ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-4-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கு இவர்கள் ஒருகால் இங்கே பர்யவசிக்கப் பெறுவது காண் என்னும் ஆசையால்
இமையவர்-எதிர் எதிர்- இருப்பிடம் வகுத்தனர்-அர்ச்சிராத்யாதி வாஹிக கணங்கள் பார்த்து அருளீர் பார்த்து அருளீர்
என்று என்று கைந்நிரை காட்டினர்-
கடல் இரைத்தால் போலே முரவ பணவாதி வாத்யங்கள் சர்வ லோகங்களுக்கும் அபி பூரிதமாம் படி முழக்கப்பட்டன
என்கிறார்
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-4-
மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப் பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
அர்ச்சிராதிகளான அவ்வவ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் என்று கைகளை நீரையே காட்டினார்கள் -ஸ்ரீ யபதியினுடைய அழகிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -இவர்களை எதிர் கொள்ளுகைக்குப் பெரிய பிராட்டியாரோடு ஒப்பித்து அருளுகிறபடி என்றுமாம் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-4-
அநந்தரம் போக்யதா பூர்ணனான ஸ்ரீ யபதியினுடைய சேஷ பூதரைக் கண்டு தேவ லோகத்தில்
உள்ளார் சத்கரித்த படியை அருளிச் செய்கிறார் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–மதுவை விகசிக்கிற திருத் துழாயைத் திரு முடியிலேயுடைய
ஸ்ரீ யபதிக்கு சேஷ பூதரானவர்களுக்கு
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்-அநிமிஷராய்க் கொண்டு தேவர்கள் இவர்கள் போகிற வழிக்கு முன்னே
வாஸஸ் ஸ்தானமான உபகார்யைகளை சமைத்தார்கள்-
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்–துவாதச ஆதித்யர்களும் தம் தாம் அடைவிலே கிரணங்கள் ஆகிற
கைகளை நிரையாகக் கொடுத்தார்கள்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த -அவர்கள் ப்ரவர்த்திப்பித்த முரசங்கள் அதிருகிற
குரலானவை அலைகிற கடலில் முழக்கு ஒத்தன –
———
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-4-
மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப் பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்--பார்த்த பார்த்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -இவர்கள் இங்கே தாங்கிப் போவார்களோ -என்னும் நசையாலே தேவர்கள் தோப்புக்கள் சமைத்தார்கள் -இமையவர் என்று ஸ்வபாவ கதனம் அன்று -தோப்புக்கள் சமைக்கையில் உள்ள தவறையாலே கண் விழித்து இருக்கிற படி -பிரபுத்தராய் இருக்கிறபடி என்கை –
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்--அர்ச்சிராதிகளாய் உள்ள அவ்வோ ஆதி வாஹிக கணங்கள் -பார்த்து அருளீர் பார்த்து அருளீர் -என்று கைகளை நிரையே காட்டினார்கள் –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-அதிரா நின்றுள்ள குரலையுடைய முரசங்கள்-கடல் கிளர்ந்து முழங்கினால் போலே முழங்கா நின்றன -அங்குத் தங்குகையில் யுண்டான ஆதார அதிசயம் தோற்ற வாத்ய கோஷங்களைப் பண்ணினார்கள் –
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–ஸ்ரீ யபதியுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு அடிமை புக்கவர்களுக்கு என்னுதல் -இவர்களை எதிர் கொள்ளுகைக்கு பிராட்டியோடே ஒப்பித்து அருளுகிற படியைச் சொல்லுதல்-
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-4-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
போக்யதா பூர்ணர் ஸ்ரீ யப்பத்தி உடைய -சேஷ பூதரைக் கண்டு தேவ லோகத்தார் ஸத்கரிக்க –
தமர்கள் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் -ஆசை உடையார்க்கு எல்லாம் -ஆசையே தகுதி -இந்த பேற்றைப் பெற –
கருணை உடன் சேர்ந்த காதல் -பிரி கதிர் பட்டு அன்றோ பிரிந்து உள்ளோம் -கிருஷிகன் மகிழ்ந்து அன்றோ திரட்டி எடுத்துக் கொண்டு போவான் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்-அநிமிஷர் -வாசல் ஸ்தானம் -நீர்ப்பந்தல் கூடாரங்கள் -இருப்பிடம் சமைத்து
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்-துவாதச ஆதித்யர்கள் -தேஜஸ் கை காட்டி -அடுத்து அடுத்து நின்று -கிரணங்கள் ஆகிற கை –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-பிரவர்த்திப்பித்த முரசங்கள்-கடல் ஓசைக்கு சமமாக இருக்க
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-மதுவை பிரவஹிக்கும் -திரு அபிஷேகம் -ஸ்ரீ யபதி
மேலே உள்ள உலகங்களில் தேவர்கள்-இவர்கள் போகிற வழிகளிலே-
தங்குகைக்காக தோப்புக்கள் அமைத்தும்-
வாத்தியம் முதலானவற்றால் ஒலியை உண்டாக்கியும்-கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் –
பரந்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ-இங்குத் தங்கிப் போவார்களோ என்னும்-
நசையால் தேவர்கள் தோப்பு சமைத்தார்கள்-
இமையவர் என்றது -இயற்கையைச் சொன்னது அன்று-
தோப்பு சமைக்கையில் உண்டான விரைவாலே கண் விழித்து இருக்கிற படியைச் சொல்கிறது-
இளைய பெருமாள் அடிமை செய்வதற்கு உறுப்பாக உறங்காமல் இருந்தது போன்று –
இவர்கள் அங்கே புக்கு தங்குகிறார்கள் அன்று –
தங்கள் தங்கள் ஸ்வரூப லாபத்திற்கு தொண்டு செய்கிற படி அன்றோ இது-
அரசர்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று புகைக்காக மாநாவி சமைப்பாரைப் போலே-
மஹா நவமி அன்று ராஜா துவாரம் அலங்காரம் பண்ணுவாரைப் போலே –
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் –
சூர்யர்கள் நிலை விளக்கு போலே-இங்கனே எழுந்தருள இங்கனே எழுந்தருள-தேஜோ விசிஷ்டர் -நிலை விளக்கு –
பார்த்தருள- பார்த்தருள என்று – கைகளை நிறையே காட்டினார்கள்-
அன்றிக்கே அர்ச்சிராதிகளான ஆதி வாஹிக கூட்டங்கள் ஆகவுமாம்-
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த –
அங்கே கால் தாழ்வார்கள் என்று-அது கேளாதபடி-அதிரா நின்றுள்ள ஒலியை உடைய முரசங்கள்-
அலையை உடைய கடல் போலே முழங்கின-
அன்றிக்கே
இங்கு தங்குகையில் உண்டான ஆசையின் மிகுதி தோற்ற வாத்தியங்களை ஒலிக்கச் செய்தார்கள் என்றுமாம் –
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே –
கொட்டு ஓசையாலும்-
ஆள்கள் எதிரே சென்று சொல்லுகையாலும்-
சென்ற இவர்களுக்கு ஒப்பித்த படியே கொடுக்கைக்காக-பிராட்டியோடு கூட அழித்து அழித்து ஒப்பிக்கிறபடி-
விரி என்பதால் -அலங்காரம் மாற்றி -என்றவாறு-
மாதவன் தமர்க்கே
பிராட்டி யினுடைய புருஷகாரம் மூலமாக பற்றியவர்கள்-
பிராட்டி முன்னாக அடிமை செய்வதற்கு வாரா நின்றார்கள்-என்று ஒப்பிக்கிறபடி –
திருமகள் கேள்வனுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு-அடிமை புக்கவர்களுக்கு -என்னுதல்-
இங்கு-பூமியிலே – ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றதே காரணமாக பங்கு பெறாதே-
திரியுண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிர் கொண்டு இருப்பிடங்களை கொடுக்கிறபடி-
மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு -அக்ரகாரகதுக்கு – செல்ல-
நீ ஆந்தராளிகன்-சம்சார்யும் இன்றி முக்தனும் இன்று நடு நிலையாளன் – -உனக்கு பங்கு இல்லை -என்ன-
நன்மையில் குறை உண்டாய்ச் சொல்லுகிறீர்களோ அன்றோ -என்ன-
நன்மையில் குறை இல்லை -இது அன்றோ கரணம் என்ன-
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவன் என்று கை விடப் பெற்றோமே அன்றோ –
என்று புடைவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினார்-
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply