Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-9-பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்-

March 28, 2015

திரு நறையூர் திருப்பதி -ஆறாவது-மங்களா சாசன திருப் பதிகம்-

பாசுரம் தோறும் நெஞ்சை விளித்து திரு நறையூர் நம்பியின் திருவடிகளை வணங்க உபதேசிக்கிறார் –

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத திருவாளன் இணை யடியே  யடை நெஞ்சே –6-9-1-

பெடை அடர்த்த மட வன்னம் -நெருங்கி இருத்தலும் -சண்டை செய்தாலும் -பிரணய கலஹம் சொன்னவாறு
முடையடர்த்த -துர்நாற்றம் உடைய என்றபடி
பலி -பிச்சை

——————————————————

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

சக்ரவர்த்தி திருமகனே இவன்-

—————————————————

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-

வளை  கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -சங்கு போல் வெளுத்த நிறமுடைய பலராமனுடைய தம்பியாயும் –
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக்குட்டன் மொடு மொடு விரைந்தோடப்
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்  குட்டன் – பெரியாழ்வார் -1-7-5-

—————————————————

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே–6-9-4-

செல்வம் மிகுந்த திரு நறையூரில் குடக் கூத்தாடின ஸ்ரமமும்
கோவர்த்தன் கிரியை குடையாகத் தூக்கி அருளின ஸ்ரமமும்  தீர
இங்கே எழுந்துஅருளி இருக்கிறான் -அவனது நூபுர அலங்க்ருதமான திருவடிகளை தொழுவாய்
குரை கழல்  -குரை கழலை யுடைய கழல் -கழல் -ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர்-

—————————————————

அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான்  இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே   அடை நெஞ்சே–6-9-5-

பகல் கரந்த சுடராழிப் படையான்  –
நிரவதிக தேஜஸ்ஸாலே தேஜோ பதார்த்தத்தை மறைத்தான் ஆயத்து
ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம்
திரு ஆழி ஆழ்வான் உடைய தேஜஸ்ஸூ கண் கொண்டு முகக்க ஒண்ணாத படி
இருக்கையாலே இருண்டு காட்டிற்று ஆயிற்று –

————————————————

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை  யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6-

சிங்கங்கள் யானைகளோடு பொருது கும்ப ஸ்தலங்களைக் கிழித்து உதிர்த்த முத்துக்களையும்
மலைகளில் உண்டான பொன்களையும்
சிங்க நகங்களையும்
யானைக் கொம்புகளையும்
நீர் வாக்கிலே கொணர்ந்து  தள்ளி  பெறுகின்ற பொன்னி யாறு பெருகும் திரு நறையூரிலே
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் வாழ்கின்றான்
அவனுடைய பொன்னடியே அடை நெஞ்சே-

————————————–

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும்  திரு  நறையூர்
கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7-

கரும்பு விளையும் நிலத்தில் கருப்பங்கட்டைகளை   வெட்டி செந்நெலை நடுவார்கள்
இடையில் தாமரை களையாக விளையும்
பழைய வாசனையாலே கருப்பங்கட்டைகளும்   விளையும்
நிலவளம் சொன்ன படி
காள மேகத் திரு உருவன் -நித்ய ஸூரி நாதன் -திருத் துழாய் முடியன் -பாத பல்லவங்களை பணி நெஞ்சே-

————————————————–

குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும்  பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8-

சோலை வளம் வாய்ந்த திரு நறையூரிலே
ஒரு மலை போன்று விலங்கா நின்ற மணி மாடக் கோயில்
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நின்று அருளும் எம்பெருமானுடைய நீள் கழலே அடை நெஞ்சே
மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் போலே
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை மேல்
பொன்னியலும் மாடம் –பெரிய திருமடல் அருளிச் செயல் –

————————————–

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும்  நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே –6-9-9-

யஞ்ஞ யாகங்கள் அனுஷ்டிக்கும் வைதிக பிராமணர்கள் வாழும் இடம்
மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான் புகைப் போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர் -திருவாய் -8-9-8-
ப்ரஹ்மாதிகள் பணிந்து வந்து போற்றும் ஸ்வாமி நம்பியின் இணை திருவடிகளை அடை நெஞ்சே  –

————————————-

திண் களக மதிள் புடை சூழ்  திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே–6-9-10-

திண் களக மதிள் -திண்ணியதாக சுண்ணாம்பு சாந்து இடப் பெற்ற திரு மதிள்
வண் களகம் -அழகிய அன்னப் பறவைகள் –
களகம் -நெல் கதிர் -கம் நீரை -களம் இடமாகக் கொண்டது என்றுமாம் -மருத நிலம்
பண்கள் அகம் பயின்ற -பண்களிலே சாரமான பண்ணிலே
விண்கள் அகத்து -மேல் உலகங்களுள் முக்கியமான பரம பதத்திலே
இப்பதிகம் கற்றார் நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக எம்பெருமானை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் —

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-8-மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்-

March 28, 2015

ஐந்தாவது திரு நறையூர் திருப் பதி மங்களா சாசன திருப் பதிகம்-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல்  திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

கிருஷ்ணா ஜினத்தாலே திரு மார்பை மறைத்து -பிராட்டி கடாஷம் தவிர்த்தான் -ப்ரஹ்மசார்யத்துக்கு அணி கலன்-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர்  திரு வேங்கட மா மலை -அடி ஒற்றி
தாளால் அளந்த பெருமானைத் திரு வேங்கடத்தானை -என்கிறார்
நான் சென்று நாடி –
என்னைப் பெற வேண்டி அவதாரங்கள் பல செய்து தேடித் திரிந்தான்
அக்காலங்களிலே விமுகனாய் இருந்து விட்டேன்
இன்று நான் அவனைத் தேடித் திரிய வேண்டிற்று
அறுகாதப் பயணம் போய் திருமலை யுச்சியில் காண வேண்டாமல்
விடாய்த்த இடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமா போலே திரு நறையூரிலே காணப் பெற்றேன்-

————————————————

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே –6-8-2-

முந்நீர் -பழைய நீர்
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர்
முத் தொழில்கள் -மண்ணைப் படைத்து காத்து அழித்தல் –

மீனாய் அந்நீரை அமைத்த -மத்ஸ்ய ரூபியாய் அந்தப் பிரளய கடல் நீரை அடக்கின
தென்னாலி -மேய –அழகிய திரு வாலி திவ்ய தேசத்திலே நித்ய வாஸம் செய்து அருளும்

————————————

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை  நறையூரில் கண்டேனே –6-8-3-

தூ ஆய-வேத ஸ்வரூபி
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு அருளிய தேவாதி தேவனே பரம பதம் விட்டு திரு நாவாயில் சேவை சாதிக்க
அதுவும் பரம பதம் போலே தூரஸ்தமாய் இருக்கையாலே அணித்தாக திரு நறையூரிலே சேவை சாதிக்கிறான்-

—————————————

ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே–6-8-4-

ஓடாத -போரில் பின்வாங்காத -நாட்டில் நடையாடாத –
இரணியனை நிரசித்த விடாய் தீர திரு நீர் மலையிலே சந்நிதி பண்ணி
ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு சேவை சாதிக்கிறான் –
நாடொறும் தேடித் திரிந்து இன்று இங்கே காணப் பெற்றேன்-

————————————-

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே–6-8-5-

அந்தரிஷகத ஸ்ரீ மான் -லஷ்மி சம்பன்ன -ச து நாகவர ஸ்ரீ மான் –
வேறாக நல்லான் -முதலிகள் தடுத்தும் அன்று ஈன்ற கன்றாக கைக் கொண்டு அருளினான்-

———————————————-

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே -6-8-6-

சங்கல்பத்தாலே சிருஷ்டிப்பவன் மெய்யே வந்து திருவவதரித்து அருளிய பெருமானே இவன்-

———————————————————–

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே  –6-8-7-

கட்டேறு நீள் சோலை -காவல் மிக்க நீண்ட சோலைகள் –
மண்ணின் பாரம் நீக்கவே அவதரித்த கண்ணன் காண்டவனம் தகனம் –
மிடைந்த நால்வகை மகீருகங்களு நெடு வேல் பினங்களுந்துன்றி
அடைந்த தானவரக்கர் பேருர கருக்காலயங்களு மாகிக்
குடைந்து சோரி கொள் வாளுகிரரி முதல்கோடு விலங்கினமிக்கு
கடைந்த கூர்யேயிற்றால தக்கனும் வாழ் கானனமது கண்டீர் -வில்லி புத்தூரார் பாரதம்
பாரிஜாத வ்ருஷத்தை வேரோடு பிடுங்கி த்வாரகையில் நட்டு அருளினவனும் இவனே
இந்த சர்வ சக்தனே திரு மெய்யத்தில் சேவை சாதிக்கிறான்
இன்று இங்கே சேவிக்கப் பெற்றேன்

——————————————————–

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே -6-8-8-

சர்வம் சஹா -பொறுமை மிக்க பூமிப் பிராட்டி கூட பொறுக்க ஒண்ணாத துர்ஜன பாரம் நீக்கி அருள
கையும் அணியும் வகுத்து வீர ஸ்வர்க்கம் அடையும் படி அருளிய ஸ்ரீ கிருஷ்ணனை இன்று இங்கே சேவிக்கப் பெற்றேன் –

——————————————————-

பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-

பொங்கேறு  நீள் சோலை -மென்மேலும் அதிசயத்து வருகிற அளவற்ற தேஜஸ்
திரு ஆழி திரு பாஞ்சசன்ய ஆழ்வார்களை தரித்து திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனை
இங்கே இன்று சேவிக்கப் பெற்றேன்

—————————————————

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்  தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் ஒரு நாளும் மாறாத -வடமதுரை
புத்தேளிர்  ஆகுவர் -பூஜ்யர் ஆகுவார் -நான்முகப் புத்தேள் -திருவாசிரியம்
நித்ய சூரிகளுக்கு தெய்வங்கள் ஆகப் பெறுவர்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-7-ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை-

March 27, 2015

நான்காவது திரு நறையூர் மங்களா சாசன திருப் பதிகம் —

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே—6-7-1-

ஆளும் பணியும் கொண்டான் -சேஷ பூதனாயும் -கிங்கரனாயும் திரு உள்ளம் கொண்டான் –
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும் தந்து அருளினவன் என்றது ஆயிற்று
வேளும் சேயும் அனையாரும் -மன்மதனோடும் சுப்பிரமணியனோடும் ஒத்த அழகிய புருஷர்கள்
விண்ட -பொருந்தி வராமல் எதிர் அம்பு கோத்த -அப்படிப் பட்ட நிசாசரரை தோளும் தலையும்
துணிவெய்த சுடு வெஞ்சிலைவாய் சரம் துரந்தான்
இன்னமும் அடியார்களை ஆளும் பணியும் கொள்ளவும்
ஆசூர பிரக்ருதிகளை தொலைப்பதற்கும் நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்   இங்கே –

———————————————-

முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட  தாரார் தோளான்  வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே-6-7-2-

துஷ்டர்களை அழித்து-சிஷ்டர்களை ரஷிக்கக் கடவேன் என்று தனி மாலை இட்டவன் -தாரார் தோளான் –
அழகிய மாதர்கள் வாழும் திவ்ய தேசம் -முல்லை அரும்பு போன்ற பல் அழகும் –
கரும் குவளை பூ போன்ற கண் அழகும் -செந்தாமரைப் பூ போன்ற முகத்தின் அழகும் –
நனி சேர் வயலுள் முத்தலைக்கும்-என்ற பாடமே சிறக்கும்-

———————————————————

தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து
துள்ளா வருமான்  வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட
நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே-6-7-3-

திரு வநந்த ஆழ்வான் அதி சங்கித்து விஷத்தை உமிழா நிற்கும் திருப் பாற் கடல்   -விடவாய சின வாளரவில்-
அங்கு இருந்து தேவர்கள் கூக்குரல் கேட்டு திரு வவதரித்து செய்து அருளிய ஒரு கார்யம் -துள்ளா வருமான் விழ வாளி துரந்தான்

———————————————-

ஒளியா வெண்ணெய்  உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால்
விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான்   மென்மலர் மேல்
கழியா வண்டு கள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-

தாம்பினால் கட்டுண்டு விம்மி அழுத பரம ஸூலபன்
வங்கிபுரத்து நம்பி பலகாலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று  போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஆழ்வானுக்கும் நம்பி   ஸ்ரீ ஹனுமத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று  அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே   சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால்  இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் —–அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்–
ஆப்புண்டு விம்மி அழுதான் -தாம்பினால் கட்டி  வருத்துகின்றாள்-துன்பம் பொறுக்காமல் விம்மி அழுதான் அல்லன்
தயிர் பால் வெண்ணெய் பெண்கள் களவு செய்து திரிய வேண்டிய காலம் பாழாய் போகிறதே
கட்டுண்டு இருக்கும் அளவும் அந்த தொழில்களைத் தவிர்ந்து இருக்க வேண்டியதாயிற்றே -என்று விம்மி அழுதான் –

மென்மலர் மேல் கழியா வண்டுகள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்-இதில் ஒரு அர்த்த விசேஷம் ஸ்புரிக்கும்
வண்டு -ஸ்ரீ வைஷ்ணவனை சொன்னதாய் -விதி வசத்தால் மது பானம் பண்ணி விட்டான்
நாட்டிலே அலர் தூற்ற -பழி தூற்ற -அலர் -புஷ்பமும் பழியும் -புறப்பட்டான் என்றும்
இவை இரண்டையும் கண்ட ஒரு சாத்விகன் -ஏதோ விதி வசத்தால் மது பானம் பண்ணினால் இதை தூற்ற வேணுமோ –
இது  சஹஜம் என்று வாளா இருத்தல்  ஆகாதோ
வாய் விட்டு சிரிக்காமல் இவை என்ன உலகு இயற்க்கை என்று புன்சிரிப்பு செய்கிறான் –
லௌகிக சந்நிவேசம் உணர்த்தியவாறு-

——————————————-

வில்லார் விழவில் வட மதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே–6-7-5-

பகவத் கதைகளை அனுசந்திப்பதில் ஆழ்வார்கட்கு ஒரு அடைவு இல்லை -பக்தி பிரகர்ஷம் பேசுகிறபடி எல்லாம் பேசுவார்கள்
வேத அத்யயன நிஷ்டர்களையும் யஞ்ஞ சீலர்களாயும் உள்ள அந்தணர்களை வாழ்விக்க இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்-

———————————————————–

வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன்  வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—-6-7-6-

பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே-
பட்டர் அருளிச் செய்ய குறிப்பாக கேட்டு இருப்பதொரு பாட்டு -என்று அருளிச் செய்வர் –
பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –
நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க
அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக  போந்த அலவன் ஆனது  தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள
போது அஸ்தமிக்கையாலே
உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி –
அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற
போது விடிந்த வாறே வந்தது –
இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது
இத்தைக் கண்டு
ராத்திரி தங்கின படியாலும்
உடம்பிலே சுவடு இருந்த படியாலும்
இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது
இத்தை பட்டர் அருளிச் செய்த அநந்தரம்
பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன
என் செய்வோம் கேள்வி இல்லாத படி   பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர்  –

—————————————

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே —6-7-7-

குடையாய் வரை ஓன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் -என்ற உடனே கூராழிப் படையான் -என்றது
இந்த்ரனை திரு ஆழி கொண்டு தலை அறுத்து ஒழிக்கலாம்
ஆயினும் அது செய்திலன்
அவனுடைய உணவைக் கொண்ட நாம் உயிரையும் கவரலாகாது
பசிக் கோபத்தாலே நலிகிறான் -நலியட்டும் -கை சலித்த வாறே தானே ஓய்கிறான்
என்று பொறுத்து இருந்து ரஷ்ய வர்க்கங்களை நோக்கிக் கொண்டான் -என்பதைக் காட்டி அருள –

————————————————————-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே  –6-7-8-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க வைத்தது த்ரௌபதியினுடைய மங்கள ஸூத்ரத்துக்காக –
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் இவளுக்காக -ஸ்ரீ வசன பூஷணம்
கோஷோ தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -ஸ்ரீ கீதை
கந்தார் களிறு -கந்து கட்டுத் தறி -அதையும் முறித்துக் கொண்டு திரியும் மத்த கஜம்-

——————————————————

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா  வாச நீர்  வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே -6-7-9-

என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்க முத நீர் திரு மார்பில் தந்தான் -1-5-8-என்றும்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் -5-9-4-என்றும் இவரே அருளிச் செய்து
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை ஊறு செங்குருதியால் நிறைத்த -திருச் சந்த விருத்தம் -42– என்றும் உண்டே-

—————————————————–

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

அநந்ய பிரயோஜனராய் பல்லாண்டு பாடுவதையே யாத்ரையாக கொண்டவர்கள் வாழும் திரு நறையூர்
இத் திரு மொழியை ஆராய்ந்து கற்பார் எவரோ அவர்கள் அருகில் பாபங்கள் அணுக மாட்டா
அவர்கள் இவ் விபூதியிலே நெடு நாள் வாழ்ந்து இருந்து இஹ லோக போகங்களை எல்லாம் புஜித்து
பின்னை பரம பதத்தே போய் நித்ய ஸூ ரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-6-அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்-

March 27, 2015

இது மூன்றாவது திரு நறையூர் திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம் –

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-

கொம்பு அமரும் -கிளைகள் பொருந்திய
வம்பு -புதுமையும் பரிமளமும் –
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் -துர் மாநியுமாய்-ஸ்நேஹமும் இன்றிக்கே-இருக்கிற ராஜா தான்-
ஸ்ரீ மார்கண்டேய பகவானைப் போலே
தேவதாந்திர பஜனம் பண்ணி-அங்கு தன்னுடைய அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளப் பெறாமையாலே
இங்கே வந்து பக்ன அபிமானனாய்-திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயித்து
ஐஹிக  ஆமுஷ்மிகங்கள் இரண்டையும் பெற்றுப் போனான் –
நம்பி ஒரு வாள் கொடுத்து அருள அத்தைக் கொண்டு பூமியை அடைய தன் காலின் கீழே இட்டுக் கொண்டான் –
என்று ஒரு பிரசித்தி உண்டாய்த்து –

திரு நறையூர் மணிமாடம் –
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடம் -என்றும் –
தென் நறையூர் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை -என்றும்
பெரிய திரு மடலில் அருளிச் செய்து இருத்தலால் –
நம்பி சந்நிதிக்கு மணி மாடக் கோயில் என்ற திரு நாமம் வழங்கி வந்தது என்று அறியலாம்
திரு நாங்கூர் மணி மாடக் கோயில் வேறே-

———————————————————–

கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி   வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

நைமித்திக பிரளயத்தில் ஹயக்ரீவன் என்னும் அரசன் வேதங்களை அபஹரித்துப் போக மத்ஸ்ய அவதாரம் –
தவத்தின் பெருமையால் கிருதமாலா நதிக் கரையில் சத்யவ்ரதன் ராஜ ரிஷி -ஏழு நாள்களில் பிரளயம் வருவதை சொல்லி
லஷம் யோஜனை நீளமும் -பதினாயிரம் யோஜனை பருமனும் -ஒற்றைக் கொம்பும் -ஸ்வர்ண வர்ணமும் –
சகல லோக மநோ ஹர ரூபமும் கொண்ட மத்ஸ்ய –
அண்டகடாத்தளவும் சென்று மீட்டுக் கொண்டு வேதங்களை உபகரித்து அருளினான் –
வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்து 
உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-

—————————————–

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-

செவ்வி மாதரம் எட்டும் தோள் ஆ -அழகிய திசைகள் எட்டையும் புஜங்களாகக் கொண்டு –
எம்பெருமான் ஜகத் ஸ்வரூபியாய்  இருக்கும் நிலைமையை உருவகத்தால் அனுபவிக்கிறார் –
கடல் நீர் -அரையில் உடுக்கும் ஆடை
பூமிப் பரப்பு திருவடி
வாயு ராசி திருமேனி
திசைகள் எட்டும் திருத் தோள்கள்
அண்ட கடாஹம் திரு அபிஷேகம்
கவ்வை மா களிறு -ஆரவாரத்தை யுடையனவாய் -பெரியவையான யானைகளை
தெய்வம் வாள் வலம் கொண்ட  சோழன் -திவ்யமான வாள் படையைக் கொண்ட சோழ ராஜன்
வெண்ணி ஏற்ற -விண்ணி ஏற்ற பாட பேதம் -கோயில் வெண்ணி -கோயில் உண்ணி – என வழங்கும் சோணாட்டூர்
படை எடுத்து வந்த மாற்றரசர் போர் செய்த இடம் இது
மேல் பாட்டிலும் இங்கனே
முடி மேல் காகம் ஏற -என்றது பிணம் ஆக்கின படி
இவ்வரசன் திரு நறையூர் நம்பி பக்கல் வாள் பெற்று வெற்றி பெற்றான் என்பர்-

———————————————————–

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி  பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணியேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே—6-6-4-

பைங்கண்  ஆள் அரி யுருவாய் -பசுமையான திருக் கண்களை யுடைய நரசிம்ஹ ரூபியாகி
சிங்கத்துக்கு கண்ணில் பசுமை ஜாதி ஸ்வ பாவம் ஆதலால் பைங்கண் -எனப் பட்டது
வரம் பரு தோள் இரணியன் -பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களை யுடைய இரணியனை –
அன்றிக்கே –
பருவரைத் தோள் -பருத்த மலை போன்ற தோள் என்றுமாம்-

—————————————————————

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-5-

காவேரி சஹ்ய பர்வத்தில் நின்று பெருகும் போது வருமிடையே தடையாக நிற்கும்
மலைகளை யுடைத்து கொண்டு பெருகுகின்றமை -விலங்கல் பாய்ந்து -என்கிறார்

——————————————————————

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான்  சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத்  தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்-
ஸ்வ இச்சையாலே
தனது திவ்ய மங்கள விக்ரஹத்தை
உண்டு பண்ணிக் கொண்ட
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை யுடையனாய் –
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்-
தன்னுடைய சங்கல்பத்தாலே
ஸ்வ ஸ்வ ரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக் கொண்டவன்
தானான நிலைமையில் சம் ரஷித்தும் ப்ரஹ்மாதிகள் அந்தர்யாமியாய் சிருஷ்டி சம்ஹாரங்களை நடத்தியும்
தான் ஆயன் ஆயினான் –
இடையர்களில் ஒருவன் இவன் என் மகன் என்று அபிமாநிக்கும் படி கிருஷ்ணனாய்  வந்து திரு வவதரித்து அருளி
விளந்தை வேளை-சரியான பாடம் -ஊருக்கு விளந்தை என்னும் பெயர் என்பர்-
விளைந்தை வேளை விண் ஏற -விளைந்தை வேள் என்னும் ஓர் அரசனை வீர ஸ்வர்க்கம் அடையும்படி

—————————————–

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி  முது துவரைக் குலபதியாக் காலிப்  பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே-6-6-7-

முது துவரை -பிராசீனமான ஸ்ரீ துவாராபதிக்கு
இலை குழல் -இலையாலே செய்யப் பட்ட குழலை
கண்ணபிரான் திருவடிகளில் சேர வேண்டி இருப்பீர் ஆகில் இங்கே வந்து சேர்மின்கள்-

———————————————

முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-8-

முருக்கம் பூ போலவும்
விளங்குகின்ற கோவைப் பழம் போலவும்
சிவந்து இருக்கும் அதரத்தை  யுடைய நப்பின்னை பிராட்டிக்கு நாயகன்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு-புருஷ ஸூ க்தம் முதலிய பாகங்களை
வாயிலே யுடைய எட்டு புஜங்களை யுடைய ருத்ரன்
இந்த சோழன் சிவபக்தனாய் இருந்து வைத்து பிறகு பகவத் பக்தனாய் –
இச் சோழன் பல சிவாலயம் செய்ததாக சேக்கிழார்
செங்கணான் அந்தமில் சீர் சோணாட்டில் அகனாடுதொரு மணியார்
சந்தரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தான் -பெரிய புராணம்
முடிவில் திரு நறையூர் திரு மாலுக்கு அடியனாய்ச் சிறப்புற்றான் –
தர்ச நீயமான மாடங்கள் எழுபதும் சமைத்து
பின்னையும் தம்முடைய அபிமதம் கிடையாமையாலே
அவ் வபிமத சித்யார்த்தமாக -அவன் வந்து ஆஸ்ரயிக்கிற தேசம் -பெரியவாச்சான் பிள்ளை -ஸ்ரீ ஸூக்திகள் –

——————————————————-

தாராளன்  தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-

தேர் அழுந்தூரில் வந்து எதிர்ந்த மன்னரை வென்ற வீரம் சொல்லுகிறது-

————————————————–

செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி  யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே–6-6-10-

வியாச பதம் செலுத்த  வல்லவர்கள் வாழும் திவ்ய தேசம் -வேத வாணர் -வேத வாழ் நர்-வேதங்களைக் கொண்டு வாழ்பவர்
இத் திரு மொழியை உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலத்திலே அதிகரிக்குமவர்கள்
யமபடர்கள் கடும் சொற்களைக் கேட்டு வருந்த அவகாசம் இல்லாமல்
திரு நாட்டிலே புகுந்து -சூழ் விசும்பு அணி முகில் திருவாய் மொழிப் படியே
நித்யசூரிகள் தாழ இருந்து திருவடி விளக்கி   கொண்டாடும்படியான பெருமையைப் பெறுவார்கள்-

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-5-கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்-

March 27, 2015

இரண்டாவது திரு நறையூர் மங்களா சாசன திருப்பதிகம் —

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம்    உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே -6-5-1-

ஆஸ்ரித விரோதிகள் அஞ்சுவதற்கு உறுப்பாகவும்
ஆஸ்ரிதர்கள் பல்லாண்டு பாடுவதற்கு உறுப்பாகவும்
திருவாழி திரு சங்கு ஆழ்வார்களை ஏந்தி சேவை சாதிக்கிறான்
தனது பள்ளியான கடலையும் கடைந்து அமுதம் அளித்த மகா குணம் -முந்நீர் கலங்க கடந்து
நல்கு சோதிச் சுடராய் -அவன் திருமேனியில் பெற்ற புகர்-அமுதம் அளித்ததால் -தேவர்கள் துயரம் நீங்கப் பெற்றதால்
நலம் கொள் வாய்மை அந்தணர் -சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் -நன்மையாகவே
தலைக் கட்டும் சத்தியமே சொல்பவர்கள் –
அன்றிக்கே
உண்மை உரையான வேதத்தை சொன்னபடி -வேதம் வல்ல அந்தணர் வாழும் இடம் –

—————————————————————-

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட  வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-

திரு நகங்களால் விரோதியைத் தொலைத்த புனிதன் வாழும் இடம்
செந்தளிர்களை குயில்கள் கொந்து கூவுதல் செய்யப் பெற்ற பூ மொட்டுக்கள் நிரந்த சோலைகளால் சூழப் பட்ட தேசம்
ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் அவகாஹித்து – -அனுபவித்து -அர்த்தங்களை உபன்யாசம் செய்யும் -உள்ளுறை பொருள்-

——————————————————-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே —6-5-3-

மள்ளர்க்கு -உழவர்களுக்கு
நானம் புதலில் -மஞ்சள்
வயல் வளத்தை யுடைய திரு நறையூர்-சேனைத் திரளை எல்லாம் பொடி பொடியாக்கி இலங்கா புரியைப் பாழ் படுத்தன பெருமாள் வாழும் இடம் –

——————————————————-

உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

பரத்வ சௌலப்யங்களை  வெளியிட்டுக்  கொண்டு சேவை சாதிக்கும் திவ்ய தேசம்

——————————————————

விடை ஏழ்  வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே-6-5-5-

தவழுகிற நடையினாலே நிலைத்து நின்ற இரட்டை மருத மரங்களை விழத் தள்ளினவன்
எருதுகளை வலி யடக்கி நப்பின்னை பிராட்டியை திரு மணம் செய்து அருளினவன் இவன்-

—————————————————-

பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல்  பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6-

பகுவாய் -பெரிய வாய்-

—————————————————-

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி
நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே —6-5-7-

முந்து நூல் -அநாதியான வேத அஷர ராசி
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே   கொடுத்தான்
ஷத்ரிய ஜாதி என்பதால் வேதம் ஓத வேண்டுமே -பிராமணர் ஷத்ரியர் வைசியர் -த்விஜர்
முப்புரி நூல் ஈந்த -உப நயனம் செய்வித்த-

————————————————–

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த  விமலனூர்
கொள்ளைக் கொழு மீன்  உண் குருகோடிப் பெடையொடும்
நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே –6-5-8-

சிந்து கோன் -சிந்து தேசத் தலைவன் ஜயத்ரதன்
அர்ஜுனன் தேர் குதிரைகள் வெண்ணிறம்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை  முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டு அருளர் -பெரியாழ்வார் -4-1-7

————————————————–

பாரையூரும் பாரந்தீரப் பார்த்தன் தன
தேரையூரும் தேவதேவன் சேருமூர்
தாரையூரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரையூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9-

திருவவதரித்து பார்த்த சாரதியாய் இருந்து பூமி பாரங்களை எல்லாம் போக்கி  அருளினவன்
தாரையூரும் -பூவைத் தோற்கடிக்கும் தளிர்களை யுடைத்தான வேலியாலே சூழப் பட்டும்
தேன் ஒழுகு கின்ற வேலி என்றதாகவுமாம்-

——————————————–

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே –6-5-10-

சகல சரா சரங்களையும் நிர்வஹிக்க வல்லவன் என்று திருத் துழாய் மாலை அணிந்த திரு அபிஷேகத்தை யுடையவன்
ஓதவல்லவர் களுக்கு   எம்பெருமான் எஞ்சான்றும் உடன் இருந்து வேண்டிய நன்மைகளை எல்லாம் செய்து அருளுவான் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-4-கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்-

March 27, 2015

கீழ் திரு மொழியிலே -கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த் தேனே -என்ற இடத்தில்
திரு நறையூர்ப் பெருக்கு சினையாறு படுகிறது கிடாய் -என்று பட்டர் அருளிச் செய்தாரே –
இது முதல் பத்து பதிகங்கள் -திருச் சேறை பதிகம் வரையில் -திரு நறையூரில் ஈடுபட்டு அருளிச் செய்யும் திரு மொழிகள் –
ஆழ்வார் திரு நாடு போகப் பாரித்தார் கீழே -திரு நாட்டுக்குப் போலியான திருப்பதிகள் இங்கே இருக்க அங்கே போகத் துடிப்பது ஏன்
நாளடைவிலே போகலாம் -திரு நறையூர் போக்யதை பாரும் -இதைக் காட்டிலும் அங்கே விசேஷம் உண்டு என்று நினைக்கிறீரோ என்ன
அப்படியாகில் இங்கே பரக்க அனுபவிக்கிறேன் என்று தொடங்குகிறார்-

அகிஞ்சனன் அநந்ய கதித்வம் தோன்றவும்  -சம்சார விரக்தி தோன்றவும்  -அங்கே போக த்வரை மிக்கும்  கூப்பிட
நம்பி திரு மந்த்ரம் உபதேசித்து அருளுகிறான் –
அருளின அநந்தரம் திருமந்திர தாத்பரார்த்தம் -பாகவத சேஷத்வம் அறிந்து- திருச் சேறை பதிகம் அருளுகிறார் மேல்-

——————————————–

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும்  வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே -6-4-1-

விஷயாந்தரங்களில் கை வைப்பது ஒரு நாளும் ஷேமப் படுவதற்கு உறுப்பாகாதே-
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்  திரு நறையூரைத் தொழுவது நன்று -என்கிறார் –

——————————————————

கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-2-

அவர்கள் பரிஹசித்து தள்ளச் செய்தேயும் இப்படியும் ஒரு கூந்தல் அழகு யுண்டோ என்று
காமுகர் சொல்வதால் கொங்குண் குழலார் —

———————————————————–

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -6-4-3-

செங்கோல் வலவன் -செங்கணான் கோச் சோழன் இத் திவ்ய தேசத்தில் அபிமானியாய் பணிகள் பல செய்து உய்வு  பெற்றான்-
அம்பரமும் பெரு நிலனும் பதிகத்தில் இதை பாசுரம் தோறும் அருளிச் செய்கிறார் மேல்-

————————————————————-

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –6-4-4-

அசக்தி மேலிட்ட காலத்திலும் தடி ஊன்றி அங்கே சாபல்யத்தால் சென்று துவண்ட இடை இருக்கும்
அழகு என் கொல் என்பரே
வாசல் கதவை நெருக்கி அடைத்து துரத்துவார்கள்
இப்படிப் பட்ட பரிபவங்களுக்கு பாத்ரம் ஆகாமல் இங்கே வந்து ஆஸ்ரயிக்க அருளுகிறார்-

——————————————————————–

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும்   வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய்  வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே—6-4-5-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
வெகுண்ட பார்வைக்கு மான் நோக்கு
மிளிர்ந்த தன்மைக்கு மீனும் -மலங்கு -வரால் -வாளை -மீன்களின் அவாந்தர ஜாதி பேதம்
கூர்மைக்கு வேலும்
வண்ணத்துக்கு செங்கழு நீர் பூவும் கண்ணுக்கு ஒப்புமை சொல்வர்
சலம் -கபடம் –

————————————————–

மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-

விலங்கெரி -விலங்கால் எரி ஊட்டினான்  -திருவடியால்
இலங்கு எரி -ஜ்வலக்கிற -முன்பு அக்னி இலங்கையில் புக அஞ்சி நடுங்க இப்பொழுது ஜ்வலிக்கிற படி-

———————————————————

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-7-

வளைவான நெற்றிக்கு வில்லையும்
கடைக் கண் பார்வைக்கு அம்பையும் ஒப்பு
பொல்லான் -குரூபி
திரிந்தான் -தோல் சுருங்கிப் போதல்
இங்கு உள்ளார் வேதமார்க்க பிரதிஷ்டாபனாச்சார்யர்கள்-

————————————————————-

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8-

நாசமான பாசங்களை விட்டு திருநறையூரில் தொழுங்கோள்
கேண்மின்கள் பாடத்தை விட கேளுங்கள் -சிறந்த பாடம்
கேள் உங்கள் -உங்கள் கேள் -உங்கள் உறவு என்று ஒருவருக்கு ஒருவர் பரிஹசித்து சொல்வது
சந்நிதியில் உத்சவ கோஷங்களும்
திரு மாளிகைகளில் யஞ்ஞ கோஷங்களும் மலிந்து இருக்கும்-

—————————————————

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9-

நனி சேர் நறையூர்-அவனது பெருமைக்கு தக்க நறையூர்

——————————————————-

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு  ஆவரே  –6-4-10-

நித்ய சூரிகளின் திரு நாட்டுக்கு நியாமகராய் ஆவார்கள்

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-3-துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாதுநின்னுருவம்-

March 27, 2015

திரு விண்ணகர் மூன்றாவது -இறுதி -மங்களா சாசன திருப்பதிகம்-

தாம் வெறுத்து கால் கடைக் கொண்ட விஷயம் இது என்றும்
பெறா விடில் முடிந்து போம் படியான அவஸ்த்தையைப் பிறப்பிக்குமதான தாம் அபேஷித்த புருஷார்த்தம் இது என்றும்
திரு நாட்டில் சென்று திருவடிகளின் கீழ் வாழ்ச்சியில் தமக்கு உண்டான பெரிய த்வரையையும்
விரிவாக விண்ணப்பம் செய்கிறார் இதில் –

—————————————————————-

துறப்பேன் அல்லேன்  இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன்  பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-

இன்பம் துறப்பேன் அல்லேன் -தேவரீருடைய அனுபவம் ஆகிற பேரின்பத்தை ஒரு நாளும் இழக்க மாட்டேன் –
தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்க முடியுமானால் அன்றோ இன்பத்தை நான் துறந்தேன் ஆவேன்
இப்படிப் பட்ட நான் இனி மேலும் இருள் தரும் மா ஞாலத்தில் பிறந்து கஷ்டப்பட நினைப்பேனோ
மறந்தேன் உன்னை முன்னம் –அதனால் இடும்பைக் குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் -என்றார் கீழ் திரு மொழியில்
மறவாமைக்குப் பலனாக பிறவாமை பெற்றார் என்கிறார் இதில்-

———————————————————

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன்  திருவிண்ணகரானே -6-3-2-

அறம் தானாய் திரிவாய் -சாஷாத் தர்மம் -நீ -ஆள் பார்த்து திரிந்த பின்பு –
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் –அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து —
உன் தன்னைப் பிறவி பெரும்தனை புண்ணியம் யாமுடையோம் அன்றோ
திறம்பாமல் கொண்டேன் -தவறாது தவிர்த்து கொண்டேன்
அனுகூலர் இடத்தில் அனுராகமும் -பிரதிகூலர் இடத்தில் பகையும் –ஆபாச பந்துக்கள் இடத்தில் உறவும்
ஆர்வம் -செற்றம் உற்றம் -மூன்றும் த்யாஜ்யம்
பரித்யக்தா மயா லங்கா
பகவத் பாகவதர்கள் இடத்தில் ப்ரேமமும் -பகவத் பாகவத விரோதிகள் இடத்தில் விளையும் பகையும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலேத் தாய் தந்தையரும் அவரே இனி யாவாரே -உறவும் உபாதேயம் –
துறந்தமையால் நின்னடிக்கே அடிமை சிறந்தேன் -திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்  –
புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்கை இறே -இழவு வருகைக்கு அடி –
அது தவிர்ந்தால் இப்போதாக உறவு சம்பாதிக்க வேண்டியது இல்லை இறே
இவன் பக்கல் சம்பந்தம் ஸ்வா பாவிகம் இறே
பாஹ்ய விஷயங்களை விட்டு-ராவண பவனத்தை விட்டு -ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம்
ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –

——————————————–

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய்  கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா  திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–6-3-3-

குழகா -கலந்து கொள்ள வந்து நிற்பவனே -மகானாய் இருக்கும் தன்மையைப் பாராமல் சிரியாரோடும் கலந்து பழகும் சௌசீல்யன்
ஊன் ஏய் கண் வாளிக்கு-உடைந்து -மாம்ச மயமான கண்கள் ஆகிற பாணத்துக்கு அஞ்சி நடுங்கி
பாம்புக்கு அஞ்சி ஓடி வந்தது போலே -காமுகர்களின் சமாதியால் முகத்தை வருணிக்கிறார் –
திரு நறையூர் தேனே -திரு நறையூர் பெறுக்கு சினை யாறு படுகிறது கிடாய் -பட்டர்
கண்ணும் சுழன்று -தொடங்கி-சினவில் செங்கண் -வரை பத்து பதிகங்கள் அருளப் போகிறார் மேல் –

————————————————–

சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே  உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே -6-3-4-

திருமங்கை ஆழ்வார் நா வீறு லோக விலஷணம்
அல்ப விஷயங்களைப் பேசும் பொழுதும் பெருக்காறு பெருகுமா போலே இருக்கும் –
விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடி சிறுத்து இராதே
வாணிலா முறுவல் சிறு  நுதல் பெரும் தோள் மாதரார் வனமுலை -என்பாரே
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர்
வீதராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய
முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு -என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள்  பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது
அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்
அவர் சொன்னவாறே தளிரும்  முறியுமாய்த் தோற்றும் -என்று –

தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் -பகவத் அனுபவமே இன்ப வெள்ளம் -ஆனந்தமயம் –
கை கண்ட ஆழ்வார் துன்ப வெள்ளம் -இன்ப வெள்ளம் என்றது உலகோர் மயங்கி ஆழம் கால் படுவதால்-

—————————————————-

மற்றோர் தெய்வம் எண்ணேன்  உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-

சர்வ ஸ்மாத் பரனான உன்னையே நெஞ்சிலே தாங்கி அலாப்ய லாபம் பெற்றேன்
இராவணனை முடித்தால் போலே என்னுடைய பிரதிபந்தகங்களை போக்கி  அருளினாய்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயிப்பதற்கு ஒரு கால் காரணமாகக் கூடிய ஜன்மமும் ஓழியப் பெற்றேன் உன்னை சேவித்த பின்பு –

————————————–

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன்  திருவிண்ணகரானே-6-3-6-

உன் உருவமே எல்லாம் என்று உணரப் பெற்ற பின்பு தேவதாந்தரங்களை தெய்வமாக நெஞ்சிலே நினைப்பேனோ
உஜ்ஜீவிக்க பிராப்தன் ஆயினேன் ஆதாலால் உன்னைத் தெரிந்து கொண்டேன் –

——————————————–

வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே   நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7-

அடியேன் வேறே கூறுவது உண்டு -ரஹச்யமாக விண்ணப்பம் செய்கிறேன் என்றபடி
ஸ்திதோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்று கை எழுத்து இடும்படி அருளிச் செய்ய வேணும்
ஆழ்வீர் உம்மைத் திருவடி சேர்த்துக் கொண்டேன் -என்று அருளிச் செய்ய வேண்டும் -தேர்ந்த பொருள்
அநந்ய கதி -என்பதால் அருள் புரிந்தே தீர வேண்டும் –

————————————————-

முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தை  நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-

சம்சாரம் -தீஷணமான ம்ருகாந்தரம்
கர்மங்கள் யானை
மாண்டு ஒழிந்த அரசர்கள் -விளிந்து தள்ளப்பட்ட மா மரங்கள் போலே-

அளிந்து ஓர்ந்த சிந்தை அடியேற்கு -கனிந்து தெளிந்த மனம் உடையேனான எனக்கு
தெளிந்து -சம்சார கலக்கங்கள் நீங்கி
வான் உலகம் எய்வது என்று -எந்நாள் என்று அருளிச் செய்ய வேண்டும்

———————————————————-

சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை  நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே -6-3-9-

குற்றங்களை நற்றமாக உபபாதிக்க வல்ல பிராட்டி இணை பிரியாது இருக்க அடியேனுக்கு என்ன குறை
திருமாலே
மிடுக்கு யுடையவனே –
மிடுக்குக்கு போக்குவீடாக குடக் கூத்தாடுபவனே
பரிபூர்ணன் ஆனவனே
மதுவைக் கொன்றவனே
லோக் விலஷண  புகழை யுடையவனே
திரு விண்ணகரப்பனே
சோதி வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
தேவரீருக்கே அடிமைப் பட்டு இருக்கிற நன்மையை யுடைய அடியேனை கருமங்கள் நெருக்காத படி ஆதரித்து அருள வேணும்
பெருமாள் அழகில் துவக்குண்டு -கைங்கர்யங்களிலே ஈடுபட்டு -சந்த்யா வந்தனம் செய்ய கால விளம்பம் ஆனாலும்
யமனுடைய ஓலையிலே குற்றமாக எழுதப் படாது காணும்
உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ -பட்டர் அருளினார்
மல்லார் குடமாடி-பாட பேதம்-மல்லா  குடமாடி -விளியான பாடமே மிக வழங்குவது-

————————————————-

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண்  புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே -6-3-10-

தன் ஒப்பார் இல்லாதவன் விஷயமாக
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானை -செல்வம் மிக்க நீண்ட திரு வீதிகளை யுடைய திரு விண்ணகரிலே
எழுந்து அருளி இருக்கும் அப்பன் விஷயமாக –
பரம உதாரரான திரு மங்கை மன்னன் அருளிச் செய்த இத் திரு மொழியை
ஒதுமவர்கள் யாராய் இருந்தாலும் எவ்விதமான துக்கமும் நிற்க மாட்டாது-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-2-பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்-

March 27, 2015

ஆழ்வார் ஒரு கால் சொன்னது போல் ஒன்பதின் கால் விண்ணப்பம் செய்தாலும்
எம்பெருமான்   இன்னமும் இவரைக் கொண்டு கார்யம் செய்யத் திரு உள்ளம் கொண்டு
கடுக வந்து சம்சாரம் தவிர்ந்து தன்னைக் கொடுத்து அருளினன் இலன்
தமக்கு மெய்யே ஆர்த்தி விளைந்த படியையும்
அநாதி காலம் சம்சாரத்தில் உழன்ற படியையும்
பல யோனிகளில் பிறந்து வருந்தினபடியையும்
அர்த்த காமங்களை விரும்பிப் போந்த படியையும்
இந்த்ரியங்களுக்கு வசப் பட்டு ஒழிந்தபடியையும்
மேல் வரக் கூடியதான நரக வேதனையை நினைத்து அஞ்சின படியையும்
பரக்க விண்ணப்பம் செய்து
இவை என்னால் கழித்துக் கொள்ள கூடியவையாய் இல்லை
குற்றம் பாராதே
இங்கு ஒழிக்க ஒழியாத சம்பந்தத்தையே பார்த்து
பிராட்டியின் பரிக்ரஹமாய் இருக்கிறேன்  என்பதையும் திரு உள்ளம் பற்றி
அடியேனை ஸ்வீகரித்து அருள வேணும் என்று திரு விண்ணகரப்பன் திருவடிகளில்
விழுந்து கதறுகிறார் -இத் திரு மொழியிலும் -மேலில் திரு மொழியிலும்-

——————————

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-1-

ஆபாச பந்துக்கள் பேசும் இழிவான சொல்களை தாங்கிக் கொண்டு இருந்தேன் -இராவணன் -விபீஷணனை சொன்னது போலே
அன்றிக்கே -நீசர்களை கவி பாடும்படி புன்மையான கவிகளை நெஞ்சிலே தரித்துக் கொண்டு இருந்தேன்
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன்-கடனைக் கொடுத்தே தொலைப்பாரைப் போலே
அர்த்த காமங்களை இந்த்ரியங்களுக்குச் செலுத்தினேன்
ஆர்வம் செற்றம் வாயிலொட்டி  அறுத்தேன் -அனுகூலர் பக்கல் உண்டாகும் ப்ரேமம் ஆர்வம் –
ப்ரதிகூலர் பக்கல் உண்டாகும் த்வேஷம் செற்றம்
பிரதிஞ்ஞை செய்து கார்யத்தாலும் தலைக் கட்டி விட்டேன்
வாயில் -வாயினால் -ஒட்டி  -பிரதிஞ்ஞை செய்து -அறுத்தேன் -செய்து முடித்தேன் –
இவை முந்திய நிலைமை
அவை தன்னை மனத்தகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன் –
அவை என்றது -பொருள் இன்பங்களை -ஆர்வச் செற்றந்களை
அர்த்த காம நசை ஒழிந்து ராக த்வேஷங்களை தவிர்ந்து உன்னை அடைந்தேன்-

—————————————————

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில்  மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன்  நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-2-

மறந்தேன் உன்னை முன்னம் -முதல் முதலாக -அநாதி காலமாக
த்யேயோ நாராயணஸ் சதா -சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தேயும்
அறிந்து மறந்தாரா -உன்னை என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே
அந்த சம்பந்தம் ஸ்வாபாவிகம் ஆகையாலே
சில நாள் ஸ்மரித்து மறந்தால் போலே இருந்ததே
மறந்து ஒழிந்தோம் என்கிற அனுதாபமும் இல்லையே –
மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் -சைதன்யம் கெட்டு அசேதனமாகப் பெற்றேன்
எத்தனையும் இறந்தேன் -அசித்தைக் காட்டிலும் -அதற்கு அடியோடு ருசி இல்லாமையாலே
பகவத் விஷயத்தை மறப்பது சஹஜம்
எய்த்து ஒழிந்தேன் -இன்னமும் பிறக்கைக்கு அடியான கர்ம வாசனை யுண்டே யாகிலும்
பிறக்கைக்கு த்ரவ்யம்  இல்லாதபடி ஆனேன்
கர்ம வாசனை கிடந்து பிறக்க வேண்டினாலும் பிறக்கைக்கு ஷமன் அல்லேன் –

திரு மார்பா -குற்றங்களை நற்றமாக உபபாதிக்கிற பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று நித்ய வாஸம் செய்து
புருஷ காரம் செய்யும் பொழுது இனி எனக்கு என்ன குறை -உன் திருவடிக்கு தகுந்தவனே-

————————————————————–

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-

தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு உடல் -தகாது என்று  நன்கு உணர்ந்தேன்  –
அது தொலைய உன் திருவடிகளில் வந்து சேர்ந்தேன்
வானே -நித்ய விபூதி நாதத்வம் -மா நிலம் -லீலா விபூதி நாதத்வம்
வந்து வந்து -இரட்டை கிளவி –பலகாலும் வந்து -விலக்காமைக்கு சமயம் பார்த்து
வந்து உவந்து -பாரித்து கொண்டு -அபிமான விசேஷம்-

———————————————————————

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

சோர்வினால் பொருள் வைத்தது உண்டதாகில் சொல்லு சொல்லு சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-
ஆபாச பந்துக்கள் துணையும் சார்வுமாகுவார் போலே அட்டை போலே சுவைப்பர்
நல்வழிக்கு சிறிதும் உதவார்கள் -இவற்றை விட்டு நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்
இடர் தீர எறிந்து வந்து -என்று வெறிந்து வந்து -என்றும் பிரிக்கலாம்
அகிஞ்சனனாக -நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் என்றபடி
வாடினேன் வாடி –கூடினேன் கூடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி –என்னுமா போலே –

——————————————–

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-

ப்ராக்ருதமான செல்வம் நிலை நிற்காதே
கைங்கர்யமே -அப்ராக்ருதமான செல்வமே நிலை நிற்கும்
இப்போது ஆள்பவர் முன்பு ஆண்டு மாண்டவருடைய கணக்கிலே பதிவு பெறுகின்றனர்
நித்ய ஐஸ்வர்யம் பெற உன்னை அடைந்தேன் –

————————————————

கல்லா  ஐம் புலன்கள்   வவை கண்டவாறே செய்ய கில்லென்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-6-

விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா –
பூணார மார்பனை புள்ளூரும் பொன் மலையை  காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டோமே –
தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோமே –
மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை -திருவடி மதித்த ஐஸ்வர்யம் உண்டு இறே-மல்லல் -மிகுதி -வளம்-

————————————————–

வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-

யான் இரந்தேன்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கல் அம்மான் திரு விக்ரமனையே –
நீ இரக்க -மறுத்துத் திரிந்த நான் அன்றோ இப்போது இரக்கிறேன்
நம்மை அலஷியம் செய்தவன் இப்போது நிர்பந்திப்பது ஏன் என்று  சீறாமல் –
எந்தையான முறைமையால் -எந்தாய் -வெகுளாது மனக் கொள்
என்னால் அழித்துக் கொள்ள ஒண்ணாத பிராப்தியைக் கொண்டு பொறுக்கை ஒழிய
செய்த குற்றத்தைக் கணக்கிட்டு  கைவிடலாம் படியோ தேவரீர் உடன் உண்டான ப்ராப்தி இருப்பது –
சீற்றத்தின் மிகுதியால்  ஐவர் உயர் திணை பிரயோகம்
குடிவிட்டவரை -உன்னை வழி படுவதற்கு பாங்காக உன்னால் குடி இருக்கச் செய்யப் பட்ட இந்த்ரியங்கள்
தேறாது -இவற்றை நம்பாமல் உன்னை வந்து பணிந்தேன் -இந்த்ரியங்களை வென்றேன் என்றபடி  –

———————————————–

தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-8-

இட உற்று -சரியான பாடம்-நரகத்தில் இடக்கருதி என்றபடி
இடருற்று -பிழை
கீழ் பாட்டில் ஐவர் -பஞ்ச இந்த்ரியங்கள்
இதில் வல் வினையார் -பாப ராசிகள் -வல் -அனுபவித்தே தீர வேண்டியவை
தீ வாய் -அக்னி போன்ற அவற்றின் கொடுமையை காட்டும்
மூவா -என்றது -வானவருக்கும் வானவர் தம் தலைவனுக்கும் விசேஷணம்-
நித்ய சூரிகளை நிர்வஹிப்பது போலே அடியேனையும் நிர்ஹகிக்கலாகாதோ –

——————————————————

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே-6-2-9-

போதார் தாமரையாள் புலவி -பூ மன்னு மாது -பூமிப் பிராட்டிக்கும்
குலம் வானவர் தம் கோதா -சிறந்த நித்ய சூரிகளுக்கும் விரும்பத் தக்கவனே -கோதா -பிரியனே என்றபடி -கௌதுகம் அடி
புலவி-பிரிவுக்கும் பெயர் -பிரணய கலஹத்தால் – பிரிந்த காலத்திலும் சேர்த்து வைத்த அடியார்கள் இடம் பிரியமானவனே
மன்னரிடை நடந்த தூதா -துரியோதனாதிகள் இடை -பாண்டவர்களை மன்னர் என்றதாகவுமாம்
பாண்டவர்கள் இடம் பரிவு தோற்ற வார்த்தை அருளி -தூ மொழியாம்
இப்படிப் பட்ட ஆஸ்ரித பஷ பாதம் அறிந்ததனால் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் -ஒலைப்புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே காணலாம் படி
இங்கே நித்ய சந்நிதி பண்ணி இருக்கும் இருப்பில் சரணம் புகுந்தேன்-

————————————————————–

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே -6-2-10-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று இத் திருமொழி கற்றார் கோனாய்-ஆவார்கள்
திரு நாடு இவர் இட்ட  வழக்காய் இருக்கும் -என்றபடி-

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-1-வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்-

March 26, 2015

திரு விண்ணகர்  திருப் பதியை மூன்று திரு மொழிகளால் மங்களா சாசனம் செய்யத் திரு உள்ளம் பற்றி
அவற்றுள் முதல் திரு மொழியால் தமக்கு சம்சாரத்தில் பிறந்து இருக்கும் அருசி வாச மகோசரம் –
இனி நீ என்னை வைத்து இருக்கத் தகாது என்று
தமக்கு பகவத் விஷயத்தில் உண்டான ருசியையும் சம்சார வாழ்ச்சியில் உண்டான அருசியையும் பரக்க விண்ணப்பம் செய்கிறார் –

——————————————————————–

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம்   அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

திருவடிகள் பரப்பி இலச்சினை பட நடந்து ஆட்கொண்டது போலே அடியேனையும் ஆட்கொண்டு அருள வேணும் –
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை எல்லாம் அடியேன் சாஷாத் கரித்து அனுபவிக்கும் படி அருள் புரிய வேணும்
இவ்வளவே அடியேன் வேண்டுவது -இப் பாழும் சம்சாரத்தில் இனி வாழ்வு வேண்டா  –
திரு விண்ணகரிலே சந்நிதி பண்ணி அருளியது சபலமாம் படி இத்தனை அருள் செய்ய வேணும்
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் -தேவர்கள் புஷ்பங்களைப் பணிமாறி வழிபாடு செய்தார்கள்
வஞ்சி விருத்த பாசுரம் -அத்யாபகர்கள் இரண்டு அடியாகக் கொண்டு இயல் சாதிப்பார்கள்-

—————————————————————————–

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

அண்ணல் செய்து -தானே சர்வ ஸ்வாமி என்பதைக் காட்டிக் கொண்டு -ஔதார்யத்தைக் காட்டிக் கொண்டு என்னவுமாம்
நஞ்சு நுதல் கண் உண்ண கண்டவனே  -நியமித்தவனே
புறவமுது உப்புச் சாறு தேவர்களுக்கு அருளி
உள்ளமுது -சீதக் கடலில் உள்ளமது -பிராட்டியாகிய உள்ளமுது தன்னாலே ஸ்வீகரிக்கப் பட்டதே
பகவத் விஷய பிராவண்யத்திலும்  விஷயாந்தர விரக்தியில் தமக்கு உள்ள உறுதியையும்
ஒரு காலுக்கு ஒன்பதின் காலாக உரைக்கிற படி-

—————————————————————————

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

நண்ணார் நகரம் விழ -திரிபுரம் எரித்த -சிவனுக்கு அந்தர்யாமியாயும் -அம்பாகவும் இருந்து செய்வித்து அருளினான்
புரம் ஒரு மூன்று எரித்து  -திருவாய் -1-1-8-
நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் -வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -திருவாய் -1-3-9-
தாமசர்கள் இடத்திலும் சௌசீல்யம் காட்டி அபிமானித்து கார்யம் செய்து அருளுகிறாயே
பரம பக்தனான அடியேன் இடம் திரு உள்ளம் இரங்கி உன்னைக் காண்பதோர் அருளல் ஆகாதோ –

———————————————————————————-

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-

அகடிதகட நா சாமர்த்தியம் காட்டி ஆலிலைத் துயின்றவனே அடியே-கலா மாதரம் -பச்சைப் பசும் குழவி என்றபடி
அறிவு மிக்க குழந்தை -கலா -சாஸ்திரம் என்று கொண்டு என்னவுமாம்-

—————————————————————————-

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-

மீண்டும் அகடிதகட நா சாமர்த்தியத்தை அருளிச் செய்கிறார்
பார் ஏழும் -நாவலந்தீவு -இறலித்தீவு -குசையின் தீவு -கிரவுஞ்சத் தீவு -சான்மலித்தீவு-தெங்கின் தீவு -புட்கரத் தீவு
அனைத்துக்கும் இவனே நிர்வாஹகன் -இவற்றின் ஸ்திதி எல்லாம் இவனுடைய சங்கல்ப்பாதீனம் என்றபடி
ஓர் எழுத்தோர் உருவானவனே -அகார வாச்யன் -மூல காரணம் ஆதி மூலமே-

—————————————————————————

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்  கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-

ப்ரஹ்மாதிகளாலும் அளவிட முடியாத ஸ்வரூ பாதிகளை யுடையவன்
வேத பிரதிபாத்யன் -வேதங்களை பயந்து அருளினவனே -நான்மறை யானவனே –
உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி அருளினால் தான்
நான் மெய்யே இந்த சம்சார வாழ்க்கையை அருவருத்தேன் ஆவேன்
முதலாவார் மூவரே என்று ப்ரஹ்மாதிகளை பிறரது கொள்கையால்
முதல் ஆழ்வார்களைச் சொன்னதாகவுமாம்-

———————————————————

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-

பெருக்கமோடு அமர நல்கும் பெருக்கம் -செல்வம்
செழிப்புற்று அமர்வதற்காக இந்த்ரன் வருணன் தேவதைகளை உத்தேசித்து உருக்கின நெய்யைக் கொண்டு ஹோமம் செய்வது
இருக்கு -வேதங்களுக்கு பொதுப் பெயரும் ஒரு வேதத்துக்கு சிறப்பு பெயரும்
இசை -லஷித லக்ஷணையால் பிரணவத்தைச் சொல்லும் -இசை -ஸ்வரம் -ஸ்வரம் பிரணவத்துக்கு வாசகம்-

———————————————————-

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன்  நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-

இளையவர் காதல் செய்து தரும் கலவி வேதனை
நான் முன்னம் செய்த தீ வினைகள் காரணமாக இன்னம் வேதனைகளை அனுபவிக்க வேண்டுமோ என்று அஞ்சா நின்றேன்
உனது   திருவடிகள் அஞ்சினாருக்கு புகலிடம்
நீயும் ஆஸ்ரித ரஷணம் பண்ணி அருள வளையம் சூடி யுள்ளாய்
உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியைப் போக்கின நீயே உன்னை நான் கண்ணாலே காணலாம் படி
என் மீது அருள் புரிவாயாகில் நன்று என்னவு மாம்-

——————————————————————-

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத் தலைப் பெய்து ஏமாறிக் கிடந்தது அலற்றி இவை என்ன உலகு இயற்கை
இருள் தரும் மா ஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன் -இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்-
ஓதல் செய் நான்மறையாகி -ஏட்டில் எழுதப் படுக்கை அன்றிக்கே பரம்பரையா அத்யயனம் பண்ணியே
வருகின்ற நான்கு வேதங்களுக்கும் பிரவசன கர்த்தா
உம்பராதல்   செய்  மூவுரு வானவனே -பிரம்மா ருத்ர இந்த்ராதிகளை சரீரமாகக் கொண்டு
அந்தராத்மாவாய் இருந்து அருளி கார்யம் நடத்துபவனே-

————————————————————–

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே-6-1-10-

இத் திரு மொழியை ஓத வல்லவர்கள்
வேண்டேன் மனை வாழ்க்கையை -என்று இவர் வேண்டாததைத் தவிர்ந்து
ஆண்டாய்  உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் -என்று வேண்டின திருவருளைப் பெற்று பொலிவர்-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-10-தீதறு நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்-

March 26, 2015

ஸ்ரீ நந்தி புர விண்ணகர மங்களா சாசன திருப் பதிகம்-

தீதறு  நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-1-

அனைத்துக்கும் அந்தராத்மாவாய் -சகல சேதனர்கள் உடைய மநோ வ்ருத்திக்கு நிர்வாஹகனாய் –
கோபால கிருஷ்ணனாய் திருவவதரித்து -ஆஸ்ரித ஹஸ்தம் பட்ட த்ரவ்யம் அல்லது செல்லாதவனாய்-மகிழ்ச்சிக்கு போக்குவீடாக
குடக்கூத்தாடினவன்-

தீதறு -பூமிக்கு விசேஷணம்-போக மோஷம்  விளைத்துக் கொள்ள பாங்கான சிறப்பால்
செற -கோபித்தல் –சிற பாடம் ஆகில் -சீற -என்றதன் விகாரம் –
நாதன் உறைகின்ற நகர் -நாதன் கோயில் என்று பிரசித்தம்
நந்தி என்னும் அரசன் பணி விடைகள் செய்தான் என்பதை மேலே ஏழாம் பாட்டில்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகர் நண்ணு மனமே -என்பர்-

———————————————————-

உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் வான் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-

திருவயிற்றில் வைத்து நோக்கி அருளிய பெருமானே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
மெய்யின் அளவே அமுது செய்கை யாவது -உலகம் எல்லாம் சிறிய திரு மேனியிலே ஒடுங்கும் படி அமுது செய்கை-

————————————————————–

உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன   நாள்
தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தடமார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வருதும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-3-

கீழே அருளியதை விரித்து அருளுகிறார்
உம்பர் உலகு ஏழு -கீழ் உலகங்களுக்கும் உப லஷணம்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் -மேல் உலகங்கள்
அதல விதல ஸூ தல நிதல தராதல ரசாதல மகா தலங்கள்
ஏழு கடல்கள் -உப்பு கடல் -கருப்பங்கடல்-தேன் கடல்  -நெய்க்கடல் -தயிர்க்கடல் -பாற் கடல் -புனல் கடல் –
ஏழு மலைகள் -இமயம் -மந்தரம் -கைலாசம் -வடவிந்தம் -நிடதம் -ஏமகூடம் -நீல கிரி –
கங்குல் வயல் -கருவடைந்த பயிர் ஆகையாலே வயல் இரவு போல் இருண்டு இருக்கை-

——————————————————————

பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்தவசுரர்
இறைகளவை நெறு நெறு என   வெறியவவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடுமா
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே–5-10-4-

இறைகளவை-சரீரங்கள் ஆனவை
இறை -சிவன் /கடன்/வேந்தன் /கையிறை /இறுப்பிறை/-சிறந்தோன் /சிறுமை /புள்ளிறகு/தங்கல்/
காபிமார் சென்னி /கூனிறப் பீராறே -பன்னிரண்டு பொருள்களில் -தலை என்னும் பொருளும் கொள்ளலாம்
அம்புகளை பொழிந்தோ-திரு ஆழி ஆழ்வானைப் பிரயோகித்தோ அசுரர்கள் உடம்புகளை நெறு நெறு   என முறித்து
அவர்கள் கையில் உள்ள ஆயுதங்களையும் சிதைத்து வயிறு எரியச் செய்த பெருமான் உறையும் இடம்
சோலைகளில் மயில்கள் ஆடவும் குயில்கள் கூவவும் வண்டினம் முரலவும்
கண்ட இடங்கள் பூக்கள் சிந்தியும் மா மரங்களின் மணம் கமழவும்  மேகங்கள் படிந்து இருக்கவும் பெற்றதாம் –

——————————————————–

மூள வெரி சிந்தி முனி வெய்தியமர் செய்தும் என வந்த வசுரர்
தோளுமவர் தாளும் முடியோடு பொடியாக   நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும்  வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-5-

ஆசூர பிரக்ருதிகளை அழிக்க பஞ்ச ஆயுதங்களையும் ஏந்தி இங்கே சேவை சாதிக்கின்றான்-

—————————————————-

தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல்  துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-6-

மாதிரங்கள் மின்னுருவில் வெண்டேர் திரிந்து வெளிப்பட்டு கல் நிரைந்து தீந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப்  பேயே  திரிந்து உலவாக் கொன்னவிலும் வெங்கானம் -பெரிய திருமடல்
காட்டின் கொடுமையை இங்கே வெம்பி எரி கானம் என்கிறார்
அயோத்தி மா நகர் -பரமபதம் போன்று இந்த திவ்ய தேசம் என்கிறார்-

—————————————–

தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழ வோசை மழையாக  வெழுகார் மயில்களாடு பொழில் சூழ்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே-5-10-7-

தந்தை மணம் உந்து துயர் நந்த  -தந்தை யாகிய நந்தகோபன் மனத்தை சோரப் பண்ணா நின்ற –
புத்திரன் இல்லையே -என்கிற துக்கமானது -தொலையும் படி –
விறல் நந்தன் முதலை -விறல் -விசேஷணம் நந்தனுக்கும் நந்தன் முதலைக்கும்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன்
பூதன நிரசனம் சகடாசுர பங்கம் போன்ற சிறுச் சேவகங்கள்
திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலேயும்
பரமேஸ்வர விண்ணகரத்தில் -பல்லவன் மல்லையர் கோன் போலேயும் –
அட்ட புயகரத்தில் வயிர மேகன்  போலேயும் –
திரு நறையூரில் செங்கணான் கோச் சோழன் போலேயும்
இங்கே நந்திவருமன் என்னும் அரசன் திருப் பணிகள் செய்தானானகச் சொல்லிப் போந்தார்கள்-

—————————————————-

எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று  முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடியவராடலொடு கூட வெழிலார்
மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-8-

சனக சனந்தாதி மஹ ரிஷிகள் -இவனே பரதெய்வம் என்று துணிந்து பண்ணார் பாடலின் கவிகளைச் சொல்லி பாடி ஆடுகின்றார்கள்
அவர்கள் உடன் தேவர்களும் புகழ்ந்து கொண்டு திரண்டு இருக்கும் தேசம்
நினைவு எய்தி -நினைவுகளை எய்துமவன் -த்யானத்துக்கு   விஷயம் ஆனவன்
எண்ணில் நினைவு எய்து –எண் இல் -கணக்கு இல்லாத -எண்ணங்களை
தொழ வேணும் துதிக்க வேணும் திரு வாராதனம் செய்ய வேணும் என்கிற பாரிப்புடன் -என்று பாடி யாட -என்றவாறு-

—————————————————-

வங்க மலி பௌவமதுமா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நாங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-

இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்ய மாகதா ச்வர்க்கேபி நோப ஜாயந்தே 
பிரளயே ந வ்யதந்தி ச -ஸ்ரீ கீதை -14-2-போலே
சாஸ்த்ரங்களை சிர மேல்  கொண்டு  நடப்பவர்கள் பிரளயத்திலும் அழியாமல் மார்க்கண்டேனயனை போலே
இருப்பார்கள் -அது போலே நீயும் விரும்பி இங்கே நண்ணி பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து பல்லாண்டு ஏத்து -என்கிறார்
அவனது ஆணை -ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் ம்மை ஆஜ்ஞாச் சேதி மம த்ரோஹீ மத பக்தோபி ந வைஷ்ணவ
பொங்கு புனல் நீர் வளம் மிக்கு பல மணிகள் கொழிக்கப் பட்டு ஒளியால் எப்போதும் பகலாய் இருக்கும் –

——————————————————-

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி  சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே–5-10-10

முறை வழுவாமல் ஓத வல்ல அடியார்கள் பாவங்கள் எல்லாம் ஒழிந்து போம் –
உறை கொள் புகராழி –
விரோதி நிரசனத்துக்கு திரு மங்கை ஆழ்வார் கையில் வேல் உண்டான பின்பு திரு ஆழி உறை இட்டு இருக்கும் காண்  –
உறையில் கிடக்க அவசரம் இல்லை யாய்த்து திரு மங்கை ஆழ்வார் வேலுக்கு- சத்ரு நிரசனம் பண்ணி
கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருக்கும்-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-