Archive for December, 2011

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -6-

December 25, 2011
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பெரி ஆழ்வார் அனுபவம் பார்ப்போம்
இருவரும் திரு குமாரிகளை திரு மணம்- ஸ்ரீ சேர குல வல்லி நாச்சியார் -ஸ்ரீ ஆண்டாள்
பகவத் அனுகூல்யம் நிலைத்து நிற்க அடியார் சேர்க்கை வேண்டுமே -அடுத்த பதிகம் -இதில் அனுபவம்
ததீய சேஷத்வம்-நம  சப்தம் -ஆழ்ந்த யாதாத்மிக அர்த்தம் –
நழுவினாலும் -பகவான் திறுஅடிகளில் விழுவோம்
அங்கே விஷயாந்தங்களில் விழுவோம்
மூன்றாவது பதிகம்- அபாகவாத சகவாசகம் இன்றி -என்பதை அருளுகிறார் .
அவனுக்கு -ஞானிகள் நித்ய யுக்த-என் ஆத்மா -அவனுக்கு பிரியம் என்பதால்
மம பிராணாக பாண்டவ -ஞானி  என் ஆத்மா  இது என் மதம் -பக்தராவி பெருமாள்
பக்தரை ஆவியாக கொண்டு -என்னது உனதாவியிலே அறிவார் ஆத்மா அவன் மதம் தோன்றும்
அறிவார்களுக்கு உயிர் –
இவரோ ஞானி தனக்கு ஆத்மா -கிருஷ்ணா சித்தாந்தம் இது -உபநிஷத் அவன் பரமாத்மா –
மகாத்மாக்கள் விரகம் சகியாமை–மார்த்வம்-வளத்தின் களத்தில் பூரிக்கும்
திரு மூழிக் களம் -பெருமான் காட்டிய திரு குணம்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே -அன்றே புனித தன்மை அடைகிறோம்
உச்சிஷ்டம் சு பாவனம்
கலத்தது இட்டு –போல்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே–என்- துற லாபம் அனைவருக்கும்
உங்கள் நாவுக்கு கண்ணன் சொல்லியே இனிக்க விலை
அவர் கூட -கண் நுண் சிறு தாம்பு-கட்டுன்ன பண்ணிய பெரு மாயனில்-என் அப்பன் – ஈடு பட
அப்பனில்-சொல்லி நினைவு வர –தென் குருகூர் நம்பி –
பக்தர் பக்தன் பின் அவனே
காண வாராய் ஆழ்வார் கதற –
நாத முனி பாட -நதாயா முனியே அதாக பகவத் பக்தி சிந்தையே
ஸ்தோத்ர ரத்னம்- சரணாகதி பண்ண இவர்கள் மூலம்-
தங்கம்-வெள்ளி-ஆச்சார்யர் -பகவான் –
வெள்ளி தானம் கொடுத்த வைபவம்
தங்க தானம் கொடுத்த வைபவம் –
தேட்டறும் திறல் -மெய் அடியார்கள் ஈட்டம்
வன மாலை மார்பனை-வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் -இவரும்
தென் அரங்கன்- தேட்டறும் -நம்மால் -இன்றி காட்டவே காணலாம் –
மணல் வெளியில் -கூட்டம்-நடை பயின்று -நம்மை பார்த்து சேவை-ஸ்ரீ பாதம் தாங்கி-அனைவர்க்கும் தனி அனுபவம் –
திரு மாது வாழ்- வனமாலை-கௌ ஸ்துபம்–துளசி -திரு ஆர மார்பு -பரத்வம்-
ஸ்ரீ வஸ்தம்-மரு -பீடம்-திரு மரு மார்பன் தன்னை சிந்தையுள் வைத்து
தேகம் சரீரம்-கேசம்-ரோமம்-
அச்சு தாலி ஆமை தாலி -ரஷிக்குமாம் உன்னை-சௌலப்யம்
வாட்டமில் மாலை-சாத்தி கொண்டு-
மால் கொள் சிந்தை யாராய் –
பிளந்தது தூணும் -கிளம்பியது செம்கண் சீயம் -மேட்டு அழகிய சிங்க பெருமாள்-
பத்தர் பேசின பித்தர் பேசின பேதையர் பேசினும் -கம்பர்
ஆட்டம் ஏறி-ஆடி ஆடி -சொல்லி பாடி எழுந்தும் பாடி துள்ளி –
கும்பிடு நட்டம் -கை தட்டுவதே -தாளம்-உலோகம் சிரிக்க நின்று ஆடி –
பீத ராக குரோத -விட்டு நித்ய யுக்த சததம் கீர்த்த யந்த
பிரகலாதன்- சீயம் கண்டு ஆடி-மெய்யடியார் -அயர்வு எய்தும் -ஈட்டம் கண்டிட கூடுமேல்
அதுதான் கண் பயன் ஆவதே
கங்கை தீர்த்தம்-ஆசை விட்டு-தொண்டர் அடி பொடி ஆட நாம்பெறில்-வேட்கை விட்டார் இது பெற்றதும்
கடு வினை களையும் –
அவன் செஷ்டிதம் சொல்லி சொல்லி பாகவதர் பிரபாவம் சொல்கிறார்  -இவையே -நினைந்து
ஏவ காரம் ஆடி பாடி அரங்கா சொல்பவர் ஸ்ரீ பாத தூளி பெற்றால் போதும் –
மூன்று நாள் தங்கி சேவிக்க வேண்டும் திவ்ய தேசம் தோறும்
கங்கை கீதை கோவிந்தா காயத்ரி-புனர் ஜன்ம பிராப்தி
வேட்கை என்னாவதே என்கிறார் –
கொன்றை மலர்-பாததுழாய் -கலந்து இழி புனல்
தேவ பிரயாகை இரண்டு வர்ணம் -கங்கை சொன்னாலே ஏற்றம்-பெரி ஆழ்வார்
பாசுரம் சொல்லியே
வில்லி புத்தூர் விருப்புற்று குளித்து இருந்த கணக்காமே
அதே பலன் பெறுவோம்
ஸ்ரீ பாத தூளி மகிமை
திரு முற்றம் சேறு -சென்னிக்கு அணிவனே -அடுத்து
சொல்லி பாடி-பின்னை சரித்ரம்- வராக -ராமன்- மண் அளந்த -அனுபவம் நிரம்ப
பொன்னி பேர் ஆறு போல்
கண்ணா நீர் கொண்டு மண் -கோலம் -சேறு -சென்னிக்கு அணிவனே
மாயன் தமர் அடி –
வெண்ணெய்  உடன் உண்ட ஆய்ச்சி கண்டு –
ஆர்த்த -கண்டு கொண்டாள்- கட்ட கட்ட -தோள்களில் வெண்ணெய் தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி
-நா தளும்ப – அம்மே என்று ஆசை உடன் கூபிடுவதுபோல் நாரணா என –
அடியவர்கள் சேவடி ஏத்தி வாழ்த்தும் -நெஞ்சமே
கரைசல் -கண்டு-
அவனை நினைந்து -திண்ணமான மதிள் -மெய் சிலிர்பவரை நினைந்து
தென் அரங்கன் என்னும் மேகம் திரு உள்ளத்தில் இருக்கும்
ரிஷி பெருமாள வந்தார்
வானமே நீலமாக மாற -மனசு -சிலிர்க்க உருக -ஊற்று வாய்
எற்றைக்கும் எழ ஏழு பிறவிக்கும் அடியாரை ஏற்ற –
தாள்கள் வணங்கி நாள் கடலை களிமினே –

ஆதி அந்தம் அனந்தன் அற்புதன்-
பக்தி இல்லாத பாவிகளும் உய்ந்திட தீதிலா நல் நெறி-சரணாகதி
காதல் செய்யும் என் நெஞ்சமே
தீதில்லாத -நல்- நெறி -சுலபம்- ச்வரூபதுக்கு அனுரூபம்
ச்வாதந்த்ரம் இன்றி -சுலபம்-
எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சம்
அநந்ய பிரயோஜனர் —
வரக்கூடிய மானம் வருமானம் தவிர்க்கும் பிரான்-திரு கண்ண புர பாசுரம்
குந்தி தேவி-வருத்தம் கொடு
அனுக்ரகிக்க சொத்தைபிடிங்கி கொள்வான்
சேர்ந்து கசிந்து -வார நிற்பவருக்கு வாரமாகும் என் நெஞ்சம்
அணுக்கராக -செய்ய வாய் -ஆர மார்பன் –
கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் -தேவ ராஜன்-
கரு நீல மலை-அருவி-ஒளி பட்டு –
புன்னகை–அருவி -வஷச்தலம்-பச்சை ஹாரம்-வெள்ளை மாலை- இடுப்பு –
சுழல்-சௌலப்யம் சௌந்தர்யம்-நாபி கமலம்-தாண்டி போகாமல்–விஷமா கதி
சேர்ந்து கசிந்து காண நீர்களாய் –
கிரீட மகுட சூடாவதம்சம்- மூன்றும் –
சலங்கை-முத்து -ஜல்பிதம்-ஆதி ராஜ்ய ஜல்பிதா -இவனே பர தேவதை -சொல்லி கொண்டே
எளியவன் -கிரீடம் -பரத்வம் ஸ்பஷ்டமாக காட்ட –
மாலை இட்டு இடும் தொண்டர் வாழ்வுக்கு மால் பித்து பிடித்து
அரச வாழ்வு பிடிக்காமல் அடியார் –
வண்டு கிண்டு நறும் துழாய் -தாமரை கண்ணனை -ஆடி பாடி –
கருணை ஆறு பெருக -திரு கண்களில் இருந்து -கரை உடைத்து –
புருவம் மேல் தடுக்க -காதுகளும் தடுக்க –
பிரசன்ன சீத மான திரு கண்கள் –
-மொய்த்து -என் அத்தன் அச்சன் -அரங்கனுக்கு -அடியார்களாகி -பித்தர்
ஆழ்வார் -அமரர் கோன் அர்சிக்கின்று –
பேய் பெண்ணே -பித்தர் ஆம் அவர் பித்தர் அல்லரே -மற்றை யாவரும் பித்தரே –
வாதம்பித்தம் கபம் -மூன்றும் -முறையாக படுத்தும் சரீரம் –
சொல்லின் இன் தமிழ் வல்லார்-தொண்டர் தொண்டர் ஆவார் பலன்
காஷ்டை நிலை அடைய பெர்வார் -எல்லையில் அடிமை திறன் –
அடுத்து -மூன்றாவது பதிகம்
பிரகலாதன்- விபீஷணன்- திருத்த பார்த்து -விலகி
கர்ணன் போல் -இன்றி -நெருப்பு பற்றி -குதித்து தப்புவது போல்
ஆபாச பந்து விட்டு பிராப்த பந்து அடைந்து –
அது போல் குலசேகரரும்–பிரயோஜனாந்த பரர விட்டு -ளைகிகர் விட்டு –
தடுப்பு நீங்க சத் சங்கம் வேண்டும்
தேக ஆத்மா அபிமானி-ச்வாதந்திர புத்தி விட்டு –
விஷயாந்த ஆசை கூடாமல்-
சேர்வதை முன்பு சொல்லி சேராதவரை
வையம் தன்னோடு கூடுவது இல்லை-
மெய்யில் வாழ்க்கையை-நித்யம் இல்லையே -மாறு பட்டு கொண்டே இருக்குமே –
வஸ்து நித்யம்-நிலை தானே மாறும் -அசேதனம் -மாறி கொண்டே இருக்கும் -இதை மெய் என கொள்ளும் வையம் –
யட்ஷன்-தர்ம புத்திரன்- ஆச்சர்யம் எது -பரம ஆச்சர்யம் எது -சேஷாகா -மிச்சம் இருப்பவன்-தூக்கி போகிறவனும் தான் நித்யம் –
மெய்யில் வாழ்கையை மெய்யாக கொள்ளும்
ஐ யனே -நிருபாதிக சுவாமி -ஆசை கொண்டேன்
இடையார் திறத்து நிற்கும்-மின்னிடை மடவார் -கூட மாட்டேன்
அரங்கன் மேல் காமம் வேண்டும் -இடையில் நிற்கிறான்-ஸ்ரீ பூதேவி நடுவில்
சீதா மத்யே சுமத்யமா -அழகிய இடை கொண்டவள் சீதை
பொய்யோ என்னும் இடையாளுடன் இடையில் உடன் போனான் -கம்பர்
மால் இழந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கு
நரகாந்தரன் நல் நாரணன் இடம் பித்து கொண்டு -பாரினார் உடன் கொடாமல் –
இச்சா மோகி-மந்திர புஷ்பம்-பீதாம்பர -சாஷாத் மன்மத மன்மத சொல்லி –
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பாருடன் சேராமல் –
வாழ்வதற்கு உண்டு-உண்பதற்கு வாழாமல்
யோகி போகி -ரோகி–கழுத்துக்கே கட்டளையாக –
உண்டி உடையே -கூடும் மண்டலம்-சாருவாக மதம்-முதலில் கண்டனம் -ஈட்டில் –
அண்ட வாணன்-இதை படைத்தவன்–இடம் ஆசை கொண்டு-உன்மத்தம்-காண்பனே
தீதில் நல் நெறி நிற்க -பேதை மணவாளன் தன் பித்தனே -புருஷகாரம் –
சாஸ்திரம் புறம்பாக போவார் இடம் சேராமல் –
ஆதி அரங்கன்-
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே –
என்னை போல் அல்லாதவர் உடன் சேராமல்
அநந்ய சேஷத்வம் அநந்ய போக்யத்வம் அநந்ய உபாயத்வம்-அறிந்த
யாரோடும் கூடும் சித்தம் தவிர்த்த உபகாரன் —
அவனே அவனே என்று பைத்தியம் பிடிக்க வைத்த உபகாரம் –
அரசனாய் இருந்து இழந்தவனை -தொண்டர் தொண்டர் ஆக்கி –
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கு
பேயனாய் ஒழிந்தேன் -பேயரே எனக்கு யாவரும் –
யானும் ஒரு பேயனே இவர்க்கும் -பேசி என் –
சிறை சாலை உள்ளம் வெளியிலும் நடுவில் கம்பி —
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் –
தனி பெரும் பித்தனாய்  அருளிய இந்த பதிகம் சொல்ல –
-ஏதம் ஒன்றும் சாராது பலன் சொல்லி நியமிக்கிறார்
அவர் பட்ட விசனமின்றி
தங்கு சிந்தை-அநந்ய கதித்வம் –
தேவரையும் அசுரரையும் திசைகளையும்  படைத்தவனே
யாவரும் வந்து அடிவணங்க -அரங்கனாக –
-ஏவரும் வெஞ் சிலை வலவா 8 -10
திக்கு படைத்ததே தான் சயனிக்க தானே -மேலை கீழை வீடு இரண்டையும் சேர்த்து அருளி –
நடந்து காட்ட -அங்கு-சேவை சாதிக்க –
குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பாவை- அனுபவம் -8-கீழ் வானம் வெள்ளென்று ..

December 25, 2011

ஹேமந்த ருது

மார்கழிக்கு திரு பாவை -தை-நாச்சியார் திரு மொழி
நாராயணன் தொடக்கி-பலதிரு நாமங்கள்-அவதாரிகை
பிள்ளாய் -ஹரி
நாராயணம் மூர்த்தி கேசவன்
தேவாதி தேவன்
மா மாயன் மாதவன் வைகுந்தன்
ஒவ் ஒன்றுக்கும் சகஸ்ரநாமம்-என்று என்று நாமம் பலவும்
தூ மணி -விடிந்த அடையாளம் சொல்லாத பாசுரம்
சுற்றும் விளக்கு எரிய-வெப்பம் இன்றி வெளிச்சம் மட்டும்
 -தூபம் கமழ -புகை இன்றி மணம் மட்டும்
மாமன் மகள்-இதுவே பெயர்-ஆத்மா பந்து -சரீர பந்து
கூரத் ஆழ்வான் முதலி ஆண்டானை கொண்டாடி –
துரக்கும் பொழுது விடாமல் கொண்டாடி –அது போல் வட மதுரையில் திரு மேனி சம்பந்தம் ஆசை கொள்கிறாள் ஆண்டாள் .
மஈமீர் -அவளை எழுப்பீரோ -நீ சொல்லி சேர்க்க வேண்டும்
உஊமையோ செவிடோ -அனந்தலோ
மந்த்ரம் பட்டாளோ-
என்ன செய்ய -திருநாமங்கள் பல சொல்ல
சரிய பதித்வம்-மாதவன் நடுவில்
வைகுந்தன் -பரதவன் -மாதவன் ஆனா படியால்
மா மாயன்-எளியவன் – இங்கும் மாதவன் ஆனதால்
லோக நாத -மாதவன்-பக்த வத்சலன் –
கோது கலமுடைய பாவாய் அனுபவிப்போம் –
மிக்கு உள்ள பிள்ளைகளையும் கூப்பிட்டு வந்து இருக்கிறோம்
போவான் போகின்றார் -போவதற்கு என்றே போகும்-
உன் பிரபாவம் அறியாதவர்கள் –
போவதே ஆனந்தம் கொடுக்கும் -வழியே முயற்சியே
திரு வேம்கட யாத்ரை/அர்ச்சிராதி கதி /அக்ரூர ஞானம் போல்
கம்சனையே பார்த்து வாழ்வு -கிருஷ்ணா தர்சனம் -பாரிப்பு -கதி சிந்தனம் –
இன்றை பொழுது நல் பொழுது -குரல் தழுத்து -10 வருஷம் பிரிந்த பின்பு கூடும் இருவர் –
தரிசித்து கூப்பிட -உள்ளூர் காரர் வருந்த -இங்கும் பகை –
ஒரு தனி மா தெய்வம் -திரு வேம்கட யாத்ரை-ஆசை பாரிப்பு –
சுயம் பிரயோஜனம்-அதுவே
கைங்கர்யத்தால் பிரயோஜனம் இல்லை- கைங்கர்யமே பிரயோஜனம்
பாடி பறை கொண்டு -பறை என்றே கொடுக்கிறேன்
இப்படி கொடுத்த வள்ளல் தனம் பாடி-ஆனந்தம்போக்கு வீடாக -உபாயமாக இல்லை
அது போல் போவான் போகின்றாரை -நிறுத்தி -பக்தி ஒருத்தி விடாமல் போக வேண்டும்
ஊன அத்யாயம் கதை -பாரிக்க நேரம் இல்லையே –
தேவாதி எனப் படுவான் முன்பு மா வாய் பிளந்த மகன்
வந்து என் மனம் புகுந்தாய் பின்பு சிந்தைக்கு
நாம் சென்றால்-ஆவா ஆவா -இரட்டித்து மகிழ்வு இல்லை- ஐயோகோ
அவனாக வந்தால் ஆ –என்பானாம் .-
சவகத ச்வீகாரம் -பரக்கத ச்வீகாரம்-
உபாய பாவம் இல்லை-ஆர்த்தியால் வந்தது -வஸ்து வைஷண்யம்
காரார் திரு மேனி காணும் அளவும் போய் -அணைத்து திவ்ய தேசம் -ஆ ஆ -பல –
இதானும் மோஷம் என்ற எண்ணம் இன்றி -அதுவே முக்தி -பிரயோஜனம்
நாறு நறும் பொழில் -நூறு தடா -அமுது செய்திட பேரில்
ஓன்று நூறு ஆயிரமாக -பின்னும் ஆளும் செய்வேன் .-கைங்கர்யத்தில் மீன்ம்டும் ஈடு பட
வரம்-பிரகலாதன் -செவிததே பலன்-வேறு வரம்கேட்காத வரம் வேண்டும் –
பிரமன்ருத்திரன் -வரம் கொடுத்து ஸ்ரமம்-இவனே தீர்ப்பான்
கொடுத்து கொள்ளாதே -கொண்டதுக்கு கை கூலி -கை கூட்டு -கொடுக்க வேண்டும் –
சென்று நாம் சேவித்தல்-உபாய கோஷ்டியால் இல்லை-
தாய்-மகள்-தோழி உணர்த்தி துணிவு பல –
சம்பந்தம் ஞானம் -உணர்த்தி -தாய் -உபாய சத்திர நம்பிக்கை-அத்யாவசியம் -பேரு தப்பாது என்ற துணிவு-மகா விசுவாசம் –
மகள்-த்வரை -ஆறி இருக்க முடியாமல்-துடிப்பு -பேற்றுக்கு துவரிக்கை-இனி இனி -இருபதின் கால் துடித்தார் –
மைத்ரேயர்-பராசர சிஷ்யர் -விஷ்ணு புராணம்
மதுர கவி – ஆழ்வார் -நம் ஆழ்வார் -செற்றதின் வாயில் சிறியது பிறந்தாலோன்று கேட்டு –
ஆழ்வாரின் மைத்ரேயர் இருந்த படி -இவர் அவா தான்
ஆவா ஆவ ஆராய்ந்து -இடம் உண்டா ஆராயாத இடம் உண்டா-வியாக்யானம்
சரண்யா ஹிருதய அனுசாரியாக இன்றி ஸ்ரீ பரத ஆழ்வான் –
அவதார பிரயோசனமே தந்தை சொல் -அனுஷ்டிப்பது
லஷ்மணன் -சேஷத்வம்-பரதன்-பாரதந்த்ர்யம்
சத்ருக்னன்-பாகவத செஷத்வம்காட்ட
திரு உள்ளம் ஏற்றதாக இல்லையே பரதன்-சரணாகதி  பலிக்க வில்லை
ஆச்சர்ய முகேன பிடித்து கொள்ள வேண்டும் –
பரதன் நேராக-சிரசா யாஜிதோ மயம்-
அஹம் சிஷ்ச்யச்ய -தம்பி-பிரபண்ணன் -போக்கிடம் அற்றவன் –
ஆ மா கோழி குதிரை வசிடராதி தாயார் மூவரும் –
உள்ளத்தில் நினைத்து மருகினான்-பெருமாள்- செய்யாமல் போனோமே
தலையால் வணங்கி -அந்த பரதன் வசனம் என்னால் நிறை வேற்ற முடியவில்லை
கை கூப்பினாள் போதுமே
தலையால் வணங்கி
வேம்கடது உறைவார்க்கு நம வென்னலாம் கடமை -தலையால் தரித்து
கடன் வாங்கினார் உள்ளம் போல்
அஞ்சலி அம் ஜலதி -நீராக உருக வைக்கும்
தஸ்ய வசனம்-பரதன்- பெயரை சொல்ல மனம் தாங்காதே -தஸ்ய -அந்த -எம் பரதன் !
யாசக-பிரார்த்தித்தான் -சொல்ல மட்டும் இல்லை –
அவர் அவர் தான்-எத்தனை சொல்லி என்
என் வசனம்பார்த்து அவன் வசனம் பார்க்க வில்லையே
கண்ணன் பீஷ்மர் வார்த்தை -இந்த தப்பை பண்ண கூடாது என்று நினைத்து –
மயா-வாய் வார்த்தை-உள்ளம் -ந கருத்தும் மயா -செயலிலும் ஏமாற்றினேன்
நான் செய்தது தப்பு
பக்தனுக்கு என்று இருக்கும் -ஜிதந்தே ஸ்தோத்ரம்- அஹம்
நான் பண்ணாமல் போனேனே
சிரசா ..-தஸ்ய வசனம் ந கருத்தும் மயா -ஆவா ஆவா -சொல்லி கொண்டே -இருந்தான் பெருமாள்
ஆராய்ந்து இது வரை-அருளும்-12 வருஷம் 6 மாசம் கழிந்து
சத்ருக்னன் கூட வலம்- ஆனந்தமாக தேரில் ஏற -திரும்பி
நந்தி கிராமம்- வருத்தம்-
மோஷ பிரதன்-அநிஷ்டம் தொலைத்து -இஷ்டம் கொடுத்து
உபாயம்-பலம் சமீபத்தில் கூட்டி
மோஷ பிரதாதா கொடுக்கிறான்
ரஷகத்வம்
பிராப்யத்வம்-பலமாக இருத்தல் –
நான்கும் அவனே –
அநிஷ்டம் -ச்வாதந்த்ரம் ஏற்றி -அபிமானதுடம் கிரீடம் வைக்க
-அதை தொலைத்து திரு அடி கிட்டியதால் அநிஷ்டம் தொலைய ஆனந்தம்
ராமன் வந்து -பட்டாபிஷேகம் ஆனா பின்பு தான்-இஷ்டம் கிட்டியது –
இடை வெளி- ஆவா –ஆவா –அருளும்
அண்ணல் வந்தனன் ஆரியன் வந்தனன் -ராஜ்ஜியம்-தத் ததாமி உன் பொருட்டு திரும்பி கொடுக்கிறேன் –
பிராமணனுக்கு தானம்-வண்ணனுக்கு வஸ்த்ரம்- வேற்றுமை உருவு வெவேற சமஸ்க்ருதம்
விப்ராய -ரஜகஷ்ய-
அவனுக்காகா இப்பொழுது கொடுக்க -இவன் துவைத்து ஒன்பது பங்கு ராஜ்ஜியம் பெருக்கி –
 பரதனை குளிர நோக்கி –

இரண்டாவது தடவை மடியில் உட்கார வைத்து -ஆச்வாசம் பரதன் –
யவ்ராஜ்ய பட்டாபிஷேகம்-வேற இஷ்டம் இல்லை
குறை எல்லாம் பெருமாள்-தலையால் தவித்து
ஆராய்ந்து அருள்-நேரம் கடத்தாமல்-
பரதன் இடம் செய்த தப்பு -இன்றி
14 நிமிஷம்-விபீஷணன் -அங்கீகாரம் –
காவல் சோர்வு-நொந்து கொள்வார் பெருமாள்-ராஷசர் ரிஷி -தலை குனிந்து வெட்க பட்டான் –
ராஷசன் தம்பி நமக்கு கிடைப்பானா -பெருமாள் துடிக்க -நீசனேன் நிறை ஒன்றும் இல்லை-
இது தானே தேஜஸ்-
நேராக கண்டதும்-திரு வாயால் தடவி கொடுத்து -கண்ணால் குளிர நோக்கி
வசத்தா சாந்தம் -மென்மையான குரல்-என்ன பெசினான்பெருமால் -வால்மீகி சொல்ல விலை –
ஆவா ஆவா சொல்லி கொண்டது
இனி பிரிய வேண்டாம் சொன்னது தான் அருள் காதில் விழுந்தது
லங்கா -பட்டம் இக்கரையிலே -பரத்வம் பரதம ஸ்பஷ்டம் -பீரிட்டு வர
அதை கண்டு துடித்தான் விபீஷணன் –
சுயம் பிரயோஜனம்-
தம்பிக்கு -இளையவருக்கு அளித்த மௌ லி என்னையும் கவித்த -கொக்கு வாயும் படு கண்ணியம் போல்
அருளும் -இது தான் -ஆராந்து -இது வரை
குகனுக்கு ஒரே நிமிஷம் கூட இடை வெளி இல்லை
ச்ருன் வேர் பூர் -சிறுங்கி பேர புரம்-மான் உடல் -அனுமதி இன்றி நுழைய முடியாதாம்
ஏழை ஏதலன் கீழ் மகன் -சொல்ல கூட அறியாத -என்னாது இரங்கி –
குகன் சொல்லாமல்-பெருமாள் கணிசியாமல்
ஏழை என்னாத பொது -ஏதலன் என்னாத பொது -கீழ் மகனஎன்னாத பொது -அருளினான்
பரபர நீச பாவம் வேண்டும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு –
இப்படி பட்டவனுக்குஉடனே அருள்
மிலேசனும் பக்தன் ஆனால் -தம்பிக்கு தலைமகன் -மம ஆத்மா சக
சக்கரவர்த்தி திரு மகன் -பெருமாள் -உயிர் உகந்த தோழன் என்றானே
வாளும் வேலும் கொண்டு பிறந்தவரை சோகித்து –லஷ்மணன் பின் செல்ல –
தொண்டர்க்களும்பின் செல்ல –
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை  வடிவழகு -படுத்தும் பாடு –
ஏழை -நின்னோடு ஐவரானோம் -உந்தை
புதல்வரால் பொதிந்தான் உன்  தந்தை -தசரதன் மனோ ரதம்-நிறைவேற்ற –
மட நோக்கி உன் தோழி-நீ கடாஷம் பண்ணி
உம்பி எம்பி -உன் தம்பி என் தம்பி -பாகவதன் மூலம்-சேர்த்து -இனி நீ முக்கியம் லஷ்மணன் விட –
ஒவ் ஒரு எழுத்தும் முக்கியம் –
புதல்வரால் பொலிந்தான்  உந்தை-எந்தை சொல்ல வில்லை –
ஆவா ஆவா
இது காடு இங்கேயே இரு குகன்
தேன் உள-தினை மா -நாய் குகன் அடியேன் உளன் – வெட்டிய மொழியணன் –
அன்போடு கொடுத்தாய் -வயிறு நிறைந்தது
வெளியார் கொடுக்க உண்ண மாட்டேன்-தன் கார்யம் கொண்டு அன்பையும் வெளி இட்டு
லஷ்மன பிரபாவம்-ஆத்மா சத்பாவம் சொன்னதும் -பரதனுக்கு -ஆவா ஆவா ஆராய்ந்து அருளிய பலன்-
பேச்சுக்கு நிலம் இல்லாத பரதன் இடம் பேச்சுக்கு இடம் இல்லா லஷ்மணன் பெருமை  குகன் சொல்ல
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -227..

December 25, 2011

ஒன்பதாம் பத்தால்-

இப்படி அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே –
இத்தலையில் ஒன்றும் அபேஷிக்காமல் -பிரளயாதி ஆபத்துகளிலே உதவி ரஷிக்கும் ஆபத் சகனான சர்வேஸ்வரன் –
கீழ் பிரகாசிப்பித்த ஆத்ம தர்சனதுக்கு பலம்-
ஸ்வரூப அனுரூபமான பிராப்த்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
அவ் அனுபவத்தில் உண்டான த்வரையாலே -ஷண காலம் விளம்பம் பொறுக்க மாட்டாமல் –
ஆர்த்தரான தமக்கு -ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாகக் கடவது -என்று
நாள் அவதி இட்டு கொடுக்கப் பெற்றவர் –
கீழ் தாம் உபதேசித்துத் திருந்தினவர்கள் ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத
பரம கிருபையாலே -யதா அதிகாரம் சர்வ உபாயங்களையும் அருளிச் செய்கிறார் -என்கிறார்-

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் அளிக்கின்ற
ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்
2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ
பரம்பரையைக் கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும்
உருகி அலற்றி கவையில் மனம் இன்றி பதினாலாண்டு
பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாச தின
சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை
போலே நாள் இடப் பெற்றவர்
5-இம்மட உலகர் கண்ட தோடு பட்ட
அபாந்த வாரா ஷகா போகயா சுக அனுபாய
பிரதி சம்பத்தியைக் காட்டி
6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற
வைகல் வாழ்தலான சித்தோபாயம்
7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை
நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும்
பாடி யிடும் தொண்டன் என்று
கீதாச்சர்யனைப் போலே அதிகார
அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..

———————————————–

1-எண் திசையும் அகல் ஞாலம் அளிக்கின்ற ஆலின் மேல் என்னும் படி நித்ய போக பாத
லீலா உபகரணத்தின் லயாதிகளை போக்கும் ஆபத் சகன்-
(பாத லீலா உபகரணம் -நித்ய போகமான பரமபதத்தை நோக்காக காள் கூறாக இருக்கும் லீலா விபூதி -என்றவாறு)
அதாவது-
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்-9-1-1- -என்றும் ,
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2- -என்றும்
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன்-9-9-2- -என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான்-9-10-1- -என்றும்
சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளாமல் ஏற்கவே -திரு வயிற்றில் வைத்து நோக்கி
அழிந்தவற்றை மீண்டும் உண்டாக்கியும் –
ஹிரண்யாஷனாலே தள்ளுண்டு அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்தும்
மகா பலி பலாத்கரித்து ஆளுகிற தசையிலே -எல்லை நடந்து மீட்டும் –
இப்படி பிரளயாதி ஆபத்துகளில் உதவி ரஷித்தவன் என்னும் படி —
கீழ் சொன்ன சத்ய காமத்வத்தால் வந்த நைரபேஷ்யம் தோற்ற -இத்தலையில் அபேஷம் அற –
பிரதுபகாரம் நினையாமல் -வரையாதே -தன் பேறாக நோவு படும் அளவுகளிலே உதவி –
பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம்–என்கிறபடியே
அம்ருத சப்தத்தால் சொல்லும்படி -நித்ய போகமான-த்ரிபாத் விபூதியைப் பற்ற அல்பம்
ஆகையாலே பாத சப்தத்தால் சொல்ல பட்ட லீலா உபகரணமான இவ் விபூதியில்
லயாதிகளை போக்கும் ஆபத் சகனானவன்–

———————————————————-

2-ஆர் உயிர் என்னப் படுத்தின ஆத்ம தர்சன பல அனுபவ பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்டு
அதாவது
இருந்தும் வியந்தில் -8-7–தம்மோடு கலந்த கலவியை ஸ்மரிப்பிக்க வித்தராய் –
பேசுகிற அளவிலே -அவன் தட்டு மாறி -நின்று பரிமாறின சீலத்தில் ஈடுபட்டு –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9–என்று என் ஆத்மா பட்டது –
நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் ஸ்வரூபம் தான் பட்டதோ என்னும் படியாக –
தாம் மேல் விழுந்து அனுபவித்த -ஆத்ம வைலஷண்யத்தை
கீழில் பத்தில் யாதாவாகக் காட்டக் கண்டு -அதுக்கு பலம்-ஸ்வரூப அனுரூபமான
பிராப்யத்தை அனுபவிக்கை ஆகையாலே –
சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்றும் –
உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் -என்றும் –
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும் –
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து நின் திரு கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்-
திருப் பவளத்தை திறந்து -ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் –
திரு கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும் –
திரு அடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும் –
தேவரீரும் பிராட்டியும் சேர்ந்து கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டி அருள வேண்டும் –
என் முன்னே நாலடி உலாவி அருள வேண்டும்
அனுகூல தர்சனத்திலே பிறக்கும் ஸ்மிதம் காண வேண்டும் -என்று இப்படி
அனுபவ பரம்பரையை ஆசைப் பட்டு -க்ரம பிராப்தி பற்றாமையாலே –
கூவுதல் வருதல் செய்யாய் -என்று
நிரதிசய போக்யமான உன் திரு அடிகளில் நான் வந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல்- நீ இங்கே வருதல்-செய்து அருள வேணும் என்று –
இப்படி முடுக விட்டு–

————————————————-

3-ஏகம் எண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறும் உருகி அலற்றி கவையில் மனம் இன்றி
அதாவது
(ஓராயிரமாய் -திருவாய்மொழியில்)மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –
என்று அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே சர்வ காலமும் ஏக ரூபமாய் மனோரதித்து –
(மையார் கருங்கண்ணி திருவாய்மொழியில்)காணக் கருதும் என் கண்ணே – என்று
பெரிய பிராட்டியாரோடும் -திவ்ய ஆயுதங்களோடும் -திவ்ய விக்ரகத்தோடும் –
கூடி இருக்கிறவனைக் காண வேண்டும் என்று ஆசை பட்டு –
(இன்னுயிர்ச் சேவலும் திருவாய்மொழியில் )எழ நண்ணி நாமும் நம் வான நாடோடு ஒன்றினோம் -என்று
ஸ்மாரக பதார்த்த தர்சனத்தில் நோவு படுகையாலே -முடிந்து போகையிலே ஒருப் பட்டு –
(உருகுமால் நெஞ்சம் திருவாய்மொழியில் )திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொறு-நெஞ்சம் உருகுமால் -என்று
அவன் அனுபவ தசையில் பரிமாறின சீலாதிகளை நினைக்கும் தோறும்
அனுபவ உபகரணமான நெஞ்சு சிதிலமாய் கரைந்து –
(எம் கானல் அகம் கழிவாய் திருவாய்மொழியில் )தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே கேளீரே -என்று
தூத பிரேஷண முகத்தாலே – கிளி மொழியாள் அலற்றிய சொல் – என்று
ஆற்றாமையாலே அக்ரமமாகக் கூப்பிட்டு –
(அறுக்கும் வினையாயின திருவாய்மொழியில்)கவையில் மனமின்றி கண்ணீர்கள் கலுழ்வன் -என்று
இரு தலைத்த நெஞ்சு இன்றிக்கே -ஏகாக்ர சித்தராய்
(மல்லிகை கமழ் தென்றல் திருவாய்மொழியில்)பதினாலாண்டு பத்து மாசம் ஒரு பகல் பொறுத்தவர்கள்
ஒரு மாச தின சந்த்யையில் படுமது ஷணத்திலே யாக விரங்குகிற த்வரைக்கு ஈடாக
பெருமாளைப் பிரிந்து பதினாலாண்டு பொறுத்து இருந்த ஸ்ரீ பரதாழ்வான் –
பூர்ணே சதுர்தச வர்ஷே பஞ்சம்யாம் லஷ்மணாக்ரஜ –யுத்த -127-1—என்று அவதி கழிந்த ஒரு நாளில் பட்ட கிலேசமும் —
பத்து மாசம் பொறுத்து இருந்த பிராட்டி -மாஸாத் ஊர்த்தவம் ந ஜீவிஷ்யே –ஸூந்தர –40 -10–
(இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்து நீதியோய்-
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அனந்த மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ –ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் )-என்று
திருவடி இடம் சொல்லி விட்ட அநந்தரம் -அவ்வொரு மாசத்தில் பட்ட கிலேசமும் –
கிருஷ்ணன் பசு மேய்க்கப் போக ஒரு பகல் எல்லாம் பொறுத்து இருந்த ஸ்ரீ கோபிமார்-
அவன் பசுக்களின் பின் குழையிலே வாரா நிற்க – முற் கொழுந்தில் காணாமையால்
ஒரு சந்த்யையில் பட்ட கிலேசம் எல்லாம் –ஒரு ஷணத்திலே யாம் படி –
அவனை விட்டு அகல்வதற்க்கே இரங்கி -என்று ஈடு படுகிற த்வரைக்கு ஈடாக-

——————————————————-

4-இனிப் பத்தில் ஓன்று தசம தசையிலே பேறு என்று
அதாவது-
நயன பிரீதி பிரதமம் சிந்தா போகஸ் ததோனு சங்கல்ப
நித்ராஸ் சேதஸ் தநுதா விஷய விரக்திஸ் த்ரபாநாச
உந்மாதோ மூர்ச்சா ம்ருதி ரித்யேதா ச்மரதசா தசைவ ஸ்யு-என்றும்-
பிரதமஸ் தவபிலாஷ ஸ்யாத் த்விதீயம் சிந்தனம் பவேத்
அநு ஸ்ம்ருதிஸ் த்ருதீயந்து சதுர்த்தம் குண கீர்த்தனம்
உத்யோக பஞ்சமம் ப்ரோக்த பிரலாப ஷஷ்ட உச்யதே
உன்மாதஸ் சப்தமோ ஞேய அஷ்டமோ வ்யாதிருச்யதே
நவமே ஜடாத சைவ தசமம் மரணம் ததா -என்றும்-
காட்சி முதலாச் சாக்காடு ஈறாக் காட்டிய பத்தும் கை வரும் எனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற்கு உரித்தே –நம்பியகப்பொருள் -என்றும்
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவம் எல்லாம்
அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றச் சிறப்புடை மரபினவை கழவென மொழிப–தொல்காப்பியம்-என்றும்
சொல்லுகிறபடி -காமுகராய் இருப்பார்க்கு தசம அவஸ்தையிலே மரணமாம் போலே –
நம் பக்கல் பரபக்தி உக்தரான உமக்கும் நம்மை பெறாவிடில் முடியும் படியான பரம பக்தி தசை –
பத்தாம் பத்திலே -பிறக்கத் தேடுகிறது –
ஆகையால் கீழ் சொன்ன விளம்பம் இல்லை –இனி உள்ளது பத்தில் ஓன்று தசம தசையான
மரண அவஸ்தையிலே பேறு என்று
நாட் கடலாக தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவை போலே நாள் இடப் பெற்றவர்
நாட் கடலை கழிமின்-1-6-7- –என்கிறபடியே -விரஹ வ்யசனத்தாலே ஒருநாள் கடல் போலே துச்தரமாம் படி –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -யுத்த -127-1–என்று தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நெடுக நாள் இட்டு
கொடுத்தால் போல் ஆகாமே –
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு -நாச்சியார்-6-2-– என்று
இன்று எனில் வெள்ளக் கேடாம்-சில நாள் கழித்து எனில் வறட்கேடாம் என்று நினைத்து –
நாளை என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே –
மரணமானால் -என்று ஆரப்த சரீர அவசானத்திலே -பேறாக -அவன் தானே
நாள் இட்டு கொடுக்க பெற்று ஹ்ருஷ்டர் ஆனவர் –

——————————————

5-இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்த வாரா ஷகா போக்யா சுக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி
அதாவது-
சரம உபாய உபேய பர்யந்தமாக -தாம் அருளிச் செய்த ஹித வசனம் கேட்டு –(சரம உபேயம் -அர்ச்சாவதாரம்)
திருந்தினவர்களை ஒழிய -அல்லாதாரையும் விட மாட்டாத தம்முடைய கிருபையால் –
இம் மட உலகீர் -9-2-7–என்று சம்சாரத்தில் அறிவு கேடர் ஆனவர்களுக்கு –
கொண்ட பெண்டிர் -என்று தொடங்கி -சந்நிதியிலே ஸ்நேகிக்கும் அது ஒழிய காணாத போது
ஸ்நேகம் ஓன்று இன்றிக்கே இருக்கிற பார்யா புத்ராதிகள் பந்துக்கள் அன்று —
பிரளய ஆபத் சகனானவனே பரம பந்து என்றும் —
துணையும் சார்வும் –
பொருள் கை உண்டாய் –
அரணமாவர் -என்ற பாட்டுகளாலே –
அவனை ஒழிந்தார் தாங்கள் உபகாரரைப் போலே -பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி –
ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பார்கள்–ஆகையால் அவர்கள் ரஷகர் அல்லர் –
தன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணினாரையும் விஸ்வசிப்பித்து ரஷிக்கும் அவனே–அவதார முகத்தால்
ஸூலபனாய் -ரஷண அனுரூபமான குணங்களை உடையவனாய் – -அவனை ஒழிய வேறு ரஷகன் இல்லை –
ஸ்திரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து -என்று தொடங்கி -தங்களுக்கு போக்யைகளாக சம்பாதித்த
ஸ்திரீகள் ஆபத்து வந்த வாறே உபேஷிப்பர்கள் —
ஏக பிரகாரமாக சந்நிக்தனாய் இருப்பவன் அவனே- ஆன பின்பு -அவர்கள் போக்யர் அல்லர் —
அவனே நிரதிசய போக்யன் என்றும் –
இல்லை கண்டீர் இன்பம்-என்று தொடங்கி
துக்கங்களிலே சில வற்றை ஸூகம் என்று பிரமிக்கும் இத்தனை போக்கி அவனை ஒழிய
ஸூக ரூபமாய் இருப்பது ஓன்று இல்லை என்றும் –
யாதும் இல்லை மிக்கு அதனில்-என்று தொடங்கி
அவனை ஒழிய வேறு ஒன்றை ரஷகம் என்று பற்றினவர்கள் பண்டை நிலையும் கெட்டு
அனர்த்தப் பட்டு போவர்கள் –ஆன பின்பு அவனை ஒழிய உபாயம் இல்லை என்றும் -இப்படி-
அவனை ஒழிந்தாருடைய அபந்துவத்தையும் -அரஷகத்வத்தையும் –அபோக்யத்வத்தையும் —
அஸூகத்வத்தையும் –அனுபாயத்வத்தையும் –
அதுக்கு பிரதி கோடியான -அவனுடைய –
பரம பந்துத்வத்தையும் –நிருபாதிக ரஷகத்வத்தையும் –நிரதிசய போக்யதையும் –
ஸூக ரூபத்தையும் –நிரபேஷ உபாயத்வத்தையும் –தர்சிப்பித்து-
இம் மட உலகருடைய அபாந்தவாதிகள் பிரதி சம்பந்தியை அவர்களுக்குக் காட்டி என்று
வாக்ய யோஜன க்ரமம்–

—————————————————-

6-மற்று ஓன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்தோபாயம்
அதாவது-
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம்- மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-என்று இதுக்கு மேல் சொல்லல் ஆவது ஓன்று இல்லை –
இது தன்னை ஸூக்ரகமாக சொன்னோம் –மகா பிருத்வியில் சகல ஆத்மாக்களுக்கும் இது தனக்கு பரக்க
ஆயாசிக்க வேண்டா – சிந்தா மாத்ரமே அமையும் –கேளி கோள் -என்கையாலே –
தனக்கு மேல் ஓன்று இன்றியே இருப்பதாய்
ஸங்க்ரஹேன உபதேசிக்கலாய் –
சர்வாதிகாரமாய் –
வரண ஸூகரமுமாய் -இருக்குமதாய் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் -என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று
கிருஷ்ணனை ஒழிய வேறு உபாயம் இல்லை என்கையால்-
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வ சக்தியாய்
நிர் பயமாய்
ப்ரப்தமாய்
சகாயாந்தர நிர பேஷமாய்
இருக்குமதாகவும் சொல்லப் படுமதாய்
வட மதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல்-என்கிற
யாவதாத்மபாவியான -குண அனுபவத்துக்கு உடலான -சித்தோ உபாயத்தை உபதேசித்தும் –

————————————————

7-அதில் துர் பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை
வாடா மலர் இட்டு அன்பராம் சாங்க பக்தி –
அதாவது-
சக்ருதேவ ஹி சாஸ்தார்த்த க்ருதோயம் தார என்னரம்
நராணாம் புத்தி தெவ்பல்யா துபாயாந்தர மிஷ்யதே -என்கிறபடியே
அந்த சித்தோ உபாயத்தில் மகா விசுவாசம் பிறக்கைக்கு அடியான
பாக்கியம் இல்லாமையாலே -இதர உபாய பரித்யாக பூர்வகமாக
அதில் இழிகையில் விசுவாசம் இல்லாமை யாகிற புத்தி துர் பல்யம் உடையவர்களுக்கு –
மாலை நண்ணி தொழுது எழுமினோ –காலை மாலை கமல மலர் இட்டு நீர் –
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் –தனதன்பர்க்கு -என்று
பக்தி யுக்தராய் கொண்டு சர்வ காலமும் புஷ்ப்யாதி உபகரணங்களாலே -அவனை சமாராதனம் பண்ணி
அவன் பக்கலிலே பக்தி நிஷ்டர் ஆகுங்கோள் -என்று
அங்க சகிதையான பக்தியை உபதேசித்தும்
அதில் அசக்தருக்கு தாள் அடையும் பக்தி
அதில் துஷ்கரத்வம் -விளம்ப பயம் -ஆகிய வற்றால் அனுஷ்டிக சக்தர் அல்லாதவருக்கு –
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -என்று
நிவ்ருத்தி சாத்தியம் ஆகையாலே
ஸூகரமாய்
சர்வாதிகாரமுமாய்
சரீர அவசானத்திலே பல பிரதமுமான பிரபத்தியை வெளி இட்டும்–

——————————————————–

8-அதில் அசக்தருக்கு உச்சாரண மாத்ரம்-
அதாவது
உபாய பல்குத்வ பல கௌரவ விரோதி பூய ஸ்தவங்களாகிற சங்காத்ரயத்தாலே
அதில் வ்யவசாயதுக்கு உடலான சக்தி இல்லாதார்க்கு –
திரு கண்ண புரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று
வசனத்தை பற்றாசாக பிடித்து அவன் திருத்திக் கொள்ளும் படியான
உச்சாரண மாத்ரத்தை வெளி இட்டும்
சர்வ உபாய சூன்யருக்கு இப் பத்தும் பாடி யிடும் தொண்டன் என்று
உச்சாரணம் தனக்கும் தாமாக ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஷமர் அன்றிக்கே –
கீழ் சொன்ன உபாயங்கள் எல்லா வற்றிலும் -அயோக்யராய் இருப்பார்க்கு –
இப்பத்தும் பாடி யாடி பணிமின் அவன் தாள்களையே -என்று இத் திரு வாய் மொழியை
பிரீதி பிரேரராய் கொண்டு பாடி அவன் திருவடிகளில் விழுங்கோள் என்று

ஸ்ரீ கீதாச்சர்யனைப் போலே அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் ஒன்பதாம் பத்தில் ..
அதாவது
ஸ்ரீ கீதோ உபநிஷதாச்சர்யன் தன்னுடைய பரம கிருபையால்-
நெறி எல்லாம் எடுத்து உரைத்த –4-8-6-என்கிறபடியே சேதனருடைய ருசி அனுகுணமான உபாயங்கள்
எல்லாவற்றையும் உபதேசித்தாப் போலே
இவரும்
பிராப்தி அணித்தவாறே சம்சாரிகள் ஒருவரும் இழக்க ஒண்ணாது என்கிற கிருபையால் எல்லாம் எடுத்து உரைத்து –
அவ்வவருடைய அதிகார அனுகுணமாக உபாயங்கள் எல்லாம் உபதேசித்து அருளுகிறார்
ஒன்பதாம் பத்தில் என்கை-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்- ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -226..

December 24, 2011

எட்டாம் பத்தால்-

கீழ் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக -பூர்வோக்த
உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து -இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..

——————————————-

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
2-தலைச் சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல
பிரத்யு உபகாரமாக வேந்தர் தலைவன்
கன்யகா தானம் போலே ஆரத் தழுவி
அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே
அதீவ விளங்கிப் பணைத்து
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார்
என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே
ப்ரீதி வர்த்தித்து
4-தித்திக்க உள்ளே உறைந்தது கண்டு கொண்டு இருந்து
அமானுஷ போகம் ஆக்கினவன்
5-மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய்
மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைகே காட்ட
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்ய ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில் ..

(சத்யகாமன் -ஆத்மலாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து –
அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் –
காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-
வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் / ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )

————————————–

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
அதாவது-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் –
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் –
நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் –
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும்
லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய –
அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் –
தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக
த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி —
கீழ் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான –
போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே
சத்ய காமனாய் இருக்கிறவன்-

கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று
தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று
தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே –
உமர் உகந்து உகந்து -6-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் –
இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்-என்று
தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று
சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக

————————————-

2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக-
அதாவது-
தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி-
மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5-
என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க -அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான
க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –
வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி
ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின
பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –
விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –
ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –
இயம் சீதா மம ஸூதா சஹா தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –
தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு
அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே
அதீவ விளங்கிப் பணைத்து
அதீவ ராமச் சுசுபே -என்றும்
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா -ஆரண்ய-37-18–என்றும்
அவளைப் பெற்று விளங்கினாப் போலே –
சோதி-8-1-10- -என்று
இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து
கொடுத்தாப் போலே -அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து
அத்யுஜ்வல்லனாய் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி
சதசாகமாகப் பணைத்து-

————————————

3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-
அதாவது –
ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில்
பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று
திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –
ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ -அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று
அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று
தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும்
திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –
அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு -துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே
தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –
வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து -நிர்பரராய் –
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே -என்று
அவனோடு பொருந்தி அனுபவித்து -விஸ்லேஷ தசையிலே -அவள் –
ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வயசன பரம்பர யாதி பீட்ய மானா
சஹ சர ரஹீதேவ சக்ர வாகிஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று
நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று
அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –
கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –
ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –
ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று
குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —

————————————————–

4-தித்திக்க உள்ளே உறைந்தது-
அதாவது –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று
எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே –
உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் ,
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று
அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு
இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –

கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்
அதாவது –
இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று
தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே
இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன
புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-
(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று
விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –
மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் –
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7-
என்று வித்தராய்ப் பேசும்படி -அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-

——————————————

5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது –
அருவினை நோய் மறுவலிடாமல்-
மருள் தானீதோ—8-7-1-என்றும்
பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -என்றும்
அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்-
உகப்பு செல்லா நிற்கச் செய்தே –

மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது
சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று
தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –
1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் –
வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் –
அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்-
2-பொரு மா நீள் படையிலே –1-10-
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –
3-அம் தாமத்து அன்பிலே –2-5-
அல்லாவி உள் கலந்த -என்றும் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –
இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே -மூன்று தத்துக்கு இவர் பிழைத்த
அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி –
இனி இவர் தாம் அகலுகிறது -வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே –
இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –

அது மறுவல் இடாதபடியாக –
அதாவது –
நமக்கு கௌஸ்துபம் போலவும்
ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் –
அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று –
சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –
யானும் தானாய் ஒழிந்தான்-8-8-4 -என்றும் –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும்
நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க

——————————————————-

6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் –
நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -என்றும் –
அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -என்றும் –
அன்று மற்றோர் உபாயம் என் -என்றும் –
யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –
அவ்வளவும் அன்றிக்கே –
மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு –
என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய
சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்-
இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே சபரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும்
நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று –
இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-

—————————————–

7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில்
அதாவது
தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-
தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் -இரு கரையர் -ஆகாதபடி-
(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-)
திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ -வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-
திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் –
இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை
உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித் தான நகரை
உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று
கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –
பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –
தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -225..

December 24, 2011

ஏழாம் பத்தால்

உபாய க்ருத்யதுக்கு உபேஷிதமான விசித்ர சக்தி யோகத்தாலே –
யதாஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு கொடுக்கக் கடவதான பரம பதத்தைத் தானே உபாயமாக கொடுக்கும் இடத்தில் –
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் சத்ருவுக்கும் உள் படக் கொடுக்க வல்ல சர்வேஸ்வரன் திரு அடிகளை
ஷண காலமும் பிரிய ஷமரும் இன்றிக்கே –சாங்க பிரபதனம் பண்ணின -தம்மை-விஷயங்களிலே மூட்டி –
தன் பக்கலிலே சேராதபடி -அகற்றுமவையான -இந்திரியங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் -வைக்கக் கண்டு –
விஷண்ணராய்க் கூப்பிட்டு –
தம் தசை தாம் பேசமாட்டாதபடி -தளர்ந்து
பிறரால்- மீட்க ஒண்ணாதபடி -அபருஹ் சித்தராய் —
அவன் தன் விஜயங்களைக் காட்டி இவரைத் தரிப்பிக்க –
அந்த தரிப்பும் சம்சாரிகள் இழவைப் பார்த்து நினைத்து சுவறி பழைய வார்த்தியே தலை எடுத்து –
அனுபாவ்ய விஷயம் -ஸ்ம்ருதி விஷயமாய் ஒரு முகம் செய்து -நலிய நோவு பட்டு-
இப்படி எடுப்பும் சாய்ப்புமாக கிலேசம் செல்லச் செய்தே
-உபாய பூதனான உனக்கு ஞான சக்திகளிலே குறைவற்று இருக்க –
எனக்கு ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களிலும் ஆர்த்தியிலும் குறை வற்று இருக்க –
என்னை சம்சாரத்திலே வைக்கைக்கு அடி என் என்று கேட்க –
அவனும்
நமக்கும் நம் உடையாருக்கும் இனிதாக திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காணும்
என்று அருளிச் செய்ய –
வ்யாசாதிகள் முதல் ஆழ்வார்கள் கவி பாட உண்டாய் இருக்க நம்மைக் கொண்டு கவி
பாடுவித்துக் கொள்வதே என்று அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –
அதுக்கு பிரதி உபகாரம் தேக் காணாமையாலே –
இனி இது ஒழிய செய்யலாவது ஓன்று இல்லை-என்று
திரு வாறன் விளையிலே-பெரிய பிராட்டியாரோடு எழுந்து அருளி இருக்கிற பேர் ஓலக்கத்திலே –
திரு வாய் மொழி கேட்பித்து -அடிமை செய்வதாக மனோரதித்து –
அங்கே தம் திரு உள்ளம் பிரவணம் ஆகையாலே -பரம பதத்தில் இருக்கும் இருப்பையும் உபேஷிக்கும் படி ஆனவர் –
கீழ் தம்முடைய உபாய நிஷ்டை வெளி இடும்படி புகுர நின்றவர்களுக்கு –
திரு வாறன் விளையே -பிராப்யம் –அங்கு எழுந்து அருளி நிற்கிறவனே உபாயம் -என்று
தாம் அறுதி இட்ட பிராப்ய பிராபகங்களின் முடிவை தம் முகப்பாலே வெளி இடுகிறார் என்கிறார் —

——————————————

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே
2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க
வல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை
3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான்
சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக்
4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில்
திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித்
5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப்
பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி
6-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும்
பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க
உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த
வைசித்திரியைக் கேட்க
7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை
அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர்
எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே
8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக
கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்
9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான்
சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

——————————————-

1-எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன்
மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே-
அதாவது-
எண்ணிலா பெரு மாயனே-7-1-1–என்று
எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே என்றும் –
குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய் படைத்து அளித்து கெடுக்கும் –7-1-1-
என்று சத்வாதி குண அனுகுணமான மூர்த்திகளைக் கொண்டு சிருஷ்டியாதிகளை பண்ணுபவன் என்றும் –
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் -7-2-7–என்று
இடமறிந்து சுக துக்கங்களை கல்பித்தவன் என்றும்
ஊழி தோர் ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் -7-3-11-என்று
கல்பம் தோறும் ரூப நாம சேஷ்டிதங்களை வேறாக உடையனாய்க் கொண்டு ஜகத்தை ரஷிக்கும் என்றும் –
மாய வாமனனே -7-8-7–என்று ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்றும் –
உள்ளப் பல் யோகு செய்து -7-8-4–என்று திரு உள்ளத்தில் பல ரஷண உபாய சிந்தைகளும் பண்ணி நிற்றி என்றும்
இப்படிப் பல விதமாகச் சொல்லப் பட்ட உபாய க்ருத்யத்துக்கு
அபேஷிதமான ஆச்சர்ய சக்தி யோகத்தாலே

———————————————–

2-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிராபகத்வம்
புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்க வல்ல சர்வ சக்தி-
அதாவது-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் – 7-5-11-என்றும்
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் 7-6-10–என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானே என்று அத்யவசித்து -பின்னை
நாட்டார்கள் செயல்களைக் கண்டு ஆதல்- யுத்தி ஆபாசம் கொண்டு ஆதல் –பிற்காலியாதே நின்று –
அவர்களுக்கு நிரதிசய ஆனந்த யுக்தமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தால் ப்ராபிக்க ஒண்ணாது இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை
தன் அருளால் கொடுக்கிற தன் உபாயத்தை –
புற்பா முதலா புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1–என்றும்
நாட்டை அளித்து உய்யச் செய்து-7-5-2- -என்றும் –
சேட் பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட் பால் அடைந்த-7-5-3- -என்றும்
ஜ்ஞானம் லேசமில்லாத திர்யக் ஸ்தாவரங்களும்
பிராதி கூல்யத்தில் முதிர நின்ற சத்ருவுக்குக்குமாம் படி பண்ண வல்ல சர்வ சக்தி யானவன் –

பாதமகலகில்லா தம்மை-
அதாவது-
அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும்-6-10-9- -என்று
தன் திருவடிகளை ஷண காலமும் அகல சக்தர் அன்றியே –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்—6-10-10-என்று சரணம் புக்க தம்மை-

——————————————-

3-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு-
அதாவது-
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை -5-7-8–என்று
தன் திருவடிகளைக் கிட்டாதபடி அகற்றவற்றான இந்திரியங்களின் நடுவே –
இவ் உடம்பிலே இருக்கும் படி வைக்க கண்டு-

நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டு
அதாவது-
நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -7-1-1–என்றும்
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்-7-1-10- -என்றும் –
விண்ணுளார் பெருமானேயோ -7-1-5–என்றும் –
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தீயோ-7-1-10- -என்று
விளம்ப ஹேது இல்லாத உபாயத்தை பரிக்ரஹித்தால் அது பல பிரதமாம் படியும்
கிடந்து கூப்பிடும் இத்தனை ஆகையாலே -கீழ் தாம் பரிக்ரஹித்த உபாயத்தின் பலமாய் வந்ததாய் –
கலங்கா பெருநகரம் கலங்கி -அவனுக்கு அங்கு குடி இருப்பது அரிதாய் வந்து
விழ வேண்டும் படியான சம்சாரத்தில் -அடிக் கொதிப்பால் வந்த பெரிய
ஆக்ரோசத்தோடே கூடிக் கொண்டு தம் தலையால் வந்தததையும் அவன் தலையில்
ஏறிடும் படியான பிராப்தியை உணர்ந்தவர் ஆகையாலே –இந்திரியங்களை இட்டு
நலிவிக்கிறாய்-நீ என்று அவன் மேல் பழி இட்டு –
(பிரஜை தெருவிலே இடறித் தாய் முதுகிலே குத்துமா போலே -ஸ்ரீ வசன பூஷணம் )

————————————————

4-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி-
(திரு விருத்தத்தில்–62-(-இதுவே கங்குலும் பகலுமாக விரிந்தது )-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் -ஈங்கு இவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -பாசுரப்படி இங்கு முறை கெட்ட -என்று அருளிச் செய்கிறார் )
அதாவது-
கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை-
அதாவது–
இப்படி கூப்பிட தானும் ஷமர் அன்றிக்கே -அவசந்னராய் கொண்டு -ஒரு பிராட்டி தசையை அடைந்து –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-
இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும் –
சிந்திக்கும் திசைக்கும் -இத்யாதிப் படியே
திவாராத்ரா விபாகமற -அழுவது -தொழுவது -மோகிப்பது -பிரலாபிப்பது —
அடைவு கெடப் பேசுவது -நெடு மூச்சு எறிவது -அது தானும் மாட்டாது ஒழிவது –
ஸ்தப்தையாய் இருப்பது -இப்படி ஆர்த்தி விஞ்சி செல்லுகையாலே –
ஆசா சிந்தா ஸ்ம்ருதி கீர்த்திர் விலாபோன்மாத விப்ரமா
மோஹோ வியாதிர் ம்ருதிச்சேதி விகாரா காம ஜாதச -என்றார் போலே
அவஸ்தைகளுக்கு அடைவு பிடிக்க ஒண்ணாத படி நடக்கிற ஆர்த்தியை-
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிற கோவில் திரு வாசலிலே
பெண் பிள்ளையைப் பொகட்டு திரு தாயார் கூச்சு முறை தவிர்ந்து -தானே இவள் தசையை அவருக்குச் சொல்லி –
திரு வரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாய் –
என் செய்திட்டாய் –
என் சிந்தித்தாய் –
என் செய்கேன் திரு மகட்கு -என்று
அவர் தம்மையே கேட்கும் படி அத்யாவசாதம் பிறந்து-

அடைவற்ற அரதியை -என்ற பாடமான போது –
கங்குலும் பகலும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே திவாராத்ரா விபாகமற
அழுவது-தொழுவது -இத்யாதிகளாலே -ஆசா சிந்தாதிகளில் போலே
அவஸ்தைகளுக்கு ஓர் அடைவு பிடிக்க ஒண்ணாதபடி நடக்கிற அரதியை
என்று யோஜிக்கவுமாம்–

———————————————

5-தேற்ற ஒண்ணாதபடி தோற்று-ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
தேற்ற ஒண்ணாதபடி தோற்று-
அதாவது-
அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா -என்றும் –
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று
பார்ஸ்வச்தராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய் கொண்டு
பாரதந்த்ர்யமும் இழந்து –(வெள்ளைச் சுரி சங்கு சாரம்)-

ஒன்றி நிற்க பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி-
அதாவது-
இப்படி விரஹ வ்யதையாலே மிகவும் தளர்ந்து இருக்கிற இவரைத் தரிப்பைக்கைகாக தன்
விஜய பரம்பரையைக் காட்டிக் கொடுக்க கண்டு ப்ரீதராய் –
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றி நின்ற சடகோபன் -என்று
தன் விஜயத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு பொருந்தி இருக்கும்
படி பண்ணின பல தானமானது –(ஆழி எழ சங்கும் எழ சாரம்)
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்று
அவதார பிரயுக்த சௌலப் யத்தை உடையவனாய் -ப்ரிய பரனுமாய் -ஹித பரனுமாய் –
தான் அங்கீகரிக்க நினைத்தாரை -நிர்ஹேதுகமாக -மோஷ பர்யந்தமாக -நடத்தும் அவனுமாகிய
இவனை ஒழிய -மற்றும் ஒரு விஷயத்தை கற்பரோ -இப்படி சுலபமான இவ் விஷயத்தை
சம்சாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவை அனுசந்தித்து -அதிலே சுவறி-( கற்பார் ராம பிரானை அல்லால் சாரம்)

———————————————-

6-பழைய தனிமை கூப்பீடு தலை எடுத்து –
அதாவது
பாமரு மூ உலகும் படைத்த பத்மநாபாவோ-என்று தொடங்கி
தனியேன் தனை யாளாவோ – என்று
ஒரு துணை அன்றிக்கே இருந்து -அவனுடைய ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லிக்
கூப்பிடும் படி -முன்புத்தை –
உண்ணிலாவியில் -கூப்பீடே மீளவும் தலை எடுத்து-

சூழவும் பகை முகம் செய்ய-
அதாவது
சூழவும் தாமரை நாண் மலர்போல் வந்து தோன்றும் -என்றும் –
இணைக் கூற்றம்கொலோ அறியேன் -என்றும் –
கண்ணன் கோளிழை வாண் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே -என்று
முன்பு அனுபவித்தவனுடைய-முக அவயவ சோபையானது – விசத ஸ்ம்ருதி விஷயமாய் –
பார்த்த பார்த்த இடம் எங்கும் தோன்றி நின்று நலிய-
(திரு முக மண்டலத்தில் திருக்கண்கள் -திரு மூக்கு -திரு வாய் – திருப்புருவம் -திருக்காது -திருநெற்றி
முதலானவை நலிவதால் சூழவும் பகை முகம் செய்ய என்கிறார் )

-எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க-
அதாவது
விஜயங்களைக் காட்டித் தரிப்பித்த போது தலை சாய்ந்தும் -மீளவும் கூப்பிடும் படி தலை எடுத்தும்-
இப்படி எடுப்பும் சாய்ப்பும் ஆக செல்லுகிற கிலேசம் நடவா நிற்கச் செய்தே-

உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க-
அதாவது
உபாய பூதனான உனக்கு அஜ்ஞான அசக்திகளாகிற தோஷம் இன்றிக்கே இருக்க –
சரண்யனான எனக்கு -ஆகிஞ்சன்யம்-அநந்ய கதித்வங்களும் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி தோஷம் இன்றிக்கே இருக்க –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி
மாயங்கள் செய்து வைத்தி -என்று
அவித்யா கர்ம வாசன ருசிகளை -சவாசனமாகப் போக்கி -உனக்கு
அனந்யார்ஹ சேஷம் ஆக்கிக் கொண்ட பின்பு ஜன்ம மரணாத் யாச்சர்யங்களை உண்டாக்கி –
என்னை சம்சாரத்தில் வைத்த ஆச்சர்யத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்க-(மாய வாமனன் சாரம்)

—————————————

7-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய-
அதாவது
அவன் -நமக்கும் நம் உடையாருக்கும் -போது போக்காகா உம்மைக் கொண்டு திருவாய் மொழி
பாடிவித்து கொள்ள வைத்தோம் காணும் –என்று கர்மம் அடியாக அன்றிக்கே-
தன் இச்சையாலே இருத்தி –

உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய
அதாவது
உறப் பல இன் கவி -என்கிறபடியே
தனக்கு தகுதியான கவிகளைப் பாடுவித்து கொண்ட ஸ்வ பிரயோஜனமும் –
பர பிரயோஜனமுமான -வித்தை -வைத்ததுக்கு ஹேதுவாக அருளிச் செய்ய-

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே-
அதாவது
வியாச பராசர வால்மீகி பிரப்ருதிகள்-முதல் ஆழ்வார்கள் -உண்டாய் இருக்க –
தம்மைக் கொண்டு கவி பாடு வித்த உபகாரத்தை அனுசந்தித்து –
என் சொல்லி நிற்பானோ-என்றும் ,
எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ -என்றும் ,
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் ஆர்வேனோ –
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ -என்று
அவன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்-எங்கனே நான் தரையில் கால் பாவுவது –
அவ் உபகாரத்தை கால தத்வம் உள்ள அளவும் அனுசந்தித்தாலும் -பர்யாப்தன் ஆகிறிலேன் –
சகல ஸ்தலங்களிலும் உண்டான சகல சேதனருடையவும்-வாகாத் யுபகரணங்களை-
நான் ஒருவனே யுடை யேனுமாய் — கால த்ரயத்திலும் -பேசி அனுபவித்தாலும் -த்ருப்தன் ஆவேனோ –
உதவிக் கைம்மாறு -என்று தொடங்கி –
எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -என்று இதுக்கு பிரத்யு உபகாரமாக
ஆத்ம சமர்ப்பணைத்தைப் பண்ணுவோம் -என்னில் -அதுவும் -ததீயமாய் -இருக்கையாலே –
உபய விபூதியிலும் செய்வது ஒன்றும் இல்லை என்னும் படியான உபகார ஸ்ம்ருதியோடு கூடிக் கொண்டு –

———————————————–

8-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே
பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர்-
அதாவது-
செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் -பெருமாள் திருமொழி -10-8—என்கிறபடியே –
பிராட்டியை ஒழிய பெருமாள் தனி இருந்த இருப்பிலே குசலவர்கள்
ஸ்ரீ ராமாயணம் கேட்பித்தாப் போல் அன்றிக்கே –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் எழ உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்று இருந்து -என்று
ஆனந்த மயனான தனக்கும் -ஆனந்த வர்தகையான பிராட்டியும் தானுமான சேர்த்தியில் –லோகம் அடங்க வாழும் படி –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த வேறு பாடு தோற்ற எழுந்து அருளி இருந்த –
நிலத் தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திரு வாறன் விளையில்-அந்த பூ சூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே –
பிரத்யு உபகாரமாக திரு வாய் மொழி கேட்விப்பித்து அடிமை செய்ய பாரித்து –
திரு வாறன் விளையில் பரத்வ விமுகமாம் படி தன் நெஞ்சு பிரவணம் ஆகையாலே –
திருவாறன் விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின் — சிந்தை மற்று ஒன்றின் திறத்து
அல்லாத் தன்மை -தேவ பிரான் அறியும் -என்று
பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –
ஹாவு ஹாவு -என்று சாம கானம் பண்ணும் பரம பதத்தில் கோஷ்டியையும் –
ஸ்வதஸ் சர்வஜ்ஞனாய் -நினைவுக்கு வாய்த் தலையிலே இருந்து –
எல்லோருடைய நினைவும் அறியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி அறிய விஸ்மரித்தவர் –

———————————————

9-சரமோ உபாய பரர் ஆனார்க்கு
அதாவது
கீழ் தாம் அருளிச் செய்யக் கேட்ட (அகலகில்லேன் இறையும் பாசுரத்தில்) ஸித்த சாதனத்திலே- தத் பரர் ஆனவர்களுக்கு
நீள் நகரமது -துணித்தான சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று
பிராப்ய சாதன அவதியைப் ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் .
அதாவது –
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திரு வாறன் விளை –
வாணனை ஆயிரம்தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்-என்றும்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று
நிரதிசய போக்யமான திரு வாறன் விளை யாகிற மகா நகரமே பிராப்யம்–
அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா அநிருத்த கடகன் ஆனவனே அந்த பிராப்யத்துக்கு பிராபகம் –
இவ்வர்த்ததில் மாறாட்டம் இல்லை -ஆகையால் இவ் அர்த்தத்தில் ருசி உடையார் புத்தி பண்ணுங்கோள் என்று –
பிராப்யத்தினுடைய அவதி ததீய விஷயம் என்றும் –
பிராபகத்தினுடைய அவதி அர்ச்சாவதார ஸூலபன் என்றும் –
இவ்வர்த்தத்தை தம்முடைய உகப்பாலே வெளி இட்டு அருளுகிறார்- ஏழாம் பத்தில் என்கை.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு பாவை- அனுபவம் -7-கீசு கீசு என்று ..

December 24, 2011

அஞ்சும் குடிக்கு சந்ததி -அஞ்சு -முதல் ஆழ்வார்கள்-திரு மழிசை நம் குலசேகரர்  பெரி ஆழ்வார் –

ஆழ்வார் செயலை விஞ்சி இருந்தால்
ஜன்ம சித்தி ச்த்ரீத்வம்-காதலில் உயர்ந்து
கோதுகலமுடைய பாவாய் -ஆசை உத்சாகம் மிக்கு
கீழ் வானம் -வெளுத்தது
உங்கள் முகம் கிழக்கே பார்த்து -ஒழி வீசி பிரதி பலிக்க
எருமை சிறு வீடு-பனி புல் மேய —மேய்வான் பரந்தன -காண் –
உங்கள் காந்தியில் இருள் விலக -பார்த்தால் எருமை போல்-
போவான் போகின்றாரை-போகாமல்-உனக்காகா காத்து வைத்து
உன்னை கூவுவான் வந்து நின்றோம்-கோதுகல முடிய பாவாய் -எழுந்திராய்
உன் கண்ணன் காதல் அனுபவிக்க வேண்டுமே –
எதற்கு கேட்டாள்-பதில்
பாடி பறை கொள்ள
என்ன பாட கேட்டால் -பதில்
 மா வாய் பிளந்தான்-கேசி காட் –
மல்லரை மாட்டிய -கோகுல மதுரை சரித்ரம்
தேவாதி தேவன் எனப் படுவான்முன்னொரு நாள் மா வாய் பிளந்தான் -முதல் ஆழ்வார்
தீவு தாது -தேவன்- விளையாட்டு
சென்று நாம் சேவித்தால்-அவனே கொள்வதிருக்க -நாம் சென்று –
சேவித்தால்-ஆல்- சங்கை-ஆலோ -பாத பூர்ணம்-ஆச்சர்யம் மூன்று காரணம் –
சுலபத்தில்-நடக்காது -நெடு மரம்  கலம் கரை சேர்வது போல் ஆல்-ஆகா -அவன் ஆகா காரம் செய்வானாம்
அருளுவான் –
கீசு கீசு -அனுபவிப்போம் –
பேய் பெண்ணை-பாகவத பிரபாவம் அறிந்து மறந்து -இருக்கிறவள் –
ராமானுஜர் நியமனம்-வியாக்யானம்-கலந்து –
வலியன்குருவி-கீசு கீசு-வரும் வரை தரிக்க பேசி கொண்டு -கலந்து
சம்பாஷணம்-போத எந்த பரஸ்பரம்
வெவேறு ஒலி-காசு பிறப்பு/மதத்தின் ஓசை/நாம சங்கீர்த்தனம் ஒலி
பாகவத ஸ்லோகம் -இதே போல்
உத்காயதீனாம் அரவிந்த லோசனாம்
விரஜை தாண்டி ஒலி ஒழிக்க -மங்கலம் எங்கும் நிறைத்தது -கண்ணனை காண கூப்பிட்டதாம் –
மூன்று ஒலியும் -ரகஸ்ய திரைய சப்தம் –
திரு எட்டு -அனைத்தும்-வேதம்- அடங்குமே
-வியாதி -துர் பிஷம் திருடர் இருக்காதே –
இதையே குறிகிறாள் ஆண்டாள்
நாயக பெண் பிள்ளாய் -இவள் தானே -கண்ணனால் ஆபத்து -வந்தால்
நாராயணன்-மூர்த்தி -கேசவனை
திரு மந்த்ரம் துவயம் நினைவு கூற –
கண் காணாமல் நின்று வர்த்திக்கும் வத்சலன்-நாராயணன்
மூர்த்தி- வடிவுடன் இருந்து ரஷிகிறான் -பிரம த்யானம் ரிஷிகள்
/நம் போல்வார் அனுபவிக்க திரு மேனி வேண்டுமே சௌசீல்யம் –
கேசவன்-கேச கந்தம்—காசி முடித்து கேச பாசம் குழல் அழகர் -கிலேச நாசன்
-க பரமன்-ஈச ருத்ரன்-இருவருக்கும் நியாமகன் –
கெடுமிடர் ஆய எல்லாம் -கேசவா -ஆழ்வார் –
இங்கு கேசி கொன்று-நம் விரோதி போக்க -படை எடுப்பு -தடங்கல்- போக்கி நம்மை கொள்வான் –
பேய் பெண்-அதிக்ரமிது -அறிவு கேடி-மதி கேடி-அழைக்கிறாள் –
பாகவத பிரபாவம் அறிந்து மறந்து
ஆள் கொண்ட வில்லி ஜீயர் -ஐதீகம்- நஞ்சீயர்–இடம் சொல்லிய வார்த்தை தனியாக சேவித்து
என்ன சேவித்து என்-பேய் பெண் போல் நடந்தேன் –
ராமானுஜர் ஆறு கட்டளைகள்-ஆறாவது மறந்து இருக்கிறாள் -வியாக்யானம் –
அஸ்துதே-நம் பெருமாள் அருளி-நாமும் உய்ந்து போகிறோம் –
அவதரித்து கிருஷி-செய்து தயார் செய்ய -தளிகை கண்டு அருளி செய்வது போல் ஆச்சார்யர் –
வரவாறு ஓன்று இல்லையேல்-கிருஷி பலித்தது -சிருஷ்டி அவதார முகேன செய்த கிருஷி பலித்து –
உபகார பரம்பரைகள் -எல்லா வியாக்யானங்களில் முதலில் இவை இருக்குமே –
பத்தி உழவன் -ஷேம கிருஷி பலம் ஸ்ரீ மன் நாராயணன் –
ஆறு கட்டளை படி இருந்தால்-கிடைக்கும் -நமக்கும் ஸ்வாமி-போல்-
விதுரர் த்ரிருத்ராஷ்திரன்-மருந்தும் பத்தியம் இரண்டும் அறியாமல் இருக்கிறாய்-
சம்சாரம் நோய் – லோகமாகிய நோய் -போக்க அமுதம்
நச்சு மா மருந்து என்கோ நலம் திகள் அமுதம் என்கோ
ஆறும் விருந்தாக இருக்கிறதே -போக்கியம்
ஸ்ரீ பாஷ்யத்தை வாசிப்பித்து போக வேண்டும்-வாசித்து -உபதேசித்து -முதல் கட்டளை –
விசுவாசம்-நம்பிக்கை-வேண்டும் -முடிந்த அளவு முயல வேண்டும் –
ஸ்ரத்தை மேல் மேல் தூண்டும் -ஒன்பது கிரந்தங்கள்-வேத சாஸ்திரங்கள் அனைத்தும் அறிய வேண்டும் –
அடுத்து-இதை செய்ய முடிய வில்லை என்றால் –
அருளி செயல்-அர்த்தம் உடன் கேட்டு -மற்றவருக்கு எடுத்து சொல்–இரண்டாவது –
விடாமல் இதை கூட சொல்கிறார் -நல்லான் சக்கரவர்த்தி -காள மேகம் போல் -சம்ரதாயம் பரப்பி-
மூலம்-அறிந்து அர்த்தமும் அறிய வேண்டும் -அனுஷ்டானம்-ஆனந்தம்   அனுபவம்
அர்த்தம்-அனுஷ்டானம்-ஆனந்தம் -தொடர் சங்கிலி –
கீசு கீசு-கலந்து பேசினது தான் இவை இரண்டும் –
அடுத்து-
பக்தி  வளர -விபூதி யோகம்-விஸ்வரூப தர்சனம் காட்டிய பின்பு -விச்வமே யாருக்கு ரூபமோ அதை காட்டி –
வளர்ந்த ரூபம் இல்லை -பாண்டிய தூதன்-திரு விக்ரமன் -போல் இல்லை-
பல பரிமாணங்களில் அனைத்துமே அவனாக காட்ட –
தன்னையே -நடக்கும் யுத்தம் -நடக்க போவதும்
வாசு தேவன் பிறந்த போலுதுய் காட்டி மறைத்து போல்
ஆழ்வாருக்கு காட்டி- மறக்காமல் வைக்க அனுக்ரகம்-
அர்ஜுனன்  இடம் கண்ணன் அருளியது போல் -பக்தி -முடியாதா -குண த்யானம்–ஞான யோகம் –
முடியாதா கர்மம் யுகம்-திரி வித த்யாகம் உடன் -மனஸ் வியாபாரம் கஷ்டம்-
காயிக வியாபாரம் செய்து-நாங்கள் எங்களுக்காக செய்து பழக்கம்-
 உன்னை குறித்து செய்வது -அஆத்மா த்யாகம் செய் விதித்தார் அடுத்து –
மர்மம்-உண்மை ஸ்வரூப ஞானம்
ஞான மாயம்-தேக விலஷனம்–அவனுக்கு அடிமை அறிவு வருமே
இது மேல் வரை கூட்டி போகுமே –
அவன் விஷயம் விட்டு நம் விஷயம் ஒன்றம் இல்லையே -அனைத்தும் அவன் பிரகாரம் –
கண்கள் சிவந்து -நேராக மாறி
ஆழ்வார் விலக -நைச்ய பாவத்தால் –
அவனை பற்றி பேசினால்கேட்பேன்-ஆழ்வார்-முதல் 2  பாசுரமும் -அடுத்து 1 /2 பாசுரம்-தன்னை பற்றி அருளி’
ஆத்மாவும் இப்படி என்று காட்டி -அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-
யானும் தானாய் ஒழிந்தானே-
தன் திரு மேனி அழகு -காட்டி- இதன் சின்ன அம்சம்நீர் பிரகாரம்-

இல்லை சொன்னால் சாஸ்திரம் மரியாதை –
ஆத்மா இயற்கையில் உயர்ந்தது-அவனுக்கு சமம் காட்டி
பரமாத்மா நிலை சொல்லி இறக்க வேண்டி அங்கு
அர்ஜுனனனுக்கு தன்னை பற்றி சொல்லி மேலே உயர்த்து
மூன்றாவது திவ்ய தேசம்-கைங்கர்யம்
தனிமையில் வாடுகிறான் -தன்னை காணயாராவது –
சேராது உண்டோ பெரும் செல்வருக்கு
ராமானுஜர் திவ்ய ஆக்ஜை அபிவர்த்தி –
சம்சார வியாதி போக்கும் மருத்துவர் -அமுது படி சாத்து படி -சாத்தி -சாத்த வேண்டும்
தைல காப்பு ஷேமம்-ஊருக்கே –மனம் உடைய பக்தர் வேண்டுமே -கைங்கர்யத்துக்கு –
பத்து கொத்து பரிகாரம் -நித்தியமே பழுதுபார்த்து -திரு பனி நித்யம்
நான்காவது -கட்டளை –
திரு நாராயண புரம் குடில் கட்டி கைங்கர்யம் செய் –
திவ்ய தேசவாசம் செய்து கைங்கர்யம் செய்ய -திருஷ்டாந்தம் -திரு நாராயண புரம்-
போதயந்த பரஸ்பரம்-கீசு கீசு –
நாராயண மூர்த்தி-உகந்து அருளின திவ்ய தேசம்-
நாராயண மூர்த்தி கேசவன்
ராம பிரியன்
ஐந்தாவது கட்டளை –
துவயம் அர்த்தத்துடன் சேர்த்து நித்ய அனுசந்தானம் செய்து கொண்டு-எங்கு இருந்தாலும் –
மர்மம்-இது செய்தால் மேல் அனைத்தும் தானே கிட்டுமே –
அப்பொழுதைக்கு அப்போலோது ஆரா அமுதம்
குரு பரம்பரையும் த்வ்யமும் ஸ்தப்தவ்யம் –
குரு பரம்பரை இல்லா விடில் -இதற்க்கு ஏற்றம் இல்லையே –
கேட்ட சிஷ்யர் உபதேசம் செய்ய வில்லையே
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்மூலம்-ஓர் ஆண் வழியாக
லஷ்மி நாதன்-நம் பெருமாள்-திரு அரங்க நாதன் தானே –
பங்குனி உத்தரம்-இருக்கும் நாள் -அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ச்குமாஸ்வ –
த்வயம் அர்த்தம் அனுசந்தானம்
ததைவ -யாவத் சரீரம் -என்றும் எப்பொழுதும்
பட்டர்-நஞ்சீயர்-த்வயம் சம்பாவனை அடிக்கடி-மடியில் தூங்கி
கோவை அம்மாள்-ராமானுஜர்-என்னமோ இருக்கணும் சேவிக்கிறார்கள்-த்வயம் இருக்கு
என்னை நம்புகிறார் -போலே –
இன்னொரு தரவை சொல்கிறீரா மறந்தேன் –
கவலை இன்றி போருமையாகுபதேசித்தார்
காசும் பிறப்பும் -தயிர் ஓசை -இது தானே -மூன்று ரகச்யங்களும்
கடைசி ஆணை-
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் நிழலில் இருந்து ஒதுங்கி கைங்கர்யம் செய்
இதை செய்தால் தானே மேல் கூட்டி செல்லுமே
தாயார் திரு அடியில் எழுந்து இருக்கும் திவ்ய தேசம் திரு நாராயண புரம்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே -இதனால் தான்
த்வயம் நிஷ்டை
சாஸ்த்ரத்தால் பேரு -திரு மந்த்ரம் –
பிராட்டியாலே பேரு-த்வயம் -பீபி நாச்சியார்-
லஷ்மி தேவியே திரு அடி கீழ் –

இந்த கட்டளையால்- அறிவு கேடி மதி கேடி -மறந்து இருக்கிறாயே
தேஜஸ் உடையவள் நினைவு படுத்துகிறார் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -5-

December 24, 2011
ஸ்ரீ ராமனே அனைத்துமாக கொண்டவர் -குலசேகர பெருமாள்
நம் பெருமாள் உத்சவர்-ராமன் பிரதிநிதி
பெரிய பெருமாள்-கண்ணன் பிரதி நிதி
பின்னானார் வணங்கும் சோதி
உண்ணும் சோறு -எல்லாம் ராமன்-
ராமோ ராமோ -ராம பூதோ -தன்மையி பாவம்-
திரு வஞ்சி களம்-மாசி- புனர்வசு –
முடி வேந்தர் சிகாமணி-ஷத்ரியர்-
31 பாசுரங்கள் -முதல் மூன்று பதிகங்கள்
திரு குமாரத்தி -திரு கல்யாணம்-
ஸ்ரீ ராம நவமி -சேர குல வல்லி நாச்சியார் சந்நிதி -சேர்த்தி –
பெருமாள் திரு மொழி-விஷயமும் பெருமாள்- அருளியவரும் பெருமாள் –
ராமானுஜர் அருளிய தனியன்.
தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்
இன்னமுதம் ஊட்டுகிறேன் -இங்கே வா பைம் கிளி –
சிலை சேர் நுதலியர்- வளைந்த நேற்று படைத்த
நித்ய வில் பிடித்த மன்னர் அனைவருக்கும் ராஜா
எங்கள் குலசேகரன் என்று கூற சொல்கிறார் –
ஸ்வாமிக்கே  நாயகி பாவம்–ஆச்சார்யர்-ஞானம்
அச்சுத சதகம்- தேவ நாதன்-அடியார்க்கு மெய்யன்-தாச சத்யன்
தேசிகன்- ஆண் பாவனை மாறி-பெண்கள் பேசும் சமஸ்க்ருதம் பாடி-
புரியாது என்று பொதுவான சமஸ்க்ருதம் மீண்டும் அருளி –
ஜகதாச்சர்யர் ஞானம் மிக்கு பிரேம நிலையில்-இவர் ராம பக்தி இப்படி பண்ண வைத்தது
பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் ராமானுஜர்
அடுத்த நிர்வாகம்-கிளி ஸ்தானத்தில் கூரத் ஆழ்வானை
அமுதம்- த்வயம் சொல்லி -தருகிறேன் மீண்டும்
ஸ்ரீ வச்தம்  அம்சம்–இவர் -கௌ ஸ்துபம் குலேசேகரர் -அண்டை வீட்டு காரர்கள் –
திருவேம்கடம்-திரு வித்துவ கோடு-திரு கண்ண புரம்- திரு சித்ர கூடம்-தில்லை –
கை தல சேவை -திரு கண்ண புரம் –
தென் அரங்கம்-பாட -தொடக்கம் இங்கு-சேர்த்து பாடுகிறார் வேறு திவ்ய தேச பதிகங்களிலும் –
யாவரும் வந்து வணங்கும் படி தென் அரங்கம் துயில்கிறவனே -திரு கண்ண புர பதிகம்-
தினே தினே ஸ்ரீ ரெங்க யாத்ரை-ஒலிக்கும் -அங்கு அனைவரும் இப்படி
பேரும் தார்களும் ஊரும் நாடும் பிதற்ற -தன்னை போல் ஆக்கி –
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் -சேர சோழ பாண்டிய மூன்றையும் –
அரசர்-பரம பக்தர் -இதுவே காலஷேமம் -ஆக கொண்டு-
நினைவே போதும்-கீதை அர்த்தத்தோடு சொல்பவனுக்கும் கர்ம ஞான பக்தி யோகி போல் மோஷம் கிட்டும்-கீதை
அவன் திரு உள்ளம் உகப்பே காரணம் –
சக்கரவர்த்தி -வேண்டாம்-கைங்கர செய்ய எதேனுமாக –
பிரம தேசம்மன்னார் கோவில்- திரு நெல்வேலி -பக்கம் -திரு அரசு-
குலசேகரன் படி கட்டு-படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
அணைய ஊர புனைய -அடியும் பொடியும் படபர்வத பவனன்களிலே -உத்தவர் சுகர் பிரார்த்தது போல் –
திர்யக் ஸ்தாவர  ஜன்மங்களை பரிகிரித்து பாரிப்பார்கள்-
அனந்தாழ்வான் -கட்டு பிரசாதம் ஐதீகம்-நித்ய சூரி-எறும்பாக –
ஆளவந்தார் -பவனம் -புழுவாக ஆசை கொண்டாரே

ஏதேனும் ஆவேனே -குலசேகரர்-பொன் மலையில்-
ச்வாதந்திர அரச பிறவி கூடாது பாரதந்திர ஜன்மம் வேண்டும்
இந்த ஞானம் -ச்வார்ததா விட்டு பாரதந்தரர் ஆக வேண்டும்
11 /10 /9 -யாவரும் வந்து அரங்க நகர் துயில்வான் 8 பதிகம் –
என்று கண்களால் சேவிக்க போகிறேனோ-
இருள் போகும் படி -ஆதி சேஷன்-நீல ரத்னம்- 1000 தலையிலும் –
இன -இரட்டை- அணி பணம்-படம்-பணா மண்டலம்-அரவரச -பெரும் ஜோதி அனந்தன் –
அந்தம் அற்றவனை தன்னுள் சயன வைத்த இவரே அனந்தன்
வெள்ளை அணை- ஆதி சேஷன் -கருப்பாக இருக்கிறதே –
ஸ்ரீ ரெங்க விமானமும் வெளுப்பு -ஆதி சேஷன்
மரகத சுகுமாரன்-உள்ளே சயனித்து -பச்சை நீலம் கருப்பு -மான் தளிர் பச்சை-
வீசி -கருப்பாக ஆக்கி -திரு மேனி காந்தி வீசியதால்-
ச்யாமா ஜீமூத -சகல ஜலதி குடித்த மேகம் போல்-கருப்ப்ப்பு மேகம் போல்  -பட்டர்
 -நம் கண்ணுக்கு பக்தி சித்தாந்ஜனம் இது தான் –அழுக்கு போக்கி ஒளி பிறக்க-பாவனம் கொடுக்க –
நீலக் கடல் கிடந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ-வெள்ளை கடலை நீலமாக்கி போல்
அனந்த போகி இவன்-மாணிக்கம்-உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்து -ரஷித்து கொண்டு –
திரு வரங்க பெரு நகர் தெண்ணீர் பொன்னி -தெளிந்த
தெளிவிலா கலங்கல் நீர் -தொண்டர் அடி பொடி –
சத்வ குணம்-அற்ற பற்றர் சுற்றி வாழும் -அணி அரங்கம்-தெளிந்து தான் இருக்கும்
செயற்கையாக கலங்கி-மாப்பிள்ளை பார்க்க வந்த பொன்னி
தாப த்ரயம் போக்கி-அவனுக்கு சிசுரோபசாரம் காவேரி –
கருமணியை கோமளத்தை-மேன்மை-
ஆதி செஷனுக்கு மட்டும் தான் சேவை
கண்டு கொண்டு
சோற்றை கண்டு மேல் விழும் பட்டினி  இருக்கும் பிரஜை போல் கண்டு கொண்டு –
நாடி நாண் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
அடுத்து -மேல் கட்டி விதானம் ஆதி சேஷன்-
திரு மண தூண் பிடித்து வாயால் தித்திக்க
காயத்ரி மண்டபம் 24 தூண்கள் -பிரணவாகார -9 கலசம்-
ஹரி -ஹ ரி இரண்டு திரு மண தூண்கள்-பாபம் அபகரிக்கும் –
சந்தனம் மண்டபம்
யுகாதி பின் மண்டபம்
கிளி மண்டபம்
 பகல்  பத்து மண்டபம்
ரேவதி மண்டபம்
பல மன்னர்கள் கட்டி-
மேல் கட்டி இருந்தால் தான் நம்பெருமாள் நிற்ப்பார் –
ஆதி சேஷன் அவரே மேல் கட்டி- உமிழ்ந்த செந்தீ -விதானமே போல்
உறகல் உறகல்-இவரை தூங்காதே -பொங்கும் பரிவு
ஹாவு ஹாவு-அசுரர் வார்த்தை நெருப்பு கக்கி மேல் கட்டி
காயம் பூ போல் அன்ன மால்-கடி அரங்கம்-வாயார வாழ்த்த என்று கொலோ –
மண தூணை பற்றி நின்று –
ஸ்ரீமான் சுக துக்க பரந்தப -பெருமாள்- சீதை பிராட்டி-
மூன்றாவது பாசுரம்
பிரமன் போல்வார் வாழ்த்த -அடியவர் உடன் சேர்ந்து வாழ்த்த
ஈர் இரண்டு முகம்-தொழுது ஏத்தி
அடி கீழ் அலர்கள் இட்டு அடியவர் உடன் அணுகும் நாள் என்றோ
அடுத்து
கைகள் மலர் தூவி -கேசி வாய் பிளந்து உகந்த –வேலை வண்ணனை –என் கண்ணனை
குன்றம் ஏந்தி ஆவினை உய கொண்ட மால் ஆயர் ஏறு சௌலப்யம்
அமரர் அதிபதி பரத்வம்
அம் தமிழ் இன்ப பா வட மொழி , இவன் தான்
பற்று அற்றார்கள்-இவனை தவிர வேறு எங்கும் பற்று இன்றி –
கை கூப்பும் நாள் என்றோ ‘
ஜிக்வே கேசவ கீர்த்தனம் முகுந்த மாலை ஸ்லோகம் போல்
அவயவம்  அனைத்தும் -படைக்க பட்ட அவனுக்கு கைங்கர்யம் செய்ய தானே –
மயில் தோகை கண் போல் –அவனை பார்க்க விடில் கேளா செவிகள் செவி இல்லை-பாம்பு புற்று போல்
போகாத கால் மரத்தின் வேர் போல்
தலை வணங்க தானே -கிரீடம் வைக்க இல்லை
அடுத்து இதை சொல்கிறார்
கொண்டு ஏத்த -வேத ஸ்தோத்ரம் கொண்டு-
மதில் உள் பக்கம் சாய்ந்து கோவில்நோக்கி-கருடன்-சிறகு விரிப்பது போல் –
அடுத்து -உள்ளம் என்று உருகும்-பாவனை சொல்கிறார்
அயன் இந்திரன்/நித்யர்/அப்சரஸ்/முனிகள்
/கர்ம பாவனை –பிரம பாவனை-உபய பாவனை-
சனகாதிகள்-மானச புத்ரர் -பிரம பாவனை மட்டும் –நான்முகன்-உபய பாவனை-
ஒளி மதி சேர் திரு முகம் கண்டு கொண்டு
அடுத்து -கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்று
அதர்மம் மனசு ஒழித்து -வஞ்சம்-பிரதி கூலம் மாத்தி
இரு முப்பொழுது ஏத்தி-பஞ்சகால பராயனர்
அறம் திகழும் மனம்-உள்ளோருக்கு கதி –
சாஸ்திரம்-இப்படி கண்ணீர் விடும் பக்தனை சேவிப்பதே பிராப்யம்
அடுத்து –
சூழ்ந்து அவனை காக்க கைங்கர்யம்-பஞ்ச ஆயுதம் போல்-கருடன் போல்
வெற்றி புள்-கொற்றை புள்-கடும் பறவை-காவேரி-முயல் செல் கயல்கெண்டை- திவ்ய தேசம் ரஷித்து –
ரஷகன் அவன் தான் -இதுவும் அவையும் ஒன்றே
இன்ப கலவி எய்து வாழ என்றோ –
அடுத்து
பூதலத்தில் புரளும் நாள் என்றோ –
சித்தரை உத்தர -வீதி சப்த பிரகாரம்-இருந்ததே –
வேலை மோதும் திரு கண்ண புரம்-அங்கும் சப்த பிரகாரம் –
காவேரி பெருக்கால் உள்ளே வந்தார்கள்
ஆராத மனம் -உடன் அழுத கண்ணீர் ததும்ப -புரண்டு-அங்க பிரதட்ஷனம் -வீதியிலே –
அடுத்து உய்ய -தொண்டர் வாழ-அடியார் குழாம் கண்டு இசைந்து இருக்க பெறுவேனோ –
வானகம் அமரர் மண் உய்ய -துயர் அகல-சுகம் வளர –
தென் திசை நோக்கி அன்புடன் பள்ளி கொள்ளும் –
அணி அரங்கன் திரு முற்றம்–இசைந்து அகங்காரம் தொலைந்து –
அடுத்து
கண்ணார கண்டு உகக்கும் காதல்-நாரணன் நலம் திகள் -நாரணன் அடி கீழ் -நண்ணுவார்கள்
வான் புகழ் நாரணன்-வாள் புகழ் நாரணன்-
மணல் திட்டு-காவேரி புலினம்-காத்து இருந்ததாம் இவனுக்கு
நுரை கங்கை பார்த்து சிரிக்கிறாள்–நித்யம் திரு அடி வருடி-தீர்த்தம்-புனிதம்-ஆக்கி
சோலைகளை பராமரித்து -வீதி அலம்பி விட்டு-ஸ்நானம் பாநி தீர்த்தம்-வேத ரகஸ்ய பெருமாளை தூக்கி காட்டும் காவேரி –
மறை க்குள் மறைந்தவனை திடர் விளங்கு  கர பொன்னி-தூக்கி காட்டுகிறதே -ஸ்பஷ்டமாக சேவை
கடல் விளங்கு கரு மேனி -கண்டு உகக்கும் காதல்-குடை விளங்கும் விரல் தானை
-கொடை வள்ளல் -பாசுரம் கொடுத்த வள்ளல் தன்மை
நடை விளங்கு தமிழ் மாலை –
குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -224..

December 23, 2011

ஆறாம் பத்தால்-

தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் -பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம்
தமக்கு தம் திரு அடிகளையே -நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க –
அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் –
தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து –
வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை அவன் பரிகரிக்க –
அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும்
பலித்தவாறே –பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி –
ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே
பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு –
விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து -பரம ஆர்த்தியோடே தமக்கு
உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை –
நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –
பத்துடை அடியவரிலே -தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் என்கிறார் .

—————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய்
அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும்
கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல்வெட்டாக்குகிற சரண்யன்
2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள்
அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும்
அநந்ய கதித்வம் உடைய தமக்கு
3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு
ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு
ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம்
உபாயத்தாலே அழிய
4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க
பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
5-சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக்
கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க
நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று
ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று
பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை
யாவையும் ஒன்றே ஆக்கி
7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ
முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
8-திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய்
அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல்கொள் திசை வையம்
விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
9-இணைத் தாமரைகள் காண இமையோரும்
வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே
கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
10-பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன
சாத்ய உபாய ஸ்ரவண
11-தந்தனன் மற்றோர் களை கண் இலம்
புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

—————————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல் வெட்டாக்குகிற சரண்யன்
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10–என்று
ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும்
ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று
திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்-
வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-தன்னுடைய கிருபையாலே –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் –
சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் –
சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்)
சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் –
வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல்
தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் -முதல் திருவந்தாதி-26-என்றும் —
போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் –
கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற
வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித விசேஷ சேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –

————————————————

2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு
அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்
பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி
ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –
(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது
அவனைத்தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று
ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –
உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-
பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –
(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்
என் நான் செய்கேன் -5-8-3–என்றும்
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று
ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –
சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –
மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில்
ஈடுபட்டு -உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –
இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –
உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –
எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –
முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –
நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –
மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —
தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி-
கீழ் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –
அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –
களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி
அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –
பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –

———————————————–

3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி
தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –
கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –
அடிமேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11என்றும் சொல்லுகிறபடி-
விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ
உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய்
திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு
வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்னுமதளவாக பெற்று அன்றி தரியாத
அதிமாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –
ததேக ரஷத்யத்வ வ்யவசாய ரகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –
உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய
யோகத்தாலே ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான
யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –
விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய
இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான
பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –
போகு நம்பீ –
கழக மேறேல் நம்பீ -என்று
உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று -சிற்றில் இழைப்பது –
சிறு சோறு அடுவதாக -அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –
அழித்தாய் உன் திருவடியாலே -என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை
தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய
வைலஷண்யத்தாலே – குலைக்க -அவனோடு பொருந்தி –

—————————————————–

4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே
பிறந்தவாற்றிலே –அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –
தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -என்றும் –
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -என்றும் –
ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற -என்னும்படி
அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி
பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்
குரவை ஆய்ச்சியரிலே- என்ன குறை எனக்கு -என்று தொடங்கி –
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர் -என்று
ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி
அனுபவிக்கப் பெற்ற எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே –
–சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே -சித்த உபாய வர்ணம்
சக்ருதேவ -என்கிறபடியே -பிராப்த்திகாகவும் ஒருகால் பண்ண வேண்டும் என்று பார்த்து
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன்
ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச
சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம்
ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி
அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராண மாக சொல்லப் பட்ட –
பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –புராண வித்தகர் ஆகையாலே -பௌ ராணிகரான
ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் -இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான
சரண வரணத்தை பண்ணுகையாலும் –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —
இங்கன் அன்றிக்கே -இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் -அது தான்
புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் .
சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை
ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் -பிதரம் மாதரம்-என்று தொடங்கி –
சாஷரான்-என்னும் அளவாக -சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –
வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின
சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய உபாசங்களையும் -பிராபக உபாசங்களையும் –
இதில்-சர்வ தர்மாம்ச்ச -கீழ் -உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –
இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ள வற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு -ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும்
உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –
அவ்வளவு இன்றிக்கே -இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே –
ஸூயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —
ஸ்திரீயும் சஹா தர்ம சாரினியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –
புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான
பாபா விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் -தம்முடைய
வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-
இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –
உபாயாந்தர சக காரிகளுமாய் -பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே –
உபேய பூதருமாய் இருப்பார்கள் –
தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தை யே பிரவர்த்திப்பிக்கை யாலே – உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்
குருக்கள் ஆகிறார்கள்- உபயாந் தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –
உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்
ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை
அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்
தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே
க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –
மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும்
மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே
சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –
அதில் சர்வ தர்மாம்ச்ச என்று கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –
சர்வ காமாம்ச்ச -ஐ கிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது
சாஷரான்-அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –
ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –
உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள்
உடைய மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை சித் அசித் பிராப்ய
பிராபக ஆபாசங்கள் என்கிறது –
அதவா -சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள்
ஆகையாலே -அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –
கை வலிந்து -இத்யாதிக்கு அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது
மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் -உபாய விரோதிகள் சர்வத்தையும் –
விஷயமாக உடைத்து ஆகையாலே -கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது
த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –
அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது
ஆக இப்படி இருந்துள்ள

————————————————

5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும்-
(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –
துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே )
நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –
இழந்தது சங்கே -6-6-1-என்றும் –
இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-
எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-
இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று
சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு -உறங்குவான் கைப் பண்டம் போலே –
பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போக கண்டும் –
சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே இவற்றை ஒன்றாக நினையாமல்
உபேஷித்து அகன்று போயும் –

ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்
இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-என்று
தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-

புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று உனக்கு அசலாம்படி
விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும்
நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி
அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே -விஷயங்களைக் காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும்
சொல்லுகையாலே -அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு

————————————————————

6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –
தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –
வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –
பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-
லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை
சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –
இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷயமொன்றுமாக நினைத்து

———————————————-

7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்றும் ,
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -என்றும் –
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்
ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –
பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –
சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –
திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக்
காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகுபோல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –
சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ -சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே
என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –
விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே !
மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே -உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-

——————————————

8-திரி விக்ரமனாய் குரல் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று
வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –
உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே -வாத்சல்யமும் –
அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே -சௌலப்யமும் –
தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –
விபோ -என்கையாலே -ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –
த்ரி விக்கிரம உபதானத்திலே -ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –
உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –
தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-
மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-
அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-சர்வேஸ்வரனாய்-
ஆஸ்ரித வத்சலனான தான் –
திரு விக்கிரம உபாதானம் பண்ணு கைக்காக பெரு விலையனான அழகை-சிறாங்கித்து
அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு மகாபலி
யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து -தான் சொன்ன படியே அவன் செய்யும் படி
விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்-
காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று
நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று – லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –
அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-
வையம் அளந்த மணாளன் –6-6-1-
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-
ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று
விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –
தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி -எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட
சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –

————————————-

9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று -இத்யாதி படியே
திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும்
உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும்
அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை -என்று
திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –
அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –
திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான
திரு மலையிலே கண்டு –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –
நிகரில் புகழாய்-என்று தொடங்கி-
திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்களை
அடைவே அனுசந்தித்துக் கொண்டு –
புகல் ஓன்று இல்லா -என்றும்
அடியேன் -என்றும்
தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக
உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –
அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற
அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-

———————————————

10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு
(சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால்
பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு )- பத்துடை அடியவரிலே –
பிணக்கற அறு வகை சமயமமும் -என்கிற பாட்டிலே –
வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –
வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித்
தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –
அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி
அத்தாலே
-எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-
என்னான் செய்கேன் –5-8-3-
என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-

—————————————-

11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை
உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் .
அதாவது –
திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –
என்கிற தம்முடைய உக்தியாலும் –
(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு )
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –
என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் -தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான
நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு பாவை- அனுபவம் -6-புள்ளும் சிலம்பின காண் ..

December 23, 2011

கீசு -அரவம்-பறவை ஒலி -பிரிவாற்றாமை- கலந்து பேசி-தோணி

ஆனை சாத்தன்-எங்கும்-உன் வீட்டு தோட்டத்திலும் கலந்து பேசி
பேய் பெண்ணே -பாகவத பிரபாவம் அறிந்தும் மறந்து இருக்கிறவள்
பறவைகளும் உம்மை போல் தூக்கம் இல்லை
தயிர் அரவம்- விடிந்த பின்பு -கர்மம்-இடையர்
முப்போதும் கடையும் வெண்ணெய் –
காசும் பிறப்பும்-ஆபரண ஒலி
கை அசைத்து கடைய
வாச நறும் குழல்-மனம் வீச
வாயால் பாடி -கே கோபாலா -இதுவும் சேர்ந்து –
நாராயணன் மூர்த்தி கேசவனை-பாட
நீ கேட்டே கிடக்கிறாய்
தேஜஸ் உடையவள்
பிள்ளாய் அனுபவம் பார்ப்போம்-
கிருஷ்ணா பக்தி ஆர்த்தி குறைவாக -இல்லை உள்ளே இருப்பவர்களுக்கும்
பறவைக்கும் உண்டே –
கிருஷ்ணன்- மோகன ஆஸ்த்ரம்–மயங்கி  ஜ்ரும்பனாஸ்ரமம் -துடிக்க வைக்கும்
இரண்டு வகை-பக்தியில் வேறு பாடு இல்லை –
பறவை ஒலி-சங்கம்-பேர் அரவம்
புள்ளும் -உம்மை தொகை முதலிலே சொல்ல காரணம் –
நாங்கள் வந்ததே அடையாளம்-முதலில்
உங்களுக்கும் கண்ணனுக்கும் தூக்கம் இல்லை
காலை எழுந்து குருவி கணங்கள்- தட்டி கூவ வைக்கிறீர்கள்
புள்ளும் – இதனால்
ஆச்சார்யர் உபதேசம் கேட்கவில்லையா -கடகர் -பறவை –
பஷங்கள்-ஞான அனுஷ்டானம் இவை நன்றாக உள்ள குருவை அடைந்தக்கால்
விண்ணாடு தான் அளிக்க வேண்டாதான்-குரு இடம் சேராமல் இருந்தால்-
அனுபவம் நிறைய உபதேசம்-
புள்ளரையன் கோ-கருடன் சுவாமி
வசிக்கும் கோவில்-பிரபத்யே பிரமானாகாரம்- விமானம் பளிச்சு என்று
செஷத்வமும் -சங்கு வடிவு
பேர் அரவம்-வெள்ளை சங்கு-பேர் அரவம் கேட்க்கவில்லையா –
சம்சார நிவர்தகமான பெரிய மந்த்ரம் உபதேசிப்பவரே ஆச்சார்யர் –
பிதரம் மாதரம் தாரான்-நித்தியமே சொல்கிறோம்-அனைத்தையும் விட்டு -அவனை பற்றுகிறோம்-
குருன்-சொல்கிறோமே-
பெரிய நம்பி திரு நட்ஷத்ரம்-கேட்டை -தொண்டர் அடி பொடி ஆழ்வார் -திரு நட்ஷத்ரம் –
ராமானுஜர் குருவை விடுவாரா –
அந்த காரம் போக்குபவர் -குரு-அத்யாத்ம சாஸ்திரம் -ஜீவா பர யாதாத்மா சொல்லி தருபவர் –
மோஷம் வழி காட்டும் ஆச்சார்யர் -தவிர மற்றவர் அனைவரும் த்யாஜ்யம் –
சம்சாரத்தில் அழுத்தும் கர்ம-
தத் ஞானம்-பிரம ஞானம் ஒன்றே –
திரு மந்த்ரம்-த்வயம் சரம ஸ்லோகம்-அரவம்-
சங்கொலி கேட்டு -திரி யோதனர் உளுத்து
ஆபாச பந்து -தேவாந்த்ரற -அனந்யார்க்க சரண்யன் போக்கியம்-
சங்க நாதம்-ரகஸ்ய த்ரயம்-ஒலி கேட்கவில்லையா
சேஷ பூதர் அறிந்த பின் எழுந்து வர வேண்டாமா –
ஒலி கேட்டது -அவனுக்கு கைங்கர்யம் செய்கிறேன்-உங்கள் உடன் சேர வேண்டுமா
பேர் அரவம்- நம-உ காரம்-சொல்லும் ஆழ்ந்த பொருள் பேர் அரவம் காதில் விழ வில்லையா —
நம முன்னும் பின்னும் சேர்ந்து அர்த்தம்-
நம சொல்லி தானே நாராயண -வரும் –
கேசவாய நம -திரு மந்த்ரத்தில் மட்டும் நம நாராயண
சம்பந்தம் ஒழிக்க ஒழியாதது- அ ம காரங்களால் வெட்டி கொள்ள முடியாது
நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை இன்றி இலேன் –
இப்படி இருப்பவர் இடம் ஒழுங்காகா இருக்க வேண்டாமா –
ஆய-ஏறி கழிய -லுப்த சதுர்த்தி-அவனுக்கு அடிமை
அவனுக்கே-ஒருவனுக்கு தான்-வலி உறுத்தி சொல்ல – உ காரம்
அனந்யார்க்க சம்பந்தம் வரை அறுத்து கொடுக்கும் –
சொல்ல சொல்ல பண் படுவோம் –
ஆனந்தம்-பிராப்தி-இதனால்தான் -மற்றவரை ஒதுக்கி –உ காரம்
எனக்கு நான் அடிமையோ-நம சப்தம்-எனக்கு நான் அல்லேன் –
ஆய ம -அவனுக்கு உரியவன் உ அவனுக்கே நம எனக்கும் அல்லேன் –
அரவம் அர்த்தம் இது வரை
வெள்ளை விளி சங்கின் அரவம் இது
அனந்யார்க்க -சப்தம் -அந்ய  சேஷத்வம்-அனார்க சேஷத்வம் –அனந்யார்க்க சேஷத்வம் –
ததீய சேஷத்வம் -அடியவர்களுக்கு -பேர் அரவம்-

ஓடினேன் ஓடி-வாடினேன் வாடி-
அகங்காரம் மம காரம் -மனனகம் மலமற-மலர் மிசை-எதற்கும் புரியாமல்
யாரை பற்றது-துர் லபம்  -இத்தையையும் விட்டு அத்தையும் விட்டு -சூன்யம்-வெறுமை
போக்க ஆச்சார்யர்-கடகர்
சௌலப்யம்-பரத்வம்-இரண்டாலும் கிட்டாமல்-இவ்வளவு எளியவனா -அவ்வளவு பெரியவனா –
பாலம்-கடகர்-ஆச்சார்யர் –
தரு துயரம்-உன் சரண் அல்லால் சரண் இல்லை-
பெற்ற தாயினும் ஆயிரம் செய்யும் –
கட்டமே காதல்-ஆழ்வார் -பக்தி கஷ்டம்-எந்த நிலை புரியாமல்-
ஆசைக்கு தீனி இல்லை -ஆற்றாமை மிக்கு –
அரியாகி ஹிரண்யனை-ஆகம் கீண்டான்-பெரியார்க்கு ஆள் பட்ட கால் -பெறாத பயன் பெறுமாறு –
பேராளன் பேர் ஓதும் பெரியோர் -பாகவதர்கள்
பாகவதர்கள்-பாலமாக வெற்றிடம் நிரப்பி-ததீயர் –
விச்லேஷம் துக்கம்-சேர்ந்து அனுபவித்து சமாதானம் பண்ண
பிரிவு சேர்த்தி இரண்டிலும் சேர்ந்து -அனுபவிக்க -நம சப்த ஆந்தர அர்த்தம்
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
நின் திரு எட்டு எழுத்து கற்று-மற்று ஓர் தெய்வம் உளது என்றுஇருப்பரோடு உற்றிலேன் –
ததீயாரதனம் -திரு குறையலூர் –
அவன் அனுபவம்-ஆழமான கங்கை நீராட்டம் போல்-
துணைக்கு -படிக் கட்டு போல் அடியவர் ஆச்சார்யர் ஆழ்வார்
பரத்வம்-கணுக்கால் அளவு –
சௌலப்யம்-இடுப்பு அளவு-எத்திறம்
வாத்சல்யம்- மார்பு
சௌசீல்யம்-தலையே முழுகும் -கை பிடிக்க
செம் சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின்
வஞ்ச கள்வன்- என் நெஞ்சு நிறைய புகுந்தான்-
திரு பேர் நகரான்-திரு மால் இரும் சோலை-ஆழ்வார் திரு உள்ளம்
அயோத்ய-சிதற கூடம் -திரு புல்லாணி
வஞ்ச கள்வன் மா மாயன் –
உனக்கு அவனால் ஆபத்து வந்தாலும் நாங்கள் வேண்டும்-
எகத்வா ந புஞ்சாதே
இனியது தனி அருந்தேல்
நன்மை பகிர்ந்து கொள்ள கூப்பிடுகிறார்கள்
அவளை புருஷாகாரமாக பற்றுகிறார்கள்
ஆஜகாம முகூர்த்தம் -லஷ்மணன் கூட இருக்கும் பெருமாள் இடம் வந்தான் விபீஷணன் –
சுக்ரீவனுக்கு புஷ்பம் போட -வாலி -வித்யாசம்- தான் முன்னிடும் அவர்களை-அவன் மூலம்-
தம்பி வார்தைகேலாத கோஷ்டி விட்டு தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்டி வந்தான்
 விபீஷணன்-யத்ர ராமோ ச லஷ்மணன்-
வானரம் மலை மரம் கை வைத்து இருக்க -ஆகாசத்தில்-நிவேதித -சரவ லோக சரண்யன்-அறிவியும் கோள்
இவ்வளவு தூரம் வந்தவன் நேராக பெருமாள் இடம் போக வில்லை –
சுக்ரீவன் மட்டும் பார்த்து சொல்லாமல்-பரம பாகவதர்கள் அனைவரும்
புருஷ காரம் செய்ய வாய்ப்பு உங்களுக்கு –
பெருமாளும் -சுக்ரீவனை விட்டே கூட்டி வர சொல்லி
ஆஸ்ரித பரதந்த்ரன்-சுக்ரீவனையும் சமாதான்சம் செய்து -அபயம் சர்வ –
கூவுதல் தானே செய்யாமல் -அவன் மூலம் அங்கீகரிக்க
பயிலும் சுடரொளி-எம்மை ஆளும் பரமரே
அடியார் அடியோடு கூடும் இது அல்லால்-வேறு ஒன்றும் வேண்டேன்-மாணிக்கம் -பாகவத பிரபாவம்
கொடு மா வினையேன்-பகவானை பாடி கழித்தேன் –
தீர்ப்பாரை யாம்-இவள் சிந்தை திசைகின்றதே
வன் துவராபதி மன்னனை-மன்னார் குடி-மா முனிகள் சமர்பித்த பாசுரம்-உன்னித்து
சகி வெறி விலக்குதல் -குறி
தோழி-பரகாலன் தோழி-ஆங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் கொண்டு தூவேன் மின்-அவள் ஸ்ரீ வைஷ்ணவ கட்டுவிச்சி –
பக்திக்கே வசப்படும்

பாகவத பாத தூளி பூச
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆள் செய்து
அடுத்த பாசுரம்
பேரை சொல்லும் கேட்டதும் -வன் துவராபதி மன்னனை ஏத்துமின் -சொன்னதை கேட்டதும்
உயிர் காத்து தோழி
திரு தொலிவில்லி மங்கலம்-அன்னைமீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்
இரட்டை திரு பதி-அரவிந்த லோசனன்-தேவபிரான்-குல தெய்வம்-
இரும்தமை   காட்டினீர் – கரும் தடம் கண்ணி-மணி வல்லி- இருந்து இருந்து அரவிந்த லோசனே -சொல்லி நைந்து
உபதேச முத்ரையுடன் அமர்ந்து
இனி இனி
இருபதுகால்-
விலகினார்கள் தோழியால் நன்மை இங்கும்
கரு மாணிக்க மாலை -மணி தடம் காடுகள் போல்
குட்ட நாட்டு திரு புலியூர் மாயப் பிரான்-
திரு கல்யாண ஏற்பாடு–பண்ணி வைத்தவளே தோழி –
அம் தண் துழாய் கமழ்தல்- மாயப் பிரான் அருளாம் இவள் நேர் பட்டதே -சேர்த்து வைத்தது
நேர் பட்ட -தொண்டர் தொண்டர் -சடகோபன்-
பலன் நேர் பட்டார்-அடியார் கைங்கர்யம் கிட்டும்
நான் பட்ட பாடு இன்றி முதலிலே கிட்டும்
நீராட போதுவீர்-ஆண்டாள் பெற்றாளே-
பூ மன்னு -பிரித்து அர்த்தம் போல்
நேர் பட்ட  நிறை மூ உலகுக்கும் நாயகன்- நேர் பட்ட -சடகோபன் சொல்ல நேர் பட்ட -நெடி மால் அடி செய்வார்
தொண்டர் அடி பொடி ஆழ்வார் வைபவம்
ஸ்வரூப நிரூபகம்
யாக -அனுயாகம் உத்தர வீதி–நடுவில் திரு வீதி பிள்ளை
காய சுத்தி தாசர் மூலம் எம்பெருமானார் -யாக சுத்தி
நம்பி ஏறு திரு உடைய தாசர் அனுயாக
ஸ்தல சுத்தி
பரம பாகவத வைபவம்
பணி பூவும் அந்தரங்கரை -புஷ்ப தாக போக மண்டபங்களில்
குறும்பு அறுத்த நம்பி-தொண்டைமான் சக்கரவர்த்தி
ஆழ வடம்-திரு கச்சி நம்பி ராமானுஜர்
திரு பாண் ஆழ்வார் -வீணையும் கையுமா -லோக சாரங்கரே
தண் சேறை தாள் தொழுவார் என் தலை மேல்- திரு மங்கை
மாரனேர் நம்பி-பெரிய நம்பி -ஈம சடங்கு செய்து –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
தர்மர் -விதுரர் -ஏய் வரில் முற்பட்டவர் சந்தேகியாமல் செய்து
ராமர்-நால்வரில் முற்பட்டவர்-ஜடாயு
மூவரில் முற்பட்டவர் -சகஜர் -பிரோடாசமாக –
அடியார் -குலம் தங்கும்-மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்து
குகன்-தம்பி கடல் ஓசை போல் வீண் இல்லை –
பாகவதன் இன்று பகவானை அடைய முடியாதே -பிள்ளாய் புரிந்து
பேய் பெண்ணை உணர்த்த
அறிந்தும் மறந்து இருக்கிறவள் -செல்கிறாள் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -4-

December 23, 2011
வளர்த்த தாய் ராமானுஜன்
யானை -ஆனந்தம் பாய் மதம் ஆக விண்டிட -மாறன்
பாடலை உண்டு-வழி மிக்க சீயம் ராமானுசன்
பாலும் தெளி தேனுமாக இவை இருக்க
தந்தை தாய் உயர் குரு திரு வாய் மொழி எம்பெருமானாருக்கு .-
தினகர குல கமல திவாகரன்-பெருமாள்-
ஆயிரமும் அரங்கனுக்கு
முதலில் நடுவில் முடிவிலும்-நாரணன்-பிரபந்த
வன் புகழ் நாரணன் திண் கழல் சேர
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்
நாரணன் -ஓலம் இட பண்ணி விட்டு -சுவடும் காட்டான்-இறுதியில் –
பெரிய பெருமாள்-முதலில் நாராயணன்-ஜகன்னாதன்
-சக பத்ன்யா விசாலாட்ஷ்ய -நாராயணம் உபாகமது –
தெப்பக் கட்டை போல் ஆழ -அனுபவிக்க பிராட்டியும் வேண்டுமே
பெருமாள் திரு ஆராதனம் செய்வதை பார்த்து -பெருமிதத்தாலே கண் அகலம்- விசலாட்ஷி -பெயர் -சீதை பிராட்டிக்கு
விபீஷணன் -கொடுக்கும் பொழுது குல தனம்-ஆராதய ஜகன் நாதம்-இன்னொரு பெயர் ஸ்ரீ ராமாயணத்தில் –
என் செய்கின்றாய் என் தாமரை கண்ணா என்னும் -அடுத்த பாசுரம்-
மகள் சொல்ல சொல்ல தாயார் திரும்பி சொல்கிறாள் -இவர் வாயால் வந்த சொல் போல் இருக்காதே
திரு தொலை வில்லி மங்கலம்-ஆழ்வார்
அழகிய மணவாள பெருமாள்-பட்டர்
எம்பெருமானார் -சோமாசி ஆண்டான்
திரு கண்ணா  புரம்-திரு மங்கை ஆழ்வார்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி–தூ மொழி இசைகள் வாயால் நோக்கி-
அடிமை சாசனம் –எழுதி கொடுக்க வைக்கும் -ஜிதந்தே புண்டரீகாஷா
கண்ணீர் மல்க -முன் நினைவால்-
என் செய்கேன்-எரி நீர் திரு அரங்கம்-வேவ்வுயர்த்து -வெப்ப நீர் கூட்டி –
உருகுவதை காவேரி தீர்த்து வைக்க கூடாதா
விரக தாபம் தீர்க்காதே -வெப் நீர் -ஆனந்த நீர் ஆகுமா –
முன் செய்த வினை-முகபடாமல்-அடிமை அறிந்த பின் இணை கூற்றங்கலோ அறியேன்-
முகில் வண்ணா தகுவதோ என்னும் –
கர்மம் காரணமாக துக்கம்-முதலில்
முகில் வண்ணன் காரணமா -முரண் பட்ட கேள்வியா
கர்மம் நம்மால் போக்க முடியாதே -உன் திருஅடி தான் உபாயம்-பிரபன்னர்
நைச்ய அனுசந்தானம் –
பெருமாள் பிரிந்தது மமைத துஷ்க்ருதம்-பிராட்டி -பாகவத அபசாரம்-
அம்மான் அருகில் இருக்க அம மானை கேட்டு-பிரயோஜனந்த
பாகவத அபசாரம் மிக பெரிய குற்றம்
பரதனும்-மந்தரை-கைகேயி-தசரதன்-பெருமாள்-தானே -நானே தான் ஆயிடுக
அது போல்முன் செய்த வினை-ஆழ்வார் –
உண்டு உமிழ்ந்து அலைந்தாயே -தெளிகிலேன் இவளுக்கு முடிவு
ஜகம் பிரார்திக்காமலே நீ நன்மை முன் செய்தாய்
கேட்காமல் இருந்தால் தான் ரஷிப்பாயா –
முகில் வண்ணன்-கொடை வள்ளல்- நல்ல பெயர் தான்-சுரம் மாற்றி-
பெயர் தகுமா –
சுக்ரீவன்-தோஷம் ஆனாலும் விடேன்-பெருமாள்
என்னை வணங்கு -மாம் நமஸ்குரு
மா சுச இரண்டும் கண்ணன் அருளி-
கருணையே வேண்டும் -பிறந்து பிழைக்க போகிறாளா –
முடிவு என்ன-பிறந்து பிழைக்க போகிறாளா இறந்து பிழைக்க போகிறாளா
அடுத்த பாசுரம்-
கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் –
இறையும் மணி வண்ணா என்னும் – -வெட்கம் இன்றி-காதலன் பெயரை சொல்லி-
நாடும் நகரமும் -நாண் எனக்குஇல்லை-தென் திரு பேரை பாசுரம்-
தாயார் இடம் திரு மேனி அழகாய் சொல்லலாமா
வானமே நோக்கும் -கஜேந்த்ரனை ரஷிக்க வந்தானே –
சீதை-காற்றை பார்த்து பூமி பார்த்து -பெருமாள் செய்தி –
அசுரர் உயிர் உண்ட ஒருவனே -பெருமை விடாமல் சொல்லி-அத்வதீயன்-
உடல் உருகி கேள்வி பட்டு இருக்கிறோம்-
மனஸ்- ஆத்மா -உள் உருகும்-
வெட்டவோ நனைக்கவோ முடியாதே
உடல் ஆத்மா தர்மம் கொள்ள –பத்திமை நூல் வரம்பு இல்லையே
காற்றையும் கழியையும் கட்டி அழுகிறார்
கட்கு இலி-கட்கிலி – காணுமாறு அருளாய் –
நம் பிரயத்னம்-கட்கிலி -நீயா காட்ட காணலாமே
பகவத் அனுக்ரகம்-ஸ்வாம் தனூம் –தேர்ந்து எடுத்து
பிரிய தமனை-அவரால் வரிக்க படுபவன்-பிரிய தமன்-சரணாகதன் –
காகுத்தா -கட்கிலி -உன்னை காணுமாறு அருளாய் –
கண்ணே உன்னை காண கருதி -எண்ணே கொண்ட –கண்ணால் காண்போமா கண்ணை பார்ப்போமா
நீ தான் கருவி – கருவி உன் கண்களே –
பெரிய பெருமாள் நம் பெருமாள்- காகுத்தன் கண்ணன்
காகுத்தனும்  வாரானால் -கண்ணனும் வாரானால்-
திருஷ்டி ச்சித்தம் அபகரிக்கும் –இருவரும் –
சாஷாத் மன்மத மன்மதன்-கண்டவர் மனம் வழங்கும் –
திண் கொடி-கட்டுவது அவிழ்ப்பது இரண்டும் இல்லை-நாளும் விழாவின் ஒலி ஓவா
தீர்த்தம் பிரசாதித்தால் அடுத்து முளை இட்டு உத்சவம் ஆரம்பம் –
கொடி மரத்தில் கருடன்-தென் நாடும் வட நாடும் கூப்பிட
அரங்கன்-வந்த பிரயோஜனம் -இவளை-என் செய்திட்டாய்
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம்  தான் கொலோ
உன் முகத்தை கண்ணாடி புரத்தில் பார்த்தது இல்லையா –
நான்காவது பாசுரம்-
இட்ட கால்-இவள் திறத்து என் சிந்தித்தாய்
மயங்கின படி- ச்வாதீனமில்லை –ஆனால் எழுந்து உளாய் மயங்கும் கை கூப்பும்
அனைய போகும் விளக்கு உஜ்ஜ்வலம்-கடைசி தசை-
விளித்து போதும் கை கூப்பி-
மயக்கும் பொழுது கை கூப்பா மாட்டாள் சொல்ல முடியாதா –
சேஷத்வ ஞானம் உண்டு எப்பொழுதும் –
சத்தை-இது தான்-
கட்டமே காதல்-கை கூப்பினாள் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த வார்த்தை-
மூர்சிக்கும்- பக்தி கட்டமே -ஸாதனம் தாழ்ந்தது -உன்னையே உபாயம்-
கடல் வண்ணா- குத்தலாக- ரஷித்து கொடுக்காமல் பெயர் மட்டும்
வட்டவாய் நேமி -முதலில் சங்கு சக்கரம் இரண்டையும் சொல்ல இங்கு ஓன்று தான் சொல்ல முடிந்ததாம்
வந்திடாய் என்று என்றே மயங்கும் -ரீங்கரித்து நாதம் போல் -இரட்டித்து -வெண்கல மணி சப்தம்
ஆடி ஆடி -சுரம் இது போல்-வாடி வாடி -இங்கும் வெண்கல ஓசை-ஈடு
சிட்டனே-ஸ்ரீக்கு இஷ்டனே –எனக்கு இஷ்டன் அல்லாதவன்
விபரீத லஷனம்- அடுத்த அர்த்தம்
செழு நீர் -தண்ணீர் பந்தல்-இருந்தும் வாட வைக்கிறாயே -இங்கும் கத்தி வைத்து குத்த இருக்கிறாயே –
பூணூலை வெளுக பண்ணி கோவிலை இடிக்கும் போல்-ஈடு-சிட்டனே செழு நீர் திரு அரங்கத்தை
என் சிந்தித்தாய்–உன் சிந்திப்பு மாறினால் மோட்ஷம்-ஆச்சார்யர்
அந்திம காலத்துக்கு தஞ்சமான வார்த்தை சொல்லும்-
ஆம் ஆகில் சொல்லி பார்க்கிறேன்-எட்டு எழுத்து சொல்லாமல்-
நம் நினைவு இல்லை-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தான் –
நாம் சிந்திக்கும் பொழுது அவன் சிந்திக்க மாட்டான்
அவன் நினைவு எப்பொழுதும் உண்டு
கார்ய கரம் ஆவது நம் நினைவு மாறினால்
குடை மழை
ஈஸ்வர பிரவ்ருத்தி -விரோதி -சு பிரவர்த்தி நிவ்ருத்தி -பிரபத்தி இது தான் -தன்னடையே ரஷிப்பான்
நம் ஆசைக்காகா சம்சாரத்தில் வைத்து இருக்கிறேன்-
தனக்கு அடிமை- பட்டது தான் அறியான்-எரி  -மாரி-மனத்தடைய வைப்பதாம் மாலை
வனத்திடை ஏரி வெட்டி காத்து இருப்பது போல் -பொழியும் பொழுது தண்ணீர் தேக்க –
ஐந்தாம் பாசுரம்-
சிந்திக்கும் -தையலை மையல் செய்தானே
திசைக்கும்-கலங்கி தவிக்கும்-தேரும்-அணைய போகிற விளக்கு போல் கேட்டேன்-ஜீயர் பணிப்பர்
மயங்கும் கை கூப்பும் -தேரும் கை கூப்பும் -ச்வாபம் ஸ்வரூபம்
இத் திரு -அடியோம் அடிச்சியோம்-தெரியும் மயங்கியும் –
உய்ந்த பிள்ளை-என் நிலை தசை -திரு அரங்கத்து உள்ளாய்-என்னும்
பெருமாளே என்னும் -பெண் சொன்னது -மாமியார் மருமக பிள்ளை பெயரை–வெட்கி
இந்த திவ்ய தேசம்- என்பதால் காதலித்தாள்
வந்திடாய் -மயங்கும்
ஒரு முகமே-அழகிய தாமரை காடே
ஒரு முறுவலே – மந்த ஸ்மிதம் சம்பாஷன மதுர விஷன
ஒரு வளையமே -தோளும் தோள் மாலையும் -கோவில்=ஸ்ரீரெங்கம் ஒன்றே
அந்தி பொது அவுணன் உடல் இடந்தானே –
ஹிரண்யன் இங்கு தடங்கல் இல்லையே -அலைகடல் கடந்தே-பிறர் ஆபத்தை போக்கி –
உன்னால் ஆபத்து வந்தால் ரஷிக்க மாட்டாயா -ஆர் அமுதே
உன்னையே பிரயோஜனமாக கொண்டவளுக்கு உதவாமல்
உன்னை கொண்டு அமுதம் பெற்ற
இவர் அமுதா அவர்களுக்கு அமுதம் கடைய -சந்தித்து உன் திரு ஆடி சேர –
ஆறாவது பாசுரம்-
பாவியேன்-நான் செய்த பாவம் என் பெண் துன்பம்
மையல் செய்து மனம் கவர்ந்தானே என்னும்-
நைவளமும் நாராயா-சங்கீதம் பேயும் இறங்கும்-நாட்டை குறிஞ்சி
நம்மை நோக்கா -சாகச செயல்-செய்தான்-மா மாயனே என்னும் -மாயன்-வட மதுரை
இங்கு மா மாயன்
கொண்டாடப்படும் நீயா-காதலி ஏமாற்ற செய்ததை சொல்லி-
செய்ய வாய் மணி-பேசின பேச்சு நினைவு இல்லை-வாய் அழகு மட்டும் கண்டாள்-ஏமாந்தாள் –
தண்  புனல்-போல் குளிர்ந்த பேச்சு -உனக்காக இங்கு வந்தேன்-ஸ்ரீ வைகுண்டம்விட்டு-
போக்கிடம் இன்றி இருக்கிறவர் புரிந்து கொண்டேன்-

உணங்கல் கெட கழுதை உதட்டம் கண்டு என் பயன்-
அழகை பார்த்து இருந்து மயங்கினேன் –
ஆதித்யன் உதயம் மறைய சந்தோசம்-நாள் போனது கவலை இல்லை
ரம்பம் அழகை பார்த்து மரம் அருபட்டதை உணராமல்-
சம்சாரம் தொலைத்தால் அல்லது பேரேன்-விண்ணோர் முதல்
சங்கு சக்கரம்-என்னை முடிக்க
பை கொள் பாம்பு ஆணை- படுக்கை-ஸ்பர்சம் பெற இவள் இலக்கிறாலே என் பாவம்
ஏழாவது
கால சக்கரத்தாய் -கோமள கொழுந்தே -பற்றிலார் பற்ற நின்றானே
அசரண்யா சரண்யன்-ரஷிக பிரதி பந்தம் இல்லை-கடல் இடம்-கண்ணனே -திரு வரண்கத்தா -தீர்த்தன
நீர் விட்டு மீன் வாழாதே
புனிதனே -ஆசை பிடித்த பெண்ணை துன்ப -விட்டு பிரிந்தால் தாங்காது -உணர வைத்தாயே -தீர்த்தன்
கோல மா மழைக் கண்-எந்த கண்ணை பார்த்து யார் கண்ணீர் விட்டு இருக்க வேண்டும்
என்னுடைய கோமள கொழுந்தே -தாயார் முகத்தை திருப்பி சாதிக்க
வங்கி புரத்து நம்பி -வெறுத்து
எட்டாவது பாசுரம் -என் செய்கேன் என் திருமகள்
உன்னையும் அவளையும் பற்றிய இத் திரு
கொழுந்து வானவர்களுக்கு மேன்மை
குன்று -எளிமை இன்றி இழக்கவோ
அழும் -அந்த மழைக்கு கோவர்த்தன்
சிநேகிதன் பாலன் படியும் செய்து அழுது தொழுது
புகல் அற்றவர் கார்யம் செய்தாள்
ப்ரக்மாஸ்த்ரமும் வீண்-தொழுதும் வரவில்லையே
இமைக்காமல் இருக்கிறாள்-கிடைத்த பின் விடலாமா –
இவள் கிட்ட நீ அழுது கொண்டு இருக்க வேண்டும்
அத திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும்
ஒன்பதாவது
என் திரு மகள்- தெளிகிலேன்
என் திரு மகள்- அனந்தாழ்வான் திரு குமாரிக்கு பெயர் வைத்தார் –
பட்டர்-என்-திரு மகளில் -சேர்த்து மார்பன்-என்னுடையவன்-அவன் கோடா சேர்த்து
ஸ்ரீ தனம் நான் -நாச்சியார் படி ஒதுங்கி-நம் அழகிய மணவாளன்-என் தாயாருக்கு கணவன் நீ
என்னுடைய ஆவி-பிராணன்- சேர்த்து நம் ஜீயர் அருள –
பட்டர் அணையில் சாய்ந்து கேட்டு மகிழ்ந்து -என்னும் -வார்த்தை என்னும் என்னுடைய ஆவியே என்னும்-சேர்த்து –
ஸ்ரிய பதி தான் என்னுடைய ஆவி- பிராணன்-அரங்க நாதா மயங்கி-பட்டர்-பிரபாவம்
பெரிய பிராட்டி கடாஷ லேசத்தல் தான் அனைத்தும்
நிலா மகள் கேள்வனே -ஆய மகள் அன்பனே
என்னை அடைய கடலை கடைய வேண்டாம்-எருதுகள் இல்லை ஹிரன் யாட்ஷன் இல்லை
முடிவு என்னது தெளிகிலேன்-
பத்தாவது
அடியை அடைந்தனள்
அடி அடையாதவள் போல் –இவள் அணுகி அடைந்தாள் -முகில் வண்ணன் அடி அடைந்து
கேசவ நம்பி கால் பிடித்து
மூஉலகு ஆளி-அந்தராத்மா -இந்த்ரன்-ருத்ரன்-நான்முக கடவுள்-சரீரம் -சரீரி பாவம்
வானோர் தலைவன்-சாமானாதிகரணம்–எம்பெருமானார் உரை -வையதிகாரண பிள்ளான் உரை
விரக தாபம் முடிந்து –
பலன்
முகில் வண்ண வானத்து -பேர் இன்ப வெள்ளத்தில் இருப்போம் –
அடியை அடைந்து -பொய் பொருநல்-சங்கணி துறை -துறைவன்-
தாமரை பரணி தெளிந்து -சத்துக்கள் மனம் போல் தெளிந்து –
இப் பத்தும் வல்லார்-இமையவர் சூழ இருப்பார்
இவள் போல் கஷ்டம் படாமல்-ஆனந்த வாழ்வு -கிட்டும் .
31-குலசேகரர் ஆழ்வார்
/36 பெரி ஆழ்வார்
பின்பு அனுபவிப்போம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்