Archive for the ‘திரு நெடும் தாண்டகம்’ Category

திரு நெடும் தாண்டகம்–23—உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து —-ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 23, 2013

அவதாரிகை –

தானே கிருஷி பண்ணி வந்து கலந்தவன் பிரிகிற போது
போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ -என்ன –
அதுவும் சொன்னேன் –
அது அகார்யமாய்த்து -என்கிறாள் –

உனக்கு பவ்யனாய் இருக்கிறவன் உன் வார்த்தை கேளாது ஒழியுமோ -என்ன –
நிலமல்லாத நிலத்தில் நீ இருக்கக் கடவதோ என்று
பெரிய திருவடி கொண்டு போகப் போனான் -என்கிறாள் –
ரஷகனுடைய வியாபாரம் ஆகையாலே கூடுகையும் –
ரஷகமாய் பிரிகையும் –
ரஷகமாய் இறே இருப்பது –

போகம் உன்மஸ்தகம் ஆனால் –
சாத்மிப்பிவித்து அனுபவிப்பிக்க வேணும் என்று இருக்கும் இறே அவன் –

ஸ்வ ரஷணத்திலே சிந்தை இல்லாமையாலே கூடு பூரிக்கிறாள் இறே இவள் –

—————————————————————————

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும்  இளம் தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-

பதவுரை

உன் ஊரும்-உள்ளுக்குள்ளேயே படரும் படியான
சிந்தை நோய்-மநோ வியாதியை
எனக்கே தந்து-என்னொருத்திக்கே உண்டாக்கி
என் ஒளி வளையும்-எனது அழகிய வளைகளையும்
மா நிறமும்-சிறந்த மேனி நிறத்தையும்
இங்கே-இந்தத் திருமணங் கொல்லையிலே
கொண்டார்-கொள்ளை கொண்டு போனார்; (அப்படி அவர் போகிய போது)
சேல்-மீன்களானவை
தெள் ஊரும் இளதெங்கின் தேறல் மாந்தி-தெளிவாகப் பெருகுகின்ற இளந்தென்னங் கள்ளைப் பானம் பண்ணி
உகளும்-களித்துத் தடித்துத் உலாவா நிற்கப் பெற்ற
திரு அரங்கம்-ஸ்ரீரங்கம்
நம் ஊர் என்ன-நமது இருப்பிடம் என்று சொல்லிப் போக,
கள் ஊரும் பைந்துழாய் மாலையானை-தேன் வெள்ளமிடா நின்ற பசுமை தங்கிய திருத்துழாய் மாலையை யுடைய அப்பெருமானை
கனவு இடத்தில் யான் காண்பன்-கனவிலே நான் காணப் பெறுகிறேன்;
கண்ட போது-அப்படி காணும் போது
புள் ஊரும் கள்வா-கருடப் பறவையை ஏறி நடந்துகிற கள்வனே!
நீ போகேல் என்பன்-இனி நீ என்னை விட்டுப் பிரி்ந்து போகலாகாது என்பேன்;
என்றாலும்-அங்ஙனஞ் சொன்னாலும்
நமக்கு-நமக்கு
இது-அப்பெருமானது கல்வியானது
ஓர் புலவி தானே-வருத்தமேயாய்த் தலைக்கட்டு மது.

அந்தக் கரணத்தையும் கூட வியாபாரிக்கும் படியான மநோ வியாதியை எனக்கே தந்து
என்னுடைய அழகிய கை வளையல் களையும் என்னுடைய ஸ்லாக்யமான நிறத்தையும்
இந்த திருவாலி திரு நகரியிலே கொண்டு போனார்
அப்போது அவர் தெளிந்து பரவா நின்றுள்ள இளமை தங்கிய தென்னங் கள்ளைக் குடித்து
மத்ஸ்யங்கள் ஆனவை சஞ்சரிக்கிற ஸ்ரீ ரெங்கமானது நம்முடைய ஊர் என்று சொல்லிப் போக
தேன் வெள்ளம் இடா நின்றுள்ள பசுமை தங்கிய திருத்துழாய் மாலையை யுடைய அவரை நான் கனவிலே கண்டேன்
அப்படி அனுபவித்த தசையில் பெரிய திருவடியை நடத்துகிற கிருத்ரிமனே
என்னை விட்டு நீ போகாதே கொள் என்று நான் சொல்லா நிற்பன்
இப்படிச் சொன்னாலும் இந்த ஸம்ஸ்லேஷம் நமக்கு ஆற்றாமைக்கு உறுப்பாமதன்றோ –

—————————————————————————

உபய விபூதி உக்தனாய் பரம உதாரனாய் இருக்கிறவனுக்கு நீ
பிரிய விஷயமாகக் கொண்டு இருந்தாய் ஆகில்
அவன் உனக்கு தந்து போய்த்தது என் என்ன –
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
அவன் தந்து போந்தது இது காண் -என்கிறாள் –

உள்ளில் நோய் –
கண் கண்டு சிகித்ஸிக்கலாம் நோய் அன்று காண் தந்தது –
பாஹ்யமான நோயாகில் இறே கண் கொண்டு சிகித்ஸிக்கலாவது –

உள்ளூரும் நோய் –
சர்ப்பம் ஊர்ந்தால் போலே சஞ்சரியா இருக்கை –
கண்ணுக்கு தெரியாது இருந்தாலும் ஒரு பிரதேசத்தில் ஆகில் அவ்விடத்தே அன்வேஷித்து சிகித்ஸிக்கலாம் இறே –
அது செய்ய ஒண்ணாதபடி கழலைக் கரைப்பான் -(ஒரு வகைச் சொறி நோய்-புற்று நோய் -)போலே எங்கும் ஒக்க சஞ்சரிக்கும் நோய் -என்கை –
காதல் நோயாகையாலே கிலாய்ப்பைப் பற்றி நிற்குமோ –
பந்தத்தைப் பற்றி நிற்குமோ -இன்னபடி இருக்கும் என்று நிர்ணயிக்க ஒண்ணாத படியாய் இருப்பது –

சிந்தை நோய்
அபரிஹரணீயமான நோய் –
ஒரூருக்கு நோய் வந்தால் வைத்யனால் பரிஹரிக்கலாம் –
வைத்தியனுக்கு நோவு வந்தால் ஒருவராலும் பரிஹரிக்க ஒண்ணாது இறே –

அபிபூய மாநா வ்யசனை –
கர்ம ஷயம் இறே என்று தரித்து இருக்கலாம் –
நெஞ்சில் வியாதிக்கு பரிஹாரம் இல்லை இறே –

(கிரயோ வர்ஷ தாராபி ஹன்யமாநா ந விவ்யது அபி பூய மாநா வ்யசனை யதா அதோஷ ஜசேதச -என்று
பெருமழையினாலும் அசையாத மலை போல் எம்பெருமான் பக்கலிலே நெஞ்சை ஊன்ற வைத்து நிற்பதனால் மலையிலினும் ஸ்திரமான பெரு மக்கள்
கர்மங்கள் கழிக்கவே இந்த ஸம்ஸார துக்கங்கள் என்ற எண்ணத்தால்  சம்சார கடல் அலைகளான தாபத் த்ரய வ்யசனங்கள் மேன் மேலும் வந்து நெருங்கா நின்றாலும் அவற்றுக்கு வருந்தாமல் இருப்பவர்கள்)

(இந்த பக்தியாகிய )நோய்
இப் ப்ரேமம் தான் அவஸ்தா அனுகுணமாக
புருஷார்த்தமாய் இருக்கும் –
போக உபகரணமாய் இருக்கும்
நோயாயும் இருக்கும்

ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தார்க்கு புருஷார்த்தமாய் இருக்கும்
போக்தாவுக்கு போக உபகரணமாய் இருக்கும்
விஸ்லேஷித்தார்க்கு வியாதியாய் இருக்கும் –

எனக்கே தந்து –
எனக்கே கூறாகத் தந்து(ஆனந்தம் அவனுக்கு மட்டும் வைத்துக் கொண்டு துக்கம் எனது கூறாக )
கலவி இருவருக்கும் ஒக்குமாகில் ஆற்றாமை இருவருக்கும் ஒவ்வாதோ -என்கை –

(உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து-தனக்கு ஒன்றும் சேஷியாமல் அனைத்தையும் –
தக்கார் பல தேவிமார் சால உடையவர் என் ஒருத்திக்குமே என்று இத்தை கொடுத்து போந்தான் -சர்வ ஸ்வதானமாக )

தந்து -என்பான் என் என்னில் –
என்னைப் போல் அன்றியே பிறர் முகம் பார்க்க வேண்டாத படியான ஸ்வாதந்தர்யத்தை உடையவர்
பிரிந்து போகையாலே அவர்க்கு இல்லை என்னும் இடம் கண்டிலையோ -என்கிறாள் –

நைவ தம்சான் ந மசகான் -என்கிறபடியே
ஊர்ந்ததும் கடித்ததும் அறியாதே அவன் படும்பாடு தான் அறியாள் இறே –
ஊர்த்த்வம் மாசான் ந ஜீவிஷ்யே -என்னும் அளவு தன்னது
ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும்படி அவன் ஆற்றாமை எனக்கே ஆய்த்து என்கிறாள் –
அவன் கிருஷியால் வந்தது ஆகையாலே –

எனக்கே தந்து
அவன் பெரியவர் அன்றோ –
தமக்கு என்று ஓன்று வைக்க வல்லரோ
எல்லாம் பக்தாநாம் -என்று அன்றோ அவர் இருப்பது -என்று ஷேபம் ஆதல் –

என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார்-
நோவை விளைத்ததுக்கு மேலே
நோவுக்கு ஆஸ்வாச கரமாய் இருக்குமத்தையும் கொண்டு போனார் –

என் ஒளி வளையும் மா நிறமும் –
மாம் மதீயஞ்ச அகிலம் (யானும் நீயே என்னுடைமையும் நீயே )-என்றும் –ததைவ -என்றும் –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தை உடைய இவள் –

(தத் க்ரது ந்யாயம். தம் யதா யதா உபாஸதே ததைவ பவதி-என்றும்
இச்சாமி த்வாம் த்ரஷ்டும் அஹம் ததைவ. தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வமூர்தே-என்றும்)

பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வம் இதி ய: |
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மகுட-நீராஜித-பதாம் ||

த்வம்” – ‘நீ’; “தாஸே மயி” – ‘தாஸனான என்னிடத்தில்’ “ஸகருணாம்” – ‘கருணையோடு கூடிய’;
“த்ருஷ்டிம் விதர” – ‘பார்வையைச் செலுத்துவாயாக!
“ஸ்தோதும் வாஞ்சன்”என்றால் ‘பிரார்த்தித்துக் கொள்ள ஆசைப்பட்டு
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்
“ததைவ” — ‘உடனேயே’, ‘அந்த க்ஷணத்திலேயே)

(என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி கழகம் ஏறேல்-அபிமான பங்கம் –
அபிமான துங்கன் செல்வன் -ஸாத்விக அஹங்காரம் உத்தேச்யம் -)

தேஹாத்மா அபிமானிகளைப் போலே சொல்லக் கடவளோ -என்னில்
சம்ஸ்லேஷ தசையில் -இது ஒரு வளை இருந்தபடி என் –
சேர்த்தியால் வந்த ஒளி இருந்தபடி என் –
வடிவில் நிறம் இருந்தபடி என் –
என்று கொண்டாடுமவை ஆகையாலே சொல்லுகிறாள்

அவனுக்கு ஆதரணீயமானவை -அவ் வழியாலே தனக்கும் ஆதரணீயமாக இருக்கையாலே –
என்னது -என்னலாம் இறே –

மா நிறம் -ஸ்லாக்கியமான நிறம் –

(கீழ்ப் பாட்டில் ‘கைவளையும் மேகலையுங் காணேன்“ என்ற விடத்திற்கொண்ட அர்த்தத்திற்கு
எதிரான அர்த்தம் இங்குக் கொள்ள வேண்டும்.
அங்கு ஸம்ஸ்லேஷத்தாலுண்டான பூரிப்பு; இங்கு விஸ்லேஷத்தாலுண்டான இளைப்பு.

ஏற்கனவே பூரிப்பினால் வளைகள் வெடித்துப் போயிருக்க, என்னொளி வளையைக் கொண்டார் என்று
இங்குச் சொல்வதற்கில்லையே; கையில் வளையிருந்தாலன்றோ கொண்டாரென்னலாம் என்று சிலர் சங்கிக்கக் கூடும்;
வளைகொண்டாரென்றதில் தாற்பரியமாகிய உடலிளைப்பு மாத்திரமே இங்கு விலக்ஷிதமென்று கொள்க;
உடல் ஈர்க்குப்போல இளைக்கும்படி செய்து விட்டாரென்றவாறு.)

இங்கே –
நான் வழி பறி வுண்ட தேசம் -என்கிறாள்-
நான் வழி பறிக்க வந்து வழி பறி வுண்டேன் -என்கிறாள்-

இங்கே இருவராய் வந்தார் -என்று
நான் நிதி எடுத்த தேசம் என்றார்
அங்கு
பறி கொடுத்த தேசம் இது என்கிறாள் -இங்கு

(மாலைத் தனி வழியே பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே -வேலை
அணைத்தருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேணும் துணிந்து –)

ஆனால் அவன் போகிற போது உம்முடைய ஊர் எது என்று கேளாது விட்டது ஏன் என்ன –
அது நான் கேட்க வேண்டிற்று இல்லை-
வ்யதிரேகத்தில் தரித்து இருக்கைக்காக தானே சொல்லிப் போந்தான் -என்கிறாள்

தெள்ளூரும் இத்யாதி –
தெளிந்து பாயா நின்றுள்ள இளம் தெங்கின் தேனை நுகர்ந்து
சேல்களானவை உகளும்படியான தேசம் –

இளம் தெங்கு –
தேச விசேஷத்திலே பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமாய் போலே ஆய்த்து –
இத் தேசத்தில் ஸ்தாவரங்களும் இருப்பது –

தெள்ளூரும் இத்யாதி —
தெளிந்து தெங்கின் நின்று வாரா நின்றுள்ள தேறல் திரு வீதிகளிலே பாயா நிற்கும் ஆயத்து –
தேன் திருவீதியிலே பாயாத போது -சேல் பருகிற்று என்னக் கூடாது இறே
இது தேட்டறும் திறல் தேனினை தென்னரங்கனை -என்கிற
தேனுக்கு ஸ்மாரகமாய் இருக்கிறதாய்த்து –

(தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-)

சேலுகளும் –
முக்தர் களித்து வர்த்திக்குமா போலே -இத் தேசத்தில் திர்யக்குகளும் அகப்பட களித்து வர்த்திக்கிற படி –
தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் –
ஜன்ம தேசமான ஆற்றை விட்டு போக ஸ்தானத்திலே புகுந்து தேனை நுகர்ந்து களித்தது என்கை
முக்தன் சம்சாரத்தை நினைக்கும் அன்று இறே இவை தமக்கு ஜன்ம பூமியான ஆற்றை நினைப்பது -(நரகத்தை நகு நெஞ்சே )

இளம் தெங்கு -இத்யாதி –
சம்சார சம்பந்தம் அற்றுப் போன முக்தனுக்கு சம்சார ஸ்பர்சம் இல்லாத நித்ய ஸூரிகள்–
ஆள்மின்கள் வானகம்
-என்று
ஸ்வ போகத்தை கொடுக்குமா போலே
ஆற்றிலே பிறந்து புகுந்த கயல்களுக்கு ஊரில் ஸ்தாவர பிரதிஷ்டிதமான
தெங்குகள் தம்முடைய தேனைக் கொடுக்க-
அத்தை நுகர்ந்து களிக்கிற கயல்களை உடைய ஊர் –

(வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-)

நம்மூர் என்ன –
நமக்கு தேசம் என்ன-
எனக்கு தேசம் எனில் –
பக்தாநாம் -என்றது வ்யாஹதமாம்-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–ஜிதந்தே -5-

உனக்கு தேசம் என்னில் -தன் பாரதந்த்ர்யத்தோடு சேராமையாலே
அவள் உன்னை ஒழிய எனக்கு ஒரு தேசமாவது ஏன் என்னும் –
இரண்டு தலைக்கும் ஸ்வரூப ஹானியாகையாலே –நம்மூர் -என்கிறான் –

இருவர் சத்தையும் உண்டாக்கும் தேசம் இது காணும் –
என்னை பிரணயி ஆக்கி உன்னை பிரணயிநி யாக்கும் தேசம் இது -என்கை –

திருமந்தரம் போலே இருவருக்கும் பொதுவான ஊர் –
இருவரும் விஷயார்த்திகள் ஆகையால் இருவருக்கும் தேசம் இது இறே–

கள்ளூறும் இத்யாதி –
தோளிலே இட்ட தனி மாலையும் தாமுமாய் வந்த வரவை நீ காணப் பெற்றது இல்லை காண் –
புழுகு நெய் ஏறிட்டுக் கொண்டு வருவாரைப் போலே நான் உகந்தபடி ஒப்பித்து வந்தார் –

கள்ளூறும் பைம் துழாய் மாலையானை –
அவனூர் பட்டது அத்தனையும் படும் காண் அவன் உடம்பு –
ரச சிரைகள் திறந்து மது ஒழுகா நின்றுள்ள திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே –

(அவ்வூர் படுமதெல்லாம் அவருடம்பும் படுகிறது காண்.
தெள்ளூருமிளந் தெங்கின் தேறல் அவ்வூர்த் திருவீதிகளிலே வெள்ளமிடுமா போலவே
அவருடம்பும் பைந்துழாய் மாலையின் மதுவெள்ள மொழுகப் பெற்றிருந்தது.)

கள்ளூறும் –
தன்னிலத்தில் காட்டில் திரு மார்பில் ஸ்பர்சித்த பின்பு செவ்வி பெற்ற படி –

பைம் துழாய் –
திருத் துழாய் குளிர்ந்து இருந்தது என்று நீ அறிந்தபடி என் என்ன –
என்னை அணைக்கையாலே அறிந்தேன் -என்கிறாள் –

கனவிடத்தில் –
இந்த்ர ஜாலம் என்றும் -கனவு என்றும் -அஸ்த்ரங்களைச் சொல்லக் கடவது –
அஸ்திரமான தேசத்திலே தாமும் சந்நிஹிதராய்-
அனுபாவ்ய விஷயமும் சந்நிஹிதமாய் இருக்க –
தேசாந்தரம் வேண்டுகிறது –தேசமும் தேஹமும் அஸ்த்ரமாக இருக்கையாலே

கனவிடத்தில்
கனவு -என்று சம்ஸ்லேஷத்தில் ஸ்தர்யத்தைச் சொல்லவுமாம் –
முன்பு அனுபூதமான வற்றை கால நீளத்தாலே ஸ்வப்னம்-
கண்ட மாத்ரம் என்று சொல்லக் கடவது இறே –

யான் காண்பன்
அவனை ஒழிய செல்லாத படியான ஆற்றாமையை உடையவ நான் காண்பன் –

நான் –
அனுபவித்தேன் –
என் அபிநிவேசத்துக்கும் குறை இல்லை –
அனுபவத்துக்கும் குறை இல்லை –

சம்ஸ்லேஷத்தில் புரை இல்லை யாகில் அத்தசையில் உனக்கு அவன் கையாளாக அன்றோ இருப்பது –
போகாதே கொள் என்று ஓர் உக்தியால் விலங்கிட மாட்டிற்று இல்லையோ என்ன
அதுவும் செய்தேன் -என்கிறாள்
கண்ட போது
அனுபவித்த தசையில் –

புள்ளூரும் கள்வா –
பெரிய திருவடியை நடத்துக்கிற க்ரித்ரிமனே-
பெரிய திருவடியை பதிப் படையாக வைத்து வந்து புகுந்து கலந்து
இத் தலை அகப்பட்டவாறே -அவன் கடுமை போராது என்று
அசேதனமான தேரை நடத்துமா போலே பெரிய த்வரையோடே பெரிய திருவடியை நடத்துக்கிற கிரித்ரிமனே
வந்த போதே போகையாலே பெரிய திருவடியை பதிப்படையாக கடத்தி வந்த க்ர்த்ரிமனே -என்கிறாள்

வந்த போது –சிலையே துணையாக வந்தானாகில் பெரிய திருவடி வருகை யாவது என் –
கொண்டு போகை யாவது என் என்ன
ராஜாக்கள் அபிமத விஷயத்தை பற்ற கறுப்புடுததுப் புறப்பட்டால்
மந்த்ரிகள் வரவும் கொண்டு போகவும் கடவதாய் இருக்குமா போலே
பெரிய திருவடி வந்து கொண்டு போனான்-

புள்ளூரும் கள்வா –
வந்த கார்யம் தலைக் கட்டிற்று ஆகில் எழுந்து அருளல் ஆகாதோ -என்று பெரிய திருவடி சொல்ல
அவனை மேல் கொண்டு போனான் -என்கிறாள் –

புள்ளூரும் –
தேரூர்ந்தான் -என்னுமா போலே –
அதாகிறது –
பெரிய திருவடியும் குழைச் சரக்காம்படி -காண் -போன கடுமை இருந்தபடி என்கிறாள் –

பெரிய திருவடி சிறகிலும்
திரு வநந்த ஆழ்வான் மடியிலும் –
சேனை முதலியார் பிரம்பிலும்
பிராட்டி கடாஷத்திலும்
வளரும் தத்வம் ஆகையாலே தான் நினைத்தபடி செய்யப் போகாது இறே –
வான் இளவரசு – இறே –

(வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*  வாசுதேவன் மதுரை மன்னன்*  நந்த- 
கோன் இளவரசு கோவலர் குட்டன்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி*  மனம் உருகி மலர்க் கண்கள் பனிப்பத்* 
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*)

நீ போகல் என்பன் –
உன்னைக் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாயோ –
நாம் பிரியில் இவள் தரியாள் என்று இருக்க வேண்டாவோ-

நீ போகல் –
என்னையும் கூட்டிக் கொண்டு போதல்-
இங்கே கூட இருத்தல் செய்யுமது ஒழிய தனியே போகக் கடவையோ –

என்பன் –
நிஷ் பிரயோஜனமான வார்த்தையைச் சொன்னேன் –
அவன் ஸ்வரூபத்துடன் சேரும் வார்த்தையைச் சொன்னேன் அல்லேன்-
என் ஸ்வரூபத்துடன் சேரும் வார்த்தையைச் சொன்னேன் அல்லேன்-
பலிப்பது ஒன்றைச் சொன்னேன் அல்லேன் –
அவன் போகத் தேட நான் தடுக்கையாவது அவனுடைய பிரணயித்வத்துக்குச் சேராதே-
தத் தஸ்ய சத்ர்சம் பவேத் -என்று இருக்கை- ஸ்வபாவமாய் இருக்க
போகாதே கொள் என்கை என் ஸ்வரூபத்துக்கும் சேராதே

என்றாலும் –
இப்படி இவருடைய ஸ்வரூபத்துக்கும் சேராத வார்த்தையைச் சொன்ன விடத்திலும்

இது நமக்கோர் புலவி தானே –
இந்த சம்ஸ்லேஷம் நமக்கு ஆற்றாமைக்கு உறுப்பாய் ஒழிந்தது –
அவனைப் பேணினேன் அல்லேன் –
என்னைப் பேணினேன் அல்லேன் –
அபிமதம் பெற்றிலேன் அல்லேன் –
இத்தால் துக்கமே சேஷித்து விட்டது -என்கிறாள்
புலவி -துக்கம் –

நமக்கு –
அவன் அபிமதம் கைப் பட்டது என்று ஹ்ர்ஷ்டனாய்ப் போனான்
நமக்கு துக்கமே பலித்து விட்டது

தானே
நாட்டாருக்கு ஸூக ஹேதுவான தானே கிடீர் நமக்கு துக்க ஹேது ஆயத்து -என்கிறாள் –

ஓர் புலவி
ஸ்வரூப ஹானியால் வந்த துக்கமும்
அவனைப் பிரிகையால் வந்த துக்கமும் சேர்ந்து இரட்டித்து இருக்கையால்
அத்விதீயம் -என்கிறாள் –

—————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்–22- நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 23, 2013

அவதாரிகை –

கீழ் பாட்டில் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  -என்று
அதஸ்மின் ஸ்த்த புத்தி பண்ணினோம் கண்டாயே தோழி -என்றாள்-

நீ அகன்றாய் ஆகில் -அவன் உன்னோடு சம்ஸ்லேஷித்த படி என் என்ன –
அவன் வசீகரித்த படியும் -சம்ஸ்லேஷித்த படியும் இது தான் -என்கிறாள் –

தன்னுடைய சௌந்த்ர்யத்தையும் சீலத்தையும் காட்டின இடத்திலும் கார்யகரம் இல்லாமையாலே –
போம் இத்தனையோ என்று நினைத்தான் –

ஸ்ரீ பாதம் பேர்ந்தது இல்லை
நித்ய சாபேஷ்யமான விஷயத்தை குறித்து -நித்ய நிரபேஷன் ஆனவன் –
கால் வாங்க மாட்டாது நிற்கையாவது என் என்ன –

சேஷி யாகையாலே சேஷ வஸ்து அகன்றால் இழவு தன்னதாய் –
அத்தால் பெரும் பேறும் தன்னதாய் இருக்கையாலும்
இவளை ஒழிய செல்லாத கரமுகத்வத்தாலும்
நம் அழகு இங்கே ஜீவிக்கை யாய்த்து இல்லை என்று மீளுவோம் ஆகில்
புறம்பு நமக்கே சர்வ ஸ்வம்மாய் இருந்துள்ள அழகை தயாரிப்பார் இல்லை என்கிற அபிமானத்தாலும்
கால் வாங்க மாட்டிற்று இலன் –

உத்தம ராஜ கன்யை பக்கல் உத்தம ராஜ புத்திரன் சென்று –
அழகு ஜீவிக்கை யாகாதே மீண்டான் என்றால் புறம்பு ஜீவிக்கை யாகாது இறே –

ருசியே தொடங்கி பிறரை வசீகரிக்கும் பரிகரமாக தான் நினைத்து இருப்பது அழகை இறே –

அது நிஷ் ப்ரயோஜனம் ஆனால் அபிமானம் கால் கட்டும் இறே
சக்தி கொண்டு கார்யம் கொள்ளிலும் விஷயம் இல்லாமையாலே மேல் விழுந்து அணைக்க மாட்டிற்று இலள் –
எதிர் தசையில் இசைவின்றிகே மேல் விழுந்தால் ரசம் இல்லை இறே –
அழகும் சீலமும் கார்யகரம் ஆய்த்தில்லை –
சக்தி கொண்டு கார்யம் கொள்ளும் நிலம் அன்றியிலே இருந்தது –

இனி இவளை வசீகரிக்கும்படி என் என்று பார்த்தார்
முன்பு திருவாய்ப்பாடியிலே பெண்கள் தன் குழல் ஓசையில்
வசீக்ர்தரான படி யைக் கண்டபடியாலே
தம்முடைய மிடற்று ஓசையாலே வசீகரிப்போம் என்று பார்த்து ஒரு பண்ணை நுணுக்கினான் –

இவனுடைய –ஏவம் பஹூவிதாம் சிந்தாம்  (சிந்தயித்வா மஹா மதி ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் -செவிக்கு இனிய செஞ்சொல் பேசினாரே )-இருக்கிறபடி –
ம்ர்கயார்த்தமாக வந்தோம் ஆகையாலே பாடுகிறவன் ஆர் என்று கேட்பார் இல்லை
இவளை வசீகரிக்கும் பரிகரம் இது வென்று ஒரு பண்ணை நுணுக்கினான் –

அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் -இது காண் செய்தபடி என்கிறாள் –
ம்க்ர்கையைக் குறித்து வந்தவர்கள் ஸ்ரமம் தீர ஒரு மரத்தின் நிழலிலே ஒதுங்குகையும் –
முகத்திலே நீரை இட்டுக் கொள்ளுகையும்-
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுகையும்-
ஒரு பண்ணை நுணுக்குகையும் -பிராப்தம் இறே-

—————————————————————————

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-

பதவுரை

ஒன்று–மிகச் சிறந்ததான
கைவளம்–கைவளமென்கிற பண்ணை
ஆராயா-ஆராய்நது பாடி
நம்மை நோக்கா–நம்மைப் பார்த்து
இறையே நாணினார் போல்–சிறிது வெட்கப் பட்டவர் போல நின்று
பின்னும்–அதற்குப் பிறகும்
நயங்கள் செய்வளவில்–நயமான வார்த்தைகளை யிட்டுப் பண்ணிலே பாடினவளவில்
என் மனமும் கண்ணும்-எனது நெஞ்சம் கண்களும்
ஓடி-பதறிச் சென்று
எம்பெருமான் திரு அடிக் கீழ் அணைய-அப்பெருமானது திருவடிவாரத்திற் பதிய
இப்பால்–அதன்பின்
கைவளையும்–என் கையில் தரித்திருந்த வளைகளையும்
மேகலையும்-அரையில் மேவிய கலையையும்
காணேன்-காண மாட்டாமல் இழந்தேன்;
கனம் மகரத்குழை இரண்டும்-கனமான மகரகுண்டலங்களிரண்டையும்
நான்கு தோளும்-நான்கு திருத்தோள்களையும் காணப் பெற்றேன்;
(அதன்பிறகு)
எம் பெருமான் கோயில் எவ்வளவு உண்டு என்றேற்கு-“தேவரீருடைய இருப்பிடம் (இவ்விடத்திலிருந்து) எவ்வளவு தூரமுண்டு?‘ என்று கேட்ட எனக்கு
எழில் ஆலி இது அன்றோ என்றார்-அழகிய திருவாலிப்பதி இதோ காண்! என்று சுட்டிக் காட்டினார்.

அத்விதீயமாக நைவிக்கும் அழகை யுடைய பண்ணை ஆராய்ந்து பாடி நம்மைப் பார்த்து
கொஞ்சம் லஜ்ஜை பட்டவர் போல் நின்று
பின்னும் நீச பாஷணங்களை செய்யும் போது
என் மனஸ்ஸும் என் கண்ணும் ஓடி எமக்கு ஸ்வாமியான சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்ட
அதன் பின் கையில் தரித்த வளையையும் அரை நூல் மாலையையும் போன இடம் அறிந்திலேன்
ஸ்திரமான இரண்டு மகர குண்டலங்களையும் நான்கு தோள்களையும் பார்த்தேன்
எனக்கு ஸ்வாமியே தேவரீர் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ ரெங்கம் எவ்வளவு தூரம் உண்டு என்று கேட்ட எனக்கு
அழகிய திருவாலி இது அன்றோ என்று தாமே சுட்டிக் காட்டி அருளினார் –

—————————————————————————————————

நைவளம் –
கேட்டாரோடு சொன்னாரோடு வாசி அற -நைவிக்கும்படியான
அழகை உடைத்தான பண்ணை நுணுக்கி
நட்ட பாஷையை -குண யோகத்தால் –நைவளம் –என்று பேரிடுகிறது –
நுடங்கு கேள்வி இசை -என்னக் கடவது இறே –

பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–3-4-6-

ஓன்று –
அல்லாத இசைகளில் காட்டிலும் பிறரை வசீகரிக்க வற்றாய் இருக்கையும் –
இதுக்கு வசீக்ர்தராகா விட்டால் வேறு கதி அற்று இருக்கையும் -பற்ற அத்விதீயம் -என்கிறது –

(‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தை யுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற் காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படா விட்டால் வேறு கதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப் பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ் நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடை கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம் தெரி பாலை கைவல் பாண் மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினை யொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையை யுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலை யாழில் வாசிக்கப் பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப் பண்கள், பகற் பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.)

கர்ம ஜ்ஞானங்களால் சாத்தியம் அல்லாததை பக்தியால் சாதிக்கலாம் –
பக்தியால் சாத்தியம் அல்லாததை பிரபத்தியால் சாதிக்கலாம் –
அதுவும் பலியா விட்டால் வேறு கதி இல்லை இறே –
சேஷ பூதன் சேஷியை லபிக்கைக்கு சரமமான உபாயத்தை பற்றினால் போலே காணும்
காந்தன் அபிமத விஷயத்தை லபிக்கைக்கு சரம உபாயத்தை பற்றினபடி –

ஆராயா –
நுணுங்கினான் –

நம்மை நோக்கா –
பண்ணை நுணுங்கின வாறே தான் அழிந்தான் –
இனித் தப்பாது இவள் அழிகை -என்று என் முகத்தைப் பார்த்தான் –
வயிர உருக்கானது அரக்கை உருக்க சொல்ல வேணுமோ என்று இருந்தான் –
நம்முடைய பும்ஸ்வத்தை அழித்த இது
ம்ருது ஸ்வ பாவியான இவளுடைய ஸ்த்ரீத்வத்தை
நம்மை -என்று
ஆத்மனி பஹூ வசனம் –

நாணினார் போல் இறையே –
அல்பம் நாணினாப் போலே –
அவர் என் முகத்தைப் பார்த்த இடத்தில் -அவர் நுணுங்கின பண்ணிலே –
அகவாய் அழிந்து இருக்கச் செய்தே -பொரி புறம் தடவி -நான் அழிந்தமை அவருக்கு தெரியாதபடி
அவிக்ர்தையாய் இருந்தேன் –

அத்தைக் கண்டு லஜ்ஜை பிறந்தது –
சரம உபாயத்தை அனுஷ்டித்தோம் –
அது நிஷ் பலமாய்த்து என்று லஜ்ஜையிலே இழிந்தார் –
நேராக நாணினால் ஆகில் மேல் பண்ணும் பிரவர்த்தி கூடாது இறே
ஆகையால் நாணினார் போலே பாவித்தார் -என்கிறாள் –

அதாகிறது
லஜ்ஜித்தார் போலே பாவியா நேர் முகம் பார்க்க மாட்டாதே -சோலையைப் பார்ப்பது
பார்ஸ்வங்களைப் பார்ப்பது -ஆனார் -என்கிறாள் –
பிரபன்னர் தம்மை லபிக்கைக்கு –அழுவன் தொழுவனில் பட்ட பாடு எல்லாம்
அபிமத விஷயத்ததைக் குறித்து தான் பட்ட படி –

(அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந் தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-)

நயங்கள் பின்னும் செய்வளவில்-
பின்னும் நயங்கள் செய்வளவில் –
பின்னும் நீச பாசஷணங்களை பண்ணிலே இட்டு நுணுங்கும் அளவில் –

நயங்கள் பின்னும் –
நம்முடைய மகா விஸ்வாஸம் போலே யாய்த்து -அவனுடைய மகா விஸ்வாஸம் இருக்கிறபடி –
பண்ணின பிரபத்தி விபரீத பலம் ஆனாலும் -அத்தை ஒழிய கதி அற்று இருக்குமா போலே
தான் நுணுங்கின பண் பலித்தது இல்லை என்று விடாதே
பின்னையும் அத்தையே நுணுங்கினான் என்கை

நயங்கள்
அவ் விசையிலே வைத்து நுணுங்கின
நீச பாஷணங்களுக்கு தொகை இல்லை -என்கிறாள்

(பின்னும் நயங்கள் செய்வளவில் = ‘பின்னும்‘ என்றது,
நைவளமென்கிற பண்ணைப் பாடினவளவோடு நில்லாமல் என்றபடி. அது பலிக்க வில்லை யென்று வாளா கிடந்திலர்;
‘அடியேன், குடியேன்‘ என்றாற் போலே சில நைச்ய பாஷணங்களைப் பண்ணிலே ஏறிட்டுப் பாடத் தொடங்கினார்;)

ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் -என்று கொண்டு
அவன் பண்ணின சாரஸ்யங்களை நீயும் கூட காணப் பெற்றது இல்லை காண் -என்கிறாள் –

செய்வளவில்
அத்தை நுணுங்கின அளவிலே –

என் மனமும் கண்ணும் ஓடி –
த்வஸ்த்தமாய் போய்த்து -என்கிறாள் –
பொரி புறம் தடவி அடக்கிக் கொண்டு இருந்தேன் –
என்னால் அடக்கப் போய்த்தில்லை –
கடல் உடைந்தால் போலே உடைந்தது -என்கிறாள் –
கண்ணால் கண்ட இடத்திலே இறே நெஞ்சு செல்வது –
அம் முறை குலைந்தது என்கிறாள் –

நெஞ்சும் தனியே போய்த்து –
கண்ணும் தனியே போய்த்து -என்கிறாள் –
ஹ்ர்ஷீகேசனை காணும் அளவு இறே இந்த்ரியங்களுக்கு இவனோடு சம்பந்தம்
கர்ம நிபந்தனம் ஆகையாலே ஔபாதிகம் இறே-

ஓடி –
ஒன்றை ஓன்று பின் பாராதே ஓடிற்று என்கிறாள் –
என்னையும் பாராதே ஓடிற்று -என்கிறாள் –

எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை –
நிருபாதிக சம்பந்தியானவன் பக்கலிலே போய்ப் புக்கது -என்கிறாள் –

எம்பெருமான்
தன் மிடற்று ஓசையால் என்னை எழுதிக் கொண்டவன் –

திருவடிக் கீழ் அணைய –
அவன் நினைத்த அளவன்று காண் தான் அழிந்த படி -என்கிறாள்
என் முலையைத் தன் மார்விலே நெருக்கி தழுவிக் கொள்ளவாய்த்து அவன் நினைத்தது –
நான் அவன் காலைத் தலை மேலே வைத்துக் கொண்டேன் -என்கிறாள் –
அழக்கி இருக்குமா போலே இறே அழியும் போது அழியும் படி –

இப்பால் –
என்னை வந்து கிட்டுகைக்கு அவன் பண்ணின வியாபாரங்கள் சொன்னேன் –
கலந்த போது அவன் பண்ணின வியாபாரங்கள் ஒரு மகாபாரதத்துக்குப் போரும் –
அத்தை அடைவு கெடப் பேசுகைக்கு வேண்டும் தெளிவு இல்லாமையாலே பேச்சுக்கு நிலம் அன்று –
இக்கதை ஸ்ரீ ராமாயணத்தில் கேட்கலாகாதோ -என்கிறாள் –

உபோத்காதம் சொன்னேன் -பல ஸ்ருதியைக் கேட்கலாகாதோ -என்கிறாள் –
கை வளையும் இத்யாதி –
அகம் ஒடுக்குண்டு போனால் கண்டது ஏது காணாதது ஏது என்று கேட்பாரைப் போலே
அவன் வந்து கலந்த போது கலவியின் பலமாய்க் கொண்டு நீ காணாதது ஏது கண்டது ஏது என்னச் சொல்கிறாள்
த்ர்ஷ்டம் அத்ர்ஷ்டமாய் அத்ர்ஷ்டம் த்ர்ஷ்டம் ஆய்த்து

கை வளையும் –
வளை கழல்வது விரஹத்தின் பின்பு அன்றோ -வளை போய்த்து என்பான் என் என்னில் –
சம்ஸ்லேஷ ரசத்தால் பூரித்து வெடித்துப் போய்த்து -என்கை –

மேகலையும் –
மேகலை கண்டிலேன் என்கை -அசதஸ்யம் அன்றோ என்னில் –
அத்தசையில் பரியட்டம் மாறாட்டத்தாலே என் பரியட்டப் பட்டும் கண்டிலேன் -என்கை
அவன் பரியட்டம் தன் கையில் இருக்க கண்டாள் இத்தனை இறே –

காணேன் –
புக்கவிடம் அறிந்திலேன் –

இத்தால் -ஸ்வாபதேசத்தில் வந்தால் –
அஹங்கார மமகார நிவ்ருத்தியை சொல்லிற்றாய்  இருக்கும் இறே –
ஸ்வரூப ஜ்ஞானம் போதில் விரோதியான அஹங்கார மமகாரங்கள்
போக வேளையில் வந்தால்
வஸ்த்ரம் என்றும் வளை
என்றும் பேரிடக் கடவதாய் இருக்கும் –
நான் போக்தா என்று இருத்தல் –
எனக்கு போக்யம் என்று இருத்தல் -செய்யுமது ஸ்வரூபம் அன்று இறே –
போஜ்யமாய் இருக்கை இறே ஸ்வரூபம் –

(உபாய விரோதி, ப்ராப்ய விரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற
பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு.
‘நான் போக்தாவன்று, எனக்குப் போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற
ஸ்வரூப தத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று.)

காணேன் –
தன் விரோதியைக் கழித்துக் கொள்ளுதல்
அவனைப் பற்றிப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தல் – செய்தால் இறே விரோதி போனது அறிவது –

தான் போகத்தில் அந்ய பரையாய் இருக்க
அவன் போக்கப் போனவை ஆகையாலே கண்டிலேன் -என்கிறாள் –

கண்டேன் இத்யாதி –
இத் தலையில் உள்ளத்து ஒன்றும் காணாதது போலே
அத் தலையில் உள்ளதை நேராகக் கண்டேன் –

விரோதியை நேராக கண்டிலேன் –
போக்யதை குறைவற்று இருக்க கண்டேன் –

அணைத்த போது உறுத்தின திரு மகரக் குழைகளையும் –
அணைத்த திருக் கைகளையும் கண்டேன் –
கன மகரக் குழை -இரண்டும்
ஸ்த்திரமான திரு மகரக் குழை –
நித்ய அனுபாவ்யமாய் இருக்கை –

கலந்தவன் சக்கரவர்த்தி திருமகனாய் இருக்க –
நான்கு தோளும்-என்கிறது
தன்னைத் தழுவுகையாலே தோள்கள் பணைத்த படியைப் பற்ற –
இத் தலை அகப்பட்ட பின்பு தன்னை வெளி இட்ட படியாகவுமாம் –

தோள்களைக் கொண்டு கார்யம் பண்ணும் இடத்தே மறைக்க ஒண்ணாது இறே –

எவ்வளவு இத்யாதி –
அவிச்சின்னமாக அனுபவிக்க வேண்டும் என்று பார்த்து –
உம்முடைய அகம் எத்தனை தூரம் போரும் என்று கேட்ட எனக்கு –

எவ்வளவு உண்டு
சற்றிடமாகில் கூடப் போம் என்று நினைத்து
எவ்வளவு உண்டு -என்கிறாள் போலே காணும் –

பருகிக் களித்தேன் -என்ற அநந்தரம் –
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்தால் போலே
இவனோடு சம்ஸ்லேஷித்து பெற்று வைத்து இவனுடைய வேண்டப்பாட்டைக் கண்டு இவனுக்குத் தகுதியான
பரிஜனத்தோடே அனுபவிக்க வேணும் என்னும் அபேஷை பிறந்தது –

(கடிவார் தண்ணந் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-)

(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிகொண்ட 2சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம் சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.–2-3-10 )

எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
என்றேற்கு –
நானே கிடீர் பிரிவை பிரசங்கித்தேன் -என்கிறாள் –

இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே
திரு மணம் கொல்லைக்கும் திருவாலிக்கும் உண்டான பிரத்யாசத்தி
அங்குலி நிர்த்தேசம் பண்ணலாய் இருக்கையாலே
இது வன்றோ -என்று கையைக் காட்டினார் -என்கிறாள் –

அங்கன் அன்றியே –
நீ இருந்த இடம் அன்றோ -நமக்கு உத்தேச்யம் என்றார் -என்னவுமாம் –
சேஷி இருந்த இடமே சேஷ பூதனனுக்கு உத்தேஸ்யமாம் போலே

பிள்ளை வேட்டகத்தை ஆசைப்படும்
பெண் பிள்ளை புக்ககத்தை ஆசைப்படும் இறே –

அதவா
எவ்வளவு -இத்யாதி –
போகம் உன்மஸ்த கரசமான வாறே சாத்மிப்பித்து அனுபவிக்க வேணும் என்று பார்த்து
நாம் அகம் புக்கு வாரா நின்றோம் -என்று பிரிவை பிரசங்கிக்க –
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு –எழில் ஆலி இது அன்றோ –என்றார் –
உன் காலே அன்றோ நமக்கு உத்தேஸ்யம் -என்று என் காலைக் காட்டிப் போந்தார் –என்கிறாள் –

தாமே
வருவாரும் தாமே
அனுபவிப்பாரும் தாமே -யாய்விட்டது என்கிறாள் –

(இத்தால் -அசித்வத் பாரதந்தர்யமே ஜீவாத்மாவின் ஸ்வரூபம் என்றதாயிற்று -)

(வந்த விடத்திலே கலந்து பிரிந்து போகை யன்றியே அவருடைய இருப்பிடத்தே உடன் சென்று
நித்ய ஸம்ஸ்லேஷம் பண்ணிக் களிக்க வேணுமென்னும் விருப்பாலும்,
சிறிது தூரமாகிலும் கூடவே தோள்மேல் தோளிட்டுக்கொண்டு போகவேணு மென்னும் விருப்பாலும்,
தகுதியான பரிஜனங்களோடே அநுபவிக்கவேணு மென்னும் விருப்பாலும்
‘தேவரீருடைய வாழ்விடம் இங்குத் தைக்கு எத்தனை தூரமுண்டு?‘ என்று கேட்டேன்;
இதோ காண்கிற திருவாலித் திருநகரி காண் என்று சொல்லி அந்தர்த்தானமாய் விட்டார்.
அந்தோ! ‘எவ்வளவுண்டெம்பெருமான் கோயில்‘ என்று பாவியேன் நானே யன்றோ பிரிவை ப்ரஸ்தாவித்தேன்;
அது கேளாதிருந்தேனாகில் இன்னமும் சற்றுப் போது அநுபவிக்கலாமாயிருந்ததே!
நானே கெடுத்துக் கொண்டேனே யென்கிறாள் போலும்.)

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–21–மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 22, 2013

அவதாரிகை –

மச் சித்தா மத் கத ப்ராணா போத யந்த பரஸ்பரம் -என்ற இத்தை
ஸூக்ரஹமாக  மூன்று பத்துக்கும்
வாக்யார்த்தமாக அருளிச் செய்வர் –பட்டர் –

(மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷–ஸ்ரீ கீதை -10.9৷৷)

(அதாவது, சித்தத்தை நமக்கென்றே பறிகொடுத்து அப்படியே நம்மைப்பிரிந்தால் தரிக்கமாட்டாமல் பிராணனையும்
நம்அதீனமாக்கி, தாம்தாம் அனுபவித்த நம்குணங்களை யெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம்செய்த திவ்யசேஷ்டிதங்களையும் எடுத்துப் பேசிக்கொண்டு ஆனந்திக்கிறார்கள்.)

மச் சித்தா
மத் ஏக சித்தாக –
விஷயாந்தரம் கலசாமே அவனையே ஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகை –

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஒரு மிதுனைத்தை விஷயீகரித்து இருக்கும் அதுவே வேஷம்
என்று அருளிச் செய்தார்கள் இறே ஆழ்வார்கள் –

(பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –-முதல் திருவந்தாதி -67-)

இத்தை ஒழிந்தவை எல்லாம் வியபிசாரமே -என்கை –
தேவதாந்தரங்களைப் பற்றிய ஜ்ஞானம் வ்யபிசாரம் –
பிரகிருதி பிராக்ருதங்களைப் பற்றிய ஜ்ஞானம் வியபிசாரம் –
இவ் விஷயம் தன்னை பிரிய பிரிதிபத்தி பண்ணும் ஜ்ஞானமும் வியபிசாரம் -என்கை –

மத் கத பிராணா —
ஆவியை அரங்க மாலை –என்கிறபடியே
தத் கத பிராணனை வுடையராய் இருக்கை –

(ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -திருக் குறும் தாண்டகம் -12-)

பிராணன் தத்கதையாய் இருக்கை யாவது –
அவனோடு கூடின போது சத்தை உண்டாய் -பிரிந்த போது –
மோஹம் கதையாய் இருக்கை –

(தானான தன்மையும் இல்லாமல் நாயகி பாசுரங்களாகவும் இல்லாமல் திருத்தாயார் பாசுரங்களாகவே இரண்டாம் பத்து)

போத யந்த பரஸ்பரம் –
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –என்று
கேட்டு தரித்தல்

கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -என்று
சொல்லி தரித்தலாம்படியாய்
இருக்கை-

(வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே- பெரிய திருமொழி 9-4-5-)

(ஒளி வண்ணம் வளை சிந்தை*  உறக்கத்தோடு இவை எல்லாம்* 
எளிமையால் இட்டு என்னை*  ஈடழியப் போயினவால்* 
குளிர் அருவி வேங்கடத்து*  என் கோவிந்தன் குணம் பாடி* 
அளியத்த மேகங்காள்!*  ஆவி காத்து இருப்பேனே*        )

தன்னுடைய வ்ருத்த கதனம் பண்ணி தரித்தும்
தோழிமார் வார்த்தை கேட்டும் தரித்தும் -இறே இப் பத்து செல்கிறது –

முதல் பத்து -பராசர பராசர்யாதிகளான ரிஷிகளுடைய ரீதியாய் இருக்கும் –
ஜ்ஞானப் பிரதானராய் இறே அவர்கள் இருப்பது –

நடுவில் பத்துஆழ்வார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராய் இறே இவர்கள் இருப்பது –

மூன்றாம் பத்துபிராட்டிமார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
வ்ருத்த கீர்த்தன ரூபமாய் இறே இருக்கும்-

(சீதா பிராட்டி த்ரிஜடை திருவடியிடம் பேசுவது போல் இருக்குமே இப் பத்தும்)

இதுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில்
தான் ஹிதம் கேட்கும் அவஸ்தை அல்லாமையாலே
மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -என்று
கொண்டாடி கடக்க நின்றாள் திருத் தாயார் –

அவன் இவ் வாற்றாமை ஸ்வ க்ர்ஷியின் பலம் ஆகையாலே
அதிலே திருப்தனாய்  கடக்க நின்றான் –

இவள் தன் ஆற்றாமையாலே அவசன்னையாய் கிடந்தாள்  –

இவளுடைய தசையைக் கண்ட தோழி –
ஏவம் பஹூ விதாம் சிந்தாம் சிந்த யித்வா -என்று-
திருவடி விசாரித்தாப் போலேயும் இவளும்-ஹிதம் சொல்லுகை அசஹ்யமாய் இருந்தது –

(மஹா மதிம் ஸம் ஸ்ரவம் மதுரம் வாக்கியம் வைதேஹி மட்டும் கேட்க்கும் படி பலவாறு ஆராய்ந்து திருவடி பேசினார் அன்றோ)

இனி இவளை தரிப்பிக்கும் விரகு ஏதோ என்று பல முகங்களையும் சிந்தித்து –
வ்ருத்தமான சம்ஸ்லேஷத்தை ஸ்மரிப்பிக்கவே இவள் தரிக்குமோ என்று பார்த்து –
இயற்கையால் புணர்சியாகையாலே (காந்தர்வ விவாஹம் )நானும் சந்நிஹிதை இல்லாமையாலே –
அவன் வந்தபடி என் –
உன்னோடு கலந்தபடி என் –
பின்பு பிரிகிற போது -உனக்கு ஆஸ்வாசமாக சொல்லிப் போன வார்த்தை தான் என்ன
வ்ருத்த கீர்த்தனம் ஆகையால் தரித்து அவற்றை இவளுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது –

(மூன்றாம் சதகத்தில் )முதல் பாட்டில் –
அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து-
கைப்பட்ட வஸ்துவை கடலிலே பொகட்டாப் போலே –
அந்யதா பிரதிபத்தி பண்ணி இழந்தோம் கண்டாயே -தோழி -என்கிறாள் –

அவன் வந்தபடி என் என்று தோழி கேட்க -பிரதமத்திலே வந்தபடியைச் சொல்கிறாள் –

இப்பாட்டு –
சக்கரவர்த்தி திருமகன் தலை மகனாய்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் தலை மகளாக
ப்ரவர்த்தம் ஆகிறது –

—————————————————————————–

(இந்த ஸ்ரீ பட்டர் நிர்வாஹத்தை ஸ்ரீ பரகால தாஸர் -என்னும் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸிஷ்யர் ஏடு படுத்தி அருளினார் என்பர்)

கஜ்ஜௌகார சௌகந்த்ய வஹாளக நிகும்பனம்
விவ்ர்ணோதி குரோ ப்ராப்தம் கலிவித் வேஷி கிங்கர -(கலி கன்றி தாஸரான அடியேன் -இவரே அருளிச் செய்தது )

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்யும் அவதாரிகை –
நாயகனோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமல் நோவு படுகிறாள் ஒரு நாயகி
உபாயத்தாலே உபவனத்திலே பூக் கொய்ய என்று புறப்பட
நாயகனும் வேட்டைக்கு என்று வர
அங்கே உபாயம் பலித்து சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தமாய்
நாயகனும் போன அளவிலே இத்தைக் கடிப்பித்து தலைக் காவலாக நின்ற
தோழி வந்து கிட்டி அவன் செய்தபடி என் என்று கேட்க
அவளுக்கு பிரவர்த்தமான படியை நாயகி சொல்கிறாள் –
இப்பாட்டால் –

1-முதல் பத்து -ஆழ்வார் தாமான பாசுரம்-
இரண்டாம் பத்து -திருத் தாயார் பாசுரம்-

மூன்றாம் பத்து -பெண் பிள்ளை பாசுரம்

2-முதல் பத்து மச் சித்தா என்கிறது –
இரண்டாம் பத்து மத் கத பிராணா என்கிறது –

மூன்றாம்பத்து -போதயந்த பரஸ்பரம் -என்கிறது –

3-முதல் பத்தாலே திருமந்தார்த்தம் சொல்லிற்று –
இரண்டாம் பத்தாலே த்வயார்த்தம் –
மூன்றாம் பத்தாலே சரம ச்லோகார்த்தம் –

4-முதல் பத்தாலே –பக்தி 
இரண்டாம் பத்தாலே -பிரபத்தி 
மூன்றாம் பத்தாலே –புருஷாகாரம்

5-முதல் பத்தாலே –பிரண வார்த்தம்  
இரண்டாம் பத்தாலே –நமஸ் சப்தார்த்தம் –
மூன்றாம் பத்தாலே –நாராயண சப்தார்த்தம்-

6-முதல் பத்திலே –அகாரார்தம்-
இரண்டாம்பத்திலே – உகாரார்தம்-
மூன்றாம் பத்திலே –மகாரார்தம் –

7-முதல் பத்தாலே –அதர்சனே தர்சன மாத்ர காமா -என்னும் அர்த்தம்
இரண்டாம் பத்தாலே –த்ரஷ்டா பரிஷ்வங்க ரசைக லோலா -என்னும் அர்த்தம்
மூன்றாம் பத்தாலே –ஆலிங்கதாயம் புநராய தாஷ்யாம் ஆசாஸ் மஹே விக்ரஹ யோர பேதம் –
என்னும் அர்த்தம் சொல்லிற்று –

முதல் பத்து ஆழ்வார் பாசுரமான படி என் என்னில் –
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என்னும் பாசுரம் ஆகையாலே

இரண்டாம் பத்து –திருத்தாயார் பாசுரமான படி எங்கனே என்னில் –
என் குடங்கால் இருக்க கில்லாள்
-என்றும்-
பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள்
-என்றும் சொல்லுகையாலே –

மூன்றாம் பத்து பெண் பிள்ளை பாசுரமானபடி என் என்னில் –என் முன்னே நின்றார் -என்றும் –
தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்
-என்றும்-
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
-என்றும் -சொல்லுகையாலே

மச் சித்தா -என்றபடி என் என்னில் –
இமையவர் தம் திரு வுருவே எண்ணும் போது -என்றும்
அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை
மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல்
வாழலாம் மட நெஞ்சமே -என்றும் சொல்லுகையாலே

மத் கத பிராணா-என்றபடி என் என்னில் –
நெஞ்சுருகி கண் பணிப்ப நிற்கும் சோரும் -என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-என்றும் சொல்லுகையாலே

போத யந்த பரஸ்பரம் -என்றபடி என் என்னில்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி -என்றும்
வரை வுருவில் மா களிற்றைத் தோழி என் தன பொன் இலங்கு
முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும் சொல்லுகையாலே –

திருமந்த்ரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
என்னுருவில் நின்ற வெந்தை -என்று சொல்லுகையாலே பிரணாவார்த்தம் சொல்லிற்று-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்று சொல்லுகையாலே நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்று –
மின்னுருவாய் முன்னுருவில் தொடங்கி அனலுரு வறுதியாகநாராயண சப்தார்த்தம் சொல்லிற்று –

த்வயார்த்தம் சொன்னபடி என் என்னில் –
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தாய் -என்றும் –
திருமாலைப் பாடக் கேட்டு -என்றும் –ஸ்ரீ மத் பதார்த்தம் சொல்லுகையாலும் –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் – என்று தொடங்கி-
துன்று குழல் கரு நிறத்து என் துணையே –என்கிற அளவாக நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –

அடி இணையும் கமலவண்ணம் –என்று சரண சப்தார்தம் சொல்லுகையாலும் –

இது செய்தார் -என்றும்
பேர் பாடி -என்றும் சரண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –

நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்றும்
நீராடப் போனாள் -என்றும் பிரபத்யே சப்தார்த்தம் சொல்லுகையாலும்

பாவை மாயன் மொய் யகத்து இருப்பாள் -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்றும்
உத்தர கண்டத்தில்
ஸ்ரீ மச் சப்தார்த்தம் சொல்லுகையாலும்

பாரை யுண்டு -இத்யாதியாலே உத்தர கண்டத்தில் நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும்

பேர்பாடி தண் குடந்தை நகரும் பாடி -என்று நமஸ் சப்தார்த்தம் சொல்லுகையாலும்-

சரம ஸ்லோகாரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
கை வளையும் மேகலையும் காணேன் -என்றும்
இரு கையில் சங்கு இவை நில்லா -என்றும் -சொல்லுகையாலே
சர்வ தர்ம பரித்யஜ்ய -த்தின் அர்த்தம் சொல்லுகையாலும்

கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்றும்-
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி இங்கே வந்து -என்றும்
கையும் சங்குமாய் கொண்டு சந்நிஹிதம் ஆகையாலே
மாம் ஏகம் பதார்த்தம் சொல்லுகையாலும்

என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும்
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேன் –என்றும்-
சரணம் -வ்ரஜ -என்கிற பதங்களின் உக்தமான அர்த்தத்தை அனுஷ்டான பர்யந்தமாக சொல்லுகையாலும்

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே -என்றும்
அஹம் சப்தார்த்தம் சொல்லுகையாலும்

அருளாய் -என்கிற இடத்தில் என்னை அருளாய் என்ன வேண்டுகையாலும்
த்வா -என்கிற பதார்த்தம் சொல்லுகையாலும்

தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற பதங்களின் அர்த்தம் சொல்லுகையாலும்

அருளாய் -என்கிற இத்தால் மாஸூச -வினர்த்தம் சொல்லுகையாலும்

பக்தி சொன்னபடி –
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -என்றும் –
காரணந்து த்யேய
-என்றும்
தஜ்ஜலா நீதி சாந்த உபாசீத -என்றும்
காரண வஸ்து உபாஸ்யம் என்னும் இடம் சொல்லுகையாலும்

மந்தரத்தால் என்றும் வாழ்த்தியேல் -என்றும்
த்ருவ அனு ஸ்ம்ருதி
 சொல்லுகையாலும் –

பிரபத்தி சொன்னபடி –
அணி யரங்கம் ஆடுதுமோ தோழி -என்று
நாயக சம்ஸ்லேஷத்துக்கு உபாயம் சிந்தித்தாலோ என்று தோழியை கேட்கையாலும்

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் – என்று சிந்தித்த உபாயாத்தை அனுஷ்டிக்கையாலும்–
புருஷகாரம்
சொன்னபடி

பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து புலவி தந்து –
என்று ததீயர் புருஷகாரமாக சம்ஸ்லேஷித்தபடி சொல்லுகையாலே –பிரணாவார்த்தம் சொன்னபடி –

என்னுருவில் நின்ற வெந்தை -என்றும்
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்று
சேஷி சேஷ சீஷத்வம் மூன்றும் ஓர் அஷரமாய் நின்ற படியும் –
அகார உகார மகார இதி -என்று அஷர த்ரயமும் ஒன்றானபடி சொல்லுகையாலே –
நமஸ் சப்தார்தம் சொன்னபடி –

என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்
என் சிறகின் கீழே அடங்கா பெண் பெற்றேன் -என்றும் –
இப்புடைகளிலே சொல்லுகையாலே மமகார நிவர்த்தி சொல்லிற்று –

நாராயண சப்தார்த்தம் சொன்ன படி –
வண்ண -என்கிற பாட்டும்-
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று
இப் புடைகளிலே ஆயுத ஆபரண விக்ரஹம் நாராயண சப்தார்த்தமான
பரத்வ சௌலப்யாதிகள்-சொல்லுகையாலே-அகார்தார்தம் சொன்னபடி –

வற்புடைய -என்கிற பாட்டில் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
அவ ரஷணே-என்கிற தாத்வர்த்தமான ரஷகத்வம் சொல்லுகையாலே-உகார்த்தம் சொன்னபடி –

நெஞ்சுருகி -என்கிற பாட்டாலே
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் ஏக காந்தத்வம் சொல்லுகையாலே மகாரார்த்தம் சொன்னபடி –

அவர் நிலைமை கண்டும் -என்றும்
தேவர் என்று அஞ்சினோம் -என்றும்
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் -இத்யாதிகளாலே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வாதிகள்   -சொல்லுகையாலே

அதர்சனே தர்சன மாத்திர காமா -என்கிறபடி என் என்னில்
எங்குற்றாய் எம்பெருமான் -என்று அவனை காண வேண்டும் என்று ஆசைப் படுகையாலே

த்ர்ஷ்டே பரிஷ்வங்கர சைகலோலா -என்றபடி என் என்னில் –
முற்றாரா வன முலையாள் -என்று துடங்கி நாச்சியார் திரு மார்பிலே அணைத்துக் கொண்டு இருக்கிறது கண்டு
தானும் அப்படி இருக்க வேணும் என்று அறுதி இட்டாள் என்கையாலே –

ஆஸாஸ் மஹே விக்ரஹே யோர பேதம் – என்கிறபடி என் என்னில் –
யான் காண்பான் கண்ட போது  புள்ளூரும் கள்வாநீ போகல் என்பன்-என்று –
என்னை விட்டு நீ போகாதே கொள் என்று அபேஷிக்கையாலே –

8-முதல் பத்திலேஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொன்ன படி –
முதல் பாட்டு துடங்கி ஸ்பஷ்டம் –

இரண்டாம் பத்தில்விஸ்லேஷித்து கலங்கின படி –
பட்டுடுக்கும் என்று துடங்கி -பெண் பிள்ளையினுடைய கிலேசம் சொன்ன -தாயார் பாசுரத்தாலே கண்டு கொள்வது –

மூன்றாம் பத்தில் கிலேசம் தீர்ந்து சம்ஸ்லேஷ வியாபாரம் பண்ணினபடி –

(“அதர்சநே தர்சநமாத்ரகாமா; த்ருஷ்ட்வா டரிஷ்வங்கரஸைகலோலா;,
ஆலிங்கிதாயாம் புநராயதாக்ஷயாம் ஆசாஸதே விக்ரஹயோரபேதம்“
(கண்ணாற் காணாதளவில் ஒருதடவை கண்ணாற் காணப்பெற்றால் அமையும் என்று காதலிப்பர்கள்;
அப்படியே காணப்பெற்றுவிட்டால் ஒருகால் அணைத்துக் கொள்ளவேணும் என்று காமுறுவர்;
அப்படியே அணைத்துக்கொள்ளவும் பெற்றால் ‘இரண்டு சரீரமாக இருப்பதேன்?
இரண்டுடலும் ஓருடலாக ஒற்றுமைப்பட்டாலாகாதோ? என்று அபேதத்தை விரும்பிப் போருவர்கள்.) என்றொரு ஸுபாஷிதமுண்டு.
இதுவும் அடைவே மூன்று பத்துக்கும் வாக்கியார்த்தமாக அமையும். எங்ஙனேயென்னில்,
முதற்பத்தில் “எங்குற்ற யெம்பெருமானுன்னை நாடி ஏழையேனிங்ஙனமே யுழிதருகேனே“ என்று
அவனைக் காணவேணுமென்னுமாசை கிளர்ந்திருக்கின்றமை தோற்றச் சொல்லுகையாலே
* அதர்சநே தர்சநமாத்ர காமா; * என்றபடியாகிறது.
இரண்டாம் பத்தில் “முற்றாராவனமுலையாள்பாவை, மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாளஃதுங்கண்டு மற்றாள்“ என்று
நாச்சியாரைப்போலே தானுந் திருமார்பிலே அணைய வாசைப்பட்டமை தோற்றச் சொல்லுகையாலே
* த்ருஷ்ட்வா பரிஷ்வங்கரஸைகலோலா; * என்றபடியாகிறது.
இனி‘ இப்பத்தில் “கள்ளூரும் பைந்துழாய்மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது,
புள்ளூரும்கள்வா! நீ போகாமைவல்லேனாய்ப் புலவியெய்தி என்னில் அங்கமெல்லாம் வந்தின்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே“ என்றும் சொல்லுகையாலே * ஆசாஸதே விக்ரஹயோரபேதம் * என்றபடியாகிறது.)

——–

மை வண்ண நறும் குஞ்சி துடங்கி –
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு —எழில் ஆலி என்றார் தாமே –என்றும்
புனல் அரங்கமூர் என்று போயினர் -என்றும் இத்யாதிகளாலே சொல்லுகையாலே –
காந்தர்வேண விவா ஹேன பாஹ்வோ ராஜர்ஷி கன்யகா
ஸ்ருயந்தே பரிணிதாஸ்தா பித்ர்ப்ச்சாபி நந்திதா -என்கிறபடியே
உபய அனுராக நிபந்தனமாக நாயக நாயகிகளுக்கு சம்ஸ்லேஷம் பிரவர்த்தமாக

இத்தைக் கேட்ட தாய் மார்
நங்காய் நம் குடிக்கு இது நன்மையோ என்ன -என்றும்
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் -என்றும்
அன்னை என்னோக்கும் என்று அஞ்சுகின்றேன் -என்றும் பயப்பட்டு –
நாயகன் பக்கல் செல்லாது ஒழிய

அவனும் சாசங்கனாய் –
இவள் பக்கல் நேர் -கொடு நேரே வரக் கூசி -இவள் அபிப்ராயம் அறிய வேணும் என்று
ச்வயந்தூத்யம் என்றும் பரதூத்யம் என்றும் இரண்டாகையாலே –
முதல் கலவி கலந்த படியாலே பர தூத்ய அபேஷை இல்லை –

ச்வயந்தௌத்யம் பண்ணத் தேடி –
குசூமாந்யவசின்வந்தி சசார மதி ரேஷண -என்றும்(பூ பறிக்க போனவள் -பொன்னாலான மாய மான் போல் மான் விழியால் நோக்கி)
சத்யம் புரீபரி சரெபி – (இதுவோ காடு -கேட்டுக்கொண்டே போக பெருமாளே கண் கலங்கி )என்றும் ஊரைச் சூழ்ந்த உபவனத்தே புறப்பட்டு
இவள் பூ கொய்யப் போகிறாள் என்று கேட்டு –

தத ஸ்தவ வநதம் சாப மாதா யாத்ம விபூஷணம்
ஆபத் த்யச கலா பௌ த்வௌ ஜகா மோதக்ர விக்கிரம – என்று

(ஆரண்ய -அணிகலனான வளைந்த வில்லை ஏந்தி -அம்பறா துணியைக் கட்டிக்கொண்டு சென்றான் )

வேட்டை வித்யாதரனாக எடுத்துக் கட்டின மயிரும்
பிடரியிலே தழைந்தலைகிற குழலும் -இறுக்கின சாணமும் -கட்டின கச்சும்-

முன்னே உடுத்த உடைத் தோலும் -இடக்கையிலே கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும் -பெரு விரலிலே சாடின சரடும்
இடக்கையிலே நடுக்கொடத்தப் பிடித்த வில்லும் -வலக்கையில் தெரிந்து பெருக்கின வம்பும் –
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்க் கொண்டு – –

வேட்டைக்கு என்று புறப்பட்டு –இவள் பூ கொய்கிற உபவனத்திலே செல்ல

அவளும்-
காமஸ் ச அஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே புருஷனில் அதிசயித்த ஆசை உடையவள் ஆகையாலே
எங்கனயோ அன்னைமீர்காள் -என்கிற பாட்டை அனுசந்தித்து –
செல்கின்றது என் நெஞ்சமே -என்றும்
அன்னை என் செய்கிலென் ஊர் என் செய்கிலென் விடுமினோ –
என்று கலக்கம் அற்று மன்றாடி –

(எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-)

(அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-)

அணி அரங்கம் ஆடுதுமோ தோழி -என்று தோழியைப் பார்த்து
சுனையாடல் என்றும் –
புனல் ஆடல்
என்றும் -சம்போகத்துக்கு பேராகையாலே –
பயலான பேச்சாலே கேட்க

அவளும் இவள் அபிப்ராயஜ்ஞள் ஆகையாலே
பூ கொய்ய என்று கொண்டு போக விட்ட தாய் மாரும் ஊரவரும்
வடும்பிடுகிறார் களோ என்று தலைக் காவலாக வழியிலே போய் நிற்க
போக உபோத்காதமாக உபய அபிப்ராய ஜ்ஞ்ஞானம் பிறந்து
சம்ஸ்லேஷமும் பிரவர்த்தமாய்
புனல் அரங்கம் ஊரென்று போயினர் – என்று நாயகனும் போய்
இவளும் மீண்டு -உயிர் தோழியானவள் செய்த படி என் என்று கேட்க –
பிறந்த வ்ருத்தாந்தத்தை  தோழிக்கு சொல்கிறாள்–இப்பாட்டில்

———————————————————————————————-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

பதவுரை

மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ-கறுத்த நிறமுடைத்தாய் மணம் மிக்கதாய்
அலகல காயிருந்துள்ள திருக் குழற் கற்றையானது பின்னே அலையவும்
இரு பாடு-இருபுறத்திலும்
மகரம் சேர் குழை–மகர குண்டலங்கள்
இலங்கி ஆட-அசைந்து விளங்கவும்
எய் வண்ணம் வெம் சிலையே துணை ஆ–ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்விய வில்லையே துணையாகக் கொண்டு
இங்கே-இந்தத் திருமணங்கொல்லையிலே
இருவர் ஆய் வந்தார்-(தாமும் இளைய பெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்;
(அவருடைய)
கை-திருக் கைகள்
தாமரை வண்ணம்-செந்தாமரை ப் பூப் போலு மழகுடையன;
வாய்–திருப் பவளமும்
கமலம் போலும்–தாமரை யொக்கும்;
கண் இணையும்–திருக் கண்களும்
அரவிந்தம்–அத் தாமரையே
அடியும்-திருவடிகளும்
அஃதே-அந்நத் தாமரையே;
அவ் வண்ணத்தவர்-அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய
நிலைமை-நிலைமையை
கண்டும்-கண்டு வைத்தும்
தோழீ-தோழியே!
அவரை-அவரைக் குறித்து
தேவர் என்று அஞ்சினோம்- பர தேவதை யென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே!

கறுத்த நிறத்தை யுடைத்தாய்
பரிமளம் மிக்கு இருப்பதாய்
அலகு அலகாய் இருந்துள்ள திருக் குழல் கற்றையானது பின்னே அலைய
இரு புறத்திலும் மகர குண்டலங்கள் அணிந்த திருச் செவிகள் பிரகாசித்துக் கொண்டு அசைந்து வர
எய்கையையே ஸ்வபாவமாக யுடைய வெவ்விய தனுஸ்ஸையே துணையாகக் கொண்டு
இந்த திரு மணம் கொல்லையிலே
தாமும் இளைய பெருமாளுமாய் -இருவராய் வந்தார்
வரவை எதிர்பார்த்து இருந்த என் முன்னே வந்து நின்றார்
அவருடைய திருக் கைகள் தாமரை புஷபத்தின் நிறம்
திருப் பவளமும் தாமரையை ஒக்கும்
திருக் கண்களும் தாமரை மலரின் நிறம்
திருவடிகளும் மலரின் நிறமே
அப்படிப்பட்ட திரு நிறத்தை யுடையரான அவர் ஸ்திதியைக் கண்டு வைத்தும்
பாங்கியே
அவரை பர தேவதை என்று பயப்பட்டோமே –

————————————————————————————-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய்–வந்தார் காண் –

வந்த போது இருந்த வமளி காண் –
ஸ்வாபாவிகமான வடிவு வழகும்
வை சேஷிகமான ஒப்பனை அழகும் –
காவல் துடிப்புமான
அப்பசும் கூட்டம் இருந்தபடி காண் –என்கிறாள் –

அன்றிக்கே
அவன் சீலத்தையும் அழகையும் கண்டு வைத்து
கைப் பட்ட பொருளை கடலிலே கவிழ்பாரைப் போலே
அன்யதா பிரதிபத்தி பண்ணி இழந்தோம் கண்டாயே தோழி
என்கிறாள் -ஆகவுமாம் –

மை வண்ணம் –
காளமேக நிபாஸ்யாமமான வடிவை
ஸ்படிகம் ஆக்கும்படியான திருக் குழலின் கறுப்பு இருந்தபடி –
திரு மேனிக்கு பரபாகமாய் இருக்கை –

நறும் குஞ்சி
நறுமை -பரிமளம்
அதி பரிமளிதமான குழல் –

தாபத் த்ரய துரரோடு விரஹதாப துரரோடு வாசி அற சர்வருக்கும் ஸ்ரமஹரமாம் படி காண் –
திருக் குழலின் பரிமளம் மிகுந்தபடி –

நரகே பஸ்யாம நஸ்து யமனே பரிபாஷித
கிம் த்வ்யா ந அர்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன
 (நரஸிம்ஹ புராணம் ஸ்லோகம் )–என்னக் கடவது இறே –

(கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-)

த்ருஷ்டி  பிரியமாய் இருக்கை அன்றிக்கே
நெஞ்சிலே ஸ்ரமம் எல்லாம் போம் படி காண் திருக் குழலின் பரிமளம் மிகுந்தபடி

குஞ்சி
திரள் திரளாக குழன்று இருக்கை அன்றிக்கே
அகலகலாக பிரிந்தது என்னலாம் படி காண்
திருக் குழல் தனித் தனியே சுருண்டு இருந்த படி –

கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளினுள்
கொண்ட நீல நன்னூல் தழை கொல் – என்று ஓர் இருளை சிஷித்து அது சத்ர்சம் இல்லாமையாலே –
அன்று மாயன் குழல் என்றார் இறே நம் ஆழ்வார் –
அஸ்திரமான இருள் சதைக ரூபமாய் இருந்துள்ள குழலுக்கு ச தர்சமாக  மாட்டாதே இறே
த்ருஷ்டி பிரியமாய் மநோஹரமாய் நித்ய அனுபாவ்யமான குழல் என்கை –

(கொள் கின்ற கோள் இரு ளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள் கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே–7-7-9-)

குழல் பின் தாழ –
ஸ்நிக்த்த நீல குடில குந்தளமான திருக் குழல் கற்றை பின்னே அலைய –

(கேசவ -பட்டர் -பிரசஸ்த- ஸ்நிக்தா -நீல -குடில)

பின் தாழ –
நீ பின்னே கண்டபடி என் என்ன –
பெருக்காற்றை எதிர் செறிக்க மாட்டாதாப் போலே
என்னுடைய சௌந்தர்ய அதரங்களைக் கண்டு நேர் முகம்
பார்க்க மாட்டாமையாலே முகத்தை திரிய வைத்தார் –
அப்போது கண்டேன் –என்கிறாள் –

முன்பு லலாட பர்யந்தமாய்ப் பின்பு அம்சவலம்பியாய் இறே திருக் குழல் இருப்பது –
சர்வ சக்திக்கும் எதிர் செறிக்க ஒண்ணாத படி இறே இவள் உடைய போக்யதை இருப்பது –

(ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||–ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் 35

ஸ்ரீ எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும்,
கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும், மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும்,
புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் …

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||-ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் 34

ஸ்ரீ எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின்
வரை வந்து தொங்குவதாலும், அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும்
அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் )

மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட –
அக் குழலின் இருட்சியாலே கண்கள் இருண்டு திரு முகம் தோற்றாது இருக்க
அத் தசையில் இரண்டு சந்தரன் உதித்தால் போலே காண் திரு மகரக் குழைகள் இருந்தபடி –

திருவடி பிராட்டி தேடுகிற தசையில் சந்த்ரோதயம் உதவினாப் போலே
திருக் குழலாலே இருண்ட திரு முகத்துக்கு இவை பிரகாசகமாக இருந்த படி –

இலங்கி –
அந்யோந்யம் பர பாகத்தாலே வந்த விளக்கத்தைச் சொல்கிறது –
திரு மகர குழைகள் திருக் குழலுக்கு ஆபரணமாக இருக்கிறதோ-
திருக் குழல் தான் திரு மகரக் குழைகளுக்கு ஆபரணமாக இருக்கிறதோ-என்று தெரியாத படியான
பர பாக ரசத்தை நீ காணப் பெற்றிலை காண் -என்கிறாள் –

(துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-)

ஆட
ஒரு கடல் அசைந்து வந்தால் போலே காண்-
வருகிற போது இரண்டு அருகும் திரு மகரக் குழைகள் அசைய வந்த படி –

அபிமத விஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகள் உண்டாகக் கடவதே -என்று
பட்டர் அருளிச் செய்வர் –

அங்கன் அன்றிக்கே
முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவது எத்தனை செய்தான்
இவள் ஸ்த்ரீத்வத்தை அழிக்க என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –

கூட வந்தார் ஆர் என்ன –
எய் வண்ண வெஞ்சிலையே துணையா –
கையும் வில்லும் துணையாக வந்தார் -என்கிறாள்

எய்கையே ஸ்வபாவமான வெஞ்சிலை –
எய்கை வம்ச தர்மமாகவே -(இஷ்வாகு குல தர்மம் -) இருக்கிறபடி –
முன் நம்மை சேர விட்டது வில்லே இறே என்று வில்லைத் துணையாக கொண்டு வந்தார் –
வில் இறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தவர் இறே –

ஒரு கா புருஷன் எடுக்கிலும் அவனை புருஷோத்தமன் ஆக்க வற்றாயும்
புருஷோத்தமனுக்கு அல்லது எடுக்க ஒண்ணாது இருக்கையும் -(சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை )
ஜமதக்னிக்கு பிறந்த பரசுராம ஆழ்வானுக்கும் புருஷோத்தமனாய் எடுக்க வேண்டிற்று இறே –
வெஞ்சிலையே- எடுத்து எய்யுமவனுடைய மனஸ் சஹகாரமும் வேண்டாத வில்லு –

வெஞ்சிலை –
கையில் வில்லைக் கண்டவாறே எதிரிகள் குடல் குழம்பும்படி இருக்கை-
‘கையும் வில்லுமாய் இருக்கும் இருப்பைக் கண்டால் அனுகூலர் வாழும்படியாய் –
பிரதிகூலர் மண் உண்ணும்படியாய் இறே இருப்பது –

‘கையில் வில்லும் தாமுமாய் வந்த ஆண் பிள்ளைத் தனம் நீ காணப் பெற்றிலை காண் –
வீர பத்னி அகப்படுவள் வீரத்திலே இறே –
பாஹுவ ஹ்ருஷ்ட்வா வைதேஹி பர்த்தாரம் தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் பரிஷஸ்வஜே-(ஆரண்ய ) -என்னக்  கடவது இறே –

சிலையே துணையா –
1-சம்ஸ்லேஷிக்கைக்கு ஏகாந்தமாம்படி வந்தார் –
கண்டார்க்கு இங்கே வந்தது என் என்றால் -வேட்டையாட வந்தோம் என்றால் உத்தரம் இல்லாதபடி
தத் அனுகூலமான வில்லோடு இறே வந்தது
அவளும் புஷ்பாபசயத்தை வ்யாஜீ கரித்து இறே வந்தது-

சிலையே துணையா –
2-இவ்விடத்திலே பிரி நிலையாலே
கொங்கு உண்ட வண்டே கரியாக வந்தான் -என்னுமா போலே போகத்துக்கு வருகிறவர்
ஊரைத் திரட்டி கொண்டு வாராதே வில்லே துணையாக குறி வுடைமையோடே வந்தார் காண்-

சிலையே துணையா
3-ஆயுத சாலை போலே சொட்டை சரிகை தொடக்கமான கருவிகள் எல்லாம் கட்டிச் சுமவாதே
வில் ஒன்றையே
கொண்டு வந்தார் காண் –

சிலையே துணையா-4-போகத்துக்கு வருகிறவர் ஸ்ரக் சந்தன தாம்பூலாதிகள் போன்ற போக உபகரணங்கள் உடன் வரும் இத்தனை போக்கி
வில்லும் தான் என் என்னில் –
பூர்வ சம்ஸ்லேஷத்துக்கு தாய்மார் ஆகிற விடறு கட்டைகளாலே சில விரோதம் பிறந்து இன்னம் அடி தொடங்கி
ஹ்ருதய  பரீஷை பண்ண வேண்டுகையாலே
அதுவும் ஸ்வயம் தௌத்யத்தில் இழிந்து அதுக்கு அவகாசம் பாஹ்ய உத்யோனத்தில்
நானும் தோழி மாறும் பூ கொய்கிற இடத்தில் தாமும் வேட்டைக்கு என்று ஏகாந்தமாக வர வேண்டி அதுக்கு
வில் அபேஷிதமாகையாலே கொடு வந்தார் காண் —

இங்கே –
1-தான் நிதி எடுத்த பிரதேசம் இது காண் -என்கிறாள் –
கலந்து பிரிந்த பின்னும் மண்ணை மோந்து -கிடக்கலாம்படி காண் –
இலச்சினைப் பட நடந்த அடிச்சுவடு இருந்தபடி -(ஸம்ஸ்லேஷம் ஆகிய புதையல் கிடைத்த இடம் )

இங்கே –
2-என்று திரு மணம் கொல்லையைக் காட்டுகிறாள் –

இருவராய் வந்தார் –
1–சிலையே துணையா -என்று வைத்து –
இருவராய் வந்தார்
-என்கை -அசங்கதம் அன்றோ என்னில்
கையில் வில்லோபாதி இளைய பெருமாளும் நிரூபக பூதராய் இருக்கையால் சொல்லுகிறது –
ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே-

(லஷ்மணஸ்ய வீர்ய வான் -நித்யம் பிராணோ–இத்யாதி-சூர்ப்பணகை ராவணன் இடம் சொன்னவை
10 சொற்கள் -நிழலும் அடி தாறும் போல் -அன்பு கொண்டவன்- பக்தன் –

இவருக்கு குற்றம் செய்தவரைப் பொறுக்காதவன் -வலக்கரம் -வெளியில் நடக்கும் எப்போதும் உயிர் போல் இருப்பவன்
ஐந்துமே ராமனை இட்டே இவனைச் சொன்னவாறு
வெல்ல முடியாதவன்- வெற்றியை அடைபவன் -தடை அற்ற நடையை யுடையவன் -அறிவாளி- பலம் மிக்கவன் -வீரன்)

இருவராய் வந்தார் -என்று பிரியச் சொல்லுவான் என் என்னில் –
2-அணைக்கும் தோள் உடன் வந்தார் என்னவும் காட்டில் பிரியச் சொல்லிற்று ஆகாது இறே –
சம்ஸ்லேஷத்துக்கு வருகிறவன் படுக்கையோடு வருகிறது மிகை அன்றே –

இருவராய் வந்ததார் —
3–தேவ மனுஷ்யம் கலசி வந்தார் –
சேஷியாய் வந்தார் அல்லர் -சேஷ பூதராய் வந்தார் அல்லர் -சந்த்ர ஸூர்ய நேத்ர -இரு தன்மைகள் உண்டே

4-உபய ஆகாரத்தாலே வந்தார் என்னவுமாம் –
தம்முடைய காலை என் தலை மேலே வைக்கக் கடவதாக வந்து
என் காலை தம் தலை மேலே வைத்துக் கொண்டார் -என்கிறாள் –

பாணிக் க்ரஹணம் பண்ணும் போது சேஷியாய் இருக்கையும்
படுக்கையிலே முறை கெட பரிமாறுகையும் இறே இருப்பது –
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும்
ந சாஸ்திரம் நைவ ச க்ரமம் -ஆகவும் வேணும் இறே –

(கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்– ஸப்த பதி -அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன்)

அதவா
சப்தத்தை நியமித்து இருவராக வந்தார் என்னவுமாம்
5-தாமும் நாமுமே யாம்படியாக வந்தார் -என்கை-(இருவர் ஆவதற்காகவே தனியாக வந்தார் )

வந்தார் –
தாம் இருந்த இடத்திலே நாம் மடல் எடுத்துச் சென்று கிட்ட வேண்டும்படியாய் இருக்க
நாம் இருந்த இடத்திலே காண் தான் வந்தது -என்கிறாள்

அங்கன் இன்றியிலும்
கால் நடையிலும் அவர் நடை அழகை நீ காணப் பெற்றிலை காண் என்னவுமாம் –
நடைச் சக்கரவத்து பிடிக்க வேண்டும்படி காண் நடந்த நடை இருந்தபடி –

வந்தார்-என் முன்னே நின்றார் –
1-பெரிய த்வரை உடன் வந்தவர் -கடல் கண்டு தேங்கின திருவடியைப் போலே
என்னைக் கண்டு மேலிட மாட்டாதே தேங்கி என் முன்னே நின்றார் –

அன்றியே
2-தாம் முகம் பாப்பது எப்போதோ என்று -நான் நிற்க பிராப்தமாய் இருக்க –
இவள் நம்மை நேரே முகம் பாக்க வல்லளோ என்று பாரித்துக் கொண்டு நின்றான் காண் -என்கிறாள் –

நின்றார் –
3-கால் வாங்க மாட்டாதே நின்றார்-

4-ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நின்றார் என்னுதல்

5-கந்தவ்ய பூமி இல்லாமையாலே நின்றார்-என்னுதல் –

கை வண்ணம் இத்யாதி –
அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் –
பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது-
தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-

கை வண்ணம் தாமரை —
1-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –

2-வாய் கமலம் போலும் –
கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற –
இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று
இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –

3-கண் இணையும் அரவிந்தம்-
இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால்
குறையும் தலைக் கட்டும் கண் –

இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி
குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி
ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு –
அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –

4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று –
கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
-என்று கீழ் சொன்னால் போலே
இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே
அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –

அடியும் தாமரை -என்னாதே-
அடியும் அக்தே
-என்றது
உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

(கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்
வாக்ய பேதம் பண்ணுதலும்-அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.)

வந்த வரவை கேட்டாப் போலே சாஷாத் கரித்தாப் போலே இருந்ததீ -நீ பேசினபடி என்று தோழி சொல்ல
இது என் எனபது –
அவ் வண்ணத்தவர்
-என்னும் இத்தனை என்கிறாள் –
பசக்கி மோந்தேன் இத்தனை ஒழிய வந்த பிரகாரத்தையும் அவரையும் நம்மால் பேசப் போமோ-

நீ கேட்கையால் உனக்கு ஒரு த்ருஷ்டாந்தம் இட்டுச் சொன்னேன் இத்தனை ஒழிய
ஒரு த்ருஷ்டாந்தம் இட்டு சொல்லலாம்படி அன்று காண் அவர் வடிவு இருந்தபடி
அப்பிரகாரத்தை உடையவர் என்னும் இத்தனை காண் –

நிலைமை கண்டும்
1-நத்யஜேயம் -என்கிறபடி -என்னைப் பெற்றுத் தரித்தல்-
பெறா விடில் முடிதல் செய்யும்படியான ஸ்வ பாவத்தை கண்டு வைத்தும் –

அவர் நிலைமை
2-அவர் வடிவு அழகு இருந்தபடி இது
அவர் சீலம் இருந்தபடி இது
வ்யவசாயம் இருந்தபடி இது
இத்தனையும் கண்டு வைத்தும் –

கண்டும் –
1-முன்பு உன் வாயாலே கேட்டுப் போந்தேன் இத்தனை இறே
கேட்டாப் போலே கண்டு வைத்தும் –

கண்டும் –
2-நெடுநாள் சாதனானுஷ்டானம் பண்ணிக் காண வேண்டும் விஷயம்
அனாயாசேன கண்ணுக்கு விஷயமாய் இருக்கச் செய்தே -கிடாய் நழுவ விட்டது –

தோழீ-
அவர் வடிவு அழகு இருந்தபடியும்
வந்த வரவு இருந்தபடியும்
நின்ற நிலை இருந்தபடியும்
நீ காணப் பெற்றிலை காண் -என்கிறாள் –

அவரை –
நம்மை ஒழிய செல்லாதபடி நின்றவரை

நாம்
அவரை ஒழிந்த போது –அசந்நேவ -என்னும் படி இருக்கிற நாம் என்னுதல் –
அவரை ஒழிய செல்லாமையை வுடைய நாம் என்னுதல் –
ஏகாதிரிக்தம் அநேகம் -என்று சொல்லுகையாலே
தோழியையும் கூட்டி –நாம் –என்கிறாள்-

தேவர் என்று –
அதஸ்மின் ஸ்தத் புத்தி பண்ணி நாம் பரதேவதை என்று பிரமித்தோம் இத்தனை ஒழிய
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்று காண் அவர் நினைத்து இருந்தது –
நாம் சஜாதீய விஷயத்தே விஜாதீய புத்தி பண்ணினோம் இத்தனை காண்

ஆத்மானம் மானுஷம் மன்யே -என்னும் அவர் நினைவை விட்டு –
பவான் நாராயணோ தேவ -என்று வழிப் போக்கர் வார்த்தை யைப் பற்றினோம் இத்தனை காண் –

(பவான் -நாராயனோ தேவா -ஸ்ரீ மான் -சக்ராயுத- விபு -ஏக ஸ்ருங்கோ வராஹத்வம்- பூத பவ்ய அசுரர் நிரசன சீலன்
விளையாட்டுக்காக படைத்து -ஜகத் காரண பூதன்)

அஞ்சினோமே —
இறாய்த்தோமே-
அபய ஸ்தானத்திலே காண் -பய புத்தி பண்ணிற்று

நாம் அஞ்சினோம் -என்று ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் வார்த்தையாய் இருந்தபடி கண்டாயே –
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

இழவிலும் வாசனை விடாது இறே –

தோழி
உன் சந்நிதி இல்லாமை இறே நான் இழந்தது –
அவன் படியையும் என் படியையும் அறியும் நீ கூட நின்றாய் ஆகில்
என் ப்ராந்தியைப் போக்கலாய்த்து -என்கிறாள் –

(அவன் தன்மையையும் என் தன்மையையும் அறிந்த கடகர் இல்லாமல் இழந்தேனே என்கிறாள்)

————————————————————————————

மை வண்ண நறும் குஞ்சி –
அத் திருக் குழலின் நிறமும் மணமும் இருந்தபடி காணும் –

மை வண்ணம்
கார் வண்ணம் திருமேனி –என்கிற வடிவின் நிறம் ஸ்படிகம்
என்னும்படி காண் திருக் குழலின் இருட்சி இருந்தபடி –

மை வண்ணம் –
பா ரூபா -என்றும்
தேஜஸா ராசும் -என்றும் –
ஒண் சுடர் கற்றை -என்றும் –
சொல்லுகிற தேஜோ ரூபமான திரு மேனியில் நின்றும் கிளம்பினதொரு மை போலே இருக்கை –

மை வண்ணம் –
இத் திருக் குழலை கண்டவர்களுக்கு சர்வமும் பிரகாசிக்கும்படி -சித்தாஞ்சனமாய் இருக்கை –

மை வண்ணம் –
பிங்கள ஜடோதேவ -என்றும்
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -என்றும் சொல்கிற
ப்ரஹ்ம ருத்ராதிகள் மயிர் போலே
குராலாயம் ஏறி ஓடி இருக்கை அன்றிக்கே –
நீல குஞ்சித மூர்த்தஜம் என்றும் –
குழல் இருண்டு சுருண்டு -என்றாப் போலே
கண்டவர்கள் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே ச்யாமளமாய் இருக்கை –

(குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்* 
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (பெரியாழ்வார் -3-6-11))

சோபயன் தண்ட காரண்யம் தீப்தேன ஸ்வேன தேஜஸா -என்கிறபடியே
தன் நிறப்பாட்டாலே ஸ்ரீ தண்ட காரண்யத்தை மயில் கழுத்து சாயல் ஆக்கா நின்றது
என்றான் இறே ஸ்ரீ வால்மீகி பகவானும்

கேவலம் ரூபா சம்ஸ்கார மேயாய் -கந்த சம்ஸ்காரம் அற்று இருக்குமோ என்னில் –
நறும் குஞ்சி –
1-மல்லிகை செங்கழுநீர் தொடக்கமான வற்றால் நாற்றம் கொள்ளுகை அன்றிக்கே
ஸ்வ பாவத ஏவ ஸூகந்தமாய் இருக்கை –

நறும் குஞ்சி –
2-திரு மேனியும் இருண்டு திருக் குழலும் இருண்டு -இருந்தால் வைஷம்யம் தெரியாது இருக்கை அன்றிக்கே
நாற்றம் கொண்டு அறியலாய் இருக்கை –

நறும் குஞ்சி –
3-பரிமளிதமான – திருக் குழல்
தாப த்ரயாதுரரோடு விரஹ தாபாதுரரோடு வாசி அற
சர்வருக்கும் ஸ்ரமஹரமாம்படி காண்
திருக் குழலின் பரிமளம் மிகுந்தபடி –

நரகே பஸ்யாம நஸ்து யமனே பரிபாஷித
கிம் த்வ்யா ந அர்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன –என்னக் கடவது இறே –

வெறும் த்ருஷ்டி  பிரியமேயாய் இருக்கை அன்றிக்கே
நெஞ்சில் ஸ்ரமமும் போம் படி காண் திருக் குழலின் பரிமளம் மிகுந்த படி-

நறும் குஞ்சி
4-திருவடிகள் தொடங்கி திருமுடி அளவும் அபிமதமாய் இருக்க
முதல் அடியிலே இவள் திருக் குழலிலே அகப்படுவான் என் என்னில் –
பிரணய கலகங்களிலே காலிலே விழுந்த போதை செம்பஞ்சு குழம்பு அடையாளமாய் இருக்கையாலே
முற்பாடுடவது கண்ணிலே தோற்றிற்று ஆகவுமாம் –

அன்றிக்கே
நறும் குஞ்சி
5-நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கிறபடியே
பரிமள பிரசுரமாய் பரத்வ ஸூசகமான
திருத் துழாய் நாற்றம் கொடு போய் மூட்டிற்று ஆகவுமாம்

அன்றியிலே
நறும் குஞ்சி -என்று
6-தாம் சூடிக் கொடுத்த பூவின் பரிமளம் அழைத்துக் கொண்டதாகவுமாம் –

அன்றியிலே
நறும் குஞ்சி -என்று
7-இவள் பூர்வ சம்ஸ்லேஷமே தொடங்கி
துன்று குழல் கரு நிறத்து என் துணையே -என்று
வாய் வெருவி வாசிதம் ஆகையாலே ஆகவுமாம்

(கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்* 
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்* 
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்* 
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! –12-)

அன்றியிலே
நறும் குஞ்சி -என்று
8-சௌந்தர்யம் அரை வயிறாய் இருக்கை அன்றிக்கே –
விஞ்சித் தலைக்கு மேலே போகையாலே -என்னவுமாம் –

குஞ்சி
1-குடில குந்தள அலங்க்ர்தம் -என்றும்
கிஞ்சித மூர்ஜ்ஜிதம் (சுக சாரணர் லஷ்மணன் அடையாளத்தைச் சொன்னவாறு)-என்றும்
குழல் இருண்டு சுருண்டேறிய குஞ்சி -என்றும் சொல்லுகிறபடியே
கோரை போலே நாலுகை அன்றிக்கே பங்கி பங்கியாக வளைந்து இருக்கை –

அன்றிக்கே –குஞ்சி –என்று
2–குஞ்சியும் கொண்டையும் குடுமியும் -என்று -(நிகண்டு) அளகாக்ரம் துள்ளித் தூரி இருக்கை யாகவுமாம் –
நெறி மென் கூர்தல் குழையல்-(நிகண்டு )என்னக் கடவது இறே –

குஞ்சி குழல் ஓதி -என்று மயிருக்குப் பேராகவும் சொல்வார்கள் –
இவ்விடத்துக்கு அது உசிதம் அல்ல —மை வண்ண நறும் குஞ்சி -என்று குழலுக்கு விசேஷணம் ஆகையாலே –

அன்றிக்கே –குஞ்சி -என்று —
3-கேச சாமான்யத்தை நினைத்த போது –
மேலே எடுத்துக் கட்டின மயிரும் -அதற்கு சேஷமாக நான்றிப் பிடரிக் குழலையும் சொல்லுகையாலே
குஞ்சிக் குழல் -என்ன ஒண்ணும் –

குஞ்சிக் குழல் -என்று கிடக்கையாலே விசேஷணமாகக் கடவது –

திரள் திரளாக குழன்று இருக்கை அன்றிக்கே அலகலகாப் பிரித்து எண்ணலாம் படி காண்
திருக் குழல் தனித் தனியே சுருண்டு இருந்தபடி –

கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளினுள்
கொண்ட நீல நன்னூல் தழை கொல் – என்று ஓர் இருளை சிஷித்து அது சத்ர்சம் இல்லாமையாலே –
அன்று மாயன் குழல் என்றார் இறே நம் ஆழ்வார் –
அஸ்திரமான இருள் சதைக ரூபமாய் இருந்துள்ள குழலுக்கு ச்த்ர்சமாக மாட்டாதே இறே
த்ருஷ்டி  பிரியமாய் மநோ ஹரமாய் நித்ய அனுபாவ்யமான குழல் என்கை –

குழல் பின் தாழ –
1-ஸ்நிக்த நீல குடில குந்தளமான திருக் குழல் -கற்றைகள் பின்னே தாழ
முன்பு லலாட பர்யந்தமாயும் பின்பு அம்சவலம்பியுமாயும் இறே திருக் குழல் இருப்பது –

மயிரை ஏற வாரி முடித்த படியால் முதுகும் தலையும் வெற்றிமை பட்டு பருஷமாய் இராதபடி –
பிறகு வாளி சாத்தினாப் போலே பிடரிக்கே குழல் அலையா நின்றது –

பின் தாழ –
2-இவள் தான் மயிர் பட மாளுமாள் ஒருத்தி ஆகையாலே முகப்பிலே நின்று
க்லேசிப்பியாதே பிறகே ஒதுங்கா நின்றது ஆயத்து –
அனுசஞ்சரன் -(தைத்ரியம் பிருகு வல்லி)என்றும்
அக்ரத ப்ரயோ ராம சீதா மத்யே ஸூ மத்யமா ப்ரஷ்ட தஸ்து தனுஷ்ப் பாணி -லஷ்மணோ அனுஜகமஹா -என்றும்
ஸ்வரூப ப்ராப்தமாக இளைய பெருமாள் சேவித்தாப் போலே பிறகே சேவியா நின்றது ஆய்த்து –

(ஓங்காரமே நடந்தால் போல்
வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–)

பின் தாழ –
3-ஸ்வரூப பாரதந்த்ர்யங்கள் இரண்டும் தோற்றும்படி பிறகே ஆய்த்து தாழ்ச்சியும் உண்டாய் இருக்கிறபடி –

(சேஷத்வம் பின் புறம் பாரதந்தர்யம் தாழ்ந்து)

அபிமுகே மயி சௌஹர்த்த மீஷிதம் -(சாகுந்தலம் – )என்றும்
ஆயாந்த மதி ஹர்ஷிதம் -என்றும்
இவளை நோக்கி எதிரே வருகிற போது -பிறகும் குழலும் கண்ட படி என் என்னில்
பெருக்காற்றை எதிர் செறுக்க ஒண்ணாத போலே
என்னுடைய சௌந்தர்ய அதரங்களைக் கண்டு நேர் முகம் பார்க்க மாட்டாமையாலே-
முகத்தை திரிய வைத்தார் -அப்போது கண்டேன் என்கிறாள் –
சர்வ சக்திக்கும் எதிர் செறிக்க ஒண்ணாத படி இறே இவளுடைய போக்யதை இருப்பது –

அன்றிக்கே
4-எதிரே வந்து அவன் இவளுடைய ஆபிஜாத்ய சௌந்த்ர்யங்களுக்கு தோற்று புரிந்த அளவிலே கண்டால் ஆகவுமாம் –

அன்றிக்கே –
5-யோவா ம்ர்கம் ம்ர்கயதே விபிநஸ்த்த லீஷூ -என்று வேட்டைக்கு வருவான் ஆகையாலே
செடிகள் தோறும் புரிந்து புரிந்து ம்ர்க்ம் தேடுகிற அளவில் கண்டாள் ஆகவுமாம் –

அன்றிக்கே–6- களவின் கீழே புணர்ச்சிக்காக வருகிறான் ஆகையாலே வேற்று மனிசர்
காண்கிறார்களோ என்னும் பயத்தால் புரிந்து பார்க்கிற போது கண்டாள் ஆகவுமாம் –

இப்படி அவயவ சோபையில் அகப்பாட்டாய் இத்தனையோ என்ன
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கி யாட –
1-என்று ஆபரண சோபையிலும் அகப்பட்டேன் காண்-
குழல் அழகர் -என்கிறவனுடைய திருக் குழலின் அழகில் அல்ல அகப்பட்டது
பார்ஸ்வத்தில் திருக் காதுகளில் சாத்தின ஆபரண சோபையில் காண் அகப்பட்டேன் -என்கிறாள் –

அக் குழல்களின் இருட்சியால் கண்கள் இருண்டு திரு முகம் தோற்றாமல் இருக்க
அவ் விடத்தே இரண்டு சந்த்ரர்கள் உதித்தால் போல் காணும் திரு மகரக் குழைகள் இருந்த படி –
சந்த்ரோபி சாசிவ்ய மிவாச்ய குர்வன் தாரா கணைர்மத்யகதோ விராஜன்
ஜ்யோத்ஸ்னா விதாநேன விதத்ய லோக முத்தி ஷ்டதே நைக சஹஸ்ராமி -என்கிறபடியே
திருவடி பிராட்டியை தேடுகிற தசையிலே சந்த்ரோதயம் உதவினால் போலே
காண் திருக் குழலாலே இருண்ட திரு முக மண்டலத்துக்கு இவை பிரகாசகமாய் இருந்தபடி –

மகரம் சேர் குழை –
2-குழை -என்று ஆபரணத்துக்கு பேராய் –
அது தான் மகர ஆகாரமாயும் மயூர ஆகாரமாயும்
ஹம்ஸ
 ஆகாரமாயும் பஹூ விதமாய் இருக்கும் ஆகையாலே
அதில் மகரத்தோடே சேர்ந்த ஆபரணம் ஆகையாலே
மகரம் சேர் குழை -என்கிறது –
மகரம் சேர் குழை –

3-அந்த மயூர ஆகாரம் ஸூ ப்ரஹ்மண்யாதி பக்தர்களுக்கு சேரும் இத்தனை ஒழிய
பகவத் பக்தர்களுக்கு சேராது -(ஹம்ஸ ஆகாரம் பிரமனுக்கு )

மகரம் சேர் குழை
4-ஆனால் அது தான் மகரம் சேர்ந்த படி எங்கனே என்னில் –
காமனார் தாதை -என்கையாலே -பகவத் புத்ரனான காமனுடைய கொடி யாகையாலும் –
ஷீரார்ணவ வசஹ சாரியாகையாலும்
பிரதம அவதார சஜாதீயம் ஆகையாலும்
மிகவும் சேர்ந்து இருக்கும் என்றபடி –

மகரம் சேர் குழை –
5-அழகுக்கு கொடியும் கானமும் உடைய காமனுக்கு அடையாளமான கொடியைப் பறித்து
சாத்தினாப் போலே இருந்தது ஆய்த்து –
ஒரு காது சீலைக் குதும்பை -ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ -என்றபடியே
ஒன்றுக்கு மகரம் சேர் குழையும் ஒன்றுக்கு வேறு ஒன்றுமாய் இருக்குமா என்னில்

(சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சம் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலாமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை – 3-3 1- )

இரு பாடு இலங்கி யாட –
1-இரண்டு அருகும் உஜ்ஜ்வலமாக கொண்டு அசையா நிற்க –

இருபாடு இலங்கி யாட –
2-மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீச என்கிறபடியே
குந்தணத்தில் அழுத்தின முக்தா மணி ரத்னங்கள் பங்திபங்தியாக பக்கம் செய்து தோன்றுகையாலே
தன் அழகு காண்பார்க்கு தானே கை விளக்காய் கொண்டு அசையா நிற்கை –

(மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல் மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்-2
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் -இரு  சுடரை-3–பெரிய திருமடல் )

இருபாடு இலங்கியாட –
3-இதத்ச்தோ தத் ததிருஷ்டியாக கொண்டு புரிந்து பார்க்கையாலே காதும் பணியும் திரும்பி
பூர்வபாகா பரபாகங்கள் இரண்டும் உஜ்ஜ்வலமாம் படி அசையா நின்றது -ஆகவுமாம் –

இலங்கி யாட –
4-ஹீனரோட்டை சம்சர்க்கத்தில் இறே மாஸ்ரண்யமும் சோபமும் பிறப்பது –
காமனை விட்டு உடையவன் காதிலே சேரப் பெறுகையாலே உண்டான உத்கர்ஷத்தாலே உஜ்ஜ்வலமாக கூத்தாடா நின்றது –

இலங்கி –
5-அந்யோந்யம் பரபாகத்தால் வந்த இலங்குதலைச் சொல்லுகிறது –
திரு மகரக் குழைகள் திருக் குழலுக்கு ஆபரணமாக இருக்கிறதோ
திருக் குழல்கள் திரு மகரக் குழைக்கு ஆபரணமாக இருக்கிறதோ என்று தெரியாதபடியான
பரபாக ரசத்தை நீ காணப் பெற்றது இல்லை காண் -என்கிறாள் –

ஆட
6-ஒரு கடல் வடிவு கொண்டு நடந்து வந்தால் போலே காண் வருகிற போது
இரண்டருகும் திரு மகர குழைகள் அசைய வந்தபடி

அபிமத விஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகள் உண்டாகக் கடவதே -என்று
பட்டர் அருளிச் செய்வர்

அங்கன் அன்றிக்கே
முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவது எத்தனை செய்தான்
இவள் ஸ்த்ரீத்வத்தை அழிக்க என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –

இப்படி அவயவ சோபையும் ஆபரண சோபையும் ஆன சீர்மைக்கு காத்தூட்டும்படியான
பரிகர பலம் இல்லையோ என்ன –
எய் வண்ண வெஞ்சிலையே துணையா -வந்தார் –
1-புறம் காவலும் கூடக் கொண்டு வந்தார் காண் –

சிலையே துணையா -என்று
2-கையில் வில்லே துணையாக வந்தார் -என்கிறாள் –

எய் வண்ண வெஞ்சிலை
3-எய்கையே ஸ்வ பாவமான வெவ்விய சிலை -அதாவது
ஒரு தனம் படைத்தால் எய்தல் செய்ய வேண்டாதே
சரவர்ஷம் வவர்ஷா ஹ் -என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை -என்றும்
வாளி மழை பொழிந்த சிலை -என்றும் –
வில்லும் தானே எய்ய வற்றாய்
சத்ருக்கள் படுகையால் அவர்களுக்கு தாப கரமுமாய் இருக்கை –

எய் வண்ண வெஞ்சிலை –
4-ஒரு கா புருஷன் எடுக்கிலும் அவனை புருஷோத்தமன் ஆக்கவற்றாயும்-
புருஷோத்தமனுக்கு அல்லது எடுக்க ஒண்ணாது இருக்கையும் –
ஜமதக்னிக்கு பிறந்த பரசுராம ஆழ்வானுக்கும் புருஷோத்தமனாய் எடுக்க வேண்டிற்று இறே –
மழு வாளி சிலை வாங்கி
–என்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கின அளவிலே
புருஷோதமத்வம் போய் பழைய ரிஷி புத்ரனாய் சோகியாய் இறே போகின போது போன எளிவரவு
இத்தால் -எடுத்து எய்யுமவனுக்கு மனஸ் சஹகாரமும் வேண்டா என்கிறது-

எய் வண்ண வெஞ்சிலையே துணையா –
5-அன்றியே திவ்ய ஆயுதங்களுக்கு ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும் இருபடை மெய்யக் காட்டாமையாலே
திருமகரக் குழையோபாதி திரு வில்லும் ஆபரணமாகத் தரித்து வந்தார் என்னவுமாம் –
சிலை இலங்கு பொன்னாழி திண் படை தண் ஒண் சங்கம் -என்றும்-
ஆழியோடும் பொன்னர் சாரங்கம் உடைய அடிகளை இன்னார் என்றறியேன் -என்றும்
சேர்த்தி அழகிலே ஆழம் கால் பட்டு அறிவு கலங்கி ஈடுபட்டார்கள் இறே –

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

ததச் சர்ய வதனம் சாப மாதா யாத்மா விபூஷணம் (ஆரண்யம் -அணிகலனாக வளைந்த வில் -ஆத்ம விபூஷணம் )-என்னக் கடவது இறே

எய்வண்ண வெஞ்சிலை
6-எய்யக் கடவதாய்-ததஸ்துதம் சமயதி சித்ர கார்முகம் – என்றும்
எவ்வரி வெஞ்சிலை -என்றும் சொல்லுகிறபடியே
நாநாவித வர்ணங்களாலே வரி வரியாக சித்ரிதமாய் தர்சநீயமாய் இருக்கை –

வெஞ்சிலை –
கையில் வில்லைக் கண்டவாறே எதிரிகள் குடல் குழம்பும்படி இருக்கை
‘கையும் வில்லுமாய் இருக்கும் இருப்பைக் கண்டால் அனுகூலர் வாழும்படியாய் –
பிரதிகூலர் மண் உண்ணும்படியாய் இறே இருப்பது –
‘கையில் வில்லும் தாமுமாய் வந்த ஆண் பிள்ளைத் தனம் நீ காணப் பெற்றிலை காண் –
வீர பத்னி அகப்படுவள் வீரத்திலே இறே –
தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ர்ஷ்ட
வைதேஹி பர்த்தாரம் பரிஷஸ்வஜே
-என்னக்  கடவது இறே –

ராஷச வேட்டையாடின பெருமாள் உடைய யுத்தாஸ்ரம பரிக்லின்னமான திருமேனியிலே
ராஷச சரவராத வ்ரணரோபமான திவா ஔஷதமான காட ஆலிங்கனத்தை பண்ணி சத்தை பெற்றால் என்கிறது –
தம் -1–ராஷச பூயிஷ்டமான தேசத்திலே உன்னைக் கொடு போக அஞ்சுவேன் என்கிற த்வரை –

தம் –
2-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று பிராட்டியாலே ஆண்கள் முன்பாகவே உண்ட அன்று தொடங்கி திரு உள்ளத்திலே கறுவி இருந்து
பதினாலாயிரம் ராஷசரையும் ஆழி மூழையாக தரித்து ரத்த வெள்ளத்தே மிதக்க விட்டு
பிராட்டியை பிடித்துக் கொண்டு சேவகத்தை மூதலித்துக் காட்டி அருளினவரை –

தம் –
3-ஆதித்ய இவ தேஜஸ்வீ -(ஸூந்தர) இத்யாதியாலே வீரப் பாட்டுக்கு சிறு விரல் முடக்கும்படி அவதீர்ணர் ஆனவரை –

தம் –
4-படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும்படி யான சௌகுமார்யத்தை உடையவரை – –

தம் –
5-உகப்பாலே அடுத்துப் பார்க்கில் ராகமான தேஜஸ்ஸூ குலையும்படியான திருமேனியை உடையவரை –

தம் –
6-வீர ஸ்ரீ பரிணயமான மணக் கோலத்தோடு தர்ச நீயமான சௌகுமாராதி அதிசயத்தை உடையவரை –

தம் –
7-ரிஷிகளுக்கு பண்ணின பிரதிஞ்ஞை கடலோசை யாகாத படி
அது செய்து தலைக் கட்டுகையாலே பூர்ண மநோரதர் ஆனவரை

சத்ரு ஹந்தாரம் –
ரத்ன கசிதமான பொன்னரி மாலை போலே சத்ரு சர வ்ராத வ்ர்ணாங்கிதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவரை –

த்ர்ஷ்ட்வா –
ஆதபாச அபி பூதர் உடைய சீதள தடாகப் பிரவேசம் போலே ராஷச சர நிகராபி பூதமான திருமேனியை
தன் பூர்ண கடாஷமாகிற ஹிமா ஜலத்தாலே வழிய வார்த்து –

சத்ரு ஹந்தாரம் –
பிரதிபஷ நிரசனத்தால் வந்த புகருடைமை
சர்வ பூத ஸூஹ்ருத்தான சர்வேஸ்வரனுக்கு பிரதி பஷம் உண்டோ என்னில்
பத்தர் – இத்யாதி பிரக்ரியையாலே ஆஸ்ரித விரோதிகளே தனக்கு விரோதிகளாம் இத்தனை -இறே

(ஞானி ஆத்மைமேவ மேதம் -மம பிராணா ஹி பாண்டவ-பத்தராவிப்பெருமாள் )
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

மஹர்ஷீனாம் ஸூ காவஹம் –
1-யுத்த ப்ராரம்பம் தொடங்கி –கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மகர்ஷிகள் உடைய பயம் தீர சத்ருக்களை கட்டடங்க கொன்று விட்டு அவர்களுக்கு ஸூகவஹராய் உள்ளவரை –

மஹர்ஷீனாம் ஸூகாவஹம்–
2-தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு சுகத்தை பண்ணி தாமுடைய சத்திக்கு ஆபாதகமானவரை –

பபூவ-சத்தை பெற்றாள் –மாலையும் மணமும் போலே -அத்யந்த ஸூகுமாரமான விக்ரஹத்தையும் ஸ்வ பாவத்தையும் உடையராய் இருக்கிற பெருமாள் கடினமான காத்ரங்களையும் ஸ்வ பாவங்களையும் உடைய முரட்டு ராஷசரோடு யுத்தம் பிராரம்பித்த போதே தொடங்கி
பிரேம அதிசயத்தாலே சத்தை மாண்டு கிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒரு தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –

ஹ்ர்ஷ்டா
தர்மி உண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இறே
ராம சௌந்த்ர்யத்தை முழுக்கக் கண்டு திரு உள்ளத்தில் இருந்த களிப்பு புற வெள்ளம் இட்டபடி –

வைதேஹீ –
1-ஐயர் வயிற்றிலே பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இறே –

வைதேஹீ –
2-இக் குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே –

வைதேஹீ-
3-இந் நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு இவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் கிடையாதே –
அவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் இல்லையாகில் வீர்ய சுல்கமான இவ்வாகாரம் கூடாதே –

வைதேஹீ –
4-தனுர்ப் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இற்றை நாள் ஆகாரம் கண்டால் என் படுகிறாரோ –

வைதேஹீ
5-ரூப ஓவ்தார்ய குணைஹி பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரிணாம் -என்கிறபடியே(பும்ஸாம்-ஆண்களையும் )
சர்வ லோக ஆகர்ஷகமான இந் நிலையை -ஐயரை ஒழிய நான் காண்பதே -என்று பித்ர் ஸ்ம்ர்த்தி பண்ணுகிறாள் –

பார்த்தாராம்
பாணி க்ரஹண வேளை தொடங்கி -பதித்தவ பிரதிபத்தி பண்ணிப் போந்தேன் –
இப்போது இறே தாத்வர்த்தம் ஜீவித்தது –

பரி ஷஸ்வஜே –
சஸ்வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
ரி ஷஸ்வஜே -1–பூரணமாக தழுவினாள்-
பரி ஷஸ்வஜே -2–பர்யாப்தமாக தழுவினாள் –
பரி ஷஸ்வஜே –3-திருமேனியில் தழும்பு மாறும் அளவும் தழுவினாள் –
பரி ஷஸ்வஜே -4–சர வ்ரணங்களால் வந்த தழும்பு மாறும் அளவும் திரு முலைத் தடங்களால் வேது கொண்டாள் –
தான் கைக் கண்ட மருந்து இறே -சர வர்ணங்களுக்கு ஆலிங்கனம்
ஔஷதமாம் இடத்தில் -ஜந்துடன் ஞானவான்களுடன்  வாசி இல்லை இறே –
(மன்மதன் )அந்தரங்கன் உள்ளூற எய்த புண்ணுக்கு மருந்தான இது தோல் புரையே எய்த புண்ணுக்கும்
மருந்தாக சொல்ல வேணுமோ என்று இருந்தாள் –

ஒரு கொடியாகில் கொள் கொம்பை தழுவி அல்லாது நில்லாது இறே -(போது அமர் செல்வக் கொழுந்து )

பார்த்தாராம் பரிஷஸ்வஜே –
5-நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்தவ ஆகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால்
தத் ஆதாரமாகப் படர்ந்து அத்தை மூடி அக் கொள் கொம்பை சிறப்பித்து கொண்டால் அல்லது
கொடிக்கு ஸ்வ பாவம் இல்லை இறே -(தர்ம ஸ்லோகம் பெண் கணவன் உடன் கூடி நின்றே உயிர் வாழ வேண்டுமே)

தம் -என்கிற பதம் -பெருமாள் உடைய சர்வாதாரத்தைக் காட்டுகிறது –
த்ர்ஷ்ட்வா -என்கிற பதத்தாலே –
பெருமாள் உடைய ஆகாரங்களை எல்லாம் நேராக காண வல்லாள் பிராட்டி -என்கிறது –

சத்ரு ஹந்தாராம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம் -என்கிறவற்றால்
தன்னோடு குடல் துவக்குண்டான சேதனருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
பண்ணின போது அல்லது அவரைக் காண கண் இல்லை -என்கிறது –
பபூவ -என்கிற இத்தால் -அவரைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –
ஹ்ர்ஷ்ட -என்கிற இத்தால் -தர்மி உண்டானவாறே தர்மம் குடி புகுந்தது என்கிறது –
வைதேஹீ -என்கிற பதத்தால் ஹேது பூதர் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தி சொல்கிறது –
பர்த்தாராம் -என்று –பிதுர்த் தச குண மாதா கௌரவேண  -என்று
புத்திர ரஷணத்திலே உகப்பாலே புருஷகாரத்வம் சொல்லுகிறது –
பரிஷஸ்வஜே -என்று ஆஸ்ரித ரஷணத்தால் வந்த உகப்புக்கு போக்கு வீடு ஆலிங்கனமாய்
அது தான் பரம பிரயோஜனம் என்கிறது –

இத்தால் வீர பத்னி அகப்பட்ட வீரக் கோலம் சொல்லிற்று –
இப்படியே இவளும் கையும் வில்லுமாக வந்த ஆண் பிள்ளைத் தனத்தை நீ காணப் பெற்றில்லை காண் -என்கிறாள் –

1-சிலை துணையா துணையாக பிரிநிலை ஏவ காரம் -மணம் புரிய இதுவே துணை இதுவே அடையாளம் -சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை-வேறே ஆயுதங்கள் கொண்டு வரவில்லை
2-கையும் மாலையாக வரவில்லை
3-தாய்மார் தடைகள் இருந்தனவே -தலை மகளுக்கு ஆசை உண்டோ -தாமே தூதாக வந்தார்
4-வேட்டைக்காகத் தனியாக-வியாஜமாக வந்தார்வேட்டைக்கு வில் வேண்டுமே

அன்றியிலே –சிலை துணையா -என்று
5-வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தாய் -என்கிறபடி
அழிய மாறி எங்களை சேர்த்த க்ர்தஞ்ஞையாலே
கை விட மாட்டாமல் கொடு வந்தார் -ஆகவுமாம் –

அன்றியிலே –சிலை துணையா -என்று
6-என் பக்கல் வரும் போது –தண்ணீர் துரும்பான தாடகா நிரசன பூர்வகமாக
விச்வாமித்ராவர த்ராணம் பண்ண வேணும் என்று கொடு வந்தார் ஆகவுமாம் –

அன்றியிலே–7- என்னைக் கை பிடித்து மீண்டு வரும் போது வழியிலே பரசுராமாதிகள் தோற்றினார் உண்டாகிலும்
கண்டகே நைவ கண்டகம் – ( -பாரதம் முள்ளை முள்ளால் எடுப்பது போல் )என்கிறபடியே ஒரு வில்லை வாங்க வேண்டுகையாலே கொடு வந்தார் -ஆகவுமாம் –

அன்றிக்கே –சிலையே துணையா -என்று
8-ஹதாந் யேகேந ராமேண மாநுஷேண பதாதிநா
சதுர் தச சஹாஸ்ராணி ரஷசாம் பீமா கர்மாணம் -என்று
பதினாலாயிரம் ராஷசரை தாம் ஒருவருமே கொன்று வென்றி கொள்ளுகிற இடத்தில்
தம்பியாரும் பிராட்டிக்கு காவலாக நிற்க —பதாதிநா-காலால் நடந்து -தேர் படை போல்வன இல்லாமல்
அத்தனை வீரத்துக்கு துணையாய் நின்று வத்தருத்துக் கொடுத்த தனி வில்லாகையாலே -அத்தை கொடு வந்தார் ஆகவுமாம் –

அன்றிக்கே –சிலையே துணையா –
9-அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்ச தநு ரூர்ஜிதம் -என்கிறபடியே(தாரை வார்த்தை -வாலியைக் கொன்ற வருத்தத்தால் பற்றுக்கோலாக நின்றது போல்)
என்னைப் பிரிந்த தளர்த்திக்கு தமக்கு ஊன்று கோலாக கொடு வந்தார் ஆகவுமாம்-

அன்றிக்கே —சிலையே துணையா -என்று
10-வன் துணை வானவர்க்காய் வரச் செற்று அரங்கத்துறையும்
இன் துணைவனுக்கும் ஒரு துணை உண்டாய்த்து காண் –

அன்றிக்கே –சிலையே துணையா -என்று
11-இது இப்படி துணை படுக்கைக்கு காரணம் ப்ராவண்யமும் குணவத்யையும் இறே
மற்று உள்ளவற்றைக் காட்டிலும் வில்லுக்கு ஏற்றம் உண்டு -என்கிறாள் ஆகவுமாம்

அன்றிக்கே -12–குணா விசிஷ்ட வஸ்த்வுக்கு குண விசிஷ்ட வஸ்துவே துணையாக இருப்பது என்கிறாள் ஆகவுமாம் –

இவர்க்கு அது துணை பட்டது யேனே என்னில் -இங்கே –
1-நான் நிதி எடுத்த இடம் -இங்கே-என்கிறாள் –
இங்கே–2–பறி கொடுத்த இடம் தன்னிலே காணப் பெற்றேன்

இங்கே—3-கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொடு கிடக்கலாம் படி காண்
4-ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் -என்றும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம் -என்றும் சொல்லுகிறபடி
இலச்சினை பட நடந்த அடிச் சுவடு இருந்தபடி

அன்றிக்கே –இங்கே –5–என்று திரு மணம் கொல்லையை காட்டுகிறாள் –

இங்கே -6-அஸ்மின் மயா சார்த்தம் உதார சீலா -என்று —
பெருமாள் கோதாவரி பாறை -நீச்சல் போட்டி -அந்த பாறை என்று
தாம் அருளிச் செய்தால் போலே சொல்கிறாள்

இங்கே – 7-ஏதத்ததிங்கு தீமூல மிதமேவ சதத்த்ர்ணம் யஸ்மிம் ராமஸ் ச சீதாஸ ராத்ரிம்
தாம் சயிதா வுபௌ
-என்கிறபடியே—-குகன் சீதா பெருமாள் சயனித்த இடம் பரதனுக்குக் காட்டிச் சொன்னது போல் நானும் அவனும் இருந்து போது போக்கின இடம் இது காண் –

இங்கே –8–ஒரு பரம பதம் அல்ல -ஷீராப்தி அல்ல -அயோத்யா மதுராதிகள் அல்ல -கோயில் திருமலை அல்ல –
இவ்விடம் பண்ணின பாக்கியம் காண் –
அஸ்மத் யக்தானி வேச்மானி கைகேயீ பிரதிபத்யாம் -என்று(அயோத்யா மக்கள் இவர்களே ஆளட்டும் நாம் பெருமாள் இடம் செல்வோம் என்றது போலே)
பிறந்து படைத்த படை வீட்டையும் மாளிகையையும் கைகேயியுக்கும் மகனுக்கும் கொடுத்தாப் போலே அன்றிக்கே– –ஸூ பக்ஸ் சித்ரகூடோ சௌகிரி ராஜோ பமோகிரி-என்று பெருமாளும் பிராட்டியும் கூடி இருந்த –சித்ரகூடம் போலே இவ்விடம் பண்ணின பேறு காண் –

இவ்விடத்திலே அவர் செய்தது என் என்ன –வந்தார் –
வந்தார்-1-இவ் விடம் கை விட்டுப் போகை அன்றிக்கே உத்தேச்ய பூமியாக வந்தார் காண் –

(ஆஜ காம விபீஷணன் வந்தார் -போனார் இல்லையே -தம்பி சொல் கேளாத இடம் விட்டு தம்பி சொல் கேட்க்கும் இடம் வந்தார் -ப்ராப்த இடம் வருகை)
வந்தார் -2–வருகிறார் என்று எழுச்சி கொட்டாது இருக்க நினைவின்றியிலே வந்து கொடு நின்றார் காண் –
வந்தார் –3-வரக் கடவர் அன்றிக்கே இருக்கை அன்றிக்கே வந்து கொடு நின்றார் காண் –
வந்தார் –4-வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் (பெரிய திருவந்தாதி)-என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
இதுக்கடியாக இருப்பது ஒரு பிரவர்த்தி என் கையில் இன்றிக்கே இருக்க -இப்படி பலித்து கொடு நிற்கக் கண்டேன் –
வந்தார் –5–போக்கு வரத்துக்கள் பொதுவாய் இருக்கை அன்றிக்கே
இனி நான் போகல ஒட்டேன் -என்றும்
திரு வாணை நின் ஆணை கண்டாய் -என்றும்
தடுத்தும் வளைத்து கொள்ளலாம்படி கை புகுந்தார் காண் –

இப்படி வருகிறவர் உன்னுடனே கலந்து மகிழ்ந்து போகிற வன்றைக்கும்-பிரிந்து கலங்கி வருகிற அன்றைக்கும் வாசி உண்டோ என்ன
இருவராய் வந்தார் -1–உருவு இரண்டு மேனியாய் வந்தார் காண் –

இருவராய் வந்தார் –
2-முன்பு என்னுடன் கலந்து போகிற அன்று
புனை இழைகள் அணிவும் ஆடையும் வுடையும் புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று(திருவாய் ) -என்றும்
உறாவி இருக்கிற போது –
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண்ணாக்கை ஆப்புண்டு –என்றும் சொல்லுகிறபடி
ஆகார நித்ரைகளையும் துறந்து ஊர்ந்தனவும் கடித்தனவும் அறியாதே
பிரிவாற்றாமையாலே மெலிந்து இருக்கிற இருப்பு பேசும் அளவல்ல காண் –

இருவராய் வந்தார் –
3-சரீரம் இரு துண்டமாயாதல் -இரு பிளவை ஆதல் வந்தார் என்கிறது அல்ல –
ஏக ஷணத்திலே உத்பத்தி விநாசமாய் வைவித்த்யம் கூடுகிறது இல்லை
சிலையே துணையா -என்று போக ஏகாந்தமாக தனியே வருவர் ஆகையாலே –
கூட சிலரைக் கொண்டு வந்தார் என்னக் கூடாது –
ஜனக கன்யா க்ரஹணம் போலே கன்னிகைகள் பலர் உண்டாய் தமையன் தம்பி கேட்க வருகிறார் அல்ல
இனி இருவராய் வருகை யாவது –
ஒருவன் தானே இரண்டு ஆகாரத்தை உடையவனாய் வருகை –

4-அதாவது சோக ஹர்ஷங்களை உடையராய் வருகை –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்ற-அவிகாராய ப்ரஹ்மம் -ஞான மய ப்ரஹ்மம் -அபரிச்சேத்ய ப்ரஹ்மம் –
விசேஷ்யமான ப்ரஹ்மம் ஒன்றாய் இருக்க
பேதகம் விசேஷணம் பேத்யம் விசேஷ்யம் என்று(பின்ன ப்ரவ்ருத்தி நிமித்த -சாமாநாதி கரண்யம் )
விசேஷண பேதாயத்த விசேஷ்ய பேதத்தை அங்கீ கரித்தது இறே
ஆகார பேதங்கள் தான் பல உண்டே –

அவையாவன
இருவராய் வந்தார் –5-அவயவ சோபையோடும் ஆபரண சோபையோடும் வந்தார் –
மை வண்ண நறும் குஞ்சி -அவயவ சோபை —மகரம் சேர் குழை ஆபரண சோபை –

இருவராய் வந்தார் —6-வீர ஸ்ருங்காரங்கள்  இரண்டும் தோற்ற வந்தார்
சிலையே துணையா -என்றது வீரம்
என் முன்னே நடந்தார்
-என்றது ஸ்ருங்காரம்

(முன்னிலும் பின் அழகு -காவல் சோர்வு அடையாமல் நடை அழகில் ஈடுபடாதே சுமத்தரை இளவனுக்கு உபதேசம்)

இருவராய் வந்தார் —7- பிரணியித்வ தைரியங்கள் இரண்டும் தோற்றும்படி வந்தார்
என் முன்னே -என்றது பிரணியித்வம்நின்றார் -என்றது தைர்யம்

இருவராய் வந்தார் –8–விநய தௌத்யங்கள் இரண்டும் தோற்றும்படி வந்தார் –
கைவண்ணம் தாமரை வாய் கமலம் -என்னும்படி இருந்தது வினயம்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே-என்று –தூது செய் கண்கள்
கொண்டு பண்ணின வியாபாரமும் நாலடி புகுர நின்றதவும் தௌத்யம்

இருவராய் வந்தார்
9-இரண்டு நினைவோடு வந்தார் –அதாவது பெறில் உஜ்ஜீவிக்கையும் பெறாவிடில் முடிகையும் –
இருவராய் வந்தார் –

10-பரத்வ சௌலப்யங்கள் இரண்டும் தோற்றும்படி வந்தார்
அவ்வண்ணத்தவர் நிலைமை என்றது சௌலப்யம்
அவரை நாம் தேவர் என்றது –பரத்வம் –

இருவராய் வந்தார் –
11-மானுஷௌ தேவ ரூபி நௌ -(சுக்ரீவன் வார்த்தை-தற் செயலாக வந்த சந்த்ர ஸூர்யர் போல் )என்கிறபடியே
திவ்ய மானுஷ ரூபம் இரண்டும் தோற்றும்படி வந்தார் –
சிலையே துணையா -மனுஷர்க்கு சேர்ந்த வில்லாலே மனுஷ்ய பாவம்
கண் இணையும் அரவிந்தம் -புண்டரீகாஷத்வத்தாலே(கப்யாஸம் புண்டரீக ஏவம் அஷிணி )திவ்யத்வ பாவம்

இருவராய் வந்தார்
12-தூதருமாய் நாயகருமாய் வந்தார் –
ஸ்வயம் தௌத்யம் ஆகையாலே தூதத்வம் -வடிவின் போக்யதையாலே நாயகத்வம் (பாண்டவ தூதன் போல் )

இருவராய் வந்தார்
13-சந்தரன் வந்தானோ ஆதித்யன் வந்தானோ என்று மானுஷௌ தேவ ரூபி நௌ-என்றும் -ஆதித்ய இவ தேஜஸ்வி -சசி ஏவ சர்வ லோகஸ்ய வைஸ்ரவணன் போல் லோக ராஜா – சங்கிக்கும் படி   வந்தார் –

மணி மகர குண்டலங்கள் வில் வீசுகையாலே ஆதித்ய சங்கை
குழல் அழகர் -என்று சொல்லுகையாலே சந்திர சங்கை

இருவராய் வந்தார் –
14-புனர் வசு நஷத்ரம் இரண்டும் சேர பூகதமானால் போலே வந்தார் என்கிற சுடர் உடைமை காரணம் -(சோபயன் தண்டகாரண்யம் )

இருவராய் வந்தார் -15–கஜ சிம்ஹ கதி வீரௌ -(விசுவாமித்திரர் இடம் விசால தேச அரசன் சுமதி வினவுதல் -)என்கிறபடி
வருகிற போதை நடை அழகு இருந்தபடி ஆனை பிசுகி நடந்ததோ –
சிம்ஹம் மதியாமே நடந்ததோ -என்னும்படி வந்தார் –

அன்றியிலே-வீர சார்தூல ரிஷபோ -என்கிறபடி
16-புலி அறட்டோடே நடந்ததோ –வ்ர்ஷம் செருக்கோடு நடந்ததோ என்னும்படி நடந்து வந்தார் என்றுமாம் —

இருவராய் வந்தார்
17-உபாயம் தாமேயுமாய் உபேயம் தாமேயுமாய் வந்தார் –
ம்ர்க வ்யாஜ்யத்தாலே வந்தது உபாயம்(வேட்டை யாடி விளையாடும் விமலன் )
அவ் வண்ணத்தவர் நிலைமை -என்னும்படியான போக்யத்வம் உபேயம் –

இருவராய் வந்தார் –
18-ஸ்வரூபத்தாலே ஸ்வ தந்த்ரராயும் -குணத்தாலே பரதந்த்ரராயும் –வந்தார்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நாரணனே நீ என்னை அன்றி இல்லை -என்றும்
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -என்றும் சொல்லுகிறபடியே
நான் உண்டாகில் தாம் உண்டாய் தாம் உண்டாகில் நான் உண்டாய் தான் இல்லையாகில் நான் இல்லையாம்படியாய்
ஆகார த்வயத்தோடும் வந்தார்

முஹூர்த்தம் அபி ஜீவதி -மனம் ஈடுபட்டதால் இன்னும் உயிர் உடன் இருக்கிறார்கள் -துஷ்க்ருதாம் க்ருதவான் ராம ப்ரபு -சத்தை ஒருவருக்கு மற்ற ஒருவரால்

அன்றிக்கே –இருவராய் வந்தார் –
19-இளைய பெருமாளும் தாமுமாக வந்தார் என்றுமாம் –

சிலையே துணையா -என்று வைத்து –இருவராய் வந்தார் –என்கை -அசங்கதம் அன்றோ என்னில்

கையில் வில்லோபாதி இளைய பெருமாளும் நிரூபக பூதராய் இருக்கையால் சொல்லுகிறது –
ராமஸ்ய தஷிணோ பாஹூ -என்னக் கடவது இறே-

இருவராய் வந்தார் -என்று பிரியச் சொல்லுவான் என் என்னில் –
20-அணைக்கும் தோள் உடன் வந்தார் என்னவும் காட்டில் பிரியச் சொல்லிற்று ஆகாது இறே –
சம்ச்லேஷத்துக்கு வருகிறவன் படுக்கையோடு வருகிறது மிகை அன்றே

இருவராய் வந்ததார் –21–தேவ மனுஷ்யம் கலசி வந்தார் –
சேஷியாய் வந்தார் அல்லர் –
சேஷபூதராய் வந்தார் அல்லர் –
உபய ஆகாரத்தாலே வந்தார் என்னவுமாம் –
தம்முடைய காலை என் தலை மேலே வைக்கக் கடவதாக வந்து
என் காலை தம் தலை மேலே வைத்துக் கொண்டார் -என்கிறாள் –

பாணிக் க்ரஹணம் பண்ணும் போது சேஷியாய் இருக்கையும்
படுக்கையிலே முறை கெட பரிமாறுகையும் இறே இருப்பது –
வகுத்த ஸ்வாமி யாகவும் வேணும்
ந சாஸ்திரம் நைவ சக்ரமம் -ஆகவும் வேணும் இறே –

அன்றிக்கே
22-நர நாராயணர்கள் போலே வந்தார் என்னவுமாம்

அதவா
சப்தத்தை நியமித்து இருவராக வந்தார் என்னவுமாம்
23-தாமும் நாமுமே யாம்படியாக வந்தார் -என்கை-

வந்தார் –
தாம் இருந்த இடத்திலே நாம் மடல் எடுத்துச் சென்று கிட்ட வேண்டும்படியாய் இருக்க
நாம் இருந்த இடத்திலே காண் தான் வந்தது -என்கிறாள்
அங்கன் இன்றியிலும்
கால் நடையிலும் அவர் நடை அழகை நீ காணப் பெற்றிலை காண் என்னவுமாம் –
நடைச் சக்கரவத்து பிடிக்க வேண்டும்படி காண் நடந்த நடை இருந்தபடி –

இப்படி வந்து இவர் செய்தது என் என்ன –
என் முன்னே நின்றார் –
1-பெரிய த்வரை உடன் வந்தவர் -கடல் கண்டு தேங்கின திருவடியைப் போலே
என்னைக் கண்டு மேலிட மாட்டாதே தேங்கி என் முன்னே நின்றார் –

அன்றியே
2-தாம் முகம் பார்ப்பது எப்போதோ என்று -நான் நிற்க பிராப்தமாய் இருக்க –
இவள் நம்மை நேரே முகம் பாக்க வல்லளோ என்று பாரித்துக் கொண்டு நின்றான் காண் -என்கிறாள்

என் முன்னே நின்றார்
3-மாச உபவாசிகளுக்கு பால் குழம்பு கொடுப்பரைப் போலே காண வேணும்
என்னுடைய ஆசானுரூபமாக அனுபவிக்கும்படி முன்னே வந்து நின்றார் காண் –

என் முன்னே நின்றார் –
4-தஸ்மின் த்ர்ஷ்டே பராவரே பித்யதே ஹ்ரதய க்ரந்தி-என்றும்
த்ரஷ்ட ஏவ ஹிநஸ் சோஹம் அபநேஷ்யதி ராகவ -(அயோத்யா -பார்த்த உடன் வருத்தங்கள் நீங்கப் பெற்றார்கள் ஸூர்யன் வந்ததும் இருள் போமா போல் -பாவி என்று ஒரு சொல் சொல்லே என் முன்னே நின்று )என்றும்
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண -என்றும்
ஆசைப்பட்ட என் அபிநிவேசம் தீரும் அளவும் என் முன்னே நின்றார் காண் –

என் முன்னே நின்றார் –
5-தேக்கிட்டாருக்கு சோறு இடுகை இன்றிக்கே பசித்தாற்கு இடுமா போலே தர்சன மாத்ரத்தையே உகந்த என்னுடைய
அபிநிவேசம் தீரும்படி என் முன்னே நின்றார் காண் –

என் முன்னே நின்றார்
6-ஆருடைய முன்னே நிற்கத் தக்கவர் என் முன்னே நின்றார் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய -என்று த்ரிபாத் விபூதியாக அனுபவிக்கிற அனுபவத்தை
நான் ஒருத்தியே அனுபவிக்கும்படி சர்வ ஸ்வதானம் பண்ணினார்

என் முன்னே நின்றார் –
7-மானஸ சஷூஸ் களுக்கு விஷயம் அல்லாத தம்மைக் கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆக்கிற்று-

என் முன்னே நின்றார் –
8-கண்ண நீர் சோர்ந்து இரண்டு கண்ணும் இல்லாத எனக்கு கிடீர் கண்ணையும் காட்சியையும் தருகிறது –

ஸ்ருதி ஸ்ம்ருதி -அறியாத எனக்கு -இவையே இரண்டு கண்கள் ப்ரஹ்மம் அறிய-திவ்யம் சஷுஸ் விபுவான தன்னைப் பார்க்க வைத்தானே –

என் முன்னே நின்றார்
9-மந்தாக்னிகளுக்கு (ஜீரண சக்தி இல்லா ஜடராக்னி )சோறு இடுவாரைப் போலே தம்முடைய தரம் அறியாத என் முன்னே கிடீர் கால் வாங்க மாட்டாதே நின்றது –

என் முன்னே நின்றார் –
10-என்னுடைய ஸ்வ ரூபத்தை பார்த்தால் தம்முடைய முன்னே நான் கைக் கட்டிக் கொண்டு நிற்க பிராப்தமாய் இருக்க
பிரணயித்வத்தால் தாம் என் முன்னே கை கட்டிக் கொண்டு நின்றார்

என் முன்னே நின்றார்
11-தாம் இத்தனை போது படுத்தின சிறுமையால் வெறுத்து  உபேஷித்து இருந்தேனோ
அன்றிக்கே -இவ்வளவில் தான் வந்து உதவினத்திலே உகந்து அணைக்கிறேனோ என்று அளவிட மாட்டாதே அவர் நிலை காண் –

என் முன்னே நின்றார்
12-அவனை நான் என் செய்வன் காணே (நாச்சியார் )-என்றும்
இன்னும் என் கையகத்து இங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -(பெருமாள் திருமொழி )என்றும்
நான் அவன் பக்கலில் கோலி வைத்து இருந்த பாரிப்பு எல்லாம் அறிந்து வைத்து அவன் என் முன்னே நின்ற சாஹசம் காண் –

அன்றியிலே -என் முன்னே நின்றார் –
13-நான் தான் கண்டு இரங்கும்படி என் முன்னே நின்றதையும் காண் -என்றுமாம் –

நின்றார்
14-ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றார் -என்னுதல்

15-கந்தவ்ய பூமி வேறு இல்லாமையாலே வந்து நின்றார் -என்னுதல் –

இப்படி இரங்கும்படி அங்கு வர்த்தித்த அளவின் மேல் செய்தது என் என்னில்
என் ஹ்ருதயத்தை கூட்டிக் கொள்ளுகையாலே
ஸ்வயம் தௌத்யத்திலெ இழிந்து இருந்து –போக பிஷை இட வேண்டும் -என்று கை ஏற்றார் –
அப்போது கை இருந்தபடி –

கை வண்ணம் தாமரை –
1-மேல் இருந்த நிறத்தே அகப்பட்டேன் இத்தனை போக்கி அக வாயில் இழிய வேண்டிற்று இல்லை –
அவர் கையில் அகப்பட்டேன் காண் -என்கிறாள் –

கை வண்ணம் தாமரை –
2-செய்ய கை -என்று சொல்கிறபடி சாமுத்ரிகா லஷணத்தை உடைய கையில் சிவப்பிலே அனுரக்தை யானேன் –

ராகத்தில் அநுராகம் கொண்டேன்-

கை வண்ணம் தாமரை –
3-வண்ணம் என்று நிறம் -அன்றியே பிரகாரமாய் -ஆகார சாம்யத்தை சொல்லிற்றாகவுமாம் –
அல்லி போலே உள்ளங்கையும் -இதழ்கள் போலே விரல்களும் –
தாது போலே ரேகைகளும் -விலஷணமான கந்தமும் – ம்ர்துவான ஸ்பர்சமும் –
புற இதழ் போலே ஸ்யாமமான புறங்கையில் பசுமையும் –
ஏவமாதியான லஷணங்களை உடைத்தாய் இருக்கை –

கை வண்ணம் தாமரை –
4-சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்றும்- 
அலம் புரிந்த நெடும் தடக்கை
-என்றும் –
திருக்கை சகல பலங்களையும் கொடுக்கும்படி போலே இருக்கும்

(தேவேந்த்ரன்-மூ யுலகம் குபேரன் செல்வம் கார்த்த வீர்யார்ஜுனன் ஐஸ்வர்யம் ஜனகன் மோஷம் )

பின்பு செய்தது என் என்னில்
போக பிஷை -என்று கையைக் குவித்தார்
தத் அநந்தரம் நான் விரோத வசனம் பண்ணாதே இருந்து கொண்டு –
அப்ரதிஷித்த மநுமதம் பவதி -என்று பேசாதே இருந்தது பாதி இசைவாகக் கொண்டு
அயம் சதோ திஷ்டதி சங்க மோத் ஸூக -(சாகுந்தலம் )என்றும்
ஸ்வ பசீ மயா ஸூ தனு -என்றும் சில வபேஷ உக்திகளைப் பண்ணினார்

வாய் கமலம் போலும் –
அப்போது செவ்வி பெற மலர்ந்தால் போலே அவ்வவ்தர ஸ்புரணம் இருந்த படி காண் –
அதுக்கு நான் ஒரு பிரத்யாக்யானம் பண்ணாமையாலே-அதுக்கு மேலே ஒரு அபூர்வமாக
தூது செய் கண்களால் சில சேஷ்டைகளைப் பண்ணினார் –

கண் இணையும் அரவிந்தம் –
அந்த கண்கள் தானும் அவையாய் இருந்தது –

கை வண்ணம் என்று ஒரு கையைச் சொன்னார்
வாய் கமலம் என்று ஒரு வாயைச் சொன்னார்
கண் இணை -என்று இரண்டு கண்களையும் சொல்லுவான் என் என்னில்
கைகள் தனித் தனியே ஸ்வ தந்திர கரணம் –
கண் இரண்டும் கூட ஏக சாமக்ரியாய் யாய்த்து இருப்பது -ஆகையாலே சொல்லுகிறது –

அபாங்களாலே சில சங்கேதங்களைப் பண்ணின இடத்தில் நான் இசைந்து இருந்த படியாலே நாலடி புகுர நின்றார் –

அடியும் அக்தே –
நிலத் தாமரை மலர்ந்தால் போலே அத்திருவடி இருந்தபடி காண் –

அன்றியிலே
விபாஹா சமாதியாலே சில ஸ்ருங்கார சேஷ்டைகளைப் பண்ணி –
க்ர்ஹீத்வாகார பத்மாப்யாம் ஸீதாயா பாத பங்கஜம் அஸ்மன்யாரோ பயாமாசா -என்றும்
செம்மை வுடைய திருக் கையால் தாள் பற்றி யம்மி மிதிக்க -என்றும்
சொல்லுகிறபடியே
என் காலைப் பிடிப்பதாக சில அபிநயங்களைப் பண்ணினார்

கை வண்ணம் தாமரை –
அப்போது கடினமான கல்லை மிதியாமே ம்ர்துவான கைத் தாமரை இருந்தபடி காண் –

அநந்தரம் –
ஆதிஷ்டேமேமச்ச்மானம் – என்று அவ் வனுஷ்டான பிரகாசமான மந்த்ரத்தை உச்சரித்த போது –
வாய் கமலம் போலும் –
இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் -என்னும்படி
மதுகர ஜங்கார முகரிதமான தாமரை மலர்ந்தால் போலே இருந்தது காண் –

அனந்தரமாக
இமாம் சமேத பஸ்யதே-என்கிற மந்த்ரத்தாலே
என்னை காலே தொடங்கி -கரிய குழல் அளவும் பார்த்தார் -அப்போது
கண் இணையும் அரவிந்தம் -என்று திருக் கண்களும் தாமரை போலே இருந்தது காண் –

தத் அனந்தரமாக –
சகா சப்த பதா பவ -என்றும் –தீ வலம் செய்ய -என்றும் சொல்லுகிறபடியே
அக்னியை பிரத்யஷமாக வருவதாக நடந்தார்
என் கையைப் பிடித்துக் கொண்டு முன்னே நடக்கிற போது மாறி மாறி இட்ட திருவடிகளும் அத் தாமரை பூத்தாப் போலே இருந்தன –

அன்றிக்கே -அஞ்சலியைப் பண்ணுவதே -என்றும் இத்யாதியாலே
காலைப் பிடிப்பதாய் கையை நீட்டுவதாய் சில பாவங்களைப் பண்ணினார் –

கை வண்ணம் தாமரை -இப்பூவிலேயோ நான் கால் வைக்கப் போவது என்று கூசும்படி இருந்தது காண் –
அனந்தரமாக
என்னை நோக்கி சில கைவாரம் கொள்ளத் தொடங்கினார்
வாய் கமலம் போலும் -அப்போது வாய் மணம் இருந்தபடி
தாமரை மணந்தது போலே இருந்தது காண்
ஓசைப்படாத படி பிறகிட்டு வந்து கண்ணைப் புதைக்கிறாள் என்று சாசங்கரராய் புரிந்து பார்த்தார் –
கண் இணையும் அரவிந்தம் –
அப்போது இக் கண்களையோ நாம் நெருங்க புக்கது என்று
தவிரும்படியான கண்களில் சிவப்பு இருந்தபடி காண் –

இங்கே சற்றே ஆஸ்பதம் பெற்ற படியாலே மடியிலே இருப்பதாக கோலி –
வேட்டைக்கு போவதாக கோத்த மரவடியை கழற்றினார் –

அடியும் அக்தே –
இம் மெல்லடியைக் கொண்டோ காடும் ஓடுமான பரப்பு எல்லாம் உலாவப் புக்கது என்று
வயிறு பிடிக்கும்படியான அடியும் அவை தானாய் இருந்தது –
எனக்கு உகப்பு என்று கையில் ரஷணத்துக்கு என்று கட்டிய
காப்பையும் கையையும் என் கை முன்னே காட்டினார்
இப்படி விரோதி நிவர்த்தி பண்ணுகிற அக்கை தனக்கு மார்த்த்வமே ஸ்வ பாவமாக இருந்தது

கை வண்ணம் தாமரை
கைக்கு கட்டின காப்புக்கு ஈடாக சில வார்த்தைகளை சொன்னான்

(ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வராஹ ஸ்ரீ ராம சரம ஸ்லோகங்கள் போல் சொன்னார்)

வாய் கமலம் போலும் –
அவ் வார்த்தைக்கு உள்ள சுவடு காண் –
கூசாமல் அபேஷிக்கலாம் படியும் க்ர்தஞ்ஞாராய் இருக்கலாம்படியும் குளிரப் பார்த்தார் –
அப் பார்வைக்கு சௌ மனஸ்யம் உண்டாய் இருந்தது -(பூதாஸ்மி ரகு நந்தன-திருக்கண் கடாக்ஷம் கூசாமல் அபேக்ஷிக்கலாம் படி )

கண் இணையும் அரவிந்தம் -என்றும்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -என்றும்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்றும்
நின்றார் நின்ற படிகளில் சொல்லலாம் படி தலையிலே புகுர விட்டால் போலே
தேனேய் மலரும் திருப் பாதம் -என்ற திருவடியைக் கொண்டு வைத்தார்

அடியும் அக்தே
அத் திருவடிகளுக்கு பூவும் செருந்தியாய் இருந்தது –
செய்யேல் தீவினை -என்றும் -பிரபத்தியில் ச்கர்தி ஒழிய
த்விதீய பர்யாயம் தொடங்கி உள்ள பிரதீவர்த்தியும்
பிரவ்ர்த்திக்கு முன்பு கழிந்த அக்ர்த்ய துஷ்டான் நிபந்தனமான சோகத்தையும் தடுப்பதாய்
இருக்கிற-
அக் கையையும் காட்டினார் –

(ப்ராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந் –ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்துர் மாம் அவ்யாத பய முத்ரித–ந்யாஸ திலகம் -2-

உனது அடிகள் அடைகின்றேன் என்று ஒரு கால் உரைத்த வாறே அமையும் இனி என்பவர் போல் அஞ்சல் எனக் கரம் வைத்து –அடைக்கலப் பத்து
நிரதிசய ஆனந்தம் அளித்த பின்பும் மீண்டும் பிரபத்தி செய்தால் இன்னும் தர ஒன்றும் இல்லையே என்று அன்றோ திரு உள்ளம் மருகுவான் –)

கை வண்ணம் தாமரை
அப்போது ஆஸ்ரிதர் உடைய முகோல்லாசத்தைக் கண்டு கர பத்மம் மலர்ந்தால் போல் இருந்தது

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்தத மெய்ம்மை பெரு வார்த்தை -என்றும்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார் -என்றும் அம்ருதம் போலே சில வார்த்தைகளை அருளிச் செய்தார் –

வாய் கமலம் போலும் -வாய் அவ் வம்ருதத்துக்கு பூண் கட்டினால் போலே இருந்தது –

என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி எனது இளம் கொங்கையையும் நோக்குகின்றார் –என்றும்
அவயவி உடன் என் அவயவங்கள் உடன் வாசி அற பூர்ண கடாஷம் பண்ணி அருளினார் -(ஞான பக்தி வைராக்யங்கள் )

கண் இணையும் அரவிந்தம்-
அப்போது ஆகாசத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருந்தது –

பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் –என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே-
என்று நான் அர்த்தியாய் அவன் இருந்த ஊரை நோக்கிப் போகத் தேடுவது
அவஸையாய் அது தானும் மாட்டாதே கிலேசிப்பாதகிற அளவிலே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -என்று
கமர் பிளந்த நிலத்திலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே என் முன்னே நின்றார் –

அடியும் அஃதே —
இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே -விரஹ சந்தப்தமான இத்தசையிலே திருவடித் தாமரை அடிகள் உண்டான படி காண் –

அன்றிக்கே(இது ஆறாவது நிர்வாகம் )
பிரதமத்தில் தன்னை பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –கைவண்ணம் தாமரை -என்றும்
வாய் கமலம் போலும் -என்று தன் கையைப் பிடித்து தன் செல்லாமை தோற்ற
இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என் –
இது ஒரு முலை அழகு இருந்தபடி என் –
இது ஒரு கண் அழகு இருந்தபடி என் –
இன் சொல்லுச் சொன்ன திருவதரம் இருந்தபடி என் –
கண் இணையும் அரவிந்தம் -இன் சொல்லு சொல்லு தொடங்கி
அது தன்னைத் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே சொல்லித் தலைக் கட்டிய படி –
ஆதர ஸூசகமாய் இறே இன் சொல்லு இருப்பது –
அவ்வதரம் அனைத்தையும் கண்ணிலே  பிரகாசிக்கும்படி நின்றார் என்கை

அடியும் அஃதே 
அந் நோக்குக்குத் தோற்று விழும் திருவடிகளைச் சொல்லுகிறாள்-(ஜிதந்தே புண்டரீகாக்ஷ )

கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று
கீழே சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க
போக்ய அதிசயத்தாலே அவயவங்கள் தோறும் தாமரையை த்ர்ஷ்டாந்தமாக சொல்கிறார் –
அடியும் தாமரை -என்னாதே-அடியும் அஃதே -என்று
உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் விசத்ர்ஷ்டாந்தம் என்னும் இடத்துக்கு ஸூசகம் –

அவர் வந்த வரவை நீ சொன்ன அழகு இருந்தபடி கேட்டதாய் இராதே சாஷாத் கரித்தாப் போலே இருந்ததீ-என்று தோழி சொல்ல
தோழி இது எல்லாம் -என் எனபது-அவ் வண்ணத்தவர் – என்னும் இத்தனை என்கிறாள் –
பசிக்கு மோந்தோம் இத்தனை ஒழிய -வந்த பிரகாரத்தையும் அவரையும் நம்மால் பேசப் போமோ –
நீ கேட்கையாலே உனக்கு ஒரு த்ர்ஷ்டாந்தத்தை இட்டுச் சொன்னேன் இத்தனை ஒழிய
ஒரு த்ர்ஷ்டாந்தத்தை இட்டு சொல்லும்படி அன்று வடிவு இருந்தபடி காண் –

அவ் வண்ணதவர்
அந்த பிரகாரத்தை -உடையவர் என்னும் இத்தனை போக்கி வேறு பாசுரம் இட ஒண்ணாது காண் –
வேதங்களும் எதோ வாசா நிவர்த்தந்தே –
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
என்று இப்படி சொல்லி விட்ட இத்தனை இறே –

(அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -9-3-3)

அவ் வண்ணத்தவர் நிலைமை -என்று இவ்விடத்தில்
அவ் வண்ணம் -அவருக்கு விசேஷணம்
அவர் நிலைமைக்கு விசேஷணம் ஆகவுமாம் –
அவ் வண்ணத்தவர் -என்ற போது –
வேதங்களில் பிரதிபாதிக்கிற பிரகாரமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையவன் -என்று பகவத் பரமாகவுமாம் –
அன்றியிலே அவ் வண்ணத்துக்கு நிலைமை என்று நிலைமைக்கு விசேஷணம் ஆகவுமாம் –
ஓன்று -வ்யவஹிதான்வய பிரமாணிகாம்
மற்றையது -ஸ்வதம் ப்ராப்தம்
நிலைமை யாவது -மரியாதைகள் -அதாவது வியசித ஸ்வபாவங்கள்

அவ் வண்ணத்தவர் நிலைமை -என்று அந்த பிரகாரத்தை உடையவருடைய வ்யவசிதங்கள் –
அவ் வண்ணத்து -என்றும் –அவர் -என்றும் பிரிக்கவுமாம் –
அவ் வண்ணத்தவர் -என்று முழு சொல் ஆகவுமாம் –
அவ் வண்ணம் -என்று சௌலப்ய ஸ்வ பாவம் –
அதாவது சௌலப்யாதிகளை கால தத்வம் உள்ள அளவும் அனுபவிக்கலாய் இருக்கை –
வஸ்து ஸ்வ பாவத்தாலே கழற்ற ஒண்ணாது கிடந்த இத்தனை-(ப்ரஸாதவ் நாதவ் மம கேஹம் -கழற்ற முடியாத ஸ்வரூபம் நாதவ் பரத்வம் )

நிலைமை -என்று அதின் வகுப்பு —
சௌசீல்ய வாத்சல்ய காருண்ய சௌந்தர்யாதிகள் –

அவை யாவன –வந்து –இங்கே வந்து -என் முன்னே வந்து நின்றார் -என்கை –
கண்டும் -குணம் கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தே –
கண்டும் –
என்கிறபடி -என் என்னில் –
கண் என்று உட் கண்ணாய் -ஜ்ஞான சாஷாத் காரத்தை சொல்கிறது –
அவன் பண்ணின தாழ்ச்சிகளை அனுபவித்து இருக்கச் செய்தேயும் -என்றபடி –

அன்றிக்கே –
அவ் வண்ணதவர் நிலைமை -பிராட்டியும் கூட ப்ரதானையாய் பிறகிடும்படி போக ஸ்ரோதஸ்ஸூக்கு
முன்னோட்டுக் கொடுத்த அவ்வவ வைவித்யங்களை ஸ்மரிக்கிறது -(12 வருஷங்கள் இன்புறும் விளையாட்டுக்கள் லீலா விநோதம் )

அவ் வண்ணத்தவர் நிலைமை –
ஒரு ஸ்ரோதஸ்ஸூக்கு நிலவராய் மற்றை ஸ்ரோதஸ்ஸூக்கு நிலவர் இன்றியிலே இருக்கை
அன்றிக்கே ஸ்ரோதஸ்ஸூ தோறும் இதுவே நிலை என்னும்படி சார்வத்ரிகமான தேசிகத்வம் சொல்லுகிறது –
விதியினால் பெடை மணக்கும் -என்னுமா போலே

அன்றியிலே –அவ் வண்ணத்தவர் நிலைமை -என்று
வைவாத்யம் ஸூர தேஷ்விவ
-என்கிறபடியே –
பஹுமுகமான ஸ்ரோதஸ்ஸூ க்கு நிலவராக இருக்கச் செய்தேயும்
என்னுடைய மார்த்த்வத்தைக் கண்டு-(மெல்லியலாள் ஸீதை -)குசை தாங்கி நின்ற நிலைமை காண்

(மாதவ காவ்யம் -வெட்கமும் பொறுமையும் பெண்கள் லக்ஷணம் -பராக்ரமம் வெட்கம் இன்மை ஆண்கள் லக்ஷணம்)

அன்றியிலே -நிலைமை -கண்டும் -என்று
என்னைப் பெற்று தரித்தல் பெறாது முடிதல் செய்யும்படியான ஸ்வ பாவத்தை கண்டு வைத்தும்
அவர் நிலைமை
அவர் வடிவு அழகு இருந்தபடி இது
சீலம் இருந்தபடி இது
வ்யவசாயம் இருந்தபடி இது
இத்தனையும் கண்டு வைத்தும்-

கண்டும்
முன்பு உன் பக்கல் கேட்டுப் போந்தேன் இத்தனை இறே -கேட்டாப் போலே கண்டு வைத்தும்

கண்டும்
நெடு நாள் சாதனானுஷ்டானம் பண்ணி காண வேண்டிய விஷயம் அனாயாசமாக
கண்ணுக்கு விஷயமாக இருக்கச் செய்தே கிடாய் நழுவ விட்டது –
காணாத போது வெருவ ப்ராப்தமாய் இருக்க கண்டு வைத்து கலங்கினேன் –
கண்டு தெளிய கில்லீர் -என்னக் கடவது இறே –
அதுக்கடி என் என்னில் –

(பரந்ததெய்வமும் பல்உல கும்படைத்து அன்றுஉட னேவிழுங்கிக்
கரந்துஉ மிழ்ந்து கடந்துஇடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்க ளால்அம ரர்வணங் கும்திருக் குருகூர் அதனுள்
பரன்திற மன்றிப் பல்லுல கீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.-4-10-3-)

அவரை –
அதாவது —பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் –என்றும்
சௌலப்யம் ஸ்வ பாவம் ஆனவோபாதி பரத்வமும் ஸ்வ பாவமாய் நின்று நிலைத்தது ஆகையாலே

(மிக்க இறை நிலையும் -இறை நிலை பரத்வம் மிக்க இறை நிலை ஸுலப்யம்)

தோழி –
1-அஞ்சினான் புகலிடமாக உன்னை யாகிலும் பெற்றோம் இறே –

தோழி —
2-பால்யத்தில் பாம் ஸூக்ரீடைக்கு துணையானாய்
நாயகன் பக்கலிலே அபிலாஷை சென்ற அளவிலே -நெஞ்சில் கிடைப்பாடும் சொல்லுகைக்கும்
அவனைக் கிட்டுவிக்கைக்கும் -துணையானாய்
விஸ்லிஷ்ட தசையிலே வ்ர்த்த கீர்த்தனம் பண்ணி அனுமோதிக்கைக்கும் துணையாய் –
சர்வ வித சகாயனும் நீயே அன்றோ –

தோழி
3-இவர் வாயில் நால் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆகையாலே -அவர் -என்று போக்யதையை சொல்லுவது
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார் -என்று
நாயக அனு ராகம் சொல்லுவது –
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகிறேன் -என்று பய ஸ்தானம் சொல்லுவது –
அச்சோ ஒருவர் அழகிய வா -என்று பின்னையும் விட ஒண்ணாத படியான
ஆகர்ஷகம்
சொல்லுகைக்கு உன்னை ஒழிய வேறு உண்டோ

தோழி
4-அவர் வடிவு அழகு இருந்தபடியும்
வந்த வரவு இருந்தபடியும்
நின்ற நிலை இருந்தபடியும்
நீ காணப் பெற்றிலை காண் -என்கிறாள் –

அவரை நாம்
நம்மை ஒழியச் செல்லாதபடி நின்றவரை -அவரை ஒழிந்த போது அசந்நேவ -என்னும்படி இருக்கிற நாம்
அன்றிக்கே -அவரை ஒழியச் செல்லாமையால் வந்த ஆற்றாமையை உடைய நாம் என்னுதல் –
ஏகாதி ரிக்தம் அநேகம் ஆகையாலே -தோழியையும் கூட்டி –நாம் -என்கிறாள்

அவரை நாம் —
செல்வர் பெரியர் -என்றும் –அவன் எவ்விடத்தான் -என்றும் எட்டாதபடி இருக்கிறவரை
சிறு மானிடவர் -என்று எண்ணிக்கைக்கு கூடப் பாற்றம் போராதபடி யான நாம் –
இப்படி பர்வத பரமாணுக்களான விடத்தில் நாம் செய்தது என் என்ன

தேவர் என்று அஞ்சினோமே –
நம் காலில் விழுவார் ஒருவர் அல்லர் –
நாம் அவர் காலில் விழத் தக்கவர் ஒருத்தர் என்று கூசினோமே

அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
ஸ்ரீ வராஹ நரசிம்ஹ அவதாரங்களை திர்யக் அவதாரங்களாக நினைத்திலோம் –
மானுஷர்களான ராம கிருஷ்ணர் என்று நினைத்திலோம் –
ஸ்த்தாவர அவதாரமான அச்வமத்த மேருக்களாக நினைத்திலோம் -(அஸ்வத்த மரமாகவும் மேருவாகவும் நானே கீதை )
மனிசர்க்கு தேவர் போலே தேவருக்கும் தேவாவோ -என்றும்-
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று ஸூரிகளுக்கும் எட்டாத பரதேவதை என்று நினைத்தோம்
ஸ்ருங்கார கர்ம சமாராத்யரானவரை கர்ம சமாத்ரயாராக நினைத்தோம்

அதவா
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்
இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் -என்றும்
வீட்டைப் பண்ணி விளையாடும் -என்றும்-அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -என்றும்
விபூதியைக் கொண்டு லீலை பண்ணுவார் ஒருவர் என்று –

(தேவு –
1-திவு கிரீடா -விளையாட்டு –
2-விஜி கீஷா வெற்றி விருப்பம்
3-வியவஹாரம் வழக்கு –
4-திதி தேஜஸ் –
5-ஸ்துதி ஸ்தோத்ரம்
6-மோதம் மகிழ்ச்சி
7-மதம் செருக்கு
8-ஸ்வப்னம் கனவு
9-காந்தி அழகு
10-கதிஸூ உபாயம் உபேயம் -10 அர்த்தங்கள் உண்டே)

தேவர் என்று –
விஜிகீஷையாய் -என்றும்-ந விஜிகிஷ்ய நிவர்த்தந்தே – ஜெயிக்காமல் திரும்ப மாட்டார்
தோற்றோம் மட நெஞ்சம் -என்றும் -சத்யேந லோகான் -தீனே தானம் குரு சிஸ்ரூஷய-இத்யாதி -என்றும்
ஸ்வேதர வஸ்துக்களை நின்ற நிலைகளிலே தோற்பித்து வெற்றி கொள்வார் ஒருவர் என்றும் –

தேவர் -என்று
வ்யாவஹரமாய்

பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் –
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -என்றும் –
மறை வுரைத்த திருமால் -என்றும்
அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் -என்றும்-பாஞ்சராத்ரஸ்ய க்ருஷ்ணஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -என்றும்
பிரபுத்வம் கொண்டாடி -வாய் திறவாது இருக்கை அன்றிக்கே –
சகல ஜகத் ஹிதமாக வேத வைதிக பிரவசனம் பண்ணுவார் ஒருத்தர் –

அன்றிக்கே வ்யவஹாரம் என்று வழக்காய்
சம்சாரியான நான் கடவேன் என்ன -புருஷோத்தம வித்யை ஸ்ரீ கீதை –
பிரமாணமான ஸ்ருதி ஸ்ம்ர்திகளை கையிலே கொண்டு சம்சாரிகள் உடன் வழக்கு சொல்லி தம்மது ஆக்குவார் -என்றுமாம் –

தேவர் என்று
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த  என்றும்-நாராயண பரோ ஜோதி இத்யாதி என்றும்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் ஒரு உரு -என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபரராய் இருப்பார் என்றும்

தேவர் -என்று
ஸ்துதியாய் -ஏத்த ஏழு உலகம் -ருக் சாம வேதங்கள் ஸ்துதியே -ஸ்தவ்ய ஸ்தவப்ரியன் -பவான் நாராயணோ தேவ 
ஏத்த ஏத்த எங்கு எய்தும் வீவில் சீர் அம்மான்  -என்றும்–ஸாஸ்தா விஷ்ணு -அனைத்தையும் நியமிப்பவன் இவனே -என்றும்
திவ்யரோடு பௌமரோடு வாசி அற சர்வைஸ்துதியனாய் இருக்கும் என்றும்

தேவர் –
காந்தி– -கதிகளுக்கு –அழகு இவனே உபேயம் கதி இவனே உபாயம் பேராய் -ஆறும் பேறும் இவனே
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்-ப்ரஹ்மத்தை அறிந்தவன் அடைகிறான்-என்றும்
மன் மனா பவ -மாம் ஏவ -இத்யாதி -என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும் சொல்லுகிறபடியே
உபாய உபேயங்கள் இரண்டும் அவனே என்றும்
வேத வைதிகர் சொல்கிற மேன்மையைன் புத்தி பண்ணினோம் -இத்தனை காண் –

அன்றியே –தேவர் -என்று –
அதஸ்மின் ஸ்தத் புத்தி பண்ணினோம் -பர தேவதை என்று பிரமித்தோம் இத்தனை ஒழிய –
மண்ணிலே மங்கி மனிசராய் இருக்கிறவரை நாம் தேவர் என்று பழி இட்டோம்
ஆலோகா லோபா லிங்கந விநயாதிகளை பண்ணி தம்மை தாழ விட்டு நின்று
சஜாதீய விஷயத்தை விஜாதீய புத்தி பண்ணினோம் இத்தனை காண் –

ஆத்மாநாம் மானுஷ்யம் மன்யம் ராமம் தசாரதாத் மஜம் -ந அஹம் தேவ –அஹம் வோ பாந்தவ ஜாத-
அவர் நினைவை விட்டு வழிப் போக்கன் வார்த்தையைப் பற்றினோம் இத்தனை காண் –
இப்படி அவர்கள் வார்த்தையை பற்றிச் செய்தது என் என்னில்

அஞ்சினோம்-
அபய ஸ்தானத்தில் பய புத்தி பண்ணினோம்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் வார்த்தையாய் இருந்தபடி கண்டாயே -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
யளவில் வந்தாலும் வாசனை விடாது இறே –

நாம் அஞ்சினோம்
(பீஷாஸ் வாத பவதி )துர்மானிகள் அஞ்சும் இடத்திலேயோ பக்ன அபிமாநீகளான நாம் அஞ்சுவது

நாம் அஞ்சினோம் –
கணயத்துக்கு உள்ளே இருக்கிற நாமா அஞ்சினோம் -(பெருமாள் தோளைப் பற்றி யானை புலி இவற்றைக் கண்டாலும் பயப்படாமல் ஸீதா பிராட்டி இருந்தாள் அன்றோ )
உபய விபூதிக்கும் அஞ்சினான் புகலிடமான தோள் எனக்கு ஒருத்திக்கும் பய ஸ்தானமாய் இருப்பதே –

அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே-
(ததாமி புத்தி யோகம் -10-10 )உணர்த்தியை தந்தவரை
அறியாதன அறிவித்த அத்தா-மயா ஸ்ருதா -ஆன்ரு சம்சயம் மயா தர்மம் -கேட்டேனே –
அவர் பக்கல் அறிவு பெற்ற நாம் பரத்வ ஞானம் பிறந்து ஸ்வ ரூப அனுரூபமாக ஒதுங்கினோம் –

நாம் அஞ்சினோம்-
தோழி உன் சந்நிதி இலோலாமை இறே நான் இழந்தது
அவன் படியையும் என் படியையும் அறிந்த நீ
கூட நின்றாயாகில் என் பிராந்தியை போக்கலாய்த்து -என்கிறாள் –

தோழி நாம் –
என்று தோழி கடக்க இருக்க
தானும் நாயகனும் கலந்து வந்த நாயகி தோழிக்கு வ்ர்த்த கீர்த்தனம் பண்ணுவதாய் இருக்க –
நாம் தேவர் என்று அஞ்சினோம் என்று தோழியை கூட்டிச் சொல்லுவான் என் என்னில்

தோழீ என்று நீங்கலாக சம்போதிக்கையாலே கூடிற்று அல்ல

நாம் அஞ்சினோம் என்கிற பஹூ வசனம் உபலம்பத்திலே
ஆத்மாநிப பஹூ வசனமாய்
நாம் இப்படி அபாயம் பட்டோம் கண்டாயே என்று லௌகிக மர்யாதையாலே
முறைப் படுகிறாள் ஆகையாலே ஒரு குறைகளும் இல்லை

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–20–தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 20, 2013

அவதாரிகை –

பொருவற்றாள் -என்று – ஊர் தடைகள் விட்டால் -ஊர்க்கதிர் காவல் விட்டால் –
அறுப்பது -கிடா விடுவதாய் கொண்டு -ஆழி மூழையாய்ச் செல்லுமா போலே
இவளும் தாய்க் காவல் விட்டவாறே
அவனுடைய சர்வ ரஷகத்வத்தை வாய் விட்டுப் பேசி கால ஷேபம் பண்ணா நின்றாள் –
இவளை மகா பாக்யவதி -என்னுமது ஒழிய உவமை இட்டுச் சொல்லப் போமோ -என்கிறாள் –

1-மகிஷிக்கு உதவினபடியையும்-
2-பேரனுக்கு உதவினபடியையும் –
3-ரஷக அபேஷை உடையாரை ரஷித்த படியையும் –
4-அதுவும் இல்லாரை தன் கிருபையால்  ரஷித்த படியையும் –
5-தன் பக்கல் விமுகராய் இருப்பார்க்கும் அகப்பட தூளிதானம் பண்ணின படியையும்
வாய் விட்டுப் பேசா நின்றாள் -என்கிறாள் –

(அர்ச்சாவதார அனுபவம் கலசாத பாசுரம் இது)

முதல் பத்தில் தாமான நிலையில் நின்று திருக் கோவலூரை அனுபவிக்கப் பார்த்து –
தாம் இருந்த இடம் திருக் கோவலூராக பெறாமையால் வந்த ஆற்றாமையாலே
கூப்பிட்ட விடத்திலும் அவன் வந்து முகம் காட்ட காணாமையாலே
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் –வாழலாம் -என்று
(முதல் மூன்று பாசுரங்கள் ஸ்வரூப ரூப குணம் அறிவித்தான் -இது அன்றோ திருமந்த்ரார்த்தம் -அடுத்து )

(அடுத்து ஓலைப்புறத்தில் கேட்டுப்போகாமல் கண்டு அனுபவிக்க திருக்கோவலூர் செல்ல எத்தனிக்க
போகும் வழியில் அங்குள்ள பெருமாள் குணங்கள் காட்டும் உகந்து அருளின திவ்ய தேசங்களை பாதேயமாகக் கொண்டு
மங்களா ஸாஸனம் செய்து பரிந்து இருப்பதை ஸாதனமாகக் கொண்டானோ என்று பதறி
அவை ஒன்றும் இல்லை என்று அறிவித்து த்வரை மிக்கு இருக்க
இந்த திருத்தாயார் வார்த்தையால் இறுதி பாசுரம் அன்றோ இது)

தாம் கால ஷேப அர்த்தமாக அனுபவிக்க இழிந்து

அது கிட்டாமையால் வந்த ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ணி
வந்து
முகம் காட்டாது ஒழிந்தானோ என்று சங்கித்து
பொன்னானாய் -என்கிற பாட்டிலே ஈஸ்வரனுடைய புத்தி சமாதானம் பண்ணினார்

இவ் விடத்தில் வினவ வந்தவர்கள் இவளுடைய ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ண
தாயார் நிலையில் நின்றவர்கள் உடைய ஹ்ர்தயத்தை சமாதானம் பண்ணித் தலைக் கட்டுகிறார் –

இத்தால் –
சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
யாவதாயுஷம் பகவத் குண சேஷ்டிதங்கள்
கால ஷேபத்துக்கு விஷயம் என்றது -ஆய்த்து –

———————————————————————————————-

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே -20-

பதவுரை

முன்–முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்–தேர்வீரனும் வாட்படை வல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள-ஐஸ்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க-(அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
(அனுமானை யிட்டு)
செம் தீ ஓங்கி–சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
(அதுவன்றியும்)
போர் ஆளன்-போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்-ஆயிரம் தோள்களை யுடையனான
வாணன் பாணாஸுரன்
மாள-பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து-அலை யெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு–பாண புரத்திற்புகுந்து
மிக்க-வீரலக்ஷ்மி மிகப் பெற்றவனும்
பார் ஆளன்–பூமிக்கு நிர்வாஹகனும்,
பார் இடந்து–(வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தி யெடுத்தும்
பாரை உண்டு–(பிரளயத்தில்) பூமியைத் திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து–அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து–(த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
(ஆக இப்படியெல்லாம்)
பாரை ஆண்ட–இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்–பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதும்-இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை-இப் பெண் பிள்ளையை
மண் மேல்-இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே–பெரும் பாக்கிய முடையவள் என்று
சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப் போமோ?

தேர் என்று பெயர் பெற்றவற்றை எல்லாம் ஆண்டவனாய்
வாள் ஆயுதத்தைக் கையிலே தாங்கின ராவணனுடைய சம்பத்து நசிக்கவும்
அழகை யுடைய லங்கையில் உள்ள ராக்ஷசர் ராவணன் முன்னே கலங்கும் படி திருவடியை இட்டு சிவந்த நெருப்பாலே கொளுத்தி
போர் செய்யும் தன்மையனான ஆயிரம் தோள்களை யுடைய பாணாசூரனை மாளச் செய்து
அலை எறிகிற ஸமுத்ரமாகிற கோட்டையை யுடைய வாண புரத்திலே புகுந்து வீர ஸ்ரீ யால் மிகுந்தவனாய்
பூமிக்கு நிர்வாஹகனாய்
வராஹ அவதாரத்தில் பூமியை அண்டபித்தியில் நின்றும் குத்தி எடுத்து பூமியை பிரளய காலத்திலே அமுது செய்து
பூமியை வெளிநாடு காண உமிழ்ந்து பூமியை த்ரி விக்ரம அவதாரத்தில் அளந்து
இப்படி பூமியை ரஷித்தவனுடைய திரு நாமங்களை எல்லாம் இடைவிடாமல் சொல்ல வல்லளான
இப்பெண்ணை பூமியிலே பெரும் பாக்யம் உள்ளவள் என்று அல்லது பேசப்போமோ –

———————————————————————————————–

தேராளும் வாளரக்கன் –
இப்போது இவனுடைய வைபவம் சொல்லுகிறது –
இவனை அநாயாசமாக அழியச் செய்த ஈஸ்வரத்வ சக்தி தோற்றுகைக்காக –

இது சதுரங்க பலத்துக்கும் உப லஷணம் –
அதிரதர் மகா ரதர் என்று பிரதானமாக சொல்லுவது தேரை யாகையாலே
அத்தை இட்டு அல்லாதவற்றையும் உப லஷிக்கிறது –

வாளரக்கன் –
இத்தனை தேராண்டான் என்று சங்க்யை சொல்லாதே
தேராளும் -என்கிறது –
தேர் என்கிற ஜாதி அத்தனையும் ஆண்டான் -என்கைக்காக –
இது சதுரங்க பலத்துக்கும் உறுப்பாக கட்டினான் இத்தனை என்னும்படியான தனி வீரன்
கையிலே வாளைக் கொண்டு எழுந்து இருந்தால் இந்த்ராதிகள் முதுகு புறம் காணும் படி இறே அவனுடைய தனி வீரம் இருப்பது –

அரக்கன் செல்வம் –
திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே -ராவணனுடைய ஐஸ்வர்யம் –
யத் தர்மோ ந பலவான் ஸ்யாத்-என்று இறே -திருவடியின் வார்த்தை –

(திருவடி மதித்த ஐஸ்வர்யம் -எங்கும் வேத ஒலியும் -வேள்விப் புகைகளும் நிறைந்து இருக்கக் கண்டார் திருவடி
மறம் செயல்களைச் செய்யாமல் இருந்தால் இவன் மூ உலகும் ஆளத்தக்கவன் என்று தோற்றிற்றே)

(யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸே ச்வா; ஸ்தாயம் ஸுரலோகஸ்ய ஸசக்ரஸ்யாபி ரக்ஷிதா.“
(இவ்விராவணனிடத்தில் அதர்மம் ஒன்று மாத்திரம் இல்லாதிருந்தால் இவனே தேவாதி தேவனாக விளங்கவல்லவன்
(என்றாயிற்று அனுமான் பேசினது.)

மாளத்-
பிணமும் காணாத படி நசிக்க —

தென்னிலங்கை –
அரணுக்கு அழகு துஷ் ப்ராபமாய் இருக்கை -(சதுர மா மதிள் சூழ் இலங்கை )
கட்டளைப் பட்ட இலங்கை -என்கை –
சுற்றும் கடலாய் –
அநந்தரம் நாடாய்-
அநந்தரம் மலையாய் –
அதின் மேலே மதிளும் அட்டாலையுமாய் -இருக்கை –
சூல் பெண் பெண்டாட்டிக்கும் எதிரிகளை ஜெயிக்கலாம் படி இருக்கை –

முன் மலங்கச் –
அவள் தன் குறி அழியாது இருக்க-
அவள் சந்நிதியில் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக கண் கலங்கும் படி –
லோகம் அடங்க அவன் கையில் படும் பாடு இத்தனையும்
அவள் சந்நிதியில் இலங்கை படும்படி ஆய்த்து –

செந்தீ யொல்கிப்
நெருப்பை கொளுத்தி –
ஒரு தனி யாளைப் புகவிட்டு இலங்கையை தக்தமாக்கி –

செந்தீ
ராவணன் ஏவல் செய்து இரை பெறாதே உடம்பு வெளுத்துப் போந்த அக்னி
திருவடி வாலை அண்டை கொண்டு தன்னிறம் பெற்றுத் தேக்கம் இட்ட படி –

அங்கன் இன்றியே
தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே
சர அக்னியால் இலங்கையை அழித்தான் சக்கரவர்த்தி திருமகன் என்னவுமாம் –

(தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே தொடுத்து விடுகிற போது அம்பாய் -ராம பாணமே நெருப்பு கக்குமே )

ஆனால் திருவடி இலங்கையை சுட்டான் என்பான் என் என்னில் –
கையில் திருச் சக்கரம் செய்தது தான் செய்தது அன்றியிலே ஒழியுமோ என்கை –
யதா ராகவ நிர்முக்தஸ் சர -என்னக் கடவது இறே –

(ஸூந்தர காண்டம் -ராம பாணம் போல் விரைவாக அடைவேன் -தனக்கு உவமானம் ராம பாணம் என்று சொல்லிக் கொண்டாரே)

போராளன் –
ஜன்ம ப்ரப்ர்தி யுத்த உன்முகனாய் போந்தவன் –
தன் தோளில் தினவு தீரும்படியான எதிரிகளைப் பெறாமையாலே
தன் அபாஸ்ரயமாக பற்றின ருத்திரன் பாடே சென்று –
பாராய மமகிம் புஜை -என்று
நான் இத் தோள் சுமந்து திரிகிற இதுக்கு பிரயோஜனம் என் –
என் மிடுக்குக்கு சத்ர்சமாய் இருப்பதொரு எதிரியைக் காட்டித் தர வேணும் என்றான் இறே –

(தோள் பலத்துக்கு ஏற்கும் படி போர் கிட்டுமா -இவை பெற்ற பலன் வேண்டுமே என்றானே)

அதுக்கு ஹேது என் என்னில் –
ஆயிரம் தோள் –
சஹஸ்ர பாஹூவாய் இருக்கையாலே

ஆயிரம் தோள் –
யௌ தத் பூஜா கரௌகரௌ -என்றும்(யௌ தத் பூஜா கரௌகரௌ-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -பூஜை செய்யவே திருக்கை )
கை உலகம் தாயவனை அல்லது தான் தொழா -என்றும் -சொல்லுகிறபடியே
கை கண்டது வகுத்த விஷயத்தை அஞ்சலி பண்ண விறே –

(வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-)

அதில் இரண்டு கை தான் தனக்கு உறுப்பாக பெற்றிலோமே -என்கிறான்
ஒருக்கால் அஞ்சலி பண்ணினாலும் ஐந்நூறு அஞ்சலி உண்டு இறே –

இத்தனையும் பர ஹிம்சைக்கு உறுப்பாவதே -என்கிறாள்
அதுக்கு ஹேது என் என்னில் –
வாணன் –
துஷ் பிரகிருதி யாகையாலே -என்கை –

மாளப்-
வாணனுடைய பாஹூ வனத்தைச் சேதித்து
அவனுடைய வீரத்தை அழித்தான் -என்கை –
வீரனுக்கு தன்னுடைய வீரத்தை அழிக்கும் அதில் காட்டிலும்
தன்னை அழிப்பது இறே நன்றாய் இருப்பது

மாலை
வீர வாசி அறியுமவள் ஆகையாலே
பின்பு இருந்த இருப்பு பிணம் என்று நினைந்து இருக்கிறாள்-

பொரு கடலை யரண் கடந்து புக்கு-
எதிரிகளுக்கு துஷ் பிரபமாம்படி யான திரைக் கிளர்த்தியை
உடைத்தான கடலாகிற
அரணைக் கடந்து பாணா புரத்திலே சென்று புக்கு –
தன்னில் தான் பொரக் கடவதான தரங்களை வுடைத்தான கடல் என்னவுமாம்

இது கீழும் அந்வயிக்கக் கடவது -(பொரு கடலை யரண் கடந்து புக்கு-தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கி)

மிக்க –
வீர ஸ்ரீயால் மிக்கவன் –
விஜயமும் மிக்கு வீர ஸ்ரீ யும் மிக்க படி –
அவனுக்கு ரஷகனாய் அபிமானித்து இருந்த எதிர்த்த ருத்ரனோடு
அவனுக்கு பரிகார பூதரானரோடு வாணன் தன்னோடு வாசி அற
அவர்கள் அழிய அழிய மேலே வீர ஸ்ரீ பணைத்த படியை சொல்கிறது –

பாராளன்-
பூ பாரமான பாணனை அழியச் செய்கையாலே பூமிக்கு நிர்வாஹகன் ஆனவனே –

பாரிடந்து-
தன் நிலை குலையாமல் நிற்கச் செய்தே வந்த ஆபத்தைப் போக்கி
விட்ட அளவு அன்றிக்கே –
அவள் தான் பாதாள கதையான போது ரஷித்த படியை சொல்லுகிறது –

தன்னிலை குலையாமல் நின்று சங்கல்ப்பத்தாலே ரஷிக்கை அன்றிக்கே
ஸூரி போக்யமான வடிவை அழிய மாறி
தத் அனுரூபமான வடிவைக் கொண்டு பிரளயம் கதையான பூமியை உத்தரித்து –
கீழ் பிராட்டியை ரஷித்த படியைச் சொல்லிற்று –
இவை இரண்டாலும் ஸ்ரீ பூமி பிராட்டியை ரஷித்த படியைச் சொல்கிறது –

(பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந்
தேசுடைய தேவர் என்னை மாத்திரம் இப்படி உபேக்ஷித்திருப்பதே! என்பது கருத்து.)

பாரை யுண்டு –
பூமியை பிரளயம் கொள்ளப் புக அந்த ஆபத்தே ஹேதுவாக திரு வயிற்றிலே வைத்து ரஷித்து

(நானும் அக்காலத்தில் இருந்திருந்தேனாகில் திருமேனியோடே ஸம்பந்தம் பெற்றிருப்பேனே என்றவாறு.)

பாருமிழ்ந்து –
அவ் அபேஷையும் இன்றிக்கே இருக்க
தயமானமனவாய்க் கொண்டு சிருஷ்டித்து –

(பிரளயகாலத்தில் திருவயிற்றினுள்ளே அடக்கின பூமியை மறுபடியும் வெளிப்படுத்திக்
கரண களேபரங்களைக் கொடுத்தருளி உருப்படுத்தினது இங்ஙனம் உபேக்ஷிக்கைக்காகவோ? என்றவாறு.)

பாரளந்து –
அபேஷை இல்லாத அளவன்றிக்கே -இவர்கள் விமுகராய் இருக்க
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தலும்
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வரூபம் நசித்த படியைக் கண்டு
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும்
திருவடிகளை வைத்து முறையை உணர்த்தி –

(உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியை வைத்து ஸத்தை பெறுவித்தருளினவன்,
விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப் பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே!
என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி.)

பாரை யாண்ட –
இப் படியால் பூமியை ரஷித்தவன் –

(பாரையாண்ட =
ஆகக் கீழ்ச் சொன்னவற்றையெல்லாம் திரளப் பிடித்து நிகமனஞ் செய்கிறபடி.

தேராளும் வாளரக்கன் செல்வம்மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கிப் பாரையாண்ட பேராளன்;
பாரிடந்து பாரையாண்ட பேராளன்; பாரையுண்டு பாரையாண்ட பேராளன்; பாருமிழந்து பாரையாண்ட பேராளன்;
பாரளந்து பாரை யாண்ட பேராளன் – என்றிங்ஙனே அந்வயித்துக் கொள்ளலாம்.)

உண்டு உமிழ்ந்து அளந்து இடந்து -என்னாதே
பல கால் பார் –என்கிறது
அவவவ அபதானங்களில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே

(ஓஓ! உலகினது இயல்வே* ஈன்றோள் இருக்க* மணை நீராட்டி,*
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து- அளந்து,* தேஎர்ந்து உலகு அளிக்கும் முதல்பெருங்- கடவுள் நிற்ப*
புடைப் பல தான் அறி- தெய்வம் பேணுதல்,* தனாது-
புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி,*
கொல்வன முதலா அல்லன முயலும்,* இனைய செய்கை இன்பு துன்பு அளி*
தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப்* பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே.)

பேராளன் –
இப்படி ரஷிக்கைக்கு ஹேதுவான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களுக்கு தொகை இல்லாதவன் –
இவளுக்கும் அத்தைப் பற்றி இறே திரு நாமத்தாலே சம்பந்தம் –

பேரோதும் பெண்ணை –
இப்படி அசங்க்யாதமான திரு நாமங்கள் இத்தனையும் இடைவிடாமல் பேச வல்லவளை –
கால ஷேப அர்த்தமாக பகவத் குண சேஷ்டிதங்கள் இத்தனையும் அவஹாகித்து அனுபவிக்க வல்ல இவளை –

மண் மேல் பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –
நித்ய ஸூரிகள் திரளினின்றும் பிறிகதிர் பட்டு போனதால் என்னும் அது ஒழிய வேறு பேசப் போமோ
பூமியிலே இருக்கச் செய்தே நித்ய ஸூரிகள் பரிமாற்றத்தை உடையவள் என்று அல்லது பேசப் போமோ –

பெரும் தவத்தர் -என்று
பரம பதத்தில் உள்ளாரை சொல்லக் கடவது இறே
நித்ய ஸூரிகள் பரிமாற்றத்தில் சாதனா புத்தி பண்ணினால் அன்றோ –
இவளுடைய ஆற்றாமையில் நமக்கு சாதனா புத்தி பண்ணலாவது
சாதனா புத்த்யா த்ர்ணச் சேதத்துக்கு பிராப்தி இல்லை –
கால ஷேப அர்த்தமாக இழிந்தால் அமுது கெடுக்க அவசரம் இல்லை -என்கை –

மண் மேல் பெரும் தவத்தள் –
நித்ய ஸூரிகள் தங்களிலே இவளை அந்ய தமையாக எண்ணப் போமோ
விண்ணுளாரிலும் சீரியர் -இத்தனை

(வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – ஸ்ரீ திரு விருத்தம் – -79)

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–19–முற்றாரா வன முலையாள் பாவை மாயன் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

December 20, 2013

அவதாரிகை –

தான் சொன்ன ஹிதம் கேளாமையாலே
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு – என்று
தானும் அதிலே உடன்பட்டமை தோன்ற வார்த்தை சொன்னாள் –

அவ்வளவிலே வினவ வந்தவர்கள்
ஸ்த்ரீத்வத்தை பார்த்திலளே ஆகையாலும்
ஆதரிக்கிறவன் தான் ஒரு விஷயத்திலே அந்ய பரன்
உனக்கு முகம் தர மாட்டான் என்று சொல்லா விட்டது என் -என்ன

அதுவும் சொன்னேன் -அது விபரீத பலமாய்
அதுவே ஹேதுவாக –
அவன் இருந்த தேசத்து ஏறப் போனாள் -என்கிறாள் –

(திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-)

(என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-)

(பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்–இதுவே உயிரான பதங்கள் இங்கு -மிதுன அனுபவத்துக்கு பேராசை கொண்டு போனாள்)

—————————————————————————————————————————————–

முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-

பதவுரை

பொருவு அற்றாள் என்மகள்–ஒப்பில்லாதவளான என்பெண்ணானவள்,
முற்று ஆராவனம் முலையாள்–முழுமுற்றும் போந்திலாத அழகிய முலைகளை யுடையவளும்
பாவை-சித்திரப் பதுமை போன்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மாயன்-அற்புதனான எம்பெருமானுடைய
பெற்றேன்-பெற்றெடுத்த தாயாகிய நான்,
வாய் சொல் பேச-(ஹிதமாகச் சில) வார்த்தைகள் சொல்ல,
இறையும்-சிறிதேனும்
கேளாள்-காது கொடுத்துங் கேட்பதில்லை;
பேர் பாடி-திருப்பேர் நகரைப் பாடியும்
தண் குடந்தை நகர் பாடியும்-குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும்
மொய் அதலத்துள் இருப்பாள் அஃது கண்டும்-அழகிய திருமார்பினுள் அடங்கி வாழும்படியைக் கண்டு வைத்தும்
அற்றாள்-அவனுக்கே அற்றுத் தீ்ர்ந்தாள்;
தன் நிறைவு அழிந்தாள்-தன்னுடைய அடக்கமொழிந்தாள்;
ஆவிக்கின்றாள்-நெடு மூச்செறியா நின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-தோழீ! திருவரங்கநகர் படிந்தாடுவோமா?‘ என்கிறாள்;
பொன் தாமரை கயம்-திருப் பொற்றாமரைத் தடாகத்திலே
நீர் ஆட-குடைந்தாடுவதற்கு
போனாள்-எழுந்து சென்றாள்;
உம் பொன்னும் அஃதே-(தோழியர்காள்!) உங்கள் பெண்ணின் படியும் இவ் வண்ணமேயோ?

பூர்ணமாகச் சமையாத இளமை தங்கிய அழகிய ஸ்தனங்களை யுடையளாய்
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை யுடையளான என் பெண்ணானவள்
ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனுடைய அழகிய திரு மார்பில் நித்ய வாஸம் பண்ணும்
பெரிய பிராட்டியார் படியை கண்ணுற்றுப் பார்த்தும் அத் தலைக்கே அற்றுத் தீர்ந்தாள்
தன்னுடைய பூர்த்தி அழிந்தாள்
நெடு மூச்சு விடா நின்றாள்
என்னுயிர்த் தோழியே
சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலுக்குப் போய் அவகாஹிக்க அனுபவிக்கக் கடவோம் என்று சொல்லா நின்றாள்
பெற்ற தாயாரான நான் சொல்ல என்னுடைய வாய் வார்த்தையை சிறிதேனும் கேளாள்
திருப்பேர் நகரைப் பாடியும்
குளிர்ந்த திருக்குடந்தை நகரை வாயாறச் சொல்லியும்
அழகிய தாமரை மலர்களை யுடைய -அழகிய மணவாளன் ஆகிற -தடாகத்திலே
நீராட -ஸம்ஸ்லேஷிக்கப் போனாள் -உபமானம் அறப் பொருந்தி விட்டாள்
தோழிமார்களே உங்கள் பெண்களும் இவள் படியோ —

—————————————————————————————————————————————–

அவனை அநந்ய பரமாக்கும் விஷயத்தை சொல்லுகிறது –

முற்றாரா வன முலையாள் –
முற்றும் வன்னியம் அறுத்து
சமைய வளராத முலை –

முலை வன்னியம் அறுத்து சமைய வளருகை யாவது –
முலை அடிக் கொள்ளுமிடத்தில் தடை அற்று இருக்கை –

இத்தால் -விஷயத்துக்கு துல்யமான பருவத்தை சொல்கிறது –
யுவா குமாரா -என்கிறபடியே –
கௌமார அவஸ்தையில் நின்றும் கால் வாங்கி –
யௌவனம் முகம் காட்டும் அளவாய் இருக்கும் – அவன் பருவம் –
யுவதிஸ்ஸ குமாரிணீ -என்கிறபடியே
கௌமார அவஸ்தையிலே ஸ்த்திதையாய் -யௌவனம் முகம் காட்டும் அளவாய் இருக்கும் -இவள் பருவம் –
இது இறே சதைக ரூபமாய் இருக்கும் படி

(வாணாட்டு இளவரசன் வைகுண்ட குட்டன் அன்றோ-அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூப ரூபாய விஷ்ணவே சர்வ )

பதினோராயிரம் ஆண்டு ராஜ்ஜியம் பண்ணின விடத்திலும் பிராட்டிக்கும் பெருமாளுக்கும் பருவம் இதுவேயாய் இறே இருந்தது –
அவர்களுக்கு பால்ய அவஸ்தை விக்ரஹத்தின் உடைய பவ்யதையால் வந்தது இத்தனை ஒழிய
பரிணாமத்தால் வந்தது அன்று என்கை –
ஜரா அவஸ்தை அநிஷ்டம் ஆகையால் வந்தது இல்லை –
அதுக்கு ஹேது ரஷ்ய வர்க்கத்துக்கும் அபேஷிதம் அன்றியிலே இருக்கையாலே
பவ்யதையே உள்ளது என்னும் இடம் கண்டோம் இறே
ஏக காலத்தில் பால்ய யௌவனங்கள் மாறாடி வரும் இறே –
உன்னையும் ஒக்கலையில் -இத்யாதி-

(உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக் கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி*
மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ் சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!*
என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.-1-5-8-)

வன முலையாள் –
அழகிய முலையை உடையவள் -என்கை –
சர்வாங்க ஸூந்த்ரையாய் இருக்க -வன முலை -என்று முலையை விசேஷிக்கிறது –
மலராள் தனத்துள்ளான் -என்கிறபடியே –
அவன் இம் முலைக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாத
போக்யதாதிசயம் தோற்றுகைக்காக –

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து —மூன்றாம் திருவந்தாதி—–3-)

(நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–)

(குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.)

உபய விபூதி நிர்வஹணத்து அடியான ஞான சக்திகளை உடையவன் கிடீர்
தன்னுடையதான வஸ்துவில் ஏக தேசத்தை பரிச்சேதித்து அனுபவிக்க மாட்டாது இருக்கிறான் –

நிருபாதிக ஸ்வ தந்த்ரனாய் -ஸ்வத நிரபேஷனாய் இருக்கிறவன் கிடீர்
ஓர் அவயவத்தைக் குறித்து பர தந்த்ரனாய் சாபேஷனாய் இருக்கிறான் –

அல்லாத இவளுடைய -குண அனுரூபேன விலாச சேஷ்டிதை -என்றும்
சொல்லப் படுகிற இவை குமர் இருந்து போம் இத்தனை –

உள்ளான்
விபு தத்வம் அணு வஸ்துவில் ஏக அவயவத்தில் அடங்கினபடி –

பாவை –
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –
அவனுடைய புருஷோதமத்வத்தாலும் மீட்க ஒண்ணாத படி இறே
இவள் உடைய ஸ்த்ரீத்வம் இருப்பது –

மாயன் –
ஆச்சர்ய பூதன் –
நிருபாதிக ஸ்வ தந்த்ரன் பர தந்த்ரனான ஆச்சர்யம் –
ஸ்வத பூரணன் ஆனவன் ஓர் அவயவத்தைக் குறித்து சாபேஷனான ஆச்சர்யம்
சர்வஞ்ஞனாய் சர்வ சக்தியாய் இருக்கிறவன் ஏக அவயவத்தை பரிச்சேதிக்க மாட்டாத ஆச்சர்யம் –

மொய்யகலத்துள் இருப்பாள் –
மொய் -என்று அழகு
அழகிய மார்பை உடையவன் –
அவன் –அகலகில்லேன் இறையும் -என்னும்படியான
இவளுடைய ஸ்தனத்தின் போக்யதை சொல்லிற்று கீழ் –

இத்தால் –
இவள் –அகலகில்லேன் இறையும் -என்று சொல்லும்படியான
அவன் மார்வின் போக்யதை சொல்கிறது

அவன் முலைக்கு அவ்வருகு போக மாட்டாதவன் போலே
இவளும் மார்வுக்கு அவ்வருகு போக மாட்டாது இருக்கிறாள்
அவளைப் போலே ஸ்வத சித்தமான ஜ்ஞான சக்திகளை உடையவள் கிடீர்
மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாது இருக்கிறாள்
உத்துங்க தத்வம் ஏக அவயவத்தில் அகப்பட்டு -தண்ணீர் தண்ணீர் -என்னும்படி இருக்கிறவள் கிடீர்
ஏக அவயவத்துக்கு அவ்வருகே போக மாட்டாது இருக்கிறாள் –
இவனுக்கும் ஒக்கும் காணும்
அல்லாத ரூப குணங்களும் ஆத்மா குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை

முலையை அணைத்து அவன் பித்தேற
மார்வை அணைத்து இவள் பித்தேற
இது ஒரு ப்ராந்த மிதுனம் இருந்த படி என்-

இருப்பாள் —
சேஷியானவள் சேஷ வஸ்துவில் ஏக அவயவத்துக்கு சேஷமானால் போலே
சேஷ பூதை யான இவள் சேஷி உடைய ஏக அவயவத்துக்கு சேஷமாய் இருக்கிறாள் இறே –
நித்ய மங்கள விக்ரஹத்துக்கு நிரூபக பூதையாய் இறே பிராட்டி இருப்பது –
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ – என்று சர்வேஸ்வர சிஹ்னம் இறே -ஸ்ரீ ய பதித்வம் –
தேவதாந்தரங்களை அவர தேவதை என்கிறதும் ஸ்ரீயபதித்வம் இல்லாமையால் இறே –

(வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம் ஹித  காம்யயா ச ராஷஸ பரீவாரம் ஹத வரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17 -மண்டோதரி சதுஸ்லோகி )

(இன்னார்- இனையார்-ஸ்ரீ யபதித்தவம் -அஹம் -அஹந்தா -மீனில் எங்கும் நீர் போல் இவள் -)

(கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு—நான்முகன் திருவந்தாதி 53–)

(லோக நாத -மாதவ -பக்த வத்சலா -ஸ்ரீ நடுவில் -பரத்வ ஸுலப்யம் – மா மாயன் மாதவன் வைகுந்தன்)

உள் இருப்பாள் –
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிரூபக பூதையாய் இருக்கை அன்றியே
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கும் நிரூபக பூதையாய் இருக்கிறபடி –

இது இறே -ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு ஸ்வரூப வேளையோடு
வாசி அற ஒரு மிதுனமே பிரதி சம்பந்தி என்கைக்கு ஹேது –

அல்லாத நாய்ச்சிமாருக்கு விபூத் அந்தர்பாவமே உள்ளது –
இவளுக்கு ஸ்வரூப ரூப விபவங்கள் மூன்றிலும் அன்வயம் உண்டு இறே –

(பூமி தேவி நீளா தேவி சொத்து போல் மட்டும் -நிழல் போலே –நிழல் தானே நிழல் கொடுக்க முடியும் -இவர்கள் மூலமே நமக்கு –சேர்ந்து கைங்கர்யம்)

அஃதும் கண்டும் அற்றாள்-
அவள் அவன் பக்கலிலே பித்தேறி –
அவன் அவள் பக்கலிலே பித்தேறி –
இருவரும் ஊமத்தங்காய்  என்று நான் சொல்ல -அது விபரீத பலமாய்த்து -என்கிறாள் –

அந்யோந்யம் ஒழிய செல்லாதே இருக்கிறபடியைக் கண்டும்
(கார்யம் கருண மார்யேண்)ந கச்சின் ந அபராத்யதி -என்கிறவள் படியையும் –
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -என்கிறபடியே
குற்றத்தை குணமாகக் கொள்ளும் அவன் படியைப் பார்த்தும்
அனன்யார்ஹை -ஆனாள் –

(குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  –முதல் திருவந்தாதி -41-)

அவன் படியைக் கண்டும் அற்றாள்
அவள் படியைக் கண்டும் அற்றாள் –
சேர்த்தியைக் கண்டும் அற்றாள் –

அற்றாள்
குற்றத்தை குணமாகக் கொண்டாள் –

செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் படியைப் பார்த்து
அங்கே அனன்யார்ஹை ஆனாள் –

(தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகு ரைக்கு மேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தா ரென்பர் போலும்
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே.)

ராஜ சம்ஸ்ரய வஸ்யானாம்-என்கிறபடியே(ராஜாவுக்கு வசப்பட்டு செய்த ராக்ஷஸிகள் இடம் கோபம் கொள்ளலாமோ )
குற்றத்தை குணமாகக் கொள்ளும் அவன் படியைப் பார்த்து அனன்யார்ஹை ஆனாள் –

சேர்த்தியைப் பார்த்து இருவரும் ஊமத்தங்காய் தின்ற போது
தெளிந்து இருப்பார் வேணும் என்று அனன்யார்ஹை ஆனாள்-

அஃதும் கண்டு அற்றாள் –
விடுகைக்கு சொன்ன குற்றம் -பற்றுகைக்கு உடலாய்த்து –
மார்வை ஒருத்திக்கு படுக்கை பற்றாக்கினான் என்றவாறே
அதனடியான தன்றோ என்ன –

என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே -என்னா நின்றாள் –
போக பூர்த்தி உள்ளது சேர்த்தியிலே இறே –

(என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-)

(“நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக“
என்கிறபடியே குற்றங்களைப் பொறுப்பிக்கவல்ல பெரியபிராட்டியாரும்,
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல், என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தாரென்பர்“
என்கிறபடியே * செய்தகுற்றம் நற்றமாகவே கொள்ள வல்ல என்பெருமானும் கூடியிருக்கிற இவ்விருப்புத்தானே
நமக்குப் பரம உத்தேச்யமென்று கொண்டு அந்த மிதுனத்திலே ஈடுபடாநின்றாளாயிற்று.)

தன் நிறைவு இழந்தாள்-
அனன்யார்ஹை யான அவ்வளவேயோ –
அசாதாரணமான ஸ்த்ரீத்வமும் அழிந்தது -என்கிறாள் –

இவற்றில் ஓர் ஒன்றே அமையும் காண் -இவள் பூர்த்தி அழிகைக்கு –
எவ் அவஸ்தையிலும் தான் அவிக்ர்தையாய் இருந்து
எதிர் தலையை விக்ர்தமாக்க வல்ல
தன் பூர்த்தி கிடீர் அழிந்தது -என்கிறாள் –

தன் நிறைவு
கடல் வற்றிற்று என்கிறாள் –

அவள் பூர்த்தி அழிந்தது என்று நீ அறிந்த படி என் என்ன –
ஆவிக்கின்றாள்-
எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்று உத்தேச்யத்துக்கு போக வழி தேடினவள்
அச் சேர்த்தியை அனுசந்தித்த போதே கிட்டாத போதே நெடு மூச்சு எறியா நின்றாள்-

அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் –
இவள் தசையைக் கண்டு அவனோ முகம் காட்டிற்று இலன் –
தாயார் ஹித பரை யாகையாலே ஆஸ்வாச ஹேதுவாக மாட்டாள் என்று பார்த்து தோழி வந்து சந்நிஹிதை யானாள் –
அவனைப் பிரிந்த போதும் இவள் முகம் தனக்கு அபேஷிதமாய் இறே இருப்பது –
தன் ஆற்றாமையே செப்பெடாக பேறு தப்பாது என்று தரித்து
தோழீ-நாம் கோயிலிலே போய் அனுபவிக்கக் கடவோம் என்று ஒருப்படுகிறாள் –

ஆடுதும் –
ஆடுவோம் -என்கிறபடி –
தாப த்ரயாதுராரோடு விரஹ தாபதுரரோடு வாசி அற சர்வருக்கும்
ஸ்ரமஹரமாய் இருக்கையாலே
அத் தேசத்தைப் பொய்கையாகப் பேசுகிறாள் இறே –

பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் –
நான் வார்த்தை சொல்லில் அனுகூல பாஷணமாயிலும் கேளாள் –

பெற்றேன் வாய் சொல் -கேளாள் –
அவன் சொன்ன வார்த்தையும் கேட்கும்
தோழி சொன்ன வார்த்தையும் கேட்கும்
பெற்றதே குற்றமாக என் வார்த்தையை கேளாள் –

இறையும் பேசக் கேளாள் –
நான் அனுகூலமாகச் சொல்லிலும் கேளாள் –
கோயிலிடை யாட்டமாக வார்த்தை சொல்லிலும் கேளாள் –

கேளாள் –
சொன்ன கார்யம் செய்திலேள் ஆகிலும் செவி தாழ்கலாம் இறே -அதுவும் செய்திலள்
அநாப்தி சம்ப்ரதிபன்னம் ஆனால் விலஷணமான வார்த்தை யாகிலும் கேட்ப்பார் இல்லை இறே –

பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
உன் வார்த்தை கேளாதவள் தன் வார்த்தை இருந்தபடி என் என்ன –
கோயிலுக்கு போம் வழியில் பாதேயங்களைப் பேசா நின்றாள் –
நிறை வழிந்தார் செவ்வை வழியும் போவார்கள் போலே காணும்

பேர் பாடி
கோயிலுக்கு போகையில் உண்டான ஆதாரதிசயத்தாலே
திருக் குடந்தைக்கு பிற்பட சொல்லக் கடவ திருப் பேரை முற்பட சொல்கிறாள்
தடை யற்றால் –ஏதத் சாமகாயன் நாஸ்தே -(தைத்ரியம் )என்று
ஆழி மூழையாகச் செல்லத் தட்டில்லை இறே-

(ஹாவு ஹாவு -கீசு கீசு -கர்மத் தடை நீங்கப் பெற்ற முக்தர்களைப் போல்)

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –
பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால்
அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –

தமிழர் –சுனையாடல் -என்றும் –
நீராட்டு
-என்றும் சம்ச்லேஷத்தை சொல்லக் கடவர்கள் –
அனுபவிக்கப் போனாள் -என்கை

போனாள் –
கீழ் பாட்டில் வழி கேட்டாள்
இப்போது போனாள் -என்பான் என் என்னில்
உடல் அன்றோ இங்கே இருக்கிறது
நெஞ்சு குடி போய்த்து என்கிறாள் -(பாவநா பிரகர்ஷம் தானே இவை எல்லாம் )

மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் –
தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –

தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்
வாசத் தடம் போலே வருவானே -என்றும்
தடாகமாக சொல்லக் கடவது இறே –

(துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-)

(மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1-)

(பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும்
புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும்
எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும்.
தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.)

அவள் போகைக்கு நீ பிரதிபந்தகை அன்றோ -என்ன
பொருவற்றாள் –
அத்தசை கடந்தாள் –
பொரு -சேர்த்தி
அவனோடு பொருந்தின பின்பு என்னோடு சேர்த்தி அற்றாள் –

அதவா
பொருவற்றாள் -என் மகள் –
என் மகள் உபமான ரஹீதை ஆனாள் –
பொரு -ஒப்பு
(மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் )கீழ் சொன்ன வளும் ஒப்பு அற்று -என்கை
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள் -என்னக் கடவது இறே –

(பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-)

உம் பொன்னும் அஃதே –
உங்கள் வயிற்றில் பிறந்தார்க்கும் இவள் படி உண்டோ
உம் பொன் -என்கிறது -அல்லாத ஆழ்வார்களை –

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு-என்று
அவதாரத்தை அனுசந்தித்து இறே அவர்கள் மோஹித்தது –

அர்ச்சாவதாரத்தில் இறே இவள் மோஹித்தது –
நங்கைமீர் -இத்யாதி –

(பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-)

(சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6-)

(உங்கள் வயிற்றிற் பிறந்த பெண்ணும் இவளைப்போலே அடங்காப் பிடாரிதானோ?
அன்றி விதேவையா யிருப்பவளோ? என்று கேட்பது வெளிப்படை. உங்கள் பெண்ணுக்கு இத்தனை வைலக்ஷண்யம் இல்லையே!,
நங்கைமீர்! நீரு மோர் பெண் பெற்று நல்கினீர், எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற வேழையை! என்றாற்போலே கொண்டாட்டம் உள்ளுறை.)

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–18–கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 19, 2013

அவதாரிகை –

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே –என்று தான் சொன்ன
ஹிததத்தைக் கடந்த படியாலே
இனி இவளை ஹிதம் சொல்லி மீட்கை என்று நமக்கு ஓன்று இல்லை என்று கூடி உடன்பட்டு –
இவள் கருத்தை கேட்போம் பார்த்து
உனக்கு ஓடுகிற கருத்து என் என்ன –

இங்கு இருந்து கூப்பிடக் கடவேன் அல்லேன் –
அவன் இருந்த தேசம் ஏறப் போகக் கடவேன் என்ன –
அளவுடையாரும் குமுழி நீர் உண்ணும் விஷயத்தில் தான் மேல் விழுந்து அனுபவியா நின்றாள் –
இது அன்றோ ஸ்த்ரீத்வத்தை பாராதே விஷய வைலஷண்யத்தை பார்த்தார் படி இருக்கும் படி

வினவ வந்தாருக்கு சொல்கிறாள்
நிறை வழிந்தார் நிற்குமாறு -இது வன்றோ -என்று இவளுக்கு பிரணயத்வத்தில் உண்டான தேசிகத்வம்
தனக்கு இஷ்டம் என்னும் இடம் ஹார்த்தமாக போந்தது –
அத்தை இங்கே பிரகாசிப்பிகிறாள்

இவ்விடத்தில் ஓர் அர்த்தத்தை தாயார் வார்த்தையால் பூர்வ பஷித்து
மகள் வார்த்தையாலே சித்தாந்திக்கிறது –

பிரதமத்திலே ஸ்வரூபத்தை அனுசந்தித்து
பின்னை ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தில் இழிய வேண்டாவோ என்று யாய்த்து தாயார் சித்தாந்தம்
அது வேண்டுகிறது என் என்னில்

சாஸ்த்ரங்களில் ஸ்வர்க்காதிகளையும் புருஷார்த்தமாக சொல்லுகையாலே
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் இது என்னும் நிர்ணயிக்கும் போது
ஸ்வரூபம் முன்னாக வேணும் என்கை –

அது ஓர் ஆர்த்தம் அன்று காண்
போக அனுரூபம் ஸ்வரூபமாம் இத்தனை ஒழிய
ஸ்வரூப அனுரூபமாயோ போகம் இருப்பது என்று ஆய்த்து மகள் சித்தாந்தம் –

(இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–நாராயணாயா பதார்த்தம் பார்க்கும் தனது பெண்

பெண் பிள்ளையின் வாய் வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய்
கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது.
‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்த படியாலே இனி படியாகவே தோற்ற விருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘
என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல,

மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது,
திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது,
அவனூர் எங்கேயென்று வினவுவது,
நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது,
ஆக விப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய்.

‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும்,
‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும்
‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும்
‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும்
‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல்.
‘என்னும்‘ என்கிற வினை முற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது.
‘என்மகள் இப்படி சொல்லுகிறாள், இப்படி சொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று.)

(எம்பெருமான் தானுகந்தார்க்கு ஸர்வ ஸ்வதானமாகக் கொடுத்தருள்வது தன் திருமேனியையே.
பரதாழ்வான், சிறிய திருவடி, அக்ரூரர் முதலானாரிடத்தே இது காணலாம்.
“தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்த; சிரஸ்யாக்ஷிபதம் கதம் – அங்கே பரதமாரோப்ய முதித; பரிஷஸ்வஜே“ என்று
பரதாழ்வான் விஷயத்திலே சொல்லப்பட்டது.
(நெடுநாள் கடந்தபின் கண்ணுக்கு இலக்காகித் திருவடிவாரத்தில் வீழ்ந்த பரதாழ்வானை வாரியெடுத்து
மடிமீதிருத்தி மகிழ்ந்து சேரத்தழுவினாள் ஸ்ரீராமபிரான் என்பது இதன் பொருள்)
“ஏஷ ஸர்வஸ்பூதஸ்து பரிஷ்வங்கோஹநூமத; மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந;“ என்று
சிறிய திருவடி விஷயத்திலே சொல்லிற்று.
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பரணிநா, ஸம்ஸப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே“ என்று
அக்ரூரர் விஷயத்திலே சொல்லப்பட்டது.
மூவர்க்கும் தன் திருமேனியை அணைக்கக் கொடுப்பதே பெரும்பரிசு.)

———————————————————————————————–

கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார்வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ணம் என் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–18-

பதவுரை

பாவம் செய்தேன் என்-பாவியான என்னுடைய
ஏர் வண்ணம் பேதை-அழகிய வடிவை யுடைய பெண்ணானவள்
என் சொல் கேளாள்–என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
திருமேனி கார் வண்ணம் என்னும்–(எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
கண்ணும்–(அவனது) திருக்கண்களும்
வாயும்–திரு வாயும்
கைத் தலமும்–திருக் கைகளும்
அடி இணையும்–திருவடியிரண்டும்
கமலம் வண்ணம் என்னும்–தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்;
பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்–(அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்;
பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்-குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்
விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்;
எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்-என்னை அடிமைப் படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்;
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்–நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக் கடவேன் என்கின்றாள்;
நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ-அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்!

கறுத்த நிறத்தை யுடைய திருமேனியையும்
செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையும் திருப் பவளத்தையும்
திருக் கைத் தலங்களையும் பரஸ்பர ஸத்ருசமான திருவடிகளையும் யுடையனாய்
பூமியைப் பிரகாரமாக யுடையளாய் மடப்பத்தை யுடையளான பூமிப் பிராட்டிக்கு இட்ட வழக்காய் இருக்குமவனாய்
குளிர்ந்த செந்தாமரை மலரில் எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் விஷயத்தில் அதி வியாமுக்தனான சர்வேஸ்வரன் விஷயத்திலே
பாபத்தைப் பண்ணினேன்
அது எது என்னில்
அழகிய வடிவை யுடைய என் பெண்ணானவள் என்னுடைய வார்த்தையைக் கேட்க்கிறாள் இல்லை
என்னை அநன்யார்ஹை யாக்கினவனுடைய கோயிலானது எங்கே என்று கேட்க்கிறாள்
கடலின் நீர் போன்ற நிறத்தை யுடையவன் எழுந்து அருளி இருக்கிற திரு நீர் மழைக்கே போவேன் என்கிறாள்
தம்முடைய ஸ்த்ரீத்வம் அழிந்தவர்கள் நிற்கும் பிரகாரம் இது அன்றோ –

————————————————————————————————–

இவளுடைய சித்தாந்தமே சித்தாந்தம் என்னும் இடத்தை வினவ வந்தார்க்கு மூதலிக்கிறாள் –
திரு மந்த்ரத்திலே பிரதம பதத்தில் இழிந்து
பின்னை த்ர்தீய பதத்தில் இழிந்தவளோ இவள் –
பிரதமத்தில் வடிவில் அன்றோ -இவள் இழிந்தது –

அநர்த்த ஹேதுவாய் இருக்கும் வடிவைப் பற்றி -புருஷார்த்தம் என்று நின்ற என் பெண்ணை –
தன் வடிவைக் காட்டி அன்றோ அவற்றில் துவக்கு அறுத்தது –
ஸூரி போக்யமான வடிவிலே அன்றோ இவள் பிரதமத்தில் இழிந்தாள் -என்கிறாள்

ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத – என்று அடிமை செய்தார்க்கு
பரிசலாகக் கொடுத்ததும் வடிவை இறே-

(ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத – மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாதமன-யுத்த -1-14)

மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று(ஸர்வ தர்மாந் பரித்யஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ |. அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி …)

உழவு கோலும்
சிறு வாய்க் கயிரும்
சேனா தூளி தூசரிதமான திருக் குழல் கற்றையுமாய்
நின்ற வடிவைக் காட்டி இறே –

பிராப்யத்தில் மேல் எல்லையான வடிவு அன்றோ
இவளுக்கு விஷயாந்தர ப்ராவண்ய நிவ்ர்த்திக்கு பரிகரம் ஆய்த்து –

திவ்ய மங்கள விக்ரஹமே பிராப்யமும் பிராபகமும் -இதுவே ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் –

(இதில் வாத்சல்ய -ஸ்வாமித்வ-சௌசீல்ய -சௌலப்யங்கள் -ஆகிற குண விசேஷங்கள் நேராகப் பிரகாசிக்கிறது –முமுஷுப்படி -சூரணை -217

கையும் உழவு கோலும்–பிடித்த சிறு வாய் கயிறும்–சேநா தூளி தூ சரிதமான திரு குழலும்–தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –முமுஷுப்படி -சூரணை -218

வைத்த அஞ்சேல் என்ற கையும் கவித்த முடியும் முகமும் முறுவலும் ஆசன பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமே தஞ்சம் )

அர்ச்சிராதி மார்க்கத்தாலே
ஓர் தேச விசேஷத்திலே செல்லுகிறதும்
பூர்ண ஷாட் குண்ய விக்ரஹத்தை அனுபவிக்கை இறே –

கார் வண்ணம் –
தாப த்ரயாதுரர்க்கு தாப ஹரமாய்
விரஹ தாபாதுரர்க்கு விரஹ தாபத்தை போக்கக் கடவதாய் இருக்கும் இறே –

அம் மேகம் பரப்பு மாற தாமரை பூத்தால் போல் ஆய்த்து
காளமேக நிபஸ்யாமமான வடிவுக்கு பரபாகமாய் கொண்டு
திவ்ய அவயவங்கள் இருப்பது –
இப்படி இருப்பதொரு மேகம் உண்டாகில் இறே வடிவுக்கு த்ர்ஷ்டாந்தம் ஆவது -இது அபூதோமை –

(கருமுகில் தாமரைக் காடு பூத்து நீடிருசுடர் இருபுறத் தேந்தி யேடவிழ்
திருவொடும் பொலியவோர் செம்பொற் குன்றின்மேல் வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான்”

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே )

திரு மேனி கண்ணும் வாயும் கைத் தலமும் அடி இணையும் கமல வண்ணம் –
இவளுடைய வாத்சல்யாதி குணங்கள் இருக்கிறபடி –
ஸ்வரூபம் அடியாக இழிந்த போது இறே ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்கள் உபாயம் ஆவது –
ரூபம் அடியாக இழிந்தவள் ஆகையால் ரூப குணங்களே ஆய்த்து இவளுடைய உபாயம் –

சம்சார பய பீதி பூர்வகமாக-
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உணர்ந்து-
தத் பூர்வ வ்ருத்தத்தையும் உணர்ந்து-
தத் பரிஹாரார்தமாக திவ்ய ஆத்ம குணங்களிலே
அடி இட்டு இழிந்தவள் அன்றோ இவள் –

கண்ணும்
தூது செய் கண்ணும் இறே
தம் பக்கல் விமுகராய் போருவாரையும் அகப்பட காலைக் கட்டி துவக்கிவிக்கும் கண் இறே –
ஜிதந்தே புண்டரீகாஷா -என்று பிரதமத்திலே ருசி ஜனகமாய் இறே கண் இருப்பது

புண்டரீகாஷா நஜா நே சரணம் பரம் -என்று ருசி பிறந்தார்க்கு உபாயமாய் இருப்பதும் கண் இறே

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று பிராப்தி தசையில்
சதா தர்சனத்துக்கு விஷயமாய் இருப்பதும் கண் இறே –

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-)

(ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !)-1-

(அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8–
பரம் சரணம் ந ஜாநே-உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-)

(தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம்மருவி நன்குஏத்தி உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்து ஆட நாஅலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!-2-6-3-)

வாயும் –
அக் கண்ணிலே துவக்கு உண்டாரை நெடும் காலம் இழந்த இழவு எல்லாம்
தோற்றும்படியாக சாந்த்வனம் பண்ணும் முறுவலும் -(ஸம் பாஷணமாவ இவ)

சாபராதரான நம் அளவிலே திரு உள்ளம் என்னாய் இருக்கிறதோ என்று கூச்சத்தோடு கிட்டினால்
நிரபராதர் நாம் என்று அவர்கள் தாங்களே தங்களை நினைக்கும் படி யாய்த்து முறுவல் இருப்பது –
அபராதத்துக்கு நேர்த்தரவு கொடுக்கும் முறுவல் இறே

கைத்தலமும் –
கிட்டினாரை மாஸூச -என்னும் கையும்(அஞ்சேல் என்ற கையும் அபய ப்ரதானம் -அபய ஹஸ்தம் )
அணி மிகு தாமரைக் கையை யந்தோ வடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் –என்று
பிராப்யமாய் இருப்பதும் இக் கையே இறே –

(பணி  மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-)

அடி இணையும் –
அக்கையைக் கொண்டு நிர்ப்பயரானார் அனுபவிக்க இழியும் துறையான திருவடிகளும் –
த்ரிவிக்ரம தவச் சரணாம் பூஜா த்வயம் மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி –என்றும்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
சொல்லுகிறபடியே போக்யமாய் இருப்பதும் திருவடிகள் இறே –

(கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி— -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்  ஸ்லோகம்-31-

(குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-)

முதல் உறவு பண்ணும் கண்ணும்
அத்தை ஸ்த்ரமாக்கும் முறுவலும்
முறை உணர்ந்தாரை மேல் விழுந்து அணைக்கும் கையும் –
அந்த ஸ்பரசத்துக்கு தோற்று விழும் திருவடிகளும் -இருக்கிறபடி –

(சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே)

கமல வண்ணம் –
தாமரையை ஒரு போலியாக சொலும் அது ஒழிய
உத்தர ஷணத்தில் சருகாய் போகும் தாமாரை
சதைக ரூபமாய் இருக்கும் வடிவுக்கு த்ர்ஷ்டாந்தமாக மாட்டாது -என்கை
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -என்று
தாமரையை அபேஷித்தார் இறே நம் ஆழ்வார்-

(கட்டுரைக்கில் தாமரை*  நின் கண் பாதம் கை ஒவ்வா,* 
சுட்டு உரைத்த நன்பொன்*  உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்*  புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,* 
பட்டுரையாய் புற்கு என்றே*  காட்டுமால் பரஞ்சோதீ!  )

சமுத்ரத்தே நிலவராய் இருக்குமவர்கள் முழுகி மண் கொள்ளுமா போலே
இந்த சௌந்த்ரய சாகரத்தை தலை நீர் பாட்டிலே அனுபவிக்கிறவர்களைச் சொல்லுகிறது
இப்போது இது சொல்லுகிறது -இவர்களும் அகப்பட குமுழி நீர் உண்ணும் விஷயத்திலே கிடீர்
இவள் அனுபவிக்க இழிகிறது என்கைக்காக –

பார்வண்ண மட மங்கை –
பூமியை தனக்கு பிரகாரமாய் வுடையவளாய்
அசாதாராணமான ஸ்த்ரீத்வத்தையும் உடையவளாய்
துல்ய சீல வயோ வ்ர்த்தாம்-என்கிற பருவத்தையும் உடையவளான ஸ்ரீ பூமிப் பிராட்டி

(துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜென்ம லக்ஷணம் ராகவோ வைதேஹி -அஸி தேக்ஷிணா –

அனைத்தும் ஸாத்ருஸ்யமாக இருந்தாலும் இவள் கண் அழகுக்கு ஒப்பு அவன் இடம் இல்லையே)

பார் வண்ணம் -என்கிற விசேஷணம் இப்போது சொல்கிறது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி தான் அபிமதையாய் இருக்கை அன்றிக்கே
தத் சம்பந்திகளும் அபிமதமாய் இருக்கும்படி தோற்றுகைக்காக

அடியார் அடியார் -என்று அவனோட்டை சம்பந்திகள்
இவனுக்கு உத்தேச்யராய் இருக்குமா போலே இறே
இவளோட்டை சம்பந்திகளும் அவனுக்கு உத்தேச்யராய் இருக்கும் படி –

(அடி ஆர்ந்த வையம் உண்டு*  ஆல் இலை அன்ன வசம் செய்யும,* 
படி யாதும் இல் குழவிப்படி*  எந்தை பிரான் தனக்கு,* 
அடியார் அடியார் தம்*  அடியார் அடியார் தமக்கு* 
அடியார் அடியார் தம்*  அடியார் அடியோங்களே.)

மங்கை –
யுவாகுமார -என்கிற பருவத்துக்கு தகுதியான
யுவதிஸ்ஸ குமாரிணி
-என்கிற பருவத்தை உடையவள் –

பத்தர்-
பஜ சேவாயாம்-என்கிறபடி -சேவையைச் சொல்கிறது –
தான் சேவ்யனாய் இவன் சேவகனாய் இருக்கிற முறையிலே பரிமாறுகை ஒழிய
அத்தலை இத்தலையாய் முறை கெட பரிமாறும்படி யாய்த்து இவளுடைய போக்யதை இருப்பது –

அஹம் சிஷ்யா ச தாசீ ச பக்த்தா ச புருஷோத்தமம் -என்று
அத் தலையில் பும்ஸ்வத்தை அனுசந்தித்து -இவள் படும்பாடு இது –

(அஹம் சிஷ்யா ச தாசீ ச பக்த்தா ச புருஷோத்தமம்-மத் க்ருத சர்வ பூதாநாம் லகு உபாயம் -அருளிச் செய்ய வேண்டும் -ஸ்ரீ வராஹ புராணம்)

இவளுடைய ஸ்த்ரீத்வத்தை அனுசந்தித்து –
கிடந்திருந்து நின்றளந்து
-என்கிறபடி இறே இவன் படுவது –

(கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்ப் புக்கு
இடந்திடும் தன்னும் கரக்கும் உமிழும்
தடம்பெருந்தோள் ஆரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை மால்செய்கின்ற மால் ஆர்காண்பாரே-(2-8-7)

(அரவாகி சுமத்தியால் –எயிற்றில் ஏந்திதியால்–ஒரு வாயில் ஒளித்தியால்-ஓர் அடியால் அளத்தியால்-
மணி மார்பில் வைகுவாள் இது அறிந்தால் சீறாளோ-சா பத்னி –நிழல் போலே –கம்பர்)

பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு –
அது தான் முறையிலே பரிமாற்றிற்று என்னும் படி யாய்த்து
இவள் பக்கல் வ்யாமோஹம் இருக்கிறபடி –

ஸ்ரமஹரமான தாமரைப் பூவிலே ஒரு பரிமளம் வடிவு கொண்டால் போலே
இருக்கிற பிராட்டிக்கு அதி வ்யாமுக்தனாய்
அல்லி மலர் மகள் போக மயக்குகளாயும் நிற்கும் -என்கிறபடியே
அவன் குமிழி நீர் உண்ணும் படி இறே பிராட்டி உடைய போக்யதை இருப்பது –

(அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யான் ஓர் துக்கம் இலனே.-3-10-8-)

பாவம் செய்தேன் –
வினவ வந்தார்க்கு அழுது காட்டுகிறாள் –
இவர்களைப் போல இவளும் முறை கெடப் பரிமாற அன்றோ புகுகிறது
அவ்விஷயத்தில் வை லஷண்யத்தை அமைக்கப் போகாது –
இவள் ஆற்றாமையை அமைக்கப் போகாது –

(பகவத் விஷயத்திலே தன் பெண்பி்ள்ளைக்குண்டான அவகாஹநம் தனக்கு மிகவும் மகிழ்ச்சிக் குடலாயிருக்கையாலே
‘புண்ணியஞ்செய்தேன்‘ என்ன வேண்டுமிடத்து நாட்டாருக்காக மறைத்து “பாவஞ்செய்தேன்“ என்கிறாள்.

காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர், ஞாலத்தப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!
நானே மற்றாருமில்லை‘ என்ற யசோதைப் பிராட்டியைப்போலே
“ஞாலத்துப் புத்திரியைப் பெற்றாள் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை” என்று சொல்லிக் கொள்ளவே இத்திருத்தாய்க்கு விருப்பம்;
ஆயினும் கட்டுப்பாட்டுக்காக மறைக்கிறாளென்க.)

என் பாபமேயாம் -இத்தனை இறே –
இதுக்கடி
மத் பாபமேவாத்ர நிமித்த மாஸீத் – என்று ஸ்ரீ பரத ஆழ்வான்அவள் வயிற்றில்
பிறந்த பாபமே -என்றாப் போலே இவளைப் பெற்ற பாபமே -என்கிறாள் –

பாவம் செய்தேன் –
எனக்கும் தனக்கும் உதவாதபடி பிள்ளை பெற்றேன்
இவள் இப்பாடு படுகைக்கு அடி தன்னை உணராமையாலே -கிடீர் -என்கிறாள் –

ஏர் வண்ணம் என் பேதை –
இவள் தன்னை உணர்ந்தாள் ஆகில் -இப்பாடு எதிர் தலை படும் படியாய் இறே இருப்பது –
தன் வடிவு அழகில் அவன் படும் பாட்டை கிடீர் -அத்தலை இத்தலையாய் தான் படுகிறாள் –

ஏர் வண்ணம் என் பேதை – –
அவனுடைய கார் வண்ணம் -இவளுடைய எர் வண்ணத்துக்கு ச்தர்சம் அன்று கிடீர்
ஒரு த்ர்ஷ்டாந்தம் இட்டுச் சொல்லும்படி இறே அவன் வடிவு இருப்பது –
அழகிய வடிவு என்னும் என்னும் இத்தனை ஒழிய இவள் வடிவுக்கு த்ர்ஷ்டாந்தம் இல்லை இறே
வடிவிணை இல்லா -என்னும் இத்தனை இறே –

(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

பிராட்டிக்கு அவன் போக்யமாய் இருக்கும்
அவனுக்கு இவள் போக்யமாய் இருக்கும் –
அம் மிதுனத்தை அனுபவிக்கும் ஏற்றம் உண்டு ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு
அந்த சமுதாயத்தை அனுபவிக்கும் ஏற்றம் உண்டு இறே இவளுக்கு
போகம் மிக்கதனையும் அழகு மினுங்கும் இத்தனை அன்றோ இறே –

என் பேதை –
என் மகள் –
அவர்களில் காட்டில் அபிஜாதையான ஏற்றம் உண்டு இறே இவளுக்கு
பிறந்திட்டாள் -என்னுமவள் அன்றோ இவள் –

(பின்னை கொல் நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொலோ?இவள் நெடு மாலென்றே நின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-)

உன் மகள் உனக்கு பவ்யையாய் அன்றோ இருப்பது – பாவம் செய்தேன் -என்ன வேணுமோ –
நீ நியமிக்க குறை என் என்ன –
என் சொல் கேளாள்-
க்ரமத்தாலே லபிக்கும் அது ஒழிய
இங்கண் த்வரிக்கக் கடவது அன்று காண் -என்று ஹிதம் சொன்னால் அது கேட்கிறிலள் –

என் சொல் கேளாள் –
அவன் சொல் கேட்டவள் ஆகையால் -என் சொல்லை கால் கடை கொள்ளா நிற்கும்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ –என்ற அவன் வார்த்தையை கேட்டவள் ஆகையாலே
க்ரம ப்ராப்தியை சஹிக்க வேணும் காணும் என்னும் என் வார்த்தையை ஸ்வீகரியாள் இறே –
க்ரம ப்ராப்தி வேண்டும்படி அன்றே உபாய ஸ்வரூபம் இருப்பது –
தனக்கு கர்த்தவ்யம் உண்டாகில் இறே க்ரம ப்ராப்தி உள்ளது –

(“மாமேகம் சரணம் வ்ரஜ“ என்றும்,
“அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம“ என்றும் அவன் சொல்லி வைத்த
வார்த்தைகளைக் கேட்டிருக்குமவள் என்சொல்லைக் கேட்பளோ?)

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
என் வார்த்தை கேளாத அளவேயோ -அவன் இருந்த தேசத்துக்கு போக வழி தேடா நின்றாள் –
என்னை அனன்யார்ஹை ஆக்கினவன் உடைய கோயிலுக்கு வழி எங்கே என்னும்

எங்கே என்னும் –
நான் சொன்ன ஹிதத்தை கால் கடைக் கொண்டது கிடக்கிடாய்
கோயிலுக்கு வழி எது என்று என்னை கேளா நின்றாள் –
அவன் பதறாமைக்கு முறை உணர்த்தி போனான் –
அது தானே பதறுகைக்கு ஹேதுவாய்த்து இவளுக்கு-

நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
கோயிலுக்கு போவது திரு நீர் மலையிலே புக்கு என்னா நின்றாள் –

இதுவன்றோ நிறை வழிந்தார் நிற்கும்படி என்கிறாள் –
திருக் குறையலூரில் நின்றும் புறப்பட்டு திரு நீர் மலையிலே புக்கு போலே காணும் கோயிலுக்கு போவது –
இவளுடைய தங்கும் பயணம் இருக்கும் படி –
பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்தனாம்ர்தம் -என்கிற ஸ்தானத்திலே
இவளுடைய பாதேயம் இருக்கிறபடி –
திருப்பதிகளிலே தங்கி அல்லது போக மாட்டாள் இறே –
கோயிலுக்கு போம் வழி திரு நீர்மலை என்னும்படி இறே இவளுடைய கலக்கம் –

இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே –
ஸ்வரூபத்தைப் பாராதே
விஷய வைலஷண்யத்தை பார்த்தார் உடைய பிரகாரம் இருக்கும்படி இது வன்றோ

இதுவன்றோ -நிற்குமாறு –
நாம் இந்த பிரகாரம் அறிந்திலோம் இத்தனை போக்கி பிரகாரம் இது வன்றோ
போக அனுரூபம் ஸ்வரூபம் என்னும் இது வன்றோ அர்த்தம்
விஷய வைலஷண்யத்தையும் உபாய சித்தமாய் இருக்கிறபடியையும் அனுசந்தித்தார் –
சித்தம் இருக்கும்படி இது வன்றோ –
நமக்கு இரண்டிலும் ஜ்ஞானம் இல்லை– ஸ்வரூபத்தை பார்த்தோம் இத்தனை இறே –

எம்பெருமான் திருவரங்கம் -இத்யாதி
இப்பெண் பிள்ளை ஆற்றிலே கெடுத்து குளத்திலே தேடுகிறாள்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
திரு நீர் மலை பம்மல் குளத்தில் இருக்கையாலே -ரசோக்தி
போக அனுரூபம் ஸ்வரூபம் ஆகையாலே இறே –

ஆண்டாள் க்ர்ஷ்ணனுக்கு இடைப் பெண்கள் பக்கலிலே நோக்கான போது
பாவநா ப்ரகரஷத்தாலே முடை நாற்றமும் இடை வுடையும் இடை முடியுமாய் இடைப் பேச்சுமாய் இருப்பது

யஞ்ஞ பத்னிகள் பக்கலில் நோக்கானவாறே மடிதார் உடுப்பதும் ஆய்த்து –

(கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-)

ரிஷி பத்தினிகள் -வேர்த்து நெடு நோக்கு கொண்டு இருக்கும் பத்த விலோசனத்து உய்த்திட –
மடிசார் கட்டியவளாக ஆனாள் அன்றோ
பெறப் போகும் பேற்றுக்கு அனுகுணமாகவே தன்னை அமைத்துக் கொண்டாளே அங்கும் இங்கு போலேவே –

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–17–பொங்கார் மென் இளம் கொங்கை பொன்னே பூப்ப –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 19, 2013

அவதாரிகை –

இவள் முழு மிடறு செய்து கூப்பிட்டு அத்தோடு தரைப் பட்ட படியைக் கண்ட
கிளியும் வீணையும் ஆஸ்வாச ஹேதுவாம் என்று
அவற்றை முன்னே வைத்துப் பார்த்தோம் –

அவையும் அகிஞ்சித்கரமாய்த்து என்று அவற்றை ஒருங்க விட்டு
நாம் ஹிதம் சொன்னால் அது ஜீவிக்கை யாமோ என்று பார்த்து –
நீ இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுகையும் மோகிக்கிகையும் ஆகிற இது
உன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கு போராது -இக்குடிக்கும் அவத்யம் என்ன
அவற்றையோ நான் இப்போது பார்த்து இருக்கிறதோ என்ன

அது தான் கிடக்க –
நீ தான் ஆதரிக்கிற விஷயம் தன்னைப் பேண வேண்டாவோ
ஆசா லேசம் உடையார்க்கு முகம் காட்ட கடவ வஸ்து
தன்னை ஒழிய செல்லாமையாலே நோவு பட்டு கூப்பிடுகிற
பிரணயிநிக்கு முகம் காட்டாது ஒழிவதே
என்று நாட்டார் சொல்லும் அவத்யத்தை பரிஹரிக்க வேண்டாவோ என்ன

எனக்கு ஓடுகிற தசையை அறியாதே ஹிதம் சொல்லுகிற இவள் முகத்தில் விழியாதே
பிரிந்தார் படும் நோவை அறியும் அவன் முகத்தில் விழிக்க வல்லளே என்று
அவனைப் பற்றிக் கூப்பிடுகிறாள் –

—————————————————————————————————————————————–

பொங்கார் மென் இளம் கொங்கை பொன்னே பூப்பப்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித்
தண் கோவலூர் பாடி யாடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே–17-

பதவுரை

பொங்கு ஆர் மெல் இள கொங்கை-வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம்
பொன்னே பூப்ப–வைவர்ணியமடையவும்
பொரு கயல் கண்–சண்டை யிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள்
நீர் அரும்ப–நீர்த் துளிகள் அரும்பவும்
போந்து நின்று–(வெளியே வந்து) நின்று
செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு–சிவந்த கால்களை யுடைய இளம் புறாக்கள்
தம் பேடைகளோடு சிறு குரலாகப் பேசுகிற படிக்கு
உடல் உருகி–மெய் கரைந்து
சிந்தித்து–(அவன் முறைகெடப் பரிமாறும் படியை) நினைத்து,
ஆங்கே–அவ்வளவில்
தண் காலும்–திருத் தண் காலையும்
தண் குடந்தை நகரும்–திருக் குடந்தைப் பதியையும்
பாடி–(வாயாரப்) பாடி
தண் கோவலூர்-குளிர்ந்த திருக் கோவலூரையும்
பாடி-பாடி
ஆட-கூத்தாட
கேட்டு–அவ் வொலியை நான் கேட்டு,
நங்காய்-‘பெண்ணே!
நம் குடிக்கு–நமது குலத்திற்கு
இது நன்மையோ என்ன–வாய் விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல,
நறையூரும்–திரு நறையூரையும்
பாடுவாள் நவில் கின்றாள்–பாடுவாளாகப் பேசத் தொடங்கினாள்.

வளர்த்தி மிக்கதாய் -மிருதுவாய் -இளையதான -ஸ்தனங்களிலே வைவர்ணயம் உண்டாக
ஒன்றோடு ஓன்று பொருகிற மத்ஸ்யம் போன்ற கண்களிலே நீர்த்துளிகள் அரும்பியா நிற்க
தாயாரை விட்டுப் புறம்பே வந்து தரித்து நின்று
சிவந்த கால்களை யுடைய அறிவு அழிந்து கிடக்கிற ஆன் புறாக்களானவை
தம் பேடைகளுக்குச் சொல்லுகிற சிறிய கண்ட த்வனிக்கு மெய் கரைந்து
அவன் முறை கெடப் பரிமாறும்படியை நினைத்து அப்போதும்
திருத்தண் காலையும் குளிர்ந்த திருக்குடந்தை நகரத்தையும் ப்ரீதிக்குப் போக்குவிட்டுப் பாடி
ஸ்ரமஹராமான திருக்கோவலூரைப் பாடி கூத்தாட அத்தைக் கேட்டு
ஸ்த்ரீத்வ பூர்த்தி யுடையவளே -நம்முடைய குலத்துக்கு வாய் விட்டுக் கூப்பிடுகிற இது நலம் தானா என்று சொல்ல
திருநறையூரையும் பாடுவதாக நினைத்து ஆரம்பிக்கிறாள் –

—————————————————————————————————————————————–

தான் படுகிற பாடு இத்தனையும் எதிர் தலையைப் படுத்தக் கடவதான
பரிகரத்தை உடையவள் கிடீர் அத்தலை இத்தலையாய் தான் படுகிறாள் –
வளர்த்தி மிக்கு ம்ர்துவாய் இளையதான முலை –

பொங்கார்ந்த முலை –
மேலே மேலே -வளரா நிற்பதான -சுற்று உடைத்தான முலை
ஆர்ந்து இருக்கையாவது -சுற்று உடைத்தாய் இருக்கை –

மென் கொங்கை –
முலைக்கு காடின்யம் ஸ்வ பாவ்யமாய் இருக்க
மென் முலை -என்கிறது விரஹ சஹம் அல்லாத முலை என்கைக்காக –

இளம் கொங்கை –
உத்யோகித்த அளவாய் இருக்கை –
நரம்பு இல்லாத முலை -என்கை

பொன்னே பூப்பப்
ஸூ ஷேத்ரம் மணல் மேடானாப் போலே
அவனுக்கு போக உபகரணமான முலையை வைவர்ண்யம் கொண்டு போய்த்து -என்கிறாள் –

பொன்னே பூப்ப –
ஒரு கற்பகக் கன்று கோட்புக்காப் போலே இருக்கிறது ஆய்த்து -தனக்கு இவள் உடைய முலையின் வை வர்ண்யம் –
பண்டு அவனோட்டை கலவி ஆபரணம் பூட்டினாப் போலே இப்போது பிரிவு ஆபரணம் பூட்டின படி –
வினவ வந்தாருக்கு தன்னளவை சாதித்துச் சொல்லுகிறாள் இத்தனை ஒழிய
தனக்கு இது தர்ச நீயமாக இறே இருக்கிறது –

(குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது-
“ஊருண்கேணியுண்டுறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி
நீங்கி விடுவுழி விடுவுழிப் பாத்தலானே“ (399) என்பதாம்.
ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலை நிறம்;
தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்;
கையை எடுத்து விட்டோமாகில் மறுபடி அவ்விடமெல்லாம் பாசி மூடிக் கொள்ளும்;
அது போல, கலவியில் கணவனுடைய கைபடுமிடங்களில் பசலை நிறம் நீங்கும்;
அணைத்த கை நெகிழ்த்த வாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலைநிறம் என்றபடி.
(தொடு வுழித் தொடு வுழி – தொட்ட விடங்கள் தோறும். விடு வுழி விடு வுழி- விட்ட விடங்கள் தோறும்.-பரத்தலான் – பரவுகிற படியினாலே.)

பொரு கயல் கண்ணீர் அரும்பப் –
சதா தர்சனத்துக்கு உப கரணமான கண்ணும் அழிந்தது -என்கிறாள்

பொரு கயல் கண்
அவனைப் பொருகின்ற கண் -என்னுதல் -ஈடுபடுத்துகை
தன்னிலே பொருகின்ற கண் -என்னுதல்

கயல் கண்
கயல் போலே மிளிரா நின்றுள்ள கண்
எப்போதும் ஒக்க அலமாப்பே யாய்த்து இவள் கண்ணுக்கு உள்ளது –

சம்ஸ்லேஷ தசையில் ஹர்ஷத்தல் அலமாக்கும்
விஸ்லேஷ தசையில் சோகத்தால் அலமாக்கும்

முலையிலே வை வர்ண்யம் குடி இருந்தால் போலே
கண்ணிலே சோகஸ்ரு குடி இருந்தது
அவனுடைய சதா தர்ஸனதுக்கு விஷயமான கண் கிடீர் சோகஸ்ருக்கு இலக்காய்த்து என்கிறாள்-

துணை முலை மேல் துளி சோர-என்றது கீழ்
இங்கு விரஹ அக்னியால் நீர் பசை அறும்படி உள் உலர்ந்து கிடக்கையாலே –அரும்ப -என்கிறது
பதக்குப் பானையிலே உழக்குப் பாலைக் காய்ச்சினால் –
வாயாலே அறப் பொங்கா நிற்கச் செய்தே கீழ்
நீர் அற்று இருக்குமா போலே உள் அடி அற்று இருக்கை –

போந்து –
அவன் மேல் விழும்படியான முலை அழகையும் கண் அழகையும் (பக்தி ஞானம் )உடைய நீ மேல் விழுகை
ஸ்த்ரீத்வத்துக்கு (ப்ரபன்னனான தன்மைக்கு )போராது காண்-என்று தாயார் சொன்ன ஹிதம் தனக்கு
ஸ்ரவண கடுகமாய் இருக்கையாலே நெருப்பு பட்ட அகத்தில் நின்றும் த்வரித்துப் புறப்படுமா போலே
அவள் இருந்த அகத்தின் நின்றும் புறப்பட்டாள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்ன ஹிதத்தை கேட்ட ராவணன்
த்வாந்து திக் குல பாம்சனம் -என்ன
ஆஜகாம முஹூர்த்தேன -என்று
அத் தலையில் ஒரு ஷணமும் தரியாதே சடக்கெனப் புறப்பட்டாப் போலே –

நின்று-
அவள் சந்நிதியில் நின்றும் போந்த பின்பு
தரித்து நின்றபடி –

உத்தரம் தீர மாசாத்தியா கஸ்த்த ஏவ வ்யதிஷ்டத -என்று
மகா ராஜ பிரப்ரதிகள் –வத்யதாம் வத்யதாம் -என்னா நிற்க –
பெருமாள் விஷயீ கரிக்காது இருக்க
ஆகாசத்தில் தரித்து நின்றால் போலே –

(“உத்தரம் தீரமாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டத“ என்றார் வால்மீகி பகவான். (வ்யதிஷ்டத – நன்றாகத் தரித்து நின்றார் என்றபடி.)

செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
அவள் சொன்ன ஹிதம் தனக்கு பாதகம் ஆகையாலே உள்ளு நின்றும் புறப்பட்டாள்
புறம்பு தர்ஷ்டி விஷமாய் இருந்தது –
ஆகையால் புறம்பு யார் இடத்திலும் புகல் பெற்றிலள் –

இத்தால் -சம்சாரம் உள்ளோடு புறம்போடு வாசி அற சார்வர்த்திரிகமாக துக்கமாய் இருக்கையாலே
போக ஸ்தானம் ஒரு தேச விசேஷமே -என்கை –

செங்கால மடப் புறவம் –
சம்ஸ்லேஷ தசையிலே தன் தலையிலே வைத்துக் கொள்ளும் அவன் காலுக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –

(ஆண் புறாவின் சிவந்த கால்கள் நாயகனுடைய செந்தாமரை யடிகளை நினைப்பூட்டி வருத்தின போலும்.
இது கண்ணுக்கு விஷமானபடி.)

மடப் புறவம் –
மடப்பத்தால் இப்போது அறிவின்மையைச் சொல்லுகிறது அன்று –
அக் காலத்தில் உணர்த்தி அழிந்து பரிமாறும் படிக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி

பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு –
சம்ஸ்லேஷ தசையில் அவன் தன்னைக் குறித்து பண்ணும் நீச பாஷணங்களுக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –

(இது காதுக்கு விஷமானபடி. இங்ஙனே அவன் ரஹஸ்யமாக நம் காதிலே பேசும் பேச்சுக்கள்
கேட்கப் பெறுவது என்றோ வென்று உடலுருகினாளென்க.0

சிறு குரல் –
சம்ஸ்லேஷ தசையில் பல ஹானியால் சொன்ன சொல் -என்னுதல் –
அஷட்கர்ணமான சொல் என்னுதல் –
அத்தலைக்கு தான் சொல்லும் நீச பாஷணங்கள் சதஸ்யம் அல்லாமையாலே
தன் செவியிலே யாய்த்து அவன் சொல்லுவது –

உடல் உருகிச் –
அவன் வடிவைக் கண்டு நெஞ்சு உருகிற்று
பேச்சைக் கேட்டு உடல் உருகிற்று

சிந்தித்து –
அத் தசையில் அவன் பண்ணும் வ்ருத்தி  விசேஷங்களை சிந்தித்து
பரியட்டம் மாறாடுவது
அஞ்சலியைப் பண்ணுவதாகக் கொண்டு
முறை அழியப் பரிமாறும் படியை நினைத்து –

ஆங்கே-
அத் தசையில்-
இவை பாதகம் ஆனால் தாய் சொல்லும் ஹிதத்தை கேட்கை இறே பிராப்தம் –
அத் தசையிலும்

அவனோடு பரிமாறும் சங்கேத ஸ்தலங்களைப் பற்றி கூப்பிடா நின்றாள் -என்கிறாள் –
தண் காலும் –
திருத் தண் காவில் வர்த்திக்கிறவன் உடைய ஸ்வபாவத்தைப் பற்றி –
திருத் தண் கால் -என்று திருப்பதிக்கு பேராகிறது –
ஸ்ரமஹரமான காற்று -என்கை –

தென்றல் போலே ஸூக ஸ்பர்சமும் ஸ்ரமஹரமுமான வடிவை உடையவன்
வர்த்திக்கிற தேசம் ஆகையாலே திருத் தண் கால் -என்று திரு நாமம் ஆகிறது –

தன்னை அவன் அடியில் அணைக்கிற போது ஸ்ரமஹரமாய் இருக்கையாலும் ஸூக ரூபமாய் இருக்கையாலும்
திருத் தண் கால் -என்று கூப்பிடுகிறாள் –

தண் குடந்தை நகரும் பாடித்
ஆஸ்ரிதர் உடன் முறை அழிய சம்ஸ்லேஷித்த இடம் ஆயத்து-
திருக் குடந்தை –

த்வதீய புக் தோஜ்ஜித சேஷ போஜினா – என்கிறபடியே சேஷி அமுது செய்த பிரசாதம்
சேஷ பூதன் பிரதிபத்தி பண்ணுகை முறையா இருக்க
ஆராவமுத ஆழ்வார் தமக்கு ஆக்கின திருப் போனகத்தை முற்பட
திரு மழிசைப் பிரானை அமுது செய்யப் பண்ணி பின்னை இறே தாம் செய்வது
அவரும் வாத்சல்ய அதிசயத்தால் வந்தது ஆகையால் வழக்கு பேச மாட்டிற்று இலர்

இத்தால் தனக்கு பிரயோஜனம் என் என்னில்
தோழிமார் பேறும் தன் பேறாய் இறே இவளுக்கு இருப்பது-

(த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –ஶ்லோகம் 42 –

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.)

தண் கோவலூர் பாடி –
ஆஸ்ரிதர் வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறை அழியப் பரிமாறுகை அன்றியே
தானே  மேல் விழுந்து சம்ஸ்லேஷித்த இடமாய்த்து –திருக் கோவலூர் ஆகிறது –
அவர்கள் மழை கண்டு ஒதுங்க -அவர்கள் இருந்த இடத்திலே தானே சென்று அவர்கள் நெருக்க
தான் -அவர்களை நெருக்க -இப்படி பரிமாறி அவர்கள் போன விடத்திலும்-அவ்விடத்தில் நிற்கிறான் இறே –
வாசல் கடை கழியா யுள் புகா -என்று

(நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —முதல் திருவந்தாதி -86-)

(பாவருந்தழிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாளிரவின், மூவரு நெருக்கி மொழி விளக்கேற்றி
முகுந்தனைத் தொழுத நன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் (பொய்கையார் பூதத்தார் பேயார்)
மூவரும் பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்து ஆனந்தப் பெருவெள்ளமெய்தின வரலாற்றை
நெஞ்சிற்கொண்டு திருக் கோவலுரைப் பாடினா ளென்க.)

பாடி
தனக்கு முகம் கொடுத்த தேசத்தையும்
தன் பேறு உடையாருக்கு முகம் கொடுத்த தேசத்தையும் நினைத்து
முன்பட்ட கிலேசத்தையும் மறந்து –
ப்ரீதி ப்ரேரிதையாய் கொண்டு சொல்லி –

யாடக் –
அவ்வளவிலே பர்யவசியாதே
காயிகமான விகர்த்தியைச் சொல்லுகிறது –

கேட்டு-
இவள் ஆடுகிறபடியைக் கண்டும்
பாடுகிறபடியைக் கேட்டும்

பாடி யாடக் கேட்டு –
இவள் என்ன பேறு பெற்றுத் தான் இங்கன் சம்ப்ரமிக்கிறது -என்கிறாள் –

நங்காய்-
முகரி -என்று பூர்வர்கள் நிர்வாகம் –
(முகரி என்று பிரதானையாய் -அத்தாலே வைதக்யத்தால் வந்த ப்ராதான்யம் )
அதாகிறது –
அவன் தான் மேல் விழுகிறது ஒழிய
நீ விதக்தையாய் இப்படி மேல் விழக் கடவையோ -என்கை –

அதவா
பூரணை -ஆனவளே என்று பட்டர் அருளிச் செய்வர் –
தத் தஸ்ய சதர்சம் பவேத் -என்று இருக்கும் பூர்த்தி அன்றோ உன்னுடைய பூர்த்தி –

அங்கன் இன்றியே
உன் பூர்த்தி கொண்டு இக்குடி வாழ வாழ இருந்த படி இதுவோ -என்னவுமாம் –

நம் குடி –
பிரபன்ன குடி -என்கிற இது வேறே ஒரு குடி போலே காணும் –

நங்காய் –
அவனுக்கு சதா தர்ஸனம்

பண்ண வேண்டும்படியான வடிவை உடையை –
அவன் வந்து தானே மேல் விழும்படியான போக உபகரணங்களை உடையை –
அவிளம்ப பல பிரதமான சாதனத்தை உடையை –
தத் தஸ்ய சதர்சம் பவேத் -என்று இருக்கும் ஞானத்தை – – உடையை –
இப்படி இருக்கிற நீ அபூர்ணையைப் போலே கூப்பிடக் கடவையோ-

இதுவோ நன்மை –
தன் பூர்த்தி கொண்டு வாழ இருப்பார்க்கு நீ பண்ணும் நன்மை யாகிறது
வாய் விட்டுக் கூப்பிடும் இதுவோ
இக்குடி விளங்கப் பிறந்த நீ இக்குடிக்கு அவத்யையை விளைக்கக் கடவையோ –

என்ன-
இப்படிச் சொல்ல –
மீளுகை தவிர்ந்து –

நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே-
மீட்க ஒண்ணாத விடத்தே புக்காள் –
இன்னம் குடி கொண்டு உண்ண இருக்கிறீர்களோ என்று
ஆசீலே கை வைக்கப் பார்க்கிறாள் -(ஆசு கவி -என்றும் ஆயுதம் எடுத்தும் என்றும் )

அவஸ்தையும் அறியாதே ஹிதம் சொல்லுகிற இவள் முகத்தில் விளியாதே
பிரிவால் வந்த ஆற்றாமை அறியும் வகுத்த தாய் முகத்தில் விழிப்பது எப்போதோ -என்கிறாள் –
அகலகில்லேன் இறையும் – என்று இருக்குமவள் ஆகையாலே ஆற்றாமை அறியும் இறே –

அங்கன் இன்றியே
நம்பியைப் பற்றி கூப்பிடுகிறாள் ஆகவுமாம்
பிராட்டியைத் தேடித் திரிந்து கண்டவன் ஆகையாலே ஆற்றாமை அறியும் இறே
என் ஆற்றாமை அறியும் தாய் முகத்திலும் தமப்பன் முகத்திலும் விழிப்பது எப்போதோ -என்கை –

(பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமல மடலெடுத்து மதுநுகரும்
வயலுடுத்த திருநறை யூரிலே சென்று சேரப் பெறுவது எந்நாளோ! என்னா நின்றாளென்க.)

(தாயார் ஹிதம் சொன்னதே ஹேதுவாக மேன்மேலும் அதி பிரவ்ருத்தியில் பணைத்த படி)

பாடுவாள் நவில்கின்றாளே-
பாடுவாளாக நினைத்து ஆளத்தி வையா நின்றாள்
பாடுதலாவது -மடல் எடுத்தவோபாதி இறே –

நவில்கின்றாளே–
நணுகா நின்றாள்
பாடினாள் ஆகிற கடலே இறே குடி -என்கை –

இத்தால் –
ஆளத்தி யிலே கருத்தறியும் தாயார் உடைய பாட்டில்
நைபுண்யம் தோற்றுகிறது –
இன்ன பாட்டு பாடப் போகிறாள் என்று அறியும் நிபுணை தாயார் என்கிறாள் –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–16–கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 19, 2013

அவதாரிகை —

மென் கிளி போல் மிக மிழற்றும் -என்று
சம்ஸ்லேஷ தசையில் தன்னுடைய ஜெயமும் அவனுடைய அபஜயமும்
தோற்ற மேலிட்டு வார்த்தை சொன்ன இடத்தில் அவனும் அப்படியே மேலிட்டு
வார்த்தை சொல்லக் கேட்டிலள் –

அத்தாலே நின்ற நிலை குலைந்து –
தன் கர்வமும் -தானும் -வீணையுமாய் -விட்டது –
கூப்பிடத் தொடங்கினாள் –

பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத் -என்று
உகந்த சமனந்தரம் –
ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூமித்ரே -என்று
பிராட்டி கூப்பிட்டாப் போலே

(ஹா ராமா ஹா லஷ்மண ஹா ஸூமித்ரே ஹா ராம மாதா ஸஹ மே ஜனன்யா
ஏஷா விபத்யாம் யஹம் யல்ப பாக்யா மஹார்ணவே நவ்ரிவ மூட வாதா –ஸூந்தர –28-8-)

ஹா ராமா -என்று போக்ய வஸ்துவை நினையா

ஹா லஷ்மணா -என்று புஜிப்பாரை நினையா –

ஹா ஸூமித்ரா –என்று நிமித்த பூதரை நினையா கூப்பிட்டாள்

அப்படியே – இறே –
வரையாதே ரஷிக்கும் படியையும்
முகம் கொடுக்கும் படியையும்
சொல்லிக் கூப்பிட்டுத் தரைப் படா நின்றாள்
என்கிறாள் –

———————————————————————————————

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

பதவுரை

கன்று மேய்த்து-கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த-மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்–இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்–வாஸனை மிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கண புரத்து–திருக் கண்ண புரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்–என் பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி–வீதி யாரக் குடக் கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்–மகிழ்ந்தவனே! என்றும்
வட திரு வேங்கடம்–வட திருவேங்கட மலையிலே
மேய மைந்தா என்றும்–பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்–அசுரக் கூட்டங்களை
வென்று–ஜயித்து
களைந்த–வேரோடொழித்த
வேந்தே என்றும்–வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்-விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்–திருநறையூரிலே
நின்றாய் என்றும்–நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்-அடர்ந்த திருக்குழற் கற்றையையும்
கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்–ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர–கண்ணீர்த் துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்–தளர்கின்றாள்

கன்றுகளை ரஷித்து மிகவும் ஸந்துஷ்டனாய் -காளை போலே செருக்குத் தோற்ற வர்த்திக்கிறவனே -என்றும்
பரிமளம் மிக்கு இருந்துள்ள சோலையாலே சூழப்பட்ட திருக்கண்ண புரத்திலே எனக்கு பக்வ பலம் போலே போக்ய பூதனானவனே என்றும்
நாற்சந்தியில் பொருந்தும்படி நர்த்தனம் பண்ணி மகிழ்ந்தவனே என்றும்
வடக்குத் திருமலையில் நித்ய வாஸம் பண்ணுகிற மிடுக்கனே என்றும்
கர தூஷணாதி அஸூரர்களை ஜெயித்து அக்குலத்தை நிர்மூலம் ஆக்கின சக்கரவர்த்தி திரு மகனே என்றும்
விஸ்திருதமான பொழிலாலே சூழப்பட்ட திரு நறையூரிலே நின்று அருளினவனே
மிகவும் நெருங்கின குழலையும் கருத்த திரு மேனியையும் யுடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான ஸ்தனங்களிலே கண்ணீர்த் துளிகள் அருவி போலே பாயும்படி தளரா நின்றாள்

———————————————————————————————-

பிரதமத்தில்
வரையாதே ரஷித்த படியைச் சொல்கிறது –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்-
சர்வ ரஷகனான நீ ரஷணத்தில் நின்றும் கை வாங்கினாயோ -என்கிறாள் –
மேய்க்கை -ரஷிக்கை –
1-நித்ய ஸூரிகளை ரஷித்த அளவாய் ஆறி இருக்கிறானோ –
2-சநகாதிகளையும் காதாசித்கதமாக ரஷித்த அளவாய் ஆறி இருக்கிறானோ –
3-ராம க்ர்ஷ்ணாதி ரூபத்தாலே வந்து அவதரித்து
4-இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரை ரஷித்த அளவாய் ஆறி இருக்கிறானோ —

அறிவு கேட்டுக்கு மேல் எல்லையான கன்றுகளை மேய்த்த யுன்னை விட்டு
எங்கனே ஆறி இருப்பேன் –

கன்று மேய்த்து இனிது உகந்து –
நித்ய ஸூரிகளை ரஷிக்கை தட்டியில் இருப்பாய் –
கன்று மேய்த்த பின்பு காணும் சார்வ பௌமன் ஆய்த்து –
சர்வ ரஷகத்வம் புஷ்கலம் ஆய்த்தது -கன்று மேய்த்த பின்பு இறே –

இனிது உகந்த –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்கிறபடியே
பசுக்களை மேய்ப்பு உகக்கும்

கன்று மேய்த்து இனிது உகக்கும் –
அவற்றுக்கு ரஷகன் பக்கல் ரஷகன் என்ற ஞானம் உண்டு –
அஞ்ஞானத்துக்கு மேல் எல்லையான கன்றுகளையும் அகப்பட ரஷித்த நீ –
உன் வாசியை அறிந்து
உன்னை ஒழிய செல்லாத
என்னை ரஷியாது ஒழிவதே -என்கிறாள் –
நானும் இவ் வாற்றாமையை விட்டு
அஞ்ஞர் கோடியிலே அந்தர்பவிக்கப் பெற்றிலேன் –

(பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-)

(கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி–10-3-4-)

(மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-)

(அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர் தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-)

காளாய் -என்றும் –
தான் சோகாவிஷ்டையாய் இருக்கச் செய்தேயும்
தன்னை வடிம்பிடிம் பருவத்தில் தோற்றுச் சொல்கிறாள் –
தருணவ்-என்று பிணம் தின்னியையும் அகப்பட ஆழம் கால் படுத்தும் பருவம் இவளை விடுமோ –
அவனோடு கலந்து தான் இளகிப் பதிக்க ஆசைப் படுகிறாள் காணும் –

(தருணவ் ரூப ஸம்பன்னவ் ஸூகுமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ் ஷீர க்ருஷ்ணாஜிநாம் பரவ்
ஒரு நாள் முகத்திலே விழித்தாரை வடிவு அழகு படுத்தும் பாடு)

அதவா
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே
கன்றுகளை ரஷித்த பின்பு வடிவு இளகிப் பதித்த படி –
மனுஷ்யர் அன்ன மய ஸ்வரூபமாய் இருக்கையாலே
அன்னமே வ்ர்த்தி ஹேதுவாமா போலே
ரஷகனுக்கு ரஷண தர்மமே இறே இளகிப் பதிகைக்கு ஹேது –

(கரியான் ஒரு காளை வந்து –
பட்டி மேய்ந்தோர் கார் ஏறு –காளாய் என்று அரசன் -வாலிபன் -காய கல்பம் உண்டவன் போல் -மூன்று அர்த்தங்கள்

காளாய்! = இளம் பருவத்தைச் சொன்னபடி;
“காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்“ என்பது திவாகரம்.)

கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
அவ்வவ காலத்தில் பிற்பட்டாரையும் ரஷிக்க அன்றோ
திருக் கண்ணபுரத்தில் வந்து போக்ய பூதனாய் நின்று அருளிற்று –
இது பூர்வர்கள் நிர்வாகம் –

பசுக்கள் கை கழியப் போகையாலே-அவற்றை மறிக்கப் போன விடத்திலே
ஸ்ரமஹரமாய் இருப்பதொரு பொழிலைக் கண்டு திரு வாய்ப்பாடியாக நினைத்துப் புக்கான் –
அப் பொழில் மயல் மிகு பொழில் ஆகையாலே கால் வாங்க மாட்டிற்றிலன் -என்று அருளிச் செய்வர் பட்டர் –
அதுக்கு ஹேது
அவதாரத்திலும் அர்ச்சாவதாரத்திலும் தமக்கு உண்டான ஸ்வரூப ஐக்ய பிரதிபத்தியாலே அருளிச் செய்தார் –

கடி பொழில் சூழ் கணபுரம் –
பரிமளமே உபாதானம் என்னும்படியான
பொழிலாலே சூழப் பட்ட தேசம்
சர்வ கந்த -என்கிற வஸ்துவையும் கூட கால் தாழப் பண்ணும் படி இறே
இப் பொழிலின் பரிமளம் இருப்பது –

என் கனியே என்றும் –
அச் சோலை பழுத்த பழம் இருக்கிறபடி –
எனக்கு பக்வ பலம் போலே போக்யமாய் இருக்கிறவனே

என் கனியே -என்று
ஸ்வ அதிகாரத்தை வெளியிடுகிறார்
சாதனாந்தர நிஷ்டர்க்கு சாதனா சமாப்தியிலே அனுபவம் ஆகையாலே
அவர்களுக்கு அவன் காயாய் இருக்கும் –
பிரபன்னருக்கு பிரபத்தி பண்ணின சமனந்தரமே பிடித்து
போக்யமாய் இருக்கையாலே பக்வ பலமாய் இருக்கும் –

என் கனியே என்றும் –
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -என்று இருக்குமவர் இறே
ஆகையாலே –என் கனியே -என்கிறார் –
கனிக்கு போக்தாவை ஒழியச் செல்லாது-
போக்தாவுக்கும் கனியை ஒழியச் செல்லாது –

மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் அளவு அன்றிக்கே
அம்பலத்தில் அவல் பொதி அவிழ்ப்பாரைப் போலே
சமுதாய ஸ்தலத்திலே சர்வ ஸ்வதானம் பண்ணிற்று இலையோ –

மன்றமரக் கூத்தாடி –
மன்றானது கூத்தோடு பொருந்தும் படியாக கூத்தாடினவனே

மன்று அமருகையாவது –
கூத்தாடி விட்டாலும் மன்று ந்ர்த்த கந்தியாய் இருக்கை –
பெருமாள் எழுந்து அருளிப் புக்க திரு வீதி போலே காண்
திருவாய்ப் பாடியிலே அம்பலம் இருப்பது –
என்று அருளிச் செய்வர் பட்டர்

மன்று -நாற் சந்திக்கும் பேர் -அம்பலத்துக்கும் பேர் –
இடையர் எல்லாரும் திரள இருக்கிற இடம் ஆய்த்து —அம்பலம் ஆகிறது –

அங்கன் இன்றியே
மன்றில் உள்ளாரைச் சொல்லிற்றாய்
இடையர் எல்லாரும் அனன்யார்ஹராம் படிக்கு ஈடாக ஆடின படி என்றுமாம் –
அதாவது
புறம்பு நெஞ்சு செல்லாதே –அது அது -என்று கூத்திலே நெஞ்சு கிடக்கை –

மகிழ்ந்தாய் என்றும் –
கூத்துக் கண்டவர்கள் உகக்கை அன்றிக்கே
உகப்பானும் தானாய் இருக்கை –
அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய்
உகப்பானும் தானாய் இருக்கிறபடி –

கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் –
தன் போக்யதையை அனுபவித்ததும் புரு நாரதர்கள் கூத்தாடக் கண்டு உகக்கக் கடவ தான் கிடீர்
அத் தலை இத் தலையாய்
கூத்தாடுவானும் தானாய் உகப்பானும் தானாய் இருக்கிறான் -என்கிறாள் –

குடக் கூத்தாடுகை தான் ஈஸ்வர லஷணமோ வென்னில் –
பிராமணர் ஐஸ்வர்யம் மிக்கால் யாகாதிகளைப் பண்ணுமா போலேயும்
விஷய பிரவணர் ஐஸ்வர்யம் மிக்கால் அழித்து விவாகம் பண்ணுமா போலேயும்
இடையருக்கு ஐஸ்வர்யம் மிக்கால் செருக்குக்குப் போக்கு வீடாக ஆடுவதாய்த்து குடக் கூத்தாகிறது –
அந்த சஜாதீய பாவத்தில் புரை யறுதியாலே குடக் கூத்தாடின படி என்கை –
ஊர்ப் பொதுவான பண்டம் கிடீர் எனக்கு அரிதாய்த்து என்கிறாள் –

வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் –
ஓர் ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுக்கை அன்றியே
உபய விபூதிக்கும் நடுவான மன்றிலே நின்று
தன்னைக் கொள்ளை கொடுத்த படியைச் சொல்லுகிறது –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்னக் கடவது இறே –

மைந்தா என்றும் –
திரு மலையில் நின்று தன் பருவத்தை ஆய்த்து கொள்ளை கொடுத்தது –
வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேங்கடம் – என்றும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்றும்
சொல்லுகிறபடியே
ஈஸ்வர அபிமானிகளோடு -நிஹீன ஜன்மாக்களோடு வாசி அற கொள்ளை கொள்ளும் வடிவு கிடீர்
எனக்கு அரிதாய்த்து -என்கிறாள் –

அதவா
பக்த்தானாம் -என்கிற வடிவு
மத் ஏக வர்ஜமாயோ இருப்பது -என்கிறாள் -என்னவுமாம் –

வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே -என்றும்
தான் போக்யனாய் இருக்கும் அளவேயாய்
விரோதி நிவ்ர்த்தி பிறக்கை யரித்தாய்த் தான் இழக்கிறேனோ -என்று
கர தூஷணாதிகள் முதலாக ராவணன் தானே தானாம்படி பரிகரத்தை கொன்று
அசூர வ்யக்திகளை கிழங்கு எடுத்து
அவர்களுக்கு கூடஸ்தனான ராவணனை அழியச் செய்த
சகரவர்த்தி திருமகனே –
அசூர வ்யக்திகள் இறே ராஷசரும் -அத்தைப் பற்ற அசுர குலம் களைந்த -என்கிறாள்

வேந்தே -என்றும்
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா -என்று
அனுகூலர் வாய் புலத்தும் படியாய்
தத் பிரதி கூலர் மண் உண்ணும்படியாய் இருக்கிறவன் கிடீர் எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான்

(ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |
ராம பூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி ||-ஜகத் ராம அத்வைதம் ஆனதே )

தாயார் மகிழ ஒன்றார் தளர –என்றும்
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான் -என்றும் இறே
வஸ்து ஸ்வ பாவம் இருப்பது –

(ஆயர் குலத்தினில் வந்துத் தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயார் மகிழ ஒன்னார்த் தளர தளர் நடை நடந்தானை
வேயர் புகழ் விட்டுச் சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே)

(விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-)

விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும் –
அவ் அவதாரத்துக்கு பிற்பட்டார்க்கும் முகம் கொடுக்கைக்காக
சக்கரவர்த்தி திருமகன் -வந்து நிற்கிற தேசம் ஆய்த்து -திரு நறையூர் ஆகிறது –

ஏக தார வ்ரதன் வந்து நிற்கிறான் என்று தோற்றும் படியாய் இறே இருப்பது –
விரியா நின்று இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்ட தேசம்

நம்பியும் நாச்சியாரும் கடாஷித்த –அக் கடாஷமே விளை நீராக வளருகிற பொழில் ஆகையாலே
நாள் தோறும் வர்த்தித்து வரக் கடவது இறே
அக் கடாஷம் மாறில் இறே பொழில் விரிவும் மாறுவது –

நின்றாய் என்றும் –

ஷீராப்தியில் இருந்து புறப்பட்டு
மேதாவி மகரிஷி இடத்தில்
திரு நறையூரில் வந்து இருக்க
இங்கே நம்பி தேடி வந்தான் இறே –

பிராட்டியை தேடி அலமர்ந்து திரிந்தவன் அத் தேசத்திலே அவளைக் கண்ட வாறே அங்கே தரித்து நின்ற படி –

அந்நிலை உனக்கு சித்திக்கும் போது எனக்கு முகம் காட்ட வேண்டாவோ
எனக்கு முகம் தராத போது அவள் முகம் உனக்கு கிடைக்குமோ என்கிறாள் –

துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
இத்தாலும் நம்பி உடைய திருக் குழலையும் வடிவையும் சொல்கிறது –
அற நெருங்கி இருண்ட குழலையும்
காளமேக நிபச்யாமமான வடிவையும் உடைய என் துணையே –

தோளு நான்குடைச் சுரி குழல் கமலக் கட் கனிவாய் காள மேகத்தை இறே இவர்கள் துணையாகப் பற்றுவது –
இந்தக் குழலிலும் வடிவிலும் போலே காணும் தான் அகப்பட்டது –
பிராட்டியைத் தேடி திரிகிற காலம் திருக் குழல் பேணாமையாலே ஜடையாய் கிடந்தது
கண்டவாறே அவள் கையாலே வகிர்ந்து பேணின குழல் ஆகையாலே துன்று குழல் -என்கிறது –

(தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன் கமர்ந்து நின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காள மேகத்தை யன்றி மற் றொன்றிலம் கதியே.)

(பிராட்டியைத் தேடுகையாவது
ஷீராப்தியின் நின்றும் புறப்பட்டு மேதாவி மகரிஷி இடத்தில் திரு நறையூரிலே வந்து இருக்க
இங்கே தேடி வந்தார் நம்பி என்கிற வ்ருத்தாந்தம் )

என் துணையே –
ஸ்நிக்த நீல குடில குந்தளம் என்கிற மயிர் முடியையும் வடிவில் ஸ்ரமஹரதையும் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே –

(கேசவ -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 23 திரு நாமம்
பிரமன் ஈசன் நிர்வாஹகன்
கேசி ஹந்த
ப்ரஷஸ்த கேஸ பாஸம்
ப்ரஷஸ்த ஸ்நிக்த நீல குடிலை குண்டல -புகழப் படும் -வழுவழுப்பான -கறுத்த -சுருண்ட திருக் குழல் காற்றை)

நான் விமுகனான தசையிலே சத்தியை நோக்கி
உன் வடிவு அழகைக் காட்டி
அனன்யார்ஹம் ஆக்கி
என்னோடு வந்து சம்ஸ்லேஷித்து
என்னை உபேஷித்துப் போகவோ -என்கிறாள் –

துணை -என்று
காந்தனையும் சொல்லக் கடவது -ரஷகனையும் சொல்லக் கடவது இறே –
இலை துணை -என்னக் கடவது இறே –
எனக்கு பிராப்யமும் பிராபகமும் ஆனவனே –

(இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை -நான்முகன் திருவந்தாதி-8- -அங்கும் – இனிய ப்ராப்யம் -காந்தன் -ரக்ஷகன் -ப்ராபகம்)

என்றும் -துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே
இப்படி சொல்லா நிற்கச் செய்தே தரைப் படா நின்றாள் –
துணை முலை
போக உபகரணமோ துணை
இதுவே போக்தாவுக்கு துணை
அவனைப் பிரிந்த தசையிலும் முலை துணையாய் இறே இருப்பது-

துளி சோரச் சோர்கின்றாளே –
அது அழிகையாலே தானும் அழிந்தாள் என்கிறாள் –
(அக்னி கணம் போலே கண்ணீர் விழ
அத்தாலே அது வை வர்ணமாய் தானும் அழியா நின்றாள் )

என் துணையே -என்று -சோர்கின்றாளே –
விழுவார் அம்மே என்று விழுமா போலே அவன் முகம் காட்டாமையாலே வந்த ஆற்றாமையாலே
நோவு படா நிற்கச் செய்தேயும்
அவனைத் துணையாகச் சொல்லி தரைப் படா நின்றாள் -(மாத்ரு காதுகனும் அம்மே என்றே சொல்லி விழுவானே )

(தாயான )துணையான நான் -என் முகம் பார்க்க வல்லளே என்று ப்ரார்த்தியா நிற்க
தான் துணையாக நினைத்தவன் முகம் காட்டாதே உபேஷித்துப் போகா நிற்க
பின்னையும் அவன் முகத்தை ஆகாங்ஷித்து தரைப் படா நின்றாள் –

இது போலே காணும் பகவத் சம்பந்த உக்தன் இருக்கும் இருப்பு –

விஷயாந்தரங்கள் தாம் மேல் விழா நின்றாலும் அத்தை கால் கடைக் கொண்டு இருக்கையும்
அவன் உபேஷகன் ஆனாலும் அவனை ஒழியச் செல்லாதே இருக்கையும் இறே -பகவத் சம்பந்த உக்தன் படி

தாய் ரஷகையாய் அபிமானித்து இருக்கச் செய்தேயும் அவளைக் கால் கடைக் கொண்டாள் இறே –

(கொண்ட பெண்டிர் மக்கள் -ஆபாஸ பந்துக்கள் வர்ஜனம் நல்ல கோட்ப்பாடுடை –அனுகூல பகவத் பக்தர்கள் உபாதேயம்

கடியன் கொடியன் நெடிய மால் -ஆகிலும் கொடிய என் நெஞ்சு அவனே என்று இருக்குமே )

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–15–கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 18, 2013

அவதாரிகை –

கீழ் பாட்டில் –
கிளி திரு நாமத்தை சொல்லக் கேட்டு ஆஸ்வஸ்தையாய்
அதின் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தியும் கொண்டாடினாளாய் நின்றது –

இதில் –
அத்தசை போய் –
தன் வாயாலே திரு நாமத்தை சொல்லி
அது தன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள்-

அந்த வீணையோடு ஸ்பர்சம் பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே
சம்ஸ்லேஷ தசையில் தன் படிகளையும் அவன் படிகளையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படிக்கு
ஸ்மாரகமாக-அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை சாஷாத் கரித்து
அந்த வீணையை அவனாகக் கொண்டு அவனோட்டை சம்ஸ்லேஷ தசையில் பண்ணும் வியாபாரங்களை
இவ் வீணையிலே பண்ணா நின்றாள்

இவள் உணர்ந்தால் என்னாய் விழப் புகுகிறதோ என்று
இன்னாதாகிறாள்

—————————————————————————————————————————————–

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-

பதவுரை

கல் உயர்ந்த நெடுமதி்ள் சூழ்-கல்லாலே செய்யப்பட்டு ஓங்கின பெரிய திருமதின்களாலே சூழப்பட்ட
கச்சி-காஞ்சீபுரத்திலே
கடல் கிடந்த கனியே என்றும்–திருப் பாற்கடலில் கண் வளர்ந்தருளுகிற கனி போன்றவனே! என்றும்.
அல்லி அம் பூ மலர் பொய்கை–தாதுகள் மிக்குப் பரிமளமுடையனவாய் அழகியவான புஷ்பங்களை யுடைய தடாகங்களையும்
பழனம்–நீர்நிலங்களையும்
வேலி-சுற்றும் வேலியாக வுடைய
அணி அழுந்தூர்–அழகிய திருவழுந்தூரிலே
நின்று-நின்றருளி
உகந்த- திருவுள்ளமுவந்திருக்கின்ற
அம்மான் என்றும்–ஸ்வாமியே! என்று (சொல்லி)
சொல் உயர்ந்த-நாதம் மிக்கிருப்பதாய்
நெடு-இசை நீண்டிருப்பதான
மேய-எழுந்தருளி யிருக்கிற
களிறு என்றும்-மத யானை போன்றவனே! என்றும்
வீணை-வீணையை
முலை மேல்-தனது ஸ்தனங்களின் மீது
தாங்கி–தாங்கிக் கொண்டு
தூ முறுவல்–பரிசுத்தமான மந்த ஹாஸத்தாலே
நகை–பல் வரிசை
இறையே தோன்ற–சிறிதே விளங்கும் படியாக
நக்கு–சிரித்து
மெல் விரல்கள்-(தனது) மெல்லிய விரல்கள்
சிவப்பு எய்த-சிவக்கும்படியாக
தடவி-(அந்த வீணையைத்) தடவி
ஆங்கே-அதற்கு மேலே
என் பேதை-என் பெண்ணானவள்
மென் கிளிபோல்–கிளிப் பிள்ளை போலே
மிக மிழற்றும்–பலபடியாகப் பாடா நின்றாள்

கல்லால் செய்யப்பட்டதாய் உயர்த்தியையும் விஸ்தாரத்தையும் யுடைத்தான மதிலாலே சூழப்பட்ட கச்சி மா நகரிலே திருப்பாடகத்திலே
பொருந்தி வர்த்திக்கிற யானை என்றும்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற கனி போலே போக்ய பூதனானவனே என்றும்
கடி மிக்கு பரிமளத்தை யுடைத்தாய் தர்ச நீயமாய் இருந்துள்ள புஷ்ப்பங்களை யுடைத்தான தடாகங்களையும் நீர் நிலங்களையும் வேலியாக யுடைய
அழகிய திருவழுந்தூரிலே ஆஸ்ரிதருக்காக நின்று அருளி
அவர்கள் ஆஸ்ரயிப்பதற்கு உகந்த ஸ்வாமீ என்றும் சொல்லி
நாதம் மிக்கு இருப்பதாய் இசை நீண்டு இருந்துள்ள வீணையை தன் ஸ்தனங்களிலே தரித்துக் கொண்டு
பரிசுத்தமான மந்த ஹாஸத்தாலே பற்களின் வரிசை அங்கே பிரகாசிக்கும் படி சிரித்து தன்னுடைய மெல்லிய விரல்கள் ஆனவை வலிக்கும் படியாக
அவ்வீணையைத் தடவி அதுக்கும் மேலே என் பெண்ணானவள் கிளிப்பிள்ளை போலே பலபடியாகப் பாடா நின்றாள் –

—————————————————————————————————————————————–

கிளி மிழற்ற -இவள் மென் கிளி- மிக மிழற்றுகிறாள்

திரு நாமம் தான்
1-ஆபத் சகமாயும்
2-உஜ்ஜீவன ஹேதுவாயும்
3-போக்யமாயுமாய் -இறே இருப்பது –

அதில் அவை இரண்டும் கீழே சொல்லி-(ஆபத் சகமாயும்-13 பாசுரம் -உஜ்ஜீவன ஹேதுவாயும்-14 பாசுரம் )
போக்யமான திரு நாமங்களை இங்கே சொல்கிறாள் –

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் –
உள்ளு நிற்கிற ஆனையினுடைய ஸ்லாக்கியத்தை எல்லாம்
மதிள்களிலே தோற்றுகிறபடி -(பாண்டவ தூதன் -25 அடி -வீற்று இருக்கும் யானை )
சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் அப்ரயோஜகம் –
விஷயத்துக்கு பரியும் அதுவே பிரயோஜகம் –
சேஷ வஸ்துவுக்கு அனுவ்ர்த்தாகாரம் சேஷியை அதிசயிப்பிக்கும் இது இறே –

(பர கத அதிசய ஆதான இச்சயா -சேஷத்வம் ஸ்வரூபம்)

கல்லாலே செய்யப்பட்டு பிரதிகூலர்க்கு துஷ் ப்ராபமான ஒக்கத்தை உடைத்தாய்
ஆனைக்கு ஸ்வைர சஞ்சாரம் பண்ணலாம் படி விஸ்தாரத்தையும் உடைத்தான -மதிள் என்கை-

கச்சி மேய களிறு என்றும்
கச்சி மேய களிறு -என்கிறது திருப் பாடகத்து நாயனாரை
நித்ய ஸ்பர்ஹணீயமாக இருக்கையாலும்
நிவாரகர் இல்லாத ஸ்வாதந்த்ரத்தாலும்
ஒரு மத ஹஸ்தி படிந்தால் போல் ஆய்த்து எழுந்து அருளி இருப்பது –

சேனை முதலியார் பெரிய திருவடி இவர்கள் உடைய நியமனமும்
ஸ்வ சந்த அனுவ்ர்த்திகளாய்க் கொண்டு நியமிக்கிறார்கள் ஆகையால்
கிஞ்சித் காரத்தில் ஒரு முக பேதமாம் இத்தனை ஒழிய
சேஷிகளாய்க் கொண்டு நியமிக்கிறார்கள் அன்று இறே

1-சர்வ ஸ்பர்ஹணீயானவனாய் இருக்கிறவன் கிடீர் தன் பக்கல் ஸ்பர்ஹை பண்ணின எனக்கு
முகம் காட்டாது ஒழிகிறான் –
2-செய்ததுக்கு நிவாரகர் இல்லாத ஸ்வ தந்த்ரன் கிடீர் எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் –

(இங்குக் கச்சிமேய களிறு என்கிறது-திருப் பாடகத்து நாயனாரை என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
திருவத்தி மா மலையில் நின்றருளாநின்ற பேரருளாளப் பெருமாளை என்று அருளிச் செய்திருக்கலாம்;
அவருடைய திருவுள்ளமங்ஙனே நெகிழ்ந்தபடி. திருப்பாடகத்து நாயனாராக அருளிச் செய்தற்கு ஒருபொருத்தமுண்டு ;
“நின்ற தெந்தை யூரகத்து இருந்த தெந்தை பாடகத்து, அன்று வெஃகாணைக் கிடந்தது – என்று
திருமழிசைப் பிரான் அநுபவித்தபடியை இம் மூன்று ஸ்தலத்திலும் அநுபவிக்கிறாள் இவள்“ என்று
மேலே நிர்வஹித்தருளுகையாலே அதற்குப் பொருந்தும்,
திருவழுந்தூரில் நின்ற திருக்கோலமும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருக்கோலமுமாக
அநுபவிக்கிறாரென்று நிர்வஹிப்பதில் ஒரு சமத்கார அதிசயமுண்டு காணும்.)

கடல் கிடந்த கனியே என்றும் –
இவ் வானை பட்ட ஆகரத்தை சொல்லுகிறது –
பிரதி கூலர்க்கு துஷ் ப்ராபமான ஷீராப்தியிலே
பக்வ பலம் போலே கண் வளர்ந்து அருளுகிற நிரதிசய போக்ய பூதனே –

(கச்சி மேய களிறு தோன்றின விடம் திருப்பாற்கடல் போலும்.
அதிலே பழுத்த பழம் போலே கண் வளர்ந்தருளுகிற பரம போக்யனே!)

கனியானது கண்ட போதே நுகரலாய் இருக்கையும்
புஜிப்பாரை பெறாத போது தான் அழியும்படியுமாய் இறே இருப்பது –

அப்படியே
தன்னை அனுபவிப்பார் தேட்டமாய்
அவர்களைப் பெறாத போது தான் அழியும்படியாய் இருக்கை –
போக்த்தாக்களைக் குறித்து அவசர பிரதீஷனாய் இருக்கிறவன் எனக்கு முகம் காட்டாது ஒழிவதே

அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் –
அவ் வானை ஸ்வரை சஞ்சாரம் பண்ணி வந்து நிற்கிற தேசத்தை சொல்கிறாள் –
தாது மிக்கு
பரிமிளிதமாய்
தர்ச நீயமாய்
இருந்துள்ள புஷ்பங்களை உடைத்தான
தடாகங்களையும் நீர் நிலங்களையும் வேலியாக உடைய தேசம்

பிரதி கூலர்க்கு துஷ் ப்ராபமாய்
அநு கூலர்க்கு ஸ்ரமஹரமாய்
இருந்துள்ள தேசம் -என்கை

நின்று உகந்த அம்மான் என்றும்
சம்சாரிகளுக்கு ஆஸ்ரயண அர்த்தமாக நின்று
அவர்கள் தன் நிலை அழகையும்
அதுக்கடியான குணங்களையும் அனுசந்தித்து
திருவடிகளைக் கிட்டினால் உகப்பானும் தானேயாய் -இருக்கை –

பிராபகனும் தானாய்
பிராப்யத்தில் உகப்பானும் தானேயாய் இருக்கை
ஆத்ம லாபம் ஈஸ்வரனது இறே -(ப்ராப்யனும் ப்ராப்தாவும் ப்ராப்திக்கு உகப்பானும் தானே )

நின்று உகந்த
நிற்கிற நிலை பலித்தவாறே-உகந்தபடி-அதுக்கு ஹேது என் என்னில் –

அம்மான் -என்றும்
உடையவன் ஆகையாலே உடைமையை லபிக்கை யத்னம் பண்ணுவானும் தானாய்
உகப்பானும் தானாய் இறே இருப்பது –

சேஷிக்கு சேஷத்வ சித்தியும் திருப்பதிகளிலே
சேஷ பூதனனுக்கு சேஷத்வ சித்தியும் திருப்பதிகளிலே
என்று ஆய்த்து இவர் இருப்பது –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது
என்னிலாத முன் எல்லாம் -என்று
திரு மழிசைப் பிரான் அனுபவித்த படியை
இம் மூன்று ஸ்தலத்திலும் அனுபவிக்கிறாள் -இவள்-

சொல்லுயர்ந்த நெடு வீணை-
சாமான்யமான யாழிலும் குழலிலும் காட்டிலும்
நாதம் மிக்கு இருக்கையும்
இசை நீண்டு இருக்கையும் –
இசை நீண்டு இருக்கை யாவது -அஷரம் நரம்பு இல்லாத படி -கரைந்து இசையாய் இருக்கை
அதாவது தோற்றாதபடி-
அதவா
நெடு வீணை கேட்டார்க்கு-அது அது -என்று கிடக்கும் படியாய் இருக்கும் என்னுதல் –

வீணை முலை மேல் தாங்கித் –
வீணையை ஸ்பர்சித்த வாறே -காந்தனானவன் சம்ஸ்லேஷ தசையில்
தன்னுடைய போக்யதையும் இவளுடைய போக்யதையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படியை சாஷாத் கரித்து
அதுக்கு ஆஸ்ரயமான தோளை சாஷாத் கரித்து –
அதுக்கு ஆஸ்ரயமான வடிவை சாஷாத் கரித்து
அவனை சம்ஸ்லேஷ தசையிலே தன் மார்பிலே ஏறிட்டு கொள்ளுமா போலே
வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள் –

இவ் வீணையை அவனாக நினைக்கக் கூடுமோ -என்னில் –
க்ர்ஹீத் த்வா ப்ரேஷமாணா ச பர்த்தும் கர விபூஷணம்
பர்த்தாரம் இவ சம்பிராப்தா ஜானகி முதிதாபவத் -என்று
பிராட்டி பெருமாளை பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே அனுபவித்தாள் இறே –

(“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து; கர விபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“
(ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னும் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கை நீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.)

க்ர்ஹீத்வா –
தேசாந்தரம் போன பந்துக்களைக் கண்டால் போல் மேல் விழுந்தாள் –

ப்ரேஷமாணா –
வைத்த கண் மாறாதே பார்த்துக் கொண்டு இருந்தாள் –

ஸா
இவன் வரவை ராவணன் வரவாக சங்கித்தவள் கிடீர் இப்படி மேல் விழுந்தாள் -என்கிறான் –

பர்த்தும் கர விபூஷணம் –
அடியில் தன்னைக் கைப் பிடிக்கும் போது தன் கையில் உறுத்தின மோதிரத்தை

அங்கன் அன்றியே
தானும் அவரும் சம்ஸ்லேஷித்த போது போகத்தின் மிகுதியாலே
ப்ரணய ரோஷம் தலை எடுத்து ஒருவரை ஒருவர் முகம் பாராதே யூடி இருப்பார்கள் –
அப்போது இருவரையும் சேர்த்து வைத்த மோதிரம் -என்னுதல் –

அதாவது
அப்போது நேர் முகம் பார்க்கையும் வார்த்தை சொல்லுகையும் இருவருக்கும் அபேஷிதமாக இருக்கும் –
வேறு சேர்ப்பார் இல்லையாகையே கையில் திரு வாழி மோதிரத்தை கழற்றி
பெருமாள் தரையிலே விழ விடுவர் –
அப்போது தான் அம் மோதிரத்தை விழ விட்டீர் காணும் என்னும் வார்த்தையை உண்டாக்கின
மோதிரம் ஆகையாலே கடகமான மோதிரம் –என்கிறது –

பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா –
திரு வாழி மோதிரத்தைக் கண்டவாறே பெருமாள் கையை நினைத்தாள்
அதுக்கு ஆஸ்ரயமான தோளையும்
அதுக்கு ஆஸ்ரயமான வடிவையும் -நினைத்தாள் –
சந்நிதியில் அவரைத் தழுவிக் கொள்ளுமா போலே திரு வாழி மோதிரத்தைக் கொண்டாள்

பர்த்தாரம் இவ –
அவள் பெருமாளாகவே தழுவிக் கொண்டாள் –
இவன் பர்த்தாவைப் போலே என்கிறான் –

ஜாநகீ முதிதா பவத் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் உகவா நின்றாள் –
உதர்க்கத்தில் என்னாய் விழப் போகிறதோ என்று பீதன் ஆகிறான் ரிஷி
தாங்கி வைத்தது -என்னாதே -தாங்கி -என்கிறது –
சம்போக தசையில்
அபூர்வ வத் விஸ்மய மாததா நயா- என்கிறபடி
தன் போக்யதையாலே குமிழ் நீர் உண்டு தளர்ந்த தசையிலே
அவனைத் தன் கையாலே எடுத்து
அணைத்துக் கொள்ளும்படி ஸ்மரதி விஷயமாக அவனை நினைத்து
வீணையை எடுத்து முலையில் தாங்கின படி –

(ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.)

தூ முறுவல்-
அவனை ஸ்பர்சிக்கையால் வந்த ஹர்ஷத்தாலும்
எதிர் தலையை தோற்பிக்கையால் வந்த ஹர்ஷத்தாலும்
ஸ்மிதம் பண்ணின படி –

நகை யிறையே தோன்றநக்கு –
தந்த பந்தி அல்பமே பிரகாசிக்கும்படி சிரித்து
அந்த ஹர்ஷம் ஸ்மிதத்து அளவில் பர்யவசியாத படியாலே
இள நிலா பாய்ந்தால் போலே இருக்கும்படியாக
வாய் விட்டு ஹாசம் பண்ணின படி –
காந்த ஸ்மிதா லஷ்மண ஜாத ஹாச -என்னக் கடவது இறே

மெல் விரல்கள் சிவப்பெய்தத் தடவி –
சம்ஸ்லேஷ தசையிலே காந்தன் முதுகிலே தான் படுத்தும்
போக சிஹ்னங்களை நினைத்து
நாணியைத் தடவின படி –

மெல் விரல்கள்
அதி ஸூ குமாரமான விரல் கிடீர் -என்கிறாள்

சிவப்பெய்யத் தடவி –
சம்போக தசையில் விமர்த்தனம் சஹ்யமாய் இறே இருப்பது –
சிவப்பெய்த -என்கையாலே
தத் காலீனமான சிவப்பு -என்கை –

யாங்கே-
அதுக்கு மேலே -என்னுதல் –
அத் தசையிலே -என்னுதல் –

மென் கிளி போல் மிக மிழற்றும்-
முக்த்தமான கிளி போலே மிக மிழற்றா நின்றாள் –
கிளியின் வாயாலும் திரு நாமத்தை கேட்டவள் ஆகையாலே
அதில் காட்டிலும் தன் மகளுக்கு உண்டான
மார்த்த்வத்தையும் -மௌக்யத்தையும் -சொல்லுகிறாள் –

மிக மிழற்றும் –
பருவம் இதுவாய் இருக்க –
பிரணயித்வத்தில் தேசிகை யானபடி
பேச்சுக்கு நிலம் அன்று -என்கிறாள் –
எதிர் தலையில் அபஜயத்தைக் கண்டு சிரித்து
த்வமாஹாசீதா பஹூ வாக்ய ஜாதம் – என்கிறபடி

நாங்கள் ஸ்திரீகள் அன்றோ -அபலைகள் அன்றோ –
நீர் ஆண் பிள்ளை அன்றோ –
என்று இப் புடைகளிலே சொல்லுகிற வார்த்தைகளுக்கு தொகை இல்லை -என்கிறார் –

நைவ மாம் கிஞ்சித் அப்ரவீத் -என்று
சுமந்த்ரன் வார்த்தை கேட்கையிலே வாய் நீர் அறும்படி கம்பீரையாய் இருக்கக் கடவ
தான் அந்த போக ரசத்தாலே காம்பீர்யம் குலைந்து
தன் வெற்றி தோற்ற விதக்தையாய் நின்று வார்த்தை சொல்லுகிறாள் இறே –

(நைவ மாம் கிஞ்சித் அப்ரவீத் -58 : 85. இது, பெருமாளையும் இளைய பெருமாளையும் பிராட்டியையும் கங்கையின் கரையிலே விட்டு மீண்டு அயோத்தியா நகரத்திற்கு வந்த சுமந்திரன் கூறுவது
‘பிராட்டி துக்கத்தால் அழுது கொண்டு என்னைப் பார்த்து வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை,’ என்பது போன்று
இருக்குமவள் வார்த்தை சொல்லுகிறது )

என் பேதையே –
என் வயிற்றில் பிறந்த சிறுப் பெண் -இவை எல்லாம் எங்கே கற்றாள் –
இப் பருவத்தில் பிரணயத்தில் வைதக்யம் எல்லாம் எங்கே கற்றாள் –
பருவமும் காலமும் என்று ஓன்று இல்லை யாகாதே
படுத்துமவன் கையதுயாகாதே
சிறிய வயிற்றிலே பெரிய ஜகத்தை அடக்கின அகடிதகடனம் போல் அன்றியே
அணு பூதன் பக்கல் விபுவான தான் சமாப்ய வியாபித்த அகடிதகடனம் போல் அன்றியே
இது ஒரு அகடிதகடனம் இருந்த படியே -என்கிறாள் –

மென் கிளி –என் பேதையே –
மௌக்த்த்ய வைதக்த்யங்கள் இரண்டும்
ஏக ஆஸ்ரயத்தில் கிடப்பதே –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–14–முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 18, 2013

அவதாரிகை –

திருநாமம் சாத்மியாத தசையும்
சாத்மிக்குமோ -என்று சங்கிக்கிகும் தசையும்
சாத்மிக்கும் தசையுமாய் இருக்கிற படியை -இறே
இம் மூன்று பாட்டிலும் சொல்கிறது –

ஆபத் சகங்களான திரு நாமங்களை தான் ஆதிக்ரஹணம் பண்ணித் தந்து சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்
அது மோஹ ஹேதுவாய்த்து என்று பார்த்து
கிளி தன்னுடைய விவேகத்தாலே முன்பு தெளிந்த காலத்திலே தான் உஜ்ஜீவித்த பிரகாரத்தாலே கற்பித்த திரு நாமங்களை
அடைவே சொல்லக் கேட்டு தரித்து –

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக -என்று
கிளியைக் கொண்டாடுகிறாள் –

——————————————————————————————————

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய்  நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -14-

பதவுரை

முளை கதிரை-இளங்கதிரவனைப் போன்றவனும்
குறுங்குடியுள் முகிலை–திருக்குறுங்குடியில் காளமேகம் போல் விளங்குபவனும்
மூவா மூ உலகும் கடந்து–நித்யமாய் மூவகைப் பட்டதான ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய்
அப்பால்–பரம பதத்திலே-தத் விஷ்ணோ -அப்பால் –
முதல் ஆய் நின்ற–(உபய விபூதிக்கும்) முதல்வனாய்க் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்
அளப்பு அரிய–(ஸ்வரூப ரூப குணங்களில்) அளவிடக் கூடாதவனும்
ஆர் அமுதை-அருமையான அம்ருதம் போன்றவனும்
அரங்கம் மேய அந்தணனை–திருவரங்க மா நகரில் பொருந்திய பரம பரிஸூத்தனும்
அந்தணர் தம் சிந்தையானை–வைதிகர்களின் உள்ளத்தை இருப்பிடமாக வுடையவனும்
திருத் தண் காவில் விளக்கு ஒளியை–திருத் தண் காவில் விளக்கொளி யெம்பெருமானாய் ஸேவை ஸாதிப்பலனும்
மரகத்தை–மரகதப் பச்சைப் போல் விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
வெஃகாவில் திருமாலை–திரு வெஃகாவில் கண் வளர்ந்தருளுகிற திருமகள் கொழுநனுமான
பாட கேட்டு–ஸர்வேஸ்வரனைக் (கிளி) பாட (அப் பாசுரங்களை)க் கேட்டு
மடக் கிளியை–அழகிய அக் கிளியை நோக்கி
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று–உன்னை வளர்த்ததனால் பிரயோஜனம் பெற்றேன்; இங்கே வா‘ என்றழைத்து
கை கூப்பி வணங்கினாள்–அதற்கு ஒரு அஞ்சலியும் செய்து நமஸ்கரித்தாள்.

பால ஸூர்யனை ஒத்தவனாய்
திருக்குறுங்குடியிலே நித்ய வாஸம் பண்ணுகிற
மேகத்தை ஒத்தவனாய்
நித்தியமான த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகு வானவனாய்
பரமபதத்திலே உபய விபூதிக்கும் காரண பூதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிறவனாய்
ஸ்வரூப ரூப குணங்களால் அளவிடக் கூடாதவனாய்
அம்ருதக் கடல் போல் நிரதிசய போக்ய பூதனாய்
கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிற பரிசுத்தனாய்
பரிஸூத்தரானாருடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்
விளக்கு ஒளி போலே நெஞ்சிலே பிரகாசிக்குமவனாய்
திருத் தண் காவில் மரகதம் போல் குளிர்ந்த வடிவை யுடையவனாய் பச்சை வண்ணராய்
திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனை
ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பாட ப்ரீதியுடன் கேட்டு உன்னை வளர்த்ததனால் உண்டான ப்ரயோஜனத்தைப் பெற்றேன்
இங்கே வா என்று அழைத்து லஜ்ஜா விஷ்டமான கிளியை அஞ்சலி பண்ணி அதின் காலிலும் விழுந்தாள் –

——————————————————————————————————-

அடியில் அவற்றைக் கற்பித்த திரு நாமங்கள் உடைய அடைவு இருக்கிறபடி –
முளைக் கதிரை -என்னீர் –
குறும் குடியுள் முகில் -என்னீர்
என்றாய்த்து கற்பித்தது

முளைக் கதிரைக் –
உதிக்கிற ஆதித்யனைப் போலே
கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி இருக்கிற
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை –

பரம பத நாதனை –
(தத்ர கோவிந்த மாஸீ நம் )பிரசன்னாதித்ய வர்ச்சசம்  –என்னக் கடவது இறே –
தம்மை அடியிலே அவன் விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டதும்
ஸ்வ விஷயத்திலே ருசியைப் பிறப்பித்ததும் –
வடிவைக் காட்டி யாகையாலே -அத்தை யாய்த்து -இதுக்கு பிரதமத்திலே உபதேசித்தது –
மணி யுருவில் பூதம் ஐந்தாய் -என்று அன்றோ அடியிலே விஷயீ கரித்த வடிவைச் சொல்லிற்று –
இங்கே –முளைக் கதிரை -என்பான் என் என்னில் –

மணி வுரு நீல வர்ணன் முளைக் கதிர் -சிவப்பு வர்ணம்
வஸ்து உத்தேச்யம் பிரயோஜனம்
பிரகாசத்காமே யாய்த்து பிரகாசிப்பித்தது –
ஆகையாலே தேஜோ மயமான விக்ரஹம் -என்கை

திருக் குறும் குடியுள் வந்து நின்று அருளின சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்கிறது மேல் –
மூவா மூ வுலகு இத்யாதி
மூவா மூ வுலகு என்று -நித்தியமான த்ரிவித ஆத்ம வர்க்கத்தை அருளிச் செய்கிறார் –

(மூ வுலகும்-உம்மைத்தொகை த்ரிவித அசேதனங்கள்
கடந்த த்ரிவித சேதன அசேதன விலக்ஷண விஸிஷ்ட ப்ரஹ்மம்

முதலாய் நின்ற -தரிப்பவன் -மேலான புருஷோத்தமன்-மூல காரணமாய் நின்ற

நித்ய முக்தர்களும் முழுவதும் அனுபவிக்க முடியாதே
நித்ய முக்தர்களை இனிமையால் தரிக்க வைக்கிறான்
நமக்கு சரீரம் இந்திரியங்கள் -கரண களேபரங்களைக் கொடுத்து தரிக்க வைக்கிறான்
நின்றனர் இருந்தனர் -இத்யாதி )

கடந்து –
சகல சேதன அசேதனங்களுக்கும் அவ்வருகாய் இருக்குமவன் –

அப்பால் –
பரம பதத்தில்

குறும் குடியுள் முகிலை –
இவ்வடிவை சாஸ்திர முகத்தாலும் அன்று
ஆசார்ய உபதேசத்தாலும் அன்று
திருக் குறும் குடியிலே யாய்த்து பிரகாசிப்பித்தது –

இரண்டாம் பாட்டில்-முகில் உருவம் -என்று
வடிவில் ஸ்ரமஹதையையும் ஔதார்யத்தையையும் பற்ற -அருளிச் செய்தார்
அத்தை இங்கே சொல்லுகிறார்

குறும் குடியுள் முகிலை –
இன்ன பர்வதத்திலே மேகம் படிந்தது என்றால் வர்ஷம் தப்பாது என்று இருக்குமா போலே
திருக் குறும் குடியிலே நின்றான் என்றால் லோகம் எல்லாம்
க்ர்தார்தமாம் படியாய்த்து இருப்பது –

உள் முகிலை
வந்து வர்ஷித்துப் போம் மேகம் போல் அன்றியே
ஸ்தாதியாய் நிற்கும் மேகம் ஆய்த்து

முதலாய் நின்ற –
உபய விபூதிக்கும் சத்தா ஹேதுவாய் நின்ற –
நித்ய ஸூரிகளுக்கு போக்யதையால் சத்தா ஹேதுவாய்
சம்சாரிகளுக்கு கரண களேபர பிரதானத்தாலே சத்தா ஹேதுவாய் இருக்கும் என்கை –

அளப்பரிய ஆராமுதை –
ஸ்வரூப ரூப குணங்களால் அபரிச்சின்னனாய்
அம்ர்த்த சாகரம் போலே நிரதிசய போக்ய பூதனாய்
இருக்குமவனை –

யரங்க மேய யந்தணனை-
அந்த அம்ர்த சாகரத்தில் நின்றும் ஒரு குமுழி புறப்பட்டு
ஒரு தடாகத்தில் வந்து தேங்கினால் போலே ஆய்த்து
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற படி –
பெரிய பெருமாளுக்கு அடி ஷீராப்தி அன்று காணும் பரம பதம் ஆய்த்து
அண்டர்கோன் அணி அரங்கன் -என்னக் கடவது இறே –

(கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–)

அரங்கம் மேய –
பரம பதத்தில் இருப்பு பேருகைக்கு யோக்யதை உண்டு
அவதாரங்களில் தீர்த்தம் பிரசாதிக்கைக்கு யோக்யதை உண்டு –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்போம் என்று கிடக்கிற கிடை இறே –
கல்ப அவசானத்திலும் விஷயம் இல்லாமையாலே போகிற இத்தனை –

அந்தணனை –
தன் வடிவு அழகைக் காட்டி-
அஹங்காரமும் விஷயாந்தர பிராவண்யமும் ஆகிற
அஸூ த்தத்தை போக்கும்படியான ஸூ த்தியை உடையவனை –

(மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-)

(சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-)

யந்தணர் தம் சிந்தையானை –
ஸூத்தரானவர் உடைய ஹ்ருதயத்தில் நித்ய வாசம் பண்ணுமவனை
கோயில் வாசமும் ராகாதி தூஷிதன் இன்றியே இருப்பான் ஒரு ஸூத்தன் உடைய ஹ்ர்தயத்தை கணிசித்து இறே –
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெல்லாம் –என்னக் கடவது இறே

(நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-)

விளக்கொளியை –
தன் வடிவு அழகைக் காட்டி அஹங்காரத்தையும் விஷயாந்த்ர ப்ராவண்யத்தையும் போக்கி விடுகை அன்றியே
நெஞ்சிலே புகுந்து முறை உணர்தினவனை

விளக்கொளியை-
பிரகாசமானவனை –
அதாகிறது –
ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களையும்
தத் விரோதி ஸ்வ ரூபத்தையும்
விரோதி நிவர்த்தி பூர்வகமாக புருஷார்த்தம் சித்திக்கும் படியான
உபாய ஸ்வ ரூபத்தையும் பிரகாசிப்பிக்கை -என்கை –

(மிக்க இறை நிலையும், மெய்யா உயிர் நிலையும் *தக்க நெறியும், தடையாகித் – தொக்கியலும்*

ஊழ்வினையும், வாழ்வினையும், ஓதும் குருகையர்கோன் * யாழினிசை வேதத்தியல்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச பிரத்யகாத்மான

ப்ராப்த்யு பாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச – வதந்தி சகலா வேதா: ஸேதிகாஸ புராணகா:  முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந)

(மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே
இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய தீப ப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்;
திருத்தண்கா ‘விளக்கொளி கோயில்‘ என்றே வழங்கப் பெறும்.
இத் தலத்துப் பெருமான் பண்டைக் காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாகப்
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரையினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது.)

மரகதத்தைத் திருத் தண் காவில்
திருத் தண் காவில் மரகதத்தை –
அரு மண வனானை-த்வீப விசேஷம் -என்னுமா போலே –
திருத் தண் காவில் மரகதம் -என்கிறார்

(மரகத வல்லித் தாயாருக்கும் மங்களா ஸாஸனம்)

இந்த தீவில் பட்ட ஆனை என்றால் விலஷணமாய் இருக்குமா போலே
திருத் தண் காவில் கண் வளர்ந்து அருளுகின்றவன் உடைய வடிவு என்றால் விலஷணமாய் இருக்கிற படி –

பச்சை மா மலை போல் மேனி -என்கிற வடிவை உடையவர் –
வடதேசத்தின் நின்றும் பெருமாளை அனுபவிக்க வருமவர்கள் இளைத்து விழுந்த இடத்திலே
அவர்களை எதிர் கொண்டு அனுபவிக்கக் கிடக்கிற கிடை –

(விளக்கு ஒளிப் பெருமாள்  கிடந்த திருக்கோலம்  –
பச்சை வண்ண பெருமாள் மங்களா ஸாஸனம் என்றுமாம்)

வெக்காவில் திருமாலைப் –
திருத் தண் காவில் மரகதம் என்கிற வடிவிலே மினுக்கம் உண்டானாப் போலே யாய்த்து
திரு வெக்காவில் வந்து கண் வளர்ந்து அருளின பின்பு ஸ்ரீயபதித்வம் நிறம் பெற்ற படி —

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் –
பிராட்டியை திரு மணம் புணர்ந்த மணக் கோலத்தோடு கூட
இருவரும் கிடந்த கிடையாக அருளிச் செய்தார் இறே -கீழே
ஆஸ்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி அற ஒரு மிதுனமாக ஆஸ்ரயமாய் இறே இருப்பது –

பாடக்-
திரு நாமம் சாத்மித்த படியாலே அவகாசத்திலே கிஞ்சித் கரிக்க பெற்றோமே
என்கிற ப்ரீதி பிரகர்ஹத்தாலே சொல்ல –

கேட்டு –
ப்ரீதி ப்ரேரிதையாய்க் கொண்டு கேட்டு-
சொல்லே என்று சோர்கின்றாள் -என்று முன்பு திரு சொன்ன இடத்தில் கேட்ப்பாரைப் பெற்றது இல்லை –
இப்போது சாம்யை யாகையாலே கேட்பாரைப் பெற்றது என்கிறாள் –
செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் – என்னுமா போலே –

(செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி; நாடுவன் மாயமே!
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே!)

வளர்த்ததனால் பயன் பெற்றேன் –
இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் –
ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான்
அத் தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்

வருக வென்று
முன்கை முப்பத்தின் காதமாய் இருக்கிறபடி

மடக் கிளியை
லஜ்ஜா விஷ்டமான கிளி -என்னுதல்-
பவ்யமான கிளி என்னுதல்-

வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று –
தன்னோட்டை சம்பந்தத்தை ஔ பாதிகம் ஆக்குவதே –என்றும்
சேஷ பூதரான நாம் ஸ்வரூப ப்ராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
உபகாரம் கொண்டால் போலே சொல்லுவதே -என்றும்
லஜ்ஜாவிஷ்டமாய் இருந்தது –

சேஷ பூதன் ஸ்வரூப பிராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
தர்மதம் பரிரஷித -என்றான் இறே –

(தர்மதம் பரி ரஷித-பிராட்டியைக் கண்டு வந்து தர்ம கார்யம் செய்து ரக்ஷித்தான் –என்பது-ஏஷ சர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்க -என்று-தழுவிக் கொள்ளுவதாக அன்றோ புகுகிறான்
அஹம் ஸஹ ரகு வம்ஸ ஸ லஷ்மணஸ் ச மஹா பல -வைதேஹ்யா -நன்றாக ரக்ஷிக்கப்பட்டோம்
கைம்மாறு கருதாமல் செய்த அறம் -என்று பெரிய உபகாரமாக கொண்டாட -திருவடி வெட்கப்பட்டு இருந்தாரே)

சேஷி பவ்யதையான போது இவள் கொண்டாடப் புக்க வாறே தன்னுடைய சேஷத்வம் தோற்ற
நிப்ர்த ப்ரணத ப்ரஹ்வ-என்கிறபடியே ஒதுங்கின படியை சொல்லுகிறது

(ராம விஜயம் சொல்ல பெருமாள் திருவடியை அனுப்ப –
நிப்ர்த ப்ரணத ப்ரஹ்வ சோ அதிகம்ய -என்கிறபடியே ஒதுங்கின படியை சொல்லுகிறது–
சீதா ராமா தாசன் என்று சொல்லி வணங்கி அடங்கி ஒடுங்கி இருந்தார்
முன்பு வெட்கம்- விநயமாக அடங்கி இருந்தமை காட்டிய இடம் இது)

கை கூப்பி வணங்கினாளே –
அந்த உபகார ச்ம்ர்தியானது அவ்வளவில் பர்யவசியாமையாலே அஞ்சலியைப் பண்ணினாள் –
லஜ்ஜை தன்னையும் கை விட்டது(உதாஸீனமாய் இருந்தது )
அதுக்கு ஹேது என் என்னில் –
வாத்சல்யத்தாலே செய்ததுக்கு வழக்கு பேசக் கடவோமோ என்னும் நினைவாலே

வணங்கினாளே-
அஞ்சலி சாத்மித்தது இறே என்னா -காலிலே விழுந்தாள்-

(முதலில் கை கூப்பி -வணங்கி-அடுத்த -வணங்கி -காலில் விழுந்தாள்)

உடையவர் முதலிகளும் தாமுமாக நீராட எழுந்து அருளுகிற போதை
சமூஹத்தைக் கண்ட ப்ரீதியாலே பெரிய நம்பி தெண்டன் இட
விநயம் பாவிப்போம் ஆகில் தெண்டனை ஸ்வீகரித்தோம் ஆவுதோம் என்று
பேசாதே எழுந்து அருளினார் இறே –

(புத்திரனாகவுமாம், சிஷ்யனாகவுமாம், பகவத் விஷயத்திற்கு உசரத் துணையாகப் பெற்றால் கௌரவிக்க வேணும்
என்னுமிடம் ஈற்றடியால் அறிவிக்கப்பட்டதாயிற்று.
“கணபுரங்கை தொழும் பிள்ளையைப் பிள்ளை யென்றெண்ணப் பெறுவரே“ என்றதும் நோக்குக.

நாம் சொன்னதே இவள் மோஹிக்க ஹேதுவானதே
தெளிந்த காலத்தில் உஜ்ஜீவனமாக கொண்டு இருந்த திரு நாமங்களை சொல்லுவோம்
என்று அடைவே சொல்ல வளர்த்ததனால் பயம் பெற்றேன் என்கிறாள்)

—————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –