Archive for December, 2011
ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -3-
December 22, 2011திரு பாவை- அனுபவம் -5-மாயனை மன்னு வட மதுரை மைந்தனை ..
December 22, 2011வேதம் வல்லாரை கொண்டு விண்ணோர் பாதம் பற்றி அவனை பற்ற வேண்டும்
ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– – சூர்ணிகை -223..
December 22, 2011ஐஞ்சாம் பத்தால்-
கீழ் சொன்ன பரத்வாதிகளால் வந்த தன்னுடைய உத்கர்ஷத்தையும்
தம்தாமுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து -அகல்வார் அளவிலும் மேல் விழுந்து –
விஷயீகரிக்கும் படி பரம காருணிகனான சர்வேஸ்வரன்
கீழ் இவருக்கு பிறப்பித்த விரக்க்திக்கு பலமான
ஸ்வ விஷய பக்தியை
பரம்பரயா அபி விருத்தமாக்கி –
அந்த பக்தியையும்
பாகவத சமாகத்தையும்
உடையரான இவர்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -திருத்தின தம்மையும் –
காண்கைக்கு வந்த நித்ய சூரிகளையும் -ஸ்வேத தீப வாசிக்களுமான சித்தர்களையும் கண்டு
மங்களா சாசனம் பண்ணி –
திருந்தாத அசுர ராஷச பிரகிருதி களையும் –
பகவத் பாகவத வைபவத்தை உபதேசித்து -திருத்தி
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படியான ஜ்ஞானம் பிறந்தார்க்கு
பிராப்ய த்வரைக்கு அடியான
பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டுகிறார் என்கிறார்-
——————————————————–
1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும்
தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும்
அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப்
பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்
2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு
யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது
நீராய் மெலிய ஊடு புக்கு வளர
3-விஷ வருஷ பலங்கள் கை கூடினவர்
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த
தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத
அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
4-தேச கால தோஷம் போக எங்கும் இடம்
கொண்ட வர்களை மேவித் தொழுது
உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை
தேவதைகளாக நிறுதினவனை
5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி
பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார்
கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை
இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-
———————————————————-
1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
ஆவா என்று அருள் செய்து -5-1-9–என்று
ஐயோ ஐயோ என்றுஎன் பக்கல் கிருபையை பண்ணி என்றும் ,
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் -5-2-11-என்று
தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு கலியுக தோஷம் ஒன்றும்
வாராத படி கிருபை பண்ணும் என்றும் -,
பெருமானது தொல் அருளே-5-9-9- -என்று சர்வேஸ்வரனுடைய ஸ்வாபாவிக கிருபை என்று சொல்லும்படி –
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யானார் -எம்மா பாவியர்க்கும்
விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர் -5-1-7–என்று
கையும் திரு ஆழியும் ஆன அழகை நித்ய சூரிகளுக்கு காட்ஷி கொடுத்து கொண்டு –
அங்கு உள்ளாருடனே பரிமாறி இருக்கிற சர்வேஸ்வரன் எவ்வளவிலே !
நித்ய சம்சாரிகளுக்கு மிவ்வருகான நான் எவ்வளவிலே !-என்று கீழ்ச் சொன்ன
பரத்வ-காரணத்வ -வியாபகத்வ -நியந்த்ருத் வாதிகளால் வந்த
உத்கர்ஷத்தையும் -தங்களுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து-
அகலும் படி எத்தனை யேனும் மகா பாபிகள் அளவிலும் -கர்ம அனுகுண நிர்வாகத்துக்கு
உடலான -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் –
தன் அனுக்ரகம் தங்கள் பக்கல் வாராதபடி அபராதங்களே பண்ணும் இவர்கள்
ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் -அழிய பெருகா நிற்குமதான கிருபா பிரவாகத்தை உடைய சர்வேஸ்வரன்
(கையார் சக்கரம் -சாரம் )
பொய் கூத்து வஞ்சக் களவு தவிர
பொய்யே கைம்மை சொல்லி –
என்று என்றே சில கூத்து சொல்ல –5-1-2-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே -5-1-3–என்று
மெய் கலவாத பெரும் பொய்யை சொல்லி -பிரேம பரவசரைப் போலே பாவித்து –
ஹிருதயம் பிராக்ருத விஷயம் பிரவணமாய் இருக்க -அநந்ய பிரயோஜனரைப் போலே –
உன் ஒவ்தாரத்தையும் வடிவழகையும் சஹ்ருதயமாய் சொல்லுகிறார் என்று
தோற்றும்படி பலகாலும் சொல்லா நின்று கொண்டு-
சர்வஜ்ஞ்ஞான உன்னையும் -பகட்டும் க்ரித்யமா உக்தமான மனசை தவிர்ந்து என்று
-அவற்றை இவர் தவிரும்படி –
முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்
என்னை முற்றவும் தானான்–5-1-10–என்று இவர்க்கு சர்வ வித போக்யமும் தானாய் –
இனி உன்னை விட்டென் கொள்வனே -5-1-3–என்று நான் உன்னை விட்ட வன்றும் விடமாட்டாத உன்னை
ஒழிய துராராதமாய் -வருந்தி ஆராத்திதாகிலும் கிடைப்பது ஓன்று இல்லாத விஷயங்களைப் பற்றவோ
என்று இவர் தாமே பேசும் படி பண்ணின
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்-4-9-10- -என்கிறபடியே அவன் போக்யதையாலே
அந்ய விஷயங்களை அடைய உபேஷிக்கும் படி -கீழில் பத்தில் பிறந்த விரக்திக்கு
பலமான -பரமாத்மினி யோ ரக்த -பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி -என்கிற பரமாத்ம விஷயத்தில் ராகமானது .–
————————————————————-
2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர
பேர் அமர் காதல் 5-3-4–என்று அபரி சேதமாய் பொருந்தி –
பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதிடும் -5-4-6–என்று பிடரி பிடித்து நின்று
நெஞ்சை முடிக்கும்படியாய் –
கழிய மிக்கதோர் காதல் -5-5-10–என்று பார்ஸ்வச்தர்க்கு பேசும்படி மிகவும் கை கழிந்து –
கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-1–என்று தொடங்கி –
வாய்ந்த வழுதி வள நாடன் -என்று அவனுடைய ஜகத் காரண த்வாத் அத்புத கர்மங்களை
நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே விஷயத்தை கிட்டி பேசும் படியாய் –
உன்னை விட்டு ஒன்றும் மாற்ற கிற்கின்றிலேன் -என்று அவனை ஒழிய ஒரு ஷணமும்
தரித்து இருக்க மாட்டாது படியாய் –
ஆரா அமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் -என்று
விஷய போக்யத அதிசயத்தால் வந்த பிராவன்யத்தாலே ஞான ஆச்ரயமான ஆத்மா ஆதல் –
ஞான பிரசரண த்வாரமான மனசாதல் அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரமும் சிதிலலாம் படியாய் –
வைகலும் வினையேன் மெலிய -என்று
அந்த சைலிந்த்யம் தான் காதாசித்கம் அன்றிக்கே -சர்வகாலமும் மெலியும் படியாக –
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண் கின்ற -என்று
பகவத் குணங்கள் மர்மத்தில் புகுந்து ஆத்மாவை இடைவிடாமல் த்ரவ்ய த்ரவ்யமாக்கும் படி அவிவிருத்தமாக
————————————————————
3-விஷ வருஷ பலங்கள் கை கூடினவர்
இப்படி பகவத் ப்ரேமம் வளருகையாலும் -பாகவதர்களோடு கூடப் பெருகையாலும் –
சம்சார விஷ வ்ருஷச்ய த்வே பலே
ஹ்யம்ருதோ பமே ,கதாசித் கேசவ பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம -என்று –
சம்சாரமாகிற விஷ விருஷத்திலே -அம்ருதோபமா பலங்களாக சொல்லப் பட்ட
பகவத் பக்தியும் – பாகவத சமாகமும் ஆகிய பல த்வயமும் கை வந்த இவர்-
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும்
போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு –
ஒன்றும் தேவிலே –
மற்றை தெய்வம் நாடுதீர் –
பாடி யாடி பரவிச் சென்மின்கள் –
தெய்வம் மற்று இல்லை –
நாயகன் அவனே –
ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே –
அறிந்தோடுமின் –
ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –
மற்றைத் தெய்வம் விளம்புதீர் –
உளம் கொள் ஞானத்து வைம்மின் –
ஆட் செய்வதே -உறுவதாவது -என்று –
தேவதாந்தராவரத்வ பூர்வகமாக பகவத் பரத்வத்தையும் –
பகவத் ஆஸ்ரயண பிரகாரத்தையும்
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் அத்தையும்
தெளிய உபதேசிக்கக் கேட்டு திருந்தி அடிமை புக்க ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –
ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன் -என்று இப்படி திருத்துகையாலே
அடிமை செய்தாரான தம்மையும் -காண்கைக்கு –
வைகுந்தன் பூதங்களேயாய் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களேயாய் –
தேவர்கள் தாமும் புகுந்து -என்னும்படி –
லோகாந்தரமான ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளாரையும் –
த்வீயாந்தரமான ச்வேதத் தீபத்தில் உள்ளாரையும் –
நேமிப் பிரான் தமர் போந்தார் -என்கிறபடியே வந்த நித்ய சூரிகளும் –
முக்த பிராயருமான தேவர்களுடைய திரள்களை –
கண்டோம் கண்டோம் -என்று
கண்ணுக்கு இனியதாய் இருக்கையாலே -கண்டோம் -என்று பல காலும் சொல்லும் படி கண்டு –
பொலிக பொலிக -என்று
அத் திரள் அபி விருத்தம் ஆயிடுக என்று மங்களா சாசனம் பண்ணி –
பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
த்வயி அஸ்தி மயி அஸ்தி ச -என்று பிரகலாதன் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத அசுரனான ஹிரண்யனும் –
ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ -யுத்த -14-34- -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உபதேசிக்க கேட்டும்
திருந்தாத ராஷசனான ராவணனை போலேயும் –
கீழ் தாம் உபதேசத்தில் திருந்தாமல் கிடந்த ராஷச பிரக்ருதிகளும் ஆசூர பிரக்ருதிக்களுமாய்
உள்ளோரை –
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-என்று தேடிப் பிடித்து-(விஷ்ணு பரராக்கி -என்றதனுடன் முடிக்க )
———————————————–
4-தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் -என்றும்
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து -என்கிறபடியே –
சரீரத்தை முடித்து -பிராண அபஹாரம் பண்ணக் கடவதான வியாதி —
அப்படி செய்யும் பகை -பசி -முதலான தேச தோஷமும் –
பவிஷ்யத் யதாரோத்தரம்-என்கிறபடியே
பதார்த்த ஸ்வபாவங்கள் வேறு படியாயான கலி பிரயுக்தமான கால தோஷமும் –
தங்கள் சஞ்சாரத்தாலே போம் படி –
இரியப் புகுந்து இசை பாடி எங்குமிடம் கொண்டன -என்கிறபடியே –
பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பெரிய ஆராவரத்தோடே -புகுந்து
பிரதி கூலருக்கு இடம் இல்லாதபடி -சர்வ பிரதேசத்திலும் பரம்பினவர்களை –
மேவித் தொழுது உய்மினீர்கள் -என்று
நீங்கள் அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் –
அவ்வளவு போக மாட்டாதே தேவதாந்திர பிராவண்யத்தாலே பகவத் வைபவம் அறிக்கைக்கு ஈடான
அளவிலி களாகில்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை
நிறுத்தி உம் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்-என்று
அவை தமக்கு ஸ்வத உத்கர்ஷம் இல்லாமையாலே -வசன ஆபாசங்களாலும் –
யுக்தி ஆபசங்களாலும் -நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி -புறம் பேசில் -அவர் அறியில்
அபஹசிப்பார்கள் என்று -உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் அறிந்ததாக உபாசிக்கும் -தேவதைகளை-
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -என்று
ராஜா வானவன் ஊர் தோறும் கூறு செய்வார்களை நிறுத்துமா போலே –
உங்களுக்கு ஆஸ்ரயனீராக நிறுத்திய சர்வேஸ்வரனை
——————————————–
5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
தொக்க அமரர் குழாங்கள் –கண்ணன் திரு மூர்த்தியை மேவி —
மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன
ஒக்க தொழுகிற்று ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லை-என்று
ருத்ரனோடு பிரம இந்திரன் முதலாக திரண்ட தேவதா சமூகங்கள்
கிருஷ்ணனுடைய அசாதாரண விக்ரகத்தை ஸூபாஸ்ரயமாகப் பற்றி
விஸ்த்ருதமான லோகங்கள் எங்கும் ஒக்கப் பரந்து விபூதி விஸ்தாரத்தை உடையவர் ஆனார்கள் .
அவர்களைப் போலே நீங்களும் அவனை ஆஸ்ரயிக்கப் பெறில் -விபரீத பிரவர்தகமான
கலி யுக தோஷம் உங்களுக்குத் தட்டாது என்று உபதேசித்து
விஷ்ணு பக்தி பரராக்கி
விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே –
அரக்கர் அசுரர் -என்னும் அது போய்-தேவ சப்த வாச்யராம் படி
பகவத் பக்தி பரராக திருத்தி
கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும்
பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்
அதாவது –
திருந்தாதவரை திருத்தின அளவு அன்றிக்கே -முன்பே திருந்தி –
கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும்படி-
பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படி -அவ்விஷயத்தில் சாபலம் உடையராய் –
உபாய அத்யாவச தசையிலே -நின்று -பிராப்ய தசையில் நிற்கிற தம்மை
பொடியும் படி யானவர்களுடைய -உபாயத்வ அத்யாவச்ய அஞ்ஞானாதின் மேலே –
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே -என்றும் ,
மனசி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்சநேன -ஸ்ரீ குணரத்னகோசம் –12-– என்கிறபடியே
சித்தாஞ்சனம் போலே கூடார்த்ததை பிரகாசிப்பதாய்-
பிராப்ய வைலஷண்யத்தை விஷயீகரித்ததான பக்தியை உபதேச முகேன
உண்டாக்குகிறார் அஞ்சாம் பத்தில் என்கை-
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
திரு பாவை- அனுபவம் -4-ஆழி மழை கண்ணா ..
December 22, 2011ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -2-
December 21, 2011திரு பாவை- அனுபவம் -3-ஓங்கி உலகு அளந்த –
December 21, 2011ஸ்ரீ விஷ்ணு சித்தர் குலம்-குல நந்தன கல்பக வல்லி –
ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -222..
December 20, 2011நாலாம் பத்தில் –
கீழ் சொன்ன வியாப்தி ஆகாச வியாப்தி போல் அன்றிக்கே -நிறம் பெறும்படி –
அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் –ஆரணம் -3-20–என்றும் ,
ய ஆத்மா நமந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-20– -என்றும் –
சாஸ்தா சராசரஸ் யைக -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களின் -பிரவ்ருத்தி நிவ்ருதிகள்-
ஸ்வாதீனமாம் படி -நியமித்து கொண்டு போருகையாலே –
சர்வ நியந்தாவாய் இருக்கிறவன் –
ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை -தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்க வேண்டும் என்று –
அதி சாபலம் பண்ணின இவர்க்கு -காலோபாதியை கழித்து -சமகாலம் ஆக்கி அனுபவித்து –
இவருடைய இழவைத் தீர்த்து -இவருடைய கரண த்ரய வியாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள –
அந்த பிரணயித்வத்திலே தோற்று –
விரஹ தசையில்-சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி –
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு கூப்பிட –
அவ் இழவு தீரும்படி –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்தியாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ –
இத்யாதிப் படியே –தேச விசேஷத்தில் பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களாய் இருக்கும் இருப்பைக் காட்டி
அனுபவித்தாப் போலே -பிரத்யஷமாம் படி -அனுபவிப்பிக்க அனுபவித்து –
இப்படி முக்த போக்யதை மானசமாக பிராபித்து –அதுக்குப் பலமான
தேவதாந்த்ரங்களில் வைராக்யதை உடையரான இவர் –
ஐஸ்வர்ய கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்வ சாவதிகத்வாதி -தோஷங்களையும் –
நிந்த்த்ய பதார்த்தங்களாலே சூத்திர தேவதா பஜனம் பண்ணுமத்தின் நிஹீததையும் –
ப்ரசம்சா பர வாக்யங்களாலே சொல்லப்பட்டு –
பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே அவனோடு விகல்ப்பிக்கலாம் படி அவன்
கொடுத்த ஐஸ்வர்யத்தை உடையராய் இருக்கிற பிரம ருத்ராதிகளுடைய அஞ்ஞனாதி களையும் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களின் தமோ நிஷ்டதையும் -வெளி இட்டு –
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத் பலமும் கை கண்டிகோள் –
ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரனே ரஷகன் –
அல்லாதார் அடையவம் -தத் ரஷ்ய பூதர் – என்னும் அர்த்தத்தை சாஸ்திர முகத்தால்
கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள் –
இப்படி நீங்கள் தேறாமைக்கு அடி -அவன் இட்ட வழக்கான -பிரகிருதி சம்பந்தம் –
தத் விமோசன உபாயமும் -அவன் திரு அடிகளில் ஆஸ்ரயணீயம் என்று அறிந்து –
தத் ஆஸ்ரயணீயத்தைப் பண்ணி இத்தை தப்பப் பாருங்கோள் –
அவன் திரு அடிகளில் கைங்கர்யமே உங்களுக்கு சீரிய புருஷார்த்தம் என்று –
பிரயோஜனாந்தர -தேவ தாந்திர -விரக்தி -முன்னாக -பரதேவதையும் பரம பிரயோஜனமும் அவனே –
அவன் விஷயத்தில் கைங்கர்யமே -என்று உபதேசித்து
பகவத் ஆஸ்ரயணீயத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்-
—————————————-
1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின
சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்
2-போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே
காதல் மையல் ஏறிய பித்தாய்
3-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது
தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச
ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை
ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன்
என்ன உடையரானவர்
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ
அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும்
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற
நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும்
நிஹீநதையையும்
6-பேச நின்ற தேவாத ஞான சக்தி
சாபேஷத்வாதிகளையும்
7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி
மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர்
8-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின்
ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை
ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் —
————————————————-
1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர் கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
மருகலில் ஈசனை –4-1-10-
ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த–4-3-2-
ஈசன் பாலோரவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே -4-10-4–என்று
நியந்தரு வாசக சப்தத்தாலே சொல்லும் படி –
ஏர் கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாக நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8–என்றும்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-4-5-9- – என்றும்
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -4-9-7–என்கிற
கீழில் பத்தில் சர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி -ஆகாச வியாப்தி போல் ஆகாமே நிறம் பெரும்படியாக –
வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செல்ல-4-5-1- -என்கிறபடி
உபய விபூதியும் தன் நியமனத்திலே ஆம் படி -தன் ஆக்ஜை நடத்துகிற
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன்
ஒழிவில் காலத்துக்கு சேர -(பாலனாய் ஏழு உலகு -திருவாய் மொழியுடைய தாத்பர்யம் இது முதல் )
-பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கி
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்று
அடிமை செய்யப் பாரிக்கிற அளவில் சர்வ தேச சர்வ அவஸ்தைகளோபாதி
சர்வ காலத்திலும் வேணும் என்று கீழ் கழிந்த காலத்தில் அடிமையையும்
ஆசைப் பட்டதுக்குச் சேரும் படி –
பாலனாய் ஏழு உலகு உண்டு -தொடங்கி –
தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதானங்களை –
தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்கையில் அபிநிவேசத்தாலே –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி
பைம் பொற் துழாய் என்றே ஒதுமால் எய்தினள்-என்று
பூர்வ காலீன போகங்களையே வாய் புலற்றும் படி பிராந்தியை அடைந்த
சாபலத்துக்கு அனுரூபமாக காலத்தினுடைய பேத வ்யவஹாரத்துக்கு
உடலான உபாதியைக் கழித்து ஒரு போகி ஆக்குகையாலே -சம காலமாக்கி அனுபவிப்பித்து
————————————————————–
2-(கோவை வாயாள்-திருவாய் மொழி தாத்பர்யம் இது முதல்)
-போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய்
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – என்று தொடங்கி –
ஏக மூர்த்திக்கே பூம் தண் மாலை கொண்டு உன்னை போதால்
வணங்கேனேலும் நின் பூம் தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே –
என்று விரோதி நிரசனம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே உதவி புஷ்பாதி உபகரணங்களை
கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் -விலஷண விக்ரக யுக்தனாய் -சர்வேஸ்வரனாய்
இருக்கிறவன் -என்னுடைய கரண த்ரய வியாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துகள்
எல்லாமாகக் கொள்வதே ! என்று இவர் தாமே ஈடுபடும்படி பண்ணி -அவ்வவோ காலங்களில்
தனக்கு உதவி அடிமை செய்யாத இழவை அவன் தீர்த்த பிரணயித்வ குணத்திலே –
காதல் மையல் ஏறினேன் -என்கிறபடியே பிரேமம் மேல் இட்டு அறிவு கலங்கினவாறே –
வெள்ளக் கேடாக ஒண்ணாது என்று அவன் அல்பம் பேர நிற்க
(மண்ணை இருந்து துழாவி -திருவாய் மொழி சாரம் இது முதல் )-அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதி பேசும்படியாக
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -என்னும்படி பித்தேறி –
———————————————
3-(சீலமில்லாச் சிறியேனேலும்-பொருள்)தேச தூரத்துக்கு கூவியும் கொள்ளாய் என்றது
தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு தேச தூரத்தைப் பற்ற –
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே -என்று
உன் வடிவு அழகை இங்கே வந்து அனுபவிப்பித்து அருளுதல்-
என்னை அங்கே அருளப் பாடு இடுதல் -செய்கிறிலை என்று -கூப்பிட்ட இழவும் தீர –
(நண்ணாதார் முறுவலிப்ப சாரம்)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு -என்று
நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்த்தாக்களாய் -அவ் விபூதியில்
உள்ளார் அடைய போகோ உபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேன் என்னும்படி –
கீழ் காலோ உபாதியை நீக்கி சமகாலம் ஆக்கினார் போலே -அவ் விபூதியில் அனுபவத்தையும் இங்கு
இருந்தே அனுபவிக்கலாம் படி ஒரு போகியாக பிரகாசிப்பிக்க
(வீற்று இருந்து ஏழு உலகம் சாரம்)-வீவில் இன்பம் கூட்டினை– என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்றும் ,
கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-8–என்று
அவனைக் கிட்டி நிரதிசய ஆனந்தியாகப் பெற்றேன் –யாவர் சிலர்க்கும் தம் தம்மால் சேர்த்து கொள்ள அரிய
திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய் – நான் அனுபவிக்கப் பெற்றேன் என்ற
அது மானச அனுபவம் ஆகையாலே -இப்படி முக்தருடைய போகமான-
அவ் அனுபவத்தில் மானசமாக உண்டான பிராப்திக்குப் பலமாக –
தேவதாந்திர ஆத்மா ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–4-6-10–என்று தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு
தெய்வத்தை தொழுது அறியாள் என்னும் படி -தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும் –
உயிரினால் குறைவிலமே -4-8-10–என்றும் ,
உடம்பினால் குறைவிலமே–4-8-9- -என்னும் படி ஆத்ம ஆத்மீயங்களில் வைராக்யத்தையும் –
கொடு உலகம் காட்டேல்—4-9-7-என்னும் படி லோக யாத்ரையில் வைராக்யத்தையும் -,
வேட்கை எல்லாம் விடுத்து -4-9-9–என்று சமுதாயவேனவும்
ஐம் கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் சிற்று இன்பம் ஒழிந்தேன்—4-9-10-என்று ப்ருதக்தவேனவும்
சொல்லும்படி ஐஸ் வர்யத்திலும் அஷர சப்த வாச்யமான ஆத்ம அனுபவ கை வல்யத்திலும்
உண்டான வைராக்யத்தையும் உடையரான இவர்
———————————————————-
(இது முதல் பர உபதேசம் செய்து அருளியவை )
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சா வாதிகத்வாதிகளையும்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -4-1-1–என்று தொடங்கி-
ராஜ்ஜியம் நாம மகா வியாதி ரசிகி த்ச்யோ விநாசன
பிரதாரம்வா ஸூதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – என்கிற ராஜ்ய ஐஸ்வர்யத்தின் அல்பத்தையும் –
குடி மன்னு மின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்று
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே
மர்த்த்ய லோகம் விசந்தி–ஸ்ரீ கீதை-9-21 -என்கிற ஸ்வர்க்க அனுபவத்தின் அஸ்த்ரத்வத்தையும் –
இருகலிறப்பு-4-1-10- -என்ற ஆத்ம அனுபவத்தின் சாவதிகத்வத்தையும் –
ஆதி சப்த்தாலே -துக்க மிஸ்ரத்வ -துச்சாததத்வ-நிச்சாரத்வங்களை சொல்லுகிறது-
——————————————————–
(தீர்ப்பாரை -சாரம் )
5-ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு
இழைத்தாடும் நிஹீநதையையும்
த்ரவ்யம் நிந்த்த்ய ஸூராதி தைவத மதி சூத்ரஞ்ச பாஹ்யாகமோ
த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜனா திக் திக் திகேஷாம் க்ரமம்-என்கிறபடி
அங்கோர் ஆடும் கள்ளும் –4-6-7-
அங்கோர் கள்ளும் இறைச்சியும் –4-6-3-
கரும் சோறும் மற்றை செஞ்சோறும்-4-6-4- -என்கிற
சூரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு –
நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம்-4-6-2- -என்கிற
சூத்திர தேவதைகளுக்கு
களன் இளைத்து-4-6-4- -என்று
அவ்வோ தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலி இட்டு –
நீர் அணங்கு ஆடுதல் கீழ்மை-4-6-8- -என்று
தைவா விஷ்டராயாடுமதின் தண்மையும்
—————————————————-
(ஒன்றும் தேவும் -சாரம் )
6-பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
தத குரோதபரீ தேன சம்ரக்த்ன யநேனச வாமாம்குஷ்ட ந
காக்ரேனஸ் சின்னம் தஸ்ய சிரோ மயா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
யச்மா தன பராதச்ய சிரச் சின்னம் த்வயா மம
தச்மச்சாபா சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும்
தத்ர நாராயணா ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித—ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
விஷ்ணு பிரசாததாத் சூஸ்ரோணி கபாலம் தத் சஹச்ரதா –
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம்யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் சொல்லுகிறபடியே –
பிரம்மா ருத்ரனால் தலை அறுப்புண்டு -சோச்யனாய் ருத்ரனை சபிக்க -ருத்ரன்
குருசிரச் சேதநத்தாலே பாதகியாய்-பிரம சாபம் தன்னால் போக்கிக் கொள்ள போகாமையாலே –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரனை அர்த்திக்க -அவன் சாபத்தை போக்கினான் ஆகையாலே –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்று வேதத்தில் பர சம்சா பரமான
வாக்யங்களாலும் –ராஜச தாமச புராணங்களாலும் -பரத்வேன பேசலாம் படி –
முட்டுப் பொறுத்து நின்ற -பிரம ருத்ராதிகள் ஆகிற தேவதைகள் உடைய அன்யோன்யம் –
தங்களுக்கு வருகிற கிலேசம் அறியாமையும் -அந்த கிலேசம் தங்களால் தவிர்த்துக் கொள்ள
மாட்டாமையும் -அதைத் தவிர்த்து கொடுக்கைக்கு ஈஸ்வரன் வேண்டுகையும் -ஆகிற
அஞான அசக்தி சாபேஷ்த்வங்களையும்–ஆதி சப்ததாலே கர்ம வஸ்யதையும்
—————————————————-
7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி
இலிங்கத்திட்ட -4-10-5–என்றும் ,
விளம்புமாறு சமயமும் -4-10-9–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஆவன
யன்மயம் ச ஜகத் சர்வம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்–1-1-5- என்ற பொதுவிலே பிரசன்னம் பண்ண –
விஷ்னோஸ் சகாசாதுத்பூதம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-41–என்று கோல் விழுக்காட்டாலே-உத்தரமாகை அன்றிக்கே –
எருமையை ஆனையாக கவி பாடத் தர வேணும் என்பாரைப் போலே –
லிங்கம் என்று ஒரு வியக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று –
கேட்கிறவனும் தமோ பிபூதனாய் கேட்க-சொல்லுகிறவனும் தமோ பிபூதனாய் சொல்ல –
இப்படி பிரவர்த்திகமான இலிங்க புரணாதிகள்-குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும் – சிலவற்றைச் சொல்லா நின்றால்-
தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் இத்தனை போக்கி -பிராமண அனுகூல தர்க்கம்
அல்லாமையாலே -கேவலம் உக்தி சாரமாய் இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் என்கிற –
ஷபணக பௌத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளும் ஆகையாலே –
ய வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாச்ச காச்ச குத்ருஷ்டைய தாச் சர்வா
நிஷ்ப்பலா ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி-12-95-என்கிறபடியே
அவற்றினுடைய தமோ நிஷ்டைதையும் சொல்லி –
ஓடிக் கண்டீர்
ஓடியோடி -4-10-7–என்று தொடங்கி
வழி ஏறிக் கண்டீர் -என்று ,
கதாகதம் காமகாமா லபந்தே–ஸ்ரீ கீதை-9-21- -என்கிற படியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது –
கர்ப்பதேற வருவதாய்க் கொண்டு -அநேக ஜன்மங்களில் பிறந்து -தேவதாந்தரங்களை
திரிவித கரணங்களாலும் பல பர்யாயம் தத் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்திர
மார்க்கத்தாலே ஆஸ்ரயித்து -அவ் ஆஸ்ரய பலமும் கண்டீர்கள்
———————————————————
8–கண்டும் தெளிய கில்லீர்-4-10-3-
இவனுடைய ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை -சாஸ்த்ரத் த்வாரா பிரத்யஷித்தும் –
இவனே ஆஸ்ரயணீயன் என்று தெளிய மாட்டுகிறீலி கோள் –
அறிந்து அறிந்து ஓடுமின்-4-10-6-
உங்களை இங்கனே வைத்தது -சதசத் -கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம
அணுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை -அழியும் என்று –
அது தான் -மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை-7-14- என்று பிரக்ருதியை இட்டு -அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள்-
ஆன பின்பு அது அவன் மாயை என்று அறிந்து –
மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்கையாலே -மாயா தரண உபாயமும் –
அவன் திருவடிகளைப் பற்றுகை என்று அறிந்து -அவனை ஆஸ்ரயித்து இந்த மாயையை தப்பப் பாருங்கோள் –
ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவதாவது -4-10-10–என்கையாலே –
நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை உடையவனுக்கு அடிமை செய்வதே
இவ் ஆத்மாவுக்கு சீரியதும் ஸூசகமும் -என்று இப்படி உபதேசித்து
விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் .
அதாவது –
பிரயோஜனாந்தர -தேவதாந்திர -பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் –
விரக்தி பூர்வகமாக –
ஜகத் காரணத்வாதிகளான பிரமாண உப பத்திகளாலே
பகவத் சமாஸ்ரயனத்தை சம்சாரிகளுக்கு ருசிப்பிக்கிறார் என்கை-
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
திரு பாவை- அனுபவம் -2-வையத்து வாழ்வீர்காள் –
December 19, 2011ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -1-
December 19, 2011திரு பாவை- அனுபவம் -1-மார்கழி திங்கள் —
December 19, 2011திரு ஆடி பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே
————————————————-