Archive for November, 2023

கடபயாதி ஸங்க்யை–

November 29, 2023

கடபயாதி ஸங்க்யை-ங்கறதா, ஒவ்வொரு நம்பருக்கு, எழுத்துக்கள் மூலமா ஸங்கேதம் குடுத்தா. அந்த அக்ஷரங்களை சேத்து, ஒரு வார்த்தையை சொல்லிட்டா….. வெளில பாத்தா…. அது வார்த்தையா இருக்கும்; உள்ளுக்குள்ள அது பல digit-களை கொண்ட ஒரு நம்பரா இருக்கும்!

க, ட, ப, ய-ங்கற எழுத்துக்கள்லேர்ந்து ஆரம்பிச்சு, இப்டி எண்ணிக்கை ஸங்கேதம் குடுத்திருக்கறதால… அதுக்கு ‘கடபயாதி ஸங்க்யை’ன்னு பேர்!

காதி நவ; டாதி நவ; பாதி பஞ்ச; யாத்யஷ்ட’...ன்னு அதுக்கு விதி வகுத்து வெச்சிருக்கா.

காதி நவ-ன்னா….. க-லேர்ந்து ஆரம்பிச்சு…. 9 [நவ] எழுத்துக்கள்;

ஸம்ஸ்க்ருதத்ல, தமிழ் மாதிரி ஒரே ஒரு ‘க’ கெடையாது.

ka, kha, ga, gha-ன்னு நாலு. அப்றம் ‘‘.

அதே மாதிரி, அப்றம் ச; cha, chha, ja, jha !

இப்போ, ‘க’ வரிஸை-ல நாலு, அதோட ‘ங’.

அப்றம், ‘ச’ வரிஸைல நாலு…. ஆக மொத்தம் 4+1+4 = 9

காதி நவ…….. க-லேர்ந்து ஒவ்வொரு எழுத்துக்கும் வரிஸையா நம்பர் குடுக்கணும்.

ka-1, kha-2, ga-3, gha-4, ங-5, cha-6, chha-7, ja-8, jha-9.

ka-லேர்ந்து jha வரைக்கும் ‘காதி நவ’ அதாவுது ஒண்ணுலேர்ந்து ஒம்பது வரை!

அடுத்தது….. ‘டாதி நவ’

ta [ட]-1, tta-2, da-3, dha-4, ண-5

tha [த] -6, thha-7, dha-8, dhha-9

அடுத்தது……. ‘பாதி பஞ்ச

pa-1, pha-2, ba-3, bha-4, ம-5

கடஸீல… ‘யாத்யஷ்ட‘……

யாதி-அஷ்ட அப்டீன்னா….. ய-லேர்ந்து எட்டு எழுத்துக்கள்.

ய-ர-ல-வ--ஷ-ஸ-ஹ… 8

இப்போ இன்னும் புரியற மாதிரி உதாரணம் சொல்றேன்……

ஜய‘ -ங்கற வார்த்தையை எடுத்துக்குவோம். ஐய ஶப்தம் எப்பவுமே….. மங்களமானது, ஆச்சார்யாளோட அது விஸேஷமா பொருந்தறது அப்டீங்கறதோட, அது [ஐய] ஒரு எண்ணிக்கையா…. கடபயாதி ஸங்க்யை-ல சொல்லப்படறதுனால, அதை example-ஆ வெச்சுப்போம்.

ஐய- ங்கறதுல…….

ஜ….. காதி நவ, டாதி நவ….. இதுல எங்க வருது? அதுக்கு என்ன value?ன்னு பாத்தா……

…. அக்ஷரம், காதி நவத்துல, 8-வது நம்பரை குறிக்கறது.

…..ங்கறது, ‘யாத்யஷ்ட’த்துல, மொதல் எழுத்து. அதுனால, 1-ஐ குறிக்கறது.

இப்போ பாத்தா….. ஜ – ய….ன்னா, 8ம்-1ம்-ன்னு வருது.

ஆனா….. இந்த ஸங்க்யை-ல இன்னொரு ரூல் இருக்கு. அதும்படி, எண்களை தலைகீழா…. மாத்தி சொல்லணும். ‘அங்காநாம் வாமதோ கதி:’

அங்க[anka] -எண்ணிக்கை;
வாம – எதிர்ப்பக்கம், reverse

அதாவுது, கடபயாதிப்படி வரும் பல digit எண்ணிக்கையை, தலைகீழா மாத்தி reverse-ல சொல்லணும்.

1-2-3-ன்னு வந்தா….. அதை 3-2-1 அப்டீன்னு திருப்பிப் போடணும்……

பகவத்கீதைல….. த்யானத்துக்கு ஆஸனம் போட்டுண்டு ஜபம் பண்றதை சொல்லும்போது…… ‘சைலாஜிந-குஶோத்தரம்-ன்னு பகவான் சொல்றார். [6-11]

சைலம், சேலம்...ன்னா துணி. சேலை-ங்கற வார்த்தை இதுலேர்ந்துதான் வந்தது.

அஜினம்..ன்னா, தோல். அதாவுது, மான்தோல், புலித்தோல்….

குஶம்…ன்னா, தர்ப்பை.

சைலாஜினகுஶம்-ன்னு அதே order-ல வெச்சிண்டா… ஆஸனமா மொதல்ல பூமில துணியையும், அதுக்கு மேல தோலையும், எல்லாத்துக்கும் மேல தர்ப்பையையும் போட்டுண்டு ஒக்காரணும்-ன்னு அர்த்தமாகும்.

இப்டி ஒக்காந்துண்டா…. என்ன ஆகும்?

தர்ப்பை குத்தி அறுக்கும்! தோல் வேற…. உறுத்தும்! அப்றம் த்யானம் பண்றதுலயா… மனஸு நிக்கும்?

அதுனால, இங்க….. ஆச்சார்யாள் பாஷ்யம் பண்றச்சே, order-ஐ தலைகீழா மாத்தி, பூமிக்கு மேல தர்ப்பையை பரத்தி, அப்றம் அதுக்கு மேல மான்தோலோ, புலித்தோலோ போட்டு, கடஸியா ஒரு வஸ்த்ரத்தை எல்லாத்துக்கும் மேல விரிச்சிண்டு ஒக்காரணும்-ன்னு reverse பண்ணி குடுத்திருக்கார்.

இங்க…. தலைகீழா அர்த்தம் பண்ணவேண்டியிருக்கற மாதிரிதான், அந்த ஸங்க்யை-ல, எண்களை மாத்திப் போடணும்.

அப்டி பண்றச்சே…. ஜய-ன்னா 8-1ன்னு சொன்னது, 1-8-ன்னு reverse ஆகும்!

ஜய’ன்னா….. பதினெட்டு!

18 ஜயப்ரதமான [வெற்றி கொள்ளும்] எண்ணிக்கை! அதுனால அந்த உதாரணம் காட்டினேன்…..

ஆச்சார்யாளோட அவதாரம் கி.மு. 509-ல!

ஒத்தர் பொறக்கற மாஸம், பக்ஷம், திதி எல்லாத்தையும் கடபயாதி ஸங்க்யை-ல சொல்லியே…. அவருக்கு நாம கரணம் செய்யறதா… மலையாளத்துல ஒரு வழக்கம் உண்டு! அங்க…… ராஜாக்களுக்கு அவாளோட ஜன்ம நக்ஷத்ரத்தையே பேரா சொல்றதுண்டு-ன்னு தெரிஞ்சிருக்கலாம்.

இப்போ…. [1960-ல்] இருக்கற மஹாராஜாவோட பேரு…. சித்திரைத் திருநாள். அதாவுது, அவர் சித்ரா நக்ஷத்ரத்துல பொறந்தவர். இவருக்கு முந்தி இருந்தவர், மூலத் திருநாள். அதுக்கும் முன்னாடி, விஶாகத் திருநாள் இருந்தார். ஸ்வாதி திருநாளோட பேர்…. செம்மங்குடி சீனுவால [ஸ்ரீநிவாஸ ஐயர்]…. எல்லாருக்கும் தெரிஞ்சுது! அந்த ராஜா…. ஸ்வாதி நக்ஷத்ரத்துல பொறந்தவர். திருவனந்தபுரம் மஹாராஜாவா இருந்ததோட, ஸாஹித்ய கர்த்தாவாவும் இருந்தார். இதெல்லாம் நக்ஷத்ரத்தை மாத்ரம் அப்டியே சொல்லி, வெச்ச பேரு!

இப்போ….. நா, சொன்னது… ஸங்கேதமா… மாஸம்-பக்ஷம்-திதிகளை வெச்சு, நாம கரணம் பண்றது.

ஆச்சார்யாளுக்கு இந்த மொறைல பேர் வெக்கறதுக்கு, அப்பாவும் இன்னும் ஊர் பெரியவாளுக்கு நெனச்சா.

அவர் பொறந்தது வைகாஸி. அதாவுது, ரெண்டாவது மாஸம்.

அதுல, ஶுக்ல பக்ஷம்.

பக்ஷங்கள் ரெண்டு. ஒண்ணு… ஶுக்லபக்ஷம், ரெண்டாவுது….க்ருஷ்ணபக்ஷம்.

ஆச்சார்யாளோட ஜனன திதி….. பஞ்சமி. அதாவுது…… அஞ்சு!

வைகாஸி மாஸம் 2

ஶுக்லபக்ஷம் 1

திதி 5

ஆக…… 2-1-5

அதுனால, இதையே தலைகீழா பாத்தா…… 5-1-2. இதை கடபயாதி ஸங்க்யைப்படி சொல்லப்பட்ட அக்ஷரங்களை சேத்து, அவருக்கு பேரா.. வெச்சிடணும்-னு நெனச்சா.

2-ம் மாஸம், 1-ம் பக்ஷம், 5-ம் திதி இதோட….. reverse 5-1-2-ன்னு வெச்சிண்டுதானே ‘ஶங்கர’ங்கற பேரை வெச்சதா சொன்னேன்? அது எப்படி-ன்னு பாக்கலாம்……

ஶங்கர‘-ங்கறதுல, மெய்யெழுத்தா வர, ங்-கை நீக்கிடணும். இந்த ஸங்க்யை-ல, மெய்யெழுத்துக்கு எப்பவுமே value கெடையாது.

அப்போ…. ஶ-க-ர…..ங்கற இந்த மூணு எழுத்துத்தான் நிக்கறது.

ஶ.… ‘யாத்யஷ்ட’ ப்ரகாரம் ய-ர-ல-வ-… இதுல 5-ஐ குறிக்கறது. அதுவே பஞ்சமி திதி!

….. ‘காதிநவ’ ப்ரகாரம் மொதலாவுது அக்ஷரம். அதுவே 1-வது பக்ஷமான ஶுக்லபக்ஷம்!

….. ‘யாத்யஷ்ட’ ப்ரகாரம் ய-ர….. 2. அதுவே 2-வது மாஸமான வைகாஸி மாஸம்!

இப்டியொரு ஸமயத்ல போயி பொறந்ததுனால, தான்…. லோக ஶங்கரனா விளங்கப் போறதுக்கு பொருத்தமா பேர் வெப்பா-ன்னு திட்டம் போட்டே….. அவதார தினத்தை ஸ்வாமி அமைச்சிண்டிருக்கான்!

————

க-ட-ப-யா-தி எண் முறை என்றால் என்ன?

எழுத்துக்களுக்கு சில எண்களை ஒதுக்கும் முறையாகும்.

தமிழில் கூட ‘க’ என்பது ஒன்றையும் ‘அ’ என்பது எட்டையும் குறிக்கிறது.

இது போல சம்ஸ்க்ருத எழுத்துக்களுக்கு எண்களை ஒதுக்கும் முறை ‘க-ட-ப-யாதி’ எண் முறை எனப்படுகிறது.

ஏன் இதற்க்கு இப்படி ‘கட முட’ சப்தம்?

தமிழில் 18 மெய் எழுத்துக்களையும்

கசடதபற,

ஙஞணநமன,

யரலவழள

—வல்லினம், மெல்லினம், இடையினம் என்று சொல்லுவோம்

அதில் முதலில் உள்ள வல்லின எழுத்துக்களின் பெயரில் அமைந்தது இது. க, ட , ப , ய  என்ற வரிசைக்கு ‘எண்  1’- என்று சொல்லிக்கொண்டே போகும் . கீழே அட்டவணையில் முழு விவரம் உளது.

கடபயாதி முறையால் நமக்குக் கிடைக்கும் அதிசயச் செய்திகள் என்ன? வரருசி என்பவர் இதை உருவாக்கியதாக ஒரு கருத்து உளது. அவரது காலம் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. சிலர் 2000 ஆண்டு என்றும் சொல்லுவார்கள். இவர் “ழ” சிறப்பு தமிழ் எழுத்தையும் இந்த முறையில் புகுத்தி அதற்கு எண் / நம்பர் கொடுத்துள்ளார். “ழ” என்னும் வளை நாமடி ஒலி (Retroflex) தமிழில் மட்டுமே உண்டு. ஆகையால் இவர் தமிழராகவோ, தென்னிந்தியாவைச் சேர்ந்தவராகவோதான் இருக்க வேண்டும். இதற்கு சில இடங்களில் 3 என்றும் இன்னும் சில இடங்களில் 9 என்ற மதிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அதிசயச் செய்தி

இந்த முறையில் எழுத்தைக் கண்டுபிடிக்க, வலமிருந்து இடமாகப் படிக்க வேண்டும் . இதே முறையில்தான் மக்கள் சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் எழுத்துக்களை எழுதினர். ஒரு காலத்தில் அதை நாம் படிக்க இந்த எண்களும் உதவலாம்.

மூன்றாவது அதிசயச் செய்தி

இது 2500 ஆண்டுக்கும் முந்தைய பழமையுடைத்து.சாம வேதத்திலேயே இப்படிப்பட்ட முறை உளது. அதை பரப்பும் பணியை ஜைமினி என்னும் மகரிஷியிடம் ஒப்படைத்தார் வியாச முனிவர். அந்த ஜைமினிக்கும் வரருசிக்கும் தொடர்பு உண்டு.

நாலாவது அதிசயச் செய்தி

உலகிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்விக்கு சிலபஸ் syllabus  / பாடத்திட்டம் போட்டுக்கொடுத்தவர் வாத்ஸ்யாயன மகரிஷி. அவர் எழுதிய காம சூத்திரம் உலகின் முதல் sex செக்ஸ் புஸ்தகமாகும். அதில் பெண்கள் கற்கவேண்டிய 64 கலைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்தார் ( இந்தப் பட்டியல் இந்த பிளாக்கில் இரு முறை புதிய தவல்களுடன் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது) . இந்த 64 கலைகளில் ஒன்று ரகசியக் குறியீடு. அதாவது சங்கேத மொழியில் (coded language)  செய்தி அனுப்ப எண்களைப் பயன்படுத்துவது . இதையும் அவர் பெண்கள் பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சேர்த்துவிட்டார்.

ஐந்தாவது அதிசயச் செய்தி

எண் ஜோதிடம் என்னும் நியூமெராலஜிக்கும் (numerology) இந்துக்களே வித்திட்டனர் . இதற்கு எடுத்துக்காட்டு மகாபாரதத்தின் மற்றொரு பெயர் ‘ஜய’ . இதை கடபயாதி முறையில் எண் ஆக்கினால்  கிடைப்பது 18. மஹாபாரத யுத்தம் 18 நாள் நடந்ததும், 18 டிவிஷன்/ அக்ஷவ்ணி  (11+7) படைகள் பங்கேற்றதும், மஹாபாரதம் 18 பிரிவுகளாக (பர்வம்) பிரிக்கப்பட்டதும், மாபாரதத்திலுள்ள பகவத்கீதை 18 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டதும் 18-ன் மஹிமையை உணர்த்தும். யாருடைய பெயரின் கூட்டுத் தொகையாவது 18 (நியூமராலஜி) என்று வந்தால், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னரே வெற்றி கிட்டும் என்பது வெளிப்படை.

மற்றோர் அதிசயச் செய்தி தமிழர்களும் ஸம்ஸ்ருத முறையைப் பின்பற்றியதாகும். நீளத்திற்கு ஏற்ப செய்யுட்களை ‘குறு’ந்தொகை, ‘நெடு’ந்தொகை என்று வகைப்படுத்துவது. இதை வேதத்திலும் காண்கிறோம் .

அதே போல 4, 40, 400, 4000 என்று செய்யுட்கள் செய்தது தமிழர்களின் புதுமை.

சம்ஸ்க்ருதம் போலவே தமிழர்களும் பஞ்சகம் (5 செய்யுள்), அஷ்டகம் (8), பதிகம்/தசகம் (10), சதகம் (100) சஹஸ்ரம் (1000) என்று நூல் செய்தனர்.

அகனானூறு புஸ்தகத்தைத் தொகுத்தவர் ஒவ்வொரு திணைக்கும் எண்வரியாக பாடல்களை ஒதுக்கியது புதுமையிலும் புதுமை (இணைப்பைக் காண்க).

பெரிய எண்களை குறிப்பிடுவதற்கு தமிழர்கள் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே எடுத்துக்கொண்டனர் . யஜுர் வேதத்திலேயே இப்படி பெரிய எண்கள் வந்து விடுவதால் உலகில் முதல் முதலில் பெரிய எண் களை உருவாக்கிய பெருமை வேத கால இந்துக்களுக்குக் கிடைத்துவிடுகிறது. சங்கம், பதுமம், சமுத்திரம், ஆயிரம் முதலிய சம்ஸ்க்ருத எண்கள் இதற்கு எடுத்துக் காட்டு  (ஆயிரம் என்பது சஹஸ்ரம் என்பதன் மருவு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை)

டெசிமல் முறையை  DECIMAL SYSTEM  (10, 100, 1000,100,000) இந்துக்கள் உலகிற்கு கற்பித்ததாலும் பூஜ்யம் ZERO என்னும் எண்ணைக் கண்டுபிடித்ததாலும் இந்துக்கள் உலக விஞ்ஞான முன்னேற்றத்துக்கு வித்திட்டனர். இது நிகழ்ந்திராவிடில் இன்று நமக்கு கம்பியூட்டர் , இன்டெர்நெட் , விண்கோள், ராக்கெட் , விண்வெளிப் பயணம் ஆகியன கிடைத்திரா.

ஒரு சில எடுத்துக் காட்டுகள்

ஜய =18 (ஜ =8; ய= 1);

18 என்று ஒருவர் எழுதினால் அதை வலமிருந்து இடமாகப் படித்தால் ஜய என்று படிப்பர்.

ஏனைய எழுத்துக்களுக்கு உள்ள எண்களை  இணைப்பில் காண்க ‘.ஜய ‘ என்றால் வெற்றி.

இது தவிர எல்லோருக்கும் தெரிந்த வேதத்திலுள்ள கடவுளர் எண்ணிக்கையையும் பயன்படுத்துவர்

(ஏகாதச) ருத்ரர் – ஆகையால் ருத்ர என்று சொன்னாலேயே 11 என்ற எண்ணைத் தான் குறிக்கும்.

(அஷ்ட) வசு =8, (த்வாதஸ ) ஆதித்ய =12,

கடபயாதி முறையில் குழப்பத்தைத் தவிர்க்க சில விதிகளையும் இயற்றினார்.

பொதுவான தகவல்

சம்ஸ்க்ருதத்தில் 4 க, 4 ச, 4 த, , 4 ப உண்டு. தமிழில் 3 ல, ள ,ழ இருப்பது போல ஸம்ஸ்க்ருத்ஸத்தில் ஸ , ஷ ச உண்டு.

க- ட -ப- ய = 1

க்க -த் த- ப்ப – ர = 2

 

உயிர் எழுத்துக்கள் அனைத்தும் = 0

CONSONANTS  (மெய் எழுத்துக்கள் )           NUMERALS

Ka ta pa ya                               1

Kha tha pha ra                          2

Ga da ba la                               3

Gha dha bha va                        4

Na na ma sa                              5

Ca  ta         sa                               6

Cha  tha      sa                              7

Ja   da           ha                             8

Jha        dha      la                        9

Na   na                                         0

Vowels                                         0

(Sanskrit has three different ‘s’ and two different ‘n’ sounds and two different ‘l’ sounds)

எழுத்துக்களின்  முன்னால்  என்ன இருக்கிறது பின்னால் என்ன இருக்கிறது என்பது  தொடர்பான விதிகளையும் அறிந்து கொள்ளுவன கொண்டு, தள்ளுவன  தள்ள வேண்டும்.

மேளகர்த்தா ராகங்கள் என்று கேள்விபட்டிருக்கலாம். ஸம்பூர்ணமாக ஸப்த ஸ்வரங்களையும் ஆரோஹண அவரோஹணங்களில் கொண்ட 72 ராகங்களுக்கு அப்படிப் பேர். அடுத்தடுத்த ராகங்களுக்கிடையில் ஒரே ஒரு ஸ்வரம் வித்யாஸப்படும் விதத்தில் அந்த 72 ராகங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறது. வேங்கடமகி என்ற பெரியவர் அப்படி வரிசைபடுத்தினார். அவர் யாரென்றால் தஞ்சாவூர் நாயக்ராஜ்யம் ஏற்பட மூல புருஷராயிருந்தவரும், அநேக தர்மங்களையும் மஹாதானங்களையும் செய்தவரும், அத்வைத வித்யாசார்யர்களில் ஒருவருமான கோவிந்த தீக்ஷிதர் என்பவரின் புத்ரர்.

மேளகர்த்தா ராகங்கள் 72-ல் எந்த ராகம் எத்தனாவது என்று கண்டுபிடிக்க வசதியாக அந்த ராகங்களின் பெயர் ஆரம்பத்தில் கடபயாதி ஸங்க்யைப்படிதான் இரண்டு எழுத்துக்கள் இருக்கும். இப்படி ஸரியாய் வரவேண்டுமென்றே சங்கராபரணம், கல்யாணி என்பது போலுள்ள பெயர்களை ‘தீர’ சங்கராபரணம், ‘மேச’ கல்யாணி என்றெல்லாம் முதலில் இரண்டு எழுத்துச் சேர்த்துச் சொல்லியிருக்கும். ‘தீ-ர’ என்பது சங்கராபரணம் எத்தனாவது மேளமோ அந்த நம்பரைக் குறிப்பிடும். ‘மே-ச’ என்பது கல்யாணியின் மேள நம்பரைக் குறிப்பிடும்2.

தீ (dhhee) ர” என்பதில் “தீ” என்பது “த” dhha-வின் அடியாக வருவது. Dhha என்பது ‘டாதி நவ’ வில் 9-ஐக் குறிக்கும். ‘ர’ என்பது ‘யாத்யஷ்ட’ப்படி 2. எனவே தீ-ர என்பது 9-2, தலைகீழாக்கினால் 29. சங்கராபரணம் 29-வது மேளம்.
‘மேச’ என்பதில் ‘மே’ என்பதில் ‘ம’வில் பிறப்பது. ‘ம’ என்பது ‘பாதிபஞ்ச’வில் 5. ‘ச’ (cha) என்பது ‘காதி நவ’வில் 6. மே-ச என்பது 5-6. முன்பின்னாக மாற்ற 65 அதுவே கல்யாணியின் மேள எண்.

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மகர நெடுங் குழைக்காதர்‌ பிள்ளைத் தமிழ்‌ பாமாலை–ஸ்ரீ திருமேனி கவிராசர்‌ –முத்தப்பருவம்‌–வாரானைப்‌ பருவம்‌ –அம்புலிப்‌ பருவம்‌ –சிற்றில்‌ பருவம்‌ –சிறுபறைப்‌ பருவம்‌ -சிறுதேர்ப்‌ பருவம்‌ —

November 29, 2023

சொற்றநான்‌ மறைபுக்‌ கிருக்குமிட மாதலாற்‌
சுரிசங்‌ கிடம்புரிவதால்‌
துய்யமலர்‌ மாளிகைச்‌ செல்விபே ரமுதந்‌
துளிக்குமென்‌ நின்புறுதலான்‌
மற்றுலகின்‌ வாழ்பல்‌ லுயிர்க்கிரங்‌ குஞ்சத்திய
வாய்மைகுடி கொண்டுறைதலான்‌
மங்கலப்‌ புனிதமாஞ்‌ சகலமுந்‌ திருவுள
மகிழ்த்திரங்‌ கிச்சிறிதுநீ
முற்றுமதி யோடர வறுகெருக்‌ கம்பூவும்‌
மொய்க்குஞ்‌ செழுங்கொன்றையும்‌
மூரித்‌ திரைப்பாய்‌ சுருட்டித்‌ தருங்கங்கை
முதுநீரும்‌ விரவுசோதிக்‌
கற்றைவார்‌ சடைமுடிச்‌ சிவனுமய ஸனுந்தொழக்‌
கனிவாயின்‌ முத்தமருளே
காவுரூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.–45-

சொற்ற நான் மறை புக்கு இருக்கும்‌ இடம்‌ ஆதலால்‌ .-சிறப்பித்துப் பேசப்படுகின்ற நான்குவேதங்களும்‌ தங்கியிருக்கும்‌ இடம்‌ நுமது கனிவாய்‌ ஆதலாலும்‌,
சுரி சங்கு இடம்‌ ‘ புரிவதால்‌ – சுழிந்த பாஞ்சன்னியம்‌ என்னும்‌ வலம்புரிச்சங்கு (நுமதுவாயிடத்து) விரும்பி இடங்கொண்டு சுவைத்தலாலும்‌,
துய்ய மலர்‌ மாளிகைச்‌ செல்வி – பரிசுத்தமான செந்தாமரை வீட்டில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இலக்குமிதேவி,
பேரமுதம்‌ துளிக்கும்‌ என்று இன்‌ புறுதலால்‌ – (நுமது வாயினிடத்து) மிக்க அதரவமுதம்‌ ஊற்றெடுக்கும்‌ என்று மகிழ்வதனாலும்‌,
மற்று – மேலும்‌,
உலகின்‌ வாழ்‌ பல்‌ உயிர்க்கு – நிலவுலகத்தில்‌ வாழ்கின்ற பல ஜீவராசிகளுக்கும்‌,
இரங்கும்‌ – கருணை கொண்டு இரக்‌கப் படும்‌,
சத்திய வாய்மை குடி கொண்டு உறைதலால்‌ – உண்மையான சத்தியம்‌ (நுமது வாயினிடத்து) நிலைபெறப்‌ பயிலுவதாலும்‌,
சகலமும்‌ மங்கலப்‌ புனிதமாம்‌ – அனைத்தும்‌ மங்களகரமான பவித்திர முடையனவாகும்‌
(அத்தகைய சிறப்புக்களையுடைய) நீ– , திருவுளம்‌ மகிழ்ந்து – மனமகிழ்ச்சியோடு,
சிறிது இரங்கி – கொஞ்சம்‌(இந்த எளியனுக்கு) இரக்கமுற்று, (கனி வாயின்‌ முத்தம்‌ அருள்‌ எனமேலியையும்‌) .

(இளி), முற்று மதியோடு – வளர்ந்துவரும்‌ பிறைச்‌ சந்திரறோடு,
அரவு அறுகு எருக்கம்பூவும்‌ – பாம்பும்‌ அறுகம்புல்லும்‌ எருக்கம்பூவும்‌,
மொய்க்கும்‌ செழுங்கொன்றையும்‌ – அடர்ந்து வளவிய கொன்றைப்பூவும்‌,
மூரி – வலிமையையுடைய,
திரைப்பாய்‌ -அலைகளாகிய பாயினை,
சுருட்டித்தரும்‌ – சுருட்டி வழங்கும்‌ (அலைகளாவீசும்‌ என்றபடி),
கங்கை முது நீரும்‌ .- கங்கையினுடையதொன்றுதொட்டுப்‌ பெருகும்‌ நீரும்‌,
விரவு – சேர்ந்து (அளிக்கின்ற)
சோதி . பேரொளியினையுடைய,
கற்றை வார்‌ சடை முடி – தொகுதிப்‌பட்ட நீண்டசுடைமுடியையுடைய,
சிவனும்‌ – சிவபெருமானும்‌,
அயனும்‌ – பிரமதேவனும்‌,
தொழ – வணங்கி வழிபட,
காவு சூழ்‌ -சோலைகள்‌ சூழ்ந்த,
தென்திருப்பேரை – தென்திருப்பேரை நகரில்‌ எழுந்தருளியுள்ள,
ஆழிநீர்‌ வண்ண !- கடல்நீர்போல்‌ நீலநிற வண்ணனே
கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ – கொவ்வை கனிபோற்‌ சிவந்த வாயிடத்து முத்தம்‌ கொடுப்பாயாக ;
நின்‌ – உன்னுடைய, கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌-

தழைமடற்‌ பச்சைப்‌ பசும்பூக மணிமிடறு
த௲ளையவிழ்க்‌ கும்பாளைவாய்‌
குருமுத்த மும்பச்‌ செனக்கிரண மடகுமுது
தாற்றிளங்‌ கதலிவாழை
உழைமுத்து முடலிழுக்‌ குண்டுரியு மென்கரும்‌ :
பொளிர்முத்து மாலைவாயிட்‌
‘டஇடனெருக்‌ கும்பொழுது கணுவினில்‌ வெடித்துதிரும்‌
மூத்தும்வான்‌ முகடுதூங்கும்‌
மழைமுத்த முந்துளி படும்போது செவ்வுக்கு
வாராத வடிவுதரும்‌
வளர்புண்ட ரீகப்‌ பொகுட்டுமுத்‌ துஞ்சிறைய
வண்டுகால்‌ கொடுதுவைக்குங்‌
கழைமுத்த முங்கதிர்‌ வெதுப்புண்டு வீனுமொரு
கதிர்முத்து நிகரல்லவே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.’–46

தழைமடல்‌ பச்சைப்‌ பசும்‌ பூகம்‌ – தழைந்த மடலைக்‌
கொண்ட பசுநிறம்‌ மிக்குப்‌ பொருந்திய கமுகின்‌,
மணி மிடறு – அழ கிய கழுத்து,
தளை அவிழ்க்கும்‌ – குலையின்கட்டு விரிக்கும்‌,
பாளை வாய்‌ தரு முத்தமும்‌ -பாளையிடத்து உண்டாகும்‌ முத்தும்‌,
பச்செனக்‌கிரணம்‌ அட .- பளிச்செனச்‌ சந்திரகிரணங்கள்‌ பட,
குமுது (உழைமுத்தும்‌) – ஆம்பலிடத்துண்டாகும்‌ முத்தும்‌,
இளங்கதலஸி வாழைதாற்று உழை முத்தும்‌ . இளைய வாழைக்குலையினிடத்து உண்‌டாகும்‌ முத்தும்‌,
உடல்‌ இழுக்குண்டு உரியும்‌ மென்கரும்பு ஒளிர்‌ முத்தும்‌ – (தன்‌) தண்டுப்பகுதிகள்‌ தளர்வுற்று உரிந்து “போகும்‌ மெல்லியகரும்பு வெளிவிடும்‌ ஒளிவிளங்கும்‌ முத்தும்‌,
ஆலைவாய்‌ இட்டு உடல்‌ நெருக்கும்‌ பொழுது –ஆலையிலிட்டுத்தண்டுகளை“நெருக்கிப்பிழியும்போது,
கணுவினில்‌ வெடித்து உதிரும்‌ முத்தும்‌ -(அதன்‌) கணுக்களினின்று வெடித்துப்புறமேயுதிரும்‌ முத்தும்‌,
வான்‌ முகடு தூங்கும்‌ மழை முத்தமும்‌ – ஆகாயத்தின்‌ உச்சியில்‌ தவழும்‌ மேகத்தினின்று உண்டாகும்‌ முத்தும்‌,
துளி படும்போது .. மழைத்‌ துளி நேரே விழும்போது,
செவ்வுக்கு வாராத வடிவு தரும்‌ – அளவுக்குட்படாத வடிவத்தைக்கொடுக்கும்படி,
வளர்‌ – வளர்கின்ற,
புண்டரீகப்‌ பொகுட்டு முத்தும்‌ – தாமரையின்‌ கொட்டையில்‌ தோன்றுகின்ற முத்தும்‌,
சிறைய வண்டு – சிறகுகளைக்கொண்ட வண்டுகள்‌,
கால்கொடு துவைக்கும்‌ – தமது ஆறுகால்களைக்‌கொண்டு மிதிக்கின்ற
கழை முத்தமும்‌ – மூங்கிலில்‌ உண்டாகும்‌ முத்தும்‌,
கதிர்‌ வெதுப்புண்டு ஈனும்‌ ஒரு கதிர்‌ முத்தும்‌ – சூரிய னால்‌ வெம்மையாகி அதணொளியுண்டாக்கும்‌ பிரகாசம்பொருந்தியதோர்‌ முத்தும்‌,
நிகரல்ல – உன்வாய்முத்துக்கு ஒப்பாகாது
(ஆகவே) காவு சூழ்‌ தென்பேரை ஆழிநீர்‌ வண்ண –, நின்‌ கனி வாயின்‌ முத்தம்‌ அருள்‌

கமுகு, சந்திரன்‌, வாழை, கரும்பு, மேகம்‌, தாமரை, மூங்கில்‌, சூரியன்‌ என்னும்‌ எட்டு இடங்களிற்பிறக்கின்ற முத்துக்களும்‌ உன்‌
கனிவாயினின்று வழங்கும்‌ முத்துக்கு (முத்தத்துக்கு) நிகரில்லை யென்றார்‌.

முத்துப்‌ பிறக்கும்‌ இடங்கள்‌: இருபது என்பர்‌. இதனை **தந்தி வராகமருப்பிப்பி பூகந்தனிக்கதலி, நந்து சலஞ்சலமீன்றலைகொக்கு
ஒளினன்மின்னார்‌, கந்தரஞ்சாலி கழைக்கன்னலாவின்பல்‌ கட்செவி கார்‌, இந்துவுடும்புகரா முத்தமினும்‌ இருபதுமே’” என்றதனாலறிக.

ஆம்பல்‌ சந்திரனைக்‌ கண்டால்‌ மலரும்பூவா தலின்‌ அதன்மூலம்‌ முத்தீனும்‌ எனக்‌ கொள்க.

முனியுமிள வலுமுடன்‌ வரத்தன்‌ நிருத்தாளின்‌
மூளரித்‌ துகட்கருங்கல்‌
முனியிட்ட சாபந்‌ தவிர்த்துமூன்‌ ஸனுூருவெய்த
முதுகருணை யோடனலஸித்துச்‌
சனகன்மிதி லாபுரிச்‌ சிலைவளைத்‌ துச்சீதை
தனைமணம்‌ புணர்தண்டுழாய்ச்‌
சக்கரா யுதக்கடவுள்‌ ! குலநந்தீன முத்தொடலை
தத்துந்‌ தடம்பொருநையான்‌ !
இனியசதுர்‌ மாமறைக்‌ கொருமுதல்வன்‌ !
வருணன்வநீ
தெக்கால மும்பரவுவோன்‌ !
இலகுகொடி மணிமாட வழுதிவள pre ! spr
றெண்மரொடும்‌ விளையாடுமால்‌ !
கனியுமமு தும்பாகு மூறிக்‌ கலந்தசொற்‌
-கனிவாயின்‌ முத்தமருளே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண ! நின்‌
கனிவாயிண்‌ முத்தமருளே.--47-

முனியும்‌-விசுவாமித்திரமுனிவனும்‌,
இளவலும்‌ – தம்பியாகிய இலக்குமணனும்‌,
உடன்‌ வர – கூட வர,
தன்‌ முளரித்திருத்‌தாளின்‌ துகள்‌ – தனது தாமரைமலர்போன்ற அழகிய பாதங்களினின்று எழுந்த புழுதிப்பொடி,
கருங்கல்‌-கரியகல்லுருவாய்‌ இருந்த அகலிகைக்கு,
முனியிட்ட சாபம்‌ தவிர்த்து – (அவள்‌ கணவனாகிய) கெளதமமுனிவரிட்ட சாபத்தை நீக்கி,
முன்‌ உரு எய்த – முன்னாலே யிருந்த பெண்‌ வடிவத்தையே அடையும்படி,
முதுகருணையோடு அளித்து – மிக்க அருளோடு வழங்கி,
(பின்னர்‌) சனகன்‌ மிதிலாபுரிச்‌ சிலை வளைத்து –ஜனகமகாராஜனின்‌ [தலைநகராகிய] மிதிலை
நகரில்‌ [கந்யா சுல்கமாக வைத்த[ வில்லை வளைத்து,
சீதைதனை மணம்‌ புணர்‌ – சீதாதேவியைத்‌ திருமணஞ்செய்து கொண்ட,
தண்‌ துழாய்‌ சக்கராயுதக்கடவுள்‌ ! – குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையைத்‌ தரித்த சக்கரப்படையையுடைய கடவுளாகிய [திருமாலின்‌ அவதார மான ] இராமபிரானே !
குல நந்து ஈன .- சிறந்த சங்குப்பூச்சிகள்‌ பெற்ற,
முத்தொடு – முத்துக்களோடு,
அலைதத்தும்‌ – அலைகள்‌ தத்திப்பாய்கின்ற
தடம்‌ பொருநையான்‌ – அகலமான தாமிரபரணி நதியையுடையவனே |
இனிய சதுர்மா மறைக்கு ஒரு முதல்வன்‌ -(காதுக்கு) இனிமையான நான்கு சிறந்த வேதங்களுக்கு ஏற்ற ஒப்‌பற்ற முதற்கடவுளே
வருணன்‌ வந்து எக்காலமும்‌ பரவுவோன்‌ -வருணபகவான்‌ வந்து எப்போதும்‌ போற்றித்துதிக்கும்படியுள்ளவனே !
இலகு கொடி மணி மாடம்‌ – விளங்குகின்ற கொடிகள்‌ -நாட்‌டிய அழகிய மாடங்களைாக்கொண்ட,
வழுதி வள நாடன்‌ | -பாண்டிய வள நாட்டுக்குத்தலைவனே |
நூற்றெண்மரொடும்‌ விளையாடும்‌ மால்‌ ! – நூற்றெட்டுப்‌ பக்தர்களோடும்‌ திருவிளையாடல்புரியும்‌ திருமாலே /
கனியும்‌ அமுதும்‌ பாகும்‌ ஊறி கலந்த சொல்‌ – பழமும்‌ பாலும்‌ வெல்லப்பாகும்‌ சேர்ந்து ஊறித்தம்முள்‌ கலப்புற்றுச்சுவைக்கும்‌ சொற்களைப்பேசும்‌,
கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ — ; காவு சூழ்தென்‌பேரை ஆழிநீர்‌ வண்ண –, நின்‌ கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌ –

*குலநந்து” என்றதால்‌ அவனது பாஞ்சசன்னியம்‌ போன்ற சங்கு என்னவுமாம்‌. -இனி, குலம்‌ – கூட்டம்‌ எனினுமாம்‌.

——

பொருதிரை சுரூட்டுமணி மகரசல ராசிதரு
புதுமுத்த முங்கைதொடேம்‌
புலவுநா றிச்சுற வெறிந்துடல முவரிப்‌
புனற்பங்க மூடெழுதலாற்‌
பருகமது ரித்தபா கூற்றிருந்‌ தொழுகும்‌
பசுங்கரும்‌ பீன்றமுத்தும்‌
பலமொழிக்‌ கவடுபடு மாதலா லதனையும்‌
படுபழி யறிந்துவேண் டேம்‌
இருநிலத்‌ துச்சிவத்துக்‌ கண்டமுங்‌ கறுப்‌
பென்றுவேய்‌ முத்தந்தொடேம்‌
இனிமேலு நினதுகனி வாய்முத்தி னுக்குவமை
ஏதெடுத்‌ துக்கூறுவேன்‌
கருதுமுது நான்மறைக்‌ கொருமுதல்வ னே !.செழுங்‌
கனிவாயின்‌ முத்தமருளே
காவுசூழ்‌ தென்பேரை யாழிநீர்‌ வண்ண ! நின்‌
கனிவாயின்‌ முத்தமருளே.–48-

புலவு நாறி- புலால்‌ நாற்றம்‌ வீசி,
சுறவு எறிந்து -சுருமீனினால்‌. ஒதுக்கப்பட்டு,
உடலம்‌ – அதன்‌ உடம்பு,
உவரிப்‌புனல்‌ பங்கம்‌ ஊடு எழுதலால்‌ – கடல்நீரின்‌ சேற்றினின்று தோன்றி யெழுதலால்‌,
பொரு திரை சுருட்டும்‌ அணி மகர சலராசி – மோதுகின்ற அலைகளைச்‌ சுருளவரச்செய்யும்‌ அழகியமீன்களையுடைய கடலானது,
தரு – கொடுக்கின்ற,
புது முத்தமும்‌ …. புதிய முத்துக்களையும்‌,
கை தொடேம்‌ – கையால்‌ தொடமாட்டோம்‌ :
பருக . உண்பதற்கு,
மதுரித்த – ருசியாகச்‌ செய்த,
பாகு – வெல்லப்பாகு,
ஊற்றிருந்து ஒழுகும்‌ – உள்ளே ஊறியிருந்து பெருகும்‌,
பசும்‌ கரும்பு ஈன்ற முத்தும்‌ – வளமுள்ள கரும்பு பெற்ற முத்தும்‌,
பல மொழி – பல கணுக்‌களிலிருந்து,
கவடுபடும்‌ ஆதலால்‌ .பிரிவுபட்டுச்‌ சிதறுகின்றனவாதலால்‌,
அதனையும்‌ – அந்தக்‌ கரும்புஎன்ற முத்தினையும்‌,
படுபழிஅறிந்து – அது உண்டாகும்‌ பிறப்பிடத்தின்‌ இழிவு தெரிந்து,
வேண்‌டேம்‌ – விரும்பமாட்டோம்‌ :
(இனி) இரு நிலத்து – தாங்கள்‌ இருக்‌கும்‌ தரையில்‌,
சிவத்து . (அடிப்பக்கம்‌) சிவந்து,
கண்டமும்‌ கறுப்புஎன்று – கழுத்தும்‌ (மேல்பாகமும்‌) கறுப்பு நிறம்‌ பொருந்தியதென்‌ று,
வேய்‌ முத்தம்‌ – மூங்கிலீன்ற முத்துக்களை,
தொடேம்‌ – (கையினாலும்‌)தொடமாட்டோம்‌ ;
இனி மேலும்‌ – இவைகளுக்கு மேலே,
நினது கனிவாய்‌ முத்தினுக்கு . உன்னுடைய கோவைக்கனிபோற்‌ சிவந்த வாயினாற்‌ கொடுக்கும்‌ முத்தத்திற்கு,
உவமை ஏது எடுத்துக்‌ கூறுவேன்‌ – ஒப்பாகசொல்லுதற்கு எதனைச் சிறப்புறவெடுத்துக்‌ கூறமாட்‌டுவேன்‌ ; (எதுவும்‌ இல்லையே) :
(ஆகவே) கருதும்‌ முது நான்‌மறைக்கு ஒரு முதல்வனே -[யாவராலும்‌] சிறப்பாக நினைக்கப்‌படுகின்ற பழைய நான்குவேதங்களுக்கு ஏற்ற ஒப்பற்ற முதற்‌கடவுளே !
செழும்‌ கனிவாயின்‌ . பழுத்துச்‌ சுவைமுதிர்ந்தபழம்‌ போன்றவாயினால்‌,
முத்தம்‌ அருள்‌ –; காவு சூழ்‌ தென்பேரை ஆழி நீர்‌ வண்ண –, நின்‌ கனிவாயின்‌ முத்தம்‌ அருள்‌

—-

உலைவளைக்‌ குங்கொழுங்‌ கனல்வாய்‌ துருத்திவைத்‌
தூதவெம்‌ பொறிசிந்தவெந்‌
துருகுங்‌ கருங்கல்‌ லுருக்கொ டிரும்புவைத்‌
தொன்றா யடித்துநீட்டித்‌
தலைமடுத்‌ ததைமுனைப்‌ படுத்திக்‌ குணக்கறத்‌
தட்டியர மிட்டராவிச்‌
சமைந்தொப்ப மிட்டுக்‌ கடைந்தவடி வேல்டொரு
தடங்கட்‌ செழுங்குமுதவாய்‌
மலைவளைக்‌ குஞ்செழுங்‌ களபகுங்‌ குமமுலை
மடந்தைதெய்‌ வீகமோக
மடமயிற்‌ சீதைப்‌ பிராட்டியை மணம்புணர
வளமருவு மிதிலாபுரிச்‌
சிலைவளைக்‌ கும்பசுந்‌ தண்டுமாய்‌ மேகமே !
திருவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–49-

உலை வளைக்கும்‌ கொழுங்கனல்‌ வாய்‌ – கொல்லனது உலை சூழஎரியும்‌ பெருத்த நெருப்பினிடத்து,
துருத்திவைத்து – உலைத்துருத்திப்பையை வைத்து,
ஊத – (அதன்‌ வாயினால்‌) ஊது,

வெம்‌ பொறி சிந்த – வெப்பமான நெருப்புப்பொறி சிதற,
வெந்து உருகும்‌ கருங்கல்‌ உருக்கொடு – கொதிப்படைந்து உருகுகின்ற கருங்கல்லில்‌ [உளியாற்‌ செய்த] சித்திரவேலையோடு,
இரும்பு வைத்து ஒன்றாய்‌ அடித்து – எஃகிரும்பினை வைத்து [இணையும்‌ படி] ஒரு சேர ஒன்ற (சம்மட்டியால்‌) அடித்து,
நீட்டி – நீளச்‌ செய்து,
தலை மடுத்து – தலைசேர்த்து,
அதை முனைப்‌ படுத்தி- அதனைக்‌ கூராக முனையுண்டாக்கி,
குணக்கு அற. கோணல்‌ நீங்க,
தட்டி – சுத்தியால்‌ தட்டி,
அரமிட்டு அராவி – அரத்தினாலே உரசி,
சமைந்து – பொருத்தமுறச்செய்து,
ஒப்பம்‌ இட்டு – துலங்கவைத்து,
கடைந்த – நன்குமுடிவுறச்செய்த,
வடிவேல்‌ – கூரிய வேலாயுதத்தை,
பொரு – ஒத்திருக்கின்ற,
தட கண்‌ – விசாலமான பெரிய கண்களையும்‌,
செழுங்‌ குமுத வாய்‌ – வளமுள்ள ஆம்பல்‌ மலர்‌ போன்ற வாயினையும்‌,
மலைவளைக்கும்‌ – மலையைப்‌ போல்‌ கனத்துப்பருத்த,
செழும்‌ களபம்‌ குங்குமம்‌ முலை – இனிமையான சந்தனக் கலவையும்‌ குங்குமக்‌ குழம்பும்‌ பூசிய முலையினையும்‌உடைய,
மடந்தை . பெண்ணாகிய,
தெய்வீக மோக மடமயில்‌ சீதை பிராட்‌டியை – தெய்வத் தன்மை பொருந்திய (கண்டார்க்கு ஆசையை விளைவிக்கின்ற மடப்பம் பொருந்திய மயில் போன்ற சாயலினை யுடைய சீதாப் பிராட்டியை,
மணம்‌ புணர – திருமணஞ்செய்து கொள்வதற்காக,
வளம்‌ மருவு மிதிலாபுரி – வளப்பம்‌ பொருந்திய மிதிலை மாநகரில்‌,
சிலை வளைக்கும்‌ – (கந்யாசுல்கமாகவைத்த) வில்லை வளைத்த,
பசும்‌ தண்‌ துழாய்‌ மேகமே ! – பச்சையாயுள்ள குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையையணிந்த மேகம்‌ போன்றவனே /(இராமாவதாரம்‌ செய்த திருமாலே!)
திருவாயின்‌ – (உனது) அழகிய வாயினது,
முத்தம்‌ அருள்‌–;
தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்‌காத ! . தென்திருப்பேரை நகரில்‌ எழுந்தருளியிருக்கின்ற– நமது மகரகுழைக்காதராம்‌ இறைவனே |!
நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌–;

——–

பம்புதிரை வாரிதி வடிம்பலம்‌ பத்துளி
பறுங்கன முகடுகோத்துப்‌
பரக்கும்‌ படிக்குமுன்‌ பெய்தகன மாரியிற்‌
பதறியா னிரைகெடாமல்‌
தம்பமற்‌ றிடையர்மடி யாதேழு நாளுமுது
தடவரை யெடுத்தேந்துமென்‌
தாமரைச்‌ செங்கைத்‌ தடங்குரிசி லே / சங்கு
சக்கரா யுதக்கடவுளே !
கம்பமத மால்யானை மூலமென்‌ றோதவொரு
கருடன்‌ பிடர்த்தலைவருங்‌
காராழி மணிவண்ண ! பேராயி ரம்பெற்ற
கர௫ணாக ரக்குரிசிலே !
செம்பவள முங்குமுத முங்கவிரு மொத்தநின்‌
திரூுவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–50-

பம்பு திரை வாரிதி வடிம்பு அலம்ப -தத்திப்‌ பாய்‌கின்ற அலைகளையுடைய கடல்‌ தன்‌ திருவடிகளைவிளக்கும்படி இராமபிரானாய்‌ நின்று, (
பின்‌) துளிபடும்‌ கனம்‌ – மழையையுண்டாக்கும்‌ மேகம்‌,
முகடு கோத்து பரக்கும்‌ படிக்கு – ஆகாச வுச்சியிற்‌ பின்னிப்‌
பரவிநிற்கும்படிக்கு,
முன்‌ பெய்த கன்‌ மாரியில்‌ – முற்பட்டுப்‌ பெய்த சோனைமழையில்‌,
ஆனிரை பதறி கெடாமல்‌ – பசுக்கூட்டங்கள்‌ நடுக்கமடைந்து அழிந்து போகாமல்‌,
தம்பம்‌ அற்று – பற்றுக்கோடு இன்றி,
இடையர்‌ – [கோகுலத்து ஆய்ப்பாடி] ஆயர்‌,
மடியாது -இறந்து போகாமல்‌,
ஏழு நாளும்‌-(இந்திரன்‌ மழையைப்‌ பெய்வித்த) ஏழுநாட்களிலும்‌,
முது தட வரை எடுத்து ஏந்தும்‌ . பழைய பெரிய கோவர்த்தன கிரியைக்‌ குடையாகத்தூக்கியெடுத்து விரலில்‌ ஏந்தி நின்ற,
மெல்‌ தாமரை செங்கைத்தடம்‌ குரிசிலே ! – மென்மையான செந்தாமரை போற்‌ சிவந்த கைத்தலங்களையுடைய சிறந்த கிருஷ்ணை பகவானே !
சங்கு சக்கராயுதக்கடவுளே ! – சங்கு சக்கரங்களை ஆயுதமாக ஏந்தியுள்ள இறைவனாகிய திருமாலே !
கம்ப மத மால்‌ யானை – கட்டுத்தறியிற்‌ கட்டப்படுகின்ற மதம்‌ பிடித்த பெரிய கஜேந்திரனென்னும்‌ யானை [முதலைவாயினிலகப்‌பட்டு]
மூலம்‌! என்று ஓத . ஆதிமூலமே ! என்று அலறிக்‌ கூப்பிட,
ஒரு கருடன்‌ பிடர்த்தலை வரும்‌ – ஒப்பற்ற கருடனின்‌ கழுத்தின்‌ மேலமர்ந்து விரைந்து வந்த,
கார்‌ ஆழி மணிவண்ண ! — மேகத்‌ தையும்‌ கடலினீரையும்‌ கருமணியையும்‌ ஒத்த சியாமளரூபனே !
பேர்‌ ஆயிரம்‌ பெற்ற கருணாகரக்‌ குரிசிலே ! –சகஸ்ரநாமங்களையும்‌ கொண்ட தயைக்கிருப்பிடமாகிச்‌ சிறந்தோனே
செம்‌ பவளமும்‌ குமுதமும்‌ கவிரும்‌ ஒத்த – சிவந்த பவளத்‌
தையும்‌ செவ்வல்லி மலரையும்‌ முண்முறுக்கம்‌ பூவையும்‌ஒத்திருக்‌கின்ற,
நின்திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌ — ; தென்திருப்பேரை வருநம்‌ குழைக்காத!–, நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌

இந்திரனுக்கென்று ஆயர்கள்‌ எடுத்த எழில்விழவில்‌ பழநடைசெய்‌, மந்திரவிதியில்‌ பூசனை பெறாது மழைபொழிந்திடத்‌ தளர்ந்து ஆயர்‌, எந்தம்மோடு இனவாநிரை தளராமல்‌ எம்பெருமான்‌ ! அருளென்ன, அந்தமில்‌ வரையால்‌ மழைதடுத்தானைத்‌ திருவல்லிக்கேணிக்‌ கண்டேனே”

——-

பொங்குவெண்‌ டிங்களங்‌ கவிகைவரு மிரணியன்‌
புகலவன்‌ மதலைபெயர்‌
புகலாம லெந்தைநா ராயண -ஸனெனப்பெயர்‌
புகன்‌ றதி லெழுந்துகோபித்‌
தங்கைமலர்‌ மீதுசங்‌ காழியேந்‌ தியுமயன்‌
அவிர்சடைப்‌ பெருமானும்‌
அஞ்சிப்‌ பதுங்கித்‌ திரிந்தனர்‌ மறந்தனைகொல்‌
அரியெங்‌ கெனப்புடைப்பப்‌
பங்கமுறு மக்கனகன்‌ மார்பம்‌ பிளந்திழி
பசுங்குடர்‌ பிடுங்கிரத்த
பானம்‌ பணித்தடந்‌ தோள்மாலை சூடவே
பண்டுகளி கொண்டொர்தூணிற்‌
சிங்கவடி வாய்வந்த வெங்கள்குல நாத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காத! நின்‌
திருவாயின்‌ முத்தமருளே.–51-

பொங்கு வெண்‌ திங்கள்‌ அம்‌ கவிகை வரும்‌ இரணியன்‌ – ஒளிமிகுகின்ற வெள்ளிய சந்திரனை அழகிய குடையாகப்‌ பிடித்து வருகின்ற இரணியாசுரன்‌,
புகல. கட்டளையிட்டுச்‌ சொல்லவும்‌,
அவன்‌ மதலை – அவனது மகனாகிய பிரகலாதாழ்வான்‌,
பெயர்‌ புகலாமல்‌ – (ஹிரண்யாய நம: என்று) அவன்‌ பெயரைச்‌ சொல்லாமல்‌,
“எந்தை நாராயணன்‌” என பெயர்‌ புகன்றதில்‌ – என்தந்தை
நாராயணன்‌ [அவனுக்கு நம : ] என்று அவன்‌ திருநாமத்தைச்‌ சொன்ன மாத்திரத்தில்‌,
[அதாவது, நாராயணாய நம: என்று சொல்லவே],
கோபித்து எழுந்து . மிக்கசினங்கொண்டு இருக்கை விட்டெழுந்து,
“அங்கை மலர்‌ மீது சங்கு ஆழி ஏந்தியும்‌ – அழகிய
தாமரை மலர்‌ போன்ற கைகளில்‌ சங்கு சக்கரங்களை யேந்தியுள்ள அந்த நாராயணனும்‌,
அயன்‌ – பிரமனும்‌,
அவிர்‌ சடைப்‌ பெருமானும்‌ – விளங்குகின்ற ஜடாபாரத்தினையுடைய சிவபெருமானும்‌ ,
(எனக்கு) அஞ்சிப்‌ பதுங்கித்‌ திரிந்தனர்‌ – பயந்து நடுங்கி
யொளித்து(என்கண்ணில்படாது) திரியலாயினரென்பதை,
மறந்தனைகொல்‌ – நீமறந்துவிட்டாயா?
“அரி எங்கு ? – அந்த நாராயணனுகிய பகைவன்‌ எங்கேயுளான்‌ ? (சொல்லு),
என – என்று
அதட்டி,புடைப்ப- (அப்‌ பிரகலாதன்‌ காட்டிய தூணைக்‌ கையால்‌ அறைந்து தட்ட,
(அப்போதே) அத்‌ தூணினின்று வெளிப்பட்டு
பங்கம்‌ உறு – (தான்‌ பொய்த்ததையெண்ணி) நாணமுற்ற, ௮ கனகன்‌ – அந்த இரணியனுடைய,-கனகன்‌ – இரணியன்‌ என்பதன்‌ பரி
யாயப்‌ பெயர்‌:–மார்பம் பிளந்து – உரத்தைக்கீறிப்‌பிளவுபடச்‌ செய்து,:
இழி பசுங்‌ குடர்‌ பிடுங்கி – கீழ்த்தொங்கிய பச்சைக்குடலைக்‌ கைகளால்‌ அளைந்து பிடுங்கியெடுத்து,
ரத்தபானம்‌ ப(ண்)ணி – [அங்கு இழிந்த] இரத்தத்தையும்‌ குடித்து
(அக்குடலை) தட.ந்‌ தோள்‌ மாலை சூடவே- விசாலமான திருத்‌தோள்களில்‌ மாலையாகச்‌ சூழவரும்படி சூடுதற்காக,
பண்டு -அக்காலத்து,
களிகொண்டு- வெறிகொண்டு,
ஒர்‌ தூணில்‌ சிங்கவடிவாய்‌ வந்த – ஒரு கம்பத்தில்‌ சிங்கத்தின்‌ வடிவெடுத்து [ நரசிங்கமாய்‌] வந்த,
எங்கள்‌ குல நாத | – எங்களுடையகுல நாதனே !
நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌– : தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்காத :; நின்‌ திருவாயின்‌ முத்தம்‌ அருள்‌ –

புடைப்பத்‌ தூணில்‌ வந்த” என்றதால்‌ எங்கும்‌ உளன்‌ நாராயணன்‌ என்று காட்டியபடி :*: அந்தர்‌ பஹிஸ்ச தத்சர்வம்‌ வியாப்ய நாராயணஸ்தித :?:” என்றது சுருதியும்‌.

———

மூவா மூதலா யுலகமொரு
மூன்றும்‌ பரவ வங்கூரித்து
முத்திக்‌ கொருவித்‌ தாகவந்த
முதுநான்‌ மறையின்‌ குலக்கொழுந்தே |!
“கோவா வொளிரு மரகதமே!
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூற்றே |
கோவேத்‌ தியர ரளக்கமலங்‌
குடி.புக்‌ கிருக்கும்‌ பெருமாளே /
தாவா வளமைக்‌ கோசலைக்கோர்‌
தவமே ! தவத்தின்‌ பயனே ! யச்‌
சனகன்‌ றருசா னகிவேட்ட
தடங்கைக்‌ களிறே 1! போரேறே !
தேவா ! வமிர்தங்‌ கனிபவளத்‌
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா ! முத்தந்‌ தருகவே.–52-

மூவா முதலா உலகம்‌ ஒரு மூன்றும்‌ – அந்தமும்‌ஆதியுமில்லாத [ஆன்மாக்கள்‌ பயிலும்‌ ] சுவர்க்கம்‌, மத்திமம்‌, பாதலம்‌ என்று மூன்று லோகங்களூம்‌,
பரவ – போற்றும்படி,
அங்குரித்து-முளையாகத்‌ தோன்றி
[மூலமாகி], முத்திக்கு ஒரு வித்தாக வந்தமுக்திக்கு விதையாக [முதற்காரணமாக ] வந்த,
முது நான்மறையின்‌ குலக்கொழுந்தே – பழைதாக வருகின்ற நான்கு வேதங்களிற்‌ பயிலும்‌ சிறந்தகொழுந்து போன்றவனே
கோவா ஒளிரும்‌ மரகதமே ! – கோக்கப்படாது விளங்குகின்றபச்சை மரகதரத்தினமே /!
கொடும்‌ போர்‌ அரக்கர்‌ – கொடியயுத்தத்‌தைச்செய்கின்ற அரக்கர்களின்‌,
குலக்கூற்றே ! – குலங்கட்கு யமன்‌ போண்றவனே !
கோ – இந்திரன்‌,
வேத்தி [வேதி] – பிரமன்‌,
அரர்‌ – சிவபெருமான்‌ (இவர்களது),
உளக்கமலம்‌ – மனத்தாமரையில்‌,
குடிபுக்கிருக்‌கும்‌ பெருமாளே – தங்கிவசிக்கும்‌ இறைவனே !
தாவா – கெடாத,
வளமை . ஐசுவரியங்களையுடைய,
கோசலைக்கு – கெளசல்யாதேவிக்கு,
ஓர்‌ தவமே? – ஒப்பற்ற தவமே !
தவத்தின்‌ பயனே ! – அந்தத்தவத்தின்‌ பயனானவனே /
௮ சனகன்‌ தரு சானகி – அந்தப் பிரசித்த பெற்ற ஜனக மகாராஜன்‌ வளர்த்துத்‌ தந்த சீதாபிராட்டி,
வேட்ட – திருமணஞ்செய்து கொண்ட,
தடகை களிறே ! .. பெரிய கைகளையுடைய ஆண்யானை போன்றவனே:
போர்‌ ஏறே ! – போரில்‌ சிங்கம்போன்றவனே !
தேவா ! – தேவனே!
அமிர்தம்‌ கனி – தேவாமிர்தம்‌ போல்‌ சுவைபழுத்த,
பவளத்‌ திருவாய்‌ – சிவந்த திருவாயினால்‌,
முத்தம்‌ தருக – ;
தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ பேரைச்‌ செல்வா! ‘* தெளிந்து வழங்குகின்ற தமிழ்மொழி யினையுடைய திருப்பேரைநகரின்‌ செல்வனே ! முத்தம்‌ தருக- ;

——

துளிக்குந்‌ திரைப்பாற்‌ கடன்முகட்டுத்‌
தூய தரங்கத்‌ தனந்தபுரத்‌
தொருவா விருகண்‌ டுயில்கூருஞ்‌
சோதிச்‌ சுடரே ! பேரின்பம்‌
அளிக்குங்‌ கருணைக்‌ கருங்கடலே !
அழியா வீட்டுக்‌ கொருவிளக்கே !
அமுதங்‌ கடைந்து திரட்டியெடுத்‌
தமரர்க்‌ குதவும்‌ பெருமானே !
களிக்குஞ்‌ சுரும்பர்‌ துதைந்துழத்தேன்‌
கக்குங்‌ கமல முறுக்குடையுங்‌
கன்னித்‌ தடஞ்சூழ்‌ திருநாடா !
கண்ணா !வரி!கே சவ! முகுந்தா !
தெளிக்கும்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா ! முத்தந்‌ தருகவே.–53-

துளிக்கும்‌-திவலைகளைத்‌ தெளிக்கும்‌,
திரை பாற்கடல்‌ -அலைவீசும்‌ திருப்பாற்கடலின்‌,
முகட்டு – மேற்‌ பகுதியிலும்‌,
தூயதரங்கத்து – பரிசுத்தமான கடலிலும்‌,
அனந்தபுரத்து – திருவனந்தபுரத்திலும்‌,
ஒருவா – நீங்காதபடி (என்றைக்கும்‌),
இரு கண்‌ துயில்‌கூரும்‌ சோதிச்‌ ௬டரே !-இரண்டுகண்களையம்‌ மூடி யோகநித்திரை செய்யும்‌ பரஞ்சோதியே
பேரின்பம்‌ அளிக்கும்‌ கருணைக்‌ கருங்‌ கடலே ! – பேரானந்த
மாகிய முத்தியைக்‌ கொடுக்கும்‌ தயாசமுத்திரமே !
அழியா வீட்டுக்குஒரு விளக்கே :! – அழிவில்லாத்‌ மோட்சலோகத்திற்கு ஒப்பற்ற விளக்‌குப்போன்று சுயம்பிரகாசனே !
அமுதம்‌ கடைந்து திரட்டி எடுத்து-தேவாமிருதத்தை (த்திருப்பாற்கடலிலிருந்து) கடைந்தெடுத்துத்‌திரளவைத்து,
அமரர்க்கு – தேவர்களுக்கு (மட்டும்‌)
உதவும்‌ – வழங்‌கிய, பெருமானே !-
களிக்கும்‌ சுரும்பர்‌ – (தேனுண்டு) வெறி கொள்ளும்‌ வண்டுகள்‌,
துதைந்து உழ – (தம்‌ கால்களால்‌) மிதித்துத்துகைத்தலால்‌,
தேன்‌ கக்கும்‌ கமலம்‌ .. (தம்மிடத்திள்ள) தேனை வெளியே சொரியும்‌ தாமரை மலர்‌,
முறுக்கு உடையும்‌ – தமதுகட்டு நெகிழ்ந்து பிரியும்‌,
தடம்‌ சூழ்‌- தடாகங்கள்‌ சூழ்ந்த,
கன்னித்‌ திருநாடா ! – பாண்டியநாட்டுக்குரியவனே :!
கண்ணா !- கண்ணனே !
அரி – விஷ்ணுவே |, கேசவ முகுந்தா -,
தெளிக்கும்‌ பொருநைத்‌ தடம்‌ துறைவா . நீர்த்துளிகளை [க்காற்றில்‌] வீசும்‌ தாமிரபர்ணியின்‌ நீர் துறைகளை யுடையவனே?
திரு வாய்‌ முத்தம்‌ தருக -; தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ பேரைச்செல்வா -; முத்தம்‌ தருக –

* பாலாழி நீ கிடக்கும்‌ பண்பு ?* (பெரிய திருவந்தாதி, 34)
* கண்ணன்‌ நின்பால்‌ திருநெடுங்கண்‌ வளர்தற்கு, அருமாதவம்‌ என்ன செய்தாய்‌ பணியெனக்கு அம்புதியே “(திருவேங்கடத்தந்‌தாதி, 10)
, “எழிலணி அனந்தபுரம்‌, படமுடையரவில்‌ பள்ளி பயின்ற வன்‌ ”” (திருவாய்மொழி – 10 – 2 – 8) முதலியன ஈண்டு முதலடியில்‌ அநுசந்திக்கவும்‌.
பாண்டி நாட்டுக்குக்‌ **கன்னிநாடு ‘” என்றும்‌ பெயருண்டு : தடாதகைப் பிராட்டியாண்டமையால்‌ என்பர்‌, இனி,கன்னி – அழியாத என்றுமாம்‌.

——

சந்தா டவியும்‌ பாதிரியுந்‌
தடந்தா மரையும்‌ விளைவயலுஞ்‌
சதுரா மறையும்‌ விழாவொலியுந்‌
தழைக்கும்‌ பிள்‌௯க்‌ குழாவொலியும்‌
நற்தா வளமைத்‌ திருவழுதி
நாடா ! பரம பதவீடா !
நறுந்தா தளையும்‌ பசுந்துளவ
நாரா யண !சீ தர! முகுந்தா !
கொந்தார்‌ மலர்ப்பூங்‌ கரியகுழற்‌
கொவ்வைக்‌ கனிவாய்‌ மணிமுறுவற்‌
கொடிபோ ஸுடங்குந்‌ துடியிடைக்கோ
மளக்கோ குலக்கோ சலையளித்த
சிந்தா மணியே மரகதமே /
திருவாய்‌ முத்தந்‌ தருகவே
தெள்ளிப்‌ பயிலுந்‌ தமிழ்ப்பேரைச்‌
செல்வா / முத்தந்‌ தருகவே.–54-

சந்து அடவியும்‌ – சந்தனமரக்காடுகளும்‌,
பரதிரியும்‌ -பாதிரிமரங்களும்‌,
தடம்‌ தாமரையும்‌ – தடாகங்களில்‌ தாமரைக்‌ கொடிகளும்‌, விளை வயலும்‌ – (நெல்‌) விளைகின்ற கழனிகளும்‌
(இவைகளோடு) சதுராம்‌ மறையும்‌ – நான்கு வேத கோஷங்களும்‌,
விழா ஒலியும்‌ – திருவிழாக்களில் எழும் ஒலிகளும்‌,
பிள்ளைக்குழாம்‌ ஒலியும்‌ – சிறுவர்களின்‌ கூட்டொலியும்‌,
தழைக்கும்‌ – மிகுதியாகச்‌ செழித்துக் காணப்படுகின்ற,
நந்தா வளமை-(என்றும்‌) குறைவுபடாத வளப்பத்தையுடைய,
திருவழுதி நாடா – பாண்டியநாட்டுக்கு உரியவனே
பரமபத வீடா – வைகுந்த வாசனே ! ,
நறும்‌ தாது அளையும்‌ பசும்‌ துளவ நாராயண –வாசனையுடைய மகரந்தங்கள்‌ செறியும்‌ பச்சைத் திருத்துழாய்‌ மாலையை யணிந்த நாராயணா,
சீதர – இலக்குமியை (மார்பில்‌) தாங்குபவனே ! –
முகுந்தா !.,
கொந்து ஆர்‌ மலர்‌ – கொத்துக்களாகவுள்ளபூக்களைச்சூடிய,
பூங்‌ கரிய குழல்‌ – (அழகிய) மென்மையான கரிய கூந்தலினையும்‌,
கொவ்வைக்‌ கனிவாய்‌ – கோவைக்கனி போற்‌ சிவந்த வாயினையும்‌,
மணி முறுவல்‌ – முத்துப்போன்ற பற்களையும்‌,
கொடி போல்‌ நுடங்கும்‌ துடி இடை. – வல்லிக்‌ கொடிபோல்‌ அசைகின்ற உடுக்கையை’ யொத்த நுண்ணிய இடுப்பினையும்‌ உடைய,
கோமளம்‌ – இளமைஅழகு படைத்த,
கோகுலக்‌ கோசலை – ஆயர்பாடியிலுள்ள யசோதை,
அளித்த – வளர்த்துக்‌ கொடுத்த,
சிந்தாமணியே – ! மரகதமே ! –, திருவாய்‌ முத்தம்‌ தருக –; தெள்ளிப்‌ பயிலும்‌ தமிழ்ப்‌ திருபேரைச்‌ செல்வா ! –, முத்தம்‌ தருக-

————–

வாரானைப்‌ பருவம்‌

விதுரன்‌ மனையி லடிசில்‌ நுகரும்‌ விரதன்‌ வருக
வருகவே
விதர ணிகமு மறிவு மூடைய விமலன்‌ வருக
வருகவே
அதிரு மணியு மரையின்‌ வடமு மசைய வருக
வருகவே
அழகு கரிய குழல்கள்‌ சரிய வபிமன்‌ வருக
வருகவே
புதிய மதியின்‌ வதன வெயர்வு பொலிய வருக
வருகவே
பொழியு நறவு விரவு துளவு புனையூ மனகன்‌
வருகவே
மதுர முறுசெவ்‌ வதர வமுத மூதரம்‌ வழிய வருகவே
வருணன்‌ வருடு முபய சரண: வரதன்‌ வருக
வருகவே.--55-

விதுரன்‌ மனையில்‌ அடிசில்‌ நுகரும்‌ – விதுரனது வீட்டில்‌ உணவு விரும்பிப்‌ புசித்த,
விரதன்‌ – சங்கற்பங்கொண்டோனே ! வருக வருக – :
விதரணிகமும்‌ – சாமர்த்தியமும்‌,
அறிவும்‌ உடைய – ஞானமும்‌ உடைய,
விமலன்‌ . புனிதனே ! வருக வருக -;
அதிரும்‌ மணியும்‌ – ஒலிக்கின்ற [அரைஞாணில்‌ கட்டிய] சிறுமணியும்‌,
அரையின்‌ வடமும்‌ – அரைஞாண்கயிறும்‌,
அசைய – மெலிய அசை யும்படி, வருக வருக – :
கரிய அழகு குழல்கள்‌ சரிய – கருநிறம்‌ பொருத்தி அழகாயுள்ள தலைமயிர்‌ தாழ்ந்துவிழும்படி ,
அபி மன்‌ – அன்புமிக்கோனே –வருக வருக – :
புதிய மதியின்‌ வதனம்‌ வெயர்வு – புதிய சந்திரன்போன்ற நெற்றியில்‌ [ துளிக்கும்‌]வெயர்வை,
பொலிய_ _ விளங்கும்படி, வருக வருக – :
பொழி:பும்‌ நறவு விரவு துளவு – செரரிகின்ற தேன்‌ பொருந்தியுள்ள திருத்துழாய்‌ மாலையை,
புனையும்‌ -சூட்டிக்கொண்ட,
அனகன்‌ – அழகுள்ளவனே ! வருக வருக – ;
மதுரம்‌ உறு செவ்‌ அதர அமுதம்‌ – சுவை மிக்க சிவந்த உதடுகளில்‌
ஊறும்‌ தேறல்நீர்‌, உதரம்‌ வழிய வருக – வயிற்றில்‌ ஒழுகும்படி வருக;
வருணன்‌ வருடும்‌ உபய சரண வரதன்‌ – வருணபகவான்‌ [தனது]கைகளால்‌ பிடிக்கும்‌ இரு திருவடிகளையுடைய வரதனே ! வருக வருக .

இச்செய்யுளுக்குச்‌ சந்தக்குழிப்பு தனன தனன தனன தனன தனன தனன தனனன என்பது.

———–

எரியூமனல்‌ கதுவும்விழி நிருதரடு சமர்புரியும்‌
. இகல்‌ தொலைய விடுகணையினான்‌
இருவினையு மொருசிறிது தொடரவரி தெனவருடும்‌
எவர்தமையு மடிமைகொளுமால்‌
முரிபுருவ நுதல்வனிதை சனகிமுலை மூகடுழுத
முகலளித விரணமுமூளோன்‌
முருகுவிரி தருதுளவு மணமலிய நெடியமணி
முடியினணி பெறவனைகுவோன்‌
உரியசது மறையுமுனி வரருமய னொடுபரவும்‌
உபயபரி புரசரண! நீ
டுலகமுழு வதுமுதர மமையவொரு தனிநுகரும்‌
ஒளிரும்ரவி குலமரபினோன்‌ !
நெரியமரு தமுமுதிய சகடுமுதை விதரணிகன்‌ !
நிமலனர வணைதுயிலுமால்‌!
நெறியுமகி மையுமளவில்‌ குணனும்வடி வழகு
முடை
நிகரில்‌ முகில்‌ வணன்‌ வருகவே.--56-

எரியும்‌ அனல்‌ கதுவும்‌ விழி நிருதர்‌ – சுவலிக்கின்ற நெருப்புப்‌ பற்றியதுபோற்‌ (சினத்தால்‌) சிவந்தகண்களையுடைய, அரக்கர்கள்‌,
அடு சமர்புரியும்‌ இகல்‌ தொலைய – கொல்லும்‌ போரைச்‌
செய்கின்ற பகைமை யொழியும்படி, (அவர்களையழிக்க)
விடு கணையினான்‌ – தொடுக்கின்ற அம்புகளை யுடையவனும்‌,
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய இரண்டும்‌,
ஒரு சிறிது தொடர அரிது, என – சிறிதேனும்‌ விடாது பின்வருவது இனிமுடியாது என்னும்‌ துணிபோடு,
வருடும்‌ எவர்தமையும்‌ – (திருப்பாதங்களைத்‌) தடவும்‌ அனைவரையும்‌,-தெண்ணீர்‌ பொன்னி திரைக்கையால்‌ அடிவருடப்‌ பள்ளி
கொள்ளும்‌: என்றது போல,
அடிமை கொளும்‌ மால்‌ – ஆட்கொண்டு கைங்‌கரியபரர்களாக ஆக்கிக்‌ கொள்ளும்‌ திருமாலும்‌,
முரிபுருவம்‌ -வளைந்த புருவத்தையுடைய,
நுதல்‌ – நெற்றியைக்‌ கொண்ட
வனிதை சனகி – பெண்ணாகிய சீதையின்‌,
முலை முகடு உழுதமுகம்‌ – கொங்கைகளின்‌ காம்பு அழுந்தப்பட்ட மார்பிடத்து,
லளிதவிரணமும்‌ உளோன்‌ – லாவண்யமான காயம்‌ வடு உள்ளவனும்‌
முருகு விரிதரு துளவு – அழகு விரிகின்ற திருத்துழாயை,
மணம்‌ மலிய – வாசனை மிகும்படி,
நெடிய மணி முடியில்‌ – நீண்ட அழகிய துலைமயிரில்‌,
அணி பெற வனைகுவோன்‌ – ஆபரணமாம்படி அழகுறச்‌ சூடுபவனும்‌, (ஆகிய உபயபரிபுரசண ! எனமேலியையும்‌) :
உரிய சதுமறையும்‌ – ஓதுதற்கு உரிய நான்கு வேதங்களும்‌,
முனிவரரும்‌ – இருடிச்சிரேட்டர்களும்‌,
அயணொடு பரவும்‌ – பிரமதேவனோடு துதிக்கின்ற,
உபய பரிபுர சரண ! . இரண்டு நூபுரங்களையுடைய பாதங்களை யுடையவனே !
நீடு உலகம்‌ முழுவதும்‌ –
பெரிய உலகத்திலுள்ள அனைத்துப்பொருள்களும்‌,
உதரம்‌ அமையஉமது வயிற்றினுள்‌ அடங்கும்படி,
ஒரு தனி நுகரும்‌ – (மகாபிரளய காலத்தில்‌) ஒப்பற்றவனாய்‌ உண்ட,
ஒளிரும்‌ ரவிகுல மரபினோன்‌ – விளக்கமுற்ற சூரியகுலத்திலுதித்தவனே !
மருதமும்‌ – இரண்டு மருதமரங்களும்‌,
முதிய சகடும்‌.- பழைய வண்டியின்‌ சக்கரமும்‌,
நெரிய – முறிந்து விழும்படி,
உதை-(கால்களால்‌) உதைத்த,
விதரணிகன்‌ – சாமர்த்திய முடையவனே?
நிமலன்‌ 1- தோஷமற்றவனே !
அரவணை துயிலும்‌ மால்‌ | – பாம்‌ பணைமேல்‌ யோகநித்திரை பயிலும்‌ திருமாலே |!
நெறியும்‌ – ஒழுக்கமும்‌,
மகிமையும்‌ – மேன்மையும்‌,
அளவு இல்‌ குணனும்‌ – எண்ணற்ற நற்குணங்களும்‌,
வடிவழகும்‌ – நல்ல உருவழகும்‌,
உடை. – உடைய,
நிகரில்‌ . ஒப்பற்ற முகில்‌ வணன்‌ – முகில்வண்ணன்‌ என்னும்‌ திருநாமம்‌ உடையவனே ! வருக–

————

புலருஞ்சது மறையருந்தவர்‌ புலவர்பண்டிதர்‌ மலர்‌
கொடே
புதியபங்கய சரண்வணங்கிய புனித!வெண்டிரை
யுததிசூழ்‌
செகமடங்கலு நொடியினுண்‌ டுபிழ்‌ திருமண ந்
தொளிர்‌ மரும! வோர்‌
-திரிபுரந்தழல்‌ படமுனிந்தருள்‌ சிவனயன்‌ தொழ
வருகவே
தகரமுங்கிய பரிமளங்கமழ்‌ தருதடம்புய சயதர !
சமர்முகந்தனி னிருதர்வெம்படை சரியடுஞ்சிலை
யபிம !னீள்‌
மகரகுண்டல மசையவிங்கெதிர்‌ மகரவண்குழை !
வருகவே
வருணன்வந்திரு சரண்வணங்கிட மனமகிழ்ந்‌
இதெதிர்‌ வருகவே.–57-

புகல்‌ அரும்‌ சதுமறை . பேசுதற்கரிய (புகழையுடைய) தான்கு வேதங்களிலும்‌ வல்ல,
அருந்தவர்‌ – சிறந்த தபசியரும்‌,
புலவர்‌ – கவிபாடுபவரும்‌,
பண்டிதர்‌ . அறிவாளிகளும்‌,
மலர்‌ கொடு .(தத்தம்‌) கையிலே பூக்களைக் கொண்டு (அர்ச்சித்து),
புதிய பங்கய சரண்‌ வணங்கிய – புதிதாக (அப்போது) மலர்ந்த தாமரை பூப்‌போன்ற திருவடிகளைப் பணியும் படியுள்ள,
புனித-பவித்திரனே!
வெண்திரை உததி சூழ்‌ – வெண்மையான அலைகளை யுடைய கடல்‌ சூழ்ந்த,
செகம்‌ அடங்கலும்‌ -,நிலவுலகம்‌ முழுவதும்‌,
தொடியின்‌ உண்டு – ஒருகணத்தில்‌ புசித்து,
உமிழ்‌ -(மறு கணத்தில்‌) வெளியுமிழ்‌கின்ற, –
திரு மணந்து ஒளிர்‌ மரும ! . இலக்குமிதேவி பொருந்தி விளங்குகின்ற மார்பனே 7
ஓர்‌ திரிபுரம்‌ தழல்‌ பட முனிந்தருள்‌ சிவன்‌ – முப்புரங்களும்‌ நெருப்புப்‌ பற்றி யெரியும்படி கோபித்த சிவபெருமானும்‌,
அயன்‌ – பிரமனும்‌,
தொழ – கை கூப்பித்‌ தொழும்படி,–வருக –
தகரம்‌ – மயிர்ச்சாந்து,
முங்கிய – நிறையப்‌ பூசியதால்‌,
பரிமளம்‌ கமழ் தரு – வாசனை வீசுகின்ற,
தடம்‌ புயம்‌ – பரந்த தோள்‌களையுடைய,
சயதர – வெற்றி வீரனே !
சமர்‌ முகம்‌ தனில்‌ – போரினிடத்து,
நிருதர்‌ வெம்படை சரிய. அரக்கர்களுடைய: கொடிய சேனைகள்‌ அழிந்து போகும்படி,
அடும்‌ – கொல்லுகின்ற,
சிலை – வில்‌லினையுடைய,
அபிமன்‌ ! – பயமில்லாதவனே :
நீள்‌ மகர குண்டலம்‌ அசைய – நீண்ட மகரகுண்டலங்கள்‌ (இரு காதுகளிலும்‌) [மெல்ல] அசையும்படி,
இங்கு எதிர்‌ வருக – ; மகரவண்குழை ! – மகரநெடுங்‌
குழைக்காதரே !
வருணன்‌ வந்து இரு சரண்‌ வணங்கிட – வருணபகவான்‌ வந்து [உம்முடைய] இரண்டு திருப்பாதங்களையும்‌வணங்க:
(அதனால்‌), மனம்‌ மகிழ்ந்து . உள்ளக்களிப்போடு, எதிர்‌ வருக-

———

கலைமண ந்தொளிர்‌ தவளவெண்பிறை கதுவிடுஞ்சிலை
நுதலிஷள்‌
கவினலந்தரு சனகிசம்பிரம கனதனம்பொரு
துழுதமால்‌
உலைமகந்தனி லடிபடும்பொழு தொளிருமொண்‌ சுடர்‌
வயிரவா
ளொடுமுனிந்தட ரவுணர்பொன் றிட உயிரடுஞ்‌
சமன்‌ ! வருகவே
திலகமஞ்சரி துளவசைந்தொளி திகழவண்டின
முூரலவே
செழுநறுந்துகள்‌ முகைவிரிந்தலர்‌ சிறிய பங்கய
மெனு
மலர்மடந்தையு நிலமடந்தையு மருவுதிண்டிறல்‌
வரத ! நீள்‌
மகரகுண்டல மசையவிங்கெதிர்‌ மகரவண்குழை !
வருகவே,–58–

கலை மணந்து ஒளிர்‌ – கலைகள்‌ பொருந்தி விளங்குகின்ற,
தவள வெண்பிறை – மிக்க வெண்மையையுடைய பிறைச்‌ சந்திரனை
கதுவிடும்‌ – பற்றியிருக்கின்‌ற,
சிலை _-வில்போன்று வளைந்த,
நுதலினாள்‌ -புருவங்களைக்‌ கொண்டவளாகிய,
கவின்‌ நலம்‌ தருசனகி – அழகினினிமை வழங்கும்‌ சீதையின்‌,
சம்பிரமம்‌ கன தனம்‌ -களிப்புமிகுந்த பருத்த கொங்கைகளோடு,
பொருது உழுத மால்‌ – போரிட்டு (மார்பினால்‌) கிண்டிய இராமபிரானாகிய திருமாலே !
உலைமுகம்‌ தனில்‌ அடிபடும்‌ பொழுது – கொல்லனது உலைக்‌ கூடத்தில்‌ [சம்மட்டியினால்‌] ஓங்கி அடிக்கும்‌ பொழுது,
ஒளிரும்‌ – பிரகாசிக்கின்ற,
ஒண்சுடர்‌ – ஒளிக்கதிர்ப்‌ பொறிகளை யுடைய,
வயிர வாளொடு – உறுதியான [வலிய] வாளைக்‌ கையிலே கொண்டு,
முனிந்து – சினந்து,
அடர்‌ அவுணர்‌ – தாக்குகின்ற அசுரர்கள்‌,
பொன்றிட -இறந்தொழியும்படி,
உயிர்‌ அடும்‌ சமன்‌ -உயிரைக் கொண்டு செல்லும்‌ யமன்‌ போன்றவனே ! வருக-
வண்டினம்‌ முரல . வண்டுக்‌ கூட்டங்கள்‌ ஒலித்துத்‌ துகைத்தலால்‌,
செழு நறும்‌ துகள்‌ முகை – செழித்த பரிமளமுள்ள மகரந்தப்‌ பொடிகளைக்‌ கொண்ட மொட்டு,
விரிந்து அலர்‌ – அகன்று மலர்ந்த,
சிறிய பங்கயம்‌ எனும்‌ நரு மலர்‌ – சிறிய (செந்‌) தாமரை யென்கின்ற தேன்‌ சொரியும்‌ மலரில்‌,
மடந்தையும்‌ – எழுந்தருளியிருக்கின்ற இலக்குமி தேவியையும்‌,
நில மடந்தையும்‌ – பூமிதேவியையும்‌,
திலகம்‌ – சிறந்த,
மஞ்சரி – கொத்துக்களைக்‌ கொண்ட, துளவு
அசைந்து ஒளி திகழ – துளவ மாலையசைந்து பிரகாசிக்க,
மருவு திண்‌ திறல்‌ வரத- தழுவுகின்ற மிக்க வலிமையை யுடைய வரதனே !
நீள்‌ மகர குண்டலம்‌ அசைய – நீண்ட மகரகுண்டலங்‌கள்‌ (இரு காதுகளிலும்‌ மெல்ல) அசையும்படி,
மகரவண்குழை !.-மகரநெடுங்குழைக்காதரே ! இங்கு எதிர்‌ வருக–

——–

உளநெ கிழ்ந்திரு பொழுதும்‌ வந்தனை யொடுமுவநீ
தெதிர்‌ பரவவே
உபயசெஞ்சரண்‌ முடிபு னைந்தொளி ரூயர்ப
தந்தரு கருணையால்‌
அளைக வர்ந்திடை மகளிர்‌ தங்குடி லணை தருங்கயி
றதுகொடே
அடிபடும்பொழு துடல்குழைந்தழு தழுதுநின்ற
வன்‌ 1 வரூகவே
கு ஈநி ரம்பிய புனலினுங்கரை யருகுவண்டலு மதகு
நீள்‌
குவளையம்படு கருநெருங்கிய குளிர்‌ நறும்பொழி
விடையும்‌ வால்‌
வளமுழங்கிய குருகையம்பதி மருவுநங்கைகண்‌
மணி நன்னா
வலவனிங்கித கவிதை கொண்டருள்‌ மகரவண்‌
சூழை ! வருகவே.--59-

உளம்‌ நெகிழ்ந்து – மனமுருகி,
இரு பொழுதும்‌ -காலைமாலையென்ற இரண்டுபொழுதும்‌,
வந்தனையொடு உவந்து -வழிபாட்டோடு மனமகிழ்ந்து,
எதிர்‌ பரவ – எதிர்‌ நின்று துதிக்க,
உபய செஞ்‌ சரண்‌ . இரண்டுசெவ்வியபா தங்களையும்‌,
முடிபுனை ந்து – (பரவுவோரின்‌) சிரசிலே சூட்டி,
ஒளிர்‌ உயர்பதம்‌ தரு கருணையால்‌ -(எப்போதும்‌) பிரகாசிக்கின்ற மேலான பரமபதத்தைக்‌ கொடுக்கின்ற தயையினால்‌,
அளை கவர்ந்து – வெண்ணெயைக்களவுகண்டு,
இடைமகளிர்தம்‌ குடில்‌ – இடைச்சியரது குடிசையில்‌,
அணை தரும்‌ – பிணித்‌திருக்கின்ற,
கயிறது கொடு – கடைகயிற்றினால்‌,
அடிபடும்‌ பொழுது -அடிவாங்கும்போது,
உடல்‌ குழைந்து – உடல்‌ நெளிந்து,
அழுதுஅழுது நின்றவன்‌ – விம்மி அழுகை ஓயாது நின்ற கண்ணனே !
குளம்‌ நிரம்பிய புனலினும்‌ .. நிரம்பியுள்ள குளத்தின்‌ நீரிலும்‌,
கரை அருகு வண்டலும்‌ – (அதன்‌) கரையில்‌ தெருங்கியுள்ள வண்‌டல் நீரிலும்‌,
மதகு – மதகில்தங்கியுள்ள நீரிலும்‌,
நீள்‌ ரூவகா அம்‌படுகரும்‌ – நீண்ட குவளைப்பூக்கள்‌ மலர்ந்துள்ள அழகிய நீர்நிலைகளிலும்‌,
நெருங்கிய குளிர்‌ நறும்‌ பொழிலிடையும்‌ – செறிந்த குளிர்ச்சி பொருந்தி வாசனையோடு கூடிய சோலைகளினிடத்திலும்‌,
வால்‌ வளை முழங்கிய – வெள்ளிய சங்குப்பூச்சிகள்‌ ஒலிக்கின்ற
[வளம்மிக்க].குருகை அம்பதி மருவும்‌ – திருக்குருகடர்‌ என்னும்‌ – ஆழ்வார்‌ திரு நகரியில்‌ வசிக்கும்‌,
நங்கை -உடையநங்கையாரின்‌,
கண்மணி.கண்‌ணின்‌ மணியபோன்றவனும்‌,
நல்‌ நாவலவன்‌ – நல்ல நாவீறுடைய பிரானும்‌ ஆகிய நம்மாழ்வாரின்‌,
இங்கித கவிதை கொண்டருள்‌ -(தத்துவக்‌) கருத்துக்களைக்‌ கொண்ட பாசுரங்களைக்கேட்டருள்‌ கின்ற,
’ மகரவண்‌ குழை ! – மகரநெடுங்குழைக்கா தரே. வருக –

ஒரு நாள்‌ பிரமன்‌ “எங்குத்‌ தவஞ்செய்வது ? என்று சிந்தை கொண்டிருக்கையில்‌ “*கர -பிரமனே ! குரு – (இங்குத்‌ தவஞ்‌) செய்‌ ?” என்று இத்தலத்தைச்‌
சுட்டி ஆகாயவாணி மொழிந்ததனால்‌, இதற்குக்‌ *குருகாபுரி’” என்று பெயர்வந்த தென்பர்‌.

நங்கை-உடைய நங்கையார்‌. இவர்‌ நம்மாழ்வாரின்‌ தாய்‌, இவர்‌ மலையாள நாட்டில்‌, திருவண்பரிசாரம்‌ என்னும்‌ திருப்பதியிலுள்ள திருவாழ்‌மார்பர்‌ என்னும்‌ பகவத் பக்தரது தனயையாவர்‌. இவர்‌ குருகூரில்‌ பொற்காரியார்‌ என்பவர்க்குப்‌ புதல்வராய்த்‌ தோன்றிய காரி யாரை மணந்தார்‌. (இவர்களுக்குப்‌ பிறந்த மாறன்‌ என்னும்‌ நாமம்‌ பெற்ற தம்மாழ்வாரைத்‌ திருக்குறுங்குடி எம்பெருமானே அவதரித்துள்ளார்‌ என்பது துணிபு)

நன்னாவலவன்‌ – **நன்‌ மதுரகவி வணங்கும்‌ நாவீறன்‌ வாழியே” என்றது இவரது வாழிதிருநாமப்‌ பாட்டு.

“*பெருமாள்‌ மகுடம்‌ சாய்க்கும்படி கவிபாடிய ஞானத்‌ தமிழ்க்கடலே””

———

முடிமீ தொளிர்சூ ழியத்தொகையின்‌
முழுவெண்‌ டிங்கட்‌ கற்றைநிலா
மூரிக்‌ கடல்ளூழ்‌ தருபுவனம்‌
முற்றுந்‌ தழைய வடர்ந்தவள்ளைக்‌
கொடிபோ லொசியுங்‌ குழையுமணிக்‌
குழையுங்‌ குழைய வுடல்குழையக்‌ |
குழைத்து நுதலி ஸிடுந்திலகக்‌
குறுவேர்‌ வழிய விடைகழியின்‌
அடிமே லடிவைத்‌ திருகைசுவர்‌
அதனைப்‌ பிடித்து வருதலிற்றள்‌
ளாடி விழதத்‌ தளிப்பின் மலர்‌
அங்கை பதித்துத்‌ தவழ்ந்தெனது மடிமீ திருந்து களபமுலை
வள்ளத்‌ தமுதுண்‌ டிடவருக
மகரக்‌ குழையே ! யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே,--60-

முடிமீது – தலையின்மேல்‌,
ஒளிர்‌ சூழியம்‌ தொகையின்‌ .விளங்குகின்ற உச்சிக்கொண்டையின்‌ கூட்டினால்‌,
முழு வெண்‌திங்கள்‌ கற்றை நிலா . பூர்ணசந்திரனது தொகுதிப்பட்ட நிலவொளி போன்ற ஒளியானது,
மூரிக்கடல்‌ சூழ்தரு புவனம்‌ முற்றும்‌ தழைய வலிமைபொருந்திய சமுத்திரம்‌ சூழ்ந்த உலகம்‌ முழுவதும்‌ பரவித்தங்கும்படியும்‌,
அடர்ந்த வள்ளைக்‌ கொடிபோல்‌ .- செறிந்துள்ள வள்ளைக்கொடி போல,
ஒசியும்‌ குழையும்‌ – (மெல்ல) அசைந்து துவளும்‌,
மணிக்‌குழையும்‌ – மகரகுண்டலங்களும்‌,
குழைய – தளர்ந்து தாழ்ந்து அசையும்படியும்‌,
உடல்‌ குழைய – திருமேனி துவளும்படியும்‌,
குழைத்து – கத்தாரியில்‌ கலந்துகுழையச்செய்து,
நுதலில்‌ இடும்‌திலகம்‌ – நெற்றியில்‌ இட்ட திலகமானது,
குறுவேர்வு அழிய -துளிக்கும்‌ வேர்வையினால்‌ (தெளிவுறத்‌ தெரியாது) அழியும்படியும்‌.
இடைகழியில்‌ – (மனையின்‌) இடைக்கட்டில்‌ (ரேழியில்‌) ,
அடிமேல்‌ அடிவைத்து – மெதுவாகக்குறுநடையிட்டு,
இருகை – இரண்டு கைகளாலும்‌,
சுவர்‌ அதனைப்பிடித்து – சுற்றுச்சுவரைப்‌ பிடித்துக்‌ கொண்டு,
வருதலின்‌ – வரும்போது,
தள்ளாடி விழ தத்தளிப்பின்‌ -தடுமாறித்‌ தரையில்விழும்படி திகைக்கும்போது,
மலர்‌ அங்கைபதித்து – பூப்போல்‌ மெல்லிய அழகிய உள்ளங்கைகளைத் தரையில்‌ பதிய வைத்து,
தவழ்ந்து – தவழ்ந்து வந்து,
எனது மடி மீது இருந்து – எனது மடியின்மேலே உட்கார்ந்து,
களப முலைவள்ளத்து- சந்தனம்‌ பூசப்படும்‌ கிண்ணம்போலுள்ள கொங்கைகளில்‌ (சுரக்கும்‌),
அமுது உண்டிட – பாலை (ச்சுவைத்து) உண்ண, வருக – மகரக்‌ குழையே ! – மகரநெடுங்‌ குழைக்காதரே |
என்‌ இரு கண்மணியே 7- எனது இரண்டு கண்மணிகளைப்போல்‌ பாதுகாக்கத்தக்கவனே l,
வருக வருக–;

———-

பண்டா லிலையி னரங்கத்தும்‌
பாலா ழமியிற்கண்‌ டுயில்கூரும்‌
பச்சைப்‌ புயலே ! பணாமகுடப்‌
படப்பாந்‌ தளின்கண்‌ பிதுங்கநறுந்‌
தண்டா மரைச்செஞ்‌ சரண்பெயர்த்துத்‌
தள்ளிக்‌ கடைவால்‌ பிடிக்கநெறி
தழைக்கும்‌ படிக்கு நடம்புரிந்த
தலைவா ! கடல்சூ முலகமுழு
துண்டா தரவோ டமிழ்ந்தளந்த
ஒளியே 1! யொளிரு மரகதமே !
ஒருவா ணுதல்பண்‌ டுளங்களிப்ப
உயர்வான்‌ முகடு கிழித்தெழுந்து
வண்டார்‌ தருவின்‌ மலார்கொணர்ந்த
மாலே ! வருக வருகவே
மகரக்‌ குழையே / யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே.–61-

பண்டு. மஹாபிரளயகாலத்து,
ஆலிலையின்‌ -(பச்சை) ஆலிலையிலும்‌,
அரங்கத்தும்‌ . திருவரங்கத்திலும்‌,
பாலாழியில்‌ – திருப்பாற்கடலிலும்‌,
கண்‌ துயில்‌ கூரும்‌ – கண்ணைமூடி யோகநித்திரை செய்யும்‌,
பச்சைப்புயலே | – கருநிறமேகமே !
பணாமகுடம்‌ படம்‌ பாந்தளின்‌ – தலையில்‌ பல படங்களைக்‌ கொண்ட காளியனென்னும்‌ விஷநாகத்தின்‌,
கண்‌ பிதுங்க – கண்கள்‌ வெளி வரும்படி,
நறும்‌ தண்‌ தாமரை செஞ்சரண்‌ பெயர்த்து – பரிமள முள்ள குளிர்ந்த தாமரை மலர்போன்ற செவ்விய திருவடிகளைத்‌ தூக்கித்‌ தூக்கிமாறவைத்து,
தள்ளி- அந்‌ நாகத்தைச்‌ சற்றுக்‌ கையினால்‌ தள்ளி,
கடை வால்‌ பிடிக்க – அதனது வாலின்‌ நுனியைக்‌ கையினால்‌ பிடித்துக்‌ கொள்ள, (பின்னர்‌)
நெறி தழைக்‌கும்படிக்கு – தருமதெறி ஓங்கும்பொருட்டு,
நடம்‌ புரிந்த -(அதனைக்கொல்லாமல்‌) அதன்‌ தலைகளில்‌ நடனம்செய்த, தலைவா .
எம்பெருமானே !
கடல்‌ சூழ்‌ உலகம்‌ முழுது உண்டு – கடலாலே சூழப்பட்ட நில
வுலகம்‌ முழுவதையும்‌ புசித்து,
ஆதரவோடு – அன்போடு,
உமிழ்ந்து- மீண்டும்‌ வெளிப்படுத்தி,
அளந்த ஒளியே – அதனைச் சிறு காலால்‌ அளந்திட்ட பிராசமானவனே
ஒளிரும்‌ மரகதமே – விளங்குகின்ற பச்சைரத்தினமே !பண்டு – நரகாசுரனையழித்தபின்பு,
ஒரு வாள்‌நுதல்‌ – ஒளிபொருந்திய நெற்றியையுடைய சத்தியபாமையானவள்‌,
உளம்‌ களிப்ப – மனம்‌ மகிழும்படி,
உயர்‌ வான்‌ முகடு கிழித்து, எழுந்து – ஒங்கியவானத்தின்‌ உச்சியினைக்கீண்டி , மேலும்‌ எழுந்து (தேவலோகத்துக்குச்‌ சென்று ஆங்கிருந்த)
வண்டு ஆர்‌ தரவின்‌ மலர்‌ – வண்டுகள்‌ ஆரவாரிக்கின்ற பரரிஜாதமரத்தில்‌ பூத்த மலரை,
கொணர்ந்த – துவாரகைக்குக்‌ கொண்டுவந்த,
மாலே -கண்ணபிரானாகிய திருமாலே ! வருக வருக .. ; மகரக்குழையே ! -என்‌ இரு கண்மணியே 1 -, வருக வருக .

——–

சிந்தா மணியே ! மரகதமே !
தேவே ! தேவர்‌ பெருமானே /
தேடும்‌ பொருளே ! நாடோறுஞ்‌
செய்யுந்‌ தவமே ! தவப்பயனே !
எந்தாய்‌ 1! நந்தா விளக்கொளியே /
எங்கட்‌ குயிரே 1! பரகதியே !
எழுதா மறையின்‌ வடிவே / சொல்‌
எழுத்தெட்‌ டினுக்கு மொருமயமே !
கொந்தார்‌ துளவப்‌ பசுந்தாமக்‌
கோவே 7 நிருதர்‌ குலக்கூற்றே !
கூடும்‌ புனனி ராடிவலங்‌
கொண்டு திருமஞ்‌ சனக்கொலுவில்‌
வந்தா தரித்து வருணனடி
வணங்கும்‌ புயலே ! வருகவே
மகரக்‌ குழையே /? யென்னிருகண்‌
மணியே ! வருக வருகவே,–62-

சிந்தாமணியே – (தேவலோகத்துள்ள) சிறந்தமணிபோன்றரத்தினமே ! மரகதமே -,
தேவே – தேவனே |,
தேவர்‌பெருமானே !-தேவர்களுக்கெல்லாம்‌ தலைவனே
தேடும்‌ பொருளே?-(அனைவராலும்‌) தேடப்படுகின்ற செல்வமே
நாள்தோறும்‌ செய்‌யும்‌ தவமே ? -, தவப்பயனே ! – அத்‌ தவத்தின்‌ பயனாய்‌ விளங்குபவனே !
எந்தாய்‌ – எனக்குத்‌ தந்தையே
நந்தா விளக்கொளியே !தூண்டப்படாத தீபப்பிரகாசமே !(சுயம்பிரகாசமானவனே )-விளக்கொளியை, மரதகத்தை ?: என்றார்‌ கலியனும்‌.
எங்‌கட்கு உயிரே | – அடியராகிய எங்களுக்குப்‌ பிராணனாயிருப்பவனே 7
பரகதியே : – (நாங்கள்‌ அடையவேண்டிய) மேலான கதியாயிருப்‌பவனே ! [உபேயமானவனே :]
எழுதா மறையின்‌ வடிவே !-அபெளருஷேயமான வேதத்தின்‌ சொரூபமானவனே |“வேதத்தை வேதத்தின்‌ சுவைப்பயனை” என்ற திருமங்கை
மன்னன்‌ வாக்கு நினைக, 

சொல்‌ எட்‌டெழுத்தினுக்கும்‌ ஒரு மயமே . -அஷ்டாக்ஷரத்தினுலாகும்‌ மந்திரச்‌ சொல்லினுக்கு ஒப்பற்றமையமாயிருப்பவனே !
கொந்து ஆர்‌ துளவப்‌பசுந்தாமம்‌ கோவே ! – கொத்துக்கள்‌ நிறைந்த துளசியினாலாகிய பச்சைமாலையைத்‌ தரிக்கும்‌ தலைவா !
நிருதர்குலக்‌ கூற்றே – அரக்கர்‌ குலத்திற்கு யமனாகுபவனே !
வருணன்‌ – வருண பகவான்‌,
கூடும்‌ -(அருகிலோடும்‌) தாமிரபரணியின்‌ நீர்த்துறையில்‌ “சேர்ந்திருக்கும்‌,
புனல்‌ நீர்‌ ஆடி – புனிதமான தண்ணீரில்‌ ஸ்நானஞ்‌ செய்து,
வலங்‌கொண்டு-கோயிலைப்‌ பிரதட்சிணஞ்செய்து,(பின்னர்‌ உட்புகுந்து)
திருமஞ்சனக்‌ கொலுவில்‌ வந்து ஆதரித்து அபிஷேகமண்டபத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ கொலுவினில்‌ வந்து பக்தியோடு விரும்பி,
அடிவணங்கும்‌- திருவடிகளில்‌ தலைவைத்து வணங்குகின்ற,
புயலே -மேகமே .(நிகரில்முகில்வண்ணனே ), வருக .; மகரக்குழையே ! -, என்‌ இரு கண்மணியே 1! -, வருக வருக –

——–

ஆரா வமுதொத்‌ திலவிதழின்‌
அமுதத்‌ திவலை மார்பொழுக
அரை நாண்‌ வடமு மணியுமருங்
கசையக்‌ குழையுங்‌ குண்டலமுஞ்‌
சீரார்‌ திருவிற்‌ பொலியுநுதல்‌
தீட்டுங்‌ குறுவேர்‌ வரும்பவருள்‌
செய்யுங்‌ கமல முகமிலங்கத்‌
திருந்தாட்‌ டுணைப்பொற்‌ றண்டையொலி
பார்மீ தெங்கள்‌ செவிகுளிரப்‌
பழகு நெறிநா டொறும்வளர்க
பசுந்தார்த்‌ துளவு மணங்கமழும்‌
படிநீ நடந்துன்‌ னடிபெயர்த்தெண்
வாரார்‌ களபக்‌ குரும்பைமுலை
வள்ளத்‌ தமுதுண்‌ டிடவருக
மகரக்‌ குழையே ! யென்னிருகண்‌
மணியே வருக / வருகவே. –63-.

ஆரா அமுது ஒத்து – (எவ்வளவு பருகினாலும்‌) திருப்திபிறவாத தேவாமிரு தத்தையொத்து,
இலவு இதழின்‌ அமுதத்திவலை – இலவம்பூப்போற்சிவந்தஉதடுகளிலூறும்‌ தேறல்நீரின்‌ துளிகள்‌,
மார்பு ஒழுக – மார்பிடத்திலே பெருகிவர,
அரை நாண்‌ வடமும்‌ மணியும்‌ மருங்கு அசைய – அரை நாண்கயிறும்‌ சிறுமணியும்‌ இடுப்‌பின்‌ பக்கத்தில்‌ அசைந்து (மெல்லென) ஒலிக்க,
குழையும்‌ குண்டலமும்‌- காதுகளில்‌ அணிந்துள்ள காதணியும்‌ (தொங்குகின்ற) குண்டலங்களும்‌, [
அசைய – அசைந்தாட,
சீர்‌ ஆர்‌ சிறப்புப்‌ பொருந்திய,
திருவில்‌ பொலியும்‌ நுதல்‌ – அழகிய வில்போல்‌ வளைத்த புருவங்களை யுடைய நெற்றியில்‌,
தீட்டும்‌ – எழுதியதுபோல,
குறுவேர்வு அரும்பசிறுவேர்வைத்துளிகள்‌ (இலேசாகத்‌) தோன்ற,
அருள்‌ செய்யும்‌ கமலமுகம்‌ இலங்க – கருணை பொழிந்து நன்மை செய்யும்‌ தாமரைமலர்‌ போல்‌ அழகிய திருமுகம்‌ ஒளிவிட,
திரு தாள்‌ துணை – அழகிய உனது இரண்டு பாதங்களிலும்‌, (அணிந்துள்ள),
பொன்‌ தண்டை ஒலி – பொன்னாலாகிய தண்டையின்‌ சப்தமானது,
எங்கள்‌ செவி குளிர – எங்களுடைய இருகாதுகளும்கேட்டு ரசிக்கும்படி,
பார்மீது – தரையின்‌ மேல்‌,
பழகும்‌ நெறி- நடைபழகுகின்‌ ற முறைமையின்‌ அழகு,
நாடோறும்‌ வளர்க – தினந்தோறும்‌ ஓங்கட்டும்‌ : (ஆகவே)
பசும்‌ தார்‌ துளவு மணம்‌ கமமும்படி ..பச்சைத்துளசிமாலைவாசனைவீசும்‌படி,
நீ நடந்து _ நீ தளர்நடையிட்டு,
உன்‌ அடி பெயர்த்து உனதுபாதங்களை மாறி மாறித் தூக்கி வைத்து,
என்‌ – என்னுடைய,
வார்‌ஆர்‌ -கச்சுப்பொருந்திய,
களபம்‌ குரும்பை முலைவள்ளத்து -சுந்துனம்‌ பூசப்படும்‌ தென்னங்குரும்பை போன்ற கொங்கைகளாகிய கிண்ணத்‌ தில்‌ [வட்டிலில்‌] (கரக்கும்‌)
அமுது உண்டிட – பாலைச்சுவைத்து உண்ண, வருக -; மகரக்குழையே! -, என்‌ இரு கண்மணியே – !, வருக வருக – ;

அருமைப்‌ பெருமான்‌ பிறவியொழித்‌
தருளும்‌ பெருமான்‌ கரதலஞ்சங்‌
காழிப்‌ பெருமான்‌ வானவர்க்கும்‌
அருநான்‌ மறைக்கு மெட்டாத
தரமப்‌ பெருமான்‌ பசுந்துளவத்‌
காமப்‌ பெருமா னேழுலகுநீ
தழைக்கும்‌ படிக்கன்‌ றளந்தநெடுஞ்‌
சரணப்‌ பெருமான்‌ மன்னுயிர்க்குங்‌
கருமப்‌ பெருமான்‌ முத்திவழி
காட்டும்‌ பெருமான்‌ பூம்பொகுட்டுக்‌
கமலா சனத்து வீற்றிருக்குங்‌
கன்னிப்‌ பெருமான்‌ றமிழ்க்குருகும்‌
பெருமைப்‌ பெருமா னென்னருமைப்‌
பிள்‌ப்‌ பெருமான்‌ வருகவே
பேரா யிரம்பெற்‌ றுயர்ந்ததிருப்‌
பேரைப்‌ பெருமான்‌ வருகவே.–64-

அருமைப்‌ பெருமான்‌ – கிடைத்தற்கரிய பெருமானும்‌, பிறவி ஒழித்து அருளும்‌ பெருமான்‌ – பிறவிப்பிணியை அகற்றிக்‌கருணைபுரியும்‌ பெருமானும்‌,
கரதலம்‌ – கைகளிடத்து,
சங்கு ஆழிபெருமான்‌ – சங்கினையும்‌ சக்கரப்படையினையும்‌ ஏந்திய பெருமானும்‌,
வானவர்க்கும்‌ – தேவர்களுக்கும்‌,
அருநான்மறைக்கும்‌ – பயிலுதற்கரிய நான்கு வேதங்களுக்கும்‌,
எட்டாத தருமப்‌ பெருமான்‌ – காண முடியாத அப்பாற்பட்ட (சாக்ஷத்‌) தருமமாகிய பெருமானும்‌,
பசும்‌ துளவத்‌ தாமம்‌ பெருமான்‌ – பச்சைத்‌திருத்துழாய்மாலையைத்‌தரித்த பெருமானும்‌,
ஏழ்‌ உலகும்‌ தழைக்கும்படிக்கு – மேலேழுலகங்களும்‌ நல்வாழ்வு வாழும்படிக்கு,
அன்று – திரிவிக்ரமனாய்‌ வளர்ந்தகாலத்து,
அளந்த – [தனது பெருங்‌ காலால்‌] அளந்து கொண்ட,
நெடும்‌ சரணப்‌ பெருமான்‌ – நீண்ட திருப்பாதங்களை யுடைய பெருமானும்‌,
மன்னுயிர்க்கும்‌ கருமப்‌ பெருமான்‌ -நிலை பெற்ற ஜீவன்களுக்கும்‌ [ அவையவையநுபவிக்கவேண்டிய]
கருமபலன்‌களை விதிக்கின்ற பெருமானும்‌,(கருமபலன்களையநுபவித்தபின்பு அவைகளுக்கு) முத்தி வழி காட்டும்‌ பெருமான்‌ – மோட்ச நெறியை யடைவதற்கான உபாயங்களைக்‌ காட்டித் தருகின்ற பெருமானும்‌,
பூம்‌ பொகுட்டுக்‌ கமலாசனத்து – கொட்டையினை உள்ளிட்ட.
தாமரைப்பூவினைத்‌ தவிசாகக்‌ கொண்டு அதனிடத்து,
வீற்றிருக்கும்‌ -தனிச்சிறப்போடு எழுந்தருளியிருக்கும்‌,
கன்னிப்‌ பெருமான்‌ -இலக்குமி தேவிக்குக்கணவனாகிய பெருமானும்‌,-கன்னி – என்றும்‌ அழியாதவன்
தமிழ்க்கு உருகும்‌பெருமைப்‌ பெருமான்‌ – ஆழ்வார்களின்‌ செஞ்சொல்லாகிய திவ்வியதமிழ்ப்‌ பாசுரங்ககாக்கேட்டு உள்ளம்‌ உருகியநுபவிக்கும்‌ பெருமையினையுடைய பெருமானும்‌,
என்‌ அருமை பிள்ளைப்‌ பெருமான்‌ -என்னுடையஅருமந்தன்ன குழந்தையாகிய பெருமானும்‌ (ஆகிய நீ) வருக .
பேர்‌ ஆயிரம்‌ பெற்று உயர்ந்த – சகஸ்ரநாமங்களைப்‌ பெற்று மேலோங்கிய, திருப்பேரை பெருமான்‌ –
தென்திரப்பேரையிலெழுந்தருளியிருக்கும்‌ மகரநெடுங்குழைக்காதரே | வருக

‘தருமப்‌ பெருமான்‌” என்றவிடத்து – கிருஷ்ணன்‌ தர்மம்‌ ஸநாதநம்‌, “சாக்ஷாத்‌ புண்ணியத்துக்குப்‌ பாலும்‌ சோறும்‌ இட்டன்றோ வளர்க்கிறோம்‌ ‘*(ஆருயிரப்படி – திருப்‌ பாவை” செ: 28) என்ற வாக்கியங்களை நோக்குக.

*கருமப்‌ பெருமான்‌” என்றது .. ‘*கர்மண்யேவ அதிகாரஸ்தே மாபலேஷு காதாசந”” என்றபடி (கீதை : சாங்கிய யோகம்‌ 47) :

முத்திவழிகாட்டும்‌ பெருமான்‌ என்றது “ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச: என்றபடி

————-

அம்புலிப்‌ பருவம்‌–(சாம தான பேத தண்ட உபாயங்களால் சந்திரனை விளையாட அழைக்கின்றார் )

மதியுடைத்‌ தாயமண்‌ டலம்பெற்று வானமுழு
மதிக்கடவு ளெனவருதலால்‌
வடியிட்ட தெள்ளமுத மயமாகி யானந்த
மகரால யத்தெழுதலால்‌
, நதியோடர வறுகெருக்‌ கணியுஞ்‌ சடைக்காட்டு
நம்பனுக்‌ கொருகண்ண தாய்‌
நாடொறுமுயிர்ப்பயிர்‌ தழைப்பவருள்பொழிவதால்‌
நற்றுணை யுனக்கிவன்்‌ காண்‌
முதிரவிளை யுங்கொழும்‌ பவளக்‌ குலைசாலி
மூடுதொறும்‌ வாய்மடைதொறும்‌
மூரிப்‌ பகட்டுவரி வாளைவெடி தரவியலை
மோதும்‌ புனற்கேணியும்‌
அதிருமணி மதகும்வளை யுகள்வழுதி நாடனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–65-(சிலேடையணி )

மதியுடைத்தாய மண்டலம்‌ பெற்று – சந்திர மண்டலம்‌ என்னும்‌ பெயர்‌ வழங்கப்‌ பெற்று,
வானம்‌ முழுவதும்‌ – ஆகாச முற்றிலும்‌.
மதிக்கடவுள்‌ என வருதலால்‌ – சந்திரனாகியகடவுள்‌என்று சொல்லும்படி நீ வருதலால்‌, ்‌

[இக்‌ குழைக்காதன்‌ ] மதியுடைத்தாய மண்டலம்‌பெற்று – ஞானம்‌ முதிர்ந்த நித்யஸூரிகள்‌ உடைத்தாய வைகுண்டலோகத்தைப்‌பெற்று,
வானம்‌ – தேவர்‌ அனைவரும்‌,
முழுமதிக்கடவுள்‌  என வருதலால்‌ – பூர்ண ஞான முடைய தெய்வமென்று சொல்லும்படிவருதலால்‌,

வடியிட்ட தெள்ளமுத மயமாகி – வடிக்கட்டித்‌ தெளிந்த அமிருத மயமாகி,
ஆனந்த மகராலயத்து எழுதலால்‌ .-மகிழ்ச்சியாகிய கடலில்‌ தோய்ந்து தோன்றுவதால்‌,

[ இக்‌ குழையன்‌ ] வடியிட்ட தெள்ளமுத மயமாகி – சாரமாக வெடுத்த தெள்ளிய அமிருதமயமாகி,
ஆனந்த மகராலயத்து எழுதலால்‌ -பேரானந்தக் கடலாகிய வைகுண்டத்தில்‌ [நித்யவாசஞ்செய்யத்‌] தோன்றுவதால்‌,

நதியோடு – கங்கையோடு,
அரவு அறுகு எருக்குஅணியும்‌ – பாம்பு அறுகம்புல்‌ வெள்ளெருக்கம்பூ இவற்றைஅணியாகச்‌ சூடும்‌,
சடைக்காட்டு நம்பனுக்கு – சடாபாரத்‌தொகுதியையுடைய சிவபிரானுக்கு,
ஒரு கண்ணதாய்‌ – (மூன்றுகண்களில்‌) ஒரு கண்ணாய்‌(இடக்கண்ணாய்‌) இருத்தலால்‌,

[இக்‌குழையன்‌ ] நதியோடு……… நம்பனுக்கு — , ஒரு கண்ணதாய்‌ – ஒப்‌பற்ற கண்போன்றவனாய்‌ இருத்தலால்‌,

நாள்தோறும்‌ உயிர்ப்பயிர்‌ தழைப்ப அருள்‌ பொழிவதால்‌ -தினந்தோறும்‌ உயிருடைய பயிர்கள்‌ செழிக்கும்படி
(நிலவாகிய)கருணையை (நீ) சொரிதலால்‌,

[இக்குழையன்‌ ] நாள்தோறும்‌………பொழிவதால்‌ –தினந்தோறும ஆன்மாக்களாகிய பயிர்கள்‌ ஈடேறுதற்குக்‌ கருணையாகிய மழையைச்‌ சொரிதலால்‌,

உனக்கு -[ மேற்‌ கூறிய பண்புகளையுடைய] உனக்கு,
இவன்‌ — (உன்னிடமுள்ள அதே பண்புகளையுடைய) இந்த மகர குழைக்காதன்‌,
நல்‌துணை . உற்ற சினேகிதனாவன்‌ :;
(ஆதலால்‌, அவனோடு அம்புலீ விளையாடவா என மேல்‌ இயைத்துப் பொருள் கொள்ள வேணும்‌) ,
முதிர விளையும்‌ – நன்கு முதிர்ந்து விளைந்திருக்கின்ற,
கொழும்‌ – செழித்த,
பவளக்குலை சாலி .. செந்நிறக்‌ கதிர்களைக்‌ கொண்ட நெற் பயிர்களின்‌,
மூடுதொறும்‌ . வேரினிடத்திலும்‌ (அடிப்பாகத்‌திலும்‌),
வாய்‌ – கால்வாய்களின்‌,
மடைதொறும்‌ – நீரணையினிடத்‌திலும்‌,
மூரி பகடு வரி வாளை – வலிமை பொருந்திய பருத்த உடற்‌கோடுகளை யுடைய வாளைமீன்‌,
வெடிதர – தாவிப் பாய, (அதனால்‌அஞ்சி)
வளை – சங்குப் பூச்சிகள்‌,
வியலை மோதும்‌ – அகன்ற இடத்தைத் தாக்குகின்ற,
புனல்‌ . சிற்றலைகளைக்‌ கொண்ட நீர்‌ நிரம்பிய,
கேணியும்‌ – கிணறுகளிலும்‌,
அதிரும்‌ அணி மதகும்‌ – ஒலிக்கின்ற அழகிய மதகினிடங்களிலும்‌,
உகள்‌ – நழுவி விழுகின்ற,
வழுதி நாடனுடன்‌ – பாண்டிய நாட்டுத்தலைவனாகிய மகரக்குழைக்‌ காதனுடன்‌,
அம்புலீ – சந்திரனே !
ஆட வா – விளையாட வருவாய்‌ :
ஆழிநீர்வண்ணன்‌ எனும்‌ .. கடலினீர்‌ வண்ணன்‌ என்னும்படியுள்ள,
மாதவனுடன்‌ . இலக்குமிகணவனாகிய மகரநெடுங்குழைக்காதனுடன்‌,
அம்புலீ . சந்திரனே
ஆடவா – விளையாட வருவாய்‌ ; வாழி – முன்னிலை யசை

மாதவனுடன்‌” என்று பாடபிருப்பின்‌, “சக்கரப்படையை யுடைய மாதவன்‌” எனப்‌ பொருள்‌ பட்டுச்‌ சிறக்கும்‌.
அம்புலி . அழகு புல்லப்‌ பெற்றிருப்பது என்ற காரணம்‌ பற்றிச்‌ சந்திரனுக்கு வந்த பெயர்‌,

———-

இருவினைச்‌ செனனவலைக்‌ கட்டறுத்‌ தழியாத
இன்பவீ டெய்தும்‌ பொருட்‌
டிணைமலர்ச்‌ சேவடி யடைந்தவர்க்‌ குதவிடுவன்‌
இவன்‌ வருணஞாதரிக்குந்‌
திருசந்திச்‌ சமுகதீர்த்‌ தத்துறைத்‌ தீம்புனல்‌
திவலையொரு சிறிதுபடிலோ
செகமண்ட லத்துன்‌ முகமண்டல முயற்கறை
சிதைத்துவண்‌ டடைகிடப்ப
முருகுவிரி தருநறுங்‌ குமுதவாய்‌ மடமங்கை
முகிண்முலை மணம்புணர்ந்து
மூன்னுங்‌ களங்கமற்‌ றப்பாலும்‌ வைகுண்ட
முத்திமண்‌ டபமெய்தலாம்‌
அருமறைக்‌ குரியவொரு பொருளா யிருப்பனவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--66-

இருவினை செனனவலை கட்டறுத்து – நல்வினை தீவி னையாகிய பிறப்புவலையிலகப்பட்டு உழலுதலைப்போக்கி,
அழியாத இன்பவீடு எய்தும்‌ பொருட்டு – (என்றைக்கும்‌) சிதையாத மோட்‌ சத்தை அடையும்பொருட்டு,
இணைமலர்ச்சேவடி – இரண்டு திருப்‌ பாதகமலங்களை,
அடைந்தவர்க்கு – (நம்பி) சரண்புகுந்தவர்க்கு,
உதவிடுவன்‌-(அவர்விரும்பியபடி ) மோட்சத்தைக்‌ கொடுத்திடுவான்‌:
வருணன்‌ ஆதரிக்கும்‌ . வருணபகவான்‌ விரும்பி நீராடும்‌,
திரு சந்திச்‌சமுகதீர்த்தத்துறை .[சகலதீர்த்தங்களும்‌ கூடும்‌ புனற்றுறையாகிய முச்சந்திச்‌ சமூகதீர்த்தம்‌ என்னும்‌துறையிலுள்ள,
தீம்புனல்‌ – தெளிவான நீரின்‌,
திவலை ஒருசிறிது படில்‌ – துளி சிறிதுமேனிமேல்பட்டாலும்‌,
(நீ) செகமண்டலத்து – இந்தநிலவுலகத்தில்‌ தெரியும்படியுள்ள
உன்‌ முகமண்டல முயற்கறை . உனது முகப்பரப்பிலுள்ள முயல்‌ போன்ற களங்கம்‌,
சிதைத்து – இல்லாது ஒழியச்செய்து, (மேலும்‌)
வண்டு அடை கிடப்ப .. வண்டுகள்‌ நெருங்கித் தங்கி யிருக்கும்படி,
முருகு விரிதரு . தேன்பெருகுகின்ற,
நறும்‌ குமுதவாய்‌ மடமங்கை – வாசனையுள்ள வாயையுடைய ஆம்பலாகிய மடப்பம்‌ பொருந்திய பெண்ணின்‌,
முகிழ்‌ முலைமணம்‌ புணர்ந்து – அரும்புகின்ற (பொகுட்டாகிய) கொங்கையினைச்சேர்ந்து திருமணம்‌ புரிந்து,
(அதனால்‌) முன்னும்‌ களங்கம்‌ அற்று – முன்னினும்‌ களங்கம்‌அற நீங்கப்பெற்று,
அப்பாலும்‌ . அதற்குமேலும்‌,
வைகுண்ட முத்திமண்டபம்‌ எய்தலாம்‌ – பரமபதத்திலுள்ள திருமாமணி மண்டபத்தையடையலாம்‌ :
அருமறைக்கு உரிய – ஓதுதற்கு அரிய வேதங்களுக்குப்‌ பொருந்திய,
ஒருபொருளாய்‌ – ஒப்பற்ற செல்வமாய்‌, அவன்‌ இருப்பன்‌ .. அந்தக்குழைக்காதன்‌ இருப்பான்‌
[அப்படிப்பட்டவணோடு ] அம்புலீ -, ஆட வா – விளையாட வருவாய்‌ :
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ -, ஆட வா –
விளையாட வருவாய்‌ ; வாழி – அசை,

————-

வெவ்வரா விடமொழுகு கறையனற்‌ பகுவாய்‌
விழுங்கிமீ ளவுமுமிழ்தரும்‌
மிச்சிலென்‌ றுலகிலுரை செய்வரத னாலுனுடல்‌
வெளுத்தற மெலித்துகுப்புற்‌
றெவ்வுலக முந்திரிந்‌ தாவதென்‌ பெரியோரை
எளியோர்‌ துணைக்கோடனன்‌
றிருகனற்‌ கட்செவி பகையுடித்‌ தற்குவணன்‌
; இவனிட்ட வேவல்கடவான்‌
செவ்வுபட வெட்டிரட்‌ டித்தகலை யுடையனீ
சிந்திப்ப தற்கரியவாந்‌
திகழருங்‌ கலைகளறு பத்துநா லுடையவொரு
செம்மலிவன்‌ வைகுண்டமாம்‌
அவ்வுலக முந்தாகத்‌ தருவ னஃதறிந்‌
கும்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புல்‌ீ யாடவாவே.–67-

வெவ்‌ அரா – கொடிய இராகுகேதுக்கள்‌ என்ற பாம்புகளின்‌,
விடம்‌ ஒழுகு கறை அனல்‌ – விஷம்பெருகிக்கறையாகி வெதுப்‌புகின்ற,
பகுவாய்‌ – பிளவுண்ட வாயினால்‌,
விழுங்கி – [கிரகணகாலங்‌களில்‌] விழுங்கி,
மீளவும்‌ உமிழ்தரும்‌ மிச்சில்‌ – மறுபடியும்‌ வெளி கக்‌குகின்ற எச்சில்‌,என்று -,
உலகில்‌ உரை செய்வர்‌ – உலக மக்கள்‌ பழிச்சொல்‌ கூறுவர்‌ ;
அதனால்‌ – அதனால்‌ நாணி,
உன்‌ உடல்‌ வெளுத்து – உன்னுடைய மேனி வெளிறி,
அற மெலிந்து – மிகவும்‌ மெலிவுற்று,
குப்புற்று . தலைகவிழ்ந்து,
எ உலகமும்‌ – எல்லாவுலகங்‌களிலும்‌,
திரிந்து – சஞ்சரித்து,
ஆவது – ஆகும் பயன்‌,
என்‌ – என்ன(எதுவும்‌ இல்லை): [ஆகவே நான்‌ சொல்வதைக் கேட்பாயாக]
பெரியோரை – தம்மினும்‌ மிக்க சான்றோரை,
எளியோர்‌ – அவரினும்‌ தாழ்ந்தோர்‌,
துணைக்கோடல்‌ நன்று – தமக்குச் சகாயமாகக்‌ கொள்ளுதல்‌ நல்லது :
கனல்‌ இரு கட்செவி – விஷத்தினால்‌ வெதுப்புகின்ற இரண்டு பாம்புகளின்‌ (இராகு கேதுக்களின்‌),
பகை முடி.த்தற்கு -விரோதத்தை நீக்குவதற்கு,
உவணன்‌ -கருடன்‌ (இருக்கிறான்‌) :
இவனிட்ட ஏவல்‌ கடவான்‌ – அவனுக்குத்தலைவனாகிய இவன்‌ சொன்ன கட்டளையை அவன்‌ மீறமாட்டான்‌ :
நீ – நீயோ,
செவ்வு பட – தேர்‌மையுண்டாக,
எட்டு இரட்டித்த கலை உடையன்‌ -பதினாறு கலைகளை யுடையவன்‌ :
இவன்‌-இவனோ (இக்குழைக்காதனோ),
சிந்திப்பதற்குஅரியவாம்‌ – நினைத்தற்கும்‌ அரியவாகிய,
திகழ்‌ அருங்‌ கலைகள்‌ – விளங்குகின்ற அரிய கலைகள்‌,
அறுபத்துநாலுடைய – அறுபத்து நான்கினையுடைய,
ஒரு செம்மல்‌ – ஒரு பெருமையன்‌ ;
வைகுண்டமாம்‌ ௮ உலகம்‌ . வைகுந்தமாகிய பரமபத லோகத்தையும்‌,
முந்தாகதருவன்‌ – (தான்‌) முற்பட்டுக்கொடுப்பன்‌ :
அஃது அறிந்து – அந்தப்‌ பண்பினையறிந்து,
அம்புலீ -, ஆட வா – ;
ஆழிநீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ ,, ஆட வா .. ,- வாழி – அசை.

சந்திரன்‌ பதினாறு கலைகளையுடையவன்‌, அந்தப்‌ பதினாறு கலைகளில்‌ கிருஷ்ணபட்சத்தில்‌ முதற்கலையை அக்கினியும்‌,
இரண்டாங்கலையைச்‌ சூரியனும்‌, மூன்றாங்கலையை விச்வேதேவரும்‌, நான்காங்கலையை வருணபகவானும்‌, ஐந்தாங்கலையை வஷட்காரக்‌
கடவுளும்‌, ஆறாங்கலையை இந்திரனும்‌, ஏழாங்கலையைத்‌ தேவரிஷி களும்‌, எட்டாங்கலையை ஒற்றைத்தாளனான அஜனென்‌ பவனும்‌,
ஒன்‌ பதாங்கலையை எமனும்‌, பத்தாங்கலையை வாயுவும்‌, பதினோராங்‌ கலையை உமையும்‌, பன்னிரண்டாங்கலையைப்‌ பித்ருதேதேவதைகளும்‌,
பதின்மூன்றாங்கலையைக்‌ குபேரனும்‌, பதினான்‌ காங்கலையைப்‌ பசுபதி யும்‌, பதினைந்தாம்கலையைப்‌ பிரஜாபதியும்‌ உண்ண

ஒற்றைக்‌ கலையஞன சந்திரன்‌ அமாவாசையினன்‌று சூரியன்‌ ஜலம்‌ ஓஷதிகள்‌ பசுக்கள்‌ என்ற இவற்றில்‌ வசித்து, ஓஷதியில்வசிக்கும்‌ தன்னை
உண்ட பசுக்களின்‌ பாலிலிருந்து தோன்றிய நெய்யினால்‌ யஜ்ஞங்‌ களில்‌ அக்கினியில்‌ ஓமஞ்செய்யப்படுவதனால்‌ ஆப்யாயனமடைந்து,
(திருப்தியுற்று) புதிது புதிதாகக்கலைவளர்ந்துவரச்‌ சுக்கில பட்சத்‌ தில்‌ வளர்ந்து வருகின்றனன்‌ என்பதறியவேண்டுவது.

——–

பைத்தலை நெடுஞ்சுடிகை விடமொழுகு கட்செவிப்‌
படவரவு தொடரினு நீ
படரொளி மழுங்கிவான்‌ முகடொளிக்‌ குவைபெரும்‌
பாம்புதீண்‌ டிக்கிடந்த
நித்திரை மயக்கத்து மொளிமழுங்‌ கானிவன்‌
நெடியவா னிடைநுழைந்து
நிலையிலா தோடித்‌ திரிந்துழல்வை நீயிவன்‌
நீடுழி யடிபெயர்ந்து
மூத்தவா ணகைவிமலை யடிவருட வானவர்கள்‌
முனிவரஞ்‌ சலிசெய்யநீள்‌
முத்திதரும்‌ வைகுந்தம்‌ வீற்றிருப்ப வனந்த
முறைமுறை தெதரிந்துபார்க்கில்‌
அத்தகைமை தோறுமுன்‌ ஸிலுமுயர்ந்‌ தவனிவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–68-

பைத்தலை . படமுடைய தலையையும்‌,
நெடும்‌ சுடிகை -பெரிய உச்சியையும்‌,
விடம்‌ ஒழுகும்‌ – விஷத்தைக்‌ கக்கும்‌,
கட்‌செவிப்‌ பட அரவு – (தமது) கண்ணையே காதாகக்‌ கொண்ட பெரிய (இராகுகேது என்னும்‌) பாம்புகள்‌,
தொடரினும்‌ – உன்னைப்‌ பீடிக்‌கத்தொடர்ந்து வந்தாலே,
நீ- , (அஞ்சி) படரொளி மழுங்கி _மிக்க வொளி மங்கிப்போய்‌,
வான்‌ முகடு ஒளிக்குவை – ஆகாயவுச்சியிலே (மறைந்து) ஒளிந்து கொள்வாய்‌ ;
இவன்‌ – இந்தக்‌குழைக்காதனோ,
பெரும்‌ பாம்பு தீண்டி – ஆதிசேடனாகிய பெரிய பாம்பு பற்றி,
கிடந்த நித்திரைமயக்கத்தும்‌ – படுத்துக்கிடந்த மயக்‌கத்தூக்கத்திலும்‌,
ஒளி மழுங்கான்‌ – (தனது) பொலிவாகிய ஒளி மங்கிப்போகமாட்டான்‌ :
[மேலும்‌] நீ–, நெடிய வானிடை நுழைந்து – பெரிய ஆகாயத்திடத்து புகுந்து,
நிலையிலாது ஓடித்‌ திரிந்து – ஒரிடத்திலும்‌ நிலைத்து நிற்காமல்‌ ஓடிக்‌ கொண்டே
(எங்கும்‌) அலைந்து, உழல்வை – வருந்துவாய்‌ :
இவன்‌ – இக்‌ குழைக்காதன்‌,
நீடுழி – நீண்ட விண்ணில்‌,
அடி பெயர்ந்து – (தன்‌) திருவடியால்‌ (அளக்க) அதனைத்தூக்கிவைத்து,
(அதனாலேற்பட்ட தோவுதீர) முத்தம்‌ வாள்‌ நகை விமலை . முத்துப்போல்‌ ஒளி விடு கின்ற பற்களையுடைய இலக்குமிதேவி,
அடி வருட – (திருப்பாதங்‌களைத்‌) தடவிக்‌ [கைகளால்‌] பிடித்துவிட,
வானவர்கள்‌ முனிவர்‌ அஞ்சலி செய்ய – தேவர்களும்‌ இருடிகளும்‌ கைகூப்பி வணங்க,
முத்திதரும்‌ நீள்‌ வைகுந்தம்‌ வீற்றிருப்பவன்‌ – மோட்சத்தைக்‌ கொடுக்கும்‌ சாசுவதமான வைகுண்ட லோகத்தில்‌ தனிச்சிறப்‌ போடு எழுந்தருளியிருப்பவன்‌ :
அந்த முறை – அந்த ரீதியை (வகையை),
முறை தெரிந்து பார்க்கில்‌ – முறைமைப்படி ஆராய்ந்து பார்த்த்தால்‌,
அ தகைமை தோறும்‌ – அந்தப்‌ பண்புகளிலெல்லாம்‌, உன்னிலும்‌ உயர்ந்தவன்‌ இவன்‌ .. உன்னைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ இந்தக்‌ குழைக்காதன்‌ :
(ஆகவே) அம்புலீ !-, ஆட வா -(இப்படிப்பட்ட மேலானவணனோடு) விளையாட வருவாயாக :
ஆழி நீர்‌வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ1-, ஆட வா-,-வாழி. அசை,

““பள்ளிகொள்ளுமிடத்தடி கொட்டிட”” என்றாள்‌ ஆண்டாள்‌ ; *வடிவிணையில்லா மலர்‌ மகள் மற்றை நிலமகள்‌ பிடிக்கும்‌ மெல்லடியைக்‌ கெரடுவினையேனும்‌
பிடிக்க”? என்றார்‌ நம்மாழ்வார்‌ (திருவாய்‌ 9-2 -10)

——–

செங்குருதி யலைமண்டி யாறெடுத்‌ தோடச்‌
சிஸலக்கால்‌ வளைத்துவிசயன்‌
தேற்றரச னைக்கொன்று கூற்றருந்‌ தும்படி
சினத்திடும்‌ போர்முகத்துப்‌
பொங்குகதி ராயிரந்‌ தங்குசெஞ்‌ சுடரவன்‌
பொழுதுகா ணாமலொளிர்செம்‌
பொன்னிறத்‌ திகிரியா லிவன்மறைத்‌ தனனன்று
போதாக்‌ குறைக்கொளிரும்வெண்
சங்குகொண் டுன்னயு மறைத்திடா மற்கலை
தளர்ந்துமெலி வெய்துறாமல்‌
தாதள வெருப்பொடித்‌ தெறியாமல்‌ முன்னில்‌
தவழ்ந்துவிகா யர்டவாவென்
றங்கைமலர்‌ விரல்குனித்‌ துனையழைத்‌ தனனிவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--69-

செங்குருதி – சிவந்தஇரத்தமானது,
அலைமண்டி -அலைகளாக நெருங்கி,
ஆறு எடுத்து ஓட – ஆறாகப்பெருகியோடும்படி,
விசயன்‌ – அருச்சுனன்‌,
சிலை கால்‌ வளைத்து – தன்‌ வில்‌லின்‌ தண்டினை நன்றாக வளைத்து,
தேற்று அரசனைக்‌ கொன்று -உடலை நன்குதேற்றி வளர்த்த சகஸ்ரபாஹு என்ற அரசனைக் கொன்று,
(மேலும்‌) கூற்று அருந்தும்படி சினந்திடும்‌ -யமனுண்ணும்படி (பகைவரைக்‌) கோபிக்கும்‌,
போர்‌ முகத்து -போர்க்களத்தில்‌,
பொங்கு கதிர்‌ஆயிரம்‌ தங்கு செஞ்‌ சுடரவன்‌-சொலிக்கின்ற ஆயிரம்‌ கிரணங்களைத்‌ தன்னிடத்துக்‌ கொண்ட செவ்விய சூரியனுடைய,
பொழுது காணாமல்‌ – பகற்பொழுது காண முடியாதபடி,(எங்கும்‌ இருள்‌ பரவும்படி)
ஒளிர்‌ செம்பொன்‌ நிறத்திகிரியால்‌ – (தன்‌ கையில்‌)பொலிகின்ற சிவந்த பொன்னின்‌ நிறத்தைக்‌ கொண்ட திருவாழியினால்‌,
இவன்‌ -இந்த எம்பெருமான்‌ (கண்ணன்‌),
அன்று – அந்தப்‌ பாரதயுத்தத்‌தில்‌ [பதினான்காம்‌ நாள்போரில்‌],
மறைத்தனன்‌ – (அந்தச்சூரியனை )மறைத்து விட்டான்‌ :
போதாக்குறைக்கு-(தனக்கு இன்னும்‌) திருப்தி பிறவாத குறைதீர, ஒளிரும்‌ வெண்சங்குகொண்டு – விளங்குகின்ற வெள்ளிய பாஞ்சசன்னியத்தைக்‌ கொண்டு,
(இப்போது) உன்னையும்‌ -, மறைத்திடாமல்‌ – மறையச்‌ செய்து விடாமல்‌,
கலை தளர்ந்து மெலிவு எய்துறாமல்‌ – உன்னுடைய ஒளிக்கலைகள்‌ மழுங்கி மெலிந்து போகாமல்‌,
தாது அளவு எரு- புழுதிகலந்த எருவை, பொடித்து – மேலும்‌ துகளாக்கி,
எறியாமல்‌ – உன்மீது வீசியெறியாமல்‌,
முன்‌னில்‌ – (எனக்கு) முன்பாக,
தவழ்ந்து – மெதுவாக நகர்ந்து,
விளை யாட வா என்று – (என்னோடு) விளையாடுதற்கு வருவாயாக என்று,
இவன்‌ -, அம்‌ கை மலர்‌ விரல்‌ குனித்து – அழகியகையில்‌ உள்ள பூப்‌போல்மெல்லிய விரலைவளைத்து,
உனை அழைத்தனன்‌ – உன்னை அழைக்கின்றுன்‌ :
(ஆகவே) அம்புலீ /-, ஆட வா- ; ஆழி நீர்‌ வண்ணனேனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ-, ஆடவா -;வாழி – அசை.

———

கூறருந்‌ துதியைநீ யுடையவ னிவனமரர்‌
கூறருந்‌ துதியையுடையான்‌
குறைபடு தடங்கலை களுடையனீ யிவனுமோ
குறையா த கலைகஞுடையான்‌
வீறுதரு முருவிஸி மதிக்குடைய னீயிவன்‌
விதரண மதிக்குடையவன்‌
விண்ணிடை கரந்தொளி யொளித்திடுவை
நீயிவன்‌
வேதநுட்‌ பொருளினொளியான்‌
ஊறுபட வோடித்‌ திரிந்திகாத்‌ திடுவைநீ
ஒருநாளு மிளையானிவன்‌
உவரிப்‌ புனற்பங்க மூடுதிப்‌ பாயிவனும்‌
உம்பரா மியினுதிப்போன்‌
ஆறலைபுரட்டு பொருனா நெடுந்துறைவன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–70-

நீ–, கூறு அரும்‌ துதியை- சொல்லுதற்கரிய (இல்லாத) துதிகளை, உடையவன்‌ .- :
இவன்‌ – இக்குழைக்காதன்‌,
அமரர்‌ – தேவர்களும்‌,
கூறு அரும்‌. சொல்லுதற்கு அருமையான (மேன்மையான),
துதியை .- துதிகளை,
உடையான்‌ -,கொண்டவனா யிருக்கிறான்‌ :
நீ -, குறைபடு தட கலைகள்‌ உடையன்‌ – குறைந்து கொண்டே வருகின்ற நல்ல கலையொளிகளை யுடையவன்‌ :
இவனு மோ – இவனோ, குறையாத கலைகளுடையான்‌ _பரிபூரணமான கலைகளனைத்தையும்‌ உடையவனுரயிருக்கிறான்‌ :
நீ-, வீறு தரும்‌ – பெருமையையுடைய,
உருவிவி – மன்மதனுடைய,
மதி குடையன்‌ _ ( சந்திர] வட்டக்குடையரயிருக்கிறாய்‌ :
இவன்‌ – இவனோ,
விதரண மதிக்கு – சாமர்த்தியமுள்ள அறிவினுக்கு,
உடையவன்‌ – உரியவன்‌
நீ, விண்ணிடை கரந்து – ஆகாயத்திலே மறைந்து,
ஓளி ஓளித்‌ திடுவை – பிரகாசத்தை வெளிவிடாது செய்கின்றாய்‌ :
இவன்‌ – இவனோ,
வேத நுண்‌ பொருளின்‌ ஒளியான்‌ – வேதங்களின்‌ நுட்பமா கிய விடயங்களில்‌ பிரகாசிப்பவன்‌ : [ அவைகளுக்குப்‌ பிரகாசம்‌ அளிப்பவன்‌ ] :
நீ -, ஊறுபட – காயமுண்டாகும்படி,
ஓடித்திரிந்து – ஆகாயவிடமெங்கும்‌ ஓடிச்சஞ்சரித்து,
இளைத்திடுவை – (உடல்‌) தேய்ந்து மெலிந்து போகிறாய்‌ :
இவன்‌ – இக்குழையணோ,
ஒருநாளும்‌ இளையான்‌ – என்றைக்கும்‌ மெலிவடையான்‌
(நீ) உவரிப்புனல்‌பங்கம்‌ ஊடு – கடல்நீரின்‌ சேற்றிலிருந்து,
உதிப்பாய்‌ – தோன்றுகின்‌றாய் :
இவனும்‌ -, உம்பர்‌ ஆழியின்‌ – மேலிடத்திலுள்ள திருப்பாற்‌ கடலில்‌,
உதிப்போன்‌ – தோன்றுவான்‌ :
(மேலும்‌ இவன்‌) ஆறு அலை புரட்டும்‌ பொருனாநதி தெடும்‌ துறைவன்‌ . (பாயும்‌) வழியிலே அலை களைப்‌ புரட்டிக்கொண்டு வருகின்ற தாமிரபரணியாற்றின்‌ [கரையி லுள்ள ]பெரியநீர்த்துறைகளுக்குத்‌ தலைவன்‌ :
(எனவே) அம்புலீ /-, ஆட வா .) ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ அம்புலீ ! _ ஆட வா? — வாழி – அசை,

——–

சந்தப்‌ படாமுலைத்‌ தார்குழற்‌ கோமளத்‌
தையல்சா னகிபொருட்டுத்‌
தடமதி லிலங்கா புரம்பொடி படுத்தித்‌
தகர்த்துமுடி பத்துமண் மேற்‌
சிந்தச்‌ சரந்தொட்டச்‌ சிலைவீர ராகவன்‌
சிறுகுழந்‌ தைப்பிள்‌காயாத்‌
திருவிரற்‌ றலைசுட்டி யுனையழைத்‌ தால்வரச்‌
செய்யா திருக்கமுறையோ
முந்தப்‌ பெருந்தக்கன்‌ வேள்வியிற்‌ றேவர்கள்‌
முறிந்துதிசை கெட்டோடுநாள்‌
முழுமதிக்‌ கடவுணீ பரிபவப்‌ பட்டகதை
மொழியக்‌ கணக்குமுண்டோ
அந்தக்‌ கணக்கின்று வந்திருக்‌ கின்றதினி
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.--71-

சந்தம்‌ – அழகு பொருந்திய,
படாம்‌ – சீலைபோர்த்த,முலை – கொங்கைகளையும்‌,
தார்‌ . பூமாலையையணிந்த,
சுழல்‌ – கூந்‌தலையுமுடைய,
கோமளம்‌ தையல்‌ – இளமையழகு பொருந்திய பெண்‌ணாகிய,
சானகி பொருட்டு-சீதாபிராட்டியின்‌ நிமித்தமாக, (அவளைச்‌சிறைமீட்டற்பொருட்டு),
தட மதில்‌ இலங்காபுரம்‌ பொடிபடுத்தி .-பெரியமதில்களைக் கொண்ட இலங்கைமாநகரைத்‌ துகளாக்கி யழித்து,
(அதன்‌ அரசனாகிய இராவணனது) முடிபத்தும்‌ தகர்த்து – பத்துத்‌ தலைகளையும்‌ சிதறவடித்து,
மண்‌ மேல்‌ சிந்த – தரையின்‌ மேல்‌ (புழுதிபட) விழும்படி,
சரம்‌ தொட்ட – அம்பு தொடுத்த,
௮ சிலை வீரராகவன்‌ – வில்லையேந்திய அந்தஇராமபிரான்‌,
(இப்போது மகரநெடுங்‌குழைக்காதனாய்‌) சிறு குழந்தைப்பிள்ளையா – சிறிய ஆண்குழந்தையாகி,
திரு விரல்தலை சுட்டி – அழகிய விரலின்‌ நுனியினால்‌ சுட்‌டிக்காட்டி,
உனை அழைத்தால்‌ – உன்னை (விளயாட)க்‌ கூப்பிட்‌டால்‌,
வரச்செய்யாதிருக்க முறையோ – (நீ) வாராதிருத்தல்‌ தகுதியாகுமா (ஆகாது);
முந்த – முன்னொரு சமயம்‌,
பெருந்‌ தக்கன்‌ வேள்‌வியில்‌ – பெரிய தக்ஷப்பிரஜாபதியின்‌ யாகத்தில்‌,
தேவர்கள்‌ முறிந்து திசைகெட்டு ஓடும்‌ நாள்‌ – தேவர்கள்‌ முறியடிக்கப்பட்டுத்‌ திசை தெரியாமல்‌ சிதறியோடிய காலத்து,
முழுமதிக்கடவுள்‌ நீ – பூர்ணசந்‌திரனாயிருந்த நீ,
பரிபவப்பட்ட கதை – அவமானமடைந்த நிகழ்ச்‌ சியை, (தேய்ந்து போனதை),
மொழிய . (நான்‌) சொல்லவேண்டிய,கணக்கும்‌ உண்டோ ? –
நியாயமும்‌ உளதோ? (அனைவர்க்கும்‌ தெரியுமே) :
அந்தக்‌ கணக்கு – அந்தநாள்‌ நியாயம்‌ [நீ பட்டபாடு],
இன்று வந்திருக்கின்றது – இந்த நாளிலும்‌ [உனக்கு] ஏற்படவிருக்‌ கின்றது :
[ஆகவே] இனி – இனிமேல்‌ தாமதிக்காமல்‌, அம்புலீ -,ஆட வா -: ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ –, அம்புலி !ஆடவா–வாழி -அசை

——

தவநெறிக்‌ கவுதமன்‌ பன்னியக லிகைபுரந்‌
தரனொடு மணந்தவதனால்‌
தவமூனி யறைந்தசா பத்திலவள்‌ கல்லுருத்‌
தாங்கிய தொழித்ததெங்கோன்‌
புவனமொரு மூன்றுமீ ரடியா லளக்கின்ற
பொற்கழற்‌ றுகளுனக்கும்‌
புனிதபூ ரணசெவ்வி முகமண்ட லக்கறைப்‌
புரைதீர வரமளிக்குஞ்‌
சிவனுமய னும்வெள்களா யயிரா பதத்தனுஞ்‌
செஞ்சுடர்க்‌ கடவுளோனுந்
தேவர்முப்‌ பத்துமுக்‌ கோடியு மறுமுகச்‌
செம்மலுங்‌ கைம்மலைக்கோட்‌
டவனுமூறை முறைபரவு நிகரில்முகில்‌
வண்ணனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.,--72-

தவ நெறி கவுதமன்‌ -தவவொழுக்கத்தை மேற்‌ கொண்டிருந்த கெளதம முனிவனின்‌,
பன்னி அகலிகை – பத்தினி யாகிய அகலிகை,
புரந்தரணொடு – தேவேந்திரனோடு,
மணந்த அதனால்‌ – புணர்ந்த காரணத்தினால்‌,
தவமுனி – அந்தக்கெள தமன்‌,
அறைந்த – சொன்ன.
சாபத்தில்‌ – சாபத்தினால்‌,
அவள்‌ – அந்தஅகலிகை,
கல்லுரு தாங்கியது ஒழித்தது – கல்லாய்‌ உருவந்தாங்கிக்‌ கிடந்ததை நீக்கியது,
எம்கோன்‌ … எமது தலைவனாகிய இவ்வெம்‌பெருமான்‌ [இராமபிரான்‌ :]
[அதுபோல] புவனம்‌ ஒரு மூன்றும்‌ – -மூவுலகங்களையும்‌.
ஈரடியால்‌ அளக்கின்ற பொன்கழல்‌ துகள்‌ – இரண்டடிகளைக்‌ கொண்டு அளந்த திவ்யபாதங்களின்‌ புழுதி,
உனக்கும்‌ – (மாசுடைய) உனக்கும்‌,
புனித பூரண செவ்வி முக மண்டலம்‌ கறை – தூய முழுமையான அழகுடைய முகவட்டத்தி லுள்ள கறையின்‌,
புரை தீர – களங்கம்‌ நன்கு நீங்கும்படி,
வரம்‌ அளிக்கும்‌ – வரங்கொடுக்கும்‌ :
[ஆகவே ] சிவனும்‌ – சிவபெருமானும்‌,
அயனும்‌ – பிரமதேவனும்‌,
வெள்ளை அயிராபதத்தனும்‌ – வெள்ளை யானையாகிய ஐராவதத்தையேறிச்‌ செலுத்துபவனாய இந்திரனும்‌,
செஞ்சுடர்க்‌ கடவுளோனும்‌ – சூரியனும்‌, -முப்பத்துமுக்கோடி தேவரும்‌–,
அறுமுகச்‌ செம்மலும்‌ – முருகக்கடவுளும்‌,
கைம்மலைக்‌ கோட்டவனும்‌ – (முகத்தில்‌, யானைக்கொம்பினையுடைய விநாயகனும்‌,
முறைமுறை பரவும்‌ – தங்கள்‌ முறைதவராதபடி துதிக்கும்‌,
நிகரில்‌ (முகில்வண்ணனுடன்‌ – மகரக்குழைக்கா தனுடன்‌, அம்புலீ -ஆட வா . ; ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ -,ஆடவா -; வாழி – அசை.

:மூவுலகும்‌ ஈரடியால்‌ முறைநிரம்பாவகை முடிய, தாவிய சேவடி” என்றார்‌ இளங்கோவடிகளும்‌,

———-

விண்டட.வி முகமா யிரங்களு மொளித்துநெடு
வெளியின்வந்‌ தொருமுகமதாய்‌
வெண்டிரைக்‌ கங்கைப்‌ பெரும்புனல்‌ பரந்தென
விரிந்தவவ்‌ வெள்ளத்தின்‌ மேல்‌
தண்டரள மணியுமிழ்ந்‌ தாகாய நள்ளிடை
தயங்கிய சலஞ்சலமென த்‌
தாரகைக்‌ குலமொடு தவழ்ந்து மேன்மேல்நீ
தலைப்பட்ட வாரறானும்‌
புண்டரிக மலா்முகை முறுக்குடைந்‌ தலருமொரு
பூவெனப்‌ பொலிவுபெற்றாய்‌
புகலரிய மதிவள முரைக்கில்முழு மதியெனப்‌
புகல்கின்ற துண்மைகண்டாய்‌
அண்டபகி ரண்டமு நிரம்பிய விவனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாவே.–73-

விண்‌ தடவி- ஆகாயத்தை முற்றும்‌ அளாவி,

ஆயிரம்‌ முகங்களும்‌ ஒளித்து – (இழியும்‌) பல வாயில்களையும்‌ மறையச்செய்து,
நெடு வெளியில்‌ வந்து . பெரிய வெட்டவெளி யிடத்துவந்து,
ஒருமுகமதாய்‌ – ஏகமுகமாய்‌ (ஒருவாயிலைக்‌ கொண்டு)
வெண்திரைக்கங்கை பெரும்‌ புனல்‌ – வெள்ளிய அலை களைக்கொண்ட ஆகாச கங்கையாகிய பேராறு,
பரந்தென விரிந்தபரந்து பாய்வதென்னும்படி பரவிய,
வெள்ளத்தின்‌ மேல்‌ – நீர்ப்‌பெருக்கில்‌,
தண்‌ தரளமணி உமிழ்ந்து – குளிர்ந்த முத்துக்களை யீன்று,
ஆகாய நள்‌ இடை தயங்கிய – ஆகாசமாகிய நடுவிடத்தே விளங்கிய,
சலஞ்சலம்‌ என – வலம்புரிச்‌ சங்கினைப்‌ போல, .
தாரகைக்‌ குலமோடு தவழ்ந்து – நட்சத்திரக்‌ கூட்டங்‌ களோடு மெல்ல நகர்ந்து,
நீ. மேன்மேல்‌ தலைப்பட்டவாறானும்‌ – மிக்க(மேலிடத்துத்தலைதூக்கிச்‌ சிறப்புற்ற வகையாலும்‌,
புண்டரிக மலர்‌ முகை – வெண்டாமரையாகிய மலரின்மொட்டு, முறுக்கு
உடைந்து அலரும்‌ – கட்டவிழ்ந்து நன்கு மலர்கின்ற,
ஒரு பூஎன – ஒப்பற்றதோர்‌ பூ என்று சொல்லும்படி,
பொலிவு பெற்றாய்‌- விளக்கம்‌ பெற்றுள்ளாய்‌ ;(அவ்வகையாலும்‌).
புகல்‌ அரிய மதிவளம்‌ உரைக்கில்‌ – பேசுதற்கரிய அறிவுவளத்‌ தைப்பற்றிச்‌ சொல்லப்போனால்‌,
(உன்னை) முழுமதி எனப்புகல்‌கின்றது உண்மை .-பூர்ணஅறிவுடையவன்‌ என்று சொல்லுவது மெய்ம்மையாகும்‌ :
(அவ்வகையாலும்‌) [நீ எங்கும்‌ எல்லாம்‌ நிரம்‌ பியவனாக இருக்கின்றாய்‌ :
ஆகையால்‌ உன்னைப்போலே] அண்ட பகிர்‌ அண்டமும்‌ நிரம்பிய இவனுடன்‌ . இந்தப்பூவுலல உருண்‌ டையிலும்‌ பிற வெளிவுருண்டைகளிலும்‌ (பரிபூரணமாக) நிரம்பி யுள்ள
இந்த மகரநெடுங்‌ குழைக்காதனுடன்‌, அம்புலீ /- ஆட
வா ? ஆழி நீர்‌ வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ – , அம்புலீ-,.ஆடவா – வாழி – அசை,

மூழுமதி -பூர்ணசந்திரன்‌, பூர்ணஅறிவு : இந்த இருபொருளையும்‌ காட்டுவதாக அமைந்துள்ள நயம்‌ காண்க,-இச்செய்யுள்‌ சாமம்‌ என்ற உபாயத்தால்‌ வந்தது.

——-

என்னென்று நிகராவை யிருளன்றி நீயன்பர்‌
இதயவிரு ணீக்கவறியாய்‌
இருவிசம்‌ பிற்பொலிகு வாயிவன்‌ புவனங்கள்‌
எங்கணும்‌ பொலிவதோராய்‌
பொன்னந்‌ தகட்டிதழ்க்‌ குமுதமல்‌ லாலுளப்‌
புதுமலர்‌ திறக்கவறியாய்‌
போலியல்‌ லாவுனைப்‌ போலியென்‌ (move BSI
புதுநிலா மணிமுன்‌ நில்வாய்‌
மன்னுஞ்‌ சரோருகப்‌ படுகரும்‌ புளினவெண்
மண ற்குன்ற முஞ்சோலையும்‌
மடவனப்‌ பேடையொடு கூடிப்‌ புணர்ந்தகம்‌
மகிழ்ந்துபிரி யாதுசெஞ்சூட்‌
டன்னங்கள்‌ விகாயாடு தென்பேரை மாயனுடன்‌
அம்புலீ யாடவாவே
ஆழிநீர்‌ வண்ணனெனும்‌ வாழிமா தவனுடன்‌
அம்புலீ யாடவாடவ,--74-(இச்‌ செய்யுள்‌ பேதோபாயத்தினால்‌ வந்தது, )

என்‌ – இது என்ன ?
என்று – என்றைக்கு,
நிகராவை -(இம்மாயனுக்கு) ஒப்பாவது (நீ) :
நீ – , இருளன்றி – (இந்தப்‌) புறவிருட்டையல்லது,
அன்பர்‌ இதய இருள்‌ – பக்தர்கசூுடைய [அஞ்‌ஞான ] மனவிருளை,
நீக்க அறியாய்‌ .. போக்குதற்குத்‌ தெரியாதவனா யிருக்கிறாய்‌
இரு விசும்பில்‌ – பெரிய ஆகாயத்தில்‌, (மட்டும்‌),
பொலிகுவாய்‌ – விளங்கிடுவாய்‌ ;
இவன்‌ – இம்‌ மாயன்‌,
புவனங்கள்‌ எங்கணும்‌ – எல்லாவுலகங்களிலும்‌,
பொலிவது – விளங்குவது,
ஓராய்‌ – அறியமாட்டாய்‌ :
பொன்‌ ௮ம்‌ தகடு இதழ்‌ குமுதம்‌ அல்‌லால்‌ – பொன்போல்‌ அழகிய புறவிதழ்ககாக்‌ கொண்ட ஆம்பல்‌ மலரன்றி,
உளம்‌ புதுமலர்‌ – மனமாகிய புதியமலரை,
திறக்க அறியாய்‌ -விகசிக்கச்‌ செய்யத்‌ தெரியா தவனாயிருக்கிறாய்‌ :
(இப்படி)போலி அல்லா உனை .. (ஒருபடியும்‌) நிகரல்லாத உன்னை,
போலி என்றால்‌ – நிகராவாய்‌ என்று (நாங்கள்‌ உன்னைத்‌ தூக்கிவைத்துச்‌) சொல்வோமானால்‌,
(அதுகேட்டு உகந்து) புது நிலா மணிமுன்றில்‌ வாய்‌ வந்து –புதிய அழகிய நிலாமுற்றத்தினிடத்து வந்து (இவனுடன்விளாயாட வரவேண்டாவோ ?)
மன்னும்‌ – நிலைபெற்ற,
சரோருகப்‌ படுகரும்‌ – தாமரைபூத்த நீர்‌ நிலைகளிலும்‌,
புளினம்‌ வெண்மணல்‌ குன்றமும்‌ – திட்டுக்களாக வுள்ள வெள்ளிய மணற்‌ குன்றுகளிலும்‌,
சோலையும்‌ – பொழில்களிலும்‌,
செஞ்சூட்டு அன்னங்கள்‌ – சிவந்த உச்சிக்கொண்டையை யுடைய ஆணன்னங்கள்‌,
மட அனப்பேடையொடு கூடி புணர்ந்து -மென்மையான பெட்டையன்னங்களோடு கலந்து சேர்ந்து,
அகம்‌மகிழ்ந்து பிரியாது .. மனங்களிப்புற்றுப்‌ பிரியாதபடி, விளையாடும்‌ – ,“மென்‌னடையன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர்‌” என்றதும்‌ நினைக,
தென்பேரை மாயனுடன்‌ – தென்பேரையில்‌ [நித்தியவாசஞ்‌ செய்யும்‌ ]மகரநெடுங்குழைக்கா தனாகிய மாயனோடு, அம்புலீ ;-, ஆடவா –
ஆழி நீர்வண்ணனெனும்‌ மாதவனுடன்‌ -, அம்புலீ – !, ஆட வா – வாழி. அசை,

————-

சிற்றில்‌ பருவம்‌

களிக்குஞ்‌ சுரும்பர்‌ துதைந்துழுது
கணைக்கா லசைத்துச்‌ சில்லோசை
கனிந்தூற்‌ றிருப்ப மிழற்றுதொறுங்‌
கக்குங்‌ கலுழி நறவுபரி |
மளிக்கும்‌ பசுந்தார்ச்‌ செழுந்துளவு
மணக்குங்‌ குழகா 1! கார்மேக
வண்ணா 1? கருணை மடைதிறந்து
வழியும்‌ புயலே 1! பேரின்பம்‌
அளிக்கும்‌ பெரிய திருவீதி
அணுகை வழிக்கும்‌ புறம்பாக
அறியாப்‌ பருவப்‌ பெண்களெடுத்‌
“தமைக்கும்‌ வண்ட லிதுகண்டாய்‌
தெளிக்கும்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைச்‌
செல்வா 7 சிற்றில்‌ சிதையேலே .
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே,–75-

களிக்கும்‌ சுரும்பர்‌ – தேனுண்டு செருக்கும்‌ வண்டுகள்‌,
துதைந்து – நெருங்கி,
கணைக்கால்‌ அசைத்து – , உழுது -கிண்டுதலால்‌,
கனிந்து – இளகி,
ஊற்றிருப்ப – துளித்திருப்ப, (அப்‌போது)
சில்லோசை மிழற்றுதொறும்‌ – மிக மெல்லென ஒலியை எழுப்‌புந்தோறும்‌,
கக்கும்‌ கலுழி நறவு – வெளியுமிழும்‌ கலங்கிய தேன்‌,
பரிமளிக்கும்‌ – கமழும்‌,
பசுந்தார்‌ செழும்‌ துளவு – அழகிய பச்சைத்‌ திருத்துழாய்‌ மாலை, மணக்கும்‌-(மார்பில்‌) பொருந்தியுள்ள,
குழகா ! -அழகனே /!
கார்மேக வண்ணா – மேகநிறத்தவனே !
கருணை மடைதிறந்து வழியும்‌ புயலே – தயை பெருகி வழியும்‌ மேகமே ,
பேரின்‌பம்‌ அளிக்கும்‌ பெரிய திருவீதி – மிக்க ஆனந்தம்‌ கொடுக்கும்‌ பெரிய திருவீதியை,
அணுகு – நெறுங்குகின்ற,
வழிக்கும்‌ – மார்க்கத்திற்கும்‌,
புறம்பாக – வெளிப்புறமாக இருக்கும்படி,
அறியாப்பருவப்பெண்கள்‌ -ஒன்றும்‌ தெரியாத சிறு பெண்களாகிய நாங்கள்‌,
எடுத்து அமைக்கும்‌ மண்ணெடுத்து (விளையாட்டில்‌) இழைத்துள்ள, வண்டல்‌ இது – சிற்‌றில்‌ இதுவாகும்‌ :
(ஆகவே) தெளிக்கும்‌ தமிழ்த்‌ தென்திருப்பேரை செல்வா -சாரமான தமிழ் வழங்கும்‌ தென்திருப்பேரை நகரிலுள்ள செல்வனே
சிற்றில்‌ சிதையேல்‌ – (எங்களுடைய) சிற்றிலைச்‌ சிதைக்‌ காதே ;
திரை ஆர்‌ பொருநை – அலைகளை வீசுகின்ற தாமிரபரணி நதியின்‌,
தடம்‌ துறைவா – பெரிய நீர்த்துறைகளையுடையவனே
சிறியேம்‌ – சிறுவராகிய எங்களுடைய,
சிற்றில்‌ சிதையேல்‌ – சிற்றிலைச்‌ சிதைக்காதே ;

———–

வேண்டக்‌ கிடையா வாரமுதம்‌
விரைதெண்‌ டிரைநீர்க்‌ கடன்முகட்டின்‌
வெற்பைப்‌ பிடுங்கி மத்தாக
விடவா எளரவுக்‌ கயிறுசுற்றிப்‌
பூண்டக்‌ கணமே சுவைமதுரம்‌
பொங்கிப்‌ பெருகக்‌ கடைந்தெடுத்துப்‌
புலவர்க்‌ களிக்கும்‌ பெருமானே !
பொருந்தா நிருதர்‌ போரேறே!
காண்டற்‌ கரிய கொழுங்கிரணங்
கக்கும்‌ பசிய மரகதமே!
கதிரா மியிற்செங்‌ கதிர்மறைத்த
கருணைப்‌ புயலே ! பூமகள்கை
கீண்டச்‌ சிவக்கும்‌ புலனருளாற்
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலேதிரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே, -76-

வெற்பைப்‌ பிடுங்கி- மந்தரைமலையையெடுத்து,
மத்தாக – கடையும்‌ மத்தாக நாட்டி,
விடம்‌ வாள்‌ அரவு கயிறுசுற்றி – விஷத்தையுடைய கொடிய வாசுகியாகியபாம்பைக்‌ கடை கயிறாகச்‌ சுற்றி,
பூண்ட ௮ கணமே – (கடையுந்‌ தொழிலை) மேற்‌கொண்ட அந்த க்ஷ்ணீத்திலேயே (உடனே),
விரை தெண்‌ திரை நீர்‌ கடல்‌ முகட்டில்‌ – (கரையை நோக்கி) விரைகின்ற தெளிந்த அலைகளையுடைய நீரைக்‌ கொண்ட,கடலின்‌ மேற்பகுதியில்‌,
வேண்‌டக்கிடையா ஆரமுதம்‌ – விரும்பினாலும்‌ கிடைத்தற்கரிய தேவாமிருதம்‌,
சுவைமதுரம்‌ பொங்கி பெருக – இனிமையான சுவையோடு கிளர்ந்தெழுந்து பெருக,
கடைந்து எடுத்து, புலவர்க்கு – தேவர்‌ களுக்கு, அளிக்கும்‌ – வழங்கிய பெருமானே -,
பொருந்தா – மனம்‌ பொருந்தாத (பகைவராகிய)
நிருதர்‌ போர்‌ ஏறே !/ – அரக்கரோடு போரிடுஞ்சிங்கமே /;
காண்டற்கு அரிய – பார்த்தற்கு முடியாத,
கொழும்‌ கிரணம்‌ – (ஒளிமிக்குச்‌) செழித்த கதிர்க்கிரணங்களை,
கக்கும்‌ – வெளியுமிழும்‌,
பசிய மரகதமே ! – பச்சை மரகதரத்தினமே
கதிர்‌ ஆழியின்‌ – ஜவலிக்கின்ற சக்கரப்‌ படையினால்‌,
செங்கதிர்‌ மறைத்த – சிவந்த கிரணங்களைக்‌ கொண்ட சூரியனை மறைத்த,
கருணைப்‌ புயலே ! – தயைபொழியும்‌ மேகமே !
புலன்‌ – உன்திருவடி,
பூமகள்‌ கைதீண்ட சிவக்கும்‌ – இலக்குமி (தன்‌ மென்மையான) கையால்‌ பிடிக்கச்‌ சிவந்து காட்டும்‌ :(அவ்வளவு மிருதுவானது : அதனால்‌)
அருளால்‌ – (எங்கள்‌ மேல்‌) கிருபைவைத்து,
சிறியேம்‌ – சிறுமியராகிய எங்களுடைய,
சிற்றில்‌ சிதையேல்‌ .: திரை ஆர்‌ பொருநை தடம்‌ துறைவா ! -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ – ;

*விஞ்சை வானவர்‌ சாரணர்‌ சித்தர்‌ வியந்துதி செய்யப்‌ பெண்ணுருவாகி, அஞ்சுவையமுதம்‌ அன்று அளித்தான்‌”? என்றார்‌ திருமங்கைமன்னனும்‌.

*வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்‌ கடல்‌ வண்ணன்‌ ! பண்டொருநாள்‌ கடல்‌ வயிறு கலக்கினையே”” என்றார்‌ இளங்கோவடிகளும்‌

*நாச்சிமாரும்‌ கூசிப்‌ பிடிக்கும்‌ திருவடிகள்‌?” என்பது சம்‌ பிரதாயம்‌, பஞ்செனச்‌ சிவக்கும்‌ மென்கால்‌ தேவியாகிய? பூமகளின்‌ கைதீண்டச்சிவக்கும்‌ என்றது நயம்‌,

———–

வள்்‌சளாக்‌ குழைவே ஸனெடுங்கருங்கண்‌
மதிவா ணுதற்கோ மளப்புளக
வனமா முலைக்குங்‌ குமச்சுவடு
மடவா ரொடும்போய்‌ விளையாட
அள்ளிக்‌ குடிக்குந்‌ தடம்பொருநை
ஆற்றிற்‌ கூடு புனற்றுறையின்‌
அருகிற்‌ சிறுபே தையர்களெடுத்‌
தடங்கா விருப்ப மீதூர்ந்து
குள்ளிப்‌ பால்மாற்‌ றரும்பசும்பொன்‌
தகட்டின்‌ வயீடூ ரியங்குயிற்றிச்‌
சமைக்குந்‌ “திருமா மணிமுறத்துத்‌
தருதா மரைக்கை சேப்பமணல்‌
தெள்ளிக்‌ கொணர்ந்து தரவிகளைத்த
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–77-

வள்ளைக்குழை – வள்‌ளைக்கொடிபோன்ற காதும்‌,
வேல்‌ நெடும்‌ கருங்‌ கண்‌ – வேலாயுதம்‌ போல்‌ கூரிய நீண்ட கரிய கண்‌களும்‌,
மதிவாள்‌ நுதல்‌ – சந்திரன்‌ போல்‌ ஒளிபொருந்திய நெற்றியும்‌,
கோமளம்‌ புளகம்‌ வனம்‌ மா முலை. இளமையோடு மயிர்க்‌
கூச்செறியும்‌ அழகிய பருத்தமுலைகளும்‌,
குங்குமச்சுவடு-(அவற்றின்‌மேல்‌) பூசியகுங்குமக்குழம்பின்‌ அடையாளங்களும்‌ கொண்ட,
மடவாரொடுபோய்‌ – பெண்டிரோடும்‌ சென்று,
சிறுபேதையர்கள்‌ -சிறுமியர்கள்‌,
விளையாட – விளையாடுதற்கு (முன்னதாக),
அள்ளிக்‌ குடிக்கும்‌ – கைகளால்‌ முகந்து குடிக்கின்ற
தடம்‌ பொருநையாற்‌நின்‌ கூடு புனல்துறையின்‌ அருகில்‌ – விசாலமான தாமிரபரணிநதியின்‌ கூடுபுனற்றுறையின்‌ (சமூகதீர்த்தம்‌ என்னும்‌ திருமஞ்சனத்துறை, )பலர்கூடும்‌ நீர்த்துறையின்‌ ]சமீபத்தில்‌,
அடங்கா விருப்பம்‌ மீதூர்ந்து – மிக்க ஆதரத்தோடு, எடுத்து –
(மணலை) வாரியெடுத்து,
தள்ளி – (அதிகமாக அள்ளவே) மிகுதியைத்தரையில்‌ தள்ளி,
பால்மாற்று அரும்‌ – பின்வாங்காமல்‌,
பசும்‌பொன்தகட்டில்‌ – பசியபொன்னாலாகிய தட்டில்‌, வயிடூரியம்‌ குயிற்‌றிச்‌ சமைக்கும்‌ – (மஞ்சள்நிறவொளி வீசும்‌) வயடூரிய மணிகளைப்‌ பதியவைத்துப்‌ பண்ணிய,
திருமாமணி முறத்து . சிறந்த பிற மணிகளுமழுத்திய முறத்தினால்‌,
தரு தாமரைக்கை சேப்ப – வழங்குகின்றதாமரைப்பூப்‌ போன்‌ றகைகள்‌ சிவக்கும்படி,
மணல்‌ தெள்ளி- (வாரியஅந்த) மணலைக்கொழித்தெடுத்து,
கொணர்ந்து தர – பிரியமோடுகொண்டுவந்து கொடுப்ப,
(அதனைக்கொண்டு) சிறியேம்‌ – சிறுமியராகிய நாங்கள்‌,
விளைத்த – உண்டாக்கிய (கட்டிய),
சிற்றில்‌ – சிற்‌நிலை,
சிதையேல்‌ – சிதைக்காதே:
திரை ஆர்‌ பொருநை தடம்‌துறைவா – ! சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌

——-

தருக்கா மலர்ப்பூம்‌ பொழிலும்‌ வயல்‌
தடமுந்‌ தருதென்‌ நிருப்பேரை
தழைக்கும்‌ படிநூற்‌ றெண்மர்தொழுந்
தாமோ தர!சீ தர [முகுந்தா !
ஒருக்கா லெணுமவ்‌ விருக்காலும்‌
உணராப்‌ பொருளே ! பரஞ்சுடரே !
ஒருவா ணுதல்பண்‌ டுளங்களிப்ப
உயர்வான்‌. முகடு கிழித்தெழுந்து
மருக்கால்‌ நறுமென்‌ மலர்கொணர்ந்த
மதமோ பதினா யிரங்கோப
மங்கை யர்கள்‌ புளகமுலை
மணந்து கனிவா யமுதுண்ட
செருக்கோ வுனக்கீ தியல்பன்று
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா 
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–78-

தரு கா (வும்‌) – மரங்களையுடைய சோலைகளையும்‌,
மலர்‌ பூம்பொழிலும்‌ – பூக்களையுடைய அழகிய சோலைகளையும்‌,
வயல்‌ தடமும்‌ – கழனியிடங்களையும்‌,
தரு – கொண்டுள்ள,
தென்‌ திருப்பேரை – தென்திருப்பேரைநகர்‌, தழைக்கும்படி .- செழித்துச்‌ சிறக்கும்படி,
நூற்று எண்மர்‌ .- நூற்றெட்டு ஜைமிநீயதலவகார,ஸாமவேதிகள்‌,
தொழும்‌ – வழிபடுகின்ற,
தாமோதர ! ..- முகுந்தா – ,
ஒருக்கால்‌ – ஒருசமயம்‌,
எணும்‌ – உன்னையறிய வேண்டும்‌ ‘ என்று எண்ணிய, ௮
இருக்காலும்‌ – அந்த வேதத்‌ தாலும்‌,
உணரா – அறியமுடியாத,
பொருளே – பரம்பொருளே !
பரஞ்சுடரே ! – மேலான சோதியே,
பண்டு – முன்‌ துவாபரயுகத்தில்‌ (கிருஷ்ணாவதாரத்தில்‌)
ஒரு வாணுதல்‌-ஒரு பெண்‌ [ஒப்பற்ற சத்திய பாமை]
உளம்‌ களிப்ப – மனம்‌ மகிழும்படி,
உயர்‌ வான்‌ முகடு கிழித்து எழுந்து – ஓங்கிய ஆகாய வுச்சியினை வபூடுருவிச்சென்று,
மரு கால்‌ – வாசனையை வெளியிடுகின்ற,
நறு மென்மலர்‌ – நல்லமெல்லிய பாரிஜாத மலர்பூக்கும்‌ தருவை,
கொணர்ந்த – (இந்திரலோகத்திலிருந்து கருடன்மேலேற்றிக்‌) கொண்டு வந்த,
மதமோ – செருக்கோ ?:
பதினாயிரம்‌ கோப மங்கையர்கள்‌ – பதினாயிரம்‌ கோப ஸ்திரீகளின்‌,
புளகம்‌ முலை மணந்து – மயிர்க்கூச்செறிந்த கொங்கைகளைத்‌ தழுவியிருந்து,
(மேலும்‌ அவர்களது) கனிவாய்‌ அமுதுஉண்ட – கொவ்வைக்கனிபோற்‌ சிவந்தவாயினிடத்து அமுதநீரைப்‌ பருகியதனாலான,
செருக்கோ – அகந்தையோ ?:
உனக்கு – , ஈது – இச்‌ செயல்‌ செய்தல்‌, இயல்பு அன்று -தகாதது :
சிறியேம்‌ சிற்‌நில்‌ சிதையேல்‌ -; திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ —

மதமோ, செருக்கோ”” எ்ன்று வினவுவதிலே சிறுமியர்‌ செருக்குத்‌ தொனித்தல்‌ சுவைக்க,

*பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பார்த்‌திருப்ப”? என்றாள்‌ ஆண்டாள்‌ (நாச்‌ : திரு : 7-9)

அவர்‌ தந்‌தையார்‌ :“பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பணிசெய்ய”? என்றார்‌. (4-9-4),

——–

கோவே ! கோவா மரகதமே !
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூ ற்றே !
குளிர்பூந்‌ துளவத்‌ திருத்தொங்கல்‌
குவவுத்‌ தடந்தோட்‌ காயாவாம்‌
பூவே ! பூவின்‌ பொலன்பொகுட்டுப்‌
புதுமென்‌ மணமே ! யருள்சுரந்து
பொங்கிப்‌ பெருகி யுவட்டெறிந்து
பொழியும்‌ புயலே ! கற்பகப்பூங்‌
காவே ! முதுகோ சலைதவமே !
கண்ணே ! கண்ணி னுண்மணியே !
கதிர்நித்‌ திலவெண்‌ மணல்நினது
காலி னுறுத்தல்‌ கடனன்றே
தேவே ! தேவப்‌ பெருமானே !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா 7
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.–79-

கோவே – ! மன்னனே
கோவா மரகதமே | . கோக்கப்‌படாத பச்சைரத்தினமே |
கொடும்‌ போர்‌ அரக்கர்‌ குலக்‌கூற்றே !–கொடிய யுத்தத்தைச் செய்கின்ற ராட்சசர்களின்‌ குல காலனே !
குளிர்பூழ்‌ துளவம்‌ திரு தொங்கல்‌ – குளிர்ந்த அழகிய துளசி மாலையைத் தரித்த,
குவவு தட தோள்‌ – திரண்ட பெரிய தோள்‌களை யுடைய,
காயாவாம்‌ பூவே!-காயாம்‌ பூப்போல்‌ கருநிறம்‌ படைத்தவனே?
பூவின்‌ – தாமரைப்பூவின்‌,
பொலன்‌ பொகுட்டு – அழகிய கொட்டையினின்று எழும்‌,
புது மென்‌ மணமே!.புதியமென்மையான பரிமளமே !
அருள்‌ சுரந்து – கருணையூறி,
பொங்கி – மேல்வந்து,
பெருகி – ஒழுகி,
உவட்டு எறிந்து – வெள்ளமிட்டு,
பொழியும்‌ – சொரியும்‌,
புயலே . மேகமே !
கற்பகப்பூங்‌ காவே?! – கற்பகச்‌சோலையே !
முது கோசலை தவமே – (தசரதரின்‌) மூத்தமனைவியாகிய கெளசல்யா தேவியின்‌ தவப் புதல்வனே !
கண்ணே . (எங்கள்‌) கண்‌போன்றவனே !
கண்ணின்‌ நுண்‌ மணியே ! – கண்ணுக்குள்ளிருக்‌கும்‌ நுண்ணிய மணிபோன்றவனே !
கதிர்‌ நித்திலம்‌ வெண்‌மணல்‌ – ஒளிருகின்ற முத்துக்களாக் கொண்ட வெள்ளிய மணல்‌,
நினது காலின்‌ உறுத்தல்‌ – உன்னுடைய (மென்மையான) அடிகளில்‌ குத்துதல்‌,
கடன்‌ அன்று – முறையன்று :
தேவே – இறைவனே
தேவப்‌ பெருமானே ! – தேவர்களுக்குத்‌ தலைவனே !
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌-; திரை ஆர்‌ பொருநைத்தடம்‌
துறைவா -, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ -;

காயா வண்ணன்‌”*’ (நாச்‌: திரு. 1-6), “காயா மலர்காள்‌ ! திருமால்‌ உருவொளி காட்டுகின்றீர்‌?? (9-3)

—————–

வன்னக்‌ களபப்‌ புளகமுலை
மடவா ரெனுங்கோ வியர்கள்‌ திரு
வாய்ப்பா டியிற் புக்கு அளை கவர்ந்த
மணிவாய்க்‌ கள்வ னென்றுகட்டி
உன்னிப்‌ பொருமி யழவடித்த
துண்டே லவர்கள்‌ விளையாடும்‌
ஒளிர்நித்‌ திலவெண்‌ மணற்சிற்றில்‌
உனக்கின்‌ றழிக்க முறைகண்டாய்‌
கன்னிக்‌ கமுக மிடறொடியக்‌
காய்க்கும்‌ பசுங்காய்க்‌ குலைசிதறக்‌
கதலிக்‌ குலங்க ளடிசாயக்‌
கயல்பாய்ந்‌ துளைந்து வாலறையுஞ்‌
செந்நெற்‌ பழனத்‌ திருப்பேரைச்‌
செல்வா ! சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே,–80-

வன்னம்‌ களபம்‌ புளகம்‌ முலை . அழகிய சந்தனம்‌ பூசப்பட்டு மயிர்கூச்செறியும்‌ கொங்கைகளைக்‌ கொண்ட,
மடவார்‌ எனும்‌ கோவியர்கள்‌ – பெண்கள்‌ என்று பேசப்படும்‌ கோபியர்களின்‌,
திருவாய்ப்பாடியில்‌ புக்கு . கோகுலத்திற்புகுந்து,
அளை கவர்ந்த -வெண்ணெயைத்‌ திருடிய,
மணிவாய்‌ – அழகிய வாயினையுடைய,
கள்வன்‌ என்று கட்டி – திருட்டுப்‌ பையன்‌ என்று தாம்பினால்‌ பிணித்து;
உன்னி – உற்று (உன்னை) உருத்துப்பார்க்க, (நீ)
பொருமி அழ – விம்மி யழும்படி,
அடித்தது உண்டேல்‌ – (மத்தினால்‌) அடித்தது உண்மையானால்‌,
அவர்கள்‌ விளையாடும்‌ – அவர்கள்‌ [வண்டலிழைத்து] விளையாடுகின்ற [இடத்திலுள்ள],
ஒளிர்‌ நித்திலம்‌ வெண்மணல்‌ சிற்றில்‌ – பிரகாசிக்கின்ற முத்துக்களைக்‌ கொண்ட வெள்ளிய மணலாலாகிய சிறு வீடுகளை,
இன்று.இப்போது,
அழிக்க – சிதைக்க,
உனக்கு முறை – உனக்குத்‌ தகுதியாகும்‌ :
கன்னிக்‌ கமுகு மிடறு ஓடிய – இளைய கமுகமரத்தின்‌ கழுத்து தாழும்படி,
காய்க்கும்‌ பசுங்காய்‌ குலை – காய்த்திருக்கின்ற பச்சைப்‌ பாக்கின்‌ குலைகள்‌,
சிதற – சிதறிவிழும்படியும்‌,
கதலிக்குலங்கள்‌ -வாழைமரங்கள்‌,
அடி சாய – கீழ்ப்பகுதி சாயும்படியும்‌,
கயல்‌ பாய்ந்து உளைந்து – கயல்‌ மீன்கள்‌ தாவியொலித்து,
வால்‌ அறையும்‌ -(தங்களது) வாலை அக்‌ குலைகளின்‌ மீதும்‌ அடிப்பகுதிமீதும்‌ [ விசையோடு] அடிக்கும்‌,
செந்நெல்‌ பழனம்‌ திருப்பேரை – செந்நெற்பயிர்‌கள்‌ விளையும்‌ வயல்களைக்‌ கொண்ட திருப்பேரைநகரின்‌,
செல்வா -,சிற்றில்‌ சிதையேல்‌ – : திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா-,சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ –;

தீராத வெகுளியளாய்ச்‌ சிக்கென ஆர்த்தடிப்ப‘? என்றவிடத்து (சிறிய திரூமடல்‌, கண்ணி – 86),
“இது அபிநயமாத்திரம்‌’” என்று வியாக்யாதமிட்டார்‌ பெரிய வாச்சாச்சான்பிள்ளே  அதுபோலே ஈண்டும்‌ “அடி அடித்ததுண்டேல்‌‘* என்கிறார்கள்‌ எனக்கொள்க:

“கள்வன்‌ என்றுகட்டி”” என்ற விடத்து அறியவேண்டுவதொன்றுண்டு : அஃதாவது –
வெண்ணெய்‌ கொள்ளுதல்‌ முதலிய தொழில்களைச்‌ செய்தலால்‌ இந்தப்‌ பட்டப்‌ பெயர்‌ பெற்றானா பினும்‌, அவனைக்‌ கள்வன்‌” என்றால்‌
தகாது என்றார்‌ திவ்யகவி தமது நூற்றெட்டுத்திரப்பதியந்தாதி’?யில்‌ (85) அஃது வருமாறு ::
பண்டேயுன்‌ பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக்‌ கள்வனென்று கூறாதே — மண்டலத்தோர்‌, புள்வாய்‌ பிளந்த புயலே யுனைக்கச்சிக்‌
கள்வாவென்‌ றோதுவதென்‌ கண்டு” என்பது.

———–

பண்ணே நியமென்‌ சூதலைமொழிப்‌
பவளக்‌ கனிவாய்க்‌ குறுநகையும்‌
பாரித்‌ தோங்கிப்‌ பூரித்த
பைம்பொற்்‌ புயமுங்‌ கண்டழகு
கண்ணே றெளியேம்‌ பட்டனமென்‌
றெண்ணிக்‌ கருத்து வேறுபடக்‌
கணக்கன்‌ றுலகில்‌ மன்னுயிர்க்குக்‌
காவற்‌ கடவுள்‌ நீயன்றோ
மண்ணே மழையுமுண்‌ இமிழ்ந்தளந்த
மாலே ! வேலைப்‌ புனல்‌ சுவறி
மறுகக்‌ கணதொட்‌ டிடுமுகுந்தா !
வருணன்‌ நினமா ராதனைசெய்‌
தெண்ணீர்ப்‌ பொருநைத்‌ தடந்துறைவா !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே தெளிக்குத்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைச்‌
செல்வா [! சிற்றில்‌ சிதையேலே.--81-

பண்‌ ஏறிய மென்‌ குதலை மொழி – இராகம்‌ போல்‌ சுவையுள்ள மெல்லிய இனிய பேச்சினையும்‌,
பவளக்‌ கனிவாய்‌ – பவளம்‌ போற்சிவந்த இனிய வாயினையும்‌,
குறு நகையும்‌ – புன்சிரப்பினையும்‌,
பாரித்து ஓங்கிப்‌ பூரித்த பைம்பொன்‌ புயமும்‌ தோன்றி உயர்ந்து பருத்த அழகிய தோள்களினையும்‌,
கண்டு – (நீ) பார்த்து, (அதனால்‌)
எளியேம்‌ – சிறுமியராகிய நாங்கள்‌,
அழகு – எங்களது அழகினால்‌,
கண்ணேறு பட்டனம்‌ என்று- (உன்னுடைய)திருஷ்டிதோஷம்‌ அடைந்து விட்டோம்‌ என்று,
எண்ணி – நினைத்து,
கருத்து – (உன்மேல்‌ வைத்துள்ள) மனம்‌,
வேறுபடக்‌ கணக்கன்று – மாறுபட நியாயமில்லை :
(ஏனெனில்‌) உலகில்‌ – இந்திலவுலகத்தி லுள்ள,
மன்னுயிர்க்கு – நிலைபெற்ற ஜீவன்களுக்கு,
காவற்‌ கடவுள்‌ நீ அன்றோ ! – பாதுகாப்பளிக்குந்‌ தெய்வம்‌ நீயல்லவா? (நீயேதான்‌) : [
ஆகவே]. மண்‌ ஏழையும்‌ உண்டு உமிழ்ந்து அளந்த மாலே _ஏழு தீவுகளையும்‌ புசித்துப்‌ பின்னர்‌ வெளியே உமிழ்ந்து அவற்றை அளவிட்ட திருமாலே!
வேலை – கடல்‌,
புனல்‌ சுவறி- நீர்‌ வற்றி,
மறுக .- வருந்தும்படி,
கணை தொட்டிடு – ஆக்னேயாஸ்திரத்தைத்‌ தொடுத்த,
முகுந்தா – முகுந்தனே !
வருணன்‌ தினம்‌ ஆராதனை செய்‌ – வருணபகவான்‌ நாடோறும்‌ பூஜை செய்கின்ற,
தெள்‌ நீர்‌ பொருநை தடம்‌ துறைவா! _ தெளிந்த நீரையுடைய தாமிரபரணி யின்‌ விசாலமான துறைகளுக்குத்‌ தலைவனே
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ – :
தெளிக்கும்‌ தமிழ்த்‌ தென்திருப்பேரை ~ ஆராய்ந்‌ தெடுத்த சாரமான தமிழ்பயிலும்‌ தென்திருப்பேரை நகரின்‌, செல்வா! , சிற்றில்‌ சிதையேல்‌ –

——-

தடிக்குஞ்‌ சிகரப்‌ படாம்பொதிந்த
தடமா முலைக்குங்‌ குமச்சுவட்டுத்‌
தழைக்குங்‌ குறுங்கண்‌ சாந்தொழுகித்‌
்‌ தருபா லசோதை மகிழ்ந்தூட்டக்‌
குடிக்கும்‌ புயலே ! யிலங்கையில்வெங்‌
கொடும்போ ரரக்கர்‌ குலக்கூற்றே /
குனிக்குஞ்‌ சிலைக்கைத்‌ தடக்களிறே !
கோவே ! பசுந்தண்‌ டுழாய்மாலை
முடிக்கும்‌ பொருளே ! முத்தொழிற்கும்‌
மூவா முதலே 1! யழியாத
முத்திக்‌ கொருவித்‌ தாகவந்து
முளைக்கும்‌ பொருளே ! பாகுபெற
வடிக்குந்‌ தமிழ்த்தென்‌ றிருப்பேரை
மாலே ! சிற்றில்‌ சிதையேலே
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! சிற்றில்‌ சிதையேலே.–82-

தடிக்கும்‌ சிகரம்‌ – திரண்ட உச்சிமேல்‌,
படாம்‌ பொதிந்த – சீலையையிட்டு மூடிய,
தட மா முலை-பருத்த பெரிய முலையில்‌,
குங்குமச்சுவடு தழைக்கும்‌ – பூசிய குங்குமச்‌ சாந்தின்‌ அடை யாளம்‌ நன்கு தெரிகின்ற,
குறுங்கண்‌ – சிறிய முலைக்காம்பினிடத்து,
சாந்து ஒழுகி – சந்தனம்‌ [கலைந்து] இலேசாக ஒழுக,
தரு-கொடுத்த,
பால்‌ – முலைப்பாலை,
அசோதை – யசோதை,
மகிழ்ந்து ஊட்ட – சந்தோஷமாக ஊட்ட,
குடிக்கும்‌ . (அதனை) உறிஞ்சிப்‌ பருகும்‌,
புயலே – மேகமே!
இலங்கையில்‌ – இலங்கை மாநகரில்‌,
வெம்‌ கொடும்‌ போர்‌ அரக்கர்‌ குலம்‌ கூற்றே! – கடிய கொடிய போரைச்‌ செய்த அரக்கர்களின்‌ குலத்திற்கு யமன்‌ போன்றவனே!
சிலை குனிக்கும்‌ கை – வில்லை (நன்கு) வளைத்துத்‌ (துட்டர்களை)(யொழிக்கும்‌) கையையுடைய,
தடக்‌ களிநே! – பெரிய யானை போன்றவனே!
கோவே. . தலைவனே!
பசும்‌ தண்‌ துழாய்‌ மாலை முடிக்கும்‌ பொருளே! – பச்சை நிறமுள்ள குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையைச்‌ சூடும்‌ பரம்பொருளே!
முத்தொழிற்கும்‌ . படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற மூன்று தொழில்களைச்‌ செய்து வரும்‌,
மூவா – (என்றைக்கும்‌) கெடாத.
முதலே! -முதற்கடவுளே!
அழியாத முத்திக்கு – (என்றைக்கும்‌) அழிவில்லாத முக்திக்கு,
ஒரு வித்தாக வந்து – ஒப்பற்ற முதற்காரணமாக வந்து,
முளைக்கும்‌ – அவதரிக்‌கின்ற,
பொருளே! . மூலப்பொருளே!
பாகு பெற வடிக்கும்‌ தமிழ்‌ – வெல்லப்பாகு போல இனிமை பெறச்‌ சாரமாகப்பிழியும்‌ தமிழ்‌
பயிலும்‌, – தென்திருப்பேரை மாலே-?, சிற்றில்‌ – சிதையேல்‌ -:
மகரக்‌குழையே! – மகரநெடுங்குழைக்காதரே!,
நூற்றெண்மர்‌ வாழ்வே! – ஜைமீ நீயதலவகார சாமவேதிகள்‌ நூற்றெட்டுப்பேருக்கும்‌ நல்‌ வாழ்வளிப்பவனே?
சிற்றில்‌ சிதையேல்‌–

——-

கொத்தோ டசையப்‌ பசுந்துளவங்‌
குடக்கூ டரும்பி முகரத்தெழுந்து
கொழிக்குந்‌ தவளப்‌ பிறைநுதலிற்‌
குறுவேர்‌ வொழுக வணிந்தசுட்டி
முத்தா னதுவெண்‌ ணிலவெறிப்ப
முகத்தா மரையி னகையிலங்க
முதுகுண்‌ டலமும்‌ வார்காது
முழுமா மணிப்பொற்‌ சோ திவிட
அத்தா 1 வருணன்‌ நினம்பரவும்‌
அரி!கேசவ! நாரண ! முகுந்தா !
அடல்வா எரவிற்‌ கண்டுயிலும்‌
ஆழிப்‌ புயலே ! யாய்ச்சியர்கை
மத்தா லடிப்ப வெண்ணெயுண்ட
வாயா ! சிற்றில்‌ சிதையேலே
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! சிற்றில்‌ சிதையேலே.–83-

பசும்‌ துவளம்‌ கொத்தோடு அசைய – கொத்தாக இடப்பட்ட பச்சைத்துளவமாலை மார்பில்‌ அசைந்தாடவும்‌,
குடக்கு ஊடு அரும்பி – மேற்குத்திசையில்‌ கீற்றாக அரும்பி,
முளைத்து எழுந்து – சற்று நன்கு தெரியும்படி மேலெழுந்து,
கொழிக்‌கும்‌ – நிலவை உமிழும்‌,
தவளம்‌ பிறை – வெள்ளிய பிறைச்‌சந்திரன்போல்‌
(வளைந்த), நுதலில்‌ – நெற்றியில்‌,
குறு வேர்வுஒழுக – சிறுதுளியாக வேர்வையொழுக,
அணிந்த: சுட்டிமுத்தானது – சூட்டியசுட்டியிலுள்ள முத்தானது,
வெள்‌ நிலவு எறிப்ப -வெண்மையான ஒளியை வீசவும்‌;
முகத்தாமரையில்‌ .- தாமரை மலர்போன்ற முகத்தில்‌,
நகை இலங்க – பற்கள்‌ (அழகாக) விளங்‌கவும்‌ ;
முது குண்டலமும்‌ – பெரிய குண்டலமும்‌, .
வார்‌ காது -நீண்ட காதினில்‌ (அணிந்துள்ள),
முழு மாமணி – முற்றும்சிறந்தமணிகளால்‌
அமைந்து-குழையும்‌,
பொன்‌ சோதி விட .. பொன்‌ போல்‌ ஒளிவிடவும்‌ ; (நீ வந்து) சிற்றில்சிதையேல்‌ எனமேல்‌ இயையும்‌,
(இனி) அத்தா ! மேலோனாகிய விட்டுணுவே !
வருணன்‌ தினம்‌ பரவும்‌ அரி – வருணபகவான்‌ தினந்தோறும்‌ துதிக்‌கின்ற ஹரியே !
கேசவ !-, நாரண !-, முகுந்தா ! -,
அடல்‌ வாள்‌ அரவில்‌ – வலிய ஒளியுள்ள ஆதிசேடன்மேல்‌,
கண்துயிலும்‌ -யோகநித்திரை கொள்ளும்‌,
ஆழிப்‌ புயலே ! .. பாற்கடல்‌ மேகமே !
ஆய்ச்சியர்‌ – (கோகுலத்து) இடைச்சியர்‌,
கைமத்தால்‌ அடிப்ப -கையிற்கொண்ட மத்தினால்‌ அடிக்கும்படி,
வெண்ணெய்‌ உண்ட வாயா – (அவர்கள்‌ மனையிலுள்ள) வெண்ணெயைக்‌ களவாடித்‌ தின்ற வாயையுடையவனே
சிற்றில்‌ சிதையேல்‌-: மகரக்‌குழையே. – நூற்றெண்மர்‌ வாழ்வே ! -, சிற்றில்‌ சிதையேல்‌-;

———

அன்போ டணைத்து முலைகொடுத்தின்‌
னமுதூற்றிருக்கும்‌ புனலாட்டி
அருங்கட்‌ கடைக்கஞ்‌ சனமெழுதி
ஆரந்‌ திருத்திப்‌ பட்டுடுத்தி
உன்பே ரிடுவே னென்குழவிக்‌
குள்ள தயவாற்‌ றனிசமைத்த
உயர்மா ளிகையு மாடரங்கும்‌
ஒளிர்‌ வே திகையு நீயழிக்க
வன்பா லோடி வரவுனக்கு
வழக்கன்‌ றுலகிற்‌ சிறுபேதை
மகளி ரிருந்து விளையாடும்‌
வண்டற்‌ றுகள்சே வடிபடுமே
தென்பே ரையினங்‌ குலநாத !
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே
திரையார்‌ பொருநைத்‌ தடந்துறைவா /
சிறியேஞ்‌ சிற்றில்‌ சிதையேலே.--84-

அன்போடு அணைத்து – ஆசையோடு கட்டித்‌ தழுவி யணைத்து,
இன்‌ அமுது ஊற்றிருக்கும்‌ முலை கொடுத்து – இனிய பால்‌ சுரந்து நிறைந்திருக்கும்‌ முலை யூட்டி,
(பின்னர்‌) புனல்‌ ஆட்டி -[கடாரத்தில்‌ பூரித்து வைத்த] நீரில்‌ குளிப்பாட்டி,
அரும்‌ கண்‌கடைக்கு – அழகிய கடைக்கண்ணுக்கு,
அஞ்சனம்‌ எழுதி -மையிட்டு-
ஆரம்‌ திருத்தி – முத்து மாலையைச்‌ சரிசெய்து,
பட்டு உடுத்தி(அரையில்‌) வெண்பட்டினையடுத்தி,
என்‌ குழவிக்கு- என்‌குழந்தைக்கு (என்வண்டற்‌ பாவைக்கு),
உன்‌ பேர்‌ இடுவேன்‌ – உன்‌னுடைய (நல்ல) பேரை வைப்பேன்‌ :
(எனவே) உள்ளம்‌ தயவால்‌ -மனத்துக்‌ கருணையினால்‌,
தனி சமைத்த – தனியாக நான்‌ (வண்டலிழைத்துக்‌) கட்டியுள்ள,
உயர்‌ மாளிகையும்‌ – உயர்ந்த மாளிகையையும்‌,
ஆடு அரங்கும்‌ – நடன சாலையையும்‌,
ஒளிர்‌ வேதிகையும்‌ -விளங்குகின்ற திண்ணையையும்‌,
நீ அழிக்க – நீ சிதைக்க,
வன்பால்‌ -பலாத்காரத்தோடு,
ஓடி வர- வேகமாக ஓடிவருதல்‌,
உனக்கு உலகில்‌ வழக்கன்று – உனக்கு இவ்வுலகில்‌ நியாயமாகாது: (உலகு பழிக்கும்‌):
(இதுகிடப்ப)சிறு பேதை மகளிர்‌-மடச்சிறுமியராகிய நாங்கள்‌,
இருந்து(முதுகு நோவ) இருந்து,
விளையாடும்‌ – இழைத்து விளையாடுகின்ற:
வண்டல்‌ துகள்‌ – வண்டல்‌ புழுதி,
சேவடி படுமே- உன்‌ சிவந்த பாதங்களில்‌ பட்டு மாசு படுத்துமே :
(ஆகையால்‌) தென்பேரையில்‌ நம்‌ குலநாத -தென்திருப்பேரையிலுள்ள எங்கள்‌ குலத்துக்கு முதல்‌வனே?
சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌ -, திரை ஆர்‌ பொருநைத்தடம்‌ துறைவா–, சிறியேம்‌ சிற்றில்‌ சிதையேல்‌-;

—————-

சிறுபறைப்‌ பருவம்‌

வானாடர்‌ முப்பத்து முக்கோடி யுஞ்சது
மறைக்கடவு ணனை்முகவனும்‌
மழுவலா ளனுமறு முகச்செம்ம லுங்கைம்‌
மலைக்கோட்டு வேழமுகனும்‌
ஏனோரும்‌ வச்சிரக்‌ குலிசபதி யுமகிழ்நீ
தெண்டிசா முகப்பாலரும்‌
இருவிழியு மிருசெவியு மிதயதா மரைமலர்நீ
தெக்கால முந்தழையவே
கானூறு பச்சைப்‌ பசும்பூக மடல்விண்டு
கக்குங்‌ கொழும்பிரசமுங்‌
கதலிக்‌ கொழுங்கனி யுடைந்துவழி . மதுவுங்‌
கலந்தோடி யலைமண்டியத்‌
தேனாறு பாயும்வயல்‌ சூழ்வழுதி நாடனொரு
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ 1!
சிறுபறை முழக்கியருளே.–85-

முப்பத்துமுக்கோடி வானாடரும்‌ -முப்பத்துமூன்று கோடிதேவர்களும்‌,
சதுமறைக்கடவுள்‌ நான்முகவனும்‌ . நான்கு வேதங்களையோதும்‌ இறைவனாகிய பிரமனும்‌,
மழுவலாளனும்‌ – மழுப்படையையேந்திய சிவபெருமானும்‌,
அறுமுகச்‌ செம்மலும்‌ -ஆறுமுகக்கடவுளாகிய முருகனும்‌,
கைம்மலைக்கோட்டு வேழமுகனும்‌ – யானைத்தந்தத்தோடு யானை முகத்தையுடைய விநாயகனும்‌,
வச்சிரக்குலிசபதியும்‌ . உறுதியான வச்சிராயுதத்தையுடைய இந்திரனும்‌,
மகிழ்ந்து எண்திசாமுகப்பாலரும்‌ – களிப்புற்று எட்டுத்‌ திக்குப்பாலகர்களும்‌,
ஏனோரும்‌ – மற்றைத்‌ தேவதைகளும்‌,
இருவிழியும்‌ இருசெவியும்‌ இதயதாமரை (யும்‌) மலர்ந்து – (தங்களது)இரண்டுகண்களும்‌ இரண்டு காதுகளும்‌ மனத்தாமரையும்‌ விகசித்து,
எக்காலமும்‌ தழைய – எப்போதும்‌ (அவர்களுக்கு) நல்‌ வாழ்வுசெழிக்கும்படி,
(சிறுபறைமுழக்கியருளன்‌ என மேலவியையும்‌),
கான்‌ ஊறும்‌ – வாசனைபூறிவீசுகின்ற,
பச்சைப்‌ பசும்‌ பூகம்‌ -மிகப்பசுமையாயுள்ள கழுகங்குலை,
மடல்‌ விண்டு – (தனது) மடல்‌கள்‌ விரிந்து,
கக்கும்‌ கொழும்‌ பிரசமும்‌ – வெளியேசொரியும்‌செழித்த தேனும்‌,
கதலிக்‌ கொழும்‌ கனி உடைந்து – வாழையினது கொழுத்துப்பருத்த பழங்கள்‌ சிதைந்து,
வழி மதுவும்‌ – வழிகின்ற தேனும்‌,
கலந்து ஓடி – ஒன்றாகச்‌ சேர்ந்து (ஆறாக) ஓடி,
அலைமண்டி – அலைகளை நெருங்கவெறிந்து,
தேனாறு பாயும்‌ -(பெரிய) தேனாறாகப்‌ பாய்கின்ற,
வயல்‌ சூழ்‌ வழுதிநரடன்‌ ! -கழனிகள்‌ சூழ்ந்த பாண்டிநாட்டுக்குரியவனே /
ஒரு சிறுபறை முழக்கியருள்‌ – ஒப்பற்ற சிறிய பறையை(க்கொட்டி) முழக்குவாயாக:
தென்‌ திருப்பேரை வரு – தென்திருப்பேரைநகரில்‌ வந்து கோயில்கொண்டுள்ள,
நம்‌ குழைக்காத முகில்‌ . நம்‌ மகர நெடுங்குழைக்காதராகிய (நிகரில்‌) முகில்வண்ணனே : சிறுபறைமுழக்கியருள்‌–;

அஷ்டதிக்குப்பாலகர்‌, அவராவார்‌– இந்திரன்‌, அக்கினி,யமன்‌, நிருதி, வருணன்‌, வாயு, குபேரன்‌, ஈசானன்‌ என்பவர்‌.

————-

பூவாருங்‌ கொன்றைச்‌ செழுஞ்சடா டவிமுமப்
புனிதபூ ரணனிரட்டும்‌
பொற்றுடி யெனச்சொற்‌ நிறம்பாத கனகவிப்‌.
புலவர்‌ திண்‌ டி மமென்னவும்‌
மேவுகதிர்‌ மணிமகுட  கோடி நிபுடஞ்செயும்‌’
விருதரசர்‌ மணிவாசலின்‌
‘விதரணக்‌ கொடைவெற்றி மணவொலி கறங்கு
தெரு
வீதிழமம்‌ முரசமெனவுந்‌
தாவுசீ ரிட்டுடன்‌ விசித்திறுக்‌ கித்தொனி
தமைத்ததொண்‌ டகமென்னவுநீ
தவறாது சதிமுறையி னண்டகோ ளகைமுகடு
தடவியது செவிடுபடவோர்‌
தேவதுந்‌ துபியெனத்‌ திருவழுதி வளநாட !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–86-

ஆரும்‌ கொன்றை – பூக்கள்‌ நிறைந்த கொன்றை மாலையை,
செழும்‌ சடா அடவி முடி – தொகுதிப்பட்ட சடைக்‌காட்டிலே சூடியுள்ள,
புனித பூரணன்‌ – தூய நிறைவுடையனாகியசிவபிரான்‌,
இரட்டும்‌ – மாறி, மாறி அடித்து ஒலிக்கச்‌ செய்கின்ற,
பொன்‌ துடி என – அழகிய உடுக்கையென்று சொல்லும்படியும்‌ ;
சொல்‌ திறம்பாத- சொன்ன சொல்‌ மாறாத,
கன கவிப்‌புலவர்‌ – மாண்பு மிக்க வாதஞ்‌ செய்யும்‌ புலவர்கள்‌, (முழக்கும்‌)
திண்டிமம்‌ என்னவும்‌ திண்டிமப்பறையென்று சொல்லும்படியும்‌ ;
மேவு கதிர்‌ மணி மகுடம்‌ கோடி – பொருந்திய ஒளி விடு கின்ற மணிகள்‌ பதித்த கிரீடங்கள்‌ ,
பல, நிபுடம்‌ செய்யும்‌ -நெருக்கத்தையுண்டாக்குகின்ற,
விருது அரசர்‌ மணிவாசலில்‌ -சிறப்புடைய மன்னரின்‌ அழகிய அரண்மனை வாசலில்‌,
விதரணம்‌“கொடை – தயாள குணத்தோடு கொடுக்கும்‌ தானம்‌,
வெற்றி -பெற்றுள்ள வெற்றிகள்‌,
மணம்‌ – நிகழும்‌ திருமணம்‌ போன்ற மங்கலநிகழ்ச்சிகள்‌இவற்றைப்‌ பற்றிய,
ஒலி- முழக்கமானது,
தெரு -குறுந்தெருக்களிலும்‌,
வீதி – பெருந்‌ தெருக்களிலும்‌,
கறங்கு . ஒலிக்கச்‌செய்கின்ற,
மும்முரசம்‌ எனவும்‌ – மூன்று முரசங்கள்‌ என்று சொல்லும்படியும்‌ ;
தாவு – பாய்ந்து குதித்தல்‌ போன்ற துரிதத்தில்‌,
சீர்‌ இட்டு -தாளத்தையமைத்து,
உடல்‌ விசித்து – பறையின்‌ (ஓரம்‌ தவிர்த்தமுக்கிய) நடுப்பகுதியைத்‌ தோல்‌ வாரினால்‌ இறுகக்கட்டி,
இறுக்கி -மேலும்‌ அழுத்தமாக இறுக்கி,
தொனி தழைத்த . முழக்கவொலி(மேன்மேலும்‌) விருத்தியாகும்‌,
தொண்டகம்‌ என்னவும்‌-தொண்டகப்‌ பறை என்று சொல்லும்படியும்‌ ;
சதி முறை தவருது – தாளவொத்து பிழையுறாமல்‌,
அண்டகோளகை முகடு – உலகவுருண்டையின்‌ மேலுச்சியை, தடவியது –
எட்டிய ஒலி முழக்கமானது, செவிடுபட – (கேட்காதபடி)கீழாகுமாறு, [பேரொலி செய்த]
ஓர்‌ தேவந்துபி என..ஒப்பற்ற தேவதுந்துபி என்று சொல்லும்படியும்‌,
திருவழுதிவள நாட! — பாண்டிய நாட்டுக்குத்தலைவனே !
சிறுபறை முழக்கியருள்‌ – உன்னுடைய சிறுபறையைக்‌ கொட்டுவாயாக :
தென்திருப்பேரை வரு தம்‌ குழைக்காத முகில்‌–, சிறுபறை முழக்கியருள்‌ –

——–

கறைகொளுஞ்‌ சமரில்வடி வாளொடு இராவணன்‌
கைகளிரு பதும்விழுதுபோ றீ
காறுடர்மண்‌ ஸணில்விள்ளிக்‌ குப்புற்று நிற்குநிலை
கண்டுதிரு வுளமிரங்கி
உறுதிபட வின்றுபோய்‌ நாகக்கு வாவென்‌
றுரைத்தரா கவ ! வெருவியன்‌
றோராண மூலமென்‌ றோதாமுன்‌ ணோடிவந்‌
துதவுமா தவ ! சீதரா !
நறையொழுக மடன்முகை முறுக்கவிழ்ந்‌ தலரு
மொரு
தளினப்‌ பொகுட்டாசன
நள்ளிடை. பதிந்துபைந்‌ தாதளைந்‌ திசைபாடி,
நாகிளம்‌ பேடையோடுஞ்‌
சிறைவண்டு கண்படுக்‌ கும்வழுதி நன்டை !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.--87-

கறைகொளும்‌ சமரில்‌ – இரத்தக்கறை படியும்‌ போரில்‌,
வடிவாளொடு – கூரியவாளோரடு,
இராவணன்‌–, கைகள்‌ இரு பதும்‌ – இருபதுகைகளும்‌,
விழுதுபோல்‌ – ஆலம்விழுதுபோல,
கால்‌ துடர்‌ . காலைத்தொடர்ந்து தொங்கி,
மண்ணில்‌ விள்ளி – தரையில்‌ பரவலாகவிழுந்துதழுவி,
குப்புற்று – தலைகவிழ்ந்து, நிற்கும்‌ நிலை கண்டு – (நாணி)
நிராயுதபாணியாய்‌ நிற்கின்ற பரிதாபமான நிலை யைப்பார்த்து,
திருவுளம்‌ இரங்கி – மனவிரக்கமுற்று,
உறுதிபட( அவ்விராவணனுக்குத்‌) துணிவு ஏற்பட,
“இன்று போய்‌ தாளைக்குவா” என்று உரைத்த – “இன்று மனைபோய்‌ போர்க்கு தாளைவா” என்று கருணையோடு கூறி விடுத்த,
இராகவா – ரகுகுல உத்தமனே ? (இராமனே ),
அன்று – (முதலைவாயிலகப்‌ பட்ட) அன்று,
ஓர்‌ ஆனை . கஜேந்திரனென்ற ஒரு யானை,
வெருவி – பயந்து,
மூலமென்று ஓதாமுன்‌ – ஆதிமூலமே என்று கூப்பிடுவதற்குமுன்னே (கூப்பிட்டவுடனே),
ஓடி வந்து உதவும்‌ . புள்ளேறி மடுக்கரைக்கு) விரைந்துவந்து உதவிபுரிந்து அதனுயி ரைக்‌ காப்பாற்றிய, மாதவ ! -, சீதரா ! -,
நறை ஒழுக – தேன் ஓழுகும்படி,
மடல்முகை முறுக்கு அவிழ்ந்து – இதழோடுகூடிய மொக்கு கட்டுவிட்டுதெகிழ்ந்து,
அலரும்‌ – மலருகின்ற,
ஒரு நளினம்‌பொகுட்டு ஆசனம்‌ – ஒருதாமரையின்‌ கொட்டையாகிய பிடத்தின்‌,
நள்ளிடை பதிந்து – நடுவிடத்தில்‌ தங்கி,
பைந்தாது அளைந்து – பசிய மகரந்தங்களையுண்டு,
இசை பாடி – பண்ணிசைத்து,
நாகுஇளம்‌ பேடையோடும்‌ – மிக்கஇளமையினையுடைய (தனது) பெண்‌வண்டோடும்‌,
சிறைவண்டு கண்படுக்கும்‌ – சிறகுகளையுடைய ஆண்‌வண்டு (கவலையின்றி யின்பமாகத்‌) துயிலும்‌,
வழுதி நன்நாட -நல்ல பாண்டியநாட்டவனே !
சிறுபறை முழக்கியருள்‌ – : தென்‌ திருப்பேரை வரு நம்‌ குழைக்காதமுகில்‌ -, சிறுபறை முழக்கியருள்‌–;:

கம்பரும்‌*-இன்றுபோய்‌ போர்க்கு நாளைவா*’ என்றார்‌. (போரிடுவதாயின்‌ நாளைக்குவா ; சரணம்புகுவதாயின்‌ இக்கணமே சாலும்‌ *:என்பது
. சாரமானகருத்து.

———-

அண்டபகி ரண்டமு மதிர்ந்துகுல வரையெட்டும்‌
அசையாம லெண்டிசைதொறும்‌
அளிகவுள கம்பக்‌ கடாக்களிறு நிலைபெயர்த்‌
தடிச்சுவ டெடுத்திடாமற்‌
கொண்டவட வைக்கனற்‌ கண்பிதுங்‌ கக்கொடுங்‌
கோளரா முடியிற்படங்‌
குலுங்காம லாமைநெடு முதுகுகுளுக்‌ காவண்ட
கோளகையின்‌ முகடுவெடியா
விண்டட வு தாரகைக்‌ குலமடங்‌ கலுமண்ணில்‌
வீழாம லுயாசெழும்‌ பொன்‌
மேருகிரி சாயாம லோடியிரு கரைதோறும்‌
வெண்ணிலா வுமிழுமுத்தந்‌
தெண்‌ டிரை சுருட்டுபொரு னாநதி நெடுந்துறைவ !
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமுகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–88-

அண்ட பகிரண்டமும்‌ அதிர்ந்து . இந்த உலகமும்‌ புறவுலகங்களும்‌ அதிர்ச்சி யடைந்து நடுங்கி,
குலவரை எட்டும்‌ அசையாமல்‌ அஷ்டகுலபர்வதங்களும்‌ நடுக்கமுறாமல்‌,
எண் திசை தொறும்‌ . எட்டுத்திக்குக்களிலுமுள்ள,
அளிகவுள – வண்டுகள்‌ மொய்க்கின்ற கன்னத்தையுடைய,
கம்பம்‌ கடாம்‌ களிறு – கட்டுத்தறிகளில்‌ கட்டப்படுகின்ற மதஜலம்‌ பெருக்குகின்ற ஆண்‌ யானைகள்‌ (அட்டதிக்குக்கஜங்கள்‌),
நிலை பெயர்ந்து – தாங்கள்‌ நிலை பெற்றுத்தங்கியுள்ள திக்கினிடங்களிலிருந்து மாறி,
அடிச்சுவடு எடுத்திடாமல்‌ – (தங்கள்‌) கால்களைப்‌ பெயர்த்து வைக்காமல்‌ ;
கொடும்‌ கோள்‌ அரா – கொடிய பற்றுந்‌தன்மையுள்ள பாம்பாகிய ஆதிசேடன்‌,
கொண்ட – கொண்டுள்ள,
வடவைக்கனல்‌ கண்‌ பிதுங்க – வடவாமுகாக்னிபோன்று சொலிக்‌ கின்ற கண்கள்‌ வெளிவரும்படி,
முடியில்‌ படம்‌ குலுங்காமல்‌ -தலையிலுள்ள படங்கள்‌ நடுங்காமல்‌,
ஆமை நெடு முதுகு குலுக்‌கா(மல்‌) – மகாகூர்மத்தின்‌ பெரிய முதுகு அசைந்து குலுங்காமல்‌,
அண்டகோளகையின்‌ முகடு வெடியா(மல்‌) உலகவுருண்டையின்‌ மேலுச்சி பிளவுபடாமல்‌,
விண்தடவு தாரகைக்குலம்‌ அடங்கலும்‌ மண்ணில்‌ வீழாமல்‌ – ஆகாயத்திலுள்ள நட்சத்திரக்‌ கூட்டமனைத்‌ தும்‌ (உதிர்ந்து) பூவுலகில்‌ தரையின்மேல்‌ விழாமல்‌,
உயர்‌ செழும்‌ பொன்‌ மேருகிரி சாயாமல்‌ .- ஓங்கியுள்ள சிறந்த பொன்மலையாகிய மேரு சாய்ந்து போகாமல்‌,(இருக்கும்படி சிறு பறைமுழக்கியருள்‌ எனப்பொருள்‌ முடிக்கவும்‌).
இரு கரைதோறும்‌ வெண்‌ நிலா உமிழும்‌ முத்தம்‌ – இரண்டுகரைகளிலும்‌ வெள்ளிய சந்திரன்‌ வெளியிட்ட முத்துக்களை,
தெண்திரை ஓடி சுருட்டும்‌-தெள்ளிய அலைகள்‌ (கரையின்‌ மேல்‌) பாய்ந்து ஓடிச் சுருளப் புரட்டி வரும்‌,
பொருனா நதி – தாமிரபரணி நதியின்‌,
நெடும்‌ துறைவ |! – பெரிய நீர்த் துறைகளுக்குத்‌ தலைவனே !
சிறுபறை முழக்கியருள்‌–: தென்திருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌ –, சிறுபறை முழக்கியருள்‌ –

அஷ்டகுல பர்வதம்‌– இமயம்‌, மந்தரம்‌, கைலாசம்‌, விந்தியம்‌, நிடதம்‌, ஏம கூடம்‌, நீலம்‌, கந்தமாதனம்‌ என்பன.

ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும்‌ பூங்கார்‌ அரவு” என்றார்‌ திருமழிசைப்பிரானும்‌. (நான்முகன்‌ : திரு : 19).

————-

கங்கா நதிச்செழும்‌ புனல்யமுனை சரசோதி
கற்புரச்‌ சுவைமணக்குங்‌
காவிரி யென த்தேவர்‌ வடியிட்ட வமுதேகக்‌
கமழுந்‌ திரைப்பொருநையும்‌
மங்காத சதுமறைக்‌ குரியவேள்‌ வியும்விழா :
வணியுமக வொலியுநாளும்‌
வளமைபெறு குலநாத! பரமபத வீடாள!
வயல்கடொறும்‌ வாய்மடைதொறுஞ்‌
சங்கார வாரஞ்செய்‌ தகடுளைந்‌ தலறித்‌
தவழ்ந்தேறி முத்துயிர்க்குந்‌
தண்ணந்‌ தடந்தா மரைப்பொகுட்‌ டாசனத்‌
தமனியப்‌ பொற்கோவிலிற்‌
செங்கா லனந்துயிலும்‌ வழுதிவள நன்ளுட!
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ காதமூகில்‌!
சிறுபறை முழக்கிடருளே. –89-

தேவர்‌ வடியிட்ட அமுது – தேவர்கள்‌ வடித்தெடுத்த அமிருதம்‌.
கங்காநதி (என) – கங்காநதியாகவும்‌,
செழும்புனல்‌ யமுனை (என) செழித்த நீரையுடைய யமுனை நதியாகவும்‌,
சரசோதி(என) – சரசுவதி நதியாகவும்‌,
கற்பூரச்‌ சுவை மணக்கும்‌ காவிரி என . கற்பூரவாசனை வீசும்‌ காவீரி நதியாகவும்‌,
ஏக – பெருக்கெடுத்‌ துப்போக, (அவ்வமுதின்‌ மணம்‌)
கமழும்‌ – பரிமளிக்கும்‌,
திரைப்‌ பொருநையும்‌- அலை வீசும்‌ தாமிரபரணியாறும்‌,
மங்காத சதுமறைக்‌ குரிய வேள்வியும்‌ – பெருமை குறையாத நான்கு வேதங்கட்கும்‌ உரித்தாய யஜ்ஞங்களும்‌,
விழா அணியும்‌ – விழாக்கோலங்களும்‌,
மக ஒலியும்‌ – குழந்தைகளின்‌ விளையாட்டொலியும்‌,
நாளும்‌ வளமை பெறு குலநாத! .. தினந்தோறும்‌ மாட்சிமை மிகும்படி செய்யும்‌ கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவனே !
பரமபத வீடாள | _ பரமபதமாகிய மோட்சவீட்டிற்குரியவனே (சிறுபறை முழக்கியருள்‌ என மேல்‌ இயையும்‌),
வயல்கள்‌ தொறும்‌ – கழனிகளிலெல்லாம்‌,
மடைவாய்‌ தொறும்‌ – மடைத்தலைகளிலெல்லாம்‌,
சங்கு . [கருக்கொண்ட ] சங்குப்‌ பூச்சிகள்‌,
ஆரவாரம்‌ செய்து-பேரொலியெழுப்பி,
அகடு உளைந்து அலறி-வயிற்று வேதனையோடு கதறி,
தவழ்ந்து ஏறி-வரப்புகளில்‌ மெல்லநகர்ந்தேறி,
முத்து உயிர்க்கும்‌ – முத்துக்களை யீனும்‌ ;
(மற்றும்‌) தண்‌ அம்‌ தடம்‌ தாமரை பொகுட்டு ஆசனம்‌ .குளிர்ந்த அழகிய விசாலமான தாமரை மலரின்‌கொட்டையாகிய (நடுப்பகுதியாகிய) தவிசினை யுடைய,
பொன்‌ – இலஷ்மியின்‌,
தமனியம்‌ கோவிலில்‌ . பொன்‌போலிலங்கும்‌ உறையுளில்‌,
செங்கால்‌ அன்னம்‌ துயிலும்‌ – சிவந்த கால்களையுடைய அன்னப்‌ பறவைகள்‌,
துயிலும்‌ – (சுகமாகத்‌) தூங்‌கும்‌ ;
(அப்படிப்பட்ட) வழுதி வள நன்னாட! – வளப்பமுடைய பாண்டிய தாட்டுக்குத்‌ தலைவனே ! சிறுபறை முழக்கியருள்‌–:
தென்‌திருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌! –, சிறு பறை முழக்கி யருள்‌ –

கோவில்‌ என்றதாலே பொன்‌” இலக்குமியைக்காட்டும்‌ : அவள்‌ உறையுள்‌ பொற்றாமரையாகும்‌.–தமனியம்‌ – பொன்‌,

வேத வொலியும்‌ விழவொலியும்‌ பிள்ளைக்குழா விளையாட்‌ டொலியும்‌ அறாத்‌ திருப்பேரை”? என்றார்‌ நம்மாழ்வார்‌, (திருவாய்‌-7-3-1)

எங்கும்‌ எழுந்த நல்வேதத்‌ தொலி நின்றோங்கும்‌ தென்திருப்பேரை”? (7-8-4)

———–

நீறுபடு தவளவெண் பொடியாட வார்சடை
நெடுந்திரைக்‌ கங்கையாட
நிலவாட முகைமூறுக்‌ கவிழ்ந்தும்பை யாடவரன்‌
நின்றாட வமரராடப்‌
பாறுபடு நெட்டிலைச்‌ சுடர்வேல்‌ விடுங்கொடும்‌
படையிரா வணன்‌ மகுடமோர்‌
பத்துந்‌ தகர்ந்தாட வெம்பேய்‌ குறும்பேய்‌
பறந்தலை கவந்தமாடத்‌
தாறுபடு கதலிக்‌ கொழுங்கனி யுடைந்துவழி
சாறுமாங்‌ கனியினறவுந்
தருமுடப்‌ பலவீனற்‌ கனியுடைத்‌ துப்பெருகு
தண்ணறவு மாலைமண் டியே
சேறுபடு பள்ளவயல்‌ சூழ்வழுதி நாடனொரு
சிறுபறை முழக்கியருளே
தென்றிருப்‌ பேரைவரு நங்குழைக்‌ கா தமூகில்‌ !
சிறுபறை முழக்கியருளே.–90-

நீறுபடு தவளம்‌ வெண்பொடி ஆட – திருநீறாகிய மிக வெண்மையான துகள்‌ மேலெழ,
வார்‌ சடை – நீண்ட சடை மேலுள்ள,
நெடும்‌ திரை கங்கை ஆட – பெரிய அலைகளை வீசும்‌ கங்கையாறு பெருக,
நிலவு ஆட – பிறைச்சந்திரன்‌ அசைய,
முறுக்கு அவிழ்ந்து தும்பை ஆட – கட்டவிழ்ந்து தும்பை மாலை அசைய, (இப்படியாக)
அரன்‌ நின்றாட – சிவபிரான்‌ அம்பலத்தில்‌ நின்று ஆடவும்‌,(நர்த்தனம்‌ புரியவும்‌),
அமரர்‌ ஆட – தேவர்கள்‌ ஆடவும்‌ (நடனமிடவும்‌),
பாறு படு – பருந்துகள்‌ (ஒட்டியுள்ளதசைகளையுண்ணத் )தொடர்கின்ற,
நெடு இலை சுடர்‌ வேல்‌ .. பெரிய இலை வடிவாயமைந்துள்ள ஒளிரும்‌ வேலாயுதத்தை
விடும்‌ – எறியும்‌,
கொடும்படை இராவணன்‌ – கொடிய சேனைகளையுடைய இராவணனது,
மகுடம்‌ ஓர்‌ பத்தும்‌ தகர்ந்து ஆட – கிரீடங்கள்‌ பத்தும்‌ உடைந்து கிதறி (த்தலைகள்‌) ஆடவும்‌ (தடுங்கவும்‌)
பறந்தலை -போர்க்களத்து,
வெம்பேய்‌ குறும்பேய்‌- கொடிய பெரிய பேயும்‌ சிறிய பேயும்‌,
கவந்தம்‌ ஆட – உடற்குறையோடு ஒருசேரக்‌ கூத்தாடவும்‌; (சிறுபறை முழக்கியருள்‌ என இயையும்‌),
படு தாறு – குலையாகவிருந்த,
கதலிக்கொழுங்கனி உடைந்து-வாழையின்‌ செழித்த பழங்கள்‌ விண்டு,
வழி சாறும்‌ – வழிகின்ற ரசமும்‌,
மாங்கனியின்‌ நறவும்‌-மாம்பழத்திலிருந்து வருகின்ற தேனும்‌,
குரு முடப்‌ பலவின்‌ – வளைத்து பலா மரத்திலுள்ள,
நல்‌ கனிஉடைத்து – நன்கு பழுத்த பழம்‌ பிளந்து,
பெருகு தண்நறவும்‌ -ஒழுகுகின்ற இனியதேனும்‌, (சேர்ந்து)
அலை மண்டி – அலையாகச்‌ செறிந்து,
சேறுபடு பன்ளம்‌ வயல்‌ – சேடையாகிற தாழ்நிலங்கள்‌,
சூழ்‌ – சுற்றியுள்ள –
வழுதி நாடன்‌! – பாண்டியநாட்டவனே ! ஓரு சிறுபறை முழக்கி யருள்‌ –:
தென்றிருப்பேரை வரு நம்‌ குழைக்காத முகில்‌ ! — சிறுபறை முழக்கி யருள்‌-

————

பொருதிரை யெறிசல ராசி யுடுக்கும்‌
புவனத்‌ திருமாதும்‌
பொங்கு சினந்தலை மண்ட வடுஞ்சமர்‌
புக்கெதிர்‌ வருவோர்செங்‌
குருதி படும்படி பொருது மணம்புணர்‌
கொற்றக்‌ குூலமாதுங்‌
கோதறு வண்புகழ்‌ சேரனுகூலக்‌
கோமள மாமாதும்‌
மருமலி சததள மண்டபமீது
மகிழ்ந்துறை பூமாதும்‌
வடகலை தென்கலை முழுதுமு ணர்ந்தசொன்்‌
மங்கையு நாடோறுந்
திருவுள மகிழ்தர வழுதிநன்‌ னாடா 1
சிறுபறை கொட்டுகவே
தென்பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.--91-

பொரு திரைஎறி சலராசி.மோதுகின்ற அலைகளை வீசுகின்ற கடலை,
உடுக்கும்‌ – ஆடையாகக்‌ சுற்றியிருக்கும்‌, புவனம்‌
திருமாதும்‌ பூதேவியும்‌;
பொங்கு சினம்‌ தலை மண்ட – கிளர்ந்தெழுகின்ற கோபம்‌ தலைக்கேற (மிகச்சினந்து)
அடும்‌ சமர்புக்கு – கொல்லுகின்ற போரிற்புகுந்து,
எதிர்வருவோர்‌ செங்குருதி படும்படி பொருது – எதிர்த்து வரும்‌ பகைவர்களின்‌ சிவந்த இரத்தம்‌ தரையில்‌ தோயும்‌படி போரிட்டுக்‌ கொன்று,
மணம்‌ புணர்‌ – வெற்றியைத்‌ தழுவுகின்ற,
கொற்றக்‌ குலமாதும்‌ . கொற்றவையும்‌ (துர்க்காதேவியும்‌);
கோது அறு வண்‌ புகழ்‌ சேர்‌ குற்றமற்ற வளமைபொருந்திய புகழைக்‌ கொடுத்து,
அனுகூலக் கோமள மாமாதும்‌ – நன்மை செய்யும்‌ அழகிய கீர்த்தி லக்ஷ்மியும்‌;
மரு மலி சத தளம்‌ மண்டபம்‌ மீது . வாசனை செறிந்த நூற்றிதழ் தாமரையாகிய அலங்காரப்‌ பந்தலில்‌,
மகிழ்ந்துறை பூமாதும்‌ – களிப்புற்று வாழும்‌ இலக்குமி தேவியும்‌;
வடகலை தென்கலை முழுதும்‌ உணர்ந்த சொல்மங்கையும்‌ –
வடமொழி தமிழ்மொழியிரண்டிலும்‌ உள்ள கலைகள்‌ முற்றும்‌ அறிந்த (கலைமகளாகிய) சரசுவதி தேவியும்‌,
நாள் தோறும்‌ – தினந்தோறும்‌,
திருவுளம்‌ மகிழ்தர – மனமகிழும்படி,
வழுதி நல்‌ நாடா? – பாண்‌டிய நாட்டுக்குத்‌ தலைவனே ! சிறுபறை கொட்டுக – சிறிய பறையை முழக்குவாயாக :
தென்பேரையில்வரு–, நம்‌ குலநாதா!– நம்கோயிலில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவனே !
சிறுபறை கொட்டுக -சிறிய பறையை முழக்குவாயாக;

*போர் மகளைக்‌ கலை மகளைப்‌ புகழ் மகளைத்‌ தழுவியகை பொறாமை கூரச்‌, சீர்மகளைத்‌ திரு மகளைத்‌
தழுவுவான்‌ உயிர் கொடுத்துப்‌ பழி கொண்ட பித்தா 7 “பின்னைப்‌ பார் மகளைத்‌ தழுவினையோ?”” என்ற விபீடணனின்‌ புலம்பலில்‌ இந்த : வழக்கினைக்‌ கம்பர்பெருமான்‌ அழகுறக்‌ காட்டியுள்ளார்‌,

———-

உழுதுழு திசைபயி லளியொரு கோடி
உதைந்து துதைந்தாட
ஒளிர்மடன்‌ முகையவிழ்‌ துளவணி மால்குரு
கூர னுவந்தோதும்‌
பழுதறு முதுதிரு வாய்மொழி நூல்செவி
பற்பல புகுநேயன்‌
பண்டுல கங்களை பயுண்டுபி னளவு
படுத்துந்‌ திருமாமால்‌
முழுமறை முறையிடு மிருசர ணாலயன்‌
மூரிக்‌ கவடூடு
முதுபுன லோடையு மகழியும்‌ வால்வளை
மொய்க்குங்‌ கழனியிலுஞ்‌
செழுமலர்‌ மணமலி வழுதிநன்‌ னாடா /
சிறுபறை கொட்டுகவே
அதன்‌ பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.–92-

உழுது உழுது-
(கால்களால்‌) கிண்டி கிண்டி,
இசை பயில்‌ – ரீங்காரஞ்‌ செய்கின்ற,
ஒரு கோடி அளி — மிகப்பலவாகிய வண்டுகள்‌.
துதைந்து – நெருங்கி,
உதைந்து – (கால்களால்‌) மிதித்து,
ஆட – அசைய, (அதனால்‌)
ஒளிர்‌ மடல்‌ முகை அவிழ்‌ துளவு – விளங்குகின்ற இதழோடு மொட்டுக்கள்‌ மலர்கின்ற திருத்துழாயை,
அணி . (மாலையாகத்‌) தரித்துள்ள,
மால்‌ -திருமாலும்‌ ;
குருகூரன்‌ – நம்மாழ்வார்‌,
உவந்து ஒதும்‌ – மகிழ்ந்து திருவாய்‌ மலர்ந்தருளிய,
பழுது அறு – குற்றமற்ற,
முது – பழமையான,
திருவாய்மொழிநூல்‌ . திருவாய்மொழிப்பாடல்கள்‌,
பற்பல செவி -பலருடைய காதுகளில்‌,
புகு – புகுதற்குக்‌ காரணமாகிய,
நேயன்‌ -நண்பனாகுபவனும்‌ ;
பண்டு . மகாபிரளய காலத்தில்‌,
உலகங்களை உண்டு – எல்லா வுலகங்களையும்‌ புசித்து,
பின்‌ – பிரளயம்‌ நீங்கிய பின்‌,
அளவு படுத்தும்‌ – (உமிழ்ந்து) சீர்‌ செய்து அமைக்கும்‌,
திருமாலால்‌ .. லக்ஷ்மீ நாராயணனணும்‌ ;
முழுமறை முறையிடும்‌ – பூர்ணமாயுள்ள வேதங்கள்‌ (கண்‌ டறிய முடியாது) ஓலமிடும்‌,
இரு சரணாலயன்‌ . உபய பாதங்களை யுடையவனும்‌ ;(ஆகிய **வழுதி நன்னாடா”” என மேலியையும்‌).
இனி)
மூரிக்‌ கவடு ஊடும்‌ – வலிய மரக்கிகாகளின்‌ நடுவிலும்‌,
முது புனல்‌ ஓடையும்‌ – பழைய நீரோடைகளிலும்‌,
அகழியும்‌ – அகழிகளிலும்‌,
வால்‌ வளை மொய்க்கும்‌ கழனியிலும்‌ – வெள்ளிய சங்குப்‌ பூச்சிகள்‌ நெருங்கியிருக்கும்‌ வயல்களிலும்‌,
செழு மலர்‌ மணம்‌ மலி – செழித்து [ ப்பூத்துள்ள ] மலர்கள்‌ வாசனையை மிகுதியாக வீசுகின்ற,
வழுதி நல்‌ நாடா . பாண்டிய தாட்டுக்குத்‌ தலைவனே !சிறு பறை கொட்டுக–;
தென்பேரையில்‌ வரு நம்‌ குல நாதா–,சிறுபறை கொட்டுக–;

நேயன்‌ .. ஸுஹ்ருத்‌ என்றது ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமமும்‌, “சுருதி நான்கும்‌ தேடுகின்ற பதம்‌‘” என்றார்‌ வில்லியும்‌.

———

புவனமு மண்ட கடாகமும்‌ வேலைப்‌
புணரித்‌ திசையெட்டும்‌
பொங்கழல்‌ கதுவிய கண்களி யானைப்‌
புகர்முக மலையெட்டுங்‌
குவடு படும்பொலன்‌ வடவரை முதலாங்‌
குலகிரி யோரெட்டுங்‌
கொடுவிட முடவுப்‌ பஃறலை மகுடக்‌
கோளர வோரெட்டுந்‌
தவமுனி வர்சுரர்‌ மகபதி முக்கட்‌
சடைமுடி யுடையோனுஞ்்‌
சதுமுக னறுமுக னொருகொம்‌ பேந்திய
தந்திமு கத்தோனுஞ்‌
செவிகுளி ரத்திரு வழுதிநன்‌ னாடா !
சிறுபறை கொட்டுகவே
தென்பே ரையில்வரு நங்குல நாதா !
சிறுபறை கொட்டுகவே.–93-

புவனமும்‌ – நிலவுலகமும்‌,
அண்ட கடாகமும்‌ – அண்டகோளகையும்‌,
வேலைப்‌ புணரி திசையெட்டும்‌ . கரையையுடைய கடலொடு பட்ட எட்டுத்திக்குக்களும்‌,
குவடுபடும்‌ – சிகரங்களைக்‌ கொண்ட,
பொலன்‌ வடவரை முதலாம்‌ குலகிரி ஓர்‌ எட்டும்‌ -வடக்கிலுள்ள பொன்மலையாகிய மேருமலை முதலாகிய சிறந்த எட்டு மலைகளும்‌,
பொங்கு அழல்‌ கதுவிய கண்கள்‌ – கிளர்ந்‌தெழும்‌ நெருப்புப்‌ பற்றியது போலச்‌ (சினத்தினால்‌) சிவந்த கண்‌களையுடைய,
புகர்‌ முக மலை – புள்ளிகளோடு கூடிய நெற்றியைக்‌ கொண்ட மலை போன்றுள்ள.
யானை எட்டும்‌ – அட்டதிக்குக்கஜங்‌களும்‌,
கொடு விடம்‌ – கொடிய விஷத்தையும்‌,
முடவு – வளைந்த,
பல்‌ தலை மகுடம்‌ – பல தலைகளையுடைய உச்சியையும்‌ கொண்ட,
கோள்‌ அரா ஓர்‌ எட்டும்‌ – பற்றுந்தன்மையுள்ள அட்டமாநாகங்‌ களும்‌, (மற்றும்‌)
தவமுனிவர்‌ – தவவிருடிகளும்‌,
சுரர்‌ – தேவர்‌களும்‌,
மகபதி – இந்திரனும்‌,
முக்கண்‌ சடைமுடி உடையோனும்‌ – மூன்றுகண்களையும்‌ சடைமுடியையும்‌ கொண்ட சிவபெருமானும்‌ ,
சதுமுகன்‌ – நான்கு முகங்ககாக்‌ கொண்ட பிரமனும்‌,
அறுமுகன்‌ -ஆறு முகங்களைக்‌ கொண்ட முருகனும்‌,
ஒரு கொம்பு ஏந்திய தறந்திமுகத்தோணும்‌ . ஒற்றைக்‌ கொம்பினடைய யானைமுகளனாகிய விநாயகனும்‌,
செவி குளிர – காதுகள்‌ (கேட்டு) இன்புறும்படி,
திருவழுதி நல்‌ நாடா — சிறு பறை கொட்டுக — :
தென்பேரை யில்‌ வரு நம்‌ குலநாதா –, சிறு பறை கொட்டுக–

அட்டதிக்கும்‌ கஜங்களும்‌ – கிழக்கில்‌ ஐராவதம்‌, தென்கிழக்கில்‌ புண்டரீகம்‌, தெற்கில்‌ வாமனம்‌,
தென்‌ மேற்கில்‌ குமுதம்‌, மேற்கில்‌ அஞ்சனம்‌, வடமேற்கில்‌ புட்பதந்தம்‌, வடக்கில்‌ சார்வபெளமம்‌ , வடகிழக்கில்‌ சுப்பிரதீகம்‌ என்பன.

அவற்றின்‌ பிடிகள்‌ — இந்த அட்டதிக்கஜங்‌களின்‌ துணைவியான பிடிகள்‌ முறையே அப்பிரமை, கபிலை, பிங்களை,
அனுபமை, தாமிரபருணி; சுதந்தி, அஞ்சனை, அஞ்சனாவதி என்பன.

அட்டதிக்குப்பாலகர்‌ – முறையே இந்திரன்‌, அக்கினி, யமன்‌, நிருதி, வருணன்‌, வாயு, குபேரன்‌, ஈசானன்‌ என்பவர்‌.
குலகிரிஎட்டு :- இம௰ம்‌, மந்தரம்‌, கைலாசம்‌, விந்தியம்‌, நிடதம்‌, ஏமகூடம்‌, நீலம்‌, கந்தமாதனம்‌ என்பன,

அட்டமா நாகங்கள்‌ – வாசுகி, அனந்தன்‌, தக்கன்‌, சங்கபாலன்‌, குளிகன்‌, பதுமன்‌, மகாபதுமன்‌, கார்க்கோடகன்‌ என்பன.

———

அளிசகற்‌ றியதண்‌ டலப்பொதியத்‌
தஞ்சா ரவிற்பைங்‌ கிழங்கெடுக்கும்‌
அம்பொற்‌ குழியில்‌ சுடர்விரிக்கு
மங்கால்‌ வயிரங்‌ கிடந்திமைப்பத்‌
துளிபட்‌ டொழுகும்‌ வரையருவி
சுழிக்குற்‌ தொறும்பொன்‌ னொழுக்கெறியச்‌
சுவையூற்‌ நிருக்கும்‌ புனுற்பொருதை
சுருட்டுந்‌ திரைசெம்‌ மணிகொழிப்பத்‌
தளைவிட்‌ டலரும்‌ பசும்பாளைத்‌
தலைப்பூங்‌ கமுக மணிமிடற்றுத்‌
தாங்கும்‌ பவளக்‌ குலைகவிப்பத்‌
தடஞ்சால்‌ வழியூர்ந்‌ தகடுகந்து
வளைமுத்‌ துதிர்க்கும்‌ வயற்பேரை
மாலே ! சிறுபறை கொட்டுகவே
வருணன்‌ பரவு மிருசரண
மாலே ! சிறுபறை கொட்டுகவே.--94-

அளி சுற்றிய தண்‌ தலம்‌ பொதியத்து ௮ம்‌ சாரலில்‌-வண்டுகள்‌ சுழலும்‌ : குளிர்ந்த சோலையிடங்களைக்‌ கொண்ட பொதியமலையின்‌ அழகிய பக்கங்களில்‌,
பைங்‌ கிழங்கு எடுக்கும்‌ அம்‌ பொன்‌ குழியில்‌ . பசிய [வள்ளிபோன்ற] கிழங்குகளைக்‌ கல்லி யெடுக்கின்ற அழகிய குழிகளில்‌,
௬டர்‌ விரிக்கும்‌ அம்‌ கால்‌ வயிரம்‌ கிடந்து இமைப்ப – ஒளியைப்‌ பரப்பும்‌ அழகிய கிரணங்களை யுடைய வயிரக்கற்கள்‌ கிடந்து பிராகாசிக்க,
துளிபட்டு ஒழுகும்‌ வரை அருவி – பாழை பெய்தலால்‌ பெருகும்‌ மலையருவி,
சுழிக்கும்‌ தொறும்‌ -சுழலிடும்போதெல்லாம்‌,
பொன்‌ ஒழுக்கு எறிய.–பொன்னை ஒழுகவிட்டாற்போல்‌ வீச;
சுவை ஊற்றிருக்கும்‌ புனல்‌ பொருநை – இனிய -: நீரூற்றுக்களைக்கொண்ட தாமிரபர்ணிததி
சுருட்டும்‌ திரை – மடித்துவீசும்‌ அலைகள்‌,
செம்மணி கொழிப்ப -சிவந்தரத்தினங்களைத்‌ தெள்ளியொதுக்க;
தளைவிட்டு அலரும்‌ பசும்‌பாளை . கட்டு நெகிழ்ந்து மலர்கின்ற பசிய பாளைகளை,
தலைபூங்‌கமூகம்‌ – உச்சியிற்கொண்டுள்ள இளைய கமுகமரங்கள்‌,
மணி மிடற்றுத்‌ தாங்கும்‌ பவளக்குலை – (தமது) அழகிய கழுத்திடத்துத்‌ தாங்கியுள்‌ள பவளம்போன்ற செவ்விய பாக்குக் குலைகளை,
கவிப்ப – வளையத்தொங்கவிட்டு மூட, (இங்ஙனம்‌ சிறப்புப்பெற்று மேலும்‌)
தடம்‌ சால்‌ வழி ஊர்ந்து – பெரிய கலப்பை சென்ற வழி
யிலேயே நகர்ந்து சென்று, (அதனால்‌)
அகடு உளைந்து – (கரக்‌கொண்டிருக்கும்‌) வயிறு நொந்து,
வளை . சங்குப்பூச்சிகள்‌,
முத்து உதிர்க்கும்‌ . (வெண்‌) முத்துக்களை ஈனும்‌,
வயல்‌ பேரை மாலே ! -கழனிகளைக் கொண்ட தென்திருப்பேரையில்‌ கோயில்கொண்டுள்ள
திருமாலே சிறுபறை கொட்டுக– ;:
வருணன்‌ பரவும்‌ இருசரணமாலே!– வருணபகவான்‌ தோத்தரிக்கின்ற உபய பாதங்களையுடைய
திருமாலே சிறுபறை கொட்டுக.

இச்செய்யுளில்‌, வயிரம்‌, பொன்‌, செம்மணி, பவளம்‌ முதலிய வந்துள்ள நயம்‌ காண்க,

——————-

சிறுதேர்ப்பருவம்‌

உரைக்குஞ்‌ சதுமா மறைதனக்கும்‌ ©
– உயர்வா னவர்க்கு மெட்டாத
உண்மைப்‌ பொருளே ! கன்றொடுகுன்‌
_ றுருகும்‌ படிவேய்ங்‌ குழலூதி
நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌
நீலப்‌ புயலே 1! போரேறே
நிலமா சமரா டிடுங்கொடிய
நிருதர்‌ குலத்துக்‌ கொருகூற்றே !
வரைச்சந்‌ தகிலுஞ்‌ செம்மணியும்‌
மதவா ரணக்கிம்‌ புரிமருப்பும்‌
மயிற்பீ லியும்வெண்‌ ணித்திலமும்‌
வாரிச்‌ சுருட்டிக்‌ கரைபொருது
திரைக்குந்‌ திரைத்தண்‌ பொருநைநதிச்‌
| செல்வா ! தடந்தே ர௬ுருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ நடந்தே ருருட்டுகவே.–95-

உரைக்கும்‌ சதுமாமறைதனக்கும்‌ – ஓதுகின்ற நால்‌ வேதங்களுக்கும்‌,
உயர்‌ வானவர்க்கும்‌ . மேலான தேவர்களுக்கும்‌,
எட்டாத – காணமுடியாது
அப்பாற்பட்ட, உண்மைப்‌பொருளே ! – சத்தியமான பரம்பொருளே !
கன்றொடு – (தான்‌ மேய்க்கும்‌) பசுங்கன்றுகளோடு,
குன்று உருகும்படி-கற்களும்‌( இசைகேட்டு) மனமுருகி நெகிழும்படி,
வேய்ங்குழல்‌ ஊதி – புல்லாங்‌குழலை யிசைத்து,:
நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌ – பசுக்கூட்டங்‌களுக்குப்‌ பின்னே (அவற்றின்‌ வாலுருவி) நடந்துசெல்லும்‌,
நீலப்‌ புயலே – நீலமேகம்‌ போன்றவனே ,
போர்‌ ஏறே! போர்க்‌களத்துச்‌ சிங்கம்போன்றவனே !
நிமலா ! – தோஷமற்றவனே
சமர்‌ ஆடிடும்‌ – போரிடுகின்ற
கொடிய நிருதர்‌ குலத்துக்கு -கொடிய அரக்கரின த்திற்கு,
ஒரு கூற்றே | – ஓப்பற்ற காலனே |
வரை சுந்து அகிலும்‌ – மலையிடத்துள்ள சந்தனக்‌கட்டையினையும்‌ அகிற்கட்டையினையும்‌,
செம்‌ மணியும்‌ . சிவந்த இரத்தினங்‌களையும்‌,
மத வாரணம்‌ கிம்புரி மருப்பும்‌ – மதயானை களின்‌ பூணிட்ட தந்தங்களையும்‌,
மயில்‌ பீலியும்‌ – மயிற்றோகையின்‌ இறகு களையும்‌,
வெள்‌ நித்திலமும்‌ – வெண்மையான முத்துக்களையும்‌,
வாரிச்சுருட்டி – (பாயும்‌ வழியில்‌) வாரிக்கொண்டு சுருட்டிவந்து,
கரை பொருது . கரைகளில்‌ மோதி,
திரைக்கும்‌ – நுரைத்திடும்‌,
திரை தண்‌ பொருநை நதி .. அலைகளையுடைய குளிர்ந்த தாமிர பர்ணியாற்றின்‌,
செல்வா !–, தடம்‌ தேர்‌ . அகலமான தேரை,உருட்டுக -உருட்டுவாயாக ;
தென்பேரையின்‌ நம்‌ குல நாதா -தென்‌பேரையிலெழுந்தருளியுள்ள எங்கள்‌ குலத்தலைவனே !
செம்‌ பொன்‌ தடம்‌ தேர்‌ – சிவந்த பொன்னினாலாகிய அகலமான தேரை,
உருட்டுக – உருட்டுவாயாக ;

*நிரைக்குப்‌ பின்னே நடந்தருளும்‌? என்றவிடத்து, “காலடி தோவக் கன்றின் பின்‌, கொடியேன்‌ என் பிள்ளையைப்‌ போக்கினேன்‌”? என்ற பெரியாழ்வார்‌ வாக்கு நினைக, (:3-2-9),

——–

உருவா யுயிரா யுணர்வாகி
உள்ளும்‌ புறனு முளனாகி
உரைக்குஞ்‌ சமய மாநினுக்கும்‌
ஒன்று பலவு மாயடங்கி
அருவாய்‌ நிறையு நின்‌ பெருமை
யார்க்குந்‌ தெரிய வசமன்றே
ஆழிப்‌ புயலே ! யருட்கடலே !
அரி ! கே சவ! சீ தர ! முகுந்தா !
மருவார்‌ பொழிலிற்‌ கேணியில்வாய்‌
மடையிற்‌ சுழியிற்‌ படுவரம்பில்‌
வளைமுத்‌ துயிர்க்குந்‌ திருவழுதி
வள நாட்‌ டுறையெம்‌ பெருமாளே 7/7
தெருவீ தியினூற்‌ றெண்மர்தொழச்‌
செம்பொற்‌ நடந்தே ர௬ுருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே.--96-

உருவாய்‌ உயிராய்‌ உணர்வாகி – உடம்புடையனவாய்‌ உயிருடையனவாய்‌ உணர்வுடையனவாய்‌ இருக்கும்‌ பொருள்களனைத்துமாகி,
(அவற்றுள்‌ ) உள்ளும்‌ புறனும்‌ உளனாகி-
உள்ளுக்குள்ளும்‌ வெளியிலும்‌ இருப்பவனாகி, (மேலும்‌)
உரைக்கும்‌ சமயம்‌ ஆறினுக்கும்‌ – (சிறப்பித்துப்‌) பேசப்படும்‌ ஆறு மதங்களுக்‌கும்‌,
ஒன்றும்‌ பலவும்‌ ஆய்‌ அடங்கி – (பொதுப்பட்ட) ஓரே தெய்வமாய்‌ ஏகனாகியும்‌ (அதற்கு ஏற்ற வடிவினனாய்ப்‌)பல தெய்வமாகியும்‌ அனைத்திலும்‌ தங்கி,
(மற்றும்‌) அருவாய்‌ . கண்ணுக்குப்‌ புலப்படாத உருக்கரந்த அந்தர்யாமியாய்‌,
நிறையும்‌ – (யாண்டும்‌நீக்கமற) நிறைந்திருக்கும்‌,
நின்‌ பெருமை – உன்னுடைய மேன்மை,
யார்க்கும்‌ தெரிய வசமன்று .. எவர்க்கும்‌ (அளவிட்டு) அறியும்‌ தரத்ததன்று :
ஆழிப்புயலே ! – (பாற்‌) கடலிலுள்ள மேகமே !
அருள்‌ கடலே – கருணா சமுத்திரமே
அரி! ஹரியே,
கேசவ- கேசவனே ,
சீதர – சீதரனே |,
முகுந்தா | – முகுந்தனே
மரு ஆர்‌ பொழிலில்‌ – வாசனை நிறைந்த சோலைகளிலும்‌,
கேணியில்‌ – கிணறுகளிலும்‌,
வாய்மடையில்‌ – மடைத்தலைகளிலும்‌,
சுழியில்‌ – நீர்ச்சுழியிடங்களிலும்‌,
படுவரம்பில்‌ – இருக்கின்ற வரப்புக்‌களிலும்‌,
வளை – சங்குப்பூச்சிகள்‌,
முத்து உயிர்க்கும்‌ – முத்துக்களை யீனுகின்ற,
திருவழுதிவள நாட்டு – பாண்டியநாட்டில்‌, உறை நித்யவாசஞ்செய்கின்ற,
எம்‌ பெருமாளே .- எங்கள்‌ இறையவனே !
தெருவீதியில்‌ – பெரியதெருவழியே,
நூற்றெண்மர்‌ தொழ -ஜைமீநீயதலவகாரசாம வேதிகள்‌ நூற்றெட்டுப்பேரும்‌ (கண்டு)தொழும்படி,
செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–: தென்பேரை யில்‌ நம்‌ குலநாதா –, செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக-

“உருவாய்‌ உயிராய்‌ உணர்வாகி உள்ளும்‌ புறனும்‌ உளனுகி‘” என்னுமிடத்து
திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசைப்‌,படர்‌ பொருண்முழுவதுமாய்‌ அவையவைதொறும்‌, உடன்மிசையுயிரெனக்‌ கரந்தெங்கும்‌ பரந்‌ துளன்‌?”’ என்னும்‌ பாசுரத்தின்‌ விசேஷார்த்தங்கள்‌

உள்ளேயிருப்பதற்கு உடலுக்குள்‌ உயிரிருப்பதும்‌, வெளிப்பட்டும்‌ இருப்பதற்கு உயிரில்‌ உணர்வு இருப்பதும்‌ எடுத்‌துக்காட்டுகளாகும்‌.

கம்பர் பெருமானும்‌ :*ஊனுமுயிரும்‌ உணர்வும்‌ போலுள்ளும்‌ புறனுமுளனென்ப”? என்றார்‌.

*ஓன்‌றெனப்‌ பலவென வறிவரும்‌ வடிவினுள்நின்ற நன்றெழில்‌ நாரணன்‌”? எனறு நம்மாழ்வார்‌

கம்பர்பெருமானும்‌ :“’ஒன்றேயென்னின்‌ ஒன்றேயாம்‌ பலவென்்‌ றுரைக்கிற்‌பலவேயாம்‌”” என்றார்‌.

அருவாய்‌ நிறையும்‌”* என்றவிடத்து உளனலனெனில்‌ அவனருவம்‌ இவ்வருவுகள்‌’*? எண்ற நம்மாழ்வார்‌பாசுரம்‌

கேசவன்‌ – பிரமனையும்‌ உருத்திரனையும்‌ தன்‌ அங்கத்திற்கொண்டவனென்று பொருள்படும்‌ : க- பிரமன்‌, ஈச – சிவன்‌ : ““பிறைதங்கு சடையானை வலத்தேவைத்துப்‌ பிரம னைத்தன்னுந்தியிலே தோற்றுவித்து”’என்ரார்‌ திருமங்கையாழ்வாரும்‌.
இனி இதற்கு- அழகிய மயிர்முடியையுடையவனென்றும்‌, கேசியென்‌ னும்‌ அசுரனைக்கொன்றவனென்றும்‌ பொருள்கள்‌ உண்டு,

———–

மேல்பால்‌ முளைக்கும்‌ பிறையெயிற்று
வெங்கட்‌ கொடிய நிருதர்குழாம்‌
வெல்லுந்‌ தடக்கைச்‌ சிலையிராமன்‌ 1
விரிதெண்‌ டிரைநீர்க்‌ கடன்முகட்டின்‌
பாலா டரவிற்‌ கண்டுயிலும்‌
பசுந்தார்க்‌ குழகன்‌ 1! கஞ்சன்விடு
பாரச்‌ சகடு மருதுமொடி
படத்தா னெரிக்கு மொருமுகுந்தண்‌ !
கால்வாய்ப்‌ புனலிற்‌ கேணியினிற்‌
கழுநீர்க்‌ குழியில்‌ வாய்மடையிற்‌
கருஞ்சேற்‌ றினினல்‌ லருங்கயத்திற்‌
கழம்பூந்‌ துறையில்‌ வெகுண்டெழுந்து
சேல்பாய்‌ வழுதித்‌ திருநாடா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ருருட்டுகவே.–97-

மேல்பால்‌ முளைக்கும்‌ -மேற்குத்திக்கில்‌ தோன்றுகின்ற,
பிறை எயிறு – பிறைச்சந்திரன்போல்‌ வளைந்த கூரிய பற்‌களையும்‌,
வெங்கண்‌ – (கோபத்தினால்‌) சிவந்த கண்களையும்‌உடைய,
கொடிய நிருதர்குழாம்‌ – கொடிய அரக்கர்கூட்டத்தை,
வெல்லும்‌ தட கை சிலை இராமன்‌ ! – செயித்த பெரிய கைகளில்‌ வில்லைப்பிடித்த இராமபிரானே ,
விரி தெள்‌ திரைநீர்‌ கடல்‌ முகட்‌டின்பால்‌ – பரந்த தெளிந்த அலைகள் வீசும்‌ திருப்பாற்கடலின்‌ மேலிடத்து,
ஆடு அரவில்‌ கண்‌ துயிலும்‌ . படமெடுத்தாடுகின்ற ஆதிசேடனாகிய பாம்பின்மேல்‌ பள்ளிகொண்டு யோகநித்திரை செய்யும்‌,
பசும்‌ தார்‌ குழகன்‌ ! .. பச்சைத்திருத்துழாய்‌ மாலையைத்‌ தரித்த அழகனே;
கஞ்சன்‌ விடு பாரம்‌ சகடும்‌ – கம்சனாகிய மாமன்‌ (தன்னைக்‌ கொல்லுமாறு) நிறுவிய பெருத்த வலிய வண்‌டியையும்‌,
மருதும்‌ . [நாரத முனிவன்‌ சாபத்தால்‌ குபேரபுத்திரர்‌ இருவர்‌ மாறிய] இரட்டை மருத மரங்களையும்‌,
ஓடிபட – முறிந்து விழும்படி,
எரிக்கும்‌ – [அடியோடு] அழித்த,
ஒரு முகுந்தன்‌ -ஒப்பற்ற முகுந்தனே !
கால்வாய்‌ புனலில்‌ – வாய்க்கால்‌ நீரிலும்‌,
கேணியினில்‌ – கிணறுகளிலும்‌,
கழுநீர்க்குழியில்‌ – செங்கழுநீர்பூத்த பள்ளங்களிலும்‌,
வாய்மடையில்‌ – மடைவாயிடங்களிலும்‌,
கரும்‌ சேற்றினில்‌ – கரிய சேற்றிடங்களிலும்‌,
நல்‌ அரும்‌ கயத்தில்‌ – நல்ல சிறந்த குளங்‌களிலும்‌,
கமழ்‌ பூந்துறையில்‌ – பரிமளிக்கின்ற பூக்கள்‌ நிறைந்த நீர்த்துறைகளிலும்‌,
சேல்‌ – சேல்மீன்கள்‌,
வெகுண்டு எழுந்து பாய்‌.சினந்து மேலெழுந்து தாவிப் பாய்கின்ற
வழுதித் திருநாடா -பாண்டியநாட்டிற்குரியவனே , செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–
தென்பேரையில்‌ நம்‌ குலநாதா –!, செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்‌.டுக–;

——————-

தந்தா னெனக்கு வரமிரண்டு
தலைநா ளுரைத்த சொற்படிக்குன்‌
தகப்பன்‌ புரந்த முறைதருமத்‌
தழைப்ப வொருகோ லோச்சியெங்கும்‌
நந்தா வளமைப்‌ பரதனிந்த
நாடா Ghost காடாள
நடவென்‌ றுரைத்த சிற்றவைசொல்‌
நலமேற்‌ றலைக்கொண் டொருப்பட்டு
கொந்தார்‌ குழலி சனகியொடுங்‌
கூடப்‌ பிறந்த விளவலொடுங்்‌
கொதிக்கும்‌ பரல்வெங்‌ கொடுங்கானங்்‌
குறுகும்‌ பொழுதுங்‌ குளிர்ந்தலர்ந்த
செந்தா மரைப்பொற்‌ நிருமுகத்துச்‌
செல்வா 1! தடந்தே ருருட்டுகவே
தென்பே ரையினங்‌ குலநாதா !
செம்பொற்‌ றடந்தே ௬ுருட்டுகவே.--98-

“தலைநாள்‌ உரைத்த சொற்படிக்கு – முன்‌ னொருதாள்‌ சொன்ன சொல்தவருதபடியிருக்க,
உன்‌ தகப்பன்‌ – உனது தந்‌தை யாகிய தசரதன்‌,
எனக்கு இரண்டு வரம்‌ தந்தான்‌ – (கைகேயியாகிய) எனக்கு இருவரங்கள்‌ இப்போது தந்துள்ளான்‌ :
புரந்த-பாதுகாக்கப்‌பட வேண்டிய,
முறை – முறைமைப்படி,
தருமம்‌ தழைப்ப – அறம்‌ செழிக்கும்படி,
ஒரு கோல்‌ ஓச்சி . ஒப்பற்ற செங்கோலினைச்‌ செலுத்தி, எங்கும்‌ நந்தா வளமை இந்த நாடு – எவ்விடத்திலும்‌ ‘குறையாத வளப்பதை(ப்பெறும்படி)இந்தக்‌ கோசலதேசத்தை,
பரதன்‌ ஆளுவன்‌ – (என்மகன்‌) பரதன்‌ ஆட்சி புரிவான்‌.
நீ–, காடாள நட-காட்டிற்குச்‌ செல்வாய்‌””என்று உரைத்த
சிற்றவை சொல்‌-என்றுகூறிய சிறிய தாயாகிய கைகேயின்‌ கட்டளை வார்த்தைகளை,
நலம்‌-நன்மையுடையனவே, (என)
ஒருப்பட்டு – உடன்பட்டு,
தலை மேல்‌ கொண்டு – சிரசாவகித்து,
கொந்து ஆர்‌ குழலி சனகியொடும்‌ – பூங்கொத்துக்கள்‌ நிறைந்த கூந்தலையுடைய சீதாபிராட்டியோடும்‌,
கூடப்‌ பிறந்த இளவலொடும்‌ – தன்னுடன்‌ பிறந்த தம்பியாகிய இலக்குமணணோடும்‌,
பரல்‌ கொதிக்கும்‌ – பருக்கைக்கற்கள்‌ (வெப்‌பத்தால்‌) கொதிப்படைந்திருக்கும்‌,
வெம்‌ கொடும்‌ கானம்‌ -மிகக்‌கொடுமையான ஆரணியம்‌,
குறுகும்‌ பொழுதும்‌ – செல்லும்‌ போதும்‌
(கவலையின்றி), குளிர்ந்து அலர்ந்த செந்தாமரை பொன்‌ திருமுகத்‌துச்‌ செல்வா |– குளிர்ச்சியாயிருக்கும்படி மலர்ந்த செந்தாமரைப்‌ பூப்‌ போன்ற அழகிய திருமுக மண்டலத்தையுடைய செல்வனே?
தடம்‌ தேர்‌ உருட்டுக . அகன்ற தேரை உருட்டுவாயாக :
தென்‌பேரையில்‌ நம்‌ குலநாத! செம்பொன்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–

பொருந்தார்கை வேல்நுதிபோல்‌ பால்பாய மெல்லடிக்கள்‌ குருதி சோர, விரும்பாத கான்‌?” என்ற குலசேகரர்‌ கூற்றும்‌ நினைக,

அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா”?

——–

தருநீழ லிடையினிது வீற்றிருக்‌ கும்புரந்‌
தரனுமுனி வரருமுளரிச்‌
சதுமுகக்‌ கடவுளு முக்கட்‌ கொழுங்கனிச்‌
சடைமுடிச்‌ சிவனும்வெஞ்சூர்ப்‌ ‘
பொருகிரண வேலுடைய பரமன்மூுரு கேசனும்‌
புகர்முகத்‌ தவனுமதியும்‌
பொங்குளைப்‌ பச்சைப்‌ பசும்புரவி யேழ்கட்டு
பொற்றடந்‌ தேரிரவியும்‌
பெருவா சலிற்புக நெருக்குண்டு சந்நிதிப்‌
பேறுண்டு கிட்டுமென்றே
பிறங்குபொற்‌ கருடக்‌ கொடிக்கம்பம்‌ வலம்வந்து
பெருகவஞ்‌ சலிசெய்திடத்‌
திருமேனி மண்டபத்‌ தரசிருக்‌ குங்கடவுள்‌ !
சிறுதே ருருட்டியருளே
தென்‌ றிருப்‌ பேரைவரு நங்குவழக்‌ காதமுகில்‌ /
-சிறுதே ருருட்டியருளே.–99-

தரு நீழலிடை இனிது வீற்றிருக்கும்‌ புரந்தரனும்‌ –கற்பக விருட்சத்தின்‌ நிழலில்‌ இணனிமையாகத்‌ தங்கியிருக்கும்‌ தேவேந்திரனும்‌,
முனிவரரும்‌ – இருடிச்சிரேட்டர்களும்‌,
முளரிச்‌ சதுமுகக்‌ கடவுளும்‌ – (திருமாலின்‌ உந்தியாகிய) தாமரை மலரில்‌ எழுந்தருளியிருக்கின்ற நான்முகனும்‌,
முக்கண்‌ கொழும்கனி சடைமுடி சிவனும்‌ – மூன்று கண்களையும்‌ பழுத்தகனி போற்‌ சிவந்த சடைத்‌ தொகுதியையும்‌ உடைய சிவபெருமானும்‌,
வெஞ்‌ சூர்‌பொரு – கொடிய சூரபதுமனோடு போரிட்ட,
கிரண வேலுடைய-ஒளிவிடும்‌ சக்தி வேலையேந்திய,
பரமன்‌ முருகேசனும்‌ – மேலானவனாகிய கந்தனும்‌,
புகர்முகத்தவனும்‌ – யானை முகத்தவனாகிய விநாயகனும்‌,
மதியும்‌ – சந்திரனும்‌,
பொங்கு உளை பச்சைப்பசும்‌ புரவி – கிளர்ந்‌தெழுகின்ற பிடரிமயிரினையுடைய மிகுந்த பச்சை நிறமுடைய குதிரைகள்‌,
ஏழ்கட்டு-ஏழு கட்டப்பட்ட,
பொன்‌ தட தேர்‌ – அழகிய விசாலமான பெரியதேரினையுடைய,
இரவியும்‌ – சூரியனும்‌,
பெரு வாசலில்‌ புக – பெரிய கோபுரவாசல்‌ மூலம்‌ புகும்போது,
நெருக்‌குண்டு – நெருக்கப்பட்டு, (உட்புகுந்தபின்‌ )
*சந்நிதிப்‌ பேறு உண்டுகிட்டும்‌, – எம்பெருமான்‌ திருவோலக்கசேவை நிச்சயம்‌ கிடைக்கும்‌; என்று – என்று குதூகலித்து,
பிறங்கு பொன்‌ கருடக்கொடிக்‌ கம்பம்‌ வலம்‌ வந்து -விளங்குகின்ற பொன்னாலாகிய அழகிய கருடத்‌துவசம்‌ கொண்ட தம்பத்தைப்‌ பிரதட்சிணஞ்‌ செய்து,
பெருக அஞ்சலி செய்திட – பெருத்தகும்பீடு போடும்படி,
திருமேனி மண்டபத்து–திருமேனிமண்டபத்திலே,
அரசிருக்கும்‌ – வீறுடன்‌ கொலுவிலெழுந்தருளியிருக்கும்‌,
கடவுள்‌ – இறையவனே ;
சிறுதேர்‌ உருட்டியருள்‌ தென்திருப்பேரை வரு-: தென்திருப்பேரை நகரில்‌ வந்து கோயில்‌ கொண்டுள்ள,
நம்‌ குழைக்காத முகில்‌ – நம்‌ மகர நெடுங்குழைக்காதராகிய [நிகரில்‌] முகில்‌ வண்ணனே ! சிறுதேர்‌ உருட்டியருள்‌ ;

*நெருக்குண்டு’ என்ற விடத்து *உன்கோயிலின்‌ வாசல்‌ சுந்தரர்நெருக்க விச்சாதரர்‌ நூக்கஇயக்கரும்‌ மயங்கினர்‌” என்ற திருப்பள்ளியெழுச்சி ஒப்புக்‌ காண்க.
** நின்‌ கோயிலின்‌ வாசல்‌, அடியாரும்‌ வானவரும்‌ அரம்பையரும்‌ கிடந்தியங்கும்‌” என்றார்‌ குலசேகரரும்‌,

முருகேசன்‌ புககுமரதண்டம்புகுந்து” என்றார்‌ தொண்டரடிப்பொடியும்‌.

———-

அன்பாய்ப்‌ பணிந்து தினம்வருணன்‌
ஆரா தனைகொண்்‌ டருள்முகுந்தா !
அடியா ராசைப்‌ புரிமுறுக்கி.
அம்பொற்‌ கயிற்று வடம்பூட்டி
வன்பால்‌ விடுத்து நெகிழ்ந்தநெஞ்சம்‌
மணிவீ தீயினள்‌ ளிடை நினைந்து
வந்துத்‌ தியரா யிருமருங்கு
மகிழ்ந்து முறையே பிடித்திழுப்பப்‌
பொன்பாற்‌ பொருந்துஞ்‌ செழுந்திலதம்‌
புவனத்‌ திருவா ணுதற்றிலதம்‌
பொங்கிப்‌ பரந்த சலராசி
புடைசுற்‌ றியபூ லோகத்துத்‌
தென்பாற்‌ நிலத மெனும்‌ பேரைச்‌
செல்வா! தடந்தே ருருட்டுகவே
செழுந்தார்த்‌ துளவு மணங்கமழுந்‌்
தேவே/ தடந்தே ருருட்டுகவே.–100-

பொங்கி – கொந்தளித்து,
பரந்த . பரவிய,
சலராசி -சமுத்திரமானது,
புடைசுற்றிய – பக்கங்களில்‌ சூழ்ந்துள்ள,
பூலோகத்து – நிலவுலகத்து, !
பொன்பால்‌ – இலக்குமியிடத்து,
பொருந்தும்‌ – நெற்றியில்‌ இடப்‌பட்டிருக்கும்‌,
செழும்‌ திலதம்‌ – செவ்வியதிலகம்‌ (என்றும்‌))
புவனதிரு – பூதேவியின்‌,
வாள்‌ நுதல்‌ திலதம்‌ – ஒளியுள்ள நெற்றியில்‌ இடப்பட்டிருக்கும்‌ திலகம்‌ (என்றும்‌),
தென்பால்‌ – தெற்குத்திக்குக்கு,
திலகம்‌ எனும்‌”- திலகம்‌ என்றும்‌ சிறப்பிக்கப்படுகின்ற
பேரை -திருப்பேரை நகரின்‌, செல்வா–!,
வருணன்‌ – வருணபகவான்‌,
தினம்‌ – நாடோறும்‌,
அன்பாய்‌ பணிந்து-பக்தியோடு வணங்கி, (செய்யும்‌)
ஆராதனை-வழிபாட்டினை
கொண்டு அருள்‌ – ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருள்புரிகின்ற,
முகுந்தா–!
அடியார்‌ . (உன்‌) அடியவர்களாகிய நாங்கள்‌,
ஆசை புரி முறுக்கி – (எங்கள்‌) ஆர்வத்தைச்‌ சுருளாக முறுக்கி,
அம்‌ பொன்‌ கயிறு வடம்‌ பூட்டி – ( அதனை) அழகிய பொன்னாலாகிய கயிற்று வடமாகப் பூட்டி,
வன்பால்‌ விடுத்து . கடினமான முரட்டுத்‌ தனத்தைவிட்டு,
நெகிழ்ந்த நெஞ்சம்‌ – உருகிய மனத்தினால்‌,
மணிவீதியின்‌ நள்‌ இடை நினைந்துவந்து -அழகியதெருவின்‌ நடு விடத்தில்‌ (நீ தடந்தேதேரோடு வருதலை) எண்ணி வந்து,
உத்தியராய்‌ – இருதரப்பிலும்‌ நின்று உனக்குத்துணைவராய்‌,
இருமருங்கு –வலம்‌ இடமாகிய இருபக்கங்களிலும்‌ நின்று,
மகிழ்ந்து – சந்தோஷத்தோடு,
முறையே பிடித்து :
இழுப்ப – நேரேவரும்படி கயிற்றினைப்பிடித்து வலிக்குமாறு, தடம்‌ தேர்‌ உருட்டுக-:
செழும்‌ துளவுத்‌ தார்‌ மணம்‌ கமழும்‌ தேவே
தழைத்த திருத்துழாய்மாலை நறுமணம்‌ வீசும்‌ இறைவா!, தடம்‌ தேர்‌ உருட்டுக–;

திருமகள்‌ திலகம்‌, நிலமகள்‌ திலகம்‌, தென்திசைத்‌ திலகம்‌ என மூன்றும்‌ திருப்பேரைக்குச்சேர்ந்து அதன்பெருமையைச்‌ சிறப்பித்‌தது
இனி, திருமகள்‌ திலகம்‌, நிலமகள்‌ திலகம்‌ என்ற இரண்டும்‌ பொங்கி (பெருகி) ப்பூலோகத்துத்‌ தென்பால்‌ திருப்பேரைத்திலகமாய்‌ இலங்கிற்று என்னவுமாம்‌.

———

மத்தா லடிப்ப வுரல்மிதித்து
மலர்த்தாள்‌ குந்திட்‌ டுறியில்‌ வெண்ணெய்‌
வாரிக்‌ களவி னுண்டமணி |
வாயா ! பரம பதந்தனக்கோர்‌
வித்தா கவும்வந்‌ தங்குரிக்கும்‌
வேதப்‌ பொருளே ! யருட்கடலே |
விரை நா றியபூம்‌ பசுந்துளவ
மெய்யா ! பொருவெங்‌ கரிமருப்பு
முத்தோ டகிலுஞ்‌ :செம்மணியும்‌
மூரித்‌ திரைப்பாய்‌ சுருட்டிமிக
முழங்கூ டும்பு னற்றுறைவா !
முதுவா ளரக்கன்‌ றலைகள்பத்துங்‌
கொத்தோ டடிவந்‌ துறவாளி
தொடுத்தோய்‌ ! தடந்தே ௬ருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே ! தடந்தே ருருட்டுகவே.--101-

மத்தால்‌ அடிப்ப – (கோபியர்‌ கடையும்‌) மத்தினாலே யடி.ப்பவும்‌, (பொருட்படுத்தாது)
உரல்‌ மிதித்து – உரலின்‌மேலேறி,
மலர்த்தாள்‌. குந்திட்டு . காலைமடக்கிக்குந்தியுட்கார்ந்து கொண்டு,
உறியில்‌ வெண்ணெய்‌ – உறியில்‌ வைத்‌திருந்த வெண்ணெயை .
களவின்‌ வாரி உண்ட – திருடியளைந்து தின்ற,
மணி வாயா – அழகிய வாயையுடையவனே !
பரமபதம்‌ தனக்கு ஓர்‌ வித்தாகவும்‌ – மேலான வைகுந்தம்‌ தமக்கு ஒரு உற்‌பத்தி ஸ்தானமாகவும்‌, வந்து -(அவ்விடத்தினின்று) பாற்கடலுக்கு
எழுந்தருளி வந்து, அங்குரிக்கும்‌ – அவதரிக்கின்ற,
வேதப்‌பொருளே !–,
அருட்கடலே / – கருணாசமுத்திரமே !
பூம்‌ பசும்‌துளவ விரை நாறிய மெய்யா . பூத்த பச்சைத்‌துழாய்‌ வாசனை மணக்கும்‌ திருமேனியையுடையவனே !
பொரு . (ஒன்றோடொன்று)சண்டையிடுகின்ற,
வெம்‌ கரி மருப்பு முத்தோடு – கொடிய யானை களின்‌ தந்தங்களீன்ற முத்துக்களோடு,
அகிலும்‌ – அகிற்கட்டைகளையும்‌,
செம்‌ மணியும்‌ சிவந்த இரத்தினங்களையும்‌,
மூரித்‌ திரை-வலிய அலைகள்‌,
பாய்சுருட்டி – வீசிப்பாய்போலச்சுருட்டி,
மிகமுழங்கு – மிகவும்‌ சப்திக்கின்ற,
கூடும்புனல்துறைவா ! – “கூடுபுனற்‌றுறை’ என்ற திருமஞ்சனத் துறையையுடையவனே !
முது வாள்‌அரக்கன்‌ தலைகள்‌ பத்தும்‌ – பழையகொடிய இராவணனாுகிய இராட்சசனின்‌ பத்துத்தலைகளையும்‌, கொத்தோடு
அடி வந்து உற – ஒருசேரத்தொகுதியாக (க்குலைபோல்‌) தன்‌ அடியில் வந்து விழும்‌படி,
வாளி தொடுத்தோய்‌ ! – பிரமாத்திரத்தை விடுத்தவனே !
தடம்‌ தேர்‌ உருட்டுக– :
கொழிக்கும்‌ தமிழ்‌ – தெளிந்தெடுத்த தமிழ்‌ மொழி பயிலுகின்ற,
தென்திருப்பேரை – தென்‌ திருப்பேரையில்‌ கோயில்கொண்டுள்ள,
கோவே – மன்னனே ! தடம்‌ தேர்‌ உருட்‌ டுக–;

₹கூடுபுனல்‌ திருப்பேரையிற்கே என்‌னைக் காட்டுமின்கள்‌?” என்றார்‌ நம்மாழ்வாரும்‌ (7-3-6).

வாளரக்கன்‌ நீள்முடியைப்‌, பாதமத்தால்‌ எண்ணினான்‌ பண்பு” (முதல்‌ திருவந்‌ :45);

வாளரக்கன்‌ ஏய்ந்த முடிப்போது மூன்றேழென்‌ றெண்ணினான்‌, ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண்‌ “(மூன்றாந்‌ ;திரு : 77);

தண்டவரக்கன்‌ தலைதாளால்‌ — பண்டெண்ணிப்‌, போம்‌குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலை”? (நான்முகன்‌ : திருவந்‌ீ 44)

———–

புழைத்திண்‌ டிறற்கை மதசலதி
பொழியும்‌ பிறைக்கிம்‌ புரிக்கோட்டுப்‌
புகர்மா விடங்கர்க்‌ குடைந்துவெரீ இப்‌
புதுப்பூங்‌ கேணித்‌ தடம்புனனின்‌
ற்ழைக்கும்‌ புயலே ! நெட்டரவி
னாடுங்‌ குழகா ! வொருநாளும்‌
அறியாப்‌ பரம பதந்ததியர்க்‌
கருள்சீ தர1!மா தவ ! முகுந்தா !
மழைக்கொந்‌ தளகக்‌ குரும்பைமுலை
மதிவா ணுதற்சா னகிபொருட்டு
மதில்சூ ழிலங்கை யரக்கன்‌ மணி
மகுடஞ்‌ சிதறக்‌ கோதண்டங்்‌
குழைக்குந்‌ தடக்கை ரெகுராமா !
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே 1! தடந்தே ருருட்டுகவே.–102-

புழை திண்‌ திறல்‌ கை. துவாரமுள்ள திண்ணிய வலியதும்பிக்கையினையும்‌,
மத சலதி .. மதநீர்ப்பெருக்கை,
பொழியும்‌.மிகுதியாகச்‌ சொரியும்‌,
பிறை கிம்புரி கோடு – பிறைபோல்வளைந்து பூணிடப்பட்ட தந்தத்தினையும்‌ உடைய,
புகர்மா – யானையாகிய கஜேந்திரன்‌,
இடங்கர்க்கு உடைந்து – முதலைக்குத்தளர்ந்து,
வெரீஇ – அஞ்சி,
புது பூம்‌ கேணித்தடம்‌ புனல்‌ நின்று – புதிய
அழகிய உட்கிணற்றினைக்கொண்ட தடாகத்தின்‌ நீரில்‌நின்று
கொண்டு, அழைக்கும்‌ – ஆதிமூலமே என்று ஓலமிட்டு அழைத்த:
புயலே! – மேக வண்ணனே
நெடு அரவின்‌ ஆடும்‌ – பெரிய (காளியனென்னும்‌) பரம்பின்‌மேல்‌ நடித்த,
குழகா | – அழகனே ?
ஒரு நாளும்‌ அறியா பரமபதம்‌ – என்றைக்கும்‌ (இப்படித்தென்று) அறிய முடியாத மேலான வைகுந்தத்தை
ததியர்க்கு – அடியார்க்கு,
அருள்‌ – கொடுக்கின்ற,
சீதர – ஸ்ரீதரனே , மாதவ | -மாதவனே
முகுந்தா ! – முகுந்தனே !,
மழை கொந்து அளகம்‌ . மேகம்போற்‌கறுத்துத்‌ தொகுதியாகத் தழைத்த கூந்தலிளையும்‌,
குரும்பை முலை -தென்னங்குரும்பைபோற்‌ கொங்கைகளையும்‌,
மதிவாள்‌ நுதல்‌ -சந்திரனைப்போல்‌ ஒளிரும்‌ நெற்றியினையும்‌ உடைய,
சானகிபொருட்டு – சீதாபிராட்டியின்பொருட்டு,
மதில்‌ சூழ்‌ இலங்கை அரக்கன்‌ – மதில்களால்‌ சூழப்பட்ட இலங்கைத் தீவின்‌ அரசனாகியஅரக்கன்‌ இராவணனது,
மணி மகுடம்‌ சிதற- மணிகள்‌ பதித்த கிரீடங்கள்‌ சிதைவுற்றழிய,
கோதண்டம்‌ குழைக்கும்‌ – கோதண்ட மென்னும்‌ தமது வில்லை வளைக்கும்‌,
தட கை-பெரிய நீண்ட கைகளையுடைய,
ரெகுராமா – ரகுகுலதிலகனுகிய ராமா
கொடிஞ்சி தடம்‌ தேர்‌ – தேர்மொட்டினையுடைய அகலமான தேரை, உருட்‌டு௧ –
கொழிக்கும்‌ தமிழ்‌ தென்திருப்பேரைக்‌ கோவே ! –, தடம்‌ தேர்‌ உருட்டுக–;

*தமிழ்வேதம்‌ ததியர்பாட”” (அஷ்‌டப்ர : ஸ்ரீரங்கநாயகர்‌ ; ஊசல்‌ 6)

“சரணமாகுந்‌ தனதாளடைநீதார்க்கெல்லாம்‌, மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌”?என்றார்‌ நம்மாழ்வாரும்‌. (திருவாய்‌ : 9-10-5),

—-

வாலப்‌ பிறைவா ணுதன்‌ மடவார்‌
மலர்க்கை வளைாகை விழத்தொழுவோர்‌
மாறாப்‌ பிறவி வேரொடற
வானத்‌ தமரர்‌ களிகூரச்‌
சாலப்‌ பொரும்வா ளசுரர்படத்‌
தருமா கதர்கள்‌ கொண்டாடத்‌
தருமந்‌ தழையக்‌ கனகவிதைத்‌
தமிழ்நா வலவ ரீடேற
ஏலக்‌ குழல்சா னகிகழுத்தின்‌
இடுமங்‌ கலநாண்‌ வாழ்வேற
எக்கா லமுநூற்‌ றெண்மர்குழாம்‌
இதயத்‌ திருந்து மகிழ்கூர்ந்து
கோலத்‌ தெருவில்‌ விளையாடிக்‌ —
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே / தடந்தே ருருட்டுகவே.–103-

வாலம்‌ பிறை வாள்‌ நுதல்‌ மடவார்‌ . வெண்மையான பிறைச் சந்திரன் போல்‌ ஒளிருகின்ற நெற்றியினை யுடைய பெண்டிர்‌,
மலர்க்கை . தாமரைமலர்போன்ற கையிலணிந்துள்ள,
வளை கை விழ தொழுவோ – வளைகள்‌ முன்கையினின்று நழுவிவிழும்படி அஞ்சலிசெய்வோரது,
மாறா பிறவி வேரொடு அற. நீங்காது,–தொடரவருகின்ற பிறப்பும்‌ அடியோடு அறும்படியும்‌ ;
வானத்து அமரர்‌ களிகூர – தேவலோகத்துத்‌ தேவர்கள்‌ மகிழ்ச்சி மிகுதியாகக்‌ கொள்ளும்படியும்‌ ;
சால பொரும்‌ . மிகுதியாகப்போரைச்‌ செய்‌கின்ற,
வாள்‌ அசுரர்‌ பட… கொடிய அரக்கர்கள்‌ அழியும்படியும்‌ ;
தரு மாகதர்கள்‌ -தரு என்ற இசைப்பாட்டை
இருந்துபாடும்‌ துதி பாடகர்கள்‌, கொண்டாட – பாராட்டும்படியும்‌ ;
தருமம்‌ தழைய -அறம்‌ செழித்தோங்கும்படியும்‌ ;
கன கவிதை தமிழ்நாவலர்‌ -மேன்மைமிக்க கவிகளைப்பாடும்‌ தமிழ்ப்புலவர்கள்‌,
ஈடேற – பெருமைபெறும்படியும்‌ ;
ஏலம்‌ குழல்‌ சானகி – வாசனைச்சாந்து பூசப்பட்ட கூந்தலினையுடைய சீதாபிராட்டியின்‌,
கழுத்தின்‌ இடு மங்கல நாண்‌ – கழுத்தில்‌ தரித்த திருமாங்கல்யம்‌,
வாழ்வு ஏற – (என்றும்‌) மங்கள வாழ்ச்சி பெற்று யரும்படியும்‌ ;
(நீ) எக்காலமும்‌ – என்றென்‌றைக்கும்‌,
நூற்றெண்மர்‌ குழாம்‌ இதயத்து இருந்து – ஜைமிநீய தலவகாரசாமவேதிகள்‌ நூற்றெட்டுப்பேர்‌ உள்ளத்திலும்‌ (நீங்காது)கோயில்கொண்டிருந்து,
மகிழ்‌ கூர்ந்து – மகிழ்ச்சிமிக்கு,
கோலத்‌தெருவில்‌ விளையாடி – அழகிய நேர்த்தியான வீதியில்‌ விளையாடி,
கொடிஞ்சித்‌ தடம்‌ தேர்‌ உருட்டுக–; கொழிக்கும்‌ தமிழ்‌ தென்‌திருப்பேரைக்கோவே !–, தடம்‌ தேர்‌ உருட்டுக -;

———-

மருவார்‌ நறுமென்‌ மலர்கொணர்ந்து
வழிபட்‌ டிருசே வடிசொரிந்து
மயங்கும்‌ புலன்க சேந்துமொன்றாய்‌
வருணன்‌ செயும்பூ சனையுவந்த
திருமா முகிலே ! தமிழ்க்குருகுஞ்‌
செல்வக்‌ குழகா ! பாட்டயர்ந்து
சிறைவண்‌ டலம்பிக்‌ கண்படுக்குஞ்‌
செழுந்தார்த்‌ துளவப்‌ புயமுகுந்தா !
அருநான்‌ மாறைநாற்‌ றெண்மரும்வநீ
தங்கீ கரித்து வடம்பிடிப்ப
அம்போ ருகப்பூந்‌ திருவுமு (ந்‌) நீர்‌
அவனித்‌ திருவு மருங்கிருப்பக்‌
குருமா மணிப்பொன்‌ மறுகினெடுங்‌
கொடிஞ்சித்‌ தடந்தே ருருட்டுகவே
கொழிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரைக்‌
கோவே ! தடந்தே ர௬ுருட்டுகவே.--104-

மரு ஆர்‌ நறுமபென்‌ மலர்‌ கொணர்ந்து – வாசனை பொருந்திய மெல்லியபூக்களைக்‌ கொண்டுவந்து,
வழிபட்டு – பூசனைபுரிந்து,
சேவடி சொரிந்து – திருவடிகளில்‌ சமர்ப்பித்து,
மயங்கும்‌புலன்கள்‌ ஐந்தும்‌ ஒன்றாய்‌ … மருளச்செய்யும்‌ பஞ்சேந்திரியங்களும்‌ ஒருமுகமாக்கி (ஏகாக்கிரசித்தத்தோடு),
வருணன்‌ செயும்‌ பூசனை -வருணபகவான்‌ செய்கின்ற அர்ச்சனையை
உவந்த – மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும்‌,
திருமா முகிலே – இலக்குமியோடு கூடிய மேக வண்ணனே !
தமிழ்க்கு உருகும்‌ – (திருவாய்மொழி போன்ற) தமிழ்‌ வேதத்திற்கும்‌ ஏனைய திவ்ய பிரபந்தங்களுக்கும்‌ மனம் நெகிழும்‌,
செல்வக்‌ குழகா ! – சகல ஐசுவரியங்களையும்‌ கொண்ட அழகனே !
சிறை வண்டு – சிறகுகளையுடைய வண்டு,
அலம்பி – ஓலித்து,
பாட்டு அயர்ந்து – இசைப்பாட்டுக்களைப்பாடி,
கண்படுக்கும்‌ – (இனிது)உறங்கும்‌,
செழும்‌ துவளத்‌ தார்‌ புயம்‌ முகுந்தா – செழித்த திருத்‌ துழாய்மாலையைத்‌ தோளில்தரித்த முகுந்தனே
அரு நான்மறை நூற்றெண்மரும்‌ வந்து – (அறிதற்கரிய) நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணராகிய நூற்றெட்டுச்‌ சாமவேதிகளும்‌ ஒருசேரவந்து,
அங்கீகரித்து – மனமொருப்பட்டு,
வடம்‌ பிடிப்ப – தேர்வடத்தைப்பிடித்து இழுக்க,
அம்போருகம்‌ பூ திருவும்‌ – தாமரைமலரில்‌ எழுந்தருளியிருக்கின்ற இலக்குமியும்‌ (ஸ்ரீதேவியும்‌),
மூ (தீ) நீர்‌ அவனித்திருவும்‌ – கடலாற்சூழப்பட்ட பூமியின்‌ தேவி யும்‌ (பூதேவியும்‌),
மருங்கிருப்ப – இருபக்கத்திலும்‌ தங்கியிருப்ப,
குரு மா மணி பொன்‌ மறுகில்‌ – நிறனுடையசிறந்த மணிகளும்‌ பொன்னும்‌ கிடக்கும்‌ தெருவில்‌,
நெடும்‌ கொடிஞ்சி – பெரிய மொட்டினையுடைய ,
தடம்‌ தேர்‌ உருட்டுக – அகலமான தேரை உருட்டுவாயாக:
கொழிக்கும்‌ தமிழ்‌ தென்திருப்பேரைக்‌ கோவே — தடம்‌ தேர்‌ உருட்டுக –

அக்ஷய வருஷம் பங்குனி மாதம் 22 தேதி மக நஷத்திரமும்‌ புந்தி வாரமுங்கூடின சுபதினத்தில்‌ பிள்ளைத்தமிழ்‌ எழுதி முடிந்தது,

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமேனி கவிராசர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மகர நெடுங் குழைக்காதர்‌ பிள்ளைத் தமிழ்‌ பாமாலை–ஸ்ரீ திருமேனி கவிராசர்‌ –காப்புப்‌ பருவம்‌–செங்கீரைப் பருவம்‌-தாலப் பருவம்‌–சப்பாணிப்‌ பருவம்‌–

November 29, 2023

பூமிதேவியானவள்‌ அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக்‌ கொண்டு ‘ (ஸரீபேரை’ என்னும்‌ பெயரைத்‌ தரித்துக்‌ கொண்டு
பங்குனிப்‌ பெளர்ணமியில்‌ சுக்கிர புஷ்கரணி தீர்த்தத்தில்‌ நீராடும்‌ போது மீன்‌ போன்ற வடிவமுடைய இரண்டு குண்டலங்கள்‌
கிடைக்கவே, இவை திருமாலின்‌ காதுகளுக்கே தகுதியுடையனவாகும்‌ என்று நினைத்த மாத்திரத்தில்‌ திருமால்‌ அவள்‌ மூன்‌
தோன்றி, அன்புள்ளவளே இந்த மகர குண்டலங்களைத்‌ தரவேண்டும்‌ என்று கேட்க, பூமிதேவியும்‌ பெருமகிழ்ச்சியுடன்‌ கொடுத்‌தாள்‌,

திருமால்‌ அவற்றை வாங்கித்‌ தமது காதுகளில்‌ அணிந்து கொண்டார்‌. வானுலகிலிருந்து பூமாரி பொழிந்தது. தேவதுந்துபிகள்‌
முழங்கின. தேவர்கள்‌ பூமிதேவியால்‌ கொடுக்கப்பட்ட மகர குண்டலங்களைக்‌ காதுகளில்‌ அணிந்து கொண்டமையால்‌ இன்று
முதல்‌ உமக்கு மகரநெடுங்குழைக்காதர்‌ என்ற திருப்பெயர்‌ விளங்கட்டும்‌. தீர்த்தமும்‌ மகர தீர்த்தம்‌ என்ற நாமத்துடன்‌
வழங்கப்படவேண்டும்‌ என்று சொல்ல, திருமாலும்‌ சம்மதித்தார்‌.
அன்று முதற்கொண்டு அந்தத்‌ திருப்பதி ஸ்ரீ பேரை என வழங்கலாயிற்று,

பெருமாள்‌ : மகரநெடுங்குழைக்காதர்‌ (நிகரில்‌ முகில் வண்ணன்‌)
தாயார்‌ : குழைக்காதுவல்லி
விமானம்‌ : பத்திர விமானம்‌–புஷ்கர விமானம்‌
தீர்த்தம்‌ : சுக்கிரபுஷ்கரணி
கிழக்கே பார்த்த சந்நிதி
வீற்றிருக்கும்‌ திருக்கோலம்‌.

திருப்பேரைப்‌ பெம்மானே இருமகரக்‌ குழையானை கருவறுக்குங்‌ கோமானை மருவி நிதம்‌ பணிவோமே.

நம்மாழ்வார்‌ திருவாய்மொழி 7 ஆம்பத்து 8-ஆம்‌ திருப்‌ பதிகப்பாசுரங்களுக்கு உரை வகுத்து பெரியோர்களில்‌ சிலர்‌
‘திருப்பேரெயில்‌” என்பேத இத்திருப்பதியின்‌ திருநாமம்‌,
இது 5, 6, 7, 9 பாட்டுக்களினின்று விளங்கும்‌. பெரியபிராகாரமுடையது என்றது பொருள்‌. நாளடைவில்‌ பேரை என்று மருவி
வழங்கலாயிற்று.*? என்று அபிப்பிராயம்‌ தெரிவித்துள்ளார்கள்‌.
மேற்குறித்த எண்ணுள்ள பாட்டுக்களில்‌ —
**திருப்பேரையிற்கே என்னைக்‌ காட்டுமின்‌ ?” (5)
““திருப்பேரையிற்கே என்னைக்‌ காட்டுமின்கள்‌”?” (6)
**பேரையிற்கே புக்கு”? (7) *
[*இந்த ஏழாம்‌ பாடலில்‌ மூன்று நான்‌ காமடிகளின்‌ முதலில்‌ ஒ*ஆரை” என வைத்திருப்பதற்கேற்ப இரண்டாமடியில்‌ பேரை” என்பது
பெரிதும்‌ பொருந்துவதாகும்‌. ]
*’தென்திருப்பேரையின்‌ மாநகரே சேர்வன்‌”? (9) என்று தொடர்கள்‌ காணப்படுகின்றன.

திருப்பேரையில்‌”? என்பதற்குப்‌ பதிலாகத்‌ “*திருப்பேரெயில்‌?* என்று கொள்ள வேணும்‌ என்பது இவர்கள்‌ அபிப்பிராயம்‌.

மணவாளமாமுனிகள்‌ தமது திருவாய்மொழி நூற்றந்தாதியில்‌ “தெள்ளியமால்‌ தென்‌ திருப்பேர்‌ சென்றுபுக””என்று
அருளிச்செய்துள்ளார்‌.

“தென்திருப்பேரைப்‌ பதியான்‌ சீர்கேட்டு நாவிலவன்‌, றன்‌ திருப்பேரைப்‌ பதியாதார்‌.”? (இன்பக்‌
கரைசாரமாட்டார்கள்‌ )என்றுகூ றியிருப்பதை நோக்குமிடத்து *தென்‌திருப்பேரை’ என்பதுதான்‌ அத்தலத்தின்‌ பெயர்‌ எனத்‌ தேறுகிறது.

பூர்வத்தில்‌ இத்தலத்திற்கு *ஹரிபத க்ஷேத்திரம்‌? என்று பெயர்‌.

ஆண்பாற்‌ பிள்ளைத்தமிழ்‌ — காப்பு, செங்கீரை, தால்‌, சப்பாணி, முத்தம்‌,வாரானை, அம்புலி, சிற்றில்‌, சிறுபறை, சிறுதேர்‌ என்னும்‌ பத்துப்‌
பருவங்களையும்‌ கூறுவதாம்‌. (இந்தப் பத்தில்‌ இறுதி மூன்றை யொழித்து அவற்றிற்குப்‌ பதிலாக, அம்மானை, நீராடல்‌, ஊசல்‌
என்பனவற்றைச்‌ சேர்த்துக் கூறுவது –பெண்பாற் பிள்ளைத்தமிழாம்‌) ,

இந்த மகரநெடுங்குழைக்காதர்‌ பிள்ளைத்தமிழ்‌ நம்மாழ்வார்‌ துதி தொடக்கமாக, ஆழ்வார்‌ பன்னிருவர்‌, ஆசார்யசார்வபெளமர்‌
உடையவர்‌ இவர்களைக்‌ காப்பாகக்‌ கொண்டு காப்புப்பருவம்‌ அமைய, மேலேவரும்‌ பருவங்கள்‌ ஒன்பதினுக்கும்‌ பப்பத்துச்‌
செய்யுள்‌ கொண்டு, பத்துப்பருவங்களாக இயன்ற நூற்றுநான்கு செய்யுட்களையுடையது, இந்நாலையியற்றியவர்‌ திருமேனி கவிராசர்‌
என்பவர்‌,

———–

காப்புப்‌ பருவம்‌

பூமாது குடிகொண்டு வீற்றிருந்‌ தரசுபுரி
பொற்புலவு பதுமா சனப்‌
பொழிகருணை யொடுபெருகு ஞானவெள்‌ ளத்தலை
புரட்டுதிரு முத்திரைக்கைக்‌
கோமானை யெழுதரிய சதுர்மறையு மள்ளிக்‌
கொழித்துவண்‌ டமிழ்ப்படுத்திக்‌
கூறுதிரு வாய்மொழியோர்‌ நாலா யிரஞ்செய்த
குருகைமுனி யைப்பரவுதும்‌

பூமாது – இலக்குமிதேவி,
குடிகொண்டு – வாசத்தானமாகவிரும்பி யேற்றுக்கொண்டு,
வீற்றிருந்து – (பிறரொருவர்க்கில்லாத) தனிச்சிறப்போடு எழுந்தருளியிருந்து,
அரசுபுரி – ஆட்சிசெய்கின்ற,
பொற்பு உலவு – விளக்கம்‌ பொருந்திய,
பதுமாசனம்‌ – தாமரையாகிய தவிர,
பொழி – மிகுதியாக வெளிப்படுத்துகின்ற
கருணையொடு – கிருபையோடு,
பெருகு – (கூடிப்‌) பெருகுகின்ற ஞான வெள்ளத்து அலை – அறிவாகிய (தத்துவஞானமாகிய) வெள்ளத்‌
தின்‌ அலை ( யெழுந்து),
புரட்டு – (முன்பின்னாகத்‌) திருப்பி விட்ட,
திருமுத்திரக்‌ கை-அழகிய ஞான சின்னத்தைக்‌ காட்டுகின்ற கையை யுடைய,
கோமானை – தலைவனை,
எழுதரிய – ஏடுபடுத்துதற்கு இயலாத,
சதுர்மறையும்‌ – நான்கு வேதங்களையும்‌,
அள்ளிக்‌ கொழித்து – வாரித்தெள்ளியெடுத்து ஆராய்ந்து,
வண் தமிழ்ப்‌ படுத்தி – வளப்பம்‌ பொருந்திய தமிழில்‌ ஆக்கி, கூறும்‌ திருவாய்‌“மொழி – சிறப்பித்துப்‌ பேசப்படுகின்ற திருவாய்மொழி உள்ளிட்டு,
ஓர்‌ நாலாயிரம்‌ செய்த – ஒப்பற்ற நாலாயிரம்‌ பாசுரங்களையும்‌ (பிரபந்தமாக நாதமுனிகள்‌ மூலம்‌) செய்வித்த,
குருகை முனியை .. திருக்‌ குருகூரில்‌ அவதரித்த நம்மாழ்வாரை,
பரவதும்‌ – போற்று வோம்‌; (எ. று),

*புரட்டு‘ என்றது – என்‌ மனனே ? என்று மனத்தைக்‌ குறித்து விளித்தமை நோக்கி ; “தொழுதெழு என்மனனே? . (திருவாய்மொழி 1-1-1), இன்றும்‌
புரட்டு திருமுத்திரைக்கை’யைக்‌ கச்சியில்‌ பேரருளாளன்‌ கோயிலின்‌ பிராகாரத்தில்‌ கோயில்‌ கொண்டிருக்கும்‌ நம்மாழ்வாரின்‌ அர்ச்சாவிக்‌கிரகத்துக்‌ காணலாம்‌.

தேமா நறுங்கனித்‌ தேன்மதகி னூடுபாய்‌
திருவழுதி வளநாடனைத்‌
தென்றிருப்‌ பேரைநகர்க்‌ காவலனை நூற்றெண்மர்‌
சிந்தைகுடி கொண்டிருக்கும்‌
மாமாலை வருணன்வந்‌ தடி.பரவு மாழிநீர்‌
வண்ணனைப்‌ புயல்வண்ணனை
வானப்‌ பிரானைநங்‌ குலநா தனைப்புகழும்‌
வண்டமிழ்ச்‌ சொற்றழையவே,–1-

தேமா நறுங்‌ கனித்தேன்‌ – இனிய மணமுள்ள மாம்பழச்சாறு, (பெருக்கெடுத்து)
மதகின்‌ ஊடு பாய்‌ – மதகுகளின்‌ மூலமாகப்‌ பாய்ந்திடுகின்ற,
திருவழுதிவள நாடனை . அழகிய வளமுள்ள பாண்டியநாட்டில்‌ எழுந்தருளியுள்ளவனை,
தென்திருப்‌ பேர் நகர்க்‌ காவலனை – தென்திருப்பேரைநகரின்‌ காத்தற்கடவுளாகியவனை,
நூற்றெண்மர்‌ சிந்தை குடி கொண்டிருக்கும்‌ மா மாலை – தலவகார சாமவேதிகளாகிய நூற்றெட்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ மனத்தில்‌ நித்ய வாசம்‌ செய்து கொண்டிருக்கும்‌ சிறந்த திருமாலை,
வருணன்‌ வந்து அடி பரவும்‌.- வருணதேவன்‌ (தவம்‌ புரிய) வந்து திருவடிகளைத்‌ தோத்தரிக்கின்ற,
ஆழிநீர்வண்ணனை – கடலின்‌ நீர்‌- போன்ற நீலநிறத்தனை,
புயல்‌ வண்ணனை – மேகநிறத்தவனை ,
வானப்‌ பிரானை – தேவர்கள்‌ தலைவனை, நம்‌ குலநாதனை – நம்‌முடைய தொண்டக்‌ குலத்துக்கு நாதனாகிய மகரநெடுங்குழைக்‌ காதரை,
புகழும்‌ – போற்றிப் பாடுகின்ற,
வண் தமிழ்ச் சொல்‌ தழைய -(பிள்ளைத் தமிழ் நூலில்‌) வளப்பம்‌ பொருந்திய தமிழ்ச் சொற்கள்‌ சிறந்து நிற்கும்படி –
(குருகை முனியைப்‌ பரவுதும்‌ என முடியும்‌).

நூற்றெண்மர்‌ –ஜைமிநீய தலவகாரஸாம வேதிகள்‌, காவிரி தீரத்திலுள்ள பதினெட்டுகிராமங்களிலிருந்து ஸாம்வேதிகள்‌ நூற்‌
றெண்மரைச்‌ சுந்தரபாண்டியவழுதி தென்‌ திருப்பேரையில்‌ குடியேற வைத்து நூற்றெட்டுக்கிரஹ தானமும்‌ செய்தான்‌ என்பது,

தலவகாரம்‌ என்பது சாமவேதத்தின்‌ சாகைகளுள்‌ ஒன்று,
“ஓதக்‌ கடலொலிபோல எங்கும்‌எழுந்த ஈநல்வேதத்தொலி நின்‌ றோங்கு தென்திருப்பேரை?” என்று நம்மாழ்வார்‌ மங்களாசாசன
மாதலின்‌, ஸாமவேதிகளைக் குடியேற்றியது. நல்வேதம்‌ — ஸாம வேதம்‌ என்றது ஈடு,

நூற்றெண்மர்‌-இராவணாதியரை வென்று இலங்கையினின்று திரும்பிய கொற்றவல்விலிராமன்‌ சோழநாட்டில்‌ காவிரிப்‌
பக்கத்தில்‌ பதினெட்டு ஊர்களை * ஜைமிநீயதலவகார ஸாமவேதி களுக்குத்‌* தானம்‌ பண்ணினான்‌* அவற்றில்‌ வாழ்ந்து வந்தவர்‌
களிலே நூற்றெண்மர்‌ சுந்தரபாண்டிய வழுதி வேண்டுகோளுக் கிணங்கித்‌ தென்திருப்பேரைக்கு வந்து குடியேறினர்‌, அவர்களுக்கு
அவ்வழுதி நூற்றெட்டு கிரஹதானம்‌ செய்யுங்காலத்தில்‌ அவர்‌ களுள்‌ ஒருவர்‌ காணாமற்போகவே அவ்வரசன்‌ பெருமாள்ப்‌ பிரார்த்‌
திக்க, பெருமாள்‌ நாம்‌ கருடனோரு அரசாழ்வார்‌ அடியில்‌ உள்‌ ளோம்‌’” என்றார்‌. அதுகொண்டு பெருமாகாயே நூற்றெட்டாவது
நபராகக்‌ கொண்டனர்‌ சிலர்‌,

பெருமாளின்‌ நியமனப்படி கருடாழ்வாரே நூற்றெண்மரில்‌ ஒருவராய்த்தானம்‌ ஏற்றுத்‌ தமது
கருடாழ்வார்‌ ஸந்நிதியில்‌ பெருமாளோடு சமபீடத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறார்‌ என்பது வரலாறு.

ஆகவே, பிற விஷ்ணு ஆலயங்களிற்போல, தென்திருப்பேரையில்‌ மகரநெடுங்குழைக்காதர்‌ கேஷேத்திரத்‌ தின்‌ நேரே முன்பக்கத்தில்‌ ஸந்நிதிக்கருடன்‌ எழுந்தருளியில்லாமல்‌-ஸந்நிதிக்குள்ளேயே நுழைவாயிலிடத்துப்‌ பெருமாளுக்கு இடப்புறமாகும்படி விலகியெழுந்தருளியிருக்கிறார்‌.

அந்தப் பதினெட்டு ஊர்களாவன : காவிரிக்கு வடகரையில்‌ எட்டும்‌, தெல்‌ கரையில்‌ பத்தும்‌ ஆகும்‌. அவற்றின்‌ பெயர்களைப்‌
பின்வரும்‌ வெண்பாக்களால்‌ அறியலாம்‌.
திட்டைகுடி அன்பில்‌ திருநறையூர்‌ ஆதனூர்‌ மட்டவிழ்பூந்‌ தோகூர்‌ வயலாலி – சிட்டர்திருக்‌
குன்ற மருதூர்‌ குறைதீர்த்தார்‌ அப்பனூர்‌ –. என்று வடகரையில்‌ எட்டு”,
இடையாற்றி னங்குடிசீர்‌ எப்போதும்‌ வாழூர்‌ மிடைமணலூர்‌ ஈரைந்தாம்‌ வேலி – இடைமருதூர்‌
நாணமங்கை பிள்ளைமங்கை நல்லபெரு மாள்மங்கை பாணமங்கை தென்கரையிற்‌ பத்து”,

—————

அஞ்சிறைய வரிவண்‌ டுழக்கிக்‌ கணைக்கால்‌
அசைத்துப்‌ பொலன்றாதளைந்‌தடைகிடந்‌ தாலித்து வாய்மடுத்‌ துத்துதைந்
தளிநறவு கூட்டுண்ணமென்‌்
பிஞ்சுமடன்‌ முகைமுறுக்‌ கவிழும்வெண்‌ டாமரைப்‌
பீடத்தி னினிதிருக்கும்‌
பெடையோதி மஞ்செஞ்சொன்‌ மடமாது வெண்‌ணிறப்‌
பெண்ணினிரு தாடுதிப்பாம்‌

அம்‌சிறைய வரி வண்டு .. அழகிய சிறகுகளோடு கோடுகளையும்‌ கொண்ட வண்டானது,
உழக்கி – கலக்கி,
கணைக் கால்‌ அசைத்து -திரண்ட நாளத்தை யாட்டி,
பொலன்‌ தாது அளைந்து – பொன்னிறமான மகரந்தங்களைத்‌ துழாவி,
அடை கிடந்து ஆலித்து – தாமரை யிலையிலே தங்கி ஆரவாரித்து,
வாய்‌ மடுத்துத்‌ துதைந்து – வாய்‌ வைத்துப்‌ படிந்து,
அளிநறவு கூட்டுண்ண – மிக்கதேனை க்கொள்ளை கொண்டு நுகர்தலாலே,
மெல்‌ பிஞ்சு மடல்‌ முகை – மெல்லிய இளை தான பூவிதழின்‌,
முறுக்கு அவிழும்‌ – அரும்பு கட்டுநெகிழும்‌,
வெண்‌ தாமரைப்‌ பீடத்தின்‌ – வெண்மையான தாமரை மலராகிய ஆசனத்‌தில்‌,
இனிது இருக்கும்‌ – நன்றாக எழுந்தருளி யிருக்கும்‌,
பெடைஒதிமம்‌ . அன்னப் பேடு போன்ற,
செஞ்சொல்‌ மடமாது – இனியசொற்‌களின்‌ கிழத்தியாகிய,
வெண்ணிறப்‌ பெண்ணின்‌ – வெள்ளிய நிறம்‌ பொருந்திய கலை மகளின்‌,
இரு தாள்‌ துதிப்பாம்‌ . உபய பாதங்களையும்‌ போற்றிப் பணிவேன்‌ ; (எ. று.).

பஞ்சளைய பரிபுரத்‌ தளிரடித்‌ துடியிடைப்‌
பணைமுலைக்‌ கனிவாய்மொழிப்‌
பைந்தொடிச்‌ சீதையை மணம்புணர மிதிலையம்‌
பதிபுகுந்‌ தாதிசனகன்‌
செஞ்சிலை யிறுத்தமக ரக்குழைக்‌ கடவுளைத்‌
திருவழுதி வளநாடனைத்‌
தென்றிருப்‌ பேரைநகர்க்‌ காவலனை வாழ்த்துமென்‌
செந்தமிழ்ச்‌ சொற்றழையவே.–2-

பஞ்சு அனைய பரிபுரம்‌ – பஞ்சுபோல்‌ வெள்ளிய சிலம்‌ பினையும்‌,
தளிர்‌ அடி – மாந்‌ தளிர்‌ போன்ற மென்‌ மையான திருவடி களையும்‌,
துடி இடை – உடுக்கைபோல்‌ சிறுத்த இடுப்பினையும்‌,
பணை முலை – பருத்த கொங்கையினையும்‌,
கனி வாய்‌ – கொவ்வைக் கனி போன்று சிவந்த வாயினையும்‌,
(கனி) மொழி – இனிய பேச்சினையும்‌ (உடைய),
பைந்தொடி சீதையை – பசிய வளையல்களையணிந்த சீதாபிராட்டியை,
மணம்‌ புணர . விவாகஞ்செய்துகொள்ள,
மிதிலை அம்‌ பதி புகுந்து – மிதிலாபுரியாகிய அழகிய நகரத்தில்‌ புகுந்து,
சனகன்‌ .. (மிதிலைமன்னனாகிய) சனகனது,
ஆதி செஞ்சிலை இறுத்த – (குலத்தில்‌) தொன்று தொட்டு வருகின்ற செவ்விய சிவ தனுசை முறித்த,
மகரக்குழைக்‌ கடவுளை – மகர நெடுங்‌ குழைக்கா தர்‌ என்னும்‌ திருநாமம்படைத்த மூர்த்தியை,
திருவழுதி வளநாடனை – பாண்டியநாட்டிற்குரியவனை,
தென்திருப்பேரை நகர்‌ காவலனை _ தென்‌ திருப்பேரையென்னும்‌ நகர்க்குத்‌ தலைவனை,
வாழ்த்தும்‌-போற்று கின்ற,
என்‌ செந்தமிழ்ச்சொல்‌ – என்னுடைய செவ்விய தமிழின்‌ சொற்கள்‌, (இப்பிள்‌ளைத் தமிழ்‌ நூலில்‌)
தழைய – சிறந்து நிந்கும்படி
(வெண்ணிறப்பெண்ணின்‌ இருதாள்‌ துதிப்பாம்‌ என மூடியும்‌)

———-

மண்மகளு மாய்ப்பின்னை மடமகளு மாய்மிதிலை
வருசனக னுக்குமகளாய்‌ மங்கலச்‌ சொற்றிருப்‌ பல்லாண்டு செம்பவள
வாய்திறந்‌ தோதினோன்றன்‌
பெண்மகளு மாய்வந்‌ தரங்கேசன்‌ முதலைந்து
பேருக்கு மொருதேவியாய்ப்‌
பேர்பெற்று மாலைசூ டிக்கொடுத்‌ தருளிய
பிராட்டியை வணங்கல் செய்வாம்‌

மண்‌ மகளுமாய்‌ – பூமிதேவியுமாய்‌,
பின்னை மட மகளுமாய்‌ – மடப்பம் பொருந்திய நப்பின்னைபிராட்டியுமாய்‌,
மிதிலைவரு சனகனுக்கு மகளாய்‌ – மிதிலாபுரியில்‌ அரசாயிருந்த ஜனகமகாராஜனுக்குப்‌ புத்திரியுமாய்‌ (சீதாபிராட்டியுமாய்‌),
மங்கலச்சொல்‌ திருப்பல்லாண்டு ~சுபத்தை யளிக்கும்‌ சொற்களாலாகிய திருப்பல்லாண்டு என்னும்‌ பிரபந்தத்தை,
செம்பவளவாய்‌ திறந்து – செவ்விய பவளம்‌ போன்ற புனித வாயினை த்‌ திறந்து,
ஓதினான்‌ தன்‌ – பாடியவனாகிய விஷ்ணு சித்தனென்னும்‌ பெரியாழ்வாருடைய,
பெண் மகளுமாய்‌ -புத்திரியுமாய்‌, வந்து – (இவ்வகையால்‌ நாற்பட) அவதரித்து, (பிறகு)
அரங்கேசன் முதல்‌ ஐந்து பேருக்கும்‌ – திருவரங்கன்‌ முதலாய கடவுளர்‌ ஐந்துபேருக்கும்‌,
ஒருதேவியாய்ப்‌ பேர்பெற்று -. (ஒப்பற்ற) ஒரே மனைவியாய்ப்‌ புகழ்பெற்று,
மாலை சூடிக்கொடுத்தருளிய பிராட்‌டியை – தான் சூட்டிக் கொண்ட மாலையைத் தரிக்கும்படி (வடபத்ர
சாயிக்குக்‌) கொடுத்த கோதைபிராட்டியாகிய ஸ்ரீ ஆண்டாளை,
வணங்கல்‌ செய்வாம்‌ – தலையால்‌ வணங்கிப்‌ பணிவேன்‌ ; (எ று.).

நான்கு மகளாய் வந்து ஐந்து பேரை மணந்து ஒருதேவி யானாள்‌ * என்ற நயம்‌

தண்மதியி னகடுதொடு மாடமா ளிகைநெடிய
தமனியப்‌ பொற்குன்றமுஞ்‌
சதுமறைக்‌ குரியவேள்‌ வியும்யாக சாலையுஞ்‌
சந்நிதியி னூற்றெண்மருங்‌
கண்மணி யெனத்தகைய பிள்ளைக்‌ குழாமுமலி
காவுஞ்சூழ்‌ பேரையூரன்‌
கருணையொடு வருணனடி பரவுமக ரக்குழைக்‌
கடவுள்சொற்‌ றழையவென்‌ றே. –3-

தண்‌ மதியின்‌ – குளிர்ந்த சந்திரனின்‌,
அகடு தொடு – நடுவிடம்‌ தொடும்படியுயர்ந்துள்ள,
மாட மாளிகை – மாடங்களோடு கூடிய மாளிகைகளாகிய,
நெடிய தமனியப்‌ பொன்‌ குன்றமும்‌ -ஓங்கிய: பொன்மலையாம்‌ மேருவும்‌,
சதுமறைக்குரிய வேள்வியும்‌ –தான்கு வேதங்களும்‌ கோஷப்பதற்குரிய ஓமகுண்டங்களும்‌,
யாக சாலையும்‌ – யாகஞ்‌ செய்தற்குரிய மண்டபங்களும்‌,
சந்நிதியின்‌ நூற்‌றெண்மரும்‌ – சந்நிதியில்‌ சேவைக்கு எழுந்தருளியுள்ள நூற்றெட்டு சாமவேதிகளும்‌,
கண்மணி எனத்‌ தகைய பிள்ளைக்குழாமும்‌ – கண்‌ணின் மணி போலக்‌ காத்தற்குரிய சிறுவர் கூட்டங்களும்‌,
மலி காவும்‌ – மிகுந்த சோலைகளும்‌,
சூழ்‌ – சுற்றலும்‌ பரந்துள்ள,
பேரை ஊரன்‌ _ தென்திருப்பேரை நகருடையானும்‌,
கருணையொடு வருணன்‌ அடி பரவும்‌ – (நன்றிக்கடன்‌ தோன்றக்‌) கிருபையை வேண்டி நின்று வருண தேவன்‌ திருவடிகளைத்‌ துதிக்கின்ற,
மகரக்குழைக்‌ கடவுள்‌ – மகரநெடுங்குழைக்‌ காதரைப் பற்றிய,
சொல்‌ – சொற்கள்‌ (இப் பிள்ளைத் தமிழ்‌ நூலில்‌)
தழைய என்று – சிறந்து நிற்க வேண்டு மென்று (பிராட்டியை வணங்கல்‌ செய்வாம்‌ என முடியும்‌) .

“பிள்ளைக்குழாம்‌‘ என்றவிடத்து,பிள்ளைக்குழா விளையாட்டொலியும்‌ அருத்‌ திருப்பேரை,” ( 7 – 3 -1))என்ற நம்மாழ்வார்‌ வாக்கு நினைக.
இந்தப்‌ பிள்ளைக்குழாம்‌ காண்பதற்கன்றோ கருடனை விலகியிருக்கச்‌ சொன்னது என்பர்‌, முதலடியில்‌, “பின்னை கொல்‌?
நில மா மகள் கொல்‌ ? திருமகள்‌ கொல்‌? பிறந்திட்டாள்‌”” (9- 5- 10).என்ற திருவாய்மொழியின்‌ கருத்துக் காண்க.

ஐந்து பேருக்கும்‌ ஒருதேவி என்றது –
ஆண்டாள்‌ திருவரங்கன்‌, சோலைமலையழகன்‌, திருவேங்கடமுடையான்‌, வட மதுரைக்‌ கண்ணண்‌, வடபத்ரசாயி என்ற
ஐவரையும்‌ தனது நாச்சியார்‌ திருமொழியில்‌ காதல் விஞ்சிக்‌ குறித்திருத்தல்‌ நோக்கியென்க”?,
ஆங்குவந்துள்ள
:திருவரங்கச்‌ செல்வனார்‌ என்மெய்ப்பொருளும்‌ கொண்டாரே”,
““திருமாலிருஞ்‌ சோலை நம்பி வரிவளையில்‌ புகுந்து வந்திபற்றும்‌ வழக்குளதே” ;
“*வேங்கடவற்கென்னை விதிக்கிற்‌றியே’” ;
கண்ணனெைன்னும்‌ கருந்தெய்வம்‌ காட்சிப்‌ பழகிக்கிடப்‌ பேனை ””
“கைத்தலம்பற்றக்‌ கனாக் கண்டேன்‌ தோழீநான்‌”” ;
“மென்‌னடை யன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூாருறைவான்றன்‌,
பொன்னடி காண்பதோராசையினால்‌ என் பொருகயற்‌ கண்ணிணை துஞ்சா?” முதலியன கொண்டு தெளியலாம்‌.

————-

பாரரா வணனேெனும்‌ படுபழிக்‌ கஞ்சாத
பாவிகொலை களவுகபடம்‌
பழகுபா தகண்மவுலி யொருபதுந்‌ துகள்படப்‌
பண்டுகோ தண்டம்வாங்கும்‌
வீரமே கந்திருக்‌ கோவலூ ரிடைகழியின்‌
வெைளிநிந்ப வொவ்வொருவர்மேல்‌
மிகுநெருக்‌ குண்டபுகழ்‌ மூவரிற்‌ பொய்கை
மென்சரண மஞ்சலிசெய்வாம்‌

படுபழிக்கு அஞ்சாத – மிக்க பழிச்‌ செயல்களைச்‌ செய்வதற்குப்‌ பயப்படாத(நாணமில்லாத),
பார ராவணனெனும்‌ பாவி – கொடுமை மிகுந்த இராவணனெனும்‌ பாவி,
கொலை களவு கபடம்‌ பழகு பாதகன்‌. -கொலை திருடு வஞ்சனை முதலிய இழி செயல்களில்‌ பயின்று பழகிய
பாதகனாவன்‌ : (அப்படிப்பட்ட அவனது)
மவுலி ஒருபதும்‌ துகள்‌ பட- தலைகள்‌ பத்தும்‌ புழுதியில்‌ உருளும்படி,
பண்டு . முன்‌ திரேதாயுகத்தில்‌,
கோதண்டம்‌ வாங்கும்‌ வீரமேகம்‌ – கோதண்டமென்னும்‌ (பேர்படைத்த) தன்‌ வில்லை’.வளைத்த மேகம்போற்‌ கரியசெம்மலாகிய
இராமபிரான்‌; (திருமாலானவன்‌)
திருக்கோவலூர்‌ இடைகழியில்‌,வெளிநிற்ப .. திருக்கோவலூரென்னும்‌ (நடுநாட்டுத்‌) திருப்பதியில்‌
(மிருகண்டு மகாமுனிவரது திருமாளிகையின்‌) இடைக்கட்டுக்கு வெளியே (மழையில்‌ இருளில்‌) நின்று கொண்டிருப்ப, (அதே சமயத்‌ தில்‌)
ஒவ்வொருவர்‌ மேல்‌ மிக நெருக்குண்ட புகழ்‌ மூவரில்‌ ஒருத்தர்க்‌ கொருத்தரிடை மிகவும்‌ நெருக்கமுறும்படியான புகழைப்‌ பெற்ற மூவர்க்குள்ளே,
பொய்கையார்‌ – (முதலவராகிய) பொய்கையாழ்வா ரின்‌,
மெல்‌ சரணம்‌-மென்மையான திருவடிகளை,
அஞ்சலி செய்வாம்‌ கைகூப்பி வணங்குவேன்‌

தாரைவேல்‌ விழிபாய்‌ வாலிமார்‌ புருவவொரு
சரம்விடுத்‌ துக்கொன்றவன்‌
தம்பிக்கு மகுடங்‌ கவித்தர சளிக்கின்ற
தாமோ தரக்குழகனைப்‌
பேரையா திபனைநங்‌ குலநாத ஊைத்துழாய்ப்‌
பெம்மானை யம்மானையே
பேசுஞ்‌ செழுந்தமிழ்ப்‌ பிள்ளைக்‌ கவிக்குள்‌ ள
பேதைமை பொறுத்தருளவே,–4-

தாரை-(தன்‌-மனையாளாகிய) தாரையின்‌,
வேல்‌ விழிபாய்‌ வாலி – வேலாயுதம்போல்‌ கூரிய கண்கள்‌ விரைந்து பார்க்‌ கின்ற வாலியின்‌,
மார்பு உருவ – (உறுதியான) மார்பில்‌ ஊடுருவும்‌படி,
ஒரு சரம்‌ விடுத்துக்‌ கொன்று – ஒரு அம்பினைச்‌ செலுத்தி உயிர்‌(போக்கி,
அவன்‌ தம்பிக்கு மகுடம்‌ கவித்து-அந்த வாலியின்‌ தம்பியாக
ஸூக்ரீவனுக்குக்‌ கிரீடத்தைத்‌ சூட்டி,
அரசு அளிக்கின்ற . கிட்கிந்தா ராஜ்யத்தின்‌ அரசாட்சியைக்‌ கொடுத்தளித்த,
தாமோதரக்‌ குழகனை- தாமோதரன்‌ என்ற திருநாமத்தை(ப்பின்னர்க்‌ கிருஷ்ணாவதாரத்தில்‌) பெறப்போகின்ற அழகனாகிய இராமபிரானை,
பேரை ஆதிபனை-தென்‌ திருப்பேரையின்‌ தலைவனை,
நம்‌ குலநாதனை – நமது குலத்துக்குத்‌தலைவனாகுபவனை
துழாய்ப்‌ பெம்மானை – துளசி மாலையைத்‌ தரித்‌ துள்ள பெருமானை,
அம்மானை – கடவுளாகுபவனை, (அதாவது மகர நெடுங்‌ குழைக்காதனை)
பேசும்‌ – குழந்தையாகப்‌ பாவித்துப்‌ பாடப்போகின்ற,
செழுந்தமிழ்ப்‌ பிள்ளைக்கவிக்கு – செவ்விய தமிழி லான பிள்ளைத்தமிழ்ச்‌ செய்யுட்களுக்கு,
உள்ள – ஏற்படக்கூடிய,
பேதைமை – அறியாமையாகிய குற்றத்தை,
பொறுத்தருள – மன்னிக்கும்படி வேண்டி (அஞ்சலி செய்வாம்‌ என முடியும்‌) :

“பாவருந் தமிழாற்‌ பேர்‌ பெறு பனுவல்‌ பாவலர்‌ பாதிநாளிரவில்‌, மூவரு நெருக்கி மொழி
விளக்கேற்றி முகுந்தனைத்‌ தொழுத நன்னாடு”

“*தராதலத்தினுள்ள தமிழ்க்‌ குற்றமெல்லாம்‌, அராவும்‌ அரமாயிற்றன்றே.… கம்பநாட்டாழ்வான்‌

—————

ஆரணப்‌ பொருணான்கும்‌ யோகமோ ரெட்டுநூல்‌
ஐந்தொடைந்‌ தெட்டுநியம
மாறுதொண்‌ ஸணூற்றாறு தத்துவஞ்‌ சித்தியெட்‌
டைம்புல னடக்கிஞானக்‌
காரணச்‌ சுடர்‌ விளக்‌ கொளிகொண்டு பரவுமொரு
கரைகண்டு புகழ்கொண்டசொற்
கருணா கரக்குரிசி லுயர்பூத வாழ்வார்‌
கழற்கால்‌ வணங்கல் செய்வாம்‌

ஆரணப்பொருள்‌ நான்கும்‌ – வேதப்‌ பொருள்களாகிய நான்கு புருஷார்த்தங்களும்‌,
யோகம்‌ ஓர்‌ எட்டும்‌ – இயமம்‌ முதலாகிய அஷ்‌டாங்க யோகமும்‌,
ஐந்தொடைந்து எட்டு நூல்‌ (௨ம்‌) – பதினெட்‌டுப்‌ புராணங்களும்‌ ( அஷ்டா தசபுராணங்களும்‌) ,
ஆறு நியமம்‌ (உம்‌)-செய்கடன்கள்‌ ஆறும்‌,
தொண்ணூற்றாறு தத்துவம்‌ (உம்‌) – தொண்‌ணூற்றாறு உண்மைப்பொருள்களும்‌, சித்தி எட்டு (உ௨ம்‌)- எண்வகைச்‌சித்திகளும்‌ (அஷ்டசித்திகளும்‌), [கைவரப்பெற்று] (மேலும்‌)
ஐம்புலன்‌ அடக்கி – பஞ்சேந்திரியங்களையும்‌ அடங்கச்‌ செய்து,
ஞானச்சுடர்‌ விளக்கொளி காரணம்‌ கொண்டு .-ஞானமாகிய ஒளி விளக்கினை யேற்றி அதனை மூலமாகக்‌ கொண்டு,
பரவும்‌ ஒரு கரை கண்டு -துதிக்‌ கின்ற வகையினைச்‌ செவ்வன்‌ அறிந்து (அதன்‌ எல்லை கண்டு),
புகழ்‌ சொல்‌ கொண்ட – புகழப்படுகின்ற வார்த்தைகளை (த்‌தமக்குரித்தாக)க்‌ கொண்ட,
கருணாகரக்‌ குரிசில்‌ உயர்‌ பூத ஆழ்வார்‌ _தயைக்‌ கிருப்பிடமாய்ச்‌ சிறந்துயர்ந்த பூதத்தாழ்வாரின்‌,
கழற்கால்‌-அணிகலன்‌ பூண்ட திருப் பாதங்களை
வணங்கல் செய்வாம்‌ – (வீழ்ந்து) வணங்குவேன்‌

பூரணக்‌ கலைமதியி னிலவொழுக வாம்பன்மென்‌
புரிமுறுக்‌ கவிழ்வாவியம்‌
புனல்படியும்‌ வன்கரா வதுவந்‌ திழுக்கவப்‌
பொழுதாதி மூலமென்றே
வாரணப்‌ பகடலறி வீரிடக்‌ காத்தருள்செய்
மையாழி நீர்வண்ணனை
வானப்‌ பிரானைநங்‌ குலநாத ஸஊனைப்புகழும்‌
வண்டமிழ்ச்‌ சொற்றழையவே.–5-

பூரணக்கலை மதியின்‌ – பதினாறுகலைகளூம்‌ நிரம்பியுள்ள முழுச்சந்திரனின்‌,
நிலவு ஒழுக – நிலாவெளிச்சம்‌ விழுதலால்‌,
(அதற்கு) ஆம்பல்‌ மென்புரி முறுக்கு அவிழ்‌ . ஆம்பலினது மெல்லி யதான மொட்டு நன்குமலர்ந்த,
வாவி அம்‌ புனல்‌ படியும்‌ – தடாகத்‌தின்‌ அழகிய நீரிற்‌ றங்கியிருந்த,
வன்‌ கரா அது – வலிய முதலையானது,
வந்து இழுக்க – கரைக்குவந்து பற்றியீர்க்க,
அப்பொழுதுஆதிமூலம்‌ என்று – அந்தச்சமயத்தில்‌ ஆதிமூலமே ! என்று [எடுத்து],
வாரணம்‌ பகடு அலறி வீரிட- [கஜேந்திரனென்னும்‌)ஆண்‌ யானை கதறியோலமிட,
காத்து அருள்செய்‌ மை ஆழிநீர்‌ வண்ணனை – [முதலையைக்‌ கொன்று] (அதனைப்‌) பாதுகாத்துத்‌
திருவருள்‌ புரிந்த கரியகடலினீர்‌ போன்ற நிறத்தவனை,

வானப்‌ பிரானை – தேவர்களின்‌ தலைவனை,
நம்‌ குலநாதனை -நமது குலத்துக்குத்‌ தலைவனாகுபவனை, [அதாவது மகரநெடு குழைக்காதனை ]
புகழும்‌- போற்றுகின்ற,
வண்தமிழ்ச்‌ சொல்‌ -வளப்பம்‌ பொருந்திய தமிழ்ச்‌ சொற்கள்‌ [இப் பிள்ளைத் தமிழ் நூலில்‌ ]
தழைய – சிறந்து நிற்க வேண்டி [வணங்கல்‌ செய்வாம்‌ என முடியும்‌]

பூதத்தாழ்வாரும்‌
தொடரெடுத்த மால்யானை சூழ்நயம்புக்‌ கஞ்சி,
படரெடுத்த பைங்கமலங்கொண்டன்‌- நிடரடுக்க
ஆழியான்‌ பாதம்‌ பணிந்தன்றே வானவர்‌ கோன்‌,
பாழிதா னெய்திற்‌றுப்‌ பண்டு‘ என்று அருளிச் செய்துள்ளார்‌.

நான்கு ஆரணப்பொருள்‌ _ தர்மார்த்தகாம மோட்சம்‌ : (அறம்‌ பொருளின்பம்‌ வீடு).
யோகம்‌ எட்டு – இமயம்‌, நியமம்‌, ஆதனம்‌, பிராணாயாமம்‌, பிரத்தியாகாரம்‌, தாரணை, தியானம்‌, சமாதி என்பன.
பதினெண்‌ புராணங்களாவன- சிவபிரானைப்பற்றிய பத்து, திருமாலைப்பற்றிய நான்கு, பிரமனைப்‌ பற்றிய இரண்டு,
அக்னியைப்பற்றிய ஒன்று, சூரியனைப்பற்றிய ஒன்று ஆக பதினெட்டுத்‌ தலைமைப்‌ புராணங்கள்‌ (ஐந்தொடு ஐந்து எட்டு_ 5+5+-8=18)
நியமம்‌ ஆறு – தவம்‌, விரதம்‌, தூய்மை, தத்துவ மோதல்‌, மனமுவந்திருத்தல்‌ (Contentment), தெய்வவழிபாடு என்பன.
தொண்ணூற்றாறு தத்துவம்‌ – உட்கருவிகள்‌ 56 புறக்கருவிகள்‌ 60 ஆக 96ஆம்‌.
( விவரம்‌ :- உட்கருவிகள்‌ 36 :- பூதம்‌ 5, ஞானேந்திரியம்‌ 5, தன்மாத்திரை 8, கன்மேந்திரியம்‌ 5, அந்தக் கரணம்‌ 4, வித்யாதத்துவம்‌ 7, சுத்த தத்துவம்‌ 5.
புறக்கநபிகள்‌ 60:- பிருத்வியின் கூறு 5, அப்புவின்‌ கூறு 5, தேயுவின்‌ கூறு 5, வாயுவின்‌ கூறுக ஆகாயத்தின்‌ கூறு5,
பிருதிவியின்‌ வழி நாடி 10, வாயுவின்‌ வழிநாடி 10. ஆகாயத்‌வழி ஏடணை, 3, வாக்காதியின்‌ வழி தொழில்‌ 5
பிரகிருதியின்‌ வழி குணம்‌ 3, விந்துவின்‌ வழி வாக்கு 4. ஆக தத்துவங்கள்‌ 98) இவற்றின்‌ முழு விவரம்‌ வல்லார்‌ வாய்க்கேட்டுணர்க.
சித்தி எட்டு-அணிமா,மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம்‌, ஈசத்துவம்‌, வசித்து வம்‌ என்பன.
புலனடக்குதல்‌ – இந்திரிய நிக்கிரஹம்‌ செய்தல்‌,

“கடல்‌ வண்ணன்‌ பூதம்‌”, “*மறுத்திருமார்பன வன்றன்‌ பூதம்‌:” என்றவாறு எம்பெருமானை அறிதலாலே தமது
உளனணாகையையுடையவராதலால்‌, இவருக்குப்‌ பூதத்தாழ்வார்‌ என்றுதிருநாமம்‌.

பூதத்தாழ்வார்‌ “*பெருந்தமிழன்‌‘? , அவர்‌ கழற்காலில்‌ வணங்குகிறார்‌.

—————–

தெளிக்குங்‌ கொழும்பிரச மூற்றிகுக்‌ குங்கலுழி
திரைமண்டி மடுநிறையவே
தேக்கெறியும்‌ வெள்ளப்‌ பெருக்கிற்‌ பொலன்ருது
சிந்தக்‌ குடைந்துபம்பிக்‌
களிக்குஞ்‌ சிறைச்சுரும்‌ பிசைமுரல்‌ முகைவிண்ட
கடிகமழ்‌ பசுந்தண்டுழாய்க்‌
– கடவுடிரு வந்தாதி புகலுமயி லையர்கோன்‌
கழற்கால்‌ வணங்கல்செய்வாம்‌

தெளிக்‌கும்‌ (கொழும்‌ பிரசம்‌ ஊற்று – கொப்புளித்தெழும்படி மிகுதியான தேனைக்‌ கொண்ட ஊற்றானது,
இகுக்கும்‌- பெருக்குகின்ற,
கலுழிதிரை மண்டி -கலங்கலின்‌ அலைகள்‌ நெருங்கி,
மடுநிறைய தேக்கு எறியும்‌ வெள்ளப்பெருக்கில்‌ – மடுக்கள்‌ உள்‌ நிறையும்படி செய்து வெளிவருகின்ற வெள்ளத்தின்‌ ஒழுக்கினிலே,
பொலன்‌ தாது சிந்த – பொன்னிற மகரந்தங்கள்‌ சிந்தும்படி,
குடைந்து – மலர்களினுட்புகுந்து கிண்டி,
பம்பிக்களிக்கும்‌ – செறிந்து மகிழும்‌,
சிறைசுரும்பு – இறகுகளைக்‌ கொண்ட வண்டுகள்‌,
இசை முரல .. ரீங்காரஞ்‌செய்ய,
முகைவிண்ட – முறுக்கு அவிழ்ந்த,
கடிகமழ்‌ பசுந்‌ தண்‌ துழாய்‌ – மிக்கவாசனை வீசுகின்ற பச்சைநிறமுடைய குளிர்ந்த துளசிமாலையைத்தரித்த,
கடவுள்‌ – திருமாலைப்பற்றி,
திருவந்தாதி புகலும்‌ – மூன்றாந்திருவந்தாதி என்ற பிரபந்தத்தை யருளிச்செய்த,
மயிலையர்‌ கோன்‌ . திருமயிலையில்‌ [மயிலாப்பூரில்‌] அவதரித்த தலைவராகிய பேயாழ்வாரின்‌,
கழற்கால்‌ – அணிகலன்‌ பூண்டபாதங்‌களை,
வணங்கல்‌ செய்வாம்‌ . (வீழ்ந்து) வணங்குவேன்‌ ;

துளிக்குந்‌ திரைப்பொருநை மதகீலனெலி யும்டபஞ்‌
சுருதிமறை யவர்களொலியுஞ்‌
சொல்லரிய பிள்‌௯ளக்‌ குழாவொலியு மங்கலத்‌
தூயமுர சத்தொடுபரீஇ
மளிக்குந்‌ திருப்பேரை மணிவண்ண ஸஊைப்புயல்‌
மகரக்‌ குழைக்கடவுளை
வானப்‌ பிரானைநங்‌ குல நாத னைப்புகழும்‌
வண்டமிழ்ச்‌ சொற்றழையவே. –6-

துளிக்கும்‌ திரைப்‌ பொருநை – தோன்றுகின்ற அலைகளை
யுடைய தாமிரபர்ணி நதியின்‌ நீர்‌ பாயும்‌,
மதகின்‌ ஒலியும்‌ – மதகுகளினின்று எழும்‌ ஆரவாரமும்‌,
பழஞ்சுருதி– மறையவர்கள்‌ ஒலியும்‌ -பழையவேதங்களை யோதும்‌ பிராம்மணர்களின்‌ வாயொலியும்‌,

சொல்லரிய பிள்ளைக்‌ குழாம்‌ ஒலியும்‌ – (இப்படித்தென) சொல்லு தற்கியலாத சிறுவர்‌ கூட்டங்களின்‌ ஆரவாரமும்‌,
தூய மங்கலம்‌ முரசத்தொடு – பரிசுத்தமான மங்கல முரசத்தினொலியொடும்‌ கூடி,
பரீமளிக்கும்‌ – சிறப்பையடையச்‌ செய்யும்‌
திருப்பேரை – தென்‌திருப்பேரை நகரிலுள்ள,
மணிவண்ணனை . நீலமணிபோன்ற நிறத்‌தவனை,
வானப்பிரானை – தேவர்களின்‌ தலைவனை,
நம்‌ குல நாதனை – நமது குலத்துக்குத்‌ தலைவனாகுபவனை,
புயல்‌ மகரக்குழைக்‌ கடவுளை – மேகத்தையொத்த மகரநெடுங்குழைக்கா தனை ,

புகழும்‌ – போற்றுகின்ற
வண் தமிழ்ச்‌ சொல்‌ – வளப்பம்‌ பொருந்திய தமிழ்ச்‌ சொற்கள்‌ [இப்பிள்ளைத்தமிழ்‌ நூலில்‌]
தழைய .-. சிறந்துநிற்கவேண்டி,. [வணங்கல்‌ செய்வாம்‌ என முடியும்‌]:

பிள்ளைக்குழா விளையாட்டொலியும்‌ ,அறுத்திருப்‌பேரை”? என்றார்‌ நம்மாழ்வாரும்‌ (திருவாய்‌ : 7-3-1)

பேயாழ்வார்‌ திருமயிலையில்‌ ஆதிகேசவப்பெருமாள்‌ கிணற்றிலே யுண்டானதொரு செவ்வல்லிப்பூவிலே நந்தகமென்கிற
வாட்படையின்‌ அம்சமாய்‌ ஐப்பசிமாதத்துச்‌ சதயநட்சத்திரத்தில்‌ திருவவதரித்தார்‌

———–

கொந்தார்‌ பசுந்துளவு பழுதுதள்‌ ளிச்செழுங்‌
குளிர்நறுந்‌ தொடையல்‌ சேர்த்து
குலவுமணி முடிமீது கைபுனைந்‌ தாழிமால்‌
குரைகழலி னங்கத்திரு
அந்தாதி யொடுதிருச்‌ சந்த நூற்‌ றிருபதையும்‌
அமுதூறு திருவிருத்தம்‌
ஆகச்சொன்‌ மாலையணி யோகப்‌ பிரான்‌ மழிசை
ஆதிபனை யேபரவுதும்‌

கொந்து ஆர்‌ பசும்‌ துளவு பழுது தள்ளி -கொத்துக்களைக்கொண்ட பச்சைத்‌ துழாய்மலர்களில்‌ கோதுகளை நீக்கி,
செழும்‌ குளிர்‌ நறும்‌ தொடையல்‌ சேர்த்து – தழைத்துக்‌ குளிர்ந்த வாசனையுள்ள மாலையாகக்கட்‌ டி,
குலவு மணி முடிமீது -விளங்குகின்ற அழகிய சிரசின்மேல்‌, கைபுனைந்து – நன்றாக சூட்டி
ஆழி மால்‌ குரை கழலில்‌ .. சக்கரத்தையேந்திய கையையுடைய திருமாலின்‌ ஒலிக்கின்ற கழலணிந்த பாதங்களில்‌,
அங்கத்‌ திருவந்தாதி யொடு – அழகுமிகுந்த *நான்முகன்‌ திருவந்தாதி” யென்னும்‌ பிரபந்‌ தத்துடன்‌,
திருச்சந்தம்‌ நூற்றிருபதையும்‌ – திருச்சந்தவிருத்தம்‌ என்‌ னும்‌ பிரபந்தத்தின்‌ நூற்றிருபது செய்யுட்களையும்‌,
அமுது ஊறும்‌ திரு விருத்தம்‌ ஆக – தேவாமிர்தம்‌ போல்‌ இனிமைசுரக்கும்‌ திருச்சந்த விருத்தப்பாக்களாக,
சொல்‌ – அருளிச்செய்த,
மாலை பாமாலை யையும்‌,
அணி . சூட்டியலங்கரித்த,
யோகப்பிரான்‌ மழிசை ஆதி பனை – யோகியர்க்கெல்லாம்‌ தலைவனாகிய திருமழிசைப்‌ பிரானை,
பரவுதும்‌ – துதிப்பபன்‌ ;

நந்தா வளம்பெற்ற திருவழுதி நாடும்வளர்‌
தகரமு முரியகோமான்‌
நாரணன்‌ பூலோக காரண னச்சுதன்‌
நந்தகோ விந்தன்முற்றும்‌
வந்தா தரித்துவரு ணன்பரவு மாழிநீர்‌
வண்ணனிகர்‌ முகில்வண்ணனை
வானப்‌ பிரானதிர்‌ வளைக்கைமக ரக்குழை
. மாதவன்‌ சொற்றழையவே.–7-

நந்தா வளம்‌ பெற்ற . குறையாத வளப்பத்தை
யுடைய,
திருவழுதிநாடும்‌ – பாண்டியநாடும்‌,
வளர்நகரமும்‌ – (அதற்‌குள்‌ சிறந்ததாக) வளர்ந்துபரந்துபட்ட திருப்பேரைநகரமும்‌,
உரியகோமான்‌ – (தனக்கே) சொந்தமாகக்கொண்ட தலைவனும்‌,
நாரணன்‌ – நாராயணன்‌ என்று நாமம்பெற்றவனும்‌,
பூலோக காரணன்‌.உலகசிருஷ்டிக்கு மூலபுருஷனானவனும்‌,
அச்சுதன்‌ – ஆஸ்ரிதர்களை நழுவவிடாதவனும்‌,
நந்த கோவிந்தன்‌ – நந்தகோபனுடைய குமார னாய்க்‌ கோவிந்தனென்னும்‌ நாமம்‌ பெற்றவனும்‌,
வருணன்‌ – வருணபகவான்‌,
முற்றும்‌ வந்து – முழுக்க ஓடிவந்து,
ஆதரித்து – விரும்பி,
பரவும்‌ – துதிக்கின்‌ ற,
ஆழி நீர்வண்ணன்‌ – கடல்நீரின்‌ நிறங்கொண்டவனும்‌,
வானப்பிரான்‌ – தேவர்களுக்குத்‌ தலைவனும்‌,
அதிர்‌ வளழ கை .. முழங்குகின்ற சங்கையேந்திய கையையுடைய,
மகரக்குகை,மாதவன்‌ – மகரக்குழைக்காதர்‌ என்னும்‌ திருநாமம் படைத்து இலக்‌குமிக்குக்‌ கணவனாகுபவனும்‌ ஆகிய,
நிகர்முகில்‌ வண்ணணை -நிகரில்‌ முகில்வண்ணன்‌ என்று திருநாமம்‌ பூண்டவளைப்‌
பற்றிய சொல்‌ – சொற்கள்‌ (இப்பிள்ளைத்தமிழ்நூலில்‌)
தழைய – சிறந்துநிற்கும்படி (மழிசையாதிபனையே பர
வுதும்‌ என முடியும்‌)

அங்கம்‌ – அழகு ,-திருவந்தாதி. நான்முகன்‌ திருவந்தாதி: 96 வெண்பாக்களாலாகியது.
இனி, அங்கம்‌ – என்பதை உடலங்கம்‌ எனக்கொண்டு, அங்கத்திருவந்தாதி என்றவிடத்து, பின்வரும்‌ அந்தாதிப்‌ பாடலை யறுசந்‌கக்கவும்‌,
வாழ்த்துகவாய்‌ காண்ககண்‌ கேட்க செவிமகுடம்‌
தாழ்த்தி வணங்குமின்கள்‌ தண்மலரால்‌ . சூழ்த்த
துழாய்‌ மன்னு நீள்முடி என்தொல்லைமால்‌ தன்னை
வழாவண்கை கூப்பி மதித்து” (நான்முகன்‌ திருவந்தாதி–செ : 11)

எழிற்‌ சந்தவிருத்தம்‌ நூற்றிருபதீந்தான்‌ வாழியே‘” என்றது இவரது வாழிதிருநாமமும்‌.

அந்தாதி வெண்பாவாலாகியது. திருச்சந்தம்‌ விருத்தத்தாலாகியது.

கோமான்‌ நாரணன்‌, காரணன்‌, அச்சுதன்‌, கோவிந்தன்‌, ஆழிநீர்‌ வண்ணன்‌, வானப்பிரான்‌. மாதவன்‌ என்று பல பெயர்கள்‌ ஒரு பொருண்மேல்‌
அடுக்கி வந்து “நிகர்‌ முகில்‌ வண்ணன்‌” என்பதோடு முடிந்தன.

————–

வள்ளைவாய்‌ நெகிழத்‌ துளிக்கும்‌ பசுந்தேறன்‌
மலர்மங்கை திகழ்வஞ்சியும்‌
வளமைதரு குடநாடும்‌ ஆன்பொருநை
யுங்கொல்லி
வரையுமுரி மைச்சேரர்கோன்‌
புள்ளவா வுறுநீல மாலிகை கிடந்தபுய
பூதான்‌ குலசேகரன்‌
பொருசிலையை நெடியவட வரைமிசை
பொறித்தவன்‌
புகழ்வேந்த னினிதுகாக்க

வள்ளை வாய்நெகிழ வள்ளைக்கொடியில்‌ மலர்கள்‌ மலர்தலால்
பசும்‌ தேறல்‌ – இனிய தேன்‌,
துளிக்கும்‌ – துளிதுளியாத்க தோன்றுகின்றது :(அப்படிப்பட்ட வளப்பத்தைக்‌ கொண்டதாய்‌),
மலர்மங்கை திகழ்‌ வஞ்சியும்‌ – (செல்வத்திற்கு அதிதேவதையாகிய) இலக்குமிதேவி விளங்குகின்ற வஞ்சிமா நகரையும்‌,
வளமை தரு குடநாடும்‌ . செழிப்பைக்கொண்ட சேரதாட்டையும்‌,-சேரநாடு . குடநாடு எனப்படும்‌.(குடக்கு – மேற்கு)
ஆன்பொருதையும்‌ – ஆன்பொருந்தம்‌ என்னும்‌ நதியையும்‌,
கொல்லி வரையும்‌ – கொல்லிமலையையும்‌,
உரிமை – தனக்கே சொந்தமாகக்‌கொண்ட,
சேரர்‌ கோன்‌ – சேரநாட்டுக்கு அரசனும்‌,
புள்‌ அவாவுறு நீல மாலிகை – வண்டுகள்‌ (தேனை) விரும்பி மொய்க்கின்ற கருங்‌குவளை மாலை,
கிடந்த புயம்‌ .. தரிக்கப்பட்டுள்ள தோள்களையுடைய,
பூதரன்‌ – பூவுலகத்துக்கே அரசனும்‌,
பொருசிலையை – போர்செய்யும்‌வில்லின்‌ குறியை,
நெடிய வடவரைமிசை .- நீண்டுள்ள இமயமலை யின்மீது, பொறித்தவன்‌ – (தன்வெற்றிக்கு அடையாளமாக)இலாஞ்சனையிட்டவனும்‌, (ஆகிய)
புகழ்வேந்தன்‌ குலசேகரன்‌ -கீர்த்திபடைத்த மன்னனாகிய குலசேகரப்பெருமாள்‌,
இனிதுகாக்க -நன்மை:புறக்‌ காப்பாற்றுவாராக;

அள்ளல்வாய்ப்‌ பழனத்‌ தடந்தொறுஞ்‌ சுரிசங்கம்‌
அகடுகைந்‌ தீன்றமுத்தும்‌
அம்பொற்‌ பசும்பாளை தளையவிழ்‌ கருங்கமுகின்‌
அணிமுத்தும்‌ நிலவுகாலக்‌.
கள்ளரு நறுமலர்க்‌ குமுதம்விரி பேரைவரு
கருணா கரக்குரிசிலைக்‌
கடவுளைக்‌ குலநா தனைப்புகழ்ந்‌ தேத்துமென்‌
கவிதையின்‌ சொற்றழையவே. –8-

அள்ளல்‌ வாய்‌ பழனத்‌ தடம்‌ தொறும்‌ – சேறு பொருத்திய வயலிடங்களிலெல்லாம்‌,
சுரிசங்கம்‌ – சுழிதலைக் கொண்ட சங்குப் பூச்சிகள்(கருக்கொண்டு)
அகடு உளைந்து – வயிறு நொந்து,
ஈன்ற முத்தும்‌ – பெற்ற முத்துக்களும்‌,
௮ம்‌ பொற்‌ பசும்‌ பாளை தளை அவிழ்‌- அழகிய பொலிவு பெற்ற பசிய நிறம் படைத்த பாளையின்‌ கட்டு விரிந்த,
கரும்‌ கமுகின்‌ – கரிய கமுகங்களின்‌ (உண்டாகிய),
அணி முத்தும்‌ – அழகிய முத்துக்களும்‌.–(சூல்கொண்ட சங்கினிடத்தும்‌ கமுகினிடத்தும்‌ முத்துப்பிறக்கும்‌என்பர்‌, )
நிலவுகால – நிலாப்போன்ற வெளிச்‌ சத்தைக்‌ கொடுக்க, (அதனால்‌)
கள்‌ அறு நறுமலர்க்‌ குமுதம்‌ – தேன்‌ தீங்கப்பெறாத வாசனை பொருந்திய ஆம்பல்மலர்கள்‌ ,
விரி . மலர்‌ கின்ற,
பேரை – தென்திருப்பேரை நகரில்‌,
வரு . கோயில்‌ கொண்டெழுந்தருளியுள்ள,
கருணாகரக்‌ குரிசிலை . தயைக்கிருப்பிடமாகிய சிறந்தோனை,
கடவுளை – தெய்வமாகுபவனை,
குலநாதனை – (நம்‌) குலத்துக்குத்‌ தலைவனாகுபவனை , (அதாவது மகரநெடுங்குழைக்‌ காதனை),
புகழ்ந்து ஏத்தும்‌ – தோத்தரித்துப்பாடுகின்ற,
என்‌ கவி தையின்‌ சொல்‌ – என்பாடல்களின்‌ சொற்கள்‌,(இப்பிள்ளைத்தமிழ்‌ நூலில்‌)
தழைய – சிறந்து நிற்க வேண்டி (வேந்தன்‌ இனிதுகாக்க என முடியும்‌)

———-

விடங்காலும்‌ வாளரா வரசுக்கு முணர்வரிய
மிக்கசங்‌ கத்தமிழினான்‌
மீனவன்‌ மதிப்பவரி யாசன மிருந்தினிது
வென்றுமூ தூர்மதுரையின்‌
அடங்காத பரசமய மதமறுத்‌ துக்கிழி
அறுத்துவே ழப்பிடரிருந்‌
தாழிமா லைக்கண்டு வாழிபா டும்பெரிய
ஆழ்வார்‌ தமைத்துதிப்பாம்‌

விடம்‌ காலும்‌ வாள்‌ அரா அரசுக்கும்‌.-விஷத்தைக்கக்குகின்ற கொடிய பாம்புகட்கரசனாகிய ஆதிசேடனுக்கும்‌,
உணர்வு அரிய .. (செவ்வன்‌) அறிதற்கு இயலாத,
மிக்க சங்கத்‌ தமிழினால்‌ – சிறப்புமிகுந்த செந்‌ தமிழ்ப்புலமையினால்‌,
மீனவன்‌ மதிப்ப அரியாசனம்‌ இருந்து -பாண்டியன்‌ கொண்டாடச்‌ சிம்மாசனத்தில்‌ (ஒக்க) வீற்றிருந்து,
இனிது வென்று – (வாதிட்ட) சமயவாதிகளை ஜெயித்து,
மூதூர்‌ மதுரையில்‌ – பழமையான நகரமாகிய மதுரையில்‌,
அடங்காத பரசமய மதம்‌ அறுத்து – வரம்புமீறிய புறச்சமயங்களின்‌ செருக்கினை யடக்கி யொழித்து,
கிழி அறுத்து – (பாண்டியன்‌ கட்டிவைத்த)பொற்பொதியை (வாதில்வென்று) தனதாக்கிக்கொண்டு,
வேழம்‌பிடர்‌ இருந்து – யானையின்‌ கழுத்திலேறியிருந்து, (ஊர்வலமாகவந்து),
ஆழிமாலைக்கண்டு – சக்கரப்படையேந்திய திருமாலின்‌ திவ்யமங்களவிக்ரஹத்தைக்‌ கண்டு,
வாழி பாடும்‌ . மங்களாசாசனமாகப்‌ பல்லாண்டுபாடிய,
பெரிய ஆழ்வார்தமை – (பட்டர்பிரான்‌என்னும்‌) பெரியாழ்வாரை,
துதிப்பாம்‌-போற்றிவணங்குவே

தடங்கா வடுக்கிடக்‌ கின்றகல்‌ லுருத்தவிர
தவமுனிவன்‌ பின்னடந்து
சரணபங்‌ கேருகத்‌ துகளளிக்‌ கும்பசுந்‌
தண்டுழாய்க்‌ கொண்டல்கேணிக்‌
கிடங்கான திற்பகட்‌ டிளவாளை துள்ளமைக்‌
கெண்டைவிசை யாடுபுனல்சூழ்‌
கெழுதகைய தென்பேரை வளமலி தருந்தூய
கேசவன்‌ சொற்றழையவே.–9-

தட கா… விசாலமான சோலையிடத்து,
வடு கிடக்‌கின்ற கல்‌ – பழிபட்டுக்‌ கிடக்கின்றதோர்‌ கருங்கல்லை,
உரு தவிர -கல்லுருநீங்கும்படி(நீங்கிப்பெண்ணுருவாகும்படி)
தவமுனிவன்‌ பின்‌நடந்து – தவத்திற்சிறந்த விசுவாமித்திரமுனிவன்‌ பின்னே நடந்துசென்று,
சரணம்‌ பங்கேருகம்‌ துகள்‌ – தாமரைமலர்‌ போன்ற
மெல்லிய திருவடிகளினின்று எழுந்த தூளி,
அளிக்கும்‌ – சாப நீக்கஞ்‌செய்து கருணைசெய்யும்‌,
பசும்‌ தண்‌ துழாய்க்‌ கொண்டல்‌ : பசியகுளிர்ந்த துளசிமாலையைத்தரித்த மேகம்போன்றவனும்‌,
கேணிகிடங்கானதில்‌ – சிறுகுளமே அகழியைப்போல்‌ ஆழ்ந்திருத்தலில்‌ (ஆழமான அகழியில்‌),
பகட்டு இள வாளை துள்ள – பருத்த இளைய வாளை மீன்கள்‌ துள்ளிக்குதிக்கும்படி,
மை கெண்டை விளையாடுபுனல்‌ சூழ்‌ – கறுத்த கெண்டைமீன்கள்‌ (மகிழ்ச்சியோடு) விளையாடும்படியான நீர்‌ சூழ்ந்து,
கெழுதகைய . விளங்குகின்ற,
தென்‌பேரை . தென்திருப்பேரை நகரின்‌,
வளம்‌ மலிதரும்‌ – செழிப்பு மிகும்‌படி யருள்செய்யும்‌,
தூய கேசவன்‌ – பரிசுத்தனான திருமாலும்‌, (ஆகிய மகரநெடுங்‌ குழைக்காதரைப்பற்றிய இப்‌ பிள்ளைத்தமிழ்‌
நூலில்‌)
சொல்‌ – பயிலும்‌ என்‌ சொற்கள்‌,
தழைய – சிறந்து நிற்க வேண்டி, (பெரிய ஆழ்வார்தமைத்‌ துதிப்பாம்‌ என முடியும்‌)

கேசவன்‌ – பிரமனையும்‌ உருத்திரனையும்‌ தன்‌ அங்கத்திற்‌ கொண்டவ னென்று பொருள்‌படும்‌ : ௧ – பிரமன்‌, ஈச – சிவன்‌ ; **பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்‌ பிரமனைத்தன்னுந்தியிலே தோற்றுவித்து”? என்றார்‌ திருமங்கையாழ்வாரும்‌. இனி, இதற்கு – அழகிய மயிர்முடியை யுடையவனென்றும்‌, கேசியென்னும்‌ அசுரனைக்‌ கொன்றவ னென்றும்‌ பொருள்கள்‌ உண்டு,

*வைநதேயம்‌ ௪ ஸம்பூதம்‌ விஷ்ணு சித்தம்‌ அஹம்‌ பஜே”
“பரண்டியன்‌ கொண்டாட”வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்‌’? என்றது தனியன்‌,

“மங்களாசாசனத்தில்‌ மற்றுள்ள ஆழ்வார்கள்‌, தங்களார்வத்தளவு தானன்றி – பொங்கும்‌, பரிவாலே வில்லிபுத்தூர்ப்‌ பட்டர்பிரான்‌
பெற்றான்‌, பெரியாழ்வாரென்னும்‌ பெயர்‌’” என்றார்‌ மாமுனிகளும்‌

—————-

பண்டா லிலையிற்‌ கண்டுயில்‌ ஞான
பராபரர்‌ காவிரிநீர்‌
படியு மரங்கர்க்‌ குச்சொன்‌ மாலை
பணிந்தடி. யிற்சூட்டி
வண்டார்‌ துளவத்‌ தொடைமுடி. சூட்டி
வணங்குத்‌ தவராசன்‌
மண்டங்‌ குடிவாழ்‌ தொண்ட ரடிப்பொடி
வரமுனி யைத்தொழுவாம்‌

பண்டு – முற்காலத்தில்‌ (மகாபிரளயத்தின்‌ போது)
ஆலிலையில்‌ கண்துயில்‌ ஞானபராபரர்‌ – இளம்‌ ஆலந்தளிரில்‌ பள்ளி கொள்ளும்‌ தத்துவஞானப்‌ பரம்பொருளாயிருக்கும்‌,
காவிரிநீர்‌படியும்‌ அரங்கர்க்கு – காவிரியின்‌ நீர்‌ அடிவருடப்‌ பள்ளிகொள்ளும்‌ஸ்ரீரங்கநாதனுக்கு,
சொல்‌ மாலை – சொற்களாலாகிய பாமாலையை(ப்பாடி),
பணிந்து – (சாஷ்டாங்கமாக) வீழ்ந்துவணங்கி,
அடியில்‌ சூட்டி – திருவடிகளில்‌ சமர்ப்பித்து அணிவித்து, (மேலும்‌) வண்டுஆர்‌ துளவத்தொடை. – வண்டுகள்‌ மொங்த்து நிறைந்த திருத்துழாய்‌ மாலையை,
முடி சூட்டி – (அரங்கனது) திருமுடியில்‌ மகுடமாக அணிவித்து,
வணங்கும்‌ தவராசன்‌ – தண்டனிட்டு வணங்கும்‌ தவச்சிரேட்டனாகிய,
மண்டங்குடி வாழ்‌ -திருமண்டங்குடியென்னுந்‌ திருப்பதியில்‌ வாழ்கின்ற,
தொண்டரடிப்‌ பொடி வரமுனியை – தொண்டரடிப்பொடி யென்னும்‌ பெயர்பெற்ற சிறந்த ஆழ்வாரை,
தொழுவாம்‌ .. (கைகூப்பி) வணங்குவேன்‌-*மண்டங்குடியதனில்‌ வாழவந்தோன்‌வாழியே”? என்பது வாழிதிருநாமம்‌,

குண்டா ருத்திப்‌ புனலனல்‌ குமிறக்‌
கோதண்‌ டம்வாங்கிக்‌
குழைய வளைத்தொரு பகழி தொடுத்தருள்‌
கோமே தகநீலந்‌
துண்டா மரைமல ரும்பே ரையில்வரு
தாமோ தரதூயர்‌
தமிழ்தெரி பிள்‌க£க்‌ கவிவழு வாதெழு
தரணியி னிலைபெறவே.–10-

குண்டு ஆர்‌ உததிப்புனல்‌ – ஆழம்‌ பொருந்திய சமுத்‌திரநீரானது,
அனல்‌ குமிற- நெருப்புப்பற்றி யொலிக்க,கோதண்டம்‌ வாங்‌கி- கோதண்டமென்னும்‌ தமது வில்லினைக்‌ கையிலெடுத்து,
குழைய வளைத்து – நன்குவளையவைத்து,
ஒரு பகழி தொடுத்தருள்‌ – ஒருஅம்பு (ஆக்நேயாஸ்திரத்தைத்‌) தொடுத்துவிடுத்த,
கோமேதகம்‌ – கோமேதகமணிபோன்றவனும்‌, ( இராமபிரானாகுபவனும்‌)
நீலம்‌ தண்‌ தாமரை மலரும்‌பேரையில்‌ – கருங்குவளையும்‌ குளிர்ந்த தாமரைப்பூவும்‌ (ஒருங்கே)மலர்கின்ற தென்திருப்பேரைநகரில்‌,
வரு தாமோதர தூயர்‌ – எழுந்‌தருளியிருக்கின்ற தாமோதரனென்னும்‌ திருநாமம்படைத்த புனிதரும்‌ (ஆகிய மகரநெடுங்குழைக்காதரைப்‌) பற்றிய,
தமிழ்‌ தெரிபிள்ளைக்கவி – தமிழிலெழுதும பிள்‌ ளைத்தமிழ்ப்பாடல்கள்‌,
வழுவாது-பிழைபடாமல்‌,
எழு தரணியில்‌ நிலைபெற – தோன்றிய இப்பூமியில்‌-ஏழுபுவனங்களிலும்‌ எனினுமாம்‌. (மங்காது என்றும்‌) நிலைத்து திற்கும்படி, (வரமுனியைத்‌ தொழுவாம்‌ என முடியும்‌).

பாவையர்கள்‌ கலவிதன்னைப்‌ பழித்த செல்வன்‌?” ஆதலின்‌, *தவராசன்‌” என்‌றும்‌*வரமுனி” என்றும்‌ பாராட்டப்பட்டார்‌.

சுடராழி யான்‌ அடிக்கே சூட்டினேன்‌ சொன்மாலை”? என்றார்‌ பொய்கையாரும்‌;

———-

வச்சிரக்‌ குலிசபதி முனிவரிமை யவர்சது
மறைக்கடவுள்‌ மழுவலாளன்‌
வந்தடி பணிந்துதொழு மெந்தைக்கு முத்திதரு
வைகுண்டப்‌ பதவியானுக்‌
கச்சுதப்‌ பச்சைமா லுக்கரு மறைப்பொருட்‌
கருமணிக்‌ கண்மலர்புடைத்‌
தமலனா திப்பொரு ளுரைக்கின்ற குரிசில்பா
ணாழ்வாரை யேபரவுதும்‌:

கச்சு அற பொருமி – இரவிக்கையறும்படி பூரித்து,
புடைத்து – பருத்து,
சினத்துக்‌ கனத்து – ‘வீங்கிச்‌ சிவந்து கடிமையாகி,
அடி. பரந்து விம்மி – கீழ்ப்பாகம்‌ அகலவெழுந்து,
கண்‌கறுத்து – முலைக்கண்கள்‌ கருநிற மடைந்து,
அமிர்தம்‌ பொதிந்த -பால்‌ கட்டியுள்ள,
குங்குமமுலை . செஞ்சாந்து பூசிய கொங்கைகளையுடைய,
கற்புடைச்‌ சீதையாளை – கற்பினுக்கணியாகீய சீதாபிராட்டியை,
நச்சி. (மணக்க) விரும்பி,
நற்சிலைவளைக்கும்‌ -நல்லசிவதனுசை வளைத்து நாணேற்றிய,
பசும்‌ தண்‌ துழாய்‌ ராமாவதார தீரன்‌ – பச்சைநிறத்ததான குளிர்ந்த திருத்துழாய்மாலையையணிந்த இராமபிரானாய்‌ அவதரித்த வீரனும்‌,
நாராயணன்‌ -நாராயணன்‌ என்ற திருநாமம்‌ படைத்தவனும்‌,
வழுதி நாடன்‌ -பாண்டியநாட்டுக்குத்தலைவனும்‌,
தம்‌ குல நாதன்‌ – நமது குலத்துக்‌குத்தலைவனாகுபவனும்‌ (ஆகிய மகரநெடுங்குழைக்‌ காதனைப்‌,பற்றிய இப்பிள்ளைத்தமிழ்‌ நூலில்‌)
நல்‌ தமிழ்ச்சொல்‌ – நல்ல(செவ்விய) தமிழ்ச்சொற்கள்‌,
தழைய – சிறந்து நிற்க வேண்டி[பாணாழ்வாரையே பரவுதும்‌ எனமுடியும்‌]

கச்சறப்‌ பொருமிப்‌ புடை த்துச்‌ சினத்துக்‌
கனத்தடி பர ந்துவிம்மிக்‌
கண்கறுத்‌ தமிர்தம்‌ பொதிந்தகுங்‌ குமமுலைக்‌
கற்புடைச்‌ சீதையாளை
நச்சிநற்‌ சிலைவளைக்‌ கும்பசுந்‌ தண்டுழாய்‌
ராமாவ தாரதீரன்‌
நாராய ணன்வழுதி நாடனங்‌ குலதநாதன்‌
நற்றமிழ்ச்‌ சொற்றழைவே.–11-

வச்சிரக்‌ குலிச பதி-உறுதியான வச்சிரப்படையையுடைய இந்திரன்‌,
முனிவர்‌ – இருடிகள்‌,
இமையவர்‌ – தேவர்கள்‌,
சதுமறைக்கடவுள்‌ – நான்கு வேதங்‌களையும்‌ ஓதும்‌ பிரமதேவன்‌,
மழுவலாளன்‌ – மழுப்படையையேந்‌திய சிவபிரான்‌ (ஆகிய இன்னோர்‌)
வந்து அடிபணிந்து தொழும்‌எந்தைக்கு – ஒருங்கு வந்து திருவடிகளை வணங்கித்‌ துதிக்கும்‌ என்‌ தந்தையாகும்‌ கடவுளுக்கு,
முத்தி தரு வைகுண்டப்பதவியானுக்கு –மோட்சத்தை யளிக்கின்ற வைகுண்ட வாசனுக்கு,
அச்‌சுதப்‌ பச்சை மாலுக்கு – ஆஸ்ரிதர்களை நமுவவிடாத பச்சைவண்ணத்‌ திருமாலுக்கு,
அருமறைப்பொருட்கு – வேதங்கள்‌ காண்டற்கரிய பரம்பொருளுக்கு,
அருமணிக்‌ கண்மலர்‌ புடைத்து – பெறுதற்கரியகருமணியைக்கொண்ட மலர்போன்ற கண்களை அகல விரித்துக்‌ காட்டி,
அமலனாதிப்பொருள்‌ உரைக்கின்ற-அமலனாதிபிரான்‌ என்று தொடங்கும்‌ திவ்யபிரபந்தத்தில்‌ அடங்கிய பழமறையின்‌ பொருளை யெடுத்துச்சொல்லிய,
குரிசில்‌ – மிகச்சிறந்தோராகிய,
பாணாழ்‌வாரையே – திருப்பாணாழ்வாரையே,
பரவுதும்‌ – தோத்தரிப்பேன்‌ ;

சரணமாகுந்தன தாளடைந்தார்க்கெல்லாம்‌, மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌  : நம்மாழ்வாரும்‌ (திருவாய்‌ ;9 – 10-5)

*பச்சைமாமலை போல்மேனி‘ என்றார்‌ தொண்டரடிப்‌பொடியாழ்வாரும்‌,

கரிய வாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட. அப்‌, பெரிய வாய கண்கள்‌”? என அகல விரித்துக்‌ கூறியபடி,

இதன்‌ “பொருள்‌? என்றது- இப்பிரபந்தத்தினிறுதியில்‌ “அணியரங்கனென்னமுதினைக்‌ கண்ட கண்கள்‌ மற்றொன்றினைக்‌ காணாவே
என்று துணிந்து கூறியதை, மறைமுடித்தேசிகனாரும்‌ *“காண்பனவுமுரைப்பனவும்‌ மற்றொன்றின்றிக்‌ கண்ணனையே கண்டுரைத்த கடிய
காதற்‌, பாண்பெழுமாள்‌ செய்த பாடல்பத்தும்‌ பழமறையின்‌ பொருளென்று பரவுமின்கள்‌?” என்றருளியுள்ளமை நஇனைக, (அமிருதாசுவாதினி, செ : 37).

———-

சிறியதிரு மடல்பெரிய திருமடற்‌ றிருமொழி
செழுந்தமிழ்‌ நெடுந்தாண்டகஞ்‌
சிறக்கின்ற சொற்குறுந்‌ தாண்டகம்‌ விதிமுறை
தெளித்தவெழு கூற்றிருக்கை
நறியதுள வணியுமுகி லுக்குரைக்கு மங்கை
நாற்கவிப்‌ பெருமானைமுன்‌
நான்மறைப்‌ பொருளுக்கு மெட்டா வரும்பொரு
நற்பொருட்‌ கவர்கள்வனைப்‌ னன்‌
பறிமுதல்‌ திரும்பக்‌ கொடாதழைத்‌ துந்திருப்‌
பணிசெயும்‌ புகழ்வேந்தனைப்‌
பலகாலு நெஞ்சில்வைத்‌ தவனடிக்‌ கமலமலர்‌
பரிவொடு பணிந்தேத்துதும்‌

சிறிய திருமடல்‌ . சிறிய திருமடல்‌ என்னும்‌ பிரபந்தத்தையும்‌, (அதனோடு)
பெரிய திருமடல்‌–, திருமொழி . -பெரிய திருமொழி, செழுந்தமிழ்‌ நெடுந்தாண்டகம்‌-வளமுள்ள தமிழில்‌ திருநெடுந்தாண்‌டகம்‌,
சொல்‌ சிறக்கின்ற குறுந்தாண்டகம்‌ – சொற்கள்‌ சிறப்புறும்‌படி யமைந்துள்ள திருக்குறுந்தாண்டகம்‌,
விதிமுறை தெளித்தஎழுகூற்றிருக்கை – யாப்பிலக்கண விதிமுறைக்கேற்ப அமைந்து தெளிவுறுத்திய திருஎழுகூற்றிருக்கை என்னும்‌ பிரபந்தங்களையும்‌,
நறியதுளவு அணியும்‌ முகிலுக்கு – வாசனை வீசுகின்ற திருத்‌ துழாயைத்தரித்த மேகம்போன்ற திருமாலுக்கு, உரைக்கும்‌ – (உரித்‌ தாம்படி) பாடியருளிய,
மங்கை நாற்கவிப்‌ பெருமானை – மங்கைநாட்டுக்குத்‌ தலைவனாய்‌ நாலுவகைக்‌ கவிகளைப்பாடுதலில்‌ வல்ல வனுமான பெருமை யுடையவனை,
முன்‌ – முன்னொருகால்‌,
நான்‌ மறைப்‌ பொருளுக்கும்‌ எட்டா அரும்பொருளின்‌–நால்வேதங்களின்‌ விஷயங்களுக்கும்‌ உணரமுடியாத அரிய பரம்பொருளாகிய மகா விஷ்ணுவின்‌,
நற்பொருள்‌ கவர்‌ கள்வனை – நல்ல செல்வங்களை (வாள்வலிகாட்டிக்‌) கொள்ளையடித்த திருடனை,
பறிமுதல்‌ -தான்‌ கொள்ளையடித்துக்‌ கவர்ந்த செல்வங்களை,
அழைத்தும்‌ – உரிய வனைக்கூவியழைத்தும்‌,
திரும்பக்கொடாது..திருப்பி (உரியவனிடமே) கொடுக்காமல்‌,
திருப்பணி செயும்‌ புகழ்‌ வேந்தனை – கோயில்‌ கைங்கரியங்களைச்‌ செய்து -புகழ்சம்பாதித்த (மங்கை) மன்னனை,
பலகாலும்‌ நெஞ்சில்‌ வைத்து – எப்போதும்‌ மனத்தினால்‌ தியா னித்து,
அவனடிக்‌ கமலமலர்‌ . அவனது திருவடித்தாமரைகளை,
பரிவொடு .. அன்போடு (பக்தியோடு),
பணிந்து ஏத்துதும்‌ – வணங்‌ கித்‌ தோத்தரிப்பேன்‌

உறிமிசை யிருந்தவளை களவினால்‌ வாரியென்‌
ஜொருதிவலை சிந்தாதுணும்‌
உயர்புகழ்ப்‌ பேரைவரு குலநாதன்‌ முதுகவிதை
உலகெங்‌ கணுந்தழையவே.–12-

உறிமிசை இருந்த அளை – உறியின்மேல்‌ வைத்‌ திருந்த வெண்ணெயை,
களவினால்‌ – திருட்டுத்‌ தொழிலினால்‌,

வாரி என்று – செல்வம்‌ கிடைத்தது என்று (மகிழ்ந்து) ,
ஒரு திவலை சிந்தாது உணும்‌ – ஒருதுளிகூடக்‌ கீழே சிந்தாதபடி முழுவதையும்‌ விழுங்கும்‌,
உயர்‌ புகழ்‌ பேரை வரு குலநாதன்‌ – மிக்க புகழை யுடைய திருப்பேரை நகரில்‌ எழுந்தருளியுள்ள நம்குலத்துக்குத்‌
தலைவனாகுபவனைப்பற்றிய,
முதுகவிதை – செவ்வி முதிர்ந்த பிள்‌ த்தமிழ்ப்‌ பாடல்கள்‌,
உலகு எங்கணும்‌ தழைய – பூவுலக மெங்கும்‌ சிறந்து நிற்கவேண்டி, (பணிந்தேத்துதும்‌ என முடியும்‌.)

மாறன்‌ பணித்த தமிழ்‌ மறைக்கு மங்கையர்கோன்‌, ஆறங்கம்‌ கூற அவதரித்த”? என்றார்‌ மாமுனிகளும்‌ (உபதேசரத்தினமாலை, 9).

ஆசு, மதுரம்‌, சித்திரம்‌, விஸ்தாரம்‌ என்பன, இவை நான்கிலும்‌ வல்லவராதலின்‌ திருமங்கையாழ்வார்‌”நாலுகவிப்பெரு மாள்‌!” எனப்படுவர்‌, (வேதப்பொருளுக்கும்‌ எட்டா அரும்பொருள்‌”என்றவிடத்து “யதோ வாசே நிவர்த்தந்தேதே அப்ராப்ய மனஸாஸஹ”” என்றது வேதமும்‌.

———-

முடிக்கும்‌ பசுந்துழாய்ச்‌ சக்கிரா யுதக்கடவுள்‌
முளரியங்‌ கண்ணனுக்கு
முதுமறை தெரிந்துதிரு வந்தாதி யாசிரிய
மூறைவழா வடிதொறுஞ்சொல்‌
வடிக்குஞ்‌ செழுந்தமிழ்ப்‌ பாடலா யிரமுமகிழ்‌
மாறனுறை செய்தருளவே
வரிசையொடு பட்டோலை யெழுதுமொரு மதுரகவி
வரமுனிவனைப்பரவுதும்‌

பசுந்துழாய்‌ முடிக்கும்‌ . பச்சைத்திருத்துழாய்மாலையைச்‌ சூடும்‌,
சக்கிராயுதக்கடவுள்‌ . சுதரிசனம்‌ என்னும்‌ சக்கரப்படையை [வலக்‌கையில்‌ ] ஏந்தியுள்ள திருமாலாம்‌,
முளரியங்‌ கண்ணனுக்கு- தாமரைமலர்போன்ற திருக்கண்களை யுடைய கண்ணனுக்கு (புண்டரீகாக்ஷனுக்கு) ஏற்குமென்று,
முதுமறை தெரிந்து – பழைய வேதங்களை யாராய்ந்தறிந்து,
திருவந்தாதி.பெரியதிருவந்தாதியையும்‌,
ஆசிரியம்‌-திருவாசிரியத்தையும்‌,
முறைவழமா அடிதொறும்‌ சொல்‌ வடிக்கும்‌ –(யாப்பு) நெறி தவறாதபடி அடியொவ்வொன்றிலும்‌ தக்க சொற்களைச்‌ சாரமாகப் பெய்தமைக்கும்‌,
செழுந்தமிழ்ப்‌ பாடல்‌ ஆயிரமும்‌ : செவ்‌விய தமிழ்ச்செய்யுட்கள்‌ ஆயிரமேற்கொண்டதிருவாய்மொழியையும்‌,
மகிழ்‌ மாறன்‌ உரைசெய்தருள – மகிழமாலையைத்தரித்த நம்‌மாழ்வார்‌ உபதேசித்‌ தருள; (அப்‌ பிரபந்தங்களை)
வரிசையொடு -சிறப்போடு,
பட்டோலை எழுதும்‌ – ஓலையிலே எழுதிக்‌ கொண்ட,
ஒரு – ஒப்பற்ற,
மதுரகவி வர முனிவனை – மதுரகவியென்று பேர்‌படைத்த சிறந்த ஆழ்வாரை,-மதுரகவி அந்தணராதலின்‌ *வரமுனிவன்‌’ எனப்பட்பார்‌.
பரவுதும்‌ . தோத்தரிப்பேன்‌

குடிபுகுந்‌ தடந்திரைப்‌ புனல்யாவு மொருமுகங்‌
கொண்டுவரு ணன்படியவே
கூடுபொரு அநத்துறைக்‌ குலநாத னுயர்மாட
கூடங்க டோறுநெடுவான்‌
இடிக்குங்‌ கருங்கொண்டல்‌ கண்படுக்‌ கும்பேரை
எம்பிரான்‌ வானப்பிரான்‌
இருசரண மலா்சூடு மெனதுதண்‌ கவிதையுல
கெங்கணுந்‌ தழையவென்றே,–13

குடிபுகும்‌ தட திரை புனல்‌ யாவும்‌ – (எல்லாவுலகங்‌களினின்றும்‌ புறச்சூழல்களினின்றும்‌) வந்துசேருகின்ற பெரிய அலைகளின்‌ நீரெல்லாம்‌
ஒருமுகம்‌ கொண்டு – ஒருங்குதிரண்டு ஓருபெருக்காய்‌ வந்து,
வருணன்‌ படியவே – (கடலரசனாகிய) வருணபகவான்‌ தன்னிடத்தில்‌ நீராடும்படி,
கூடு பொருநைத்துறை – இணையும்‌ கூடுபுனற்றுறை என்றுபெயர்‌ பெற்ற தாமிரபர்ணி நதித்‌ துறையிலெழுந்தருளியிருக்கும்‌,
குலநாதன்‌ – நம்குலத்துக்குத்‌ தலைவணனாகுபவனும்‌,
உயர்‌ மாட கூடங்கள்‌ தோறும்‌ – ஓங்கியுயர்ந்துள்ள உபரிகைகள்‌ ஒவ்வொன்றினிடத்தும்‌,
நெடு வான்‌ இடிக்கும்‌ கருங்‌கொண்டல்‌ – பெரிய ஆகாயத்தில்‌ முழங்கும்‌ கரிய மேகங்கள்‌,
கண்‌படுக்கும்‌ – தங்கி யுறங்கும்படியான
பேரை . திருப்பேரை நகருக்கு
எம்பிரான்‌ – தலைவனாகுபவனும்‌,
வானப்பிரான்‌ – தேவர்களுக்குத்‌;குலைவனாகுபவனும்‌, (ஆகிய மகரநெடுங்குழைக்கா தரின்‌)
இரு சரணமலர்‌ சூடும்‌ எனது – இரண்டு பாததாமரைகளையும்‌ (தலைக்கணியாக்‌)கொள்ளும்‌ என்னுடைய,
தண்‌ கவிதை – இனிய பாட்டுக்கள்‌,
உலகுஎங்கணும்‌ தழைய என்று-இந்நிலவுலகு முழுதும்‌ சிறந்துநிற்கவேண்டுமென்று வேண்டி, [மதுரகவி வரமுனிவனைப்‌ பரவுதும்‌ என முடியும்‌ ]

ஒரு காலத்தில்‌ அசுரர்‌ வருணபாசத்தைக்கவர்ந்து போயினர்‌, அதனைத்திரும்பப்‌பெறவேண்டுமென்று வருணன்‌, பொருநையாற்றங்கரையையடைந்து
மகரநெடுங்குழைக்காதரை நோக்கித்‌ தவம்‌ புரிந்தான்‌ : அப்பெருமானருளால்‌ திரும்பவும்‌ பாசம்‌ கிடைக்கப்பெற்றான்‌ அந்நன்றிக்‌
காக வருணன்‌, தான்நின்று தவம்செய்தஅத்தீர்த்தத்தில்‌ **எல்லாவுலகங்களிலுமுள்ளசகலதீர்த்தங்களின்‌ மகிமையும்‌ கூடுவதாக?” என்று
அருள்செய்தமையால்‌, இத்தலத்திலுள்ள அத்திருமஞ்சனத்துறை “கூடுபுனற்றுறை”” (ஸமூகதீர்த்தம்‌) எனப்பெயர்பெற்றது இத்துறை யில்‌ பெருமாள்‌ உகந்த அற்புத மகரகுண்டலம்‌ அகய்பட்டமையால்‌இஃது மாகரிக (ஸமூக) தீர்த்தமெனவும்‌ வழங்கப்படும்‌. நம்மாழ்‌வாரும்‌ ‘”கூடுபுனல்‌ திருப்பேரையிற்கே காலம்பெற என்னைக்காட்டு மின்கள்‌? என்று விதந்தெடுத்துப்‌ பேசியுள்ளார்‌. (திருவாய்‌ ; 7+3-6)

முதியகவி நாவலவர்‌ தம்பிரான்‌ றிருஞான
முத்திரைக்‌ கடவுள்திருவாய்‌
மொழிதனக்‌ குரைவிரித்‌ தெழுதும்பிர புடவாக்கி
முழுதுமன்‌ பர்க்குவாழ்வு
புதுநறவு கக்கித்‌ துளிக்குஞ்‌ சரோருகப்‌
பொற்கழற்‌ கருணாகரன்‌
புகலரிய பரசமய திமிராரி வண்புகழ்ப்‌
பூதூர ஸஊைப்பரவுதும்‌

முதியகவி நாவலவர்‌ தம்பிரான்‌ – செவ்விமுதிர்ந்த பாடல்களைப்‌ பாடவல்லநாவீறுபடைத்தவர்களின்‌ தலைவராகுபவரும்‌,
திருஞான முத்திரைகடவுள்‌ – அழகிய ஞானமுத்திரையைக்‌ கொண்ட தெய்வமாகுபவரும்‌,
திருவாய்மொழிதனக்கு .. (சாமவேதசாரமாகிய) திருவாய்‌ மொழி பிரபந்தத்துக்கு,
உரை விரித்து – விரிவுரை செய்து (பரக்க வியாக்கியானித்து),
எழுதும்‌ – (திருக்குருகைப்பிரான்பிள்ளானைக்‌கொண்டு) எழுதுவிக்கும்‌,
பிரபுட வாக்கி – கம்பீரமான வாக்கினை யுடையவரும்‌,
அன்பர்க்கு . தன்பக்தர்களுக்கு,
முழுதும்‌ வாழ்வு -முற்றும்‌ பாதுகாப்பாய்‌ இருப்பிடமாகுபவரும்‌ (ரட்சகராகுபவரும்‌)
புது நறவு கக்கித்‌ துளிக்கும்‌ – புதிய தேன்‌ கசிந்து சொட்டுகின்ற,
சரோருகம்‌ – தாமரைமலர்‌ போன்ற,
பொற்‌ கழல்‌ கருணாகரன்‌ -அழகிய பாதங்களையுடைய தயைக்கிருப்பிடமாகுபவரும்‌,
புகலரிய பரசமய திமிர அரி – சொல்லுதற்கும்‌ வாய்‌ கூசுகின்ற புறச்சமயங்‌ களாகிய இருட்டினை அழித்தவரும்‌, (ஆகிய)
வண்புகழ்‌ பூதூரனை -வளப்பத்தில்‌ புகழ்பெற்ற ஸ்ரீபெரும்பூதாரில்‌ அவரித்தவராகியஇராமநுசரை,
பரவுதும்‌ . தோத்தரிப்பேன்‌ ;

சதுமறையு மறிவரிய குலநாத னமுதொடலை
தத்துந்‌ தடம்பொருநையான்‌
தருமதநெறி தவருத திருவழுதி வளநாடு
கதுழையவரு கருணைமேகம்‌
விதியுறையி னொடுதொழுது வருணனா ரா தனைசெய்
விமலன்‌ மக ரக்குழையன்மால்‌
விரவுஞ்‌ செழுந்தமிழ்ப்‌ பிள்ளைக்‌ கவிக்குள்ளம்‌
மிக்கசொற்‌ றழையவென்றே,–14-

சதுமறையும்‌ அறிவரிய குலநாதன்‌ . நான்குவேதங்‌
களாலும்‌ அறிதற்கு அரிய நமது குலத்துக்குத்‌ தலைவனாகுபவனும்‌,அமுதொடு அலை தத்தும்‌ தடம்‌ பொருநையான்‌ -தேவாமிர்தம்‌ போல்‌ இனிய நீர்கொண்டு அலைகள்‌ பாயும்‌ பரந்த தாமிரபர்ணிதீரத்தில்‌ எழுந்தருளியிருப்பவனும்‌, தருமநெறி தவருத திருவழுதிவளநாடு – தருமமார்க்கத்தினின்று (சிறிதும்‌) பிறழாத பாண்டியநாடு,
தழைய வரு – செழிப்புறுமாறு அவதரித்துள்ள,
கருணைமேகம்‌ – தயைபொழியும்‌ மேகம்‌ போன்றவனும்‌,
வருணன்‌ – (கடல்‌தெய்வமாகிய) வருணன்‌,
விதிமுறையினொடு தொழுது – வழிபடுங்‌கிரமத்தோடு வணங்கி,
ஆராதனை செய்‌ விமலன்‌ – ஆராதிக்‌கும்‌ புனிதனும்‌ (ஆகிய)
மகரக்குழையன்மால்‌ .. திருமாலாம்‌மகரக்குழைக்காதன்‌,
விரவும்‌ – பிரபந்தத்தலைவனாகப்‌ (பொருந்திவருகின்ற,
செழுந்தமிழ்ப்‌ பிள்ளைக்கவிக்கு – செவ்வியதமிழில்‌எழுதும்‌பிள்ளைத்‌ தமிழ்ப்பாடல்களுக்கு (ஏற்ற)
உள்ளம்‌ மிக்க சொல்‌ – மனப்‌பரிவு மிகுந்த சொற்கள்‌,
தழைய என்று – சிறந்து நிற்கவேண்டுமென்று வேண்டி, (பூதுரனைப்பரவுதும்‌ என முடியும்‌),

நாவலவர்‌ தம்பிரான்‌ ? என்றவிடத்து ”’பல்கலையோர்தாம்‌ மன்னவந்த இராமாநுசன்‌ ‘**என்றதும்‌ காண்க. (இராமா:நூற்றந்‌ : 1)

ஞானமுத்திரை – சின்முத்திரை : உபதேசக்குறியாகச்‌ சுட்டுவிரல்‌ நுனியைப்பெருவிரல்நுனியுடன்‌ சேர்த்துக்காட்டும்‌
ஞானமுத்திரை : இராமாநுசரை ஞானமுத்திரை திருக் கோலத்துடன்‌ திருமலையில்‌ திருவேங்கடமுடையான்‌ சந்நிதியில்‌ இன்றும்‌ ஸேவிக்கலாம்‌,

“முந்துறவேபிள்ளான்‌ முதலானோர்‌ செய்தருளும்‌, அந்த வியாக்கியைகளன்றாகில்‌ . அந்தோ ! திருவாய்‌
மொழிப்பொருளைத்தேர்ந்துரைக்கவல்ல,குருவார்‌ இக்காலம்‌ நெஞ்சே! கூறு ”? (உபதேசரத்‌ : 40) **

தெள்ளாரும்‌ ஞானத்‌ திருக்குருகைப்‌பிரான்‌, பிள்ளான்‌ எதிராசர்‌ பேரருளால்‌ – உள்ளாரும்‌, அன்புடனே
மாறன்மறைப்பொருளை அன்றுரைத்தது, இன்பமிகும்‌ ஆறாயிரம்‌?”(உபதேசரத்‌ : 41)

சாருவாகமதம்‌ நீறுசெய்து சமணச்செடிக்‌கனல்‌ கொளுத்தியே சாக்கி யக்கடலை வற்றுவித்து மிகுசாங்கி யக்கிரி முறித்திட,
மாறு செய்திடு, கணாுதவாதியர்கள்‌ வாய்தகர்த்தறமிகுத்துமேல்‌ வந்தபாசுபதர்சிந்தி யோடும்வகை வாதுசெய்தஎதிராசனார்‌,
கூறுமாகுருமதத்தொடோங்கியகுமாரிலன்‌ மதமவற்றின்‌மேல்‌ கொடியதர்க்கசரம்‌ விட்ட பின்‌ குறுகிமாயவாதியரைவென்றிட,
மீறிவர்தில்வருபாற்கரன்‌ மதவிலக்‌ கடிக்கொடியெறிந்து போய்‌ மிக்கயா தவமதத்தைமாய்த்தபெருவீரர்‌”* என்றும்‌,
சங்கரபாற்‌கரயாதவபாட்டப்ரபாகரர்தங்கள்மதம்‌ சாய்வுற வாதியர்மாய்குவரென்று சதுமறைவாழ்ந்திடுதாள்‌?
என்றும்‌ மா முனிகள்‌ அருளிச்‌ செய்தவை அநுசந்தேயம்‌ (ஆர்த்திப்ரந்தம்‌, 29, 52).

———

செங்கீரைப்பருவம்‌

வானாட ரும்பொற்‌ பொகுட்டா சனப்பற்ப
மண்டபத்‌ : தரசிருக்கும்‌
மறைக்கிழவ னுஞ்சடை முடிக்கடவு ஞுங்குலிச
வச்சிரா யுதத்தலைவனும்‌
பூநாறு வெட்சியந்‌ ெரியல்புனை குமரனும்‌
புகர்முகத்‌ தவனுமதியும்‌
பொங்குசுட ரிரவியுந்‌ துங்கமுனி’ வருநெடும்‌
பொற்கோயில்‌ வலம்வந்துநம்‌
கோனாகும்‌ வருணனா ராதனைசெய்‌ மஞ்சனக்‌
கொலுவில்வந்‌ தடிவணங்கிக்‌
கும்பிட்டு நின்றுசே விப்பநற்‌ சேவைபுரி
கோசலைக்‌ கிருகண்மணியே!
தேனாறு பச்சைப்‌ பசுந்துழாய்‌ மேகமே!
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே. –15.

வான்‌ – தேவலோகத்திலும்‌,
நாடு அரும்‌ – தேடிக்‌காண்பதற்கரிய,
பொன்‌ பொகுட்டு – அழகிய கொட்டையையுடைய,
பற்ப- ஆசன மண்டபத்து – தாமரையாகிய தவிசினையிட்ட கொலுமண்டபத்தில்‌,
அரசு இருக்கும்‌ – மன்னனாய்‌ வீற்றிருக்கும்‌,
மறைக்‌கிழவனும்‌ – பிரமதேவனும்‌,
சடைமுடிக்‌ கடவுளும்‌ – கபர்த்த மென்‌னும்‌ சடாபாரத்தையுடைய சிவபெருமானும்‌,
குலிச வச்சிராயுதத்‌துலைவனும்‌ – வயிரம்‌ போலுறுதி கொண்ட வச்சிரப்படையை யேந்‌திய இந்திரனும்‌,
வெட்சி பூ நாறு அம்‌ தெரியல்‌ .. வெட்சிப்பூவின்‌வாசனை வீசுகின்ற அழகிய மாலையை,
புனை – தரித்துள்ள,
குமரனும்‌ – முருகனும்‌,
புகர்‌ முகத்தவனும்‌ – புள்ளிகளையுடைய யானையின்‌ முகத்தைக்‌ கொண்ட விநாயகனும்‌,
மதியும்‌ – சத்திரனும்‌,
சுடர்‌ பொங்கு இரவியும்‌ – ஒளிமிக்க சூரியனும்‌,
துங்க முனிவரும்‌ -தூய இருடிகளும்‌,
நெடும்‌ பொற்‌ கோயில்‌ வலம்‌ வந்து – நீண்டபெரிய அழகிய கோயிலைப்‌ பிரதட்சிணமாக வந்து, (மேலும்‌)
நம்‌கோனாகும்‌ வருணன்‌ – நமக்கெல்லாம்‌ தலைவனாகும்‌ (மழைக்கடவுளான) வருணபகவான்‌,
ஆராதனைசெய்‌ . திருவர்ராதனம்‌ செய்து வழிபடுகின்ற,
மஞ்சனக்‌ கொலுவில்‌ வந்து – திருமஞ்சனமண்டபத்‌தில்‌ (சூழ) வந்திருந்து,
அடி வணங்கி – பாதங்களில்‌ பணிந்து.
கும்பிட்டு நின்று சேவிப்ப – கைகூப்பி நின்று சேவிக்கும்படி,
நல்‌சேவை புரி – நன்றாகத்தரிசனம்‌ கொடுக்கின்ற,
கோசலைக்கு இருகண்மணியே – கெளசல்யாதேவிக்கு இருகண்களிலுள்ள மணிபோல்‌ போற்றக்‌ கூடிய மகரநெடுங்குழைக்காதரே
தேன்‌ நாறு பச்சைப்‌பசுந்துழாய்‌ மேகமே – தேன்வாசனைவீசுகின்ற பசிய இளைய திருத்‌துழாய்மாலையை யணிந்துள்ள புயல்‌ வண்ணனே
செங்கீரைஆடியருள்‌ – முழந்தாளிட்டு முகமசைத்து ஆடுவாயாக ;
செல்வத்‌திருப்பேரை வல்லிக்கு மணவாள – சகல செளபாக்யங்களுக்கும்‌ உரிய தென்திருப்பேரை நாச்சியாருக்குக்‌ கணவனாகுபவனே ;
செங்கீரை ஆடியருள்‌–

———

மூருகொழுகு பங்கயத்‌ தடமுநீள்‌ குளனுமலை
மோதும்‌ புனற்சுழியினும்‌
முதிராத விளமணலு நடைவரம்‌ புஞ்செய்ய
முதுகுரம்‌ புங்கரும்பும்‌
அருகுநெட்‌ டிலைமுடத்‌ தாழைநீ ழலும்வேலி
அடருஞ்‌ செழுஞ்சோலையும்‌
அம்பொற்‌ பசும்பாளை தகாயவிழ்க்‌ குங்கமுகின்‌
அணிவனமூ மதகினூடுஞ்‌
சொருகுகுழல்‌ மகளிர்குட முலையசைய நுணுகிடை
சுமக்கின்ற பொற்குடத்துஞ்‌
சுடர்மணிப்‌ பொற்றடந்‌ தேரோடும்‌ வீதியும்‌
சுரிமுகச்‌ சங்கமூரும்‌
திருவழதி நாடாள ! பரமபத வீடாளா 
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே.–16-

முருகு ஒழுகும்‌-தேன்‌ பெருகுகின்ற,
பங்கயத்‌ தடமும்‌-தாமரைத்தடாகங்களிலும்‌,
நீள்‌ குளனும்‌ – நீண்டகுளங்களிலும்‌,

அலைமோதும்‌ புனல்‌ சுழியினும்‌ – சிற்றலைகள் வீசுகின்ற தண்ணீர்ச்‌சுழிகளிலும்‌,
முதிராத இள மணலும்‌ – கெட்டிப்பட்டிராத இளையமணல்‌மேடுகளிலும்‌ (வாலுகங்களிலும்‌) ,
நடை வரம்பும்‌- நடக்கின்‌ ற (கழனி)வரப்புகளிலும்‌,
செய்ய முது குரம்பும்‌ – செவ்விய பழைமையான நீர்ப்‌பாசனஅணைக்கட்டுகளிலும்‌,
கரும்பும்‌ – கருப்பந்தோட்டங்களிலும்‌,
அருகு – (அவற்றின்‌) சமீபத்திலுள்ள,
நெடு இலை முடத்‌ தாழை நீழலும்‌ – நீண்டஓலைகளையுடைய வளைந்த தென்னைமரங்களின்‌ நிழலிலும்‌,
வேலி அடரும்‌ செழும்‌ சோலையும்‌ – வேலிகள்‌ நெருங்கச்சூழ்ந்‌துள்ள செழிப்பான சோலைகளிலும்‌,
அம்‌ பொன்‌ பசும்‌ பாளை தளைஅவிழ்க்கும்‌ – அழகிய பொன்போலொளிரும்‌ இளைய குலைகள்‌ முறுக்கவிழ்ந்துநிற்கும்‌,
கமுகின்‌ அணிவனமும்‌ – பாக்குமரங்களின்‌ அழகிய சோலைகளிலும்‌,
மதகின்‌ – மதகுகளிற்பாயும்‌ நீர்போல,
ஊடும்‌ -புலக்கின்‌ற,
சொருகு குழல்‌ மகளிர்‌ -கூந்தலையெடுத்துச்‌ செருகிமுடிக்‌கின்ற பெண்டிரின்‌,
குடமுலை அசைய . குடம்போல்பருத்தகொங்கைகள்‌ அசையும்படி,
நுணுகு இடை சுமக்கின்ற – மிகநுண்ணிதாகியஇடுப்பிலே தாங்கியுள்ள,
பொன்‌ குடத்தும்‌ – (நீர்முகந்து கொண்டுவரும்‌) பொன்போல்‌ ஒளிரும்‌ குடங்களிலும்‌,
சுடர்‌ மணிப்‌ பொன்‌தடம்‌ தேரோடும்‌ வீதியும்‌ -ஒளிவிடுகின்ற மணிககாக்கொண்டஅழகிய விசாலமானதேர்கள்‌ ஓடும்படியான பெரிய தெருக்களிலும்‌,

சுரிமுகச்‌ சங்கம்‌ ஊரும்‌ . சுழிந்தமுகத்தைக்‌ கொண்ட சங்குப்பூச்சிகள்‌ மெல்ல நகர்ந்து செல்லுகின்ற,
திருவழுதிநாடு ஆள? – பாண்டியநாட்டின்‌ தலைவனாய மன்னனே !
பரமபத வீடாளா . பரமபதமென்கின்ற மோட்சத்தையாள்கின்ற கடவுளே ! –
செங்கீரை ஆடியருள்‌ –;
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள? சகலசெளபாக்‌
யங்களுக்கும்‌ உரிய தென்திருப்பேரை நாச்சியாருக்குக்‌ கணவனாகுபவனே .
செங்கீரை ஆடியருள்‌ –

சுழியாரும்‌ கனசங்கம்‌ கலந்தெங்கும்‌ நிறைந்தேறி, வழியாரமுத்தீன்று வளம்‌ கொடுக்கும்‌ திருநறையூர்‌”என்றார்‌ திருமங்கைமன்னனும்‌. (பெரியதிரு ; 6-9-2) “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌? ஆதலின்‌, *பரமபத வீடாள !* என்றார்‌.

——

அறுகால்‌ வரிச்சுரும்‌ படைகிடக்‌ குங்குழல்‌
அரக்கிமண்‌ டோதரிகழுத்‌
தழகுதா லிச்சரடு தரையில்வீ ழப்பருந்
தாயவெண்‌் கழுகுமொய்ப்ப
மறுகா னெடுஞ்சிகர மாடமா எளிகையிடிய
வலதுகட்‌ கடைதுடிப்ப
வா்சறொறும்‌ நெய்தலம்‌ பறைகொட்‌ டலங்கை
யழன்‌
மண்டிவான்‌ மூகடுதாவக்‌
குறுகாத வல்லசுரர்‌ செவியடைப்‌ பக்கொழுங்‌
குருதிவாய்‌ கொப்பளிப்பக்‌
கொடியரா வணன்மகுட முடிசிதறவரி சிலை
குழைத்துவெஞ்‌ சமர்முகத்துச்‌
சிறுநா ணொலிக்கொண்டு விளையாடு மேகமே!
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே.-17-

அறுகால்‌ வரிச்‌ சுரும்பு – ஆறுகால்களையும்புள்ளிகளையும்‌ கொண்டுள்ள வண்டுகள்‌,
அடை கிடக்கும்‌-நெருங்கிப்படிந்திருக்‌கும்‌,
குழல்‌ – கூந்தலினையுடைய,
அரக்கி மண்டோதரி – ராட்சசியாகிய மண்டோதரியின்‌,
கழுத்து அழகு தாலிச்சரடு – கழுத்திலே அழகுற அணிந்திருந்த தாலிவடம்‌,
தரையில்‌ வீழ – பூமியில்‌ அறுந்து விழும்படியும்‌,
பருந்தாய வெண்கழுகு மொய்ப்ப– பருந்துமுதலாய வெள்ளியகழுகுகள்‌ நெருங்கிச்‌ சூழும்படியும்‌,
மறுகால்‌ – தெருக்கள்‌தோறும்‌,
நெடும்‌ – நீண்ட,
சிகரம்‌ – உச்சிகளைக்கொண்ட,
மாடமாளிகைகள்‌ இடிய – மாடங்களோடு கூடிய பெருமனைகள்‌ இடிந்து விழும்‌ படியும்‌,
வலது கண்‌ கடை துடிப்ப – (மண்டோதரியின்‌) வலக்கண்‌ணின்‌ ஓரம்‌ துடிக்கும்படியும்‌,
வாசல்‌ தொறும்‌ – ஒவ்வொருவீட்டுமுன்‌நிலிடந்தோறும்‌,
நெய்தல்‌ அம்‌ பறை கொட்ட – சாப்பறை யடிக்கும்‌ படியும்‌,
லங்கை அழல்‌ மண்டி-இலங்கா நகரில்‌ நெருப்புப்பற்றியெழுந்து

வான்‌ முகடு தாவ . ஆகாயஉச்சிவரை பாயும்படியும்‌, (அதனால்‌)

குறுகாத . (இலங்கையை) நெருங்கமுடியாத,
வல்‌ அசுரர்‌ – கொடிய,அரக்கர்கள்‌,
செவி அடைப்ப -(அழலொலிதாங்காமல்‌) தங்கள்‌ காதுகளைப்பொத்திக்கொள்ளும்படியும்‌,
வாய்‌ கொழுங்‌ குருதி கொப்பளிப்ப -வாயிலிருந்து பெருத்த இரத்தம்‌ பீறிடும்படி,
கொடிய ராவணன்‌மகுடமுடி சிதற – துஷ்டனான இராவணனின்‌ தலையிலணிந்துள்ள கிரீடம்‌ துகளாகும்படியும்‌,
வரிசிலை குழைத்து – வரிந்துகட்டப்பட்ட வில்லினை வளைத்து,
வெஞ்சமர்‌ முகத்து – கொடிய போரினிடத்து, சிறுநாணொலிக்கொண்டு –
மெல்லிதாக டங்காரத்‌ தொனியை யெழுப்‌ பிக்‌ கொண்டு,
விளையாடும்‌ மேகமே ! – [பெரும்போரினை] ஓர்‌ விளையாட்டைப்போலச்செய்த மாரிபோன்றவனே
செங்கீரை ஆடியருள்‌–;
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள–, செங்கீரைஆடியருள்‌–;

————

இருகுழையு மணிகுதம்‌ பையுமாட வெயில்விரிந்‌
திலங்குறு முறுவலாட
இணை திருக்‌ கையிலணி வளையாட மென்சுரும்‌
பிசைபயில்செய்‌ துளவமாடப்‌
பொருவுமிரு சிலைநுதலில்‌ வேர்வாட வேபொங்கு
– புழுதிதிரு மேனியாடப்‌
புழூகொழுகுங்‌ கரியகுழல்‌ சரியவரை வடமுநூ
புரமுந்‌ தயங்கியாட
முருகுவிரி தருநறுங்‌ கமலமதி முகவட்ட
முழுநிலா வீசியாட
முதியவானவர் முனிவரமரர்கோன்‌ வாலவள
முறையொடுங்‌ காணவந்தார்‌
திருவரையின்‌ மணியசைந்‌ தாடக்‌ குழைந்தினிது
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள?!
செங்கீரை யாடியருளே.–18-

இருகுழையும்‌ – இரண்டு குண்டலங்களும்‌,
மணி குதம்பையும்‌ – மணியாலாகிய காதுபெருக்குஞ்சுறாளும்‌,–குதம்பை – காதுபெருக்குவதற்காக இடும்‌ ஓலைசீலைமுதலியவற்றின்‌ சுருள்‌,
ஆட -(மெதுவாக அசைந்து) ஆடவும்‌,
வெயில்‌ விரிந்து இலங்குறு முறுவல்‌ஆட – ஒளிபரந்து விளங்குகின்ற புன்சிரிப்பு தெரியும்படி வாய்‌ அசையவும்‌,
இணை திரு கையில்‌ அணி வளை ஆட – அழகிய இரண்டு கைகளிலும்‌ தரித்துள்ள காப்புகள்‌ ஆடவும்‌,
மெல்‌சுரும்பு இசை பயில்செய்‌ துளவம்‌ ஆட – மென்மையான வண்டுகள்‌ தங்கி ரீங்காரஞ்‌ செய்கின்ற திருத்துழாய்மாலையாடவும்‌,
பொருவும்‌இரு சிலை நுதலில்‌ வேர்வு ஆட – ஒன்றற்கொன்‌று ஓத்துள்ள இரண்டு புருவங்களைக்‌ கொண்டுள்ள நெற்றியில்‌ குறு வேர்வை துளித்துச்‌ சொட்டவும்‌,
பொங்கு புழுதி திருமேனி ஆட – படிந்‌துள்ள மிகுதியான தெருமண்துகள்‌ அழகிய உடம்பினின்று உதிரவும்‌,
புழுகு ஒழுகும்‌ கரிய குழல்‌ சரிய – புனுகு பூசப்பட்டு வாசனை வீசுகின்ற கருமையான தலைமயிர்‌ கலையும்படி,
அரைவடமும்‌ . அரை ஞாணும்‌,
நூபுரமும்‌ – காற்சிலம்பும்‌,
தயங்கி ஆட – மெல்லொலியொடு விளங்கியாடவும்‌,
முருகு ‘விரிதரு நறுங்கமலம்‌ -அழகு பரவி பரிமளம்‌ வீசுகின்ற தாமரை மலர்போன்று,
மதிமுகவட்டம்‌ – பூர்ண சந்திரன்‌ போல்‌ வட்டமாயுள்ள முகம்‌,
முழு நிலா வீசி ஆட – முற்றும்‌ ஒளிபரப்பும்படி அசைந்து ஆடவும்‌, (இவற்றால்‌ ஏற்படுகின்ற)
வாலவளம்‌ இளமையழகின்‌ செழுமையை,
காண – பார்த்து ரசிப்பதற்காக,
முதிய வானவர்‌ -(அறிவு) முதிர்ந்த தேவர்களும்‌,
முனிவர்‌ – இருடிகளும்‌,
அமரர்‌ கோன்‌ – தேவேந்திரனும்‌,
முறையொடும்‌ – வரிசையாக,
வந்தார்‌–வந்து சேர்ந்துள்ளார்கள்‌ (ஆகவே)
திரு அரையின்‌ மணிஅசைந்து ஆட – அழகிய இடுப்பில்‌ கட்டியுள்ள மணிவடம்‌அசைந்து ஆடும்படி,
குழைந்து – வளைந்து,
இனிது – (கண்ணுக்கு)இனிமையாக, ;
செங்கீரை ஆடியருள்‌ ;–
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள?–, செங்கீரை ஆடியருள்‌ –

வாலவளம்‌ – இளமை யழகின்‌ செழுமை ; அதாவது குழந்தை ஐந்தாம்‌ மாதத்தில்‌ முகமசைத்து
செங்கீரையாடுமா தலின்‌, அந்த அழகினைக் காட்ட வந்தது. :*ஐந்தாந்‌ திங்களிற்‌ செங்கீரையாடலும்‌?” என்பது பிங்கலந்தை.

——–

சந்தன கதம்பப்‌ படீரகுங்‌ குமமுலைத்‌
தையல்மர கதவல்லிசெஞ்‌’
சடிலேசர்‌ வாமத்‌ திருப்பநான்‌ மறைபரவு
சதுரமுகப்‌’ பிர மனாவில்‌
இந்துநுதல்‌ வாணி சந்ததமி ருப்பப்பணிந்‌
திருசரண மலர்சூடுவோர்‌
இதயதா மரைமலரின்‌ நூற்றெண்மர்‌ சிந்தையினும்‌
இசைபாடி வண்டுகிண்டக்‌கொந்தவிழ்‌ நறுங்கமல்‌ மலராச னக்கோவில்‌
குடி யிருக்‌ கும்பரிமளக்‌
கோமளக்‌ கொடிவல்லி மாமதுர வாயாள்‌
குழைக்காத ணாயகியெனுஞ்‌
சிந்துரப்‌ பிடியொடும்‌ விளாயாடு மழகளிறு !
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள !
செங்கீரை யாடியருளே.–19-

சந்தனம்‌ கதம்பம்‌ படீர குங்குமம்‌” –சந்தனத்தையும்‌ கதம்பமாலையையும்‌ சிவப்புகுங்குமத்தையும்‌ அணிந்துள்ள,

முலைத்‌ தையல்‌ மரகதவல்லி-கொங்கைகளையுடைய அழகிய பார்வதி தேவி,
செஞ்சடில ஈசர்‌ – சிவந்த சடாபாரத்தையுடைய சிவ பிரானின்‌,
வாமத்து இருப்ப – இடப்பக்கத்தில்‌ எழுந்தருளியிருப்ப,

நான்மறை பரவும்‌ சதுர்முகப்பிரமன்‌ நாவில்‌ -நான்கு வேதங்களையும்‌ ஓதிக்கொண்டிருக்கும்‌ நான்குமுகங்களைக்கொண்டுள்ள பிரமதேவனின்‌ நாக்கினில்‌,
இந்துநுதல்வாணி – சந்திரன்போல்‌ ஒளிவிடும்‌நெற்றியையுடைய – சரசுவதிதேவி,
சந்ததம்‌ இருப்ப – நிரந்தரமாக எழுந்தருளியிருப்ப,–
(இக்‌ குழைக்காதர்மட்டும்‌) பணிந்து -தம்மை வணங்கி,
இரு சரணமலர்‌ சூடுவோர்‌ – இரண்டு திருவடித்‌ தாமரைகளையும்‌ (தமதுசிரசில்‌) தரிப்பபருடைய,
இதய தாமரைமலரின்‌ (உம்‌)- ஹ்ருதயகமலங்களிலும்‌,
நூற்றெண்மர்‌ சிந்தையினும்‌ – நூற்றெட்டுப்‌ பக்தர்களுடைய மனத்திலும்‌,
(தமது நாயகியொடு விளையாடுகின்ற மழகளிறாவன்‌ என மேல்‌ இயையும்‌) .

வண்டு இசை பாடி கிண்ட – வண்டுகள்‌ ரீங்காரஞ்செய்து கிளர்‌தலாலே,
கொந்து அவிழ்‌ – இதழாகிய கொத்துக்கள்‌ கட்டுவிடுகின்ற,
நறுங்கமல மலராசனக்‌ கோவில்‌ – பரிமளம்‌ மிக்க செந்தாமரை மலராகிய தவிசினைக்‌ கொண்ட மனையில்‌,
குடியிருக்கும்‌ -தங்கியிருக்கின்ற,
பரிமளக்‌ கோமளக்‌ கொடி வல்லி – வாசனை வீசும்‌ அழகுடன்‌ கூடிய வல்லிக்கொடிபோன்றவளும்‌,
மா மதுரவாயாள்‌… சிறந்த இனிப்பான வாயினையுடையவளும்‌,
குழைக்கா தன்‌நாயகி எனும்‌ – குழைக்காதனாச்சியார்‌ என்னும்‌ பெயரினையுடையவளும்‌ (ஆகிய),
சிந்துரப்‌ பிடியொடும்‌ விளையாடும்‌ – சிந்தாரமென்‌ னும்‌ ஒருவகைச்‌ செம்பொடியாலாகிய திலகத்தை யணிந்துள்ளபெண்யானையோடும்‌, விளையாடும்‌,
மழ களிறு -(மகிழ்ந்து) விளையாடுகின்ற இளமையுள்ள ஆண் யானை போன்றவனே
செங்கீரை ஆடி யருள்‌ –;செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள -; செங்கீரைஆடியருள்‌ –

———–

ஓள்ளொளி விரித்தசெறு கிண்கிணிய நூபுரமும்‌
உபயசர ணத்தினாட
ஒளிர்மணிப்‌ பட்டாடை யாடவரை வடமாட்‌
உச்சியின்‌ மிலைச்சுபரிதி
நள்ளிடை வயங்குபொற்‌ சூழியத்‌ தொகையாட
நகுநிலா முறுவலாட
நவமணிச்‌ சுட்டியொடு கட்டுபொற்‌ பட்டமு
நன்னுதற்‌ பொட்டுமாடத்‌
துள்ளியெறி திரைமகர சலராசி படுசெழுந்‌
துய்யசெம்‌ பவளமேனி
தொய்யக்‌ குழைந்தாடு பண்டியுந்‌ தொந்தியுந்‌
துணைநெடுங்‌ குழையுமாடத்‌
தெள்ளமுத மணிவாயி னுள்ளொழுகி வழியவே
. செங்கீரை யாடியருளே
“செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே.–20-

ஒள்‌ ஒளி விரித்த – மிக்கவொளிபரவவிடுத்த,
செறு கிண்கிணிய – நெருங்கிய கிண்கிணிச்‌ சதங்கையோடுகூடிய,
நூபுரமும்‌ – சிலம்பும்‌,
உபய சரணத்தின்‌ ஆட . இருபாதங்களிலும்‌ ஆடி யொலிக்கவும்‌,
ஒளிர்மணிப்‌ பட்டாடை ஆட – விளங்குகின்ற அழகிய வெண்பட்டாடை இடுப்பில்‌ விளங்கவும்‌,
அரை வடம்‌ ஆட. அரையிற்கட்டிய ஞாண்கயிறு அசையவும்‌,
உச்சியின்‌ மிலைச்சு -தலையின்மேல்‌ சூட்டியுள்ள,
பரிதி . வட்டவடிவமாய்‌ உள்ளதும்‌,
நள்ளிடை வயங்கு பொன்‌ . நடுநிசியில்‌ மிக்கு ஒளிர்கின்ற பொன்‌போல உள்ளதுமான,
சூழியத்தொகை . உச்சிக்‌ கொண்டையிலணிந்துள்ள ஆபரணத்தின்‌ சேர்க்கை,
ஆட – ஒருங்கு அசைந்துஆடவும்‌,
நகு நிலா முறுவல்‌ ஆட – விளங்குகின்ற நிலவுபோன்றபுன்சிரிப்பு தோன்றி ஒளிரவும்‌,
நவமணிச்‌ சுட்டியொடு – ஒன்பது வகை மணிகளும்‌ பதித்த சுட்டியென்னும்‌ ஆபரணத்தோடு,
கட்டு பொன்‌ பட்டமும்‌ – நெற்றியில்‌ (அழகுறக்‌) கட்டியுள்ள பொன்னாலாகிய தகடும்‌,
நன்னுதல்‌ பொட்டும்‌ ஆட . நல்லநெற்றியில்‌ இட்டுள்ள திலகமும்‌ ஒளிரவும்‌,
துள்ளி எறி திரை – பொங்கிவந்து கரையின்‌ மேலெறிகின்ற அலைகளையும்‌,
மகரம்‌ – மீன்களையும்‌ கொண்ட,
சலராசி – சமுத்திரத்தில்‌,
படு – உண்டாகின்ற.
செழும்‌துய்ய செம்‌ பவளம்‌ – செழிப்பான பரிசுத்தமான சிவநீத பவளம்‌ போன்ற,
மேனி – உடம்பு,
தொய்ய . தளர்வுபடும்படி,
குழைந்துஆடும்‌ – நெகிழ்ந்து அசைகின்ற,
பண்டியும்‌- வயிறும்‌,
தொந்தியும்‌ -தசைடடிப்பும்‌,
துணைநெடுந்‌ குழையும்‌ ஆட – இரண்டுநீண்ட காதணிகளோடும்‌ ஆடியசையவும்‌,
தெள்‌ அமுதம்‌ – தெளிந்ததேவாமிர்தம்‌ போல்‌ இனிய
சொள்ளுநீர்‌, மணி வாயினுள்‌ ஒழுகிவழிய – அழகிய வாயினின்று பெருகி வழியும்படியும்‌,
செங்கீரை ஆடியருள்‌–; செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள -; செங்கீரைஆடியருள்‌

நவமணிகளாவன –
கோமேதகம்‌, நீலம்‌, பவளம்‌, மரகதம்‌, மாணிக்கம்‌, முத்து, புருட ராகம்‌, வைடூரியம்‌, வயிரம்‌ ஆகிய ஒன்பதுவகை ரத்தினங்கள்‌,

———-

நிரையும்ப சும்பொனணி மாடகூ டமூமேடை
நிழன்‌ மணிச்‌. சாளரத்து
தெடுநிலா முற்றத்தும்‌ வாவிதொறு நீராடி
நிறைநறுத்‌ தாதுபூசி
வருமந்த மாருதத்‌ திராயமென்‌ காலசைய
மாவிளங்‌ குயில்கள்கூவ
மயிலாட வளிபாட வேனில்வே எரசுபுரி
வழுதிவள நாடுதழைய
விரையுந்‌ தடம்புனல்‌ பெருக்கா றெடுத்தோட
வெழின்‌ மயிற்‌ றழைபீலியும்‌
இணையிலா மணியு மாரமும்யானை வெண் கோடும்‌
எற்றியெற்‌ நிச்சுருட்டித்‌
திரைவந்து தரைமோது பொருநையந்‌ தண்‌ ௫றைவ !
செங்கீரை யாடியரூளே
செல்வத்‌ திருபேரை வல்லிக்கு மணிவாள!
செங்கீரை யாடியருளே.–21-

பசும்‌ பொன்‌ அணிமாட நிரையும்‌ . பைம்பொன்‌றாலழகு பெற்ற மாடங்களின்‌ “வரிசையிலும்‌,
கூடமும்‌ – மேலிடங்‌களிலும்‌,
மேடை – வேதிகைகளிலும்‌,
மணி நிழல்‌ சாளரத்தும்‌ -(பதித்துள்ள) மணிகளினொளியைப்‌ பிரதிபலிக்கின்ற பலகணிகளிலும்‌,
நெடு நிலா முற்றத்தும்‌ – நீண்டநிலா வெளிச்சம்‌ பயிலும்‌
முற்றங்களிலும்‌, (தங்கி வந்து பின்பு)
வாவி தொறும்‌ நீராடி – நீர்‌ நிலைகளொவ்வொன்றிலும்‌ படிந்து,
நிறை – (தன்மேனி) நிறைய,

நறுந்‌ தாது பூசி – பரிமளம்‌ மிகுந்த மகரந்தத்‌ துகள்களைப்பூசிக்‌ கொண்டு,
வரும்‌ – மெல்ல (நடையிட்டு) வரும்‌,
மந்த மாருதத்து இளைய மென்‌ கால்‌ அசைய – மெல்லிய தென்றலின்‌ முதிராத மென்மையான சிறுகாற்று வீச, (இளவேனில்‌ வருதல்கண்டு) மாஇளங்‌ குயில்கள்‌ கூவ -(துளிர்த்த) மாமரங்களில்‌ இளைய குயிற்‌பறவைகள்‌ இனிமையாகக்‌ கூவ,
(அதனிசைகேட்டு) மயில்‌ ஆடமயிற்பறவைகள்‌ (தமது தோகைகளை விரித்து) ஆட,
அளி பாட -(அவற்றின்‌ ஆட்டத்திற்கேற்ப) வண்டுகள்‌ பண்களைப்பாட,
(இங்‌ஙனம்‌) வேனில்‌ வேள்‌ ஆசு புரி இளவேனிற்பருவத்தின்‌ தலைவனாகிய மன்மதன்‌ அரசாட்சி செய்கின்ற,
வழுதிவள நாடு தழைய -பாண்டி வளநாடு செழிக்கும்படி,
விரையும்‌ . வேகமாகப்‌ பாய்ந்து வருகின்ற,
தடம்‌ புனல்‌ பெருக்காறு – மிக்கநீரைக்‌ கொண்டு பெருகும்‌ ஆறானது,
எடுத்து ஓட – அடித்துக்கொண்டு ஓடி வர, (அதனால்‌)
எழில்‌ மயில்தழை பீலியும்‌ – அழகுமிக்க மயிலினது பீலித்தொகுதிகளும்‌,
இணையிலா மணியும்‌ – ஒப்பற்ற இரத்தினங்களும்‌,
ஆரமும்‌-சந்தனக்கட்டைகளும்‌,
யானை வெண்கோடும்‌ . யானையினுடைய வெள்ளிய தந்தங்களும்‌,
எற்றி எற்றிச்‌ சுருட்டி – மோதிமோதிச்‌ சுருட்டிக்‌ கொண்டு,
திரை – அலைகள்‌,
வந்து – வீசிவந்து,
தரைமோதும்‌ – கரையிலே தாக்கி ‘யொதுக்கும்‌,
பொருதை – தாமிரபர்ணி நதியின்‌,
அம்‌ தண்துறைவ ! அழகிய குளிர்ந்த நீர்த் துறைகளை -யுடையவனே?
செங்கீரை ஆடியருள்‌–; செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள ! –, செங்கீரை ஆடியருள்‌–;

———–

எத்திக்கும்‌ வண்புகழ்‌ தழைத்ததிரு வாய்ப்பாடி
இடையர்தம்‌ குடில்கடோறும்‌
இடுகயிற்‌ றுநியடுக்‌ கியமணி கலசத்‌
திருக்குமந்‌ தயிர்க்கட்டிகண்‌
டொத்திக்கை யிட்டுரல்‌ மிதித்தேறி யடிகுந்தி
ஒருதிவலை சிந்தாமலே |
ஒண்பவள வாய்மடுத்‌ துண்டிடுங்‌ கள்வனென்‌
றுரலொடு கட்டி யவர்கை
மத்திட்‌ டடிப்பவிரு கண்பிசைந்‌ தழுதரையின்‌
மணிபொத்தி யோடிமறுகால்‌
வாயூறி யச்சுவை கனிந்தாச்சி யாடைபட
வற்றக்‌ கறந்துகாய்ச்சுந்‌
தித்தித்த பாலுக்கு மிச்சித்து நின்றவா!
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள!
செங்கீரை யாடியருளே,–22-

௭த்திக்கும்‌ – எல்லா விடங்களிலும்‌,
வண்புகழ்‌ தழைத்த வளப்பம்பொருந்திய புகழ்‌ பரவும்படி செழித்த,
திருவாய்ப்பாடி இடையர்‌ – கோகுலத்திலிருந்த ஆயர்கள்‌,
தம்‌ குடில்கள்தோறும்‌ – தமது குடிசைகள்‌ ஒவ்வொன்றிலும்‌,
இடு-கட்டிவைத்துள்ள,
கயிற்றுஉறி – கயிற்றிறாலாகிய உறிகளில்‌,
அடுக்கிய – ஒன்றன்‌ மேலொன்றாகஅடுக்கியுள்ள,
மணி கலசத்து . அழகியபானைகளில்‌,
இருக்கும்‌ .தோய்ந்திருக்கும்‌,
அம்‌ தயிர்‌ கட்டி கண்டு . நேர்த்தியான கட்டித்‌தயிர்களைப்‌ பார்த்து
ஒத்தி – தொட்டு,
கை இட்டு . (தன்‌) கைகளைஉள்ளே வைத்து (அது முற்றும்‌ எட்டாமல்‌ இருப்பவே),
உரல்‌மிதித்து ஏறி – (அங்கிருந்த பொத்தை)உரலைக்கவிழ்த்து அதன்‌ மேலே மிதித்து ஏறி,
அடி குந்தி -பாதங்களைக்கொண்டு உட்கார்ந்து,
ஓரு திவலை சிந்தாமலே – ஒருதுளி தயிர்கூடக்‌ கீழே சிந்தாதபடி(சாமர்த்தியமாக),
ஒண்‌ பவள வாய்மடுத்து – அழகிய பவளம்‌ போன்ற இதழ்களையுடைய வாயினை நெருங்கவைத்து,
உண்டிடும்‌கள்வன்‌ என்று – சுவைத்துண்ணும்‌ திருடனென்று (பட்டங்கட்டி),
உரலோடு கட்டி – (ஆங்கிருற்த) உரலோடு (கண்ணிநுண்‌ சிறுத்தாம்‌பினால்‌) பிணித்து,
அவர்‌ -அந்தஇடையர்கள்‌,
கைமத்திட்டு அடிப்ப–(தமது) கைகளால்‌ மத்தினைக்கொண்டு அடிப்பதுபோல்‌ மிரட்ட
(அதனைக்கண்டு அஞ்சியவன்போல) இருகண்‌ பிசைந்து அழுது -(தனது) இரண்டு கண்களையும்‌ (தனது கைகளால்‌)
கசக்கி யழுது,
அரையின்‌ மணி பொத்தி – (தனது) இடுப்பில்‌ அரைஞாணில்‌ கட்டியிருந்த சிறுமணியின்‌ நாக்கினை (அது ஒலிசெய்யாதவாறு) பிடித்துக்‌கொண்டு,
ஓடி – தெருவிலே ஓடிப்போய்‌,
(சிறிதுநேரம்‌ கழித்துத்‌திரும்பிவந்து)– மறுகால்‌ – மறுபடியும்‌,
ஆச்சி – ஆயர்மகள்‌ (யசோதை),
வற்றக்‌ கறந்து – (பசுவின்மடியில்‌ சிறிதுபாலும்‌ இல்‌லாதவாறு) முற்றக்கறந்து,
ஆடை படக்‌ காய்ச்சும்‌ – பாலேடுஉண்‌டாகும்படி நன்கு காய்ச்சுகின்ற,
தித்தித்த பாலுக்கும்‌ . இனிப்பான(ஆவின்‌) பாலுக்கும்‌,
வாய்‌ ஊறி – வாயில்‌ (பருகும்‌ அருத்தியினால்‌)நீர்சுரந்து,
அ சுவை கனிந்து – அந்த நீரின்‌ சுவை முற்றி. (அந்தப்‌ பாலுக்கும்‌) இச்சித்து
நின்றவா ! – விரும்பி நின்ற கள்வனே !
செங்‌கீரை ஆடியருள்‌–; செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள !—,
செங்கீரை ஆடியருள்‌–;

வெண்தயிர்‌தோய்ந்த செவ்வாயும்‌”*, “மோரார்குடமுருட்டி’”, தாயெடுத்த சிறு கோலுக்குளைந்தோடித்‌ தயிருண்ட, வாய்துடைத்த மைந்தனுக்கு
இழந்தேன்‌ என்‌ வரிவளையேஅஞ்சவுரப்பாள்‌ அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்‌? என்றது ஆண்டாள்‌ வாக்கு.

இதனைப்பாடவந்த நம்மாழ்வார்‌ ‘‘மத்துறுகடை வெண்ணெய்களவினில்‌ உரவிடை யாப்புண்டு, எத்திறம்‌
உரலிணொடிணைந்திருந்தேங்கிய எனிவே?” என்று வாய்வெரீஇ ஆறுமாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌,

தித்தித்த பாலுந்‌ தடாவினில்‌ வெண்ணெயும்‌, மெத்தத்‌ திருவயிரார விழுங்கிய அத்தன்‌”? என்று ஈடுபட்டார்‌ பெரியாழ்வார்‌.

தாதவிழ்‌ பசுந்துளவ மாலையா டச்சிறிய
தமனியச்‌ சுட்டியாடத்‌
தருணமர கதவயிர வலயமா டப்பொற்
றடந்திருத்‌ தோள்களாடக்‌
காதுதரு மணிமகர குண்டலமு மாடக்‌
கவின்‌ பொலிய மேனியாடக்‌
கதிர்முத்து வடமாட மதுரித செந்தமிழ்க்‌
கற்றவர்கள்‌ கொண்டாடவே
வாதுபுரி கொடியசே னாபதி யிராவணன்‌
மனவலிகள்‌ திண்டாடநீள்‌
வானத்‌ திருந்துதுந்‌ துபியாட மலர்மாரி
வானவர்‌ பொழிந்தாடவோர்‌
சீதர முகுந்தபே ராயிர முகந்தவா !
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள !
செங்கீரை யாடியருளே.--23-

தாது அவிழ்‌ பசும்‌ துளவமாலை ஆட – புறவிதழ்கள்‌
விரிந்து பசிய திருத்துழாய்மாலை மார்பினில்‌ ஆட,
தமனிய சிறியசுட்டி ஆட – பொன்னாலாகிய சிறிய சுட்டியென்னும்‌ தலையுச்சி யாபரணம்‌ ஆட,
தருண மரகத வயிர வலயம்‌ ஆட – ஏற்ற அழகு பொருந்திய மரகதம்‌ வயிரம்‌ இவற்றாலாகிய கைவளையங்கள்‌ ஆட,

பொன்‌ தட திரு தோள்கள்‌ (வலயம்‌) ஆட – அழகிய பரந்த சிறந்த தோள்களில்‌ வளையங்கள்‌ ஆட,
காது தரு மணி மகர குண்டலமும்‌ ஆட . காதுகளில்‌ தொங்குகின்ற மணிகளாலாகிய மகரகுண்டலகளும்‌ ஆட,
கவின்‌ பொலியும்‌ மேனி ஆட – அழகு விளங்குகின்றஉடம்பும்‌ ஆட,
கதிர்‌ முத்து வடம்‌ ஆட – ஒளி வீசும்‌ முத்துச்சரம்‌ மார்பில்‌ ஆட,
மதுரித செந்தமிழ்‌ – இனிமையான செவ்விய தமிழ்‌ மொழியை,
கற்றவர்கள்‌ – பயின்றமகான்கள்‌,
கொண்டாட.(நும்மைப்‌)பாராட்ட,
வாதுபுரி – (விதண்டா) வாதஞ்‌ செய்தலில்‌ வல்ல,
கொடிய சேனாபதி -. கொடுமையையுடைய சேனைத்தலைவனாகிய பிரகஸ்தன்‌,
இராவணன்‌ – அவனுக்கும்‌ தலைவனாகிய இராவணன்‌
(இவர்களது),மன வலிகள்‌ திண்டாட .- மனோதிடங்கள்‌ சிதறுண்டு , அலைய,
(அதுகண்டு) நீள்‌ வானத்திருந்து துந்துபி ஆட – நீண்ட ஆகாசத்‌திலிருந்து துந்துபியென்ற தேவ வாத்தியம்‌ முழங்க,
வானவர்‌ மலர்‌மாரி பொழிந்து ஆட – தேவர்கள்‌ பூமழை சொரிந்து (ஆனந்தத்‌தால்‌) கூத்தாட,
ஒர்‌ பேர்‌ ஆயிரம்‌ உகந்தவா – ஒப்பற்ற ஆயிரநாமங்களை (சகஸ்ரநாமங்களை) விரும்பி யேற்றுக்‌ கொண்டவனே
ஸ்ரீ தர . திருமகளை மார்பில்‌ தரித்தவனே.
முகுந்த – முகுந்தனே !
செங்கீரைஆடியருள்‌–;செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள ।!— செங்கீரை ஆடியருள்‌

முகுந்தன்‌ என்பதற்கு – முத்தியுலகவின்பத்‌தையும்‌ இவ்வுலகவின்‌ பத்தையும்‌ (தன்‌. அடியார்க்குத்‌) தருபவனென்று பொருள்‌ ; மு- முக்தி, கு- பூமி, த- கொடுப்பவன்‌.

————

அலைஉளைக்‌ குங்கருங்‌ கடலும்வான்‌ முகடுதொடும்‌
அம்பொற்‌ கொடிக்குழாமொய்த்‌
தாதவன்‌ பொற்றடந்‌ தேர்தடுக்‌ குஞ்செம்பொன்‌
அணிமாட கூடங்களும்‌
நிலைவளைக்‌ கும்புக பிலங்கா புரத்திறைவன்‌
நெடியரா வணன்‌ மகுடமும்‌
நீலிதா டகைமார்பும்‌ மாரீச னும்பார
நெட்டூர வதிகாயனுங்
கொலைவளைக்‌ குங்கும்ப கன்னனு நிகும்பனும்‌
குறுகாத வல்லசுரரும்‌
கொடியவா லியுமரா மரமேழு முருவக்‌
குழைத்துவடி வாளிதொடவெஞ்்‌
சிலைவக௯சக்‌ குந்திருக்‌ கைத்தா மரைக்கொண்டல்‌ !
செங்கீரை யாடியருளே
செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள !
செங்கீரை யாடியருளே.–24-

அலை வளைக்கும்‌ கருங்கடலும்‌ – அலைகள்‌ சூழ்ந்துவரும்‌ கரிய கடலும்‌ ;
வான்முகடு தொடும்‌ அம்‌ பொன்‌ கொடிக்‌குழாம்‌ மொய்த்து – ஆகாயமுகட்டினை யெட்டும்‌ அழகிய பொன்‌ போல்‌ ஒளிரும்‌ துவசத்‌ தொகுதிகள்‌ நெருங்கி,
ஆதவன்‌ பொன்‌தேர்‌ தடுக்கும்‌ – சூரியனின்‌ அழகிய தேரினைச்‌ செல்லவிடாது தடைசெய்யும்‌,
செம்‌ பொன்‌ அணி மாட கூடங்களும்‌ – சிறந்த பொன்னினாலாகிய அழகிய உபரிகைகளும்‌ கோபுரங்களும்‌ ;
நிலைவளைக்கும்‌ புகழ்‌ – பூமிமுற்றும்‌ பரவியுள்ள கீர்த்தியையுடைய,
லங்கா புரத்து இறைவன்‌ – இலங்கை நகரின்‌ அரசனாகிய
நெடிய ராவணன்‌ மகுடமும்‌ . உயரமான இராவணனின்‌ கிரீடத்‌ தையும்‌ ;
நீலி தாடகை மார்பும்‌ – கரிய தாடகையின்‌ உரத்தினையும்‌;

மாரீசனும்‌ – (மாயமானாகவந்த) மாரீசனையும்‌ ;
பார நெட்டூர அதிகா யனும்‌ – பருத்தகொடிய அதிகாயனையும்‌ ?
கொலை வளைக்கும்‌ கும்ப கன்னனும்‌ -கொலைகளைமிகுதியாகச்செய்யும்‌ கும்பகர்ணனையும்‌ ;
நிகும்பனும்‌ – (அவன்‌ மகனாகிய) நிகும்பனையும்‌ ;
குறுகாத வல்லசுர ரும்‌ – போர்க்களத்துவாராத கொடிய அசுரர்களையும்‌ ;
கொடிய.வாலியும்‌ – கொடிய வாலியையும்‌ ;
மராமரம்‌ ஏழும்‌ – ஏழுஆச்சா மரங்களையும்‌ ;
உருவ – ஊடுருவிச்சென்று பாயும்படி,
வடி வாளி – கூர்மையான அம்பினை,
குழைத்து தொட – தழையச்‌ செய்து விடுப்பதற்கு,
‘ வெம்‌ சிலை வளைக்கும்‌ – கொடிய கோதண்டம்‌ என்னும்‌ வில்லை வளைக்கும்‌,
தாமரை திருக்கை – தாமரை போன்ற அழகிய கைகளையுடைய,
கொண்டல்‌ – மேகம்போன்றவனே
செங்‌ கீரை ஆடியருள்‌–; செல்வத்‌ திருப்பேரை வல்லிக்கு மணவாள — செங்கீரை ஆடியருள்‌–;

———–

தாலப் பருவம்‌

கயங்கொண்‌டலம்பித்‌ திரையெறியுங்‌:
கடல் சூழ் உலக முழுவதும்வெண்
கவிகை நிழற்கீ மினிதடக்கிக்‌
கரூணை புரிந்து நாடொறுநின்‌
நியங்குஞ்‌ சரங்க ளனைத்தையுமற்‌
றெல்லா வுயிருந்‌ தன்னுயிர்போல்‌
இரங்கிக்‌ காக்கு மரசர்பிரான்‌
எங்கோன்‌ றசர தப்பெருமான்‌
முயங்கும்‌ பிராட்டி மாமூவர்‌
அவர்க்குண்‌ முதன்மைத்‌ தலைவியெனும்‌
முற்று முலைக்கோ சலைவயிற்றில்‌
முளைத்து மடிமேற்‌ கிடந்துதனி
வயங்குங்‌ கிரண மரகதமா
மணியே! தாலோ தாலேலோ
மகரக்‌ குழைய! யென்னிருகண்‌
மணியே! தாலோ தாலேலோ. –25-

கயம்‌ கொண்டு – யானைச்சேனையைக்‌ கொண்டு,அலம்பி – (பகையரசர்களைக்‌) களைந்துவென்று,
திரை எறியும்‌ கடல்‌சூழ்‌ உலகம்‌ முழுவதும்‌ – அலைகள்‌ வீசுகின்ற கடல்‌ சூழ்ந்த நிலவுலகம்‌ முழுவதையும்‌,
வெண்‌ கவிகை நிழற்கீழ்‌ இனிது அடக்கி -(ஒற்றை) வெண்கொற்றக்குடையின்‌ திழலின்கீழே தங்குமாறு (ஏக சக்ராதிபதியாய்‌) சுகம்பெறப்‌ பணியவைத்து,
கருணை புரிந்து -அருள்கொண்டு ஆட்சிசெய்து,
நாள்தோறும்‌ – தினந்தோறும்‌,
நின்று – நிமிர்ந்து நின்று,
இயங்கும்‌ . சஞ்சரிக்கின்ற,
சரங்கள்‌அனைத்தையும்‌ – மக்கள்போன்று நடமாடும்‌ ஜீவன்களெல்லாவற்றையும்‌,
மற்று – மேலும்‌,
எல்லா உயிரும்‌ . ஏனைய விலங்குபோல்‌(குறுக்காக வளரும்‌) பிராணிகளையும்‌,
தன்னுயிர்போல்‌ இரங்கிக்‌காக்கும்‌ – தனக்குரித்தாய உயிர்போல்‌ கருணையொடு பாதுகாக்‌ கின்ற,
அரசர்‌ பிரான்‌ – மன்னர்மன்னனும்‌,
எம்‌ கோன்‌ _ எங்கட்குத்‌தலைவனுமாகிய,
தசரதப்பெருமான்‌ – தசரதமகாசக்கரவர்த்தி,
முயங்கும்‌ – தழுவும்‌,
பிராட்டி – தேவியர்‌,
மா மூவர்‌ – சிறந்த மூன்றுபேராவர்‌ :
அவர்க்குள்‌ – அம்‌ மூவர்க்குள்‌,
முதன்மைத்‌ தலைவி யெனும்‌ – முதல்‌ பட்டமகிஷியென்று வழங்கப்பெறும்‌,
முற்றா முலைக்‌ கோசலை வயிற்றில்‌ – முதிராத(இளையவாய) கொங்கைகளைக்‌கொண்ட கெளசல்யா தேவி திருவுதரத்தில்‌,
முளைத்து – தோன்றி,
மடிமேல்‌ கிடந்து – (அவளது) மடியின்மேல்‌ படுத்து வளர்ந்து,
தனி வயங்கும்‌ – தனிப்பட (ஏனையோர்க்கில்லாதபடி) விளங்குகின்ற,
கிரணம்‌ – பொலிவுடன்‌ கூடிய,
மரகத மா மணியே – (பச்சை நிறம்‌படைத்த) சிறந்த மரகத மணியைப்‌ போன்றவனே .
தாலோ தாலேலோ–;
மகரக்குழையே !-மகரக்குழைக்காதனே ,
என்‌ இரு கண்மணியே – என்னுடைய இரண்டு கண்ணுள் மணிபோல்‌ போற்‌ றத்தக்கவனே !
தாலோ தாலேலோ–;

பண்ணார்‌ மதுரம்‌ பழுத்தொழுகிப்‌
பாகூற்‌ ழிருந்து கனிந்தமொழி
பவளத்‌ திருவாய்‌ மணிமுறுவற்‌
பங்கே ருகக்குங்‌ குமச்சுவட்டுப்‌
பெண்ணா ரமுதத்‌ திருமடந்தை
பிரியா மருமத்‌ தினிதிருக்கும்‌
பேரா யிரம்பெற்‌ றுடையதிருப்‌
பேரைப்‌ பிரானே ! முறுக்கவிழ்பூந்‌
தண்ணார்‌ துளவப்‌ புயசயில
தாமோ தர! சீதர/ முகுந்த!
குமரக்‌ கடலிற்‌ புனல்முகந்து
தழைக்குங்‌ கமஞ்சூற்‌ கார்மேக
வண்ணா 1! வுலகன்‌ றளந்தநெடு
மாலே ! தாலோ தாலேலோ
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! தாலோ தாலேலோ,–26-

பண்‌ ஆர்‌ மதுரம்‌ பழுத்து ஒழுகி – இராகம்‌ பொருந்திஇனிமைமுதிர்ந்து பெருகி,
பாகு ஊற்றிருந்து – வெல்லப்பாகினில்‌ ஊறியிருந்தது போல்‌ சுவையொடுகூடி,
கனிந்த மொழி – கொஞ்சும்‌மொழியினையுடைய,
பவளத்திருவாய்‌ – பவளம்‌ போற்சிவந்த இதழ்‌களைக்கொண்ட அழகிய வாயினிற்றோன்றும்‌,
மணி முறுவல்‌ _அழகிய புன்‌ சிரிப்பினை க்கொண்ட,
குங்குமச்‌ சுவட்டுப்‌ பங்கேருகம்‌ -குங்குமக்குழம்பு பூசப்பட்டகுறிகளையுடைய தாமரைமொட்டினையும்‌

கொண்ட, பெண்ணார்‌ அமுதத்‌ திருமடந்தை – பெண்ணுக்குரிய நற்‌பண்புகள்‌ அனைத்தும்‌ நிறைந்த தேவாமிர்‌ தம்போன்ற இலக்குமிதேவி,

பிரியா – (இறையேனும்‌) விட்டுப்பிரியாதபடி,
மருமத்து- மார்‌பினில்‌,
இனிது இருக்கும்‌ – சுகமாக எழுந்தருளியிருக்கும்‌, பேராயிரம்‌ .பெற்றுடைய – சகஸ்ர நாமங்களைக்கொண்ட,
திருபேரைப்பிரானே -தென்‌ திருப்பேரை நகர்க்குத்‌ தலைவனே
முறுக்கு அவிழ்‌ பூந்‌ தண்‌ணார்‌ துளவம்‌ – கட்டவிழ்ந்த பூந்தாதுகளைக்கொண்டு குளிர்ச்சிபொருந்திய திருத்துழாய்மாலையைத்தரித்த,
சயிலபுய – மலைபோன்றதோள்களையுடைய,
தாமோதர ! – தாமோதரனே !
சீதர… சீதரனே !
முகுந்த – முகுந்தனே !
தமரக்கடவில்‌ – (எப்போதும்‌) ஒலிக்கின்றகடலினின்று,
புனல்‌முகந்து . நீரை மொண்டு கொண்டு,
தழைக்கும்‌ -செழிக்கும்‌,
கமம்‌ சூல்‌-நிறைந்த கருப்பத்தைக்‌ கொண்ட,
கார்மேகம்‌ -கருநிறங்கொண்ட மேகத்தைப்போன்ற,
வண்ணா ! – நிறம்‌ படைத்‌தவனே
அன்று உலகு அளந்த நெடுமாலே – திரிவிக்ரம அவதாரம்‌
எடுத்த போது மூவுலகங்களையும்‌ ஈரடியால்‌ அளந்திட்ட நீண்ட திருமாலே !
தாலோ தாலேலோ — ;
மகரக்குழையே .
நூற்றெண்மர்‌ வாழ்வே : – நூற்றெட்டுச்‌ சாமவேதிகசுடைய நல்‌ வாழ்ச்சிக்குக்‌ காரணமாகுபவனே :!
தாலோ தாலேலோ –

முளைக்குந்‌ தவளக்‌ கற்றைநிலா
மூழுவெண் டிங்கட்‌ டிருவதன
முற்றா முலைக்கோட்‌ டரமகளிர்‌
முதுபே ராயத்‌ தவர்மருங்கிற்‌
கிலாக்குங்‌ கொடிபோற்‌ கொடிநுடங்க
வெழின்மா மணிச்சூளி கைமுகட்டி
னிணக்கும்‌ பசிய மரகதங்கான்‌
நெறிக்குங்‌ கிரணக்‌ கொழுந்தோடிக்‌
கிளாக்குந்‌ துணர்க்கற்‌ பகச்சோலைக்‌
கிடையே தகைய வாகாச
கெங்கைக்‌ கரையிற்‌ பசும்புல்லெனக்‌
கிட்டிச்‌ சுரபி மணிநாவால்‌
வளைக்கும்  பசும்பொற்‌ றலங்கள்மலி
வளஞ்சேர்‌ நாடா ! தாலேலோ
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே 1! தாலோ தாலேலோ,–27-

முளைக்கும்‌ தவளக்‌ கற்றை நிலா – உதிக்கின்ற வெண்‌
மையான நிலாத்தொகுதியைக்கொண்ட,
முழு வெண்‌ திங்கள்‌ -வெள்ளிய பூர்ணசந்திரன்‌ போன்ற,
திரு வதனம்‌-அழகிய முகத்தினையும்‌,
முற்றா முலைக்கோட்டு-முதிராத (இளைய)கொங்கையுச்சிகளையும்‌உடைய,
அரமகளிர்‌ – தேவமாதரின்‌,
முது பேராயத்தவர்‌ – பழகிப்‌பயின்ற பெரியதோழியர்‌கூட்டத்தினரின்‌,
மருங்கிற்கு – (சிறிய)இடைக்கு,
இளைக்கும்‌ . தோற்றுப்போன;
கொடிபோல்‌ – பூங்கொடிபோல்‌ (வெட்கி),
கொடி நுடங்க. (மாளிகைகளின்மேல்‌ நாட்டியுள்ள)துவசங்கள்‌ அசைய,
எழில்‌ மா மணி சூளிகை முகட்டின்‌ – அழகு பொருந்திய பெரிய பளிங்குமணிகள்பதித்த உச்சியறைகளின்‌ மேற்‌பகுதியில்‌,
இணக்கும்‌ – இசைவுறப்‌ பதித்திருக்கும்‌,
பசிய மரகதம்‌பச்சை மரகதமணிகள்‌,
கான்று – கக்கி,
எறிக்கும்‌ . வெளிச்சொரியும்‌,

கிரணக்கொழுந்து ஓடி – ஒளியின்கீற்றுக்கள்‌ பரவியோடி,
கிளைக்கும்‌-முளைத்துள்ள,
துணர்‌ – கொத்துக்களைக்கொண்ட,
கற்பகச்சோலைக்குஇடையே – கற்பகக்‌ காவினுக்கு நடுவிலே,
தளைய – தடைபட்டுநிற்க [அவற்றை]
ஆகாசகங்கைக்‌ கரையில்‌ பசும்புல்லென – ஆகாய
கங்கையின்‌ கரையிலேமுளைத்துள்ள பச்சைப்புல்லென்றுமயங்கி,

சுரபி கிட்டி – காமதேனுவாகிய பசு நெருங்கி,
மணி நாவால்‌ வளைக்‌கும்‌ -(அதனையுண்ணத்‌ தனது) அழகிய நாக்கினால்‌ வளைக்கும்படியான,
பசும்பொன்‌ தலங்கள்‌ மலி – பசியபொன்னிடங்கள்‌ (பலவாகச்‌) செறிந்துள்ள,
வளம்சேர்‌ நாடா — வளப்பம்‌ பொருந்திய பாண்டி நாட்டுக்குத்‌ தலைவனே —
தாலேலோ–; மகரக்‌ குழையே !–, நூற்றெண்மர்‌ வாழ்வே –, தாலோ தாலேலோ–

———

இடிக்குங்‌ கடுஞ்சொற்‌ கொடும்பாவி
இழைக்குந்‌ தறுகட்‌ கஞ்சன்விடுத்‌
திடுகோக்‌ களிற்றின்‌ புகர்முகத்தின்‌
ஏந்தும்‌ பிறைக்கிம்‌ புரிமருப்பை
ஒடிக்குந்‌ தடக்கைச்‌ செழும்புயலே!
உணர்வுக்‌ குணர்வே!யென்னுயிரே!
ஒழியாப்‌ பிறவிக்‌ கடல்சுவற்றி
உயர்வீ டளிக்கும்‌ பெருமானே!
முடிக்கும்‌ பசுந்தண்‌ டுழாய்மாலை
முடிக்குங்‌ குழகா! வானவர்க்கும்‌
முதுநான்‌ மறைக்கு மெட்டாத
மூலப்‌ பொருளே! பாகுபெற
வடிக்குந்‌ தமிழ்த்தென்‌ நிருப்பேரை
மாலே! தாலோ தாலேலோ
மகரக்‌ குழையே! நூற்றெண்மர்‌
வாழ்வே! தாலோ தாலேலோ.--28-

இடிக்கும்‌ கடுஞ்சொல்‌ – (கேட்போர்‌) காதில்வந்து மோதும்படி கொடிய சொற்களைப்‌ பேசுகின்ற
கொடும்‌ பாவி- துஷ்டனணான பாவி,
தறுகண்‌ இழைக்கும்‌ கஞ்சன்‌ – கொலைகளைச்‌ செய்யும்‌ கம்சன்‌,
விடுத்திடு – (தன்னைக்‌ கொல்லும்படி) ஏவிய,
கோகளிற்றின்‌ – பட்டத்து யானையாகிய குவலயாபீடத்தின்‌.
புகர்‌முகத்தின்‌ – புள்ளிகளையுடைய முகத்திலே,
ஏந்தும்‌ – தாங்கியுள்ள(முளைத்துள்ள),
கிம்புரி பிறை மருப்பை – பூணிட்ட பிறைச்சந்திரன்‌போல்‌ வளைந்துள்ள தந்தத்தை,
ஒடிக்கும்‌ – முறித்த,
தட கை செழும்‌புயலே – நீண்ட (வலிய) கைகளையுடைய செழித்த மேகம்‌ போன்றவனே ?
உணர்வுக்கு உணர்வே – ஆன்மாவுக்கு ஆன்மா போன்றவனே !
என்‌ உயிரே – எனது (அரிய) உயிர்‌ போன்றவனே
ஒழியாபிறவிக்கடல்‌ சுவற்றி – நீங்காத பிறவிகளாகிய கடலையும்‌ வற்றச்‌செய்து,
உயர்‌ வீடு அளிக்கும்‌ பெருமானே – மேலான பரமபத்தை
வழங்கும்‌ இறைவனே :
முடிக்கும்‌ – சிரசுக்கும்‌,
பசும்‌ தண்‌ துழரய்‌மாலை – பசுமையான குளிர்ந்ததிருத்துழாய்மாலையையே,
முடிக்கும்‌ -சூடும்‌,
குழகா – அழகனே !
வானவர்க்கும்‌ – தேவர்களுக்கும்‌,
முது நான்மறைக்கும்‌ – பழைய நான்கு வேதங்களுக்கும்‌,
எட்டாத -அறிய, மூடியாத,
மூலப்பொருளே ! – முதற்காரணனே ,
பாகுபெற- இனிமையுண்டாகும்படி,
வடிக்கும்‌ – திருத்தமாகச்‌ செய்த,
தமிழ்‌ – தமிழ்மொழி பயில்கின்ற,
தென்திருப்பேரை மாலே! –தாலோ தாலேலோ–; மகரக்குழையே –, நூற்றெண்மர்‌ வாழ்வே |- தாலோ தாலேலோ

உணர்வு – ஆன்மா :“ஒண்டாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்கும்‌ உணர்வு”(திவ்ய : முதல்திரு : 67) உணர்வுக்கு உணர்வு – பரமான்மா
என்றபடி.

———–

கருதுஞ்‌ சமய மோராறுங்‌
களிக்கும்‌ பொருளே ! யுவட்டெறியுங்‌
கருணைக்‌ கடலே ! செழுங்கமலக்‌
கண்ணா ! கண்ணி னுண்மணியே!
திருக்குஞ்‌ சின வா ளவுணர்பட
சிலைக்கால்‌ வளைத்துப்‌ போர்முகத்துச்‌
செல்லும்‌ புயலே! யுறியில்வெண்ணெய்‌
திருடுங்‌ குழகா! பேய்முலைப்பால்‌
பருகும்‌ பவளக்‌ கனிவாயா!
பசுந்தார்த்‌ துளவ மணிமுகுந்த!
பங்கே ருகச்செஞ்‌ சரண! நெடும்‌
படப்பாந்‌ தளின்மே னடித்துநெட்டை
மருதந்‌ தவழ்ந்து சகடுதைத்த
மாலே! தாலோ தாலேலோ —
மகரக்‌ குழையே! நூற்றெண்மார்‌
வாழ்வே! தாலோ தாலேலோ,--29-

கருதும்‌ சமயம்‌ ஓர்‌ ஆறும்‌ – (யாவராலும்‌) எண்ணப்படு
கின்ற ஆறுவகைப்பட்ட மதங்களும்‌,
களிக்கும்‌ பொருளே –மகிழ்ந்து (ஏற்றுக்‌) கொள்ளும்‌ பரம்பொருளே !
உவட்டு எறியும்‌ ௧ருணைக்‌ கடலே : – பெருக்கெடுத்து வீசும்‌ தயாசமுத்திரமே
செழுங்‌கமலக்‌ கண்ணா — வளமுள்ளசெந்தாமரைமலர்போன்ற கண்களை யுடையவனே !
கண்ணின்‌ உள்‌ மணியே !-கண்களுக்குள்ளிருக்கும்‌மணிபோன்றவனே !,
திருக்கும்‌ – மாறுபாடுடைய,
சின வாள்‌ அவுணர்‌ – கோயிக்குந்‌தன்மையுள்ள கொடிய அரக்கர்கள்‌,
பட – அழியும்படி,
சிலைக்கால்‌வளைத்து – வில்லின்‌ தண்டத்தை (நாணேற்றி) வளைத்து,
போர்‌முகத்துச்‌ செல்லும்‌ – போர்க்களத்துக்குச்‌ செல்லும்‌, புயலே – மேகம்‌போன்றவனே ,
உறியில்‌ வெண்ணெய்‌ திருடும்‌ குழகா ! – உறியின்‌ மேல்‌ (நன்கமைய வைத்த) வெண்ணெயைத்‌ திருடியுண்ணும்‌ இளை யோனே ,
பேய்‌ முலைப்பால்‌ பருகும்‌ பவளக்‌ கனிவாயா | – (தாய்‌ போல்வந்த) பூதனையென்னும்‌ பேயின்‌ முலைப்பாலை(அவளுயிரோடு ஒருசேர)ப்பருகிய சிவந்த கனிபோன்ற வாயினையுடையவனே |
பசும்‌தார்‌ துளவம்‌ அணி முகுந்த !– பச்சைத்திருத்துழாய்‌ மாலையைத்‌தரித்த முகுந்தனே 1,
பங்கேருகம்‌ செஞ்‌ சரண — தாமரை மலர்‌ போன்ற செவ்விய பாதங்களையுடையவனே
நெடும்‌ படப்‌ பாந்த ளின்மேல்‌ நடித்து – பெரியபடத்தையுடைய காளியனென்னும்‌ நாகத்தின்‌ தலையின்மேல்‌ நடனஞ்செய்து,
நெட்டை மருதம்‌ தவழ்ந்து – உயர்ந்து வளர்ந்திருந்த இரண்டு மருதமரங்களினிடையே தவழ்ந்துசென்று,
(பின்பு) சகடு உதைத்த .. சகடாசுரனை யழியும்படிஉதைத்த,
மாலே ! – திருமாலே
தாலோ தாலேலோ–; மகரக்‌குழையே -, நூற்றெண்மர்‌ வாழ்வே !–, தாலோ தாலேலோ,

சமயம்‌ ஆறு என்றது – ஒன்றோடொன்று மாறுபட்ட வைஷ்‌ணவம்‌, சைவம்‌, சாக்தம்‌, செளரம்‌, காணபதம்‌, கெளமாரம்‌ என்னும்‌
ஆறு வைதிகமென்னலாம்‌ ; இனி, கபிலமதம்‌, கணாதமதம்‌, பதஞ்சலிமதம்‌, அக்ஷபாதமதம்‌, வியாசமதம்‌ ஜைமிநிமதம்‌ என்னும்‌ ஆறு
வேதாந்தமதங்களையும்‌ ; பெளத்தம்‌, ஜைநம்‌, பைரவம்‌, காளாமுகம்‌, லோகாயதம்‌, சூநியவாதம்‌ என்னும்‌ ஆறு புறச்சமயங்களையும்‌ குறிக்‌
கும்‌ என்னலாம்‌ ; இவற்றிற்கெல்லாம்‌ ஏற்ற அந்தந்தத்‌ தெய்வமாய்‌திருமால்‌ வீற்றிருக்குந்‌ தன்மையை **சமயமோராறும்‌ களிக்கும்‌
பொருளே !*: என்பதால்‌ பெறவைத்தார்‌, *’இறைஞ்சுவாரிறைஞ்சப்‌பற்பல்‌ தேவருமாகி”” என்றார்‌ வில்லியாரும்‌.

——–

சொல்லற்‌ கரிய கிரணநெடுஞ்‌
சுடரா மியினாற்‌ கதிர்மறைத்த
சுருதிப்‌ பொருளே! குருகூரன்‌
சொற்பா வமிரீதங்‌ கனிந்தசெவிச்‌
செல்வக்‌ குழகா! பாட்டயர்ந்து
சிறைவண்‌ டலம்பிக்‌ கண்படுக்குஞ்‌
செழுந்தார்த்‌ துளவு மணங்கமழுஞ்‌
சிகரப்‌ புய! பூ தர! முகுந்த!
அல்லிக்‌ கமலப்‌ பொகுட்டுமட
அனஞ்சேர்‌ வழுதித்‌ திருநாடா!
அடிவைத்‌ தொருமூ வுலகமுமன்‌
றளக்கும்‌ புயலே! சேறுடைக்கு
மல்லற்‌ பழனத்‌ திருப்பேரை
மாலே! தாலோ தரலேலோ
மகரக்‌ குழையே! நூற்றெண்மர்‌
வாழ்வே! தாலோ தாலேலோ, –30-

சொல்லற்கு அரிய – பேச்சுக்கு நிலமல்லாத,
கிரணநெடும்‌ சுடர்‌ ஆழியினால்‌–ஓளிக்கற்றைகளை வெளிவிடுகின்ற பேரொளியைக்‌ கொண்ட சக்கரப்‌ படையினால்‌,
கதிர்‌ மறைத்த – சூரியனை மறையவைத்த,
சுருதிப்‌ பொருளே – வேத முதல்வனே !
குரு கூரன்‌ – நம்மாழ்வாரின்‌,
சொற்‌ பா அமிர்தம்‌ கனிந்த – நல்ல சொற்‌ களாலாகிய திருவாய்மொழிப்‌ பாசுரங்களாகிய அமிர்தத்தைக்‌
கேட்டுக்‌ கேட்டுச்‌ சுவைத்துப்‌ பழுத்த,
செவிச்‌ செல்வக்‌ குழகா – செவிச்செல்வத்தையுடைய அழகனே
சிறை வண்டு – இறகுகளை யுடைய வண்டுகள்‌,
அலம்பி – ஒலித்து,
பாட்டயர்ந்து – இசைப்‌ பாட்டுக்களைப்பாடி,
கண்படுக்கும்‌ – (பின்னர்‌) உறங்குகின்ற,

துளவுச்‌ செழுந்தார்‌ மணம்‌ கமழும்‌-செழித்த திருத்துழாய்‌ மாலையின்‌ வாசனை வீசும்‌,
சிகரப்‌ புய — உயர்ந்த தோள்களையுடைவனே

பூதர : – பூமியைத்‌ தாங்குபவனே !
முகுந்த – முகுந்தனே
அல்லிக்‌ கமலப்‌ பொகுட்டு – புறவிதழ்களைக்‌ கொண்ட தாமரைக்‌ கொட்டையில்‌,
மட அனம்‌ சேர்‌ . மென்மையான அன்னப்‌ பறவைகள்‌ தங்கும்‌, வழுதித்‌ திருநாடா !–
பாண்டி நாட்டுக்‌ குரிய வனே !
அன்று – (மாவலிபாற்‌ சென்ற) அன்றையதினம்‌,
அடிவைத்து . உன்சிறுகாலடியைக்காட்டிவைத்து,
ஒரு மூவுலகமும்‌ – ஒப்பற்ற மேல்‌ கீழ் நாடு என்ற மூவுலகங்களையும்‌,
அளக்கும்‌ புயலே | – [திரிவிக்கிரமனாகி] அளந்து கெரண்டமேகவண்ணனே |
சேறு உடைக்கும்‌ – சேரறாகக் குழையும்படி உழுது மண்ணுண்டைகளை யுடைக்கும்படியுள்ள,
மல்லல்‌ – வளப்பத்தையுடைய,
பழனம்‌ -கழனிக&ாக்‌ கொண்ட,
திருப்பேரை மாலே | — ; தாலோ தாலேலோ — ; மகரக்‌ குழையே ! –, நூற்றெண்மர்‌ வாழ்வே | –, தாலோதாலேலோ

“பெருமாள்‌ மகுடம்‌ சாய்க்கும்படி கவி பாடிய ஞானத்‌ தமிழ்க்கடலே:”

இடையிற்‌ ரொடியக்‌ கனத்தடிகொண்
டிளகித்‌ ததும்பிப்‌ பணைத்திறுமாந்‌
தேந்துங்‌ களபப்‌ புளகமுலை
இலவத்‌ துவர்வா யம்புயப்பொற்‌
பெடையைத்‌ தழுவி யனுதினமும்‌
பிரியா திருக்குந்‌ திருமார்பா!
பெருவா ரிதிசூழ்‌ நிலவலயப்‌
பெண்ணுக்‌ கிணங்கும்‌ புயசயில!
படையிற்‌ சுமந்த கொழுநுழைந்த
பழனக்‌ கொழுஞ்சேற்‌ றினில்வரம்பிற்‌
பாகு படுநெட்‌ டிலைக்கரும்பிற்‌
பசும்பூங்‌ காவில்‌ மணலினில்வாய்‌
மடையிற்‌ பணிலந்‌ தவழ்பேரை
மாலே! தாலோ தாலேலோ
மகரக்‌ குழையே! நூற்றெண்‌ மர்‌
வாழ்வே! தாலோ தாலேலோ.--31-

இடை இற்று ஒடிய – இடுப்பு கட்டுவிட்டு ஒடியும்படி,
கனத்து பாரமாகி,
அடி கொண்டு- அடி புடைத்து, இளகி -(அதனால்‌) நெகிழ்ந்து, பணைத்து – பருத்து,
இறுமாந்து – செருக்கி,ஏந்தும்‌ – நிமிர்ந்து நிற்கும்‌,
களபம்‌ புளகம்‌ முலை – சந்தனம்‌ பூசப்‌பட்டு மயிர்க்கூச்செரியும்‌ கொங்கைகளையும்‌,
இலவம்‌ துவர்‌ வாய்‌ -இலவம்‌ பூப்போலச்சிவந்த பவளம்போன்ற வாயினையும்‌ உடைய,

அம்புயப்பொன்‌ பெடையைத்தழுவி – இலக்குமியைத்‌ தழுவி,
அனுதினமும்‌ – தினந்தோறும்‌ (எப்போதும்‌),
பிரியாதிருக்கும்‌ – (அவளைவிட்டு) – நீங்காதிருக்கும்‌,
திருமார்பா | . அழகிய மார்பினையுடையவனே
பெரு. வாரிதி சூழ்‌ நிலவலயப்‌ பெண்ணுக்கு – பெரியகடல்‌
சூழ்ந்த பூமிதேவிக்கு,
இணங்கும்‌ – தழுவுதற்குப்‌ பொருத்தமா யிருக்கிற,
சயில புய! மலைபோன்ற தோள்களையுடையவனே |
படையில்‌ சுமந்த கொழு – உழுபடைக்கலப்பையில்‌ பொருத்தப்‌ பட்ட கொழுமுனை,
நுழைந்த – ஊடுருவிச்சென்ற,
பழனக்‌ கொழும்‌சேற்றினில்‌ – வயலிலுள்ள குழைந்த சேற்றினிலும்‌,
வரம்பில்‌ – வரப்புகளிலும்‌,
பாகு படு நெடு இலை கரும்பில்‌ – வெல்லப்பாகு உண்டாக்குகின்ற நீண்டஇலைகளையுடைய கரும்புகளிலும்‌,
பசும்‌ பூங்காவில்‌ -பசுமையான பூஞ்சோலைகளிலும்‌,
மணலினில்‌ – மணலிலும்‌,
வாய்‌மடையில்‌ – மதகினிடங்களிலும்‌,
பணிலம்‌ தவழ்‌ – சங்குப்பூச்சிகள்‌ தவழ்கின்ற
(வளப்பமுடைய), பேரை . தென்திருப்பேரையென்ற
நகரில்‌ எழுந்தருளியுள்ள,
மாலே !–திருமாலே !
தாலோ தாலேலோ–; மகரக்குழையே !–, நூற்றெண்மர்‌ வாழவே !–,தாலோ தாலேலோ–;

*அகலகில்லேன்‌ இறையுமென்று அலர்‌ மேல்மங்கையுறைகின்றனளாதலின்‌, **அனுதினமும்‌ பிரியாதிருக்குந்‌
திருமார்பா !?* என்றார்‌. மார்பிற்கு அணி ஸ்ரீதேவியும்‌, தோளுக்கு அணி பூதேவியும்‌ ஆவள்‌ என்றபடி. “*இன்துணைபதுமத்தலர்மகள்‌
தனக்கு இன்பன்‌, நற்புவிதனக்கு இறைவன்‌”? என்றார்‌ கலிகன்றியும்‌,

—–

அடியார்‌ பிறவிக்‌ கடல்சுவற்றி
அழியாப்‌ பரம பதங்கொடுக்கும்‌
ஆழிப்‌ புயலே! பணாமகுடத்‌
தடல்வா ளரவின்‌ கண்பிதுங்க
நடியா நிற்கு மொருகுழக!
நாரா யண?!சீ தர! முகுந்த!
நண்ணும்‌ புலவன்‌ கணிகணன்பின்‌
நற்பாய்‌ சுருட்டிச்‌ சொற்றமிழ்க்குப்‌
படிமே னடக்கு மிரு சரண
பங்கே ௬க1வன்‌ றனல்கொளுந்தப்‌
பாவைக்‌ கொருகாய்‌ கணைதொடுத்த
பாரப்‌ புய। பூ தரத்திலங்கும்‌
வடிவார்‌ திகிரிப்‌ படைசுமந்த
மாலே / தாலோ தாலேலோ
மகரக்‌ குழையே / நூற்றெண்மர்‌
வாழ்வே / தாலேலோ.–32-

அடியார்‌ பிறவிக்கடல்‌ சுவற்றி – (தனது) பக்தர்களது
பிறவியாகிய சாகரத்தை வற்றச்செய்து,
அழியாப்பரம பதம்‌ கொடுக்‌கும்‌ . என்றைக்கும்‌ அழிவில்லாத மேலான மோட்சபதவியைக்‌
கொடுக்கும்‌,
ஆழிப்புயலே ! – திருப்பாற்கடலில்‌ படிந்துள்ள மேகமே !
பணா மகுடத்து அடல்‌ வாள்‌ அரவின்‌ – படங்கள்‌ (ஐந்தினைத்‌) தலையிற்‌ கொண்ட வலிய கொடிய காளியனென்னும்‌ பாம்பின்‌,
கண்‌பிதுங்க – கண்கள்‌ வெளிவந்துவிடும்படி (துரிதமாகவும்‌ அழுத்த மாகவும்‌) நடியாநிற்கும்‌ – (அதன்‌ தலைகளின்‌ மேல்‌ கால்களால்‌)நடனஞ்செய்யும்‌,
ஒரு குழக – ஓப்பற்ற அழகுடையவனே |
நாராயண–।, ஸ்ரீதர–, முகுந்த–!,
நண்ணும்‌ புலவன்‌ கணிகணன்‌ பின்‌(உன்னை நம்பிக்கச்சி) சேர்ந்த கணிகண்ணன்‌ என்னும்‌ புலவனுக்குப்‌ பின்னாலே,
சொல்‌ தமிழ்க்கு – அவன்‌ ஆசிரியர்‌ திருமழிசையாழ்வார்‌ சொன்ன தமிழ்ப்பாடலுக்காக,
நல்பாய்‌ சுருட்டி – தல்ல’பாயாகிய ஆதிசேடனைச்சுருட்டி (த்தலைமேல்‌ வைத்துக்கொண்டுஎருத்து அலைப்ப) ,
படிமேல்‌ நடக்கும்‌ . தரையில்‌ நடந்துசென்ற,
பங்கேருக இரு சரண ! .-தாமரைமலர்போன்ற உபய பாதங்களை யுடையவனே !
பாவைக்கு – சீதாபிராட்டிக்காக,
அன்று . (அணை கட்டிச்செல்ல நினைத்த) அன்றைத்தினம்‌,
அனல்‌ கொளுத்த -நெருப்புப்பற்றியெரியும்படி,
ஒருகாய்‌ கணை தொடுத்த – ஓப்பற்ற (ஆக்‌னேயாஸ்திரமாகிய) சடுசரத்தைத்‌ தொடுக்கச்‌ சித்தமாயிருந்த,
பாரப்‌ புய ! . வலிய தோள்களையுடையவனே !
பூதரத்து இலங்கும்‌ -மலையைப்போல விளங்குகின்ற,
வடிவார்‌ – வலியவுருக்கொண்டுள்ள,
திகிரிப்படை – சுதரிசனம்‌ என்னும்‌ சக்ராயுதத்தை, ௬மந்த – வலக்‌கையில்‌ தாங்கியுள்ள,
மாலே !– திருமாலே | தாலோ தாலேலோ– மகரக்குழையே :!–,. நூற்றெண்மர்‌ வாழ்வே !–, தாலோதாலேலோ–;

கணிகண்ணன்‌ போகின்றான்‌ காமருபூங்கச்சி, மணிவண்ணா நீ கிடக்கவேண்டா — துணிவுடைய,
செந்நாப்புலவனும்‌ போகின்றேன்‌ நீயுமுன்றன்‌, பைந்நாகப்‌ பாய்‌ சுருட்டிக்கொள்”?”

பாலாற்றங்கரையில்‌ உள்ள 😕*ஓரிருக்கை”?

*கணிவண்ணன்‌ போக்கொழிந்தான்‌ காமருபூங்கச்சி, மணிவண்ணாநீகிடக்கவேண்டும்‌-
துணிவுடைய, செந்தாப்புலவனும்‌ போக்கொழிந்தேன்‌ நீயுமுன்றன்‌, பைந்தாகப்பாய்‌ படுத்துக்‌ கொள்‌”?

குமர குருபரரும்‌ இவ்வரலாற்றை?” பணிகொண்ட முடவுப்‌ படப்பாய்ச்‌ சுருட்டுப்‌ பணைத்தேள்‌ எருத்தலைப்பப்‌, பழமறைகள்‌ முறையிடப்‌
பைந்தமிழ்ப்‌ பின்சென்ற பச்சைப்‌ பசுங்கொண்டலே’” என்று பாராட்டுகின்றார்‌. (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்‌ : காப்பு : 1 😉

——–

கருணை பெருகி யுவட்டெறியுங்‌
கண்ணு! நிரையின்‌ பின்னடந்து
கானந்‌ தழைப்பத்‌ துணைக்கமல
கழற்கால்‌ பின்னிக்‌ கன்றொடுகுன்‌
றுருகும்‌ படிவேய்ங்‌ குழல்வாய்வைத்‌
தூதும்‌ புயலே! அடியவர்தம்‌
ஒழியாப்‌ பிறவித்‌ துயரகற்றி
உள்ளத்‌ திருக்குந்‌ திருக்கறுத்து
நிருதர்‌ குலமும்‌ வேரறுத்த
நிமலா! சமரார்த்‌ திடுந்திகிரி ‘
நீலக்‌ குழகா ! மண நாற
நிறைக்கும்‌ பசுந்தண்‌ டுழாய்முகுந்த !
வருணன்‌ பரவு மிருசரண !
மாலே [தாலோ தாலேலோ
மகரக்‌ குழையே ! நூற்றெண்மர்‌
வாழ்வே ! தாலோ தாலேலோ.–33-

கருணை பெருகி உவட்டு எறியும்‌ கண்ணா ! . தயை
மிகுந்து வெள்ளமிடும்‌ கண்ணா !
நிரையின்‌ பின்‌ நடந்து – பசுக்‌கூட்டங்களின்பின்றால்‌ நடந்து சென்று,
கானம்‌ குழைப்ப -(அவைகள்‌) மேயும்‌ காடுகள்‌ செழிக்கும்படி,
துணைக்‌ கமலக்‌ கழல்‌கால்பின்னி-இரு தாமரைமலர்‌ போல்‌ மெல்லிய கழலணிந்த பாதங்கள்‌மாறவைத்து,
கன்றொடு குன்று உருகும்படி – பசுங்கன்றுகளும்‌
(கடினமான) குன்றுகளும்‌ (கேட்டு) நெகிழ்ந்து நீராகும்படி,
வேய்ங்குழல்‌ வாய்வைத்து ஊதும்‌ புயலே ! -புல்லாங்குழலை வாயிதழிலே (யிட்டு இசைக்கும்‌ மேகமே !
அடியவர்தம்‌ – பக்தர்களுடைய,
ஒழியாப்‌ பிறவித்துயர்‌ அகற்றி – நீங்காத பிறவித்துன்பத்தைப்‌ போக்கடித்து,
உள்ளத்து இருக்கும்‌ திருக்கு அறுத்து – மனத்திலே யிருக்கும்‌ மாறுபாட்டினை நீக்கி,
நிருதர்‌ குலமும்‌ வேர்‌ அறுத்த -அரக்கர்‌ குலத்தையும்‌ அடியோடு தொலைத்த,
நிமலா | –புனிதனே !
சமர்‌ – போரில்‌,
ஆர்த்திடும்‌ – ஆரவாரித்திடும்‌,
திகிரி -சக்கரப்‌ படையையுடைய,
நீலக்‌ குழகா ! – நீலரத்தினம்‌ போன்ற நிறமுடைய அழகனே
மணம்‌ நாற நிறைக்கும்‌ . வாசனை வீசும்‌ படிசெய்து எங்கும்‌ பரப்பும்‌,
பசும்‌ தண்‌ துழாய்‌ முகுந்த! பச்சை நிறமுடைய குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையையணிந்துள்ள முகுந்தனே |
வருணன்‌ பரவும்‌ இரு சரண ! — வருணபகவான்‌ துதிக்கும்‌ உபயபாதங்களையுடையவனே —
மாலே – திருமாலே !
தாலோ தாலேலேோ– ; மகரக்குழையே! — , நூற்றெண்மர்‌ வாழ்வே –, தாலோ தாலேலோ ;

*இடவணரை இடத்‌ தோளொடு சாய்த்து இருகைகூடப்‌ புருவம்‌ நெரிந்தேதற, குடவயிறுபட வாய்‌ கடைகூட “என்ற பெரியாழ்வார்‌

“கறவையின்‌ கணங்கள்‌ கால்பரப்பிட்டுக்‌ கவிழ்ந்திறங்கிச்‌ செவியாட்டகில்லாவே”” 

சமர் ஆர்த்திடும்‌ திகிரி  என்றவிடத்து . “மாயவன்‌ தீயவரைக்‌ கூராழி கொண்டு குறைப்பது” (இராமாநுச : நூற்‌: 74)

———

விடவா எளரவக்‌ கயிறுசுற்றி
வெற்பிற்‌ பிணித்து விசித்திறுக்கி
விரைதெண்‌ டிரைநீர்க்‌ கடன்முகட்டின்‌
விண்ணோ ரமுதங்‌ கடைந்தவந்நாள்‌
அடருங்‌ கிரணக்‌ கவுத்துவமும்‌
அருமைத்‌ திருவுந்‌ தடமார்புக்‌
கமைத்துத்‌ திருப்பா லாழியினும்‌
அரங்கத்‌ தினுங்கண்‌ டுயில்பெறுங்‌
குடவால்‌ வளைசூ லுசைந்துசெந்தேன்‌
கொழிக்கும்‌ பொலன்றா மரைப்பொகுட்டிற்‌
குளிர்முத்‌ துயிர்ப்பக்‌ கருவென்னக்‌
கொணர்ந்தஞ்‌ சிறைய விளம்பேட்டு
மடநா ரைகள்கூண்‌ டடைசெறிக்கும்‌
வளஞ்சேர்‌ நாடா! தாலேலோ
மகரக்‌ குழையே! நூற்றெண்மர்‌
வாழ்வே! தாலோ தாலேலோ.--34-

விடம்‌ வாள்‌ அரவும்‌ கயிறு சுற்றி . விஷத்தைக்‌கொண்ட கொடிய வாசுகி யென்னும்‌ பாம்பைக்‌ கடைகயிருகச்‌சுற்றி,
வெற்பில்‌ பிணித்து – மந்தரமலையில்‌ (அதனை மத்தாகக்‌கொண்டு) பூட்டி,
இறுக்கி விசித்து – நெருக்கியிழுத்து,
விண்‌ணோர்‌ – தேவர்கள்‌,
விரை தெண்‌ திரை நீர்க்‌ கடல்‌ முகட்டில்‌ -(கொந்தளித்து) விரைகின்ற தெள்ளிய அலைகளையுடைய கடலின்‌ மேலிடத்து,
அமுதம்‌ கடைந்த அந்நாள்‌ – அமுதமெழும்படிகடைந்த அக்காலத்து,
அடரும்‌ கிரணம்‌ கவுத்துவமும்‌ – செறிந்த ஒளிக்கற்றைகளைக்‌ கொண்ட கெளஸ்துப மணியையும்‌,
அருமைத்‌திருவும்‌ – (பெறுதற்கு) அரிய இலக்குமியையும்‌,
தட மார்புக்கு அமைத்து – விசாலமான மார்பினுக்கு அணியாக வைத்து,
திருப்‌ பாலாழியினும்‌ அரங்கத்தினும்‌ கண்‌ துயில்‌ பெறும்‌ -திருப்பாற்‌கடலிலும்‌ திருவரங்கத்திலும்‌ யோகநித்திரை செய்கின்ற, (
நாடா |என மேலியைத்துப்‌ பொருள்கொள்ள வேணும்‌.). (இனி),
குட வால்‌வளை – குடம்போல்‌ சுழிந்த வாலினைக்கொண்ட சங்குப்பூச்சிகள்‌,

சூல்‌உளைந்து – கருக்கொண்டு வருந்தி,
செந்தேன்‌ கொழிக்கும்‌பொலன்‌ தாமரைப்‌ யபோகுட்டில்‌ – நல்லதேனைப்‌ பெருக்குகின்ற அழகிய தாமரைக்கொட்டையில்‌,
குளிர்‌ முத்து உயிர்ப்ப – குளிர்ச்சிபொருந்திய முத்துக்களை யீன, (அவற்றை)
அம்‌ சிறைய இளம்‌பேட்டு மட நாரைகள்‌ – அழகிய சிறகுகளைக்கொண்ட இளையமென்மை பொருந்திய பெண்நாரைகள்‌,
கரு என்னக்கொணர்ந்து -(தமது) கருமுட்டைகள்‌ என எண்ணிக்‌ கொண்டுவந்து,
கூண்டுஅடை செறிக்கும்‌ . தமதுகூடுகளில்‌ அடைகாக்கும்படியான,
வளம்‌சேர்‌ நாடா – வளப்பமுடைய பாண்டி நாட்டுக்குத்‌ தலைவனே
தாலேலோ–; மகரக்குழையே — [,நுற்றெண்மர்‌ வாழ்வே !–,
தாலோ தாலேலோ–;

*பாலாழி நீகிடக்‌கும்‌ பண்பையாம்‌ கேட்டேயும்‌ காலாழும்‌:’ என்றார்‌ நம்மாழ்வார்‌.

———

சப்பாணிப்‌ பருவம்‌

அரமகளிர்‌ தங்கழுத்‌ தணியுநா ணகலாமல்‌
ஐ.ந்தரு வடிக்கொடாமல்‌
அயிரா பதப்பெரும்‌ பகடொளித்‌ தோடிநீள்‌
அலைகடற்‌ புக்கிடாமல்‌
திரளவடி கொண்டதெள்‌ எளமுதமது கொள்ளா
போய்த்‌
தேவர்கள்‌ நடுக்குறாமல்‌
தேவேந்தி ரனுக்கரசு மகுடபங்‌ கம்வந்து
சிறைச்சாலை யுட்புகாமற்‌
கரதூற டணனிறிரி சிரர்நிகும்‌ பன்கும்ப
கன்னனிந்‌ திரசித்து
கலங்காத ராவணன்‌ மடியலங்‌ காபுரங்‌
கனல்கொளுந்‌் தப்பெருவிரற்‌
சரடுபூட்‌ டிச்சிலைக்‌ கடைகுழைக்‌ குங்கொண்டல்‌!
சப்பாணி. கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌!
சப்பாணி கொட்டியருளே.–35-

அரமகளிர்‌ – தேவமாதர்கள்‌,
தம்‌ கழுத்து அணியும்‌ நாண்‌: – தங்களது கழுத்துகளில்‌ பூண்டுள்ள மங்கலநாண்‌,
அகலா மல்‌ – நீங்காதபடியும்‌ ;
ஐந்‌ தரு அடிக்கொடாமல்‌ – பஞ்சுதருக்களும்‌
வேரொடு சாயாதபடியும்‌ ;
அயராப தம்‌ பெரும்‌ பகடு – பெரிய ஐராவ தமென்னும்‌ யானை,
ஒளித்து ஓடி – மறையவோடி,
நீள்‌ அலைகடல்‌ புக்கிடாமல்‌ – நீண்ட அலைகளையுடைய பாற்கடலில்‌ புகுத்திடாத படியும்‌ ;
திரள வடிகொண்ட தெள்‌ அமுதம்‌ அது .. நன்கு திரளும்‌ படி. வடிக்கட்டிய தெளிந்த தேவாமிர்தமானது,
கொள்ளை போய்‌ . கொள்ளையடிக்கப்பட்டு,
தேவர்கள்‌ தடுக்குறாமல்‌ – தேவர்கள்‌ பயப்‌ படாமலிருக்கும்படியும்‌ ;
தேவேந்திரனுக்கு –, அரசு மகுட பங்கம்‌ வந்து – அரசுக்குரிய கிரீடத்திற்குக்கேடு விளைந்து, (சிறைபிடிக்கப்‌ பட்டு)
சிறைச்சாலையுள்‌ புகாமல்‌ – சிறைச்சாலையுள்‌ செல்லாதபடியும்‌;
(ராவணன்‌ மடிய சிலைக்கடைக்‌ குழைக்கும்‌ கொண்டல்‌! எனமேலியைத்துப்‌ பொருள்‌ கொள்ளவேணும்‌)
இனி- கரன்‌ தூடணன்‌திரிசிரர்‌ நிகும்பன்‌ ரும்பகன்னன்‌ இந்திரசித்து கலங்காத ராவணன்‌–, (இவர்கள்‌ )
மடிய – இறந்துபோக,
லங்காபுரம்‌ கனல்‌ கொளுந்த -இலங்கை நகரம்‌ அனல்பற்றியழிய,
பெருவிரல்‌ சரடு பூட்டி – பெருவிரலினைக்கொண்டு (வில்லின்‌) நாணினைப்பூட்டி,
சிலைக்கடைகுழைக்கும்‌ . வில்லினை நன்கு வளையச்‌ செய்துவிடும்‌,
கொண்டல்‌ -மேகமே :
சப்பாணி கொட்டியருள்‌ – ஒரு கையுடனே மற்றொரு கை
யைச்சேர்த்துத்‌ தட்டுவாயாக ;
சந்தனச்சோலை செறி தென்‌ திருப்‌ பேரைமுகில்‌ . சந்தனமரங்களைக்கொண்ட பொழில்கள்‌ அடர்ந்த
தென்திருப்பேரையில்‌ தங்கியிருக்கும்‌ மேகமே !
சப்பாணி கொட்டியருள்‌ –;

தென்‌ திருப்பேரை முகில்‌ என்றது – அத்தலத்துத்‌ திருமாலின்பெயர்களுள்‌-நிகரில்‌ முகில்வண்ணன்‌ என்பதும்‌ பிரசித்தமானதொன்றாகும்‌.

மேலும்‌ கீழும்‌ பாட்டுக்களில்‌ – புயலே , முகிலே, மேகமே, மழையே, காளமேகமே, கரியமேகவண்ணனே முதலாக விளி
அடிக்கடி யமைத்திருப்பதும்‌ இதுபற்றியென்பது அறிக].

———-

அமரர்கின்‌ னரர்முனிவர்‌ கிம்புருட ரும்பரவும்‌
அயிரா பதப்பாகனும்‌
அம்பரத்‌ திடையுலவு கங்கைப்‌ பெரும்பாவு
அலையெறநிய விட்டசடிலத்‌
துமையையொரு பங்குடைக்‌ கடவுளுந்‌ தொழுதுளம்‌
உவப்பவம ராடுசுடர்‌ வேல்‌
ஊறுபடு நயனப்‌ படீரகுங்‌ குமமுலைக்‌
கொல்குமொரு நுண்மருங்குற்‌
குமுதவாய்‌ மடமங்கை தேவகிக்‌ குள்ளங்‌
குழைந்துகண்‌: களிகூரவே
கோசலைக்‌ கினியகைக்‌ கோமளக்‌ குழவியே /
கோதிலா மழைவள்ளலே /
தமரவரி வண்டடை கிடந்தமுள ரிக்கைகொடு
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்நிருப்‌ பேரைமுகில்‌ !
சப்பாணி கொட்டியருளே.--36-

அமரர்‌ . தேவர்கள்‌,
கின்னரர்‌ – கின்னரசாதியினர்‌,முனிவர்‌ .. இருடிகள்‌,
கிம்புருடரும்‌ – கிம்புருடர்களும்‌,
பரவும்‌ – ஸ்துதிக்கின்ற ,
அயிராபதப்பாகனும்‌ – தேவேந்திரனும்‌,
அம்பரத்திடை -ஆகாசத்திலே,
உலவு – ஓடுகின்ற,
கங்கை – கங்கையாற்றினது[ஆகாசகங்கையினது],
பெரும்‌ பாவு அலை எறிய விட்ட – பெரிதும்‌ பரவிவருகின்ற அலையை; [த்தன்சிரசில்‌] வீசும்படி விட்டுக்‌,
கொண்ட, சடிலத்து [ க்கடவுளும்‌] – ஜடாபாரத்தையுடைய இறைவனும்‌,
உமையை ஒரு பங்கு உடை கடவுளும்‌ – உமாதேவியை வாம பாகத்தில்‌ உடையவனாகிய இறைவனும்‌ [ஆகிய]சிவபெருமானும்‌;
தொழுது உளம்‌ உவப்ப – வணங்கி மனங்களிக்கும்படி உள்ள,
கோதிலா $மழை வள்ளலே ! — மொய்த்தலில்லாதமழைபோன்ற வண்மையுடைய திருமாலே !
அமர்‌ ஆடு ௬டர்வேல்‌ ஊறுபடு நயனம்‌ – போரில்‌ பயன்படுகின்ற ஒளிரும்‌ வேலாயுதமும்‌ புண்பட்டு வருந்தும்படியுள்ள கண்களையும்‌,
படீரம்‌ குங்கும முலைக்கு ஒல்கும்‌ – சிவப்புநிறம்பொருந்திய குங்குமக்குழம்பு பூசப்பட்ட கொங்கைகளின்‌பாரத்தைத்‌ தாங்கமாட்டாது
நுடங்கியசைகின்ற ஒரு நுண்‌மருங்குல்‌ – நுண்ணியதோர்‌ இடையினையும்‌,
குமுத வாய்‌ – ஆம்பல்‌போல்‌ குளிர்ந்த வாயினையும்‌ உடைய,
மடமங்கை தேவகிக்கு -மென்மை பொருந்திய தேவகிப்‌ பிராட்டிக்கு,
உள்ளம்‌ குழைந்துட கண்‌ களி கூர – மனம்நெகிழ்ந்து இருகண்களும்‌ கண்டு மகிழும்‌படி, (சேஷ்டிதங்கள்‌ செய்த)
கோதிலா மழை வள்ளலே!–,
(மேலும்‌) கோசலைக்கு இனிய கைக்கோமளக்‌ குழவியே ! .கெளசல்‌யாதேவிக்கு இனிய அழகு பொருந்திய கைக்குழந்தையாயிருப்‌பவனே ! (இராமபிரானே 1)
தமரம்‌ வரி வண்டு – ஒலிக்கின்ற கோடுகளையுடைய கைவயல்கள்‌,
அடைகிடந்த – செறிய இடப்பட்டுள்ள,
முளிரிக்‌ கைகொடு -தாமரைப்‌ பூப்‌ போல்‌ மெல்லிய கைகளைக்‌ கொண்டு,
சப்பாணிகொட்டியருள்‌ –;
சந்தனச்‌ சோலை செறி தென்திருப்பேரை முகில்‌ ! –, சப்பாணி கொட்டியருள்‌ –

———

வேதங்க ளோடைந்து பூதங்க ளுமயன்‌
விதிக்கின்ற பல்லுயிர்களும்‌
மிக்கவைம்‌ பொறிகளு மெட்டெழுத்துநின்று
விளையாடு மொருகுழவியே!
ஏதங்க ௯ரந்தடிய ரிருவினை தணந்துபே
ரின்பத்‌ திருத்துமொளியே!
இலகு௬டர்‌ வேல்விழி துரோபதை தனைச்சிறிதும்‌
எண்ணாது துகிலுரிதரும்‌
போதந்த வேளைவந்‌ துதவுசீ தர! துழாய்‌
பூதரப்‌ புயமுகுந்தா/
பொருவரிய வண்டகோ எளகைமுகடு கீறியப்‌
பொன்னுலகு மேவுபாரி
சாதங்‌ கொணர்ந்தருட்‌ பின்னைக்‌ களித்தவன்‌ /
சப்பாணி கொட்டியருளே |
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌!
சப்பாணி கொட்டியருளே.–37-

வேதங்களோடு – நான்கு வேதங்களோடு,
ஐந்து பூதங்‌ களும்‌ – பஞ்சபூதங்களும்‌,
அயன்‌ – பிரமதேவன்‌,
விதிக்கின்ற – படைக்கின்ற,
பல்‌ உயிர்களும்‌ . பல ஜீவராசிகளும்‌,
மிக்க ஐம்பொறிகளும்‌ – (அடக்கமுடியாது) மிகுந்த பஞ்சேந்திரியங்களும்‌,
எட்டு எழுத்து நின்று – அஷ்டாக்ஷர மகாமந்திரமாகிய ‘*ஓம்‌ நமோ நாராயணாய* என்றதில்‌ நிலைத்து நிற்கும்படிசெய்து,
விளையாடும்‌ – (இந்த லீலா விபூதியிலே) விளையாடுகின்ற,
ஒரு குழவியே / – ஒப்பற்ற குழந்தைவடிவினனே !
அடியர்‌ – (தனது) பக்தர்களின்‌,
ஏதம்‌ களைந்து – துன்பங்களை நீக்கி,
இருவினை தணந்து … (அவர்களது) நல்வினை தீவினைகளையும்‌ நீக்கி,
பேரின்பத்து இருத்தும்‌ – ஆனந்தமய மாகிய மோட்சத்திலே நிலைபெறவைக்கும்‌,
ஒளியே ! – பிரகாசமானவனே !

இலகு ௬டர்‌ வேல்விழி துரோபதை தனை -விளங்கியொளிரும்‌ வேலாயுதம்போன்ற கண்களையுடைய திரெளபதியை,
சிறிதும்‌ எண்‌ ணாது – இறையேனும்‌ மைத்துனியாயிற்றே என்று உறவுமுறையும்‌ பாராதே,
துகிலுரிதரும்‌ போது – (பாவி துச்சாதனன்‌) ஆடையைக்‌ களைந்தபோது,
அந்த வேளை வந்து உதவும்‌ சீதர [| – அந்தச்சமயத்‌திலே (தோன்றாத்துணையாக) வந்து ஆடைவளரும்படி உதவிசெய்த சீதரனே !
துழாய்‌ -திருத்துழாய்‌ மாலையை,
பூதரப்‌புயம்‌.மலைபோன்ற தோள்களிலே
தரித்திருக்கும்‌, முகுந்தா ! – முகுந்தனே !
பொருவு அரிய – ஒப்பற்ற
அண்டகோளகை முகடு கீறி – ஆகாயமேல்வட்டத்தின்‌ உச்சியைப்பிளந்து,
௮ பொன்‌ உலகு மேவு – அந்த இந்திரலோகத்து இருந்த,
பாரிசாதம்‌ கொணர்ந்து – பாரிஜாத தருவை எடுத்து வந்து,
அருள்‌ – கருணையோடு,
பின்வனைக்கு அளித்தவன்‌ ! – சத்தியபாமைக்குக்‌ கொடுத்தவனே !
சப்‌பாணி கொட்டியருள்‌–; சந்தனச்சோலைசெறி தென்திருப்பேரை முகில்‌!–, சப்பாணி கொட்டியருள்‌–

———-

அடங்காத வெழுபது வெள்ளஞ்சே னையுங்கை
அமைக்கும்‌ படைத்தலைவரும்‌
அநுமன்‌ முதலாய சுக்கிரீப ஸுஞ்சென்றுகடல்‌
அணைகட்டி லங்காபுரந்‌
தொடர்ந்தேறி யொருசிலைக்‌ கடைகுழைத்‌ தடுகணை
துரந்திரா வணன்‌ மகுடமுந்‌
துகள்படுத்‌ திச்சனகி சிறைமீட்ட தண்ணந்‌
துழாய்க்காள மேகம்்‌/கொ௫ு .,
விடந்தாவு பஃறலைக்‌ கட்செவி கிடந்தாட
விரிதிரைக்‌ கங்கையாட
வேணியா டக்காளி தன்னுடன்‌ வாதாடும்‌
வெள்ளிப்‌ பொருப்பன்னபா ந்தள்‌
தடத்தாரு வேரோடு புறந்தாளக்‌ கொணர்ந்தமால்‌!
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌!
சப்பாணி கொட்டியருளே.–38-

அடங்காத எழுபது வெள்ளம்‌ சேனையும்‌ – அடக்க
முடியாது கிளர்ந்தெழும்‌ எழுபது வெள்ளம்‌ வாநர சேனையும்‌,
கை அமைக்கும்‌ படைத்‌ தலைவரும்‌ – கையைச்சைகை காட்டி (அவற்றை)அடக்கியாளும்‌ சேனைத்தலைவர்களும்‌,
அனுமன்‌ முதலாய சுக்கிரீபனும்‌ சென்று – அனுமனையுள்ளிட்ட சுக்கிரீவமகாராஜனும்‌ போய்‌,

கடல்‌ அணை கட்டி – சமுத்திரத்தில்‌ சேதுபந்தனஞ்செய்து,
லங்காபுரம்‌ தொடர்ந்து ஏறி . இலங்கை நகருக்குள்‌ வரிசையாக ஏறிச்‌ சென்று, (இராமபிரான்‌ )
ஒரு சிலை கடை குழைத்து – ஒப்பற்ற (தன்‌)வில்லை நன்குவளைத்து,
அடுகண துரந்து – கொல்லும்‌ பிரமாத்‌ கதிரத்தைத்‌ தொடுத்து,
இராவணன்‌ மகுடமும்‌ துகள்படுத்தி இராவணனுடைய கிரீடத்தையும்‌ தூளாக்கி,
சனகி சிறை மீட்ட -ஜானகிப்‌ பிராட்டியைச்‌ சிறையினின்று விடுவித்து மீட்டுவந்த,
தண்‌ அம்‌ துழாய்க்‌ காளமேகம்‌ – குளிர்ச்சி பொருந்திய அழகிய திருத்‌துழாய் மாலையைத் தரித்த கரியமேகம்‌ போன்றவனே !
கொடு விடம்தாவு – கொடிய விஷம்‌ கக்குகின்ற
பல்தலைக்‌ கட்செவி – பல தலைகளையுடைய பாம்புகள்‌,
கிடந்து ஆட -திருமேனியில்‌ தங்கியிருந்து ஆடவும்‌,
விரிதிரைக்‌ கங்கை ஆட – பரந்த அலைகளயுடைய கங்காநதி ஆடவும்‌,
வேணி ஆட. (கமர்த்தம்‌என்னும்‌) சடாபாரம்‌ ஆடவும்‌,
(அப்போது) காளிதன்னுடன்‌வாதாடும்‌ . (சிவனுக்கு எதிராகப்‌ போட்டியிட்டு நடனமாடும்‌) காளிதேவியோடு வாதிடுகின்ற,
வெள்ளிப்‌ பொருப்பன்ன பாந்தள்‌.-கைலாய மலையைப் போன்ற (சிவனது) பாம்பு,
தட தாரு- பெரியமரத்தை,
வேரோடு – அடியிலுள்ள வேருடனே,
புறம்‌ தாள.(தரையினின்று பெயர்த்து) முதுகிலே பொறுத்து வர
(அதனைக்‌)கொணர்ந்த மால்‌ !- கொண்டுவந்த திருமாலே !
சப்பாணி கொட்டி.யருள்‌ –; சந்தனச்‌ சோலை செறி தென்திருப்பேரை முகில்‌– | சப்‌பாணி கொட்டியருள்‌ —

———

மண்டுதிரை யெறிமகர சலராசி யேழுநெடு
வரையேழு மகிலமேழும்‌
வானகமு முயர்திசையும்‌ வயிறடங்‌ கப்பவள
வாய்மடுத்‌ தங்காந்துமுன்‌
உண்டுமிழு நீனிறக்‌ குழவி ! நெடு வாலிமார்‌
புருவவொரு சரம்விடுக்கும்‌ ஒண்டிறச்‌ செங்கைத்‌ தடங்குரிசில்‌ ! வேதாந்த
உபநிடத ஞானதிீபம்‌ !
புண்டரிக மலர்முகை முறுக்கவிழு மோடையிற்
புக்கிடங்‌ கர்க்குவெருவிப்‌
போரான்‌ மூலமென்‌ றோதாமுன்‌ னோடியொரு
புள்ளரசு மீதுவருபைந்‌
– தண்டுழாய்‌ புனகொண்ட லண்டரீநா யகனினிது
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌ !
சப்பாணி கொட்டியருளே.–39-

மண்டு திரை எறி – நெருங்கி வருகின்ற அலைகள்‌ வீசுகின்ற,
மகர சல ராசி ஏழும்‌ – மீன்களைக்‌ கொண்ட கடல்கள் ஏழும்
நெடுவரை ஏழும்‌ . பெரிய மலைகளேழும்‌,
அகிலம்‌ ஏழும்‌;புவனங்களேழும்‌,
வானகமும்‌ – ஆகாசத்தினிடமும்‌,
உயர்‌ திசையும்‌ -உயர்ந்த அட்டதிக்குக்களும்‌,
வயிறு அடங்க .. தன்‌ வயிற்றிலே(மகாபிரளயத்தின்போது) அடங்கும்படி,
பவளவாய்‌ மடுத்து –பவளம்போற்‌ சிவந்த வாயினிலிட்டு,
அங்காந்து – வாய்திறந்து,
முன்‌ உண்டு – முன்னர்‌ புசித்து,
உமிழும்‌ . (பின்னர்‌) உமிழ்ந்த
நீல்‌ நிறக்‌ குழவி ! – கருநிறம்‌ பொருந்திய குழந்தையே !

தெடு வாலி மார்பு உருவ- பெரிய வாலியினுடைய மார்பு ஊடுருவும்படி,
ஒரு சரம்‌ விடுக்கும்‌ – ஒப்பற்ற (இராம) பாணத்தை விடும்‌,
ஒண் திறம்‌ செங்கைத் தடம்‌ – மிக்க சாமர்த்தியம்‌ பொருந்திய சிவந்த கைகளை யுடைய,
குரிசில்‌ !- சிறந்தோனே !
வேதாந்த உப நிடத ஞான தீபம்‌ – வேதாந்தங்களாகிய உபநிடதங்களாலே பிரதி பாதிக்கப்பட்ட ஞானவொளி விளக்கே !
புண்டரிகம்‌ மலர்‌ முகை- தாமரையாகிய பூவின்‌ அரும்பு,
முறுக்கு அவிழும்‌ – தன்கட்டவிழ்ந்து மலரும்‌
ஓடையில்‌ புக்கு, -தடாகத்தில்‌ புகுந்து இறங்கி,
இடங்கர்க்கு வெருவி – (ஆங்கிருந்த) முதலைக்குப்‌ பயந்து,
போரானை – (அதனோடு போராடும்‌) கஜேந்திரனாகிய யானை,
மூலம்‌ என்று ஒதா முன்‌-ஆதி மூலமே யென்று கதறி ஓலமிட்டவுடனே,
ஒரு புள்‌ அரசு மீது ஓடிவரு – ஒப்பற்ற ௧ருடனின்‌ மேலேறி ஓடி வந்த,
பைந்தண்‌ துழாய்‌ புனை கொண்டல்‌ ! .பசிய குளிர்ந்த திருத்துழாய்‌ மாலையை யணிந்த மேகமே !
அண்டர்‌ நாயகன்‌ – தேவர்களின்‌ தலைவனே !
இனிது-இனிமைபட,
சப்பாணி கொட்டியருள்‌ –;
சந்தனச் சோலை செறி தென்‌ திருப்பேரை முகில்‌–! ,
சப்பாணி கொட்டியருள்‌ –

ஏழு கடல்கள்‌ – உவர்நீர்‌, கருப்பஞ்சாறு, கள்‌, நெய்‌, தயிர்‌, பால்‌,நன்னீர்‌ என இவற்றின்‌ மயமானவை.

வரை ஏழு .. கைலை, இமயம்‌, மந்தரம்‌, விந்தம்‌, நிடதம்‌, ஏமகூடம்‌, நீலகிரி என்பன.

அகிலம்‌ ஏழு – ஜம்பூ, பிலட்சம்‌, குசம்‌, கிரெளஞ்சம்‌, சாகம்‌, சால்மலி, புஷ்கரம்‌ என்னும்‌ ஏழுதீவுகளாகவுள்ளவை.

———

வண்ணந்‌ தளைந்தகட லுலகமுழு தும்பரதன்‌
மணிமுடி கவிப்பநீவெவ்‌
– வனமேகெ ஸனுஞ்சிறியதாய்சொற்‌ றலைக்கொண்டு
மணிநெடுஞ்‌ சீரைசுற்றிப்‌
பெண்ணென்ற சீதையொடு மிகாயவன்‌ றன்னொடும்‌
பெருங்கான கத்திற்புகும்‌
பெம்மா னறுந்துளவ மாலிகா பரணன்முது
பேரின்ப வீடளிக்குங்‌
கண்ணன்‌ சிலைக்கடை குழைத்திலங்‌ காபுரங்‌
கட்டழிக்‌ குந்தேவர்கோன்‌
கருணைப்‌ பெருக்கா றுவட்டெடுத்‌ தலைமண்டு
காளமே கந்துளிபடுந்
தண்ணந்‌ தடந்திரைப்‌ பொருநையந்‌ தண்டுறைவ !
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌ !
சப்பாணி கொட்டியருளே.--40-

வள்‌ நந்து அளைந்த – வளப்பம்‌ பொருந்திய
சங்குப்பூச்சிகள்‌ துழாவுகின்ற
கடல்‌ உலக முழுவதும்‌ – கடல்‌ சூழ்ந்த நிலவுலக முழுவதையும்‌,
பரதன்‌ மணிமுடி கவிப்ப – (என்‌)மகன்‌ பரதன்‌ இரத்தினங்கள்‌ பதித்த கிரீடத்தைச்‌ சூடிட,
நீ -(இராமனாகிய) நீ,
வெவ்‌ வனம்‌ ஏகு- கொடிய கானகம்‌ செல்‌வாய்‌?” எனும்‌ – என்று ஆணையிட்ட,
சிறிய தாய்‌ சொல்‌ தலைக்‌கொண்டு – சிற்றன்னை கைகேயின்‌ சொற்களைச்‌ சிரசாவஹித்து,
மணி நெடும்‌ சீரை சுற்றி – அழகிய பெரிய மரவுரியை இடுப்பில்‌ கட்டி,
பெண்ணென்ற சீதையொடும்‌ – பெண்மைக்குரிய குணங்க ளோடு கூடிய சீதையாகிய மனைவியோடும்‌,
இளையவன்‌ தன்‌னொடும்‌ – தம்பியாகிய இலக்குவணோடும்‌,
பெரும்‌ கானத்தில்‌ புகும்‌ -பெரிய காட்டினுள்‌ (நடந்து) செல்லும்‌,
பெம்மான்‌ – பெருமானும்‌,
துளவ மாலிக ஆபரணன்‌ – திருத்துழாய்‌ மாலையை அணியாகக்‌ கொண்டவனும்‌,
முது பேரின்ப வீடு அளிக்கும்‌ கண்ணன்‌ பழயதாகி வரும்‌ பேரின்பந்தரும்‌ மோட்சத்தைக்‌ கொடுக்கும்‌கண் போலினியவனும்‌,
சிலைக்‌ கடை குழைத்து – (தனது) வில்லின்‌ முனைகளைச்‌ சேர்த்து வளைத்து,
லங்காபுரம்‌ கட்டவிழ்க்கும்‌ தேவர்‌கோன்‌ – பகைவனான [இராவணனின்‌] இலங்காநகரினைச்‌ சிதைத்‌ தொழிக்கும்‌ தெய்வத் தலைவனும்‌,
கருணைப்‌ பெருக்காறு உவட்டு எடுத்து . தயையாகிய பேராறு வெள்ளமிட்டு,
அலை மண்டு காளமேகம்‌ – ‘கருணாகாகுஸ்த:”-என்னும்படி

——–

உடுக்குந்‌ திரைக்கருங்‌ கடலாடை நிலவலயம்‌
உதரத்தி னுள்ளடக்கி
ஒருசிறிய குறளுருவ மைந்தநெடு நேமிமால்‌”
உபயசர ணாரைவிந்தத்‌
தெடுக்கும்‌ பனிக்குறுந்‌ திவலைபடு மலரிட்‌
டிறைஞ்சிவரு ணன்பரவுவோன்‌
இசைபாடி யொருகோடி யறுகாலு தைந்தாடும்‌
ஈர்ந்துழாய்ப்‌ படலைமாயன்‌
மடுக்குங்‌ கொழுஞ்சுடர்ப்‌ பரிதிவா னவனுதய
வரைபசும்‌ புரவிபூட்டி
வருமணிப்‌ பொற்றடந்‌ தேருக்கி டுஞ்சித்திர
வட்டாழி யெட்டிமுட்டித்‌
தடுக்கும்‌ பொலம்புரிசை சூழ்வழுதி நாட / னெரு
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமூகில்‌ !
சப்பாணி கொட்டியருளே, அலைவீசும்‌ கரிய மேகம்‌ போன்றவனும்‌,
[ஆகிய] துளிபடும்‌ – மழை துளித்தலால்‌ தோன்றும்‌,
தண்‌ ௮ம்‌ தடந்‌ திரைப்‌ பொருநை . குளிர்ந்த அழகிய பெரிய அலைகளைக்‌ கொண்ட தாமிரபரணி ததியின்‌,
அம்‌ தண்‌ துறைவ ! – அழகிய குளிர்ச்சி பொருந்‌திய நீர்த்துறைகளுக்கு உரியவனே |!
சப்பாணி கொட்டியருள்‌ –; சந்தனச்‌ சோலை செறி தென்திருப்பேரை முகில்‌ ! — , சப்பாணிகொட்டியருள்‌–;–41-

திரைக்‌ கருங்கடல்‌ ஆடை. உடுக்கும்‌ . அலைகளையுடைய
கரியகடலை ஆடையாகச்‌ சுற்றியுடுக்கும்‌,
நிலவலயம்‌ – நிலவுலகத்தை,
உதரத்தினுள்‌ அடக்கி – வயிற்றினுள்‌ அடங்க வைத்து,
ஒரு சிறிய குறளுரு அமைந்த – ஒருசிறிய குள்ள உருவம்‌ (வாமனாய்‌) எடுத்த.

நேமி நெடு மால்‌ – சக்கரப்படையேந்தி திரிவிக்கிரமனாக வளர்ந்த திருமாலின்‌,
உபய சரண அரவிந்தத்து – இரண்டு பாததாமரை களில்‌,

எடுக்கும்‌ – பறித்தெடுக்கும்‌,
பனி குறுந்‌ திவலைபடு மலர்‌ இட்டு – குளிர்ந்த சிறிய பனித்துளி பட்டுள்ள பூவினையிட்டு
அருச்சித்து, வணங்கி-இறைஞ்சி,
வருணன்‌ – வருண பகவானால்‌,
பரவுவோன்‌ -தொழப்பட்டுத்துதிக்கப்படுவோனும்‌,
ஒரு கோடி அறுகால்‌-ஒருகோடி வண்டுகள்‌,
இசைபாடி, உதைநீது ஆடும்‌ – ரீங்காரம்‌ செய்து கால்‌
களால்‌ துவைத்து அசைகின்ற,
ஈர்ந்துழாய்‌ படலை மாயன்‌ – ஈரமா யுள்ள (குளிர்ந்த) திருத் துழாைய் மாலையை யுடைய மாயனும்‌, (ஆகிய)

கொழும்‌ சுடர்‌ மடுக்கும்‌ பரிதி வானன்‌ – பரவிய ஒளியை மிகுவிக்‌கும்‌ சூரியனாகிய தேவன்‌,
பசும்‌ புரவி பூட்டி – பச்சைக்குதிரைகள்‌ (ஏழினைப்‌) பூட்டி,
உதய வரை .. உதயகிரியிலே,
வரு – வருகின்ற
மணி பொன்‌ தட தேருக்கு -அழகிய பொன்போல்‌ ஒளிர்கின்ற பெரிய தேரினுக்கு,
இடும்‌ சித்திர வட்டாழி – மாட்டியுள்ள வேலைப்பாடு அமைந்த வட்டமாகிய சக்கரங்கள்‌,
எட்டி – தமக்கு எட்டி,
முட்டி -(தம்மோடு) மோதி
(அதனால்‌) தடுக்கும்‌ – தடைப்பட்டுப்போகும்‌,
பொலம்‌ புரிசை சூழ்‌ – பொலிவு பெற்ற (உயர்ந்த) மதில்கள்‌ சூழ்ந்த.
வழுதி நாடன்‌ ..்‌் பாண்டிய நாட்டுக்கு உரியவனே !
ஒரு சப்பாணி கொட்டியருள்‌–; சந்தனச்‌ சோலை செறி தென்‌ திருப்பேரைமுகில்‌ சப்பாணி கொட்டியருள்‌–

——–

மானவே லரசர்தொழு. மிதிலா புரிச்சனகன்‌
மாதேவி மணிமுன் கைமேல்‌
வைத்துமுத்‌ தாடும்‌ பசுங்கிளி யெனத்தூம
மஞ்சனஞ்‌ செய்துசெம்பொன்‌
மேனிமுழு வதுநலங்‌ கிடுசெய்து கொங்கைக்கு
மென்களப மனள்ளவியப்பி
விரைநறுந்‌ தார்குழலின்‌ மீதணிந்‌ :தஞ்சனம்‌
விளங்குகட்‌ கடையினெழுகிக்‌
கூனிளம்‌ பிறைநுதற்‌ கத்தூரி தீட்டிதற்‌
குளிர்மணிச்‌ சுடிகைநாற்றிக்‌
கோலவளை திருத்திமணி மேகலை மருங்கினிற்‌
கொய்துகோ தினிதுடுக்குஞ்‌
சானகி பெருங்காம வெள்ளத்‌ திளைத்தவன்‌
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌ !
சப்பாணி கொட்டியருளே.–42-

மானம்‌ வேல்‌ அரசர்‌ தொழும்‌ – பெருமை பொருந்திய
வேலாயுதத்தையேந்திய அரசர்கள்‌ வணங்கும்‌,
மிதிலாபுரிச் சனகன்‌ -மிதிலைநகர்க்குப்‌ பேரரசனாகிய சனகமகாராசனுடைய,
மா தேவி -முதற்‌ பட்டமஹிஷி,
மணி முன்கை மேல்‌ வைத்து- (தனது) அழகிய
முன்னங்கையின்‌ மேலே தூக்கிவைத்துகொண்டு,
முத்தாடும்‌பசுங்கிளி – முத்தங்கொடுத்துக்‌ கொஞ்சும்‌ பச்சைக் கிளியாவள்‌ என்று சொல்லும்படி,
தூய மஞ்சனம்‌ செய்து. பரிசுத்தமான நீரிலே ஸ்நானம்‌ செய்வித்து,
செம்‌ பொன்‌ மேனி முழுவதும்‌நலங்கிடு செய்து – சிவந்த பொன்‌ போன்ற உடல்‌ முற்றும்‌ நலங்கு பூசுஞ்‌ சடங்கு செய்து,
கொங்கைக்கு மென்‌ களபம்‌ அள்ளி அப்பி -முலைகளுக்கு மென்மையான சந்தனக்குழம்பை நிறைய யப்பிவைத்து
(தொய்யிலெழுதி) விரை நறும்‌ தார்‌ – மிக்க வாசனை வீசுகின்ற மாலையை,
குழலின்மீது அணிந்து – கூந்தலின்‌ மேல்‌ சூட்டி யணிவித்து,
விளங்கு கண்கடையின்‌ அஞ்சனம்‌ எழுதி – ஒளிர்கின்ற கடைக்கண்களில்‌ மைதீட்டி,
கூன்‌ இளம்‌ பிறை நுதல்‌ கத்தூரி தீட்டி – வளைந்து இளம்பிறை போலிருக்கின்ற நெற்றியில்‌ கஸ்தூரித்‌ திலகம்‌ இட்டு,
நல்‌ குளிர்‌ மணிச்சுடிகை நாற்றி – நல்ல குளிர்ச்சியை யளிக்கின்ற முத்தினாலாகிய சுட்டியைத் தொங்கவிட்டு,
கோலம்‌ வளை திருத்தி-அழகிய வளையல்களைத்திருத்தமுற அணிவித்து,
மருங்‌கினில்‌ – இடுப்பினில்‌,
மணிமேகலை -மணிகள்‌ கோத்த புடைவையை,
கோதி – சிக்கின்றியெடுத்து,
கொய்து – கொசுவி,
இனிது உடுக்கும்‌- அழகுற உடுத்திக்கொண்டிருக்கும்‌,
சானகி – சீதாபிராட்டியுடன்‌,
பெரும்‌ காம வெள்ளம்‌ திளைத்தவன்‌- மிக்க காமவிளையாட்டுப்‌ பெருக்‌ கில்‌ மூழ்கியநுபவித்தவனே !
சப்பாணி கொட்டியருள்‌ —; சந்தனச்சோலை செறி தென்திருப்பேரை முகில்‌ !–, சப்பாணி கொட்டியருள்‌ —

———

கக்கக்‌ கொழுங்குருதி நரிபிடுங்‌ கத்தசை
கவர்ந்துயிர்‌ குடிப்பமறலி
கருநிறத்‌ தாடகையை வதைபடுத்‌ தச்சிலைக்‌
கடைகுழைத்‌ தடுகணைதொடுத்‌
தொக்கிற்‌ பெருந்தவக்‌ கவுசிகன்‌ வேள்வியுஞ்‌
சுருதிநூன்‌ முறைமுடித்துச்‌
சொல்லரிய மிதிலா புரிச்சனகன்‌ விற்கண்ட
துண்டப்‌ படுத்துமெங்கோன்‌!
செக்கச்‌ சிவக்குங்‌ கொழும்பவள வார்கதிர்‌
செஞ்சடா டவிமணிமுடிச்‌
சிவசங்‌ கரக்கடவுள்‌ கண்களி கூரச்‌
சிறந்தருள்‌ புரிந்துசங்கு
சக்கர துணைச்செங்கை யொக்கச்‌ சிவப்பவொரு
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌ !
சப்பாணி கொட்டியருளே.–43-

கொழுங்‌ குருதி கக்க: மிகுதியாக இரத்தம்‌ பீறிட்டுவர,
நரி தசை பிடுங்க – நரிகள்‌ சதையைப்‌ (பற்களால்‌) பிடுங்கியிழுக்க,
மறலி – யமனானவன்‌,
கவர்ந்து உயிர்‌ குடிப்ப . உயிரைப்‌போக்கும்படி,
கருநிற தாடகையை வதைபடுத்த – கருநிறம்‌ பொருந்‌திய தாடகையரக்கியைக்‌ கொன்றொழிக்க,
சிலை கடை குழைத்து -வில்லை முனைசேர வளைத்து,
அடுகணை தொடுத்து – கொல்லும்‌ அம்பினை விடுத்து,
ஒக்கு இல்‌ -, ஒப்பில்லாத
பெருந்தவக்‌ கெளசிகன்‌ வேள்வியும்‌ – பெரிய தவத்தைச்செய்த விசுவாமித்‌ திரனது யாகத்தையும்‌, சுருதி
நூல்முறை – வேத நூலில்‌ கூறியுள்ளபடியே,
முடித்து . நிறைவேறவைத்து, (பின்னர்‌)
சொல்‌லரிய – பேச்சுக்கு நிலமல்லாது சிறப்புற்ற
மிதிலாபுரிச்‌ சனகன்‌ -மிதிலைமா நகரின்‌ மன்னனாகிய ஜனகனின்‌,
வில்‌ கண்ட துண்டப்படுத்‌தும்‌ – சிவதனுசைத்‌ துண்டு துண்டாகச்‌ சிதையும்படி செய்யும்‌,
எம்‌கோன்‌ – எமது தலைவனான இராமபிரானே !.
செக்கச்‌ சிவக்கும்‌ கொழும்‌ பவளம்‌ வார்‌ கதிர்‌ – மிகச்சிவப்பு நிறம் பொருந்திய செழித்த பவளம்போல்‌ நீண்ட ஓளிக் கற்றைகளை யுடைய,
செஞ்சடா அடவி – சிவந்த ஜடாபாரத்‌ தொகுதியை,
மணிமுடி – அழகிய சிரசில்‌கொண்ட,
சிவசங்கரக்‌ கடவுள்‌ – சங்காரக்‌கடவுளாகிய சிவபெருமான்‌,
கண்‌ களி கூர – கண்களும்‌ மகிழ்ச்சி மிகும்படி,
சிறந்து அருள்புரிந்து – சிறப்புறக்‌ கருணைசெய்து,
சங்கு சக்கரம்‌ துணைச்செங்கை – சங்கினையும்‌ சக்கரத்தையும்‌ ஏந்திய இரண்டு செவ்விய கைகளும்‌,
ஓக்கச்‌ சிவப்ப — தம்முள்‌ ஒத்திருக்கும்‌படி சிவக்குமாறு,
ஒரு சப்பாணி கொட்டியருள்‌ — ; சந்தனச்‌ சோலை
செறி தென்திருப்பேரை முகில்‌ ! –, சப்பாணி கொட்டியருள்

ஒருவில்வளைத்துத்‌ தாடகையைக்கொன்று கெளசிகன்‌ வேள்வி முடித்தது மற்றொருவில்வளைத்திறுத்துச்‌ சீதையை மணவேள்வி
செய்து கொண்டது என்க.

————

படநடுங்‌ கக்கண்‌ பிதுங்கப்‌ பணாமுடிப்‌
பஃறலைக்‌ கட்செவியின்மேற்‌
பதறிமுறு கித்திருகி நடனஞ்‌ செயுஞ்சரண
பங்கேரு கக்குழகன் வெவ்‌
விடரகற்‌ றிச்செனன வலையறுத்‌ துத்தொண்டர்‌
ஈடேறி வீடுகுடிபுக்‌
கெக்கால முமர சிருப்பக்‌ கடைக்கண்நோக்‌
கின்னருள்‌ புரிந்தநெடுமால்‌ !
_ மடமயிற்‌ சாயற்‌ பசுங்கிள்ளை யங்குதலை
மணிவல்லி கூரயவல்லி
வளருந்‌ திருப்பேரை வல்லிகுங்‌ குமமிருக
மதசந்த னப்பாளிதத்‌
தடமுலைச்‌ சுவடுபொரு துழுதமணி மார்ப! Deny
சப்பாணி கொட்டியருளே
சந்தனச்‌ சோலைசெறி தென்றிருப்‌ பேரைமுகில்‌ 1
சப்பாணி கொட்டியருளே.--44-

பணுமூடிக்‌ கட்செவியின்‌ மேல்‌ – படங்களையுச்சியிற்‌ கொண்ட காளியனென்னும்‌ பாம்பின்‌ மேல்‌,
படம்‌ நடுங்க .. (அதன்‌)படங்கள்‌ நடுக்க முறும்படியும்‌,
கண்‌ பிதுங்க – கண்கள்‌ வெளிவந்து விடும்படியும்‌,
பதறி – கலங்கச்‌ செய்து,
முறுகி கடுமையான விசையோடு,
திருகி – முறுக்கி,
நடனம்‌ செய்‌. நர்த்தனம்‌ செய்கின்ற,
சரணபங்கேருகம்‌ – திருவடித் தாமரைகளை யுடைய,
குழகன்‌ !-அழகனே
வெவ்‌ இடர்‌ அகற்றி – கொடிய பாபங்களைப்‌ போக்கி,
செனனம்‌ வலை அறுத்து – பிறவியாகிய வலையை யறுத்துப்‌ போக்கி,
தொண்‌டர்‌ – (தனது) அடியவர்கள்‌,
ஈடேறி – (சம்சாரத்திலிருந்து) உய்ந்து தப்பித்து,
வீடு குடி. புக்கு – மோட்சலோகத்தில்‌ சென்று புகுந்து தங்கி,
எக்காலமும்‌ அரசு இருப்ப – எப்போதும்‌”மன்னராய்ச்‌ சுகத்‌தோடு வீற்றிருக்கும்படி,
கடைக்கண்‌ நோக்கு இன்‌ அருள்‌-புரிந்த கடைக் கண் பார்வையினால்‌ இனிய கருணையைச்‌ செய்கின்ற,
நெடுமால்‌ – ஓங்கியதிருமாலே !
மடமயில்‌ சாயல்‌ – மடப்பம்‌ பொருந்திய மயில்‌ போன்ற மென்‌மையினையும்‌,
பசும்‌ கிள்ள அம்‌ குதலை பச்சைக்கிளியின்‌ அழகிய பேச்சினிமையையும்‌ கொண்ட,
மணி வல்லி – மணிக்கொடி போன்றவளும்‌,
தூய வல்லி – பரிசுத்தமான வல்லிக்கொடி போன்‌ றவளும்‌
(ஆகிய), வளரும்‌ திருப்பேரை வல்லி – என்றும்‌ ஓங்கித்‌ திகழும்‌ திருப்பேரைநாச்சியாரின்‌,
குங்குமம்‌ மிருகமதம்‌ சந்தனம்‌ பாளிதம்‌- குங்குமம்‌ கஸ்தூரி சந்தனம்‌ இவற்றைக்‌ குழம்பாகப்‌ பூசி யுள்ள,
தட முலைச்‌ சுவடு – பெரிய முலையின்‌ அடையாளங்கள்‌
(பதியும்படி), பொருது – கலவிப்போர்செய்து,
உழுத – அழுந்த வைத்த,
மணி மார்பன்‌ – அழகிய மார்பை யுடையவனே |
ஒரு சப்‌பாணி கொட்டியருள்‌ — ; சந்தனச்சோலை செறி தென்திருப்பேரைமுகில்‌ ! -, சப்பாணி கொட்டியருள்‌

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குழைக்காதர்‌ சந்தானப்பந்து — ஸ்ரீ ராமையங்கார்‌

November 29, 2023

ஸ்ரீ  ராமையங்கார்‌ அருளியுள்ள இந்தப்‌ பதின்மூன்று செய்யுட்‌ களையும்‌ தினந்தோறும்‌ ஏகாக்ர சித்தத்துடன்‌
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள்‌ பாராயணம்‌ செய்தால்‌ நன்மகவைப்‌ பெற்று இன்புற்று வாழ்வார்கள்‌ என்பது அநுபவசித்தம்‌.

சந்தான மூர்த்தி மகரக்‌ குழையர்‌ தம்‌ மேலடியேன்‌
சந்தானப்‌ பத்துத்‌ தமிழ் மாலை பாடத்‌ தயவருள்வாய்‌
சந்தான மாகுந்‌ தமிழ்ப்பேரை நங்கை தவத்துதித்த
சந்தான மாஞ்சட கோபா மகிழ்மலர்த்‌ தாமத்தனே.–1-

செந்தார்‌ மணிமகிழ்‌ சேர்மணி மார்பன்‌ திருப்புயத்திற்‌
கொந்தாரும்‌ பச்சைத்‌ துழாயணி கேசவ கொண்டல் வண்ண
பிந்தாமல்‌ நான்வந்து பொன்னடி போற்றப்‌ பிரியமுடன்‌
சந்தானந்‌ தா குழைக்‌ காதா தென்‌ பேரைத்‌ தயா நிதியே–2-

முந்தித்த காலம்‌ பொருநாநதியினின்‌ மூழ்கியுமே
வந்தவென் பாவம்‌ தவிர்ந்திலை நீயதை மாற்று கண்டாய்‌
உன்பதி யார்பதம்‌ போற்றுந்‌ தமியன்‌ உளமகிழச்‌
சந்ததி பாக்கியந்‌ தந்தருள்‌ பேரைத்‌ தயா நிதியே,–3-

பாகார்ந்த செந்தமிழ்ப்‌ பாமாலை பாடிய பாவலர்க்குப்‌
போகாத வல்வினை போக்குவித்‌ தாயிந்தப்‌ பூதலத்தில்‌
வாகார்‌ மகரக்‌ குழையாயடியன்‌ மனமகிழச்‌
சாகாத சந்ததி தந்தருள்‌ பேரைத்‌ தயாநிதியே.–4-

கையார வாரி யெடுத்தணைத்‌தே முத்தங்‌ காதலுடன்‌
பொய்யாமல்‌ மைந்தன்‌ அருள்புரிவா யிந்தப்‌ பூதலத்தில்‌
அய்யா மகரக்‌ குழையா அடிமைக்‌ கிரங்கியிப்போ
மெய்யான சந்ததி தாருந்தென்‌பேரையில்‌ வித்தகனே.–5-

கூர்க்காயு மாழிக்‌ கரத்தா யினியுன்‌ குரைகழலே
யார்க்கார மாகத்‌ தொழுமடியேனுக்‌ கருன்புரிவாய்‌
நீர்க்கார மேனி யழகா எனக்கின்று நிச்சயமாய்‌
தீர்க்காயு ஞுள்ள மகன்தாதென்‌ பேரையில்‌ ஸ்ரீதரனே–6-

அத்திர வேல்விழி மின்னார்கள்‌ தந்த விரகத்தினால்‌
தெத்திலும்‌ தீவிழுந்‌ தெரியாமல்‌ உன்தன்‌ திருவுளத்தால்‌
பத்திர மாக அடியேன்‌ தனக்கோர்‌ பலமிகுந்த
புத்திர சம்பத்தை ஈவாய் தென்‌பேரையில்‌ புண்ணியனே.–7-

மீனம்பு நீர்விழி யனார்கள்‌ தந்த விரகத்தினால்‌
ஊனம்‌ படுந்துயர்‌ ஒன்றொழிப்‌பாயுயர்‌ வானறலே
வானம்பு பூமி வளர்பயிர்‌போலுன்‌ மலர்ப்பதத்தை
நான்நம்பி னேன்குழைக்‌ காதாயினியுன்ற னடைக்கலமே.–8-

நத்தூர நேமிக்‌ கரத்தாய்‌இனியுந்தன்‌ நாமத்தைநான்‌
எத்தூரம்‌ போயினும்‌ நான்மற வேனிடை. மாதர்தனில்‌
முத்தூருங்‌ கொங்கைய சோதைப்‌பிராட்டி முகத்திலிட்ட
கத்தூரி நாமத்‌ தழகாதென் பேரையில்‌ காதலனே–9-

மாந்திக்‌ கிடக்கும்‌ அடியேனுடைய மனமகிழ
சாந்தி முனிக்கருள்‌ செய்தது போலத்‌ தயவு செய்து
ஏந்தி மதிக்க விளையாடப்‌பிள்ளை எனக்கருள்வாய்‌
காந்தி மதிக்கு நிகராகியமுகக்‌ காகுத்தனே.–10-

ஒருமைந்‌ தனுக்கு வரம்வேண்டிப்‌ பெற்ற உடையநங்கைக்‌
கருமைந்த னாகி யவதரித்‌ தாயய்யன்‌ ராமனுக்கு
திருமைநீ தனாகிய ஸ்ரீராமன்‌ செல்வக்‌ குடிதழைக்கக்‌
கருமைந்தன்‌ தந்தருள்‌ பேரை வகுள திவாகரனே.–11-

மாவுக்கு வாசந்‌ திருமால்‌ உரையடி மாதர்மகிழ்‌
‘பாவுக்கு வாசமகிழ்‌ மாறன்‌செய்பாடல்‌ பைந்துளவத்‌
தேவுக்கு வாச மடியார்கள்‌ சிந்தையில்‌ சேர்ந்திருந்தும்‌
நாவுக்கு வாசம்‌ புகழ்பேரை வந்தருள்‌ நாரணனே.–12-

சந்தானப்‌ பத்துந்‌ தமிழ்மாலை நூறுந்‌ தரித்தவர்கள்‌
அந்தா ரணியில்நல்‌ லாண்பிள்ளை தான்பெற்‌ றகமகிழ்ந்து
கொந்தார்‌ துளவமணி மால்குழைக்‌ காதரைக்‌ கும்பிட்டுடன்‌
மந்தாத வாழ்வும்‌ பெறுவார்‌ அவரிந்த மாநிலத்தே.–13-

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின்- பாண்டி நாட்டுத் திவ்ய தேசங்கள் — தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

November 24, 2023

78. திருக்குறுங்குடி

இத்தலத்தைப் பற்றி வராக புராணம் மிக விரித்துப் பேசுகிறது. கைசிக புராணம் இத்தலத்திற்கு ஏற்பட்ட பெரும்பேறு வராஹ அவதாரங் கொண்ட
பெருமாள் தன் பிராட்டியோடு இங்குள்ள சிறுகுடிலில் சில காலம் தங்கினமையால் குறுங்குடியாயிற்றென்பர். பயங்கரமான வராகரூபத்தை மிகவும்
குறுகச் செய்தமையாலும். குறுங்குடியாயிற்று என்பர்.

மூலவர் நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, , வைஷ்ணவ நம்பி என்ற பல பெயர்கள் உண்டு. கிழக்கு நோக்கி நின்ற கோலம்
தாயார் குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் திருப்பாற்கடல்
விமானம்  பஞ்சகேதக விமானம்

காட்சி கண்டவர்கள் சிவபெருமான், கஜேந்திரன்.

நம்மாழ்வாரின் தந்தையாகிய காரியாரும் தாயாராகிய உடைய நங்கையாரும் தமக்கு நெடுங்காலம் புத்திரப்பேறில்லாது போக இந்த
திருக்குறுங்குடி நம்பியை வந்து வேண்டிக்கொள்ள, நாமே வந்து உங்கட்குப் பிள்ளையாகப் போகிறோம் என்று இப்பெருமான் கூறி அவ்விதமே
நம்மாழ்வாராக அவதரித்தார். வேதம் தமிழ் செய்த மாறனாகப் பிறந்தது இந்நம்பியே. அதனால் இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு விக்ரகம் இல்லை.

திருமங்கையாழ்வார் இத்தலத்தில்தான், பரமபதம் பெற்றார்.அரங்கனுக்கு (ஸ்ரீரங்கம்) பல பணிவிடைகள் செய்த திருமங்கை ஆழ்வார்
தனக்கு மோட்சம் வேண்டுமென அரங்கனிடம் வேண்டினார். அவ்வாறாயின் நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ என்று அரங்கன் கூற அவ்விதமே தெற்கு
வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்து இங்கும் எம்பெருமானுக்கு பல நற்பணிகள் புரிந்து இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட
அவரும் இவருக்கு வீடு தந்து ஏற்றுக்கொண்டார். ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுரம் போலவே (ஜீயர் ஸ்வாமிகளால் ராஜகோபுரமாக கட்டப்பட்ட நிலைக்கு முன்பு இருந்தது) திருக்குறுங்குடியின் கிழக்கு கோபுரமும் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது
இந்த திவ்ய தேசம்தான். இங்கு கழனிகளின் நடுவே அமைந்துள்ள திருவரசு எனப்படும் திருமங்கையாழ்வார் முக்தி பெற்ற இடம் இன்றும் நித்ய
பூஜைகளை ஏற்றுக்கொள்கிறது. இறைவனிடம் வீடு பேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம்
திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியுள்ளார். இதற்கடுத்து திருவாலி திருநகரியில் மட்டுமே இதே போன்று அமைந்துள்ளது.

இங்கிருந்துதான் திருமங்கையாழ்வாரின் மங்கள விக்ரகத்தை திருவாலி திருநகரிக்கு கொண்டு சென்றனர்.

இராமானுஜர் வைணவத்தைப் பரப்பி எல்லோரையும் எம்பெருமானிடம் ஈடுபாடு செய்துவரலானார். இராமாவதாரம்,
கிருஷ்ணவதாரத்தில் தம்மால் செய்ய முடியாத இக்காரியத்தை நீர் இவ்வளவு சுலபமாய் செய்த விந்தை எப்படி என்று திருக்குறுங்குடி எம்பெருமான் கேட்க
அதற்கு இராமானுஜர் கேட்கும் விதத்தில் கேட்டால் பதில்தருவோம் என்றுசொல்ல இத்தலத்தின் நம்பியும் சீடனாக அமர்ந்து இவரை குருவாக ஏற்று
விளக்கம் கேட்க இராமானுஜர் நம்பியின் செவியில் நாராயண மந்திரத்தை யோதி இம்மந்திரத்தால்தான் என்றார்.

திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் எம்பெருமான் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். ஆனால் இங்கு இறைவனுக்கு எம்பெருமானாரே
(எம்பெருமானார்] திருமந்திர உபதேசம் செய்து ஆசிரிய ஸ்தானம் பெற்றது இத்தலத்தில்தான்.

திருவனந்தபுரத்தில் இராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவத்தை போதிக்கச் செல்கையில் அதை விரும்பாத நம்பூதிரிகள் எங்கே இவரால் தம் தொழிலுக்கு
இடையூறு வருமோ என்றஞ்சி அனந்தபுர பத்மநாபனை வேண்டிக்கொள்ள அவரும் தம் எதிரே இருந்த கருடாழ்ழ்ழ்வாரை நோக்கி இவரைக்கொண்டு
திருக்குறுங்குடியிலே விட்டுவாருமென்றார். கருடாழ்வார் அவ்வாறே செய்தார்.
எனவே தான் இத்தலத்தில் கருடாழ்வார் இல்லை (திருவனந்தபுரத்தில்)

தூங்கச் சென்ற இராமானுஜர் விடிந்தெழுந்து பார்த்தபோது தாம் திருக்குறுங்குடியிலே இருப்பதை யுணர்ந்து இதுவும் அவன் மாயையே என்று
கருதிக் கொண்டு, திருமண் தரிப்பதன் பொருட்டு எப்போதும் தன் சீடனைஅழைப்பது போல் வடுகநம்பி என்றழைக்க, திருக்குறுங்குடி எம் பெருமானே
வடுகநம்பி வேடங்கொண்டு இவர் பின்னே வந்து தமது திருக்கரத்தால் இராமானுஜருக்கு திருமண் காப்பிட்டு விட்டு திருமன் பெட்டி
போன்றவற்றை எடுத்துக்கொண்டு இராமானுஜரின் பின்னேவர, எம்பெருமானை சேவித்தற் பொருட்டு திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் உள்ளே நுழைய
துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டார். வடுகநம்பி
வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என்றெண்ணி இப்பெருமானுக்கு வடுகநம்பி என்ற பெயரிட்டு அழைத்தார் இராமானுஜர்.
இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்து வருந்திய வடுகநம்பியின் கனவில் தோன்றிய எம்பிரான் இராமானுஜர்
திருக்குறுங்குடியில் உள்ளாரென்றுரைக்க சிலநாள் கழித்து வடுகநம்பி திருக்குறுங்குடி வந்தடைந்தார்.

வராகமூர்த்தியின் மடியிலிருந்த பூமிப்பிராட்டி அவரால் உரைக்கப்பட்ட கைசிக மகத்துவத்தைக் கேட்டுத் தாமும் பூலோகம் சென்று
இறைவனின் பெருமையைப் பரப்ப வேண்டுமென்று நினத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதாரம் செய்தார். எனவே ஆண்டாள் அவதாரத்திற்கு
வித்திட்ட விளை நிலம் இதுதான்.

இந்தக் கைசிக புராணத்தை ஸ்ரீ பராசரபட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் தெளிவாக வாசிக்க கேட்ட அரங்கன் பட்டரே உமக்கு மேலைவீடு தந்தோம்
என்று கூறி பட்டரை ஏற்றுக்கொண்டார். இன்றும் இக் கைசிக புராணம்,குறுங்குடி, அரங்கம், ஆழ்வார் திருகரி, திருவாலி திருநகரி, போன்ற திவ்ய
தேசங்களில் வாசிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி எல்லா ஸ்தலங்களிலும் கொண்டாடுதல் போல் கைசிக ஏகாதசியும் எல்லாச் சேத்திரங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இம்மகத்துவம் பிற திவ்யதேசங்களுக்குண்டான திருவிழாக்களுக்கு இல்லை.

இத்தலத்தில் சிவபெருமானுக்கும் சன்னதி உள்ளது. திருமங்கையாழ்வார் “அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்று சிவன்
இவரோடு இருக்கும் இருப்பை உணர்த்துகிறார். இப்பொழுதும் திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் பக்கம் நின்றார்க்கு குறையேதும் உண்டோ என்று கேட்கும்
வழக்கம் நடைமுறையில் உள்ளது.

குறுங்குடிக்கு வைகுந்தம் கூப்பிடுதூரமே என்று சொல்வது போல் வைகுண்டம் இங்கிருந்து மிக அருகில் என்பது பெரியோர் வாக்கு.

இன்றும் நம்பாடுவான் வேடம் பிரம்ம ராட்சசன் வேடம் கிழப்பிராம்மணன் வேடம் போட்டு கைசிக புராணத்தை நாடகமாக நடத்திடும்
பழக்கம் இங்குண்டு.

பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை
வருராம தேவமகராசன் தருபீடத்
துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும்
விற்பனமாய் நீங்காத மேன்மையான்” என்று அழகிய நம்பியுலாவில் வரும் பாடலால் உதயமார்த்தாண்டர்
என்னும் சேர அரசரால் செய்யப்பட்ட பந்தலின் கீழ், ராமவர்மன் என்ற அரசனால் (இராமதேவன்) செய்யப்பட்ட பீடத்தின் மேல் திருக்குறுங்குடி
நம்பி எழுந்தருளியிருந்தார். இதில் குறிக்கப்படும் மன்னர்கள் யாவரும் சேர நாட்டினரே.

இத்தலத்தில் உள்ள மணியின் மேற்புரத்தில் செய்துங்க நாட்டுச் சிறைவாய் மன்னாதித்தன் தென் வஞ்சியான் என்ற பாடல் செய்துங்க நாடு
என்று குறிக்கப்படும், திருவிதாங்கோட்டு அரசர்கள் இத்திருத்தலத்திற்கு பல நற்பணிகள் செய்ததை அறிய முடிகிறது.

ஸ்ரீரங்கத்து அரங்கன் திருப்பானாழ்வாரை ஆட்கொண்ட விடத்து ஸ்ரீலோக சாரங்கன் என்னும் முனிவர் மூலமே ஆட்கொண்டார். ஆனால்
நம்பாடுவானை இப்பெருமான் நேரிலேயே சென்று ஆட்கொண்டார்.

இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள். அவர்கள் தமது வீட்டின் பின்னால்
உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம் இந் நம்பியே ஒரு வைணவன்
வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம்.

வளர் அரையர் திருமனையில் வந்து அவரை நிழல்தனில் வன்காணம் கேட்ட பெருமான்’ என்ற பாடலால் உணரலாம்.

இராமானுஜர் திவ்ய தேச யாத்திரை மேற்கொண்டு செல்லுமிடத்து மைசூரில் உள்ள திருநாராயணபுரம் செல்ல அங்கு கைங்கர்யத்திற்கு
ஸ்ரீவைஷ்ணவர் வேண்டுமென்று இராமானுஜரிடம் விண்ணப்பம் செய்ய, இராமானுஜர் திருக்குறுங்குடி ஜீயருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அரையர்
வம்சத்தில் வந்த ஒருவரையும் அங்கு அனுப்பி வைத்தார். இன்றும் அங்கு அவர்கள் திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் ஸ்தானிகம் (கைங்கர்யம்)
செய்து வருகின்றனர்.

இதனை தட்சிண பத்ரி (தென்பத்ரிசாச்சிரமம்) என்று வடவாணர் கூறுவர்.

இப்பெருமாளை சேவிக்க ஒரு சமயம் இராஜாக்கள், கூட்டம் கூட்டமாய் வந்தபோது வானமாமலை மூர்த்திகளான ஸ்ரீதெய்வநாயகன்
ஸ்ரீவரமங்கைத் தாயார் முதலானோர்கள் பூமியில் அமிழ்ந்து இருப்பதாகவும், அவ்விடம் சென்றால் எந்த இடத்தைச் சுற்றிக் கருடன் பறக்கிறானோ அந்த
இடத்தில் தோண்டினால் அவர்கள் வெளிப்படுவார்கள் என்று (அசரீரீயாய்) சொல்ல அவ்விதமாய் செய்துதான் வானமாமலை திவ்யதேசத்தை ஸ்தாபித்தனர் என்பர்.
எனவே வானமாமலை திவ்ய தேசம் உருவாவதற்கும் இத்திருப்பதியே காரணமாயிற்றென்றால் அது மிகையல்ல.
இச்சன்னதி திருக்குறுக்குடி ஜீயர் ஆதிக்கத்தில் உள்ளது. இராமானுஜரால்தான் இந்த ஜீயர் மடம் உருவாக்கப்பட்டது.

இங்கிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையருகே திருப்பாற்கடல் நம்பி சன்னதியும் உள்ளது. இதே போன்று
இங்கிருந்து 6 1/2 மைல் தூரத்தில் மலைமேல் உள்ள ஒரு குன்றில் மலைமேல் நம்பி சந்நிதியும் உள்ளது. ஒரு ராட்சசன் ஒரு பிராம்மணனைக் கொல்லவர,
கொல்வது பாவமென்று பிராமணர் சொல்ல, அதுதான் எனது தொழில் என்று ராட்சசன் சொல்ல இருவருக்கும் விவாதம் முற்ற வேடன் வடிவங்கொண்டு
வந்த பெருமான் அவ்விருவருக்கும் உபதேசம் செய்து திருப்பாற்கடலில் ஸ்நானம் செய்ய இருவரும் மோட்சம் பெற்றனர் என்பது திருப்பாற்கடல்
ஸ்தல வரலாறு.

திருக்குறுங்குடி மேன்மையை நன்கு அறிந்து கற்றாலே அவன்தான் முழு வைணவன் அப்போதுதான் வைணவ சித்தியுண்டாகும். வைணவ பூரண
ஞானமே திருக்குறுங்குடி எம்பெருமானின் திவ்ய விஷயங்களை அறிந்து அவன்பாற் அன்பு பூண்டலால் ஏற்படுகிறது என்று நம்மாழ்வாரே
அறுதியிட்டுள்ளார்.-இவை பத்தும் திருக்குறுங் குடியதன்மேல் அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே

எட்டெழுத்தைக் கருதிற் குறித்திட்டு நித்தம் பரவும்
சிட்டர்கட்கு திருப்பொற்பதத்தை சிறக்கத் தருமவ்
வட்டநெட்டைப் பணிமெத்தை யதிற்கிட வாரிசப்போ
குட்டினத்துக் குலம் தத்தி முத்தீனும் குறுங்குடியே.–புகழேந்திப் புலவர்

——————–

79. திருவரமங்கை என்னும் வானமாமலை

சீரீவரமங்கை என்னும் திவ்ய ஸ்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு.

பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. நரசிம்ம புராணத்தில் 16 அத்தியாயங்களில் இத்தலத்தின்
பெருமை பற்றியும், வைணவர்களின் ஏற்றம் பற்றியும், கங்கை காவிரியின் மகத்துவம் பற்றியும் பெரிதும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. புராணத்தில்
சிவன் நாரதரிடம் இத்தலம் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொன்னதாகச் சொல்லப் பட்டுள்ளது.

உரோமச முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோம ஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து
பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக
இருக்கும் பேறு பெற்றதால் நாகனை சேரி எனவும் மரங்கள் நிறைந்த வனமும், மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள
திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி நான்குநேரி எனவும் அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும்
நடுமையப் பகுதியில் அமைந்ததால் நான் +கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.
வடமொழியினர் தோத்தாத்தரி என வழங்குவர் வைணவ பெரியவர்கள் தோத்தாத்திரி என்றேயழைப்பர்.

தாமிரபரணியின் தெற்கே ஒரு யோஜனையும் தென் கடலுக்கு வடக்கே இரண்டு யேஜனையும், கிழக்கு கடலுக்கு மேற்கே மூன்று யோஜனை
தூரத்திலும் இந்த தோத்தோத்திரி உள்ளது என புராணம் இதற்கு எல்கை காட்டுகிறது.

1. நாய் மோட்சம் பெறுதல்–சிந்து நாட்டரசன் வேட்டைக்கு சென்றபோது அவனை எட்டுக்கால் யானை ஒன்று விரட்ட தனது படைக்கூட்டத்தை விட்டுப் பிரிந்து
நெடுந்தொலைவு அலைந்து பசியால் மிக வாடினான். அந்நிலையில் தூரத்தே தெரிந்த குடிலொன்றுக்கு செல்ல அங்கு யாருமில்லாமல் அறுசுவை
உணவுமட்டும் இருப்பதை கண்டான். பசிபொறுக்காத மன்னன் அதை எடுத்து உண்டுவிட்டான்.
சற்று நேரம் கழித்து அக்குடிசைக்குரிய குசானன் என்னும் முனிவன் அங்குவந்து தான் விஷ்ணுவின் பூஜைக்கு வைத்திருந்த உணவை உண்ட
இம்மன்னனைக் கடுஞ்சினத்துடன் நோக்கி நீ உண்ட உணவு உனக்கு நஞ்சாகுக. நீ பருகிய நீர் கள்ளாகுக. காய்கறிகள் பசுமாமிசம் ஆகுக. நீ
நாயாக மாறி அலைந்து திரிக என சபித்தான்.

முனிவனின் பக்தி மேன்மையினையும் தனது தவறினையும் உணர்ந்த மன்னன் சாப விமோசனம் வேண்டி நின்றான். அதற்கு அந்த முனிவன்,
இவ்வுலகில் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும் என்றார்.

ஒரு நாள் விலங்குகளை வைத்து வேட்டையாடுவோன் ஒருவன் அந்நாயைப் பிடித்து பல வேடிக்கைகளைக் காட்டி பல நாடுகளுக்குச் சென்று
வரும் நிலையில் ஒரு நாள் மரங்களடர்ந்த இச்சோலைக்கு வந்து (வானமாமலை) ஓய்வெடுத்து அங்கிருந்த (சேற்றுத் தாமரை என்ற
தெப்பக்குளத்தில்) நீராடினான். உடன்வந்தோறும் நீராடினர். இதைக்கண்ட நாயும் அவ்விதமே செய்ய நாயுருவம் மறைந்து அரசனாக நின்றான்.
இதைக்கண்டு அனைவரும் அதிசயத்து நிற்க, தனது பூர்வக் கதையை தெளிவுற விளக்கி தன்னை அழைத்துவந்தவனை தனது தந்தைக்கொப்பான்
என்று கூறி, இச்ஷேத்ரத்து எம்பெருமானை வழிபட்டு பல நாள் தங்கியிருந்து அவ்வேடுவனோடு தனது நாட்டை அடைந்தான்.

2. பூமிப்பிராட்டி தனது அழுக்கைப் போக்குதல்
திருமால் பிரம்மனைப் படைத்தான். பிரம்மனுக்கு சிருஷ்டித் தொழில் அமைந்ததால் கர்வம் ஏற்பட்டது. அதை அடக்க திருமால் தனது
செவியிலிருந்து அழுக்கை எடுத்து உருட்டிப்போட அது மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்களாய் உருவெடுத்து, திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து
செல்லும் தாமரைத் தண்டினை ஆட்டி பிரம்மனை அச்சுறுத்தினர். தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பிரம்மன் தன்னைக் காக்குமாறு
திருமாலிடமே தஞ்சம் புகுந்தார். அவ்விரண்டு அசுரர்களும் திருமாலையும் எதிர்க்கத் துணியவே இருவரையும் பிடித்து தமது தொடையில் அடித்து
முறித்து பூமியில் வீசினார். அவர்களின் மேனியிலிருந்து ரத்தமும் நிணமும் கலந்து பூமியெங்கும் துர்நாற்றம் வீசவே நிலைகுலைந்த பூமித்தாய்,
திருமாலைத் தஞ்சமடைந்து துதித்து நின்றார். திருமால் தமது சக்ரத்தை ஏவி அமிர்த மழைபெய்வித்து அசுத்தத்தைப் போக்கினார்.

தனது அழுக்குநிலை போக வேண்டுமென இத்தலத்தில்தான் பூமித்தாய் திருமாலை துதித்து நின்றார்.

3. ஊர்வசியும் திலோத்துமையும் மோட்சம் பெறல்
தேவலோகத்தில் அழகிலும் ஆடல் பாடல்களிலும் சிறந்த ஊர்வசி, திலோத்தமை இருவரும் பிரம்மனிடம் சென்று தமக்கு எப்போதும்
அழிவில்லாததும், பிறப்பற்றதுமான ஒரே மாதிரி நிலை வேண்டுமெனக் கேட்க மகாவிஷ்ணு ஒருவரால் மட்டுமே பிறப்பற்ற மோட்சநிலை தரமுடியுமென்றும்
அதற்கு பூலோகத்தில் உள்ள தோத்தாத்திரியில் சென்று விஷ்ணுவை குறித்து தவம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தார்.

உடனே இரண்டு அழகிகளும் இத்தலத்திற்கு வந்து இங்கிருந்த வைகனச முனிவரிடம் (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்று
பயிற்சி பெற்று பல்லாண்டுகள் தவமிருந்து இறுதியில் திருமால் காட்சி கொடுத்து (சாயுஜ்யம்) தமது பக்கத்திலேயே இருக்கும் பேரளித்தார்.

எனவேதான் இத்தலத்தில் தேவமாதர்களான ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீச, ஸ்ரீதேவியும் இருமருங்கும் அமர்ந்திருக்க
மாமேருபோல் எம்பெருமான் எழுந்தருளி யுள்ளார்.

4. ஆதிசேடனும், கருடனும் தவமியற்றல்-கிரேதா யுகத்தில் காசியப் பிரஜாபதி என்பவருக்கு கத்ரு, வினதை என்ற
இரண்டு மனைவியர் இருந்தனர். இவ்விருவரும் நெடுங்காலம் புத்திரப் பேறு இல்லாதிருக்க தவவலிமையில் மிகச்சிறந்த முனிவராய் விளங்கிய தமது
தந்தையிடம் சென்று வரம் கேட்டு நின்றனர். அதற்கவர் கத்ரு நீ பல புதல்வரைப் பெறுவாய், வினதை நீ இரு மக்களை பெறுவாய் உங்களிருவரின்
குழந்தைகள் இரண்டு பேர் விஷ்ணுவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெறுவர் என்று சொல்ல கத்ரு எண்ணற்ற நாகங்களைப் பெற்றெடுக்க அவர்கட்குத்
தலைவனான ஆதிசேடன் எம்பெருமான் துயில்கின்ற அனந்தனாகவானான். வினதை இரு புதல்வரை ஈன்றாள், ஒருவன் அருணன், மற்றொருவன் கருடன்
இதில் அருணன் சூரியனுக்கு தேரோட்டியாகப் போனான் கருடன் ஹரிக்கு வாகனமானான்.

ஒரு சமயம் கருடன் பாதாள லோகத்திற்கு தனது சகோதரர்களாகிய நாகங்களைக் கண்டுவரலாமென்று சென்றான். அப்போது நாகங்கள் கருடனை
இகழ்ந்து பேச கருடன் நாகங்களை நையப் புடைத்தான் அப்போது அங்கு வந்த ஆதிசேடன் நானும் நீயும் ஒரே இடத்தில் சேவகம் செய்கிறோம், என்று
சமாதானம் செய்ய கருடன் சமாதானமுற்று பாற்கடலுக்குச் சென்றான்.

அங்கிருந்த முனிவர்களிடம் அனந்தன் (ஆதிசேடன்) சர்வகாலமும் மகாவிஷ்ணுவிற்கு பணிவிடை செய்து அவனருகிலேயே உள்ளான். எனக்கும்
அதுபோல பாக்கியம் வேண்டுமெனவும் அதற்கு நான் என்ன செய்யவேண்டுமெனவும் வேண்டி நின்றான்.

அதற்கவர்கள் தோத்தாத்திரி சென்று எம்பெருமானைக் குறித்து தவமிருக்கச் சொல்ல அவ்விதமே கருடன் கடுந்தவமியற்றினான். இதையறிந்த
திருமால் உடனே தோத்தாத்திரிக்கு எழுந்தருளி கருடா நீ முன்பே எனக்கு வாகனமாகும் பேறு பெற்றாய் இதற்குமேல் உனக்கு என்ன வேண்டும் என்று
கேட்க அனந்தனைப் போல பிரியாநிலை வேண்டுமென்றான்.

கருடனைப் போற்றிய திருமால் அவ்வாறாயின் நீயும் வைகுந்தம் வந்து எனது வாசலின் முன்னே எந்தநேரமும் புறப்படத் தயாராகும் கோலத்தில்
நிற்பாயாக என்றருளினார்.

இவ்விதம் ஆதிசேடனை விட்டால். கருடன் என்ற நிலைக்கு கருடனுக்கு வரமளிக்கப்பட்டது இத்தலத்தில்தான்.

வீபிதகன் மகன் தவமியற்றியது.–காவிரியின் வடகரையிலுள்ள திருமூலம் என்ற சிவபதியில் வாழ்ந்து
வந்த வீபிதகன் பெரும் செல்வன். அவனது புதல்வன் தர்மவத்சலன் கெட்ட சிநேகிதத்தால் தன் தந்தை தேடிய செல்வம் எல்லாம் தொலைத்து
வியாபாரிகளுடன் சேர்ந்து வாணிகம் செய்யும்போது அவர்களின் பொருட்களையும் திருட அதைக்கண்டுபிடித்த வணிகர்கள் இவனை
நையப்புடைக்க காட்டிற்கு ஓடிய இவன் சிங்கத்தால் கொல்லப்பட்டு பதினாயிரம் ஆண்டுகள் பிசாசாக அலைந்து இறுதியில் சண்டாளனாக ஒரு
ஜென்மம் எடுத்து அப்போதும் தீச்செயல்களே செய்ய குஷ்டம் வந்துவிட்டது.
இதற்கு விமோசனம் யாது என தமது ஊரிலிருந்த திருமாலடியாரை வினவ அவர் சேற்றுத் தாமரையில் நீராடினால் குட்டம் மறையும் என்று சொல்ல
கடும் பக்தியுடன் அவ்விதமே செய்ய நோய் நீங்கி திருமாலடியான் ஆகி இறுதியில் வைகுந்தம் அடைந்தான்.

மூலவர்–தோத்தாத்திரிநாதன் (வானமாமலை)
உற்சவர்–   தெய்வநாயகன்
தாயார்–   ஸ்ரீதேவி, பூமிதேவி
தீர்த்தம்–   சேற்றுத்தாமரை தீர்த்தம்
விமானம்–   நந்தவர்த்தன விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன். கருடன் ஊர்வசி, திலோத்தமை.

ஸ்வயம் விய்க்த ஸ்தலம் என்ற அமைப்புப்படி இது தானாகத் தோன்றிய ஸ்தலம். எம்பெருமானும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த வண்ணமே
சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

திருப்பாற்கடலே இங்கு சேற்றுத் தாமரைத் தெப்பமாக அமைந்துள்ளதாக ஐதீகம். எனவே பரமும், வியூகமும் இங்கு ஒருங்கே
அமைந்தது போலாகும்.

இங்கு பெருமானுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர்.
இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் சகல வியாதிகளும் தீரும்.

ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். வானமாமலை ஜீயர் சுவாமிகள் இங்கேதான் எழுந்தருளியுள்ளார். மணவாள
மாமுனிகளால் நியமனம் செய்யப்பட்ட அஷ்ட திக்கஜங்களுள் இந்த ஜீயர் முதன்மையானவர். மணவாள மாமுனிகள் “வாரீர் பொன்னடிக்கால் ஜீயரே”
என்று இவரை அழைக்க மணவாள மாமுனிகளின் பாதுகைகளாக விளங்குபவர் ஸ்ரீவானமாமலை ஜீயர் (விஷ்ணுவின் பாதுகைகள் நம்மாழ்வார், நம்மாழ்வாரின் பாதுகைகள் ராமானுஜர்-ராமானுஜர் பாதுகைகள் மணவாள மாமுனிகள், மணவாள மாமுனிகளின் பாதுகைகள் வானமாமலை ஜீயர்]

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை ஜீயர் சுவாமிகள்
அணிந்து காட்சி கொடுப்பதுடன் ஸ்ரீபாத தீர்த்தமும் அருளுவார்.

நவதிருப்பதிகளில் ஆழ்வார் திருநகரி தவிற வேறெங்கும் நம்மாழ்வாருக்கு மங்கள விக்ரகம் இல்லை. இத்தலத்தில் உள்ள சடாரியில்
நம்மாழ்வாரின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வாரே வந்து ஆசிர்வதிப்பதற்குச் சமானமானதாகும்.

சுசிலை என்ற பெண் காவிரியில் நீராட வந்தபோது பிரியம்வதன் என்ற பிராமணனின் அழகில் மோஹித்து தனது தோழிகளுடன் வந்து தன்னை
இப்போதே மணந்துகொள்ளுமாறு கேட்க, அவன் தான் பிரம்மச்சாரி என்று கூறி திருமணத்திற்கு மறுக்க இவர்கள் விடாப்பிடியாக தொந்திரவு செய்ய
மிகவும் சினம் கொண்ட பிராமணன் இவர்களைப் பேயாகப் போகுமாறு சபிக்க, அப்பெண்களும் பதிலுக்கு இவனைப் பேயாகப் போகுமாறு சபித்தனர்.
இவ்விதம் பல காலம் பேயாக அலைந்து கொண்டிருக்க பிரியம்வதனைக் காண அவனது தந்தை நடந்ததை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்து யாது
செய்வதென முனிவர்களிடம் வினவ இதற்குத் தோத்தாத்தரி நாதனைக் குறித்து கடுந்தவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்க அவரும் அவ்விதமே செய்யலானார்.

இறுதியில் திருமால் பிரத்தியக்ஷ்மாகி அவர்களின் பேயுருவை ஒழித்து சுசிலைக்கும், பிரியம்வதனனுக்கும் திருமணம் செய்யச் சொல்லி அவ்விருவரும்
இல்வாழ்வில் புகுந்து நெடுங்காலம் இப்பெருமானுக்கு தொண்டாற்றி திருமாலடியெய்தினர்.

எனவே கடுந்தவத்தினால் கோரிய கோரிக்கையை நிறை வேற்றப்படுதல் இத்தலத்தின் சிறப்பு ஆகும்.

முக்தியளிக்கும் எட்டுத்தலங்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.

இக்கோயில் நிர்வாகம் வானமாமலை மடத்து ஜீயர் சுவாமிகளின் ஆதினத்தில் உள்ளது. அவர்களே பரம்பரை அறங்காவலராக இருந்து
இத்திருக்கோவிலில் ஒன்றும் குறைவு வராமல் பூஜை, திருவிழாக்கள் நடத்திவருகிறார்கள். இக்கோயில் திருப்பணிகளும் அவர்களே செய்து
திருக்கோயிலைப் பொலிவுடன் விளங்கும்படி செய்து வருகிறார்கள்.

இத்திருக்கோயிலின் முக்கியமான திருவிழா பங்குனி பிரம்மோத்ஸவம், சித்திரை பிரம்மோத்திஸவமும் ஆகும்.

————-

80. ஸ்ரீவைகுண்டம்

பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற
அரக்கன் பிரம்மதேவன் வைத்திருந்த (ச்ருஷ்டி ரகஸ்யக் கிரந்தம்) படைப்புத்தொழில் ரகசியம் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒளிந்து
கொண்டான்.
தம்நிலையுணர்ந்து வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து மீட்கும்பொருட்டு விஷ்ணுவைக் குறித்து தவமியற்ற எண்ணி தன் கரத்திலிருந்து
ஒரு பிரம்பை ஒரு பிரம்மச்சாரியாகச் செய்து, தாம் தவமியற்றுவதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவு செய்து வருமாறு பூவுலகிற்கு அனுப்பினார்.
தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஜயந்தீரபுரத்திற்கு வந்து, அங்கிருந்த அழகியின் மயக்கத்திலீடுபட்டு தான் வந்த வேலையை மறந்து போயினான்.
இதன்பின் பிரம்மா தன் மறுகையிலிருந்த தண்டத்தை ஒரு பெண்ணாக்கி, யான் தவம் புரிய ஏற்ற இடம் பார்த்து வா என்று சொல்ல அவள்
தாமிரபரணியாற்றங்கரையில் சோலைகள் நிறைந்த ஓரிடத்தை தெரிவு செய்து பிரம்மனிடம் கூற, பிரம்மன்

அங்கு வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் இருக்கலானார். பிரம்மனின் தவத்தை மெச்சிய திருமால் வைகுண்டத்திலிருந்து படைப்பின் ரகசியத்தை
மீளவும் பிரம்மனிடமே சேர்ப்பித்தார்.
வைகுண்டத்திலிருந்து எழுந்த கோலத்தில் இவ்விடம் காட்சி தந்தமையாலும், இதே திருக்கோலத்தில் பக்தர்களுக்கு இவ்விடத்தே நின்று
அருள வேண்டுமென்று பிரம்மன் வேண்டியதால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீவைகுண்டம் என்ற பெயருண்டாயிற்று.

பின்பு இதே ஸ்ரீவைகுண்டத்தில் காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன், இப்பெருமானை வழிபட்டே திருடச் செல்வதும், அவ்வாறு திருடிய
பொருட்களில் பாதியை இப்பெருமானுக்கே சமர்ப்பணம் செய்து, இடையறாது பக்தி செலுத்திவந்தான். ஒரு நாள் தன் கூட்டத்தினருடன் அரசனின்
அரண்மனையில் திருடிக்கொண்டிருக்கும்போது இவன் கூட்டத்தைச் சார்ந்த சிலரை காவலாளிகள் பிடித்து விசாரணை செய்ய, அவர்கள் தாங்கள்
காலதூஷகனின் கையாட்களே என்றும் எங்களோடு வந்தால் காலதூஷகனைக் காண்பிக்கிறோம் என்று சொல்ல அவ்விதமே காவலாளிகளும் தேடிவந்தனர்.

இதனையறிந்த காலதூஷகன் ஸ்ரீவைகுண்டனைச் சரணடைந்து தன்னைக் காக்குமாறு வேண்ட அப்பெருமானே காலதூஷகன் வேடத்தில் எதிரில் வர,
காவலாளிகள் பிடித்துக்கொண்டுபோய் மன்னன் முன்னிலையில் நிறுத்தினர்.
காலதூஷகனை மன்னன் கூர்ந்து நோக்கியபோது தன் சுயரூபத்தை அவனுக்கு மட்டும் காட்டியருள அடிபணிந்து நின்ற மன்னன் என்னிடம்
கொள்ளையடித்துச் செல்ல வேண்டிய காரணம் என்னவென்று கேட்க,
“திரவியத்திற்கு சத்ருக்கள் நால்வர்”. அவர்கள் தர்மம், அக்னி, சோரன், ராஜா என்பவர்கள். இதில் முதலாவதாகிய தருமத்தை நீ கொஞ்சமேனும்
கடைப்பிடிக்கவில்லை. இதை உனக்குப் புகட்டி தர்மத்தில் உன்னை நிலைநாட்டச் செய்யவே இந்நாடகமாடினோம் என்றார்.

மிகவும் ஆனந்தித்து பேரின்பக் காட்சியைக் கண்ட அம்மன்னன் எனக்கருள்புரிந்த இத்திருக்கோலத்திலேயே கள்ளப் பிரானாக (சோரநாதனாக)
எந்நாளும் காட்சியளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வைகுண்டத்துஎம்பெருமான் அவ்விதமே ஆகட்டும் என்று கூறி மறைந்தார்.

சோரநாதனிடம் ஈடற்ற பக்தி கொண்ட அம்மன்னன், கால தூஷகனையும் நண்பனாகக் கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற தான
தருமங்களைச் செய்து மண்டபமும், மதிலும் எழுப்பினான். இம்மன்னன் யாரென்றும், பெயரின்னதென்றும் அறியுமாறில்லை.

அதுமுதல் இப்பெருமானுக்கு கள்ளப்பிரான் என்ற திருநாமமே பிரதானமாக இருந்து வருகிறது.

மூலவர்–ஸ்ரீவைகுந்த நாதன், கள்ளப்பிரான்.
தாயார்-  வைகுந்தவல்லி, பூதேவி.
தீர்த்தம்–  பிருகு தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம், கலச தீர்த்தம்.
விமானம்–   சந்தர விமானம்
காட்சி கண்டவர்கள்–  பிரம்மா, இந்திரன், காலதூஷகன்.

பிரம்மா தமது கமண்டலத்தில் தாமிரபரணி நீரையெடுத்து திருமாலுக்குத் திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம்
செய்ததால் இன்றும் கலச தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. பிரம்மனாலேயே இங்கு வைகுண்டநாதனுக்கு சித்திரை உற்சவம் நடத்தப்பட்டது.

மற்றெல்லா ஸ்தலங்களிலும் ஆதிசேடனில் தான் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு நின்ற திருக்கோலத்தில் உள்ள
பெருமானுக்கு ஆதிசேடன் குடைபிடிக்கும் வண்ணத்தில் அமைந்துள்ள காட்சி வேறெங்கும் காண்டற்கரியதாகும்.

108 வைணவ திவ்ய தேசங்களில் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் ஸ்ரீவைகுண்டம் என்னும் திருப்பெயரை மண்ணுலகில் தாங்கி
நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.

சோரநாதன் என்று பெயர்கொண்ட இப்பெருமானின் மீது வடமொழியில் இயற்றப்பட்டுள்ள “ஸ்ரீசோரநாத சுப்ரபாதம்” மிகவும்
பிரசித்திபெற்றதாகும்.

காலதூஷகனுக்கு அருள் பாலித்து ஸ்ரீவைகுண்ட நாதனாக எழுந்தருளியிருந்த பெருமானும், அச்சிறு சன்னதியும் வெகு காலத்திற்குப்பின்
பூமியில் புதையுண்டு போனது. ஒரு சமயம் பாண்டிய மன்னர்கள் நெல்லையில் தமது அரசாட்சியை செலுத்துங்கால் மணப்படை, கொற்கை போன்றன,
பாண்டியர்களின் முக்கிய பிரதேசமாக விளங்கின. அவ்வமயம் பாண்டியனின் பசுக்களை மேய்ப்பவன் சந்நிதி மூடிய இவ்விடத்திற்குப் பசுக்களை ஓட்டி
வந்ததும் ஒரு பசுமட்டும் தனித்துச் சென்று வைகுண்ட பெருமாள் பூமியில் மறைந்துள்ள இடத்தில் பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
இதைக்கண்ட பசுமேய்ப்பவன் இதனை மன்னனுக்குத் தெரிவிக்க மன்னன் தன் பரிவாரங்களுடன் சூழ இவ்விடம் வந்து தோண்டிப் பார்க்கையில், அங்கே
வைகுண்டப் பெருமான் சன்னதியிருப்பதைக்கண்டு மிகவும் ஆனந்தித்து தற்போதுள்ள கோவிலை அமைத்தான் என்பர்.

இங்குள்ள கள்ளப்பிரானின் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து ஆசைமிக்குப்
போனதால் செல்லமாகக் கன்னத்தில் கிள்ளி விட்டார். ஆத்மார்த்தமான பக்தியில் கிள்ளிய வடுவை எம்பெருமான் கன்னத்தில் ஏற்றுக் கொண்டார்.
இன்றும் இப்பெருமானின் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடுவைக் காணலாம்.

இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது.

இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி.
இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற்கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டது, எண்ணியெண்ணி
வியக்கத் தக்கதாகும். சூரிய வழிபாடு 108 திருத்தலங்களில் இங்கு மட்டுமே உள்ளது.

—————–

81. திருவரகுணமங்கை

வரகுண மங்கையென்றுசொன்னால் யாருக்கும் தெரியாது. நத்தம் என்று சொன்னால் எல்லோரும்
அடையாளம் காட்டிடுவர். தற்போது நத்தம் என்னும் பெயரே பிரதானமாக உள்ளது.

இத்தலத்தைப் பற்றியும் பிரம்மாண்ட புராணத்தில்தான் சொல்லப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணிய
கோசம் என்ற அக்கிரஹாரத்தில் வாழ்ந்து வந்த “வேதவித்” என்னும் பிராமணன் ஒருவன் மாதா. பிதா. குரு ஆகிய மூவருக்கும் செய்ய வேண்டிய
கடன்களைச் செய்து முடித்து திருமாலைக் குறித்து தவமியற்றுவதில் மிகச் சிறந்த மந்திரங்களில் ஒன்றாகிய “ஆஸணதை” என்னும் மந்திரத்தை ஜெபித்து
தவமியற்ற எண்ணிக்கொண்டிருந்தான். அப்போது திருமாலே ஒரு கிழப் பிராமணன் வேடம் பூண்டு அவனிடம் வந்து “சக்யம், மகேந்திரம் என்னும்
இருமலைகட்கு இடைப்பட்டு விளங்கும் வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவமியற்றுமாறும், அதுவே “ஆஸணதை” என்னும் மந்திரா
ஜபத்திற்குச் சிறந்த இடமென்று கூற வேதவித் என்னும் பிராமணன் உடனே இவ்விடம் வந்து ஆகார நித்திரையின்றி கடுந்தவஞ்செய்து இறுதியில்
திருமாலின் சேவையைப் பெற்று பரமபதம் பெற்றான். ஆஸணத் மந்திரத்தை ஜெபித்து இறைவன் காட்சி தந்ததால் விசயாசனர் என்னும் திருநாமம்
இப்பெருமானுக்கு உண்டாயிற்று.

 இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ரோமச முனிவர் என்பார் இங்கு தவஞ்செய்கையில் அவரது சீடன் சத்தியவான்
என்பவன் இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது, அத்தீர்த்தக் கரையின் மறுபக்கத்தில் ஒரு மீனவன் மீன்களைப் பிடித்து
கரையில் உலர்த்திவிட்டு மீண்டும் வலை வீசும்போது அவனுக்குப் பின்னால் இருந்து பாம்பு தீண்ட அவ்விடத்திலேயே இறந்து போனான். அவன் இறந்த
சில நிமிடங்களிலேயே வானுலகிலிருந்து வந்த தேவவிமானத்தில் ஏறி அந்த வேடன் சுவர்க்கம் சென்றான்.

இதைக்கண்ட சத்தியவான் உடனே தன் குருவை அணுகி நடந்த விருத்தாந்தத்தைக் கூறி, உயிர்களைக் கொல்லும் புலைஞனாகிய வேடனுக்கு
சுவர்க்கம் எவ்வாறு கிட்டியதென்று கேட்க, தம்ஞான திருஷ்டியால் ரோமசர் பின்வருமாறு கூறலானார்.

முன் ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டின் விசுவசகன் என்னும் அரசனின் மைந்தன் தர்மத்தில் மிகவும் பற்றுள்ளவனாகவும், அனேக புண்ணிய
காரியங்களைச் செய்து வருபவனாகவும் இருந்தான். இருப்பினும் துஷ்டசிநேகிதர்களின் நட்பால் அவ்வப்போது துன்மார்க்கத்திலும் ஈடுபட்டு வந்தான்.
தனது பாவத் தன்மையால் முன் ஜென்மத்தில் நரகம் பெற்ற இவன், இந்த ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியத்தால் இத்திருத்தலத்தில் உயிர்நீக்கும்
பேறு பெற்றான்.

இத்திருப்பதியில் உயிர் நீத்ததால் மோட்சம் செல்லும் மகிமை பெற்றான் என்று இத்தலத்தின் மேன்மையை ரோமசர் கூறினார்.

மூலவர்– விஜயாசனப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுகமண்டலம்.
தாயார்– வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார்.
தீர்த்தம்–   அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம்
விமானம்–   விஜயகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்– அக்னி, வேதவித், ரோமசர்.

ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமானுக்கு குடைப்பிடித்த ஆதிசேடன் இங்கு அமர்ந்த பெருமானுக்கு குடைப்பிடித்துள்ளான்.
பிரம்மாவின் புத்திரனான கனக முனிவர் இத்தலத்தின் வரலாற்று மேன்மையை தட்சிண கங்கை என்று சொல்லப்படும் காவிரியின் தென்கரையில்
தர்மபுரம் என்ற நகரத்தைப் பரிபாலித்து வந்த மன்னனுக்கு கூறியதாகவும் புராணக் குறிப்புள்ளது.

————

82. திருப்புளிங்குடி

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தாலும், தாமிரபரணி ஸ்தல புராணத்தாலும் அறிய முடிகிறது.

ஒருசமயம் மஹாவிஷ்ணு இலக்குமி தேவியுடன் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் அழகழகாக
வரிசைக்கிரமமாக மணல்மேடு அமைந்துள்ள பகுதியில் சற்றே உல்லாசத்துடன் தனித்திருக்க, இப்பூவுலகில் வந்ததும் தன்னை விட்டுவிட்டு இலக்குமி
தேவியுடன் இவர் மகிழ்வெய்தியுள்ளாரே என்று எண்ணி பொறாமை கொண்ட பூமிப்பிராட்டி மிகவும் சினங்கொண்டு பாதாள லோகம் புக்கு மறைய உலகம்
வறண்டு இருளடைய தேவர்கள் எல்லாம் இந்நிலை மாறவேண்டுமென ஸ்ரீமந் நாராயணனைத் துதிக்க அவரும் பாதாள லோகம் சென்று பூமிப்பிராட்டியைச்
சமாதானப்படுத்தி இருவரும் தமக்குச் சமமே என உபதேசம் செய்து இருவருக்கும் நட்பு உண்டாக்கி, அவ்விரண்டு தேவிமார்களும் சூழ
இவ்விடத்தில் காட்சி தந்தார். பூமியைக் (பூமிப் பிராட்டியைக்) காத்ததாலும் பூமிபாலர் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்று. காசினி
வேந்தர் என்ற சொல்லே நம்மாழ்வாரின் பிற பாக்களில் காய்சின வேந்தர் என்று பயின்று வருகிறது.

இத்தலத்தில் நடைபெற்ற இன்னொரு புனித வரலாற்றையும் புராணம் பேசுகிறது.

யக்ஞசர்மா என்னும் அந்தணன் தனது பத்தினியுடன் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கையில், வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது
ரிஷிகள் புடைசூழ வந்தவிடத்து அவர்களை மதியாதிருந்ததோடு, தட்சிணையுங்கொடுக்காது அவர்களை தீச் சொற்களால் நிந்தனையும்
செய்வித்தான். அக்கணமே அம் முனிவர்கள் அனைவரும் யக்ஞசர்மாவை ஓர் அரக்கனாகும்படி சபிக்க, தன் நிலை மாறிய அவ்வந்தணன், அம்
முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து சாப விமோசனமும் வேண்டி நின்றான்.
அதற்கு முனிவர்கள் இத்திருத்தலத்தில் பின்னொரு காலத்தில் இந்திரன் யாகம் செய்வான். அப்போது அந்த யாகத்தை அழிக்க நீ எத்தனிக்கும்
போது திருமாலின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர்.

இஃதிவ்வாறிருக்க, இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் இனிதே குலாவிக் கொண்டிருக்கும்போது
அத்தடாகத்துக்கு அருகில் மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திரன் தனது வஜ்ராயுதத்
தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதைத் தீர்ப்பதற்கு கண்ட விடமெங்கும்
பைத்தியன்போல் இந்திரன் அலைந்தான்.

இதைக்கண்டு மிகவும் மனம் நொந்த தேவர்கள் தமது குலகுருவான வியாழபகவானைச் சரணடைந்து ஆலோசனை கேட்க, அவர், இந்திரனைத்
திருப்புளிங்குடிக்கு அழைத்து வந்து பயப்பக்தியுடன் பூமிபாலரை வணங்கி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடச் செய்ததும் பிரம்மஹத்தி தோஷம்
இந்திரனைவிட்டு நீங்கியது. இந்த தீர்த்தத்துக்கும் இந்திர தீர்த்தம் என்ற பெயர் நிலைத்தது.

தனது சாபவிமோசனத்தால் மிகவும் மகிழ்ந்த இந்திரன். திருமாலுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் இங்கு மிகப் பெரிய யாகம் துவங்கினான்.
அப்போது அரக்கனுருவில் உள்ள யக்ஞசர்மா திருமாலைக் குறித்து உள்ளுருகி வேண்டி கடுந்தவம் புரிந்து கண்ணீர் சிந்தி நின்றான்.

அப்போது யாக குண்டலியில் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன் தனது கதையினால் அவ்வரக்கனை அடித்து வீழ்த்த அவன் சாப விமோசனம்
பெற்றான்.

மூலவர்-காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-  மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லியென்ற சிறிய உற்சவப் பிராட்டியுமுண்டு.
தீர்த்தம்-  இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்
விமானம்-  வேதசார விமானம்
காட்சி கண்டவர்கள்–   இந்திரன், நிர்ருதி, வருணன், யக்ஞ சர்மா.

பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய
காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது.
(பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்)

நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம்

சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு
ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.

இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய
(நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக்கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும்
கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்” என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள்.
ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி)
அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும்
கோரினார்)

————-

83. திருத்துலைவில்லி மங்கலம்

பிரம்மாண்ட புராணமே இதைப்பற்றியும் புகழ்கிறது. பாத்ம புராணத்தில் சிறு குறிப்புத் தென்படுகிறது. வடநூற்கள் “கேதார நிலையம்” என்று
இத்திருப்பதியைக் குறிக்கின்றது.

முன்னொரு காலத்தில் ஆத்ரேய கோத்திரத்தில் உதித்த சுப்ரபர் என்னும் முனிவர் திருமாலைக் குறித்துப் பெரும் யாகஞ் செய்ய பல
இடங்களிலும் முயன்றும், ஒரு இடத்திலும் தனது மனம் ஒருநிலைப்படாது. யாகமும் தொடர இயலாது, அலைந்து தேடுங்காலை புஷ்பங்களாலும் அழகிய சோலைகளாலும், இனிய கீதம் பாடும் பறவைகளாலும் சூழப்பட்ட இவ்விடத்தை தெரிவு செய்து, தம் யாகத்தை தொடங்க எத்தனித்தார்.

இவ்விடத்தில் யாகசாலை அமைக்க பூமியை உழுது சமப்படுத்த முனைந்து கொண்டிருக்கும்போது உழுதவிடத்தில் ஒளிபொருந்திய ஒரு
தராசையும் வில்லையுங்கண்டு. ஆச்சர்யத்துடன் அதைக் கையில் எடுத்ததும், இவை இரண்டும் இளம் வயதான ஒரு ஆணாகவும், பெண்ணாகவும் மாறி
சுப்ரபரை வணங்கி நின்றனர்.

வியப்புற்ற சப்ரபர் இத்தகு சாபம் விளைந்த காரணத்தை வினவ அவர்கள் கீழ்வருமாறு கூறினர்.

வில்லாயிருந்த அந்த ஆண்மகன் சுப்ரபரை நோக்கி சுவாமி, முன் பிறப்பில் வித்யாதரன் என்னும் தேவனாயிருந்த நான், அதோ அருகிலிருக்கும்
என் மனையாளுடன் வெகுவான காமத்திலீடுபட்டு இச் சோலை வந்து    மோகித்திருந்தேன். அப்போது ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த
குபேரனை நான் கண்டும் காணததுபோல் இருந்தேன். இதையறிந்த குபேரன் மிக்க சினங்கொண்டு எங்களிருவரையும் வில்லாகவும், தராசாகவும் மாறுமாறுசபித்தான்.

குபேரனின் பாதத்தில் வீழ்ந்து சாபவிமோசனம் வேண்டினேன். என்னை  மதியாதிருந்த உமக்கு இச்சாபம் செல்லும். சாப விமோசனத்தை நான்
கொடேன். பின்னொரு காலத்தில் சுப்ரபர் என்னும் முனிவர் யாகம் செய்ய இவ்விடத்தை தோண்டும் போது அவர் கரங்கள் பட்டதும் சாபம் விலகும்.
அதுவரை இப்பூமியில் அமிழ்ந்து கிடக்கவும் என்று கூறி செல்லலுற்றான்.

இதுவரை இங்கு அமிழ்ந்து கிடந்த நாங்கள் இன்று உங்கள் திருக்கரம் பட்டதும் மீண்டும் பழைய நிலை எய்தினோம் என்று கூறி தொழுது நின்றனர்.

முனிவர் அவர்களை வாழ்த்திவிட்டு, தம்யாகத்தை தொடங்கலானார்.

சுப்ரபர் யாகத்தை வெகு விமரிசையாக நடாத்தி திரண்டு வந்த யாகத்தின் பலனை “அவிர்ப்பாகமாக” தேவர்களுக்கும் கொடுத்தார். அவிர்ப்பாகம் தமக்கு
கிடைக்க காரணமாயிருந்த எம்பெருமானை தேவர்களும் சுப்ரபருடன் கூடித் தொழ திருமால் அப்போதே தோன்றி காட்சியளித்தார்.

அதுமுதல் இங்கு எழுந்தருளிய பிரானுக்குத் தேவப்பிரான் என்னும் திருநாமம் நிலைக்கலாயிற்று.

மூலவர்-  தேவப்பிரான் நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்-  உபயநாச்சியார்கள் (கருந்தடக்கண்ணி நாச்சியார்)
தீர்த்தம்-   தாமிரபரணி, வருணதீர்த்தம்
விமானம்-   குமுத விமானம்
காட்சி கண்டவர்கள்    இந்திரன், வாயு, வருணன் (அவிர்ப்பாகம் பெற்ற தேவர்கள்) சுப்ரபர்

இரட்டைத் திருப்பதிகள் என்றழைக்கப்படும் துலைவில்லி மங்கலத்தின் முதலாவது திருப்பதியான இந்த தேவப்பிரான் சன்னதி
தாமிரபரணி நதிக்கரையினிடையே அமைந்துள்ளது.
அரவிந்த லோசனப் பெருமாள் எழுந்தருளியுள்ள இரண்டாவது திருப்பதி இதிலிருந்து சுமார் அரை பர்லாங் தூரத்தில் தாமிரபரணியிலிருந்து
பிரியும் வாய்க்கால் கரையில் உள்ளது.

இவ்விரண்டுகோவில்களும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக கருதப்பட்டாலும் இரட்டை திருப்பதி என்று பெயர் பெற்றமையால் இரண்டு
பெருமாள்களின் பெயரையும் ஆழ்வார், தம் பாசுரங்களில் தனித்தனியே குறிப்பதாலும், நவதிருப்பதிகளில் இரண்டு திருப்பதியாகக் கொள்ளப்படுகிறது.

1. திருவைகுண்டம்
2. திருவரகுணமங்கை
3. திருப்புளிங்குடி
4. திருத்துலை வில்லிமங்கலம்
5. திருக்குளந்தை
6. திருக்கோளூர்
7. திருப்பேரை
8. திருக்குருகூர்

துலைவில்லி மங்கலமென்னும் இரட்டைத் திருப்பதியில் இரண்டாவதான ஸ்ரீ அரவிந்த லோசன சன்னதி

பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி உரைக்கிறது.
தேவப்பிரான் சன்னதியில் துலையும், வில்லும் சுவர்க்கம் பெற்றபின் இவ்விடத்தே பெரும் யாகஞ் செய்து முடித்த சுப்ரபர், தினந்தோறும் அருகில்
உள்ள பொய்கையிற் சென்று தூய்மையும், மணமும், பேரழகும் வாய்ந்த தாமரை மலர்களைக் கொய்து தேவப்பிரானுக்கு வழிபாடு செய்து வரலாயினர்.

தினந்தோறும் இத்தகைய அழகு மலர்களைக் கொணர்ந்து சுப்ரபர் பூஜை செய்வதைக்கண்ட பெருமான், இம்முனிவர் மலர் பறிக்கும் அழகையும்,
எங்கிருந்து இதனைக் கொணர்கிறார் என்றும் அறிய சுப்ரபரின் பின்னாலேயே வரலாயினர்.

பொய்கையில் தியானத்தோடு பூப்பறிக்கும் சுப்ரபரைக் கண்டு வியந்து பெருமாள் அங்கேயே (தாமிர பரணியின் வடகரையிலே) நின்றார்.
இத்திருக்கோலத்தைக் கண்ட சுப்ரபர் மிகவும் வியந்து இவ்வண்ணம் பின் தொடரக் காரணம் கேட்க, பெருமானும் பக்தியோடு நீர் செய்யும் தாமரைப்
புஷ்ப பூஜைக்கு உகந்தே இங்கே நின்றோம்.

தாமரை மலர்களை விரும்பி நான் இங்கு நின்றதால் அரவிந்த லோசனன் என்ற திரு நாமமே எனக்கு நிலைத்திடும். நீவிர் எப்போதும்
போன்று தேவப்பிரானோடு, எனக்கு சேர்த்து தாமரை மலர்களாலேயே அபிஷேகம் செய்யுங்கள். எவனொருவன் தாமரை மலர்களால் இங்கு என்னை
பூஜிக்கின்றானோ அவனது சகல பாவங்களையும் நான் போக்குகிறேன், என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இஃதிவ்வாறிருக்க, முனிவர்கள் நடத்தக்கூடிய யாகத்தின் அவிர்ப்பாகம் யாகத்தின் முடிவில் திரண்டுவரும் பலன்) தேவர்களுக்கு மட்டுமே கிடைத்து
வந்தது.-அப்போது அசுவினி தேவர்கள் என்னும் இருவர் பிரம்மனிடம் சென்று யாகவேதியில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தில் தமக்கும் பங்கு வேண்டுமென்று
கேட்டனர்.

பூமியில் வைத்தியர்கள் தர்மம் பிறழாமல் வைத்தியம் செய்து வருங்காலத்தில் அத்தர்மத்தின் பலன் அசுவினி தேவர்களிரு வருக்கும்
கிடைத்து வந்ததாம். பூவுலகில் வைத்தியர்கள் தர்மத்தினின்றும் பிறழ்ந்ததால் வைத்ய தர்மப்பலன் கிடைக்காததால் அவர்கள் சென்று பிரம்மனிடம்
முறையிட்டனர். (தேவலோகத்தில் அஸ்வினி தேவர்களிருவரும் வைத்தியத்திற்கு தலையாயவர்கள் என்பது புராணக்கருத்து)

பிரம்மன் அவ்விருவரையும் நோக்கி, தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்க வேண்டுமெனில் பூவுலகில் தாமிர பரணியின் வடகரையில் உள்ள
அரவிந்த லோசனப் பெருமாளை தாமரைப் பூக்களால் அர்ச்சித்து கடுந்தவம் மேற்கொள்ளுங்கள் என்று கூற அவ்விருவரும் அவ்விதமே ஆயிரம்
வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டனர்.

இவர்களின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் தாமரைப் பு ஷ்பங்களைக் கையில் ஏந்திய திருக்கோலத்தோடு காட்சி தந்து
அவ்விருவருக்கும் அவிர்ப்பாகம் பெறுவதற்கான சக்தியினையும் வரத்தினையும் அளித்தார்.
அசுவினி தேவர்கள் நீராடினமையால் அங்குள்ள பொய்கை நீர் அஸ்வினி தீர்த்தமாயிற்று.

மூலவர்-  ஸ்ரீஅரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்-  கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம்-    குமுத விமானம்
தீர்த்தம்-  அஸ்வினி தீர்த்தம்

காட்சி கண்டவர்கள்- அஸ்வினி, தேவர்கள், சுப்ரபர்

பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் சம்பந்தமாக கூறப்படும் இன்னொரு முக்கியமான கதையும் (வரலாறும்) உண்டு. கங்கை நதிக்கரையில்
உள்ள அகளங்கமென்னும் அக்ரஹாரத்தில் பரத்வாஜ கோத்திரத்தில் வந்த சத்யசீலர் என்பாருக்கு, வண்ணிசாரன், விபீதகன், சுவர்ணகேது என்னும்
மூன்று புத்திரர்கள் இருந்தனர்.
இவர்களில் விபீதகன் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு எவ்வித சிகிச்சையும் பலனளிக்காது துன்புற்று வந்தான். அவ்வமயம் அங்குவந்த
நாரதரைத் தொழுது விபீதகனுக்கு எவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று வினவினார். நாரதர் முப்பிறப்பில் இவன் தனது குருவின் பசுவைத்
திருடினான். குருவின் சாபத்தால் கைவிரல், கால் விரலில் உள்ள நகங்கள் எல்லாம் குறைந்து விகாரத்தை (குஷ்டத்தை) அடைந்துள்ளான்.
தாமிரபரணியின் வடகரையில் உள்ள அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள பெருமானை வழிபட்டால் குஷ்டம் நீங்கும் என்றார். பின்பு எல்லோரும்
அங்குவந்து பெருமாளைத் தரிசித்தனர். விபீதகன் அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.
வெகு காலம் அங்கேயே தங்கியிருந்து, இரண்டு ஸ்தலத்தின் பெருமாள்களுக்கும் எண்ணற்ற பணி விடைகள் செய்து இறுதியில் மோட்சம்
பெற்றான்.

———

84. திருக்குளந்தை

திருக்குளந்தை யென்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் எளிதில் விளங்கும்.

ஸ்ரீ பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றியும் கூறுகிறது.

இவ்விடம் ஒரு காலத்தில் தடாகவனம் என்றழைக்கப்பட்டது. அவ்விடத்து ஒரு ஸ்தலமும் இருந்தது. அவ்வனத்தில் வாழ்ந்து வந்த
வேதசாரன் என்னும் அந்தணன், தனது மனைவி குமுத வல்லியுடன் தனக்குப் புத்திரப்பேறு வேண்டுமென்று இந்த தடாகத்தில் உள்ள பொய்கையில் நீராடி
நாள் தோறும் பகவானை வேண்டிவந்தான்.
பெருமாளின் திருவருளால் ஒரு பெண் மகவு பிறக்க அதற்கு “கமலாவதி” என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்த்து வரலாயினர். தக்க பருவம் அடைந்த அவள் தான் மானிடரை மணந்து சாதாரண வாழ்க்கை வாழ மாட்டேன். மணந்தால் பகவானையே மணப்பேன் என்று கூறி கானகம் சென்று கடுந்தவமியற்றத் தொடங்கினாள்.

யார்சொல்லியும் கேளாது தவத்திலேயே லயித்துப்போன கமலாவதிக்கு முன் எம்பெருமான் தோன்றி, நின் கடுந்தவத்தை மெச்சினோம், வேண்டிய
வரங்கேள் என்றார். கமலாவதி தனது எண்ணத்தைத் தெரிவித்து மீண்டும் அதையே கேட்பாள் போன்று தவத்தினில் மூழ்க ஆரம்பித்தாள். இவள்
தவத்தை பெரிதும் மெச்சிய பகவான் தம் கௌஸ்துப மணியோடு அவளை ஆலிங்கனம் செய்து தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார். பாலிகை (கன்னிகை)
தவம் செய்த வனமாகையால் பாலிகாவனமாயிற்று.

தனது புதல்விக்கு கிடைத்த பெரும் பாக்கியத்தை நினைத்து பெருமிதம் அடைந்த வேதசாரன் அங்கெழுந்தருளிய பெருமான் மீது பெரிதும் பக்தி
கொண்டு தினந்தவறாது ஆராதனையில் ஈடுபட்டிருந்தார்.

இவ்விதமிருக்கையில் ஒரு நாள் குமுதவல்லி நீராடச் சென்றவிடத்து அஸ்மாசரன் என்னும் அரக்கன் அவளைக் கவர்ந்து சென்று இமயமலைக்
குகையில் சிறைவைத்தான். விஷயமறிந்த வேதசாரன் பூச நட்சத்திரம் கலந்த தைம் மாத பௌர்ணமியில் பெருமாளைக் குறித்து திருமஞ்சனம் செய்வித்து
தனது மனக் குறையை தெரிவித்து அருள் புரிய வேண்டி நின்றான்.

உடனே பெருமாள் கருட வாகனத்தின் மேலேறி இமயஞ் சென்று குமுதவல்லியை மீட்டு வந்தார். இதனை உணர்ந்த அஸ்மாசரன் பாலி காவனம்
வந்து பகவானுடன் கடும் யுத்தம் செய்தான். பகவான் அவனது இரு கால்களையும் பிடித்து தரையில் அடித்து அவன் மீது நின்று நர்த்தனம்
புரிந்தார்.

சோரனான (அஸ்மாசரன் மீது) நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமானுக்கு ஸோரநாதன் (ஸோர நாட்டியன்) என்ற திருநாமம் ஏற்பட்டது. தூய தமிழில்
மாயக் கூத்தன் என்றாயிற்று.

மூலவர்- சோர நாதன். ஸ்ரீனிவாஸன் என்று திருநாமமும் உண்டு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்
உற்சவர்–   மாயக்கூத்தன்
தாயார்-  குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி) அலமேலு மங்கைத் தாயார் என்ற இரண்டு உபய நாச்சியார்கள்

தீர்த்தம்-பெருங்குளம்
விமானம்-  ஆனந்த நிலய விமானம்
காட்சி கண்டவர்கள்–  பிரகஸ்பதி, வேதசாரன்

இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமான் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு “உற்சவராகவே” எழுந்தருளியுள்ளார்.

இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று
மணங்கொண்டாள். அதேபோல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார்.இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார்.

————

85. திருக்கோளுர்

பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது.

ஒன்பது வகையான நவநிதிகளுக்கும் எண்ணிலடங்காப் பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி (காப்பாளனாக) அளகா புரியிலிருந்து
அரசாண்டகுபேரன் சிறந்த சிவ பக்தனாயிருந்தான் ஒரு சமயம் அவன் சிவனை வழிபடக் கைலாயம் சென்றான். அப்போது சிவன் தனது பத்தினியான
உமையவளோடு அன்போடு பேசிக்கொண்டிருக்க உமைய வளின் அழகில் மயங்கி ஒற்றைக் கண்ணால் பார்த்தான் குபேரன்.

இதைப் பார்த்துவிட்ட உமையவள் மிக்க சினங்கொண்டு “நீ கெட்ட எண்ணத்துடன் பார்த்ததால் ஒரு கண்ணை இழப்பதுடன் உருவமும்
விகாரமடையக் கடவது” என்று சபித்து நவநிதிகளும் உன்னை விட்டகலக் கடவதென்றார்.

உடனே நவநிதிகளும் குபேரனை விட்டகன்று, தாங்கள் தஞ்சமடைவதற்குத் தகுந்த தலைவன் இல்லையென்றும், தம்மைக் காத்து
அபயம் அளிக்குமாறும், பொருனை நதிக்கரையில் நீராடித் திருமாலைத் துதிக்க, அப்பொருனைக் கரையிலே நவநிதிகளுக்கும் காட்சி கொடுத்து எம்பெருமான் அந்நிதிகளுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல அவைகளை அரவணைத்துப்பள்ளி கொண்டான்.

நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து, பாதுகாப்பளித்து அதன் மீது சயனங் கொண்டதால் “வைத்தமாநிதிப் பெருமாள்” என்ற திருநாமம்
இப்பெருமாளுக்கு உண்டாயிற்று. நிதிகள் எல்லாம் இங்கு தீர்த்தமாடியதால் இந்த தீர்த்தத்திற்கும் “நிதித் தீர்த்தம்” என்றே பெயர் உண்டானது.

முன்னொரு காலத்தில் தர்மத்தை (தர்ம தேவதையை) அதர்மம் தோற்கடித்தது. எங்கும் அதர்மம் பரவியது. தோற்றுப் போன தர்மம் இந்த
நிதி வனத்திற்கு வந்து இப்பெருமானை அண்டி தஞ்சம் அடைந்திருந்தது. அதர்மத்தினால் உண்டான தொல்லை தாங்க முடியாத தேவர்கள், தர்மம்
தஞ்சம் புக்கிருந்த இத்தலத்திற்கு வந்து சேர, அதை பின் தொடர்ந்து அதர்மமும் இங்கு வந்து சேர, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பெரும் யுத்தம்
நடந்து, இறுதியில் எம்பெருமானின் அருள்பெற்ற தர்மம் வென்றது.

இஃதிவ்வாறிருக்க, தன் தவறுணர்ந்த குபேரன் பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்புக் கோர, அதற்கவர் பார்வதியிடமே மன்னிப்புக்
கோருமென்று கூற, குபேரன் உமையவளின் பாதம் பணிந்து மன்னிப்புக் கோரினான்.

குபேரனை நோக்கிப் பார்வதி கூறுகிறாள். நான் சபித்ததைப் போலவேஉனக்கு இனிமேல் ஒரு கண்ணும் தெரியாது. உன் மேனியின் விகாரமும்
மறையாது. ஆனால் நீ இழந்த நவநிதியங்களை மட்டும் பெற்று வாழ்தற்கு ஒரு உபாயம் உண்டு. உன்னைவிட்டுப் பிரிந்த நவநிதிகள் தாமிரபரணி நதி
தென்கரையில் தர்மப் பிசுன ஷேத்திரத்தில் திருமாலைத் தஞ்சம்அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அங்கு
சென்று ஸ்ரீமந் நாராயணனைக் குறித்தே தவம் செய்து இழந்த நிதியினைப் பெறுக என்றாள்.

திருக்கோளூர் வந்து சேர்ந்த குபேரன், வைத்த மாநிதிப் பெருமாளைக் குறித்துப் பெருந்தவஞ் செய்து மன்றாடி நிற்க, ஒரு மாசி மாதம் சுக்லபட்ச
துவாதசியில் எம்பெருமான் காட்சி கொடுத்து, “உன் தவத்தை நான் மெச்சினேன். இருப்பினும் செல்வம் யாவும் உனக்கு இப்போதே தரமுடியாது.
கொஞ்சம் தருகிறேன் பெற்றுக்கொள்” என்று கொஞ்சம் செல்வத்தைத் தரஅதைப் பெற்ற குபேரன் “இத்தகு நிதியாகிலும் வைத்திருக்கப் பெற்றோமே
யென்று” எண்ணித் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

மூலவர்–நிஷேபவித்தன், வைத்தமா நிதிப் பெருமான் புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்–   குமுதவல்லி, கோளுர் வள்ளி

தீர்த்தம்-  குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் தாமிரபரணியாறு.
விமானம்-  ஸ்ரீ கர விமானம்
காட்சி கண்டவர்கள்  குபேரன், நவநிதிகள் மதுரகவியாழ்வார்.

பிரம்மாண்ட புராணத்திலேயே இதற்கொரு கதை பேசப்படுகிறது.
வியாச வம்சத்தில் வந்த தர்ம குப்தன் என்பவன் 8 ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று மிகுந்த
தரித்திரனாக ஆகி, வறுமையினின்றும் மீள முடியாத நிலையேற்பட தமது குலகுருவாகிய நர்மதா நதிக்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த பரத்வாஜ
முனிவரைச் சரணடைய, தமது ஞானக்கண்ணால் நடந்ததையறிந்து, தர்மகுப்தனை நோக்கி, முற்பிறவியில் பெருஞ் செல்வத்திற்கு அதிபதியான
ஒரு அந்தணனாகப் பிறந்த நீ, யாருக்கும் ஒரு தர்மமும் செய்யாது, பணத்தாசை பிடித்து அலைந்து திரிபவனாயிருந்தாய், உன் ஊர் அரசன்
உன்னிடம் வந்து உனக்குள்ள செல்வம் எவ்வளவு யென்று கேட்க, நீ ஒன்றுமில்லை என்று பொய் கூறினாய் இதனால் உன் செல்வம் முழுவதும்
கள்வர்களால் அபகரிக்கப்பட்டு, மன நோயால் பீடிக்கப்பட்டு இறந்தாய்.

பிராமணனாகவே இப்பிறவியில் பிறந்தாலும் உன் பழவினை உன்னைத் தொடர்கிறது. இதற்கு ஒரே மார்க்கம், நவநிதிகளும் சரணடைந்துள்ள,
திருக்கோளுர் வைத்தமாநிதியைத் தொழுதால் உனது சாபந் தீருமென்று கூறினார்.

தர்ம குப்தனும் அவ்விதமே வந்து (தன் குடும்பத்துடன்) வெகு காலம் இப்பெருமானைச் சேவித்து எண்ணற்ற பணிவிடைகளைச் செய்து
கொண்டிருக்க, ஒரு நாள் நீராடச் செல்லுங்காலை மாதனங் கண்டெடுத்து, மீளவும் பெருஞ் செல்வந்தனாகி நெடுங்காலம் சுகவாழ்வு வாழ்ந்திருந்தான்

குபேரனும், தர்ம குப்தனும் இழந்த செல்வத்தைப் பெற்றதால் இழந்த பொருளை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த திருத்தலமாக இது கருதப்படுகிறது.

இத்தலத்துப் பெருமாள் (வைத்த மாநிதிப் பெருமாள்) தலைக்கு மரக்கால் வைத்துப் படுத்தார் இதற்கு காரணம் இப்பெருமாள் செல்வத்தைப்
பாதுகாத்துச் செல்வமளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து கையில் அஞ்சனம், மை, போன்றன தடவி நிதி எங்கிருக்கிறது என்று
பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறுவர். மரக்கால் வைத்து எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்ய தேசமான திரு
ஆதனூரில் மட்டுமே.

இவ்வூரில் கல்வி கேள்விகளில் சிறந்த “விஷ்ணுநேசர்” என்ற முன்குடுமிச் சோழிய ஸ்ரீவைஷ்ணவர் வாழ்ந்து வந்தார். வைத்த மாநிதிப்
பெருமாளிடம் மாறாத அன்பு பூண்டிருந்த இவருக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று அவதரித்த தவப்புதல்வரே மதுர கவியாழ்வார் ஆவார்.

ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும். நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு
“அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம் என்று பெரியோர் கூறுவர்.

4. திருப்புளிங்குடி நிகழ்ச்சியைப் போலவே, இராமானுஜர் இவ்வூரை அணுகியதும், வைணவ இலச்சினையுடன் எதிர்ப்பட்ட ஒரு பெண்ணை
வணங்கி நீ யெங்கு நின்று புறப்பட்டாய் என்று கேட்க, திருக்கோளுரிலிருந்து விடை கொண்டேன் என்று அவள் சொல்லவும் அவளை நோக்கி, இராமானுஜர்
ஒருவா கூறை யெழுவருடுத்துக் காய் கிழங்கு சாப்பிட்டு, திண்ணமென்னிள மான்புகுமூர் திருக்கோளுரே என்று” எல்லோரும் புகும் ஊர் உனக்குப்
புறப்படும் ஊராயிற்றா என்றார்.
அதற்கவள் (இவ்வூரில் பிறந்து வடதேச யாத்திரை சென்று காய், கனி, கிழங்குகளைப் புசித்துவந்த மதுரகவியாழ்வார் ஜோதி தெரிந்து மீண்டும்
இவ்வூருக்கே வந்து நின்றதை மனதிற் கொண்டே இராமானுஜர் இங்ஙனம் கூறுகின்றாறெண்ணி) பல அருஞ்செயல்கள் செய்த அடியவர்களைப் போல
யானேதும் அருஞ்செயல் செய்தேனோ, முதல் புழுக்கைவயலில் கிடந்தென், வரப்பிலே கிடந்தென் என்று பதிலளிக்க, இதைக்கேட்ட இராமானுஜர் இவளதறிவு கண்டு வியந்து, இவளில்லத்தில் விருந்துண்டு சென்றார்.

———–

86. தென்திருப்பேரை

பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு
கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த
நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும் அழகும் தனக்கு வரவேண்டுமென்று வேண்டினாள்.

துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர்  வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி, எம்பெருமானின்
மடியைவிட்டு எழுந்திராமல் இருக்கவே, கடுஞ்சினங்கொண்ட துர்வாசர் பூமாதேவியை நோக்கி “நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய்” என்று சபிக்க
அதுகேட்ட பூமாதேவி தனது குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய நிலையில், தனது குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது “கரிய
நிறம் பெறும் காலம்” எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென் கரையில் உள்ள கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால்
உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.

இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம் சொல்ல இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.

துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி மாதம்
பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது, அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக்
கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர குண்டலங்களைத் திருமாலுக்கே உகந்தளித்தாள். அதனால் எம்பெருமானுக்கும் “மகர
நெடுங்குழைக் காதர்” என்ற திருநாமம் உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும் மத்ஸய தீர்த்தம் என்றே பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய
அழகுத்திருமேனியாக விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே மகர நெடுங்குழைக் காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச்
சம்மதித்தார்.

ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.

108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால் இத்தலத்தை தென்
திருப்பேரை என்று அழைத்தனர்.

மூலவர்- மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்-   குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்
விமானம்-   பத்ர விமானம்
தீர்த்தம்–  சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்

ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு திசை சென்று
வருணனுடன் போரிட்டு வருணனைத் தோற்கடித்தனர், தனது பாசத்தை (வருணனின் ஒருவகையான ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்றறியாது
திகைத்து தனது குருவான வியாழபகவானைச் சரணடைய, வருணனை நோக்கிய வியாழ பகவான் நீ ஒரு காலத்தில் மதியீனத்தால் என்னை அவமதித்ததால் உனக்கு இக்கதி ஏற்பட்டது.

இதிலிருந்து மீள்வதற்கு ஒரே உபாயம், எம்பெருமான் ஸ்ரீபேரை என்ற பூமிப்பிராட்டியுடன் மகரபூஷணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள
திருப்பேரை சென்று அப்பெருமானைக் குறித்துத் தவம் செய்வதொன்றே யாகு மென்றார்.

அவ்வாறே வருணன் கடுந்தவம் மேற்கொள்ள எம்பெருமான் தோன்றி, தமது திருக்கரத்தால் தீர்த்தத்தை எடுத்துக் கீழேவிட அது பாசம் ஆயிற்று.
வருணன் தனது பாசத்தையும், இழந்த நகரத்தையும் பெற்றான்.

இன்றும் ஆண்டுதோறும் வருணன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பங்குனி மாதம் பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு ஆராதனம் செய்து
வருவதாக ஐதீகம்.

இந்தக் கதை பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு பன்னிரன்டாண்டுகள் மழையின்றிப் போக அந்நாட்டரசன் இதற்கான
காரணத்தை தனது புரோகிதரிடம் வினவ, இப்பஞ்சத்திற்கு காரணம் தேவதா கோபமேயன்றி, நீ காரணமல்ல என்று கூறிய அரண்மனைப் புரோகிதர்,
மழைக்கு அதிபதியான வருண பகவானின் சாபம் நீங்கப் பெற்ற தென்திருப்பேரை எம்பெருமானைச் சென்று வழிபடுவதைத் தவிர வேறு
வழியில்லை என்று கூற மன்னனும் அவ்விதமே வந்து வழிபட்டு சிறப்பான பூஜைகள் செய்ய திரண்டுவந்த முகில்களால் நீர்மாரி பெய்து விதர்ப்ப நாட்டில்
பஞ்சம் ஒழிந்தது. இதனால் இப்பெருமானுக்கு நீர் முகில் வண்ணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இக்கதையும் பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

வருணன் மழைக்கதிபதி. நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்குரிய கிரகம். வருண சாபந் தீர்ந்ததால் இப்பெருமானை உகந்து சுக்கிரனும் இங்கு
வந்து தவம் செய்து திருமாலின் அருள் பெற்றான் எனவும் கூறுவர்.

————-

87. திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி

பிரம்மாண்ட புராணம் குருபரம்பரை, குருகாமான்மியம், திருப்பணிமாலை, வாகன கவி மாலை, கல்வெட்டுக்கள், மற்றும் செவிவழிச் செய்திகள் என்று
ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன.

இத்தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே மிகவும் பிரசித்திபெற்றதாகவே இருந்தது. குருகூர் என்று பெயர் வந்தமைக்குப் பல
காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம் செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்டிய போது, திருமால்
பிரம்மனை நோக்கி உன்னைப் படைப்பதற்கு முன்பே தாமிரபரணியாற்றங்கரையில் இனியதோர் இடத்தையும் படைத்து ஆதிப்பிரான்
என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். ஆதிபுரி என்று அதற்குப் பெயர். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும் வாவிகளும் சூழ்ந்த அந்த
இடத்தில் சென்று தவம் செய் என்றார். இதனை ஒன்றும் தேவும்.. என்ற ஆழ்வார் பாசுரத்தால் அறியலாம்.

திருமாலை ஆதிநாதனாகக் கொண்டு கடுந்தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக வந்து உபதேசித்ததால் மிக மகிழ்ந்த பிரம்மன்
குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன் நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்றே பெயர் விளங்க வேண்டுமென பிரம்மன் வேண்டிக்கொண்டான் அதுமுதல் குருகூர் ஆயிற்று.

நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வள நாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச்
தலைநகராகக்கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. குருகாகிய சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும்
குருகூர் ஆயிற்றென்பர்.

நம்மாழ்வாரின் அவதார மகிமையால்தான் ஆழ்வார் திரு நகரியாயிற்று.

சுரக்குந்திருவும் வறுமையுந் தீரும் தொடக்குவிட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் கானும் கயல் குதிப்ப
திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து
பரக்கும் பழன வயற்குருகூர் வளம் பாடுமினே--கம்பரும் தமது சடகோபரந்தாதி

இந்த தலத்திற்கு தாந்த ஷேத்ரம், வராஹ ஷேத்ரம், சேஷஷேத்ரம், தீர்த்த ஷேத்ரம் என்று பல பெயர்களுண்டு.

தாந்த ஷேத்ரம் (புராண வரலாறு)

சாளக்கிராமத்தில் வேதம் பயின்ற அந்தணச் சிறுவர்களில் “மந்தன்” என்பவன் சரிவர வேதம் பயிலாதது மட்டுமன்றி வேதத்தை இகழ்ந்துரைக்கவும்
பழிச்சொல் பேசவும் செய்யலானான். இதனால் வெகுண்ட அவனது ஆசிரியர் நீ இழிஞனாய் மறுபிறப்பில் இழி குலத்தில் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். ஆனால் மந்தன் சற்றும் மனந்தளராது அங்கிருந்த விஷ்ணு கோவில்களில் புல்லை செதுக்கி சுத்தப்படுத்திவந்தான்.

இவனது கைங்கர்யத்தால் மனமகிழ்ந்த மகாவிஷ்ணு இவனை ஆட்கொள்ள நினைத்தார். தனது அந்திமகாலத்தில் பூதவுடல் நீத்த மந்தன்
மறுபிறவியில் தாந்தன் என்றபெயரில் கீழ்க்குலத்தில் பிறந்து நல்ல ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கி நல்லோர் வழிகாட்ட விந்திய மலைக்கு வந்தான். அங்கு விண்ணில் பேரொளி தோன்ற அதைத் தொடர்ந்து தண்பொருணல் ஆற்றங் கரையில் உள்ள சங்கணித்துறைக்கு வந்து குருகூர் அடைந்து ஆதிநாதனை வழிபட்டுவந்தான்.

அங்கிருந்த அந்தணரும் திருமாலின் அருள்பெற வழிபாடியற்றியவர்களும் இவன் கீழ்க்குலத்தான் என்று கருதி வெறுத்து ஒதுக்க
தாந்தன் அங்கிருந்து வடகிழக்கே சென்று கூப்பிடு தூரத்தில் பொருணலின் வடகரையில் ஆதிநாத வேதியை அமைத்து வழிபட்டான்.

திடீரென்று தாந்தனை வெறுத்தொதுக்கிய அந்தணர்கட்கு கண்தெரியாது போகவே இதற்கு யாது காரணமென அவர்கள் பெருமாளை இறைஞ்சி நிற்க
பரமபக்தனான தாந்தனை வெறுத்தற்கு இதுவே தண்டனை யென்றும் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசரீரியாய் ஒளியுடன்
ஒரு சப்தம் கேட்கவே அனைவரும் அப்படியே சென்று தாந்தன் இருப்பிடம் அடைந்ததும் கண்ணொளி பெற்றனர்.

தாந்தனுக்குத் தம் தேவியோடு காட்சியளித்து ஆட்கொண்டார் பகவான். இன்றும் இங்குள்ள அர்த்த மண்டபத்தில் முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவன் ஆதிநாதனை வழிபட்ட ஸ்தலம் அப்பன் கோவில் என்று வழங்கி வருகிறது. இதைச் செம்பொன் மாடத் திருக்குருகூர்
என்றும் வழங்குவர். இவன் மகத்துவத்தால் இத்தலம் தாந்த ஷேத்ரமென்று புராணங்களில் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.

சங்கன் வீடுபெற்றது.-கொலைத் தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் வேடன் ஒருவன் விந்திய
மலையில் தாந்தன் தங்கியிருந்த ஆலமரத்தடியில் கொஞ்சநேரம் வாசம் தங்கியதால் மறுபிறப்பில் சங்கன் என்னும் முனிவனாகப் பிறந்து கடுந்தவம்
செய்து கொண்டிருந்தான். அப்போது அங்குவந்த நாரதர் இந்தக் கடுந்தவத்தின் காரணத்தை வினவ, “நான் எட்டுத் திக்கும் காவல் புரியும்
காவலர்களில் ஒருவனாக ஆவதன் பொருட்டே இந்த தவத்தை மேற்கொண்டுள்ளேன்” என்று கூற. நாரதர் அவனை நோக்கி, அதைவிட
மேலான பதமளிக்கும் நாராயணனைக் குறித்து தவமிருந்து பிறவா நிலைபெறுவாய் என்று தெரிவித்தார். அதற்கு நான் என்ன செய்ய
வேண்டுமென சங்கன் வினவ நீ இப்போது தாங்கியிருக்கும் இதே பெயரைக்கொண்ட சங்காக உவர்க்கடலில் பிறந்து தண்பொருநல் நதிகடலில்
கலக்கும் இடத்திலிருந்து ஒரு காத தூரத்தில் உள்ள குருகூரில் ஏறி ஆதிநாத வேதியை 1000 ஆண்டுகள் சூழவந்து அவன் அருள் வாய்க்கப் பெறுவாயாக
என்று வாழ்த்தியருளினார்.

அப்படியே சங்கனும் தன் நோன்பின் வலிமையால் சங்காகி தாமிரபரணி நதிவழிவந்து வடகரையில் உள்ள திருப்பதியைக் குருகூர் என்று எண்ணி
வழிபட மீண்டும் அங்குவந்த நாரதமுனிவர் இது தாந்தன் வழிபட்ட இடமென்றும் சற்று தெற்கே தள்ளியிருப்பது தான் ஆதிநாதர் கோவில் என்றும் எடுத்துரைத்து தினந்தோறும் பகலில் வந்து ஆதிநாதரை பூஜித்து இரவில் கடலிற் சென்று சங்காக வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான். ஒருநாள் இந்த சங்கவரசன் தனது இனங்களுடன் வந்து கொண்டிருக்கும் போது ஒரு திமிங்கலம் எதிர்ப்பட்டுச் சங்கங்கள் வராது தடுக்கவே, சங்கன் ஆதிநாதரை
மனமுருகி வேண்ட ஒரு மானிடன் கடலில் தோன்றி அந்தத் திமிங்கலத்தை விழுங்கிச் சென்றான்.

இதன்பின் எவ்வித தடையுமின்றி சங்கன் வந்து சென்று 1000 ஆண்டுகள் கழியவே எம்பெருமான் கருட வாகனத்தில் தமது தேவியருடன்
காட்சி கொடுத்து சங்கனின் தவத்தை மெச்சி சங்கனுக்கும் உடனிருந்த சங்கங்களுக்கும் மோட்சம் நல்கினார்.
சங்கினங்களுடன் சங்கன் ஏறிவந்த துறைக்கு “திருச்சங்கணித்துறை” என்று இன்றும் பெயர் வழங்குகிறது.

சேஷ ஷேத்திரம்-இராமவதாரம் முடிவதற்கு மூன்று நாள் இருக்கும்போது பெருமானைப் பார்க்க எமதர்மராஜன் வந்தான். அப்போது இராமர் இலக்குவனை நோக்கி தம்பி, யாரையும் இனிமேல் உள்ளே அனுமதியாதே என்றார். சில நாழிகை கழித்து கடைசியாக ஒரு முறை இராமனைக் கண்குளிரக் கண்டுவிடுவோமென துர்வாச முனிவர் வந்தார். இவரைத் தடுத்தால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகநேரிடும் என்றெண்ணி இலக்குமணன் தடுக்கவில்லை. துர்வாசரை உபசரித்து அனுப்பிவைத்த ராமன் என் ஆணையை மீறி மரமாக நின்றமையால் நீ மரமாக இருக்கக் கடவாய் என்றார். இலக்குமணன் இராமனின் இரண்டு கால்களையும் பற்றிக்கொண்டு நான் நின்னைவிட்டு பிரிந்திருப்பது இயல்போ அண்ணா, இது உமக்கே தெரியாதோ என்று மண்டியிட்டு நின்றான்.

இலக்குமனை எடுத்து ஆரத் தழுவிய இராமன் நான் இந்த இராமாவதாரத்தில் சீதையை காட்டில் வாழச் செய்த பாவத்தை போக்க 16
ஆண்டுகள் அசையா பிம்பமாய் பிறக்க வேண்டியுள்ளது. அப்போதும் நான் உன் மடி மீது அமர்ந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான் உன்னை மரமாக நிற்கச்
சொன்னேன். அந்த மரப்பொந்தில் நான் வந்து அமர்வேன் என்றார்.

இங்கிருந்து நீ புறப்பட்டு தாமிரபரணியின் தென்கரையில் உள்ள வராக ஷேத்திரத்தை அடைந்து ஒரு புளியமரமாக மாறப் போகிறாய். இன்னும்
கொஞ்சகாலத்தில் காசிப முனிவர் காரி என்ற பெயரில் அங்கு குறுநில மன்னராகப் பிறப்பார். அவரது மனைவியான ஆத்மவிதி என்பாளும் உடைய நங்கை என்ற பெயரில் பிறந்து இருவரும் புத்திரப்பேறு வேண்டி குருகூர்வந்து விரதம் இருக்கப் போகிறார்கள். அவர்களின் புத்திரனாக நான் அவதரிக்க போவதன் காரணம், துவாபரயுகத்தில் கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவரும், தேவகியும் தமக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னை நோக்கிமோட்சம் வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் சித்திக்கும் என்று நான் ஏற்கனவே வரம் கொடுத்துள்ளேன்.
அவர்களே தற்போது புத்திரப்பேறுவேண்டி நிற்பர். அவர்கட்குப் புத்திரனாக அவதரித்ததும் நான் மிக உகந்த ஆதிநாதன் திருத்தலத்தில் என்னை
வந்துவிட்டவுடன் நான் தவழ்ந்துவந்து நினது மடிமேல் ஏறி 16 ஆண்டுகள் யோக நிஷ்டையில் அமர்ந்து அதன்பின் வேதம் தமிழ்செய்து நாத்திகமழித்து
ஆத்திகம் வளர வழிகாட்டுவோம் என்று சொல்லி தனது விரலில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொடுத்து இது எந்த இடத்தில் உனது கையை
விட்டு நழுவுகிறதோ அந்த இடத்தில் புளியமரமாக நில் என்று ஆசீர்வதித்து அனுப்பினார். ஆதிசேடனான இலக்குமணனே இங்கு புளியமரமாக
எழுந்தருளியிருப்பதால் இதற்கு சேஷ ஷேத்திரம் என்றும் பெயர்.

வராஹ ஷேத்திரம்-வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ நாராயணன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சிகொடுத்த திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.

தீர்த்த ஷேத்திரம்-சங்கன் முக்தி பெற்றதாலும், பெரும் ஞானிகளும் தபசிகளும் இந்த பொருநல்லாற்றில் அவதரித்ததாலும் முக்தியளிக்கும் ஸ்தலங்கள் இவ்வாற்றின் கரை மருங்கு அமைந்திருப்பதாலும் இதற்கு தீர்த்த ஷேத்திரம் என்று பெயர்.

இவ்விதம் ஆதியில் தோன்றியதால் “ஆதிஷேத்திரம்” என்றும், வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும் ஆயிரம் தலை
கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும், சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய
ஊராகையால் “தீர்த்த சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம் நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த
குருகூரை “பஞ்சமஹா ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார்.

மூலவர்–ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்து நின்ற பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-  ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி என்று இரண்டு நாச்சியார்கள். இருவருக்கும் தனித்தனியே கோவில்கள்.
தீர்த்தம்-   தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,
விமானம்-  கோவிந்த விமானம்.
காட்சி கண்டவர்கள்–  பிரம்மா, நம்மாழ்வார், சங்கன், தாந்தன், ரிஷிகள், மதுரகவியாழ்வார்.

ஆதிநாதர் கோவில் ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்தது. பின்னர் கோவிலையும் ஊரையும் பெரிய தாக்கும்
பொருட்டு வடக்கே கரையை தள்ளி வைத்து அலகல்லும் படித்துறையும் கட்டினர். ஸ்ரீ ஆதிநாதர் கோவிலும் புளியமரமும் அவற்றை ஒட்டி இருந்தன.
அப்புளி இன்றும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற பழமொழிக் கொப்ப பல பொந்துகளுடன் முதிர்ந்துள்ளது: இன்றும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிடிக்காத
காரியங்கள் இந்த தலத்தில் நடந்தால் இப்புளிய மரத்திலிருந்து நிணநீர் வடிவது கண்கூடு.

நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது போல் திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வாருடன் உறங்காப்புளி தொடர்பு
கொண்டு விட்டது.

ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து வந்து இந்தப் புளியமரத்தின்
பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழி மலர்ந்தருளினார். வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக
நம்மாழ்வார் வடித்துக்கொடுத்த இடம்தான், இது,

ஸ்ரீராமன் மட்டும் ஆதிசேடன் மடியில் அமர்ந்தால் போதுமா, அர்ச்சாவதார மூர்த்திகளான தாங்களும் அமர வேண்டாமோ என்று நினைத்து
பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக,
எம்மைப்பாடுக என்று நான் முந்தி நீ முந்தி என்று நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக ஐதீகம்.

ஸ்ரீ நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது இந்தப் புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய ஸ்தலங்கட்கு பாசுரம்
அருளினார்.

இத்தலத்திற்கு அருகாமையிலமைந்த திருக்கோளுரில் பிறந்த மதுரகவியாழ்வார் வடநாட்டிற்கு யாத்திரை சென்றபோது திடீரென்று
அவருக்குத் தென்திசையில் ஒரு ஜோதி தோன்றி அவரைக் கவர்ந்திழுக்க இது விந்திய மலையில் தோன்றக் கூடுமென நினைத்த அவர் அங்குவந்து
கண்டால் மேலும் தெற்கே தள்ளித் தெரிய இறுதியில் இவ்விடம் வந்து நம்மாழ்வாரின் அவதார மேன்மையைத் தெரிந்து வேறொன்றும் நானறியேன்”
என்று நம்மாழ்வாருக்கு அடிபணிந்து உய்தலே தொழிலெனக் கொண்டு அவரால் மொழியப் பட்ட திருவாய் மொழியினை ஏட்டில் எழுத லுற்றார்.

நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை தொகுக்க வந்த நாதமுனிகள் மதுரகவியின் வம்சத்தாரிடம் கண்ணி நுன் சிறுத்தாம்மைப் பெற்று அதை
பன்னீராயிரம் முறை ஜெபித்து ஸ்ரீநம்மாழ்வாரே பிரத்யட்சமாகி ஒரு திரையிட்டு அதனுள் அமர்ந்து கொண்டு நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனியே
அவற்றை எழுதி தமிழன்னைக்கு பக்தி அணிகலனாகச் சூட்டினார்.

இவ்வூரில் வடகரையில் உள்ள காந்திஸ்வரத்தில் கருவூர்ச் சித்தர் என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு நாய் இருந்தது. அது
தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து ஸ்ரீ வைணவர்கள் உணவருந்தி விட்டு எறிந்த எச்சில் இலையில் உள்ள மீத உணவை உண்டுவந்தது.

ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு நதியைக் கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு அதனின்றும் மீள முடியாமல்
உயிர் துறக்க நேர்ந்தது. அது உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம் வெடித்து மாபெரும் ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது.
இத்தகைய பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார்

வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே”–என்று பாடினார்

ஒரு சமயம் இத்தலத்தில் யானை ஒன்றும் வேடன் ஒருவனும் பொருத இருவரும் மாண்டனர். இருவருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்
போதே எமதூதர்களும், விஷ்ணு தூதர்களும் வந்து சேர்ந்தனர். இருவரும் இறந்ததும், இத்தலத்தில் இறந்த ஒரே காரணத்திற்காக அவர்களை விஷ்ணு
தூதர்கள் அழைத்துச் சென்றனர். இத்தலத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை விளக்கும் சிற்பங்கள் தீட்டப்பட்டுள்ளன. குருகா
மாலை என்னும் நாலும் இந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது.-செஞ்சர நாணிட்ட சிலைவேடனும் பொருகைக் குஞ்சரமும் வான்சேர் குருகை”

அந்தமில்லா மறையாயிரத் தாழ்ந்த வரும்பொருளைச் செந்தமிழாகத்
திருத்திய வேணி தேவர்கள் தத்தம்
விழாவு அழகு மென்னா தமிழார் கவியின் பந்தம்
விழாவொழுகும் குருகூர் வந்த பண்ணவனே”-சடகோபர் அந்தாதி

இந்திரன் தனது மனைவியுடன் மதுவில் மாந்தி இன்பம் நுகரும் போது அவனைக் காணவந்த காசிப முனிவரைக் கண்டும் காணாதது
போலிருக்க இதனால் சினமுற்ற காசிபர் “உனது இளமையில் திமிராலும், செல்வச் செருக்காலும் எம்மை மதியாதிருந்தமையால் நீ இளமை இழந்து
மூப்பாவதுடன் ஐஸ்வரியமும் இழக்கக் கடவாய் என்று சபித்தார். இதனால் துடித்த இந்திரன் சாப விமோசனம் வேண்டி மன்றாடினான். இவனை நோக்கிய
காசிபர், தாமிரபரணி யாற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆதிப்பிரானைக்குறித்து தவமிருந்து சாபம் போக்கிக் கொள் என்று சொல்ல இந்திரனும்
இவ்விடம் வந்து தவமிருந்து திருமால் அருளுக்கு உரியவனாகி சாப விமோசனம் பெற்றான். நம்மாழ்வார் தம் பாசுரத்தில் “சிரங்களால் அமரர்
வணங்கும் திருக்குருகூரதனுள்” என்று குறிப்பிடுகிறார்.

இவ்விடத்தில் இருக்கும் புளியமரத்தில் பகவான் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால் லட்சுமி தேவி பெருமானை நாடிவந்த காலத்தில்
லட்சுமி தேவியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டதாக ஐதீகம்.

இராமானுஜர் இவ்வூருக்கு எழுந்தருளினார். இராமானுஜர் இந்த ஊருக்கு வெகுதொலைவில் வரும்போதே தாமிரபரணி நதிக்கரையில் இத்தலம் காட்சியளிக்க மிகவும் உணர்ச்சி வசப்பட்டு,

இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்— என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இராமானுஜர் ஆழ்வார் திருநகரியைnபரமபதத்து எல்லை என்கிறார். இதுபரமபதத்து எல்லையாகின்றது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டமாகிறது.

ஆழ்வார் தங்கித்தவம் செய்த புளியமரம் 7 கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த பகுதிக்கு ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் என்பதே
பெயர். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வரை இப்பெயரே பிரசித்தமாயிருந்தது.

இங்கு தெற்கு மாடத் தெருவில் கீழ்புரம் திருவேங்கிட முடையான் சன்னதியும், மேல்புரம் திருவரங்க நாதன் கோவிலும், வடக்கு மாடத்
தெருவின் மத்தியில் பிள்ளைலோகாச்சாரியர், அழகிய தேசிகர், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.

எம்பெருமானார் – ஜீயர் இங்கு எழுந்தருளியுள்ளார். அவருக்குத் தனி மடம் உண்டு.

இங்குள்ள நம்மாழ்வார் விக்ரஹம் எந்தவிதமான உலோகத்தாலும் செய்யப்பட்டதன்று. தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி அதில் ஆழ்வார் தமது
சக்தியை பிரயோகித்துள்ளார். எனவே பார்ப்பதற்கே பேரதிசயமாக தோன்றும் காட்சி
இதுவாகும்.

இங்குள்ள திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் மிகவும் வேலைத்திறம் கொண்டவை.

இந்தக் கோவிலில் மிகவும் அருமையான வேலைப் பாடமைந்த கல்நாதஸ்வரம் ஒன்றுள்ளது. இது கருங்கல்லில் குடைந்த அதிசய
இசைக்கருவியானாலும் மரத்தால் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது.
இது நீளம் 1 அடி மேல்ப்பாகம் 1/4 அங்குலம். அடிப்பாகம் 1 அங்குலம் குறுக்களவுடையது. இதனடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது.
இது இந்தக் கோவிலில் பரத நாட்டியம் நடைபெறும் பொழுது வாசிப்பதற்கு பயன்பட்டதாகத் தெரிகிறது. இது சுமார் 350 வருடத்திற்கு முன்னால்
கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயரும் உண்டு.

இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு பெரிய திருமேனியுடைய இந்த மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்று இங்கும் அரையர் சேவை உண்டு. திருமஞ்சனத்தின்போது பிரபந்தங்களையும், புருஷஸு க்தத்தையும் தாளம்
போட்டுக்கொண்டே படிக்கும் முறை இங்கு இன்றும் வழக்கில் உண்டு.

1991இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும் சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”- என்று வள்ளுவர் நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து கூறியதாகச்
சொல்லப்படுகிறது.

———–

88. ஸ்ரீவில்லிபுத்தூர்

வராஹ ஷேத்திரம்-வராஹ புராணத்தின் ரகஸ்ய காண்டத்தில் 9 அத்தியாயங்களில் இத்தல வரலாறு பின்வருமாறு பேசப்பட்டுள்ளது.
எம்பெருமான் வராஹ ரூபியாய் பிராட்டியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு நம்பாடுவான் போன்ற பக்தர்களின் கதையை இவ்விடத்தில்
பிராட்டிக்கு கூறியதாக ஐதீகம். எனவே இதனை “வராஹ ஷேத்ரம்” என்றே குறிப்பிடுகின்றன.

முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே நாடெங்கும் பரவியிருந்தது. அப்போது தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்த தலங்கள்
திருமலை, திருக்கடன் மல்லை, திருவிட வெந்தை, தஞ்சை மாமணிக் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுஷ்ணம் போன்றன.

ஒரு காலத்தில் “சுதபா” என்னும் முனிவர் திருமாலிருஞ் சோலையில் தெளிவிசும்பு பெற தவமிருக்கும் கால் துர்வாச முனிவர் தமது சீடர்களுடன்
அவரைக் காண வந்து வெகுநேரம் அவரது குடிலில் காத்திருந்தார். ஆனால் நீராடுவதில் விருப்பம் கொண்டு ஜலக்கிரீடையில் ஈடுபட்டவராக
தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இருந்தார். துர்வாசரின் சினம் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெகுநேரம் கழித்து வந்த சுதபா முனிவரை
வெகுண்டு நோக்கிய துர்வாசர், நீர் யாம் வந்திருப்பதை அறிந்தும் எம்மை மதியாது தண்ணீருக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால் “எப்போதும்
நீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கும் மண்டுகமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

தமது நிலையுணர்ந்த சுதாப முனிவர் தம்மை மன்னித் தருளும்படி மன்றாடி வேண்டினார். அதற்கு அவர் வராஹ ஷேத்திரத்திற்கு அருகில்
தருமாத்தரி என்றொரு மலையுள்ளது. அதற்கருகில் பிரவாஹித்துக் கொண்டிருக்கும் புண்ணியநதி யொன்றுள்ளது. எண்ணற்ற ரிஷிகள் அங்கு
தவஞ்செய்து அந்நதியில் நீராடிய மாத்திரத்தில் சாபந் தீர்ந்து தெளிவிசும்பும் பெற்றுள்ளனர். அவ்வருவியில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும்
என்று துர்வாசர் கூறவே, அவ்வருவியில், யான் தெளிவிசும்பு பெற விரும்பி தவம் மேற்கொண்ட திருமாலிருஞ் சோலையானையே அங்கு காணவேண்டும்
என்று வேண்ட அதுவும் பலிக்குமென்றார். துர்வாசரின் சாபம் பலிப்பதற்கான ஒரு முகூர்த்த நேரம் ஆவதற்குள் தம் தபோ பலத்தால் ஆகாய மார்க்கத்தில்
பறந்து அந்நதியில் (நூபுர கங்கையில்) நீராடினவுடன் சாபவிமோசனம் பெற்று திருமாலிருஞ்சோலை சுந்தர ராஜனையே தியானம் பண்ண அவரும்
பிரத்யட்சமானார். இவ்வாறு திருமாலிருஞ்சோலை எழிலழகன் இங்கு வந்து குடிகொண்டார். இஃது வராஹ ஷேத்திரம் எனப் பெயர் விளங்கப்பட்ட
காலம், காலவரைக்கு உட்படாத முன்னொரு யுகத்தில் நடந்ததாகும்.

வடேசுபுரம்– மண்டுகர் தவஞ்செய்த இவ்வனத்தில் சிலயாண்டுகள் கழித்து எண்ணற்ற ரிஷிகளும் இத்தலத்தின் பேற்றையெண்ணி இங்குவந்து தவஞ் செய்யலாயினர். இது போழ்து இப்பகுதி சம்பகாரண்யம் என்ற பெயரோடு விளங்கியது.-அவ்வமயம் காலநேமி என்னும் அரக்கன் இங்கு தவஞ்செய்த முனிவர்கட்குத் தீரா இடும்பை விளைவித்து இந்திர லோகத்தையும் துன்புறுத்தினான்.
எல்லோரும் சென்று இவ்வரக்கனைக் கொல்ல வேண்டுமென்று மஹா விஷ்ணுவை வேண்ட காலம் வரும்போது
அவனையழிப்போம் என்று மஹாவிஷ்ணு கூற இறுதியில் அவ்வரக்கனின் தொல்லைகள் அதிகமாக விஷ்ணு அங்கே தோன்றி சக்ராயுதத்தை ஏவினான்.
அவனைத் துண்டு துண்டாக்கிய சக்ராயுதம் அப்பாபத்தைப் போக்கித் தன்னைச் சுத்தப்படுத்த நினைத்த மாத்திரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி
ஆகிய நதிகளை நினைக்க உடனே அவர்களும் வந்து புனிதப்படுத்தினர்.
சக்ராயுதத்தை புனிதப்படுத்திய மூன்று நதிகளும் எம்பெருமானை இவ்விடத்திலேயே இருந்து காட்சியருளவேண்டுமென்று கேட்க, அவர் தமக்கு
மிகவும் ரம்யமான ஸ்தலம் இதுதானென்றும் இப்புரிக்கு வடேசுபுர மென்றும், இங்கிருக்கும் எனக்கு வடமஹாதாமா வென்றும் (வடபெருங்கோயிலுடையான்) என்றும் பெயர் விளங்கும். யான் இங்கு நித்யவாஸம் பண்ணுவேன். நீங்கள்
மூவரும் உம்மில் ஒரு சக்தியை பிரித்து இங்கு தடாகங்களாக மாற்றிவிட்டுச் செல்லுங்கள், கலியுகத்தில் இச்சேஷத்ரம் மிகப்புகழையடையும் என்றும் கூறி
திருநாடு புக்கார்.

வில்லிபுத்தூர்–இஃதிவ்வாறிருக்க கங்கை கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்களில் சரப முனிவர் என்பவர் தமது பிராப்தகர்மத்தினால் வேடனாய் வந்து பிறந்து அப்போதும் தமது பூர்வ ஞான பலத்தால் தவமியற்றும் முனிவர்களை மறைந்து நின்று தாக்க, இதுகண்ட முனிவர்கள் இவனை
விரட்டிக் கொல்ல நினைக்க அவன் தனது குருவை அடைந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்ல அவர் தமது ஞான திருஷ்டியால் இவர் மஹா
ஞானியென்றுணர்ந்து இவருக்குத் தீங்கு இழைக்கக் கூடாதெனப் பணித்து, அவரைச் சமாதானப்படுத்தி உம்மைக் கொல்ல வந்த இவ்விருவரும் வராஹ
ஷேத்ரத்தில் மன்னர்களாய்ப் பிறப்பர். அவ்வாறு பிறந்து வில்லன், கண்டன் என்றும் பெயர்பெற்று வேட்டைக்கு வரும் தருவாயில் ஒரு புலியைத் துரத்திக்
கொண்டு வரும் போது இருவரும் தனித்தனியே புலியை விரட்ட காட்டிற்குள் பிரிய நேரிட்டு, புலியைத் துரத்தி சென்ற கண்டன் அதனோடு பொருது மடிய,
மடியும் தருவாயில் நாராயண மந்திரத்தைச் சொல்லி மோட்சம் பெற்றான்:
அவனைத் தேடி வந்த வில்லி பல இடங்களிலும் அலைந்து கண்டனைக் காண முடியாமல் அயர்ந்து தூங்க அவன் கனவில் வந்த பெருமாள் கண்டன்
இருக்குமிடத்தை தெரிவித்து அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை செய்துவிட்டு இக்காட்டையழித்து ஒரு திருநகரியை உண்டாக்க, அதுவும் நின் பெயரால் வில்லிபுத்தூர் என அழைக்கப்படும் என்று சொல்ல அவனும் அவ்விதமே செய்து இந்த வில்லிபுத்தூரை உருவாக்கினான்.

எம்பெருமான் (வராஹ ரூபியாய் தான் இருந்த போது பிராட்டி வேண்டியபடி) திருமகள் ஆண்டாளாக அவதரிக்கும் காலம்
நெருங்குவதையெண்ணி தனது புள்ளரையனாகிய கருடனைப் பார்த்து வில்லிபுத்தூரில் வாசம் செய்யும் மூங்கில் குடி என்னும் வம்சத்திலிருக்கும்
முகுந்தர் என்பவருக்கு 4வது புத்திரனாக விஷ்ணுசித்தர் என்ற பெயரில் அவதரிக்க கடவாய் என்ன அவ்விதமே அவதரித்து, விஷ்ணு சித்தன் என்ற
பெயர் பூண்டு, திருமால் மீது மிக்க பக்தி கொண்டு நித்ய கைங்கர்யங்களைச் செய்து இறைவனுக்குப் பாமாலையும் பூமாலையும் சூட்டி வருங்காலையில்
மதுரையை ஆண்ட வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் மறுமைப் பேற்றில் பேரவா கொண்டவனாக பல மதங்களையும் பற்றி ஆராய்ந்து வருங்காலையில் எது உண்மையிலேயே மோட்சம் கொடுக்க வல்லதென வினவ பற்பலரும் பற்பல விதமாய்ச் சொல்ல இறுதியிலே சகல மதத்தாரையுமழைத்து மோட்சம் தரத்தக்க மதம் (மார்க்கம்) எதுவென்று நிர்ணயஞ் செய்ய ஒரு போட்டியொன்று வைத்தான். மந்திரத்தால் செய்யப்பட்ட பொற்கிழியொன்றைக் கட்டுவித்து சகல மதத்தாரையும் அழைத்து தத்தம் மதமே சிறந்ததென வாதிடச் சொல்லி, யாருடைய மதம் சிறந்தது (மோட்சம் தரத்தக்க வல்லது) என்று நிருபிக்கும் தருவாயில் பொற்கிழி தானே அறுபட்டு விழ வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய எண்ணற்ற மதத்தினரும் வந்து வாதம் பல புரிந்து வருங்காலை, விஷ்ணுசித்தன் கனவிலே தோன்றிய எம்பெருமான் அவரைச் சென்று வாதிடுமாறு சொல்ல அவ்விதமே அவரும் செய்து
பரதத்துவம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கவல்லது ஸ்ரீவைஷ்ணவமே என்று நிருபிக்க பொற்கிழி அறுபட்டு வீழ்ந்தது, பாண்டியன் மிகவும் மகிழ்ந்து
இவரைப் பலவாறு, கொண்டாடி துதித்து பட்டர்பிரான் என்னும் பட்டத்தையுமளித்தான்.

இதன்பின் பாண்டிய மன்னன் இவரை பட்டத்து யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்த தருணத்தில் எம்பெருமான் பிராட்டியோடு கருட
வாகனத்தில் இவருக்கு காட்சி தந்தருளினார் அதனைக் கண்ட விஷ்ணு சித்தர் இப்பூவுலகில் எம்பெருமானுக்குத் தீங்கு யாதும் நேர்ந்திடலாகாதே, கண்ணேறு பட்டுவிடலாகாதே என்று நினைந்து பல்லாண்டு, பாடினார்.

இதன்பின் மீண்டும் வில்லிபுத்தூரையடைந்து விட்டு சித்தர் தொடர்ந்து எம்பெருமானின் கைங்கர்யத்திலீடுபட்டு நந்தவனம் அமைத்து மலர் பறித்து
எம்பெருமானுக்கு பாமாலையோடு பூமாலையும் படைத்துக்கொண்டிருந்தார்.

இஃதிவ்வாறிருக்க எம்பெருமானிடம் பிராட்டி, பூலோகம் சென்று இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய எண்ணியிருப்பதையுணர்த்த எம்பெருமானும்
சம்மதிக்க விஷ்ணு சித்தர் நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் அங்கிருந்த திருத்தூழாய்ச் செடியடியில் ஆடிப் பூரத்தில்
அன்றலர்ந்த மலராய் அவதரித்திருக்க சற்றே இவ்விந்தையைக் கண்ட அவர் வந்திருப்பது திருமகளேயென உணர்ந்து தம்பத்தினியான விரஜையிடம்
கொடுத்து கோதை என்றே பெயர்சூட்டி வளர்க்க, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஆண்டாள் வளர்ந்து பருவம் எய்தினாள்.

விட்டுசித்தன் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வார் தினந்தோறும் இறைவனுக்குச் சூட்டிவைக்கும் பூமாலையை ஆண்டாள் தானே எடுத்து தனது
குழலிற்சூடி அதன்பின் பெருமாளுக்குச் சூட்டலானாள். இவ்வாறு தினந்தோறும் நடந்து வருவதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் கோதையை மிகவும் கடிந்துகொண்டு எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யத்தில் இப்படியொரு பழுது நேர்ந்ததே என்றெண்ணி மிகவும் வருத்தமுற்று அயர்ந்து தூங்குகையில் கனவில் வந்த எம்பெருமான் ஆண்டாள் சூடிக்களைந்த கண்ணியே தமக்கு மிகவும் உகப்பு என்று சொல்ல இதைக்கேட்ட விட்டு சித்தர் மிகவும் வியந்து போனார்.

பின் ஆண்டாளுக்குத் திருமணம் முடிக்க பேச்சு எடுக்குங்காலை தான் “மானிடர்க்கு வாக்குப்படேன் அரங்கனுக்கே ஆட்படுவேன்” என்று கூறி
தனது தோழிகளை அழைத்துக் கொண்டு (கிருஷ்ணவதாரத்தில் மோஹித்து) கிருஷ்ணாவதாரத்தில் கோபிகாஸ்திரிகள் கோபாலனை எவ்விதஞ்சென்று
துதித்தினரோ அதே போன்று ஸ்ரீவில்லி புத்தூரை கோகுலமாகவும். அங்கே எழுந்தருளியிருந்த வடபெருங்கோயிலுடையானை கண்ணனாகவும், தனது
தோழிகளை கோபிகாஸ்திரீகளாகவும் கற்பனை செய்துகொண்டு தினமும் கோயிற் சென்று பாடல் புனைந்து பாமாலை சூட்ட, இவளின் எண்ணம்
ஈடேறுமோ என்று பெரியாழ்வார் வியந்திருந்த ஒரு காலையில் அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், “நின் திருமகளோடு அரங்கம் வாரீர்
யாமாட் கொள்வோம்” என்று சொல்ல அவ்விதமே வல்லப தேவ பாண்டியனிடம் பல்லக்குப் பரிவாரங் களைப் பெற்று அரங்கம் எழுந்தருளுகையில் தென்திருக் காவேரியின் மத்தியில் வந்து கொண்டிருக்கும் போது பல்லக்கிலிருந்து கோதை மறைய
ஈதென்ன விந்தையென்று கோயிலுக்குள் புகுந்து காணுகையில் அரங்கனுக்கு அருகில் கோதை எழுந்தருளியிருக்க இக்காட்சியைக் கண்டு மிகவும்
சிலாகித்துப் போய் வில்லிபுத்தூரார் அரங்கனடி பணிந்து இத்திருமணக் கோலத்தை வில்லிபுத்தூரிலும் காட்டியருள வேண்டுமென கேட்க, அவ்விதமே
வில்லிபுத்தூர் வந்து வடபெருங்கோயிலை அலங்கரிக்க எம்பெருமான் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.

மூலவர்-  வடபத்ரசாயி (ரங்கமன்னார்) கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்-   (கோதாதேவி) ஆண்டாள்
தீர்த்தம்-   திருமுக்குளம்
விமானம்-   ஸம்சன விமானம்
காட்சிகண்டவர்கள்    மண்டுக மஹரிஷி, பெரியாழ்வார்.

பாண்டிநாட்டு 18 ஸ்தலங்களில் இரண்டு ஆழ்வார்கள் தந்தையும், மகளுமாய் அவதரித்தது, இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

கும்பகோணத்தின் தலவரலாற்றோடு திருமலையும் ஸ்ரீரங்கமும் எவ்விதம் சம்பந்தப்பட்டதோ அதே போன்று திருமாலிருஞ்சோலையும்,
திருவரங்கமும் இத் தலத்தோடு சம்மந்தப்படுகிறது.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்கள் 12 ஆழ்வார்களாய் அவதார மெடுத்த காலையில், பிராட்டியே ஆழ்வாராக அவதரித்த பேறுபெற்ற ஸ்தலம்.

தமிழ்நாடு அரசு முத்திரையில் இடம் பெற்றிருப்பது இக்கோவிலின் ராஜகோபுரமாகும்.

இதற்கருகில் உள்ள திருவண்ணாமலை தென்திருப்பதி என்று பெயர் பெற்று திருமலைக்குச் செய்யவேண்டிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்,
இங்கேயே செய்துவிடும் பழக்கமுள்ளது. திருமலை வேங்கடவனைப் போன்றேஸ்ரீனிவாச மூர்த்தியாக எம்பெருமான் இங்கே எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 4கி.மீ. தொலைவில் உள்ளது.

பெருமாளுடன் கருடாழ்வார் எழுந்தருளியிருப்பது இங்கு ஒரு சிறப்பம்சமாகும்.

ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோல் அரையர் சேவையும் இங்குண்டு. சுதாப முனிவர் வராஹ ஷேத்ரத்திற்கு வந்து அழகர் மலையானை நினைத்து
தியானஞ் செய்ய அங்கே எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை நின்றான் சுதபா முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கேயே இருந்து பக்தர்களின் பாவம் போக்க நித்ய வாசம் செய்து வருகிறார். இத்தலம் காட்டழகர் கோவில் என்றும், காட்டழகர் சுந்தரராஜப் பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் எப்போதும் தண்ணீர்வந்து கொண்டே இருக்கும். கடுமையான பஞ்ச காலத்திலும் இங்கு தண்ணீர் வரும். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும். சுமார் 50 அடி அகலத்தில் கற்களால் தொட்டி கட்டி வைத்துள்ளனர். இங்கு பெருமாள் பூதேவி ஸ்ரீ தேவி சமேதராயிக் காட்சி தருகிறார்.

இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பு பகுதியில் உள்ளது. இங்கு செல்ல வேண்டுமெனில் செண்பகத்தோப்பு
பகவதி நகர் வரை வாகனங்கள் செல்லும், அதன்பின் சுமார் 6கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் காட்டுயானைகள்
அதிகம் வசித்தாலும் யாரையும் துன்புறுத்துவதில்லை.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்கு மிக விசேஷமான திருவிழா நடைபெறும். 6 கால பூஜையும் விசேஷ அலங்காரங்களும் நிறைந்து
இத்தலம் ஒளிமயமாய்த் திகழும். இவ்விழாவை ராஜபாளையும் பூசப்பாடி தாயாதியார் ராஜாக்களான பங்கார் ராஜாக்கள் வகையறாவினர்.
இத்திருவிழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இச்சமயம் இங்கு பெருங்கூட்டம் வரும். காரைக்குடி செட்டியார்கள் அதிகம் வருவர்.
பிறமாதங்களில் நடைபெறும் முக்கிய விழாக்கள் விசேடங்களின் போதும் இங்கும் கூட்டம் அதிகமாக வரும்.

எம்பெருமானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைச் சூடிப்பார்த்து திருப்தியடைந்து கொடுத்தனுப்பி கொண்டிருந்தாள் ஆண்டாள்.
இதன் நினைவாக இன்றும் தினந்தோறும் முதல்நாள் இரவு ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட மலர் மாலை வடபத்திர சாயியாக பள்ளிகொண்டிருக்கும்
பெருமாளுக்கு சிரசின் மேல் மறுநாள் காலை முதல்மாலையாக அணிவிக்கப்படுகின்றது.

பெரியாழ்வார் தமது திருமாளிகையில் வைத்து வழிபட்ட லெட்சுமி நாராயணர் இங்கு தனிக்கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்துகொண்டு இதை இவ்வாறே எம்பெருமானுக்கே அணிவித்தால் அழகாய் இருக்குமா என்று
ஆண்டாள் தனது ஒப்பனையை சரிபார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஆண்டாள் சன்னதிக்கு அருகாமையில் இன்றும் உள்ளது.
இந்தக் கிணற்றில்தான் ஆண்டாள் தனது அழகு பார்ப்பாளாம்.

பெரியாழ்வாரின் வம்சத்தார் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். கோவிலுக்கு வெகு அருகாமையிலேயே வாசம் செய்கின்றனர்.
பெரியாழ்வாருக்கு வாரிசு இல்லை. அவரது சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்”
என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உற்சவகாலங்களில் ஆண்டாளுக்கும் ரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு.

மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஆண்டாள் ரங்க மன்னார் துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது பெரியாழ்வாரின்
வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி
பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம்
காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை”
மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு
உபசரிக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார தினமான ஆடி மாதம் பூரநட்சத்திரத்தன்று நடைபெறும் திருவாடிப்பூரத் திருவிழாவும், ரத
உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது இங்கு நடைபெறும் 5 கருட சேவை வேறெங்கும் இல்லாததாகும் 5 கருட சேவையில் பங்கு பெரும்
எம்பெருமான்கள்.

1. திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருங்கமைந்த    வெங்கிடாசலபதி பெருமாள்)
2. திருத்தங்காலப்பன், திருத்தங்கல் பெருமாள்.
3. வடபத்ரசாயி
4. ரெங்கமன்னார்
5. காட்டழகர் சுந்தரராஜன்

திருக்கல்யாணத்தின்போது பெண்வீட்டாரான பெரியாழ்வாரின் தற்போதுள்ள வாரிசினர் சந்நதிக்கு வந்துண்ண பெருமாள் “பரதேசம்” செல்ல
விருப்பதைத் தடுத்து மகளை மணங்கொள்ள பிரார்த்திக்க, அவ்விதமே எம்பெருமான் ஏற்றுக்கொண்டதை “திருவுள்ளம் பற்றித் திருவுள்ளம்
ஆக்கினார்” என்று அறிவிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறக்கூடிய தெய்வீகம் கமழும் இனிய நிகழ்ச்சியாகும்.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆகிய மூவரும் சேர்ந்தது ஆண்டாளாகக் காட்சியளிப்பது இங்குதான், மற்ற தலங்களில் பெருமாள்
தம்பதி சமேதராய்க் காட்சி அளித்தால் (கல்யாண திருக்கோலத்தில்) ஸ்ரீதேவியும், பூதேவியும் அருகிலிருப்பார்கள். இந்த தலத்தில்தான் ஆண்டாள்
ஒருவரோடு காட்சிதருகிறார். பெருமாளுக்கு வலப்புறத்தே ஆண்டாளும், இடப்புறத்தே கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். இந்த அமைப்பும்
வேறெங்கும் இல்லாததாகும்.

இங்கு திருமஞ்சனம் ஆகும் போது ஆண்டாளின் சன்னதிக்கு முன்பு ஒரு காராம்பசு கொண்டு வரப்படுகிறது. தேவி காராம்பசுவைப் பார்த்துக்
கண்திறப்பதாக ஐதீகம். தட்டொளி என்னும் கண்ணாடியும் எதிரே பொருத்தப் பட்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் பிராட்டி முன்னிரவில் சூடிய மாலையைக்
கழற்றிக் கொடுக்க அதை, பெருமாள் அணிந்து கொண்டு கண்விழித்துப் பெருமாள் திருப்பள்ளி யெழுச்சியாகிறார்.

இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் மிகவும் பிரசித்திவாய்ந்தது.காலநேமி என்னும் கொடிய அரக்கனை எம்பெருமான் தன் சக்ராயுதத்தால்
அழித்தார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வந்து எம்பெருமானிடம் நின்றவுடன் சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய
மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய, சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால்தான் இதற்கு
திருமுக்குளம் என்ற பெயர் உண்டாயிற்று என்பர்.

——————

89. திருத்தங்கல்

பிரம்மாண்ட புராணத்தின் சேத்திர காண்டத்தில் 8வது அத்தியாயத்தில் இத்தலம் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவனான
புதபகவானின் மைந்தன் புரூரவ சக்ரவர்த்தியால் இப்பாரத தேசம் ஒரு காலத்தில் நான்குவகையான நீதி நெறிகளுடன் ஆளப்பட்டது. அவன்
பேரறிஞனாகவும் (கல்விக்கு அதிபதியான புதனின் மைந்தனல்லவா) மிக்க வல்லமை பொருந்தியவனாகவும் இருந்தான். தன் அந்திமக் காலத்தின்
ஆரம்பத்தருவாயில் தனது நாட்டினைக் குழந்தைகளிடம் ஒப்புவித்துவிட்டு காட்டில் தவமிருக்கச் சென்று அங்கிருந்த முனிவர்களிடம்
இப்பூவுலகில் மோட்சம் நல்கிடும் திருத்தலம் யாண்டு உளதென வினவ திருத்தங்கல் பெருமையை அம்மன்னனிடம் கூறுமுகத்தான் அமைந்துள்ளது
புராண விளக்கம்.
புரூரவச் சக்ரவர்த்தி இங்கு வருவதற்கு முன் இத்தலம் எங்ஙன மேற்பட்டதென்பது பற்றி கீழ்க்கண்டவாறு பிரம்மாண்ட புராணம்
விளக்குகிறது.
திருப்பாற்கடலில் ஓர் நாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களுக்குள் தம்மில் யார் பெரியவர் என்னும் பூசல்
உண்டாக ஸ்ரீதேவியின் தோழிகள், நீயே உலக ஈஸ்வரி எல்லா மக்களுக்கு காரணி, இந்திரனும் ஸ்ரீயாலேயே பலம் பெறுகிறான், வேதங்களும் இவளையே
பரக்க பேசுகின்றன. பெருமாளுக்கும் இவளிடந்தான் பிரியம் அதிகம். எனவேதான் பெருமாள் ஸ்ரீயஃபதியாகவும், ஸ்ரீநிகேதனனாகவும், ஸ்ரீநிவாச
னாகவும் உள்ளான் என்றனர்.
இதற்கு பூமாதேவியின் தோழிகள், பூதேவியே மிகவும் உயர்ந்தவள்.எந்நிலையிலும் சாந்தம் உள்ளவள். பெருமாள் மாவலிச்சக்கரவர்த்தியிடம்
வாமன அவதாரங்கொண்டு இப்பூமாதேவியையே வேண்டினான். வராஹ அவதாரத்திலும் பெருமாள் இவளைக் காக்கவே பிரியம் கொண்டார் என்றனர்.

நீளாதேவியின் தோழிகள் நீளாவே உயர்ந்தவள். இவள் ரஸ ரூபம். எனவே இவளை முன்னிட்டே பெருமாளை “ரஸோவைஸ” என வேதங்கள்
புகழ்கின்றன. இவள் ஜல மயமானதாலே பெருமாளும் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டார். வேதங்களில் இவள் உறைகிறாள். நீருக்கு நாரம் என்று பெயர்.
இவளை வைத்தே பெருமாளுக்கு நாராயணன் என்னும் பெயருண்டாயிற்று என்றனர்.

இவ்விதமாக விவாதம் வளர்ந்துகொண்டேயிருந்தது. ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு தானே சிறந்தவள் என்று நிருபிப்பதன்
பொருட்டு தங்கால மலையென்னும் திருத்தங்காலில் வந்து தவமியற்ற ஸ்ரீதேவியின் கடுந்தவத்தை மெச்சியும், பிரிவாற்றாமையைத் தீர்க்கும்
முகத்தானும் பெருமாள் காட்சியளித்து, நீயே சிறந்தவள் என்று போற்றி ஏற்றுக்கொண்டார்.

திருமகள் தங்கி தவமியற்றியதால் திருத்தங்கல் என்ற பெயர் உண்டாயிற்றென்பர். இவ்விடத்திற்குத் தங்கால மலையென்னும் பெயருமுண்டு.

முன்னொருகாலத்தில் சுவேதத்தீவு என்னும் வெள்ளையந் தீவில் ஒரு புனித ஆலமரத்திற்கும், ஆதிசேடனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற
விவாதம் வளர, இவ்விவாதந் தீர்க்க பிரம்மனிடம் செல்ல, ஆதிசேடனே சிறந்தவன் அவன் மீதுதான் பெருமாள் எப்போதும் பள்ளிகொண்டுள்ளார்.
ஆலிலையின் மீது எப்போதோ ஒரேயொரு சமயத்தில்தான் பள்ளி கொள்கிறாரென்று சொல்ல மிகவும் சினந்த ஆலமரம் விஷ்ணுவை நோக்கி
தவமிருக்க, விஷ்ணு தோன்றி நின் ஆசையாதென வினவ, என் மீதும் எப்போதும் பள்ளிகொள்ள வேண்டுமென்று சொல்ல, அங்ஙனமாயின் தென்
தமிழ்நாட்டில் ஸ்ரீ தவமிருக்கும் திருத்தங்கலில் நீ மலைவடிவில் சென்று அமர்வாயாக, ஸ்ரீயை ஏற்க வரும் காலத்தில் யாம் உன் மேல் (உன்
விருப்பப்படியே) நின்றுங் கிடந்தும் இருந்தும் அருள்பாலிக்கிறோம் என்று அருளினார். மலை வடிவங்கொண்டு இங்கு தங்கிய ஆலமரத்திற்கு
தங்கும்+ஆல+மலை-தங்காலமலை எனும் பெயருண்டாயிற்றென்பர்.

இதனைப் பிரளய காலத்தில் திருமால் தங்கிய ஆலிலையின் அம்சமாகவே ஆன்றோர் கருதுவர்.

இம்மலையின் மீது ஸ்ரீயை ஏற்றுக்கொள்ள திருமால் விரைந்த போது மற்ற இரண்டு பிராட்டிமார்களும் அவர் கருத்தையொப்பி இவ்விடத்தே
எழுந்தருளி சேவை தந்தனர்.

மூலவர்- நின்ற நாராயணன். கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர்–   திருத்தண்காலப்பன். நின்ற திருக்கோலம்
தாயார்–  செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) என்ற திருப்பெயர்களும் உண்டு.
தீர்த்தம்–  பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன என வேறு 4 தீர்த்தங்களுமுண்டு.
விமானம்–  தேவசந்ர விமானம்

காட்சி கண்டவர்கள்–  சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி.

அர்ஜு னா நதி ஒரு காலத்தில் இந்நகரில் ஓடிய தாய் ஐதீகம். அந்நதிக் கரையிலமைந்திருந்த ஸ்தலம் அழிந்துவிடவே இப்போதுள்ளவாறு
அமைக்கப்பட்டதென ஒரு கருத்து நிலவுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இங்குள்ள மூலவர், உற்சவர், திருமேனிகள்யாவும் வர்ணம் பூசப்பட்ட
சுதையால் ஆனவை. எனவே இங்கு பெருமாளுக்குத் திருமஞ்சனம் கிடையாது.

அர்ஜூனா நதியை ஆய்வு செய்தபோது கிடைக்கப்பெற்ற செப்பேடுகள் இவ்வூரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. இவை சுமார் 6000
ஆண்டுகட்கும் முந்தியவை. பண்டை காலத்து பாண்டி நாட்டரசர்கள் இத்திருத்தலத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சல்ய
பாண்டியனுக்கு இறைவன் இங்கு காட்சிகொடுத்த வரலாற்றால் உணரலாம். பல பாண்டிய மன்னர்களால் கைங்கர்யம் செய்யப்பட்ட தலமாகும் இது.

பாண்டி நாட்டு மன்னர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு இவ்வூரைப் பற்றியும், இத்தலத்தைப் பற்றியும் கிடைக்கும்
தகவல்கள் ஒரு விடி விளக்காகவும், வழிகாட்டியாகவும் அமையும்.

திருத்தங்காலப்பன் என்றும் அருண கமலா மகா தேவி என்றும் அழகான தமிழ்ப் பெயர் கொண்டவர்கள் இப்பெருமானும் பிராட்டியும்.

சிலப்பதிகாரத்தில் வரும் “வார்த்திகன் கதை” இவ்வூரில் நிகழ்ந்ததாகும். எனவே சிலம்பும் இதைப் பற்றிப் பேசுகின்றது.

மைசூரின் நரசிம்மர் ஆலயத்தில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்புகள் உள்ளது.

பண்டைக் காலத்து பாண்டி நாட்டு வரலாற்றை ஆராயுங்கால் இது “கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்’ என்றே சொல்லப்படுகிறது.

ஆழ்வார்கள் திருத்தங்காலப்பன் என்றே அழைத்தனர். இங்குள்ள கல்வெட்டுகள் “பிரம்ம சுவாமி” யெனப்போற்றுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன் அநிருத்தன் உஷயை மணந்தது இந்த தலத்தில்தான்.

சந்திரகேது என்ற மன்னன் ஏகாதசி விரதம் மேற்கொண்டு துவாதசியில் விரதம் விடக் கூடிய நேரத்திற்கு (துவாதசி பாரணைக்கு முன்)
முன்பே எண்ணெய் தேய்த்துக் குளித்ததால் புலியாகப் பிறந்து பூவுலகெங்கிலும் அலைய இந்த ஷேத்திரம் வந்ததும் பூர்வ ஜென்ம நினைவு ஏற்பட்டு
இப்பகவானை பூஜித்துமோட்சம் பெற்ற ஸ்தலம்.

ஸ்ரீதேவி இத்தலத்தில் தவம் செய்து பகவானே உகந்து “எல்லா மஹிஷிகளையும் விட எனக்கு நீயே மிகவும் பிரியமானவள்” எனவே
இந்நகரத்திற்கு ஸ்ரீபுரம் என்றே பெயருண்டாகட்டும் என்று பகவானே கூறியதாக விஷ்ணு புராணங் கூறும்.

இங்குள்ள கருடாழ்வார் சர்ப்பத்துடனும் அம்ருதகலசத்துடனும் காணப்படுகிறார். தனக்கு எதிரியான சர்ப்பத்தை தன்னுடன் வைத்திருப்பதும்,
கருடாழ்வான் கலசம் ஏந்திய திருக்கோலத்திலிருப்பதும் வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத காட்சியாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையுங்கொண்டது.

——————

90. திருக்கூடல் என்னும் மதுரை

ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவுவதாகும். வடநாட்டில் கங்கை, யமுனை,
சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் “திரிவேணி சங்கமம்” ஆயிற்று.

தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர். மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல்
எனவும் இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர். தொண்டை நாட்டில்பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும்
சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர். நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும்
சேருமிடம் முக்கூடல் ஆயிற்று. முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே.

இஃதே போன்று “கிருதமாலா” என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று
சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.-இக்கூடல் மாநகரில் கோவிந்தனின் சாநித்தியம் ஏற்பட்டதால் “திருக்கூடல்” ஆயிற்று.

இத்தலத்தைப் பற்றி, பிரம்மாண்ட புராணம் கூடற் புராணம் போன்றவற்றால் விரிவான செய்திகளை அறிய முடிகிறது. நான்கு யுகங்களிலும்
இத்தலம் இருந்ததாக புராண வரலாறு உரைக்கிறது.

கிரேதா யுகத்தில் பிரம்ம தேவனின் மைந்தன் திருமாலை அர்ச்சா ரூபத்தில் வழிபட விரும்பி, விஸ்வகர்மாவை அழைத்து அதற்கேற்றார் போல
ஒரு கோவிலைப் படைக்கச் சொன்னதும் இந்தக் கிருதமாலா நதியிடையே அஷ்டாங்க விமானத்துடன் இக்கோவிலைப் படைக்க எம்பெருமானும்
பிராட்டியும் சகல பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளினர். இதே யுகத்தில்தான் சிவன் உமையவளைக் கூட இத்தலத்தே தவமிருந்து
இப்பெருமானின் அருள்பெற்று உமையவளை மணம் புரிந்தார்.

திரேதாயுகத்தில் பிருது என்னும் மன்னன் ஒருவன் எல்லாத் தலங்கட்கும் சென்று வழிபட்டு வரும் சமயத்தில் இத்தலத்தின் மீது பறக்கும் போதும்
அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் விமானம் பறக்க முடியாமல் போகவே இவ்விடத்தே இறங்கி இப்பெருமானின் திருவழகில் ஈடுபட்டு நெடுநாள் தங்கி
பரமபதம் அடைந்தான்.
துவாபரயுகத்தில் விஷ்ணு பக்தியில் மிகச்சிறந்து விளங்கிய அம்பரிஷன் மன்னனும் இப்பெருமானை வழிப்பட்டு முக்தியடைந்தான்.
கலியுகத்தின் ஆரம்பத்தில் புருரவன் என்னும் பேரரசன் இந்தக் கூடலழகருக்குப் பணிவிடை பல செய்து வைகுந்தம் அடைந்தான். அவனது
மகன் இந்திரத்யுமனன் தந்தையைப் பின்பற்றியே தொண்டூழியம் செய்து உய்ந்து போனான். இவனது புத்திரனே மலயத்துவசப் பாண்டியன் என்பவன்.
இவனே வடநாட்டு வேந்தர்களை வென்று இமயமலைமீது மீன் கொடியை நாட்டி மீன் முத்திரையும் பதித்துத் திரும்பினான். இவனைத்தான்
பெரியாழ்வார்,-பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர்-என்கிறார்.

இதே கலியுகத்தில் நீண்ட வருடங்கட்குப் பிறகு “வல்லபதேவன்” என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த போது “முக்தியளிக்கும் தெய்வம்
எது’. என்று சந்தேகம் கொண்டு தன் தேசத்திலிருந்த பல மதத்தார்களையும் முக்தியளிக்கும் தெய்வத்தை நிருபணம் செய்யுமாறு கோரி அதற்குப் பரிசாக
பொற்கிழி ஒன்றைக் கட்டுவித்து யாருடைய மதம் முக்தியளிக்கும் என்று நிருபணம் செய்யப்படுகிறதோ அப்போது இந்தப் பொற்கிழி தானாகவே
அறுந்துவிழும் என்றும், இதனை யாவருக்கும் அறிவிக்க ஏற்பாடு செய்தான்.
இதைக் கேள்வியுற்ற ஒவ்வொரு மதாபிமானியும் தத்தம் மதமே சிறந்ததென்று வாதிட்டு வரலாயினர். அப்போது பாண்டியனின் அரசவைப் புரோகிதராக
இருந்த செல்வநம்பியின் கனவில் தோன்றிய கூடலழகர் திருவில்லிபுத்தூரிலே இருக்கும் பெரியாழ்வாரை விழிமின். அவர் வந்து திருமாலே பரம்பொருள்,
வைணவமே முக்தியளிக்கும் மதம் என்று பரதத்துவ நிர்ணயம் செய்வாரென்று கூற அவ்வாறே பெரியாழ்வாரை அழைக்க அவரும் இக்கூடல் நகருக்கு
எழுந்தருளினார்.

சபையினுள் புகுந்த பெரியாழ்வார் வேதம், இதிகாசம், ஸ்மிருதிகள், மற்றும் புராணங்களிலிருந்து எண்ணற்ற எடுத்துக் காட்டுகளைக் காட்டி
திருமாலே பரம்பொருள் எனவும், வைணவமே முக்தியளிக்க வல்ல மதம் எனவும் நிருபணம் செய்து காட்ட பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது.
இதைக்கண்டு பேராச்சர்யமுற்ற பாண்டியன் பெரியாழ்வாரையும் பணிந்து போற்றி பலவாறாகப் புகழ்ந்து, யானை மீதேற்றித் தானும் பின் தொடர்ந்து
ஊர்வலமாய் அழைத்து வரலானான். இக்காட்சியைக் காண கூடலழகரே பிராட்டியோடு கருட வாகனத்தில் விண்ணில் உலாவரத் தொடங்கினார்.

இக்காட்சியைக் கண்ட ஆழ்வார், பெருமாளே கலியுகத்தில் நீ இவ்விதம் காட்சி தருவதோ, நின் அழகுக்கு கண்ணேறு பட்டுவிடாதோ என்று நினைத்து
எம்பெருமானைப் பல்லாண்டு வாழ்க என்று பல்லாண்டு பாடினார்.
இந்த திவ்யதேசத்தில் விளைந்த இப்பல்லாண்டுதான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்குத் திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக
அமைந்துவிட்டது.

மூலவர்-  கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–   மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி என்ற பெயர்களும் உண்டு.
தீர்த்தம்-   கிருதமாலா, ஹேம புஷ்கரிணி

விமானம்–அட்டாங்க விமானம் (எண்கோண விமானம்)
காட்சி கண்டவர்கள்–   பெரியாழ்வார், வல்லபர், பிருகு.

திருமால் “திரிவிக்ரம” அவதாரம் எடுக்கும் போது வளர்ந்த அவரது ஒரு பாதம் சத்திய லோகம் வரை செல்ல, பிரம்மன் அக்கமல பாதங்களை
தனது கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அலம்ப அதனின்றும் தெரித்த நீர்த்துளிகள் இவ்வையத்தில் வீழ்ந்து புனிதமாக்கியது. அதுவே இவ்வையத்தில்
(வைகை) ஆனது. இவ்வையை இருகூறு ஆகப் பிரிந்து மதுரை நகருக்கு மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு கிருதமால்
எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில் இப்பெருமாள் எழுந்தருளினார். இங்கு விழுந்ததைப் போலவே திருமாலிருஞ்சோலையில்
விழுந்த ஒரு நீர்த்துளிதான் சிலம்பாறு ஆயிற்று. வையை இருபெரும் பிரிவாய் பிரிந்து ஓடியமைக்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் ஏராளம்.

முன்னொரு யுகத்தில் சத்திய விரதன் என்னும் பாண்டியன் கூடல் அழகர்பால் மிக்க அன்புகொண்டு திருவாராதன தீர்த்தம் மட்டும் பருகி கடும்
விரதம் மேற்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் அந்தி வேளையில் ஜல தர்ப்பணம் செய்கையில் அவன் அஞ்சலி செய்யும் நீரில் மீனுருவமாக
(மச்சாவதாரமாய்) வந்த திருமால் அவனுக்கு அருமறைப் பொருளை உபதேசித்தார், என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. எனவேதான் பாண்டிய
மன்னர்கள் திருமாலிடம் பெரும் பக்தி பூண்டது மட்டுமன்றி தமது கொடிகளிலும் மீன் உருவத்தையே தங்கள் சின்னமாய் பொறிக்கலாயினர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான். ஆவணித்
திருவோண நன்னாளில் சிறப்பான பல வழிபாடுகள் செய்தான். அதனை “மாயோன் மேய ஓண நன்னாள்” என்று தமது மதுரைக் காஞ்சியில் மாங்குடி
மருதனார் கூறுகிறார்.

துவரைக் கோமான் என்ற பெயரில் கூடழலகரே சங்கப்புலவராக வீற்றிருந்தார் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கூடல் அழகர் என்ற
இச்சொல்லைத்தான் “வ்யூக சுந்தரராஜன்” என்று வடநூலார் மொழியாக்கஞ் செய்து கொண்டனர்.

சங்க காலத்தில் இப்பெருமானுக்கு “இருந்த வளமுடையார்’ என்ற திருநாமம் இருந்தது. கூடழலகர் இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய ஸ்தல
மென்பதால் சிலப்பதிகார அரும்பதவுரைகாரரும் இருந்த வளமுடையார் என்றே இப்பெருமானுக்கு பெயர் சூட்டியுள்ளார்.

“வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வாநின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே”–பரிபாடலில்,

இருந்தையூர் அமர்ந்த செல்வா என்று இப்பெருமான் போற்றப்படுகிறார். இத்தலமிருந்த பகுதி இருந்தையூர் என சங்க காலத்தில்
அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்தையூர் கருங்கோழி மோசி என்னும் தமிழ்ப் புலவர் இருந்தமையை நக்கீரனின் இறையனார் களவியல்
உரை பேசிப் போகிறது.

கி.பி. 1307இல் திருவாய் மொழிப் பிள்ளை என்ற ஆசிரியர் மதுரைக்கு அருகே உள்ள குந்தி நகரத்தில் (கொந்தகை) அவதரித்தார். இவர்
பாண்டி நாட்டின் முதலமைச்சராய் இருந்தவர். முஸ்லீம்களின் படையெடுப்பின் போது இத்தலத்திற்கு எவ்வித ஊரும் நேராவண்ணம் பாதுகாத்துவந்தவர்.
இவரது சீடரே மணவாள மாமுனிகளாவர்.

இராமானுஜரால் இத்தலம் பெரிதும் உவப்பாக பேசப்பட்டுள்ளது. பல்லாண்டு பாடப்பட்ட ஸ்தலமாதலால் இதனை பரமபதத்திற்கு ஈடாக அவர்
கருதினார்.

பாண்டிநாட்டுத் தலங்களில் பெருமாள் மாடி வீட்டில் குடிகொண்டுள்ளார் என்று கூறுவதற்கொப்ப இத்தலம் 3 அடுக்குகளாலானது.
முதல் அடுக்கில் (தளத்தில்) வீற்றிருந்த திருக்கோலத்தில் வீயூக சுந்தரராசன் என்ற பெயரில் அமர்ந்துள்ளார். 2வது அடுக்கில் சூரிய நாராயணன் என்ற
பெயரில் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளுகிறார். நவக்கிரகங்களும் இந்தக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இதன் மற்றோர்
சிறப்பம்சமாகும்.

ஒரு சமயம் பூமியெங்கும் பெருமழை பொழிய மழை நிற்பதற்கான அறிகுறிகள் யாதும் தென்படாத நிலையில் பக்தர்கள் மழை நிற்க
வேண்டுமென்று இப்பெருமானைப் பிரார்த்திக்க, பக்தர்கள் வேண்டுகோளை ஏற்ற பகவான் நான்கு மேகங்களை ஏவ, அவை மாடங்கள் போல் ஒன்று கூடி
மழையைத் தடுத்தமையால் இந்நகருக்கு “நான் மாடக்கூடல்” என்று பெயருண்டாயிற்று என்பர்.

வைகானஸ ஆகமம் என்ற ஆராதனைக் கிரம முறைக்கு உட்பட்டது இத்தலம்

சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்டு
(அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது. அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை. இவ்விமானத்தை 45 நாட்கள் தொடர்ந்து
தினமும் பதினொருமுறை சுற்றினால் எண்ணியகாரியம் கைகூடும் என்பது இங்கு அனுபவ உண்மையாகும்.

வில்லாண்ட வடவரையான் மணம் புணரஅட்டாங்க விமான மென்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார் பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருரவசு மலயகேதனன் முதலலோர் தொழப் புத்தூரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோளனடி பணிதல் செய்வாம்.–கூடலழகரை வேண்டிப் பேறு பெறலாம் என்பதை இந்தப் பாடலால் தெரியலாம்

வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும் உண்டு. விண்ணின்று வையம் நோக்கி வந்ததால் வையை என்றும் பெயர்
பெற்றதென்பர். இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை நகருக்கு மாலையிட்டது போல் வந்ததால் “கிருதமாலை” என்று இதனைப் புராணம் கூறும்

வேகமாதலின் வேகவதி என்றும்
மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் – தார்
ஆகலால் கிருதமலையதாம் என்றும்
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று சிலம்பு செப்புகிறது. சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி என்னும் இடைப்
பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார் என்பதை.

ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்–இளங்கோவடிகள் பகர்கிறார்.

பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்தசபை இருந்த இடத்தை மெய்காட்டும் பொட்டல் என்பர். அதுவே இன்று மேங்காட்டுப்பொட்டலாயிற்று.
இதனால் இன்றும் மாழ்கழி மாதத்தில் பகற்பத்து முதல் நாளில் கூடலழகர் கருட வாகனத்தில் மேங்காட்டுப் பொட்டலுக்கு எழுந்தருள்கிறார்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் இத்திருத்தலத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்யப்பட்டது. இக்கோவிலில் உள்ள
கல்வெட்டுக்கள் 557,558,559, நாயக்க மன்னர்களின் திருப்பணியைப் பற்றித் தெரிவிக்கிறது.

கிருதாதி ஷீ நராராஜன் கலாவிச் சந்தி மஹராஜ் திராவிடே ஷீ சபூவிச தாம்ரபர்ணீ நதியத்ர “க்ருதமாலா பயஸ்வநீ”–ஸ்ரீ பாகவதம் 11வது அத்தியாயத்தில்

தாமிரபரணியாற்றங்கரையிலும் கிருதமாலா நதி தீரத்திலும் பெரும் பேருடன் விளங்கி-வைணவத்தை ஸ்தாபிக்கும் மஹான்கள் அவதரிக்கப்போகிறார்கள் என்று சொன்னாற்போல் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரும், கிருதமாலாவில் பெரியாழ்வாரும் பிரேவேசித்தார்கள்.

ஒரு வகையில் ஸ்ரீ ரங்கத்தைப் போல இத்திருத்தலம் இரண்டு நதிகளுக்கு இடைப்பட்டதாகும். அரங்கம் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும்
இடைப்பட்டது. கூடல் வையைக்கும் கிருதமாலாவிற்கும் இடைப்பட்டது.

ஆகமங்களில் கூறியுள்ள முறை வழுவாத அர்ச்சாரூபியே இங்கு எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ஆர்ஷிதம் என்ற வகைக்குட்பட்டதாகும்.

இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்
எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால் தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இங்கு இருக்கும் ஆண்டாள் திருச்சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். தம் தகப்பனாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாதலால்
தனது தனிப்பெருமானை மகள் நிலைநாட்டிக் கொள்வதில் தடை என்ன இருக்க முடியும்.

இந்த மதுரையில் ஒரு காலத்தில் வைணவம் தழைத்தோங்கி இருந்தது. இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள் இருந்ததைச்
சிலப்பதிகாரம் செப்புகிறது.-உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”

மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய திருமாலின் கோவிலும், மேழிவலவன் – பலராமனின் கோவிலுமிருந்த
வெள்ளை நகரம் – அதாவது வெண்மை நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல் போன்று) எந்நேரமும் சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும்
சிறப்பிக்கப்படுகிறது.

—————-

91. திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை

இத்தலத்தைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம் ஆக்னேய புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக புராணத்தில் ரிஷபாத்திரி
மகாத்மியும் என்னும் தலைப்பில் இத்தலம் பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது.
ரிஷபம் என்றால் காளை. இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும் பசுவினைப் போலவும் இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால்
இதற்கு ரிஷபாத்திரி என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.

மலய பர்வதம் எனப்படும் பொதியமலைக்கு வடக்கே 10 யோஜனை தூரத்திலும், காவிரி நதிக்குத் தெற்கே 6 யோஜனைத் தூரத்திலும், வராக
பர்வதம் எனப்படும் பழனிக்கு கிழக்கே 6 யோஜனை தூரத்திலும், அமைந்துள்ளதாக எல்லைகள் குறிப்பிட்ட இப்பகுதியை கூடலூர் நாடு என்றும்,
மாலிருங் குன்றம் என்றும், திருமால் சோலை யென்றும் வனகிரி யென்றும் தமிழ்மொழி பல பெயர்களைச் சூட்டுகின்றது. அதேபோல் இங்குள்ள உற்சவப்
பெருமாளுக்கும் அழகர் என்னும் வெகு அழகான சொல் வாய்த்துவிட்டது.

மகாவிஷ்ணுவிற்கும், அவரது இராம கிருஷ்ண அவதாரங்களுக்கும் அழகர் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை
தமிழிலும் பின்பற்றப் பட்டுள்ளது. மதுரையிலிருக்கும் எம்பெருமானுக்கு கூடலழகர் என்பதும் ஒரு திருநாமம். இவருக்கும் அழகர் கள்ளழகர் என்று திருநாமங்கள், குழலழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர் என்பது ஆண்டாளின் மங்களாசாசனம். அச்சோ ஓரழகியவா என்பது திருமங்கை மன்னனின் மங்களாசாசனம். இக்கள்ளழகர் என்னும் சொல்லே வடமொழியில் சுந்தரராஜர் என்றாயிற்று. இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல் என்னும் சங்ககால நூல் பின்வருமாறு கூறுகிறது.

தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்
நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை
ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம்
அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும்
மாயோ னெத்தலின் னிலைத்தே
சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே
இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே
பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது -பரி பாடல்

“தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்குவீராயின்”— என்று சிலப்பதிகாரமும் திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது.

எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன் இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும், உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம், கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில் எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது வரலாறு.

எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது ஒரு பாதத்தால் உலகளந்துவிட்டு மறு பாதத்தால் விண்ணளக்க அது பிரம்மனின் சத்திய லோகம் வரை செல்ல பிரம்மன் தனது கமண்டல நீரால் பாத கமலங்கட்கு அபிஷேகம் செய்ய அந்த கமண்டல நீர்
பெருமாளின் காலிலுள்ள பொன்சிலம்பில் பட்டுத் தெறித்து இவ்விடத்தே சிலம்பாறாகப் பெருகி இது எங்கே உற்பத்தியாகிறது என்று
சொல்லமுடியாதவாறு வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டு தேனைவிட இனிமையாக இனிக்கும் தன்மை பெற்று எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு
இலக்காகி நிற்கிறது.

இந்தச் சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும். இந்த தீர்த்தம் தவிர்த்து வேறு தீர்த்தங்களில் இங்குள்ள உற்சவருக்கு திருமஞ்சனம் செய்தால்
பெருமாள் கறுத்துவிடுவதால் இரண்டு மைல் தொலைவில் உள்ள இந்த தீர்த்தமே எப்போதும் திருமஞ்சனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

எம்பெருமானின் திருமேனிக்கு தீர்த்தமாகி வயல்வெளிகளில் நெளியும் இந்த நூபுர கங்கையின் மகத்துவம் எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.
இதில் நீராடி விஷ்ணு சாமீப்யம் பெற்றவர் பலருண்டு. இந்த நதி இகபர சுகத்தைத் தருவதால் இந்த நதிக்கு “இஷ்டசித்தி” என்ற ஒரு பெயரும்
உண்டு. பகவானுடைய பாதார விந்தங்களிலிருந்து தோன்றி ஸம்ஸார பந்தத்தினால் உண்டான அழுக்கைப் போக்கடிக்கும் இந்நதிக்குப் “புண்யச்ருதி’.
என்றும், சகல ஜனங்களின் ஜனன மரண துக்கத்தைப் போக்கடிப்பதால் “பவஹாரி” என்றும் பல பெயர் உண்டு.

மூலவர்– ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்–  சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு.
உற்சவர்-  சுந்தரராஜன், கள்ளழகர் என்னும் திருநாமம். இங்கு உற்சவர் மிகவும். பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால் செய்யப்பட்டவர்.
இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சியால் செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர். சோலைமலைக்கரசர் என்றே திவ்ய
பிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதிஷர்” என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு உற்சவரும் பஞ்சாயுதங்களுடன் திகழ்கிறார்.

தீர்த்தம்- நூபுரகங்கை என்னும் சிலம்பாறு
ஸ்தலவிருட்சம்-  வ்ருஷபகிரி. சந்தன விருட்சம்
விமானம்- ஸோம ஸந்த விமானம்
காட்சி கண்டவர்கள்–   மலயத்வஜ பாண்டியன், எமன், தர்மதேவதை.

கிழக்கு மேற்காக 10 மைல் தூரமும், 1000 அடி உயரமும் உள்ள இம்மலை எண்ணற்ற பூம்பொழில்களையும், பல சுனைகளையும், அரிய
மூலிகைகளையும் நிறைந்த குளிர்ச்சியினையும் கொண்டு திகழ்கிறது. இந்த மலையில் ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேடன் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.
ஆயிரம் தலைகள் இருப்பதால் ஆயிரம் தடாகங்களும் ஆயிரம் பொழில்களும் அவன் வாழ்வதற்கு வேண்டுமல்லவா?

இம்மலையைத் திருமாலின் இருப்பிடமென்றும், இம்மலை நோக்கித் தொழுவதை திருமாலைத் தொழுவதற்குச் சமம் எனக் கருதி மக்கள் இம்மலை
நோக்கித் தொழுதனர் என்று பரிபாடல் என்னும் தமிழிலக்கியம் கூறுகிறது.

இங்கு பாயும் சிலம்பாறு என்னும் நூபுர கங்கையினை மிகவும் புண்ணியமான நதியென்று புராணங்கள் வர்ணிக்கிறது. சிலப்பதிகாரமும் இந்தச்
சிலம்பாற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறது. சிலம்பு செப்புகிறது.

திருமாலைத் தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான். இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம். அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன. புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள். பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும். இட்டசித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கைகூடும்.

துவாதசி தினத்தில் இந்த நூபுர கங்கையில் நீராடுபவர்கள் சகலவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக
ஐப்பசி மாதத்தின் வளர் பிறையில் வரக்கூடிய துவாதசியன்று நீராடக் கூடியவர்கள் விஷ்ணு ஸாயுஜ்யம் எனச் சொல்லப்படும் மோட்சத்தை
அடைந்து விஷ்ணுவுக்குச் சமீபத்தில் இருக்கும் நிலையினைப் பெறுகின்றார்கள்.

அலங்கும் மருவியார்த்து திமிழ் பிழியச் சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற் சோலையொடு தொடர்மலி மாலிருங் குன்றம்”-என்று சிலம்பாற்றைப் பற்றி பரிபாடல் கூறுகிறது.
சிலம்பாறுடை மாலிருஞ்சோலை என்கிறார் திருமங்கை யாழ்வார்,

கந்த புராணத்தில் “முக்திதரு பேரழகு திருமலை” என்று போற்றப்படுகிறது. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் அழகிய மணவாளதாசர் இந்த
அழகரைப்பற்றி அழகர் அந்தாதி பாடியுள்ளார். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கவிகாலருந்திரர் என்னும் புலவர் ஒருதனிப் பிள்ளைத் தமிழ்
பாடியுள்ளார். வேம்பத்தூரைச் சேர்ந்த கவிகுஞ்சரம் அய்யர் என்பவர் அழகர் கலம்பகம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
பல பட்டடை சொக்க நாதப் புலவர் “அழகர் கிள்ளை விடு தூது என்னும் இலக்கிய மணி மாலையை அழகருக்குச் சமர்ப்பித்துள்ளார். “கவிக் குஞ்ச
பாரதி” சோலைமலைக் குறவஞ்சி என்னும் நூலில் மலையழகையும், அங்குள்ள கோவில்களையும், இயற்கை காட்சிகளையும் வர்ணிக்கிறார். மற்றும் திவ்ய சூரி சரிதம், ஸ்ரீகம்ச சந்தேகம், போன்ற நூல்களும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன.
கோவில் ஒழுகு என்னும் நூலும் இத்தலம் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கின்றது.

சந்திர வம்சத்தில் உதித்த புருரவசு என்னும் மன்னன் தென்தேசத்தில் மணலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு
புத்திரர்கள். மூத்தவனான இந்திரத்யுமனன் இத்தலத்தில் மகா விஷ்ணுவைக் குறித்து தவமிருந்து பராக்கிரமசாலியான ஒரு புத்திரனை பெற்றெடுத்தான்.
அவனுக்கு மலயத்வஜன் என்று பெயரிட்டான். இந்த மலயத்வஜ பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வரும் போது தனது புஷ்ப விமானத்தில் இம்மலை
மீது பறந்துவர விமானம் பறக்க முடியாது தரையிறங்கியது. அங்கிருந்த முனிவர்கள் மூலம் இப்பெருமானின் கோபுரத்தை தாண்டி எந்த விமானமும்
பறக்க முடியாதென்ற உண்மையைக் கேள்விப்பட்டு, இப்பெருமான் பக்கலில் ஈடற்ற பக்தி கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற கைங்கரியங்களை செய்து மிகச் சிறந்த வைணவ மன்னனாகத் திகழ்ந்தான்.

திருவரங்கமும், திருமாலிருஞ் சோலையும், அநேக விஷயங்களில் ஒன்று படுகின்றன. இரண்டு கோவில்களும் கோட்டைகளும், உயர்ந்த
மதிற்சுவர்களும் வாய்க்கப் பெற்றவை. நெல் மணிகளைச் சேர்த்து வைக்கும் குதிர்கள் இரண்டு தலங்களிலுமுண்டு, இரண்டு கோவில்களிலும் உள்ள
பிரதான வாயில்கள் “ஆர்யன் வாசல்” என்றும் ஆர்ய படர் வாசல் என்றும் அழைக்கப்படுகின்றன. இரண்டு ஸ்தலங்களிலும்
பிரசாதங்கள் தயாரிப்பதும், விளக்கிடுவதும். தனி நெய்யிலேயே நடைபெறுகின்றன. திருவிழாக்களின் நடைமுறையும் இரண்டு கோவில்களில்
ஒத்துக் காணப்படுகின்றன. திருவரங்கத்தின் மதில்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார் திருமாலிருஞ் சோலை மதில்களை பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவரங்கன் இராமாணுஜருக்கு அருள் பாலித்தான். மாலிருஞ் சோலையான் கூரத்தாழ்வானுக்கு அருள் பாலித்தான். இருவரும் அழகில் விஞ்சியவர்கள். திருவரங்கன் சயன திருக்கோலத்தில் தனது பேரழகைக் காட்டினான். இவன் நின்ற திருக்கோலத்திலும், அமர்ந்த திருக்கோலத்திலும் காட்டினான். பெரியாழ்வாருடன் ஆண்டாளும் இப்பெருமானைக் குறித்துப் பாசுரம் பாடி இறுதியில் இவ்வழகரையே ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். அதாவது ஸ்ரீரெங்கநாதன் அழகராகவே வந்து ஆண்டாளை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். இதிலும் இவ்விரண்டு ஸ்தலங்களும் ஒன்று படுகின்றன. அமர்ந்த திருக் கோலத்தில் ஆண்டாள் இருப்பது இங்கு மட்டும்தான்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பாக “இடைக்காடர்” என்பவரால் இந்த அழகர் மலையில் மருத்துவ மன்றம் ஏற்படுத்தப்பட்டு சித்த
வைத்திய சாஸ்திரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள், உயர்ந்த மூலிகைகள், பற்றி சித்த வைத்திய நூல்கள் அரிய குறிப்புக்களைத் தருகிறது.

இங்குள்ள அர்த்த மண்டபத்தில் கல்லால் செய்யப்பட்ட மிக நுணுக்கம் வாய்ந்த இரண்டு ஜன்னல்கள் காண்போரை வியப்புறச் செய்யும்
தன்மை கொண்டதாகும். இங்குள்ள குலசேகராழ்வார், ஆண்டாள் ஆகிய இருவரின் செப்புத் திருமேனிகளும் நமது சிந்தை கவர்வதாகும். திரு
மந்திரத்தின் மூன்று பதம் போல் திகழும் மூன்றடுக்குகள் கொண்ட விமானம், அதில் அமைந்துள்ள சிற்பங்களும், மற்றும் பிரதான கோபுரத்தின் மேல்
அமைந்துள்ள இராமாயண, மகாபாரத கதை சிற்பங்களும் மிக்க கலையழகு வாய்ந்தவை. இத்தலத்தின் சோமஸந்த விமானத்தின் நிழல் அந்த
விமானத்திற்குள்ளேயே விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர். பாண்டியர்கட்கு இராமாயண காலத்தில் கபாடபுரம் தலைநகர்,
மகாபாரதம் காலத்தில் மணலூர் தலைநகர். சங்கம் மருவிய காலம் முதல் சமீப காலம் வரை மதுரை தலைநகரமாகவும் விளங்கியது. இப்பாண்டியர்களும்
பாரம்பர்யம் பாரம்பர்யமாய் பல்லவ மன்னர்களைப் போன்று விஷ்ணுவுக்குத் தொண்டு செய்தவர்கள் ஆவர். திருமாலின் அவதாரங்களுள் முதன்மையும்
முக்கியத்துவமும் பெற்றதான மச்சாவதாரத்தின் ஞாபகமாகவே பாண்டியர்கள் மீன் கொடியை தமது சின்னமாகத் தமது கொடியிலும் பொறித்தனர். பாண்டிய மன்னன் வல்லப தேவன் காலத்தில்தான் மதுரையில் பல்லாண்டு விளைந்தது.
பாண்டிய குல மன்னர்களுள் வாணர், அல்லது வானாதிராயர் என்ற பெயருடையோர் சுமார் 500 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி பீடத்தை
அலங்கரித்தனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர்கள் “திருமாலிருஞ் சோலை நின்றான்” மகாபலி, வானாதிராயன், உறங்கா வில்லிதாசன்
ஆகியோராவர். இவர்களின் பெயர்களே இவர்கள் வைணவ ஈடுபாட்டில் எத்துணையளவிற்கு சிறந்து விளங்கினர் என்பதைப் புலப்படுத்தும், இவர்களில்
சில வானதிராயர்கள் திருமாலிருஞ்சோலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை மாதப் பௌர்ணமி அன்று வர கூடிய சித்திரைத் திருவிழாவாகும்.
மதுரை மீனாட்சி கோவிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும், இவ்விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. திருமலை நாயக்கர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி பொறுப்பு ஏற்கும் முன்னர் இவ்விருவிழாக்களும் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்றுவந்தன.
அப்போது அழகரின் சைத்ரோத்ஸவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோவில் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது. இதனால் தான் மாசி
மாதம் நடக்கும் திருவிழாவில் மீனாட்சிரதம் செல்லும் சாலைகள் (வீதிகள்) மாசி வீதிகள் என்றே அழைக்கப்பட்டன. திருமலை நாயக்க மன்னரின்
ஆட்சிக்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர், தேனூர் வழியாக மதுரை வந்து வைகையில் இறங்கி வண்டியூரில் தங்கி மீண்டும்
அழகர் மலையடைவது வழக்கம். திருமலை மன்னர் இந்த இரண்டு விழாக்களையும் ஒன்று சேர்த்தால் அது சிறப்பாக இருக்கும் என்று கருதியே
இரண்டையும் ஒன்று சேர்த்தார்.

இதற்கு கூறப்படும் கதை தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணம் (திருமணம்) காண எம்பெருமான் மதுரைக்கு எழுந்துவரும்
சமயம் எதிரில் பல மண்டபங்களில் தங்கி இளைப்பாறிவர (12 மைல் தொலைவல்லவா) இவர் வருவதையறிந்த மதுரை மக்கள் எதிர்கொண்டு
வரவேற்க (சேவிக்க) செல்லும் வழக்கமே எதிர் சேவையாயிற்று.

இந்நிகழ்ச்சிக்குப் புராதன ஆதாரமில்லை. சைவ வைணவ பேதம் நீங்கி ஒற்றுமை உண்டாகவே இப்படியொரு விழாவை உண்டாக்கினாரோ என்று
கருத வேண்டியுள்ளது.

அழகர் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கிச் செல்லும் போதுவைகையில் இறங்கும் முன் ஸ்ரீவில்லி புத்தூரிலிருந்து வரும் சூடிக் கொடுத்த
ஆண்டாளின் மாலையைச் சூட்டிக் கொள்கிறார். இது ஆண்டு தோறும் தவறாது நடக்கும் நிகழ்ச்சி. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டுதோறும்
மாலையும் இங்கு வந்து சேர்கிறது.

வைகையிறங்கியதும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் இவரை எதிர்கொண்டழைப்பார். இந்த திருவிழாவிற்கு தமிழகமெங்குமிருந்து
லட்சோபலட்சம் பேர் குமுழுவதும், வேறெங்கும் இல்லாத நிகழ்ச்சியாகும்.
இந்நிகழ்ச்சியின் போது ராமராயர் மண்டபத்திற்கு அழகர் வந்துற்றதும் நடைபெறும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் பக்தர்கள் திரிஎடுத்துக்கொண்டு
வண்ண உடைகளில் தம்மை அலங்காரம் செய்துகொண்டு ஆடுவதும், கோவிந்தா, கோவிந்தாவென
விண்ணதிர கூவுவதும், செவிக்கும் கண்களுக்கும் பக்தி பூர்வமான ஞானத்திற்கும் ஒரு அரிய விருந்தாகும்.

அழகர் ஆற்றில் இறங்கும் போது என்னவிதமான பட்டாடை உடுத்தி கொண்டு வந்துள்ளார் என்று அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.
அழகர் அணிந்துவரும் பட்டாடைக்கும், அடுத்த ஆண்டு விளையப்போகும் விளைச்சலுக்கும் தொடர்புண்டு என்பதும் இங்கு உள்ள மக்களின் அசைக்க
முடியாத நம்பிக்கையாகும்.
9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா மதுரைத் திருவிழா எனவும், சித்திரைத் திருவிழாவெனவும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இதுதான்
மதுரையில் நடக்கும் பெரிய திருவிழாவாகும்.

இந்த அழகர் மலையில் உள்ள அழகிய மணவாளன் கிணற்றில்தான் முகம்மதியர் படையெடுப்பின் போது ரெங்கநாதனை இருமுறை கொணர்ந்து
பத்திரப்படுத்தி வைத்தனர் என்று கோயில் வரலாறு கூறுகிறது.

இங்கு இராமானுஜர் மடம் இருந்தது. ஒரு ஜீயர் சுவாமிகள் இம்மடத்திற்கு தலைமைப்பொறுப்பேற்று நடத்திவரும் வண்ணம் செயல்பட்டு
வந்தது. இராமானுஜருக்குப் பின்னர் பிரசித்தி பெற்ற மணவாள மாமுனிகள் இப்பீடத்தை அலங்கரித்தார். இதேபோன்று குலசேகரன் மடம்.
திருநாடுடையான் மடம், வானாதிராயன் மடம் என்ற மடங்கள் இருந்தமை பற்றியும் சாசனங்களால் அறிய முடிகிறது.

இம்மலையில் வேறுபல தெய்வங்களும் இருப்பதாக காலப்போக்கில் கூறப்படும் பழக்கம் உண்டாயினும் பௌத்தமும், ஜைனமும் அழகரே
முக்கியமான தெய்வமென்று ஒப்புக்கொண்டதாக திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் பாசுரிக்கிறார்.

இங்குள்ள 18ஆம்படி கருப்பண சுவாமி மிகவும் பிரசித்தி. மலையாளத்தரசன் ஒருவன் இவ்வழகரை அங்கு கொண்டு செல்ல
வேண்டுமென்று திருடிச் செல்ல முயன்றான் அது முடியாமல் போகவே 18 பேர்களை (மந்திர தந்திரங்களில் தேர்ச்சிபெற்ற பணிக்கர்கள்) இங்கு அனுப்பி எப்படியாவது அழகரை கொண்டு செல்ல வேண்டுமென்று திட்டமிட்டான்.
இவர்கள் வந்து அழகரை திருடிச் செல்ல எத்தனிக்கையில் இதையறிந்த இங்கிருந்த ஒரு சாஸ்திரி தமக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு
வந்து பதினெட்டுப்பேரையும் பிடித்துப் படிக்கொருவராக புதைத்து வைத்தனர்.

மலையாள மாந்த்ரீகர் அழகர் சன்னிதானத்தில் இருந்து மலையாளம் கொண்டு செல்ல மறைந்து இருந்து மந்த்ர பிரயோகம் செய்து கொண்டு
பலி பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சுத்த அன்னத்தை உண்டு வர
கண்ணுக்கு இனியான் என்னும் வைஷ்ணவர்  ஒரு பலி பீட அன்னம் உடனே மறைந்து வருவதைக் கண்டு மிளகு சேர்த்தி படைக்க இவர் உண்டு கண்ண நீரை வழிய-அத்தைத்துடைக்க -கண்ணில் பூசின அஞ்சனம் கரைந்து இவர் இருப்பதைக் காட்டிக்கொடுக்க அவரைத் திருத்திப் பணி கொண்டருளினார்
இந்த அந்தணர் திரு மாலை ஆண்டான் முன்னோர் -20 பரம்பரைக்கு மேல் –

அழகரே திருமாலை ஆண்டானுக்கு சரம கைங்கர்யம் செய்ததால் இன்றும் அந்த நாளில் தொட்டித் திருமஞ்சனம் கண்டு அருளுகிறார்

இந்த பதினெட்டுப்பேரின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக வந்த காவல் தெய்வம் ஒன்று இப்பெருமானின் பேரழகில் மயங்கி
இவரைக் கொண்டுபோக முடியாவிட்டாலும் பரவாயில்லை, இவருக்கு காவலாவது இருப்போம் என்றெண்ணி, அங்கிருந்த அர்ச்சகரையும், பிறரையும்
நோக்கி தான் இந்தப் பெருமாளின் வாசலையும், இந்தப் பதினெட்டுப் படிகளையும் காப்பதாக உறுதி கூறி அதற்கு அர்த்தஜாம பூஜாப் பிரசாதத்தைத்
தமக்கு அளிக்க வேண்டுமென்று கேட்க அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அந்தக் காவல் தெய்வமே பதினெட்டாம்படி
கருப்பணசுவாமியாவான். இவ்விதம் கருப்பணசுவாமி கள்ளழகருக்கு காவற்கடன் பூண்டான்.

இன்றும் பொய், சூது, குற்றம், களவு போன்றனபற்றி நடக்கும் பஞ்சாயத்துக்கள் இவன் முன்னிலையில் பேசப்படுகிறது. நிதர்சனமின்றி
தண்டிப்பவன் கருப்பணசுவாமி என்பது மக்கள் நம்பிக்கை.
இந்தப் பதினெட்டுப் படிகளைப் பற்றி ஆண்டாள் கூட வியந்ததாய்க் கூறுவர்.

இங்கு மேற்குப் பிரகாரத்தில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவர் கடுகடுப்பான முகத்துடன் மிகவும் கோபக் கனலுடன் உள்ளார்.
இவருடைய சிரசிலிருந்து கோபக்கினி மேலே கிளம்பிச் செல்வதாக ஐதீகம்.
இவரின் தலைக்கு மேலாக ஒரு சிறு தூவரம் உள்ளது. இந்தக் கோபக்கினியைத் தணிப்பதற்கு தினமும் எண்ணெய், பால், தயிர் இவற்றாலும் நூபுரகங்கையாலும் திருமஞ்சனம் உண்டு. இதற்காக 100 ஆண்டுகட்கு முன்பு பச்சையப்ப முதலியார் ஏற்படுத்திய அறக்கட்டளை இன்றும் தவறாமல் நடந்துவருகிறது.இங்குள்ள சாளக்கிராம தரிசனமும், அதன் அபிஷேக தீர்த்தமும் பக்தர்கட்குத் தீர்த்தமாக்கப்படுவதுண்டு.

வைணவ மறுமலர்ச்சிக்கு தந்தையாக விளங்கிய கிருஷ்ண தேவராயர்தென்னாட்டு ஸ்தலங்களில் 90 ஸ்தலங்களில் கோபுரங்களை கட்டினார். இதில்
பெரும்பான்மையான கோபுரங்கள் கட்டி முடிக்காமலேயே நின்று விட்டன.
இவைகள் யாவும் ராயகோபுரம் என்றும், மொட்டைக் கோபுரம் என்றும் அழைக்கப்பட்டன. திருமாலிருஞ் சோலையில் ராயர் கோபுரம் உண்டு.

திருவரங்கத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருந்த ராயகோபுரத்தைத்தான் ஸ்ரீ அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிகள் கட்டி முடித்தார்.
கிருஷ்ணதேவராயர்தான் முதன்முதலில் இத்தலத்திற்கு சமயநல்லூர். சாந்த மங்கலம் ஆகிய கிராமங்களைத் தானமாக வழங்கினார்.

கி.1757இல் ஹைதர் அலி இங்குள்ள கல்யாண மண்டபத்தை கொள்ளையிட்டு சுற்றியிருந்த மதில்களை சின்னாபின்னப் படுத்தினான்.
யூசுப்கான் என்னும் முகம்மதிய வீரன் ஹைதர் அலியை தோற்கடித்து திண்டுக்கல்லுக்கு விரட்டியபோது 1758இல் அவன் கள்ளழகர் கோவில்
சொத்துக்களைத் திருப்பிக் கொடுத்து. பரிகாரமும் செய்து கொண்டான். 1801இல் இக்கோவில் ஆங்கில கலெக்டர்களின் பராமரிப்பின் கீழ் வந்தது.
கலெக்டர் புஹார்ஸ் என்பவர் இக்கோவிலின் சொத்துக்களைத் தொகுத்து நிர்வாகத்தை வரைமுறைப்படுத்தி பரிபாலித்தார்.

சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார்.ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசரும் அவரது
சீடர்களும் அங்கு வர இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம்நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. என்னை மதியாது
தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால் நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது (மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். தனது நிலையுணர்ந்த
சுதபன் முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்ததுர்வாசர் நீநாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள
தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று தவம் புரிக, எம்பெருமான் காட்சிகொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும்
என்றார். அதற்கு சுதப முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன். இப்பெருமானையே நான்
அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார்
துர்வாசர். இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள் வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு
எழுந்தருளினார். இந்த அழகர் தான் இன்றைய காட்டழகர் திருக்கோவிலாகும்
(இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாற்றில் விரிவாகக் காணலாம்)

காணப்பா வழுகணிச் சித்தருண்டு கமண்டல நீர் தொட்டியிலே வந்து பாயும்
தோனப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு துலங்கிடவே கன்னியொன்று அவர் பாலுண்டு
பூணப்பா வதனடியிற் றெப்பமுண்டு புகழான திரவியங்கள் அநேக முண்டு
மாணப்பா வழகர்மலை யென்று பேருமாச்சர்யம் நீலகிரிக் கதிகம் பாரே
பாரே னென்றேனம் மலையினுயரஞ் சென்றால் பதிவான கருப்பானுட கோவி லொன்று
நிரென்றேன் கோவிலுக்குத் தெற்கே சென்றால் நெடிய தொருபாறையொன்று சுனையொன்றுண்டு
பேரென்றேன் வனம் வொன்று பெருத்துக் காணு பெரிதாக குகையொன்று கதவுந் தோன்றும்
சேரென்றே குகையுள்ளே சென்றே யானால்ச் செயமான வையப்பா இத்திருப்பத்தானே”

என்று போகமுனிவர் தான் இயற்றிய ஜெனன சாகரம் என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார். இதில் சிலம்பு குறிக்கும் சிலம்பாற்றுடன் திரவியங்கள் கிடைப்பதையும், 18ம் படிக் கருப்பண்ணணையும் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொருபாடலில், “தானென்ற சப்தரிஷி ஷப்த கன்னி தற்பரமாம் திருமாலும் மதனினுதுண்டாம். -என்றும் குறிப்பிடுகின்றார்.
(போகரின் மருத்துவ, வானசாஸ்திர ஆன்மீக நூல்கள் யாவும் பெரும் ஆய்வு செய்ய வேண்டிய களஞ்சியங்களாகும்)

————

92. திருமோகூர்

பிர்ம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் பேசப்படுகிறது. மாத்ஸய புராணத்தில் 11 முதல் 14 வரையுள்ள 4 அத்தியாயங்களில்
பேசப்படுகிறது.
இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்று மேற்படி புராணங்கள் குறிக்கின்றன. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி, பாண்டிய தேசத்தில்
விருஷபகிரிக்கு (திருமாலிருஞ் சோலைக்கு) தென்திசையில் சுமார் ஒரு யோசனை தூரத்தில் அஸ்திகிரி எனவழைக்கப்படும் யானை மலை உள்ளது,
அதற்குச் சற்றே தென் கிழக்கில் ப்ரஹம்ம தீர்த்தம் (ஒரு காலத்தில் பிரம்மன் தவம் செய்து பயன்படுத்திய தடாகம்) என்ற தடாகமுள்ளது. இதனையும்
இதனைச் சூழ்ந்துள்ள இடத்தையும் உத்துங்கவனம் என்பர். அந்த பிரம்ம தீர்த்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியே மோஹன சேத்திரம்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மஹா விஷ்ணுவைத் துதித்து சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டும் எனக் கேட்க, அவ்விதமே
அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்த திருமால், தேவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு பாற்கடலைக் கடைந்து அமுதமெடுக்க ஆயத்தமானார்.
மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை பெரிய கயிறாகவுங் கொண்டு ஆயிரம் கைகளால் பாற்கடலைக்
கடைந்தனர். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன்முதலில் காளகூட விஷம் உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர் தோன்றினர்.
இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின. இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம் உண்டாயிற்று.
இதில் உச்சை சிரவசு என்னும் குதிரையும், ஐராவதம் என்னும் யானையும்இந்திரனை அடைந்தன. காமதேனுவை வசிட்டரும், அகல்யயைக் கௌதம
முனிவரும், விஷத்தையும் சந்திரனையும், பரமசிவனும் பெற்றார்கள், லட்சுமியும், கௌஸ்துப மணியும் மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன.

அமிர்தத்தை எடுக்க தேவர்கள் விரைந்ததும், அசுரர்களும் ஓடி வந்து தமக்கும் பங்கு கேட்டனர். அமிர்தம் வேண்டிநெடுங்காலம் மஹாவிஷ்ணுவைக்
குறித்து துதி செய்தது நாங்கள்தான். எங்கள் வேண்டுதலுக்கு இசைந்து தான்பெருமாள் பாற்கடல் கடைந்தார், எனவே உங்களுக்கு அமிர்தம்
கிடையாதென்றனர் தேவர்கள்.

உடனே தேவாசுர யுத்தம் தொடங்கி விட்டது, யுத்தத்தில் அசுரர்களின்கை ஓங்கிக் கொண்டே வந்ததும், தம்மைக் காப்பாற்றுமாறு தேவர்கள்
திருமாலைத் தொழ, தேவரட்சகனான திருமால் ஒரு அழகான மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தேவர்களையும்,
அசுரர்களையும் நோக்கி நீங்கள் இரண்டு வரிசைகளாக அமர்ந்து கொள்ளுங்கள் நான் அமிர்தத்தை உங்களுக்குப் பகிர்ந்து தருகிறேன் என்று
சொல்ல, தேவர்கள் ஒரு வரிசையிலும், அசுரர்கள் ஒரு வரிசையிலும் அமர்ந்தனர்.

அசுரர்கள் மோகினியின் அலங்காரத்திலேயே மனதைப் பறி கொடுத்தவர்களாயிருந்து கொண்டு சலன சித்தத்துடன் வீற்றிருக்க, மோகினி
அவதாரங்கொண்ட பெருமாள் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார்.

இதனைக் கண்ட ராகு, கேதுக்களிருவரும் தேவர்களின் வடிவங்கொண்டு தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டனர். இவர்களிருவரும்
சந்திரனாலும், சூரியனாலும் திருமாலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டனர்.
சினங்கொண்ட திருமால் தமது சக்ராயுதத்தால் அவ்விருவரின் சிரங்களைக் கொய்தார். இதனால், சூரீய, சந்திரர் மீது பகைமை பூண்ட ராகு கேதுக்கள்
பருவ காலங்களில், சூரிய சந்திரனைப் பிடித்து அவர்களது பலத்தை குறைக்கிறார்கள்.

பெருமாள் மோகினி அவதாரங்கொண்டு, திருப்பாற் கடலில் கடையப்பட்ட அமிர்தத்தை இவ்விடத்திலிருந்து தேவர்கட்கு வழங்கினமையால்
“மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில் மோஹினியூராகி, மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஒரு துளியானது இந்த சேத்திரத்தில் விழுந்ததாகவும், அவ்விடத்தில் தேவர்களால் ஒரு குளம்
வெட்டப்பட்டதென்றும், அந்த தீர்த்தத்திற்கு க்ஷீராப்தி தீர்த்தம் (திருப்பாற்கடல்) என்ற பெயருண்டாயிற்றென்றும் மாத்ஸய புராணம் கூறும்.

புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனை குறித்து இத்தலத்தில் தவமியற்றினார். பாற்கடல் கடையுங்கால் பெருமாள்
கொண்ட கோலத்தை இச் சேத்திரத்தில் காணவேண்டும் என்று கடுந்தவம் இயற்றினார். இவரின் தவத்தை மெச்சிய எம்பெருமான், புலஸ்தியர்
விரும்பியவாறே அவருக்கு காட்சிக் கொடுத்தது மட்டுமின்றி, புத்திரப்பேறு இல்லாதிருந்த புலஸ்தியருக்கு “விச்ருவர்” என்ற பெயர் கொண்ட புத்திரனை
விரைவில் பெறுவதற்கான வரத்தையும் அளித்தார்.
எனவேதான் இங்கு பாற்கடல் வண்ணனுக்கு திருப்பாற்கடல் நாதனாக காட்சி தரும்) தனிச் சந்நிதியுள்ளது.

மூலவர்-காளமேகப் பெருமாள் (நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணைமழைபொழிவதால் காளமேகப் பெருமாள் என்ற திருநாமம்
வரலாயிற்று) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயயுதங்களுடன் கூடின திருக்கோலம்) குடமாடு கூத்தன் என்றும் தயரதன் பெற்ற மரகதமணித்தடம் என்றும்
சுடர்கொள் ஜோதியென்றும் உற்சவ மூர்த்திக்கு பல திருநாமங்கள் உண்டு.
தாயார்–    மோஹனவல்லி, திருமோகூர் வல்லி, மோகவல்லி என்ற திருநாமங்கள்.
விமானம்-   கேதச விமானம்

தீர்த்தம்-சீராப்தி புஷ்கரணி (திருப்பாற்கடல் தீர்த்தம்) ப்ரஹம்ம தீர்த்தம் (பிரம்மனால் உண்டாக்கப்பட்டது) இதற்கு தெற்கே பாபநாச தீர்த்தமும்,
வடக்கே ஸ்வர்க்கத்வாரா தீர்த்தமும், மேற்கே நரகாசுர தீர்த்தமும், கிழக்கே பரமன் தீர்த்தமும் உண்டு.
காட்சி கண்டவர்கள்- பிரம்மா, இந்திரன், புலஸ்தியர், தேவர்கள்

பிரம்மன் இவ்விடத்தில் திருமாலைக் குறித்து தவம் செய்தார். இதனை பிரம்மாண்ட புராணம், மாத்ஸய புராணம் இரண்டும் ஸ்தல வரலாறு பற்றிக்
கூறும் விவரங்களுடன் கலந்து தெரிவிக்கின்றது.

நாராயணன் தமது உந்திக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்த அதே நேரத்தில் அவரது காதுகள் வழியாக, மது, கைடபன் என்ற இரண்டு
அரக்கர்கள் தோன்றினர். இவ்விருவரும் பிரம்மனருகே இருந்த வேதப் புத்தகங்களைத் திருடிக் கொண்டுபோய் பாதாள லோகத்தில் மறைத்து
வைத்துவிட்டனர்.

மஹா விஷ்ணு மத்ஸயவதாரம் (மச்ச-மீன்) எடுத்து பாதாளம் சென்று அவ்வேதப்புத்தகங்களை மீண்டும் எடுத்து (ஹயக்ரீவ அவதாரம்) பிரம்மனிடம்
சேர்ப்பித்தார்.

இதனையறிந்த அரக்கர்கள் இருவரும், எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து செல்லக் கூடிய தாமரைத் தண்டினைப் பிடித்து ஆட்டி
பிரம்மனுக்கு இடையூறு விளைவிக்கவே மிகவும் சினம்கொண்ட எம்பெருமான் அவ்விருவரையும் பிடித்து தனது தொடையிலடித்து முறித்துக் கடலில் தூக்கி
எறிந்தார். அவர்களின் வாயிலிருந்து மிகுதியான ரத்தத்தை தங்கள் உடம்பில் கக்கிக் கொண்டு சமுத்திரத்தில் வீழ்ந்ததால் சமுத்திர ஜலமும் கெட்டியானது.

அதற்கு முன் அவனியென்றழைக்கப்பட்டு வந்த இப்பூமி அவ்வரக்கர்களின் கொழுப்பினால் வியாபிக்கப்பட்டு மேடாகி “மேதிநீ’
என்றாயிற்று. இதனால்தான் பூமிக்கு மேதிநீ என்ற பெயரும் வந்த தென்றும் பெரியோர் சொல்வர். (பிர்ம்மாண்ட புராணம், மோஹன ஷேத்ர மஹாத்திமியம்
ஸ்லோகம் 26)

தனக்கு மீண்டும் வேத நூல்களை அளித்து அரக்கர்களை அழித்தமைக்கு நன்றி கூறும் முகத்தான் பிரம்மன் இவ்விடத்திற்கு வந்து ஒரு தடாகம் (பிரம்ம
தீர்த்தம்) உண்டாக்கி பெருமானுக்கு திருவாராதனக் கைங்கர்யத்தை தினந்தோறும் செய்து வர இறுதியில் எம்பெருமான் பிரத்தியட்சமானார்.

தேவர்களுக்கு அமிர்தம் கொடுப்பதற்கு இத்தலம் காரணமாக இருந்தமையால் தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சிற்பிகளுடன் விஸ்வகர்மாவும்
சேர்ந்து இந்தக் கோவிலின் விமானத்தை (கேதச விமானத்தை) அமைத்தனர்.

மோகினி அவதாரத்துடன் இங்கு நின்று கொண்டிருந்தமஹாவிஷ்ணுவை, மோகினி என்றே நினைத்த சிவன், அவ்வழகில் மயங்கி,
உன்னழகால் கவரப்பட்ட நான் உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள எத்தனிக்கிறேன் என்று சொல்ல, மோகினியாய் நின்ற விஷ்ணு,
அப்படியேயாகட்டும் என்று சொல்லி தன்னையொத்த இன்னொரு மோகினியை அங்கே ச்ருஷ்டி செய்துவிட்டு மறைய, இது விஷ்ணுவின் மாயை என்று
தெளிந்த சிவபிரான் “விஷ்ணுவின் மாயையால் யார்தான் மயங்கார்” என்று தன்னை நொந்துகொண்டு ப்ரமத்தை அடைந்தார். அம்மாயையும் அப்போதே
மறைந்தது.   (மாத்ஸ்ய புராணம் பதினோராம் அத்தியாயம் ஸ்லோகம் 54 1/2 – 611/2)

இங்குள்ள ஆதிசேடனுக்குத் தங்க கவசங்கள் சாத்தப்பட்டுள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும்.

சீராப்தி புஷ்கரணிக்கு கிழக்கில் ஒரு விருட்சம் (ஸ்தலமரம்) இருக்கிறது. அவ்விருட்சம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும்,
திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபராயுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் அரசமரமாகவும் திகழ்கிறதென்று பிரம்மாண்ட புராணம்
கூறுகிறது.

வேல் கொடித் துனைக்காலன்ன புனைதேர் கோசர்
தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர் -அகநானூற்றில் -251-சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.

—————

93. திருக்கோட்டியூர்

பிர்ம்மாண்ட புராணத்தில் 6 அத்தியாயங்களிலும், பிரம்ம கைவர்தத்தில் இரண்டு அத்தியாயங்களிலும் இத்தலம் பற்றிச் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது
என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி, உலகெங்கும் நமோ ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து வந்தான். இரண்யனின்
இம்சை பொறுக்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன் வரங்கொடுத்த பிரம்மாதான் இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல
பிரம்மரோ ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால்தான் இரண்யாட்சகனுக்கு சரியான முடிவு கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள
பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர்.

இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது.

இரண்ய நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப் பேசலாம்
என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி நாதனாகக் காண வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார். எந்நேரமும் நாராயண
மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஒரு ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம் கூடிப் பேசுவதற்கு அதுவே
உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற தேவர்களும் மும்மூர்த்திகளும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளி, அம்முனிவரின் தவப்பயனாக
சீராப்திநாதனாக எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய சம்ஹாரத்தைப் பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும்
கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான் மட்டும் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன்.

 மூம்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர்
ஆயிற்று.   (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும்.

திருக்கோட்டியூர் அமைந்துள்ள இடத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் பின்வருமாறு கூறுகிறது.

“காவேரி நதிக்குத் தெற்குப் பக்கத்தில் விருஷபாசலத்திற்கு (அழகர் கோவிலுக்கு) கீழ்ப்புறத்தில் புண்ணியமாய் சக்தியையுடைய மணிமுத்தா
நதிக்கரையில் பரமாத்ம ஞானம் பிறந்த பாகவதர்கள் தங்குமிடமாய் நான்கு யோஜனை விஸ்தீரணமாய் (யோஜனை 10 மைல்) கதம்ப மஹரிஷியின்
ஆஸ்ரமம் அமைந்துள்ளது.  (பிர்ம்மாண்ட புராணம், திருக்கோட்டியூர் க்ஷேத்ர மகிமை சுலோகம் 42, 43)

பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில் இருந்த சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி வசந்தமாலையின்
வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக் கூற, அவ்விதமே பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல, எங்கேயடா உன்
நாராயணன் என்று இரண்யன் கேட்க, தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான் என, பிரஹலாதன் சொல்ல, இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச்
சீறி வெகுண்டு தூண் புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய” தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று
நரசிம்மவதாரம் முடிவுற்றது.

இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன் இரண்யனைப் பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள விக்ரகங்களைத்
தனக்குத் தரவேண்டுமென்று பிரம்மனை வேண்ட, பிரம்மன், தேவசிற்பியான விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல, மூன்றடுக்குகள் கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை நிர்மாணித்து முடித்தனர்.

மூன்று தளங்களுடன் கூடிய இந்த விமானம் மூன்று பதங்களுடன் கூடின மூலமந்திரம் போன்ற தாயும் (ஓம் என ஒருபதம், நமோ என ஒருபதம்,
நாராயண என ஒரு பதம்) விளங்குகிறது.

இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரனான இந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட பேரழகு வாய்ந்த
ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீ சௌமிய நாராயணனை, கதம்ப மஹரிஷிக்கு கொடுக்க மிக்க சந்தோஷத்துடன் பெற்று அர்ச்சித்து வரலானார்.
கதம்பரிஷியை வாழ்த்தி வணங்கிவிட்டு அனைவரும் தேவருலகெய்தினர்.

மூலவர்-உரக மெல்லணையான் (திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன்) புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம் (பன்னக மருதுசாயி
என்றும் பெயர்)
உற்சவர்-   சௌம்ய நாராயணன் நின்ற திருக்கோலம்.
தாயார்-  திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்-தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)
விமானம்–  அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்-   பிரம்மா, தேவர்கள், கதம்ப முனி.

கதம்ப முனி 64 சதுர்யுகங்கள் இப்பூவுலகில் இருந்ததாக பிர்ம்மாண்ட புராணங்கூறுகிறது. எனவே இந்த திவ்யதேசத்தின் தொன்மை எழுத்தில்
அடங்கும் தன்மையதன்று.

மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும் திருக்கூடல்
என்னும் மதுரையிலும் ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது.

முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல்
நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி.
பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் 3வது
தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும், ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும்
திருப்பெயர்கள் உண்டாயிற்று.

அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும், தென்பகுதியை விஸ்வகர்மாவாகவும் அமைத்தனர். விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட பாகத்தில்
இரண்யனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில் இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நரசிம்ம மூர்த்திகள் காண்போரை பிரம்மிக்கச் செய்யும் தோற்றமுள்ளவை.

அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு
வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம்.

நகக்கிரகங்களில் சந்திரனின் மகன் புதன். இந்த புதனின் மைந்தன் புருரவன் என்பவன் மிகச்சிறந்த தர்மவானாக இருந்து செங்கோல் செலுத்தி
நாட்டையாண்டுவந்த காலத்தில் கங்கா ஸ்நானம் செய்யும் பொருட்டுதனது விமானத்திலேறி வரும்போது, இத்திவ்ய தேசத்தின் மேல் பறக்க முடியாதபடி
(அஷ்டாங்க விமானத்தின் சக்தியால்) தரையிறங்க நேர்ந்ததும் அதன்பின் இங்குள்ள பெருமானின் சக்தியறிந்து வழிபட்டு, இத்திருக்கோவிலைச் சுற்றி
அந்தணர்களும், பெரியோர்களும், வாழ்வதற்குரிய அழகிய நகரத்தை நிர்மாணித்துச் சென்றான்.   (இக்கதை பிரம்ம கைவர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.)

மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால் அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது இன்னொரு
சிறப்பாகும் (இச்சிலை இந்திரன் கொடுத்ததாக ஐதீகம்) வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்டது.

வைணவ மத வளர்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு ஏற்றமுண்டோ அதற்குச் சமமான ஏற்றம் இந்த திருக்கோட்டியூருக்கு உண்டு. “திருமந்திரம்
விளைந்த திவ்ய தேசம்” என்ற திருப்பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்குவந்து திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஞானம் பெறமுயல, 17 முறையும் பல காரணங்களைக் கூறி
திருப்பியனுப்பி இறுதியாக 18வது முறை வந்தபோது இராமானுஜருக்குத் “திருமந்திர உபதேசம்” செய்வித்து இதனை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது.
அவ்வாறு குருவின் கட்டளையை மீறித் தெரிவித்தால் உமக்கு நரகம்தான் கிடைக்குமென்றார்.
சரி, என்று ஒப்புக்கொண்ட இராமானுஜர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி “எல்லீரும் வாருங்கள்,
திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உரக்கக் கூவி திருமந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்பதை எல்லோருக்கும் தெரிவித்தார்.

இதனைச் செவியுற்ற திருக்கோட்டியூர் நம்பி விரைந்து வந்து இராமானுஜரை நோக்கி “இராமானுஜரே திருமந்திரத்தைப் பிறருக்கு
உரைத்தால் உமக்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதை மறந்து விட்டீரா” என்றார்.
அதற்கு இராமானுஜர் “தெரியும் சுவாமீ, இம்மந்திரத்தைப் பிறருக்குச் சொன்னால் எனக்கு நரகம் கிட்டுமென்றீர் பரவாயில்லை, அடியேன் ஒருவன்
நரகம் புகுந்தாலும் பரவாயில்லை. இம்மந்திரம் தெரிந்து உச்சரிக்கும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் மோட்சம் கிட்டுமே என்றார்.
இதனைக் கேட்டு, ஒரு கணம் சிந்தித்த நம்பிகள் இராமானுஜரை பகவானின் அவதாரம் என்றே கருதி “நீர் தான் எம்பெருமானாரோ” என்று
கூறி கட்டித் தழுவிக் கொண்டார்.
அது முதல் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்னும் திருநாமம் உண்டாயிற்று. இராமானுஜருக்கு, உடையவர், ஸ்ரீபாஷ்யகாரர், திருப்பாவை
ஜீயர் என்னும் திருநாமங்களும் உண்டு.
எனவே வைஷ்ணவ சம்பிரதாய ஏற்றத்திற்கும் ஒரு மறுமலர்ச்சிக்கும் பாசறையாக திருக்கோட்டியூர் திகழ்ந்ததென்பதில் ஐயமில்லை.

அஷ்டாங்க விமானத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கொண்டுதான் இராமானுஜர் திருமந்திர ரகசிய அர்த்தத்தை வெளியிட்டார். இந்த 3வது
மாடியில் கோபுரத்தின் உச்சியில் ஊரைப் பார்த்தவண்ணம் இராமானுஜருக்கு   சிலை வைக்கப்பட்டு உள்ளது.
திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரஸ்தலமான இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டியூர் நம்பியின் வம்சா வழியினர்
இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.
மற்றவிடத்து இல்லாதவாறு, இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்ற மூன்று திருநாமங்களுண்டு.

இங்குள்ள திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின் திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன்,அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.

திருக்கோட்டியூருக்கு தெற்கில் சுமார் 18 கீ.மி. தொலைவில் அமைந்துள்ள ஒக்கூர் என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலத்துப் பெண்பாற்
புலவர் “ஒக்கூர் மாசாத்தியார்” என்பார் இக்கோவிலைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் காணப்படுகிறது.

முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை) கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு காரணமாய்
இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

பத்ரிகாச்ரமத்தைப் போல இத்தலம் பெருமைவாய்ந்ததெனவும், அதனால் இதனை தென்பத்ரியென்றும் கூறுவர் “நைமிசாரண்யத்தில்
செய்ததவப்பயனும், கங்கை கரையில் நேர்ந்த மரண பலமும் (ஆயுள் விருத்தி) குருச்சேத்திரத்தில் செய்த தனப்பிரயோஜனமும்” ஆகிய இம்மூன்றும்
திருக்கோட்டியூரைச் சேவிப்பதால் கிடைக்குமென்று ப்ரம்மாண்ட புராணத்தில் 47வது ஸ்லோகம் கூறுகிறது. கோஷ்டியூர் போகாதவன் குரங்காய்ப் போவான்
என்பதும் வைணவப் பழமொழி.

மகாமகக் கிணறு (சிம்மக்கிணறு) இங்கு உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நீராடுவது மிகவும் விசேஷம்.

திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர் கோன் அபிமான
துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார்.
இவ்வூரின் செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை புரோகிதர் ஆவர்.

பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை
ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த
சிற்றரசன் முனைந்தபோது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள்
திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார்.பராசரபட்டர் ஆண்டாள்மீது அருளியுள்ள ‘நீளாதுங்க’ என்று தொடங்கும் வடமொழிச்சுலோகம் இவ்வூரில் இயற்றப்பெற்றதாகவும் அறிகின்றோம்.

செல்வ நம்பிகள் பெரியாழ்வாரைத் திருக்கோட்டியூருக்கு அழைத்து வந்தபொழுது ஸ்ரீஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன்
மிகவும் நேர்த்தியான ஆடல்பாடலால் உற்சவம் நடந்ததைக் கண்டு இதுதான் ஆயர்பாடி என்றும், வண்ண மாடங்கள் சூழ்…. திருக்கோட்டியூர் என்று
மங்களாசாசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தாலாட்டு, நீராட்டல், பூச்சூடல் போன்றனவும் இவருக்கே பாடினதாயும் கொள்வர்.
உரக மெல்லணையான் என்று பெரியாழ்வார் மூலவரையும் திருமாமகட் கினியான் என்று உற்சவரையும் மங்களாசாசனம் செய்கிறார்.
திருமங்கையாழ்வார், திருப்பிரிதி என்ற திவ்ய தேசத்தில் தொடங்கிய பதிகம் மூலமான அர்ச்சாவதார மங்களாசாசனத்தை, திருக்கோட்டியூரில் நிறைவு
செய்கிறார்,

செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு யாத்துள்ளார்.

சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர்.

————–

94. திருப்புல்லாணி

இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது.

திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது இத்தலம், ஸ்ரீ இராமனின் தந்தை தசரதனால் பூஜிக்கப்பட்டதெனில் தொன்மை
எழுத்தில் அடங்குந் தன்மையதன்று.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் புறப்பட்டுச் சென்று தென்கடற்கரையடைந்து
(சேதுக்கரை) கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டும்மென்று அக்கடலரசனான வருணணைப் பிரார்த்தித்து 7 நாட்கள் பிரயோபவேசமாக
(தர்ப்பைப் புல்லான நாணலில்) கிடந்த தலமாதலால் இத்தலம் வடமொழியில் தர்ப்பசயனம் எனவும், (இராமன் தர்ப்பசயன ராமன் எனவும்) தமிழில்
புல்லணை எனவும் பெயராயிற்று.

இராமபிரானே இத்தலத்து பெருமாளைப் பூஜித்தான். திருவரங்கனைப் போன்று இவரும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்தில்
உள்ள ஆதிஜெகநாதப் பெருமாளை இராமன் பூஜித்து அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று இராவண வதஞ்செய்ததாகவும் வரலாறு.
பூரியில் ஜெகந்நாத சேத்திரத்தில் அரூபியாக திகழும் இப்பெருமாள் இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு கரங்களுடன் ஸ்வரூபராய்த் திகழ்கிறார்.

புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மஹரிஷிகளும் இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான்
வைகுண்டத்திலிருந்து இத்தலத்திற்கு வந்து அஸ்வத்தமாக (அரசமரமாக) பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே உபாஸகர்கள்
அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர்.

இத்தலத்தை வடமொழியில் புல்லாரண்யம் என்றும் தமிழில் புல்லணை என்றும் கூறுவர். வடமொழிச் சொல்லுக்கு மலர்ந்து மலர்கள் அடர்ந்த காடு
என்றும் முனிவர் தவஞ்செய்த காடு என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புல்லணை என்பதற்கு திருப்புல் – அதாவது தருப்பை அப்புல்லை அணைந்து ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை என்றும், தருப்பை
புற்கள் (நாணற்புதர்கள்) அடர்ந்தோங்கி வளருங்காடு என்றும் பொருள்படும்.

இராமன் இலங்கையினின்றும் திரும்புகையில் மீண்டும் இவ்விடத்திற்கு வந்தபோது பக்தர்களின் வேண்டுதலுக்கிணங்கி இங்கு பட்டாபிஷேகம் செய்து
கொண்டதால் பட்டாபிராமன் எனவும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்- ஆதிஜெகந்நாதன் (தெய்வச்சிலையார்) நின்ற திருக்கோலம். சக்ரவர்த்தி திருமகன், தர்ப்பசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்–   கல்யாணவல்லி, பத்மாஸனி என்ற இரண்டு தேவிமார்கள்.
உற்சவர்–   கல்யாண ஜெகந்நாதன்

தீர்த்தம்-மொத்தம் 10 தீர்த்தங்கள். சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம் போன்றன
முக்கியமானவைகள்.
ஸ்தலவிருட்சம்- அஸ்வத்த விருட்சம் (அரசமரம்)
விமானம்–   கல்யாண விமானம் (மொத்தம் 7 விமானங்கள்)
காட்சி கண்டவர்கள்–   அச்வத்த நாராயணன், புல்லர், சமுத்திரராஜன்.

கடற்கடவுள் தன் பத்தினியோடு இராமனைச் சரணமடைய அவனுக்கு மோட்சமளித்த ஸ்தலம்.

புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர்எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம் பெற்றதால் இது ஒரு
சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச்
சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர் என்பவர் இவ்வூரினர்.
இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் தொன்மைப் புகழுக்கோர் சான்று.

இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்) மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில்
நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு
இல்லாதவர்கள் ஸேதுவில் நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை,
செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது புராண வரலாறு. இம்மரத்தை பக்திச் சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படு நன்மைகளைப் பற்றிக் கீழ்க் காணும் கவிதை விளக்குகிறது.

பெருவயிறு கண்டமாலை, உதரவலி அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி வளர் அரசு கண்ட பேரை அணுகாவே”

தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம் இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். ஸேது என்ற
வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர். ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு
அணை) இந்தியாவின் தெற்கெல்லையாகத் திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து அறியலாம்.

கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த ஸேதுவும் மேன்மை
பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப் பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்”
தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும்.என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில்
வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும் மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார்.

இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத் தொடர்பு கொண்டது இத்தலம்.

இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு வந்து புத்திர
காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன் முதலான 4 புத்திரர்களாக
அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது.

புல்லை, அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றி செய்திகள்  தருகின்றன.

வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் ராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல் ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”-அகநானூற்றின் 70வது பாடல்
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.

இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள் தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு அவர்தம்
பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பை பெற்றதாகும்.

ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப் பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். “திரு அணை
காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக் கம்பர்.

மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”

எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. ஆம். விண்வெளியில்
உலகைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம் புராணங்கூறுவது
யாதும் பொய்யே அல்லவென்றும், முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் நிரூபணம் செய்துள்ளது.

விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

மூலவரின் திருநாமத்தை,
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற் கென் சிந்தை நோய் செப்புமினே – என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில் குறிப்பிடுகிறார்.

—————

95. திருமெய்யம்

பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப் பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த ஸம்பாஷணையாக
10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு பேசப்படுகிறது.

சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர் தவமிருந்து
நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை ஆண்டபுருரவச் சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார்.

ஆதிசேடன் தவம்-தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம் வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான். அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த வரத்தைப் பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம் தலைகளுடனும் பல மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5 தலைகளுடனும், ஒரு பாக நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும், ஒரு பனை மரத்தின் அளவிற்கு நீண்ட சரீரத்தையும் எடுத்துக் கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக் கொண்டு வந்து இவ்விடம் வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம்
பள்ளமானபடியால் அது ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்டஇடம் சத்திய சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய
புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ் செய்யலானான் ஆதிசேடன் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம் கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்)
தோன்றினார். உடனே ஆதிசேடன் தனது உடலால் ஆசனமும் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம்
கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து மானசீகமாக அன்ன
நிவேதனம் செய்து ஆராதித்தான். இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேடனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை
மாற்றியது மட்டுமன்றி இன்னும் வேறு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்.
அதற்கு ஆதிசேடன் திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு இங்கும்சயனித்துக் காட்சியருள வேண்டுமென்று கேட்க, அவ்வண்ணமே ஆகட்டும்
என்றார். பின்னர் அர்ச்சாரூபமாய் மாறிய பின்னர் இருவரும் திருப்பாற்கடலெய்தினர்.

சந்திரன் தவம்-அத்திரி என்ற முனிவரின் கற்புடை மனைவி அனுசூயை என்பவள் மும்மூர்த்திகளே தமக்குப் புத்திரர்களாக வாய்க்க வேண்டுமென
கடுந்தவமியற்றினாள். அதன் பயனாக மஹாவிஷ்ணு அம்சமாக தத்தாத்திரேயர் என்ற தவநிதியாகவும், கோபாம்சக் குணம் கொண்ட ருத்ரன் அம்சமாக
துர்வாசர் என்ற கோபம் மிகுந்த முனிவராயும், பிரம்மாவின் அம்சமாக சந்திரனும் வந்து பிறந்தனர். தக்க பருவம் அடைந்ததும் அத்திரி முனிவர்
மூவரையும் அழைத்து மந்திர உபதேசம் செய்து தவஞ்செய்ய அனுப்பினார்.
துர்வாசர் கைலாய மலையினையும், தத்தாத்திரேயர் இமயமலையினையும், சந்திரன் ஸத்திய கிரியையும் அடைந்தனர். பிரம்மனுக்கு திருமாலைக் குறித்து
தவம் செய்வதே எப்போதும் பொழுது போக்கான விஷயம். எனவே பிரம்மனின் அம்சமாக வந்த சந்திரன் இச்சத்திய கிரியை அடைந்து
திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்யலானான். திருமால் வாமன வடிவில் சந்திரனுக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டுமென்று வினவினார்.
இத்தலத்தில் எனக்கு காட்சி கொடுத்த மாதிரியே சந்திர மண்டலத்திலும் தாங்கள் எழுந்தருளி நித்திய வாசம் செய்யவேண்டுமென சந்திரன்
வேண்டவே ராஜ ஹம்ஸம் வெண் தாமரையில் வசிப்பதுபோல் திருமால் அங்கு எழுந்தருளி நித்திய வாசம் செய்யலானார்.

ஸத்திய மகரிஷியின் வரலாறு இமயத்தின் வடபுரத் தாழ்வரையில் புஷ்ப பத்திரை என்னும்
நதியோடுகிறது. அதன் கரையில் சித்ரசிலை என்ற பாறை இருக்கிறது அந்தப் பாறையினருகில் பத்ரவடம் என்ற ஒரு ஆலமரம்
இருந்தது. அதனடியில் ஸத்திய தவர் என்னும் முனிவர் தவமியற்றினார். இவர் மகா தபசி. இவரது தவத்தை மெச்சி காட்சி கொடுத்த எம்பெருமான் என்ன
வரம் வேண்டுமென்று கேட்க அதற்கு ஸத்தியத்தவர் எனக்கு வரம் எதுவும் வேண்டாம். ஆயின் நான் நினைக்கும் போதெல்லாம் தாங்கள் எழுந்தருள
வேண்டும் என்றார். மகாவிஷ்ணுவும் சரி என்று ஒப்புக்கொண்டார். பின்னர் அம்முனிவரைப் பார்த்து இவ்விடத்தில் (இமயச்சாரலில்) பின்னொரு யுகத்தில்
யாம் இன்னொரு திருவிளையாடல் புரிய சித்தமாயுள்ளோம். ஆகவே நீங்கள் தவம் செய்ததற்கு பிறிதொரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். உம்
விருப்பப்படி நீங்கள் நினைத்த மாத்திரத்தில் வரக்கடவோம் என்றார் மஹாவிஷ்ணு.

இதைச் செவிமடுத்து மிகவும் சந்தோஷித்த ஸத்தியதவர் திருமாலை நோக்கி அவ்வாறாயின் யான் தவம் செய்தற்குத் தகுந்த இடத்தை தாங்களே
திருவாய்மலர்ந்தருளும்படி வேண்டினார். உடனே மஹாவிஷ்ணு சந்திரனும், அனந்தனும் தன்னைக் குறித்து தவமிருந்த இந்தச் சேத்திரத்தில் (சத்திய
ஷேத்திரத்தில்) சென்று தவமியற்ற அருளினார்.

தமக்கு கிடைத்த பெரும் பேற்றை எண்ணிய ஸத்தியதவர் மீண்டும் மஹாவிஷ்ணுவை நோக்கி அவ்வாறாயின் இவ்வளவு காலம் என்னோடு
ஒன்றிப் போய்விட்ட புஷ்ப பத்திரா என்னும் நதி, சித்திரசிலை என்னும் பாறை, பத்ரவடம் என்னும் ஆலமரம், என்னும் இம்மூன்றும் எனக்குத் தாய்,
தந்தை, தோழன், போன்றன. எனவே இவைகளை விட்டுப் பிரிவதும் மிகவும் கஷ்டமாயுள்ளது. என்றார். உடனே மஹாவிஷ்ணு அவரின் நன்றியறிதலை
மெச்சி அவ்வாறாயின் இந்த மூன்றையும் அந்தச் சேத்திரத்திற்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ஐராவதத்திற்கு உத்தரவிட அம்மூன்றும் இங்கு
வந்து சேர்ந்தன. புஷ்பத்திரா நதி புஷ்கரணியாயிற்று. சித்திர சிலை என்னும் பாறையே தற்போதுள்ள மெய்ய மலையாயிற்று. பத்ரவடம் என்னும்
ஆலமரமே தற்போது அரசமரமாகக் காட்சியளிக்கிறது. இந்த ஆலமரம்,

கிரேதாயுகத்தில் பத்ரவடமாகவும்
திரேதாயுகத்தில் அஸ்வத்தமாகவும்
துவாபரயுகத்தில் புத்திரதீபமாகவும்
கலியுகத்தில் பநஸ என்ற பெயரில் அரச மரமாகவும் திகழ்கிறது.

ஸத்திய முனிவரும் இங்கு வந்து கடுந்தவஞ் செய்ய, ஓர் நாள் வைகாசி சுக்ல பட்சம், பஞ்சமி ஞாயிறன்று சிம்ம லக்கினத்தில் எம்பெருமானை நினைக்க உடனே பிரத்யட்சமாகி யாது வேண்டுமென்று கேட்க ஸத்திய முனிவர் மோட்சம் வேண்டுமென்றார். அதற்கு
திருமால் ஸத்திய முனிவரை நோக்கி இன்னும் கொஞ்சகாலம் இங்கேயே தவம் புரிந்து கொண்டிருக்குமாறும் புருரவச் சக்கரவர்த்தி இவ்விடம் வந்து
சேர்ந்தவுடன் இருவருக்கும் மோட்சம் அளிப்பதாகவும் கூறியருளினார்.

நவக்கிரகங்களில் ஒருவனான புதனின் மைந்தன் புருரவச் சக்கரவர்த்தி, இக்காலத்தில் இவன் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்துவந்தான். இவன் விஷ்ணு பக்தியில் அளவற்ற ஈடுபாடும் பேராற்றலும் பெற்றவன். இவனுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு அடிக்கடி பிராட்டியால்
வேண்டப்பட்ட எம்பெருமான் தன் பரிவாரங்களையெல்லாம் வராகங்களாக்கி தானும் வராக ரூபங்கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார்.

வைகைக்கு வடக்கு பக்கமாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கு பக்கமாகவும் உள்ள செழிப்பான பகுதியில் இந்த வராகங்கள் புகுந்து வயல்களை நாசம்
செய்ய கிராம மக்களால் இவைகளை அடக்க முடியாமல் போக மதுரைக்கு மன்னனான புருரவச் சக்கரவர்த்தியிடம் முறையிட்டனர் (பிர்ம்மாண்ட
புராணம் ஸ்லோகம் 217)

மன்னன் தன் சேனைகளை அனுப்ப அவர்கள் தோற்றுப் போய்வர, இதைக்கண்டு திகைத்த மன்னன் தானே நேரில் யுத்தத்திற்கு சென்று வராகக்
கூட்டங்களின் மீது சரமாரியாக அம்புகளை எய்து கொண்டிருக்கையில் தலைமை வராகம் மட்டும் (விஷ்ணு) புருரவச் சக்கரவர்த்தியின் முன்பு வந்து
அவன் கைகளில் வைத்திருந்த வில்லையும் அம்பையும் பறித்துக் கொண்டு ஓட இவன் துரத்த இறுதியில் இந்த சத்தியகிரிவரை ஓடிவந்த அந்த வராகம்
ஆலமரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த ஸத்திய முனிவருக்கு முன்னால் ஒரு மனிதன் பேசுவது போல் இதோ புருரவன் வந்துவிட்டான், புருரவன்
வந்துவிட்டான் என்று இரண்டு முறை சப்தமிட்டுவிட்டு மறைந்துவிட்டது.

சப்தத்தைக் கேட்டு தவத்திலிருந்து கண்விழித்த ஸத்திய முனிவரும் புருரவச் சக்கரவர்த்தியும் யாரையும் காணாது திகைத்து நிற்க
அவ்விருவருக்கும் சக்ரதாரியாக காட்சி தந்து சத்திய முனிவருக்கு மோட்சம் கொடுத்துவிட்டு, புருரவனை நோக்கி நீ இன்னும் 3 ஆண்டுகள் இங்கு
தங்கியிருந்து இந்த ஆலயத்தை நல்லவிதத்தில் கட்டி முடித்து அதன்பின்பு என்னைச் சேர்வாயாக என்று
அருளி மறைந்தார்.

மூலவர்-ஸத்யகிரி நாதன், ஸத்யமூர்த்தி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம், அனந்த சயனத்தில் பள்ளிகொண்ட பெருமாள்.
உற்சவர்- மெய்யப்பன். ராஜ கோபாலன் என்ற திருநாமமும் உண்டு.
தாயார்-   உஜ்ஜீவனத் தாயார், உய்யவந்த நாச்சியார், என்பதும் திருநாமம்.
தீர்த்தம்-  கதம்ப புஷ்கரணி, ஸத்ய தீர்த்தம்
ஸ்தலவிருட்சம்-   அரச மரம் (அஸ்வத்தம்)
விமானம்-    ஸத்திய கிரி விமானம்
காட்சி கண்டவர்கள்-     ஸத்திய முனி, புருரவன் ஆதிசேடன், சந்திரன், கருடன்.

கருடன் தன் தாயின் அடிமைத் தளையைத் தீர்க்க அமிர்தம் கொண்டுவர வேண்டிய நிலையேற்பட்டது. அதற்கு வேண்டிய மகாபலத்தையும்
சக்தியையும் இவ்விடத்திலிருந்துதான் மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவமிருந்து பெற்றான் என்பர்.

சுவேதத் தீவில் பகவானுடைய கோட்டை வாசற் காவல் பூண்ட தச்சகன் என்பவன் கோபங்கொண்ட துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு
உடனே பாம்பினுருவத்தையடைந்து பூமியில் பல இடங்களிலும் திரிந்து இறுதியில் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பகவானின் அனுக்கிரகத்தால்
முன்பு போலவே விஷ்ணு சிங்கார ரூபத்தையடைந்தான்.

இங்கு சந்திரனால் ஆராதிக்கப்பட்ட பிம்பம் ஸத்திய புஷ்கரணிக்கு தெற்கில் ததிவாமன மூர்த்தியாய் உள்ளது.-இது முழுமையும் சந்திர காந்தக் கல்லினால் அமைக்கப்பட்டது.

அதற்கு மேற்கில் திருமெய்ய மலைக்குத் தென்புறம் அடிவாரத்தில் மிக்க அழகுள்ளதாகவும், சயன மூர்த்தியாகவும் திகழ்பவர் ஆதிசேடனால்
அமைக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டவராகும்.

மெய்யமலையின் உச்சியில் கருடனால் பிரதிட்டை செய்யப்பட்ட பிம்பம் உயர்ந்ததான ஒரு கருடப் பச்சைக் கல்லினால் அமைக்கப்பட்டதாகும்.

ஆதிசேடன் தனக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள சர்வஞானமும் தெரியவேண்டுமெனப் பிரார்த்தித்த தலம், எனவே இச்சேத்ரம் அஞ்ஞான
இருள் நீக்கி மோட்சம் தரத்தக்கதாகும்.

தற்போதுள்ள ஆலய அமைப்பு பல்லவ மன்னர்களின் குடவரைக்கல் கோவில்கள் என்பதின் அடிப்படையில் வருவதாகும். பல்லவ மன்னன்
இரண்டாம் நரசிம்மவர்மனால் (இப்போதுள்ளவாறு) கட்டப்பட்டதாகும்.

இங்கு ஆதிசேடனில் சயனித்துள்ள பெருமாள் ஸ்ரீரங்க நாதனைவிட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல
தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.

ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க
வந்ததாயும் ஆதிசேடன் விஷக் காற்றைவிட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் முகத்தான் இங்குள்ள
ஆதிசேடன் வாயிலிருந்து விஷ ஜு வாலைகள் செல்வது போன்று செதுக்கப் பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின்- வடநாட்டுத் திவ்ய தேசங்கள் — தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

November 24, 2023

96. திருஅயோத்தி

புராணங்கள் யாவற்றிலும், எண்ணற்ற இலக்கியங்களிலும், கணக்கிலடங்கா நூல்களிலும் இந்த அயோத்தி விரித்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்காந்த புராணத்தில் மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் அயோத்தி வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம்
பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. “செங்கண்மால் பிறந்து தனிச் சிறப்புடன் ஆண்டு அளப்பருங்காலம் திருவின் வீற்றிருந்தான்” என்கிறான் கம்பன்.
திருவயோத்தியென்றும் அயோத்தி நகர் என்றும் மாந்தி மகிழ்வர்கள் ஆழ்வார்கள்.

பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வாயம்புவான் என்பவனுக்கு ஸ்ரீநாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும்
பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார்
என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதுவே பல நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி
மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன்
வைகுந்தத்தை முதலிலேயே இங்கு இறக்கிவைத்துவிட்டாரோ என்னவோ.  இத்தகைய அயோத்தியின் இன்றைய நிலைமை எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றாகும். இன்றைய அயோத்தியே பாரத மண்ணில் பக்தி மணத்தைக் கமழச் செய்து கொண்டிருக்கிறதென்றால் திரேதாயுகத்தின் அயோத்தி எப்படி
இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையிலேயே வைகுந்தமாகவே இருந்திருக்கும்.

மூலவர்–  ஸ்ரீராமன், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன், வடதிசை நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்- சீதா பிராட்டி
தீர்த்தம்–   சரயூ நதி, பரமபத புஷ்கரணி
விமானம்–   புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்–   பரதாழ்வான், தேவர்கள், முனிவர்கள், திரேதாயுகத்து அயோத்தி நகர்வாசிகள்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் ஒன்றான இந்த அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமநாமம் இந்தியா முழுவதும், ஏன் உலகம்
முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும், சங்கீதங்களிலும், மனிதர்களின் பெயர்களிலும், புராண இதிகாச இலக்கியங்கள் மூலமாகவும்,

கோவில்களிலும் இந்த நாமம் ஒலிக்காத நாளும், ஒலிக்காத நேரமும் இல்லை என்று சொல்லலாம். ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி
விரித்துரைக்கும் தன்மையதன்று. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டெரிக்கவல்லது. திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள் ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள் இம்மண்ணுள்ளவரை அழியா மகத்துவம் பெற்றவைகளாகும். ராம நாமம் ஜென்ம ரட்சக மந்திரம் என்றார் போல் ராம நாமத்தை உலகிற்குப் பயந்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்புமாகும்.

இட்சுவாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை
தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இட்சுவாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி
கொண்டது. பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவன் பூவுலகிற்கு வந்து
முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான்.
திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார். இதன் பெருமைகளை எளிதில் சொல்லிடவும் முடியுமோ.

சூரிய வம்சத்து மன்னர்களால் ஆளப்பட்டு 7 புண்ணிய மோட்ச புரிகளில் முதன்மை பெற்றதும், சரித்திர கோசல ராஜ்யத்தின் தலைநகரமாக
விளங்கியதும் மனு என்னும் மன்னரால் கட்டப்பட்டதுமான இந்த அயோத்தியை, மாந்தாதா, அரிச்சந்திரன், பாகீ ரதன், தீலிபன், ரகு, போன்ற
புகழ்பெற்ற சூரிய வம்சத்து மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.

இந்த அயோத்தியை (அதாவது அன்றைய அயோத்தியா ராஜ்யத்தை) ராமன் தனது புதல்வர்களான லவ குசனுக்கும், பரதனின் குமாரர்களான தசு-
புஷ்கலனுக்கும், லட்சுமணனின் புதல்வர்களான அங்கத, சந்திர கேசனருக்கும், சத்துருக்கன் புதல்வர்களான சூரஸேன, சூடாஹி ஆகியோருக்கும் 8
பாகங்களாகப் பகிர்ந்து கொடுத்தார்.

இங்கு ராம, லட்சுமண, சீதை, அனுமார் ஆகியவர்கட்கும் எண்ணற்ற சின்னஞ்சிறு கோவில்கள் உண்டு. எங்கு நோக்கினும் ராமபிரான் சந்நிதிகளே.
பைசாபாத் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தி வரும் வழியில் எண்ணற்ற ஆஞ்சநேயர் கோவில்கள் ஆங்காங்கே வழி நெடுக இருப்பது நம்மை
ஆஞ்சநேயரே ராமபிரானிடம் அழைத்துச் செல்வதுபோல் உள்ளது.

இங்கு அமைந்துள்ள கனகமந்திர் என்னும் மண்டபத்தில் (மந்திர் என்றால் இந்தியில் கோவில் என்று பொருள்) கனகமந்திர் என்னும் இவ்விடம்
ஒரு மண்டபம் போல் காட்சியளிப்பதால் மண்டபம் என்றே எடுத்தாண்டுள்ளோம். இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் கனக மந்திர் என்னும் பெயருண்டாயிற்று. இங்கு
துறவிகள் இருவர் நடத்திக் கொண்டிருக்கும் ராம பஜனை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் பேரழகு பொருந்தியதாகும்.

இராம சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்த
துளசி மாடம், இராமபிரானுக்கும் அவரது தம்பிகட்கும் திருமணம் நடந்த இடம், ராமன் பட்டாபிசேகம் செய்த இடம் (இந்த இடம் இன்று ஒரு
நந்தவனம் போல் உள்ளது) சீதையின் தகப்பனார் ஜனகர் தங்கியிருந்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப்பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர்
ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களைக் காணும் போது இராமாயண காலத்தோடு கலந்து ஒன்றிவிட்ட உணர்வு
ஏற்படுகிறது.

பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும்வரை காத்திருந்த நந்திகிராமம் (நந்திகிராமம் அயோத்தியிலிருந்து 20 மைல்)
லகட்மண்டி என்றழைக்கப்படும் இடமான தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம், அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கனகபவனம்
என்றழைக்கப்படும் கைகேயியின் அரண்மனை ஆகிய ஒவ்வொன்றையும் காணும்போது ராமாயண காலத்தில்  வாழ்ந்தது போன்று உணர்வுகள் தலைதூக்கும்.

அயோத்தியென்றதும் சரயு நதிதான் சடக்கென்று நினைவுக்கு வரும். இந்நதி இமயத்திற்குள் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது.
அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காளி என்னும் நதி கலந்துறவாடுகிறது. இப்போது இதனை கோக்ரா என்று அழைக்கின்றனர். இந்த சரயு நதியில்
உள்ள ராம்காட் என்னுமிடத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.
மேலும் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம், குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய தீர்த்தங்களாகும்.

ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுற்றதை எமதர்மன் ஒரு தபசியின் ரூபத்தில் வந்து இராமனுக்கு நினைவு படுத்த ராமன் இந்தச் சரயு
நதிக்குச் சென்று தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

ராமன் தனது சரீரத்தைக் களைந்து பூத உடலைத் துறந்து இந்தச் சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கையில் இங்கு
வருவோரனைவரும் இதில் நீராடுவர்.

அநுமான்கடி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. ஐம்பது
படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடினதாக கம்பீரத்தோற்றத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. இந்த ஆலயத்தின்
சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் ராமாயணம் படித்துக்கொண்டிருக்கும் பக்தர்களைக் காணும்போது இந்து
மதத்தின் தார்மீக வளர்ச்சியை எவரும் அசைத்துவிட முடியாது என்று சொல்லாமற் சொல்வது போல் உள்ளது.

சரயு நதிக்கருகில் அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தென்னிந்திய கோவில்களின் பாணியில் கட்டப்பட்டுள்ள
இத்தலத்தில் தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ள இத்தலம் புராதன
காலந்தொட்டு இதே இடத்தில் எச்சிதைவு இல்லாது அமைந்துள்ளது.

இராமகாதையின் தாக்கம் இந்தியாவின் எண்ணற்ற இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது. தமிழிலக்கியம் பலவற்றில் இராமாயணம் இழைந்தோடுகிறது.
சிலப்பதிகாரத்தில் இராமாயணத்தின் தாக்கம் அதிகம் என்றும், சிலம்பு பயந்த இளங்கோவடிகள் பல மதக் கருத்துக்களையும் தம் நூலில்
கூறிப்போந்துள்ளாரெனினும் வைணவ கருத்துக்களையும், இராம காதையின் நிகழ்ச்சிகளையும் அதிகமாக எடுத்தாண்டுள்ளார் என்பதை சிலம்பைக் கற்றவர்கள் யாரும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வோம்.

கோவலன் புகார் நகரைவிட்டுப் பிரிந்து செய்திக்கு உவமானம் கூறவந்த இளங்கோவடிகள் ராமன் அயோத்தியை விட்டுப் பிரிந்ததை நினைவு கூர்கிறார்.
ராமன் அயோத்தியை விட்டுப் பிரியும்போது மக்கள் எவ்வாறு அலமந்தனரோ அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.

பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும் -என்கிறார்

ராமகாதையில் இளங்கோவடிக்கு இருந்த ஈடுபாடு தன் காவியத்தில் ராம நிகழ்ச்சியைப் புகுத்த வேண்டுமென்ற தாக்கம்
இவ்வுவமானமாக மிளிர்ந்தது.
அதேபோல் கோவலன் புகாரை விடுத்து மதுரை நோக்கி வரும் வழியில் “அறியா தேயத்து ஆரிடை உய்ந்து சிறுமையுற்றேன்” என்று
கோவலன் வருந்தியபோது அவனுக்கு ஆறுதல்மொழி பகர்ந்த கவுந்தி அடிகள்.

தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வ பயந்தோன் என்பது
நீயறிந்திலையோ நெடுமொழியன்றோ – என்கிறார்.
தந்தையின் கட்டளைப்படி வனமேகிய ராமன் சீதையைப் பரிந்து கடுந்துயறுற்றதை நீ அறியவில்லையா உலகோ ரனைவரும் அறிந்த நெடு மொழியல்லவா? அது என்று கூறி கோவலனைத் தேற்றுகிறார்.

————-

97. திருநைமிசாரண்யம்

ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர்.
அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு
வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தான்.

இந்த பாரத தேசத்தில் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது
என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.
நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் ஆனதால் நேமிச ஆரண்யமாகி
நைமிசாரண்யம் ஆயிற்று.
இதே கதை சில நூல்களில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
தீர்க்க ரோமர் என்ற மகரிஷியின் தலைமையில் பிரம்மனிடம் சென்ற முனிவர்கள் சத்திர வேள்வியைத் துவக்கத் தகுதியான இடத்தைக்காட்டுமாறு
வேண்ட, பிரம்மன் அவர்களை ஒரு விமானத்தில் ஏற்றி இவ்வுலகை (பூவுலகை)  வலம் வருமாறும், அவ்வாறு வரும்போது விமானத்தின் நேமி, (சக்கரம்)
தானாக எவ்விடத்தில் கழன்று விழுகிறதோ அதுவே வேள்வியைத்துவக்க சிறந்த இடமென்று கூறியனுப்ப விமானத்தின் சக்கரம் இவ்விடத்தில்
விழுந்ததாகவும் அதனால் இவ்விடம் நேமிச ஆரண்யம் ஆயிற்றென்றும் கூறுவர்.

எவ்வாறாயினும் நேமிசம் விழுந்த ஆரண்யம் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இந்த இடம்தான் என்பதில் ஐயமில்லை.

வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர். அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து
தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம்
எம்பெருமான் அருள்புரிந்து அவர்களை சாயுஜ்ய பதவிக்குரியனாக்கினார் என்பது வரலாறு.

இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய ஸ்வரூபியாக
(காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.

மூலவர்-  தேவராஜன் (ஸ்ரீஹரி) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்–  ஸ்ரீஹரிலெட்சுமி

தீர்த்தம்- சக்கர தீர்த்தம் – கோமுகி நதி
விமானம்-   ஸ்ரீஹரி விமானம்
ஸ்தல விருட்சம்-    தபோவனம்
காட்சி கண்டவர்கள்-   இந்திரன், சுதர்மன், சூதபுரானிகர், ரோமசர் முதலான முனிவர்கள்

இங்குள்ள சக்ர தீர்த்தம் சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ர
நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு. வினோதமான முறையில் இங்கு விநாயகருக்கும் சன்னதி
உண்டு. இதுவும் வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதது.

இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும்,
சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்றவற்றை உருவாக்கினார்கள். இதனால் வேறெந்த ஸ்தலத்திற்கும்
இல்லாத பெருமை (வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்தது) இத்தலத்திற்குண்டாகிறது.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட
அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

————–

98. திருப்பிரிதி

திருமங்கையாழ்வாரால் தொடக்க மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். இமயமலைக்கு வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற
அழகுள்ள இடத்தில் எங்கோ அமைந்துள்ளது. அல்லது அமைந்திருந்தது என்றும் சொல்லலாம். ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று அறுதியிட்டுச்
சொல்ல முடியாததால் இதனைச் சேவிக்க இயலாது.

மூலவர்-  பரமபுருஷன், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-   பரிமளவல்லி நாச்சியார்
விமானம்-    கோவர்த்தன விமானம்
தீர்த்தம்-   இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்

ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிரிதி என்னும் கருத்து ஒன்றும் நிலவுகிறது. இந்த
இடத்தில் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர்.
இவ்விரண்டும் அல்ல. அது எங்கோ இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.

இதில் தற்போது திருப்பிரிதி என்றழைக்கப்படும் ஜோஷிமட் திருப்பிரிதியாகாது. திருப்பிரிதி இமயத்திற்குள் உள்ளது என்று அறுதியிட்டுக்
கூறுகிறார். ஸ்ரீவைஷ்ணவ சுதர்சன ஆசிரியர் ஸ்ரீமான் திரு. கிருஷ்ணசுவாமி ஐயங்கார். இவர் கூறும் கருத்துக்களே ஏற்றுக்கொள்வதற்கு உடன்பாடாய்
இருப்பதாலும் அதுவே உண்மையாகுமாதலாலும் அவர் தமது கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்களை இங்கே சுருங்கச் சொல்கிறோம்.

திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி
வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார்.
இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிரிதியாக இருந்திருந்தால் ஆழ்வார்
முதலில் ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் முதலில்
திருப்பிரிதியை தமது திருமொழியில் 1-2ல் மங்களாசாசனம் செய்து விட்டு அதன் பிறகு பத்ரியை மங்களாசாசனம் செய்கிறார். (எனவே ஜோஷி மடமே
திருப்பிரிதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்)

திருமங்கையாழ்வாரும், மற்றும் பிற ஆழ்வார்களும் தாம் மங்களாசாசனம் செய்யும் திவ்ய தேசத்தின் மருங்கமைந்த இயற்கை
காட்சிகளை தம் பாடல்களில் மறவாது குறிப்பிடுவர். உதாரணமாக திருவரங்கத்தைப் பாடும் பாக்கள் பலவற்றில் ஆழ்வார் காவிரியைக்
குறித்துள்ளார்.

கங்கை கரையில் உள்ள வதரியச்சிரமத்தை பாடும் போது முதல் ஒன்பது பாசுரங்களிலும் ஈற்றடியில் கங்கையின் கரைமேல் வதரியாச் சிரமத்துள்ளானே
என்று முத்திரை பொறிக்கிறார். இதே போல் கண்டமென்னும் கடிநகர்ப் பதிகப் பாசுரம் ஒவ்வொன்றிலும் அந்த நகர் கங்கை கரையில் உள்ளதென்பதை
உணர்த்தியுள்ளார்.

கங்கைக் கரையின் மேலுள்ள ஜோஷி மடமே திருப்பிரிதியாகில் திருப்பிரிதிப் பதிகப் பாசுரம் ஒன்றிலாவது கங்கையைப் பற்றிச் சொல்லி
இருக்கவேண்டும். கங்கை பெருகி ஓடும் நதி. திருப்பிரிதி பாசுரத்தில் தடஞ்சுனைகளையும், அருவிகளையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செய்கிறார். இவைகள் கங்கைகரையில் இல்லை. ரிஷிகேசத்திலிருந்து வதரி வரை செல்லும் பாதையை ஒட்டியே கங்கை பாய்கின்றது. திருப்பிரிதிக்கு
கங்கையின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் சொல்லாமல் இருப்பதிலிருந்தே திருப்பிரிதியானது கங்கையின் உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் தாண்டி வதரிக்கு மிகவும் வடக்கே இருந்திருக்க வேண்டும் என்று காட்டும் முக்கியமான அகச் சான்றாகும்.

திருமங்கையாழ்வார் திருப்பிரிதிக்கு இட்டருளிய பாசுரங்களில் எல்லாம் இமயத்துள் என்று இந்த திவ்ய தேசத்தைக் குறிக்கிறார். இமயத்துள்
என்னும் பதத்தாலே இமயத்தின் நடுவில் இருப்பதே திருப்பிரிதி என உணர்த்துவதன் மூலம் இமயத்தின் தென்பகுதியில் உள்ள வதரி முதலிய திவ்ய தேசங்களைக் காட்டிலும் திருப்பிரிதியை வேறுபடுத்திக் காட்டுகிறார். இவ்வாறே பிரிதியில் உள்ளவனென்றும் இமயத்துள் இருப்பவனென்றும் ஆழ்வார் திருவுள்ளம் பற்றியதாலே ஏற்றினை இமயத்துள் எம்மீசனை என்ற பதத்திற்கு பெரியவாச்சான் பிள்ளை பொருள் கூறுமிடத்து ஹிமவானில் திருப்பிரிதியில் வந்து ஸந்நிஹிதனானவன் என்று அருளினார். (பெரியவாச்சான் பிள்ளை கங்கையையோ வதரியையோ குறிப்பிடவில்லை. இமயத்தை ஹிமவான் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது)     

திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் திருப்பிரிதியின் இயற்கை காட்சிகளை விளித்துப் போகும்போது அங்கு வாழும்
காட்டு மிருகங்களை தமது பாக்களில் கூறிப்போகிறார்.பெரிய யானைகளை இம்சித்துக் கொண்டு சிங்கங்கள் சஞ்சரிக்கும்
பிரதேசம் என்கிறார்-போர் செய்தலையே தொழிலாக கொண்ட வேங்கைப் புலிகள் திரியுமிடமென்கிறார்.-யானைகளை விழுங்கக்கூடிய மலைப் பாம்புகள் ஊர்ந்து செல்லக்கூடிய இடமென்கிறார்.

திருப்பிரிதியை இவ்வண்ணம் பாடியிருக்கும் திருமங்கையாழ்வார், வதரியைப் பற்றிப் பாடும்பொழுது ஒரு பாசுரத்திலாவது துஷ்ட மிருகங்கள்
இருப்பதைப்பற்றிப் பாடவில்லை பாரோர் புகழும் வதரியென்று திருமங்கையாழ்வார் காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஜனங்கள்
வருடந்தோறும் வதரி சென்று வந்திருக்கிறார்களாகையாலே துஷ்ட மிருகங்கள் சஞ்சரித்திருக்க முடியாது. ஆகவே சிங்கம், புலி, மலையரவு ஆகிய துஷ்ட
ஜந்துக்கள் வாழுமிடமாய் பாடப்படும் திருப்பிரிதி வதரிக்கு 20 மைல் தெற்கே உள்ள ஜோஷி மடமாக இருக்கவே முடியாது.

ஜோஷி மடம் பிரிதியாய் இருக்க முடியா தென்பதற்கும் அடர்ந்த காட்டுப் பிரதேசமொன்றில் அமைந்தது திருப்பிரிதி என்பதற்கும் இது
முக்கியமான அகச்சான்றாகும்.-இந்த அகச்சான்றுகள் போக, சில புறச்சான்றுகளையும் இனி காண்போம்.

பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்களிலும் உகந்தருளிய நிலங்களுக்கெல்லாம் எல்லையாயிருப்பது திருப்பிரிதி என்று அருளியிருப்பது மற்ற திவ்யதேசங்கள் அனைத்திலும் வடக்கே இருப்பது என்று ஐயந்திரிபறக் காட்டுகிறது.

பெருமாள்-பரமபுருஷன், கிழக்கே திருமுகம், புஜங்க சயனம், பார்வதிக்குப் பிரதயட்சம்.
தாயார்–   பரிமளவல்லி நாச்சியார்

விமானம்–  கோவர்த்தன விமானம்
தீர்த்தம்–   இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ்.

விபூதூர் வித்வான் கி.வேங்கிடசாமி ரெட்டியாரிடமிருந்து கிடைத்த 108 திருப்பதியந்தாதியென்னும் கட்டளைக் கலித்துறையிலமைந்த
நூலில்,“நாரங்களுக் கிறைவன் பார்வதிக்கு நயந்தருள்வோன்
வாசஞ்செய் மானச வாவி அனந்தன் வர்த்தனத்தில்
பாரமர் பரிமளவல்லிக் கின்பாகத் தென்பால் துயிலும்
ஆரம் செறி இமயப்பால் திருப்பிரித்திக் கரசே–என்று அமைந்துள்ள இப்பாட்டிலும் இவ்விவரங்களே காணப்படுகின்றன.

108 திருப்பதியந்தாதி பாடலில் மான ஸரஸ் என்னும் தீர்த்தம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பண்டைப் புராணங்களும் இதிகாசங்களும்
மானஸரோ வரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில்
வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250 அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000
அடி உயரத்தில் கடல் போல் விளங்குகிறது. பிரம்மன் தனது மனத்தாலே (ஸங்கல்பத்தாலே) முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த
ஏரியைச் சிருஷ்டித்தால் மானஸரஸ் என பெயர் உண்டானதாகக் கூறுவர்.
உலகிலேயே மிகப் பெரியதும் அழகியதுமாகையால் ஸரோவரம் என்னும் புகழைப் பெற்றுள்ளது.
மிக முக்கியமான இயற்கை காட்சியொன்று ஒரு திவ்ய தேசத்தில் இருக்குமானால் திருமங்கை அதை தமது பாடலில் குறிக்காமல் விடார். அவ்வாறெனின் இந்த ஏரியைக் குறித்திருக்கிறாராவெனின் முதல் பாசுரத்திலேயே தடஞ்சுனை பிரிதி என்று பிரிதிக்குத் தடஞ்சுனை என்றே பேரிட்டு மானஸரோ வரத்தையே உணர்த்துகிறார் என்பது நமது பதில். ஸரோவரம் என்பதை தடஞ்சுனை என்று தமிழாக்கியுள்ளார். தடஞ்சுனை பிரிதி பெரிய ஏரிகளை உடைய பிரிதி என்றும் பொதுவாய் பொருள் கொள்ளலாம்.

மேலும் இங்குள்ள பெருமாளின் பெயர், பிராட்டியின் பெயர், சயன திருக்கோலம், போன்றவற்றையும், திருமங்கை தமது பாசுரங்களில் குறிக்கிறார்.

பணங்கொள் ஆயிரம் உடைய நல் அரவனைப் பள்ளி கொள் பரமா என்று
இறங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்த நல்லிமயத்துள்–என்று பெருமாளின் திருநாமத்தோடு அவரின் சயனத்
திருக்கோலத்தையும் குறிக்கிறார். இப்பாசுரத்திற்கு முன் உள்ள பாசுரத்தில் கரைசெய் மாகடல் கிடந்தவன் என்று திருப்பாற்கடல் நாதனை அனுபவித்து
விட்டு அங்கே கிட்டமுடியாதாரும் அனுபவிக்கலாம்படி இங்கே தன் திருக்கோலத்தைக் காட்டுகிறான் என்னும் ஸங்கதி தோன்ற அப்படித்
திருப்பாற்கடலில் சாய்ந்தருளினவன் இங்கே வந்து எழுந்தருளியிருக்கும் படியை அனுஸந்திக்கிறார் என்று பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுரத்திற்கு
அவதாரிகை இட்டிருப்பதிலிருந்து திருப்பிரிதியின் பனங்கொள்ளாயிரமுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமனாகவே எம்பெருமான் சேவை ஸாதிக்கிறார் என்று விளங்குகிறது. எனவே புஜங்க சயனமில்லாத ஜோஷி மடக்கோவில் திருப்பிரிதியாய் இருக்க இடமில்லை என்பது தெளிவு. பார்வதியோடு சிவன் வாழும் கயிலை மலைக்கு அருகில் உள்ள திருப்பிரிதியில் எம்பெருமானைப் பார்வதிக்குப் பிரதயட்சமாக ப்ரபாவ நூலில் பேசியிருப்பதிலும் பொருத்தமுள்ளது.

இவ்வண்ணமாக நூற்றெட்டுத் திருப்பதி ப்ரபாவ நூல்களில் திருப்பிரிதிபற்றிக் கூறியுள்ள விபரங்கள் ஆழ்வார் பாசுரங்களோடும்
பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தோடும் ஒத்திருக்கையாலே பாரதத்தின் வட எல்லையில் இமயத்தினுள்ளே மானஸரோவர தீர்த்தத்தில் உள்ளதொரு அடர்ந்த காடே திருப்பிரிதியென்று பெயர் பெற்றிருந்ததென்றும், அதில் எம்பெருமான் பரமபுருஷன் என்னும் திருநாமத்தோடு பரிமளவல்லி
நாச்சியாரோடு ஆதிசேட சயனத்திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.

திருப்பிரிதி என்னும் திருநாமம் எவ்வாறு வந்துள்ளதெனில், பதரி கண்டம் முதலான வடநாட்டுத் திருப்பதித் திருநாமங்களைப் போல இதை
வடமொழி பெயராகக் கொண்டு பிரீதி எனவழைத்து காலப்போக்கில் பிரிதியாக மருவியுள்ளதாகக் கருதலாம். எம்பெருமான் பிரீதியுடன் (உகப்புடன்)
எழுந்தருளியிருக்கும் இடம் என்றபடி,

அல்லது இத்திருநாமம் தமிழர்கள் இட்ட திருப்பெயரே எனக் கொண்டால் பாரத தேசத்தை, தேசாந்திரத்திலிருந்து பிரிக்குமிடமாகையாலே
பிரிதி என்று பெயரிட்டதாகக் கொள்ளலாம். உகந்தருளின நிலங்களுக்கு எல்லை என்று பெரியவாச்சான் பிள்ளை பிரிதியைக் குறிப்பிட்டிருப்பது இப்படி
பொருள் கொள்ள இடமளிக்கிறது. மானஸரோவரம் பாரதத்தின் வட எல்லையென்று இதிஹாச புராணங்களில் காட்டப்பட்டிருப்பதும் இப்படி
பொருள் கொள்வதற்குப் பொருந்தியிருக்கிறது.
இந்த மானஸரோவரக் கரையில் திருப்பிரிதி எங்கோ இருக்க வேண்டும் என்பதுதான் தெளிவு.

————

99. திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ராயாகை)

இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்தில் இருந்து நேராக பத்திரிநாத் சென்றுவிட்டும் திரும்பும் வழியிலும் சேவித்துவிட்டு வரலாம். பத்ரியிலிருந்து சுமார் 60 மைல் தூரமாகும்.

இவ்விடத்திற்கு தேவப்ராயகை என்றும் பெயர். ப்ர-சிறந்த யாகம், வேள்வி, மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால்
இவ்விடத்திற்கு ப்ராயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ராயாகை
என்றாயிற்று என்றும் சொல்வர். தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில் பரவியிருப்பதால் தேவப்ராயாகை ஆயிற்றென்றும் சொல்வர்.

ப்ரயாகைக்கு கிழக்கே உள்ளே பிரதிஷ்டானம் என்ற இடத்தில் உள்ள தீர்த்தக் கிணறு. வடக்கேயுள்ள வாசுகி என்ற இடம், மேற்கே காம்ப்ளாஸ்
என்னும் சர்ப்பங்கள் உள்ள இடம். தெற்கு திசையில் உள்ள பஹூ மூலம் என்னும் பகுதி ஆகியன ப்ரயாகையின் எல்லைகளாகும்.
இந்த தேவப்ரயாகையின் சிறப்பை பற்றி பாத்ம, மத்ஸய, கூர்ம அக்னி புராணங்கள் பகர்கின்றன.

கங்கையும், யமுனையும் கூடும் இடமே ப்ரயாகை. மிக ரஹஸ்யமான தீர்த்தமிது. விதிப்படி இங்கே வசித்துக் கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில்
எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்ற ஞானத்தை நமக்கு தரும் என்றுகூர்ம புராணம் கூறுகிறது.

கங்கையும், யமுனையும், சேருமிங்கு விதிக்கப்பட்டுள்ள முறைகளின்படி தூய்மையான மனத்துடன் யாகம் செய்பவர்கள் நற்கதி (மோட்சம்)
அடைகின்றனர். என்றும், இங்கே உயிர்விடுபவர்கள் மோட்சம் பெறுகின்றனர் என்றும் ரிக்வேதம் பகர்கிறது.
தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதனிலையில்தான் பெருமாள்
குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மாத்ஸய புராணம் கூறுகிறது.
இத்தலத்தைச் சேவிப்பதும், ப்ரயாகையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகும்.

மூலவர்-  நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் வேணி மாதவன், விமலா
என்ற பெயரை வடநாட்டு நூல்கள் சூட்டி மகிழ்கின்றன.
தாயார்–   புண்டரீக வல்லி
தீர்த்தம்–  மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை
விமானம்-   மங்கள விமானம்

காட்சி கண்டவர்கள்–  பரத்வாஜ முனி, பிரம்மா

பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்றாலும் அவர்கள் சகோதரர்கள் அல்லவா, சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில்
நீராடினால் போதும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடுமென மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு.
பிரம்மா, இவ்விடத்தில் செய்தயாகத்திற்குப் பின்பே தனது படைக்கும் தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம்.
பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
ப்ரயாகை யாத்திரை செய்வதாக நிச்சயித்தவுடன் நம் உடம்பில் இருக்கும் பாவங்கள் எல்லாம் நடுங்குகின்றன.
இவ்விடத்தில் செய்யும் அன்னதானம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கொரு கதை உண்டு. சுவேத கேது என்னும் மன்னன் எண்ணற்ற
தர்மங்கள் செய்தும் அன்னதானம் மட்டும் செய்யாதிருந்தான். அதன் மகத்துவத்தை முனிவர்கள் உணர்த்தியும் அவன் பின்பற்றவில்லை.
அம்மன்னன் இறந்து மேலுலகு சென்ற பின் அவனை பசி வாட்டியது.
இப்பசியை அடக்க தாங்கள் தான் வழிகாட்ட வேண்டுமென்று பிரம்மாவிடம் விண்ணப்பித்தான். அதற்குப் பிரம்மா, நீ அன்னதானம் செய்யாததால்
உன்னை இங்கு கொடும்பசி வாட்டுகிறது. பூவுலகில் தானம் செய்யாதபொருள் இங்கு கிடைக்காது. எனவே நீ மண்ணுலகு சென்று பாதுகாப்பாக உனது
சரீரத்தை மிதக்க வைப்பதற்காக நீ வெட்டிய குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் உனது சரீரத்தை கத்தியால் அறுத்து அதைப் புசி என்றார்.

வேறு வழியின்றி சுவேத கேது அவ்வாறே செய்தான். ஆயினும் அவன் பசி அடங்கவில்லை. அப்போது முனிவரொருவர் ப்ரயாகையில் நீராடு என்று
சொல்ல அவ்விதமே நீராடியும் பயனில்லை.அப்போது அங்குவந்த அகஸ்தியர் ப்ரயாகையில் அன்னதானம்
செய்தால் உன்சாபம் அகலுமென்றார். தேவ சரீரத்தில் நான் அவ்விதம் செய்ய இயலாதே என்று மன்னன் தெரிவிக்க அவ்வாறாயின் கையில் உள்ள
யாதாயினும் ஒரு பொருளைக் கொண்டு அதை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்விக்கலாமென கூறினார். தனது தேவ சரீரத்தில் அவ்வாறு
கழற்றிக் கொடுக்க அணிகலன்கள் யாதுமில்லையே என்று கூற, நீ செய்த பிற புண்ணியங்களின் பலன்களை திரட்டி கொடு என்று கூற, தான் செய்த
தர்மத்தின் பலனையெல்லாம் திரட்டி ஒரு கணையாழி ரூபத்தில் தர அகஸ்தியர் அதனை அங்கிருந்த சீடர்களிடம் கொடுத்து இப்பொருளை விற்று
அன்னதானம் செய்யுமாறு கூற அவ்வாறே அன்னதானம் செய்ய சுவேத கேதுவின் கொடும்பசி அகன்று மோட்சம் பெற்றாரென்பர்.

மகாபுண்ணிய தீர்த்தமான இந்த ப்ராயாகையில் பல தீர்த்தங்களும் பல நதிகளும் சங்கமிக்கின்றன. கங்கையும், யமுனையும் கலப்பதோடு
அளகநந்தாவும் பாகீரதியும் இங்கு சங்கமிக்கின்றன. ப்ரயாகையில் நீராடும் போது மிகவும் கவனத்துடன் நீராட வேண்டும். வெள்ளப் பெருக்கும் நீரின்
விரைவும் இங்கு திடீரென உண்டாகும்.
இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவமியற்றினார்.
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும். அ.உ.ம. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓங்கார வடிவமானது
ப்ரயாக சேத்திரம். அ எழுத்தாகவும், பிரத்யுமனனாகவும் இருக்கிறாள் சரஸ்வதி. யமுனா உ என்ற எழுத்தாகவும், அநிருத்தனாகவும்இருக்கிறாள் ம என்ற எழுத்தாகவும், சங்கர்ஷனனாகவும் இருக்கிறாள் கங்கை.

இங்குள்ள ஆலமரம் அழிவற்றது. அதில் வேணிமாதவன் என்ற பெயரில் விஷ்ணு, ஆடலங்கேசர் என்ற பெயரில் சிவன், மற்றும் பிரம்மனும் இதில்
வாசம் செய்கின்றனர்.

பாண்டவர்கள் போருக்குப்பின் தமது சத்துருக்களைக் கொன்ற பாவங்களைப் போக்க யாது வழி என்று மார்க்கண்டேயரிடம் கேட்க, அவர்
ப்ரயாகை ஒன்றே சகல பாவங்களையும் போக்கவல்லது என்று பாண்டவர்களை இங்கு அனுப்பி வைத்ததாக மாத்ஸய புராணம் கூறுகிறது.

————-

100. திருவதரியாச்சரமம் (பத்ரிநாத்)

கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிக்குன்றுகட்கு மத்தியில் பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள்
நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.

எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இடமாகவும், மோட்சத்தைத் தரத்தக்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இத்தலம்
பற்றி தனி நூலொன்றே யாக்கும் அளவிற்கு வடநாட்டுப் புராணங்களும், வடநாட்டு நூல்களும் குறிப்புக்களை வாரிவாரியிறைக்கின்றன.

இங்குதான் பெருமாள் தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு திருமந்திர உபதேசத்தை செய்தருளினான். ஓம் நமோ நாராயணாய
என்ற மந்திரத்தை நாராயணன் என்ற திருநாமத்துடனே வந்து உலகத்திற்கு உகந்தருளின இடம் இந்த தலமாகும். திருமந்திரம் பகவான் மூலமாகவே
வெளியான இடம்.

எம்பெருமானைச் சரண்புகுந்து மோட்சம்புகும் பக்தர்கட்கு மிக எளிய வழியான திருமந்திர உபதேசத்தை போதித்துத் தன்னை காட்டிக் கொடுத்த
தலம்.

மகாலெட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்திரகாச்ரமம்
ஆயிற்றென்பர். உபதேசம் செய்வதற்கு ஆஸ்ரமம் அவசியமன்றோ.-எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக
தேர்ந்தெடுத்ததால் பத்திரகாஸ்ரமம் ஆயிற்றென்பர். இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. இதற்கு எதிர்புறம் அமைந்துள்ள நீலகண்ட
பர்வதம் காண்பதற்குப் பேரெழில் பொலிந்ததாகும்.

மூலவர்- பத்ரி நாராயணன், சங்கு சக்கரத்துடன் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்–   அரவிந்த வல்லி
தீர்த்தம்-   தப்த குண்டம்
ஸ்தல விருட்சம்-   பத்ரி, இலந்தை மரம்
விமானம்-   தப்த காஞ்ச விமானம்
காட்சி கண்டவர்கள்-   மானிடரூப சிஷ்யனான நர நாராயணன்.

108 திவ்ய தேசங்களிலேயே இங்குதான் பகவான் ஆச்சாரியன் ரூபத்தில் எழுந்தருளிய ஸ்தலமாகும். மற்றெல்லா ஸ்தலங்களிலும் அவனருள்
காட்டி அவனது பலத்தைக் காட்டி நின்றாலும் இங்கு மட்டும்தான் ஆச்சார்ய திருக்கோலத்தில் திகழ்கின்றான். பக்தர்களுக்காகவும் இவ்வுலகிற்காகவும்,
பிராட்டிக்காகவும், பிற ஸ்தலங்களில் தன்னை வெளிக்காட்டிய எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசம் செய்ய தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்திய
ஸ்தலம் இது ஒன்றுதான். எனவேதான் இங்கு தனது இடது கைகளை யோக முத்திரையாகக் கொண்டு ஒரு தபஸ்வியின் வடிவில் இலந்தை மரத்தடியில்
பத்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார்.

பத்ரிநாத்தானது, அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில்
அமைந்துள்ளது. இந்த பத்ரி நாதனைக் குறித்து நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் ஜபம் செய்து மஹா விஷ்ணுவின் அருள்பெற்றார் என்னும் ஓர் வரலாறும் உண்டு.

பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான்
கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தப்த குண்டத்தில்
நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார். கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன்
ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க
வீற்றிருக்கின்றனர்.

இங்கு பெருமாள் சாளக்கிராம மூர்த்தியாக (ஸாளக்கிராமச் சிலையாக) எழுந்தருளியுள்ளார்.

இங்கு பெருமாளுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும் (திருமஞ்சனம்) திருவாராதனம், சாத்துமரை மக்களுக்கு எதிரிலேயே
நடைபெறுகின்றன. திரைபோடுவது இல்லை. இங்கு நடைபெறும்  பூஜாமுறைகளை பக்தர்கள் நேருக்கு நேர் நின்று காணலாம்.

இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். இந்த பூஜைக்குரிய மந்திரங்களை வடநாட்டு பிராம்மணரே
ஓதுவர். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் கலைவர். இந்த நிகழ்ச்சிக்கு கேரள தேசத்து நம்பூதிரிகளே தலைமை
அர்ச்சகராக இருந்து செயல்படுவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். மிகவும் நல்லொழுக்கம் வாய்க்கப் பெற்றவர்களும், சாஸ்திரங்களிலும், சமஸ்கிருதத்திலும் மிக்க தேர்ச்சி பெற்ற பிராம்மணர்களே இந்த நிகழ்ச்சிக்கு குழுவினராக நியமிக்கப்படுவர். இந்த பூஜை நடைபெறும் சமயம் பெருமாளின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை
நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.

இங்கு கோவிலின் வடபுறம் கங்கை கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில்
பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுகிறது. இவ்விடத்தில் சிரார்த்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோட்சம்
கிடைப்பதாக ஐதீஹம்.

இங்கு இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன.

இங்கு அமைந்துள்ள வசுதரா என்ற பனிமலையில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியின் பனித்திவலைகள் மிகவும் புனிதம் வாய்ந்தவை
என்றும், இவைகள் மேனியில் படுதலால் புனிதம் உண்டாகிறதென்றும் நம்பிக்கை. இங்கு யாத்திரை செல்வோர் இந்த திவலைகளில் குளித்து வருவர்.

எல்லையற்ற பெருமைகொண்ட இத்தலத்திற்கு விசாலபுரி என்ற பெயரும் உண்டு. பாண்டவர்களின் அவதாரஸ்தலம் இதுதான் என்று ஒரு
கருத்தும் உண்டு.

இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்துவிடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து
இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று மீண்டும்
திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் இரவில் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும்போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள்
மறுநாள் காலையில் பார்த்தால் எந்த அளவுக்கு லேசாக வாடியிருக்குமோ அந்த அளவிற்குத்தான் மலர்களின் வாட்டம் இருக்குமாம். அதனால் தான்
மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர் என்னும் ஐதீஹம் உண்டானது.

மே மற்றும் ஜூன் மாதங்களே இந்த யாத்திரைக்கு மிகவும் உகந்ததாகும்.

————–

101. திருச்சாளக்கிராமம் (ஸாளக்கிராவா)

இத்தலம், நேபாளம் காட்மண்டு பகுதியில் அமைந்துள்ள கண்டகி நதி பிராந்தியத்தில் உள்ளது.
அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும். நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து 170 மைல் தூரத்தில் கண்டகி நதிக்
கரையில் அமைந்துள்ளது. இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண சேத்திரம் உள்ளது. இந்த முக்தி நாராயண சேத்திரமே சாளக்கிராமம் என்று
சொல்வாருமுண்டு.

பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம். இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல்
ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தியாகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம்
என்றழைக்கப்படுகிறது.

இந்த ஹரி சேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், (குளிர், காற்று இவைகளில்லாமல் அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்) விஷ்ணுவின் சகல
அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள மூர்த்தியும் சாளக்கிராம
வடிவத்தினர்தான்.

மூலவர்–  ஸ்ரீமூர்த்தி வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-  ஸ்ரீதேவி
தீர்த்தம்-    சக்ர தீர்த்தம், கண்டகி நதி
விமானம்-   கனக விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மா, சிவன், கண்டகி.

சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக் கூடு, சங்கு
போன்ற பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
மஹாவிஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து அதன் கர்ப்பத்தை
அடைந்து அங்கு ரீங்காரமான சப்தத்தில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பலவிதமான சுருள் ரேகையுடன் கூடின பல சக்கரங்களை
வரைந்து பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை (அதாவது தனது அவதார ரூபங்களை) பல வடிவங்களில் விளையாட்டாக வரைந்து வெகு காலத்திற்கு
அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.

இப்பேர்ப்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும். இவைகளில் ஸ்ரீமந் நாராயணனின் ஜீவரூபம் கலந்திருப்பதாக ஐதீஹம்.
இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம்.

சாளக்கிராமங்கள் உருண்டையான வடிவத்திலும் தட்டையான வடிவத்திலும் முக்கோணத்தில் பாதிக் கூறான அரை முக்கோண வடிவிலும்
சங்கு, நத்தைக் கூடு வடிவிலும் சுருள் சுருளான ரேகைகளுடன் கூடினதாகவும், துவாரங்களுடன் கூடினதாகவும், இன்னும் வடிவு சொல்லவியலாத சில
வடிவங்களிலும் தோன்றுகின்றன. இங்குள்ளவர்கள் இதனைச் சாளக்கிராவா என்று அழைக்கின்றனர்.

சாளக்கிராமங்கள் எந்தவிதமான வண்ணத்தில் அமைந்துள்ளனவோ, அந்த ரூபங்கொண்ட விஷ்ணுவாசம் செய்யும் ஸ்தலமாகவே அவைகள்
கருதப்படுகின்றன.

1. வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ சேத்திரம்
2. கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு சேத்திரம்
3. பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண சேத்திரம்
4. பசும்பொன் (அ) மஞ்சள் சற்று மஞ்சள் கலந்து சிகப்பு நிற
சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம சேத்திரம்
5. மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன சேத்திரம்
6. கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண சேத்திரம்

இந்த வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜாபலன்களும்   மாறுபடுகின்றனவாம்.

நீலநிறம்   – செல்வத்தையும், சுகத்தையும்
பச்சை     – பலம், தைரியம்
வெண்மை  – ஞானம், பக்தி, மோட்சம்
கருப்பு     – புகழ், பெருமை
புகை நிறம் – துக்கம், தரித்திரம்

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமன்றி அவற்றில் 14 உலோகங்கள் (உலோகங்களின் சக்திகள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூஜிக்கப்பட்ட சாளக் கிராமங் களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவேண்டுமென்பது நியதி. இதைப்பால் அல்லது அரிசி மீது
வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் அதன் எடை முன்பு இருந்ததை விட கூடுதலாக இருக்கும். துண்டிக்கப்பட்டிருந்தாலும் அல்லது விரிந்து
போனதாய் இருந்தாலும் சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை. சாளக்கிராமம் உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள்
இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும்.

சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் நன்றன்று. பெரியவர்களின் கையிலிருந்து வாங்குதல் நன்று அல்லது பிறரால்
பூஜிக்கப்பட்ட சாளக்கிராமத்தைப் பெற்றுக் கொள்வதும் நன்று. நேபாளத்தில் கடைத்தெருவில் இதைக் குவித்து வைத்து விற்கிறார்கள். இதன் மீது புனித
நீரை தெளித்துப் பூக்களைச் சொரிந்து புனிதப் படுத்தி விற்கிறார்கள். இருப்பினும் இங்கிருக்கும் பெரியவர்கள் அல்லது சாளக்கிராமத்தின்
தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில்
வாங்குதல் சிறப்பு.

சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கடலில் ஒரு சாளக்கிராமம் கிடைக்க அதனை ஸ்ரீராமர் பாதம்
அமைந்திருக்கும் கந்தமான பர்வதம் அருகேயுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் (இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல்) வைக்கப்பட்டுள்ளது.
தேங்காயளவு பருமனான இந்தச் சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திருமுகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது.

நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. இதுதான்
சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான்அமைந்துள்ளது.
இருப்பினும் காட்மண்டுவிலிருந்து முக்தி நாராயணசேத்திரம் செல்லும் வழியில் உள்ள பூஜைக்குரிய ஸாளக்கிராமங்கள் உற்பத்தியாகக் கூடிய கண்டகி
நதிக் கரையில் அமைந்துள்ள சேத்திரமே சாளக்கிராமமாகும். இவ்விடத்திற்குச் செல்ல நேபாள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. மலையேறிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த யாத்திரையில் 50 பேர் கொண்ட குழுக்களாகச் செல்லவே நேபாள அரசு அனுமதியளிக்கிறது.

ஸ்ரீஇராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இங்கு பகவான் தீர்த்த ரூபியாவார்.
வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து
கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதற்குகந்த எம்பெருமான் இதில் நித்ய அவதாரம் (சாளக்கிராம
ரூபியாக) செய்து கண்டகி நதிக்கு சிறப்பளிக்கிறார் என்பதும் ஓர் வரலாறு.

சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

ஏறத்தாழ 7 கோடியிலிருந்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இடை ஊழிக்காலத்தில் (MESOZOIC) வாழ்ந்து பின்னர் அற்றுப்போய்விட்ட ஒரு
வித மெல்லுடலிகள்தான் அம்மோனைட்டுகள் அல்லது அம்மோனாய்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ 8000 வகை அம்மோனைட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அம்மோனைட்டுகளின் ஓடுகள்
அளவிலும், வடிவிலும் வேறுபட்டவை. 1.3 செ.மீ முதல் 2 செ.மீ அளவு விட்டமுடையவை. ஒருதளச் சுருளமைப்பு உடையவை. அம்மோனைட்டுகளின்
ஓடுகள் தவிர மென்பகுதிகள் கற்படிவங்களாக மாற்றமடையாததால் அவற்றின் தன்மையை அறிய இயலவில்லை.

இந்தியா நேபாளம் உள்பட பல நாடுகளிலும் அம்மோனைட்டுகளின் கற்படிவங்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அரியலூர்ப்
பகுதியில் கிரெட்டேசியஸ் காலத்து (கிரெட்டேசியஸ் காலம் என்பது சுமார் 7 கோடி ஆண்டுகட்கு முற்பட்டதாகும்) அம்மோனைட் கற்படிவங்கள்
சுண்ணாம்பு கற்பாறைகளிடையே நிறையக் கிடைக்கின்றன. இவை வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கின்றன. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கருங்கல்லாலான அம்மோனைட் கற்படிவங்கள் பார்க்க மிக அழகாக இருக்கும். இவையே நம் நாட்டில் சாளக்கிராமம் என்று புகழ்பெற்றுள்ளன.

பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாளக்கிராமமோ என்ற முதுமொழி ஒரு பழைய தமிழ் நூலில் (சேது புராணம்) மேற்கோளாக
எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலிருந்து நத்தை போன்ற, ஆனால் வேறொரு உயிரின் படிவமே சாளக்கிராமம் என்று நம் முன்னோர்கள்
அறிந்திருக்கின்றனர்.இயற்கையில் மிகத் தொன்மையான அற்புதமான இந்தச் சிருஷ்டியில் நம் முன்னோர்கள் இறைத் தத்துவத்தைக் கண்டது நமது மரபாகும்.

————-

102. திருவடமதுரை (மதுரா)-(பிருந்தாவனமும், கோவர்த்தனமும் அடங்கியது.)

கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆநிரை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் களித்திருந்த பிருந்தாவனம்,
ஆநிரைகளையும் கோபால கோபியரையும் காக்க குன்றைக் குடையாக எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும்
சேர்த்தே மங்களாசாசனமாகக் கொள்வர். இந்த மூன்று இடங்களும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள் பிருந்தாவனத்திற்கு
கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஸ்ரீமத் பாகவதத்தில் முழுக்க முழுக்க மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்துப் பயின்று வந்துள்ளன. ஸ்ரீகிருஷ்ணன்
பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் 7வது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற
குழந்தைகளை எல்லாம் கொன்றது, கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல்
சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது, அங்கு
லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து, அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம்
செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ணவரலாற்று நிகழ்ச்சிகள்
இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.

மூலவர்–  கோவர்த்தன நேசன், பாலகிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-   சத்திய பாமா நாச்சியார்
தீர்த்தம்-   இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி
விமானம்–   கோவர்த்தன விமானம்
காட்சி கண்டவர்கள்–   மதுரா நகர்வாசிகள், கோபாலர்கள், கோபியர்கள், இந்திராதி தேவர்கள், வசுதேவர், தேவகி, யசோதை, கம்சன்,

ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரங்களில் மது என்னும் ஒரு நகரம் தலைசிறந்து விளங்கியது. அந்நகரை அரசாண்டு வந்த
லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்தது மட்டுமன்றி யாகங்களை அழித்து ரிஷிகட்குத் துன்பம்
விளைவித்துக் கொடும்பாதகம் புரிந்து வந்தான். இந்நிகழ்ச்சி இவ்வூரில் இராமாவதார காலத்தில் நிகழ்ந்ததாகும். ரிஷிகள் இராமபிரானிடம் சென்று
லவணாசுரனை சம்ஹாரம் செய்து விசுவாமித்திரருக்கு உதவியது போல தமக்கும் உதவி தம்மை ரட்சிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தனர். ராமன்
தன் தம்பி சத்ருக்கனை அனுப்பி லவணாசுரனை அழித்தான்.

அரக்கனையழித்த பிறகு பிறைவட்ட வடிவில் யமுனை நதிக்கரையில் இந்த மது நகரத்தை விரிவாக்கி புதுமைப்படுத்தி மதுரா என்று பெயரிட்டு
சத்ருக்கனன் நெடுங்காலம் ஆண்டு வந்தார். இவரது வம்சத்தாருக்குப் பிறகு இந்நகரம் வசுதேவரின் பரம்பரையினருக்கு வந்துற்றதாக ஐதீஹம். இந்த
மதுராநகர்தான் இன்று கிருஷ்ண ஜென்ம பூமியாக தனது தொல்லியல் புகழை மெல்லிய வேணுகானத்தில் இழைத்துக் கொண்டுள்ளது.

ஆயர்பாடியில் இந்திர பூஜை நடப்பது வழக்கம். இந்திரனுக்கு ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழை வேண்டி ஆடல் பாடல்
புரிவர். ஸ்ரீகிருஷ்ணன், ஆயர்பாடியில் வளர்ந்து வரும் சமயம் ஒரு நாள் இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கவே இவைகளெல்லாம்
என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக இந்திரனுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து கொண்டுள்ளோம் என்று சொன்னவுடன் அட
அப்படியா இந்த உணவு வகைகள் எனக்கு பிரியமானவைகள் தான் இவைகளை எனக்கே படையுங்கள் என்று கூறி கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை இடச்சொல்லி தானே கோவர்த்தன மலையாக இருந்து முழுதும் உண்டு தீர்த்தான் உலகுண்டவாயன்.

இதனால் சீற்றம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி ஆநிரைகளையும், ஆயர்களையும் அப்பாலும் இப்பாலும் அலைக்கழிக்க
எல்லோரும் ஒன்றாகக் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கோவர்த்தன மலையருகே ஓடி வந்தனர். இவர்கள் வருவதைக் கண்டவுடன் கண்ணன் அந்த
மலையை பெயர்த்தெடுத்து தலைக்குமேல் குடைபோல் பிடித்துக் கொள்ள அதற்குள் வந்து ஆயர்களும், ஆநிரைகளும் அடைக்கலமாயினர். பயங்கர மழை கொட்டியும் எவ்வளவோ இந்திர ஜாலங்கள் செய்தும் பயனின்றி போகவே இறுதியில் இந்திரன் வந்து கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கோரினான்.

இந்திரன் ஆணையிட்டவுடன் மேகங்கள் வாயைத் திறந்து கொண்டு சென்று கடல்நீரை அப்படியே கபளீகரம் செய்து பானையிலிருந்து கொட்டிக்
கவிழ்த்ததைப் போல கொட்டியதாம்.இவ்வாறு கொட்டு கொட்டு என்று கொட்டிய மழையைக் கண்ணன் தடுத்தானாம்.

தனது ஐந்து விரல்களையும் தாமரை மொட்டுப் போல் கவித்து வைத்து மலையைத் தூக்கி அந்தக் கைவிரல்கள் தாங்குவதற்கு தமது நெடுந்தோள்களை
காம்பு போல் வளைந்து கொடுத்து ஆனாயசமாக தூக்கினானாம்

மதுரா செல்பவர்கள் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தன கிரி இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கோகுலம் இவைகளை வரிசைப்
படுத்தி ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் நாள் தங்கி கண்ணன் லீலைகளை மானசீகமாக உணர்ந்து திவ்யமான பக்தி உணர்வில் திளைத்து ஸ்ரீகிருஷ்ண
நினைவுடன் திரும்பி வரலாம். கோகுலாஷ்டமி சமயத்தில் இங்கே சென்றால் ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண
நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.

பிருந்தாவனத்தில் தென்னக முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. ரங்கமந்திர் என்றழைக்கப்படும் இந்த
விசாலமான கோவிலில் நுழைந்தவுடன் தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டோமோ என்ற எண்ணம் வந்துவிடும். காரணம், இங்கு எம்பெருமானின் கைங்கர்யத்தில்
ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு வைணவர்களேயாவர். இங்கு ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள்,
திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர்கட்கும் சன்னதிகள் உண்டு.
இவர்களை வரிசைக் கிரமமாக சேவித்து வரும்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் பெருமாளை தரிசிப்பது போன்ற எண்ணம் வந்து விடும்.
தமிழகத்திலிருந்தும் மற்றும் தென் மாநிலங் களிலிருந்தும் வரக்கூடிய பக்தர்களுக்கும், அடியார்கட்கும் இக்கோவில் கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள
தமிழக வைணவர்கள் பேருதவி புரிந்துவருகின்றனர்.

————

103. கோகுலம் (ஆய்ப்பாடி)

இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8
மைல் தூரத்தில் உள்ளது.

கண்ணனின் பாலபருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம்
எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த
கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. சுருக்கமாக இதன்
வரலாற்றை ஒரே வரியில் சொன்னால் கண்ணனின் பால பருவ வளர்ச்சிதான் கோகுலம்.

மூலவர்-  நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- ருக்மணி தேவியார், சத்திய பாமா
விமானம்-    ஹேம கூட விமானம்
காட்சி கண்டவர்கள்–   கோகுல வாசிகள்

இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது. ஒரு காலத்தில் (துவாபரயுகத்தில்) இங்கு கண்ணன் பாலகுமாரனாக ஓடியாடி
விளையாடி லீலை செய்த காட்சிகளை நினைவு கூறும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும்
இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை,
பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்.

ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும் மதுராவில் இப்போதுள்ள தொன்மைமிக்க கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

அயோத்தியைப் போலவும், துவாரகை போன்றும் பரபரப்பாகக் காணப்படாவிடினும் அமைதி தவழும் ஆரண்யம் போல் திகழ்கிறது கோகுலம்.

எம்பெருமான் “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன்
இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது.
இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக கோகுல வாசத்திற்கே சாலவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு.

ரஸோ வை ரஸ, என்று வேதமும் உன்னைச் சிறந்த ரஸம் என்கிறது. நீ இருக்கும் இடம் ரஸம் நிறைந்ததாகவே இருக்கிறது. கிருஷ்ண ரஸாயணம் பிப
என்றார் குலசேகரர். அவர் சொன்னபடி கிருஷ்ணரஸாயணத்தை (கிருஷ்ண சரித்திரங்களை) உண்டு சுவைப்பதிலேயே உயிரினங்களும்
காலங்கடத்துகின்றன.  என்னே அருமையான ரஸபாவனையில் மூழ்கியுள்ளனர் பெரியோர்கள்.

————–

104. திருத்துவாரகை

தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இந்தக்கோவிலை இங்குள்ள
மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். கடந்த 5000
ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற  இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

கண்ணபிரானின் சரித்திரத்தோடும், பாரதப் போரினோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்த துவாரகாபுரி அமைந்துள்ள மாநிலம் தான்
இன்றைய இந்தியா சுதந்திரம் பெறக் காரணமான மகானையும் ஈன்று அன்று போல் இன்றும் தன் ஒல்காப் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

மூலவர்- துவாரகா நாத்ஜி. கல்யாண நாராயணன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- கல்யாண நாச்சியார் (ஸ்ரீலட்சுமிதேவி) ருக்மணி, அஷ்டமஹிஷிகள்.
தீர்த்தம்- கோமதி நதி
விமானம்- ஹேம கூட விமானம்
காட்சிகண்டவர்கள்-  கண்ணன் வாழ்ந்த போதிருந்த துவாரகா வாசிகள் மற்றும் திரௌபதி

இங்கு செங்கோல் செலுத்தி மன்னாதி மன்னனாக வாழ்ந்த கண்ணபிரானை துவாரகா நாத்ஜி என்றே இங்குள்ள மக்கள் அழைப்பர்.
எவ்வளவு அரசியல்மாற்றங்கள் வந்தாலும் இங்குள்ள மக்கள் கண்ணனே தங்கள் மன்னன் என்று எண்ணி வாழ்கின்றனர். தங்களை துவாரகா நாத்ஜியின்
பிரஜைகளாக இன்றும் எண்ணி இறுமாப்பெய்துகின்றனர்.

இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது அஷ்ட மகிஷிகட்கும் அண்ணன்
பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.

இங்கே கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து
மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை
உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 71/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும்
படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு
அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு கனி வர்க்கங்கள் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான்.
இதனால் பயந்து போய் உணவு செரிமானம் ஆயிற்றோ என்னவோ என்று கருதி செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம்
கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு (திருவாராதனத்திற்கு) போக் என்று பெயர்.

பக்த மீரா அன்ன ஆகாரமின்றி கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனை ஆரத்தழுவி அவனோடு இரண்டறக்
கலந்தது இந்த தலத்தில் தான். இவளின் கானம் தூணுக்குத் தூண் எதிரொலித்து கண்ணனை புளகாங்கிதம் அடையச் செய்ததும் இங்குதான்.
மீராவுக்கு மேவார் நகரில் விஷம் தர ஏற்பாடு செய்யப்பட்டதும் இச்சன்னதியின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. மேவாரிலிருந்து பித்துப்
பிடித்தவள் போல் ஓடி வந்த மீரா, எங்கே துவாரகை எங்கே என் நாதன்என்று கூவிக் கொண்டே இச்சன்னதியின் வாசலை அடைந்தவுடன்
கோவிற்கதவுகள் தானாகத் திறந்து கொண்டன.

அரண்மனை எவ்வாறு கலகலப்பாக இருக்குமோ அதேபோல் இங்கு யாத்ரீகர்கள் (பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்) கூட்டம் கூட்டமாக
வருவதால் எந்நேரமும் கலகலப்பு களைகட்டியிருக்கின்றது. இங்கு பெண்கள்கூட்டங்களையும் அவர்களின் உடைகளையும் பார்க்கும்போது ஆயர்ப்பாடி
கோபிகைகளின் நினைவே நமக்கு வருகிறது. கண்ணன் இருக்கிறான்
கோபியர்கள் இருக்கிறார்கள். ஆநிரைகள் மட்டும் எங்கே சென்றுவிடும். இங்கே ஊருக்குள் திரியும் ஆநிரைகளை மக்கள் கண்ணனின்
ஆநிரைகளாகவே அவைகளைத் தொடுவதில் மகிழ்ச்சி கொள்வதும், அவைகட்கும் பூச்சூட்டி மகிழ்வதும் அவைகள் பொலிவு தோன்ற இறுமாந்து நின்று செம்மாந்து திரிவதும் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமன்றி காண கிடைக்காத ஒரு தெய்வீகம் கலந்த காட்சியாகும்.

ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி
சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். பட்ட மகிஷி அல்லவா ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜகளை
ஜொலிக்க வீற்றிருக்கிறாள்.

ஒருநாள் ராதை துவாரகை வந்தாள். ருக்மணி வரவேற்று பாலும், தேனும் கொடுத்தாள். இருவரும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
அன்றிரவு கண்ணன் படுக்கையறைக்கு வந்ததும் ருக்மணி கண்ணனுக்குப் பாத பூஜை செய்தாள். கண்ணனின் பாதங்களில் சிறு கொப்புளங்கள்
உண்டாயிருந்தன. இதைக் கண்டு திடுக்கிட்ட ருக்மணி பெருமானே, இந்தக் கொப்புளங்கள் எப்படி வந்தன என்று கேட்டாள். ருக்மணி நீ இன்று
ராதைக்குப் பால் கொடுத்தாயல்லவா அது சூடாக இருந்தது. அதை அவள் பருகியபோது எப்போதும் அவள் தனது இதய கமலங்களில் வைத்திருக்கும்
எனது பாதங்களில் சூடுபட்டு இந்தக் கொப்புளங்கள் வந்துவிட்டதென்றான். ஆனால் பால் சூடாக இருந்தது என்று ராதை கூறவில்லையே என்றாள்
ருக்மணி. நீ பிரியமாக கொடுத்ததால் சூடு உள்ளது என்று உன்னிடம் சொல்லாமலேயே குடித்துவிட்டாள். ஆகா, உம் பாதங்கள் கோமளமானவை
அதைவிடக் கோமளமானதன்றோ ராதையின் இதயம் என்றாள் ருக்மணி. என்னே அன்பு கலந்து நிகழ்ச்சியைக் கூட்டி விட்டான் இந்த துவாரகையில்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்கட்கு
இங்கிருந்துகொண்டு மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப்படுகிறது. இதனாலும் துவாரகை என்று பெயர் வந்தது என்பர்.

இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இது ஒரு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை
பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். நாம் முன்னே சொன்ன துவாரகா சன்னதியிலிருந்து ஒகா துறைமுகம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து
விசைப்படகு மூலம் இத்தலத்தை அடையலாம். இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர்.
இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும்
நடைபெறும் அலங்காரங்களை நாம் எதிரில் நின்று கொண்டே கண்குளிரக் காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி ஸேவை தருகிறாள்.
இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி நாராயணன் என மொத்தம் ஐந்து சன்னதிகளும், சங்க தீர்த்தம் என்னும் மிகப்
பிரசித்தமான தீர்த்தமும் உண்டு.

துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 3 மைல் தூரத்தில் உள்ள ருக்மணி தேவியின் சன்னதியில் தான்
ஸ்ரீகிருஷ்ணபகவான் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீஹம்.

இங்கிருந்து திரும்பும்போது (அதாவது பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு) விராவல் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கினால் பிரசித்தி
பெற்ற சோமநாதர் ஆலயம் செல்லலாம். இதற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலகா என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் போவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் கிருஷ்ணரின் அரசரடி சயன திருக்கோலத்தைக் காணலாம். கிருஷ்ணன் சயனத் திருக்கோலத்தில் இருப்பது அநேகமாக 108 திவ்ய தேசங்களில் இந்த ஒரு இடத்தில் என்று மட்டுமே கூறலாம். துவாரகா புரியை மட்டுமே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பினும் நிகழ்ச்சிகளால் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து
கிடக்கும் இங்குள்ள ஸ்தலங்கள் யாவற்றையும் மங்களாசாசனம் செய்வதாக கொள்ளலாம்.

ஜராசந்தன் என்னும் அரக்கன் மக்களுக்கு பல துன்பங்கள்விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு
உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டுமென கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை யழைக்க அவனால்
வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி. இதனால் மிக்க சந்தோஷமடைந்த சமுத்திர ராஜன் இந்நகரைக் காத்து வந்ததாகவும் ஐதீஹம். இந்த துவாரகாபுரி
கடல் கோள்களால் விழுங்கப்பட்டு விட்டது.

இங்கு செல்பவர்கள் தனி பிரயாணத்திட்டம் வகுத்து சுமார் 6 நாட்கள் வரை தங்கி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கையோடு
தொடர்புடைய இடங்கள், பேட்துவாரகை, விராவல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்தலங்கள் மற்றும் இங்குள்ள ப்ராபஸ தீர்த்தம், ஜீனகட்
எனப்படும் ரயில்நிலையத்திலிருந்து 100மைல் தொலைவிலுள்ள கிரிதார் என்னும் ரைவதமலை மற்றும் இங்கு வாழும் பெரியவர்களாலும்,
பக்தர்களாலும் சொல்லப்படும் முக்கியமான புனித ஸ்தலங்களைத் தரிசித்து, தீர்த்தாடனம் செய்து வருவது மிக்க விசேஷம்.

கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ண சாம்ராஜ்யமான இந்த துவாரகாபதி சென்று வந்தவர்கட்கு இங்கு
கண்ட காட்சிகள் வாழ்நாள் முடிய மறக்கவொன்னாதவைகளாகும்.

———————–

105. திருச்சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)

இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோவிலும், மலையின் மேல் ஒரு கோவிலுமாக இரண்டு கோவில்கள் உண்டு. மலையடிவாரத்திலிருந்து

பிலம் என்றால் குகை அஹோ என்னும் சொல் சிம்மத்தை குறிப்பது. ஆதலின் வடமொழியில் அஹோபிலமாயிற்று. சிங்கவேள் என்று தூயதமிழால் சுட்டப்பட்டு குன்றத்தையும் சேர்த்து சிங்கவேள் குன்றமாயிற்று. மலைமேல் உள்ள கோவில் சுமார் 10 கி.மீ. தூரமாகும்.

கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாக அவ்வவதாரத்தை தரிசிக்க இந்த மலைகளடங்கிய
காட்டுப்பகுதியில் வந்து கடுந்தவமியற்றி வர, கருடனின் தவத்தை மெச்சிய எம்பெருமான் இந்த அஹோபிலம் மலையில் மீளவும் நரசிம்ம அவதாரம்
செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல்
கர்ஜித்தது. பிரகலாதனின் வேண்டுகோளுக் கிசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற நரசிம்ம அவதாரத்தின் 9 தத்துவங்களை அர்ச்சா ரூபமாக
9 திருக்கோலங்களில் இங்கு காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும்
பெயருண்டு. சேஷாத்திரியாக உயர்ந்திருப்பது வேங்கடமென்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.

மலையடிவாரக் கோவில்- இதனைக் கீழ் அஹோபிலம் என்றும் சொல்வர்.

மூலவர்- பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன், கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- அமிர்தவல்லி, செஞ்சுலெட்சுமி
உற்சவர்-நரசிம்ம ரூபத்தின் அர்ச்சா மூர்த்திகளான 9 மூர்த்திகள். 8 உற்சவ மூர்த்திகள் இந்தக் கோவிலில் உள்ளனர். மாலோல நரசிம்மருக்கான
உற்சவமூர்த்தி மட்டும்தனியாக உள்ளார். இங்குள்ள உற்சவர் சக்கரவர்த்தி திருமகனாக சேவை சாதிக்கிறார். இவர் சுயம்பு.
மாலோல உற்சவர் அஹோபில மடத்தில் அழகிய ஜீயர் சுவாமிகளின் நித்திய திருவாராதன விக்ரகமாக உள்ளார்.

தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்.
விமானம்-    குகை விமானம்
காட்சி கண்டவர்கள்-    கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய சிங்கர்.

மலையின் மேல் உள்ள கோவில்

மூலவர்-  அஹோபில நரசிம்மர்
தாயார்-   லட்சுமி
தீர்த்தம்-    பாவநாசினி
விமானம்-    குகை விமானம்
காட்சி கண்டவர்கள்=    பிரகலாதன். கருடன், இங்குதான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும் கூறுவர்.

இங்கு மொத்தம் 9 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. எனவே இதனை நவநரசிம்ம சேத்திரங்கள் என்றும் வழங்குவர். மலையடிவாரத்திலும், மலையின்
மேலுமாக மொத்தம் 9 நரசிம்மர்கள்.

1. அஹோபில நரசிம்மன்
2. வராக நரசிம்மன்
3. பாவந நரசிம்மன்
4. காரஞ்ச நரசிம்மன்
5. சக்ரவட நரசிம்மன்
6. பார்க்கவ நரசிம்மன்
7. ஜ்வாலா நரசிம்மன்
8. மாலோலா நரசிம்மன்
9. யோகாநந்த நரசிம்மன்

இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக ஐதீஹம். (அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்கப் பெருமாள் வைகுண்டத்தை
விட்டதும் பிராட்டியும் இவ்விடம் புக்கு வேடுவர் குலமகளாய் அவதாரம் செய்தனரென்பர்) லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில்
வளர்ந்துவர பெருமாள் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டம் விடுத்து இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு
செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும்வரை இங்கேயே தங்கிவிட்டதாக ஐதீகம். பெருமாள் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டார் என்றும்
சொல்வர். பெருமாளுக்கு இவ்விடத்து வேடவர் சம்பந்தமிருந்ததை “களைந்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்று திருமங்கை படம்
பிடித்திருக்கிறார்.

இங்கு மலையின்மேல் பாவநாசினி என்னும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் கரைவழியே மேலே சென்றால் வராஹ நரசிம்மன் சன்னதியைச்
சேவிக்கலாம். இங்கிருந்து மேலும் 1 1/2 மைல் தூரம் சென்றால் மாலோல நரசிம்ம சேத்திரம் உள்ளது. இங்கிருந்து மேலும் 2 மைல் தொலைவு சென்றால்
ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்த தூண். நரசிம்மன் தூணிலிருந்து வெளிப்பட்ட இடம் உள்ளது. இங்கு தகுந்த துணையுடன் செல்ல வேண்டும். அல்லது
பிரம்மோத்ஸவம் நடைபெறும் சமயமான மாசி மாதம் சென்றால் கூட்டமாகச் செல்லும் பக்தர் குழாத்துடன் செல்லலாம். பொதுவாகவே இங்கு மலைமேல்
உள்ள எல்லா நரசிம்மர்களையும் சேவிப்பது கடுமையான செயலாகும். கரடுமுரடான பாதைகள் மட்டுமின்றி செங்குத்தாக மலைமேல் ஏறவேண்டிய
இடங்கள் மட்டுமின்றி காட்டுமிருகங்கள் நடமாடக்கூடிய பகுதிகளும் உண்டு.

மலையடிவாரக் கோவிலுக்கு முன்பு சுமார் 85 அடி உயரமுள்ள ஒரே கல்லாலான தூண் ஒன்று உள்ளது. இதற்கு ஜெயஸ்தம்பம், வெற்றித்தூண்
என்பது பெயர். இது பூமிக்கடியில் சுமார் 30 அடிவரை தோண்டி நிலை நிறுத்தப்பட்டுள்ள தென்ற விபரத்தை அறியும்போது பேராச்சர்யமாக உள்ளது.
மிகுந்த பக்திசிரத்தையோடு இந்த தூணின் முன்புறம் எடுத்துக்கொள்ளும் பிரதிக்ஞைகள் (வேண்டுகோள்கள்) வெற்றிபெற்று விடுவதாக ஐதீஹம்.

சீதா தேவியைத் தேடிவரும் போது இராமபிரானும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து நரசிம்மனை ஐந்து ஸ்லோகங்களால் அர்ச்சித்து
வெற்றிப்பாதையில் சென்றதாக வரலாறு. இப்பெருமானைத் துதித்தவுடன் சீதை கிடைத்துவிட்டதாகவே ராமபிரான் எண்ணிச் சென்றார்.

அஹோபிலமடம் வைணவசமய வளர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இடம்வகிக்கிறது. வானமாமலைபோல் திருவரங்கம் போல் திருமலைபோல் வைணவ
சம்பிரதாய வளர்ச்சியில் அஹோபிலமடம் முதன்மையும் முக்கியத் துவமும் வகிக்கிறது. அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் எண்ணற்ற
கோவில்களும், நூலகங்களும், கல்விக் கூடங்களும் மத சம்பந்தமான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அஹோபில மடங்களுக்கு தலைமைப் பீடம்
இதுதான். இங்கு தற்போது பெரிய மடங்களும் விசாலமான மண்டபங்களும், உயர்ந்த கட்டிடங்களும் நிறைந்து அஹோபிலம் களைகட்டி நிற்கிறது.
வடகலை சம்பிரதாயப்படி இயங்கிவரும் இந்த அஹோபில மடத்தின் ஒவ்வொரு ஜீயர் சுவாமிகளும் ஒரு குறிப்பிடத்தக்கப் பெரும் பணியைச்
செய்திருக்கின்றனர். இந்த மடத்தின் அழகிய சிங்க ஜீயர் சுவாமிகள்தான் ஸ்ரீரங்கம் தெற்கு ராய கோபுரத்தின் நின்றுபோன பணியைத் துவக்கி அதனை ஆசியாவிலேயே பெரிய கோபுரமாக்கி அரங்கனுக்குச் சமர்ப்பித்து அழியாப் புகழ்படைத்து
பெருஞ்சாதனை புரிந்துவிட்டார்.

அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு இளைஞர் வந்தார். அப்போது பெருமாளே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து
அவருக்கு காட்சி கொடுத்து மந்திர உபதேசம் செய்து அவரைத் துறவறத்தில் சேர்த்து இங்குள்ள ராமானுஜர் சன்னதியிலிருந்து துறவாடையினையும் திரி
தண்டத்தையும் கொடுத்து ஸ்ரீசடகோபஜீயர் என்ற திருநாமத்தையிட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். அப்போது இந்த
ஜீயருக்கு வயது 17. பெருமாளால் ஜீயர் சுவாமிகட்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை
வைத்துக்கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவதென்று ஜீயர் பெருமானிடம் வேண்ட பெருமாள் இங்குள்ள உற்சவமூர்த்தியான மாலோல நரசிம்மனை
ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார் அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத்தான் தாம் செல்லும் இடங்களுக்கு
எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டி முடித்த அழகிய சிங்கர் ஜீயர் திருவரங்கம் வந்தபோது
இந்த பெருமாளும் திருவரங்கம் வந்துவிட்டார்.

அஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட பராங்குச யதீந்த்ர மகாதேசிகன் என்னும் ஜீயர் இங்குள்ள மலைமேல் உள்ள
நரசிம்மன் சன்னதியில் (அகோபில நரசிம்மர்) ஒரு குகையினுள் சென்று இன்னும் தியானத்திலிருப்பதாக ஐதீகம். தற்போது இந்தக் குகை சிமிண்டினால்
மூடப்பட்டுள்ளது. அங்கு ஜீயர் சுவாமிகள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது இங்குள்ள பெரியவர்களின் சொல்.

ஆதிசங்கரர் இந்த மலைக்கு விஜயம் செய்தபோது சில காபாலிகள் அவரைக் கொலை செய்ய முயன்றபோது ஸ்ரீநரசிம்மப் பெருமாளே அவரைக்
காப்பாற்றினார் என்பதோர் வரலாறும் உண்டு.

—————

106. திருவேங்கடம் (திருப்பதி)

வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிர்ம்மாண்ட புராணம், வராக புராணம்
ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல குறிப்புகள்
கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு எழுதப்பட்டுள்ளது.
எழுத்து வடிவம் பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும் இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு முன்னால் இப்பெருமானைக்
குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது.

இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம்.

இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால் ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது.
கிரேதாயுகத்தில்-கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி

திரேதாயுகத்தில்-வ்ருஷபாத்ரி

துவாபர யுகத்தில்-  அஞ்சனாத்ரி

கலியுகத்தில்-வேங்கடாத்ரி (வேங்கடாசலம்)

இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில்
எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து
முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்

7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம் வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் பெயர்களுடன்
ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7 மலைகட்கு மத்தியில் ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி தந்தருளினார்.
வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதிவராகரைச்
சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டுமென்பது நியதி.

பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின் ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக் கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.

பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார். தான்
வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று நினைத்த பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச நின்றார். அப்போதும்
பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி அலட்சியப்பார்வை பார்த்து வரவேற்காது இருந்தார். இதனால் கோபத்தின் எல்லையை அடைந்த பிருகு ஏ
பிரம்மனே நீ வந்தோரை வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய் எனவே உனக்கு பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில் உனக்கு பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.

கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில் இருக்கும்
வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு இவன்
கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி என்போன்ற ரிஷிகள்
எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உன்போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில்
பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.

அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை கூட இங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை என்று
எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த நடையினராய் திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவுமில்லை.
எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார் (கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)

திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில் உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை  தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.

தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ வினில் உரைக்க திரும்பலுற்றார்.

என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர் ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு
விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர். திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு
தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம் புகுந்து தம் மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில் ஒரு
புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.

இஃதிவ்வாறிருக்க திரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த பேரொளியாய் வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத் தக்க
பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு அவனையே மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று தந்தையை வினவ அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு சொல்ல வேதவதி விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.

திரேதாயுகத்தில் இராமவதாரத்தின்போது இராவணன் பஞ்சவடியிலிருந்து சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது வேதவதியுடன் சென்ற அக்னி
தேவன் ராவணனை நிறுத்தி ஏ, இராவணா நீ கொண்டு செல்லும் சீதை போலிச் சீதை உண்மையான சீதையை இதோ என்னிடம் ஒளித்து
வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி பின்னால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன். இந்த உண்மைச்
சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை நம்பிய ராவணன் வேதவதியைக் கொண்டு செல்ல, உண்மைச் சீதை அக்னியிடம் சேர்ந்தாள்.

இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையை ஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின் தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில்
நான் ஏகபத்தினி விரதன். எனவே கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து பூவுலக வாசம் செய்யும் போது நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.

அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர காமேஷ்டி
யாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும் பெயரில் அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை. தன் குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.

இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருமலயில்
புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி நெடுநாள் அன்ன ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும் சிவனும் தாங்களே முறையே
பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் சோழ மன்னனிடம் விற்க, அவனதை
மந்தையில் சேர்க்க தினந்தோறும் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப்பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியுள்ள புற்றுக்கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு பால் கொடுக்காமல் இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக்
கண்டுபிடிக்குமாறு பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே சென்று பால் சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த
கோடாலியால் பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க பசுமேய்ப்பவன்
மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின் ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன் பசுவினைப் பின்
தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே விழுந்துகிடப்பதையும், ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக்கொல்லவந்தவனைத் தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும், ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக அலையக்கடவது
என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன் மன்னிப்புக்கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும் அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம் வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே
வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு இவளே
திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம் தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார்.

ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும் மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து
திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம் நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம் பற்றாக்குறையாக இருக்க
குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாகவரலாறு.

வேதவதியான பத்மாவதியினை ஏற்று யசோதையான வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம் உள்ளவர் போலவே
தோற்றமளிக்க எம்பெருமானின் உளக்கிடைக்கையை அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய் மகாலெட்சுமியை அழைத்து வாரும்
என்று அனுப்பிவைக்க திருமகள் லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு
எழுந்தருள லட்சுமி தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில்
கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது.

பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி ஓடுகிறது. அதன்
அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம் இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் அம்மலரை பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால்
திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான் வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர உத்தரவிட
வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது.

அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள் பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க தாயே
தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில் யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும் தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின் குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம் வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகைகொண்டு ஏற்றுக்கொண்டார்.

பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி, குழந்தாய்
பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம் பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு
திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும் எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு லட்சமி பத்மாவதி
சமேதராக திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு.

ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3 பிரிவுகள் கொண்டது.

முதல் பிரிவு-திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள் சயன திருக்கோலம்.
மூலவர்-கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.

தாயார்- புண்டரீக வல்லி. இங்கு ஆண்டாள் உடையவருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.

இந்தக் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி மிகவும் சக்திவாய்ந்ததாகும். முக்கியத்துவம் நிறைந்ததாகும். தில்லை
திருச்சித்ரகூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து இருந்த பின்னால் தில்லைக்கு சென்றுவிட அவர் நினைவாக இத்தலம்
தோற்றுவிக்கப்பட்டது.

2ம் பிரிவு திருமலை- இது மலைமேல் உள்ள கோவில்

மூலவர்-திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கிடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் வேங்கடத்தான் என்று பல திருநாமங்கள். கிழக்குநோக்கி
நின்ற திருக்கோலம்.

உற்சவர்-  கல்யாண வெங்கடேஸ்வரர்.

தீர்த்தங்கள்- மொத்தம் 14 தீர்த்தங்கள்.

 1. சுவாமி புஷ்கரிணி     2. பாபவிநாசம்
3. ஆகாசகங்கை        4. கோனேரி
5. வைகுண்ட தீர்த்தம்   6. சக்ரதீர்த்தம்
7. ஜபாலி தீர்த்தம்      8. வகுள தீர்த்தம்
9. பாண்டவ தீர்த்தம்    10. இராமகிருஷ்ண தீர்த்தம்
11. தும்புரு தீர்த்தம்     12. சேஷ தீர்த்தம்
13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.

இதில் மிகவும் முக்கியமான தீர்த்தங்கள் பற்றிய சிறப்பியல்புகள் தனியே தரப்பட்டுள்ளது.

விமானம்- ஆனந்த நிலைய விமானம்

காட்சி கண்டவர்கள்-  எண்ணற்ற ரிஷிகள், பிரம்மா, சிவன், ஆறுமுகன், தொண்டைமன்னன்.

3ம் பிரிவு-  திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர்.
மூலவர்-    தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும்-திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தீர்த்தம்-    பத்ம ஸரோவரம்.
சிறப்புகள்     1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த என்பதற்கு 7 என்பது
பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக் குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும் இந்த மலை குறிக்கப்படுகிறது.

அந்த 7 மலைகள் எவையெனில்

1. வேங்கடாத்ரி-வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள்
எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே
பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று.
2. சேஷாத்ரி-ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை
உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று.
3. வேதாத்ரி-   வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால்
வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது.
4. கருடாத்ரிதிருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின்
அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.

5. விருஷபாத்தரிவிருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில் திருமால் மோட்சம்
அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே
விருஷபாத்ரி என மொழியப்படுவதாக ஐதீஹம்.
6. அஞ்சனாத்ரி     அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள்.
மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ மூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு
அஞ்சனாத்ரி ஆயிற்று.
7. ஆனந்தாத்ரி     ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக்
காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக்கொண்டு இப்பெருமாள்
முன்னிலையில் வீழ்த்த, பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின் திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.

திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும். சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்–பாரதம் பாடிய பெருந்தேவனார்

குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக் கொண்டுள்ள
மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த
தொண்டை மன்னனும் வேங்கடவன் பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து
வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் யாவும்
சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங் கரிப்பதையும் கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த நம்பியின் பக்தி மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுதுசென்றான் தொண்டை மன்னன்.

இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின் மேன்மையை வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான பக்தியுடனும், ஆடம்பரமான
பக்தி வேஷத்தையும், சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக் கூடிய பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த உள்ளம் கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்துகொண்டே இருக்கிறான் வேங்கடவன்.

அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை
முதன் முதலில் அமைத்தவர்.

மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து
கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு ராமாயண பாடம் கற்றுத் தந்தவர் ஆவார். மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை
எழுந்தருளியுள்ளார்.

இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் பூண,

வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில் பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர் என்னும்
அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார். திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்தான் திருமலைப் பயணம்
பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச்
சேலை, ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை
பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன் நடைபெறுகிறது.
தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான் கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பத்ம ஸரோவரத்ர்த்தம் மிகவும்
பிரசித்தி வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு.

இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக இங்குகொண்டு
வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும்
நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது.
நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவை ததும்ப அமைந்ததில்லை.

திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான் கட்டியதாகும். இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இத்தலத்தின் உட்புறச் சுவர்களில் மூல
ஸ்தானத்தைச் சுற்றிவரும் நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும் தூண்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி
எழுத்துக்களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து முறை உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.

தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள் சூழநின்று பொருதபோது
போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட வேங்கடவன் தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க
போர்வென்ற தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்று
வேண்ட அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்ததாகவும் கூறுவர்.
இதேபோல் தொண்டைமானின் வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க நிகழ்வுகளை வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும் கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட வில்லை.

இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல் வேங்கடவன்
இருப்பதால் தான் மிதித்து நடந்துவர விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும்,
இவருக்காகவே இவரது தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து தினமும் இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர். பிற்காலத்தே வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு தெரிவித்ததின் அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார் என்றும் கூறுவர்.

இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல் முன்பு நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார் என்னும் கூற்று பல
இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இளம்வயதில் இராமானுஜர் இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய் இருந்தார். இராமானுஜர்
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் பயில வந்த காலை திருக்கோட்டியூரில் நம்பிகளின் திருமாளிகைக்கு வரும்பொழுது
திருக்கோட்டியூர் தலத்தின் மதிலருகே வந்தவுடன் மண்டி யிட்டு ஊர்ந்து சென்றே நம்பிகளின் வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு ஓர்ந்து
நோக்கத் தக்கதாகும்.

இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து
மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர்.

இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக்
காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை
தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்

திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து எனக்கு மோட்சம் கொடு
என்று கேட்க அது என்னால் முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால் பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது
என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க. ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர் எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு புக்காள்.

அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல) சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும். இது.

தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம்

திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம், இதையெல்லாம் விட இதுஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம் இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என
புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து கூடுகின்றன.
சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.

1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம்

மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு
உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.

2. தும்புரு தீர்த்தம்

பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு
தீர்த்தம். பங்குனி
மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

3. இராமகிருஷ்ண தீர்த்தம்

     தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இகபரசுகம் இரண்டும் சித்திக்கும்.

4. ஆகாச கங்கை

     தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில்
வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம்.
கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும்
இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமியன்று நீராடுவது மிக விசேடம்.

5. பாண்டு தீர்த்தம்

     வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அதுபோழ்து இதில் நீராடுவோர் சகல
பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.

6. பாபவிநாசன தீர்த்தம்

இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம்
வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய
தினத்தில் இதில் நீராடுவோர் பெறற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

ஸ்வாமி புஷ்கரிணி

 தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும் சரஸ்வதி தேவி தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில்தான்
ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது.
மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.

வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்–   என்கிறார் இளங்கோவடிகள்.

————

107. திருப்பாற்கடல்

இதற்கு வெள்ளையந் தீவு என்ற பெயருமுண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி
அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற திருநாமத்தோடு யோக நித்திரையில் தம்மைச் சங்கர்ஷணன், ப்ரத்யுமனன், அநிருத்தன்
என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும் திருமகளும் திருவடி வருட பள்ளி கொண்ட நிலையாகும் திருப்பாற்கடல்
வடிவம்.

கிழக்குப் பக்கம் சிரிப்புடன் கூடின – வாசுதேவனாகவும்
தெற்கு நோக்கி சிங்கமுகமாக – சங்கர்ஷணனும்
வடக்கு – பிர்த்யுமனனாகவும்
மேற்கு – அநிருத்தனாகவும் திகழ்கிறார்.

பக்தர்களின் அபயக் குரல், குறிப்பாக தேவர்களின் அபயக் குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில்தான் அதனால் இவ்வுலகுக்கு
கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர் பாட்டுக்கேட்டும் உலகான பரமபதத்திற்கு தேவர்களும் செல்ல முடியாது. அது சித்திப்பது நித்ய சூரிகள்
எனப்படும் முக்தர்கட்கு மட்டும்தான். எனவேதான் தேவர்கள் தங்கட்கு பிரச்சினை வரும்போதெல்லாம் அல்லது பிரச்சினைகளை உண்டாக்கிக்
கொண்டு அல்லற்படும்போதெல்லாம் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானை பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது
வழக்கமாம்.

ப்ரளய காலம் வரைதான் திருப்பற்கடல் வாசம். ப்ரளய காலம் முடிந்ததும் மீண்டும் பரமபதம். எனவே ப்ரளய காலத்தில் திவ்யதேசங்கள்
மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன. திவய்தேசங்களுக்குத் தொடக்க திவ்யதேசமாகவும் இதனைக் கொள்ளலாம்.

சங்கர்ஷணன் அநிருத்தன், ப்ரத்யுமனன் என்னும் 3 உருவங்களும் ப்ரளயகாலத்தில் வ்யூக வாசுதேவனோடு ஐக்கியமாகி விடுகின்றன.

மூலவர்–பாற்கடல் வண்ணன் (சஷீராப்திநாதன்) ஆதிசேடன் மேல் தெற்கு நோக்கிய சயனம்
தாயார் —  கடல்மகள் நாச்சியார், ஸ்ரீபூமாதேவி
தீர்த்தம் -அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்
விமானம்–   அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மனும் சிவனும்

இங்கு பெருமாள் வெண்மை நிறத்தில் இருக்கிறார். இங்கு எல்லாமே
வெண்மை, எங்கு நோக்கிலும் வெண்மை, அதனால்தான் வெள்ளை வெள்ளத்தின் மேலொரு நாகத்தை மெத்தையாக விரித்து அதன்மேல் கள்ள
நித்திரை கொள்கின்ற கள்வன் என்கிறார் ஆழ்வார். இப்பெருமானின் வண்ணம் வெண்மை என்பதை திருமங்கை யாழ்வார் முன்னை வண்ணம்
பாலின் வண்ணம் என்கிறார். அதாவது விபவ அவதாரங்கட்கு முன் (உலகைப்படைத்து இங்கு அவதாரங்களை நிகழ்த்துவதற்கு முன்) பாற்கடலில்
எழுந்தருளியதை பாலின் வண்ணம் என்கிறார். பிறகுதான் விபவ அவதாரத்தில் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் என்றார்.

இங்குதான் பிரம்மதேவன் படைக்கப்பட்டான். இது வொன்றே இதன் தனிச்சிறப்பம்சமாகும்.

திருப்பாற்கடலுக்கு சஷ்ராப்தி நாதனாக (பாற்கடல் வண்ணனாக) வந்துற்றது முதல் வாசுவேதன் அநிருத்தன். ப்ரத்யுமணன், சங்கர் ஷ்ணன்
என்றும் 4 வியூகங்களாகப் பிரிந்த நிலைகளும் சேர்ந்து பஞ்ச வ்யூகங்கள் ஆகும். இந்த வ்யூக மூர்த்திகட்கும் சில திவ்யதேசங்கட்கும் தொடர்புண்டு.

1. சஷ்ஷிராப்தி நாதன் என்னும் பாற்கடல் வண்ணன்-திருக்கோட்டியூர் உரக மெல்லனையாளனாக ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளியது.
2. வாசுதேவன்-   திருநறையூரில் திருமகளை மணந்த திருக்கல்யாணக் கோலம்
3. அநிருத்தன்-    திருஅன்பில் அழகிய வல்லிநாச்சியாருடன் அருளல்
4. ப்ரத்யுமனன்-    திருவெள்ளறை இங்கு ஸ்ரீதேவி மனித உருவில் நின்று கைங்கர்யம்
5. ஸங்கர்ஷ்ணன்–     உறையூர் கமலவல்லி என்ற பெயரில் சோழன் மகளாக வளர்ந்த திருமகளை மணத்தல் அதாவது பாற்கடலில் முதல்நிலையில் தேவிமாரோடு எழுந்தருள்கிறான். இதர வ்யூகங்கட்கு பிராட்டிகள் திவ்யதேசங்களில் 4 நிலைகளில் நின்ற பெருமாளைச் சேர்ந்து எழுந்தருள்கின்றனர் என்பதும் ஐதீஹம்.

————

108. திருப்பரமபதம் (திருநாடு, வைகுண்டம், பரம்)

விஷ்ணுவின் அடியவர்கட்கு முக்தியில் நாட்டம்கொண்ட முக்தர்கட்கு திவ்யதேசங்களில் ஊறித்திளைத்துப் போன பக்தர்கட்கு திருநாடு மிகவும்
சமீபம். அவனது சாயுஜ்யம் அவர்கட்கு மிகவும் சாமீப்யம். ஆம் இதிலெல்லாம் திளைத்தவர்களை அவனே வந்து தன் திருநாடுக்கு இட்டுச் செல்கிறான்
என்பது ஐதீஹம்.

வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே
வைணவர்களின் கடைசி இலக்காகும்.

பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று
எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான்.

மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.

திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல்
திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான
வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம்
பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

“திருவனந்தாழ்வானின் மேல் – தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை
உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய்,
கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும்
முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.
(ப்ரப்பந்நாம்ருத தர்ப்பணம் (23-26)

மூலவர்–  பரமபதநாதன், வைகுண்டபதி, தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்-    பெரியபிராட்டியார்

தீர்த்தம்-  விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி
காட்சி கண்டவர்கள்-     ஆதிசேடன், கருடன், நித்யசூரிகளும், முக்தர்களும்.

இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம்
என்பது பொருள்

இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும்
இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர் சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு
வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே இருந்துகொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்ததுபோல்
வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.
வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுந்தம் என்றும் பெயருண்டு.

எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக, உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின்- மலையாள நாட்டுத் திவ்ய தேசங்கள் — தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

November 24, 2023

65. திருநாவாய்

இவ்விடத்தில் எம்பெருமானைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த ஸ்தலம் நவ யோகிஸ்தலம் என்று
அழைக்கப்பட்டு காலப் போக்கில் நாவாய் ஸ்தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.

மூலவர்- நாவாய் முகுந்தன் நாராயணன் கிழக்கு நோக்கிய திருக்கோலம்
தாயார்- மலர்மங்கை நாச்சியார்
விமானம்- வேதவிமானம்
காட்சி கண்டவர்கள் இலட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள்.

இத்தலம் பாரத் புழை ஆற்றை ஒட்டியுள்ளது. கேரளாவில் இத்தலம் மிகவும் முக்கியத்துவமும், புராதனமும் வாய்ந்ததாகும். காசியில்
நடைபெறுவதைப் போன்று இங்கு சிரார்த்தங்களும் செய்யப்படுகின்றன.
இத்தலத்தின் எதிர்ப்புறம் சிவனுக்கும் பிரம்மனுக்கும் கோவில்கள் இருப்பதால் இது
ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகப் புகழ்பெற்றுள்ளது.

ஒரு முறை மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து பகவானை அர்ச்சித்து வர கஜேந்திரனுக்குப் பூ கிடைக்காமல்
போயிற்று. இதனால் பகவானிடம் கஜேந்திரன் தனது நிலையை விளக்கிமுறையிட பகவான் லட்சுமி தேவியைப் பூப்பறிக்க வேண்டாமென்று
சொல்லிவிட்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப்பறித்துப் பகவானை அர்ச்சிக்கலானான். பூஜையின்போது லட்சுமி தேவி
தனக்கு சமமான சிம்மாசனத்தை அளித்து அதிலமர்ந்து தன்னோடு சேர்ந்து எம்பெருமானை பூஜிக்குமாறு வேண்டிக்கொண்டாள். எம்பெருமான் மனமுவந்துபூஜையை ஏற்றுக் கொண்டு அவ்விருவருக்கும் காட்சி கொடுத்தான். இதனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் மலையாள திவ்யதேசத்தில் லட்சுமி தேவிக்குத் தனி சன்னதியுள்ளது.

————-

66. திருவித்துவக்கோடு (திருமிற்றக் கோடு)

இத்தலம் கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

துவாபர யுகத்தில் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நித்ய வழிபாட்டிற்காக விக்கிரகங்களையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர்.

முதலில் அர்ஜு னன் மஹாவிஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்தான். அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு
சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். அவர்களது வனவாசம் முடியும் வரை
இங்கேயே இருந்ததாகவும் கூறுவர். வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

இவ்வாறு நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த
முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கிவாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி
வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விஸ்வநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர்.

வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில்
தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக
சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது.

காசி விஸ்வநாதரே இந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்கு இங்கே வந்துவிட்டதாகவும், அதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்தார் என்றும்
கூறுவர். பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.
இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்றும் இதனை வழங்குவர்.

மூலவர்- உய்யவந்த பெருமாள், அபயப்ரதன், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்-வித்துவக்கோட்டு வல்லி, பதமாஸனி நாச்சியார்.
தீர்த்தம்– சக்ர தீர்த்தம்
விமானம்- தத்வ காஞ்சன விமானம்
காட்சி கண்டவர்கள்–  அம்பரிஷன் (பஞ்சபாண்டவர்கள்)

திருவித்துவக்கோடு என்னும் இத்தலம், திருமிற்றக்கோடு எனவும், திருவீக்கோடு எனவும் வழங்கப்படுகிறது

கோவிலின் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி,
தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த வண்ணங்களில் மிளிர்வது கண்கொள்ளாக் காட்சியாகும். பார்ப்பதற்குப்
பேரழகு பொருந்தியதாகும் இவைகள்.

திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது முக்கண்ணன் மற்ற தேவதாந்தங்கள் போல் ஸ்ரீமந் நாராயணனின் உடலின்
அங்கமே என்று நீரூபிப்பதைப் போல அமைந்துள்ளது.

இது பிற்காலத்தே செய்யப்பட்ட ஏற்பாடென்றும் கூறுவர். இருப்பினும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக திவ்ய
தேசங்களில் 10க்கு மேற்பட்ட தலங்களில் உண்டு. இரு மூர்த்திகளும் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.

 அம்பரீஷ சக்ரவர்த்தி பரமபதநாதனின் வ்யூக அவதாரத்தை சேவிக்க வேண்டுமென்று எம்பெருமானை இவ்விடத்திலிருந்து பிரார்த்திக்க
எம்பெருமான் நான்கு வடிவங்கொண்டு (வ்யூக வடிவத்தை) அவனுக்கு காட்சி கொடுத்து முக்தியும் கொடுத்தார். இதனால்தான் நாலுமூர்த்தி கோவில் என்னும் பெயர், இத்தலத்திற்கு உண்டானதென்றும் பிற்காலத்தே பஞ்ச பாண்டவர்களின் தொடர்பால் இத்தலத்தின் பிரசித்தி உயர்வடைந்ததென்றும் கூறுவர்.

நடுவில் இருக்கும் மூர்த்தியை தருமனும், மேற்கில் உள்ள மூர்த்தியை அர்ஜு னனும், இடப்புறம் உள்ள மூர்த்தியை பீமனும், வலப்புறம் உள்ள
மூர்த்தியை நகுல சகாதேவர்கள் பூஜை செய்ததாகவும் வரலாறு.- பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவும் கூட.

———-

67. திருகாட்கரை

இத்தலம் ஷோரனூர் – எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 2 மைல்
தொலைவில் உள்ளது.- ஆலவாய், திருச்சூர் ரயில் மார்க்கத்தில் உள்ள இருஞாலக்கொடி புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 9 மைல் தூரம். ஆலவாயிலிருந்து பேருந்தும் உண்டு.

இப்பெருமானை மலையாளத்தில் வாமன மூர்த்தி என்று அழைத்து வழிபடுகின்றனர். இந்த வாமன மூர்த்தி திருக்கோயில் கொண்டுள்ள இடமே
திருக்காக்கரா. திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து
குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதா, பத்ம ஹஸ்தங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு
எழுந்தருளியுள்ளார்.
திருமால் மூவடிமண்வேண்டி ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து மூன்றாவதடியை மாவலியின் தலையில் வைக்க எத்தணித்ததும் வந்திருப்பது
சாட்சாத் மஹாவிஷ்ணுவே என்றறிந்த மாவலி எம்பெருமானைத் துதித்து ஒரு வரம் கேட்டான். அதாவது நான் ஆண்டுக்கு ஒரு முறை உலக மக்களைச்
சந்திக்க விரும்புகிறேன். அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான். அவ்வாறாயின் இன்றைய தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக்
கொண்டாடும் நாளில் உனக்கு அந்த நிலை உண்டாகுமென்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை
நினைவு கூர்ந்து மக்கள் விழாவெடுக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரும் திருவிழாவான இதை ஓணத் திருவிழா என்றழைக்கின்றனர்.

ஓணம் பண்டிகை மலையாளத்தில் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மகாபலியும்
திருவிழாவிற்கு வருவதாக ஐதீஹம். கேரள தேசத்தின் மிகப்பெருந்திருவிழா இது ஒன்றுதான்.

மூலவர்- காட்கரையப்பன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அப்பன் என்பதே மூலவரின் திருநாமம்.
தாயார்- பெருஞ்செல்வ நாயகி வாத்ஸல்யவல்லி.
தீர்த்தம்- கபில தீர்த்தம்
விமானம்–  புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்– கபில முனி

கிழக்கும், மேற்குமாக இருபுறமும் வாயில்கள் அமைந்த இத்தலத்தின் முன்புறம் யானைப் பந்தல் ஒன்றும், பின்புறம் அமைந்துள்ள 8 அடி நீளமுள்ள
பலிபீடமும் கோவிலுக்கு மேலும் அழகு தருகிறது.
வாமனத்தலம் என்று வழங்கப்படும் இத்தலத்தில் மகாவிஷ்ணு மாவலிக்கு வாமனனாக எவ்விதம் காட்சியளித்தாரோ அதேபோல் காட்சி
அளிக்கிறார். இத்தலத்தின் உள்ளே நுழைந்ததும் வட்டவடிவில் அமைந்துள்ள மிகப் பெரும் கருவறை மண்டபம் காண்பதற்குப் பேரெழில் வாய்ந்தது.
நமஸ்கார மண்டபத்தில் தென்பக்கம் யட்ச பிரதிஷ்டை காணப்படுகிறது.
வடகிழக்கில் கோபால கிருஷ்ணன் சன்னதியுள்ளது. தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள நாகப்பிரதிஷ்டைகளும் கண்ணோடு கருத்தைக் கவர்வனவாகும். வெளிப்பிரகாரத்தின் தென்புறத்தில் மிகப்பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.
காற்றில் இதன் இலைகள் சலசலப்பது அதன் தெய்வீக அமைதிக்கு மேலும் புனிதம் காட்டுவதாக அமைந்துள்ளது.

இத்தலத்தில் ஒரு தனிகன் வாழை மரங்களை நட்டுப் பயிர் செய்ததாகவும், அவைகள் குலை தள்ளாமல் தொடர்ந்து அழிந்து பட்டே
போக அத்தனிகன் பொன் வாழைக்குலைகள் செய்து அப்பனுக்குச் சமர்ப்பிக்க
எம்பெருமானின் திருவருளால் வாழை மரங்கள் வளர்ந்து வாழைகள் குலை தள்ளியதாகவும், எம்பெருமானிடம் நேர்ந்து இந்த வாழைப்பழங்கள்
உருவானமையால் இதற்கு நேத்திரம் வாழைப்பழம் என்ற பெயருண்டாயிற்றென்றும் கூறுவர்.

இந்த தனிகன் சமர்ப்பித்த பொன் வாழைக்குலை ஒரு சமயம் காணாமல் போய்விட்டது. மன்னன் பலரையும் பிடித்து விசாரித்தார். அவ்வாறு விசாரித்து
வருகையில் ஒரு யோகியைத் தீர விசாரிக்காமல் மிகவும் துன்புறுத்தியதாகவும், அந்நிலையில் அந்தப் பொன் வாழைக்குலை கர்ப்பக் கிரஹத்திற்குள்ளேயே இருந்ததாகவும், கண்டறியப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட பிறகு, தன்னை மிகவும் இம்சை படுத்தியதைப் பொறுக்க முடியாத அந்தத் துறவி, சாபம் இட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உயிர்துறக்க, அந்தச் சாபம் நீங்குவதற்காக, பல முனிவர்களின் கருத்துப்படி மூங்கில் கூரை ஒன்றை உருவாக்கி, அதனுள் கோரைப் புற்களையிட்டுத் தீயை உண்டாக்கி பலநாள் எரித்து வெளிச்சத்தை உண்டாக்கி சாபம் தீர்க்கப்பட்டதாக வரலாறுண்டு.

அப்பன், என்றும் பெருஞ்செல்வ நாயகி என்றும் இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் மலையாள மண்ணில் தூய தமிழ்ப்பெயர்கள் இலங்குகின்றன.

————

68 திருமூழிக்களம்

ஹரித மஹரிஷி என்பவர் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்தார். இவரின் தவத்திற்கு உகந்து இங்கு எழுந்தருளிய எம்பெருமான்,
உமது விருப்பம் என்னவென்று கேட்க, எம்பெருமானை யாவரும் இலகுவில் அடையக்கூடிய வழியை உபதேசிக்குமாறு பிரார்த்திக்க அதற்கு, அவரவர்கள்
கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் தன்னையடைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீஸுக்தியை’ திரு மொழியை இவ்விடத்தில் அம்முனிவர்க்கு வழங்கினார்.

எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக் களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே
காலப்போக்கில் பொருள்காண இயலா வண்ணம் திருமூழிக்களமாயிற்று.
இப்பெயரே தொன்னெடுங்காலமாய் பிரசித்தமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது.

மூலவர்–திருமூழிக்களத்தான். அப்பன் ஸ்ரீஸு க்திநாதன் கிழக்குநோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்–  மதுரவேணி நாச்சியார்.
தீர்த்தம்–  சங்க தீர்த்தம், சிற்றாறு
விமானம்-   சௌந்தர்ய விமானம்
காட்சி கண்டவர்கள்– ஹாரித மஹரிஷி

பாரதப் புழை ஆற்றங்கரையில் எழில் தரும் சூழ்நிலையில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான இத்தலம் ஒரு காலத்தில் பெரிய
கலாசேஷத்ரமாக விளங்கியிருக்கிறது. ஸ்ரீஸு ஸீக்தி இங்கு அருளப்பட்டதால் எண்ணற்ற நூல்கள் இங்கு ஆராயப்பட்டு கற்றறிந்த பெரியோர்கள்
குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் ஒரு போது சிறப்புற்று இருந்துள்ளது.

இராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்கியிருந்த சமயம், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துப்போக பரதன் வந்து
கொண்டிருந்த காட்சியைக் கண்ட இலக்குவன், பரதன் இராமனுடன் யுத்தத்திற்கு வருகிறான் என்று நினைத்து பரதனைக் கொல்ல எத்தணித்தான்.
இந்த பாவத்தைப் போக்கிக்கொள்வதற்காக இலக்குவன் திருமூழிக்களத்து அப்பனிடம் வந்து அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து இலக்குவனை ஆரத்தழுவி இன் சொல்லால் உபசரித்ததாகவும், இவ்விதம் இன்சொல் விளைந்த ஸ்தலமாதலால் திருமொழிக்களம்
ஆயிற்றென்றும் கூறுவர். இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலமாகும் இது. இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம்
போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான்.

இங்கு லட்சுமணப் பெருமாளையே (ஸ்ரீராமானுஜர்) மூலவராக எண்ணி வழிபடும் வழக்கம் பிற்காலத்தே ஏற்பட்டது. அதாவது இலட்சுமணைப்
பெருமாளின் திருப்பணிக்கும் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.

—————-

69. திருவல்லவாழ்

திருக்கடித்தானத்திலிருந்து 5 மைல் தூரம் திருவல்லா. திருவல்லாவிலிருந்து 5 மைல் தூரம் திருவண் வண்டூர்

திருவண் வண்டூரிலிருந்து 4 மைல் தூரத்தில் திருச்செங்குன்றூர். இந்த திவ்யதேசத்தை இப்பகுதி வாழ் மக்கள் செங்கானூர் என்றும், சேங்கனூர்
என்றும் வழங்குகின்றனர்.
திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே 4 மைல் தூரத்தில் திருப்புலியூர் என்னும் திவ்யதேசம்.
இங்கிருந்து மீண்டும் செங்கனாச்சேரி சென்று, செங்கனாச்சேரியிலிருந்து 10 கீ.மி. கிழக்கு திசையில் சென்றால் திருவாறன்விளை (திரு ஆரம் முளா]
என்னும் திவ்ய தேசம்.

திருவல்லாவாழ் எனப்படும் இந்த திருவல்லா என்ற திவ்ய ஸ்தலத்தைப் பற்றி கருடபுராணம். மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் குறிப்புகள்
காணப்படுகிறது.

சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதிவிரதையானவர் இத்தலத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று பிரம்மச்சாரிகட்கு
உணவு படைத்து அதன்பின் தான் விரதம் விடும் பழக்கத்தைப் பெற்றவளாய் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும்
அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அப்பெண் அரக் கனை வதம் செய்ய எம்பெருமானை
வேண்டிக்கொண்டாள்.
எம்பெருமானே பிரம்மச்சரிய வேடத்தில் வந்து தோலகாசுரனை எதிர்த்தார் தோலகாசுரன் மிகக் கடுமையாக எம்பெருமானுடன் யுத்தம்
செய்யவே எம்பெருமான் சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை துண்டு துண்டாக்கியது. அவனது தலைவீழ்ந்த இடம் தலையார் என்றும் அவனது கை
விழுந்த இடம் முட்டாறு என்றும் கால்கள் விழுந்த இடம் காலாறு எனவும் இன்றும் அழைக்கப்படுகிறது. தன்னில் படிந்திருந்த ரத்தத்தை சுதர்சனர்
சத்தம் செய்த இடம் சக்கரகாலக் கடவு என்றும் வழங்கப்படுகிறது.
இதன்பின்னர் இச்சக்கரம் திருவல்லாணின் பின்புறம் போய் குடிகொண்டது. அந்த அரக்கனைக் கொன்றுவிட்டு தூவாதசியன்று (விரதம் விட) பாரணைக்கு
வந்ததாகவும், திருவாழ் மார்பை பிரம்மச்சாரி மறைப்பதைக் கண்ட அப்பதிவிரதை வந்திருப்பது எம்பெருமான் என்று ஐயுற்று திருவாழ் மார்பை
தரிசிக்க வேண்டுமென்று கேட்க, அவளின் வேண்டுகோளின்படியே திருவாழ் மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம்.

இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயருண்டானதாக வரலாறு. இந்தப் பதிவிரதையானவள் கமுகு மரத்தின் பாளையில் எம்பெருமானுக்கு
அன்னமிட்டு உப்புமாங்காயை அளித்தாளாம். இதை உண்டுவிட்டு இந்த ஆலயமிருக்குமிடம் வந்து எம்பெருமான் கிழக்கு நோக்கி திரும்பி நின்றதாலும்
திருவல்லா அல்லது திருவல்லர் என்றாயிற்றென்பர்.

கண்டாகர்ணன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன், சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டபடி மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்து
எட்டெழுத்துமந்திரத்தை ஜபிக்கலானான். அம்மந்திரத்தை ஜபிக்கும்போது  கிருஷ்ணநாமம் தவிர வேறு எந்த சப்தமும் தன் செவியில் விழுகாதிருக்கும்
பொருட்டு தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு மணிகளைத் தனது காதில் தொங்கவிட்டு, எந்நேரமும்
அது ஒலித்துக் கொண்டே இருக்கும்படி தனது காதுகளை அசைத்து அதுனூடே (அஷ்டாச்சர) எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து மோட்சம்
பெற்றதாக வரலாறு.
இந்த கண்டாகர்ணன் என்பவன் இந்த தலத்தில்தான் தவமிருந்தான்.

மூலவர்–திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன் கோலப்பிரான், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– செல்வத் திருக்கொழுந்துநாச்சியார் வாத்சல்ய தேவி
தீர்த்தம்- கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம்
விமானம்– சதுரங்க கோல விமானம்
காட்சி கண்டவர்கள்– கண்டா கர்ணன், சங்கரமங்கலத் தம்மையார்

ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று சொன்னால்தான் யாருக்கும் தெரியும்.

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்று மட்டுமே இத்தலத்தில் பெருமானை வழிபட
பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் அந்தக் காலத்தில் நம்பூதிரிகள் அரைகுறை ஆடையுடன் பூஜையில் ஈடுபட்டிருந்ததால் பெண்கள்
அனுமதிக்கப்படவில்லை.
இத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானதென்றும் இன்றும்கூட பூமிக்கடியிலிருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு
தண்ணீர் வருவதாகச் சொல்லப்படுகிறது.

இங்கு நம் கருத்தைக் கவர்வது ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல்தான் 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் கொண்ட இக்கல் பூமிக்கடியில் எவ்வளவு
ஆழத்தில் சென்றுள்ளது என்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லாத இப்பகுதியில் இப்படியொரு பெருங்கல்லை கொணர்ந்து வைத்தது பேராச்சர்யம்.

அண்மையில் இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தாலான கருடாழ்வாரை வைத்துள்ளார்கள். இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு
(கொடிக்கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. இதில் அமர்ந்துள்ள கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து இதோ புறப்படுகிறேன் என்று
சொல்வதைப் போல வெகுநேர்த்தியாய் எம்பெருமானை (கோலப்பிரானை) பார்ப்பது போல் அமைந்துள்ள இந்த தோற்றம் காண்டொறும் காண்டொறும்
வியக்கத்தக்கதாய் இருப்பதுடன் காலை நேரத்து வெய்யில் இதில் பட்டு ஜொலிக்கும் பேரழகு சொல்லுந் தரமன்று.

பொதுவாக தமிழ்நாட்டில் திவ்ய ஸ்தலங்களில் உள்ள கொடிக்கம்பத்திற்கும் கேரளத்து திவ்ய ஸ்தலங்களில் உள்ள
கொடிக்கம்பத்திற்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. தமிழ்நாட்டில் கொடிக் கம்பத்தில் சிற்பங்களையோ
விக்கிரகங்களையோ காண்பதரிது. ஆனால் மலையாளத்து திவ்ய தேசங்களில் இந்த துவஜ ஸ்தம்பத்தில் சுமார் 6 அல்லது 7 அடி உயரத்தில்
துவஜஸ்தம்பத்தைச் சுற்றி அபூர்வமான சிற்பங்களையும், விக்ரகங்களையும், வடித்துள்ளார்கள். இவைகள் அதிதேவதைகளாகவும் சில ஸ்தலங்களில்
நவக்கிரகங்களாகவும் வடிக்கப் பட்டுள்ளன. இங்கு ஒரு சில பக்தர்களின் இல்லங்களில் வைத்து பூஜிக்கப்படும் திருவாராதன விக்ரகங்களையொத்தே
இவைகள் காணப்படுகின்றன.

மலையாளத்து திவ்ய தேசங்களில் துவஜஸ்தம்பத்தில் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள் யாவற்றிலும் இத்தலத்துச் சிற்பங்கள் மிகவும் வசீகரத்
தோற்றத்துடனும் தெய்வீகப் பொலிவுடனும் திகழ்வது இத்தலத்திற்கே உரித்தான ஒரு தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தில் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதும், துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு
விடத்திலில்லாத தனிச் சிறப்பாகும்.
திருவட்டாறு திவ்ய தேசத்தைப் போன்றே இங்கும் மூலஸ்தானத்திற்கு முன்புறம் அமைந்துள்ள மண்டபத்தின் மீதேறி இறைவனை வழிபட யாரையும்
அனுமதிப்பதில்லை. நித்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு பூஜைகள் செய்யும் போத்தி மட்டும் மண்டபத்தின் மீதேறி இறைவனை தெண்டனிட்டு
வணங்கிவிட்டு தனது பூஜைக் கிரமங்களை ஆரம்பிக்கிறார்.

ஸ்ரீ வல்லபனுக்கு பந்தீராயிரம் என்ற வழிபாடு இங்கு பக்தர்களால் சிறப்பாக செய்யப்படும் ஒன்றாகும். அதாவது 12000 வாழைக்காய்களை
குலைகுலையாய் வாங்கி ஏதாவது ஒரு வேள்வி செய்து அந்த வேள்வியில் பழுக்கவைத்துமேளதாளமுடன் புதுக்கூடைகளில் சுமந்து வந்து
திருவல்லாருக்குச் சமர்ப்பித்து வழிபடுவர் பாதிப் பழங்கள் நிவேதனம் ஆகும்.
மீதி 6000 பழங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்படும்.
தூவாதசியன்று எம்பெருமானுக்கு இங்கு உணவு படைக்கப்பட்டதைப் போலவே இன்றும் கமுகு பானையில் பிரசாதமும் உப்பு மாங்காயும்
எம்பெருமானுக்கு நைவேத்யமாக அமுது படைக்கப்படுகிறது. இங்கு கமுக மரங்கள் செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் காட்சியை வானார் வண்கமுகும்
மதுமல்லிகை கமழும் என்றும், பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் என்று நம்மாழ்வார் தம் பாசுரங்களில் கமுகின் செழுமையை
எடுத்தாண்டுள்ளார்.

————

70. திருக்கடித்தானம்

கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள்
விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், இத்திருக்கடித்தானமும் ஒன்று.-அஃதாவது கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் மோட்சமும் கிட்டும் என்பது ஐதீஹம்.
இப்பகுதி வாழ் மக்கள் திருக்கடித்தானம் என்றும், திருக்கொடித்தானம் என்றும் இத்தலத்தை விளிக்கின்றனர்

ருக்மாங்கதன் என்ற சூர்ய வம்சத்து மன்னன் ஆட்சி செய்த இடமென்றும் இவனது நந்த வனத்தில் பூத்திருந்த மிக அழகான புஷ்பங்களை
யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்ந்தனர் என்றும், இவ்வாறு மலர்கள் மறைவதை அறிய முற்பட்ட
மன்னன் தன் தபோவலிமையால் தேவர்களையும் தேவ மகளிர்களையும் மலர்கொய்ய வந்த விடத்து பிடித்துக்கொள்ள, தேவர்கள் விண்ணுலகம்
(தேவருலகம்) செல்ல இயலாத நிலை ஏற்பட இதற்குப் பிராயச்சித்தம் கோரி நிற்க, ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும்
பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்கட்குக் கொடுத்தால்தான் அவர்கள் மீண்டும் தேவருலகம் செல்ல முடியுமென்று அசரீரி ஒலித்தது.

அதுபோலவே ருக்மாங்கத மன்னன் தேவர்களை அழைத்து வந்து இத்தலத்து எம்பெருமான் முன்னே நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின்
பலனை அவர்கட்கு கொடுக்கவே அவர்கள் தேவருலகெய்தினார்.

நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.

மூலவர்–  அற்புத நாராயணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கற்பகவல்லி
தீர்த்தம்– பூமி தீர்த்தம்
விமானம்–  புண்யகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்– ருக்மாங்கதன், தேவர்கள்

இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோர் மிக்க பேரழகு வாய்ந்தவர்கள். இத்தலத்திற்குள்ளாகவே தனித்தனி
சன்னதிகளாக இரண்டு சன்னதிகளும் அமைந்துள்ளன.

பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே
இந்தத் தலம் சகாதேவன் கட்டிய ஸ்தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண ஷேத்திரங்களில் மூன்று
ஷேத்திரங்கள் உடனடியாக மோட்சமளிக்க வல்ல தென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது.

சகல சாஸ்திரங்களும் கற்றுத்துறை போய மேதாவியான சகாதேவன் ஜோதிடக்கலை வல்லுனன். அவனால் பிரதிஷ்டை (ஸ்தாபிக்கப்பட்ட)
செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரகம் ஒவ்வொரு 60 ஆண்டுகட்கு ஒரு முறையும் புதிய சக்தியைப் பெற்றுக்கொண்டே சென்று கலியுகம் முடியும் தறுவாயில்
ஜோதிமயமாய் மாறி விண்ணுள் கலக்குமாம்.

இத்தலத்து எம்பெருமானின் பெயர் அற்புத நாராயணன் என்பதாகும்.
இதனை நம்மாழ்வார்.-அற்புதன் நாராயணன் அரிவாமனன்
நிற்பது மேவி இருப்பதும் என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே – என்று எடுத்துரைத்தார்.

———-

71. திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)

பாரத யுத்தத்தில் துரோணரைக் கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத் தாமன் இறந்துவிட்டான் என்று சொல்ல வேண்டிய
தர்மன் அஸ்வத்தாமன் என்ற சொல்லைப் பலமாக கூவி (அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில்
உச்சரித்தான். இதனால் போரில் துரோணாச்சாரி கொல்லப்பட்டார்.
தான் சொன்ன பொய்யே துரோணரின் இறப்புக்குக் காரணமாய் இருந்ததை எண்ணி தர்மன் அதற்குப் பெரிதும் மனம் வருந்தி போர் முடிந்த
பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக தவமிருந்ததையும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தை தர்மன்
புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தர்மனே பிரதிஷ்டை செய்தாரென இங்கு வழங்கப்படுகிறது.

தர்மபுத்திரன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் பெரிதும் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே
குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்று அவர்கட்கு தந்தை யொப்பத் திகழ்ந்த திருமால் இவ்விடத்து அவர்கட்கு காட்சி
கொடுத்ததால் “இமையவரப்பன்” என்ற திருநாமம் இவ்விடத்து எம்பெருமானுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறிய
முடிகிறது.

மூலவர்–இமையவரப்பன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– செங்கமலவல்லி
தீர்த்தம்–  சிற்றாறு
விமானம்–  ஜெகஜோதி விமானம்
காட்சி கண்டவர்கள்–   சிவன்

இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன்.
நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் எடுத்தாண்டுள்ளார்

————

72. திருப்புலியூர் (குட்டநாடு)

ஒரு சமயம் மன்னன் சிபியின் மைந்தன் அரசாண்டு வரும்பொழுது அவனுக்கு கடுமையான நோயும், நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.
அச்சமயம் அந்நாட்டிற்கு வருகை தந்த சப்தரிஷிகளை வேண்டிய மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் உண்டான பேராபத்தைப் போக்கினால்தான்
முனிவர்கட்குத் தானம் கொடுப்பதாகக் கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்டு சினந்த ரிஷிகள் மன்னர்களிடம் முனிவர்கள் யாதொரு
தானமும் பெறக்கூடாது. அதிலும் உன் போன்ற மன்னர்களிடம் பெறுதல் பெரிய பாவமென்று சப்தரிஷிகள் மறுத்துவிட்டனர்.

இருப்பினும் சிபியின் மைந்தனான வ்ருஷாதர்பி மந்திரிகள் மூலமாக மறைமுகமாக தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைக்க அதையும்
முனிவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் வெகுண்ட மன்னன் ஒரு யாகத்தைச் செய்து அந்த யாகத்தில் தோன்றிய தேவதையை சப்தரிஷிகளைக்
கொல்வதற்காக ஏவினான்.
ரிஷிகள் மஹாவிஷ்ணுவைத் துதித்து நிற்க, அம்மாத்திரத்திலேயே மஹாவிஷ்ணு இந்திரனை அனுப்பி இந்திரன் புலியாக மாறி தேவதையைக்
கடித்துக் குதறினான். இதனால் திருப்புலியூராயிற்று என்பர்.
ரிஷிகள் திருமால் ஒருவன்தான் பரம்பொருள் என்று இவ்விடத்து நிர்ணயம் செய்ததால் திருமால் அவர்கட்கு மாயப் பிரானாகக் காட்சி
கொடுத்து மோட்சமளித்தார்.

மூலவர்–  மாயப் பிரான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்–   பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம்–  ப்ரஞ்ஞா ஸரஸ்
விமானம்–   புருஷோத்தம விமானம்
காட்சி கண்டவர்கள்–   சப்த ரிஷிகள்

பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமனும் திருமாலைக்குறித்து தவம் புரிந்தான். பீமனைப்
போன்றே அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பைக் கொண்டுத் திகழ்கிறது இத்தலம். இப்பகுதியில் வாழும் சற்று விஷயமறிந்த பெரியவர்கள்
இதனை பீமஷேத்ரம் என்றே கூறுகின்றனர்.
இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள உயர்ந்த கொடிமரம் (துவஜஸ்தம்பம்) வட்டவடிவமான (மூலஸ்தானம்) கருவறை அமைப்பும் மிக்க
எழில் வாய்ந்ததாகும்.

——————–

73. திருவாறன் விளை (ஆரம்முளா)

பஞ்சபாண்டவர்களுள் அர்ஜு னனால் புதுப்பிக்கப்பட்ட இத்தலம் இன்றும் அவன் பெயரைப் பறை சாற்றிக் கொண்டு அர்ஜு னன் அம்பலம்
என்று சொல்லத்தக்க அளவில் சிறந்து விளங்குகிறது.

பாரத யுத்தத்தில் கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் பதிந்துவிட்டது. அதனைத் தோள் கொடுத்து எடுத்து நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்த
கர்ணன் அச்சக்கரத்தை தோள்கொடுத்து தூக்கும்போது அர்ஜு னன் அம்பெய்து கர்ணனைக் கொன்றான். இவ்வாறு நிராயுத பாணியான
கர்ணனைக் கொன்றது அர்ஜு னனுக்கு நியாயமாகப் படவில்லை. யுத்த தர்மத்தின்படி அது பெரும் பாவம் என்றும் அதிலும்தன்போன்றோர் செய்யத் தகாத காரியமென்றும் பெரிதும் வருந்தினான்அர்ஜு னன்.

ஏற்கனவே பாண்டவர்கள் கேரள தேசத்தில் மறைந்து வாழும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலத்தைப் புதுப்பித்தனர். அதாவது
ஒவ்வொருவரும் ஒரு திவ்ய தேசத்தை தெரிவு செய்து தமது எண்ணத்தை ஈடேற்ற தவமியற்றினர்.

அர்ஜு னன் இந்த இடத்தில் இருந்த பெருமாளைத் தியானித்து தவமிருந்ததாகவும், இத்தலத்திற்கு அருகாமையில் இருந்த வன்னி மரத்தில்
தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் அந்த வன்னிமரம் இத்தலத்தருகே இருந்தது என்பதும் ஐதீஹம்.

போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு முரணாக கொன்றதால் தனது நெஞ்சம் அமைதியுறவும், யுத்தத்தில் உயிர்களைக் கொன்ற பாவம் போக்கவும்
மீண்டும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்ததாகவும் எம்பெருமான் பார்த்தசாரதியாகவே காட்சியளித்ததாகவும் ஐதீஹம்.

அர்ஜு னன் இரண்டாம் முறையாக வந்த போதே இத்தலத்தை புதுப்பித்ததாகவும் ஐதீஹம்.

மூலவர்
திருக்குறளப்பன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– பத்தமாஸனித்தாயார்
தீர்த்தம்- வேதவியாச தீர்த்தம். பம்பா தீர்த்தம்.
விமானம்– வாமன விமானம்
காட்சி கண்டவர்கள்-  பிரம்மன், வேதவியாசர், அர்ஜு னன்.

எம்பெருமானுக்கு திருக்குறளப்பன் என்பது வாமனவதாரத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. பிரம்மன், வாமன
அவதார மூர்த்தியை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு.

இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் வன்னி மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ் தம்பத்தின் முன்பு குவித்து
வைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில்
இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜு னன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது
இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும் துலாபாரம்கொடுக்கும் முறை நடைமுறைப் பழக்கத்திலிருந்து வருகிறது இங்கு
துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது.

இங்கு அர்ஜு னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி சிலைஒன்று உள்ளது. இவரது கரம் மூளியாக இருந்ததாகவும், கோவில் வேலை
பார்க்கும் தந்திரி. தங்கத்தால் கை செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது.
பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ள இக்காட்சி இக்கோவிலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

இந்த தலத்தில்தான் புதுத்தைவமான ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக
சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் பஜனைப் பாடல்களுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிடுங்கிச் சென்று விட்டனர். பிரம்மன் திருமாலைத் துதித்து
நின்றான். திருமால் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார்.
இதற்கு நன்றி கூறும் முகத்தான் இத்தலத்தில் பிரம்மன் திருமாலைக் குறித்து தவமிருந்தான் என கூறுவர்.

————–

74. திருவண்வண்டூர்

திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் இந்தப் பக்கத்தில் அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம் நாரதனுக்கும் பிரம்மனுக்கும் வந்த வாக்கு வாதத்தில் நாரதனை பிரம்மன் சபித்துவிடவே பிரம்மனைவிட்டுப் பிரிந்த நாரதன்
இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்துக் கடுந்தவமிருந்து சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவத்தை பற்றிய ஞானத்தைத் தமக்கு உபதேசிக்க
வேண்டுமென்று கேட்க, இவன் தவத்தை மெச்சிய திருமாலும் அவ்விதமேயருளினார்.
அதனால் திருமாலே பரதத்துவம் என்றும் சகலமும் அவரிடமே அடக்கமென்றும் அவரைப் பூஜிக்கும் முறை துதிப்பாக்கள் ஆகியன
கொண்டதாக நாலாயிரம் அடிகள் கொண்ட ஒரு நூலை நாரதீய புராணம் என்ற பெயரில் இவ்விடத்திலே இயற்றியதாக வரலாறு.

மூலவர்– பாம்பனையப்பன், கமலநாதன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்–  கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்–  பம்பை தீர்த்தம்
விமானம்–   வேதாலய விமானம்
காட்சி கண்டவர்கள்–   நாரதர்.

பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால்
நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது.
இவ்வூரில் பூமியைத் தோண்டும்போது புதிய பெருமாள் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு இவ்விடத்தில் கொணர்ந்து புதிய
மண்டபங்களும் சன்னதிகளும் ஸ்தாபிக்கப்பட்டன.
இத்தலம் வட்டவடிவான கருவறையுடன் கூடியிருப்பதும் சங்கு, சக்கர, கதா, பத்ம பானியாகப் பெருமாள் மேற்கு நோக்கி
எழுந்தருளியிருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
இத்தலத்திற்குள் நுழையும் போது (மேற்கு புற நுழைவாசலில்,வாசலின் மேல் காளிங்கனின் மேல் (காளிங்கன் என்னும் கொடிய
விஷங்கொண்ட ஐந்து தலை நாகம்) கண்ணன் நர்த்தனமிடுவதுபோல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு பொருந்தியதாகும். இக்கண்ணன்
காளிங்கனின் தலை மீது ஒரு காலை ஊன்றிக்கொண்டு ஒரு காலை வலப்புறம் வளைத்து தூக்கித் தனது இரண்டு கரங்களையும் (பேலன்ஸ் செய்வது போல) நீட்டி நிற்கின்ற காட்சி காணக் காணக் கண்ணையும் கருத்தையும் விட்டு அகலாத ஒன்றாகும். இக்கண்ணன் தூய நீல நிறத்தில் அமைந்திருப்பது
இன்னுமோர் பேரழகாகும்.
கண்ணனைத் தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டு பக்கங்களிலும் தசாவதாரக் காட்சி மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற பம்பை நதிக்கு வடக்கே இத்தலம் அமைந்துள்ளதை ‘தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’ என்று
நம்மாழ்வார் தன் பாசுரத்திலும் சுட்டுகிறார்.
பஞ்ச பாண்டவர்கள் சம்பந்த முற்ற ஸ்தலங்களில் இந்த தலம் அடிக்கடி விழாக்களும் முக்கியமான நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடமாகும்.

————

75 திருவனந்தபுரம்

திவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை)
காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார்.
தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன் தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர்
தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான்
உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத் தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார்.

அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை
அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன்
காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது.

முனிவரும் மிகுந்த பக்தி ஏக்கத்தோடு பல இடத்திலும் தேடியலைந்து இறுதியில் அனந்தன் காட்டில் கடலோரமுள்ள ஒரு இலுப்பை மரப்பொந்தில்
அக்குழந்தையைக் கண்டுவிட்டார்.

அம்மரம் திடீரென நிலத்தில் வீழ்ந்து அனந்தசயன வடிவமாக இறைவன்காட்சியளித்தார். அவ்வடிவின் தலை திருவல்லத்திலும் (அனந்தபுரம்
துறைமுகத்திலிருந்து 3 மைல்) பாதம் திருப்பாப்புரத்திலும் (அதற்கெதிர்புறம் 5 மைல்) சரீரம் திருவனந்தபுரத்திலும் அமையக்கண்ட அவர் வியந்து, திகைத்து பயந்து தமக்கு மிகச்சிறு வடிவாகக் காட்சியளிக்க வேண்டுமென்று கேட்க அவ்விதமே அம்முனிவர் கையில் வைத்திருந்த யோக தண்டத்தின்
அளவிற்குத் தம்மைச் சுருக்கி காட்சியளித்தார்.

தமக்கு ஏற்பட்ட பாக்கியத்தை எண்ணி முனிவர் வியந்து நிற்க, இம்முனிவரின் பால் பற்றுக்கொண்ட எம்பெருமான் தனக்குத் துளுவம்சத்தைச்
சார்ந்த பிராம்மணர்களே நித்ய பூஜை செய்யவேண்டுமென வேண்டியதாகவும் அவ்விதமே இன்றளவும் நடைபெற்று வருவதாகவும் ஐதீஹம்.

இப்புரத்தைப்பற்றிய மற்றொரு கதை வில்வமங்கலத்திலிருந்த நம்பூதிரி வகுப்பைச் சார்ந்த சன்னியாசி ஒருவர் அனந்த சயன வடிவிலிருந்த
இப்பெருமானைக் கண்டு மோகித்து வழிபட ஆரம்பித்தார். ஒரு நாள்நிவேதிக்க (நைவேத்தியத்திற்கு, வழிபாட்டிற்கு) கைவசம் யாதுமில்லாததால்
அருகிலிருந்த மாமரத்தில் சில மாங்காய்களைப் பறித்து ஒரு சிரட்டையில் (தேங்காய் மூடியில்) வைத்து நைவேத்தியம் செய்தார். இதை நினைவு கூறும்
முகத்தான் இன்றும் தங்கத்தாலான தேங்காய்ச் சிரட்டையில் மாங்காய் ஊறுகாய் வைத்து நைவேத்யம் செய்யும் முறை இங்கு வழக்கத்தில் உள்ளது.

இவ்விரண்டு பாரம்பரியங்களையும் இன்றும் பின்பற்றி இக்கோவிலின் பூஜா உரிமைகள் துளு நாட்டவர்க்கும், நிர்வாகம் நம்பூதிரிகளிடமும் விடப்
பட்டுள்ளது.

மூலவர்– அநந்த பத்மநாபன். புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்
தாயார்–   ஸ்ரீ ஹரி லட்சுமி
தீர்த்தம்–   மத்ஸ்ய தீர்த்தம், பத்மதீர்த்தம், வராஹ தீர்த்தம்

விமானம்- ஹேமகூட விமானம்
காட்சி கண்டவர்கள்–   இந்திரன், திவாகர முனிவர் ஏகாதச ரூத்ர்கள்.

பலராமன் தீர்த்தயாத்திரையின் போது இந்தச் ஸியானந்தூரபுரத்தைத் (திருவனந்தபுரத்தை, தரிசித்தார்) என்று பாகவதம் கூறுகிறது.
எம்பெருமானின் திருமேனி மிகப்பெரிய வடிவமானதால் சிரசு, உடல், திருவடிகள் இவற்றை மூன்று வாசல்கள் வழியே தனித்தனியே தரிசிக்க
வேண்டும். திருவட்டாற்றிலும் இதேபோன்று மூன்று வாசல்கள் வழியேதான் எம்பெருமானைத் தரிசிக்க வேண்டும்.

இச்சன்னதியின் தெற்கில் (தெற்குப் பிரகாரத்தில்) யோக நரசிம்மனும், சன்னதிக்கு முன்புறம் ஆஞ்சநேயரும், பின்புறம் கிருஷ்ணனும்
காட்சியளிக்கிறார்கள். இந்த அனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் எத்தனை வெயில் அடித்தாலும் உருகுவதே
இல்லை.
இத்தலத்திற்கு அஸ்திவாரமிட்டு வேலையைத் துவக்கியவர் சேரமான் பெருமாள் நாயனார் என்று (கி.பி. 1050) கல்வெட்டுக் கூறுகிறது.
கோவிலைச்சுற்றி நான்கு புறமும் உள்ள பிரகாரம், அதில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள 366 தூண்கள், ஒவ்வொரு தூணுக்கும் ஒரு விளக்கேந்திய
பாவை, தூய்மையில் கொலுவிருக்கும் பிரகாரங்கள், காணக் கண்கொள்ளாக் காட்சியாகும்.

கி.பி. 1673 முதல் 1677 வரை பூஜையின்றி இக்கோவில் அடைக்கப்பட்டிருந்தது. 1686 இல் இக்கோவில் தீப்பிடித்து மூலவிக்ரகம் தவிர
பிறவெல்லாம் பழுதுற்றது. கி.பி. 1729ல் ராஜாமார்த்தாண்ட வர்மாவினால் புதுப்பிக்கப்பட்டு மரத்தாலான மூல விக்ரகம் அகற்றப்பட்டு 12000, சாளக்கிராமத்தினாலும், கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியே இப்போது நாம் காண்பதாகும்.

1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மர், தனது உறவினர்களுடனும், தளபதி சேனா பரிவாரங்களுடன் இச்சன்னதிக்கு வந்து
தன் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யம் மற்றும் பிற செல்வங்களையும் அனந்தபுரம் பத்மநாபனுக்கே பட்டயமெழுதிக்கொடுத்து தன் உடைவாளையும் அவரின்
திருப்பாதத்தில் வைத்து எடுத்துக்கொண்டு பரிபூர்ண சரணாகதி அடைந்தார்.
அன்றுமுதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் பத்ம நாப தாசர் என்றே அழைக்கப்பட்டனர். தினமும் காலையில் வந்து பத்மநாபரை வணங்கி
ஆசீர்வாதம் பெற்று ஆட்சி நடத்தினர்.

இன்று அரசபதவியில்லாவிட்டாலும், ராஜ்யம் உருமாறி அம்மன்னர் பரம்பரை இன்று நமது குடியரசின் கீழ் சாதாரண பிரஜைகளாக
வாழ்ந்தபோதும், அன்றுபோல் இன்றும் திருவிதாங்கூர் ராஜா தினமும் காலையில் ஆலயத்திற்கு வந்து பத்மநாபரை வழிபட்டுச் செல்லும் பண்பு
மாறவில்லை. கேவலமான மண்ராஜ்யம் போனாலும், தூய்மையான பக்தி சாம்ராஜ்யத்தை விடாது போற்றிக் காக்கும் அம்மன்னர் பரம்பரையின்
மகத்துவம்தான் என்னே.

இன்றும் அவர்கள் பத்மநாப தாசராகவே வாழ்ந்து வருகிறார்கள். தனி வழியே வந்து (தரிசனத்தின் பொருட்டு) தனிவழியே திரும்பிச் செல்கிறார்கள்.
அப்போது வேறு யாரையும் தரிசனத்திற்கு அனுமதிப்பது இல்லை ராஜா திருச்சன்னதியை நோக்கி குனிந்து நமஸ்கரித்து விரல்களால் தரையைத்
தொட்டுத்தொட்டுத் தன் மார்பில் பக்தி சிரத்தையோடு அந்த விரல்களை வைக்கும் பாணி, ஓ நெஞ்சுருகச் செய்து கண்களில் பக்தி நீரை
வரவழைக்கிறது.

இந்தியா சுகந்திரம் பெற்றபின், திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டாலும் இக்கோவில் மட்டும் அரசால் எடுக்கப்படாது
மகாராஜாவால் மட்டுமே நிர்வகிக்கப் பட்டுவந்துள்ளது.

இக்கோவிலின் உள்ளே மண்டபம் ஒன்று பல இசைத் தூண்களைக் கொண்ட தாயும், ஒவ்வொன்றிலும் தசாவதாரச் சிறப்பை விளக்கும் சித்திர மேம்பாட்டுடன் கூடியதாகவும் விளங்குகிறது. இதைக் குலசேகராழ்வார் கட்டினார் என்றும் கூறுவர். ஆனால்
கல்வெட்டு செய்தி ராமவர்ம மகாராஜாவால் கட்டப்பட்டதென்றும் கூறுகிறது. ஆயினும் இதைக் குலசேகர மண்டபம் என்றழைக்கப்படுவதே
மரபாயிருந்துவருகிறது. இதனைச் சப்த ஸ்வர மண்டபம் என்றும் கூறுவர்.
இதில் உள்ள தூண்களை லேசாகத் தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு இசைக் கருவியின் நாதம் எழுகிறது. ஒரு தூணில் எழுகின்ற
நாதத்தை மற்றொரு தூணில் காது வைத்து ரசிக்கலாம்.

இராமானுஜர் இங்குவர எத்தனித்தபோது எதிரிகள் இவரைக் கொல்ல நினைக்க (அல்லது தமது வழிபாட்டுரிமையை மாற்றிவிடக் கூடுமென
இங்குள்ள பிராம்மணர்கள் அஞ்சி அனந்தனைச் சரணடைய) இறைவனே இராமானுஜரைக் காத்து திருக்குறுங்குடி சேர்ப்பித்ததாகக் கூறுவர். இதனை
குறுங்குடி ஸ்தல வரலாற்றிலும் காணலாம்.

மன்னர்கள் பத்மநாத சுவாமிக்கு மூரஜபம் என்று கூறப்படும் திருவிழாவை பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம். மன்னர்
மார்த்தாண்டவர்மர் 1750 ஆம் ஆண்டில் நான்கு வேதங்களையும் ஆலயத்தில் 8 தடவைகள் முழுமையாகக் கூறக்கேட்டு ஆலயம் முழுதும் லட்சதீபங்கள்
ஏற்றி கொண்டாடினாராம். கோபுரத்தின் இந்த திருவிளக்கு தோற்றம் பத்மதீர்த்தம் என்ற திருக்குளத்தில் மிக அழகாக பிரதிபலிக்கும். இச்சிறப்பான
திருவிழா 1960 வரை தொடர்ந்து கொண்டாடப்பட்டது.

இன்னொரு சிறப்பான திருவிழா ஆராட்டு என்பதாகும். இந்த விழாவில் மகாராஜா, திவான் மற்ற உயரதிகாரிகள் சுவாமியின் குடை மற்றும்
சின்னங்களுடன் ஊர்வலமாக 3 மைல் தொலைவில் உள்ள அரபிக் கடலுக்குள் சென்று திரும்புவர். சுவாமியை ஊர்வலமாய் எடுத்துச் சென்று பின்பு நீராட்டி
பின் எடுத்து வரும். இவர்கட்கு முன் திருமால் தீய சக்திகளை அழிக்க வில் அம்புடன் வேட்டைக்குச் செல்வர். மன்னர்கள் சுவாமியுடன் காட்டுக்குப்போய்
வேட்டையாடி பின்னர் கடலில் நீராடித் திரும்புவர்.

இக்கோவிலை கட்டி முடிக்க 40 ஆண்டுகள் ஆயிற்று 4000 கொத்தர்கள், 6000 ஆட்கள், 100 யானைகள், யானைப் பாகர்கள் வேலையில்
ஈடுபட்டனர். 30 மைல் தொலைவிலிருந்து பெரிய தேக்கு மரம் ஒன்று கொணரப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு துவஜஸ்தம்பமாக நிறுத்தப்
பட்டது. ஆலயத்தின் வெளிப்பிரகாரம் மட்டும் அமைக்க 7 ஆண்டுகள் ஆயிற்றாம்.

இங்கு ஊட்டுப்பறை என்ற பெயரில் அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது. இப்போது இது வழக்கிலில்லை.

துவஜஸ்தம்பத்தின் அருகில் உள்ள குலசேகரமண்டபத்தில் அழகிய சிற்பங்கள் பலவுள. யாளி உருவமும் அதன் வாயில் பந்தும் கொண்ட
தோற்றம் தனிச் சிறப்பு கொண்டது ஒவ்வொரு தூணிலும் ஒரு தீபம் ஏந்திய பெண்மணி (பாவைவிளக்காக) இருப்பதும் பேரழகு வாய்ந்தது. இம்முறையானது மலையாளத்தின் பிற சன்னதியில் இருப்பினும் இங்குமட்டுமே பேரழகு பொருந்தியதாய் உள்ளது.

சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது. சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன் அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று ‘தொடுத்த
தூவாய்முடி சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,

ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’ – என்கிறார் இளங்கோவடிகள்

ஆடக மாடம் – திருவனந்தபுரம்
சேடம் – மலர்மாலை.

————-

76. திருவட்டாறு

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் தொடுவெட்டி என்ற ஊரில் இறங்கி இங்கிருந்து 6 மைல் தூரம் சென்றும்
இத்தலத்தை அடையலாம்.  இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணம், கருட புராணம் போன்றவற்றால் அறிய முடிகிறது.

ஆதிதாமஸ்தலம் என்று இத்தலத்திற்குப் பெயர்.

கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது. இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள்
முற்பட்டது என்று மதிலக கிரந்தம் என்ற நூலில் சொல்லப் பட்டுள்ளது.
திருவட்டாறு தேவஸ்தானத்தில் கிடைத்த வட்டெழுத்துக்களாலான ஓலைச்சுவடியில் இத்தலம் திரேதா யுகத்தில் தோற்றுவிக்கப்பட்டது எனக்
கூறப்பட்டுள்ளது.
பிள்ளைப் பெருமாளையங்காரின் விபவனாலங்காரம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய கவிதை ஒன்று உள்ளது.

மாலைமுடிநீத்து மலர்ச்செம்பொன்னடி நோவ
பாலைவனம் நீபுகுந்தாய் …. கேசவனே
பாம்பனை மேல் வாட்டாற்றில் துயில்கொள்பவனே

திருக்குருகைப் பிரான் எழுதிய மாறன லங்காரம் (கி.பி. 16 ஆம் நூற்றாண்டு) இத்தலம் பற்றி புகழ்ந்துள்ளது.

கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான கவிகுல திலகம் களக்கூத்து குஞ்சன் நம்பியார் இத்தலம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
எட்டெழுத்து மந்திரத்தின் பொருளான ஆதிகேசவனே என்னை ஒருவட்டமாவது உன் திருக்கண்களால் நோக்காயோ

வேனாடு என்பது திருவிதாங்கூர் பகுதி. இப்பகுதியில் இசைச் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் இப்பெருமாள் மீது கீர்த்தனங்கள்
இயற்றியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா,

ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வார் பரவிப் போற்றும்
மாறாப் பேரன் புருவாம் பண்புடை சைதன்யர் வாழ்த்தும்
ஆறார் திருவாட் டாற்றின் ஆதிகேசவப் பெருமாள்
மாறாய் என் உள்ளத்தென்றும் மலரடி வணங்கி னேனே’– என்று கூறுகிறார்.

‘வாழி திருவட்டாறு வாழி திருமாயவன்
வாழியடியார்கள் வளமையுடன் வாழி
திருமாலடி சேர்ந்தார் தெய்வபலம் சேர்ப்பார்
கருமால் அறுப்பர் அணிந்து’– என்கிறார் கிருபானந்த வாரியார்

‘சேத்ரா நாம பரசுராம ஷேத்ரா தீர்த்த நாம சக்ர தீர்த்த– என்று அத்யயன ராமாயணம் கூறுகிறது

வேதவியாசரின் பாத்ம புராணம் வசிஷ்ட மஹரிஷி இங்கு வந்து இப்பெருமானை தரிசித்துவிட்டு நெடுங்காலம் இங்கேயே தங்கியிருந்து 5
மடங்களை உருவாக்கினார் என்று தெரிவிக்கிறது. இம்மடங்கள் இவருக்குப்பின் இவரது சீடர்களால் நிர்வாகிக்கப்பட்டன. அவைகள் 1. முனிகள் மடம் 2.
மார்த்தாண்ட மடம் 3. ராமனா மடம் 4. பஞ்சாண்ட மடம் 5. காஞ்சி மடம்.
கலியுகத்தின் தொடக்கம் வரை மேற்சொன்ன மடங்களின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம் இருந்து வந்தது. (கி.மு. 3102 பெப்ரவரி 13 கலியுகம் தொடங்கிய
நாளாகும்) இவர்களின் காலத்திற்குப் பிறகு திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆனவாரி பிள்ளைமார்கள் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இத்தலம்
இருந்தது.

பிரம்மன் ஒரு யாகம் செய்ய யாக வேள்வியில் தோன்றிய கேசன், கேசி என்னும் இரு அரக்கர்கள் யாகத்திற்கு இடையூறு விளைவித்ததோடு
தேவர்களையும் விண்ணுலகையும் அச்சுறுத்தினர். அனைவரும் சென்று திருமாலிடம் முறையிட திருமால் கேசனைக் கொன்று கேசியை கீழே தள்ளி
கேசியின் மீது படுத்துக் கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கழைக்க அவ்விருவரும் வேகமாக ஓடிவர
அந்நிலையில் பூமாதேவி திருமால் சயனித்திருந்த இடத்தை பெரிய மேடாக ஆக்க இது திருமகளின் செயல் என்பதை உணர்ந்த இரண்டு நதி
தேவதைகளும் அவ்விடத்தைச் சுற்றி இரண்டு மாலைகள் போல் வட்டவடிவில் வந்தபடியால் இவ்விடம் வட்டாறு என வழங்கப்பட்டு வட்டாறு ஆயிற்று.
இவ்விடம் மேடாக இருப்பதை,-மாலை மாடத் தரவணைமேல் வாட்டாற்றான்’
  என்கிறார் நம்மாழ்வார்.

கேசியை அழித்தால் பகவான் ஆதிகேசவர் என்று வழங்கப்படுகிறார். இங்கு கங்கையும் தாமிரபரணியும் மாலை போல் பிரியுமிடத்தில் ஒன்றுக்கு
கோதையென்றும் ஒன்றுக்கு பரளி என்றும் பெயருண்டாயிற்று. நதிகள் பிரியும் இவ்விடத்திற்கு மூவாத்து முகம் என மலையாளத்தில் குறிப்பிடுகின்றனர்.

மூலவர்-ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம் மேற்கு நோக்கிய திருக்கோலம்.-இடது கை தொங்கவிட்ட நிலையிலும் வலது கை யோக முத்திரை காட்டி
தெற்கே சிரசும் வடக்கே திருவடியும் ஸ்ரீசேஷ சயனமாக மேற்கு நோக்கிய திருக்கோலம். நாபித் தாமரையோ பிரம்மாவோ இல்லை 23 அடி நீளமான
திருக்கோலம். இவரின் சிரசருகே ஹாதலேயே மஹரிஷி உள்ளார்.
தாயார்– மரகதவல்லி நாச்சியார்
தீர்த்தம்– கடல்வாய் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்
விமானம்–  அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்–   பரசுராமன், சந்திரன்.

வளமிக்க வாட்டாறு என்பது நம்மாழ்வார் திருவாக்கு, திருவனந்தபுரம் போலவே இங்கு மூன்று வாசல். 20 படிகள் ஏறிச்சென்று இச்சன்னதியை
அடையவேண்டும். சுற்றுப் பிரகாரத்தில் 224 தூண்கள் உண்டு. கேரளத்துப் பாணியில் ஒவ்வொன்றும் ஒரு பாவை விளக்கேந்திய பெண்.

இங்கு மூலவர் சன்னதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் உள்ளது.
இங்கு ஆதிசேடன் ஐந்து தலை நாகமாய் குடை விரித்திருக்கிறார். இதில் ஒரு தலையைத்தான் காணமுடியும். பெருமாளின் கீரிடமும் பாதிதான் தெரியும். பாதி உள்ளே மறைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நாபியில் கமலம் பிரம்மர் இல்லை. அங்கே பெருமாளின் வலது கை சிவலிங்கத்தை தொட்டுக்கொண்டிருக்கும். இங்கே திருப்பாதங்கட்கு அருகில் சிவலிங்கம் உள்ளது. அங்கே கிழக்கு நோக்கிய சன்னதி. இங்கே மேற்கு நோக்கிய சன்னதி. ஸ்ரீஆதி அனந்தபுரம் என்றும் சேரநாட்டு ஸ்ரீரங்கம் என்றும் இதற்குப் பெயர்.

நம்மாழ்வாரும்,-திரைகுழவு கடல்புடை சூழ் தென்னாட்டுத் திலதமன்ன  வரைகுழவு மணிமாட வாட்டாற்றான் மலரடியே’-என்று மங்களா ஸாஸனம்

சந்திரனும், பரசுராமனும் இத்தலத்து எம்பெருமானை வழிபட்டு இங்கு தவமியற்றினர். திரேதா யுகத்தில் பரசுராமன் சந்திரத் தீர்த்தத்தில்
இப்பெருமாளை பூஜித்தார் என்று புராணம் கூறுகிறது.

கி.பி. 510 இல் சைதன்யர் இங்கு வந்திருந்தார். இவருக்கு பிரம்ம ஸம்ஹிதை இங்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் வாசியான
பரமேஸ்வரன் பிள்ளை தம் நூலில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். இது 100 அத்தியாயம் கொண்டது. 5 அத்தியாயங்கள் வங்கமொழியில் வெளிவந்துள்ளது. தற்போது ஹரேராமா, ஹரேகிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளனர்.

சங்க காலத்தே சிறப்பாகப் பேசப்படும் எழினி ஆதன் பிறந்த ஊர் இந்த திருவாட்டாறுதான். புறநானூறு புரந்த எழினி ஆதன் ஊர் என்று
மாங்குடி கிழார் கூறுகிறார்.

துவாபார யுகத்தில் சோமயாசி என்னும் ரிஷி இவ்விடம் தனது மனைவியுடன் தங்கி ஒரு பர்ணகசாலை அமைத்து புத்திர பாக்கியம் வேண்டி
யாகம் செய்தார். யாக குண்டலியில் ஒரு புத்திரன் உண்டாக அப்புத்திரனை சப்தரிஷிகள் வளர்த்து வரலாயினர். சுசிவ்ருதன் என்னும் தேவகுமாரன்
ஹாதலேகன் எனப் பெயர் பூண்ட இப்பையனை பார்த்து உன் அப்பா, அம்மா யார் எனக் கேட்க இவன் பக்கத்திலிருந்த கதலியை (வாழைமரம்) காட்டி
இவர்களே என்று சொல்ல தேவகுமாரன் நகைக்க பெருமாளும் பிராட்டியும் வாழைமரத்திலிருந்து வந்து ஹாதலேய முனிவரை அழைத்து அஷ்டாச்சர மந்திரம் சொல்லி தமது சிரசருகில் அமர வைத்தார்.

ஆற்காடு நவாப் (கி.பி.1740) தமது இரண்டு மருமகன்களான சந்தா சாகிப், படாசாகிப் ஆகியோருக்கு அதிக அளவில் பொன் கொடுக்க நினைத்து
தெட்சிண திருவிதாங்கூரில் உள்ள சுசீந்திரம், கோட்டாறு, வாழ்வச்ச கோட்டம் திருவட்டாறு போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில்
கொள்ளையடித்தான். திருவாட்டாற்றில் உள்ள அர்ச்சனா விக்ரகத்தைத் தங்க விக்ரகம் என நினைத்து பாளையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்தான். அன்று முதல் நவாபின் அரண்மனையில் பல துர்நிமித்தங்கள்
தோன்ற ஆரம்பித்தன.

இந்நிலையில் இப்பெருமான் மீது ஆராக்காதல் கொண்ட பக்தன்ஒருவரின் கனவில் வந்து பெருமாள்தான் இருக்கும் இடத்தை தெரிவிக்க
இவர் பரிவாரத்துடன் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார். இவர் வருவதற்குள் திருவட்டாற்றில் இருந்த மக்கள் அதேபோல் விக்ரகத்தை
செய்து சன்னதியில் வைத்து பூஜைகள் ஆரம்பித்துவிட்டனர்.
நவாபிடமிருந்து கொண்டு வரப்பட்ட விக்கிரகத்தை ஒரு இடத்திலவைத்து சுத்தப்படுத்தி நீராட்டி அதை எடுக்க முயற்சிக்கையில் எடுக்க
முடியாமல் போகவே அவ்விடத்திலேயே விட்டுவிட்டனர்.

பிறகு அந்த இடத்திலேயே அதேபோன்று விக்ரகத்தை செய்து திருவட்டாறு கொண்டுவர இங்கே ஒரு விக்ரகம் இருப்பதைக் கண்டு
பேராச்சர்யமுற்று கொண்டு வந்த விக்ரகத்தை மாத்தூர் கொண்டு சென்று வைத்தனர். இந்த விக்ரகத்தைச் செய்தவர் கற்பக மங்கள் தந்திரிகள் என்றும்
கூறப்படுகிறது.
தாங்க வொண்ணாத் துன்பங்கட்கு ஆட்பட்ட நவாப் தனது தவறுகளை உணர்ந்து அதற்குப் பிராயச்சித்தமாக திருவட்டாறின் சன்னதியில் உட்புறத்தே
ஒரு மண்டபம் கட்டிகொடுத்தான். அதற்கு அல்லா பூஜை மண்டபம் என்று  பெயர். 388 தோலான் எடையுள்ள தங்கத் தொப்பியும் தங்கத் தகடும்
இப்பெருமானுக்கு நாவாபு கொடுத்தான்.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் (கொல்லம் 855-57) உமயம்ம ராணி என்பாரின் ஆட்சிக்காலத்தில் முகில்கான் என்னும் பட்டாணி இந்து
ஆலயங்களில் கொள்ளையிட்டான். அவன் மணக்காடு என்னும் ஊரில் தங்கி இருந்து திருவனந்தபுரம் கோவிலைக் கொள்ளையிட முயன்றான். இதையறிந்த திருவனந்தபுரம் முஸ்லீம்களே அவனை எதிர்த்து தாக்கி விரட்டினார்கள்.
காடுகளில் ஒளிந்து தப்பித்து முகில்கான் திருவட்டாறு கோவிலைக் கொள்ளையிட திட்டம் போட்டான். இதையறிந்த ராணி தனது நாட்டின்
மருங்கிருந்த குறுநில மன்னர்களின் உதவியை நாடினாள். இவ்விருவரின் படைகளும் இணைந்து வருவதற்குள் முகில்கான் சாஹெப் திருவட்டாறு
அருகில் உள்ள ஒரு குன்றுக்கு வந்து சேர்ந்து படைகளை எதிர்க்க பலமான வ்யூகம் அமைத்திருந்தான். வ்யூகத்தின் தன்மை அறிந்த சிற்றரசுகள் தம்மிடம்
இருக்கும் படைகளைக் கொண்டு இவனை எதிர்ப்பது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்தனர்.

அவர்கள் மிகுந்த பயப்பக்தியோடு திருவட்டாறு எம்பெருமானிடம் சரண்புகுந்து அற்புதமான கீர்த்தனங்கள் இயற்றி பிரார்த்தித்தனர். இந்த
கீர்த்தனங்கள் ஆதி கேஸ்வ ஸ்தவம் என்று அழைக்கப்பட்டன. இதற்குப் பட சங்கீர்த்தனம் என்னும் பெயருமுண்டு.

இவர்களின் பக்தியை மெச்சிய எம்பெருமான் கதண்டு வண்டு வடிவமெடுத்து எண்ணற்ற கதண்டுகளாக பிரிந்தார். இந்தக் கதண்டுகள்
முகில்கானின் படைகளைக் கொத்திச் சின்னாபின்னப்படுத்தின.

இந்த வண்டுகளின் வடிவத்தை மலையாள மொழியில் கடந்தல் என்று குறிப்பர். முகில்கான் கொடுரமான ரண காயங்களுடன் மரணமடைந்தான்.
அவனது வ்யூகம் சிதறியது. எண்ணற்ற படைவீரர்கள் மாண்டனர். முகில்கான் படையில் இருந்த குதிரைகளை ‘உரளி பஞ்சஸ் திதன்’ என்ற குறுநில மன்னன் கவர்ந்து சென்றான்.
முகில்கானை அடக்கம் செய்த கல்லறை இன்று முகில்கான் குன்று என்று அழைக்கப்படுகிறது. இது மலையாளத்தில் முகில்கான் கரா
எனவழங்கப்பட்டு தற்போது காங்கரா என வழங்குகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் முகத்தான் முகில்கான் படைகள் வீழ்ச்சி அடைந்த நாளில் எம்பெருமானுக்கு விசேச பூஜையும் வீரகேரள
பாயாசம் வழங்கப்படும் நிவேதனமும் தினத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதை ஏற்படுத்திய குறுநிலமன்னன் ஆண்ட ஊர்
இரண்யசிம்ஹ நல்லூர் என்பதாகும். இவ்வூர்தான் தற்போது இரண்யல் என்றழைக்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களும் உற்சவங்களும் மிகச் சிறப்பானவைகளாகும். அவைகள் மீன உற்சவம். துலா உற்சவம் என
அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு திருவிழாக்களும் 10 நாட்கள் நடைபெறும்.
இதில் 9வது திருநாள் யானை குதிரையில் பெருமாள் புறப்பாடாகி தாரை தப்பட்டைகள் முழங்க கோலாகலமாய் நடைபெறும். இதற்கு பள்ளிவேட்டை
என்றும் பெயருண்டு.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், தினத்தில் சொர்க்கவாசல் திறப்பதும், முலைப்பாரி உற்சவமும் இங்கு மிகச் சிறப்பானதாகும்.

இத்தலத்தில் எண்ணற்ற கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள வட்டெழுத்துக்களாலான கல்வெட்டில் கீழ்க்கண்டவர்களின்
ஆட்சிக்காலம் குறிக்கப்பட்டுள்ளது.

1. குலசேகரப்பெருமாள்    – கி.பி. 644-659
2. வீரமார்த்தாண்டவர்மா  – 510-519
3. வீரகேரளவர்மா        – 519-550
4. செம்பலாதித்த வர்மா   – 612-645
5. உன்னி கேரள வர்மா   – 734-753

மேற்சொன்னவர்களுக்கு இத்தலத்தில் சிற்பங்கள் உண்டு

இங்குள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளது. இதில் 9 கைவிளக்குகள் உள்ளன.

இங்குள்ள 2 1/2 அடி உயரமுள்ள முரளி வேணுகான கிருஷ்ண சிற்பமும், இவர் எழுந்தருளியுள்ள மண்டபமும் மிக நேர்த்தியான தாகும்.

இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தின் 3வது தூணிலும் பிற தூண்களிலும் பலவிதமான சிற்பங்கள் உண்டு. ஒரு கையில் திரிசூலம் ஏந்திய ஒரு பெண்,
மற்றொரு தேவதை தன்கையில் திரிசூலம், கேடயம் வாள் ஏந்திய தோற்றத்துடன் கூடிய சிற்பம்,
நாய் சங்கு ஊதும் சிற்பம், பெண் ஒருத்தி குடைபிடித்து நடனம் ஆடும்
சிற்பம், வைரவரின் சிற்பம், இத்துடன் தமிழ் எழுத்துக்களாலான கல்வெட்டும்
சேர்ந்து வெளிப்பிரகாரம் ஒரு கலைக்களஞ்சியம் போல் தென்படுகிறது.

குலசேகர ரவி வர்மாவால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று இங்குள்ளது. மூலஸ்தானத்தில் 5 தங்க கலசங்கள், (பொன் முலாம்
பூசியதுண்டு) கருவறைக்கு மேல் உள்ள அஷ்டாங்க விமானம் செம்பாலானது. தாரு மரத்தாலான சிற்பங்களும் இம்மன்னன் செய்வித்தான்.

கலி 4705இல் இத்தலம் புதுப்பிக்கப்பட்டதாக இங்குள்ள தமிழ்க் கல்வெட்டால் அறியமுடிகிறது. இங்கு ஒரே கல்லினாலான ஒற்றைக்கல்
மண்டபம் உள்ளது. இது 25 அடி நீளம் 171 அடி அகலம் 3 அடி உயரம் இம்மண்டபம் கொல்லம் ஆண்டு 778 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் கலி 4556 ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வெட்டும் வடக்குப் பக்கத்தில் உள்ள சமஸ்கிருத கிரந்த
எழுத்துக்களாலான கல்வெட்டும் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
13ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்துக் கல்வெட்டும் இங்குண்டு. ஆங்கிலக் கல்வெட்டுக்களும் உண்டு. கி.பி. 1937இல் மகாத்மா காந்தி இங்கு வந்ததை
ஆங்கிலக் கல்வெட்டு கூறுகிறது.

மார்த்தாண்ட வர்மா (கி.பி. 1749) குளச்சல் யுத்தத்திற்குச் செல்லும் போது 908 பொற்காசு, பட்டு, உடைவாள், போன்றவற்றை இப்பெருமாள்
திருவடியில் வைத்து வேண்டி போரில் வெற்றி பெற்றார் என்ற செய்தியைக் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

————-

77. திருவண்பரிசாரம்

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் எழுவரும் திருமாலைக் காணும் முகத்தான் சுசீந்திரத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு இடத்தில் (தற்போது ஆஸ்ரமம்
என்று அழைக்கப்படும் கிராமம்) தவஞ்செய்ய அவர்கட்கு இறைவன் சிவரூபமாய் காட்சியளிக்க, தாங்கள் இறைவனை மஹாவிஷ்ணு ரூபத்திலேயே
தரிசிக்க விரும்பியதால், சுசீந்தரத்திற்கு 4 மைல் தொலைவில் உள்ள சோமதீர்த்தம் என்ற இடத்தில் மீண்டும் தவம் செய்ய, தவத்தின் கடுமையை
மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் மஹாவிஷ்ணு வாக அவர்கட்கு காட்சி கொடுக்க எந்நாளும் இதேபோன்ற திருக்கோலத்தில் இங்கே எழுந்தருளி பக்தர்களின்
பாவம் போக்கி மோட்சம் நல்கிட வேண்டுமென்று கேட்க திருமாலும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
இதனால்தான் இங்கு அமர்ந்துள்ள பெருமாளைச் சுற்றி 7 ரிஷிகள் சூழ்ந்துள்ள திருக்கோலத்தை இன்றும் காணமுடிகிறது.

இத்தலத்தைப் பற்றி பிறிதொரு கதையும் உண்டு. பகவான் நரசிம்ம அவதாரங்கொண்டு இரண்யனை வதம் செய்து விட்டு மிகவும் கோபம்
அடங்காதவராய் இருந்த போது லட்சுமி பயந்துபோய் இவ்விடம் வந்து அவர் சாந்த மூர்த்தியாக வேண்டுமென தவம்செய்ததாகவும், பின்பு பிரகலாதனின் பிரார்த்தனைக்கு இணங்கி சாந்தமடைந்த எம்பிரான் தேவியைத் தேடி இவ்விடம் வர லட்சுமி மிகவும் ஆனந்தம் அடைந்து பகவானின் திருமார்பில் நித்யாவாசம் செய்ய எத்தனித்து உள்புகுந்து கொண்டாராம்.

திருவாகிய இலக்குமியை தன் சரீரத்திலே இவ்விடத்தில் பெருமாள் ஏற்றுக்கொண்டதால் இப்பிரானுக்கு திரு+வாழ்+மார்பன் திருவாழ்மார்பன்
என்பது திருநாமம்.

இப்பகுதியில் திருவெண்பரிசாரம் என்றால் வெகு சிலருக்கே தெரியும். திருப்பதிசாரம் என்பதே இவ்வூருக்குச் சகலரும் அறிந்த பெயராக உள்ளது.

திருவாகிய இலக்குமி தனது பதியாகிய மஹாவிஷ்ணுவை இவ்விடத்தில் சார்ந்ததால் திருப்பதி சாரம் என்பதே இத்தலத்திற்குப் பொருத்தமான பெயர்
என்று இவ்வூர்வாழ் பெரியோர் பகர்கின்றனர்.
இதனாற்றான் இங்கு தாயாருக்கு தனிச் சன்னதியோ தனி விக்ரகமோ கிடையாது. ஏகாந்தத்தில் இருவரும் ஒருமிக்கவே சேவை சாதிக்கின்றனர்.

மூலவர்–திருவாழ்மார்பன்
தாயார்-  கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்–   லட்சுமி தீர்த்தம்
விமானம்–  இந்திர கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்–  காரி, உடைய நங்கை, லட்சுமி, கருடன், சப்த ரிஷிகள்

இங்குள்ள மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனயப் பட்டுள்ளதால்) இவருக்கு
திருமஞ்சனம் கிடையாது.
நம்மாழ்வாரின் அன்னை ஸ்ரீஉடையநங்கை அவதரித்த தலம்.

திருப்பதிசாரத்தில் பிறந்த உடையநங்கை ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த காரி என்பாருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு உடைய நங்கை
புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் 41 நாட்கள் விரதமிருந்து பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தி கலி 43வது நாள் நம்மாழ்வாரைப் பெற்றெடுத்தார்.

வைகாசி விசாகத்தன்று அவதரித்த நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிப்பிரான் சன்னதியில் விட அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமர
பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் ஆழ்வாராய் அமர்ந்தார்.

திருக்குறுங்குடி எம்பெருமானை வேண்டிய பின்பு உடைய நங்கை இத்தலத்திற்கு வந்து 41 நாள் தவமிருந்தார்.

இங்கு மூலவருக்கு வலப்புறத்தில் இராம, இலக்குவ, சீத்தா பிராட்டியாருண்டு. இதற்கு ஒரு காரணக் கதை உண்டு. வீடணன்
அயோத்தியில் ஸ்ரீஇராம பிரானின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது அவரால் கொணரப்பட்ட பெருமான் அரங்கனாக
பள்ளிகொண்ட பின்பு விபீஷ்ணன் இவ்வழியாக இலங்கை செல்லும் போது இப்பெருமானை வழிபட்டு வேண்டுதல் ஒன்று உண்டு என்று விளம்பினார்.
உடனே வீடணனுக்கு காட்சி கொடுத்த திருவாழ்மார்பன் யாது வேண்டுமென அன்போடு வினவ, என்னால் இராமாவதார திருக்கோலத்தை மறக்க
முடியவில்லையே என்று கண்ணீர் மல்க நின்று மீண்டும் ஒருமுறை காட்சியைக் காண ஆசைப்படுகிறேன். என்று சொல்ல அவ்விதமே காட்சி தந்தருளினார்
என்பர்.

குலசேகர ராஜன் (குலசேகர ஆழ்வார் வம்ச அரசர்) கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து வாகனம். மதில் போன்ற திருப்பணிகள் பலவும்
செய்து, கொடிக்கம்பத்தையும் (துவஜஸ்தம்பத்தையும்) நிர்மாணித்து பிரம்மோத்ஸ்வமும் செய்துவைத்தார்.

ஆஞ்ச நேயரின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்தியர் இங்கு இராமாயணம் அருளியதாகவும் கூறுவர்.

இப்பெருமான் பிரஸன்ன மூர்த்தியாகி 4 கரங்களுடன் சங்கு சக்கரங்களுடன் காட்சியருளுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய விக்ரகம் இங்கு ஒன்றுள்ளது.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின்- தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் — தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

November 24, 2023

43. திருக்கச்சி அத்திகிரி (காஞ்சிபுரம்)

ஒரு சமயம் தேவியர்களின் துணையின்றி மும்மூர்த்திகள் தனித்து யாகம் செய்து வெற்றி காண முடியாதென்று விவாதம் ஏற்பட பிரம்மன் நான் செய்து
காட்டுகின்றேனென்று உலக நன்மைக்காக ஒரு யாகத்தை ஆரம்பிக்க, சரஸ்வதி அந்த யாகத்தை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டாள்.

பிரம்மனின் யாகத்தைக் கெடுக்க சரஸ்வதி எத்தனையோ முயற்சிகள் செய்தாள். அக்னி ரூபத்தில் அசுரர்கள் சரஸ்வதி அனுப்பினாள். பிரம்மனுக்காக
அந்த அக்னியை கையில் தீபம் போல் ஏந்தி தீபப் பிரகாசமாக எம்பெருமான் நின்றார். இதனால் சினங்கொண்ட சரஸ்வதி கொடூரமான யானைகளைப்
படைத்தனுப்பி யாகத்தை அழிக்க எத்தனித்தாள். எம்பெருமான் நரசிம்ம ரூபனாகி யானைகளை வென்று விரட்டியடித்தார்.

பின்னர் சரஸ்வதி அரக்கர் கூட்டங்களைப் படைத்து அனுப்பினாள். அவ்வரக்கர்களைத் துவம்சித்து எம்பெருமான் ரத்தப் பிரவாளராக நின்றார்.
இந்நிலையில் யாகத்தைக் கலைக்க 8 கைகளைக் கொண்ட காளியைப் படைத்தனுப்பினாள். திருமால் 8 கைகள் கொண்ட அட்டபுயக்கரத்தானாகத்
தோன்றி காளியின் கொட்டத்தை அடக்கினார். இவ்வாறு தனது முயற்சிகள் எல்லாம் வீணாவதைக் கண்ட சரஸ்வதி தானே ஒரு வேகமுள்ள நதியாக
வேகவதி என்ற பெயரில் பிரளயம் போல் வர எம்பெருமான் அந்த நதிக்கு எதிரே அணையாகப் படுத்துத் தடுத்தார்.

அணையாக வந்துபடுத்து சரஸ்வதியின் வெள்ளப் பெருக்கைத் தடுத்த பிறகு பிரம்மன் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்ய திருமால் அக்னி ஜு
வாலையாக காட்சிக் கொடுத்து பிரம்மனின் யாகத்தைத் தொடர அருள்புரிந்தார்.
(அக்னி ஜ்வாலையாக இவ்விடத்து எம்பெருமான் எழுந்தருளியமையை இங்குள்ள உற்சவரின் திருமுகத்தில் அக்னியின் வடுக்கள் போன்று ஜ்வாலை
வீசக்கூடிய புள்ளிகளை இன்றும் காணலாம்.)
இவ்வாறு தனது இடைஞ்சல்கள் எல்லாம் தவிடுபொடியாவதைக் கண்ட சரஸ்வதி நாணமுற்று ஓய்ந்தாள்.

இதன்பின் பிரம்மா யாகத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் யாகத்தில் கிடைக்கும் அவிர்ப்பாகத்தை வழக்கப்படித் தமக்குத் தரவேண்டுமென்று
தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட சுவர்க்கம் முதலான பலனைக் கோரி செய்யும் யாகங்களில் தான் உங்களுக்குப் பங்குண்டு. இது உலக நன்மைக்காகச்
செய்யும் யாகம். இது லோக சிருஷ்டியாகும். எனவே இதில் யக்ஞ அங்கமாக  உங்கள் பெயர்கள் கூறினாலும், உங்களிடத்திலும் அதேபோல் உலகத்தின் சகல ஜீவன்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் நாராயணனுக்கே அவிர்ப்பாகம் செல்லும். அவரே இதனை ஏற்றுக்கொள்வார் என்று சொல்லி யாகத்தைத்
தொடர்ந்தார். யாகம் முடியும் தருவாயில் பேரொளி பொருந்திய விமானம் ஒன்று அதில் தோன்றியது. கோடிப்பிறவியில் செய்த புண்ணியத்தால் தரிசிக்கத்
தகுந்த அந்த விமானம் புண்யகோடி விமானமாகும். அதில் சங்கு சக்ர கதா பாணியாக எம்பெருமான் தோன்றி அவிர்ப்பாகத்தையேற்றுக் கொள்ள யாகம்
முடிவுற்றது.

யாகத்தில் பங்கு கொண்ட தேவர்களுட்பட்ட அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுத்ததால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம்
உண்டாயிற்று. ஸ்ரீமந்நாராயணன் புண்ணிய கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்னாள் ஒரு சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும்.

இதேபோல் எம்பெருமான் இங்கு நித்யவாசம் செய்து வேண்டியவர்க்கு வேண்டிய வரமெல்லாம் கொடுக்க வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க
எம்பெருமானும் அதற்கிசைந்தார். உடன் தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது.
அதனால் இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் வெள்ளைநிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

க. என்றால் பிரம்மன் என்றும் அஞ்சிரம் என்றால் பூஜிக்கப்படல் என்பதாலும் கஞ்சிரம் என்றாகி கஞ்சிதபுரியாகி காலப்போக்கில் மருவி
காஞ்சிபுரமாயிற்றென்பர்.

இத்தலத்தை
கிரேதா யுகத்தில் பிரம்மனும்
திரேதாயுகத்தில் கஜேந்திரனும்
துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும்
கலியுகத்தில் அனந்தனும் பூஜித்து உய்ந்தனர்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு புத்திரர்கள் இருந்தனர். இவர்கள் கொங்கண தேசத்தில் கௌதம முனிவரிடம் வித்தை பயின்றனர். இவ்விருவரும் விஷ்ணு பூசைக்கு பழம், புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஒரு நாள் தீர்த்தத்தை மூடாமல் வைக்க அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. அதைக் காணாது அப்படியே கொணர்ந்து குருவிடம் கொடுக்க அதிலிருந்து பல்லி தாவியோடியது. இதைக் கண்டு சினந்த முனிவர் இவ்விருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார். தமது தவறுணர்ந்த சீடர்கள் மன்னிப்பு வேண்டி பிராயச் சித்தம் கோரினார்.

இந்திரன் (கஜேந்திரனாக) யானையாகி வரதனைத் தரிசிக்க இச் சன்னதியில் நுழைவான். அப்போது உங்கள் சாபமகலும் என்று தெரிவிக்க
இருவரும் இத்தலத்தின் பிரகாரத்தில் பல்லிகளாக வந்தமர்ந்தனர். பின்பு இந்திரன் இத் தலத்தில் நுழைந்ததும்
இவர்களின் சாபமகன்று தங்கள் பூர்வ ஜென்ம உடம்பைப் பெற்று வரதனைச் சேவித்து முக்தியடைந்தனர்.

இந்நிகழ்வைக் குறிக்குமாற்றான் தற்போது இத்தலத்தின் பிரகாரத்தில் 24வது படிக்கெதிரில் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான இரண்டு பல்லிகள்
செய்து அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டு வரதராஜப் பெருமாளைச் சேவித்தால் நோயினின்று விடுபடுகின்றனர் என்று ஐதீஹம்.
(அயோத்தி மன்னன் சகரன் என்பவனின் மகனும் மனைவியுமே சாபத்தினால் பல்லிகளாக மாறி இவ்விதம் ஆனர் என்றும் ஒரு கதையுண்டு)

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மாடி போன்ற மலைகளாலானது இத்தலம். வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது.
இங்கு அழகிய சிங்கர் (நரசிம்ம அவதார திருக்கோலத்தில்) அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஹரித்ரா தேவியே இங்கு பிராட்டியாக
எழுந்தருளியுள்ளார். குஹ விமானம் பிருஹஸ்பதிக்கு காட்சி.
2வது மாடியான மேல்மாடி வரதராஜப் பெருமாள் சன்னதியான அத்திகிரியாகும். தற்போதுள்ள இவ்வமைப்பு பிற்காலத்தில் ஒரு பக்தரால்
கட்டப்பட்டதாகும். இவர் முதலில் சிவபக்தனாக இருந்து புத்திரப்பேறு வேண்டி சிவபக்தி செய்ய புத்திரப்பேறு கிட்டாது போகவே விஷ்ணு பூஜை செய்ய
புத்திரப்பேறு உண்டாக எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமை பூண்டு இத்தலத்தின் தற்போதைய அமைப்பை அமைத்தார் என்றும் கூறுவர்.

மூலவர்-ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்று பல திருநாமங்கள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்-பெருந்தேவித் தாயார் மஹாதேவி தனிக்கோவில்
தீர்த்தம்–வேகவதி நதி, அனந்த ஸரஸ், சேஷ தீர்த்தம், வராஹ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,
விமானம்–புண்யகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்–பிரம்மா, பிருகு, நாரதர் ஆகியோர். கஜேந்திரன் (இந்திரன்) சரஸ்வதி மற்றும் பலர்.

விஷ்ணு காஞ்சியென்றும், அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும், ஸ்தய விரத சேஷத்ரமென்றும் பெயர்கொண்ட இத்தலம் வைணவ சம்பிரதாயத்தில்  தமிழகத்தில் ஒரு தலைமை இடமாகத் திகழ்கிறது.

இங்குள்ள குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்திமரத்தாலான சிலையை 40 வருடங்கட்கு ஒரு முறை வெளியே எடுத்து
பூஜை செய்து 10 தினங்கட்குப் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.

சித்ரா பௌர்ணமியன்று இப்போதும் ஒவ்வொர் ஆண்டும் இரவு 12 மணிக்கு மேல் பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக
ஐதீஹம். இந்த தினத்தில் எம்பெருமானுக்குப் பிரசாதம் செய்து வைத்துவிட்டு பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள். ஒரு நாழிகை (24 நிமிஷம்) கழித்து
எடுத்துப் பார்த்தால் அதில் தூய நறுமணம் கமழும் இக்காட்சி ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் வைபவமாகும்.

சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்கட்கு சூரியன் மறையும்போது சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள் மூலவரின் திருமுகத்தில்
விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களும் கண்டு களிக்கக் கூடிய இவ்வரிய காட்சி மற்றெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததாகும்.

ஆடி மாதத்தில் வளர்பிறையில் தசமியன்றும் தேய்பிறையில் ஏகாதசியன்றும் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேடனுக்கு இங்கு
சிறப்பான வழிபாடு நடக்கிறது. இந்த இரண்டு தினங்களிலும் ஆதிசேடனே இங்கு வந்து வழிபடுவதாக ஐதீஹம்.

ஒரு சமயம் தேவசபையில் குழுமியிருந்த முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கிடையே இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற சர்ச்சை
ஏற்பட்டு இரு சாரராக அணி பிரிந்து தத்தம் வாதமே உயர்ந்ததென வாதிட்டு இறுதியில் தமது குலகுருவான பிரகஸ்பதியான வியாழ பகவானை அணுகினர்.

பிரகஸ்பதியான வியாழன், ‘தாழிருஞ்சடைகள் தாங்கி தாங்கருந் தவமேற்கொண்டு, பூழி வெங்கானம்புக்கு, புண்ணிய துறைகளாடும்’ ஞான
வாழ்க்கையான துறவறமே சிறந்ததென்று தீர்ப்பளித்தார். இல்லறமே சிறந்ததென்ற அணிக்குத் தலைமை தாங்கிய இந்திரன் பிரகஸ்பதியின்
தீர்ப்பைக் கேட்டு சினந்து, பசி, ஏழ்மை, இல்லறம் என்பதையென்னவென்று உணராத பிரகஸ்பதி ஒரு ஏழை அந்தணனாகப் பிறக்கக் கடவது என்று சபிக்க
பல குழந்தைகட்குத் தந்தையாய் ஒரு ஏழை அந்தணனாகப் பிறந்து வாழலானார் பிரகஸ்பதி.

ஒரு நாள் குழந்தைகளோடு உணவு உட்கொள்ளும் வேளையில் ஒரு நாய் ஒன்று உள்ளே புக, அதை அடித்து விரட்டுமாறு தெரிவிக்க மனிதனைப்
போலவே பேசிய நாய் நான் போன பிறவியில் என்னைச் சரணடைந்தவளைக் காக்க தவறியதால் நாயாக அலைகின்றேன். இன்று உன்னைச் சரணடைய
நீயும் காக்க தவறினாய். நீயும் நாயாவாய் என்று சபிக்க, இது என்ன தர்ம சங்கடம், உள்ள கஷ்டம் போதாதென்று நாய் ஜென்மம் வேறா என்றெண்ணி
நொந்த பிரகஸ்பதி இதற்குப் பரிகாரம் காண பரத்வாஜரை அணுகினார்.

அதற்கவர் ஸ்தய வரத ஷேத்ரம் சென்று வரதனைச் சேவித்தால் தோஷமகலும் என்றார். இந்நிலையில் தேவசபையில் குலகுருவாகவும்,
அரசப்புரோகிதராகவும் விளங்கிய பிரகஸ்பதியில்லாமல் சபைகளையிழந்து இருந்தது. இது கண்ட தேவர்கள் இந்திரனிடம் முறையிட இந்திரன்
பிரம்மனிடம் சென்றார்.
பிரம்மன், நான் சித்ரா பௌர்ணமியன்று வரதனை தரிசிக்கச் செல்லும்போது நீயும் வந்து வரதனை வேண்டிக்கொள் என்று தெரிவிக்க
மூவரும் ஒன்று சேர கிழப்பிராமணராக வந்த பிரகஸ்பதி தனது நிலையை விவரித்து வரதன் முன் கண்ணீர் மல்க நிற்க, எம்பெருமான் பிரகஸ்பதிக்கு
சுயரூபம் கொடுத்து அமருலகு புகச் செய்தார்.
108 வைணவத்திருத்தலங்களில் கோயில் என்று திருவரங்கத்தையும், திருமலை என்று திருவேங்கடத்தையும், பெருமாள் கோயில் என்று
இத்தலத்தையும் குறிப்பர். இக்கோவிலின் முதல் பிரகாரத்திற்கு சேனையர் கோன் திருமுற்றமென்றும், மூன்றாவது பிரகாரத்திற்கு ஆளவந்தார்
பிரகாரமென்றும், நான்காவது பிரகாரத்திற்கு ஆழ்வார் திருவீதியெனவும், 5வது பிரகாரத்திற்கு மாடவீதி எனவும் பெயர். இந்த பிரகாரத்திற்குள்தான்
ஸ்ரீஆளவந்தார் இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம் முதல்வனிவன் என்றருளினார்.

நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் அயர்வறு அமரர்கள் அதிபதி என்றது இப்பெருமாளைத்தான் என்று பெரியோர்கள் பொருள்
கூறுவர். இதற்கொப்பவே வேறெங்குமில்லாதவாறு இத்தலத்தில் உள்ள நம்மாழ்வார் துயரறு சுடர் அடிதொழுதொழு என் மனனே என்று
கூறுவதுபோல் ஞான முத்திரையின்றி தம் நெஞ்சில் கை வைத்து எழுந்தருளியுள்ளார்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாகக் கருடசேவை மிகப் பிரஸித்தி பெற்றதாகும்.
இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இப்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அதாவது பெருமாளுக்கு வியர்க்கும் என்று (வேர்க்கும்)
எப்போதும் பெரிய விசிறி கொண்டு விசிறிக் கொண்டேயிருப்பாராம். இந்த திருக்கச்சி நம்பியைக் காஞ்சி பூர்ணர் என்றும் மொழிவர்.

1. அஹம் மேவபரம்தத்வம்–2. தர்சனம் பேத ஏவ ச–3. உபாயேஷ் பரப்த்திய ஸ்யாத்–4. அந்திமஸ்மருதி வர்ஜனம்-
5. தேக வஸானே முக்தி ஸ்யாத் -6. பூர்ணசச்யார்ய ஸமாச்ரய–என்பன ப்ரஸித்த ஆறு வார்த்தைகள்

வழி தவறித் திகைத்து அலைந்த இராமானுஜருக்கு இத்திவ்ய தேசத்து பெருமாளும் பிராட்டியுமே, ஒரு வேடுவ வேட்டுவச்சி வேடம் பூண்டு, ஒரே
இரவில் இராமானுஜரைக் காஞ்சிக்கருகில் இருந்த சாலைக்கிணறு ஓரமாகக் கொணர்ந்து விடுத்து தாக சாந்திக்குத் தண்ணீர் கேட்க இராமானுஜர் தீர்த்தம்
கொண்டு வந்து கொடுக்க வந்தபோது அவ்விருவரும் மறைய சற்றே திரும்பி பார்த்த ராமானுஜர் சற்றுத் தூரத்தில் புண்யகோடி விமானத்தையும், காஞ்சி
மாநகர் நோக்கிச் செல்லும் மக்களையும் கண்டு பெரிதும் வியந்து தம் பொருட்டு எம்பெருமான் வேடுவ வடிவங்கொண்டு வந்ததை யெண்ணி
கண்ணீர் உகுத்தவராய் வைய மாளிகை அடைந்தார்.

நடந்த வ்ருத்தாந்தங்களைத் தம் தாயாரிடம் கூறி, அவரது அறிவுரையின்படி திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்று அன்றுமுதல்
சாலைக் கிணற்றிலிருந்து வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொணர்ந்து கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டார்.

இன்றளவும் இக்கிணற்றின் தீர்த்தமே கச்சி வரதனுக்கு திருமஞ்சன தீர்த்தமாக எடுத்து வரப்படுகிறது. பெருமாள் இராமானுஜரை மீட்டுக்
கொணர்ந்த நாள் இன்றும் உற்சவதினமாகக் கொண்டாடப்படுகிறது.

பூ மண்டபம், போக மண்டபம், தியாக மண்டபம் என்று மூன்று திவ்ய தேசங்கள் வர்ணிக்கப்படுகின்றன. பூ மண்டபம் என்பது திருவேங்கடம்
‘சிந்து பூ மகிழ் திருவேங்கடம்’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. போக மண்டபம் என்பது திருவரங்கம். எம்பெருமான் திருவரங்கத்தில் பக்தர்கட்கு
போக்யமாய் இருப்பதாலும், சயன திருக்கோலத்தில் ஒரு வகையான போக மண்டபம் ஆயிற்று ஸ்ரீரங்கம். தியாக மண்டபம் எனப்படுவது இத்தலமாகும்.
தனக்கே திருமஞ்சன தீர்த்தம் கொணரும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்த இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு ஆளவந்தார்க்கு அடுத்தபடியாக வைணவத்
தலைமையேற்க தியாகம் செய்து அனுப்பி வைத்ததால் இத்தலத்திற்கு தியாக மண்டபம் என்றும் பெயருண்டாயிற்று.

ஸ்ரீஇராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களையிழந்த கூரத்தாழ்வான் அவர் நியமனப்படியே வரதராஜ ஸ்தவம் அருளிச் செய்து
இழந்த தம் கண்களைப் பெற்றது இத்தலத்தில் தான்.
இப்பெருமானைத் திருக்கச்சி நம்பிகள் தேவராஜஷ்டகம் என்னும் ஸ்தோத்திரத்தாலும், வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத் என்னும்
ஸ்தோத்திரத்தாலும், மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் தேவராஜ ஸ்துதி செய்துள்ளன

முஸ்லீம்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோது இங்குள்ள உற்சவரை கி.பி. 1688இல் திருச்சி உடையார் பாளையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
1710இல் ஆத்தான் ஜீயர் தம் சீடர் ராஜா தோடர்மாலின் உதவியுடன் இப்பெருமாளை மீண்டும் காஞ்சிக்கே கொணர்ந்தார். இதனால் இக்கோவிலின்
நிர்வாகம் ஆத்தான் ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை விவரிக்கும் கல்வெட்டு ஒன்று தாயார் சன்னதியின் முகப்பிலேயே உள்ளது. இங்கு ராஜா தோடர்மாலுக்கும் சிலை உண்டு. இப்பெருமானை மீட்டுக் கொணர்ந்த தினமான பங்குனி உத்திரட்டாதி தினம் உடையார்பாளைய உத்ஸவம் என்ற
பெயராலேயே இன்றும் நடைபெறுகிறது.

எம்பெருமான் இங்கு புண்யகோடி விமானத்துடன் எழுந்தருளியதால் இங்கு செய்யப்படும் ஒரு புண்ணியமானது கோடியாக விருத்தியடைகிறது
என்பது ஐதீஹம்.

தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்’–பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர்,

பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
திருளாசை சிந்தித்திராதே – அருளாளன்
கச்சித் திருப்பதியாம் அத்தியூர்க் கண்ணன்தாள்
இச்சித் திருப்பதி யாமென்று— பிள்ளைப் பெருமாளையங்கார்.

—————–

44. அட்டபுயக்கரம்

பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த எம்பெருமான் பலவாறாக உதவி, பாதுகாத்துக் கொண்டிருக்க மேலும் அதனை நிலைகுலைக்க எண்ணிய
நாமகள் பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களையும் அனுப்பினாள். காளியின் கொட்டத்தை அடக்கி உடன்வந்த
அரக்கர் கூட்டத்தை முறியடிக்க எம்பெருமான் 8 கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து காளியை அடக்கினார். அதனால் அட்டபுயக்கரத்தோன்
ஆனார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8 கைகளுடன் நிற்கிறார். அட்டபுயகரத்தோனாக ஆகும் முன்பே (இவ்விடத்தில்
ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு)

மூலவர்-ஆதிகேசவப் பெருமாள். கஜேந்திரவரதன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
(ஆழ்வார் மங்களாசாசனத்திற்குப் பிறகு அஷ்ட புயக்கரத்தான் என்பதே பிரபல்யம்)
தாயார்–அலர்மேல் மங்கை, பத்மாஸனி
தீர்த்தம்- கஜேந்திர புஷ்கரணி
விமானம்– ககநாக்ருதி, சக்ராக்ருதி விமானமென்றும், வ்யோமாகர விமானமென்றும் பெயர்களுண்டு.
காட்சி கண்டவர்கள்- கஜேந்திரன், திருமங்கையாழ்வார்.

எட்டுக்கரங்களுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பது 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான். வலப்புறம் உள்ள 4 கரங்களில் சக்கரம்,
வாள், மலர், அம்பு, ஆகியவற்றையும் இடப்புறம் உள்ள நான்கு கரங்களில் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் போன்றவற்றைப் பெற்றுத் திகழ்கிறார்.

சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியின் கொட்டத்தை இவ்விடத்தே அடக்கினார். இதற்கு ஆதாரம் தரத்தக்க வகையில்
இச்சன்னதியின் அருகே கருங்காளியம்மன் கோவிலொன்றுள்ளது.

தொண்டை மண்டலத்து திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது.

மகாசந்தன் என்னும் முனிவர் மஹாவிஷ்ணுவைக் குறித்துதவமிருந்தார். இவர் இந்திரனுக்கு எதிரி. தனது இந்திர பதவியைப்
பெறுவதற்காகத்தான் இம்முனிவர் தவமிருக்கிறார் போலும் என்று நினைத்த இந்திரன் தேவலோக மாதர்களை (அப்ஸரஸ்களை) அனுப்ப முனிவர்
அவர்களை வெறுத்தொதுக்கினார். எனவே இந்திரன் எப்படியும் இம்முனிவரின் தவத்தைக் கலைக்க வேண்டுமென்றெண்ணி யானை வடிவங்கொண்டு
தன்னோடு பல யானைக் கூட்டங்களை அழைத்துக் கொண்டு இம்முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு வந்து காமப்புணர்ச்சி கொண்டு நிற்க இதைக் கண்ட
முனிவர் சித்தம் கலங்கி தவவலிமையிழந்து தாமும் ஒரு யானையாக மாறினார். தம் நிலை மறந்து பெண்யானைகளுடன் இன்புற்று திரிந்தார். இவ்வாறே
நாட்கள் பல நகர்ந்து மாதங்கள் உருண்டோடி வருடங்களுக்குள் நுழைந்தன. யானைக்கூட்டங்களுடனே காடு மலையெங்கும் சுற்றித் திரிந்தார். இவ்விதம்
அலையும்போது ஒரு நாள் சாளக்கிராமத்தில் யானைக் கூட்டங்கள் நீராடின. அப்போது யானை வடிவிலிருந்த முனிவனுக்கு தீர்த்த மகிமையால் தனது
முன்பிறவி ஞானம் வரலாயிற்று. தம் நிலையுணர்ந்த அந்தக் களிறு மிகவும் வாடி களிறினக் கூட்டங்களைத் துறந்து தனித்தேயோடி வனாந்திரங்களில்
விழுந்து புரண்டு தனது கஜ உடலுடனே பல திவ்ய தேசங்கட்கும் சென்று இறைவனை வணங்கி வரும்போது ஒருநாள் கோதாவரியில் நீராட அங்கிருந்த
மிருகண்டு முனிவரிடம் யானை தனது பாஷையில் தன் நிலைமையினைச் சொல்லி விமோச்சனம் வேண்ட அவர் சகல பாவத்தையும் தீர்க்கும்
காஞ்சிபுரத்திற்கு செல் எனச் சொல்ல காஞ்சிபுரம் வந்த இந்தக் களிறு (முனிவர்) வரதராஜப்பெருமாளுக்கு தினந்தோறும் மலர்பறித்துச் சமர்ப்பித்து
கைங்கர்யம் செய்து வந்தது. இவ்வித மிருக்கையில் ஒருநாள் மலர் பறிக்க வரும் வழியில் அட்ட புயக்கரத்தோனைக் கண்டு மயங்கி அன்று
முதற்கொண்டு அவனுக்கே தனது மலர்க் கைங்கர்யத்தைச் செய்துகொண்டே வந்தது. இவ்விதம் 14000 மலர்கள் பறித்துச் சமர்ப்பித்ததாகக் கூறுவர்.
இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு சமயம் மழை இல்லாமல் போக மலர் பறிக்க நெடுந்தொலைவு சென்ற யானை ஒரு குளத்தில் இறங்கி அங்கிருந்த மலர்களை பறிக்க, அதிலிருந்த முதலை யானையின்
காலை கவ்வியது (ஆதிமூலமே என்று அன்று ஒரு கஜேந்திரன் அழைத்தது போலவே இந்த யானையும் திருமாலைக் கூவி அழைக்க அட்டபுயக்கரத்தோன்
வந்து சக்கராயுதத்தால், முதலையின் தலையைக் கொய்ய, யானைக்கு சாபம் நீங்கியது.
யானையாகிய மகாசந்தன் தனக்கு மோட்சம் வேண்டுமென பெருமாளைக் கேட்க அவரும் இம்முனிவருக்கு மோட்சம் நல்கினார்.

காளியுடன் வரப்பெற்ற நக்கரன் என்னும் அரக்கனைக் கொல்வதற்காகவே எம்பெருமான் 8 கரங்களுடன் வடிவெடுத்ததாகவும் கூறுவர்.

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண்முடி மாலை வயிரமேகன் தன்வலிதன் புகழ் சூழ்ந்த கச்சி அட்ட புயகரத்து ஆதி தன்னை’-வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக் கட்டினான் என்றும் அறியமுடிகிறது.

இங்கு வந்த சரபம் ஒன்று அட்டபுயக்கரத்தானைக் கண்டு அஞ்சி சரண் அடைய அச்சரபத்தை நோக்கிய எம்பெருமான் இச்சன்னதியில் வாயு
மூலையில் உள்ளயாக சாலையைக் காக்குமாறு சொல்ல சரபேசன் என்ற பெயரில் இன்றும் காவல் காப்பதாக ஐதீஹம்.
இக்கோவிலில் அமைந்துள்ள வராகப் பெருமாள் சன்னதி சக்கரவர்த்தி திருமகள் சன்னதி, புஷ்பவல்லித் தாயார் சன்னதி, ஆண்டாள்
சன்னதி ஆகியன காண்பதற்கும் பேரழகு பொருந்தியனவாகும்.

என்றுள் துயருழக்கு மேன்புகாள் நீங்களிளங்
கன்று போல் துள்ளிக் களித்திரீர், அன்று நட
மிட்ட புயங்கத்திரு சரணமே சரணென்று
அட்ட புயங்கத்திற் காளாய்-– என்று கண்ணனாய் காண்கிறார்.-பிள்ளைப் பெருமாளையங்கார்

வண் புகழ் நாரணன் திண் கழல் சேர்மின்’-அதேபோபயம் கதோபவதி’

——————

45. திருத்தண்கா (தூப்புல், காஞ்சி)

பிரம்மன் தொடர்ந்து யாகம் நடத்தினான். (மும்மூர்த்திகள் தமது துணைவியரின்றி தொடர்ந்து செயல்பட முடியும் என்பதைக் காட்ட பிரம்மன்
தனது தேவியின் துணையின்றி இவ்விடத்தில் யாகத்தை துவக்கினான்)
பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன
செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச்
செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள்.
திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரம்மன், வழக்கம்போல் உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார்.
உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை
தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சத்தின் மடியில் வைத்தார்

ஜோதிமயமான வெளிச்சத்தில் தனது யாகத்தை தொடர்ந்தான் பிரம்மன்.யாக சாலையை மேலும் விரிவு படுத்த எண்ணிய பிரம்மன் விஸ்வகர்மாவை
நினைக்க தேவர்கள் புடைசூழ வந்த விஸ்வகர்மா யாக சாலையை மிக நுட்பம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தான். விஸ்வகர்மாவுடன்தேவர்கள் வந்ததைக் கண்ட அசுரர்கள் தாமும் கூட்டம் கூட்டமாய் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால் பிரம்மனோ தேவர்களை
மட்டும் எதிர்கொண்டழைத்து அசுரர்களை கண்டும் காணாமல் இருந்ததால் அவர்கள் மிகவும் சினங்கொண்டனர். யாக சாலையை விட்டு வெளியேறிய
அவர்கள் பிராமண வடிவம் கொண்டு நேராக சரஸ்வதிதேவியின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.

பத்னி இல்லாமல் யாகம் செய்ய பிரம்மன் தனது மமதையால் தங்களைப் பழித்துச் செயல்படுவது போலல்லவா இது இருக்கிறது என்று பலவிதமாகக்
கூறி வாணியின் கோபத்தைக் கிளற மிகவும் சினந்த சரஸ்வதி நானும்பலவிதமான முயற்சிகள் செய்துவிட்டேன். என்ன செய்யலாமென நீங்கள்
கூறுங்கள் என்று கேட்க, அதற்கவர்கள் கொடிய அரக்கன் ஒருவனை அக்னி பிழம்பாய் படைத்து அனுப்பினால் அவன்யாக குண்டலியின் வேள்வித் தீயைத்
தன்னுள் கிரஹித்துக் கொண்டு வந்துவிடுவான் என்று சொல்ல தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி.
மாய நலன் என்பது அவனது பெயர்.
கொடிய அக்கினி ரூபத்தில் யாகத்தை அழிக்க வந்த அந்த அக்கினி ரூப அசுரனை அவ்விடத்தில் பிரவேசித்த பெருமாள் தனது கையில் தீபம் போல்
ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார்.
இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் தீபப் பிரகாசர் ஆனார். தூய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ஆனார்.

மூலவர்–தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர், என்னும் திருநாமமும் உண்டு. மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– மரகதவல்லி
தீர்த்தம்– சரஸ்வதி தீர்த்தம்
விமானம்– ஸ்ரீகர விமானம்
காட்சி கண்டவர்கள்– சரஸ்வதி

தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால்
திருத்தண்கா என்றாயிற்று. பாண்டிநாட்டுத் திருப்பதியில் திருத்தங்கல் என்பது ஒன்றுண்டு. அது வேறு இது வேறு.

மாயநலன் என்னும் அசுரனைப் படைத்தனுப்பி அவன் எவ்விதம் யாகத் தீயைக் கிரஹித்துப் போகிறான் என்பதைக் காண சரஸ்வதி பின்
தொடர மாயநலனை தீபம் போல் பெருமாள் ஏந்த, அந்த திருக்கோலத்தில் பெருமாள் சரஸ்வதி தேவிக்கு இங்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.
பின்னால் பிரம்மனின் யாகத்தை தடுக்க முடியாமல் போய் தனது தவறுணர்ந்து பிரம்மனோடு ஐக்கியமாகிய பின்பு இவ்விடத்தில் சரஸ்வதி
தேவியே தீர்த்தமாக அமைந்து எம்பெருமான் தன் கரத்தில் அக்னியை ஏந்திய கடூரம் நீங்க குளிர்ந்த தீர்த்தமாக மாறி இவ்விடத்தில் நிலை பெற்றாள்
என்றும் கூறுவர்.

இச்சன்னதியில் தேசிகன் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி தேசிகனின்
திருமேனியை அவரது குமாரர் நயினவராதாச்சாரியார் தான் பிரதிஷ்டைசெய்தார். ஸ்ரீஸ்வாமி தேசிகர் தனது வாழ்நாளெல்லாம் வைத்து வழிபட்ட
திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர் தற்போது இச்சன்னதியில்தான் உள்ளார். தேசிகன் சன்னதி தெற்கு நோக்கி
அமைந்ததாகும்.

ஆட்பட்டேன் ஐம் பொறியால் ஆசைப்பட்டே னறிவும்
கோட்பட்டு நாளும் குறை பட்டேன் – சேட்பட்ட
வண்காவை வண்துவரை வைத்து விளக்கொளிக்குத்
தண்காவைச் சேர்ந்தான் தனக்கு. –பிள்ளைப் பெருமாளய்யங்கார்

————-

46. திருவேளுக்கை

வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். நரசிம்ம மூர்த்தி இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி
காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது.

எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த காலை ஹஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து
வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரங்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்தது அசுரக்
கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது
என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.
காமாஷிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.

மூலவர்-அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்றும் திருப்பெயர்கள் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்-வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார்.
தீர்த்தம்- கனக ஸரஸ், ஹேம சரஸ்
விமானம்- கனக விமானம்
காட்சி கண்டவர்கள்- பிருகு முனிவர்

மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்

புராண வரலாற்றின்படி பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.
தற்போது நரசிம்மனாகயோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
இம்மாற்றத்திற்கான காரணம் அறியுமாறில்லை.

எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ்
பெற்றிருந்ததெனச் சொல்லலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலம் என்றாலே அது ஊரகம், பாடகம், வெஃகா தான் என்று
சொல்லாமல் சொல்வதைப் போலவும், எல்லோராலும் மூன்று திருக்கோலங்கட்கு இந்த மூன்று ஸ்தலங்கள்தான் என்று அறியப்பட்டதாயும்,
காஞ்சி மண்ணிற்கே தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்றுத் தந்த ஸ்தலங்களாக விளங்குகின்றது என உணர முடிகிறது.
108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திற்கு வேங்கடமலையானையும், அமர்ந்த திருக்கோலத்திற்கு பத்ரிநாதனையும்,
கிடந்த திருக்கோலத்திற்கு திருவரங்கத்து அரங்கனையும் தனித்துவம் படுத்தலாமென்றிருந்தாலும் ஆழ்வார்கள், நின்ற, கிடந்த, இருந்த
திருக்கோலங்கட்கு காஞ்சியில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களையே குறித்து மங்களாசாசனம் செய்துள்ளனர் -அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலமெனில் அவைகள் ஊரகம், பாடகம், வெஃகாதான் பிறவன்று என்றும் உரைக்கலாம்

————-

47. திருநீரகம்

மூலவர்-இல்லை. திருநாமம் நீரகத்தான்
உற்சவர்- ஜெகதீஸ்வரப்பெருமாள். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- நிலமங்கை வல்லி
தீர்த்தம்– அக்ரூர தீர்த்தம்
விமானம்- ஜெகதீஸ்வர விமானம்
காட்சி கண்டவர்கள்– அக்ரூரர்

திருஊரகத் தலத்தின் 2வது பிரகாரத்தில் உள்ள அழகு பொருந்திய 16 கால் மண்டபத்தில் நீரகத்தான் சன்னதி அமைந்துள்ளது.

ஆலத்திலை சேர்ந்து ஆழியுலகை உட்புகுந்த
காலத்தில் எவ்வகை நீ காட்டினாய் – ஞாலத்துள்
நீரகத்தாய் நின்னடியேன் நெஞ்சகத்தாய் நீண்மறையின்
வேரகத்தாய் வேதியர்க்கு மீண்டு.–பிள்ளைப் பெருமாளையங்கார்,

பிரபஞ்ச பிரளயத்தின் போது ஆலமரத்திலை மேல் ஒரு பாலகனாய் கண் வளர்ந்த திருக்கோலத்தை
இத்தலத்தில் பிள்ளைப் பெருமாளையங்காருக்கு எம்பெருமான் காட்டியருளினார்

மறைகட்கு வேர்போன்று திகழும் எம்பெருமானை மார்க்கண்டேயருக்கு ஆலத்திலை திருக்கோலத்தைக் காட்டிக் கொடுத்தவனை, நீரகத்தானை என்
நெஞ்சகத்தின்பால் பெற்றேனே என்கிறார்.
வேதங்களுக்கு வேராகத் திகழ்ந்து, என் நெஞ்சகத்தே வாழும் நீரகத்தானே நீ, மார்க்கண்டேயனுக்கு எவ்விதம் பிரளயகால ஆலத்திலை
திருக்கோலத்தைக் காட்டிக் கொடுக்கிறாயோ, என்று பேராச்சர்யப்படுகிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

இப்பாடலும் எம்பெருமானின் நீரகத்தன்மைக்கு சான்று பகர்கிறது.

————

48. திருப்பாடகம்

பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில் இருந்த  திருக்கோலம் திருப்பாடகத்தில், கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில்.

பாடு – மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம்

பாரத யுத்தம் முடிந்த பிறகு வெகுகாலத்திற்குப் பின் ஜெனமேஜெய மகராசன் வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக்கேட்டு
வரும்போது ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் இருந்து தூது சென்றவிடத்து எடுத்த பிரம்மாண்ட திருக்கோலத்தை மாபாராதம் கை செய்த மாவுருவத்தை
தானும் சேவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்குபாயம் கேட்க சத்தியவிரத ஷேத்ரமான காஞ்சிக்கு சென்று அஸ்வமேதயாகம் செய்து
யாகத்தின் முடிவில் நீ விரும்பிய திருக்கோலத்தைக் காணலாமென்று முனிவர்கள் கூற மன்னன் அவ்விதமே செய்தான்.

யாகத்தின் திரண்ட பயனாக பிரம்மாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னருக்கும் ஹாரித முனிவர்க்கும் காட்சி கொடுத்தார்
என்பது வரலாறு.

மூலவர்–பாண்டவ தூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். மிகப் பிரம்மாண்டமான திருமேனி.
தாயார்- ருக்மணி சத்தியபாமா
விமானம்- பத்ர விமானம், வேத கோடி விமானம்
தீர்த்தம்- மத்ஸய தீர்த்தம்
காட்சி கண்டவர்கள்- ஜெனமேஜெய மகராசன், ஹாரித முனி

அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை
ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட
வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.
கர்ப்பக் கிரஹத்தின் அமைப்பை உற்று நோக்கினால் நிலவறையின் மொத்தப்பகுதியை அப்படியே பெயர்த்து தலைக்கு மேல் குவித்து வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் தோன்றுகிறது. மிக சிறிய அளவில் இச்சன்னதி அமைந்திருந்தாலும்,
கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது
மட்டுமன்றி பேராச்சர்யம் தருவதுமாகும்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஜீவித்திருந்தது இந்த திவ்ய தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.

தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரம்மனிந்திரனா செய்கை – உவந்து
திருப்பாடக மருவுங் செங்கண் மால் தன் மார்
பிருப்பாடக உரையாலே–பிள்ளைப் பெருமாளையங்கார்

பக்தர்களின் கைங்கர்யத்திற்காகவே சென்ற பாண்டவ தூதன் என்ற தனது கைங்கர்ய திருநாமத்தையே கொண்டு இத்தலத்தில் இருப்பது ஒரு தனிப்பெருஞ் சிறப்பாகும்.

—————

49. திரு நிலாத்திங்கள் துண்டம்

ஒரு சமயம் பார்வதிக்கும், பரமசிவனுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டு பார்வதி இவ்விடத்தில் ஒரு மாமரத்தின் கீழ் தவம் செய்ய அத்தவத்தை
சோதிக்க எண்ணி சிவன் மாமரத்தை நெற்றிக் கண்ணால் தீ ஜ்வாலைகளால் எரிக்க பார்வதி திருமாலைப் பிரார்த்தித்தாள். சங்கு சக்ரதாரியாகத் தோன்றிய திருமால் அம்ருத கிரணங்களால் மாமரத்தை தழைப்பிக்கச் செய்ய பார்வதியின் தாபம் தீர்ந்து தவத்தைத் தொடர்ந்தாள். பார்வதியின் தாபம் தீர்க்கப்பட்டதால் (துண்டிக்கப்பட்டதால்) இப்பெருமானுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயருண்டாயிற்று. நிலவின் குளிர்ந்த கிரணங்களால் பார்வதியின் யாகத்திற்குண்டான தடை துண்டிக்கப்பட்டதால் இப்பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.

பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம்.

மூலவர்-நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் என்பது வடவாணர் மொழிவர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார் என்னும் திருநாமம்.
தீர்த்தம்- சந்திர புஷ்கரணி
விமானம்– புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்)
காட்சி கண்டவர்கள்- சிவன், பார்வதி

மாமரத்தை தழைக்கச் செய்த பிறகு பார்வதி மீண்டும் யாகத்தை துவக்க இதனால் மேலும் சினந்த சிவன் தனது தலையில் உள்ள கங்கையை
ஏவினார் தமக்கையாயிற்றே என்றெண்ணி தன்யாகத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டாமென்று வேகமாக வந்த கங்கையை வேண்டினாள். கங்கை அதைப் பொருட்படுத்தவில்லை. பார்வதி தனது பக்தி மேலீட்டால் மணலினால் லிங்கம் செய்து தவமிருந்தாள். கங்கையால் அந்த லிங்கத்தைக் கரைக்க முடியவில்லை. இதைக் கண்ட பார்வதி மிக்க சந்தோஷத்துடன் அந்த லிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டாள். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள்
துண்டத்தான் அருள்பாலித்தார்.இவ்விதம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒருசேர அருளிய ஸ்தலம் உண்டென்றால்
அது இது ஒன்றுதான்.

மீண்டும் தெளியார்கள் மேதினயினோர் நின்னடிப்பூ
பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் – தீண்டிக்
கலாத்திங்கள் துண்டத்தான் மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கள் துண்டத்தானே”–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

நிலாத்திங்கள் துண்டத்தானாக எழுந்தருளியுள்ள எம்பெருமானே,
அர்ஜு னன் நின்னை பூசித்து நின் திருவடிகளில் சமர்ப்பித்த மலர்களை திருவடி பாக்கியத்தின் மேன்மை கருதி. பதினொன்று கூத்துக்களில் ஒன்றான
பாண்டரங்கம் என்னும் கூத்தாடும் சிவன் தன் தலையில் ஏற்றுக் கொண்டான்.

—————–

50. திரு ஊரகம்

இந்த ஊரகம் என்னும் திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன

ஊரகத்தை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் கச்சி ஊரகத்தாய் என்று விளிப்பதைப் போல மற்ற தலங்களையும் கச்சி
நீரகத்தாய், கச்சி காரகத்தாய் என்று காஞ்சியின் சம்பந்தத்தை திருமங்கையாழ்வார் அருளவில்லை.

பாதாள லோகத்திலேயே எம்பெருமானைக் குறித்து தவமிருக்க அந்த தவத்திற்கு மெச்சி இந்த ஸத்யவ்ரத ஷேத்ரமான காஞ்சியில் மகாபலிச் சக்ரவர்த்திக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டிக் கொடுத்த ஸ்தலமே ஊரகம் ஆயிற்றென்பர்.
பாதாள லோகத்தில் சாதாரண மனிதனைப் போல இருந்த மகாபலி நெடிதுயர்ந்து உலகளந்த திருக்கோலத்தை மீண்டும் முழுமையாக என்னால்
தரிசிக்க இயலவில்லையே என்று பதைபதைத்து எம்பெருமானைத் துதித்து நிற்க எளிய விதத்தில் அவனுக்கு காட்சி தரும்பொருட்டு இந்த இடத்திற்கு
அருகிலேயே ஆதி சேடனாக காட்சியளித்தார். இந்த இடம் பேரகம் எனப்படும்.
ஆதிசேடனாக காட்சியளித்த அந்த இடமே தற்போது பேரகம் என்ற பெயரில் இத்தலத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. இங்கு
எம்பெருமான் சரப ரூபமாகக் காட்சியளிக்கிறார். பார்ப்பதற்குப் பேரெழில் பொருந்தியவர் இந்தப் பெருமாளுக்கு ஊரகத்தான் என்று பெயர். உரகம் என்பது பாம்பைக் குறிக்கும். எனவேதான் ஆதிசேடன் ரூபத்தில் உள்ள பெருமான் உரகத்தான் என்று அழைக்கப்பட்டு ஊரகத்தான் ஆயிற்றார்
போலும்.

மூலவர்-உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- அமுதவல்லி நாச்சியார்
உற்சவர்– பேரகத்தான்
தீர்த்தம்– நாக தீர்த்தம்
விமானம்– ஸார ஸ்ரீகர விமானம்
காட்சி கண்டவர்கள்– மகாபலிச் சக்ரவர்த்தி, ஆதிசேடன்.

ஊரகம் (பேரகம்) இரண்டும் சேர்ந்து ஒரு திவ்ய தேசம்தான் “மதில் கச்சி யூரகமே பேரகமே” என்பது
சிறிய திருமடலில் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்.

இங்கு எழுந்தருளியுள்ள உலகளந்த பெருமாள் மிகப் பிரம்மாண்டமானவர். நெடிதுயர்ந்த இவர் திருமேனி பார்ப்பதற்குப்
பேராச்சர்யம் உடைத்து 108 திவ்ய தேசங்களில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இத்தகைய பிரம்மாண்டமான உலகளந்த பெருமாள் இல்லையென்று
சொல்லலாம். பேரகத்தான் என்பது இவர் திருநாமம். இப்பெருமாள் தனது இரண்டு கரங்களை நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித்தூக்கிய
திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக்காட்டி எழுந்தருளியுள்ளார். இடது திருக்கரத்தின் இரண்டு
விரல்களை உயர்த்தியதால் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில் ஒருவிரலை உயர்த்தி ஓரடியை எங்கே வைப்பது என்று
மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர்.

இதேபோல் பேரகத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேட எம்பெருமானும் மிகப் பிரசித்தி வாய்ந்தவர். இவர் போன்ற நாகமூர்த்தியை வேறெங்கும்
காண்டலரிது. இவரிடம் தூய மனதுடன் கேட்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகிறது. இப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது
(பாயாசம்) படைத்துப் புத்திரப்பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேரடைகின்றனர். இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வெம்
பெருமானுக்குத்தான் (ஊரகத்தான்) ஊரகத்தான் என்பது திருநாமம்.

நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
வாசத்தாள் என்தலைமேல் வைத்திலையேல் – நாகத்தால்
பாரகத்துள்ளன்றி நான் பாழ்நரகில் வீழ்ந்தென் சொல்
ஊரகத்துள் நின்றாயுரை–பிள்ளைப் பெருமாளையங்கார்

மாவலி தாரை வார்த்துக்கொடுத்தபோது ஈரடியால் உலகளந்து மூன்றாவதடியை அவன் தலைமீது வைத்து நின்திருவடியை அவனுக்குப்
பொலியச் செய்தல் போன்று என் சென்னியின் மேலும் வைப்பாயாயென்று கேட்கிறார்.
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் வைத்தாய்” என்று ஆழ்வாருரைத்தபடி தமக்குமாகட்டும் என்கிறார்.

———–

51. திருவெஃகா

பிரம்மா செய்த பரிவேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்க அதற்குக் குறுக்கே எம்பெருமான் அணையாகப் படுத்துக்கொண்டான்.
எம்பெருமான் படுத்திருந்த திருக்கோலத்தைக் கண்ட சரஸ்வதி முன்னேறிச் செல்ல வொண்ணாமல் பின் வாங்கினாள். இதனால் வேகாஷேது என்று
பெயர் பெற்றாள். தமிழில் வேகவனை என்றானது. இச்சொல் நாளடைவில் வேகணை என்று திரிந்து பிறகு வேகினி என்றாகி வெஃகின என்றாகி
வெஃகணையானது. காலப்போக்கில் வெஃகா என்றாயிற்று.

தாம் யாகம் செய்யும் பகுதியை நோக்கி ஒரு பெரும் நதி வருவதையறிந்த பிரம்மன் வழக்கம் போல் தன்னையும் தம் யாகத்தையும்
காக்க திருமாலைத் துதித்தான். திருமால் அவ்வெள்ளத்திற்கு எதிரே அணையாகப் படுத்தார். திருமாலின் அறிதுயில் கோலத்தைக் கண்ணுற்ற
சரஸ்வதி தனது வேகத்தை சுருக்கி தன்னை மறைத்துக் கொண்டாள். சரஸ்வதி-மறையலுற்றதும் திருமால் தனது தேவியுடன் பிரம்மாவுக்கு காட்சி
கொடுக்க பிரம்மன் யாகத்தைத் தொடர்ந்தார்.

மூலவர்-யாதோத்தகாரி. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்- கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம்– பொய்கை புஷ்கரிணி
விமானம்- வேதஸார விமானம்
காட்சி கண்டவர்கள்- பிரம்மதேவன், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், கணி கண்ணன், சரஸ்வதி தேவி.

பொய்கையாழ்வார் அவதாரம் செய்த தலமாகும் இது. இங்குள்ள பொய்கையொன்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்தமையால்
பொய்கையாழ்வாரானார்.
எல்லா ஸ்தலங்களிலும் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும், ஆனால் இங்கு மட்டும் பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார்.

கணி கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந் நாகப் பாய் விரித்துக்கொள்

எம்பெருமான் மீண்டும் காஞ்சிக்கு வேகமாக திரும்பி சயனித்துக்கொண்டான். அவசர நிமித்தத்தில் வலமிருந்து இடமாகச்
சயனித்துவிட்டார் என்று காரணங் கூறுவர்.
ஒரு முறை இடம் பெயர்ந்து மீண்டும் அதே இடத்திற்கு எழுந்தருளியதால் வலமிருந்து இடமாக மாறிச் சயனித்தார் என்றும் கூறுவர்.
வேகவதியாக சரஸ்வதி மாறி விரைந்தோடி வரும்போது அந்த நதியைத் தடுக்க தாமும் வேகமாக வந்த பெருமாள் சடக்கென சயனிக்க
எத்தனித்த நிலையில் தம்நிலை மாறிச் சயனித்தர் என்றும் கூறுவர்.
திருமழிசையாழ்வாருடனும், கணிகண்ணனுடனும் பெருமாள் ஒரு இரவு தம் யாக்கையை கிடத்தி இருந்த இடம் ஓரிரவு யாக்கை என்ற
பெயராலேயே பன்னெடுங் காலமாக அழைக்கப்பட்டு வந்தது.
தம்மிஷ்ட்டத்திற்குத் தமிழை திரிப்பவர்கள் தலைதூக்கிய காலத்தில் ஓரிரவுயாக்கை என்னும் இந்த அழகிய காரணப் பெயர் ‘ஓரியாக்கை’
ஓர் இரவு இருக்கை –ஓரிக்கை–என்றாக்கப்பட்டது. காஞ்சிக்கு சமீபத்தில் இந்த ஊர் இன்றும் ஓரியாக்கை என்றே வழங்கப்பட்டு வருகிறது.

திருமழிசையாழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட இந்நிகழ்ச்சி இங்கு ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தினன்று உற்சவமாக
நடைபெறுகிறது. அப்போது எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி யாற்றங்கரை வரை சென்று மீள்வர்.

நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமான திருவிருத்தத்தில் கோயில், திருமலை, திருவெஃகா, ஆகிய 3 திவ்ய தேசங்களை மட்டும் பாடியிருப்பதால்
பெருமாள் கோயில் என்பது இத்தலத்தையே குறிக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துக் கொண்டுள்ளனர்.

கச்சிக் கிடந்தவனூர்க் கடல்மல்லைத் தலசயனம் நச்சித் தொழுவாரை நச்சென்றன் நணி நெஞ்சமே –இங்கு
கச்சிக் கிடந்தவன் என்ற இச்சொல்லுக்கு வ்யாக்யானச் சக்ரவர்த்தி பெரிய வாச்சான் பிள்ளை-ஆஸ்ரிதர்க்காகத் திருவெஃகாவிலே படுக்கை மாறி கைம் மாறிக் கிடந்தவனை’-என்கிறார்

உரைகலந்த நூலெல்லா மோதி யுணர்ந்தாலும்
பிரைகலந்த பால்போல் பிறிதாம் – தரையில்
திருவெஃகா மாயனுக்கே சீருறவார், தங்கள்
உருவெஃகா வுள்ளத்தினோர்க்கு.

————–

52. திருக்காரகம்

கார்ஹமஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்று உய்ந்தமையால் அவர் பெயரின்
பொருட்டே திவ்ய தேசம் விளங்கி நின்று கார்ஹகம் ஆகி காரகம் ஆயிற்றென்பர்

உலகமேத்தும் காரகத்தாய் என்ற திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்

மூலவர்-கருணாகரப் பெருமாள். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- பத்மாமணி, நாச்சியார், ராமா மணி நாச்சியார்
தீர்த்தம்– அக்ராய தீர்த்தம்
விமானம்– வாமன விமானம், ரம்ய விமானம்
காட்சி கண்டவர்கள்– கார்ஹ மஹரிஷி

உலகளந்த பெருமாள் சன்னதியில் மூன்றாவது பிரகாரத்தில் ரம்ய விமானத்தில் கீழ், வடக்கு நோக்கி ஆதி சேடன் மீது அமர்ந்த
திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஓராதார் கல்வியுடையேம் குலமுடையேம்
ஆராதனம் உடையேம் யாமென்று – சீராயன்
பூங்காரகங் கானப் போதுவார் தாள் தலைமேல்
தாங்கா ரகங்காரத் தால்–பிள்ளைப் பெருமாளையங்கார்

———–

53. திருக்கார் வானம்

கார்வானத்துள்ளாய் கள்வா என்று இத்தலத்து எம்பெருமானின் பெயரையும் சேர்த்தே ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
திருவூரகத்திற்குள்ளே இருக்கும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் மற்ற இருவருக்குமில்லா தனிச் சிறப்பாகும் இது. நீரகத்தாய் என்றும், காரகத்தாய்
என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது மட்டும் எம்பெருமானின்
பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.
திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால் அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இந்தக்
கார்வானத்து எம்பெருமானுக்குத்தான் கள்வர் என்றும் திருநாமமாகும்.

கார்வானத்துள்ளாய் கள்வா என்பது ஒரு தனிச் சொல்லாகும். அஃதாவது இடப்பெயரும், பெருமாளின் பெயரும் சேர்ந்த தனிச்சொல்லாகும்.
திருக்குடந்தை ஆராவமுதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன், கச்சி வரதராஜன், திருவனந்தபுர பத்மநாபன்,
திருவேங்கடத்து ஸ்ரீனிவாசன், என்பது போன்று ஊர்ச் சொல்லுடன் பெயர்ச் சொல்லும் சேர்ந்த காரண குறிச்சொல்லேயன்றி தனித்தனி சொற்களாகக்
கொள்ளவியலாது.

மூலவர்- கள்வர், வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கமலவல்லி, தாமரையாள்
தீர்த்தம்– கௌரீ தீர்த்தம், தராதர தீர்த்தம்
விமானம்– புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்– பார்வதி

தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா
லாலே யெவ்வாறு பசியாற்றினள் முன் – மாலேபூங்
கார்வானத் துள்ளாய் கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய் நீ பண்டு.–நூற்றெட்டுத் திருப்பதி

———

54. திருக்கள்வனூர்

இவ்விடத்து எம்பெருமான் தனது நின்ற இருந்த கிடந்த என்னும் 3 திருக்கோலங்களை காட்டியருளுகிறார்

மூலவர்-ஆதிவராஹப் பெருமாள், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்- அஞ்சிலை வல்லி நாச்சியார்
தீர்த்தம்– நித்ய புஷ்கரணி.
விமானம்- வாமன விமானம்
காட்சி கண்டவர்கள்– பார்வதி, லட்சுமி தேவி.

பல அழகு தமிழ்ப் பெயர்கள் பூண்டுள்ள நாச்சியார்களைப் போல இந்த பிராட்டிக்கும் அஞ்சிலைவல்லி நாச்சியார் என்றும் அழகுத் திருநாமம்.

காஞ்சியில் பற்பல திவ்ய தேசங்களில் மிகமிகப் பெரிய கோவில்களில் எழுந்தருளியிருந்து அங்குவரும் பக்தர்கட்கு அருள் பாலித்து திருப்தி
அடையாமல் காமாட்சியம்மன் கோவிலின் ஒரு மூலையின் நின்றுகொண்டு இங்கு வரும் பக்தர்களையும் தன் அருளுக்கு இலக்காக்க வேண்டுமென்று
இப்படிக் கள்ளத் தனமாக உறைவதால் கள்வன் எனப்பட்டான் போலும்

பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று
கொண்டேனைக் கள்வனென்று கூறாதே – மண்டலத்தோர்
புள்வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக்
கள்வா வென் றோதுவதென் கண்டு.–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

———

55. திருப்பவள வண்ணம் (காஞ்சி)

இந்தப் பவளவண்ணர் கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள காலாண்டார் தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார்
2 பர்லாங் தொலைவு.

காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு சிறப்பாய் பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தேவி தொடர்ந்து
எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த
அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்து ரத்தம் தோய நின்றார் பெருமாள். இவ்வாறு ரத்தம் தோய ப்ரவாளேசராக, ப்ரவாளேச வண்ணராக நின்றதால்
ப்ரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்.

மூலவர்-பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்- பவள வல்லி தனிக்கோவில் நாச்சியார்
தீர்த்தம்– சக்ர தீர்த்தம்
விமானம்-ப்ரவாள விமானம்
காட்சி கண்டவர்கள்– அச்வினி தேவதைகள், பார்வதி, பிரம்மன்.

இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று
எதிர்த்திசையில் அமைந்துள்ளது. காலாண்டார் கோவிலில் பவள வண்ணரும் அதற்கெதிரில் அமைந்துள்ள பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர்
கோவிலும் அமைந்துள்ளது.

இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார். இவர்
பிரும்மரிஷிக்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.

அச்வினி தேவதைகட்கும், பார்வதி தேவிக்கும் பெருமாள் காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.

கண்டறிந்தும் கேட்டறிந்தும் தொட்டறிந்தும் காதலால்
உண்டறிந்தும் மோந்தறிந்தும் முய்யேனே –
பண்டைத் தவள வண்ணா, கார்வண்ணா, சாமவண்ணா,
கச்சிப் பவள வண்ணா நின் பொற்பாதம்.–பிள்ளைப் பெருமாளயங்கார்

————

56. திருப் பரமேச்சுர விண்ணகரம்

புராண காலத்தில் இத்தலம் ஸர்ப்பச் சேஷத்ரம் என அழைக்கப்பட்டதாகவும், இங்கு
எழுந்தருளியிருந்த பிரான் பரமபத நாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

விதர்ப்ப நாட்டு மன்னன் புத்ர சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள கைலாச நாதனை வணங்க விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும்
பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும், அவ்விருவரும் மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு மூலையில் அஸ்வமேத
யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்டநாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்து அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு
அருளுவதாக ஐதீஹம்.

ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம்
பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.
பரமேஸ்வரவர்மன் பிறப்புக்கும் இத்தலத்திற்கும் உண்டான தொடர்பு கீழ்வருமாறு பேசப்படுகிறது.

ஒரு சமயம் பரத்வாஜ முனிவர் பெரும் தவமியற்றிக் கொண்டிருக்கும்
போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின்பால் மோகம்
கொண்டு அவளை ஆலிங்கனம் செய்ய அவ்வளவிலேயே ஒரு ஆண் மகவு
உண்டாக இக்குழவியை என்ன செய்வதென்று பிரம்மன் சிந்தனையில் மூழ்க
அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும் இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து
நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று
சொல்லி, மஹாவிஷ்ணுவும் லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு
உயிர் கொடுக்கலாயினர்.

இஃதிவ்வாறிருந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென
இப்பெருமாளைத் துதித்துவிட்டு திரும்பும்போது வேடன் உருக்கொண்டிருந்த எம்பெருமானால் இம்மகவு அவர்களின் கையில் தரப்பட்டது. பிரம்மனாலும்
விஷ்ணுவாலும் வளர்க்கும் பொறுப்பு உண்டானதால் பரமேஸ்வரன் என்று பெயரிட்டதாகவும் ஒரு கதை உண்டு.
இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். யானைப்பாலை உண்டு
வளர்ந்த அவன் மிக்க பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் விளங்கினான்.

பல்லவர்கள் யார் என்பதை ஆராயப் புகுந்த வரலாற்று அறிஞர்கள் பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணுமிடத்து பரத்வாஜ கோத்ரம்
என்றவொரு பிறப்புரிமையைக் காட்டுவதும் இங்கு உற்று நோக்கத் தக்கதாகும்.
பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும், அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும்,
சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர்.
இதனை நினைவுகூறும். முகத்தான்தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்)
பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் ரங்கநாதனாகச் சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும்
எம்பெருமானை எழுந்தருளச் செய்தார்.

மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச்
சிதலமடைய பிறகு அவ்விடத்தில் சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. (இந்நிகழ்ச்சி நடைபெற்றதும்
பல்லவர்கள் காலத்திலேதான்) இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும்.

ஸ்ரீ வைகுண்டமென்னும் பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு புஷ்கரணியாக அமைந்துள்ளதாக ஐதீஹம்.

மூலவர்-பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- வைகுந்த வல்லி
தீர்த்தம்– ஐரம்மத தீர்த்தம்
விமானம்– முகுந்த விமானம்
காட்சி கண்டவர்கள்– பல்லவ மன்னன்.

மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளமை மிகவும் வியத்தற்குரியதாகும்.
பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள்
யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும்.
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட சகல காரியங்களுக்கும், தான் போர் மேற் செல்வதற்கும், இப்பெருமாளையே
குருவாகக் கொண்டு வெற்றிமேல் வெற்றி கண்டான்

இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம அவதாரம் நரஹாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம் செய்த
இராமவதாரம், போன்ற காட்சிகள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டுக் கல்லும்கதை பேசும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டுள்ளது.

இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள்
அதனைத் தோண்டிக்காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான்
என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக்
கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். சுரங்கப் பாதையைத் தோண்ட வந்த
வெள்ளையன் இங்கு அவ்வாறு சுரங்கப் பாதை யாதும் இல்லையெனக் கூறிச் சென்று விட்டதாகக் கூறுவர்.
இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக ஐதீஹம்.

பதத்தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத்தன்
பதத்தடியார்க்கே யாட்படுத்தான் – இதந்த
பரமேச்சுர விண்ணகரான் பலவான்
வரமேச்சுர லணைந்த மால்–பிள்ளைப்பெருமாளய்யங்கார்

——————–

57. திருப்புட்குழி

சென்னையிலிருந்து வேலூர் சாலையில் அமைந்துள்ள இந்த பாலுசெட்டி சத்திரத்திலிருந்து நடந்தே செல்லலாம். சென்னையிலிருந்தும்
காஞ்சிபுரத்தில் இருந்தும் தற்போது ஏராளமான பேருந்துகள் உண்டு.

சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனையெதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்து பின்
ஜானகியைத் தேடி அவ்வழிழிழழிததததனதமனழிழிதமதமட்தமனதமழியில் வந்தஇராமனிடம் விவரங்களைத் தெரிவித்துவிட்டு உயிர் நீத்தார். ராமன் அவருக்கு மோட்சமளித்து தனது கரங்களால் அந்திமச் சடங்குகளை இங்கு (இத்தலத்தில்)
செய்வித்தார். எனவே இத்தலத்திற்கு திரு + புள் + குழி என்ற பெயருண்டாயிற்று (வட மொழியில் க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் எனப்படுகிறது)
இதே வரலாறுதான் புள்ளம் பூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது

மூலவர்-விஜயராகவப் பெருமாள். நான்கு புஜங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்– மரகதவல்லி (தனிக்கோவில்)
தீர்த்தம்- ஜடாயு தீர்த்தம்
விமானம்- விஜயகோடி விமானம்
காட்சி கண்டவர்கள்- ஜடாயு

ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்
புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸ்காரம் செய்யும் பாவணையில்
அமர்ந்துள்ளார். இந்த தாபத்தைத் தாங்க முடியாமல் இடம், வலமாகமாறி எழுந்தருளியுள்ளார்.

வலப்பக்கத்தே இருக்க வேண்டிய ஸ்ரீதேவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.
இங்கு பெருமாள் வெளியே புறப்பட்டு திருவீதி கண்டருளும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் உண்டு.
இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில் ஸமர புங்கவன் என்பது பெயர். இதைத்தான் போரேறு என்று தமிழ்படுத்தினார்
ஆழ்வார்.

இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் மடியில் (பெண்கள்) வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன்
அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும். இங்கு இது அனுபவரீதியாகக் காணப்படும் உண்மையாகும். இதனாற்றான்
இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்று பெயர் பிரசித்தம்.

இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும்
உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. (இராமானுஜரோடு எம்பாரும் இங்குதான் கற்றார்.]

நம்பிள்ளையாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும்.

இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும்
உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர்துறந்தானாம்.
இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் உத்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.

மால்வேழ்கு மரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழப் படையும் விட்டுப் போய்ப் – பாலன்
நெருப்புட்குழி குளிர நின்றதும் கேட்டதோர்
திருப்புட்குழி யமலன் சீர்” – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

——————

58. திருநின்றவூர்

திருமங்கையாழ்வார். திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டே வரும் போது இத்தலத்தின் வழியாகச் சென்றும் இதனைப் பாடாது சென்றார்.
இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை எழுப்பி உடனே சென்று ஒரு பாசுரம் பெற்றுவருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார்
திருவிடந்தை வந்து விட்டு, திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்) வந்து விட்டார்.

அப்போது எம்பெருமான் பாசுரங் கேட்டுவந்து நிற்பதைக் கண்ட திருமங்கையாழ்வார்.

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மலலை தலசயனத்தே-என்று மங்களா ஸாஸனம்

கண்ணமங்கைப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை
ஓரக் கண்ணால் கண்ட திருமங்கையாழ்வார் நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை என்று பெருமாளையும் அவர் காற்றினும் கடுகி வந்த வேகத்தைக்
குறிக்கு மாற்றான் “காற்றினைப் புனலை” என்று அவரது வேகத்தையும் குறித்து கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று அவரையும் சேர்த்து
மங்களாசாசனம் செய்தார்.

திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று

ஆதிசேடனைத் தாங்கியுள்ள ஸமுத்திர ராஜனுடன் கோபம் செய்து கொண்டு இவ்விடத்து வந்து நின்றதாகவும், பிறகு
ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகுண்டம் எழுந்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும்
திருமகள் மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் வந்து எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும்
தேவியை மீண்டும் இங்கே எழுந்தருள மனங்கனிய அருள வேண்டும் என வேண்டினான். பக்தர்க்கு
இரங்கும் பண்பினான பரந்தாமன் மீண்டும் ஸமுத்திர ராஜனைப் பிராட்டியிடம் அனுப்பி நீ முன்னால் செல், நான் பின்னால் வருகிறேன் என்று
சொல்லியனுப்ப அவ்வண்ணமே ஸமுத்திரராஜன் வந்து தன்னை மீண்டும் மன்னிக்குமாறு என்னை பெற்றதாயே என்றும் பலவாறு வேண்டியும் திருமகள்
சமாதானம் அடையவில்லை. அவ்வேளையில் எம்பெருமானும் அங்கு எழுந்தருளி சமாதானஞ் சொல்ல திருமகள் மீண்டும் வைகுந்தம் எழுந்தருள
சம்மதித்தார்.
இதுவரை ஜலத்திலேயே ஸமுத்திர ராஜனுக்கு காட்சி கொடுத்த எம்பெருமானும் பிராட்டியும் இப்போது முதன்முதலாக நிலத்திலும் காட்சி
கொடுத்ததால், ஸமுத்திர ராஜனைக் நோக்கி உனக்கு என்னவேண்டும் என்று கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து
அதேபோல் இங்கேயே நின்றிலங்கவேண்டும்மென்று வேண்ட அவ்வண்ணமே அருள் பாலித்தனர்.

பக்தனுக்காக அவன்பால் வாத்சல்யம் (பேரன்பு) ஏற்பட்டு தன்னைவிட்டுப் பிரிந்த தேவியை அழைத்துவர பக்தனுக்காகத் தான் புறப்பட்டு வந்ததால்
பெருமாளுக்கு இங்கு பக்தவத்ஸலன் என்பது திருநாமம். இவ்வாறு பக்தர்களின் உயிருக்குயிராய் விளங்குவதால் பத்தராவிப்பெருமாள் என்ற திருநாமமுண்டு-ஸமுத்திரராஜன் பிராட்டியை வேண்டும்பொழுது என்னைப் பெற்ற தாயல்லவா என்று சொல்லி தன்பிழை பொறுத்து வைகுண்டம் ‘மீளக் கேட்டுக் கொண்டதால் என்னைப் பெற்ற தாயார் என்பதே பிராட்டியின் திருநாமம் நன்னு கன்ன தல்லி’ என்பர் தெலுங்கில்.

மூலவர்-பக்தவத்சல பெருமாள். பத்தராவிப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்றிருந்த திருக்கோலம்.
தாயார்- என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி
தீர்த்தம்– வருண புஷ்கரணி
விமானம்- உத்பல விமானம்
காட்சி கண்டவர்கள்- ஸமுத்திர ராஜன், வருணன்.

திருமலை பெரிய திருப்பதி பெரிய ஜீயர் சுவாமிகளின் நிர்வாகத்திற்குட்பட்டது இந்த ஸ்தலம்.

பூந்தமல்லியில் (பூவிருந்த வல்லியில்) நாசரத்பேட்டையில் அனந்த நாராயண தீட்சிதர் பூமிநாச்சியார் என்னும் தம்பதியார் வாழ்ந்து வந்தனர்.
(இந்த பூமிநாச்சியார் இராமானுஜரின் பெரிய சகோதரி) இவர்கட்கு புத்திரப்பேறு இல்லை. புத்திரப்பேறு வேண்டி திருமலையாத்திரையை
மேற்கொண்டனர்.
யாத்திரையின்போது இத்தலத்திற்கு அருகில் உள்ள வருண புஷ்கரணியின் சமீபம் உள்ள ஏரிகாத்த ராமரின் ஆலயத்தில் தங்கினர்.
மானசீகமாக இப்பெருமானை வேண்டினர். (மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரிகாத்த ராமன் உள்ளன்)
அப்போது அவர்களின் கனவில் தோன்றிய ராமன் நீங்கள் புத்திரப்பேறு குறித்து திருமலை செல்லவேண்டாம். எம் அம்சமாக உங்கட்கு ஒரு புத்திரன்
பிறப்பான் என்றார். அவர்களும் அவ்வண்ணமே ஊருக்குத் திரும்ப அவர்கட்கு வைணவ சீலனாக ஒரு திருமகன் அவதரித்தான். அவர்தான்
முதலியாண்டான்.-இவருக்கு பூந்தமல்லியில் சன்னதி உண்டு.
இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே லட்சுமணன் அவதாரம் செய்தான். (ஆம் ராமானுஜராக வந்தது ஆதிசேடனன்றோ) தற்போது ராமபிரானின்
அம்சமாக முதலியாண்டார் அவதரித்தார்.
இவ்வாறு லட்சுமணன் முதலாவதாகவும் ராமன் இரண்டாவதாகவும் அவதாரம் செய்தது பகவத் அவதாரங்களிலேயே இதற்குமுன் ஒருமுறைதான்
நிகழ்ந்தது. அதுதான் ஸ்ரீகிருஷ்ணர் – பலராமர் அவதாரமாகும்.
இவர் (முதலியாண்டார்) பிற்காலத்தே இராமானுஜரின் பிரதம சீடராகத் திகழ்ந்தார். இராமானுஜருக்கு சாத்துமறை நடந்த மறுநாளில் இவருக்கு
சாத்துமறை நடக்கும். இவரது உபதேசங்களுள் மிகவும் முக்கியமானது மூன்று திவ்யங்கள் எனப்படும். அவை.
அ) எம்பெருமானின் தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போல்-ஆ) ஆழ்வார்களின் அருளிச் செயல் அம்ருத பானம் போல
இ) பிராட்டிக்கு ராவண பவனம் போல ஸ்ரீவைணவர்கட்கு ஸம்சாரம்.

சீரறிந்து தோழிமீர் சென்று கொணர்ந்தெனக்குப்
போரமுலை முகட்டிற் பூட்டுமினோ நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
நின்றவூர் நித்திலத்தை நீர்–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

—————–

59. திருவள்ளூர் (திரு எவ்வுள்)

கிரேதாயுகத்தில் புரு புண்ணியர் எனப் பெயர் கொண்ட அந்தணர் ஒருவர் தமது மனைவியுடன் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டிசாலியக்ஞம்
என்னும் பெயர் கொண்ட யாகம் தொடங்கி சாலி எனப்படும் நெல்மணிகளால் அந்த யாகத்தைச் செய்தார்.
யாகத்தின் முடிவில் யாக குண்டலியில் தோன்றின மகாவிஷ்ணு மஹாபுருஷரே உமது யாகத்தை மெச்சினோம் நீர் வேண்டின வரம்
கேளுமென்ன, புத்திர பாக்கியம் கருதியே யாம் இந்த யாகம் துவங்கியதாகவும், தமக்குப் புத்திரப் பேறு வேண்டுமென்றும் கேட்க அப்படியே உமக்குப்
புத்திரப் பேறு அளித்தோம், நீர் சாலியக்ஐம் செய்து புத்திரப்பேறு பெற்றபடியால் உமக்குப் பிறக்கும் புத்திரன் சாலிஹோத்ரன் என்ற பெயருடன்
பிரசித்தி பெற்றுத் திகழ்வான் என்று கூறியருளினார்.-அவ்வாறே பிறந்து வளர்ந்த சாலி ஹோத்ரரும் தக்க பருவமும்,
ஞானமும் எய்திய பிறகு தீர்த்த யாத்திரை தொடங்கினார். அவ்விதம் வருங்காலையில் எண்ணற்ற ரிஷிகள் தவமியற்றும்
வீட்சாரண்யம் எனப்படும் இவ்விடத்தையடைந்து இங்குள்ள ஹ்ருதத்த பாப நாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடிச் செல்வதைக் கண்டு
இந்த ஆரண்யத்தில் ஒரு குடில் அமைத்து நெடுங்காலம் பெரும் பக்திபூண்டு எம் பெருமானிடம் பக்தி செலுத்திப் போது போக்கி வந்தார்.

இவ்வாறு தினந்தோறும் இவர் மிகுந்த ஈடுபாட்டுடன் பூஜை செய்து வருகையில் எப்போதும் போல் ஓர்நாள் அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு
அமுது படைத்து யாராயினும் அதிதி வருவார்களா என்று காத்திருந்தார். இந்த விரதத்தைப் பன்னெடுங்காலம் விடாது பின்பற்றி வந்தார் சாலி
ஹோத்ரர்.-இந்நிலையில் அதிதியை எதிர்பார்த்திருந்த அந்நாளில் இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் தானே ஒரு முதியவர் ரூபத்தில் வந்து கேட்க தாம் வைத்திருந்த மாவில் பாதியைக் கொடுத்தார் சாலிஹோத்திரர். அதை உண்ட பின்பும் தமது பசியடங்கவில்லையென்று முதியவர் கேட்க தனக்கு
வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் உண்ட மயக்கால் மிக்க களைப்பாயுள்ளது, படுக்கச் சற்று இடம்
வேண்டும் எங்கு படுக்கலாமென்று கேட்க சாலி ஹோத்ரர் தமது பர்ணக சாலையைக் காட்டி இவ்வுள் தேவரிருடையதே இங்கு சயனிக்கலாம். என்று
சொல்ல, தனது கிழச் சொரூபத்தை மாற்றிய எம்பெருமான் தெற்கே திருமுகம் வத்துச் சயனித்தார். ஒன்றுமே புரியாத சாலிஹோத்தரர் தாம் செய்த
பாக்கியத்தை எண்ணி எம்பெருமானைப் பணிந்து நிற்க தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை
ஆசீர்வதித்து என்ன வரம் வேண்டுமென்று கேட்க, இதே திருக்கோலத்தில் எம் பெருமான் இவ்விடத்திலேயிருந்து அருள்பாலிக்க வேண்டுமென சாலி
ஹோத்ர முனிவர் வேண்ட எம் பெருமான் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியும் அதற்கிசைந்து அவ்வண்ணமே சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி
காட்சியளித்தார். உடனே விஜயகோடி விமானத்துடன் இத்தலம் உருப்பெற்றது.

எம்பெருமான் தாமே வந்து முனிவரிடம் கிங்கிருஹம் ‘படுக்க எவ்வுள்’ எங்குற்றதெனக் கேட்டதால் வடமொழியில் கிங்கிருஹரபுரமென்றும் தமிழில்
எவ்வுள்ளூர் என்று மாயிற்று. எம்பெருமானுக்கும் கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான் என்னும் திருநாமமாயிற்று.

மூலவர்–வீரராகவப் பெருமாள், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
தாயார்- கனக வல்லி (வஸு மதி தேவி)
உற்சவர்- மூலவருக்குரைத்ததே
விமானம்– விஜயகோடி விமானம்
தீர்த்தம்- ஹ்ருத்தபாப நாசினி
காட்சி கண்டவர்கள்– சாலிஹோத்ர முனிவர் (மது, கைடபன்)

இச்ஷேத்திரத்திற்கு வீச்சாரண்யச் ஷேத்ரம் என்றும் இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால்
புண்யாவார்த்த ஷேத்ரமென்றும் எவ்வுள்ளுர் என்றும் இத்தலத்திற்குப் பல திருநாமங்களமைகின்றன.
சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலெட்சுமி வஸு மதி என்ற பெயரில்
தர்மசேன புரம் என்னும் நாட்டையாண்ட திலிப மகாராஜாவுக்குப் புத்திரியாக அவதரித்து வாழ, இவ்வெம்பெருமான் வீரநாராயணன் என்ற திருப்பெயருடன்
வேட்டைக்குச் செல்ல, தேவியைக் கண்டு மணமுடித்ததாக வரலாறு. கனகவல்லித் தாயார் என்றும் திருநாமம் உண்டு. அதற்கு முன் கிங்கிருஹேசன்
(எவ்வுள் கிடந்தான்) என்பதே பிரதானம். இங்கு கனகவல்லித் தாயாருக்குத் தனிச் சன்னதி உண்டு.

‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனேபோற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதிநல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர்வாழ் வீரராகவனே போற்றி–வடலூர் இராமலிங்க அடிகளார் -திருப்பஞ்சகத்தில் ஒரு பாசுரம்

இப்பெருமானுக்கு வைத்திய வீரராகவன் என்னும் சிறப்புத் திருநாமமுண்டு.

இவ்விடம் வந்து சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு. இன்றும் தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
திரிசித்தபடி ருத்ரன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.

மது கைடபன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகஸ்யத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலை
வேண்ட பயங்கர ரூபங்கொண்ட இவ்விருவரையும் திருமால் துவம்சம்ப்படுத்தினார். அவர்கள் தமது பராக்கிரமத்தால் சூர்ய சந்திரர்களின்
ஒளியையும் மறைத்து உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ அதன்முன் நிற்க முடியாமல் இருவரும்
ஓடியொழிந்தார்கள். (இக்கதை பாண்டிநாட்டு திருப்பதிகளுள் ஒன்றான வானமாமலை என்னும் திருச்சீரிவரமங்கை ஸ்தலத்திற்கும் சொல்லப்பட்டுள்ளது)

அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் உற்ருத்த பாப நாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். தாம்
கிடப்பதற்கு உள் ஆதி இருந்த இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினந்தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.

பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில்தேவ பாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் மார்க்கண்டேய முனிவரையணுகி சகல
பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும் மோட்சத்தையும் தரக் கூடிய பெருமாள் எழுந்தருளியுள்ள ஸ்தலம் யாதென வினவ அவர் தேவபாகரை
இத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறி இங்கு ஆற்றுப்படுத்தியதாகவும் புராணங்கூறும்.

கௌசிகன் என்னும் அந்தணன் ஒருவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராட யாத்திரை புறப்பட்டு நெடுங்காலம் அவ்விதமே திரிந்து
தண்டகாரண்யத்தின் மத்திய பிரதேசத்தை அடைந்தான். அங்கு உணவின்றி வாடி பசியால் மிக்க களைப்புற்றுச் சோர்ந்துபோனபோது அவ்வழியே சென்ற
சண்டாளன் ஒருவனைக் கண்டு அவனிடம் தனக்கு உணவளிக்குமாறு வேண்டினான். இப்பிராமணனின் முகத்திலிருந்த ஒளியைக் கண்ட அவன் தன்
தோள் மீது ஏற்றிச் சென்று கௌசிகனுக்கு உணவளித்தான். அயர்ந்து தூங்கிய கௌசிகனுக்குப் பணவிடைகள் செய்யுமாறு தன் புத்திரியை அனுப்பினான்.அவளது பணிவிடைகளில் தன்நிலை மறந்த கௌசிகன் பலகாலம் அவளுடனே தங்கியிருந்து இன்புற்றிருந்தான்.
பிறகு ஒரு நாள் தன் நிலையுணர்ந்த கௌசிகன் மீண்டும் தீர்த்த யாத்திரை தொடங்கி தனது கிழப்பருவ நிலையில் இங்குள்ள ஹ்ருத்த பாப
நாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தெய்வாதீனமாய்த் தைஅமாவாசையாயிற்று. இவனை யமலோகத்திற்கு இட்டுச் சென்ற யமதூதர்கள்
இவன் பாபச் செயல்களின் பொருட்டே இவனை இங்கு கொணர்ந்தோம் எனக் கூறினார். இதைக் கேட்டு நகைத்த எமன் இவன் தை அமாவாசையன்று
ஹ்ருத்த பாப நாசினியிலில் நீராடியதால் இவனுக்கு பாபங்களே இல்லை.இவனை மோட்சவாயிலில் கொண்டு சென்றுவிட்டுவாருங்கள் என்று
உத்திரவிட்டான்.

நீர்மை கெட வைதாரும் நின்னோடெதிர்த்தாரும்
சீர்மை பெற நின்னடிக்கீழ் சேர்கையினால் நேர்மையிலா
யெவுள்ளத் தனேன் செய்கையை பொறுத்தருளி
யைவ்வுள்ளத்தனே நீ யிரங்கு—  நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

————

60. திருவல்லிக்கேணி

பிருந்தம் என்றால் துளசி.-ஆரண்யம் என்றால் காடு. எனவே பிருந்தாரண்யம் துளசி வனம் என்று-பொருள் கொள்ளப்படும்.

சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப்பெருமாளை வழிபட்டு அர்ஜு னனுக்கு தேரோட்டிய கண்ணனாக பெருமாளைக் காண
விழைவதாக எண்ணி தவத்திலிருக்க அப்போதே ஸ்ரீனிவாசன் அசரீராய் நீ விரும்பிய தோற்றத்துடன் கைரவணி தீர்த்தங்கொண்ட பிருந்தாரண்யத்தில்
எழுந்தருளினேன் அங்கு சென்று தரிசிப்பாயாக என்று கூற, சுமதியும் அவ்வாறு செய்தான் என்பது வரலாறு.

ஆனால் இந்த பிருந்தாரண்யத்துக்கு எப்போது பெருமாள் அவ்விதம் வந்தாரென்னில் வேத வியாசருக்கு ஆத்திரேய முனிவர் என்னும் ஒரு சீடரிருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி பிருந்தாரண்யத்திற்குத் தவம் செய்ய வந்தபோது அவரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகமொன்றையுங் கொண்டு வந்தார். அவ்விக்கிரகம் ஒரு கையில் சங்கேந்தியதாயும் மறு கையில் தான் முத்திரையுடையதாயும் (தன் திருவடியில் சரணம் அடைய அருள்புரிதல்) இலங்கியிருந்தது.

பிருந்தாரண்யம் வந்த ஆத்திரேய முனிவர் அங்கு சுமதி என்ற முனிவரைக் கண்டு (சுமதி மன்னர்வேறு) மகிழ்ந்து தம் வருகையைக் கூற
இருவரும் அப்பெருமானை அங்கேயே பிரதிட்டை செய்து வழிபடலாயினர்.
வலப்புறம் ருக்குமணியையும் இடப்புறம் சாத்தியாகியையும் நிறுவி வழிபட்டு அவ்விருவரும் மோட்ச உலகுபெற்றனர்.

இக்கோலத்தையே கண்டு வழிபடுமாறு ஏழுமலையான் கட்டளையிட சுமதி மன்னனும் அவ்விதமே வழி பாடியியற்றினான். வேங்கடவனால்
காட்டப்பட்டதால் வேங்கட கிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று.

மூலவர்- வேங்கட கிருஷ்ணன் ருக்குமணி பிராட்டியுடன் பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யுமனன் இவர்களோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்– பார்த்தசாரதி
தாயார்– வேதவல்லி
விமானம்– ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம்.
தீர்த்தம்– கைரவிணி (அல்லிக்கேணி) இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்னி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீஹம்.
கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை அவ்வளவு புனிதமானது இந்த தீர்த்தம். பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள்– சுமதி ராஜன், பிருகு மகரிஷி, மதுமான் மகரிஷி, சப்தரோமர் அத்திரி மகரிஷி, ஜாஜலி மகரிஷி

அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக இத்தலத்தது எழுந்தருளினார்.

மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமனாக இத்தலத்து எழுந்தருளினார். சீதை, இலக்குவன்,
பரத சத்ருக்கணரும் பின் தொடர்ந்தனர்.

சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்குகந்து கஜேந்திரவரதர் கோலத்தில் இங்கு காட்சி தந்தார்.

சுமதி என்னும் மன்னனின் விருப்பதிற்கிசைந்து வேங்கட கிருஷ்ணனாய் அவதாரம் செய்தார்.

திருமாலுடன் ஊடல் கொண்ட திருமகள் வைகுண்டத்தை விட்டுப் பிரிந்து இவ்விடத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த பிருகு மகரிஷியின்
குடிசைக்கருகில் குழந்தையாய் உருவாகி நிற்க, வேதங்களில் கூறப்பட்ட தேவமகள் இவளேயென உணர்ந்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவர
தக்க பருவம் வந்ததும், ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளை ஏற்றுக்கொண்டார். திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே மந்நாதர் (என்
கணவர்) என்றுரைத்ததால் மந்நாதர் என்ற பெயரும் உண்டு.- எனவே திருமணக் கோலத்திலான ரங்கநாதராக (மந்நாதர்) இத்தலத்து எழுந்தருளினார்

இவ்விதம் ஐந்து மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியிருப்பது. இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

திரிந்துழலும் சிந்தைதனிச் செல்வே நிறுத்திப்
பரிந்து புகன்மின் புகன்றால் – மருந்தாங்
கருவல்லிக் கேணியாம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக் கேணியான் சீர்–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

—————-

61. திருநீர்மலை

இந்த தலம் அமைந்துள்ள பகுதியை காண்டவனம் என்றும், இத்தலம் அமைந்துள்ள மலையினை தோயத்தரி என்றும் புராணம் செப்புகிறது.

இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. இங்குவந்த வால்மீகி மலைமீதேறி சயனத் திருக்கோல
அரங்கன் அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே இறங்கலானார்.
ஏனோ தெரியவில்லை. இம்மூவரைச் சேவித்தும் வால்மீகிக்கு பூரண திருப்தியுண்டாகவில்லை. உள்மனதை ஏதோ வருடியது போல இருந்தது. கீழே
இறங்கியதும் கீழ்த்திசை நோக்கி கரங்களை குவித்த வால்மீகி என் பிரிய ராமன் இங்கு இல்லை. ரமனியமான ராமபிரானே எங்கே உன் பேரழகுத்
திருவுருவம் என்று ராமனைப் பிரிந்த நெஞ்சு வேகுவதுபோல நீர்மல்கப் பிரார்த்தித்து நின்றார்.

அந்தர்யாமியான பரஸ்வரூப நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு இரங்கினார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்கள் மூலமாகவே வால்மீகிக்கு
காட்சியளித்தார். அதாவது இங்குள்ள ரெங்கநாதனே ராமனாகவும், லட்சுமிதேவியே ஜானகியாகவும், ஆதிசேடன் இலக்குமணனாகவும் சங்குச்சக்கரங்கள்
சத்ருக்கனர், பரதராகவும், விஸ்வக்சேனர் சுக்ரீவனாகவும் கருடன் ஆஞ்சநேயராகவும், ரம்மியமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து
வால்மீகியின் கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம்
ராமனின் பேரழகில் அதாவது நீர்வண்ணனாக ராமன் காட்சி அளித்த தோற்றப் பொலிவை கண்டு மயங்கி நின்ற வால்மீகி இதே திருக்கோலத்தை
எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்று வேண்டி நிற்க அவ்வண்ணமே ஆயிற்றென்பது வரலாறு. தாமரை மலர் பீடத்தில் அஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பை சாளக்கிராம மாலை அலங்கரிக்க நீர்வண்ண ரூபத்தில் இங்குகாட்சி தருகிறார்.

இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய வந்தபோது தொடர்மழை பெய்து அடைமழையாக மாறி மலையைச் சுற்றிலும்
அரண்போல் நீர் சூழ்ந்துகொண்டது. திருமங்கையால் பெருமாளைத் தரிசிக்கமுடியவில்லை. ஒன்றிரண்டு நான்கைந்து ஆறேழுவென நாட்கள் கடந்து

வாரங்களாகி மாதங்களுக்குள் ஐக்கியமாகிவிட்டது. என்ன நேர்ந்தாலும் சரி எத்தனை மாதங்களாயினும் சரி இப்பெருமானைச் சேவிக்காது
செல்வதில்லையென முடிவு செய்துவிட்டார்.-அர்ச்சாவதாரத்தில் அவருக்குள்ள ஈடுபாட்டிற்கு எல்லை காட்ட முடியுமா.

கடல் நீர் கண்டு களிக்க முடியுமேயன்றி உண்டு உய்ய முடியாது. ஆற்று நிரோவெனில் வற்றும், பெருகும். அதன் மருங்கேயே காலம் முழுவதும்
வாழ்தலுமரிது. குளங்குட்டைகளில் உள்ள நீரெனில் பருவகாலம் முடிந்ததும் வற்றி போகும். அடுத்த பருவத்திற்கு அவை காத்து நிற்கும். ஊற்று நீரெனில்
எங்கு ஊற்றுள்ளது என்று தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் நன்னீர் ஊற்றாக அமையுமென சொல்ல முடியாதே. கிணற்று நீரென்றால்
வேண்டும். போதெல்லாம் முகந்து கொள்ளலாமே. கிணற்றில் நீர் வற்றினும் ஆழப்படுத்திக் கொள்ளலாமே. அதுபோன்றதல்லவா எம்பெருமானின்
நிலைகள். அதாவது கடல்நீர் போன்றதே பரம். ஆற்றுநீர் போன்றதே வ்யூகம். குளத்து நீர் போன்றதே விபவம் ஊற்று நீர் போன்றது அந்தர்யாமித்வம்.
கிணற்று நீர் போன்றதல்லவா அர்ச்சாவதாரம்.
வேண்டிய பொழுதெல்லாம் சேவித்து ஆத்மதாகம் தீர்க்கப் பெறலாமே. எம்பெருமான் கோபமாக இருந்தால் கூட பக்தி யென்னும் கயிற்றால் கட்டி
இழுத்து விடலாமே.
(அர்ச்சாவதாரமான அதிபோக்யமான வஸ்து நமக்கு எளிதில் கிடைத்திருக்க, அதைவிட்டு கிட்டுதற்கரிய பரஸ்வ ரூபத்தை ஏன் அனுபவிக்கத்
துடிக்க வேண்டும்)
“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” அப்பேர்ப்பட்ட அர்ச்சாவதார மூர்த்தியை நீர் சூழ்ந்து விட்டால் மட்டும் சேவிக்காது சென்று
விடலாமா என்று எண்ணி அங்கேயே தங்கி இருந்தார். தங்கியிருந்தார் 6 மாத காலம். பிறகு நீர்வற்றிப் போன பின்பு பெருமாளைக் கண்குளிரக் கண்டு
பாக்களை மங்களாசாசனமாய் பொழிந்தார்.
திருமங்கையாழ்வார் வந்தபோது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் திருநீர்மலை என்றாயிற்று. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள் என்றும்,
காண்டபவன நாதன் என்னும் பெயர்களே வழக்கிலிருந்ததாக அறிய முடிகிறது.

சர்வேஸ்வரனின் மாயையே காண்டவ வனமாக ஏற்பட்டதால் உலகத்தில் மாயையில் சிக்கியிருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இத்தலத்தில் பெருமாளை
சேவித்துக் கடைத்தேறுகின்றன.
தோயம் என்ற சொல்லுக்கு பால் என்பது பொருள். ஒரு காலத்தில் இம்மலை நீர்மலையாக விளங்கப்போகிறது என்பதாலோ என்னவோ
முதலிலேயே தோயாத்ரி என்றும் பெயர் ஏற்பட்டுவிட்டது.

1. மலைஅடிவாரக் கோவில்
மூலவர்- நீர் வண்ணன், நீலமுகில் வண்ணன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்– அணிமாமலர் மங்கை தனிக்கோவில் நாச்சியார்

2. மலைமேல் உள்ள கோவில்கள்
மூலவர்– சாந்த நரசிம்மன் அமர்ந்த திருக்கோலம் பிராட்டியை இதயத்தில் ஏற்றுள்ளார்.
ரங்கநாதன் சயன திருக்கோலம்
திரிவிக்ரமன் (நடந்த மற்றும்) நின்ற திருக்கோலம்
தீர்த்தம்– மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி ஸவர்ண புஷ்கரணி.
விமானம்– தோயகிரி விமானம்
காட்சி கண்டவர்கள்– தொண்டைமான், வால்மீகி.

இங்கு இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் ஏகும் முன்

திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த மந்திரகிரி என்னும் ஊர் இங்கிருந்து சமீப
தொலைவில் உள்ளது.உள்ள சீத்தா ராமனாக திருமணக் கோலத்தில் காட்சி

இரங்கு முயிரனைத்து மின்னருளால் காப்பான்
அரங்க னொருவனுமேயாதல் – கரங்களால்
போர்மலை வான் வந்த புகழ்வாணன் காட்டினான்
நீந்மலை வா ழெந்தையெதிர் நின்று–நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி

——

62. திருவிடவெந்தை (திருவடந்தை)

இத்தலத்தைப்பற்றி வராஹ புராணத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர் கௌசிக ரிஷிக்கு கூறியதாக உள்ளது.

முன்னொரு யுகத்தில் (கிரேதா) மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக செங்கோலோச்சி வந்தான்.
அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான்.
அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.
அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து தேவர்கள்
தலைவன் திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து மோட்சம் நல்கி
சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.

இஃதிவ்வாறிருக்க சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே சுவர்க்கம்
செல்ல எண்ணி தவஞ்செய்யுங்காலை, நாரதர் வந்து, நீ மணமாகாதவள் மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது என்று சொல்லி, அங்கு
தவஞ்செய்துகொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம் இப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நாரதர் வேண்டினார்.
அம்முனிவர்களுள் காலவரிஷி என்பார் அப்பெண்ணைத் திருமணஞ்செய்துகொண்டு ஓராண்டில் 360 கன்னிகைகளை (பெரிய
பிராட்டியார் அம்சமாக) பெற்றார். இவ்விதம் 360 கன்னிகைகள் தமக்குப் பிறந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் இது இறைவன் செயலே
என்று எண்ணி அத்தனைபேரையும் கிருஷ்ணார்ப்பணம் என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட தமக்குள் தீர்மானித்திருந்தார்.
பருவமடைந்த இவர்களை திருமணஞ்செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சரஸ்வதியில் தீர்த்தாடனம் செய்ய வடதேச
யாத்திரை சென்ற சிலர் இவ்விபரந் தெரிந்து காலவரிஷியை அணுகி தமது நாடாகிய வாமகவிபுரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள
வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி யென்றும், தெய்வத்தால்தான் இக்காரியம் நடக்க வேண்டுமென்று சொல்ல அவரும் இசைந்து இங்குவந்த
வராஹமூர்த்தியைக் கருதி கடுந்தவஞ் செய்து வரலாயினார்.
இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரை அணுகி தான் திவ்யதேச யாத்திரையாக வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து தனது பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை
முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் திருமணம்
செய்து கொண்டார்.
கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது
இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன
படியால் திரு+இட+எந்தை திருவிட வெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை ஆயிற்று.

மூலவர்–லட்சுமி வராஹப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்- நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார்– கோமளவல்லி நாச்சியார்
தீர்த்தம்– வராஹதீர்த்தம், கல்யாண தீர்த்தம்
விமானம்– கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்– பலி, காலவ ரிஷி

இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான்.
இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக
மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
இக்கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையின் ஓர்பால் அமைந்துள்ளது. இப்பெருமானைக்கூட திருமங்கையாழ்வார்
மங்களாசாசனம் செய்துள்ளார்.
360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு.
தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும்
பெயராயிற்று. வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு.அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு நான்கு பெயர்கள் உண்டு.
360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.
இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதே திருநாமம்
நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவ்விருவர் திருமேனியில் (முகத்தில்) தாடையில் பொட்டு இயற்கையாகவே
அமைந்திருப்பது கண்கூடு. இந்தப் பொட்டு திருமகள் திருமண வைபவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும்.

இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும் அவன் பத்தினியான
இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ
மூர்த்தியாய் நின்றிலங்குகிறார்.

கி.பி. 1052 ஆம் ஆண்டில் விஜய ராஜேந்திர தேவ சோழனின் 35வது ஆட்சியாண்டில் இக்கிராமம் இப்பெருமாளுக்கே தேவதானமாய்த் தரப்பட்ட
செய்தியை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து கலியாண திருவிடவெந்தை தேவர்க்கு நித்திய சிறப்புக்கும்… நாம் பிறந்த பூர நாளால் திங்கள் தோறும்
திருவிழா உள்ளிட்டு வேண்டும் நிபந்தனைகளுக்கும்.. யாண்டு முப்பத்தைந்தாவது முதல் தேவதான இறையிலியாக … கொடுக்க
வென்று திருவாய் மொழிந்தருளினாரென்று திருவோலை கூறுகிறது.

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம்
என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி. (தனிக் கோவில்
நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர்
திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக
அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம் நாயகி போன்றும் எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை
ஈண்டு நோக்கத்தக்கது)

நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்துக்
கொன்று திரியும் கொடுவினையார் – இன்று
வெருவிட வெந்தைக்கே விழுமிய தொண்டானேன்
திருவிட வெந்தகைக்கே செறிந்து.-பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

————–

63. திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்)

இந்த தேசம் பல்லவ மன்னர்களின் வரலாற்றோடு மண்டிக் கிடக்கிறது. பாகவத புராணத்தில் புண்டரீக மஹரிஷியின் வரலாற்றைச்
சொல்லி வரும்போது இத்தல வரலாறு இணைந்து வருகிறது.
இந்த முனிவர் தாமரஸ புஷ்பங்களைக் கொண்டு சஷீராப்தி நாதனை (திருப்பாற் கடலில் எம்பெருமான் பள்ளி கொண்ட கோலத்தை) வழிபட
எண்ணி ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை
அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர ஜெலத்தைக் கைகளால் இறைத்து விடலாமென இறைக்க ஆரம்பித்தார்.

இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் இவர்படும் துயரைப் போக்க காட்சி கொடுக்க எண்ணியவராய் ஒரு முதியவர் வேடங்கொண்டு இவரிடம்
வந்து அருந்துவதற்கு ஆகாரம் கேட்க, அந்த நிலையிலும் அவருக்கு ஆகாரம் கொடுக்க எண்ணிய ரிஷி தாம் கொண்டுவந்த மலர்க்கூடையை
அவரிடம் கொடுத்து இதை வைத்துக்கொண்டிரும். யாம் சென்று ஆகாரம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிச் செல்ல, அவர் ஆகாரம் கொண்டு
வருவதற்குள் எம்பெருமான் மாமல்லைக்கடலில் ரிஷியால் கொணரப்பட்ட பூக்களையெல்லாம் சூடிக்கொண்டு ஆதிசேடன் மேல் சயனித்திருக்கும்
திருக்கோலத்தில் சேவை சாதிக்க இதைக் கண்டு பேரானந்தமுற்ற ரிஷி எம்பெருமானின் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தமக்கு வேண்டுமென்று
கேட்க பெருமானும் அவ்வாறே அருளினார்.

இவ்விதம் அந்த ஸ்தலத்திலேயே சயன திருக்கோலத்தில் காட்சி யருளியமையால் தலசயனப்பெருமாள் என்னும் திருநாமம் உண்டாயிற்றென்பர்.
தற்போதுள்ள கோவிலும் வெறுந்தரையிலே (ஆதிசேடன் மீது) எம்பெருமான் சயனித்திருக்க புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார்.

மூலவர்–ஸ்தல சயனப் பெருமாள். புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
உற்சவர்– உலகுய்ய நின்றான்
தாயார்– நிலமங்கைத் தாயார், தனிக்கோயில் நாச்சியார்
தீர்த்தம்– புண்டரீக புஷ்கரணி கருட நதி
காட்சி கண்டவர்கள்– புண்டரீக மஹரிஷி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இது மிகச் சிறந்த கடற்கரை நகரமாகவும், பெரிய துறைமுகமாகவும், பன்னாட்டு வணிகர்களும்
வந்து குழுமி பண்டமாற்று செய்துகொள்ளும் மிகப்பெரிய வாணிகத்தலமாகவும் விளங்கியது. கி.பி. முதல் நூற்றாண்டில் பெரிப்பளசு தமது நூலில்
இவ்வூரினையும் பாண்டிச்சேரியையும் பற்றி குறிக்கிறார். இங்கு கிரேக்கர்கள். ரோமானியர்கள். கோணகர்களின் வாணிகக் கப்பல்கள் நிதிக் குவியலோடு
வந்து நம் நாட்டு பொருட்களையும், யானைகளையும் ஏற்றிச் சென்றனர்.
எண்ணற்றக் கப்பல்கள் வந்தும், போய்க் கொண்டும் கடலில் ஓவியக் காட்சிகளைத் தீட்டிக் கொண்டிருந்தன

சங்க காலத் தொகை நூலான பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மீது உருத்திரங் கண்ணனார் என்பார் பாடிய பாடலில் இந்த
மாமல்லபுரம் குறிக்கப்படுகிறது. அந்தக் காலத்திலேயே (நீர்ப்பாயல் (சலசயனம்) சலசயனம் என்று குறிக்கப்பட்டுவிட்டது)

வண்டல் ஆயமொடு உள்துறை தலைஇப்
புனல் ஆடும் மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்தென
புள்ஆர் பெண்ணை புலம்பு மடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி – என்ற பாடலில்
நீர்ப்பெயற்ற- நீர்ப்பாயற்று – நீர்ப்பாயலை உடையது (நீர்ப்பாயல்-சலசயனம் என்னும் கோயிலேயாகுமென) ஆராய்ச்சியாளர் குறித்துச் சென்றுள்ளனர்.
சங்க காலத்திலேயே சலசயனம் என்னும் சொல் அக்கால தமிழ்ச்சொல்லான நீர்ப்பாயல் என்றே குறிக்கப்படுவதிலிருந்து இதன் தொன்மை விளங்கும்.
சங்க காலத்தில் மட்டுமல்ல ஆழ்வாரும் இதே நீர்ப்பாயல் என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

தூயனாயு மன்றியும் சு ரும்புலாவு தண்டுழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்து மீதெல்லாம்
நீயுநின் குறிப்பினிற் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேயவேலை வண்ணனே

இங்குள்ள ஆதிவராகர் கோவில், மும்மூர்த்தி மண்டபம், பாண்டவர் ரதங்கள், அர்ஜூனன் தவம், கண்ணபிரானின் கவின்மிகு லீலா விநோதக்
காட்சிகள், தசாவதாரக் காட்சிகள், இராமானுஜர் மண்டபம், திரௌபதி தேர், திருமாலின் சயன திருக்கோலங்கள் நின்ற, அமர்ந்த திருக்கோலங்கள் என்று
எங்கு காணினும் விஷ்ணுவின் காட்சிகளும், இலட்சினைகளும், வைணவம்எத்துனை யாழமாக வேரூன்றி தழைத்துப் பரவி விரவியிருந்ததை எண்ணிப்
பார்க்கும்போது நெஞ்சு விம்முகிறது.
பல்லவ மன்னர்கள் வைணவர்கள், வைணவம் பரப்பும் வீரர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர். இங்கு சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது
பக்தியின் அடையாளமாக ஆதிவராகர் குகைக் கோவில் அமைத்தான். இக்கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீசிம்மவிஷ்ணு போத்தாதி ராஜன் என்று பல்லவ
கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சிம்ம விஷ்ணுவுக்கு எதிரே அவனது மகன் மகேந்திர வர்மனுக்கும் இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள வராக மண்டபம் மும்மூர்த்தி மண்டபம் போன்றன சிம்ம விஷ்ணுவால் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னர்கள் தங்களுக்கு தூய
வைணவ பெயர்களையே வைத்துக்கொண்டனர் என்பதற்கு இதுவே சான்று.

ஆதிவராக மண்டபம் என்றும் ஒரு மண்டபம் இங்குள்ளது. இது இங்குள்ள மகிசாசுர மர்த்தினிக் குகையிலிருந்து தெற்கே உள்ளது. குகை
மேற்கு நோக்கிய அமைப்பு. இதன் நடுவில் உள்ள கருவறையில் வராக மூர்த்தி உள்ளார்.

கல்வெட்டுக்களில் இக்கோவில் (ஆதிவராக மண்டபம்) பரமேச்சுர மகா வராஹ விஷ்ணுக் கிரஹம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. திருமாலின் 10
அவதாரங்களைக் குறிக்கும் கல்வெட்டும் இங்குள்ளது.

ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகவும் அவைகள் கடல் கோளால் அழிக்கப்பட்டுவிட்டன வென்றும் அப்போது இந்நகரத்திற்கு 7
கோயில் நகரம் என்னும் பெயர் விளங்கியதாகவும் அறிய முடிகிறது. இதன்பின் பல்லவ மன்னன் ராஜ சிம்மன் காலத்தில் கடற்கரையில் 3 கோவில்கள்
எழுப்பப்பட்டன. இக்கோயில்களின் அமைப்பைக் கண்டு சோழமன்னன் ராஜராஜ சோழன் வியந்து போற்றியுள்ளான். இதிலும் 2 கோவில்கள் கடல்
வெள்ளத்தில் அழிந்து விட்டன. அக்கோயில் குறித்து இரண்டு பலி பீடங்களும்ஒரு கொடி மரமும் இன்றும் இருக்கின்றன. அழியாத ஒரு கோவில் இன்றும்
கடல்வயப்பட்டே உள்ளது. சுற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டு கடல் அலைகள் கோவிலின் மதிற்சுவர்களில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான்
சலசயனப் பெருமாளாகக் கொள்ளும் ஒரு கருத்தும் உண்டு. இந்தக் கோவிலில் தற்போது திருவாராதன வழிபாடுகள் இல்லை. இப்பெருமானைச் சேவிக்கும் போது இக்கோவில் அமைந்துள்ள சூழ்நிலையும் அலைமுழங்கும் திருப்பாற்கடல் நாதனையே சேவிக்கும் உணர்வைத் தரும்.

கடலுக்குள் அமிழ்ந்த கோவிலில் இருந்த பெருமாளைக் கொணர்ந்து கடற்கரைக்குச் சற்றுத் தொலைவில் ஊருக்குள் அமைத்துள்ளனர். இங்கு பள்ளி
கொண்ட நிலையில் உள்ள பெருமாளுக்கே ஸ்தல சயனத் துறைவார் என்பது திருநாமம். இக்கோவில் தான் மங்களாசாசனம் செய்யப்படட திவ்யதேசமாகும். இதுதான் தல சயனமாகும்.
சிலர் இரண்டு கோவில்களும் (அதாவது சலசயனம், தல சயனம்) மங்களாசாசனம் என்று கூறுவர்.

இருப்பினும் தற்போது பெயர் பெற்றிருப்பது ஊருக்குள் அமைந்திருக்கும் தலசயனப் பெருமாள் கோவில் மட்டுமே.

இங்கு ஸ்தல சயனப்பெருமாள் கோவில் அமைவதற்கு முன்பே சுமார் ஒரு யுகத்திற்கு முன்பிருந்தே ஆதிவராஹப் பெருமாள் கோவில் என்று ஒரு
கோவில் இருந்தது. இப்போதும் அந்தத் தலம் இங்குள்ள கலங்கரைவிளக்கத்திற்குச் செல்லும் பாதையின் ஓர் பால் அமைந்துள்ளது.
ஏனத்துருவில் என்று திருமங்கையாழ்வார் இந்தப் பெருமாளையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.-பிராட்டியின் பெயரான நிலமங்கை நாச்சியார் என்பதையும் திருமங்கையாழ்வார் இப்பாடலில் குறித்துள்ளார்.

கடற்கரைக் கோவிலின் மூலவர் தலசயனத் துறைவார். உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான் என்பதாகும். இங்கு உற்சவர் தம் கையில் ஒரு
சிறு தாமரை மொக்குடன் திகழ்கிறார் இதை அவரே மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாகவும் ஐதீஹம். பார்ப்பதற்கு மிக்க ரம்மியமானவர் இவர். கையில்
தாமரை மொட்டுடன் இருக்கும் உற்சவர் 108இல் இவர் ஒருவர்தான்.
பல்லவ மன்னர்கள் கலைத்தாய்க்குச் சிற்பக் கலையை காணிக்கையாக அர்ப்பணித்த இவ்விடத்திற்கு அர்த்த சேது என்றும் ஒரு பெயரும் உண்டு.
இப்போதுள்ள கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லையென்றும், அக்கோவில் கடலுக்குள் மூழ்கிவிட்டதென்றும்,
கடலுள் கிடந்த இக்கருமாணிக்கம் (பெருமாள்) தன் பக்தரின் கனவில் தான் இருப்பதை யுணர்த்த அந்த திவ்ய விக்ரஹத்தை எடுத்துவந்து இப்போதுள்ள
இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும் மரபுவழிக் கதைகள் உள்ளன.

இப்பெருமாள் (ஏனப்பிரான்) வலது திருக்கரத்தை தமது திருமார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்து ஞானத்தமிழ் புரிந்த நான் என்பதை
விளக்குகிறார்.

செறிந்த பனைபறித்துத் திண் களிற்றை சாடி
முறிந்து விழப் பாகனையு மோதி – யெறிந்து
தருக்கடன் மல்லைக் குமைத்தான் தஞ்சமென் நெஞ்சே
திருக்கடன் மல்லைக்குள் திரி.–பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

—————

64. சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை

இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணமும் பாத்ம புராணமும் துணுக்குத் துணுக்குத் தகவல்கள் தருகின்றன.

சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டின நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டுமென்ற ஆவலால்
இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர். அவர்கள் ஏன் இம்மலையைத்தேர்ந்தெடுத்தனர் என்றால் முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர்
இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிசி பட்டம் பெற்றாராம். எனவே கடிகை நேரத்தில்
தாமும் நரசிம்ம மூர்த்தியைக் காணலாம் என்ற பேரவா காரணத்தால் இம்மலையைத் தெரிவு செய்து தவமியற்றத் தொடங்கினர்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீஇராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளுந் தருவாயில் தாமும் உடன்வருவதாக
ஆஞ்சநேயர் கூற, கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம்
வருவாயாக என்று கூற, அவ்விதமே ஆஞ்சநேயனும் இம்மலை வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில்
நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகட்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களொடு பொருது களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளுக்கு தடையற்ற நிலையை உண்டாக்குகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய பகவான்
நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயர் ஆனந்த பஜனம் செய்து நிற்க ஆஞ்சநேயா நீ நமது முன்பமர்ந்து யோக ஆஞ்சநேயராக
மக்களுக்கு தீராத பிணிகளையுந் தீர்த்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக என்றருளி மறைந்தார்.

இதனால் தான் யோக நிலையில் அமர்ந்த (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. இப்பிரதான கீர்த்தி அனுமனுக்கு
வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லை. கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு
இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம்

மூலவர்–யோக நரசிம்மர் (அக்காரக்கனி) வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்–அம்ருதவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
உற்சவர்–பக்தவத்ஸ்ல பெருமாள் (தக்கான்)
தீர்த்தம்–அம்ருத தீர்த்தம் தக்கான் குளம் பாண்டவ தீர்த்தம்
விமானம்–ஸிம்ஹ விமானம் கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்) ஹேமகோடி விமானம் என்றும் சொல்லப்படும்.
காட்சி கண்டவர்கள்-  ஆஞ்சநேயர், ஸப்த ரிஷிகள்

இங்கு கீழே உற்சவரும், சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு
சக்கரங்களுடன் இலங்கும் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர்.

சுமார் ஒரு கடிகை (24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை – நாழிகை அசலம் – மலை எனவே கடிகாசலமானது

தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை
இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து
காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித்துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி
தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும்போது கோபுர வாயிலில்
தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில்
தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
சோழநாட்டைப் போன்று வளமிகுந்து நரசிம்மப் பெருமாள் உறைதற்கு இடமாதல் பற்றி சோளசிம்மபுரம் என்று அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுக்களும் இப்பெயரையே குறிக்கின்றன. இப்போது சோளிங்கர் என்பர்.

சோழன் கரிகால் பெருவளத்தான் தன் நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்த போது இப்பகுதியைக் கடிகைக் கோட்டம் என்னும் பெயராலேயே
குறிக்கிறான். இச்செய்தி பட்டினப் பாலையில் பேசப்படுகிறது.

ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும்,
தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில்
ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில்
பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று
புராணங்கூறும்.
தொட்டையாசார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும்
இங்குதான் வாழ்ந்தார்.

இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான் சிறிய மலையில்
எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள்.
அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர். தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர்.

அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல்
சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)
‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம்

சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே – நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான்–நூற்றெட்டு திருப்பதியந்தாதி

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின்- நடுநாட்டுத் திவ்ய தேசங்கள் — தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

November 24, 2023

41. திருவயிந்திரபுரம்

இத்தலம் கடலூர் நகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று
வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும்.

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்கட்கும் கடும்போர் மூண்டு யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். முறியடிக்கப்பட்ட தேவர்கள்
திருமாலைத் துதித்து உதவி புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்க, அவர்கட்கு உதவ வந்த ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தின் மேலிருந்து போரிட
அசுரர்கள் நாராயணனையும் எதிர்த்து கடும்போர் புரிந்தனர். இறுதியில் ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தை ஏவ, அது சகல அசுரர்களையும் அழித்தது.

இந்நிலையில் அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அதுவும் சக்கரத்தின் பாற்பட்டு அதற்கோர்
அணிகலன் போன்று அச்சக்கரத்தையே சார்ந்து நிற்க, இது கண்ட சிவன் தன் ஞான திருஷ்டியால் நோக்க, ஸ்ரீமந் நாராயணன் அங்கு தனது மும்மூர்த்தி
வடிவத்தை அரனுக்கு காண்பித்தார். அவ்வடிவில் ஸ்ரீமந் நாராயணனுடன் பிரம்மா, சிவன், தேவர்களும் தெரிய, சிவன் துதித்து நிற்க,
எம்பெருமான் சாந்தமுற்று சக்ராயுதத்தை ஏற்றுக் கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே சேர்ப்பித்து ரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளின்படி
அவ்விடத்திலேயே கோயில் கொண்டார்.
அவ்வமயம் தாக சாந்திக்கு நீர் கேட்க, நீர் கொணர கருடன் ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேடன் தரையிலிறங்கி தனது வாலால் பூமியை
அடித்துப் பிளந்து தீர்த்தம் உண்டு பண்ணி பகவானுக்கு அளித்தார்.
இவ்வாறு ஆதிசேடனால் திருவாகிய பூமியை வகிண்டு நீர் கொண்டு வரப்பட்டதால் திரு+வகிண்ட+நீர் (திருஹிந்தபுரம்) எனப் பெயருண்டாயிற்று.
ஆதிசேடன் கைங்கர்யத்தாலே இத்தலம் திருவஹீந்திபுரம் என அழைக்கப்படுகிறது. அவன் பெயராலேயே இங்குள்ள தீர்த்தமும் சேஷ
தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

மூலவர்-தெய்வநாயகன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தேவர்கட்கு நாதனாக இருந்து எம்பெருமான் யுத்தம் செய்தமையால் தேவ நாதன் என்றும் திருநாமம் உண்டு.
உற்சவர்– மூவராகிய ஒருவன் (தேவன்)
தாயார்– வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்.
தேவர்களைக் காப்பதால் ஹேமாம்புஜ வல்லி என்றும், பார் எல்லாம் காக்கும் தன்மையால் பார்க்கவி என்றும் திருநாமமும் உண்டு.
விமானம்– சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம்
காட்சி கண்டவர்கள்– கருடன், ஆதிசேடன், சிவன், தேவாசுரர்கள்

இப்பெருமானுக்கு 1) தாஸ ஸத்யன் 2) அச்சுதன் 3) ஸ்த்ரஜ்யோதிஷ் 4) அனகஞ்யோதிஷ் 5) த்ரிமூர்த்தி என்று ஐந்து பெயர்களைப் புராணம் சூட்டி
மகிழ்கிறது. இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கை எடுத்தாண்டுள்ளார்.

ஆதிசேடன் பூமியைப் பிளந்து உடனே நீர் கொண்டு வந்தான். ஆகாயத்தில் பறந்து சென்ற கருடன் சற்று தாமதித்து வைகுண்டத்திலிருந்து
விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்தான். இவ்விதம் பரமனின் இரண்டு வாகனங்களால் தீர்த்தம் கொண்டுவரப்பட்ட சிறப்பு வேறெந்த திவ்ய
தேசத்திற்குமில்லை.
கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருடாழ்வார் தீர்த்தமாகி காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி
தற்போதும் கெடிலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

சற்று வேறுபட்ட கருத்திலும் இந்நிகழ்ச்சி சில நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. எம்பெருமான் தாகத்திற்கு தண்ணீர் கேட்டதும்
கருடன் விரஜா தீர்த்தம் கொணர ஆகாயத்தில் பறக்கையில் ஒரு ரிஷியின் கமண்டலத்தில் விரஜா தீர்த்தம் இருப்பதையறிந்து தன் அலகினால்
கமண்டலத்தைச் சாய்த்து நதியாகப் பெருக்கி இத்தலத்தை நோக்கி ஓடச் செய்தார் என்றும், இதைக் கண்டு சினந்த ரிஷி கருடனை எதிர்க்க
மனமில்லாமல் இத்தண்ணீர் கலக்கமடையக் கடவது என்று சபித்தார். உடனே நீர் களங்கமுற்றது. உடனே கருடன் தான் எம்பெருமானின் தாகத்தை
தணிக்கவே இந்தக் கைங்கர்யத்தை மேற்கொண்டேன் என்று கூறியதும் அவ்வாறாயின் கலங்கியது மறையக் கடவதென்ன நீரும் முன்போல தெளிந்தது.
இன்றளவும் இந்நதியின் நீர் பார்வைக்கு கலங்கியிருப்பதைப் போன்று தெரியினும் கையில் எடுத்துப் பார்த்ததும் தெளிவாகத் தெரிவதைப் பார்க்கலாம்.

தான் வருவதற்குள் ஆதிசேடனால் எம்பெருமான் தாகவிடாய் தீர்த்ததைக் கண்ட கருடன் எம்பெருமானை நோக்கி நான் கொணர்ந்த
தீர்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென விண்ணப்பிக்க கருடா நீ கொணர்ந்த தீர்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். என் ரதோற்சவ
தினத்தில் அந்த நதிக்கரையில் பூசைகளை ஏற்று நின் தீர்த்தத்தையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல அவ்விதமே இன்றளவும் ரதோற்சவம்
இந்த கெடில நதிக்கரையிலேயே நடைபெறுகிறது.

தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப்
பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும் சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார் என்பர். அதனால் தான் மூவராகிய ஒருவனை என்று மங்களாசாசனத்தை மொழிந்தார்

இங்குள்ள சோழ மன்னன் ஒருவன் விஷ்ணு கோவில்களை இடித்துவிடும் நோக்குடன் இங்கு வந்ததாகவும் ஆடு மேய்க்கும் சிறுவர்கள்
இது சிவன் கோயில் என்று கூற மன்னன் உற்று நோக்க சிவனைப் போல் அம்மன்னனுக்கு இப்பெருமான் காட்சியளித்தார் எனவும் கூறுவர்.

இங்குள்ள விமானத்தில் வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைப் போலவே சுத்த ஸ்த்வ விமானத்தின் கீழ், கிழக்குத்திக்கில் பெருமாளும்,
தெற்கில் தட்சிண மூர்த்தியாகிய சிவனும், மேற்கு திக்கில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் அமைந்துள்ள திறம் மேற்கூறியவைகளோடு வியந்து
ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

இவ்வூர் (இத்தலம் பற்றிய) புராணத்தை பிரம்மா என்றும் பாராயணம் செய்து வழிபட்டு வருவதாக பூ மறையோன் பாராயணத்தில் பணியும்
அயிந்தை நகர் நாராயணனார் என்று மும்மணிக் கோவையில் சுவாமி தேசிகன் அருளியுள்ளார்.

வைகானஸ முறைப்படி பூஜைகள் நடத்தப்படும் இத்தலத்து எம்பெருமான் திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையன் என்பதோர் ஐதீஹமும்
உண்டு.
வெகு காலத்திற்கு முன் கோவில் பிரகாரத்திலிருந்த ஒரு பழைய புன்னை மரத்தின் வேரிலிருந்து சக்ரவர்த்தி திருமகனுடன் (ஸ்ரீராம பிரானுடன்)
நம்மாழ்வாரும் தோன்றினாரென்றும் அதனாலே இங்கு இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர் என்பதும் வரலாறு.

வ்ருத்தா சுரன் என்னும் அரக்கன் தனது கடின தபோ பலத்தால் பெற்ற சக்தியைக் கொண்டு இந்திரனை வென்று இந்திரலோகத்தை தன்
கையகப்படுத்திக் கொண்டான். இந்திரன் இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டானென்றும். தேவர்கள் இந்திரனை எங்கு
தேடியும் காணமுடியாது போகவே திருமாலைக் குறித்து தவஞ்செய்து தங்களது தலைவனைத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர். நீங்கள்
அயிந்திரபுரத்தில் ஒரு வைஷ்ணவ யாகம் செய்தால் தாமரைத் தண்டில் ஒளிந்துள்ள இந்திரன் வருவான் என்று திருமால் அருள அவ்விதமே இங்கு
யாகம் நடத்த இந்திரன் தோன்றினான். திருமாலும் பிரத்யட்சமாகி இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைக் கொடுக்க அதனால் வ்ருத்தாசுரனைக் கொன்று மீண்டும்
இந்திரன் தனது நாட்டைப் பெற்றானென்பர்.

திருமாலின் அமிசா அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவ அவதாரத்திற்கு இச்சன்னதியின் அருகாமையிலேயே ஒரு திருக்கோவில்
அமைந்துள்ளது. தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான மேடிட்ட பகுதியில் அமைந்து ஒளஷதகிரி என்றழைக்கப்படும் இத்தலம் மிகவும்
தொன்மையும் பெரும் சக்தியும் கொண்டதாகும்.
ஞானத்தையும் கல்வியையும் தரும் ஹயக்ரீவப் பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மது, கைடபன் என்னும் அரக்கர்கள் பிரம்மனிடமிருந்த
படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை எடுத்து மறைத்துக் கொள்ள பிரம்மன் மேற்படி வேதத்தை தமக்கு மீட்டுத்தர திருமாலைக் குறித்து
வேண்டினார். திருமால் ஹயக்ரீவ வடிவம் கொண்டு அரக்கர்களைத் துவம்சித்து படைப்புத் தொழிலுக்கான ரஹ்ஸய வேதத்தை மீண்டும்
பிரம்மனிடமே ஒப்படைத்தார். இதனால்தான் ஹயக்ரீவ பெருமாளை ‘நால்வேதப் பொருளைப் பரிமுகமாய் அருளிய பரமன்’ என்று போற்றுவர்.
இப்பெருமாளை வழிபடுவர்கட்குத் தங்கு தடையற்ற கல்வியும், தெளிவான ஞானமும் உண்டாகும். ஹயக்ரீவ பெருமாள் ஆதித்திருமேனிகள் இந்தியாவில்
இரண்டு இடங்களில் உண்டு. ஒன்று இங்கு மற்றொன்று மைசூரில் உள்ள பரகால மடம்.

இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள் உண்டென்றும் அவைகள் இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும் என்றும் சொல்வர்.

நாற்பதாண்டுகள் இந்த திவ்ய தேசத்தில் ஜீவித்திருந்த தேசிகர் இவ்விடத்தில் ஒரு திருமாளிகை கட்டித் தமது திருக்கரத்தால் ஒரு கிணறும்
வெட்டினார். இவர் வாழ்ந்திருந்த திருமாளிகை இன்றும் உள்ளது.

இங்கு ஸ்ரீதேசிகர் தம்மைப் போல ஒரு திருமேனி செய்தார். உமது திருமேனிக்கும் உம்மைப்போல் உயிரோட்டம் தரமுடியுமா என்று ஒரு சிற்ப
சாஸ்திரி கேட்க, ஸ்ரீராமானுஜர் பெரும்புதூரில் வடித்ததைப் போன்று இங்கு தேசிகரும் தம்மைப் போல் ஒரு திருமேனி செய்தார். திருமேனி செய்து
முடிக்கப்பட்டவுடன் சிற்ப சாஸ்திரி அத்திருமேனியைத் தொட்டபோது அதில் விரல் கீறல் பட்டு ரத்தம் கசிந்ததாகவும், ஸ்ரீதேசிகரின் மகிமை
அறியாது அவரிடம் ஆணவத்துடன் நடந்து கொண்ட முறைக்கு அச்சிற்ப வல்லுனர் தேசிகரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டான் என்றும்
சொல்வர்.

அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர் தூவி
முன் பணிந்த நீரெமக்கு மூர்த்தியரே என்பர்
எம்மயிந்தர புரத்தார்க் இன்றொண்ட ரானார்.
தலைமயிந்தர புரத்தார் தான்.’–பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

எம்பெருமானின் திருவடிப் பேற்றினையே நினைந்து தொழுது திருப்பனந்தாழ்வான் வழிபட்ட இத்தலத்தை தூய்மையான
சிந்தனையுடையோராய்த் தொழுது இப்பெருமானுக்குத் தொண்டரானவர்கள் தான் எமக்குத் தலைவராவர் என்கிறார்

————-

42. திருக்கோவலூர்

பஞ்ச கிருஷ்ணச் ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். வாமன திருவிக்ரம அவதார ஸ்தலம் என்றும் இது அழைக்கப்படுகிறது. கிருஷ்ணன் கோவில் என்றே வடமொழி நூல்கள் குறிக்கின்றன. ஆழ்வார்களால் முதன்முதலாப் பாடப்பட்ட திவ்ய தேசம் இதுதான்.

பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும் முன்பே கிருஷ்ணக் கோவில் என்று பிரதானமாக வழங்கப்பட்ட இத்தலத்தின் தொன்மை பல
சதுர்யுகங்கட்கு முந்தியதாகும். கோபாலன் என்னும் சொல்லே கோவலன் எனத் திரிந்தது. அந்த ஆயனான கோபாலன் எழுந்தருளியுள்ள ஸ்தலமே
திருக்கோவலூர் ஆயிற்று. தட்சிண பினாகினி எனப்படும் தென்பெண்ணையாற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

மகா ஞானிகளும், நாரதரும், கின்னரங்களும் இந்தக் கிருஷ்ண ஷேத்திரத்தில் தவம் செய்தனரென்றும் தானும் இந்தச் ஷேத்திரத்தில்
தவமியற்றியதாக கூறிய பிரம்மன், மார்க்கண்டேயரின் தந்தையான மிருகண்டு முனிவர் எம்பெருமானின் வாமன அவதாரத்தைக் காண விரும்பி தவமியற்றின ஸ்தலம் இதுதான் என்று பாத்ம புராணத்தில் எட்டு அத்தியாயங்களில் (பிரம்மன் கூறியதாக) இத்தல வரலாறு பேசப்படுகிறது.

ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதாரம் எடுத்த திருக்கோலக் காட்சியைக் கேள்விப்பட்ட மிருகண்டு என்னும் முனிவர் தாமும்
இவ்விரு திருக்கோலங்களையும் ஒரு சேரக் காண வேண்டுமென்று எம்பெருமானைக் குறித்து தவமிருந்ததாக ஐதீஹம். அன்ன பானமின்றி கடும்
விரதம் மேற்கொண்ட இம்முனிவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் நீர்வாமன, திருவிக்ரம திருக்கோலத்தைக் காண வேண்டுமாயின் கிருஷ்ண பத்திரா
நதிக்கரையில் கிருஷ்ண ஷேத்திரத்தில், கிருஷ்ணன் என்ற பெயரில் பகவான் கோயில் கொண்டுள்ள இடமே நீர் தவம் செய்வதற்கு உகந்த இடமாகும்.
எனவே அங்கு சென்று கடுந்தவம் புரிவதுடன் ஏழையெளியவர்கட்கும் வரையாது அன்னதானம் செய்ய வேண்டுமெனக் கூறினார்.

அதன்படி மிருகண்டு முனிவர் தமது துணைவியார் மித்ராவதியுடன் தென்புலத்துக் கிருஷ்ண ஷேத்திரத்தை அடைந்தார். பன்னெடுங்காலம்
இவ்விதமே அன்னதானம் செய்து கடுந்தவமியற்றி வருங்காலை ஓர் நாள் மஹாவிஷ்ணு ஒருவயோதிக பிராம்மணர் ரூபத்தில் வந்து அன்னம் கேட்க,
அப்போது தானம் செய்யக்கூட அன்னம் இல்லாத நிலைமையிருக்க தனது மனைவி மித்ராவதியை அணுகிய மிருகண்டு முனிவர் வந்திருக்கும்
வேதியர்க்கு உடனடியாக அன்னம் படைக்க ஏதாவது செய்ய வேண்டுமென, கற்பிற் சிறந்த அப்பெண்மணி நாராயணனை நினைத்துப் பாத்திரத்தைக்
கையிலெடுத்த மாத்திரத்தில் அதில் அன்னம் நிரம்பி வழிந்தது.
அதைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்வோடு முனிவர் வெளியே வர பகவான் சங்கு சக்ரதாரியாக காட்சி தந்தார். வீழ்ந்து பணிந்த மிருகண்டு
முனிவர் வாமன-திருவிக்ரம அவதாரத்தைத் தமக்கு காட்டியருள வேண்டுமென அவ்வண்ணமே திருமால் அருள் பாலித்த திருத்தலம் இத் திருக்கோவலூராகும்.

மூலவர்-திரு விக்ரமன் – ஒரு காலைத் தரையில் ஊன்றி ஒரு காலை விண்ணை நோக்கித் தூக்கிய நிலை. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
இப்பெருமான் விராட் புருஷனாக இடது கையில் சக்கரம், வலது கையில் சங்கும் கொண்டு நீருண்ட மேகம் போன்ற திருமேனியுடன் மார்பில்
ஸ்ரீவத்ஸம், கண்டத்தில் கௌஸ்துபம், காதுகளில் மஹாகுண்டலம், வைஜயந்தி வனமாலையுடன் தேஜோமயமாய்
ஒளிரும் புன்னகையுடன் சுற்றியும் பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார், தேவர்கள், யட்சர்கள், சித்தர்கள்,
கருட வில்வக்ஸேநர் புடை சூழ ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கிறார்.
தாயார்-பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார் என்னும் திருநாமங்கள்.
உற்சவர்- ஆயன், ஆயனார், கோவலன் (கோபாலன்)
தாயார்- கஜலெட்சுமி
தீர்த்தம் பெண்னையாறு, கிருஷ்ண தீர்த்தம், சுக்ர தீர்த்தம்.
விமானம் சுர விமானம்
காட்சி கண்டவர்கள் மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், குஷி, சௌனகர், காஸ்யபர், முதல் மூன்று ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் மூவரும் பெருமாளை அனுபவித்ததை ஸ்ரீமந் நிகாமந்த தேசிகன் இப்படி வர்ணிக்கிறார்.
மூன்று ஆழ்வார்களாகிய கரும்பாலையில் மூன்று உருளைகள் கரும்பைப் பிழிவதைப் போல, தீங்கரும்பான எம்பெருமானை நெருக்கி அவருடைய
திருக்குணங்களாகிய ரஸத்தைப் பருகுகிறார்கள்.

இந்த தலத்தில் கிருஷ்ணன் மகிழ்ந்துறைவதை யெண்ணிய துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இவ்விடத்தே கோவில் கொண்டாள்.
துர்க்கைக்கு இங்கே கோவிலும், வழிபாடுகளும் உண்டு. இது மற்றெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லாச் சிறப்பம்சமாகும். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை ‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்’ என்று புகழ்கிறார்.

இங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களை பிரம்மனிடம் கொடிய வரங்களைப் பெற்ற பாதாள கேது என்னும் அரக்கன் துன்புறுத்தியதாகவும்,
முனிவர்களால் வேண்டப்பட்ட நிலையில் குசத்வ ராஜன் என்னும் மன்னன் ஆகாயத்திலிருந்து திருமாலால் அனுப்பப்பட்ட குதிரையிலேறி அவ்வரக்கனைக்
கொன்று தானும் மோட்சம் பெற்றாரென பிரம்மாண்ட புராணங்கூறுகிறது.

கிருஷ்ண பத்திரா நதிதான் இங்கு ஓடும் பெண்ணையாறாகும். வெண்ணெய் உருகுமுன் பெண்ணை உருகும் என்று சிறப்பிக்கப்பட்ட
நதியாகும். பிரம்ம புராணத்தின் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களுள் ஒன்றாக இது குறிக்கப்படுகிறது.

பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள்.-1.திருக்கோவலூர் 2. திருக்கண்ணங்குட 3. திருக்கவித்தலம் 4. திருக்கண்ணபுரம 5. திருக்கண்ணமங்கை

இடைகழியில் ஆழ்வார்கட்கு எம்பெருமான் காட்சி கொடுத்ததால் இத்தல பெருமாளுக்கு இடைகழி ஆயன் என்னும் பெயர் உண்டு. நடுநாட்டின்
முதலாவது ஸ்தலமாகையாலும் விண்ணுலகிற்கும், பாதாள லோகத்திற்கும் நடுவுபட்டு நின்றமையால் நடுநாட்டான் என்னும் பெயர் வந்தது என்பர்

இங்கு தற்போதுள்ள எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் ஒரு பணி இராமானுஜரையே நினைவுபடுத்துகிறது. நாராயண மந்திரத்தை அனைவர்க்கும்
உபதேசித்து அரிஜனங்களை திருக்குலத்தார் என்று பெயரிட்டு அழைத்து அவர்களை வைணவ அடியார்களாக்கினார் இராமானுஜர். அதுபோல் இந்த
ஜீயர் சுவாமிகளும், ஆயிரக்கணக்கான அரிஜன சகோதரர்கட்கு தீட்சை அளிக்கிறார். அதாவது வருடாவருடம் தமது திருமாளிகையில் சமபந்தி
போஜனம் அளிக்கிறார்.

மிருகண்டு முனிவர்கட்கு திருவிக்ரம அவதாரத்தைக் காட்டிக்கொடுக்கும் முன்பு கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சன்னதி
தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே அமைந்துள்ளது. ஆதி சன்னதி இதுதான். சாளக்கிராமத் திருமேனியுடன் இவர் பொலிந்து தோன்றுகிறார்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாவலந் தீவினோரே, நாவலந் தீவின் நங்கை மீரே வம்மின்- சோழ தேச திவ்ய தேசங்கள் -பகுதி -2- தொழுவோம், வம்மின்–வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் —

November 24, 2023

19. திருநாகையென்னும் நாகப்பட்டினம்

காவிரியின் தென்கரை தொடங்கி திருமறைக்காடு வரை தென்வடல் கீழ்மேலாக பரந்துபட்ட காட்டின் 50 யோஜனை அளவுக்கு கிருஷ்ணாரண்யம்
(கிருஷ்ணனின் காடு) என்று பெயர். இதன் கீழ்த்திசையில் 5 மைல் தொலைவுக்கு உள்ள பகுதியே சௌந்தர்ய ஆர்ணயம். மிகப்பழஞ்சுவடிகள்
சுந்தராரண்யம், என்றே இப்பகுதியைப் பற்றிப் பேசுகின்றது.
இத்தலம் நான்கு யுகங்களில் பெருமை பெற்றுத் திகழ்ந்தது.
கிரேதாயுகத்தில் இங்குள்ள ஸார புஷ்கரணி அருகாமையில் நாகங்களுக்குத் தலைவன் ஆதிசேடன் எம்பெருமானைக் குறித்து தவமிருந்து எம்பெருமான்
காட்சி கொடுத்து, ஆதிசேடனை எப்போதும் தான் சயனமாக ஏற்றுக் கொள்வதாக அருளிய ஸ்தலம்.
ஆதிசேடன் ஆகம விதிப்படி அஷ்டாங்க விதான முறையில் பெருமாளை ஆராதித்ததால் அவன் பெயராலேயே நாகன்பட்டினமாகி நாகப்பட்டினமாயிற்று.
திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க் கண்டேயனும் பகவானைக் குறித்து தவமிருந்த ஸ்தலம்.

இந்தச் சௌந்த்ரா ரண்யத்தைப் பற்றியும் (ஸாரம் என்றால் பாம்பு, பாம்பாகிய நாகராஜனால் உண்டாக்கப்பட்ட) ஸார புஷ்கரிணி பற்றியும்,

யப்பிரயஸ்தி கிருஷ்ணாதி சௌந்தர் ஆரண்ய பூதலே தரவு பௌ புண்ய கர்மாணௌ பேத்தா ரென்ன சூர்யமண்டலம்” என்றும்
“சாரபுஷ்கரிணி தீரமத்ஸே சுந்தர்கான(க)ம் ஆவிர்ப்ப பூவ, பகவான் லட்சுமி ஷீர சாகராத்”என்றும்

அதாவது இப்பெருமானை மனசுத்தியோடு வழிபட்டு இங்குள்ள ஸார புஷ்கரணியில் தீர்த்தமாடினால் அவர்கள் சூர்யமண்டலத்தை அடைவார்கள்
என்று இந்த ஸ்தலத்தின் மகிமையை எல்லாம் நாரதர் மூலம் கேட்ட துருவன் என்னும் சிறுவன் (உத்தானபாத மகாராஜனின் குமாரன் இவன்) இந்த உலகு
முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டுமென்று திருமாலைக் குறித்து இவ்விடத்தே கடுந்தவம் செய்து, தவத்தில் உண்டான எண்ணற்ற
இடையூறுகளை எல்லாம் கடந்து நிற்க, இறுதியில் எம்பெருமான் கருடாழ்வார் மீது பேரழகு பொருந்தியவராகக் காட்சி கொடுக்க, அப்பேரழகில் மயங்கி
துருவன் தான் கேட்க வந்த வரத்தை (நிலஉலக ராஜயோகம்) வெறுத்து இறைவனது இப்பேரழகில் எப்போதும் திளைக்கும் மோட்சம் வேண்டுமென்று அவ்விதமே மோட்சமளித்து, அவனுக்கு காட்சி கொடுத்த சௌந்தர்யமான திருக் கோலத்திலேயே இவ்விடம் காட்சி தருகிறார்.

இக்கலியுகத்திலேயே பக்தியில் சிறந்த சாலிசுகன் என்னும் சோழன் இப்பெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள் அம்மன்னன் இவ்வனத்தில்
உள்ள ஒரு சுருங்கை (சுரங்கம் அல்லது குகை) வழியே வந்து போகும் மூன்று கொங்கைகளோடு கூடிய ஒரு பெண்ணைக் கண்டான். இம்மன்னனின் பார்வை பட்டதும் ஒரு கொங்கை மறைய அப்பெண்ணும் திகைத்து நின்று இவனைக் காண ஒருவரையொருவர் காமுற்று காதல் கொண்டு இப்பெருமான் மீது பேரன்பு கொண்டு நித்ய கைங்கர்யங்கள் செய்து சிறந்த புத்திரப் பேற்றினையும் பெற்று இப்பெருமானுக்கு பிர்ம்மோத்ஸ்வமும் நடத்தி வைத்தார்கள்.

இச்சாலிசுக சோழனை துந்துமான் என்று புராணங் கூற, தொண்டைமான் என்று தமிழிலக்கியங்கள் பகர்கின்றன. மேற்சொன்ன வரலாற்றை (சாலிசுக
சோழன் கதையை) பெரும் பாணாற்றுப் படை நூலுக்கான நச்சினார்க்கினியாரின் உரைநூலும் விளக்குகிறது.

மூலவர்–நீலமேகப் பெருமாள் – கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
உற்சவர்–சௌந்தர்ய ராஜன்
தாயார்- சௌந்தர்ய வல்லி
உற்சவர்– கஜலெட்சுமி
தீர்த்தம்– ஸாரபுஷ்கரிணி
விமானம்– சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)
காட்சி கண்டவர்கள்– நாகராஜன் (ஆதிசேடன்) துருவன், திருமங்கை, சாலிசுக சோழன்

நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இங்குண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று
அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும்
எம்பெருமான் ஸேவை சாதித்ததாகச் சொல்லுவர்.
கண்டன், சுகண்டன் என்ற இரண்டு அந்தண உடன் பிறப்பாளர்கள் எண்ணற்ற கொடுஞ்செயல்கள் செய்து இறுதியில் ஒரு நாள் இங்குள்ள சார
புஷ்கரிணியில் தமது உடலை நனைத்து வைகுந்தம் பெற்றனர். இவ்விருவரின் சிற்பங்களும் (இந்நிகழ்ச்சியின் நினைவாக) இங்குள்ள அரங்கநாதனின்
சன்னதியில் கைகூப்பிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்புத் தகட்டாலான மாலையொன்று இப்பெருமானின் இடையை அலங்கரிக்கிறது.

இங்குள்ள அரங்கனின் சன்னதியில் உள்ள நரசிம்ம அவதாரத்தினை விளக்கும் வெண்கலச் சிலை மிகவும் அபூர்வமானதாகும். ஒரு கையால்
பிரஹலாதனை தாங்கி ஆசீர்வாதம் செய்வது போலவும், ஒரு கையை அபய முத்திரையாகவும் வைத்துக்கொண்டு, மற்ற எல்லாக் கைகளாலும் இரண்யனை வதம் செய்வது போலவும் அமைந்துள்ளது.

திருமங்கையாழ்வாரால் அறம்பாடி தங்கத்தாலான புத்தர் சிலையை எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக கொண்டு வந்தது இந்த
நாகப்பட்டினத்திலிருந்துதான். இக்கோவிலிலிருந்து புத்தர் சிலை இருந்த இடம் சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. நாகப்பட்டினம் கோர்ட்டுக்கு
சமீபத்தில் உள்ளது.

————–

20. திருத்தஞ்சை மாமணிக் கோயில்

இத்தலம். தஞ்சை நகரைத் தாண்டியதும்-அமைந்துள்ள வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது.

கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து கடுந்தவம் செய்ய
சிவன் தோன்றி என்ன வரவேண்டுமெனக் கேட்க அதற்கம்மூவரும் சாகா வரம் வேண்டுமென்று கேட்டனர். சாகா வரமளிக்கும் வல்லமை திருமால்
ஒருவருக்கே உண்டு என்றும், என்னால் உங்கள் மூவருக்கும் மரணமில்லை என்றும் சிவன் அருளி மறைந்தார்.

இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று இந்திரலோகத்தையும்அச்சுறுத்தி, முனிவர்களின் தவத்தையும் சிதைத்து கொடுமைகள்
புரிந்துவந்தனர். அப்போது பராசுரர் என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம் செய்து வந்தார். அப்போது நாடெங்கும் கடும் பஞ்சம் உண்டாகி குடிப்பதற்கும் நீரின்றிப் போனது.

ஆனால் பராசர முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு அருகில் மட்டும் ஒரு சுனையில் நன்னீர் இருந்தது. இம்மூவரும் வந்து அந்த தண்ணீரைப்
பருகிக் கொண்டு அவ்வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் பராசரரின் தவத்தைக் கண்டதும் அவரைத் துன்புறுத்தி அழிக்கலாயினர்.

பராசரர் ஹரி, ஹரி என்று அரியை அழைக்க, பக்தருக்கு இரங்கும் பரந்தாமன் தனது வாகனமான கருடனை அனுப்ப அம்மூவருக்குத் துணை
நின்ற அரக்கர்களையெல்லாம் கருடன் அழித்துவிட அம்மூவர் மட்டும் எஞ்சி நின்றனர். இந்நிலைகண்ட எம்பெருமான் தானே நேரில் வந்து தஞ்சகன்
என்னும் அரக்கனை தனது சக்ராயுதத்தால் தலையைச் சீவினார். தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன் பெயரிலேயே இந்நகரம்
திகழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான் (எனவே தஞ்சகனூர் ஆகி தஞ்சகூராகி, தஞ்சாவூராயிற்று)

இதன் பிறகு கஜமுகன் என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல இறக்கும்
தருவாயில் தனக்குத் திருநாடு வேண்டுமெனக் கேட்க அவனுக்கும் திருநாடருளினார். இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம ரூபத்தில் நின்றதால்
தஞ்சையாளி என்றே பெயராயிற்று.

இவ்வாறு இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட தண்டகாசுரன் மிக்க சினத்துடன் திருமாலுடன் பொருதி பாதாளத்திற்குள்
புகுந்து மறைந்து கொண்டான். திருமால் உடனே வராக உருவங்கொண்டு பூமியைக் கீண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் முகக் கோட்டால்
அவனது தலையைக் கிழித்து எறிந்தார். அவனும் தனது இறுதிக் காலம் வந்துற்றதையெண்ணி எம்பெருமானின் பாதங்களில் வீழ்ந்து இவ்விடமும் தன்
பெயரால் வழங்கப்படவேண்டுமென வேண்டிக்கொள்ள அவ்வனம் “தண்டகாரண்யம்” ஆயிற்று.

அதன் நடுவே திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) என்னும் திவ்ய ஷேத்திரத்தில் நிலத்தினின்று எழுந்த வண்ணம் ஸ்ரீபூவராகப் பெருமாள் சுயம்பு வடிவாய் காட்சி தந்தார்.

1. தஞ்சை மாமணிக் கோயில்
மூலவர்–நீலமேகப் பெருமாள், கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்
தாயார்–செங்கமலவல்லி
தீர்த்தம்– கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு
விமானம்– சௌந்தாய விமானம்
காட்சி கண்டவர்கள்– பராசர முனி

2. மணிக்குன்றம்
மூலவர்– மணிக்குன்றப் பெருமாள், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்- அம்புச வல்லி
தீர்த்தம்– ஸ்ரீராம தீர்த்தம்
விமானம்– மணிக்கூட விமானம்
காட்சி கண்டவர்கள்– மார்க்கண்டேயர்

3. தஞ்சையாளி நகர்

மூலவர்– நரசிம்மன், கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்– தஞ்சை நாயகி
தீர்த்தம்– சூர்ய புஷ்கரணி
விமானம்– வேதசுந்தரவிமானம்
காட்சி கண்டவர்கள்– மார்க்கண்டேயர்

ஸ்ரீநீலமேகன், ஸ்ரீமணிக்குன்னன், ஸ்ரீவீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து
பக்தர்கட்கு அருளுவதாகவும் மரபு.

இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

இம்மூன்று ஸ்தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும்,
மணிக்குன்னப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் ஸ்ரீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள
சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.
பரமபதத்தில் ஓடக்கூடிய விரஜாநதியே இங்கு ஓடுவதாகவும் விண்ணிலிருந்து வந்த தன்மையால் விண்+ஆறு – விண்ணாறு ஆயிற்று
என்றும் சொல்வார்கள்.

பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமிது.

தஞ்சையைப் பார்த்த வண்ணம் விக்ரஹங்கள் அமைந்திருப்பதால் தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணி யென்றும்
போற்றப்படுகிறது.

—————-

21. நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்

பாற்கடலில் எம்பெருமானின் பாதாரவிந்தங்களையே பற்றிக் கொண்டிருந்த பிராட்டிக்கு தேஜஸ் பொருந்திய எம்பெருமானின் திருமார்பைக்
கண்டு, அவ்விடத்திலேயே எப்போதும் நித்ய வாசம் செய்ய வேண்டுமென எண்ணங் கொண்டு
திருப்பாற்கடலின்றும் புறப்பட்டு, செண்பகாரண்யம் என்னும் இவ்விடத்தில் கடுந்தவம் செய்ய, தேவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாத பெருமாள்
ஒரு ஐப்பசி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமை அன்று தேவிக்குப் பிரத்யட்சமாகி எண்ணப்படியே நெஞ்சில் திருமகளை ஏற்றுக் கொண்டார்.

கிழக்கு நோக்கி தவஞ்செய்த நிலையிருந்த பிராட்டியை பெருமான்எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டமையால் இத்தலத்தில் எம்பெருமான் மேற்கு
நோக்கி எழுந்தருளியுள்ளார். செண்பகாரண்யத்தில் தேவி தவம் செய்தபடியால் செண்பகவல்லி என்றே திருநாமம். உற்சவரின் பெயர் ஜெகந்நாதன்.
எனவேதான் உற்சவரின் பெயரைவைத்தே இவ்வூர் நாதன் கோவில் என்றாயிற்று. திருமகளின் எண்ணத்திற்கு இசைந்து பிராட்டியை நெஞ்சில்
ஏற்றுக்கொண்டதால் பெருமானுக்கு போக ஸ்ரீனிவாசன் என்பது பெயர்.

அதிகார நந்தி என்றும், நந்திகேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானின் வாகனமான நந்தி, ஒரு சமயம் மஹா விஷ்ணுவைக்கான
வைகுண்டத்திற்கு வந்தபோது காவலில் நின்ற துவார பாலகர்களையுங் கேளாது உள்ளே புக முயன்றபோது துவார பாலகர்கள் தடுத்து, தங்கள்
அனுமதி பெறாமல் செல்ல எத்தனித்த காரணத்தால், காரணம் காணா அளவுக்கு உன் உடம்பில் உஷ்ணம் எரிந்துகொண்டிருக்கக்கடவது என்று
சபித்துத் திருப்பியனுப்பினர்.
தன்நிலையை சிவபிரானிடம் நந்தி உரைக்க, விஷ்ணுவின் துவார பாலகர்கள் இட்ட சாபம், விஷ்ணுவின் சாபத்திற்குச் சமமானதாகும். இதைத்
தீர்ப்பதற்கு ஒரே உபாயந்தான் உண்டு.–யாரும் காணவியலா மஹாவிஷ்ணுவின் நெஞ்சில் இடம் பிடிக்க
திருமகள் தவம் புரிந்த செண்பகாரண்யம்தான் காரணம் காணா இவ்வியாதியைப் போக்க நீ தவமிருக்க சிறந்த இடமாகும். எனவே அங்கு
சென்று திருமாலைக் குறித்து தவமிருந்து சாபத்தைப் போக்கிக்கொள் என்றுரைக்க, அவ்விடம் யாண்டுளது என நந்தி வினவியதற்கு,
அச்செண்பகாரண்யம் என்பது பூலோகத்தில் சக்ரபடித் துறைக்கு (குடந்தைக்கு) தென்பால், மன்னார்குடிக்கு வடபாலும், விண்ணகரத்திற்கு
(உப்பிலியப்பன்) மேற்கேயும், அரங்கத்திற்கு தெற்கேயும் உள்ளதெனத்தெரிவிக்க நந்தியும் அவ்விடத்தே வந்து நெடுங்காலம் கடுந்தவம் செய்ய
உடனே மஹாவிஷ்ணு தோன்றி சாபந்தீர்த்து வேண்டிய வரம் கேள் என்று  சொல்ல இத்தலம் எனது பெயராலேயே விளங்க வேண்டும் என்று சொல்ல அன்று முதல் நாதன் கோவிலாய் இருந்த இத்தலம் நந்திபுரவிண்ணகரமாயிற்று.

மூலவர்-நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம், ஜகந்நாதன் என்றும் சொல்வர்.
தாயார்– செண்பகவல்லி
உற்சவர்– ஜெகந்நாதன்
தீர்த்தம்- நந்தி தீர்த்த புஷ்கரிணி
விமானம்– மந்தார விமானம்
காட்சி கண்டவர்கள்– நந்தி, சிபிச் சக்கரவர்த்தி

மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர்.

விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய் மாதிரி)
நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா
அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்)
கோலம் மிகவும் அழகானதாகும்.

இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம். இப்பெருமான் மீது அபாரமான பக்தி கொண்டவர் இவர்.

இத்தலம் வானமாமலை ஆதிக்கத்திற்கு உட்பட்டது.

ஐப்பசி வெள்ளிக் கிழமையில் இங்கு தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் சர்வகாரிய சித்தியை உண்டு பண்ணுகிறதென்று புராண
காலத்திலிருந்து இன்றும் உள்ள நம்பிக்கை.

இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து
ஆயுதங்களைப் பெற்றுள்ளார்-வாளும் வில்லும் வளை யாழி கதை சங்கமிவை யங்கை யுடையான்” திருமங்கையாழ்வார்

————-

22. திருவெள்ளியங்குடி

தன்னைக் குறித்து தவமிருந்த (சுக்கிரனுக்கு) வெள்ளியாருக்கும் அருள் பாலித்தவன்

க்ருதே பிரம்மபுத்திரம் நாமா
திரேதாயந்து பரா சரம்
த்வாபரே சைந்திர நகரா
கலௌ சேஷத்திரந்து பார்க்கவம்

கிரேதா யுகத்தில் பிரம்மபுத்திரம் என்னும் பெயருடனும், திரேதா யுகத்தில் பராசரம் என்னும் திருநாமத்துடனும், துவாபர யுகத்தில் சைந்திர
நகரம் என்னும் நாமத்துடனும், கலியுகத்தில் பார்க்கவ புரம் என்றும் குறிக்கப்படுகிறது. பார்க்கவன் என்றால் சுக்கிரன் என்று பொருள்.

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையனே அச்சோ அச்சோ-அசுர குல குருவான சுக்கிரபகவான்,-சுக்ராச்சாரியார் – இவ்விடத்து தவமிருந்து பெற்றதால் இவர் பெயராலே வெள்ளியங்குடியென அழைக்கப்படுகிறது. சுக்கிரனுக்கு பெருமாள் இவ்விடத்தில் அருளியதைத் தான் வெள்ளியார் வணங்க விரைந்தருள்  செய்வான் என்று திருமங்கையாழ்வார் சுட்டிக் காட்டுகிறார்.

தேவர்களுக்கு சிற்பியாகத் திகழ்ந்த விஸ்வகர்மா இறைவன் எழுந்தருளியுள்ள எண்ணற்ற திவ்ய தேசங்களைக் கட்டி முடித்ததாயும், தனக்கு
அது போன்ற பாக்கியம் யாதும் கிடைக்கவில்லையே என்று அசுரர்களுக்குச் சிற்பியாகத் திகழ்ந்த மயன் மிகவும் மனம் வருத்தமுற்று பிரம்மனிடம் வேண்ட கலியுகத்தில் தனக்கு காட்சி கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதியும் நினைவுக்குவர மயன்
அவ்விதமே செய்து கடுந்தவமியற்ற இறைவன் அவனுக்கு சங்கு, சக்ரதாரியாக, மஹாவிஷ்ணு கோலத்தில் காட்சியளித்தார்.
தனக்கு இந்தவிதமான திருக்கோலக்காட்சி வேண்டாமென்றும், இராமாவதாரத் திருக்கோலத்தையே தான் தரிசிக்க விரும்புவதாய் மயன் கூற,
தம் கரத்திலிருந்த சங்கு, சக்கரங்களைக் கருடனுக்கு கொடுத்துவிட்டு வில், அம்புகளுடன், அலங்காரக் கோலத்துடன் கோலவில் ராமனாக
காட்சியளித்தார். எனவேதான் இப்பெருமானுக்கு கோலவில்லி ராமன் என்னும் பெயர் உண்டானது.-   108 திவ்ய தேசங்களிலே இங்குதான் கருடாழ்வாருக்கு 4 கரங்கள் உள்ளது.-சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய்த் திகழ்கிறார் இந்த கருடாழ்வார்.

மூலவர்–கோலவில்லி ராமன், புசங்க சயனம் கிழக்கு திருமுக மண்டலம்.
உற்சவர்- சிருங்கார சுந்தரன், (தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)
தாயார்- மரகதவல்லி
தீர்த்தம்- சுக்ரதீர்த்தம், ப்ரஹமதீர்த்தம், பரசுராமதீர்த்தம், இந்திர தீர்த்தம்.
ஸ்தல விருட்சம்- கதலீ (வாழை)
விமானம்- புஷ்கலா வர்த்தக விமானம்
காட்சி கண்டவர்கள்- சுக்கிரன், பிரம்மா, இந்திரன் பராசுரர், மயன்

இங்கு கோவிலில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்துவரும்
காட்சியை இன்றும் காணலாம். இவ்வாழையே ஸ்தலவிருட்சமாகவும் ஆகிறது.
வெள்ளியங்குடிக்கு அருகாமையில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இதுதான் வைணவமேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம்.
நவக்கிரகங்களுக்கு நடுநாயகமாகத் திகழ்கிறது. இத்தலம்.-இவ்விடத்தைச் சுற்றியே 9 நவக்கிரக ஸ்தலங்கள் உள்ளன.

சூரியன்   – சூரியனார் கோவில்
சந்திரன்   – சந்திரன். இந்தளூர் (மாயவரம்)
செவ்வாய்  – வைத்தீஸ்வரன் கோவில்
புதன்     – திருவெண்காடு
வியாழன்  – ஆலங்குடி
சுக்கிரன்   – வெள்ளியங்குடி
சனி       – திருநள்ளாறு
ராகு, கேது – வாஞ்சியம்

——————

23. திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

இத்திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் – கும்பகோணம் பாதையில்
இரண்டாவது ரயில் நிலையம்)

கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை
நதிக்குச் சென்றிருந்த போது, அப்பசுமந்தையை பிரம்மா தேரழுந்தூருக்கு ஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக் கண்ணன். உடனே
அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே படைத்து விட, தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ள
வேண்டுமென்று விண்ணப்பிக்க, அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக” வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக
இங்குள்ள உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ள பேரழகும் எழுத்தில் அடக்கும் தன்மை பெற்றதல்ல.

மூலவர்-மூலவரின் திருநாமம் தேவாதிராஜன் என்பதாகும். வட மொழியில்கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர்.
கோசகன் என்பதின் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். இப்பெயரும் மூலவருக்குண்டு.
தாயார்- செங்கமல வல்லி
உற்சவர்- ஆமருவியப்பன்.
விமானம்– கருட விமானம்
தீர்த்தம்– தர்சன புஷ்கரிணி, காவேரி
காட்சி கண்டவர்கள்– தர்மதேவதை, உபரிசரவசு, காவேரி, கருடன், அகத்தியர்,
மூலவர், உற்சவர், தாயார், மூவரும் கிழக்கே திருமுக மண்டலம்.

ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் விழுகையில் இங்குள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர்
என்ற பெயருடயதுயாயிற்றென்பர். கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு) என்பது புராணம் சூட்டும் பெயர்.

கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர் கும்பமுனி சாபம் குலைந்தவூர்
செம்பதுமத் தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமானின் சாந்த சொரூபத்தைக் காட்ட வேண்டுமென்று வேண்டிய போது, சினம்
அடங்கப்பட்ட சிங்கமாகப் பெருமாள் காட்சி தந்தும், பிரகலாதனின் அச்சம் குறையாதிருக்க இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக காட்சி தந்தார்
என்பதும் ஒரு பெருஞ் சிறப்பு நிகழ்ச்சியாகும். இத்தலத்தில் பிரகலாதனும் இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான்.

அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித் தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணப்பிக்க, காவிரி மறுக்க, இதனால் கோபமுற்ற
அகத்தியர் காவிரியைக் குடத்திலடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தைக் காகம் சாய்க்க, காவிரி வழிந்தோடியது.

இதனால் மீண்டும் சினமுற்ற முனிவர் காவிரியால் வளம் பெறும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்புற்று வறுமையுறட்டும் என்று சாபமிட,
இச்சாபத்தை போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து தவமிருந்து காவிரி சாபம் துடைத்தாள் என்பதும் வரலாறு. இப்பெருமானை நோக்கித்
தவமிருந்த நிலையில் காவிரித் தாயாரும் இச்சந்நிதியில் இடம் பெற்றுள்ளாள்.

தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து, ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு
உகந்தவைகளோ அவ்வவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட, திருநாராயண புரத்தில் உள்ள (மைசூர்) செல்லப் பிள்ளை பெருமாளுக்கு வைரமுடியினையும்,
இந்த தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். இதனால் இப்பெருமாள் கருடனைத் தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார்.

திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத் திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும்
மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார்.

———————

24. திருச்சிறுபுலியூர்

மயிலாடுதுறையிலிருந்து (மாயவரம்) நகரப்பேருந்தில் ஏறிச்சென்று கொல்லுமாங்குடி என்ற சிற்றூரில்
இறங்கி 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்

ஒருகாலத்தில் கருடனுக்கும், ஆதிசேசனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க இவர்களைச்
சாமாதானப்படுத்துவதற்காகப் பெருமாள் “ பாலசயனத்தில்” எழுந்தருளிய ஸ்தலம் இதுவென்பது வரலாறு.

வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர்
மகாவிஷ்ணுவே என்று நடராஜன் கூற, அவ்வாறாயின் அதற்குரிய ஸ்தலத்தை எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட நடராஜர் சிவலிங்க ரூபமாக
வழிகாட்ட அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து
முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர்.

மூலவர்– சலசயனப்பெருமாள், தெற்கே திருமுக மண்டலம், புஜங்க சயனம்.
உற்சவர்- க்ருபா ஸமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்)
தாயார்– திருமாமகள் நாச்சியார்,
உற்சவர்– தயாநாயகி
தீர்த்தம்–மானஸ புஷ்கரிணி
விமானம்– நந்தவர்த்தனம்
காட்சி கண்டவர்கள்- வியாஸர், வியாக்ர பாதர்.

புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாயிருந்ததைக்கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறைதீர நமது மிகப்பெரிய
உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச் செய்த ஸ்தலம்.
கருடனுக்கு அபயமளித்த இடம்.
இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது.
ஸ்ரீரங்கத்தைப் போன்றே தெற்கு நோக்கிய சயனம்.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.
இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுண்டம் அடைந்த வியக்ர பாதரை பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிட்டை செய்துள்ளனர்.
அவருக்கும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.

————–

25. தலைச்சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு)

தலைச்சங்காடு என்ற பெயரே தற்போது பிரதானமாய்த் திகழ்கிறது.
திருச்சீரங்கநாதன் பள்ளி திருச்சிராப்பள்ளியாகி திருச்சியானது போலவும்,
துலை, வில்லி, மங்கலம் என்பது பொருள் காணவியலாத அளவிற்குத் தொலைவில்லிமங்கலம் ஆனது போலவும்.
காழிச்சீராம விண்ணகரம் என்பது நிலைதடுமாறி (தடம்புரண்டு) சீர்காழியானது போலவும்,
திருத்தண்கால் என்பது திருத்தங்கல் ஆனது போலவும்,
திருமெய்யம் என்பது திருமயம் ஆனது போலவும்,
தலைச்சங்க நாண்மதியம் என்பது தலைச்சங்காடு ஆயிற்று.

இரவில் நமக்கு ஒளிதரும் நாள் மதியாகிய சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் தீர்ந்தமையால் இங்குள்ள பெருமாளுக்கு நாண்மதியப்பெருமாள் என்ற
திருநாமம் ஏற்பட்டது. இதையேதான் வடவானரும் “சந்திரசாப ஹரப்”பெருமாள் என்றழைத்தனர். விலை மதிப்பற்ற சங்கு ஒன்றை இப்பெருமாள்
ஏந்தியிருப்பதாலும் தலைச்சங்கானம் ஆயிற்றென்பர்.
சங்ககாலத்தில் இப்பகுதி தலைச்சங்கானம் என வழங்கப்பட்டு காலப்போக்கில் அது மருவி தலைச்சங்கமாயிற்று என்று தமிழாய்வாளர்
பகர்வர்

மூலவர்–நாண்மதியப் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– தலைச்சங்க நாச்சியார்
உற்சவர்– வெண்சுடர்ப் பெருமாள்
தாயார்– செங்கமலவல்லி
விமானம்– சந்திர விமானம்
தீர்த்தம்– சந்திர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள்– சந்திரன், தேவப்பிருந்தங்கள்.

சங்க காலத்திலேயே இப்பகுதி பெரும் புகழ் பெற்றிருந்தது. அப்போது இந்நகரில் தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்டன. இன்றைய காவிரி
பூம்பட்டிணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் பண்டைய நாளில் சங்கு வாணிகத்தில் தலைசிறந்திருந்தது. இங்கு சங்குகள் குவித்துவைத்து
விற்கப்பட்டதை சங்க நூல்கள் பரக்கப் பேசுகின்றன. இவ்விடத்தைச் சுற்றிலும் புரசமாக விளங்கியதால் (பலாச
மரக்காடுகள் இருந்தமையை) இவ்விடத்தைக் காடு என்று சுட்டினர்.
தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்ட இடமும் காடும் சேர்ந்து தலைச்சங்காடு ஆயிற்று. இவ்வூருக்கு அருகில் திருவெண்காடும் இருப்பதால் காடு என்னும்
பெயர் ஊருக்கு வருதல் வழக்கமாயிற்று, எனலாம். காடு என்னும் ஈற்றடி வரப்பெற்ற திவ்யதேசம் இதுஒன்றுதான்.
(காட்டில் வேங்கடம், கண்ணபுரநகர் என்று திருவேங்கடம் இருந்த இடத்தையும் காடு என்று குறித்ததை ஈண்டு நோக்கத்தக்கது)

தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நாண்மறை முற்றிய நலம்புரிக் கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங்கொண்டு
குமரியம் பெருந்துறைக் கொள்கையிற் படிந்து
தமர்முதல் பெயர்வோன்” –  சிலப்பதிகாரம் இவ்வூரின் தொன்மை பெயரைச் சுட்டுகிறது

இவ்வூரில் இருந்த மாடலன் என்னும் மறையோன் ஒருவன் அகத்திய முனிவனின் பொதிய மலையை வலங்கொண்டு குமரியாற்றில் முறைப்படி
தீர்த்தமாடி மீண்டும் தன் கிளைஞர் (உறவினர்) வாழும் சொந்த ஊரான தலைச் சங்கானத்திற்கு மீள்கிறார் என்று இவ்வூரைப்பற்றிச் சிலப்பதிகாரம்
கூறுகிறது.-தலைச் செங்காணமும் தலைச்சங்காடும் ஒன்றுதான்.

இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு வாய்ந்தது. வெண்சுடர்ப் பெருமாள் (மூலவர் நாண்மதியராகிறார், உற்சவர்
வெண்சுடர் பெருமாள் ஆகிறார்) நீளா தேவியுடனும் நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள செப்புச் சிலைகள் மிக்க கலை
நுணுக்கம் வாய்ந்தவை.

தலைச்சங்க நாண்மதியத்தைப் பற்றிக் கீழ்காணும் அருமையான பாடல் ஒன்று காணப்படுகிறது.
செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்புங் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்
அலைச்சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச்சங்க நாண் மதியத்தான்.

————-

26 திருஇந்தளூர் (மயிலாடுதுறை)

இந்தளூர் என்றால் பலருக்குத் தெரியாது. மாயவரம் பரிமள ரெங்கன் கோயில் என்றால் எல்லோருக்கும் தெரியும்

இப்பகுதிக்கும் சுகந்தவனம் என்று பெயர் எனவே பெருமாளுக்கும் சுகந்தவன நாதன் என்ற திருநாமமும் உண்டானது. வடமொழி நூல்கள்
சுகந்தவனநாதன் என்றே இப்பெருமானைக் குறிக்கின்றன. இப்பெயர்தான் தூயதமிழில் பரிமள ரெங்கன் என்றாயிற்று.

சந்திரனுக்கு இந்து என்ற ஒரு பெயர் உண்டு. தனக்கு தோஷம் நீங்கப்பட்ட இத்தலம் தனது பெயராலேயே
வழங்கப்பட வேண்டும் என சந்திரன் வேண்டிக்கொள்ள இந்தளூர் ஆயிற்றென்பர்.

மூலவர்–பரிமள ரெங்கநாதன், சுகந்தவன நாதன் மருவினிய மைந்தன், 4 புஜங்களுடன் ஆதிசேடன் மீது வீரசயனம். கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்– பரிமள ரெங்கநாயகி, சந்திர சாப விமோசன வல்லி,
தீர்த்தம் — சந்திர (இந்து) புஷ்கரிணி
விமானம்– வேத சக்ர விமானம்
காட்சி கண்டவர்கள்- சந்திரன்.

4 புஜங்களுடன் கூடின இப்பெருமாளின் திருவடியருகில் கங்கைத் தாயாரும், சிரசருகில் காவிரித் தாயாரும் அமைந்துள்ளனர். ஐப்பசி மாதம்
முழுதும் இங்கே விழாக் கோலமாக இருக்கும். சமுத்திரத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் நீராட இந்தியா முழுவதிலுமிருந்து இங்கு பக்தர்கள்
வருவர்.

திருமங்கை யாழ்வார் பெருமானை “ வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே-என்று வசை வாழ்த்துக் கூறினார்.

தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்” – என்றார்

நும்மடியோம், நுமக்கே என்பன போன்ற அழகு தமிழ்ச் சொற்களை திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் எடுத்தாண்டுள்ளனர். நம்மாழ்வார்,
“நுமக்கடியோ மென்றென்று நொந்துரைத்தேன், மாலார்
தமக்கவர்தாம் சார்வரியரானால் — எமக்கினி
யாதானு மாகிடு காண் நெஞ்சே, அவர்திறத்தே
யாதானும் சிந்தித்திரு”– பெரியதிருவந்தாதி) என்று சொல்லியிருப்பதும் இங்கு பொருளமைதியில் மிகவும் வியந்து போற்றத்தக்கதாகும்.

————-

திருநாங்கூர் 11 திவ்ய தேசம்

திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்ய தேசம் உள்ளது.

1. திருக்காவளம்பாடி
2. திருஅரிமேய விண்ணகரம்
3. திருவண்புருடோத்தமம்
4. திருச்செம்பொன் செய்கோவில்
5. திருமணிமாடக்கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்

இவ்வூரைச் சுற்றி சுமார் 1/2, 1, 1 1/2 மைல் தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு திவ்ய தேசம் என்றே வழங்குவர்.

7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன் பள்ளி

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருட சேவைக்கு இந்த 11 பெருமாள்களும் எழுந்தருள்வர். இந்த
11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் வந்து ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வர். இந்த கண்கொள்ளா காட்சியான கருட சேவையை காண்பதற்கு இந்தியா வெங்கிலும் உள்ள
பக்தர்கள் கூடுவர்.

புரசங்காடு எனவும், பலாசவன சேத்திரம் எனவும், மதங்காச்சரமம் எனவும் நாகபுரி எனவும் பல பெயர்களில் வழங்கப்படும் இந்த
திருநாங்கூர் பகுதிக்கு உபய காவேரி மத்திமம் என்றும் ஒரு பெயர் உண்டு. தெற்கே காவேரிக்கும் வடக்கே மண்ணியாறுக்கும் இடைப்பட்ட இப்பகுதி
உபயகாவேரி மத்திமம் ஆகும்

ஒரு சமயம் பூலோகத்தில் பராசக்தியின் தந்தையாக இருந்த தட்சன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே
பார்வதி சிவனைநோக்கி தட்சனுக்கு புத்திமதி கூறி தங்களை அழைக்கச் செய்கிறேன் என்று சென்று தட்சனுக்கு புத்திமதிகள் கூற அவன் சிவனை
மேலும் இகழ்ந்து பேசி அனுப்பினான். இதனால் கோபமுற்ற பார்வதி தட்சனை சபித்து அவன் யாகத்தை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வர, சிவன்
ஏற்றுக்கொள்ள மறுத்து கோபம் அடங்காமல் ருத்ர தாண்டவம் ஆடினார் என்ற கதை எல்லோருக்கும் தெரியும். சற்றேனும் கோபம் தணியாத சிவன்
இவ்வுலகமே அழியும்படியாக கொடூர நடனத்தில் இந்த உபயகாவேரி மத்திமத்தில் வந்து ஆடியதாகவும் அப்பொழுது சிவனின் தலையில் உள்ள
சடாமுடித் தரையில் பட்ட உடன் அதில் இருந்து ஒரு சிவன் தோன்றி கொடூர நடனம் ஆட, இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிவனுடைய தலைமுடி
தரையில் அடிபட அதிலிருந்து ஒவ்வொரு சிவனாக தோன்ற தேவர்களும், ரிஷிகளும் பேரழிவு வந்துவிடுமோ என்று எண்ணி உலகை காக்குமாறு
மகாவிஷ்ணுவிடம் வேண்ட பரமபதத்தில் இருந்து மகாவிஷ்ணு புறப்பட்டார். இதற்குள் இந்த உபயகாவேரி மத்திமத்தில் 11 சிவன்கள் (சிவரூபங்கள்)
தோன்றி கொடும் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க பரமபதத்திலிருந்து வந்தஎம்பெருமான் இவ்விடத்திற்கு எழுந்தருளினான். நாராயணனை பரமபத
நாதனாக கண்டதும் சிவன் தனது கொடூரமான தாண்டவத்தை நிறுத்தினான். என்னைப்போல் தாங்கள் 11 திருமால்களாக காட்சி அளிக்கவேண்டும் என்று
சிவன் வேண்ட பூலோகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளாக உள்ள 10 பெருமாள்களை பரமபதநாதன் நினைத்த மாத்திரத்தில் 10 பெருமாள்களும்
இங்கு எழுந்தருளினர். பேராச்சரியம் உற்ற சிவன் ஏகாதச மூர்த்தியாக காட்சி தரவேண்டும் என்று விண்ணப்பிக்க, அவ்வண்ணமே செய்வதாக பெருமாள்
அருள்பாலித்தார்.
11 பெருமாள்கள் நின்ற இடந்தான் உபயகாவேரி மத்திமத்தில் அமைந்துள்ள இந்த திருநாங்கூர் 11 திருப்பதிகள் ஆகும்.
இதன்பின் பதினொரு சிவரூபங்களை திருமாலின் அவதார மூர்த்திகளாகிய பதினொருவரும் அழைத்து ஒரு சிவனுக்குள் ஒரு சிவனாகச்
செலுத்தி பார்வதியையும் ஏற்றுக் கொள்ள வைத்ததாக ஐதீகம்.
இந்த பதினொரு திவ்ய தேசங்களை சேவித்த வகையில் இங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது.

சிவன் பதினொரு வடிவம் கொண்டதை
ஸ்வமயம் பூதஸத் யானே
த்வாதச விபத்வானே
ஏகாதசனாம் ருத்தரனாம்
பூதஸ் ஸண்யானே. – என்று வடமொழி கூறும்.

11 பெருமாள்களாக வந்தவர்கள் யார் யார் எனில் பத்திரிநாத்தில் உள்ள நாராயணப் பெருமாளே
அதே பெயரில் வந்து மணிமாடக்கோவில் இருந்த இடத்தில் எழுந்தருளினார்.
1. மணிமாடக்கோவில் – நாராயணப்பெருமாள் – பத்ரி
2. அரிமேயவிண்ணகரம் – குடமாடு கூத்தர் – கோவர்த்தனகிரி
3. வைகுந்தவிண்ணகரம் – ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
4. வெண்புருடோத்தமம் – அயோத்தி
5. செம்பொன்செய் கோயில் – அழகிய மணவாள- உறையூர்
6. திருவெள்ளக்குளம் – அண்ணன்கோயில் – திருப்பதி
7. திருதெற்றியம்பலம் – பள்ளிகொண்ட பெருமாள் – ஸ்ரீரங்கம்
8. திருத்தேவனார்த் தொலை – கீழச்சாலை – திருவடந்தை
9. திருக்காவளம்பாடி – கோபாலகிருஷ்ணன் – ருக்மணியுடன் – துவாரகை
10. திருமணிக்கூடம் – வரதராஜப்பெருமாள் – கச்சி
11. பார்த்தன்பள்ளி – பார்த்தசாரதி – குருசேஷ்த்திரம்

இந்த பதினொரு திருநாங்கூர் திருப்பதிகளிலும் உள்ள பெருமாள்கள் தான். ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூருக்கு
எழுந்தருளுவர். மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்த கருடசேவை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த 11 பெருமாள்களை கருடசேவையில் சேவிப்பது 11 திவ்ய தேசங்களுக்கு சென்று வந்ததற்கு ஒப்பாகும்.

ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர்
சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்) காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தை கேட்ட உடன்
திருமங்கையாழ்வார் பிரேவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும் திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும்
என்று மக்கள் நம்புவதும் இப்பகுதியில் நிலவும் ஒரு திவ்யமான பக்தி நம்பிக்கையாகும்.

27. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)

கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசூரனையழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை
அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன்
இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுத்தான். எனவே சினங் கொண்ட கண்ணன் அவனோடு பொருது அவனது காவளத்தை
(பூம்பொழிலை) அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் (சிவனை ஒன்றாக்கி முடிந்தபின்)
தான்  இருக்க காவளம் போன்ற பொழிலைத் தேடினான். இந்தக் காவளம்பாடியில் நின்றுவிட்டான்.

மூலவர்-கோபாலகிருஷ்ணன், (ராஜகோபாலன்) ருக்மணி, சத்தியபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார் (சன்னதி இல்லை)
தீர்த்தம்– தடமலர்ப் பொய்கை
விமானம்– ஸ்வயம்பு விமானம்
காட்சி கண்டவர்கள்– சேனைத்தலைவர், ருத்ரன்

காவளம் என்னும் சொல்லிற் கொப்ப அழகிய பொழில்கள் சூழ்ந்து துவாரகாபுரியைப் போலவே செழித்து திகழ்கிறது.

இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான“மடவரல் மங்கை” என்பதாகும்.
படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பல்நடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தினானே–திருமங்கை மங்களா ஸாஸனம்

———-

28. சீர்காழி என்னும் காழிச்சீராம விண்ணகரம்

இத்தலம் இருந்த பகுதிக்கு பாடலீக வனம் என்றும், சேத்திரத்திற்கு “உத்தம ஷேத்திரம்” என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்கு
தவமியற்றியதாகவும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து எம்பெருமான் அவருக்கு திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டியருளியதாகவும் இத்தல வரலாறு பேசப்படுகிறது.
பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும் அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகா விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம்
இருக்கலானார். உரோமச முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு உன் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின்
ஆயுளில் ஒருவருடம் குறையும் என்று கூறி இன்னும் யாதுவேண்டுமென்று கேட்க எம்பெருமான் எடுத்த திரிவிக்ரம அதாரத்தை இவ்விடத்தே எனக்கு
காட்டியருளவேண்டுமென்று வேண்ட அவ்வண்ணமே எம்பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி திரிவிக்ரம கோலத்தில் நின்றருளியதாக புராண வரலாறு இவ்விதம் வரம் பெற்ற உரோமச முனிவர் பிரம்மனை நோக்கி “உன் ஆயுளும் என் ஒருரோமும் சரி” என்று கூறி அவனது கர்வத்தை அடக்கியதாகவும் கூறுவர்.
புராணமும்,
பாடலீக வனம் நாம ஷேத்ர நாம உத்தமஷேத்ரா
ரோமஸ்ய மஹாத்ம நகரி
……………………………………………..
த்ரி விக்ரம முகம் வந்தே ஸதா ஸர்வாங்கம் சுந்தரம்— என்று விவரித்துப் பேசும்,
இதன் எல்லைகளைக் கூட,
உதகே பச்சிம பாகே காவிரி யாற்ச உத்ரதடே
பூர்வேஸ்ய உத்ர ரங்கஸ்யே நூபுராயஸ்த தக்ஷ்ணே-(உதகே – கடல், பச்சிம் – மேற்கு, உத்ர – வடக்கு, பூர்வ -கிழக்கு)
பாடலிக வனம் முடியும் இடத்தே மேற்கு எல்லை கடல் காவிரிக்கு வடக்கு, நூபுர கங்கையென்னும் கொள்ளிடத்திற்குத் தெற்கு,
உத்திரரங்கம் என்னும் கோயிலுக்கு கிழக்கு என்று இதன் எல்லைகளையும் கோடிட்டு காட்டுகிறது.

தாளாளன் – தாடாளன்-என்பதே திருநாமமாயிற்று. தாடாளப் பெருமானை வைத்து திரேதாயுகத்தில் கட்டப்பட்டிருந்த கோவில் இப்போதுள்ள இடத்தைவிட்டு சற்று தொலைவில் இருந்ததாகவும், அக்கோவில் வெள்ளப்பெருக்கால் சிதைபாடுற்ற பின்னே அதே பெருமாளை பிரதிட்டை செய்து இப்போதுள்ள இடத்தில் இத்தலம் எழுப்பப்பட்டதென்பர். ஆயினும் இக்கோவிலும் பழங்காலத்தே எந்த மன்னரால் அல்லது யாரால் கட்டப்பட்ட தென்று அறியுமாறில்லை.

மூலவர்–திரி விக்ரமன், தாடாளன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய நிலை.
தாயார்- லோக நாயகி
உற்சவர்– திரிவிக்ரமன், தாயார் மட்டவிழ்குழலி
தீர்த்தம் — சங்க தீர்த்தம், சக்ர தீர்த்தம்
விமானம்– புஷ்கலா வர்த்தம்
காட்சி கண்டவர்கள்– உரோமசர், அஷ்டகோண மஹரிஷி

108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம் என்றால் விண்ணில்
உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம் என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

1. பரமேச்சுர விண்ணகரம்
2. காழிச்சீ ராம விண்ணகரம்
3. அரிமேய விண்ணகரம்
4. வைகுந்த விண்ணகரம்
5. நந்திபுர விண்ணகரம்
6– திரு விண்ணகரம்

ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து தினமும் திருவாராதனம்
முடித்து மீண்டும் தவிட்டுப் பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள்.
திருமங்கை யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில் வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு கூற
அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற
பெயரும் உண்டு.
திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர் வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட ஆராதன விக்ரக
வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க அவரது சீடர்கள்மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள் இருப்பதை அறிந்து அதனைப்
பெற்று வந்து கொடுத்ததாகவும் கூறுவர்.
ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று நவாபின்
மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும், உப்பரிகையிலும் வைத்து விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர படையாச்சி கனவிலும், அர்ச்சகரின்
கனவிலும் வந்து தாம் இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி உம்மைக் கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன் என்று கூறினார்.
அவ்விதமே அவ்விருவரும் வரும்போது காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை அடைந்து.

தாடாளா வா தாடாளா வா வெண்ணெய் உண்ட தாடாளா வா
தாடாளா வா தாடாளா வா தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று கூற-உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப் பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக் கொண்டுவந்து
அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.
இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் சிதம்பரப் படையாச்சியின் வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா(அ)யது எல்லாம் ஒருங்கு – குறள் 610
தா அயது – தாவிய பரப்பு முழுவதும்
அடி அளந்தான் – அடியால் உலகளந்த திருமால்
திருமாலின் காலடிக்கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

திருமங்கையாழ்வாரின் மேன்மைக்கும் புகழுக்கும் இத்தலம் ஒரு உந்துகோலாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஞானசம்பந்தரை
வாதில் வென்று அவரது வேலை திருமங்கையாழ்வார் பரிசாகப் பெற்றது இந்த தலத்தில்தான்.

ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி –முதலடியாகக் கொண்டு,
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எண் வரிசையிலும் பாடி தொடர்ந்து வரும் பத்துப் பாடல்களில் திருமாலின் பத்து அவதாரங்களை விளக்கி நிற்க,
இத் திறன் கண்டு வியந்த ஞான சம்பந்தர் நாலுகவிப்பெருமாள் என்பது உமக்கே செல்லும், விருதோதிச் செல்லும்,
விருதோதிச் செல்லும் என்று கூறி கையிலிருந்த வேலினையும் பரிசாகக் கொடுத்து திருமங்கையின் கால்களுக்கு தண்டை அணிவித்து மகிழ்ந்தார்.

தமது பட்டப் பெயர்கள் 1.ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார் சீயம் 5.கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான் 8.கலியன்.

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக் கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம் அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா
படியுண்ட பெருமானைப் பறித்து பாடி பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே— என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு
அதாவது தன்னைத் தாயாக நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.
ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.-உமது பவனியைக்காண என் மகள் ஒருநாள் வந்தபோது அவள் உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர்.-இதுமுறையோ, எனது ஒரே மகள் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று கூறும் வகையில்
திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும் திருடி விட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) ஞானசம்பந்தர் கூறினார்.

இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக் கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப் பேச்சுப்
பேசுகிறார்.–திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை உயிர்ப்பித்துக் கொடுத்தார். இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு
தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.
ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை என்பர் பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து காணாக் காதலுற்று
பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன். தாங்கள் மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
பிழைக்கச் செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட இதனைச் செய்ய முடியுமன்றோ, ஆனால் தங்களைக் காண விரும்பி நிலவில்
வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை நிலைக்கும் என்றார்.

வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே

பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களைத் தமிழன்னைக்கு வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் கண நேரத்தில் (தாய்ப்பேச்சு,
தலைவிப்பேச்சு என்று) இரண்டு காதற்பூக்களைத் தமிழன்னைக்குச் சொருகி விட்டுச்சென்று விட்டனர்.

—————-

29. திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

அரிமேய விண்ணகரம் என்றால் அனைவருக்கும் தெரியாது.-குடமாடு கூத்தர் கோவில் என்றால் யாவருங் கூறுவர். கோவர்த்தன
மலையைக் குடையாக எடுத்தாடிய ஹரியே இங்கு வந்துள்ளான் என்பது ஐதீஹம்.

மூலவர்–குடமாடு கூத்தன். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்– அம்ருத கடவல்லி
உற்சவர்– சுதுர்புஜங்களுடனான கோபாலன் குன்றம் குடையாக எடுத்த கோபானல்லவா
தீர்த்தம்– கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம்– உச்சருங்க விமானம்
காட்சி கண்டவர்கள்– உதங்க முனிவர்

உதங்க முனிவர் என்பார் எம்பெருமானைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைச் சேவித்ததாக ஒரு வரலாறும்
உண்டு.

குடமாடு கூத்தர் என்பது இப்பெருமானின் திருநாமம்–பரஞ்சோதியை குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை”குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன நாதனே–வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.- குடங்கள் எடுத்து ஆடினானா அல்லது குடை கொண்டு ஆடினானா

நந்திபுரவிண்ணகரத்தை மங்களாசாசனம் செய்யும்போது
தாய்செற உளைந்து தயிருண்டு குட மாடு தட மார்வர் தகைசேர் ….… என்று குடங்களில் தயிருண்டதை கூறுகிறார்.
இத்தலத்திற்கு அளித்த பாடலில்,
காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் என்று
குன்றை குடையாய் பிடித்த காட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
எனவே இங்கிருப்பவனுக்கு கூறப்பட்ட குடமாடு கூத்தன் என்ற சொல் குடங்களையெடுத்து ஆடவல்ல கூத்தனல்ல
குன்றத்தைக் குடையாய் எடுத்த கோவிந்தன் தான்” என்பதில் சான்றோர் மருட்சி கொள்வாரா,
மேலும் குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடுவது லீலாவிநோதம்
குன்றத்தைக் குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம். பகைவனுக்கு அருளும் பண்பினனாக
இங்கு எழுந்தருளியுள்ளவன் குடங்கள் எடுத்து ஆடுபவனன்று குடையாக குன்றத்தை எடுத்தவனே என்று தலைக்கட்டுவதற்கு தடையாது முளதோ,
எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு குறிப்பிட்டது குன்றைக் குடையாகப் பிடித்ததைத்தான் குறிக்குமென்பது துணிவு.
மேலும் பாடல் 207இல்
குன்றத்தாய் என்றும், குடமாடு கூத்தன் என்றும் பிரித்துச்
சொல்லப்பட்டுள்ளதும் இங்கு சீர்தூக்கிப் பார்க்க வல்லதொன்றாகும்.
குன்றத்தை குடையாக எடுத்து கோபாலர்களையும்,ஆவினங்களையும் காத்தருளின கோவர்த்தன நாதனே
இங்கு எழுந்தருளிய 11 பெருமான்களுள் ஒருவராக இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியை குடையாகப்
பிடித்த நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளதால் குடமாடு கூத்தன் என்று திருமங்கையாழ்வார் குறிப்பது குடைபிடித்த நிகழ்ச்சியேயாகும்.

எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு எடுத்தாளப்பட்ட இச்சொல் குடைக் கூத்தினையே குறிக்கிறது என்பதில் யாதும் ஐயமில்லை.

———–

30. திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)

தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுந்தான்.
புருஷோத்தமனைத் தான் தூய தமிழில் புருடோத்தமன் என்கிறார் மங்கை மன்னன்.

மூலவர்–புருடோத்தமன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– புருடோத்தம நாயகி
தீர்த்தம்– திருப்பாற்கடல் தீர்த்தம்
விமானம்– சஞ்சீவி விக்ரஹ விமானம்
காட்சி கண்டவர்கள்– உபமன்யு, வ்யாக்ரபாத முனிவர்

அயோத்தி எம்பெருமானே இங்கு பதினொருவரில் ஒருவராக  எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா அயோத்தியில்
உள்ளவன்தான் புருடோத்தமன் என்பதை திருமங்கையாழ்வார் மட்டுமல்ல, பெரியாழ்வாரும்,-வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரைஅயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை

வ்யாக்ர பாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு
மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி
தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாத முனிவருக்கும் காட்சி
தந்தார் என்பதும் இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும்.

———-

31. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)

நன்னடுவுள்–திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.

இராவண சம்ஹாரம் முடிந்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு
தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு பிராம்மணர்க்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு இந்தக்
கோவிலை (அப்பிராம்மணர் தற்போதுள்ளவாறு) கட்டியபடியால் இதற்கு செம்பொன்செய் கோவில் என்று பெயர் வந்ததாயும் கூறுவர்.

மூலவர்-செம்பொன்ரங்கர்
தாயார்- அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம்– ஹேம புஷ்கரணி, கனக தீர்த்தம்
விமானம்– கனக விமானம்
காட்சி கண்டவர்கள்– ருத்ரன்

செம்பொன் ரங்கர் என்றும் ஹேமரங்கர் என்றும் பேரருளாளன் என்றும் இப்பெருமாளுக்குத் திருநாமங்கள். பெருமாள் பரமபதத்தில்
இருப்பதால் அருளாளன். அதைவிடுத்து இங்குவந்து நம்மோடு இருப்பதால் பேரருளாளன்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காஸ்யபன் என்னும் அந்தணன் மிக்க வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் வறுமையைப் போக்க
எவ்வளவோ முயன்றும் தவம்பல செய்தும் பயனில்லை. பின்னர் பக்தர்களால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அவன் இங்கு வந்து திருமந்திரத்தை 3
தினங்களில் 32000ம் தடவை உச்சரித்து ஜபம் செய்ய பெருமாள் திருவருளால் பெருஞ்செல்வம் பெற்றான் என்பதுமோர் கதையுண்டு. எனவே இழந்த
செல்வத்தை பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் எம்பெருமானை சேவிப்பது மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பதில் ஐயமில்லை.

திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின் (திருக்கோழி) அழகிய மணவாளப் பெருமான் ஆவார். இவரே பேரருளாளன்
என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார். எனவேதான் உறையூரில் உள்ளதைப் போன்றே இங்கும் பெருமாளுக்கு இரண்டு
பிராட்டிகள். இதனைத் திருமங்கையாழ்வாரும்,

பேரணிந் துலகத்தவர் தொழுதேத்தும் பேரருளா ளனெம் பிரானை
வாரணி முலையாள் மலர் மகளோடு மண்மகளுடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே-என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
உறையூரில் கமலவல்லி நாச்சியார், பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார்
இங்கு அல்லி மாமலர் நாச்சியாரும் பூமாதேவியும் எழுந்தருளியுள்ளனர்.

————

32. திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்)

ஸ்தயம் ஞானம் அநந்தம் பிரஹ்மம்’ -நந்தா விளக்கே, அளத்தற் கரியாய் -மெய் மதிக்கடல்

அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள்நிறைந்து இங்கு எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணி
மாடக்கோயில் எனப்பெயர் வந்ததாகவும் கூறுவர்.

மூலவர்– நாராயணன், நந்தாவிளக்கு கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்- புண்டரீகவல்லித் தாயார்
உற்சவர்–அளத்தற்கரியான்
தீர்த்தம்– இந்திர புஷ்கரணி, ருத்ர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள்– இந்திரன், 11 சிவன்கள்
விமானம்– ப்ரணவ விமானம்

பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11 திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன் என்ற
பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே நிலை. பத்ரிகாஸ்ரமத்தில்தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை உபதேசித்
தருளினார். எனவேதான் எமக்கும் அந்த மந்திரத்தை யருளாயென தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். என்பது ஐதீகம். திருமந்திரம் உபதேசித்த
பெருமாளே இங்கு எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலம்.

எம்பெருமான், சிவனின் நடனத்தை நிறுத்த, திருநாங்கூரில்பிரவேசித்தபோது இந்த ஸ்தலத்தினருகில் சிவன் நடனம் புரிந்துகொண்டு
இருந்ததாகவும், ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத நாதனாகக் கண்டபரமேஸ்வரன் தன்னைப்போல் 11 உருக்கொண்டு பெருமாள் காட்சி தர
வேண்டுமென விண்ணப்பம் செய்ய, அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் காட்சி தந்து ஒரு சிவனை அழைத்து ஒரு சிவனுக்குள்
செலுத்தி பிறகு இன்னொரு சிவனை அழைத்துச் செலுத்தி இந்த விதமாக 11   சிவன்களை ஒன்றாக்கி நிறுத்தினார் என்பது ஐதீஹம்.
இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக வந்ததாயும் கூறுவர்.
திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்த ஸ்தலத்திற்கு முன்புதான் நடைபெறுகிறது

திருக்கோட்டியூர் நம்பி இங்கு விஜயம் செய்துள்ளார். திருமந்திரத்தை உபதேசித்த பத்ரி நாராயணன் இருக்கும் இடமல்லவா இது. திருமந்திரத்தை
இராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோட்டியூர்நம்பி இங்கு எழுந்தருளியிருப்பது முறைதானே.

—————–

33. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)

சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவிடம் (திருநாங்கூர்) வந்தனர்.
பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய ஸூரிகட்கு காட்சி கொடுக்கிறானோ அதே போல் இங்கும் எழுந்தருளியுள்ளார்.

மூலவர்-வைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான். உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- வைகுந்த வல்லி
உற்சவர்- மூலவருக்குரைத்த அதே பெயர்கள்
தீர்த்தம்– லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா
விமானம்– அனந்த ஸத்ய வர்த்தக விமானம்

காட்சி கண்டவர்கள்-உபரிசரவசு, உதங்கமஹாரிஷி

பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது

——–

34. திருவாலி – திருநகரி

திருவாலி-

ஒரு காலத்தில் ஆலி நாடு என்று ஒரு குறுநிலப் பகுதி மிகப் புகழ் வாய்ந்ததாக இருந்தது. பில்வாரண்யம் என்று அழைக்கப்பட்ட ஆரண்யத்தை
ஒட்டியதாக இப்பகுதி அமைந்திருந்தது.
திருமால் நரசிம்ம அவதாரம் செய்தபோது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருக்கக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் பூலோகம்
மேலும் அழியாது காக்கப்படவேண்டும்

திருமால் நரசிம்ம அவதாரம் செய்தபோது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருக்கக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் பூலோகம்
மேலும் அழியாது காக்கப்படவேண்டும் என்று பிராட்டியை வேண்ட, பிராட்டி எம்பெருமானின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். அமர்ந்த தேவியை எம்பெருமான் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதால் திருவாலி (திருவாகிய இலக்குமியை ஆலிங்கனம் செய்தமையால்) ஆயிற்று.

குலசேகராழ்வார் ஆலி நகர்க்கதிபதியே அயோத்தி யெம்மரசே ராகவனே தாலேலோ என்று மங்களாசாசனம்

இந்த ஆலிநாட்டைத் தலைநகரமாகக் கொண்டுதான் திருமங்கை குறுநில வேந்தனாய்த் திகழ்ந்தார். எனவேதான் அவருக்கும் ஆலிநாடான்
என்றும் பெயருண்டாயிற்றுஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும்,சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலுமே இப்போது
திருவாலியில் உள்ள அடையாளங்களாகும்

மூலவர்-அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர்- திருவாலி நகராளன்
தாயார்– பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தீர்த்தம்- இலாக்ஷ்ண புஷ்கரணி
விமானம்– அஷ்டாச்சர விமானம்
காட்சி கண்டவர்கள்– திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வாரின் தேவி குமுதவல்லி நாச்சியார் வளர்க்கப்பட்ட இடம்.

இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம ஷேத்ரம் என்று பெயர் லட்சுமி தேவியுடன் நரசிம்ம ரூபமாய் எழுந்தருளியிருப்பதால் இப்பெயருண்டாயிற்று.
இதனையும் சேர்த்து இவ்விடத்தைச் சுற்றி ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள் உண்டு. அவைகள் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்கள் என்று இன்றும்
வழங்கப்படுகின்றன.

1. குறையலூர் – உக்கிர நரசிம்மன்
2. மங்கை மடம் – வீர நரசிம்மன்
3. திருநகரி – யோக நரசிம்மன்
4. திருநகரி – ஹிரண்ய நரசிம்மன் (திருநகரியில் இரண்டு நரசிம்மர்கள் சன்னதிகள் உள்ளன)
5. திருவாலி – லட்சுமி நரசிம்மன்

திருமங்கைக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று பிராட்டி எம்பெருமானுக்கு விடாது வேண்டுகோள் விடுக்க அவ்வாறாயின் திருவாலியில்
தவஞ்செய்து கொண்டிருக்கும் பூர்ணமஹரிஷியின் புத்திரியாகப் போய் அவதாரஞ்செய் நான் வந்து திருமணக் கோலத்தில் உன்னை ஏற்றுக்கொள்ளும்
போது திருமங்கைக்கு அருள் பாலிப்போம் என்றார்.0 பூர்ண மஹரிஷி தவம் புரிந்தமையால் பூர்ண புரி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.

எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு எழுந்தருளி (ஆலி மணவாளனாக) பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை
மணம் புரிந்து கொண்டு திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட வேதராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது திருமங்கையாழ்வார் மறித்து
வழிப்பறி நடத்த, எம்பெருமான் திருமங்கையின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தை உபதேசம் செய்தார்.

எம்பெருமான் பத்ரியில் (பதிரகாசிரமத்தில்) தானே ஆச்சாரியனுமாய் தானே சீடனுமாய் நின்று திருமந்திர உபதேசம் செய்தார். அந்தக் குறைதீர
ஸ்ரீபதரியின் நாராயணப் பெருமாளே ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமாளாக இங்கு எழுந்தருளி திருமங்கை மன்னனுக்கு திருமந்திர உபதேசம் செய்து
அதற்கு எல்லை நிலமான அர்ச்சாவதாரங்களையும் காட்டிக்கொடுத்து திருமங்கை யாழ்வாரையும் ஆட்கொண்டார்.

எட்டிழையாய், மூன்று சரடாய், இருப்பதொரு மங்கள சூத்திரத்தை (ஓம் நமோ நாராயணா என்று 8 எழுத்தாக) ஓம், நமோ, நாராயணாய என்று
மூன்று சரடாய் திருமங்கையாழ்வாருக்கு காட்டின இடமாகையால் இதனைத் திருமணங்கொல்லை என்று பெரியோர் அருளிச் செய்வர். இதன் பெருமையை
மணவாள மாமுனிகளும் இதுவோ திருமணங்கொல்லை. இங்கேதான் வெட்டுங் கலியன் வாள் வலியால் வெறுட்டி நெடுமாலை எட்டெழுத்தும் தட்டிப் பறித்த இடம் என்று ஈடுபட்டு அனுபவிப்பர்.

இங்கு (வேதராஜபுரத்தில்) ஆண்டுதோறும் பங்குனி உத்திர முதல் நாள் இரவு திருமங்கை மன்னன் ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமானை வழிமறித்து
திருவேடுபறி நடத்தி திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. வேடுபறி மண்டபம் என்று வேடுபறி (எம்பெருமானிடம்
திருமங்கை கொள்ளையிட்ட இடத்தில்) நடந்த இடத்தில் ஒரு மண்டபமும் உள்ளது.

பத்ரிகாச்ரமத்துக்கு அடுத்தபடியாக எம்பெருமான் இரண்டாவது முறையாகத் தாமே இவ்விடத்து திருமந்திர உபதேசம் செய்ய
எழுந்தருளியதால் இத்தலம் (திருவாலி) பத்ரிகாச்ரமத்துக்கு சமமானதாய்க் கருதப்படுகிறது.

———-

திருநகரி

திருநகரி அமைந்துள்ள இடம் பில்வாரண்யம் என்று புராணம் கூறுகிறது. பில்வாரண்யத்தின் எல்லைகள் கீழ்க்கண்டவாறு பேசப்படுகிறது.

காவிரிக்கு வடக்கு, நூபுர கங்கை என்னும் கொள்ளிடத்திற்கும் உரோமச ஷேத்ரமாகிய சீர்காழிக்கும் சமுத்திரத்திற்கும் மத்தியில் பில்வாரண்யம்
அமைந்துள்ளது.

காவேர்யாற்ச் சேத்தர தீரே நூபுராயஸ்ச தட்சிணே
ரோமஸ் சோரு தன்வதார் மத்யே பில்வாரண்ய மிதிச்ருதம்
பில்வ முலஸ்திதளொ பூத்வா நரசிம்மஸய சன்னிதென
ஐ யேதஷ்டாஷரம் மந்தரம் மந்திரசித்தம் அவாப்துயாது – என்பது கருட புராணம்.

பில்வாரண்யம் அல்லது வில்வாரண்யம் என்று அழைக்கப்படும் இப்பகுதி பஞ்ச நரசிம்ம ஷேத்ரங்களுள் ஒன்றாகும். இங்கு யோக நரசிம்ம
மூர்த்தி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீபுரி யென்றும் ஆலிங்கன புரி யென்றும் பில்வாரண்ய ஷேத்ரம் என்றும் இதற்குப் பெயர்.

கிரேதாயுகத்தில், பிரம்மாவின் 5வது புத்திரனான கர்த்தம பிரஜாபதி திருமாலின் ஸாயுஜ்யம் (மோட்சம்) வேண்டுமென இவ்விடத்து
திருமாலைக்குறித்து கடுந்தவம் செய்தார். இவருக்கு அருள்வதில் எம்பெருமான் அதிகமான கால தாமதம் காட்டவே பக்தனுக்கு விரைவில் காட்சி கொடுக்க
வேண்டும் என்று பிராட்டி எம்பெருமானை வேண்ட, அவரோ அதற்குச் சற்றும் செவி சாய்க்காவண்ணம் மேலும் பொறுமை காட்டி நின்றார். இதைக்
கண்டு சினந்த பிராட்டி (பக்தனுக்கு அருள்வதில் தான் கொண்டுள்ள பரிவு என்னும் தாய் மனோபாவத்தில்) வைகுண்டத்தை விட்டு பூவுலகுவந்து
இவ்விடத்து அமைந்திருந்த ஒரு அழகிய தாமரைப் பொய்கையில் ஒரு அழகிய தாமரை மலருக்குள் தன்னை மறைத்துக் கொள்ள திருமகள் இல்லாத
வைகுந்தம் பொலிவு குன்றியது.

திருமால் திருமகளைத் தேடி எங்கும் அலைந்து காணாமல் இவ்விடம் வந்து சேர்ந்தார். லட்சுமிக்குத் தாமரை மிகவும் உவப்பாதலால் ஒரு வேளை
இங்கு மறைந்திருக்கலாமென்று தாமரைகளை உற்று நோக்கினார்.
எல்லாத் தாமரைகளும் இதழ் விரிக்காது ஒரே மாதிரி மொட்டாக இருக்கக்கண்ட எம்பெருமான் தனது வலது கண்ணை மூடி இடது கண்ணைத்
திறந்தார். (திருமாலின் வலது கண் சூரியன் இடது கண் சந்திரனல்லவா) எல்லா தாமரைகளும் சந்திரன் வந்துவிட்டது. சந்திர ஒளி வந்துவிட்டது என்று
எண்ணி அலர்ந்துவிட்டது. அதில் ஒரேயொரு தாமரை மட்டும் மலராது நிற்க இதில்தான் ஸ்ரீஇருக்க வேண்டுமென நினைத்த எம்பெருமான் ஓடி வந்து
தாமரை புஷ்பத்திற்குள் இருந்த ஸ்ரீயை ஆலிங்கனம் செய்துகொண்டார்.
எனவே இது ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. தமிழில் திருநகரியானது. (ஏற்கனவே ஒரு ஆலிங்கனம் நடந்ததும்
இவ்விடத்தில்தான் (திருவாலியில்) எனவே இரண்டும் சேர்ந்து வரலாற்றுப் பின்னணியில் ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி என்றாயிற்று.

இத்திருக்கோலத்தைக் கண்ட கர்த்தம ப்ராஜாபதி இதுதான் தருணம் என்று இருவரையும் விடாதே பற்றிக்கொண்டு மோட்சமளிக்க வேண்டினார்.
எம்பெருமான் ப்ரம்ம புத்திரனை நோக்கி உனக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்றும், அருளி
வேறுயாதாகிலும் வேண்டிக்கொள் என்று சொல்ல, இதே திருக்கோலத்தில் இங்கேயே எழுந்தருளியிருக்குமாறு வேண்ட அஷ்டாச்சர விமானத்துடன்
எழுந்தருளினார்.

திரேதாயுகத்தில் இவரே உபரி ஸர வஸு என்னும் மன்னனாக பிறந்தார். (வசு என்பது பெயர். ஸரம் – என்றால் அலைதல் உபரியென்றால் ஆகாய
மார்க்கம். ஆகாய சஞ்சாரம் செய்பவர் என்பது பொருள்) இவர் மிகச்சிறந்த தபஸ்வியாகவும், கடுமையான பக்தனாகவும், பெரிய
பராக்ரமசாலியாகவும் விளங்கி தேவர்களுக்காக இந்திரனுக்கு போரில் உதவி அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்து இந்திரனிடமிருந்து தர்சனம் என்னும்
சக்தியினையும், அங்கஜம் என்னும் தோள்வளையினையும் பரிசாகப் பெற்றார்.
இவர் ஒரு சமயம் விமானத்தில் பறந்து வரும்போது இந்த ஸ்ரீபுரிக்கு மேலாக வரும்போது மேற்கொண்டு செல்லமுடியாமல் விமானம் தடைபட்டு நிற்க
இவ்விடத்தின் மகிமையினையும், விமானம் பறக்காது தடைபட்டமைக்கான காரணத்தையும் அறியுமாற்றான் இவ்விடத்திலேயே திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்யலாயினார். எம்பெருமான் பிரத்யட்சமானதும் இவருக்குப் பூர்வ ஜென்மம் புலப்படவே, எம்பெருமானைப் பலவாறு போற்றித் துதித்து முக்தியளிக்க வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். இதன் பிறகு உபரி ஸர வசு இக்கோவிலுக்கு பல கைங்கர்யங்களை செய்து நெடுங்காலம் இங்கு தங்கியிருந்து சென்றார்.

துவாபுரயுகத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ககூஸ்தபட்டினம் என்னும் நாட்டையாண்ட வஜ்ரகோஷன் என்னும் மன்னனுக்குப் புத்திரப்
பேறில்லை. இவருக்குச் சங்க பாலன் என்னும் ஒரு மந்திரி இருந்தார். அவருக்கு வைரமேகன், நிதிபாலன் என்ற இரண்டு புத்திரர்கள் இருந்தனர்.

வஜ்ரகோஷன் தனக்குப் புத்திரனில்லாமையால் சங்க பாலனின் முதல் புத்திரன் வைரமேகனை நாட்டின் இளவரசனாக்கி, நிதிபாலனை
மந்திரியாக்கினான். இவ்விதம் ராஜ்ய பரிபாலனப் பொறுப்புகளைத் தமது புதல்வர்கள் ஏற்றுக் கொண்டபடியால் சங்கபாலன் திக்விஜயம்
மேற்கொண்டான்.
திக் விஜயத்தின் போது இந்த லட்சுமிபுரியாகிய வில்வாரண்ய மகாத்மியத்தைக் கேள்விப்பட்டு இங்கு தங்கி இவ்விடத்தே மஹாரிஷிகளை
வைத்து பெரிய யாகம் செய்ய, யாகத்தின் அவிர்ப்பாகத்தை ஏற்க திருமால் நேரில் தோன்ற சங்கபாலன் தனக்கு (ஸாயுஜ்யம்) மோட்சம் வேண்டுமென்று
கேட்க அது கலியுகத்தில்தான் என்று எம்பெருமான் கூற அவ்வாறாயாயின் இதே கோலத்தில் எம்பெருமான் இங்கு நித்யவாஸம் செய்ய வேண்டுமென்றும்
இவ்விடத்தில் ஊரும், நாடும், நகரமும் உண்டாக வேண்டும் என்று பிரார்த்திக்க, அவ்வாறே ஆகட்டும் என்று கூறி கூப்பிடு தூரத்தில் கடல்
இருந்தமையால் எம்பெருமான் மேற்கு நோக்கி நின்றருளினார்.

இந்த கலியுகத்தில் திருநகரிக்கு அருகாமையில் உள்ள குறையலூரில் சோழனின் ஆளுகைக்குட்பட்ட சேனைத் தலைவனுக்கு ஒரு புத்திரன்
பிறந்தார். இவரது திருமேனி நீலவண்ணமாயிருந்ததால் இவருக்கு நீலமேகன் (நீலன்) என்றே பெயரிட்டழைத்தனர்.

இளம் வயதில் காமவேட்கையில் ஈடுபட்டுத் திரியும் ஸ்திரிலோலராக இருந்து வருங்காலையில், திருவெள்ளக்குளத்தில் அப்சரஸாக வந்து
திருவாலியில் வளர்ந்து வரும் குமுதவல்லியாரைக் கேள்விபட்டு அவரைத் திருமணம் செய்து தரச் சொல்லி கேட்க, குமுதவல்லியோ திருவிலச்சினை
பெற்றுதுவாதச திருநாமங்கள் அணிந்த பாகவதனுக்கேத்தான் வாழ்க்கைப்பட முடியும் என்று சொல்ல, அவ்விதமே பரமபாகவதனாக மாறி வர, இவரை நோக்கிய குமுதவல்லி எனக்கு ஒரு விரதமுண்டு, அதாவது ஒரு வருட காலத்திற்கு தினமும் ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கட்கு அன்னதானம் (ததியாரதனம்) செய்ய வேண்டுமென்றும் இவ்விதம் முடிந்த பின்னரே நான் தங்களுக்கு பத்தினியாக முடியும் என்று கூற நீலமேகனும் அதற்கியைந்து ததியாரதனத்தின் பொருட்டு பொருள் எல்லாஞ்செலவு செய்து கப்பம் கட்ட பணமில்லாதபோது சோழனால் நறையூரில் (நாச்சியார் கோவிலில்) சிறைவைக்கப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வாரும், மாதனம் தருகிறோம் என்று சொல்லி அவ்வண்ணமே வேகவதி நதிக்கரையில் தனம் கண்டெடுத்து மன்னனுக்கு கப்பம் கட்டிவிட்டு, மீண்டும் ததியாரதனம் செய்து வரும்போது மீண்டும் பொருளின்றிப் போகவே, வழிப்பறியில் இறங்கலானார்.

இந்நிலையில் வைகுண்டத்தில், தனது பக்தன் படும்பாட்டைக் கண்டு மனமிரங்கி பிராட்டி எம்பெருமானை நோக்கி நீலனுக்கு உடனே
அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்க, சரி என்று ஒப்புக் கொண்டு, திருமகளை பூர்ண மஹரிஷியின் புத்திரியாக வளரக் கட்டளையிட்டு
திருமணப் பருவம் வந்துள்ளபோது ஆலிநகருக்கு மணவாளனாகவந்து திருமணம் முடித்து பொற்குவியல்களுடன் திருநகரி நோக்கிச் சென்று
கொண்டிருக்க ஏதோ பெரிய திருமணக் கோஷ்டி செல்வதைக் கேள்வியுற்று திருமங்கை வேதராஜ புரத்திற்கே வந்து எம்பெருமானை வழி மறித்து
பொருட்களைக் கொள்கையிட்டு அதை ஒரு மூட்டையாகக் கட்டித் தூக்க முயன்றபோது, தன் சக்தி முழுவதும் பிரயோகித்ததில், தூக்க முடியாமல்
போக, இவன் ஏதோ மந்திரம் போட்டுவிட்டான் என்று தன் வாளினை உருவி, இம்மூட்டையைத் தூக்க முடியாமல் போனதற்கான மந்திரத்தை
எனக்கு கூறு என்று கேட்க, வா சொல்கிறேன் என்று அழைத்து நீலமேகனின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தைக் (எட்டெழுத்து மந்திரத்தை) கூற
அவருக்கு ஞானமும் பூர்வ ஜென்மமும் புலப்பட திருமங்கை ஆழ்வாராகி (குமுதவல்லி என்னும் மங்கையால் எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்தமையால்
மங்கையாழ்வாரானார்) திக்விஜயம் மேற்கொண்டு, திவ்ய தேசங்களைச் சேவித்து மங்களாசாசனம் செய்து இறுதியில் திருக்குறுங்குடி சென்று திருவரசு
எய்தினார்.

வயலாலி மணவாளனும், திருமகளும் பக்தனின் பொருட்டு இவ்விரண்டு ஸ்தலங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டமையால் திருமங்கையின்
வரலாறும் இவ்விரண்டு திவ்ய தேசங்களுடன் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி ஆயிற்று.

மூலவர்–வேதராஜன் (வயலாலி மணவாளன்) வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுகம்.
உற்சவர்- கல்யாண ரங்கநாதன்
தாயார்- அம்ருத வல்லி
காட்சி கண்டவர்கள்- திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வாரால் பூஜிக்கப்பட்ட சிந்தனைக்கினியான் என்னும் விக்ரகம் இராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு
இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம்
என்றே அழைக்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார் திருக்குறுங்குடியிலிருந்தபோது தம்மைப் போலவே ஒரு பிம்பம் (தங்கத்தால் விக்ரகம்) செய்து தான் அப்பிம்பத்தின்
நேரில் நின்று கொண்டு வா என்று அழைக்க, அப்பிம்பம் நடந்து வர அதனைக் கட்டித் தழுவி தம் சக்தி முழுவதையும், அப்பிம்பத்தில்
செலுத்திவிட்டு அதன் பிறகே திருமங்கையாழ்வார் திருவரசு (மோட்சம்) எய்தினார். இப்பிம்பம்தான் இப்போது திருநகரியில் வைக்கப்பட்டு நித்ய
பூஜைகளும் நடைபெறுகின்றன.

குமுதவல்லியாரின் கோரிக்கைப்படி ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தினந்தோறும் ததியாரதனம் செய்த இடம் இன்றும் மங்கை மடம் என்றே
அழைக்கப்படுகிறது. திருக்குறையலூரிலிருந்து வெகு அருகாமையில் உள்ளது

நம்மாழ்வாரின் அவதாரஸ்தலம் ஆழ்வார் திருநகரியாயிற்று இவரின் அவதாரஸ்தலம் திருவாலி திருநகரியாயிற்று.
ஆண்டாள் மனத்துக்கினியானிடம் ஈடுபட்டார். இவரோ சிந்தனைக்கினியானிடம் ஈடுபட்டார்.

————–

35. திருத் தேவனார்த் தொகை (திருநாங்கூர்)

இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர்-ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க (ஸ்ரீமந் நாராயணன் 11 மூர்த்திகளாக
திருநாங்கூருக்கு வந்தபோது) தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் சபை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.

மூலவர்-தெய்வநாயகன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கடல் மகள் நாச்சியார்
உற்சவர்- மாதவப் பெருமாள்
தாயார்- மாதவ நாயகி
தீர்த்தம்– சோபன புஷ்கரணி, தேவஸபா புஷ்கரணி
விமானம்-சோபனவிமானம்
காட்சி கண்டவர்கள்- வசிஷ்டர்

திருநாங்கூருக்கு எழுந்தருளின 11 எம்பெருமான்களில் இவர் திருவிடவெந்தை  எம்பெருமான் ஆனார்.

உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப்பெருமாள் கோவில் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவருக்குண்டான தெய்வநாயகன் என்னும்
திருநாமம் 108 திவ்யதேச எம்பெருமான்களில் நடுநாட்டுத் திருப்பதியான் திருவஹிந்திரபுரத்துக்கும் பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான
வானமாமலைக்கும் (திருச்சீரவரமங்கை) உண்டு.
இதனால்தானோ என்னவோ இத்தலத்து மூலவர் திருநாமத்தினின்றும் உற்சவரின் திருநாமமான மாதவப் பெருமாள் பெயராலேயே இத்தலம்
வழங்கப்படுகிறது. திருமங்கையும் தமது பாசுரத்தில் தடமண்ணி தென்கரை மேல் மாதவன்றானுரையுமிடம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

வசிட்டர் இத்தலத்து எம்பெருமானை குறித்து தவமிருந்து பெருமாளைக் கண்டதாக ஐதீஹம்.

கடல் மகள் நாச்சியார் என்று அழகிய செந்தமிழ் சொல்கொண்ட நாச்சியார் ஆவார், இத்தலத்துப் பிராட்டி.

————————

36. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது.-பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.

மூலவர்-செங்கண்மால் ரங்கநாதர். லட்சுமிரங்கர் நான்கு புஜங்களுடன் சயன திருக்கோலம். கிழக்கு நோக்கிய சயனம்.
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்– சூர்ய புஷ்கரணி
விமானம்– வேதவிமானம்
காட்சி கண்டவர்கள்- நாச்சியார், அனந்தாழ்வார்

நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது சயன திருக்கோலத்தில் இருக்கும் இப்பெருமான் பார்ப்பதற்கு மிகவும் பேரழகு வாய்ந்தவர்.
செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு மிக்கவர் இந்தப் பெருமாள்.

திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் இவர் ஸ்ரீரங்கத்து ரெங்கநாதனாவார். அதனாற்றான் அரங்கனைப்போல (ஆதிசேடன் மேல்
சயனித்து) பேரழகு வாய்ந்தவராகக் காணப்படுகிறார்.

இந்தக் கோயிலின் புராணக்கதை, அருகிலுள்ள திருமணிகூடம் கோயிலின் புராணக்கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் ஒரு பொதுவான புராணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.கடல் கடைந்த பிறகு, அசுரர்களுக்கு அமிர்தம் கொடுக்காமல் இருக்க, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை விநியோகிக்க ஆரம்பித்தார். என்ன நடக்கிறது என்பதை அசுரர்கள் உணர்ந்தபோது, அசுரர்களில் ஒருவன் (அசுரப் பெண் சிம்ஹிகாவின் மகன்) தேவர் வேடமிட்டு அமிர்தத்திற்காக தேவர்களுடன் அமர்ந்தான். இதை கவனித்த சூர்யனும் சந்திரனும் இதை மோகினியிடம் சுட்டிக் காட்ட, அவள் பானையில் இருந்த கரண்டியைத் தட்டினாள். இதன் விளைவாக, அசுரனின் தலை மற்றும் உடல் பிளவுபட்டு, ராகு மற்றும் கேதுவாக மாறியது. இதற்கு சூரியனும் சந்திரனும் காரணம் என்பதால், இன்றுவரை ராகு கிரகணங்களை ஏற்படுத்தி அவர்களை பழிவாங்குவதாக கருதப்படுகிறது!சூரியனும் சந்திரனும் பயந்து, அவர்கள் உருவாக்கிய இரண்டு குளங்களில் ஒளிந்து கொண்டனர் – சூரிய புஷ்கரிணி மற்றும் சந்திர புஷ்கரிணி – (அவை இந்த கோவில் மற்றும் அருகிலுள்ள திருமணிகூடம் கோவில்.) விஷ்ணு இங்கு வந்து சூரியனை ஆசிர்வதித்தார்.தசாவதாரத்தின் ஒரு பகுதியாக, வராஹ அவதார காலத்தில், காலகேயபுரத்தில் ஹிரண்யாக்ஷனை வதம் செய்வதற்காக விஷ்ணு வைகுண்டத்தை விட்டு வெளியேறினார். ஆனால், ஸ்ரீதேவியும், பூதேவியும் அவரை விட்டு பிரிந்ததை எண்ணி கவலைப்பட்டனர். எனவே இறைவன் இங்கு ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்து, தேவிகளை தன் பக்கத்தில் உட்கார வைத்து, ஹிரண்யாக்ஷனைக் கொல்லும் போது அவர்களை இங்கே இருக்கச் சொன்னார்.11 நாங்கூர் கோவில்களில் பெருமாள் சயன கோலத்தில் இருக்கும் ஒரே கோவில் இதுதான். மேடை மற்றும் கோயில் (மலையாளத்தில்) என்று பொருள்படும் “அம்பலம்” என்ற பட்டம் பெற்ற தமிழ்நாட்டின் ஒரே பெருமாள் கோயிலும் இதுதான். தேற்றி என்பது உயர்ந்த இடத்தைக் குறிக்கிறது. இக்கோயில் மேடு போன்ற உயர்ந்த மட்டத்தில் அமைந்திருப்பதால் இத்தலம் திருத்தேற்றியம்பலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், பொதுவாக சயன கோலத்தில் பெருமாள் இரண்டு கரங்களுடன் மட்டுமே காட்சி தருகிறார். இக்கோயிலில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்-தமிழ் மாதமான தையில் (ஜனவரி-பிப்ரவரி), நாங்கூரில் உள்ள பத்ரிநாராயணப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது, இங்கு 11 நாங்கூர் திவ்ய தேசத்தின் ஒவ்வொரு பெருமாள் மற்றும் கருடன் இங்கு வந்து சேரும். ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய திருவிழா இது.நாங்கூரில் தங்கும் வசதிகள் இல்லை. ஒழுக்கமான பட்ஜெட் மற்றும் இடைப்பட்ட தங்குமிடங்களுக்கு அருகிலுள்ள இடம் மயிலாடுதுறை ஆகும். சமீபத்தில், சீர்காழியைச் சுற்றி சில ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகள் வந்துள்ளன. தொடர்பு கொள்ளவும் : ஆர். நாராயணன் பட்டர்/ ராஜகோபாலன் பட்டர்: 04364 275689/ 94439 85843/87789 87034

—————-

37. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

மூலவர்-வரதராஜப்பெருமாள் (கஜேந்திரவரதன்) மணிக்கூட நாயகன் என்றும் சொல்வர். கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) பூ தேவி
தீர்த்தம்- சந்திர புஷ்கரணி
விமானம்- கனகவிமானம்
காட்சி கண்டவர்கள்- பெரிய திருவடி, சந்திரன்

திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆவார்.

பெரிய திருவடி, சந்திரன், இவ்விருவருக்கும் பெருமாள் இங்கே காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.

—————

38. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)

திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே
ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று.
முன்னொருகாலத்தில் சூர்ய வம்சத்தைச் சார்ந்த துந்துமாரன் என்னும் மன்னனுக்கு சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு 9 வயதில்
மரண கண்டமென்றும் அதிலிருந்து மீள முடியாதென்றும் சாஸ்திர வாதிகளால் தெரிந்த மன்னன் அதற்குப் பிராயசித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுகினான். அவர் இவ்விடத்திற் சென்று (ஆயுள் விருத்தி) மந்திரஞ் ஜெபித்து மரண கண்டத்தை வெல்லுமாறு கூறினார்.

எனவே இவ்விடம் வந்த சுவேதன், இங்கு தவம் செய்து கொண்டிருந்த மருத்த முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து மந்திரப் பயிற்சிப் பெற்று
தடாகத்தின் தெற்கில் வில்வ மரத்தடியில் வடக்கு முகமாயமர்ந்து ஆயுள்விருத்தி மந்திரத்தை ஜெபித்து (ஐப்பசிமாதம் வளர்பிறை தசமி முதல்,
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை ஒரு மாதம்) கடுந்தவமியற்றசிறுவனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரண
கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல நீடித்த ஆயுளை நல்கினார்.

இவ்விதம் சுவேதன் பகவானின் அருள் பெற்றதால் ஸ்வேத புஷ்கரணி என்றாகி தமிழில் வெள்ளக்குளம் ஆயிற்று.

ஸ்வேத வத்ஸ சிரஞ்சீவிந் ஜிதோ ம்ருத்யுஸ்தவயா அதுநா
ம்ருக்யுஞ்ஜயேன மந்த்ரேண ப்ரிதோஸ்மி தவஸி வ்ரத
தீர்க்கமாயு ப்ரதாஸ்யாமி கல்பாந்தஸ் தாயி தேந்நாப
விநோசோ ந பவேத்தாத மார்க்கண்டேயே ஸமோவ – என்பது புராணம்.

முதலில் திருமலைவேங்கடவனை அண்ணா என்று விட்டு அதற்குப் பிறகு இப்பெருமாளை அண்ணா என்றதால் அவருக்கு இவர் அண்ணனானார். அதாவது வேங்கடவனை அண்ணா என்றழைத்த இவர் அதற்குப் பிறகு தமது மங்களாசாசனம் முற்றிலும் வேறு எவரையும் அண்ணா என்றழைக்கவில்லை.
திருவேங்கடத்திற்குப் பிறகு இவரை மட்டுமே அண்ணா என்றதால் அந்த அண்ணாவுக்கு இவர் அண்ணனானார்.
அண்ணன் குடி கொண்ட கோவில் அண்ணன் கோவிலல்லவா.அதனால் தான் திருவெள்ளக்குளத்திற்கு அண்ணன் கோவில் என்றும் பெயருண்டாயிற்று.
அண்ணன் கோவில் என்னும் சொல்லே இங்கு பிரதானமாக விளங்கி வருகிறது.
அவர்மேல் மங்கையுறை மார்பா என்று நம்மாழ்வார் வேங்கடவனை விழிக்கிறார்.
திருமங்கையாழ்வார் இப்பெருமானை பூவார் திருமகள் புல்கிய மார்பா என்றழைக்கிறார்.
அதாவது வேங்கடத்து ஸ்ரீனிவாசனுக்கும் பிராட்டிக்கும் உள்ள தொடர்பை வெள்ளக்குளத்து அண்ணாவுக்கு வழங்குகிறார்.
அம்மட்டுமன்றி இப்பெருமாளைத் திருமங்கையாழ்வார் வேடார் திருவேங்கடமேய விளக்கே என்று விளித்து வேங்கடவனுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பை விரிவுபடுத்துகிறார்.
மேலும் வேங்கடவனை மங்களாசாசனம் செய்து முடிக்கும்போது“கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவராகுவார் தாமே” என்று சொல்லி முடித்தார்.
இவ்வூரிலிருக்கும் அண்ணாவைச் சொல்லும்போது
கலியன் சொன்ன மாலை வல்லரென வல்லவர் வானவர் தாமே” என்று கூறி அவருக்கிவர் அண்ணா என்றே தலைக்கட்டி விடுகிறார்.

மூலவர்-அண்ணன் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- அலர் மேல் மங்கை
உற்சவர்- ஸ்ரீனிவாசப் பெருமாள்
உற்சவர் பத்மாவதித் தாயார் பூவார் திருமகள்
விமானம்- தத்வத் யோதக விமானம்
காட்சி கண்டவர்கள்- சுவேதன்

திருமலையில் பெருமாளுக்குரிய திருநாமமான ஸ்ரீனிவாசன் என்பதும் பிராட்டியின் திருநாமமான அலர்மேல் மங்கைத் தாயார் என்பதும். அதே
பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்ய தேசம் 108 இல் இது ஒன்றுதான்.
வேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது ஐதீஹமாவதால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு
மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் பகர்வர்.

இந்த ஸ்வேத புஷ்கரணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து செல்ல தேவகுலப் பெண்கள் இங்குவருவது ஒரு காலத்தில்
வழக்கமாயிருந்ததாம். அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட
குமுதவல்லியைத்தான் திருமங்கையாழ்வார் திருமணம் செய்ய விழைந்தார்.
எனவே இத்தலம் குமுதவல்லியாரின் அவதார ஸ்தலம் என்பதோடுமட்டுமின்றி திருமங்கையாழ்வாரை இவ்வுலகிற்கு அளித்தமைக்கும் எல்லை நிலமாயிற்று.
அதாவது நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாகத் திகழ்ந்த திருமங்கை குமுதவல்லியைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண் கேட்டு வர,
குமுதவல்லியார் ஒவ்வொரு நிபந்தனையாக விதித்து நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் திருமணம் என்று சொல்ல இவரும் நிபந்தனைகளை
நிறைவேற்ற ஈடுபட்டு, இறுதியில் ஆழ்வாரானார். ஒரு மங்கையினால்ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.

திருமலையைப் போன்றே இங்கும் பிரம்மோத்ஸ்வம் புரட்டாசி மாதமே நடைபெறுகிறது.
இப்பகுதி பலாசவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

——————–

39. திருப்பார்த்தன் பள்ளி

அர்ஜூனன் இவ்விடத்திற்கு வந்தபோது அதிகமான தாக வேட்கை யுண்டாக இங்கே தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்தை நோக்க அதில் இருந்த நீரும் வற்றிப்போனது.
இவ்வாறு தண்ணீர் வற்றிப்போவதற்கு என்னவென்று அகத்தியர் ஆராய்ந்து ஞான திருஷ்டியில் இது கண்ணனுடைய வேலையென்று தெரிந்து
கொண்டு, அர்ஜூனனை நோக்கி அர்ஜூனா நீ எப்போதும், எந்த உதவி வேண்டுமானாலும் உன் ஆபத்பாண்டவனான கண்ணனையல்லவா அழைக்க
வேண்டும் என்று கூற, அர்ஜூனனும் தன் தவறை உணர்ந்து உடனே கண்ணனை நினைக்க கண்ணன் அவ்விடத்தே வந்து கத்தி ஒன்றை அர்ஜூனனிடம்
கொடுத்தான்.
அக்கத்தியால் மண்ணைக் கீண்டிப் பூமியைப் பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது. தாகந்தீர்த்த விஜயன் கண்ணனால் இவ்விடத்து
சிறிது ஞானோபதேசமும் பெற்றான்
பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.-பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு.

மூலவர்–தாமரையாள் கேள்வன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்– பார்த்த சாரதி
தாயார்- தாமரை நாயகி
தீர்த்தம்– கட்க புஷ்கரணி
விமானம்– நாராயண விமானம்
காட்சி கண்டவர்கள்- அர்ஜூனன், வருணன், பதினொரு வடிவமெடுத்த சிவன்.

வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால்
பார்த்த சாரதி பள்ளியென வழங்கி பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.
அகத்தியர், கௌதமர், பரத்வாஜர் போன்றவர்கள் இவ்விடத்தே தவம் செய்தனர்.
கண்ணனிடமிருந்து கத்தியைப் பெற்றுக் கீறி தீர்த்தம் உண்டாக்கியதால் (கட்க-கத்தி) கட்க புஷ்கரணியாயிற்று.
அர்ஜூனனுக்கும் இவ்விடத்து ஒரு கோவிலிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

அகத்தியமுனிவர் நடந்தாய் வாழி காவேரி என்று காவிரித்தாயைத் தரிசித்துக்கொண்டே அதன் பாதையில் நடந்து வந்தவர் இந்த இடத்தைத்
தாண்டிச் செல்லாது இங்கேயே காவிரி தரிசன பயணத்தை முடித்துக் கொண்டு தங்கிவிட்டார். ஆங்காங்கே அகத்தியருக்கு சிறிய சிறிய கோவில்கள்
அமைந்திருந்தாலும் இங்கிருப்பதுதான் கடைசியானதாகும்.
பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன்
உள்ளார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் வதனத்துடன் திகழ்கிறார்.

யாக்ஞவல்ய ஸ்ம்ருதி” என்ற வடநூலும் இத்தலத்தைப் பற்றி பேசுகிறது

இத்தலம் பலாசவனச்ஷேத்திரம், புரசங்காடு என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
பலாசவனம் என்பதும் இத்தலம் உள்ள பகுதியோடு முடிவடைகிறது.
இங்குள்ள கட்க புஷ்கரணி கங்கா தீர்த்தம் என்றும், விஷ்ணு பாத தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.

தசரதன் இவ்விடத்தில் ஒரு யாகஞ்செய்ததாகவும் ஐதீஹம்.

பதினொரு பெருமாள்களில் ஒருவராக இங்கு எழுந்தருளிய இப்பெருமாள் குருக்ஷேத்திரத்திலிருந்து வந்தவரென்றும், திருவல்லிக்கேணி
பார்த்தசாரதியே இங்கு வந்தாரென்றும் சொல்வர். திருவல்லிக்கேணி பெருமாளே இங்கு வந்ததாகக் கொள்வர். ஏனெனில் திருவல்லிக்கேணியில்
இருப்பவர் குருஷேத்ர போரை நடத்திய பார்த்த சாரதியல்லவா?
மூலவர், உற்சவர், இருவருக்குமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவி மார்கள் புடை சூழ இருப்பது 108 திவ்ய தேசங்களில்
இங்கு மட்டும்தான். இவர் பார்த்தசாரதியான கண்ணபிரானல்லவா? எனவே தேவிகள் புடைசூழ இருப்பதில் அதிசயமென்னவுள்ளது.

இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்ற ஒரு பெயரும் உண்டு. சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும்,
கொண்டு திகழ்கிறார் இவர். இவருக்கும் ஒரு தனி மூலவர் இருக்கிறார்.
அவரது கோவில் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தோப்பில் இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரத்தன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி
மிகச்சிறப்பான விழாவாகும். சரம சுலோகார்த்தம் விளங்கிய இடமும் இதுதான்.

இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் பெயரே திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவருக்கும் அமைந்திருப்பது
ஆராய்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.

—————

40. சிதம்பரம் என்னும் திருச்சித்ர கூடம்

கிருஷ்ணாரண்யம் என்று அழைக்கப்படும் ஆரண்யத்தின் மத்தியப்பகுதியில் அழகுற அமைந்துள்ள இத்திருத்தலத்தின்
எல்லைகளைக் கீழ்க்கண்டவாறு பிர்ம்மாண்ட புராணம் கூறுகிறது.
காவிரிக்கு வடக்கு, வெள்ளாற்றுக்குத் தெற்கு, கீழ்கடலுக்கு மேற்கு, ஸ்ரீமுஷ்ணத்திற்கு கிழக்கு.

முனிவ, எவ்வுலகிலுஞ் சிறந்தது பூவுலகம். அதில் நாவலந்தீவு என்னும் பரதக்கண்டஞ்சிறந்தது. அதில் தமிழ்நாடு சிறந்தது. அதில் வடகாவேரியில்
வடதிசை சிறந்தது. அதில் தில்லைவனஞ்சிறந்தது. அதில் புண்டரீகபுரம் சிறந்தது. அதில் சித்ரகூடஞ் சிறந்தது. அந்தச் சித்திரக் கூடத்தில் திருவனந்தன் மேல் அறிதுயிலமர்ந்த தேவாதி தேவனை நானும் சிவபெருமானும் இந்திரனுள்ளிட்டோரும் போற்றி இஷ்டசித்திகள் பெற்றுள்ளோம்.- என்று பிரம்மன் நாரதருக்குச் சொல்கிறான் (பிர்ம்மாண்ட புராணம்)

தகரவித்தை, மதுவித்தை, புருஷோத்தம வித்தை ஆகியன அகர வித்தைக்குள்ளேயடங்கும் (அகரவித்தையென்பது சிருஷ்டியின் தொடக்கத்தை
உணர்த்துவது) அந்த அகர வித்தையின் சிகரத்திற்கு சிற்சபை எனப்பெயர்.
அதில் அட்டாக்கரப்படியின் (அஷ்டாச்சர மந்திரத்தின்) சிகரத்தில் எம்பெருமான் சயனங் கொண்டுள்ளார். (பிர்ம்மாண்ட புராணம்)

கலிங்க நாட்டு மன்னன் கவேரன் என்பவனுக்கு நெடுங்காலம் புத்திரபாக்கியமின்றியிருக்க, கவேரனும் அவனது மனைவியும் கடுந்தவம்
மேற்கொண்டு அதன் பயனால் காவேரியே அவர்களுக்கு குழந்தையாகப் பிறந்தாள். பிறகு காவேரி அகத்தியனால் நதியாக ஆன பின்பு காவேரியின்
தாயும் தந்தையும் அதில் நீராட வரும்போது, உன்னைப்போல் நாங்களும் சாகா வரம் பெற்று எந்நாளும் வாழும் பேறு வேண்டுமென்று கேட்க அதற்கு
வரமளிக்கும் சக்தி திருமால் ஒருவனுக்குத்தான் உண்டெனவும், எனவே அருகாமையில் இருக்கும் தில்லைவனஞ் சென்று கோவிந்தா, கோவிந்தா
என்று கூறி தவமிருக்குமாறு காவேரி கூறியனுப்பினாள்.

அவ்வண்ணமே தவமிருக்க எம்பெருமான் பிரதயட்சமாகி அவ்விருவருக்கும் மோட்சமளித்தார். அஷ்டாச்சர மந்திரத்தை விட கோவிந்தா
என்னும் நாமத்தால் இவ்விடத்தே பக்தர்கட்கு மோட்சம் கிட்டியமையால் எம்பிரானுக்கும் கோவிந்தராஜன் என்னும் திருநாமமே எல்லை கட்டி நின்றது.

இஃதிவ்வாறிருக்க, பராசரன் என்னும் ஒரு முனிவர் திருமாலைக் குறித்து தவஞ் செய்கையில் தஞ்சகன், கஜமுகன், தண்டகாசுரன் என்னும் 3
அரக்கர்கள் அத்தவத்தைக் கலைக்க, முனிவரின் வேண்டுதலின்படி மகாவிஷ்ணு கருடப்பறவை மீதேறி வந்து தஞ்சகன், கஜமுகன் ஆகிய
இருவரையும் சம்ஹாரம் செய்ய தண்டகாசுரன் மட்டும் அங்கிருந்த பிலத்தின் வழியாக ஓடி பாதாளத்தில் ஒளிய அவனைப் பின்தொடர்ந்த எம்பெருமான்
தனது முகக்கோட்டால் அவனைக் கீறிக்கிழித்துப் போட்டு பாதாளத்திலிருந்து பூமியைப் பிளந்து கொண்டு (ஸ்ரீமுஷ்ணத்தில் பூமியைப் பிளந்து கொண்டு
வந்த வராகனாக) பூவராகப் பெருமாளாக எழுந்தருளினார். (மூன்று அரக்கர்களை வதம் செய்ததை தஞ்சை மாமணிக்கோயில் ஸ்தல வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோம்

இவ்வரக்கர்களுக்கு சில்லி, தில்லி என்னும் இரு சகோதரிகள் இருந்தனர். அவ்விருவரும் தம் சகோதரர்களை சம்ஹாரம் செய்த பூவராகப் பெருமானை
சரணடைந்து எங்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று கேட்க, நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் அவ்வண்ணமே தருகிறேன் என்றார் பூவராகன்.
சில்லியானவள் உமக்கே யான் காவல் பூணக் காத்துள்ளேன் என்று சொல்ல அவ்வண்ணமே ஆகுக என்று சொல்ல சில்லி ஸ்ரீமுஷ்ணத்தில்
கோவிற்கடையில் காவல் காத்து வருகிறாள்.
தில்லி திருநாடு கேட்க, அவ்வண்ணமாயின் அருகில் உள்ள (இரண்டு யோசனை தூரமுள்ள) புண்டரீகபுரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி
தன்னைக் குறித்து தவமிருக்குமாறு சொல்ல அவ்வண்ணமே செய்தாள். அவ்விடத்தே புள்ளேறி வந்த எம்பெருமானைத் தரிசித்த தில்லி தானும் தன்
சகோதரியைப் போல எம்பெருமானின் வீட்டிடத்தே மரமாக இருப்பதாகச் சொல்ல எம்பெருமானும் சரியென்றார். (புண்டரீகபுரத்தைச் சுற்றி) தில்லி
அழகான தில்லைக் காந்தார விருட்சமாக விரிந்து பரந்து நின்றாள். திருமால்தில்லைக் கோவிந்தனாகப் பள்ளி கொண்டார்.

இஃதிவ்வாறிருக்க பரமசிவனும் பார்வதியும் ஒரு சமயம் மிக்க மனக்களிப்புடன் ஒருவரையொருவர் விஞ்சி நடனம் புரிகையில் அங்கிருந்த
முருக விநாயகரை நோக்கி யாரின் நடனம் சிறப்பாக இருந்தது என்று வினவ அவ்விருவருடன் அங்கு குழுமியிருந்தோறும் சேர்ந்து உமையவளின் நடனமே
மிகவும் சிறந்ததாய் இருந்தது என்று கூற சிவன் மிகவும் கோபமுற்று நீவிர் இருவரும் சிறுவர்கள் உமக்குத் தீர்ப்புச் சொல்ல தகுதி போதாது என்று கூறி
பிரம்மனிடம் சென்று நடந்த வ்ருந்தாந்தத்தைச் சொன்னார்.

உடனே பிரம்மன், அவ்வாறாயின் திருவேங்கடத்திற்கு தெற்கில் 3யோசனை தூரத்தில் காஞ்சிபுரத்திற்கு வாயு திசையில் ஆலங்காட்டில்
(திருவாலங்காடு) வந்து நடனமிடுங்கள் நான் வந்து தீர்ப்பளிக்கிறேன் என்றார்.

அவ்விதமே அவ்விடத்தில் பரமசிவனும், பார்வதியும் பயங்கர நடனம் புரிந்து நிற்க, நாமகளுடன் வந்த பிரம்மனும் பிற தேவர்களும் என்ன
சொல்வது எவ்வாறு தீர்ப்பளிப்பது என்று புரியாமல் இருவரின் ஆட்டத்தையும் வியந்து வியந்து பேசி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் இருந்தனர்.

சபை நடுவே எழுந்த பிரம்மன் இதற்குத் தீர்ப்பு சொல்லும் சக்தி தனக்கு இல்லையென்றும், திருமால் ஒருவரால் தான் இதற்குத் தீர்ப்பளிக்க
முடியுமென்று சொல்ல எல்லோரும் வைகுந்தம் சென்று நடந்ததை விளம்பி நின்றனர்.

திருமால் (தன் மனதுக்குள் உகந்த) தில்லை வனத்திற்கு வந்து நடனமாடுமாறும் அப்போது தீர்ப்பு வழங்குகிறேன் என்று சொல்லித்
தெய்வத்தச்சனான விஸ்வகர்மாவை நோக்கினார்.

உடனே விஸ்வகர்மா அரக்கர்களின் தச்சன் மயனையும் உடனழைத்துக்கொண்டு தில்லைவனத்தில் நடுமையத்தே சித்ர கூடத்தை
அமைத்தான். ஐந்து பூதங்களை ஐந்து கலசமாக்கி நான்கு வேதங்களையும் நான்கு கோபுரமாக்கினான். 36 ஸ்மிருதி சூத்ரங்களை 36 வாயில்களாகவும் 5
எக்கியங்களை 5 மதில்களாகவும், ஆறு அங்கங்களை 6 வாயில்களாகவும் 6தரிசனங்களை 6 கதவுகளாகவும், மூன்று வியாகிருதிகளை மூன்று
மாடங்களாகவும், நூறு யாக யூபத்தம்பங்களை நூற்றுக்கால் மண்டபமாகவும், அமைத்து சித்ரக்கூடத்தை கனகசபை, ரத்தின சபை, நாகசபை, தேவசபை,
ராஜசபை, ஆகியன சூழ தோற்று வித்தான்.

அமைப்புப் பொருந்திய சபையில் நடனம் ஆரம்பித்தது யார் நன்றாடினார், யார் வெண்றாடினார் என்று கூறமுடியா வண்ணம் தேவகணங்களும், தேவருலக நடன மாதரசிகளும், சர்வ லோகமும் திகைத்து மெய்மறந்து நினைவிழந்து நிற்க உக்கிரமடைந்த ருத்ரன் தனது இடதுகாலைத்
தரையில் ஊன்றி வலதுகாலைத் தலைமேல் தூக்கி நிறுத்தி நிற்கலுற்றான்.
பெண்மைக்குரிய நாணத்தால் தான் அவ்வாறு செய்ய இயலாது வெட்கித்தலை குனிந்து நின்றாள் உமையவள். நடராசனே வென்றான், என்று
சபையோரனைவரும் தீர்ப்புக் கூற, திருமாலும் அதற்கு இசைவு தெரிவித்து மாயப்புன்னகை புரிய உமையவள் காளியாக மாறி தில்லைவனத்தைச் சுற்றித்
தாண்டவமாடி அந்த வனத்திற்குத் தென்பாற்போய் அதற்கே ஒரு காவல்தெய்வமாய் நின்றாள். சிவன் திருமாலை நோக்கித் தாங்களும் இதே
திருக்கோலத்தில் இவ்விடத்தே எழுந்தருளி பக்தர்கட்கு அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்க அவ்வண்ணமே ஒப்புக்கொண்டார் திருமால்.

மூலவர்–கோவிந்தராஜன், யோகசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்
உற்சவர்-தேவாதி தேவன், சித்ரகூடத்துள்ளான் என்றொரு உற்சவருண்டு.
தாயார்- புண்டரீகவல்லி
தீர்த்தம்– இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு
விமானம்- ஸாத்வீக விமானம்
காட்சி கண்டவர்கள்- தில்லை மூவாயிரவர், சிவன், உமையவள், பாணினி, வ்யாக்ரபாதர்.

பதஞ்சலி, கண்ணுவர், ஆகிய முனிவர்களும் இங்கு பெருமானைக் குறித்து தவம் செய்தனர்.
இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு.
1. புண்டரீக தீர்த்தம்
2. அமுத கூபம்(எம்பெருமான் நடனம் காண வந்தபோது எம்பெருமான் உண்பதற்காக கருடன்அமுதங்கொணர்ந்து வைத்த இடம்)
3. திருப்பாற்கடல்,
4. சேஷ தீர்த்தம்
5. கருட தீர்த்தம்
6. காவேரி தீர்த்தம்
7. சுவேத நதி தீர்த்தம்
8. இயமபாகச் சேதன தீர்த்தம்
9. இந்திர தீர்த்தம்
10. அக்கினி தீர்த்தம்
11. நிர்ஜரா தீர்த்தம்
12. சாமி தீர்த்தம்
முன்னொரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் தனித்தனியே இருந்தது.
தில்லைத் திருச்சித்ரக்கூடம் என்று பெருமாள் கோவிலை ஆழ்வார்களும்.
சிற்றம்பலம் என்று நடராஜர் கோவிலை சைவர்களும் வழங்குவதிலிருந்து முற்காலத்தே இவையிரண்டும் தனித்தனியே இருந்தன என்பது தெளிவு.

சிறு அம்பலம் (சிறுகோவில்) என்பதே சிற்றம்பலமாயிருக் கையில் நடராஜர் கோயில் சிறிய கோவிலாகவும், சித்ரக்கூடம் எனப்பட்ட பெருமாள்
கோயில் பெரிய கோவிலாகவும் இருந்திருக்கின்றன என்றும், நடராஜர் கோவிலை விரிவுபடுத்துவதற்காக சோழவரசன் பெருமாள் கோவிலை இடித்து
வளைத்துக் கட்டிய பின்பே பெருமாள் கோயில் பிற்காலத்தே (கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில்) சிவன் கோவிலுக்குள் அகப்பட்டுவிட்டதென்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்.

தில்லையில் திருமாலும் சிவனும் ஒரு சேரக் கோவில் கொண்டிருப்பதைக் கண்ட சைவ விருப்பும் வைணவ வெறுப்பும் கொண்ட
சோழன் ஒருவன் திருமாலை நீலக்கடலுக்கே அனுப்பிவிட எண்ணினான். –

மூன்றில் கிடந்த தடங்கடல் போய் முன்னைக் கடல்புக
பிள்ளைத் தில்லை மன்றிற்கு இடங்கொண்ட கொண்டல்–அனுப்பியதாகவே ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.
சோழ மன்னன் ஒருவனால் கடலில் எறியப்பட்ட பெருமாள் மீண்டும் தில்லை மன்றத்தில் இடம் கொண்ட இந்நிகழ்ச்சியை
(சோழன் கடலில் அமிழ்த்திய பிறகு அதனால் சீற்றமுற்றவர்கள் அப்பெருமானை எழப் பண்ணி
இப்போதிருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும்
பிற்காலத்தே இவ்விரண்டும் சேர்ந்து ஒரே கோவிலாக பிறிதொரு சோழனால்கட்டப்பட்டதென்றும் கூறுவர்.)

தில்லை நகர், திருச்சித்ர கூடம், புண்டரிக புரம், என்பதுவும் இத்தலத்திற்கு அமைந்த திருப்பெயர்கள்.

முதலாம் நந்திவர்மனை (சைவ, சமண மதங்களின் மேல் பற்றாயிருந்தவனை) திருமங்கையாழ்வார் வைணவத்தின் பால் ஈர்த்தார்.
இந்த நந்திவர்ம பல்லவனைத்தான் பைம்பொன்னும் முத்தும் கொணர்ந்து பணிந்த பல்லவன் என்று திருமங்கையாழ்வார் தம் பாடலில்
குறிக்கின்றார்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் பராந்தகசோழன் தில்லைக் கோவிலுக்கு பொன் வேய்ந்தான்.
தன் எதிரில் நடராஜப் பெருமான் நடனமாடியதை பெருமாள் ரசித்ததாகவும், எம்பெருமான் பள்ளிகொண்ட அர்ச்சா விக்ரகத்திற்கு அருகில்
இன்றும் நடராஜன் நடனமாடும் கோலத்தில் இருப்பது காண்டற்குரியதாகும்.

இங்கு ஆண்டுதோறும் பெருமாள் சன்னதியில் ப்ரஹ்ம உத்ஸ்வம்நடைபெற்றது, இதனை,
“கைதொழ வீதி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
தெய்வ புள்ளேறி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
தெருவில் திளைத்து வருவான் சித்திரக் கூடத்துள்ளானே– என்று திருமங்கையாழ்வாரின் ஸ்ரீ ஸூ க்திகள் உணர்த்துகின்றன.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –