ஆழ்வார் பாசுரம் தோறும் பிரபத்தி செய்தாலும் நிரந்குச ஸ்வா தந்த்ரன் –
உள்ளத்தில் உள்ளதை அறிந்து அருள் புரியும் ஸ்வ பாவன்
ஆழ்வார் திவ்ய தேசங்களை அனுபவிப்பதில் அபி நிவேசம் இருக்கும் படி அறிந்து
கோவிந்த சுவாமிக்கு அருளியது போலே பரமபத பிராப்திக்கு அவசரம் இல்லை –
ஆனந்தமாக திருப்பதிகளில் மண்டி அனுபவித்து போது போக்கும் என்று அருளிச் செய்ய
அப்பக் கூடத்தான் சந்நிதி -தென் திருப்பேர் நகரில் புக்கு வாயாரப் பேசி அனுபவித்து இனியர் ஆகிறார்-
—————————————————–
கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே-5-9-1-
தன் அடியார்களுக்கு தனது ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை மெய்யாகக் காட்டி அருளுபவன்
தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் -நித்ய கைங்கர்யம் செய்வித்து அருள் புரியும்
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி உய்ந்தேன் -திருப்பேர் நகர் -திருநாமங்களை சொல்லி உய்யவே வாய்த்த திவ்ய தேசம் –
பொய்யிலன் -அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -என்று கடல் கரையிலும்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று திருத் தேர் தட்டிலும் நின்று அருளியவற்றை
அனுஷ்டானத்தில் கொண்டு வருவதில் பொய்ம்மை இல்லாதவன்
ஆஸ்ரித ரஷணம் தவராதவன்
மீண்டும் மெய்யன் -என்றது உறைப்பைக் காட்டும்
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றாலும் கச்ச -என்று ஜடாயு மகா ராஜருக்கு -சத்ய வாக்யன் என்பதால் தான் இட்ட வழக்கு உபய விபூதியும் –
————————————————————————————-
வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே -5-9-2-
திரு வயிற்றிலே வைத்து காத்து அருளி -பின்பு உமிழ்ந்து செய்து அருளிய பெருமான் ஸ்ரமம் தீர
இந்த பரம போக்யமான திவ்ய தேசத்தில் கண் வளர்ந்து அருளுகிறான்
பங்கம் -அலை கப்பல்
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் -சந்திர மண்டத்து அளவும் அளாவிய பொழில் -சந்தரன் தோன்றுகிற மேக மண்டலம்-
——————————————————————————————
ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே -5-9-3-
பதினான்கு லோகங்களுக்கு நிர்வாஹகன் என்பதால் அத்விதீயன் -ஒருவன் -பிரமனை திரு நாபி கமலத்தில் தோன்றுவித்தவனும்
சிவன் சாபத்தை போக்கி தேவ ஜாதிக்கு நிர்வாஹகன் என்னும் நிலையில் குறையாமல்; நடந்து கொள்ள நியமித்து விடுத்தவன்
மலை போன்ற மதில்கள் சூழ்ந்த இங்கே சேஷசாயியாய் விளங்கா நிற்கிறான் –
அவன் திரு நாமங்களை அனுசந்தித்து வாழ்ந்தேன் –
ஆகம் தன்னால் -ஆகம் -உடம்புக்கும் மார்வுக்கும் பெயர் -இலக்கணையால் மார்வில் யுண்டான நீரைச் சொல்கிறது
என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுத நீர் திரு மார்பில் தந்தான் -என்றார் இவர் தாமே கீழ்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் -என்பர் மேல் –
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால் மிசை ஊறு செங்குருதியால் நிறைத்த -திருச் சந்த விருத்தம்
திரு மார்பைக் கீறி ரத்தத்தை இட்டு பிச்சை இட்டதாகவும் சொல்வர் -செங்குருதியால் -என்றதால்
அரவணை மேல் கருவரை வண்ணன் -ஒரு வெள்ளி மலை மேல் அஞ்சன கிரி சாய்ந்தால் போன்ற பராபக அழகு-
————————————————————————————
ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்தை அடைந்து நாராயண மூர்த்தி தன்னை வணங்கி பிரார்த்தித்து அஷயம் என்று பிஷை இட்டு
அக்கபாலத்தை கையை விட்டு அகல செய்து அருளிய பெருமான்
இங்கே தேவாதி தேவனாக விளங்க -அவனது திரு நாமங்களை வாழ்த்தி உய்வு பெற்றேன்
ஈனமர் சாபம் -கண்டவர்கள் அடங்கலும் இவன் பிரமஹத்தி காரன் -என்று பழிக்கும் படியான பாவம் -என்றவாறு –
ஹீனம் என்றது ஈனம் என்று சிதைந்து உள்ளது
————————————————————————————–
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே –5-9-5-
தந்த வக்கரன் -கிருஷ்ணாவதாரத்தில் கொல்லப் பட்டவன்
தேனுகனும் முரனும் திண் திறல் வென்ன்ரகன் என்பவர் தாம் மடிய செருவதிரச் செல்லும் ஆணை
எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
நக்கரி -நகு + அரி-வாய் திறந்து கொண்டே தோன்றின நரசிம்ஹம்
சக்கரச் செல்வன் -எல்லா திவ்ய ஆயுதங்களுக்கும் திரு ஆழி ஆழ்வான்-பிரதி நிதி போலே திரு உகிரும்
திரு நகங்களுக்கே இரை போதாமை யாலே திரு ஆழி ஆழ்வான் வியாபாரிக்க அவகாசம் இல்லை
ஆகவே அழகுக்கே உடல் -சக்கரச் செல்வன் என்கிறார் -செலவு -அழகு-
————————————————————————
விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லாக்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புய்ம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே–5-9-6-
விலங்கினால்-மலைகளினால்
மலங்கு -மீன்கள்
விளங்கிழை -பொதுவான ஸ்திரீகளுக்கு பெயர் சீதா பிராட்டி ஆபரணங்கள் விளங்கப்பெற்று இல்லாமல் இருந்தாலும் –
விளங்கிழை -மையார் கண்ணி -குவளையங்கண்ணி -பூங்குழலி -இத்யாதிகள் ஸ்திரீகளுக்கு பொது பெயர்
இராவணனுடைய சமாதியாலே சொன்னவாறு என்றுமாம்
நலம் கொள் நான்மறை -வேதங்களுக்கும் மறையோர்களுக்கும்
வைதிக லஷ்மி -வேத கோஷத்தால் மிரண்டு மீன்கள் துள்ளி ஓடும் வயல்கள் சூழ்ந்த திவ்ய தேசம் –
——————————————————————————–
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –5-9-7-
அளவு கடந்து உண்கையாலே திரு மேனிக்கு தீங்கு ஆகுமோ என்று அஞ்சிய யசோதை பிராட்டி
கண்ணி நுண் சிறுத் தாம்பினாலே கட்ட தனது சௌசீல்யம் சௌலப்யம் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் காட்டி அருள கட்டுண்டு இருந்தானே
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ -ஸீலா திருக் குணங்கள் விளங்கவே
கண்ணியார் குறும் கயிறு -துண்டு துண்டான தாம்புகளாலே கட்டினாள்
இப்படிப் பட்ட இவனுடைய திரு நாமங்களை வாயாலே சொல்லி வாழ்ந்தேன் –
—————————————————————————
அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே–5-9-8-
நப்பின்னை பிராட்டியை திருமணம் செய்து அருள காளைகள் ஏழையும் கொன்று ஒழித்து
அந்த திருமணக் கோலம் விளங்க இங்கே சேவை சாதிக்கின்றான் –
அவன் திரு நாமங்களை நாள் தோறும் வாழ்த்தி வாழ்ந்தேன் –
——————————————————————–
நால் வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே–5-9-9-
மகாத்மாக்களின் சிந்தையில் பொருந்தி வாழும் பெருமானே எனது சிந்தையிலும் பொருந்தி வாழ்கின்றான்
வைதிக பிராமணர்கள் உடன் இருந்து பணிவிடைகள் செய்யப் பெற்ற அப்பக் குடத்தானை த்யானிக்கிறேன் -என்றவாறு-
————————————————————————
வண்டறை பொழில் திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே-5-9-10-
இப்பதிகத்தை ஓதி
அர்த்த ஜ்ஞானத்தாலே களித்து கூத்தாடுமவர்கள்
திரு நாட்டில் சென்று நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவார்கள் –
——————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply