1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
14 –விபாக, பாதம் -214 – 217—மொத்தம் – 4– –ஸூரணைகள்- இரண்டு அதிகரணங்கள்–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம் –214 —ஒரே -1–ஸூரணை
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217—மொத்தம்—3–ஸூரணைகள்–
—
இனி இப் பத்துகளையும் இவற்றின் சமுதாயமான பிரபந்தத்தையும் ஆழ்வார் ஸ்லாகித்து பேசின பாசுரங்களில் சாபிப்ராயதையை சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் —
ஐந்தினா டொன்பதோட ஒரு பத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிர மென்றதும் ஸாபிப்ராயம்.-சூரணை-215-
(ஐந்தினோடு-என்னுமது போலே- ஒன்பதினோடு-என்னுமது போலே– ஒரு பத்து-என்னுமது போலே–
நூறே சொன்ன என்றதும்-பத்து நூறு என்றதும் ஓர் ஆயிரம் என்றதும் சபிப்ராயம் –ஒரு கருத்தை உட்க்கொண்டது -என்றவாறு )
ஐந்தினோடு-என்னுமது போலே-அதாவது-முன்னில் ஓர் ஐந்துக்கு ஒரு கருத்தும் பின்னில் ஐந்து பாட்டுக்கு ஒரு கருத்தும் -ஆகையாலே – ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –10-2-11-என்றும்- ஒன்பதினோடு-என்னுமது போலே-அதாவது-ஒன்பது பாட்டுக்கு ஒரு கருத்தும் ஒரு பாட்டுக்கு ஒரு கருத்தும் ஆகையாலே-ஒன்பதோடு ஒன்றுக்கும் —9-5-11- என்றும் –-ஒரு பத்து-என்னுமது போலே–அதாவது
பத்து பாட்டுக்கும் சேர ஒரு கருத்து ஆகையாலே –-பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து-3-4-11 -என்றும் சொன்னவை போலே –-நூறே சொன்ன என்றதும்--அதாவது–நூறே சொன்ன ஓர் ஆயிரம் -9-4-11-என்று கிழி கிழியாகக் கொடுப்பாரை போலே –-நூறு நூறு ஆகச் சொன்ன ஆயிரம் என்றும் –
பத்து நூறு என்றதும் –-அதாவது- பத்து நூற்றுள் இப் பத்து -6-7-11-என்று பத்து நூறு என்றும்
இப்படி பத்துகளை பிரித்து சொன்னதும்-ஓர் ஆயிரம் என்றதும் –-அதாவது–தெரியச் சொன்ன ஓர் ஆயிரம்–6-9-11 -என்றும் –-மிக்க ஓர் ஆயிரம் –7-6-11-என்றும் –-அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரம்-10-10-11 -என்றும் , ஆயிரத்தை சேரச் சொன்னதும்- பத்துகள் தோறும் வெவ்வேறு கருத்தாயும்-ஆயிரத்துக்கும் சேர ஒரு கருத்தாயும் இருக்கும் படியை நினைத்து ஆகையாலே சாபிப்ராயம் என்கை —
இனிமேல் (ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தும் என்னுமவை போலே) “ஐந்தினோடைந்தும் வல்லார் ் (திருவாய்மொழி 10-2-11) என்று ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயம் ஐந்து பாட்டுக்கொரு அபி ப்ராயமுமானாப்போலவும் “ஒன்பதோடொன்றுக்கும்” (திருவாய்மொழி 9-5-11) என்று ஒன்பது பாட்டுக்கொரு கருத்தும் ஒருபாட்டுக்கொரு கருத்துமானாப் போலவும் “பாடலோராயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் (திருவாய்மொழி 3-4-11 என்று பத்து பாட்டுக்கு ஒரு கருத்தானாப் போலவும் (நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம் என்றதும் ஸாபிப்ராயம்) “நூறே சொன்ன ஆயிரம்” (திருவாய்மொழி 9-4-11) என்றும் “பத்து நூற்றுள் இப்பத்து” (திருவாய்மொழி 6-7-11 என்றும் சொல்லுகையாலே பத்துக்கள் தோறும் வேறு வேறு கருத்தாயும் “அவாவிலந்தாதிகளால் இவை ஆயிரமும்” (திருவாய்மொழி 10-10-11) என்று ஆயிரத்துக்கும் ஓரபிப்ராயமாயும் இப்படித் தலைக்கட்டுமென்கிறார்-
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11—கேவலம் பர உபதேசமாக ஐந்தினோடே கூட –தம்மையும் கூட்டிக் கொண்டு உபதேசித்த ஐந்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்-
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-கீழ் ஒன்பது பாட்டிலும் உண்டான வியஸனம் ஸூகம் என்னலாம் படி வியஸனம் மிக்கு இருந்த பத்தாம் பாட்டு -இவற்றை யுடைய இத்திருவாய் மொழி-ஸ்மாரக பதார்த்தங்களாலே ஜீவனத்தில் நசையோடே நோவு பட்ட ஒன்பது பாட்டோடு ஜீவனத்தில் நசை அற்ற ஒரு பாட்டுக்கும் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –
கூடிவண்டு அறையும் தண்தார்க் கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர் வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள் இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-பாடல் கானம் -புஷபம் பரிமளத்தோடே அலருமா போலே இசை முன்னாகத் தோற்றின ஆயிரம் இவையும் ஓர் பத்தும் வல்லார்
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-தரிப்பார்க்கு எளிதாம் படி நூறு நூறாக அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வானவர் தம் இந்த உயிர்க்கு ஏறானவனை தரும் என்றும் சொல்லுவார் –
வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-கிழி கிழி யாய் கொடுப்பாரை போலே –
அவன் பொருந்தி வர்த்திக்கிற திருக் கோளூருக்கே நெஞ்சை வைத்து சொல்லுமவர்கள்
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-–பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –முடிந்த -அவா இல் அந்தாதி இப்பத்து -பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –
—
இனி பத்துகள் தோறும் உபதேச பரமான ஓர் ஒரு திருவாய்மொழி பிரதானமாய் -அவ்வோ பத்துகளுக்கு அவ்வோ திருவாய்மொழியில் நோக்காய் இருக்கும்படியை சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —
பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து–சூரணை-216-
பாட்டுக்கு க்ரியை போலே-அதாவது பாட்டானால் க்ரியை (பயனிலை) யோடு தலைக் கட்ட வேண்டும் ஆகையாலே பாட்டுகள் தோறும் க்ரியா பதம் பிரதானமாக இருக்குமா போலேயும்–பத்துக்கு கருத்தும் போலே- அதாவது–ஒரொரு திரு வாய் மொழிக்கு -பரத்வம்-பஜநீயதை – சௌலப்யம் -அபராத சஹத்வம் என்றாப் போலே –(உயர்வற உயர்நலம் -பரத்வத்திலே நோக்கு -பிரதான பாசுரம் -1-1-1-
வீடுன் முற்றவும் -பஜநீயதை – எண் பெருக்கு அந்நலத்து-1-2-10– ஸுலப்யம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1-அபராத சஹத்வம் -எண் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு -1-4-7–)
தனித் தனியே கருத்துகள் ஆகையாலே -பத்துப் பாட்டுக்குக் கருத்தான நிதானம் சொல்லும் பாட்டு பிரதானமாய் இருக்குமா போலேயும் —
நூற்றுக்கு உபதேச பத்து--அதாவது-நூறு பாட்டுக்கு பர உபதேசமான பத்துப் பாட்டு பிரதானமாய் இருக்கும் என்கை —(முதல் பத்தில் வீடுமுன் முற்றவும் -இரண்டாம் பத்தில் கிளர் ஒளி இளமை -மூன்றாம் பத்தில் சொன்னால் விரோதம் -நான்காம் பத்தில் –ஒன்றும் தேவும் -ஐந்தாம் பத்தில் –பொலிக பொலிக -ஆறாம் பத்தில் -நல்குரவு செல்வமும் -ஏழாம் பத்தில் –இன்பம் பயக்க – எட்டாம் பத்தில் –எல்லியும் காலையும் -ஒன்பதாம் பத்தில் –மாலை நண்ணி -பத்தாம் பத்தில் –கண்ணன் கழலிணை )
நூறு பாட்டு பரோபதேஸமா யிருப்பதொரு திருவாய்மொழியோடே தலைக்கட்டுமென்கிறார் –
இத்தால் பாட்டுகளுக்கு க்ரியையிலும் –-பத்து பாட்டுகளுக்கு நிதானம் சொல்லும் பாட்டிலும்- தாத்பர்யமாய் இருக்குமோபாதி நூறு பாட்டுக்கும் பர உபதேசமான பத்து பாட்டிலே -தாத்பர்யமாய் இருக்கும் என்றது ஆய்த்து –
பிணங்கி அமரர் பிதற்றும் -1-6-4–என்கிறபடியே –பேர் அளவு உடைய நித்ய ஸூரிகள் -ஸ்வ ஸ்வ அநுபூத குண தாரதம்யங்களைச் சொல்லி – சரச விவாத கோலாகலம் பண்ணும்படி இருக்கிற அவனுடைய
பரத்வ சௌலப்ய பிரயுக்தமான குண விசேஷங்களைத் தனித்து தம்மால் புசித்து தலை கட்ட ஒண்ணாமையாலே-அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-– என்று ‘
கூட்டரான ரசஞ்சரைத் தேடின அளவில் கிடையாதபடி தூரஸ்தராக- சந்நிஹிதரான சம்சாரிகளுடைய அனாத்ம குணம் பாராதே பகவத் குணங்களில் மூட்டித் திருத்திக் கூட்டிக் கொள்ள தேட்டமாய் உபதேசத்திலே ஒருப் படுகையாலே அதிலே நோக்காக வேணும் இறே–
அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4–அமரர் என்கிறது -நித்ய ஸூரிகளை -ஏக ரசர் ஆனவர்களை விபிரதிபத்தி உண்டோ என்னில்-தாம்தாம் அனுபவித்த குணங்களில் ஏற்றத்தை -நான் முந்துறச் சொல்ல -நான் முந்துறச் சொல்ல -என்று-ஒருவருக்கு ஒருவர் பிணங்கா நிற்பார்கள்-பிதற்றும் – ஜ்வர சந்நிபரைப் போலே கூப்பிடா நிற்கை–
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10–இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –குழாங்களையே – திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்
இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ--நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே
–
இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வரும் அவற்றுக்கு தாத்பர்யம் எது என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் .-இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வருமவற்றுக்குத் தாத்பர்யம் ஏதென்ன, அவற்றுக்குத் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்.-
பகவத் பக்த பரங்கள் ஆஸ்ரயண விதி சேஷங்கள் —சூரணை -217-
(ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் -சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )
பகவத் பக்த பரங்கள்-அதாவது-பயிலும் சுடர் ஒளி -முதலான பாகவத பரங்களான திருவாய்மொழிகள் –ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -என்கிற விதிக்கு பிரயாஜாதி விதிகள்
சேஷமாய் -அவற்றினுடைய அனுஷ்டானதோடே அது பல பர்யந்தமாய்த் தலைக்கட்டுமா போலே —
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ–4-1-1- –என்றும் ,
நலம் அந்தமில் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமினோ ஓவாதே -2-8-4–என்று
விதிக்கிற பகவத் ஆஸ்ரயணம் -பாகவத் ஆஸ்ரயணத்தோடு ஒழிய தலைக் கட்டாமையாலே
பகவத் ஆஸ்ரயணீய விதிக்கு சேஷங்கள் என்கை ..
அதவா-
பர உபதேச பரமான இதில் பகவத் குணங்களையும் ஜீவ குணங்களையும் பிரதி பாதிக்கிறவற்றுக்கு விநியோகம் ஏது என்ன அருளிச் செய்கிறார் — பகவத் பரங்களாயும் -தத் பக்தரான -ஜீவ பரங்களாயும் -அவ்வவ் குணங்களை பிரதி பாதிக்கிறவை -ஆஸ்ரயண விஷயத்தையும் – ஆஸ்ரயண கர்த்தாவையும்- சொல்லுகிறது ஆகையாலே-ஆஸ்ரயண விதிக்கு சேஷங்கள் இத்தனை என்கை ..ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் -சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )-
பயிலும் சுடரொளி” (திருவாய்மொழி 3-7) “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) என்ற பாகவத பரங்களான திருவாய்மொழிகளுக்குக் கருத்து என்னென்னில், ‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” (யஜுஸ் ஸம்ஹிதை 2-5-5) என்று ஸ்வர்க்க காமனானவன் ஜ்யோதிஷ்டோமத்தைப் பண்ணுவான் என்கிற விதிக்கு “ப்ரயாஜைர் யஜேத” இத்யாதி விதிகள் ஸேஷமாய் அவற்றினுடைய அநுஷ்டானத்தோடே பல பர்யந்தமாய்த் தலைக் கட்டுமா போலே ‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 41-1) “நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமின் ஓவாதே” (திருவாய்மொழி 2-8-4) என்கிற ஆஸ்ரயணம் பாகவத ஸமாஸ்ரயணத்தோடொழிய தலைக் கட்டாமையாலே அவ்வாஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார். அன்றிக்கே பகவத் பக்த பரங்கள் என்கிற இதுக்கு பகவத் பரமாயும் தத் பக்த பரமாயும் வருமவை என்று பொருளான போது (பாட்டு க்ரியையிலே முடியுமாபோலேயும் )பத்துப் பாட்டு நிதாநம் சொல்லும் பாட்டிலே முடியுமா போலேயும் பத்துத் தோறும் உபதேஸம் உண்டாகையாலே) பகவத் குணங்களையும் தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும் சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார். அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம் பண்ணுகிற திருவாய்மொழியில் என்று இதற்குத் தாத்பர்யமாகக் கடவதென்று ஏக வாக்யமாகச் சொல்லவுமாம் –
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-திரு நாரணன்-இடர் கெடுத்த திருவாளன் இணை அடி–தத்ர நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ஒரு மிதுனம் இறே-ஆசிரயணீயமும் ப்ராப்யமும் -ஒரு மிதுனத்துக்கு இறே சேஷம் இறே இது-தாள்-சேஷ பூதம் பற்றுவது திருவடிகளை இறே-காலம் பெறச் –-ஜீவிதும் மரணாந்தம் ஹி ஜராந்தே ரூபா யவ்வனே சம்பதச்ச வி நா சாந்தா ஜானன் கோ த்ருதிமாப் நுயாத்--நாளை செய்கிறோம் என்னுமது அன்று-யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வா ஸூ தேவோ ந சிந்தயந்தே வா ஸூ தேவ தருச்சாய சாகி மர்த்தம் ந ஸேவ்யதே
சிந்தித் துய்ம்மினோ--ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார்-நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply