Archive for the ‘திரு நெடும் தாண்டகம்’ Category

திரு நெடும் தாண்டகம்–13–கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 18, 2013

(ராஜ குமாரனுக்கு பிடி தோறும் நெய் போல் இவருக்கு அடி தோறும் அர்ச்சை
கூரத்தாழ்வானுக்கு திருச்செவியில் த்வயம் ஓதச் சொல்லி உடையவர் அருளிச் செய்த வார்த்தை)

அவதாரிகை –

திருத் தாயார் -இவள் திரு நாமத்தை தன் வாயால் சொல்லா நின்றாள் –
திருநாமம் சாத்மிக்கும் தசை போலே இருந்தது என்று பார்த்து -இவள் வார்த்தை கேளாதே –
உறாவிக் கிடக்கிற கிளியை இவள் கண் முகப்பே வைத்து திரு நாமத்தை சொல்லுவிக்க –
இவளுக்கு ஆஸ்வாசம் பிறக்கும் என்று நினைத்து –
இவள் முன்பே கிளியைக் கொண்டு விட்ட இடத்திலும் அது பேசாதே இருக்க
இவள் திரு நாமத்தை சொல்லீர் -என்றாள் –

இவள் தசையைக் கண்டு உறாவி இருக்கையாலும்
சேஷ பூதரான நாம் இவள் கற்பித்தவையே யாகிலும்
இவள் சந்நிதியில் சொல்லக் கடவோம் அல்லோம் -என்னும்
நினைவாலும் பேசாமல் இருந்தது –
ஆச்சார்யன் போதித்தனவையே யாகிலும் தத் சந்நிதியில் சொல்லக் கடவது அல்ல என்கிற சாஸ்திர
அர்த்தம் இவ்விடத்தில் வெளிப்படுத்தப் படுகிறது –

நான் உச்சரிக்க
அநந்தரம்
உனக்கு உச்சரிக்கலாமே -என்ன
அடியிலும் கற்பித்த பிரகாரம் அது வாகையாலே அதுக்கு இசைய
தான் ஆதி க்ரஹணம் பண்ண -அநந்தரம் -சொன்னவாறே
இது ஒரு முகத்தாலே -ஆபத்சகம் முதலான வ்ர்த்த முகத்தாலே -சாத்மிகாமையாலே
தளர்ந்தாள் -என்கிறாள் –

திருநாமம் சாத்மிக்கும் தசை என்றும் சாத்மியாத தசை என்றும் ஓன்று உண்டோ -என்னில் –
திருநாமம் தான்–1- ஓர் அவஸ்தையிலே பாவனமுமாய்
2-ஓர் அவஸ்தையிலே போக்யமுமாய்-
3-ஓர் அவஸ்தையிலே சம்சார பய நிவர்தகமுமாய் –
4-ஓர் அவஸ்தையிலே சாதனமுமாய் –
5-ஓர் அவஸ்தையில் தாரகமுமாய்-
6-ஓர் அவஸ்தையில் நஞ்சுமுமாய் –இருக்கும் –
தேக ஆத்மா அபிமானிகளுக்கு அன்னம் -இத்தனையும் -ஆகா நின்றது இறே –

ஆகார சுத்தௌ சத்வ சுத்தி -என்கிறபடியே
1-அன்னம் பாவனமாயும் இருக்கும் –
2-தாரகமாயும் இருக்கும்
3-போக்யமுமாயும் இருக்கும்
4-தாநாதி முகத்தாலே –புருஷார்த்த சாதனமாயுமாய் இருக்கும் –
5-அதிசயித்தவாறே நஞ்சுமுமாயும் இருக்கும் -இறே –

(ஸம்ஸார பய நிவர்த்தகம் இதுக்கு இல்லையே -ஸம்ஸாரம் ஈடுபடுத்தவே ஹேதுவாகும்)

அப்படியே பர சேஷம் ஆத்மா என்று இருக்கிறவனுக்கு –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே -என்கிறபடியே பிரதமத்தில் பாவனமாய் இருக்கும்
அநந்தரம்
புண்யா நாமபி புண்யோ சௌ-என்கிறபடியே உஜ்ஜீவன சாதனமாயும் இருக்கும் –
மங்களாநாஞ்ச மங்களம் -என்கிறபடியே பிராப்யமுமாய் இருக்கும் –
யன் நாம சந்கீர்தனதோ மஹா பயாத் விமோஷநம் ஆப்நோதி ந சம்சயம் நர -ஸர்வ லோகம் -ந்ரு கேஸரி
எனக்கு மங்களம் அளிக்கட்டும் ம்ருத்யோர் ம்ருத்யு
-என்கிறபடியே சம்சார பய நிவர்த்தகமுமாய் இருக்கும்
இது ரிஷிகள் கோஷ்டியில் பரிமாற்றம்

(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் -உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே)

ஆழ்வார்கள் கோஷ்டியில் ஒன்றாய்த்து –திருநாமம்
1- போக்கியம் என்றும்
2-தாரகம் என்றும்
3-பாவனம் என்றும்
4-நஞ்சு என்றும் சொல்லுகிற இது –

1-அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -என்று திரு நாமம் போக்யமாம் இருக்கிற படியை சொன்னார்கள்
2-நின் நாமம் கற்ற ஆவலிப்பு -என்று பாவனம் என்னும் இடம் சொன்னார்கள் –
3-கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் -என்று தாரகம் என்னும் இடம் சொன்னார்கள்
4-கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பிழைப்பில் பெரும் பெயர் -என்றும் நஞ்சு என்னும் இடத்தைச் சொன்னார்கள்

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.-திருமாலை -2-

காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.–திருமாலை -1-

ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே–நாச்சியார் -8-3-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –திருவாய் -9-5-8-

(அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து –இரண்டாம் திருவந்தாதி —50-)

திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை அனுசந்திக்கப் புக்கால் பிழைக்க அரிதாய்
அத்தாலே அரை ஷணம் விடப் போகாத திரு நாமங்களைச் சொல்லி –
(பிழைப்பில் -தோஷம் அற்ற பெயர் என்று கொள்ளலாமே யாகிலும் பிரகரண ஸ்வா ரஸ் யத்தாலே அனுசந்தித்தாருக்குப் பிழைக்க ஒண்ணாத என்று பொருள் கொள்ளக் கடவது –
பெரும் பெயரே பேசி -நாராயணாதி பரத்வ பரம் இன்றிக்கே ஸுலப்யாதி குணங்களை அன்றோ பேச அடுத்து -கோவிந்த பட்டாபிஷேகத்துக்குப் பின் –
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தாநவ அஹம் வோ பந்தவோ ஜாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-12- என்றவன் அன்றோ அவன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -1-3-4-
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு மனம் இரங்கினால் போலே நம்மிடமும் இரங்குவான் என்று கூப்பிடா நின்றேன்
நெஞ்சிலும் முற்பட்டு அழைப்பேன்)

—————————————————————————————————

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-

பதவுரை

(இப் பெண் பிள்ளை)
கல் மாரி–(இந்திரன் பெய்வித்த) கல் மழையை
கல் எடுத்து–ஒரு மலையை யெடுத்துப் பிடித்து
காத்தாய் என்றும்–தடுத்தவனே! என்றும்,
காமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும்-விரும்பத் தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,
அட்டாய் என்றும்–ஒழித்தவனே! என்றும்
மா கீண்ட–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த
கைத் தலத்து–திருக் கைகளை யுடைய
என் மைந்தா என்றும்–எனது மைந்தனே! என்றும்
தன் கிளியை–தன்னுடைய கிளியை நோக்கி
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும்-வில்லை முறித்துப் பிராட்டியைக் கைப் பிடித்தவனே! என்றும்,
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும்–திரு வெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,
அன்று–முன்பொரு காலத்தில்
மல்லரை–மல்லர்களை
மல் அடர்த்து–வலிமை யடக்கி
சொல் எடுத்து–திருநாமத்தின் முதற் சொல்லை யெடுத்துக் கொடுத்து
சொல் என்று–(மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,
(அது சொல்லத் தொடங்கினவாறே)
துணை முலை மேல்–உபயஸ்தரங்களிலும்
துளி சோர–கண்ணீர் பெருகப் பெற்று
சோர்கின்றாளே.–துவளா நின்றாள்.

இந்திரன் வர்ஷித்த கல் வர்ஷத்தை மலையை எடுத்துத் தடுத்து ரஷித்தவனே -என்கிறாள்
ஆசைப்படத்தக்கதாய் அழகியதாய் இருந்துள்ள காஞ்சீ புரத்திலே திரு ஊரகத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனே -என்கிறாள்
ஜனகராஜன் பல பரீஷார்த்தமாக வைத்த வில்லை முறித்து ம்ருது ஸ்வ பாவையான பிராட்டியுடைய புஜங்களோடு ஸம்ஸ்லேஷித்தவனே என்கிறாள்
திரு வெஃகாவிலே கண் வளர்ந்து அருளுகிற ராஜாவானவனே என்கிறாள்
கம்சன் தன்னை நலிகைக்காக மல்லரை வாசலிலே காவலாக வைத்த அன்று அவர்கள் பலத்தைப் போக்கி
சாணூர முஷ்டிகர்களாகிய மல்லர்களை நிரசித்தவனே என்கிறாள்
குதிரை வடிவை யுடைய கேசி என்னும் அஸுரனுடைய வாயைக் கிழித்துப் பொ கட்ட புஜ பலத்தை யுடையவனாய் யுவா வானவன் என்கிறாள்
இப்படி பலவகையாகக் கூப்பிட்டு தன்னுடைய கிளியைப் பார்த்து அதுக்குத் திரு நாமத்தின் முதலையை எடுத்துக் கொடுத்து
மேல் உள்ளதை நீயே சொல் என்று சொல்லி
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான ஸ்தனங்களில் கண்ணீர் துளிகள் பாயத் துவளா நின்றாள் –

—————————————————————————————————–

தான் ஆபன்னையாய் இருக்கையாலே
ஆபன் நிவர்த்தகமான திரு நாமங்களை
எடுத்து யாய்த்து -அவற்றைச் சொல்லச் சொல்லுகிறது –

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
ரஷகனாய் வைத்த இந்த்ரன் பாதகனாக
ரஷ்ய வர்க்கம் அவன் கையிலே பாத்யமாக நிற்க
நிருபாதிக ரஷகன் ரஷித்த படியைச் சொல்கிறது –

திருவாய்ப்பாடியில் உள்ளார் வர்ஷார்த்தமாக இந்த்ரனை ஆராதிக்கப் புக –
கிருஷ்ணன் அத்தை நிஷேதித்து –
நமக்கு ரஷகம் காடும் மலையும் ஆய்த்து -அவற்றை ஆராதிக்க அமையும் -என்று சொல்ல –
அவர்களும் அப்படியே மலையை ஆராதிக்க
மலைத் தெய்வமாய் இருந்து அத்தை அமுது செய்தான் ஆய்த்து –

தன் அபிமானத்தில் கிடந்தவர்கள் தேவதாந்திர பஜனம் பண்ணுகையாகிற இது –
ஸ்வ ஸ்திரீயை பிறருக்கு கொடுத்தால் போலே இருந்த தாய்த்து ஈஸ்வரனுக்கு –
இவ்வளவிலே -நமக்கு என்று நிவேதித்ததை அபிமான உபஹதம் என்று பாராதே அமுது செய்யப் பெறுவதே
என்று அவர்களை வாங்கி வர பிராப்தமாய் இருக்க
கிருஷ்ணனை அண்டை கொண்டு நம்முடைய யாக பங்கத்தைப் பண்ணினார்கள்

இடையர் என்று குபிதனாய்
சம்வர்த்த கணங்களை அழைத்து -கல் வர்ஷமாக சொரிந்து
திருவாய்ப் பாடியை அழித்து பொகடுங்கள் என்ன
திரு வாய்ப்பாடியில் உள்ளாறும்
கோ கோபி ஜன சங்குலம் அதீவர்த்தம் –என்கிறபடியே
ஆபன்னராக அத்தசையிலே
மலையை ஆராதித்தோம் -கிருஷ்ணன் ரஷித்தான் – என்ன ஒண்ணாது என்று பார்த்து
இவர்கள் ஆராதித்த மலை தன்னையே எடுத்து ரஷித்த படி –

கல்லெடுத்து
அவன் எடுத்தது –சோலை சூழ் குன்றாய் இருக்க –
கல்லெடுத்து -என்று ஒரு சிலா மாதரத்தை எடுத்தால் போலே
ஒசழக்காகச் சொல்கிறாள் –

(பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)

(கல்லெடுத்து–அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி.
“கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில,
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க.
வீரபத்நியாகை யாலே “பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க.)

ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்த போதை அநாயாசத்தை கண்டு இருந்தவள் ஆகையாலே
இந்த சக்தி இறே இவள் ஹ்ர்தயத்தில் கிடப்பது –
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே என்று இருக்குமவள் இறே –
அசக்தாதிகாரம் இது சக்தாதிகாரம் இது -சாதனாந்தரங்கள் -என்கிற வார்த்தைகள்
நம் ஆச்சார்யர்கள் கோஷ்டியில் புகுரக் கடவது அன்றியே இறே இருப்பது –
சக்தரோடு அசக்தரோடு வாசி இல்லை –ஈஸ்வர சக்தியைக் கொண்டு
தலை எடுக்கைக்கு என்று இருக்கும் கோஷ்டி இறே

சீதோ பவஹா நூமத -என்கிற சக்தி ஸ்வ ஆஸ்ரயத்தில் கிடக்க –
நரவண சஹாஸ்ரம்மே யுத்தே பிரதிபலம் பவேத் -என்கிற சக்தி உடையவன் சஹகாரியாக
தனக்கு ஓர் ஆற்றாமை அதிசயித்து இருக்க
தத் தஸ்ய ததர்சம் பவேத் -என்று இறே பிரதம ஆச்சார்யையான பிராட்டி இருந்தது –

கல் மாரியாலே கல்லை எடுத்து ரஷித்தான்
நீர் மாரியாகில் கடலை எடுத்து ரஷிக்கும் காணும் -என்று பட்டர் அருளிச் செய்வர்
இத்தால்-இன்னத்தைக் கொண்டு இன்ன கார்யம் செய்யக் கடவோம் என்னும் நியதி இல்லை –
சர்வ சக்தன் என்கை –

1-பிறரால் வந்த ஆபத்திலோ ரஷிக்கலாவது –
உன்னால் வந்த ஆபத்தில் ரஷிக்கல் ஆகாதோ –

2-கல் வர்ஷத்தில் அகப்பட்டாரையோ ரஷிக்கலாவது
பஹூத சந்தத துக்க வர்ஷிணி –என்று
துக்க வர்ஷத்தில் அகப்பட்டாரை ரஷிக்கல் ஆகாதோ

(அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்க வர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 49 –

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)

3-ஒரு ஊராக அகப்பட்ட நோவு பட்டாலோ ரஷிக்கலாவதோ
அவ் ஊராக அகப்பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரஷிக்கலாகாதோ

4-என்னுடைய ரஷணத்துக்கும் மலை எடுக்க வேணுமோ –
மலையை எடுத்த தோளைக் காட்ட அமையாதோ –

காமரு பூமி -இத்யாதி –
அக்காலத்தில் பிற்பட்டார்க்கு முன்னை சர்வ ஸ்வாதானம் பண்ணுகைக்கு அன்றோ
திரு ஊரகத்திலே வந்து நின்று அருளிற்று –

திரு ஊரகத்தில் த்ரிவிக்ரம ஆபதான வேஷத்தோடு வந்து நிற்க
கிருஷ்ணன் வந்து நின்றானாக பேசுவான் என் என்னில் –
வரையாதே எல்லாரையும் தீண்டுகையும்
தன் பேறாக கார்யம் செய்கையும் -இரண்டு அவதாரத்துக்கும் நிரூபகமாய் இருக்கையாலே
தத் சாம்யத்தை பற்ற அபிபின்னமாக பேசா நிற்பார்கள் –

காமரும் பூம் கச்சி –
ஆதரிக்கப் படுவதாய்
தர்ச நீயமாக இருக்கை –
போக்யங்களாலும் போக உபகரணங்களாலும் சம்ர்த்தமான காஞ்சிபுரம் என்கை –

திருப்பதிகளால் ச்ம்ர்த்தமாய் இருக்கையாலே போக்யங்களால் சம்ர்த்தமான தேசம் என்கிறது
படை வீடு ஆகையாலே போக உபகரணங்களாலே சம்ர்த்தமான தேசம் என்கை
பரம பதத்துக்கும் ஏற்றம் இதுவே இறே –

விமுகர்களுக்கும் ஸூலபமான திருவடிகள்
ஆற்றாமையை உடைய எனக்கு துர்லபம் ஆவதே -என்கிறாள் –

அந்த தூளிதானம் தான் ப்ராதேசிகமாய் தான் ஆறி இருக்கிறேனோ –
அக் காலத்தில் பிற்பட்டாருக்கும் உதவ வந்து நிற்க அக் காலத்துற்கு பிற்பட்டேன் என்று ஆறி இருக்கிறேனோ –

ஒன்றில் அவதாரங்களைச் சேர அனுபவிக்கிறிலர்-
ஒன்றில் திருப்பதிகளை சேர அனுபவிக்கிறிலர் –
கலசி யாய்த்து அனுபவிக்கிறார் ஆய்த்து –

அதுக்கு ஹேது என் என்னில்
பிடிதோரும் நெய் வார்ப்பாரைப் போலே
திருப்பதிகளை ஒழிய தமக்குச் செல்லாத படியாலே –
திருப்பதிகளின் உடைய அடிப்பாடு வேண்டுகையாலே இறே அவதாரத்தில் இழிகிறது –
அல்லாத ஆழ்வார்களுக்கும் இவருக்கும் உண்டான வாசி இதுவே இறே –

அவர்கள் மேன்மையை அனுபவிக்கும் போது பர அவஸ்தையை பேசுவார்கள்
நீர்மையை அனுபவிக்கும் போது அவதாரங்களைப் பேசுவார்கள் –
அந்நீர்மையை சாஷாத் கரிக்கைக்கு திருப்பதிகளில் இழிவார்கள் –

இவர் மேன்மையை அனுபவிப்பதும் திருப்பதிகளிலே
நீர்மை அனுபவிப்பதும் திருப்பதிகளில்
அத்தை சாஷாத் கரிப்பதும் திருப்பதிகளிலே –

வில் இறுத்து இத்யாதி –
பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து –
அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி
பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷிதவனே

ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று
பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு
வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து
அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக
ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து
பெண் தேடி வந்தோமோ நாங்கள் –
அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும்
வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி –
அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆயத்து

தோள் தோய்ந்தான் என்னும் –
விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி –
அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –

இத்தால் –
நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும்
உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி –
சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும்
ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே
ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது –
உன்னைப் பிரிந்து தனி இருப்பாருடைய ஆபத்தை போக்கின
நீ என் தனிமையால் வந்த ஆபத்தை போக்காது ஒழிவதே –

வெக்காவில் துயில் இத்யாதி
பிராட்டியை பாணிக்ரஹனம் பண்ணி வந்து கிடந்த தேசம் திரு வெக்கா வாய்த்து –
வேந்தே -என்னும் –
ஒரு ராஜ குமாரன் வந்து கிடக்கிறான் என்று பிரத்யபிஞ்ஞை பண்ணலாம் படி ஆயத்து
திரு வெக்காவில் நாயனார் வந்து கண் வளர்ந்து அருளும் படி –
இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே
நோவு படுகிற எனக்கும் அச் சேர்த்திக்கும் என்ன சங்கதி உண்டு –

மல்லடர்த்த -இத்யாதி –
சாணூர முஷ்டிகர்களை நிரசித்த போது பிரதமத்திலே அவர்கள் மிடுக்கை அழித்து
பின்னை ஆய்த்து அவர்களை நிரசித்து

ம்ர்கமத்யே யதாசிதம் ஹௌ சர்வ லீலா விநோதி நௌ-என்கிறபடியே
குவலயா பீடத்தை நிரசித்து அதனுடைய கொம்பை இருவரும் கையிலே
கையிலே பிடித்துக் கொண்டு சத்ரு பஷம் என்று மதியாதே
குரு வேர்ப்பும் தாங்களுமாய் பெரிய செருக்கோடு ரங்க மத்யத்திலே புகுந்து போது
ஒரு மான் குழாத்தின் நடுவே இரண்டு சிம்ஹம் புக்கப் போலே இருக்கையாலே
தர்சித்த போது மிடுக்குப் போய்த்து
பின்னை ஆஸ்ரயத்தை அழித்து விட்டான் ஆய்த்து

அங்கன் அன்றியே –
மல்லடர்த்து-
வரும் மல்லரை நிரசித்தபடியைச் சொல்லுகிறது என்னவுமாம் –
திருத் தோள்களின் மிடுக்கு தான் குமரிருந்து போம் இத்தனையோ –
என் தினவு தீர விஷயம் காட்ட வேணும் என்ன நெருக்கி விஷய்ம் காட்டிக் கொடுத்த படி-

அன்று இத்யாதி –
அன்றும் இன்றும் போலே காணும் ஆபத்து உள்ளது –
ஸ்ரீ வசு தேவரும் தேவகிப் பிராட்டியாரும் பிறந்த அன்று கண்டு விட்டோம் –
சமாப்தி வேளை யாகிலும் பிள்ளை முகத்தில் விழிக்க வல்லோமே
என்று ஆபன்னராய்க் கிடக்க
அவர்கள் ஆபத்துக்கு தன் ஆபத்து நிதர்சனமாய் இருக்கையாலே -அன்று -என்கிறாள் –

இவர்கள் முகத்தில் விழித்து பின்னை விரோதி நிரசனம் பண்ணப் பிராப்தமாய் இருக்க -அது செய்யாது ஒழிந்தது-
விரோதி கிடக்கச் செய்தே சென்று விழிக்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்னும் நினைவாலே –
விரோதி நிவர்த்தக பூர்வகமாக விறே பிராப்ய சித்தி இருப்பது –

மல்லரை அன்று அட்டாய் என்னும் –
மாதா பிதாக்களுக்கு வந்த ஆபத்தோ போக்கலாவது –
பிரணயிநிக்கு வந்த ஆபத்தை போக்கலாகாதோ –
மகா பாபிகளான சாணூர முஷ்டிகர் பெற்ற தோள் -அத் தோளை ஒழிய செல்லா எனக்கு அரியது ஆவதே -என்கிறாள்

நான் இவ் வாற்றாமையை விட்டு -பிரதிகூல வேஷத்தைக் கொண்டு வந்தேன் ஆகில்
தோளை அனுபவிக்கலாமே -என்கிறாள் –

மா கீண்ட -இத்யாதி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கும் தன்னை அனுபவிக்கையில் வருகிற
வழியில் உண்டான வன்னியம் அறுத்து கொடுத்தபடியைச் சொல்லுகிறது –

கம்ச ப்ரீரிதனாய் வந்த கேசி இவனுடைய பருவத்தையும் சுகுமார்யத்தையும் கண்டு
இவன் ஒரு பொருளோ -எடுத்து விழுங்குகிறோம் -என்று வாயைத் திறந்து கொண்டு வர
சிறு பிள்ளைகள் த்வாரம் கண்ட இடத்தில் கையை நீட்டக் கடவர்கள் ஆகையாலே கையை நீட்ட
ரஷகன் உடைய கை ஆகையாலே ரஷன தர்மம் பெற்றவாறே வளர்ந்து கொடுத்தது –
வெள்ளரிப் பழம் விரிந்தால் போலே விரிந்து கிடந்தான் இத்தனை இறே –

என் மைந்தா என்னும் –
திருவாய்ப்பாடி பெண்களை வசீகரித்த பருவத்தைக் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே என்னும் –

இப்படி ஆபத் சகமான திரு நாமங்களை ஆதி க்ரஹணம் பண்ணி –

சொல்லெடுத்து –
சப்தோச்சாரணம் மலை எடுத்தால் போலே இருக்கிறது காணும் இவளுக்கு
அவன் மலை எடுக்கிற போதை அவனுடைய சக்தியை நினைந்து –கல்லெடுத்து –என்றாள் –
தன் அளவில் வந்தவாறே வாய் விடுகைக்கும் சக்தி அற்று இருந்தபடி –

தன் கிளியை
தான் விரும்பி வளர்த்த கிளியை –
பாவை பேணாள் -என்றது போக்யமாக தோற்றினவாறே பாவையை அநாதரித்தாள் –
இதுக்கு திருநாம ஸ்பர்சம் உண்டாகையாலே ஆதரிக்கிறாள்
பரிக்ரஹங்களில் வந்தால் ஸ்வரூபேண த்யாஜ்யம் இல்லை -ஸ்வரூபேண- உபாதேயமும் இல்லை இறே
பிரதிகூலம் ஆன போது சர்வமும் த்யாஜ்யமாகக் கடவது
அனுகூலமான போது சர்வமும் உத்தேச்யமாகக் கடவது இறே –

சொல்லே என்று
திரு நாமத்தை சொல்லீர் என்று ஆதி க்ரஹணம் பண்ணிக் கொடுத்தாள் –
அநந்தரம் அது சொல்லத் தொடங்கிற்று –

துணை முலை இத்யாதி –
கேட்பாரைப் பெற்றது இல்லை என்கிறாள் –
ஸ்த்ரீத்வ பாவனை ஒழிய ச்மச்ரு வ்யோகமும் பிறந்து ஸ்தன உத்போதமும் பிறந்ததோ என்னில்
ஸ்மஸ்ரு ஸ்வதந்திர லஷணம்
ஸ்தனம் பரதந்திர லஷணம்
அந்த ஸ்வா தந்த்ரத்ய நிவ்ருத்தியையும் பார தந்த்ரத்தையும் சொல்லுகிறது –

ஸ்திரீகளுக்கு போக உபகரணம் இறே முலை
சேஷ பூதனுக்கு முலை என்கிற இத்தால் –பக்தியை -நினைக்கிறது –
இவனுக்கும் போக உபகரணம் பக்தி
அவனுக்கும் போக உபகரணம் பக்தி
நராணாம் –பக்தி க்ரீதன்–(ஸ்ரீ விஷ்ணு தர்மம்)  இறே –

(சம்சாரி நர கர்மத்தால் தூண்டப்பட்டு உழன்று இருக்க – ஹஸ்த ஆலம்பனம்-கைபிடித்து வழிகாட்டுவான் -ஜனார்த்தனன்
அவன் இடம் பக்தி கொண்டவர் அவனை -விற்கவும் வாங்கவும் பெறுவார்கள்)

துணை முலை –
போக்தாவுக்கு போக உபகரணம் இறே துணை முலை ஆவது -அங்கன் இன்றிக்கே
ஒரு முலைக்கு ஒரு முலை துணையாம் இத்தனை ஒழிய -வேறு ஒப்பு இன்றிக்கே இருக்கை –
அவனுடைய திருவடிகளைப் போலே யாய்த்து இவளுடைய முலையும் இருப்பது –
அல்லாத ஆழ்வார்களைப் போல் அன்றியே ஸூ குமாரராய் இறே திருமங்கை ஆழ்வார் இருப்பது –

மலையாளர் ஒரு மாசத்துக்கு ஒருக்காலே உண்ணவும் வல்லராய்
ஒரு மாசம் பட்டினி விடவும் வல்லர்க்களுமாய் இருக்குமா போலே
சம்ஸ்லேஷ தசையில் நெடுநாள் தரித்து அனுபவிக்கவும் வல்லர்களாய்
விஸ்லேஷத்தில் நெடுநாள் தரிக்கவும் வல்லர்களாய் இறே மற்றைய ஆழ்வார்கள் இருப்பது –
சம்ஸ்லேஷிக்கவும் மாட்டாதே விஸ்லேஷிக்கவும் மாட்டாதே யாய்த்து இவருடைய சௌகுமார்யம் இருப்பது –
இவர் உண்ணவும் மாட்டார் பட்டினி விடவும் மாட்டார் –

நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை –என்னக் கடவது இறே –

(சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே!)

துணை முலை மேல் துளி சோர –
ஸ்பர்ச இந்த்ரியமும் த்ர்ஷ்டியும் -ஸ்வ போகங்களை இழந்து –
தன்னிலே கட்டிக் கொண்டு கிடந்து கதறுகிறாப் போலே இருக்கிறபடி
கண்ணீர் அல்லாத பிரதேசங்களிலே விழாமல் முலையிலே விழுகையாலே
கண்ணும் முலையும் தன்னிலே கட்டிக் கொண்டு கிடந்து கதறுகிறாப் போலேஇருக்கிறது யாய்த்து –

சோர்கின்றாளே-
போக உபகரணமான ஞான பக்திகள் அழிகையாலே தானும் சோரா நின்றாள்

முன்பு திருநாமம் சொல்லுகையாலே ஆஸ்வாசம் பிறந்தது –
ஆகையாலே திரு நாமம் ஆஸ்வாச ஹேது வாமோ என்று பார்த்து அத்தை சொல்லுவிக்கத் தொடங்கினாள-
அதுக்கு உள்ளீடான வர்த்தத்தை யனுசந்தித்து மோஹம்கதை யானாள்-

ஆபத் சகனானவன் ஆபன்னையான எனக்கு -உதவாது ஒழிவதே -என்று
மோஹம் கதை யானாள் என்கை –

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–12–நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 18, 2013

அவதாரிகை –

கடல்வண்ணர் -என்று கட்டுவிச்சி திரு நாமம் சொல்லுகையாலும்
அத்தை திருத் தாயார் அனுபாஷித்தும்
வினவ வந்தார்க்கு சொல்லியும்
இவள் தான் வாய் வெருவினாள் போலே –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -என்று
தன் வாயாலே திரு நாமத்தை சொல்லுகையாலும்
பூர்வ அவஸ்தையில் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்து
அவ்வளவிலும் அபிமதன் வந்து முகம் காட்டாமையாலே
அதுவும் ஆற்றாமைக்கு உடலாய் -இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்-
அத்தை வினவ வந்தார்க்கு சொல்லி இன்னாதாகிறாள் –

இவளுடைய கிலேசம் நின்ற நிலை இது –
ஸ்வரூப ஹானி நின்ற நிலை இது –
எனக்கு அபவ்யையான படி இது –
இத்தனைக்கு அடி என் பாபம் இறே என்று -அவர்களுக்குச் சொல்லி இன்னாதாகிறாள் –

லோக அபவாதம் பரிஹரிக்க சொல்லுகிறாள் இத்தனை போக்கி
அகவாயில் இவ்விஷயத்தில் இவளுடைய அவகாஹனம்
தனக்கு அநிஷ்டமாய் இருக்கிறது அன்று இறே

(கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை
“நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி.)

——————————————————————————

நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா வென்னும்
அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்தோர் பழி படைத்தேன் ஏ பாவமே–12-

பதவுரை
(இப் பெண்பிள்ளை)
நெஞ்சு-மனமானது
உருகி-நீர்ப்பண்டமா யுருகி
கண் பனிப்ப நிற்கும்-கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்-மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்-பெரு மூச்சு விடுகின்றாள்;
உண்டு அறியாள்-போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்-உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்-விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரை புரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்-பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்ய யுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்-அழகிய சிறகை யுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்-பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா–என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்-பெண் மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து-விசாலமான இப் பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்-ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்–அந்தோ!.

மனஸ்ஸானது நிர்ப் பண்டமாக உருகி கண்களின் நின்றும் தாரை தாரையாக விழ அசைவற்று நிற்கிறாள்
மோஹங்கதை யாகிறாள்
நெடு மூச்சு விடா நின்றாள்
போஜனம் செய்து அறியாள்
உறக்கத்தை ஆதரியாள்
விஷத்தை உமிழா நின்றாள்
திருவனந்த ஆழ்வான் மேல் யோக நித்திரை பண்ணுகிற பூர்ணனே -என்று சொல்லா நின்றாள்
பரிமளம் மிக்கு இருந்துள்ள புஷ்பங்களை யுடைய வயல்கள் சூழ்ந்த திருவாலியில்
எழுந்து அருளி இருக்கும் நித்ய யுவாவானவனே என்று சொல்லா நின்றாள்
அழகிய சிறகை யுடைத்தான கருட த்வஜத்தை அநு கரிக்கும்
காநம் பண்ணும்
என் உயிர்த் தோழியே சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே போய்
அவனுடன் ஸம்ஸ்லேஷிக்கப் பெறுவோமோ என்று சொல்லா நின்றாள்
என் கைக்கு அடங்காத பெண்ணைப் பெற்றேன்
இந்த மஹா பிருத்வியிலே ஒப்பற்ற பழியை லபித்தேன் நான் செய்த பாபமே –

————————————————————————

நெஞ்சு இத்யாதி –
கீழ் பாட்டில் இரங்கும் -என்ற இரக்கத்தின் உடைய வகைகள் இருக்கிறபடி –

நெஞ்சுருகி –
நிரவயவமான மனஸ் தத்வம் நீர்ப் பண்டமாகா நின்றது –
அக்னி சகாசத்தியிலே மெழுகு போலே விரஹ அக்நியாலே த்ரவ த்ரவ்யமாகா நின்றது –
லௌகிக அக்னிக்கு உருகா நின்றால் விரஹ அக்னிக்கு உருகாது ஒழியுமோ –
விரஹ அக்னிக்கு உருகாத போது ஜ்ஞானப் பிரசர த்வாரம் இன்றியிலே ஒழியக் கடவது இறே –

(ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-)

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருமாள் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் ?
தெரு வெல்லாம் காவி கமல் திரு காட் கரை
மருவிய மாயன் தன மாயம் நினைதொறே–9-6-1

(நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-)

(வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

(வேம்  எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட-10-3-7-)

கண் பனிப்ப –
அது உள்ளடங்காமையாலே பரீவாஹ ரூபத்தாலே புறப்படுகிறபடி –
அந்த கரணம் உருகி பாஹ்ய கரணத்தாலே புறப்படுகிற படி –

நிற்கும் சோரும் –
அவை இரண்டின் உடைய கார்யம் இருக்கிறபடி –
க்ர்த்ய அக்ர்த்ய விவேகம் பண்ண மாட்டாமையாலே ஸ்தப்தையாய் நிற்கும் –
க்ர்த்ய அக்ர்த்ய விவேகத்துக்கு அடியான நெஞ்சு அழிகையாலே
ஒரு வியாபார ஷமை அன்றியே இருக்கும்

சத்ருக்னோ நந்தர ஸ்தித -என்னக் கடவது இறே –
ஸ்வாமி தரைப் பட்டுக் கிடந்தது ப்ரலாபியா நிற்க -சேஷ பூதன் தரித்து நின்றான் என்கை ஓர் அர்த்தம் அன்றே –
க்ர்த்ய அக்ர்த்ய விவேகம் பண்ண மாட்டாமையாலே ஸ்தப்தனாய் நின்றான் -என்கை –
இவனுடைய பிரலாபத்தை தவிர்க்க மாட்டான்
பெருமாளை அழைக்க மாட்டான் –
ஆகையால் ஸ்ப்தனனாய் நின்றான் என்கை

(சத்ருக்னோ அநந்தர ஸ்தித-ஸ்தம்பித்து நின்றானே -குகன் பெருமாள் தரைக் கிடந்த இடத்தைக் காட்டி
சொல்வதைக் கேட்டு பரதன் நினைவு இழந்து கீழ் விழ
அறிவு இழந்து அழுது -செய்வது இன்னது செய்யத்தக்கதது என்று அறிய மாட்டாமையால் அசைவற்று நிலையாக நின்றானே)

சோரும் –
ஓர் ஆலம்பனம் பெறில் இறே ஸ்த்தியாய் நிற்கலாவது –
அது இல்லாமையாலே மோஹம் கதை யானாள் –
க்ர்த்த்ய அக்ர்த்த்ய விவேகம் இன்றியிலே ஒழிந்தாலும் ஒரு ப்ரிவ்ருத்தி பண்ணலாவது
கண்ணாறு உண்டாகில் இறே -அது அழிகையாலே மூச்சு அடங்கினாள் –

நெடிது உயிர்க்கும்
உள் உண்டான சோகாவேசத்தாலே நெடு மூச்சு எறியா நிற்கும்
கோடாரித்தில் பற்றின அக்னி போலே அந்த கரணத்தை உருக்கி விடும் அளவன்றியே –
தச் சேஷம் நெடு மூச்சாய்ப் புறப்படா நின்றது –
தஹந்தீ மிவ நிஸ் வாஸை வ்ர்ஷான் பல்லவ தாரிண – என்னக் கடவது இறே –
திருவடி லௌகிக அக்னியால் ஊரைச் சுட்டான் –
இவள் விரஹ அக்னியால் அசோக வநிகையைச் சுட்டாள் –

(தஹந்தீ மிவ நிஸ்வாஸை வ்ர்ஷான் பல்லவ தாரிண – –
பிராட்டியின் மூச்சுக் காற்றின் வெப்பத்தால் அசோக வனத்தில் தளிர்களுடன் கூடிய மரங்களும் எரிந்தன )

உண்டு அறியாள் உறக்கம் பேணாள் –
தன் கார்யம் தலைக் கட்டின படி இது –
என் கார்யத்தில் இவள் நின்ற நிலை இது –
இவளுடைய ஊணும் உறக்கமும் போலே காணும் -தனக்கு உத்தேச்யம் –

உண்டு அறியாள் –
உண்கிறிலள் -என்கை அன்றிக்கே
முதலிலே ஊணை மறந்தாள் என்கிறாள் சம்ச்லேஷ தசையில் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -என்றும்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்றும் இருக்கையாலே
ஊண் இல்லை –
தத் விஸ்லேஷத்தில் உபவாச க்ர்சையாய் இருக்கையாலே ஊண் இல்லை –

(கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாம வேதம் நாள் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை  தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – பெரியாழ்வார் திருமொழி-5-1-6-)

(உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-)

உறக்கம் பேணாள் –
நித்ரையைக் கால் கடைக் கொள்ளா நின்றாள் –
பட்டுடுக்கும் -என்று அவன் ஆதரித்த வுடை என்று அன்றோ
நீ அவ்வுடை உடுக்கத் தொடங்கிற்று –
அவ்வோபாதி அவன் ஆதரித்த உடம்பு அன்றோ உன் உடம்பு
அவன் வந்து முகம் காட்டினால் அதின் போக்கியம் அழிந்தது என்று
விஷண்ணன் ஆகாதபடி -உன் சௌகுமார்யத்துக்கு அனுகூலமாக வருந்தி யாகிலும்
உறங்க வேணும் காணும் என்ன அவற்றையும் அநாதாரியா நின்றாள் –

பேணாள் -என்ற இது
வருந்தி யாகிலும் உறங்க வேணும் என்று சொன்னத்தை காட்டுகிறது இறே –
அநாதி மாயயா ஸூப்த – (சாந்தோக்யம் )என்கிறபடியே-
பகவத் விஷயத்தை கிட்டுவதற்கு முன்பு உணர்த்தி அறியாதா போலே
பகவத் விஷயத்தை கிட்டினாலும் உறக்கம் அறியாது இருக்கக் கடவது இறே-

நஞ்சு இத்யாதி –
தன் பிரயோஜனமும் கிடக்க -என் பிரயோஜனமும் கிடக்க
ஸ்வரூபம் அழிந்தபடி பார்க்கலாகாதோ -என்கிறாள் –
அபிமத வ்யோகத்தால் வந்த ஆற்றாமையாலே அகவாய் அழியா நிற்கச் செய்தேயும்
அத்தைப் பிறர் அறியாதபடி அடக்கி பொரி புறம் தடவி
எதிர்தலையை அழிப்பிக்கை இறே -ஸ்த்ரீத்வ லஷணம்
அது தவிர்ந்து வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள் –

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
என்று அத்தை வாய் வெருவினாள் என்று நினைந்து இருந்தோம் –
அது போய் இடைவிடாமல் வாய் புலத்த தொடங்கினாள் –
முன்பு –திருவரங்கம் -என்று ஊரைச் சொன்னாள் –
கட்டுவிச்சி –கடல் வண்ணர் -என்று பெரிய பெருமாளைச் சொன்னாள்
இப்போது படுக்கையைச் சொல்கிறாள் –
முதல் படுக்கை கோயில் போலே காணும் இவளுக்கு –

நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் –
தான் அழியா நிற்க –
எதிர் தலையைப் பேணா நின்றாள் –
நஞ்சரவு –
பிரதி கூலர்க்கு கிட்ட ஒண்ணாத படுக்கையாக பெறுவோமே –

(“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது.
பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற
திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத் தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று.)

அரவு –
படுக்கைக்கு சம்பாத்தியமான லஷணங்கள் ஸ்வத சித்தமாக பெற்றோமே –
மென்மை குளிர்த்தி நாற்றம் என்கிற இவை ஜாதி பிரயுக்தமாய் இறே சர்ப்பத்துக்கு இருப்பது –
சேதனமான படுக்கையைப் பெற்றோமே –
பிரக்ர்ஷ்ட விஜ்ஞான பலை கதா மனி -என்கிறபடியே –
அவஸ்தா அனுகுணமாக குழைய வேண்டும் இடத்தில் குழைந்து –
உறைய வேண்டும் இடத்தில் உறைந்து -கொடுக்கும் படுக்கையாகப் பெற்றோமே –

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–)

துயில் அமர்ந்த –
1-படுக்கை வாய்ப்பாலே வீசி வில் இட்டு எழுப்பினாலும் எழுந்து இராத படி யாய்த்து படுக்கை வாய்ப்பு இருக்கிறபடி –
2-நிர் பயமாக கண் வளரப் பெற்றோமே
3-போக ரூபமாக கண் வளரப் பெற்றோமே –

நம்பீ -என்னும் –
திரு வநந்த ஆழ்வான் மடியில் சாய்ந்த பின்பு தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
அழகால் வந்த பூர்த்தியைச் சொல்லுகிறது –
சமயா போதிதஸ் ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப – என்று
ஆலத்தி வழிக்க வேண்டும்படி இறே
உறங்கும் போதை அழகு இருப்பது –

(பையத் துயின்ற பரமன் -தூங்கும் போதும் பரமன் போல் இங்கும்)

அதவா
நஞ்சு -இத்யாதி –
ப்ரணய ரோஷம் தோற்ற வாய்விடா நின்றாள் -என்கிறாள் ஆகவுமாம் –
நஞ்சரவு
பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிறான் என்று இருந்தோம் –
அது ஒரு வ்யாஜமாய்
அவ் வஸ்துவை ஒழிய செல்லாதார் கிட்டாதபடி நஞ்சை உமிழும்படி ஆவதே –

படுக்கையின் ஸ்வ பாவம் –
அவனோடு இன்னாதாம் ஒழிய படுக்கையோடு இன்னாதாவான் என் என்னில் –
அவனோடு தான் இன்னாதாகைக்கு ஹேது அவர்ஜநீய சம்பந்தமும் போக்யதையும் அன்றோ –
அவ்வோபாதி ததீயரோடும் அவர்ஜநீய சம்பந்தமும் போக்யதையும் உண்டானால் கிலாய்க்கத் தட்டில்லை இறே –
அவனுடைய அனன்யார்ஹ சேஷத்வத்தில் அந்தர் பூதம் இறே ததீயர் உடைய போக்யதையும் –
ஆகையாலே படுக்கையோடு கிலாய்க்கை பிராப்தம் –

துயில் அமர்ந்த –
இருவர்க்கு படுத்த படுக்கை ஒருவருக்குப் பொருந்துவதே –
பரம பிரயணியிகளாய் இருக்கிற தம்முடைய
பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் -என்கிறாள் –

நம்பீ என்னும்
இத்தலை வெறும் தரையாய் இருக்க அத்தலை குறைவற்று இருக்கிறபடி

வம்பார் பூம் வயலாலி மைந்தா வென்னும் — –
அப் படுக்கையோடு சேருகைக்கு பாணி க்ரஹணம் பண்ணின தேசத்தை சொல்கிறது –
பரிமள பிரசுரமான பூவை உடைத்தான வயல் –
அவனுடைய யுவத்வம் நித்யமானாப் போலே வயலும் நித்ய வசந்தமாய் இருக்கிறபடி –
தம்முடைய அரும்பினை அலரை -என்கிற பருவத்துக்கு அனுகூலமாக நித்ய வசந்தமாக வயலைப் பெறுவோமே

(யுவா குமார யுவதிஸ்ய குமாரிணி)

அதவா
நான் இருக்கிற தேசம் நீரும் பூவும் பரிமளமும் இன்றிக்கே வறண்டு தரையாய் கிடக்க
தான் இருக்கிற தேசம் அகப்பட தளிரும் முறியும்படி ஆவதே –
அவனுடைய செந்தலிப்பே இறே அத்தேசத்துக்கும் செந்தலிப்பு –
அப்படியே தன் செந்தலிப்பாய் இருக்கும் தேசம் ஆகையாலே
தான் உறாவுகையாலே
அத் தேசமும் உறாவிக் கிடக்கிறது இறே-(செந்தலிப்பு -குளிர்த்தி)

மைந்தா என்னும் –
என்னை உபேஷிக்கப் பார்த்தாய் ஆகில் பருவத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹை ஆக்குவான் என் என்னில்
அடியிலே நான் விஷய பிரவணனாய் திரிய
வாடினேன் -என்று சொல்லும்படி உன்னுடைய போக்யதையைக் காட்டி
புறம்பு உள்ள துவக்கை அறுத்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணிற்று என்னைக் கை விடுகைக்கோ –

அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும் –
பாணி க்ரணம் பண்ணி வைக்க கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்கிறது –
அழகிய சிறைகை உடைய பெரிய திருவடி ஆகிற த்வஜத்தை அனுகரியா நின்றாள்
வந்தால் பிரியப் படுக்கை அன்றியிலே வருகிறான் என்று தூரத்தில் கண்டால்
விஸ்வசிக்கும்படி இறே பெரிய திருவடி உடைய ஔதார்யம் இருப்பது –
பெரிய திருவடி தூரத்தில் தோற்றி ஆஸ்வசிக்கும் படியை
நினைத்துக் கொண்டு இருந்தாள் –
அவன் வரக் காணாமையாலே அவனை அனுகரிக்கத் தொடங்கினாள் -(ஆடுகை -அனுகரிக்கை )
விடாய்த்தார் ஹஸ்த முகத்தாலே தண்ணீர் வேண்டுமா போலே அவன் வரவில்
தனக்கு உண்டான ஆகாங்க்ஷை தோற்ற அவன் வரும்படியை பாவிக்கத் தொடங்கினாள் –

புட்கொடியே யாடும் –
பெரிய திருவடி முதுகில் அவன் தான் வரும்படியை பாவிக்கை அன்றியே
கொடியையே பாவியா நின்றாள் –

பாடும் –
அவனை அனுகரிக்கையாலே பிறந்த ஆஸ்வாசத்தாலே வாய் திறக்க வல்லளாய் ஆர்த்தி தோற்ற கூப்பிடத் தொடங்கினாள் –

பாட்டாவது
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு கால் தாழ்ந்து இருக்கும்படியான த்வனி இறே –
அப்படியே இவளும் உரக்க -ஆர்த்த நாதத்தாலே
மரங்களும் இரங்கும் வகை -என்கிறபடியே
பிறர் கால் தாழ்ந்து கண்ணும் கண்ணீருமாய் இருக்கையாலே

(இரங்கி நாள் தொறும் வாய்வெரீஇ* இவள் கண்ண நீர்கள் அலமர,*
மரங்களும் இரங்கும் வகை* ‘மணி வண்ணவோ!’ என்று கூவுமால்,*
துரங்கம் வாய் பிளந்தான் உறை* தொலை வில்லி மங்கலம் என்று,* தன்
கரங்கள் கூப்பித் தொழும்* அவ் ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.)

பாடும் -என்கிறது
சோக ரசத்தோடு போக ரசத்தோடு வாசி இல்லை இறே -பிறரைக் கால் தாழப் பண்ணுகைக்கு-

அணி யரங்கம் -இத்யாதி –
இவளுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்ட தோழி -தாயானவள் கடக்க நின்று ஹிதம் சொல்லுமவள் ஆகையாலே
ஆஸ்வாச கரையாக மாட்டாள் –
நம்முடைய சந்நிதி ஆஸ்வாச ஹேதுவாமோ என்று பார்த்து –
ஏகம் துக்கம் சுகஞ்சனௌ-என்று இருக்குமவள் ஆகையாலே
காய்ந்த தலையும் க்ர்சமான வடிவும் உறாவின முகமாய்க் கொண்டு
தன் ஆர்த்தி எல்லாம் வடிவிலே தோற்றும்படி முன்னே வந்து நின்றாள் –

(த்வம் வயஸ்ய அஸி ஹ்ருதய மே ஹி ஏகம் துக்கம் சுகம் நௌ சுக்ரீவோ ராகவம் வாக்யம் …)

அவள் முகத்தை பார்த்து -தோழி நம் கோயிலிலே போய் பெரிய பெருமாளை அனுபவிக்க வல்லோமோ -என்கிறாள் –
ஏஷ ப்ரஹ்ம பிரவிஷ்டோஸ்மி- க்ரீஷ்மே சீதமிவ ஹ்ர்தம்-(மஹா பாரதம் கோடையில் குளிர்ந்த குளத்தில் நீராடுவது போல்)  -என்று ஈஸ்வரனை தடாகமாக சொல்லக் கடவது இறே –
தாப த்ரயாதுரர்க்கு தாப ஹரமாய் இருக்கையாலும்
விரஹ தாபாதுரர்க்கு விரஹ தாப சமநமாய் இருக்கையாலும் ஆடுதுமோ – என்கிறாள் –

(‘ஆடுதும்‘ என்றது
கலவி செய்ய விருப்பத்தைக் கூறியவாறு. தமிழர் கலவியைச் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ எனனுமாற்றாற் கூறுவர்!

“பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றளென்மகள்“ என்பர் மேலும்
“தயாதன் பெற்ற மரதக மணித் தடம்“ என்கிறபடியே எம்பெருமான் தடாகமாகச் சொல்லப் பட்டிருந்தலுங்காண்க.)

அணி அரங்கம் ஆடுடுமோ
தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் -என்று
கல்லைப் பொய்கையாக சொல்ல வல்லவர்கள்
ஆற்றைப் பொய்கையாக சொல்லச் சொல்ல வேணுமோ –
அனன்யார்ஹராய் -அநந்ய போக்யராய் இருப்பார்க்கு இறே இவ் ஊரில் புகுந்தால்
ஒரு மடுவிலே புகுந்தாப் போலே ஸ்ரமஹரமாய் இருப்பது –

(உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பிலராய்,இவளைப்
பெருகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறுகின் றிலர் தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தால் இவளாகம்,மெல்லாவி எரி கொள்ளவே! –திரு விருத்தம்)

தோழி -என்னும் –
அவள் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு
நாம் போல் கோயிலிலே அனுபவித்து நம் முகம் பண்டு போலே
செந்தலித்து (குளிர்ந்து )இருக்க நாம் காண்பது எப்போதோ -என்னும் –

உன் வயிற்றில் பிறந்தவளை ஸ்வரூப ஹாநியாலே இழியப் புக்கால் நியமிக்கக் குறை என் -என்னில் –
என் சிறகின் கீழ் அடங்காப் பெண் பெற்றேன் –
என் கைக்கு அடங்காதபடி ஆனாள் –
ஆஸ்ரயண தசையில் அவன் மேல் விழுந்து ஆஸ்ரயிப்பிக ஆஸ்ரயித்த்வோபாதி
போக தசையிலும் அவன் செய்தபடி கண்டு இருக்கை தான் ஸ்வரூபம்
நீ மேல் விழுகைக்கு ஸ்த்ரீத்வத்துக்கு போராது காண் என்று
நான் அறிந்ததைச் சொன்னாலும் அத்தை கால் கடை கொள்ளா நின்றாள் –

என் சிறகு –
என் பஷத்தில் – என் அபிமானத்திலே -என்றபடி –
அவன் அபிமானத்தில் அடங்கினவள் ஆகையாலே என் அபிமானத்தை விட்டாள் இறே –
ஸ்வரூபத்தை நோக்கினாள் அல்லள்
என் அபிமதம் செய்தாள் அல்லள் –
எனக்கு பவ்யை ஆனாள் அல்லள் –

பெற்றேன் –
இவை எல்லாம் இவள் குற்றம் ஆகாதே பெற்ற தன் குற்றம் ஆக்குகிறாள் –

இரு நிலத்து ஒரு பழி படைத்தேன் –
இவளைப் பெற்ற தான் உண்டான பேறு இதுவே இறே –
பஞ்சாசத்கோடி விஸ்தீர்ணையான பூமிப் பரப்பு அடங்கலும் வ்யாப்தமாம் படியான பழியைப் படைத்தேன் –
தன் கார்யத்தே ப்ரவர்த்திக்கை குடி பழியாம் படி இறே இக் குடியின் ஏற்றம் இருப்பது –

ஓர் பழி –
அத்விதீயமான பழி –

(இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.)

(‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.)

ஏ பாவமே
இவள் குறையும் அன்று
அவன் குறையும் அன்று
நான் பண்ணின பாபமே இதுக்கு ஹேது என்கிறாள் –

ந மந்தராயா -இத்யாதி –
இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதை மந்தரை என்று நினையா -அவளுடைய தோஷம் அன்று
அவள் வார்த்தை கேட்ட கைகேயி தோஷம் என்று நினைத்தான்

ந ச மாதுரஸ்ய-இவளுடைய தோஷமும் அன்று –
இவள் வார்த்தையைக் கேட்ட சக்கரவர்த்தி தோஷம் என்று நினைத்தான் –

தோஷோ ந ராஜ்ஞா-ராஜாவுக்கு ஒரு தோஷம் இல்லை
அவன் வார்த்தை கேட்டு -தமக்கு வகுத்த அபிஷேகத்தை பொகட்டு காட்டிலே போன அவர் குற்றமே இத்தனை –

ந ச ராகவஸ்ய -அவருக்குத் தான் குற்றம் என்
அவர் அபிஷிக்தராய் அனுகூல வ்ருத்தி பண்ண கடவனாய் இருக்க
அதுக்கல்லாத என் பாபமே இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதம் –

வனப்ரவேச ரகு நந்தனஸ்ய -இக்குடி வாழப் பிறந்த செல்வப் பிள்ளை
வனவாசம் பண்ணுகைக்கு நிமித்தம் என் பாபமே யாம் இத்தனை –
கூனி சொன்னது கைகேயி கேட்க வேண்டா
அவள் சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டா
அவன் சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டா

கூனி சொன்னது கேட்க வேண்டாது ஒழிகிறது-அடியாத்தி யாகையாலே
கைகேயி சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில்
ஸ்திரீ புத்திர வாத்சல்யத்தாலே சொன்ன வார்த்தையை
பர்த்தாவுக்கு கேட்க வேணுமோ –

சக்கரவர்த்தி சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில் –
தர்ம ஆபாசத்தை ஆலம்பனம் ஆக்கிக் கொண்டு
ஸ்திரீ பாரதந்த்ர்யத்தாலே பிரமித்து சொன்ன வார்த்தையை பெருமாளுக்கு கேட்க வேணுமோ
தம்முடைய அந்ய வ்யதிரேகங்களில் நான் படும் பாடு அறிவர் தாம் ராஜ்ய ப்ராப்தர் என்னும் இடம் அறிவர்
ஆன பின்பு அவனைக் கட்டி இட்டு வைத்து ராஜ்யத்தை ஆளத் தட்டேன் –
அவன் சொன்ன வசனத்தை அநாதரித்து -ராஜ்யத்தை ஆண்டார் ஆகில்
தம்முடைய வ்யதிரேகத்தில் நான் முடியாத படி ரஷித்தார் ஆகில் ஆயத்தே
ஆகையால் என் பாபமே இதுக்கு நிமித்தம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான் —

(நானே தான் ஆயிடுக
இல்லாத குற்றத்தை இருப்பதாக ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே இருப்பதாக இசைவதே
நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்)

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–11–பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 17, 2013

அவதாரிகை –

ஆற்றாமையோடு –முதலானாய் -என்றார் –
அந்த வெக்காயத்தோடே –ஆண் பெண்ணாய் –
அது தன்னிலும் தன் வாயாலே சொல்லுகைக்கு யோக்யதை இல்லாதபடி – மோஹங்கதையாய் –
வைத்து வாயாலே கூப்பிடும்படியாய்ச் செல்கிறது மேல் –

அதாகிறது-
இயற்கையிலே புணர்ந்து பிரிந்து பிரிவு ஆற்றாதாள் ஒரு பிராட்டி
மோஹம் உணர்த்தியும் -இவை முதலான தசா விசேஷங்களும் ஒருகால் பிறக்கையும்
அது தானும் அக்ரமாக பிறக்கையுமாக செல்லா நிற்க
பந்து வர்க்கத்தில் உள்ளாறும் யுக்த அயுக்த நிரூபணம் பண்ண மாட்டாதே இருக்க
இந் நோவுக்கு நிதானம் அறியாதே
பேஷஜ குசலரும் மந்திர வாத குசலரும் புகுந்து பிரவர்த்தியா நிற்கும் அளவிலே

பகவத் பரையாய் இருக்குமவள் ஒரு கட்டுவிச்சி(கட்டு விடுவிப்பவள் கட்டு விச்சி )
இவளுடைய நோவுக்கு நிதானம் அறிகிலிகோள்-
இவளுக்கு எம்பெருமான் அடியாக வந்த நோவு –
இது அவனாலே பரிஹ்ர்தமாக வேணும் என்று
அவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட திருத் தாயார் –
வினவ வந்தார்க்கு இப் பெண் பிள்ளை உடைய பிரவ்ர்த்தியையும்
கட்டுவிச்சி சொல்லுகிற வார்த்தையையும்
சொல்லுகிற பாசுரத்தாலே
தம் தசையை அருளிச் செய்கிறார் –

(கடல் வண்ணர் இது செய்தார்-இங்கு ஒரே அடையாளம் -திருமடல் போல் பல விசேஷணங்கள் இங்கு இல்லையே)

இவர் பிராட்டி தசையை பிராபிக்கை யாகிறது -அனுபபன்னம் அன்றோ -என்னில் –
உபபன்னம் –
பிராட்டிமார்க்கும் இவருக்கும் அனன்யார்ஹ சேஷத்வம்
ஆகிற சம்பந்தம் ஒத்து இருக்கையாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -என்கிறபடி
போகம் சமானமாய் இருக்கை யாலும் –
(அக் குளத்தில் மீன் போல்- ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவா )முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்ர்தௌ -என்று
இளைய பெருமாள் பிராட்டியோடு ஏக பிரக்ருதியாய் தம்மைச் சொல்லுகையாலே –
வியதிரேகத்தில் ஆற்றாமை ஒத்து இருக்கையாலும்
பிராட்டி தசையைப் பிராபிக்க தட்டில்லை –

(நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?-4-5-8-)

ஆனாலும் தான் ஸ்திரீ என்கிற புத்தி பிறக்கக் கூடுமோ என்னில் –
ஸ்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி நோ குணா
ஸ்வேப்யோ தாசஸ்த்வ தேஹத்வ சேஷித்வ ஸ்த்ரீத் வதாயின -என்கிறபடியே
புருஷோத்தமன் உடைய பும்ஸ்த்வம் ஆவது எதிர்தலைக்கு ஸ்த்ரீத்வதயாய் இருக்கையாலே-
நான் ஸ்திரீ என்று புத்தி பிறக்க தட்டில்லை –

(ஸ்வாமித்வ -ஆத்மத்வ- சேஷித்வ -பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி- நோ குணா–ஸ்வேப்யோ தாசஸ்த்வ தேஹத்வ சேஷித்வ- ஸ்த்ரீத்வதாயின -என்கிறபடியே
ஜீவனை ஸ்த்ரீ லிங்கம் -பாரதந்த்ரம் உத்தேச்யம் காட்ட -காகுத்தன் வாரானால் -பெண் பிறந்தேன் -மாயும் வகை அறியேன் )

ஸ்திரீ என்ற புத்தி பிறக்கை யாவது -தான் ஸ்திரீகளோடே ஆகார சாம்யத்தாலே பிறக்கும் புத்தி யல்ல-
புருஷ விஷயத்தில் ஸ்திரீகளுக்குப் பிறக்கும் அனுராக விசேஷ புத்தி பிறக்கை-

சஜாதீய விஷயத்தில் விஜாதிய புத்தி பிறக்க எங்கே கண்டோம் என்னில்
பாஞ்சால்யா பத்ம பத்ராஷாயா ச் ஸ்னாயந்த்யா ஜகனம் கனம்
யாஸ்த்ரியோ த்ரஷ்ட வத்யஸ்தா பும்பாவம் மானசா யயு – என்று
எதிர் தலையில் வைலஷண்யத்தாலே சஜாதிகளான ஸ்திரீகளுக்கு
ஸ்திரீகளைக் கண்டால் புருஷர்க்கு பிறக்கும் அனுராக புத்தி
பிறந்தது இறே

(திரௌபதியைக் கண்ட பெண்களுக்கும் பெருமாளைக் கண்ட ரிஷிகளும் ஆசைப்பட்டதும் உண்டே)

அப்படியே -புருஷோத்தம விஷயமாக இவருக்கு பிறக்கும் அனுராக விஷயம் பிறக்க தட்டில்லை –
எதிர் தலையில் வை ஷண்யம் இறே விஜாதீய புத்திக்கு உத்பாதகம் –
ஆகையாலே ஒரு பிராட்டி தசையை பிராபிக்கிறார் –

இன்னமும் இயற்கையில் புணர்ச்சி என்கிற இதுவுக்கு நினைவு என் என்னில்
சர்வேஸ்வரனுக்கு சேதன விஷயத்திலே ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக விஷயீ கரிக்கும்
நிர்ஹேதுக விஷயீ காரத்தை சொல்லுகை –

எங்கனே என்னில்
பாஹ்ய உபவனத்தில் ஒரு பிராட்டி புறப்பட்டு புஷ்பாபசம் பண்ணுகிற சமயத்தில்
அபிமதனான காந்தனும் ம்ர்க வியாஜத்தாலே வர
தோழிமார்களும் அந்ய பரைகளாய் இருக்கிற தசையிலே
தர்மி பிரயுக்தமான ஸ்த்ரீத்வ பும்ஸ்த்வங்களே ஹேதுவாக
ஜ்ஞாபகரும் இன்றிக்கே
கடகரும் இன்றிக்கே
இருக்க –சம்ஸ்லேஷிக்கை இறே -இயற்க்கை  புணர்ச்சி ஆகிறது-

ஆசார்ய க்ர்த்ய்த்தையும் புருஷகார க்ர்த்யத்தையும் தானே ஏறிட்டுக் கொண்டான் –

ஸ்த்ரீத்வம் ஆகிறது ஒரு விஷயத்துக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கை இறே –
எதிர் தலையில் பும்ஸ்த்வம் ஆவது -வகுத்த விஷயமுமே -சர்வ வித ரஷகமுமாய் -இருக்கை இறே –
ஆகையால் நிர்ஹேதுக விஷயீகாரத்தை சொல்லுகிறது –

ஆனால் ஜ்ஞாபகராய் இருப்பார் சில ஆச்சார்யர்களும்
பொறுப்பித்து சேர்ப்பிக்கைக்கு சில புருஷகார பூதரும் வேண்டி அன்றோ இருப்பது
ஈஸ்வர விஷயீ காரம் இருப்பது என் என்னில் –
அப்போதும் ஆசார்யன் ஜ்ஞாபகன் ஆகிறதும் -இந்த சேஷ சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேகத்தில் ஆத்ம புத்தியையும் -தத் சம்பந்த நிபந்தனமான ஸ்வாதந்த்ர்யத்தையும் நிவர்த்திப்பிக்கை இறே –
புருஷகார பூதையான பிராட்டியும் பூர்வ வர்த்தத்தை ஷமிப்பிபதும் இஸ் சம்பந்தத்தையும்
இதன் அடியாக வரும் வாத்சல்யத்தையும் முன்னிட்டு இறே –

இன்னமும் பிராட்டியினுடைய நோவுக்கு நிதானம் அறியாதே
மந்திர ஔஷாதிகளால் வியாபிக்கிறார் சிலரும்
அத்தை நிஷேதிக்கிறாள் ஒரு கட்டு விச்சி வார்த்தையும் ஆக செல்லுகிற இதுக்கு கருத்து யாது என்னில் –
விஷயாந்தர பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –
சாதநாந்தர நிவ்ர்த்த்யம் –
பகவத் பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –
அதுக்கு ஹேது பூதனாய்  இருந்துள்ள ஈஸ்வரன் தானே வந்து முகம் காட்டிப் போக்க வேணும் –

தத் சம்ஸ்லேஷம் யாவதாத்மபாவி யாகையாலும்
இந்த பிரேமாதிசயம் ஸ்வரூப பிராப்தம் ஆகையாலும் -அநிவர்த்யம் –
ஸ்வ வாக்யத்தோபாதி-திருத் தாயார் வார்த்தையாலும் பேசுகிறார் தாமாய் இரா நின்றது –

இது சங்கதம் ஆகிறபடி எங்கனே என்னில் –
ஒரு ஆறு பெருகிப் போகா நின்றால் கரையைப் பற்றி போம் அளவு அன்றிக்கே –
பெருக்கு மிக்கு இருந்தால் கைவாய்க்கால்களாப் போம் போக்கும் நிரம்பிப் போகா நிற்க –
தானும் குறையாதே சென்று கடலிலே புகுமாறு போலே –
இவருடைய பிரேமாதிசயத்தாலே –
திருத் தாயார் வார்த்தையும் குறைவற்று செல்லா நிற்க செய்தே
தம் வார்த்தையும் குறைவற்று செல்லுகை  யாகிறது -இது சங்கிதம் –

இன்னமும் பெண் பிள்ளை மோஹங்கதையாய் இருக்க-
புருஷ வ்யாக்ர ஸதா -வ்யாசநேஷு மனுஷ்யாணாம் பர்ஸ்வம் பவதி துக்கித -என்று அவளிலும் தான் அவ சன்னையாய் இருக்க –
பிராப்தமாய் இருக்க தெளிந்து வார்த்தை சொல்லுகிற இது யுக்தமாமோ வென்னில்
பிராட்டியைப் பிரிந்த சமயத்தில் சக்கரவர்த்தி திருமகனாருக்கு பிறந்த அவசாதத்தில் காட்டில்
இளைய பெருமாளும் அவருடைய அவசாதால் வந்ததும்
தம்முடைய காவல் சோர்வால் வந்த அவசாததுமாய்க் கொண்டு
அவசாதம் இரட்டித்து இருக்க
அவற்றைப் பொறுத்து தெளிந்து வார்த்தை சொல்ல வேண்டும் சமயம் அறிந்து
பெருமாளைத் தேற்றினாப் போலே
இவளும் இப் பெண் பிள்ளையினுடைய உஜ்ஜீவன அர்த்தமாக தெளிந்து இருக்கையும் உக்தமே-

ரஷய பூதர் அவசன்னராய் இருக்க வமையும் –
அவசாதம் ஒத்து இருக்கச் செய்தேயும் அத்தை அறிந்து பொறுத்து தெளிந்து இருந்து வார்த்தை
சொல்ல வேண்டும் அருமை உண்டு இறே -ரஷகருக்கு

இவளுடைய வார்த்தை இவளுக்கு ஜீவன ஹேது ஆனபடி என் என்னில்
கட்டுவிச்சி வார்த்தை பகவத் பரமாய் இருக்கையாலும்
இவள் தன்னுடைய வியாபாரம் விரக்தி பரமாய் இருக்கையாலும்
இவள் அழகில் அவன் படும் பாட்டை இவள் படுவதே -என்று அவனை பிரசங்கிக்கையாலும் –
தீர்ப்பாரை யாமினியில் கட்டுவிச்சி போல் அன்றியே –
திருமடலில் கட்டுவிச்சி போலே-
மகா பாகவதையாள் இருப்பாள் ஒருத்தி – யாகையாலே
நோவு தீர்க்கை அன்றியே –
வர்த்திக்கிலும் அவள் ஸ்பர்சமம் அமையும் என்னும்படி இருக்கிறவனை பிரசங்கிக்கையாலும்-
ஆஸ்வாச ஹேதுவாகத் தட்டு இல்லை –

இன்னமும் முதல் பத்து -இவர் தம்முடைய வார்த்தை –
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை –
மூன்றாம் பத்து -பிராட்டியார் வார்த்தை –

மச் சித்தா -மத் கத ப்ராணா – போதயந்த பரஸ்பரம் -என்றபடியே
மூன்று பத்துக்கும் மூன்று வாக்யார்த்தம் –

மச் சித்தா –
விஷயாந்தரம் கலசாத படி -அனந்யார்ஹராய் அநந்ய போக்யராய் -இருக்கிறபடியை
பேசுகையாலே முதல் பத்து -ஜ்ஞான பரம் -(மறவாது வாழுதியேல் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-ஞானத்தில் தன் பேச்சு )

இரண்டாம் பத்து -அந்த ஜ்ஞான கார்யமான –வைராக்ய பூர்வகமாக
பகவத் பிராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது -(பக்தி பாரவஸ்யம் -பரமாத்மா ரக்த-மற்றவற்றில் விரக்தி பூர்வகம்-பிரேமத்தில் பெண் பேச்சு இவள் பேசும் நிலை தவிர்ந்து திருத்தாயார் பேச்சு )

பிரேம பூர்வகமானால் பிராப்தி அளவும் செல்ல நிலவரோடே கால ஷேபம் பண்ணும்படியைச் சொல்லுகிறது -மூன்றாம் பத்து -(போதயந்த பரஸ்பரம்)

இரண்டாம் பத்துமத் கத ப்ராணா -என்றது இறே –
தன் மூச்சடங்க தாயார் வார்த்தையாகச் செல்லுகையாலே
போத யந்த பரஸ்பரம் -என்றது இறே தோழி யோடு வ்ர்த்த கீர்த்தனம் பண்ணுகையாலே-

(ஞானம் -பக்தி -கால ஷேபம் மூன்றையும் சொன்னவாறு)

இதில் -முதல் பாட்டில்
திருத் தாயார் இவளுடைய விரக்தியையும் கட்டுவிச்சி சொன்ன வார்த்தையையும் வினவ வந்தார்க்கு சொல்லுகிறாள் –
அவர்களுக்கு சொல்லுகிற வார்த்தை ஒன்றும் –
தன்னுடைய பாவ வ்ர்த்தி என்றும் ஆய்த்து இருக்கிறது –
விஸ்லேஷத்தில் இப்படி அவசன்னையாம்படி –பிரணயத்தில் தேசிகை யாவதே –
என்கிற உகப்பு ஆய்த்து உள் வாயில் தனக்குச் செல்லுகிறது -(கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே )

தனக்கு அபிமதமாய் இருந்தால் அது தன்னை இவர்களுக்கு சொல்ல குறை என் என்னில் –
இயற்கையில் புணர்ச்சி யாகையாலே அவர்களுக்கு சொல்ல மாட்டுகிறிலள் –
கடகர் அடியாக பிறந்த சம்பந்தம் ஆகில் இறே சொல்வது –

ஆசார்ய உபதேச பூர்வகமாக பகவத் சம்பந்தம் உக்தனாகில் இறே -நமக்கு கொண்டாடல் ஆவது

அஜ்ஞான கார்யமான கலக்கம் யதா ஜ்ஞானத்தாலே நிவர்த்த்யம்
யதாஞ்ஞான கார்யமான கலக்கம் -யாவதாத்மபாவி அநிவிர்த்யம்-என்னும் அது இறே
இப் பாட்டில் பிரகாசிக்கிறது –

—————————————————————————————————————————————–

பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடும் கண்ணீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
எட்டுணைப் போது என் குடங்காலில் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே –

பதவுரை

பள்ளி கொள்ளான்–உறங்குகின்றிலன்;
என் துணை போது-ஒரு நொடிப் பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள்-என் மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான்-எம்பெருமானுடைய
திரு அரங்கம்-ஸ்ரீரங்கக்ஷத்ரம்
எங்கே என்னும்-எங்கிருக்கின்றது? என்கிறாள்;
மணி வண்டு-அழகிய வண்டுகள்
மட்டு விக்கி-(உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ் செய்யப் பெற்ற
கூந்தல்-கூந்தலை யுடையவளான
மட மானை-அழகிய மான் போன்ற இப் பெண் பிள்ளையை
இது செய்தார் தம்மை-இப்படிப்பட்ட நிலைமை யடைவித்தவர் இன்னாரென்பதை,
கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவளே!
மெய்யே சொல் என்ன-உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்)
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்-‘கடல் போன்ற நிறத்தை யுடையரான பெருமாள்
இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்;
நங்காய்-நங்கைமீர்களே!,
ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு)
காப்பார் ஆரே-இவ் வாபத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறு யாருளர்?.

என் பெண்ணானவள்
பட்டுச் சீரைகளை அரையிலே தரியா நின்றாள்
மோஹித்து அலமரா நின்றாள்
மரப்பாச்சியை ஆதரியாள்
குளிர்ந்து நீண்ட கண்களில் சோகா ஸ்ருக்கள் துளும்பும் படி நின்றாள்
உறங்குகிறிலள்
க்ஷண காலம் கூட மடியில் உட்க்கார்ந்து இருக்கவும் க்ஷமை ஆகிறிலள்
என்னை அநந்யார்ஹை யாக்கின ஸர்வேஸ்வரனுடைய திருவரங்கமானது எங்கே என்று வாய் வெருவா நின்றாள்
அழகிய வண்டுகள் தேனைப் பாநம் பண்ணி -விடாயின் மிகுதியால் விக்கி ஆலாபனை பண்ணா நின்றுள்ள
மயிர் முடியை யுடையவளாய் மடப்பத்தையும் மான் போன்ற கண்களையும் யுடையளான என் பெண்ணை
இப்படி ஆக்கினவரை கட்டுசிச்சியே உண்மையாகச் சொல் என்று சொல்ல
கடலின் நிறம் போலே ஸ்ரமஹராமான திரு நிறத்தை யுடைய ஸர்வேஸ்வரன்
இப்படிச் செய்தாராகச் சொன்னாள்
என்னுயிர் தோழியே இத்தைப் பரிஹரிக்க வல்லார்கள் வேறே யார் இருக்கிறார்கள் –

————————————————————————————

பட்டுடுக்கும்-
இதுவும் மேல் சொல்கிற அவஸ்தைகளோபாதி
ஆற்றாமையிலே ஒரு அவஸ்தா விசேஷம் –
அவன் சம்ஸ்லேஷ தசையில் -அவயவ சோபையைக் காட்டிலும் -சமுதாய சோபையைக் காட்டிலும் –
உடை அழகிலே ஈடுபட்டு-
இது ஒரு உடை அழகு இருக்கும்படியே -என்று அதிலே சக்தனாய் இருக்கும் படியைக் கண்டு
அவன் வருகிறதற்கு சாதனா அனுஷ்டானம் பண்ணுகிறாள் –
புடைவை வுடுக்கத் தொடங்கினாள் –
அவ் வுடையை உடுக்க -இத்தை இழக்க ஒண்ணாது என்று வரும் –
என்று அத்தை உடுக்கத் தொடங்கினாள் –

உடுக்கும் –
அவன் ஆதரிக்கும் உடை அவன் வரும் அளவும் அழிப்பது உடுப்பது ஆகிற படி –
அவனுக்கு உறுப்பாக தன் உடம்பை அலங்கரிக்கையும் பிராப்தம் இறே –
சேஷிக்கு அபிமான போது சேஷித்வமும் உத்தேஸ்யமாய் இறே இருப்பது —

அயர்த்து –
உடை வாய்த்தவாறே அவன் வரும் என்று சந்துஷ்டயாய் இருந்தாள்-
அவ்வளவிலும் வரக் காணாகையாலே மோஹங்க தையானாள்-

அவன் வருகைக்கு உறுப்பாக அலங்கரித்தாள்-
அதிலும் அவன் வரக் காணாமையாலே ஸ்வார்த்த்தமாய் விழுந்தது –
ஸ்வரூப ஹாநியாலே மோஹங்க தையானாள்-
ஆற்றாமையால் வரும் மோஹம் போல் அன்றே
ஸ்வரூப ஹாநி வந்தால் வரும் மோஹம் –

இரங்கும் –
ப்ரலாபஸ் ததா சம்மோஹா -என்று
இரக்கத்துக்கு பின்பு மோஹம் வர பிராப்தமாக இருக்க –
அக்ரமமாக சொல்லும்படி இறே இவ் விஷய வைலஷண்யம் இருப்பதும் –
இவளுடைய ஆற்றாமையின் உடைய வைலஷண்யம் இருப்பதும் –

இரக்கம் -ஆவது
அவனை அணைய வேண்டும் என்னும் த்வரையாலே வரும் அலமாப்பு –
மோஹம் ஸ்வஸ்த தசை என்னும் படி இறே -இந்த அலமாப்பு இருப்பது –

அதவா –
பட்டுடுக்கும் -நக்னமாய் திரிகிறது -லஜ்ஜாவஹமாய்
பட்டுடுக்கும் படியான பருவம் கிடீர் -என்கிறாள் –

பட்டு –
வஸ்த்ர சாமான்யத்துக்குப் பேர் –
பொத்திப் புலி வுகிர்ப்பட்டு -என்றால் போலே வஸ்த்ர விசேஷத்துக்கும் பேர் –

உடுக்கும்
அரையிலே ஒருங்காதபடியாலே எடுப்பது உடுப்பது ஆகிறபடி –
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ வரையில்லை -இவள் பரமே
-என்று இறே ஒரு திருத் தாயார் வார்த்தை

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – திரு விருத்தம் -60-)

அயர்த்து -பருவம் இதுவாக இருக்க வ்யதிரேகத்தில்
மூச்சு அடங்கும்படி இறே
பிரணயத்தில் தேசிகை யானபடி -(பிஞ்சாய் பழுத்தாள்-பகவத் பக்திக்கு பிறருக்கு வழி காட்டியான ஆண்டாளைப் போலே )

இரங்கும்
அது தான் ஸ்வஸ்த தசை என்னும்படி
மோஹம் கதையான தசையிலே
ஜ்ஞானம் வந்து குடி புகுந்து அவனை நினைத்து அணை
ரதியாகச் செல்லா நின்றது ஆய்த்து –
மோஹத்தில் ஜ்ஞானம் நடையாடாத படியாலே துக்கம் இல்லை இறே –

பாவை பேணாள்-
இவளுடைய தசா விசேஷத்தைக் கண்டு இவளை தரிப்பிக்கைக்கு விரகு ஏதோ என்று –
பண்டு ஊண் உறக்கம் இல்லாதபடி பாவையை உடன் போது போக்க காண்கையாலே
பாவையைக் கொண்டு வந்து காட்டினாள் –
அது -த்ருஷ்ட்டி  விஷம் போலே ஆய்த்து –
பாவையை ஒழியச் செல்லாதவள் கிடீர் பாவையை அநாதரிக்கிறாள் –
போக உபகரணங்களோடு தோற்றும்படி கிடீர் ஒரு விஷயத்தில் அவஹாகித்த படி

இத்தால் -பகவத் விஷயத்தில் அவஹாகித்த படி –
இத்தால் -பகவத் விஷயத்தில் அவஹகித்தார்க்கு விஷயாந்தரங்கள்
த்ருஷ்ட்டி  விஷம் போல் இருக்கும் என்னும் அர்த்தத்தை வெளியிடுகிறார் –
பகவத் விஷயத்தில் பிராவண்யம் -பகவத் பிரசாத சித்தமானவோபாதி
விஷயாந்தரங்களில் விரக்தியும் பகவத் பிரசாத பலம் இறே-

பள்ளி கொள்ளாள்-உறக்கமும் குடி போய்த்து –
பனி நெடும் கண்ணீர் ததும்ப –
ஆனந்தா ஸ்ருவுக்கு இலக்கான கண்
சோகா ஸ்ருவுக்கு இலக்காவதே –
ஸூஷேத்ரம் வெள்ளம் கொண்டால் போலே
ஈஸ்வர போக்யமான கண் படும் எளி வரவே இது –

(பனி நெடும் கண்ணீர் ததும்ப பள்ளி கொள்ளாள்-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் -அங்கு மாற்றி)

பனி நெடும் கண் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு  -(“ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:-ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிறபடியே
சம்ஸ்லேஷ தசையிலே கண்ணீர் சீதளமாய் இறே இருப்பது –

நெடும் கண் –
அல்லாத அவயவங்களில் காட்டில் கண் அழகிலே ஈடுபடும் படி இறே கண்ணின் போக்யதை இருப்பது –
ஏகைககுணாவ தீப்சையா -சதாஸ்தி தாகிர -(நூறு நூறு மடங்கி மேலே கூட்டித் திரும்புவது போல் )என்கிறபடியே
பகவத் குணங்களில் ஒரோ குணங்களே அவதி காண ஒண்ணாதா போலே யாய்த்து-
விபுவாய் சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் ஈஸ்வரனுக்கும்
இவள் கண்ணின் போக்யதை பரிச்சேதிக்க ஒண்ணாத படி –
அவன் ஸ்வரூபத்தால் அபரிச்சின்னன்
இவள் போக்யதையால் அபரிச்சின்னை –

அதவா –
நெடும் கண் –
உபய விபூதி உக்தனையும் கூட ஒரு புடையிலே
அடக்க வற்றான கண் என்னவுமாம் –
இத்தால் ஜ்ஞான வைபவத்தை சொல்கிறது –

(ஸ்வாபதேசத்தில் கண் என்று ஞானத்தைச் சொன்னபடி.
எம்பெருமானைச் சேரப் பெறாத வருத்தத்தினால் ஞானக் கலக்கமுண்டானமை கூறியவாறு.)

நீர் ததும்ப –
சோக ஸ்ருவாலே தளும்புகையாலே

பள்ளி கொள்ளாள் –
உறங்குகிறிலள்
சம்ஸ்லேஷ தசையில் ஆனந்த ஸ்ருவாலே உறங்கப் பெறாள் –
விஸ்லேஷ தசையில் சோக ஸ்ருவாலே உறங்கப் பெறாள் –
சம்ஸ்லேஷ தசையில் அவன் உறங்க மாட்டான் –
விஸ்லேஷ தசையில் விரஹம் உறங்க ஒட்டாது –

(“தொல்லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள்துஞ்சுதல்“ என்றபடியே
கண்ணுறங்க ப்ரஸக்தியுண்டோ?
கூடிக் களிக்குங்கால் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்று உறங்கப் பெறாள்.
பிரிந்து படுங்கால் சோகக் கண்ணநீராலே உறங்கப்பெறாள்.
ஸம்ச்லேஷதசையில் அவன் உறங்கவொட்டான்;
விச்லேஷதசையில் விரஹவேதனை உறங்க வொட்டாது.)

தன் வயிற்றில் பிறந்த இவள் உறங்காள் -என்ன அமைந்து இருக்க
பள்ளி கொள்ளாள் -என்பான் என் என்னில் –
வயிற்றில் பிறந்தவளே யாகிலும் ராஜ மகிஷி யாகப் பட்டம் கட்டினால்
ஆழ்வார் என்று இறே சொல்லுவது –
அப்படியே புத்ரனோடு சிஷ்யனோடு வாசி அற
அவர்களுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் –
உத்தேச்யத்தை தோற்ற பூஜ்ய வாசி சப்தங்களால்
சொல்லக் கடவது என்று
பூர்வாச்சார்கள் அனுஷ்டித்துப் போந்த சாஸ்தரார்த்ததுக்கு அடி இது இறே –
இவளுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -உறங்காது ஒழிவதே -என்கிறாள்

எட்டுணைப் போது என் குடங்காலில் இருக்க கில்லாள் –
இவள் உறங்கக் காணாமையாலே
முன்பு தன் மடியிலே உறங்கிப் போகக் கண்ட வாசனையாலே
தன் மடியைக் கொடுத்தாள் –
அது நெருப்பிலே அணைந்தால் போலே இருக்கையாலே துணுக என எழுந்து இருந்தாள் –

எட்டுணைப் போது
சர்வ காலமும் என் மடி ஒழிய செல்லாத வளுக்கு கிடீர்
ஷண காலமும் பொருந்தாது ஒழிகிறது –

(‘எட்டுணை‘ ‘எட்டணை‘ என்பன பாடபேதங்கள். (எள்Xதுணை= எட்டுணை.) எள் X தணை, எட்டணை.)
எள் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் – க்ஷண காலமும் என்றபடி.)

என் குடம் கால் –
பெற்ற தாயான என் மடி

பொருந்தாத படி துச் சிஷையைப் பண்ணினவன் ஆனாரோ என்கிறாள் –
ரஷ்யதையோடு ரஷகத்வத்தோடு வாசி அற சம்பந்தம் அற்றபடி
அபிமத விஷயங்களோடு பூஜ்ய விஷயங்களோடு வாசி அற சம்பந்தம் அற்றபடி –

இருக்க கில்லாள் –
உறங்குகை அபேஷிதம் அல்லாமையாலே எழுந்து இருந்து ஆகிலும் இருக்குமோ என்னும் நசையாலே
அணைத்து மடியிலே இருத்தப் பார்த்தாள் –
அதுவும் பொருந்திற்று இல்லை –

கில்லாள் –
சக்தை யாகிறிலள் –
என் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு இருக்கத் தேடினாலும் அதுக்கு சக்தை யாகிறிலள் –
ஏதேனும் அளவிலும் தன் மகளை குறை சொல்லுமவள் அன்றே
நெருப்பில் கிடக்க ஆசை உண்டானாலும் மடியில் கிடக்கப் போகாது இறே-

இத்தால் பிரகிருதி பிராக்ருதங்களில் -விரக்தி ஜ்ஞாநதையா வந்தது அன்று –சத்தா பிரயுக்தம் -என்கை –
பகவத் பிரேமம் சத்தா பிரயுக்தமானவோபாதி
இதர விஷயத்தில் விரக்தியும் சத்தா பிரயுக்தமாயே இறே இருப்பது –

அவ்வளவேயோ -என்னை அனன்யார்ஹை ஆக்கினவன் கோயில் எங்கே -என்கிறாள் –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
பாவையோடு தாயின் மடியோடு வாசி அற புறம்பு உள்ள துவக்கை அறுத்தவனூர் எங்கே -என்னா நின்றாள் –

இன்னார் உடைய கோயில் எங்கே என்று பேரைச் சொல்லாதே
எம்பெருமான் -என்பான் என் என்னில் –
இயற்கைப் புணர்ச்சி யாகையாலே
ஸ்த்ரீத்வ பும்ஸ்வத்தங்களே ஹேதுவாக கலந்தது -இத்தனை

ஜ்ஞாபகர் உண்டாய் கலக்கில் இறே பேர் அறியல் ஆவது –
அவனூர் கோயில் என்று அறிந்தபடி எங்கனே என்னில்
சம்ஸ்லேஷ தசையில் பிரிவை நினைந்து
பிரியேன் -பிரியில் தரியேன் -என்று பிரிவை பிரசங்கிக்கிற அளவிலே
இவள் தரித்து இருக்க வேணும் என்று
நம்மூர் கோயில் -என்று ஊரை பிரசங்கித்தான் –
அத்தாலே ஊர் கோயில் –
என்கிறாள் –

எம்பெருமான் –
எனக்குத் தன்னை எழுதித் தந்து என்னை எழுதிக் கொண்டவன்

(மா மாயன் -வசீகர புத்தியால் தான் தோற்று நம்மை அடிமை கொள்பவன்)

திருவரங்கம் எங்கே என்னும் –
கோயில் மேற்கே என்று அறியுமே –
எங்கே என்பான் என் என்னில்
ஆற்றாமையாலே கண்ணும் சுழலை இட்டு திக் பிரமம் பிறந்தால் பின்னை
திக்குத் தேட வேண்டி இறே இருப்பது-

மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் –
அவனை இப்படி படுத்தக் கடவ மயிர் முடியை உடையவள் கிடீர்-
அத்தலை இத்தலையாய் இப்படி நோவு படுகிறாள் –
செவ்வைப் பூசலிலே -இவள் அழகு நெஞ்சிலே படுகை -இறே அவன் நோவு படுவது
வஞ்சனத்தே -அவள் அழகு தன் நெஞ்சில் படாமல் –
தன் அழகு இவள் நெஞ்சில் படும் படி -அகப்பட்டாளாம் இத்தனை -என்கிறாள் –

மட்டு விக்கி –
1-பெரிய அபிநிவேசத்தோடே மது பானம் பண்ண இழிந்து
விடாயின் மிகுதியாலே விக்கின படியைச் சொல்லுதல்

2-மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணின இடத்திலும்
அபிநிவேசம் மாளாத படியாலே தரித்து -இழிய அவகாசம் இல்லாத படியாலே -விக்கின படியைச் சொல்லுதல் –

3-சாரஸ்யத்தாலே உள் இழியவும் மாட்டாமல் உமிழவும் மாட்டாதே
நடுவே நாக்கடியிலே வைத்து இருக்கிறபடியைச் சொல்லுதல் –

4-மனுஷ்யர்க்கு அன்ன பானாதிகள் இரண்டும் தாரகம் ஆகையாலே
அன்னத்தாலே விக்கினால் நீராலே சமாதானம் பண்ணலாம் –

மதுவ்ரதம் ஆகையாலே மதுவினால் விக்கினால்
மதுவை இட்டு ஆஸ்வசித்தல் தவிருதல்-
செய்யும் இத்தனை ஒழிய
த்ரவ்யாந்தரத்தால் ஆஸ்வசிப்பிக்க ஒண்ணாது இறே –

பதிம் விஸ்வஸ்ய -(தைத்ரியம் நாராயண வல்லி)
என்கிறபடியே பதி வ்ரதைக்கு வந்த ஆபத்தை
பதி தானே போக்குமது ஒழிய விஷயாந்தரங்களால்  பரிஹரிக்க ஒண்ணாதே இறே-

(மது விரதைக்கு வந்த நோய் -பதி விரதைக்கு வந்த ஆபத்தை பதியே போக்க வேண்டுமே)

மணி வண்டு –
ரசாயன சேவை பண்ணின படியாலே –நரை திரை மூப்பு அற்று இருக்கிறபடி –
அரும்பினை அலரை -என்கிற விஷயத்துக்கு ஸ்மாரகமாய் இருக்கிறத்கு ஆய்த்து –
இவளுடைய மயிர் முடியைக் கண்டு –
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -என்கிறபடியே
ஒரு தெய்வ வண்டு படும் அலமாப்புக்கு ஸ்மாரகமாய் இருக்கிறது ஆய்த்து –
இவள் குழலிலே மதுவாலே வண்டுகள் படும் அலமாப்பு –

(பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-)

(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

முரலும் –
மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணின ப்ரீதி பிரகர்ஷத்தாலே
இருந்த இடத்திலே இருக்க மாட்டாமையாலும்
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாமையாலும்
ஆளத்தி வைக்கிறபடி –

மடமானை –
எனக்கு பவ்யையானவள் கிடீர் இப்போது அபவ்யையாய் இருக்கிறாள் –
அங்கன் அன்றியே
மடப்பம் என்று -ஸ்த்ரீத்வமாய்-நிருபாதிக ஸ்த்ரீதவத்தை உடையவள் என்னவுமாம் –
தனக்கு ஆற்றாமை மீதூர்ந்தாலும் அது தெரியாதபடி அடக்கி -அவிக்ரிதையாய் இருந்து
எதிர்தலையை விக்ரதமாக்கக் கடவள் இவள் கிடீர் –

எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்று வாய் விட்டுக் கூப்பிடுகிறாள் –

இது செய்தார் தம்மை –
இவளுடைய தசா விசேஷம் பாசுரம் இட்டு சொல்லப் போகாமையாலே
கடலைக் காட்டுமா போலே -இது -என்று -கையாலே காட்டுகிறாள் –

இது செய்தார் –
பண்டு நான் ஒப்பித்து விட்டால் -அவ் ஒப்பனை குறி அழியாதே வரும் –
இப்போது இக் குழலை ஆற்ற சாரம் ஆக்கினவர் ஆரோ -என்கிறாள்
அங்கன் அன்றியே
இவள் மயிரில் பூவை சருகாக்கி
வண்டுகளை பட்டினி கொண்டவன் ஆரோ -என்னுதல்

தம்மை –
இவளுடைய அவசாதத்தைக் கொண்டு அவனுடைய வைலஷண்யத்தை -நிலை இடுகிறாள் –
இவளை இப்பாடு படுத்தின சௌபாக்யத்தை உடையவரும் ஒருவரே –

தம்மை –
இது என்ன சௌபாக்யம் –
அவர் எம் மடுவில் வளர்ந்தாரோ

தம்மை –
இவளை இப்படி பிரணயித்வத்தில் தேசிகை ஆக்கின பரம பிரணியயார்  யாரோ -என்கிறாள்
இவ்வாற்றாமை விளைப்பித்தது அசஹ்யம் ஆகில் இது செய்தவனைச் சொல் என்ன வேணும்
அது தமக்கு அபிமதம் என்னும் இடம் பிரகாசிக்கிறது ஆய்த்து -தம்மை -என்கையாலே

மெய்யே கட்டுவிச்சி சொல் –
யதார்த்தைச் சொல் –

கட்டுவிச்சி சத்தியவாதி என்று பிரசித்தையாய் இருக்க
யதார்த்தத்தை சொல் என்பான் -என் என்னில்
இயற்கைப் புணர்ச்சி ஆகையாலே நேராகச் சொல்ல ஒண்ணாது என்று இராதே
இது எனக்கு அபிமதம் -உள்ளபடி சொல் -என்கிறாள் –
கிஞ்சித் காரம் சித்திக்கும் போது உள்ளபடி அறிய வேணுமே

சொல் எனச் சொன்னாள் –
நெடுநாள் அனுவர்த்தித்து கேட்கும் வார்த்தை ஏவச் சொன்னாள்
எம்பெருமானாரைப் போலேயும்
கீதோபநிஷத் ஆச்சார்யனைப் போலேயும் காணும்
இக் கட்டுவிச்சி வைபவம் இருப்பது –

செவி தாழ்ந்தார்க்கு எல்லாம் வார்த்தை சொல்லிப் போந்தார் உடையவர் –
ருசியைப் பிறப்பித்து வார்த்தை சொல்லிப் போந்தான் கீதோபநிஷத் ஆச்சார்யன் –

(ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் -உபதேச ரத்ன மாலை –37-)

சொன்னாள் –
தென்றலும் சிறு துளியும் போலே இதுக்கு ஓர் அர்த்தம் வேணுமோ –
இப் பாசுரமே அமையாதோ என்னும்படி -காணும் வார்த்தை சொன்ன சீர்மை இருந்தபடி –

(செவிக்கு இனிய செஞ்சொல் என்று மதுர கவி ஆழ்வாரே ஈடுபட்டால் போலேயும்
மதுரா மதுரா லாப -என்று பெருமாள் ஈடுபட்டால் போலேயும்)

சொன்னாள் –
எனக்கு கேட்கை தேட்டமானாப் போலே காணும் இவளுக்கு சொல்லுகை தேட்டமாய் சொன்னபடி –
ஆசார்யனுக்கு பகவத் அனுபவ ப்ரீதிக்கு பரிவாஹா அபேஷை உண்டாகையாலே
ஆள் தேட்டமாய் இறே இருப்பது –
சிஷ்யன் கேட்டுத் தரிக்கக் கடவன் –
ஆசார்யன் சொல்லித் தரிக்கக் கடவன்
இவனுக்கு கேட்கை உஜ்ஜீவன ஹேது
அவனுக்கு சொல்லுகை போக ஹேது –

நங்காய்-
அவள் சொன்ன வார்த்தை சொல்லலாம்படி புறம்பு கை ஒழிந்து இருக்கும்படியான பூர்த்தி உண்டு இறே –
அவளுக்கு நான் தேட்டமானாப் போலே காண் எனக்கு நீ தேட்டமான படி –

அவள் சொன்ன வார்த்தை தான் எது என்ன -சொல்லுகிறாள் –
கடல் வண்ணர் இது செய்தார் –
எம்பெருமான் திருவரங்கமே -என்றாள் அவள்
இவள் கடல் வண்ணர் -என்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள் –

இங்கு கடலின் ஸ்வபாவத்தை சொல்லுகிறது அன்று –நிறத்தைச் சொல்லுகிறது –
ஸ்வரூபத்திலே புகாதே -குணத்திலே புகாதே -வாய்கரையிலே அழுந்தினாள் என்கிறாள் –
ஒருக்கால் அணைத்து விட்டான் போலே காணும் அவ் வடிவிலே அகப்பட்டாள் –
ஸ்வரூபத்திலே இழிந்தாருக்கு குணங்களிலே இழிய வேணும்
உபயத்துக்கும் பிரகாசகமான விக்ரஹத்தில் இழிந்தாருக்கு புறம்பு போக வேண்டா விறே –
ருசி ஜனகமாய் இருப்பதுவும் வடிவே –
ஆஸ்ரயணீயமாய் இருப்பதும் வடிவே –
போக்யமாய் இருப்பதுவும் வடிவே -இறே –

இது செய்தார்
தீரா நோய் செய்தார்
இது
நீர் ஏறுண்டு மோஹித்தாரை வடிவிலே தெரியுமா போலே நோய் இவள் வடிவிலே தோற்றுகிறபடி –
இந்நோய் பெரும் பேறு என்னும் இடம் தோற்ற –இது -என்கிறாள்
தெய்வ நந்நோய் இறே –
தெய்வம் அடியாக வந்த நோயாகையாலே விலஷணமான நோய் இறே
நாட்டார் புருஷார்த்தம் என்று சாதிக்கிற இத்தை நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே பெற்றவள் அன்றோ இவள் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ இத்யாதியில் சொல்லுகிறபடியே-

(ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம் ஷீண பாப நாம் கிருஷ்ண பக்தி )

சாதனாந்தர நிஷ்டருக்கு அநேக ஜன்ம சாத்யையான பக்தி இவளுக்கு நிர்ஹேதுக
பகவத் பிரசாதத்தாலே சித்தித்தது இறே –
உபாசகனுக்கு சாதனத்தின் உடைய மேல் எல்லையாய்
பிரபன்னனுக்கு பிராப்யத்தின் உடைய முதலடியாய் இறே பக்தி இருப்பது –

கடல் வண்ணர் இது செய்தார் –
ஒரு வடிவைக் காட்டி ஒரு வடிவைக் கொண்டார்
நஜீவேயம் ஷணம் அபி -என்கிற வடிவைக் காட்டி
ஊர்த்தம் மாஸான் ந ஜீவிஷ்யே -என்கிற வடிவைக் கிடீர் கொண்டது –

காப்பாராரே –
ரஷகனால் வந்த ஆபத்தை உங்கள் யாவராலும் பரிஹரிக்கப் போமோ –
விஷயாந்தரங்களால் வந்த நோவு பகவத் விஷயத்தை கிட்டிப் போக்கலாம்
பகவத் விஷயமடியாக வந்த நோவு ஸ்வரூப பிராப்தம் ஆகையாலே
யாவதாத்மபாவி அநிவர்த்யம் இறே –

(கீழ் கட்டு விச்சி வார்த்தை கடல் வண்ணர் இது செய்தார் என்றும்
காப்பார் யாரே -திருத்தாயார் வார்த்தை யாகவும் கொண்டு
மேல் முழுவதுமே கட்டு விச்சி வார்த்தையாகக் கொண்டு அருளிச் செய்கிறார்)

கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யார் –
கடல் கொண்ட வஸ்துவை கடலிலே வீச வேண்டாவோ –

காப்பார் ஆரோ –
இவளால் பரிஹரிக்கப் போமோ –
உன்னால் பரிஹரிக்கப் போமோ –
பிறரால் பரிஹரிக்கப் போமோ –
வேலியே பயிரை அழித்தால் வேலி தான் நோக்கும் இத்தனை ஒழிய பயிரால் நோக்கிக் கொள்ளப் போமோ –

இத்தால்
ஸ்வாபதேசம் ஆய்த்து –
நிர்ஹேதுக விஷயீ காரம்
தத்கார்யமான ப்ரேமாதிசயம்
தத் கார்யமான விரக்தி –
ஆசார்ய உபதேச பூர்வகமாக ஜ்ஞான சித்தி ஆகிற இவை –

(ஆக இப்பாசுரத்தால்,
எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வார்க்கு வாய்த்தபடியும்,
இது நித்ய கைங்கரியத்திற்கு உறுப்பாகமல்
ஆற்றங்கரை வாழ் மரம்போல் அஞ்சும்படியாக இவ்விபூதியிலே இருக்க வைக்கையாலே நோயாகச் சொல்லப்படுகிற தென்பதும்,
இது தான் ஆத்ம ஸ்வரூபாநு பந்தியாகையாலே ஆத்மா உள்ளவரைக்கும் நிலைத்திருக்கக் கூடிய தாய் அபரிஹார்யமான தென்றும்,
இவ்வுண்மையை ஜ்ஞாநாதிகரான பாகவதர்கள் அறிவார்களென்றும் சொல்லிற்றாயிற்று.)

(கொங்குங் குடந்தையுங் கோட்டியூறும் பேரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
கண்டியூராங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திருவேனை யாரிங்கழைத்த்தூஉ,
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமட வேளுக்கை தென்குடந்தை
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்துதூஉ,
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
வேங்கடமும் விண்ணவரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!“

என்று தெருவேறக் கூவிக்கொண்டு தானாகவேவந்து சேர்ந்தாள்,
அவளை நோக்கித் தாயானவள்
“மட்டுவிக்கி மணிவண்டு முரலுங்கூந்தல் மடமானை யிருசெய்தார்தம்மை மெய்யே கட்டுவிச்சி! சொல்“ என்றாள்.

குறிசொல்லுகிற குறத்திக்குக் கட்டுவிச்சி யென்று பெயர்
திருவாய்மொழியில் “இது காண்மினன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற் கொண்டு“ என்றும்,
சிறிய திருமடலில் “அது கேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சிகட்டேறி“ என்றும் வருவன காண்க.

ஐயங்கார் திருவரங்கக் கலம்பதத்தில் –
“காலமுணர்ந்த குறத்தி நான் கருதினை யொன்றது சொல்லுவேன்,
பாலகனுச்சியி லெண்ணெய்வார் பழகியதோர் கலை கொண்டுவா,
கோலமலர்க்குழன் மங்கை! நின்கொங்கை முகக்குறி நன்றுகாண
ஞாலமுவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே‘ என்று கட்டுவிச்சியின் பாசுரமாகப்
பாடியுள்ள செய்யுளும் குறிக்கொள்ளத்தகும்.)

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–10–பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 16, 2013

அவதாரிகை –

ஆஸ்ரிதர் இருந்த இடத்தே சென்று முகம் கொடுக்குமவனாய்
யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவனாய் இருக்க
சர்வதா நமக்கு முகம் காட்டாது ஒழிந்தது –
அடியிலே –
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் –என்று சொன்னவர் –
சாதனத்தில் அந்வயித்து வந்து முகம் காட்டாது ஒழிந்தானாக வேணும் என்று சங்கித்து

சம்பந்த ஜ்ஞாபகமான திரு மந்த்ரத்தை உபகரணமாகக் கொண்டு –
இங்கே அனுபவிப்பார்க்கு அங்கே யாவதாத்மபாவி அனுபவிக்கலாம் என்று
கால ஷேப அர்த்தமாக சொன்ன இத்தனை ஒழிய

பிராப்யம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறியில் அன்றோ –
பிராபகம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறிவது –
நான் என் அறிவன் -என்கிறார்

மந்தரத்தால் -என்கையாலே -ஒரு சாதன பாவமும்
மறவாது வாழ்தியேல் -என்கையாலே -ஒரு கர்த்தவ்யமும் –
வாழலாம் -என்கையாலே -(வேறே )ஒரு பலமுமாய்த் தோற்றும் இறே –

இவருடைய நோற்ற நோன்பு இருக்கிறபடி –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்று
ஆகிஞ்சன்யத்தைச் சொல்லி யாகிலும்
இனி உன்னை விட்டு ஓன்று மாற்ற கிற்கின்றிலேன் -என்று
ருசியில் குறைவற்று இருக்கிறபடியையும்
அருளிச் செய்தார் இறே –

(நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-)

(தமக்கு ருசியில் குறைவற்று இருக்கிறபடியையும்-கீழ் 4 -பாசுரத்தில் அருளிச் செய்து
இதில் ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு அருளுகிறார்)

———————————————————————————————-

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-

பதவுரை

உலகம் ஏத்தும்-உலகமடங்கலும் துதிக்கத் தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே!
வட ஆனாய்-வட திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே!
குட பால் ஆனாய்–மேற்றிசையில் (கோயிலில் திருக் கண் வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே!
குண பால மதம் யானாய்–கீழ்த் திசையில் (திருக் கண்ணபுரத்தில்) மத யானை போன்றவனே!
என்றும்–எக் காலத்திலும்
இமை யோர்க்கு முன்னானாய்-நித்ய ஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே!
பின்னானார் வணங்கும் சோதி–அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத் தக்க சோதியாக
திரு மூழிக் களத்து ஆனாய்–திரு மூழிக் களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
முதல் ஆனாய்–முழு முதற் கடவுளே!
பொன் ஆனாய்–பொன் போன்றவனே!
பொழில் ஏழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்–ஸப்த லோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே!
இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்–இகழ்வையே வடிவாக வுடைய தொண்டனாய் அறிவிலியான நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்–என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது
என் அறிவன்-வேறு என்ன வென்று சொல்ல அறிவேன்?

லோகத்தார் ஸ்துதிக்கத் தக்கதான தென் திருமாலிருஞ்சோலை மலையிலே நின்று அருளினவனே
வட திருவேங்கடத்திலே நின்று அருளினவனே
மேற்குத் திக்கில் கோயிலிலே கண் வளர்ந்து அருளுமவனே
கீழ்த் திசையிலே திருக் கண்ண புரத்தில் மத யானை போல் செருக்குத் தோன்ற நின்றவனே
நித்ய ஸூரிகளுக்கு எக்காலத்திலும் கண்ணால் கண்டு அனுபவிக்கலாம் படி முன்னே இருப்பவனே
அவதாரத்துக்குப் பிற்பட்டவர்கள் ஆஸ்ரயிக்கத் தக்கதாக தேஜோ மயனாய் திரு மூழிக் களத்திலே வர்த்திக்கிறவனே
ஜகத் காரண பூதனே
பொன் போலே எப்படியாலும் எனக்கு உபகரிக்குமவனே
ஸப்த லோகங்களையும் ரஷிக்கையால் வல்ல குண பிரதையை யுடையவனே
இகழவையே வடிவாக யுடைய தாஸ பூதனான நான்
என்னுடைய ஆனாய் என்னுடைய ஆனாய் என்று சொல்லும் அத்தனை அல்லது
உன் விஷயத்தில் அதி சபலனான நான்
உன்னுடைய குண சேஷ்டிதங்களிலே எத்தை அறிவேன் –

————————————————————————————————-

பொன்னானாய் –
எனக்கு பிராப்யன் ஆனவனே –
1-ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் -என்றும்
2-அவயயோநிதி (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்-30-ஆபத் தனம் )-என்றும் –
3-வைப்பாம் -என்றும்
ஸ்ருதி-ஸ்மரதி-இதிகாச புராணங்களிலே
நிதி சப்தத்தாலே பிராப்யத்தை சொல்லக் கடவது இறே –

(பிரசாசிதாரம் சர்வேஷாம் அணீயாம் சமணீயசாம்
ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்–மனு ஸ்ம்ருதி -12–122-)
( பரம புருஷனை எல்லாவற்றையும் நியமிக்கப்படுகின்றவனாகவும் சூஷ்மமானத்தைக் காட்டிலும் சூஷ்மமானவனாயும்
ஓடவைத்த பொன்னிறம் யுடையவனாகவும் கனவில் உள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாயும் அறிதல் வேண்டும் )

(வைத்த மா நிதி -தனம் மதியம் தவ பாத பங்கஜம் -நிதியினை பவளத்தூணை)

தனம் ஆவது
1-ஆபத் சகமாய் –
2-உண்டு என உயிர் நிற்கும்படியாக
3-சர்வ அனுபாவ்யமாய் -இறே இருப்பது –

இப்போது இது சொல்கிறது -உன்னை ஒழிய வேறு ஒரு பிராப்யம் உண்டு என்று அறியில் அன்றோ
உன்னை ஒழிய வேறு ஒரு பிராபகம் உண்டு என்று அறிவதற்காக என்கைக்காக –

(பொன்னானாய்! =
பொன் போன்றவனே! எம்பெருமானைப் பொன்னாகக் கூறுவதற்குப் பல பொருத்தஞ் சொல்லலாம்;
அதாவது-
பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விருப்பமுடையாரையும் இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது;
எம்பெருமான் படியும் அப்படியே;
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பு முமுக்ஷுக்களை உறங்கவெட்டான்;
கண்ட பின்பும் * ஸதாபச்யந்தி யாகையாலே நித்ய முக்தர்களை உறங்கவொட்டான்.
பொன்னானது தன்னையிழந்தவனைக் கதறிக் கதறி யழப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே: ஸ்ரீராமபிரானை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறிழுதமை ஸ்ரீராமாயணாதிப்ரஸித்தம்.
“பழுதே பலபகலும் போயின” வென்று கதறியழுவர் விவேகமுடையார்.
“இன்பத்தை யிழந்த பாவியேனெனதாவி நில்லாதே”
“எழில்கொள் நின் திருக்கண்ணினை நோக்கந் தன்னையுமிழந்தேனிழந்தேனே”
“உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாசத்தை நோக்கியழுவன் தொழுவனே” என்றிப்படியெல்லாங் கதறுவர்கள்.
பொன்னானது தன்னையுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்; தன்னை யுடையவனை மார்பு நெறிக்கப் பண்ணும்;
எம்பெருமானுமப்படியே; “எனக்காரும் நிகரில்லையே”
“மாறுளதோவிம்மண்ணின் மிசையே”
“எனக்கென்னினி வேண்டுவதே”
“இல்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரில்லையெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்களிறே எம்பெருமானையுடையார் –
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.)

அங்கன் அன்றிக்கே –
பிராபக அபேஷை உள்ளது -பிராப்ய சித்திக்கே இறே –
அத்தைப் பற்றி சொல்லிற்று ஆகவுமாம்

பொழில் ஏழும் காவல் பூண்ட
வைப்பாம் மருந்தாம் -என்றார் இறே நம் ஆழ்வார்
மேல் சொல்கிற சாதனம் –அநந்ய சாத்யே-என்கிற சாத்தியத்துக்கு அனுரூபமாக
பிரதமத்திலே உபாதானம் பண்ணுகிறது ஆகவுமாம் –

(வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-)

(அநந்ய சாத்யே மஹா விசுவாச பூர்வகம் ததேக உபாயதாயாஞ்ச பிரபத்தி சரணாகதி)

ஆனாய் –
நான் விஷய பிரவணனாய் திரியா நிற்க
உன்னுடைய வினை கேட்டாலே நீயே மேல் விழுந்து
எனக்கு ருசியைப் பிறப்பித்து -பிராப்யன் ஆனாய் –
இத்தனை அன்றோ செய்தது-

பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் –
இத்தால் –பிராபகமும் நீயே என்கிறார் –
லீலா விபூதிக்கு ரஷகன் ஆனவனே –

பொழில் எழும் -என்று
சப்த லோகங்களையும் சொல்கிறது –

இத்தால் கீழ் உள்ள லோகங்களையும் உபலஷிக்கிறது
ஈத்ர்சாநாம் -என்கிற அண்டாந்தரங்களுக்கும் உப லஷணம்
பொழில் -லோகம்

காவல் பூண்ட –
ராஜாவாக அபிஷேகத்தை பண்ணி இருந்து ஆளிட்டு ரஷிக்கை இன்றிக்கே
கையிலே ஆயுதத்தை எடுத்து ஓர் ஊரை நோக்குவாரைப் போலே அன்றோ
சகல லோகங்களையும் அவதானம் பண்ணி ரஷிப்பது –

பூண்ட –
ரஷண பிரதிபந்தகம் உண்டானாலும் -அதில் குறையாது இருக்கை
அதாவது எத்தைனையேனும் அந்தரங்கமான மகா ராஜ பிரதிபத்திகளும்
வத்யதாம் -என்றாலும்
நத்யஜேயம் -என்னும்படி இறே ரஷகத்வத்தில் பூட்சி இருப்பது –
அபயம் சர்வ பூதேப்யோ -என்கிறபடியே
தன் கையில் தன்னைக் காட்டிக் கொடாதே இறே ரஷிப்பது

(வத்யதாம் ஏஷ தண்டேந தீவ்ரேண ஸசிவைஸேஹ. ராவணஸ்ய ந்ருபஸம்ஸஸ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண:.

மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபிதஸ்ய சியாத் ஸதாம்ஏதத் …

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே| அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம …)

இத்தால் –
என்னுடைய அவித்யா கர்மா வாசனா ருசிகளைப் போக்கி
ரஷித்தாய் நீயே அன்றோ -என்கிறார் –

அதவா –
பூண்ட –போக்யதை இறே -வஸ்துவுக்கு வேஷம்
உபாயம் ஆகிறது கதி சூன்யதையால் இறே –
பால் பித்த ஹரமானாலும் கஷாயம் ஆகாது இறே –

இத்தால் –
நீயே மேல் விழுந்து அன்றோ எனக்கு பிராபகனாய் ஆயத்து என்கிறார்-

புகழானாய் —
இப்படி ரஷிக்கையால் வந்த குண ப்ரதையை உடையவனே –
யசஸ் சைக பாஜனம்
உலப்பில் கீர்த்தி அம்மானே -என்னக் கடவது இறே
யானி நாமானி கௌனானி -என்கிறபடியே
ரஷண தர்மத்தால் வந்த குண சேஷ்டிதங்களுக்கு வாசகமமாய் இறே திரு நாமம் இருப்பது –

(நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபன்னாம் பராம் கதிம் யசஸ்  ச ஏக  பாஜனம் (புகழுக்கு ஒரே இருப்பிடமாய் இருப்பவன்)

(உலகம் உண்ட பெருவாயா!* உலப்பு இல் கீர்த்தி அம்மானே,*
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!* நெடியாய் அடியேன் ஆர் உயிரே,*
திலதம் உலகுக்கு ஆய் நின்ற* திருவேங்கடத்து எம் பெருமானே,*
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.-6-10-1)

(யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||)

இகழ்வாய தொண்டனேன் நான் –
இத்தால் பிராப்ய பிராபகங்களை பிராபிக்க வுரிய அதிகாரி ஸ்வரூபத்தை சொல்கிறது –
உனக்கு புகழே வடிவாய் இருக்கிறாப் போலே அன்றோ
எனக்கு இகழ்வே வடிவாய் இருக்கிறபடியும் –

(குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்)

ஆகிஞ்சன்யம் இறே அதிகாரம்
ஸ்வ தோஷம் சம்பாதிக்க வேண்டியது இல்லை –
ஜ்ஞாபனமே-அபேக்ஷிதம் –

அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலயா –
ராவணோ நாம துர் வ்ருத்த –
அமர்யாதா சூத்திர -என்கிற இடங்களிலும்
ஜ்ஞாபனமே இறே உள்ளது –
சாத்தியம் ஆகிஞ்சன்யம் இறே –

(அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அநந்ய கதி -த்வமேவ உபாய பூதோ மே பவ –
பிரார்த்தனா மதி மாம் சரணாகதிர் இத்யுக்தா -சா -தேவேஸ்மின் பிரயுஜ்யதாம்-(அஹிர் புத்தி சம்ஹிதை பிரமாணம்)

(ராவணோ நாம துர் வ்ருத்த ராக்ஷசோ ராக்ஷஸேஸ்வர –)

(அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 62 –)

தொண்டனேன் நான் -(இத்தால் உறவும் ருசியும் சொல்லிற்று )
உன் பக்கலில் அதி சபலனான நான் –
இத்தால் –பிராப்ய ருசியைச் சொல்லுகிறது –
பிராபகப் பிரார்த்தனைக்கு -ஆகிஞ்சன்யமும் -ஸ்வ தோஷ ஜ்ஞாபனமும் வேண்டினவோ பாதி
பிராப்யப் பிரார்த்தனைக்கு பிராப்ய ருசி வேணும் இறே –
ஆகிஞ்சன்யமும் அவனை ஒழிய செல்லாமையும் இறே
த்வயத்துக்கு அதிகாரம் –

அதவா
இகழ்வாய தொண்டனேன் நான் –
ஒரு கட தாசி சார்வ பௌமனை ஆசைப்பட்டால் நாட்டார் இகழுமா போலேயும்
மௌஷ்டிகன் அபிஷேகத்தை ஆசைப் பட்டால் இகழுமா போலேயும் அன்றோ
நித்ய சம்சாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது-

(‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்;
அடைவே, நீசனாகிய என்றும்,
இகழத் தக்க வாய் மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க.
தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப் படுதல் போலவும்
பிச்சை யாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்ய ஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார்.)

என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
இத்தால் -இவ்வதிகாரி உடைய கால ஷேபம் சொல்கிறது –
கால ஷேபத்துக்காக உன்னுடைய குணங்களை அனுபவித்தேன் இத்தனை ஒழிய
என் ஆற்றாமையை சாதனமாக நினைந்து இருந்தேனோ –

(ஆனை என்பது ஈறு திரிந்த விளியாய் ‘ஆனாய்‘ என்றாயி்ற்று;
‘என்னுடைய மத்த கஜமே! என்னுடைய மத்த கஜமே!‘ என்று ஏதோ வாய் வெருவுகின்றேனத்தனை யொழிய
ஸாதநாநுஷ்டானமாகச் சொல்லும் முறைமை யொன்றுமறியே னென்றவாறு.)

ஆனையினுடைய ஸ்வபாவங்கள் ஈஸ்வரனுக்கும் உண்டு ஆகையாலே
அந்த ஸ்வபாவங்களை பற்ற –என்னானாய் -என்கிறார் –
1-ஆனையானது -ஒரு நாள் கண்டோம் -என்று இருக்க ஒண்ணாத படி
நித்ய ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-பெரிய செருக்கை உடைத்தாய் இருக்கையும்
3-தான் நினைத்த பொது கைக்கு எட்டினாரை எடுத்து கழுத்தில் வைத்து கொள்ள கடவதாய் இருக்கும் –
4-தான் உகவாதவரை கீண்டு பொகட்டால் ஆராய்ச்சி இன்றிக்கே இருக்கையும் –
5-தன்னைக் கட்ட கயிறு தானே கொடுக்கக் கடவதாய் இருக்கையும் -இறே இருபது –

அப்படியே
1-நித்ய ஸ்பர்ஹணீயமான வடிவு அழகும்
2-செருக்கால் பலித்த சமாதிக ரஹீத்வமும்
3-ராஜா ஒரு பாணிச்சியை தனக்கு மகிஷி ஆக்கி வைத்தால்
நிவாகரரில்லாதாப் போலே
ஒரு நித்ய சம்சாரிக்கும் தன் பக்கல் ந்யச்த பரதையே ஹேதுவாக தன்னைக் கொடுத்தால்
நிவாரகர் இன்றியிலே இருக்கும் படியான ஸ்வா தந்த்ர்யமும் –
4-ஆனை தன் மேலே ஏறப் படிந்து கொடுக்குமா போலே
சாதநாந்தர நிஷ்டருக்கு
நேதாவாய் இருக்கிற சீலமும்
5-ஆஸ்ரித விரோதிகளை சம்பந்தம் கிடக்கச் செய்தே அழியச் செய்தாலும்
நிவாரகர் இல்லாத படியான விரோதி நிரசன சீலமும்
6-போக உபகரணமான பக்தியை தானே கொடுக்கக் கடவதான ருசி ஜனகத்வம் ஆகிற
இஸ் ஸ்வபாவங்கள் ஆய்த்து -இவருக்கு கால ஷேபத்துக்கு விஷயம் –

எட்டினோடு இரண்டு என்னும் கயிறு -என்று பக்தியை கயிறாகச் சொல்லக் கடவது இறே –
ஈஸ்வரனை புறம்பு போக ஒட்டாதபடி –
மனஸ் ஆகிற ஸ்தம்பத்தோடே
பக்தி யாகிற கயிறாலே இறே கட்டுவது –

(மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –திருச்சந்த விருத்தம் -83-)

வீப்சையாலே –
அவ்வ ஸ்வபாவங்களே கால ஷேபத்துக்கு விஷயமாய் இருக்கை –
நிவர்த்தி துச்சகம்
விஷயாந்தரங்களிலே இழிய ஒண்ணாது –
அவற்றுக்கு அஞ்சிப் புகுந்தவர் ஆகையாலே –
சாதனாந்தரங்களில் இழிய ஒண்ணாது –
வேறு ஒன்றை சாதனமாக சஹியாத உபாயத்தை பரிக்ரஹிக்கையாலே –
இனி இவ் விஷயம் தன்னை முகாந்தரத்தாலே அனுபவிக்கை இறே உள்ளது –

(உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -உபாயம் சரணாகதி இரண்டையும் பொறுக்காது -ஈஸ்வரன் தன்னைப் பொறுக்கும்)

என்னால் அல்லால் –
இப்படி தேவரீர் படிகளை அனுசந்தித்து
கால ஷேபம் பண்ணினேன் இத்தனை ஒழிய

என்னறிவேன்-
நான் அடைவு பட -சாஸ்திர க்ரமத்திலே -ஓன்று அறிவேனோ –

1-அமாநித்வாத்யாத்ம குணங்களை அறிவேனோ(ஸ்ரீ கீதை 13-7 ஸ்லோகம் தொடங்கி-13-11-வரை -20 ஆத்ம குணங்கள் )
2-கர்ம யோகத்தை அறிவேனோ
3-ஜ்ஞான யோகத்தை அறிவேனோ
4-உபய சாத்யமான பக்தி யோகத்தை அறிவேனோ –
நான் எத்தை அறிந்தேன் –

உறங்குகிறவனுக்கு விடிந்தால் போலே விஷயாந்தரங்களை ஒழியவே ஓன்று அறியாதே திரியச் செய்தே
உன்னுடைய வைலஷண்யத்தைக் காட்டக் கண்டேன் இத்தனை போக்கி –
சாதனாந்தரங்களை எங்கே கண்டேன் -என்கை –

(1-அமாநித்வம் = கர்வமின்மை
2-அதம்பித்வம் = தற்பெருமை இன்மை
3-அஹிம்ஸா = துன்பம் செய்யாமை
4-க்ஷாந்தி = பொறுமை
4-ஆர்ஜவம் = எளிமை, நேர்மை
5-ஆசார்யோபாஸநம் = ஆசாரியனை வழிபடுதல்
6-ஸௌசம் = தூய்மை
7-ஸ்தைர்யம் = உறுதி
8-ஆத்மவிநிக்³ரஹ = சுய கட்டுப்பாடு-ஆத்ம சப்தம் இங்கு மனசைச் சொன்னவாறு
9-இந்த்ரிய அர்தேஷு வைராக்யம் ச-இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை,
10-அநஹங்கார: ஏவ-அகங்காரம் இல்லாமை,–ஏவ ச -பிரதர்சனார்த்தம் முக்கியம்
12-ஜந்ம ம்ருத்யு-பிறப்பு, இறப்பு, ஜரா வ்யாதி-நரை, நோய்,து:க தோஷ-துக்கம், தோஷம்,
13-அநுதர்ஸநம்-இவற்றின் கண் இசைந்த காட்சியுடைமை.
14-புத்ர தார க்ருஹாதிஷு-மகனையும் மனைவியையும், வீட்டையும்,
அஸக்தி-பற்றின்மை, அநபிஷ்வங்க:-தன்னுடைமையெனக் கருதாமை,
ச-மேலும், இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு – விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே,
நித்யம் ஸமசித்தத்வம்-எப்போதுமே சமசித்தமுடைமை.)

நாமே பிராப்ய பிராபகங்கள் என்று அறிந்தீர் ஆகில்
உம்முடைய கையில் முதல் இல்லை என்று அறிந்தீர் ஆகில் –
நாம் செய்த படி கண்டு இருக்கை அன்றோ பிராப்தம் –
முகம் காட்டாது ஒழிவதே என்று கூப்பிடக் கடவீரோ -என்ன –

ஏழையேன்-
சாபல ப்ரேரிதன் ஆனால் நான் செய்வது என் –
அத்யந்த சபலன் ஆனேன் –

விஷயாந்தரங்களில் எனக்கு ஓர் அடைவு உண்டாகில் அன்றோ
இவ்விஷயத்திலும் எனக்கு ஓர் அடைவு உண்டாவது –

பிராப்த அப்ராப்த விவேகம் பண்ண ஒட்டாத என்னுடைய
சாபல அதிசயத்தாலே கண்டவற்றிலே கால் தாழ்ந்து போனேன் –
இத்தனை அன்றோ செய்தது –

ஆற்றாமையை சாதனம் என்று பழி இட்டு விடப் பார்க்கில்
நித்ய ஸூரிகளை முற்பட விட்டு பின்னை அன்றோ என்னை விடுவது –

ஆனையின் ஸ்வபாவங்கள் நமக்கு உண்டு என்று அறிந்தது சாஸ்திர முகத்தாலேயோ –
ஆசார்ய முகத்தாலேயோ என்னில் –
உகந்து அருளின நிலங்களிலே கண்டு அறிந்தேன் -என்கிறார் –

உலகமேத்தும் -இத்யாதி –
திருமங்கை மன்னன் கட்டின திக் விஜயங்கள் இருக்கிறபடி –

உலகமேத்தும் தென்னானாய் –
உபய விபூதியும் வந்து ஆஸ்ரயிக்கும் படி தெற்குத் திருமலையிலே நின்று அருளினவனே –
இருந்ததே குடியாக தெற்கு திக்கில் உள்ளார் வாழ்க்கை அன்றிக்கே –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்கிறபடியே –
நித்ய ஸூரிகளும் ஏற்று அங்கு அக்கம் உண்ண (சிறந்த விருந்து ஸுலப்யம் அனுபவிக்க )வரும் படி இறே திரு மலையிலே நின்று அருளிற்று
தெற்கு திக்கில் ஆனாய்

(வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-)

(உலகமேத்தும்) வடவானாய் –
அப்படியே இறே வடக்குத் திக்கிலும் நின்று அருளிற்று –
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –என்றும்
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும் -சொல்லுகிறபடியே
நித்ய ஸூரிகளோடு -ப்ரஹ்மாதிகளோடு -மனுஷ்யர்களோடு வாசி அற வாழும் படி
இறே திருவேங்கடமுடையான் நின்று அருளிற்று –

(எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2-)

(சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-)

(உலகமேத்தும்)குடபாலனாய் –
கீழ்ச் சொன்ன ஆனைகளைப் போலே நிற்கை அன்றியே
மேலைத் திக்கிலே ஒரு மத ஹஸ்தி சாய்ந்தாப் போலே ஆய்த்து –
கோயிலிலே வந்து பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய -என்கிறபடியே
சகல லோகங்களும் அனுபவித்து சத்தை பெறும்படி இறே கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

(வன் பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மண்ணுலகில் மனிசர் உய்ய,
துன்ப மிகு துயர் அகல, அயர்வொன்றில்லாச் சுகம் வளர, அகமகிழுந் தொண்டர் வாழ,
அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்,
இன்ப மிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்று கொலோ இருக்கு நாளே”-பெருமாள் திருமொழி )

(உலகமேத்தும்)குண பால மதயானாய் –
பெரிய முதலியார் பக்கல் தமக்கு உண்டான ஆதரத்தாலே
மன்னாருடைய வடிவு அழகையும் செருக்கையும் நிலை அழகையும் பற்ற
உடையவர் மன்னாரை அருளிச் செய்வர் –

(அருளிச் செயல்களைக் காட்டி அருளவே நாதமுனிகளையும் ஆளவந்தாரையும் கடாக்ஷித்து அருளிய மன்னார் அன்றோ)

(உலகமேத்தும்) குண பால மதயானாய் –
த்ர்தீயம் கிர்ஷ்ண நகரம் -என்கிறபடியே
பஞ்ச ஷேத்ரத்திலே த்ர்தீய ஷேத்ரமாகச் சொல்லுகையாலும்
கரு வரை போல் நின்றானை கண்ண புரத் தம்மானை கண்டாள் கொலோ -என்றும்
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
கற்றார் சேர் கண்ண புரம் -என்றும்
இவர் தாம் அத் தேசத்தில் மண்டி இருக்கையாலும்
திருக் கண்ண புரத்தை அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –
உலகம் ஏத்தும் -என்றது இங்கும் அந்வயிக்கக் கடவது –

(பஞ்ச கிருஷ்ண ஷேத்தரங்கள் -திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர் )

இமையோர் -இத்யாதி –
இத்தால் -பிராப்ய ஸ்தானத்தையும்
பிராபக ஸ்தானத்தையும்
அருளிச் செய்கிறார் –

இமையோர்க்கு என்றும் முன்னானாய் –
நித்ய ஸூரிகளுக்கு என்றும் ஒக்க பிரத்யஷ விஷயமாய் இருக்கிறவனே -(ஸதா பஸ்யந்தி ஸூரயா )

பின்னானார் -இத்யாதி –
பரம பதத்தோடு
ஷீராப்தியோடு
அவதாரங்களோடு
அர்ச்சாவதாரங்கள் உடன் வாசி அற –
பிற்பட்டாருக்கும் ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு
திரு மூழிக் களத்திலே-வர்த்திக்கிறவனாய்
நாஸ்திக்ய பிரசுரர் ஆனவர்களுக்கும், ஆஸ்ரயணீயனாகைக்கு இறே
மேலை சமுத்ரக் கரையிலே நித்ய வாசம் பண்ணுகிறது –

அதவா –
த்ரை வர்ணிக்க அதிகாரமாய் இருத்தல் –
சதுரத்த வர்ண அதிகாரமாய் இருத்தல் செய்கை இன்றியே
இனி இல்லை என்னும்படி நிஹீன ஜன்மத்திலே பிறந்தவர்களுக்கும்
ஆஸ்ரயணீயனாக இருக்கும் படியைச் சொல்லிற்றாகவுமாம் –

(மலையாள தேசம் மதம் மாறுபவர்கள் நிறைந்தவர்கள் என்று காட்டி அருளுகிறார்)

பின்னானார் வணங்கும்
தேச காலங்களால் விப்ரக்ர்ஷ்டரானாரோடு
ஜன்மத்தால் விப்ரக்ர்ஷ்டனாரோடு
வாசி அற சர்வ சமாஸ்ரயணீயன் -என்கை-

சோதி -திரு மூழிக் களத்தனாய் –
அந்தகாரத்தில் தீபம் போலே
நிஹீன ஜன்மாக்களும் ஆஸ்ரயிக்கலாம் படி நிற்கையாலே
சர்வ சமாஸ்ரயணீயத்தால் வந்த ஔஜ்வல்யம் –

திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை -என்றும்
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -என்றும் –
சொல்லக் கடவது இறே –

(‘திருமூழிக் களத்துறையு மொண் சுடர்‘ என்றும்
‘முனியே திருமூழிக்களத்து விளக்கே” என்றும்
“மூழிக்களத்து விளக்கினை” என்றும் சுடர்ப் பொருளாக அருளிச் செய்தல் குறிக் கொள்ளத் தக்கது:
அவ்வாறே இங்கும் “பின்னானார் வணங்குஞ் சோதி திருமூழிக்களம்” எனப்பட்டது.

எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களுள் ஸௌலப்யம் சிறந்தது;
அத் திருக்குணம் இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே;
அது தன்னிலும், கேவலம் அறிவிலிகளானவர்கட்கே காட்சி தருமிடமாகிய திருமூழிக்களத்தில்
அக்குணம் மிகமிக வொளிப்பெற்று விளங்குதலால்
‘ஒண்சுடர்‘ என்றும்
‘விளக்கு‘ என்றும்
‘சோதி‘ என்றும் இத் திருப்பதிக்குச் சிறப்பாகச் சொல்லுதல் ஏற்குமென்ப.
ஸகல ஜாதிகளிலும் பிற்பட்டவர்களைப் பின்னானார் என்கிற சொல்லாற் கொள்ளவுமாம்.
அர்ச்சாவதாரங்களில் புறப்பாடு வியாஜத்தினால் மிகத் தண்ணியர்களுக்கும் காட்சி தருவதுண்டே.)

முதலானாயே –
1-இவை எல்லா வற்றுக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம்  ஆனவனே –
த்வத் பாத கமலாத் அந்யம் நேம் ஜன்மாந்தரேஷ் வபி நிமித்தம் குசலஸ் யாஸ்தி-(ஜிதந்தே-)
முதல் புண்ணியம் உனது திருவடிகளே -வேறே ஒன்றும் இல்லையே – என்னக் கடவது இறே –
 என்னக் கடவது இறே –

2-அங்கன் அன்றியே –
ஜகத் காரணத்வத்தை -சொல்லவுமாம்-

அதவா
3-முதலானாயே –
அழகிதாக உத்பாதகன் ஆனாய் -என்று –
கிலாய்ப்போடே தலைக் கட்டுகிறார் –

(தானான தன்மை போய் திருத்தாயார் பேச்சு உண்டே -ஞானத்தில் தன் பேச்சு -பிரேமத்தில் பெண் பேச்சு)

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–9–வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 16, 2013

அவதாரிகை –

தாம் இருந்த இடம் திருக் கோவலூராகப் பெறாமையாலும்-
அவன் தாம் இருந்த இடம் வந்து முகம் காட்டாமையாலும் –
அவன் வந்து முகம் காட்டுகைக்கு ஹேதுவான ஸ்வ பாவங்களை பற்றிக் கூப்பிட்டாராய் நின்றார் கீழ்

இதில் –
திரு உலகு அளந்து அருளின போதை செவ்வியை அனுபவிக்க வேணும் என்று
ஆசைப்பட்டவருக்கு அச் செவ்வியோடு திருக் கோவலூரிலே வந்து
நின்ற படியைக் காட்டிக் கொடுத்தோம் ஆகில் சாபேஷரான தாம்
நம் பக்கலிலே வந்து அனுபவிக்கும் அத்தனை அன்றோ
என்று நினைத்து இருந்தானோ வென்றும்
நாம் அயோக்யர் என்று முகம் தாராது இருந்தானோ என்றும் சங்கித்து –

அவன் படியைப் பார்த்தால்
ஆசாலேசம் உடையார் இடத்தே சென்று முகம் கொடுக்குமவன்
யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவன்
ஆகையால் அக்குறை அவனுக்கு உண்டாக மாட்டாது –
இனி இழைக்கைக்கு அடி என் பாபம் இறே

(ந மந்த்ராய–ந ராகவஸ்ய மத் பாப மாத்ர நிமித்த ஆஸீத் -நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை என்னாமல் இசைகையே நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம்)

ஆகையால் யாதனா சரீரம் போலே முடியவும் பெறாதே
தரிக்கவும் பெறாதே
கிடந்தது உழையா நிற்கும் இதுவே யாய்விட்டது என் கார்யம்
என்று தம் அவஸ்தையை அனுசந்தித்து
விஷண்ண்ர் ஆகிறார் –

(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-)

——————————————————————————————————

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே

பதவுரை

வங்கத்தால்–கப்பல்களினால்
மா மணி–சிறந்த ரத்னங்களை
வந்து–கொண்டு வந்து
உந்து-தள்ளுமிடமான
முந்நீர்-கடற்கரையிலுள்ள
மல்லையாய்–திருக்கடன் மல்லையில் வாழ்பவனே!
மதிள் கச்சி ஊராய்–மதிள்களை யுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே!
பேராய்-திருப்பேர் நதராளனே!
கொங்குஆர்–தேன் நிறைந்ததும்
வளம்–செவ்வி பெற்றதுமான
கொன்றை அலங்கல்- கொன்றை மாலையை
மார்வன்-மார்விலே யுடையனும்
குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான்-பர்வதராஜ புத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை
பங்கத்தாய்-(வலது) பக்கத்திலுடையவனே!
பால் கடலாய்-திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே!
பாரின் மேலாய்-ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே!
பனி வரையின் உச்சியாய்-குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே
எங்கு உற்றாய்-எங்கிருக்கிறாய்?
பவளவண்ணா-திருப்பவள வண்ணனே!
எம்பெருமான்-எம்பிரானே!
ஏழையேன்-மிகவும் சபலனாகிய அடியேன்
உன்னை நாடி –உன்னைத் தேடிக்கொண்டு–
இங்ஙனமே -இவ்வண்ணமாகவே–
உழிதருகேன்–அலைச்சல் படாநின்றேன்.

மரக்கலங்களாலே பெரு விலையனான ரத்னங்களைக் கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள கடல் கரையில் உள்ள
திருக்கடல் மல்லையிலே நித்ய வாஸம் பண்ணுமவனே
திரு மதில்களை யுடைய கச்சி நகரிலே வர்த்திப்பவனே
திருப்பேரிலே வர்த்திப்பவனே
தேனையும் மிக்க பரிமளத்தையும் யுடைத்தான கொன்றை மாலையை மார்விலே யுடையவனாய்
ஸ்லாக்யனான பர்வத ராஜன் புத்ரியான பார்வதியை இடது பக்கத்தில் உடையனான ருத்ரனை வலது பக்கத்திலே யுடையவன்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுமவனே
பூமியில் உல்லார்க்கு நன்மை செய்வதற்காக திரு அவதாரம் செய்து அருளினவனே
குளிர்ச்சியை யுடைய திரு மலையிலே நின்று அருளின திருவேங்கடமுடையானே
பவளம் போல் போக்யமான காஞ்சி நகரில் இருக்கும் பவள வண்ணனே
எங்கே புக்காய்
எனக்கு ஸ்வாமியானவனே
உன்னை அதி சபலனான நான் தேடிக்கொண்டு இவ்வண்ணமாக அலையா நிற்கிறேன் –

——————————————————————————————————-

வங்கத்தால் மா மணி வந்துந்து –
ஓர் ஆஸ்ரயன் இக் கரையிலே திருப் பள்ளித் தாமத்தை சமைத்து
இச் செவ்வி மாறுவதற்கு முன்பே போய்ச் சாத்த வேணும் என்று நினைத்து
கடல் வற்றினால் அல்லது நமக்கு வழி போக ஒண்ணாது என்று கடலை இறைக்கத் தொடங்க
இவனுடைய ஆதர அதிசயத்தைக் கண்டு கடல்கரையிலே இவன் ஆக்கின திருவிளை ஆடல் சூழலுக்கு உள்ளே வந்து
தரைக் கிடந்த இடமாய்த்து –திருக் கடல் மலை –

ஆனால் முந்நீர் மல்லை -என்ன அமைந்து இருக்க
கீழில் விசேஷணங்களுக்கு பிரயோஜனம் என் என்னில் –
மரக்கலம் ஆகிறது த்வீபாந்தர வஸ்துவை த்விபீந்தாரத்திலே வந்து தள்ளும் அது இறே –
அப்படியே பரமபத நிலயனான தன்னை லீலா விபூதியிலே கொடு வந்து பொகட்டது ஆய்த்து ஆஸ்ரித வாத்சல்யம் –

இதுக்கு –மரக்கல ஸ்தாநீயம் -ஆஸ்ரித வாத்சல்யம்
மா மணி -மகார்க்கமான மணி –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்றும்
வானவர் உச்சி வைத்த பெரு மணி -என்றும்
சொல்லுகிற மாணிக்கத்தை இறே கொடு வந்து தள்ளிற்று –

(கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே ! என்று என்று
பொய்யே கைமை சொல்லிப் புறமே புறமே யாடி
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் ?
ஐயோ ! கண்ணா பிரான் ! அறையோ ! இனிப் போனாலே–5-1-1)

(கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து  காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி  வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்–9-5-4-)

வந்துந்தும் –
கொள்வார் அற்று இருக்கிற கடல்கரையிலே வந்து தள்ளிக் கிடக்கிறபடி –
மாணிக்கத்தின் சீர்மை அறிந்து கிழிச் சீரையிலே இட்டு ஆளுமா போலே
ஸூரி போக்யமான வஸ்து கடல்கரையிலே கிடக்கிறது -என்று
வாசி அறிந்து பேணுவார் அற்று இருக்கச் செய்தே
கிடீர் கண் வளர்ந்து அருளுகிறது –
கிட்டினாலும் பிரயோஜனத்தை கொடுபோமது ஒழிய தன்னை
ஆசைப் படுவார் இல்லையே-

முந்நீர் -மல்லையாய்-
மகார்க்கமான த்விபாந்தர சரக்கு –
த்விபாந்தரத்திலே வந்து விலை உண்ணாதே போக சோம்பாதே கடல்கரையிலே கிடக்கிறபடி –
அநந்த சாயி -கிடீர் -அவனை விட்டு ஆஸ்ரிதனுக்காக தரை கிடை கிடக்கிறான்
நித்ய அநபாயினி யான பிராட்டியையும் விட்டுக் கிடீர் ஓர் ஆஸ்ரிதனுக்காக தனியே வந்து கிடக்கிறது –
இவ் விசேஷணங்களால் அவன் சீர்மை அறிந்து பேணுவார் இல்லை என்று
இத் தேசத்தின் உடைய தண்மையைச் சொல்கிறது –
ஆஸ்ரிதன் இருந்த இடத்தே வந்து முகம் காட்டும் வத்சலன் கிடீர்
என் ஆற்றாமைக்கு முகம் காட்டாது ஒழிகிறான் –

மதிட் கச்சி யூராய்-
கீழ் சொன்ன திருப்பதிகளை இங்கே சொன்னார் ஆகிலும்
பிரயோஜன பேதத்தாலே புனர் உக்தி தோஷம் இல்லை –
திருக் கடல் மல்லை போலே பேணுவார் அற்று இருக்கை அன்றியே
இவ் விஷயத்தின் உடைய சீர்மையை அறிந்து சில தார்மிகர் மதிள் இட்டு நோக்கப் பெற்றோம் -இறே என்கிறார்
அங்கு -இழவைப் பற்றிக் கூப்பிட்டார்
இங்கு -பரிகிறார்

இழவிலும் அத்தலைக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று பரிய வேண்டும்படி இறே ஸ்வரூபம் இருப்பது –
அதவா
பிரதிகூலர் கிட்டாமைக்கு இட்ட மதிள் என்று இருந்தோம் –
அது போய் அனுகூலர் கிட்டாமைக்கு இட்ட மதிளாய் இருந்ததீ –என்கிறார் என்னவுமாம் –

மல்லையாய் மதிள் கச்சி ஊராய் –
ஒரு துறையிலே வந்து இறங்கினது ஒரு நகரத்திலே விலை பெறுவது
அப்படியே திருக் கடல் மல்லைத் துறையிலே இறங்கி
காஞ்சீபுரத்திலே வந்து விலை பெற்றபடி –
அத்தலையிலே சௌகுமார்யத்தைப் பார்த்து பரிகையும்
தனிமையைப் பார்த்து கிலாக்கையும்
இரண்டும் ஆத்மா தர்மம் இறே –

(“கானத்தின் கடல் மல்லை“ என்றபடி காட்டு நிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்னத்தைப் பேணுவார் இல்லாமையாலும்
ரத்னம் விலை போவது மஹா நகரங்களிலாகையாலும் அந்தக் கப்பலானது அந்த ரத்னத்தை அங்கிருந்து கொணர்ந்து
காஞ்சீபுரத்திலே திருவெஃகாத்துறையிலே தள்ளிற்றாம்- என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது.
ஆழ்வார் தாமும் இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம் பற்றியே பெரியதிருமொழியில்
திருக்கடல்மல்லைப் பதிகத்திலும் ”கச்சிக்கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்” என்றருளிச் செய்தது.)

பேராய் –
ஆஸ்ரிதரைக் கிட்டுமோ என்று அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியை இறே -கீழே சொல்லிற்று
இங்கு –
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
-என்றபடியே –
விமுகரையும் உட்பட மடி மாங்காய் இட்டு விஷயீ கரிக்க வந்து இருக்கிறவன் கிடீர்
தன்னை ஒழியச் செல்லாத என்னை வந்து விஷயீ கரிக்காமல் இருக்கிறானே -என்கிறார் –

(திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-)

(அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூரணை -186-)

இத்தால்
ஆஸ்ரிதர் உகந்த இடத்தில் தானே வந்து முகம் கொடுக்கும் படியைச் சொல்லுகிறது –

மேல் அயோக்யதை பாராதே முகம் கொடுக்கும் படியைச் சொல்லுகிறது –
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன் –
நாயே கொள் பேயே கொள் -என்கிற வடிவு கிடீர்
அவ் வடிவை ஒழிய செல்லாத எனக்கு அரித்தாய்த்து என்கிறார் –

தேனையும் பரிமளத்தையும் செவ்வியையும் உடைத்தான
கொன்றை மாலையாலே அலங்க்ர்தமான மார்பை உடையவன் –
கொங்கு -தேன் ஆர் மிகுதி –வளம் -அழகு –
புஷ்பத்துக்கு அழகு -செவ்வி பெற்று இருக்கையும்- பரிமளிதமாய் இருக்கையும் இறே —

குல வரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் –
பார்வதியை தனக்கு பார்யையாக உடையவன்
ருத்ரனுக்கு பார்ஸ்வத்தைக் கொடுத்து -என்ன அமைந்து இருக்க
இவனை இங்கனே திருநாள் எழுந்து அருளி இருக்கிறது –
குவாலாக விசேஷணங்கள் சொல்லுகிறது
இவனுடைய துர்மானம் தோற்றுகைக்காக
திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தனாய்
ஸ்ரீ ய பதியாய் இருக்கிற -சர்வேஸ்வரன் உடன் சமமாக கொன்றை மாலை இட்டு
ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற துர்மாநிக்கு கிடீர் உடம்பு கொடுத்தான் என்று தோற்றுகைக்காக –

கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்பன் –
தண் துழாய் மாலை மார்பனுக்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
ஈஸ்வரன் ஜகத் ரஷணத்திலே தனி மாலை இட்டு இருக்கிறபடியைக் கண்டு
நமக்கும் ஈஸ்வர சித்தி உண்டாம் போதைக்கு ஒரு மாலை வேணும் என்று பார்த்து
கொன்றையை மாலையாக இட்டு இருக்கிறபடி —

குல வரையன் மடப் பாவை –
மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகளுக்கு எதிர் தட்டாய் இருக்கிற படி –
அவன் ஸ்ரீய பதியாய் இருந்தானே
நமக்கும் அனுசந்திக்கும் போது ஒரு மிதுனமாய் இருக்க வேணும் என்று பார்த்து உமாபதியாய் இருக்கிறபடி –

இடப் பால் கொண்டான் –
வல மார்பினில் வாழ்கின்ற மங்கைக்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி-

பங்கயத்தாய் –
கூறாளும் தனி உடம்பன் -என்கிறபடியே
பெரிய பிராட்டியாரோடு வழக்கு பேசி இருக்கும் படி இறே உடம்பு கொடுத்தது –
நித்ய அநபாயினி யான பிராட்டிக்குக் கொடுத்த உடம்பை கிடீர்
அந்ய பரனாய் –ஈஸ்வரோஹம் -என்று
இருக்குமவனுக்கும் கொடுத்தது –
அவன் படியையும் இவள் படியையும் அன்று காண்பது -சம்பந்தத்தை யாய்த்துப் பார்ப்பது –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற துர்மாநிகளுக்கும் கொடுத்த வடிவு கிடீர்
பரதந்த்ரனாய் அத்தை ஒழிய செல்லாத எனக்கு அரிதாய்த்து -என்கிறார் –

(ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-)

பாற்கடலாய்-
குண ஷதன்யாயமாய் ருத்ரன் ஒருவனுக்கு உடம்பு கொடுத்த அளவேயோ –
ப்ரஹ்மாதிகளுக்கு ஒரு ஆபத்து வந்த போது ரஷகரான நாம்
தூரஸ்தனாக ஒண்ணாது என்று
பரம பதத்தை கால் கடைக் கொண்டு ஷீராப்தியில் வந்து கண் வளர்ந்து அருளுகிறவனே
அபேஷா நிரபேஷனாக வந்து முகம் கொடுக்கிறவன் கிடீர்
அபேஷை உடைய எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் –

பாரின் மேலாய் –
ஆசூர ராஷசராலே குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர
ராம கிருஷ்ணாதி  ரூபத்தாலே தன்னை அழிய மாறி வந்து ரஷித்த படியைச் சொல்கிறது –

(வேண்டித் தேவர் இரக்க இத்யாதி -ஸாஷாத் நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுராம் புரீம் -மனிசர்க்காகப் படாதன பட்டு)

ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞ்ஞே விஷ்ணுஸ் சனாதன –
தச் சப்தம் பிரக்ருத பராமர்ச்சி இறே –
பபூவ குண வத்தர -என்று இறே கீழ் சொல்லிற்று –
அப்படிப் பட்ட குணாதிகன் ஆகையால்
பிறந்தான் -என்கிறார்
அநந்ய பிரயோஜனர்க்காக பிறக்கை குணம் அன்று இறே –

ஹி-சப்தம் – ஹேதுவிலே
தேவை -வந்து பிறந்தது –
திருவடி திரு வநந்த ஆழ்வான் அர்த்திக்கவோ –
பிரயோஜனாந்த பரராய் ஈஸ்வரோஹம் என்று இருக்கிற துர்மானிகள் அர்த்தித்த கார்யம் செய்யக் கிடீர்
கார்யம் கொண்ட சமனந்தரம் எதிர் அம்பு கோக்குமவர்கள் இறே –

உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி –
தன்னுடைய செருக்காலே லோகத்தை அடைய அழித்துக் கொண்டு திரியும் ராவண நிரசன அர்த்தமாக
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க
அர்த்திக்கிறவர்கள் பிரயோஜனாந்த பரராய் இருக்க
அவர்களை அழியச் செய்கைக்காக கிடீர் பிறந்தது –

அர்த்தித
இது இவர்கள் பண்ணின தபஸ் ஸூ –

மானுஷே லோக
தேவதைகளும் அகப்பட கீழ் நோக்கி முகம் காட்டாத தேசத்திலே கிடீர் வந்து பிறக்கிறது

ஜஜ்ஞ்ஞே –
நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாஸம் பண்ணுவார் ஆகில்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிக் கிடீர் பிறக்கிறது –

விஷ்ணு –
வ்யாபக வஸ்து கிடீர் வ்யாப்ய ஏக தேசதத்துக்கு சேஷமாய் பிறந்தது

சனாதன
நித்ய வஸ்து கிடீர் பிறந்தான் என்னும்படி
ஒருத்தனுக்கு புத்ரனே வந்து பிறந்தது

இப்படி
பிரயோஜனாந்த பரருக்கும் அகப்பட தன்னை அழிய மாறி கார்யம் செய்கிறவன் கிடீர்
அநந்ய பிரயோஜனான எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் -என்கிறார் –

(குண பூர்ணன் -பிரயோஜனாந்தர பரர்களுக்கு -ராவணாதிகளை நிரசிக்க -ஆர்த்தித்த மாத்ரம்
தேவர்களும் கால் வைக்க கூசும் -12 மாதங்கள் கர்ப்ப வாசம்
எங்கும் நிறைந்தவன் இங்கு பாரின் மேல் -ஆஸ்ரித பரதந்த்ரனாக –
இப்படி எட்டு விஷயங்கள் இந்த ஸ்லோகத்தில் -அப்படிப்பட்டவன் எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே

பரமபதம் வ்யூஹம் விபவம் சொல்லி மேல் அர்ச்சை )

பனி வரையின் உச்சியாய் –
பிரயோஜனாந்த பரர்க்கு முகம் கொடுத்த அளவேயோ
கானமும் வானரமும் வேடும் உடை வேங்கடம் –என்கிறபடியே
நிஹீன ஜாதிக்கும் அகப்படம் முகம் கொடுக்க திருமலையில் வந்து நிற்கிறவன் கிடீர்
எனக்கு முகம் கொடாது ஒழிகிறான் –

(நன் மணி வண்ணன் ஊர்* ஆளியும் கோளரியும்*
பொன் மணியும்* முத்தமும் பூமரமும்* பன்மணி நீ
ரோடு பொருது உருளும்* கானமும் வானரமும்*
வேடும் உடை வேங்கடம். –நான்முகன் -47)

பவள வண்ணா-
அதுவுமாம் இறே
க்ரம பிராப்தியை சஹித்து இருக்கலாம் வடிவு படைத்தான் ஆகில்
அப்படிப் பெற்றோம் ஆகில் வேண்டின போது முகம் கொடுக்கிறான் என்று ஆறி இருக்கலாம் இறே –
ஸ்வரூபத்தை அனுசந்தித்து ஆறி இருக்கும்படி அன்றே
அவன் வடிவு படைத்தது

பவள வண்ணா எங்குற்றாய் –
வடிவின் போக்யதையை அனுசந்தித்து கண்ணான் சுழலை இட்டு
முன்னாடி தோற்றாமையாலே –எங்குற்றாய் -என்கிறார் –

(பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவு படைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம் )

ராமம் மே அநுகதா த்ர்ஷ்டி ரத்யாபிந நிவர்த்ததே
நத்வா பஸ்யாமி கௌசல்யே சதுமா பாணினா ஸ்பர்ச –

மே த்ர்ஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய கண்ணானது அபிராமதையைப் பற்றி பெருமாள் பின்னே போய்த்து –
ஆஸ்ரயத்தை விட்டு விஷயத்தின் பின்னே போய்த்து
பிறந்தகத்தில் சம்பந்தம் விஷயம் பெரும் அளவே காணும்

மே த்ர்ஷ்டி
என்று கண்ணைக் கொண்டாடுகிறான் –
நான் விஸ்லேஷத்தாலே தளர்ந்து தரைப் பட்டுக் கிடந்தேன்
கண் கூடப் போகப் பற்றது இறே –
கர்த்தாவாய் இராதே கரணமாக பெற்றிலேன் என்கிறான்

(கண்ணுக்கு உரியவனாக இல்லாமல் பார்க்கும் கண்ணாகவே இருந்து பேறு பெறாது இழந்தேனே)

அத்யாபிந நிவர்த்ததே –
இவ்வளவும் மீண்டது இல்லை –
உன்னுடைய தர்சனத்தாலே ஆஸ்வசிப்பிக்க யோக்யதை உண்டான தசையிலும் மீண்டது இல்லை –

நத்வா பஸ்யாமி –
ஆஸ்ரயமான நீர் இங்கே இருக்க
கண் அவர் பின்னே போகை யாவது என்னில்
காரணத்தைக் கொண்டு கார்யத்தை கற்ப்பித்தேன் -என்கிறான்
வந்து நிற்கிற உன்னைக் காணப் பெற்றிலேனே -அத்தாலே சொல்லுகிறேன் -என்கிறான்

நித்ய அனுமேயமாய் இறே இந்த்ரியங்கள் இருப்பது –
பதார்த்த தர்ஸனத்தாலே இந்த்ரியங்கள் உண்டு என்று அறிகையும்
அவை தோற்றாத போது இல்லை என்று அறிகையுமாய் இறே இருப்பது –

கௌசல்யே
கைகேயியாய் இட்டு காணாது ஒழிகிறேன் அன்றே

சதுமா பாணி நா ஸ்பர்ச –
என்னுடைய அதிக்ரமத்தை நினையாதே
துர்கதியைப் பார்த்து ஐயோ என்று இரங்கி
உன் கையால் என்னை ஸ்பர்சி என்கிறான்

அபிஷேகத்தைப் பாரித்து
காப்பைக் கட்டி வந்து ஏறப் போக விட்டேன் என்று பாராமல்
அவனைப் பிரிந்து முடியும்படியாய் விட்டதே என்று இரங்கி
ஸ்பர்சியாய் -என்கிறான்

கண்ணானது அவன் பின்னே போய்த்து
த்வக் இந்த்ரியம் போய்த்தோ இல்லையோ என்று அறியும்படி
உன் கையாலே தடவிப் பாராய் என்கிறான் -என்று
அருளிச் செய்வர் பட்டர் –

பவள வண்ணா எங்குற்றாய்
பக்தாநாம் -என்கிற வடிவைக் கொண்டு எங்கே புக்காய்
வடிவின் வைலஷண்யத்தை பிரகாசிப்பித்தது அவ் வடிவைக் கொண்டு ஒளிக்கவோ

அதவா
எங்குற்றாய்
சர்வதா இவ் வாற்றாமையாலே அவன் வாராது ஒழியான் என்றும்
தம்முடைய ஆற்றாமையே செப்பேடாக வரும் என்று நினைத்து
எங்குற்றாய் -என்று கையை நீட்டுகிறார் -என்னவுமாம் –

கையை நீட்டினவாறே கைக்கு எட்டும்
பிடித்துக் கொள்ளலாம் -என்று இருக்கிறார்
உபக்நம் பெறாத கொடி போலே தரைப் பட்டு கிடக்கிறவர் ஆகையாலே உபக்நம் தேட்டமாய் இறே இருப்பது
படர் கொடியாய் இறே இருப்பது
படர் கொடி இறே ஆத்ம வஸ்து ஆகிறது –

எம்பெருமான் -எங்குற்றாய் –
உன்னுடைய உடைமை நோவு படா நிற்க
உடையை நீ எங்கே புக்கு இருக்கிறாய் –
உடைமை இருந்த இடத்தே உடையவன் வந்து முகம் காட்டும் இத்தனை ஒழிய
உடையவன் இருந்த இடத்தே உடைமை செல்ல வற்றோ –
சோறு இருந்த இடத்தே பசியன் செல்லலும் இத்தனை ஒழிய
பசியன் இருந்த இடத்தே சோறு செல்ல வற்றோ -(அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -சோறு தானே ஜீவாத்மா )

(அடியார்களுக்காகவே திருப்பதிகளில் ஸந்நிதி பண்ணியிருந்தும் பாவியேனுக்குத் தோற்றா தொழிவது என்னோ;
“வருந்தி நான் வாசக மாலை கொண்டு, உன்னையே யிருந்திரந்து எத்தனை காலம் புலம்புவனே” என்றாற்போலே
உன்னைக் கூவிக் கூவிக் கதறுவதே எனக்குப் பணியாயிற்றே!, என்படியைக் கண்டாயோ;
இன்னமும் இரங்கியருளத் திருவுள்ளமில்லையோ? என்றாராயிற்று.)

உன்னை நாடி
நிரதிசய போக்யனுமாய்
பிராப்யனுமாய் இருக்கிற உன்னைத் தேடி
பிராப்தியும் த்வரைக்கு உடலாய் இருக்கிறது இறே இவருக்கு

அதவா
உன்னை நாடி
அநாதி காலம் எதிர் சூழல் புக்குத் தேடித் திரிந்த உன்னை –
நான் தேடும் படி ஆவதே –

ஓடினேன் ஓடி -என்கிறபடியே
விஷயாந்தரங்களிலே  கை கழிந்த எனக்கு
நீயே மேல் விழுந்து முறையை உணர்த்தி
உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்னும்படி பண்ணி
உன் பேறாக என் தலையிலே உன் திருவடிகளை வைத்தது
இன்று உன்னை பிரிந்து நிறைவு பட-
வந்து முகம் காட்டாது ஒழிகைக்கோ –

அழகிது -நாம் மேல் விழுந்து கார்யம் செய்தோம் என்னும்படி அறிந்தீர் ஆகில்
பின்னை மேல் உள்ளதும் நாமே செய்த படி கண்டு
தத் தஸ்ய சத்ர்சம்பவேத் -என்று இருக்கை அன்றோ பிராப்தம்
இங்கனம் த்வரிக்க கடவீரோ என்ன –

ஏழையேன் –
அது செய்ய ஒட்டுகிறது இல்லை என்னுடைய சாபல்யம்

அதி சபலன் நான் என்கிறார் –
நீ செய்தததை அனுசந்தித்து மேலும் தானே செய்கிறான் என்று ஆறி இருக்க ஒட்டுகிறது இல்லை –

இங்கனே யுழி தருகேனே –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் அல்லன் என்ன ஒண்ணாது
அவன் யோக்யதை பார்த்து முகம் தருவான் என்ன ஒண்ணாது –
இனி இழக்கைக்கு அடி என் பாபம் இறே-
இப்படி கிலேசித்து போம் இத்தனை இறே –

இங்கனமே –
ஏஹி பஸ்ய சரீராணி -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகள் ராஷசர்கள் தின்ற
சரீரத்தைக் காட்டினால் போலே விரஹம் தின்ற வுடம்பைக் காட்டுகிறார் –

யுழி தருகேனே  –
யாதனா சரீரம் போலே விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார் –

யுழி தருகேனே  –
யாதனா சரீரம் போலே முடியவும் பெறாதே
தரிக்கவும் பெறாதே
துக்க அனுபவமே யாத்ரையாம் படி பண்ணுவதே -என் கார்யம் -என்கிறார் –
ஒன்றில் பகவத் விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்

ஒன்றில் ஸ்வரூபத்தை அனுசந்தித்து –தத் தஸ்ய ஸ்த்ர்சம் பவேத் -என்று இருக்கப் பெற்றிலேன் –
ஒன்றில் சிந்தயந்தியையும் சக்ரவர்த்தியையும் போலே முடியப் பெற்றிலேன் –
எனக்கு கூறு- விரஹ கிலேச அனுபவமே யாய் விடுவதே-என்கிறார் –

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–8-நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 15, 2013

அவதாரிகை –

திரு உலகு அளந்து அருளின படியை –
தத் காலத்தில் அனுபவிக்கப் பெற்றிலோம் என்று -விஷண்ணராய்-
அச் செவ்வியோடு திருக் கோவலூரிலே வந்து நின்றோம் –
அனுபவியீர் என்ன –

தம்முடைய திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு அனுபவிக்க இழிந்தவர் –
ஆயனுடைய சௌர்ய வீர்யாதிகளையும் விஸ்மரித்து தம்முடைய அனுபவத்தையும் விஸ்மரித்தும்
முகப்பிலே சௌகுமார்யத்தை அனுசந்தித்தும்
தேச ஸ்வபாவத்தை அனுசந்தித்தும்
இவ்விஷயத்துக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று பீதரானார் –

அவ்விஷயத்தில் ஆசை பிறக்கையும் அங்குத்தைக்கு பரிகையும் ஆத்ம தர்மம் இறே –
அவன் தன்னுடைய சக்த்யாதிகளைக் காட்டி தெளிவிக்க
திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு
அனுபவத்தில் உத்யோகித்தாராய் நின்றார் கீழில்

இதில் –
திருக் கோவலூர் போய் அனுபவிக்க ஒருப்படுகிறார் –
தாமாகையாலே போக வென்று ஒருப்பட்ட அளவிலே ஸ்ரீ பாதம் பேர்ந்தது இல்லை –
ஆயனுடைய சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து

(பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்,-நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல் வினை யெம் பால் கடியும்,
நீதியாய்! நிற் சார்ந்து நின்று.)

காலாளும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்கிறபடி
கரணங்கள் சிதிலமாகையாலும்
ஸ்வரூப அனுசந்தானத்தாலே வந்த அப்ராப்தியாலும்
ஆஸ்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி அற அவன் மேல் விழுந்து
ஆஸ்ரயிப்பிக்க ஆஸ்ரயிக்கையும்
அவன் மேல்,விழுந்து புஜிபிக்க புஜிக்கையும் இறே ஸ்வரூபம்
கூவுதல் வருதல் செய்யாய் – –
என் திறம் சொல்லார் –
என்னக் கடவது இறே –

(கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

(கூவிப் பணி கொள்ளாய் -குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -கிரியதாம் வத
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே–8-3-7-

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் –காட்டி அருளிய பின்பு அவையே சரணாகக் கொண்ட ஆழ்வார்
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் 5-7-10-
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!-5-8-9-
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்–5-8-10-)

ஆக
கரண சைல்யத்தாலும் -அப்ராப்தியாலும் தாம் போக மாட்டிற்று இலர் –
தாம் இருந்த இடம் திருக் கோவலூராகப் பெற்றிலர் –
கூப்பிடத் தொடங்கினார் –

திருக் கோவலூரை அனுபவிக்கப் பாரித்தவர் -திருப் பதிகளைப் பற்றிக் கூப்பிடுவான் என் என்னில்
கதிர் பொறுக்கிக் கூட்டுவாரைப் போலே
ஆயனுடைய ஸ்வ பாவம் திருப் பதிகளிலே
பிரகாசிக்கையாலே -அத்தைப் பற்றிக் கூப்பிடுகிறார்
விஷ்ணு நா சத்ர்சோ வீர்யே-என்னுமா போலே-

(இவர் 86 திவ்ய தேசங்கள் மங்களா ஸாஸனம் செய்துள்ளார் அன்றோ
இவர் மட்டுமே 47 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
67 திவ்ய தேசங்கள் ஒரே ஆழ்வாரால் மங்களா ஸாஸனம்
நம்மாழ்வார் -பெரியாழ்வார் -திருமழிசை ஆழ்வார் -போழ்வாரால் மற்ற 20 திவ்ய தேசங்கள்
இப் பாசுரத்தில் ஒன்பது திவ்ய தேசங்கள் மங்களா ஸாஸனம் –

கார் வானத்து உள்ளாய் கள்வா–திருக் கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே! -கள்வனே!-ஒன்றாகக் கொண்டு
பெருமான் -என்று திருக் கோவலூர்
ஒரே பாடலால் -16 திவ்ய தேசங்களால் மங்களா ஸாஸனம்-ஐந்து திவ்ய தேசங்கள் இப் பாசுரத்தாலே திவ்ய தேசங்கள் ஆயின

ஒன்பது விழிச் சொற்கள் -திவ்ய தேச எம்பெருமானைக் குறித்தும் –
உள்ளுவார் உள்ளதாய் -என்றும் பேராது என் நெஞ்சின் உள்ளாய் -இரண்டு விழிச் சொற்கள் இப்பாசுரத்தில் உண்டே )

————————————————————————————————

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –

பதவுரை

நீரகத்தாய்-நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய்–திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய்–நிலாத் திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய்–செழிப்பு நிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருப்பதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்–அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய்–சிந்திப்பாருடைய நெஞ்சிலுறைபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய்–உலகமெல்லாம் துதிக்கும்படியான திருக்காரகத்திலுள்ளவனே;
கார் வானத்து உள்ளாய்–திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா-கள்வனே!
காமரு–விரும்பத் தக்கதாய்
பூ–அழகியதான
காவிரியின்–திருக்காவேரியினது
தென் பால்-தென் புறத்திலே
மன்னு-பொருந்தி யிருக்கிற
பேரகத்தாய்-திருப்பேர் நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய்-எனது ஹ்ருதயத்திலே பேராமலிருப்பவனே!
பெருமான்-ஸர்வ ஸ்வாமி யானவனே!
உன் திரு அடியே-உனது திருவடிகளையே
பேணினேன்-ஆசைப்படா நின்றேன்.

திரு நீரகத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனே
உயர்ந்த திருமலையின் சிகரத்திலே நின்று அருளினவனே
ஸகல கலைகளாலும் பூர்ணனான சந்திரனைப் போலே தாபத்தைப் போக்குமவனாய்
பூமியிலே ஒரு கண்டமான நில்லாத திங்கள் துண்டம் என்கிற திருப்பதியில் நின்று அருளினவனே
அழகு நிறைந்த காஞ்சீ புரத்திலே திரு ஊரகத்திலே நின்று அருளினவனே
அழகிய தடாகத்தின் கரையிலே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுமவனே
உன்னை சேஷி என்று அனுசந்திப்பாருடைய மனஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணுமவனே
லோகத்தார் எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணும்படி திருக் காரகத்திலே நின்று அருளுமவனே
திருக் கார் வானத்திலே வர்த்திக்குமவனே
ஆஸ்ரிதர்களுக்காக இருக்கிற திரு மேனியை அவர்களுக்கு காட்டாத கள்வனே
மிக்க அழகை யுடைத்தான காவேரியின் தென் கரையிலே திருப் பேரகத்திலே பொருந்தி எழுந்து அருளி இருப்பவனே
என் நெஞ்சிலே பேராது இருப்பவனே
ஸர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளையே காண வேணும் என்கிற ஆசையாலே கூப்பிடா நின்றேன் –

————————————————————————————————–

நீரகத்தாய்-
திரு நீரகத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறவனே –
நீரின் உடைய ஸ்வ பாவத்தை உடையவன் வர்த்திக்கையாலே
தத் சம்பந்த நிபந்தனமாக –நீரகம் -என்று திருப்பதியைச் சொல்லுகிறது –

(மூலவர் இல்லை -உத்ஸவர் -ஜெகதீஸ்வரர் -தாயார் நிலமங்கை வல்லித்தாயார் –
உலகு அளந்த பெருமாள் இரண்டாம் பிரகாரத்தில் 16 கால் மண்டபத்தில் இந்த ஸந்நிதி உள்ளது )

ஆத்ம ஸ்வரூபம் ஏக ரூபமாய் இருக்கச் செய்தே
கர்ம அனுகுணமாக -தேவாதி ஜாதி பேதம் உண்டாய் –
ஜாத்ய அனுகுணமான புத்தி பேதமும் உண்டாய் –
தந் அனுகுணமாக ஜீவன பேதங்கள் உண்டானாலும்
சர்வ உபஜீவ்யமாய் இறே ஜலம் இருப்பது –

(நீரின் ஸ்வ பாவங்கள் அவனுக்கும் உண்டே
1-பள்ளத்தில் பாயும் -மேட்டில் ஏறுவது அருமை
ஜாதி இத்யாதிகளால் குறைந்தோர் பக்கம்
பாண்டவ தூதன் பீஷ்மர் துரோணர் துரியோதனன் விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகை அமுது செய்து அருளினான்
பள்ளத்தே ஓடி பெரும் குழியே தங்கும் இயல்வு உண்டே
2-நீர் இல்லாமல் கார்யம் இல்லை
லோகோ பின்ன ருசி யாக இருந்தாலும் எல்லாரும் நீரை விரும்புவது போலே எம்பெருமானும்
3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை– சூடு வந்தேறி
இவனுக்கும் தண்ணளி இயற்கை -சீற்றம் வந்தேறி
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் -முமுஷூப்படி திவ்ய ஸ்ரீ ஸூக்தி
4- நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேணும்
எம்பெருமான் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –
5-நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரியதாய் இருக்கும்
ஆண்டாள் சூடிக் களைந்த மாலையாலே விலங்கிட்டு வைத்து புஜிக்க- நின்றான்
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது நடந்தான்
6-நீர் மற்ற பண்டங்கள் சமைக்க வேணும் –
தனிப்பட தானே குடிக்கவும் தக்கதாய் இருக்கும்
அவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் இரண்டு ஆகாரங்களும் உண்டே
அவனும் ஸ்வயம் புருஷார்த்தம்
7-அன்னம் போன்றதுக்கு பிரதி நிதி உண்டு
நீருக்கு பிரதிநிதி இல்லையே
குண அனுசந்தானத்தாலும் போது போக்க அரிது
ஒரு நாள் காண வாராயே -அடியேன் தொழ வந்து அருளாயே -என்று பிரார்தித்து பெற்றே தீர வேணும்
8-சோறு உண்ணும் போது நீர் வேணும்
நீர் வேறு ஒன்றை அபேஷிக்காது
உபாயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேணும்
எம்பெருமான் இதர நிரபேஷன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
9-கொள்ளும் பாத்ரங்கள் தார தம்யம் அன்றி நீர் தானே குறைய நில்லாது
எங்கும் நிரம்பவற்று
எம்பெருமானும் கொள்ளக் குறைவிலேன்
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்ளக் குறையே அத்தனை
ஐஸ்வர்யம் போதுமே கைவல்யம் போதுமே
10- நீர் ஐந்து வகைப் பட்டு இருக்கும்
பூமிக்கு உள்ள பதுங்கிக் கிடக்கும் நீர் /ஆவரண ஜலம் /பாற் கடல் நீர் /பெருக் காற்று நீர் /தடாகங்களில் தேங்கும் நீர்
அவனும் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
விடாய்த்தவனுக்கு வேறு இடம் தேடித் போக வேண்டாத படி நிற்கிற இடத்திலே உண்டாய் இருக்கச் செய்தேயும்
கொட்டும் குத்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாத பூமிக்குள் பதிந்த நீர் போலே அந்தர்யாமித்வம்
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்தில் இருக்கச் செய்தேயும்
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அஷ்டாங்க யோகம் யத்னத்தால் காண வேணுமே
விடாய்தவனுக்கு அண்டத்துக்கு வெளியே பெருகிக் கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆயிற்று
கண்டு பற்ற வேண்டும் என்று இருக்குமவனுக்கு லீலா விபூதிக்கு அப்பால் உள்ள பரத்வம்
அப்படி அதி தூரஸ்தம் அன்றியே அண்டத்துக்கு உட்பட்டு இருக்கச் செய்தேயும்
விடாய்தவனுக்கு கிட்ட அரிதான பாற் கடல் போலே வ்யூஹம்
சமீஸ்தமாய் இருந்தும் தத் காலத்தில் இருந்தவர்களுக்கு மாத்ரம் உபயோகமாய் யோக்யமாய்
பிற்பட்டார்க்கு அரிதான பெருக்காறு போலே ஆயிற்று விபவம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
விடாய்தவனுக்கு விடாய் தீரலாம்படி பெருக்காரிலே தேங்கின மடுக்கல் போலே யாயிற்று
கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லார் கண்ணுக்கும் இலக்காம்படி அர்ச்சாவதாரம்
11- நீரானது ஸ்வத பரிசுத்தமாயினும் ஆஸ்ரய வசத்தாலே த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும்
அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் த்யாஜ்யனாயும்
கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள எம்பெருமான் உபாதேயம்
12-தோண்ட தோண்ட சுரக்கும் நீர்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும்
13-நீர் தனக்கு ஒரு பிரயோஜனமும் இன்றியே பரார்த்தமாகவே இருக்கும்
எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும்
14-நீர் தானே பெய்ய வேணும் அன்றி ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது
எம்பெருமான் படியும் அப்படியே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷை கஞ்சித் கதாசன
15 நீர் கடலில் இருந்து காள மேகம் வழியாக வந்தால் அன்று உபஜீவிக்க உரியது ஆகாது
எம்பெருமானும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆசார்யர் முகமாகவே வந்தே உபஜீவ்யன் ஆகிறான்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூல் கடல் சொல் இவர் வாயனவாயத் திருந்தினவாறே
சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆமே
16-வசிஷ்ட சண்டாள விபாகம் அற ஒரே துறையிலே படிந்து குடைந்தாடலாம் நீரில்
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
பெரியார் சிறியார் வாசி அற ஆஸ்ரயிக்கலாம்
17-நீர் சிறிது த்வாரம் கிடைத்தாலும் உட் புகுந்து விடும்
எம்பெருமானுக்கு சிறிது வ்யாஜ்யமே போதும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறைய வந்து புகுந்தான்
18-தீர்த்த விசேஷங்களிலே நீருக்கு மகாத்மயம் அதிகம்
எம்பெருமானுக்கு கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திருப்பதிகள் விசேஷம்
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் ஏறட்டு கொள்வது
முதுகில் கொட்டுவது உள்ளில் இழிச்சுவது குடைந்து நீராடுவது
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி -எம்பெருமானை விழுங்குவார்கள்
20-நீர் வேண்டியவன் துளி நுனி நாக்கு நனைத்தால் போதும் என்பான்
கூராழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள் காண வாராயே
21-நீரில் சிறிய கல்லும் அமிழும் பெரிய தெப்ப மரமும் மிதக்கும்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யக் காண்போம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
சிறு மா மனிசர் அமிழ்தலும்
ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்றலும் காண்போம்
இங்கனே பலவும் உண்டே)

அப்படியே திரு நீராக நாயனாரும் சர்வ உபஜீவ்யராய் இருக்கை –
திரு உலகு அளந்த திருவடிகள் சர்வ உஜ்ஜீவ்யமாய் இறே இருப்பது –
இஸ் ஸ்வ பாவம் இத் திருப்பதியிலே பிரகாசிக்கையாலே
வரையாதே எல்லார்க்கும் அனுபாவ்யனான நீ
எனக்கு முகம் காட்டாது ஒழிவதே -என்கிறார் –

நெடு வரையின் உச்சி மேலாய் –
பூமியில் உள்ளார் அனுபவிக்கை அன்றிக்கே
ஊர்த்தவ லோகங்களிலும் உள்ளாரும் அனுபவிக்கலாம் படி
திரு மலையிலே நின்று அருளினவனே

வானவர் வானவர் கோனுடன் நமன்று எழும் திருவேங்கடம் -என்னக் கடவது இறே
ஊர்த்த்வ லோகங்களை அளந்த திருவடிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறது ஆய்த்து -திருமலையின் -நிலை –
ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கும் அகப்பட முகம் கொடுக்கக் கடவ நீ
எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –

(எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2-

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–நான்முகன் திருவந்தாதி -45-

மந்திபாய் வட வேங்கட மா மலை -வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -)

நிலாத் திங்கள் துண்டத்தாய் –
இதுவும் நாயனார் ஸ்வ பாவத்தைப் பற்ற திருப்பதிக்கு திரு நாமம் ஆகிறது –
சகல கலைகளாலும் பூர்ணனான சந்தரனைப் போலே
தாப த்ரயாதுரர்கு தாப ஹரனாயும்
அனுபவிப்பார்க்கு போக்யமுமாய் -இருக்கிறவனே –

ஸூர்யாம் சுஜநிதம் தாபம் நின்யேதாராபதிஸ் சமம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே
ஆதித்ய கிரணங்களாலே தப்தரான சேதனர்க்கு சாந்தி ஹேதுவாயும் –
ஆஹ்லாத கரனுமாயும் இறே சந்தரன் இருப்பது –

(பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள ஸந்நிதி
சந்த்ர சூட பெருமாள் என்றும் சொல்வார் –
மூலவர் நிலாத் திங்கள் துண்டத்தான், நின்ற திருக்கோலமாக மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
பேர் ஒருவர் இல்லா வல்லித்தாயார் -நிலாத் திங்கள் துண்டத்தாய்த் தாயார் –
அலங்கார பூஷிதனாக அழகுத் தோற்றம் காட்டும் நிலாத் துண்டப் பெருமாள், நோய் தீர்க்கும் நாயகன் என்றும் போற்றப்படுகிறார்.

பார்வதி அருகே உள்ள வாமனர்தான் மாமரத்தை தழைக்க வைத்த பெருமாள் என்றும் கூறுவர்.)

நிலாத் திங்கள்
கலை குறைந்த நாளில் நிலா மழுங்கி இருக்கையாலே -நிலாத் திங்கள் -என்கிறது –
பூமியிலே ஒரு கண்டம் இறே திருப்பதி யாகிறது –
அத்தைப் பற்ற –துண்டம் -என்கிறது –

(திங்கள் என்று மட்டும் அல்லாமல் நிலா விசேஷணத்துக்கு வியாக்யானம் )

இத்தால்
அல்லாத தேசங்களில் காட்டில் இதுக்கு உண்டான வ்யாவர்த்தி தோற்ற சொல்கிறது –
திரு உலகு அளந்து அருளின போதை வடிவில் ஸ்ரமஹரதைக்கும் போக்யதைக்கும் ஸ்மாகரமாய் இருக்கிறது –
சர்வர்க்கும் ஸ்ரமஹரனாய் ஆஹ்லாத கரனாய் இருக்கிற நீ
எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –

நிறைந்த கச்சி ஊரகத்தாய் –
அழகாலும் சீலத்தாலும் காஞ்சிபுரம் இத்தனையும் நிரம்பி
சுழி யாறு படும்படி
திரு ஊரகத்தில் நின்று அருளினவனே
திரு உலகு அளந்து அருளினமையை பிரத்யபிஞ்ஞை பண்ணலாம் படி இறே அங்கு நிற்பது –

(உலகு அளந்த பெருமாள் -அம்ருத வல்லித் தாயார்)

நிறைந்த கச்சி
சோபயன் தண்டகாரண்யம் -என்னுமா போலே
திருக் கச்சி அடைய இவர் நிழலீட்டாலே நிரம்பி இருக்கை –
திருப்பதிகளிளாலே நிறைந்த கச்சி -என்னவுமாம்-

ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய் -(வேகா சேது ஸ்தோத்ரம் தேசிகன் -வேகா அணை வேகவதிக்கு அணை -வெக்கணை -வெக்கா )
திரு வெக்காவில் அழகிய துறையைப் பற்றி கண் வளர்ந்து அருளினவனே –
அல்லாத துறைகளைப் போல் அன்றியே
ஆழ்வார் திரு மழிசைப் பிரான் இழிந்து தீர்த்தம் ஆடின துறை யாகையாலே –
அழகிய துறை -என்கிறது -(யதோ யுக்த காரி சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -)

தத் சம்பந்தத்தாலே இறே அத்துறையைப் பற்றிக்  கிடக்கிறது –
ஆஸ்ரிதன் போன போது அவன் பின்னே போயும்
அவன் வந்தவாறே வந்து
கால் கடை தலை மாடாக கிடந்தும் -இப்படி இறே
அங்குத்தை ஆஸ்ரிய பாரதந்த்ர்யம் இருப்பது –

(ஓர் இருக்கை –கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணி வண்ணா! நீ கிடக்க வேண்டா-
துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்.”-
“கணி கண்ணன் போக்கொழிந்தான் காமரூ பூங் கச்சி, மணி வண்ணா! நீ கிடக்க வேண்டும் –
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந் நாகப் பாய் படுத்துக் கொள்.” )
என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற் காண்க.-)

இருந்த வூரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ –என்று
வைஷ்ணவன் இருந்த தேசம் வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாக இருக்குமா போலே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள ஒரு துறையும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –

வாசல் கடை கழியா வுள் புகாகா மாமரு பூம் கோவலிடைகழியே பற்றி இனி – என்று
அவர்களோடு கூட நெருக்கிக் கொண்டு புகுந்து இருந்து
அவர்கள் போன இடத்திலும்
அவ்விடத்தை விடாதே இருந்த படிக்கு
ஸ்மாரகமாய் இருக்கிறது ஆய்த்து திரு வெக்காவில் நாயனார் ஸ்வ பாவம்
ஆஸ்ரிதரோடு கால் கடை தலை மாடாக இறே பரிமாறிக் கிடக்கிறது –

(பக்த பராதீனன் திசை மாற்றி கண் வளர்ந்து சொன்ன வண்ணம் செய்தமையைக் காட்டி அருளவே )

(நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —முதல் திருவந்தாதி -86-புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )

சொன்ன வண்ணம் செய்தார்
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளது ஒன்றை விடாதே இருக்கிற நீ
உன்னை ஒழிய செல்லாத எனக்கு
முகம் காட்டாது ஒழிவதே-

உள்ளுவார் உள்ளத்தாய்-
சேஷி ஒருவன் உண்டு என்று அனுசந்திப்பார் உடைய ஹிர்தயத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனே –
திருப்பதிகள் நிலையம் ஓர் ஆஸ்ரிதன் உடைய ஹ்ர்தயத்தை கணிசித்து இறே –

(உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -முதல் திருவந்தாதி-99-)

நின்ற எந்தை -இத்யாதி –
ஆசாலேசம் உடையவர் ஹ்ருதயத்தில் குடி இருக்கக் கட நீ
உன்னை ஒழிய செல்லாத எனக்கு
முகம் காட்டாது ஒழிவதே –

(நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)

யுலகமேத்தும் காரகத்தாய் –
லோகம் அடங்க -ஏத்தும்படியாக
திருக் காரகத்திலே நின்று அருளினவனே

(கருணாகரப் பெருமாள் -பத்மா மணித் தாயார் ரமா மணித் தாயார்
மூலவர் : கருணாகரப் பெருமாள்
தாயார் : பத்மாமணி நாச்சியார்
கோலம் : நின்ற கோலம்
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்
ஆதிசேஷன் குடை பிடிக்கப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்)

லோக விக்ராந்த சரனௌ -என்றும்
சர்வ லோகங்களும் வழக்கு பேசி ஆஸ்ரயிக்கலாம் படி
த்ரை விக்கிரம அபதானம் பண்ணின ஆயனுடைய
சர்வ சமாஸ்ரயணீ யதைக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –
சர்வ சமாஸ்ரயணீயனான நீ எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –

கார் வனாத்துள்ளாய்-
வர்ஷூக வலாஹம் போலே -திருக் கார்வனத்திலே வர்த்திக்கிறவனே
இத் திருப்பதிக்கு திரு நாமம் இந் நாயனார் ஸ்வ பாவத்தை பற்றி இறே ஆய்த்து –

(கார்வானத்துள்ளாய் கள்வா என்று இத்தலத்து எம்பெருமானின்
பெயரையும் சேர்த்தே ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.
திருவூரகத்திற்குள்ளே இருக்கும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் மற்ற
இருவருக்குமில்லா தனிச் சிறப்பாகும் இது. நீரகத்தாய் என்றும், காரகத்தாய்
என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை இந்த
திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது மட்டும் எம்பெருமானின்
பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.

திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால்
அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இந்தக்
கார்வானத்து எம்பெருமானுக்குத்தான் கள்வர் என்றும் திருநாமமாகும்.
கார்வானத்துள்ளாய் கள்வா என்னும் மங்களாசாசனத்தால் கார்வானம் என்னும் திவ்யதேசத்தில் உள்ள எம்பெருமானாகிய கள்வனைத்தான் மங்களாசாசனம் செய்ததாகக் கொள்ள வேண்டும்.

இதில் உள்ள கள்வா என்னும் சொல் காஞ்சியில் காமாட்சியம்மன்
கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப் பெருமாளை மங்களாசாசனம் செய்ததாகக்
கொண்டு அத்தலத்திற்கும் தலைப்பிட்ட இப்பாடலையே மங்களாசாசனப்
பாடலாக நம் முன்னோர்கள் எடுத்தாண்டுள்ளனர்.)

மூலவர்–கள்வர், வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- கமலவல்லி, தாமரையாள்
தீர்த்தம்- கௌரீ தீர்த்தம், தராதர தீர்த்தம்
விமானம்– புஷ்கல விமானம்
காட்சி கண்டவர்கள்- பார்வதி)

மேகம் பிரயோஜன நிரபேஷமாய் ஜல ஸ்தல விபாகம் இன்றிக்கே வர்ஷிக்குமா போலே
அர்த்தித்வ நிரபேஷமாக எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த
ஆயனுடைய ஔதார்யத்துக்கு ஸ்மாரகமாய் இருக்கிறது –
அபேஷா நிரபேஷமாக ஔதார்யம் பண்ணக் கடவ நீ
என் பக்கலில் ஔதார்யம் பண்ணாது ஒழிவதே –

மேகம் போன்ற ஸ்வ பாவம் உடையவனே
1-பெய்ய வேண்டிய இடம் அளவும் சென்று பெய்யும்
வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே
2- மின்னல் உள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும்
பிராட்டி உடன் இருந்தால் கிருபா ரசம் விஞ்சி இருக்கும்
இவள் சந்நிதியால் காகம் தலைப் பெற்றது அது இல்லாமையால் ராவணன் முடிந்தான்
3- மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்
தனக்கு உபதேசித்தார்க்கும் உபதேசிப்பான்
சித்ர கூடத்தில் வசிஷ்டன் பெருமாள் இடத்திலே சில சூஷ்ம தர்மங்கள் கேட்கப் பெறலாயிற்று
4-பெய்யப் பெறாத காலத்திலே வரைக்கும் மேகம்
நெஞ்சு உலர்ந்து பேசினான் இறே திரௌபதிக்கு ஆபத்திலே நேரிலே வந்து உதவப் பெறாமையாலே
5-இன்ன காலத்தில் மேகம் பெய்யும் என்று அறுதியிட வல்லார் யாரும் இல்லை
வந்தாய் போலே வாராதே வாராதே போலே வருவானே
திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான்
அபேஷியாது இருக்கவே தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்டான்
6- வனத்திடை ஏரியாக வெட்டி யாயிற்று நீ மழை பெய்தாக வேணும் என்று வளைப்பிட ஒண்ணாது
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்தனன்
7- ஜல ஸ்தல விபாகம் இன்றியே பெய்யும் மழை
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம்
இடையர் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -பகவத் விஷயீ காரம் பெற்றவர்கள்
8-மேகம் சரத் காலத்திலே கர்ஜித்து போய் விடும் மழை பெய்யாது பெய்யும் காலத்தில் ஆடம்பரம் அறப் பெய்யும்
எம்பெருமான் குசேலருக்கு அருள் செய்தபடி
9- விராட பர்வ கால ஷேபத்துக்கு வரும் மேகம்
பகவத் விஷய கால ஷேபத்துக்கு வந்து நிற்கும் எம்பெருமான்
ஸ்ரீ சைல தயா பாத்ரம் என்று வந்தான் இறே ஸ்ரீ ரெங்க நாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே
10- சுக்திகளில் பெய்து முத்தாக்கும் மேகம்
அடியாருக்கு இன்ப மாரியாகிய எம்பெருமான் கடாஷ தாரையும்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் இடத்தே பிரவஹித்து மிக்க பயன் தரும்
11-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் -இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்
இவனும் இன்னார் தூதன் என நின்றான்
கோதை வேலை ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் இறே
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்
எருக்கலை போல்வன வீழ்ந்து ஒழியும்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய்
தாயார் மகிழ ஒன்னார் தளர
13- எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் பைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் -வேறு புகல் அற்று
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -அநந்ய கதிகளால்
14-துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை -என்கிறபடி
அன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேது வாகையாலே போக ஸ்தானமாயும்
விடாய் தீர பருகுகையாலே ஸ்வயம் போக்யமாயும் இருக்கும்
பிராப்யனும் பிரபகனுமாய் இறே இவனும் இருப்பது
15-எத்தனை கண்ணீர் விட்டாலும் விருப்பம் இல்லாத அன்று வாளா இருக்கும் மேகம்
பரதாழ்வான் பலருடன் சித்ர கூட பரிசரத்திலே போந்து கண்ணநீரை விழ விட்டு வேண்டினவிடத்தும்
ஸ காம மன வாப்யைவ -என்று மநோ ரதம் பெறாமல் வீண்டான் இறே)

கள்வா-
அபஹாரகனே
நாம் -கள்வா -என்ன மாட்டோமே-இவரோபாதி பந்தம் இல்லாமையாலே(பக்தி பாரவஸ்யத்தாலே திரு நாமம் சாத்துகிறார் )

அபஹாரமாவது -ஒருவனுக்காய் இருக்கும் அத்தை அவனுக்கு ஆகாதபடி மறைக்கை –
ஆஸ்ரிதனுக்கு அனுபாவ்யமான வடிவை அவனுக்கு கொடாது ஒழிகை இ றே ஈஸ்வரனுக்கு அபஹாரம் ஆவது –
அது இறே சேதனனுக்கு ஆத்மா அபஹாரம் ஆகிறது –
ததர்த்தம் ஸ்வ ரூபமாய் இருக்க –
அத்தை இசையாதே ஸ்வ தந்த்ரோஹம் -என்கை இறே அபஹாரம் ஆகிறது –
என்னுடைய ஆத்மா அபஹாரத்தை தவிர்த்தது
உன்னுடைய ஆத்மாவை அபஹரிக்ககவோ
தாதர்யத்தை ஜீவிப்பித்தது –பக்தாநாம் -என்கிற இத்தை அழிக்கைக்கோ –

(இதில் உள்ள கள்வா என்னும் சொல் காஞ்சியில் காமாட்சியம்மன்
கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப் பெருமாளை மங்களாசாசனம் செய்ததாகக்
கொண்டு அத்தலத்திற்கும் தலைப்பிட்ட இப்பாடலையே மங்களாசாசனப்
பாடலாக நம் முன்னோர்கள் எடுத்தாண்டுள்ளனர்.)

(ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–-ஜிதந்தே ஸ்தோத்ரம் -5-)

(பண்டே யுன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டத்தோர் புள் வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா
என்று ஓதுவது என் கண்டு)

காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் –
ஸ்பர்ஹணீயமான அழகை உடைய
காவிரியின் தென் பார்ஸ்வத்திலே
திருப் பேரிலே
நித்ய வாஸம் பண்ணுகிறவனே

கோயிலை -நடுவே வுடைத்தாய் ஆகையால் -காமரு பூம் காவேரி -என்கிறார்
ரஷ்ய ரஷக விபாகம் அற இரண்டு தலைக்கும் உத்தேயமாய் இறே கோயில் இருப்பது –

(ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு))

தென் பால் –
கரையே வழி போவார் உண்டோ என்று கரையைப் பற்றி கிடக்கிற படி –
ஜீவன அர்த்தமாக கரையைப் பற்றி இருப்பாரைப் போலே
ரஷகத்வ சித்திக்காக கரையைப் பற்றி கிடக்கிற படி –

மன்னு –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்போம் என்று கிடக்கிற படி இறே –
ஆரோ நம்மை வந்து கிட்டுவார் என்று அவசர ப்ரதீஷனாய் கிடக்கிற நீ எனக்கு முகம் காட்டாது ஒழிவதே –
இதுவும் ஆஸ்ரிதனை ஒழிய செல்லாது இருக்கிற ஆயனுக்கு ஸ்மாகரமாய் இருக்கிறது –

பேராது என் நெஞ்சின் உள்ளாய் –
உன்னை சஷூர் விஷயம் ஆக்காது ஒழிந்தால்
மனஸ்ஸூக்கு விஷயம் ஆக்கவும் வேணுமோ –

அகவாய் பெரிய திருநாளாய் செல்லும்படி பண்ணினால்
புறம்பு ஊத்தும் சுவடும் அற்று கிடக்கவும் வேணுமோ –

நெஞ்சுக்கு விஷயம் ஆக்காது ஒழிந்தாய் ஆகில்
மறந்து பிழைத்தல் ஆய்த்தே –
கண்டு பிழைத்தல் ஆய்த்தே

1-கண்டு பிழைக்கப் பெற்றிலேன்
2-மறந்து பிழைக்கப் பெற்றிலேன்
3-முடிந்து பிழைக்கப் பெற்றிலேன் –

கண்டு பிழைக்கப் பெற்றிலர் -காட்சி அவன் பக்கலது- ஆகையாலே
மறந்து பிழைக்க மாட்டிற்று -இலர் -விஷய வைலஷண்யத்தாலே –
முடிந்து பிழைக்கப் பெற்றிலர் இன்னம் ஒருக்கால் காணலாம் என்னும் நசையாலே

பிரிந்தாலும் -அது அது -என்று கிடக்கும் படி இறே விஷய வைலஷண்யம் இருப்பது
விஷயாந்தராங்கள் ஆகில் இறே நாளோட்டத்திலே மறந்து பிழைக்கல் ஆவது –
நாள் செல்லச் செல்ல ஆற்றாமை மிகுக்கும் விஷயம் இறே –
முடிந்து பிழைக்க மாட்டு கிறிலர் -சத்தை அவன் ஆதீனம் ஆகையாலே
பிராட்டிக்கு ஆற்றாமை மீதூர்ந்து வேண் யுத்க்ரனத்திலே
ஒருப்பட்ட இடத்திலும் முடியப் போய்த்து இல்லையே
தான் பிறர் சரக்கு ஆகையாலே

உயிரினால் குறைவிலம் -என்ற இடத்திலும் முடியாமையாலே
சாமாறே -பணி -என்று அவனை இரக்க வேண்டிற்று இறே-

(உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை யென்ன உலகியற்கை?,
கண்ணாளா கடல் கடைந்தாய் உன் கழற்கே வரும் பரிசு,
தண்ணாவா தடியேனைப் பணி கண்டாய் சாமாறே. –4-9-1-)

பெருமான் –
இப்படிப் பட்ட திருப்பதிகளுக்கு தொகை இல்லாதவனே
ஆயன் -ஸ்வ பாவத்துக்கு ஸ்மாகாரமான திருப்பதிகளுக்கு தொகை இல்லாமையாலும்
அவை எல்லாவற்றையும் பேச தமக்கு சக்தி இல்லாமையாலும்
அனுக்தமான திருப்பதிகளை சமுச்சியிக்கிறார் –

அதவா
பெருமான்
சேஷியானவனே –
முறை அறிந்து என்ன கார்யம் செய்தேன் -என்கிறார் –

முறை அறிந்திலேன் ஆகையாலே சம்சாரிகளைப் போலே விஷய பிரவணனாய் கழித்து திரியல் ஆய்த்து —
தாபத் த்ரய தப்தரான சம்சாரிகளைப் போலே யாகப் பெற்றிலேன் என்பான் என் என்னில்
அஹங்கார மமகாரங்கள் அடியாக வரும் துக்கத்தை பொறுக்கலாம்
அது போல் அன்றே விரஹ தாபம் –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றது சுக ஹேது என்று இருந்தோம் –
துக்க ஹேதுவாய் தலைக் கட்டிற்றீ என்கிறார் –
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் ஸ்வரூப அனுரூபமான ஜீவனம் பெற்றால் இறே -சுகம் உள்ளது
அல்லாத போது துக்க ஹேதுவாம் இத்தனை இறே –

மாந்த்யம் உடையவனுக்கு இறே பசி உத்தேச்யமாவது –
பசியனுக்கு சோறு பெறாத போது பசி தானே துக்க ஹேதுவாய் இறே இருப்பது –
ஒன்றில் சம்சாரிகளைப் போலே விஷய அனுபவத்தில் களித்தேன் அல்லேன் –
முக்தரைப் போலே பகவத் அனுபவத்தில் களித்தேன் அல்லேன்
முமுஷூக்களைப் போலே ஸ்வரூபத்தை உணர்ந்து
தத் தஸ்ய த்ர்தசம் பவேத் -என்று இருந்தேன் அல்லேன் –
இவை ஒரு கோடியிலும் அன்வயிதாய் இருப்பதொரு புடை உண்டாவதே –எனக்கு என்கிறார் –

(அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-)

தேகாத்ம அபிமாநிகளாய்-விஷய பிரவணராய் திரிகிற உமக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை அறிவிப்பித்து –
நம்மோட்டை சம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே சுக துக்க ரூபமாம் படி புகுர நிறுத்தி
இப்படி நாம் பண்ணின உபகாரங்கள் எல்லாம் கிடக்க
க்ர்தக்னரைப் போலே
நீர் கூப்பிடுவான் என் என்னில் –

உன் திருவடியே பேணினேனே –
செய்த அம்சத்தில் க்ர்தக்னனாய் கூப்பிடுகிறேன் அல்லேன் –
அவ்வம்சத்தில் க்ர்தஞ்ஞன்
உன் திருவடிகளை காண வேணும் என்கிற ஆசையினால் கூப்பிடுகிறேன் -என்கிறார் –

நாட்டாரில் காட்டில் ஒரு வ்யாவர்த்தியோ எனக்கு புருஷார்த்தம்
உன்னைக் கண்ணால் கண்டு அனுபவிக்கை அன்றோ எனக்கு புருஷார்த்தம்
உன் திருவடியைக் காட்டாத படியால் நீ பண்ணின க்ர்ஷியும்
துக்க ஹேதுவாய் விட்டது இத்தனை

உன் திருவடி –
பிராப்யமும் பிராபகமுமான உன் திருவடி

அநேகம் திருப் பதிகளைச் சொல்லி
உன் திருவடி -என்கையாலே –
ஆயன் படியையே திருப்பதிகளிலும் அனுபவிக்கிறார்
என்னும் இடம் தோற்றுகிறது

உன் திருவடி –
ஏவம் விதமான -ஸ்வ பாவத்தை உடைய உன் திருவடி

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–7 –வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 15, 2013

அவதாரிகை –

இப்படி திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு அனுபவிக்கப் பார்த்தவர்
அனுபாவ்ய விஷயமானது வரையாதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த
அந்த செவ்வியோடு -தூளி தானத்தோடே வந்து நிற்கையாலே அத்தை அனுசந்தித்து –
அனுபவத்தை விஸ்மரித்து பயப்பட தொடங்கினார்

அதுவும் அனுபவத்துக்கு உறுப்பாம் இத்தனை அன்றோ -பயப்பட வேண்டுவான் என் என்னில் –
அனுபவிதாக்களான தம் படியாலும் அனுபாவ்ய விஷயத்தின் படியாலும் பயம் மேலிட்டது
அஸ்தானே பய சங்கை பண்ணும்படி யாய்த்து -இவர் தம்முடைய ப்ரேமாந்த்யதை இருப்பது – –

(அவ்விடத்து எம்பெருமான் வஸிஷ்ட சண்டான விபாகமின்றி எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த
ஸர்வ ஸ்தானத்தோடே வந்து நிற்கையாலே அதை அநுஸந்தித்து அநுபவத்தை மறந்து அஞ்சத் தொடங்கினார்.
அஸ்தானத்திலும் பய சங்கை பண்ணுகை யன்றோ ஆழ்வார்களின் பணி.)

பக்தி போக உபகரணமாகை தவிர்ந்து
உபாய உபகரணாமாம் படி இறே இவருடைய ப்ரேமாந்த்யதை இருப்பது –
உபாய பூதன் ஆனவனை ரஷிக்கைக்கு உபகரணம்
இவர் தமக்கு அனுபவம் சௌந்தர்யாதிகள் இறே-

இதில் சௌகுமார்யத்தை அனுசந்தித்த வாறே வயிறு பிடிக்க வேண்டும்படி இருக்கும் –
மகாராஜர் -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் அனுகூலனாய் வந்து சரணம் புகுரா நிற்க –
தம்முடைய ப்ரேமாந்த்யத்தாலே
வத்யதாம் வத்யதாம் -என்றார் இறே –

ஆசூர ராஷசராலே மிடைந்து கிடக்கிற தேசம் ஆகையாலே அத்தைப் பார்த்தவாறே வயிறு பிடிக்க வேண்டி இருக்கும் –
இவர் பயத்தாலே இழிந்தாலும்
ரஷகனுக்கு அவ்வவ பய நிவ்ருத்தியைப் பண்ணி
அனுபவிப்பிக்கை பரம் இறே –

ஆகையால் மகாராஜர் பயத்தை பெருமாள் தம்முடைய ராஜநீதியைக் காட்டியும்
சரணாகதி விஷயத்தில் –நத்யஜேயம் -என்று பண்ணின பிரதிஞ்ஞையைக் காட்டியும்
சமிப்பிக்க ஒண்ணாது என்று பார்த்து
தன் தோள் வலியைக் காட்டி பய நிவ்ருத்தியைப் பண்ணினால் போலே

(மித்ர பாவேந இத்யாதி –பிசாசான் தானவன் யஜ்ஜான் ப்ருதிவ்யாஞ்ச ராக்ஷஸாம் அங்குள  அக்ரேன –இச்சான் – தோள் வலிமை காட்டி)

1-தன் மிடுக்கையும் -2-காவல் உரைப்பையும்-3-தேசத்தின் உடைய அரண் உடைமையையும் –
புத்தி பிரதான முகத்தாலே காட்டிக் கொடுக்க
நிர் பயராய் நெஞ்சே நாம் அனுபவிக்க போராய் -என்கிறார் –

அத்த லையில் சௌகுமார்யத்தை அனுசந்தித்து பயப்பட கடவன்
சௌர்ய வீர்யாதிகளை அனுசந்தித்து நிர் பயனாகக் கடவன்

(“வற்புடையவரை நெடுந்தோள் மன்னர்மாள வடிவாய மழுவேந்தி” என்ற வளவும் பரசுராமாவதார பரம்.
“உலகமாண்டு” என்றது ஸ்ரீராமாவதாரபரம்.
“வெற்புடைய நெடுங்கடலுள் தனி வேலுய்த்த வேள் முதலா வென்றான்” என்றது ஸ்ரீ க்ருஷ்ண யவதாரத்தில்
பாணாஸுர விஜய பரம். இவை, ஆழ்வாருடைய அச்சங்கெடுக்கைக்கு எம்பெருமான் காட்டித் தந்த மிடுக்குக்களாம்.)

(அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

நம்மாழ்வாருக்கு கிருஷ்ணாவதாரம் காட்டி அருள ஸமாஹிதர் ஆனார்
இவருக்கு மூன்றுமே காட்ட வேண்டியதாயிற்று
அதுவும் போதாதே பொங்கும் பரிவு கொண்ட பெரியாழ்வாருக்கு –

அஸ்தானே பய சங்கையும் பய நிவர்த்தகங்களுக்கும் பயப்படுகையும் இவர்கள் அன்றோ -)

—————————————————————————————————————————————–

வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள
வடிவாய மழு வேந்தி உலகம் ஆண்டு
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த
வேள் முதலா வென்றானூர் விந்தை மேய
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட
கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்புடைய மலை யரையன் பணிய நின்ற
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –

பதவுரை

வற்பு உடைய–மிடுக்குடைய
வரை நெடு தோள்–மலை போன்று உயர்ந்த தோள்களை யுடையரான
மன்னர்–(கார்த்த வீரியார்ஜூனன் முதலான) அரசர்கள்
மாள–முடியும்படி
வடிவு ஆய–அழகியதான
மழு–கோடாலிப் படையை
ஏந்தி–தரித்து (பரசு ராமனாய்த் திருவதரித்தும்)
உலகம் ஆண்டு–(ஸ்ரீராமபிரனாய்) உலகங்களைத் திருக் குணங்களா லீடுபடுத்தியும்
வெற்பு உடைய–மலையை உள்ளே யுடைய
நெடு கடலுள் –பெரிய கடலினுள்ளே
தனி வேல்–ஒப்பற்ற வேற் படையை
உய்த்த–செலுத்தின
வேள் முதலா–ஸுப்ரஹமண்யன் முதலான தேவதைகளை
வென்றான்–(பாணாஸுர யுத்தத்தில்) தோல்வி யடையச் செய்தும் போந்த எம்பெருமான்
ஊர்–எழுந்தருளி யிருக்குமிடமாய்,
விந்தை மேய–(தவம் புரிவதற்காக) விந்தின மலையிலி் வாழ்ந்தவளாய்
கற்பு உடைய–அறிவில் சிறந்தவளாய்
மடம்–பற்றினது விடாமையாகிற குணமுடையனான
கன்னி–துர்க்கையானவள்
கடி பொழில் சூழ்–பரிமளத்தை யுடைய சோலைகளாலே சூழப்பட்டதாய்
நெடு மறுகில்–விசாலமான திரு வீதிகளை யுடைத்தாய்
கமலம் வேலி–தாமரைத் தடாகங்களைச் சுற்றிலுமுடைத்தாய்
பொற்பு உடைய மலை அரையன்–பராக்ரம சாலிகளான மலயமாநவர்களாலே ஆச்ரயிக்கப் பட்டதான
பூங்கோவலூர்–திருக் கோவலூரை
நெஞ்சே தொழுதும்–மனமே! தொழுவோம்;
போது–வா

—————————————————————————————————————————————–

அநேக அவதாரங்களில் உண்டான மிடுக்கை எல்லாம் காட்டி
சமிப்பிக்க வேண்டும்படி காணும் இவருடைய பயாதிசயம் இருப்பது –

வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் –
ஹிரண்ய ராவணாதிகள் உடைய பலத்தை சொல்லுமா போலே
இவர்கள் உடைய பலத்தை அருளிச் செய்கிறது –
அத் தலையில் மிடுக்கு தோற்றுகைக்காக -(பரியனாகி வந்த அவுணன் -வரத்தினால் ஸ்ரத்தை வைத்த போல் இங்கும் )

பலத்தையும் -மலை போலே ஓங்கின தோள்களையும் உடையவர்கள் –
மலையிலே சில பதார்த்தங்கள் வந்து அடி உண்டால்
அவை தான் நக்கரைந்து போம் அத்தனை ஒழிய
மலைக்கு சிதைவு இல்லாதது போலே
எதிரிகள் நசித்துப் போய் அவன் தோளுக்கு சலனம் இன்றிக்கே இருக்கை-

மன்னர் மாள-
அனுகூல வேஷத்தை பரிக்ரஹித்தாலும்
ஆசூரமாய் இருக்குமாகில் ஈஸ்வரன் அழியச் செய்யும் என்கை –

ரஷக ஜன்மம் இறே என்று பாரான் –
அவர்கள் ஆசூரமாய்த்து பார்ப்பது –
சஹஸ்ர பாஹ்வர்ஜுனன் முதலான ராஜாக்கள் எல்லாம்
நிஸ்சேஷமாக நசிக்கும் படி –

இவர்கள் நசிக்கும்படி பண்ணின வியாபாரம் என் என்னில் –
வடிவாய மழு வேந்தி –
கையில் மழுவை ஏந்த -நசித்துக் கிடக்குமித்தனை யாய்த்து –
மழுவின் கூர்மையையும் பிடித்த பிடியையும் கண்டு நசித்த வித்தனை
நரசிம்ஹ வேஷத்தைக் கண்டு ஹிரண்யன் ம்ர்த்தனானாப் போலே –

அங்கன் இன்றியே
கையும் மழுவுமாய் இருக்கிற இருப்பு தர்சநீயமாய் இருக்கையாலே -ஏந்தி –என்னவுமாம் –
ரௌத்ரமான அஸ்தரம் என்று வைஷ்ணவர்கள் எல்லாரும் இத்தை அநாதரியா நிற்க
இவர் –வடிவாய மழு -என்கிறார்-
ஏதேனும் ஒரு ஆயுதத்தைப் பிடிக்கிலும் இவருக்கு தர்சநீயமாய் இருக்கும் இறே –
திரு ஆழியும் அவன் பிடித்த பின்பு இறே தர்சநீயமாய் இருக்கிறது-

(அது இது உது என்னாலாவது இல்லை -அனைத்துமே இவர்களை -நைவிக்கும்)

உலகம் ஆண்டு –
ஸ்ரீ பரசுராம ஆழ்வான் ஆண்டதொரு ராஜ்ஜியம் இல்லாமையாலே
ராமாவதாரத்தை நினைக்கிறது –
தன் பிதாவை நலிந்தார்கள் என்னும் கோபத்தால் ராஜாக்கள் தலையை அறுத்து
அவர்களுடைய ரத்தத்தாலே தடாகத்தை நிரப்பி
உதக க்ரியை பண்ணிப் போம் இத்தனை இறே -ஆனாலும்

ஸ்நாத்வா புஞ்சீத -என்னுமா போலே -ஏந்தி -என்ற இந்தல்ய்ப்பு
ஏக கர்த்ர்கமாக அன்றோ இருக்கிறது என்னில்
வஸ்த்வைக்யத்தாலே ஏக க்ர்த்கமாக இருக்கவும் தட்டில்லை –
அர்த்த அனுபபத்தியாலே பின்ன வ்யக்தியாகவும் தட்டில்லை
மேலே கிருஷ்ண அவதாரமாக இருக்க -ஏக க்ர்த்கமமாய் இருக்கிறது வஸ்த் வைக்க்யத்தாலே இறே –
ஆகையாலே ஆகார த்வயத்தாலும்
உலகமாண்டு -என்கிற இது ராமாவதாரத்தை காட்டுகிறது –

பரசுராம ஆழ்வான் பெருமாளைக் கண்டவாறே கையில் மழுவைப் பொகட்டு -வில்லை எடுக்க
வில்லோடு கூட அவனுடைய சக்தியை வாங்கி
அவ் வில்லாலே ராவணாதி கண்டக நிரசன பூர்வகமாக
சிறியதை பெரியது நலியாதபடி ராஜ்யத்தை ஆண்ட படியைச் சொல்லுகிறது –
ஏந்தி ஆண்டு -என்றதை பற்ற –ராமாவதாரத்தை நினைக்கிறது -என்கிறார்-

வெற்பு -இத்யாதி –
வெற்பைத் தனக்கு உள்ளே உடைத்தான மகா சமுத்ரத்திலே அத்விதீயமான வேலை இட்ட –
இளமறிப் பேரான ஸூப்ரஹமண்யன் –
அதாவது பர்வதங்கள் அடைய பஷவத்தாய் கொண்டு பறந்து லோகங்களையும் அழித்துக் கொண்டு திரிகையாலே
இந்த்ரன் -தன் கையில் வஜ்ராயுதத்தால் பசங்களை சேதித்து போக
ஒரு பர்வதம் அவனைத் தப்பித் தெரியாதபடி சமுத்ரத்துக்கு உள்ளே கிடக்க –
தேவ சேநாபதி ஆகையாலே அது கிடக்கிற இடம் அறிந்து அழியச் செய்த படியைச் சொல்கிறது –

நெடும் கடல்
இப்போது சமுத்திரத்தின் உடைய மகத்தை சொல்கிறது –பர்வதம் இன்ன இடத்தில் புக்கு ஒளித்தது என்று
ஒருவருக்கும் நிலை நாட்ட ஒண்ணாது -என்கைக்காக –

தனி வேல் உய்த்த –
வேல் எறிந்தால் தந் நிரசனத்துக்கு பின்னை ஓர் ஆயுதம் விட வேண்டாதபடி இருக்கை –

வேள் -என்று காமனுக்கு பேராய் இருக்க இவனை வேள் -என்கிறது
பருவத்தாலும் வீர்யத்தாலும் எதிரிகளை அழியச் செய்கையாலே சொல்லுகிறது –

(வேள்‘ என்று காமனுக்குப் பேராயிருக்க, ஸுப்ரஹ்மண்யனை வேள் என்றது உவமையாகு பெயர்.
மன்மதனைப் போல் அழகிற் சிறந்தவனென்க.)

முதலா வென்றானூர் –
ஸூ ப்ரஹமண்யன் முதலாக ஜெயித்த ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம் –
பாண யுத்தத்திலே பிரதானாய் முற் கூற்றாலே வந்தான் இவன் இறே-
நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் – என்னக் கடவது இறே –
அப்போது வந்து எதிர் இட்டார்க்கும் தோற்றார்க்கும் தொகை இல்லாமையாலே
வேள் முதலா -என்று திரளச் சொல்கிறார் –
முண்டன் நீறன் இத்யாதி –

(நம்மாழ்வார் ‘ஆழியெழ‘ என்னுந் திருவாய்மொழியிலே பாணஸுர விஜய வ்ருத்தாந்தத்தைப் பேசும் போது

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8–என்று ஸுப்ரஹ்மண்யன் தோற்றுப் போனதை முந்துற
அருளிச் செய்கையாலே இவ்வாழ்வாரும் அதனைப் பின்பற்றி ”வேள்முதலா வென்றான்” என்றாரென்க.
”கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு” என்ற இராமாநுச நூற்றந்தாதியுங் காண்க.

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே (திருச்சந்த விருத்தம் -71))

வென்றானூர்-
அநிருத்வ ஆழ்வானை பந்தித்த அளவிலே ஸ்ரீ நாரத பகவான் கிருஷ்ணனுக்கு வந்து விண்ணப்பம் செய்ய-
பெரிய திருவடி முதுகிலே புறப்பட்டு அழியச் செய்யக் கடவதாக சென்றால்
கிருஷ்ணன் ஒரு தலையானால் நமக்கு ஜெயிக்கப் போகாது என்று அறியாதே மதி கேடன் ஆகையால்
அவனை ரஷிக்கக் கடவதாகப் பண்ணின பிரதிஞ்ஞையை நினைத்து –
ந நமேயம் -என்று இருக்கும் நிர்பந்தம் இவர்களுக்கு இல்லாமையாலே
ஈஸ்வரோஹம் அஹம் போகி  -என்று இருக்கைக்கு அடியான செருக்கை ஒட்டி ரஷிக்கக் கடவதாக வந்து பாணனை
காட்டிக் கொடுத்து தோற்று முதுகிட்டு ஓடும்படி பண்ணினான் ஆய்த்து –

பாணனை அழியச் செய்யாதே அவன் செருக்கு அடியான தோள்களை சேதித்து விட்டது –
உஷை -நாம் பித்ர்ஹீனை -என்று கண்ண நீர் பாய்ச்ச ஒண்ணாது என்கைக்காக –
அது தான் இரண்டொரு கார்யம் ஆய்த்து –
உன்னை ரஷகனாப் பற்றி நான் பட்ட பாடே என்று அந்யோன்யம் கட்டிக் கொண்டு கதறுகைக்கு உறுப்பாய்த்து –

வென்றானூர் –
இப்படிப் பட்ட வீரன் வர்த்திக்கிற தேசம் –

விந்தை மேய -இத்யாதி –
காவல் உரைப்பை அருளிச் செய்கிறார் –

விந்தை மேய
விந்த்யாடவியிலே வர்த்திதவள்
துர்க்கை -என்ன அமைந்து இருக்க -இப்போது இது சொல்கிறது –
காவல் பூண்கைக்கு உறுப்பாக தபஸ்ஸூ பண்ணின வனம் சொல்லுகைக்காக –
தான் அடிமை செய்யப் ப்ராப்தை யானாலும் அவன் இரங்கிக் கொள்ளும்போது
தபஸ்ஸூ பண்ண வேணும் போலே காணும்
இவளுடைய வைபவம் எல்லாம் அவனுடைய ரஷணத்துக்கு உறுப்பாகையாலே அருளிச் செய்கிறார் –

(பெரிய திருமொழியிலும் (2-10-6) இவ்வூர்த் திருப்பதிகத்தில்

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை
வெறியார்ந்த மலர்மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6—என்றருளிச் செய்தது முணர்க.)

கற்புடை –
கற்பு -ஞானம்
கட்டும் கழற்றும் அறிந்து காக்க வல்ல ஜ்ஞாநாதியத்தை உடையவள் –
கற்பு என்று ஸ்த்ரீத்வமாய்
தம்தாமை அழிய மாறியும் ஸ்த்ரீத்வம் நோக்குவாரைப் போலே
தன்னை அழிய மாறியும் அத்தை நோக்கக் கடவளாய் இருக்கை –

மடப்பமாவது -பற்றிற்று விடாது ஒழிகை –
பிரபல விரோதிகள் உண்டாகிலும் விட்டுப் போகாது ஒழிகை

கன்னி
அநந்ய பரை -என்கை

காவல் பூண்ட
பிறர் நியமிக்க காக்கை அன்றிக்கே தன் ஆதாரத்தால் காக்கை -என்கை –

காவல் பூண்ட
பரிவின் மிகுதியால் -ரஷண தர்மத்தில் அன்வயித்தாள் -என்கை –
காவலுக்கும் அழிவு வரும் இறே -இவள் போக ப்ரவணையாமாகில் -(கன்னியாகவே இருக்க விரதம் பூண்டவள் )

கன்னி என்று கன்னித்தமிழ் -கன்னியாறு – யாற்றுக்குப் பேராகையாலே இவளுக்கு அழிவு இல்லாமையாலே
ஊருக்கு அழிவு இல்லை என்றபடி –

பிறந்தவன்றே நடை போந்தவள் ஆகையாலே என்றும் ஒக்க பரிவையாய் இருக்கும் இறே -(விஷ்ணு மாயை துர்க்கை வைஷ்ணவீ பெயர் பூண்டவள் அன்றோ-முன்பே பிறந்து தம்பி என்று அபிமானித்து -ரக்ஷணத்தில் தீஷித்து -வளைக்காரி என்ற பெயர் பெற்றவள் )
தம்பி வளைக் காரி யன்றோ -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
சேஷ பூதனாய் இருக்கச் செய்தே தன் பரிவின் மிகுதியால்
ரஷண தர்மத்தை ஏறிட்டுக் கொள்ளும் இறே –
நின் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்றார் இறே பெரியாழ்வார் –

கடி பொழில் -இத்யாதி –
பரிமளத்தை நிரூபகமாக உடைய பொழில்
நித்ய வசந்தமான தேசம் -என்கை –
இப்போது தேசத்தின் போக்யதை சொல்லுகிறது அன்று –
இவருடைய பய நிவ்ருத்திக்கு உறுப்பானவற்றை சொல்லுகிற பிரகரணம் ஆகையாலே
நம் ஆச்சார்யர்கள் பய நிவர்த்திக்கு உறுப்பாக அருளிச் செய்து போருவார்கள் –
போக மோஷங்கள் ஒழிய புருஷார்த்தம் இல்லை இறே –

பகவத் விரோதிகளாய் இருப்பார் விஷயாந்தர பிரவணராய் இருக்கையாலே
அவர்களை தன்னுடைய போக்யாதிசயத்தாலே உள்ளுப் புகுராமே தன் பக்கலிலே துவக்க வற்றாய் இருக்கை –
உள்ளுப் புக்கு ஒருவனை அழியச் செய்ய  வேணுமோ –
இந்த போக்யதை அனுபவிக்க அமையாதோ என்னும்படி பண்ணுகை –

நெடு மறுகின் –
அத்தைத் தப்பிப் புகுந்தாரை
திரு வீதி தான் ஆயாம விஸ்தாரங்களாலே தர்சநீயமாய் உள்ளுப் புகுராத படி துவக்க வற்றாய் இருக்கை –

கமல வேலி –
பரப்பு மாறப் பூத்த தாமரைத் தடங்களை உடைத்தாய் இருக்கை
ஓடைகள் பரப்பு மாறப் பூத்து கிடக்கையாலே தர்சநீயமாய்
அங்கே கால் தாழும்படி பண்ணுகை –

இத்தால் –
ஒரு காவல் வேண்டாதபடி அரண் உடைய தேசம் -என்கை –

பொற்புடைய -இத்யாதி –
அரண் இன்றியிலே ஒழிந்தாலும்-கிட்ட ஒண்ணாத காவல் உறைப்பு இருக்கிறபடி –
இத் தேசத்தோடே செறிவை உடைய மலயமானவர்களுக்கு ஆஸ்ரயணீயனாவன் வர்த்திக்கிற தேசம்
தபஸ்ஸூ பண்ணி வந்த காக்கை அன்றியே -நிலவராலே காக்கப் பட்ட தேசம் -என்கை –
அந்யோன்யம் உண்டான செரிவைச் சொல்லுதல்
அதாவது
எல்லாரும் ஒக்க ஏக கண்டராய் காக்கும் தேசம் -என்கை–
ஏக வசனம் -ஜாதி அபிப்ராயத்தாலே -(எம்மனா எம் குல தெய்வமே என்று இருக்கும் அரசர்கள் உண்டே )

(மலையரையன் ஜாதி ஏக வசனம்-பரம்பரையான அரசர்கள் – என்றுமாம்-)

(பொற்புடைய மலையரையன் பணிய நின்ற =
திருவல்லிக்கேணியில் தொண்டையர் கோன் போலவும்,
அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும்,
நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும்,
திருநறையூரில் செம்பியன் கோச் செய்கணான்போலவும்,
திருக்கோவலூரில் ‘மலயமாநவர்‘ என்னும் பிரபுக்கள் தொண்டு பூண்டு உய்ந்தனராக இதிஹாஸம் வழங்குமென்ப.

”மலையரையன்” என்றது ஜாத்யேக வசநமாய்ப் பரம்பரையான அரசர்களைச் சொல்லுகிறதென்பது பெரியவாச்சான் திருவுள்ளம்.
அவ்வரசர்களின் கைங்கரியங்களுக்கு இலக்காயிருக்கும் திருக்கோவலூர்.
ஆக இப்படிப்பட்ட திருப்பதியைச்சென்று தொழுவோம், புறப்படாய் நெஞ்சமே! என்றாராயிற்று.)

பணிய நின்ற –
சர்வ சமாஸ்ரயணீயன் வர்த்திக்கிற தேசம் –

நின்ற –
சர்வ சமாஸ்ரயணீயன் ஆன பின்பு காணும் க்ர்த்க்ருத்யனாய் தரையில் கால் பாவிற்று –
சேதனர் பகவத் விஷயத்தில் போக்யதை அளவும் செல்ல அவஹாகித்தால் க்ர்த்க்ருத்யர் ஆமா போலே
விமுகராய் இருக்கச் செய்தே -நிர்ஹேதுகமாக சம்பந்தத்தை உணர்த்தினவன்
சம்பந்த அனுகுணமாக ஆஸ்ரயித்தால் க்ர்த்க்ர்த்யனாகச் சொல்ல வேணுமோ –

பூம் கோவலூர் தொழுதும் –
அவனை ஒழிய அத் தேசமே போக்யமாம் படி இறே
இவர் திருப்பதிகளிலே மண்டின படி –

போது நெஞ்சே –
இவர்க்கு பய நிவ்ருத்தி பிறந்த இடத்திலும் திரு உள்ளம் தரைப் பட்டுக் கிடந்தது –
சர்வ பிரகாரத்தாலும் ரஷகமான தேசம் ஆகையாலே
நமக்கு பயப்பட வேண்டா -நெஞ்சே -நாம் அனுபவிக்கப் போராய் -என்கிறார் –

தொழுதும் போது நெஞ்சே –
உண்ணப் போராய் -என்பாரைப் போலே அழைக்கிறார் –
தொழுது எழ -இறே
தொழாத போது சத்தை இல்லை -தொழுதும் போது நெஞ்சே -என்கிறார் –
ஊண் தாரகமாப் போலே தொழுகையும் சத்தா ஹேது என்கிறார் –

(உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-)

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–6-அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 15, 2013

அவதாரிகை –

மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் -என்று
திருமந்த்ரத்தை பிரமாணத்தாலே கண்டு போகை  அன்றிக்கே
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து அவதரித்து எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையால் உணர்த்தின
சம்பந்தத்தையும்(மண் முழுதும் அகப்படுத்தி )
தத் காலத்தில் செவ்வியையும்(மலர் புரையும் திருவடி )
அதுக்கு பிற்பாடர் ஆகையாலே அனுபவிக்கப் பெற்றிலோம் என்று – விஷண்ணராக–

அவதாரத்துக்கு பிற்பட்டாரை அனுபவிப்பைக்கு உறுப்பாக அன்றோ
நாம் செவ்வியோடு திருக் கோவலூரிலே வந்து நின்றோம் என்று
உகந்து அருளின தேசத்தைக் காட்டிக் கொடுக்க
நெஞ்சே -நமக்கு வாய்த்தது -அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

திருமந்த்ரார்தத்துக்கு எல்லை உகந்து அருளின நிலங்கள் இறே –
திரு மந்த்ரத்தை பிரதம பிரபந்தத்திலே லபித்தது
அதின் அர்த்தத்தை அனுபவிக்கிற இடத்தில்
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்று அன்றே அனுபவித்தது –

(ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-)

ஆனால் –புலம் புரந்து பொன் விளைக்கும் பொய்கை வெளி பூம் கோவலூர் தொழுதும் -என்ன அமையாதோ
கீழ் எல்லாம் சொல்ல வேண்டுவான் என் என்னில்
உகந்து அருளின நிலங்கள் உடைய அடிப்பாடு சொல்லுகிறது
மேன்மையும் நீர்மையும் போலே காணும் நாராயண சப்தார்த்தம் ஆகிறது –

(நாரங்களுக்கு இருப்பிடம் -மேன்மை-பரமாத்மா -நாரங்களைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவன் -அந்தர்யாமித்வம் நீர்மை

முதல் மூன்று அடிகளால்-அமரர் வேந்தன் -புட் பாகன் மேன்மையைச் சொல்லி -மேல் அர்ச்சாவதார நீர்மை சொல்லிற்று

தேவப் பெருமாளையே சொன்னவாறு -அர்த்தி தார்த்த வரத ராஜன் )

———————————————————————————–

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –

பதவுரை

அலம் புரிந்த–போதும் போதும் என்று சொல்லும்படி கொடுக்க வல்ல
நெடு தட கை–நீண்ட பெரிய திருக் கைகளை யுடையனாய்
அமரர் வேந்தன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
அம் சிறை புள் தனி பாகன்–அழகிய சிறகை யுடைய பெரிய திருவடிக்குத் தனிப் பாகனாய்
அவுணர்க்கு–ஆஸுர ப்க்ருதிகளுக்கு
என்றும்–எக் காலத்தும்
சலம் புரிந்து–சீற்றங்கொண்டிருந்து
அங்கு–அவர்கள் விஷயத்திலே
அருள் இல்லா தன்மை ஆளன் தான்-இரக்க மற்றிருக்கை யாகிற தன்மையை யுடையனான் எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கிற
ஊர் எல்லாம்–திருப்பதிகளிலெல்லாம்
தன் தாள் பாடி–அவனுடைய திருவடிகளைப் பாடி,
நிலம் பரந்து வரும் கலுழி–பூமி முழுதும் வியாபித்து வருகின்ற பெரு வெள்ளத்தை யுடைய
பெண்ணை–பெண்ணை யாறானது
ஈர்த்த-(வெள்ளத்தில்) இழுத்துக் கொண்டு வருகிற
நெடு வேய்கள்-பெரிய மூங்கில்களினின்றும்
படு-உண்டாகிற
முத்தம்-முத்துக்களை
உந்த–வயல்களிலே கொண்டு தள்ள
உந்தி–(உழவர்களாலும் தங்கள் பயிர்க்குக் களையென்று) தள்ளப்பட்டு
புலம் பரந்து–கழனிகளெங்கும் பரவி
பொன் விளைக்கும்–பொன்னை விளைக்குமிடமாயும்
பொய்கை வேலி–நீர் நிலைகளைச் சுற்றிலும் உடையதாயுமுள்ள
பூ கோவலூர்–திருக் கோவலூரை
தொழுதும்–ஸேவிப்போம்;
நெஞ்சே போது–நெஞ்சே! வா.

இரப்பாளர் போதும் போதும் என்னும்படி கொடா நிற்பதாய்
நீண்டு பரந்து இருந்துள்ள திருக்கைகளை யுடையவனாய்
நித்ய ஸூரி நிர்வாஹகனாய்
அழகிய சிறகை யுடைத்தான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகனாய்
ராக்ஷஸர்களுக்கு எந்தக் காலத்திலும் தீங்கு இழைக்குமவனாய்
அவர்கள் விஷயத்தில் தயை இன்மையையே ஸ்வபாவமாக யுடையனான ஸர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்களில் எல்லாம் அவனுடைய திருவடிகளை பாடி
பூமி எங்கும் வியாபித்து வருமதாய் கலக்கத்தை யுடைத்தான தக்ஷிண பிநகிநி யானது
இழுத்துக் கொண்டு வருகிற பெரிய மூங்கில்களில் உண்டாகிற முத்துக்களை கழனிகளிலே கொண்டு தள்ள
கர்ஷகர் தங்கள் பயிருக்குக் களை என்று தள்ளப்பட்டு
கழனிகள் எங்கும் பரவி இருக்குமதாய்
பொன்னை விளையா நின்றுள்ள தடாகங்களை சுற்றும் உடைத்தாய்
தர்ச நீயமான திருக்கோவலூரை மனஸ்ஸே அனுபவிப்போம் வருவாயாக –

—————————————————-

அலம் புரிந்த நெடும் தடக்கை –
இட்டு நீண்ட கை -என்கிறார் –
அர்த்திகள் –அலம் -(போதும் )என்னும்படியாக (புரிகை )கொடுக்கை –

இத்தால் –
ஈஸ்வரனைப் பற்றி இருக்கிறவன் வ்யதிரிக்த விஷயங்களில் சாபேஷன் அல்லன் –
என்னும் இடம் சொல்லுகிறது -(ஸர்வ லாப கேஸவ)

அதவா –
அலம் புரிந்த –
ஔதார்யம் பண்ண உத்யோகித்தால் -அவன் அமையும் -என்று வாறே
மீளும் இத்தனை போக்கித் தன் கொடைக்கு அவதி இன்றியிலே இருக்கை –

உழக்கிலே பதக்கை பொகட ஒண்ணாமையாலே மீளும் இத்தனை –
இவனுடைய ஔதார்யத்தைப் பார்த்தால்
அவனுடைய மனோ ரதம் கடலில் குளப்படி போலே இறே இருப்பது –

புரிகை -கொடுக்கையும் மீளுகையும்

அலம் என்ன கொடுக்கை யாவது –
பின்னை ஒருத்தன் பக்கலிலும் சாபேஷன் ஆகாதபடியாய் கொடுக்கை –

(ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே––ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -2)

அநந்ய பிரயோஜனனுக்கு தன்னையும் தன் உடைமையையும் கொடுத்தால்
பின்னை தனக்கு கொடுக்க விரகு இல்லை –
அவனும் அபேஷிக்க வேண்டுவது இல்லை –
அவனும் அனுபவத்தில் இழியும் இத்தனை –
இவனும் -என் செய்வேன் என்றே இருந்து போம் இத்தனை-

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–பெரிய திருவந்தாதி -53-)

(என்னிடமும் எனது அடியார்கள் இடமும் ஒன்றும் இல்லை -கிருஷ்ணன் ருக்மிணித் தாயார் இடம் சொன்னானே
யதா ஸ்ருதி கிரஹணம் –
இனி மேல் அடைய வேண்டியது ஒன்றும் இல்லை அதனால் ஏழை அவாப்த ஸமஸ்த காமன்
அடியார்கள் என்னையே பெற்றதால் இனி வேறே ஒன்றுமே வேண்டியது இல்லை
கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே)

நெடும் கை
கொடுக்கையே விளை நீராக வளர்ந்த கை –
ரஷகனுக்கு வ்ருத்தி ரஷண தர்மத்தாலே இறே –
ஔதார்யத்தை பரிச்சேதிக்க ஒண்ணாத கை -என்னவுமாம் –
அர்த்திகள் இருந்த அளவும் செல்ல நீண்ட கை என்னவுமாம் –

(திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்-உறையூர் வரை -குணதிசை பாதம் நீட்டி -திருமண்டங்குடி வரை)

தடக்கை
பஹூஸ் சாயாம் அவஷ்டப்த்த யஸ்ய லோகோ மஹாத்மாந -என்கிறபடியே
லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும்படியான தோள் -(பெருமாள் பற்றி திருவடி பிராட்டி இடம்)

(லோக -அனைவரும் ஒதுங்கும் படி -தடக்கை -அனைவருக்கும் புகலிடம் -தானே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொடுப்பவன் மஹாத்மனா
அமலன் விமலன் நிமலன் நின்மலன் போல் இங்கும்)

சர்வாதிகாரமுமாய் –
ஆஸ்ரயணீயமுமாய் –
தானே பிரயோஜனமாமுமாய் -இருக்கும் கை

தடக்கை -பரந்த கை –

யமரர் வேந்தன் –
இந்த ஔதார்யத்தை உப ஜீவிக்குமவர்களைச் சொல்லுகிறது –

அமரர் -மரண தர்மம் இல்லாதவர்கள் –
நித்ய ஸூரிகளுக்கு மரண பிரசங்கம் உண்டோ என்னில் –
போக விச்சேதத்தில் மூச்சு அடங்குமவர்கள் ஆகையாலே
மரண பிரசங்கம் உண்டு –
அது இல்லாமையாலே –அமரர் -என்கிறது –
அனுபவம் நித்யம் ஆனவாறே அவர்களும் நித்யம் ஆனார்கள் இத்தனை இறே –

வேந்தன் –
அவர்களை அடிமை கொள்ளுவதாக முடி கவித்து இருக்குமவன் –

வேந்தன் -அரசன் –
அவன் அடிமை கொள்ளுகையிலே அபிஷிக்தனாய் இருக்கும்-
இவர்கள் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று
தாஸ்யத்திலே அபிஷிக்தர்களாய் இருப்பார்கள்
அபிஷேகம் இருவருக்கும் ஒக்கும் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னக் கடவது இறே-

(பவாமஸ்து ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே -அயோத்யா -31-2)

(குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-)

அஞ்சிறைப் புள் தனிப்பாகன் –
அவர்களை அடிமை கொள்ளும் படிக்கு த்ர்ஷ்டாந்தமாக
ஒரு வ்யக்தியைப் பேசுகிறார் –

அழகிய சிறையை உடைத்தான பெரிய திருவடிக்கு அத்விதீயனான பாகன் –

வினை உள்ள போது அன்றோ வாகன அபேஷை உள்ளது -என்னில்
வினை இல்லாத போதும் ராஜாக்கள் அழகு செண்டேறக் கடவதாய் இறே இருப்பது
ஓடும் புள்ளேறி -என்னக் கடவது இறே –

(ஓடும் புள்ளேறி சூடும் தன் துழாய்
நீடு நின்று அவை ஆடும் அம்மானே –1-8-1)

பெரிய திருவடி உடைய செல்லாமையாலும்
தன் செல்லாமையாலும்
நித்ய ஸூரிகளை அனுபவிப்பிக்காகவும்
அழகு செண்டேறக் கடவதே இறே இருப்பது –
செழும் பறவை தான் ஏறித் திரிவான் -என்னக் கடவது இறே –

(வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே-10-6-5-)

அம் சிறை –
பெரிய திருவடியை மேல் கொண்டால்
திரிப் பரியட்டத்தைக் கொய்து சாத்தினாப் போலே அங்குத்தைக்கு அலங்காரமாய் இருக்கை –

அதவா
அழகு செண்டேறும் போதை ஆயாசத்துக்கு ஆலவட்டம் பணி மாறினாப் போலே
இரண்டு திருச் சிறகாலும் ஆஸ்வாச கரனாய்  இருக்கிறபடியைச் சொல்லுகிறது –
வ்யஜனம் த்ரயீ மய-என்னக் கடவது இறே –

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய்)

அங்கன் அன்றியே
பரத்வத்தை ஆஸ்ரிதர் உடைய கால் கடையிலே கொண்டு வந்து சேர்க்கைக்கு
அடியான-பரிகரத்தை உடையவன் -என்னுதல்-

புள் –
(தர்ம ஸாஸ்த்ரம் -காயிக கைகளால் அபசாரம் -ஞானம் இல்லாத -ஸ்தாவரமாக பிறப்பார்கள் – வாசிக அபசாரத்தால் -பறவை பிறப்பு என்று சொல்லுமே )

பாப யோநியான ஜன்மம் அவர்களுக்கு உண்டோ என்னில் –
பிராட்டியும் சர்வேஸ்வரனும் திருத் திரைக்கு உள்ளே இருந்தால்
நிலா தென்றல் சஞ்சரிக்கும் போது பிற்காலிக்க வேண்டும்படி இறே அப்போதை ஐகாந்தம் இருப்பது –
அவஸ்தா அனுகுணமாக கூனர் குறளர்(நபுபும்சகர் )சஞ்சரிக்குமா போலே
அந்தரங்க சேவைக்கு அனுகூலமான வடிவை பரிகிரஹிப்பர்கள் -என்கை –
ஸ்ரீ சர்ப்ப ஜாதியோடு பஷி ஜாதியோடு ஸ்தாவர ஜாதியோடு வாசி அற பரிகிரஹிப்பர்கள்
சம்சாரி கர்ம பல அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –
அவன் அவஸ்தா அனுகுணமாக சரீர பரிக்ரஹம் பண்ணக் கடவன் –

(அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம்-அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தம் அற்றவர்கள் -இச்சா க்ருஹீதம்

நித்ய ஸூரிகள் -அநந்தன் -பெரிய திருவடி -துளஸீ கேசவ ப்ரிய -ஸூத்த ஸத்வ மயம் )

தனிப் பாகன்
பாகன் -என்கையாலே
அவனுக்குத் தான் பவ்யனாய்
தனக்கு அவன் பவ்யனாய் இருக்கிறபடியும் தோற்றுகிறது –
ஆனையைத் தன் நினைவிலே நடத்தக் கடவனாயும்
அதுக்கு சேஷனாயும் இறே பாகன் இருப்பது-

பெரிய திருவடி முதுகிலே நல் தரிக்க இருந்து அவனை நடத்துகை இறே சர்வாதிக லஷணம்
அது புறம்பு இல்லாமையாலே அத்விதியீத்வம்(வேதாத்மா விஹஹேஸ்வரன் )

(சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ -வாஹனம் கொடி -சங்க காலம்சேவல் -ஆண் பறவை பெரிய திருவடியைச் சொன்னவாறு)

அதவா
தனிப் பாகன்
நித்ய ஸூரிகளுக்கு அத்விதீய நிர்வாஹகன் -என்னவுமாம் –
அயர்வறும் அமரர்கள் என்னக் கடவது இறே –

அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் –
இத்தால் -அத்தேசத்தில் விரோதி பிரசங்கம் இல்லாமையாலே
ராம க்ர்ஷ்ணாதி ரூபத்தாலே
சாது பரித்ராணார்த்தமாக அவதரித்து –
தத் விரோதி நிரசனம் பண்ணின படியைச் சொல்லுகிறது –

அவதாரத்துக்கு பிரயோஜனம் விரோதி நிரசனம் பண்ணுகையோ என்னில் –
பிரதானம் விரோதி நிவர்தனம் ஆகையாலே சொல்லுகிறது –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்னக் கடவது இறே –
சஹஜ கைங்கர்யம் ஆகையாலே ஆவிர்பாவம் இறே உள்ளது –

சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்லாமல்
இத்தை -விரோதி நிவர்த்தியைச் -சொல்லி
அத்தை -கைங்கர்யத்தை -ஸூசிப்பது போலே
சாத்தியம் விரோதி நிவர்த்தி இறே –
ஆகையால் இறே இத்தை இட்டு அத்தை உபேஷிக்கிறது –

அவுணர்
இத்தால் அசுர ஜாதியைச் சொல்லுகிறது அன்று –
அஹங்கார மமகார உக்தராய் –ந நமேயம் -என்று இருக்குமவர்களைச் சொல்லுகிறது –

ஸ்ரீ பிரஹலாதனை ஜன்மம் அதுவாய் இருக்கச் செய்தே –
உபமானம் அசேஷாநாம் சாதூநாம்  – என்கையாலும் –

(ப்ரஹ்லாதாழ்வான் அஸுரயோனியிற் பிறந்தவனாயிருக்கச் செய்தேயும்
“உபமாநமசேஷாணாம் ஸாதூநாம்யஸ் ஸதாபவத்“ எனும்படி ஸாதுக்களுக்கு உபமாநமா யிருந்தான்.)

ராஜஸ ஜென்மமாய் இருக்கச் செய்தே
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித -என்கையாலும்

தேவ யோநியாய் இருக்கச் செய்தே ஜெயந்தன் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்கு ஆகையாலும் –
ஜாதி பரம் அன்று -ஸ்வ பாவ பரம் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ் ததாம் ஸூர (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )-என்னக் கடவது இறே –

(த்வௌ பூத சர்க்கௌ லோகேச்மின் தைவ ஆசூர ஏவ ச
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாயா சூரி மதா-ஸ்ரீ கீதை)

என்றும் சலம் புரிந்து –
அவர்களுக்கு ந நமேயம் -என்று இருக்கை -வ்யவஸ்திதம் ஆனால் போலே யாய்த்து
அவர்கள் திறத்தில் இவனுக்கும் க்ரோதம் வ்யவஸ்திதமாய் இருக்கும் படி-

புரிந்து
ஈஸ்வரனை கிட்டினார்க்கு வெறுமன் போக வேண்டாம் காணும்
ஔதார்யத்தைப் பெற்று போதல்
குரோதத்தைப் பெற்று போதல் -செய்யும் இத்தனை போக்கி
பிரயோஜன சூன்யமாய் இராது –

ஸ்வ விநாசம் பிரயோஜனமாக இருக்குமோ வென்னில் –
அவர்கள் நினைவாலே பிரயோஜனம் அன்றிலே இருந்ததே யாகிலும்
அது தான் அவர்களுக்கு ஹிதமாக தலைக் கட்டா நின்றது இறே –

ஒருவன் தலையை அறுத்துக் கொள்ளப் புக்கால் கையில் வாளை வாங்குகை ஹிதமாய் இருக்குமா போலே –
பகவத் பாகவத நிந்தைக்கு உபகரணமான கரணத்தை போக்குகை உபகாரமாகக் கடவது –
தலையை அறுப்பது ரஷகனுடைய வியாபாரம் ஆகையாலே
சர்வமும் ரஷணமாய் இருக்கும் இறே –

ராம பாணாச நஷிப்த மா வஹத் பரமாங்கதிம் (வெற்று அரசை தம்பிக்கு ஈந்து வீட்டு அரசை அளித்தாயே -வாலி )-என்றும்
தலையை ஆங்கே அறுப்பதே கர்மம் -என்றும் -சொல்லக் கடவது இறே

(வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில், போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில், கூடுமேல், தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே! –திருமாலை–8)

புரிகை -யாவது
குரோத கார்யமான நிரசனத்தை பண்ணுகை
புரிதல் -செய்தல் தமிழர்
சலத்தை பண்ணி -என்றபடி –
புரிதல் -செய்தாலும் கொடுத்தாலும் –

அங்கு அருள் இல்லா தன்மையாளன் –
ஆஸ்ரித விஷயத்தில் தயை வ்யவஸ்த்திதமாய் இருக்குமா போலே
அவர்கள் விஷயத்தில் நிர்த்தயத்வம் வ்யவஸ்திதமாய் இருக்கும் –

(வரம் தருபவர்களில் ராஜா வானவரையே -க்ருபா சிந்துவை -பக்த வத்சலனை -அருளாத நீர் -திரு நாமம் சாத்தினாரே ஆழ்வாரும்)

சீற்றமும் தயையும் வ்ருத்த தர்மம்(சீறி அருளாதே )
ஏக ஆஸ்ரயத்தில் வர்த்திகலாம் இறே விஷய விபாகத்தாலே –
அசேதனமாய் இருப்பதொரு கல்லு -சந்திர சந்நிதியிலே நீராகவும்
அசந்நியிலே கல்லாகவும் காணா நின்றோம் இறே –

தன்மையாளன் –
இதுவே தனக்கு -ஸ்வ பாவமாக -உடையவன் –
ஆஸ்ரித விஷயத்தில் உதாரனாய் -தயாவானாய் -இருக்கையும் –
தத் விரோதிகள் பக்கல் க்ருத்தனாய் நிர்த்தயனாய் இருக்கையுமே ஸ்வ பாவனாய் இருக்கும்-

தான் உகந்த ஊர் –
அமரர் வேந்தன் தான் உகந்த ஊர் –
அங்கு அருள் இல்லாத தன்மை யாளன் தான் உகந்த ஊர் –
நிரதிசய போக்யன் வர்த்திக்கும் ஊர் –
விரோதி நிரசன சீலன் வர்த்திக்கும் ஊர் –
நித்ய ஸூரிகளும் தானுமாக வுகந்த தேசம் இறே பரமபதம் –
சம்சாரிகள் விமுகராய் இருக்க தானே உகந்த தேசம் இறே இது –
உடைமை நசியாமைக்காக தானே ஆதரித்து வந்து நிற்கிற தேசம் இறே இது –
இத்தால்
உகந்து அருளின நிலங்களே ஆஸ்ரயணீயமும் பிராப்யமும் -என்கை –

அமரர் வேந்தன் –என்கையாலே ஸ்வாமித்வம் கண்டோம் –
அத் தேசத்தை கால் கடைக் கொண்டு
தோஷ பூயிஷ்டமான இத் தேசத்திலே வந்து நிற்கையாலே சௌலப்யம் கண்டோம் –
நித்ய ஸூரிகள் ஏற்று அம்மம் உண்ண இங்கே வருகையாலே ப்ராப்ய பௌஷ்கல்பம் உள்ளது இங்கே இறே உள்ளது –
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -என்றார் இறே நம் ஆழ்வார்
வானவர் வானவர் கோன் உடன் -அடி அறப் போந்த படி –
எல்லாரையும் போக விட்டு அகம் பார்த்து இருக்கிறாப் போலே காணும் -ஸ்ரீ வைகுண்ட நாதன் –

(குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்-நிகரில் புகழாய் –வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்-உலகம் மூன்று உடையாய் ஸ்வாமித்வம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்–திருவேங்கடத்தானே -ஸுலப்யம்)
விலாகாமைக்கு ஸுசீல்யம்அர்ச்சக பராதீனன் -ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி வைக்கையாலே ஸுசீல்யம்-என்னை ஆள்வானே -ஸுசீல்யம்-
நான்கையும் காட்டி அருளுகிறார் திவ்ய தேசங்களிலே -)

(எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2-)

தான் உகந்த ஊர் –
அவன் உகந்ததாக அமையும் போல் காணும் இவர் ஆதரிக்கைக்கு –

ஊரெல்லாம் –
ஜ்ஞானம் பிறப்பதற்கு முன்பு –
அவரவர் பணை முலை துணையா -என்று
ஜாதி நியதி இன்றியிலே வரையாதே உத்தேச்யம் ஆனால் போலே
ஜ்ஞானம் பிறந்த பின்பு திருப்பதிகள் எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

அனுபவிக்கப் போகிறது –திருக் கோவலூராய் இருக்க –
ஊரெல்லாம் -என்பான் என் என்னில்
ஓர் ஊருக்குப் போகும் பொழுது நீர் சாய்வையும் நிழல் சாய்வையும் பற்றிப் போவாரைப் போலே
திருப்பதிகளிலே ஒதுங்கப் போகிறார் –

வாசுதேவ தருவை அனுபவிக்கப் போம் பொழுது வாசு தேவ தருச் சாயையிலே ஒதுங்கிப் போவது
சர்வம் வசதீதி வாசுதேவ -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் வஸ்தவ்ய பூமி இறே –
தத் வ்யதிரிக்த பூமிகளை மரு பூமியாக இறே நினைத்து இருப்பது –
தரு -பிராப்யம் நிழல் பிராபகம் -உபாய உபேயம் அவனே என்றபடி –

எல்லாம் தன் தாள் பாடி –
வழி போவார்க்கு பாதேயம் வேணும் இறே –
பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தன அம்ர்தம் -என்னக் கடவது இறே –
பிராப்ய பிராபகங்கள் இரண்டுமான தன் திருவடிகளை -(பரமன் அடி பாடி -பொற்றாமரை அடி போற்றும் பொருள் கேளாய் )

தன்னைப் பாடி -என்னாதே
தாள் பாடி -என்கையாலே
கீழ் –ஒரு கால் நிற்ப ஒரு காலும் -என்ற திருவடிகள் ஆய்த்து இவருக்கு பாதேயம்

பாடி
ப்ரீதி ப்ரேரிரதராய்-கொண்டு பாடி –

நிலம் இத்யாதி
பெண்ணையைக் காண்பதற்கு முன்பே போலே காணும் திருவடிகளைப் பாடுவது –
பெண்ணையைக் கண்டவாறே திருவடிகளை மறந்து இத்தைக் கவி பாடத் தொடங்கினார் –
அதுக்கு ஹேது என் என்னில்
அத் தேசத்தில் தமக்கு ஆதரம் உண்டாகையாலே
அத் தேசத்தை ஆதரிப்பாரும் தமக்கு துணையாய் இருப்பார் இறே –

நிலம் பரந்து வரும் –
புருஷோத்தமனை ஒரு ஸ்திரீ அனுபவிக்க பிரார்த்திக்கிறாள் ஆகையாலே
அத்யாதரத்தோடே வாய்த்து போகிறது

(தெண்ணீர் பொன்னி -தெளிவிலாக் கலங்கல் காவேரி -ஸூத்த ஸத்வம் -அநுபவ த்வரையால் கலங்கியும் இருக்குமே)

திருக் கோவலூரை அனுபவிக்கப் போகிற ப்ரீதி பிரகர்ஷத்தாலே கரைக்கு மீதே வழிந்து
குடியிருப்புகளை அழித்து – கரையில் நிற்கிற வேய்களை
பீட் கன்ற்றாக-கீழ்க்கன்றோடே – வேர் பற்றோடு குத்தி எடுத்து இழுத்துக் கொண்டு
பெரிய கிளர்த்தியோடே வருகிறபடி –

கலுழி –
கலக்கமும் கானாரும்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே கலங்கிப் போகிற படி —

பகவத் விஷயத்தை அனுபவிக்கப் போம் போது-அவன் விபூதியை அழித்துக் கொண்டு போகலாமோ -என்னில் –
விபூதியின் அழிவு பாரான் –இவள் ஆதரத்தை இறே அவன் பார்ப்பது –

கண்டா கர்ணன் ரிஷி பிணம் இப்போது கொன்றது இத்தை இப்போதே அமுது செய்து அருள வேணும் என்றான் இறே

பிராட்டியைக் கண்ட ப்ரீதி பிரகர்ஷத்தாலே முதலிகள் மது வனத்தை அழிக்க
அத்தை வந்து மகா ராஜற்கு சொல்ல
நம் கார்யம் க்ர்தக்ர்த்யம் ஆயிற்று என்று உகந்தார்கள் இறே –
மகா ராஜரும் -ராஜ குமாரர்களும் –
த்ரஷ்டா சீதா -என்ன வேண்டுவது இல்லை –

எம்பார் -இவ்விடத்தில் -நடுவே மதுவனம் ஓன்று இல்லை யாகில் முதலிகளுடைய
கிளர்த்தி ராஜ குமாரர்கள் முதுகோடு போம் இத்தனை – காண் என்று அருளிச் செய்வர் –

பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் –
ஆசன்ன பிரசவைகளான கர்ப்பிணிகளை மயிரைப் பிடித்து இழுத்தால்
அதுவே ஹேதுவாக பிரசவிக்குமா போலே
வேர் பற்றிலே குத்தி எடுத்து அலைத்துக் கொண்டு போகப் புக்க வாறே
வேய்கள் உடைந்து முத்தை ஈன்றபடி

நெடு வேய்கள்
திரு உலகு அளந்து அருளின படிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறதாய்த்து வேய்களின் ஒக்கம் –

உந்த உந்தி –
பெண்ணையானது ப்ரீதி பிரகர்ஷத்தாலே முத்தை கொடு சென்று வயல்களிலே தள்ள
கர்ஷகர் தங்கள் பயிர்களுக்கு களைகள் என்று தள்ள –
அவர்களால் நோக்க ஒண்ணாதபடி தள்ளி வயல்கள் எங்கும்
பரந்தது ஆய்த்து முத்து –
விளைவது பொன்னாய் முத்து களையாம் படி இறே தேசத்தின் போக்யதை –
பொன் படு குட்டம் இறே
பொன்னானாய் -என்கிற வஸ்துவை விளைக்கும் தேசம் போலே காணும்

பொய்கை வேலி-
இப்படிப் பட்ட வயல்களையும் தடாகங்களையும் சுற்றிலே உடைத்தாய் இருக்காய் –
நதீஸ் தடா காநி ச பூரயித்வா -என்கிறபடியே
வர்ஷம் நிறைக்கை அன்றிக்கே ஆறு நிறைக்கக் கடவதான பொய்கைகள் இறே –

பூம் கோவலூர் –
அவன் தன பாடு போக வேண்டாதபடி
தேசம் தானே போக்யமாம் இருக்கிறபடி –

தொழுதும் போது நெஞ்சே –
நெஞ்சே அனுபவிக்கப் போராய் –
தொழுவோம் -என்னும் அளவும் அமைந்து இருக்க
தொழுவோம் போது -என்றது
ஆற்றின் உடைய ஆதரத்தையும் ஊரின் போக்யதையும் சொல்லக் கேட்ட போதே
திரு உள்ளம் கட்டணம் கட்டி எடுக்க வேண்டும்படி தரைப் பட்டுக் கிடந்தது –

அன்றியே
தன் தாள் பாடி -என்று
திருவடிகளைப் பாடுகையாலே
திருவடிகளின் போக்யதையும் மிடற்று ஓசையும் வருத்தி திரு உள்ளம் தளர்ந்த படி ஆகவுமாம் –
கையைக் கொடுத்து போராய் என்கிறார் –

தொழுதும் –
நம இத்யே வாதிந  -என்றார் கீழ்
இதில் –பத்தாஞ்சலி புடா -என்கிறார்
இரண்டும் முக்தர் உடைய அனுபவம் இறே –

(முக்தானாம் லக்ஷணம்- நித்ய அஞ்சலி ஸ்புட ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -சாந்தி பர்வம்)

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–5 ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 14, 2013

ஜகத் காரண பூதனாய்-
ஜகத் சரீரியாய் இருக்கிற படியை
அனுசந்தித்தார் –

அநந்தரம்
நாராயண சப்தார்த்தத்தை
நாராயண அனுவாகம் ஆகிற ஓலைப் புறத்தே
கேட்டுப் போகாதே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ வாமனனாய் அவதரித்து திரு உலகு அளந்த படியை
அனுபவிக்கிறார் —

(நவவித சம்பந்தங்களையுமே உலகு அளந்த வ்ருத்தாந்தம் காட்டுமே -சேஷ சேஷித்வ சம்பந்தம் இறே – நாராயண சப்தார்த்தம் ஆகிறது –
ஜகத் காரணத்வத்தால் -ஈஸ்வரனோடு இவ் வாத்மாவுக்கு உள்ள சம்பந்தத்தை இறே சொல்லுகிறது – –

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி

திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.

நவ வித சம்பந்தங்களையும் திருமந்திரம் சொல்லுமே -தாரக தார்ய பாவம் நாராயண சப்தார்த்தம் காட்டுமே –
மந்திரத்தால் வாழுதியேல் -திரு அஷ்டாஷர மகா மந்த்ரத்தை ஸ்மரித்தார்
அதில் நாராயண நாம பொருளான வியாபகத்தை திரி விக்கிரம வியாபாரத்திலே இட்டு அனுபவிக்கிற பாசுரம் இது)

காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -என்று
சர்வ லோகமும் இவ் வர்தத்தைக் கண்ணாலே காணும்படி இறே -திரு உலகு அளந்து அருளினது –
ஆகையாலே -நாராயண சப்தார்த்தமான -திரிவிக்கிரம அபதானத்தை அனுபவிக்கிறார் –

(காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-)

யஞ்ஞ வாடத்தே சென்றபடியையும் –
அர்த்தித்த படியையும் சொல்லாதே –
எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த இவ் வம்சத்தைச் சொல்லுகையாலே –
சேஷ சேஷித்வ பாவ சம்பந்தத்தை அனுபவிக்கிறார் என்று
தோற்றுகிறது இறே –

வாமன அவதாரத்தால் சீலம் காட்டி
திரு விக்கிரம அவதானத்தாலே சம்பந்தம் உணர்த்தி அருளினானே

வாமனன் -உபாயம்
திரிவிக்ரமன்-உபேயம் –
ஆழ்வார்கள் ஈடுபாடும் அத்தாலே

————————————————————————-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே

பதவுரை

ஒரு கால்–ஒரு திருவடியானது
ஒண் மிதியில்–அழகாக ஓரடியிட்ட மாத்திரத்தில்
புனல் உருவி நிற்ப–ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச் சென்று
(அப்புறம் போக இடம் பெறாமையாலே) நிற்க,
ஒரு காலும்–மற்றொரு திருவடி
காமரு சீர் அவுணன்–நல்ல பாக்யசாலியான மஹாபலி யானவன்
உள்ளத்து எண் மதியும் கடந்து–தன்னெஞ்சிலே நினைத்திருந்த நினைவைக் கடந்து
அண்டம் மீது போகி எழுந்து–அண்ட பித்திக்கு மப்பால் செல்லக் கிளம்பி
இரு விசும்பின் ஊடு போய்–பெரிய ஆகாசத்தையும் ஊடுருவிச் சென்று
கதிரவனும் –ஸூரிய மண்டலத்தையும்–
மேலே தண் மதியும்–அதற்கும் மேற்பட்ட குளிர்ந்த சந்திர மண்டலத்தையும்
தவிர ஓடி–கடந்து சென்று
தாரகையின் புறம் தடவி–(அதற்கும் மேற்பட்ட) நக்ஷத்ர மண்டலத்தையும் கடந்து
அப்பால் மிக்கு–அவ்வருகே பிரம லோகத் தளவும் வியாபித்து நிற்க
மண் முழுதும்–பூலோகம் முதலான பதினான்கு லோகங்களையும்
அகப்படுத்து நின்ற எந்தை-ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தை–எம்பெருமானுடைய
மலர் புரையும் திரு அடியே–தாமரை மலரையொத்த திருவடிகளையே
வணங்கினேன்–வணங்கப் பெற்றேன்.

ஒரு திருவடி ஓர் அடி இட்ட மாத்திரத்தில் ஆவரண ஜலத்து அளவும் ஊடுருவிச் சென்று
அப்புறம் போக இடம் பெறாமையாலே -அங்கே நிற்க
ஒரு திருவடி நல்ல உதார குண ஸ்வபாவத்தை யுடையனான மஹா பலி தன் மனஸ்ஸிலே நினைக்கும் நினைவைக் கடந்து
அண்டபித்திக்கும் அங்கு அவ்வருகே போகைக்காக
கிளம்பி விசாலமான ஆகாசத்தை ஊடுருவிச் சென்று
மேலே இருக்கிற ஸூர்ய மண்டலத்தையும்
அதற்கும் மேலே இருக்கிற குளிர்ந்த சந்த்ர மண்டலத்தையும் கடந்து அதற்கும் மேலே ப்ரஹ்ம லோகத்து அளவும் வியாபித்து
பூ லோகம் முதலான பதினாலு லோகங்களையும் அளந்து கொண்டு க்ருதக்ருத்யனாய் நின்ற
எனக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளை ஆஸ்ரயித்தேன் –

——————————————————————-

ஒரு திருவடியாலே பூமியை அடங்க வளர்ந்தான் –
ஒரு திருவடியாலே ஊர்த்த்வ லோகங்கள் அடங்க வளர்ந்தான் –

ஒண் மிதியில் –
சர்வ ஆதாரமான வஸ்து -சேதனர் தலையில் திருவடிகளை வைத்தால் லோகம் தரிக்க வற்றோ –
கம்சன் திருவடிகள் படும் காட்டில் நக்கரைந்து கிடந்தது இலனோ வென்னில் –
அவை தானே யாய்த்து தரிக்கைக்கு ஹேதுவும்-
தாரகமான பதார்த்தம் தார்யமானாலும் தாரகத்வம் நழுவாது இறே –
திருவடிகளுக்கு தான் தாரகன் ஆனவோபாதி
இவர்கள் தலைக்கும் தாரகன் தானே இறே –

(அவன் ஸ்வரூபமே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் குணங்களுக்கும் ஆஸ்ரயம் தாரகம்)

தார்யம் ஆனது தாரகம் ஆக மாட்டாது –
தாரகம் ஆனது தார்யம் ஆக மாட்டாது –
சரீரம் ஆத்மாவுக்கு அதிஷ்டானமாய் இருந்தாலும் சரீரம் தாரகம் ஆகிறது அன்று –
ஆத்மா தார்யம் ஆகிறது அன்று இறே –
ஆத்மா தாரகம் சரீரம் தார்யம் என்னும் இடம் சரீர ஆத்மா லஷணம்
சொல்லுகிற இடத்தே சொல்லிற்று இறே –

சரீர ஆத்ம லஷணம் ஆவது
யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே –
நியந்தும் தாரயிதும் சக்யம்-தத் சேஷை தைக ஸ்வரூப
பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

புனலுருவி –
பூமி அளவாதல்
சப்த சமுத்ரங்கள் அளவாதல்
சப்த த்வீபங்கள் அளவாதல் –
சக்ரவாள கிரி அளவாதல் -(இங்கு தான் ஜாம்பவான் பறை கொட்டி ஆர்ப்பரித்தான் )
மகா ஜலத்து அளவதால் –
அண்டகடாஹத்து அளவாதல் -நிமுருகை அன்றியே –
ஆவரண ஜலத்து அளவும் செல்ல திருவடிகளை நிமிர்த்தபடி –

அண்ட கடாஹத்துக்கு உள்ளே அன்றோ ரஷ்ய வர்க்கம் –
அவ்வருகு போக வேண்டுவான் -என் என்னில்
ரஷ்யத்தின் அளவு அல்ல ரஷகன் உடைய பாரிப்பு -என்கை

அதனில் பெரிய அவா -என்று
இவருடைய அவாவைப் போலே காணும் அவனுடைய அவாவும்
இவருடைய ப்ரேமம் செய்தது செய்ய மாட்டாதோ அவனுடைய வாத்சல்யம் –

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-)

திருவடிகள் அண்ட கடாஹத்தையும் ஊடுருவி ஆவரண ஜலத்து அளவும் சென்றால்
அண்டகடாஹம் போகாதோ என்னில் -அது வேண்டுவது இல்லை இறே –

ஸூஷ்ம ஸ்தூலத்தை வியாபிக்கும் போது -ஆகாசம் அண்ட கடாஹத்தை வியாபியா நின்றது –
அதில் காட்டில் ஸூஷ்ம ரூபமான மூலப் பிரக்ருதியிலும்
ஸூஷ்மமாய் இறே திவ்ய மங்கள விக்ரகம் இருப்பது –

மிதியில் –
மதிய மூர்த்த்நாம் அலங்க்ரிஷ்யதே -என்றும்
படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும் –
திருவடிகளை சிரோ பூஷணமாகச் சொல்லுவது
திருவடிகளின் வைலஷண்யத்தையும் அறிந்து
தங்களுக்கும் அதிலே ஆதரம் உண்டானால் இறே –

தேகாத்ம அபிமானிகள் ஆகையாலே வெற்றுக் கால் தங்கள் தலையைத் துகைத்ததாக நினைத்து இருக்கும் இத்தனை இறே –
ஆகையால் அவர்கள் அபிப்ராயத்தால் அருளிச் செய்கிறார் –

(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 31 –

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.)

(குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-)

(ஒருவருடைய கால் நம் தலையிலே பட்டதே“ என்று வெறுத்திருந்ததத்தனை யொழிய
”கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே” என்றாற் போலே-
அலங்க்ருதமாகவும் அணியாகவும் உகந்து கொண்டார்களில்லையே;
அன்னவரது கருத்தாலே கால் என்றது.)

ஒண் மிதியில் –
நிலா தென்றல் சஞ்சரித்தால் போலே அனுகூலமாக திருவடிகளை வைத்த படி –
அல்லாத போது –திரு வாணை -என்று ஆணை இடுவர்கள் இறே –

அதவா
மேல் ஒரு காலத்தில் ஆபி முக்கியம் பிறந்தால்
தங்கள் பூர்வ வ்ருத்தத்தையும்
ஈஸ்வர வைலஷண்யத்தையும் பார்த்து இறாயாதே
வழக்கு பேசிப் பற்றலாம்படி மிதித்த மிதி யாகையாலே –
ஒண் மிதி -என்கிறது -என்னவுமாம் –
நான் விமுகன் ஆனவன்று என் தலையிலே இருந்த திருவடிகளை
ஆபிமுக்யம் பண்ணின இன்று பற்றக் குறை என் என்னலாம் இறே
லோக விக்ராந்த சரணவ் -என்றால்
ஈஸ்வரனுக்கு மறு மற்றம் இல்லை போல் காணும்-

(“பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥

“ஸர்வத⁴ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய * ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் ।
லோகவிக்ராந்த சரணௌ * ஶரணம் தேঽவ்ரஜம் விபோ⁴!” ॥)

ஒரு கால் நிற்ப –
ஒரு திருவடிகள் நிற்ப
திருவடியே வணங்கினேனே -என்னா நின்றார் மேல்
கீழ் –திருவடி என் தலை மேலேவே -என்றார்-
ஆயிருக்க திருவடிகள் என்னாதே கால் என்கிறது –
சம்சாரிகள் அபிப்ராயத்தாலே
ஒருவன் கால் தம் தலையில் இருந்தது என்று நினைத்ததற்கும் அது ஒழிய
வகுத்ததுமாய் ஸூரி போக்யமுமான திருவடிகள் இறே
நம் தலையில் இருந்தது என்ற முறை அறியார்கள் இறே –

நிற்ப –
திருவடிகள் பூமியை அளக்க என்று உத்யோகித்த உத்யோகத்தே
குசை தாங்கின அருமை எல்லாம் தோற்றுகிறது ஆய்த்து –
இதனுடைய உத்யோகத்தே குசை தாங்கினான் என்று இறே அவன் தனக்கு ஏற்றம்

குசை தாங்குகை -வேகத்தில் ஓடுகிற குதிரையை கடிவாளம் கொண்டு வெட்டி நிறுத்துமா போலே நிறுத்துகை –

ஒரு காலும் –
பூமியை அளந்த திருவடிகளை அனுபவித்தார் கீழ் –
இத்தால் ஊர்த்த்வ லோகங்களை அளந்த திருவடிகளை அனுபவிக்கிறார் —

ஒரு காலும் –
மற்றத் திருவடிகளும்
மற்றக் காலும் என்னாதே –ஒரு காலும் -என்கையாலே
இது ஓன்று இருந்தபடி என் என்கிறார் –
அந்தத் திருவடிகளை அனுபவிக்கிற போது இதுக்கு மேற்பட்ட போக்ய வஸ்து இல்லை யாகாதே என்று இருந்தார் –
இந்தத் திருவடிகளைக் கண்ட வாறே இதுக்கு மேற்பட்ட போகய வஸ்து இல்லை -என்கிறார்-

காமருசீர் அவுணன் உள்ளத்து
மகா பலி யினுடைய மநோரத ரூபமான ஜ்ஞானத்தை அதிக்ரமித்து —
காமரு சீர் அவுணன் –
ஸ்ப்ரஹணீய ஸ்வபாவனான -மகா பலி –
ஜ்ஞாதாக்கள் அடைய இவனை அஹங்கார க்ரஸ்தன் -பகவத் விபூதி அபஹாரி -என்று –
நிந்தியா நிற்க இவர் மகா பாக்யவான் -என்கிறார் –
அதற்கு ஹேது என் என்னில்

பிற்பாடரான நம்மைப் போல் அன்றியே –
ஸ்ரீ வாமனனுடைய வடிவு அழகையையும் சீலத்தையும் கண்ணால் காணப் பெற்றவன் அன்றோ

இவனோபாதி பாக்யவான்கள் உண்டோ -என்கிறார் –
நானும் -அடியேன் -என்று இருக்கிறதை விட்டு –
பகவத் விபூதியை அபஹரித்து
ஔதார்யத்தை ஏறிட்டுக் கொண்டு
யஞ்ஞத்தில் இழியப் பெற்றிலேனே -என்கிறார் –
காமருதல் -விரும்புதல்-

(“ஐயோ! நான் காளிய நாகமாகப் பிறவாதொழிந்தேனே; பிறந்திருந்தேனாகில் கண்ணபிரானுடைய
திருவடியைச் சென்னி மேற் கொண்டிருப்பேனே“ என்று ஸுந்தரபாஹுஸ்தவத்தில் ஆழ்வான் அருளிச் செய்ததை நினைப்பது.)

எண் மதியும் கடந்து –
மூவடி என்றதும் (கொள்வன் நான் மாவலி மூவடி தா )-அத்தை ஒழிந்த இடம் நம்மதன்றோ -என்று இருந்தான் -(எண் மதியும்-நினைவு )
பூமியை அடங்க அளந்தவாறே -ஊர்த்வ லோகங்கள் உண்டு இறே என்று இருந்தான் –
அந்தரிஷத்தை அளந்தவாறே மேல் உள்ளத்து எல்லாம் இழந்தோம் என்று நிவர்தன் ஆனான் –
ஆகையாலே –கடந்து -என்கிறார் –

அண்ட மீது போகி –
ஒரு திருவடிகளே அண்ட பித்திக்கும் அவ் வருகே போய்-
அளந்த க்ரமத்திலெ சொல்லாதே -பிரதமத்திலே –அண்ட மீது போகி -என்பான் என் என்னில் –
ஸ்ரீ வாமனன் உடைய விசயத்திலே தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே
அளக்கும் பிரதேசத்துக்கு கொண்டைக் கால் நாட்டுகிறார் –
ஜிதம் பகவதா ஜகத் -(ஹரி வம்சம் )என்று ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர் அவனுடைய விசயத்திலே
தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே சக்ரவாள கிரியைச் சூழ பறை அடித்துக் கொண்டு திரிந்தால் போலே -(32 தடவை சுற்றி பறை சாற்றினாரே )

மீது போகி
என்றது மீது போகைகாக என்று கொண்டு
அர்த்தத்தோடு சேர சப்தத்தை நியமித்துச் சொல்லப் போக கடவது –
திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றத்தை
வணங்க -என்று அர்த்தத்தை நியமித்துச் சொல்லக் கடவது இறே –
அப் பஷத்திலும் முற்பட சொல்லுகைக்கு ஹேது கொண்டைக்கால் நாட்டுகிறார் -என்கிற இதுவாம் இத்தனை –

(நாளும் நின்று அடும் நம் பழைமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே –1-3-8-)

(காவலில் புலனை வைத்து -திருநாம சங்கீர்தன மஹிமை ன்சொல்ல காவலில் இல்லாமல் புலனை வைத்து
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய் -உறங்கேல் என்று பிரித்தே பிரகரணத்துக்குச் சேரும்
அதே போல் இங்கும் மேல் போகும் இடங்களை சொல்வதால் இங்கும் போவதற்காக என்றே கொள்ள வேண்டும்)

எழுந்து இரு விசும்பினூடு போய் -என்று அந்வயம் –
எழுந்து
கையில் நீர் விழுந்த சமனந்தரம்
மகா பலியினுடைய யஞ்ஞவாடத்தில் நின்றும் கிளம்பி -(உவந்த உள்ளத்தனாய் -மகிழ்ச்சி சிலிர்க்க வைக்க -அத்தாலே உயர்ந்தான் அன்றோ )
இரு விசும்பு -பெரிய ஆகாசம் –

பூமியைப் பற்ற பெரிதாய் இருக்கையாலும்
அவனுடைய வளர்த்தியில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலும்
அந்தரிஷத்தை –இரு விசும்பு -என்கிறார் –

ஊடு போய் –
பூமிக்கு மேலே -ஸ்வர்க்கத்து கீழே நூறாயிரக் காதமாறு ஒக்கத்தை உடைத்தான –
அந்தரிஷம் இத்தனையும் விம்மும்படியாக திருவடிகளை நிமிர்த்த படி –
அந்தரிஷ ஸ்ருஷ்டி சபலமாய்த்து -என்கிறார் –
திருவடிகள் வ்யாபியாத போது பாழ் போலே காணும் -(குட திசை முடியை வைத்து -திசைகள் ஸ்ருஷ்டித்த பயன் பெற்றதே )

மேலைத் –
அந்தரிஷத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்வர்க்கத்து கீழ் எல்லையாய்
யாய்த்து ஆதித்ய பதம் இருப்பது –
அதற்கு மேலே நூறு ஆயிர  காதமாறு சந்திர பதம்

ஆனால் ஆதித்ய பதத்தைச் சொல்லி சந்திர பதத்தை சொல்லாது ஒழிவான் என் என்னில் –
அஹங்கார க்ர்ஸ்தராய் -பகவத் விமுகராய் இருப்பவர்கள் தலையிலே
அத்யந்த ஸூகுமாரமான திருவடிகளை வைக்கையாலே
இவர் சிசுரோபசாரம் பண்ணுகிறார் –
அது தோற்ற விறே –தண் மதி- என்கிறார் –
வெங்கதிரோன் -என்றிலரே –
வெறும் கதிரவன் – இறே அங்கு –
மேலைக் கதிரவனும் கீழைத் தண் மதியும் –
மேல் -என்றது –கீழையும் காட்டும் இறே –

தவிர வோடித்
அதுக்கும் மேலே போய் –
ஓடி என்று –
திருவடிகளை அமைக்க வேண்டும்படியான த்வரை இருக்கிறபடி –
தாய் நாடு கன்றே போலே -என்று
சேஷ பூதன் சேஷியை கிட்டுகைக்கு உண்டான த்வரையோ பாதி போரும் இறே –
சேஷிக்கும் சேஷ பூதனை லபிக்கைக்கு உண்டான த்வரையும் –
எல்லார்க்கும் தம் தாம் அபிமத சித்தியிலே த்வரை உண்டாய் இருக்கும் இறே –

(தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து—முதல் திருவந்தாதி -30-)

தாரகையின் புறம் தடவி –
நஷத்ர பதத்தையும் வியாபித்து -அதுக்கும் மேலே போய்
சந்திர பதத்துக்கு மேலே நூறாயிரக் காதமாறு உண்டு இறே -நஷத்ர பதம் –
நஷத்ர பதத்துக்கு மேல் எல்லை -சிம்சுமார பிரஜாபதி- இறே –
க்ரஹங்களோபாதி நஷத்ரங்களிலே ஒருவன் இறே அவனும் –
பன்னிரண்டு நூறாயிரக் காதமாறு உண்டு இறே –

தடவி –
கெடுத்துத் தேடுவாரைப் போலே -ரஷகனுக்கு ரஷ்ய வர்க்கம் தேட்டமாய் இருக்கிறபடி –
இப்படித் தடவி திரிகிற இடத்திலும் அகப்படாதே –
கடந்து -என்கிறார் –
புடை தான் பெரிதே புவி -என்கிறபடியே
திரிவிக்கிரம அபதானத்திலும் அகப்படாதே கிடப்பதொரு புடை உண்டாவதே –

(என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-பெரிய திருவந்தாதி -74-)

தடவி –
அனுகூலமாக திருவடிகளை வைக்கையாலே ஸூக ஸ்பரசமாய் இருந்தபடி -என்னவுமாம்-

அப்பால் மிக்கு –
ப்ரஹ்ம லோகம் அவதியாக வியாபித்து –
மகா பலி அபஹரித்தது த்ரை லோக்யம் அன்றோ –
மேல் உள்ள லோகங்களை அளக்க வேண்டுவான் என் என்னில் –

அந்ய சேஷத்வத்தால் த்ரை லோக்யமும் நசித்தவோபாதி
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தாலே மேல் உள்ள லோகங்களும் நசித்துக் கிடந்ததாய் ஆய்த்து –
ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவர்கள் ஆகையால்
அந்ய சேஷத்வத்தால் வரும் அநர்த்தம் போல் அன்றே
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் அநர்த்தம் –
சேஷத்வத்தை இசைந்தான் இறே இவன் –

மண் முழுதும் அகப்படுத்து –
சதுர்தச புவனத்தையும் அளந்து கொண்டு –
மண் -என்று பூமியைச் சொல்லி
முழுதும் -என்கையாலே ஊர்த்வ லோகங்களையும் நினைக்கிறார் –

அங்கன் இன்றிக்கே
மண் -என்று ஸ்தலமாய்
மேல் உண்டான ஸ்தலங்களைச் சொல்லுகிறது –
அளந்து -என்னாதே –அகப்படுத்து -என்கையாலே –
இவன் மேல் விழுக்காடும் அவர்கள் இறாய்ப்பும் -தோற்றுகிறது –

நின்ற –
க்ர்தக்ருத்யனாய் நின்ற
சேஷ பூதன் சேஷியை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் போலே காணும்
சேஷியும் சேஷ பூதனை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் ஆனபடி -(க்ருத க்ருத்யா ததோ ராம விஜ்வர பிரமுமோத ஹா )

வெந்தை –
ஸ்ரீ வாமனன் உடைய வடிவழகையும் சீலத்தையும் கண்டால்
ராஜ்யத்தை கால் கடைக் கொண்டு மார்பை பிளக்க எழுத்து வாங்கிக் கொடுக்க பிராப்தமாக இருக்க
1-ராஜ்யத்தை கொண்டு போனான் இந்த்ரன் –
2-மகாபலி தன்னை வைத்து ராஜ்யத்தைக் கொடுத்தான் –
3-நான் என்னைக் கொடுத்தேன் -என்கிறார் –

மலர் புரையும் திருவடியே வணங்கினேனே –
நிரதிசய திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் –
கீழே –தளிர் புரையும் திருவடி -என்றார் –
இங்கே –மலர் புரையும் திருவடி -என்கிறார் –

இதுக்கு ஹேது என் என்னில்
ஆழ்வார் உடைய விஸ்லேஷத்தால் வாடினவன் அவருடைய தலையிலே திருவடிகளை வைக்கையாலே
தளிறும் முறியும் ஆன படியைச் சொல்லிற்று -அங்கு
இங்கு -போக்தாக்களாய் அனுபவிக்க இழிந்த வாறே – போக்யமாய் இருக்கிற படியைச் சொல்கிறது –

(தளிர் புரையும் திருவடி-மலர் புரையும் திருவடி-ஒப்பற்ற இனிய உபாய உபேய -இரண்டுக்கும் இணை அடிகள்

திருக்கமல -பாதம் -பொன் தாமரை அடி போற்றும் பொருள் -பேசிற்றே பேசும் ஏக கண்டர்
ஸூர்யன் கண்டு தாமரை மலரும் -அடியார்களைப் பெற்று தாமரை அடிகள் மலரும் அன்றோ )

மலர் புரையும் –
ஆஸ்ரிதர் சந்நிதியிலே அலரும் தாமரை இறே இது –

திருவடி –
அனுபவிக்க இழியும் துறையும் திருவடிகள் இறே

திருவடியே
என்கிற அவதாரணத்தாலே
அவயவாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது –
மேன்மையும் நீர்மையும் வடிவழகும் குறைவற்ற விஷயம் இறே –

1-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே –
மேன்மையில் குறை இல்லை –

2-தன் உடைமையை லபிக்கைக்கு தான் அர்த்தியாய் செல்லுகையாலே
நீர்மைக்கு குறை இல்லை –

3-துஷ்ப்ரக்ருதியான மகா பலியையும் அகப்பட எழுதிக் கொள்ளுகையாலே
வடிவழகில் குறை இல்லை

ஆகையால் புறம்பு போக வேண்டா விறே –

வணங்கினேன் –
அனுபவிக்கப் பெற்றேன் –
நித்ய பத்தாஞ்சலி -ஸ்புட ஸித்தாந்த -நம இத்யேவ வாதின–ஹ்ருஷ்டா சாந்தி பர்வம் –
ஸ்வேத தீப வாசிகள் முக்கரணங்களால் அனுபவம் -என்று முக்த போக்யத்தை சொல்லக் கடவது இறே –

இவருக்கு ஆஸ்ரயணீயமும் திருவடிகளே
அனுபாவ்யமும் -திருவடிகளே –

உலகம் அளந்த பொன்னடியை அடைந்து உய்ந்தேன் -என்று இறே ஆஸ்ரயண வேளையிலும் அருளிச் செய்தது –

(துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-அடைந்து உய்ந்தேன் -உபாய உபேயம் )

விமுகனான மகா பலிக்கும் ருசியைப் பிறப்பிக்கும் சௌந்தர்யத்தை
உடையவனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
தன் உடைமையை லபிக்கைக்காக தான் அர்த்தியாக செல்லும் சீலவானை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
அதீந்த்ரியமான விக்ரகத்தை துஷ் பிரக்ருதிகள் கண்ணுக்கும் அகப்பட விஷயமாக்கும் ஸூலபனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
சதுர்தச புவனத்தையும் அளந்த சர்வ ஸ்மாத் பரனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –

1-சர்வ ஸ்மாத் பரனாய் –
2-ஸீலவானய்
3-ஸூலபனாய்
4-ருசி ஜனகனாய் -இருக்குமவன் இறே -ஆஸ்ரயணீயவானும் போக்யவானும் ஆவான் –

த்ரை விக்கிரம த்வ சரணாம் புஜ த்வயம் மதிய மூர்த்தானம் அலங்க்ரிஷ்யதி –என்றார் ஆளவந்தார் –
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ -என்றார் உடையவர்

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 31

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை

(ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் -பரத்வ- ஸுலப்ய ஸுசீல்ய -ஸுந்தர்ய -வாத்சல்ய –
பச்சை மா மலை போல் மேனி — –அச்யுதா -அமரர் ஏறே -ஆயர் தம் கொழுந்தே
மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்)

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–4- இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 14, 2013

அவதாரிகை –

(ஸ்வரூப ரூபம் குணம் காட்டி அனுபவிப்பித்தான் என்றார் மூன்றாலும்
கீழ் நீசனேன் நிறை ஒன்றும் இலேன் – பரகத ஸ்வீ காரத்துக்கு அர்ஹதை தனக்கே என்கிறார்)

முதல் மூன்று பாட்டில் திருமந்த்ரார்த்தங்கள் அனைத்துமே அருளிச் செய்தார்-திரு நெடும் தாண்டக ஸாஸ்த்ரம் அன்றோ இது –
ஓம்-நான் அடிமைப்பட்டவன் என்றும் தான் அடிமை கொள்ளுபவன் -என்றும் சேஷ சேஷி பாவம் -அநந்யார்ஹ சேஷத்வம்
இரண்டாம் பாட்டில் -நம -அது அநந்ய சரண்யத்வம் -நான் ஒருவனே ஸ்வாமி சேஷி என்றும்
மூன்றாம் பாட்டில்-நாராயணாய -போக்யத்வம் குறைவற்று இருக்கும் படியையும் -அநந்ய போக்யத்வம் – காட்டி அருளியதை அருளிச் செய்தார்

பத த்ரயம் -பிரமாணம் -ஓம்- நம – நாராயணாய –
பிரகார த்ரயம் -திருமேனி -ப்ரமேயம் -ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளே -வைத்த அஞ்சல் என்ற கை -கவித்த முடியும் முகமும் முறுவலும் –
ஆகார த்ரயம் –அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம்

அழகிய மணவாளன் ராஜன் -திரு மந்த்ர ராஜாவை வைத்தே ஆலி நாட்டு அரசரான இவரை அரச மரத்தின் அடியில் ஆழ்வார் ஆக்கி அருளினார்

(நெஞ்சுக்கு திருமந்திரத்தில் மூலம் அவனே ஜகத்காரண பூதன் ஜனகன் என்கிறார் இதில்

அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே)

கீழ் மூன்று பாட்டாலும் திருமந்த்ரார்தம் ஆய்த்து –
முதல் பாட்டில் –சேஷ சேஷித்வம் சாஷாத்க்ர்தம் ஆய்த்து
இரண்டாம் பாட்டில் –அந்ய சேஷத்வம் நிவர்த்தம் ஆய்த்து
மூன்றாம் பாட்டில் -போக்யதை குறைவற்றது

இனி அனுபவத்துக்கு சஹ காரிகளைத் தேடும் இத்தனை இறே –

அதில் –
நித்ய ஸூரிகள் தேச விப்ரக்ர்ஷ்டர் ஆகையாலும்
சம்சாரிகள் விஷய பிரவணர் ஆகையாலும் –
துணையாக மாட்டார்கள் –
இனி தமக்கு அவர்ஜநீயமாய் இருந்துள்ள திரு உள்ளம் இறே சஹகாரி யாவது –
ஆகையால் -நெஞ்சே -நாம் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பாராய் –
என்கிறார் –

கீழ்ச் சொன்ன விலஷண விக்ரஹ விசிஷ்டன் உடைய
ஜகத் காரண பிரயுக்தமான வைபவத்தை
ஸ்வரூப பிரகாசமான
திருமந்திர முகத்தாலே அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

இவர் தாம் திரு மந்திர முகத்தாலே அனுபவிக்கிறார் ஆகில்
அதுக்கு
உபயவிபூதி நாதத்வமும் சமஸ்த கல்யாண குணாத்மகத்வத்மமும் அன்றோ அர்த்தம் -என்னில்
அதுவும் பிரமாண ப்ராசுர்யத்தாலே காரணத்வத்திலே ஒதுங்கி இருக்கக் கடவது –

ஏகோஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந -(மஹா உபநிஷத்-ஸ்ருதி -அவன் ஒருவனே இருந்தான் )என்றும்
நராஜ்ஜாதானி தத்வானி-(நாராயண ஸ்ம்ருதி மஹா பாரதம் நாரதர் புண்டரீகருக்கு உபதேசம்-அவன் இடம் இருந்தே அனைத்தும் உருவான )என்றும்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா -(படைக்கப்பட்ட நீரை பிரளய ஜலத்தை இருப்பிடமாகக் கொண்டவன் )என்றும் இத்யாதிகளாலே
ஜகத் காரணத்வத்தை நாராயண சப்தார்த்தமாக சொல்லக் கடவது இறே –

(ஸ்ரீ விஷ்ணு சித்த விஜயம் விவரமாக ப்ரமாணங்களைக் காட்டுமே
ஒன்றும் தேவும் -திருவாய் மொழி

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூநவ:| தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருத:|| – மனுஸ்ம்ருதி 1.10, சாந்தி பர்வம் 328.25..)

அது தனக்கு கருத்து என் என்னில் -முறை அழிந்து கிடக்கிறது இத் தேசம் ஆகையாலே
பிரமாண அபேஷை உள்ளது இத் தேசத்துக்கு இறே –
தம் காணியைப் பிறர் ஆளும் போது இறே பிரமாணம் காட்ட வேண்டுவது –
ஆகையால் சொல்லுகிறது
ஆகையால் –நெஞ்சே ஜனகனை அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

—————————————————————————————————————————————–

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே

பதவுரை

இந்திரற்கும்–இந்திரனுக்கும்
பிரமற்கும்–ப்ரஹ்மாவுக்கும்
முதல்வன் தன்னை–காரண பூதனாய்
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம்–பெரிதானபூமி, காற்று, அக்நி, ஜலம், ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நியாமகனாய்
செம்திறத்த தமிழ் ஓசை ஆகி–செவ்விய தமிழ்ப் பிரபந்தங்களைப் பிரகாசித்தவனாய்
வடசொல் ஆகி–ஸம்ஸ்க்ருத வேதத்தையும் பிரகாசித்தவனாய்
திசை நான்கும் ஆய்–நான்கு திசைகளிலுமுள்ள எல்லாப் பொருள்களுக்கும் அந்தராத்மாவாய்
திங்கள் ஞாயிறு ஆகி–சந்திர ஸூரியர்கட்கும் நியாமகனாய்
அந்தரத்தில்–இப்படி ஸகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமிடத்தில்
தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை–தேவர்களுக்கும் அறியக் கூடாத ஸூத்த ஸ்வபாவனாய்
அந்தணர் மாடு–பிரமாணர்கட்குச் செல்வமான வேதத்தினுடைய
அந்தி–முடிவிலே
வைத்த–விளங்குகிற
மந்திரத்தை–பரம மந்த்ரமான ஸர்வேஸ்வரனை
மந்திரத்தால்–திரு மந்த்ரத்தாலே
மறவாது வாழுதி ஏல்–இடைவிடாது அநுபவிப்பாயாகில்
மட நெஞ்சமே–விதேயமான நெஞ்சே!
என்றும்–இவ் வாத்மா உள்ளவளவும்
வாழலாம்–உஜ்ஜீவிக்கப் பெறலாம்.

இந்திரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் காரண பூதனாய்
பெரிதான பூமி காற்று அக்னி ஜலம் ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்ம தயா வியாபித்து நிற்குமவனாய்
தன்னை உள்ளபடியே காட்டும் செவ்வையை யுடைய திராவிட வேதமான ப்ரபந்தங்களுமாய் சமஸ்க்ருத வேதங்களுமாய்
நான்கு திக்குகளிலும் உள்ள பதார்த்தங்களும் அந்தர்யாத்மாவாய்
சந்த்ர ஸூர்யர்களுக்கும் அந்தர்யாத்மாவாய்
இப்படி அந்தர்யாத்மதயா வியாபித்து நிற்கும் இடத்தில் தேவாதி ஸகல பதார்த்தங்களும் அறியக்கூடாத ஸூத்த ஸ்வபவனாய்
ப்ராஹ்மணர்களுக்கு தனமான வேதத்தினுடைய முடிவிலே பிரகாசிக்கிற ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரனை
திரு மந்திரத்தால் இடைவிடாமல் அனுபவிப்பாயே ஆகில்
எனக்கு கீழ்ப் படிந்து நடக்கும் நெஞ்சே
இவ்வாத்ம உள்ளதனையும் நித்ய ஸூரிகள் நடுவே இருந்து அனுபவிக்கப் பெறுவாய் –

———————————————————————

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
மூ வுலகும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்கிற இடத்தில்
சப்தத்தை நெருக்கி இறே பொருள் சொல்வது –
அதுவே தமக்கு கருத்து என்னும் இடம் தோற்ற அத்தை இங்கே வ்யக்தமாக்குகிறார்
ஏகனே நிர்வாஹகன் என்று கீழ்ச் சொல்லிற்று என்கிறார் –

சம் ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞனான இந்த்ரனுக்கும்
ஈஸ்வரன் என்று சங்கிக்கைக்கு யோக்யமான ப்ரஹ்மனுக்கும்
உத்பாதகன் ஆனவனை –
சங்க நீயகனான ப்ரஹ்மாவை முற்படச் சொல்லி பின்பு இவனைச் சொல்ல பிராப்தமாய் இருக்க –
இவனை முற்படச் சொல்லிற்று
இவனோபாதி அவனும் ஸ்ர்ஜயக் கோடி கடிதன் என்னும் இடம் தோற்றுகைக்காக –

ஆனால் ருத்ரனும் ஈஸ்வரனாக சங்க நீயனாய் அன்றோ இருப்பது
அவனைச் சொல்லாது ஒழிவான் -என் என்னில்
ப்ரஹ்மணச் சாபி சம்பூதஸ் சிவா இத்ய வதார்யதாம் -என்றும்
இத்யாதி பிரமாணங்களாலே அவனுக்கு ப்ரஹ்ம புத்ரத்வம் பிரசித்தமாய் இருக்கையாலே
எல்லாரிலும் பிரதானனான ப்ரஹ்மாவையும் கீழான இந்த்ரனையும் சொன்ன போதே
ப்ரத்யாஹார ந்யாயத்தாலே மத்யே அவனையும் சொல்லிற்றாகக் கடவது –

(ப்ரத்யாஹாரம் -அல் -அகாரத்தையும் லகாரத்தையும் எடுக்கவே
நடுவுள்ள அக்ஷரங்கள் தன்னடையே ஸித்திக்குமே
ஸப்த பிரகர்யா நியாயம்
அப்படியே ஆதி அந்தங்களைச் சொல்லவே நடுவுள்ளதும் ஸித்திக்கும் )

(எம்பெருமான் கருடனுக்கு அருளிச் செய்தது -நான்கு வித ஸ்ருஷ்டிகளைச் செய்தேன் –
முதலில் உந்தித் தாமரை -அதில் இருந்து -நான்முகன் -அவன் -ருத்ரன் -ஸ்கந்தன்)

இந்த்ரனுக்கும் பிரமனுக்கும் என்னாதே ரேபாந்தமாகச் சொல்லிற்று
பூஜ்யதா புத்தியால் அன்று -ஷேபிக்கிறார் –
ஈஸ்வரனே ஸ்ர்ஜயனாய் இருக்கச் செய்தே கிடீர்
த்ரிலோக்யாத்யஷன் -நான் -என்று இருக்கிறதும்
சதுர்தச புவனமும் என்னாலே ஸ்ர்ஜ்யம் -இத்தனைக்கும் நிர்வாஹகன் நான் என்று இருக்கையும்
கும்பிட்டுக் கொள்ளுகிறதும் –

முதல்வன் –
தனக்கு உத்பாதகன் இன்றியே இருக்கிறவன் –

தன்னை –
வ்யஷ்டி சிருஷ்டிக்குக் காரணமான தன்னை -என்னுதல்

இரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்-
கீழ் வ்யஷ்டி சிருஷ்டியைச் சொல்லிற்று
இத்தால் –சமஷ்டி சிருஷ்டியைச் சொல்லுகிறது –

முற்பட வ்யஷ்டி சிருஷ்டியைச் சொல்லி பின்பு சமஷ்டி சிருஷ்டியைச் சொல்லுகிறது
ஈஸ்வர சங்கை உள்ளது இவர்கள் பக்கலிலே யாகையாலே –

நாரங்களுக்கு ஈஸ்வரத்வ சங்கை இல்லை இறே –
பூதங்களை வ்யய க்ரமத்திலே சொல்லுதல் -ஸ்ர்ஷ்டி க்ரமத்திலே சொல்லுதல் செய்யாதே
அக்ரமமாக சொல்லிற்று ஒரு நினைவைப் பற்ற –

சர்வாதரமுமாய் -அசஞ்சாரியுமாய் -அபாதகமுமாய்
இருக்கும் பெருமையைப் பற்ற
பூமியை முற்படச் சொன்னார் –

அல்லாத பூத த்ரயங்களும் சஞ்சாரியுமாய்-ரஷகத்வ பாதகத்வங்களும் பொதுவாய் இருக்கையாலே
அக்ரமத்திலே சொன்னார் –
இத்தனைக்கும் அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தை பற்ற
ஆகாசத்தைப் பின்பே அருளிச் செய்தார் –
இவை நினவு இல்லாத போது இதுக்கு பிரயோஜனம் இல்லை –

முதல்வன் தன்னை -என்றார் கீழ்
இங்கே –ஐந்தாய் -என்கிறார்
ஆகையால் இந்த சாமானாதி கரண்யத்துக்கு நிபந்தனம் –
உத்பாத்ய உத்பாதக பாவ சம்பந்தம் – என்க –

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
மேல் சாஸ்திர வஸ்யர் உடைய (திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,)ஸ்ருஷ்டியைச் சொல்லுகைக்காக
சாஸ்திர ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறார் –
திராவிட சம்ஸ்க்ருதங்களை ஸ்ருஷ்டித்து
ஆரியத்தைச் சொல்லி அதனுடைய சிதைவாகையாலே பின்னை தமிழைச் சொல்ல பிராப்தமாய் இருக்க –
இத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணிற்று
1-இது சர்வாதிகாரம் ஆகையாலும்
2-ஸ்வார்த்தத்தைச் செவ்வே பிரகாசிப்பிக்க கடவதாகையாலும்
3-தம் பாழி ( தம் துறை )யாகையாலும்
4-இன்னமும் அத்தோபாதி இதுவும் பிரமாணம் என்கைக்காக
முற்பட அருளிச் செய்கிறார்-

வேதங்கள் போலேயும் இதிஹாச புராணங்கள் போலேயும் அன்று இறே ஆழ்வார்கள் வார்த்தை –
அனுஷ்டாவின் வார்த்தை இறே இது –
(த்ரை குண்யா விஷயா வேதா )ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்ய தயா புகுரும் இத்தனை இறே இவர்கள் பக்கலில் –

செந் திறத்த தமிழ் ஓசை
திறம் –கூறுபாடும்-பிரகாரமும் –
ஸ்வாரதத்தை செவ்வியதாக பிரகாசிப்பிக்கையே கூறான -த்ரமிட சப்தம்
உப ப்ரஹ்மண அபேஷை அற்று இருக்கை-
வேதங்களுக்கு உப ப்ரஹ்மண அபேஷை உண்டு இறே –

(தமிழ் வேதமானது வடமொழி வேதம் போலல்லாமல் ஸர்வாதிகாரமாயிருத்தாலலும்,-அது தேவ பாஷை இது மனுஷ்ய பாஷை –
”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்ற
வேதாந்த தேசிகன் பாசுரப்படியே தெளிவாகப் பொருள்களை விளக்குதலாலும்,
ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவையும் சேராதவையுமாகிய கண்ட பொருள்களையும் பேசுகிற வடமொழி வேதம்
போலல்லாமல் ஸ்வரூபத்திற்குச் சேர்ந்தவற்றையே பேசுதலாலும்
இன்னமும் இப்படிப்பட்ட பலவகையான வைலக்ஷண்யத்தை உட்கொண்டு
ஸம்ஸ்க்ருத வேதத்திலும் தமிழ்வேதம் மிகச் சிறந்ததென்பது விளங்க முந்துறச் சொல்லிற்றென்க.

வடமொழியானது ‘முரட்டு ஸ்ம்ஸ்க்ருதம்‘ என்று பேர் பெற்றிருக்கும்;
இஃது அங்ஙனல்லாமல் ‘ஈரத் தமிழ்‘ என்றும் செவிக்கினிய செஞ்சொல்‘ என்றும்
சிறப்புறுதல் பற்றிச் ‘செந் திறத்த‘ என விசேஷிக்கப்பட்டது.)

ஓசை -என்று பாட்டுக்கும் த்வனிக்கும் பெயர்
லஷணையால் சப்தத்தை சொல்கிறது -மேல் வடசொல் -என்கையாலே

வடசொல் -என்று
சமஸ்க்ரதத்தை சொல்கிறது –

த்ரமிட பாஷை சஞ்சரிக்கும் தேசத்துக்கு வட எல்லையாக
திருமலையைச் சொல்லக் கடவர்கள் இறே –
அதற்கு வடக்கு எல்லாம் சமஸ்க்ர்தமே சஞ்சரிக்கும் இறே
அத்தேசத்தில் தமிழ் சஞ்சரிக்காது –
உபயமும் சஞ்சரிக்கும் ஏற்றம் உண்டு இறே இத் தேசத்துக்கு -(உபய வேதாந்தம் இங்கே தானே )

ஆகி -சாஸ்த்ரத்தை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது -பிரகாசிப்பிக்கை -(வெளியிட்டு அருளினான் ஆழ்வார்கள் மூலம் )

திசை நான்குமாய் –
நாலு திக்குகளிலும் உண்டான சகல பதார்த்ர்ங்களையும் ஸ்ருஷ்டித்து
மஞ்சா க்ரோசந்தி -இதிவத் -இத்தால் –
சாஸ்திர வஸ்யருடைய ஸ்ருஷ்டியைச் சொல்கிறது –

திங்கள் நாயிறாகி –
அக்னௌ பிராப்தா ஹூதிக்ஸ் சமயக் ஆதித்யம் உபதிஷ்டதே
ஆதித்யாஜ்ஜாய தேவ்ர்ஷ்டி -வ்ர்ஷ்டோரன்னம் ததா பிரஜா (மனு ஸ்ம்ருதி )-என்னக் கடவது இறே –

ஸ்ருஷ்டி சமாப்தி -தோற்ற –ஆகி -என்கிறார் -(ஆய் –கீழ் இங்கு ஆகி )
லோக உபகாரகர் ஆகையால் இவற்றையும் ஸ்ருஷ்டிக்கிறார் –

(ஆஹுதியைப் பெற்ற ஸூர்யன் மழை பெய்விக்க தான்யம் விளைந்து -சந்திரன் தாபம் ஆற்ற -இவ்வாறு உபகாரம் -)

ஆனால் தேவர்க்கும் -என்று இவர்களை விசேஷித்து எடுப்பான் என் என்னில்
ஜ்ஞான சக்திகளால் அதிகர் ஆனவர்களுக்கும் அறிய ஒண்ணாது என்கைக்காக அருளிச் செய்கிறார் –

கீழே நார -சப்தார்த்தம் சொல்லிற்று
மேலே அயன சப்தார்த்தம் சொல்கிறது –

அந்தரத்தில்
அந்தரனாம் இடத்தில் –
ஸ்ர்ஷ்டமான சகல பதர்த்தங்களிலும் வியாபித்து நிற்கும் இடத்தில் –
ப்ர்திவ்யா அந்தர -ஆத்மந அந்தர -என்று
அந்தர சப்தத்தாலே வ்யாப்தியைச் சொல்லக் கடவது இறே –

(ய ப்ர்த்வியம் திஷ்டன் ப்ர்திவ்யா அந்தர யம் ப்ர்திவி ந வேத யஸ்ய ப்ர்திவி சரீரம் ய ப்ர்த்வீம் அந்தரோ யமயதி ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-3-

யோ விஞ்ஞாநே திஷ்டன் விஞ்ஞானாத் அந்தர யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-22-

வரிசையாக -12-மந்த்ரங்கள் -பிருத்வி -தண்ணீர் -வாயு -அந்தரிக்ஷம் -திசைகள் -ஆகாசம் -தமஸ் –ஆத்மா -ஞானவானாக இருந்தாலும் அந்தோ
புகுந்து ஆட்சி செய்தாலும் யறியாமல் -அம்ர்தம் –நிருபாதிக–வியாப்யக தோஷம் தட்டாமல் –)

தேவர்க்கும் அறியலாகா –
ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை –
யமாத்மா ந வேத -என்று
யாவன் ஒருவனை ஆத்மா அறியான் –
அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி )
அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –

அந்தணனை –
ஸூத்தனை -(அம் தன்மை -அழகிய தன்மை -மனஸ் வாக் கர்மங்களால் ஸூத்தி )
ஆழ்வார்கள் எல்லாம் இச் சப்தத்தால் சுத்தியை சொல்லக் கடவதாய் இருப்பதொரு ஏற்றமும் உண்டே –
அறவனை ஆழிப்படை அந்தணனை -என்றார் இறே நம் ஆழ்வார் –

பிறவித் துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப் பெய்வார்,*
அறவனை* ஆழிப் படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.

கையும் திரு ஆழியுமாய் இருப்பன் ஒரு பிராமணன் இல்லை இறே –
கேவலனுக்கு ஸூபாஸ்ரயமாக அருளிச் செய்கிறார் ஆகையாலே அங்கன் அருளிச் செய்தது –
பகவத் பிராப்தி காமன் குண விசிஷ்டமாக உபாசிக்கக் கடவன் –
குணங்களே பிராப்யம் ஆகையாலே ஆத்ம பிராப்தி காமன் ஸூத்தி விசிஷ்டனாக உபாசிக்கக் கடவன் –
ஜரா மரண மோஷமே புருஷார்த்தம் ஆகையாலே –

ஆனால் -இவர்க்கு ஸூத்தி அபேஷிதமோ -என்னில்
கீழ் ஸ்ருஷ்டியைச் சொல்லி –
ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்கும் என்கையாலே
தத் கத தோஷ ரஸம் அஸ்ப்ருஷ்டம் என்கை-அபேஷிதம் –
அத்தைப் பற்றச் சொல்கிறது

(கைவல்யன் அந்தணன் என்று சாணிச் சாறு மாத்ரமாக கொள்வான் –
ஆனால் -தேவர்களுக்கும் அறியலாகா அந்தணன் -இங்கே சொல்வது பொருந்துமோ என்னில்
வியாப்ய கத தோஷம் தட்டாதவன் என்பதாலேயே -)

ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா -என்று வ்யாப்தியைச் சொன்ன பிரகாரங்களில்
தத்கத தோஷை ரஸம் அஸ்ப்ருஷ்டங்களையும் சொல்லக் கடவது இறே –
இது இறே இவர் திரு உள்ளத்தில் கிடக்கிறது –
பரம வைதிகள் இறே ஆழ்வார்கள் ஆகிறார்கள் –

அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை –
கீழ் உக்தமான இவ் வஸ்து
வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –

அந்தணர் மாடு –
பிராமணா நாம் தனம் வேத -என்கிறபடியே
ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் -இறே

(”மாடு பொன் பக்கஞ் செல்வம்” என்ற நிகண்டின்படி மாடு-செல்வம்;
பிரமாணர்கட்குச் செல்வம் வேதமென்று நூல்கள் கூறும்.)

தனம் மதியம் தவ பாத பங்கஜம் -என்கிற ஈஸ்வரன் அன்று தனம் –
வேதங்களே தனம் –
வேதைக சமதி கம்யன் -என்று இறே வஸ்துவுக்கு ஏற்றம் –
பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –

(விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருத க்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்  ஶ்லோகம் 30 –)

(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷)

அந்தி வைத்த மந்த்ரத்தை –
வேதாந்தத்தில் பிரகாசிக்கிற ரகஸ்யத்தை –
மாட்டந்தி -வேதத்தின் முடிவிலே -வேதாந்தத்தில் -என்றபடி –

மந்த்ரம் -என்றும் –
சர்வைஸ் ஸ்மாத் பரன் -என்றும் பர்யாயம் போலே காணும் –
ஈஸ்வரனை ரகசியம் -என்கிறது –

தலைக்கடையும் புழக்கடையும் அடைத்து
கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்ப்பாரைப் போலே
அஷட் கரணமாக உபதேசிக்கவும் அனுசந்திக்கவும் வேண்டி
இப்படி சீரிய சரக்காய் இருக்கையாலே –

அதவா
மந்த்ரம் -என்று
ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே
மந்த்ரஸ் சந்த்ராம் ஸூர்ப்பாஸ்கரத் யுதி -என்னக் கடவது இறே –

(ஓஜஸ்தேஜோ த்யுதிதர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸூர் பாஸ்கரத்யுதி|–ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமா-30

281-மந்த்ர-மந்தாரம் த்ராயத இதி மந்திர-
தம்மை த்யானம் செய்பவர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –)

அந்தணர் மாடு -என்கிறார் காணும் தாம் அதுக்கு அயோக்யர் என்னும் இடம் தோற்ற –
சர்வமும் திரு உள்ளத்திலே பிரகாசியா நிற்க –
வாய் விடுகை மர்யாதஹானி என்று இருக்கிறார் இறே –
தாம் பரம வைதிகராய் இருக்கச் செய்தே -பிறர் தனம் என்பாரைப் போலே
அத்தோடு சம்பந்தம் அற வார்த்தை சொல்லுகிறார் இறே
மர்யாதா ஸ்தாபன அர்த்தமாக –

அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்தரத்தால் வாழ்தியேல்
பிரதிபாத்யமும் அங்கேயாய்
பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி –

மந்த்ரத்தை -வாழ்தியேல்

1-ஜகத் காரண பூதனை –
2-சர்வாந்தராமியாய் –
3-துர் ஜ்ஜேயனாய் –
4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை
அனுபவிப்புதியாகில்

மந்தரத்தால் வாழ்தியேல்-

அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –
இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே
நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –
திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –

திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே –
சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –
சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –

(ருக் யஜுஸ் ஸாம வேதார்த்தங்கள் எல்லாம் அஷ்டாக்ஷரத்திலே உண்டே)

பகவத் மந்த்ரங்கள் அசங்க்யாதங்கள் அன்றோ –

மந்த்ரம் -என்ன –
பெரிய திருமந்த்ரத்தை
காட்டுமோ வென்னில் –
யானி நாமானி கௌனானி -என்கிறபடியே
அல்லாதவை குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் இறே இருப்பது –
கீழ்ச் சொன்ன அர்த்தத்துக்கு வாசகமாய் இருப்பதொரு சப்தம் இல்லையே இறே -ஆகையாலே காட்டும் –

(யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |
ரிஶிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 13 ||
(அந்த பரப்ரஹ்மத்தின் திருநாமங்களுள்) அவரது குணங்களினின்று தோன்றியதும், (அந்த குணங்களை வர்ணிக்கும் திருநாமங்களுள்) மிகவும் புகழ் பெற்றதும், (அவ்வாறு குணங்களை வர்ணித்தும், பிரசித்தி பெற்றதுமான திருநாமங்களுள்) மந்திர சித்தி பெற்ற முனிவர்களாலும் மற்றும் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கும் புராணக்கதைகளில் பாடபெற்றதும், நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதான திருநாமங்களை, (அந்த புருஷார்த்தங்களை) அடைவிக்கும் பொருட்டு உனக்கு நான் உபதேசிக்கிறேன்.)

அல்லாத வ்யாப்த மந்த்ரங்கள் இதுக்கு வாசகம் அன்றோ என்னில் –
அவற்றைப் பற்ற சாபேஷம் ஆகையாலே வ்யாபகாந்தரங்களையும் காட்டாது –
அடியிலே இவர் தாம் —நான் கண்டு கொண்டேன் -என்று
தலை செய்த மந்த்ரம் இது இறே –

(பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-8-)

மறவாது வாழ்தியேல் –
விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்
பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே
விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –
அது இவர்க்குச் சேராது –
சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே

இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் –
விஷய வைலஷண்யத்தைப் பாரார் –
தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக
அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –
அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது –
ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்

இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ
இங்கனே சொல்லுவான் என் என்னில்
அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்
இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –

பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-

வாழ்தியேல் –
அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே –
போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –

(கேவலம் உபேயாகவே நினைக்க வேண்டிய எம்பெருமானை
உபாயமாகவும் நினைத்தல் அவனை மறந்ததாகவே கருதக் கூடியதாதலால் அந்த நினைவு வேண்டாவென்கிற தென்க.
‘சிந்தித்தியேல் என்றோ ‘நினைத்தியேல்‘ என்றோ சொல்ல வேண்டுமிடத்தில் ‘வாழுதியேல் என்றது,
அதுதானே வாழ்ச்சியாயிருக்கவேணு மென்கைக்காக.
எம்பெருமானுடைய பரத்வத்திலும் உபாயத்வத்திலும் இழியாதே போக்யதையில் இழிந்து
அநுபவித்தால் அதுதானே வாழ்ச்சியாயிருக்குமிறே.)

வாழ்தியேல் –
வாழ்ச்சி உன்னதே இறே
நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –

வாழ்தியேல் -என்று
தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே
கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –
மன பிரதானம் தோற்ற –
யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய்  இறே முமுஷூ இருப்பது –

என்றும் வாழலாம் –
நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –
எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது
வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே –

மட நெஞ்சமே
எனக்கு பவ்யமான நெஞ்சே
விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு
போக வேளையோடு
வாசி அற
என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே
என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் –
நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –