எம்பெருமான் தன அடியார்களை ஆதரித்த வரலாறுகளை ஒவ் ஒன்றும் பாசுரம் தோறும் எடுத்துக் கூறி
இத் திரு மொழியால் திருவரங்கன் திருவடிகளில் சரணம் புகுகிறார் இந்த திரு மொழியில் –
குஹப் பெருமாள்
திருவடி
கஜேந்திர ஆழ்வான்
ஸூ முகன்
கோவிந்த சுவாமி
மார்கண்டேயன்
சாந்தீபிநி முனிவன்
வைதிகன்
தொண்டைமான் சக்ரவர்த்தி
ஆகிய இவர்கள் உன் தன திருவடிகளுக்கு இலக்கானது போலே அடியேனும் ஆக வேணும் என்று திருவருளை வேண்டுகிறார் ஆயிற்று –
திருவரங்கம் மங்களா சாசன திருப்பதிகங்களில் ஐந்தாவது -கடைசி -பதிகம் இது-
—————————————————————
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-
ஏழை ஏதலன் கீழ் மகன் -மேன்மேலும் ஓன்று ஒன்றுக்கு மேலான இழிவாம்
கை விடுகைக்கு ஒன்றே அமைந்து இருக்க மூன்றும் சொன்னது –பெருமாள் உடைய நீர்மையைக் காட்டி அருள
குலம் செயல் குணம் ஒன்றையும் பாராதே விஷயீ கரிக்கும் ஸ்வ பாவன் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போலே குகன் தன்னைப் பற்றி சொல்லவும் இல்லையே -என்னாது –
நுண் உணர்வு இன்மை வறுமை அஃது யுடைமை பண்ணப் பணைத்த பெரும் செல்வம் -என்பதால் ஏழை -அறிவு கேடன்
பொருள் இல்லாத தரித்திரன் -என்றுமாம் –
ஏதலன் -ஏது அலன் -யாதொரு சம்பந்தமும் உடையன் அல்லாதவன் –
அயலான் பகைவன் -கொல்லுவதே சாதித் தொழில் வேடர்களுக்கு
அவர்க்கு இன்னருள் சுரந்து-கன்று அணுகில் பசு பாலை சுரப்பது போலே அடியவன் அணுகிய அளவில்
கருணை வெள்ளத்தை சுரந்து அருளுபவன்
அருள் சுரந்து பேசின பேச்சின் பரிசு சொல்கிறது மேல்
மான் போன்ற சபலமான கடாஷத்தால் பிராட்டி அங்கீ கரித்தமை தோன்றும்
புருஷகாரமான பிராட்டி யுடைய கடாஷம் முற்பாடு காட்டும்
மாழை -அறிவின்மை
மட நோக்கி உன் தோழி -என்றதனால் குகனை தனக்கு சமமாக கொண்டமை தோற்றுமே
ஆக இப்பாட்டால் கானவரில் தலைவனான குஹப் பெருமானுக்கு வானவர் தலைவனான இராமபிரான்
திருவருள் புரிந்தமையை முன்னிட்டு திருவரங்க நாதன் திருவடிகளில் சரணம் புகுந்தார் ஆயிற்று –
———————————————————
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-
பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தனது இலையிலே திருவடி யுடன் உண்டு அருளிய பெருமாள்
சங்கல்பத்தால் இடையில் நரம்பு வாழை இலையில் அதுமுதல் ஏற்பட்டது என்பர்
ஆசார்ய ஹிருதயம் -மிலேச்சனும் பக்தனானால் இத்யாதி சூர்ணிகையில்
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் சகுண சஹ போஜனமும் -வ்யாக்யானத்தில்
உபகாராய சூக்ரீவோ ராஜ்ய காங்ஷீ விபீஷண நிஷ்காரணாய ஹனுமான் தத்துல்யம் சஹ போஜனம் -என்று திரு உள்ளம் பற்றி
கோதில் வாய்மையினாயோடும் உடனே உண்பான் என்ற பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும்
என்று அருளிச் செய்த மா முனிகள் ஸ்ரீ ஸூ க்திகள்-
வாசிஷ்ட ஸ்ரீ ராமாயணத்தில் -பாத்ம உத்தரத்திலோ உள்ளது என்று பெரியோர் கூறுவார் –
உடனே உண்பன் நான் என்று –
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்-
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கை யாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ்வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது -பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் வால்மீகி ஸ்ரீ ராமாயணம் ஒட்டி –
கேசரி வானர வீரன் -அஞ்சனா தேவி வயிற்றில் வாயு தேவன் அருளால் –
தோன்றியவன் ஆதலால் வாத மா மகன்
பீமா சேனன் வாய் தேவன் அருளால் குந்தி தேவி இடம் தோன்றியது பற்றி —
அவன் இளைய மகன் -இவன் மா மகன் -சிறந்த மகன் என்னலுமாம் –
காதல் ஆதாரம் கடலின் பெருகச் செய்தகவினுக்கு கைம்மாறு இல்லை என்று
அனுமானுக்கு தன் பக்கல் யுண்டான அன்பு மிகுதியை பெருமாள் பாராட்டி கூறுவதாகவும்
ஆழ்வார் பாராட்டிக் கூறுவதாகவும் கொள்ளலாம்
காதலும் ஆதரமும் கடலைக் காட்டிலும் பெறுகிற நிலையிலே இவன் செய்த உபகாரத்துக்கு
தகவு -தகுதியான உதவி -செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு –
சேஷி விஷயமாக சேஷ பூதன் சொல்ல வேண்டிய வார்த்தையை
தலைவனான இராம பிரான் அடியவனான அனுமன் விஷயமாக கூறினது அப் பெருமான் யுடைய நீர்மையைக் காட்டிமே
வாய்மைக்கு கோது இல்லாமை -செவிக்கினிய செஞ்சொல் -நன்மை விளைத்தல் -பயன் கருதாமல் –
திருவடி பெற்ற பெரிய பேற்றை எளியனான யானும் பெற விரும்புவது வெறும் ஆசையின் கார்யமே யாயினும்
சரணாகதி யினால் சாத்யம் ஆகாதது எதுவும் இல்லை என்று தாம் கருதியமை தோற்றும் –
——————————————————–
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -5-8-3-
கொண்ட சீற்றம் -வருவித்துக் கொண்ட -என்றபடி
கடல் அரசன் விஷயத்திலே பெருமாள் -குரோதம் ஆஹாரயத் தீவரம் -என்றார் இறே வால்மீகி
கொண்ட சீற்றம் உளது என்று அறிந்து -ஆபத்தனம் போலே ஆழ்வார் இத்தையே கருதுகிறார்
மதுவின் கரை தேடி ஓடி வர வேண்டாமே என்னை ரஷித்து அருள -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –
நான் உள்ள இந்த நில உலகத்திலே கோயில் கொண்டுள்ளாயே –
நறு மணம் வழி காட்ட பொய்கைக்கு வந்ததே யானை
ஆதர அதிசயத்தாலே முதலை உள்ளதை கணிசியாமல் விரைந்து மலர் கொய்யப் புக்கதே –
கொடிய வாய் விலங்கு-யானையின் காலை மட்டும் இன்றி எம்பெருமான் திரு உள்ளத்தையும்
புண் படுத்திய கொடிய வாயை யுடைய -என்றபடி –
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா -என்பதாலும் கொடிய வாய் விலங்கு
முழு வலி முதலை -தன்னிலம் என்பதால்-
—————————————–
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-4-
அடுத்த கடும் பகைஞற்கு -முதல் திருவந்தாதி
பதிப் பகைஞற்கு ஆற்றாது -நான்முகன் திருவந்தாதி -இவற்றில் இந்த இதிகாசம் யுண்டே –
நஞ்சு சர்வதே -வெஞ்சினம் -என்றதால் சரணா கதிக்கு அதிகாரி ஆகாதார் இல்லை -என்கிறது
நெஞ்சில் கொண்டு -நாம் அல்லது ரஷகர் இல்லை -என்ற எம்பெருமானது குளிர்ந்த திரு உள்ளம் காட்டும் –
அடைக்கலம் -பாது காக்கப் படும் பொருள் -ரஷ்ய வஸ்து —
கருடன் இடத்திலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே பாது காத்து அருளிய அருமை திறத்தைப் பாராட்டி அருள்கிறார்
வெஞ்சொல் ஆளர்கள் -எமபடர்கள் செய்யும் தண்டனைகளை காட்டிலும் சொற்கள் கொடியனவாய் இருக்கும் என்கை-
கொடிய செய்வனவுள் -தீ வினைகள் பல
கொடிய செய்வன -அதற்குத் தக்க தண்டனையும் பல
அவற்றைத் தொகுத்து ஜாதி ஒற்றுமையால் -அதற்கு -என்கிறார் -அவர்கள் செய்யும் கொடும் தொழில்களுக்கு என்றவாறு-
அடியேன் அஞ்சி வந்து
உனக்கு ஆட்பட்ட பின்பும் யான் யமனுக்கு அஞ்சலாமோ -என்றவாறு-
————————————————————
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-
திருவேங்கட மலை மகாத்மயம் அருளும் புராணங்களில் இந்த இதிகாசம் யுண்டு என்பர்
மாலாகாரருக்கும் புக்த்வா ச விபுலான் போகான் த்வமந்தே மத் பிரசாததே
மம அநு ஸ்மரணம் ப்ராப்ய திவ்யம் லோகம் அவாப்ச்யசி -என்று அருளியதும் ஸ்மரிக்கத் தக்கது
விஷயாந்தரங்களை காரி உமிழும் ஆழ்வார் இந்த உதாஹரணம் எடுத்துக் காட்டியது
அவனுக்கு அருள் செய்தது போலே அடியேனுக்கும் உட்கருத்தை அறிந்து அருள வேணும் என்னும் இத்தனையே இங்கு விவஷிதம் –
மாற்றமுள -திரு மொழியில் இவ் வாழ்வாரது உத்தேச்யம் நன்கு விளங்குமே-
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி-கண்ணபிரானுடைய திருவடிகளைச் சொன்னபடி
உபய விபூதியில் உள்ளாறும் வந்து வணங்கப் பெற்ற பெருமை
நித்ய சூரிகள் -இடையர் -இடைச்சி -பசுக்கள் -பீஷ்மர் போல்வார் ஆஸ்ரயித்து உய்ந்தமை –
மாகம் முழுதும் -மா நிலம் முழுதும் -என்று அந்வயம்
கண்ணபிரான் பாலமுது செய்து சாய்ந்த அளவில் இந்த்ரன் நரகாசூரன் நெருக்கா நின்றான் –
சத்ய பாமை பிராட்டி உடன் பெரிய திருவடி தோளில் ஏறி எழுந்து அருளி நரகாசூரம் செய்து மீண்டான் இறே–
அவன் கூடவே வருவேன் என்றாலும் இங்கேயே இருந்து பின்பு வரச் சொல்லிய பெருமாள் திரு உள்ளம் எதனால் என்றால்
ஈஸ்வரன் நினைத்தால் விஷய ப்ரவணரையும் இவ்வாசனை அறுத்துக் கொடு போக சக்தன் என்னும் இடமும்
எத்தனையேனும் பகவத் ப்ரவணரையும் தேக சம்பந்தின் வழியே கொடு போய் விநாசத்தைப் பலிப்பிக்கும் என்னும் இடமும் வெளியிட்டது –
சாதுக்கள் உடைய உபமான பூமியாய் இருக்கிற ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் இறே எதிரம்பு கோத்தான்
இதுக்கு நேரே உதாஹரணம் ஸ்ரீ மாலா காரர் அளவில் செய்தது இறே-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள்
——————————————————
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-
மிருகண்டு முனிவர் பிள்ளை -மார்கண்டேயர் -சிவ லிங்கத்தை தழுவிக் கொள்ள
சிவபிரான் ஸ்ரீ மன் நாராயணனை சிந்தை செய்து அவன் திருவருள் பெற்று யமனை காலால் உதைத்துத் தள்ளி
என்றும் பதினாறு -அநேக கல்ப காலம் வாழும் தீர்க்க ஆயுசு கொடுத்து அருளினான் –
மகா -ஆரண்ய பர்வம் -192 அத்யாயம் -ஸ்ரீ பாககவதம் 12 ஸ்கந்தம் 8 அத்யாயம் –
ஸ்ரீ மன் நாராயணனை ஆராதித்து வெல்ல ஒண்ணாத யமனை வென்று ஒழிந்தான் -என்று அறியலாம் –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -திருவாய் -4-10-8-
நிறுத்தி உம் உள்ளத்து கொள்ளும் தெய்வங்களும் உம்மை உய்ய கொள் மறுத்துவம் அவனோடு கண்டீர் மார்கண்டேயனும் கரியே -திருவாய் -5-2-7-
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ
வண்டுண் மலர்த் தொங்கல் மார்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசனுடன் கொண்டு உசாச் செல்ல
கொண்டங்குத் தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்துமே -திருவாய் -7-5-6-
நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகள் உங்களை ரஷிப்பதும் அவன் பக்கலிலே கொண்டு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று
ஆனபின்பு அவனையே ஆஸ்ரயிக்கப் பெறில் அழகிது -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –
நான்மறை மன்னு மா முனி -என்று மாற்றி -வேதங்களை ஓதி யுணர்தலிலே நிலை பெற்ற என்று பொருள் கொள்ளவுமாம் –
உயர் குலத்தோருக்கு அருள் செய்த நீ தாழ்ந்த குலத்தில் உள்ள எனக்கும் அருள வேணும் என்கிறார்
இழிவு உயர்வு இரண்டும் சரணா கதிக்கு பயன்படுபவை அல்ல
மைந்து -இளமை -வலிமை -அழகு -அதனை யுடையவன் மைந்தன்
ம முனி பெற்ற மைந்தனை நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய -என்று அந்வயம் –
—————————————————————
ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-7-
அவந்தி நகரத்தில் சாந்தீபிநி
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உரு வுருவே கொடுத்தான் -பெரியாழ்வார்
பிராமணர் ஷத்ரியர் வைசியர் -உப நயனம் -த்விஜர்
உவனியம்-உப நயனம் -மாணாக்கனை ஆசார்யன் தன்னிடத்தே வைத்துக் கொள்ளுதல் பதப் பொருளின் அர்த்தம்
அந்தணன் ஒருவன் -ஒருவன் -அத்விதீயன்
வித்யா ஸ்தலங்களுக்கு அடைய தானே யாம்படி சமைந்தவன்
அத்யயனத்திலே அந்தர்பூதம் அல்லாத வித்யா ஸ்தலங்களும்
சீஷாயாம் -இத்யாதி
தநுர் வேதமும் ஆயுர் வேதமும் அகப்பட அங்கே இறே அதிகரித்தது
முற்பட த்வ்யத்தைக் கேட்டு
இதிஹாச புராணங்களையும் அதிகரித்து
பர பஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து
போது போக்கும் அருளிச் செயலிலே யாம்படி –
பிள்ளையைப் போலே -நம்பிள்ளை என்ற ஜகதாச்சார்யர் -அதிகரிப்பிக்க வல்லானை இறே -ஒருத்தன் -எனபது –ஸ்ரீ ஸூக்திகள்
நெஞ்சிலே தேனூறி எப்பொழுதும் தித்திக்கும்
காதல் என் மகன் -அன்பே ஒரு உருவம் கொண்டது என்னும்படியான புத்திரன்
கடலில் மூழ்கிய குமாரனை மீட்டிக் கொடுத்து அருளியது போலே சம்சார சாகரத்தில் மூழ்கிய என்னை
மீட்டுப் பாதுகாத்து அருள வேண்டும் -என்கிறார் –
———————————————
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-
தப்பின பிள்ளைகளை தடை மிகு சோதி புக தன யொரு தேர் கடவி தாயோடு கூட்டிய என்னப்பன் -என்றும்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகள் நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறபைப்பன்-என்றும்
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய
படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலோடு கொண்டு கொடுத்தவன் -என்றும் சொல்லுகிறபடியே
வேத வாய் மொழி அந்தணன் -பொய்ம்மை மொழி புகன்று அறியேன் புகல மனம் எண்ணுகினும்
மெய்ம்மை அலது உரையா நா வேத நல் பயிற்ச்சியால் -என்றபடி
சத்ய வாக்யன் -வேதம் போலே பயன் நிறைந்த வார்த்தை களை யுடையவன்
எந்தாய் -பிதா புத்ரனைக் காப்பது போலே நீ என்னைக் காக்கக் கடவை
கடியதோர் தெய்வம் -பெற்று முகத்திலே விழிப்பதற்கு முன்பே உடலோடு கொண்டு போய் ஒழியா நின்ற தெய்வம் –
யமனும் உடலை இங்கு விட்டு உயிரை மட்டும் தானே கொண்டு போவான்
கடிய தெய்வம் -பாட பேதம் -மிக பொருந்தும்
ஏதலர் -சத்ருக்கள் -அஹங்கார மமகாரங்கள் -மிக்கு -கிருஷ்ணனைக் கொண்டு மீட்டுக் கொள்ளப் போகிறானாம் என்று ஏசுபவர்கள் –
———————————————————
துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே -5-8-9-
வளம் கொள் மந்த்ரம் -சிறப்பு கொண்ட பெரிய திரு மந்த்ரம்
சோழ நாட்டு அரசன் குமாரன் தொண்டை நாட்டு அரசன் தொண்டை மான் சக்ரவர்த்திக்கு திருவேங்கடமுடையான்
அஷடாஷர திரு மந்த்ரம் -சங்கு சக்கரங்களையும் -பிரசாதித்து அருளினான்
கைங்கர்யங்கள் பல செய்து ஸ்வர்ண மயமான 1008 தாமரைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து வந்து
பெருமான் திரு அருளால் பரம கதி அடைந்தான்
துளங்கு முடி -பரஸ்பர விரோதம் வராதபடி அரசாண்டதால் ஒளி பெற்ற கிரீடம்
நீள் முடி -தொன்று தொட்டு பரம்பரையாக வந்த கிரீடம்
பூமியான பெண்ணுக்கு தொண்டை கழுத்து ஸ்தானமான நாடு தொண்டை நாடு
தொண்டை நாடு சான்றோர் யுடைத்து
மேற்குப் பவள மலை வேங்கடம் நேர் வடக்காம் ஆர்க்கும் உவரி அணி கிழக்குப் –பார்க்குள் உயர் தெற்கு பினாகி திகழ்
இருபதின் காதம் நல் தொண்டை எனவே நாட்டே -தொண்டை நாட்டின் எல்லை
உளம் கொள் அன்பு -ஹிதோபதேசம் செய்து அருள திரு உள்ளத்தில் கொண்ட அன்பு
சுரந்த -பாலமுதின் மிகுதியால் அணித்தான கன்றுக்கு பசு சுரப்பது போலே
அங்கோடு நாளிகை ஏழுடன்
ஓடு -ஓடுகிற கழிகிற-ராஜ்ய பரிபாலத்தில் கழிகின்ற வீணாக காலத்தில் -ஒடு பாடமே சிறக்கும்-யாப்புக்குப் பொருந்தும்
ஏழு நாழிகை உடன் இருந்து அருளினான் என்றும் ஏழு அர்த்தங்கள் அருளினான் என்றுமாம் –
1- தேகாத்மா அபிமானம் ஒழிதல்
2-ஸ்வ ஸ்வா தந்திர அபிமானம் ஒழிதல்
3-தேவதாந்தர சஹவாசம் ஒழிதல்
4- உபாயாந்தர சஹவாசம் ஒழிதல்
5- அபந்துவர்கள் மேல் பந்துதுத்வ புத்தி ஒழிதல்
6- இந்த்ரியங்கள் வசப்படுகை ஒழிதல் –
7-பாகவத சேஷத்வம் அறிகை
வளம் கொள் மந்த்ரம் –
நமோ நாராயணா யெதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதக -குலம் தரும் செல்வம் தந்திடும் —
நாராயணா என்னும் நாமம் -சர்வம் அஷ்டாஷராந்தஸ் ஸ்தம்-
எல்லா பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி யுள்ள திரு மந்த்ரம்
உய்ந்தேன் -உன் திருவடிகளை அடைந்து உஜ்ஜீவிப்பேன்-தெளிவும் விரைவும் பற்றி கால வழு வமைதி –
————————————————————-
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –5-8-10-
தீ வினை தவிர்ந்து பெருமாள் அருளால் பரமபதம் அடைவர்
ஒன்னவர் தங்களை வெல்லும் -ஆடல் மாவுக்கும் ஆடல் மா வலவனுக்கும் விசேஷணம்
நெடுமாலை நினைந்த பாடல் -அனுபவம் உள் அடங்காமல் -ஆதியோடு அந்தமாக சரணா கதியையையே
பொருளாக கொண்டு அருளிய திரு மொழி என்பதால் பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்
பால் குடிக்க நோய் தீருமா போலே -பாடல்களை நினையாமலே பாடினாலும் -ஆழ்வார் போலே பாவ பந்தம் இல்லாமல் இருந்தாலும்
சர்வ பாபங்களும் அற்றுப் போம் –பாசுரங்களின் மகிமையை -நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை பாடுமின் –
———————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-