ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-13 –உபதேஸ பாதம் -(208 –213) -19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -(211 -212-)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

(1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

13 –உபதேஸ பாதம் -208 –213—மொத்தம் –6– ஸூரணைகள் –மூன்று அதிகரணங்கள் —
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—மொத்தம்–3-ஸூரணைகள்
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212-மொத்தம்—2-ஸூரணைகள்
20-மங்கலா சரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–ஒரே ஸூரணை

ஆக இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகதயா தீர்க்க சரணாகதியாய் இருக்கிற திரு வாய் மொழிக்கு
மற்றும் ஆச்சார்யர்கள் அருளிச் செய்யும் அர்த்த யோசனைகளை அருளிச் செய்கிறார் —இனி மேல்‌ திருமந்த்ரத்திலும்‌ சரம ஸ்லோகத்திலும்‌ ஸங்க்‌ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்திலே விவரித்தாப் போலே திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத்‌ திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச்‌ சொல்லுகையாலே அர்த்த பஞ்சகமும்‌ இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அந்த அர்த்த பஞ்சகத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு  உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அவை தன்னிலும்‌ உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ சொல்லக்‌ கடவதென்கிறார்‌-

மூன்றில்‌ சுருக்கிய ஐந்தையும்‌ உயர்‌ திண்‌ அணை ஒன்று பயில்‌ ஏறு கண்‌ ௧ரு வீடு சொன்னால்‌ ஒருக்‌ கொண்ட நோற்ற நாலும்‌ எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌ அருளினன்‌ வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌, தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணிசெய்யென்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்‌ டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயமென்னும்‌.–சூரணை -211–

(மூன்று -திருவிருத்தம் -திருவாசிரியம் பெரிய திருவந்தாதி -இவற்றில் சுருக்கிய ப்ரமேயம் -ஐந்து -அர்த்த பஞ்சுகம் –இத்தை இருபதில் விசதமாக்கி-என்பதில் பரப்பி -என்றும் கொண்டு –-அருளினன் -வீடு பெற்ற -இரண்டிலும் உபாய ஸ்வரூபத்தையும் உபேய ஸ்வரூபத்தையும் -என்றும் கொண்டு
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே
இந்த இரண்டில் ஒன்றான உபேய -பிராப்தி ஸ்வரூபமே ப்ரமேயம் –என்றவாறு )

அதாவது-மந்த்ர ஸ்லோககங்களில் -சங்கரஹேன உக்தங்களான அர்த்த விசேஷங்களை
த்வயத்திலே விவரிக்குமா போலே – பூர்வ பிரபந்த த்ரயத்திலும் சங்கரஹேன சொல்லப் பட்ட அர்த்த பஞ்சகத்தையும் –ஸ்ருதி சாயையாலே அந்வய ரூபேண -ஸ்வ அனுபவ முகத்தாலே — பரத்வத்தில் பரத்வத்தை பிரதி பாதித்த -உயர்வற உயர் நலமும் —1-1–இதிகாச புராண பிரக்ரியையாலே –அந்வய வ்யதிரேகங்கள் -இரண்டாலும் -பர உபதேச முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -திண்ணன் வீடும் –2-2–மோஷ பிரதத்வ கதனத்தாலே பரத்வத்தை பிரதி பாதித்த -அணைவது அரவு அணையும் –2-8–அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -ஒன்றும் தேவும்-4-10- -ஆகிற
நான்கு திரு வாய் மொழியாலும் பர ஸ்வரூபம் —

திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்தில்‌ சுருங்கச்‌ சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தையும்‌ திருவாய்மொழியில்‌ (உயர்‌ திண்‌ அணை ஒன்று) முதல்‌ திருவாய்மொழியான உயர்வற உயர் நலத்தில்‌ ஸ்ருதிச் சாயையாலே அந்வய ரூபேண ஸ்வாநுபவ ரூபத்தாலே பரத்வத்திலே பரத்வத்தையும்‌, திண்ணன்‌ வீட்டில்‌ (திருவாய்மொழி 2-2 இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அந்வய வ்யதிரேகங்கள்‌ இரண்டாலும்‌ பரோபதேஸ முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தையும்‌, அணைவதரவணையில்‌ (திருவாய்மொழி 2-8 மோக்ஷ ப்ரதத்வத்தாலே வந்த பரத்வத்தையும்‌, ஒன்றும்‌ தேவிலே (திருவாய்மொழி 4-10) அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக உயர்வற உயர்நலம்‌ திண்ணன் வீடு அணைவதரவணை ஒன்றுந் தேவு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பர ஸ்வரூபத்தையும்‌; 

உயர்வற உயர் நலம் —1--முதல் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று-நாநா ரத்ன பூர்ணமாய்-அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரி பூர்ணனாய் எல்லாப் படியாலும் எல்லாரிலும் மேற்பட்டு சர்வேஸ்வர ரூபனாய் ஸ்ரீ யபதியாக -அபௌருஷேயமாய்க் கொண்டு ஸூ த்ருட பிரமாணமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானை பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமை அனுபவித்தபடியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

திண்ணன் வீடு –2-2-–இப்பரத்வம் முதல் திருவாய் மொழியிலே சொல்லிற்று அன்றோ என்னில்–இவர் தாம் ஒரு கால் அனுபவித்த குணத்தையே அபூர்வமாக அனுபவிக்க வல்ல அபி நிவேசத்தை உடையவர் – அவனும் அநுபூத குணங்களையே அபூர்வமாக அனுபவிப்பிக்க வல்லவன் – அதுவே யன்று-அங்கு தாம் அனுபவித்தார் -இங்கு பிறர்க்கு உபதேசிக்கிறார்-அங்கு அன்வயத்தாலே உபபாதித்தார் -இங்கு -அன்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் உபபாதிக்கிறார் அங்கு சுருதி பிரகிரியையாலே -இங்கு இதிகாச புராண ப்ரக்ரியையாலே – அங்கு பரத்வத்திலே பரத்வம் இங்கு அவதாரத்தில் பரத்வம் –

அரவு அணை –2-8-இது திருவாய் மொழி பரத்வ உபதேசம் என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்
பல இடத்திலும் பரத்வம் சொல்லா நின்றது -மோக்ஷ பிரதத்வம் தனியே சொல்ல வேண்டுவது ஓன்று -அத்தைச் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்வார்
– இவை தான் ஒன்றை ஓன்று ஒழிந்து இராது –மோக்ஷ பிரதத்வம் சர்வேஸ்வரத்தோடே வ்யாப்தம் -சர்வேஸ்வரனாகில் மோக்ஷ பிரதனாய் இருக்கும்
மோக்ஷம் ஆகிறது -தனக்கு அசாதாரணமாய் முக்த ப்ராப்யமான தன்னுடைய ஐஸ்வர்யம்
அதாகிறது பிராட்டி திரு வனந்த ஆழ்வான் முதலான நித்ய ஸூ ரிகளை பரிகாரமாக உடைத்தாய்
அளவுடையார்க்கும் ஸ்வ யத்ன சாத்தியம் அன்றிக்கே தன்னாலே தன்னைப் பெறுவார்க்கு அநாயாஸ ஸித்தமாய்-நிரதிசய ஸூக ரூபமாய் அபரிச்சேதயமாய் -அதி ஸ் ப்புடமாய் சர்வ உத்க்ருஷ்டமான ஐஸ்வர்யம் –

ஒன்றும் தேவும்-4-10–இதில் ஈஸ்வரனும் திருத்த ஒண்ணாத என்று கை விட்ட சம்சாரிகளை தம்முடைய கிருபாதிசயத்தாலே திருத்த உத்யோகித்து அவனுடைய பரத்வ ஸுலப்யங்களை உபதேசித்து –இவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உத்பாதகனான ஸ்ரீ யபதியே சர்வ ஸ்மாத் பரன் என்றும் பிரதிபாதித்து இவன் அரியன் என்று கை வாங்க வேண்டாத படி திரு நகரியிலே சர்வ ஸூ லபனாய் வந்து சந்நிஹிதனான அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –சம்சாரத்துக்கு பீஜம் -பகவத் பரத்வ ஞானம் இல்லாமையும் ஸ்வ ஸ்வாதந்தர்ய ப்ரபத்தியும் யாயிற்று
அவற்றைத் தவிர்க்கைக்காக அவனுடைய பரத்வத்தை உபதேசித்து அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்-முதல் திருவாய்மொழி யிலே சாஸ்த்ரா சுத்தமான பகவத் பரத்வத்தை பகவத் பிரசாதத்தாலே கண்டு அனுபவித்தார்-திண்ணன் வீட்டிலே வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராண பிரக்ரியாலே பரத்வத்தை பேசினார்-அணைவது அரவணை மேல் -மோக்ஷ பிரதத்வம் சர்வேஸ்வரனது ஆகையால் மோக்ஷ ப்ரதன் என்கிற ப்ரசங்கத்தாலே பரத்வத்தை அருளிச் செய்தார் -இதில் உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்-என்று முதலிலே ப்ரஸக்தமான சுருதி சாயலாலே பரத்வத்தை உபதேசிக்கிறார் –

பகவத் சேஷத்வதிலும் தத் காஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யம் என்று
பிரதி பாதித்த -பயிலும் சுடர் ஒளியும் —3-7- சேஷத்வ பஹிர் பூதங்களான ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் என்கிற வ்யதிரேகத்தாலே சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று பிரதி பாதித்த -ஏறாளும் இறையோனும்-4-8–பகவானுக்கு இவ் ஆத்ம வஸ்து பிரகார தயா சேஷமாய் -ப்ரக்ருதே பரமாய் -ஞான ஆனந்த லஷணமாய்-இருக்கும் என்பதை பிரதிபாதித்த -கண்கள் சிவந்தும் –8-8- அந்ய சேஷ பிரசங்கமும் – அசஹ்யமாம் படி அதின் அனந்யார்ஹத்வத்தை பிரதி பாதித்த -கரு மாணிக்க மலையும் -8-9–ஆகிற நான்கு திரு வாய் மொழியாலும் ஸ்வ ஸ்வரூபமும்-

(பயிலேறு கண்‌ ௧ரு ) பயிலும்‌ சுடரொளியில்‌ (திருவாய்மொழி 3-7] இவ் வாத்மாவுக்கு ஸேஷத்வமே ஸ்வரூபமாகையாலே அதினுடைய எல்லையான பாகவத ஸேஷத்வத்தையும்‌, ஏறாளுமிறையோனில்‌ (திருவாய்மொழி 4-8) அவன்‌ வேண்டாத ஆத்மாத்மீயங்களை வேண்டேன்‌ என்று இவ் வாத்மா ஸேஷமான போது உபாதேயமாய்‌ அல்லாத போது த்யாஜ்யமென்கிற வ்யதிரேகத்தாலே ஸேஷத்வமே ஸ்வரூபமென்னுமிடத்தையும்‌ கண்கள்‌ சிவந்திலே “சென்று சென்று பரம் பரமாய்‌” (திருவாய்மொழி 8-8-5) இத்யாதி யாலே ஸேஷத்வாஸ்ரயமான ஆத்ம வஸ்துவினுடைய ப்ரக்ருதே:பரத்வ ஜ்ஞாநாநந்த அமலத்வங்களையும்‌ கரு மாணிக்க மலையிலே அந்த ஸேஷத்வத்தினுடைய அநந்யார்ஹத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக பயிலுஞ்சுடரொளி ஏறாளுமிறையோன்‌ கண்கள் சிவந்து கரு மாணிக்கமலை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ ஸ்வ ஸ்ரூபத்தையும்‌, 

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை பற்றுகைக்கு உடலான அஹங்கார மம காரங்கள் த்யாஜ்யம் என்ற -வீடு முன் முற்றவும் –1-2- அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்ற -சொன்னால் விரோதமும் –3-9- ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்ற -ஒரு நாயகமும் –4-1- சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்கிற -கொண்ட பெண்டிரும் –9-1- ஆகிய நாலு திரு வாய் மொழிகளும் விரோதி ஸ்வரூபம் —

பயிலும் சுடர் ஒளி —3-7–பகவத் குணங்களே தாரகமாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஜென்ம வருத்தங்களால் குறைய நின்றார்களே யாகிலும் அவர்கள் எனக்கு நாதர் -நான் அவர்களுக்கு அடியன் -என்று அவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவிக்கிறார்-பகவத் ஸுலப்ய த்தை அர்ச்சாவதார பர்யந்தமாக உபதேசித்தார் கீழே சம்சாரிகளுக்கு உபதேச நிரபேஷமாக பகவத் ப்ரவணராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களோட்டை சம்பந்தத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார்-எம்மா வீடு –ப்ராப்யத்தின் உடைய பிரதம அவதி -இது – சரம அவதி -கச்சதா மாதுலம் குலம்-

ஏறாளும் இறையோனும்-4-8-அவனுகுக்காக கண்ட என்னுடைய ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஆதரணீயம் அன்றாகில் எனக்கும் அவற்றால் கார்யம் இல்லை என்று அவற்றால் தாம் நசை அற்ற படியை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்-கோவை வாயாள் -திருவாய் மொழியில் படி விரும்பினவன் இப்படி உபேக்ஷித்த பின்பு என்னாலும் என் உடைமையாலும் எனக்குத் தான் என்ன கார்யம் உண்டு என்கிறாள் –ஆத்மாத்மீயங்களை அவன் விரும்பின வழியாலே விரும்ப வாயிற்று பிராப்தம் –அல்லது தான் உகந்த வழியாலே விரும்புமது தேஹாத்ம அபிமானத்தோடே ஒக்கும் அத்தனை – முந்துற ஆத்மாவை வேண்டேன் என்னாதே-உடைமையை வேண்டேன் -என்றது -இவள் தன்னிலும் இவள் உடைமையை அவன் விரும்புகையாலே அவன் விரும்புன அடைவே உபேக்ஷிக்கிறாள்-என்னுடைமையை வேண்டேன் என்று திரளச் சொல்லாதே வ்யக்தி தோறும் வேண்டேன் என்கிறது என் என்னில் – அவன் வ்யக்தி தோறும் விரும்புகையாலே -நதேஹம் ந பிராணன் -நஹிமே ஜீவிதே நார்த்த-ந தேவ லோகா க்ரமணம்

கண்கள் சிவந்தும் –8-8—இந்த ஸ்வரூப வை லக்ஷண்யத்தை இவர் நெஞ்சிலே படுத்தவே இவர் நம்மை விடார் -அது செய்யும் இடத்தில் முதலிலே ஆத்ம ஸ்வரூபத்தை பாரீர் என்னில் -அவ்வாயன்றி நான் அறியேன் -என்று நம்முடைய குணங்களிலே கால் தாழ்ந்து புறம்பு ஒன்றிலே போகாதவர் ஆகையால் -மின்மினி போல் இருக்கிற இது கொடு கார்யம் என் -என்று அத்தை கால் கடைக் கொண்டு பிடி தாரார் என்று பார்த்து –தன் வடிவைக் காட்டி இவரை வர வணைத்து-இவருடைய ஸ்வரூபம் தனக்கு பிரகாரமாய் -தன்னைக் காணும் காட்சிக்குள்ளே காணலாம் படி இருக்கிறபடியையும் தனக்கும் நிறம் கொடுக்கும் படியான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கிற படியையும் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதர் ஆகிறார்-முதல் இரண்டரைப் பாட்டாலே தன் வடிவு அழகைக் காட்டி அவ்வழி யாலே ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறனாய் இருக்கிறது – முதல் இரண்டரைப் பாட்டு ஆத்மாஸ்ரயம் என்னும் இடத்தை காட்டிக் கொடுக்கைக்காக ஆஸ்ரயமான தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் என்றும் சொல்லுவர்-இருத்தும் வியந்தில் அழகு பின்னாட்டுகிறது என்றும் சொல்லுவர்கள்

கரு மாணிக்க மலையும் -8-9–ப்ரீதி பாரவஸ்யத்தாலே-தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையை பிராப்தராய் ஸ்வ தசையை அந்யாபதேசத்தாலே பேசி இனியராகிறார் –ப்ரீதியில் அந்யாபதேசம் உள்ளது இத்திரு வாய் மொழியே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும்-அவனோடே சம்ச்லேஷித்தமை இவள் வடிவிலே வியக்தமாம் அடையாளங்களும் உண்டு -ஆனபின்பு அவனுக்கே கொடுக்கப் பாருங்கோள் -என்று அறத்தோடு நின்று அவர்கள் செய்கிறவற்றை -நீங்கள் கேட்க்கிற அளவுள்ள – இவை எல்லாம் குறைவற்ற விஷயம் -இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் இவள் தான் அங்கே அநன்யார்ஹை ஆனாள்-நீங்கள் செய்கிற இவற்றை தவிருங்கோள் -என்று -விலக்குகிற தோழி வார்த்தையாய் இருக்கிறது –

(வீடு சொன்னால்‌ ஒரு கொண்ட) வீடுமின் முற்றத்தில்‌ (திருவாய்மொழி 1-2) ஸ்வரூப விரோதி யான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம்‌ என்றும்‌, சொன்னால்‌ விரோதத்தில்‌ (திருவாய்மொழி 3.9) உபாய விரோதியான அஸேவ்ய ஸேவை முதலானவை த்யாஜ்யம்‌ என்னுமிடத்தையும் – ஒரு நாயகத்தில -1- ப்ராப்ய விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்னுமிடத்தையும் கொண்ட பெண்டிரில் -திருவாய் -9-1-ப்ராப்தி விரோதி யான ஸரீர ஸம்பந்திகள்‌ தொடக்கமானவை த்யாஜ்ய மென்னு மிடத்தையும்‌ சொல்லுகையாலே ஆக வீடுமின் முற்றவும்‌ சொன்னால்‌ விரோதம்‌ ஒருநாயகம்‌ கொண்ட பெண்டிர்‌ என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ விரோதி ஸ்வரூபத்தையும்‌

(வீடு சொன்னால்‌ ஒரு கொண்ட) வீடுமின் முற்றத்தில்‌ (திருவாய்மொழி 1-2) ஸ்வரூப விரோதி யான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம்‌ என்றும்‌, சொன்னால்‌ விரோதத்தில்‌ (திருவாய்மொழி 3.9) உபாய விரோதியான அஸேவ்ய ஸேவை முதலானவை த்யாஜ்யம்‌ என்னுமிடத்தையும் – ஒரு நாயகத்தில -1- ப்ராப்ய விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்னுமிடத்தையும் கொண்ட பெண்டிரில் -திருவாய் -9-1-ப்ராப்தி விரோதி யான ஸரீர ஸம்பந்திகள்‌ தொடக்கமானவை த்யாஜ்யமென்னு மிடத்தையும்‌ சொல்லுகையாலே ஆக வீடுமின் முற்றவும்‌ சொன்னால்‌ விரோதம்‌ ஒருநாயகம்‌ கொண்ட பெண்டிர்‌ என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ விரோதி ஸ்வரூபத்தையும்‌

வீடு முன் முற்றவும் –1-2-அவர்களைத் திருத்தும் விரகு எங்கனே என்று பார்த்து அருளி சேதனர் ஆகிறார் -பொல்லாது கண்டால் கை விடவும் -நல்லது கண்டால் கைக் கொள்ளவும் கடவராய் இருப்பர்
ஆன பின்பு சம்சாரத்தின் தன்மையைக் காட்டியும் பகவத் விஷயத்தின் நன்மையைக் காட்டியும்
திருத்துவோம் என்று பார்த்து அருளி இவர்களுக்கு சம்சாரத்தின் உடைய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும் சர்வராலும் ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும் உபதேசித்து அருளி அவனை பஜியுங்கோள்-என்று பக்தி யோகத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதமும் –3-9-தாம் பகவத் ப்ரவணர் ஆனால் போலே சப் தாதி விஷயங்களில் மிகவும் ப்ரவண ராய் அதுக்கு உறுப்பாக மனுஷ்யாதிகளை கவி பாடி திரிகிற படியைக் கண்டு தம்முடைய இழவை எல்லாம் மறந்து ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் அத்யந்த ஸூ ந்தரனாய் ஸ்ரீ யபதியாய்-இப்படி இருக்கையாலே கவி பாடுகைக்கு விஷயம் போந்து தன்னைப் பாடின கவியைக் கொண்டாடுகைக்கு ஈடான பரிஜனங்களை யும் உடையவனாய்-கேட்டாரார் வானவர்கள் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ஈடான விபூதிகளையும் உடையவனாய் -எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்கும் என்னும் படி -ஸ்வ ஆராதனாய் அவர்களுக்கு போக மோஷாதி சகல புருஷார்த்தங்கள் கொடாவிடிலும்-தன்னைப் பாடுகையே பிரயோஜனம் போந்து இருக்கிற எம்பெருமானை ஒழிய-கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றிக்கே -கவி பாடினார்க்கு தருவதும் ஒன்றும் இன்றிக்கே தங்கள் நிஸ் ஸ்ரீ கராய் அதுக்கு மேலே கவி பாடினவர்கள் சந்திக்கும் தனை நாள் -நிலை நிற்பதுவும் செய்யாதே முடியும் ஸ்வபாவராய் கவி பாடினால் ஒரு பிரயோஜனம் பெறாமையே அன்றியே கவி பாட்டு உண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை ஏறிட்டு பாடுகையாலே அவனுக்கு உள்ள தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவனுக்கு அவத்யாவஹராய் அபிராப்த விஷயத்தில் பாடுகையாலே
கவி பாடினார் நரகம் புகும் படி இருக்கிற ஷூ த்ரரை பகவத் அர்ஹமான உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு ஸ்துதிக்கை ஈடு அன்று என்று அருளிச் செய்து -உங்களை போலே அன்றியே நான் வேறு சிலரை ஸ்துதிக்கை அநர்ஹ கரணனாக பெற்றேன் என்று ப்ரீதராய் முடிக்கிறார்

ஊனில் வாழ் உயிரிலே ப்ரீதிக்கு நித்ய ஸூரிகளை சஜாதீயராக தேடினால் போலே இங்கு வியசனத்துக்கு சம்சாரிகளை சஜாதீயராகக் கருதி இங்கண் அல்லாமையாலே அவர்களை திருத்தப் பார்க்கிறார் — இவர் தம்முடைய இழவுக்கு கூப்பிடுகை தவித்து தங்கள் இழவுக்கு கூப்பிடும்படி பண்ணுவதே சம்சாரிகள் —

ஒரு நாயகமும் –4-1-கீழ் பகவத் அனுபவத்தால் ஹ்ருஷ்டரானவர் அந்த ப்ரீதி ப்ரகரஷத்தாலே இவ்விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளில் மண்டி கிடக்கிறவர்களைப் பார்த்து –இவர்கள் இவற்றினுடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை அறியாமையால் இவற்றை விரும்புகிறார்கள் -என்று இவற்றினுடைய தோஷங்களை உபபாதியா நின்று கொண்டு பரம புருஷார்த்த பூதனான எம்பெருமான் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியில் பகவத் ஸமாச்ரயணத்தில் நோக்கு-சொன்னால் விரோதம் – திருவாய் மொழியில் பகவத் அர்ஹ காரணங்களைக் கொண்டு அபிராப்தமாய் நிஷ் பிரயோஜனமான விஷயங்களை கவி பாடி பாழே போக்காதே கொள்ளுங்கோள் என்றார் அத்தாலே ஸித்தித்த த்ரவ்யமும் அஸ்திரம் என்கிறது இதில் –

கொண்ட பெண்டிரும் –9-1- ஸமஸ்த சேதனரையும் குறித்து சோபாதிக பந்துக்களான புத்ர மித்ராதிகளை விட்டு நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றுங்கோள் -என்று உபதேசிக்கிறார்-இப்படி நிருபாதிக பந்து அவனே -புறம்பு உள்ளார் அடங்க சோபாதிக பந்துக்கள் -என்று அனுசந்தித்து -அத்தால் வந்த ப்ரீதியாலே எல்லாரும் சோபாதிக பந்துக்களை விட்டு அவனையே பற்றுங்கோள் என்று பரோபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –

நோற்ற நோன்பு இலேன் –என்று ஆகிஞ்சன்ய பூர்வமாக -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக
தந்து ஒழிந்தாய்–என்ற நோற்ற நோன்பும்–5-7- களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்–என்று அநந்ய கதித்வ பூர்வகமாக -கழல்கள் அவையே சரணாக கொண்ட -என்ற -ஆரா அமுதும் –5-8- வைகலும் வினையேன் மெலிய -என்று பக்தி பாரவச்யம் முன்னாக – நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்ற -மானேய் நோக்கும் –5-9- எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்று தரித்து நின்று அவன் குணங்களை அனுசந்திக்க மாட்டாத சைதில்யம் செல்லா நிற்க –நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய் -என்ற -பிறந்தவாறும்–5-10- -ஆகிற நாலு திரு வாய் மொழியாலும் உபாய ஸ்வரூபமும்

நோற்ற நாலும்‌) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌’ (திருவாய்மொழி 5-7-1 என்று தம்முடைய ஆகிஞ்சந்ய பூர்வகமாகவும்‌ ஆராவமுதில்‌ “களைவாய்‌ துன்பம் களையா தொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று தம்முடைய அநந்யகதித்வ பூர்வகமாகவும்‌, மானேய் நோக்கில்‌ “வைகலும்‌ வினையேன்‌ மெலிய (திருவாய்மொழி 9-9-1) என்று தம்முடைய பக்தி பாரவஸ்யதையாலும்‌ அடி மேல்‌ சேமங்கொள்ளென்று ஸரணம்‌ புகுந்து, பிறந்தவாற்றில்‌ “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு என்று நாடொறும்‌ ஏக சிந்தையனாய்‌’ (திருவாய்மொழி 5-10-11 என்று தமக்கு அவ்வுபாயத்திலுண்டான அத்‌யவஸாயத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக நோற்ற நோன்பு, ஆராவமுது, மானேய் நோக்கு, பிறந்தவாறு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ உபாய ஸ்வரூபத்தையும்‌

நோற்ற நோன்பும்–5-7-அவனுக்கு தன் நிலையை விண்ணப்பம் செய்யவே தம் அபேக்ஷிதம் கிட்டும் என்று பார்த்து அருளி-தம் பரிகரம் அடங்க சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளின ஸ்ரீ வானமா மலையை தன் வெறுமையை முன்னிட்டு கொண்டு சரணம் புகுகிறார் –

ஆரா அமுதும் –5-8-திருக் குடந்தையில் சென்று -பரமபதம் கலவிருக்கையாய் இருக்க இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது குறைவாளர் குறை தீர்க்கைக்கு ஆனபின்பு நம் அபேக்ஷிதம் செய்யாது ஒழியக் கூடாது என்று தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் மநோ ரதித்துக் கொண்டு ஸ்ரீ பரத ஆழ்வான் தம் ஆர்த்தி எல்லாம் பெருமாள் திருவடிகளில் செல்லத் தீரும் என்று மநோ ரதித்திக் கொண்டு சென்றால் போலே ஆராவமுத ஆழ்வார் திருவடிகளில் செல்ல-மாமக்ரூரேதி வஷ்யதி -என்கிறபடியே வினவுதல் -குளிர நோக்குதல் அணைத்தல் செய்யாமையாலே – ஸ்தநந்த்ய பிரஜை முலையை நினைத்து விடாய்த்து தாய் பக்கலிலே செல்ல அவன் முகம் பெறாதே தடுமாறுமா போலே
திருவடிகளில் சம்பந்தத்தையும் -சந்நிதி யுண்டாய் இருக்கிற படியையும்-கிடையா விடில் விட ஒண்ணாத போக்யதையையும் சொல்லி-கேட்டார் அடைய நீராம் படி கூப்பிடுகிறார் -ஒரு கால் பண்ணின பிரபத்தி பலித்தது இல்லை என்னா தவிருமவர் அல்லர்-மேன்மேல் என சரணம் புகும் அத்தனை -அப்படி இருக்கை யாயிற்று -மஹா விச்வாஸம் ஆகிறது –அங்கு ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு பெருமாள் முகம் காட்டா விட்டது தம் பிரதிஞ்ஜை தலைக் கட்டுகைக்காக-இங்கு ஆழ்வாருக்கு முகம் காட்டாது ஒழிந்தது -பிரபந்தம் தலைக் கட்டுகைக்காகவும் -விடாயைப் பிறப்பித்து முகம் காட்டுகைக்காகவும்-

மானேய் நோக்கும் –5-9-உகந்து அருளின நிலங்களில் வந்து இருக்கிற இருப்பு ஆஸ்ரித அர்த்தமாக என்று இருகையாலும் -தமக்குப் பேறு உகந்து அருளின நிலங்களே என்று இருகையாலும்
திரு வல்ல வாழிலே போய்ப் புக்கு -தம்முடைய மநோ ரதங்கள் பூரிக்கும் என்று அங்கே புக்கு -பல ஹானியாலே முட்டப் போக மாட்டாமையாலே நடுவே நோவு படுகிற தம்முடைய தசையை -அந்யாபதேசத்தாலே பேசுகிறார் – எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தன் ஆற்றாமையால் புறப்பட்டு -திருவல்ல வாழுக்கு அணித்ததாகச் சென்று கால் நடை தாராதே நோவு படுகிறவளை -தோழி -அவன் தானே வரக் காணும் அது ஒழிய நீ பதறுகை ஸ்வரூபம் அன்று என்று விலக்க அவ் ஊரில்- திருச் சோலையும் அங்குத்தை பரிமளத்தையும் கொண்டு புறப்படுகிற தென்றலும் -அங்குத்தை திருச் சோலைகளில் மதுபான மத்தமான வண்டுகளுடைய இனிதான மிடற்று ஓசைகளும் -வைதிக க்ரியா கோலா ஹலங்களும் -ஹோம தூமங்களும் -மற்றும் யுண்டான நகர சம்ரப்ங்களும் எல்லாம் -அங்கே ஆகர்ஷிக்க ஏக தத்விதத்ரிதர்கள் ஸ்வேத தீபவாசிகள் அனுபவிக்கிற ஆரவாரத்தைக் கேட்டு தங்கள் அனுபவிக்கப் பெறாமையால் நோவு பட்டால் போலே நோவுபட்டு நிஷேதிக்கிற தோழி மார்களுக்கு -தன் ஆர்த்தியை ஆவிஷ் கரித்து அவர்களை அனுவர்த்தியா நின்று கொண்டு
-திரு வல்ல வாழிலே புக்கு நினைத்த படியே பரிமாற வல்லனே -என்று அவர்களைக் குறித்துச் சொல்லுகிறாள் –

பிறந்தவாறும்–5-10-இத் திருவாய் மொழியில் அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் –இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்–அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற நினைத்தவர் அங்கு கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்-விபவங்களிலும் இழந்தாருக்கும் இழவு தீர்க்க இடமாய் இருக்க அவதாரங்களில் போருகை யாவது என் – அர்ச்சாவதாரத்தில் அதீந்த்ரியனான தன்னை சம்சாரிகள் கண்களுக்கு விஷயம் ஆக்குகையும் -சர்வ அபேக்ஷிதங்களையும் கொடுக்கையும் ஒழிய குளிர நோக்குதல் வினவுதல் செய்யக் கடவது அன்றாக சங்கல்பித்து இருக்கையினாலே -சத்ய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும் படி
அதி நிர்பந்தம் பண்ணைக் கடவோம் அல்லோம் என்று –ஸம்ஸ்ப்ரூ க்ருஷ்யச ப்ரீதியா –ஸூ காடம் பரிஷஸ்வஜே -என்று கிருஷ்ணாவதாரத்தில் போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அதுவும் தீர்த்தம் பிரசாதிக்கையாலே -பல்லில் பட்டுத் தெறித்தது -என்று கூப்பிடுகிறார் -இது ஆழ்வான் நிர்வாஹம் –
உன்னைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் ஸ்ம்ருதி விஷயமாய் நலியா நின்றது -இவ் வவசாதம் தீரும் படி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்று என்கிறார் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிட்டார் நிர்வாஹம் –

தனக்கேயாக -என்று கைங்கர்யத்திலே ஸ்வார்த்தா நிவ்ருத்தியை அபேஷித்த -எம்மா வீடும் —2-9-
சர்வ கால விசிஷ்டமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் என்று பாரித்த-ஒழிவில் காலமும் —3-3- அதுதான் பாகவத கைங்கர்ய பர்யந்தமாக வேணும் என்று மநோ ரதித்த –நெடுமாற்கு அடிமையும் –8-10- அது தன்னில் பர சம்ருத்யேக பிரயோஜனத்தை சொன்ன -வேய் மரு தோளிணை யுமாகிற–10-3- நாலு திரு வாய் மொழியாலும்-பல ஸ்வரூபமாய் –

(எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற) எம்மா வீட்டிலே (திருவாய்மொழி 2-9) கைங்கர்யத்தினுடைய ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை ப்ரார்த்தித்து, ஒழிவில்‌ காலத்தில்‌ (திருவாய்மொழி 3-3)அந்த கைங்கர்யந் தன்னை ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமாகச்‌ செய்ய வேணுமென்று ப்ரார்த்தித்து, நெடுமாற்கடிமையில்‌ (திருவாய்மொழி 8-10) அந்த கைங்கர்யம்‌ பாகவத பர்யந்தமாக வேணுமென்றும்‌, வேய்மருதோளிணையில்‌ (திருவாய்மொழி 10-3) அது தான்‌ பர ஸம்ருத்‌தயைக ப்ரயோஜநமாகவும்‌ ப்ரார்த்திக்கையாலே, ஆக எம்மா வீடு ஒழிவில் காலம்‌ நெடுமாற் கடிமை வேய்மரு தோளிணை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பல ஸ்வரூபத்தையும்‌

எம்மா வீடும் —2-9-எனக்கு என்று ஒரு புருஷார்த்தைக் கோலுமது மமகார விஷயம் ஆகையால் ஐஸ்வர்யார்யாதிகளோ பாதி ஹேயம் என்று அத்தை உபேக்ஷித்து பரமபதஸ் தத்தனாய் ஸூ கியாகவும் -சம்சாரத்தில் தூக்கியாகவுமாம் இவற்றில் நிர்பந்தம் இல்லை -உனக்கே யாய் இருக்கும் இருப்பு எனக்கு வேண்டுவது -என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் இது தான் ஸ்வரூபம் அன்றோ அபேக்ஷிக்க வேணுமோ என்னில் புருஷார்த்தங்களுக்கும் சாதாரணமான பிரகிருதி சம்பந்தத்தோடே
இருக்கையாலே அபேக்ஷிக்கை பிராப்தம் –
அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே-உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வீ காரம் வேண்டுமா போலே உபேயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வரூப அனுகூலமான புருஷார்த்தத்தை அபேக்ஷிக்கை பிராப்தம்

ஒழிவில் காலமும் —3-3-உன்னை அனுபவிக்கைக்கு விரோதியான பிரக்ருதியை போக்க வேணும் என்று இவர் பிரார்த்திக்க இப் பிரக்ருதி நம்மோட்டை பரிமாற்றத்துக்கு விரோதி யல்ல –இப்பிரக்ருதியோடே கூட உம்மை அடிமை கொள்ளுகையில் உள்ள அபி நிவேசத்தாலே அன்றோ இங்கே நிற்கிறது என்று வேதைக சமதி கம்யனான தான் திருமலையில் நின்று அருளுகிற படியைக் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் அவன் திருவடிகளில் எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்த இளைய பெருமாளை போலே மநோ ரதிக்கிறார் –

நெடுமாற்கு அடிமையும் –8-10-அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்டு இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவடிகளிலே சேஷத்து அளவும் சென்று -அவர்களுக்கு சேஷமாகையே நிரதிசய புருஷார்த்தம் என்று அத்யவசித்து – ஐஸ்வர்யம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி சர்வ நியந்தாவாய் ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் இருப்பு என்று சொல்லுகிற சகல புருஷார்த்தங்களும்
தனித்தனியாகவும் திரளாகவும் இந்த பாகவத சேஷத்வம் ஆகிற புருஷார்த்தத்தோடு ஒவ்வாது –
இப்புருஷார்த்தம் என்றும் நேர் பட வேணும் என்று பிரார்த்தித்து தலைக் கட்டுகிறார் -இதுவும் நமஸ் சப்தார்த்ததில் ஒன்றாய் இருக்கிறது
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றது இறே -இன்னம் ஈஸ்வர சேஷத்வம் நிலை நின்றதாவது -ததீயர்க்கு க்ரய விக்ரய அர்ஹம் ஆனால் ஆயிற்று – ஒருவனுக்கு ஓன்று உண்டானால் புத்ர பவ்த்ராதிகளுக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆனால் இ றே அவனுக்கு ஸ்வம்மாய் ஆயிற்று ஆவது –இது தான் பயிலும் சுடர் ஒளியில் சொல்லிற்று அன்றோ என்னில் –அதில் இவ்வாத்மாவுக்கு நாதர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றது
இதில் நிரதிசய போக்ய பூதர் அவர்கள் -என்கிறது -ச மஹாத்மா ஸூ துர்லப -பேராளன் பேரோதும் பெரியோர் –-தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலை மேலாரே
-என்று இறே அளவுடையார் வார்த்தை -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் இதுக்கு நிதர்சனம் -கச்சதா -இத்யாதி –

வேய் மரு தோளிணையுமாகிற–10-3-ப்ரேமத்தாலே வந்த இருட்சியாலே அஸ்த்தானே பீதராய் தம் தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் – ராத்திரி எல்லாம் கிருஷ்ணனோடு சம்ச்லேஷித்து -ப்ரபாத சமயத்திலே – சகல சத்தவங்களும் உணர்ந்து கிளம்பவும் செய்து -குயில்கள் கூவுவது -மயில்கள் ஆலிப்பது–இளங்காற்று சஞ்சரிப்பது – -கன்றுகளும் பசுக்களும் காடு எல்லாம் பரவா நிற்பதுவுமாய் இருப்பதைக் கண்டு -அவனுக்கு பிரியக் கடவதாக நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே -போது விடிந்தவாறே – பண்டு என்றும் இக்காலத்தில் பிரியக் கண்ட வாஸனையாலே -அவன் பசு மேய்க்கப் போகிறானாக அதி சங்கை பண்ணி –போனானாக அத்யவசித்து -நீயும் பிரிந்தாய் -நீ பிரிந்தால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலியா நின்றன – -பசு மேய்க்கப் போமது எனக்கு அநபிமதம் -நீ போக வேண்டா என்று சொல்ல ஒண்ணாத படி என்னுடைய நாக்கு நீர் அற்று வாரா நின்றது -நான் நினைத்ததை சொல்ல வல்லேனாம் படி உன்னுடைய அணி மிகு தாமரைக் கையை என் தலை மேலே வைத்து அருளி -உன்னுடைய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும்-அஸூர ராக்ஷசர் சஞ்சாரத்தால் -சப்ரமாதமான காட்டில் பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும்- -மாதா பிதா பிராதா -என்று இவ்வாத்மாவுக்கு சர்வவித பந்துவும் என்று உணர்ந்தால் தன் இழவில் காட்டில் இவனுக்கு பரிய வேண்டும்படி யாயத்து இருப்பது –ஆனபின்பு நீ போகில் நான் உளனாக மாட்டேன் -என்று இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை-அவன் சந்நிதியில் பட -அத்தைப் பார்த்து -நாம் போகக் கடவோம் அல்லோம் -நாம் போக நினைப்பதும் செய்திலோம்-என்று
தான் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்த -அத்தாலே தரித்தாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் – எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்-
-இதில் அவன் ஸம்ருத்தியை ஆசாசிக்கும் இதுவே புருஷார்த்தம் -என்கிறார் –

அதுதன்னையே விஸ்தரிக்கையாலே – அர்த்த பஞ்சகமே -இப் பிர பந்தத்துக்கு பிரமேயம் என்றும் –

(இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌) ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ இவ் விருபது திருவாய்மொழியாலும்‌ விஸதமாக அருளிச் செய்து மற்ற எண்பது திருவாய் மொழியாலும்‌ விஸ்த்ருதமாக்குகையாலே இத் திருவாய்மொழிக்கு இவ்வர்த்த பஞ்சகமும்‌ ப்ரமேயமென்றும்‌

மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்று தொடங்கி –அவா அற்று வீடு பெற்ற-10-10-11- -என்று
தலைக் கட்டுகையாலே -அவ் ஐந்திலும் வைத்துக் கொண்டு -பிரதானமான –உபாய உபேயங்கள் -இரண்டையும் இதுக்கு பிரமேயம் என்றும் –

(அருளினன்‌ வீடு பெற்ற என்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌) “மயர்வறமதிநல மருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “அவாவற்று வீடு பெற்ற” (திருவாய்மொழி 10-10-11) என்று அர்த்த பஞ்சகத்துக்கும்‌ ப்ரதாநமான உபாயோபேயங்கள்‌ இரண்டையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்றும்‌

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1—மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்– இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-அவன்-அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார்

தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே--அதாவது-
தொழுது எழு என் மனனே-1-1-1- -என்றும் ,-விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேன் -10-8-6–என்றும் –
மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7–என்றும் -சொல்லப் படுகிற
பத்தாஞ்சலி புடத்வ ஹ்ருஷ்டத்வ நம இத்யேவ வாதித்வங்களாகிற–முக்த லஷணத்தாலும் –
விபந்யவ -என்கிறவர்களைப் போலே-சொற் பணி செய் ஆயிரம் -1-10-11-என்று சொல்லப் படுகிற வாசக வ்ருதியாலும் –அவ் இரண்டிலும் வைத்து கொண்டு –உபேயம் -ஒன்றுமே இதுக்கு பிரமேயம் -என்றும் சொல்லும் என்கை —

(தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணி செய்‌ என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்னும்‌) ‘தொழுதெழு” என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌, “விருப்பே பெற்று அமுதமுண்டு களித்தேனே’ (திருவாய்மொழி 10-8-6)என்றும்‌, “மேலைத்‌ தொண்டுகளித்து அந்தி தொழும்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌” (திருவாய்மொழி 10-8-7) என்றும்‌ “சொல்‌ பணி செய்‌ ஆயிரம்‌” (திருவாய்மொழி 1-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே முக்தர்க்கு அஸாதாரண லக்ஷணமான வாசிக வ்ருத்தி இத் திருவாய்மொழி என்கையாலே அவ்வுபாயோபேயங் களிரண்டிலும்‌ உபேயமொன்றுமே இதுக்குத்‌ தாத்பர்யார்த்த மென்று சொல்லக் கடவதென்கிறார்‌.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-தொழுது-சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்-எழு-உஜ்ஜீவி-தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது
என் மனனே-பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6--அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்றுஅமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் -அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் –ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7—ஞான அனுபவத்தால் களிக்கப் பெற்ற எனக்கு -இதுக்கு மேலே ஒன்றுமே வேண்டா -இதுவே அமையும் என்னும் படி ஞான அனுபவம் தானே இனிதாய் இறே இருப்பது –உம்பர் என் குறை -மேலே என்ன குறை யுண்டு –உம்பர் -மேல் –மேலைத் தொண்டு உகளித்து –மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்

தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11-மிடைந்த சொல் -என்கிறபடியே சொற்கள் பணி செய்த ஆயிரம் என்னுதல்-சொல்லாலே பணி செய்த ஆயிரம் என்னுதல் -வாசிகமான அடிமையை சொல்லுதல்

இருபதில் விசதமாக்கி -எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும் இதுக்கு பிரமேயம் -என்னும் -என்ற இது – இப் பிரபந்தங்களில் ஸூக்திகள் -பிராப்யனான எம்பெருமான் உடைய ஸ்வரூப பிரதிபாதன பரமாய் இருக்கும் சில — பிராப்தாவான பிரத்யகாத்மா ஸ்வரூப விஷயமாய் இருக்கும் சில —
பிராப்த்யு உபாயத்தை சொல்லும் சில — பலத்தை சொல்லும் சில .. பிராப்ய விரோதியை சொல்லும் சில – அவ சிஷ்டமானவை இவற்றுக்கு உபபாதங்களாய் இருக்கும் -என்று ஈட்டில் யோஜித்த க்ரமம் 

உபாய உபேயங்கள் இரண்டையுமே இதுக்கு பிரமேயம் என்னும் -என்ற இது –இவை இரண்டுமே பிரதான பிரமேயம் .. இவ் உபாய உபேயங்களுக்கு அதிகாரி இன்னான் என்கைக்காக -பிரத்யகாத்மா ஸ்வரூபம் ..-உபாய பூதனும் உபேய விஷயமும் இன்னார் என்கைக்காக பர ஸ்வரூபம் ..
உபேய பிரதி பந்தகமாய் -உபாய நிவர்தமாய் இருக்கும் அது -இன்னது என்கைக்காக -விரோதி ஸ்வரூபம் சொல்லுகிறது இத்தனை
என்று நினைத்து-

உபேயம் ஒன்றுமே இதுக்கு பிரமேயம் -என்ற இது –இவற்றில் உத்தேச்யம் பலம் – தத் அர்த்தமாக மற்றுள்ள நாலு அர்த்தம் சொல்லுகிறது -என்று ஈட்டில் சொன்ன படி கைங்கர்யமே பிரதானம் –மற்றை நாலும் சொன்னது – கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் – தத் ஆஸ்ரயத்தையும் – தத் விரோதியையும் –
அவ் விரோதி நிவர்தகத்தையும் அறிவிக்கைகாக ஆகையாலே -தத் சேஷமாக சொன்னது இத்தனை என்று நினைத்து —

இனி பிரதம சரம பிரபந்தங்களினுடைய ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில் பிரதி பாத்யார்த்தங்களை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –திருமந்த்ரமும்‌ த்‌வயமும்‌ முதல்‌ பதங்களிலே ஸங்க்‌ரஹமாய்‌ ஒழிந்தவிடம்‌ அவற்றினுடைய விவரணமா யிருக்குமா போலே திருவிருத்தமும்‌ திருவாய்மொழியும்‌ முதல்‌ பாட்டுக்களிலே ஸங்க்‌ரஹமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌.-

ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கோருருவும்‌ போலே யானவற்றிலே இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்தருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழென்ற பஞ்சகத்தோடே அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஸ்வர பந்த ரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபி மாநோபதேஸ விஷய அந்யாபதேஸ ஹேத்வாதிகளும்‌ ஸங்க்‌ருஹீதம்‌–சூரணை -212–

ரஹஸ்யத்துக்கு ஓர் எழுத்தும் அதுக்கு ஓர் உருவம் போல் ஆனவற்றிலே –-அதாவது-(பார் ஏழு கடல் ஏழு மலை ஏழுமாய் சீர் கெழும் இவ்வுலகு ஏழும் எல்லாம் ஆர் கெழு வயிற்றினுள் அடக்கி நின்று அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே -ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -6-1-5– )ஓர் எழுத்து ஓர் உரு-பெரிய திருமொழி -6-1-5- -என்னும்படி – திருமந்த்ரமாகிற ரஹஸ்யத்துக்கு ஸங்க்ரஹமாய் -ஓம் இத் ஏக அஷரம் – என்று ஏக அஷரமாக இருக்கிற பிரணவமும் – தஸ்ய பிரகிருதி லீனச்ய -என்கிற படி –அந்த பிரணவதுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் அகாரம் போலவும் – திரு விருத்தம் -திரு வாய் மொழி ஆகிய பிரபந்தங்களுக்கு ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில் –

ஒரெழுத்து ஒருருவென்னும்படி திருமந்த்ரத்துக்கு ஸங்க்‌ரஹமான அகாரத்தையும்‌ அதன்‌ விக்ருதியான ப்ரணவத்தையும்‌ போலே என்னுதல்‌-அன்றிக்கே த்‌வயத்துக்கு ஸங்க்‌ரஹமான அதில்‌ ப்ரதம பதத்தையும்‌ போலே யிருக்கிற திருவிருத்தத்தில்‌ முதல்‌ பாட்டிலும்‌ திருவாய்மொழியில்‌ முதல்‌ பாட்டிலும்‌

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே
—6-1-5-(எழுத்து ஓர் உரு வானவனே-அகார -வாஸ்யம் -உரு வாசகம் –சொல்லுக்கு காரணம் போல் பொருள்களுக்கு காரணம் –அகாரார்தோ விஷ்ணு –பூமிகள் ஏழும் கடல்கள் ஏழும் மலைகள் ஏழுமான இவற்றுக்கு நிர்வாஹகனாய் அழகு செய்து இருந்துள்ள இந்த லோகங்கள் ஏழும் அடைய –அழகு மிக்கு இருந்துள்ள வயிற்றிலே அடக்கி நின்றாய் –
இத்தால்-வாச்யங்களுக்கு  எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி சொல்லிற்று-வாசக ஜாதத்துக்கு எல்லாம் பிரதானமாய் இருக்கிற அகார சப்த வாச்யன் ஆனவனே )

இமையோர் அதிபதி--அதாவது–இமையோர் தலைவா-என்றும் ,-அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் , ஸூரி சேவ்யமாய் -சர்வாதிகமாய் இருக்கும் –பர ஸ்வரூபத்தையும் –

“இமையோர்‌ தலைவா” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “அயர்வறும்‌ அமரர்கள்‌ அதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ சொல்லுகையாலே ஸுரி ஸேவ்யமாய்‌ ஸர்வாதிகமா யிருக்குமென்று பர ஸ்வரூபத்தையும்‌

அடியேன் மனனே--அதாவது–-அடியேன் -என்றும் ,-என் மனனே -என்றும் சேஷ பூதமாய் -பரி சுத்த அந்த கரணமாய் இருக்கும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் –

அடியேன்‌” என்றும்‌ “என்‌ மனனே” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷமாய்‌ அபரிச்சேத்‌யாந்த:கரணமா யிருக்கும்‌ என்று ஸ்வ ஸ்வரூபத்தையும்‌

பொய் மயர்வு--அதாவது–-பொய் நின்ற ஞானமும் ,பொல்லா ஒழுக்கும் , அழுக்கு உடம்பும் -என்றும் ,
மயர்வு -என்றும் ,அவித்யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும்

பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்றும்‌ “மயர்வு” என்றும்‌ சொல்லுகையாலே அவித்‌யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும்‌

பிறந்து அருளினன்-அதாவது- உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் –என்றும் ,
மதி நலம் அருளினன் -என்றும் , லோக ரஷண அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணின சர்வேஸ்வரனுடைய கிருபையே உபாயம் என்று –உபாய ஸ்வரூபத்தையும் –

உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌” என்றும்‌ “மதிநலமருளினன்‌” என்றும்‌ சொல்லுகையாலே லோக ரக்ஷணார்த்தமாக அநேகாவதாரங்களைப்‌ பண்ணின ஸர்வேஸ்வரனுடைய க்ருபையே உபாயமென்று உபாய ஸ்வரூபத்தையும்‌

விண்ணப்பம் தொழுது எழு -என்ற பஞ்சகத்தோடே-அதாவது–செய்யும் விண்ணப்பம் -என்றும் ,
தொழுது எழு -என்றும் சேஷி விஷயத்தில் கரண த்ரயத்தாலும் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று பல ஸ்வரூபத்தையும் கொண்டு ஸங்க்ரஹித்துச் சொன்ன அர்த்த பஞ்சகத்தோடே 

“அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே” என்றும்‌ “தொழுதெழு” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷி விஷயத்தில்‌ கரண த்ரயத்தாலும்‌ உண்டான கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்று பல ஸ்வரூபத்தையும்‌ ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லி அவ்வர்த்த பஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும்‌ அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவங்கள்‌ முதலான வர்த்த விஸேஷங்களும்‌ ஸங்க்‌ருஹீதமென்கிறார்‌ மேல்‌

அவித்யாதி ஸ்வரூப –அதாவது–பொய் நின்ற ஞானம் இத்யாதியாலே – அவித்யாதிகளைச் சொல்லுகிற அளவில் -உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அசத்ய சப்த வாச்யமான -அசேதன விஷயத்தில் ஆத்ம ஜ்ஞானமும் அந்த தேக -ஆத்ம அபிமான அடியான -சாம்சாரிக துஷ்கர்ம பிரவ்ருதியும் – அக் கர்மம் அடியாக வரக் கடவதான -மாம்ஸ ஸ்ருகாதி மல ரூப தேக சம்பந்தமும் –
என்ற இவற்றின் உடைய ஸ்வரூபங்களும்–அவித்யாதி — ஸ்வபாவ–அதாவது–விபிரதிபத்தி ஹேதுத்வம் சம்சார ஹேதுத்வம் ஸ்வரூப திரோதாயகத்வம் உத்தர உத்தரங்களில் -பூர்வ பூர்வ காரணத்வம் இனி யாம் உறாமை –என்கையாலே -அவற்றின் அநாதித்வம்-சோபாதிகத்வம்-
மயர்வற மதி நலம் அருளினன் -என்கையாலே அவற்றின் ஜ்ஞான நிவர்த்த்யத்வம் முதலான ஸ்வபாவங்களும் –

(அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவ) “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்று அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவத்தையும்‌-அன்றிக்கே அவித்‌யாதி, ஸ்வரூப ஸ்வபாவமென்ற இவற்றை தத்வ த்ரய விஷயமாக்கி அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைப்‌ “பொய்ந் நின்ற ஞானம்‌” என்றும்‌ –மயர்வு” என்றும்‌ அவித்‌யையாகிற அசித் ஸ்வரூபத்தையும்‌ ஜ்ஞாநாநுதய அத்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞானங்களாகிற அவித்‌யா ஸ்வபாவத்தையும்‌ அடியேன்‌ என்று ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ “என் மனனே” என்று ஆத்மாவினுடைய ஸ்வபா வத்தையும்‌ “தலைவா” என்றும்‌ “யவன்‌” என்றும்‌ ஈஸ்வர ஸ்வரூபத்தையும்‌“நலமுடையவன்‌” என்று அவனுடைய ஸ்வபாவத்தையும்‌ சொல்லுகிறார்‌ என்றுமாம்‌.

ஆத்மேஸ்வர பந்த-அதாவது–-இமையோர் தலைவா –அடியேன் -என்றும் – அதிபதி –அடி தொழுது
என்கையாலே ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான சேஷ சேஷி பாவ சம்பந்தமும்

(ஆத்மேஸ்வரபந்த ) “இமையோர்‌ தலைவா” “அடியேன்‌” “அதிபதி”“தொழுதெழு” என்று ஜீவேஸ்வரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்தத்தையும்‌

ரஷண க்ரம-அதாவது–-உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் , மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் அநேக அவதாரங்களை பண்ணி ரஷிக்கும் படியையும் – சம்சார ஹேதுவான அஜ்ஞானத்தை போக்கி -உஜ்ஜீவன ஹேதுவான ஞான பக்திகளை தன் கிருபையாலே தந்த படியையும் சொல்லுகையாலே ஈஸ்வரனுடைய ரஷண க்ரமமும்–

ரக்ஷண க்ரமம்‌ ” உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌ என்றும்‌ “மயர்வற மதிநல மருளினன்‌’ என்றும்‌ ஈஸ்வரன்‌ அநேகா வதாரங்களைப்‌ பண்ணி ரக்ஷிக்குமென்றும்‌ அஜ்ஞானத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளைத்‌ தன்‌ க்ருபையாலே தந்தானென்றும்‌ அவனுடைய ரக்ஷண க்ரமத்தையும்‌

குண விக்ரஹ விபூதி யோக--அதாவது–உயர்வற -உயர்நலம் -துயர் அறு சுடர் அடி -என்றும் , இமையோர் -என்றும் –-அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்-குண -விக்ரக -விபூதிகளும் —

(குண விக்‌ரஹ விபூதி யோக,) “நலமுடையவன்‌ என்று குணத்தையும்‌, “சுடரடி” என்று விக்‌ரஹத்தையும்‌, இமையோர்‌” என்றும்‌“அயர்வறும்‌ அமரர்கள்‌” என்றும்‌ விபூதியையும்‌ 

ததீய அபிமான–அதாவது- அந்த ஸூரிகளை முன் இடுகையாலே ததீய அபிமானமும்

அந்த ஸுூரிகளை முன்னிடுகையாலே ததீயாபிமானத்தையும்‌

உபதேச விஷய–அதாவது-நின்று கேட்டு அருளாய் -என்றும் ,தொழுது எழு என் மனனே -என்றும் ,
நெஞ்சு போலே பவ்யனான ஈஸ்வரனும் –அப்படி பவ்யமானார் உபதேச விஷயம் -என்னும் அதுவும்

மெய்‌ நின்று கேட்டருளாய்‌”“தொழுதெழு என்‌ மனனே” என்று நெஞ்சு போலே பவ்யமான ஈஸ்வரனும்‌ அப்படி பவ்யரானார்‌ உபதேஸத்துக்கு விஷயமென்றும்‌

அந்ய உபதேச-அதாவது- நலம் அருளினன் என்று – பக்தியைத் தந்தான் என்கையாலே –அந்ய உபதேசத்துக்கு ஹேதுவான பக்தியும் – முதலான அர்த்தங்களும் ஸங்க்ரஹேண சொல்லப் பட்டன என்கை —

(அந்யாபதேஸ ஹேது)“நலமருளினன்‌’ என்று பக்தியைத்‌ தந்தான்‌ என்கையாலே அந்யாபதேஸ த்துக்குஹேது அந்த பக்தி என்றும்‌

அந்ய உபதேச ஹேத்வாதிகளும் -என்ற இடத்தில் –ஆதி சப்தத்தாலே-மற்றும் வேதாந்த ஸங்க்ரஹ தாத்பர்யங்களான அர்த்தங்கள் பலவும் இவற்றில் சங்க்ருஹீதங்கள் என்னும் இடம் காட்டப் பட்டது

ஆதி ஸப்தத்தாலே வேதாந்தங்களில்‌ யாவை சில அர்த்தங்கள்‌ சொல்லப்பட்டது அவை யெல்லாம்‌ ஸங்க்‌ரஹ ரூபேண இவற்றிலே சொல்லப் பட்டதென்கிறார் –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading