ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

August 10, 2026

கார்யாரம்பேஷு ஸர்வேஷு து:ஸ்வப்நேஷு ச ஸத்தம |
அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம்‌ ததுச்யதாம்‌ ॥
யே நாரம்பாச்‌’ச ஸித்த்யந்தி து:ஸ்வப்நச்‌’சோப சாந்தயே |
அமங்களாநாம்‌ த்ருஷ்டாநாம்‌ பரிஹாரச்‌’ச ஜாயதே ||-
1-2-

தால்ப்யர் கூறுகிறார்‌: ‘ ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் பெரியோரே, கார்யங்களை ஆரம்பிக்கும்‌ போதும்‌, துஸ்வப்நமேோ அமங்களமோ நேரும் போதும்‌ எதனை ஜபிக்க வேண்டும்‌? அறிவுறை எங்கட்கு வழங்கப்பட வேண்டும்‌. துவங்கிய கார்யங்கள்‌ இனிது திறைவேறுவது எதனால்‌ 2? கெட்ட கனவு பலனற்றுப்‌ போவதும்‌ எதனால்‌ ? யாம்‌ காணும்‌ அசுபங்களுக்குப்‌ பரிஹாரம்‌ உண்டாவதும்‌ எதனால்‌ ?

ஸ்ரீ புலஸ்த்ய:–

ஜநார்தநம்‌ பூத பதிம்‌ ஜகத் குரும்‌ ஸ்மரந்‌ மநுஷ்யஸ்‌ ஸததம்‌ மஹாமுநே | துஷ்டாந் யசே’ஷாண் யபஹந்தி ஸாதயதி அசேஷா கார்யாணி ச யாந்ய பீப்ஸதி-3-

புலஸ்தியர்‌ மொழிவது :- மா முனிவரே, பிறவியை நீக்க வல்லவரும்‌, உலகில்‌ உள்ள பொருள்‌ எல்லாவற்றிற்கும்‌ சொந்தக்‌காரரும்‌, உலகிலேயே மிக உயர்ந்தவருமான எம்பெருமானைத் தியானித்துக்‌ கொண்டிருக்கும்‌ மனிதன்‌ தீயனவெல்லாம்‌ போக்கிக்‌ கொண்டு, தான்‌ விரும்பும்‌ எல்லாச் செயல்களையும்‌ நற் பயனளிக்கும்‌ படி ஸாதித்துக்‌ கொள்ளுகிறான்

ச்‌’ருணுஷ்வ சாந்யத்‌ கததோ மமாகிலம்‌ வதாமி யத்தே த்விஜ வர்ய மங்களம்‌ |
ஸர்வார்த்த ஸித்திம்‌ ப்ரததாதி யத்‌ ஸதா நிஹந்த்யசே’ஷாணி ச பாதகாநி ॥|-4-

அந்தணர்‌ பெருமானே, எது உமக்குச்‌ சுபமோ, எது வேண்டிய பலன் யாவும்‌ கைகூடும்படி செய்ய வல்லதோ, எது தீவினை யாவற்றையும்‌ ஒழிக்க வல்லதோ அத்தகைய ஸ்துதியை உமக்குக்‌ கூறுகிறேன்‌. அதை முழுவதும்‌ கேட்பீராக

ப்ரதிஷ்டிதம்‌ யத்ர ஜகத்‌ சராசரம்‌ ஜகத் த்ரயே யோ ஜகதச்‌’ ச ஹேது: |
ஜகத்‌ ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
-5-

மூவுலகிலும்‌ யார்‌ ஜங்கம ஸ்தாவர ரூபமான உலதற்குக்‌ காரணமானவரோ, யாரிடத்தில்‌ இது நிலைத்துக்‌ கீழே விழாது தாங்கப்பட்டு நிற்கிறதோ, இவ் வுலகை யார்‌ ரஷிக்கிறாரோ,.(ப்ரளய காலத்தில்‌) யார்‌ இதனை உணவைப் போல்‌ தம்முள்‌ ஒடுங்கும்‌ படி செய்கிறாரோ, ஸர்வ பாபங்களையும்‌ போக்கும்‌ அந்தத்‌ திருமால்‌ “எனக்கு மங்களங்கள்‌ பொங்கிப்‌ பெருக அருள்வாராக –

வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வ ரூபை: விஸ்தாரவாந்‌ யோ அணுதரோ அணுபாவாத்‌ |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ்‌ ஸததம்‌ பரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –6-

வான்‌, வாயு, தீ, நீர்‌, பூமி எனும்‌ இவ்வுருவுகளால்‌ தம்மைப்‌ பெருக்கிக்‌ கொண்டவரும்‌, சிறிய பொருட்களிலும்‌ சிறியவரும்‌, சிறிது, பெரிதென்றளவுள்ள பொருட்களைக்‌ காட்டிலும்‌ முற்றிலும்‌ வேறான்‌ தன்மை யுள்ளவருமான ஹரி எக் காலத்திலும்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

யஸ்மாத்‌ பரஸ்மாத்‌ புருஷா தநந்தாத்‌ அநாதிமத்யா ததிகம்‌ ந கிஞ்சித்‌ |
ஸ ஹேது ஹேது: பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–7-

காலத்தாலும்‌, இடத்தாலும்‌, குணங்களாலும்‌ அளப்பரியதானவரும்‌, பிறப்பும்‌ இறுதியுமற்றவரும்‌, தம்மிலும்‌ உயர்ந்த ஒருவரைக்‌ கிடையாதவரும்‌, படைப்போரையும்கூட. படைப்பவராகவும்‌, தேவர்க்கும்‌ தேவனாகவும்‌ உள்ள ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபீ ்‌ ஸ்ருஜத்யசே”ஷம்‌ பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர்‌ யோ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||-8-

நான்முகனுக்கு அந்‌தராத்மாவாயிருந்து உலகத்தைப்‌ படைத்‌தும்‌, தானே நேரில்‌ அச்சுதனாய்த்‌ தோன்றி அதை ரஷித்தும்‌, ருத்ரனுக்கு ஆத்மாவாய்‌ நின்று இதனை அழித்தும்‌ வருகிறவரும்‌, குணசாலிகளுள்‌ முதல்வரும்‌, நன் ஞானம்‌, படைக்கப்படும்‌ பொருளாக ஆகும்‌ ஆற்றல்‌, அனைத்தையும்‌ தாங்கும்‌ வலிமை, இதில்‌ ஆயாஸமின்மை, பிறரைத்‌ தம்‌ இஷ்டப்படி இயங்கும்படிச்‌ செய்யா வல்ல மிடுக்கு, ஸூர்ய வெளிச்சத்தில்‌ விளக்குப் போல்‌ . பிற பொருளை யில்லை யாக்கவல்ல பேரொளி இவை யாவும்‌ உடையவரும்‌, தோஷம்‌ சிறிதுமில்லாதவருமான ஹரி எனக்குச்‌ சுபங்களே பெருக அருள் பாலிப்பாராக

பரஸ்‌ ஸுராணாம்‌ பரமோ அஸுராணாம்‌ பரோ யதீநாம்‌ பரமோ முநீநாம்‌ |
பரஸ்‌ ஸமஸ்தஸ்ய ச யஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
-9-

தேவர்க்கும்‌, : அஸுரர்க்கும்‌, துறவிகட்கும்‌, முனிவர்க்கும்‌, எல்லாவற்றிற்குமே மிகமிக உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்‌கள்‌ பெருக அருள வேண்டும் –

த்யாதோ முநீநா மபகல்மஷைர்‌ யோ ததாதி முக்திம்‌ பரமேஸ்வரேஸ்வர : |
மநோபிராம: புருஷஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥-10-

எல்லாக் காலத்திலும்‌ தன்னையே நினைத்திருப்பவர்களின்‌, குற்று மற்ற உள்ளங்களால்‌ சிந்தனை செய்யப்பட்டு, அவர்க்கு முக்தி யளிப்‌ யவராயும்‌, மனதைக்‌ கவரும்‌ அழகுடையவராயும்‌ எல்லா பலனையும்‌ தர வல்லவராயும்‌ இருக்கும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ வ்ருத்தி யாக அநுக்ரஹம்‌ செய்வாராக–

ஸுரேந்த்ர-வைவஸ்வத-வித்தபாம்‌ புப ஸ்வரூப ரூபீ பரிபாதி யோ ஜகத்‌ |
ஸ ஸூத்த ஸூத்த: பரமேஸ்வரேஸ்வர: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–11-

தேவேந்த்ரன்‌, இயமன்‌, வருணன்‌, குபேரன்‌ என்பவரைத்‌ தம்‌ உடலாகக்‌ கொண்டு யார்‌ உலகைப்‌ பரிபாலிக்கிறாரோ, தூய பொருட்கும்‌ தூய்மை யளிக்கும்‌ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

யந்நாம-ஸங்கீர்த்தநதோ விமுச்யதே ஹி அநேக-ஜந்மார்ஜித-பாப ஸஞ்சயாத்‌ |
பாபேந்தநாக்நிஸ்‌ ஸ ஸதைவ நிர்மலோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥ -12-

பல பல பிறவிகளில்‌ ஈட்டிய பாப மூட்டைகள்‌ எவருடைய திருநாம ஸங்கீர்த்‌தநத்தால்‌ தொலைகிறதோ, விறகை அழிக்கும்‌ தீ போலே பாபத்தை அழிக்க வல்லவரும் மாசற்றவருமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ எப்பொழுதும் பொங்கிப் பெருக அருள் செய்ய வேண்டும் –

ஸ்ரீ வராஹாவதாரம்
யேநோத்த்ருதேயம்‌ தரணீ ரஸாதலாத்‌ அசேஷ ஸ்ருஷ்டி ஸ்திதி காரணாதிகம்‌ |
பிபர்த்தி விஸ்வம்‌ ஜகதஸ்‌ ஸ மூலம்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–13-

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகளைப்‌ பாதாளத்திலிருந்து யார்‌ தூக்கி எடுத்தாரோ, யார்‌ மற்றெல்லாரையும்‌ படைத்தளித்து அழிக்கவும்‌ செய்கிறாரோ, ஜகந்‌ மூலமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

பாதேஷு வேதா ஜடரே சராசரம்‌ ரோமஸ்‌-வசேஷா முநயோ முகே மகா: | யஸ்யேஸ்வரேஸஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–14-

எந்த தேவ தேவனுடைய பாதங்களில்‌ வேதங்களும்‌, திருவயிற்‌றில்‌ அண்ட சராசரம்‌ முழுவதும்‌, உரோமங்களில்‌ முனிவர்கள் அனைவரும்‌, முகத்தில்‌ யாகங்களும்‌ இருக்கின்றனவோ அந்த ஆற்றல்‌ மிக்கானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்ய வேண்டும்‌-

ஸமஸ்த யஜ்ஞாங்க மயம்‌ வபு: ப்ரபோ:யஸ்யாங்க-மீசேஸ்வர-ஸம்ஸ்துதஸ்ய |
வராஹ ரூபீ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –15-

ஸமஸ்த தேவர்களாலும்‌ ஸ்துதிக்கப்பட்ட எந்த ப்ரபுவின்‌ திரு அவயவங்கள்‌ யாக உபகரணங்களனைத்துமாய்‌ ஆகின்றனவோ, அந்தக்‌ கோல வராஹ வடிவம்‌ கொண்ட பக்வானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பல்கிப்‌ பெருக அருள வேண்டும்‌-

விக்ஷோப்ய ஸர்வோததி-தோய-ஸம்பவம்‌ ததார தாத்ரீம்‌ ஜகதச்‌ ச யோ புவம்‌ |
யஜ்ஞோஸ்வரோ யஜ்ஞ புமாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: || –16-

மாகடல்‌ நீரனைத்தையும்‌ கலக்கி ப்ராணிகளின்‌ இருப்பிடமான . வார் மடந்தையைப்‌ பேர்த்தெடுத்தவரும்‌ யாகங்களால்‌ பூஜிக்கப்படுபவரும்‌ யஜ்ஞ வராஹ மூர்த்தியுமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும்‌-

விந்யஸ்ய பாதெள ப்ருதிவீம்‌ ச பிப்ரத: | யஸ்யோபமாநம்‌ ந பபூவ ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–17-

ஸமஸ்த ஜகதாதாரனான பரமனது திருப் பள்ளியான ஆதி சேஷன் மேல்‌ திருப் பாதங்களை ஊன்றிப்‌ பூமி தேவியைப்‌ பேர்த்‌தெடுத்த எந்‌த பகவானுக்கு உவமையே இல்லையோ அந்த பகவான்‌ எனக்கு மங்கள வ்ருத்தியைச்‌ செய்வாராக-

ஸகர்கரம்‌ யஸ்ய ச ப்ரும்ஹிதம்‌ முஹா:ஸநந்தநாத்யைர்‌ ஜந லோக-ஸம்ச்‌’ரிதை: |
ஸ்ருதம்‌ ஜயே த்யுக்தி பரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி; | –18-

உறுமலுடன்‌ கூடிய எவரது ஐய கோஷத்தை ஐந லோகத்தில் இருந்த ஸநந்தநாதியர்‌ பல்லாண்டு பாடிய வண்ணமே கேட்டு மகிழ்ந்தனரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி அருள்‌ செய்ய வேண்டும் –

ஏகார்ணவாத்‌ யஸ்ய மஹீயஸோ மஹீம்‌ ஆதாய வேகேந கமுத்பதிஷ்யத: |
நதம்‌ வபுர்‌ யோகிவரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; | .-19-

மிகப் பெரிய நீர்ப் பரப்பிலிருந்து நிலமகளைப்‌ பெயர்ந்து எடுத்துக் விரைவாக விரைவாக மேலே பாய்ந்து வந்த எந்தக்‌ கோல வராஹ மூர்த்தியை ஸநகாதி யோகியர்‌ கண்டு வணங்கினரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்குவராக –

ஹதோ ஹிரண்யாஷ மஹாஸூர: புரா புராண பும்ஸா பரமேண யேந |
வராஹ ரூபஸ்‌ ஸ பதி: ப்ரஜாபதி:மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||–20-

மிகச் சிறந்த புராண புருஷரான யாரால்‌ ஹிரண்யாக்ஷனென்ற அஸுரன்‌ அழிக்கப் பட்டானோ, அந்த ஞானப் பிரான்‌ எனக்கு மங்களங்கள் பெருக அருள்‌ செய்ய வேண்டும் –

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
தம்ஷ்ட்ரா-கராளம்‌ ஸுர பீதி நாச”கம்‌ க்ருதம்‌ வபுர்‌ திவ்ய-ந்ருஸிம்ஹ-ரூபிணா |
த்ராதும்‌ ஜகத்‌ யேந ஸ ஸர்வதா ப்ரபு: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–21-

தேவர்களின்‌ பயத்தை அகற்ற வல்லரும்‌ கோரைப் பற்களால்‌ அச்சுறுத்துவதுமான நரங் கலந்த சிங்க உருவை உலகைக்‌ காக்க வென்றே யார்‌ தரித்தாரோ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்ய வேண்டும்‌-

தைத்யேந்த்ர-வக்ஷஸ் ஸ்தல-தார-தாருணை: கரேருஹைர்‌ ய: க்ரகசாநுகாரிபி: |
சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோ அச்யுதோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ||–22-

அவுணன்‌ மார்பைக்‌ கிழிக்க வல்லதும்‌ ரம்பம்‌ போன்றதுமான நகங்களால்‌ உலகின்‌ பயத்தைப்‌ போக்கிய ஹரி எனக்கு மங்களங்‌கள் பெருக அருள வேண்டும் –

தந்தாந்த-தீப்தத்யுதி-நிர்மலாநி ய; சகார ஸர்வாணி திசாம்‌ முகாநி |
நிநாத-வித்ராஸித-தாநவோ ஹ்யஸெள மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–23-

பற்களின்‌ காந்தியால்‌ திசை முடிவிலும்‌ ஒளி பரப்புகிறவரும்‌ ஸிம்ஹ நாதத்தால்‌ அஸுரர்களை நடுக்கமுறச்‌ செய்பவருமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும் –

யந்நாம-ஸங்கீர்த்தநதோ மஹா பயாத்‌ விமோக்ஷ-மாப்நோதி ந ஸம்சயம்‌ நர; |
ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ ந்ரு கேஸரீ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–24-

தன்‌ நாமத்தைச்‌ சொல்பவனது பெரும்‌ பயத்தைப்‌ போக்கி அருள்பவரும்‌ உலகனைத்தின்‌ துயரைத்‌ துடைப்பவருமான சிங்கப்‌ பிரான்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

ஸடா-கராள-ப்ரமணா நிலாஹதா: ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ்‌ ஸமந்தத: |
ஸ திவ்ய ஸிம்ஹ: ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி:–25-

அசையும்‌ பிடரி மயிர்களால்‌ மேகக்‌ கூட்டங்களை நாற் புறமும்‌ சிதறி விழும்படி செய்பவரும்‌ ஜ்வலிக்கும்‌ கனல்‌ போன்ற கண்களை வுடையவருமான சிங்கப்பிரான்‌ எனக்கு மங்களம்‌ பெருக அருள்வாராக.

யதீஷண-ஜ்யோதிஷி ரஸ்மி-மண்டலம்‌ ப்ரலீந-மீஷந்‌ ந ரராஜ பாஸ்வத: |
குத: ச சாங்கஸ்ய ஸ திவ்ய ரூப-த்ருக்‌ மமாஸ்து: மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–26-

பகலவனது கதிர்க் கூட்டங்கள்‌ எவரது கண்ணொளியில்‌ மங்கிப்‌ போகிறதோ, சந்திரனைப் பற்றிப்‌ பேசவே வேண்டிய தில்லையோ, அந்த அழகிய சிங்க உருவம்‌ தரித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

அசே’ஷ-தேவேச’-நரேஸ்வரேஸ்வரை: ஸதா ஸ்துதம்‌ யஸ் சரிதம்‌ மஹாத்புதம்‌ |
ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ மஹா ஹரி: மமாஸ்து மாங்கள்ய- -விவ்ருத்தயே ஹரி: ॥–27-

எந்த சிங்கப் பிரானது மிக அத்புத சரிதையை ப்ரபுக்களும்‌ மேலாத்‌ தேவரும்‌ நிலத் தேவரும்‌ புகழ்ந்த வண்ண மிருக்கிறார்களோ உலகனைத்தின்‌ துயரையும்‌ பாபங்களையும்‌ போக்க வல்ல அந்த ஹரி: எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக –

த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா: நச்‌யந்தி ரஷாம்ஸி அபயாந்தி சாரய; | யத் கீர்த்தநாத்‌ ஸோ அத்புத-ரூப கேஸரீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–28-

எவருடைய திரு நாமத்தைச்‌ சொன்ன மாத்திரத்தாலேயே அஸூரர்கள்‌ ஒடுகின்றனரோ, தேவர்கள்‌ வணங்குகின்றனரோ, அரக்கர்கள்‌ அழிந்து போவார்களோ, எதிரிகள்‌ திரும்பி ஓடுவார் களோ, அந்த அழகிய சிங்கர்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

வாமனாவதாரம்‌
ருக்பாவிதம்‌ யோ யஜுஷா ஹி ஸ்ரீமத்‌ ஸாம த்வநி-த்வஸ்த-ஸமஸ்த-பாதகம்‌ |
சக்ரே ஜகத்‌ வாமநகஸ்‌ ஸ் ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி –29-

ருக் வேதத்தை உச்சரித்து உலகைத்‌ தூயதாக்கியும்‌, யஜுர்‌ வேதத்தால்‌ நிறம் பெறச் செய்தும்‌ ஸாம கானத்தால்‌ ஸமஸ்த பாதகத்தையும்‌ அழித்து முள்ள திருக் குறள்‌ உருவனான மாயன்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

யத்பாத-விந்யாஸ-பவித்ரதாம்‌ மஹீ யயெள வியச்சர்க்‌-பஜுஷா-முதீரணாத்‌ |
ஸ வாமநோ வாம சரீர-ரூப த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–30-

எவருடைய திருவடி படுதலால்‌ நிலப் பரப்பும்‌, ருக்‌ யஜுஸ்‌ மூதலிய வேதங்களைச்‌ சொல்வதால்‌ வானமும்‌ புனிதமாயினவோ அந்த வாமன மூர்த்தி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக –

யஸ்மிந்‌ ப்ரயாதே அஸூர-பூப்ருதோ அத்வராத்‌ நநாம கேதாத்‌ அவநிஸ்‌ ஸஸாகரா |
ஸ வாமநஸ்‌ ஸர்வ-ஜகந் மயஸ்‌ ஸதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–31-

அஸுர மன்னன்‌ மஹா பலியின்‌ அரண்மனையை நோக்கி எவர்‌ போன போது கடல்‌ சூழ்ந்த நில மங்கை வருந்தித் தலை குனிந்தாளோ உலகனைத்தையும்‌ தன்னுள்‌ ஒடுக்கிய அந்தத்‌ திருக் குறளப்பன்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

மஹாத்புதே தைத்ய பதேர்‌ மஹா த்வரே யஸ்மிந்‌ ப்ரவிஷ்டே ஷுபிதம்‌ மஹா ஸூரை: |
ஸ வாமநோ அந்தஸ்‌ ஸ்தித ஸப்த லோக த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–32-

மிக ஆச்சர்யமான அஸூர மன்னனது யாக சாலையில்‌ எவர் ப்ரவேசித்ததும்‌ அஸுரரனைவரும்‌ குழப்ப மடைந்து போயினரோ, ஸப்த லோகத்தையும்‌ தன்‌ வயிற்றில்‌ வைத்துக் கொண்ட அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

ஸங்கைஸ்‌ ஸுராணாம்‌ திவி பூதலஸ்திதை: ததா மநுஷ்யைர்‌ ககநே ச கேசரை: |
ஸ்துத: க்ரமாத்‌ ய: ப்ரசசார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–33-

ஸ்வர்க்கத்தில்‌ தேவர்களாலும்‌, தரையில்‌ மனிதர்களாலும்‌, வானில்‌ வானவர்களாலும்‌ முறையுடன்‌ ஸ்துதிக்கப்பட்டவாறு உலகளந்த ஹரி எனக்கு மங்கள வ்ருத்தியை செய்தருள வேண்டும் –

க்ராந்த்வா தரித்ரீம்‌ ககநம்‌ ததா திவம்‌ மருத் பதேர்‌ ய: ப்ரததெள த்ரிவிஷ்டபம்‌ |
ஸ தேவ தேவோ புவநேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; –34-

நிலத்தையும்‌ வானத்தையும்‌ ஸ்வர்க்க உலகையும்‌ அளந்து கொண்டு இந்த்ரனுக்கு மூவுலகையும்‌ அளித்த ஜகந் நாதனான ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி யருள வேணும் –

அநுக்ரஹம்‌ சாபி பலே-ரநுத்தமம்‌ சகார யச்சேந்த்ர-பதோபமம்‌ க்ஷணாத்‌ | ்‌
ஸுராம்ச்‌’ச யஜ்ஞாம்ச”புஜஸ்‌ ஸ ஸர்வதா |மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–35-

மஹாபலிக்கு இந்திர பதவியை யொத்த உயர்‌ பதவியையும்‌. வாசகத்தின்‌ ஹவிர்ப் பாகத்தைத்‌ தேவர்களுக்கும்‌ விரைவில்‌ அளித்த ஹரி எனக்கு மங்களங்களே பெருக அருள் பாலிப்பாராக —

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்‌
ரஸாதலாத்‌ யேந புரா ஸமாஹ்ருதா: ஸமஸ்த வேதா ஜல சார ரூபிணா |
ஸ கைடபாரிர்‌ மதுஹாம்புசாயீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–36-

மீனாக, மது கைடபர்களை அழித்து, பாதாளத்‌திலிருந்து வேதங்‌களை மீட்டுக்‌ கொணர்ந்த ஷீராப்தி நாதனான ஹரி என்‌ மங்கள்‌களைப்‌ பெருக்குவாராக–

ஸ்ரீ பரசுராமாவதாரம்‌
நி:ஷத்ரியாம்‌ யச்‌’ச சகார மேதிநீம்‌ அநேகசோ பாஹு வநம்‌ ததாச்சிநத்‌ |
ய:கார்த்த வீர்யஸ்ய ஸ பார்க வோத்தமோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; || –37-

கார்த்த வீர்யார்ஜுனனது ஆயிரம்‌ தோள்களைத்‌ துணித்து, பலகால்‌ அரசர்களை யழித்த பரசுராமராகிய ஹரி எனக்கு மங்களங்‌களைப்‌ பெருக்க வேணும்‌–

ஸ்ரீ ராமாவதாரம்‌-
நிஹத்ய யோ வாலிந-முக்ர-விக்ரமம்‌ நிபத்ய ஸேதும்‌ ஜலதெள தசா நநம்‌ |
ஜகாந சாந்யாந்‌ ரஜநீ சரா நஸெள மமாஸ்து மாங்கள்ய விவருத்தயே ஹரி: ॥ –38-

கொடிய வலிமை யுள்ள வாலியைக்‌ கொன்று, மா கடலில்‌ அணையைக்‌ கட்டி தசமுகனையும்‌ மற்றுமுள்ள அசுரர்களையும் அழித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்‌-
சிக்ஷேப பால: சகடம்‌ பபஞ்ஜ யோ யமார்ஜுநம்‌ கம்ஸமரிம்‌ ஜகாந ௪ |
மமர்த சாணூர முகாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–39-

பால கிருஷ்ணனாய்ச்‌ சகடெறிந்தும்‌, மருத மரங்களை முறித்தும்‌ சாணூராதியரையும்‌, பகைமை கொண்ட கம்சனையும்‌ அழித்‌தும்‌ உகந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலீப்பாராக–

ப்ராதஸ்‌ ஸஹஸ்ராம்சு” மரீசி-நிர்மலம்‌ கரேண பிப்ரத்‌-பகவாந்‌ ஸுதர்ச’நம்‌ |
கெளமோதகீம்‌ சாபி கதா-மநந்தோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: |-40-

காலையில்‌ ஆயிரம்‌ கதிரவனது கதிர்க் கூட்டத்தைப்‌ போன்ற பேரொளி யுள்ள சக்கரத்தையும்‌ கெளமோதகி எனும்‌ கதையையும்‌ ஏந்திய பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலிப்‌ பாராக.-

ஹிமேந்து-குந்த-ஸ்படிகாப-நிர்மலம்‌ முகா நிலா பூரிதம்‌ ஈஸ்வரேஸ்வர | மத்யாஹ்ந காலே அபி ஸ ச’ங்கமுத்வஹந்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–41-

பனி நீர்‌, சந்த்ர மண்ட்லம்‌, குந்தப்பூ, ஸ்படிகமணி இவை போன்று வெண்ணிறமாயும்‌, திரு முகத்தால்‌ காற்று நிரப்பப் படுவதாயும்‌ உள்ள ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நடுப் பகலில்‌ ஏத்தி யருளும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம்‌ வக்ஷஸ் ஸ்தலேந ஸ்ரிய முத்வஹந்‌ ஹரி: |
விஸ்தாரி-பத்மாயத-பத்ர லோசநோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே –42-

மலர்த்த தாமரையைக்‌ கையிலும்‌ திருமகளைத்‌ திரு மார்பிலும்‌ மாலையில்‌ ஏந்தி யருளும்‌ மலர்ந்த தாமரை யிதழை யொத்த கண்ணீனரான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

ஸர்வேஷு காலேஷு ஸமஸ்த தேசேஷு அசேஷ கார்யேஷு ததேஸ்வரேஸ்வர: |
ஸர்வைஸ்‌ ஸ்வரூபைர்‌ பகவாநநாதிமாந்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥ –43-

எல்லாக்‌ காலத்திலும்‌, எல்லா இடங்களிலும்‌, எல்லாத்‌ தொழில்களிலும்‌, எல்லா வித உருவங்களுடன்‌ தோன்றி யருளும்‌ ஆதி யந்த மற்ற பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்வாராக –

பல ஸ்ருதி
ஏதத்‌ படந்‌ தால்ப்ய ஸமஸ்த பாபை; விமுச்யதே விஷ்ணு பரோ மநுஷ்ய: |
ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வாந்‌ அர்த்தா-நவாப்நோதி யதேச்சதே தாந்‌ ॥–44-

தால்ப்ய முனிவரே, விஷ்ணுவே பர தேவதை யெனும்‌ உண்மை உணர்ந்த மனிதன்‌ இத்துதி நூலைப்‌ பாராயணம்‌ செய்து எல்லாப்‌ பாபங்களிலிருந்தும்‌ விடுபடுகிறான்‌. அவனுடைய கார்யங்கள்‌ யாவும்‌ நற் பயனை அளிக்கின்றன. விரும்பிய எல்லாப்‌ பொருளும்‌ அவனுக்‌குக்‌ கை கூடுகின்றன-

துஸ் ஸ்வப்ந: ப்ரச’ம-முபைதி பட்ய மாநே ஸ்தோத்ரேஸ்மிந்‌ ஸ்ரவண விதெள ஸதோத்ய தஸ்ய!
ப்ராரம்போ த்ருத முபயாதி ஸித்திமீச பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேவ தேவ: ||–45-

இத்துதியை எப்பொழுதும்‌ படிப்பதைக்‌ கேட்பதென்னும் விரதம்‌ பூண்டவனது கெட்ட கனவுகள்‌ அடங்கிப்‌ பயனற்றுப்‌ போகும்‌, துவங்கிய தொழில்கள்‌ விரைவில்‌ நற்பயனளிக்கும்படி, நிறைவேறும்‌, தேவ தேவனாய இறைவன்‌ பாவங்களை யெல்லாம்‌ போக்கி விடுதிறான் –

மாங்கள்யம்‌ பரமபதம்‌ ஸதார்த்த-ஸித்திம்‌ நிர்விக்நா-மதிகபலாம்‌ ஸ்ரியம்‌ ததாதி |
கிம்‌ லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம்‌ யத்‌ விஷ்ணு-ப்ரவணதியாம்‌ ந தால்ப்ய ஸாத்யம்‌ ॥–46-

மங்களத்தையும்‌, நலமந்தமில்லதோர்‌ நாட்டையும்‌, விரும்பியது நன்கு விரைவில்‌ கை கூடுவதையும்‌, தடை யற்ற பெருஞ் செல்வத்தையும்‌ இறைவன்‌ அருள்வான்‌. தால்ப்ய முனிவரே, இம்மையிலும்‌ மறுமையிலும்‌ திருமாலடி யார்க்குக்‌ கிட்டாதது யாதுமில்லை —

தேவேந்த்ரஸ்‌ த்ரிபுவந-மர்த்த-மேகபிங்க: ஸம் ஸித்திம்‌ த்ரி புவநகாம்‌ ச கார்த்த வீர்ய: |
வைதேஹ: பரமபதம்‌ ப்ரஸாத்ய விஷ்ணும்‌ ஸம் ப்ராப்தஸ்‌ ஸகல-பல ப்ரதோ ஹி விஷ்ணு: ||–47-

கார்த்த வீர்யார்ஜுனன்‌ மூவுலகிலும்‌ அதர்மத்தைத் தடுக்க வல்ல தர்ம சக்தியையும்‌, குபேரன்‌ பணத்தின்‌ அதிபனாகும்‌ பதவியையும்‌, இந்த்ரன்‌ மூவுலகில்‌ உள்ள இன்பத்தையும்‌, விதேஹ மன்‌னன்‌ பரம பதத்தையும்‌ திருமாலைப்‌ பூசித்தே பெற்றனர்‌. எல்லாப் பயன்களையும் அளிக்க வல்லவர்‌ திருமால் தானே –

ஸர் வாரம் பேஷு தால்ப்யைதத்‌ துஸ் ஸ்வப்நேஷு ச பண்டித:
ஜபே-தேகமநா விஷ்ணெள ததா மங்கள்ய-தர்சநே ॥-48-

தால்ப்யரே, அறிவுள்ளவன்‌ எல்லாக்‌ கார்யங்களை ஆரம்பிக்‌கும் போதும்‌, கெட்ட கனவுகள்‌ தோன்றும் போதும்‌, அமங்களங்கள்‌ நேரும் போதும்‌, இறைவனான திருமாலிடம்‌ மாறாத பக்தியுடன்‌ இத்‌ ஸ்துதியை ஜபம்‌ செய்ய வேண்டும் –

சமம்‌ ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாச்‌’ச தாருணா: |
கர்மாரம்பாச்‌’ ச ஸித்த்யந்தி புண்யமாப்நோதி சோத்தமம்‌ –49-

அவனது தீமைகள்‌ யாவும்‌ அழிந்து போகின்றன. கொடிய கிரஹங்களின்‌ தீய பலன்களும்‌ மாறுகின்றன. தொழில்களும்‌ நற்‌ பயனளிக்கின்றன. தீய கனவும்‌ பயனற்றதாகிறது. நல் வினையின்‌ உயர்ந்த பயனையும்‌ பெறுகிறான் —

ஹரிர்‌ ததாதி பத்ராணி மங்கள்ய ஸ்துதி ஸம்ஸ்துத;
கரோ-த்யகில-ரூபைஸ்து ரக்ஷா-மக்ஷத-ச’க்தி ப்ருத்‌ ॥–50-

மாங்கள்ய ஸ்தவத்தால்‌ ஸ்துதிக்கப் பெற்ற திருமால்‌ எல்லா மங்களங்சளையும்‌ நல்குகிறான்‌. எல்லா வித வடிவத்திலும்‌ தோன்றி குறைவற்ற ஆற்றல்‌ படைத்த அந்தப்‌ பரமன்‌, அடியார்க்கு நற் பாது காப்பையும்‌ அளிக்கிறான் –

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்திலுள்ள மாங்கள்ய ஸ்தவம்‌ முற்றும்‌.

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 ) 27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –(234)ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 10, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

நூறே சொன்ன பத்து நூறு ஓர் ஆயிரம் என்றதும் சாபிப்ராயம் -என்றதில் – நூறே சொன்ன பத்து நூறு என்றதில் –கருத்தை பத்து நிகமநத்திலே விஸ்த்ரேண பிரதிபாதித்து – ப்ராசங்கிகமாக அருளிச் செய்ய வேண்டுமவையும் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –-இனி ஓர் ஆயிரம் ஒன்றதின் கருத்தை விசதமாக்கா நின்று கொண்டு –பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —

அவித்‌யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத்‌ மோக்ஷ லாபம்‌ என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்‌யம்‌.–சூரணை -234-

அதாவது-சம்சார காரணமான அஞ்ஞானத்துக்கு நிவர்த்தகமான ஞான பூர்த்தியை உபகரித்த
ஞானாதி குண பூர்ணனான பகவானுடைய நிர்ஹேதுகமான பிரசாதத்தாலே –-சம்சார நிவ்ருத்தி பூர்வக-பகவத் பிராப்தி ரூப மோஷத்தினுடைய – லாபம் என்று பிரதிபாதிக்கை –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று தொடங்கி –அவா அற்று வீடு பெற்ற –என்று தலைக் கட்டின
இப் பிரபந்தத்துக்கு ஒன்றான தாத்பர்யம் என்கை –இத்தால் ஞான பிரதான -பகவத் பிரசாதமே மோஷ பிரதமும் -என்னுமிது இப் பிரபந்தத்துக்கு தாத்பர்யமாய் இருப்பதோர் அர்த்தம் என்றது ஆய்த்து 

” மயர்வற மதிநலமருளினன்‌” திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ “அவா வற்று வீடு பெற்ற திருவாய்மொழி 10-10-11-என்றும் சொல்லுகையாலே ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாந பூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதி குண பூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம்‌ பரமபக்தி தஸையான பாகத்தையும்‌ விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும்‌ தரும்‌ என்கை- ஒன்றான ப்ரபந்த த்துக்குத்‌ தாத்பர்யமென்கிறார்‌. (மயர்வற வீடுபெற்ற என்ற பிரபந்த ஏக அர்த்‌யம்‌) அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்‌

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்–-இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார்-அருளிச் செய்த-இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இறே

ஆக
இப்பிரபந்தத்தால் –
1-சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -அஞ்ஞான சேதனர்-தத்வஞ்ஞராய் -சார அசரா விவேகம் பண்ணுகைக்கு சாஸ்திர பிரதானம் பண்ணின படியையும்-
2-அந்த சாஸ்திர முகேன தத்வ ஞானம் பிறக்கும் அளவில் உண்டான அருமையை நினைத்து –
தாத்பர்யமான திரு மந்த்ரத்தை-தன் பரம கிருபையால் வெளி இட்ட படியையும் –
3-அந்த சாஸ்திர தாத்பர்யங்களின் விஷய பேதாதிகளையும்-
4-தத் உபய நிஷ்டரான அதிகாரிகளுடைய பிரகாரங்களும் –
5-அந்த வியாஜத்தாலே பிரஸ்துதமான திருவாய் மொழியினுடைய வைபவத்தையும் –
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவத்தையும் –
7-அந்த பிரபாவத்துக்கு மூலமான பகவத் நிர்ஹேதுக கடாஷத்தையும் –
8-அதடியாக இவர்க்கு உண்டான ஞான பக்திகளும் –
9-அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுகளையும் –
10-அந்த பக்தி தசையில் பகவத் பிரேம யுக்தர் எல்லோரோடும் இவர்க்கு உண்டான சாம்யத்தையும் –
11-அந்த பக்தி தசையில் பேசும் அந்ய உபதேசங்களுக்கு ஸ்வாப தேசங்களையும் –
12-அந்த பக்தி விஷயமான திவ்ய தேசங்களில் நிற்கிற ஈஸ்வரனுடைய குண விசேஷங்களையும் –
13-அந்த குண விசிஷ்ட வஸ்துவில் உண்டான -அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமாய் கொண்டு இப்பிரபந்தங்கள் அவதரித்த படியும் –
14-பிரதிபாத்யார்த்த சாம்யத்தாலே ஸ்ரீ கீதையோடு திருவாய்மொழிக்கு உண்டான சாம்யத்தையும் –
15-தத் வ்யாவிருத்தியையும்
16-இதில் இவர் உபதேசிக்கிற விஷய பேதத்தையும்
17-அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேசிக்கிற அர்த்த விசேஷங்களையும் –
18-அந்த வியாஜத்தாலே உபதேச விஷயமான சிஷ்ய லஷணதையும் –
19-அந்த லஷணம் இல்லாதவருக்கும் இவர் உபதேசிகைக்கு ஹேதுக்களையும் –
20-க்யாதி லாபாதி நிரபேஷராய் பகவத் கைங்கர்ய புத்த்ய உபதேசிக்கையாலே -உபதேசம் சபலமான படியையும் –
21-உபதேசிக்கிற இப் பிரபந்தங்கள் தாம் ரகஸ்ய த்ரய அர்த்தம் என்னுமத்தையும் –
22-அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதிபாதிக்க படுகிற அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தங்களிலே சங்கரக விபரண ரூபேண சொல்லப் படுகிற பிரகாரத்தையும் –
23-பிரபந்த ஆரம்பங்களில் அபேஷிதமான மங்களா சரணங்கள் இப்பிரபந்தத்தில் உண்டான படியையும் –
24-சாது பரித்ராணாதிகளிலே – ஜகத் ரஷண அர்த்தமான சர்வேஸ்வர அவதாரம் போலே இப் பிரபந்த அவதாரம் என்னுமத்தையும் –
25-இதில் பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப் பட்ட ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்களையும் –
26-அக் குண விசிஷ்டனானவன் -இப் பத்து பத்தாலும் இவ் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்களையும் –
27-பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்களையும் –
28-இவருக்கு பிரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே -ஈஸ்வரன் இவரை வைக்கைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்களையும் –
29-இவருக்கு பிறப்பித்த பரபக்தி பரஞான பரம பக்தி களாகிற தசா விசேஷ ஸ்தலங்களையும்
30-அஞ்ஞான நிவர்த்தக ஞான பூர்த்தி ப்ரத பகவத் பிரசாதமே அநிஷ்டமான சம்சாரத்தை அறுத்து அபீஷ்டமான மோஷ லாபத்தை உண்டாக்கும் என்கை- இப்பிரபந்ததுக்கு ஒன்றான தாத்பர்யம் என்னும் அத்தையும்
31-ஆஸ்திகராய் ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி – அவருடைய திவ்ய ஸூக்திகளில் பிரவணராய்-அநந்ய பரராய் இருப்பார் -எல்லோரும் அனுசந்தித்து வாழும்படி அதி ஸ்புடமாக அருளிச் செய்து தலைக் கட்டினார் —

ஆக, 1-ஸர்வேஸ்வரன்‌ அஜ்ஞரான சேதநர்க்‌குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம்‌ உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
2-அந்த ஸாஸ்த்ரம்‌ கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம்‌ தொடக்கமான ஷைம்யங்களையும்‌,
4-உபயத்திலும்‌ நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்‌,
5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்‌,
6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்‌,
8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்‌,
9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில்‌ இவர பேசும்‌ பேச்சுக்களையும்‌,
10-அந்த பக்தி தஸையில்‌ பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும்‌ இவர்க்குண்டான ஸாம்யத்தையும்‌,
11-அந்த பக்தி தஸையில்‌ பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்‌,
12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில்‌ நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்‌,
13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு ப்ரபந்தங்கள்‌ அவதரித்தமையையும்‌,
14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்‌,
15-அந்த கீதையில்‌ காட்டில்‌ இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்‌,
16-இதில்‌ இவர்‌ உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்‌,
17-அவ்வோ விஷயங்கள்‌ தோறும்‌ உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்‌,
18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்‌,
19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்‌,
20-இப்படி இவர்‌ க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம்‌ பலித்தபடியையும்‌,
21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான்‌ தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்‌,
22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும்‌ இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்‌ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்‌,
23-ப்ரபந்த ஆரம்பங்களில்‌ உண்டான லக்ஷணங்களில்‌ ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌,
24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம்‌ போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம்‌ அவதரித்த தென்னுமிடத்தையும்‌, 25-திருவாய்மொழியில்‌ பத்துப் பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்‌,
25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம்‌ முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்‌,
26-இவர் தாம்‌ பிறரைக்‌ குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்‌,
27-இவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்‌,
28-இவர்க்குப்‌ பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்‌,
29-அஜ்ஞாந்‌ நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்‌,
30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்‌
அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்

நான்காம் பிரகரணம் முற்றிற்று-

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் முற்றிற்று –

தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய் வந்த முடும்பை மணவாளா
சிந்தையினால் நீ உரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என் வாய் உரைத்து வாழும் வகை-

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி தாழ்வதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து

அடியார்கள் வாழ அரங்கன் நகர் வாழச் சடகோபன் தண் தமிழ் நூல் வாழக்
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 )-26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ (230 –233) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 10, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

அதில் இவ் ஆர்த்திக்கு அடியான –பர பக்தி -பர ஞான -பரம பக்திகளின் தசைகள்-எந்த திரு வாய் மொழிகள் என்னும் அபேஷையிலே அவற்றை அருளிச் செய்கிறார் மேல் மூன்று வாக்யத்தாலே –-அது தன்னில் பரபக்த்ய வஸ்தை இன்னது என்கிறார் இதில் –ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள்‌ எந்தெந்த திருவாய்மொழிகள்‌ என்ன- அத்தை அருளிச் செய்கிறார்‌-

கமலக்கண்ணனென்று தொடங்கிக்‌ கண்ணுள்‌ நின்றிறுதி கண்டேனென்ற பத்தும்‌ உட்கண்ணாலேயாய்‌, காண்பான வாவுதல்‌ அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும்‌ பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.-சூரணை -230-

அதாவது –கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் -1-9-9–என்று புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான் என்று தொடங்கி –கண்ணுள் நின்று அகலான்-10-8-8- -என்று என் கண் வட்டத்திலே நின்றும் கால் வாங்கு கிறிலன் என்னுமதளவாக –-என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3-2-10–நறும் துழாய் என் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –4-7-7–கை தொழ இருந்தாயது நானும் கண்டேனே –-5-7-5–ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –5–8-1-திரு விண்ணகர் கண்டேனே –6-3-1–தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –-9-4-8–கண்டேன் கமல மலர் பாதம் –10-4-9-
என்று இப் பத்து சந்தையாலும் சொன்ன சாஷாத்காரம் –-நெஞ்சு என்னும் உட் கண் -பெரிய திருவந்தாதி -28-என்கிற ஆந்தர சஷுசான மனசாலே உண்டானதாய் –

“கமலக்கண்ணன்‌ என்‌ கண்ணினுள்ளான்‌ காண்பன்‌” (திருவாய்மொழி 1-9-9) என்று புண்டரீகாக்ஷ்னானவன்‌ என்‌ கண்ணுக்கு விஷயமானான்‌; நானுமவனை ஸாக்ஷாத்கரியா நின்றேன்‌ என்று உபக்ரமித்து “கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-8) என்‌ கண் வட்டத்தை விட்டுப்‌ போகிறிலன்‌ என்றெதளவாக “என்‌ கண்ணனை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 2-8-10) “கலைப்பல்‌ ஞானத்தென்‌ கண்ணனைக் கண்டு கொண்டு” (திருவாய்மொழி 3-2-10), “நறுந்துழாயின்கண்ணியம்மா நானுன்னைக்கண்டு கொண்டே” (திருவாய்மொழி 4-7-7), “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 4-9-9) “கைதொழவிருந்தாயது நானுங்‌ கண்டேனே (திருவாய்மொழி 5-7-5), “ஏரார்‌ கோலந்திகழக்கிடந்தாய்‌ கண்டேனெம்மானே’ (திருவாய்மொழி 5-8-1), “திருவிண்ணகர்க்‌ கண்டேனே’ (திருவாய்மொழி 6-3-1), “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே” (திருவாய்மொழி 9-4-8) என்று இப் பத்து சந்தையாலும்‌ ஸாக்ஷாத்காரமாகச்‌ சொல்லுகிறவிது “நெஞ்சென்னும்‌ உட்கண்‌” (பெரிய திருவந்தாதி 28) என்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மாநஸ ஸாக்ஷாத்காரமாய்‌-

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9—புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான் –-ந மாம்ஸ சஷூர் அபி வீக்ஷ தேதம் ந சஷூஷா பஸ்யதி-என்கிற மரியாதை குலைந்தது-காண்பன் –-நானும் அவனைக் காணா நின்றேன்-காண்பன் -என்கிற இடம் வர்த்தமானம்-நீர் காண வல்லீர் யாயிற்று -எத்தாலே என்னில்-அவன் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் – அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8–சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.
–3-2-10-பல கலைகளாலும் அறியப் படுபவன்
வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு நிலைப்பெற்று என்னெஞ்சம் – என் மனத்தினை நீ சிந்தாமல் செய்வாய் -என்று சிதிலமான நெஞ்சம் தான் தரித்தது-பெற்றது நீடுஉயிரே.–-உயிர் நீடு பெற்றது -எங்கு இனித் தலைப் பெய்வன்-என்று முடிய புக்க ஆத்ம வஸ்துவும் நித்யமாயிற்று-நித்ய வஸ்துவுக்கு நாசமாவது -தாஸ்ய அசித்தி
தாஸ்யமே நிரூபகம் ஆனால் தத் அலாபத்தில் நிரூப்பியமும் இல்லையாம் இறே-ச்சேத்யாதி விஸஜாதீயம்-ஏன்னா பகவத் அலாபத்தில் அழியாது ஒழியுமோ –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-நான் உனைக் கண்டு கொண்டே.–-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் –-நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே
.–4-9-9–ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி-கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.– அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் -கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்க பெற்றேன் ஆகையால் அறிந்தேன்

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!
–5-7-5—இவர்கள் நிரந்தரமாக வர்த்திக்கும் தேசம் -நகர் கை தொழுகை யாவது -மஞ்சா க்ரோஸந்தி போலே இவர்கள் அனுவர்த்த நமே தாரகமாய் இருந்தாய்
அது நானும் கண்டேனே!–அநுபூத அம்சத்தை இல்லை என்கிறேன் அல்லேன்-அனுபாவ்ய அம்சம் யுண்டாகையாலே சொல்லுகிறேன் -அடிமை கொள்ளுகிற நீ சந்நிஹிதன் ஆனமை அறிந்தேன் -எனக்கு அத்தால் போராது -உன் திருவடிகளில் கைங்கர்யமே யாத்ரையாகப் பெற வேணும் என்று வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
5-8-1-அழகு மிக்க ஒப்பனை -இப் ஒப்பனை அழகு நிறம் பெறும்படி யாயிற்று கண் வளர்ந்து அருளிற்று -அல்லாதார்க்கு கிடந்த போது வைரூப்யம் உறைத்து இருக்கும் -இங்கு அழகு உறைத்து இருக்கும் -ச மயா போதித ஸ்ரீ மான் –-கிடந்தாய் கண்டேன் -கண் வளர்ந்து அருளுகிற படி கண்டேன் –உணர்ந்து குளிர நோக்குதல் -அணைத்தல் -இந்த சொல்லுச் சொல்லுதல் -செய்யப் பெற்றிலேன் -கண்ணாலே காணப் பெற்றேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் -பரி மாற்றம் பெறா விட்டால் ஆறி இருக்கலாம் -பிராப்தி இல்லை யாகில் -வடிவு அழகோ பாதி சம்பந்தமும் நலியா நின்றதே –ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை என்றுமாம் –செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–-நிரவதிக சம்பத்தை உடைய தேசம் -பிரிந்து தூது விட வேண்டாதே-ப்ரணய ரோஷத்தாலே -கிட்ட ஓட்டோம் -என்று வியசனப் படாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் இடம் என்கை –லஷ்மனோ லஷ்மி சம்பன்னவ் -என்கிறபடியே இடைவிடாதே பகவத் அனுபவ ஸ்ரீ -இறே சம்பத்து ஆகிறது –-திருவிண்ணகர்க் கண்டேனே.-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே
–9-4-8-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனை –கண்ணனைக் -காரியங்களில் ஒன்றுக்கு தான் காரணம் ஆனவனை-கண்டு கொண்டேனே–அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க கண்டு கொண்டேன் என்கிறார் இறே -ப்ரேமார்த்த சித்தருக்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசு பாலாதிகளுக்கு –பாஹ்ய சமயங்களால் அவிஸால்யனாய் -சர்வ அந்தராத்மாவாய்க் கொண்டு -சர்வ நியாந்தாவாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்கு ஸூலபனாய் இருக்கிறவனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –-காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –திருவிருத்தம் -84-
அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –2-4-2-
கூவுகின்றேன் காண்பான்-3-2-8-
மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே –3-8-4-
கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –3-8-7-
உன்னை எந்நாள் கண்டு கொள்வேனே –3-8-8-
கோல மேனி காண வாராய் –4-7-1-
தடவுகின்றேன் எங்குக் காண்பன் –4-7-9-
பாவியேன் காண்கின்றிலேன் –4-7-10-
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-
உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –5-8-9-
என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-
விளங்க ஒருநாள் காண வாராய் –6-9-4-
உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் –6-9-6-
அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-
ஒருநாள் காண வாராய் –8-5-1-
தொண்டனேன் உன் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே –8-5-6-
உன்னை எங்கே காண்கேனே-8-5-10-
உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –9-4-1-

என்று பாஹ்ய சஷுசாலே அவனைக் காண ஆசைப் பட்டு கூப்பிட்ட சந்தைகள் –அதில் இரட்டி உண்டாகையாலே –-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -10-8-7–என்று திருமால் இரும் சோலை அளவாக ஆந்த்ர அனுபவம் செல்லா நிற்க – பெற்று அன்று தரியாத –பாஹ்ய அனுபவ அபேஷை -நடக்கையாலே – பர ஞானத்தை கர்ப்பித்து கொண்டு இருக்கிற பர பக்தி என்கை —

கைய பொன்னாழி வெண்சங்கொடுங்‌ காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌ (திருவிருத்தம்‌ 84), “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ ‘, (திருவாய்மொழி 1-5-7) “உம்மைக் காணு மாசையுள்‌ நைகின்றாள்‌” (திருவாய்மொழி 2 -4-2, “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8), “மெய் கொள்ளக் காண விரும்பும்‌ என் கண்களே’ (திருவாய்மொழி 3-8-4), “கூவியுங்காணப்‌ பெறேன்‌ உன கோலமே”, (திருவாய்மொழி 3-8-7) “உன்னை யெந்நாள்‌ கண்டு கொள்வனே’ (திருவாய்மொழி 3-8-8), “கோல மேனி காண வாராய்‌” (திருவாய்மொழி 4-7-1), “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8) “பாவியேன்‌ காண்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 4-7-10), “உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌” (திருவாய்மொழி 5-8-4), “ஒரு நாள்‌ காணவாராயே” (திருவாய்மொழி 8-5-1) “என்று கொல்‌ கண்கள்‌ காண்பதுவே” (திருவாய்மொழி 5-9-5), “விளங்க ஒருநாள்‌ காண வாராய்‌” (திருவாய்‌ மொழி 6-9-4), “உன்னைக் காண்பான்‌ வருந்தியெனை நாளும்‌” (திருவாய்‌ மொழி 6-9-6) “அலைகடல்‌ கடைந்தவப்பனே காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 8-1-1), “தொண்டனேனுன்கழல்காணவொருநாள்வந்து தோன்றாயே” (திருவாய்மொழி 8-5-6), “உன்னையெங்கே காண்கேனோ’ (திருவாய்மொழி 8-5-10), “கனிவாய்‌ சிவப்ப நீ காணவாராயே” (திருவாய்மொழி 9-2-4), “உன்னைக்காணக்‌ கருதுமென்கண்ணே’ (திருவாய்மொழி 9-4-1) என்று அவனைக் காண வாசசைப்பட்டுக்‌ கூப்பிட்ட சந்தைகள்‌ அதிலிரட்டி யாகையாலே “கண்டு களிப்பக்‌ கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-7) என்று திருமாலிருஞ்சோலையளவும்‌ அநுபவம்‌ செல்லா நிற்கச்‌ செய்தே பெற்றல்லது தரியாதபடியான பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டு பரமபக்தி யாயிருக்கிறது –

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே 
– -84-குழாங்கள் குழிய குழு-என்கையாலே அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது-ஐய நல்லார்கள் குழிய விழவினும்-பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்–அங்கங்கெல்லாம்-அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-போக்யத்வ ரக்ஷகத்வங்களுக்கு ஸூசகமாய் கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய் ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும் அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும் கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-அடியேன் – ஸ்வாமிக்கு அதிசயத்தைப் பண்ணப் பார்த்தால் அன்றோ மாம்பழ யுண்ணி போலே பேரைச் சுமந்து காண வேணும் என்று கூப்பிடா நின்றேன் அவ்விஷயத்தைக் கிட்டி தூஷிக்கப் பாரா நின்றேன்

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள்
விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-பிரிந்தார்க்கு தரிக்க ஒண்ணாத உம்மை இவளை அறியாது ஒழிந்தால் உம்மை அறியாது ஒழிய வேணுமோ-உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியீரே-காணும் ஆசையுள் நைகின்றாள் – உம்மைக் கிட்டி அணைக்கவோ ஆசைப் பட்டது -ஒரு கால் காண வன்றோ
நைகின்றாள் –-வாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8–சாதனா அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்த்தாரைப் போலெ கூப்பிடா நின்றேன்-எங்கு எய்தக் கூவுவனே –-ஒரு ஷூத்ரன் கூப்பீடு எங்கே பலிக்க -சாபலம் இறே

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-உன்னை-இப்படி பிராப்தனும் போக்யமுமான உன்னை-மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–
மானஸ அநு பவமாதரமாய் -பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாது ஒழிகை அன்றிக்கே மெய்யாகக் காண வேணும் என்று விரும்பா நின்றன –

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-கூவியும் காணப்பெறேன் –-ஸ்வரூபம் பெற்றேன் அல்லேன்-அபிமதம் பெற்றேன் அல்லேன் என்கிறார்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கப் பெற்றிலேன்-மடலூர்ந்தார் பெற்ற பேற்றை பெற்றேன் அல்லேன்-என் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன் -அவன் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன்
உன்னுடைய நீர்மையும் அழித்தேன்-என்னுடைய சேஷத்வத்தையும் அழித்தேன் –-உன கோலமே-இரண்டு தலையையும் அழித்தே யாகிலும் பெற வேண்டும் விஷய வை லக்ஷண்யத்தை சொல்லுகிறது
வ்யதிரேகத்தில் புறம்பே போது போக்குதல் கண் உறங்குதல் செய்யும் விஷயம் அன்று இறே –

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-உன்னை-சர்வ பிரகார வி லஷணனாய் கால த்ரயமும் நீ இட்ட வழக்கான உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–நான் பெரும் நாள் இன்ன நாள் என்ன வேணும் –-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்குச் சொன்னால் போலே சொல்ல வேணும் என்கிறார் –

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-இப்படி விடாயைப் பிறப்பிக்கும் வடிவு -விடாய்த்தார்க்கு காட்ட அன்றோ வடிவு படைத்தது -பக்தா நாம் அன்றோ –காண-காண்கை இறே பிரயோஜனம் –சதா பஸ்யந்தி இறே-கருமுகை மாலை தேடுவார் சூட வன்றோ தேடுவது -சும்மாட்டைக் கொள்ள அன்றே-வாராய்;-இப்போதும் அவன் வரவால் பெறுகை முறை என்கை -வருகிறிலை
கூவியும் கொள்ளாயே.-இஷ் ஷூ த்ர ஜந்துவின் பக்கலிலே நான் செல்லவோ என்று இருந்தாயாகில் என்னை அழைத்துக் கொள்ளலாம் –அதுவும் செய்கிறிலை-ஞாலம் உண்டாய் என்று தொடங்கி-காண வருகிறிலை -கூவியும் கொள்ளுகிறிலை -சீலமில்லா சிறியேனாலும் செய் வினையோ பெரிதால் -என்று அந்வயம்-

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-அறிவு கேட்டை உடையேனாய் முன்னே வந்து நின்றாலும் காண முடியாத படி தடவா நின்றேன்-நத்வா பச்யாமி கௌசல்யே -என்கிறபடியே-எங்குக் காண்பன்-ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க கூப்பிடா நின்றேன் -எங்கே காணப் பெறுகிறேன்-சக்கரத்து அண்ணலையே?–-கையும் திரு வாழியுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் அகப்பட்டது-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
.–4-7-10-வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை
என்-தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது-மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
–5-8-4-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான் வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே
.–5-8-9-வருத்தம் இன்றிக்கே லோகமானது ஆஸ்ரயிக்க என்னுதல் -நித்ய ஸூ ரிகள் நீர்மைக்குத் தோற்று ஏத்தும் படி என்னுதல் -இடம் வலம் கொண்ட போது எல்லாம் திருத்திரை எடுத்தால் போலே லோகம் அடங்க ஏத்தக் கிடந்தாய் என்னுதல் –
கிடந்தாய்! காண வாராயே.–-கண் வளர்ந்து அருளுகிற அழகை அனுபவித்தால்-நடை அழகை அனுபவிக்க வேண்டாவோ -அதீந்திரியமான வடிவை கண்ணுக்கு இலக்காக்கின அருமை யுண்டோ நடக்கையில் –

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே
.–5-9-5-கண்ட போதே நுகரலாம் படி இருக்கை -ரசத்துக்கு மேலே போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை -என்னை சர்வ ஸ்வபஹாரம் பண்ணி -அத்தாலே உஜ்ஜவலனாய் இருக்கிறவனை –என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம் –என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–-நான் பட்டது பட -பிரஜை ஜீவிப்பது காண் என்பாரைப் போலே என் கண்களின் விடாய் தீருவது என்றோ என்கிறாள் -முடியானேயில் கரணங்கள் இ றே -காண விரும்பும் என் கண்களே என்று கண்களும் தாமும் தனித்தனியே விடாய்க்கும் படி இ றே இவருடைய விடாய்-என்னலம் கொள் சுடரை என் கண்களின் விடாய் கெட காணப் பெறுவது என்றோ –

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6–பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இறே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே
வினையேன்- கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–6-9-4-ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்மாதிகள் பெரிய கிளர்த்தியோடே ஜய ஸ் துதி களைப் பண்ணிக் கொண்டு சூழ்ந்து சேவிக்க-விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–ஆகாசம் அவகாசம்எ ல்லாம் அழகு வெள்ளம் இடும்படி என்னுதல் -ஆதித்ய சகாசத்தில் நக்ஷத்ராதிகள் போலே அவர்கள் ஒளி கீழ்ப் பட என்னுதல்-ஒரு நாள் -ஆனைக்கு வந்து தேப்பற்றினார் போலே ஒருநாள் வந்து அருள வேணும் –

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
–6-9-6–என்னைக் கிட்டுக்கைக்கு வருந்தி திரிந்த உன்னைக் காண வேணும் என்று நான் வருந்தி -அத்தலை இத்தலையாய் –எனைநாளும்–அநேக காலமும் -ஒரு நாள் என்னாசையை ஆவிஷ்கரித்து விட்டேனோ-தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–அக்னி சகாசத்திலே மெழுகு போலே -தூர இருந்து அழியாது இருத்தல் -அக்னியில் புக்கு நசித்தல் -செய்யப் பெறாதே இருக்கை -நசையின் ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் ஸைதில்யாம் நித்தியமாய் இருக்கை -ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே யாதநா சரீரம் போலே குளிர்ந்த வழி இல்லாத தேசத்தே எத்தனை நாள் தட்டித் திரியக் கட வேன்-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-நிரதிசய போக்யனாய் இருந்த உன்னை அநாதரித்து புறம்பே ஓர் உப்புச்சாறு அமையும் என்று இருப்பார்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுக்கும் உபகாரகனே-காணுமாறு அருளாயே–எனக்கு கடல் கடைய வேண்டா -வடிவைக் காட்ட அமையும் -இவருக்கு பிராப்யம் அம்ருதம் அன்று –காண்கை -உபாயமும் கடல் கடைகை அன்று –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இ றே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் –-என்று என்றே -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இ றே அத்தை பற்றலாவது –
கலங்கிக்-இப்படி கூப்பிட்டு ஒரு படி செல்லா நின்ற வந்த தாருண த்வனி வழியே ஹ்ருதயத்தில் பிறந்த கலக்கம் ஒருகாலைக்கு ஒரு கால் ஏறி வரா நின்றது -ஜடிலம் சீர வசனம் – கண்ண நீர் அலமர – அகவாயில் கலக்கம் உள் அடங்காமை கண்ண நீராய் ப்ரவாஹியா நின்றது-வினையேன்-இதுக்கு முன்பு அவ்விஷயத்தை பற்றினார்க்கு கலக்கமும் கண்ண நீருள் இல்லை கிடீர் -ஆசா லேசமுடையார் கால்கடையிலே துவளக் கடவ தத்துவத்தை பெறுகைக்கு நான் இங்கனம் கூப்பிடும் படியான பாபத்தை பண்ணினேன்-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1-பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது -சர்வ கந்த என்ன கடவது இறே –வருவானே-வரும் ஸ்வ பாவனே-முன்பு தம் பக்கல் வரும்படியை யுபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறார்-ஒரு நாள்-ஒரு கால் நாக்கு நனைக்க என்பாரை போலே-காண -வந்தால் கொள்ளும் பிரயோஜனம் காணும் அதுவே -ஒரு தேச விசேஷத்திலும் சதா பஸ்யந்தி -தரிசனத்தை இ றே பிரயோஜனமாக சொல்லிற்று-வாராயே-ஆற்றாமை மிக்காலும்-தானே வந்து காட்ட காணும் அதுவே முறை –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனும் ஸ்வாம் –ஏஷ சர்வஸ்வ பூதஸ்து –என்ன கடவது இறே –

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய்
கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2–ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர் –யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜனார்த்தியாய் அழைக்கிறேனோ –

கொண்டல்வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-தூணிலே வந்து தோற்றினால் போல் ஆதல் -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்-தொண்டனேன் -உன் திருவடிகளிலே கைங்கர்யத்தில் சபலனான நான்-உன் கழல் காண-எனக்கு ஜீவனமான திருவடிகளை காண-ஒரு நாள் வந்து தோன்றாயே—பல நாள் வேணும் என்று நிர்பந்திக்கிறேனோ என் சத்தையை நோக்குகைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேணும் –

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே-8-5-10-காலத்தாலும் ஆதஞ்சா நாதிகளாலும் தோற்றுகிற நெய் கறந்த காலத்தில் தோற்றாது இ றே -உன் பக்கல் ந்யஸ்த பரராகை யாகிற ஸம்ஸ்காரத்தால் அல்லது காண வரியை என்கை-உன்னை எங்கே காண்கேனே–பரமபதத்தில் காட்சிக்கு சரீர சம்பந்தம் அற வேணும் -அவதாரத்துக்கு பிற்பாடான ஆனேன் -அர்ச்சாவதாரம் நினைத்தபடி கிடையாது -அந்தர்யாமித்வம் கண்ணுக்கு விஷயம் அன்று -இனி எங்கே காணப் புகுகிறேன் –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11–ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கடவேன்-என்று என்று-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்-எல்லியும் காலையே-–இஹ லோகத்தில் இஜ்ஜன்மத்திலே திவா ராத்திரி விபாகம் இன்றிக்கே பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவர் –ஆளாக் கூப்பிட்டு அழைத்தக்கால் –என்று கூப்பிட வானத்து முகம் காட்டாததால் பிறந்த தன்னுடைய அவத்யத்தை-ஆழ்வார் ஆஸ்ரயித்தார் பக்கலிலே தீருமாயிற்று அவன் -பார்யையோடு வெறுப்புண்டால் அவள் பக்கல் முகம் பெறுகைக்கு பிரஜைகளை ஸ்லாகிப்பாரை போலே –

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4–தெளிந்த நீரை முகக்கையாலே தர்ச நீயமான மேகமானது பவளத்தைப் பூத்தால் போலே யாயிற்று திரு வதரத்தில் பழுப்பு இருப்பது –இவர் சமப்ரமத்தைக் கண்டு அவன் பண்ணும் ஸ்மிதம் இருக்கிற படி –நீ காண வாராயே–நான் காண நீ வர வேணும் -என் எதிரே உன் நடை அழகு காண வேணும் -அவன் கூத்து இருக்கிற படி -வல்லார் ஆடினால் போலே இறே நடை அழகு இருப்பது –

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-அவாக்ய அநாதரா என்கிறபடியே ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத நீ -அனுகூல தர்சனத்தாலே அகவாயில் பந்தம் தோற்ற விக்ருதனாய் ஸ்மிதம் பண்ணி நிற்கும் படியைக் காண வேணும் –பல் நிலா முத்தம்-பல்லாகிற நிலாவை யுடைய திரு முத்து நிரையானது-தவழ் கதிர் முறுவல் செய்து-கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-சங்க சக்ர கதா தர –ஸ்ரீ வத்ஸ வக்ஷ-என்கிற வடிவையுடைய உன்னை-காணக் கருதும் -காண ஆசைப்படா நின்றது -இவ்வஸ்துவைப் பார்த்தால் கண்டு கொண்டே இருக்கை இறே சத்ருசம் -நித்ய ஸூ ரிகளும் சதா தர்சனம் இறே பண்ணுவது –
என் கண்ணே–சம்சாரிகளில் இவர்க்கு உள்ள வியாவ்ருத்தி போருமாயிற்று -இவரில் காட்டில் இவருடைய கண்ணுக்கு –

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2—கண்ணே -எனக்கு த்ருஷ்ட்டி யானவனே –
உன்னைக் காணக் கருதி -நிரதிசய போக்யனான உன்னைக் காண ஆசைப்பட்டு -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே -என்கிறார் –சஷூச் ச த்ரஷ்டவ்யஞ்ஜ நாராயணா -என்னக் கடவது இறே -அவன் தன்னாலே அவனைப் பெறும் அவர் இறே இவர் -ப்ராப்யத்தில் நியதி போலே இறே இவர்க்குப் ப்ராபகத்தில் நியதியும் –-என் நெஞ்சம்-இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்ன வேண்டும்படியான நெஞ்சம் –-எண்ணே — கொண்ட சிந்தையதாய்–எண் கொண்ட மநோ ரதத்தை யுடைத்தாய் -பஹு மநோ ரதங்களைப் பண்ணி -காண வேணும் -காணாதே பட்ட துக்கத்தை போக்க வேணும் -அடிமை செய்ய வேணும் -என்று –-நின்று இயம்பும்-நிரந்தரமாக கூப்பிடா நிற்கும் -வாக் விருத்தியும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும் –

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே
-10-8-7-கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –-கண்ணுள் நின்று அகலானே--நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்திலும் நின்றும் போகிறிலன் -விஷய பிரவணரை போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு போகாதாப் போலே -இப்படி அவனை அனுபவித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி மேல் ஒரு குறை யுண்டோ –

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

அநந்தரம் பரஞான அவஸ்தை ஆகிறது இன்னது என்கிறார்–

இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்‌.–சூரணை -231-

அதாவது–அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -2-3-10–என்று – அடியார்கள் குழாங்களைக் கூடுவது என்று கொலோ -10-9-11–என்று ஆசைப் பட்ட படி – அர்ச்சிராதி கதியாலே -தேச விசேஷத்திலே -போய் -பகவத் ஸ்வரூபாதிகளை பரி பூர்ண அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளின் திரளிலே கூடி இருந்தாராக தரிசித்துப் பேசின – சூழ் விசும்பணி முகில் -10-9- -பூரணமான பர ஞானம் என்கை —

சூழ்விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கி” (திருவாய்மொழி 10-9-1 என்று தொடங்கி “அந்தமில் பேரின்பத்தடியரோ டிருந்தமை” (திருவாய்மொழி 10-9-11) என்று அர்ச்சிராதி மார்கத்தையும்‌ மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் தேஸ விஸேஷ ப்ராப்தியையும்‌ பகவதநுபவத்தையும்‌ பகவத் ஸ்வரூப ரூப குண விபூ,திகளை ஸாக்ஷாத்கரித் தநுபவிக்கிற நித்ய ஸூரிகளோடு ஏக ரஸராய்க்‌ கொண்டிருந்த நுபவிக்கிற ப்ரகாரத்தையும்‌ யதாவாக ஸாக்ஷாத்கரிக்கையாலே சூழ்விசும்பணிமுகில்‌ பூர்ண பரஜ்ஞாநமாய்‌ இருக்கிறது –

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—அடியார்கள் குழாங்களையே –-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –
குழாங்களையே –-திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ-நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே

சூழ் விசும்பணி முகில் -10-9-வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம் எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும்-நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் –நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் -பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்
-தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது- அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–
10-9-2-மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச் செய்கிறார் –

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே
–10-9-3-ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
-10-9-4-மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப் பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே
–10-9-5-ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–
10-9-6-ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–
10-9-8-பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை யருளிச் செய்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
–10-9-9-ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார்

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
–10-9-10-சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–
10-9-11-நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் 

அநந்தரம் பரம பக்தத்யவஸ்தை இன்னது என்கிறார் —

முடிந்த அவாவென்றது பரமபக்தி–சூரணை -232-

அதாவது-அப்படி தர்சித்த அது தான் மானச அனுபவமாய் -பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமையாலே – பெரு விடாய் பிறந்து கூப்பிட்டுத் தரிக்க மாட்டாமல் – திரு வாணை இட்டுத் தடுத்து -பெறா ஆணை அல்லாமை சாதித்து -பேற்றோடு தலைக் கட்டின – முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து–10-10-11 -என்கிற-முனியே நான் முகன் -பக்தியினுடைய சரம அவதியான பரம பக்தி என்கை —

இப்படி ஸாக்ஷாத்கரித்த விது மாநஸாநுபவமாகையாலே யதா மநோரதாநுபவ ஸித்‌தியாகத்‌ திருவாணை யிட்டுத்‌ தடுத்துப்‌ பெருங் கூப்பீடாகக்‌ கூப்பிட்டுப்‌ பெற்றாலல்லது தரிக்க வொண்ணாத படியாய்‌ “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து” (திருவாய்மொழி 10-10-11) என்கிற “முனியே நான்முகன்‌” (திருவாய்மொழி 10-10) பரமபக்தி தஸையாயிருக்கிறது –

பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால் தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டு கையும் இன்றிக்கே – தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு மிகவும் கூப்பிட்டு ––சாகாம்ருக ராவண சாயகார்த்தா ஜகமுச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம் -என்கிறபடியே தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக – பரம தயாளுவான சர்வேஸ்வரன் இவற்றிலும் காட்டிலும் தான் நொந்து – பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்தாலே போலே தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து -இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே அத்திரளிலே புகப் பெற்று- என் அவா அறச் சூழ்ந்தாயே என்றும் – அவாவற்று வீடு பெற்ற என்றும் இவர் வாயாலே சொல்லும் படி இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து அருளினான் –என்கிறார் –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
–10-10-11-பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்கள் –1- முதல் திருவாயமொழியில் நாராயண சப் தார்தத்தை அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில் –வண் புகழ் நாரணன் -என்று பிரயோகித்து –அமைவுடை நாரணன் -என்றும் –செல்வ நாரணன் -என்றும் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் –திரு நாரணன் -என்றும் –நாராயணன் நாங்கள் பிரான் -என்றும் -சொல்லிக் கொடு போந்து –திண்ணம் நாரணமே என்றும் –வாழ் புகழ் நாரணமே -என்றும் தலைக் கட்டுகையாலே –அவனுக்கு அசாதாரணமான திரு நாமம் இதுவே என்னும் இடம் தோற்றுகிறது--2-முதலிலே மலர் மகள் விரும்பும் -என்றும் திருவுடை அடிகள் என்றும் –கமல மலர் மேலே செய்யாள் -என்றும் –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்றும் -சொல்லிக் கொடு போந்து –திருவாணை நின்னாணை கண்டாய் –என்றும் கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டுகையாலே –ஸ்ரீ மானான நாராயணனே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று இவருக்கு பக்ஷம் என்னும் இடம் தோற்றுகிறது -இவ்வர்த்தம் உபநிஷத் பிரசித்தம் -அநந்ய பாரமான நாராயண அநுவாகத்திலே-நாராயண சப் தத்தாலே சர்வாதிகனைச் சொல்லி –ஹ்ரீச்சதே லஷ்மீ ச்ச பத்நவ் -என்று உத்தர நாராயணத்திலே சொல்லிற்று –-3-முதலிலே மயர்வற மதிநலம் அருளினன் என்றும் –எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -என்றும் சொல்லி –நாலு பிரயோகம் எடுத்து சரணம் புக்கு -தேவிமாராவாரிலே -தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த -என்றும் சொல்லிக் கொடு போந்து –இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்றும் தலைக் கட்டுகையாலே –அம் மிதுனத்தைப் பெறுகைக்கு சாதனமும் அவனுடைய நிர்ஹேதுக கிருபை என்னும் இடம் தோற்றிற்று--4-முதலிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி –என்று தொடங்கி –அடியார்கள் குழாங்களை— உடன் கூடுவது என்று கொலோ என்று பிரார்த்தித்து –பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையில் ததீய சேஷத்வத்தை பரக்கத் சொல்லி -அடியாரோடு இருந்தமை என்று தலைக் கட்டுகையாலே பகவத் சேஷத்த்வத்தின் யுடைய எல்லை யாகிறது ததீய சேஷத்வம் என்னும் இடம் தோற்றிற்று –இவ்வர்த்தங்கள் இப்பிரபந்தத்துக்கு பிரதானம் -என்று கருத்து –-பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இறே 

இந்த பரபக்தியாதிகளின் வேஷத்தை பகவத் வசனத்தாலே தர்சிப்பிக்கிறார்

இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்‌.–சூரணை-233-

அதாவது-இந்த-பரபக்தி -பரஞான -பரம பக்தி தசைகள் –-பக்த்யா த்வய அந்ய யா சக்ய அஹமேவம் விதோர்ஜுனா ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்வேன ப்ரேவேஷ்டுஞ்ச பரந்தப – ஸ்ரீ கீதை-11-54-என்று
அர்ஜுனனைக் குறித்து திருத் தேர் தட்டிலும் —-பரபக்தி பரஞான பாமபக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று- பிரார்த்தித்த ஸ்ரீ பாஷ்யகாரரைக் குறித்து–மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சம்சயஸ் சுகமாஸ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று சேர பாண்டியனிலும் அவன் அருளிச் செய்த ஞான தர்சன பிராப்த்ய அவஸ்தைகள் என்கை —இத்தால் –பகவத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராம் படியான பரபக்தி -ஞான அவஸ்தையாகவும் – பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசித தமமாக சாஷாத்கரிக்கிற -பர ஞானம் -தர்சன அவஸ்தையாகவும் – அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்க பெறாவிடில் முடியும்படியான பரம பக்தி -ப்ராப்ய அவஸ்தையாகவும் -சொல்லப்படும் என்ற படி —

“ஜ்ஞாதும்‌ த்‌,ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப” (கீதை 11-54) என்றிந்த பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை ஜ்ஞாந தர்ஸந ப்ராப்தி அவஸ்தைகள்‌ என்கிறார்‌. எங்ஙனே என்னில்‌ பகவத்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுகதுக்கராம்படியான ப்ரேம பூர்வகமான பரபக்தி ஜ்ஞாந தஸையாயும்‌, பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம்‌ தர்ஸந தஸையாயும்‌ ஸாக்ஷாத்கார ஸமநந்தரம்‌ அப்போதே அநுபவியா விடில்‌ முடியும்படியான பரமபக்தி ப்ராப்தி தஸையாயுமிருக்கிற அவஸ்தா விஸேஷம்‌ என்கிறார்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் – தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் – நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால் அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்

அதஸ் த்வம் தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ்ஸ்வசூரணை -23-அதஸ் –ஆகையாலே–த்வம் – இப்படிப் பட்ட நம்முடைய மெய்ம்மைப் பெரு வார்த்தையைக் கேட்டு -என்னையே விஸ்வசித்து இருக்கிற நீர்–தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ –மத் -என் விஷயமாக-தவ-உமக்கு-தத்வத -மெய்யாக உண்டான-மெய்யே என்னுடைய ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலேபக்த்யா தவ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப-ஸ்ரீ கீதை -11-54- என்கிற ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ் ஸ்வ-சம்சயம் இல்லாதவராய்க் கொண்டு சுகமே வர்த்தியும்-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 ) 25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –(229)ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 9, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

இனிமேல் இவர் பிரதமத்தில் –இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று ஆர்த்தராய் சரணம் புக்க போதே விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல் இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே-வைக்கைக்கு ஹேது பல உண்டு என்னும் அத்தையும் -அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –இனிமேலிவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தராய்க்‌ கொண்டு ஸரணம்‌ புக்க போதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக் கடியேதென்னில்‌ அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச் செய்து அவை எல்லாவற்றிலும்‌ இவர்க்குப்‌ பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான்‌ என்கிறார்‌.

உறாமையோடே உற்றேன்‌ ஆக்காது ஒழிந்தது, நாடு திருந்த நச்சுப்‌ பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம்‌ தலைக் கட்ட, வேர்சூடுவார்‌ மண் பற்றுப் போலே என்னுமவற்றிலும்‌ இனி இனியென்று இருபதின் கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி அதிகார பூர்த்திக் கென்னுமது முக்‌யம்‌.–சூரணை-229 –-

அதாவது – பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய் திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-என்று திரு அடிகளைக் கிட்டி – ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

“பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கும்‌ அழுக்குடம்பபும்‌ (இன்னின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌-1) என்று முதலிலே அவித்‌யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்‌களை விடுவிக்க வேணுமென்று ஆர்த்தராய்‌ ஸரணம் புக்க விவர்க்கு “உற்றேன்‌ உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம்‌ வேண்டுவதெந்தாய்‌” (திருவாய்மொழி 10-8-10)என்று திருவடிகளைக்‌ கட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப்‌ பெற்றேன்‌ என்று பேசும் படியாகத்‌ தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவவும்‌ ஈஸ்வரன்‌ வைக்கைக்கு ஹேதுவென்னென்னில்‌,

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1–அடியேன் செய்யும் விண்ணப்பமே –
வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று –நீர் ஆர் -என்றான்-அடியேன் -என்கிறார் இவருடைய நான் -இருக்கிறபடி  – (அடிச்சியோம் அடியேன் என்றே எப்பொழுதும் இவர் )நான் என்றாகில் இறே –
சொன்ன வார்த்தை -என்பது அடியேன் -என்கையாலே – செய்யும் விண்ணப்பம் -என்கிறார்-அடியேன் உடைய விஞ்ஞாபனம்-இவருடைய உக்தியிலே இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள அடியேன் -என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்-செய்யும் –இவ் வபேஷைக்கு மேல் இல்லை –யாம் உறாமை-என்று பன்மையாய் இருக்க-அடியேன்-என்று ஒருமையாலே ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய் பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –இப் பாட்டில் விரோதி நிவ்ருத்தியையும் அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும் நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும் அடியேன் -என்று ஸ்வரூபத்தையும் மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –அர்த்த பஞ்சகம்-தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரயம் அனைத்தும் இதிலே உண்டே

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இ றே –புநரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –-எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம்

தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —

(நாடு இருந்த) அவன்‌ ஸ்ருஷ்ட் யவதாரங்களாலும்‌ திருத்த வொண்ணாத ஜகத்தை ஊரும் நாடு முலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்னும்படி திருத்துகைக்காகவும்‌,

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற
க் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2–தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இ றே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ – அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் –அரவிந்த லோசனன் என்றும் –மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் –பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –

(நச்சுப் பொய்கை யாகாமைக்கு) இவரபேஷித்த போதே) கார்யம்‌ செய்யில்‌ நச்சுப்‌ பொய்கை போலே பகவத்‌ விஷயத்தில்‌ இழிவாரில்லை என்றும்‌ 

தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
பரிசமாப்தம் ஆகைக்காகவும் –

(ப்ரபந்தம்‌ தலைக்‌ கட்ட) தன்னோடு பிறரோடு வாசியற எல்லார்க்கும்‌ போக்‌யமுமாய்‌ பாவநமுமாய்‌ இருக்கிற இப்ப்ரபந்தங்களை இவரைக்‌ கொண்டு தலைக் கட்டுவித்துக்‌ கொள்ளுகைக்கும்‌,

வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே – ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே – இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

(வேர் சூடுவார்‌ மண் பற்றுப்‌ போலே) வேர்‌ சூடுவார்‌ அதில்‌ மண்பற்றுக்‌ கழற்றதாப் போலே, சரம ஸரீரமான இவருடைய விக்‌ரஹத்திலுண்டான வ்யாமோஹத்தாலே விட மாட்டாமை யாலும்‌ வைத்தான்‌ என்கிற இந்த ஹேதுக்களெல்லாவற்றிலும்‌

1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி இவளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-
4-இனி அவர் கண் தாங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-

(இனியினி யென்றிருபது கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி) அவித்‌யாதி துக்கம்‌ “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌ -1) என்று தொடங்கி “இனிநெஞ்சமிங்குக்‌ கவர்வது யாமிலம்‌” (திருவிருத்தம்‌ 4), “இனி வளை காப்பவரார்‌’ (திருவிருத்தம்‌ 13),“இனியுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” (திருவிருத்தம்‌ 62), “இனியவர் கண்‌தங்காது” (திருவாய்மொழி 1-4-4),“இனி யுனது வாயலகிலின்னடிசில்‌ வைப்பாரை நாடாயே” (திருவாய்மொழி 1-4-8), 

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1–இனி –ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு–நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு-உன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
  —-4—-அவனோடு ஸ்பர்சம் உண்டான திருத்துழாய்க்கு கவர்வதற்கு நெஞ்சு இங்கே இல்லையே–குளிர்ந்த திருத் துழாய்க்கு-இனி நெஞ்சம்–மரம் போலே திமிர்த்து இருந்தாலும் ஆவது உண்டோ-ஓரடி முற்பட பெற்றது இல்லை-ஒப்பூணாக உண்ணலாயிற்று-உங்கள் அபேஷிதம் இல்லை(ஸாயுஜ்யம் -ஸோ ஸ்னுதே -அங்கு குணம் அனுபவம் சேர்ந்து – அது போல் இங்கு இல்லையே )-இங்குக் –-விளக்கு ஏற்றிக் காட்டுகிறாள்-கவர்வது யாமிலம் – திருவடி பாடே போம் இத்தனை-பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்-தண்ணம் துழாய்க்கு கவர்வதான நெஞ்சுக்கு யாம்  இனி இங்கே உடையோம் அல்லோம்–இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில் அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே கர்த்தவ்ய அம்சம் இல்லை என்று கருத்து-அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே-மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே -இனி கவர்வது யாமிலம் –என்று ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு-கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்-பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை இனிக் கழலாமல் நோக்குபவர் யார்-கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் )

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
 – 62–வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-பிரபல விரோதி யுண்டாய் ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று-ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும் ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது –இவ் வவஸ்தையில் இவள் நிறை அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு உன்னருளால் அன்றி இல்லையே அத்தால் அவ்வவஸ்தை யானானாள் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ 
–1-4-4-இனி-பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8-இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண் சரம தசையில் தம்முடைய திரு ஆராதனப் பிள்ளையைப் பார்த்து –வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே– என்று அருளிச் செய்தார் பெரிய திருமலை நம்பி 

6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
7-எந்நாள் யான் உன்னை இனி வந்துகூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-

இனி யெம்மைச்‌ சோரேலே” (திருவாய்மொழி-2-1-10), “எந்நாள்‌ யானுன்னை யினி வந்து கூடுவனே” (திருவாய்மொழி 3-2-1),“ஆவி காப்பாரினியார்‌” (திருவாய்மொழி 5-4-2),

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10–இனி எம்மைச் சோரேலே –-இதுக்கு முன் நீ போய் நின்று பட்டது போறும்-இனி நீ என்னை விடாது ஒழிய வேணும் என்கிறார்

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன்
–3-2-1-இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்-யான் –உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –உன்னை-என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-இனி வந்து கூடுவேன்-நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் –

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –
3-2-9—உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்-எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே--எல்லாரையும் அடிமை கொண்டவனை-அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-உனக்கே சேஷமாக்கிக் கொண்ட பின்பு
இனி என் என்றுமாம் -அப்போது உன்னைக் காட்டி சம்சாரிகள் நோவை மீட்க ஒன்னாதான பின்பு இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என் என்கை-என் ஆரமுதே -உன் போக்யதையை எனக்கு காட்டினவனே-நீ நிரதிசய போக்யனாய் இருக்க நான் இவர்கள் நடுவே இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டு அருள வேணும் –

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-விரஹத்துக்கு சளையாதே ஆவி -பிரிவே ஹேதுவாக நூறே பிராயம் என்னும் ஆவி-இனி –யார் -ஆபத்துக்களில் உதவிப் போருமவன் உதவாத பின்பு பாதகர் என்னை நோக்கவோ –

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -இனி காப்பார் யார் –

11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-

நெஞ்சிடர்‌ தீர்ப்பாரினியார்‌‘(திருவாய்மொழி 5-4-9), “இனி யுன்னை விட்டொன்று மாற்ற கிற்கின்றிலேன்‌”(திருவாய்மொழி 5-7-1), “தரியேனி” (திருவாய்மொழி 5-8-7), “உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4), “அத்தனையா மினி யென்னுயிரவன்‌ கையதே” (திருவாய்மொழி 9-5-2),

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இ றே ஆதித்யன் போக்குவது –நின்று ருகுகின்றேனே.–-நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்-விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்
அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1–இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே-இனி -என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையா
யே.–5-8-7—தரியேன் இனி
மாதா பிதாக்கள் சந்நிஹிதரான பின்பு -மாதா பிதாக்கள் அசந்நிதியில் பசி பொறுக்கலாம்-சந்நிதி யுண்டானாலும் பசி பொறுக்கப் போகாது இறே -தறியாமை எவ்வளவு போரும் என்ன-உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.--ஜென்ம சம்பந்தம் அற்று உன் திருவடிகளை பெறப் பற்றாது -முலையைக் கொடுத்து சிகித்சிப்பாரை போலே திருவடிகளைத் தந்து விரோதிகளை போக்க வேணும் –

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-

16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்று
இப்படி இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து – பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை -ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது –ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி — பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது – ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் – இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –

நாரைக் குழாங்கள்காள்‌ பயின்றென்னினி(திருவாய்மொழி 9-5-10),“இனியிருந்தென்னுயிர்‌ காக்குமாறென்‌” (திருவாய்மொழி-9-9-2), “இனிப் பிறவி யான் வேண்டேன்‌” (திருவாய்மொழி 10-6-1) “இனி நான்‌போகலொட்டேன்‌’ (திருவாய்மொழி 10-10-1), “முடிவிலீயோ” (திருவாய்மொழி
-10-10-9), “சுடர்ஞான இன்பமேயோ” (திருவாய்மொழி 10-10-10) என்னுமளவாக
இருபதின்கால்‌ கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து இவருடைய பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை ப்ரகாஸிப்பிக்கைக்காக வைத்தான்‌ என்கிற விதுவே தாத்பர்யமென்கிறார்

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-இனி அத்தனை யாகாதே என்கிறாள் –
என் உயிர்-அவன் கையதே–என்னுடைய பிராணன் அவன் கைப் பட்டது -அவன் நினைவேயாய்த் தலைக் கட்டின பின்பு என்னுடைய பிராண ரக்ஷணத்துக்கு உங்கள் கால் பிடிக்க வேண்டா வாகாதே –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10—நீர் நிலங்களிலே வர்த்திப்பதாய் -தொடங்கின கார்யம் முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைத்தான நாரைக் குழாங்கள்-பயின்று என் இனி-திரண்டு பிரயோஜனம் என் -நான் அவன் கருத்தை பின் செல்ல நினையாத அன்று அன்றோ உங்கள் மந்திரத்துக்கு பிரயோஜனம் உள்ளது -முதலிகள் திரள் திரளாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்க்கைக்கு விரகு பார்த்தால் போலே -இவை திரள் திரளாக இருந்து தன்னையும் அவனையும் பிரிக்கைக்கு விசாரிக்கிறன என்று இருக்கிறாள் -அவன் வேண்டுவரைச் சேர்க்கையும் வேண்டாதாரை முடிக்கையும் திர்யக்குகள் பணி என்று இருக்கும் இறே -ராமாவதார வாசனையால் –

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ —இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் -என்கிறபடியே அத்தலையிலே ஆற்றாமையும் –வாலி மாட்டான் படை கூடிற்று -என்றால் போலே ரக்ஷணத்தில் உத்யோகத்தையும் -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ –இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இறே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –பிறவி யான் வேண்டேன்வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –-நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு -ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இறே –ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் —என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6—மனக்கு ஆராமை -மனஸ்ஸூக்கு ஆராமை –மனக்கு -மனஸ்ஸூக்கு —மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே –இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-பிரகிருதி பிராக்ருதங்களுக்கு நியாமகமாய் -பிரதானமாய் -ஒப்பின்றிக்கே இவற்றை அடைய பத்துத் திக்கிலும் ஞானத்தால் வியாபித்து நித்தியமாய் இருந்துள்ள ஆத்மவஸ்துவுக்கு நிர்வாஹகன் ஆனவனே –-முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்–முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–முதல் தனி வித்தாய் –முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயாய் -இருக்கிற -முதல் தனி யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–கார்ய காரண உபய அவஸ்தமான சித் அசித்துக்குகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவு போராது -அசாதாரண விக்ரஹ யுக்தனாய் ஒரு தேச விசேஷத்திலே இருக்கும் இருப்பை அனுபவிக்க வேணும் என்றதாய்த்து

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சிங்கள ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் ––ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

August 9, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் –உபாசனம் த்யானம் பக்தி போன்ற ப்ரஹ்ம வித்யைகளும்
அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் படிக்கப் படுகின்றன – இதில் 26 அதிகரணங்கள்/ 64 ஸூத்ரங்கள் உள்ளன –-இதுவரை பத்து பாதங்களால் மோக்ஷத்திற்கான தத்வ ஞானம் உறுதி செய்யப் பட்டது மேல் வரும் ஆறு பாதங்களாலே பர ப்ரஹ்ம பிராப்தி என்னும் பலத்துடன் அதுக்கு ஹேதுவான உபாஸனத்தையும் விளக்கப் பட இருக்கிறது-ப்ரஹ்ம உபாஸனத்தில் இச்சை பிறக்க ப்ரஹ்மமே பலம் தருவது என்பது வரை கூறப்பட்டது-இப்போது அந்த உபாசன விஷயத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்ட குண விசேஷங்களை மற்றோர் வித்யையிலும் அனுசந்தானம் செய்ய ஏற்றுக் கொள்வதாகிற குண உப ஸம்ஹாரத்தையும் கூறப்பட்ட குணங்களை அதே வித்யையில் மட்டும் அனுசந்தானம் செய்வது என்னும் விகல்பத்தையும் தீர்மானிக்க பேத அபேத சிந்தை செய்யப் படுகிறது-வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு படாதவைகள் என்றால் குணங்களை உப சம்ஹாரம் செய்யலாம் வித்யை களுக்குள் பேதம் உண்டு என்னில் விகல்பம் தான் என்று கருத்து-இந்த பேத அபேதங்கள் இப்பாதத்தில் ஒத்தவை அல்ல ஆயினும் அவை குண ஸம்ஹாரத்திற்கு நிமித்தங்களே-இந்தப் பாதத்தில் குண சம்ஹாரம் உண்டா இல்லையா என்பது விசாரிக்கப் படுவதால்இதற்கு குண சம்ஹார பாதம் என்ற பெயர் ஆயிற்று

முதல் அதிகரணம் -சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்- 5 ஸூத்ரங்கள்–
வைச்வாநர வித்யை-தஹர வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும்
அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள்
வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -1-ஸூத்ரம்-
சாந்தோக்யம் கௌஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை என்பது
ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் 7 -ஸூத்ரங்கள்-
ப்ரஹ்ம ஆனந்த மயம் -அவிகாராய -ஞான மயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய
ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –1-ஸூத்ரம்-
ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் –1-ஸூத்ரம்–
சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

ஏழாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –3 -ஸூத்ரங்கள்-
ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை –
கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

எட்டாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –1-ஸூத்ரம்-
கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் –
ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ வித்யைகளில் ரூபம் வேறுபடுவதால்
அவை வெவ்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம்—1-ஸூத்ரம் –
தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் —1-ஸூத்ரம் –
புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை விட்டு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று
அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம்–5 -ஸூத்ரங்கள்- –
உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -13–அநிய மாதிகரணம் —1-ஸூத்ரம்-
அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –2–ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்—1-ஸூத்ரம்–
அபஹத பாப்மா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின்
ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -19-நாராயண அநுவாகம்
ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -7-ஸூத்ரங்கள் –
அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் -2-ஸூத்ரங்கள் –
சாதன தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே
ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -2-ஸூத்ரங்கள் –
சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -1 ஸூத்ரம் –
சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசகமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம்-1 ஸூத்ரம் –
சத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம
வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -25-விகல்பாதிகரணம்-2-ஸூத்ரங்கள் – –
ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம்–6 ஸூத்ரங்கள்-
உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது-

————

இனி, ஸாத₄ந அத்யாயம் என்ற இந்த மூன்றாவது அத்யாயத்தின் முக்கியமான விஷயத்தை விவரிக்கிறார். ஸாத₄நம் என்றால் மார்கம் -வழி என்று பொருள். மோக்ஷத்தை அடைவதற்கான வழியை ஆராயும் அத்யாயம் தான் ஸாத₄ந அத்யாயம்–உபநிஷத்துக்களில் மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன் பர ப்ரஹ்மமான ஶ்ரீமந் நாராயணனைத் த்யானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. த்யானம் என்றால் பரமாத்மாவை இடை விடாமல் அன்போடு தொடர்ந்து நினைப்பது. இந்த த்யானம் தான் பக்தி மார்கம் என்றும் உபாஸனம் என்றும் வித்யை என்றும் கூறப்படுகிறது.-ப்ரஹ்மத்தை உபாஸனம் செய்ய பலவிதமான வித்யைகள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ளன. பரமாத்மாவுக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளபடியால், அதில் ஒரு சில குணங்களோடு அவரைத் த்யானிப்பது ஒரு வித்யை , வேறு சில குணங்களோடு கூடியவராக த்யானிப்பது வேறொரு வித்யை ஆகும். சாண்டில்ய வித்யை , த₃ஹர வித்யை , ஸத்₃வித்யை , பூ₄ம வித்யை , அந்தராதி₃த்ய வித்யை முதலான 32 வித்யைகள் உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ளன.

இப்போது இந்த மூன்றாவது பாதத்திற்கு கு₃ண உப ஸம்ஹார பாதம் என்று பெயர். கு₃ணம் என்றால் பரமாத்மாவின் பண்புகள். உப ஸம்ஹாரம் என்றால், ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை மற்ற இடங்களில் சேர்த்துக் கொள்வது. இந்தப் பாதத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி யாதெனில் – உபநிஷத்துக்களில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தப் பகுதியில் சொல்லப்பட்ட வித்யை யில் மட்டும்தான் சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (விகல்பம்) ? அல்லது வேறு இடத்தில் சொல்லப்பட்ட வித்யையிலும் இவற்றை சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (உப ஸம்ஹாரம்)?

இதை முடிவு செய்ய,வேறொரு ஆராய்ச்சி தேவை – வெவ்வேறு உபநிஷத்களில் கூறப்பட்டுள்ள ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றா? வேறா? என்று. இரண்டு இடங்களில் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்று தான் என்றால், உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், அதாவது, ஓரிடத்தில் சொல்லப்பட்ட குணங்களை மற்றோர் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வித்யைகள் வெவ்வேறானவை என்றால், விகல்பம் தான், அதாவது, அந்தந்த குணத்தை அங்கங்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்-எனவே குணங்களுக்கு உப ஸம்ஹாரமா விகல்பமா என்ற அறிவதற்காக வித்யைகள் ஒன்றா வேறா என்று ஆராயப்படுகிறது.

பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் வேறுபாடு
இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன்னால், வேதத்தில் சொல்லப்பட்ட யாகம், ஹோமம், தானம் முதலான கர்மங்களைப் பற்றி ஆராய்வதற்காக மஹரிஷி ஜைமிநி எழுதிய பூர்வ மீமாம்ஸா அல்லது கர்ம மீமாம்ஸா என்று அழைக்கப்படும் ஸாஸ்த்ரத்திலிருந்து ஒரு சில கருத்துக்களை நாம் அறிந்து கொண்டால் மேலே செய்யப் போகும் ஆராய்ச்சிக்கு உதவும்.

பூர்வ மீமாம்ஸையின் இரண்டாம் அத்யாயத்தில், (பேத அத்யாயம்)வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களின் (செயல்களின்) வேறுபாட்டை எப்படி அறிய வேண்டும் என்று ஆராய்கிறார் ஜைமிநி. அந்தக் கர்மத்தைக் காட்டிலும் இந்தக் கர்மம் வேறு என்று அறிய ஆறு ப்ரமாணங்கள் (கருவிகள்) உள்ளன என்று அவ் விடத்தில் நிரூபிக்கிறார்.
1-சப்₃தா₃ந்தரம்
– சப்தாந்தரம் என்றால் ’வேறு சொல்’. வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும்
செயல்கள் வெவ்வேறு கர்மங்களாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – யாகம் செய், ஹோமம் செய், தானம் செய் என்ற கட்டளைகளில், யாகம் தானம் ஹோமம் என்ற வெவ்வேறு சொற்களால் சொல்லப் படுகிற படியால் அந்தக் கர்மங்கள் வெவ்வேறு தான். யாகமும் ஹோமமும் ஒன்றாகாது.

2-அப்₄யாஸ: – அப்₄யாஸம் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லுதல். வேதத்துக்கு ஒரு பண்பு உள்ளது –
’ஒவ்வொரு வாக்கியமும் புதிதான அர்த்தங்களை மட்டுமே சொல்லும், முன்னமே அறியப்பட்ட அர்த்தங்களைச் சொல்லாது’ என்று. ஆகையால், வேதத்தில் எங்காவது ’யாகம் செய்’, ’யாகம் செய்’ என்று இரண்டு கட்டளைகள் காணப்பட்டால், அவை இரண்டும் ஒரே யாகத்தைச் செய்யச் சொல்கின்றன என்று கொள்ள முடியாது, இரண்டாவது வாக்கியம் வீணானபடியால். எனவே , இரண்டு வாக்கியங்களால் கட்டளையிடப்படும் யாகங்கள் இரண்டும் வெவ்வேறு என்றே கொள்ள வேண்டும்.

3-ஸம்க்₂யா – ஸம்க்₂யா என்றால் எண்ணிக்கை . வேதத்தில் கர்மங்களைக் கட்டளை யிடும் போதே , அவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யோடு சேர்த்துச் சொல்லி யிருந்தால், கண்டிப்பாக அவ் விடத்தில் கர்மங்களில் வேறுபாடு உள்ளது என்று தான் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு – ’மூன்று ஹோமங்களைச் செய்’ என்ற வேதம் சொன்னால், அது வெவ்வேறு ஹோமங்கள் இங்கு சொல்லப் படுகின்றன என்று தான் ஏற்க வேண்டும்.

4-ஸம்ஜ்ஞா – ஸம்ஜ்ஞா என்றால் பெயர். இரண்டு வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் யாகங்கள்
வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். பெயர் என்பது குறிப்பிடும் வசதிக்காகத் தான். எனவே ஒரு யாகத்துக்கு ஒரு பெயர் போதுமானது. எனவே வெவ்வேறு பெயர்களை உடைய யாகங்கள்
வெவ்வேறாகத் தான் இருக்கும்.

5- கு₃ண: – குணம் என்றால் பண்பு. சில பண்புகளோடு கூடிய ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு,அதற்குப் பிறகு முரண்பட்ட வேறொரு பண்போடு கூடிய யாகத்தை வேதம் கூறினால், அது கண்டிப்பாக
வேறொரு யாகமாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – “பாலைக் கொண்டு ஹோமம் செய்” என்று ஒரு புதிதான ஹோமத்தைச் சொல்லி விட்டு, அதற்குப் பின் “தயிரைக் கொண்டு ஹோமம் செய்” என்று வேதம் கூறினால், இந்த இரண்டவது வாக்கியத்தில் சொல்லப்படும் ஹோமம் வேறொரு ஹோமமாகத் தான் இருக்க முடியும், முதல் ஹோமத்தில் பால் என்ற பொருள் முன்னமே சொல்லப் பட்டு விட்டபடியால்.(இந்த்ரனைக் குறித்து யாகம் செய் -ஸூர்யனைக் குறித்து யாகம் செய் என்னும் பொழுதும் வேறே வேறே யாகங்களையே குறிக்கும்)

6- ப்ரகரணாந்தரம் ् – ப்ரகரணாந்தரம் என்றால் வேறு ப்ரகரணம். வேதத்தில் பல பகுதிகள் உள்ளன.ஒரே விஷயத்தைப் பற்றி (யாகமோ , ஹோமமோ , வேறொன்றோ ) பேசக் கூடிய வேதப் பகுதிக்குப் ப்ரகரணம் என்று பெயர். ஒரு ப்ரகரணத்தில் ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு, வேறொரு ப்ரகரணத்தில் அதே போல் தோற்றும் யாகத்தைச் சொல்லி யிருந்தாலும், அந்த யாகம் வேறொன்று என்று தான் கொள்ள வேண்டும், ப்ரகரணம் மாறிவிட்டபடியால்.(சைந்தவம் உப்புக்கும் குதிரைக்கும் பெயர் -இரண்டும் கடலில் இருந்து வந்ததால் -சாப்பிடும் பொழுது சொன்னால் உப்பையே குறிக்கும் -ராஜா வேட்டைக்குச் செல்லும் பொழுது அதே சொல்லுக்கு குதிரையைக் குறிக்கும்)

இப்படி யாகம் முதலான கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிய ஜைமிநி கூறுய கருவிகளைக் கொண்டு உபநிஷத்துக்களில் உபாஸனங்களுக்குள் இருக்கும் வே றுபாட்டையும் அறியலாம். இது இந்த பாதத்தில் செய்யப்பட உள்ளது

பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் ஐக்யம்
இது வரை இரண்டு கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிவதற்கான வழிகளைப் பூர்வ மீமாம்ஸையில் சொன்னபடி பார்த்தோம். அதே பூர்வ மீமாம்ஸையில் எப்போது இரண்டு வித்யைகள் ஒன்று தான் (ஐக்யம்) என்று கொள்ள வேண்டும் என்பதையும் மஹரிஷி ஜைமிநி கூறுவதால், அதுவும் நமக்கு இப்போது தேவையானது.

பூர்வ மீமாம்ஸையில் இரண்டாம் அத்யாயத்தின் நான்காவது பாதத்தில் இரண்டாவது அதிகரணம் சாகா₂ந்தராதி₄கரணம் (2-4-2-) என்றும், அதில் சொல்லப்பட்ட ந்யாயம் ஸர்வ சாகா₂ ப்ரத்ய்ய ந்யாயம் என்றும் கூறப்படுகிறது. அந்த அதிகரணத்தின் சுருக்கம் பின் வருமாறு –
பூர்வபக்ஷம் – வேதங்களில் இரண்டு வெவ்வேறு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்கள் வெவ்வேறாகத் தான் இருக்க வண்டும், ஏனென்றால் அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற ப்ரமாணம் உள்ளது. ஒரு சாகையில் சொல்லப்பட்ட அதே கர்மத்தை வேறொரு சாகையில் வேதம் கட்டளை யிட்டால், சொன்னதையே திரும்பச் சொல்வதாக ஆகுகையால் வேதத்துக்கு தோஷம் வரும். எனவே , இரண்டும் வெவ்வேறு தான்.(ரிக் வேதத்தில் 9 சாகைகள் -யஜுர் வேதத்தில் 15-20 சாகைகள் -சாமவேதத்தில் 1000 சாகைகள் உண்டு)

ஸித்தாந்தம் – ஏகம் வா ् ஸம்யோக₃ ரூப சோத₃நா ஆக்₂யா அவிசேஷாத்-
ஏகம் வா
– இரண்டு சாகைகளிலும் சொல்லப்பட்ட கர்மம் ஒன்று தான்
ஸம்யோக₃ -பயனும் ரூப வடிவமும்
சோத₃நா -கட்டளை வாக்கியமும்
ஆக்₂யா -பெயரும்
அவிசேஷாத் -மாறாதபடியால்

இரண்டு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்களுக்கும் பெயரும், பயனும், வடிவமும் (எந்த தேவதையைக் குறித்து எந்தப் பொருளைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும் என்பதும்), கட்டளை யிடும் வாக்கியமும் ஒன்றாக இருந்தால், அவ் விரண்டு கர்மங்களும் ஒன்று என்று தான் கொள்ள வேண்டும்

அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற தோஷமும் வராது. ஏனென்றால், ஒருவர் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது தோஷமல்ல; ஒருவர் ஒரு விஷயத்தை ஒருவருக்கே திரும்பத் திரும்பச் சொல்வது தான் தோஷம். இங்கு இரண்டு சாகைகளையும் கற்கும் மக்கள் வெவ்வேறான படியால், அவரவர்க்கு அந்தந்த சாகையில் உள்ள ஒரு வாக்கியம் ஒரே முறை தான் இக் கர்மத்தை உபதேசிப்பதால், அப்யாஸமே இவ் விடத்தில் இல்லை . எனவே இந்தக் கர்மங்களில் வேறுபாடில்லை , இரண்டும் ஒரே கர்மம் என்று தான் கொள்ள வேண்டும்

3-3-1-ஸர்வ வேதாந்த ப்ரத்யயாதி₄கரணம்-பல உபநிஷத்துக்களில் ஒரே கர்மம் -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –-ஓர் உபநிஷத்தில் ஒரு வித்யையில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை
மற்றொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட வித்யையில் சேர்த்துக் கொள்ளுதல் உப ஸம்ஹாரம் ஆகும். அந்தந்த இடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தந்த இடத்திலுள்ள வித்யையில் மட்டும் வைத்து த்யானித்தல் விகல்பம் ஆகும்.இவற்றில் எது சரி என்ற ஆராய்ச்சி இந்த பாதத்தில் முக்கியமானது. அதற்காக, இரண்டு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட வித்யைகள் வெவ்வேறா ? அல்லது ஒன்றா ? என்று ஆராய வேண்டும். இந்த முதல் அதிகரணத்தில் இதைத்தான் வ்யாஸர் ஓரிடத்தில் ஆராய்கிறார். ஒர் வித்யை என்றால் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், வெவ்வேறு என்றால் விகல்பம் ஏற்படும் என்று கருத்து

ஸந்தேஹம் – சாந்தோக்யம் மற்றும் ப்ருஹதாரண்யக உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள வைஶ்வாநர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒரே வித்யையா? அல்லது அவை வெவ்வேறு வித்யைகளா ?

பூர்வ பக்ஷம் – பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்டுள்ை நியாயங்களின் படி, அவை வெவ்வேறு வித்யைகள் தான்.முதலில், அப்₄யாஸம் அதாவது மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்படுவது இங்கு காணப்படுகிறது. வேதம் ஒரே செயலை இரண்டு முறை கட்டளை யிட முடியாது. எனவே இவை வெவ்வேறு வித்யைகள் தான்-மேலும், இந்த உபதேசங்கள் இரண்டும் வெவ்வேறு ப்ரகரணங்களில் கூறப்பட்டிருப்பதாலும், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணத்தால் அவற்றை ஒரே வித்யை என்று கொள்ள
முடியாது. ஆக, வெவ்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வித்யைகள் வெவ்வேறானவையே –

பூர்வ மீமாம்ஸை சாஸ்த்ரத்தில் எற்கனவே ஆராயப்பட்ட இவ் விஷயத்தை இங்கு ப்ரஹ்ம ஸூத்ரங்களில் மறுபடியும் ஆரய்வதற்குக் காரணம் – இங்கு ஸந்தேகத்துக்கு அதிகப்படியான ஒரு காரணம் உள்ளது.-தேஷாமேவ ஏதாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் வதே₃த ஶிரோ வ்ரதம் விதி₄வத் யைஸ்து சீர்ணம்) என்று ஸ்ருதி கூறுகிறது. அதாவது, “விதிப்படி ஶிரோ வ்ரதம் என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையை உபதேசிக்க வேண்டும்” என்று கூறுகிறது.-இந்த ஶிரோ வ்ரதம் என்பது அதர்வண வேத சாகையைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு விசேஷ விரதமாகும். எனவே , இந்த வித்யை அதர்வண வேத சாகயைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று இந்த விதி காட்டுகிறது.-எல்லாச் சாகைகளிலும் கூறப் படும் வித்யை ஒன்றே என்று ஏற்றுக் கொண்டால், மற்ற வேத சாகைகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படியானால், இந்த விதி அதர்வண வேதத்தாருக்கு மட்டுமே என்று கூறியதற்குப் பொருள் இருக்காது. ஆகவே , இந்த வித்யைகள் ஒன்றல்ல; வெவ்வேறானவையே

வெவ்வேறு உபநிஷத்துக்களிலும் ஒரே வித்யையே -ஸித்தாந்தம் – (1) ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம் சோத₃நாத்₃ யவிசேஷாத்
ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம்
— எல்லா வேதாந்தங்களிலும் அறியப்படும் (வித்யை ஒன்றே-ஏகமே );
சோத₃நா — கட்டளை
ஆதி — பெயர், வடிவு, பலன் ஆகியவற்றில்;
அவிசேஷாத் — வேறுபாடு இல்லாததால்.

பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்ட ஸர்வ சாகா₂ ப்ரத்யய ந்யாயம் இங்கும் பொருந்துகிறது. எனவே , பல்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வைஶ்வாநர வித்யை போன்ற வித்யைகள், வெவ்வேறு வித்யைகள் அல்ல; ஒரே வித்யையின் பல்வேறு விளக்கங்களே .
சோத₃நா (கட்டளை ): சாந்தோக்ய உபநிஷத்திலும், வாஜஸநேய சாகையிலும் (வைஶ்வாநரம் உபாஸ்தே ) அதாவது “வைஶ்வாநரனை உபாஸிக்க வேண்டும்” என்ற ஒரே கட்டளை கூறப்படுகிறது.
ரூபம் (உபாஸனத்தின் வடிவு):-உபாஸனத்தின் என்பது த்யானம். அதில் வேறுபாடு என்பது த்யானிக்கப்படும் பொருளின் வேறுபாட்டால் மட்டும் தான் ஏற்படும். இந்த வித்யையிலோ இரண்டு உபநிஷத்துக்களிலும் உபாஸிக்கப்பட வேண்டியவர் உலகங்களை யெல்லாம் தனக்கு உடலாகக் கொண்ட ஒரே வைஶ்வாநர ப்ரஹ்மம் தான். எனவே , வித்யைகளின் வடிவமும் ஒன்றே .
ஆக்₂யா (பெயர்): எல்லா இடங்களிலும் இந்த உபாஸனை வைஶ்வாநர வித்யை என்ற ஒரே பெயரால் அறியப்படுகிறது.
ஸம்யோகம் (பலன்): எல்லா இடங்களிலும் இந்த வித்யையின் பலன் ப்ரஹ்ம ப்ராப்தி (ப்ரஹ்மத்தை அடைதல்) என்பதே .-
ஆகவே , பல்வேறு வேத சாகைகளில் கூறப்பட்டாலும், “அந்த வைஸ்வாநர வித்யை தான் இதுவும்” என்கிற ப்ரத்யபி₄ஜ்ஞா என்னும் அறிவு ஏற்படுவதால் வைஶ்வாநர வித்யை ஒன்றே .-

2-பே₄தா₃த் ந இதி சேத் ஏகஸ்யாமபி
பேதா₃த்
— (அப்₄யாஸம், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணங்களால்) வித்யைகளில் வேறுபாடு இருப்பதால்;
— (வித்யைகள்) ஒன்றல்ல;
இதி சேத் — இவ்வாறு கூறினால்; ஏகஸ்யாமபி — ஒரே வித்யையானலும் (அவை இருக்கலாம்).

பூர்வ பக்ஷியின் கேள்வி – திரும்பத் திரும்பச் சொல்வது வீணானபடியால் இவை யிரண்டும் ஒரே வித்யையாக இருக்க இயலாது

ஸித்தாந்தியின் பதில் – இங்கு அப்₄யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்னும் தோஷமே இல்லை .

சிரோ வ்ரதம் த்யானத்தின் அங்கமா? கல்வியின் அங்கமா?
ஒரே நபருக்கே , ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்பட்டால் மட்டுமே அது அப்₄யாஸம் ஆகும். அது போலவே , ஒரே நபருக்கே வெவ்வேறு ப்ரகரணங்களில் ஒரே மாதிரியான வித்யைகள் மீண்டும் கட்டளை யிடப்பட்டால் மட்டுமே , அதனால் புதிய வித்யை ஒன்று கூறப்படுகிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.-ஆனால், வெவ்வேறு சாகைகளை ஒருவரே அத்யயனம் செய்யப் போவதில்லை . எனவே சாந்தோக்யத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது, ப்ருஹதாரண்யகத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது. எனவே , அங்கு திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்ற தோஷமே இல்லை .-அதனால் இவை வெவ்வேறு வித்யைகள் என்று கொள்ள எந்தக் காரணமும் இல்லை

3-ஸ்வாத்₄யாயஸ்ய ததா₂த்வே ஹி ஸமாசார அதி₄காராச் ச ஸவவச் ச தந் நியம:
“ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கே இந்த வித்யை உரியது” என்று ஒரு நியமத்தால் வித்யைகள் வேறுபடுகின்றன என்று கூறுவது பொருந்தாது. ஏனெனில், அந்த நியமம் வித்யைக்காக அல்ல; வேத அத்யயனத்திற்காகவே விதிக்கப்பட்டது.”
ஹி— ஏனெனில்;
ஸ்வாத்₄யாயஸ்ய — வேத அத்யயனத்திற்கே ;
ததா₂த்ரே — சிரோ வ்ரதம் அங்கமாக இருப்பதற்காக (உபதேசம்); —
மேலும்;
ஸமாசார — ஸமாசார கிரந்தத்தில்; அதி₄காராத் —வேத வ்ரதம் என்று இது குறிப்பிடப்படுவதால்;
ஸவவத் — ஸவ ஹோமங்களைப் போல; தந் நியம: — அந்த நியமம் பொருந்துகிறது-

பூர்வ பக்ஷீ, “ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையே உபதேசிக்க வேண்டும்” என்ற ஸ்ருதியைக் காட்டி, அதர்வண வேதத்தில் கூறப்படும் வித்யை மற்ற சாகைகளில் கூறப்படும் வித்யைகளிலிருந்து வேறுபட்டது என்று வாதிட்டார்.

(அத்யயனம் -கற்பது-இது வேறு -இதற்க்கு மேல் -அனுஷ்டானம் நிலை வேறே)

அது சரியல்ல. ஶிரோ வ்ரதம் என்பது வித்யையின் அங்கம் அல்ல; வேத அத்யயனத்தின் அங்கம். வேதத்தைப் படிப்பதற்குத் தேவையான ஸம்ஸ்காரத்தை அளிப்பதற்காகவே இந்த விரதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையே (நைதத் அசீர்ண வ்ரத: அதீ₄தே ) என்ற ஸ்ருதி, “இந்த விரதத்தை அனுஷ்டிக்காதவன் இதை அத்யயனம் செய்யக் கூடாது” என்று கூறுவதன் மூலம் தெளிவு படுத்துகிறது. மேலும், ஸமாசாரம் என்னும் கிரந்தத்திலும், (இத₃மபி வேத வ்ரதேந வ்யாக்₂யாதம்)
என்ற விடத்தில் இந்த சிரோ வ்ரதம் வேத வ்ரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், (உபாசன விரதம் அல்ல -வேத விரதம் என்றும் நிரதேசிப்பதால் )இந்த நியமம் வித்யைக்கானது அல்ல.-அத₂ர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ஸவ ஹோமங்கள் என்பவை எப்படி அந்த சாகைகளைப் படிப்பவர்களுக்கு மட்டுமானதோ அதே போல் இந்த சிரோ வ்ரதமும். ஆக, இது வித்யையின் பகுதி அல்ல. அதனால் இரண்டிடங்களும் ஒரே வித்யையே கூறப்படுகிறது

வேதமே உப ஸம்ஹாரத்தைக் காட்டுகிறது
4– த₃ர்ஸயதி ச –
“மேலும் (ஸ்ருதி) காட்டுகிறது”
இது வரை , யுக்தியின் மூலம் பல்வேறு வேத சாகைகளில் கூறப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிறுவப்பட்டது. இப்போது, அதையே ஸ்ருதி ப்ரமாணத்தாலும் ஸூத்ரகாரர் உறுதிப்படுத்துகிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில்,(தஸ்மிந் யத₃ந்த: தத் விஜிஞாஸி தவ்யம்) என்று “இதயத்துக்குள் இருக்கும்
பரமாத்மாவுக்குள் உள்ளதை த்யானிக்க வேண்டும்” என்று கூறி, (கிம் தத₃த்ர வித்₃யதே யத₃ந்வேஷ்டவ்யம்), அதாவது “அந்தப் பரமாத்மாவுக்குள் உள்ளது எது?” என்று கேட்டுக் கொண்டு, எட்டு (அபஹத பாப்மாதி )கல்யாண குணங்களைச் சொல்கிறது.(இதுவே தஹர வித்யை )

அதே போல், தைத்திரீய உபநிஷத்திலும், அதே வித்யையைக் குறிப்பிட்டு, “्(தஸ்மிந் தத₃ந்த: தது₃பாஸி தவ்யம்), அதாவது “பரமாத்மாவுக்குள் உள்ளதை உபாஸிக்க வேண்டும்” என்று மட்டும் கூறுகிறது. உள்ளே இருப்பது என்ன என்று ஆராயவே இல்லை . இதற்கு ஒரே கருத்து தான் இருக்க முடியும் – இதே வித்யை தான் சாந்தோக்யத்திலும் சொல்லப்பட்டுள்ள படியால், அங்கிருந்து உள்ளே இருப்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் என்று. ஆகவே , அந்த வித்யைகள் ஒன்றே

5–உப ஸம்ஹார: அர்தா₂பே₄தா₃த் விதி₄சேஷவத் ஸமாநே ச
ஸமாநே —
(வித்யை ) ஒன்றாக இருக்கும் போது;
— கண்டிப்பாக;
உப ஸம்ஹார: — (குணங்களைச் ) சேர்த்துக் கொள்ள வேண்டும்;
விதி₄சேஷவத் — அந்தந்த விதியின் அங்கங்களைப் போல;
அர்தா₂பே₄தா₃த் — பயனில் வேறுபாடு இல்லாததால்;

பல உபநிஷத்துகளில் கூறப்படும் உபாஸனை ஒன்றே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த உபாஸனையில் கூறப்படும் கல்யாண குணங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றில் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும்.-ஒரு உபநிஷத்தில் ஒரு வித்யையை விதித்து விட்டு, அங்கேயே சில குணங்களைச் சொன்னால், அந்த குணங்களை யெல்லாம் கண்டிப்பாக அந்த வித்யையில் த்யானிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிறோம், அந்த குணங்கள் அந்த விதிக்கு சேஷமாக (அங்கமாக -பகுதியாக -உதவுவதாக) இருப்பதால். இதைத் தான் வ்யாஸர் ’விதி₄சேஷம் போல்’ என்கிறார். அதே போல், வேறொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட குணமும் இந்த உபாஸனத்துக்கு அதே போன்ற உதவியையே செய்கிற படியால், பயனில் எந்த வேறுபாடும் இல்லை . இதைத் தான் வ்யாஸர் ’அர்த்தத்தில் (பயனில்) வேறுபாடு இல்லாதபடியால்) என்கிறார்-

ஆக, இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்றானபடியால், இரண்டிடத்தில் சொல்லப்பட்ட குணங்களையும் சேர்த்துத்தான் அந்த வித்யையில் பரமாத்மாவைத் த்யானம் செய்ய வேண்டும் என்று நிச்சயமாயிற்று.

3.3.2 அந்யதா₂த்வாதி₄கரணம்-உத்கீத வித்யைகள் வெவ்வெறு ஆனவை -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –பெயர், பயன், கட்டளை வாக்கியம் மற்றும் உபாஸனத்தின் வடிவம் ஒன்றாக
இருந்தால் வெவ்வேறு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட வித்யைகளும் ஒன்றே என்றும், ஆகையால் இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட குணங்களை உபஸம்ஹாரம் செய்ய வேண்டும் (சேர்த்துக் கொண்டு உபாஸனம் செய்ய வேண்டும்) என்றும் முந்தைய அதிகரணத்தில் கூறப்பட்டது. இனி, அடுத்து வரும் சில அதிகரணங்களில், ஒரு சில வித்யைகளை எடுத்துக் கொண்டு, அவற்றுக்குப் பெயர், பயன், கட்டளை வாக்கியம் & வடிவம் ஒன்றாக உள்ளனவா அல்லது வெவ்வேறா என்று ஆராயப் படுகிறது, அவை ஒரே வித்யையா வெவ்வேறு வித்யைகளா என்று அறிவதற்காக.

(திருஷ்ட்டி விதிகள்-இஹ லோக பயன்களுக்காக உபாசனம் -இவற்றுக்கு அங்கமாகவும் உத்கீத உபாசனம் உண்டு -அடுத்து –ப்ரஹ்ம உபாசனை-பரம புருஷார்த்த பலனுக்காக -இரண்டு விதங்கள் – உண்டு –இந்த அதிகரணத்தில் திருஷ்ட்டி விதியைப் பற்றி இரண்டு உபநிஷத்துக்களில் உள்ளவை பற்றிய ஆராய்ச்சி செய்யப்படுகிறது -உத்கீதம் -பாடல் வடிவுடன் சாம மந்த்ரம் பற்றிய வித்யை –)

விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 1ஆம் அத்யாயம் 3ஆம் ப்ராஹ்மணத்தில் “உத்₃கீ₃த₂ வித்₃யை” த்வயாஹ ப்ராஜாபத்யா தே₃வாஶ்சா ஸுராஶ்ச । தேஹ தே₃வா ஊசுர்ஹந்தா ஸுராந்யஜ்ஞ உத்கீ₃தே ₂நாத்யயாமேதி ॥-ப்ரஜாபதியின் படைப்புகளான தேவர்களும் அஸுரர்களும் இரு பிரிவினராக இருந்தனர். தேவர்கள் யாகத்தில் உத்கீ₃தத்தைப் பயன்படுத்தி அஸுரர்களை வெல்வோம் என்று கூறினர்.

தேஹ வாசமூசுஸ் த்வம் ந உத்கா₃யேதி । தமபி₄த்₃ருத்ய பாப்மநா ஆவித்₄யந் ॥-அவர்கள் வாக்கு என்ற பேச்சுப் புலனை உத்கீ₃தம் பாடுமாறு கேட்டனர். ஆனால், அஸுரர்கள் வாக்கைத் தோஷத்தால் பாதித்தனர். இதே போல் சக்ஷுஸ் (கண்), ஸ்ரோத்ரம் (காது), மனது ஆகியவற்றையும் அஸுர்ர்கள் பாதித்தனர்.(இதனால் தான் கயிற்றைக் கண்டு பாம்பு என்று பிரமிக்கிறோம் -இதே போல் மனதிலும் ப்ரமம் ஏற்படுகிறது)

அத₂ஹ இமம் ஆஸந்யம் ப்ராண மூசுஸ் த்வம் ந உத்கா₃யேதி । ஸ யாதா₂ஶ்மாந ம்ருத்வா லோஷ்டோ வித்₄வம் ஸேத ஏவம் ஹைவ வித்₄வம்ஸமாநா விஷ்வஞ்சோ விநேஶு: । ததோ தே₃வா அப₄வந் பராʼஸுரா: ॥-அடுத்து தேவர்கள் முக்ய ப்ராணனை (மூச்சுக் காற்றை) பாடும்படி வேண்டினார்கள். அஸுரர்கள் ப்ராணனைத் தாக்கினர்.ஆனால், கல்லில் மோதிய மண் கட்டி சிதறுவதைப் போல், அவர்களே அழிந்து சிதறினர். இதனால் தேவர்கள் வெற்றி பெற்றனர்; அஸுரர்கள் தோல்வி யடைந்தனர் –

ப₄வத் யாத்மநா பரா அஸ்ய த்₃விஷந் ப்₄ராத்ருவ்யோ ய ஏவம் வேத₃ ॥-இவ்வாறு உத்கீதத்தை மூச்சுக் காற்றாக உபாஸிப்பவர் உயர்ந்தவராகிறார்; அவரது பகைவன் தோற்றுப் போகிறான்-

சாந்தோக்ய உபநிஷத்தின் 1ஆம் அத்யாயம் 2 ஆம் கண்டத்தில் “உத்₃கீ₃த₂ வித்யை” –தே₃வாஸுரா ஹ வை யாத்ர ஸம்யேதிரே … தே₃வா உத்கீ₃த₂மாஜஹ்ரு: அநேந ஏநாந் அபி₄ப₄விஷ்யாம இதி ॥தேவர்களும் அஸுரர்களும் ஒருவரை யொருவர் எதிர்த்து போரிட்ட போது, தேவர்கள், உத்கீ₃தத்தைக் கொண்டு
அஸுரர்களை வெல்வோம் என்று எண்ணினர்.

முதலில் உத்கீதத்தை வாக் (பேச்சுப் புலன்), சக்ஷுஸ் (கண்), ஸ்ரோத்ரம் (காது), மனது ஆகியவையாக உபாஸனம் செய்தனர், ஆனால் அஸுரர்களை வெல்ல முடியவில்லை

அத₂ஹ ய ஏவாயம் முக்₂ய: ப்ராணஸ்தமுத்கீ₃த₂ முபாஸாஞ்சக்ரிரே । தம் ஹாஸுரா ருத்வா வித₄வம் ஸு: யதா₂ அஶ்மாநமாக₂ணம் ருத்வா வித₄வம் ஸே தைவம் ॥--பின்னர் இந்த உத்கீ₃தத்தை முக்கிய ப்ராணனாக (மூச்சுக் காற்றாக) உபாஸித்தனர். அஸுரர்கள் அதைத் தாக்கிய போது,கல்லில் மோதிய மண் கட்டி சிதைவதைப் போல் அவர்களே அழிந்து போனார்கள்-

யதா₂ அஶ்மாநம் ஆக₂ணம் ருத்வா வித்₄வம் ஸத ஏவம் ஹைவ ஸ வித்₄வம் ஸதே ய ஏவம்விதி₃ பாபம் காமயதே-இப்படி உத்கீதத்தைப் ப்ராணனாக உபாஸிப்பவனுடைய பகைவன் கல்லில் மோதிய மண் கட்டி போல் அழிகிறான்-

ஸந்தேகம்ப்ருஹதாரண்யக உபநிஷத்திலும் சாந்தோக்ய உபநிஷத்திலும் கூறப்படுபவை இரண்டு வெவ்வேறு உத்கீ₃த₂ வித்யைகளா? அல்லது ஒன்றா

பூர்வ பக்ஷியின் வாதம்–பூர்வ பக்ஷம் – இரண்டு இடங்களிலும் கூறப்படும் வித்யைகள் ஒன்றே . பெயர், பயன், கட்டளை , வடிவம் ஒன்றானதால்.-இரண்டு இடங்களிலும் பலன் ஒன்றே — சத்ருக்களை வெல்வது;-இரண்டு இடங்களிலும் ரூபமும் (வடிவமும்) ஒன்றே –உத்கீதத்தைப் ப்ராணனாக உபாஸனம் செய்வது தான்.-இரண்டு இடங்களிலும் சோத₃நா எனப்படும் கட்டளையும் ஒன்றே .-மேலும், இரண்டுமே உத்கீ₃த₂ வித்யை என்ற ஒரே பெயரால் அழைக்கப் படுவதால் ஆக்₂யையும் ஒன்றே

1–அந்யதா ् ₂த்வம் ஶப்₃தா₃த் இதி சேத் ந அவிஸேஷாத்
அந்யதா₂த்வம்
–ரூபத்தில் வேறுபாடு உள்ளது
சப்₃தா₃த் -சொற்களில் வேறுபாடு இருப்பதால்
இதி சேத் ந – எனவே வித்யைகள் ஒன்றல்ல என்று கூறினால், அது சரியல்ல; அவிஸேஷாத் –-வேறுபாடு இல்லாததால்-

ஆஷேபம் – ப்ருஹதா₃ரண்யகத்தில்-(தேப்₄ய ஏஷ ப்ராண உத₃கா₃யத்) என்று, உத்கீ₃தத்தைப் பாடுபவரைத் தான் ப்ராணனாக (மூச்சுக் காற்றாக) உபாஸிப்பது கூறப்பட்டுள்ளது.
சாந்தோக்யத்தில் (ய ஏவாயம் முக்₂ய: ப்ராணஸ்த முத்கீ₃த₂ம் உபாஸாஞ் சக்ரிரே ) என்று, உத்கீ₃தத்தையே ப்ராணனாக உபாஸிப்பது கூறப்படுகிறது. எனவே , இரண்டிடங்களிலும் உபாஸனத்தின் ரூபம் வேறுபடுவதால், வித்யைகள் வெவ்வேறு.

குடத்தையைப் பற்றிய ஞானமும் துணியைப் பற்றிய ஞானமும் வேறுபாடு – விஷயீகரிக்கும் பொருளின் வேறுபாட்டால் ஞானத்தில் வேறுபாடு போல் இங்கும் –

பூர்வ பக்ஷியின் பதில் – வேறுபாடு இல்லை . ஓரிடத்தில் முன்புள்ள வாக்கியத்துக்கு ஏற்பத்தான் பின்புள்ள வாக்கியங்களுக்குப் பொருள் கூற வேண்டும். இங்கு ப்ருஹதாரண்யகத்திலும் தொடக்கத்தில் உத்கீ₃தத்தைக் கொண்டு சத்ருக்களை வெல்வது என்பதே கூறப்படுகிறது. ஆகையால், (தேப்₄ய ஏஷ ப்ராண உத₃கா₃யத்) என்று பின்பு வரும் வாக்கியத்தில் உத்கீதத்தைப் பாடுபவர் கூறப்பட்டிருந்தாலும், (உத்கீதத்தை மூச்சுக்காற்று பாடியது -ப்ரஹதாரண்யம் -தேவர்கள் பிராணனாக த்யானம் செய்தார்கள் -சாந்தோக்யம் -ஆகையால் வடிவத்தில் வேறுபாடு -சொல்லைக் கொண்டு அறிகிறோம்) அங்கும் உத்கீதத்தையே ப்ராணனாக த்யானிப்பது தான் சொல்லப்படுவதாகக் கொள்ள வேண்டும். உத்கீதத்தைப் பாடுபவர் எப்படி உத்கீதமாக இருக்க முடியும்? இருக்கலாம். சமைக்கப்படும் அரிசி மிக நன்றாக இருந்தால், “அரிசியே தன்னைச் சமைத்தது, நான் ஒன்றுமே செய்யவில்லை ” என்று கூறுவது போல், பாடப்படும் உத்கீதமே இங்கு பாடுபவறாகச் சொல்லப் படுவதில் தவறில்லை . எனவே இரண்டு உபநிஷத்துக்களிலும் வடிவம் ஒன்றே –(குடத்தையைப் பற்றிய ஞானமும் துணியைப் பற்றிய ஞானமும் வேறுபாடு – விஷயீகரிக்கும் பொருளின் வேறுபாட்டால் ஞானத்தில் வேறுபாடு போல் இங்கும் -)

(அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -ராமன் காட்டுக்குப் போனார் என்று உபக்ரமித்து தொடங்கி அவர் சூர்ப்பணகையின் காது மூக்கை அறுத்தார் என்றால் லஷ்மணனைக் கொண்டு அறுக்கப் பண்ணினார் என்றே கொள்ள வேண்டும் -பிரகரண பலத்தால்-இரண்டு இடங்களிலும் தொடக்கத்தில் உத்கீதத்தைக் கொண்டு அவர்களை வெல்வோம் என்றே உள்ளது -)

வடிவத்தில் வேறுபாடு உள்ளது-ஸித்தாந்தம் – 2-ந வா ப்ரகரண பே₄தா₃த் பரோவரீயஸ்த்வாதி₃வத்
ந வா
-அவ்வாறல்ல;
ப்ரகரண பே₄தா₃த் – தொடக்கம் வேறுபடுவதால் (வித்யையின் வடிவமும் வேறுபடுகிறது)
பரோ வரீையாஸ்த்வாதி₃வத் -பரோ வரீயஸ்த்வம் முதலானவற்றை த்யானிக்கும் உபாஸநங்கள் போல்
இங்கு ப்ரகரணம் என்றால் ப்ரக்ரமம், உபக்ரமம் அதாவது தொடக்கம் என்று பொருள். ப்ருஹதாரண்யகத்திலும்-சாந்தோக்யத்திலும் தொடக்கம் வேறுபடுவதால் வித்யைகளின் வடிவம் மாறுவதால் வித்யைகள் வெவ்வேறு தான்.

சாந்தோக்யத்தில் (தஸ்யை வாக்ஷரஸ்யோப வ்யாக்₂யாநம் ப₄வதி) அதாவது “ஓம் என்ற அக்ஷரத்தைப் பற்றின கதை இது” என்று கூறி விட்டு, மேலே தேவர்கள் அஸுரர்களைத் தோற்கடித்தது கூறப்படுகிறது.-எனவே , பாடப்படும் உத்கீதத்தின் ஒரு பகுதியான ஓம் என்ற ப்ரணவத்தை மட்டும் ப்ராணனாக உபாஸிப்பது தான்- சாந்தோக்யகத்தில் விதிக்கப்படுகிறது. ஆனால் ப்ருஹதா₃ரண்யகத்தில், இதைப் போல் தொடக்கத்தில் எந்த வாக்கியமும் இல்லாததால்,முழு உத்கீ₃தத்தையும் பாடுபவராகிய உத்காதாவைப் ப்ராணனாக உபாஸிப்பது தான் கூறப்படுகிறது.
எனவே, உபாஸிக்கப்படும் பொருளிலேயே வேறுபாடு இருப்பதால், இவை ஒரே வித்யை அல்ல.

ப்ருஹதாரண்யகத்தில் உத்கீதத்தைப் பாடியவரைப் ப்ராணனாக த்யானிப்பது சொல்லப்படவில்லை , உத்கீதத்தையே ப்ராணனாக த்யானிப்பது தான் கூறப்படுகிறது, தொடக்கத்திலிருக்கும் வாக்கியத்தோடு முறண்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக – என்று பூர்வ பஷி கூறி யிருந்தார். இது தவறானது. தொடக்கத்தில் உள்ள “உத்கீதத்தைக் கொண்டு அஸுரர்கணை அழிக்க நினைத்தார்கள்” என்பதற்கும், இறுதியில் ’உத்கீதத்தைப் பாடுபவரைப் ப்ராணனாக நினைக்க வேண்டும்’ என்பதற்கும் முரண்பாடே இல்லை . பாடுபவர் இருந்தால் பாடப்பட்ட உத்கீதமும் இருக்குமே

பரோவரீயஸ்த்வாதி₃வத் – ப்ரணவத்தை பரமாத்மாவாக உபாஸிக்கும் வித்யைகளில், ஓரிடத்தில் அவர் ஹிரண்மய புருஷர் (தங்கம் போன்ற திருமேனி உணடயவர்) என்றும் மற்றோர் இடத்தில் “பரோவரீயஸ்த்வம்” (உயர்ந்தவர்களை விடச் சிறந்தவர்) என்ற குணத்தோடு கூடியவர் என்றும் கூறப்படுகிறார். இங்கு உபாஸிக்கப்படும் பொருள் ஒன்றாக இருந்தாலும், குணங்களில் வேறுபாடு இருப்பதால் வித்யைகள் வேறுபட்டவையே . அப்படி யிருக்க, இங்கு உபாஸிக்கப்படும் பொருளிலேயே வேறுபாடு இருக்கும் போது, இரண்டு வித்யைகளும் ஒன்றாக இருக்க இயலாது.

பெயர் ஒன்றானாலும் வித்யைகள் வேறாகலாம்
3-ஸம்ஜ்ஞாதஶ் சேத் தது³க்தம், அஸ்தி து தத₃பி
ஸம்ஜ்ஞாத:
— பெயர் ஒன்றாக இருப்பதால்;
தத் — வித்யைகள் ஒன்றே ;
உக்தம் வசத் — என்று கூறப்படது என்றால்;
தத் – அந்தப் பெயர் ஒற்றுமையும்;
அபி –வித்யைகள் வேறுபட்டிருந்தாலும்; அஸ்தி து — இருக்கிறதன்றோ .

ஒரே பெயர் இருப்பதால் மட்டுமே இரண்டு வித்யைகளும் ஒன்றே என்று முடிவு செய்ய முடியாது. உதாரணமாக, நித்ய அக்னிஹோத்ரம் மற்றும் குண்ட பாயின மயன அக்னி ஹோத்ரம் ஆகிய இரண்டிற்கும் “அக்னி ஹோத்ரம்” என்ற ஒரே பெயர் இருக்கிறது; ஆனால் அவை வெவ்வேறு கர்மங்கள். அதே போல்,சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் கூறப்படும் பல் வேறு வித்யைகளுக்கும் “உத்₃கீ₃த₂ வித்யை” என்ற ஒரே பெயர் பயன்படுத்தப்படுகிறது.

பூர்வ பக்ஷியின் கேள்வி: சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரணவத்தை மட்டும் பற்றின உபாஸனம் முந்தைய பகுதியோடு முடிந்து, இந்த உபாஸனம் முழு உத்கீதத்தைப் பற்றியதாக இருக்கலாமே ?

ஸித்தாந்தியின் பதில் – 4-வ்யாப்தேஶ்ச ्ஸமஞ்ஜஸம் –“மேலும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் இதே விதமாக இருப்பதால், இவ்வாறு கொள்வதே பொருத்தமானது.”
சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் இப்போது ஆராயப்படும் வித்யைக்கு முன்னும் பின்னும் வரும் வித்யைகளில் எல்லாம் உத்கீ₃தத்தின் ஒரு பகுதியாகிய ப்ரணவமே உபாஸிக்கப்பட வேண்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த வித்யையிலும், உத்கீ₃தம் என்ற சொல் ப்ரணவத்தையே குறிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது.

உத்கீதம் முழுவதையும் குறிக்கும் ’உத்கீதம்’ என்ற சொல், அதன் ஒரு பகுதியான ப்ரணவத்தை மட்டும் எப்படிக் குறிக்க முடியும்? இது சாத்தியமே . ஒரு துணியின் ஒரு பகுதி எரிந்தாலும், “துணி எரிந்து விட்டது” என்று சொல்வது போல். எனவே , சாந்தோக்யத்தில் ப்ரணவம் மட்டும் ப்ராணனாக உபாஸிக்கப்பட வேண்டியதாகவும், ப்ருஹதா₃ரண்யகத்தில் முழு உத்கீ₃தத்தைப் பாடுபவர் ப்ராணனாக உபாஸிக்கப்பட வேண்டியதாகவும் கூறப்படுவதால், உபாஸனையின் வடிவத்தில் வேறுபாடு உள்ளது. ஆகையால், இவை இரண்டும் வெவ்வேறு வித்யைகள் என்பது நிரூபிக்கப்பட்டது.

3-3-3-ஸர்வாபே₄தா₃தி₄கரணம்-மூன்று இடங்களிலும் ஒரே ப்ராண வித்யை -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –-முந்தைய அதிகரணத்தில் உத்கீதம் என்ற மந்த்ரப் பகுதியைப் ப்ராணனாகத் த்யானிக்கும் வித்யை ஆராயப்பட்டது. இப்போது, ப்ராணனையே நேரடியாக த்யானிக்கும் வித்யை ஆராயப்படுகிறது

விஷய வாக்யம் – ப்ராண வித்யை சாந்தோக்ய உபநிஷத்தின் 5ஆம் அத்யாயத்தின் 1ஆம் கண்டத்திலும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 6அம் அத்யாயத்தின் 1ஆம் ப்ராஹ்மணத்திலும் ஒரே மதிரி சொல்லப்பட்டுள்ளது.-முதலில் ப்ராணனைப் பற்றின வித்யையை உபதேசிக்கிறது –
யோ ஹ வை ஜ்யேஷ்ட₂ம் ச ஸ்ரேஷ்ட₂ம் ச வேத₃ ஜ்யேஷ்ட₂: ச ஹ வை ஸ்ரேஷ்ட₂: ச ப₄வதி | ப்ராணோ வாவ ஜ்யேஷ்ட₂: ச ஸ்ரேஷ்ட₂: ச-
“யார் ஜ்யேஷ்டமானதும் ஸ்ரேஷ்டமானதுமான பொருளை த்யானிக்கிறாரோ , அவர் ஜ்யேஷ்டராகவும் ஸ்ரேஷ்டராகவும் ஆகிறார்.-ப்ராணனே ஜ்யேஷ்டமானதும் ஸ்ரேஷ்டமானதும் ஆகும்”.
ஜ்ரேஷ்டத்வம் என்றால் மூத்ததாய் தொன்மையானதாய் இருத்தல்.-ஸ்ரேஷ்டத்வம் என்றால் மிகச் சிறந்ததாய் இருத்தல்.

அதற்குப் பிறகு நான்கு புலன்களுக்குள்ள சிறப்புகள் சொல்லப்படுகின்றன.
வாக்
(பேச்சுப் புலன்) – வஸிஷ்ட₂த்வம் (செல்வத்தைப் பெறச் செய்யும் நல்ல பேச்சுக்குக் காரணமாக இருத்தல்.
சக்ஷு ஸ் (கண்) – ப்ரதிஷ்டா₂த்வம் (நிலையான இருப்புக்காக நிலத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் காண்பித்தல்.
ஸ்ரோத்ரம் (காது) – ஸம்பத்த்வம் (செல்வத்திற்குக் காரணமான சாஸ்த்ர ஜ்ஞாநத்துக்குக் காரணமாய் இருத்தல்.
மனஸ் (மனது) – ஆயதனத்வம் (மாலை , சந்தனம் முதலானவற்றால் ஏற்படும் அனுபவங்களுக்கு காரணமாக இருத்தல்.

எல்லா இந்த்ரியங்களும் ப்ராணனைச் சார்ந்தே நிலைத்திருக்கின்றன; அவற்றின் ஒவ்வொரு செயல்பாடும் ப்ராணனைச் சார்ந்தே நடை பெறுகிறது. இதுவே ப்ராணனுடைய ஸ்ரேஷ்ட் ம் அதாவது உயர்ந்த தன்மை . இதைக் காட்ட ஒரு கதை சொல்லப்படுகிறது –

அத₂ ஹ ப்ராணா அஹம் ஸ்ரேயஸி வ்யூதி₃ரே | அத₂ ஹ ப்ராண உச்சிக்ரமிஷந் இதராந் ப்ராணா: ஸமகி₂தத் । த்வம் ந: ஸ்ரேஷ்டோ ₂ʼஸி
புலன்கள் மற்றும் ப்ராண வாயுவுக்குள் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட, ஒவ்வொருவராக உடலை விட்டு விலகிய போதும் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . ஆனால் ப்ராணன் விலக முற்பட்ட போது, எல்லாப் புலன்களும் செயலிழந்து போயின, உடலே நிலை குலைந்து போயிற்று. ஆகவே , எல்லாப் புலன்களும் கூடி, ப்ராணனே சிறந்தது என்று ஏற்றுக் கொண்டன

விஷய வாக்யம்-இதற்குப் பிறகு வாக் முதலான இந்த்ரியங்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்பட்ட வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்கள், இப்போது ப்ராணனுடன் தொடர்புைடவையாகவும் கூறப்படுகின்றன-
அத₂ ஹைநம் வாகு₃வாச யத₃ஹம் வஸிஷ்டோ₂ʼஸ்மி த்வம் தத்₃வஸிஷ்டோ ₂
ʼஸீதி-

“அப்போது வாக் ப்ராணனை நோக்கி, ‘நான் வஸிஷ்டத்வம் என்ற குணத்தோடு உள்ளதே உம்மை அண்டித் தான், எனவே வஸிஷ்டத்வம் என்ற பண்பு உனக்கும் உள்ளது” என்று கூறியது. இதே போல் கண், காது, மனது ஆகியவையும் கூறின.
ஆக இந்த வித்யையில் ப்ராண னுக்கு முதலில் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் என்று 2 குணங்கள் சொல்லப்பட்டன. அதற்குப் பின், வாக் முதலானவற்றுக்குச் சொல்லப்பட்ட வஸிஷ்டத்வம் முதலான 4 பண்புகள் கூட ப்ராணனுக்கும் உள்ளன என்றும் சொல்லப்பட்டது. ஆகவே , மொத்தம் 6 குணங்களோடு கூடிய ப்ராணனை உபாஸிப்பது இந்த வித்யை . பெயர், பயன், கட்டளை மற்றும் வடிவத்தில் வேறுபாடு இல்லாததால், இந்த ஒரே வித்யை சாந்தோக்யத்திலும் ப்ருஹதாரண்யகத்திலும் சொல்லப்பட்டுள்ளது என்பதில் எந்த ஸந்தேஹமும் இல்லை .

ருக்₃வேதத்தைச் சேர்ந்த கௌஷீதகீ உபநிஷத்திலும் ஒரு ப்ராண வித்யை சொல்லப்பட்டுள்ளது. அதிலும், ஜ்யேஷ்டத்வம் மற்றும் ஸ்ரேஷ்டத்வம் என்று ப்ராணனுக்குள்ள இரண்டு பண்புகளைச் சொல்லி, பிறகு வாக் முதலான புலன்களுக்கு உள்ள வஸிஷ்டத்வம் முதலான 4 பண்புகளைச் சொல்லி, அதற்குப் பின் ப்ராணன்களுக்குள் வந்த போட்டியைச் சொல்வதன் மூலம் எல்லாப் புலன்களும் ப்ராணனை நம்பியே இயங்குகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சாந்தோக்யத்திலும் ப்ருஹதாரண்யகத்திலும் இருப்பது போல் இறுதியில் அந்தந்தப் புலன்கள் வஸிஷ்ட₂த்வம் முதலான தங்கள் தங்கள் குணங்களை ப்ராணனுக்கு இருப்பதாகச் சொன்ன பகுதி மட்டும் இந்த உபநிஷத்தில் இல்லை .

ஸந்தேகம் கௌஷீதகீ உபநிஷத்தில் கூறப்படும் ப்ராண வித்யை , மற்ற இரண்டு உபநிஷத்துக்களிலும் சொல்லப்பட்ட ப்ராண வித்யையைக் காட்டிலும் வேறா? அல்லது ஒன்று தானா?

பூர்வ பக்ஷம் – இந்த வித்யை வேறு தான், உபாஸனத்தின் ரூபம் (வடிவம்) மாறுபடுவதால். இரண்டு இடங்களிலும் ப்ராணனே உபாஸிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும், ஒரு இடத்தில் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் வஸிஷ்டவ்யம் ப்ரதிஷ்டத்வம் ஸபத்த்வம் ஆயதனத்வம் என்ற 6 குணங்களோடு கூடியதாகப் ப்ராணனை உபாஸிக்க வேண்டும்; மற்றோர் இடத்தில் வெறும் ஜ்யேஷ்டத்வம் மற்றும் ஸ்ரேஷ்டத்வம் என்ற 2 குணங்கள் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளன. எனவே , உபாஸனத்தின் வடிவம்
மாறுவதால் இந்த ப்ராண வித்யை வேறாகத் தான் இருக்க வேண்டும்.

வடிவத்தில் வேறுபாடு இல்லை என்பதே ஸித்தாந்தம் – 1-ஸர்வா பே₄தா₃த் அந்யத்ர இமே
இமே
— இந்த வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்கள்;
அந்யத்ர — மற்ற இடத்தில், அதாவது கௌஷீதகீ ப்ராண வித்யையிலும் (உள்ளன);
ஸர்வ அபே₄தாத்— முழு விளக்க முறையிலும் வேறுபாடு இல்லாததால்.

சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண் கத்திலும், இந்த்ரியங்களுக்கும் ப்ராணனுக்கும் இடையே ஏற்பட்ட
விவாதத்தை விவரித்து, இந்த்ரியங்கள் ப்ராணனைச் சார்ந்தே நிலைத்திருப்பதாலும், அவற்றின் செயல்கள் ப்ராணனைச் சார்ந்தே நடை பெறுவதாலும், ப்ராணனுடைய ஸ்ரேஷ்ட்யம் விளக்கப் படுகிறது. அதன் பின்னர் “நான் எந்தக் குணத்தைக் கொண்டிருக்கிறேனோ அந்த குணம் தங்களுக்கும் உள்ளது” என்று கூறி, வாக் முதலான இந்த்ரியங்களுக்கு உரிய வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்களும் ப்ராணனைச் சார்ந்தவையே என்று விளக்கப் படுகிறது.

கௌஷீதகீ உபநிஷத்திலும் இதே முறையிலேயே முழு விஷயமும் விளக்கப் படுகிறது. ஆனால், வாக் முதலான இந்த்ரியங்கள் தங்களுக்குரிய வஸிஷ்டத்வம் முதலான குணங்கள் ப்ராணனைச் சார்ந்தவை என்று கூறும் அந்தப் பகுதி மட்டும் இல்லை . ஆனாலும், வஸிஷ்டத்வம் முதலானவை ப்ராணனுக்கு உள்ளன என்பதை இது இல்லா விட்டாலும் நாம் அறிய முடியும். ப்ராணன் உடலை விட்டும் புறப்படும் பொழுது மற்ற புலன்கள் எல்லாம் செயலிழந்தன என்று சொல்வதன் மூலமே , வாக் முதலானவற்றுக்கு உள்ள வஸிஷ்டத்வம் முதலான குணங்கள் ப்ராணனுக்கும் இருக்கின்றன என்பது தெரிந்து விடுகிறது. அதை அந்தப் புலன்கள் வந்து ப்ராணனிடம் சொன்னால் தான் நமக்குத் தெரியம் என்பதல்ல. அதனால் கௌஷீதகீ உபநிஷத்திலும் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் வஸிஷ்டத்வம் ப்ரதிஷ்டாத்வம் ஸம்பத்த்வம் ஆயதனத்வம் என்ற 6 குணங்களோடு கூடியதாகத் தான் ப்ராணனைத் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எனவே , சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண் கத்திலும் சொன்ன ப்ராண வித்யைக்கும் கௌஷீதகீ உபநிஷத்தில் சொன்ன ப்ராண வித்யைக்கும் ரூபத்தில் (வடிவத்தில்) எந்த வேறு பாடும் இல்லை . எனவே , இவை எல்லாம் ஒரே வித்யை தான்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-பத்தாம்‌ பகுதி-(228) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 9, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

பத்தாம் பத்தில் –இப்படி ஆபத் சகன் ஆகையாலே –அவ் ஆபத் ரஷண அனுரூபமாக -பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு எல்லாம் மூல பூதமாய் –நிரதிசய வைலஷ்ணய யுக்தமான –திவ்ய விக்ரகத்தோடே வந்து தோன்றி -தன் பக்கல் ந்யஸ்த பரரானவர்கள் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –தன் திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலும் படும் ஆர்த்தியை ஹரிக்கும் ஸ்வாபம் ஆனவன் –கீழில் பத்தில் –தம்முடைய த்வரை அனுகுணமாக நாள் இட்டுக் கொடுத்ததுக்குப் பலம் –அர்ச்சிராதி கதியாலே-தேச விசேஷத்தில் ஏறப் போகையாலே –அதுக்கு ஆப்த தமனானவன் தன்னை வழித் துணையாக பற்றி –இனி பிராப்தியில் கண் அழிவு இல்லை என்று தமக்கு ஏற நிச்சயித்த இவர் –மறைத்து வைத்த அர்த்தம் உள்ளதும் வெளி இட வேண்டும் தசை யானவாறே –பிரதம உபதேச பாத்ரமான தம் திரு உள்ளத்துக்கு கிருத்திய அக்ருத்யங்களை விதித்து –அப்படி பவ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்தவ்யாதிகளை வெளி இட்டு –முதலிலே உபக்ரமித்த பக்தி யோகத்தையும் நியமித்து –(முதலில் –பிணக்கற அறுவகைச் சமயமும் -என்ற திருப்பாசுரத்தில் தொடங்கின பக்தி யோகத்தை –சார்வே தவ நெறி -திருவாய்மொழியிலே முடித்தார் -என்றவாறு ) சம்சாரிகளுக்கு ஸூகரமான ஆஸ்ரயணத்தை உபதேசித்து –அனுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு சீல குணமாகிற ஆழம் காலையும் காட்டி –தம் பக்கல் விருப்பத்தாலே -தம் திரு மேனியிலே -அதி வியாமோகம் பண்ணுகிற ஈஸ்வரனுக்கு-அதின் தோஷத்தை உணர்த்தி –இப்போது தமக்கு பரதந்தரனாய் -தம்மை பரம பதத்தில் கொண்டு போவதாக அத்யாதரம் பண்ணுகிறவனை அநாதி காலம் தம்மை சம்சரிக்க விட்டு -உபேஷித்து இருந்ததற்கு ஹேது என்ன என்று கேட்க –அவனும் இந்திரிய அவஸ்தை முதலான ஹேது பரம்பரையை எண்ணி –அதுவும் மதா யத்தம் என்று அறியும் சர்வஜ்ஞ்ஞரான இவருக்கு போக்கடி சொல்லுகை அரிது என்று நிருத்தரனாய் –அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்கு உள்ளாருடைய சத்காரத்தையும் அவ் வழியாலே போய் பெரும் -ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமாகக் காட்டிக் கொடுக்க அத்தை சாஷாத் கரித்து-அது மானச அனுபவ மாத்ரமாய் -பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே அத்தை எதாவாகப் பிராபிக்க வேணும் என்று பதறி அவனுக்கு மறுக்க ஒண்ணாத திரு ஆணை இட்டுத் தடுத்து அது பெறா ஆணை அல்லாமைக்கு ஹேதுகளையும் சொல்லும் படியான தம்முடைய பரம பக்தியெல்லாம் –குளப் படியாம் படியான -அபிநிவேசத்தோடே-வந்து தம்முடைய தாபங்களைப் போக்கின பிரகாரத்தை வெளி இடுகிறார் என்கிறார்–

ஆபத் ஸகனாகையாலே ப்ரபந்நரானவர்களுடைய ஆபத்துக்களிலே ஸூபாஸ்ரயமாய்‌ அஸாதாரணமான திருமேனியோடே வந்துதவி அவர்களுடைய தாபங்களைப்‌ போக்கும்‌ ஆர்த்த ஹரனானவன்‌ கீழில்‌ பத்தில்‌ இவர் த்வரைக்கீடாக அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததற்குப்‌ பலம்‌ அர்ச்சிராதி, கதியாலே துணை பெற்றுப்‌ போகை யாகையாலே அதுக்கு ஆப்தனானவன்‌ தன்னையே துணையாகப்‌ பற்றி ப்ராப்தி நிஸ்சிதமென்ற போக்கிலே ஒருப்பட்ட இவர்‌ தாம்‌ தஞ்சமாக நினைத்திருந்த வர்த்தமும்‌ பேசியிடும்படியான தஸையானவாறே முற்பட்ட உபதேஸ விஷயமான திருவுள்ளத்துக்கு க்ருத்யாக்ருத்யங்களை விதித்து-அப்படி பவ்யரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கர்த்வ்யாதிகளை வெளியிட்டு முதலிலே உபக்ரமித்த பக்தி ப்ரபத்திகளையும்‌ நிகமித்து ஸம்ஸாரிகளுக்கு ஸுகரமாக ஆஸ்ரயணத்தை உபதேஸித்து அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு பல் குணமாகிற ஆழங்காலையும்‌ காட்டித்‌ தம் பக்கல்‌ வ்யாமுக்‌தனான ஈஸ்வரனுக்குத்‌ தம்முடைய திருமேனியில்‌ தமக்குண்டான உபேக்ஷையை வெளியிட்டு இப்போது தமக்குப்‌ பரதந்த்ரனாய்‌ நிற்கிறவவனை அநாதி காலம்‌ தம்மைக்‌ கைவிட்டதுக்கு ஹேதுவென் னென்று கேட்க அவனும்‌ இந்த்‌ரிய வஸ்யதை தொடக்கமான ஹேது பரம்பரைகளை யெண்ணி அதுவும்‌ ததாயத்தமென்றறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்குப்‌ போக்கிடம்‌ சொல்லுகை யரிதென்று நிருத்தரனாய்‌ அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ அங்குள்ளாருடைய ஸத்காரத்தையும்‌ காட்டிக் கொடுக்க அத்தை ஸாக்ஷாத்கரித்தவிவர்‌ அதுவும்‌ மாநஸாநுபவமாய்‌ பாஹ்யகரண யோக்‌ய மல்லாமையாலே அவனுக்கு மறுக்க வொண்ணாத வாணையிட்டுத்‌ தடுத்து அது பெறாவாணை யல்லாமைக்கு ஹேதுக்களைச்‌ சொல்லும்படியான தம்முடைய பரமபக்தி யெல்லாம்‌ குளப்படியாம்படியான அபி நிவேஸத்தோடே வந்து தம்முடைய தாபத்தைப்‌ போக்கிப்‌ பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடுத்தபடியை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌ பத்தாம் பத்தில்‌.

1-சுரிகுழல்‌ அஞ்சனப்‌ புனல் மைந்நீன்ற பொல்லாப் புனக்‌ காயாவென்னும்‌ ஆபத்திற் கொள்ளும்‌ காம ரூப கந்த, ரூபத்தாலே ப்ரபந்நார்த்தி ஹரனானவன்‌ –2-அருள் பெறும்‌ போதணுக விட்டதுக்குப்‌ பலமான வானேறும்‌ ௧திக்கு அண்ட மூவுலகும்‌ முன்னோடிக்‌ கால்‌ விழுந்திடத்தே நிழல்‌ தடங்களாக்கி அமுதமளித்த தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே வேடன்‌, வேடுவிச்சி, பஷி , குரங்கு, சராசரம்‌, இடைச்சி, இடையர்‌, தயிர்த் தாழி, கூனி, மாலாகாரர்‌, பிணவிருந்து, வேண்டடிசில்‌ இட்டவர்‌, அவன் மகன்‌, அவன் தம்பி, ஆனை, அரவம்‌, மறையாளன்‌, பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன்‌ பெருங்கூட்டம்‌ நடத்தும்‌ ஆத்தனை வழித் துணையாக்கி –3–அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணை பிரியாமல்‌ போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர்‌ ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தஸையானவாறே –4-முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சு போல்வாரைத்‌ தொண்டீரென்றழைத்து, –5-வலம்‌ செய்து எண்ணுமின்‌ பேசுமின்‌ கேண்மின்‌ காண்மின்‌ நடமின்‌ புகுதுமென்று கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டுப்‌ –6-பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து –7-எண்பெருக்கிலெண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி மாதவனென்று த்‌வயமாக்கி, கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக்‌ கையோலை செய்து கொடுத்துச்‌ செஞ்சொற் கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு –8-மனம்‌ திருத்தி வீடு திருத்தப்‌ போய்‌ நாடு திருந்தின வாறே வந்து விண்ணுலகம்‌ தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம்‌ புறப்பட்ட வாக்கையிலே புக்குத்‌ தான நகர்களை அதிலே வகுத்துக்‌ குரவை துவரைகளில்‌ வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷம்‌ அறிவித்து –9-மாயையை மடித்து வானே தரக்‌ கருதிக்‌ கருத்தின் கண்‌ பெரியனானவனை இன்று ௮ஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்‌ யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க –10-இந்த்‌ரிய கிங்கரராய்க்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌, அவை யாவரையும்‌ அகற்ற நீ வைத்தவை யென்பர்‌; அது தேஹ யோகத்தாலே யென்னில்‌ அந் நாள்‌ நீதந்த சுமடென்பர்‌: முன் செய்த முழு வினையாலே என்னில்‌, அது துயரமே உற்ற விருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌ ; –11-ஈவிலாத மதியிலேன்‌ என்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில்‌, ஆங்காரமாய்ப்‌ புக்குச்‌ செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌; –12-யானே எஞ்ஞான்றும்‌ என்றத்தாலே யென்னில்‌; அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழிலென்பர்‌: ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது; அகமேனியி லழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்‌; –13-தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌; ஸெளஹார்தம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌; பிணக்கிப்‌ பேதியாத ஜஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில்‌ அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள்‌ நம்மது; –14-நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவன அறிந்தனமே யென்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌; -15-நெறி காட்டி அருகும்‌ சுவடும்‌ போலே இதுவும்‌ நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, –16-அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம்‌ போலே ஏறப்‌ பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்குத்‌ –17-தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு போகாமல்‌ தடுத்துத்‌ திருவாணை யிட்டுக்‌ கூசம்‌ செய்யாத செய்திப்‌ பிழை –18-பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும்பழி; –19-புறம் போனால்‌ வருமிழவு, –20-உண்டிட்ட முற்றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம்‌, உயிருறவு –21-முதலளவு துரக்கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல்‌ போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌.

1- சுரி குழல் அஞ்சனப் புனல் மைந் நின்ற பொல்லாக் புனக்காயா வென்னும் ஆபத்திற் கொள்ளும் காம ரூப கந்த ரூபத்தாலே பிரபன்ன ஆர்த்தி ஹரனானவன்-அதாவது –சுரி குழல் கமலக் கண் கனி வாய் –10-1-1-அஞ்சன மேனி-10-3-3-புனல் நின்ற வரை போலும் திரு உருவம் –10-6-8-பொல்லாக் கனி வாய் தாமரைக் கண் கரு மாணிக்கம்-10-10-1-புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் -10-10-6–என்று அந்யோந்ய விலஷணமாய்–அதி மனோகரமாய் -அனுபவித்தாக்களைத் தனித் தனியே ஆழம் கால் படுத்த வல்ல அவயவ சோபையும் – –அதுக்கு பரபாகமாய் -அத் உஜ்ஜ்வலமாய் –விடாயர் முகத்திலே நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போல் -சகல ஸ்ரமங்களும் மாறும் படி இருக்கும் திரு நிறத்தை உடைத்தாய் சொல்லப் படுமதாய் –காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -10-1-10–என்று ஆஸ்ரிதருடைய ஆபத் ரஷண அனுரூபமாக வேண்டினபடி பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு எல்லாம் கந்தமாய் இருக்கும் திவ்ய விக்ரகத்தை கொண்டு -தன் பக்கல் -நிஷிப்த பரர் ஆனவர்கள் அநிஷ்டமான சம்சாரத்தில் இருப்பாலும் –அபீஷ்டமான தன் திருவடிகளை கிட்டாமையாலும் படும் ஆர்த்தியை தீர்க்கும் ஸ்வபாவனானவன்–

(சுரிகுழலஞ்சனப்புனலித்யாதி, ப்ரபந்நார்த்த்ஹரனான ஸர்வேஸ்வரன்‌) “சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌” (திருவாய்மொழி 10-1-1) “அணிக்கொள்‌ நால்தடந்தோள்‌” (திருவாய்மொழி 10-1-9) “மணிமிகு மார்பு அணிமிகு தாமரைக்‌ கை” (திருவாய்மொழி 10-3-5) “கைகளும்‌ பீதகவாடையும்‌” (திருவாய்மொழி 10-3-8) “செங்கமலவண்ண மென்மலரடி” (திருவாய்மொழி 10-3-7) “மணிநின்ற சோதி” (திருவாய்மொழி 10-4-7) “அஞ்சன மேனி” (திருவாய்மொழி 10-3-3) “புனல்‌ மைநின்றவரை போலும்‌ திருவுருவம்‌” (திருவாய்மொழி 10-6-8) “பொல்லாத்‌ தாமரைக்கண்‌ கருமாணிக்கம்‌” (திருவாய்மொழி 10-10-1 “புனக்காயா நிறத்த” (திருவாய்மொழி 10-10-6) “நீரார்‌ முகில்‌ வண்ணன்‌” (திருவாய்மொழி 10-5-8) “கார்‌ மேகவண்ணன்‌” (திருவாய்மொழி 10-4-1 “மெய்ந்நின்று கமழ்‌ துளப விரையேறு திருமுடியன்‌” (திருவாய்மொழி 10-6-8) “திகழ்கின்ற திருமார்பில்‌ திருமங்கை” (திருவாய்மொழி 10-6-9) “அணிநின்ற செம்பொன்‌ அடலாழி” (திருவாய்மொழி 10-4-7) “காமனைப்‌ பயந்த காளை” (திருவாய்மொழி 10-2-8) என்று அவயவங்களோடும்‌ ஒளதார்யம்‌ முதலான குணங்களோடும்‌ ஸ்ரக்‌ வஸ்த்ர ஆபரண ஆயுதங்களோடும்‌ கூடி “காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான்‌” (திருவாய்மொழி 10-1-10) என்று ஆஸ்ரிதருடைய ஆபத்‌ ரக்ஷணத்துக்கு அநுரூபமாகக்‌ கொள்ளும்‌ விக்‌ரஹங்களுக்கெல்லாம்‌ கந்த மாய்‌ ஸூபாஸ்ரயமான அந்த விக்‌ரஹத்தை யுடையனாய்க்‌ கொண்டு தன் பக்கல்‌ ந்யஸ்த பரரானவர்களுடைய ஆர்த்தியைத்‌ தீர்க்கையாலே ப்ரபந்நார்த்த ஹரனான ஸர்வேஸ்வரன்‌

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே
-10-1-1—இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது –கேசவ கிலேச நாசனகமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –காளமேகத்தை – -வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் 

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்
அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9–தெளிந்த தொரு தடாகம் போலே யாய்த்து திருவடிகள் இருப்பது –ஸ்ரமஹரமான திருவடிகள் -என்கை-மலர்க் கண்கள்-அந்த தடாகம் பூத்தால் போலே யாய்த்து திருக் கண்கள் இருப்பது-பவளச் செவ்வாய்-பவளம் போலே சிவந்த திரு வதரத்தை யுடையவனாய்-அணிக் கொள் நால் தடம் தோள் –தனக்குத் தானே ஆபரணமாய் பெரிய நாலு திருத் தோள்களை யுடைய தெய்வம் -அவன் வழித் துணையாம் போது -ஸ்ரமஹரமான வடிவும் தன் உகப்பு தோற்றின ஸ்மித வீக்ஷணமும் யுடையவன் -ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமா போலே அச்சம் கெடும் படி யாய்த்து கொடு போவது –

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5—ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்வு என்னுதல் -திரு மார்வு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தில் புகரே யாம் படி இருக்கும் என்னுதல் -கலவியில் கழற்ற ஒண்ணாத படி இறே ஸ்ரீ கௌஸ்துபம் இருப்பது -ஸ்த்ரீக்கு ஸ்தனம் போலே ஸ்ரீ கௌஸ்துபம் புருஷோத்தம சிஹ்னம் இறே —அணி மிகு தாமரைக் கையை யந்தோ-ஆபரண பிரசுரமாய் -அது தான் மிகையாம் படி தனக்குத் தானே ஆபரணமான கையை – அந்தோ -சேர்ந்து குளிர்ந்து விடாயார்க்கு சமைத்து வைத்த தண்ணீரை வார்க்கச் சொல்ல வேண்டுவதே -என் ஆற்றாமையை நான் உனக்கு அறிவிக்க வேண்டும்படி யாவதே –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8–கைகளும்-அந்நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்ற அளவில் அனுவர்த்தித்து அணைக்கிற கைகளும்-பீதக வுடையும்-அவற்றுக்குத் தோற்று விழும் போது நடுவே தொகையும் திருப் பீதாம்பரமும் –பீதாம்பர தர ஸ்ரக்வீ –-காட்டி--உனக்கு அவர்களை அழைக்கைக்கு பணி யுண்டோ -வடிவைக் காட்ட அமையாதோ-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றத்துக்கு தாமரையை ஒப்பாகச் சொல்லும் -ஸுகுமார்யத்துக்கு சொல்லலாவது இல்லை –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7–நீல மணியின் ஒளியை வடிவை வகுத்தால் போலே இருந்துள்ள வடிவை யுடையவன் –அடிமை கொள்ளும் வடிவு இருக்கிறபடி –

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-இருந்தால் ஜீவிக்கும் ஜீவனமும் பெறேன்-ஸ்ரமஹரமான வடிவைக் கொண்டு என் முன்னே சஞ்சரிக்கக் காணேன் -உன்னைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியாயோ -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார் என்று இருக்க வேண்டாவோ -காமினி யாகையாலே ஸ்வரூபத்திலும் குணத்திலும் இழியாள் இறே -வடிவை இறே ஆசைப் படுவது

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ
வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-புனல் போலேயும் மை போலேயும் நின்ற வரை போலேயும் என்னுதல் –மைந்நின்ற வரை— மை மாறாத வரை –அஞ்சன கிரி -என்னுதல்

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண்
கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-பொல்லா -அழகு இது என்னில் நாட்டார் அழகோ பாதியாம் என்று விஜாதீயம் என்று தோற்றுகைக்காக -என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாக என்னுதல் –கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6–முன்பு நீ மேல் விழுந்தது உனக்கு ஒரு குறை உண்டாயோ -ஸ்ரீ யானவள் தான் மேல் விழும் வடிவை யுடையையாய் வைத்து அன்றோ என் பக்கலிலே அபி நிவேசித்தது —புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இறே இவை –

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8–நீராலே பூர்ணமான மேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -அவ்வடிவைக் காணும் தனையும் இறே உபதேசிக்க வேண்டுவது –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1–விலக்ஷண விக்ரஹத்தை யுடையனாய் -உபய விபூதியுக்தனானவன் என்கிறார் -கார்மேக வண்ணன் — நீர் கொண்டு எழுந்த கார் மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடையவன் –அடியிலே இவனுக்கு ருசியைப் பிறப்பித்து -பக்திபர்யந்தமாக வளர்த்து –அது பக்வமானால் பின்னைத் தானே ப்ராப்யமாய் இருக்கிற வடிவு -கறுத்த மேகம் என்னுதல் -கார் காலத்து மேகம் என்னுதல் -புயல் கரு நிறத்தனன் -என்றத்தை நினைக்கிறது

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-திரு மேனியில் கமழா நின்றுள்ள திருத் துழாயின் பரிமளம் –-ஏறு திரு முடியன்--அப் பரிமளம் மிகா நின்றுள்ள திரு முடியை யுடையனாய் -கடலில் நீர் ஸஹ்யத்திலே ஏறுமா போலே திரு முடியில் வெள்ளம் இடா நின்றது –

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9–வெறும் புறத்திலே விளங்கா நிற்கிற திரு மார்விலே இருக்கிற பிராட்டி யோட்டை சேர்த்தி அழகாலும் விளங்கா நின்றுள்ள ஸ்ரீயபதியானவன் சேரும் ஸ்தானம் ஸ்ரமஹரமான வாட்டாறு –ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திருவாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7–தன் கைக்குத் தானே ஆபரணமாய் அனுபவிப்பார்க்கு ஸ்ப்ருஹணீயமான வடிவை யுடைய யுத்த உன்முகனான திரு வாழி யைக் கையிலே யுடையவன் -அனுபவத்துக்கு தானே விஷயமாய் -விரோதியைப் போக்குகைக்கு தானே ஆபரணமாக பரிகரத்தை யுடையவன் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8–இது நான் உபதேசிக்க வேண்டுவது அவனை ப்ரத்யஷிக்கும் தனையும் இ றே –நாட்டை அடங்கத் தன் அழகாலே பிச்சேற்றித் திரியும் காமனுக்கும் உத்பாதகனானவன் –காளை–யவ்வனம் பிரஸவாந்தமாய் இருக்க பருவத்தால் அவனிலும் இளகிப் பதித்து இருக்கும்

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-ரக்ஷண ரூபமான வடிவை கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர் –காம ரூபம் –நாஸ்யார்த்த தா நூம் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்த தா நூம் ததா -என்கிற படியே

2-அருள் பெரும் போது அணுக விட்டதுக்கு பலமான வானேறும் கதிக்கு அண்ட மூ உலகும் முன்னோடி கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி அமுதம் அளித்த தயரதன் பெற்ற கோவலன் ஆகையாலே வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாழி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டடிசில் இட்டவர் அவன் மகன் அவன்தம்பி ஆணை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழி துணையாக்கி-அதாவது —அவனுடைய அருள் பெரும் போது அரிதால்–9-9-6–என்றும் அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது -9-9-6–என்றும் -கீழில் பத்தில் ஷண காலம் விளம்பம் பொறாத படி ஆர்த்தரான தமக்கு –மரணமானால்–9-10-5-என்று ஆரப்த சரீர அவசானத்திலே மோஷம் தருகிறோம் என்று அணித்தாக நாள் இட்டு கொடுத்ததுக்கு பலம் –வானேற வழி தந்த வாட்டாற்றான் –10-6-5–என்று பிராப்ய பூமியான பரம பதத்தில் சென்று புகுருகைக்கு வழியாக அவன் காட்டிக் கொடுத்த அர்ச்சிராதி கதியில் போகப் பெறுகையாலே –

(அருள்பெறும்போதணுக விட்டதித்யாதி, தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே) “அவனுடையருள்பெறும்‌ போதரிதால்‌ அவனருள்‌ பெருமளவாவி நில்லாது” (திருவாய்மொழி 9-9-6) என்று கீழில்‌ பத்திலே க்ஷண கால விஸ்லேஷம்‌ பொறாமை ஆர்த்தரான இவ்வாழ்வார்க்கு “மரணமானால்‌’” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே உமக்கு மோக்ஷம்‌ தருகிறோம்‌ என்று அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததுக்குப்‌ பலம்‌ வானேற வழிதந்த” (திருவாய்மொழி 10-6-5) என்று அவன்‌ காட்டிக்‌ கொடுத்த அர்ச்சிராதி மார்க்கத்துக்குத்‌ துணை பெற்றுப்‌ போகையாலே 

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாகா நின்றது –கொள்வார் தேட்டமான அருள் நமக்குத் தேட்டமாவதே -சர்வ சாதாரணமான ஜலம் அது ஒழியச் செல்லாத தத்துவங்களுக்கு அரிதாப் போலே அவன் அருள் கிடைக்கும் அளவும் பந்துக்களுடைய இன் சொல்லாலே தரித்தாலோ என்ன –
அவ்வருள் அல்லன வருளும் அல்ல–தாபார்த்தர் அக்னியைக் கொண்டு விடாய் தீருமா போலே தாயமாருடைய ஹித வசனத்தாலே தரிக்கவோ –விடாய் தீராத அளவல்ல –விடாயை விளைப்பதும் செய்யும் 

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-அபு நராவ்ருத்த லக்ஷணமான பரமபதத்தில் ஏறுகைக்கு அர்ச்சிராதி கதியைத் தந்த -பரம பாத லாபத்தாலும் -அவ்வருகே ஒரு லாபம் என்னலாம் படி இறே அர்ச்சிராதி கத்தி ஸித்தி –வாட்டாற்றான் -இப்பேற்றுக்கு கிருஷி பண்ணின தேசம் –

அவ் அர்ச்சிராதி கதிக்கு -ராஜ குமாரன் வழி போம் போது வழிக்கு கடவார் – முன்னோடி நிலம் சோதித்து -நிழலும் தடாகமும் பண்ணி -பின்னைக் கொண்டு போம் போலே அண்ட மூ உலகு அளந்தவன் -10-1-5–என்று திரு உலகு அளக்க என்ற ஒரு வியாஜத்தாலே முன்னோடி நிலம் சோதித்து – அவனடி நிழல் தடம்-10-1-2- -என்று காள மேகமான தன் கால் விழுந்த இடத்தே -நிழலும் தடாகுமாம் படி பண்ணி –

இவரை இவ் வழியாலே கொடு போவதாக ராஜ குமாரன்‌ போம் போது நிலவரானார்‌ முன்னே போய்‌ நிலம்‌ சோதித்து நிழலாம்படி சோலை செய்து தடாகங்கள்‌ சமைத்து வைத்துப்‌ பின்‌ கொண்டு போவரைப்‌ போலே “அண்டமூவுலகளந்தவன்‌” (திருவாய்மொழி 10-1-5) என்று திருவுலகளக்க என்றொரு வ்யாஜத்தாலே முன்னோடி நிலம்‌ ஸோதித்து “அவனடி நிழல்‌ தடமன்றி யாமே” திருவாய்மொழி 10-1-2) என்று காளமேகமான தன் கால்‌ விழுந்த விடத்தே நிழலும்‌ தடாகமுமாம்படி பண்ணி

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5–நிரவதிக தேஜோ ரூபியாய் த்ரிவித காரணமும் தானே யானவன் –நம் -என்று பிராமண பிரசித்தியை சொல்லுதல் –தன் வடிவு அழகையும் ஜனகனான தன்னோட்டை பிராப்தியையும் நமக்கு அறிவித்தவன் என்னுதல் -அண்ட மூவுலகளந்தவன் அணி திரு மோகூர்-அவன் தனக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –சம்சாரத்துக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2–நலம் கழல் -ஆஸ்ரிதருடைய குண தோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள் -அவர்கள் ப்ரேமாந்தராய் -வத்யதாம் -என்றாலும் -நத்யஜேயம் -என்னுமவன் –அவனடி நிழல் தடம் அன்றி யாமே–அவனுடைய பாதச் சாயை யாகிற பொய்கையை ஒழிய —யாம் -இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்–அவன்தானே வத்யதாம் என்றாலும் புறம்பு புகலற்று இருக்கிற படி –

அமுதம் அளித்த பெருமான் ஆகையாலே –-அதாவது- பாதேயம் புண்டரீகாஷர் நாம சங்கீர்த்தன அமிர்தம்-காருடம்–என்கிறபடியே பாதேயமாக தன் திவ்ய குண அம்ருதத்தை வர்ஷிக்குமவனாய் —
தயரதன் பெற்றவன் ஆகையாலே- அதாவது- தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
கோவலன் ஆகையாலே அதாவது-கூத்தன் கோவலன் -என்றும் – சக்கரவர்த்தி திருமகனாயும் கிருஷ்ணனாயும் வந்து அவதரித்தவன் ஆகையாலே –

அமுதமளித்த பெருமானாகையாலே “பாதேயம்‌ புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்‌” (காருடம்‌) என்றிவர்க்கு பாதேயமாகத்‌ தன்‌ திவ்ய குணாம்ருதத்தை வர்ஷிக்குமவனாய்‌ “தயரதன்‌ பெற்ற மரதக மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்றும்‌ “கூத்தன்‌ கோவலன்‌” (திருவாய்மொழி 10-1-6 என்றும்‌ சக்ரவர்த்தி திருமகனாயும்‌ க்ருஷ்ணனாயும்‌ வந்தவதரித்தவனாகையாலே.

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை –அடைந்து வந்து அடியவர் தொழுமின்—வழித் துணை இல்லை என்று கிலேசப்படுகிற நீங்கள் ஆஸ்ரயிங்கோள்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6—நடக்கப் புக்கால்-வல்லார் ஆடினால் போலே இருக்கை –புத்ர ப்ராதரி கச்சதி -வழித் துணையாய் -அவன் முன்னே போக பின்னே போம் இடத்து நடை அழகு தானே பிரயோஜனமாய் இருக்கை -ஆடல் பாடல் அவை மாறினார் தாமே -என்னக் கடவது இறே -இவன் திருக் குழல் வாய் வைத்த போது அப்சரஸ் ஸூ க்கள் குழல் ஓசையைக் கேட்டு பாட்டுத் தவிர்ந்தார்கள்–இவன் நடை கண்டு ஆடல் தவிர்ந்தார்கள் –-கோவலன்-ஆச்ரயித்தாரை ரக்ஷிக்கும் இடத்து தாழ வந்து அவதரித்து ரக்ஷிக்குமவன் -பிசாசுக்கு மோக்ஷ ப்ரதனாய் வழி நடத்தியவன் இறே –ஆஸ்ரிதர் சிறுமை பாராதவன் இறே –

வேடன்-அதாவது குஹமாசாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் -பால-1-29–என்னும்படி
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி–பெரிய திருமொழி-5-8-1- -என்று பிராட்டியையும் இளைய பெருமாளையும் முன்னிட்டு – உகந்த தோழன் நீ -என்று விஷயீ கரிக்க பெற்ற -ஸ்ரீ குகப் பெருமாள் —

(வேடன்‌ வேடு வச்சி என்று தொடங்கி – ஆத்தனை வழித்துணையாக்கி) “உகந்த தோழன்‌ நீ” (பெரிய திருமொழி 5-8-1) என்று பெருமாளுடைய ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனான ஸ்ரீகுஹப்‌ பெருமாள்‌

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு
இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-உகந்து –
உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்-உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே (உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )-தோழன் நீ எனக்கு – ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி புருஷகாரத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது –(நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

வேடுவிச்சி--அதாவது–சோப்ய கச்சன் மகா தேஜஸ் சபரீம்–பால-1-58–என்கிறபடி-தானே சென்று -கிட்டி -விருந்துண்டு – சஷூஷா தவ ஸௌ மயேன பூதாஸ்மி ரகுநந்தன-ஆரண்ய -74-14 -என்னும்படி தன் விசேஷ கடாஷத்தாலே பூதை ஆக்கின சபரி —

சஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு நந்தந” (ரா. ஆ. 74-14) என்று அவன்‌ கடாக்ஷ லஷ்ய பூதையான ஸபரீ,

பஷி--அதாவது- ஸ்ரீ கார்யார்த்தமாக தேஹத்தை அழிய மாறினவர் என்னும் உகப்பாலே –
யா கதிர் யஜ்ஞ சீலானாம் ஆஹிதாக் நேஸ்ச யா கதி -என்றும் அபாரவர்த்தினாம் யாச யாச பூமி பிரதாயினாம் மயா த்வம் சமநுஞ்சாதோ கச்ச லோகன் அனுத்தமான்-ஆரண்ய-68-29/30 -என்று விஷயீகரிக்க பட்ட ஸ்ரீ ஜடாயு மகா ராஜர்

யா கதிர்‌ யஜ்ஞ ஸீலாநாம்‌ ஆஹிதாக்‌ நேசயா க,தி: அபரா வர்த்திநாம்‌ யாச யாச பூமி ப்ரதாயிநாம்‌ மயா த்வம்‌ ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாதநநுத்தமாந்‌” (ரா.ஆ. 68-29, 30) என்று விஷயீ கரிக்கும்படியான ஸ்ரீஜடாயு மஹாராஜர்‌, 

குரங்கு--அதாவது–குரங்கு என்ற இது –ஜாத்ய ஏக வசனம் ஆகையாலே -சுக்ரீவம் நாதமிச்சதி-கிஷ்கிந்தா-4-18 -என்று-அத்தலை இத்தலையாய் சென்று அங்கீகரிக்கப் பெற்ற வானர அதிபதியான மகா ராஜரும் – பரிகரமான வானர வர்க்கமும் –

ராமபாணாஸந ஷிப்தமாவஹத்‌ பரமாங்கதிம்‌” (ரா. ஸு. 17-8) என்னும்படியான வாலி ஸுக்ரீவ மஹாராஜர்‌ தொடக்கமான வாநர ஸேநைகள்‌

சராசரம் – அதாவது–ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன்–7-5-1- -என்று ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்க செய்தே – ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்க ராம்படியாக விஷயீ கரிக்க பெற்ற –அயோத்தியில் வாழும் -சராசரம்-(ஆவும் பயமும் அமுதும் ஒப்பான அரங்கருக்கு மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ அவர் மெய் அருளால் தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சராசரங்கள் யாவும் கிளையுடன் வைகுண்ட லோகத்தில் ஆர்ந்திட்டவே –திருவரங்கத்து மாலை- )

அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌,

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.
–7-5-1-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன-நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக் கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –

இடைச்சி- அதாவது–சிந்தயந்தி ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்ச்வாசதயா முக்திம்
கதான்யா கோப கன்யகா
-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-10-22-– என்று விக்ரக வைலஷண்யமே உபாயமாக வீடு கொடுக்கப் பெற்ற சிந்தயந்தி –(உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-சிந்தையந்தியும் போலே இருக்க வேண்டும்- பெரிய வுடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேக்ஷித்தார்கள் -சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போய்த்து- மதியிலேன் வல்வினையே மாளாதோ
-1-4-3-என்பதால் மதியினை யுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டதே —-அதாவது சிந்தயந்தி என்பாள் சதுரப்பாட்டினை யுடையாளாய் மாமியார் முதலாயினருடைய முன்னிலையிலேயே இரு வினைகளையும் நீக்கி மோக்ஷம் அடைந்தாள்-ஈட்டு ஸ்ரீ ஸூக்தி )

சிந்தயந்தீ ஜகத் ஸூதிம்‌ பரப்‌ரஹ்ம ஸ்வரூபிணம்‌ நிருச்வாஸ தயா முக்திம்‌ க.தாந்யா கோப கந்யகா” என்னும்படி இடைச்சியான சிந்தயந்தி 

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3–வல்வினையே மாளாதோ வென்றுபாக்யவதி யாகையாலே அனுபவ விநாச்யமான பாபத்தைப் பண்ணினாள் சிந்தயந்தி – நான் பண்ணின பாபத்துக்கேயோ முடிவு காணாது ஒழிகிறது-தத் சித்த விமலாஹ்லத-இத்யாதி -இவர் தம்மை தீர்க்க சிந்தயந்தி என்று இறே நம் முதலிகள் சொல்வது –

இடையர்-அதாவது- வெண்ணெய் களவு காண புக்க விடத்தே தொடுப்புண்டு வந்து தம்மகத்தே புகப் படலைத் திருகி வைத்து மோஷம் தராவிடில் காட்டிக் கொடுப்பேன் என்று மோஷம் பெற்ற ததிபாண்டர்தயிர்த் தாழி-அதாவது- நாம ரூபங்கள் உள்ளவற்றுக்கு எல்லாம் ஒரு சேதன அதிஷ்டானம் உண்டாகையாலே இதுக்கு மோஷம் கொடுக்க வேண்டும் என்கிறவன் நிர்பந்தத்துக்காக மோஷம் கொடுக்கப் பெற்ற- தயிர்த் தாழி –(சிந்திக்க நெஞ்சு இல்லை நா இல்லை நாமங்கள் செப்ப நின்னை வாதிக்க மெய்யில்லை வந்திருபோதும் மொய்ம் மா மலர்ப் பூம் பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச் சந்தித்த நாள் முக்தி பெற்றது என்னோ தயிர்த் தாழியுமே–திருவரங்கத்து மாலை )

ததி பாண்டன்‌, அவனுடைய தயிர்த்தாழி

கூனி-அதாவது–ஸுகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே ஆவயோர் காத்ர சத்ரு சம் தீயதா மனுலேபனம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-20-6–என்று பூசும் சாந்து அபேஷிக்க-அநந்ய பிரயோஜனமமாக கொடுத்த ப்ரீதியாலே விசேஷ கடாஷ விஷய பூதையான கூனி

ஸுகந்த மேதத்‌ ராஜார்ஹம்‌ ரசம்‌ ருசிராநநே ஆவயோர்காத்ர ஸத்‌ருஸம்‌ தீ,யதா மநுலேபநம்‌”  (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-20-6) என்று விஷயீகரிக்கும்படியான கூனி,

மாலாகாரர்–அதாவது–பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்ச இஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவன –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21- -என்று அநந்ய பிரயோஜனமாக பூவைக் கொடுத்த உகப்பாலே தர்மே மனச்ச தே பதரே சர்வ காலம் பவிஷ்யதி -யுஷ்மத் சந்ததி ஜாதானாம்
தீர்க்க மாயுர்ப்பவிஷ்யதி
–ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-9-26-என்று விசேஷ கடாஷம் பெற்ற ஸ்ரீ மாலா காரர்-

தர்மே மநஸ் ச தே பத்ர ஸர்வ காலம்‌ பவிஷ்யதி யுஷ்மத்‌ ஸந்ததி ஜாதாநாம்‌ தீர்க்க மாயுர்‌ பவிஷ்யதி” ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 5-9-26) என்று விஷயீகரிக்கும்படியான ஸ்ரீமாலாகாரர்‌

பிணவிருந்து இட்டவர்- அதாவது–நவம் சவமிதம் புண்யம் வேத பார கமச்யுத -யஜ்ச சீல மகா பிராஞ்ஜா ப்ரஹ்மானம் ஸ்வ உத்தமம் -ஹரி வம்சம் -என்று எதன்ன புருஷ பவதிப்படியே-அயோத்யா-102-30- பிண விருந்திட்ட கண்டா கர்ணன்-(ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை– நஞ்சிருக்கும் தானக் கண்டா கனற்ஜோதி என்று ஏத்தும் வன் தாலமுடன் வானக் கண் தா கன வண்ணா என்று ஒது வலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கும் ஈந்தான் பரகதி என்னப்பனே
–திரு வேங்கடத்தந்தாதி )

“நவம்‌ ஸவமிதம்‌ புண்யம்‌ வேத பாரக மச்யுத யஜ்ஞ ஸீல மஹா ப்ராஜ்ஞ ப்‌ராஹ்மணம்‌ ஸவமுத்தமம்‌” (ஹரிவம்சம்‌) என்று பிணவிருந்திட்ட கண்டாகர்ணன்‌,

வேண்டடிசில் இட்டவர்–அதாவது–வேண்டு அடிசில் உண்ணும்போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனத்தில் பக்தி புரசஸ்சரமாக அடிசில் கொண்டு வந்து இட்ட ருஷி பத்னிகள் –நாச்சியார்-12-6-

வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்‌ கொள்ளும்‌” (நாச்சியார்‌ திருமொழி 12-6) பத்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகள்‌,

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6–வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு-அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்-அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –

அவன் மகன்–அதாவது–மீள அவன் மகனை -பெரியாழ்வார்-1-5-2–என்று ஹிரண்ய புத்ரனாய் வைத்து –
தன் அருளுக்கு விஷயமாம் படி பக்தனான ஸ்ரீ பிரகலாதன்

மீளவவன்மகனை” (பெரியாழ்வார்‌ திருமொழி 1-5-2) என்று ஹிரண்ய புத்ரனான ஸ்ரீப்ரஹ்லாதன்‌,

கோளரி அரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர
காள நல் மேகமவை கல்லோடு கார் பொழிய கருதி வரை குடையாக காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால்  ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே –1-5-2–பாபிஷ்டனான ஹிரண்யாசுரனுடைய-வர பல புஜ பலங்களால் உண்டான செருக்காலே – மிடியற வளர்ந்த சரீரம் ஆனது ரத்தம் குழம்பிக் கிளரும்படியாகவும் – (எங்கும் உளன் கண்ணன் -)சர்வத்ஸ்ர அஸ்தி -என்று சொன்ன வார்த்தையை பொய் என்று – இங்கு இல்லை என்று தான் – அளந்திட்ட தூணை தட்டின அவன் –மனசு புரிந்து – ஸ்வ புத்ரனானவனை -சத்தியவாதி -என்று கொள்ளும்படியாகவும் -திரு உள்ளம் பற்றி –ஆயுதம் எடுக்க ஒண்ணாதது கொண்டு -முழு கூர்மையான திரு உகிர்களாலே – ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிக் குடைந்தவனே  –மீள என்ற இது –-இல்லை -என்ற மனசு புரிந்தபடி –

அவன்தம்பி--அதாவது –அவன் தம்பிக்கு -என்னும்படி ராவண அனுஜனாய் – அனுஜோ ராவணஸ்யாஹம் தேனஸா அஸ்மி அவமானித–யுத்த-19-4- -இத்யாதிபடியே ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு –ராகவம் சரணம் கத -யுத்த-17-14–என்று திரு அடிகளை அடைந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –

“அவன்‌ தம்பிக்கு” (பெருமாள்‌ திருமொழி 10-7) என்று ராவணாநுஜனான ஸ்ரீவிபீஷணப் பெருமாள்‌,

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8–லங்காதிபதியான ராவணனை அவன் உகந்த பிராணனை ஹரித்து -அவன் தம்பிக்கு ராஜ்யத்தையும் கொடுத்து

ஆனை-அதாவது-பரமாபதமா பன்னோ மனசா சிந்த யத்தரிம் -சது நாகவர -ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்று ஸ்வ யத்னத்தை விட்டு -பிரபன்னனாய் -ஸ்வாபிலஷித கைங்கர்யம் பெற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்

ஸ்ரீகஜேந்த்‌ராழ்வான்‌, 

அரவம்-அதாவது நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெறுவி வந்து நின் சரண் என-பெரிய திருமொழி-5-8-4- -என்கிறபடியே பெரிய திருவடிக்கு அஞ்சி வந்து திருவடிகளை சரணாக அடைந்த சுமுகன் –

நஞ்சு சோர்வதோர்‌ வெஞ்சினவரவம்‌” (பெரிய திரு மொழி 5-8-4) எனகிற ஸுமுகன்‌,

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-தன்னை பஷிக்க வந்த திருவடியை எதிரிடுவதும் செய்யாதே-வேறு ஓர் இடத்தில் போவதும் செய்யாதே
தன்னைச் சரணம் புக்க ஸூமுகன் பண்ணிற்று-ஏதேனும் அபராதம் உண்டோ-ந ஷமாமி யாவது என் என்னில்-ஈஸ்வர ஹிருதயம் என்று ஓன்று உண்டு என்று ஆராய்ந்து பார்த்தால்-ஜகத்தை அடைய ஆஸ்ரிதார்த்தம் என்று ஆய்த்து இருப்பது-அப்படி இருக்க-பெரிய திருவடிக்கு தான் நியதாஹாரனாய் இருக்கச் செய்தே அது தலைக் கட்டாதே போருவதே -என்று திரு உள்ளம் சிவிக் என்று இருக்கும் இறே

மறையாளன்-அதாவது-மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன் -பெரிய திருமொழி-5-8-5-என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தன் பால்ய சேஷ்டாதிகளை சாஷாத் கரித்து காமனாய் தபஸூ பண்ணி-அப்படியே காட்டி அருளக் கண்டு -அனுபவித்த அநந்தரம் -நித்ய
அனுபவத்தை அபேஷித்த கோவிந்த ஸ்வாமி-

மலரடி கண்ட மாமறையாளனான (பெரிய திருமொழி 58-5] கோவிந்த ஸ்வாமி,

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற  பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே—5-8-5–மலரடி
நிரதிசயமான போக்யமான திருவடிகள்-பசுக்களின் பின்னே போவது-தேர்த் தட்டிலே நிற்பது
தூது நடப்பது ஆகிற அளவிலே கிடீர் சர்வ சமாஸ்ரயணீயன் ஆய்த்து-கண்ட –-எல்லாரும் ஒக்க இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டும்படியான திருவடிகளை யாய்த்து தானே வர இவன் கண்டது –மா மறையாளன் –சாஸ்த்ரத்தாலே யாதல்-உபதேசத்தால்  யாதல்-அன்றிக்கே-கண்ணால் காணப் பெற்ற வைதிக அக்ரேசரன்  –

பெற்ற மைந்தன்--அதாவது-மா முனி பெற்ற மைந்தன் -பெரிய திருமொழி-5-8-6-என்று மிருகண்டு புத்ரனாய் -மோஷார்தமாக தன்னை வந்து அடைந்த மார்கண்டேயன் –

மாமுனி பெற்ற மைந்தன்‌” (பெரிய திருமொழி 5-8-6) என்று ம்ருகண்டு புத்ரனான மார்க்கண்டே,யன்‌

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய்  தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-மஹத்தை யாவது –பிரயோஜனாந்தர விதுரமாக-வாசுதேவஸ் சர்வம் என்கிறபடியேஎல்லாம் அவனே -என்று உபாசிக்கை –முனி பெற்ற – ஜ்ஞான விபாக தசையிலே பிறந்தவன் –

ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித் துணையாக்கி-அதாவது-
இவர்கள் ஆகிற நானா ஜாதிதையாலும் -இப்படி பதினெட்டாக எண்ணலாம் படி இருக்கையாலும் –
பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் போலே இருந்துள்ள இத் திரளை -அர்ச்சிராதி மார்க்கத்தாலே –
தானே துணையாகக் கொண்டு நடத்துமவனாய் –திருமோகூர் ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரண்-10-1-6–என்றும் –காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதி -10-1-1–என்னும்படி
திரு மோகூரிலே நின்று அருளின பரம ஆப்தனான காள மேகத்தை வழித் துணையாக கொண்டு –

இவர்கள்‌ தொடக்கமான பதினெட்டு நாட்டிலுள்ள அநுகூல வர்க்கமான பெருங்கூட்டத்தை அர்ச்சிராதி மார்க்கத்தாலே தானே துணையாய்க்‌ கொண்டு நடத்துகிறவனாய்‌ “திருமோகூராத்தன்‌ தாமரையடியன்றி மற்றொன்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1) என்று பரமாப்தனான காளமேகத்தை வழித் துணையாகப்‌ பெற்று 

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே
–10-1-6–திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ் மராமி மத்பக்தம் நயம்மி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –-தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

3-அறியச் சொன்ன சுப்ரபாதத்தே துணை புரியாமல் போக்கு ஒழித்து மீள்கின்றது இல்லை என்று நிச்சித்திருந்தவர்- அதாவது–நாமுமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான -10-2-9–என்றும் –
நாளேல் அறியேன் -9-8-4–என்றும் –-மரணமானால்-9-10-5- என்றும் –நான் உங்களுக்குச் சொன்ன நாள் ஆசன்னமாய்த்து என்று பிறர்க்கும் பேசும்படியாய் – ஸூப்ரபாதாச மே நிசா-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-17-3- -என்றும் – ஸூப்ரபாதாத்ய ராஜநீ மதுரவாசா யோஷிதாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-18-24 -என்றும் சொல்லுகிறபடியே பகவத் பிராப்தி அணித்தான வாறே நல் விடிவான நாளிலே –

(அறியச்‌ சொன்ன ஸூப்ரபாதத்தே) “நாமுமக்கறியச்‌ சொன்ன நாள்களும்‌ நணியவான” (திருவாய்மொழி 10-2-9) “மரணமானால்‌” (திருவாய்மொழி 9-10-35) என்று அவனறுதி யிட்டுத்‌ தந்தானாய்‌ நான்‌ உங்களுக்குச்‌ சொன்ன நாள்‌ கிட்டிற்றென்று பிறர்க்கும்‌ பேசும்படியாய்‌ “ஸுப்ரபாதா ச மே நிஸா ” (ஸ்ரீவிஷ்ணுபுரானம்‌ 5-17-3) “ஸுப்ரபா தாத்‌ய ரஜநீ மது,ராவாஸ யோஷிதாம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-18-24) என்று பகவத் ப்ராப்தி அணித்தான நல்விடிவான நாளிலே-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9–நாளேல் அறியேன் –என்றும் –மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து –தஸ்மிந் நஸ்தமிதே பீஷ் மே-என்று அவன் தான் சொன்ன வார்த்தையை இவர் சொல்லுகிறார் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5–-மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை-10-3-4–பசு மேய்க்க போகல் –10-3-9–என் கை கழி யேல் –10-3-8-
அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –10-3-11-என்று தமக்கு துணையான அவனை பசு மேய்க்கையாகிற அபிமதத்தை பற்றவும் போகாதபடி பண்ணி –

(துணை பிரியாமல்‌ போக்கொழிந்து மீள்கின்றதில்லை என்று நிச்சித்திருந்தவிவர்‌) “துணை பிரிந்தார்‌ துயரமும்‌ நினைகிலை பசுமேய்க்கப் போகேல்‌” (திருவாய்மொழி 10-3-4) “என்‌ கை கழியேல்‌” (திருவாய்மொழி 10-3-8) “பசுநிரை மேய்ப்பொழிப்பானுரைத்தன (திருவாய்மொழி 10-3-11) என்று தமக்குத்‌ துணையாக அவனை பசு மேய்க்கப்‌ போகையாகிற அபிமதத்தில்‌ நின்றும்‌ தவிர்த்து-

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்- துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4–துணை பிரிந்தார் என்று உன்னைப் பிரிந்தார் என்றபடி -துணை என்றால் த்விஷ்டமாய் என்று காண் இருப்பது -என்னும் ஆச்சான் -அவனே துணை –அல்லாதார் எல்லாம் கழுத்துக் கட்டி -தொழுத்தையோம் தனிமையும் அறிகிறிலை–துணை பிரிந்தார் துயரமும் அறிகிறிலை –பிரிகிறோம் நாங்கள் என்றும் அறிகிறிலை –பிரிகிறது உன்னை என்றும் அறிகிறிலை —

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9–உனக்கு எழுத்து வாங்குகிறோம் -நீ பசு மேய்க்கப் போகாது ஒழிய வல்லையே -நீங்கள் இங்கனே நிர்பந்திக்க நான் போகா நின்றேனோ -ஸ்வ தர்மத்தைச் செய்யப் போனால் தான் வருவது என் என்ன –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8–பிரிவில் தரிக்கலாம் படியோ நீ கலவியில் பரிமாறிற்று என்கிறாள் -அபிமத விஷயத்தோடு இருக்கச் செய்தே-சந்த்யா வந்தனம் பண்ண நினைப்பார் யுண்டோ -ஸ்வ ஜனத்தை விட்டோ ஸ்வ ஜனத்தை ரஷிப்பது-என் கை கழியேல்--நான் அணைத்த கைக்கு உள்ளே இருக்கப் பார்-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-அவனோட்டை பிரிவு பொறுக்க மாட்டாத படியால் -ஒரு பருவத்தில் இடைப் பெண்கள் அனுசந்தித்த -தொடையாய் -அவர்களில் ஒருத்தி பசு நிரை மேய்க்க வேண்டா -என்று உரைத்தாள் -எல்லாரும் திரளச் சொன்னால் அவன் செவிப்படாது என்னுமத்தாலே -நப்பின்னைப் பிராட்டியைப் போலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத தரம் யுடையாள் ஒருத்தியை வார்த்தை சொல்ல விட்டார்கள் -இப்படி யாகில் இறே -அடிச்சியோம் -என்றும் –தொழுத்தையோம் -என்றும் -ஆழும் என்னாருயிர் -என்றும் -என் சொற் கொள் என்றும் -சொன்ன பன்மைகளும் ஒருமைகளும் -சேரக் கிடப்பது –இவையும் பத்து அவற்றின் சார்வே-–கீழ்ச் சொன்ன திருவாய் மொழிகள் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே -என்றாய்த்து நிர்வகித்துப் போருவது –அங்கன் அன்றிக்கே கீழில் திருவாய் மொழிகளுக்குச் சொன்ன பலமே இதுக்கும் பலம் என்னுதல் –மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலையால் பலித்த பலமே இதுக்கும் பலம் என்னுதல் -அவர்களுக்கு அவன் போகாமல் மீண்டான் ஆகில் இவர்களுக்கும் அதுவே பலமாய் -அவனோடே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்–என்கிறார் –

மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்–10-4-3–நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேன்-10-4-4- –என்று-சம்சார துரிதம் மருவல் இடாது என்று –நபிபேதி குதச்சன -என்கிற படி-ஒன்றுக்கும் அஞ்சாதபடி நிச்சயித்து இருந்தவர் சஞ்சிதம் காட்டும் தசை யானவாறே மரண தசையான அளவிலே சஞ்சிதமாக புதைத்து கிடக்கும் மகா நிதிகளை புத்ராதிகளுக்குக் காட்டுவாரைப் போலே –தமக்கு பகவத் பிராப்தி அணித்தானவாறே – ஒருவரும் இழக்க ஒண்ணாது -எல்லாருக்கும் ஹித அஹிதங்கள் அறிவிக்க வேணும் என்று பார்த்து-

மீள்கின்றதில்லை பிறவித்துயர்‌ கடிந்தோம்‌” (திருவாய்மொழி 10-4-3 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்‌’ (திருவாய்மொழி 10-4-4) என்று ஸம்ஸார துரிதம்‌ மறுவலிடா தென்று “நபி, பேதி குதஸ்சந’ (தைத்திர்யோபநிஷத்‌ என்கிறபடியே ஒன்றுக்கும்‌ அஞ்சாதபடி நிஸ்சித்திருந்த விவர்‌ -(ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தமையானவாறே) மரணாவஸ்தைகளிலே ஸஞ்சிதமாய்ப்‌ புதைத்துக்‌ இடந்த நிதிகளைப்‌ புத்ராதிகளுக்குக்‌ காட்டுவாரைப்‌ போலே தமக்கு ப்ராப்தி யணித்தானவாறே ஒருவரும்‌ இழக்க வொண்ணாது இவ்வளவிலே எல்லார்க்கும்‌ ஹிதாஹிதங்களை அறிவிக்க வேணுமென்று பார்த்து,

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
–10-4-3-இனி மறுவல் இடுகிறது இல்லை –
பிறவித் துயர் கடிந்தோம்–துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய் தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை என்கை 

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4–அவ்விருப்பை என்னால் போக்க ஒண்ணாமையை நிச்சயித்து –அவன் போகைக்கு உறுப்பாக என்னால் செய்யலாவது ப்ராதிகூல்யம் இறே -நெஞ்சைக் கொண்டு இருக்கையாலே அத்தை செய்ய ஒண்ணாது இறே –இருந்தேனே— இனி ஒரு பயம் இல்லை என்று நிர்ப்பயனாய் இருந்தேன் –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி -என்று அவனுடைய ரக்ஷகத்வத்தை அறிந்தாலும் போக்யத்தை அறிந்தாலும் -ஒன்றாலும் சலியான் இறே —

4 -முந்துற்ற நெஞ்சுக்கு பணி மறவாதே மருள் ஒழி நகு கைவிடேல் என்று க்ருத்யா க்ருத்யங்களை விதித்து-அதாவது-தொழுது எழு என் மனனே-1-1-1- -என்று பிரதமத்தில் உபதேசிக்கும் படி –முந்துற்ற நெஞ்சே –பெரிய திருவந்தாதி-1–என்கிற படி தம்மிலும் பகவத் விஷயத்தில் முற்பட்டு நிற்கும் தம் திரு உள்ளத்துக்கு –பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை–10-4-7–என்றும் –வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8- -என்றும் –மருள் ஒழி நீ மட நெஞ்சே-10-6-1- -என்றும் –நரகத்தை நகு நெஞ்சே-10-6-5- -என்றும் –வாழி மனமே கை விடேல்-10-7-9- -என்று நம் பிரதி பந்தங்களை எல்லாம் தானே போக்கி அடிமை கொள்ளும் சர்வ ஸ்மாத் பரனை அனுபவிக்க பார் –உனக்கு இஸ் சம்ருதி மாறாதே சென்றிடுக –கை புகுந்தது என்னா இதர விஷயங்களில் செய்யும் அத்தை இவ் விஷயத்திலும் செய்யாதே கொள் –திரு வாறன் விளை யதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்–7-10-9- -என்று –பிராப்ய வஸ்து கிட்டிற்று ஆகில் -இங்கு அடிமை செய்ய அமையாதோ என்று -உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமிப்பது ஓன்று உண்டு உனக்கு -அத்தை தவிரப் பார் –உத்தேச்ய வஸ்து சந்நிஹிதமாய்த்து என்று இத்தையே – பார்க்கும் இத்தனையோ –நம்மையும் பார்க்க வேண்டாவோ –நான் பரமபதத்து ஏறப் போகா நின்றேன் –நெடு நாள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின சம்சாரத்தை புரிந்து பார்த்து சிரித்துப் போரு கிடாய் –நமக்கு இச் சம்பத்து எல்லாம் திரு மலையால் வந்தது ஆய்த்து -அத் திரு மலையை கை விடாதே கொள் –என்று கிருத்தய அக்ருத்யங்களை அவஸ்ய கரணியமாம்படி விதித்து நெஞ்சு போல்வாரை தொண்டீர் என்று அழைத்து தம் திரு உள்ளம் போலே அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை தொண்டீர் வம்மின்-10-1-4- -என்று பகவத் விஷயத்தில் சபலரானார் வாருங்கோள் என்று அழைத்து –

(முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணியித்யாதி க்ருத்யாக்ருத்யங்‌களை விதித்து) “தொழுதெழென்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) என்று ப்ரதமத்திலே உபதேஸிக்கும்படி பகவத்‌ விஷயத்திலே தம்மிலும்‌ முந்துற்று நிற்கிற தம்முடைய திருவுள்ளத்தைப்‌ பார்த்து, “பணிநெஞ்சே நாளும்‌ பரம பரம் பரனை  (திருவாய்மொழி 10-4-7) “வாழியென்‌ நெஞ்சே மறவாது வாழ்கண்டாய்‌” (திருவாய்மொழி 10-4-8) “மருளொழி நீ மடநெஞ்சே” (திருவாய்மொழி 10-6-1 “நரகத்தை நகு நெஞ்சே” (திருவாய்மொழி 10-6-5 “வாழி மனமே கைவிடேல்‌” (திருவாய்மொழி 10-7-9 என்று நம்‌ ப்ரதிபந்தகங்களை யெல்லாம்‌ தானே போக்கி அடிமை கொள்ளும்‌ ஸர்வஸ்மாத்‌ பரனை அநுபவிக்கப்பார்‌. உனக்கிந்த ஸம்ருத்‌தி மாறாதே சென்றிடுக கைபுகுந்ததென்னா இதர விஷயங்களிலே செய்யுமத்தை இவ் விஷயத்திலும்‌ செய்யாதே கிடாய்‌. இன்பம்‌ பயக்கவிலே ‘ திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து கை தொழக்கூடுங்கொலோ” (திருவாய்மொழி 7-10-9)என்று ப்ராப்ய வஸ்து கிட்டிற்றாகில்‌ இங்கே யடிமை செய்ய வமையாதோ வென்று ப்‌ரமிப்பதொன்றுண்டு; உனக்கு அத்தைத்‌ தவிரப் பார்‌. உத்தேஸ்ய வஸ்து ஸந்நிஹிதமாய்த்தென்று அத்தையே பார்க்குமத்தனையோ, நம்மைப்‌ பார்க்க வேண்டாவோ நான்‌ பரமபதத்தேறப்‌ போகா நின்றேன்‌. நெடுநாள்‌ நம்மைக்‌ குடிமக்களாக்கி எளிவரவு படுத்தின ஸம்ஸாரத்தைப்‌ புரிந்து பார்த்து சிரித்துப்‌ போரு கிடாய்‌; நமக்கு இந்த ஸம்பத்தெல்லாம்‌ திருமலையாழ்வாராலே வந்ததாய்த்து. அத்திருமலையைக்‌ கைவிடாதேகொள்‌ என்று க்ருத்யாக்ருத்யங்களை அவஸ்ய கரணீயமாம்‌ படி விதித்து (நெஞ்சு போல்வாரைத் தொண்டீரென்றழைத்து) திருவுள்ளம்‌ போலே அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவர்களை “தொண்டீர்‌ வம்மின்‌” (திருவாய்மொழி 10-1-4) என்று அழைத்து –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-தொழுது-சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்-எழு-உஜ்ஜீவி-தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது
என் மனனே-பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-நெஞ்சே நாள் தோறும் அனுபவிக்கப் பார் –
பரம பரம்பரனை-சம்சாரிகளுக்கு அவ்வருகான-ப்ரஹ்மாதிகளுக்கும் பரரான நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாஹகானானவனை –

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்
–10-4-8-ஆபத்சகனுடைய திருவடிகளை –வாழி-மேல் சொல்லப் புகுகிற காரியத்தை நினைத்து –ஆயுஷ்மன் -என்னுமா போலே -உனக்கு இது நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார் –-என் நெஞ்சே -புறம்பு உள்ளாரை சுமை எடுத்து தன் வழியே கொடு போகா நிற்க -முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே –-மறவாது -இதர விஷயங்களில் போல் அன்றியே விஸ்மரிக்கை ஸ்வரூப நாசம் என்னும் படியான விஷயம் கிடாய் –சா ஹானி –என்னக் கடவது இறே –-வாழ் கண்டாய்–உன் பேற்றுக்கு இறே நான் கால் பிடிக்கிறது –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1–மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –-மட நெஞ்சே–சாது நெஞ்சே –பவ்யமான நெஞ்சே —மடமை -அறிவின்மை-வாட்டாற்றான் அடி வணங்கே–திரு வாட்டாற்றிலே வந்து நிற்கிறவன் நினைவிலே போகப் பார் –அடி வணங்குகை யாவது -ஈரரசு தவிருகை –அவன் கருத்தில் போகை –

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5–சம்சாரத்தைப் பார்த்து உன்னை வென்றேன் -என்று சிரித்து போகப் பார் -உன்னை நெடுநாள் குடிமை கொண்டது என்று பார்த்து உன் வெற்றி தோன்ற போ -விஸ்லேஷம் ஆகிற நரகத்தை நகு என்றுமாம்-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-வாழி–நான் சொல்லுகிற கார்யம் -உனக்கு நித்தியமாகச் சென்றிடுக —மனமே கை விடேல் -நமக்கு இஸ் சம்பந்தத்துக்கு எல்லாம் அடி திருமலையான பின்பு அத்தைக்கு கை விடாதே கொள் என்று என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்ய –அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து ஆழ்வார் திருமேனியை கை விடாதே கொள் -என்று அருளிச் செய்ய -இந்நிரபந்தத்தைத் தவிர்ந்து அருள வேணும் என்கிறார் 

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’
என்னுமென் சிந்தனையே.–7-10-9-மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை –தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை-மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ் ஸூ –

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-தேவாதிகளுக்கு ஸூ லபன் ஆனால் போலே -நமக்கும் ஸூ லபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினான் – இடர் கெட வடி பரவுதும் -நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் போம்படி அவனுடைய திருவடிகளை ஆஸ்ரயிப்போம்
தொண்டீர் வம்மினே–என்னோடு சகோத்ரிகளாய் இருப்பார் திரளுங்கோள்–

5-வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதும் என்று கர்த்தவ்யம்
ஸ்மர்தவ்யம் வக்தவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யம் எல்லாம் வெளி இட்டு-

அதாவது–கொண்ட கோவிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே -10-1-5–என்று அவன் எழுந்து அருளி நிற்கும் தேசத்தை குறித்து அனுகூல வ்ருத்தியை பண்ணி – ஹ்ருஷ்டராவோம் வாருங்கோள் என்கையாலே கர்த்தவ்யமும் –எண்ணுமின் எந்தை நாமம் 10-2-5–என்று ஸ்வாமி உடைய திரு நாமத்தை
அனுசந்தியுங்கோள் என்கையாலே –ஸ்மர்த்தவ்யமும் –பேசுமின் கூசமின்றி -10-2-4–என்று உங்கள் யோக்யதை பார்த்து கூசாதே திருவனந்த புரத்திலே சிநேகத்தை பண்ணி வர்த்திக்கிறவனை பேசுங்கோள் என்கையாலே –வக்தவ்யமும் –நமர்களோ சொல்லக் கேண்மின் -10-2-8–என்று நம்மோடு சம்பந்தம் உடையீர் நாம் சொல்லுகிறதை கேளுங்கோள் என்கையாலே – ஸ்ரோதவ்யமும் –படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ -10-2-1–என்று திரு வனந்த புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளை காணப் போருங்கோள் என்கையாலே –த்ரஷ்டவ்ய கந்தவ்யங்களும்அனந்த புர நகர் புகுதும் இன்றே -என்று இச்சை பிறந்த இன்றே திருவனந்த புரத்திலே போய்ப் புக வாருங்கோள் என்கையாலே –வஸ்தவ்யமும் – ஆகிய இவைகள் எல்லாம் அவர்களுக்கு வெளி இட்டு–

(வலஞ்செய்தித்யாதி நடமின்‌ புகுதுமின்‌ என்று) கொண்ட “கோயிலை வலஞ்செய்திங்காடுதும்‌ கூத்தே” (திருவாய்மொழி 101-5) “எண்ணுமின்‌ எந்தை நாமம்‌” (திருவாய்மொழி 10-2-5) “பேசுமின்‌ கூசமின்றி” (திருவாய்மொழி 10-2-4) “நமர்களோ சொல்லக் கேண்மின்‌” (திருவாய்மொழி 10-2-8)பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் (திருவாய்மொழி 10-2-1)அனந்தநகர் புகுதுமின் (திருவாய்மொழி 10-2-1) என்றும் அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணுங்கோள் -ஸ்வாமியுடைய திரு நாமங்களை அநுஸந்தியுங்கோள்‌; உங்கள்‌ அயோக்‌யதை பார்த்துக்‌ கூசாதே திருவனந்தபுரத்திலே ஸ்நேஹத்தைப் பண்ணி வர்த்திக்கதிறவனைப்‌ பேசுங்கோள்‌; என்னோடு ஸம்பந்த முடையரானார்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேளுங்கோள்‌: திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளைக்‌ காணப்‌ போருங்கோள்‌; இச்சை பிறந்த இன்றே அங்கே போய்ப் புகப்‌ பாருங்கோள்‌ என்று அவர்களுக்குக்‌ கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டு

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணி
இங்கு ஆடுதும் கூத்தே–பந்தம் இது –வடிவு அழகு அது -ஆனபின்பு ஆடாதே இருக்கப் போமோ -அங்குப் போனால் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கேயே களிப்போம்-

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5–என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்த யந்தே–என்னக் கடவது இறே

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-உங்கள் அயோக்யதை பார்த்து கூசாதே -அத்தலையில் நீர்மையையும் ப்ராப்தியையும் பார்த்து பேசுங்கோள் -வளவேழ் உலகில் தமக்குப் பிறந்த இறாய்ப்பு இவர்களுக்கும் ஒக்கும் என்று இருப்பவர் இறே

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6—நம்மோடு குடல் துவக்கு உள்ள நீங்கள் சொல்லக் கேளுங்கோள் –வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற நம் நினைவே நினைவாய் யுள்ளார் கேளுங்கோள் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ
நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8—ஸ்வ ஸ்பர்சத்தாலே விஸ்திருத பணனான திருவனந்த ஆழ்வான் மேலே நிரந்தரமாக கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைக் காண -/பயின்ற-என்று வீசு வில்லிட்டு எழுப்பிலும் எழுப்ப ஒண்ணாத படி இறே படுக்கை வாய்ப்பு இருப்பது-நடமினோ நமர்கள் உள்ளீர்-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-நாமும் உமக்கு அறியச் சொன்னோம்வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் –ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

6-பிணக்கறவை சார்வாக நிகமித்து-அதாவது-உபக்ரமித்த அர்த்தத்தை -உப சம்ஹரிக்கை-சாஸ்திர க்ரமம் ஆகையால் –பிணக்கற -1-3-1–என்ற பாட்டில்-வணக்குடை தவ நெறி -என்று உபக்ரமித்த பக்தி யோகத்தை –சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்-10-4-1- -என்ற ஸ்வ சாத்யத்தோடே பொருந்தின படியை சொல்லி நிகமித்து –இதின் பட்டோலையான க்ரந்தத்தில் –வீடுமுன் முற்றவும் -பத்துடை அடியவரிலே உபதேசிக்கத் தொடங்கின -சாத்திய ஸித்த ரூபமான சாதன த்வயதையும் –தவ நெறிக்கு பரமன் பணித்த -என்று நிகமித்து என்றவர் இதில் இப்படி அருளிச் செய்வான் என் என்னில் –அது வீடுமுன் முற்றவும் -பிரபத்தி பரமாகவும் பத்துடை அடியவர் -பக்தி பரமாகவும் – பூர்வர்கள் நிர்வகித்த கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார் –இது -வீடுமுன் முற்றத்தையும் பக்தி பரமாக்கி யோசித்து அருளின எம்பெருமானார் நிர்வாக கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார்-இதிறே சகல வியாக்யான சித்தமுமாய் -ஈட்டிலும்-பிரதான யோஜனையுமாய் -இருக்குமது –இந்த க்ரமத்திலே இறே இவர் தாம் முதல் பத்தில் பக்தியை உபதேசிக்கிறார் என்று அருளிச் செய்ததும் –ஆகையால் அது முன்புள்ளார் அருளிச் செய்த படியை பற்றி அருளிச் செய்தார்–இது எம்பெருமானார் யோஜனையாய் பின்பு உள்ளார் எல்லாரும் அருளிச் செய்து கொண்டு போந்த மரியாதையை பற்ற அருளிச் செய்தார் என்று கொள்ளும் இத்தனை –வணக்குடை தவ நெறி -என்கிற இது பிரபத்தி பரமாகவும் ஈட்டில் ஒரு யோஜனை தோன்றி இருக்கையாலே பிணக்கறவை-என்கிற இதிலே –பக்தி பிரபத்தி -இரண்டையும் கூட்டிக் கொண்டு –சார்வே தவ நெறியிலே –சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும் –பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் -என்றும் இரண்டையும் நியமிக்கிறார் என்றாலோ என்னில் -அதுக்கும் அனுபபத்தி உண்டு –பிணக்கற -என்ற பாட்டிலே -பிரபத்தி பரமான யோஜனை உண்டானாலும் -விகல்பம் ஒழிய –சமுச்சயம் கூடாமையாலே –ஆகையால் சகல வியாக்யானங்களும் சேர -பிணக்கற வில் -உபக்ரமித்த பக்தியை நியமிக்கிறார் -என்ன அமையும் –ஆனால் பக்தி உபதேச உபக்கிரமம் -வீடுமின் முற்றத்திலே -யாயிருக்க -பிணக்கறவை-என்பான் என் என்னில் –வீடுமின் -என்று த்யாஜ்ய உபாதேய -தோஷ குண -பரித்யாக -சமர்பண க்ரமத்தை-சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து –அத்தையும் இதுக்கு சேஷமாக ஒருங்க விட்டுக் கொண்டு வந்து –அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலம் செய்வது -என்று தாம் யோஜித்த க்ரமத்தை பிடித்து முதல் பத்திலே தொடங்கின பக்தி யோகத்தை என்றபடி —பிணக்கற தொடங்கி வேத புனித இறுதி சொன்ன -என்று இறே கீழும் அருளிச் செய்தது –ஆக இப்படி முதல் பத்தில் உபக்ரமித்த பக்தியை நிகமித்துக் கொண்டு –

(பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்துக்‌ கொண்டு) உக்த நிகமநம்‌ பண்ணுகை ஸாஸ்த்ரமாகையாலே முதலிலே “பிணக்கற” என்கிற பாட்டில்‌ “வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்று உபக்ரமித்த ஸாத்‌ய ஸித்‌த ரூபமான பக்தி ப்ரபத்திகளாகிற உபாயத்தையும்‌ சார்வே தவநெறியிலே “சார்வே தவ நெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌” (திருவாய்மொழி 10-4-1 என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) “இருமை வினைகடிந்து இங்கென்னை யாள்கின்றான்‌” (திருவாய்மொழி 10-4-2) என்று நிகமித்துக்‌ கொண்டு 

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-வணக்குடைத் தவ நெறி வழி நின்று – வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –
பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்
புற நெறிகளை கட்டு-இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யற பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே -அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்-அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே-தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –-அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்- அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம் –தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1—தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்–சார்வே –தவ நெறிக்குத் -பக்தி மார்க்கத்துக்கு –வணக்குடை தவ நெறி என்றத்தைச் சொல்லுகிறது –மாம் நமஸ் குரு–என்று வணக்கத்தை கரண சரீரமாக யுடைத்தாய் இருக்கும் இறே பக்தி –அன்றிக்கே –யஸ்ய ஞான மாயம் தப -என்று ஞான விசேஷமான பக்தியை தபஸ் -என்று சொல்லுகிறது -இவன் ஒரு கால் தலை வணங்க -பெரு வருத்தமான காய கிலேசமாக நினைத்து இருக்கும் ஈஸ்வர அபிப்பிராயத்தாலே சொல்லவுமாம் —தாமோதரன் தாள்கள்–தாமோதரன் —உரலினோடு இணைந்து இருந்து -என்றத்தை சொல்லுகிறது -சர்வாதிகனாய் வைத்து ஓர் இடைச்சி கட்டவும் அடிக்கவும் -தன்னைக் கொடுத்து -அத்தாலே வந்த தழும்பாலே–அது தானே தனக்குத் திரு நாமமாம் படி இருக்கிறவன் –தாள்கள் – தன்னை உகப்பாருக்கு இவன் இப்படி எளியன் ஆனால் -அவனை உகப்பார் அவன் ஸுலப்யத்தத்துக்கு தோற்று அவன் திருவடிகளை பெறும் அத்தனை இறே —சார்வு -ப்ராப்யம்-பத்துடை அடியவர்க்கு எளியவன் என்றும் –எளிவரும் இயல்வினன் என்றும் –அவன் சார்வு -என்றார் -இங்கே சார்வே -என்று அவதரிக்கிறார் 

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9—கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே –தொண்டே செய்து –பர பக்தியாதிகளை யுடையவனாய்
என்றும் தொழுது வழி ஒழுக-நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–
பண்டே பரமன் பணித்த பணி வகையே–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே –மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் –

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-இருமை வினை கடிந்து -நாளும்- இங்கு என்னை ஆள்கின்றானே–புண்ய பாப ரூப கர்மங்களை போக்கி -ஒரு தேச விசேஷத்தில் அன்றிக்கே-இங்கு -இஹ லோகத்திலேயே -நாள் தோறும் -என்னை அடிமை கொள்ளா நின்றான் -அங்கே குண அனுபவம் –இங்கே குண ஞானத்தால் தரிக்கை–

7-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி-அதாவது- எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10–என்று முதல் பத்தில் பஜன ஆலம்பனமாக சொல்லப் பட்டதாய்- எண்ணும் திரு நாமம் -10-6-1–என்று பஜன தசையில் அனுசந்திக்க படும் திருநாமமான திரு மந்த்ரத்தினுடைய சப்தத்தையும் -அர்த்தத்தையும் – நாரணம் -என்றும் – நாரணன் எம்மான் -10-5-2–என்றும் -இத்யாதியாலும் ஸூக்ரஹமாம் படி சுருங்க உபதேசித்தும்-

எண் பெருக்கில்‌ எண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி) “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ “திண்ணம்‌ நாரணமே” (திருவாய்மொழி 10-5-1) என்றும்‌ பக்திக்காலம்பநமாக உபதேஸித்த திருமந்தரத்திலர்த்தத்தையும்‌ ஸப்‌தத்தையும்‌ பரவாதபடி சுருக்கிக்‌ கொண்டு

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-எண் பெருக்கு-இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது-அந் நலத்து –கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-ஈறில-நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்
வண் புகழ் –கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை-ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்-நாரணன் –-நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்-திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–
10-5-1-கண்ணன் கழலிணை–என்று தாமோதரன் தாள்கள் சார்வே -என்றத்தை அனுபாஷிக்கிறார்-எண்ணும் திருநாமம்–எப்போதும் அநுஸந்திக்கும் திரு நாமம் -மந்த்ரம் என்னாதே திரு நாமம் என்கிறது -அதிகாரி நியதி யாதல் –அங்க நியதி யாதல் -வேண்டா என்கைக்காக -மாத்ரு நாம க்ரஹணத்துக்கு அதிகாரமும் வேண்டா -சரசமுமாய் இருப்பது -அது தான் ஏது என்னில்-நாரணமே–-அவதாரணத்தாலே இவ்வளவே பூர்ணம் என்கை -ப்ரணவத்தையும் நமஸ்ஸையும் சதுர்த்தியும் ஒழியவே பூர்ணம் -என்கை –அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று -நீ ப்ரஹ்ம ராக்ஷசனாய்ப் பிற -என்னுமதில் வியாவ்ருத்தி சொல்லிற்று-திண்ணம் –பெறுகிற பேற்றின் கணத்துக்கு போருமோ-என்ன வேண்டா -நிச்சிதம் –சத்யம் சத்யம் —

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-நாரணன்-சப்த உபாதானம் –எம்மான் –எனக்கு ஸ்வாமி யானவன் –பாரணங்கு ஆளன்–பூமிக்கு அபிமானிநியான நாயகன் ஆனவன் – வாரணம் தொலைத்த காரணன் தானே–ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் –சர்வ காரணமாய் இருக்கிறான் கிருஷ்ணன் தான் —-எம்மான் -என்கிறது சம்சார விபூதிக்கு உப லக்ஷணம் –பாரணங்கு ஆளன்-என்கிறது நித்ய விபூதிக்கு உப லக்ஷணம் -வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –

மாதவன் என்று த்வயமாக்கி–அதாவது- பூர்வ உத்தர வாக்யங்களில் -ஸ்ரீ மத் -பத அர்த்தங்களை திரு உள்ளத்தில் கொண்டு – மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -10-5-7–என்று கீழ்ச் சொன்ன நாராயண சப்தத்தோடு -மாதவன் -என்கிற இத்தை இரண்டு பர்யாயம் சேர்த்து சொல்லீர்கள் என்கையாலே –
அந்த திரு மந்த்ரத்தை அதனுடைய விசத அனுசந்தானமான த்வய ரூபேண வெளி இட்டு –

மாதவனென்றென்று ஓத வல்லீரேல்‌” (திருவாய்மொழி 10-5-7) என்று அந்தத் திருநாமத்தினுடைய விதாநுஸந்தாநமான த்‌வயத்தையும்‌ வெளியிட்டு

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே
-10-5-7–ஸ்ரீ வல்லபன் என்னும் திரு நாமத்தை உங்களுக்கு ருசி இல்லையே யாகிலும் -பர பிரேரி தராய்க் கொண்டாகிலும் நிரந்தரமாகச் சொல்ல வல்லி கோளாகில் பூர்வாகங்கள் நசிக்கும் -உத்தராகங்கள் ஸ்லேஷியா – முன்புள்ள வற்றை மறக்கும் -பின்புள்ள வற்றில் நெஞ்சு செல்லாது –கீழ்ச் சொன்ன திரு மந்த்ரமும் -இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும் தனித் தனியே பேற்றுக்கு பர்யாப்த்தமான பின்பு -இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்கு பேற்றுக்குச் சொல்ல வேண்டா இறே –

கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்து-அதாவது-
ஈஸ்வரன் தம்மைக் கொண்டு போகையிலே த்வரிக்கிற படியாலும் – கேட்கிறவர்களுக்கு பிரபத்தி விஷயமாம்படி யாகவும் சுருங்கக் கொண்டு –-தாள் வாய் மலரிட்டு நாள் வாய் நாடீர் -10-5-4–என்றும்
பாடீர் அவன்நாமம்–10-5-5- -என்றும் –சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே-10-5-10-–என்று
இப்படி கரண த்ரயத்தாலும் பிரயோகிக்கப் படும் பகவத் ஆச்ரயண வ்ருத்தியை – பரந்த சடங்குகளை சுருங்க அனுஷ்டேயார்த்த பிரகாசமான பிரயோக வ்ருத்தியாக்கி கையோலை செய்து கொடுக்குமா போலே –சம்சாரிகளுக்கு தர்சிப்பித்து-

(கரண த்ரயமித்யாதி, கையோலை செய்து கொடுத்து )ஈஸ்வரன் தம்மைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிறபடியாலும்‌ கேட்கிறவர்களுக்கு ப்ரதிபத்திக்கு விஷயமாம்படியாகவும் சுருங்கக் கொண்டு அநுஷ்டாநார்த்த ப்ரகாஸகமான ப்ரயோக விருத்தி போலே பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே” நெடியானே” (திருவாய்மொழி 10-5-5) “சுனைநன்‌ மலரிட்டு நினைமின்‌ (திருவாய்மொழி 10-5-10) என்று கரண த்ரயத்தாலுமுண்டான ஆஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து 

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-ஆஸ்ரித ஸூலபன் ஆகையால் ஸ்வாராதனுடைய திருவடிகளிலே செவ்வித் பூவை பணிமாறி நாள் தோறும் ஆஸ்ரயிங்கோள் -இப்படிச் செய்ய ஸ்வரூப அனுரூபமான பேறு நிச்சிதம் -என்கிறார் –

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-ப்ரீதி பூர்வகமான வ்ருத்திக்கு கால நியதி இல்லை -உங்கள் அபி நிவேசத்துக்கு அனுரூபமான விலக்ஷண புஷ்பத்தைக் கொண்டு அவன் திரு நாமத்தை ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சொல்லுங்கோள் -இப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -அங்கு சூட்டு நன் மாலைகளைக் கொண்டு ஆராதிக்கையும் -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னும் பாட்டுமாய் இறே இருப்பது –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10–அழகிய செவ்விப்பூவை திருவடிகளிலே பரிமாற நினையுங்கோள் –நெடியானே-எல்லாம் செய்தாலும் –ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே–என்று இருக்குமவன் –ஸ்மர்த்தா என்கிறபடியே -இவன் ஒரு கால் நினைக்க –அஹம் ஸ்மராமி-என்று என்றும் ஓக்க நினைக்குமவன் –

செஞ் சொல் கவிகளுக்கு கள்ள விழி காவல் இட்டு--அதாவது–செஞ் சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின்-10-7-1- -என்று-அவனுக்கு அடிமை செய்வீர் ! அவனுடைய சீலாதிகளிலே அகப்பட்டு அழுந்திப் போகாமல் உங்கள் உயிரை நோக்கி கொண்டு அடிமை செய்யப் பாருங்கோள் என்று -உபதேசிக்கையாலே – அனுபவ கைங்கர்யங்களோடு நடக்கிற ச கோத்ரிகளுக்கு-அரண் அழியாமல் -கள்ள வழி காவல் இடுவாரைப் போலே – சீல குணமாகிற ஆழம் காலில் இழியாதே கொள்ளுங்கோள் என்று – வஞ்சக் கள்வன் உள் கலந்து அழிக்கும் வழிக்குக் காவல் இட்டு

(செஞ்சொற்கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு) “செஞ்சொற்கவிகாள்‌ உயிர்காத்தாட்செய்மின்‌” (திருவாய்மொழி 10-7-1) என்று அவனுக்கு அடிமை செய்வார்‌ ஸீலாதிகளிலே அகப்படாதே கொள்ளுங்கோள்‌, அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு அரணழியாமல்‌ கள்ள வழி காவலிடுவாரைப்‌ போலே ஸீல குணமாகிற ஆழங்காலிலே இழியாதே கொள்ளுங்கோள்‌ என்று உபதேஸித்து

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1—செஞ்சொற் கவிகாள்--செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே –ஆட் செய்ம்மின் -என்கிறார் –ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் –ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக் கால் நாட்டுமாப் போலே -வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இறே ப்ரீதி பிரகரஷத்தாலே –

8-மனம் திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர விரைந்து அத்தை மறந்து குடி கொண்டு தாம் புறப் பட்ட வாக்கையிலே புக்கு தான நகர்களை அதிலே வகுத்து குரவை துவரைகளிலே வடிவு கொண்ட சபலனுக்கு தேக தோஷம் அறிவித்து அதாவது தன் பால் மனம் வைக்கத் திருத்தி –1-5-10–என்று வள ஏழ் உலகிலே -1-5-1–அயோக்யர் என்று அகன்ற தம்மை தன் சீலவத்யைக் காட்டி மனசைத் திருத்தி சேர்த்துக் கொண்டு -இன்னமும் இவர் இங்கே இருக்கில் அயோக்யர் என்று அகல்வர் –அகல ஒண்ணாத தேசத்து ஏறக் கொண்டு போக வேணும் -என்று –வீடு திருத்துவான் -1-5-10–என்கிறபடியே -பரமபதத்தை கோடிப்பதாய் போய் -அது செய்து மீளுவதற்கு முன்பே –ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-6-7-2- -என்கிறபடியே தன் உபதேசத்தாலே நாடெல்லாம் திருந்தி –தான் இங்கே தம்மை வைத்துக் கொள்ள நினைத்த காரியமும் தலைக் கட்டின வாறே –இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-10-6-3- -என்று மீள வந்து பரம பதத்தில் ஏறக் கொண்டு போகையிலே -த்வரித்து-சரம சரீரம் ஆகையாலே தம்முடைய திருமேனியில் தனக்கு உண்டான வ்யாமோகத்தாலே கொண்டு போக விரைந்து -அத்தையும் கூட மறந்து –கோவிந்தன் குடி கொண்டான் -10-6-7–என்கிறபடியே சபரிகரனாய் கொண்டு –எண் மாய ஆக்கை இதனுள் புக்கு -10-7-3–என்று த்யாஜ்யம் என்று குந்தி யடி இட்டு தாம் சரக்கு கட்டிப் புறப் பட்டு நிற்கிற தேஹத்துக்கு உள்ளே தான் புகுந்து-திரு மால் இரும் சோலை மலையே -10-7-8–என்கிற பாட்டின் படியே –தான நகர்கள் -என்று தனக்கு வாசஸ்தானமான திவ்ய நகரங்களில் பண்ணும் விருப்பத்தை எல்லாம் -ஓரோர் அவயவங்களிலே பண்ணி எல்லாம் இதுக்கு உள்ளே யாக வகுத்து –அங்கனாம் அங்கனாம் அந்த்தரே மாதவோ மாதரம் சாந்தரேன் அங்கனா–கர்ணாம்ருதம்-என்கிறபடியே திருக் குரவையிலே பெண்களொடே அநேக விக்ரக பரிக்ரஹம் பண்ணி அனுபவித்தாப் போலேயும் –ஏகஸ்மின்னேவ கோவிந்த காலே தாசாம் மகா முனே ஜக்ரகா விதிவத் பாணீன் ப்ருதக் கேஹெஷூ தர்மத–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-என்றும்–உவாச விப்ர சர்வாசாம் விச்வரூப தரோ ஹரி-ஸ்ரீ விஷ்ணு புராணம்-3-31-20- -என்கிறபடியே ஸ்ரீமத் த்வாரகையில் தேவிமாருடனே பதினாறாயிரம் விக்ரகம் கொண்டு அனுபவித்தாப் போலேயும் –அநேக விக்ரகம் கொண்டு தம்முடைய அவயவங்கள் தோறும் அனுபவிக்கும் படி தம் திருமேனியிலே அதி சபலன் ஆனவனுக்கு –பொங் ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம் இங்கு இவ் உயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களான உன் மா மாயை மங்க ஒட்டு-10-8-10–என்று ஸ்வ தேக தோஷத்தை அறிவித்து -இத்தை விடுவிக்க வேணும் என்று கால் கட்டி –

(மனந்திருந்தி யென்று தொடங்கி தேஹதோஷமறிவித்து) “தன்பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி வீடு தருத்துவான்‌’ (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே பரமபதத்தைக்‌ கொடுப்பதாகப்‌ போய்‌ அலங்கரித்து அவன்‌ வரக் கொள்ள “ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்று இவருபதேஸத்தாலே லோகமாகத்‌ திருந்த இவரை வைத்த கார்யம்‌ தலைக் கட்டினவாறே “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரித்து இவருடைய ஸரீரம்‌ சரம ஸரீரமாகையாலே அதில்‌ தனக்குண்டான வ்யாமோஹத்தாலே இவரைக்‌ கொண்டு போகையையும்‌ மறந்து “கோவிந்தன்‌ குடி கொண்டான்‌’ (திருவாய்மொழி 10-6-7) என்று ஸபரிகரனாய்க்‌ கொண்டு “என்‌ மாய வாக்கை இதனுள்‌ புக்கு” (திருவாய்மொழி 10-7-3) இன்றிவர் தாம்‌ குந்தியடியிட்டு த்யாஜ்யமென்று சரக்குக்‌ கட்டிப்‌ புறப்பட்டு நிற்கிற இவருடைய தேஹத்திலே தான்‌ புகுந்து “திருமாலிருஞ்சோலை மலையே” (திருவாய்மொழி 10-7-8) என்கிற பாட்டின்படியே ஷீராப்‌தி தொடக்கமாகத்‌ தனக்கு வாஸஸ்தாந திவ்ய நகரங்களில்‌ பண்ணும்‌ விருப்பத்தை யெல்லாம்‌ ஒரோ அவயவங்களிலே பண்ணி “அங்க நாமங்க நாமந்தரே மாத வவோ மாதவம்‌ மாதவஞ்சாந்தரேணாங்க நா இத்தமா கல்பிதே மண்டலே ஸஞ்சரந்‌ ஸஞ்ஜகெள, வேணுநா தேவகீ நந்த ந: (கர்ணாம்ருதம்‌ என்று திருக் குரவையில்‌ பெண்களோடே அநேக விக்‌ரஹ பரிக்ரஹம்‌ பண்ணி அநுபவித்தாப்‌ போலவும்‌ ஸ்ரீமத்‌ த்‌வாரகையிலே தேவிமார்களோடே பதினாறாயிரம்‌ விக்‌ரஹம்‌ கொண்டு அநுபவித்தாப் போலவும்‌ அநேக விக்‌ரஹ பரிக்‌ரஹம்‌ பண்ணி இவருடைய அவயவங்கள் தோறும்‌ அநுபவிக்கும்படி இவருடைய விக்‌ரஹத்திலே சபலனானவனுக்கு “பொங்கைம்புலனும்‌ பொறியைந்தும்‌ கருமேந்திரியம்‌ ஐம்பூதம்‌ இங்கிவ்வுயிரேய்‌ பிரகிருதி மானாங்கார மனங்களே உன்‌ மாமாயை மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-8-10) என்று தம்முடைய தேஹத்தில்‌ தோஷத்தை அவனுக்கறிவித்து அத்தை விடுவிக்க வேணுமென்று 

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10–தன்பால் மனம் வைக்கத் திருத்தி
விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ்ஸூக்குத் தானே விஷயமாம் படி அண்ணி-வீடு திருத்துவான்-பரமபதத்தை கோடிக்கத் தொடங்குவான்-அதாகிறது -ஆழ்வார் எழுந்து அருளி இருக்கிற மகோத்சவத்தாலே ஒரு புதுமை தோற்றி இருக்கை

வள ஏழ் உலகிலே -1-5-இவர் அகலப் புக –அவனும் உம்மோட்டை சம்ச்லேஷம் அவத்யாவஹம் அன்று -சௌசீல்ய வர்த்தகம் -என்ற பின்பும் என்னுடைய சம்ச்லேஷத்தால் அங்குத்தைக்கு வரும் சௌசீல்யமும் வேண்டா என்று இவர் அகல-மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே தன் பிரக்ருதியைக் காட்டி -நீர் சம்ச்லேஷியாத அன்று நம்முடைய சத்தையே இல்லை -என்று-யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினால் போலே-தன்னோடு சேர்த்துக் கொண்டான் என்கிறார் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –-அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் –அரவிந்த லோசனன் என்றும் –மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்
விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3–விண்ணுலகம் தருவானாய்–பரம பதத்திலே செல்லப் பெறுகை யன்றிக்கே –ஆண்மின்கள் வணக்கம் -என்ற பொதுவும் இன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் நமக்கே தருவானாய் இரா நின்றான் –விரைகின்றான் –சா பேஷாரான நாம் ஆறி இருக்க -நிரபேஷனானவன்-பதறா நின்றான் –முன்பு இவர் விரைந்த போது ஒரு கார்யார்த்தமாக வைத்தானாய் -அது தலைக் கட்டின வாறே -விசத்ருசமான விபூதி இவருக்குத் தரம் அன்று என்று பதறா நின்றான் –தொடங்கின அப்போதே தலைக் கட்ட வல்ல சர்வ சக்திக்கு பதற வேண்டுகிறது என் என்னில்-விதி வகையே--நாம் விதிக்கத் தருவானாக வேண்டி இரா நின்றான் –

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-குரை கழல்கள் குறுகினம் –ஆபரண த்வனியோடே அவன் வந்து மேல் விழக் கிட்டப் பெற்றோம்-நம் கோவிந்தன் குடி கொண்டான்–ஆஸ்ரித வத்சலனான கிருஷ்ணன் அகம்படி வந்து புகுந்து -என்கிற படி வந்து புகுந்தான்

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-என் மாய ஆக்கை இதனுள் புக்கு–அதி ஷூத்ரமான என் சரீரத்தில் புக்கு தனக்கு உத்தேச்யமான ஆத்மாவளவன்றியே-அழுக்கு உடம்பு -என்று தன்னை கால் காட்டித் தவிர்ப்பித்து கொள்ள வேண்டும் படி த்யாஜ்யமான சரீரத்தையே விரும்பா நின்றான் –-இதனுள் புக்கு-இது இது என்று இவர் இறாய்க்க அவன் மேல் விழா நின்றான் என்கை –புகுந்து என்னாதே புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இறே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இறே மேல் விழா நின்றான் –
என்னை முற்றும் தானேயாய் நின்ற--ஆத்மாவோடு சரீரத்தோடு வசி யறப் புக்கு வியாபித்து தானே அபிமானியாய் நின்றான் -என்னுடைய அஹங்கார மமகாரங்களும் விஷயம் இல்லாத படி நின்றான் –

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8—திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–தெற்கில் திருமலையையும் திருப் பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் -ஓக்க விரும்பா நின்றான் –திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே-பரமபதத்தையும் -வடக்கில் திருமலையையும் -என் சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –திருமால் வைகுந்தம் –ஸ்ரியா சார்த்தம் ஜகத் பத்தி -என்கிறபடியே அம் மிதுனத்துக்குத் தகுதியான தேசம் –
இத்தேசங்களிலே பண்ணுகிற விருப்பம் தம் திருமேனியில் பண்ணுகிற விருப்பத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே தம்முடைய அவயவங்கள் தோறும் புக்கு அனுபவியா நின்றான் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே
–10-7-10-இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ்ஸூக்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு-ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ –மமமாயா துரத்யயா –என்றிலையோ–

9-மாயையை மடித்து–அதாவது – அவனும் இத்தை விடுவிப்பதாக அனுமதி பண்ண -ப்ரீதராய் –
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை -10-8-3–என்று சம்சாரத்தில் நிற்கைக்கு
அடியான மாயை யுண்டு மூலப் பிரகிருதி -அத்தை திரிய விடுவித்தேன் என்று செருக்கி

(மாயையை மடித்து வானே தரக் கருதி கருத்தின் கண்‌ பெரியனானவனை) ‘”மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை” (திருவாய்மொழி 10-8-3) ஸம்ஸாரத்தில்‌ நிற்கைக்கடியான மாயை ப்ரக்ருதி அத்தைத்‌ திரிய விடுத்தேன்‌ என்று இவர் தாமே பேசும்படி அசித் ஸம்பந்தத்தை யறுத்து

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3–அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் –மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –

வானே தரக் கருதி கருத்தின் கண் பெரியனாவனை–அதாவது –-வானே தருவான் எனக்காய்-10-8-5- -என்று தனக்குப் பரம பதத்தைத் தருவானாய் ஒருப்பட்டு – கருத்தின் கண் பெரியவன்-10-8-8–என்று
உபய விபூதி யோகத்தால் வரும் அந்ய பரதையை அடையத் தீர்ந்து -தம்மை அவ் அருகே கொடு போகையாலும்– ஆதி வாஹிகரை நியமிக்கையாலும் -தான் முற்பாடனாகக் கொண்டு போகையாலும் –
பெருக்க பாரியா நிற்கிறவனை –-அன்றிக்கே -மாயையை மடித்து-என்கிறதை மேலோடு சேர்த்து –
மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை மடித்தேன் -என்று தாம் பேசும் படி அசித் சம்பத்ததை அறுத்து – வானே தருவான் -என்று தமக்கு பரம பதத்தைத் தருவானாக உத்யோகித்த –கருத்தின் கண் பெரியன் -என்று தம்மால் எண்ணி முடிக்க ஒண்ணாதபடி -தம் கார்யத்தில் த்வரிகிறவனை என்றுமாம் –

வானே தருவான்‌” (திருவாய்மொழி 10-8-5) என்று பரமபதத்தை இவர்க்குக்‌ கொடுப்பதாக “கருத்தின் கண்‌ பெரியன்‌” (திருவாய்மொழி 10-8-8 என்று இவருடைய மநோரதத்தினளவல்லா படி இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிற பற்று கண்டு

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5–எனக்கு வானே தருவானாய் -சம்சாரியான எனக்கு நித்ய ஸூரிகள் இருப்பை தருவானாக –ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து -என்னோடே பூணித்து -நான் அர்த்தியாய் இருக்கச் செய்தேயும் –அராவணம ராமம் வா -என்கிறபடியே -என்னோடே சமயத்தைப் பண்ணி மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே தானே புகுந்து -நிர்ஹேதுகமாக வந்து புகுந்து-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-கண்ணுள் நின்று அகலான்-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

ஆக இப்படி தாம் சொன்னபடி செய்யக் கடவனாய் -தம்மை கொண்டு போகையிலே மிகவும் பாரிக்கிறவனை-இன்று அஹேதுகமாக வாதரித்த நீ அநாதய நாதார ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க-அதாவது –-இன்று என்னை பொருளாக்கி-10-8-9- -என்று தொடங்கி இன்று இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்த நீ அநாதி காலம் என்னை உபேஷித்து இருந்ததற்கு ஹேதுவை அருளிச் செய்ய வேணும் என்று-மடியைப் பிடித்து கேட்க -இதுக்கு சொல்லலாம் உத்தரம் என்ன என்று தன்னிலே நிரூபித்து – இவை ஒன்றும் இவர்க்கு சொல்லத் தகாதன என்று அவன் நிருத்தரனாய் நின்றமையை நெடுக உபபாதிகிறார் மேல் – ஈஸ்வரன் நிரூபித்த க்ரமம்தான் இருக்கும் படி–

(அநாத்‌யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க) “இன்றென்னை’ (திருவாய்மொழி 10-8-9) இத்யாதி, இன்றிப்படி நிர்ஹேதுகமாக விஷயிகரித்த நீ அநாதி காலம்‌ உபேக்ஷித்து வைத்ததுக்கு ஹேதுவை அருளிச்‌ செய்யவேணுமென்று அவன்‌ மடியைப்‌ பிடிக்க-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்

குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9–இன்று என்னைப் பொருள் ஆக்கி -அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –
தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை-என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்–பர தந்த்ரனான என்னை புறம்போகப் பண்ணிற்று என் செயகைக்காக -பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை -புறம் போக விட்டானும் அவனே என்று இருக்கிறார் -ஸ்வ சத்தை பர அதீனமாய் இருக்கை -இவ் வஸ்துவுக்கு போக்கு வரவு ஆவது என் -இரண்டுக்கும் காரணம் சொல்ல வேணும் –குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மலைகள் போன்று விளங்கா நின்றுள்ள மாடங்களாலே சூழப் பட்ட திருப் பேர் நகரான் –ஓன்று எனக்கு அருள் செய்ய -இன்று விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்ல வேணும் –முன்பு உபாசித்தத்துக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே–அறிவிக்க வேண்டி இரா நின்றேன் –இதுக்கு ஈஸ்வரன் இவருக்கு சொன்ன உத்தரம் ஏது என்று சீயர் பட்டரைக் கேட்க -இவர் தலையிலே ஒரு பழி ஏறிட்டு நெடு நாள் இழந்த நாம் சொல்லுவது என் -என்று லஜ்ஜா விஷ்டனாய் நின்றான் -என்று அருளிச் செய்தார் –

10-இந்திரிய கிங்கரராய் குழி தூர்த்து சுவைத்து அகன்றீர் என்னில் –அவை யாவரையும் அகற்ற நீவைத்தவை என்பர் –அதாவது –யூயம் இந்திரிய கிங்கரா -வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை–என்கிறபடி -அநாதி காலம் இந்திரிய வச்யராய் –தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்-5-8-6- -என்றும் –அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-3-2-6- -என்று துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை இட்டு எத்தனை காலம் உன்னை அகன்று இருக்கக் கடவேன் -அல்ப ரசங்களாய் -அநேக விதங்களாய் இருக்கிற –சப்தாதி விஷயங்களைப் பசை உண்டதாக பிரமித்து -எதிர் பசை கொடுத்து புசித்து -சர்வ சக்தியான உனக்கு எட்டாதபடி –சம்சாரத்தில் கை கழியப் போனேன் என்று நீர் தானே பேசும்படியான சப்தாதி விஷய பிராவண்யம் அன்றோ -நீர் அநேக காலம் சம்சரிக்கைக்கு ஹேது என்னில் –ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -7-1-8–என்றும்–அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள்-5-7-8- -என்று -விஷயங்களும்–அவற்றில் பிராவண்ய ஹேதுவான இந்திரியங்களும் -எத்தனை ஏலும் அளவுடையாரே ஆகிலும் -கலங்கப் பண்ணி நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை அன்றோ என்பர்-

(இந்த்‌ரிய கிங்கரராய்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌ அவை யாவரையுமகற்ற நீ வைத்தவை என்பர்‌) “வயந்து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்‌ரிய இங்கரா:” (வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை) என்கிறபடியே அநாதி காலம்‌ இந்த்‌ரிய வஸ்யராய்‌ “தூராக்குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்‌” (திருவாய்மொழி 5-8-6) “அற்ப சாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்‌” (திருவாய்மொழி 3-2-6) என்று துஷ்பூரமான இந்த்‌ரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம்‌ உன்னை அகன்றிருக்கக்‌ கடவேன்‌ அற்ப சாரமானது அது நமக்குமெட்டாதபடி ஸம்ஸாரத்திலே கைகழிப்‌ போந்தேன்‌ என்று நீர் தாமே பேசும்படியான ஸப்‌தாதி விஷய ப்ராவண்ய மன்றோ நீர்‌ அநாதி காலம்‌ இழக்கைக்கு ஹேது என்னில்‌, “ஓரைவர்‌ யாவரையும்‌ மயக்க நீ வைத்த” (திருவாய்மொழி 7-1-8) என்றும்‌ “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்‌” (திருவாய்மொழி 5-7-8) என்றும்‌ நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை என்று நன்றாக அறிந்தேன்‌ என்பர்‌. 

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-உன் திருவடிகளை சேரும் முறைமை கண்டு வைத்தே துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை தேடியிட்டு எத்தனை நாள் அகன்று இருக்கக் கடவேன் இப்படி ஆறி இருக்கப் பார்த்தால் முறையை அறிவித்தது என் –மயர்வற மதி நலம் அருளிற்றிலை யாகில் நானும் ஆறி இருக்கலாயிறே-பூர்ணே சதுர்த்தசே-வர்ஷே -என்று ஓர் அவதி பெறினும் பெற்றதோடு ஒக்கும்

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்

பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-நீ விசேஷ கடாக்ஷம் பண்ணுவதற்கு முன்பு எல்லாம் –இந்த நெடு நாள் எல்லாம் நம்மை அகன்றது எத்தாலே என்ன-அற்ப சாரங்கள்-உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –அவை-இப்படி இருப்பன அநேகம்-சுவைத்து-இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்-நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை –-இத்தால் பெற்றது ஏது என்ன
அகன்று ஒழிந்தேன்-சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து
என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-இன்னமு தெனத் தோன்றி -முகப்பிலே நிரதிசய போக்யம் போலே தோன்றி –அக்ரே அமிருதம் இவ -என்னும்படியே -விபாகத்தில் இருக்கும் இருப்பு உபக்ரமத்தில் தோன்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாயிற்று -வாயில் இட்டால் ரசித்து அநந்தரம் முடிப்பன சில விஷங்கள் உண்டு அது போலே ஆயிற்று-ஓர் ஐவர் -தனித் தனியே பிரபலமாய் அத்விதீயமான சப் தாதிகள் ஐந்தும் யாவரையும் மயக்க-எத்தனையேனும் அதிசயித ஞானரையும் கலங்கப் பண்ணும் படியாக-நீ வைத்த-சர்வ சக்தியான நீ வைத்த முன்னம் மாயமெல்லாம் -அநாதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை காரியத்தோடு கூட முழு வேர் அரிந்து -சவாசனமாக போக்கி

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்

பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8–அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன் -யுகாவாதாரை யன்றோ யகற்றுவது -உமக்கு என் என்ன –-அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
அவை அபுருஷார்த்தம் என்று அறிந்த என்னையும் -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப்தாதி விஷயங்களில் தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன் -உன்பக்கல் ந்யஸ்த பரனான என்னையும்-என்றுமாம் -நீர் அஞ்சக் கடவீரோ என்ன -விளம்ப ஹேது இன்றிக்கே இருக்க விரோதி கிடைக்கையாலே அஞ்சா நின்றேன்

அது தேக யோகத்தாலே என்னில் –அந்நாள் நீ தந்த சுமடு என்பர் — அதாவது – அந்த இந்திரிய வஸ்தைக்கு அடி -குண த்ரையாத் மகமான சரீர சம்பந்தம் அன்றோ என்னில்–அந்நாள் நீ தந்த ஆக்கை –3-2-1- அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10–என்று அதுவும் தந்தாய் நீ என்பர்-

(அது தேஹ யோகத்தாலே என்னில்‌ அந்நாள்‌ நீ தந்த சுமடென்பர்‌) அந்த இந்த்‌ரிய வஸ்யதைக்கடி ஸரீர ஸம்பந்த மன்றோ என்னில்‌ “அந்நாள்‌ நீ தந்த ஆக்கை” (திருவாய்மொழி 3-2-1) “அது நிற்கச்‌ சுமடு தந்தாய்‌” (திருவாய்மொழி 7-1-10) என்று அதுவும்‌ உன்னாலே உண்டான (தென்பர்‌).

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-அந்நாள் –-அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்-நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ-தந்த –-திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –-துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய –தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி-ஆக்கையின் வழி உழல்வேன்-விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –-உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-சுமடு தந்தாய்-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இறே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்

முன் செய்த முழு வினை யாலே-என்னில் அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளும் என்பர்-அதாவது- அந்த தேக சம்பந்தத்துக்கு அடி –முன் செய்த முழு வினை-1-4-2- -என்று நீர் சொன்ன அநாதிகால ஆர்ஜித புண்ய பாப ரூப கர்மம் அன்றோ -என்று சொல்லுவோம் ஆகில்-துயரமே தரு துன்ப இன்ப விளைகளாய்–3-6-8-என்றும்–உற்ற விறு வினையாய் –10-10-8- என்று அசேதனுமாய் -அசக்தமுமாய் – நச்வரமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -உன்னுடைய நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண பலிக்கும் அவை ஆகையாலே கர்மமும் நீ இட்ட வழக்கு என்பர்

(முன்‌ செய்த முழு வினையாலே என்னில்‌ அது துயரமே யுற்ற இருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌) “முன்செய்த முழு வினையால்‌ திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌ முன் செய்ய முயலாதே அகல்வதுவோ (திருவாய்மொழி 1-4-2) என்று அந்த தேஹ ஸம்பந்தத்துக்கடி நீர்‌ அநாதியாகச்‌ செய்து போந்த கர்மமன்றோ என்னில்‌ “துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்‌” (திருவாய்மொழி 3-6-8) “உற்ற விரு வினையாய்‌” (திருவாய்மொழி 10-10-8) என்று புண்ய பாப ரூபமான கர்மங்களை அசேதநமுமாய்‌ நஸ்வரமுமாய்‌ இருபசை மலமுமாய்க்‌ கொண்டு உன்‌ கோபமும்‌ அருளுமென்று உன்னுடைய நிக்‌ரஹாநுக்‌ரஹ ரூபேண பலிக்குமவை யாகையாலே அந்த கர்மம்‌ நீயிட்ட வழக்கென்பர்‌.

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-முன் செய்த முழு வினையால் –-அநாதி கால சஞ்சிதமான பாபத்தாலே -பாபம் சாவதியாதல் -பாபம் பண்ணின காலம் சாவதி யாதனால் அன்றோ என் கையில் என்னைக் காட்டித் தருவது-இதிகாசம் -பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -தெற்கு ஆழ்வானும்-கோளரி ஆழ்வானும் என்று இருண்டு திருப்பதியார் உண்டு கோளரி ஆழ்வான் சதாசார பரனாய் இருக்கும் -தெற்கு ஆழ்வான் மேல் எழத் திரியும்
ஒரு விசேஷ திவசத்திலே இருவரும் சேர்ந்த அளவிலே கோளரி ஆழ்வான் தெற்கு ஆழ்வானை
இன்று ஆகிலும் ஒரு முழுக்கு இட மாட்டாயோ -என்ன -என்னுடைய பாபம் தெற்கு ஆழ்வார் கையில்
திரு ஆழி யாலே போக்கப் போமது ஒழிய ஓர் இரண்டு முழுக்கால் போம் அதன்று காண் என்ன
அத்தைக் கேட்டு இவனை மேல் எழ விசாரித்தோமே-என்று வித்தராய் அருளினார் பட்டர் –திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ--திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –-முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை-க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம்-தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து-த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இறே –

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-துக்க ஏக ஹேது வான புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நியாமகனாய்

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி கலந்து -இருவகைப் பட்ட புண்ய பாபங்களுக்கு நியாமகனாய் –

11-ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில்-ஆங்காரமாய் புக்கு செய்கைப் பயன் உண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்-அதாவது-ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-4-7-3- -என்று முடிவு இன்றிக்கே இருக்கிற கொடிய பாபங்களிலே எத்தனை பண்ணினேன் என்றும் –மதியிலேன் வல்வினையே மாளாதோ –1-4-3- என்று நான் பண்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாது என்றும் -நீரே சொல்லுகையாலே –கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் உம்மதன்றோ என்று சொல்லுவோம் ஆகில் –தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே யானான் -10-7-11-என்று தான் அபிமானியாய்ப் புக்கு ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து தானே அபிமானி ஆனான் என்றும் –செய்கை பயன் உண்பேனும் யானே -5-6-4–என்று நம்முடைய படியை அனுகரித்து சொல்லுகிற இடத்தில் –சகல கர்மங்களுடைய பல போக்தாவும் நானே என்றும் –கருமமும் கரும பலனுமாகிய-3-5-10- என்று புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் கர்ம பலன்களுக்கும் நியாமகனாய் -என்றும் சொன்னவர் ஆகையாலே –கர்ம கர்த்தாவும் -தத் பல போக்தாவும் -நீ இட்ட வழக்கு ஆகையாலே- கர்த்தாவும் போக்தாவும் நீயே என்பர்-கருமமும் கரும பலனுமாகிய -இத்தால் – கர்ம கர்த்தரு -தத் பல போக்த்ரு -ததநீயம் விவஷிதம் ஆகையாலே யாய்த்து இவ் இடத்தில் இவர் இச் சந்தையை எடுத்தது–

(ஈவிலாத மதியிலே னென்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்‌ என்னில்‌ ஆங்காரமாய்ப்‌ புக்கு செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கர்த்ருத்வமும்‌ தத்‌ பலமான போக்த்ருவத்வமும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌) “ஈவிலாத வினைகள்‌ எத்தனை செய்தனன்‌ கொல்‌” (திருவாய்மொழி 4-7-3) என்றும்‌ “மதியிலேன்‌ வல்வினையே மாளாதோ” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌ அநுபவித்தாலும்‌ மாளாத பாபத்தை எத்தனை பண்ணினேன்‌, நான்‌ பண்ணின பாபமேயோ அநுபவித்தாலும்‌ மாளாதே யிருப்பது என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்த்ருத்வமும்‌ போக்த்ருத்வமும்‌ உம்மதன்றோ என்று நாம்‌ சொல்லில்‌ தானாங்காரமாய்ப்‌ புக்கு தானே தானே யானான்‌’ (திருவாய்மொழி 10-7-11 என்று தானபிமாநியாய்ப்‌ புக்கு ஆத்மாத்மீயங்களில்‌ எனக்குண்டான அபிமானத்தைத்‌ தவிர்த்துத்‌ தானே அபிமாநியானானென்று, அந்த கர்த்ருத்வமும்‌ “செய்கைப்‌ பயன்‌ உண்பேனும்‌ யானே” (திருவாய்மொழி 5-6-4) என்றும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய காரணன்‌ தன்னை (திருவாய்மொழி 3-5-10) என்று பல போக்தாவும்‌ நாமிட்டவழக்காகையாலே கர்த்தாவும்‌ போக்தாவும்‌ நீயே என்பர்‌

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-பெரிதால்-என்று பெரிதான அளவும் அன்றிக்கே-அனுபவ விநாசியம் அல்லாத பாபத்தையோ பண்ணிற்று-நா புக்தம் ஷீயதே கர்ம-என்கிறதுவும் விபரீத பலமாயிற்று-புக்தமாக புக்தமாக வர்த்தியா நின்றதீ-எத்தனை செய்தனன் கொல்?
செய்வினை என்று ஓன்று அன்றிக்கே அநேகம் –எத்தனை பாபங்களை பண்ணினேன்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-மதியிலேன்-பிரிவை பிரசங்கித்த அளவிலே போகாதே கொள்ளும் என்று ஓர் உக்தியால் விலங்கிட்டு வைக்கலாய் இருக்க-அதுவும் கலவியில் ஒரு வகையோ என்று இருந்த மதி கேடியான என்னுடைய –-வல்வினையே மாளாதோ வென்று-பாக்யவதி யாகையாலே அனுபவ விநாச்யமான பாபத்தைப் பண்ணினாள் சிந்தயந்தி –-நான் பண்ணின பாபத்துக்கேயோ முடிவு காணாது ஒழிகிறது-தத் சித்த விமலாஹ்லத-இத்யாதி -இவர் தம்மை தீர்க்க சிந்தயந்தி என்று இறே நம் முதலிகள் சொல்வது –

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-தான் ஆங்கார மாயப் புக்கு -எனக்கு அபிமானியாய்ப் புகுந்து என்னுதல் /பெரிய செருக்கை யுடையனாய்க் கொண்டு புகுந்து என்னுதல் –தானே தானே ஆனானைத்–ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து தானே அபிமானியானவனை –

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-சகல கர்மங்களினுடையவும் பல போக்தாவும் –அஹம் ஹி சர்வ யஞ்ஞா நாம் போக்தா –என்னா நின்றாள்

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் நியந்தாவாய் -கர்ம பலன்களும் நியந்தாவாய்-காரணன் தன்னைத்-காரணந்து த்யேய-என்கிறபடியே ஸமாச்ரயணீயன் ஆனவனை

12-யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே என்னில்-அயர்ப்பாய் சமய மதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை உன் தொழில் என்பர்-அதாவது–யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன்-2-9-9- -என்றும் – எஞ்ஞான்று நாம் -என்று தொடங்கி-மெய் ஞானமின்றி வினை இயல் பிறப்பு அழுந்தி -3-2-7–என்றும் நீர் சொன்ன – அஞ்ஞான அந்யதா ஞானாதிகளாலே காணும் உமக்கு அந்த கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் உண்டாய்த்து என்று சொன்னோம் ஆகில் –அயர்ப்பாய் தேற்றமுமாய் –7-8-6-மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் –3-1-4- உள்ளம் பேதம் செய்திட்டு ஒர் உண்ட உபாயங்களும் -5-10-4–என்று ஞான அஞ்ஞானங்கள் இரண்டும் நீ இட்ட வழக்கு ஆகையாலே –
அஞ்ஞான அந்யதா ஞானாதிகளை விளைக்கையும் உன் கிருத்யம் என்பர்

(யானே எஞ்ஞான்றுமென்றத்தாலே என்னில்‌ அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழில்‌ என்பர்‌) “யானே என்னை அறியகிலாதே யானே என்றனதே என்றிருந்தேன்‌” (திருவாய்மொழி 2-9-9 “எஞ்ஞான்றும்‌ மெய்ஞ்ஞான மின்றி வினையியல்‌ பிறப்பழுந்தி’ (திருவாய்மொழி 3-2-7) என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்ம கர்த்ருத்வ பல போக்த்ருத்வங்களுக்கடி உம்முடைய அஜ்ஞானமன்றோ என்னில்‌, ‘அயர்ப்பாய்த்‌ தேற்றமுமாய்‌” (திருவாய்மொழி 7-8-6) “மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்‌” (திருவாய்மொழி 3-1-4) “உள்ளம்‌ பேதம்‌ செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்‌” (திருவாய்மொழி 5-10-4) என்று ஜ்ஞாநாஜ்ஞானங்களிரண்டும்‌ நீயிட்ட வழக்காகையாலே அத்தால்‌ வந்த புத்தி பேதங்களும்‌ உனக்குக்‌ காரியமென்று சொல்லுவர்‌.

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-யானே என் தனதே என்று இருந்தேன் -ஸ்வ தந்த்ரன் -என்னை ஒழிந்தவை என்னுடைமை என்றும்-அடியேன் உனக்கு -இவை எல்லாம் உனது என்று இல்லாமல்-இருந்தேன் -முடிந்தேன் -சொல்லாமல் -இன்னும் இருக்கிறேன் -ஆத்மா அழியாதே -ஆத்மா நித்யத்வமும் -அனர்த்தமாம் படி ஆனதே

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-மெய்ஞ்ஞானம் இன்றி – புருஷார்த்த உபயோகியான சம்யக்ஞ்ஞானம் இன்றிக்கே-வினையியல் பிறப்பு அழுந்தி-அவித்யாதிகளை பிறப்பிக்கும் சம்சாரத்தில் மூழ்கி இருக்கிற நாம் –அவித்யாதிகள் அடியான பிறப்பில் அழுந்தி இருக்கிற நாம் என்றுமாம் –

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6–அயர்ப்பாய்த் தேற்றமுமாய் -விஸ்ம்ருதியும் தெளிவுமாய் –மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞான மபோஹஞ்ச -என்கிறபடியே-

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்

மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-திரு உருவம் மனம் வைக்க மாட்டாதவையாய் ஒன்றோடு ஓன்று சேராதே பாஹ்ய சமய மதி பேதங்களை உண்டாக்கினாய்-பண்டே உன்னை அறிய மாட்டாதே சம்சாரிகளுக்கு இம் மதி பேதங்களை உண்டாக்கினாய் –

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-அஸூரர்களோடு சேர்ந்து வைதிக சிரத்தை போம்படி புத்திகளை பேதித்து அவர்களை பிராண ஹானி பண்ணி பிணமாக்கி -இன்னார் கொன்றார் என்று விருது பிடிக்கும் படி நின்ற விரகுகளும்-

–ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம் அதாவது —யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம்-95–இத்யாதிபடியே –சூஷ்ம பிரகிருதி விசிஷ்டனாய்க் கொண்டு ஸ்வ கர்ம அனுகுணமாக நானா வித சரீரங்களிலே ஒன்றுபட்டு ஒன்றைப் பற்றி தடுமாறி திரியும் -ஜீவனுக்கு -தேக இந்த்ரியத்வேன-போக்யத்வேன -அவஸ்தையான பிரக்ருதியைப் பற்றி கிடக்கிற சைதன்யம் –யாதேனும் பற்றி நீங்கும் விரதம்-திருவிருத்தம்-95 -என்கிறபடியே பிரகிருதி பிராக்ருதங்களிலே-ஏதேனும் ஒன்றை அவலம்பித்து -நம்மை விட்டு அகலும் விரதத்துக்கு ஹேதுவாய் இருப்பது ஓன்று –அகமேனி ஒழியாமே -9-7-10–என்று நமக்கு அந்தரங்க சரீரமான -இவ் ஆத்மாவை பற்றிக் கிடக்கிற பிரகிருதி சம்பந்த ரூப மாலின்யத்தைப் போக்குகை –இவ் ஆத்மாவுக்கு அபிமானியான நம்முடைய க்ருத்யமாய் இருந்தது ..அன்றிக்கே –-ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்-அதாவது-
இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவ பூதாம்-ஸ்ரீ கீதை-7-5-என்று சொல்லப் பட்ட
ஜீவனாகிய பிரக்ருதியில் கிடக்கிற சைதன்யம் -ஏதேனும் பற்றி நீங்கும் -என்கிறபடியே –
பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை பற்றி -நம்மை விட்டு அகலும் விரத ஹேதுவாய் இருப்ப தொன்று – அசித் சரீரமாய் இருக்க செய்தே – அப்படி அன்றிக்கே -அக மேனி -என்று நமக்கு அந்தரங்க சரீரமாய் இருக்கிற இவ் ஆத்ம வஸ்துவில் கிடக்கிற பிரகிருதி சம்பந்தமான மாலின்யத்தை போக்குகை இதுக்கு அபிமானியான நம்முடைய க்ருத்யமாய் இருந்தது என்னவுமாம்–

(ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது அக மேனியில்‌ அழுக்கறுக்கை அபி மாநி க்ருத்யம்‌) “மூதாவியில்‌ தடுமாறு முயிர்‌ முன்னமே யாதானும்‌ பற்றி நீங்கும்‌ வ்ரதம்‌” (திருவிருத்தம்‌ 95) என்று ஸுஷ்ம ப்ரக்ருதி விஸிஷ்டனான ஆத்மாவில்‌ இடக்கிற சைதந்யம்‌ ப்ரக்ருதி ப்ராக்ருதங்களைப்‌ பற்றி நம்மை விட்டகலுகை நங்கார்யம்‌. “அகமேனி ஒழியாமே’ (திருவாய்மொழி 9-7-10) என்று நமக்கந்தரங்க ஸரீரமான இவ் வாத்மாவைப்‌ பற்றிக்‌ கிடக்கிற ப்ரக்ருதி ரூபமான மாலிந்யத்தை அறுக்கை அவ்வாத்மாவுக்கு அபிமாநியான நம்முடைய க்ருத்யமாயிருந்ததீ.

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – 
-95 –யாதானும் பற்றி –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் – பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது 

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்-7-5
-இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே
திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-பரியட்டமும் கட்டு அழிந்து -மேகலை தொங்கும் போது ஆஸ்ரயம் வேணுமே –என்-அகமேனி ஒழியாமே–புறம்பு கழலுமவை கழன்றது -அகவாயில் ஸ்வரூபம் கழலுவதற்கு முன்பே -நான் முடிவதற்கு முன்னே -என்கை –

13-தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்--அதாவது நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினை யேற்கே நல்கத்தான் ஆகாதோ நாரணனை கண்டக்கால் -1-4-5- -என்னும்படி (நல்கும் -ரஷிக்கும்)
நாம் ஸ்நேஹ பூர்வகமாக ரஷிக்கைக்கு அடியான நாராயணத்வ பிரயுக்தமான சம்பந்தம் நிருபாதிகமாய் இருந்தது-

(தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌) “நல்கித்தான்‌ காத்தளிக்கும்‌ பொழிலேழும்‌ வினையேற்கே நல்கத் தானாகாதோ நாரணனைக்‌ கண்டக்கால்‌” (திருவாய்மொழி 1-4-5) என்று நாம்‌ ஸ்நேஹ பூர்வமாக ரக்ஷிக்கைக் கடியான நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தம்‌ நிருபாதிகமாகையால்‌ 

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே 
–1-4-5-என்னை உபேஷித்தால் -சர்வ ரஷகத்வத்தால் பூர்ணனான தன்னுடைய நாராயணத்வம் விகலம் ஆகாதோ என்று அறிவி என்று-(அறிவிக்கச் சொல்லி) ஒரு குருகை அபேஷிக்கிறாள்-நாரணனைக் கண்டக்கால் குணங்களில் ஞானானந்த அமலத்வங்கள் நிரூபகம் ஆனால் போலே யன்றோ சப்தங்களில் இத் திருநாமம்
இத்தாலே நிரூபிதமான வஸ்து வுக்கு சில விசேஷங்களைச் சொல்லுகிறது அத்தனை அன்றோ மற்றைத் திரு நாமங்கள்-நாரங்களில் ஓன்று குறைந்தாலும் தன் கார்யம் ஒறுவாம் அன்றோ
என் சத்தையில் அபேஷை இல்லையாகிலும் தன் சத்தையில் அபேஷை இல்லையோ என்று சொன்னேன் என்று சொல்லுங்கோள் –

ஸௌஹார்தம் எஞ்ஞான்றும் நிற்கும்--அதாவது-தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாகத் தான் தோன்றி-8-10-7- -என்று நாம ரூபங்களை இழந்து -தமோ பூதமான சமயத்திலே -இவற்றை உண்டாக்க நினைத்த அத்வீதியமான மகா குணம் என்கிற சௌஹார்த்தம்-கால தத்வம் உள்ளதனையும் ஒருவன்
பண்ணும் உபகாரமே என்று -அத்தையே அனுசந்திப்பார் -ஹ்ருதயத்தில் நிற்கும் படியாக –
என்கையாலே அந்த சம்பந்தம் அடியாக – சர்வருக்கும் நன்மையை -ஆசாசிக்கைக்கு அடியான –
சௌஹார்த்த குணத்திலும் கண் அழிவு சொல்லப் போகாது-

(ஸெளஹார்த்த,ம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌) “தனிமாப்‌ புகழே எஞ்ஞான்றும்‌ நிற்கும்படியாய்த்‌ தான்தோன்றி” (திருவாய்மொழி 8-10-7) என்று அந்த பந்த மடியாக எல்லாருடைய நன்மையை ஆஸாஸிக்கைக்கடியான ஸெளஹார்த்த குணம்‌ ஸர்வாத்மாக்கள்‌ பக்கலிலும்‌ ஸர்வ காலமும்‌ நடக்கையாலே இந்த ஸம்பந்த மடியான ஸ்நேஹமும்‌ இவனுக்குக்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யிருந்தது.

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-உபமான ரஹிதமாய் -அழகிதான புகழே -நாம ரூபங்கள் அழிந்து தமோ பூதமான சமயத்திலே இவற்றை யுண்டாக்க நினைத்த மஹா குணம் –
எஞ்ஞான்றும்நிற்கும் படியாத் -கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே -என்று அத்தையே அநுஸந்திக்கும் படியாக-தான் தோன்றி-அர்த்திப்பாரும் இன்றிக்கே இருக்க -பூர்ணனாய் இருக்கிற -தான் -தன் பேறாக -பஹுஸ்யாம் -என்று தோன்றி –

பிணக்கிப் பேதியாதே ஜ்ஞானாதி வைகல்யமில்லை-(வைகல்யம் -வேறுபாடு )-அதாவது
பிணக்கி யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -6-2-8- -என்னும்படி சம்ஹ்ருதி சமயத்திலே -சகல சேதன அசேதனங்களையும் நாம ரூப விவேக ரஹிதமாம்படி கலசி–சிருஷ்டி தசையிலே ஒருவர் கர்மம் ஒருவருக்கு தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டித்தும் -தனக்கு ஒரு பேதம் இன்றிக்கே இருக்கும் ஜ்ஞானாதிகளை உடைய நமக்கு ஞானாதி சக்திகளில் குறைவு சொல்ல இடம் இல்லை-

(பிணக்கிப்‌ பேதியாத ஜ்ஞாந வைகல்யம்‌ இல்லை) “பிணக்கி யாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர் கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர் ஞான மூர்த்தியினாய்‌” (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்தில்‌ மண்ணும்‌ நீரும்‌ கலசுமாப் போலே நன்றாகக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவருக்குத்‌ தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டிக்கும்படியான நமக்கு ஞான சக்த்யாதிகளிலே குறை சொல்லி கண்ணழிக்க வொண்ணாதாயிருந்தது.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!

இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-சேதன அசேதனங்களை தேவாதி விபாகம் அற்று-தம ஏகி பவதி-என்று தன்னோடே அவி பக்தமாம் படி கலசி -ஸ்ருஷ்ட்டி காலத்தில் ஒருத்தன் கர்மம் வேறு ஒருத்தன் அனுபவியாத படி -பேதித்தும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி
பேதியாதது ஓர்கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!– சம்ஹார காலத்தில் அசித்கதமான சூஷ்ம பரிணாகம் – சேதனகதமான அஞ்ஞானம் –ஸ்ருஷ்ட்டி காலத்தில் அசித் கதமான ஸ்வரூப அந்யதா பாவம் -சேதனகதமான ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஆக இப்பேதங்கள் ஒன்றும் இன்றிக்கே ஏக ரூபமாய் ஏக ரூபமாய் அத்விதீயமாய் அனவதியான ஏக ரூபத்வம் ஆகிற கீர்த்தி சமுத்திரத்தை யுடையையாய் பிரபா ரூபமான சங்கல்ப ஞானத்துக்கு ஆஸ்ரயமானவனே-இத்தால் விஸ்லேஷ தசையில் கலக்கமும் சம்ச்லேஷ தசையில் போக ரூப விக்ருதியும் இன்றிக்கே ஏக ரூபன் என்கை

ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள் நம்மது–அதாவது ஏக மூர்த்தி-4-3-3- -என்கிற பாட்டில் காரணங்களோடு கார்யங்களோடு வாசியற சகலத்தையும் சிருஷ்டித்து -அவற்றினுடைய தாரண அர்த்தமாக அந்தராத்மாவாய் ஸ்ருஷ்டமான பதார்தங்களுடைய ரஷணத்துக்காக ஸ்ரீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளி -இப்படி சர்வ காலமும் ஒருபடிப் பட்ட அனுக்ரஹ சீலனாகைக்கு அடியான பிராப்தியை உடையையான நீ உன் திருமேனிக்கு வேண்டும்
போக உபகரணங்கள் எல்லாம் –பூசும் சாந்திர் -படியே -என்பக்கலிலே உண்டாக்கி -நிர் துக்கனானாய்
என்று -இவர் பேசினபடியே இவரைப் பெருகைக்கு எத்தனம் பண்ணுகையும் – பெற்றால் உகக்கும் பலித்வமும் – நமக்கே உள்ளது ஒன்றாய் இருந்தது —

[எகமுர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள்‌ நம்மது) “ஏகமூர்த்தி யிருமூர்த்தி’  (திருவாய்மொழி-4-3-3) என்கிற பாட்டின்படியே காரணங்களோடு கார்யங்களோடு வாசியற எல்லாவற்றையும் உண்டாக்கி அவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு ப்ரஸித்து ஸுஷ்மரான சேதநர்க்கு ருசி பிறந்த போது ஆஸ்ரயிக்கைக்காக ஷீராப்தியிலே கண் வளர்ந்தருளுகிற ஸர்வ ஸரீரியான நீ உன்னுடைய திருமேனிக்கு வேண்டும்‌ போகோபகரணங்களை பூசும்‌ சாந்தில்‌ படியே என் பக்கலாக்கி நிர்துக்கனானாயே என்று இவர்‌ பேசும்படி இவரைப்‌ பெறுகைக்கு யத்நம்‌ பண்ணுகையும்‌ பெற்றால்‌ உகக்கைக்கீடாந அறிவுள்ளதொன்றாயிருந்து அத்தாலும்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யொழிந்தது. 

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3–தம்மோட்டை ஏவம் வித ப்ரணயத்தால் அவன் க்ருதார்த்தன் ஆனபடி சொல்லுகிறார் –உன் ஆக முற்றும் அகத்து அடக்கி –-இதுக்கு பிரயோஜனம் உன் திருமேனிக்கு வேண்டும் போக உபகரணம் எல்லாம் என்னுள்ளே யாம் படி பண்ணுகை-அத்தைச் செய்து சாந்து பூ மாலை பரிவட்டம் ஆபரணம் இவை எல்லாம் என்னுள்ளே யாம்படி பண்ணி-ஆவி அல்லல் மாய்த்ததே -உன் திரு உள்ளம் நிர்த் துக்கம் யாயிற்றே -ஒரு படி கரை மரம் சேர்க்க வல்லேன் என்று இருந்த உன் திரு உள்ளத்தில் பரகு பரகு கெட்டு க்ருதார்த்தன் ஆனாயே -என்கிறார் என்னுடைய நெஞ்சில் துக்கம் ஒருபடி போயிற்றே என்றுமாம்-அவன் பிரணயித்தவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையால் அவனுடைய துக்க நிவ்ருத்தியே பொருளாக அமையும் –
இத்தை பர வ்யூஹ விபவங்களை சொல்லிற்றாக நிர்வஹிப்பாரும் உண்டு

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.
–4-3-2--கோவை வாயாள் பொருட்டு-ஈஸ்வரனுடைய –பாலனாய் ஏழ் உலகு -இது திருவாய் மொழி –விடாய்த்த என்னுடைய கரண கார்யமான ஸ்ம்ருதியாதிகளை பூர்ணனாவனுக்கு போக உபகரணங்கள் எல்லாமாய் விடுவதே என்கிறார் –
அசேதனமான கரணத்தை போக்யமாக விரும்பின படியை கண்டு அந்த ப்ரீதியாலே பின்னாட்டிப் பின்னையும் -பூசும் சாந்து என்நெஞ்சமே-என்கிறார் –

14-நாம் தனி நிற்ற ஸ்வதந்த்ரர் என்று அவனே அறிந்தனமே என்னும் சர்வஜ்ஞர் இவர்-அதாவது-தனி நின்ற சார்விலா மூர்த்தி -என்று கார்ய வர்க்கம் அழிந்த அன்று -சச் சப்த வாச்யனாய் -நின்று-ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித ப்ரஹ்மா மமாஸ்ரிதோ ராஜன் நாஹம் கம்சிது பாஸ்ரித -பாரதம்
இத்யாதி பிரக்ரியையாலே -உனக்கோர் அபாஸ்ரயமில்லாதபடி இருக்கிறவனே -என்கையாலே
நாம் வேண்டிற்றை செய்யும் படி நிரந்குச ஸ்வதந்த்ரன் என்று அறுதி இட்டு – அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-9-3-2- -என்று தொடங்கி – அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்று சகல கார்யங்களிலும் சஹகாரி நிரபேஷனாய் -ஸ்வாதீன சகல சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதிகனாய் இருக்கும் அவன் என்று அறிந்தோம் என்று சொல்லும்படியான சர்வஞராய் இருப்பார் ஒருவர் இவர்

(நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே என்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌) “தனி நின்ற சார்விலா மூர்த்தி” (பெரிய திருவந்தாதி 71 என்று தான்‌ வேண்டிற்றுச்‌ செய்யும்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரனும்‌ நீயே. “அவனே அகல் ஞாலம்‌ படைத்திடந்தான்‌ (திருவாய்மொழி 9-3-2) இத்யாதி. “அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” (திருவாய்மொழி 9-3-2) என்று ஸ்ருஷ்டி முதலான ஸகல ப்ரவ்ருத்திகளையும்‌ ஸஹஜமாகத்‌ தானே செய்ய வல்லனென்று இப்படி நம்மை உள்ளபடி அறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்கு உத்தரம்‌ சொல்லுகை யறிந்து

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71—கார்ய ஜாதம் எல்லாம் அழிந்து காரண அவஸ்த்தமாய்
நாம ரூப விபாக அநர்ஹமாய் தான் என்ற சொல்லிலே அடங்கித் தனக்கு வேறே ஒரு அபாஸ்ரயம் இன்றிக்கே நின்றவனே-சார்வு -ஆச்சர்யம் ஆதல் -ஒப்பு ஆதல் –

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–
9-3-2-நாராயண சப்தத்துக்கு அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –விஸ்திருதமான பூமியை ஸ்ருஷ்டித்து –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்தானும் அவனே –அவதாரணத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளில் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்— பிரளயம் கொள்ளாத பூமியை வயிற்றிலே வைத்து வெளிநாடு காண உமிழ்ந்து -அபஹ்ருதமான பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் அவனே –இந்த அவதாரணத்தாலே ஆபத் சகத்வாதி ரக்ஷகத்வத்திலும் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
அவனே யவனும் அவனுமவனும்–ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –அவனே மற்று எல்லாமும் -பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே-அறிந்தனமே–ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை –

15-நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க-அதாவது-
நெறிகாட்டி நீக்குதியோ –பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் – அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும் உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் – இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் – உம்முடைய அருகு வருதல்- உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க -உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கடி அருளச் செய்ய வேணும் என்றும்-முன்பு இவர் கேட்டவை நிருத்தரம் ஆனால் போலே –இப்பொழுது கேட்டதும் நிருத்தரம் என்று –
நிலத்தை கீறாக் கவிழ்ந்து நிற்க –

(நெறி காட்டி அருகும்‌ சுவடும் போலே இதுவும்‌ நிருத்தரம்‌ என்ற கவிழ்ந்து நிற்க) “நெறிகாட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6) என்கிற பாட்டிலும்‌ “அருகும்‌ சுவடும்‌ தெரிவுணரோம்‌” (பெரிய திருவந்தாதி 8) என்கிற பாட்டிலும்‌ உபாயாந்தரங்களைக்‌ காட்டி அகற்றப்‌ பார்த்தாயோ -விலக்ஷணமான திருமேனியைக்‌ காட்டி சேர்த்துக்‌ கொள்ளப்‌ பார்த்தாயோ அஜ்ஞரான எங்களை என் செய்வதாக நினைத்தாய்‌ இத்தை அருளிச்செய்ய வேணும் என்றும் கேட்ட விடங்களில்‌ ஒரு ஹேது இல்லாமையாலே இதுக்கும்‌ சொல்லலாவ தொரு ஹேது இல்லாமையாலே நிருத்தரமென்‌று தரையைக் கீறிக்கவிழ்ந்து நிற்க

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-கர்மம் ஞானம் போன்ற உபாயாந்தரங்களைக் காட்டி-இவற்றை அனுஷ்டித்து பலன் பெறுவாய் என்று-சொல்லி என்னை கை விடப் பார்க்கிறாயோ —நெறி காட்டுகையும் -நீக்குகையும் பர்யாயம் போலும் இவருக்கு –உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தைக் காட்டி-உன் பக்கலில் நின்றும்-என்னை அகற்றப் பார்க்கிறாயோ

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-அருகும்-கிட்டுவதையும் சுவடும் -கிட்டுவதற்கு உபாயத்தையும் –
தெரி யுணரோம்- நாங்கள் பகுத்து அறிந்தோம் இல்லை –அப்படி இருக்கச் செய்தேயும் ––நும்மை நுமக்கு – அன்பே பெருகும் மிக- உம் விஷயத்திலேயே-எமக்கு ஆசையானது மிகவும் பெருகா நின்றது —-பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு -என்று இருக்கிறதே-அதற்கு எங்கே அந்வயம் என்று-ஸ்ரீ நஞ்சீயர்-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரைக் கேட்க-நும்மை அருகும் சுவடும் –நுமக்கு அன்பே பெருகும் மிக -என்று அன்வயித்து பொருள் உரைக்கலாம் என்று அருளிச் செய்தாராம்-

16-அமந்த்ரஜ்ஞா உத்சவ கோஷம் ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிகிற மேக சமுத்திர பேரீ கீத
காஹள சங்கா சீச்ஸ்துதி கோலாகலம் செவிப் பட்டவாறே சாஷாத்க்ருத பர பிராப்திக்கு
உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயர் மந்த்ரம் தோன்றாவிடில் – கொட்டச் சொல்லி வாத்திய கோஷத்தாலே -அத்தை மறைத்து விடுமா போலே
–அதாவது-தான் நிருத்தரானமை தோற்றாதபடி மறைக்கைக்காக -இவனாலே பிரவ்ர்த்திதமாய் –நான் ஏறப் பெறுகின்றேன் -10-6-5–என்று தாம் கீழே சொன்னபடியே பரம பதத்தில் ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பியா நின்றுள்ள –சூழ் விசும்பு பணி முகில் தூரியம் முழக்கின ஆழ கடல் அலை திரை கை எடுத்து ஆடின-10-9-1- -என்று ராஜ குமாரர் போம் போது -தூர்யாதி மங்கள கோஷம் பண்ணுவாரைப் போலே –பரம பதத்துக்கு போமவர்களைக் கண்ட ப்ரீதியால் முழங்குவது -கோஷிப்பதாக நிற்கும் –மேக சமுத்ரங்கள் ஆகிற பேரிகள் உடையவும் –கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்–10-9-5–என்கிற கீதங்களினுடையவும் –காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் -10-9-6–என்கிற காஹள சங்கங்களினுடையவும் –வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர்–10-9-6-என்கிற ஆசீசினுடையவும் –தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்-10-9-7- -என்று ஸ்தோத்ரிதனுடைய சம்மிசர கோஷமாகிற கோலாகலம் செவிப் பட்டவாறே –அர்ச்சிராதி கதியையும் – ஆதி வாஹிக சத்காரத்தையும் -திவ்ய தேச பிராப்தியையும் –அங்கு உள்ளாருடைய பஹுமானத்தையும் -ஆனந்த மயமான ஆஸ்த்தானத்தில் இருப்பையும் –ஸ்வ சரண கமல பிராப்தியையும் –பெற்றாராகப் பேசும்படி சாஷாத் கரித்த பர பிராப்திக்கு –

(அமந்த்ரோத்ஸவ கோஷம் போலே )உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயன் மந்த்ரம் தோன்றாவிட்டால் கொட்டச் சொல்லுமா போலே இவனும் ( ஏறப்போகிற எழுச்சியை ஸூ சிப்பிக்கிற வென்று )அது கிடக்க உம்மைக் கொண்டு போகிற வழியைப் பாரீர் என்று –நான் ஏறப் பெறுகின்றேன் (திருவாய் மொழி -10-6-5)என்றும் இவர் கீழ்ச் சொன்னபடியே -பரமபதத்திற்குப் போகிற மார்க்கத்தையும் -மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க (மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே )சூழ் விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கின ஆழ்கடல்‌ அலை திரை கையெடுத்தாடின (திருவாய்மொழி 10-9-1)கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கெருடர்கள்(திருவாய்மொழி 10-9-5) “காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்கு மிசைத்தனர் வாளொண்‌ கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌” (திருவாய்மொழி 10-9-6) “தொடர்ந்தெங்கும்‌ தோத்திரம்‌ சொல்லினர்‌” (திருவாய்மொழி 10-9-7) என்று ராஜாக்கள்‌ போகிற போது தூர்யாதி, மங்கல கோஷம்‌ பண்ணுவாரைப்‌ போலே போகிறவர்களைக்‌ கண்ட ப்ரீதியாலே உண்டான மேக ஸமுத்‌ரங்களினுடைய கோஷங்களாகிற தூர்யாதி பேரிகளையும்‌ அங்குள்ளாருடைய கீத காஹள ஸங்கா ஸீஸ்துதி கோலாஹலங்களையும்‌ இவர்‌ செவிப்படுத்த அத்தைக்‌ கேட்டவாறே (ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்கு) 

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன்
நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5—அவன் பரம பதத்துக்கு போக ஆஸ்ரிதற்கு வைத்த அர்ச்சிராதி கதியாலே போகப் பெறா நின்றேன் -நித்ய ஆஸ்ரிதரைப் போலே என்னை விஷயீ கரிக்கவும் பெற்றேன் -என்கிறார் –வான் ஏற வழி தந்த -அபு நராவ்ருத்த லக்ஷணமான பரமபதத்தில் ஏறுகைக்கு அர்ச்சிராதி கதியைத் தந்த -பரம பாத லாபத்தாலும் -அவ்வருகே ஒரு லாபம் என்னலாம் படி இறே அர்ச்சிராதி கத்தி ஸித்தி –-வாட்டாற்றான் -இப்பேற்றுக்கு கிருஷி பண்ணின தேசம் – பணி வகையே-சொன்ன படியே -மாமேகம் சரணம் வ்ரஜ -என்னும் படி -பண்டே பரமன் பணித்த பணி வகை -என்றார் இ றே -மரணமானால் -என்று சொன்ன படியே என்னவுமாம் –நான் ஏறப் பெறுகின்றேன் -நான் செல்லப் பெறா நின்றேன் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின

ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-பூமியை சூழும் படி இடமுடைத்தான ஆகாசத்தில் –அணி முகில்-ஆபரணமான முகில் என்னுதல் -ஆகாசப் பரப்பு அடங்கலும் அணியப் பட்ட முகில் என்னுதல் -அழகிய முகில் என்னுதல் –-தூரியம் முழக்கின–தூர்ய கோஷத்தை பண்ணிற்றன – அணி முகில் தூரியம் முழக்கின-ஒப்பித்து நின்று கொட்டுவரைப் போலே -மந்தம் ஜகரஜ்ஜூர் ஜலதா -இவன் போக்குக்கு அடியான அவன் வரவில் பிறந்த விக்ருதி இ றே இது –இவன் தானே போகப் புக்கால் சொல்ல வேண்டா இறே -அவற்றுக்கு அபிமானிகளான இந்திர வருண பார்ஜ்ஜனியரைச் சொல்லிற்று ஆகவுமாம் –-ஆழ் கடல்-அலை திரைக் கை எடுத்து ஆடின–தன்னுள்ளே அடக்க வற்றான அளவுடைய கடல் தைர்ய பங்கம் பிறந்து -அலையா நின்று இருந்து உள்ள  திரை யாகிற கையை எடுத்துக் கொண்டு -கூத்தாடிற்றன –

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-இங்கனே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிற அளவிலே -கின்னர்களும் கருடர்களும் கீதங்கள் பாடினர் –

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–
10-9-6-அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவிலே – வேறே சிலர் காளான்களையும்-வலம் புரிகளையும் -கலந்து த்வநிப்பித்தார்கள் –கலந்து எங்கும் இசைத்தனர்–மாறி மாறி எங்கும் ஓக்க த்வனித்தன –
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –ஆழியான் தமர் —ஆண்மின்கள் வானகம்-என்று–சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள் இவ்விடத்தை யாளி கோளோ–என்றாய்த்து ஸ்தோத்ர பிரகாரம் -அவன் தானும் தன் விபூதியை -பக்தாநாம் என்று அன்றோ இருப்பது -ஆளக் குறை என் -என்பார்கள் –வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–ஆதி வாஹிக கர்த்தாக்கள் யுடைய மஹிஷிகள் வாழ்த்தினார்கள் -ஒளியை யுடைத்தாய் ஆகர்ஷகமான கண்களை யுடையவர்கள் -இது ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று -இவர்களை கண்டத்தாலே கண்களுக்கு உண்டான ஒளியையும் அழகையும் சொல்லுகிறது –மகிழ்ந்தே -பார்த்தாக்கள் அனுவர்த்திகையாலே விஹிதம் என்று செய்கிறார்கள் அன்று -ப்ரீதியாலே செய்கிறார்கள் -இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனாய்ப் போந்தவன் -சரீர வியோக சமானந்தரத்திலே தங்களுக்கு அவ்வருகு இல்லாதவர் கொண்டாடும் படி இறே இவன் பேறு –

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்
தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7—-தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எல்லாம் சென்று புகழ்ந்தார்கள் -ஒரு நிமேஷ மாத்திரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள் ஆகையால் தங்கள் எல்லைக்கு உள்ளுப் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள் -அவர்கள் தாங்கள் சடக்கென போகிறதுக்கு அடி என் என்னில் –காண்பது எஞ்ஞான்று கொலோ-என்று இருக்குமவர்கள் ஆகையாலும் –நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் –

17-தலை மிசையாய் வந்த தாள்களை பூண்டு போகாமல் தடுத்து திருவாணை இட்டு-அதாவது-அப்படி சாஷாத் கரித்த பர பிராப்தி -மானச அனுபவ மாத்ரமாய் -பாக்ய சம்ச்லேஷ யோக்யை அல்லாமையாலே -அத்தைப் பெறுகைக்காக –தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன்-10-10-1- -என்றும் –தலை மேல் புனைந்தேன் சரணங்கள் 10-4-4-– என்றும் –தலை மேல் தாள் இணைகள்-10-6-6–என்றும் –என்கிறபடி மானச அனுபவ வைசத்யத்தாலே -தம் தலை மேல் ஆகும்படி வந்த திரு வடிகளைக் கட்டிக் கொண்டு -போகாமல் தடுத்து –திரு ஆணை நின் ஆணை கண்டாய் -10-10-2–என்று அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி ஆணை இட்டு -இப்படி ஆணை இட்டவாறே சேஷ பூதரான நீர் சேஷியான நாம் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை ஒழிய –நம்மை ஆணை இட்டுத் தடுக்கை உம்முடைய ஸ்வரூபத்தோடு விருத்த மாகையால் இது பெறா ஆணை காணும் என கூசம் செய்யாதே செய்திப் பிழை கூசும் செய்யாது கொண்டாய் -என்று சர்வஜ்ஞ்ஞானான நீ என் பூர்வ விருத்தத்தால் வந்த அயோக்யதை பார்த்து கூசி வாசி வையாதே –உன்னோடு ஆத்ம பேதம் இல்லாதபடி -என்னை பரிகிரஹித்தாய் -ஆன பின்பு உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்

அந்த அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ மார்க்கஸ்தரான ஆதி வாஹிக ஸத்காரத்தையும்‌ திவ்ய தேஸ ப்ராப்தியையும்‌ அங்குள்ளாருடைய பஹுமாநத்தையும்‌ பெற்று ஆநந்த மயமான ஆஸ்தாநத்தில்‌ இருப்பையும்‌ ஸாக்ஷாத்கரித்து, இப்படி ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்தி மாநஸாநுபவ மாத்ரமாய்‌ யதா, மநோரத மநுபவமல்லாமையாலே (தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு) “தலைமிசையாய்‌ வந்திட்டினி நான்‌ போகலொட்டேன்‌” (திருவாய்மொழி 10-10-1 என்றும்‌ “தலைமேல்‌ புனைந்தேன்‌” (திருவாய்மொழி 10-4-4) “தலைமேல தாளிணைகள்‌‘ (திருவாய்மொழி 10-6-6 என்றும்‌ இப்படி பூர்ணமாக வந்து தோன்றின திருவடிகளைக்‌ கட்டிக்‌ கொண்டு போகாமல்‌ தடுத்து (திருவாணையிட்டு) “திருவாணை நின்னாணை கண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று அவனுக்கு மறுக்க வொண்ணாத ஆணை யிட்டுத்‌ தடுக்க நீர்‌ ஸேஷ பூதரான பின்பு ஸேஷியான நான்‌ செய்தது கண்டிருக்குமத்தனையொழிய நீர்‌ ஆணை யிட்டுத்‌ தடுக்கை உமக்கு ஸ்வரூபமன்று; ஆன பின்பு அது பெறாவாணை காணும்‌” என்ன, (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) ‘கூசம்‌ செய்யாது கொண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று ஸர்வஜ்ஞனான நீ என்‌ பூர்வ வ்ருத்தத்தால்‌ வந்த அயோக்‌யதையைப்‌ பார்த்துக்‌ கூசி வாசி வையாதே உன்னோடு ஆத்ம பேதமில்லாதபடி என்னைப்‌ பரிக்‌ரஹித்த உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்‌.

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-என் தலையிலே  திருவடிகள் இருக்கும் படி நீட்டி வைத்து -நிர்ஹேதுகமாக பெரிய திருவடியின் முதுகிலே வந்து -என் தலையிலே திருவடிகளை வைத்து –செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்றார் இறே-ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் பண்ணுகிற இடத்தில் உனக்கு ஜகத்தால் செய்யப் பட்டது ஓன்று இல்லாதாப் போலே என்னை இவ்வளவு புகுர நிறுத்தின உனக்கு என்னால் செய்யப் பட்டது ஓன்று இல்லை -இனி மேல் உள்ளதும் உனக்கே பரம் என்கை -இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு – நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு –ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இறே –-ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் – என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –

18-பற்றுக் கொம்பற்ற கதி கேடு-அதாவது-ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் -என்று கொடி கொள் கொம்பை ஒழிய தரிக்க மாட்டாதாப் போலே -என் ஆத்மாவுக்கு ஜீவன
ஹேதுவாய் இருப்பது -உன்னை ஒழிய வேறு காண் கிறிலேன் -ஆதலால் நான்-அநந்ய கதி -என்றும் –-போர விட்ட பெரும் பழி-அதாவது எம் பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாய் -என்று
என் கார்யம் நீ செய்ததாக ஏறிட்டுக் கொண்டு-உன் பக்கல் நின்றும் பிரித்து – உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே தள்ளி உபேஷித்தாய் –இது உனக்கு பரிகிரஹிக்க ஒண்ணாத பெரும் பழி அன்றோ என்றும் –

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
–10-4-3-நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்றும் –கோலமாம் என் சென்னிக்கு என்றும் ஆசைப்பட்ட படி என் தலை மேலே சூடாய் பெற்றேன் -என்கிறார் –

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-அமரர் சென்னிப் பூவான திருவடிகளை சூடாய் பெற்றேன் -பிரார்த்தித்துப் போகை அன்றிக்கே கிட்டப் பெற்றேன் –

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-
10-6-5-இவனோட்டை சம்ச்லேஷத்தாலே தர்ச நீயமான வடிவை யுடையவன் –-தான் ஏறித் திரிவான தாளிணை -அவனுக்காகவும் அன்றிக்கே -அவனுடைய ஸூக ஸ்பர்சத்துக்காக தான் ஏறி சஞ்சரிக்குமவனுடைய திருவடிகள் –-என் தலை மேலே-–அவன் தோளில் இருக்கை தவிர்ந்து என் தலை மேலே இரா நின்றான் –

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-திருவடிகளாலே என் தலையை அலங்கரியா நின்றான் –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-திருவினுடைய ஆணை கிடாய் -என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர இட ஒண்ணாத படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் போய்க் காண் என்று கருத்து -புறம்பு உள்ளார்க்கு எல்லாம் இடும் ஆணை உன் ஆணை –உனக்கு இடும் ஆணை அவள் ஆணை —-அங்கன் இன்றியே –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் –மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –கூசம் செய்யாது கொண்டாய்-என் பக்கல் உள்ள அயோக்யதையை பாராதே பரிக்ரஹித்தாய் -முதலிலே என் பூர்வ வ்ருத்தம் பாராதே மயர்வற மதி நலம் அருளினாய் -பின்பு வளவேழ் உலகிலே நான் அயோக்கியன் என்று அகலப் புக -என் வழியே விடாதே உன் செல்லாமையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டாய் -இப்படி செய்திலை யாகில் நான் இன்று கிலேசப்படாதே போகலாய்த்தே–என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய் -சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது -குண ஆவிஷ் காரம் மாத்ரம் போராது -உன்னை நான் கிட்டி அனுபவிக்கும் படி பண்ண வேணும் –அந்தோ -தன்னை ஒழியச் செல்லாமையை தானே விளைத்து -நான் கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

(பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு) “ஆவிக்கோர்‌ பற்றுக்‌ கொம்பு நின்னலாலறிகின்றிலேன்‌ நான்‌” (திருவாய்மொழி 10-10-3 என்று கொடி கொழு கொம்பை ஒழிய நிற்க மாட்டாதாப்‌ போலே என்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்ப தொன்று உன்னை யொழிய வேறு காண்கிறிலேன்‌ என்னும்படியான அநந்யகதித்வம்‌ என்றும்‌ (போரவிட்ட பெரும்பழி) “எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப்‌ போரவிட்டிட்டாயே” (திருவாய்மொழி 10-10-4) என்று என்‌ கார்யம்‌ நீ செய்யக் கடவதாக ஏறிட்டுக்‌ கொண்டு உன் பக்கல்‌ நின்றும்‌ பிரித்து உன்‌ குணங்கள்‌ கால் நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளி உபேக்ஷித்தாய்‌; இது உனக்கும்‌ பரிஹரிக்க வொண்ணாத பெரும்பழியன்றோ வென்றும்‌ 

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-என் கார்யம் நீயே செய்யக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு -அத்தையும் உபேக்ஷித்து அசேதனத்தைப் பொகடுமா போல பொகட்டாய் என்னுதல் –சகலத்தையும் நிர்வஹிக்கிற நீ என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கலில் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாய் என்னுதல் —என்னை -உன்னை ஒழியச் செல்லாத என்னை —

19-புறம் போனால் வரும் இழவு-அதாவது-போர விட்டு இட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின் யான் யாரைக் கொண்டு எத்தை எந்தோ எனது என்பது என் யான் எனபது என் -என்று உன் பக்கல் நின்றும் பிரித்து -அநந்ய கதி யான என்னை -சிருஷ்டியே தொடங்கி – இவ்வளவும் புகுர நிறுத்தின நீ என் கார்யம் நான் செய்வானாகப் பார்த்து என்னை உபேஷித்தால்- சர்வ சக்தியான நீ அநாதாரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது –
எனக்கு பரிகிரமாய் இருப்பது உண்டு என்பதோர் அர்த்தமுண்டோ – பிருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதொரு நானுண்டோ -ஐயோ -என்னை என் கையிலே காட்டித் தந்தால் இழவே அன்றோ உள்ளது என்றும்-

(புறம்போனால்‌ வருமிழவு) “போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால்‌ பின்னை யான்‌ ஆரைக்‌ கொண்டெத்தை யந்தோ எனதென்பதென்‌ யானென்பதென்‌” (திருவாய்மொழி 10-10-5)என்று உன் பக்கல்‌ நின்றும் பிரித்து அநந்ய கதியாய்‌ அஜ்ஞனாய்‌ அஸக்தனான என்னை ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவு புகுர நிறுத்தி ஸர்வ ரக்ஷகனான நீ என்‌ கார்யம்‌ நான்‌ செய்வேனாகப்‌ பார்த்து என்னை உபேஷித்தால்‌ நான்‌ எந்த உபாயத்தைக்‌ கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? எனக்கொரு புருஷார்த்தமென்றும்‌ நானென்றும்‌ உண்டா? முடிந்தேன்‌ என்கிற இழவாலும்‌.

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என்
யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5—உன் பக்கலில் நின்று அகற்றி உபேக்ஷித்து -என்னை-அநந்ய கதியான என்னை —நீ -ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவும் வர என்னைப் புகுர நிறுத்தின நீ என்னுதல் -சர்வ ரக்ஷகனான நீ என்னுதல் – புறம் போக்கல் உற்றால்-புறம்பு போக்குகையில் அத்யவசித்தால் -என் கார்யம் நானே செய்வானாகப் பார்த்து என்னை உபேக்ஷித்தால் –-பின்னை யான்-ஆரைக் கொண்டு எத்தை -சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -ஆரைக் கொண்டு என்கிறது புருஷார்த்தம் பெறுவது ஒரு பரம சேதனனாலே -அசேதன க்ரியாகலாபங்களால் அல்ல என்னும் இடம் தோற்றுகைக்காக -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் – அந்தோமா மேகம் சரணம் வ்ரஜ என்ற உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே-எனது என்பன் என் யான் எனபது என்-பேறு உம்மதானால் சாதனம் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன -எனக்கு பரிகரமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் அர்த்தம் உண்டோ –ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதோர் அர்த்தம் உண்டோ -சரீர ரக்ஷணம் சரீரியை ஒழியச் செய்வார் உண்டோ –

20-உண்டிட்ட முற்றீம்பு-அதாவது-எனது ஆவியை இன் உயிரை மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – என்னுடைய ஹேயமான சரீரத்தையும் ஆத்மாவையும் மனசுக்கு பர்யாப்தி பிறவாமல் நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கினதை குறை கிடக்க விடாதே -விஷயீ கரித்து விடாய் – புக்த சேஷமான உன்னதன்றோ முதல் தீம்பு என்றும்

(உண்டிட்ட முற்றீம்பு] மனக்காராமை மன்ன உண்டிட்டாய்‌ இனி உண்டொழியாய்‌” (திருவாய்மொழி 10-10-6 )என்று மநஸ்ஸூக்கு பர்யாப்தி பிறவாமல்‌ நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கின கார்யத்தை குறை கிடவாதே விஷயீகரித்து விடாய்‌- புக்த ஸேஷமாக்கின உன்னதன்றோ முதல்‌ தீம்பு என்றும்‌

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-மனஸ்ஸூ க்கு ஆராமை –மனக்கு -மனஸ்ஸூக்கு —-மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு

அன்பு வளர்ந்த அடி வுரம்-அதாவது கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்று
பெரிய பிராட்டியார் பக்கல் -ஸ்நேஹ அதிசயத்தால் -அவள் பரிக்ரமான – என் பக்கல் அதி பிரவணன் ஆனவனே -நான் அந்தப் புர பரிக்ரம் அன்றோ – என் பக்கல் உனக்கு உண்டான அன்புக்கு அடி இல்லையோ -ஆகையால் அவள் பரிக்ரகம் என்கிற -அடி உரம்-என்றும்

(அன்பு வளர்ந்த அடியுரம்‌) கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ” (திருவாய்மொழி 10-10-7) நான்‌ அந்த:புர பரிகரமன்றோ! என்பக்கலுண்டான அன்புக்கடி மில்லையோ! அந்த புருஷகார பலத்தால்‌ வந்த அடியுரமென்றும்‌, –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே –சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –

உயிர் உறவு-அதாவது-பெற்று இனிப் போக்குவனோ -உன்னை என் தனி பேர் உயிரை -என்று
அத்யந்த விசஜாதீயனாய் இருந்து வைத்து -எனக்கு தாரகனான உன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ -உயிரை விட்டு உடல் தரிக்க வற்றோ என்கிற சரீர சரீர பாவ சம்பந்தம் என்றும்

(உயிருறவு) “பெற்றினிப் போக்குவனோ உன்னை என்‌ தனிப்பேருயிரை” (திருவாய்மொழி 10-10-8) என்று அத்யந்த விஸஜாதீயனாயிருந்து வைத்து எனக்கு தாரகனான உன்னை விட்டுத் தரிக்கப்‌ போமோ? ப்ராணனை விட்டு ப்ரக்ருதி தரிக்கவற்றோ என்னும்படியான ஸரீர ஸரிர ஸம்பந்தம்‌ என்றிப்படி.

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8––ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே –இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –
என் தனிப் பேர் உயிரை–உன்னை -என்றதின் வியாக்யானம் -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –

21-முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை யல்ல வாக்கின பேரவா குளப் படியாம் படி
அதாவது-இப்படி -முதல் தனி வித்து –என்கிற பாட்டு அளவாக உத்தரோத்தரம் புகலற – துரக் கைகளினால் தாம் இட்ட ஆணை பெறா ஆணை அல்லாமையை சாதித்த – அதனில் பெரிய என் அவா –என்ற தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு – அவை குளப் படியாம் படி பெரிதான தம்முடைய பரம பக்தி குளப் படி யாம் படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளி இடுகிறார் பத்தாம் பத்தில் ..-அதாவது –-என் அவா அறச் சூழ்ந்தாயே –என்று கீழ் சொன்ன அபரிசேத்யமான தம்முடைய அபிநிவேசத்தையும் தன் அபிநிவேசத்தையும் பார்த்தால் இது ஒரு குளப் படியும் -அது ஒரு சமுத்ரம் என்னும் படியான அபிநிவேவேசத்தோடே வந்து சம்ச்லேஷித்து –
அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷச்வஜே -யுத்த-134-39-என்று மீண்டு எழுந்து அருளி ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து அணைத்து உச்சி மோந்து முகந்தாப் போலே தம்முடைய விடாய் கெடும் படி அனுபவித்து -அலாப நிபந்தன பரிதாபத்தாலே கூப்ப்பிட்ட வாயாலே –-அவா அற்று வீடு பெற்ற  குருகூர் சடகோபன் -10-10-11-என்று பேசும்படி –அவா அற சூழ் அரியை -10-10-10–என்று ஹரி என்கிற திரு நாமத்துக்கு அனுகுணமாக தம்முடைய சகல தாபங்களையும் ஹரித்தமையை சர்வரும் அறியும்படி
பிரகாசிப்பிக்கிறார்  பத்தாம் பத்தில் என்கை

(முதலளவு துரக் கைகளாலே) முதலிலே பிடித்து முடியுமளவாக புகலறத் துரந்து பெறாவாணை யல்லாமையை பலிப்பித்துக்‌ கொள்ளும்படியான பேரவா குளப்படியாம்படி யென்னும்படி “அதனில்‌ பெரியவென் னவா வறச்‌ சூழ்ந்தாயே” (திருவாய்மொழி 10-10-10) என்று தத்வ த்ரயங்களையும்‌ விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படியான பரம பக்தியையும்‌ குளப்படியாக்க வற்றான ஸமுத்‌ரம்‌ போன்றிருக்கிற தன்னபிநிவேஸத்தைக்‌ காட்டி வந்து ஸம்ஸ்லேஷித்து இவருடைய ஸகல தாபத்தையும்‌ வாஸநையோடே போக்கி இவருடைய கூப்பீட்டையும்‌ ஓயப்‌ பண்ணி “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” (ராயு. 134-39) என்கிறபடியே மீண்டெழுந்தருளிப்‌ பெருமாள்‌ ஸ்ரீபரதாழ்வானை மடியிலே வைத்தணைத்துக்‌ கொண்டாப் போலே இவர்‌ விடாய்‌ கெடும்படி கலந்து ‘அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்‌” என்று தாமே பேசும்படி இவருடைய ஸகல தாபங்களையும்‌ போக்குகையாலே நிர்துக்கராய்‌ நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய்‌ பேற்றோடே தலைக் கட்டின படியை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே –என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-ஒன்பதாம்‌ பகுதி-(227) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 4, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

ஒன்பதாம் பத்தால்–இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் –என்கிறார்-

இப்படி அவாப்த ஸமஸ்த காமத்வத்தால்‌ வந்த நைரபேக்ஷ்யத்தாலே அபேக்ஷா நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத் தஸைகளிலே உதவி ரக்ஷிக்கும்‌ ஆபத் ஸகனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ ப்ரகாஸிப்பித்த ஆத்ம தர்ஸநத்துக்கு பலம்‌ ஸ்வ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யாநுபவமாய்‌ அவ்வநுபவத்திலுண்டான த்வரையாலே க்ஷண கால விளம்பம்‌ பொறுக்க மாட்டாமல்‌ ஆர்த்தரான இவர்க்கு ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே பேறாகக்‌ கடவதென்று நாளிட்டுக்‌ கொடுக்கப்‌ பெற்ற இவர்‌ கீழ்த்‌ தாமுபதேஸித்த ஹித வசநம்‌ கேட்டுத்‌ திருந்தினவர்களை யொழிய அல்லாதாரையும்‌ விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே யதாதிகாரம்‌ ஸர்வோபாயங்களையும்‌ அருளிச் செய்கிறார்‌ என்கிறார்‌.

1-எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற ஆலின்‌ மேலென்னும்படி நித்ய போக பாத லீலோபகரணத்தின்‌ லயாதிகளைப்‌ போக்குமாபத்ஸகன்‌ -2-ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்ஸந பலாநுபவ பரம்பரையைக்‌ கூவுதல்‌ வருதலென்று முடுகவிட்டு –3-ஏகமெண்ணிக்‌ காணக் கருதி எழ நண்ணி நினை தொறும்‌ உருகி யலற்றிக்‌ கவையில்‌ மனமின்றி, பதினாலாண்டு பத்து மாஸம்‌ ஒருபகல்‌ பொறுத்தவர்கள்‌ ஒரு மாஸ தின ஸந்த்‌யையில்‌ படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக்‌ கீடாக -4-இனிப் பத்திலோன்று தஸம தஸையிலே பேறென்று நாட் கடலாகத்‌ தம்பிக்‌ கிட்டதாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப்‌ பெற்றவர்‌ –5-இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட அபாந்தவ-அரக்ஷக-அபோக்ய-அஸு௧,-அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக்‌ காட்டி –6-மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌, –7-அதில்‌ துர்பல புத்‌திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி, அதில்‌ அஸக்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி –8-அதில்‌ அஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌, ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும்‌ பாடியிடும்‌ தண்டனென்று கீதாசார்யனைப்‌ போலே அதிகாராநுகுணம்‌ நெறி யெல்‌லாம்‌ உரைக்கிறார்‌ ஒன்பதாம்‌ பத்தில்‌.

1-எண் திசையும் அகல் ஞாலம் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரமபதத்தை நோக்காக காள் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு) அதாவது-எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும் அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும் ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும் சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும் மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —கீழ்ச் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத் தலையில் அபேஷம் அற –பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம் ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில் லயாதிகளை போக்கும்

(எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற இத்யாதி,) “எண்டிசையும்‌ கீழும்‌ மேலும்‌ முற்றவும்‌ உண்ட பிரான்‌” (திருவாய்மொழி 9-1-1 “அவனே அகல் ஞாலம்‌ படைத்திடந்தான்‌ அவனே அஃதுண்டு மிழ்ந்தான்‌ அளந்தான்‌” (திருவாய் மொழி 9-3-2 “அகலிடம்‌ படைத் திடந்துண்டுமிழ்ந் தளந்து எங்கும்‌ அளிக்கின்ற ஆயன்‌” (திருவாய்மொழி 9-9-2) “ஆலின் மேலாலமர்ந்தான்‌’ (திருவாய்மொழி 9-10-1) என்று ஸகல லோகங்களையும்‌ ஸஹகாரி நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத்துக்களிலே உதவி ரக்ஷிக்கும்‌ என்கையாலே கீழ்ச் சொன்ன ஸத்ய காமத்வத்தால்‌ வந்த நைரபேக்ஷ்யத்தாலே “பாதோஸ்ய விஸ்வா பூதாநி திரிபாதஸ்யாம்ருதம்‌ திவி (புருஷ ஸூக்தம்‌) அந்த நித்யவிபூத்யேக தேஸமான லீலா விபூதிக்குண்டான ஆபத்துக்களிலே அபேக்ஷா நிரபேக்ஷமாக உதவித்‌ தன் பேறாக ரக்ஷிக்கும்‌ ஆபத் ஸகத்வனான ஸர்வேஸ்வரன்‌

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1—பத்துத் திக்கிலும் உண்டான சகல சேதனரையும் பிரிகதிர் படாமல் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தவன்-இவற்றின் பக்கல் ஒன்றும் இல்லாத அன்று ரக்ஷிக்குமவன் -பிரளய ஆபத்தில் ரஷிக்கைக்கு ஒரு கை முதலும் இல்லை -அர்த்தித்தவமும் இல்லை இறே –ரஷிக்கைக்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமுமே இறே வேண்டுவது -அப்போது விலக்குகைக்கு பரிகரமும் இல்லையே –பிரான் -உபகார சீலனானவன் –

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்

அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2—விஸ்திருதமான பூமியை ஸ்ருஷ்டித்து –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்தானும் அவனே –அவதாரணத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளில் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது – அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்— பிரளயம் கொள்ளாத பூமியை வயிற்றிலே வைத்து வெளிநாடு காண உமிழ்ந்து -அபஹ்ருதமான பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் அவனே –இந்த அவதாரணத்தாலே ஆபத் சகத்வாதி ரக்ஷகத்வத்திலும் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –-அவனே யவனும் அவனுமவனும்–ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –-அவனே மற்று எல்லாமும் -பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் ஆதீனமே
அறிந்தனமே–ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை –

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2––பரப்பை யுடைத்தான பூமி உரு மாய்ந்து போக -அத்தை யுண்டாக்கி பிரளய ஆபத்தில் அகப்படாதே வயிற்றிலே வைத்து நோக்கி -வெளிநாடு காண உமிழ்ந்து -பிரபலர் அபகரித்த அளவிலே எல்லை நடந்து மீட்டுக் கொண்டு இப்படி வரையாதே ரஷிக்கையே ஸ்வ பாவமாக இருக்குமவன் –இருந்ததே குடியாக ரக்ஷிக்குமவன் கிடீர் மஹிஷி நோவு பட உதவாது இருக்கிறவன் –-வாயன்-கிருஷ்ண ஏவஹி லோகா நாம் -என்கிறபடியே -ஜகத் காரண பூதன் –மாயோன்–ரக்ஷண அர்த்தமான ஆச்சர்ய சக்தி உக்தன் –

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1–சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினவன் -உங்கள் விரோதி நிரசனங்கள் துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லன் என்கை —அவன் இணை அடிகளையே இறைஞ்சுமின் –

2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு-அதாவது இருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க வித்தராய் –
பேசுகிற அளவிலே –அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு – ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது – நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக – தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே – சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்றும் – உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -என்றும் – கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும் – நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்-
திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் – திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் – திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் – தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் – என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும் அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –-கூவுதல் வருதல் செய்யாய்
-என்று நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று – இப்படி முடுக விட்டு–

(ஆருயிரென்னப்படுத்தின இத்யாதி.) “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்று என்னாத்மா பட்டது நித்ய விபூதியிலுள்ளாரா ரேனும்‌ பட்டாருண்டோ என்று இவர் தாமே பேசும்படி அவன் மேல் விழுந்து அநுபவிக்கைக்கு அடியாக கீழில்‌ பத்தில்‌ ஆத்ம ஸ்வரூபத்தை யதாவாகக்‌ கண்டவதுக்குப்‌ பலம்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை யநுபவிக்கையாய்‌, அதிலே த்வரை விளைகையாலே “தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌” (திருவாய்மொழி 9-2-1 “பாத பங்கயமே தலைக்கணியாய்‌” (திருவாய்மொழி 9-2-2 “உன்‌ தாமரை மங்கையும்‌ நீயும்‌ இடங்கொள்‌ மூவுலகும்‌ தொழ இருந்தருளாய்‌” (திருவாய்மொழி 9-2-3), “கனிவாய்‌ சிவப்ப நீ காண வாராய்‌” (திருவாய்மொழி 9-2-4) “நின்‌ பன்னிலா முத்தம்‌ தவழ் கதிர்‌ முறுவல்‌ செய்து நின்‌ திருக் கண்‌ தாமரை தயங்க நின்றருளாய்‌” (திருவாய்மொழி 9-2-5) என்று என்னார்த்தி தீரத்‌ திருக் கண்களாலே குளிர நோக்கி யருள வேணும்‌, திருவடிகளை என்‌ தலையிலே வைத்தருள வேணும்‌, தேவரீரும்‌ பிராட்டிமாரும்‌ கூட எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குக்‌ காட்டி யருள வேணும்‌, என்‌ முன்னே நாலடி உலாவி யருள வேணும்‌, அநுகூல தர்ஸனத்திலே பிறக்கும்‌ ஸ்மிதம்‌ நான்‌ காண வேணும்‌, ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்‌, என்றிப்படி அநுபவ பரம்பரைகளை ஆசைப்பட்டு அது க்ரம ப்ராப்தமாகாமல்‌ கூவுதல்‌ வருதல்‌ செய்யாயே என்று நிரதிஸய போக்‌யமான உன்னுடைய திருவடிகளிலே நானும்‌ வந்தடிமை செய்யும்படி என்னை அங்கே அழைத்தல்‌ இங்கே வருதல்‌ செய்தருள வேணும்‌ என்று இப்படி முடுக விட்டு

இருந்தும் வியந்தில் -8-7-அவன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹத்தில் அதிசங்கை பண்ணி -மெய் என்று தெளிந்து அந்த வியாமோஹத்தை பேசி ஹ்ருஷ்டராகிறார்-இத்திருவாய் மொழி யில் லாபத்துக்கு க்ருஷி பண்ணின படியாய் இருக்கிறது கீழ் எல்லாம் –-இது ஸ்திரமாகைக்கு வேலி படைக்கிறார் மேல் – சர்வேஸ்வரன் ஸ்வதந்த்ரன் என்று உபபாதித்தது கீழ் அங்கனம் அன்றிக்கே ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்கிறது இத்திருவாய் மொழியிலே –

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9—நான் பட்ட பாட்டை நித்ய ஸூரிகளில் சிலர் பட்டார் யுண்டோ -பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற சம்சாரத்தில் நான் பட்ட பாடு நித்ய விபூதியில் உள்ளார் பட்டார்களோ –இங்கு எனது உயிர் பட்டது –அங்கே ஆருயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் -நவோடையான ஸ்த்ரீக்கு அனுபவத்தில் புதுமையாலே ஆர்த்தி மிக்கு இருக்கும் இறே -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர் –

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி –மாமக்ரூரேதி வஹ்யதி என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –உன்-தாமரைக் கண்களால் நோக்காய்--வார்த்தை யில் தோற்றாத பந்தமும் நோக்கிலே அனுபவிக்கும் படி குளிர நோக்கி யருள வேணும் –அவலோக நதா நேந பூயோ மாம்பால யாவ்யய

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-படிக்களவாக நிமிர்த்த-பூமிக்கு அளவாக நிமிர்த்த -சதைக்க ரூபமான திருவடிகளை நிமிர்த்த ஆச்சர்யத்தோ பாதி போருமாயிற்று பூமி யளவிலே குசை தாங்கின படி-நின் பாத பங்கயமே தலைக்கணியாய்-சர்வ ஸூ லபனான -உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை என் தலைக்கு ஆபரணமாம் படி பண்ணி யருள வேணும் -குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை அநந்ய பிரயோஜனனான நான் இழக்கவோ -ருசி இல்லார் தலையிலே வைத்த திருவடிகளை ருசி உடைய என் தலையிலே வைக்கலாகாதோ-பூமிக்கு அளவான திருவடிகளை என் தலைக்கு அளவாக்க லாகாதோ –கோலமாம் என் சென்னிக்கு -என்று இருக்கிற என் தலையில் வைக்கலாகாதோ -இந்த சீலம் காதாசித்கமாய் இழக்கிறேனோ

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3—பொய்கையை விழுங்கின தாமரை போலே இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி-நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்-நீ எழுந்து அருளி இருந்து -உணர்ந்து அருளும் போதை செவ்வியை அனுபவிக்க வேணும் -மாரி முலை முழைஞ்சில் -என்கிறபடியே –உன் தாமரை மங்கையும் நீயும் -பிராட்டியும் தேவரும் சேர இருந்து -எனக்கு காட்டித் தர வேணும் –பங்கயத்தாள் திருவருளும் –என்று ஆஸ்ரயண தசையாகையாலே புருஷகார பாவத்தை சொல்லிற்று கீழ் -அடிமை செய்யும் இடத்திலும் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவது -என்னுமத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு
இடம் கொள் மூ வுலகும்-இடமுடைத்தான சகல லோகங்களில் உள்ளாரும்-தொழ விருந்து அருளாய்-அநந்ய பரரைப் போலே முறையிலே தொழ இருக்கும் இருப்பை நான் கண்டு அனுபவிக்க வேணும் –

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4–தெளிந்த நீரை முகக்கையாலே தர்ச நீயமான மேகமானது பவளத்தைப் பூத்தால் போலே யாயிற்று திரு வதரத்தில் பழுப்பு இருப்பது –இவர் சமப்ரமத்தைக் கண்டு அவன் பண்ணும் ஸ்மிதம் இருக்கிற படி –-நீ காண வாராயே–நான் காண நீ வர வேணும் -என் எதிரே உன் நடை அழகு காண வேணும் -அவன் கூத்து இருக்கிற படி -வல்லார் ஆடினால் போலே இறே நடை அழகு இருப்பது –

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்

பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-அவாக்ய அநாதரா என்கிறபடியே ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத நீ -அனுகூல தர்சனத்தாலே அகவாயில் பந்தம் தோற்ற விக்ருதனாய் ஸ்மிதம் பண்ணி நிற்கும் படியைக் காண வேணும் –பல் நிலா முத்தம்-பல்லாகிற நிலாவை யுடைய திரு முத்து நிரையானது-தவழ் கதிர் முறுவல் செய்து-கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி –தயங்குகை -தத் காலத்தில் ஒளி யாதல் -கடல் சலித்தால் போலே அசைந்து வருகிறபடி யாதல் –

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –

3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி–அதாவது (ஓராயிரமாய் -திருவாய்மொழியில்)மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –(மையார் கருங்கண்ணி திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே – என்று பெரிய பிராட்டியாரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –(இன்னுயிர்ச் சேவலும் திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் –என்று ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –(உருகுமால் நெஞ்சம் திருவாய்மொழியில் )திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால் -என்று அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும் அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில் )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -என்று தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –(அறுக்கும் வினையாயின திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -என்று இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய் (மல்லிகை கமழ் தென்றல் திருவாய்மொழியில்)பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி –மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால் ஒரு சந்த்யையில் பட்ட கிலேசம் எல்லாம் –ஒரு ஷணத்திலே யாம் படிஅவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி -என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-

(ஏகமெண்ணி இத்யாதி) “கவையில்‌ மனமின்றி” (திருவாய்மொழி 9-8-3) “மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனம்‌ ஏகமெண்ணும்‌ இராப் பகலின்றியே” (திருவாய்மொழி 9-2-7) என்று அவன்‌ நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே ஸர்வ காலமும் ஏக ரூபமாக மநோ ரதித்து -காணாக் கருதும் என் கண்ணே (திருவாய்மொழி 9-4-1) என்று பெரிய பிராட்டியாரோடும்‌ திவ்யாயுதங்களோடும்‌ திவ்ய விக்‌ரஹத்தோடும்‌ கூடி யிருக்கிற அவனைக்‌ காண வேணுமென்று ஆசைப் பட்டு “எழ நண்ணி நாமும்‌ நம்‌ வானநாடனோடொன்றினோம்‌” (திருவாய்மொழி 9-5-10) என்று ஸ்மாரக பதார்த்த, தர்ஸநத்திலே நோவு படுகையாலே முடிந்து போகையிலே ஒருப்பட்டு “நினைதொறும்‌ சொல்லுந்‌ தொறும்‌ நெஞ்சிடிந்துகும்‌” (திருவாய்மொழி 9-6-9) “உருகுமால்‌ நெஞ்சம்‌ உயிரின்‌ பரமன்றி பெருகுமால்‌ வேட்கையும்‌” (திருவாய்மொழி 9-6-1) என்று, அவனுடைய அனுபவத்தை நினைக்கும் தொறும்‌ அநுபவ உபகரணமான நெஞ்சானது ஸிதிலமாய்க்‌ கரைய “தக்கிலமே கேளீர்கள்‌” (திருவாய்மொழி 9-7-2 )என்று ஆள் விட்டு “கிளிமொழியாளலற்றிய சொல்‌” (திருவாய்மொழி 9-7-111) என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக்‌ கூப்பிட்டு “கவையில்‌ மனமின்றிக்‌ கண்ணீர்கள்‌ கலுழ்வன்‌’ திருவாய்மொழி 9-8-3) என்று இருதலைத்த நெஞ்சின்றிக்கே கண்ணீர்‌ காட்டாறு போலே பெருக (பதினாலாண்டு இத்யாதி, இரங்குகிற த்வரைக்கீடாக) பெருமாளைப்‌ பிரிந்து பதினாலாண்டு பொறுத்திருந்த ஸ்ரீபரதாழ்வான்‌ அந்த அவதி கழிந்த ஒருநாள்‌ பட்ட க்லேஸமும்‌, பத்து மாஸம்‌ பிரிந்து பொறுத்திருந்த பிராட்டி “மாஸாதூரர்த்‌வம்‌ ந ஜீவிஷ்யே” (ரா.ஸு. 40-10) என்று ஒரு மாஸத்தில்‌ பட்ட க்லேஸமும்‌, க்ருஷ்ணன்‌ பசு மேய்க்கப்‌ போக ஒரு பகலெல்லாம்‌ அவனைப்‌ பிரிந்து பொறுத்திருந்த ஸ்ரீகோபிமார்‌ ஸந்த்‌யா காலத்திலே பசுக்களின்‌ முற் கொழுந்திலே காணாமல்‌ அவர்கள்‌ பட்ட க்லேஸமுமெல்லாம்‌ அவனை “விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச்‌ சடகோபன்‌” என்று ஒரு க்ஷணத்திலே யாம்படி யீடுபடுகிற தம்முடைய த்வரைக்கீடாக

எவைகோல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3—நான் வந்து கிட்டப் பெறும் நாள் எவை என்று
எப்போதும்-ஒரு கால் இத்தைச் சொல்லி அல்லாத போது அந்நிய பரதை பண்ணுகிறேனோ –
கவை யில் மனம் இன்றி -அது தன்னிலும் இதுவும் முகாந்தரமுமாய்ச் செல்லுகிறதோ -இரு தலைத்த நெஞ்சு இன்றியே –கண்ணீர்கள் கலுழ்வன்-கண்ணீர்கள் வெள்ளமிட விருப்பன்

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–
9-3-7-என் மனஸ்ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ –என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-சங்க சக்ர கதா தர –ஸ்ரீ வத்ஸ வக்ஷ-என்கிற வடிவையுடைய உன்னை-காணக் கருதும் -காண ஆசைப்படா நின்றது -இவ்வஸ்துவைப் பார்த்தால் கண்டு கொண்டே இருக்கை இறே சத்ருசம் -நித்ய ஸூரிகளும் சதா தர்சனம் இறே பண்ணுவது –
என் கண்ணே–சம்சாரிகளில் இவர்க்கு உள்ள வியாவ்ருத்தி போருமாயிற்று -இவரில் காட்டில் இவருடைய கண்ணுக்கு –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-போக்கிலே ஒருப்பட்டு நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம் -கடலைக் குளப்படியிலே மடுத்தால் போலே தன்னை இலக்காக்கி இத் தலையை வெறும் தறையாக்கி தன்னைக் கொண்டு அகன்றான் -நாமும் அயர்வறும் அமரர்கள் அதிபதியோடே ஒரு மிடறு ஆனோம் -நித்ய ஸூரிகளும் அவனுமாய் இருந்து நம்மை முடிக்க எண்ணின் படியே நாமும் இசைந்தோம் -அவன் முடிக்க நினைக்க நாம் ஜீவிக்க எண்ணி இடக்கைப் புரி முறுக்குகை தவிர்ந்து நாமும் முடிகையிலே துணிந்தோம் -நித்ய ஸூரிகளும் ச்சந்தா அனுவர்த்திகள் ஆகையால் அவன் கருத்தே கருத்தாய் இருப்பார்கள் இறே –

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2—நினைதொறும்-நினைக்க உபக்ரமிப்பர் -அந்நினைவேயாய்ச் செல்ல ஒண்ணாத படி பலஹானி மிகும் -மறக்க மாட்டார் -திரியட்டும் நினைக்க என்று இழிவார் -இப்படி பல காலும் நினைக்க உபக்ரமித்து தலைக் கட்ட மாட்டாதே செல்லுகிற படி –
சொல்லும் தொறும் -நினைக்க அரிய விஷயம் சொல்ல ஒண்ணாது என்னும் இடம் சொல்ல வேண்டாது இருக்க சொல்லும் தொறும் -என்கிறது -என்னும் எப்போதும் என் வாசகம் -என்கிற படியே மனஸ் சஹகாரம் ஒழிய வாசனையால் வாக்கு பேசாத தொடங்கும் -செவி வன்மையாக புக்கு நெஞ்சை அழிக்கும்-நெஞ்சு இடிந்து உகும்-நெஞ்சு கட்டு அழிந்து நீராகா நின்றது -பெருக்காற்றில் கறை இடிந்து விழுந்து பின்பு நீராய் கரைந்து போமா போலே சிதிலம் ஆகா நின்றது

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் எ
ன் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-அனுபவத்துக்கு பிரதம உபகரணமான மனஸ் தத்வம் சிதிலமாகா நின்றது -அனுபவிக்கைக்கும் அனுபவத்தி நிர் வ்ருத்தராகைக்கும் நெஞ்சு வேணுமே –தொழுது எழு என்கைக்கும் -நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் என்கைக்கும் நெஞ்சு வேணும் இறே -நீஞ்சப் புக்கவனுக்கு வாய் கரையிலே தெப்பம் ஒழுகுமா போலே பரிகரமாக நெஞ்சு சிதிலமாகா நின்றது -எதிர்தலையும் யுண்டாம் படி பரிமாற அறியான் -அனுபவத்துக்கு இருவர் வேண்டும் என்று இரான் –-உயிரின் பரம் அன்றி-பெருகுமால் வேட்கையும் –ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ் வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூசகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்-என் செய்கேன் -நெஞ்சு உருகாத படி தரிப்பேனோ -பெருகுகிற அபி நிவேசத்தை அமைப்பேனோ -இதுக்கு அடியான அவன் குணங்களை தவிர்ப்பேனோ-தொண்டனேன்-அதுக்கு அடியான என் சாபல்யத்தை தவிர்ப்பேனோ -சாபலம் அபூமி என்று கை வாங்க ஓட்டுகிறது இல்லை -மறந்து தரிக்க வொட்டுகிறது இல்லை –

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு –அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள்

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11–அவன் அவ்வூரில் ஒழியில் தரிக்க மாட்டாதாப் போலே -அவனை ஒழிய தரிக்க மாட்டாதவள் -என்கை –-அணி மழலைக் கிளி மொழியாள் -அழகியதாய் முக்தமான கிளியின் பேச்சுப் போலே இருக்கிற பேச்சை யுடையவள் –
அலற்றிய சொல்-தன் ஆற்றாமையால் அக்ரமமாகச் சொன்ன பாசுரத்தை

எவைகோல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று -நான் வந்து கிட்டப் பெறும் நாள் எவை என்று-எப்போதும்-ஒரு கால் இத்தைச் சொல்லி அல்லாத போது அந்நிய பரதை பண்ணுகிறேனோ – கவை யில் மனம் இன்றி -அது தன்னிலும் இதுவும் முகாந்தரமுமாய்ச் செல்லுகிறதோ -இரு தலைத்த நெஞ்சு இன்றியே –

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-அவனுடைய பிரிவால் நோவு பட்டு அருளிச் செய்த ஆழ்வார் -அவர்கள் எல்லாரும் பட்ட கிலேசத்தை இவர் ஒருவருமே பட்டார் என்கை –

4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று-அதாவது-நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-பிரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத் அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம் -உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே உன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்-வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும் சொல்லுகிறபடி -காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான மரண அவஸ்தையிலே பேறு என்று நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர் நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு கொடுத்தால் போல் ஆகாமே –நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து – நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே – மரணமானால் -என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே நாள் இட்டு கொடுக்க பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –

(இனிப்‌ பத்திலொன்று தஸம தஸையிலே பேறென்று) “நயந ப்ரீதி: ப்ரதமம்‌ சித்தா போகஸ்‌ ததோநு ஸங்கல்ப: நித்‌ராச் சேதஸ்‌ தநுதா விஷய விரக்திஸ்‌ த்ரபாநாமா: உந்மாதோ, மூர்ச்சா மரணம்‌ இத்யேதா ஸ்மரதஸா தஸைவ ஸ்யு:, ப்ரதமஸ் த்வபிலாஷ: ஸ்யாத்‌ த்‌விதீயம்‌ சிந்தநம்‌ பவேத்‌ அநுஸ்ம்ருதிஸ்‌ த்ருதீயந்து சதுர்த்தம்‌ குண கீர்த்தநம்‌ உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாத.ஸ்‌ ஸப்தமோ ஜ்ஞோய: அஷ்டமோ வ்யாதி ருஸ்யதே நவமே ஜடதா சைவ தஸமம்‌ மரணம்‌ ததா,” என்று காமுகராயிருப்பார்க்கு தஸமமாவஸ்தையிலே மரணமாமா போலே நம் பக்கல்‌ பரபக்தி யுக்தரான உமக்கு நம்மைப்‌ பெறா விடில்‌ முடியும்படி பரம பக்தி தஸையான பத்தாம் பத்திலே பெறக் கடவதென்று (நாட் கடலாகத்‌ தம்பிக்கிட்ட தாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர்‌) “நாட்கடலைக்‌ கழிமினே” (திருவாய்மொழி 1-6-7) என்று ஒரு நாள்‌ ஒரு கடல்‌ போலே விஸ்லேஷ வ்யஸநத்தாலே துஸ்தரமாம்படி ‘பூர்ணே சதுர்தமே வர்ஷே” (ராயு. 127-1 என்று தம்பியான ஸ்ரீ பரதாழ்வானுக்கு நெடுக நாளிட்டுக்‌ கொடுத்தாப் போலே யன்றியே “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” (நாச்சியார்‌ திருமொழி 6-2) என்று இன்றென்னில்‌ வெள்ளக்கேடாம்‌ சிலநாள்‌ கழித்தென்னில்‌ வறட்கேடாமென்று “நாளை” என்று நாச்சியார்க்கு நாளிட்டாற் போலே “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்‌த ஸரீராவதியாக அவனாலே நாளிட்டுக்‌ கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டரான இவர்‌

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்-நாழ் -குற்றம்

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2–நாள் நெடுக விட்டால் ஆற்ற மாட்டாள்
இன்று என்னில் வாய் புகு நீராய்த் தரிக்க மாட்டாள் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்த வாரா ஷகா போக்யா சுக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி அதாவது-சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்) திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –கொண்ட பெண்டிர் -என்று தொடங்கி –சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —துணையும் சார்வும் –பொருள் கை உண்டாய் –அரணமாவர் -என்ற பாட்டுகளாலே –அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால் ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –ஸ்திரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து -என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —அவனே நிரதிசய போக்யன் என்றும் –இல்லை கண்டீர் இன்பம்-என்று தொடங்கி துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும்யாதும் இல்லை மிக்கு அதனில்-என்று தொடங்கி அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் -இப்படி-அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று வாக்ய யோஜன க்ரமம்–

(இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட இத்யாதி, ப்ரதி ஸம்பந்‌தியைக்‌ காட்டி) சரமோபாயோபேய பர்யந்தமாக தாமருளிச் செய்த ஹித வசநம்‌ கேட்டுத்‌ திருந்தனவர்களை யொழிய அல்லாதாரையும்‌ விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே “இம் மடவுலகர்‌’ (திருவாய்மொழி 9-2-7 என்று ஸம்ஸாரத்தில்‌ அறிவு கேடரானவர்களையும்‌ பார்த்து, “கொண்ட பெண்டிர்‌’ (திருவாய்மொழி 9-1-1 என்று தொடங்கி த்‌ரவ்யாதிகளாலே ஸம்பாதிக்கப்‌ பட்டு ஸந்நிதி யிலே ஸ்நேஹித்திருக்கு மதொழிய காணாத போது ஸ்நேஹமொன்று மின்றிக்கே மிருக்கிற புத்ரதாராதிகள்‌ பந்துக்களன்று ப்ரளயாபத் ஸகனானவனே பரமபந்து வென்று துணையும்‌ சார்வும் (திருவாய்மொழி 9-1-2) இத்யாதி “பொருள்‌ கை” (திருவாய்மொழி 9-1-3) இத்யாதி, “அரணமாவர்‌” (திருவாய்மொழி 9-1-4) இத்யாதி, அவனை யொழிந்தார்‌ தாங்கள்‌ உபகாரகரைப் போலே ப்ரயோஜநமுள்ள போது பந்துக்களாய்க்‌ கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பர்கள்‌. ஆகையாலே இவர்கள்‌ ரக்ஷகரல்லர்‌. நிர்ஹேதுகமாக ஆபத் ஸகனான க்ருஷ்ணனை யொழிய வேறு ரக்ஷகரில்லை. “சதிரம்‌’” (திருவாய்மொழி 9-1-5) இத்யாதி தங்களுக்கு போக்‌யைகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள்‌ ஆபத்து வந்தவாறே உபேஷிப்பர்கள்‌. ஏக ப்ரகாரமாக ஸ்நிக்‌தனா யிருப்பானவனே. ஆனபின்பவனே நிரதிஸய போக்‌யன்‌. “இல்லை கண்டீர்‌ இன்பம்‌” (திருவாய்மொழி 9-1-5) என்று துக்க மிஸ்ரமான சிலவற்றை ஸுக மென்று ப்‌ரமிக்கிற வத்தனை போக்கி அவனை யொழிய ஸுக ரூபமாயிருப்ப தொன்றில்லை. “யாதுமில்லை” (திருவாய்மொழி 9-1-9) இத்யாதி. இவனை யொழிய வேறே யொருவனை ரஷகமென்று பற்றினவர்கள்‌ பண்டை நிலையுங்‌ கெட்டு அநர்த்த ப்பட்டுப்‌ போவர்கள்‌; ஆன பின்பு அவனை யொழிய உபாயமில்லை என்று அவனை யொழிந்த வற்றினுடைய அபாந்துத்வத்தையும்‌, அரக்ஷகத்வத்தையும்‌, அபோக்யத்வத்தையும்‌, அஸுகத்வத்தையும்‌, அநுபாயத்வத்தையும்‌ அவர்களுக்கு உபதேஸித்து

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7–அஞ்ஞரான சம்சாரிகள் அனுபவிக்கும் படி எங்கள் கண் வட்டத்தில் ஒரு நாள் இருந்து அருள வேணும் -நித்ய ஸூரிகளுக்கு சதா தர்சனமான விஷயம் நீ ஒரு நாள் எங்கள் கண்ணுக்கு விஷயமாய் இருந்தால் ஆகாதோ -உன்னுடைய தர்சனம் அதிக்ருதாதிகாரமாக வேணுமோ –

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-எல்லாருடைய பந்துத்வமும் சோபாதிகம் ஆகையால் -ஆபத் சகனும் நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றி உஜ்ஜீவிக்க வேணும் -என்கிறார்-அடியோமாய் உஜ்ஜீவிக்கை ஒழிய நம்மதாய் அவனுக்கு கொடுக்க வேண்டுவது ஒன்றும் இல்லை -சேஷத்வத்தை இசையும் அத்தனை -சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையால் அத்தை அறிகை உஜ்ஜீவனம் -சேஷத்வத்தை இழக்கை இறே நாசமும்-இல்லை கண்டீர் துணையே -வேறே துணை உண்டாய் இருக்க இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன் -இவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் அத்தனை -அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-உபகாரகரைப் போலே இருந்து ஸ்வ பிரயோஜனங்களையே தலைக் கட்ட நினைக்குமவர்களை ஒழிய -நிர்ஹேதுகமாக ஆபத்சகனைப் பற்றுங்கோள் -என்கிறார்-ஆகுவார் போல்-தாங்கள் அபந்துக்கள் ஆனபடியே கடக்க நிற்பதும் செய்யாதே – ரக்ஷகர் என்று பிரமிக்கும் படி வர்த்திப்பர்கள் –-சுற்றத்தவர் பிறரும்-பந்துக்களோடு வாசி இன்றிக்கே –அணைய வந்த வாக்கம் உண்டேல்-கைக்கு எட்டின சம்பத்து உண்டாகில் -இவன் பக்கலிலே ஒரு பிரயோஜனம் தங்களுக்கு உண்டாம் என்று தோற்றி இருக்கில் என்னுதல் -தங்கள் பக்கலிலே இவனுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று தோற்றி இருக்கில் என்னுதல் –

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-எம்பெருமானை ஒழிய மற்று உள்ளார் எல்லாம் பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி -இவனுக்கு ஆபத்து வந்தால் பார்ப்பாரும் இல்லை -ஆன பின்பு நிருபாதிகமாக எல்லாருக்கும் ஆபத் சகனாய் இருக்க கிருஷ்ணனையே பஜியுங்கோள் -அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லாது -என்கிறார் –என்னே என்பாருமில்லை-ஐயோ என்ன கடவாரும் இல்லை -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளை திரு நறையூர் அரையர் அர்த்தித்தவனுக்கு இட்டே தரித்ரனாய் -இவனுடைய சர்வஸ்வத்தையும் கொண்டு சம்ருத்தரானவர்கள் –என் என்ற மாத்திரத்திலே இவனுடைய பந்து என்று ஜீவிக்கலாய் இருக்குமாகில் அதிலும் லோபிகளாய் ஓர் இன் சொல்லுச் சொல் சொல்லார் -என்பர் –

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–9-1-4-சிலரை ஆபத்சரென்றே அர்க்காதிகளாலே நெடு நாள் ஆஸ்ரயித்து வைத்தால் -ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர் -நிர்ஹேதுகமாக அவன் வந்து அவதரித்து ஆபத்சகானான வனே ஆஸ்ரயணீயன் என்கிறார் –கைமுதல் அற்ற அன்றைக்கு ரக்ஷகனாவான் ஒருவன் வேணும் என்று இயற்றி உள்ள காலத்திலே பச்சை இட்டு ஆஸ்ரயித்து -தனக்கு அபாஸ்ரயமாக சமைத்து வைத்தவர்கள் -அவர்கள் ஆபத்துக்கு உதவும்படி என் என்னில் – இரணம் கொண்டு தெப்பர் ஆவர்-முன்பு பச்சை கொண்டதுவும் கடவிய தனம் கொண்டாராய் -ஆபத்து வந்தவாறே உபேக்ஷித்து க்ருதக்நராயப் போவார்கள் –-தெப்பர் ஆவர்-நம்மத்தை நாம் கொண்டோம் -என்று இருக்கும் புல்லியராவர்–இன்றி இட்டாலும் அக்தே-பச்சை இட்டு ஆஸ்ரயியா விட்டாலும் ஆபத்து வந்தால் கை விடுவாரை கிடைக்கும் –ஆபத்து வந்தால் -பொகட்டுப் போகைக்கு பச்சை இட வேண்டாவே -அவர்கள் தாங்கள் நடுவே முடிந்து இவர்களுக்கு உதவாதே போனாலும் பலம் அதுவே என்றுமாம் –-வருணித்து என்னே-வ்யர்த்த கதையை பரக்க சொல்லுகிறதுக்கு என்ன பிரயோஜனம் உண்டு -க்ருதக்நரான சம்சாரிகள் படியை அனுசந்தித்து என்ன பலம் உண்டு

சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்

அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-தங்களை பெறா விடில் தரிக்க மாட்டாத படி ஸ்நிக்த்தை களான ஸ்த்ரீகளாலே ஆபத்துக்கள் வந்தால் இகழப் படுவர் -ஆனபின்பு என்றும் ஏக பிரகாரமாக ஸ்நிக்தனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –சதிராக வாழா நின்றோம் என்று -இருந்ததே குடியாக -எல்லாரும் தம்மை இப்படி இ றே நினைத்து இருப்பது – தம்மைத் தாமே-சம்மதித்து -தங்களை தாங்களே இசைந்து -இயற்றி யுடையனானவன் -நம்மை சதிரன் என்று அங்கே நினைப்பிடு -என்னும் -இவ்வசதஸ்ய ப்ரவ்ருத்திக்கு வேறு சஹகரிப்பார் இல்லாமையால் தாமே மேல் எழுத்து இட்டுக் கொடு வர வேணும் –-இன் மொழியார்-இனிய பேச்சை யுடையவர்களுடைய –அகவாய் மயிர்க்கத்தியாய் இருக்க பேச்சில் இனிமையாலே வசீகரிப்பர்கள் –-மதுர போகம் துற்றவரே-மதுரமான போகங்களை அவர்களைக் கொண்டு நெருங்க புஜித்தவர்களே-வைகி மற்றொன்றுறுவர்-போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இறே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே மற்று ஓன்று -என்கிறார்

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே
–9-1-9–எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று ரக்ஷகம் உண்டு என்று பற்றினவர்கள் -பண்டு நின்ற நிலையும் கெட்டு அநர்த்தப் பட்டு போவார்கள் -ஆனபின்பு இவன் போக்கி சரணம் இல்லை என்கிறார் –பகவத் வ்யதி ரிக்தமாய் இருப்பது ஒன்றைப் பற்றி இது ஒழிய வேறு ரக்ஷகமாய் இருபத்தொரு ஒன்றும் இல்லை என்று சொல்லி அத்தை ரக்ஷகமாகப் பற்றி -சமர்த்தோ த்ருச்யதே கச்சித -என்கிற பிரதிபத்தியை அதிலே வேணும் என்று பண்ணி இருக்கை – காது செய்வான் கூதை செய்து-காது பெருக்கப் புக்கு பண்டு உள்ள யோக்கியதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே கடை முறை வாழ்க்கையும் போம்-தண்ணிய முறையான வாழ்க்கையும் அழியும் -ஆபத்தில் அது ரக்ஷகம் ஆகாது –அதின் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே தான் செய்து கொள்ளும் அத்தையும் இழக்கும் –தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-வைஜயந்தி உள்ளிட்ட தோள் மாலைகளால் அலங்க்ருதமான கிருஷ்ணனை ஒழிய வேறு பிரயோஜனம் வேண்டாம் என்கை-இல்லை கண்டீர் சரணே-புறம்பு ரக்ஷகம் இல்லை கிடி கோள் –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-பகவத் ஸமாச்ரயணீயத்தின் உடைய எளிமையையும் இனிமையையும் அருளிச் செய்கிறார் –மா நிலத்து -இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –எவ் உயிர் க்கும்-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –
சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை – சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் – அந்தோ-இவ்விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –குற்றம் அன்று-ஒரு நன்மை இல்லை யானாலும் ஓர் அநர்த்தத்தை விளையாதே -ப்ராதர்த்தே வேதி கிருஷ்ணேதி-இவ்வுபாயத்துக்கு பலம் இல்லை யானாலும் தானே பிரயோஜனம் போரும் என்கை – எங்கள் பெற்றத் தாயன்-வடமதுரைப் பிறந்தான்–ஆஸ்ரிதர்க்காக பசு மேய்க்கும் ஆயன் ஆனவனாக வடமதுரைப் பிறந்தவன் -என்னுதல் – குற்றமில் சீர் கற்று -ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களை அப்யஸித்து என்னுதல் -பிறப்பிலும் சேஷ்டிதங்களிலும் புரை யற்று இருக்கை என்னுதல் –அஹம் வோ பாந்தவோ ஜாதவைகல்-வாழ்தல் கண்டீர் குணமே–கற்பது ஒரு கால் –வாழ்ச்சி நித்தியமாய் இருக்கும் -வாழ்தல் கண்டீர் குணமே–வாழ்தல் கிடீர் இவ்வாத்மாவுக்கு யுக்தம் -அல்லாதவை எல்லாம் அப்ராப்தம் என்கை

6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்-அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –-இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே – தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய் ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் – சர்வாதிகாரமாய் – வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்று மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்- சித்தமாய் பரம சேதனமாய் சர்வ சக்தியாய் நிர் பயமாய்
ப்ரப்தமாய் சகாயாந்தர நிர பேஷமாய் இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய் வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்-என்கிற யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –

(மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌)”மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌”திருவாய்மொழி 9-1-7) என்று இதுக்கு மேலொன்று இன்றியிலே யிருப்பதாய்‌ ஸம் ஷேபேண வுபதேஸிக்கலாம் படியுமாய்‌ ஸர்வாதிகாரமுமாய்‌ ஸ்வரூபாநுரூபமுமாய்‌ ஸுகரமுமாய்‌ நிரதிஸய போக்‌யமுமாய்‌ “கண்ணனல்லா லில்லை கண்டீர்‌ சரண்‌” (திருவாய்மொழி 9-1-9 என்று “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ” (கீதை 18-66) என்று திருத் தேர்த்தட்டிலே நின்றருளிச் செய்த க்ருஷ்ணனை யொழிய வேறு நிரபேக்ஷோபாயமில்லை. இவ்வுபாயந்தான்‌ “வைகல்‌ வாழ்தல்‌ கண்டீர்‌ குணம்‌” (திருவாய்மொழி 9-1-7) என்று யாவதாத்ம பாவி யநுபவம்‌ என்று ஸித்‌தோபாயத்தை அவர்களுக்குபதேஸித்தும்‌

7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி – அதாவது- சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம் நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே –என்கிறபடியே அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு – மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் – விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் – தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –தனதன்பர்க்கு -என்று பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக்க சக்தர் அல்லாதவருக்கு – சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -என்று நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே ஸூகரமாய் சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–

(அதில் துர்பல புத்‌தி களுக்கு) “ஸக்ருதேவஹி ஸமாஸ்த்ரார்த்த,: தப்நாம்‌ பயநா முக: நராணாம்‌ புத்தி தெளர்பல்யாத்‌ உபாயாந்தர மிஷ்யதே” என்று அந்த ஸித்‌தோ பாயத்தில்‌ மஹா விஸ்வாஸம்‌ பிறக்கைக் கடியான பாக்‌யமின்றிக்கே ஸாத்‌யங்களான உபாயாந்தரங்களில்‌ ருசி குலையாமையாலே அவன்‌ பல ப்ரதனாமோ என்று புத்‌தி தெளர்ப்பல்ய முடையார்க்கு (மாலை நண்ணிக்‌ காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி) “மாலை நண்ணித்‌ தொழுதெழுமினோ காலை மாலை கமல மலரிட்டு நீர்‌” (திருவாய்மொழி 9-10-1) “விண்டு வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” (திருவாய்மொழி 9-10-3) “தேனை வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” (திருவாய்மொழி 9-10-4) “தனதன்பர்க்கு” (திருவாய்மொழி 9-10-5) என்று நிரதிஸய ப்ரீதி யுக்தராய்க்‌ கொண்டு ஸர்வ காலமும்‌ புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு அவனை ஸமாராதநம் பண்ணி அவன்‌ பக்கலிலே பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று அங்க ஸஹிதையான பக்தியை உபதேஸித்தும்‌ (அதிலஸத்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி) அதில்‌ துஷ்கரத்வத்தாலே அநுஷ்டிக்க ஸக்தி இல்லாதார்க்கு “சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று ஸர்வாதிகாரமுமாய்‌ ஸரீராவஸாநத்திலே பலமுமான ப்ரபத்தியை வெளியிட்டும்‌

மாலை  நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-உங்களுடைய சகல துக்கங்களும் போம்படி திருக் கண்ண புரத்திலே நின்று அருளின எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்று இத் திருவாய் மொழியில் சொல்லுகிற ஆச்ரயணத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –காலை மாலை – ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –கமல மலர் இட்டு–சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை –-நீர்-அதிகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும் –

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-சாபலமுடைய நீங்கள் துக்கம் கெட உபய விபூதி உக்தனாய் திருக் கண்ண புரத்திலே நின்று அருளினவனை அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-தொண்டீர் -ஆசாலேசமுடைய நீங்கள் என்னுதல் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கும் நீங்கள் என்னுதல்-நும் தம் துயர் போக -துயரும் வ்ருத்தமாய் இறே இருப்பது -விஷய ப்ராவண்யத்தால் வந்த துக்கம் என்னுதல் -இறைஞ்சப் பெறாத தன்னுடைய விரஹத்தால் வந்த துக்கம் என்னுதல்-நீர் ஏகமாய்-நீங்கள் அநந்ய பிரயோஜனராய் -என்னுதல் -நீங்கள் எல்லாம் ஒரு மிடறாய் என்னுதல் –தொண்டர் என்கையாலே எல்லாரும் ஒரு மிடறு ஆகலாம் இ றே
விண்டு வாடா மலர் ரிட்டு நீர் இறைஞ்சுமின்—அலரத் தொடங்கின அளவாய் கழிய அலர்ந்து வாடாத பூ -செவ்விப் பூவைக் கொண்டு ஆஸ்ரயிங்கோள்

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-தேனை -நிரதிசய போக்யமானவனை -இது இ றே நான் உங்களுக்குச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்-செவ்விப் பூவையிட்டு ஆஸ்ரயிங்கோள் -தேனையையும் செவ்விப் பூவையையும் சேர்க்கை போலே காணும் ஆஸ்ரயணம் ஆவது –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-பக்தி யோகத்தால் அவனை ஆஸ்ரயிக்க ஷமர் இன்றிக்கே தன் திருவடிகளே உபாயமாகப் பற்றினார் திறத்து செய்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –தனது அன்பர்க்கு அன்பாகுமே-தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் பக்கல் அதி பிரவணானாம் –அன்பாகுமே–அன்புடையன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்- அதாவது உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திருக் கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று வசனத்தை பற்றாசாக பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும் சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தொண்டன் என்று உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே – கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு – இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -என்று இத் திரு வாய் மொழியை பிரீதி பிரேரராய்க் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்றுஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..-அதாவது ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்–நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள் எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே இவரும் பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து – அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார் ஒன்பதாம் பத்தில் என்கை-

(அதிலஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌) உபாய பல்குத்வம்‌ பல கெளரவ விரோதி பூயஸ்த்வங்களாகிற ஸங்கா த்ரயத்தாலே அதில்‌ வ்யவஸாயத்துக் கடியான ஸக்தி யில்லாதார்க்கு “திருக்கண்ணபுரம்‌ சொல்ல நாளும்‌ துயர்‌ பாடு சாராவே” (திருவாய்மொழி 9-10-10) என்று உச்சாரண மாத்ரத்தை வெளியிட்டும்‌ (ஸர்வோபாயர்க்கும்‌ இப்பத்தும் பாடியிடும்‌ தண்டனென்று) கீழ்ச் சொன்ன உபாயாங்க ளெல்லாவற்றிலும்‌ அயோக்‌யராயிருப்பார்க்கு“இப்பத்தும்‌ பாடியாடிப்‌ பணிமின்‌ அவன்‌ தாள்களே” (திருவாய்மொழி 9-10-11 )என்று இத் திருவாய்மொழியை ப்ரீதி ப்ரேரிதராய்க்‌ கொண்டு பாடி அவன்‌ திருவடிகளிலே விழுங்கோளென்று கீதோபநிஷதா சார்யன்‌ தன்‌ பரம க்ருபையாலே“நெறி யெல்லாம்‌ எடுத்துரைத்த” (திருவாய்மொழி 4-8-6) என்கிறபடியே ருச்யநுகுணமான உபாயங்கள்‌ எல்லாவற்றையும்‌ வெளியிட்டாற் போலே இவர்‌ தமக்கு ப்ராப்தி அணித்தானவாறே ஸம்ஸாரிகள்‌ இழக்க வொண்ணாதென்று பார்த்து அவ்வவருடைய அதிகாராநுகு ணமாந உபாயங்கள்‌ எல்லாவற்றையும்‌ வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே
–9-10-10—ப்ரீதி அதிசயத்தாலே மீளவும் ஸ்வலாபத்தைச் சொல்லி பக்தி -பிரபத்யாதி அனுஷ்டானங்களுக்கு ஷமர் அல்லர் ஆகில் திருக் கண்ண புரம் என்று வாயாலே சொல்ல-உக்தியாலேயே – ஸமஸ்த துக்கங்களும் போம் -என்கிறார் –திண்ணிதான மதிலை யுடைய திருக் கண்ண புரத்தை – –வாயாலே சொல்லவே -பக்தியில் இழிகைக்கு பரிகரமும் இன்றிக்கே -ப்ரபத்திக்கும் வியவசாயம் இல்லாதார் -திருக் கண்ண புரம் என்று வாயாலே சொல்ல -ஸமஸ்த துக்கங்களும் போம் –

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே
–9-10-11-நிகமத்தில் பிரதிபந்தகங்கள் சவாசனமாக போக வேண்டி இருக்கில் இத்திருவாய் மொழியை ப்ரீதி பூர்வகமாகக் கொண்டு அவன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –அநாப்தர் சொல்லிலும் விட ஒண்ணாத போக்யத்தை யுடைத்தான இப்பத்து -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே இசையோடக் கூடப் பாடின தமிழ் –ப்ரீதி பூர்வகமாகப் பாடி -இருந்த இடத்திலே இருக்க ஒட்டாதே ஆடி ப்ரீதி பிரேரித்தராய்க் கொண்டு அவன் திருவடிகளிலே விழுங்கோள் -இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6–கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –-நெறி எல்லாம் எடுத்து உரைத்த-சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,நிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் –-ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியானை ஞான பூர்த்தியை யுடையவன் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-எட்டாம் பகுதி-(226) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 4, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

எட்டாம் பத்தால்–கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான – போக்ய போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே – சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி – சம்சார தோஷ அனுசந்தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –-இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண – அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்- இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து -இனி அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க
–-அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் – பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி – பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார்

இப்படிப்பட்ட ஸக்தி தன்னாலே நித்யமாக கல்பிதமான போக்ய போகோபகரண போக ஸ்தாநங்களை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ தம்மைக்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரித்து பகவத லாபத்தாலே கலங்கி அவனுடைய குணங்களிலும்‌ ஸ்வரூபத்திலும்‌ அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தாநத்தாலே அஞ்சின இவரை தரிப்பிக்கைக்காக பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க அத்தாலே க்ருதஜ்ஞராய்‌ அதுக்குப்‌ பலமாக அவர்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ பண்ண அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய்‌ இவர்க்குண்டான ஆத்ம குணங்களாலே ப்ரீதனாய்‌ இவர்‌ திருவுள்ளத்திலே யிருந்து நிரதிஸயமாக அநுபவிப்பித்து இவர்‌ இனி அயோக்‌யரென்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை ப்ரகாஸிப்பிக்க அதனுடைய யாதாத்ம்யத்தை அநுஸந்தித்த இவர்‌ கீழ்‌ தம்முடைய ப்ராப்ய ப்ராபகங்களைக்‌ கேட்டு உகந்தவர்களுக்கு ப்ராப்ய மொன்றும்‌ ப்ராபக மொன்றுமாகாதபடி ப்ராப்ய மொன்றிலுமே தத்பரராக்குகிறார்‌.

1-தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்‌னும் படி சக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்ய காமன்‌ கொண்ட வாக்‌ வ்ருத்தியையும்‌ மறப்பிக்கும்‌ கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும் தீர, –2-தலைச்‌ சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத் யுபகாரமாக வேந்தர்‌ தலைவன்‌ கந்யகாதநம்‌ போலே ஆரத் தழுவி அற விலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப்‌ பணைத்து –3-ஜந்ம பாஸம் விட்டு ஆத்‌வாரம்‌ ஆளுமாளாரென்று பரிந்து அநுருபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து -4-தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்‌ –5-மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அரு வினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேனென்றதின்‌ பெருமையைக்‌ காட்ட –6–தேஹாதிகளில்‌ பரமாய்‌ கன்று நினைக்கில்‌ லக்ஷ்மீ துல்யமாய்‌ அவர்க்கே குடிகளாம்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌ –7-ஸ்வ ஸாதந ஸாத்‌யஸ்தர்‌ இரு கரையராகாமல்‌ மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக் கொண்மின்‌ உள்ளத்தென்று ப்ராப்ய ஏக பரராக்குகிறார்‌ எட்டாம் பத்திலே –

சத்யகாமன் -ஆத்மலாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து – அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் – காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-
வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் -ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
-அதாவது–தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் – பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் – நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் – நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும் லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய – அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் – தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி — கீழ்ச் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான – போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே-சத்ய காமனாய் இருக்கிறவன்-

(தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடென்னும்படி ஸக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்யகாமன்‌) “தேவிமாராவார்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட்செய்வார்‌” (திருவாய்மொழி 8-1-1 “பணியாவமரர்‌ பணிவும்‌ பண்பும்‌ தாமேயாம்‌ அணியாராழியும்‌ சங்கமுமேந்துமவர்‌ (திருவாய்மொழி 8-3-6) “நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” (திருவாய்மொழி 8-9-111) “நல்லகோட்பாட்டுலகங்கள்‌ மூன்றினுள்ளும்‌ தான் நிறைந்த அல்லிக்கமலக்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று லக்ஷ்மீ ப்‌ரப்‌ருதி திவ்ய மஹிஷிகளுக்கு வல்லபனாய்‌, நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுமவனுமாய்‌, அவர்களுடைய ஸ்தோத்ராதிகளுக்கு விஷய பூ,தனுமாய்‌, போக்யாதிகளால்‌ குறைவற்றுக்‌ கட்டளைப்‌ பட்ட லோக த்ரயத்துக்கும்‌ நிர்வாஹகனுமாய்‌ இருக்குமென்கையாலே கீழ்ச் சொன்ன ஸக்தி தன்னாலே நித்யமாகக்‌ கல்பிக்கப்பட்ட பத்நீ பரிஜந ஸ்தாந போக்‌ய போகோபகரணங்களை உடைய ப்ரக்ருதியாலே தனக்கென்று தேட வேண்டாத படி நித்யமான போகத்தை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌. 

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-அவர்கள்புருவம் நெளிந்த இடத்தே உனக்கு கார்யம் செய்ய வேண்டும் படி வல்லபைகளாய் இருக்கிறார் பிராட்டியாரும் ஆண்டாளும் -நகச்சின் நபாராத்யதி -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி -பொறுப்பது எத்தை குற்றம் தான் உண்டோ -என்று அப் பொறை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் ஒருத்தி -ஒருத்தி சம்பத்தாய் இருக்கும் -ஒருத்தி சம்பத்துக்கு விளை பூமியாய் இருக்கும் -அவர்கள் இருவரும் அருகே இருக்க நான் இழக்க வேண்டுகிறது என் என்ன-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்ய ஸூரிகள்-ஏவ -கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை –க்ரியதாம் இதி மாம் வத –
மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திரு முலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் –ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இறே-ஸூகங்கள் இருப்பது –வேதம் வல்லார்களைக் கொண்டு என்கிறபடியே அவர்களும் புருஷகார பூதராய் இறே இருப்பது

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6–பணியாவமரர் -வேறே சிலரை பணிய சம்பாவனை இல்லாத நித்ய ஸூரிகள் -முன்பு அஸேவ்யர் காலிலே குனிந்து ஒரு நாளிலே அனுகூலித்து-அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று அனுதபித்து -பின்பு அவன் காலிலே குனிந்தவர்கள் அல்லர் –பணிவும் பண்பும் தாமேயாம்-அவர்கள் பணிவுக்கும் ஞானாதி குணங்களுக்கும் தாமே விஷயமாய் இருக்குமவர்

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-குறைவற்ற மூவுலகுக்கும் நேர்பட்ட நாயகன் -த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யான் நாத வத்தரம்-என்று ரஷ்யத்தின் அளவன்றிக்கே இருக்கிற ரக்ஷகத்வ துடிப்பு -இத்தால் நாயகன் படி சொல்லிற்று -மேல் இவர் தம் படி சொல்லுகிறது –
தன்னடிமை-நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்-தொண்டன் சடகோபன்-அவன் சேஷித்வத்துக்கு எல்லை யானால் போலே இவர் சேஷத்வத்துக்கு எல்லை யான படியும்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-நல்ல கோட்பாட்டுலகங்கள்-பாகவத சேஷத்வமே புருஷார்த்தம் என்று உபபாதித்தவாறே சகல லோகங்களும் அப்படியே கட்டளை பட்டது-மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-வ்யாப்தியும் தேவையாகி யன்றிக்கே புதுக் கணித்தது

கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்-அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின – காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே – உமர் உகந்து உகந்து -6-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் – இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக

(கொண்ட வாக்‌ வ்ருத்தியை மறப்பிக்கும்‌) கீமும்‌ கைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொள்ள வைத்தோம்‌ என்று அவன்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரிப்பிக்க வற்றான (கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும்‌ தீர) “காணுமாறருளாய்‌ என்றென்றே கலங்கி” (திருவாய்மொழி 8-1-2 “அறிவொன்றும் சங்கிப்பன்‌‘ (திருவாய்மொழி 8-1-7) நரகம் நானடைதல் அன்றும் அஞ்சுவன் (திருவாய்மொழி 8-1-9) என்று பகவதலாபத்தாலே கலங்கி பகவத் குணங்களிலும் ஸ்வரூபத்திலும்‌ அதி ஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தானத்தாலே அஞ்சின இவர்க்கு அவையும்‌ நிவ்ருத்தமாம்படி.

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2–காணுமாறு அருளாய் -அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இறே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் –
என்று என்றே -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இ றே அத்தை பற்றலாவது –கலங்கிக்-இப்படி கூப்பிட்டு ஒரு படி செல்லா நின்ற வந்த தாருண த்வனி வழியே ஹ்ருதயத்தில் பிறந்த கலக்கம் ஒருகாலைக்கு ஒரு கால் ஏறி வரா நின்றது –ஜடிலம் சீர வசனம் –

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன்
வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4—உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி-உனக்கு அசாதாரணமாய் இருப்பார் எப்போதும் உகந்த ரூபமே உனக்குத் திரு மேனியாக நினைத்து இருப்புதி என்னுதல் -உனக்கு அசாதாரணராய் இருப்பார் உகந்தத்வத்தாலே நீ உகந்து இருக்கும் வடிவு இறே உனக்கு வடிவாய் விட்டது என்னுதல் –தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் -தாம்ஸ் ததைவ பஜாம் யஹம்உன் தனக்கு அன்பரான-இவர் -உன் பக்கலிலே பிரேம பரவசராய் இருக்குமவர்கள்-உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை-அத்யாதரத்தை பண்ணி -பிரயோஜன நிரபேஷமாக கிட்ட வேண்டும் செயல்கள் –உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் –
அறிவொன்றும் சங்கிப்பன்-தன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காகும் அறிவே யாயிற்று இவர் உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் சங்கை பண்ணா நின்றேன்-வினையேன்-நான் கண்ணான் சுழலை இட்டு அதி சங்கை பண்ணின போதாக ஸ்வரூப அனுபந்தியான குணங்கள் இல்லை யாகாது இறே -அதிலே அதி சங்கை வர்த்திகைக்கு அடி என் பாபம் இறே

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்

கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-தூரஸ்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விபக்ருஷ்டமாயும் உள்ள பதார்த்தங்கள் உனக்கு பிரகாரமாயற்றால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு ஆகையால் சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகாரம் என்னுதல் – அறிவொன்றும் சங்கிப்பன்-சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –
வினையேன்-கலக்கத்தாலே அதி சங்கை பண்ணும் காட்டில் அவன் ஸ்வரூபம் இல்லை யாகாது இறே -எனக்கு இப்புத்தி பிறக்கைக்கு அடி என் பாபம் இறே -கீழில் அதி சங்கைக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு -ஆஸ்ரித பரதந்த்ரன் என்கிற ஸ்வ பாவத்தில் அதி சங்கை பண்ணினால் ஆச்ரயணத்தில் குறையால் அங்கீ கரித்திலன் என்று நினைத்து இருக்கலாம் -இதில் அவனுடைய ஸத்பாவத்திலே அதி சங்கை பண்ணுகிறது இறே -சர்வபிரகாரியாய் கொண்டு இறே அவனுடைய சத்தை — ஸ்வ வ்யதிரிக்தங்கள் பிரகாரமாய் கொண்டு இறே உண்டாவது

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9–சேஷத்வ ஞானத்துக்கு விருத்தமான சம்சாரத்தில் இருக்கில் அகப்பட்ட இந்த ஞானத்தையும் இழப்பன் என்று நான் அஞ்சா நின்றேன் -உம்மோடு மற்றும் உள்ள பதார்த்தங்களோடு வாசி அற நம்மைக் குறித்து அத்யந்த பரதந்ந்திரமான பின்பு பரமபதத்தில் இருப்போடு சம்சாரத்தில் இருப்போடு வாசி என் என்று நீ கை வாங்கி இருக்கப் புகுகிறாயோ -என்று சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன் 

2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக– அதாவது- தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி- மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5- என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க -அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-

(தலைச் சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்து (திருவாய்மொழி 5-7-10) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே” (திருவாய்மொழி 6-3-9) என்று உபாயமாக முன்னிவர்க்கு உபகரித்த தன்‌ திருவடிகளை “தாள்களை எனக்கே தலைத் தலைச்‌ சிறப்பத்‌ தந்த” (திருவாய்மொழி 8-1-10) என்று விஸத ஸ்ம்ருதி விஷயமாக்க அத்தை அநுஸந்தித்து அத்தால்‌ வந்த க்ருதஜ்ஞதைக்குப்‌ பலம்‌ ஸத்‌ருஸ ப்ரத்யுபகாரம்‌ பண்ணுகையாலே

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம்

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10–தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத்-உன் திருவடிகளை பற்றினாரில்-நான் பெற்ற பேறு பெற்றார் இல்லை என்னும் படி அடிமை கொண்ட -இன்கவி பாடும் பரமகவிகளால்-என்று பராசராதிகள் முதல் ஆழ்வார்கள் உண்டாய் இருக்க என்னைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட-தலைத் தலைச் சிறப்பத் தந்த-மிகச் சிறக்கும் படி தந்த -பூர்ணமாம் படி தந்த என்கை –பேருதவிக் -கொள்கின்ற என் தரத்தில் அன்றிக்கே தன் திறத்தில் தருகை–கைம்மாறா-பிரதியுபகாரமாக

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது
என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10–உதவிக் கைம்மாறு-பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக-என் உயிர் -நித்தியமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஞான குணகனான ஆத்மாவை கொடுத்தாலோ என்னில் -அது செய்யலாம் இறே முன்பே மயர்வற மதி நலம் அருளிக் கொடுத்து இலனாகில் –-என்ன உற்று எண்ணில்அதுவும் மற்று ஆங்கவன் தன்னது -ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5–பலரடியார் முன்பு அருளிய -அயர்வறும் அமரர்கள் இருக்க என்னுதல் -சுருதி பிரசித்தரான பராசராதிகள் இருக்க என்னுதல் -இன்கவிபாடும் பரம கவிகளான முதல் ஆழ்வார்கள் இருக்க என்னுதல் -என் பக்கலிலே விசேஷ கடாக்ஷத்தை பண்ணுவதே -முதலிகள் எல்லாம் இருக்க திருவடி பக்கலிலே விசேஷ கடாக்ஷத்தை பண்ணினால் போலே -அதாகிறது தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட யுபகாரம்-பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்-பரியங்க வித்யையில் போலே திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற யுபகாரகன் -அப்படுக்கையில் காட்டில் விரும்பி வர்த்திக்கிற தேசம் -சபரிகரனாய் -அநந்ய பிரயோஜனனாய் வர்த்திக்கிற தேசம் என்றுமாம் –

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-அதாவது உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது –7-9-10–என்று கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –இயம் சீதா மம ஸூதா சஹா தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே –பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே அதீவ விளங்கிப் பணைத்து அதீவ ராமச் சுசுபே -என்றும் அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா –ஆரண்ய-37-18–என்றும் அவளைப் பெற்று விளங்கினாப் போலே –சோதி-8-1-10- -என்று இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து கொடுத்தாப் போலே -அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து அத்யுஜ்வல்லனாய் –தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி சதசாகமாகப் பணைத்து-

உதவிக் கைமாறு என்னுயிர்‌ என்ன வுற்றெண்ணில்‌ அதுவுமற்றாங்கவன்றன்னது’ (திருவாய்மொழி 7-9-10) என்று கீழ்‌ ப்ரத்புபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி பகவதீயத் வாகார அநுஸந்தானத்தாலே நிவ்ருத்தரானவர்‌ இங்கு உபகார ஸ்ம்ருதியாலே வந்த கலக்கத்தாலே (வேந்தர்‌ தலைவன்‌ கந்யகா தாநம்‌ போலே ஆரத் தழுவி யறவிலை செய்த) “வேந்தர்‌ தலைவன்‌ சனகராசன் தன்‌ வேள்வியில்‌ கண்டாருளர்‌ ‘ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-1-2) என்கிறபடியே க்ஷத்ரியாக்‌ரேஸராய்‌ ஜ்ஞாநாதிகனான ஜநக சக்ரவர்த்தி மாஹேஸ்வரமான தநுர்பங்கம்‌ பண்ணின பெருமாளுடைய ஆண் பிள்ளைத் தனத்தைக்‌ கண்டு கலங்கி “விஷ்ணோஞஸ்ரீரநபாயிநீ”’ ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 1-17) “அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபா யதா,” (ரா) என்கிறபடியே ப்ருதக் ஸித்‌தி அநர்ஹையாய்‌ ததர்த்தமாக “ராக வத்வே அபவத்‌ ஸீதா” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-9-144) என்றவனுடைய அவதாராநுகூலமாக அவதரித்து நாச்சியாரை “இயம்‌ ஸீதா மம ஸுதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம்‌ பத்‌ரம்‌ தே பாணிம்‌ க்‌ரஹ்ணீஷ்வ பாணிநா” (ரா.பா. 73-26) என்று கந்யகா தாநமாக ஸமர்ப்பித்தாப் போலே ‘பேருதவிக்‌ கைம்மாறா தோள்களை ஆரத்‌ தழுவி என்னுயிரை அற விலை செய்தனன்‌” (திருவாய்மொழி 8-1-10) என்று ஸமர்ப்பணோந்முகரான வளவிலே தாளும்‌ தோளுமாகப்‌ பணைத்த வந்த ஆத்ம வஸ்துவை அவனுக்கு ப்ரத்யுபகாரமாக ஸமர்ப்பிக்க ஆ த்ம லாபத்தாலே தன்னதல்லாததொன்றை அதீவ விளங்கிப்‌ பணைத்து அவனும்‌ “அப்ரமேயம்‌ ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஐநகாத்மஜா” (ரா.ஆ. 37-18) என்று அவளைப்‌ பெற்று விளங்கினாப் போலே “சோதீ” (திருவாய்மொழி 8-1-10) என்றிவர்‌ பேசும்படி இவருடைய ஆத்ம லாபத்தாலே தன்னதல்லாத தொன்றைப்‌ பெற்றாப்‌ போலே அதீவ உஜ்ஜ்வலனாய்‌ “தோள்களாயிரத்தாய்‌ முடிகளாயிரத்தாய்‌ துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌ தாள்களாயிரத்தாய்‌ பேர்களாயிரத்தாய்‌” (திருவாய்மொழி 8-1-10) என்னும்படி அந்த ப்ரீதியாலே ஸதஸாகமாகப்‌ பணைத்து-

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது
என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10–உதவிக் கைம்மாறு-பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக-என் உயிர் -நித்தியமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஞான குணகனான ஆத்மாவை கொடுத்தாலோ என்னில் -அது செய்யலாம் இறே முன்பே மயர்வற மதி நலம் அருளிக் கொடுத்து இலனாகில் –-என்ன உற்று எண்ணில்அதுவும் மற்று ஆங்கவன் தன்னது -ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4- 1-2 –-வேந்தர் -இத்யாதி 
ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ )
ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர் 

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ

தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே
!–8-1-10—தோள்களை யாரைத் தழுவி-உனக்குத் தரப் புகுகிற வஸ்து என்று மிகவும் கொண்டாடி -உபகார ஸ்ம்ருதியில் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து சாவயம் போலே அணைக்கலாம் படி தடித்தது –
என்னுயிரை -விலக்ஷணமான ஆத்ம வஸ்துவை –அறவிலை செய்தனன்-இஷ்ட விநியோக அர்ஹமாம் படி அற விலை செய்து தந்தேன் –தாம் முன்பு மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே -என்று சொன்ன வார்த்தையை மறந்து உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஹர்ஷத்தாலே பிரமித்து சொல்கிறார்
சோதீ-இவர் பண்ணின ஆத்ம சமர்ப்பணத்தாலே அவனுக்கு பிறந்த உஜ்ஜ்வல்யம் –இவர் தம்மது அல்லாத ஒன்றை ஹர்ஷத்தாலே கலங்கி கொடுத்தார் -அவன் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றானாய் அத்தாலே உஜ்ஜவலன் ஆகா நின்றான் -மயர்வற மதிநலம் அருள பெற்ற இவர் கலங்க சொல்ல வேணுமோ -மயர்வற மதிநலம் அருளினான் தானே கலங்கா நின்றான்-தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !-தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! – முன்பு இழவாலே கூப்பிட்டவர் -தரித்து பிரதியுபகாரத்திலே இழிந்த படியைக் கண்டு அத்தாலே அவனுக்கு பிறந்த புஷ்கல்யத்தை பேசுகிறார் -உபகார ஸ்ம்ருதியால் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து அணைக்கலாம் படி தடித்தது போலே சதைகரூபமான வடிவும் சதசாகமாயிற்று -அவாப்த ஸமஸ்த காமனானவன் ஒரு சம்சாரியை லபித்து ஹ்ருஷ்டானானான் என்கிற இதுவும் கூடுமோ என்னில் -ஸார்வ பவ்மனான ஷத்ரியனுக்கு உயர்த்தி உண்டு என்னா அபிமதையான மஹிஷி பக்கலிலே சாபலம் இன்றிக்கே ஒழியுமோ -அவாப்த ஸமஸ்த காமத்வமும் பிராமண ஸித்தமாய் ஆஸ்ரித வாத்சல்யமும் பிராமண ஸித்தமாய் ஆனால் அப்படியே கொள்ளும் அத்தனை அன்றோ -எனக்கு ஹர்ஷத்தை தானே பிறப்பித்து -அந்த ஹர்ஷத்தைக் கண்டு அத்தாலே தான் இப்படி விஸ்திருதன் ஆவதே என்று கொண்டாடுகிறார்-தமியனேன்-அவன் ஸ்வரூபத்திலும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலும் அதி சங்கை பண்ணின போதை வெறுமையை நினைத்து சொல்கிறார்-பெரிய வப்பனே !–அவ்வதி சங்கைகளையும் போக்கி இவ்வளவு புகுர நிறுத்தின மஹா உபகாரகனே-

3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-அதாவது –ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில் பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ –அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும் திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு –துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து –நிர்பரராய் –அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே -என்று அவனோடு பொருந்தி அனுபவித்து -விஸ்லேஷ தசையிலே -அவள் –ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வயசன பரம்பர யாதி பீட்ய மானா சஹ சர ரஹீதேவ சக்ர வாகிஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —

(ஜந்ம பாசம்‌ விட்டு ஆத்‌,வாரம்‌ ஆளுமாளார்‌ என்று பரிந்து அநுரூபனோடே யமர்ந்து பிரிவில்‌ க்ருபண தசையாகத்‌ துவரும்‌ ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து) அந்த நாச்சியார்‌ பெருமாளைக்‌ கைப் பிடித்த பின்பு ஐந்ம பூமியான மிதிலையை நினையாதாப் போலே ‘பாதமடைவதன்‌ பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் விட்டு (திருவாய்மொழி 8-2-11) என்கிறபடியே இவரும்‌ திருவடிகளைக்‌ கிட்டுகையிலுண்டான ஸங்கத்தாலே புறம்புண்டான வலிய ஸங்கங்களை நிஸ் ஸேஷமாக விட்டு, “ஆத்‌வாரமநுவவ்ராஜ மங்களாந்யபி தத்‌,யுஷீ’ (ரா.௮. 14-21 என்று அவள்‌ பெருமாளுடைய அழகுக்குப்‌ பரிந்து மங்க,ளாசாஸனம்‌ பண்ணினாப் போலே “ஆளுமாளார்‌ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார் தாம்‌” (திருவாய்மொழி 8-3-3) என்று இவரும்‌ ரக்ஷண பரிகரமாய்‌ அஸாதாரணமான திவ்யாயுத ங்களும்‌ சுமையாம்படியான அவனுடைய ஸெளகுமார்யத்தைக்‌ கண்டு பரிந்து பெருமாளுடைய சவ்ர்யாதிகளைக்‌ கண்டு துல்ய ஸீலேத்யாதிப் படியே ஸ்ரீலாதி களால்‌ “அநுரூபஸ்வைநாத:”  என்கிறபடியே அவள் தனக்கு அநுரூபமான பெருமாளோடே பொருந்தினாப் போலே இவரும்‌ “திருச்சிற்றாற்றங்கரை செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி “அமர்ந்த மாயோனை முக்கணம்மானை நான்முகனை யமர்ந்தேனே” (திருவாய்மொழி 8-4-4) என்று அவனுடைய சவ்ர்யாதிகளை யநுசந்தி த்து நிர்ப்பயராய்ப்‌ பொருந்தி யநுபவித்து விஸ்லேஷ தஸையில்‌ அவள்‌ “ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா, வ்யஸந பரம்பரயாதி பீட்‌ யமாநா ஸஹ சரரஹிதேவ சக்ரவாகீ ஜநக ஸுதா க்ருபணாம்‌ தமாம்‌ ப்ரபந்நா” (ரா.ஸு.16-30) என்று நிர்க்‌ருணரு மிரங்கும்படியான தஸையை ப்ராப்தையானாப்‌ போலே இவரும்‌ “காண வாரா யென்றென்று கண்ணும்‌ வாயும்‌ துவர்ந்து” (திருவாய்மொழி 8-5-2 அவனைக்‌ காண ஆசைப்பட்டு எங்கும்‌ பார்த்துக்‌ கூப்பிடுகையாலே நீர்ப்பசை யறும்படியாக உலர்ந்து இப்படிப்பட்ட ஜநக குல ஸுந்தரியான நாச்சியாருடைய குணங்களை இவர் பக்கலிலே காண்கையாலே நிரதிசய ப்ரீதி யுக்தனாய்‌

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11–திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் –மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3—ஆளுமாளார் -உபய விபூதியிலும் பரிகைக்கு ஓர் ஆளில்லை -தனியே ஒருத்தரை ஆள வேணும் என்று இருக்கிறார் -நித்ய ஸூ ரிகள் பகவத் அனுபவத்தில் அந்நிய பரர் -சம்சாரிகள் சப்தாதி விஷய பரர்-ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்–ஆபரணமான திவ்யாயுதங்கள் -அவன் ஸுகுமார்யத்தாலே மலை எடுத்தால் போலே சுமையாய் தோற்றுகிறது இவர்க்கு -எதிரிகளுக்கு அஸ்திரமாய் -அனுபவிப்பார்க்கு ஆபரணமாய் இருக்கிறதை -ஸுகுமார்யத்தை அனுசந்தித்த இவருக்கு மலையாய் இருக்கிறது-தாம் -தம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டாவோ -எப்போதும் கை கழலா நேமியான் அன்றோ 

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-சீர்கொள் சிற்றாயன்— பருவம் நிரம்பாது இருக்கஹ் செய்தே-வீர ஸ்ரீ யாலே குறைவற்று இருக்கிறவன்
திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு — புலி நின்ற தூறு போலே பிரதிகூலருக்கு அஞ்ச வேண்டும் வூர்
எங்கள் செல் சார்வே–மஹா ராஜர் -பெரியாழ்வார் -ஸ்ரீ விதுரர் -தாம் -இங்கனம் ஒத்த பரிவர்களுக்கு -நிர்ப்பய ஸ்தானம் என்று புகும் புகல்–கீழ் இவருக்கு ஓடின பயம் நீங்கிற்று என்னுமது இயல் தழைப்பிலே தெரிந்து இருக்கிற படி கண்டதே –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-இத்தேசத்தில் பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்யமான அழகை யுடையவனை -ப்ரஹ்மாதிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை -ப்ரஹ்ம ருத்ராதிகளை பலகாலும் சொல்லுகிறது -இவனுடைய சர்வ நிர்வாஹகத்வம் தோற்றுகைக்காகவும்-நிர்வாஹயங்களில் ஒன்றால் நலிவு யுண்டாக்க கூடாது என்கைக்காகவும்
யமர்ந்தேனே-ஸர்வேச்வரத்வத்தை அனுசந்தித்து -கீழ் ஓடின பயம் தீர்ந்து -அவனைக் கிட்டப் பெற்றேன் -என்கிறார் –

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர் – கண்ணும் வாயும் துவர்ந்து -எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது- அடியேன்நாணி-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –

4-தித்திக்க உள்ளே உறைந்தது-அதாவது –மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே – உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் , ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –

(தித்திக்க உள்ளே உறைந்து) “உள்ளுந் தோறும்‌ தித்திப்பான்‌ ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான்‌” (திருவாய்மொழி 8-6-3) என்று அநுஸந்தாந தசைகள்‌ தோறும்‌ நிரதிசய போக்‌யனாய்க்‌ கொண்டு இவர்‌ திருவுள்ளத்திலே நித்ய வாஸம்‌ பண்ணி

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3—அனுசந்திக்க அனுசந்திக்க புதியனாய்க் கொண்டு ரசியா நின்றான்-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2—ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –உள்ளே உறையும்-என் மனசிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் -விரோதி செய்தது என் என்ன -அது ராக்ஷசர் பட்டது பட்டது

கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்-அதாவது – இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து – சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் – தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் – செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7- என்று வித்தராய்ப் பேசும்படி –அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-

(கண்டு கொண்டிருந்து அமாநுஷபோக மாக்கினவன்‌) “இருந்தான்‌ கண்டு கொண்டு” என்று தரித்‌ரனானவனுக்கு நிதி லாப முண்டானாப் போலே இவரைப்‌ பெற்ற ப்ரீதியாலே பார்த்துக்‌ கொண்டிருந்து “ஸமா த்‌வாதஸ தத்ராஹம்‌ ராகவஸ்ய நிவேயநே, பு ஞ்ஜாநாமாநுஷாந்‌ போகாந்‌ ஸர்வகாம ஸம்ருத்‌திநீ” (ரா.ஸு.33-17 என்று அவன்‌ விஸ்லேஷித்த தஸையிலும்‌ விருத்த கீர்த்தநம்‌ பண்ணித் தரிக்கலாம்படி அவளை அநுபவிப்பித்தாப் போலே இவரையும்‌ ‘தருந்தானருள்தானினி யானறியேன்‌” (திருவாய்மொழி 8-7-2) என்றும்‌, “மூவுலகும்‌ பொருளல்ல” (திருவாய்மொழி 8-7-3) என்றும்‌ “செவ்வாய்‌ முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன்‌ மற்றருளே” (திருவாய்மொழி 8-7-7 என்றும்‌ இவர் தாமே பேசும்படி இவரை அப்ராக்ருத போகங்களை புஜிப்பித்தவன்‌–

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2—தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே ––தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இறே இவர் நினைத்து இருப்பது –-இனி யானறியேனே-–எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் /அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே /முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3—நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாக நினைத்து இருப்பது -த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை ஆயிற்று -இவன் என் ஹிருதயத்திலே பிறந்த பின்பு அத்தையும் ஒரு பொருளாக நினைத்து இரேன் -என்று ஆளவந்தார் நிர்வாஹமாக-திருமாலை ஆண்டான் பணிக்கும் –என் ஹிருதயத்தில் வீற்று இருந்த இது ஒழிய வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செல்ல இருக்கிற ஐஸ்வர்யத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ -என்று பார்த்தால் அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்று எம்பெருமானார் நிர்வாஹம் -இதுவே பிரகரணத்துக்கு சேருவது

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே
–8-7-7–சிவந்த திருப் பவளத்தில் முறுவலோடே என்னுடைய ஹிருதயத்தில் இருந்த -அவாக்ய அநாதரா-என்று இருக்குமவன் -இவரைப் பெற்ற இது தன் பேறு என்று தோற்ற ஹ்ருஷ்டானாய் முறுவல் செய்து இருந்த படி -பூ வலரும் போது எங்கும் ஓக்க ஒரு செவ்வி பிறக்குமா போலே -திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு விக்ருதி பிறக்கும் படி யாயிற்று ஸ்மிதம் பண்ணிற்று –அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இறே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-அதாவது – அருவினை நோய் மறுவலிடாமல்- மருள் தானீதோ—8-7-1-என்றும் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -என்றும் அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்- உகப்பு செல்லா நிற்கச் செய்தே –

(மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அருவினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேன்‌ என்றதின்‌ பெருமையைக்‌ காட்ட) “மருள் தானீதோ” (திருவாய்மொழி 8-7-3) “பின்னை யார்க்கவன்தன்றைக்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 8-7-6) “அருள்தானினி யானறியேன்‌‘ (திருவாய்மொழி 8-7-3) என்கிற உகப்புச்‌ செல்லா நிற்கச்‌ செய்தே

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3—-அருள் தான் இனி யான் அறியேன்-என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்-அவன் என்னுள்-இருள் தானற வீற்றிருந்தான்--அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய் -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –மருள் தானீதோ ––சர்வேஸ்வரன் ஒரு சம்சாரியைப் பெற்று ஹ்ருஷ்டனானான் என்கிற இது கூடுவது ஓன்று அன்று -நான் பிரமித்தேனோ –-மாய மயக்கு மயக்கே-தன் ஆச்சர்யமான ப்ரம சாதனங்களால் ப்ரமிப்பித்தானோ -அநாதி காலம் பிரக்ருதியைக் காட்டி அறிவு கெடுத்தான் -இப்போது தன் வ்யாமோஹத்தை காட்டி அறிவு கெடா நின்றான் –

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6—பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்-அவன் பின்னை யாருக்கு தன்னைக் கொடுக்கும் -இப் பொகடு சரக்கை கொள்வார் இல்லை என்று ஷேபம் -கொள்வார் இல்லாத வஸ்து இருக்கிற படியை மேலே அருளிச் செய்கிறார்-கரு மாணிக்கக் குன்றத்துத் -ஆச்சர்யத்துக்கு திருஷ்டாந்தம் –-தாமரை போல்-அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம் –
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி இருக்கிற திரு மார்வு-கால் -அச்சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்-கண் -திருவடிகளிலே விழுந்தாரை குளிர நோக்கும் திருக் கண்கள்-கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை-செவ்வாய் -இந்த சொல்லுச் சொல்லும் திருவதரம்-யுந்தியானே–அவர்களுக்கு அனுபாவ்யமான திரு உந்தி -உந்தி மேலதன்றோ-என்னக் கடவது இறே-

மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-அதாவது-சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் – வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் – அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்–2-பொரு மா நீள் படையிலே –1-10- சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –-3-அம் தாமத்து அன்பிலே –2-5- அல்லாவி உள் கலந்த -என்றும் – என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே
-மூன்று தத்துக்கு இவர் பிழைத்த அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி – இனி இவர் தாம் அகலுகிறது –வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே – இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –

சிறியேன்‌” (திருவாய்-8-7-8)என்று தம்முடைய சிறுமையை அநுஸந்தி க்க அவ்வளவில்‌ வளவேழுலகில்‌ “களவேழ்‌ வெண்ணெய்‌ தொடுவுண்ட கள்வா என்பன்‌ அருவினையேன்‌’ (திருவாய்மொழி 1-5-1), “வணங்கினால்‌ உன்‌ பெருமை மாசூணாதோ மாயோனே (திருவாய்மொழி 1-5-2 என்றும்‌, “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ இதனில்‌ மிக்கோர்‌ அயர்வுண்டே” (திருவாய்மொழி 1-5-7) என்றும்‌, “சிந்தையுள்‌ வைப்பன்‌ சொல்லுவன்‌ பாவியேன்‌” (திருவாய்மொழி 1-7-1) என்றும்‌ இப்படி மும்மறுவலிட்ட அயோக்‌யதாநுஸந்தாந வ்யாதிக்குத்‌ தப்பின இவர்‌ மீண்டும்‌ மறுவலிட்டு “சிறியேன்‌” (திருவாய்மொழி 8-7-8) என்று இவர்‌ அகலில்‌ செய்வதென்‌ என்று கலங்கி,-இவர்‌ இப்படி அகலுகிறது வந்தேறியான அசித் ஸம்பந்தத்தை யிட்டு இது நமக்கநர்ஹமென்றிறே இதினுடைய யதா,வஸ்தித வேஷத்தைக்‌ கண்டால்‌ அகல வொண்ணாதே என்று

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8––அத்யல்பனான என்னுடைய ஹ்ருதயத்திலே-சம்சாரிகள் நித்ய சித்தர் கோடியிலே யாம் படி இறே தம்மை நினைத்து இருப்பது –

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-இவர் இப்போது அருவினையேன் என்கிறது -பகவத் ப்ராவண்யத்தை-இப்போது பகவத் விஷயத்தை கிட்டுகை அநிஷ்டம் ஆகையாலே கடவது இறே-அநிஷ்டாவஹம் இறே பாவம் –முதல் திருவாய் மொழியில் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமான மேன்மையை தூஷித்தேன்-பத்துடை அடியவரில் யசோதைப் பிராட்டிக்கு அனுபாவ்யமான நீர்மையை தூஷித்தேன்-அஞ்சிறைய மட நாரையில் பிராட்டிமார் பாசுரத்தைச் சொன்னேன்-நினைந்து -மானசம் -நைந்து – காயிகம் -என்பன் -வாசிகம் –

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-மாசூணாதோ-தங்களோடு -உப கரணங்களோடு வாசியற உனக்கு போக உபகரணமாம் படி இருக்கும் நித்ய ஸூ ரிகளுடைய அனுகூல பிரவ்ருத்திகளை-கர்மம் -அத்தால் வந்த அசித் சம்சர்க்கம் -அத்தால் வந்த அஹங்காராதிகள்-இவற்றை யுடைய ப்ரஹ்மாதிகள் பண்ணப் புக்கால் உன் பெருமை மழுங்காதோ-மாயோனே-ப்ரஹ்மாதிகளையும் சூத்ர மனுஷ்யர்களுடைய ஸ்தானத்திலே யாக்க வல்ல உன்னுடைய ஆச்சர்யமான வை லஷண்யம் இருந்த படி என்-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-சேஷ பூதனாய் வைத்து காண வேணும் என்று அத்தலைக்கு அவித்யகரமாம் படி நான்-அலற்றா நின்றேன் -இதில் விஞ்சிற்று ஒரு அறிவு கேடு உண்டோ –

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7—சிந்தையுள் வைப்பன்–விஷயாந்தர ப்ரவணமான நெஞ்சிலே வைப்பன்-நெஞ்சிலே நினைத்து ரகஸ்ய பிராயச் சித்தம் பண்ணி விடும் அளவன்றிக்கே-சொல்லுவன்–இவன் பேசும் அளவேயோஇவ்விஷயம் என்று கை விடும் படி பிறர் கேட்க்கச் சொல்லா நின்றேன்-பாவியேன்--விலக்ஷண போக்யமான இவ் விஷயத்தை அழிக்கைக்கு நான் ஒரு பாப கர்மா உண்டாவதே-தமோ அபி பூதியாலே அகத்திலே அக்னி ப்ரஷே பத்தைப் பண்ணி சத்வம் தலை எடுத்த வாறே அநுதபிக்குமா போலே பாவியேன் என்கிறார் –-நீர் இங்கனே சொல்லுவான் என் -பகவத் விஷயத்தை நினைக்கையும் சொல்லுகையும் பாப பலமோ என்னில் –-புரோடாசத்தை நாய் தீண்டினால் போலே வி லக்ஷணருடைய பாக்யத்தை அளிக்கை பாப பலம் அன்றோ

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–ஆராவமுதமாய்- நிரதிசய போக்யனாய் வைத்து -அசன்னேவ -என்கிற ஆத்மாவோடு வந்து கலந்தான் –-தன்னையும் அறிந்திலேன் -என்னையும் அறிந்திலேன் –-யல்லாவி – அசித்தில் காட்டில் தம்மைக் குறைய நினைத்த படி -அசித்துக்கு இழவு இல்லை –சேதனனாய் இருந்து வைத்து ஞான பலம் இல்லாமையால் அசித்துக்கு அவ்வருகாக நினைத்து இருக்கிறார்-யுள் கலந்த-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற ஸூ ரிகள் அளவில் கலக்குமா போலே தான் கலந்தானோ –-என்னை ஆராவமுதமாக நினைத்து என் அளவாக தன்னை நினைத்துக் கிடீர் கலந்தது-

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8–தன்னுடைய உத்கர்ஷத்துக்கு முடிவு இல்லாதோபாதி உஎன்னுடைய நிகர்ஷத்துக்கும் முடிவு இன்றிக்கே இருக்க அத்தைப் பாராதே அவ்விஞ்ஞாதவாய் என்னோடே கலந்தவனை–வாங்மனசங்களுக்கு அவிஷயமான வைலக்ஷண்யத்தை உடையனாய் வைத்து என்னோடே கலந்த இம் மஹா குணம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார் –

அது மறுவல் இடாதபடியாக – அதாவது – நமக்கு கௌஸ்துபம் போலவும் ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் – அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று – சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –யானும் தானாய் ஒழிந்தான்-
8-8-4 -என்றும் –தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும் நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க

மக்கு ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி, தேஜஸ்கரமாய்‌ ஸ்ரீஸ்தநம்‌ போலே போ க்‌,யமாய்‌ அப்ராக்ருதாதிகளைப் போலே(?) அப்ருதக் ஸித்‌தமாய்‌ அநந்யார்ஹ ஸேஷமாய்க்‌ காணும்‌ உம்முடைய ஆத்ம வஸ்து இருப்பது என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்க ( தேஹாதிகளில்‌ பரமாய்‌) அவ்வாத்ம வஸ்துவை “யானும்‌ தானாய்‌ ஒழிந்தானை” (திருவாய்மொழி 8-8-4 என்கிறபடியே அவனுடைய அபிமாநாந்தர்பூ தமாம்படி அப்ருதக் ஸித்‌த,விஸேஷணமாய்‌ “தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அமுதுமாகித்‌ தித்தித்து” (திருவாய்மொழி 8-8-4) என்னும்படி ஆநந்த ரூபமாகையாலே

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் -அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் -தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-
யானும் தானாய் ஒழிந்தானை-கீழ் சொன்ன அநந்யார்ஹ சேஷத்வத்தில் ப்ரீதியாலே அனுபாஷிக்கிறார்-தேனும் பாலும் கன்னலும்-அமுதுமாகித் தித்தித்து -சர்வ ரஸ-என்று சேதனுக்கு அவன் இனிதாய் இருக்குமா போலே அவனுக்கும் இவன் போக்யனாய் இருக்கை –அவனுக்கு போக்யம் என்னும் ஆகாரத்தாலே இ றே ஸ்வ ஸ்வரூபம் இவனுக்கு இனிதாவது-என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற வொன்றை யுணர்ந்தேனே-என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமான வி லக்ஷணமான ஆத்மாவை தனக்கு சரீரமாக யுடையவனை அறியப் பெற்றேன் –நின்ற ஓன்று -என்கிற ஆத்ம ஸ்வரூப வாசியான சப்தம் -ஆஸ்ரயமான பிரகாரி பர்யந்த அபிதானம் பண்ணுகிறது -ஸ்வ நிஷ்டம் அல்லாமையாலே பகவத் பர்யந்தமாய் இறே இருப்பது -ஆத்மாவினுடைய போக்யத்தை யாகில் சொல்லுகிறது -காரணத்வம் சொல்லுகிறது என் என்னில் –விமுகரான அவர்களை கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டித்து விட்டான் –
ஐஸ்வர்ய காமரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுத்து அதிகாரங்களை நடத்திக் கொடுத்தான் -என்னளவில் இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹமாய் போக்யமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் என்கிறார் 

6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –-அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் – நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -என்றும் – அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -என்றும் – அன்று மற்றோர் உபாயம் என் -என்றும் – யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –
அவ்வளவும் அன்றிக்கே – மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு
– என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்–இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே சபரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும் நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று – இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-

அவனுக்கு நிரதிசய போ க்‌.யமாய்‌ “சென்று சென்று பரம்பரமாய்‌” (திருவாய்மொழி 8-8-5) என்கிறபடியே தேஹ இந்த்‌,ரியாதி, விலக்ஷணமாய்‌ (நின்று நினைக்கில்‌ லஷ்மீ துல்யமாய்‌) “நினையும்‌ நீர்மையதன்று இவட்கது நின்று நினைக்கப்‌ புக்கால்‌” (திருவாய்மொழி 8-9-5) “அருமாயன் பேரன்றிப்‌ பேச்சிலள்‌” (திருவாய்மொழி 8-9-1) “அன்றி மற்றோருபாயமென்‌” (திருவாய்மொழி 8-9-10) என்று யதா, நிரூபணம்‌ பண்ணில்‌ பிராட்டிமாரோபாதி அநந்யார்ஹமாய்‌ அவ்வளவில்‌ பர்யவஸியாதே (அவர்க்கே குடிகளாய்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌) “மாகாயாம்‌ பூக்கொள்‌ மேனி நான்கு தோள்‌ பொன்னாழிக்கை யென்னம்மான்‌ நீக்கமில்லா அடியார் தம்‌ அடியாரடியாரடியார்‌ எங்கோக்கள்‌ அவர்க்கே குடிகளாய்ச்‌ செல்லும்‌ நல்லகோட்பாடே ஊழிதோறாழி வாய்க்க தமியேற்கு”  (திருவாய்மொழி 8-10-10) என்று விலக்ஷண விக்‌ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுக்குப்‌ பிரியாவடிமை செய்கிற பா கவதர்களுடைய ஸேஷத்வத்தின்‌ எல்லையிலே நிற்கிறவர்களே எனக்கு ஸேஷிகள்‌, என்னோடு ஸம்பந்தமுடையாரும்‌ நானும்‌ அவர்களுக்கு க்ரய விக்ரஹார்ஹமாம்படியான பாரதந்த்ர்யம்‌ கால தத்த்வம்‌ உள்ளதனையும்‌ எனக்கொருவனுக்குமே ஸித்‌திக்க வேணுமென்று இப் பாரதந்த்ர்ய காஷ்டை யான ததீய பாரதந்த்ர்யமே ஸ்வரூபம்‌ என்றநுஸந்தித்தவர்‌

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5—பகவத் பிரசாதத்தாலே நான் அறிந்த இவ்வாத்ம வஸ்து ஒருவருக்கும் அறியப் போகிறது அன்று -அது அறிந்தாலும் சாஷாத் கரிக்கப் போகிறது அன்று -என்கிறார் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-நின்று நினைக்கப் புக்கால்—-நினையும் நீர்மையதன்றுஇவட்கிது-உபக்ரமித்து விடுகை அன்றிக்கே காலம் எல்லாம் ஆராயப் புக்காலும் இவளுக்கு பிறந்த அழகுகள் நினைக்கப் போகாது –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை பரிச்சேதிக்கிலும் இவள் படி பரிச்சேதிக்க நிலம் அன்று -இவை எல்லா வற்றாலும் நீ பரிச்சேதித்த அம்சம் ஏது என்ன -அப்பன் திருவருள் மூழ்கினளே-கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-பர வ்யூஹ விபவங்களிலே திரு நாமங்களை சொல்லுகிறிலள்–அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–அவர்களோடு ஓக்க தானும் அறியாதாளாய் -தன் வார்த்தையை விசுவசிக்கைக்காக சாதித்து -இதுக்கு என் செய்வேன் -என்கிறாள் -உள்வாய் ப்ரீதிக்கு போக்கு விட்டுச் சொல்கிறாள் –

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-வேறு மற்று உபாயம் உண்டோ -இவள் அழகியதாய் குளிர்ந்து இருக்கிற திருத் துழாய் நாறுகைக்கு -ராஜ புத்ரனை அணையாதார்க்கு மாளிகைச் சாந்து நாறுமோ -என்னுடம்பு திருத் துழாய் நாறா நின்றதோ -ஸ்வாபதேசத்தில் –அம் தண் துழாய் கமழ்தல்-என்கிறது அங்கீ கார ஸூசகமாய் இருக்கிறது –

வாய்க்க  தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே-8-10-10-அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலம் ஆக வேணும் என்கிறார் –-சதிரே வாய்க்க -இந்த நிரதிசய புருஷார்த்தம் -என்றும் ஓக்க வாய்க்க வேணும் –-தமியேற்கே–பூத காலத்திலும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானை தேடித் பிடிக்க வேண்டும்படி யாகையாலே வர்த்தமான காலத்திலே தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை –கீழே நங்கட்கே-என்றார் -கேசவன் தமரர்க்கு பின்பு தனியர் அல்லாமையாலே தம்மைப் பற்றினாரை கூட்டிக் கொண்டு –இங்கு –தமியேற்கே-என்கிறது தமக்கு சம்சாரிகளில் உபமானவர் இல்லாமையால் –

7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல் மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே குறிக் கொண்மின் உள்ளத்து என்று பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில்–அதாவது தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் –இரு கரையர் -ஆகாதபடி-(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-) திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ -வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் -இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித்தான நகரை உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —

(ஸ்வ ஸாத ந ஸாத்‌ யஸ்தர்‌ இருகரையராகாமல்‌) தம்முடைய ஸாதந ஸாத்‌யங்களே தங்களுக்கும்‌ என்றிருக்கிறவர்கள்‌ தத்‌ விஷயத்திலும்‌ ததீயவிஷயத்திலுமாய்‌ ப்ராப்ய மொன்றும்‌ ப்ராபக மொன்றுமாய்‌ இருகரையராகாதபடி (மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக்கொண்மின்‌ உள்ளத்தென்று) “கோவிந்தன்‌ மண்ணும்‌ விண்ணும்‌ அளந்த வொண்டாமரையை மண்ணவர்தாம்‌ தொழ வானவர்தாம்‌ வந்து நண்ணு திருக்கடித்தான நகரை உள்ளத்துக்‌ கொண்மின்‌ இடர்கெட” (திருவாய்மொழி 8-6-7) என்று ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ ஸுலப மான திருவடிகளை உபய விபூதியிலுள்ளாரும்‌ வந்தனுபவிக்கும்படியான திருக்கடித்தான நகரை உங்கள்‌ ஸமஸ்த துக்கங்களும்‌ போம்படி நெஞ்சாலே நினையுங்கோளென்று கீழ்ப்பத்திலே ப்ராப்யமாக உபதேஸித்த அர்ச்சாவதார பூமியே துக்க,நிவர்த்தகமுமென்கையாலே ப்ராப்யமே ப்ராபகமென்று ப்ராப்யமொன்றிலுமே அவர்களை தத் பரராக்குகிறார்‌ எட்டாம்‌ பத்தில் -என்கிறார் –

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே
-8-6-7—உங்கள் ஸமஸ்த துக்கங்களும் போம்படியாகத் திருக் கடித் தானத்தை நெஞ்சால் நினையுங்கோள்-கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த -சர்வ ஸூலபனானவனுடைய -சகல லோகங்களையும் அளந்த –-ஒண் தாமரை-ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று அளந்தது-மண்ணவர் தாம் தொழ -ஸுலபயத்தையும் போக்யதையும் அறிய மாட்டாத அஞ்ஞர் தொழ-தாம் வந்து-பரமபதம் நித்ய ஸூ ரிகளுக்கே யாய் இருக்குமா போலே -உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கேயாய் இருக்கை -அந்தர்க்கு வைத்த இறையிலியில் கண்ணுடையார்க்குப் பிராப்தி இல்லை இறே-வானவர் நண்ணு திருக் கடித் தான நகரே— அசங்குசித ஞானராய் நித்ய அனுபவம் பண்ணுமவர்கள் தாம் வந்து நண்ணுகிற தேசம் -நமக்கு அவ்வருகானவன் தாழ்வுக்கு எல்லையான சம்சாரிகள் தொழும் படி நிற்கிற சீலம் இருந்த படி என்-என்று இத்தை அனுபவிக்கைக்கு இங்கே வந்து ஆஸ்ரயிக்கும் திருக் கடித்தான நகரை –கொண்மின் இடர் கெட உள்ளத்து -இங்குள்ளார் அங்கே போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கே வருவது சீல குணம் அனுபவிக்க –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-ஏழாம்  பகுதி-(225) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 3, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

ஏழாம் பத்தால்-உபாய க்ருத்யதுக்கு உபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –யதா ஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –சாங்க பிரபதனம் பண்ணின -தம்மை-விஷயங்களிலே மூட்டி –தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –விஷண்ணராய்க் கூப்பிட்டு –தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க –அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி பழைய வார்த்தியே தலை எடுத்து –அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே-உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –அவனும் நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும் என்று அருளிச் செய்ய –வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –அதுக்கு பிரதி உபகாரம் தேடிக் காணாமையாலே –இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —

இப்படி ப்ரபந்நரான இவர்களுடைய அநிஷ்ட நிவருத்தி பூர்வகமாக இஷ்ட ப்ராப்தியை பண்ணுகைக்கீடான ஆஸ்சர்யமான ஜ்ஞாந சக்த்யாதி, யுக்தனாகையாலே யதாஜ்ஞாநம்‌ பிறந்தவர்களுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதான பரமபதத்தைத்‌ தானே உபாயமாய்க்‌ கொண்டு கொடுக்குமிடத்தில்‌ சத்ருவுக்கும்‌ திர்யக் ஸ்த்தாவரங்களுக்கு முட்படக்‌ கொடுக்க வல்ல ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரன்‌ தன்‌ திருவடிகளிலே ஸாங்க,ப்ரபதநம்‌ பண்ணின தம்மை விஷயாந்தரங்களிலே மூட்டி நஸிப்பிக்கக்‌ கடவதான இந்த்‌ரியங்கள்‌ நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக்‌ கண்டு விஷண்ணராய்க்‌ கூப்பிட்டு தம்‌ தமை தாம்‌ பேச மாட்டாதே அபஹ்ருத சித்தராக அவன்‌ தன்‌ விஜயத்தைக்‌ காட்டித் தரிப்பிக்க அந்த தரிப்பும்‌ ஸம்ஸாரிகளிழவை நினைத்துச்‌ சுவறிப்‌ பழைய வார்த்தியே தலை யெடுத்து அநுபாவ்ய விஷயம்‌ ஸ்ம்ருதி விஷயமாய்‌ ஒருமுகஞ்செய்து நலிய நோவு பட்டு இப்படி க்லேஸப்படுகிற இவர்‌ உபாய பூதனாயிருக்கிற உனக்கு ஜ்ஞாந சக்திகளில்‌ குறைவற்றிருக்க எனக்கு ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களிலும்‌ ஆர்த்தியிலும்‌ குறைவற்றிருக்க என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக் கடியென்‌ என்று அவனைக்‌ கேட்க அவனும்‌ நமக்கும்‌ நம்மடியார்க்கும்‌ திருவாய்மொழி பாடுகைக்கு வைத்தோங்காணும்‌ என்று தான்‌ இவரை வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய முதலாழ்வார்கள்‌ வ்யாஸாதிகள்‌ கவி பாடுகைக்கு உண்டாயிருக்க நம்மைக்‌ கொண்டு கவிபாடுவித்துக்‌ கொள்ளுவதே என்று அவன்‌ பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்குப்‌ ப்ரத்யுபகாரம்‌ தேடிக்‌ தாணாமையாலே திருவாறன்விளையிலே அவன்‌ பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்தருளி யிருக்கிற விருப்பிலே திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து அங்கே தம்முடைய திருவுள்ளம்‌ ப்ரவணமாகையாலே பரமபதத்திலிருப்பை உபேக்ஷிக்கும்படியான ப்ரகாரத்தை உடையரான இவர்‌ கீழ்‌ தம்முடைய உபாயத்தில்‌ நிஷ்டையை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு அந்த திருவாறன்விளையில்‌ நின்றருளினவனுடைய திருவடிகளே உபாயம்‌ அத்தேஸமே ப்ராப்யமென்று தாமறுதியிட்ட ப்ராப்ய ப்ராபகங்களினுடைய முடிவைத்‌ தம்முடைய திருவுள்ளத்தில்‌ உகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.

(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்-மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே–அதாவது–எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-1- என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் – பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்–ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் – மாய வாமனனே -7-8-7–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –-உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே

(எண்ணிலாக்‌ கு,ணங்கள்‌ இத்யாதி,) ஆஸ்சர்ய யோக,த்தாலே “எண்ணிலாப்‌ பெரு மாயனே’ (திருவாய்மொழி 7-1-1 “குணங்கள்‌ கொண்ட மூர்த்தியோர்‌ மூவராய்ப்‌ படைத்தளித்துக்‌ கெடுக்கும்‌” (திருவாய்மொழி 7-1-11 “பால துன்பங்கள்‌ இன்பங்கள்‌ படைத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-7) “ஊழிதோறாழி உருவும்‌ பேரும்‌ செய்கையும்‌ வேறவன்‌ வையங்காக்கும்‌” (திருவாய்மொழி 7-3-11) “மாயா வாமனனே’ (திருவாய்மொழி 8-8-1 “உள்ளப் பல் யோகு செய்தி” (திருவாய்மொழி 7-8-4) என்று எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையனாய்‌ ஸத்வாதி குண ப்ரசுரமான மூர்த்திகளைக்‌ கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணுமவனாய்‌ இடமறிந்து ஸுக,துக்கங்களை ஸங்கல்பிக்குமவனாய்‌ ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாகக்‌ கல்பந்தோறும்‌ திருமேனியும்‌ சேஷ்டிதங்களும்‌ வேறு படக்‌ கொள்ளுமவனுமாய்‌ ஆஸ்சர்ய சேஷ்டிதங்களை உடையவனுமாய்‌ ஸர்வருடையவும்‌ ரக்ஷ்ணோப சிந்தை பண்ணுமவனுமாய்‌ இப்படி உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆஸ்சர்ய சக்தி யோகத்தை உடையவனாகையாலே

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-எண்ணிறந்த காரியங்களை விளைக்க வற்றாய் துஸ்தரமான பிரக்ருதியை யுடையவனே -நீ வேண்டாதாரை நலிகைக்கு ப்ரக்ருதியை உபகரணமாக யுடையவன் என்கை –மமமாயா துரத்யயாஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று பிள்ளான் பணிக்கும் -என்னுடைய நோய்க்கும் உன்னுடைய குணங்களுக்கும் என்ன சேர்த்தி யுண்டு

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-சத்வாதி குண அனுரூபமான வடிவை யுடைய மூவராய் – படைத்து அளித்துக் கெடுக்கும்-சதுரமிக்க அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து ஸ்வேன ரூபேண நின்று பரிபாலனம் பண்ணி -ருத்ராந்தர்யாமியாய் சம்ஹரித்து செய்து அருளுகிற
அப்-புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-ஜகத் காரணத்தயா பிரசித்தமான புண்டரீகத்தோடே கூடின திரு நாபியை யுடைய ஏகார்ணவ சாயியான சர்வ காரணனுக்கே

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-இடம் அறிந்து ஸூ க துக்கங்களை படைத்தவனே –பாலாவாக -ஸ்த்தாநே ஸ்த்தாநே யாக -பிரிந்தார் எல்லாரும் அனுபவிக்கும் இத்தை இவள் ஒருத்தியும் அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ -அங்கனம் இன்றிக்கே ஆஸ்ரிதர் வாழ்வும் அநாஸ்ரிதர் கெடும்படியாகவும் அன்றோ பண்ணி வைத்தது –தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்யுமவன் அன்றோ –பண்டு கட்டின மரியாதையும் இல்லையோ இவளுக்கு –

ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-யுகம் தோறும் ரக்ஷணத்துக்கு ஈடான ரூப நாம சேஷ்டிதங்களை வெவ்வேறாக யுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்கும் –பாலினீர்மை செம்பொனீர்மை-என்கிறபடியே ருஸ்யனுகுணமாக ரூப நாமாதிகளை யுடையனாயிற்று ஜகத் ரக்ஷணம் பண்ணுவது –

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-மாயா!-இத் திருவாய் மொழிக்கு நிதானமான ஆச்சர்யங்களை யுடையனாய் இருக்கும் இருப்பை அனுசந்தித்து சங்க்ரஹேண சொல்லுகிறது –
வாமனனே! –ஆச்சர்யங்களுக்கு எல்லாம் உதாஹரணம் -அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே அர்த்தியாய் மஹாபலி யஜ்ஜ்வாடத்தில் சென்று சொல்லிற்று எல்லாம் அவன் செய்யும் படி வார்த்தை சொன்ன ஆச்சர்யங்களை நினைத்து வாமனனே என்கிறார் –மது சூதா! நீ அருளாய் ஆச்சர்யங்களுக்கு ஸ்ரீ வாமன ப்ராதுர்ப்பாவம் போலே யாயிற்று விரோதி நிரசனத்துக்கு மதுசூநத்வம்-மதுவாகிற அரசனை நிரசித்தால் போலே என் ஸம்சயத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4–திரு உள்ளத்திலே பல ரக்ஷண சிந்தை பண்ணா நிற்றி –சேதன பேதத்தோபாதியும் போரும் இறே ரக்ஷண உபாய சிந்தைகளில் விதா பேதமும்

2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்-புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி--அதாவது–தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்-ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து -பின்னை நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று – அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை – புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –-சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும் ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும் பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –

(தெளிவுற்றவர்க்கு ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம்‌ புற்பா வெறும்பு பகைவனுக்குமாக்க வல்ல ஸர்வஸக்தி)தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்‌ கதிசெய்யும்‌ தெளிவுற்ற கண்ணன்‌” (திருவாய்மொழி 7-5-1 “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌” (திருவாய்மொழி 7-6-10) என்று ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ தானேயென்று அத்‌யவஸித்துப்‌ பின்பு நாட்டார்‌ செயல்‌ கண்டாதல்‌ உக்த்யாபாஸங்கள்‌ கண்டாதல்‌ பிற்காலியாதே நின்றவர்களுக்கு நிரதிஸயாநந்தமாய்‌ ஒருவராலும்‌ ஸ்வ யத்நத்தாலே ப்ராபிக்க வொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத்‌ தன்னருளாலே கொடுக்கைக்குத்‌ தான்‌ உபாயமாமிடத்தில்‌ “புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌ ‘ (திருவாய்மொழி 7-5-1) என்றும்‌ “நாட்டை அளித்துய்யச்‌ செய்து” (திருவாய்மொழி 7-5-2 என்றும்‌ “சேட்பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசுபாலன்‌ திருவடி தாட்பாலடைந்த‘ (திருவாய்மொழி 7-5-3) என்றும்‌ முதலிலே ஜ்ஞாந லேஸமில்லாத திர்யக்‌ ஸ்தாவரங்களுக்கும்‌ ப்ராதி கூல்யத்திலே முதிர நின்ற ஸத்ருவுக்கும்‌ கொடுக்க வல்லனாம்படி ஸர்வ ஸக்தி யுக்தனான ஸர்வேஸ்வரன்‌

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத்
தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அத்யவசித்து -பின்னை யுக்தி ஆபாச வசனங்களால் அதுக்கு குஅநந்ய பிரயோஜனராய் நிலை நின்றவர்கள் என்னுதல் –-இன்பக்கதி செய்யும்-ஸூ கரூபமான ப்ராப்யத்தைக் கொடுக்கும் –ஏஷ ஹ்யேவ ஆனந்தாதி –-தெளிவுற்ற கண்ணனைத் –நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத பரம பதத்தை-தன்னாலே பெற்றேன் என்று துணிந்து இருக்கிற நமக்கு அருளும் –

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-தேச வாசம் தானே போக ரூபமாய் இருக்கை -ராம குணங்களையே அனுபவித்து இருக்கும் என்னுதல்-சராசரம் முற்றவும்-ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தங்களையும் –-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – –அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் –ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக் கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2—போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து-உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை –சந்தமேனம்-என்னும் படி பண்ணி

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .
–7-5-3-சிசுபாலன் -சாஸ்திரங்களில் சொன்ன அதிகாரி களில் ஒருத்தன் அல்லன் -விஷய வை லக்ஷண்யத்தாலே பெற்றவன் -வைது நின்னை வல்லவா பழித்தார்க்கும்- பேருளான் பெருமை பேசி ஏசினார்-தன்மை அறிவாரை அறிந்துமே .–-கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?–ஈஸ்வரனுடைய ஸ்வ பாவத்தை அறிந்தவர்கள் பக்கலிலே செவி தாழ்த்து வைத்தும் -இஸ் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தும் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று –ப்ராதிகூல்யமே யாத்ரையாய் இருந்தவனுக்கு -தன்னால் அல்லது செல்லாமை யுடையார் பெரும் பேற்றைக் கொடுத்தான் என்றது ஆயிற்று–

பாதமகலகில்லா தம்மை–அதாவது–அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –-அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-

(பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுன பாதம்‌ அகலகில்லேனிறையும்‌” (திருவாய்மொழி 6-10-9)என்று தன் திருவடிகளை க்ஷ்ண காலம்‌ அகல ஸக்தரன்றியிலே “அடிக்கீழமர்ந்து (திருவாய்மொழி 6-10-10) என்று ஸரணம்‌ புகுந்த தம்மை –

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்-உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10–உன் திருவடிகளை அநந்ய சரண்யனான அடியேன் அநந்ய ப்ரயோஜனாயக் கொண்டு-பெரிய பிராட்டியார் புருஷகாரமாக சரணம் புகுந்தேன் – இப்போதே நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தயகனாய் உன் திருவடிகளில் சர்வ காலமும் சர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெற வேணும் என்கிறார் –

3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு–அதாவது–அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு- நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு-அதாவது- நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் – விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் – முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும் கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் – கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கு அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில் ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு – (பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே -ஸ்ரீ வசன பூஷணம் )

(அகற்றுமவற்றின்‌ நடுவே இருத்தக்‌ கண்டு) “அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை (திருவாய்மொழி 5-7-8) என்று பகவத்‌ விஷயத்தைக்‌ கிட்டாத படி அகற்றவற்றான இந்த்‌ரியங்களின்‌ நடுவே வைக்கக்‌ கண்டு (நலிவான்‌ சுமடு தந்தாய்‌ ஓவென்று சாதன பலமான ஆக்ரஸத்தோடே பழியிட்டு )நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -(திருவாய் -7-1-1)அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் (திருவாய் -7-1-10) விண்ணுளார் பெருமானேயோ (திருவாய் -7-1-5) முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியேயோ (திருவாய் -7-1-10) என்று வ்யவதான விளம்பம் இல்லாத உபாயத்தைக் கீழே பரிக்ரஹிக்கையாலே – பிரதிகூலமான ஸம்ஸாரத்திலே பொருந்தாமையோடே தம் தலையிலே உள்ளத்தையும் அவன் தலையிலே ஏறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்தவராகையாலே –சாகாம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முஸ் சரண்யம் சரணம் ச ராமம் -(யுத்த -59-44)என்கிறபடியே இவரும் அவன் பரமபதத்தில் இருப்பும் குலைந்து வந்து விஷயீ கரிக்கும்படி பெரிய ஆக்ரோஸத்தோடே அவன் மேலே பழியாம்படி கூப்பிட்டு

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8—அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன்-

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1–நலிவான் -அவனைக் கிட்டாமைக்கு மேல்பட தமக்கு நலிவு இல்லை என்று இருக்கிறார்-இன்னம் -இந்திரியங்களுக்கு அலைந்து உன்னைத் சரணம் புக்க பின்பும்-எண்ணுகின்றாய்-என்னை நித்ய சம்சாரியாக்கி அகற்றும் விரகு எண்ணுகிறான் என்று இருக்கிறார்

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்

வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-சுமடு தந்தாய்-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இ றே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கிற படியை அனுசந்தித்து நான் அதுக்கு அசலாவதே என்று கூப்பிடுகிறார் –ஹா ராம ஹா லஷ்மணா என்னுமா போலே உறவு முறையரான நித்ய ஸூரிகளையும் அவனையும் நினைத்து தன் ஆற்றாமையால் அங்கு சென்று கேட்க்கும் படி கூப்பிடுகிறார்-

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இறே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்–முன் கடலைக் கடைந்து ஆஸ்ரிதர் அபேக்ஷை முடிக்க ஷமனான நாதனேயோ -கடலைக் கடைந்து அம்ருதத்தை வாங்கி தேவர்களுக்கு கொடுத்து அசுர வர்க்கங்களை பறக்க அடித்தால் போலே இந்திர வஸ்யத்தையையும் பாற அடித்து தர வல்லையே –-

4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-(திரு விருத்தத்தில்–62-(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது )-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )அதாவது-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-அதாவது–இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –சிந்திக்கும் திசைக்கும் -இத்யாதிப் படியே திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை- பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –என் செய்திட்டாய் –என் சிந்தித்தாய் –என் செய்கேன் திரு மகட்கு -என்று அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து–அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை என்று யோஜிக்கவுமாம்–

(கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி)கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் (திருவாய்மொழி 7-521)இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் (திருவாய்மொழி 7-2-4)சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் (திருவாய்மொழி 7-2-5)என்று திவா ராத்ரி விபாகமற அரதியாயத் துடிக்கும்படி அடைவுக்கெட்ட ஆர்த்தியை திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே (திருவாய்மொழி 7-2-1)என் செய்திட்டாய் (திருவாய்மொழி 7-2-3) என் சிந்தித்தாயே (திருவாய்மொழி 7-2-4)என் செய்கேன் என் திருமகட்கே (திருவாய்மொழி 7-2-8)என்றும் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டுக் கூச்சு முறை தவிர்ந்து அவன் தன்னையே கேட்டுக் கூப்பிடும்படியான ஆர்த்தியாலே வந்த அவஸ்தா பேதத்தை யுடையவராய்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
 – 62-ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ – தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –அரவணை -இத்யாதி –செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1–உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயிநிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்; ‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!nஇவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-ஸ்வாதீனம் இல்லாமையால் தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும் –விரஹம் சந்தி பந்தங்களையும் குலைத்து சிதறிக் கிடக்கிற இத்தனை –

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5–சிந்திக்கும்-உம்முடைய ஸுந்தர்யாதி குணங்களையும் உம்மோட்டை சம்ச்லேஷத்தையும் நினைக்கும் –முன்பு இவ்வநுஸந்தானம் இன்றியே யாயிற்று இருப்பது -மோஹித்தவோ பாதி இதுவும் ஒரு படி விக்ருதி இருக்கிற படி -அப்போதே காணப் பெறாமையாலே-திசைக்கும்-மோஹிக்கும்-தேறும் -ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தேறா நின்றாள் -இது தானும் பயாவஹமாய் இருக்கிறதாய் யாயிற்று -மோஹம் செல்லா நிற்க அபேக்ஷிதம் பெற்றாரைப் போலே தேறுகை பயாவஹம் இறே -சரம தசையில் பிறக்கும் தெளிவுக்கு அஞ்ச வேணுமே-கை கூப்பும்-தேவர் படிகளை நினைத்து ஈடுபட்டுக் கும்பிடும் -கீழே மயங்கும் -கை கூப்பும் -என்றது -இங்கே தேறும் கை கூப்பும் என்றது -அல்லாதது சஞ்சாரியாய் செல்லா நிற்க இது ஒன்றும் ஸ்திரமாக செல்லா நின்றது –ஸ்வரூப அனுபந்தியான தர்மம் ஆகையால் -நித்யாஞ்சலி புடா -என்ன கடவது இறே -ஆற்றாமையாலே

இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இ றே இவள் கிடக்கிறது -ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-இவளுக்கு இவ்வளவான தசையை விளைக்கைக்கு நீ இட்ட மருந்து என் என்கிறாள் -அதாகிறது உன் முகம் தான் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று வடிவு அழகை காட்டுகை இறே -இவள் கேட்க்கிறது என் எனில் அதுவாகில் அதுக்கு பிரதிகிரியையாக –த்ரை லோக்ய ராஜ்ஜியம் சகலம் ஸீதாயா நாப் நுயாத்க்கலாம் -என்கிற இவளை அவன் முன்னே நிறுத்தி இவள் பட்டது எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள் –

இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-பேச்சுக்கு நிலம் இல்லாத படி நோவு பட்டக் கிடக்கிற இவள் திறத்து-என் சிந்தித்தாயே -நினைத்து இருந்தது என் –ஜீவிப்பிக்க நினைத்தீரோ -முடிக்க நினைத்தீரோ -இப்படிப்பட்ட ஆற்றாமையையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருக்கிறிலள் -அவன் நினைவாலே பேறு என்று இருக்கிறாள் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்ன கடவது இறே –

என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-இப்படி அலமாக்கிற இவள் உம்மைப் பெற்று ஆளாகைக்கு நான் செய்வது என் -உம்மால் அல்லது செல்லாமைக்கு பிராட்டி அளவு அல்லள்-என் திரு மகட்கே?-அவள் உம்மை ஆசைப்பட்டு இருக்கும் -இவள் உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்டு இருக்கும் –

5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-அதாவது-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-அதாவது-அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -என்றும் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-அதாவது-இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன் விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன் -என்று தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்படி பண்ணின பல தானமானது –(ஆழி எழ சங்கும் எழ சாரம்) கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று அவதார பிரயுக்த சௌலப் யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய இவனை ஒழிய -மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ –இப்படி சுலபமான இவ் விஷயத்தை சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)

(தேற்ற ஒண்ணாத தோற்று)அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் (திருவாய் மொழி -7-3-9)என்று பார்ஸ்வத்தாராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்தர்யத்தையும் இழந்து (ஓன்று நிற்கப் பண்ணின பலாதாநம் )இப்படி இருக்கிற இவரைத் தரிப்பிக்கைக்காக ஈஸ்வரன் தன்னுடைய விஜய பரம்பரைகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஓன்று நின்ற சடகோபன் (திருவாய் மொழி -7-4-11)என்று அவர் விஜய பரம்பரைகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒரு சேர்த்தியாக நிற்கும்படி பலாதாநம் பண்ணி (மற்றும் கற்பார் இழவிலே சுவறி )கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும்‌ கற்பரோ” (திருவாய்மொழி 7-5-1) என்று “அபவரகே ஹிரண்ய நித ம்‌ நிதா ய உபரி ஸஞ்சரந் தோ நத்‌ ரஷ்யந்தி” என்கிறபடியே அவதார ப்ரயுக்த ஸெளலப்‌யத்தை உடையனாய்‌ ப்ரிய பரனுமாய்‌ தான்‌ அங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷ பர்யந்தம்‌ நடத்துமவனுமா யிருக்குமிவனை ஸம்ஸாரிகள் இழப்பதே -என்று அவர்களுடைய இழவை அநுஸந்தித்து அதிலே அந்த பலாதாநமும்‌ சுவறி

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்! அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத் தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-கலங்கினாரோ தெளிந்தார்க்கு உபதேசிப்பார் -அஞ்ஞரோ வ்யவஸ்திதரை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார் -விஷயாதீனமாய் வருகிறத்தை சாதனத்தில் செலவு எழுத்துவார்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார் -இவள் தன்னை மறந்து அவனையே பார்த்து சொல்லுகிறாள் -அவர்கள் அவனை மறந்து தம் தம்மையே பார்த்து மீட்க்கத் தேடுகிறார்கள்-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன்
உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களிலே தம்மையும் அந்நிய தமராக நினைத்து இருந்த ஆழ்வார் அருளிச் செய்த இது -மலையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கினவர்களை போலே சம்சாரத்துக்கு அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளிலே ஒதுங்குமவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அச் செயலுக்கு தோற்று அடிமை புக்கவர் ஆயிற்று இவர்-

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே பரார்த்தமாய் இருக்கிற விஷயத்தை ஒழிய -அதிகரிப்பார் புறம்பேயும் ஒன்றை அப்யசிப்பாரோ -அநர்த்த கரம் என்றாலும் விட ஒண்ணாத பிரிய விஷயமாய் -அபிரியம் ஆனாலும் விட ஒண்ணாத படி பத்த்யமான இவ்விஷயத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யஸிக்கக் கடவதோ –மற்றும் என்று -தேவதாந்தரங்களை சொல்லுகிறது அன்று -பரத்வத்தையும் அவதாரங்களையும் சொல்லுகிறது –பாவோ நான்யத்ர கச்சதி -தொழில் எனக்கு – கற்பரோ?-சேதனர் அன்றோ -எல்லாவற்றையும் விட்டு -இவ்விஷயத்தை கற்கைக்கு இங்குத்தைக்கு ஏற்றம் என் என்னில் -அது சொல்லுகிறது –மேலடைய

6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –-அதாவது-பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ-என்று தொடங்கி–தனியேன் தனை யாளாவோ – என்று ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக் கூப்பிடும் படி -முன்புத்தை – உண்ணிலாவியில் -கூப்பீடே மீளவும் தலை எடுத்து-

“பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி “தனியேன்‌ தனியாளாவோ” (திருவாய்மொழி 7-6-1 என்று அவனுடைய ஐகத் காரணத்வாதிகளைச்‌ சொல்லிக்‌ கூப்பிடும்படி முன்புற்றை உண்ணிலாவியில்‌ தனிமைக்‌ கூப்பீடே மீண்டும்‌ தலையெடுத்து

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-ஸ்தாவர ஜங்கமாத்மகமான பதார்த்தங்கள் சேர்ந்து இருந்துள்ள சகல லோகங்களையும் உண்டாக்கின திரு நாபி கமலத்தை உடையவனே-என் தாயே என்பாரைப் போலே கூப்பிடுகிறார்-தனியேன் தனி ஆளாவோ!-அக் கண் அழகே ஜீவனமாய் இருக்கிற திரளிலும் கொண்டு போகக் கண்டிலேன் -ஸ்த்ரீகளினுடைய நோக்கி ஜீவனமாய் இருக்கிற தசையில் அத் திரளிலும் கூடப் பெற்றிலேன் -த்ருதீய விபூதி போலே தனியே ஆளுகிறவனே -உன் குணங்களைக் காட்டி ஆற்றாமையை விளைத்தவனே –உன் கிருபை ஒழிய வேறு ஒன்றை அறியாதவன் நான் -உன் கிருபைக்கு நான் அல்லது இலக்கு இல்லாதபடி இருக்கிறவன் நீ என்றுமாம் –

சூழவும் பகை முகம் செய்ய--அதாவது சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -என்றும் –
இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்றும் – கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே -என்று முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் – பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய- (திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார் )

சூழவும்‌ தாமரை நாண் மலர் போல்‌ வந்து தோன்றும்‌ கண்டீர்‌ இணைக் கூற்றங்கொலோ அறியேன்‌” (திருவாய்மொழி 7-7-1) “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே” (திருவாய்மொழி 7-7-8 என்று முன்பு அநுபூதமான அவனுடைய முகத்தில்‌ அவயவ ஸோபை யானது விஸத ஸ்ம்ருதி விஷயமாய்க்‌ கொண்டு பாதிக்க நலிவு பட்டு

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை – இணைக் கூற்றங் கொலோ -ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாகும் படி ரூபகம் முற்றின படி-கொடியேன் உயிர் கொள்கின்றதே.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-

எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க–அதாவது விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்- இப்படி எடுப்பும் சாய்ப்பும் ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க--அதாவது உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி தோஷம் இன்றிக்கே இருக்க –-பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி-மாயங்கள் செய்து வைத்தி –என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி – என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)

(எடுப்பும்‌ சாய்ப்புமான க்லேஸம்‌ நடக்க) தம்முடைய ஆர்த்தியாலே வருகிற எடுப்பும்‌ அவனுடைய குணாநுஸந்தாநத்தாலே வந்த சாய்ப்புமாய்க்‌ கொண்டு க்லேஸமானது உருவ நடக்க (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள்‌ செய்து வைத்த வைசித்ரியைக்‌ கேட்க) உபாய பூதனாயிருக்கிற வுனக்கு அஜ்ஞாந அஸக்திகளாகிற தோஷமின்றிக்கே யிருக்க ஸரணாகதனான எனக்கு ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும்‌ ஆர்த்தியும்‌ உண்டாயிருக்கையாலே அதிகாரத்திலே தோஷமின்றிக்கே இருக்க “பாசங்கள்‌ நீக்கி இத்யாதி, மாயங்கள்‌ செய்து வைத்தி” (திருவாய்மொழி 7-7-5) என்று ஸம்ஸாரத்தில்‌ ஸங்கத்தை வாஸநையோடே அறுத்து உனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக்‌ கொண்டு பின்பு என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆஸ்சர்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று கேட்க

மாய வாமனன் -உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று யமுனைக் கரையிலே –ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-பாசங்கள் நீக்கி -அவித்யா கர்ம வாசனா ருசிகளைப் போக்கி-என்னை-விஷயாந்தரங்களிலே கால் தாழ்ந்து இருக்கிற என்னை
உனக்கே அறக் கொண்டிட்டு நீ-துயர் அறு சுடர் தொழுது எழு-என்னும் படி பண்ணி -இவருக்கு மயர்வை அறுத்து மதி நலத்தை அருளிற்று எத்தைக் கொண்டு என்னில்-வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!-சாத்தின வளையத்தின் அழகைக் காட்டி யாயிற்று இப்படி பண்ணிற்று -பரிமளத்தை யுடைத்தாய் மலரோடு கூடின சிரமஹரமான திருத் துழாய் மாலையை திருமுடியில் யுடைய ஆச்சர்ய ஸுந்தர்ய யுக்தனே –அருளாய்-இவ்வளவு புகுர நின்ற என்னை இங்கே இட்டு வைத்தது நலியவோ
காயமும் சீவனுமாய்க் -சரீரமும் ஆத்மாவுமாய்-கழிவாய்ப் பிறப்பாய் -உத்த்பத்தி விநாசங்களுமாய்
பின்னும் நீ-மாயங்கள் செய்து -சம்சாரத்தில் நசை அற்ற பின்பும் ஜென்ம மரநாத்தி யாச்சர்யங்களை யுண்டாக்கி – வைத்தி;-அவற்றோடு ஜீவிப்பித்து வைத்தீ இவை என்ன மயக்குகளே.–இவை என்ன தெரியாச் செயல்கள் -துர்ஜ்ஜேய ப்ரவ்ருத்திகள் –

7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய--அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்து கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே- தன் இச்சையாலே இருத்தி –உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-அதாவது உறப் பல இன் கவி -என்கிறபடியே–தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் – பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-

(ஐச்சிகமாக இருத்தி யறக்கொண்ட ஸ்வ பர ப்ரயோஜநத்தை அருளிச்‌ செய்ய) அவன்‌ நமக்கும்‌ நம்முடையார்க்கும்‌ உம்மைக்‌ கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்‌ கொள்ளுகைக்காக நம்முடைய இச்சையாலே வைத்தோம்‌ காணும்‌ என்று வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–
7-9-9-ஸ்வ விஷய ஞானத்துக்கு சம்பாவனை இல்லாமையால் விஸ்ம்ருதியும் இன்றிக்கே அசித்சமனான என்னை -மறந்தேன் உன்னை முன்னம் என்கிற படியே அனுதாபமும் இன்றிக்கே இருக்கிற என்னை-என்னால் தன்னை உற-யதோ வாசோ நிவர்த்தந்தே என்கிற விஷயத்தை –எல்லை உற -தனக்கு நேரே வாசகமாம் படி ஈஸ்வரனுக்கு உறும் படி என்றுமாம் இது பிள்ளான் நிர்வாஹம்-பல இன்கவி சொன்ன உதவிக்கே?சதுர்விம்சத் சஹஸ்ராணி என்றும் பாட்ட்யே-கேயே ச மதுரம் என்றும் சொல்லுமா போலே ஆயிரமுமாய் இனிதான கவி சொன்ன உபகாரத்துக்கு –திறத்துக்கு என்று தொடங்கி பருகிலும் ஆர்வனோ-

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே--அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க – தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –என் சொல்லி நிற்பானோ-என்றும் ,-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -என்றும் ,-பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வேனோ – இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –-அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –-சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை- நான் ஒருவனே யுடை யேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –-உதவிக் கைம்மாறு -என்று தொடங்கி –-எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே – உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு

(என்‌ சொல்லி எந்நாள்‌ பார் விண்ணீரிறப்பெதிர்‌ எதுவும்‌ என்கிற உபகார ஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்‌ருதிகள்‌ முதலாழ்வார்களள வுண்டாயிருக்கத்‌ தம்மைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொண்ட உபகாரத்தை அநுஸந்தித்து “என்‌ சொல்லி நிற்பனோ” “எந்நாள்‌ சிந்தித்தார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “பார்‌ விண்ணீர்‌ முற்றுங்‌ கலந்து பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-9) என்று எங்ஙனே நான்‌ தரையில்‌ கால்‌ பாவுவது அவவுபகாரத்தைக்‌ காலதத்வ முள்ளதனையும்‌ அநுஸந்தித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. ஸகல ஸ்தலங்களிலு முண்டாயிருக்கிற ஸகல சேதநருடைய வாகாத்‌ யுபகரணங்களை நானொருவனுமே உடையேனுமாய்‌ கால த்ரயத்திலும்‌ பேசி யநுபவித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. “உதவிக் கைம்மாறு இத்யாதி. எதுவுமொன்று மில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) இதுக்கு ப்ரத்யுபகாரம்‌ பண்ணுமிடத்தில்‌ ஆத்மாவும்‌ ததீயமா யறிகையாலே உபய விபூதியிலும்‌ செய்யலாவது ஒன்றில்லை என்னும்படியான உபகார ஸ்ம்ருதியை உடையராய்‌

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-என் சொல்லி தரிப்பேன் -சம்சாரியாய் இருக்கிற நான் தனக்கு ஆபி முக்கியம் பண்ணுகைக்கு என் பக்கலிலே ஒரு ஹேது யுண்டு என்று தரிக்கவோ -பின்பு தன்னை ஒழிய செல்லாமை பிறக்கைக்கு என் பக்கலிலே சாதன லேசம் உண்டு என்று தரிக்கவோ -என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்டு தனக்கு ஓர் ஏற்றம் யுண்டாக இருக்கிற நீர்மையை கண்டால் என்னால் தரிக்கலாமோ -சாரதியாய் நின்று வென்று வெற்றியை அர்ஜுனன் தலையில் ஏறிட்டால் போலே தானே பாடி என் தலையிலே ஏறிட்டான் அத்தனை –

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-பண்ணின உபகாரத்தை எத்தனை நாள் அநுஸந்தித்தால் எனக்கு பரியாப்தி பிறப்பது -கால தத்வம் உள்ளதனையும் ஸ்மரித்தாலும் பரியாப்தி பிறக்குமோ -சரீர சம்பந்தம் அற்றால் இதுக்கு அவசரம் இல்லை -அதுக்கு முன்பு காலம் அல்பம் ஆகையால் பரியாப்தி பிறவாது என்கிறார் –

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்

சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-பூமியிலும் ஊர்த்வ லோகத்திலும் ஜாலங்களிலும் உள்ள சகல சேதனர்கள் உடைய போக்த்ருத்வத்தையும் வாக்யாதி உபகரணங்களையும் துணையாக கொண்டு அனுபவித்தாலும் ஆர்வேனோ

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே 

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.
–7-9-10-செய்யலாவது எதுவும் ஒன்றும் இல்லை -இங்கு இருந்த நாள் சங்கோசத்தாலே செய்யலாவது ஒன்றும் இல்லை யாகிலும் -சங்கோசம் அற்று முக்தன் ஆனால் பிரத்யுபகாரம் பண்ணத் தட்டில்லையே என்னில்-இங்கும் அங்கே.–இங்கு ஆனால் தேஹாத்ம அபிமான வாசனையால் செய்யலாவது உண்டோ என்று பிரமிக்கலாய் இருக்கும் -சங்கோசம் கழிந்த அளவில் செய்யலாவது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டாம் இறே –ஸ்வேந ரூபேண ஆபிநிஷ்பத்யதே-என்று ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை –

8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-அதாவது-செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள் ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து –என்று ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் — சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -என்று பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர்

(தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக்‌ கேட்பிப்பதாக காந கோஷ்ட்டியையும் தேவ பிரானறிய மறந்தவர்‌) “செம்பவளத்‌ திரள்வாய்த்‌ தன் சரிதை கேட்டான் (பெருமாள்‌ திருமொழி 10-8) என்று நாச்சியாரை யொழிய பெருமாள் தாமே தனி இருந்த இடத்தே ஸ்ரீராமாயணம்‌ கேட்பித்த குஸ லவர்களைப்‌ போல் அன்றிக்கே –இன்பம் பயக்க வெழில்‌ மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ் வேழுலகை இன்பம்‌ பயக்க நிலத் தேவர்‌ குழு வணங்கும்‌ சிந்தை மகிழ்‌ திருவாறன்விளை” (திருவாய்மொழி 7-10-1 என்று ஆநந்த மயனான அவன் தனக்குமாநந்த வர்தகையான பிராட்டியும்‌ ஸர்வேஸ்வரனுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதி நாயகத்வத்தால்‌ வந்த வேறுபாடெல்லாம்‌ தோற்ற எழுந்தருளியிருக்கிற அவனை கரண த்ரயத்தாலும்‌ அநுபவிக்கிற பூ ஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திரட்சியை யுடைத்தான திருவாறன்விளையிலே ப்ரத்யுபகமாரமாகத்‌ திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து (காந கோஷ்டியையும்‌ தேவபிரானறிய மறந்தவர்‌) “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை தேவபிரானறியும்‌ திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்‌” (திருவாய்மொழி 7-10-10) என்று அந்தத்‌ திருவாறன்‌ விளையிலே தம்முடைய நெஞ்சு ப்ரவணமாகையாலே “ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரியோபநிஷத்‌) என்று ஸாமகாநம்‌ பண்ணுகிற பரமபதத்தில்‌ கோஷ்டியையும்‌ அயர்வறுமமரர்கள்‌ அதிபதியாய்‌ ஸர்வருடைய ஹ்ருதயமும்‌ அறியும்படி ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனா யிருக்கிற அவனும் கூட அறியும்படி விஸ்‌மரித்த இவர்

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஜகம் அடைய உஜ்ஜீவிக்கும் படி பெற்ற ஸ்ரீ குசலவர்கள் பேச தம்முடைய வ்ருத்தாந்தமான ஸ்ரீ இராமாயண கதையை கேட்டு அருளினவர் நித்ய வாஸம் பண்ணுகிற

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை

அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1–நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்தமயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்னக் கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்
எழில் மலர் மாதருந் தானும்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார்அன்புற்று-இவர் திருவாய்மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி அமர்ந்து -வேறு ஒரு பிரயோஜனத்தை கனிசியாதே-தேச வாசம் தானே பிரயோஜனமாக கொண்டு-உறைகின்ற -அவதாரம் போலே அன்றிக்கே நித்ய வாசம் பண்ணுகிற-அணி பொழில் சூழ் திரு வாறன்விளை-தர்ச நீயமான பொழில் சூழ்ந்த தேசத்தை-அன்புற்று -தேன தே தமனுவ்ரதா -என்கிறபடியே அவன் விரும்பும் தேசத்தையே விரும்பும் அத்தனை இறே -அவன் திருவாய் மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நேஹித்தால் போலே நாமும் திரு வாய் மொழி கேட்ப்பிக்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நேஹத்தை பண்ணி-அமர்ந்து -நாமும் அநந்ய பிரயோஜனராய்–அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி -மநோ ரத்தத்துக்கு காலமான ஆனதுவே போகத்துக்கும் காலமாக வற்றோ –அபீதா நீம் சகலஸ் ஸ்யாத் –

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் –கிட்டினாரை நிரதிசய ஆனந்தி யாக்கும் தேசம் -இவ்வத்தியவசாயம் என்று தொடங்கி என்ன –யுறை தீர்த்தனுக்கு-அங்குத்தை நித்ய வாசத்தாலே தனக்கு போக்யத்தை காட்டி -புறம்பு உள்ள ருசியைப் போக்கி தன் பக்கல் ருசியை பிறப்பித்தவனுக்கு –அற்ற பின்னே- அவன் பக்கல் அநந்யார்ஹமாம் படி ருசி பிறந்த பின்பு –சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை -தேவபிரான் அறியும்-

9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு அதாவது-கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு-நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .-அதாவது –-நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை – வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்–
அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் – இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று – பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் – பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் – இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.

(சரம உபாய பரரானார்க்கு )கீழ்‌ தாமருளிச்செய்யக்‌ கேட்ட (ஸித்‌த சாதனத்தாலே தத் பரரானார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார்) நீள் நகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனை ஆயிரம் தோள் துணித்தான்‌ சரணன்றி மற்று ஒன்றிலம் உள்ளித்தொழுமின் தொண்டீர் (திருவாய் மொழி -7-10-7) என்றும் நிரதிசய போக்யமான திருவாறன்விளை யாகிற மஹா நகரே பரம ப்ராப்யம் -அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா நிருத்த கடகனானவனுடைய திருவடிகளே ப்ராபகம் -இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை – ஆகையால்‌ இவ்வர்த்தத்தில்‌ ருசி யுடையராய் புத்தி பண்ணுங்கோள்‌ என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயம் என்றும் பிராபகத்தினுடைய அவதி, அர்ச்சாவதார ஸுலபனானவன்‌ திருவடிகளே என்றும்‌ இவ்வர்த்தத்தைத்‌ தம்முடைய திரு வுள்ளத்தி லுகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார் –

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-நீணக ரமதுவே-கலங்கா பெரு நகரமாய் -அபுநாராவ்ருத்தி லக்ஷணமான தேசம் திருவாறன் விளையே-மஹா நகரத்திலே நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன் -விண்ணவர் கோனாய் வைத்து ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூ லபன் ஆனவன் –-வாண புரம் புக்கு -எதிரிகள் இருந்த தேசத்திலே எடுத்து விட்டு-முக் கட் பிரானைத்-ஈஸ்வர அபிமானியாய் வாணனுடைய ரக்ஷணத்துக்கு நான் கடவன் என்று ஏறிட்டு கொண்ட ருத்ரனை –-தொலைய-இனி ரக்ஷகத்வம் வேண்டா -அத்தை பொகடும் படி வெம் போர்கள் செய்து-கொடிய யுத்தங்கள் செய்து – வாணனை ஆயிரம் தோள் துணித்தான்- பாணனுடைய பாஹு வனத்தை சேதித்து விட்டான் -உஷை பித்ரு ஹீனை யாகாமைக்கு –சரண் -அவனே அத்தேசத்தை பிராபிக்கைக்கு உபாயம் –-அன்றி மற்றொன்று இலமே.–வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-ஆறாம்  பகுதி-(224) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

August 2, 2026

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

ஆறாம் பத்தால்--தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் -பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம் தமக்கு தம் திரு அடிகளையே -நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க – அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் – தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து – வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை அவன் பரிகரிக்க –
அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும் பலித்தவாறே –பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி – ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு – விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து –பரம ஆர்த்தியோடே தமக்கு உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை – நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு – பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –
பத்துடை அடியவரிலே -தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார்
என்கிறார்

தன்னுடைய பரம க்ருபையாலே ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படி யிருக்கிற ஸர்வ ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளான இவர்க்குத்‌ தன்‌ திருவடிகளே நிரபேக்ஷோ பாயமென்னுமிடத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்க, அந்த உபாயத்திலே விச்சேதமில்லாதபடி வ்யவஸாயத்தை யுடையராய்த்‌ தம்முடைய வ்யவஸாயத்தை ௧டகர்‌ முகத்தாலே யவனுக்கறிவித்துத்‌ தம்முடைய விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த இன்னாப்பைப்‌ பரிஹரித்தவனுடைய ஸாமர்த்‌யத்தை அநுஸந்தித்து குணாநுபவத்துக்குப்‌ பண்ணின ப்ரபத்தியும்‌ பலித்தவாறே ப்ராப்திக்குப்‌ ப்ரபத்தி பண்ணுவதாக ஸித்‌தோபாய ஸ்வீகாரம்‌ இதரோபாய த்யாக பூர்வகமாக வேண்டுகையாலே பெளராணிக வசந ப்ரக்ரியாலே உபாய விரோதி களான த்யாஜ்யங்களை வாஸநையோடே அவற்றினுடைய ப்ரஸங்கமும்‌ அஸஹ்யமாம்படி விட்டு விட்டவை யெல்லாம்‌ தமக்கு ப்ராப்த விஷயமே யாக்கி நிரதிஸயமான பர பக்தியோடே திருவுலகளந்த ஸர்வ ஸுலபமான திருவடிகளை நித்ய ஸூரிகளும்‌ வந்தனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே ஸரணம்‌ புக்கவர்‌ பத்துடையடியவரிலே தொடங்கி அஞ்சாம் பத்தளவாக உபதேஸித்த பக்த் யுபாயத்தினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தானத்தாலே ஸோகம்‌ ஐநிக்கும்படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்குத்‌ தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஸிப்பிக்கிறார்‌ என்கிறார் –

(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே-சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல் வெட்டாக்குகிற சரண்யன்
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே
-6-1-10–என்று ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்–வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-தன்னுடைய கிருபையாலே – சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் – சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் – சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்) சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் – வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் –முதல் திருவந்தாதி-26-என்றும் — போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் – கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித விசேஷ சேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –

(என்னையும்‌ இத்யாதி, சரண்யனென்கிற தளவாக) “ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளளென்மின்௧ளே” (திருவாய்மொழி 6-1-10) “யாவர்க்கும்‌ வன்‌ சரணே” (திருவாய்மொழி 6-3-7) ‘வன் சரண்‌ சுரர்க்காய்‌” (திருவாய்மொழி 6-3-8) என்று ஆர்த்த ரக்ஷ்ணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரக்ஷ்ய வர்க்கத்திலே நானுமொருத்தி உளள்‌ என்று சொல்லுங்கோள்‌ என்றும்‌, திருவிண்ணகரிலே நின்றருளினவனுடைய திருவடிகளல்லது ஸர்வர்க்கும்‌ வலிய ரக்ஷை இல்லை; தேவர்களுக்கும்‌ வலிய ரக்ஷ என்று இவர் தாமே பேசும்படி “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து அடியீர்‌ வாழ்மின்‌ என்றென்றருள்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 6-10-11) என்று நமக்கு ஸேஷபூதராயுள்ளா ரெல்லாரும்‌ நம்மடியின்‌ கீழே அநந்ய ப்ரயோஜநராய்ப்‌ புகுந்து உஜ்ஜீவியுங்கோள்‌ என்று அவன் தானே அருளிச் செய்யும்படியான க்ருபையாலே (ஸர்வ லோக பூதேப்‌ய: என்கிறவை கடலோசையும்‌ கழுத்துக்கு மேலுமாகாமல்‌) “ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம்‌ க்ஷிப்ரம்‌ விபீஷணமுபஸ்த்திதம்‌” ரா.யு. 17-14 என்றும்‌, “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோ ததாமி ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33) என்றும்‌ சொல்லுகிற ஸரணாக தனுடையவும்‌ ஸரண்யனுடையவும்‌ உக்தி ஸமுத்‌ர கோஷம்‌ போலே நிரர்த்தகமாகாத படியாகவும்‌, கண்டாதுபரியாகாத படியாகவும்‌ “வானவர்‌ வானவர்‌ கோனொடும்‌ நமன்றெழும்‌ திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 3-3-7 என்றும்‌ “வினைச்‌ சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடம்‌” (முதல்‌ திருவந்தாதி 26) என்றும்‌ “வானரமும்‌ வேடுமுடை வேங்கடம்‌” நான்முகன்‌ திருவந்தாதி 47) என்றும்‌ “கண்டு வணங்கும்‌ களிறு” (மூன்றாம்‌ திருவந்தாதி 70) என்றும்‌ சொல்லுகிறபடியே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குகளோடு வாசியற ஆஸ்ரயிக்கலாம்படி நிற்கையாலே தன்னுடைய ஸமாஸ்ரயணீயத்வம்‌ ஸிலா லிகிதமாம்படி திருமலையிலே யெழுந்தருளி நிற்கிற அநாலோசித விஸேஷ அஸேஷ லோக ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ 

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் -ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7–வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்-சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8–தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11—தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம்
நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-நித்ய ஸூ ரிகள் -ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடு என்னுதல்
தேவர்களோடு ப்ரஹ்மா என்னுதல் -அமர்ந்து -அநந்ய பிரயோஜனராய்-நமன்று எழும்–தொழுது எழு-என்னும் தம்மைப் போலே என்கை -பக்கன அபிமானராய் உத்தியோகிக்கும் திருவேங்கடம் – பிரயோஜ நான்தர பரரை-அநந்ய பிரயோஜனர் ஆக்கும் -நில மிதியாலே

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26–இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு-பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்-அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது-ஐஸ்வர்ய விரோதி ஆத்ம பிராப்தி விரோதி பகவத் ப்ராப்தி விரோதி இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்-மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி – சிலருக்கு சத்ரு பீடாதிகள் சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-திரு வருவிகள் பெருகப் புக்கால் இவை எல்லாவற்றையும் உடைத்தாய் இருக்கை-நீருக்கு இறாய்த்து மரங்களிலே ஏறுகிற வானரமும் வேடரும் -என்றுமாம் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —
–70-திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -(ததாமி புத்தி யோகம் )-ஞான கார்யமான ஸமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –(தேசோயம் ஸர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-அவனே இது மூலம் அருளுகிறான் )

2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர் பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது அவனைத் தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்-என் நான் செய்கேன் -5-8-3–என்றும்–பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில் ஈடுபட்டு -உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி–கீழ்ப் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –

(அஜ்ஞாந அஸக்தியித்யாதி, அநந்ய கதித்வமுடைய தமக்கு) “அவித்‌யாதோ தேவே பரிப்‌ருட தயா வா விதி தயா ஸ்வ பக்தேர்‌ பூம்நா வா ஐகதி கதி மந்யா விதுஷாம்‌ கதிர்‌ கம்யஸ் சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ : ரஹஸ்யம்‌ வ்யாஜஹ்ரே ஸ கலு பகவாந்‌ சவ்நகமுநி:” (பட்டர்‌ ஸ்ரீஸூக்தி)என்று உபாயாந்தரங்களை அறிகைக்கும்‌ அநுஷ்டிக்கைக்கு மீடான ஜ்ஞாந ஸக்திகளில்லாத அளவால்‌ வந்த அந்த உபாயாந்தரங்களில்‌ அந்வயமே யன்றிக்கே ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே பகவதேக ரஷ்யமாகை யொழிய வ்யதிரிக்தோபாயங்கள்‌ ஸ்வரூப விருத்‌தங்கள்‌ என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும்‌ ஒன்றும்‌ குறை வேண்டேன்‌-(திருவாய் -5-8-3) என்று அவற்றிலுண்டான அநந்வயத் தளவன்றிக்கே அங்குற்றேனல்லேன்‌ இங்குற்றேன்‌ அல்லேன்‌ உன்னைக்‌ காணும்‌ அவாவில்‌ வீழ்ந்து நான எங்குற்றேனுமல்லேன்‌‘ (திருவாய்மொழி 5-7-2) “என்‌ நான்‌ செய்கேன்‌” (திருவாய்மொழி 5-8-3) “புணரா நின்ற மரமேழ்‌ அன்றெய்த ஒரு வில் வலவாவோ” திருவாய்மொழி 6-10-5) என்று நித்ய ஸூரிகள்‌ ஸம்ஸாரத்திலே உலாவினாப் போலே ஸித்‌த ஸாதநம்‌ பண்ணி வர்த்திக்கிறேனல்லேன்‌ ஸாதநாநுஷ்டாநம்‌ பண்ணுகிறவர்களிலே ஒருவனாய்‌ வர்த்திக்கிறேனல்லேன்‌, அன்றிக்கே உன்னை அநுபவிக்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவனாய்‌ அங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌ உன்னை யொழிய ஸப்‌தாதி, விஷயாநுப,வம்‌ பண்ணுகிற ஸம்ஸாரிகளிலேயாய்‌ இங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌. உன்னுடைய ஸெளந்தர்யாதி களிலே ஈடுபட்டு உன்னைத் தான்‌ வேணுமென்று ஆசையாலே பல ஹீநனாய்த்‌ தளர்ந்து இனி உபாயாநுஷ்டாநம்‌ பண்ண க்ஷமனல்லேன்‌; உன்‌ திருவடிகளைக்‌ கிட்டுகைக்கு என்னால்‌ செய்யலாவதில்லை; எனக்கும்‌ செயலுக்கும்‌ என்ன சேர்த்தி யுண்டு? உன்னுடைய ரக்ஷணத்திலே அதி ஸங்கை பண்ணின மஹா ராஜருடைய ஸங்கா நிராகரணார்த்தமாக இலக்குக்‌ குறிக்க வொண்ணாதபடி திரண்டு நின்ற மராமரங்கள்‌ ஏழையும்‌ எய்த ஏக வீரனே ஓ என்று கூப்பிடும்படி “மெய் யமர்‌ காதல்‌” (திருவாய்மொழி 6-8-2) என்று அவனுடைய திருமேனியோடே யமர வேண்டும்படியாய்த்‌ தம்முடம்போடே அவனமர வேண்டும் படியாய்‌ ஸத்யமாய்ப்‌ பொருந்தி ஸ்வரூபாநுபந்தியாய்‌ கீழில்‌ பத்தில்‌ தமக்குப்‌ பிறந்த பக்தி பாரவஸ்யத்தினுடைய பலமாகவுமாம்‌. உபாயாந்தரத்துக் கன்றிக்கே “களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்னும்படி அநந்ய கதித்வமுடைய இவர்

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3—என்னான் செய்கேன் –
உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பவ –

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன்
இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2—சாதனம் அனுஷ்ட்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் -சாதனம் அனுஷ்டானம் பண்ணுமவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி ஸுந்தரியாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணும் ஆசையால் பலஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டான ஷமனும் அல்லேன் –இது பூர்வர்கள் நிர்வாகம் –-அதவா – நீ இருந்த இடத்தே வந்து கிட்டி உன்னை அனுபவிக்கிறேன் அல்லேன் -உன் பக்கல் நிரபேஷராய் இருக்கிற சம்சாரிகளிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -உன்னை ஒழிய தரித்து இருக்கிற சம்சாரிகளோடே பொருத்தம் யுடையேன் அல்லேன் –அங்கு வர மாட்டேன் -அபி நிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருத்தம் உடையேன் அல்லேன் -என்றுமாம் –

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-புணர்ந்து நின்ற -அம்புக்கு நேரோட ஒண்ணாத படி திரண்டு நின்ற-மரமேழ் அன் றெய்த -ரக்ஷணத்தில் சங்கை பண்ணின வன்று ஏழையும் ஓர் அம்பால் அழித்த-அதி சங்கை பண்ண மழு வேந்திக் கொடுத்து ரசித்தவன் கிடீர் ஆசைப்பட்ட என்னை அநாதரிக்கிறான் -அதி சங்கையைப் போக்கி பணி கொண்டவன் கிடீர் இரந்த என்னை பணி கொள்ளாது ஒழிகிறான்-ஒருவில் வலவாவோ!-ஏக வீரனே –ஓ என்று விஷாத அதிசய ஸூ சகம் –

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-திருமேனியில் அணைய வேண்டும்படியான காதல் -என் உடம்போடு அணைய வேண்டும் காதல் என்றுமாம் –காத்ரைச் சோகாபி கர்ச்சிதை சம்ஸ்ப்ருசெயம்-என்ன கடவது இறே –குண ஞானத்தால் தரிக்கும் அளவன்று என்று சொல்லுங்கோள் -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளான் -தம்மை போல் பொய்யாய் நிலை நில்லாத காதல் அன்று என்று சொல்லுங்கோள் என்று பணிக்கும்

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ

3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்–ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11 -என்றும் சொல்லுகிறபடி-விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து-வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்னுமதளவாக பெற்று அன்றி தரியாத அதி மாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –ததேக ரஷத்யத்வ வ்யவசாய ரகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய யோகத்தாலே ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –போகு நம்பீ –கழக மேறேல் நம்பீ -என்று உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று -சிற்றில் இழைப்பது –சிறு சோறு அடுவதாக –அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –அழித்தாய் உன் திருவடியாலே -என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய வைலஷண்யத்தாலே – குலைக்க -அவனோடு பொருந்தி

தமக்கு (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டேக சிந்தையராய்‌ ) “ஆறெனெக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்‌” (திருவாய்மொழி 5-7-10) என்று தன்‌ திருவடிகளே ஸஹாயாந்தர நிரபேஷமான ஸாதநமென்னுமிடத்தைக்‌ காட்டிக் கொடுக்க; “கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” (திருவாய்மொழி 5-8-11 என்றும்‌, “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌, “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கென்று நாடொறு மேக சிந்தையனாய்‌” (திருவாய்மொழி 5-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே விரோதி நிரஸந ஸீலனாயிருக்கிறவன்‌ திருவடிகளே நிரபேக்ஷோபாய மென்கிற ஏக ரூபமான வ்யவஸாயத்தை யுடையராய்‌ , (திர்யக்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல் பூங்கழிவாய்‌ வந்து மேயுங்‌ குருகினங்காள்‌ வினையாட்டியேன்‌ காதன்மை கைகள்‌ கூப்பிச் சொல்லீர்‌ ” (திருவாய்மொழி 6-1-1) என்றும்‌, “சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்களே’ (திருவாய்மொழி 6-1-10) என்றும்‌ பெற்றல்லது தரியாத அதி மாத்ர ப்ராவண்ய முடையரா யிருக்கச்‌ செய்தேயும்‌, ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத அத்யந்த பாரதந்த்ர் யத்தினாலே ததேக ரக்ஷ்யமா யிருக்குமென்கிற தம்முடைய கருத்தை, ஸூத்‌த ஸ்வபா வராய்‌ ஸாகா ஸஞ்சாரிகளாய்‌ மதுகர ப்ரக்ருதிகளாய்‌ பக்ஷபாதிகளாய்‌ ஷட்பத நிஷ்டரான கடகரை யிட்டறிவித்து (விளம்ப ரோஷ முபாயத்தாலே யழிய) இப்படியறிவித்த விடத்திலும்‌ அவன் தாழ்க்க அத்தால்‌ வந்த ப்ரணய ரோஷத்தாலே, அவன்‌ வந்து மேல்‌ விழுந்த வளவிலும்‌, “போகு நம்பீ ” (திருவாய்மொழி 6-2-2) “கழகமேறேல்‌ நம்பீ (திருவாய்மொழி 6-2-6) என்று அவனை உபேஷித்து அவன்‌ முகம்‌ பாராமலிருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அவனும்‌ தன்னுடைய போக விரோதி யாகையாலே “அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அந்த அநாதராந்ய பரதைகளை தனக்கும்‌ சரமோபாயமான திருவடிகளாலே உப லக்ஷிதமான விக்‌ரஹ வைலக்ஷ்ண்யத்தாலே குலைத்த அவனோடே சேர்ந்து.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10—ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன்
தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-அவனுக்கு மறுக்க ஒண்ணாத அஞ்சலியைப் பண்ணுங்கோள் – பலத்தோடு வியபிசரியாத செயலைச் செய்யுங்கோள் -என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்-பத்தாம் பாட்டிலே யாயிற்று இன்னாப்பு பிரசங்கிப்பது-பட்டர் பத்துப் பாட்டிலும் இன்னாப்பு தோற்ற நிர்வஹித்து அருளுவார்-முன்பு போலே என்று இராதே பெரிய முதலிகள் கும்பிடுங்கோள் -கும்பிட்ட வாறே முகம் பார்ப்பார் -பின்னை முகம் மாறுவதற்கு முன்னே என் தசையைச் சொல்லுங்கோள்-கைகளை கூப்பி -கைகளை கூப்புகையாவது -சிறகுகளை விரிக்கை –
சொல்லீர்-ஒரு மஹா பாரத்துக்கு போரும் இறே-வினையாட்டியேன் காதன்மையே.-சொல்லீர்
பிரிந்தால் அவனைப் போல் அன்றியே தரிக்க மாட்டாத படி பாபம் பண்ணின என் காதன்மை சொல்லீர் -அவன் வேண்டேன் என்றாலும் விட மாட்ட தபடியான பாபம் -வந்த ஆளின் கையிலே வார்த்தை சொல்லி விடுகை அன்றிக்கே திர்யக்குகளைக் குறித்து தூது விட வேண்டும்படியான பாபத்தை பண்ணினேன் –-காதன்மை என்றவாறே -தம்மளவு என்று இராமே -என்னுடைய காதன்மை -வன் நெஞ்சர் காதல் போல் அன்றி இறே மெல்லியலார் காதல் -மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதன்மை சொல்லீர் -சொல்லின் தாழ்வே -வரவு தப்பாது என்று இருக்கிறாள் –

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத –என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனைபேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்-முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் –

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –நம்பி!-சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ

4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே -பிறந்தவாற்றிலே –அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்றும் –பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -என்றும் –உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -என்றும் –ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற –என்னும்படி அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்–குரவை ஆய்ச்சியரிலே- என்ன குறை எனக்கு -என்று தொடங்கி –நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர் -என்று ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி அனுபவிக்கப் பெற்ற எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே ––சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே –சித்த உபாய வர்ணம் சக்ருதேவ –என்கிறபடியே -பிராப்த்திகாகவும் ஒருகால் பண்ண வேண்டும் என்று பார்த்து புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன் ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம் ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராண மாக சொல்லப் பட்ட –பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –புராண வித்தகர் ஆகையாலே -பௌ ராணிகரான ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் -இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான சரண வரணத்தை பண்ணுகையாலும் –புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —இங்கன் அன்றிக்கே –இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் -அது தான் புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் -சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் –பிதரம் மாதரம்-என்று தொடங்கி –சாஷரான்-என்னும் அளவாக –சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய உபாசங்களையும் -பிராபக உபாசங்களையும் –இதில்-சர்வ தர்மாம்ச்ச –கீழ் -உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ள வற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு –ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும் உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –அவ்வளவு இன்றிக்கே -இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே –ஸூயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —ஸ்திரீயும் சஹா தர்ம சாரினியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான பாப விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் -தம்முடைய வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –உபாயாந்தர சக காரிகளுமாய் -பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே –உபேய பூதருமாய் இருப்பார்கள் தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தை யே பிரவர்த்திப்பிக்கை யாலே – உபாயாந்தர சக காரியுமாய்-அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்–குருக்கள் ஆகிறார்கள்- உபயாந் தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்–ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்-தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும் –மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –அதில் சர்வ தர்மாம்ச்ச என்று கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –சர்வ காமாம்ச்ச -ஐ கிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது–சாஷரான்-அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள் உடைய மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்கள் என்கிறது –அதவா -சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள் ஆகையாலே -அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –கை வலிந்து -இத்யாதிக்கு அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது -மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் -உபாய விரோதிகள் சர்வத்தையும் –விஷயமாக உடைத்து ஆகையாலே -கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது ஆக இப்படி இருந்துள்ள

(உருகாமல்‌ வலித்ததும்‌ நண்ணி வணங்க பலித்தவாறே) “உகவையால்‌ நெஞ்சமுள்ளுருகி உன்‌ தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌ அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றிப்படி அல்லோம்‌ என்ற நம்மைச்‌ சேர்த்துக்‌ கொண்ட தோராஸ்சர்ய மிருந்தபடி யென்‌ என்றுருக, இது தொன்று கண்டோ ஆஸ்சர்யப்படுகிறீர்‌, தன்னில் தான்‌ சேராதபடி விலக்ஷணங்களானவை நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்‌ என்று தன்னுடைய விருத்‌த விபூதிகத்வத்தை நல்குரவுஞ் செல்விலே காட்டி உருகாதபடி வலிக்கப் பண்ண இவரும்‌ “நல்குரவும்‌” என்று தொடங்கி “திருவிண்ணகர்க்‌ கண்டேனே” (திருவாய்மொழி 6-3-1) என்று அத்தைக்‌ கண்டு தேறின விதுவும்‌ குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி 6-4-1) என்று தொடங்கி “நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ எனக்கார்‌ பிறர்‌ நாயகரே” (திருவாய்மொழி 6-4-10) என்னும்படி க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை தரித்து நின்று அநுபவிக்கலாம்படி பலித்தவாறே. ‘உருகாமல்‌ வரித்தும்‌’ என்று பாடமானபோது பிறந்தவாற்றிலே உன்னைப்‌ பிரிந்த தஸையிலே உன்னுடைய குணாநுஸந்தாநம்‌ பண்ணி தரிக்கலாமோ வென்று பாரா நின்றேன்‌; “ஊடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” (திருவாய்மொழி 5-10-10) என்று அவை தானே ஸிதிலமாக்கா நின்றன-தரித்து நின்று குணாநுஸந்தாநம்‌ பண்ணும்படி பண்ணி யருள வேணுமென்றும்‌ “மற்றோர்‌ களை கணிலம்‌ காண்மின்களே” (திருவாய்மொழி 6-3-10) “(நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌” (திருவாய்மொழி 5-10-11 )என்று உபாய வரணம்‌ பண்ணி அந்த வரணமும்‌ என்ன குறை யெனக் கென்று தொடங்கி “விண் மிசைத்‌ தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்‌ நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ (திருவாய்மொழி 6-4-10) என்று க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை திவா ராத்ர விபாகமற ப்ரீதி ப்ரேரிதனாய்க்‌ கொண்டு பேசப்‌ பெற்ற எனக்கு என்ன குறையுண்டு, பொய்யாஸநமிடுவார்‌ மல்லரை யிட்டு நெருக்கத்‌ தேடுவார்‌ எதிரம்பு கோர்ப்பாராய்க்‌ கொண்டு இருக்கற இந்த விபூதியிலிராதே “கதஸ்‌ ஸ்வம் ஸ்த்தாந முத்தமம்‌” என்கிறபடியே பரிவரேயான நிர்பய ஸ்த்தா நத்திலே எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து முறையிலே கிட்டப்‌ பெற்ற வெனக்கு வேறு நிர்வாஹகருண்டோ என்றும்‌; கர்விக்க வேண்டும்படி பலித்தவாறே என்றுமாம்‌. (ஸப்ரகாரமாக ஸக்ருத்‌ கரணீயமென்று) இதரோபாயத்யாகமாகிற ப்ரகாரத்தோடே ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ “ஸக்ருதேவ” (ராயு. 18-33 என்கிற படியே ஒருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து. (புராண பெளராணிகர்‌ தயாஜ்யா மஸமாக்கின சித சித்‌ ப்ராப்ய ப்ராபகா பாஸங்களை) புராணேதிஹாஸங்‌களும்‌ அவற்றை உள்ளபடி யறிகையாலே பெளராணிகரான உடையவரும்‌ –பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌, ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌ரஹாணிச, ஸர்வ தர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்‌” (சரணாகதி கத்யம்‌) “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்‌ ச ராகவம்‌ ஸரணம்‌ கத: (ரா.யு19-5) என்று த்யாஜ்யாம்ஸமாக்கினவற்றில்‌ பித்ராதிகளான சேதநருடைய ரக்ஷணம்‌ “மாத்ரு தேவோ பவ” (தைத்திர்யோபநிஷத்‌ இத்யாதி ப்படியே ஸாதநாந்தரத்துக்கு உபகாரகமாகையாலே ப்ராபகங்களாயும்‌ அவர்களுடைய வியோகம்‌ அஸஹ்யமாம்படி ப்ரிய விஷயமாகையாலே ப்ராப்யங்களாயு மிருக்கையாலும்‌; ரத்நாதிகள்‌ உபாயாந்தரத்துக்கு தாநாதி முகத்தாலே ஸஹகாரிகளா யிருக்கையாலே ப்ராபகங்களாயும்‌ தன்னை யழிய மாறியும்‌ இவற்றை ஆர்ஜிக்க வேண்டும்படி ஸ்வயம் ப்ரயோஜநங்க ளாகையாலே ப்ராப்யங்களா யுமிருக்கிற இந்த ப்ராப்ய ப்ராபகாபா ஸங்களை; ஸாக்ஷாத்‌ ப்ராப்ய ப்ராபகங்கள்‌ அல்லாமையாலே ஆபாஸங்களென்கிறது.

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி-உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –-தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இறே அநந்யார்ஹம் ஆக்குவது –
அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.
–6-3-1-சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –-

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ -புருஷார்த்த காஷடையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10–தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்-

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை –மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார்

மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன்
எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-பொய்யாசனம் எடுவார் -பரிபாவிப்பாரான தேசத்தை விட்டுப் போய் -பரிவரேயான பரம பதத்தில்-தன தாமமே புக மேவிய சோதிகதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் –என்கிறபடியே தனக்கு அசாதாரணமான ஸ்தானத்தில் போய்ப் புக்கான்-தன்தாள்-நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே- அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ –புருஷார்த்த காஷ்டையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-

5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும்-(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே )நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –இழந்தது சங்கே -6-6-1-என்றும் –இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு -உறங்குவான் கைப் பண்டம் போலே –பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போக கண்டும் –சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே இவற்றை ஒன்றாக நினையாமல் உபேஷித்து அகன்று போயும்

(கை வலிந்து கை கழலக்‌ கண்டும்‌ எல்லாம்‌ கிடக்க நினையாதகன்றும்‌) “நம்மைக்‌ கை வலிந்து” (திருவாய்மொழி 6-5-7) “இழந்தது சங்கே” (திருவாய்மொழி 6-6-1) “இதெல்லாம்‌ கடக்க இனிப்‌ போய்‌ எம்மை யொன்றும்‌ நினைத்திலளே” (திருவாய்மொழி 6-7-9) “இன்றெனக்கு உதவாதகன்ற” (திருவாய்மொழி 6-7-6) என்று சிதசித்‌ வர்க்கமான இவற்றைக்‌ கை விட்டும்‌, உறங்கினவன்‌ கையிலே எலுமிச்சம்‌ பழம்‌ போலே ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே தன் கையில்‌ நின்றும்‌ நெகிழும்படி கண்டு “ஸர்வாந்‌ போகாந்‌ பரித்யஜ்ய” என்கிறபடியே இவற்றை மதியாமல்‌ அகன்றும்‌ 

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே -மைத்ரேய என்னுமா போலே – அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்-முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-இவள் மயிர் முடி ஒன்றுக்கும் தோற்று குமிழ் நீர் உண்ணுமவன் கிடீர் இவளை அழித்தான் -பங்களப் படை கொண்டு தனி வீரம் செய்வாரை அழிக்குமா போலே
இவளுக்குத் தோற்று -அவன் இழக்குமத்தை இவள் இழந்தாள் –சங்கு -வளை –

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-தன்னை பிரிந்து நோவு படுகிற இத்தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழிய போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத்தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் –இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்இள மான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்-இனிப் போய்த்-பெற்றோரை விடும் படி இவ் விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் -பெற்றோரை விட்டு பற்றுமது இறே ப்ராவண்யத்துக்கு எல்லை

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9—இதெல்லாம் கிடக்க-வி லக்ஷண பதார்த்த தரிசனத்தில் அவனுக்கு என்கை -அவன் குண அனுசந்தானத்தாலே விக்ருதியாகை -இவற்றை அளவிறந்த சம்பத்தாக நினைத்து இருக்கிறாள் இவள் -கண்டதை மமேதம் என்று இராதே அவனுக்கு என்று இருக்கை இ றே சம்பத்து –இனிப்போய்ச்-பாவ சுத்தியால் துஷ்டனாம் அவனுக்கு ஓன்று செய்யப் புறப்பட்டு போனாளோ-இத்தலையில் உள்ளது ஓன்று இல்லை -அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –எம்மை ஒன்றும் நினைத்திலளே–வழித் துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் –குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-

ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்-இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-என்று தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-

(ஆளீர்‌ மேவீர்‌ ஊதீர்‌ என்று ததீய ஷோஷமாக்கியும்‌) “பொன்னுலகாளீரோ” (திருவாய்மொழி 6-8-1 “நெய்யமரின்னடிசல்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” (திருவாய்மொழி 6-8-2 )“ஓடிவந்தென்‌ குழல்மேலொளி மாமலரூதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்று கீழ்‌ தாம்‌ விட்டவிடத்திலும்‌ தம்மை விடாதபடி பற்றிக்‌ கிடக்கிற ஆத்மாத்மீயங்களை பகவத்‌ விஷயத்தில்‌ உபகாரகரானவர்களுக்கு “ஸத்‌ குருப்யோ நிவேதயேத்‌” என்கிறபடியே ஸமர்ப்பித்து.

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-ஈஸ்வர விபூதியானது விஸ்லேஷ தசையில் அவனையும் தன்னையும் சேர்ந்தார்க்கு பரிசிலாக கண்டது என்று இருக்கிறாள் -உபய விபூதியும் ஒரு மிதுனத்துக்கு சேஷம் இறே-அவ்வவஸ்தை பிறந்தால் சொல்லலாம் இ றே -நித்ய விபூதியைக் கொடுத்து பின்பு லீலா விபூதியைக் கொடுக்கிறாள் -இவளுக்கு இதிலும் நித்ய விபூதி விதேயமாய் இருக்கிற படி -அவன் அடியில் காட்டிக் கொடுத்த அடைவும் இது இ றே -அயர்வறும் அமரர்கள் அதிபதி -இலனது உடையனிது -என்றது இறே -தான் பெற்ற அடைவிலே கொடுக்கிறாள் -வி லக்ஷணமான நித்ய விபூதியைக் கொடுத்து வைத்து லீலா விபூதியைக் கொடுப்பான் என் என்னில் -பண்ணின உபகாரத் த்திலே கலங்கி கொடுக்கிறாள் –அபராவர்த்தி நாம் யாச யாச பூமி ப்ரதாயி நாம் -என்றாரைப் போலே –ஆளீரோ -உங்கள் விபூதியை அராஜமாக விட்டு வைக்கிறது என் -ஆளி கோளோ-தான் கொடுத்ததாக நினைத்து இருக்கிறிலள்

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2—நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்யமிஸ்ரமாய் பால்முடிவான சோறு -இன்னடிசில் –எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி -என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –-நிச்சல்-பகவத் விஷயத்தில் வாசி அறிய அறிய உபகாரகரை கொண்டாடும் அத்தனை இறே –மேவீரோ -ஸ் வீகரியீரோ -என் பேறாக ஸ்வீகரிக்க வேணும் என்கை –உபாய நாந்யுபாதயா மூளா நிச பலா நிச-என்று திருவடியை முதலிகள் கொண்டாடினால் போலே

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3—ஓடி வந்து -முன்பே அவற்றின் வார்த்தை கேட்க்கையில் உண்டான த்வரையாலே யாதல் -அவற்றை அனுபவிக்கையில் உண்டான த்வரையிலே யாதல் -சடக்கென வர வேணும் என்கிறாள்-என் குழல் மேல்-அவனோடே போக சாம்யம் உண்டாம் படி பண்ணைக் கட வேன் -அவன் தனக்கு தூது போனவர்களுக்கு ததிமுகன் காத்து இருக்கிற காவல் காட்டை அழிக்கக் கொடுத்தான் இறே -அவன் காவல் காட்டை அழிக்க தருகிறேன் உங்களுக்கு -என்கிறாள் –அஹமாவாராயிஷ்யாமி யுஷ் மாகம் பரிபந்தின-என்று திருவடியைப் பற்றி அழிக்கவும் வேண்டா விறே -இவளுடைய ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து இருக்கிற படி -உங்களுடைய வரவால் தளிர்த்து இருக்கிற என்னுடைய குழலிலே –ஒளி மா மலர் ஊதிரோ?-ஒளியை யுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் பண்ணீரோ –ஊதிரோ?-மதுவின் ஸம்ருத்தியாலே கிண்ணகத்தில் இழிவாரைப் போலே இழிய மாட்டாதே நின்று பறக்கிற படி -உங்கள் காரியமுமாய் பர ரக்ஷணமும் ஆனால் ஆறி இருக்கிறது என் என்கை

புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று உனக்கு அசலாம்படி விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும் -நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி-அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே -விஷயங்களைக் காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும் சொல்லுகையாலே –அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு

(புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில்‌ முடியும்படி விட்டு) “புறத்திட்டின்னம்‌ கெடுப்பாயோ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ” (திருவாய்மொழி 6-9-8) என்று ஸம்ஸாரிகளுக்கு போக்‌யமான ஸப்‌தாதி, விஷயங்களினுடைய தர்ஸநத்திலே ஸத்தா ஹாநி பிறக்கும்படி அஸஹ்யமாயிருக்கையாலே அவற்றை விட்டு,-

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8—கிறிசெய்து என்னைப் -எனக்கு முன்பு செய்தது இத்தனையும் விரகு அடித்ததாம் இத்தனை இ றே -அநந்ய கதியாய் இருக்கிற என்னை பிரமிக்கும் படி ஒரு விரகு பண்ணி -அதாகிறது பேறு உன்னதான பின்பு கிருஷியும் உன்னதாக வேண்டாவோ என்கை-புறத்திட்டு-உனக்கு அசலாம் படி விஷயங்களில் தள்ளி-இன்னம் கெடுப்பாயோ?-அநாதி காலம் இழந்தது போராதோ-உன் சுவடு அறிந்த பின்பும் உனக்கு அசலாகவோ -அறிவிலேன் என்றாலும் -அருளாய் என்றாலும் கெடுக்கும் இத்தனையோ –புத்தி நாஸாத் ப்ரணச்யதி -விஷய ப்ராவண்யம் என்றும் விநாசம் என்றும் பர்யாயம் இறே-இன்னம் கெடுப்பாயோ?-பேறு அவனாலே யானாள் இழவும் அவனாலே என்னலாம் இறே -ஸ்தநந்த்ய பிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9–பல -பைதல் கைசு -நோய் முக்கை சு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-நீ காட்டிப் படுப்பாயோ?-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப்தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று

6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும் -அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷய மொன்றுமாக நினைத்து

(தந்தைதாயுண்ணுஞ்‌ சோறு மாநிதி, பூவை யாவை யுமொன்றே யாக்கி) “பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை” ரா.யு என்றும்‌, “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ் ச குரஸ்‌ த்வமேவ, த்வமேவ வித்‌யா த்‌ரவிணம்‌ த்வமேவ த்வமேவ ஸர்வம்‌ மம தேவதே வ” என்றும்‌ ‘வாஸுதேவஸ்‌ ஸர்வம்‌” (கீதை 7-) என்றும்‌ “மாதா பிதா ப்‌ராதா நிவாஸஸ் ஸரணம்‌ ஸுஹ்ருத்‌ கதிர்‌ நாராயண:” (ஸுபால உபநிஷத் )என்றும்‌ சொல்லுகிறபடியே “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த‘” (திருவாய்மொழி 6-5-11) என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதா பித்ரு ப்ரப்‌ருதிகளான ஸர்வ வித பந்துவும்‌ என்றும்‌, ‘ உண்ணுஞ் சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலை யுமெல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்க ளெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான கிருஷ்ணனே என்றும்‌, “வைத்த மா நிதியாம்‌ மதுசூதனையே அலற்றி” (திருவாய்மொழி 6-7-11) என்று ஆபத் ரக்ஷகமாகச்‌ சேமித்து வைத்த அக்ஷயமான நிதியும்‌ விரோதி நிரஸந ஸீலனான அவனே யென்றும்‌, “பூவை பைங்கிளிகள்‌ பந்து தூதை பூம்புட்டில்கள்‌ யாவையும்‌ திருமால்‌ திரு நாமங்களே கூவியெழும்‌’ (திருவாய்மொழி 6-7-3) என்று லோபகரணங்களால்‌ பிறக்கும்‌ ரஸமெல்லாம்‌ ஸ்ரீயபதியினுடைய திருநாமங்களைச்‌ சொல்லவே யுண்டாகா நின்றதென்றும்‌, இப்படி கீழ்‌ விட்டவை யெல்லாம்‌ பகவத்‌ விஷய மொன்றிலுமே யாக்கி, 

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூலபனாய் இருந்தவனையே சர்வவித பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர்

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்
எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் –வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிராசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்
என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-யாவையாலும் பிறக்கும் ரசம் எல்லாம் அவனுடைய திரு நாமத்தால் பிறக்குமாயிற்று இவளுக்கு -அவனுடைய லீலா உபகரணங்களோ பாதியும் போருமாயிற்று இவளுடைய லீலா உபகரணங்களும் -பகவான் நாமங்களை சொல்லி உஜ்ஜீவிக்கும் –திரு நாமச் சுவடு அறிந்த பின்பு லீலா உபகரண தர்சனம் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ராஜ்ய தர்சனம் போலே அஸஹ்யமாய் இருக்கும் -இவளுடைய லீலா உபகரணங்கள் அவனுக்கு போக உபகரணங்களாய் இருக்கும் -இந்த லீலா உபகரணங்கள் திரு நாமத்தை சொல்லிற்று ஆனாலோ என்ன -என்று பெற்றி கேட்க -பந்து தூதை பூம் புட்டிகளால் ஏறாது என்று பிள்ளை பரிஹரித்தார் -அவற்றைத் திரு நாமத்தை சொல்லி அழைத்தால் ஆனாலோ என்னில் அது -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கிறதுக்குச் சேராது –

7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே–கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்றும் ,-தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –என்றும்–கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -என்றும் –புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்-ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக் காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகு போல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ -சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே ! மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே –உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-

(தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னு மார்த்தியோடே) “கோலத்‌ திருமாமகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள்‌ அடியேனின்னம்‌ தளர்வேனோ” (திருவாய்மொழி 6-9-10) “தீயோடுடன்‌ சேர்‌ மெழுகா யுலகில்‌ திரிவேனோ” (திருவாய்மொழி 6-9-6) “கூவிக்கொள்ளுங்காலமின்னம்‌ குறுகாதோ” (திருவாய்மொழி 6-9-9) “புணரேய்‌ நின்ற மரமிண்டின்‌ நடுவே போன முதல்வாவோ” (திருவாய்மொழி 6-10-5) என்று ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய்‌ பெரிய பிராட்டியாரோடே யிருக்கிற உன்னைக்‌ கிட்டப் பெறாதே ஸம்ஸாரத்திலே யிருந்து எத்தனை காலம்‌ இப்படியே அவஸந்நனாகக் கடவேன்‌ என்றும்‌, த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணின வுன்னைக்‌ காண வாசைப்பட்டுக்‌ கிடையாமையாலே அக்‌நி ஸகாஸத்தில்‌ மெழுகு போலே ஸம்ஸாரத்திலே இப்படி எத்தனை காலம்‌ திரியக் கடவேன்‌ என்றும்‌, ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக்யமான உன்‌ திருவடிகளிலே என்னை அருளப் பாடிடுங்காலம்‌ இன்னமணித்தாகாதோ என்றும்‌, யமளார்ஜுநங்களின்‌ நடுவே போன ஸர்வ காரண பூதனே என்றும்‌ உன்‌ திருவடிகள்‌ மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே ப்ரத்யக்ஷமாகக்‌ கிட்டுவதென்றோ என்கிற ஆர்த்தியோடே 

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இறே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே-சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–-அநாதி காலம் இழந்த நான் அநந்த காலம் இழக்கவோ-முறை அறியாத காலம் இழந்தேன் ஆகில் முறை அறிந்த காலமும் இழக்கவோ -ருசி பிறவாத காலம் இழந்தேன் ஆகில் ருசி பிறந்த பின்பும் இழக்கும் அத்தனையோ –

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-அக்னி சகாசத்திலே மெழுகு போலே -தூர இருந்து அழியாது இருத்தல் -அக்னியில் புக்கு நசித்தல் -செய்யப் பெறாதே இருக்கை -நசையின் ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் ஸைதில்யாம் நித்தியமாய் இருக்கை -ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே யாதநா சரீரம் போலே குளிர்ந்த வழி இல்லாத தேசத்தே எத்தனை நாள் தட்டித் திரியக் கட வேன்-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தாமரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-புணர்ந்து நின்ற -இரண்டும் கூடி ஓன்று என்னலாம் படி பொருந்தி நிற்க -அதிலே இடம் கண்டு போய் உன்னைத் தப்புவித்து ஜகத்தை உண்டாக்கினவனே-

8-திரி விக்ரமனாய் குரல் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே –வாத்சல்யமும் –அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே –சௌலப்யமும் –தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –விபோ -என்கையாலே –ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –த்ரி விக்கிரம உபதானத்திலே –ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-சர்வேஸ்வரனாய்-ஆஸ்ரித வத்சலனான தான் –திரு விக்கிரம உபாதானம் பண்ணுகைக்காக பெரு விலையனான அழகை-சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு மகாபலி யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து -தான் சொன்ன படியே அவன் செய்யும் படி விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்- காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று – லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-வையம் அளந்த மணாளன் –6-6-1-மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி –எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –

(ப்ரபத்தி முக்‌யாதிகாரமான பரமார்த்தியை உடையராய்‌) (த்ரிவிக்ரமனென்று தொடங்கி தடந் தாமரை யென்கிற தளவாக)லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே(அ)வ்ரஜம்‌ விபோ” என்று ஸம்ஸாரிகளுடைய தோஷங்களை போக்யமாகக்‌ கொண்டு அவர்களுடைய தண்மை பாராதே “தலை விளாக்‌ கொண்ட எந்தாய்‌” என்கிறபடியே ஒரு நீராகவும்‌ அவர்கள்‌ தாங்களே ப்ரத்யக்ஷிக்கும்படி வடிவைக்‌ காட்டி திருவடிகளை எல்லாருடைய தலைகளிலும்‌ வைக்கையாலே ஆஸ்ரயணோப யோகியான வாத்ஸல்ய ஸெளஸீல்ய ஸெளலப்‌யங்களும்‌, “தே?” என்று தன் பேறாகச்‌ செய்கைக் குறுப்பான ஸ்வாமித்வமும்‌, “விபோ” என்று கார்யோப யோகியான ஜ்ஞாந ஸக்திகளும்‌ த்ரிவிக்ரமாபதாநத்திலே ப்ரகாபபிக்கையாலே “தெய்வ நாயகன்‌ நாரணன்‌ திரிவிக்கிரமன்‌” “மாண் குறள்‌ கோலப் பிரான்‌’ (திருவாய்மொழி 5-9-6) “அடியை மூன்றை இரந்தவாறும்‌” (திருவாய்மொழி 5-10-9) “மின் கொள் சேர்‌ புரி நூல்‌ குறளாய்‌ அகல் ஞாலம் கொண்ட வன்‌ கள்வன்‌” (திருவாய்மொழி 6-1-11) என்றும்‌ ஸுூரிபோக்யனாய்‌ ஸர்வ ஸ்வாமி யானவன்‌ த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணுகைக்காகப்‌ பெரு விலையனான அழகைச்‌ சிறாங்கித் தனுபவிக்கலாம்படி வாமந வேஷ பரிக்‌ரஹம்‌ பண்ணி மஹாபலியுடைய யஜ்ஞ வாடத்திலே சென்று மூன்றடி யென்றிரந்து ப்‌ரஹ்மசாரி வேஷத்தோடே நிற்கிற மஹா வஞ்சகன்‌- “காண்மின்களுலகரென்று கண் முகப்பே நிமிர்ந்த” (திருவாய்மொழி 6-3-1 )நோக்கு வித்‌யை காட்டுவாரைப் போலே லெளகிகர்‌ ப்ரத்யக்ஷிக்கும்படி “அகல் கொள்‌ திசை வையமளந்த மாயன்‌‘ (திருவாய்மொழி 6-4-6) “திசை ஞாலம் தாவி யளந்ததும்‌” (திருவாய்மொழி 6-5-3) “வையமளந்த மணாளன்‌” (திருவாய்மொழி 6-6-1) “மண்ணும்‌ விண்ணும்‌ கொண்ட மாய வம்மான்‌’” (திருவாய்மொழி 6-9-2) “ஓரடியால்‌ எல்லா வுலகும்‌ தட வந்த” (திருவாய்மொழி 6-9-6) “தாவி வையம்‌ கொண்ட தடந் தாமரைகட்கே” (திருவாய்மொழி 6-9-9) என்று விஸ்த்ருதமாய்‌ திக்குகளோடே கூடின பூமியையும்‌ உபரிதந லோகங்களையும்‌ தென்றலுலாவினாப்‌ போலே ஸுக தரமாம்படி எங்குமொக்கப்‌ பரப்பி யளந்து கொண்ட நிரதிஸய போக்‌யமாய்‌ அதிஸுகுமாரமான திருவடிகள்‌.

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-சர்வேஸ்வரனாய் -ஆஸ்ரித வத்சலனாய் -தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியாய் அபேக்ஷிதம் செய்து கொடுக்குமவன் திருஅடிகளிலே

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-தன்னுடைமை பெறுகைக்கு தான் அர்த்தியாய் -வடிவை குறுக விட்டு மிக்க அழகை யுடையவனாய் -ஸுலப்யத்தையும் அழகையும் திரு வல்ல வாழிலே ஆஸ்ரிதரை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை காண்பது எஞ்ஞான்று கொலோ-மலர்த்தாமரை -அப்போது அலர்ந்த தாமரை –

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9–இந்திரன் இழந்தது த்ரை லோக்யம் இறே -த்ரை லோக்யத்தையும் தா என்றால் இசையால் -அடி என்றால் உதாரன் ஆகையாலே இசையக் கூடும் என்று அடியை இரந்தான்-ஓர் அடிக்கு சிறையிட்டு வைக்க நினைக்கிறான் ஆகையாலே மூன்றை இரந்தான் – இரந்தவாறும்- தன்னதை அவனதாக்கி-தான் அர்த்தி யான படியும்

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-மின்னை வென்று ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமான சேர்த்தியை யுடைத்தான திரு யஜ்ஜோபவீதத்தை யுடைய ஸ்ரீ வாமனனாய் –
வி நீதமாய் ஆகர்ஷகமான வடிவைக் காட்டி இசைவித்து -பூமிப் பரப்பை தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட-வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன-தன் உடைமை அவனதாக்கி அவன் தந்தானாம் படி பண்ணின பண்ணின மஹா வஞ்சகன் திருவடிகளில் –-ஸ்ரீ வாமன வ்ருத்தாந்த கதனம் மின்னிடை மடவாருக்கு தோற்றுகிற தோற்றரவுக்கு ஸூ சகம் -இதில் பிறந்த பிரணய ரோஷம் மின்னிடை மடவாராக்கைக்கு ஸ்ரீ வாமனனாய் வந்து தோன்ற கிழக்கு வெளுத்த படி -மஹா பலியை அர்த்தியாய்ச் சென்று வஞ்சித்து பூமிப் பரப்பு அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டால் போலே யாயிற்று பிரணய கோபத்தால் -அல்லோம் -என்றவர்களை திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட படி

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்
தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-நோக்கு வித்யை காட்டுவரைப் போலே இது ஓர் ஆச்சர்யம் பாருங்கோள் என்று லௌகிகர் எல்லாருடையவும் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை -உங்கள் தலையிலே திருவடிகளை வைக்க வாருங்கோள் -என்றால் இசைவார் இல்லையே

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-பரப்பை யுடைத்தான பூமி அடங்கலும் தன் திருவடிகளின் கீழே கொண்ட ஆச்சர்யத்தை யுடையவன் -வரையாதே தீண்டும் ஸ்வ பாவ சாம்யத்தாலே சொல்லுகிறார் என்னப்பன் தன் மாயங்களே -இவ் வபதானம் தமக்கு உதவ பலித்தது என்று இருக்கிறார் -ஆச்சர்ய சேஷ்டிதங்களையே

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-மஹா பலியால் பூமி அபஹ்ருதை யாயிற்று என்று கேட்டவாறே அப்படுக்கையில் பொருந்தாதே திக்குகளோடே கூடின பூமியை அநாயாசேன எல்லை நடந்து கொண்டதும்-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-உகாதவரையும் கூட தன்னை இரப்பாளன் ஆக்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட வ்யாமோஹத்தாலே அநந்யார்ஹம் ஆக்கி தன்னை போக்தாவானவனுக்கு

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–6-9-2–மஹா பலியாலே அபஹ்ருதமான த்ரை லோக்யத்தையும் இந்திரனுக்கு வாங்கிக் கொடுத்த –கொண்ட என்றது இந்திரன் பேறு தன் பேறாய் இருக்கிற படி -பிறந்த வன்றே ப்ரஹ்மசாரியாய் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு இரந்து -சிறு காலைக் காட்டி அபஹரித்து பெரிய காலாலே அளந்து கொண்ட ஆச்சர்யங்கள் –-அம்மானே-இது எல்லாம் வேண்டிற்று உடையவனாகை இறே

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்!
உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6–ஓர் அடியை பாய் வைத்து -பரம்ப வைத்து -அத் திருவடியின் கீழே கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் அளந்து கொண்டு-தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த-மற்றை ஓர் அடியால்-சகல லோகங்களையும் ஸ்பர்சித்த-தட வந்த -தடவின -தென்றல் பட்டால் போலே உஜ்ஜீவிக்கும் படி இருக்கை –மாயோன்! -ஆச்சர்ய பூதனே -இது எல்லாம் தன் பேறாகச் செய்த வ்யாமோஹத்தை உடையவன் என்கை

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –/தடந்தா மரை கள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று -இத்யாதி படியே திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும் உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும் அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை -என்று திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான திரு மலையிலே கண்டு –அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –நிகரில் புகழாய்-என்று தொடங்கி-திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்கள அடைவே அனுசந்தித்துக் கொண்டு –புகல் ஓன்று இல்லா -என்றும் அடியேன் -என்றும் தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-

(இணைத் தாமரைகள்‌ காண இமையோரும்‌ வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு) “எந்நாளே நாம்‌ மண்ணளந்த” (திருவாய்மொழி 6-10-6) இத்யாதி, திருவுலகளந்தருளின ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக் யமாய்ச்‌ சேர்த்தி யழகை யுடைத்தான திருவடிகளை நாம்‌ காண்பதெப்போதோ என்று நித்ய ஸூரிகளும்‌ வந்தநுபவிக்க ஆசைப்பட்டு வரும்படி “அன்று ஞாலம்‌ அளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை‘ (திருவாய்மொழி 3-3-8) என்று திருவுலகளந்தருளின ஸ்ரமந் தீர அச் செயலாலே ஸர்வ ஸ்மாத் பரனானவன்‌ விடாயர்‌ மடுவிலே சேருமாப் போலே உகந்து நிற்கிற ‘ உலகுக்குத்‌ திலதமாய்‌ நின்ற திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 6-10-1 என்று ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு முக்‌யமான ஆபரணமாயிருக்கிற திருமலையிலே கண்டு (அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே அநுஸந்தித்தவர்‌) ‘ “அகலகில்லேன்‌ இறையும்‌”(திருவாய்மொழி 6-10-10) இத்யாதி புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு வாத்ஸல்யாதி, குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டு தம்முடைய அநந்ய கதித்வாநுஸந்தாந பூர்வகமாக பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே பூர்ண ப்ரபதநம்‌ பண்ணினவர்‌ 

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-நித்ய ஸூரிகள் பாசுரம் இருக்கிற படி -பரம பதத்தில் மேன்மையை அனுசந்திக்கிற நாம் சர்வ ஸூலபமான திருவடிகளைக் கிட்டுவது என்றோ -என்று -இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கு வருவது சீல குண அனுபவம் பண்ண -விஷயம் உண்டாகையாலே வ்யக்தமாக அனுபவிக்க லாவது இங்கே -சங்கோசம் அற்றவர்களுக்கும்-எந்நாள் என்னும் படி இறே சீல குணத்தில் ஏற்றம்

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-இந்திரனுடைய பூமியை மஹா பலி பறித்துக் கொள்ள எல்லை நடந்து மீட்டு பூமியை ரஷித்த உபகாரகன் –-பரன் –சர்வேஸ்வரன்-சென்று சேர் திரு வேங்கட மாமலை–சேஷியானவன் விரும்புகிற தேசம் சேஷ பூதனுக்கு ப்ராப்யமாகச் சொல்ல வேணுமோ

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
.–6-10-10-வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய் -பிராட்டியோட்டை பழக்கத்தால் ஆஸ்ரிதரை கைவிடாத ஒப்பில்லாத குண பிரதையை யுடையையாய் -எல்லோரோடும் அவரஜனீயமான சம்பந்தத்தையும் உடையையாய் -உன்னை அறியாதே இருக்கிற எனக்கு குணங்களை அறிவித்து அத்தாலே என்னை நடத்துவதும் செய்து திரு நாட்டில் உள்ளாரும் திருமலையில் எனக்கு ஆஸ்ரயிக்கைக்கு எளிதாம் படி வந்து நின்று அருளினவனே –-சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான் அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு உன் திருவடிகளே உபாயமாகப் பற்றினேன் -புருஷார்த்த சாதனமாக என் தலையில் உள்ள வற்றை எல்லாம் தவிர்ந்து என் தலைக்கும் திருவடிகளுக்கு நடுவு விளக்கு வாய் தெரியாத படி செறிந்து புகுந்தேன் என்றுமாம் 

10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு (சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால் பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு )- பத்துடை அடியவரிலே –பிணக்கற அறு வகை சமயமமும் -என்கிற பாட்டிலே –வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித் தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி அத்தாலே-எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-என்னான் செய்கேன் –5-8-3-என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-

(பிணக்கறத்‌ தொடங்கி வேதப் புனித விருக்கை நாவில்‌ கொண்டு) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ஞான விதி பிழையாமே அச்சுதன்‌ தன்னை மேவித்‌ தொழுதுய்ம்மினீர்கள்‌’ (திருவாய்மொழி 5-2-9) என்கிறதளவாகக்‌ கீழுபதேஸித்த ஸாத்‌ய ஸாதந பக்தி ஸ்ரவணத்தாலே அதினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தா நத்தாலும்‌ ஸ்வ பாரதந்த்ர்யா நுஸந்தானத்தாலும்‌ ஸோகம்‌ பிறக்கையாலே தம்முடைய ப்ரபத்தி நிஷ்டை துணையாம் படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்கு

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே–வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்-இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்-புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யற-பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே-அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்-அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –
அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்-தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை
ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே
.–5-2-9-அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் -வேதத்தில் விபூதி விஷயமாக சொன்னவை அன்றிக்கே -பகவத் குணங்களையும் வடிவு அழகையும் ப்ரதிபாதியா நின்றுள்ள ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு –
அச்சுதன் தன்னை –-அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து –நத்யஜேயம் –என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே-
வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது –-பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து--பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –-மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–
அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் – -பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –-கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –-மேவித் தொழுது உய்ம்மின்கள்-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5–தம்முடைய வெறுமை திரு உள்ளத்தே படுகைக்கு திரியவும் சொல்லுகிறார் -நீ எனக்கு கைப்படும் படியாக நான் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ -உன்னோபாதி நான் என்னை அறிவேனோ -என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்க்கிறார் –-எனக்கு -இந்த சர்வ சக்தியைக் கண்ட வாறே -தன் கார்யம் தானே செய்து கொள்ளுகிறான் என்று இருக்கிறாயோ –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3–உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இ றே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ

11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் –அதாவது –திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –என்கிற தம்முடைய உக்தியாலும் –(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு ) அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் -தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை

(தந்தனன்‌ களை கணிலம்‌ புகுந்தேனென்று ஸ்வ ஸித்‌தோபாய நிஷ்டையை உக்த் யநுஷ்டாங்களாலே காட்டுகிறார்‌ என்கிறார்‌) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே”(திருவாய்மொழி 6-3-9) “திருவிண்ணகர்‌ மன்னு பிரான்‌ கழல்களன்றி மற்றோர் களை கணிலம்‌ காண்மின்களே‘ (திருவாய்மொழி 6-3-10) என்கிற தம்முடைய உக்தியாலும்‌ “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து” (திருவாய்மொழி 6-10-11 என்கிற தம்முடைய அநுஷ்டானத்தாலும்‌ தமக்கிந்த ஸித்‌தோபாயத் திலுண்டான நிஷ்டையை ப்ரகாஸ்ரிப்பிக்கிறார்‌ என்கிறார்‌ ஆறாம் பத்தில்

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9—தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.
–6-3-10-நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானை
ப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது-படிக் கேழில்லாப் பெருமானைப்-இப்படிக்கு தனக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்