ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-8-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று இவரை சேஷத்வ சாம்ராஜ்யத்தில் அபிஷிக்தராய்
அதுக்கு முடி சூடி இருந்த அயர்வறும் அமரர்கள் முறை முறை எதிர் கொள்ள-
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகுகைக்காக
இவர்கள் முன்னமே த்வஜ பதாகாதிகளாலே அலங்க்ருதமான பெரிய திருக் கோபுரத்தைச் சென்று
குறுகினர்கள்-என்கிறார்

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-8-

பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை  யருளிச் செய்கிறார் –

குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

கோவிந்தன் தனக்குத் தரும் சந்தான பிரயுக்தமான அடியார் என்று சேஷத்வத்துக்கு சூடின முடியை யுடைய அயர்வறும் அமரர்கள் பர்யாயமாக எதிர் கொள்ள –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்–இவர்கள் வருகிறாள் என்று கொடிகளால் அலங்கரிக்கப் படுவதும் செய்து -திரு நாட்டுக்கு எல்லையான மதிலை யுடைய திருக் கோபுரத்தைக் குறுகினார்கள் -தங்கள் வரவால் உண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த திருமேனியை யுடைய ஸ்ரீ ய பதியதான ஸ்ரீ வைகுண்டத்தில் புக்கு இருக்கைக்காக –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-8-

அநந்தரம் -ஆஸ்ரித ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய அடியார் என்கிற ஆதரத்தாலே பரமபத வாசிகள்
நாட்டு எல்லையில் வந்து எதிர் கொள்ளப் பரமபதத்தைக் கிட்டின படியை அருளிச் செய்கிறார்

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று-இவர் ஆஸ்ரித அர்த்தமாக அவதீர்ணனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அநந்யார்ஹமான குலத்தையுடைய அடியார் என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-ஈஸ்வரனோ பாதி அபிஷேகாதி ஸாரூப்யத்தை யுடையரான நித்ய ஸூரிகள்
தம் தாம் தரங்கள் தப்பாமல் இவர்கள் வருகிறார்கள் என்று
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–அலங்க்ருதமான திவ்ய வடிவை யுடையனாய் ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டியாரோடே
கூட எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்ரீ வைகுண்டத்தில் பிரவேசிக்கைக்கு உறுப்பாக
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-தங்கள் வரவுக்கு அலங்காரமாக எடுத்துக் கட்டின கொடியால் அலங்க்ருதமாய்
உயர்ந்த மதிளை யுடைத்தான தலை வாசலிலே புக்கார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-8-

பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை  யருளிச் செய்கிறார் –

குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று--அவனுடைய ஸுலப்யத்திலே தோற்று சபரிகரமாக எழுதிக் கொடுத்தவர்கள் என்றாய்த்து -நித்ய ஸூ ரிகள் ஆதரிப்பது –குடந்தை எம் கோவலன் -குடி குடியார் -என்றது கீழ் —குடி குடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே -இவர்கள் விபவங்களிலே ஆஸ்ரயித்தவர்கள் -இவர்கள் உகந்து அருளின நிலங்களில் ஆஸ்ரயித்தவர்கள் -என்றாய்த்து அங்கு உள்ளார் ஸ்லாகிப்பது –
முடி யுடை வானவர் -அவனோபாதியும் மதிப்பில் குறைவற்றவர்கள் யாய்த்து இவர்களை ஆதரிப்பார் -அபிஷேகம் அவனுக்கும் நித்ய ஸூ ரி களுக்கும் ஒத்து இருக்குமாகில் வாசி என் என்னில் -அவன் ரக்ஷணத்துக்கு முடி சூடி இருக்கும் -இவர்கள் அடிமைக்கு முடி சூடி இருப்பார்கள் –
முறை முறை எதிர் கொள்ள-பர்யாயமாக எதிர் கொள்ள -யத்ர பூர்வே ஸாத்யா என்றும் -அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும் சொல்லுகிறபடியே தங்களுக்கு உத்தேசியரானவர்களுக்கு உத்தேச்யர்கள் ஆகிறார்கள் இ றே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்க்ருதமாய் –ஒக்கத்தை யுடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான திரு மதிலில் திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–-தங்கள் வரவால் யுண்டான ஹர்ஷத்தாலே புதுக் கணித்த வடிவை யுடைய ஸ்ரீ யபதியதான பரம பதத்தில் புகுகைக்காக -வந்து கிட்டினார் என்றவாறே தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்கை –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

சுத்த சத்வமயம் -கீழே மிஸ்ர சத்வம் -பிரகிருதி வரைக்கும் –
தமஸ் தாண்டி –
ஆஸ்ரித சுலப கிருஷ்ண அடியார்கள் -நித்ய ஸூ ரிகள் நாட்டு எல்லையில் வந்து எதிர் கொள்ள
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று-கோவலன் -அவனுக்கே ஆட் பட்டு
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-நித்ய ஸூ ரிகள்-ஸாரூப்யம் கொண்ட நித்ய ஸூ ரிகள்
-தம் தாம் தரங்கள் தப்பாமல் -நீதி வானவர்கள் அன்றோ -முறை மாறாமல்
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
கொடிகளால் அலங்க்ருதம் -கோபுரம் நோக்கி -முக்தர்களும் நித்யர்களும் தலை வாசலுக்கு வந்து எதிர் கொள்ளுகிறபடி
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே-அலங்க்ருதமான வடிவு -புதுசாக -கொண்ட அலங்காரம் -ந கால இருந்தாலும்
-எல்லாம் உண்டே -விஸ்வரூபம் – புது பரிவட்டம் -காலம் இல்லை என்றாலும் –
முக்த ஜீவன் வர -விஷ்வக் சேனர்-பட்டியல் கொடுத்து -அவனும் அவளும் -சேர்ந்து -கூட எழுந்து அருளி
-மாதவன் -மிதுனத்தில் தானே ப்ராப்யம் -ஒரே ஆசனம் -கைங்கர்யம் கொடுக்க வேண்டும் -புதுசாக உருவாக்க முடியாதே
-அது தான் அவளது சாமர்த்தியம் -காந்தஸ்ய புருஷோத்தம -தாஸ தாஸீ கணம் -சர்வேஸ்வரன் உடைய ஸ்ரீ வைகுந்தம் –

இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே-பரமபததுக்கு புறம்பாக-
நித்ய சூரிகள் இவர்களை-எதிர் கொள்ளுகிறபடியை-அருளிச் செய்கிறார் –

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று –
கோவிந்தன் தனக்கு -இவர் -குடி அடியார் -என்று –அவனுடைய எளிமையில் தோற்று-
உற்றார் உறவினர்களோடு எழுதிக் கொடுத்தவர்கள் என்றாயிற்று-நித்ய சூரிகள் ஆதரிப்பது –
குடந்தை எம் கோவலன் குடி அடியார் -என்றார் மேலே –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே –
இதற்கு கருத்து என் என்னில்
இவர்கள் அவதாரங்களைப் பற்றினவர்கள்-
இவர்கள் உகந்து அருளின நிலங்களைப் பற்றினவர்கள் என்று ஆயிற்று அவர்கள் சிறப்பிப்பது –

முடி யுடை வானவர் –
அவனைப் போன்ற பெருமையில் குறைவு அற்றவர்கள் ஆயிற்று இவர்களை ஆதரிப்பார்கள்-
திருமுடி அவனுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்குமாகில் வாசி என் என்னில்-
அவன் சேஷித்வத்துக்கு முடி சூடி இருப்பான்-
இவர்கள் சேஷத்வத்துக்கு முடி சூடி இருப்பவர்கள் –

முறை முறை எதிர் கொள்ள –
வகை வகையாக தாம் தப்பாமல் எதிர் கொள்ள –
யத்ர பூர்வே சாத்யா -புருஷ சூக்தம்-
எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்-
சாத்யா -உத்தேச்யர்-
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -3-3-10- என்றும்-சொல்லுகிறபடியே-
தங்களுக்கு உத்தேயர் ஆனவர்களுக்கு உத்தேச்யர் ஆகிறார் அன்றோ இவர்கள்-

கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் –
இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாய்-
ஒக்கத்தை உடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான-திரு மதிளிலே திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –

வடிவுடை மாதவன்-
மகோத்சவம் இவ ஆசாத்யா புத்ரானன விலோகனம்-
யுவவே வாசுதேவ அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-52-
கிழத்தன்மை விட்டு வாசுதேவன் காளைப் பருவத்தை அடைந்தான் -என்கிறபடியே-
கம்சனைக் கொன்ற பின்பு பிள்ளையைக் கண்ட-ஸ்ரீ வசுதேவரும் தேவகி பிராட்டியாரும் போலவும் –
நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105-
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்-என்று சொல்லப் பட்டால் போலவும் –
வா போகு-இத்யாதி -சுப்ரமண்யன் போன்ற அழகன் -ரிஷி கரி பூசுகிறான் –
அன்றிக்கே –
வடிவுடை மாதவன் –
தங்கள் வரவால் உண்டான உவகையாலே புதுக் கணித்த-வடிவை உடைய-திருமகள் கேள்வன் -என்னுதல் –

வைகுந்தம் புகவே –
பரம பதத்தில் புகுகைக்காக-வந்து கிட்டினார் -என்றவாறே
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்றபடி-
வைகுந்தம் புகவே மாதவன் வடிவுடை ஆனார்கள் -என்றபடி -திருவா மாலா வாசி தெரியாதபடி மாறினால் போலே –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading