ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –இரண்டாம் பத்து –

1. விஷயதே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா:
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா: ஸபுஷ்பாங்குர கோரகா: ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன

———


2. உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸூஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச. –ஸ்ரீராமா. அயோத். 59 : 5.

ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்

இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

———


3. ஸீதே ம்ருத: தேஸ்வஸூர: பிதராஹீந: அஸி லஷ்மண. –ஸ்ரீராமா. அயோத். 102 : 4

ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு.

——–


4. நசஸீதா த்வயாஹீநா நசாஹம் அபிராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவோத் த்ருதௌ.–ஸ்ரீராமா, அயோத். 53 : 31.

இத்திருவாய்மொழியில், இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், 3மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்.

———


5. கிரயோ வர்ஷதாராபி: ஹந்யமாநா ந விவ்யது:
அபி பூயமாநா: வ்யஸநை: யதாதோக்ஷஜ சேதஸ:. – பாகவதம். 10. 20 : 15.

சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், மூவகைத் துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே!

———-


6. பதிஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத : பாரம்நாஸஸாத ஆப்லவோயதா. –ஸ்ரீராமா, அயோத். 119 : 36

பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது; ‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

——–


7. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.–ஸ்ரீராமா. சுந். 9 : 30.

 

பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-என்கிறாள்.

———


8. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.–தைத்திரீய நாராய. 11 : 8.

 

இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’

——–


9. யஸ்ய அஸ்மி. 

இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்

————


10. தௌ வநாநி கிரீம்ஸ்சைவ ஸரிதஸ்ச ஸராம்ஸிச
நிகிலேந விசிந்வாநௌ ஸீதாம் தஸரதாத்மஜௌ.  ஸ்ரீராமா. ஆரண். 61 : 20.

கடலும் மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள் வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.

தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆகையாலே, தேடப் பிறந்தவர்கள் அல்லர்’  என்றும்,
சீதாம்’என்றதனாலே, ‘தேடிக்கண்டிலோம் என்று ஆறியிருக்கலாம் விஷயமன்று’ என்றும்,
‘இத்தால், அவர்கள் ஜீவிக்கை என்று ஒரு பொருளுண்டோ? ஜீவித்தல் சக்கியமன்று’
என்றும் உரையாசிரியர் அச்சுலோகத்திற்கு விசேடப்பொருள் அருளிச் செய்வர்.

——-


11. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம.–ஸ்ரீராமா. யுத் 18 : 33.

 

அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் – ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? ‘என்னை அடைந்தவர்களை எல்லாத் துன்பத்தினின்றும் நீக்கிப் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு’ என்று கூறிய வார்த்தை-இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, (ஆயின், அவ்வார்த்தை பொய்யோ?’ எனின், இப்பொழுது தனக்கு உதவாமையாலே பொய் என்று இருக்கின்றாள். ‘ஆயின், பொய் என்று இருக்கின்றவள் மெய்ந்நீர்மை தோற்கக் கூடுமோ?’ எனின், இராமாவதாரத்தில் மெய்யும் 1கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.-ஆயுதம் எடேன்’ என்ற சூளுறவைப் பொய்யாக்கின கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்  என்றபடி-)பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.

———

12. ஏஹிஏஹி புல்லாம்புஜபத்ர நேத்ர
நமோஸ்துதே தேவவர அப்ரமேய.
ப்ரஸ்ஹ்ய மாம் பாதய லோகநாத
   ரதோத்த மாத் பூத ஸரண்ய ஸங்க்ஸேய.-(பார. பீஷ்ம.  59 : 98)

ஏஹ்யேஹி – கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி   மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை  மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்  பாதய – ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்  இருக்கிற வரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
லோக நாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது   அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள்.

  ‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
  காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
  நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
  வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’-  என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
உள்ள செய்யுள்

———


13. ஸபங்காம் அநலங்காராம் விபத்மாம் இவ பத்மிநீம்
வ்ரீளிதாம் துக்க ஸந்தப்தாம் பரிம்லாநாம் தபஸ்விநீம். –ஸ்ரீராமா. சுந். 15 : 22.

14. அவ்யக்தலேகாம் இவ சந்த்ரலேகாம்
    பாம்ஸூ ப்ரதிக்தாம்இவ ஹேமலேகாம்
    க்ஷதப்ர்ரூடாம்இவ பாணலேகாம்
    வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம்

நைவாய எம்மே போல் -நைவையுடைய எங்களைப் போன்று. இனி, ‘நைவு தான் ஒரு வடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற எங்களைப் போன்று’ என்று கூறலுமாம்; ‘பூமியினின்றும் தோன்றினவளைப் போன்றிருந்தவளும், அதனை அழித்து அலங்காரம் செய்கின்றவர்கள் இன்மையின் ஒப்பனை அழிந்திருந்தவளும், பெருமாள் வரினும் ‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச் சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், அம்பு வாய் (அம்பு பட்ட புண்.)உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற இருந்தவளும், பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகதுண்டங்கள் போல இருந்தவளும், (பெருமாளுடைய திருமேனியிற் பிரிக்கப்பட்ட ஏகதேசம் என்று தோற்ற இருந்தாள்  என்றபடி.)ஆன சீதை’ என்றார் வால்மீகி பகவானும்.

——–


15. பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸிதேக்ஷணா
ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களாநி அபிதத்நுஷீ. 

——–


16. ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹதா ஜ்வலதா நித்யம் அக்நிநேவாக்நிபர்வதா:. –ஸ்ரீராமா. சுந்த. 35 : 44.


17. அந்தர்தாஹேந தஹந: ஸந்தாபயதி ராகவம்
வந தாஹாபிஸந்தப்தம் கூடோக்நிரிவ பாதபம். –ஸ்ரீராமா. அயோத். 85 : 17

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான்

ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த – சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.

—————


18. ஸாரதீம் ரஜநீஞ்சைவ த்ருஷ்ட்வா ஜ்யோத்ஸ்நாநு லேபநாம்
காமவ்ருத்தஞ்ச ஸூக்ரீவம் நஷ்டாஞ்ச ஜனகாத்மஜாம்
   புத்த்வா காலமதீதஞ்ச முமோஹ பரமாதுர:.–  ஸ்ரீராமா, கிக்ஷ்கிந். 30 : 3.

கழிந்து போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும்

———


19. ந மே துக்கம் ப்ரியாதூரே ந மே துக்கம் ஹ்ருதேதிவா
   ஏததேவ அநுஸோசாமி வய: அஸ்யா: ஹி அதிவர்த்ததே.-ஸ்ரீராமா. யுத்த 5 : 5.

போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள் என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.

——–   


20. அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
    க்ருதக்ருத்ய: ததாராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ. –சங்க்ஷேப ராமாயணம். 

விபீஷணனுக்கு முடி சூட்டிய பின்னர்ச் செய்து முடிக்க
வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவராய் நடுக்கமும் தீர்ந்து மகிழ்ந்தவர் ஆனார்’

இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்; திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி. துளக்கு அறுதலாவது, ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான 1ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல் 2‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. இனி, துளக்கு அறுதலாவது, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது

————-


21. க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிச அப்யய:
   க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம். -மஹாபாரதம். பீஷ்ம பர்வம்.

 சர்வ ரக்ஷகனான கிருஷ்ணனே உலகத்துக்குக் கண். 3‘உலகங்களுடைய தோற்றமும் கிருஷ்ணனே; காணப்படுகிற சராசரங்களாகிற எல்லாம் கிருஷ்ணன் பொருட்டாகவே இருக்கின்றன; இது பிரசித்தம்’ என்கிற பிரமாணப் பிரசித்தி இருக்கிறபடி.

———-


22. ஸ்தயம் ஸத்யம் புநஸ்ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
   வேத ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி நதைவம் கேஸவாத் பரம்.

அல்லது இல்லை ஓர் கண்’ என்கிறார். ‘ஆயின், மற்றைத் தேவர்களும் காப்பவர்களாகக் கூறப்படுகின்றனரே?’ எனின், மாலைக்கண் என்று இருப்பார்க்கு அல்லாதவை எல்லாம் மாலைக்கண்ணாகத் தோற்றும். திண்ணம் – இது திடம். 2‘சத்தியம் சத்தியம்; மீண்டும் சத்தியம்; கைகளை மேலே தூக்கிச் சொல்லுகிறேன்; வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் இல்லை; அது போன்று கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறு இல்லை’ என்றார் ஸ்ரீ வியாச பகவான். ஆதலின், இவரும் ‘திண்ணம்’ என்கிறார்.

    ‘நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.  

————

23. அத்யத்புதம். இதம் வாக்யம் தவ ராம ஸூபாக்ஷரம்
     பாவந: ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந, –ஸ்ரீராமா. உத்தர. 82 : 9.

அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்

—————


24. நஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

 

காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,

மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.

————


25. தத: கரோத பரீதேந ஸம்ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேணச்சிந்நம் தஸ்ய ஸிரோமயா.–மத்ஸபுராணம்

தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

——–
26. ஸஏஷ ப்ருது தீர்க்காக்ஷ: ஸம்பந்தீ தே ஜநார்த்தந: – பாரதம்.

27. தம்இமம் ஸர்வஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்
அர்ச்யம் அர்ச்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்தும் அர்ஹத.–பாரதம், ராஜசூய

பெரியதாயும் விசாலமானதாயும் நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர் தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள்.

இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.

———–


28. பஹூஸ்யாம் பிரஜாயேயேதி. பக். –தைத்திரீய. ஆனந். 6 : 3.

நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள்

  ஜ்ரும்பிதம் தத்தநு: த்ருஷ்ட்வா ஸைவம் விஷ்ணு பராக்ரமை:
அதிகம் மேநிரே விஷ்ணும் தேவா: ஸர்ஷிகணா: ததா. – ஸ்ரீராமா. பால. 75 : 19.

மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான (சந்தேகம் கொள்ளும்படி)தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

—–


29. ராம: கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:
ரூபதாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே. –ஸ்ரீராமா. சுந். 53 : 8

தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார்.

ராம சர்வாங்க சுந்தரராய் இருக்கை. கமலபத்ராக்ஷ – அதிலே ஒரு சுழியாயிற்று-  அமிழ்ந்துவராக்கு வேண்டுவது. ‘அக்கண் அழகுக்கு எல்லை என்?’ என்னில், ஸர்வ  ஸத்வ மநோஹர:- திர்யக் ஜாதியனாய்ப் பணையோடு பணை தத்தித் திரிகிற என்  நெஞ்சையும் அபஹரித்தன்றோ? ரூப தாக்ஷிண்ய ஸம்பந்த ப்ரஸூத; – தேக  குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றதுதான் ஒளத்பத்திகமாயிருக்கும்.  ஜநகாத்மஜே -‘அற விஞ்சச் சொன்னாய்; இனி, இங்ஙன் சொல்லலாவார் உண்டோ, இல்லையோ?’ என்று பிராட்டிக்குக் கருத்தாக, பின்னை உம்மைச் சொல்லலாம், நீரும்  உண்டு’ என்கிறான்திருவடி

——-

30. ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மாத் ஸமுத்தாய பரஞ்ஜ்யோதி:
உபஸம்பத்ய ஸ்வேநரூபேண அபிநிஷ்பத்யதே. –சாந்தோக்கியம்.

31. நாராயண பரோஜ்யோதி:. –தைத்திரீய நாரா, அநு. 11.

32. ஸ்வாபாவிக அநவதிகாரிஸய ஈஸித்ருத்வம்
நாராயண த்வயி நம்ருஷ்யதி வைதிக: க:. –தோத்திர ரத்நம், 11.

பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ –1எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி

————


33. விஷ்ணுபக்தி விஹீந: ய: ஸர்வ ஸாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய நபவேத் தஸ்ய உத்பத்தி: நிரூப்யதாம்.-பத்மபுராணம்.

பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.

நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின் கண் ஐயப் படும்.’

——–
34. யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம்
தத் அபஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்யகுகௌ மஹாத் மந:.–பாரதம், ஆரண்ய.

தன்னுள் ஒடுங்க நின்ற1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே, 2தன்னுள் அடங்க நின்ற(இது அவாந்தர சம்ஹாரத்தைக் குறித்தது.). இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம்(இது மஹாசம்ஹாரத்தைக் குறித்தது. இப்பொருளில் ‘கவர் வின்றி’ என்பதற்கு, ‘ஒன்றும்
தப்பாமல்’ என்று பொருள் கொள்க.)

————

35. நஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே.
ஸமர்த்தோ த்ரூஸ்யதே கஸ்சித் தம்விநா புருஷோத்தமம்.

காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்  விரிகமல உந்தியுடை விண்ணவனை’-  என்றார் இளங்கோவடிகள்.

—————-

36. அந்யம் தேஹி வரம் தேவ ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷூ
மர்த்யோ பூத்வா பவாநேவ மாம் ஆராதய கேஸவ. 

கள்வா1சர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.; நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த

——-

37. தேவகார்யாவதாரேஷூ மநுஷ்யத்வம் உபேயிவாந்
     த்வாமேவ ஆராதயிஷ்யாமி ஹரத்வம் வரதோபவ. –ஹரி வம்ஸம்.கைலாச யாத்திரை.

38. அஞ்ஜலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணும் உத்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தமீஸாநோ மாஹாத்ம்யம் வக்தும் ஐஹத.

நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ? ‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ (மீன் துடித்தல் போல நாக்குத் துடிக்கிறபடி’)என்றான். 7நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?

———–

39. ஸங்கை: ஸூராணாம் திவி பூதலஸ்தை:
ததா மநுஷ்யை: ககநேச கேசரை:
ஸ்துத: க்ரமாந்ய: ப்ரசகார ஸர்வதா
மம அஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி–
. விஷ்ணு தர்மம்.

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட – 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட

——

40. ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஐஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தக்கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:

இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.

ராமஸ்து – பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்  சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ  சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த  இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’  என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்  பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார – இப்படிப்  பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் –  ‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த  போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ –  ஸம்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-  தஸ்யாம் கத: – சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்  இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி  ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்  இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’  என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

——–

41. மநஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் –ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’ எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார். 3‘நல்லை போ – நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.

———


42. ஸர்வகந்த: ஸர்வரஸ:. –சாந். உபநிட 2 : 14.

‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.

————
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே நதத் ஸம:ச அப்யதிகஸ்ச த்ருஸ்யதே. -அதிமா நுஷ ஸ்தவம், 15.

எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம் என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய் இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்

———-

43. ப்ரஹ்மேஸமத்ய கணநா கணநார்க்க பங்க்தௌ
இந்த்ராநுஜத்வம் அதிதே: தநயத்வயோகாத்
இக்ஷ்வாகுவம்ஸ யதுவம்ஸ ஜநிஸ்ச ஹந்த
ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந:  பக். 65.

————-

44. யஸ்மாத் தர்மாந் ஆசிநோதி ஸ ஆசார்ய:
தஸ்மை நத்ருஹ்யேத் கதாசந
ஸஹி வித்யாத: தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜன்ம
ஸரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: –ஆபஸ்தம்ப தர்ம சூத்

தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார்.

———–

45. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் விரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸச:ஸ்ரீ கீதை. 18 : 66

46. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹ்ருத் கதி:  நாராயண: 

இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள்.-(ஸ்ரீராமா, யுத். 33 : 18) 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது சுபாலோபநிடதம்.. 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது  பெரிய திருவந். 5

——————-

47. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:.

48. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸா நூஷூரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.

 

49. குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மியம் நேஹ வித்யதே
க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்ப்யதே.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’ என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார், ‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும்.

முலையோ முழுமுற்றும் போந்தில; மொய்பூங் குழல்குறிய;
கலையோ அரையில்லை;நாவோ குழறும் ‘கடல்மண்ணெல்லாம்
விலையோ!’ எனமிளிரும்கண் இவள்பர மேபெருமான் மலையோ திருவேங் கடமென்று
கற்கின்ற வாசகமே?’–திருவிருத்தம். 60

——–

50. க்ரயஸ்ச பரிவ்ருத்திஸ்ச விபாகஸ்ச ஸமே யதி
ஆதஸாஹாத் நிவர்த்தந்தே விஷமே நவ வத்ஸராத். –.

51. வபுராதிஷூ யோபிகோபி வா குணத: அஸாநியதா ததாவித:
தத் அயம் தவ பாதபத்மயோ: அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித:.–ஸ்தோத்திர ரத்நம், 52.

52. மமநாத யத் அஸ்தி யோஸ்மி அஹம் ஸகலம் தத் ஹி தவைவ மாதவ

நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ: அதவா கிந்நு ஸமர்ப் பயாமி தே.–ஸ்தோத்திர ரத்நம், 53.

மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும், 3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீஆளவந்தார் திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.  

———                          

53. இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா
நித்யம் ப்ரியாஸ்தவது கேசந தேபி நித்யா:
நித்யம் த்வ தேகக பரதந்த்ர நிஜஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸநம் ந: –ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், 36.

எனது ஆவி யார் யான் ஆர்  – ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே – ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.

————

54. த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்
ஏஷமே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவோ துரதிக்ரம:. –ஸ்ரீராமா. யுத். 36 : 11.

சேர்ந்தார் – 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்

————

55. ந அஹம் ஆராதயாமி த்வாம் தவபத்த: அயம் அஞ்சலி:
வரார்த்திநாந்த்வம் வரத ப்ரயச்ச அபிமதாந் வரான். –விஷ்ணு தர்மம்.

அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக்கொண்டு சென்று, 5‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன,நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போகவல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான். ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.

தீர்ந்தார்தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை. இனி, தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –2பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம்

————

56. அமர்ஷீ துர்ஜயோ ஜேதா விக்ராந்தோ புத்திமாந் பலீ
ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: நித்யம் பிராணோ பஹிஸ்சர:.–ஸ்ரீராமா. ஆரண் 34 : 14.

மூக்கை அறுத்தவன் ஸ்ரீராமனோ?’ எனில், ஆம்; கையாலே அறுக்க வேண்டுமே? 3‘ஸ்ரீராமபிரானுக்கு இலக்குமணன் வலத்தோள்’ எனப் புகலும் ஸ்ரீராமாயணம்.

நீருள எனின்உள் மீனும் நீலமும்
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளு வாய்’ என்றான்.–
  என்ற கம்பராமாயணச் செய்யுள்


57. யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹகச்சதி.

பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய் -‘இறைவன் எவ்வெவ் வழியில் செல்லுகின்றான்? இவ்வுயிரும் அவ்வவ்வழியெல்லாம் கூடவே செல்லுகிறது’ என்கிறபடியே,2 அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய். இதனால், ‘தவம் எய்தினன்’ என்கிற பலத்தைச் சொல்லுகிறாராதல். ‘பின் நெறி’ என்பது, ‘பிரபத்தியை’ எனலுமாம். பின் நெறி – 3பின்னே சொன்னவழி என்றபடி.

58. ஸ: அஸ்துதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணாவிபஸ்சிதா.–ஆனந்தவல்லி, 1 : 2.

இவ்வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே, தம்முடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி ‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’ என்று மகிழ்கிறார்.

 

59. ஆகர்ண பூர்ணை: இஷூபி: ஜீவலோகம் துராஸதை:
கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம் –ஸ்ரீராமா. ஆரண் 64 : 66

 குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – 2’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால் இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின இராக்கதனுடைய சாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

60. கதாநு அஹம் ஸமேஷ்யாமி பரதேந பஹாத்மநா
ஸத்ருக்நேந ச வீரேண த்வயாச ரகுநந்தந.–ஸ்ரீராமா. ஆரண். 16 : 10.

61. குஹேந ஸஹிதோ ராம: லக்ஷ்மணேந ச ஸீதயா. –ஸ்ரீராமா. பால. 1 : 29

இலக்குமணா! மகாத்துவமாவான பரதனோடும், வீரனான சத்துருக்கனனோடும், உன்னோடும் எப்பொழுது சேர்வேன்?’ என்கிறார் பெருமாள். இங்கு, ஸ்ரீபரதாழ்வானோடும் சத்துருக்கனாழ்வானோடும் கூடப்பெறாத 3கிழிக்குறையாலே, (கிழிக்குறை – நிறைந்திராமல் குறைந்திருக்கிற பணப்பை. கிழி – பணப்பை. ‘வேண்டிய,  வேதங்கள் ஒதி விரைந்து ‘கிழி அறுத்தான்’ என்ற இடத்துக் ‘கிழி’ என்பது இப்பொருட்டு.)கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோன்றவில்லை பெருமாளுக்கு; 4‘ஸ்ரீராபிரான், குகனைச் சேர்ந்தார்; அதனால், இலக்குமணனோடும் பிராட்டியோடும் சேர்ந்தவரானார்’ என்கிறார் வால்மீகி. இங்கு, கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோன்றியது, 5ஸ்ரீகுகப்பெருமாளோடு கூடின பின்பு அன்றோ? இப்படியே அன்றோ இறைவன் தனக்கும் 6அந்வய வியதிரேகங்கள் இருக்கும்படி. ஆக, அடியார்களுடைய சேர்க்கையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவு, பெற்ற பகவானுடைய சேர்க்கையையும் இழந்து அடியே பிடித்துப் பிரார்த்திக்க வேண்டும் படியாய் வந்து விழுந்தது எனக் கோடலுமாம்.

62. ராமலக்ஷமண ஸீதார்த்தம் ஸ்ரவந்தீம் வாரிநேத்ரஜம்
அஸக்ருத் ப்ரைக்ஷத ததா ந்ருத்யந்தீமிவ மாதரம். –ஸ்ரீராமா. அயோத். 40 : 25.

63. ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே
நரம் ஸ்ரியாஜூஷ்டம் இவ உபஜீவிந:.–ஸ்ரீராமா. சுந். 29 : 1 .

ஸ்ரீகௌசல்யையார் பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை 1‘ஸ்ரீராமன், தாயை நர்த்தனஞ் செய்கின்றவளைப் போன்று பார்த்தான்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி பகவான். ஆதலால், வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள் எல்லாம் கண்ணுக்கு இனியவாகவே இருக்கும். அன்றியும் பிராட்டி, பிரிந்து அழகு அழிந்திருக்கிற சமயத்திலேதான் 2‘மங்கள சொரூபியாய் இருந்தாள்’ என்று ஸ்ரீவால்மீகி கூறுகிறார். ஆதலால், அழகியார், என்றும் வடிவழகியாரேயாவர்.

64. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருசன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.–ஸ்ரீராமா. பால. 1 : 38.

ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின், 4குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; 5‘ஸ்ரீ பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்வாராம பிரானுடைய முகத்தில் விழ்க்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் அன்றோ?

 

65. மந: பூர்வோ வாக் உத்தர:.

இசை பாடிப் பாடி – ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை.

66. மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ
மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வ மே. –ஸ்ரீராமா. சுந். 64 : 15.

பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ (திருச்சந். 105.)ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. 2‘அழகானவளும் மதுரமான வார்த்தையுடையவளும்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி. ‘பாடிப்பாடி’என்ற அடுக்கு, முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்ததிருத்தலையும் தெரிவிக்கும்.

67. கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி ஸோகஜம்
புண்டரீக பலாஸாப்யாம் விப்ரகீர்ணம் இவ உதகம். –ஸ்ரீராமா. சுந். 33 : 4.

 கண்ணீர் மல்கி – உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? (முடியானே’ என்ற திருவாய்மொழியின்  பொருளை ஈண்டு நினைத்தல் தகும்.)மங்குதல் – மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது 5யார் குடி வேர் அற?’ (இராவணன் குடி வேர் பறியவோ, இராக்காதர்கள் என்று
சொல்லப்படுகிற எல்லாருடைய குடிகளும் வேர் பறியவோ?’)என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். 7‘பாவியேன், யான் வந்த இவ்வரவு, உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லையே!’ என்று இரங்குகிறான் திருவடி.

யாரைச் சேதநராகக் கொண்டு?’ என்றது, ‘யாருடைய இன்பத்திற்காக?’ என்றபடி.  சேதநன் -இன்பத்தை நுகர்கின்றவன். ‘தாமரை இதழிலே முத்துப்பட்டாற்போன்று  இருக்கிற இந்த அழகினை அனுபவித்தற்குத் தக்கவரான பெருமாள் அருகில்  இல்லாதிருக்க, இக் கண்ணீருக்குப் பயன் யாது?’ என்பது கருத்து.

68. ஸாதிர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாத் நிரீக்ஷ மாணாம் அசிந்த்யபுத்திம்

ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யம் இவ உதயஸ்தம்.–ஸ்ரீராமா. சுந். 31 : 119.

எங்கும் நாடி நாடி – தன் ஆபத்தே செப்பேடாக, வருதற்கு உரித்து அல்லாத திக்குகளையும் பார்க்கிறாள். நினைவின்றியே இருக்கச் செய்தேயும், வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே 1‘விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பது ஆனாள்’ என்றார் ஸ்ரீவால்மீகி. ‘ஆயின், வருவதற்கு உரித்து அல்லாத திக்கிலும் தேடுவான் என்?’ என்னில், சம்பாவனை இல்லாத திக்கிலும் வந்து தோற்றுமவன் ஆகையாலே, தேடுகிறாள். ‘ஆயின், பரத்துவம் முதலிய நிலைகளை விட்டு, இவர் அவதாரத்தையே பேசுவான் என்?’ எனில், 2‘பத்துடை அடியவர்க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். இனி, ‘எங்கும் நாடி நாடி’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே

கீழே பார்த்ததற்குக் கருத்து என்?’ என்னில், பூமியைப் பிளந்து  கொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்லச் சம்பாவனையுண்டாகில், அல்லாத
திக்கிலும் உள்ளது என்று பார்த்தாள்; அன்றிக்கே, ‘மாஸோபவாசிகள், ‘சோறு’ என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள்,’ என்னுதல்; அங்ஙனன்றிக்கே, ‘சிம்சுபா  விருக்ஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள்’ என்னுதல். யூம சிந்த்ய புத்தம் ததர்ஸ் – அவன்  வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்றுப் பரிசோதித்தது; ‘இந்நிலத்திலே புகுந்து  இடங்கொண்டு நாம் இருந்த இடந்துருவி நிலை குத்த வல்ல நெஞ்சையுடைய  வனன்றோ?’ என்று. பிங்காதிபதேரமாத்யம் – ‘இவன் ஸ்வதந்த்ரல்லன்; இராஜ கார்யம்  இவன் கையிலே உண்டு’ என்று அறிந்தாள். வாதாத்மஜம் – பெருமாளுக்குப் பிராணஹேதுவான பிராட்டிக்குப் பிராணனைக் கொடுக்கையாலே ‘இவன் சர்வர்க்கும்  பிராணஹேதுவானு வாயுபுத்திரன்’ என்று தோன்ற இருந்தான். சூர்யமிவோதயஸ்த்தம் –  இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது. பெருமாளாகிற ஆதித்திய உதயத்துக்கு  அருணோதயம் என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே, இலங்கை நாலுமதிளுக்கு நடுவு  ‘ஹரி ஹரி’ என்கிறபடியே இருக்கிறது.’

69. மத்த: ஸர்வம் அஹம் ஸ்ரவம் ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே
அஹமேவ அவ்யய: அநந்த: பரமாத்மா ஆத்மஸம்ஸ்ரய:.– ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19 : 85.

என்னிடமிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; எல்லாம் என்னிடத்தில் லயம் அடைகின்றன; எல்லாப் பொருள்களும் நானாகவே இருக்கிறேன்’ என்னும் தெளிவுடையவனுக்குத் தோன்றினவன், கலங்கின 1அபலைக்குத் தோன்றானோ!’ என்று வாடுகிறாள் என்கிறாள் என்றபடி. 


70. தாதா யதாபூாவம் அகல்பயத்.–தைத்திரீய நாராயண் உபநிடதம்.

இவ்வாணுதலே – ஒளியுடன் கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே!’ என்பாள், ‘வாடும் இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் 6‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே படைத்தான்’ என்பது போன்று, உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப்பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ என்று இருக்கிறீரோ?’ என்பது திருத்தாயாருடைய உடகோள். ‘நன்று; இந்நிலையில்  இவளை ‘வாணுதல்’ என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம்  முகத்தின் எழிலிலே தெரியாநின்றது என்றபடி.

70a. இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்மசரீ தவ
       ப்ரதீச்சசைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா.–ஸ்ரீராமா. பால. 73 : 24.

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்     

71. துஷ்கரம் க்ருதவாந் ராம்: ஹீநோ யத் அநயா ப்ரபு:
    தாரயதி ஆத்மநோ தேஹம் ந ஸோகேநாவஸீத்தி. –ஸ்ரீராமா. சுந். 15 : 53

இப்பெண்பிள்ளை நிலையைக்கண்ட திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்; 2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை. மால்ய வானில் பெருமாள் இருந்த போது கார் காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு, ‘வசிஷ்ட சிஷ்யன், ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான் விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. ‘இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.

72. துல்ய ஸீல வயோ வருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
    ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சேயம் அஸிதேக்ஷணா.–ஸ்ரீராமா. சுந். 16 : 5.

சக்கரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த சீலம், வயது, ஒழுக்கம், ஒத்த குலம், இராஜ இலக்கணம் இவற்றையுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு, பெருமாள் தகுந்தவர்; கறுத்த கண்களை  உடையளான இப்பிராட்டியும் பெருமாளுக்குத் தகுந்தவர்’ என்னும் படி காணும் இருக்கிறது. உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – ‘விஷயத்திற்குத் தகுதியாக அன்றோ ஆசையும் இருப்பது? உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள். 1‘ஆசை என்னும் கடல்’ (பெரிய திருமொழி, 4. 9 : 3.)என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தாநின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ என்கிறாள். நைகின்றாள்’ என்பதில், 4இவளைத் தரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே நிறுத்த அமையும்’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இதனால், ‘வாடுகை தான் தேட்டமாம்படி ஆயிற்று என்கிறாள்’ என்றயடி..

73. நைவ தம்ஸந் ந மஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந். –ஸ்ரீராமா. சுந். 36 : 42.

நீர் இரக்கம் இலீர்6‘தன் சரீரத்தின்மேல் தங்கி இருந்த காட்டு ஈக்களையும் கொசுக்களையும் பாம்புகளையும் ஓட்டமாட்டார்’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த துன்பத்தால், மற்றைப் பிராணிகளால் உண்டாகும் துன்பத்தையும் அறியாதிருந்த நீர், இப்பொழுது நோவுபடுகை தவிர்ந்தால், சாமான்யமான இரக்கமும் போகவேண்டுமோ? ‘ஆயின், நீரே இரங்கல் வேண்டும்; நீர் இரங்கும்படி செய்யத் தக்க சாதனம் இவளிடத்து இன்று என்று கூறுவது போன்று, ‘நீர் இரக்கமிலீர்’ என்று கூறுவது எற்றிற்கு? ‘நைகின்றாள்’ என்று திருத்தாயார் கூறியது, இறைவன் இரக்கத்திற்குச் சாதனம் ஆகாதோ?’ எனின், ‘இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது. ‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின், ‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம், அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்

74. நாயம் ஆத்மா ப்ரவசநேந லப்யோ நமேதயா ந பஹூநா ஸ்ருதேந

யம் ஏவ ஏஷ வ்ருணுதே தேநலப்ப: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருதே தநூம் ஸ்வாம்.–முண்டகோபநிடதம். 3. 2 : 3

இப்பரம்பொருள், மனத்தாலும் நிதித்தியாசனத்தாலும் மிகுந்த கேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின்றானோ, அவனால் அடையத் தக்கவன்,’ என்கிறபடியே, தானே காட்டாக காணும் இத்தனையே.

இவ்வுபநிடத வாக்கியத்தின் பொருளோடு ‘வீட்டிற்கு நிமித்த காரணமாய் முதற்பொருளை   உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவணை என்பன: அவற்றுள்  கேள்வி இதனாற்கூறப்பட்டது,’ என்னும் (கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப் படுவர் மற்றீண்டு வாரா நெறி.-குறள். 356)பரிமேலழகருரை ஒரு புடை ஒப்பு நோக்கத்தகும்                        

75. விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:–ஸ்ரீராமா. பால. 1 : 18.

சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத் தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித் திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது

76. தஹந்தீமிவ நிஸ்வாஸை: வ்ருக்ஷாந் பல்லவதாரிண:
ஸங்காதமிவ ஸோகாநாம் துக்கஸ்ய ஊர்மிமிவ ஸ்திதாம்.–ஸ்ரீராமா. 17 : 29.

உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.  

 

மகளிர், தெளிந்திருக்கும் காலத்துக் கணவனது அன்பைப் பெறுவதற்கு அவனை  வணங்கமாட்டார்’ என்பது கருத்து. ‘ஞானிகள் இறைவனுடைய திருவருளைப் பெறுதல்  நிமித்தம். அவனை வணங்கமாட்டார்கள்’ என்ற விசேடப்பொருளும் தோன்றும்.
அடியேன் நான் முயற்சியின்றி நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே’ என்றார்  திவ்வியகவி.

77. அநித்ர: ஸததம் ராம: ஸூப்தோபிச நரோத்தம:
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே.–ஸ்ரீராமா. சுந். 38 : 48 

சீதேதி மதுராம் வாணீம் வியாகரந் ப்ரதிபுத்யதே’ என்று வாய்வெருவுவான்  அவன் கிடீர். அநித்ரஸ் ஸததம் ராம: – நித்திரையோடே காலக்ஷேபம் பண்ணவேண்டும்  செலவுடையவர், ஸந்ததம் அநித்ரராயிருப்பர். சுப்தோபிச – ஸததம் நித்ர : என்று  வைத்து, ஸூப்தோ பிச என்கிறது, பராகர்த்த அநுசந்தான அபாவத்தைப் பற்ற.  நரோத்தம: – அபிமத விஸ்லேஷத்தில் இங்ஙனே இருக்கைபோலே – புருஷோத்தமத்தமாவது.’

இவள் இராப்பகல் வாய் வெரீஇ – 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் *கவனம், ஞாபகம்.)பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.

78. மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத்அஹ்தி நஸம்ஸய:
ஸமர்த்தாவபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ.
பக். 106.

79. அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அசோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசல: அயம் ஸநாதந: –ஸ்ரீகீதை. 2 : 24.

உள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே -வேவாரா வேட்கை நோயாகையாலே -அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று

80. அந்தகாரே அதி தீவ்ரேச நரஸிம்ஹம் அநுஸ்மரேத்
     தரதி அகிலதுக்காநி தாபார்த்தோ ஜலஸாயிநம்
    கருடத்வஜ அநுஸ்மரணாத் விஷவீர்யம் ப்ரஸாம்யதி.–விஷ்ணு தர்மம். அத், 40.

வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.   

81. சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம். ஸ்ரீராமா. சுந். 66 : 10.

தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

அளவுபடை-சிறுபடை; இங்கு, நாயகன். பெரும்படை – நாயகி. கண்ணழகு  முதலியவற்றையுடையவளாதலின், நாயகியைப் ‘பெரும்படை’ என்றார்.

82. ததோ மலிந ஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம்
உபவாஸ க்ருஸாம் தீ நாம் நிஸ்வஸந்தீம் புந: புந: –ஸ்ரீராமா. சுந். 15 : 18

இந்தச் சுலோகம், பலகாலும் பெருமூச்சு விடுதற்கு மேற்கோள்.–பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். ஸ்ரீவால்மீகியும். 3உள்ளம் மலங்க’ (திருவாய். 2. 4 : 4)என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று. 4உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ (திருவாய். 2. 4 : 7)என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது.

83. ஸஹி தேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷணு: ஸநாதந:.–ஸ்ரீராமா. அயோத். 1 : 7.

கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ (இலங்கையை அடியோடு அழித்தது போன்று, இவளையும் அழியாதே  கொள்ளும்)என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள்? நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள்,(உம்முடைய ஜீவனம்’ என்றது, ‘மணநோக்கம் உண்டானே’ (பெரியதிரு. 8. 10 : 1.)  என்றதனை நோக்கி;) ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

84. உதார வ்ருத்தார்த்த பதை: மநோரமை:
ததாஸ்ய ராமஸ்ய சகார கீர்த்திமாந்
ஸமாக்ஷரை:ஸ்லோகஸதை: யஸஸ்விந:
யஸஸ் கரம் காவ்யம் உதாரதீ: முநி: — ஸ்ரீராமா. பால. 2 : 42.

வண்சடகோபன் சொல் –2‘உதாரகுணத்தையுடையவரும் மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின், ‘வண்சடகோபர்’ என்கிறார்.

85. கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ: ஆகர்ஷதே ஜலே
தயோ: த்வந்த்வ ஸமம் யுத்தம் திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரகம்.– விஷ்ணு தர்மம், 68.

கஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’ 2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்;-பிரிவால் உண்டாகிய துன்பம் முடிக்கத் தேட,  நசையானது முடிக்க ஒட்டாமல் ஜீவிப்பிக்க, இப்படியே, மேல் ‘ஆடிஆடி’ என்ற  திருவாய்மொழியில் ஆழ்வாருடைய நிலை சென்றது என்றபடி.

 

86. அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தமஸ்வீக்ருத
ப்ரணீத மணிபாதுகம் கிமிதிச ஆகுலாந்த: புரம்
அவாஹந பரிஷ்க்ரியம் பதகராஜம் ஆரோஹத:
கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம: –ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத். 59.

87. ஸ்தலஸ்தம் தாரயாமாஸ க்ராஹம் சக்ரேண மாதவ:

அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில்  முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’(திருவாய். 2. : 4. 4)

88. ஸ ஏகாகீ ந ரமேத. -மஹோபநிடதம்.

அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’

89. அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைகரூப ரூபாய விஷ்ணுவே ஸர்வஜிஷ்ணவே. -ஸ்ரீ விஷ்ணு புரா. 1 . 2 : 1

செந்தாமரைத்தடம் கண் – துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே! ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ?’ எனின், அங்குக் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம்

90. ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்
ருக்மாபம் ஸ்வப்ந தீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்.-மனு ஸ்மிருதி. 12 : 122.

செந்தாமரை அடிகள் – நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே – திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என்னும்படி ஆயிற்று.

 ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்  கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்  கூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி  சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்  ஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.

91. இச்சாக்ருஹீத அபிமதோருதேஹ:
ஸம்ஸாதி தாஸேஷ ஜகத்திதோஸௌ. — ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.

92. ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹ நூமத:
மயா காலம் இமம் ப்ராப்ய தத்த: தஸ்ய மஹாத்மந:–ஸ்ரீ ராமா. யுத். 1 : 13.

விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர். ‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ? (இதனால், இவர் அனுபவ பரவாஹ ரூபமான ஸ்ரீசூக்தியும் பரமப் பிரமாணம் என்றபடி)அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.

93. தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதா தரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம். –ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63

வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின், ‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.-பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.

94. பஸ்பர்ஸாங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்யாபி ஸர்வத:
கரேண ம்ருதுநா தேவ: பாபாந்நிர்மோசயந் ஹரி:–ஹரி வம்ஸம்.

கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார்.

95. யச்சாபி ஸர்வ பூதாநாம் பீஜம் ததஹம் அர்ஜூந
நததஸ்தி விநா யத்ஸ்யாத் மயா பூதம் சராசரம். –ஸ்ரீ கீதை. 10 : 39.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு, ‘இறைவன் உருவமாக இல்லாத பொருள் தான் இல்லை என்று பொருள் கூறலுமாம். 2‘இயங்கியற்பொருளும் நிலையிற்பொருளுமாகக் காணப்படுகின்றவை எவையோ, அவை எல்லாம் என்னை அன்றி இல்லை’ என்பது ஸ்ரீ கீதை. உலகத்துப் பொருள்கள், இறைவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, சொரூபத்தாலே; இறைவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது, காதலாகிய பண்பாலே.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு இரண்டு கருத்து  அருளிச்செய்கிறார். முன்னையது, சங்கல்பாஸ்ரிதம்; உள் – உள்ளம். இரண்டாவது,  சொரூபாஸ்ரிதம்; தன்னுள் – தன்னிடத்தில். ஸ்ரீகீதையின் சுலோகம், சொரூபாஸ்ரிதத்திற்கு  மேற்கோள்.

96. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.– தைத்தீரிய ஆனந். 9 : 1

தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காணமாட்டாது 3‘வாக்கிற்கு அப்பாற்பட்டவனே’ என்று மீளும்படி இருப்பானாய் இருக்கின்ற தண்துழாய் மாலையனை. எல்லை காண வொண்ணாத பரம்பொருளுக்குத் திருத்துழாய் மாலை அடையாளம் ஆதலின், ‘தன் முடிவு ஒன்று இல்லாத தண்துழாய் மாலையனை’ என்கிறார்.

 

97. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸூ: விதாதா க்ருத லக்ஷண:–ஸ்ரீ சஹஸ்ரநாமம்.

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – 4அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் 5செம்பளித்து (மூடிக்கொண்டு.)வந்து கலந்தான். இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி. இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் ‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து ஒரு கணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்று கூறலுமாம்.
கண்செம் பளித்திருந்து கைத்துருத்தி நீர்தூவி அம்புதத்தைப் பார்த்திருப்பான் அற்று.’–ஞானசாரம், 33

98. நைநம் வாசா ஸ்த்ரியம் ப்ருவந் நைநம் அஸ்த்ரீபுமாந் ப்ருவந்
புமாம்ஸம் நப்ருவந் நைநம் வதந் வததி கஸ்சந  அ இதி ப்ரஹ்ம.–
2. ருக்வேதம், ஆர. 2 : 2.

99. ஸவை ந தேவாஸூர மர்த்யதிர்யங்
ஸ்த்ரீந ஷண்டோ ந புமாந் நஜந்து:
ந அயம் குண: கர்மந ஸத் ந ச அஸத்
நிஷேத ஸேஷோ ஜயதாதஸேஷ: —
3. பாகவதம், 8. 3 : 24.

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாட்டில் காண்கிற ஆண்களின்படியும் அல்லன், பெண்களின்படியும் அல்லன், உபயோகத்திற்குத் தகுதியில்லாத அலியின்படியும் அல்லன். பட்டர் இவ்விடத்தில், 2‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை; ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை. அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; 3‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை; ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை; கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ என்னும் இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், 4‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே! (4. இயலறிவுக்கு – சொல் இலக்கணத்துக்கு. ‘அர்த்தஞானமே அன்றிச் சப்த ஞானமும்  இல்லையே!’ என்றபடி.)‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.

100. ஸ்துத: அஹம் யத்தவயா பூர்வம் புத்ரார்த்திந்யா தத் அத்யதே.
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாத: அஹம் யத்தவ உதராத்.

காணலும் ஆகான் -ஆண் பெண் அலி என்னும் இவற்றைக் காண்கிற பிரமாணங்களால் காணப்படாதவன். இத்தால், 2ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை. உளன் அல்லன் அல்லாதார்க்கு. இல்லை அல்லன், அடியார்கட்கு. இவற்றை விரிக்கிறார் மேல்: பேணுங்கால் பேணும் உருவாகும் –3‘தேவீ, நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானேஉனக்குப் புத்திரனாய்த் தோன்றவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானே உனக்குப் புத்திரனாய்த் தோன்றிவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான். இனி, இதற்குத் 4‘தன்னை அர்த்திக்குங் காட்டில் அன்போடு தன்னைப் பேணி மறைக்கவேண்டும்படி வந்து அவதரிப்பான்’ என்று கூறலுமாம்      

பேணுங்கால் பேணும் உருவாகும்’ என்பதற்கு, இரு பொருள் அருளிச்செய்கிறார்:
முன்னையது, ‘அடியார்கள் ஆசைப்பட்ட வடிவோடே அவதரிக்கும்’ என்பது;  பின்னையது, ‘மங்களாசாசனம் செய்ய வேண்டும்படியான விக்கிரகத்தையுடையவனாய்  அவதரிக்கும்’ என்பது. முதற்பொருளில், பேணுதல் – விரும்புதல். இரண்டாவது  பொருளில், பேணுதல் – பரிவு.

101. மஹாத்மந: ஸங்க சக்ராஸிபாணே:
    விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸூதேவாத்மஜஸ்ய.  பாரதம், கர்ண பர்வம்.

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை – தன்படிகளைப் பேசப் புக்கால், 3ஆனந்தவல்லியிற்சொல்லுகிறபடியே, (யாதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது. (தைத்தீரிய ஆனந். 9 : 1) அந்த ஆனந்த  குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன’)பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை. அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று. 4‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும், ஜெயசீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ணபிரானுடைய நற்குணங்கள் உலகங்கள் அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்

102. வைதேஹி ரமஸே கச்சித் சித்ரகூடே மயா ஸஹ
     பஸ்யந்தீ விவிதாந் பாவாந் மநோ வாக்காய ஸம்யதா.-ஸ்ரீராமா. அயோத். 94 : 18

இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று 2ஐயங்கொண்டு, அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் ஐயத்தை நீக்கி, அவனை உளன் ஆக்குகிறார். 3‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடுகூட இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றாற்போலே ஆயிற்று இதில் சுவையும்; 4‘மைதிலி, உன்னை அறிந்தாயே நம்மை அறிந்தாயே, கலக்கிற தேசம் அறிந்தாயே! என்கிறார் என்றபடி.

சம்ஸ்லேஷ ரசாதிசயத்துக்கும், அத்தாலே  ஐயங்கொண்டதற்கும் மேற்கோள், ‘விதேககுலத்தில்’ என்று தொடங்கும் பொருளையுடைய  சுலோகம். ரமியாநிற்கச்செய்தே ‘ரமஸேகச்சித்’ என்கையாலே, நீர் வாய்ப்பும் நிழல்  வாய்ப்புமான சித்திரகூட பரிசரத்தில் அழகையும், தங்கள் சேர்த்தியழகையும் கண்டு, ‘இது  தொங்கப் புகுகிறதோ!’ என்று ஐயங்கொண்டது தோன்றுகிறது. அப்படிப் பெருமாள்  ஐயங்கொண்டது போன்று, இங்கும், ஆழ்வார் விஷயத்தில் இறைவனுக்கும் ஐயம்  உண்டாயிற்று என்றபடி.

103. குமுத: குந்தர: குந்த:–சஹஸ்ரநாமம்.

செய் குந்தா வரும் தீமை – செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்குந்தீமை. இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை எனப்பொருள் கூறலுமாம். உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா – உன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய் இருப்பார்க்கு வாராதபடி நீக்கி, அசுரத்தன்மையுடையவர்கள் மேலே போகடும்படியான சுத்தியையுடையவனே! குந்தம் – குருந்தம் என்ற சொல்லின் விகாரம்; அது ஆகுபெயராய் அதன் மலருக்கு ஆயிற்று; அதன் மலர் வெளுத்து இருக்குமாதலின், அவ்வழியாலே பரிசுத்தத்தை நினைக்கிறது. இனி, ‘குந்தன்’ என்பதனை இறைவனுடைய திருபெயர்களில் ஒன்றாகக் கோடலும் அமையும், 4குமுத, குந்தா, குந்த’ என வருதல் காண்க.

104. விஸ்ருஷ்டம் பகதத்தேந ததஸ்த்ரம் ஸர்வ காதுகம்
உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸஞ்சாத்ய மாதவ: —பாரதம்.

 முன் பிராதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே, பின்னர் அவர்கள் பகைவர்கள் மேலே போகடுவான் என்பதனைத் தெரிவித்தபடி. கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் முகங்காட்டினவாறே மருகாந்தாரத்தில் அசுரர்கள் மேலே தொடுத்தமையை 5ஸ்ரீராமாயத்தால் உணர்க. அங்ஙனம் ஒரு போக்கடி கண்டிலனாகில், 6‘பகதத்தனால் விடப்பட்டதும் எல்லாப் பொருள்களையும் அழிக்கக் கூடியதுமான அந்தச் சத்தி என்னும் பாணத்தைக், கிருஷ்ணன் அருச்சுனனை மறைத்துத் தன் மார்பிலே ஏற்றுக்கொண்டான்’ என்கிறபடியே, 1பகதத்தன் விட்ட சத்தியை, அருச்சுனனைத் தள்ளித் தன் 2அந்தப்புரத்திலே (மார்பு.)ஏற்றாற்போலே, தாம் ஏறிட்டுக்கொண்டு அனுபவித்தல் செய்யுமித்தனை. 3பாவங்கள்தாம் – அசேதனமாய் இருப்பன சில கிரியா விசேடங்களாய் அவை செய்தபோதே நசிக்கும்; செய்தவன் அறிவில்லாதவன் ஆகையாலே செய்ததை மறப்பான்; முற்றறிவினனான சர்வேஸ்வரன் உணர்ந்திருந்து பலத்தை நுகர்விக்க நுகர்வான் இத்தனை. அவன் மார்பிலே ஏற்றுக்கொள்கையாவது. ‘பொறுத்தேன்’ எனத் தீர்தல். 4‘அபூர்வங்காண், சத்திகாண், பலாநுபவம் பண்ணுவிக்கிறது’ என்று கூறுவதைக் காட்டிலும், முற்றறிவினனான இறைவன் செய்விக்கிறான் என்கை அழகிதே அன்றோ?

105. ஸ்ருத அயமர்த்த: ராமஸ்ய ஜாமதக்ந்யஸ்ய ஜல்பத:– பாரதம், மோக்ஷதர்மம்
பக் 153.

106. நிரவத்ய: பர: ப்ராப்தே: நிரதிஷ்ட: அக்ஷர: கிரம:
ஸர்வேஸ்வர பராதார தாம்நாம் தாமாத்மகாக்ஷய –ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 48.

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை – ஒருகால் திருக்கண்களாலே குளிர நோக்கினால் அதிலே தோற்றுச் சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று 1அடைவு கெட ஏத்தாநிற்பர்கள் ஆயிற்று நித்தியசூரிகள். 2‘ஜமதக்நியின் புதல்வரும் அடைவு கெடப் பேசுகிறவருமான பரசுராமரிடத்தில் இப்பொருள் கேட்கப்பட்டது’ என்பது பாரதம். தலை மகனை – இவர்கள் ஏத்தாநின்றாலும் 3‘குற்றம் இல்லாதவர், அடைவதற்கு முடியாதவர்’ என்கிறபடியே, அவன் பரன் ஆகவே இருப்பான்

துழாய் விரை பூமருவு கண்ணி எம்பிரானை – விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க்கண்ணி எம்பிரானை. நித்தியசூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்; இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான். அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’ என்றபடி

107. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.–உபநிடதம்.

கடவுள் உளன் என்று நினைத்தால் இவனும் உள்ளவன் ஆகின்றான்’ என்கிறபடியே உய்வு பெற்று. போந்து -சம்சாரிகளைக்காட்டிலும் வேறுபட்டவனாய். இருந்து – பாரம் இல்லாதவனாய் இருந்து. ‘வள்ளலே! மதுசூதனா! உன்னை எங்ஙனம் விடுகேன்?’ என்க

 

108. ஆத்ம மாயாமயீம் திவ்யாம் யோகநித்ராம் ஸமாஸ்ரித:
ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயந் மதுஸூதந:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6.4 : 6.

ஐந்து பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய் – பெருவெள்ளத்துக்குப் பல 3வாய்த்தலைகள் (வாய்க்கால்கள்.)போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் பல தலைகளை உடையவனாய், கட்குடியரைப் போலே ஆடுகின்றவனாய், 4சைத்திய சௌகுமார்ய சௌகந்தியங்களை உடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற்கடலிலே, ‘எல்லாப்பிராணிகளும் கரைமரம் சேர்ந்தாம் விரகு என்?’ என்று யோகநித்திரையில் திருவுள்ளம் செய்த என் நாயன் ஆனவனே! யோகநித்திரை – 5‘பரமபுருஷன் வாசுதேவன் என்ற தன்னைச் சிந்தித்துக் கொண்டு தனது மாயாரூபமான பிரகிருதி சம்பந்தம் இல்லாத யோக நித்திரையை அடைந்தார்’ என்கிறபடியே, தன்னை நினைத்தல். எந்தாய் – நீர்மையைக் காட்டி என்னை உனக்கே உரிமை ஆக்கினவனே! ‘உன்னைச் சிந்தை செய்து செய்து – நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம் உண்டோ?’ என மேலே கூட்டுக.

109. ஆத்மாவா அரே த்ர்ஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய:
மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய: — பிருகதாரண்ய உபநிடதம். 4 : 5.

 உன்னைச் சிந்தை செய்து செய்து – இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாமல் நினைத்து. உன்னை – இனியனுமாய் அடையத் தகுந்தவனுமான உன்னை. சிந்தை செய்து செய்து – 2‘தியானம் செய்யத் தக்கவன்’ என்கிற ஒரு விதியினாலே தூண்டப்பட்டவனாயல்லாமல், இனிமையாலே விடமாட்டாமல் எப்பொழுதும் நினைத்து.

110.  உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.–நரசிம்ஹ அநுஷ்டுப்

என் முன்னைக் கோள் அரியே– 4நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்; அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி. கோளரி‘மஹாவிஷ்ணும்’ என்கிற 5மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.(மிடுக்காவது, சர்வலோக வியாபன சக்தி.) 6ஜ்வலந்தம்’ என்கிற ஒளியையுடைய சிங்கம் என்னுதல். முடியாதது என் எனக்கே – நீ சூளுறவு செய்த அக்காலத்திலேயே தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?     

111. ஸபித்ராச பரித்யக்த: ஸூரைஸ்ச ஸமஹர்ஷிபி:
    த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் கத: –ஸ்ரீராமா. சுந்த. 38 : 33.

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ – முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, 2‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி 3எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ

112. விதித: ஸஹிதர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:
     தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி. — ஸ்ரீராமா. சுந்த. 21 : 20.

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே– பரம்பி இருப்பதாய், 4இயல்பிலே அமைந்த (தொன்மை – பழமை; அதனால் பலித்த பொருள், ‘இயல்பிலேயமைந்த’ என்பது.)நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! 5‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

113. மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜநம்
      க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்கார: மமஅபிஏஷ யதா தவ.–ஸ்ரீராமா. யுத். 114 : 101

‘சர்வேஸ்வரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் (எமர் கீழ் மேல் எழு பிறப்பும்)அங்கீகரிப்பான் என்?’ எனின், சர்வேஸ்வரன் ஒருவனை அங்கீகரித்தால், அது பின்னை அவன் அளவிலே நில்லாதே அன்றோ? 2‘இருடிகள் குடியிருப்பை அழித்தான்; மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீஜடாயு மஹாராஜரை நலிந்தான். இவை எல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; இவன் ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவதுகாண்’ என்று இருந்தோம்; அது அந்நாளில் பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்க வேண்டுமோ? வேண்டுவன செய்யப் பாரும்; நீர் இறாய்தது   இருந்தீராகில், 1குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனை அன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் கட்ட நில்லீர்’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீவிபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது – ஸ்ரீவிபீஷ்ணாழ்வானைப் பெருமாள் தமக்கு உடன் பிறந்தவனாகக் கொண்டார்  ஆகையாலே, அவனுக்குத் தமையனான இராவணனும் உடன் பிறந்தவன் ஆவன்;  ஆதலின், தம்மைக் ‘குடல் தொடக்குடையாரிலே ஒருவன்’ என்கிறார்

கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்  மாற்றே மாற்றல் இலையே; நினக்கு
மாற்றோ ரும்இலர் கேளிரும் இலர்எனும்  வேற்றுமை இன்று;அது போற்றுநர்ப் பெறினே.’–(பரிபா. 4)

உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும்  உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான் அவை உளவல்ல என்றவாறாம்’

 ‘அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கித்
  தன்னதோ ளிணையை நோக்கி, ‘வீடணா! தக்க தன்றால்;
  என்னதோ இறந்து ளார்மேல் வயிர்த்தல்?நீ இவனுக்கு ஈண்டு
  சொன்னதோர் விதியி னாலே கடன்செயத் துணிதி’ என்றான்.’ 
  என்றார் கம்பநாடரும்.

114. இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகுப்ரவீர: ஸ்ருத்வாவசோ     வாலி ஜகந்யஜஸ்ய
    ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம்  விமநா பபூவ. –ஸ்ரீராமா. கிஷ்கிந். 23 : 24.

115. தர்மே மநஸ்ச தே பத்ர ஸர்வகாலம் பவிஷ்யதி
    யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்கம்ஆயு: பவிஷ்யதி. –ஸ்ரீவிஷ்ணு புரா 5. 19 : 27.

‘மகாராஜர்க்குப் பகைவன்’ என்று வாலியைக் கொன்ற பின்னர், மகாராஜர் கண்ண நீர் பொறுக்கமாட்டாமல் 3‘விடப்பட்ட கண்ணநீரை உடையவர் ஆனார்’ என்கிறபடியே, தாமும் கண்ணநீர் விழ விட்டார். 4‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது!’ என்கிறபடியே, ஸ்ரீமாலாகாரர் பக்கல் அங்கீகாரம் அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீகண்டாகர்ணன் பக்கல் பண்ணின அங்கீகாரம் அவன் தம்பி அளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில் 5‘அவன் முன்னாகப் போ’ என்று அருளிச்செய்தான். ஆக, இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.

எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீவைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பராம். ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத்துவாதச நாமங்கள்? நெடுமாற்கு அடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும். அவற்றுள், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத்திருவாய்மொழி.

நெடுமாற்கடிமை’  என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை. இந்தப் பிரேமம் ஆழ்வார்க்குச்  சொரூபத்தோடு கூடியது; எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.

116. க இதி ப்ாஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
     ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.

கேசவன் தமர் – பிரசஸ்தகேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது, அவனுடைய அவயவங்களின் அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி. அன்றிக்கே, பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்; அன்றிக்கே, 1‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப் பொருளையும் நியமிக்கிற சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம். ஆதலால், ‘கேசவன்’     

கேசவன் என்பதற்கு மூன்று பொருள் அருளிச்செய்கிறார்; கேசத்தை யுடையவன்; கேசம்  – மயிர் முடி. ‘கேசி’ என்னும் அசுரனைக் கொன்றவன் கேசவன்; பிரமனையும்  சிவனையும் தன் திருமேனியிலே வைத்திருப்பவன் கேசவன். பிரசஸ்தகேசன் – நீண்ட  மயிர் முடியை உடையவன்.

117. ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ்தம் உதகம் குரு
    குலம் தாரயதே தாத ஸப்த ஸப்தச ஸப்த ச. –மஹாபாரதம்.

118. தஸபூர்வாந் தஸ அபராந் ஆத்மாநம்ச. –போதாயனதர்மம்:

சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது; ‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது. இத்தால் இறைவன் அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி. எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும் கேசவன் தமர் ஆனார்கள் என்க. 1‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும், 2‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.

உன்னைஇங்கு உயிர்த்த ஆற்றால் உரைக்கும்நின் குலத்து மூவேழ்
  என்னும்நன் மரபு ளோரும் இயைந்தனர் புனிதம் என்றால்
  அன்னவன் புனிதன் ஆதற்கு ஐயம்என்? அவனுக்கு ஈமம்
  மன்னுநல் வினைசெய் கென்ன மைந்தன்அவ் வினைசெய் தானால்.’-
  என்னும் பாகவதச் செய்யுள் . 7-ஆம் ஸ்கந்தம். இரணியனைக்  கொன்ற அத். 107.

119. நாராயண பரம்பிரஹ்ம தத்வம் நாராயண; பர:
    நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயணபர:

நாரணன் – ‘இதற்குப் பொருள் என்?’ என்னில், முழு ஏழ் உலகுக்கும் நாதன் -சர்வ ஸ்வாமி. ‘இவ்வர்த்தத்தில் பிரமாணம் என்?’ என்னில், வேத மயன் -‘நாராயண பரப்பிரஹ்ம’ என்று இது போன்று பிரமாணங்களால் ‘சர்வ ஸ்வாமி’ என்று ஓதப்படுகிறவன். காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் – தன்உலகத்தில் (மண் ஆதியான) காரணமாயும், (குடம் முதலான) காரியமாயும், (தண்ணீர்கொண்டு வரலாகிற) பலமாயும் வரக் கூடியதான இவற்றுக்கு 1நியந்தாவாக உள்ளவன். (காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்’ என்ற இதனால்,  ஐம்பெரும்பூதங்களையும், அவற்றின் காரியமான அண்டம் முதலானவற்றையும் அவற்றில்  வசிக்கிற ஆத்துமாக்களின் செயல்களையும் கூறியபடி.)-இனி, 2‘கிரியா சாதனம், அது அடியாக வரும் கிரியை, அதனால் சாதிக்கப்படுகிற காரியம், இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன்’ என்றும் ஆம்

கிரிதா சாதனம் – மட்பிண்டம். தண்டசக்கரங்கள் முதலானவைகள். கிரியை  – தொழில்.  அதனால் சாதிக்கப்படுகிற காரியம், குடம் முதலான காரியங்கள். இங்குக் கூறிய  இரண்டாவது பொருளால், நிமித்தகாரணம் முதற்காரணம் துணைக்காரணங்களையும்,  அவற்றின் காரியமான படைத்தல் முதலான காரியங்களையும், அவற்றால் உண்டான  தேவர்கள் முதலான பதார்த்தங்களையும் தெரிவித்தபடி.

120. ஸ்தலஸ்தஸ்ய ச ராமஸ்ய ரதஸ்தஸ்ய ச ராக்ஷஸ:
     நஸமம் யுத்தம் இதி ஆஹூ: தேவ கந்தர்வ தாநவா:–ஸ்ரீவிஷ்ணு புரா.

சீர் அணங்கு அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று வாரணம் மருப்பு ஒசித்த பிரான் – சேஷத்வத்திற்குத் தகுதியான ஆத்தும குணங்களைத் தரிக்கின்றவர்களாய்ப் பிரகிருதி சம்பந்தம் இல்லாத தன்மையரான நித்தியசூரிகள், இவ்வருகு உண்டான சம்சாரிகள்,இப்படி, ‘சிறியார் பெரியார்’ என்னும் வாசி இன்றிக்கே, எல்லாரும் 3எழுத்து வாங்கி ஏத்தும்படியாக நின்று, 4குவலயாபீடத்தின் கொம்பை வருத்தம் இன்றி முரித்த உபகாரகன். 5‘தரையில் இருக்கும் இராமனுக்கும் தேரில் இருக்கும் அரக்கனுக்கும் சண்டை தகுந்தது அன்று என்று தேவர்கள் கந்தருவர்கள் தானவர்கள் ஆகிய இவர்கள் கூறினார்கள்’ என்பது போன்று, ‘அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று’ என்கிறார்    

அகாரத்தின் விவரணமான நாராயண சப்தத்திலே ‘அவ ரக்ஷண’ என்கிற ரக்ஷகத்வமும் அர்த்தசித்தமாகையாலே, ‘வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்’ என்று அரிஷ்ட  நிவர்த்தியையும் இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

121. மாதர் லக்ஷ்மி யதைவ மைதிலஜந: தேநாத்வநா: தேவயம்
     த்வத் தாஸ்யைகரஸ அபிமாந ஸூபகை: பாவை: ஹரிம் [ இஹ  அமுத்ரச
     ஜாமாதா தயித:தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா
      பஸ்யேம ப்ரதியாம யாமச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேம ச.–குணரத்நகோசம் 52-ஆம் சுலோகம்

மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார்(மாதவன் என்றதே கொண்டு – நான் ‘மாதவன்’ என்று கூறிய சொல்மாத்திரத்தையே கொண்டு; ‘). ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக் கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றோம்’ என்று அருளிச்செய்தார் அன்றே பட்டர்?    

அல்லாத திருநாமங்களுக்கும் இதற்கும் வாசி அறிவதே!’ என்று இதனையே குவாலாகக் கொண்டான் ஆதலின், ‘மாதவன் என்றதே கொண்டு’ என்கிறார். என்னை – மற்றைத் திருப்பெயர்கட்கும் இதற்கும் வாசி அறியாத என்னை. 

122. காமவ்ருத்தம்ச ஸூக்ரீவம் நஷ்டாம்ச ஜநகாத்மஜாம்
      புத்வா காலமதீதம்ச முமோஹ பரமாதுர: ஸ்ரீராமா. கிஷ்கிந். 30 : 3.

முன்பு கழிந்த காலம் கழிந்துவிட்டது அன்றோ? இதனால், மேலுள்ள காலம் மிகச் சிறிய காலமாகத் தோன்றாநின்ற தாயிற்று ஈஸ்வரனுக்கு! 1‘பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன், அரவணைமேல் கண்டு தொழுதேன்’ என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருப்பைத் தான் என்பக்கலிலே கொண்டுள்ளான் என்கிறார். ‘சுக்கிரீவன் சொன்ன தவணைக் காலம் கடந்துவிட்டது என்று கருதி மூர்ச்சித்தார்’ என்கிறபடியே, இராநின்றான் என்றபடி.

123. கோக்நே சைவ ஸூராபேச சோரே பக்நவ்ரதே ததா
      நிஷ்க்ருதி: விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்ருதி:.ஸ்ரீராமா. கிஷ். 33 : 12. 

தீது அவம் கெடுக்கும்தீதாவது, பொய்ந்நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த பாவங்கள்; அவமாவது, ஞானம் பிறந்த பின்பு தம்மை அறியாமல் நேர்ந்தவைகள் ஆக, இவ்விரண்டாலும் பகவானை அடைவதற்குத் தடையாக இருந்த கர்மங்களைச் சொல்லுகிறது. அன்றியே, 2‘பசு வதை செய்தவன் விஷயத்திலும், சுராபானம் செய்பவன் விஷயத்திலும், திருடன் விஷயத்திலும், விரதங்களை நியமம் தவறி நடத்தினவன் விஷயத்திலும், பிராயச் சித்தம் பெரியோர்களால் சொல்லப்பட்டது; நன்றி கெட்டவன் விஷயத்தில் பிராயச்சித்தம் சொல்லப்படவில்லை’ என்கிறபடியே, பிராயச்சித்தம் உள்ள பாவங்களையும் அஃது இல்லாத பாவங்களையும் சொல்லிற்றாகவுமாம். ‘இவற்றைக் கெடுப்பது கஷாயத்தைக் குடிக்கச் செய்தோ?’ என்னில், அமுதம் – தன்னுடைய இனிமையை அனுபவிப்பித்ததாயிற்று.

124. வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ்வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி. -ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

செந்தாமரைக்கண் குன்றம் – வாக்கு இத்திரியத்திற்கே அன்றிக் கண்ணுக்கும் இனியனாய் இருக்கை. இத்தலையில் தீதும் அவமும் போக்கினானாய் இருக்கை அன்றியே, 1‘தனக்கு உண்டாய்க் கழிந்தது’ என்று தோன்றும்படி வடிவில் பிறந்த பேரொளியோடு விளங்குகிறான் ஆதலின், செந்தாமரைக் கண் குன்றம்’ என்கிறார். 2‘மனிதர்கட்குத் துன்பம் வரும் காலத்தில் அவர்கள் படும் துன்பத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான துன்பத்தைத் தான் அடைகின்றான்’ என்கிறபடியே இருக்குமவனன்றோ இறைவன்

125. அவாக்யநாதர: -சாந். உபநிட. 3 : 14.

குடக்கூத்தாவது. 2‘எல்லாம் நிறைந்தவனாதலின், ஒன்றிலும் விருப்பம் இல்லாதவன்; ஆதலால், மௌனமாக இருக்கிறான்,’ என்கிறபடியே, இருக்கக் கூடிய பொருள், 3தைரிய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச்சாவி வெட்டி ஆடினபடி இது.

126. பரதஸ்ய வச: குர்வந் யாசமாநஸ்ய ராகவ
ஆத்மாநம் நாதிவர்த்தேதா: ஸத்ய தர்ம பராக்ரம.

தேவும் என்றது, இறைமைத் தன்மையினை. தன்னை என்கிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மையை; அது அன்றோ 1தானான தன்மை? ‘ஆத்மாநம் நாதி வர்த்தேதா: – நீரான தன்மையை இழவாதே கொள்ளும்’ என்றார் வசிஷ்ட பகவானும். இச்சுலோகத்திலுள்ள ‘ஆத்மாநம்’ என்பதனை ஸ்ரீ பரதாழ்வானுக்கு அடைமொழியாக்கி, ‘ஆத்துமாவைப் போன்ற பரதனை இழவாதே கொள்ளும்’ என்று இதற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவர் சிலர். ‘நீரான தன்மையாகிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவராய் இருத்தல்; ‘உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து, நீரான தன்மையை இழவாதே கொள்ளும் 2என்கிறான்’ என்று பொருள் அருளிச்செய்வர் பட்டர். பாடி ஆடத் திருத்தி – தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போன்று, நித்திய சூரிகள் யாத்திரையே யாத்திரையாம்படி திருத்தி. ‘ஆயின், மேல் அடியில், ‘என்று என்றே குனித்து’ என்றதற்கும், இங்குப் ‘பாடி ஆடி’ என்பதற்கும் வேற்றுமை என்?’ என்னில், மேலிடம், 3சௌலப்யத்திலே நோக்கு; இங்கு, இறைமை,

தானான தன்மை – தன்னுடைய சுவபாவம்; அதாவது, இறைவனுக்கு இயற்கைத்  தன்மையாவது, அடியார்கட்குப் பரதந்திரனாய் இருத்தல் என்பதாம். ‘அப்படி ஆஸ்ரித  பாரதந்தர்யமே தானான தன்மையாக இருக்குமோ?’ எனின், அதற்கு, ‘ஆத்மாநம்  நாதிவர்த்தேதா:’ என்னும் ஸ்ரீராமாயணச் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.

சத்தியம் தர்மம் பராக்கிரமம் இவற்றையுடைய இராகவனே! யாசிக்கின்ற  பரதனுடைய வார்த்தையை மறுத்து நீரான தன்மையை (ஆஸ்ரித பாரதந்தர்யத்தை)  இழவாதே கொள்ளும்’ என்கிறான்

சௌலப்யத்திலே நோக்கு’ என்றது, ‘கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன்’ என  வருகின்றவற்றை நோக்கி. ‘இங்கு, இறைமை சௌலப்யம் இரண்டிலும் நோக்கு’ என்றது,  ‘தேவும் தன்னையும்’ என்றதனை நோக்கி. தேவு என்றதில் இறைமைத்தன்மை; தன்னை  என்றதில் சௌலப்யத் தன்மை, சௌலப்யத்தை, அநுசந்தித்த காரணத்தால் வந்த  கூத்தைச் சொல்லுகிறது; இறைமைத்தன்மையினையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்த  காரணத்தால் வந்த பாடுதல் ஆடுதல்களைச் சொல்லுகிறது என்றபடி.

127. விஸோதித ஐட : ஸ்நாத: சித்ர மால்யாநுலேபந:
      மஹார்ஹ வஸந: ராம: தஸ்தௌ தத்ர ஸ்ரியா ஜ்வலந்.–(ஸ்ரீராமா. யுத்.  131 : 15.)

திருமலையாண்டானிடத்தில் எம்பெருமானார் திருவாய்மொழி கேட்டருளுகிற காலத்தில் பாசுரந்தோறும் சில வார்த்தைகளை அருளிச்செய்து, ‘இது அர்த்தம் ஆனாலோ?’ என்றால், ‘இது விஸ்வாமித்திர சிருஷ்டி; ஆளவந்தார் அருளிச்செய்யக் கேட்டறியேன்’ என்று பணிக்குமாம் ஆண்டான். ஆண்டான் ‘இப்பாசுரத்திற்கு விஸ்வாமித்திர் சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ’ என்ன, எம்பெருமானார் 1இப்பாசுரத்தால், தன் அவயவ சௌந்தர்யத்தால் என்னைத் தனக்கு ஆக்கினான் என்கிறார்’ என்று அருளிச்செய்தனராம். அதுவும் கிடக்க, பட்டர், ‘ஆழ்வாரையும் ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்ததனால் திருமேனியிற்பிறந்த பேரொளியைச் சொல்லுகிறது’ என்று அருளிச்செய்வர்; ‘நீராட்டம் முடிந்த பின் பல வித மலர்களால் கட்டப்பட்ட மாலை, கலவைச் சந்தனம் இவற்றை அணிந்திருப்பவரும், மிக உயர்ந்த பீதாம்பரத்தைத் தரித்திருப்பவருமான ஸ்ரீராமர், சுத்தமான திருக்குழலை உடையவராய் அந்தச் சிம்மாசனத்தில் அலங்கார இலக்குமியோடு பிரகாசித்தவராய் நின்றார்,’ என்றார் ஸ்ரீ வால்மீகியார்.      

சபரிகரமாகத் தம்மை அங்கீகரித்தது எத்தாலே?’ என்னில், ‘தன்னுடைய அவயவ  சௌந்தர்யத்தாலே என்கிறார்’ என்பது எம்பெருமானாருடைய திருவுள்ளம். ‘எமர்  ஏழெழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கின குணத்துக்குத் தோற்று, ‘விட்டிலங்கு’  என்று இன்னோரன்ன விசேஷணங்களை இட்டு ஏத்துகிறார்,’ என்பது  திருமாலையாண்டான் நிர்வாஹம்.

128. ஸோபயந் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா
அத்ருஸ்யத ததா ராம: பால சந்த்ர இவோ தித: –ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு 1‘இராமர் தமது திருமேனியின் ஒளியாலே தண்டகவனத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரன் போன்று காணப்பட்டார்’ என்னுமாறு போன்று இராநின்றது வடிவழகு; தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி.

129. தேஹி மே ததாமி தே. –யஜூர்வே. 1 : 8. ‘

துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும் – கல்பந்தோறும் கல்பந்தோறும் துதி செய்த பாடல்களைக்கொண்டு பாடுவது ஆடுவதாம்படி பண்ணினான். துதி சூழ்ந்த பாடல் – துதி உருவமான பாடல்கள் என்னுதல்; துதிக்கப்படுகிற குணங்களை விளாக்கொலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல். ‘நின்று’ என்கிறார், 2‘எனக்குக்கொடு’ என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை இன்றியே இருத்தலின்.

எனக்கு நீ ஒரு பலனைக் கொடு; நான் உனக்கு ஒருபலனைக்  கொடுக்கிறேன்’ என்று வேறு பிரயோசனங்களைக் கொண்டு நீங்காமல் என்றபடி.

130. ஸதம் நிபதிதம் பூமௌ ஸரண்ய: ஸரணாகதம்
      வதார்ஹம்அபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத். –ஸ்ரீராமா. சுந். 38 : 34.

தங்களிலும் (தங்கட்குக் கேடுவரினும் கிருபையே மிகுந்து  என்றபடி.)திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்; கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் 2கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.

ககுஸ்த வம்ஸத்தில் பிறந்த சரண்யரான அவ்விராமபிரான்,  பூமியில் விழுந்தவனும் சரணம் அடைந்தவனுமான அந்தக் காகாசுரன் கொல்லத்  தக்கவனாயிருந்தும், பரமகிருபையால் அவனைக் காப்பாற்றினார்’

எந்தை நின்சர ணம்சரண் என்றஇ தன்னால்
முந்தை நின்குறை யும்பொறை தந்தனம்; முந்துன்
சந்தம் ஒன்று கொடித்திரன் கண்கள் தமக்கே
வந்தொர் நன்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய்.’ –கம்பரா. சுந். சூடா. 82)

சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டுஎறிய அனைத்துலகும் திரிந்தோடி
‘வித்தகனே! இராமாவோ! நின்னபயம்!’ என்றுஅழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓர் அடையாளம்–(பெரியாழ். 3. 10 : 6)

131. சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
     தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்.–ஸ்ரீ கீதை. 6 : 34.

மருவித் தொழும் மனமே தந்தாய் – கல்பந்தோறும் கல்பந்தோறும் பரம போக்யமான உனது திருவடிகளையே 4அநந்யப் பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனத்தினைத் தந்தாய். இனி, மற்றைய விஷயங்கள் நிலையற்றவை ஆகையாலும், இனியன அல்லாதவை ஆகையாலும், ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை ஆகையாலே, மனம் 5‘சஞ்சலம் அடைந்துகொண்டே இருக்கும் மனம்’ என்கிறபடியே, சஞ்சலம் அடைந்துகொண்டே அன்றோ இருப்பது? அப்படி இன்றியே நித்தியமுமாய் எல்லை இல்லாத போக்கியமுமாய் இருக்கையாலே ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்கிறார்   -அளவே அன்றி, 1கருவூலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்

132. நது மாம் ஸக்ஷ்யஸே தர்ஷ்டும் அநேநைவ ஸ்வ சக்ஷூஷா
திவ்யம் ததாமி தே சக்ஷூ: பஸ்ய மே யோகம் ஜஸ்வரம்.– ஸ்ரீ கீதை, 11 : 18.

உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி

என் வாமனனே வல்லைகாண் – வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே, மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் – உகப்பின் மிகுதி.           

133. ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜாம்.
      வக்ஷஸ்தலேந ஸ்ரியம் உத்வஹந் விபு:
      விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசநோ
      மமாஸ்து மங்கள்ய விவிருத்தயே ஹரி;–விஷ்ணு தர்மம்.

சிரீதரன் – பெரியபிராட்டியாரைத் திருமார்விலே உடையவன். செய்ய தாமரைக் கண்ணன்1‘பிராட்டியைத் திருமார்விலே தரித்துக்கொண்டு இருப்பவரும், எங்கும் நிறைந்தவரும் விசாலமான தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்’ என்கிறபடியே, நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமாறு போன்று, பிராட்டி மார்வில் இருக்கையாலே குளிர்ந்த கண்ணழகினையுடையவன்

134. ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்.–சாந்தோக்கிய உபநிடதம். 6. 2 : 1. 

தனி முதல்வனை –3‘சத் என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத் தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது’ என்கிறபடியே மூன்று விதக் காரணமும் தானேயாய் இருக்கிற இருப்பை அறியப்போமோ?

 

135. த்யக்த்வா காமம் பயம் குரோதம் லோபம் மோஹம்ச மத்ஸரம்
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்.–பாரதம், மோக்ஷ தர்மம். 4 : 50.

மூவகைத் துன்பங்களாலே நொந்த சம்சாரி சேதனன், 3‘கோடைக்காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று, பரம்பொருளை அடைந்தவனாய் இருக்கிறான்’ என்கிறபடியே, அப்பெரிய மடுவிலே வீழ்ந்து தன் தாபம் எல்லாம் ஆறுமாறு போன்று, முதலிலே, 4இவை இல்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க் கழிந்தாரைப் போன்று இருக்கின்றான் ஆதலின், ‘அணைவது’ என்கிறார். விடாயர் மடுவிலே விழுமாறு போலே ஆயிற்று அணைவது. 5சேஷபூதன் அடிமை செய்து அல்லது தரியாதது போன்று, சேஷியும் சேஷபூதனோடே அணைந்தல்லது தரியாதானாய் இருக்கிறபடி    

136. ரம்யம் ஆவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய:–சங்க்ஷேபராமாயணம்.

 பூம்பாவை ஆகம் புணர்வது2இன்பமே ஒரு வடிவுகொண்டவளாய் ஒரு காரணத்தால் வந்த பெண்மையினையுடையள் அல்லாதவளாய் உள்ள பெரிய பிராட்டியாரோடே கலந்து ஒழுகுவது. ஆகம் புணர்வது என்றதனால், 3ஆத்ம குணங்கள் குமரி இருந்து போமித்தனை. 4மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே ‘அணைவது, புணர்வது’ என்கிறார்.

ஆத்ம குணங்கள் குமர் இருந்துபோம் இத்தனை’ என்பதற்கு, பரமரசிகனான  சர்வேஸ்வரன் பிராட்டியினுடைய திருமேனியின் சௌந்தர்யம் முதலிய குணங்களில்  ஈடுபட்டதனால் ஆத்ம குணங்கள் பர்யந்தம் சென்றிலன் என்பதும், அதனால்,  பிராட்டியின் ஆத்ம குணங்கள் பயன் அற்றுக் கிடக்கின்றன என்பதும் கருத்து

மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே’ என்றது, அக்ர்யப் பிராய நியாயத்தாலே,  பிராட்டியோடே கூட எடுக்கையாலே இவ்விருவர்க்கும் பிறக்கும் ரசம், சேர்த்தியைக்  கண்டு அனுபவிக்கையாலே திருவனந்தாழ்வானுக்கும் உண்டு என்பதாம். இதற்கு  மேற்கோள் காட்டுகிறார், ‘காட்டில் கட்டிய ஆசிரமத்தில்’ என்று தொடங்கி, இச்சுலோகம்,  சங்க்ஷேபராமாயணம். இதற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்: – ரம்யமா வசதம்  கிருத்வா – அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்குத்  தகுதியாகச் சமைத்த மாளிகைகளிலும் திருவுள்ளத்துக்குப் பொருந்தி அழகியதாய்  இருந்தது காட்டிலே இளைய பெருமாள் சமைத்த ஆசிரமமாயிற்று. த்ரயோ ரமமாணா: –  நாயகரான பெருமாள் ரசம் அன்றே பிராட்டியது? பிராட்டிக்குப் பிறக்கும் ரசம் அன்றே  பெருமாளது? அப்படியே, அச்சேர்த்தி கண்டு உகக்குமவரன்றோ இளையபெருமாள்?  வநே -‘படைவீடர் காட்டிலே வசித்தார்கள்’ என்று தோற்றாமல், காடர் காட்டிலே  வசித்தாற்போலே பொருந்தி இருந்தபடி. படைவீடர் – படைவீட்டிலே இருப்பவர்கள்;  படைவீடு – நகரம். அக்ர்யப் பிராயம் – முதன்மை பெற்றவர்கள் வகுப்பிலே சேர்த்தல்.  இது ஒரு நியாயம்.

பிராட்டி, இளையபெருமாள் ஆகய மூவரும் களிக்கின்றவர்களாய் வாழ்ந்தார்கள்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. ஆக, சொல்லிற்றாயிற்று, சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாகத் திருவனந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை, முக்தப் பிராப்பியபோகம் என்றபடி

137. தஸ்யா: ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித:
     ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்தர: ஸ: அக்ஷர: பரம: ஸ்வராட்.–தைத்திரீயநாரா. உப. 11. 

138. ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர்வ்யஸ்திதா:
      ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வஸவர்த்திந: -விஷ்ணு தர்மம்

இங்கு ‘முதல்’ என்கையாலே, இவ்வுலகத்தில் காரிய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும், இதுதான் ஆவது அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது. இதனால், பிரமனும் சிவனும் 2சம்சார பத்தர்கள் என்னுமிடமும், சர்வேஸ்வரனே மோக்ஷத்தைக் கொடுக்கவல்லான் என்னுமிடமும் சொல்லுகிறது. ஆக, அடையத் தக்கவன் அவனே; பிரமனும் சிவனும் அடையத் தக்கவர்களல்லர் என்கை. 3‘பிரமன் முதல் புழு இறுதியாக உள்ள இவ்வுலகத்துப் பொருள்கள் புண்ணிய பாவ ரூப கருமங்களால் உண்டு பண்ணப்பட்ட சம்சாரத்துக்கு உட்பட்டவைகள்’ என்னாநின்றது அன்றோ? ஆக, இப்படிப் பிரஹ்ம ருத்திரர்களுக்கும் காரணனாய் இருக்கையாலே வந்த மேன்மை உடையவன்.    

139. ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
      த்வாமேவ ஸரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

140. ஸ்ம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
     விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்.

புணைவன்’ என்பதற்கு, ‘புணையாமவன்’ என்றும், ‘சர்வபர நிர்வாஹகனாமவன்’ என்றும் பொருள் கோடலுமாம். 2‘ஞானிகள் தேவரீரையே சரணமாக அடைந்து, கொடியதாயும் எல்லை இல்லாத துக்கத்துக்கு இருப்பிடமாயும் இருக்கிற சம்சாரமாகிற கடலைத் தாண்டுகிறார்கள்,’ என்றது காண்க. ‘விஷ்ணு போதம்’ என்று கூறப்பட்டுள்ளது அன்றே? (விஷ்ணுவாகிற ஓடம். இது, விஷ்ணு தர்மம்.)இதனால், ஓர் இடத்தைப் பற்றி நிற்கை அன்றிக்கே, அக்கரையும் இக்கரையுமாய் நிற்கும் ஓடம் என்பது போதரும்.

பனிநின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் படிபற்றி நனிநின்ற சமயத்தோர் எல்லோரும் நன்றுஎன்னத்
தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகில்  இனிநின்ற முதல்தேவர் என்கொண்டுஎன் செய்வாரே?’    –விராதன் வதைப். 52)   —    

141. முக்தி: மோக்ஷோ மஹாநந்த:

142. நிரஸ்த ஆதிஸயாஹ்லாத ஸூக பாவைக லக்ஷணா
     பேஷஜம் பகவத் ப்ராப்தி: ஏகாந்தாத்யந்திநீமதா. —

மேற்பாசுரத்தில் ‘பிறவிக்கடல் நீந்துவார்க்கு’ என்ற அதனுடைய விவரணமாய் இருக்கின்றது இப்பாசுரம். நீந்தும் துயர்ப்பிறவி உட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் – கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான பிறப்புத் தொடக்கமான மற்றும் உண்டான 1அபக்ஷயகேடு முதலானவைகளையும் (உண்டாதல், பிறத்தல், பரிணமித்தல், வளர்தல்,  குறைதல், மரணம் என்பனவற்றை அபக்ஷயம்-குறைதல்.)கடத்தும். ‘கடக்க அரிது’ என்பது போதர ‘நீந்தும்’ என நிகழ்காலச் சொல்லால் அருளிச்செய்கிறார். துயர் இல்லா வீடு முதலாம் -துக்கத்தின் வாசனையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம். இனி, இதனை ஒரு தொடராகக் கொண்டு, ‘கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான பிறவி தொடக்கமாக நீந்தும் துயரான மற்றும் எவ்வெவையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம்’ என்று பொருள் கோடலுமாம். 2இப் பொருளில், இரண்டாம் அடியிலுள்ள ‘நீந்தும்’ என்பதும் பெயரெச்சம். இவர் ’வீடு’ என்கிறது, பிறவி நீங்குதல் மாத்திரத்தை அன்று; சுகமாக இருத்தலையே இலக்கணமாகவுடைய பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுகிறது. ‘ஆயின், வீடு என்ற சொல் பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுமோ?’ எனின், 3‘முக்திர் மோக்ஷா மஹாநந்த’ என்பது நிகண்டு.

முதல் இரண்டு அடிகட்கு, இரண்டு வகையாகப் பொருள்  அருளிச்செய்கிறார். முதற்பொருள், அநிஷ்ட நிவர்த்தி பூர்வமாக இஷ்டப் பிராப்தியைச்  சொல்லுகிறது. இரண்டாவது பொருள், கேவலம் இஷ்டப் பிராப்தியைச் சொல்லுகிறது.

முத்தி என்பதும், மோக்ஷம் என்பதும், பெரிய ஆனந்தம் என்பது ஒரு பொருளன’  என்பது பொருளாம். இங்கு மோஷத்திற்கு ‘மஹானந்தம்’ என்ற பெயர் இருத்தல்  கருதத்தக்கது.

143. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்ம்ருதௌ
     ததாதர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம், சாந்தி பர்வம், 169.

144. உத்பாத்ய ப்ருதிவீம் ஸம்பயக் ஸ்தாபயித்வா யதாபுரம்
     ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாம் ஆவிஸ்ய ப்ரஜாபதே.-விஷ்ணு தர்மம்.

புணர்க்கும் அயன் ஆம் – இவற்றைப் படைத்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிற பிரமனும் ஆம். அழிக்கும் அரன் ஆம் – சுடுதடி போலே இவற்றை அடைய அழித்துக் கொண்டிருக்கிற சிவனும் ஆம். 2‘அந்த நாராயணனால் நன்கு காண்பிக்கப்பட்ட படைத்தல் அழித்தல் என்னும் தொழில்களை உடையவர்களாய்ப் படைத்தல் அழித்தல்களைச் செய்கிறார்கள்’ என்றும், 3‘பிரமனே! உன்னிடத்தில் அந்தாரத்துமாவாய் நின்று சிருஷ்டியைச் செய்யப்போகிறேன்’ என்றும் வருகிறபடியே, அவன் அந்தராத்துமாவாய் நின்று நடத்துவிக்க இவற்றைச் செய்கிறார்கள். புணர்த்த தன் உந்தியோடு மன்னிப் புணர்க்கும் அயன் ஆம் ஆகத்து மன்னி அழிக்கும் அரன் ஆம் – இவைதாம் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றி இருந்த போதாயிற்று;    பால் குடிக்கும் குழந்தை வாயில் முலை வாங்கினால் தரியாதது போன்று, இவர்களும் திருமேனியை விட்டு விலகின், ஆற்றல் இல்லாதவர்கள் ஆவர்கள் என்றபடி. 1இத்தால், சாமாநாதிகர்ணயத்தாலே அந்தர்யாமித்துவம் சொல்லிற்று. ‘புணர்த்த தன் உந்தி’ என்கையாலே, 2காரணத்துவம் சொல்லிற்று; ‘ஆகத்து மன்னி’ என்கையாலே, திருமேனியைப் பற்றிப் பெற்ற சொரூபத்தினை உடையவர் என்னுமிடம் சொல்லிற்று.

145. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரமிதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யபயம்.–ஸ்ரீ கீதை, 9 : 2.

பலம் முந்து சீரில் படிமின் – அவனுடைய பலம் முற்பட்டிருக்கின கல்யாணகுணங்களிலே அன்புடையர் ஆகுங்கோள். 5‘செய்வதற்குச் சுக ரூபமாக இருக்கும், நினைத்த பலன்களைக் கொடுத்துத் தான் அழிவில்லாமல் இருக்கும்’ என்னும்படி அறுதி செய்யப்பட்ட விஷய 6சாரஸ்யத்தாலே, சாதன தசையே தொடங்கி இனியதாய் இருத்தலின் ‘பலம் முந்து சீர்’ என்கிறார். ஓவாதே – ‘பௌர்ணமி அல்லாத மற்றை நாள்களில் கடல் தீண்டலாகாது’ என்னுமாறு போன்று ஒரு நியதி இலை இதற்கு    

146. மர்யாதாநாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ: –ஸ்ரீராமா. சுந். 35 : 11

அந்த இராகவன் உலகினுடைய மரியாதையைச் செய்கிறவன், செய்விக்கிறவன்’ என்றார் ஸ்ரீ வால்மீகி

ஒழுக்கத்தை அநுஷ்டித்துக் காட்ட வந்த அவதாரங்கள்

அறந்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித்
திறந்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி”–கம்பர்

147. யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத்ததேவ இதரோ ஜந:
      ஸயத் ப்ரமாணம் குருதே லோக: ததநுவர்த்ததே. –ஸ்ரீ கீதை, 3 : 21.

பெரியவன் எதனை எதனைச் செய்கிறானோ, அதனையே மற்றை மக்களும் செய்கிறார்கள்; அப் பெரியவன்  எதனைப் பிரமாணமாக வேண்டுமென்று செய்கிறானோ, அதனையே உலகமும் அநுசரிக்கிறது’, என்பது ஸ்ரீ கீதை.

இப்படித் தாழவிட்டு அவதரிக்கிறவன்தான் யார்?’ என்னில், தேவாதி தேவபெருமான் – மனித மணம் பொறாத தேவ மணம் பொறாத நித்திய குரிகட்கு அவ்வருகானவன்.

148. வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
     ஆபத் விமோசந மஹேஷ்ட பலப்ரதாநை:
      க: அந்ய: ப்ரஜாபஸூபதீ பரிபாதி கஸ்ய
      பாத உதகேந ஸஸிவ: ஸ்வஸிரோத்ருதேந.–ஸ்தோத்திர ரத்தினம்.

149. ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார ஸிரஸா ஹர:
பாவநார்த்தம் ஜடாமத்யே யோக்ய: அஸ்மி இதிஅவதாரணாத்– ஈஸ்வர சம்ஹிதை.

 தீர்த்தன்1‘தன் தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன் ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே, ‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல்.

குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
  மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் – கறைகொண்ட
  கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
  அண்டத்தான் சேவடியை ஆங்கு-நான்முகன் திருவந். 9

குறைகொண்டு – தன்னுடைய செல்லாமையை முன்னிட்டுக்கொண்டு. நான்முகன்  குண்டிகைநீர் பெய்து – அருகே நின்ற தர்ம தத்துவம் ஜலமாய் இவன் குண்டிகையிலே  பிரவேசித்தது, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷசூக்தாதிகளைக் கொண்டு துதித்து. கறை கொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் -‘யுக்தாயுக்த  நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கைவளராநின்றான்; அது போக  வேணும்’ என்று இவன் ஜடையிலே ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்;ஸ்ரீபாததீர்த்தம் கொண்டு துஷ்புத்திரர்கள் தலைகளிலே தெளிக்குமாறு போன்று’ என்பன
மேல் பாசுரத்துக்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்.

 ‘புவிஅளந்தவன் பொன்னடித் தாமரை   
  தவழும் கங்கைஅம் தண்புனல் பொன்னென
  அவிர்ச டாமுடி மீதுவைத் தன்றுகொல்
  சிவனும் ஓர்சிவ னாகித் திகழ்ந்தனன்-பாகவதம், 3-ஆம் ஸ்கந்தம், கபிலர் தத்துவம் உரைத்த அத். செய். 51)

தேனந்து சோலை அரங்கேசர் சேவடி மேல்விசயன்
  தானந்த நாளையிற் சார்த்திய மாலையும் தாள்விளக்கும்
  வானம் தரும்கங்கை நன்னீரும் சென்னியில் வைக்கப்பெற்ற
  ஆனந்தத் தான்அல்ல வோமுக்க ணான்மன்றுள் ஆடுவதே?’–திருவரங்கக்கலம். 45.

150. பார்த்தோ விஜேதா மதுஸூதநஸ்ய
      பாதாரவிந்த அர்பபித சித்ரபுஷ்பம்
      ததர்ஸ கங்காதர மௌளிமத்யே
      பபூவவீர: க்ருத நிஸ்சயார்த்த: -ஸ்ரீகீதை, 11 : 40

151. நம: புரஸ்தாத் அத பருஷ்டத: தே. 

பார்த்தன் தெளிந்து ஒழிந்த – இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில் கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும் வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே – அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?

152. தத: ஸாகர வேலாயாம் தர்ப்பாந் ஆஸ்தீர்ய ராகவ:
     அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹூம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந: –ஸ்ரீராமா. யுத். 21 : 1.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்

பாஹூம்புஜகபோகாபம் – திருவனந்தாழ்வான் மேலே  சாய்ந்தாற்போலேயாயிற்றுத் திருக்கையை மடித்துச்சாய்ந்தால் இருக்கும்படி. அரிஸூதந:
கிடந்த கிடையிலே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை –பிரதிஸிஸ்யே  மஹேததே:- ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பரிசித்துச் சாய்ந்தாற்போலே இருக்கை’

153. உடஜே ராமம் ஆஸீநம் ஜடாமண்டல தாரிணம். ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்; இருந்து – பரமபதத்திலே இருந்தபடியாதல்; 2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீராமர்’ என்கிறபடியே, இருடிகள் ஆஸ்ரமங்களிலே இருந்தபடியாதல்

154. அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ஸதநு: ஊர்ஜிதம்
       ராமம் ராமாநுஜம் சைவ பர்த்து: சைவ அநுஜம் ஸூபா.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 19 : 25.
நின்று – திருமலையிலே நின்ற படியாதல்; இராவணனைக் கொன்ற பின்னர்க் கையும் வில்லுமாய் இலங்கையிலே நின்றபடியாதல்; 3‘வலிய வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீராமனையும் இலக்குமணனையும், தன் கணவனுக்குத் தம்பியான சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே வாலியைக் கொன்று நின்ற நிலையாதல்

155. தவஸ: பரமோதாதா ஸங்க சக்ர கதாதர:
     ஸ்ரீ வத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வதோ த்ருவ:.–ஸ்ரீராமா. யுத். 114 : 15. இது மண்டோதரியின் கூற்று.

அவர்களுடைய பெண்கள் பக்கலிலே கேட்குமித்தனையே அன்றோ இவனுடைய பரத்துவம்? 4‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலே இருக்கிற ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், கொடுக்கிறவர், ஸ்ரீவத்சம் என்னும் மறுவைத் திருமார்விலுடையவர், பிரியாமல் இருக்கிற பெரிய பிராட்டியாரையுடையவர், ஒருவராலும் வெல்ல முடியாதவர்,   

156. த்வம் அப்ரமேய: ச துராஸதஸ்ச ஜிதேந்த்ரிய: ச உத்தம     தார்மிக: ச
     அக்ஷயகீர்த்தி: ச விசக்ஷண: ச க்ஷிதிக்ஷமாவாந்   க்ஷதஜோபமாக்ஷ:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 24 : 31. இது தாரையின் கூற்று.

தேவரீர் வேதங்களாலும் அளவிட முடியாதவர்; அணுக முடியாதவர்; இந்திரியங்களை வென்றவர்; உயர்ந்த தார்மிகர்; அழிவற்ற கீர்த்தியினை உடையவர்; பூதேவி போன்ற பொறுமை உடையவர்; இரத்தம் போன்ற திருக்கண்களையுடையவர்’ என்னுதல் சொல்லாநிற்பர்கள் அன்றே?

செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
  கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
  ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
  ஊழி யாவரும் உணரா
  ஆழி முதல்வ!நின் பேணுதும் தொழுது.’ –(பரி. 2 : 15  -19

காலவீட்டம் கழிந்த பின் உயிர்கள் உளவாதற்பொருட்டு  அந்நிலத்தினை எடுத்திட்ட கேழல் கோலத்தால், திகழ்வரப் பெயர் பெற்ற இவ்வராக
கற்பம் நின் செயல்களுள் ஒரு செயலின் பெயராமதனை உணர்த்துதலின், அச்செயல்கள்  பலவற்றையும் செய்கின்ற நின் முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாத’-  என்ற அதன் உரை

157. மயாததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்திநா
     மத்ஸ்தாநி ஸர்வபூதாநி நசாஹம் தேஷூ அவஸ்தித:–ஸ்ரீ கீதை, 9 : 4.

கண்ணன் எங்கும் உளன் – இது ஆயிற்று அவன் சொன்ன தப்பு; ‘சர்வேஸ்வரன் எங்கும் உள்ளவன்’ என்றான். 1‘இவ்வுலகம் எல்லாம் என்னால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், 2‘யாது ஒன்று இருக்கின்றது, அது என்னை அன்றி இல்லை,’ (ஸ்ரீ கீதை, 10 : 39)என்றும் அவ்விறைவன் தான் சொன்னவார்த்தை ஆயிற்று இவன் தான் சொல்லிற்று   

158. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்ய
     ஸச்ச த்யச்சாபவத். –தைத்திரீய ஆனந். : 6.

 வேர் முதலாய் வித்தாய்2மூன்றுவித காரணமும் தானேயாய். பரந்து –3‘உயிர்களைப் படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்; பிரவேசித்து, அறிவுடைப்பொருள், அறிவில் பொருள்கள் ஆனார்’ என்கிறபடியே, முந்துற இவற்றை அடைய உண்டாக்கி, பின்னர்ப் பொருளாதல் பெயரடைதல்களுக்காக அவற்றுள் அநுப்பிரவேசித்து, இப்படி உலகமே உருவமாய் நின்று. தனி நின்ற கார்முகில்போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேன்-‘இப்படி, உலகமே உருவமாய் நின்ற அளவே அன்றி, தன்னுடைய சிறப்புத் தோன்றும்படி ஸ்ரீவைகுண்டத்திலே மழை பெய்யும் மேகம் போலே இருக்கிற அழகிய திருமேனியையுடையனாய் இருந்தும், கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாள் ஆனவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்கிறார்.

முதல் துணை நிமித்த காரணங்கள். வேர் –  துணைக் காரணம்; முதல் – நிமித்த காரணம்; வித்து – முதற் காரணம்.
ஞானசத்தியாதிகளோடு கூடிய வேஷத்தால் துணைக் காரணமும், சங்கல்பத்தோடு கூடிய  வேஷத்தால் நிமித்த காரணமும், சூஷ்ம சித்து அசித்துகளோடு கூடின தன்மையால்  முதற் காரணமும் கொள்க.

159. அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே
நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயாந்

ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி ஸமநுப்ரவிஷ்ட:
ப்ரஜாபதி: சரதி கர்ப்பே அந்த:

160. உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ராஜந் புத்ர மஹாபஸ:
த்வத்விதா ந ஹிஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸம்மதா:–ஸ்ரீராமா. அயோத். 72 : 24.

கைகேயி 1‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான் அன்றோ      

161. ஸபாஷ்பகலயா வாசா கலஹம் ஸஸ்வரோ யுவா
    விலலாப ஸபா மத்யே ஜகர்ஹேச புரோஹிதம்.
    ராஜ்யம்சஅஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹஸி
    ததம் தஸரதாத் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக. –ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 11.

162. ஏகஸ்மிந்நபி அதிக்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜ்ஜிதே
தஸ்யுபி: முஷிதேநேவ யுக்தம் ஆக்ரந்திதும் ப்ருஸம்.
     

163. நியமாதிக்ரமம் ரஹஸி போதயேத். 

அன்னத்தின் குரல் போன்று குரலையுடைய யுவாவாகிய அந்தப் பரதாழ்வான், கண்ணீர்   அடைப்பினால் தெளிவில்லாத வார்த்தைகளால் சபை மத்தியில் கதறினான்;  புரோகிதனான வசிஷ்டனையும் குறை கூறினான்; இராஜ்யமும்  நானும் இராம்பிரானுடைய  சொத்து; இந்த விஷயத்தில் தர்மத்தைச் சொல்லக்கடவீர்; தசரதரிடமிருந்து பிறந்தவன்  ராஜ்யத்தை அபஹரித்துக்கொள்ளுகின்றவனாக எப்படி ஆகக்கூடும்?

விலலாப சபா மத்யே – ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக் கொள்ளை கொள்வதே! திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’ என்கிறபடியே, இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்? ஜகர்ஹேச – சந்தியாவந்தனத்திற்குப் பிற்பாடரைச் 3சிஷ்டகர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான். புரோஹிதம் – அழகியதாக இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய். சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே – சபையின் மத்தியிலே புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்; 4‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின் அதனை அவனிடத்தில் ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ என்கிற நிலையையும் பார்த்திலன். ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய – ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ? அப்படியாயின், ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; சக்கரவர்த்தி துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது; நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’ என்று பார்த்தாய் இத்தனை போக்கி, இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை. கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: – 5அவர் போகட்டுப் போன ராஜ்யத்தை  அபகரித்து, அவரைப் பிரிந்த அந்தக் கணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.

  ‘தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்
பள்ளம்எனும் தகையானைப் பரதன்எனும் பெயரானை’–கம்பநாட்டடிகள் திருவாக்கு

குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
  கிருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’

சேஷபூதனான என்னைப் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்  என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;  தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச் செய்து அத்தால்  வந்த கைங்கர்ய பலத்தை  அடைந்தவனாகப் போகிறேன்

ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத் தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி.

164. ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷமண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம்வசநம் அப்ரவீத்.

165. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
     ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாம்இதி மாம் வத.

பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே கிரியதாமிதி மாம் வத.’(ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )

 ‘ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும்  நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்; தேவரீரே மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,  ‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும்.

மேலும், 4பரவா நஸ்மி – (ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்றார் இளையபெருமாள். இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.

‘இதுதான் ஒருவர் விரும்புவதும் அன்று; விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று; அவ்வழி புல் எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க, ‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ புருஷார்த்தமாவது? இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப, 1அவனுந் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.

பரவாநஸ்மி – பரதந்திரனாக இருக்கிறேன். நான் பரதந்திரனாக  இருக்கிறேன் என்றதனால் நீர் ஸ்வதந்திரராக இருக்கின்றீர் என்பது போதருதலின்,
அதனையே, ‘உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்று அருளிச் செய்கிறார். அஸ்மி – ஆகிறேன்; ஆகிறேன் ஆகுந்தன்மை – அஸ்மிதை.

நீருள எனின்உள் மீனும் நீலமும்;
  பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
  நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
  யாருளர் எனின்உளேம்? அருளுவாய்’ என்றான். -கம்ப. நகர் நீங். 157
   

166. யாவந்ந சரணௌ ப்ராது: பாரத்திவ வ்யஞ்ஜநாந்விதௌ
ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி.–ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான். மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போன்று, இவரும் ஈறு இல் இன்பத்து இருவெள்ளத்திலே முழுகிப் பூச்சூட இருக்கின்றார் ஆதலின், ‘பற்புத்ததலை சேர்த்து’ என்கிறார்.

இராஜ லஷணம் பொருந்திய தமையனாரான ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை  என் தலையில் எதுவரையிலும் தரிக்கமாட்டேனோ’ அது வரையிலும் எனக்குச்  சாந்தியானது உண்டாகமாட்டாது. -. இது, ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ  சத்ருக்நாழ்வானிடம் கூறியதானாலும், ஸ்ரீகௌசல்யையார் முதலாயினாரோடும்  கூறியதாகவும் கோடல் தகும்.

167. பரமாபதம் ஆபந்ந: மநஸா அசிந்தயத் ஹரிம்
     ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண: –விஷ்ணு தர்மம். 68.

கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நீ விரைந்து வந்து விழுந்தபடி அறியாயோ? 3பெரிய ஆபத்தை அடைந்தது, கூப்பிடுதற்கும் ஆற்றல் அற்று மனத்தினாலே நினைந்தது’ என்கிறபடியே, சர்வேஸ்வரனாகிய நீயும் உன்றன்னைப் பேணாமல் வந்து விழும்படியான ஆபத்தே அன்றோ?’ என்றபடியாம். யானையும் தன் அளவிலே படும் துன்பம் என்பார், ‘கைம்மாத் துன்பம்’ என்கிறார், இனி, துதிக்கை ஒழிய முழுகிற்று’ என்பார், ‘கைம் மா’ என்கிறார்’ எனலுமாம். ‘அப்படி, உமக்கு ஆபத்து உண்டோ?’ என்ன, ‘அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து: அங்கு ஆயிரம் தெய்வ யாண்டு; இங்கு அநாதிகாலம்; அங்கு ஒரு சிறு குழி; இங்குப் பிறவி என்னும் பெருங்கடல்;அதற்குச் சரீர நாசம்; எனக்கு ஆத்தும நாசம்; அங்கு யானையின் காலை முதலை பற்றியது; இங்கு என்னுடைய நெஞ்சை அன்றோ அருவித் தின்றிடுகிறது? ஆதலால், அதற்கும் இதற்கும் உள்ள வாசி பாராய். கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கின அதுவும் தமக்குப் போக்கியது என்று இருக்கின்றார் ஆதலின் ‘பிரானே’ என்கிறார். ‘அதற்கு உதவினமை உண்டு; உமக்கு என்?’ என்ன, அம்மா -‘அதற்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரீருடைய சம்பந்தம்? நீர் சுவாமி அன்றோ?’ ‘நீர் யார்?’ என்ன, அடியேன்-நான் அடியவன். ‘நன்று; இவருடைய சொரூபத்தையும் பற்றித் ‘தவிர ஒண்ணாது’ என்று விரும்புகிறீரோ?’ என்ன, வேண்டுவது – வேண்டிப் பெறத்தக்கது. ‘இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான். இஃதே – 1நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்ற இதுவே’ என்கிறார்.

168. துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோரத:
யதி நாஸம் நவிந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா. –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

துன்பத்தை நீக்க வேண்டும்’ என்கிறேன். அல்லேன்; 2‘துன்பம் வந்த காலத்திலும், உன்னை அடைந்திருக்கிற என்னுடைய எண்ணமானது கேட்டை அடையாமல் இருந்ததே ஆனால், அதைக்கொண்டு எப்பொழுதும் பேறு பெற்றவனாக இருக்கிறேன்’ என்கிறபடியே, ‘ஏதேனும் 3உத்கிரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும்படி செய்தருளவேண்டும்’ என்றபடி

169. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
      தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம். –யஜூர்வேதம் ஆ. பிர. 3. 8 : 17.

பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை – பிறத்தற்குக் காரணமான கர்மம் இல்லாதிருக்கவும், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறவாத பிறவிகளிலே பிறக்க வல்ல, எல்லார்க்கும் தலைவனை. 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமல் இருக்கிற சர்வேஸ்வரன் இச்சை அடியாகப் பல விதமாக அவதரிக்கிறான்; அதன் காரணத்தைப் பெரியோர்கள் அறிவார்கள்,

170. யத்ரருஷய: ப்ரதமஜாயே புராணா:

மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே அன்றோ?’ என்கிறார்; அதாவது, பகவானுடைய அனுபவத்தில் மிக்காராய், ‘எல்லாவற்றையும் அறிந்தவர்கள், பழையராய் இருந்தும் புதியராகவே காணப்படுகின்றவர்கள்’ என்கிறபடியே, வேதத்திலே குற்றமற்றவர்களாகச் சொல்லப்பட்டுள்ள நித்திய சூரிகள் அனுபவிக்கின்ற அக்காரம் போலவும், கனி போலவும் உள்ள உன்னுடைய இனிமையின் மிகுதியை எனக்குப் பிரகாசிப்பித்தவனே! அன்றோ?’ என்கிறார்.

நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன்’ என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க, ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது; ஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.

171. தத்ஹி ஏதத் பஸ்யந்ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே
அஹம் மநு: அபவம் ஸ்ூர்யஸ்ச.–ஸ்ரீராமா. அயோத். 31 : 25.

பொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ?’ என்ன, யானே நீ – யானும் நீயே. 3முத்தர்கள், 4‘நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னாநிற்பர்; சம்சாரத்தில் தெளிவுடையார் 5‘எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின.’ எல்லாப் பொருள்களும் நானே’ என்னாநிற்பர்; இங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை?’ எனின், ‘அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘

172. ஏகம் ஸதைகம் பரம: பரேஸ:
     ஸவாஸூதேவோ நயத: அந்யத் அஸ்தி. –பிருகதாரண்ய உபநிடதம், 3.

173. த்ரய ஏவாதநா ராஜந் பார்யா தாஸ: ததா ஸூத:
     யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம். -ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 85.

அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘இது எங்கே நிகழக்கண்டு சொல்லும் வார்த்தை?’ என்ன, ‘நித்தியசூரிகள் முழுதும் இப்படி அன்றோ உன்னை அனுபவிப்பது?’ என்கிறார்

174. அஹோ வீர்யம் அஹோ தைர்யம் அஹோஸத்வம்  அஹோத்யுதி: –ஸ்ரீராமா. சுந். 49 : 17.

175. பபூவ புத்திஸ்து ஹரீஸ்வரஸ்ய யத் ஈத்ருஸீ ராகவ தர்மபத்நீ
இமாயதா ராக்ஷஸ ராஜபார்யா: ஸீஜாதம்அஸ்யேதி ஹி  ஸாதுபுத்தே: — ஸ்ரீராமா. சுந். 9 : 12.

ஏர் கொள் இலங்கையை – காட்சிக்கு இனியதாய்க் கட்டுடைத்தான இலங்கையை. 2‘இது என்ன வீரியம்! இது என்ன தைரியம்! இராக்ஷச அரசனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்’ என்றும், 1‘இராவணனும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைக் கண்டவாறே, ‘பையல், தானும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைப் பெருமாளும் பிராட்டியுமாய் இருக்கச் சம்மதித்தானாகில், இந்த ஐஸ்வரியம் குலையாதிருக்குமே!’ என்றும் நினைத்தான், ‘பகைவர்கட்கும் நன்மை வேண்டும்’ என்று இருக்கும் புத்தியையுடைய அனுமான்; தானும் ஒரு கூட்டத்துக்குத் தலைவன் ஆகையாலே இங்ஙனே இருப்பது ஒரு புத்தி பிறந்தது’ என்றும் கூறப்படுகின்றபடியே, திருவடி மதிக்கும்படியான இலங்கை ஆதலின், ‘ஏர் கொள் இலங்கை’ என்கிறார்.

176. பால்யே க்ரீடநகா ஸக்தா: யௌவநே விஷயோந்முகா:
177. தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயஸே ஸதா. –ஸ்ரீ விஷ்ணு புரா. 17. 74 : 75. இது பிரஹ்லாதாழ்வான் கூற்று.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – ‘கிளர் ஒளி இளமை’ என்றது, 1‘மனத்தில் உண்டாகும் சிரத்தையாய், பிறந்த இச் சிரத்தை இதினின்றும் மாறி வேறு விஷயங்களில் பிறப்பதற்கு முன்னே’ என்றபடி. என்றது, ‘ஒருவனுக்கு ஒரு விஷயத்தில் ஒரு கால் சிரத்தை பிறக்கும்; அவனதனக்கே அவ்விஷயத்திலே சிரத்தை இன்மையும் பிறக்கக் கூடியதாய் இருக்கும். ஆக, பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே’ என்றவாறு. ‘கிளர் ஒளி இளமை’ என்பதற்கு, ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்பது பொருள். ஒளி என்றது, ஞானத்தை; அது ஈண்டு இச்சைக்கு ஆயிற்று. ‘இளமை’ என்றது, அவ்விச்சை உண்டாகும் ஆரம்ப நிலையைக் குறித்தது. அந்த இச்சை தோன்றுவது மனத்திலே ஆகையாலே ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்று பொருள் அருளிச்செய்கிறார்

இனி, ‘கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்’ என்பதற்கு,  ‘அடையத் தக்கது’ என்னும் நினைவு பிறந்தாலும், 2‘கரணபாடவம் இல்லையே!’ (கரணங்கள் தத்தம் காரியங்களைச் செய்வதற்குத் தக்க ஆற்றலுடன் சேர்ந்திருத்தல்.)என்று கை வாங்க வேண்டாதபடி கரணபாடவம் உள்ள போதே என்று பொருள் கூறலுமாம். உயர்வு பற்றி ‘ இளமை கெடுவதன் முன்னம்’ என்றாராயினும், இனம் பற்றிப் பால்ய யௌவன பருவங்களையும் கொள்க. 3‘பாலியத்தில் விளையாட்டில் ஆசையுள்ளவர்களாகவும், யௌவன காலத்தில் விஷயங்களை அனுபவித்தலில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று கூறி, ‘ஆகையாலே, பால்யத்திலே அறிவோடு கூடினவனாய் எக்காலத்திலும் புகழின்பொருட்டு முயற்சி செய்தல் வேண்டும்’ என்றும் கூறுதல் காண்க.

178. யத் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூதேவோ நசிந்த்யதே
ஸாஹாநி: தத் மஹத் சித்ரம் ஸாப்ராந்தி: ஸாசவிக்ரியா.

தளர்வு இலர் ஆகில் – ‘முகூர்த்தகாலமாயினும் ஒரு கண நேரமாயினும் வாசுதேவனைச் சிந்திக்க இல்லை என்பது யாது ஒன்று உண்டு? அது பெரிய இழிவு; பெரிய கெடுதி’ என்கிறபடியே, 1‘திருமலையைக் கிட்டாமையால் வருகின்ற எவ்வகையான துக்கமும் இல்லாமல் இருக்க வேண்டில். இனி, ‘திருமலையே அடையத்தக்கது’ என்னும் புத்தி பிறந்து அதனை அடைவதற்கு விரோதியாய் வருகின்ற 2அனர்த்தபாகிகள் (கேட்டினையடைகின்றவர்கள்.)அல்லாதாராய் ஒழிய வேண்டில் எனலுமாம்

தளர்விலராகில்’ என்பதற்கு, இருவகைப் பொருள் அருளிக் செய்கிறார்; முன்னையது, ‘திருமலையைச் சாராமையாகிற துக்கம் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது ஸ்ரீ  ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள். பின்னையது, ‘திருமலையைக்  கிட்டுகைக்கு விரோதியான பாவங்கள் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது  எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள் 

179. நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நா சாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.

பக்தா நாம்’ என்கிறபடியே, பிறர்களுக்கு உரியதாய் நிரதிசய போக்கியமாய் இருக்கும்  விஷயம் அன்று; ஆதலின், ‘மதியாது’ என்கிறார்

பணிமின் திருவருள் என்னும்அம் சீதப் பைம்பூம் பள்ளி
  அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்’–திருவாய். 4. 4. 5.

பாண்தேன் வண்டுஅறையும் குழலார்கள்பல் லாண்டுஇசைப்ப
  ஆண்டார் வையமெல்லாம் அரசாகிமுன் ஆண்டவரே
  மாண்டார் என்றுவந்தார் அந்தோமனை வாழ்க்கைதன்னை
  வேண்டேன் நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!’–பெரிய திருமொழி. 6. 2 : 5

180. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.–ஸ்ரீகீதை.
    

181. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
    தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தாய ஸ்ம்பவாமி யுகே யுகே. –ஸ்ரீகீதை. 4 : 8.

182. தத: தக்கோகுலம் ஸர்வம் கோ கோபீஜந ஸங்குலம்
அதீவார்த்தம் ஹரி: த்ருஷ்ட்வா மைத்ரேய அசிந்தயத்ததா.–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 : 13.

பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்2‘பசுக்கள் ஆயர்கள் ஆயச்சிகள் எல்லாரும் வருந்திக் கொண்டிருக்கிற அந்தக் கோகுலம் முழுதையும் கிருஷ்ணன் பார்த்து அப்போது சிந்தித்தான்’ என்கிறபடியே, ஆயர்களும் ஆய்ச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன், அந்த ஐஸ்வர்யத்தோடு வந்து நித்தியவாசம் செய்யுங்கோயில். இதனால், அரியன செய்தும் அடைந்தவர்களைப் பாதுகாப்பவன் என்பதனைத் தெரிவித்தபடி. ஐந்து லட்சம் குடிகளும் நிழலிலே ஒதுங்கலாம்படி மலையின் பரப்பு இருந்தது ஆதலின், ‘பெருமலை’ என்கிறார். பீடு – பெருமை; என்றது, ஆபத்திற்குத் துணையாதல் முதலாயினவற்றை. ‘பெரு மலை எடுத்தான் பீடு உறை கோயில்’ என்றதனால், ‘ஒரு மலையை 3ஆதேயமாகக் கொண்டு ரஷித்தவன், ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு காப்பாற்றுகின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி. ‘ஆயின், திருமலையில் நிற்றல் காத்தலுக்கோ?’ எனின், 4‘சாதுக்களைக் காத்தற்காகவும், துஷ்டர்களை அழித்தற்காகவும், தர்மங்களை நிலைநிறுத்துதற்காகவும், யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்கிறபடியே, விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை அன்றோ 5அவதாரங்களுக்குப் பிரயோஜனம்?

183. ஸமுத்வஹந்த: ஸலிலாதிபாரம் பலாகிநோ வாரிதரா நதந்த:
மஹத்ஸூ ஸ்ருங்கேஷூ மஹீதராணாம் விஸ்ரம்ய விஸ்ரம்ய
புந: ப்ரயாந்தி. -ஸ்ரீராமா. கிஷ். 28 : 22.

நின்ற இடத்தே நின்று பெய்வது ஒரு மேகமும், போவதும் வருவதுமாய் இருந்து பெய்வது ஒரு மேகமும் என ஊர்க்கு மேகம் இரண்டாதலின்’ ‘வருமழை தவழும்’ என்கிறார். ‘ஆயின், இறைவன் மேகமோ?’ எனின், ‘புயல் மழை வண்ணர்’ என்றாரே முன்னர்

மிக அதிகமான தண்ணீரைத் தாங்குவனவும், கொக்குகளின் வரிசையையுடையனவும், ஒலிப்பனவுமான மேகங்கள், மலைகளின் பெரிய கொடுமுடிகளில் இளைப்பாறி இளைப்பாறி மீண்டும் செல்கின்றன’ என்பவாகலின், ‘மழை தவழும்’ என்கிறார்.

184. ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்யச தீமத:
     ந அத்யர்த்தம் க்ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே.-ஸ்ரீராமா. சுந். 16 : 4

அறம் முயல் ஆழ்ப்படையவன் கோயில்3‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறபடியே, (இங்கு, பெருமாளைக் காட்டிலும் அடியார்களைக் காப்பதில்
சிரத்தையுள்ளவன் இலக்குமணன் என்பதனைக் காட்டுவதற்காக ‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறார்.)அடியார்
களைப் பாதுகாத்தலிலே முயலாநின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் வந்து வாழ்கிற தேசம். 1சர்வேஸ்வரன் கடைக்கணித்துவிட அரைக்கணத்திலே வாராணசியை எரித்து வந்து நின்றவன் ஆதலின், ‘அறம் முயல் ஆழி’ என்கிறார்.

185. அகர்த்தமம் இதம் தீர்த்தம் பரத்வாஜ நிஸாமய
ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந் மநுஷ்ய மநோ யதா. –ஸ்ரீராமா. பால. 2.

மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை புற மலை சாரப் போவது கிறியே – 2‘பெரியோர்களுடைய மனத்தைப் போன்று தெளிந்த தண்ணீரையுடையது’ என்கிறபடியே, மறு அற்று, ஆழ்வார் திருவுள்ளம் போன்று தெளிவையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போகும் இதுவே பகவானை அடைதலை வேண்டியிருப்பார்க்கு வருத்தம் அற அடையக்கூடிய நல்விரகு.

186. ய: த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க: நிரயோ ய: த்வயா விநா
இதிஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மாய ஸஹ. –ஸ்ரீராமா. அயோத். 30 : 18.

187. யதி த்வம் ப்ரஸ்திதோ துர்க்கம் வநம் அத்யைவ ராகவ
    அக்ரத: தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸகண்டகாந். –ஸ்ரீராமா. அயோத். 27 : 9.

188. நச ஸீதா த்வயா ஹீநா ந சாஹம் அபி ராகவ
     முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

நரகு அழுந்தாதே – பிரிவால் வரும் துன்பத்தை நுகராமல். ‘ஆயின், ‘நரகு’ என்பது, பிரிவுத் துன்பத்தைக் காட்டுமோ?’ எனின், நரகங்களும் இவர்களுக்கு முடிவு செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பது? ‘காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?     

189. ய ஆத்மதா பலதா.– யஜூர் வேதம், காண்டம், 7, 5 : 36.

வலஞ்செய்து நாளும் வலம் கழியாதே – சர்வேஸ்வரன் தன்னை அடைகைக்கு உறுப்பாகத் தந்த மனித சரீரத்தைக் கொண்டு வலிமையை உண்டாக்கிப் பின்னை அவனை அடையாமல் இதர விஷயத்தில் ஈடுபடுகைக்கு உடலாக்கிக் கெடாமல். ஆய மாயவன் வலம் செயும் கோயில் – திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக்கொண்டு 1உலாவினாற்போன்று, பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத்தோடே சஞ்சரிக்கிற தேசம். இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, 2‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, 3‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்வதற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம்.   (வலம் செய்தல் – வலிமையை உண்டாக்குதல்; ‘வலம்’ பலம் என்ற சொல்லின் சிதைவு.  முதற்பொருளில், வலஞ்செயல் – வலம் வருதல்.)

வானோர் வலம் செயும் மாலிருஞ்சோலை – பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிற போது இலக்குமணபரதர்கள் பின் தொடர்ந்தது போன்று, சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே நித்தியசூரிகளும் போந்து வலஞ்செய்கிற மாலிருஞ்சோலை. உகந்தருளின மற்றைத் திவ்விய தேசங்கள் எல்லாம் கிடக்க, திருவேங்கடத்தை 4‘விண்ணோர் வெற்பன்’ (திருவாய். 1. 8 : 3.)என்றார் மேல்; இங்கே இதனை ‘வானோர் மாலிருஞ்சோலை’ என்கிறார்; ‘இதற்கு நினைவு என்?’ எனின், ‘குழந்தைக்குத் தாயினுடைய உறுப்புகள் எல்லாம் கிடக்க முலைக்கண்ணிலே அன்றோ வாய் வைக்கலாகாவது? அப்படியே இங்குத் 5‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையாவடிவு அமைந்த, அன்ன நடைய அணங்கு’ (பெரிய திருமடல், 6,7.)என்கிறபடியே, அவை இரண்டும் முலைகள் ஆகையாலே, அவர்களுக்கேயாகி இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார்

190. ய: அந்யதாஸந்தம் ஆத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
     கிம் தேந நக்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா.–பாரதம் உத்தியோக பர்வம். இது திருதராஷ்டிரனைப் பார்த்து சனத்ஸூஜாதன் கூறுவது.

 சூது என்று களவும் சூதும் செய்யாதே-நமக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று சூதும் களவும் செய்யாமல். 2நூல்கள் ‘செய்தல் ஆகாது’ என்று இவ்விரண்டனையும் விலக்குகின்றமையால், ‘சூதும் களவும் செய்யாதே’ என்கிறார். இனி, களவாவது, 3‘ஆத்துமாவைத் திருடின திருடன்’ என்கிறபடியே, ஆத்துமாவைத் திருடுதல் என்றும்; சூதாவது, ஸாத்விகனாய்ப் பிராமாணிகனாய் இருப்பான் ஒருவன், ‘சர்வேஸ்வரன் இரட்சகன்’ என்று நம்பி இருந்தால், ‘காண்கிற சரீரத்துக்கு அப்பால் ஓர் ஈஸ்வரனாவது என்? ஆத்துமா வாவது என்?’ என்று காணக் காணக் கொள்ளை கொள்ளுதல் என்றும் 4கூறலுமாம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading