ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-10-
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
நம்முடைய பாக்யத்தினாலே இங்கே புகுந்தார் என்று அஸ்கலித ஜ்ஞானரான அயர்வரும் அமரர்கள்
தங்கள் திரு மாளிகைகளில் யதோசிதமாக இவர்களுடைய திருவடிகளை விளக்கினார்கள் –
சிரகால விரஹித புத்ர சந்தர்சனத்தினாலே ஜநநி ப்ரீதையாமாப் போலே-இவர்களைக் கண்டு ப்ரீதைகளாய்
அந்த ப்ரீதி அதிசயத்தினாலே சரத்காலத்தில் பரிபூர்ண சந்த்ர மண்டல சத்ருசமான திரு முக மண்டலங்களை யுடையரான
பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப பிராட்டியாரும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியாரும்
தங்களுடைய நித்ய பரிசாரிகைகளோடே கூட தங்களுக்குப் பரம தனமான
ஸ்ரீ சடகோபனும் நல் சுண்ணமும் நிறை கூட விளக்கமும் மற்றும் மங்களமான சத்கார உபகரணங்களை எல்லாம்
ஏந்திக் கொண்டு வந்து எதிர் கொண்டார்கள் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-10-
சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
தங்கள் பாக்யத்தால் அன்றிக்கே நம்முடைய பாக்யத்தாலே சம்சாரிகள் ஆனவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றோம் என்று -வேதத்தில் உபநிஷத் பாகங்களாலே ப்ரதிபாத்யரான நித்ய ஸூ ரிகள் தங்கள் கோயில்களிலே-தங்கள் தாழ்ச்சி தோன்றும் படி இருந்து அவர்களுடைய ஸ்ரீ பாதங்களை விளக்கினார்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நீதியான திருவடி நிலைகளையும் நற் சுண்ணத்தையும் நிறை குடங்களையும் மங்கள தீபங்களையும் ஏந்தி நெடுங்காலம் பிரஜைகளை பிரிந்து கண்ட தாய்மாரைப் போலே ஹ்ருஷ்டமாய் பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களையும் யுடைய பகவத் பரிசாரி கைகள் வந்து எதிர் கொண்டார்கள் –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-10-
அநந்தரம் -ஸ்ரீ வைகுண்ட நாதன் நியோகத்தாலே ஸூரி களும் திவ்ய அப்சரஸ் ஸூக்களும்
ஆதரித்த படியை அருளிச் செய்கிறார்
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்-நம்முடைய பாக்ய ரூபமான ஈஸ்வர நியோக பிரகாரத்தில் வந்து புகுந்தார்கள் –
என்று ப்ரீதராய் விலக்ஷண ஸ்வ பாவராய் வேதாந்த வேத்யரான ஸூரிகள்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்-தம் தம்முடைய திவ்ய ஸ்த்தானங்களில் சோபசாரமாக அவர் திருவடிகளை விளக்கினார்கள்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்–ஆஸ்ரிதற்கு நிதியான திருவடி நிலைகளையும் திரு மேனியோட்டை ஸ்பர்சத்தாலே
விலக்ஷணமான திருச் சூர்ணத்தையும் பூர்ண கும்பங்களையும் மங்கள தீபங்களையும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–இவர்கள் தர்சனத்தாலே பூர்ண சந்திரனைப் போலே விளங்குகிற முகத்தை யுடையராய்
தங்கள் பாரதந்தர்ய ஸூசகமான மடப்பத்தையுடைய திவ்ய அப்சரஸ்ஸூக்கள் எதிரே வந்து ஏந்தினார்கள் –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-10-
சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்–வைகுந்தம் புகுவது -மண்ணவர் விதியே என்று இவர்கள் சொல்லுகிற இது வார்த்தை என்று என்று வேறே சிலர் -இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்ய பலம் அன்றோ -என்பார்கள் -விஷயங்கள் நடையாடுகிற சம்சாரத்தில் இருந்து வைத்து -அநந்ய பிரயோஜனராய் பகவத் குண அனுபவம் பண்ணப் பெற்ற மஹா புருஷர்களாய் -விண்ணுளாரிலும் சீரியர் -என்கிறவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்ற இது நாம் பண்ணின பாக்யம் அன்றோ என்பார்கள் –-வைகுந்தம் புகுவது -என்றது அங்கு -இங்கு புகுந்தனர் என்கையாலே தங்கள் பாக்யத்தை காட்டுகிறது -/ நல் வேதியர்--உபநிஷத் பாகத்தில் பிரதிபாத்யரானவர்கள் -யத்ரர்க்ஷய–யத்ர பூர்வே -என்று ஓதப்படுபவர்கள் –
பதியினில்-எதிரே புறப்பட்டு ஆதரித்து தங்கள் கோயில்களிலே கொண்டு புக்கு
பாங்கினில் பாதங்கள் கழுவினர்–தங்கள் ஆசனங்களில் இவர்களை வைத்து தங்கள் தாழ்ச்சி தோற்றது தறையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -இவர்கள் ஸ்ரீ பாதத்தை விளக்கினார்கள் –
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-அவ்வளவில் பகவத் பரி சாரிகைகள் வந்து எதிரே நிற்பார்கள் -வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் -திருச் சுண்ண பிரசாதத்தையும் -நிறை குடங்களையும் -மங்கள தீபங்களையும் ஏந்தி
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-10-
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆணையால் சூரிகளும் திவ்ய அப்சரஸ் களும் ஆதரித்த படி
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்-ஈஸ்வரன் நியோகப்படி ஆனைப் படி -இதில் தான் புகுந்தனர் –
விலக்ஷண வேதாந்தம் பிரசித்த ஸூ ரிகள் -பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்-தங்கள் திவ்ய ஸ்தானங்களில்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-தானம் மதியம் -ஆஸ்ரிதர்களுக்கு திருவடி -திருச் சூரணம் பூர்ண கும்பம் மங்கள தீபம்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே-இவர்கள் தரிசனத்தால் ஒளி பெற்ற முகம் -எதிரே வந்து ஏந்தினார்கள் -பாரதந்தர்யம் ஸூ சகம் -மடப்பம் –
நித்ய சூரிகள் இவர்களை-கொண்டாடும் படியை-அருளிச் செய்கிறார் -.
விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று-வேறு சிலர் –
இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-
நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது-
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து-வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்-விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற-
இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
மேலே -வைகுந்தம் புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புண்யத்தைக் காட்டுகிறது –
நல் வேதியர் –
ஸ்ரீ புருஷ ஸூ க்தாதிகளில் பிரதிபாத்யம் -சொல்லப் பட்டவர்கள் -என்றபடி –
யத்ர ரிஷய பிரதம ஜாயே புராணா-
எவ்விடத்தில் காண்கின்றவர்களும் முன் தோன்றியவர்களும்-பழமையானவர்களும் –
புராணர்-புரா நவ -பகவத் அனுபவத்தால் இளகிப் பதித்தவர்கள் -ஸ்துதி பண்ணி அனுபவத்தில் ஏக சிந்தையராய்
யத்ர பூர்வே சாத்யா சந்திதேவ –
எங்கும் உள்ளவர்களும் பற்றத் தக்கவர்க்களுமான தேவர்கள்-
தத் விப்ராச விபத்யவ ஜாகுயாம்ச சமிந்ததே விஷ்ணோ யத் பரமம் பதம்-
எங்கும் பரந்து இருக்கின்ற திரு மாலுக்கு யாதொரு சிறந்த இடம் உண்டோ
அந்த பரம பதத்தை -ஞானம் நிறைந்தவர்களும்-துதிப்பதையே தன்மையாய் உடையவர்களும்
எப்பொழுதும் ஜாக்ரதையோடு கூடினவர்களுமான
நித்ய சூரிகள் அடைகிறார்கள் -என்று-வேதங்களால் சொல்லப் பட்டவர்கள் –
பதியினில் –
ஆதி சேடன் -பெரிய திருவடி முதலானவர்கள்
தங்கள் திரு மாளிகைகளிலே கொடு புக்கு –
பாங்கினில் பாதங்கள் கழுவினர் –
இவன் பிறப்பு இறப்புகளில் உழன்று திரிந்து போந்த ஒருவன்-
நாம் சம்சாரத்தின் வாசனை தீண்டப் பெறாதவர்கள்-என்ற வாசி வையாதே-
இவனை சிங்காசனத்திலே உயர வைத்து-
அவர்களுக்கு பாங்காக தாங்கள் இருந்து-திருவடிகளை விளக்குவார்கள் –
சிஷ்யர்கள் ஆகவுமாம் புத்திரர்கள் ஆகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவம் பண்ணப் படுபவர்கள் -நீராடப் போதுவீர்-
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –
கண்ணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ
பராசர பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் திருத்த தாயார் ஆண்டாள் சுவீகரித்துக் கொண்டாளே
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
அவ்வளவிலே பகவானுக்கு தொண்டு செய்கிறவர்கள் வந்து-எதிர் நிற்ப்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செல்வமான திருவடி நிலைகளையும்
திருச் சுண்ணப் பிரசாதத்தையும்
நிறை குபங்களையும்-மங்கள தீபங்களையும் -ஏந்தி –
மதி முக மடந்தையர் -ஏந்தினர் வந்தே
வேறு தேசத்திற்கு போன பிள்ளைகள் வந்தால்-தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே
உவகையாலே பூர்ண சந்தரனைப் போலே
இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் —
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –