திரு விண்ணகர் மூன்றாவது -இறுதி -மங்களா சாசன திருப்பதிகம்-
தாம் வெறுத்து கால் கடைக் கொண்ட விஷயம் இது என்றும்
பெறா விடில் முடிந்து போம் படியான அவஸ்த்தையைப் பிறப்பிக்குமதான தாம் அபேஷித்த புருஷார்த்தம் இது என்றும்
திரு நாட்டில் சென்று திருவடிகளின் கீழ் வாழ்ச்சியில் தமக்கு உண்டான பெரிய த்வரையையும்
விரிவாக விண்ணப்பம் செய்கிறார் இதில் –
—————————————————————-
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-
இன்பம் துறப்பேன் அல்லேன் -தேவரீருடைய அனுபவம் ஆகிற பேரின்பத்தை ஒரு நாளும் இழக்க மாட்டேன் –
தேவரீருடைய வடிவழகு என்னால் மறக்க முடியுமானால் அன்றோ இன்பத்தை நான் துறந்தேன் ஆவேன்
இப்படிப் பட்ட நான் இனி மேலும் இருள் தரும் மா ஞாலத்தில் பிறந்து கஷ்டப்பட நினைப்பேனோ
மறந்தேன் உன்னை முன்னம் –அதனால் இடும்பைக் குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் -என்றார் கீழ் திரு மொழியில்
மறவாமைக்குப் பலனாக பிறவாமை பெற்றார் என்கிறார் இதில்-
———————————————————
துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-
அறம் தானாய் திரிவாய் -சாஷாத் தர்மம் -நீ -ஆள் பார்த்து திரிந்த பின்பு –
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் –அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து —
உன் தன்னைப் பிறவி பெரும்தனை புண்ணியம் யாமுடையோம் அன்றோ
திறம்பாமல் கொண்டேன் -தவறாது தவிர்த்து கொண்டேன்
அனுகூலர் இடத்தில் அனுராகமும் -பிரதிகூலர் இடத்தில் பகையும் –ஆபாச பந்துக்கள் இடத்தில் உறவும்
ஆர்வம் -செற்றம் உற்றம் -மூன்றும் த்யாஜ்யம்
பரித்யக்தா மயா லங்கா
பகவத் பாகவதர்கள் இடத்தில் ப்ரேமமும் -பகவத் பாகவத விரோதிகள் இடத்தில் விளையும் பகையும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலேத் தாய் தந்தையரும் அவரே இனி யாவாரே -உறவும் உபாதேயம் –
துறந்தமையால் நின்னடிக்கே அடிமை சிறந்தேன் -திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் –
புறம்பே சிலரை உறவு முறை என்று இருக்கை இறே -இழவு வருகைக்கு அடி –
அது தவிர்ந்தால் இப்போதாக உறவு சம்பாதிக்க வேண்டியது இல்லை இறே
இவன் பக்கல் சம்பந்தம் ஸ்வா பாவிகம் இறே
பாஹ்ய விஷயங்களை விட்டு-ராவண பவனத்தை விட்டு -ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம்
ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –
——————————————–
மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–6-3-3-
குழகா -கலந்து கொள்ள வந்து நிற்பவனே -மகானாய் இருக்கும் தன்மையைப் பாராமல் சிரியாரோடும் கலந்து பழகும் சௌசீல்யன்
ஊன் ஏய் கண் வாளிக்கு-உடைந்து -மாம்ச மயமான கண்கள் ஆகிற பாணத்துக்கு அஞ்சி நடுங்கி
பாம்புக்கு அஞ்சி ஓடி வந்தது போலே -காமுகர்களின் சமாதியால் முகத்தை வருணிக்கிறார் –
திரு நறையூர் தேனே -திரு நறையூர் பெறுக்கு சினை யாறு படுகிறது கிடாய் -பட்டர்
கண்ணும் சுழன்று -தொடங்கி-சினவில் செங்கண் -வரை பத்து பதிகங்கள் அருளப் போகிறார் மேல் –
————————————————–
சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே -6-3-4-
திருமங்கை ஆழ்வார் நா வீறு லோக விலஷணம்
அல்ப விஷயங்களைப் பேசும் பொழுதும் பெருக்காறு பெருகுமா போலே இருக்கும் –
விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடி சிறுத்து இராதே
வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வனமுலை -என்பாரே
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர்
வீதராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய
முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு -என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள் பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது
அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும் -என்று –
தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் -பகவத் அனுபவமே இன்ப வெள்ளம் -ஆனந்தமயம் –
கை கண்ட ஆழ்வார் துன்ப வெள்ளம் -இன்ப வெள்ளம் என்றது உலகோர் மயங்கி ஆழம் கால் படுவதால்-
—————————————————-
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-
சர்வ ஸ்மாத் பரனான உன்னையே நெஞ்சிலே தாங்கி அலாப்ய லாபம் பெற்றேன்
இராவணனை முடித்தால் போலே என்னுடைய பிரதிபந்தகங்களை போக்கி அருளினாய்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயிப்பதற்கு ஒரு கால் காரணமாகக் கூடிய ஜன்மமும் ஓழியப் பெற்றேன் உன்னை சேவித்த பின்பு –
————————————–
மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே-6-3-6-
உன் உருவமே எல்லாம் என்று உணரப் பெற்ற பின்பு தேவதாந்தரங்களை தெய்வமாக நெஞ்சிலே நினைப்பேனோ
உஜ்ஜீவிக்க பிராப்தன் ஆயினேன் ஆதாலால் உன்னைத் தெரிந்து கொண்டேன் –
——————————————–
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7-
அடியேன் வேறே கூறுவது உண்டு -ரஹச்யமாக விண்ணப்பம் செய்கிறேன் என்றபடி
ஸ்திதோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்று கை எழுத்து இடும்படி அருளிச் செய்ய வேணும்
ஆழ்வீர் உம்மைத் திருவடி சேர்த்துக் கொண்டேன் -என்று அருளிச் செய்ய வேண்டும் -தேர்ந்த பொருள்
அநந்ய கதி -என்பதால் அருள் புரிந்தே தீர வேண்டும் –
————————————————-
முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-
சம்சாரம் -தீஷணமான ம்ருகாந்தரம்
கர்மங்கள் யானை
மாண்டு ஒழிந்த அரசர்கள் -விளிந்து தள்ளப்பட்ட மா மரங்கள் போலே-
அளிந்து ஓர்ந்த சிந்தை அடியேற்கு -கனிந்து தெளிந்த மனம் உடையேனான எனக்கு
தெளிந்து -சம்சார கலக்கங்கள் நீங்கி
வான் உலகம் எய்வது என்று -எந்நாள் என்று அருளிச் செய்ய வேண்டும்
———————————————————-
சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே -6-3-9-
குற்றங்களை நற்றமாக உபபாதிக்க வல்ல பிராட்டி இணை பிரியாது இருக்க அடியேனுக்கு என்ன குறை
திருமாலே
மிடுக்கு யுடையவனே –
மிடுக்குக்கு போக்குவீடாக குடக் கூத்தாடுபவனே
பரிபூர்ணன் ஆனவனே
மதுவைக் கொன்றவனே
லோக் விலஷண புகழை யுடையவனே
திரு விண்ணகரப்பனே
சோதி வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
தேவரீருக்கே அடிமைப் பட்டு இருக்கிற நன்மையை யுடைய அடியேனை கருமங்கள் நெருக்காத படி ஆதரித்து அருள வேணும்
பெருமாள் அழகில் துவக்குண்டு -கைங்கர்யங்களிலே ஈடுபட்டு -சந்த்யா வந்தனம் செய்ய கால விளம்பம் ஆனாலும்
யமனுடைய ஓலையிலே குற்றமாக எழுதப் படாது காணும்
உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ -பட்டர் அருளினார்
மல்லார் குடமாடி-பாட பேதம்-மல்லா குடமாடி -விளியான பாடமே மிக வழங்குவது-
————————————————-
தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே -6-3-10-
தன் ஒப்பார் இல்லாதவன் விஷயமாக
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானை -செல்வம் மிக்க நீண்ட திரு வீதிகளை யுடைய திரு விண்ணகரிலே
எழுந்து அருளி இருக்கும் அப்பன் விஷயமாக –
பரம உதாரரான திரு மங்கை மன்னன் அருளிச் செய்த இத் திரு மொழியை
ஒதுமவர்கள் யாராய் இருந்தாலும் எவ்விதமான துக்கமும் நிற்க மாட்டாது-
——————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply