ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-6-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-6-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

இவர் சிலர் ஸ்வ க்ருதமான யாக பலத்தைக் கொடுக்கும் அளவில் வேறே சிலர் தூப தீபாதிகளால் அப்யர்ச்சனம் பண்ணினார்கள் –
சிலர் காளாங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
வாள் ஒண் கண் மடந்தையர் இவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தினாலே இவர்கள் தங்கள் வரப் புகுகிற மங்களத்தில் காட்டில்
மேற் பட்டதொரு மங்களம் இல்லாமையால் ஆழியான் தமரான நீங்கள்
ஆண்மின்கள் வானகம் என்று இது தன்னையே மங்களமாக ஆசாசித்தார்கள் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-6-

ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

வேள்வி  உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

சிலர் தாங்கள் பண்ணின யாக பலங்களை சமர்ப்பிக்கும் அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் –கலந்து எங்கும் இசைத்தனர்–கலந்து எங்கும் த்வனித்தன –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-6-

அநந்தரம் சேஷித்வ சிஹ்னமான திருவாழியை யுடையவனுக்கு சேஷ பூதரான நீங்கள் இந்த ஊர்த்வ லோகத்தை
நிர்வஹியுங்கோள் என்று ஆதி வாஹிக மஹிஷிகள் வாழ்த்தின படியை அருளிச் செய்கிறார்

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை–வைதிகர் சகல கர்மங்களை சமர்ப்பித்த அளவிலே
பரிமளத்தைப் ப்ரவஹிக்கிற ஸூ கந்தமான தூபங்களானவை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்–எங்கும் கலந்து காளங்களையும் வலம் புரிகளையும் த்வநிப்பித்தார்கள்-
இவர்களைக் கண்ட ப்ரீதியாலே
வாள் ஒண் கண் மடந்தையர்-ஒளியை யுடைத்தாய் தர்ச நீயமான கண்களையுடைய தேவ ஸ்த்ரீகளானவர்கள்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாழ்த்தினர் மகிழ்ந்தே–திருவாழியை யுடைய சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள்
இந்த ஸ்வர்க்காதி பதங்களை ஆளுவுதி கோளாக வேணும் என்று ப்ரீதியை யுடையராய்க் கொண்டு வாழ்த்தினார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-6-

ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

வேள்வி  உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

வேள்வி உள் மடுத்தலும்– விரை கமழ் நறும் புகை–அவர்கள் தங்கள் யாக பலங்களை சமர்ப்பித்த அளவிலே வேறே சிலர் அகில் தொடக்கமான த்ரவ்யங்களைக் கொண்டு நல்ல புகைகளை ப்ரவர்த்திப்பித்தார்கள் -/ விரை கமழ் நறும் புகை–பரிமள பிரசுரம் ஆகையால் ஸ்ப்ருஹணீயமான புகை –
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்--அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவிலே – வேறே சிலர் காளான்களையும்-வலம் புரிகளையும் -கலந்து த்வநிப்பித்தார்கள் -/ கலந்து எங்கும் இசைத்தனர்–மாறி மாறி எங்கும் ஓக்க த்வனித்தன –
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –ஆழியான் தமர் —ஆண்மின்கள் வானகம்-என்று–சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள் இவ்விடத்தை யாளி கோளோ–என்றாய்த்து ஸ்தோத்ர பிரகாரம் -அவன் தானும் தன் விபூதியை -பக்தாநாம் என்று அன்றோ இருப்பது -ஆளக் குறை என் -என்பார்கள் –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–ஆதி வாஹிக கர்த்தாக்கள் யுடைய மஹிஷிகள் வாழ்த்தினார்கள் -ஒளியை யுடைத்தாய் ஆகர்ஷகமான கண்களை யுடையவர்கள் -இது ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று -இவர்களை கண்டத்தாலே கண்களுக்கு உண்டான ஒளியையும் அழகையும் சொல்லுகிறது / மகிழ்ந்தே -பார்த்தாக்கள் அனுவர்த்திகையாலே விஹிதம் என்று செய்கிறார்கள் அன்று -ப்ரீதியாலே செய்கிறார்கள் -இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனாய்ப் போந்தவன் -சரீர வியோக சமானந்தரத்திலே தங்களுக்கு அவ்வருகு இல்லாதவர் கொண்டாடும் படி இ றே இவன் பேறு –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-6-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

ஆதி வாஹிக பத்நிகள்-சேஷித்வ சிஹ்னம்-அடியார் -மஹிஷிகள் –
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை-வைதிகர் தங்கள் யாக பலன்களை சமர்ப்பித்த வாறே -ஸூ கந்தமான தூபம் கலந்து
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்-வாத்தியங்கள் சங்குகள் த்வநித்து
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று-ஸ்வர்க்காதி லோகங்களை இதுவும் லீலா விபூதி தானே -ப்ரீதி
முன்பே செங்கோலைக் கொடுத்து புருஷர்கள் -இங்கு இவர்களும் கை ஓலை போட்டு கொடுத்தபடி –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-ஒளி தர்ச நீயமான தேவ ஸ்த்ரீகள் –

உபசரித்தல் முன்னாக-தெய்வப் பெண்கள் உகந்து-இவர்களை வாழ்த்தினார்கள் –என்கிறார் –

வேள்வி உள் மடுத்தலும்
-அவர்கள் தங்கள் யாகத்தின் பலன்களை சமர்ப்பித்த அளவிலே-வேறே சிலர் –

விரை கமழ் நறும் புகை –
வாசனை மிக்கு இருந்தமையால் விரும்பத் தக்கவான-
அகில் தொடக்கமான பொருள்களைக் கொண்டு-நல்ல புகைகளை உண்டாக்கினார்கள் –

காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவில் வேறே சிலர்-
காளங்களையும் வலம் புரி களையும் கலந்து ஒலிக்கச் செய்தனர்-
கலந்து எங்கும் இசைத்தல் ஆவது-
மாறி மாறி எங்கும் ஒக்க ஒலிக்கச் செய்தல் –

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –
சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்-
இவ்விடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது –
நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-
பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –
ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –
பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றார் அன்றோ –

வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –
ஆதி வாஹிகத் தலைவர்கள் உடைய மனைவிமார்கள் வாழ்த்தினார்கள்-
வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மார்-குளிரப் பார்க்குமாறு போலே-
ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி-
கணவன்மார்கள் பணி செய்கையாலே -நாமும் செய்யத் தகும் -என்று-கருதிச் செய்கிறார்கள் அன்று –
ப்ரீதியாலே செய்கிறார்கள் இத்தனை ஆதலின் -மகிழ்ந்து -என்கிறார் –
இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே-பரிபவம் செய்யப் பட்டவன்-
சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான-
தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading