Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-9-கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்-

March 30, 2015

திரு சிறு புலியீர் சல சயனப் பெருமாள் மங்களா சாசன திருப்பதிகம்
இதில் ஈடுபட்ட ஆழ்வார் பலரை நோக்கி -பாஹ்ய குத்ருஷ்டிகள் பக்கல் புகாமல் சிறு புலியூர் பெருமான் அடிகளையே
அடைந்து வாழ்ந்து போமின் என்று உபதேசிப்பதும்
அத்தை தாம் அனுஷ்டித்துக் காட்டுவதுமாக செல்லுகிறது இத் திரு பதிகம்-

———————————————–

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல  சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே –7-9-1-

ஸ்வா தந்த்ர்யம் கூடாது பரதந்த்ரராக   இருக்க வேணும் என்று உபதேசித்து
அடுத்து அந்ய சேஷத்வம் கழித்து அவனுக்கே அற்றுத் தீர்ந்த அடியாராக உபதேசிக்க வேண்டுமே
மனம் கள்ளம் விள்ளும் மனம் கருதி -என்கிறார்
கள்ளம்  -தன்னை தனக்கே சேஷம் என்று கொண்டு இருக்கை
கழல் -யாரானும் ஒருவனுடைய பாதம்
அடுத்த யோஜனையில்
கள்ளம் -எம்பெருமானுக்கே உரிய ஆத்மவச்துவை தேவதாந்த்ரங்களுக்கு ஆக்குவது
கழல் -எம்பெருமானுடைய திருவடிகள்
சல சயனம் திவ்ய தேசத்திலும் என்னுடைய உள்ளத்திலும் பொருந்தி
நித்ய வாஸம் செய்து அருளும் எம்பெருமானை சிந்தனை பண்ணுமின் —

வியாக்ரபாதர் -என்னும் முனிவருக்கு பால சயனமாய் சேவை சாதித்த ஸ்தலம் என்பதால்
சிறு புலியூர் ஷேத்ரத்தின் திரு நாமம்
சல சயனம் -சலம் -மாயை -உறங்குவான் போல் யோகு செய்து அருளும் எம்பெருமான் –
சல சயனம் திருக் கோயிலின் திரு நாமம்
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடித்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -போலே
சிறு புலியூர் சல சயனத்துள்ளும் என் உள்ளத்துள் உள்ளும் உறைவாரை -என்கிறார்
உள்ளீர் -ஏவல் பன்மை வினை முற்று -உள்ளுதல் -த்யானம் பண்ணுதல்-

———————————

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர்  வாய் மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர்  சிருபுலியூர்ச் சல சயனத்து
உருவக் குறளடிகள் அடி யுணர்மின் யுணர்வீரே –7-9-2-

சமண மதத்தில் ஒரு விரதம் உண்டு -பெரும் சோறு உண்ணுதல் -வெஞ்சோறு உண்ணுதல் –
வேகு சோறு உண்ணுதல் இப்படி சில சோறுகளைத்   தின்று தெருவில் திரிவார்களாம் –
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவர் -என்றார் -2-1- திருமொழியில்
இப்படிப் பட்ட பஹிஷ்டர்களின்  வாய் மொழிகளை திரஸ்கரித்து விட்டு வந்து உற்றது பற்றுமின் –
திருவில் பொலி மறையோர் -திரு -என்று ஐஸ்வர்யத்தை ஆகவுமாம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை யாகவுமாம்
உருவக் குறள் அடிகள் -ஸ்ரீ வாமன மூர்த்தியாய் திரு அவதாரம் செய்து அருளினவனே இங்கே  நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான் –
அடிகள் -ஸ்வாமி-

—————————————–

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

வகுத்த விஷயத்தில் தொண்டு படுமின் என்று உபதேசித்து
தமது அத்யவசாயத்தையும் வெளியிட்டு அருளி
நான் இருக்கிற படி கண்டு நீங்களும் அப்படியே இருந்து வாழ வேண்டாமோ -என்கிறார்
பணியும் சிறு தொண்டீர் -தகுதி அற்றவர்களை பணியும் நீசர்களே -என்றுமாம்
அத்தை தவிர்ந்து வகுத்த விஷயத்தில் பணிமின் என்றுமாம் –
தீர்த்தங்கள் மது உடன் பெருகுவதால் நசையால் வண்டுகள் வந்து மொய்த்து  ரீங்கரிக்கும் –
ஈக்கள் வண்டோடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்கமே மிகுந்து உள் தெளிவின்றியே
தேக்கெறிந்து வருதலிற்றீம்புனல் வாக்கு தேனுகர் மாக்களை மானுமே -கம்பர் ஆற்றுப் படலம் -21-

—————————————-

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு  ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே -7-9-4-

தம்முடைய உறுதியை வெளியிட்டு அருளுகிறார்
இது கேட்டு அவர்கள் திருந்தக் கூடும் என்று நினைத்து அருளிச் செய்கிறார் ஆகவுமாம்
ஏறாளும் இறையோனும் திசை மகனும் திரு மகளும் கூறாளும் தனியுடம்பன் -என்றும்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் -என்றும்
இந்தரனுக்கு அந்தர்யாமியாய் இருந்து நிர்வஹிப்பவனும் இவனே
-மழுவாளி -தமப்பன் பிறர் என்று பாராதே கொல்லுகைக்கு பரிகரமான மழுவை உடைய ருத்ரனுக்கு
தன் திருமேனியிலே இடம் கொடுத்து கொடு நிற்கிற சீலத்தை உடைய சர்வாதிகன் –
சலசயனத்தானாய் உனது அடி அல்லது -தப்பான பாடம்
சலசயனத்து ஆனாயனது -என்றே வ்யாக்யானத்துக்குப் பொருந்தும் –
கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும் அனுபவிக்கலாம் படி
அவ்வதாரத்தின் படியே வந்து சாய்ந்தவன் – அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் –
அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

————————————

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே -7-9-5-

நந்தா நெடு நரகத்திடை -நணுகா வகை உனது அடியேற்கு அருள் புரியே -என்று அந்வயம்-
-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்றபடி புகாதபடி உனது அடியேனுக்கு அருள் புரிய வேணும்
ப்ரஹ்மாதிகளும் இங்கே-வந்து எந்தாய் என்று இறைஞ்சி துதிக்கும் இடம் –

—————————————

முழு ஆம்பலும் அலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவாரவர் கண் வாய் முக மலரும்
செழுநீர் வயல் தழுவும்  சிறுபுலியீர்ச் சலசயனம்
தொழு நீர்மை யது உடையார் அடி தொழுவார் துயர் இலரே –7-9-6-

சிறு புலியூரும் வேண்டா –
அங்கு உள்ள சல சயனத் திருக் கோயிலும் வேண்டா –
அதில் உள்ள பெருமானும் வேண்டா –
அத்திருக் கோயிலையே தொழுவதையே இயற்கையாக வுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு வடிகளே சரணம்
என்று இருப்பாருக்கு துயர் எல்லாம் தொலைந்து விடும் -என்கிறார்
இங்கே வயலுக்கும் ஊருக்கும் வாசி இல்லை
நீலோற்பலங்கள் -பெண்களின் கண்கள்
அரக்கலாம்பல் -அவர்களின் அதரம்
தாமரைப் பூக்கள் -அவர்கள் முகங்கள்
ஆக உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசி தெரிவரிதாம் –

—————————–

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7-

சேய் ஓங்கு -மிகவும் உயர்ந்ததாய்
இத் தலத்து பெருமாளை திரு மால் இரும் சோலை மலை யுறையும் மாயா -என்பதால் இவனே அவன் என்கிறார்
நான்கு வேதங்கள் -திவ்ய தேசங்கள் -அடியார் மனம் -உறைபவன் இவனே
ப்ரத்யஷம் -திவ்ய தேச வாஸம்
வேத வாஸம் அடியார் மனச் வாஸம் -சாஸ்திர சித்தம்
உன் இருப்பிடம் இன்னது என்று நீயே சோதி வாய் திறந்து அருளிச் செய்ய வேண்டும்
சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டிய அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
கண்ணால் கண்டு அனுபவிக்கலாம் படியான அர்ச்சா ரூபங்களையும்
நெஞ்சாலே அனுபவிக்கலாம் படி அந்தர்யாமியாய் இருக்கும் வடிவங்களையும்
ஒரு காலே சேவை சாதிப்பித்த படியாலே கண்டு ஆச்சர்யப் படுகிறார் –

இத்தால் சொல்லிற்று ஆயத்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே-இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

————————————————-

மையார் வரிநீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே   தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஐவாய அரவணை மேல் உறை யமலா யருளாயே -7-9-8-

மாதர்களின் கண் அழகில் ஈடுபட்டு அழிந்து போகாமல் உன் திறத்தில் ஈடுபட்டு உய்வு பெற வேண்டி
உன்னைத் தொழுகின்றேன் -உபேஷியாமல் அருள் புரிய வேண்டும்
கிளி போன்ற சொற்களை யுடைய மடவார்
மடவார்களை கண்டு கிளி பயிலும் என்றுமாம்-

—————————————————-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை  யுருவா  பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9-

-இனிமை கனிந்த நெஞ்சினராலே அனுசந்திக்கும் பாசுரம் –
ஆழ்வார் திரு உள்ளம் விளங்க வாயாராக விளிக்கின்றார்
காணும் பொழுதே சகல தாபங்களும் தீரும்படி பெரிய காள மேகம் போன்ற திரு உருவத்தை யுடையவனே –
தீய புத்தி கம்சன் போல்வாருக்கு கிட்ட ஒண்ணாத படி நெருப்பு போன்றவனே
அக்ரூரர் விதுரர் மாலாகாரர் போல்வாருக்கு -மெய்யன்பர்களுக்கு தண்ணீர் போலே விரும்பத் தக்க ரூபத்தை யுடையவனே –
மலை போலே எல்லை காண ஒண்ணாத பிரகாரத்தை யுடையவனே
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய்-சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –
தாயாய்த் தந்தையாய்  மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -இத்யாதிப்படியே எல்லா வடிவும் ஆனவனே
இப்படி ஜகதாகாரானாய் இருப்பதும் தவிர கூராழி வெண் சங்கேந்தி -என்கிற
அசாதாராண வடிவுகளையும் யுடையவனே
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சிறு புலியூர் சல சயனத்து பரம போக்யனே-
உன் திருவடிகளே சரணம் -என்கிறார் ஆயிற்று –

——————————

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –7-9-10-

செல்வம் மிக்க திரு வீதிகள் –
பாரார் -பூமியில் பிறந்தார் எல்லாரும் இது கற்க அதிகாரிகள் -என்றது ஆயிற்று
இத் திருமொழியை வாயாலே சொல்லி  ஆஸ்ரயிக்கவே பாபங்கள் தாமாகவே
நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று விட்டுப் போம்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-8-செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த-

March 30, 2015

இதுவும் திரு அழுந்தூர் திருப்பதி  -நான்காவது -மங்களா சாசன திருப்பதிகம் –
திருப்பாற்கடலில் ப்ரஹ்மாதிகள் கூப்பீடு கேட்டு குறை தீர்க்க அன்றோ யோக நித்தரை செய்து அருளுகிறேன்
இந்த்ரியங்களுக்கு அஞ்சி கூக்குரல் இடும் உம்முடைய குறையைத் தீர்க்கேனோ  –
அதற்காக அன்றோ இங்கே திரு அழுந்தூரிலே   நின்று அருளுகிறோம் -என்று காட்டி அருள
திருப்தராய்
இவனே ஆஸ்ரயணீயன் -எல்லாரும் இவனையே ஆஸ்ரயித்து உய்யப் பாருமின் -காண்மின் என்று பாசுரம் தோறும் அருளுகிறார்-

——————————–

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும்  வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும்   இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர்  கோவே -7-8-1-

இயன்ற தன்மை  -இயற்கையாகவே அறிந்துள்ள குணத்தை யுடையராய்
ஷீராப்தி நாதனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
அநந்தன் என்னும் மாயோன் -ஆதி சேஷனுக்கும்  பெருமாளுக்கும் பெயர் -தேச கால வஸ்து பரிச்சேதம்  இல்லாதவன்
மாயோன் -அகடிதகடநா சாமர்த்தியம்
அந்தணர்கள் தப வாய்மையால் ஸ்ருஷ்டிக்கவும் வேதம் ஓதவும் பிரமனுக்கு ஒப்பாவார்
அணி -ஆபரணம் போல என்றவாறே-

——————————————————–

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே –7-8-2-

வேத பிரதானம் பண்ணி அருளிய ஸ்ரீ ஹயக்ரீவ பெருமானும் இவனே என்கிறார்
பன்னு கலை நால் வேதம் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள் உடன் கூடிய வேதங்கள் என்றபடி
செந்நெல் கதிர்கள் -வெண் சாமாரம் வீச -சங்கங்கள் ஒலிக்க-அன்னப் பறவைகள் பேடைகள் உடன் செந்தாமரை மலர்களில் வீற்று இருக்கும்
சங்கம் -நீரில் வாழும் உயிர்களில்  ஓன்று
கதிர் கவரி -கதிர்க்க வரி -பாட பேதங்கள் -செந்நெல் பயிர்கள்  தங்கள் கதிர்களாகிய கவரியை வீச-

———————————————————–

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ்  சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து  வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-3-

வேதத்தின் தாத்பர்யமான கைங்கர்யம் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருளியதை அருளுகிறார்
குலத்தலைய மத  வேழம்–நிலத்திகழும் மலர்ச் சுடரேய்-சரியான பாடம்
கொலைத்தலைய-நிலைத் திகழும் -லை எதுகைக்காக பாட பேதங்கள்
கொல்லும் தொழிலை  தன்னிடம் கொண்ட என்பது பொருள்
கோடு கைம்முதலா ஒன்பது உறுப்பினும் கோறல் வல்ல நீடுயிர் மா –
நான்கு கால்கள் -துதிக்கை இரண்டு தந்தம் மஸ்தகம் வால் ஒன்பதாலும் கொல்ல வல்லதே
நிலையாக விளங்கும் பரவுதலை உடைய ஒளி வடிவமானவனே-

மலைத்தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் -அதனாலே பொன்னி
எம்பெருமான் அன்பர்கள் உள்ள இடங்களில் வந்து ரஷிப்பது போலே காவிரியும் வெள்ளத்தால் வேண்டும்
இடங்களில் வந்து பாயும் என்றது ஆயிற்று-

—————————————————

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கற்குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை   வைத்து அருளிய வெம்மீசன் காண்மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும்   குயில் கூவ மயில்கள்  ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

கூப்பிட அறியாத பூமியை பிரளயத்தில் ரஷித்து அருளிய ஸ்ரீ வராஹ நாயானாரும் இவனே என்கிறார்
சிலம்பு முதற்கலன் அணிந்தோர் செங்கட் குன்றம் -சிறந்த ரத்னன்களை யுடைய மேரு மலை
ஆலுதல் -ஆரவாரித்தல்

————————————————————–

சின மேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மன மேவும் வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள வுயிர் வவ்விய   வெம்மாயோன் காண்மின்
இனமேவும் வரி வளைக்கை ஏந்தும் கோவை ஏய்வாய மரகதம் போல் கிளியின் இன்சொல்
அனமேவு நடை மடவார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போலேயும் ஸ்ரீ பூமிப் பிராட்டி போலேயும் இல்லாத நம் போல்வார்  விரோதிகளையும் போக்கி அருளுபவனும் இவனே –
சிறுக்கனுக்கு உதைவி அருளினானே
பெரும் சீற்றமும் வலிமையையும் கொண்ட -சினமேவும் அடல் அரியன் உருவமாகி
கண்டும் பிற்காலியாத மிடுக்கன் -திறல் மேவும் இரணியன்
அன்பு மிக்க தாய் போலே மனசிலே கொடுமையை கொண்ட பூதனை -மன மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
கிளி போன்ற இன் சொல்லையும் -அன்னப்பெடை போன்ற மென்னடையும் கொண்ட மடவார் –
அறிந்தும் அறியாதது போல் இருத்தல் மடப்பம்-

——————————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே -7-8-6-

பிரயோஜனாந்த பரர்களுக்கும் யாசகனாய் சென்று ரஷித்து அருளினவன் -சௌசீல்யன்-என்கிறார்
மாணுரு -மாணி யுரு-அன்றிக்கே மாட்சிமை தாங்கிய உரு என்றுமாம் -ஆலமர் வித்தின் அரும் குறள் ஆனான்
மூ வுலகத்தையும் ஈரடியால் அடக்க வல்ல பேருருவம் தன்னுள் அடக்கிக் கொண்டு இருந்த மாட்சிமை
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும் வரையாதே திருவடிகளால் தீண்டி அருளினவன் -உதாரன்
தான் அளந்த -தானே நேரில் சென்று அளந்த -தேவர்களின் துயரத்தைக் கண்ட பின் -காருண்யம் பரத்வம் சௌலப்யம்-

————————————————————-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி  யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே -7-8-7-

சீதா -அயோநிஜத்வம்
இரு சுடர் மீதினியிலங்கா மும்மதிள் இலங்கை -திரு எழுக் கூற்று இருக்கை போலே
இங்கும் -பகலவன் மீதியங்காதா  இலங்கை
அந்தமில் திண் கரம் -இராவணன் பெருமாள் திருவவதாரம் முன்பு கொண்ட வலிமையால்
அந்தமில் திண் சிரங்கள் -மீண்டும் மீண்டும் முளைத்தனவாதளால்
புரண்டு வீழ -வீழ்ந்து புரள
எய்து உகந்த -பாகவத விரோதிகளை தொலைத்த ப்ரீதி யுண்டே
தமிழுக்கு செம்மை -செவிக்கு இனிய செஞ்சொல்-

——————————————–

கும்ப மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ  விடை யடர்த்துக்   குரவை கோத்து
வம்பவிழும் மலர்க் குழலாள் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்
செம்பவள மரகதம் நன் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் சூழ்ந்து அழகார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த வமரர் கோவே –7-8-8-

ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் கொண்ட த்ரவ்யத்தை அல்லது செல்லாத தன்மையான்
குரவைக் கூத்து ராச க்ரீடை
குரவை என்பது கூறும் காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்தக் கூறும் இயல்பிற்று என்ப -என்றும் சிலப்பதிகாரத்திலும்
குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக்கை கோத்து
அந்நிலை கொட்ப நின்று ஆடலாகும் -அடியாருக்கு நல்லார் உரை
பாக்கு மரங்களில் -முதிர்ந்த பழங்கள் -பவளத்தையும் -பசும் காய்கள் மரகத ரத்னத்தையும் –
விரிந்த பாளைகள் வெண் முத்துக்களையும் காட்டுமே-

———————————————-

ஊடேறு கஞ்சனொடு வில்லும் மல்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடேறு பெரு வலித் தோளுடை வென்றி நிலவு புகழ் நேமி யங்கை நெடியோன் காண்மின் –
சேடேறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் திரு விழவில்  மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க் குழலார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-9-

சேடு ஏறு -இளமை மிக்கு தோன்றுகின்ற -சேடு -அழகு -இளமை -பெருமை
திரு ஆழியைப் போலே நம்மையும் கை விடாதே தரித்து அருளுவான்
நெடியோன் -ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹம் மிக்கவன்
ஆடு  ஏறும் மலர்க் குழலார் -நறு மணம் மிக்க மலர்களை யுடைய கூந்தலை யுடைய மடவார் –
ஆடலில் வல்லார் இரு மருங்கிலும் ஏறி இருப்பப் பெற்ற திவ்ய தேசம் –

—————————————–

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10-

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலமான பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான ஐஸ்வர்யம் பெறப் பெறுவார்கள்
ஒன்றினோடு -வ்யூஹ மூர்த்தி
நான்கும் -2-4-5-10- விலங்கான ரூபமாகிய விபவ மூர்த்திகள் பாசுரங்கள்
ஓர் ஐந்தும் -கஜேந்திர ரக்ஷண /வாமன /ராம /கிருஷ்ண திரு வவதாரங்கள் பாசுரங்கள்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-7-திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா-

March 30, 2015

இது திரு அழுந்தூர்  திருப்பதி -மூன்றாவது -மங்களா சாசன திருப்பதிகம்
கீழே கண்டு கொண்டு நிறைந்தேனே -கண்டு கொண்டு களித்தேனே -என்றார்
இந்த பரமானந்தம்  நித்யமாக செல்லுமா என்று ஆராய்ந்து பார்த்தார்
பஞ்ச இந்த்ரியங்கள் உடன் இங்கேயே இருக்கக் காண்கையாலும்
இவை விஷயாந்தரங்களில் மூட்டி ஹிம்சிக்கக் காண்கையாலும்
திரு உள்ளம் நொந்து படும்பாட்டை போக்கி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்
திருவாய் மொழி ஏழாம் பத்தில் -உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -என்று தொடங்கி அருளிச் செய்தது போலே –
இவரும் ஏழாம் பத்திலே இங்கனம் கூப்பிட்டு அருளுகிறார்

—————————————————-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

திருவுக்கும் திருவாகிய செல்வா –
ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே -க ஸ்ரீ ஸ்ரீயா
தெய்வத்துக்கு அரசே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியே –
செய்ய கண்ணா-
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே-அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ
உருவச் செஞ்சுடராழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-அழகிய வடிவை யுடைத்தாய் -நிரதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனே –
ஸ்ரீ லஷ்மீபதி என்னுதல்-நித்ய ஸூ ரிகளுக்கு எல்லாம் நிர்வாஹகன் என்னுதல் –
கை சலியாமல் திரு ஆழியைப் பிடிக்க வல்லவன் என்னுதல் -இவை இறே சர்வாதிகத்துவத்துக்கு லஷணம்
உய்யும் வகை என்றால்-பாடம் பொருந்தாது அன்றால் என்பதே சரியான பாடம் –
ஒருவருக்கு ஆடல் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படியாய் இருக்கிறது இல்லை -வ்யாக்யானத்துக்கு சேரும் இதுவே

——————————————–

பந்தார் மெல்விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாமவேதனே நெடுமாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே-7-7-2-

பாவை பூ மகள் தன்னொடும் யுடனே வந்தாய் –
தாமரைப் பூவை இருப்பிடமாக பெரிய பிராட்டியாரோடு கூட வந்தாய் –
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்   அரவிந்தப் பாவையும் தானும் -அகம்படி வந்து புகுந்து என்கிறபடியே
சபரிகரனாய்க் கொண்டாய்த்து வந்து புகுந்தது –
என் மனத்தே மன்னி நின்றாய் –
இவ்வரவாலே நெஞ்சை நெகிழப் பண்ணி விலக்காமை யுண்டான வாறே –
ஆவாசந்த்வஹம் இச்சாமி -என்கிறபடியே வந்து புகுந்தான் ஆய்த்து-

———————————————-

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கு முள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-3-

செய்யாத செய்தாய் -உன் விஷயத்தில் ருசி விஸ்வாசாதிகளை உண்டு பண்ணிணவனே-
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் –
கடைந்து பற்றற நெய் இட்டு இருக்கிற திவ்ய ஆயுதங்களை யுடையவனே
நெய் -கூர்மை ஆர்தல் -மிகுதி — கூர்மை மிக்க திரு வாழி-
பூ ஏந்துமா போலே நின்று அருளி -அவற்றுக்குத் தகுதியான திருத் தோள்களை யுடையவனே –
அடியேனைச்-
தேவர்க்கு யோக்யனாய் இருக்கிற யுன்னை –
அடியேனாகவும் வைத்து இந்த்ரியங்களையும் வைக்க வேண்டுமா -என்ன
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
அன்பாழியானை அணுக என்னும் நா அவன் தன் பண்பாழித் தோள் பரவி  எத்து என்னும்
முன்பூழி காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
பேரின்பம் பெருவிக்கவும் இவை வல்லன –
உலகத்திடைச் செய்யாதது செய்தாய் என்று அந்வயம்-

———————————

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார் மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமானும் பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-7-7-4-

மன்னர் மன்னர் -மன்னருக்கும் மன்னர்
திரு நறையூர் நம்பி 100 பாசுரங்களால் திருப்தி அடையாமல் மீண்டும் வந்து திரு முகம் காட்டி அருளினான்
திரு விண்ணகரிலே தொடங்கி-திரு நரையூர்த் தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே – என்று பேசிச் சென்று
வழி விட்டுத் திரும்புகிறான் -என்று ரசமாக அருளிச் செய்வர்-

———————————-

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என் தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-5-

கலியுகத் தன் தன்மை -கலியுகத்தின் ஸ்வ பாவத்தை –
பகவத் விஷயத்தை மறப்பித்து ஆத்மஹாநியை விளைப்பிப்பதே என்பதை அறிந்து கொண்டேன்
இப்படிப்பட்ட நிலைமையிலே உனது திருவடிகளை ஆஸ்ரயிப்பதே கருமம் என்று ஆராய்ந்து துணிந்து
வேறு ஒன்றையும் அறியாதவனாய் இருக்கிறேன்
விண்டான் பரியோன் -இரணியனை சொல்லும் சொற்கள் –
அண்டத்துக்கு நிர்வாஹகனானவனே
அன்றிக்கே இடையருக்கு நிர்வாஹகனானவனே என்றுமாம் –
நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும் இடையருக்கும் பசுக்களுக்கும் இங்கு வந்து நிற்கிறது —

—————————————————

தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும்  தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர  கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-

கிருஷ்ணனாய் திருவவதரித்து சௌலப்ய குணம் வெளிப்படுத்தி வருந்தினவன் போலே அபி நயித்து விக்கி விக்கி அழுது இருந்தாலும்
ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளாலும் கிட்டவும் அறியமும் முடியாமல் தூரஸ்தன்
யுகங்களுக்கு எல்லாம் நிர்வாஹகன் -இருந்தும் என்னை கலி நலிய விடுவான் என்று உள் கருத்து
தோயா இன் தயிர் என்றும் தோய் ஆவின் தயிர் என்றும் பிரிக்கலாம் –

————————————————-

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-

துக்க அனுபவங்களையே நான் அடைந்தும்படி பஞ்ச இந்த்ரியங்கள் என்னுள் புகுந்து ஹிம்சிக்க
அந்த ஹிம்சைகளுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே வந்து புகுந்தேன்
நுகர்வான்  -நான் அனுபவிக்கும் படி செய்வதற்காக -என்றபடி –

———————————————-

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-8-

காளையர் -ஹிம்சிப்பதில் யுவான பருவம் கொண்டு வலியனவாய் –
நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர்
ஆர்கலி -திருப்பாற் கடலை நினைக்கிறது
கூறை சோறு இவை எனக்குத் தந்து அருளி
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
வாஸூதேவஸ் சர்வமிதி ச மகாத்மா ஸூ துர்லப –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்கிறபடியே
அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்

அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் –
வகுத்த ஸ்வாமியான நீ -ராஜ புத்ரனாய் பிறந்து முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாய் இருக்கிற என்னை நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம் படி கடல்கரை வெளியிலே வந்து நின்றால் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்ட அன்று வந்து கிட்டலாம் படி அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————————————————–

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக்-
நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –
கூறை சோறு இவை தா என்று குமைத்துப்  போவார்– நானவரைப் பொறுக்க கில்லேன்-
நான் கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று
என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் –
நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் –

நெடுமாலே –
ஆஸ்ரிதர் பக்கலில் வ்யாமோஹத்தை யுடையவனே
தீவாய் நாகணையில் துயில்வானே-
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ பாவனே
உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற
திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு

—————————————————–

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்  மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே–7-7-10-

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த –
அன்னங்கள் நித்ய வாசம்  பண்ணுகிற பரந்த பூவை யுடைத்தான பொழிலாலே  சூழப் பட்ட   –
அன்னங்கள் ஒன்றோடு ஓன்று கூடினால் உடம்போடு உடம்பு அணுகாதபடி கிடைக்கைக்கு வேண்டும்படி
பரப்பு போந்து இருக்குமாய்த்து பூவின் பெருமை –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் –
திரு அழுந்தூரில் மேற்கு பார்ச்வத்திலே நின்ற சர்வாதிகனான சர்வேஸ்வரனை
கன்னி மன்னு திண் தோள் -கலிகன்றி ஆலி  நாடன்  மங்கைக் குல வேந்தன்
ஒரு நாளும் அழியாத மிடுக்கை யுடைத்தான தோள்களை யுடைய ஆழ்வார் -திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார்
திரு மங்கையில் உள்ளார்க்கு பழையதாக ராஜாக்களாய் யுள்ளார்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்-
சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை
லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப்பத்தையும் அப்யசிக்க வல்லார் –
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மன்னுவாரே–
சிரகாலம் ராஜாக்களாய் -லோகங்களை அடைய நிர்வஹித்து பெரிய முத்தின் குடைக்கீழே இருந்து நிரவதிக ப்ரீதி  யுக்தராய்ப் பெறுவார் –
இந்த்ரிய வஸ்தையை  அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே
புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-6-சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த-

March 29, 2015

திரு அழுந்தூர் திருப்பதி -இரண்டாவது -மங்களா சாசன திருப்பதிகம் –

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி  வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே -7-6-1-

நரசிங்கமதாய் -என்னாமல்-சிங்கமதாய் -என்றது திரு முக மண்டலமே முக்கியம் என்பதால்
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஓயாது வேதம் ஓதுவதில் -சிருஷ்டி நடத்தும் விஷயத்தில் அயனை ஒத்தவர்கள் –

ஆஸ்ரிதர் உடைய விரோதி தொலையப் பெற்றோம் என்று உகந்த –
திரு நகங்களுக்கே இரை போராமையாலே திரு வாழி திருச் சங்கு ஆழ்வார்கள் இருந்த படியே விளங்கப் பெற்றவன் –

————————————–

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு
ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அடியார்க்கு ஆ ஆ என்று இரங்கி -நீர்மையால் -தயையால் –
பரதுக்க துக்கித்வம் –
சக்தி இருந்தாலும் அநியாயமாக குழந்தையைத் துக்கப்பட வைத்தோமே என்கிற தாயைப் போலே
காவல் சோர்வால் -திரௌபதிக்கு எல்லாம் செய்தாலும்  கடனாளி  போலே நெஞ்சில் புண்ணுடனே எழுந்து அருளிற்று
ஸ்ரீ கஜேந்திர  ஆழ்வான் உடைய கால் புண்ணை தனது திரு பரிவட்டத்தாலே வேது கொடுத்து குளிரத் தடவிக் கொடுத்து
அருளிய அவன் திரு உள்ளத்தில் துக்கம் வாசோ மகோசரம் அன்றோ
அவிகாராயா சுத்தாயா என்பதை மட்டும் கொண்டு அவனுக்கு துக்கம் இல்லை என்பது
அவனை காஷ்ட லோஷ்ட ப்ராயனாக இசைந்தமைக்கு பர்யாயம் அன்றோ
ஆஸ்ரித விச்லேஷத்தில் விகாரம் இல்லை என்றால் அவ் வஸ்துவை அணைய ஆசைப் பட வேண்டாவே-

—————————————

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி  யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

உடையான் -ஸ்வாமி
ஒலி நீர் -ஒலிக்கின்ற நீர் -கடல்
விடையான் -எருதை வாகனமாக யுடைய ருத்ரன் -பாணாசுர யுத்த விருத்தாந்தம்
அடையார் -தன்னை வந்து அடையாமல் இருப்பார்கள் -பகைவர் என்றபடி
பிரதிகூலங்களை குடியோடு களைந்து ஒழிப்பவன்-

———————————————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

ஆபத்துக்களை போக்க வல்ல ஆண் புலி –
பசு நெய்யை விரும்பி அமுது செய்யும் ஆ மருவி அப்பன் நித்ய வாசம் செய்ய கண்டு குறைகள் தீர்ந்தேன் –
திருவாய்ப்பாடி ஸ்தானத்திலே திரு அழுந்தூரைப் பற்றி நின்றான்
பொன்றாமை -பொன்றுதல் -அழிதல்
அதனுக்கு அருள் செய்த -தாமரைப் பூவைத் திருவடிகளில் சமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிய அருள்-

————————————————

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள்  நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன்  கண்டு கொண்டேனே-7-6-5-

அஞ்சன மலை நிற்பது போலே இங்கே நின்று சேவை சாதிப்பவனை அடியேன் சேவிக்கப் பெற்றேன்
ஆ மருவி அப்பன் இடம் ஆழ்வார் ஈடுபட்டு இருக்க திருக் கண்ணமங்கை எம்பெருமான் ஓடி வந்து
இங்கேயே சேவை சாதித்து அருளினான்
கண்ண மங்கையுள் நின்றானை -என்று அவனுக்கும் மங்களா சாசனம் செய்து அருளுகிறார்-

——————————————-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -7-6-6-

சர்வ ஸ்மாத் பரன்-யாம் கடவுள்  என்று இருக்கும் எவ்வுலகில்  கடவுளர்க்கும் ஆம் கடவுள் நீ -திருவரங்க கலம்பகம்
உரியானை யுகந்தான் -யானை உரி உகந்தான் -யானை தோலை உகந்து தரிக்கின்ற  ருத்ரன்
நடனம் ஆடும் பொழுது யானை யுரியைப் போர்த்துக் கொண்டு நடனம் ஆடுவானாம்
ப்ரஹ்மாதிகளாலும் உள்ளபடி அறியப் படாத ஸ்வரூப ஸ்வ பாவங்கள் யுடையவன்
வைதிகர்கள் அடி பணிய நிற்பவன்
நீல மணி போன்றவன் -அவனை சேவிக்கப் பெற்ற பரம ஆனந்தம் பெற்றேன்-

—————————————-

திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா
உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே –7–6-7-

ஸ்ரீ யபதியாய் -அனைத்துக்கும் அந்தராத்மாவாய் –ஒலி சேரும் மாருதத்தை
வாயு ஆகாசத்தில் நின்றும் பிறந்ததால்
பூர்வ பூர்வ பூதங்களின் குணமும் உத்தர உத்தர பூதங்களின் காணலாம் என்கிற ரீதியில்
தனது குணமான ஸ்பர்சமும் ஆகாச குணமான சப்தமும் உண்டே காற்றுக்கு
பூநிலாய ஐந்துமாய் -பாசுரத்தில் சிறந்த கால் இரண்டுமாய் -என்றதும் அனுசந்தேயம்
கருவார் கற்பகம் -கரு -அடியைச் சொன்னபடி -ஸ்வர்க்க லோகத்தில் ஆலம்பனம் ஒன்றுமே
இல்லாத கற்பகத் தரு போலே இன்றிக்கே பூமியிலே வேர் பற்று உடைத்தான கற்பகமாம் எம்பெருமான் –

———————————————–

நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-8-

நிலை ஆளாக -நிலை நின்ற அடியவனாக -அவனே உபாய உபேயமாக பற்றி ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி வழு  விலா அடிமை செய்யப் பெற்றவனாக்கி அருள் செய்தான்
நிலமகள் தன் முலையாள வித்தகன் -ஸ்ரீ பூமிப் பிராட்டியார் உடைய திரு முலைத் தடத்துக்கு
ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஆச்சர்ய பூதனை –
பூமிப் பிராட்டிக்கு ஸ்ருங்கார ரசத்தில் தோலாதவன் என்றவாறு –
வேத கோஷம் மிக்க திவ்ய தேசம்
கலையார் சொற்பொருளை -சகல சாஸ்த்ரங்களில் சகல சப்தங்களுக்கும் அவனே பொருள்
சகல கலைகளிலும் புருஷார்த்தமாகப் பிரதிபாதிக்கப் படுபவன்
அலையார் கடல் -பாட பேதம்

———————————————————–

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

திருப் பேர் நகரிலும்
திருக் குடந்தையிலும்
அரவணை மீது பள்ளி கொண்டு இருப்பவனும்
நித்ய யுவதியான பெரிய பிராட்டியாருக்கு  நாயகனும்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
கார் காலத்து காள மேகம் போலே  இங்கே சேவை சாதித்து அருளுகிறான் -அவனைக் கண்டு களித்தேன் –

——————————————————–

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல்  வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –7-6-10-

மருவார் -பகைவருடைய
கறை நெடு வேல் -தானுகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -போது போக்காய் இருப்பதால்
ரத்தக் கறை கழுவதற்கு அவகாசம் இல்லை
பரம பதத்தை தாங்கள் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவார்கள்-

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-5-தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த-

March 29, 2015

திருவழுந்தூர் திருப்பதி -முதலாவது-மங்களா சாசன திருப்பதிகம் –

உபரி சரவஸூ -முனிவர்களால் சபிக்கப் பட்டு -தேர் அழுந்தி -இப் பெயர் பெற்ற திவ்ய தேசம்
ஆ மருவி யப்பன் –

———————————————

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழிய மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

அத்யந்த அதிசய உக்தி யாகங்கள் செய்வதற்கு முன்னமே மழை பொழியும் என்றது
முந்து வானம் மழை பொழியும் -தவறான பாடம்– பொழிய என்பதே பிராசீன பாடம்
மூவா  வுருவின் – -சக்தி வாய்ந்த யௌவன சாலிகள் என்றபடி
அந்தி மூன்றும் -ப்ராதஸ் ஸ்வநம் -மாத்யந்தின ஸ்வநம் -சாயம் ஸ்வநம்-

—————————————————————–

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன  குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே–7-5-2-

குருகுகள் திரள் திரளாக மீன்களைப் பிடிக்க நீர் நிலைகளிலே வந்து இழிந்து
தம் வாய்க்கு அடங்கக் கூடிய சிறு மீனைப்-ஆரல்- பிடித்து கதுப்பிலே அடக்கிக் கொண்டு இருக்கச் செய்தே
வேறு ஒரு பெரிய மீன் -நெடு வாளை-வந்து தோற்ற அதைப் பிடிக்க அஞ்சி ஓடிப் போய் பின்னையும் ஆசையினால் வந்து கிட்டா நிற்கும்
இதன் உட்கருத்தை பெரிய வாச்சான் பிள்ளை -பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதிரதர் மகா ரதர் -என்று இங்கனே
ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம்
இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று
சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது
தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது   -என்று  அகலுவதாய்க் கொண்டு
அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும் –

——————————————————————–

செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3-

வண்டுகள் குருக்கத்திப் பூக்களை விட்டு ஸ்திரீகளின் கூந்தல் கற்றைகளில் மது பானம் பண்ண எருகின்றனவாம்
ஐம்பால் -ஐந்து பண்புகள் கொண்ட கூந்தல் -சுருண்டு -நீண்டு -அடர்ந்து -கறுத்து-நறு மணம் கொண்டு இருத்தல் –

————————————————————————-

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

பரிவர் யாரும் இல்லாமல் ஆலிலை துயின்றுள்ளானே என்ற சிந்தனையே காரணமாக என்னுள்ளம் புகுந்து அருளினான்
மானச அனுபவம் மாத்ரமே அன்றி கண்ணுக்கும் விஷயமாய் ஹிருதயம் வேறு ஒன்றிலும் போகாத படி
இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளினவன்
பிள்ளைக்கு இரை தேடப் போகும் பொழுதும் பெடையுடன் செல்லுமாம் புள்ளு-

———————————————————–

பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே —-7-5-5-

சூர்ய சந்த்ரர்களுக்கு நிர்வாஹகன்
சங்கல்ப சக்தியால் பகலை இரவாக்கவும் இரவை பகலாக்கவும் வல்லவன்
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் -பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் -சாத்விகர்களுக்கு ஜாயமான கடாஷம் அருளி ராஷசருக்கும்
தாமசருக்கும் தோன்றாமல்
இப்படி ஜகத் ரூபியாய் இருந்தாலும் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாக
இங்கே சேவை சாதித்து அருளுகிறான்-

காற்று தூள் மேகப்படலம்   கார் காலத்தில் இருக்குமே –
-கொடிகளில் கட்டிய துணிகளின் அலைச்சலால் காற்று
திரு வீதியில் செல்வத் தேர்கள் சஞ்சாரத்தால் தூள்
மாதர்கள் கூந்தல் பரிமளத்துக்கு அகில் புகைப்படலம்
நித்யமும் வர்ஷா காலமாய் தோற்றும் –

——————————————-

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6-

என்னை பெறுகைக்கு நெடு நாள்  சமயம் பார்த்து பெற்றதால் அலாப்ய லாபம் பெற்றால் போலே சந்தோஷித்து
தாமரைப் பூ மலர்ந்தால் போலே திருப்பவளத்தை திறந்து ஸ்மிதம் செய்தருளி
அதிலே என்னை ஈடுபடுத்தி ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு போக்கு இல்லை என்று தோற்ற நின்றவர்
கண்ணுக்கு இலக்காக இங்கே சேவை சாதித்து அருளுகிறார் –

போழ்க-மேகத்தின் வயிற்றைக் கீண்ட அளவிலே
மாடங்களில் பாதுகாப்புக்கு உறுப்பாக சூலங்கள் நாட்டப்பட்டு இருக்குமே -ஒக்கம் சொன்ன படி –
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசை சூலம் செழும் கொண்டல் அகடிரிய -3-9-4–என்றார்
ஸ்ரீ வைகுண்ட விண்ணகர் திருப் பதிகத்திலும்-

மாதர்கள் ஆடும் ஆரவாரம் இடையறாது செல்லுகின்றதாம்-

——————————————-

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப்  புகையால்  அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –7-5-7-

இது முதல் மேல் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வாருக்கு நாயகி பாவனை –
என்னுடன் கலவி செய்ய திரு உள்ளம் கொண்டு -மாலைப்  பொழுதிலே வந்து சேர்ந்து  -மென் மலர்ப் பள்ளியிலே தங்கி
அதிலே பொருந்தாமல் -திருப்தி படாமல் -என்னுடைய ஹிருதயத்திலே ஏக தத்வமாகப் புகுந்து
கலவி பிரிவுடனே சேர்ந்து அல்லது இருக்க மாட்டாமையாலே பிரிவை பிரஸ்தாபித்து
அவ்வளவிலே என் கண்களில் நீர் பெருக –
இப்பைப் பட்ட நாயகியை எங்கனம் பிரிவேன் என்று கலங்கி கால் பெயர்ந்து போக மாட்டாதே நின்றவர்
நித்ய வாசம் செய்து அருளும் இடம் இத் திவ்ய தேசம்
இங்கே திரு வீதிகளும் கடல் போலே விசாலமாய் பெருமை பொருந்தி இருக்கும்
சாந்திட்டு வெண்ணிறமாய் இருக்கும் மணி மாடங்கள் விண்ணுலகத்து அளவும் ஓங்கி இருக்கும் –
கரும்பாலைப் புகை சூர்ய கிரணங்களை மறைத்து எங்கும் நிழல் செய்யும் –

——————————————

வஞ்சி  மருங்கிலிடை நோவ மணந்து நின்ற  கனவகத்து  என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவைமார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே –7-5-8-

கனவிலே வந்து கலந்து -இடை நோவ -பூர்ண சம்ச்லேஷம் செய்து அருளி -பிரிந்து போனவர் மற்றுள்ள
அன்பரோடும் நனவிலே -ப்ரத்யஷமாக
கலவி செய்ய வந்து நிற்கிற இடம் இது
மருங்குல் இடை -இரட்டைச் சொற்கள்
மாதர்கள் அணிந்த பொன்மயமான நூபுரங்கள் சப்தம் ஓயாது இருக்கும் –

கை கூப்பி நின்றார் -நான் அஞ்சலி செய்யப் பெற்று நின்று கொண்டு இருந்தவர் -என்றபடி-

———————————————–

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே-7-5-9-

என்னுடைய பஞ்ச இந்த்ரியங்களையும் தன வசமாக்கிக் கொண்டவர் -ஜிஹ்வே கீர்த்தய கேசவம் இத்யாதி
மேனி அழகையும் கொள்ளை கொண்டவர்
அரையில் பரியட்டம் தங்காத படி பண்ணிப் போந்தவர் -தலைவர் வாழும் இடம்
புனிதர் -எதிர்மறை லஷணம்-பெண்ணை படுகொலை பண்ணி -ப்ரணய ரோஷம் தோற்ற அருளிச் செய்கிறார்
வயல்களிலும் பாட்டும் கூத்தும் நடை பெறுகின்றன –

———————————————-

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10-

குவளைக் கண்கள்
ஆம்பல் அதரம்
தாமரைப் பூக்கள் முக மண்டலம் –
ஓத வல்லார்கள் பாவங்கள் தொலைந்து போம்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-4-கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை-

March 29, 2015

ஸ்ரீ சார நாத பெருமாள் -திருச்சேறை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –
இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை —
பாகவத சேஷத்வம் -பகவத் சேஷத்வத்தின் காஷ்டை -எம்பெருமான் இடம் அளவிறந்த பக்திப் பெரும் காதலை வெளியிட்டு அருளுகிறார்   –
கீழே -நண்ணாத வாளவுணர் -திருப்பதிகம் போலே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு   அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

—————————————–

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

பூதனையை முடித்த அமரர்கள் அதிபதியே -என்று பரத்வ  சௌலப்யங்களை போற்றி உருகும்
பாகவதர்கள் என் தலைமேலே  வீற்று இருக்க உரியார்-என்கிறார் –

வெந்தழல் போல் கூந்தலாளை-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த  கரு நிறச் செம்மயிர் பேயை -பெரியாழ்வார்
அரக்கி யாதலால் செம்பட்ட மயிரை யுடையவள்
மா மதலாய் -பிள்ளைத் தனத்தில் குறை அற்றவன்
பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே மா மதலைப்  பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய
பசைந்த வளையத்திலே கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –

——————————————-

அம்புருவ வரி நெடுங்கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்யப் பெற்ற திரு மார்பன் –
ஸ்ரீ கிருஷ்ணன் போல விரோதி நிரசனம் செய்யும் திருச் சேறை எம்பெருமான் திருவடிகளை
சேவிப்பார்கள் என்நெஞ்சை விட்டு பிரியார்
நிதித்யாசிதவ்ய -என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்   –
சிந்தைக்கு இனியானுக்கும் அங்கு இடம் இல்லையாம் -வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகளின் போக்யம்
அம்புருவ வரி  நெடுங்கண் -அம்பு உருவம் -கண்ணுக்கு விசேஷணம் –
அம் புருவம் -அம்பன்ன கண்ணாள் அசோதை –

———————————————

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-

பாற் கடல் பாம்பணி மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம்
முன் விலகும் உருவினாள்-முன்னே சஞ்சரிக்கிற -என்றும் விட்டு
விலக வேண்டும்படி பயங்கர ரூபத்தை உடையவள் என்றுமாம் –

———————————————

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-

திருச்சேறை எம்பெருமானுடைய திரு நாமங்களை வாயாரப் பாடும் பெருமை யுடைய பாகவதர்களைப் பிரிந்து
ஒரு நொடிப் பொழுதும் தரித்து இருக்க கில்லேன்
ஸ்ரீ கீதையில் -ஸ மகாத்மா -மகாத்மானா -என்று சொல்பவர்கள்-

——————————————–

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

பாகவத பக்தி தமக்கு இருப்பதால் பகவத் பக்தியிலும் குறை அற்று இருக்கிறேன் என்கிறார்
முழு முதல் கடவுளான எம்பெருமானுக்கே அனன்யார்ஹ சேஷ பூதன் ஆவேன் என்கிறார்
பாகவதர்களை நினைத்த மாத்ரத்திலே உள்ளத்திலே தேனூருகிறதே
வந்திக்கும் மற்றவர் -பௌத்தர்கள் ஸ்தோத்ரம் -வந்தே வந்தே -மிகையாக இருப்பதால் வந்திக்குமவர் என்று பௌத்தர்கள் –
மாசுடம்பின் வல்லமணர் -உடம்பில் அழுக்கை கழற்றல் ஆகாது என்று இருக்கும் ஜைனர்கள் –

——————————————-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நீர்மையிலே தோற்று உன் திருவடிக்கே அடிமை யானேன்
உன் திருவடிகளே எனக்குத் தஞ்சம் -வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் -ஆணை இட்டுச் சொல்லுவேன்
இப்படி திண்ணமாக சொல்லுவது எதனால் என்றால்
அடியார்களை சேவித்த மாத்ரத்திலே கண்ணும் நெஞ்சும் களிக்கின்றனவே –
இவ்வளவு பரிபாகம் பெற்றேன்- ஆன பின்பு அந்த அத்யவசாயம் திடமாக இருக்கத் தட்டுண்டோ –

—————————————-

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7-

பகவத் அடியார்கள் என்பதால் பாகவதர்கள் உத்தேச்யம்
பாகவதர்கள் பற்றும் தெய்வம் என்பதால் எம்பெருமானும் உத்தேச்யம்
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பான் நான்
பெரிய வண்  குருகூர் நகர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
சிந்தித்தேற்கு -சிந்தித்த எனக்கு என்ற பொருள் இல்லை -சிந்தித்த என்ற விசேஷணம் மாத்ரம்
திருமாலை -மழைக்கு அன்று  வரை முனேந்தும் பாசுரத்தில் -உழைக்கின்றேற்கு என்னை-என்ற  பிரயோகம் போலே-

——————————————

உண்ணாது வெங்கூற்றம்  ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8-

எம்பெருமானைக் கண்ணாரக் கண்டும் கையாரத் தொழும் பரவசப் படும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
நெஞ்சால் நினைத்த மாத்ரத்திலே
மிருத்யு பயத்துக்கும் பாப பயத்துக்கு பிரசக்தி இல்லை யாகும்
உண்ணாது  வெங்கூற்றம்–சாவு இல்லை என்ற பொருளில் இல்லை -யம தண்டனைக்கு ஆளாக மாட்டார்கள்
அன்றிக்கே
பாகவதர்கள் மரணத்தை பற்றிய வருத்தத்தினால் கரைய மாட்டார்கள் என்றபடி
மரண துக்கம் பெரிய துக்கம் -சரீரம் புத்து இந்திரியங்கள் சுவாதீனத்தில்   இல்லாமல் போகலாம்
பகவத் பாகவதர்கள் ஆத்மாபற்றிய சிந்தனையே கொண்டு ஆத்மானந்ததிலே ஆழ்ந்து
மரணத்தை உத்சவமாகவே கொண்டு இருப்பார்கள்
ஈஸ்வரன் நியமனத்தால் பிராப்த போகம் முடிந்து பிதாவான ஈஸ்வரன் சந்நிதானத்துக்கு
மீண்டு போவதால் மகத்தான ஆனந்தத்தை அடைகிறான் –

அந்த பேர் ஆனந்தத்தை எதற்கும் ஒப்பாக சொல்ல முடியாதே-

——————————————

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும்  தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

ஆத்மா அபஹாரனான எனக்கும் இப்படி பாகவதர்களைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் எப்படி உண்டானதோ
வஞ்சக் கள்வன் மா மாயன் எம்பெருமானையும் வஞ்சித்தேன்
எனக்கு பாகவதர்களைக் கண்டால் நீர்ப்பண்டமாக உருகும் நெஞ்சம் ஏற்பட்டதே-

யோன்யதா சந்த மாத்மானம் அன்யதா ப்ரதிபத்யதே கிம் தேன ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா-
போதொருகால் -தப்பான பாடம் -போதருகால் -நுகளும் காலம் என்ற படி -சரியான பாடம் –

———————————————————-

பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

மேல் ஒன்பது பாசுரங்களிலும் பாகவத நிஷ்டையை பேசினாலும் -நிகம பாசுரத்தில் –
தண் சேறை அம்மான் தன்னை -என்றது பாகவதர்களுக்கு உத்தேச்யன் என்பதால் –
இத் திருமொழியை திருச் சேறை எம்பெருமானுடைய திருவடிகளில் உங்கள் கையால் சூட்டுமின் –
ஸ்வயம் போக்யம் இதுவே பலன் என்கிறார்
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி போன்றவை தேட வேண்டா
இத்தையே பூ இட்டதுக்கும் மேலாக எம்பெருமான் திரு உள்ளம் உகக்கும் —

வா மான் தேர் பரகாலன்-வாம் -வாவும் என்றபடி -தாவுதல் -மான் -குதிரைக்கும் பெயர் –
ஆடல் மா -குதிரை யுடைய ஆழ்வார் என்றபடி —

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-3-சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்-

March 29, 2015

திரு நறையூர் திருப்பதி  பத்தாவது மங்களா சாசன திருப்பதிகம்-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1-

சினவில் செங்கண் அரக்கர்-சினம் இல் -கோபத்துக்கு இருப்பிடமாய் -செங்கண் அரக்கர் என்றபடி
ராவணாதி ராஷசர்களை அழியச் செய்து
ஆஸ்ரிதர்க்கு ஒன்றும் செய்ய வில்லையே இன்னும் என்ன செய்வோம் என்று மனனம் செய்யும் மா முனி
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி
அரியன செய்தும் ஆஸ்ரிதர்கள் நம்பிக்கையை வளரச் செய்பவன் -மரம் ஏழும் எய்த மைந்தன் -மிடுக்கன்
நனவு -கனவுக்கு எதிர்தட்டு -தெளிவைச் சொன்னபடி
தெளிந்த சனகாதிகளுக்கும் ஸ்வ யத்னத்தால் காண முடியாதவன்
கனவில் கண்டேன்-ஸ்வப்னத்தை சொன்னது அன்று -தெளிவற்ற மன நிலைமை
தெளிந்தவர்களாலும் காண முடியாத அவனை தெளிவற்ற இவர் அவன் காட்டக் கண்டார்
முந்துற நெஞ்சு கண்டது –பின்னைக் கண்களும் கண்டன -அதனால் களிப்படைந்தேன் –

———————————————————

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை  மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே —7-3-2-

உலகுக்கு எல்லாம் தாயான உன்னையே நினைத்து இருக்கும் படி அருள் செய்தாய்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக
நீ நினைக்க வேண்டும் -திருச் சந்த விருத்தம்  -101-
என்னையும் தன்னையே நினைக்கச் செய்து அருளினார் என்கிறார்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -நம்மை நினைத்து இருந்து அருள் செய்வன் –
தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
எங்கே கண்டோம் -அபேஷா நிரபேஷமாக ரஷித்து அருளிய -அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை –
அருளாமல் உபேஷித்தாலும் விட ஒண்ணாத அழகன் – மகரக் குழைக் காதன் –
மின்னு மணி மகரக் குண்டலங்கள் வில் வீச நிற்கும் அழகுக்குத் தோற்றுப் பேசுகிறபடி
பிரளயத்தில் தள்ளிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
மைந்தன் -எப்போதும் யௌவனமாகவே இருப்பவன் –
மதிள் கோவல் இடை கழி யாயனை –
பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின் மூவரு நெருக்கி மொழி
விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து பாயும் பனி மறுத்த பண்பாளா
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூம் கோவல் இடை கழியே பற்றி இனி -முதல் திரு -86-
உகந்தார் நடுவே புகுந்து நெருக்குமவன்
தேஹளீ -வடமொழி – ரேழி -தேஹளீசன்

—————————————————-

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

தானாகவே தன் பேறாகவே வந்து சேரக் கண்டவர் ஆதலால் -வந்த நாள் வந்து  -என்கிறார்
பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது –
அங்கன் ஓன்று இல்லாமையாலே
பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும்
இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –
நிர்ஹேதுகமாக திருவருள் அடியாக கிடைத்தது ஆகையால் விச்சேதம் இல்லை
எத்தால் மறக்கேன் -உபகாரம் ஸ்வல்பம் இல்லை -பெற்ற உபகாரத்துக்கு கைம்மாறு செய்து இருந்தாலும் மறக்கலாம்
ஒன்றும் இல்லையாய் இருக்க எங்கனே மறப்பது

———————————————————

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச்   சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-

சரங்கள் ஆண்ட -வில்லாண்ட போலே -சத்ருக்களை காட்டு காட்டு என்று விம்மிக் கிளம்பும் அம்புகள்
சரங்களாண்ட தண் தாமரைக் கண்ணன் -சேர்க்கையாலே கடாஷத்துக்கு இலக்கு ஆகாமல் அம்புக்கு இலக்காகி மாண்டனர்
-ந நமேயம்  -என்று மார்பு நெரித்து மாண்டு ஒழிந்தனர்
என் மனம் அங்கனம் இன்றி தாழ்ந்து போய் உய்ந்து போம்-

————————————————————–

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே  —7-3-5-

உம்பர் மேல் உலகங்களுக்கும் உலகத்தாருக்கும்
உரலிடை கட்டுண்டவன் கண்ணன் இல்லை ஒரு தீம் கரும்பு என்கிறார்
சௌசீல்ய சௌலப்ய திருக் குணங்களில் ஈடுபட்டமை –

—————————————————————–

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன்சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே -7-3-6-

எள் தனை எட்டனை
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கு
கோங்கு நின்று பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிரும் சோலை யதே -பெரியாழ்வார்
கோங்கு அலரும் பொழில்  மாலிரும் சோலை -நாச்சியார்
கோங்கு மரங்கள் விசேஷமாய் உள்ளதை அருளிச் செய்து
கோங்கு பொன் போன்ற நிறம் உடையது -மலர்ந்தால் பொன் தட்டு போலே இருக்கும்-

மறை நான்கும் முன் ஓதிய பட்டனை -பிரமனுக்கு ஓதுவித்த என்றபடி
பரவைத் துயில் ஏற்றை  -பரந்து இருப்பது பரவை- கடல் திருப் பாற் கடல் –

———————————————

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே -7-3-7-

பாலை ஆகி -பாலை ஆகிய இனிய பான் போலே இனியனாய்-
யாழ் பயில் நாத ரூபியை பாலை யாக்கி என்று விசேஷிக்கையாலே -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி
என் கண்ணையும் நெஞ்சையும் வாயையும் இடம் கொண்டான் ஆதலால் என் வாயானது -கொண்ட பின் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி மற்று ஒன்றை சுவையாது –
மனம் தன்னுள் -மனம் -வைதிகர் திரு உள்ளத்தை – -தனக்கு உரிய -உள்-உள்ளாக கொண்டவன் –

வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் -லாவண்யம் நிரம்பப் பெற்றவன் -மீன் போன்று திருக் கண்கள் திகழப் பெற்றவன் -என்றவாறு

———————————–

இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

பெற வேண்டிய பேறு இம்மையே பெற்றேன் -இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் –
கம்பீரமாக தொடங்கும் மிடுக்கு
அடும் துனியைத் தீர்த்து -துனி -துன்பம் -இங்கே மூல காரணம் -கருமம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி –
தன்னை அடைய தானே நெறி-

——————————-

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை  யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

செய்து அருளிய உபகாரத்துக்கு கைம்மாறு செய்யலாவது ஒன்றும் இல்லையே –
என் செய்கேன் அடியேன் உரையீர்
கைம்முதல் இல்லாமல் ஸ்வரூபமே பிடித்து பரதந்த்ரனான நான் எத்தைச் செய்வேன் என்கிறார்
சம்சாரியான நான் நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன்-

———————————————-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10-

நாச்சியார் கோயில் என்பதால் ஆழ்வார் தம்முடைய திருப் புகழை முற்கொண்டு பேசி –
தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்-என்று தொடங்கி
பலன் சொல்லி நிகமிக்கிறார்
பக்தர்களுக்கு அமிருதமாக அருளிச் செய்யப் பட்ட இத் திரு மொழி கற்பவர்கள் பக்கலில் பாவம் ஒன்றும் நில்லாது –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-2-புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட-

March 28, 2015

திரு நறையூர் திருப்பதி ஒன்பதாம் மங்களா சாசன திருப்பதிகம் —

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும்  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-

உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -பசு பஷி யோனிகளிலும் பிறக்க வேணுமோ
என்று  சிந்தித்து நெஞ்சு உருகி கண்கள் பனி மல்கவும் பெற்றேன் –

மனம் உவந்து பிறந்து அருளும் திருக் கல்யாண குணங்களை பிரகாசித்து கொண்டு இங்கே சேவை சாதித்து அருளும்
இருப்பிலே என்னை அடிமை கொண்டாயே -என் நெஞ்சை எனக்குத் தெரியாமல் அபஹரித்து கொண்டாயே
வாய் விட்டுச் சொல்லி ஆனந்த பாஷ்பம் அருவி சோரத் தொடங்கிற்று-

——————————————————

ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-5-

பனுவல் கவிதை கொண்டு -சாஸ்திர உக்தமான இலக்கணம் வழுவாத கவிகள்
தொண்டர் தம்மை -நீசர்களை -கூழாட்பட்டு இருப்பவர்கள்-

ஓடா வாளரியின் உருவாய் –
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –
தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் –
நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ –
நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் –

அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா-கல் நெஞ்சனான என்னுடைய நெஞ்சையும்
கொள்ளை கொண்டதே உனக்கு பெரிய மிடுக்கு காண் –

————————————————————

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3-

சகல வித பந்துவும் நீயே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி  யாவாரே –
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை —-
எத்தால் யான் மறக்கேன் இது சொல்லேன் ஏழை நெஞ்சே -என்பர் மேல் எட்டாம் பத்தில்-

நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ-இப்படி விலஷணமான அளவிறந்த ஒள்ளிய சுடரே –
பரமபதத்தில் இருக்கும் இருப்பை இங்கே காட்டி அருளுபவனே –

————————————————–

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ்  நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

ஆலிலை போலே என் நெஞ்சையும் உரிய இடமாகக் கொண்டாய்-
ஆலிலையை இகழ்ந்திட்டு என் நெஞ்சில் இடமாக கொண்டாய் என்றுமாம்
இதை அறிந்து -இந்த பெரிய அருளை சிந்தியாமல் இல்லை
பரம போக்யமான திரு நறையூர் இருப்பிடமாக இருக்க இப்படி என் நெஞ்சில் நித்ய வாஸம் செய்து அருளி –
சால க்ருதஜ்ஞனனாய் இரா நின்றேன் –

———————————————————————————————-

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நாண்தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-

நீண்டாய் -நெடுமாலே -உனது ஸ்வரூபாதிகளை யாவராலும் அறிய முடியாதே
ப்ரஹ்மாதிகள் ஆண்டாய் ஸ்வாமின் என்று மட்டும் சொல்லிப் போவார்கள்
இப்படிப் பட்ட உனக்கு நித்ய கைங்கர்யம் செய்ய ஒருப்பட்டேன்
அத்தை அறிந்து என் நெஞ்சில் புகுந்தாய்
இனி நீயே பெயர்ந்து போகப் பார்த்தாலும் திரு வாணை நின் ஆணை கண்டாய் என்னுமா போலே ஆணை இட்டாகிலும் தடுப்பேன்
இப்படி அருளிய ஆழ்வாரை -அடியேன் என்கிறீர் ஆண்டான் சொல் படி நடக்க வேண்டாவோ- நிர்பந்திக்கலாமோ என்ன
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் –
மடல் எடுக்கப் பார்ப்பார் இது ஆம் இது ஆகாது என்று பார்த்தோ கார்யம் செய்வது
நம்பி நறை யூரர் என் நிலைமை கண்டு இரங்காரரே  யாமாகில் மன்னு மடலூர்வன் வந்து -பெரிய திருமடல் தனியன்
நாண் என்ன அடைவிலே நிற்க முடியும் என்றவாறே –

——————————————

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே  அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-6-

எம் தாதை தாதை அப்பால் எழுவர் -நானும் -என் தகப்பனும் -அவன் தகப்பனும் –
அவனுக்கு முன்புண்டான சப்த புருஷர்களும் -ஆக பத்து தலை முறையாக
ஏழாட்  காலும் பழிப்பிலோம் நாங்கள் –
எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் –
அடிமைச் சுவடு நன்கு ஆரியப் பெற்ற நான்-என் நெஞ்சுள்ளே வந்து சேர்ந்த தேவரீரை போகல் விடுவேனோ
இப்படி சொன்ன பின்பும் போக பார்த்தானாம் அந்தோ -என்கிறார்-
உனது கிடைக்கப் பெறாப் பேறான சொத்தை இழக்கப் பார்க்கிறாய்
என் ஆருயிரே -உன்னை ஒழிய ஜீவியாதபடி என்னுடைய சத்தையை நிர்வஹித்துக்  கொண்டு  போகிறவனே-

——————————————————–

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-7-

நெஞ்சை விட்டு போக உறுப்பாக மிடுக்கைக் காட்ட -அந்த மிடுக்கை நான் அறிவேன் -என்கிறார்
அந்த மிடுக்கை விதேயனான அடியேன் இடத்திலே உபயோகிக்க வேண்டா-

பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்-ஆழ்வார் மற்றவர்கள் நெஞ்சு எல்லாம் வல் நெஞ்சு என்று இருக்கிறார்
இவர் போன்ற மென்மை இல்லையே -பரத ஆழ்வான் சித்ர கூடம் ஏற போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டால் போலே
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் -அன்ன நடைய அணங்காய பெரிய பிராட்டியார்
ந கச்சின் ந அபராதயாதி என்பவள் நித்ய வாஸம் செய்து இருக்க
பெரிய திரு மடலில் –
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா ம மலை போல் பொன்னியலும் மாடக்
கவாடம் கடந்து புக்கு –என்னுடைய கண் களிப்ப நோக்கினேன்  –
என்ற பின் நாச்சியாரைப் பற்றி பேசும் கால்
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் –அன்ன திரு யுருவம் நின்றது
என்று பிராட்டியை அன்னமாய் அருளிச் செய்தது காண்க –

———————————————–

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல  ஒட்டேன்
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-

இமையோர்களையும் விட்டு என் நெஞ்சிலே புகுந்து அருளிற்று -இனி நான் போகல் ஒட்டேன்
பொன் மலர் -பொன் போலே விரும்பத் தக்க மலர்
தொழுது இறைஞ்சி வணங்க -ஒரு பொருள் பன்மொழிகள்
மனம் மொழி மெய்கள் ஆகிற த்ரி கரணங்களின் வ்ருத்தியை சொல்லுகின்றன
கைப்போது கொள்ளுதல் -புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்சலி செய்தல்-

————————————————-

ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-9-

யான் ஆய் -எனக்கு அந்தராத்மாவாய்
என் தனக்கு ஆய் -எனக்கு விதேயனாகக் கொண்டு
கீழ் கழிந்த காலம் எல்லாம் பாழே கழிந்தன -இந்த உடலைக் கொண்டு ஒரு பயனும் பெறாது ஒழிந்தேன் முன்பு எல்லாம்
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் நானே எய்தப் பெற்றேன் -என்று அந்வயம்
சரீரமாத்யம் கலு தர்ம சாதனம் -என்கிறபடியே தர்ம அனுஷ்டானத்துக்கு இன்றியமையாத சரீரத்தை போஷிக்க வேண்டியது அவசியமே-

———————————————-

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து   நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-

கல் நீர் மால் வரைத் தோள் -ஒலிக்கின்ற அருவி நீரை யுடைய பெரிய மலை போன்ற திருத் தோள்கள்
சொல் நீர சொல் மாலை -கொண்டாடிச் சொல்ல வேண்டியதையே ஸ்வ பாவமாக யுடைய இச் சொல் மாலைகளை
இத்தை அனுசந்தித்தாருக்கு இது ஒரு சப்தமே என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையை –
நல் நீர்மையால் -நித்ய கைங்கர்யம் ஆகிற சிறந்த ஸ்வ பாவத்தோடு
நித்ய விபூதியில் சென்று நித்ய கைங்கர்யம் செய்து நித்ய ஆனந்த அனுபவம் பெறுவார்கள் –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-1-கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்–

March 28, 2015

திரு நறையூர் திருப்பதி எட்டாவது மங்களா சாசன திருப்பதிகம்-

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

நாகின் ஸ்தானத்திலே ஆழ்வாரான தம்மையும் கன்றின் ஸ்தானத்திலே எம்பெருமானையும் கொள்ள முடியாமல்
பிள்ளை அமுதனார் மிடி பட
பட்டர் -நாகை தன் கன்று உள்ளினால் போலே என்று கொண்டு
நாகுதன் -நாகினுடைய
கன்றானது
தாயையே நினைத்து கத்துமா போலே
பால் சுரவாத பசுவின் ஸ்தானத்திலே -அருள் புரியாத எம்பெருமான்
கத்துகின்ற கன்றின் ஸ்தானத்திலே தம்மை வைத்துக் கொண்டு -பட்டர் நிர்வாஹம் –
உன்னை மறப்பதற்கு ஹேதுவான இந்நிலத்திலே பிறந்து வைத்தும் மறவாதே இயற்கையான
அடிமையை உணர்ந்து உன்னையே அழைக்கின்றேன்
நறவு -தேனுக்கும் வாசனைக்கும் பெயர்
பிறவாமை என்னைப் பணி-பிறப்பது -என்பதும் எம்பெருமானை மறப்பதும் என்பதும் பர்யாயம்
இனி ஒரு காலும் உன் திருவடிகளை மறவாமல் இருக்கும்படி அருள் புரிய வேணும் –

————————————————————

வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே –7-1-2-

துற்றாக -ஒரு கபளமாக-
அண்டம் எல்லாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கவை நீ
உண்டு அருளும் காலத்தில் ஒரு துற்றுக்கு ஆற்றாவால் -திருவரங்கக் கலம்பகம்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் என்பதும் மிகை அன்றோ
பிரளய காலத்தில் ஆர் கூப்பிட்டு ரஷித்து அருளினாய்
பிரஜைகளின் நோயை அறிந்து பரிஹரிக்கும் மாதாவைப் போலே அன்றோ நீயே ரஷித்தாய்
உன் பேறாகக் காத்து அருள வேண்டி இருந்தும் நான் உன்னை நோக்கி கூப்பாடு போடுவதைக் கேட்டாகிலும் இரங்கி  அருளல் ஆகாதோ
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் விண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வாயிற்று அடக்கி ஆலின் மேலோர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன்-

தொல் புகழோனே-இப்படி பல காலும் ஆஸ்ரித ரஷணம் பண்ணிப் படைத்த புகழ் எல்லை அற்றது என்கை
ஆற்றேன் -வேறு ஒருவருக்கும் உரியேன் ஆகாதபடி உனக்கே அற்றுத் தீர்ந்தவன் –

—————————————————-

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3-

உன்னையே கூப்பிடும்படி அருள் புரிந்து வைத்து இருக்கிறாயே
உன்னுடைய கிருபையையே அனுபவித்து பர்யாப்தி பிறவாமல் அபி நிவேசம் உடையேனாய்
அதையே அனுபவித்து செருக்குற்று யமாதிகள் தலையிலே அடி இட்டுத் திரியும்படி ஆனேன் –
சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு அவ்வோ இடங்கள் தோறும்
இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான்  –
அஸ்மாதாதிகளை அனுபவிப்பதற்காக பல திவ்ய தேசங்களில் திவ்ய மங்கள விக்ரஹங்களை பரிஹரித்து சந்நிதி பண்ணி அருளுகிறான்
தாரேன் -என்றது -தர ஒட்டேன் -என்றபடி-

——————————————————

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே–7-1-4-

புள் வாய் பிளந்த புனிதா என்றதும் என் உள்ளத்திலே வந்து ஸ்தாவர பிரதிஷ்டியாக நிலைத்து
சகல தாபங்களையும் ஆற்றி குளிர்ச்சியை உண்டாக்கினாய்
தானே கை தொட்டு விரோதிகளை களைந்த பரி சுத்தி -புனிதா
கள்வா -இராமடம் ஊட்டுவாரைப் போலே உள்ளேயே பதி கிடந்து சத்தையையே பிடித்து  நோக்கிக் கொண்டு
போருமவன் என்கையால் கள்வா
உலகம் ஏத்தும் காரகத்தாய் கார் வானத்துள்ளாய் கள்வா -திரு நெடும் தாண்டகம்
பண்டே உன் தொண்டாம் பழ வுயிரை என்னது என்று கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டலத்தோர் புள் வாய்ந்த பிளந்த புயலே உன்னைக் கச்சிக் கள்வா என்று
ஓதுவது என் கொண்டு -திருப்பதி அந்தாதி -85-

கடல் மல்லைக் கிடந்த கரும்பே -இப்படி ஸ்ரீ ஸூக்திகள் ஆழ்வார் திருவாக்கிலே நின்று தான் வெளி வரும்
கரும்பே -கை தொட்டு நெருக்குதலால் வரும் செவ்வி அழிகை இன்றிக்கே இருக்கை
வள்ளால் -வள்ளல் -ஆஸ்ரிதர்க்கு தன்னை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்குமவனே
மகா உபாகாரகனான உன்னை -உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான் -ஒருபடியாலும் மறக்க முடியாது –

——————————————————

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

உனக்கு ஆகர்ஷகமான சௌகுமார்யத்தை யுடைய சீதா பிராட்டியும்
அவளும் கூட துணுக் துணுக் என்னும்படியான சௌகுமார்யத்தை யுடைய நீயும்
துஷ்ட ஜந்துக்கள் நிறைந்த காட்டிலே ஒரு மத யானை பிடியோடு கூடக் களித்து உலாவுமா போலே  உலாவினவனே
அவனுடைய வள்ளல்தனத்தை விவரித்த படி -நித்ய சூரிகள் மட்டும் அனுபவிக்கும் தங்கள் திரு மேனியை
எல்லா பிராணிகளும் கண்டு அனுபவிக்க சர்வ ஸ்வ தானம் பண்ணிணவனே -என்றவாறு
நல்லாய் -ஆஸ்ரித வத்சலனே
நர நாரணனே -நர நாராயணனாய் யுலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -என்பர் மேல் பத்தாம் பத்தில்
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து
இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட
சர்வேஸ்வரன் தன கிருபையாலே இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி
தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான் –
சிஷ்யனாய் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக -முமுஷுப்படி
சொல்லாய் -தேர் தட்டில் சோதி வாய் திறந்து அருளினால் போலே அடியேனுக்கும் ஓன்று அருளிச் செய்ய வேண்டும் —

————————————————————

பனியேய் பரங்குன்றின்   பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

திருப் பிரிதியில் எல்லாரும் விரும்பும் படி நித்ய  சந்நிதி பண்ணி அருளி –
ஆஸ்ரிதர் ஹிதத்தை   அநவரதம் சிந்தனை பண்ணி அருளும் முனியே –
திரு மூழிக் களத்திலே உன்னுடைய ஸ்வரூபாதிகளை பிரகாசிப்படுத்துக் கொண்டு நித்ய சந்நிதி பண்ணி அருளுபவனே
இனியாய்  -சரியான பாடம்- இனியாய தொண்டரோம்-பாட பேதம் -வ்யாக்யானத்துச் சேராது-

———————————————————————-

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-

எனக்கு வைத்த மா நிதியும் நீயே
திவ்ய தேசங்களே யாத்ரையாக போது போக்கித் திரியும் என்னோடு ஒத்த பக்தர்களுக்கு கதியும் நீயே
உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
எல்லா திவ்ய தேச எம்பெருமான்களும் இவனுக்கு தங்களைக் காட்டித் தந்து ஆஸ்வாசப் படுத்தி  அருளுகிறார்கள்
நித்திலம் -நிஸ்தலம் வடமொழி சொல் -முத்து பொருளில் –
அதிவித்ரும மஸ்த நிஸ்தலா ளீருசம்-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
திரு நீர் மலை நித்திலத்தொத்தே –
திரு நீர் மலையிலே வந்து
முத்து மாலையை உடம்பிலே அள்ளி ஏறிட்டுக் கொள்ளுமா போலே -நித்திலம் -பனி ஸ்தலம் -முத்து
தொத்து -மாலை –
குளிர உடம்பிலே எறட்டு அணைத்துக்  கொள்ளலாம் படி இருக்கிறவனே –
பதியே –பதியே பரவித் தொழும் என்று சேர்க்காமல் -தனியாகவும் கொண்டு
ஆஸ்ரிதற்கு வாசஸ் ஸ்தானமாய் உள்ளவனே என்னும் விளிச் சொல் -என்றுமாம்-

——————————————————–

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-

உண்டியே உடையே என்னாமல் அத்தா ஸ்வாமியே அரியே விரோதி நிரசன சீலனே-
முளைக்கின்ற வித்தே -ஜகத் காரண பூதனே – என்று சொல்லிக் கொண்டு கால ஷேபம் செய்கின்றேன்
திகம்பர ஜனே க்ராமே ஹாஸ்யே கௌபீ ந வான் நர -போலே
பரிகாசத்துக்கு அஞ்சி -விட முடியாமல் அன்றோ உன்னுடைய போக்யதையில் ஈடுபட்டு
பேயரே எனக்கி யாவரும் யானும் ஓர் பேயனே –அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -பெருமாள் திரு மொழி-

————————————————–

தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ -7-1-9-

தூயா -எல்லார் திறத்திலும் நன்மையே சிந்திக்கும் உள்ளத் தூய்மை
விளக்கில் விட்டில் பூச்சிகள் போலே அசுரர்கள் விழுந்து முடிவர் –
அவர்களையும் நல் வழிப் படுத்த பழ கிருஷிகளை பண்ணி அருளுவான் இவன்
சுடர் மா மதி போல் -திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம்  இழிந்தேலோர் எம்பாவாய்
ஆயா -உன்னுடைய  விபூதியில் ஒருவர் இவன் நம் பிள்ளை என்று அபிமாநிக்கலாம் படி இடைப்பிள்ளையாய் வந்து அவதரித்து அருளினவனே
அலை நீர்-ஆபத் பந்துவான உன்னை அடியேன் எங்கனம் மறக்க வல்லேன் —

——————————————————-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ்  மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே -7-1-10-

சமஸ்த கல்யாண பரிபூர்ணனான பெருமானுக்கு அடிமைப் பட்ட திரு மங்கை ஆழ்வார்
திருவாய் மலர்ந்து அருளின இத் திரு மொழியை தொண்டர்களே வாயாரப் பாடுங்கோள்-பாடி ஆடுங்கோள் –
இங்கனே யாகில் சகல சம்சார தாபங்கள் தொலைந்து பரமபத பிராப்தி யுண்டாகும் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-10-கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை-

March 28, 2015

திருநறையூர் திருப்பதி ஏழாவது மங்களா சாசன திருப்பதிகம் –

திரு நாமப் பாட்டு ஒழிய ஒன்பது பாசுரங்களும் நமோ நாராயணமே-என்ற மகுடத்தாலே முடியும்
இவ்வாழ்வார் திரு நறையூர் நம்பி பக்கல் திரு இலச்சினை  பெற்றார் என்று பிரசித்தம் இறே
இம்முகத்தாலே நம்பி இவருக்கு ஆச்சார்யர் ஆகிறார்
ஆச்சார்யர் திரு நாமமே அனுசந்தேயம் ஆதலால் பெரிய திருமந்தரம் ஆகிற அத் திரு நாமத்தை
தாமும் அனுசந்தித்து பிறருக்கும் கற்பிக்கிறார் இத் திரு மொழியில்
இதில் பெரிய திரு மந்த்ரத்தில் ஆதி அந்தங்களை விட்டு இருந்தாலும் அவையும் சேர்ந்த திரு அஷ்டாஷரமே இங்கே விவஷிதம்
கீழே -பேசுமின் -திரு நாமம் எட்டு எழுத்தும் -1-8-9-பாசுரத்திலும் இவ்விஷயத்தின் விவரணங்கள் பார்த்தோம் –

—————————————–

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-

எறிஞர் -சத்ருக்கள்
இவனே ஸ்ரீ வராஹ மூர்த்தி -சக்ரவர்த்தி திருமகன் -ஓங்கு உலகளந்த  அளந்த உத்தமன்
தாளால் உலகளந்த ஆயாசம் தீர திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனும் இவனே
இந்த நம்பியுடைய திரு நாமத்தை அனுசந்தித்து வாழ்வோம்
ஒன்பது பாசுரங்களிலும் திருநறையூர் பிரஸ்தாபமே இல்லை யாயினும்
மேல் திரு நாமப் பாட்டில் -நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை -என்று
தலைக் கட்டி அருளுவதால்
எல்லா பாசுரங்களுக்கும் திரு நறையூர் நம்பியே இலக்கு எனபது விளங்கும் –

————————————-

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

விடம் தான் உடைய அரவம் வெருவ -விடம் உடைய அரவம் தான் வெருவ -என்று அந்வயம்
மிக்க தாளாளன் -காளியன் தலையிலே திருவடிகளை இட்டு நர்த்தனம் ஆடினவன்
பொய்கையிலே போய்ப் புக்கு அவனைத் துரத்தின ஏற்றத்தை யுடையவன் –
ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ வராஹன் -ஸ்ரீ திரிவிக்ரமன்  -திரு நாமம் திரு அஷ்டாஷரம்-

———————————————————————-

பூணாது அனலும் தறு கண் வேழம்  மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா  வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

ஸ்ரீ கிருஷ்ணனும்
அமுதினில் வரும் பெண்ணமுது தனக்காக்கிக் கொண்டவனும்
திரு நாமம் திரு அஷ்டாஷரம்
தறு கண் வேழம் -ஜாதி பிரயுக்தமான வட்டணித்த கண்ணை யுடைத்த குவலயாபீடம் –
தறுகண்மை -அஞ்சாது இருக்கும் தன்மை
அமுதம் கொண்ட பெருமான் –
கடலைக் கடைந்து அமுதம் வாங்கி அது புஜித்தார்க்கு வரக் கடவ ப்ரீதிதனக்கு உண்டாம்படி இருந்தான் -வியாக்யானம் கொண்டு
அமுதம் கொண்டு உகந்த பெருமான் என்று சிலர் பாடம் கொள்வார் -யாப்பு இலக்கணத்துக்கு ஒவ்வாது
நீணாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ்  கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானை -11-7-1- என்பார் மேல்
பாணா வண்டு முரலும் கூந்தல் யாய்ச்சி -பூ மாலை சூடிய கூந்தலாள்
நாணாது உண்டான் -பரிபவங்களை போக்யமாகக் கொண்டு உண்டான்-

————————————————————————–

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை  விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-

ஸ்ரீ  ராமபிரான் -ஸ்ரீ பாடகத்து எம்பெருமான் திரு நாமமும் திரு அஷ்டாஷரம்
பாடு அகம் -பெருமை உள்ள சந்நிதி பாடகம்
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவ
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-

———————————————————————————

குடையா வரையால் நிரை முன் காத்த  பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி  வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-

ஸ்ரீ கிருஷ்ணனாகவும் ஸ்ரீ ராம பிரானாகவும் திருவவதரித்து சேஷ்டிதங்கள் செய்து அருளிய பெருமைகள் எல்லாம் தோன்றும்படி
திருக் கோவலூரிலே உலகளந்த பெருமானாக சேவை சாதித்து அருளும் பெருமான் திரு நாமம் திரு அஷ்டாஷரம்-

———————————————————————

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-

கானம் எண்கும் -காட்டுக் கரடிகளையும்
ராவணாதி ராஷசர்களை அடக்கி வெற்றி பெற்ற பெருமான் திரு நாமம்
தேனும் பாலும் அமுதமும் போலே பரம போக்யமானது
நான் அத்தை அனுசந்தித்து ஆனந்திப்பது போலே ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் உள்ளீர் எல்லாரும்
அனுசந்தித்து ஆனந்திக்க வேண்டுகிறேன் –
இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன்  –
இனி இது கண்டால் எல்லார்க்கும் சொல்லத் தட்டில்லை இறே
என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப்  போருங்கோள் –
நமோ நாராயணமே –
நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள-
ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை –
உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் –
தேவோ நாம சஹஸ்ரவான் –
பல பசு உடையவன் -என்னுமா போலே
ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து
இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு
காரண வாக்யங்களோடு–
இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே –
இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே
ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் –

—————————————————

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

சங்கல்பத்தாலே மேன் மேலும் சிருஷ்டித்து அருளும் பெருமான் திரு நாமம் திருஷ்டாஷரம்
நான் சொல்லி ஆனந்தித்தேன் நீங்களும் சொலி ஆனந்திப்பீர்

——————————————-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

நெடுகால் குன்றம் ஓன்று -சுற்று மலைகளை யுடைத்தான ஒரு கோவர்த்தன மலையை
பயத்துக்கு அவகாசம் இன்றி உடனே மலையை குடையாகத் தரித்து காத்து அருளின பெருமான் திரு நாமம் திரு அஷ்டாஷரம்
தான் அறிந்த ஆபத்தும்
விலக்காமையும்- இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு
ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே –

——————————————

பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா  மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

உபய விபூதி நாதனின் திரு நாமம் திரு அஷ்டாஷரம்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் என்று
முதல் திருமொழியில் அருளிச் செய்ததது போலே நங்கள் வினைகள் தவிர யுரைமின் நமோ நாராயனமே -என்கிறார்-

—————————————————–

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே —-6-10-10-

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை –
முன்பு எனக்கு ஏற்றமாக நினைத்து இருப்பது இது –
இப்போது எனக்கு பிறந்த செவ்வியும் கண்டி கோளே-
இப்போது மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும்
இதுவும் விஷயமான படி கண்டி கோளே –

ஓத வல்லவர்கள் சர்வ பாப விநிர்முக்தராய் நித்ய அனுபவம் பெறப் பெறுவார்கள்-

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-