Archive for March, 2015

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-4-மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் –

March 22, 2015

திருத் தெற்றி அம்பலம் திருப் பதி மங்களா சாசன திருப் பதிகம் –

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே—–4-4-1-

கத நாகம் காத்தளித்த -கதம் -கோபம் -என்ன கண் அற்றவனோ -சாதி இயற்கைக்காக விசேஷணம்-தொடர் எடுத்த மால் யானை
நூற்று இதழ் கொள் -சதபத்ரம் -தாமரை -நண்டுகள் தாமரைப் பூவிலே உணவுக்காக புகுந்து
பாக்குப் பாளைகளின் நின்று வெண் முத்துக்கள் இறைக்கப் பட்டு வளை மூடப் படுகின்றதாம் –

——————————————————————————————————————————————————————————————————————–

பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப வாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

பால கிருஷ்ண இங்கே சேவை சாதிக்கிறான்
யசோதை போலவே ஆபரண அலங்காரங்கள் செய்து வந்தமையால் பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட
வண்டுகள் ஆரவாரமும் மங்கைமார் சிலம்பு ஒலியும் சேர்ந்து  தொனிக்கும் திருப்பதி
தாய் போல் மடுப்ப -பிழையான பாடம் -சீர் கெடும்
தாய் போல மடுப்ப -சரியான பாடம்-

————————————————————————————————————————————————————————————————————————

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே———————4-4-3-

வெண்ணெய் திரட்டி சேமித்து வைத்து -படலும் விட்டடைத்து பாது காத்து இருப்பார்கள்
தந்த்திரமாகப் பிரவேசித்து -மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் -என்றபடி
திருவாய்ப் பாடி முழுவதும் தீமை செய்த அவனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
குரம்பை -குடிசை
பசு வெண்ணெய் -பசுமை மாறாத  வெண்ணெய் -அப்போது தான் கடைந்து திரட்டின வெண்ணெய்
தோக்கை-முந்தானை
அலந்தலைமை -துன்பம் -வ்யாமோஹம்
திடல் எடுத்து -திடர் -எழுத்துப் போலி -மேட்டு நிலம் – பேரு வெள்ளத்தில் மேட்டு நிலம் கரைந்து சம நிலம் ஆவது இயல்பு-

————————————————————————————————————————————————————————————————————————————

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—————–4-4-4-

நப்பின்னைப் பிராட்டியை திரு மணம் புரிய இடையூறாய் இருந்த கொழுத்த ரிஷபங்கள் ஏழையும் செருக்கு அடக்கி மணம் புரிந்த காள மேகத் திரு உருவனே இங்கே சேவை சாதிக்கிறான்
ஓங்கிய மணி மாடங்கள்  மலிந்த திவ்ய தேசம் –

————————————————————————————————————————————————————————————————————————————————————–

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

மலை இலங்கு -மலை போல் விளங்குகின்ற
முகத்து இரண்டு சிலை விலங்கி-முகத்தில் இரண்டு விற்கள் போன்ற புருவங்கள் ஆனவை வளைந்து –
அழகில்,சிறந்த மாதர் வாழும் திவ்ய தேசம்
கலை இலங்கு -வஸ்த்ரம் -மேகலை –
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப -என்றதால் அப் பிராட்டிமார் உடன் கலவி சொல்லப் பட்டது –
யுவா குமாரா -நித்ய சம்ச்லேஷம் செய்த போதும் யௌவனம் மாறாத எம்பெருமான் நித்ய வாஸம் செய்து அருளுகிறான்-

————————————————————————————————————————————————————————————————————————————

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே ——————–4-4-6-

இராவண வார்த்தையின் அனுவாதம் என்று பட்டர் ஆப்பான் திருவழுந்தூர் அரையருக்கு அருளிய வார்த்தை –
-ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்
அது கண்டு தரித்து இருப்பான்
ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய மலை போல் இருக்கிற இருபது தோளையும்
துணித்த தனி வீரன் கிடீர்
அல்பமாகச் சொல்லி யுத்தத்துக்கு கிளம்பினான் என்றவாறு
இங்குள்ள பெண்கள் கையிலே கிளியை வைத்து இனிய பேச்சுக்களை கற்ப்பிக்கும் இடம்-

——————————————————————————————————————————————————————————————————————————–

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே———4-4-7-

பொல்லாத குறள் உருவாய் -விபரீத லஷணை
சாஷாத் சர்வேஸ்வரன் எழுந்து அருளிய யாகசாலை ஆதலால் மங்கலம் சேர்
நீராடுவதால் கொங்கைத் தடங்களில் சாத்திய குங்கும குழம்புகளால் சிவப்பு நிறம் பெற்று வெண் மணல் நிலங்களில் நீர் தங்குமாம்
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர் -என்பர் மேல் திரு மொழிகளிலும் –

—————————————————————————————————————————————————————————————————————————————

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து  புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும்  செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே  ——————4-4-8-

வேதங்கள் வேதாந்தங்கள் இதிஹாச புராணங்கள் பெரிய கோஷமாக -இதுவே செல்வமாக யுடைய திரு நாங்கூரில்
பெரிய வராஹமாய் திரு வவத்ரித்து அருளிய எம்பெருமானே சேவை சாதிக்கின்றான்
தீதறு திங்கள் பொங்கு சுடரும் –ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தியது  -பெரிய திருமொழி -11-4-8-
பெரிய மேரு மலை ஸ்ரீ வராஹ நாயனார் திருக் குளம்பில் கண கணத்தது என்ற இதனால்  -மகா வாராஹா -திரு உருவம்
திருவாகாரம் குலுங்க -அகலகில்லேன் இறையும்-என்று பிராட்டி இருக்கும் இருப்பு குலுங்கும் படியாக-

———————————————————————————————————————————————————————————————————————————–

ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும்   மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம்  திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே ————-4-4-9-

பிரளயத்தில் ரஷித்து அருளினவனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்
மோழை-கீழாறு
அகடு -கீழ் வயிறு
மூர்த்தி -ஸ்வாமி
தாள் வரையும் -பக்கத்தில் சிறிய மலைகளை யுடைய பெரிய மலைகளும் –

——————————————————————————————————————————————————————————————————————-

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன்  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான்   கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10-

ராஜாதி ராஜர்களாக வீறு பெற்று விளங்கி பின்பு நித்ய விபூதியிலும் சென்று நித்ய கைங்கர்யம் பெறுவார்கள்

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-3-பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை-

March 22, 2015

திரு நாங்கூர் -நன் நடுவுள்-திரு செம்பொன் செய் கோயில் மங்களா சாசன திருப் பதிகம்-

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

பேர் அருளாளன் என்று பேர் பெற்றவனும் -எமக்கு ஸ்வாமியாய் -கார் காலத்திலேயே நீர் கொண்டு எழுந்த
காள மேகம் தான் இங்கனே ஒரு வடிவு எடுத்து நிற்கிறதோ என்னலாம் படி விளங்குபவனுமான
எம்பெருமான் இரண்டு பக்கலிலும் திரு மகளும் மண் மகளும் உடன் நிற்க இத் திவ்ய தேசத்திலே சேவித்து வாழப்  பெற்றேன்
வாரணி முலையாள் -நித்ய யௌவனம்
நந்தா விளக்கே தொடங்கி–கவள யானை கொம்பு ஒசித்த -வரையில் பதினொன்று திரு நாங்கூர் பதிகத்தில்
நடுவில் அமைந்த பதிகம் -இத் திவ்ய தேசமும் திரு நாங்கூர் நட்ட நடுவில் உள்ளது-

———————————————————

பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச்
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே-4-3-2-

என்னின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -அனுக்ரஹம் அடியாக திருவவதாரம் என்பதால் –
பிறப்போடு மூப்பு ஓன்று இல்லவன் –
பேதியா -விகாரம் அடையாத -ஆனந்தமயன்-இன்ப வெள்ளமே  ஸ்வரூபமாய் உள்ளவன்
இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை -கழிவும் -கழிந்து கொண்டே செல்லுகிற  நிகழ் காலம் –
பரம போக்யன்-சகல வேத பிரதிபாத்யன் -தேவாதி  தேவன் -இவனே இங்கே சேவை சாதித்து அருளுகிறான்-

—————————————————–

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே-4-3-3-

கரிய கோலத் திரு உருவன் -இங்கே சேவித்து உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
ஆகாசமே மற்ற  பூதங்களுக்கு முன் தோன்றி இறுதியில் லயிப்பதால் திடம் –
ஆகாசம் இல்லை என்னும் புற சமயத்தினரையும் நிரசிக்க திடம் என்கிறார்
அந்தணர்கள் பிரமனைப் போலே வேத அத்யயனம் செய்து -ஸ்ருஷ்டிக்கவும் வல்லவர்கள்
திட மொழி மறையோர் -சொன்ன சொல் தவறாத சத்ய சீலர் –

——————————————————–

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத்
திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

சம்சாரிகளை ரஷிக்கக் கடவேன் என்று முடி சூடி இருக்கும் சர்வேஸ்வரனை இங்கே கண்டு வாழ்ந்தேன்
வசை அறு குறள்-குறை ஒன்றும் கூற ஒண்ணாத படியான ஸ்ரீ வாமன திரு உருவம்
அசைவு அறும் அமரர் -சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் நழுவாமல் உள்ள அமரர் –
ப்ரஹ்மாதிகள் கூப்பீடு செய்வார்கள் ஒழிய கைங்கர்யம் செய்யார்கள் -அப்படி அன்றிக்கே
நித்ய சூரிகள் கைங்கர்யமே செய்து கொண்டு இருப்பதால் அசைவு அறும் அமரர்-

—————————————————

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத்
தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே
தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே-4-3-5-

அடியவர் திறத்திலே தாய் போலே இரங்கி அருள் செய்யும் சக்ரவர்த்தி திருமகனே இணங்கே சேவை சாதித்து அருளுகிறான்
சயமே -ஸ்வயம் -ஜெயம்
ஸ்வயமாகவே வந்து மேவி இருக்கப் பெற்ற ஸ்தலம்
ஜெய விஜயீபவ -பல்லாண்டு பாடும் படியான ஜெய சப்தங்கள் மேவப் பெற்ற ஸ்தலம்
சமூஹமான தே மலர்ப் பொழிலை யுடைய -என்றுமாம்-

——————————————————-

மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச்
செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6-

பிராட்டி உடன் சேவை பெற்று சம்சார தாபங்கள் தீரப் பெற்றேன்
கடல் ரத்னங்களுக்கு பிறப்பிடம் -மல்லை மா முந்நீர்
திரிகூட மலை சிகரத்தில் இலங்கை என்பதால் -கல்லின் மீது இயன்ற
செல்வ நான் மறையோர் -வேதமே செல்வம் -அந்தணர் மாடு-

————————————————-

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7-

வெகுண்டு -இறுத்து -அடர்த்து -முறையே
களிற்றிலும் -வில்லிலும் -மல்லிலும் -இயைக்க
களிற்றை வெகுண்டவன் -வில்லை இறுத்துவன் -மல்லை அடர்த்தவன் -கம்ச வதத்துக்கு முன்னம்
செய்து அருளிய சிறுச் சேவகங்கள் –
கண்டார் கண் குளிரும்படியே அஞ்சன கிரி நிற்பது போலே நிற்கும் பெருமானைக் கண்டு
சகல தாபங்களும் தணியப் பெற்றேன்-

—————————————————

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

கண்ணபிரானும் திரு வேங்கடமுடையானும் ஆனவனே இங்கே பேர் அருளாளப் பெருமாளாக சேவை சாதிக்கிறான்
அன்றிய வாணன் -அன்றுதல் -பகைத்தல்
ஆழி தொட்டானை -வெகு லாகவமாக தோள்களை துணித்தமை
மன்றது பொலிய -பலர் திரட்சியாக கூடும் இடம் மன்று -நாங்கை நாலாயிரம் என்பதால்-

—————————————————

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-

அவனை கண்ணுக்கு குளிர்ந்த வடிவுடையவனே -என்றும்
கண்ணபிரானே -என்றும் –
காள மேகத் திரு உருவை  பூர்ண அனுபவம் பண்ணும் படி உபகரித்து அருளினவனே -என்றும் –
அனுசந்தித்து நெஞ்சு கனிந்து இருக்கும் அன்பருடைய உள்ளத்திலே ஊறிய தேன் போலே இனியனாய்
இருப்பவனை இங்கே கண்டு வணங்கி வாழ்ந்தேன்
தெளிந்த நான்மறையோர் -எல்லா அவஸ்தையிலும் அவனே ரஷகன் என்று தெளிந்த
இப்படிப் பட்ட தெளிந்த மறையோரை கிடைக்கப் பெற்றோமே என்று மகிழுந்து -வடிவிலே தோன்றும் படி –
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை -என்கிறார் –

——————————————-

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே-4-3-10-

கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -என்றும்
கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே -என்றும்
ஒரு கால் சொன்னால் போலே ஒன்பதின் கால் சொல்லி அருளிய இப் பதிகத்தை
ஒன்றும் வழுவாமே அப்யசிக்க வல்லவர்கள் வெண் கொற்றக் குடையின் கீழே வீற்று இருந்து
இவ்வுலகை நெடும் காலம் ஆண்டு பின்னர் நித்ய சூரிகள் திரளிலும் சென்று சேரப் பெறுவார்-

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-2-கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்-

March 22, 2015

திரு நாங்கூர் வண் புருடோத்தம திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம் –

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-

தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவுமா சென்ற  -பெரியாழ்வார்
கதிர் முடி யவை பத்தும் -முடி -கிரீடம் /தலை -கிரணம் வீசுகின்ற கிரீடங்கள் அணிந்த பத்துத் தலைகளையும் -என்றபடி
பரம உதாரனான எம்பெருமான் யுடைய ஸ்தலம் -வண் புருடோத்தமம் -என்றதாயிற்று-

——————————————————

பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-2-

கண்ணபிரான் திருவடி சம்பந்தத்தால் பல்லவம் திகழ் பூம் கடம்பம் ஆயிற்று -பூத்த நீள் கடம்பேறி -நாச்சியார்
இங்கு உள்ள அந்தணர்களின் ஞான அனுஷ்டான வைபவம் மேலே அருளிச் செய்கிறார்-

—————————————————-

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

அண்டர் ஆனவர் -இடையர்கள்
கோவர்த்த கிரி தாரியே இன்றும் நம்மை எல்லாரையும் ரஷிக்கக் கோலி இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
இங்கு திருச் சோலைகளிலே கூத்தும் பாட்டுமாக செல்லுகின்றன –
மேகங்கள் முழங்குவதையே வாத்ய கோஷமாகக் கொண்டு -மயில்கள் கூத்தாட -வண்டுகள் ரீங்கரிக்கின்றன-

————————————————

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-4-

ஆஸ்ரித விரோதிகளை முடிப்பதற்காக கண்ணபிரான் நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம்
கரும்பு உடன் சமமாக ஓங்கி வளர்ந்த செந்நெல் பயிர்கள் யுடைத்தான வயலிலே
நிறைந்து இருக்கும் பொய்கைகளின் பக்கம் எல்லாம் சோலைகள் செழித்து இருக்கும் திவ்ய தேசம்-

——————————————–

சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்
ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-5-

வாணனைப் போன்ற ஆசூர பிரக்ருதிகளை அழித்து அடியார்களைக் காத்து அருள நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
மாட மாளிகைகள் மீது உள்ள த்வஜங்கள் ஆட சூரியன் மறைக்கப் பட நிழல் பரவும் -ஒக்கம் சொல்லிற்று ஆயிற்று-

—————————————————

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு  நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-6-

கோ சஹஸ்ர பிரதாதாரம்
அலம் புரிந்த  நெடும் தடக்கை அமரர் வேந்தன் -யாசகனாய் சென்று-ருத்ரன் புனிதனாக –
நாம் எல்லாம் அடி தொழும்படி நம்மையும் புனிதராக்க நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
கோங்கு மரங்கள் அரும்புகள் -மாதர்கள் கொங்கை
அலர்ந்த அரக்காம்பல் மலர்கள் அதரங்கள்
செவ்வி பெற அலர்ந்த செந்தாமரைப் பூக்கள் முகங்கள்
உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசி இல்லை-

————————————————–

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே-4-2-7-

ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கும் பொருட்டு நித்ய வாஸம் பண்ணி அருளுகிறான் என்கிறார் மீண்டும்
சிறுமிகள் நர்த்தனம் -பந்தாட்டம் -செய்வதால் கால் சிலம்பு ஒலியும் கை வளையல்கள் ஒலியும் ஓங்கி
மற்ற நகர கோஷங்களைக் கீழ்ப் படுத்தி -நகரச் சிறப்பு அருளுகிறார் –

————————————————

வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-8-

அர்த்த நாரீஸ்வரன் -உமை பங்கன்
மூளையார் சிரத்து -ரக்த ஸ்பர்சம் ஒன்றும் இன்றிக்கே வெறும் அஸ்தியேயாய்  இருக்கிற தலை ஓட்டிலே –
பாக்குச் சோலைகளின் நடுவே தென்னை மரங்கள் ஓங்கி வளர
தென்னம் காய்கள் குளங்களிலே விழ -மீன்கள் பயந்து துள்ள -அஸ்தானே பய சங்கை பண்ணும் பரிவர்கள் போலே-

—————————————————

இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-9-

நான்முகனை நாராயணன் படைத்தான் -போலே பிரமனுக்கும் தந்தையான பெருமாள்
உலகங்களை காத்தருள பாங்காக நித்ய சந்நிதி கொண்டு அருளுகிறான்
மந்திகள் தங்கள் குட்டிகள் உடன் துள்ளித் திரியும் -ஸ்வபாவ உக்தி –

———————————————-

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-

மண்ணுள் ஆர் புகழ் -பூமியில் நிறைந்த புகழை யுடைய வைதிகர்கள்
மண்ணுளார் புகழ் -பூமியில் உள்ள எல்லாராலும் புகழப் படும் வைதிகர்கள்  -இங்கு புகழ் – வினைத் தொகை
இத் திருமொழியை கற்பார் இங்கே எல்லை இல்லா ஆனந்தங்களை அனுபவித்து
நித்ய சூரிகளோடும் அந்வயித்து நித்ய அனுபவம் பெறப் பெறுவார்கள்-

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -4-1-போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்-

March 22, 2015

திருத் தேவனார் தொகை -மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –
எம்பெருமானை சேவிப்பதற்கு தேவதைகள் நெருங்கி நின்ற திவ்ய தேசம்-

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

பெரிய மண்ணி ஆற்றின் தென்கரையிலே உள்ள திவ்ய தேசம் -மாதவப் பெருமாள் சந்நிதி -பிரசித்தம்
பொழில் சோலை -பெருமை -செறிந்த சோலை
தேதென -இசைக் குறிப்பு-

————————————————————————–

யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-

யாவையும் எவரும் தானே -ஐக்ய பாவம் சொல்ல  வில்லை -சரீர சரீரி பாவம் –
எழில் வேதப் பொருள்களுமாய் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை பிரதிபாதிக்கும் வேதம் என்பதால் பன்மை
பாண்டிய ராஜன் படை திரட்டி வர அந்தணர்கள் தாமே புறபபட்டு ஓடி எதிர்த்து வெற்றி கொண்ட இதிஹாச பிரசித்தி யுண்டே
ஒண் திறல் தென்னன் ஓட வடவரசோட்டம் கண்ட திண் திறலாளர் நாங்கூர் திருமணிக் கூடத்தானே -என்பர் ஐந்தாம் திருமொழியிலும்
உடைய பிள்ளை -ஞான சம்பந்தரின் மறு பெயர் -உடைய பிள்ளை என்கிறவன் -அங்குத்தை ஆலயத்தைக் கவிபாட என்று வர
அவனை எதிரே சென்று அடித்தோட்டி பின்னை பாடப் பெறாதே போந்தான் -என்று ஒரு பிரசித்தி உண்டு இறே –

——————————————————————

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்
தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-3-

ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் தனக்கு பிரகாரமாய்
புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே
தலைவன் ஆனவன் வந்து நித்ய வாசம் பண்ணி அருளும் திவ்ய தேசம்
செல்வம் ஒரு நாளும் குறையாமல் பெருகி வரப் பெற்ற வைதிக பிராமணர்கள் வாழும்
திரு நாங்கூரில் பரம போக்யமான திருத் தேவனார் தொகை-

———————————————————————

இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-4-

அனைத்து தேவதைகளும் திரண்டு அருள் புரிய வேண்டிக் கொள்ள
அவர்களுடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைக்காக
அருள் புரியும் எம்பெருமான் நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம் –
அபேஷிதங்களை நிறைவேற்றி தருவதற்கு மாத்ரம் அல்லாமல்
சோலை வாய்ப்பு கண்டும் விட மாட்டாமல் எழுந்து அருளி இருக்கும் இடம் –

——————————————————–

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே -4-1-5-

பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து உய்யக் கொண்ட உபகாரஹன்
நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்
உருவம் அற்ற ஆகாசத்தையும் வயிற்றிலே வைத்து அருளியதை சொன்னது இவற்றை வைத்தாலும்
நெருக்கு உண்ணாமல் இடைவெளி பெரிதும் யுண்டாயிற்று என்பதை தெளிவிப்பதற்காக-

—————————————————–

ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே—4-1-6-

மிகச் சிறிய குழவியாய் சிறிய ஆலந்தளிரிலே பள்ளி கொண்டு அருளிய பிரான் எழுந்து அருளி உள்ள திவ்ய தேசம்
யதோ வாசோ நிவர்த்தந்தே -புறப்பாட்டின் பொழுதும் வேதம் பின்னே செல்லுமே
தொடராத -பின் தொடர்ந்தும் பிடிக்க முடியாத -என்றபடி-

—————————————————–

ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்
ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே–4-1-7-

ஏடு ஏறு -புத்தகத்தில் எழுதி வைக்கத் தக்க
ஸ்ரீ ராமாயணம் போல இங்குள்ளார் வைதிக செல்வமும் எழுதி வைக்கத் தக்கதாம்
குற்றம் அற்ற பெரும் செல்வர் என்றுமாம்
நாட்டில் நடையாடாத அத்விதீய நரசிம்ஹம் என்றபடி-

————————————————-

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

விஸ்வகர்மா நிருமித்த  சிவ வில்லை ஜனக குலத்தில் தேவராதன் என்னும் அரசன் இடம் சிவபெருமான் கொடுத்தான்
வம்ச பரம்பரையாக ஜனக மகா ராஜன் அளவும் வந்தது-

——————————————-

கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக்
கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்
வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-9-

கூத்தன் -திவ்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
வீரச்   செயல்களை சிரமம் இன்றி விநோதமாக கூத்தாடுவது போலே  செய்து அருளின ஸ்ரீ கிருஷ்ணனே  
இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான்
வம்பு புதுமை –வம்பவிழும் புதுமையாக அலர்ந்த -அப்போது அலர்ந்த –

——————————————

காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-

ஏர் ஆர்ந்த வைகுந்தத்து -நன்மைக்கு எல்லை இல்லாமல் இருக்கும் திரு நாட்டிலே
திருவடி திரு வநந்த ஆழ்வான் போன்ற நித்ய சூரிகளோடே ஒரு கோவையாக இருக்கப் பெறுவார்-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-10-திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ-

March 22, 2015

அரிமேய விண்ணகரத்திலே புருஷகார பூதைகளான உபய நாச்சியார் சமேதராய் நித்ய வாஸம் செய்து
அருளுகிறபடியை அனுசந்தித்து
அங்கே சென்று வணங்கும்படி தம் திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார்-

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

ஸ்ரீ தேவியும்  பூமா தேவியும் இறையும் அகலாது அருகே இருக்க தீ வினைகள்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்னும்படி
பறந்து ஒடும்படியை -தீ வினைகள் போயகல அடியவர்க்கு என்றும் அருள் நடந்து –
ஏழு உலகத்தில் உள்ளாறும் வந்து ஆஸ்ரயிக்கும்படி நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம்
அரு விடங்கள் -உருவம் அற்ற வஸ்து -அரு -ஆகாசத்தை சொன்னபடி
அரிமேய விண்ணகரம் -ஹரிர் ஹரதி பாபானி -பாபங்களைப் போக்குவதாலே ஹரி எனப் பேர் பெற்றவன்
நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம் –

———————————————————–

வென்றி மிகு நரகனுரமது அழிய விசுறும்
விறல் ஆழித் தடக்கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குரு மணி என்னாரமுதம் குலவி யுறை கோயில்
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை யவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-2-

பரம போக்யனான எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசம் -இங்கு
சகல சாஸ்திரங்களையும் அதிகரித்து ப்ரஹ்மா  போலே சிருஷ்டிகளைப் பண்ண வல்லவர் -வைதிகர்கள் வாழும் இடம்
குரு மணி -சிறந்த மணி போன்றவன்
அமுதம் அளிக்கும் குரு மணி என் ஆராமுதம் குலவி உறைகோயில் அரிமேய விண்ணகரம் வணங்கு -என்றபடி-

——————————————————————

உம்பரும் இவ் ஏழு உலகும் ஏழு கடலும் எல்லாம்
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வெய்த
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சி பிடித்தடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்டப்
பலங்கனிகள் தேன் காட்ட படவரவேரல்குல்
அம்பனைய கண் மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-3-

அண்டர்கள் -இடையர்கள்
ஆபத் சகன் -பிரளய ஆபத்தில் லோகத்தை ரஷித்து
குவலயா பீடம்-கம்சனாதிகளை  நிரசித்து  தன்னையே ரஷித்தும் அருளிய அவனே நித்ய வாஸம் செய்யும் இடம்
அழகிய மாதர்கள் மகிழ்ந்து வாழும் தேசம்
கும்பீ-யானைக்கு வட மொழியில் இதுவும் உண்டு -மருப்பு ஒசித்து -கொலை செய்தமையைக் காட்டும் உபசார வார்த்தை
குஞ்சி -ஆண் மயிர்

————————————————————-

ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று
உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு
அருள் செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடேறு மலர்ச் செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணம் நாறும் வான் பொழிலினூடே
ஆடேறு வயலாலைப் புகை கமழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-4-

இரணியனை நிரசித்து ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு பேர் அருள் செய்து அருளிய பெருமான் நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம்
கரும்பு ஆலைகளும் புகை கமழும் திவ்ய தேசம்-சேடு-அழகு -இளமை -திரட்சி -நன்மை -பெருமை

———————————————————————

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக்
களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே
அண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே  3-10-5-

அழகு வாய்ந்த ஸ்ரீ வாமன மூர்த்தியாகி -என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் கொடு என்று யாசித்து
பெற்ற ஹர்ஷத்தால் விம்ம வளர்ந்து எல்லா உலகங்களையும் ஆக்கிரமித்து கொண்டு அருளிய எம்பெருமானே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
வாத்திய கோஷங்கள் -வண்டுகள் ரீங்காரம் -வேத த்வனிகள் -ஸ்திரீகள் நூபுர  ஓசைகள் -சேர்ந்து கடல் ஒலி போலே -இருக்கும் தேசம் –

————————————————————————

வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன் முடி யொருபதும் தோள் இருப்பதும் போய் உதிர
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன்
தனிச்சரண் வானவர்க்கரசு கருதுமிடம் தடமார்
சேண் இடங்கொள் மலர்க்கமலம் சேல் கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-6-

சக்ரவர்த்தி திருமகனாயும்  -அத்விதீய ரஷகனாயும்-நித்ய ஸூ ரிகள் நிர்வாஹகனாயும் உகந்து அருளி எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம்
வாயிலிலே செந்நெல் பயிர்களை அறுக்கும் போது பிடிக்கும் பிடியில்  தாமரைகளும் மீன்களும் பிடி பட்டு அறுக்கப் பட
அவற்றின் நின்றும் உதிர்ந்த முத்துக்களை வலைச்சியர்கள் வாரித் திரட்டும் -தேசம் –
கடல் அருகில் இருப்பதால் கடலோதம் வரும் முத்துக்களும் வரும் –
அவை மீன்கள் வயிற்றினில் புகுமே -அவை அறுவடையில் வெளிப்பட்டன

———————————————————————-

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத் தான் பயந்த கரு மேனி யுடை யம்மான்
கருதும் இடம் பொருது புனல் துறைதுறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆ மனத்து மறையவர்கள் பயிலு மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-7-

தேனுகாசுரன் காலைப் பற்றி சுழற்றி பனை மரத்தில் எறிந்து நிரசித்த கண்ணனே இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான்
அவனே காமனைப் பயந்த கருமேனி யுடை அம்மான் –
வைதிக பெருமக்கள் நித்ய வாஸம் செய்யும் தேசம்

—————————————–

கன்றதனால் விளவெறிந்து கனி யுதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதி யொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது வுண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-8-

தொங்கு ஈண்டி -கும்பலாக கூடி இருக்குமிடம்
தொழுதியோடு மிக பயிலும் சோலை -பறவைகளின் ஒலியோடு மிகவும் கூடி உள்ள சோலைகளிலே
அப்போது அலர்ந்த நறு மலர்களிலே வண்டுகள் தேனைக் குடித்து இசை பாடும்

—————————————————-

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-9-

பூதனையின் விஷப்பாலை யுண்டு -மாற்றாக தயிர் வெண்ணெய் வாரி யுண்டு -கம்சனுடைய உயிரை முடித்தவன் –
உலகம் யுண்ட பெரு வாயன் உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம் –
ஹரி உன்  திருவடிகளே சரணம் என்று வணங்கும் அந்தணர்கள் நிறைந்த திவ்ய தேசம்

————————————————-

சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்
கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-

நப்பின்னை பிராட்டியை சம்ச்லேஷித்த பெருமானே உகந்து அருளி நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்
இங்கு உள்ள வைதிகர்கள் வேத அத்யயனத்தில் பிரமனை ஒத்தும் அழகில் சுப்ரமணியனை வென்றும் இருப்பார்கள்
இந்த திரு மொழியை ஓதி யுணருமவர்கள் இங்கேயே பெரும் புகழ் உடன் வாழ்ந்து பின்பு நித்ய ஆனந்தம் பெறுவார்கள்-

ஐந்தினோடு மூன்றும் ஒன்றினோடும் ஒன்றும் இவை
ஐந்து -கிருஷ்ணாவதார சேஷ்டிதங்களை அருளிச் செய்யும் பாசுரங்கள் -2-3-7-8-9- இவை
மூன்றும் -நரசிம்க வாமன ராம அவதாரங்களை அருளிச் செய்யும் பாசுரங்கள் மூன்றும் -4-5-6- முறையே இவை
அர்ச்சாவதார முதல் பாட்டும்
பயன் சொல்லி அருளும் ஈற்றுப் பாட்டும் -என்றபடி-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-9-சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு-

March 22, 2015

ஸ்ரீ வைகுண்டம் போலே வீற்று இருந்த திருக் கோலத்துடன் சேவை சாதிக்கும்
ஸ்ரீ வைகுண்ட விண்ணகரம் மங்களா சாசனம் செய்து அருளுகிறார்-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
சலம் -தப்பு எண்ணம் கொண்ட –
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி-
சலம் -நீர்
நில வளப்பாலே மீன்கள் இங்கே துள்ளி விளையாடுமாம் –

—————————————————-

திண்ணிய தோர் அரி யுருவாய்த் திசை யனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண்ணில் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழு இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே—3-9-2-

சலம் கொண்ட இரணியனதகல மார்பம் கீண்ட -சுருக்கமாக அருளியதில் திருப்தி இல்லாமல் விவரிக்கிறார்
சேராச் சேர்க்கை -எந்த வஸ்துக்களில்    இனி என்ன உருக் கிளம்புமோ   என்று அஞ்சும்படி
பின் வாங்காமல்  அழன்று வெளிக் கிளம்பின காரணத்தால் திண்ணியதான-
அவனை அழித்து சர்வேஸ்வரத்வம் நிலை நிறுத்தி அருளி –
சகல சாஸ்திர நிபுணர் -ஆத்ம குண சாலிகள் பரம பாகவதர்கள் வாழும் திவ்ய தேசம்-

—————————————————-

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-

ஆபத் சகன்
ப்ரஹ்மாதிகளுக்கும் ஆபத்தை போக்கி அருளியவன் நித்ய வாசம் செய்யும் திவ்ய தேசம்
வயல் வாய்ப்பும் பொழில் வாய்ப்பும் நிறைந்த திவ்ய தேசம் –

——————————————————

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-

அழகிய வடிவம் எடுத்து வந்தவள் என்பதால் -கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடி-சூர்பணகை
மாட மாளிகைகளிலே முனையிலே பாதுகாப்பாக்கு உறுப்பாக சூலங்கள் நாட்டப் படும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்க கொண்டல் துளி தூவ -7-5-6- திரு வழுந்தூர் பதிகத்திலும் அருளுவர்-

———————————————————-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-5-

பிராட்டியைச் சிறை வைத்த குற்றத்துக்கா இராவணனை சித்ர வதம் பண்ணி அருளிய மகா வீரன் நித்ய வாசம் செய்து அருளுபவன்
வயல்களின் புற வளமும் வைதிகர்களின் மன வளமும் வாசா மகோசரம்-எங்கும் விலஷணமான திவ்ய தேசம்-

——————————————————–

பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நற் சகடம் இறுத்து அருளும்
தேவனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
உண்மை மிகு மறையொடு நற் கலைகள் நிறை பொறைகள்
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-6-

கண்ணபிரானே இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறான்
வேதாந்திகள் -ஔதார்யம் பொறுமை மிக்கவர்கள் வாழும் தேசம்
உதவு கொடி -யாசகர்களுக்கு தானம் செய்வது-வண்மை மிகு -ஆத்ம சமர்ப்பண்யம்  பண்ணின படி –

——————————————————–

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து
வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுது செய்து இவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாள் தோறும் மருவி யுறை கோயில்
இளம்படி நற் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல்
ஈன கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால்
வளங்கொண்ட பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வண்ங்கு மட நெஞ்சே–3-9-7-

மீண்டும் கிருஷ்ண அனுபவம்

———————————————

ஆறாத சினத்தின் மிகு நரகனுரம் அழித்த
அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு யுடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை யடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரு மணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-8-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் -நரகாசுரனை வதம் செய்து அருளினவன் –
மலர்களில் இருந்து மது வெள்ளம் பயிர்களை அழிக்குமோ என்று அஞ்சும் படி –
மாறாத பெரும் செல்வம் -அங்கே உடைந்தது இங்கே உடைந்தது கிடாய் சக்யப் பெருக்கு கிடாய் -என்று கூப்பிடுகிற-

——————————————————

வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே ! எமக்கு அருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செங்கயலும் வாளைகளும் செந்நெல் இடைக் குதிப்பச்
சேலுகளும் செழும் பணை சூழ் வீதி தொறும் மிடைந்து
மங்குல் மதிய கடு உரிஞ்சி மணி மாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-9-

கயல் வாளை சேல்-மீன் வகைகள்
வங்கம் -கப்பல் பங்கம் அலைகள் என்றுமாம்  –

ப்ரஹ்மாதிகளும் நம் போல வந்து அருள் வேண்டி நிற்கும் திவ்ய தேசம்

——————————————————

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்
தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-

திவ்ய ஆயுதங்களை அழகுக்கு யுடலாக தரித்து இருக்கும் புண்டரீகாஷனான  விஷயமாக அருளிய
இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார்கள்
உபய விபூதி நிர்வாஹகர்கள் ஆவார் -பல சொல்லி அருளி தலைக் கட்டுகிறார்-

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-8-நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே !-

March 22, 2015

திரு நாங்கூர் அனுபவம் ஆரம்பம் –

நாங்கை நாலாயிரம் -நாலாயிரம் குடிகள் வாழ்ந்த ஷேத்ரம் ஆதலால் அவர்களுக்காக பதினோரு இடங்களிலே சந்நிதி பண்ணலாயிற்று
திரு மணி மாடக் கோயில் மங்களா சாசனம் இதில் –

————————————————————–

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-

நந்தா விளக்கே -அணையாதே விளக்கே –
ஸ்வயம் பிரகாசகமான ஜ்ஞானத்தை குணமாக யுடையவன் -ஜ்ஞான ஸ்வரூபத்தை யுடையவன் –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு -பெரியாழ்வார் 4-3-11-
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கு -திருவாய் -4-7-1-
ஞானச் சுடர் விளக்கேற்றி -இரண்டாம் -1-
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி -மூன்றாம் திருவந்தாதி –
ஹர்த்தும் தமஸ் சதஸ தீச விவேக்தும் ஈசோ மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி -ஸ்ரீ ரீங்க ராஜ ஸ்தவம் –
சாஸ்திரம் கொண்டே அறிய முடியும் –

அளத்தற்கு அரியாய் –
தேச கால வஸ்து பரிச்சேதம் இல்லாதவன் –
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -திருவாய் -1-1-10-சர்வ வியாபி –
த்ரிவித பரிச்சேத ராஹித்யம் -ஸ்ரீ பாஷ்யம் இதனாலே -அநந்தன் -என்னும் திரு நாமம் இவனுக்கு –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-தைத்ரியம் என்பதையே
நந்தா விளக்கே -அளத்தற்கு அரியாய் -ஆழ்வான் நிர்வாஹம்
நந்தா -சத்யம் –/விளக்கு -ஞானம் –/அளத்தற்கு அரியாய் -அநந்தம் ப்ரஹ்ம –
நர நாரணனே
நர நாரணனாய் உலகத்து -அற நூல் சிநகாமை விரித்தான் என்பர் மேலும்
இவை எல்லாம் கிடக்க காள மேகத் திரு உருவைக் காட்டி  தங்களை ஆழம் கால் படுத்தியது பற்றி –
கரு மா முகில் போல் எந்தாய் -என்கிறார்
இவ்வாறு இமையோர்கள் ஏத்தி அருள் இரக்கிறார்கள் இங்கே
திரு நாங்கூர் சோலை வளம் மேலே சொல்லப் படும்
தேன் வண்டு களி வண்டு சுரும்பு வண்டு -பல வகை யுண்டே  –

————————————————————

முதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும்
பதலைக் கபோதததொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம்
மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே—3-8-2-

முதலைத் தனி மா முரண் -பகவத் பக்தர்களை ஹிம்சிக்க வேணும் என்று இருந்த துஷ்டத் தனம்
விதலை -நடுக்கம்
வி தலை -பஷி ராஜன் வி பஷி -கருடன் மேலே என்றுமாம்-

பதலை யாவது நுனியில் ஸ்தாபிக்கப் படும் கும்பங்கள்
கபோதம் -மாடப் புறா -அப் புறாக்கள் தங்கி வாழும் இடம் சந்நிவேசத்தையும்
கபோதம் கபோதை கபோதி என்றும் வ்யவஹரிப்பது உண்டு -மாடங்களில் ஒரு பகுதி
மதலைத்தலை-பிள்ளைத் தூண்களின் தலையிலே-

———————————————————-

கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர்
இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-3-

ஆஸ்ரிதர் விரோதிகளைக் களைந்து ஒழிந்தால் அந்த சந்தோஷத்துக்குப் போக்குவீடாக பிராட்டி
திரு முலைத் தடங்களாலே அணைத்து அமுக்கி கட்டுதல் –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகவாஹம் -பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பார்த்தாராம் பரிஷவஜே
குன்றம் -ஆகுபெயரால் யானையைக் குறிக்கும்
காவேரி வாய்க்கால் பெருக்கால் திரு நாங்கூர் சுற்று பிரதேசங்களில் உள்ளது பற்று -பொன்னி திரை யுந்து நாங்கூர்
ஆளரியால்-ஆண்மைத் தனம் நிரந்த சிங்கங்கள் என்றபடி-

———————————————————-

சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4-

கருடன் -ஸூபர்ணா-உவணம் எனத் திரிந்து -மாலி சுமாலி வதம் -புள்ளூர்ந்து செய்து அருளி -அவனே இங்கே  சேவை சாதிக்கிறான்
முத்தீ -கார்ஹபத்யம் -ஆஹவ நீயம் -தஷிணாக்னி
புகழ் எய்தி -பரம வைதிகர்கள் வாழும் புகழ் -நாங்கூர் நாலாயிரம் –

——————————————————-

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-

யசோதை பிராட்டி அணிந்து கொள்ளும் ஆபரணங்கள் உடன் வந்தது பற்றி -இழையோடு-
கொங்கைத் தலை கொங்கைத் தலம்-பாட பேதங்கள்
தடம் தாமரை பொய்கை புக்கான் -காளிய நர்த்தனம்-கோபிகள் யுடன் ஜலக் கிரீடை என்றுமாம் –

——————————————————————————-

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன
உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் எனது இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-

பூதனை நிரசனம் ஆழ்வார்கள் மிகவும் ஈடுபட்டு அருளுவார்கள்
ஆய்ச்சியர் -ஆய்சிகள் அனைவரும்  அஞ்ச -யசோதை அஞ்ச -உயர்வு பன்மை
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -பெரியாழ்வார் -3-1-1-என்றும்
பேய்ச்சி முலை யுண்ட பின்வை இப்பிள்ளை பேசுவது அஞ்சுவனே -பெரிய திருமொழி -10-7-8-
பகுவாய் -ராஷச தன்மைக்கு உரிய விசேஷணம்-கழுது -பேய்
பிள்ளை விழுப்பரையரும் ஆப்பானும் கூட அனுசந்திக்க -வைகி-மூன்றாம் அடியிலும் -வைகு -நான்காம் அடியிலும் ஆவ்ருத்திக்கு பொருள் –
பட்டர் -இளைய ஸூகுமாரமான எருமைகள் என்பதால் -வைகுதல் -விளம்புதல் –

———————————————-

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-

நுழைப் பாவையர் -குறத்திகள்
தழைக் காட்டவிழ்  தாமரை -தழை தாமரை -கட்டவிழ் தாமரை –
கட்டு நெகிழாமல் முகுளமாக இருக்கும் தாமரையும் -கட்டு அவிழ்ந்து மலர்ந்த தாமரையும்
விடம் கால் -காலுதல் -வீசுதல் -என்பதால் காற்று
அதன் உச்சி தன் மேல் அடி வைத்த -அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழியம்  கண்ணா யுன் கோலப் பாதம் -திருவாய் -10-3-6-
அடியார் பிரார்த்தித்து பெற வேண்டியவை இந்த துஷ்ட காளியன் பெற்றானே –
செழு முத்து வெண் நெல்லுக்கு என்ன -தங்கள் முத்துவின் சீர்மையும் தாங்கள் பெரும் நெல்லின் தாழ்வும் தெரிவிக்கப் பட்டன
முன்றில் சென்று -இல் முன் சென்று -குறத்திகள் நாழி நெல்லுக்கு நாலு  நாழி முத்து கொள்ளுங்கோள் என்று
வலுக் கட்டாயமாக சொல்வார்களாம் -இல்லத்திலும் முத்துகள் சிறந்து இருப்பதால் –

——————————————————-

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-

கோழி அழைப்பதன் முன்னம் -நாமம் ஆயிரம் ஏத்த நின்ற -நாச்சியார் திருமொழி –
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள்  முன்னடிகளில் -கூறை பறித்தல் -சிற்றில் சிதைத்தல் போல்வன
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியார் -மூன்று வகைப் பொருள்
துளைகள் நிறைந்த கரிய மெல்லிய புல்லாங்குழல் போலே இனிய குரல் யுடைய ஆய்ச்சியர்
நீரில் துளைந்து -படிந்து -நிறைந்துள்ள கரிய மெல்லிய கூந்தலை யுடைய ஆய்ச்சியர்
துளைகள் பொருந்திய கரிய மெல்லிய குழலின் பெயரையும் அதன் அடை மொழிகளையும் தங்கள் கூந்தலுக்கு யுடைய ஆய்ச்சியர்
கூந்தல் சுருண்டு இருக்கும் நிலையில் துளைகள் தென் படுவதால் -துளையார் என்று துளை மிக்கு இருக்க
அதாவது சுருண்டு கறுத்து மிருதுவான குழலை
உடையராய்-என்றுமாம் –
வைதிக புருஷர்கள் -வீட்டுப் பெண்கள் -கிளிகள் யாவரும் வேதம் ஓதும் திரு நாங்கூர்-

———————————————

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா ! விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஓன்று   உடையாய் ! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப்
பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-9-

நப்பின்னை பிராட்டி கொழுநனே இங்கே சேவை சாதிக்கின்றான்
அன்னப்  பறவைகள் மிதுனமாக விளையாட அந்த துகைப்பால் மது வெள்ளம் பெருகி செங்கழுநீர்  ஓடைகளில் ஓட –
ஆஸ்ரயத்தை பேணிப் பரிமாற அறிகிறன இல்லை
அத்தாலே துக்கப் பட்ட
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் மடையோட நின்று மது விம்மு –
திரண்ட தாமரைப் பூ வின் நடுவே
செங்கழுநீரின் மது வெள்ளமானது
மடையாலே போகா நிற்கச் செய்தேயும்
அதினுடைய மிகுதியாலே உள்ளே நின்று
விம்மா நிற்கும் ஆயிற்று –
திரண்ட புண்டரீகங்களின் நடுவே அன்னங்கள் துக்கிக்க
நடுவு நிற்கிற செங்கழு நீரானது மது வெள்ளம் இடா நிற்கும்-

—————————————–

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மாதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10-

ஓத வல்லவர்கள் ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் ஆவார்
மருந்து தின்னப் பின் வாங்கும் பிரஜைகளை வெல்லக் கட்டி கொடுத்து ருசி விளைவிப்பது போலே
இஹ  லோக புருஷார்த்தங்களை காட்டி மேலே கூட்டிஷ் செல்வர்
விரும்புவர் -சிற்றின்பங்களை   நுகந்து  பின்  க்ரமமாக பரம புருஷார்த்தம் விரும்புவர்-

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-7-கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து-

March 21, 2015

கீழே -என் தனக்கோர் துணை யாளானாகாயே-கன வளையும் கடவேனோ – என் முலை யாள ஒரு நாள் உன்னகலத்து ஆளாயே
என்று கதறுவதை கேட்ட வயலாலி  மணவாளன் -பரகால நாயகியை யாரும் அறியாமல் ரஹஸ்யமாக கூட்டிச் சென்றான்
கண்ணாலே கண்டு தாய்மார் வாய் விட்டுச் சொல்கிறாள்
பாஹ்ய சம்ஸ்லேஷம் போலே மானச அனுபவத்தை விஸ்தாரப் படுத்தி  அருளினான் -என்றபடி
நித்ய சம்ஸ்லேஷம் பெற வேண்டிய ஆழ்வார் திரு உள்ளத்து விருப்பம் இத் திரு மொழியாக பரிணமித்து விட்டது –

—————————————————-

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

சொல்லத் தொடங்கும் போதே திருத் தாயார் -கள்வன் கொல் -என்று தம்முடைய கள்ளத் தனத்தை அவன் மேல் ஏறிட்டு –
அஹங்கார மமகாரங்களின் வாசனையால் –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும்  சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் -திருவாய் -10-7-1- போலே
சர்வ ஸ்வாமி தனது உடைமையை  பிரகாசமாக கொண்டு போனதால் கள்வன் கொல் யான் அறியேன் என்கிறாள்
ஏகாந்தமாக தாய் அனைத்துக் கொண்டு கிடக்க கவர்ந்து கொண்டு போனான் -பிள்ளை அமுதனார் நிர்வாஹம்
அங்கனம் வேண்டா பலரும் கண்டு கொண்டு இருக்கையில் தீ வட்டிக் கொள்ளைக் காரன் கொண்டு போவது போலே
கொண்டு சென்றான் என்று நிர்வஹிப்பது எளிது என்றாராம் பட்டர்

அணியாலி புகுவர் கொலோ -சங்கை இங்கே
திண்ணம் என் இளமான் புகுமூர் திருக் கோளூரே –
பரகால நாயகி தனித்து போக வில்லை -நெடுமால் துணையாப் போயின பூம்கொடியாள்-தலைவன் துணையோடு சென்றாலும் சங்கை –
ஆளவந்தார் -தனியே சென்றால் நினைத்த இடம் சென்று சேர வேண்டும் என்னும் த்வரையால் விரைவில் சென்று அங்கே சேர்ந்து விடுவாள்
வழியில் அபாயங்களுக்கு ஆபஸ்தமாவதற்கு  காரணம்  இல்லை –
ஆகையால் அவளைப் பற்றி கவலைப் பட வேண்டாம் –
இங்கே பரஸ்பரம் பித்துக் கொள்ளிகளாய்ச் சென்று இலங்கை போன்ற விரோதிகள் உள்ள இடம் சேருவார்களோ
ஆகையால் ஒவ் ஒரு பாசுரத்திலும் அணி யாலி புகுவர் கொலோ உள்ளது-

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -பெரியாழ்வார்-
அஞ்சி கம்சன் உள்ள இடம் -வடமதுரை போவார்களோ திருவாய்ப்பாடி போவார்களோ –
காளை-காளையே எருது  பாலைக்கதிபன் நல்விளையோன் பேராம் -நிகண்டு-

———————————————————

பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன்
தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-2-

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்புது கிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்யும் கோபால கிருஷ்ணனே என்னகத்திலே புகுந்து
என் மகளது கொவ்வைக் கனி அதரத்தை பருகி பின்பு அவன் யுடனே என் மகள் புறப்பட்டுச் சென்றாள்
வழியில் பல அபூர்வ பொருள்களை பார்த்து இவை என் என்பாளே -கெண்டை ஒண் கண் மிளிர -என்கிறாள்
இனிய செஞ்சொல் களைப் பேசிக் கொண்டே போவார்களே -கிளி போல் மிழற்றி நடந்து  -என்கிறாள் –

——————————————————-

அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை
வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-3-

அரக்கியின் மூக்கை அறுத்தால் போலே அறுப்பானோ என்று அஞ்சுகிறார் இல்லை -அது குண ஹானி ஆகுமே
கிடாம்பி ஆச்சான் -துடுப்பு இருக்க கை வேக வேணுமோ -அரக்கர் குலப்பாவை  தன்னை மூக்கரிந்த விறலோன்-என்றார்
பிராட்டியை கவர்ந்து செல்ல மூல காரணம் இது வாகையாலே -அது போலே விதி வசத்தால் பிரிவு உண்டாகுமோ
ராமஸ்ய தஷிண பாஹூ-என்பதால் பெருமாள் வலக்கையே செய்தது
பஞ்சிய -செம் பஞ்சுச் சாறு ஊட்டப் பெற்ற மெல்லடி
பறக்கு அழிந்து -அடக்கம் கெட்டு-பெரு நிந்தை பெரும் தீங்கு
கம்பர் வாலி வதைப் படலம் -அரக்கரோர்  அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத் தரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்குத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிகிற் பாலார் –
இங்கும் பேரு தீங்கு நிந்தை அர்த்தம்
நாச்சியாரும் -12-3- கொந்தளமாக்கி பரக் கழித்து குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –
இங்கும் பரக்கு அழிக்கை -பழி விளைக்கை வியாக்யானம்
பணை -பண்ணை என்று கொண்டு தடாகம் -பணை -மூங்கில் புதர் என்றுமாம் —

—————————————————–

ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர்
தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -இவன் ஷத்ரியனா இடைக் குலத்தவனா
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம் மா மாட வேளுக்கை
மண்ணகத்த தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி -என்ற படியும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை -என்றும் ஊர்களும் பல உண்டே –
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் -போலே
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -என்றும் –
கரந்து எங்கும் பரந்து உளன் –என்றும் —

ஆறு நீந்த வேண்டுவோர் கரும் கல்லை மடியிலே கட்டிக் கொண்டு இழிவார் போலே
மாதவனை -திருமகள் கொழுநன் -சுவையன் திருவின் மணாளன் –
இன்ப வார்த்தையில் மதி கெட்டு மூர்ச்சிக்க வேண்டியதாகும் -என்றபடி
செம்மல் -பெருமை -சிறப்பு –

—————————————————–

தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்
வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-

ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண் மால் தான் கொண்டு போனான் -பெரியாழ்வார் -3-8-4-
அவன் பெருமையை நினைத்து உடன் சென்றாள் -என் வருத்தம் சிறிதும்  நினைக்க வில்லை –
அன்னப் பெடை நடந்து செல்வது போலே சென்றாள்
என்னை வருத்திப் போனாலும் போக வேண்டிய தேசம் சேர்ந்தால் சந்தோஷமே
தனக்கமைந்த மாயவனை மாதவனை பின் செல்லுகின்றாள்  ஆகையாலே
பரஸ்பரம் மயங்கி வழி தப்புவார்களோ -என்கிற கவலை-

—————————————————

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-

என் ஆர்த்தியை கணிசியாமல் பெரிய துணைவனைப் பிடித்துக் கொண்டு போனாள்
ஆஸ்ரிதர்க்காக தன் உடம்பில் அம்புக்கு இலக்காகி கார்யம் செய்யுமவன் -என்று அவன் திறத்திலே ஈடுபட்டு உடன் சென்றாள்
வரம் செற்று-இராவணன்  பெற்ற வரம் அழியும் படி-

————————————————

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-

நப்பின்னைப் பிராட்டியை கைப்பிடித்த பெருமான் தானே நேராக வந்து அழைத்தமையால் -அவன் தோள் அழகிலே தோய்ந்து எம்மை மறந்தாள்-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே –
மின்னல் வஞ்சிக் கொடி இவற்றை விட  நுட்பமான இடையை யுடையவள் நடந்து செல்லத் தகுந்தவள் அன்றே
பெரிய திருவடி மேல் வைத்துக் கொண்டு போகல் ஆகாதோ
அடியோமுக்கு -தேவ தேவ திவ்ய மகிஷியாகப் பெற்ற பெரு மேன்மையில் ஈடுபட்டதனால் -என்கை
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி-சோலை வாய்ப்பையும் நீர் வாய்ப்பையும் நோக்கி கால் தாழ்ந்து மயங்கிக் கிடந்தது
ஆபத்துக்கு இலக்காகாதே- கண்ணை மூடிக் கொண்டு போய்ச் சேர  வேண்டுமே-

——————————————————-

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-

இன்புறும் இவ் விளையாட்டுடையான் பெருமான் வந்து அழைத்தவாறே விளையாட்டுக் கருவிகளை விட்டு ஒழிந்து
அவன் உடன் விளையாடுவதையே பிராப்தமாக கொண்டு உடன் சென்று விட்டாள்
வழி அடையே மகா உத்சவமாய் அன்றோ இருக்கும் -சேர்த்தி புறப்பாடு காண -அனைவரும் கை தொழ -பாவியேன் நான் இழந்தேனே –
பாங்காக வயலாலி போய்ச் சேர வேண்டுமே
செழும் கோதை -பூ மாலை போலே சுகுமாரமாய் நெஞ்சை கவருமவள்
முற்றில் -சிற்றில் இளைக்கும் கருவி -மணல் கொழிக்க-

மற்றெல்லாம் கை தொழப் –
தாயான குற்றத்தாலே எனக்கு ஒருத்திக்கும் இறே
தொழ ஒண்ணாதது
அல்லாதார்க்கு எல்லாம் தொழுது பின்னே போகலாம் இறே-

மற்று எல்லாரும் என்னாமல் மற்று எல்லாம் என்கையாலே அக்றிணைப் பொருள்களோடு
உயர்திணைப்   பொருள்களோடு வாசி அற சகலமும் தொழும் -என்றவாறு-

————————————————–

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-

பின்னை கொல் நிலா மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்-போலே கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் –
கந்தல் கழிந்தால் சர்வர்க்கும் நாரீணாம் உத்தமி யுடைய  அவஸ்தை வரக் கடவதே இருக்குமே -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி
அனன்யார்ஹத்வம்-அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -அநந்ய நிர்வாஹத்வம் –
சம்ச்லேஷத்தில் ஆறி இருக்கை -விச்லேஷத்தில் தரியாமை -ஆறு படிகளாலும் சாம்யம் உண்டே
பாவியேன் -தந்தையும் தாயும் உற்றாரும் நிற்க தனி வழியே போயினாள் என்று பழி சொல்லும் படி
சீதா பிராட்டி சக்கரவர்த்தி திரு மகன் உடன் போனால் போலே -வாவித் தடங்களிலே ரமித்து மயங்கிக் கிடப்பார்களோ –

—————————————————————

தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10-

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்த்திட்டு அழகு அழிந்ததால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ-என்று  தாய் வயிறு எரிந்து சொல்லும் படியாக விட்டுச் சென்ற
இத் திரு மொழியை ஓத வல்லார்கள் நித்ய அனுபவம் பெறுவார்கள்
நெடுமால் துணையா -என்னாமல்-தனியே -என்றது புக்ககம் செல்ல பிறந்தகத்தார் யாரும் துணை இன்றி போனபடி
மேவிய நெஞ்சுடையார்க்கு -பாட பேதம் –
தஞ்சமாவது விண்ணுலகே -தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா –
ஆதி வாஹிக கணத்தோடு
தானே வழி காட்டிப் போம்-
பிராப்ய பூமியாம் –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-6-தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே-

March 21, 2015

பிராட்டியின் அவஸ்தையை அடைந்து -நான்கு பாசுரங்களே தூது உரைப்பார்
நஞ்சீயர் திரு மேனி நோவு சாத்திக் கொண்டு இருக்க-
பெற்றி -வரம் தரும் பெருமாள் அரையரை எழுந்து அருளப் பண்ணி இத் திரு மொழியை
சொல்லிக் கேட்டு அருளா நிற்கையில் நாலாம் பாட்டிலே –
தானாக நினையானேல் தன் நினைந்து  நைவேற்கு ஒரு மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ –
என்னும் அளவிலே வந்தவாறே –
நோவு படுவதற்கு முன்பே வந்து உதவாமல் போனாலும் நேர்ந்த நோயைப் பரிஹரிக்க வாக்கிலும் வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து -மிகவும் தளர்ந்து வருந்தினார் -எனபது பிரசித்தம் –
ஆகவே இத் திருமொழி பகவத் காமுகர்களை நன்கு உருக்கும் -என்க-

——————————————–

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

தூ என்றும் தூவி என்றும் சிறகுக்குப் பெயர்
உழக்கல் -மிதித்தல் -சிதிலமாக்குதல்-

நானும் துணைவனோடு கலந்து வாழும்படி நீ கார்யம் செய்ய வேண்டாவோ –
ஸ்ரீ வைஷ்ணவர்களே வண்டு -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-என்றும்
போந்தது  என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் யுண்டு அமர்ந்திட வேண்டி –
ஆசார்ய பாதாரவிந்த சேவையே மது -பருகுவதையே விரதமாகக் கொண்டவர்கள்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய
தூ விரியும் மலர் உழக்கி -என்றும் பாடம் -தூய்தாக விரியும் மலரை -நன்றாக அலர்ந்த மலரை
பொறிவரிய -புள்ளிகளும் ரேகைகளும் வண்டுக்கு இயல்பு
பரத்வன் வயலாலி மணவாளன் நம்மை மதிப்பானா என்ன அங்கு வாழும் மகா தர்மிஷ்டர்கள்
ஸ்திரீஹத்தி பண்ணுகிறவனையா நாம் யஜிக்கின்றோம் என்று நொந்து அவனை புறப்பட செய்வார்கள் –
உன்னையும் வரவேற்று சத்கரிப்பர்கள் -தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி -என்கிறார் –

நம்முடைய பிரதி பந்தகங்களைப் போக்கி அருள சாதனம் கை கண்டவன் -ஏவரி வெஞ்சிலை யானுக்கு -என்கிறாள்
என் வடிவு இருக்கும் நிலையை நீ பார்த்தாயே -நீயே பாசுரம் இட்டு என்நிலைமை உரையாயே -என்கிறாள்

உரையாயே
கொடு வர வேண்டா
அறிவிக்கும் அத்தனை இறே இத்தலைக்கு வேண்டுவது –
கிருபை அவன் பணியே
வாராது ஒழியும் அன்று ரஷகனுக்கு குறை யாமே –
நீங்கள் அறிவித்த அநந்தரம்
உங்கள் பேச்சுக் கேட்டு தானே வாரா நிற்கும்-

——————————————

பிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-

அறுகால சிறு வண்டே -இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே
ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம்
தலைக் கட்டலாம் இறே -பூர்வ பஷம் இது
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று
சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது –
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை -திரு நெடும் தாண்டகம் -26 வியாக்யானம் –
த்விபாத்தாய் இருத்தல் -சதுஷ் பாத்தாய் இருத்தல்  செய்கை அன்றிக்கே கமன சாதனமான கால்கள்
ஆறு உண்டாகப் பெற்றேன் என்கிறாள் -பூர்வர் நிர்வாஹம்
வண்டுக்கு கமச சாதனம்  சிறகு ஆகையாலும்
மேலே தொழுதேன் என்கையாலும்-என் தலையிலே வைக்கைக்கு ஆறு கால்
உண்டாகப் பெற்றேன் என்கிறாள் -என்று பட்டர் அருளிச் செய்வர்-

எங்கானல்  அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூந்துழாய் முடி என் குடக் கூத்தற்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திரு வாய் மொழி-

—————————————–

நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய  நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-

நாரையைத் தூது விடுகிறார் –
திரு மார்பில் அணிந்துள்ள மணமாலை என் கொங்கைத் தடத்தில் நெருக்குண்ணும் படி வந்து சம்ச்லேஷிக்க  வில்லை –
இத்தலையை மறந்து ஒழிந்தானா -குறிப்பு அறிந்து கூறாய் –
அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் –
நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம்
அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து
வார்த்தை சொல் என்றுமாம் –
மிகச் சொல்லில் அவனைக் கிடையாது
அவன் நைராஸ்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்
நாம் முடிந்து பிழைக்கும் படி –பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்தியின் போக்யதை அனுபவிக்கத் தக்கது
பெரும் தகையேற்கு-பெறும் தகையேற்கு–இரண்டு பாட பேதங்கள்
திருத் துழாயை பெறுவதற்கு தகுதி உடையளான எனக்கு அருள் செய்கிறான் இல்லை –

——————————————

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-

இதுவும் வண்டு விடு தூது
உடைமையை அவனாக நினைக்குமது கிடையாதாகில் –
முறை செய்யானாகில் –
அவனுக்கு ஆஸ்ரிதரை நினையாமை சத்தா பிரயுக்தமாகில் –
தன் சத்தை உண்டாக்கைக்கு ஈடாக நினையானாகில்- என்றுமாம் –
தன் நினைந்து நைவேற்கு –
நாம் அவனைப் போலே ஆக மாட்டோமே
நாமும் நினையாமைக்கு ஒரு நெஞ்சு படைக்கப் பெற்றிலோமே
இடையிலே மன்மதன் சிறு பையல் நலிகின்றானே
காமற்கு என் கடவேன் கரு மா முகில் வண்ணற்கு அல்லால் பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து
எய்யக் காமற்கு என் கடவேன் -10-10-7- மேலே அருளிச் செய்வர்-

தேன் வாய வரி வண்டே -திருவடி இனிமையாக பேசி பிராட்டி உயிர் காத்தால் போலே –
திருவாலி நகராளும் ஆனாயற்கு –
திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே
திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-
அர்ச்சாவதாரத்தின் ஐஸ்வர்யமும் விபவாதாரத்தின் ஐஸ்வர்யமும் ஒரு மடை கொண்டு இருக்கும் இடம் -என்றவாறு –
என்னுறு நோய் அறியச் சென்று உரையாய் –
அறிய என்பதை -உரையாய் என்பதன் உடனும் -சென்று -என்பதனோடும் –
நீ சென்று அவன் அறிந்து கொள்ளும் படி
நீ தளர்ந்து செல்லுகிற நடையிலே அவன் என் ஆற்றாமையை அறிந்து உடம்பு வெளுக்கும் படி என்றுமாம் –

—————————————————

வாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த
தாளாளா ! த ண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

அநவரத   பாவனையால் அவன் கண்  முன்னே தோற்றுவானாகக் கொண்டு -நேராக வார்த்தை சொல்லுகிறாள்
சீதா பிராட்டியும் இது போலே காகாசுரனை விஷயத்தில் பராக்கிரமம் காட்டினாய் –
இராவணன் மேல் பொறுமை பாராட்டி நின்றாய் போல வார்த்தைகள் அருளினது போலே
வாளாய் கண் பனிப்ப -கண்ணாலே விலங்கிட்டு நிறுத்தி வைத்து நித்ய அனுபவம் பண்ணலாய் இருக்கவும்
வெட்கத்தாலே தலை கவிழ்ந்து இருந்து கெட்டேன் என்கிறாள்
மென் முலைகள் பொன் அரும்ப -என்றது எம்பெருமானை அனுபவித்து மேன்மை பெற வேண்டிய ஆசையானது
அது கிடையாமையாலே பாழாய் போனது என்கை
ஒ -விழியை ஒவ் ஒன்றுடன் கூட்டிப் பொருள் கொள்க
என் தனக்கு ஒரு துனையாளான் ஆகாய் -கோவர்த்தன கிரியைத் தூக்கினது ஒரு பெருமை இல்லை
என் ஆற்றாமையில் சிறிது அளவாகிலும் உன்னால் சுமக்க முடியுமோ -என்றபடி –

——————————————————

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–3-6-6-

இப்பாட்டு மட்டும் படர்க்கையாக -கீழ்ப் பாட்டும் மேல் பாட்டுக்களும் முன்னிலையாக அருளி -அனுபவம் போகும் போக்குகள் இவை –
ஆத்ம குணங்களையும் கையில் வளைகளையும் கொண்டானே-

வ்ரஹம் பிரஸ்தாவத்திலே உடம்பு மெலியும்- பிரிவு வார்த்தை மாறினவாறே பூரிக்கும் –
பூரித்துக் கிடக்க பிராப்தமாய் இருக்க இப்படி பிரிந்து மெலிந்து வருந்த்கை தகுதியோ
கன வளை -கெட்டியான வளை -பொன் வளை –

————————————————–

கொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல்
பண்டு அரவின் அணைக் கிடந்தது பாரளந்த பண்பாளா !
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன  வளையும் கடவேனோ!–3-6-7-

கண் துயில் கொள்ளுகை-உறங்க ஒட்டாமை
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ  கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
சதா பஸ்யந்தி ஸூரயய-
இரவும் பகலும் உன்னை சிந்தித்துக் கொண்டு கண் உறங்கப் பெறாமல் மேனி மெலிந்து போனேன் என்றார் ஆயிற்று –

——————————————–

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ !
முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே !–3-6-8-

குடக் கூத்தாடிய அழகையும் சௌலப்யத்தையும் பிரகாசப் படுத்திக் கொண்டு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளும் பிரானே
என் நினைவுக்கு விஷயமாக்கி வருத்துகின்றாயே
முயலாலும் இள மதி -சந்தரன் மத்திய கறுப்பை முயல் மான் என்று பல படியாகக் கூறுவார்
சார்ந்தகடு தேய்ப்ப தடாவிய கோட்டுச்சிவாய் ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் புன வேங்கை நாறும் பொருப்பு-பேயாழ்வார்-

———————————————-

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு  இலா அடிமை செய்ய வேண்டும் -என்றும்
நியதமும் அத்தாணிச் சேவகமும் -என்றும் இன் திருவடிகளுக்கு அடிமை செய்து கொண்டு இருப்பதே கடமை –
அதுவும் நீ திரு உள்ளம் பற்றினால் அன்றோ –
நித்ய கைங்கர்யம் அருளா விடிலும் ஒரு நாளாவது  உன் திருமேனியை தந்தால் ஆகாதா
ஒருத்திக்கு கார்யம் செய்யாது இருந்தால் உனக்கு புகழ் எல்லாம் நிலைக்குமா –
அம்மங்கி  அம்மாள் நோய் சாதிக் கொண்டு இருக்க நஞ்சீயர் நம் பிள்ளை சென்று –
குணானுபவத்தால் அல்லது  போது  போக்கி அறியீர் -இப்படி கஷ்டப் படுத்துகிறானே  -என்ன –
நீ யாள வளை யாள மாட்டோமே -என்று அன்றோ கலியன் பாசுரம் —
எம்பெருமானுக்கு வாழ்க்கைப் பட்டால் கிலேசப் பட்டுத் தானே இருக்க வேண்டும் என்றாராம் –
பார்த்தீரா இவருடைய விசுவாசத்தை -என்ன பாசுரம் எடுத்து காட்டினார் என்று பாராட்டினாராம் –

———————————————————–

மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யில்ங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே–3-6-10-

கடலில் சென்று சேரும் பொழுது நதி முக்கிய பெயருடனே சேருமா போலே நிகமத்திலே தனது வாய் பாசுரமாகவே பேசி அருளுகிறார்
தூது விட வேண்டும்படியான தீ வினை வாராது -என்று பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
இவர்களை அடைய எம்பெருமானே தூது அனுப்பி சேர்த்து கொள்வான் என்றபடி-

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-5-வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்-

March 20, 2015

ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரம் சேர்மினீரே  -என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகச் சொல்லி நின்றார் –
நம்மளவும் வாராமல் நின்றிடுவாரோ என்ற அதிசங்கை கொண்ட திருவாலி எம்பெருமான்
தானாக இவரை விஷயீ கரித்து இவர் திரு உள்ளத்திலே வந்து குடி புகுந்தான் –
அதனை உணர்ந்த ஆழ்வார் -பிரானே நான் அபேஷியாது இருக்க நீயே வந்து  விஷயீ கரித்தாய்-
உன்னை ஒழிய வேறு ஒன்றில் நெஞ்சு போகாத படி ருசியையும் விளைவித்தாய் –
ஒரு நொடிப் பொழுதாகிலும்  விட்டுப் பிரிந்தால் உயிர் வாழ முடியாதபடியும் ஆக்கி வைத்தாய் –
இனி நானும் உன்னைப் போகல ஒட்டேன்
என் நெஞ்சிலே நித்ய வாசம் பண்ணி அருளி என்னை ஒழிவில் காலம் எல்லாம் அடிமை கொண்டு அருள வேண்டும் -என்கிறார்-

—————————————————

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளிரணியாரசோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-

மெய்யடியார் ஹிருதய கமலத்தில் புகுந்து வாழ்வதே அவனுக்கு பரம உத்தேச்யம் –
பிரார்த்தனை இன்றியே வந்து புகுந்து கண்டு மகிழ்ந்து -உள் அடங்காமல்  –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று வாய் விட்டு அருளுகிறார்
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -திருவாய் -5-8-9-
துரியோதனன் தன்னை மறந்து எழுந்து நின்றால் போலே –
நன்றி பாராட்டின தமக்கு தித்தித்து இருக்கும் படி -சிந்தனைக்கு இனியாய்
ஆழ்வார் திருவாராதன பெருமாள் இன்றும் கலியன் சந்நிதியில் சேவை சாதித்து அருளுகிறார் –
தாரகமாயும் இருந்தபடி ஆர் உயிர் -என்கிறார் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -6-7-1-
எம்பெருமான் நினைவாலே பக்தர்கள் அவன் உயிர்
பக்தர்கள் நினைவாலே எம்பெருமான் அவர்கள் உயிர் -அறிவிலேனுக்கு அருளாய் அறிவர் ஆர் உயிர் ஆனாய் -திருவாய் -6-9-8-

அசோக மரங்கள் அடர்ந்து செந்நிற தளிர்களின் ஒளி வீசி அக்னி ஜ்வாலை பரவினால் போலே விளங்கும் திருவாலி
சிந்தனைக்கு இனியாய் –விளியாகக் கொண்டு -வாழ்க -வினை முற்று வருவித்து முடிக்கவுமாம் –

—————————————————————

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–3-5-2-

பக்தருடைய ஹ்ருதயத்தில் வந்து புகுவதற்க்காகவே  எங்கும் கோயில் கொண்டு அருளுகிறான்
இது சித்தித்தவாறே அங்கு எல்லாம் ஆதாரம் மட்டமாகி விடுமே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வாநாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் -அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி போலே
அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் -என்கிறார்
நீல நிறத்தொரு மலையின் மேல் மா மணி விளங்குவது போலே அரவணை மேல் கிடந்தாய் என்கிற இதனால்
நீல மலையின் ஸ்தானத்தில் எம்பெருமானையும்
மா மணியின் ஸ்தானத்திலே ஸ்ரீ கௌஸ்துப மணியையும் உபமேயமாகக் கொள்ள வேணும்
அரவணை வேலைத் தலையில் -என்றதற்கு உபமேய  அந்வயம் இல்லை
பாற் கடலும் பாம்பு அணையும் அவன் நிழலீட்டாலே நீல நிறம் பெற்றனவாகக் கொண்டு
அவற்றை நீலத் தட வரைக்கு உபமேயம் ஆகவும்
எம்பெருமானை மா மணிக்கு உபமேயமாகவும் கொள்ளலாம்
இந்த யோஜனையில்-அபி பணிபதி பாவாத் சுப்ர மந்தச் சயாளோ மரகத ஸூ குமாரை -ரங்க பர்த்துர் மயூகை –
சகல ஜலீதிபா நச்யாமஜீ முத ஜைத்ரம் புலகயதி விமானம் பாவனம் லோசனே ந-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -ஸ்லோகம் அனுசந்தேயம்
மா மணி நிகழ –  நிகழ்தல் -விளங்குதல்
கரும்பாலை புகையைக் கண்ட மயில்கள் மேகத் திரளாக மயங்கி கூத்தாடுகின்றனவாம் –

———————————————

நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி யிராமை
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்
செந்நெல் கூழை வரம் பொரீ இ அரிவார் முகத்தெழு வாளை போய் கரும்பு
அந்நல் காடு அணையும் அணி யாலி யம்மானே–3-5-3-

ஸ்திரப் பிரதிஷ்டை யாம்படி என் மனத்திலே புகுந்தாய் –
பரத ஆழ்வான் போலே பல்லைக் கடித்து கொண்டு நாள்களை எண்ண வேண்டாத படி
இந்த ஜன்மம் முழுவதும் நித்ய சம்ச்லேஷம் ஆகைக்காக -நிலை நிற்கும் என்று நிச்சயித்து இருந்தேன்
கூழை தலை மயிர்க்கு பேராய் இலக்கணையால் தலையை சொல்லிற்று =செந்நெல் தலை என்றபடி –
முள்  எயிறு  ஏய்ந்தில கூழை முடி கொடா-பெரிய திரு மொழி -8-2-9-
கூழ் உணவு -பயிரை குறித்து காரிய ஆகு பெயர்-

———————————————–

மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே–3-5-4-

பழைய நிலைமையையும் இப்பொழுது நிலைமையையும் அனுசந்தித்து நன்றி பாராட்டி அருளுகிறார்
உன் திருவடிகளையே சிக்கென பிடித்துக் கொண்டு வாழுமாறு அருளினாயே
பணை -குளம்

——————————————–

நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-

அந்தரங்க கைங்கர்யம் இடை விடாமல் செய்து கொண்டு இருக்க அருள வேண்டும் –
சுக்ரீவனுக்கு நம்பிக்கை கொடுக்க அரும் பெரும் செயல்களை செய்து அருளினாய் -மரம் எய்த மா முனிவா –
அவை ஒன்றும் வேண்டா பிரியாமல் இருந்தாலே போதும்-

—————————————–

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

கருமுகை -கற்பகம்- நாழல் -மந்தாரம் -சௌகந்தி- செங்கழுநீர் -தாமரை -தாழை -மா மலர் எட்டு
புன்னை முதலியவற்றுக்கும் உப லஷணம்
திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
அஹிம்சா பிரதமம் புஷ்பம் -புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ -சர்வ பூத தயா புஷ்பம் -ஷமா புஷ்பம் விசேஷத –
ஜ்ஞானம் புஷ்பம் -தப புஷ்பம் -த்யானம் புஷ்பம் -ததைவ ச சத்யம் அஷ்ட விதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதி கரம் பவேத்
காமரு சேவடி -காமம் தரு சேவடி -தானாக வந்த செல்வத்தை தள்ளுவார் யுண்டோ -இனி போகலொட்டேன் –

—————————————

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–3-5-7-

திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம் –
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் –
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் –
சமயம் பார்த்து புகுந்த உன்னை இனி போகலொட்டேன்

அப்புலவ –
விசேஜஞ்ஞன் அல்லையோ அவசரம் அறியாயோ புகுருகைக்கு

புண்ணியனே
உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூ க்ருதமானவனே-

வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று
இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –

———————————————————–

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே–3-5-8-

நிர்ஹேதுக  கிருபையாலே என் நெஞ்சிலே வந்து புகுந்தாய் -இனி இவ்விடம் விட்டு நீ நினைத்தாலும் போக முடியுமோ –
இனிப் போனால் அறையோ-பேர் அருள் மாறினால் அன்றோ இவ்விருப்பு மாறப் போகிறது
அறையோ என நின்ற திருக் கருங்கடல் -திரு விருத்தம்
மதுவைப் பருக இழிந்த வண்டுகள் செண்பக மல்லிகை மலர்களில் தழுவி இருக்க
அவை கொதித்தவாறே சந்தனச் சேற்றில் கை வைத்து கிடக்குமா போலே –
இளம் தெங்கிலே   போய் அதன் தாதுக்களை அளைகின்றன   –

—————————————————–

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–3-5-9-

புகுந்தாயைப் போகலொட்டேன் -என்றார் –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்றும் –
இனி உன் திருக் குறிப்பே -என்றும்
அவன் திரு உள்ளத்தை அனுசரித்து நிற்க வேண்டிய ஸ்வரூப உண்மையை உணர்ந்த ஆழ்வார்
பல் பன்னிரண்டையும் காட்டிப் பிரார்த்திக்கிறார்
நத்யஜேயம் கதஞ்சன -மாஸூசா -என்ற கடல்கரை -தேர் தட்டு வார்த்தையாவது
அடியேனை நோக்கி அருளிச் செய்ய வேணும் என்கிறார்
இனி நான் உன்னை விட்டு ஒரு நாளும் பிரியேன் -என்று சோதி வாய் திறந்து அருள வேணும் என்கிறார்
ஒரு பொருள் உரையாய் -ஒரு மாற்றம் உரையாய் -என்னைப் பெறுகைக்கு இத் திருவடிகளே சாதனம் என்ற ஒரு பொருளையும்
மாஸூச துக்கப் படாதே என்ற ஒரு சொல்லையும் சொல்ல வேணும் -என்கை
நீதியாகிய வேதம் -சத்யம் வத-மெய்யே சொல்லு தர்மத்தை நடத்து -நீதியை உணர்த்துகின்ற வேதம் —

—————————————————-

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10-

திரு நாட்டிலே சென்று நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறுவார்கள்
ஓத வல்லவர்கள் இருக்கும் இடமே வைகுந்தம் ஆகும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -திருவாய் மொழி போலே-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .