பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-8-மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்-

ஐந்தாவது திரு நறையூர் திருப் பதி மங்களா சாசன திருப் பதிகம்-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல்  திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

கிருஷ்ணா ஜினத்தாலே திரு மார்பை மறைத்து -பிராட்டி கடாஷம் தவிர்த்தான் -ப்ரஹ்மசார்யத்துக்கு அணி கலன்-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர்  திரு வேங்கட மா மலை -அடி ஒற்றி
தாளால் அளந்த பெருமானைத் திரு வேங்கடத்தானை -என்கிறார்
நான் சென்று நாடி –
என்னைப் பெற வேண்டி அவதாரங்கள் பல செய்து தேடித் திரிந்தான்
அக்காலங்களிலே விமுகனாய் இருந்து விட்டேன்
இன்று நான் அவனைத் தேடித் திரிய வேண்டிற்று
அறுகாதப் பயணம் போய் திருமலை யுச்சியில் காண வேண்டாமல்
விடாய்த்த இடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமா போலே திரு நறையூரிலே காணப் பெற்றேன்-

————————————————

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே –6-8-2-

முந்நீர் -பழைய நீர்
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர்
முத் தொழில்கள் -மண்ணைப் படைத்து காத்து அழித்தல் –

மீனாய் அந்நீரை அமைத்த -மத்ஸ்ய ரூபியாய் அந்தப் பிரளய கடல் நீரை அடக்கின
தென்னாலி -மேய –அழகிய திரு வாலி திவ்ய தேசத்திலே நித்ய வாஸம் செய்து அருளும்

————————————

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை  நறையூரில் கண்டேனே –6-8-3-

தூ ஆய-வேத ஸ்வரூபி
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு அருளிய தேவாதி தேவனே பரம பதம் விட்டு திரு நாவாயில் சேவை சாதிக்க
அதுவும் பரம பதம் போலே தூரஸ்தமாய் இருக்கையாலே அணித்தாக திரு நறையூரிலே சேவை சாதிக்கிறான்-

—————————————

ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே–6-8-4-

ஓடாத -போரில் பின்வாங்காத -நாட்டில் நடையாடாத –
இரணியனை நிரசித்த விடாய் தீர திரு நீர் மலையிலே சந்நிதி பண்ணி
ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு சேவை சாதிக்கிறான் –
நாடொறும் தேடித் திரிந்து இன்று இங்கே காணப் பெற்றேன்-

————————————-

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே–6-8-5-

அந்தரிஷகத ஸ்ரீ மான் -லஷ்மி சம்பன்ன -ச து நாகவர ஸ்ரீ மான் –
வேறாக நல்லான் -முதலிகள் தடுத்தும் அன்று ஈன்ற கன்றாக கைக் கொண்டு அருளினான்-

———————————————-

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே -6-8-6-

சங்கல்பத்தாலே சிருஷ்டிப்பவன் மெய்யே வந்து திருவவதரித்து அருளிய பெருமானே இவன்-

———————————————————–

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே  –6-8-7-

கட்டேறு நீள் சோலை -காவல் மிக்க நீண்ட சோலைகள் –
மண்ணின் பாரம் நீக்கவே அவதரித்த கண்ணன் காண்டவனம் தகனம் –
மிடைந்த நால்வகை மகீருகங்களு நெடு வேல் பினங்களுந்துன்றி
அடைந்த தானவரக்கர் பேருர கருக்காலயங்களு மாகிக்
குடைந்து சோரி கொள் வாளுகிரரி முதல்கோடு விலங்கினமிக்கு
கடைந்த கூர்யேயிற்றால தக்கனும் வாழ் கானனமது கண்டீர் -வில்லி புத்தூரார் பாரதம்
பாரிஜாத வ்ருஷத்தை வேரோடு பிடுங்கி த்வாரகையில் நட்டு அருளினவனும் இவனே
இந்த சர்வ சக்தனே திரு மெய்யத்தில் சேவை சாதிக்கிறான்
இன்று இங்கே சேவிக்கப் பெற்றேன்

——————————————————–

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே -6-8-8-

சர்வம் சஹா -பொறுமை மிக்க பூமிப் பிராட்டி கூட பொறுக்க ஒண்ணாத துர்ஜன பாரம் நீக்கி அருள
கையும் அணியும் வகுத்து வீர ஸ்வர்க்கம் அடையும் படி அருளிய ஸ்ரீ கிருஷ்ணனை இன்று இங்கே சேவிக்கப் பெற்றேன் –

——————————————————-

பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-

பொங்கேறு  நீள் சோலை -மென்மேலும் அதிசயத்து வருகிற அளவற்ற தேஜஸ்
திரு ஆழி திரு பாஞ்சசன்ய ஆழ்வார்களை தரித்து திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனை
இங்கே இன்று சேவிக்கப் பெற்றேன்

—————————————————

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்  தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் ஒரு நாளும் மாறாத -வடமதுரை
புத்தேளிர்  ஆகுவர் -பூஜ்யர் ஆகுவார் -நான்முகப் புத்தேள் -திருவாசிரியம்
நித்ய சூரிகளுக்கு தெய்வங்கள் ஆகப் பெறுவர்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading