Archive for May, 2024

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-8-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

புண்ய பாப ரூப கர்ம தத் பல போக்த்ரு சேதன கர்ம பல போக உபகரண ப்ரப்ருதி
சர்வ ஜன அந்தராத்மா பூதனாய் சர்வ ஜகத் காரணமாய் சர்வைரத்ருஸ்யனாய் இருந்த
உன்னைப் பெற்று இனி விடுவேனோ -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-8-

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

அத்யந்த விஸஜாதீயனாய் இருந்து எனக்கு மிகவும் சத்தா தாரகனான உன்னைப் பெற்று வைத்து – இனித் தப்ப விடுவேனோ -ஆத்மாவைப் பற்றி விடாதே இருக்கிற புண்ய பாப ரூப கர்மங்களையும் -ஆத்மா தன்னையும் -கர்ம பலமானவற்றையும் -இவை எல்லாம் ஆகிற துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான த்ரை லோக்யம் ஆகிற தூற்றை யுண்டாக்கி -அந்த துர்ஜ்ஜேய ஸ்வ பாவமான ஜகத்தினுள்ளே புக்கு -எங்கும் வியாபித்து தெரியாதபடி நின்றாய் –என் முதல் தனி வித்தேயோ-எனக்கு முதலிலே இச்சையும் இன்றிக்கே இருக்க உன் பக்கலிலே ஆபி முக்யத்தைப் பிறப்பித்தவனே –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-8-

அநந்தரம் சர்வ தாரகனாம் படி அந்தராத்மாவாய் எனக்கு தாரகனான உன்னைப் பெற்று வைத்துக் கை விடுவேனோ என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்–இரண்டு வைக்கப்பட்ட புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நிர்வாஹகனாய் —
கர்ம வஸ்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் -அந்தக் கர்மங்களால் யுண்டான ஸூக துக்கங்களை பிரதாவாய்க் கொண்டு
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-இந்த ஜகத் த்ரயம் எல்லாம் ஆகிற பெரிய தூற்றை பிரகாரமாக யுடையையாய் —
கர்ம நிபந்தனமாக பிரவேசித்தார்க்குப் புறப்பட வழி இல்லாத ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ தந்திரனாய் பிரவேசித்து
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-ஒரு பிரகாரத்தாலும் அறிய ஒண்ணாத படி ஸூஷ்ம பூதனாய்க் கொண்டு
மறைந்து நிற்குமவனாய் எனக்கு உன்னைக் கிட்டுக்கைக்கு பிரதம ஸூக்ருதமான அத்விதீய காரணம் ஆனவனே –
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை- எனக்கு நிரூபமாய் அபரிச்சின்னமான பிராண பூதனாய் இருக்கிற
உன்னை கை புகுரப் பெற்று வைத்து உன்னை விடில் முடியும்படியான அவஸ்தை பிறந்த பின்பு விட விரகு உண்டோ –
ஓ என்கிற அசை விடில் செய்வது என் என்கிற விதாதத்தைக் காட்டுகிறது –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-8-

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று  இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை-ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே -இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –
என் தனிப் பேர் உயிரை–உன்னை -என்றதின் வியாக்யானம் -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –
உற்ற இரு வினையாய் -இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி கலந்து -இருவகைப் பட்ட புண்ய பாபங்களுக்கு நியாமகனாய் –
உயிராயப் -அவற்றிலே சிறைப்பட்டுக் கிடக்கிற ஆத்மாவுக்கு நியாமகனாய்
பயன் ஆயவையாய்-அந்த புண்ய பாபங்களுடைய பலன்களுக்கு நிர்வாஹகனாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-முற்றக் கரந்து ஒளித்தாய்--இவை எல்லாம் ஆகிற த்ரை லோக்யம் என்கிற தூற்றை யுண்டாக்கி —பெரும் தூறு -என்கிறது -துர்ஜ்ஜேய ஸ்வ பாவம் யுண்டாகையாலே -இந்த லோகத்தின் உள்ளே புக்கு -எங்கும் வியாபித்து துர்ஜ்ஜேய ஸ்வ பாவனாய் இருந்தாய்
என் முதல் தனி வித்தேயோ-இப்படி இருந்து வைத்து உன்னை எனக்கு பெறுகைக்கு அடியான அத்விதீயமான மூல ஸூ க்ருதத்துக்கு உத்பாதகனாய் -உன் பக்கலிலே ஆபிமுக்யத்தை -ஒளன் முக்கியத்தை -பிறப்பித்தவனே -இப்படிப் பட்டு இருக்கிற உன்னை பிரதம ஸூக்ருதத்துக்கும் உத்பாதகனாய்க் கொண்டு வந்த தரப் பெற்ற நான் உன்னைப் போக்குவேனோ –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

துர் அவகமானான் அறிய அறிய ஸர்வதாத்மா மறைந்து இருந்து தாரகனாக உன்னைப் பெட்ரா பின்பு க்கை விடுவேனோ
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்-புண்ய பாபங்களை நிர்வாகன்-கர்மாவைஷ்யனான ஆத்மாவுக்கு நியாந்தா
-கர்மங்களால் உண்டான சுக துக்கம் பிரதனானாக
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-அடக்கி உள்ள மூல பிரக்ருதியை பிரகாரமாக கொண்டு -கர்மா நிபந்தமாக புகுந்த
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-வித்து தனி வித்து முதல் வித்து -ஸூ சங்கல்பத்தால்
ஸ்வ தந்த்ரனாக சங்கல்ப ஆதீனத்தால் பிரவேசித்து -அறிய ஒண்ணாதபடி அதி சூஷ்மமாக
எனக்கு அடைய பிரதம ஸூ ஹ்ருத் நீயே தானே -அத்விதீய காரணம் -வித்து -காரணம் -தனி அத்விதீயம் –
எனக்கு நிரூபணம் அபரிச்சின்ன பிராண பூதன்-மூன்றையும் சேர்த்து -தனி -பேர் உயிர் -மூன்றையும் உவமானம் இல்லாமல் –
-அபரிச்சின்ன -பிராணன் -உன்னை விடில் முடியும் அவஸ்தை பிறந்த பின்பு விட முடியுமோ –
ஓ பயத்தால் -துக்கம் -விட்டால் என்ன செய்வேன் –

சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –
ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ-
அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-
இனி நான் உன்னை விடுவேனோ –

என் தனிப் பேர் உயிரை –
வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ-
இயம் சீதா -ப்ரதீச்ச -பத்ரம் -மேல் விழுந்து அங்கீ கரிக்க வேணும் -என்றார் ஸ்ரீ ஜனக மகாராஜர் –
உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல்
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே-
எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை –
பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பார லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே –
என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –

உற்ற இரு வினையாய்-
ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே-
உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை-தனித்து இயலும் தன்மையை உடையவனாய்-
நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது –

உயிராயப்-
நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்-
அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் —

பயன் ஆயவையாய் –
அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்-நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய-
வேறு சிலரால் கிடைக்கின்றது என்று-இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது-

முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-
இவை எல்லாம் ஆகிய த்ரை லோக்யம் ஆகிய தூற்றை -அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி
த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே –
பெரும் தூறு சம்சாரம் புக்க இடமும் போந்த இடமும் தெரியாத படி அன்றோ சம்சாரம் -அறிய முடியாதபடி என்றவாறு –
புக்கு -அநாயாசேன தேவரீர் புக்கு –
தூறாய் -உபாதான காரணமாக இருந்து உண்டாக்கி -கடல் ஞாலம் செயதேனும் யானே என்னும் –
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-
நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய்
கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய்
அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து –
அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ –
நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-7-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

பெரிய பிராட்டியார் பக்கலிலும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலும் பண்ணும் வ்யாமோஹத்தை
என் பக்கலிலே பண்ணிக் கொண்டு என்னை புஜித்து அருளின உன்னைப் பெற்று
இனி விடுவேனோ என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-7-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-பெரிய பிராட்டியாருக்கு ஸ்நேஹியாகையாலே அவள் பரிஹாரமான என் பக்கலில் ஸ்நே ஹத்தைப் பண்ணினவனே –நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே / நீலக் கடல் -என்று கடைந்து அருளுகிற எம்பெருமானுடைய திரு நிறம் நிழல் இட்ட படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-7-

அநந்தரம் -ஆஸ்ரித ரக்ஷகனாக உன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ என்கிறார் –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–வடிவு அழகையும் போக்யத்தையும் யுடையளான பிராட்டிக்கு
உகப்பான வத்தாலே என் பக்கலிலும் அதி ப்ராவண்யத்தை யுடையையாய்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்–நீல ரத்ன கிரியானது இரண்டு பிறையை கவ்வி எழுந்து இருந்தால் போலே
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்–விலக்ஷணமான வடிவு அழகை யுடைத்தாய் அத்விதீயமாய்
இருபத்தொரு ஸ்ரீ மஹா வராஹமாய் பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திரு எயிற்றிலே வைத்த அபதானத்தாலே
என்னை சம்சாரத்தில் நின்றும் எடுக்கும் ஆகாரத்தை பிரகாசிப்பிக்கும் ஸ்வாமியாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –உன் திரு வடிவின் நிழலீட்டாலே நீலமான கடலைக் கடைந்து
யரும் தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே –
இப்படி புருஷகார பூர்வகமாய் எனக்கு நல்லையாய் -என்னை ரக்ஷிக்குமவனான உன்னை லபித்து வைத்து
கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ –
நீலக்கடல் -என்று நீல ரத்னத்தை யுடைய கடல் என்றுமாம் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-7-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி  கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இ றே-க்ருபயா  பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இ றே பிராட்டி நீர்மை –
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்--ததஸ்தம் உத்க்ஷிப்ய நீல இவா சலோ மஹான் –ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே –பிறையில் மறுவோபாதி யாய்த்து திரு எயிற்றில் கிடந்த பூமி –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்-மாசுடம்பில் நீர் வாரா நின்ற நிலை இ றே இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயமாய்த்து -பாசி தூர்த்து கிடந்த பார்மகட்க்கு-என்கிறபடியே பிரணயிநி அழுக்கோடு இருக்க தாமான படியே வருவாராகில் பிரணயித்தவத்துக்கு நமஸ்காரமாம் அத்தனை இ றே -அவன் அழிவுக்கு இட்ட வடிவைப் பற்றி இ றே இவர் ஆலத்தி வழிக்கிறது / ஒன்றாய் -வராஹ சஜாதீய மாத்ரம் என்னுதல் –த்ரைலோக்யத்தையும் கண் செறியிட்டால் போலே விம்ம வளர்ந்தபடியாலே அத்விதீயம் என்னுதல் –
நீலக் கடல் கடைந்தாய் -பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தவனே -/ நீலக்கடல் -கடைகிறவனுடைய நிழலீட்டாலே யாதல் -சகல ஓஷிதிகளையும் பொகடுகையால் வந்த நிற வேறுபாடு என்னுதல் -/ நிறத்தால் நீல ரத்னத்தைச் சொல்லிற்றாய் தத் பிரசுரமான ரத்நாகாரம் என்னுதல் –
உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

ஆச்ரித ரக்ஷகனான உன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ -வராஹ நாயனாரை பெற்றதும் –
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-வடிவு அழகு -போக்யத்தை-உடைய பிராட்டிக்கு உகப்பான வைத்தாலே ஏன் பாக்கள் அதி பிறாவண்யம் -அந்தப்புர பரிகாரம் என்பதால்

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-கடலில் -நீல ரத்ன கிரி -சந்திரர்கள் ஒட்டி -கோரைப் பற்கள் சந்திரர்கள்
-அழுக்கு போலே பூமா தேவி ஒட்டிக் கொண்டு
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
வி லக்ஷணமான வடிவை -ஸ்ரீ பூ வராகன் ஸ்ரீ மூக்ஷணம் -அத்விதீயமான -மஹா வராஹா பெரும் கேழலார்
-புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -விஷயீ கரிக்க தேடி ஆழ்வாரை பிடித்து -எங்கும் பக்க நோக்கு அறியான் பைம் தாமரைக்கு கண்ணன்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ–இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நியமிக்கிறார்
-ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே திரு விருத்தத்திலும் -நிகமித்தார்
பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திருமுடியில் வைத்து -இத்தால் சம்சாரத்தில் இருந்து என்னை எடுத்துக் கொண்ட
சம்சார ஆர்ணவம் -ஸூ சிப்பிக்கவே இந்த திருவவதாரம் –
உன் வடிவில் நிழலீட்டாலே -நீலக் கடல் -பாற் கடல் -ஸ்ரீ தேவிக்காக -நீல ரத்னங்கள் உள்ள கடல் -நீல மூலிகைகள் இருந்து நீலம் என்றுமாம்
மூன்றாவது இத்திரு -அருமை தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே -புருஷகார பூர்வகமாக எனக்கு நல்லையாய்
-உன்ன பெற்று லபித்து க்கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ

நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்-பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு கலந்தால் போலேயும்-
கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்-பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து
என்னோடு கலந்தருளி-
என் பக்கல் மிக்க காதலைச் செய்த-உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ-என்கிறார்-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –
பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட-
என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே-
ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை-
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே-
தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –
திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் –
திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு நீல மலை-இரண்டு பிறையைக் கவ்வி-நிமிர்ந்தால் போலே-
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று-
அன்றிக்கே-
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே-
காதலி அழுக்கோடு இருக்க-தாமான படியே வருவார் ஆகில்-காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்-
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது-
மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி –
பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி –

ஒன்றாய் –
வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்-
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே-விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்-
நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு-திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே-
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

நீலக் கடல் கடைந்தாய் –
பிராட்டியைப் பெறுகைக்காக-கடலைக் கடைந்தவனே-கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் –
அன்றிக்கே –
எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்-
அன்றிக்கே-
நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்-
இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –
ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ-
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-6-

May 9, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

ஸுந்தர்யாதி சர்வ குணங்களினாலும் உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு போக்யமானால் போலே
எனக்கு போக்யமாய் இருந்து வைத்த அத்தனையே அன்றியே
என்னுடைய ப்ரக்ருதியையும் என்னுடைய ஆத்மாவையும் நிரவாதிகமான அபி நிவேசத்தோடே புஜித்து அருளினை நீ
பிரானே என்னைப் பொகடாதே கொள்ளாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-6-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய பிரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும் ஓக்க ஹிருதயத்துக்கு அமையாமை நிரந்தரமாக புஜித்தாய்-இனி இத்தை விடாதே விஷயீ கரியாய்-எம்பெருமான் கருத்தால் இன்னுயிர் -என்றதாகவுமாம் -தன்னிலத்திலே நின்ற காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை யுடையையாய் புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் -சிவந்த திருப் பவளத்தையும் யுடையையான உனக்கு சத்ருசமான அழகை யுடைய பெரிய பிராட்டியாருக்கு ஸ்நே ஹியாய் வைத்து என் பக்கலிலே அபி நிவிஷ்டன் ஆனவனே –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-6-

அநந்தரம் -பிராட்டி பக்கல் பிரணயியானால் போலே என் பக்கலிலும் நிரதிசய ப்ரணயத்தை யுடைய நீ
உன் போக்யதையை பிரகாசிப்பித்து புஜிப்பித்தாய் -இனி முழுக்க நிர்வஹித்து விட வேணும் என்கிறார்

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்–தன் நிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் சிவந்த திருப் பவளத்தையும் யுடைய
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–உனக்கு அனுரூபமான திரு வடிவை யுடையளாய்
பூவில் பிறப்பால் நிரதிசய போக்ய பூதையாய் ஸ்த்ரீத்வ அனுரூபமான ஆத்மகுணத்தை யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிக்கு அன்பை யுடையையாய் –
என் அன்பு தானே ஒரு வடிவாய் இருக்கிறவனே
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை-எனக்கு நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய
ப்ரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-ஹ்ருதயத்துக்கு திருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-
இனித் தொடங்கி நீ குறையும் புஜிப்பித்தே விட வேணும்
ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இ றே ஸ்வாபாவிகம் –
அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்
ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈசுவரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் சுருதி சொல்லி முடித்தது
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-6-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூ ரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –
எனது ஆவியை-என்னது என்னும் அதுவே ஹேதுவாக காமுகர் அபிமத விஷயத்தில் அழுக்கை விரும்புமா போலே என்னுடம்பை விரும்பினாய் –
இன்னுயிரை-அது தன்னை நன்று என்று விரும்புகையாலே அதிலும் தண்ணிதான ஆத்மாவை விரும்பினாய் –இன்னுயிர் என்று செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்னுமா போலே -என்னுதல் -அவன் தலையால் சுமக்கிற படியால் என்னுதல் –
மனக்கு ஆராமை -மனஸ் ஸூ க்கு ஆராமை –மனக்கு -மனஸ் ஸூ க்கு —
மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்
இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-முன்பு நீ மேல் விழுந்தது உனக்கு ஒரு குறை உண்டாயோ -ஸ்ரீ யானவள் தான் மேல் விழும் வடிவை யுடையையாய் வைத்து அன்றோ என் பக்கலிலே அபி நிவேசித்தது —புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இ றே இவை –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா –இப்படிப் பட்ட உனக்கு சத்ருசமாக அழகை யுடையளாய் புஷபத்தில் பரிமளத்தை வகுத்தால் போலே இருக்கிற ஸுகுமார்யத்தை யுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே -பிராட்டி அழகு நாவால் துகைக்க ஒண்ணாமையாலே –உனக்கு ஏற்கும் கோலம் -என்கிறார் –
என் அன்பேயோ-அவளுக்கு அன்பை யுடையவன் -என்கிறார் -இங்கு இரண்டாக பிரிக்க ஒண்ணாத படி இருந்தான் என்கிறார் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-முன்பு இப்படி தலையால் சுமந்து வைத்து உபேக்ஷித்தால் பொறுக்கப் போமோ —

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

பிராட்டி பக்கல் பிரணயி போலே நிரதிசய பிரணயித்தவம் போக்யத்தை காட்டி அருளினாய் -மேலும் -முழுக்க நிர்வகிக்க வேணும்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-காயாம்பூ தன்னிலம் -புண்டரீகம் போலே திருக்கண்கள்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் -தாமரை மலரால் -பத்மாலயா பத்மாசனம் -நிரதிசய போக்யதை பூதை
மணம் பரிமளம் உருவெடுத்தால் போலே -ஆத்மகுணம் கொண்ட
அன்பேயோ-அன்பே யாகவே தர்மமாகவே -அன்பே வடிவமாகக் கொண்ட -எனக்கு
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
-நிரதிசய போக்யத்தை ஹேயமான எனது பிரக்ருதியை -விலக்ஷண ஆத்மாவையும் -ஆவி சரீரம்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
திருப்தி பெறாத படி விரும்பி அனுபவித்து -இனி குறையும் புஜிப்பித்தே விட வேண்டும் -அவன் புஜித்து-அவன் ஆனந்தம் கண்டு
நாம் மகிழும் படி -உனது அவனுக்கு நிருபாதிக போக்த்ருத்வம் சேதனனுக்கு போக்யமும் -அனுபவ ஜெனித ப்ரீதி கண்டு
ஜீவன் ஆனந்தம் -அஹம் அன்னம் ஸ்வரூபம் -ஞானத்துக்கு வடிகால் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணி அவன் அனுபவிக்க –
அவன் ஆனந்தம் கொண்டு நாம் ஆனந்தம் -அப்ரதானம் என்றபடி –

பெரிய பிராட்டியார் பக்கல் போலே-என் பக்கல் மிக்க காதலை உடையவனாய்
என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து-அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் ஈண்டென-அங்கீ கரித்து அருளாய் –என்கிறார்-

எனக்கு ஆரா அமுதமாய் –
தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே-
எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்-நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை-
பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் –

எனது ஆவியை –
என்னுடையது என்னுமதுவே காரணமாக-
காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் –

இன்னுயிரை –
பகவான் உடைய அபிப்ராயத்தாலே-
தவதவ நாறுகிற படி –
தவ -பாரதந்த்ர்யம்
மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே
செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே –
சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்-

மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் –
மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –

இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது
நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –
உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –
புனக்காயா நிறத்த-
தன்னிலத்தில் அலர்ந்த-காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது –

புண்டரீகக் கண் –
வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி-ஆயிற்று கண்கள் இருப்பன –

செங்கனி வாய் –
சிவந்து கனிந்து ஆயிற்று-முறுவல் இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை-
அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று-
திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது-

உனக்கு ஏற்கும் கோலம் –
இவனைப் போன்று வார்த்தையால்-
கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்-
இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்-

மலர்ப் பாவைக்கு அன்பா –
மலரில் மணத்தை வடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –இருக்கிற பிராட்டிக்கு அன்பனே
உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அதிதேசம் = ஏறிடுதல்
ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை-
நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –
காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி —

கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ-
அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது-
தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை –
ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று-
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-5-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-5-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

உம்முடைய பரத்தை நான் நிர்வஹிக்கத் தவிர்த்தால் அந்த பரத்தை நீரே நிர்வஹித்துக் கொள்ளலாகாதோ என்னில்-
நீ என்னைக் கை விட்டு உபேக்ஷித்தால் பின்னை யாரைக் கொண்டு எத்தைச் செய்வது –
நான் என்று ஓன்று உண்டோ -என்னுடையது என்று ஓன்று உண்டோ -அடைய முடிந்தது இ றே-ஆனபின்பு
அக்னி சந்தப்த்தமான இரும்பு தாபம் தீரும்படி நீரைப் பருகினால் போலே
உன்னைப் பிரிந்த என்னுடைய ஸந்தாபம் எல்லாம் தீரும்படி யுன்னைப் பருக எனக்கு ஆராவமுதானாய் –
இனிக் குறையும் நீயே செய்து அருளாய் என்கிறார் –

——————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-5-

நான் என்னுடைய யத்தனத்தாலே உன்னைப் பெறுகிறேனாக நீ என்னைக் கை விட்டு இருக்கில் -நான் என்றும் என்னது என்றும் சில உளவோ -முடிந்தேன் அத்தனை இ றே என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

ரக்ஷகனான நீ -அநந்ய கதியான என்னை உன் பக்கல் நின்றும் போர தூக்கிப் பொகட்டால் பின்னை நான் ஆரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -என்ன சாதனத்தாலே என்னாதே ஆரைக் கொண்டு என்கிறது என் என்னில் -என்றும் புருஷார்த்தம் பெறுவது பரம சேதனனாய் இருப்பான் ஒருவனாலே என்று இருக்கையாலே –அக்னி சந்தப்த்தமான இரும்பு நீரை  நிஸ் சேஷமாக புஜிக்குமா போலே / என் ஆர் உயிரை-சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய  நிரதிசய போக்யதையைக் காட்டி  என்னை அகப்படுத்தினாய் –காய்ந்த இரும்பு -அக் காய்ச்சல் தீர  நீரைப் பருகுமா போலே என்னுடைய சந்தானம் எல்லாம் தீரும் படி எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே -என்றுமாம் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-5-

அநந்தரம் எனக்கு நிரதிசய போக்ய பூதனாய் இருந்து வைத்து நீ என்னை உபேக்ஷிக்கப் பார்த்தால்
எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ -என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –தன் காய்ச்சல் தீரும்படி இரும்பானது
உண்ட நீர் போலே என் ஆத்மாவின் விடாய் எல்லாம் தீரப் பரிபூர்ணமாக பருகைக்கு
எனக்கு திருஷ்ணை தொடாத அம்ருதமானாயே -இப்படி இருக்க –
இரும்புண்ட நீர் போலே என் ஆத்மாவை முற்றாய் பருகினான் என்கிறபடியே நீ பூர்ணமாகப் பானம் பண்ணுகைக்கு உறுப்பாக
உன் போக்யதையை எனக்குப் பிரகாசிப்பித்தாய் என்னவுமாம் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் -உன் வாசி அறிந்து புஜிக்கும் படி பண்ணி பிராப்தி பர்யந்தமாக பிரகாசிப்பித்த நீ
அத்தைக் குலைத்துப் போரவிட்டு அசேதனவத் அநாதரித்து
அநந்ய கதியான என்னை உனக்குப் புறம்பான விஷயாந்தரத்திலே போக்க நினைத்தால் –
பின்னை யான்ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்- – சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு
அசக்தனான நான் புருஷார்த்த சாதகராய் இருப்பார் மாற்று யாரைக் கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஐயோ சாதிப்பேன்
என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை
நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை
இது வேறு உண்டோ என்று கருத்து –
ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-5-

சர்வ ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் என் கார்யம் நான் செய்யவோ -பிறர் செய்யவோ -நான் முடிந்தேன் -என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

போர விட்டிட்டு-உன் பக்கலில் நின்று அகற்றி உபேக்ஷித்து -என்னை-அநந்ய கதியான என்னை —நீ -ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவும் வர என்னைப் புகுர நிறுத்தின நீ என்னுதல் -சர்வ ரக்ஷகனான நீ என்னுதல் –
புறம் போக்கல் உற்றால்-புறம்பு போக்குகையில் அத்யவசித்தால் -என் கார்யம் நானே செய்வானாகப் பார்த்து என்னை உபேக்ஷித்தால் –
பின்னை யான்-ஆரைக் கொண்டு எத்தை -சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -ஆரைக் கொண்டு என்கிறது புருஷார்த்தம் பெறுவது ஒரு பரம சேதனனாலே -அசேதன க்ரியாகலாபங்களால் அல்ல என்னும் இடம் தோற்றுகைக்காக -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
அந்தோ-மா மேகம் சரணம் வ்ரஜ என்ற உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே
எனது என்பன் என் யான் எனபது என்-பேறு உம்மதானால் சாதனம் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன -எனக்கு பரிகரமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் அர்த்தம் உண்டோ -ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதோர் அர்த்தம் உண்டோ -சரீர ரக்ஷணம் சரீரியை ஒழியச் செய்வார் உண்டோ –
தீர இரும்பு உண்ட நீரது போலே–அக்னி சந்தப்த்தமான இரும்பு உண்ட நீரானது காற்ற ஒண்ணாதாப் போலே
என் ஆர் உயிரை-ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே -என் ஆத்மாவைச் சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய நிரதிசய போக்யதையைக் காட்டி என்னை அகப்படுத்தினாய் -முன்பு நீ போக்யதையைக் காட்டிற்றும் உன்னை நான் பெறுகைக்கு அன்றி -என்னை அகப்படுத்தி உன் கார்யம் செய்தாயாய் யத்தனை இ றே என்னுதல் –
காய்ந்த இரும்பு அக்காய்ச்சல் தீரும்படி நீரைப் பருகுமா போலே என்னுடைய விடாய் தீரும்படி உன்னைப் புஜிக்க எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே என்னுதல்

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-5-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

நிரவாதிக பாக்ய பூதனாக வைத்து உபேக்ஷித்தால் எனக்கு உஜ்ஜீவனம் உண்டோ
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்-வாசி அறிந்து பிராப்தி பர்யந்தம் பிரகாசிப்பித்த நீ
அத்தை குலைத்து அநாதரித்து அனன்யா கைதியான என்னை விஷயாந்தரங்களில் போக விட்டால்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்-அசக்தன் நான் புருஷார்த்த சாதகனாய் இருப்பார்
யாரைக் கொண்டு என்ன சாதிப்பெண் வேறே உபாயமும் பிறப்பியமும் இல்லையே எனது என்பது என் யான் என்பது என்
காரணங்கள் இல்லை உபாயம் இல்லை -யான் தனியாக ஸ்வ தந்த்ரன் இல்லை -இனி வேறு உண்டோ
யாரை கொண்டு எத்தை -விருத்த யுக்தி -சேதனனைக் கொண்டு அசேதனத்தை -சொல்லி எத்தை கொண்டு யாரை சொல்ல வில்லை
புருஷார்த்தம் ஆழ்வாருக்கு அவனே -ஐஸ்வர்யார்த்திகளை கண்டிக்கிறார் -யாரை -உபாயாந்தரங்கள் -செத்தான் தானே கொடுப்பான்
ஜகத் யுக்தி மாற்றி அருளிச் செய்கிறார் –
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை-காய்ச்சல் தீரும் படி -எனது ஆத்மாவின்
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே-விடாய் தீரும் படி திருப்தி அடைய முடியாத அமுது ஆனாய் –
பூர்ணமாக பானம் பண்ண பரம போக்யன் என்று பிரகாசிப்பித்தாய்

எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற நீ கை விட்டால்-என் கார்யம் -நான் செய்யவோ-
பிறர் செய்யவோ-முடிந்தேனே அன்றோ –என்கிறார்-

போர விட்டிட்டு –
உன் பக்கலில் நின்றும் பிரித்து-உபேஷித்து-

என்னை –
வேறு கதி இல்லாத என்னை –
அன்றிக்கே –
அறிவின்மை -ஆற்றல் இன்மைகளுக்கு எல்லாம்-எல்லையான -என்னை -என்னுதல்-

நீ –
படைப்பே தொடங்கி-இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது-
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது-
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி
அக்கரை ஏறமாட்டாதான் ஒருவனை அமுக்கினால் போலே இருக்கிறது காணும்-

என்னை நீ –
கண்ணும் காலும் இன்றிக்கே இருப்பான் ஒருவன்-கண்ணும் காலும் உடையனாய் இருப்பான் ஒருவன்-
யாருக்கு யார் வழி காட்டுவார் -என்கிறது –
நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ந கச்யசித் -ஜிதந்தே-
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை-
நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் -என்றபடி –

புறம் போக்கல் உற்றால் –
புறம்பே போக்குகையிலே நினைத்தால் -என்றது-
என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து-என்னைக் கை விட்டால் -என்றபடி –

பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை –
அளவில்லா ஆற்றல் உடைய நீ கை விட்ட பின்பு-ஆற்றல் இல்லாதவனான நான்-
என்ன உபாயத்தைக் கொண்டு-என்ன புருஷார்த்தை முடிப்பது –
பேற்றினைப் பெறுவது இறைவனாலே-
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று –
என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு எண்ணாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் –
ப்ரஹ்மம் தானே பல பிரதன் -அசேதன கிரியா கலபரங்கள் இல்லையே –

அந்தோ –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்ற
உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே –
எனது என்பன் என் யான் எனபது என் –
முடிந்தேன் -அன்றோ என்கிறார் –
நானும் இல்லை கரணங்களும் இல்லை என்றவாறு –
பேறு உம்மதானால் -அதற்கு செய்ய வேண்டிய உபாயமும் –
உம்முடைய தலையில் ஆக வேண்டாவோ -என்ன
எனக்கு உபாயமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் பொருள் உண்டோ-
பிரிந்து நிற்பதற்கு தகுதியாய் இருப்பது ஒரு நான் உண்டோ-ப்ருதக் ஸ்திதியே இல்லையே –
சரீரியை ஒழிய சரீரத்தை பாது காப்பதற்கு வேறு சிலர் உளரோ –என்கிறார்-

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –
நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு-காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக-
எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்
உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது
உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு-
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்-
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி-நீரைப் பருகுமாறு போலே-
என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி-
உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத-இனியன் ஆனவனே -என்றுமாம் –
இரும்புண்ட நீர் மீள்கினும் யென்னுழையில்-கரும்புண்ட சொல் மீள்கிலன் காணுதியால்-கம்பர் ஜடாயு உயிர் நீத்த படலம் -104

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-4-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

பிரகிருதி புருஷ மஹான் அகங்கார பிருதிவ்யாதி பூத சதுர்முக ருத்ர தேவாதி ஸ்தாவராந்த சேதன அசேதனாத்மக
ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகளுக்கும் நீயே நிர்வாஹகானாய் இருந்து வைத்து
என்னுடைய பரமத்தனையும் நானே நிர்வஹிக்கக் கடவேனாகப் பார்த்து அருளினாயாகில்
என்னைக் கை விட்டாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-4-

சர்வ நிர்வாஹகனான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே  யல்லையோ என்கிறார் –

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

மஹதாதி விகாரங்களுக்கும் காரணம் ஆகையால் -ஸ்வ காரியங்களுக்கு எல்லாம் மேலாய் -ஸ்வ கார்யங்களை பிறப்பிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தையும் யுடைத்தாய் -சேதனர்க்கு போக மோஷாதி புருஷார்த்தங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன்   ஆனவனே -அதிலே பத்தமாய் நிற்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகனாய் -ஆகாசாதி பூத பஞ்சகத்துக்கும் பாஞ்ச பவ்திகமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ -தேவர்களையும் மற்று உள்ளாரையும் படைத்த முனியாக பிரசித்தனானவன்  நீ -என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கல் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாயே —

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-4-

அநந்தரம் -சர்வ பிரகார விசிஷ்டனான நீ பிரகார பூதனான என்னுடைய கார்யம் நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
வைத்து என்னை இந்த விபூதியில் போர விட்டாய் இத்தனை அன்றோ என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார் –

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ -அதனுள்- மிசை நீயேயோ–பூதமான மஹாதாதி களுக்கு எல்லாம் பிரதான காரணமாகையாலே
மேலாய் -உனக்கு லீலா உபகரணம் ஆகையாலே விலக்ஷணமாய் –
குண த்ரய ஸாம்ய அவஸ்தமாகையாலே-குளிர்ந்து இருப்பதாய் போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்டகாரணமான ஆகாசம் விலக்ஷணமான தேஜஸ்ஸூ முதலான பூதங்களை
ஸ்ருஷ்டித்து தத் பிரகாரியாய் –
பூத ஆரப்தமான அண்டத்துக்கு உள்ளே ப்ரஹ்ம ருத்ராதிகளை உத்பாதித்து தத் தத் பிரகார விசிஷ்டனானவன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–பிராணி ஜாதங்களுக்கு மேலான தேவர்களையும் மனுஷ்யாதி சகல சேதனரையும்
தத் தத் கர்ம விபாக மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ இப்படியாய் இருக்க
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–பிரகார பூதனான என்னுடைய தேகத்தை நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
பிராப்தி பர்யந்தமாக அபரோஷிப்பித்து உன்னை ஒழியச் செல்லாத என்னை பின்னையும் இங்கே போர விட்டிட்டு வைத்தாய்
ஓ என்கிற அசை-நீ என்னும் இடம் தோறும் கூட்டி -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேது போந்து இருக்க
அநாதரித்தாய் என்று கூப்பிடுகிற ஆர்த்தியை ஸூசிப்பிக்கிறது –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-4-

சர்வ நிர்வாஹகானான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே  யல்லையோ என்கிறார் –

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ-மஹதாதி காரியங்களுக்கு எல்லாம் காரணம் ஆகையால் மேலாயத் தன்னுடைய ஏக தேசத்தாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான சக்தியை யுடைத்தாய் விசித்ர பரிணாமினியாய்ச்-சேதனர்க்கு போக மோக்ஷத்தை இசைத்துக் கொள்ளலாம் நிலமாய் இருந்துள்ள மூலப் பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனே – / உம்பர் –மேல் / அம் தண் -அழகியதுமாய் அனுகூலமுமாய் இருக்கை / பாழேயோ-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை
அதனுள் மிசை நீயேயோ–அதிலே பத்தமாய் இருக்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத-தமேவார்த்த ஸ்வரூபேண பிராந்தி தர்சநத ஸ்த்திதம் –ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரி காரணம் ஆகையால் -காரண அவஸ்தையைச் சொல்லிற்று –இத்தால் விசேஷண ப்ராதான்யம் சொல்லும் நியாய வைசேஷிக பக்ஷமும்–விசேஷத்துக்கு அபாரமர்த்த்யம் சொல்லும் மாயாவதி பக்ஷமும் ஆழ்வாருக்கு பக்ஷம் அல்ல என்றதாய்த்து –
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அம்பரம் -ஆகாசம் / நற் சோதி-தேஜோ பதார்த்தம் / இவை இரண்டும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம் –/ அதனுள் பிரமன் அரன் நீ-அந்த பஞ்ச பூதங்களால் ஸ்ருஷ்டமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ –
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–மேலான தேவர்களையும் மனுஷ்யாதி ஸ்தாவாராந்தமான சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்த முனியாக பிரசித்தனானவன் நீ –சகல பதார்த்தங்களையும் கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டிக்கைக்காக பூர்வ கர்மங்களை அநுஸந்திக்குமவன் இ றே முனியாகிறான் -ததச தேவ சன்மனோஸ் குருத ஸ் யாமிதி –இத்தால் ஸ்தூல சித் அசித் சரீரத்வத்தாலே கார்யம் சொல்லிற்று யாய்த்து –கஸ்யப ப்ரஜாபதியைச் சொல்லிற்று ஆகவுமாம் –எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–என் கார்யம் நீயே செய்யக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு -அத்தையும் உபேக்ஷித்து அசேதனத்தைப் பொகடுமா போல பொகட்டாய் என்னுதல் –சகலத்தையும் நிர்வஹிக்கிற நீ என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கலில் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாய் என்னுதல் -/ என்னை -உன்னை ஒழியச் செல்லாத என்னை —

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

சர்வ பிரகார விசிஷ்டன் -பிரகார பூதனான என் கார்யம் செய்வதாக உபக்ரமித்து போர விட்டது எதனால்
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ-பூதமான மஹதாதிகளுக்கு எல்லாம் மேலான
-உனக்கு லீலை உபகரணம் அழகிய குளிர்ந்த -சத்வம் ரஜஸ் தாமஸ் சாம்யம் -போக மோக்ஷங்கள்விலைக்கும் ஸ்தானம்
அதனுள் அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்ட காரணம் -தேஜஸ் -பஞ்ச பூதங்கள் -ப்ரஹ்மாதிகளை உத்பாத்தித்து பிரகாரமாகக் கொண்டு
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ-தத் தத் கர்மா விபாகம் பண்ணி ஸ்ருஷ்டித்த பின்பு
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே-என்னுடைய தேகம் -பிராப்தி பர்யந்தமாக -கண் முன்னால் காட்டிய பின்பு விட்டாயே
ஓ ஒவ் ஒரு இடத்திலும் -சேர்த்து -உம்பர் அம் தண் பாழேயோ-நீ ஓ / அதனுள் மிசை நீயேயோ-நீ ஓ
அம்பரம் நற் சோதி -ஓ /அதனுள் பிரமன் அரன் நீ-ஓ /உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ ஓ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயேஓ /
பொறுப்பை நிர்வகிக்கத்த பின்பு -ஓர் ஒன்றே ரசிக்க ஹேதுவான பின்பு அநாதரிப்பது -ஆர்த்தி மிக கூப்பிடுகிறார்

எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ-என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய் பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் அல்லையோ-என்கிறார்

உம்பர் அம் தண் பாழேயோ –
மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –
தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்-
வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்-நிலமாய் இருந்துள்ள மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே
உம்பர் -மேல்
அம் தண் -அழகிய குளிர்ந்த
பாழ் -மூல பிரகிருதி -படைத்ததற்கு தகுதியாய் இருக்கை-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை-
காரண நிலையில் கார்யத்துக்கு தகுதியாய் நின்று-தன் கார்யத்தாலே-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைக்கவற்று -என்னும் இடத்தை சொல்லுகிறது –
வெண்மை என்று கொண்டு பிரித்துக் காட்டும் சொல்லாலே-தர்மத்தை பிரிய சொல்லுமாறு போலே-
பிரியச் சொல்லப் போகாது இறைவனுக்கு சரீரம் ஆனவற்றை-ஆதலின் பாழேயோ -என்கிறார்-
உம்பர் அம் தண் பாழ் -என்கிற இதனால்-ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ்வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை-அன்றிக்கே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் –
ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்-அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி-
பாழேயோ -என்கிற இதனால்
சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்–
ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –

அந்த மூலப் பிரக்ருதிலே மறைந்து நிற்கிற சிறப்புடைத்தான-ஆத்மாவுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே-காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று-
இதனால் விசேஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்-
விசேஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்-ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்-
ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே-
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –

பிரகாரி பிரகார சம்பந்தம் -காரிய காரண சம்பந்தம் -நீயே பாழ்–சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
நீ ஆத்மா தத் தவம் அ ஸி -அதனுள் மீசை நீயே யோ
ஜகத் வியதிரிக்த விஷயங்களில் -நிஷ்கர்ஷம் தர்மம் தர்மம் சொல்லும் தர்மியை சொல்லாதே –
பூவின் மணம் -மணத்தை தானே குறிக்கும் பூவைக் குறிக்காதே
பகவத் விஷயத்தில் நிஷ்கர்ஷமான சொல்லும் அவனையே குறிக்கும் -நீ பிரகிருதி பாழ் சொல்லலாம் -என்றவாறு –
பிரகிருதி சப்தம் அவன் அளவில் பர்யவசிக்கும் -சர்வ சப்த வாச்யத்வம் –
பிரகார பிரகாரி சரீர ஆத்மா சம்பந்தம் இவனைப் போலே இல்லையே -நமக்கும் சரீர சம்பந்தம் இந்த பிறவியில்
-பிரகிருதி சம்பந்தம் மோக்ஷம் அடைந்ததும் போகுமே
என் உடம்பு நாம் சொல்ல வேண்டும் -அவன் நானே உடம்பு -சொல்லலாம்
ஆடையின் வெண்மை -படஸ்ய ஸுக்லயம் -வெண் தன்மை -நிஷ்கர்ஷகம்
வெண் ஆடை -அநிஷ்கர்ஷகம்
வை வைஷிகா நிஷ்கர்ஷகம்-சுக்ல பட -வெண் ஆடை சொல்லாமல் ஆடையின் வெளுப்பு
நியதி -நிஷ்கர்ஷகம்-கந்தம் பிருத்வி மண்ணில் மணம்
தர்மத்தை மட்டும் சொல்லும் தர்மியை சொல்லாதே
ஈஸ்வரன் இடத்தில் -அப்ஸு ரஸோஹம் தண்ணீரில் ரசம் நான் -கௌந்தேய -சொல்கிறான் –
அனைத்தும் நீயேயாக இருக்க நீ போர விட்டால் எங்கே போவேன் என்கிறார் –
சேதனம் உடன் கூடி இருந்தாலும் கூடாமல் இருந்தாலும் அவனுக்கு சரீரம் -அவனே நிர்வாககன்
அசித் மிஸ்ரான் -விசுத்த ஜீவன் -பக்த முக்த —அசித்தை பிரிந்த ஜீவனும் உண்டே –
அழுக்கு குறைகள் தட்டும் என்பதால் வேறே என்பர் மீமாம்ஸய்கர் -அப்படி அல்ல -ஆத்மாவுக்கு தட்டாது போலே அவனுக்கு –
அத்வைதி மாயாவாதிகள் -சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் ஒன்றாக -ஸ்வரூபத்தால் ஓன்று -அதுவே இது இதுவே அது என்பர் –
தத் ப்ரஹ்மத்தை சொல்லி த்வம் ஸ்வகேதுவைச் சொல்லுமே -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்கியம் சொல்வார் அத்வைதிகள்
-பிரக்ருதிக்கும் ப்ரஹ்மத்துக்கும் சொல்லார் ஆழ்வார் அத்தையும் சொல்லி சரீர ஆத்ம பாவத்தால் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைதிகள் –
விசேஷண பிரதான்யம் சொல்லும் வைசேஷிகர் –
நீ என்பதற்கு தானே ஆழ்வார் பிரதான்யம் என்கிறார் –
பொய் இல்லை -விசேஷணம் உண்டு என்கிறார் -ஆகையால் இரண்டு மதங்களையும் கண்டனம் பண்ணி அருளுகிறார் –

அம்பரம் நற் சோதி –
ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்-
இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்-
யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா-பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில்
தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனால் போலே –

அதனுள் பிரமன் அரன் நீ –
பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான-அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்-நீ இட்ட வழக்கு -என்கிறது –

உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ –
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்-பிரசித்தமாய் இருப்பவனும் நீ-
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை-கார்ய காரண தன்மை அடியாய் வந்தது-
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை-அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன-
ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே-
எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு-
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்-
நாம ரூப வேறுபாடு அற்ற சூஷ்ம சேதனங்கள் அசேதனங்கள் உடன் கூடிய அந்த பரம் பொருளே-
நாம ரூப வேறுபாட்டுக்கு உரிய ஸ்தூல சேதன அசேதன பொருள்களாக கடவேன் -என்று எண்ணியது-
இதனால் ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே-காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று –
சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் தமிழ் செய்த மாறன் –

எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –
என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக் கொண்டு-அதனை விட்டு-அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்-
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ-என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து-
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்-
என்னை-
உன்னால் அல்லது செல்லாத என்னை-
போர விட்டாய்-
அவன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி-குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்-
தெளிந்த ஞானத்தினை உண்டாக்கி-பேற்றின் அளவும் செல்லாமல் இருக்கிற இது-
நளன் தமயந்தி வழி காட்டி விட்டால் போலே இருக்கிறது காணும்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-3-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-3-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஐஸ்வர்யாதிகளும் த்வத் பிரசாத அதீனம் ஆதலால்
என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமும் நீ யல்லது மற்று ஒன்றும் காண்கிறிலேன்-
நீயே உன் திருவடிகளில் என்னை வாங்கி அருளி பிரானே உன் திரு அழகைக் காட்டி அருளாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-3-

பெரு மிடுக்கரான ப்ரஹ்ம ஈஸா நாதிகள் யுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகளுக்கு எல்லாம் நிர்வாஹகானான நீ -உன்னால் அல்லது உஜ்ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை ஐயோ விஷயீ கரித்து அருளாய் -என்கிறார் –

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

அதி லோகமான அழகைக் காட்டி என்னை மிகவும் ஈடுபடுத்தினவனை -என் ஆத்மாவுக்கு -உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய  வேறு ஓன்று அறிகிறிலேன்  -அபிமான ரஹிதமாய்க் கொண்டு தொழும் ப்ரஹ்மாதிகளுக்கு எல்லாம் காரணமான திரு நாபீ கமலத்துக்கு கிழங்கு ஆனவனே – உம்பரந்ததுவே-அயர்வறும் அமரர்களுக்கு பரம ப்ராப்யன் ஆனவனே –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-3-

அநந்தரம்-ப்ரஹ்மாதி சகல சேதனர்க்கும் உத்பாதகமான திரு நாபீ கமலத்துக்கு மூல கந்தமான
நீ வந்து விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

என் பொல்லாக் கருமாணிக்கமே-எனக்கு நிரதிசய போக்யமாய் துளையாத மாணிக்கம் போலே விலக்ஷணமான வடிவை யுடையையாய்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–தம்தாமுடைய பத
சித்த்யர்த்தமாகக் கிட்டி ஆஸ்ரயிக்கக் கடவரான பிரம்மா ருத்ர இந்த்ரர்கள் முதலானார்க்கும் முதலான
திரு நாபி கமலத்துக்கு கந்த பூதனாய் –
இப்படி ஸ்ருஜ்யர் அன்றியே மேலாய் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கும்
அப்படியே சத்தா ஸ்த்தித் யாதிகளுக்கு நிர்வாஹகானானவனே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் ஆத்மாவுக்கு அபாஸ்ரயமாய்
இருப்பதொரு உபக்நம் உன்னை ஒழிய நான் அறிகின்றிலேன் –
ஆனபின்பு நீ தானே வந்து அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ உன் கார்யம் நான் சொல்ல வேண்டுவதே –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-3-

பெரு மிடுக்கரான ப்ரஹ்ம ஈஸா நாதிகள் யுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகளுக்கு எல்லாம் நிர்வாஹகானான நீ -உன்னால் அல்லது உஜ்ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை ஐயோ விஷயீ கரித்து அருளாய் -என்கிறார் –

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ –கீழே கூவிக் கொள்ளாய் என்றவர் -இங்கு வந்து கூவிக் கொள்ளாய் -என்கிறார் -தாஹித்தவன் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே -ஆற்றாமை மிக்குச் செல்லா நின்றாலும் பாசுரம் இது அல்லது இன்றிக்கே இருக்கிற படி -கூவிக் கொள்ளும் அளவு போராது –வந்து கூவிக் கொள்ள வேணும் -ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறை என்று -உனக்கு அவத்யமும் காண் என்கிறார் -சரைஸ்த்து சங்குலாம் க்ருத்வா -/ அந்தோ -உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –
என் பொல்லாக் கருமாணிக்கமே-அதி லோகமான வடிவு அழகைக் காட்டி -என்னை ஈடுபடுத்தினவனே -துளையாத மாணிக்கம் -அநுபபுக்தமான மாணிக்கம் என்னுதல் -நாட்டு ஒப்பான அழகு இன்றியே விசஜாதீயமாய் இருக்கையாலே -பொல்லா -என்கிறது என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ பரிஹாரமாக -என்னுதல் -வி லக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்-நாவிக் கமல முதல் கிழங்கே –ஈஸ்வரோஹம் என்று இருப்பார்க்கும் நிர்வாஹகன் அல்லையோ நீ என்கிறார் -ஆபத்து வந்தவாறே நிரபிமாநிகளாய்க் கொண்டு தொழும் ப்ரஹ்மாதிகளுக்கு எல்லாம் காரணமான திரு நாபீ கமலத்துக்குக் கிழங்கு ஆனவனே —முதலான நாபீக் கிழங்கே —
உம்பரந்ததுவே–அவர்களுக்கும் மேலான நித்ய ஸூ ரிகளுக்கும் அப்படிப் பட்ட ப்ராப்ய வஸ்து ஆனவனே –அதுவே -என்று பிராமண பிரசித்தியைச் சொல்லுகிறது -மேலான மஹதாதி களுக்கும் காரண புதன் என்று சொல்லிற்று ஆகவுமாம் –நித்ய ஸூ ரிகளோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற சர்வ நிர்வாஹகனாய் இருக்கிற நீ என்னை வந்து கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் -கீழும் மேலும் சொல்லுகிற சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் காரிய காரண பாவம் என்னுமத்தை அருளிச் செய்தார் யாய்த்து – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-3-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

ப்ரஹ்மாதி காரணன் -நாபி கமலம் -மூலமாக -நீ வந்து விஷயீ
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே-நிரதிசய போக்யன் -விலக்ஷண மேனி
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்-தஞ்சமாக பிடிக்க உபகனம்
உன் கார்யம் நான் சொல்ல வேண்டி இருக்கிறதே அந்தோ
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்-ப்ரஹ்மாதிகள் எல்லாம் தம் தாம் பிரயோஜனங்கள் பெற
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே-வித்து ஜகத் காரணன் -கந்த பூதன்-
ஸ்ருஷ்யர் அல்லாத நித்ய ஸூ ரிகளுக்கும் அந்த அதுவே -லோகத்தில் பிரசித்தம் -அத்தனை பெருமை படைத்த
-உம்பருக்கும் பிராப்யம்-சத்தா ஸ்திதி யாதிகளுக்கு நிர்வாகன்

பெரு மிடுக்கரான பிரமன் முதலாயினோர்கள்-உடைய ஸ்வரூபம் ஸ்திதி பேறு-முதலாயின வற்றுக்கு எல்லாம்-நிர்வாஹகனான நீ
உன்னால் அல்லது ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை-ஐயோ -வந்து அங்கீ கருத்து அருள வேண்டும்-என்கிறார் –

கூவிக் கொள்ளாய் –
மேலே கூவிக் கொள்ளாய் -என்றவர்
இங்கேயும் -கூவிக் கொள்ளாய் -என்கிறார் காணும் –விடாய் கொண்டவன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமாறு போலே
ஆற்றாமை மிக்கு செல்லா நின்றாலும் பாசுரம் இது அன்று இன்றிக்கே இருக்கிறபடி –

கூவிக் கொள்ளும் அளவும் போராது-வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –
ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறைமை அன்று-
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு-
நாம் செல்லுதல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ
–வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பிரபலார்த்தன-மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே-
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்-அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்-

அந்தோ –
உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –

என் பொல்லாக் கருமாணிக்கமே-
தொளையாத மாணிக்கம் –அனுபவிக்கப் படாத ரத்னம் -என்றபடி –
அன்றிக்கே
உலகத்துக்கு ஒப்பான அழகு அன்றிக்கே வேறு பட்டு இருக்கையாலே-பொல்லா -என்கிறார் -என்னுதல்-வைஜாயத்யம்–
அன்றிக்கே
கண் எச்சில் வாராமைக்காக -பொல்லா -என்கிறார் -என்னுதல்
நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே- நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் –என்பார் -பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார் –
க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என் –என்பார் -என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார்

நன்று -உலகங்கட்கு எல்லாம் வேறு பட்டவனாய் இருப்பினும்-ஸ்வரூபத்தை பார்த்து ஆறி இருக்க வேண்டாமோ -என்னில்
அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே -என்கிறார் -மேல்-
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –
பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-
கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –
என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-

ஆயின் பேற்றுக்கு உடலாக நீரும் சில செய்தாலோ என்ன-
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்நாவிக் கமல முதல் கிழங்கே-
செருக்கு அற்றவர்கள் ஆகித் தொழும் பிரமன் சிவன் முதலாயினோர்கட்கு எல்லாம்-காரணமான திரு நாபிக் கமலத்துக்கும் கிழங்கு ஆனவனே –
கார்யம் இல்லாத போது ஒருவருக்கு ஒருவர் மாறு பட்டவர்களாய்-
இருப்பார்கள் ஆதலாலும் -தங்களுக்கு ஒரு கார்யம் வந்த வாறே எல்லாரும் கூடி தொழுவார்கள் ஆதலானும்-
மேவித் தொழும் -என்கிறார்
அன்றிக்கே
யான் எனது -என்ற செருக்கு அற்றவர்களாய் தொழுகிறார்கள் என்பார் -மேவித் தொழும் -என்கிறார் என்னுதல் –
இதனால் மற்றை பிரமன் முதலாயினோர் தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்கின்றார்கள் இலர் என்பதனையும்-
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்-உதவுமவன் அன்றோ நீ –என்பதனையும் தெரிவித்த படி –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்ல அறியாமையாலே-பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –

நித்ய சூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்-
புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்-
-உம்பர் அந்த அதுவே –
அவர்களுக்கும் மேலான நித்ய சூரிகட்கும்-
அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே-ஸூ பாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் –
சதா பஸ்யந்தி சூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்-
அது -என்று-
நித்ய சூரிகளோடு-
பிரமன் முதலாயினர்களோடு-
வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற-
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் முன்னும் பின்னும் சொல்லுகிற-சாமாநாதி கரண்யத்துக்கு காரணம்-
கார்ய காரண பாவம் என்னும் அத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -சுருதி -இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-2-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-2-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

பண்டு உன்னைக் காண வேணும் என்று ஆசைப்பட்டுக் காணப் பெறாமையாலே நான் வியசனப்படும் அளவில்
கண்ணாரக் கண்டால் போலே விசதமாம்படி என் நெஞ்சில் யுன்னைக் காட்டி காண வேணும் என்னும் அபேக்ஷையைப் பிறப்பித்து
என்னுடைய வியசனத்தை ஸமாயநம் பண்ணினால் போலே செய்து அருள ஒண்ணாது –
இனி யுன்னைக் காட்டாதே வஞ்சித்து ஒளிக்கில் உனக்கு நிரவதிக சம்பத்தாய் நிரவதிக போக்ய பூதையாய்
உன்னாலும் பஹுமந்தவ்யையாய் உன் திருமேனிக்கு வாசம் செய்யா நின்ற அழகிய திருக் குழலை யுடையளாய்
இருந்த பெரிய பிராட்டி திருவாணை நின் திருவாணை கண்டாய் –
ஸமஸ்த ஹேயாஸ் பதமாய் இருந்த என்னை யருவாதே என் பக்கலிலே அதி ஸ்நேஹத்தைப் பண்ணி
உன்னோடே ஓன்று என்று சொல்லலாம் படி என்னோடே கலந்து அருளினாய் –
ஆதலால் அது பெறா ஆணை அன்று –
6இனிச் செய்கிறோம் என்னப் பற்றாது ஈண்டென வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-2-

தம்முடைய அபேக்ஷிதத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி எம்பெருமானுக்கு பெரிய பிராட்டியார் திரு வாணை யிடுகிறார்-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

விஷ்ணோ ஸ்ரீ என்னும் படியே உனக்கு சம்பத்தாய் உன் திரு மார்வுக்கு அலங்காரமான மாலையாய் -உன்னாலும் சிலாகிக்கப் படுவாளாய் உன் திருமேனிக்கு பரிமளத்தைப் பண்ணா நின்றுள்ள அழகிய திருக் குழலை யுடைய பெரிய பிராட்டியார் உடைய ஆணை கிடாய் -உனக்கு இட்டவடி பேராதே என் அபேக்ஷிதம் செய்து முடிக்க வேண்டும் படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் -போய்க் காண் என்று கருத்து -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்னும் படியால் பெரிய பிராட்டியார் ஆணை உன் ஆணை கிடாய் என்றுமாம் –
இனி இத் திருவாய் மொழி குறையும் -நீர் பெறா ஆணை விட்டீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அல்லாமை ஏத்துகிறார் -பெரிய பிராட்டியார் பக்கலிலும் பண்ணாத ஸ்நேஹத்தை என் பக்கலிலே பண்ணி -என் பக்கல் உள்ள அயோக்யதை பாராதே உன்னோடு ஆத்ம பேதம் இல்லாத படி என்னைப் பரிஹரித்தாய் -ஆனபின்பு ஐயோ ஈண்டு என்னை வந்து விஷயீ கரியாய் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-2-

அநந்தரம் -தம்முடைய கார்யம் செயகைக்காக மறுக்க ஒண்ணாதபடி வல்லபையான பிராட்டியுடைய திருவாணை இடுகிறார் –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் செய்யேல் என்னை -முன்பு ஆர்த்தனாய்க் கூப்பிட்ட தசைகள் தோறும் குண ஆவிஷ்கார மாத்திரத்தாலே ஆஸ்வசிப்பித்து
அகல நின்றால் போலே க்ஷண காலமும் உன்னைப் பிரியில் முடியும் தசையான
என்னை இனி வஞ்சியாது ஒழிய வேணும்
உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்–நான் நினைத்தபடி செய்கிறோம் என்று
ஸ்வா தந்தர்யம் கொண்டாடப் பார்த்தாய் ஆகில்
உனக்கு நிருபாதிக சம்பத் ஆகையால் சர்வாதிகமான ஸ்வரூபத்துக்கு நிரூபக பூதையாய்-தானும் -அகலகில்லேன் -என்று
விரும்பும்படியான திரு மார்புக்கு பரபாகமாம் படியாய் –
ஹிரண்மயமான மாலை போலே திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிருபாதிக பூதையாய்
உன்னோபாதி ஸமஸ்த கல்யாண குண பூர்ணை யாகையாலே
கண்ணாடியில் நிழல் எழுமா போலே இக் குணங்களும் நிறம் பெறும்படி பண்ணுமவளாய் –
சர்வ கந்த -என்னும்படி உனக்கும் அதி வாசகரமாய் விலக்ஷணமான திருக் குழலை யுடையளாய்க் கொண்டு –
போக்ய பூதை யாகையாலே விபூதி யபிமானியான ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டியினுடைய கௌரவ்யமான ஆணையானது –
ஸமஸ்த ஜகத்தையும் உன் ஆணையால் நிர்வஹிக்கிற உனக்கு ஆணையாக –
இப்படி ஆணை இட்டு நிர்ப்பந்திக்கிறது த்வரையாலே என்று நினைத்து
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே–நிர்ஹேதுகமாக ஸ்நேஹித்து -ஹேய ப்ரத்ய நீகனான உன்னோடே
ஹேய ஸம்ஸ்ருஷ்டனான என்னை
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -என்னும்படி ஆத்ம சேஷம் பிரவாதபடியாக –
அப்ருதக் ஸித்தியாலே ஏக பிரதிபத்தி பிறக்கும்படிக்கு ஈடாக
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் நிகர்ஷத்தைப் பார்த்துக் கூசாதே
அடியே பிடித்து அங்கீ கரித்து அருளினாய் –
இப்படி உன் ப்ரவ்ருத்தி அறிந்து இருக்கிற என்னை என் முன்னே வந்து
ஆழ்வீர் போதீரோ என்று திரு மிடற்று ஓசையைக் காட்டி அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ நீ தானே த்வரிக்கிற இக்காரியத்துக்கு நான் ஆணை இட வேண்டி இருப்பதே

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-2-

தம்முடைய அபேக்ஷிதத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி எம்பெருமானுக்கு பெரிய பிராட்டியார் திரு வாணை யிடுகிறார்-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் செய்யேல் என்னை–பகவத் குணங்களே போது போக்காம் படி பண்ணின வித்தை -க்ரித்திரிமம் என்று நெஞ்சோடு சொல்லக் கூடுமோ என்ன -அங்கன் அல்ல -புத்தி பூர்வகமாகச் சொல்லுகிறேன் -க்ஷண காலமும் தன்னால் அல்லது செல்லாமையை விளைவிக்கைக்காக வாய்த்து -குண அனுபவத்தோடு சம்சாரத்திலே இவரை வைத்தது -அச்செல்லாமை யுண்டானால் இது அனுவர்த்திக்கும் இ றே -இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் உம்மை மாயம் செய்கிறிலோம் -என்று மா ஸூ ச -என்னாமையாலே-நம் கார்யம் செய்யப் பார்த்திலன் ஆகாதே என்று பார்த்து -செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பிராட்டி ஆணை இடுகிறார் –
உன் திரு –விஷ்ணோஸ் ஸ்ரீ என்கிறபடியே உனக்கு சம்பத்தாய் உள்ளவள் -எனக்கு நீ சம்பத்தாய் இருக்கிறாப் போலே உனக்கு அவள் சம்பத்தாய் இருக்கிற படி -ரத்னத்துக்கு ஒளி சேஷமாய் இருக்கச் செய்தே அத்தாலே இ றே பெரு விலையனாகிறது-இவளாலே அவனுக்கு பெருமை சொல்லா நிர்க்கச் செய்தேயும் சேஷத்வம் குறையாது இ றே இருப்பது –
மார்வத்து மாலை -தாம் விரும்புகிற மார்வுக்கு மாலை யானவள் -உன் திருமார்வுக்கு அலங்காரம் ஆனவள் என்கை –
நங்கை-அவாப்த ஸமஸ்த காமனான நீ -குறைவாளரைப் போலே சிலாகிக்கப் படுபவள் -ரூப குணத்தாலும் சீலாதிகளாலும் பூர்ணையாய் இருக்குமவள் –
வாசம் செய் பூங்குழலாள் –சர்வ கந்த என்கிற விஷயத்தையும் பரிமளிதம் ஆக்கா நின்றுள்ள குழலை யுடையவன் -/ பூங்குழலாள் -பூவை யுடைத்தான குழல் -அழகிய குழல் என்றுமாம் –
திரு ஆணை நின் ஆணை கண்டாய்–திருவினுடைய ஆணை கிடாய் -என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர இட ஒண்ணாத படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் போய்க் காண் என்று கருத்து -புறம்பு உள்ளார்க்கு எல்லாம் இடும் ஆணை உன் ஆணை –உனக்கு இடும் ஆணை அவள் ஆணை —
அங்கன் இன்றியே –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே--நீர் பெறா ஆணை விட்டீர் என்ற அவன் அருளிச் செய்ய அல்லாமை ஏத்துகிறார்-மேல் இத்திருவாய் மொழி குறையும் -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி பரிஹரிக்கிறார் –
நேசம் செய்து-பிராட்டி பக்கல் பண்ணாத ஸ்நே ஹத்தை என் பக்கலிலே பண்ணி -அகலகில்லேன் இறையும் என்று அவள் செல்லாமை கண்டு இ றே அவள் பக்கல் ப்ரேமத்தைப் பண்ணிற்று -உன் செல்லாமை அன்றோ என் பக்கல் ப்ரேமம் பண்ணிற்று –உன்னோடு என்னை -என்னை நித்ய சம்சாரி என்றாதல் -உன்னை நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் என்றாதல் பார்த்தோ மேல் விழுந்தது -இவன் அணு பரிமாணன்-நியாம்யன்-நாம் விபு நியாமகன் -என்று பார்த்தாயா –
உயிர் வேறின்றி ஒன்றாகவே-ஆத்ம பேதம் இல்லாத படி யன்றோ என்னைப் பரிக்ரஹித்தது -உன்னது என்னதாவியும் -என்னது உன்னதாவியும் -என்னும் படி என்னைப் பிரித்து காண ஒண்ணாத படி யன்றோ நீ தலையால் சுமந்து –
கூசம் செய்யாது கொண்டாய்-என் பக்கல் உள்ள அயோக்யதையை பாராதே பரிக்ரஹித்தாய் -முதலிலே என் பூர்வ வ்ருத்தம் பாராதே மயர்வற மதி நலம் அருளினாய் -பின்பு வளவேழ் உலகிலே நான் அயோக்கியன் என்று அகலப் புக -என் வழியே விடாதே உன் செல்லாமையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டாய் -இப்படி செய்திலை யாகில் நான் இன்று கிலேசப்படாதே போகலாய்த்தே-
என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய் -சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது -குண ஆவிஷ் காரம் மாத்ரம் போராது -உன்னை நான் கிட்டி அனுபவிக்கும் படி பண்ண வேணும் -/ அந்தோ -தன்னை ஒழியச் செல்லாமையை தானே விளைத்து -நான் கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-2-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் தொடர -தம்முடைய கார்யம் செய்ய மறுக்க ஒண்ணாத -பரனுக்கு அங்குசம் -நின் ஆணை திரு ஆணை
ஆண் யானை பெண் யானை பிடி களிறு -பிரணய ரோஷம் திருமால் இரும் சோலை -பிடி பிடிவாதமாக இருக்க -அழகர் பேரில் ஆணை
-இசையாமல் -திரு ஆணை தாயார் பேரில் ஆணை இட்டதும் கோபம் தணிந்ததாம் -வல்லபை மேல் ஆணை –
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை-முன்பு குண ஆவிஸ்காரம் செய்து அகன்றால் போலே
-க்ஷணம் காலம் பிரிந்தால் முடியும் தசை நினைத்தபடி செய்வோம் என்று ஸ்வ தந்திரம் கொண்டு திரு உள்ளம் ஆனால்
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்-உனக்கு திரு -உன்னுடைய திரு -நிருபாதிக சம்பத் ஆகையால்
-சம்பந்தம் நித்யம் அன்றோ -சர்வாதிகமான ஸ்வரூபம் -நிரூபக பூதை -இன்றியமையாத அடையாளம் -ஸ்ரீ யபதித்தவம்-
உன்னுடைய திரு -மார்வம் -பிராட்டி எழுந்து அருளி -மார்வத்து மாலை நங்கை-பரிபாகம் ஒத்து கரு நீலம் செக்கச் சிவந்த செய்யாள்
-கோபம் சாந்தி -சூர்யன் சந்திரன் -ஹிரண்யமயமான மாலை போலே -கண்டிகையில் பத்மாவதி தாயார்-திவ்ய மங்கள -விக்கிரகத்துக்கு
நிருபாதிக பூதை-நாச்சியார் திருமொழி திரு மஞ்சனம் பொழுது சேவை -எம்பெருமானார் ஏற்பாடு -ஸமஸ்த கல்யாண பூர்ணை நங்கை –
தர்பண இவ பிரசரம் -நம்பி -பிரதிபலிக்கும் அழகு -குணங்கள் நிறம் பெறும்படி பண்ணுமவள் –
சர்வ கந்த உனக்கும் அதி வாசகமாய் -இயற்க்கை மணமா-கந்தம் கமழும் குழலி -நறு மணம் ஊட்டும்
விலக்ஷணமான திரு குழல் -அபிமானி -உபய விபூதிக்கும் –
திருவின் ஆணையே உன் ஆணையே -அவள் விருப்பமே உன் விருப்பம் -ஸமஸ்த ஜகத்தையும் நிர்வகிக்கும் –
ஆணை இட்டு நிர்பந்திப்பது த்வரையாலே என்று நினைத்து
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே-நிர்ஹேதுகமாக -தோஷம் தீண்டாத உன்னுடன் -தோஷமே –
நிரூபகமான என்னை -உன்னது என்னதாவி -ஒன்றாகவே -என்னது உன்னதாவி ஆத்ம பேதம் பிறவாதபடி-
ஸ்வரூபம் ஐக்கியம் இல்லை ஸாம்ப்பயாத்தி-அப்ருதக் ஸ்திதி
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-தாழ்ந்தவன் என்று கூசாமல் கொண்டாய்
-அடியே பிடித்து அங்கீ கரித்து அருளினாய்
உனது பிரவ்ருத்தி அறிந்த என்னை -ஆழ்வீர் போதீரே என்று திரு மிடற்று ஓசையைக் கேட்க வேணும்
அந்தோ நீயே த்வரிக்க வேண்டிய காரியத்துக்கு நான் கூவ வேண்டி இருக்கிறதே –
எங்கோ திரிந்த என்னை வளைத்த பின்பு –

தாம் விரும்பியது-செய்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி-அவனுக்கு திரு ஆணை-இடுகிறார்-

மாயம் செய்யேல் –
மேல் மாயம் செய்யேல் -என்னச் செய்தே-மீண்டும் சொல்லுகிறது என்ன ஆற்றாமை தான் –
இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் -உம்மை மாயம் செய்யோம் -துக்கப் பட வேண்டா -என்னாமையாலே-
மாயம் செய்யேல் -என்று மீண்டும் கூறுகிறார் –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ –

என்னை –
என் ஒருவனையும் -அடைக்கலம் புகுந்த என்னை –இதனால் உன்னுடைய லீலா விபூதி முடிந்து விடாதே காண் –
அன்றிக்கே –
தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா-மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ-அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் -என்கிற-உன்னுடைய வார்த்தையை நம்பி-
அலர் மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் புகுந்தேன் -என்றுபுகல் புக்க என்னை வஞ்சியாதே கொள் -என்னுதல் –
தனியனாக என்னை -சரணாகதனான என்னை என்றபடி-

இப்படி நிர்பந்திக்கச் செய்தேயும் -துக்கப் படாதே -என்னாமையாலே -அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி-
பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் –
உன் திரு –
நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17
விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே-
உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி-உன்னுடைய செல்வம் -என்னுதல்-
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்-
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ-
அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே-
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்-ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை-
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக-நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்
வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-
பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன் என்கிறபடியே –
ஸ்ரத்தாயா -லஷ்மயா -தேவத்வம் ஈஸ்வரத்வம்-அடைகிறான் -ஆதார பிரதான்யம் -சர்வ ஆதாரம் ஈஸ்வரன் -பரிமளம் புஷ்ப்பம் இடமும்
– ஒளி ரத்னம் -ஆதேயம் பிரதான்யம் -இங்கு மட்டும் சமப்பிரதான்யம் -என்றவாறு –
ச குடும்ப சமேதராய் -இரண்டு சகாரம் -தன்னாகத்து திருமங்கை தங்கிய சீர் மார்பன் -இரண்டும் சொல்லி
ஆதார நிரூபக பிரதான்யம் இரண்டும் சொல்லி
ஆகத்து திருமங்கை -அவளுக்கு பிரதான்யம் -தங்கிய சீர் மார்பன் -அவனுக்கு பிரதான்யம் –

மார்வத்து மாலை –
கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே-திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –
மார்புக்கு அலங்காரம் அவள்-அவளுக்கு அலங்காரம் மார்பு –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5-
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி-
அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் -என்றபடி –

நங்கை-
வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் -என்கிறவனுக்கும் இவள் நினைவால்-பொரி புறம் தடவ வேண்டும்படி இருக்கை –
பிரமன் சிவன் மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு இத்தனையுமே அன்றோ-
திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –
ஜ்ஞானமே வடிவாக இருத்தலில் ஒற்றுமை-
நரநாரீ மயோ ஹரி -பெருமானும் பிராட்டியும் சேர்ந்த உருவமே ஹரி என்னும் பொழுது-
உன்னுடைய திரு -எனபது ஆதார பிரதானமாக இருத்தலால் –
வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்-
சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்-
சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது-
இத் தலை மயிராலே ரசோக்தியாக அருளிச் செய்கிறார்-
ஸ்ரத்தாயா அதேவ அஸ்னுதே தேவன் ஆனான் என்பர் ரஸோக்தியால் –
பூங்குழல்-
பூவை உடைத்தான குழல் -என்னுதல்
அழகிய குழல் -என்னுதல்

திரு ஆணை நின் ஆணை கண்டாய் –
திருவினுடைய ஆணை காண் –
என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –
போக வல்லை யாகில் போய்க் காண் -எனபது கருத்து –
இவளே திரு -தானே -திவ்ய பிரபந்த கோஷ்ட்டி தாண்டி போக வில்லையே இன்றும் –
வளைத்து வைத்தேன் -இனிப் போகல ஒட்டேன் உன் தன் இந்த்ர ஞாலங்களால்-
ஒளித்திடில் இன் திரு ஆணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-3-2-

எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை-
உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –
அன்றிக்கே –
மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27-
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே-
மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை -என்ற பெருமாள் போலே-இங்கேயும்-
பெரிய பிராட்டியார் ஆணை-நின் ஆணை -காண் -என்கிறார் -என்னலுமாம் –

நீர் இட்ட ஆணை உம்முடைய ஸ்வரூபத்துக்கு மாறு பட்டது காணும் –
அடியார் ஆனால் நாம் செய்து இருக்கிறபடி கண்டு இருக்க வேண்டும் காணும்-என்ன-
மாறுபட்டது அன்று -என்கிறார் பின் இரண்டு அடிகளாலும் தாவது -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி நீக்குகிறார் -என்றபடி-
உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன-
அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று-
தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்-மேலில் பாட்டுக்களாலும்-
பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்-
கண்கள் சிவந்து -2 1/2 பாட்டுக்கள் -பரமாத்மா ஸ்வரூபம் -மேலே 7 1/2 பாட்டுக்கள் ஜீவாத்மா ஸ்வரூபம் பிரித்தால் போலே
இங்கும் மேலே 8 1/2 பாசுரங்கள் -என்றவாறு –
நேசம் செய்து –
பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ-என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ-ஈஸ்வரஸ்ய அஸ்ய ஸுஹார்த்தம் முதல் படி அன்றோ –
அகலகில்லேன் இறையும் -என்று அவள் செல்லாமை கண்டே அன்றோ அவள் பக்கல் அன்பு செலுத்தினாய் –
இன்னும் ஒரு மாசம் தான் இருப்பேன் -மன்னன் மேல் ஆணை -திருவடி வார்த்தை சொல்லக் கேட்டு பெருமாள் கார்யம் செய்தாரே-

உன்னோடு என்னை –
உன்னை அறிந்தாயோ-என்னை அறிந்தாயோ –
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கவி நீ -3-6-7-அதற்கு எதிர் தலை அடியேன் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
அன்றிக்கே
இவன் அணு அளவினன்-ஏவப்படுகின்றவன் –நாம் எங்கும் பரந்து இருப்பவன் -ஏவுகின்ற்றவன் -என்று பார்த்தாயோ -என்னுதல் –

உயிர் வேறின்றி ஒன்றாகவே –
உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது-உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-
என்னும்படி
என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது-
தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்காயும்
உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்காயும் படி அன்றோ -நீ செய்த செயல் –
தலை தடுமாறி பரிமாற்றினாய் -தட்டு மாறின சீலம் திருக் காட்கரை அப்பன் –
சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –
சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு -இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –

கூசம் செய்யாது கொண்டாய் –
சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை-என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் –
முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்-
பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல-என்னை என் வழியில் விடாதே-
உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்-இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –

என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து –
ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய்-
1-சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது-
2-குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது-
3-உட் கண்ணால் காணலும் போராது –
4-உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
வர வேண்டும் கூவ வேண்டும் -நடை அழகைக் காண வேண்டும் -மிடற்று ஓசையை கேட்க வேண்டும் -கைங்கர்யம் கொள்ள வேண்டும் –
அந்தோ –
தன்னை ஒழியச் செல்லாமையை-தானே விளைத்து-கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-1-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-1-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலனாய் –
நிரவதிக ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்யா யவ்வனத்தி அபரிமித உதார குண சாகரனாய் இருந்த
உன்னுடைய ஸுந்தர்யாதி குணங்களைக் காட்டி என்னைத் தோற்பித்து அடிமை யாக்கி
எனக்கு ஒருவனுக்கும் உன்னுடைய உன்னுடைய குணங்களையே தாரகமாக்கி
என் நெஞ்சம் நிறையப்புகுந்து இருந்த உன்னை இனி நான் போகல் ஓட்டேன்
இனிப் பண்டு போலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகளை என் நெஞ்சிலே காட்டி வஞ்சித்து
என்னை ஒன்றும் மறப்பிக்க ஒண்ணாது –
இனி மெய்யே வந்து கலந்து அருள வேணும் -என்று கொண்டு
தம்முடைய அபேக்ஷிதம் செய்து அல்லது எம்பெருமானுக்குத் திரு நாட்டிலும் கூட இருக்க ஒண்ணாத தொருபடி
பெரிய ஆர்த்தியோடே பெரும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-10-1-

நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தரியாதிகளைக் காட்டி எனக்குத் தன்னை ஒழியச் செல்லாத படி பண்ணி என்னை துஸ் ஸஹமான சம்சாரத்திலே வைத்து நீ போய்ப் பண்டு போலே ஒரு குண ஆவிஷ்காரத்தை பண்ணி விட ஒண்ணாது என்கிறார் –

முனியே  நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முனியே –பஹுஸ்யாம் என்று தொடங்கி சொல்லப்படுகிற மஹத் அஹங்காராதி பஞ்ச பூத பர்யந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியை பண்ணுவதாய் யுள்ள திவ்ய சங்கல்பத்தை யுடையனாய் பகவத் சப்த வாச்யனாய் பர ப்ரஹ்ம பரமாத்ம சப் தங்களினாலே வேதாந்தங்களிலே சொல்லப் பட்ட ஸ்வரூபேண அவஸ்த்திதனாய் இருந்துள்ள பரம புருஷனே என்றவாறு –
நான்முகனே -சதுர்முக ஸ்வரூபனாய் -அவனுக்கு அந்தராத்மாவாய்க் கொண்டு திசைமுகன் கருவுள் வீற்று இருந்து சேதனரான புருஷர்கள் அசேதனமான ஸ்வ சரீரத்தை கொண்டு தம் நினைவுக்கு தக்கபடி கமன ஆகமனாதி சேஷ்டைகளைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர் முகனைக் கொண்டு -ஸ்வ சங்கல்ப அனுகுணமான -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித பூத ஸ்ருஷ்ட்டியையும் பண்ணி அருளுதலால் சேதனரானவர்கள் தேவர்கள் என்றும் மனுஷ்யர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் க்ஷத்ரியர் என்றும் கோ வென்றும் ஸ் வ சரீரங்களைக்காட்டுகிற சப் தங்களால் வேறாய் இருந்த தாங்களும் சொல்லப் பட்டால் போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் காட்டக் கடவ சதுர்முக சப்தத்தாலே-அவனில் வேறாய் அவனுக்கு அந்தராத்மாவாய் இருந்த எம்பெருமானும் சொல்லப்படுகையாலே –நான் முகனே -என்னும் சொல்லாலே எம்பெருமானை சம்போதிக்கிறது –
முக்கண் அப்பா–இப்படி ஜகத் சம்ஹாரம் பண்ணுகிற  எம்பெருமானுக்கு சரீர பூதனான த்ரி நேத்ரனுடைய பேரான சப்தத்தினாலே அவனுக்கு அந்தராத்மாவான எம்பெருமானை சம்போதிக்கிறது –
என் பொல்லாக்-கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –-ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய் ஆதி தேவர்களாய் யுள்ள ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே -தான் அடியவர்க்கு எளியன் ஆதலால் தான் அவர்களோடே ஒத்த தரத்தனாய் இஷ்வாகு வம்சயரோடும் யது வம்சயரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திருவவதாரம் பண்ணினால் போலே ஆஸ்ரித ஸூலபத்வர்த்தமாக ஆதி தேவனாய் விஷ்ணு நாமாவாய் ஸ்வ ஸ்வரூபத்தாலே திருவவதாரம் பண்ணின படியால் சம்போதிக்கிறது –த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாகவாதல் -அவனுடைய அழகால் விசஜாதீயத்தையாலே –பொல்லா -என்கிறது –
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி என்னை வஞ்சித்து என்னை அடிமை கொண்ட பிரானே
தனியேன் ஆர் உயிரே -தன்னைக் காணப் பெறாதே வியசனத்தில் ஒரு துணை இன்றியே இருந்த எனக்கு பிராண ஹேதுவாய் இருந்துள்ள பிராணனாய் யுள்ளாயே -என் தலை மிசையாய் வந்திட்டு–இப்படி ஸ்வரூபத்தினாலும் -ஸமஸ்த ஜகத்தினுடைய ஸ்ருஷ்டியாதி சேஷ்டிதைகளும் உன்னால் அன்றி ஒருத்தராலும் தம்மால் செயல் இல்லை -என் பக்கலிலும் சுவீகார ப்ரப்ருதி இவ்வளவும் வர உன்னால் அல்லது என்னால் செய்யப் பட்டது ஒன்றும் இல்லை -மேலும் என்னால் செயல் இல்லை –இப்படி ஸமஸ்த வியாபாரமும் செய்கிற உனக்கு இனி மேல் பரிஹரிக்கை ஒரு பரமும் அன்று – ஆதலால் இப்படி என் தலை மிசையாய் வந்திட்டு –இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–
இப்பாட்டில் பத யோஜனை ஆழ்வான் படி –என் தலை மிசையாய் வந்திட்டு -என்கிறது எனக்கு பூர்ணமாக வந்து தோற்றி —நிர்ஹேதுகமாக வந்து வைத்து என்றுமாம் –
இனி நான் போகல் ஒட்டேன்-உன்னைக் காட்டின மாத்ரம் அன்றிக்கே -முக்த ப்ராப்த தேசத்தையும் காட்டிலும் இனி விஸ்லேஷிக்க ஓட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–பண்டு போலே குண ஆவிஷ் காரங்களை பண்ணி -பெற்றேனாகப் பண்ணி -என்னை வஞ்சியாது ஒழிய வேணும் –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-10-1-

முதல் பாட்டில் ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய்ப் போந்து
வடிவு அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து உன்னை ஒழியச் செல்லாதபடி யாக்கி
என்னை அனுபவிப்பிப்பதாக த்வரித்து வந்து ஸந்நிஹிதனான நீ
இனி குண ஆவிஷ்காரத்தாலே வஞ்சித்து அகலப் போக இசையேன் என்கிறார் –

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முனியே -நாம ரூப விபாக அநர்ஹமாய்-சித் அசித் விசேஷிதமாய்க் கொண்டு ஸம்ஹ்ருதமாய் –
ஏகீபவித்துக் கிடக்கிற தசையில் ஆஸ்ரயண அர்ஹமாகக் கொண்டு ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தை மனனம் பண்ணுமவனாய்
நான்முகனே–மஹதாதி ரூப சமஷ்டியை ஸ்வயமேவ ஸ்ருஷ்டித்து -அண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியைப்
பண்ணுகைக்காக சதுர்முகனை சரீரமாக யுடையையாய்
முக்கண் அப்பா -ஸம்ஹ்ருதி சமயத்தில் ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய உபஸம்ஹார அர்த்தமாக சக்தி ஸூசகமான
த்ரி நேத்ரத்தை யுடையனாய் -அதி ப்ரவ்ருத்த கரணருடைய உப சம்ஹாரத்தாலே
உபகாரகனான ருத்ரனை சரீரமாக வுடையையாய்
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா–அவர்கள் இருவருக்கும் நடுவே
ரக்ஷகனான தசையில் எனக்கு உன் பக்கலில் ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலம் போலே போக்யமான
திரு அதரத்தையும்-தாமரைப் பூப் போலே தர்ச நியாமான திருக் கண்ணையும் யுடைத்தாய் இருபத்தொரு
துளையாத கரு மாணிக்கம் போலே இருக்கிற திவ்ய வடிவை யுடையையாய் –
அநாதியாக ஆத்ம அபஹாரம் பண்ணிப் போந்த சோரனான என்னையும்
அவ்வழகாலே அறியாதபடி வஞ்சித்து அபஹரித்துக் கொண்டவனாய்
தனியேன் ஆர் உயிரே -அப்ராப்த பலனாகையாலே-தனிமைப்பட்டு எனக்கு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணித்
தன்னை ஒழியச் செல்லாத படி எனக்குப் பரிபூர்ண பிராணனானவனே
என் தலை மிசையாய் வந்திட்டு–செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்னும்படி
என் தலைக்கு மேலாயக் கொண்டு வந்து சமைந்து
இனி நான் போகல் ஒட்டேன் –சம்சார தோஷத்தோடே புருஷார்த்தத்தையும் ஆவிஷ்கரித்து
ஆர்த்தியையும் அபி நிவேசத்தையும் ஜெநிப்பித்த பின்பு
உன்னாலே லப்த ஞான ப்ரேமனாய்க் கொண்டு அதி த்வரிதனாய் –
உன் த்வரையையும் அறிந்து இருக்கிற நான் -முன்பு போலே நீ அகன்று போக இசையேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னைப் பெறா விடில் முடியும்படியான என்னை
சம்சார தசையில் விஷயாந்தரங்களைக் காட்டி அந்நிய பரனாக்கினவோ பாதி யாதல் –
ருசி பிறந்த பின்பு குண ஆவிஷ்காராதிகளைப் பண்ணி ஆஸ்வசிப்பித்தவோ யாதல் –
சிறிதும் வஞ்சியாது ஒழிய வேணும் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-10-1-

நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தரியாதிகளைக் காட்டி எனக்குத் தன்னை ஒழியச் செல்லாத படி பண்ணி என்னை துஸ் ஸஹமான சம்சாரத்திலே வைத்து நீ போய்ப் பண்டு போலே ஒரு குண ஆவிஷ்காரத்தை பண்ணி விட ஒண்ணாது என்கிறார் –

முனியே  நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முனியே— பஹுஸ்யாம் என்று மஹதாதி விசேஷாந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணுவதான மாநஸமான சங்கல்பத்தை யுடையையாய் இருந்துள்ள சர்வாதிகனே –கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய் – ஸோஸ்ய நஸா பன்னமாய்-சதேவ -என்று தன்னைச் சொல்லும் செயலாலே சொல்லும்படி ஸூ ஷ்ம அவஸ்தையை -பஜித்துக் கிடக்கிற அன்று -ச ஏகாகீ நரமேத -என்கிறபடி இவற்றினுடைய நோவை அனுசந்திக்கிற இருப்பைச் சொல்லுகிறது -என்றுமாம் -எனக்கு ருசியைப் பிறப்பிக்கைக்காக நாம ரூபங்களை உன் பேறாகத் தந்து பண்ணின கிருஷி பலித்து உன்னால் அல்லது செல்லாமையை உண்டாக்கிக் கொண்டு நீ கைவிடப் பார்த்தாயா -என்கை –
நான்முகனே-ஆண்ட ஸ்ருஷ்ட்டி யளவும் தானே பண்ணி -இவ்வருகு  யுண்டான தேவாதி ஸ்ருஷ்டிகளை பண்ணுகைக்காக ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக நின்று ஸ்ருஷ்டித்தவனே –நான்முகன் என்கிற இது -விசேஷமான சதுர்முகன் அளவிலே பர்யவசிக்கிறது அன்று -அவனுக்கு அந்தர்யாமியான அவன் அளவும் செல்லுகிறது -மனுஷ்ய சப்தம் தத் சரீரி அளவும் செல்லுகிறாப் போலே –சேதனன் ஸ்வ சரீரத்தைக் கொண்டு தன் நினைவாலே கமன கமன ஆகமனாதி சேஷ்டிதங்களைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் கொண்டு ஸ்வ சங்கல்பத்தாலே தேவாதி சதுர்முக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் -ஸர்வேஸ்வரனே–ஸ்ருஷ்டிந்தன கரிஷ்யாமி -த்வாமாவிசய–தநாதரிசின பந்த்தாநவ் –திசைமுகன் கருவுள் வீற்று இருந்து –
முக்கண் அப்பா-இப்படி ருத்ர சரீரியாய்க் கொண்டு ஜகத் உப சம்ஹாரம் பண்ணுமவனே -அதி பிரவ்ருத்தனான பிரஜையை விலங்கிட்டு வைப்பாரைப் போலே ஸ்ருஷ்ட்டி யோபாதி சம்ஹாரமும் உபகாரம் ஆகையால் –அப்பா -என்கிறார் -சம்சார சிரம கின்னா நாம் -இத்யாதி –ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யந்தர கரணீம்–இத்யாதி –
என் பொல்லாக்-கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –-இஷ்வாகு வம்சயரோடும் யது வம்சயரோடும் சஜாதீயனாய்க் கொண்டு அவதரித்தால் போலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் நடுவே -விஷ்ணு நாமாவாய் அவதரித்து ரக்ஷணத்தைப் பண்ணுகையாலே சம்போதிக்கிறது -அவ்வடிவிலே துவக்கு உண்டவர் ஆகையால் –என் -என்கிறார் –
பொல்லா -அழகு இது என்னில் நாட்டார் அழகோ பாதியாம் என்று விஜாதீயம் என்று தோற்றுகைக்காக -என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாக என்னுதல் –
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே -நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் –
தனியேன் -சம்சாரிகளோடு பொருந்தாதே உத்தேச்யமான திரளில் புகப் பெறாமையாலே தானியேல் -என்கிறார் –
ஆர் உயிரே -எனக்கு குணங்களை ஆவிஷ் கரித்து குண அனுபவமே யாத்ரையாம் படி பண்ணி எனக்கு பிராண ஹேதுவானவனே –
என் தலை மிசையாய் வந்திட்டு-என் தலையிலே  திருவடிகள் இருக்கும் படி நீட்டி வைத்து -நிர்ஹேதுகமாக பெரிய திருவடியின் முதுகிலே வந்து -என் தலையிலே திருவடிகளை வைத்து -செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்றார் இ றே-ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் பண்ணுகிற இடத்தில் உனக்கு ஜகத்தால் செய்யப் பட்டது ஓன்று இல்லாதாப் போலே என்னை இவ்வளவு புகுர நிறுத்தின உனக்கு என்னால் செய்யப் பட்டது ஓன்று இல்லை -இனி மேல் உள்ளதும் உனக்கே பரம் என்கை -இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –
நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு -ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இ றே –
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் -/ என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன -ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-10-1-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய் போந்து -வடிவு அழகைக் காட்டி -ருசியைப் பிறப்பித்து -உன்னை ஒழிய தரியாதபடி ஆக்கி –
இனி குண அனுபவம் கொடுத்து பிரிக்காதே –
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்-நாம ரூப விபாக அநர்ஹமாய் -சித்த அசித்- அவிசேஷமாய் -ஒன்றும் தேவும் இத்யாதி
-இதம் அக்ரே –சதேவ ஏக மேவ அத்விதீயம் ஆஸீத் -ஏகி பவித்து -அபின்ன நிமித்த -விசித்ரா தேக சம்பந்தி ஆச்ரயண அர்த்தமாகக் கொண்டு
-சேதன வர்க்கத்துக்கு -கரண களேபரங்கள் கொடுப்பவனாக தயாமானாவானாகக் கொண்டு -தாய் தன பேராக குழந்தையை அணைத்து
-சிருஷ்ட்டி பிரகாரம் மனனம் பண்ணி
மஹத்தாதி சமஷ்டி ஸ்வயம் ஏவ ஸ்ருஷ்டித்து -பஞ்ச பூதம் –அண்ட கடாகங்கள் -அண்டாந்தர வர்த்தி – ஸ்ருஷ்ட்டி பண்ண
-பிரஜாபதி உன்னை சரீரமாகக் கொண்டு பண்ணுவேன்
ஸம்ஹ்ருதி -சரஷ்ஷடமான ஜகத்தின் உப சம்ஹார அர்த்தமாக த்ரி நேத்ரம் -சம்ஹார சக்திக்கு அடையாளம்
அப்பா -உபகாரகன் -அழித்து-மேல் பாபங்கள் சேர்க்க முடியாதே -அதிபிரிவர்த்த கரணங்கள் முடித்து
இருவர் நடுவில் ரக்ஷகனான தசையில்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா-ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலமான -போக்யமாய் -ஆதாரம்
-தாமரைப் பூ போலே தர்ச நீயமானதுளையாத கரிய மாணிக்கம் -முழுவதாக -அநாதி ஆத்ம அபகாரம் பண்ணி சோரனான
என்னையும் வஞ்சித்து அபகரித்து -நின்றார் அறியா வண்ணம்
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு-அபிராப்த பலம் என்பதால் தனிமைப் பட்ட எனக்கு குணங்களைக் காட்டி தரிக்காமல்
-பரி பூர்ணனான -தான் ஏறி தலை மிசையாய் பிராணன் போலே
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-சம்சார தோஷம் -அறிந்து -புருஷார்த்தமும் காட்டி அருளி
-ஆர்த்தியையும் அபி நிவேசமும் ஜெநிப்பித்த பின்பு -நான்கையும் அருளிய பின்பு
முன்பு போலே நீ அகன்று போக ல் ஓட்டேன் -இது 19 வைத்து இனி -3 தடவை 17 தடவை -இன்னும் ஒரு இனி தான் உண்டு
உன் த்வரையும் அறிந்த பின்பு -உன்னைப் பெறாவிடில் முடியும் நிலையில் உள்ள என்னை -சம்சார தசையில் விஷயாந்தரங்கள் காட்டி
பல நீ காட்டி படுத்த மாயம் ருசி பிறந்த பின்பு குணங்களைக் காட்டி பராக்கு பார்க்க வைத்தாய் -ஆசுவாசிப்பித்தாய் முன்பு
-அது போலே இனி மேல் மாயம் இனி செய்யேல் -என்னை -வஞ்சியாதே கொள்ள வேண்டும் –
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து – நீ சென்று -பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-விட ஒண்ணாது-என்கிறார்-

நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-

முனியே –
பஹுஸ்யாம் -சங்கல்ப -முனி -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் –
பஹு பாவன சங்கல்ப விசிஷ்டன் -நிமித்த கார்யம் சித்திக்க
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம் –
விகாரத்வம் வருமோ -அவிகாராயா சுத்தாயா –
சரீராத்மா பாவம் -சொல்லி -ஆத்மாவுக்கு நிர்விகாரத்வம் சித்திக்கும் –
ப்ரஹ்மத்துக்கு அம்சம் -அறிந்து நிர்பரராய் -பொறுப்பாய் -இருப்போமே-
விசிஷ்ட ப்ரஹ்மம் சொல்லி -பல பிரமாணம் சொல்லி –
முனியே –
பஹூச்யாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –
அவன் இடத்தில் பிறக்கையாலும்
அவன் இடத்தில் இலயிக்கையாலும்
அவனாலே காக்கப் படுகையாலும்
இப்பொருள்கள் யாவும் அவனே -என்றும்
விஷ்ணுவானவன் சூஷ்மமான சித் அசித்துகளுடன் கூடின தன்னை படைப்பில்-
ஸ்தூல சித் அசித்துகள் உடன் கூடினவனாக படைக்கிறான்-
காப்பாற்றப் படுகின்ற பொருளான தன்னைக் காப்பாற்றுகிறான் –
பிரளய காலத்தில் தான் அழிக்கப் படுகிறான் தான் அழிக்கிறான்-என்றும்-
இதம் சர்வம் -கார்ய தசை –
காரண தசை சேதனம் அசேதனம் –
ப்ரஹ்மம் ஒன்றே இரண்டு தசைகள் – ஸ்தூல சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டம் -ப்ரஹ்மம் –
விசேஷணம் மாறி விசேஷயம் ஒன்றாக இதம் சர்வம் -காரியம் -ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு
இதம் சர்வம் ப்ரஹ்ம-ஒன்றாக ஹிந்து தஜ்ஜலான் -என்கிறது –
சதேவ -சத்தாகவே ஸ்ருஷ்டிக்கு முன்னால் இருந்தது -ஏக மேவ ஒன்றாகவே இருந்தது

ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச பாதிச-உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா-ஸ ஏவபாதி அத்திச பால்யதி-ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி-விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
வசிஷ்ட வரத வரேண்ய-சேஷித்வம் சரண்யத்வம் பிராப்யத்வம்
அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்
பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்
மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன-மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7-
என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற
மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை-இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச-அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
அம்சம் -ஜீவாத்மா பரமாத்மாவுக்கு -நாநா-வெவ்வேறாக -என்றும் ஓன்றும் என்றும் சொல்லி – பேத அபேத சுருதிகள் இரண்டையும் சேர்த்து கடக சுருதி
பிரியாமல் இருப்பதால் ஓன்று -தனித்த தனி தத்வங்கள் அதனசால் நாநா -அம்ச அம்சி பாவம் என்றதாயிற்று -ஈசன் அநீசன் இரண்டும் உண்டே –
ப்ரஹ்மமே தாசர் ப்ரஹ்மமே கிதவத்ய -/தத்வம் அஸி -அபேத சுருதி
பிருத்தாகாத்மானம் பிரேரிராத் தாஞ்ச மத்வ -பேத சுருதி –

உயிர் பரம் பொருளின் கூறே யாகும்-அது பரம் பொருளின் வேறாகவும் ஒன்றாகவும்-
ஸ்ருதிகளிலே சொல்லப் பட்டு இருக்கிறது -என்றும் சொல்லுகிறபடியே-
சித் அசிதுக்களோடு கூடின தானே படைத்தலையும் அழித்தலையும் செய்கிறான்–

ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே-ஆப தேஜச லியந்தே
தேஜோ வாயோ லீயதே-வாயு ஆகாசே லீயதே
ஆகாசம் இந்த்ரியேஷூ-இந்த்ரியாணி தன்மாத்ரேஷூ
தன்மாத்ரேஷூ பூதாதௌ லியந்தே-பூதாதி மஹதி லியதே
மஹான் அவ்யக்த லீயதே-அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே-தம பரதேவ ஏகீபவதி-சுபால உபநிஷதம் –
படைத்தல் அழித்தலை முன்னிட்டு கொண்டு உள்ளது ஓன்று ஆகையாலே
முந்துற அளிக்கும் முறையை அருளிச் செய்கிறார்
ஆகையாலே பூமி தண்ணீரிலே மறைகிறது -தண்ணீர் நெருப்பிலே மறைகிறது
நெருப்பு காற்றிலே மறைகிறது காற்று ஆகாசத்தில் மறைகிறது
ஆகாசம் -இந்த்ரியங்கள் -தன் மாத்ரைகள் –அஹங்காரம் -மஹத் தத்வம் -அவ்யக்தம் -அஷரம் -தமஸ்
பரம் பொருளில் மறைகிறது -என்கிறபடியே-தன்னிடத்தில் மறைந்து இருக்கிற இதனை
பஹுச்யாம் பிரஜாயேயேதி -தைத்ரியம் -என்று நினைந்து விளங்கச் செய்து –
தமஸ் -அஷரம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் –தன்மாத்ரைகள் -உண்டாக்கி
அவற்றை பூதங்களாக முற்றுவித்து அண்டத்தை படைத்தல் முடிவாக உதிய உலகத்தினை படைத்தல்
செய்கிற திவ்ய சங்கல்ப்பத்தினை உடையவனாய்
பகவான் என்ற சொல்லால் சொல்லப் படுகின்ற பரப் ப்ரஹ்மம்-பரமாத்மா போன்ற பல
சொற்களால் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட-ஸ்வரூபத்தால் நிலை பேறு உடையனாய் இருந்த பரம புருஷன் -என்றபடி-

ஆகாசத்துக்கு இந்திரியங்கள் காரணம் இல்லாமையால் -இதர பூத சதுஷ்டயம் -இந்திரியங்களுக்கு ஆப்யாயகமாகக் கொண்டு
ஆகாசம் -சப்தம் -காதுக்கு /வாய் -ஸ்பர்சம் -தொக்கு /பிருதிவி -கந்தம் –
இந்திரியங்களுக்கு தன்மாத்திரைகள் பூத சூஷ்மம் காரணம் இல்லாமையால் -ஆப்யாயகம் -அனுபவிப்பதால் –
சப்தம் தன்மாத்திரை -ஆகாசமும் ஸ்பர்ச தன்மாத்திரை பிறக்கும் -இதனால் பூதங்களுக்கு தன்மாத்திரை காரணம்
அவ்யக்தம் -அக்ஷரம் -தமஸ் மூன்று நிலைகள் /விதை -பருத்து -வெடிக்கும் முளை விடும் -மூன்று தசைகள் –
அவ்யக்தம் தெளிவு இல்லாமல் மஹான் தெளிவு பிறக்கும் -மேலே அஹங்காரம் -பூத தன் மாத்திரைகள் -பூதங்கள் –

அன்றிக்கே
ஸ ஏவாகி ந நமேத -வெறுத்தவன் துறந்தவன்-
அப்பரம புருஷன் தன்னம்தனியே இருந்த காலத்தில் மகிழ்ச்சி கொண்டான் இலன் -என்கிறபடியே-முனிதல் கோபித்தல் –
எல்லா பொருள்களும் தம் தம் பெயரையும் உருவத்தையும் இழந்து-
பரம் பொருளின் பெயரும் உருவமுமேயாய் அசித் கல்பமாய் கிடந்தால் போலே-
ஜலத்தின் நாமரூபமேயாய் லயித்தால் போலே -காரணதசையில் லயித்தால் போலே குடம் மண்ணேயாய் என்றவாறு –
எப்பொழுது பரதன் சத்ருக்கனன் இளைய பெருமாள் உடன் கூடுவேனோ -கூடவே இருந்தாலும் அசத்சமம் என்றவாறு –
சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-
தத ராவண நீதாயா சீதையா சத்ரு கர்ஸன-இயேஷ பதம் அந்வேஷ்டும் சரனாசரிதே பதி-சுந்தர -1-1-
ஜாம்பவானால் புகழ்ந்து பேசப் பட்ட பின்னர் பகைவர்களை அழிக்க வல்ல அனுமான்-
இராவணனால் கொண்டு போகப்பட்ட பிராட்டி இருக்கும் இடத்தை தேடுவதற்கு-
தேவர்கள் சஞ்சரிக்கிற ஆகாசம் வழியாக செல்வதற்கு விரும்பினார் -என்கிறபடியே –
சிறை புகுந்தவள் ஏற்றம் -வலிய அன்றோ சிறை புகுந்தாள்-கண்டு பிடிக்க திருவடி திரு உள்ளம் கொண்டால் போலே
சர்வேஸ்வரன் நம்மை – கடல் கொண்ட பொருளை நாடுவதற்கு திருவடி இச்சித்தால் போலே-
உரு மாய்ந்த மக்களை உண்டாக்க நீ மனனம் பண்ணிற்று –
நான் இல்லாத அன்று ஒரு காரணம் இல்லாமல் என்னை உண்டாக்கின நீ-
நான் உண்டாய் நோவு படுகிற இன்று எனக்கு உதவ வேண்டாவோ-
முனியே
அம்மே -என்பாரைப் போலே -என்றது
உறுப்புகளும் சரீரமும் கரண களேபரம் இல்லாதவாய் இவை கிடந்த அன்று உண்டாக்கினாய்-
ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது-
நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -என்றபடி-
இனி
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு-சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது-
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே-
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

நான்முகனே –
வ்யஷ்டி சிருஷ்டிக்கு தகுதியாக-சமஷ்டி புருஷனான பிரமனுக்கு அந்தராத்மாவாக
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினொதி தஸ்மை –
முதல் முன்னம் பிரமனை எவன் படைத்தானோ -என்கிறபடியே பிரமனைப் படைத்து-
அவன் ஆத்மா வழியாக அவன் சரீரத்திலே அனுபிரவேசித்து-
சேதனர் அசேதனமான தங்கள் சரீரங்களைக் கொண்டு
தங்கள் தங்கள் நினைவுக்கு தக்கபடி போதல் வருதல்-முதலிய செயல்களை செய்யுமாறு போலே-
தன்னுடைய சரீரமாய் இருக்கிற பிரமனுக்கு அந்தர்யாமியாய்-அவனைக் கொண்டு மற்றும் நினைவுக்கு தகுதியாக
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர உருவமான உலகத்தை படைத்த படியைச் சொல்லுகிறது-
இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு-
அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –
சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்-
அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –
தேவர் மனுஷ்யர் திர்யக் -என்றும்
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன்-என்றும் அந்த அந்த சரீரங்களை காட்டும் சொற்களாலே-
அவற்றில் வேறாய் இருந்துள்ள அவர்களும் சொல்லப் பட்டால் போலே -இங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரத்வி சரீரம் –என்றும் –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்-அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80-–என்றும் –
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து-என்றும்
யானி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்-சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் ––என்றும் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி-
சரீரத்தை காட்டுகிற சொல் ஆத்மா வரையிலும் தன் பொருளைக் குறிக்கும் என்கிற-நியாயத்தாலே
தனக்கு சரீரமாய் இருக்கும் பிரமனைக் காட்டக் கூடிய நான் முகன் என்ற சொல்லாலே-
அவனில் வேறாய் அவனுக்கு ஆத்மாவாய் இருக்கிற எம்பெருமான் சொல்லப் படுகையாலே-
நான்முகனே -என்ற சொல்லால் -எம்பெருமானை விளிக்கிறது —

முக்கண் அப்பா –
யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்–என்றும் -ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி-என்றும் –
ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது
எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ
அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர் -என்கிறபடியே
அழிக்கப் படுகின்ற பொருள்களோடு

அழிக்கின்ற வனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக்கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –
அப்பா –
என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது-
படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ –
நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்-
சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –
எங்கனே என்னில்
தம் தாம் கைகளைக் கொண்டு கண்களை கலக்கிக் கொள்வாரைப் போலே
படைத்த படைப்பு பேற்றுக்கு உடல் அன்றியே தீம்புக்கு உடல் ஆனவாறே-
சிறு குழந்தைகளை கால்களிலும் கைகளிலும் விலங்கிட்டு காப்பாற்றும் தாய் தந்தையரைப் போலே-
உறுப்புகளையும் உறுப்பக்களோடு கூடிய சரீரத்தையும் நீக்கி அழித்திட்டு விக்கியும் உபகாரமாம் படி இருக்கிறபடி-
ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-

கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே-என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை
சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –
தன்னுடைய த்யானத்திலே இருக்கிறவனுக்கு ஒரு மனம் பத்து இந்த்ரியங்கள் -என்று தொடங்கி
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்ப்பிக்க நினைந்து த்யானம் செய்தான் –
த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது-
அது தான் தண்ணீர்-
அது பொன் மயமான அண்டம் ஆயிற்று-
அந்த அண்டத்தின் நின்று நான்கு முகங்களை உடைய பிரமன் உண்டானான்-
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தான்-
அங்கனம் த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது-
அவ் வேர்வையின் நின்றும் குமுழி உண்டாயிற்று-
அந்த குமுழியின் நின்றும் முக்கண்களை உடையனாய்-
சூலத்தை கையிலே தரித்தவனாய் ஒரு புருஷன் உண்டானான்-
என்று சொல்லுகிற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது –
முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயணஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ-சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்
சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை-
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
படைத்தல் அழித்தல்களுக்கு இடையில்
பருந்து இறாஞ்சினால் போலே இறாஞ்சிக் கொண்டு போவார்களே அன்றோ காப்பார் இல்லா விட்டால்
அதற்காக படைத்தல் அழித்தல் செய்யும் தலைவர்களாய்
ஆதி தேவர்களாய் உள்ள
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே-
ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்-
தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது
பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர-விஷ்ணு நாமா சவேதேஷூ-வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய்
உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன் வேதம் வேதாங்களில் பேசப்படுகிறான்-
கர்மம்களுக்கு தகுதியாக உயர்வு தாழ்வு இன்றி-கண் அழிவு இன்றி செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே
படைத்தல் அழித்தல் களுக்கு ஆள் இடும் –கார்மீதீனம் -தானே இவை தயைக்கு வேலை இல்லையே அங்கு எல்லாம் –
காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்-ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்-
எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு
ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே-சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை -என்றும் சொல்லுகிறபடியே-

நான் முகனே முக்கண் அப்பா –
என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு போய் விசேடியத்திலே இளைப்பாறினார்-
இங்கு விசேஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது –
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே -என்று-ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்-
இந்த திரு மேனியை பற்றுக் கோடாக சொல்லா நிற்கச் செய்தே-இதனை விட்டு திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போ என்கிறது-
இதனை விடச் சொல்லுகிறது அன்று-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்து அளவும் போவான் என் -என்கையிலே தான் கருத்து-

பொல்லா என்பதனை -கரு மாணிக்கம் -என்பதனோடு சேர்ப்பது-பொல்லாக் கரு மாணிக்கம் என்று கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார்-
அன்றிக்கே
அழகிலே வேறுபட்ட சிறப்பினை உடைமையாலே கூறுகிறது -என்னுதல்
கனிவாய் –
அவாக்ய அநாதர -பேசாதவன் -விருப்பமில்லாதவன் என்று சொல்லப் படுகிறவன் –
அனுகூலரைக் கண்டு -அங்கனம் சொல்லப் படுகின்ற நிலை நீங்கி புன் முறுவல் செய்து நிற்கும்படியைச் சொல்கிறது –
ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி –
தாமரைக் கண் –
வினவப் புக்கு விக்கித் தடுமாறினால் குறையும் தலைக் கட்டும் கண்களைச் சொல்லுகிறது-
தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ-அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே-
திருவருள் புரிய வேண்டும்-பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் -என்கிறபடியே
கரு மாணிக்கமே –
குளிர்ந்து -இவ் உலகத்தில் விடாய் தீர அணைக்கும் உடம்பைச் சொல்லுகிறது
ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத-மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால்
விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான-இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது -என்கிறபடியே
கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது-

என் கள்வா –
என் இசைவு இன்றிக்கே என்னைக் கவர்ந்தவனே –
கருமத்தாலே இறைவன் உடையதான ஆத்மாவை முன் தோற்றாதே நின்று கவர்வான் இவன்-வடிவினைக் காட்டி இவனைக் கவர்வான் அவன் –
சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ-இவனுடைய -என்னின் -உரம் இருப்பது-
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று-கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி
ஸ்ரீ ஜனக ராஜன் பெண் பிள்ளையை நீர் வார்ப்பித்து தனக்கு ஆக்கினாப் போலே அன்றோ –ஆத்மாவை தனக்கு ஆக்கிக் கொள்ளுகையாவது –

தனியேன் ஆர் உயிரே –
என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து-பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே
இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்-பரமபதத்திலே புகப் பெறாமையும்-நோக்கித்- தனியேன் -என்கிறார் –
பிராட்டி அசோக வனத்தில் அரக்கிகள் நடுவே இருந்தால் போல் காணும் இவருக்கு-இவ் உலக மக்கள் நடுவே இருப்பு
உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே —

என் தலை மிசையாய் வந்திட்டு –
செழும் பறவை தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே -10-8-5-
தலை மேலே தாள் இணைகள் -என்று சொல்லுகிறபடியே குறைவு இல்லாமல் வந்து தோற்றி –நிர்ஹேதுகமாக வந்து தோற்றி -என்னுமாம் –

இனி-
உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே-பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு-

நான் –
வழிச் சுவடு அறிந்த நான்

போகல் ஒட்டேன் –
தம்முடைய செல்லாமையாலும்-சம்பந்தத்தாலும்-தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்-
செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இறே-

போகல் ஒட்டேன் –
வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ –
இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்-
விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு-
மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று-
நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –

ஒன்றும் மாயம் செய்யேல் –
உன்னை அறிவதற்கு முன்பு-விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்-
உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து-
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்
அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து-நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் –

அங்கன் வேண்டுவான் என் -என்ன
என்னையே –
ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும் –என்கிறபடியே
விரகம் தின்று-குறைவு பட்ட உடம்பினை காட்டுகிறார் –
அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

முனியே என்று சமஷ்டி ஸ்ருஷ்டியையும் –
நான் முகனே என்று வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியையும் –
தத் ஸ்ருஷ்ட்வா –தத்அனுபிரவேச -படைத்த பின்பு -இரண்டு அனுபிரவேசம் –
ஜீவனை சரீரமாகக் கொண்டு அனுபிரவேசம் -அண்ட கடாகம் ஸ்ருஷ்டித்த பின்பு தானே -முன்பு சமஷ்டி சிருஷ்டியில் நேராக புகுகிறார் –
பிரதம ஜீவன் நான்முகன் –
முக்கண் அப்பா சம்ஹாரத்தையும் –
கரு மாணிக்கமே -பாலனத்தையும் அருளிச் செய்தார்

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-10-முனியே நான்முகனே முக்கண் அப்பா -ப்ரவேஸம்-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்த ஆழ்வார் தாம் இந்த பிரக்ருதியில்
இருந்த இருப்பைக் காணாய் என்று ஏங்கிக் கூப்பிடுகிறார்

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —

திருநாட்டில் புக்கு அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்த ஆழ்வார் அவ்விருப்பு ஞான அனுசந்தான மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அன்றிக்கே -ப்ரக்ருதி பத்தரானமையை அறிந்து மேரு சிகரத்தில் இருந்து நிர்த்துக்கனாய் மிகவும்
ஸூகியாய் நின்று வைத்து -துக்க பஹுளமாய்-துஸ் தரமாய் மிகவும் ஓர் இடத்திலும் ஸ்திதி இல்லாத படி பேர் ஆழமான கடலின் நடுவே
தள்ளுண்டவனைப் போலே அவசன்னராய் -அதுக்கு மேலே தமக்கு அவன் பண்டு கை வந்த படியையும் தன்னைப் பெறுகைக்கு
உபாயம் தானே அல்லாது இன்றிக்கே இருந்த படியையும் அவ்வளவு அன்றிக்கே -எல்லார்க்கும் அவன் அல்லது வேறு ரக்ஷகர் அன்றிக்கே
இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து -இப்படியே இருக்கிறவனை அஷணத்திலே பெறாமையாலே -பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து
தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட
இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால்
தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு
காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டத் தவிர்ந்து
தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு
மிகவும் கூப்பிட்டு தரிக்க மாட்டாமை சரணம் புக –
பரம தயாளுவான சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்தாலே போலே
தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
-இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி —

பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

திருநாட்டில் புக்கு அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்த ஆழ்வார் அவ்விருப்பு ஞான அனுசந்தான மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அன்றிக்கே –அதுக்கு மேலே இல்லை கண்டீர் இன்பம் என்றும்
-பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம்-என்றும் தாம் பிறருக்கு உபதேசிக்கிற சம்சாரத்தில்,
-ப்ரக்ருதி பத்தரானமையை அறிந்து மேரு சிகரத்தில் இருந்து நிர்த்துக்கனாய் மிகவும்
ஸூ கியாய் நின்று வைத்து -துக்க பஹுள மாய்-துஸ் தரமாய் பேர் ஆழமாய் மிகவும் ஓர் இடத்திலும் ஸ்திதி இல்லாத படி
பேர் ஆழமான கடலின் நடுவே தள்ளுண்டவனைப் போலேயும் பாதாளத்தில் விழுந்து நோவு படுமா போலேயும்
அவசன்னராய் -அதுக்கு மேலே தமக்கு அவன் பண்டு கை வந்த படியையும் தன்னைப் பெறுகைக்கு
உபாயம் தானே அல்லாது இன்றிக்கே இருந்த படியையும் அவ்வளவு அன்றிக்கே -எல்லார்க்கும் அவன் அல்லது வேறு ரக்ஷகர் அன்றிக்கே
இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து -இப்படியே இருக்கிறவனை அஷணத்திலே பெறாமையாலே -பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து
தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட
இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால்
தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு
காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டு கையும் இன்றிக்கே –
தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு மிகவும் கூப்பிட்டு –
–சாகாம்ருக ராவண சாயகார்த்தா ஜகமுச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம் -என்கிறபடியே தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக –
பரம தயாளுவான சர்வேஸ்வரன் இவற்றிலும் காட்டிலும் தான் நொந்து – பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே
இவர் அபேக்ஷித்தாலே போலே தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
-இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே என்றும் – அவாவற்று வீடு பெற்ற என்றும் இவர் வாயாலே சொல்லும் படி
இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து அருளினான் -என்கிறார் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

முனியானே -பிரவேசம் –

பரமபதத்திலே புக்கு-அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்-
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –அதற்கு மேலே-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்-
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்-மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்-
பல பல துக்கங்களை உடையதாய்-தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்-
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே-
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்-
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்-இருக்கும் படியையும் நினைந்து-
அக்கணத்தில் பெறாமையாலே-
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று-மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்-

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்-
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே-
வள வேழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்-
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்-
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமையோடு-
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக-
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்-
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு-

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே-இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்-சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

ஷேமுசி பக்தி ரூபா -பக்தி ரூபாபன்ன -மதி நலம் -பக்தி பூமா என்றுமாம் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க-ஆதி லீலே-
உலகம் யாவையும் -தாம் உளவாக்கலுக்கும் நிலை பெறுத்தலும் நீங்கலும் நீங்கலா -அலகிலா விளையாட்டுடை அண்ணல் அவன் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-11-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

சர்வேஸ்வரனாய் ஸ்ரீ யபதியாய் இருந்த எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ளத்
திரு மா மணி மண்டபத்திலே சென்று
அந்தமில் பேரின்பம் விளையும்படியாக அயர்வரும் அமரர்களோடே கூடத் தாம் இருந்தமையைச் சொன்ன
இத்திருவாய் மொழியை வல்லார்
அந்தமில் பிரின்பத்து அடியரோடு இருக்கப் பெறுவார் என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே கூட எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ள –அயர்வறும் அமரர்கள் -என்றுமாம் -திருமா மணி மண்டபத்திலே பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு இருந்தமையை -மிகவும் பூத்த பொழிலொடு கூடின திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய உக்தியாய் சந்தோ ரூபமான ஆயிரம் திருவாய் மொழியிலும் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-11-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் அனுபவத்தை அருளிச் செய்கிறார் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து–ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயரான அவர் தாமே வந்து
எதிர் கொள்ள திரு மா மணி மண்டபத்திலே
வந்தவர் எதிர் கொள்ள என்று -பிரதானரான விஷ்வக் சேனாதிகள் ஆகவுமாம்
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை-முடிவின்றியே அபரிச்சின்னமான ஆனந்தத்தை யுடைய
ஸூ ரிகளோடே கூடி இருந்த பிரகாரத்தை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–பூங்கொத்து அலருகிற பொழிலை யுடைய திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–சந்தஸ்ஸூக்களான வ்ருத்த பேதங்களை யுடைய ஆயிரத்தில்
இப்பத்தையும் அனுசந்திக்க வல்லவர்கள் பரமபதத்தில் பகவத் குண மனன சீலராவார்கள்
சந்தஸ்ஸூக்கள் என்று வேதமாகவுமாம்
இது கலி விருத்தம் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள--பிராட்டியோடே எம்பெருமான் தானே வந்து எதிர் கொள்ள -அப்ராக்ருதரான அயர்வறும் அமரர்கள் என்றுமாம் –
மா மணி மண்டபத்து-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –
அந்தமில் பேர் இன்பத்து –யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –
அடியரொடு இருந்தமைஅடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இ றே இருப்பது –கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்--நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த –போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரி தொடங்கி சோலை செய்தால் போலே இருக்கை –
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

பகவத் அனுபவம் பலம் -மனன சீலர் முனிவர் -பகவத் அனுபவம்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து-வந்து அவர் எதிர் கொள்ள -பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து -லஷ்மீ ஸஹாயர் அவரே –
பிரதான விஷ்வக் சேனர் முதலானோர் என்றுமாம் –
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை-நித்ய முக்தர்கள் உடன் இருந்தமையை -முடிவு இல்லாதவாகவும் அபரிச்சின்னமானவாகவும் -இருந்த பிரகாரத்தை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-பூ கொத்து -திரு நகரிக்கு நிர்வாகர்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே-ஆயிரத்து பத்து -இங்கு இவை பத்தும் சொல்லாமல் -பர பக்தி தசையில் -அப்படி
விருத்தம் பேதங்கள் உண்டே வெண்பா பா இனம் போல்வன -இவை இந்த பத்தையும் அனுசந்திக்க வல்லார்
-வைகுந்தது அமரர் முனிவர் -குண நிஷ்டர் -குண மனன சீலர் ஆவார்கள்
சந்தஸ் -வேதம் ஆகவுமாம் -தமிழ் வேதரூபம் என்றவாறு –

நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-நித்ய சூரிகளோடு ஒப்பர்-என்கிறார்-

வந்தவர் எதிர் கொள்ள –
அவர் வந்து எதிர் கொள்ள –
வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள –
அன்றிக்கே –
இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் –

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-
பாண்டு ஒருவன் மேல் -மான் உருக் கொண்ட மனைவி உடன் சேர்ந்த முனிவன் -மேல் அம்பை விட-சாபம் -கொடுத்து –
இவ் உலக வாழ்க்கையில் ஆயிரம் கூற்றில் ஒரு கணம் ஆயிற்று சுகம் உள்ளது-
அதனையும் அனுபவிக்க ஒட்டிற்று இல்லையே -என்றானே அன்றோ –ரிஷிகளையும் மயக்கும் படி அன்றோ ஐம்புலன் இன்பங்கள் –
பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது என்றவாறு –

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-
எப்பொழுதும் மலர்களை உடைத்தான சோலையாலே-சூழப் பட்ட-திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கி போலே காணும் சோலை செய்வது -அலர் –
அந்தமில் பேர் இன்பத்து -ஆழ்வாருக்கும் கொள்ளலாம்

சந்தங்கள் ஆயிரத்து –
விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
சந்தோ ரூபமான -வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –

இவை வல்லார் முனிவரே –
இப்பதத்தினை கற்க வல்லார்-
அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அவற்றிலே ஈடுபட்டவராய்-
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே-இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்- இங்கேயே முக்தர்களைப் போலே ஆவார்கள் –

வகுள மாலை -சாத்தி -சேஷத்வ ஸூ சகம் -குறவன் கொண்டை -கிளி கொண்டை நித்யம் சாத்தி சேவை சாதிப்பார் –
குறட்டில் எழுந்து அருளி -கொட்டு வந்ததா -என்பர் -ஆச்சர்யமான உத்சவம் –
நாலாயிரம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆச்சார்ய ஹிருதயம் பெண்கள் நித்ய அனுசந்தானம் ஆழ்வார் திருநகரியில்
-ஞானம் பிரேமம் மிக்கு -ஆழ்வார் மேலே வெய்யில் படாமல் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –