மூன்றாவது திருவரங்க மங்களா சாசன திருப்பதிகம் —
கீழ் பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து மகிழ்ந்து பேசி அருளும் திரு மொழி யாயிற்று இது –
கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-
கை மானம் -மானம் கை -நீண்ட கையை யுடைய
மழ களிறு -இளமை தங்கிய யானை போன்றவன் -களிற்றை -என்றது உவமை ஆகு பெயர் -களிறு போன்றவனை -என்றபடி
தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பால மத யானாய் -திரு நெடும் தாண்டகம்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -திருவாய்மொழி-
1-அப்பொழுதைக்கு அப் பொழுது ஆராவமுதன் -அபூர்வ வஸ்து
2-அவன் திருவடி ஒன்றையே பற்றி ஏற வேண்டும்
3-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -கயிற்றை தானே கொடுக்கும் பக்தியை இவன் தானே கொடுப்பான் -மதி அலம் அருளினன் –
4-நீராட்டி யுடனே அழுக்கை போட்டுக் கொள்ளும் என் நின்ற யோனியுமாய் இவனும் பிறந்து கலப்பான்
5-பெண் யானை கொண்டே பிடிக்க வேண்டும் பிராட்டி புருஷகார பூதை
6-பாகன் அனுமதி கொண்டே அருகே கிட்ட வேண்டும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிவோம்
7- யானையின் பாஷை பாகன் அறிவான் -திருக் கச்சி நம்பி போல்வார் உடன் பேசுவான்
8- யானையின் நிற்பதுவும் இருத்தல் கிடத்தல் பாகன் இட்ட வழக்கு –
கணி கண்ணன் போகின்றான் –பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்பர்
9- யானை உண்ண சிந்தினவற்றை எறும்பு போல்வன உண்ணும் -பகவத் சேஷம் பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்க
10-யானைக்கு நீண்ட கை -அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அத்தக் கரு முகிலை எம்மான் தன்னை
11-இறந்த பின்பும் உதவும்-இதிஹாச புராணங்கள் அவன் தன்னுடைச் சோதி எழுந்து அருளிய பின்பும் உஜ்ஜீவிக்க உதவும்
12- யானைக்கு ஒரே கை -இவனுக்கும் கொடுக்கும் கை ஒன்றே கொள்ளுவான் இல்லை
13 -பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் -அர்ச்சக பரிசாகர்களுக்கு இவனும் –
இப்படி பல ஒற்றுமைகள் உண்டே
கடல் கிடந்த கரு மணி -நீல ரத்னம் சாய்ந்தால் போலே திருப் பாற் கடலிலே கிடந்தவன்
கைம்மான மரகதத்தை -காளமேகத் திரு உருவத்துக்கு கருமணியையும் மரகதத்தையும் உவமை
மறை உரைத்த -இரண்டு வகை
வேதங்களை உபகரித்து அருளிய என்றும்
வேதங்களால் பிரதிபாதிக்கப் பட்டவன் -என்றுமாம்
பனி காத்தது-கோவர்த்தன கிரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தான்
இக் குணங்கள் விளங்க திருவரங்கம்பெரிய கோயிலிலே காணப் பெற்றேன் –
—————————————————
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2-
கரம்பனூர் உத்தமனை -வழிக் கரையிலே திரு வாசலுக்கு கதவிடாதே கிடக்கிறவனை-
கோபுர வாசலுக்கு கதவடைக்காமல் -சௌலப்ய பரம காஷ்டை
இதனாலே உத்தமன் -என்று திரு நாமம் இடப் பெற்றான் போலும்
ஆராது என்று இருந்தானை -ஜகத் ரஷணம் எவ்வளவு செய்து அருளினாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலனாகி
நினைத்து இருக்கும் இருப்பைச் சொன்னபடி-
—————————————————
ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே -5-6-3-
மகா வராஹ ரூபி -பாரார் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் உருவத்து
ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை -பெரிய திருமொழி -8-8-3-
சகல பதார்த்தங்களும் -தான் என்ற சொல்லில் அடங்குபடி பிரகாரமாக -யுடையவன்
தனக்கு அற்றுத் தீர்ந்த அடியவர்களுக்கு சகல வித போக்ய வஸ்துவும் தானேயாக இருப்பவன்
இடைச் சாதியில் பிறந்து தான் சத்தை பெற்றவன் –
திருவரங்கத்தே கண்டேன் என்கிறார்-
———————————————————
வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம்
தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-
திரு அவதாரங்களுக்கு நாற்றங்காலான விசாலமான திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளுபவனும்
ஊர்ந்து வந்த சகடம் சின்னா பின்னமாய் ஒழியும்படி திருவடியை உதைத்தவனும்
நரசிம்ஹ மூர்த்தியாய் இரணியனை முடித்தவனும்
இரண்டு அடியாலே உலகை அளந்து கொண்டவனும்
திருவரங்கத்திலே காணப் பெற்றேன்
உதிர- அதிர -பாட பேதம்
தரியாது -பாகவதர் திறத்து செய்யும் அபராதங்கள் பொறுக்க மாட்டாதான்
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உரத்தினால் ஈரரியாய் நேர் வலியோனாய இரணியனை ஒரரியாய் நீ இடந்ததூன் -முதல் திருவந்தாதி -உள்ளுறை பொருள்-
————————————————
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-
பஞ்ச பூதங்களுக்கும் நியாமகன் -நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய்-போலே –
அனைத்தையும் சரீரமாய்க் கொண்டவன்
கண்டார் பின் காணாமே அரக்கனூர் அழல் உண்டானை -திருவடி மதித்த ஐஸ்வர்யம்
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் -திவ்ய தேசங்களை
வருணிப்பது போலே இங்கே சந்நிவேசம்
பேர் அழலாய் -கடலில் உறைகின்ற பாபாக்னி ஸ்வரூபமாயும்
அன்னங்களை பசனம் செய்யும் ஜாடராக்னி ஸ்வரூபமாயும்
பெருவிசும்பாய்-பரமாகாசம் பரமபதம் நிர்வாஹகன்
மறையோர் மந்த்ரத்தின் ஆர் அழலால் உண்டானை-வேள்விகளில் இந்த்ரன் சோமன் வருணன் பெயர்களை சொல்லி
ஆஹூதிகள் செய்தாலும் -தேபிமாமேவ கௌந்தேய யஜந்தி -என்றும் –
அஹம் ஹி சர்வ யஜ்ஞ்ஞானாம் போக்தா -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ யஜஞ சமாராத்யன் -என்றபடி –
——————————————————-
தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-
அத்வேஷம் ஒன்றையே பரம பக்தியாகக் கொண்டு இரக்கம் காட்டி அருளுவான்
தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் -த்வேஷத்தை நீக்கிக் கொண்டு அடைந்தார் என்ற பொருளை விட
த்வேஷத்தை தவிர்த்துக் கொள்வதாகிற பஜனத்தை செய்பவர்களுக்கு -பொருள் கொள்ளுதல் சிறக்கும்
த்வேஷம் தவிர்ப்பதே ஆஸ்ரயணம்-என்றவாறு –
தவ நெறியை-தன்னைப்பெற்ற உபாயங்களை தானே நிர்வஹித்துக் கொள்வன் என்றபடி –
தவம் தபஸ் -உபாயம்
வெஞ்சினத்த கொடும் தொழிலோன் -பாணாசூரன் -ருத்ரன் -நரகாசூரன் என்றுமாம் –
அசைவித்த -சலிக்கச் செய்த –
——————————————————
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-
கைங்கர்ய மநோ ரதங்களுக்கு இலக்கானவன் -சிந்தனையை
உபாய பூதனும் அவனே -தவ நெறியை
எனது நெஞ்சிலே நிரந்த வாஸம் செய்து அருளினவன்-அந்தணன் -அழகிய தண்மை பொருந்தினவன் -பரம தயாளு –
——————————————————–
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-
புற மதத்தவர்கள் இடத்தில் தயாளு அல்லன்
காஷாய தாரிகளான பௌத்தர்கள் ஜைனர் திறத்திலும் அருள் அற்று நிக்ரகித்து நரகத்திலே வீழ்த்துபவன்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மாசரித்து பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -எம்பெருமான் அருள் ஏறிப் பாயும்-
—————————————————————
பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே -5-6-9-
அஸ்திரங்கள் -ப்ராக்ருத பதார்த்தங்கள் -பொய் வண்ணம் -அவற்றை நெஞ்சில் கொள்ளாமல்
விஷயாந்தரங்களில் செல்லாமல் தடுத்து தனியே உண்மையாக சிந்திப்பவர்களுக்கு
தன்னுடைய ஸ்வ ரூபா ஸ்வ பாவங்களை உள்ளபடி காட்டித் தந்து அருளுபவன் –
அஞ்சனம் போலேயும் காள மேகம் போலேயும் மரகதம் போலேயும் ஆகர்ஷகமான திரு நிறம் பெற்ற பெருமானைக் கண்டேன் என்கிறார் –
—————————————————————–
ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10-
கைம்முதல் இல்லாத பசுக்களையும் ரசித்து அருளிய கண்ணபிரானே
பசு மேய்த்த விடாய் தீர -திருவரங்கத்திலே -உபய காவேரி மத்யத்திலே -அரவணை மேலே -இனிதாக திருக் கண் வளர்ந்து அருளுகின்றான் –
இத் திரு மொழியை ஓத வல்லாருக்கு ஒரு வகைத் தீங்கும் வாராது என்று பயன் உரைத்து தலைக் கட்டினார் –
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply