ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-2-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
நாரணன் தமரைக் கண்டு மேகங்கள் உகந்தன –
ஆகாச சரரான தேவாதிகள் ஆகாசத்தில் பூர்ண கும்பங்களை பூரித்தார்கள் –
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன –
நெடுவரை போலே இருந்த தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகர்கள் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-2-
மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச் செய்கிறார் –
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
அழகிய நீர் முகில்கள் நாரணன் தாமரைக்கு கண்டு உகந்தன–அவை தான் பூர்ண கும்பங்கள் ஆயின -ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம் -நீராலே அணியப் பட்ட கடல்கள் ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன -லோகங்களில் உள்ளார் எங்கும் நெடுவரை போலே இருக்கும் தோரணங்களை நிரைத்து தொழுதார்கள் –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-2-
அநந்தரம் -நிருபாதிக சேஷியான நாராயணனுக்கு சேஷ பூதரானவர்களைக் கண்டு
லோகத்தார் சத்கரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-நிருபாதிக சேஷியான நாராயணனுக்கு சேஷ பூதரானவர்களைக் கண்டு
உகப்பை யுடைத்தாய் சுத்தமான ஜலத்தாலே பூரணமான மேகமானது
முகில் என்கிற ஒருமை ஜாதிபரம்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்–த்வார வேதிகளில் போலே உயர்ந்த ஆகாசத்தில் பூரணமான பொற்குடங்களாக நிறைத்தது
நீரணி கடல்கள் நின்றார்த்தன -நீரை வஹிக்கிற கடல்களானவை ஒரு படிப் பட்டு நின்று கோஷித்தன
நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–நெடு வரைகளாகிற தோரணங்களை நிரைத்து உலகில் உள்ளார் எங்கும் தொழுதனர்
உலகம் என்று லோக பிரதானரை லஷிக்கிறது
இவ்விரண்டு பட்டாலும் அந்தரிக்ஷ பர்யந்தமான பூ லோகமானது உகந்து ஆதரித்த படியை ப்ரதர்ஸிப்பித்தாராய்த்து –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-2-
மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச் செய்கிறார் –
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்–பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்–நிருபாதிக சேஷியானவனுடைய அடியாரைக் கண்டு நல்ல நீரை யுடைத்தான மேகங்களானவை உகப்பாலே -உயர்ந்த ஆகாசத்தில் பூர்ண கும்பங்களாக சமைக்கப் பட்டன –முற்படக் கண்டு உகந்தன -பின்பு அவை தானே பூர்ண கும்பங்களாகாய்த்தின -ஒரு கால் தூர்ய கோஷத்தைப் பண்ணினோம் என்று இருக்கிறனவில்லை –ஆகாச சரரான தேவர்களால் ஆகாசம் எங்கும் பூர்ண கும்பம் வைக்கப் பட்டது என்றுமாம் –
நீரணி கடல்கள் நின்றார்த்தன –நீராலே அணியப் பட்ட கடல்கள் ஒருகால் ஆடினோம் என்று இராதே -ஹர்ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்தன –
நெடுவரைத்-தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–அவ்வோ லோகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள் -உலகு என்று லோகத்தில் உள்ளாரைச் சொல்லுகிறது -மஞ்சா க்ரோஸந்தி இத்வத் — -சத்ர சாமர பாணிஸ்து-என்கிறபடியே ஹர்ஷத்தாலே எல்லா அடிமைகளும் செய்யா நின்றார்கள் –
———
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-2-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
முதல் பாசுர சேஷம் -7 பாசுரம் வரை பிரகிருதி மண்டல ஸத்காரம்
நிருபாதிக சேஷி நாராயணன் சேஷ பூதர்களைக் கண்டு லோகத்தார் சதிகரிக்க
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-நிருபாதிக சேஷி உடைய சேஷ பூதர்கள் -சுத்தமான நீர்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்-உயர்ந்த ஆகாசத்தில் பூரணமான பொன் குடம் போலே பூரிக்க
-நீல வர்ணம் -ஆழ்வாரை கண்ட பள பளப்பு –
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்-நீரை வகிக்கும் கடல்கள் ஒருபடிப் படி நின்று கோஷிக்க
நெடு வரையில் மலைகள்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே-தோரணம் கட்டி -உலகில் உள்ளார் எல்லா பக்கமும் தொழ
முகில் ஒருமை ஜாதி பரம் -முகில்கள் அனைத்தும்
அந்தரிக்ஷ பர்யந்தம் பூ லோகம் உகந்து சதிகரிப்பதை சொல்லிற்றே -உலகு -உயர்ந்தோர் மாட்டே –
மேல் உள்ள உலகங்கள்-செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்-
நிர்ஹேதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய-அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை-
உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக-சமைந்தன –முற்பட கண்டு உகந்தன-
பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை-
ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே-ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே-ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —என்றுமாம் –
நீரணி கடல்கள் நின்றார்த்தன-
நீராலே அணியப்பட்ட கடல்கள்-ஒரு கால் ஆடினோம் என்று இராமல்-உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –
உலகே- நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் –
அவ்வவ் உலகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டு-
தாங்களும் தொழுதார்கள் –
உலகம் எனபது உயர்ந்தோரை அன்றோ –
அன்றிக்கே-அங்கு உள்ளாரைச் சொன்னபடியுமாம்-
சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ-ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92-
இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்-
தமையனாரோடு தேரிலே ஏறிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்-
என்கிறபடியே உவகையாலே எல்லா அடிமைகளையும் செய்யா நின்றார்கள் –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply