Archive for March, 2015

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-4-உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்-

March 24, 2015

திருவரங்கம் பெரிய கோயில் மங்களா சாசன முதல் பதிகம் –

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-

திரு நாபீக் கமலத்திலே நான்முகனைப் படைத்து -அவன் மூலமாக கார்யப் பொருள்களைப் படைத்து அருள்பவனும்
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருள்பவனும்
இப்படிப் பட்ட குணங்களைக் காட்டி எம்மை ஆட்கொண்டு அருள்பவனும்
நித்ய சூரிகளுக்கு நாதனுமான எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம்
சந்தன மரங்களையும் நவ மணிகளையும் கொழித்து தள்ளிக் கொண்டு பெரு வெள்ளமாகப் பெருகுகின்ற
திருக் காவேரியாலும் அந்த நதியினால் வளம் பெற்ற வயல்களினாலும் சூழப் பட்ட திருவரங்கம் பெரிய கோயிலாம்
அந்திபோலும் நிறத்தார் வயல் -சாயம் சந்த்யா காலம் இருள் மூடிக் கறுத்துத் தோற்றுமே-

கரு நெல் சூழ் கண்ணமங்கை -போலே -கருவடைந்த பயிர்களாலே வயல்கள் கறுத்துத் தோன்றுமே
சாயம் சந்த்யா செந்நிறம் என்பதாகக் கொண்டு நுனி நெல் பழுத்த வயல்களாலே சூழப் பட்ட -என்றுமாம் –

————————————————————-

வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –5-4-2-

பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி சிறு ஆலந்தளிரிலே திருக் கண் வளர்ந்து அருளிய ஆச்சர்ய சக்தி யுக்தனும்
யாம் கடவுள் என்று இருக்கும் எவ் வுலகில் கடவுளர்க்கும் ஆம் கடவுள் தானே -என்னும்படி திரு அபிஷேகம் அணிந்து உள்ளவனும்
இனத்துத்தி யணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவரசப் பெரும்சோதி அநந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி பள்ளி கொள்பவனுமான பெருமான்
ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற திவ்ய தேசம்
மாதர்கள் குழல் மாலையும் குங்குமச் சேறுமாய் கலங்கி ஓடா நிற்கும் காவேரி
தையல் நல்லார் -தையல் -அழகு -ஆகு பெயர் அழகு உடையவர்கள் என்றவாறு -நல தையலார் -என மாறுதலுமாம் –

—————————————————————

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே  –5-4-3-

அலம் புரிந்த நெடும் கையால் உதக தானம் வாங்கின ஸ்ரீ வாமன மூர்த்தி வாழும் இடம் –
திருக் காவேரி தீர்த்தம் மதுவோடு கூடப் பெருகும் -மதுவில் நசையால் வண்டுகள் வந்து மொய்க்கும்
ஈக்கள் வண்டோடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்கமே மிகுந்து உள் தெளிவின்றியே
தேக்கெறிந்து வருதலிற்றீம் புனல் வாக்கு தேனுகர் மாக்களை மானுமே -கம்பர் பால காண்டம்- ஆற்றுப் படலம் -21

———————————————————————–

விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை   யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே -5-4-4-

இராவணனுடைய இலங்கா புரி பாழ் பட்டு போம்படியாக பெரு வில்லை வளைத்த பெரு வீரன் வாழும் இடம்
யானைத் தந்தங்களையும் அகில் மரங்களையும் தள்ளிக் கொண்டு வந்து விளையாடுவது போன்று உள்ளதாம் —

———————————————————————-

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே -5-4-5-

இராவணன் போர்க் களத்திலே மடிந்து வீர ஸ்வர்க்கம் அடையுமாறு அம்புகளைச் செலுத்தி சித்ரவதம் செய்த
சக்ரவர்த்தி திருமகன் வாழும் இடம்
ப்ரஹ்மாதிகளும் ஜகத்தில் உள்ள எல்லாரும் வந்து ஆஸ்ரயிக்கும்படி உள்ளே சாய்ந்து அருளும் பெருமானுக்கு
அரணாகப் போரும்படியான பெரிய மதிள்களாலே சூழப் பட்டது

————————————————————————-

கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்  வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே -5-4-6-

யசோதை பிராட்டி போலே அலங்கரித்துக் கொண்டு பட்டாடை யுடுத்து  வஞ்சனை வழியாலே
நஞ்சு தீற்றிய முலையை வாயிலே உண்ண கொடுத்துக் கொல்ல வந்த பூதனை என்னும் பேய்ச்சியின் உயிரை
பால் உண்கிற பாவனையிலே உறிஞ்சிக் கவர்ந்து உண்ட கன்ன பிரானே ஸ்ரீ ரெங்க நாதானாக கண் வளர்ந்து அருளுகிறான்
காவேரி வாழை மரங்களை வேரோடு பறித்துக் கொண்டு தல்லா நின்றுள்ள நீர்ப் பெருக்கை யுடைய காவேரி-

———————————————————————

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-

கஞ்சன் மல்லர் சகடாசுரன் நிரசித்த கண்ணபிரானே அரங்கன்
சர்வகந்தா -பரிமளத்துக்கு மேலே அகில் புகையின் பரிமளமும்  ஒமப் புகையின் பரிமளமும் விஞ்சி விளங்குகின்றதாம்
காலினால் வென்ற -மூன்றிலும் அன்வயிக்கும்
சகடத்தை திருவடியால் சிதைத்தது  பிரசித்தம்
மல்லர்களை  -ஆயுதங்கள் சகாயம் இன்றி தோள் வலிமையால் வென்றான் என்றதால் இங்கும் அந்வயம்
கம்சனுடைய கருத்தையும் திருவடியால் சிதைத்தான் என்றது காலினால் உதைத்து கொன்றான் என்பதே
தலை மயிரைப் பிடித்து தரையிலே தள்ளி தான் விழுந்து நன்றாக உதைத்திட்டு கொன்றான்-

————————————————————–

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

ஸ்ரீ மகா வராஹமாயும் –
ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தியாயும் –
ஸ்ரீ கூர்ம ரூபியாயும் –
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாயும் –
ஸ்ரீ வாமன மூர்த்தியாயும் –
ஸ்ரீ ராம பிரானாயும்
திரு வவதரித்த முழு முதல் கடவுள் வாழும் இடம் ஸ்ரீரெங்கம்
நித்ய சூரிகளும் சம்சாரிகளும் நெருங்கிப் புகுந்து பணியும் இடம்
சம ரசர்களாய் வாழ்கின்ற பரம பாகவதர்கள் கூடிக் களிக்கும் இடம் இதுவே
இரண்டாம் அடியில் தானுமாய -ஸ்ரீ ராமன் அவதாரத்தை உட்கொண்டதே யாகும்
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கல்கியும் ஆனான் –
தேனும் பாலும் கலந்தன்னவர் -தேனும் தேனும் கலந்தால் போலவும் பாலும் பாலும் கலந்தால் போலவும்
ஏக ரசமாய் இங்கு உள்ளார் எல்லாரும் தங்களிலே
ஒரு மிடறாக இனியராய் இருக்கும் படி –
விஜாதீய த்ரவ்யம் கலந்தால் போல் அன்றியே
சஜாதீயம் கலந்தால் போலே யாய்த்து –
நித்ய சூரிகள் சம்சாரிகள் என்கிற வாசி தெரியாதே
ஒரு நீராய்ப் பரிமாறா நிற்பர்கள் –
தேசாந்தரங்களில் முன்பு கண்டு அறியாதார்
வந்து போகப் புக்கால்
பிரிந்துபோகா நின்றோம் -என்று
கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது -பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

——————————————————

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே–5-4-9-

சேயன் என்றும் விம் மாயையை யாரும் யறியா வகையான்
மிகப் பெரியன் விம்மாயையை யாரும் யறியா வகையான்
நுண் நேர்மையினாய விம் மாயையை யாரும் யறியா வகையான்
சேயன் -தூரத்தில் இருப்பவன் -பரமபதத்தில் வீற்று இருக்கும் இருப்பு
மிகப் பெரியன் -தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் -என்ற விராட் ஸ்வரூப நிலைமை
நுண் நேர்மையன் -பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவற
கரந்த சிலிடம் தொறும்  இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -திருவாய் -1-1-10-என்றபடி
சூஷ்ம ஸ்வரூபனாக உள்ளவன் –
அதி சூஷ்மமான பொருள்கள் தொறும் வியாபித்து தரித்துக் கொண்டு நிற்கை -என்றபடி
நுண் நேர்மை யினாய-என்றும் சொல்வர் -நேர்மை நுட்பம் –

———————————————————

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்   தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-

உபய விபூதியையும் ஆளப் பெறுவார்
உலகாண்டு – கோயிலிலே இருந்து அனுபவித்து -திருவரங்கத்தில் வாழ்ச்சியே உலகாட்சி
நாலிரண்டும் இரண்டும் –
உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் /
விளைத்த -வம்பு – ஸ்ரீ ராமன் விஷயம் /
கலை -கஞ்சன் – ஸ்ரீ கிருஷ்ண விஷயம் /
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம் / இப்படி நாலு இரண்டும்
பண்டு -திருக் குறளன் விஷயம் / ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம் /இப்படி இரண்டும்-

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-3-வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்-

March 24, 2015

திரு வெள்ளறை மங்களா சாசன திருப்பதிகம் –

இத் திருமொழியில் பாசுரங்கள் தோறும் அருள் புரியே -என்றும் –
நின் காதலை அருள் எனக்கு -என்றும் –
நின் அடிமையை அருள் எனக்கு -என்றும்
பரி பூரணமான பக்திப் பெரும் காதல் உண்டாகும்படியும் –
அத்தாணிச் சேவகம் செய்யும் படியும் அருள பிரார்த்திப்பதே இத் திரு மொழியின் பிரமேயம் –

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ்   தரவரு திரு வெள்ளறை நின்றானே -5-3-1-

விரோதிகளை களைந்து ஒழிந்த உபகாரத்துக்கு தோற்று துதிப்பது மாத்ரம் உண்டு –
உபாசனைக்கு உரிய திருவவதாரம் இல்லை –
தென்றல் பரார்த்தமாகவே இருப்பது போலே -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே என்னும்படி
அத்தலைக்கே உறுப்பாக கொள்ள வேணும் என்பதாம் –
வெள்ளறை -வெண்மையான பாறைகளால் இயன்ற மலை -அறை -பாறை -ஸ்வேத கிரி –

———————————————————————

வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-

ஸ்ரீ ஹயக்ரீவ திருவவதாரம் செய்து அருளி வேதங்களை மீட்டுக் கொணர்ந்து உபகரித்து அருளினவன்
எனக்கு அவ்வளவு அறிய பெரிய கார்யங்கள் செய்து அருள வேண்டா -குற்றேவல் கொண்டு அருளினால் போதும்

——————————————————-

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3-

ஹிரண்யனை நிரசித்த அறிய செயல்கள்  எல்லாம் எனக்கு வேண்டாம் -தொண்டன் ஆக்கி அருள அமையும் என்கிறார்
நீள் உகிர் பாடியது வாய்த்தவனே -அஸ்த்ர சஸ்திரங்களால் சாகக் கடவேன் அல்லேன் –
ஈரம் உள்ளதாலும் ஈரம் அல்லாததாலும் சாகக் கடவேன் அல்லேன் –
என்பதால் நகங்களையே ஆயுதமாகக் கொண்ட நீ -என்றபடி-

———————————————————–

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர்   திரு வெள்ளறை நின்றானே-5-3-4-

வாம் பரி உக –பாரத போர்ச் சேனைகளிலே மேல் விழுந்து வருகிற குதிரைகள் மாளும் படி  –
வாவும்  பரி -வாவுதல் -தாவுதல் –
காம்பின் ஆர் -மூங்கில்களாலே நிறைந்த
பஞ்ச பாண்டவர்கட்காக மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய
நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளைய திண தேர் மேல் முன் நின்றாய்
இப்படி அருமைப் பட வேண்டாம் எனக்கு -உன் அடிமையில் ருசியைப் பிறப்பிக்கும் அத்தனை-

திருவேங்கட மலையில் நிற்பவனும் இங்கே நிற்பவனும் ஒரே வ்யக்தியே -காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப –திரு வெள்ளறை நின்றானே –
நின் காதலை அருள் எனக்கு -தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் -என்றபடி –
பெண் குயில் மாம் பழம் தின்ற துவர்ப்பு தீர பலாப் பழத்தில் வாய் வைக்கின்றதாம் –

—————————————————-

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே –5-3-5-

கரும்பு கழை  ஏறி -கரும்பு நுனி அளவும் சென்று படர்ந்து
தேனின் வாய் முருகு உருக்கும் -வண்டுகளின் வாய்களிலே தேனை பெருகா நிற்கும்
மானம் வேல் -பெருமை தங்கிய வேல் படைபோன்ற
வாய் திறந்து வேண்டவும் மாட்டாத பூமியை மகா வராஹமாய் ரஷித்து அருளிய நீ
வாய் திறந்து வேண்டுகிற என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –

——————————————————

பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்கு ஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே-5-3-6-

மதுகரம் -ஆண் வண்டு
பிரயோஜன பரர்கட்கு நீ பட்ட வருத்தங்கள் அடியேனுக்கு பட வேண்டா
உன்  திருவடிகளில் நான் அடிமை செய்வேனாம் படி எனக்கு அருளினால் போதும் -என்கிறார்
தங்கு பேடையோடு இத்யாதி -வண்டுகள் ஆணும் பெண்ணுமாக பூவிலே படுக்க –
ப்ரணய கலஹம் இயற்க்கை யாகையாலே ஊடல் உண்டாக
ஆண் வண்டு பேடிக்கு தெரியாதோர் இடத்தில் மறைய எண்ணி ஸ்திரீகள்  கூந்தலிலே மறையக் கோலி
சந்தர மண்டலத்து அளவும் ஓங்கின சிகரத்தை யுடைய மாடங்களிலே சென்று அணைகின்றனவாம்-

———————————————————–

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-

பிராட்டி பத்து மாதம் பிரிந்து இருந்தாள் -நான் நொடிப் பொழுதும் பிரிவு ஆற்றகில்லேன்-நெடு வாசி யுண்டி
ஆகிலும் அவளுக்காக செய்த அரும் தொழில்கள் செய்ய வேண்டா
இவன் நம் தொண்டன் என்னும் திரு உள்ளம் பற்றினால் போதும் பிரானே –

————————————————————–

முன்  இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8–

சூதகம் -மா மரங்கள்
கேதகை -தாழைகள்
அன்னமாகி அருமறை பயந்து அருளினாய்
அப்படிப் பட்ட அருமையான கார்யம் என் திறத்து செய்ய வேண்டாம்
அந்த வேதங்களில் பரம புருஷார்த்தமாக கூறப்பட்ட கைங்கர்யத்தை அடியேனுக்கு பெறுவித்து அருளினால் போதும்
தென்ன தென்ன என வண்டு இன்னிசை முரல் -சரியான பாடம்
தென்ன தென்ன என்று இன்னிசை முரல் -தப்பான பாடம்
வண்டு சாதி வேற -சுரும்பு சாதி வேற –
நறிய மலர் மேல் சுரும்பார்க்க –சிறை வண்டு இசை பாடும் -5-1-1-கீழே அருளிச் செய்தார்-

—————————————————————-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா  வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —5-3-9-

படப்பை -கொடித் தோட்டங்களை யுடைத்தான
இந்த்ரனுக்குச் செய்தது போலே ஒன்றும்  வேண்டாம்
இவன் நம் தொண்டன் என்று திரு உள்ளம் பற்றுவது அத்தனையே வேண்டுவது
பிண்டி -அசோக மரம் -பூக்கள் சிவந்து இருக்க-வண்டுகள் நெருப்பு என்று மயங்க
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-9-
சில வண்டுகள் மது பருக போக குயில்கள் அந்தோ இவை நெருப்பில் அகப்பட்டனவே என்று அநஷர  ரசமாக கூப்பிடுகின்றன
இப்படிப் பட்ட சோலைகளால் சூழப் பெற்ற திவ்ய தேசம்-

———————————————————————

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ  இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே -5-3-10-

இங்கு நித்ய வாஸம் செய்து அருளும் ஸ்ரீ புண்டரீகாஷன்  பெருமாள் விஷயமான இத் திருமொழியை ஓத வல்லார்கள்
ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று நித்ய சூரிகளால் கொண்டாடப் படுவார்கள்-

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-2-தாந்தம் பெருமை அறியார் தூது-

March 24, 2015

திருக் கூடலூர்  மங்களா சாசன திருப் பதிகம்-

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே–5-2-1-

சர்வஜ்ஞ்ஞன் சர்வசக்தன் -தனக்கும் தன் பெருமையை அறிவரியான் –
பரத்வம் பொலிய நிற்குமது அன்று -ஏவிக் கார்யம் கொள்ளும்படி தன்னைத் தாழ விட்டு நிற்கும் இருப்பே பெருமை இங்கே
வேந்தர்க்கு தூதாய வேந்தர் -சௌலப்ய பரத்வங்கள் விகல்பிக்கலாம் படி யுள்ள எம்பெருமான்
திரு ஆடுதுறைப் பெருமாள் கோயில் -திருக் கூடலூர் -தேவர்கள் கூட்டமாக கூடி
எம்பெருமானை வணங்கி வாழ்த்தப் பெற்ற ஸ்தலம் –

—————————————————

செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம்  பெற்றாரூர் போல்
நறும் தண் தீம் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-

ஏறு யுடைய பின்னை   -என்றது -சுல்கமாக யுடைய என்றபடி
வலி அடக்கிய மைந்தன் வாழும் இடம்
கோலம் -அழகுக்கும் உடம்புக்கும் பெயர்
தண்டீன்-தப்பான பாடம் -தண்டீம் -தண் தீம் சரியான பாடம்-

———————————————–

பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே –5-2-3-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து தயிர் உண்ணப் பார்த்தால் தன் விருப்பம் நிறைவேறாது என்று பார்த்து
அதற்காக பிள்ளை வடிவு கொண்டு தயிர் அமுது செய்து
இப்படி ஆஸ்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யத்தால் அன்றி வேறு ஒன்றிலும் செல்லாத நீர்மையைக் காட்டி
என் நெஞ்சை வசப்படுத்திக் கொண்டவனே  இங்கே சேவை சாதிக்கின்றான்
நாரைகள் நீர் நிலைகளில் நிற்க சிறு மீன்கள் காலைக் குத்த உறு மீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு –
ஒராதவன்  போல் உறங்கி -சிறிய திருமடல் -யசோதை அப்பால் சென்றவாறே வெண்ணெய் தயிர் கொள்ளை கொள்ளுமா போலே –
பிள்ளை யுருவாய் தயிர் யுண்டு என்கிறார்-

————————————–

கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே–5-2-4-

கூறு ஏர் உருவின் -கொண்டாடத் தக்க ரூபத்தை யுடைய
இங்கு ஏர் பிடித்து உழுபவர்கள் முடியில் பூ அணிந்து இருப்பார்களாம்
கோல் தேன் -மரக் கொம்புகளிலே தட்டித் திரியும் வண்டுகள்
இவை தமக்கு வாய்த்த இடங்களை விட்டு சேற்றில் ஏரு உழவர்கள் தலை பூக்களின் மதுவின் நசையால் திரிகின்றனவாம் –

———————————————

தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே —5-2-5-

உலகு அளக்கும் காலத்தில் ஆங்காங்கு உள்ள தொண்டர்கள் எத்தின படியைச் சொன்னவாறு -தொண்டர் பரவ –
சுடர் சென்று அணவ-ஜ்யோதிர் மண்டலத்து அளவும் ஓங்கினபடி
அண்டத்து அமரும் -திசை பரப்பு எல்லாம் வியாபித்த படி
கெண்டை மீன்கள் செருக்காலே துள்ள -உடல் மின்னல் மின்னினால் போல் இருக்க –
மேகங்கள் மின்னல் ஒளி என்று நினைத்து கர்ஜித்தனவாம் –

—————————————

தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே –5-2-6-

கொக்கின் பழம்- மாம்பழங்கள்
அவை மணல்களில் விழ பழுப்பதற்காக   வைத்தவை போலே இருந்தனவாம்
தஷன் யாகம் தகர்த்த ருத்ரன் சாபம் தீர்த்தவன் இவனே

——————————————-

கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் தண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும்  கூடலூரே -5-2-7-

பிரளயம் கொள்ளாத படி திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளியவனே இவன்
முல்லைக் கொடிகள் குறுந்த மரத்தை முட்டாக்கு இட்டுப் படருகின்றனவாம்-முல்லைப்பிள்ளை -முல்லைக்கொடி –

———————————-

கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே–5-2-8-

தர்மி ஐக்கியம் விபவத்திலும் அர்ச்சையிலும் உண்டே
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கையோடு அன்பளவி-என்றதனால்
கலை வாழ் பிணையோடு அணையும் என்கிறார்
நின்ற இளநீர் -தென்னை மரத்தில் இளநீர் குலைகள் தாழ்ந்து குளங்களை இலைகளால்
மறைத்து வைத்தால் போலே உள்ளனவாம் –

——————————–

பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே—5-2-9-

ஆற்றுப் பெருக்குப் போலே பெருகா நின்றுள்ள காதல் கொண்ட அடியேனுடைய ஹிருதயம்
உருகும்படியாக உட்புகுந்த பெருமான் வாழும் இடம்
மலர்ந்த தாழம் பூக்களைக் கண்ட கெண்டை  மீன்கள் நம்மை கவ்விக் கொள்ள
இப்படி சப்தமாக நிற்கின்றன என்று அஞ்சி  ஒழிகின்றனவாம் –

——————————————-

காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே–5-2-10-

கோவை தமிழால் -ஒழுங்கான தமிழினால்-கோக்கப் பட்ட மாலைக்கும்
கோவை -மாலை போலே போக்யமான தமிழ் என்னவுமாம் –
பாவங்கள் தொலையப் பெறுவார் –

————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -5-1-அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்-

March 24, 2015

திரு புள்ளம் பூதம் குடி மங்களா சாசன திருப் பதிகம் –

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார்  மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-

ஸ்வ யத்னத்தால் அறிய முயல்வாருக்கு அரியான்-
தான காட்ட காண்பார்கள் இறே-திவ்யம் ததாமி தே சஷூர் பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் –
மற்ற ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியா முடியாது ஆனாலும் அனைத்து உலக்கும் யுடையான் -சர்வ ஸ்வாமி-அறிவது எளிதாகும்
உலகம் ஒரு தட்டும்  ஆழ்வார் ஒரு தட்டும் -என்னை ஆளுடையான்
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மின் ஸ்வாமின் போலே
குறிய மாண் யுருவாய கூத்தன் -சர்வ லோக ஸ்வாமி காட்டி அருளிய இடம்
குறிய மாண் யுருவாகிய பிழையான பாடம்
திருக் குருகூர் அதனுள் குறிய மாண் யுருவாகிய -திருவாய் -4-10-10-இங்கு வந்து நுழைந்தது போலும்
சுரும்பு வண்டுகளில் ஒரு ஜாதி
ஜடாயு பரிசுத்தி பெற்ற ஸ்தலம் –

————————————————-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரத்த போதகத்தின்  துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்   புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-

பொள்ளை -துளை
போதகத்தின் துன்பம் தவிர்த்த என்றாலே போதுமே -பொள்ளைக் கரத்த என்றது  -புஷ்பம் வைத்து உள்ள துதிக்கையும்
மூழ்கும்  படியான பேர் ஆபத்து என்பதைக் காட்டி அருள
புனிதன் -யானையின் துயரம் தனது துயரமாக கொண்ட பரிசுத்தன்
ஆலவாயுடையான் தமிழன் பட்டர் இடம் கேட்ட பிரசித்தி யுண்டே -பிள்ளைக்கு இரை தேடும்-

———————————————

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-3-

மேவா அரக்கர் -இயற்கையிலே த்வேஷமே வடிவாய்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை சேர்த்து அனுபவிக்கிறார்
தேங்காய்கள் விழ மீன்கள் குதிக்க குருகுகள் சிதறி ஓட நீர் வளம் மிக்க தேசம்-

——————————————-

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
கற்பார் புரிசை  செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-4-

வல்வில் ராமன் -கோவர்த்தன கிரி தாரி இவனே
மதிள்கள் மாட மாளிகைகள் மண்டபங்கள் நிறைந்த ஸ்தலம் –

———————————–

மையார் தடங்கண் கருங்கூந்தல்  யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5-

தான் அவாப்த சமஸ்த காமனாய் இருக்கச் செய்தேயும் குறைவாளன் போலே திரு ஆய்ப்பாடியிலே
தயிர் நெய் பால் களவு கண்டு அமுது செய்து அருளிய ஆழி யம் கையன் இங்கே நித்ய வாசம் செய்கிறான்
மீன்கள் நாரைகள் வைதிக அந்தணர்கள் நிறைய வாழும் ஸ்தலம்-

————————————

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள்  மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம்  விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-

கருமாரி பாய்ந்தும் அனைய வேண்டும் ஆய்த்து நப்பின்னை பிராட்டியின் வடிவு அழகு
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் -இன்றும் திருப் புன்னை மரம் வளர்க்கப் பட்டு இருக்கும் –
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி  நெடுந்தகாய் -திருச்சந்த விருத்தம்
அருளிச் செயல் படியே இன்றும் ஒரு திருப் பனை மரம் வளர்க்கப் படுவது போலே-

——————————————

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே  வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

விலங்கல் -கோவர்த்தன மலையை
கிருஷ்ணனே இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான்
குடையா -குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை -திருவாய் -போலே மூன்றாம் அடி என்பர்
குடையா -என்பதே வ்யாக்யானத்துக்கு சேரும் -புத்ர பௌத்ராதிகள் உடனும் பார்யாதிகள் உடனும்
வண்டுகள் ஆனவை மது பானத்தைப் பண்ண-என்று இருப்பதால்
வண்டுகள் உண்ண -என்றும் -வண்டு -கள் -உண்ண என்றும் பிரிக்கலாம்

———————————————————

கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே–5-1-8-

பார்த்த சாரதி என்ற பெயர் பெற்றவனும் –

கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் முண்டத்துக்கு ஆற்றா -தலையோட்டையை தனது ஜல பிந்துவாலே
நிறைத்த எம்பெருமான் இவனே
இங்கு உள்ள அந்தணர்கள் மறையால் மிக்கவர்கள் -முத்தீயை வளர்ப்பவர்கள் -வன்மையால் மிக்கவர்கள் –
பொறையால் மிக்கவர்கள்
மறையால் முத்தீயை  வளர்ப்பவர்கள் என்றுமாம் –

————————————————–

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-9-

சோமுகன் என்னும் அசுரன் தவங்கள் செய்து வரங்கள் பெற்று நான்கு வேதங்களையும் கவர்ந்து போக
மீனாக அவதரித்து அந்த அசுரனைத் தேடித் பிடித்து கொண்டு வேதங்களையும் மீட்டு அருளி
சார அசார விபாகம் பண்ணி அருளும் ஹம்சமாகவும் திரு அவதரித்து பிரமனுக்கு உபதேசித்து அருளியவனே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
வேயின் முத்தும் -மின்னு சோதி நவ மணியும் -சொல்லி
பொன்னையும் முத்தையும் தனிப்பட சொல்லுவதால் இவை திருக் காவேரியால்
அதிகமாக கொணரப் படும் என்றது ஆயிற்று

———————————————–

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-

துயர் அற்றவாராவார் பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் -கன்று  + ஆ =கற்றா

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-10–ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்-

March 24, 2015

கீழ் திரு மொழியில் பட்ட பரிதாபங்கள் எல்லாம் தீரும் படி திரு வெள்ளியங்குடி யிலே முகம் காட்டுகின்றோம் வாரும்
என்று அழைக்க -மனம் தேறி அங்குச் சென்று அனுபவித்து பேசுகிறார்
வாழைப் பழத்துக்கு அழுகிற குழந்தைகளை தாய்மார் மரப்பாச்சியை தந்து ஆற்றி விடுவதும் யுண்டே –

————————————————————–

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம்  அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில் களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால்  திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-

மண்ணியாற்றின் தென் கரையில் உள்ள திவ்ய தேசம்
வெண்ணெய் களவு கண்ட  கிருஷ்ணனே இவன் -வையம் எல்லாம் உண்ட ஆலிலை பாலகனே இவன் –
வாமனன் ஆனவனும் இவனே என்கிறார்
பாக்கு தென்னை வாழை மரங்கள் நிறைந்த ஸ்தலம் -காய்த்த -நீள் -அடை மொழி மூன்றுக்கும்
சுக்கிரன் தவம் புரிந்து பேறு பெற்ற ஸ்தலம் -அதனால் திரு வெள்ளியங்குடி திரு நாமம் ஆயிற்று என்பர்-

————————————————————

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2-

தனது மேன்மை பாராதே பசுக்களையும் கன்றுகளையும் இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடினவன் இவனே
கடலிலே அணை கட்டி இலங்கையில் சென்று ராஷசர்கள் யுடைய தலைகளை உருட்டினவனும் இவனே
கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே வடிவுடையவன்
திரு உள்ளம் உகந்து வர்த்திக்கும் திவ்ய தேசம்
நிறையப் பூத்து இருக்கிற ஸூகந்த புன்னை மரங்கள் என்ன
மொக்கு விட்டுக் கிடக்கிற புன்னை மரங்கள் என்ன
இவற்றின் இடையே வண்டுகள் புகுந்து வானர முதலிகள் மதுவனத்தில் மது உண்டு ஆரவாரித்தது போலே
பருகின மதுவால் இருந்த இடம் இருக்க ஒட்டாமல் இசை பாடித் திரியப் பெற்ற சோலைகளை யுடைய ஸ்தலம்-

————————————————————–

கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும்  திருவெள்ளியங்குடி யதுவே–4-10-3-

குரூரமான விஷத்தை கக்கும் காளியனும் இனி வேறு யமன் வேண்டா -என்னும்படி வருத்தம் உறுத்தி
பலவகை நடனங்கள் ஆடி அருளிய கண்ணபிரான் விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசம்
இங்கு உள்ள மாதர்கள் நாட்டிய த்வனி எங்கும் பரவி மேல் உலகங்களிலும் அதிர்ந்ததாம்
அடை புடை தழுவி -இரவும் பகலும் -அஹோராத்ரம் அணைந்து ஆகாசத்தில் நின்று கோஷியா நிற்கும் ஆய்த்து-

———————————————————

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற  பரமனார் பள்ளி  கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக்  கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4-

தன் மேன்மையை மதியாதே இடையர் குலத்தில் பிறந்து
பசுக்களை மேய்த்து -கம்சனை முடித்து
நீர் கொண்டு எழுந்த காள  மேகம் போலே வடிவு யுடையவனும்
பெரிய திருவடியைக் கொடியாக யுடையவனும்
ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்க திருப் பாற் கடலில் சாய்ந்து அருளினவனும் இவனே-

ஓங்கிய மணி மாடங்கள் யுடைய ஸ்தலம் –

—————————————————-

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை  யூர்ந்து  தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே  —4-10-5-

பிரளயத்தில் உண்டு பின்பு உமிழ்ந்தவனும் அவனே
மண்ணின் பாரம் நீக்கிய பார்த்த சாரதியும் இவனே
வாத்சல்யம் அடங்கலும் திருக் கண்களிலே தோற்றும்படி இருந்து இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
ஏர்களால் உழுவதால் மீன்கள் நிர் பயமான இடம் என்று பொய்கைகளிலே புகுந்து வர்த்திக்கும் ஸ்தலம்
சம்சாரம் அஞ்சி பரம பதம் புகுவார் -முமுஷூக்கள் -போலே –

————————————————–

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து  வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்   திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6-

பூளைப் பூக்கள் ஒரு ஜாதி காட்டில் உண்டே -காற்று அடித்த வாறே உரு மாய்ந்து பறந்து போகும்
அது போன்று பராக்ரமம் வாய்ந்த கோல வில்லி ராமன் அம்புகளை பிரயோகித்த பின்பு
இலங்கை அரக்கர் சேனைகள் எல்லாம் உரு மாய்ந்து ஒழிந்தன
வாழை முற்றி பழுத்த பழங்கள் விழ அவற்றை யுண்ட மீன்கள் புஜித்து செருக்கி துள்ளி விளையாடுகின்றன
கரந்தன-கரந்தல் அன்ன -என்றபடி -உருத் தெரியாது போதல்
அரந்தை -துன்பம்
கூற்று -எமன் -உயிரையும் உடலையும் வேறு கூறாக்குபவன்
ஊழ்த்தல் -உதிர்த்தல்-

————————————————–

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய்   இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே -4-10-7-

ஒள்ளிய கருமம் -வேண்டியவர்க்கு வேண்டியன கொடுக்கும் ஔதார்யம்
அள்ளி -தாதுக்களை யுடைத்தாய் -எதுகை நயம் கருதி அல்லி -அள்ளி ஆயிற்று
அன்றிக்கே அளி-விரிந்து கிடந்தது -குளிர்த்தி பொருந்திய
முதல் அடியில் உணர்ந்து -என்ற பாடமும் உண்டு
திவ்ய தேசத்து வாழும் குயில்கள் ஆகையாலே ஹரிர் ஹரி ஹரிர் ஹரி -என்று சோலைத் தடங்களிலே கூவுகின்றனவாம்
வெள்ளியார் வணங்க -சத்வ குணம் உள்ளார் அத்தை வளர்க்க
அன்றிக்கே -சுக்கிரன் உபாசித்து பேறு பெற்ற –
அன்றிக்கே -பஸ்மம் பூசி வெளுத்த ருத்ரன் பாதகத்தை போக்கி அருளினவன் -என்றுமாம்-

——————————————

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை  முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே -4-10-8-

படியிடை மாடத்து தூண் அடியிடையிலே –பூமியில் யுண்டான மாடங்களில் நடப் பட்டு இருக்கிற தூண்களின் அடியிலே
தூண்களில்  மணிகள் ஒளி இரவு பகல் விபாகம் இல்லாமல் –
அப்படி ஆக வேண்டும் என்று மங்களா சாசனம் செய்கிறார் என்னவுமாம் –
நரசிம்ஹ மூர்த்தியும் அவனே
அனுகூலனான என்னை மடியில் ஏற்றிக் கொண்டு மகிழ்விக்க வேண்டி இருக்க அது செய்யாதே
பிரதிகூலர்களில் தலைவனான அப்பாவிக்கு மதியிடம் கொடுப்பதே -பட்டர்
பூமியிலும் வானத்திலும் சாகக் கடவன் அல்லன் என்ற வரத்தை மெய்ப்பிக்க  மடியிலே ஏறிட்டுக் கொண்டான் –

————————————————-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே-4-10-9-

தேவர்கள் இவனுடைய பரத்வ சௌலப்ய  சௌசீல்ய வாத்சல்ய குணங்களில் ஈடுபட்டு
கூடி ஏத்தும் திருப் பாற் கடல் எம்பெருமானே இவன்
ஆழியான் -திரு வாழி ஆழ்வான் தரித்தவன் -திருப் பாற் கடலை இடமாக யுடையவன்
தாமரை கரும்புக்கும் செந்நெலுக்கும் நடுவிலே அடியிலே மலர்கின்றது
இரு புறத்திலும் அவை அசைய அம் மலரின் மீது அன்னம் பேடை யுடன் வாழ்கின்றன
தாமரை மலர் சிங்காசனம் கரும்பும் செந்நெலும் சாமரம் -அன்னமும் பெடையும் எம்பெருமானும் பிராட்டியும் –
மகிஷி யுடன் ராஜ புத்திரன் இருக்கும் இருப்பு –

——————————————–

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில்  கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற  திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வர் இக் குரை  கடல் உலகே –4-10-10-

மகா வராஹமாய் திரு வவதரித்து இடர்ந்து எடுத்து விடாய் தீர திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளிணவனே இவன்
இத் திரு மொழியை பண்ணிலே அமைத்துப் பாடும் பாக்யசாலிகள் கடல் சூழ்ந்த மண் உலகை தாம் இட்ட வழக்காக பெறுவார்
ஹேயமான ஐஸ்வர்யம் -இவ் வாழ்வாருக்கு பின்பு கைங்கர்யத்துக்குப்   பயன் பெற்றதால் உத்தேச்யம் –
ஐஹிக ஆமுஷ்மிக புருஷார்த்தத்தோடு வாசி அற எல்லாவற்றுக்கும் இத் திரு மொழியே சாதனம் –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-9-நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்-

March 23, 2015

திரு இந்தளூர் பரிமள ரெங்கனை கண்ணாரக் காணவும் கையாரத் தொழவும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றும்
பாரித்துக் கொண்டு வந்தார் ஆழ்வார் –
அவனோ திருக் கண்களாலே  குளிர நோக்குதல் வாரி அணைத்தல் வினவுதல்
அத்தாணிச் சேவகத்தில் ஏவுதல் ஒன்றும் செய்திலன் –
நிரந்குச  ஸ்வதந்த்ரன் திரு உள்ளத்தை யாரால் அறிய முடியும் –
ஆழ்வாருடைய உருக்கமான பாசுரங்களைக் கேட்க வேணும் என்று பிச்சேறினான் போலும்
கோபுர வாசல் கதவையும் அடைத்துக் கொண்டு கிடந்தான் போலும்
ஆழ்வார் துடிக்கிற துடிப்பை என் சொல்ல வல்லோம் –
பெண் உடை உடுத்து பாசுரம்  இட்டு காட்டுகிற துடிப்பை ஆண் உடையிலே காட்டும் திரு மொழி அன்றோ –
நம் ஆழ்வார் மின்னிடை மடவார்கள் -என்னும் திருவாய் மொழியிலும்
குலசேகரப் பெருமாள் -ஏர் மலர் பூம் குழல் -என்னும் திரு மொழியிலும்
இவ்வாழ்வார் தாம் பத்தாம் பத்தில் -காதில் கடிப்பிட்டு -என்னும் திரு மொழியிலும்
பெண்ணுடை யுடுத்து வெளியிட்ட பரிதாபத்தை எல்லாம்
இத் திரு மொழியிலே ஆண்மை மாறாதே அருளிச் செய்யும் அழகு அற்புதம் –

திருமேனி நிறத்தையும் காட்டாதே ஒளிப்பாயோ-பிரானே
என்னை இப்படி பட்டினி அடித்து நீயே வயிறு வளர்க்கக் கருதினாயே-
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ-என்கிறபடியே உலகத்தை வாழ்வித்து நீ சத்தை பெற வேண்டி இருக்க
உலகத்தை படு கொலை அடிப்பதே உனக்கு வாழ்ச்சயாய் விட்டதே
நீயே வாழ்ந்து போ -என்று திரு உள்ளம் நொந்து பேசுகிறார் இத் திரு மொழியிலே –

————————————————-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே –4-9-1-

பெரு விடாய் பட்டவன் நாக்கு நனைக்க தீர்த்தம் கேட்பது போலே –
சிறிது காணப் பெருமாகில் பிறகு வளைத்துக் கொள்ளலாம் இறே
ஒரு கால் காண ஆசை யுண்டாக -கண்டால் அணைக்க ஆசைப் பட –
அணைந்த பின் இரண்டு சரீரமும் ஒன்றாக ஆக பாரிக்குமே
நும்மைத் தொழுதோம் –
தேவதாந்த்ரங்களுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் நிலையிலே ஆஸ்ரயித்தோம் அல்லோம்
அசாதாரண விக்ரஹ விசிஷ்டனான உன்னை அன்றோ ஆஸ்ரயித்தோம்
ஆனபின்பு இப்படி விளம்பமாக தகுமோ
விஷயாந்தரங்களில் ருசி இல்லாத அடியேன் உன்னைப் பிரிந்து ஆறி இருக்க வழி இல்லையே-

நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்-
உனக்கு கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்ற பொருளில் அன்று
உனக்கு பணிவிடை செய்தே சத்தை பெறும்படியான  குடியிலே அன்றோ நான் பிறந்து இருக்கிறேன்
கைங்கர்யத்தில் நியமித்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்-

இம்மைக்கு இன்பம் பெற்றோம் –
அறிவுக்கு மேற்பட்ட ஆனந்தம் இல்லையே
சேஷ சேஷி முறை அறியப் பெற்றேன் -அதனாலே துடிக்க வேண்டி இருக்கின்றது
அன்றிக்கே –
சோறிடாத ஒருவனை -அழகாக சோறிட்டாய்
அடிமையாலே ஸ்வரூப லாபமாம் படி இருக்கும் எங்களுக்கு
அழகிதாக விடாய்த்த விடத்தே தண்ணீர் வார்த்தீர்
எம்மை  இன்பம் பெறாதபடி செய்திட்டீர் என்றபடி-

எந்தாய் இந்தளூரீரே
பரமபதத்தை விட்டு இங்கே சந்நிதி செய்து அருளியது படு கொலைப் படுத்தவா
ஆவா வென்று இரங்கி -சாஸ்திர அர்த்தம் இரக்கமே கார்யகரம் –
தொழுதோம் -என்று வளைப்பிட ஒண்ணாது காணும்
அபிமதம் பெரும் போது அவனுடைய இரக்கமே வேணும் –
ஈற்றடியில் நம்மை என்றது தேவரீரை -நம்ம வீட்டில் குழந்தைகள் ஷேமமா போலே
நம்மைக் காட்டி -ஒரு கால் என்னைக் காணும் படியாகச் செய்து என்று பொருள் உரைப்பது சுவைக் கேடு
காட்டினால் -என்னாமல் -காட்டி நடந்தால் -புறப்பாடு சேவிக்கையில் காதல் வெளிப்படுமே –

——————————————–

சிந்தை  தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி  மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே–4-9-2-

மருவ இனிய -அனுபவிக்க அனுபவிக்க போக்யமானவனே
கடலிலே நீர் வற்றுமோ -இரக்கம் காட்டீர்
இப்படி உபேஷிக்க எண்ணம் ஆகில் என் சிந்தையில் இடைவிடாமல் பொருந்தி இருப்பது என்
நிர்ஹேதுகமாக சிந்தையில் புகுந்தது போலே கட் கண்ணுக்கும் இலக்காக வேணும்-

திருவுக்கும் திருவாகிய செல்வன் ஆகையாலே -திருவே -என்கிறார்
மருவினிய மைந்தா -கண்ணாலே கண்டு கழிக்கப் பெரும் அனுபவத்தை நீ வஞ்சித்தாய் ஆகிலும்
மானச அனுபவம் பண்ணப் பண்ண இனிதாய் இருக்கிறதே -இவ்வினிமையை உன்னாலே தவிர்க்க முடியாதே-

சிந்தை  தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா -என்ற இடத்திலும் -கீழே
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னாருயிரே -3-5-1- என்று வயலாலி மணவாளனை
பேசின அனுபவம் நினைவுக்கு வர -அதனால் இந்தளூர் எம்பெருமானையே
வயலாலி மணவாளனாக  பாவித்து -அந்தணாலி  மாலே -என்கிறார் –
சோலை மழக் களிறே -சோலைக்கு உள்ளே வளர்ந்த தொரு இள வானைக் கன்று போலே இனியனாய் இருப்பவனே
திரு மால் இரும் சோலையிலே திகழும் யானைக் குட்டியே -என்றுமாம்
நந்தா விளக்கின் சுடரே -புகரே வடிவு கொண்டால் போலே ஜ்ஞான ஸ்வரூபனாய்  பிரகாசிப்பவனே
இறையும் இரங்காய் -சிறிதேனும் இரங்க வேணும் –

———————————————————

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

நீர் குணசாலி என்று பேர் படைப்பதற்குபடாத பாடுகள் பட்டு இருக்கிறாய்
ஒருவரும் அபேஷியாய் இருக்கச் செய்தே எல்லார் தலையிலும் திருவடியை வைத்து அருளிய நீ
நான் பல் பன்னிரண்டும் காட்டி யாசிக்க என் விருப்பத்தை நிறைவேற்றா  விடில் குணக் கேடு விளையாதோ
பேசுகின்றது இதுவே -உனக்கு குணக்கேடு விளையாமல் என்னை நோக்கி அருள வேணும் என்றே அடியேன்  பேசுவது
ஆளவந்தார் இதே போலே ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோஹம் அனுசந்தேயம்
குளிர நோக்கி ரஷிப்பேன் என்று தீஷை கொண்டு முடி சூடி இருப்பவன் அன்றோ –
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் -மூசுகை -மொய்க்கை
அயலார் ஏசுகின்றதுவும் இதுவே நான் பேசுகின்றதுவும் இதுவே -என்று முடிவையும் முதலையும் கூட்டி யோஜித்துக் கொள்க-

——————————————————–

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே  -4-9-4-

நீ உபேஷிக்க உபேஷிக்க அதுவே எருவாக ஆசை வளருகின்றதே -அவ்வாசையினால் யுன்னைத் துதிக்கின்றேன்
இதையே உன்னையும் என்னையும் பரிகாசமாக பேசி ஏசுகின்றனர்
எங்களுக்கு என்றே கொண்டு இருக்கிற பொன் ஒளியில் காட்டிலும் மிகவும் விளங்கா நின்றுள்ள
வடிவு அழகை காட்ட மாட்டேன் என்று இருக்கிறீரே
வாசி வல்லீர் -நித்ய சூரிகள் மட்டும் காணலாம் -என்று சர்வ சாதாரணமான உன் திரு மேனியை
இன்னாருக்கு காட்டலாகாது என்று ஒரு வாசி இட்டுக் கொள்ளலாமோ
இந்தளூரீர்-நித்ய சம்சாரிகளுக்கும் சர்வ ஸ்வதானம்-  பண்ண வந்த நீர் –
வாசி அற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்திலே வாசி வைக்கின்றீரே
வாழ்ந்தே போம் நீரே -உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டவர்களுக்கு என்று இருந்தோம்
அப்படி அன்றாகில் உம்முடைய உடம்பை -நீரே கண்டு கொண்டு -நீரே தொட்டுக் கொண்டு –
நீரே மோந்து கொண்டு -நீரே கட்டிக் கொண்டு -நீரே வாழ்ந்து போம்
காசியின் ஒளியில் திகழும் வண்ணம் –
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -திருவாய் -3-1-2-அனுசந்தேயம் –

—————————————————————

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -4-9-5-

நீர் வானம் மண் எரி காலை நின்ற நெடுமால் –
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை –
இந்த சாஸ்திர அர்த்தம் அடியோமுக்கு தெரியாமல் இல்லை
சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களும் -என்றபடியே
அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ வேஷத்தை கண்டு களிக்க ஆவல் கொண்டு இருக்கும் அடியோமுக்கு
ஜகத் ஸ்வரூபனாய்  இருக்கும் இருப்பு என்ன பயன்
நாங்கள் கண்டு களிப்பதற்கு அன்றோ நீ இங்கே வந்து நின்று அருளுகிறது –
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர்
பர வாசுதேவனாய் இருக்கும் இருப்பு நித்ய முக்தர்கள் அனுபவத்துக்காக
வ்யூஹ நிலை ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கைக்காக
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி விபவ அவதாரங்கள் அக்காலத்தில் இருந்தவர்களுக்காகவே
அந்தர்யாமியாய் இருக்கும் இருப்பு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போல்வாருக்கு பயன் அளிக்கும்
அர்ச்சாவதாரம் ஒன்றே அடியோங்களுக்கு ஜீவனம் –
சம்சாரிகளுக்கு முகம் கொடுக்கைக்காக அன்றோ இது ஏற்பட்டது
குருடருக்கு ஏற்பட்ட இடத்தில் விழி கண்ணார் புகுரலாமோ
விழி கண்னர்க்கு ஏற்பட்ட இடம் குருடருக்கு உதவுமோ
திருவாய் -6-9-1- நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -என்று
ஜகத் ஸ்வரூபனாய் இருக்கும் இருப்பை அருளிச் செய்து திருப்தி இல்லாமல்
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள் விண்ணும் மண்ணும் மகிழவே -என்றால் போலே
விஸ்வரூபம் கண்ட அர்ஜூனனும் இங்கனே பிரார்தித்தானே –

—————————————————-

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6-

சேஷ பூதன் சேஷியை நிர்பந்திக்கலாமா –
சர்வஞ்ஞரான உமக்கும் தெரியாத விஷயம் ஓன்று உண்டு என்று அடியேன் நினைத்து இருக்கின்றேன்
மற்ற அடியார்கள் போலே இக்கலியனும் ஒரு அடியான் என்று நீர் நினைத்து இருக்கின்றீர்
அத்தனை அல்லது எனக்கு உள்ள வாசியை சிறிதும் அறிகின்றிலீர்
ஒரு மாசம் வரையில் ஜீவித்து இருப்பேன் -என்று இருந்த சீதா பிராட்டியும் என்னையும் ஒரு தட்டாக எண்ணி உள்ளீர்
ஒரு நொடிப் பொழுதும் பிரியாத ஸூகுமார ஸ்வ பாவன் இவன் என்னும் வாசியை அறிந்திலீர்
நல்லார் அறிவீர் -உம்மை விட்டுப் பிரிந்து தரிக்க மாட்டாதார் உடைய தன்மையும் அறிவீர்
தீயார் அறிவீர் -உம்மை ஒழிந்தும் ஜீவித்து இருப்பாருடைய தன்மையும் அறிவீர்
இப்படி பிரித்து சொல்லுவான் என் –
இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -நீர் சர்வஜ்ஞ்ஞராய் இருந்து வைத்தும்
ஈதே அறியீர் -இவர் பிரக்ருதி லோக விலஷணம்-என்பதை மாத்ரம் தெரிந்து கொண்டிலீர்
இந்தளூரீரே -நீர் இங்கே வந்து நிற்கிற கார்யத்தை மறந்தீரே-

——————————————————-

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே -4-9-7-

கீழே அவனுடைய சர்வஜ்ஞத்வத்துக்கு குறை சொல்லி இதில் சர்வ சக்தித்வத்துக்கு குறை சொல்கிறார்
நீர் பணி கொள்ள மாட்டீர் ஆனீர் -சர்வ சக்தராய் இருந்து வைத்தும் என்னிடம் கைங்கர்யம் கொள்ள சக்தி அற்று இருக்கின்றீரே
இந்த நீசனால் என்ன கைங்கர்யம் கொள்ளள முடியும் என்று இருக்கின்றீர்
நீசனையும் நிறை ஒன்றும் இல்லாதவனையும் கைங்கர்யத்துக்கு ஆளாம் படி திருத்திப் பணி கொள்ள சக்தி இல்லையே
அடியோமை மண் கட்டியாக படைத்து இருந்தால் ஆறி இருக்கலாம்
சேஷத்வ ஜ்ஞானம் அருளினீர் -கைங்கர்யம் செய்யா விடில் சேஷத்வம் நிறம் பெறாது என்று உணர்த்தி வைத்தீர்
இவ்வளவு அறிவை பிறப்பித்து-
கைங்கர்யம் கொள்ளா விடிலும் திருவடியை யாவது சேவை சாதிப்பிக்கலாமே
பிறர்க்கு என்றே உள்ள திருவடியை உமக்கு என்று கொண்டு இருந்தீர்
இதனை வேறே சொன்னோம்
மற்றவர் சொல்லும் வார்த்தை போல் அன்று அடியேன் சொல்லும் வார்த்தை
அடியேன் இப்பொழுது சொல்வது நான் சொல்லுகிற மற்ற வார்த்தைகளைப் போல் அன்று என்னவுமாம் –

பணி அறியா விட்டீர் -அறிவித்து என்றபடி

——————————————————————

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்   நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-8-

பாலின் நீர்மை செம் பொன் நீர்மை -திருச் சந்த விருத்தம்
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும் -நான்முகன் திருவந்தாதி
இங்கே அர்ச்சாவதாரத்தில் என்ன நிறம் கொண்டு இருக்கிறீர் என்பதை அடியேன் அறிய வேண்டாவோ
இதோ பாராய் இதுவே என் வண்ணம் என்று காட்டி அருளாய் என்கிறார்-

——————————————–

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே  -4-9-9-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்  படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட செய்கின்றோம் -போலே
உம்முடைய திருமேனியை காட்ட இவன் தகுந்தவனோ -வாசி பார்க்கிறீரே
திரு மேனியைக்  காட்ட ஆலோசிக்கிற நீர் ஆலோசனை பண்ணாமல் நெஞ்சிலே வந்து முந்தி நின்று விட்டீரே -அது என் செய்தீர்
நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை இங்கு உள்ளாருக்கு முழுக்க காட்சி கொடுக்கைக்காக அன்றோ இங்கே வந்து நிற்கிறது –

——————————————————

ஏரார்  பொழில்  சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே -4-9-10-

இத் திருமொழியை ஒதுமவர் எவராயினும் நித்ய சூரிகளால் சிரசா வஹித்து கொண்டாடப் படுவார்கள்
இராமானுசனை மேவும் நல்லோர் எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே -26-போலே
உலகத்து ஆரார  அவரே  -என்றதனால் இப்பொருள் விளங்கும்-

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-8-கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் –

March 23, 2015

திரு பார்த்தன் பள்ளி மங்களா சாசன திருப்பதிகம் –
பிராட்டி தன்மையில் -திருத் தாய் பாசுரத்தாலே -அருளிச் செய்தது –
ஆழ்வார் யுடைய அளவற்ற அபி நிவேசம் இத் திரு மொழியாக பரிணமித்தது
எம்பெருமான் யுடைய குண சேஷ்டிதங்களையே வாய் வெருவிக் கொண்டு
இந்த திருப்பதியின் திரு நாமத்தையே பாடா நிற்கிறாள் -என்கிறாள் –
இத்துடன் திரு நாங்கூர் திவ்ய தேச மங்களா சாசனம் முற்றுப் பெறுகிறது-

———————————————–

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன்பள்ளி பாடுவாளே -4-8-1-

என் கணவன் செய்த அருமைச் செயல்கள் உங்களுக்கு  தெரியுமோ –
தீனிகளை  இட்டு மதம் ஊட்டிய -கவள யானை – -குவலயா பீடத்தை நிரசித்த சூரன் இவன் –
மேலே அவன் திரு மேனி அழகை சொல்லத் தொடக்கி யானை போன்று கறுத்து குளிர்ந்து கண்ணைக் கவரும் நிறம் அன்றோ –
அபூர்வ வஸ்து -அப்பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுதன் –
அவன் எழுந்து அருளி இருக்கும் ராஜதானியும் மாட மாளிகைகள் ஓங்கிய திரு நாங்கூரில் பார்த்தன் பள்ளி –
காமரு -காமம் தரு -ஆசையை விளைக்கின்ற
அர்ஜுனனுக்காக பள்ளி கொண்ட திருக் கோலம் -என்பதால் பார்த்தன் பள்ளி-

———————————————-

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-2-

மீண்டும் அந்த வீரச் செயலில் ஈடுபட்டு -கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை-
அது சிறிது வயசு சென்ற பின் செய்த வீரச் செயல்
தொட்டில் பருவத்திலே பேய்ச்சி உயிர் யுண்ட மாயன் அன்றோ –
சாஸ்திரங்கள் அதிகரித்த நல்ல வைதிகர்கள் வாழும் ஸ்தலம்
இவ்வளவும் சொல்லி பார்த்தன் பள்ளி பெயரையும் இசை கூட்டி பாடுகிறாள் என்கிறாள்
பஞ்சி யன்ன —பஞ்சி-பஞ்சு போலி

——————————————–

அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-3-

அண்டர் -தேவர் இடையர் -இரட்டித்து அருளுவதால் இருவரையும் அருளிய படி –
ஸுலப்யத்திலும் பரத்வத்திலும் எல்லை இல்லாதவன் என்றபடி
இடையர்களுக்கு தலைவன் -அமரர்கள் அதிபதி
இடைசிகள் யுடன் புணர்த்வதில் ஆர்வம் கொண்டவன் பிரணய ரோஷம்
செண்டன் -செண்டு -ஸ்வ பாவம்
நான்மறைகள் தேடியோ ஓடும் செல்வன் -யாதோ வாசோ நிவர்த்தந்தே
பண்டு போல் அன்று
முன்பு பந்து அம்மான் பாவை பைங்கிளி இவை கொண்டு போது போக்கினவள்-
இன்று இப்படி விகாரப் பட்டு பாடுகிறாள்
அன்றிக்கே
அன்று எல்லாம் இப்படி அனுராகம் தோற்றப் பாடினாள் அல்லள்-
இன்று- விலஷணமாக பாடுகின்றாள் என்னவுமாம் –

——————————————–

கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டிலங்கை  கட்டழித்த மாயன் என்றும்
செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே-4-8-4-

கொல்லை ஆனாள்-வரம்பு அழிந்தவள் ஆனாள்
பரிசு அழிந்தாள் -பெண்மைக்கு உரிய  மரியாதைகள் அழியப் பெற்றாள்
பல பெண்டிர்கள் எதிரே  தனது தலைமகனுடைய வீரச்  செயல்களை சொல்லத் தொடக்கி
கடலில் மேல் அணை கட்டி அருளிய மிடுக்கன் -என்கிறாள்
பல் வளையாள்-பல வளையல்களை இட்டு அலங்கரித்து வைத்தால் பகவத் விஷயத்தில் ஈடுபட்டு
உருகி உடம்பு மெலிந்து வளை கழலப் பெற்றாள் –

—————————————-

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-5-

பரக்கழிந்தாள்  -பெரும் பழிக்கு இடமானவளாய்
பரக்கு -அடக்கம் -பரக்கழிந்தாள்-அடக்கம் கெட்டாள்
கிஷ்கிந்தா வாலி வதைப்படலம் -அரக்கரோர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்து அரசைக் கொல்ல
மனு நெறி கூறிற்று யுண்டோ- இரக்கம் எங்குத்தாய் என்பால் எப்பிழை கொண்டாய்  அப்பா 
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கற்பாலார் –
இங்கு பரக்கழி -பெரு நிந்தை பெரு தீங்கு –
நாச்சியார் -12-3- கொந்தளமாக்கி பரக்கழித்து  குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –
பழி விளைக்கை என்றே வியாக்யானம் –

—————————————–

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின்  நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே-4-8-6-

ஆபத் சகன் அன்றோ -பிரளயம் சூழ்ந்த அன்றும் ரஷித்து அருளினவன்
கடல் போன்ற திருமேனியை நேரில் கண்டவள் போலே பேசுகிறாள்
இவள் பேசும் பேச்சுக்கள் பாலை விட போக்யமாய் உள்ளன
நானிலம் -முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
காடும் காடு சார்ந்த இடம் -முல்லை / மழையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
நாடும் நாடு சார்ந்த இடமும் -மருதம் / கடலும் கடல் சார்ந்த இடமும்  நெய்தல்
பாலை நீரும் நிழலும் இல்லாத இடம் -பிராணி சஞ்சாரத்துக்கு உரியது அன்று -விலக்கப் பட்டது –

——————————————————

நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று  என்று ஓதிப்
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-7-

பாடகம் -பாதச் சிலம்பு -பாத காடகம் -சிதைந்து – பாடகம் –
எத்தனையோ ஜன்மங்களாக என்னைத் தேடிப் பிடித்து நிர்ஹேதுகமாக  வந்து என் மனசை
இருப்பிடமாகக் கொண்டு அருளிய என் ஸ்வாமி
நான்கு வேதங்களுக்கும் அகப்படாதவன் கிடீர் பரம போக்யமான இத் திவ்ய தேசத்தில்
அனைவர் கண்ணுக்கும் இலக்காம் படி விஷய பூதனாகக் கொண்ட தேவ தேவன்-

——————————————————–

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-8-

ஒண் சுடரோடு உம்பர்  எய்தி -விசேஷணம்-ஆழிப் படைக்கும் -எம்பெருமானுக்கும் அந்வயம்
நேசன் -அடியார்கள் இடத்தில் அன்பே வடிவானவன்
தென் திசைக்கு திலதம் அன்ன -மறையோர்க்கும் -திவ்ய தேசத்துக்கும் அந்வயம் –
பலரும் ஏச -உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தார் இவளுக்கு  பரிகாசமாய் இருக்குமோ பாதி
அவர்களுக்கும் இவள் கார்யம் பரிகாசமாய் இருக்கும் ஆய்த்து –

————————————————————-

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-9-

இசைப் பாட்டோடு ஒத்த மிருதுவான பேச்சை யுடையவள்
கண்ணன் என்றும் -ஆனந்த மயன் என்றும் ஆதி மூலமே என்றும்
பக்தியுடன் கூடு புஷ்பங்களால் அர்ச்சிக்குமவர்கள் மனத்தில் இருப்பவன் -என்றும் சொல்லி உபன்யசிக்கிறாள்
தன் பெருமை எல்லாம் விளங்க இங்கே சேவை சாதிக்கின்றான் என்று
இவள் பாடும் இனிய சொல்லின் அழகை  என் என்று சொல்லுவேன்-

——————————————————-

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே –4-8-10-

பரகால நாயகி ஈடுபட்டு பேச அருளிய பேச்சுக்களை திருத் தாயார் எடுத்து உரைப்பதாக
அமைந்த இத் திருமொழி பதிகத்தை ஒதுமவர்கள் -எம்பெருமானை ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல்
அனுபவிக்கும் இடமாகிய நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-7-கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்-

March 23, 2015

திரு வெள்ளக் குளத் திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம் –

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-

கடல் போன்ற திருமேனியை யுடையனாய் இருப்பது சம்சார தாபங்களை  தணிப்பதற்கு அன்றோ –
கடுகவே என்னிடரைக் களைந்து அருளாய்
கண்ணார் கடல் -கண்டார் கண் அங்கும் இங்கும் போக ஒட்டாமல் –
வைத்த கண் வாங்கப் போகாதபடியான அழகு -விசாலமான கடல் என்றுமாம் –
இங்குள்ள அந்தணர்கள் பகைவர்களை வெல்லக் கூடிய பராக்கிரமம் யுள்ளவர்கள் –
திரு வெள்ளக குளம் புஷ்கரணியின் பெயரே திவ்ய தேச திரு நாமம் -அண்ணன் கோயில் -என்ற பிரசித்தம்-

—————————————————–

கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர்  நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே –4-7-2-

சர்வ ரஷகன் எனபது விளங்க அன்றோ திருத் துழாய் மாலை சாத்தி இருப்பது
உன்னுடைய பாத்ர பூதர்கள் நாடெங்கும் புகழ் பெற்ற அந்தணர்கள் நிறைந்து வாழும் திவ்ய தேசத்தில் அன்றோ 
நித்ய வாஸம் செய்து அருளுகிறாய்
என்னிடரைக் களைந்து உஜ்ஜ்வலனாக்க வேணும்
நந்தாத பெரும் புகழ் வேதியர் -இங்கு உள்ள வைதிகர்களே எல்லார் யுடைய இடர்களைக் களைந்து பேர் பெற்று இருக்கிறார்கள் –
அப்படிப் பட்ட புகழை நீயும் பெற வேண்டாவோ என்றுமாம் –

—————————————————-

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக்  குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர்  நீக்கே –4-7-3-

குளிர்மாரி -திரு வாய்ப்பாடியை வவ்வவிடப் பண்ணின மழை-
போவார் வருவார் எல்லாம் கை எடுத்துக் கும்பிடும் படி திரு வெள்ளக குளத்தில் எளியனாய் நிற்கும் பிரானே –
ஆ நிரைகளும் ஆயர்களை போலே உன்னையே ரஷகனாக  –
களை கணாகக் கொண்டு இருக்கும் அடியேனுடைய இடரையும் நீக்கி அருள வேணும் –

———————————————————-

கானார் கரி கொம்பு ஒசித்த களிறே
நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே -4-7-4-

நாநா வகை -குலம் ஞானம் அனுஷ்டானம் ஆத்ம குணங்களால் மற்று எல்லாவற்றாலும்
விலஷணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ்கின்ற ஸ்தலம்
கானார் கரி -கம்சன் ராஜதானியிலே வளர்ந்தது ஆனாலும் காட்டில் வேண்டின படி தின்று
வேண்டின படி திரிந்து கொழுப்படைந்த யானை என்றபடி-

———————————————————-

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ்  திரு வெள்ளக் குளத்தாய்
பாடாவருவேன் வினையாயின பாற்றே –4-7-5-

வடநாட்டுத் திருப்பதிகளில் திருவேங்கடம் போன்ற சிறப்பு பெற்றது சோழ நாட்டில் திரு வெள்ளக்குளம் -பிரார்த்தனை ஸ்தலம்
கண்ணார் கடல் சூழ் என்று அதே சாயலில் இந்த திரு மொழி அமைந்த அழகும் அனுசந்திக்கத் தக்கது
வேடார் திருவேங்கடம் -திருமலையை விட்டுப் பிரியாத வேடர்கள்
விளக்கு -தன்னையும் காட்டி நம்முடைய ஸ்வரூபத்தையும் காட்டி அருளும் படி
பாடா வருவேன் -பாடிக் கொண்டே வருவேன் -பாடு ஆ வருவேன் -அன்பாக வருவேன் -என்றுமாம் –

———————————————————

கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே –4-7-6-

செல்வா நீ பிராட்டிக்காக அறியான பல செய்து அருளினாய்
நீரிலே ஆழ்ந்து போகக் கடவ மலைகளைக் கொண்டு அணை கட்டி அரக்கர்கள் பூண்டை அழித்து
பிராட்டி யுடைய இடர் களைந்தாய் –
அப்படியே அடியேனுக்கும் சிறு அருள் செய்து இடர் களையாயே-என்றபடி-

——————————————————–

கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக்  குளத்துள்
மாலே யென வல் வினை தீர்த்து அருளாயே –4-7-7-

சங்கல்ப மாத்ரத்திலே சகலமும் செய்ய வல்லனாய் இருந்தும் இடையனாய் அவதரித்து
கோலைக் கையிலே கொண்டு கறவைகளின் பின்னே காடுகளில் சென்று புல்லும் தண்ணீரும்
உள்ள இடத்திலே கொண்டு மேய்த்தே
இப்படி செய்யாத அன்று உனக்கு திருப்தி பிறவாதே
என்னுடைய இடர்களை தீர்க்க அவ்வளவு பிரயாசம் பட வேண்டாமே
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று திரு உள்ளத்தில் நினைப்பிட்டால் போதுமே என்னுடைய வல்வினைகள் தீர்க்க —

———————————————————-

வராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக்  குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

பூமியை பிரளயம் கொள்ள மகா வராஹமாய் இடந்து எடுத்தாய்
உன்னால் செய்ய முடியாதது யுண்டோ
மேலே நாராயணன் நீ அன்றோ -சரீரத்துக்கு நன்மை செய்ய வேண்டியது சரீரி அன்றோ
ஆகையால் எனக்கு அருள் புரிய வேண்டிய கடமை உன்னதே -அருள் செய்யாய் என்கிறார்-

———————————————————

பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா -போலே –
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா –
பிராட்டி உன்னை விட்டுப் பிரியாது இருந்தும் நான் இழக்கவோ
ஹா ஹா ஆழ்வீர் நீரா இப்படி சம்சாரத்தில் கிடந்தது அனர்த்தப் படுவது என்று
வயிறு எரிந்து நோக்கி அருள வேணும்-

—————————————————-

நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர்  வானவர் தாமே –4-7-10-

கல்லின் மலி தோள் கலியன் -மலையை காட்டிலும் அதிசயித்த வலியுள்ள
புஜங்களையுடையவர் திரு மங்கை ஆழ்வார்
வல்லர் என வல்லவர் -இவர் பெரிய திரு மொழி புலவர் -என்று
பிறர் கொண்டாடும்படியாக கற்குமவர்கள்
நித்ய சூரிகள் உடன் கூடி நித்ய அனுபவம் பெறுவார்கள்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-6-தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு-

March 23, 2015

திருக் காவளம்பாடி மங்களா சாசன திருப் பதிகம் —

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1-

தாவளந்து -தட்டித் திரிந்து -தாமரைப் பூவை சம்பாதிப்பதர்க்காக
அன்றிக்கே உலகம் முற்றும் தாவி அளந்த திரு விக்ரமன் என்னவுமாம்
நா வளம் -நாவுக்கு அலங்காரமான திரு நாமங்களை
ஐந்து முதலைகள் இந்த்ரியங்கள் இடம் அகப்பட்ட நம் போல்வாரை காத்து அருள இங்கு நித்ய வாசம் செய்து அருளுகிறான்
இவன் ஒருவனே நமக்கு ரஷகன் –

——————————————————–

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-2-

முந்திய கல்பம் -பாத்ம கல்பத்தின் இறுதியில் மகா வராஹ ரூபியாய் -ஸ்ரீ வாமனனாய் திருவவதரித்த அவனே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
ஆக்ரமிக்க வந்த மாற்றலரை தொலைத்து ஒழித்த அந்தணர் வாழும் திருக் காவளம்பாடி எம்பெருமானே நீயே ரஷகன் –

————————————————————

உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே-4-6-3-

உருத்து எழு வாலி -கோபம் கொண்டு கிளம்பி வந்த வாலி
எங்கள் கைங்கர்ய விரோதிகளையும் தொலைத்து கைங்கர்ய பட்டாபிஷேகம் செய்து அருள நித்ய சந்நிதி பண்ணா நின்றாய் –
நீயே ரஷகன் என்று உறுதியாய் இருப்போம்
ஒரு கணை -ஒப்பற்ற ஸ்ரீ ராம பானம்
கருத்துடைத் தம்பிக்கு -வாலி ராஜ்யத்தை ஆழ வேண்டும் என்னும் கருத்துடைய
அன்றிக்கே
தன்னோடு ஸ்நேஹம்   கொண்டதனால் ஒத்த கருத்துடைய என்றுமாம்-

கருத்தனே -எல்லா வற்றுக்கும் கர்த்தாவாய் இருப்பவனே-

————————————————————–

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்  சுரும்பு தேனுகரு நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-

துஷ்டர்களை ஒளித்து சிஷ்டர்களை பரிபாலனம் செய்து அருள வ்ரதம் பூண்டவனே
உன்னை ஒழிய வேறு ரஷகனை யுடையோம் அல்லோம் –
வண்டுகள் பூக்களிலே படிந்து மது பானம் பண்ணும் போது பெரிய கோலாகலமாக இருக்கும்
அது மீன்கள் காதுகளில் பட வண்டுகள் தம் மேல் விழுந்தனவாக நினைத்து அஞ்சிப் பாய்கின்றனவாம் –

————————————————————-

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந்தண்  பாடியாய் களை கண் நீயே -4-6-5-

காளியன் போன்ற கொடியவர்களை இன்றைக்கும் தண்டிக்க வேண்டி இங்கே சந்நிதி பண்ணி அருளுகிறாய்
புருஷகார பூதையான பிராட்டியும் உனது திரு மார்பில் நித்ய வாஸம் செய்து அருளுகிறாள்
இப்படிப் பட்ட நீயே எமக்கு ரஷகன் –

————————————————————–

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
நல்லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே -4-6-6-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய  நூற்றுவரும் பட்டழிய பெரியாழ்வார் -2-1-2-
மண்ணின் பாரம் நீக்க இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறாய்
நீயே எமக்கு ரஷகன் –

—————————————————————

மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்
பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-

ஆஸ்ரியர்கட்கு பரிந்து கார்யம் செய்யும் குணமும் விரோதிகளை முடிக்கும் குணமும் நிறைந்த நீயே எங்களுக்கு ரஷகன்
மாத்தமர் பாகன் -மஸ்தகம் -மத்தகம் திரிந்து-மாத்து என சிதைந்தது-

—————————————————————

ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-8-

புரந்தரன் செய்த  நாங்கை காவளம் பாடி -இந்த்ரனால் ஏற்படுத்தப் பட்ட -ஸ்வர்க்க லோகத்து கட்டளையாக திரு நாங்கூரை அமைத்தான் என்பர்
ஏவு இளம் கன்னிக்காக -சத்தியபாமை பிராட்டிக்காக யுத்தத்திலே -ஏவின -முற்றத்திலே நடு என்று ஏவின-

————————————————————

சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-9-

சந்தஸ் முதலிய எல்லாமும் நீயே -எங்களுக்கு ரஷகன்
மந்தாரம் -மந்தம் என்று சிதைந்து-

——————————————————-

மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக்
கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே -4-6-10-

வேதாந்த விழுப் பொருள் -எம்பெருமானை கண்ணார கண்டு
எல்லை அற்ற செல்வம் மென்மேலும்  கரை புரண்டு வாழும் அந்தணர்கள் நிறைந்த இங்கே
நித்ய வாஸம்  செய்யும் எம்பெருமான்
விஷயமாக இத் திரு மொழியை ஓத வல்லவர்கள் சார்வ பௌமராய் இங்கே வாழப் பெறுவார் –
மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று
ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4–5–தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு-

March 23, 2015

திரு மணிக் கூடம் மங்களா சாசன திருப் பதிகம்

தூம்புடைப் பனைக்கை  வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ்  நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-1-

நம் போல்வார் துயரம் தீர்த்து அருள நித்ய வாசம் செய்து அருளுகிறான்
காவேரி பொற் குவியல்கள் தள்ள -தேன் மிக்க சோலைகள் கமழ பெற்றதாம்
பணைக்கை -என்றும் பாடம் -பருத்த கை
முற்றும் முற்றம் -பாட பேதங்கள்
வரண்ட -தள்ள
மழைப் பேர் அருவி மணி வரண்டி வந்திழிய -நான் முகன் -39–

—————————————————-

கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து இலங்கை
மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-2-

கவ்வை -ஆரவாரம் செய்பவளாய்
இடும்பை -ராஷச பூண்டுகள் நெருங்கி இருத்தல் ஆகிற கேடானது
அம்புகளை துறந்து வெற்றி பெற்ற சக்ரவர்த்தி திரு மகனே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்  –
மாதர்கள் கொங்கை தடத்தில் அணிந்து இருந்த கும்குமச்  சேறுகளால் நீர் கமழ –
விடும்பை தீர -கூர பாட பேதங்கள்-

——————————————————–

மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த  வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-3-

கேசி நிரசனம் செய்து அருளிய நப்பின்னை மணாளனே இங்கு கோயில் கொண்டு அருளுகிறான்
தீ தொழில் பயிலும் -அக்னி கார்யம் -தீய தொழில் தொலைக்க -என்றுமாம் –

அவ் ஊரில் உள்ளாருக்கு    அத்யயனமும் அனுஷ்டானமும்
யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி

——————————————————

தாங்கரும் சினத்து வன் தாள்  தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப்  புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-4-

எருது அடர்த்த -நப்பின்னை பிராட்டியை திரு மணம் செய்து அருள
அரிஷ்டன் என்னும் எருது கம்சனால் ஏவப் பட்டதே -அதன் கொம்பை பறித்து கொன்றவன்  என்னவுமாம்
குரங்குகள் மாம் பழம் சுவைக்க -தெறிட்ட வாழைப் பழம் புஜிக்க நுகர
அங்கு உள்ள வண்டு இனங்கள் அஞ்சி கிளம்பி ஓடுகின்றன –

————————————–

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே—4-5-5-

கருமகள் -சண்டாள ஸ்திரீ போலே தண்ணியவளாய்
இலங்கையாட்டி -ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே
இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்
ராமஸ்ய தஷிணோ பாஹூ-அவயவம் தானே மூக்கரிந்தது -பலராமன் செய்து அருளிய
ப்ரலம்பாசுர வதம் கண்ணபிரான் அருளிச் செய்வதாக சொல்லுவது போலே
அந்த சக்ரவர்த்தி திரு மகனே ஸ்ரீ தேவி பூ தேவி சமேதராய் நித்ய வாஸம் செய்து அருளுகிறான் இங்கே-

————————————————–

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே  –4-5-6-

மத்ஸ்ய வாமன ஹம்ச வராஹ நரசிம்ஹ ஹயக்ரீவ போன்ற திரு வவதாரங்கள் செய்து அருளி
அனைத்துக்கும் பிரகாரியாய் இருப்பவனே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
அந்தணர்கள் பாண்டிய அரசனை விரட்டி -மற்று ஒரு சமயத்தில் சோழ ராஜனையும் விரட்டிய வீரர்கள் வாழும் தேசம் –

——————————————————-

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-7–

சர்வ அந்தர்யாமியான அவனே இங்கே நித்ய சேவை செய்து அருளுகிறான் –
தென்றல் வீசி மண நாறுகின்ற திரு நாங்கூர் திரு மணிக் கூடத்தில் –
திவ்ய தேச மாட மாளிகைகள் திரு மணம் கவர்ந்து எங்கும் வீசுகின்றன என்னவுமாம் –

———————————————————-

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-8-

சம்சய ரூபமான ஞானத்துக்கும் நிச்சய ரூபமான ஞானத்துக்கும் எம்பெருமானே நிர்வாஹஹன்
மெய்யர்க்கே மெய்யனாகும் பொய்யர்க்கே பொய்யனாகும்
சர்வத்துக்கும் நியாமகனான எம்பெருமான் இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
தாமரைப் பூவிலே தேன் வெள்ளம் அதிகமாக நீரிலே பெருக அதனைப் பானம் பண்ணிக் கொழுத்த வாளை மீன் களிப்பாலே பாய
செங்கயல் அதைக் கண்டு அஞ்சி துள்ளி வேறிடம் பெயர பெற்ற நீர் நிலைகளை யுடைய தேசம் –

—————————————————–

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-9-

அனைத்தும் அவன் இட்ட வழக்கு -சர்வ நிர்வாஹகன் இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
அரன் அரி அயன் மூவரில் விஷ்ணுவே எங்கள் மூர்த்தி என்று சாத்விகர் –
சனகாதிகள் -ப்ரஹ்மாதிகளும் வந்து ஆஸ்ரயிக்கப் பெற்ற ஸ்தலம்-

—————————————————

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே–4-5-10-

தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இவ்வுலக இன்பங்களையும் -ஸ்வர்க்க லோக சுகங்களையும் –
பரமபத அனுபவங்களையும் அனுபவிக்கப் பெறுவார் –
அர்ச்சிராதி கதி செல்வார் சூர்ய மண்டலத்தை பிளந்து கொண்டு அவ்வழியே செல்லக் கடவர்கள் என்பதால் –
வெங்கதிரோ  பரிவட்டத்தூடு போய்-என்கிறார்-

வண் தார்க் கலியன் -முள்ளிச் செழு மலரோ தாரான் -சிறிய திருமடல் தனியன் –
முள்ளி மாலையை அணிந்து உள்ளவர்
அன்றிக்கே
ஸ்ரீ வைஷ்ணவ லஷணத்துக்கு தகுதியாக திருமணித் தாவடங்களை அணிந்து உள்ளவர் என்றுமாம் –

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .