Archive for May, 2024

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ப்ரவேஸம்-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி நிர்ஹேதுகமாக எம்பெருமானோடே ஸம்ஸ்லிஷ்டரான ஆழ்வார்
தாம் திரு நாடு ஏற எழுந்து அருளும்படியையும்
தாம் எழுந்த அருளும் போது சர்வ லோகங்களும் தம்மைக் கொண்டாடும்படியையும்
திரு உள்ளத்தால் ப்ரத்யஷீ கரித்து அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —

பரம யோகிகளுக்கு சம்பவிப்பதான -பகவத் ஞான -வைராக்ய பக்தி பிரகாரங்களை -இத் திருவாய் மொழி அளவும் அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது ஒன்றும் இல்லாமையால் -திரு நாடு ஏறப் போக வேணும் -என்று மநோ ரதிக்கிற ஆழ்வாரை
ஈண்டென கொடு போக வேணும் என்று விரைகிற எம்பெருமான் இவருக்கு அங்குத்தைக்கு ஈடாகும் படி மிகவும் விடாய் பிறக்கைக்காக
திரு நாட்டுக்கு போகைக்கு ஈடாக வேதாந்தங்களில் பிரசித்தமான -அர்ச்சிராதி மார்க்கத்தையும் -அங்கு உள்ளார் பண்ணும் –
ஸத்காரங்களையும் -அவ்வழியே போய்ப் புக்க கடவிய திரு நாட்டையும் -அங்கே எம்பெருமான் அயர்வறும் அமரர்கள் சேவிக்க –
பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளும் படியையும் -பரம ப்ராப்யரான அயர்வறும் அமரர்கள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும்
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி —

ஒன்பதாம் திருவாய் மொழியில் -கீழில்-திருவாய் மொழி இறுதியாக பகவத் விஷயமாகத் தமக்கு
அனுபவ ப்ராவண்ய ரூபமான பரபக்தி நடந்தபடியே அருளிச் செய்து
அனுபவத்தில் அன்விதாரான இவர்க்குப் பரிபூர்ண அனுபவத்தில் ப்ராவண்ய அதிசயம் பிறக்கைக்கு உறுப்பாக
இவரைக் கொண்டு போய் அனுபவிப்பிப்பதாக நினைத்து
அர்ச்சிராதி மார்க்கம் முதலாக பிராப்தி பர்யந்தமான ப்ரயோஜன அம்சத்தைப்
பரஞ்ஞான விஷயமாம்படி பிரகாசிப்பிக்க நினைத்த சர்வேஸ்வரனுடைய
போக்ய குண பூர்த்தியையும்
நிருபாதிக சேஷித்வத்தையும்
அநந்யார்ஹத அபாதகத்வத்தையும்
போக்யத்வ பூர்த்தியையும்
அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்
சேஷித்வ சிஹ்னத்தையும்
சமுத்திர ஸாயித்வாதிகளால் வந்த சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஸத்காரத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் முக்தராய்ப் போகிற பாகவதருக்கு பந்தவ்யமான அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உண்டான ஆதி வாஹிக சதிகார பிரகாரங்களையும்
தேச விசேஷ ப்ராப்தியையும்
நித்ய ஸூரி பரிஷத் அந்தர்பவாத்தையும்
அபரோஷித்த க்ரமத்திலே முக்தராய்ப் போகிற பாகவருடைய ஸத்கார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

பரம யோகிகளுக்குப் பிறக்கக் கடவதான பர பக்தி இவர்க்குப் பிறந்து தத் பிரகாரங்களை இத் திருவாய் மொழி யளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிப்பது -ஒன்றும் இல்லாமையால் -பரம பதத்திலே போக வேணும் -என்று மநோ ரதிக்கிற இவரை
-தம்மில் காட்டில் -சடக்கெனக் கொடு போக வேணும் என்று விரைகிற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபத்துக்கு ஈடாம்படி மிகவும் விடாய் பிறக்கைக்காக –
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணாலே கண்டால் போலே விசதமாக பிரகாசிக்கும் படி பண்ணி அருளினான் –
அதாகிறது -வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம்
எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும்
நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் –
நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் -பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே
தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்
-தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது-
அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

——————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

சூழ் விசும்பு -பிரவேசம் –

மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே-
பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக-
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-பிரத்யக்ஷ சமானஹார சாஷாத்காரம் —
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –
பரஞானம் -தர்சன -தசை –தர்சன -சமா நாகாரமான தசை -இடைப்பட்ட நிலை —

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி நெறியையும்-
சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங்களையும்-
அந் நெறியாலே சென்று புகக் கூடிய பரமபதத்தையும்-
நித்ய சூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்-
பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்-
நித்ய சூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்-
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான நித்ய சூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –
தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்-பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது-
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கை-

தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் —சுக்ல கிருஷ்னே –தேவயான மார்க்கம் -முக்தி அபிலாஷை -ஹார்த்தா அனுக்ரஹ தானே வந்து முகம் காட்டி –
7 பாசுரம் வரை பிரகிருதி ஸத்காரம் 8-11- மேலே –
மாதவன் வைகுந்தம் புகவே -அந்த மார்க்கம்
முடி உடை வானவர் எதிர் கொள்ள -நித்ய ஸூ ரிகள்-ஸத்காரம்
பிராட்டிமாரும் -தானுமாக – வந்தவர் –மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை –
மாதவன் தமர் -என்பதால் அந்யாபதேசம் –
ஸோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -சக ஸ்ருதி
பரமம் சாம்யம் உபைதி -சாம்ய ஸ்ருதி
மம சமதர்மம் -சமதர்ம ஸ்ருதி –
சூர்ய கிரணம் பிடித்தே –தேக சம்பந்தம் நீங்கிய பின்பு உடனே -மோக்ஷம் -பகலோ இரவோ -தஷிணாயனமோ உத்தரணமோ –
அர்ச்சிஸ் /பகல்/சுக்ல /உத்தர அயனம் /-சம்வத்சரம் / வாயு லோகம் -முதல் ஆறு –
சூர்ய லோகம் / சந்த்ர லோகம் /வித்யுத் -அமானவான்-/வருண லோகம் /-சுவர்க்கம் /சத்ய லோகம் -ஆகிய 12 -தாண்டி
இவ்வளவையும் காட்டி -மேலும் ருசியை வளர்க்க -நமக்கு அருளிச் செய்ய –
அர்ச்சிராதி மார்க்க பிரதர்சனம் -மார்க்கம் காட்டிக் கொடுத்த குணம் –

28 சூர்ணிகைகள் -கல்யாண குணங்கள் -காட்டி -30 திவ்ய தேசங்கள் -நவ திருப்பதி கணக்கில் 8 திவ்ய தேசம் –
தெளிந்த என் சிந்தை -ஒரே சூர்ணிகை மூன்று திவ்ய தேசங்கள் –
வன் பெரு வானக முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளர் திருப்பதி வடிவுடை கடலிடம் கட்கிலீ என்னுமவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ ஸுஹார்த்த பிரதானம் -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழ் உலகுக்குக் உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் -160
உபய பிரதான ப்ரணவமான உறை கோயிலிலே எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-161 –
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -162-
ருசி விவசரக்குப் பாதமே சரணாக்கும் உதாரயம் வானமா மலையிலே கொழுந்து விடும் -163-
களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் கூட மூக்கிலே ப்ரவஹிக்கும் -164
மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் -165
வ்யவசா யஜ்ஞர் ரக்ஷண ஸ்தைரியம் பம்பா உத்தர தேசஸ்த்தம் -166-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கட நா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் -167-
கடி தகட கவி கடநா பாந்தவம் அவ்வூரிலே த்வி குணம் -168-
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -169
சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -170
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே -171-
சாதராரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித்த ஆஸ்ச்சர்யம் குளத்தே கொடி விடும் -172-
ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்யா பிரகாசம் ஆய்ச்சேரியிலே -173
மஹா மத்தியில் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -174-
சாத்ய ஹ்ருதி ஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே -175-
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழமூரிலே கூட்டமிடும் -176-
போக்ய பாகத் த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் பிறக்கட்டும் -177
போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -178
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -179
பிரிந்த துன்பக் கடல் கடத்துக் விஷ்ணு போது ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -180
சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதாகத்திலே பிரசித்தம் -181-
மார்க்க பந்து சைத்யம் மோஹ நத்தே மடுவிடும் -182-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூரார்ச்சிநத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் -183-
மோக்ஷ தானத்தில் ப்ரண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -184-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும் -185
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -186-
12 மலை நாட்டு திவ்ய தேசங்கள் / 5 சோழ நாட்டு திவ்ய தேசங்கள் / 1 வட நாட்டு திவ்ய தேசம் / 12 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் /-ஆக 30 –
38 திவ்ய தேசங்கள் –ஊரகம் / பாடகம்/ வெக்கா/ அயோத்யா/ த்வாரகா / வட மதுரை / பாற்கடல் / பரம பதம் -சேர்த்து -38-

அது வரை தான் கால தாமதம் -பிராரப்த கர்மம் தொலையும் வரை -ஞானம் ஆதித்யவது -கர்மங்களால் மூடப்படாமல் -விளங்கி –
சூஷ்ம சரீரம் -நுண்ணிய மேனி உடன் சென்று -ஸத்காரம் -பெரிய கல்யாணம் போலே
-பரன் போலே சஜாதீயம் தானே ஞாத்ருத்வம் -ஆனந்தமயத்வம் -சேஷத்வம் -பாரதந்தர்யம் –
சக சாம்யா சமதர்ம சுருதிகள்
இடத்தால் கூடி இருந்து -சாமியாபுத்தி பெற்று -சமதர்மம் பெற்று -ஞானா ஆனந்தங்களில் சாம்யம் -போக மாத்ர சாம்ய லிங்காசா -ஸூ த்ரம்-
ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஏக போக உரிமை அவனுக்கு -யுக பத்தாக அனுக்கிரக கார்யம் –
சேஷி மற்ற சேஷ பூதர்களையும் இப்படி ஆக்க பரம காருண்யத்தால் செய்யும் கிரியைகள் –
ஆனந்தம் இங்கே -அங்கு எதிர்பார்ப்பு -மகிழ்ச்சி -ஆழ்வார் திரு அடி சேவை -கைகளில் எழுந்து அருளி -பெருமாள் திருவடிகளில் –
பிரத்யக்ஷ மாக பிரமாணம் காட்டி -நம்பிக்கை கொடுத்து நமக்கும் இந்த பேறு-சூழ் விசும்பு -பாசுரம் அனுசந்தித்து
நம்பெருமாள் அனைத்தையும் களைந்து ஆழ்வாருக்கு சம்பாவனையாக கொடுத்து அருளி
செம்மா பாத பற்பு தலை மேல்சேர்த்து -இளையவர்க்கு கவித்த மௌலி – சர்வ ஸ்வதானம்-பண்ணி – பிரபன்ன ஜன கூடஸ்தர் –
பிரபத்தி ஏற்றம் காட்டி அருளி -திருத் துழாய் வைத்து மறைத்து -அவா அற ச் சூழ் -சாத்து முறை பாசுரம் சாதித்து பிரசாதம் சாதிப்பார்கள் –
பிரகிருதி உள்ளார் ஆர்ப்பாராம் முதல் இரண்டு பாசுரங்கள் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-11-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-11-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு அல்லல் நில்லாதே -இது நிச்சிதம் -என்று கொண்டு
இத்தையே பின்னையும் அநு பாஷித்து திருப்பேரை ப்ரதிபாதித்த இத்திருவாய் மொழி வல்லார்
இட்ட வழக்காம் திரு நாடு என்கிறார்

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் இட்ட வழக்காம் -விலக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

பெருத்த  வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப் பேர் மேலே விலக்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து க்ருதார்த்தரான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய சொல் சேர்ந்த-
தமிழனா ஆயிரம் திரு வாய் மொழியிலும் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-11-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக ஸ்வா ராஜ்ய ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-துக்கத்துக்கு வாஸஸ் ஸ்தானம் அல்லாத தேசமாய்
பெரிய பரப்பை யுடைத்தான வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-விலக்ஷண புருஷரானார் பலரும் திருவாய் மொழி கேட்டு வாழ்கிற
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல்லாய்ச் சேர்ந்து இருக்கிற தமிழனா ஆயிரத்தில் இவை பத்தையும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–அப்யஸிக்க வல்லரான பாகவதரானவர்கள் தங்கள் நிர்வாஹகராய்
நடத்துமது அபரிச்சின்னமாய்க் கொண்டு வ்யாப்தமாய்
தேஜோ மாயமாய் பரம வ்யோம சப்த வாஸ்யமான பரமபதம் –
இது கலித்துறை –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-11-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் இட்ட வழக்காம் -வி லக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்--துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பி
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல் சேர்ந்த தமிழான ஆயிரம்  என்னுதல் -பாட்ட்யேகேயேச மதுரம் என்கிறபடியே இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் என்னுதல்
வல்லார் தொண்டர்-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் -செஞ்சொற்கவிகள் என்கிறபடியே வாசிகமான அடிமை செய்யும் வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே–நிரதிசய தேஜோ ரூபமான பரம பதத்தை யாய்த்து ஆளுவது -இத் திருவாய் மொழிஅப்யசித்தவர்கள் சென்றால் ஆண்மின்கள் வானகம்-என்றாய்த்து -அங்குள்ளார் சொல்லுவது –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-11-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்து – சக்தி பிராப்தி பூர்த்தி -முன் மூன்று பதிகங்களில்
-சக்தத்வம் சத்ய காம்தவம் ஆபத் ஸகாத்வம் அன்றோ இவற்றுக்கு –
ஆத்ம தரிசன பல பிராப்தி மரணாவதியாகப் பெற்று காலாசத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றை
பிறர் அறிய பத்துத் தோறும் வெளியிடுகிறார் -அன்றோ
அர்ச்சிராதி மார்க்கம் வழி போவார்கள் நச புன பார்த்ததே -லேசான மோக்ஷம் அடைவோம் –
ஆனால் நச புன பார்த்ததே என்று அங்கு சென்றவர்கள் எல்லாம் அர்ச்சிராதி கதி வழியே போக வேண்டாம்
-சத்ய லோகம் -12 வைத்து லோகம் -அங்கே இருந்தே அவன் போகலாமே -அர்ச்சிஸ் முதலில் உள்ள மார்க்கம் போக வேண்டாமே -அவனுக்கு –
சரீரமாக இருப்பவை -எல்லாம் -பிரகாரமாக இருப்பவை -தான்
பிரகாரமாக இருக்கும் எல்லாம் சரீரம் ஆக வேண்டாம் புஷபம் மணம் போலே -மணம் குணம் தானே த்ரவ்யம் இல்லை –
யஸ்ய சேதனஸ்ய ய த்ரவ்யம் -சேதனத்வமும் த்ரவ்யமும் வேணும் -சரீராத்மா பாவம் சொல்ல –
சுவீக்ருத சித்த சாதனர்-இத்தை சாத்தியமாக இரக்க-பிராப்திக்கு முன்னே சித்திக்கும்
-பர பக்தி பர ஞானம் பரம பக்தி -என்பதை இத்தை என்கிறார் நாயனார் –
பகவத் இச்சா ஆதீனமாக ஆவிர்பவித்த ஆழ்வார் அர்ச்சிராதிகதி அறிந்து -அவன் காட்டக் கண்டு அருளிச் செய்கிறார்
-கடோ உபநிஷத் சாந்தோக்யம் -சொல்லும்
பிடித்தார் பிடித்தாரை பற்றி அல்லல் தீர பெறலாம் என்றார் முன்னம் -உகந்து பணி செய்வதையும் உனபாதம் பிடிப்பதையும் பெற்றேன் —
ஸூ ராஜ்ய பலம் -எல்லாரும் இந்நாட்டு மன்னர் -பரம ஸ்வராட் -ச ப்ரஹ்ம ச சிவ ச இந்திரா –அங்கு தான் -கர்மாதீனம் இல்லையே -பகவத் அதீனம்-
திருப் பேர் -பேரில் மணாளனை ஒரு நாள் சுற்றம் கடைசியில் அங்கும் -திவ்ய தேச பதிகங்கள் முற்றும் இத்துடன் –
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-துக்கம் வாஸ் ஸ்தானம் இல்லா தேசம் நீண்ட வயல்களால் சூழப்பட்ட
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் வி லக்ஷணர் வாழும் -திருவாய் மொழி கேட்டு வாழும் -தொழுவதும் எழுவதும் ஒன்றே போலே
திருவாயமொழி கேட்டு பாடுவதே வாழ்வே
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல்லாய் செறிந்த தமிழ் -செந்தமிழ் -இலக்கிய தமிழ்
-27 சொல் பொருள் எழுத்து -இலக்கணம் -தொல்காப்பியம் -அகஸ்தியர் சிஷ்யர் -எழுத்து
சொல் வாக்கியம் பொருள் பாடல் -யாப்பு இலக்கணம் பொருந்தி
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே-பொன் சூழ் விசும்பு ஹிரண்மயமான விஷ்ணோ பரமம் பதம் -ஆளுவார்கள்
பாகவதர்கள் தாங்களே நிர்வாகராக நடத்துவது பரமபதம் -அபரிச்சின்னமான -வியாப்தமாய் நித்ய விபூதிக்கு மேல் எல்லை இல்லை
லீலா விபூதிக்கு கீழ் எல்லை என்பர் எங்கும் சூழ்ந்து –
சப்தாவரணங்கள் -மூலப் பிரகிருதி பாழ்- தாண்டி விரஜா நதி – ஸ்வயம் பிரகாசம் -அங்கு எல்லாம் -கோடி சூர்ய பிரகாசத்தை இருளாக்கும் படி
-சுத்த சத்வம் பொன் சூழ்ந்த -தேஜோ மயம்-பரம வ்யோமம் மா க வைகுந்தம் -ஆள்வார்கள்

நிகமத்தில்
இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்-இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –
இவர்களும் உடையவர் போலே ஆவார்கள் என்றவாறு —

நில்லா அல்லல் –
துக்கங்கள் ஆனவை-இது நமக்கு இடம் அன்று என்று தாமே விட்டுப் போம் –அநிஷ்ட நிவ்ருத்தி

நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-
பெருத்த வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பேர் மேல்-ஆயிற்றுச் சொல்லிற்று-

நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
பெரியார் பலரும் தம்மை அனுபவித்து-இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்-இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி-ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்-
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –
திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –

சொல்லார் தமிழ் ஆயிரத்துள் –
சொற்கள் தாமே வந்து சேர்ந்த தமிழான ஆயிரம் -என்னுதல்
அன்றிக்கே-இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் -என்னுதல் –

இவை பத்தும் வல்லார் தொண்டர் –
இப்பத்தினை கற்க வல்லவர்கள்-செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே-வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

ஆள்வது சூழ் பொன் விசும்பே-
எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை-ஆயிற்று ஆளுவது-இஷ்ட பிராப்தி –
இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்-
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று-அங்கு உள்ளார் சொல்லுவது-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-10-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-10-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

எம்பெருமான் ஒரு உத்தரம் காணாமை உம்முடைய திறத்தில் நான் செய்த செயல் எல்லாம்
சொன்னபடியே நிர்ஹேதுகமாகவே செய்தேன் -அது நிற்க —
இனி நான் செய்ய வேண்டுவது என் என்ன –
உன் திருவடிகளைப் பெற்றேன் -பெறுகிறேன் -உகந்து பணி செய்து கொண்டு உன் திருவடிகளை பெற்றேன் –
இன்னம் உன் திருவடிகளில் அடிமை செய்யும் இதுவே எனக்கு வேண்டுவது எந்தாய் என்று ஆழ்வார் சொல்ல
எம்பெருமானும் அப்படியே செய்கிறோம் -என்று அருளிச் செய்ய –
ஆழ்வாரும் திருப்பேர் நகரான் திருவடிகளை பற்றினார்க்கு ஒரு கர்மம் -பந்தம் -பாவம் – இல்லை யாகாதே என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-10-

உற்றேன்  உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய -அவனும் அப்படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் -திருப் பேர் நகரான் -திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு ஒரு துக்கம் ஆகாதே என்கிறார் -அற்றாரான அடியார் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-10-

அநந்தரம் கைங்கர்ய பிரதிசம்பந்தியான அவன் திருவடிகளை அடிமை செய்து பெற்றேன் –
யாவதாத்ம பாவி எனக்கு இதுவே அமையும் என்கிறார் –

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்—நிர்ஹேதுகமாக
உன் திருவடிகளைக் கிட்டினேன் -அத்தாலே -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு
வாசிகமான அடிமை செய்து பரம ப்ராப்ய பூதனான உன் திருவடிகளைப் பெற்றேன் –
நிருபாதிக பந்துவானவனே -இவ்வடிமையே இவ்வாத்மாவுக்கு உள்ளதனையும் அபேக்ஷிதம் -இது உண்டாகவே
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–ஆச்சார்ய முகத்தால்
ஞாதவ்யங்களை அப்யசித்தவர்களாய் ஸ்ருதமான வேதார்த்தங்களை நிர்வஹிக்க சமர்த்தரானவர்கள்
பகவத் அனுபவத்தோடு வாழுகிற திருப்பேரிலே வர்த்திக்கிற உனக்கு –
அடியார் தமக்கு அனுபவ பிரதிபந்தக பாவங்கள் தன்னடையே நில்லாது இறே
அற்றாருக்கு அடியார் என்றுமாம் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-10-

இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார் -அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும்  பிரசங்கியாதோ  -என்னில் -இத்தலையில் ருசியை அபேக்ஷித்துச் செய்கையாலே அவனுக்கு அது தட்டாது -அது ஹேது வென்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயமாக மாட்டாது -பல வ்யாப்தமானது இ றே உபாயம் ஆவது -இந்த ருசி அதிகார ஸ்வரூபம் ஆகையால் தத் விசேஷணமாம் அத்தனை -உபாயம்  சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது -இது உபாயம் அல்லாமையாலே இவர்க்கு இல்லை என்னஅவனுக்கு உண்டு என்னவுமாம் –

உற்றேன்  உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

உற்றேன்உகந்து பணி செய்ய உன பாதம்-பெற்றேன்-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –
ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இ றே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –
எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இ றே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
கற்றார்-ஒரு ஆசனத்தின் கீழே இருந்து போக்கினவர்கள் –
மறை வாணர்கள் வாழ் -வியாச பதம் செலுத்த ஷமர் ஆனவர்கள் அனுபவித்து வர்த்திக்கிற தேசம் –
திருப் பேராற்கு–ப்ரீதி பிரகரஷத்தாலே முகத்தை ஸ்வகதமாகச் சொல்லுகிறார் -என்னுதல் -திருப் பேரனான உனக்கு என்னுதல் –
அற்றார் அடியார் -திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல் -அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் -என்னுதல் –

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-10-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

கைங்கர்ய பிரதி சம்பந்தியான அவன் திருவடிகளில் அடிமை செய்வதும் -கைங்கர்யம் செய்வதும் பிராப்தம் –
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்-நிர்ஹேதுகமாக -அத்தால் ஆனந்தம் உந்த வாசிக்க திருவாய் மொழி பாடி –
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்-குடல் துவக்கு உள்ள ஸ்வாமி -இது ஒன்றுமே ஆத்மாவுக்கு வேண்டியது –
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு-இந்த எண்ணம் வரவே உகந்து அருளினை தேசங்கள் -இத்தையே வேதம் சொல்லும்
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–அநந்யார்ஹ சேஷ பூதர்களுக்கு அனுபவ பிரதி பந்தகங்கள் நிற்காதே –
சேஷமாக இருப்பிற்கு சேஷ பூதர் அற்றார்க்கு அடியார் –

இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-விடை அளித்தால் அற்றவனாய்-உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன-
ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்-
அவன்தானே செய்தான் -என்னும் அன்று-அவனுக்கு உயர்வு தாழ்வு காண்டலும்-
அருள் பெற்ற தன்மையும்-எல்லார்க்கும் மோஷம் கொடுத்தலும்-என்னும் இவை வாராவோ -என்னில்-
இத்தலையில் ருசியை விரும்பிச் செய்கையாலே-அவனுக்கு அவை உண்டாக மாட்டா-
அதுவே காரணம் என்று ஈஸ்வரன் அதனைச் சொன்னாலோ என்னில்-அது உபாயம் ஆக மாட்டாது
பலத்தோடு கூடி இருப்பது அன்றோ உபாயம் ஆவது-
இந்த ருசி அதிகாரியின் உடைய ஸ்வரூபம் ஆகையாலே-அவனுக்கு விசேஷணம் ஆம் இத்தனை-
உபாயம் வேறு துணையை விரும்பாதது ஆகையாலும்-இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது-
ஆக
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னவுமாம்-
சர்வ முக்தி பிரசங்கம் நீங்குவதற்காக அவனுக்கு உண்டு -என்னவுமாம் –

உற்றேன் –
கெடுமரக்கலம் கரை சேர்ந்தால் போல்-கிட்டிக் கொடு நின்றேன் –

உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் –
ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு-திரு வாய் மொழி பாடி-
உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்-
உகந்து பணி செய்கை சாதனமாக-மேல் சாதனத்தால் அடையக் கூடிய பேற்றினைச் சொல்லுகிறது அன்று-
இரண்டும் ஒரே காலத்திலே உள்ளன ஆகையாலே-

ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –
இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது-
மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் –
இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்-
இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

கற்றார் –
ஒரு ஆசனத்தின் கீழே இருந்து கற்றவர்கள்-

மறை வாணர்கள் வாழ் –
வேதத்திற்கு -வியாச பதம் -வியபதேசம் செலுத்த வல்லவர்கள்-அனுபவித்து வசிக்கிற நகரம்-

திருப் பேராற்கு –
ப்ரீதியின் மிகுதியாலே முகத்தை மாற்றி-தனக்குத் தானே சொல்லுகிறார் -என்னுதல்-
அன்றிக்கே –திருப் பேரரான உனக்கு -என்கிறார் -என்னுதல் –எந்தாய் -சம்போதனம் என்றவாறு –

அற்றார் அடியார் தமக்கு-
திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல்
அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் என்னுதல்-
அல்லால் நில்லாவே –
ஒரு துக்கமும் இவர்கள் பக்கல் நில்லாது-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-9

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-9

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

திருப்பேர் நகரான் இன்று என்னை ஸ்வ விஷய திவ்ய ஞானவான் ஆக்கித் தன்னை என்னுள்ளே வைக்கைக்கு ஹேது என் –
இதற்கு முன்பு இப்படிச் செய்யாது ஒழிகைக்கு ஹேது என் என்று அவனை நான் கேட்க்கிறேன் –
இதற்க்கு ஓர் உத்தரம் வல்லனாகில் சொல்லுவான் என்கிறார் –
ஒரு க்ஷணம் பிரியில் தரிக்க மாட்டாதே மத் ஏக தாரகனாய் இருக்கிற இவன் இதுக்கு முன்பு
அநாதி காலம் எல்லாம் என்னை விட்டு எங்கனே தரித்து இருந்தான் என்று கிடக்கிறார் என்றுமாம் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-9

இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

குன்று போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் ஓன்று எனக்குச் சொல்ல வேண்டும் என்று உணர்த்த வேண்டி இருந்தேன் –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-9

இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

நிதான பாசுரம் -இன்று நிர்ஹேதுகமாக உபகரித்தவன் -முன்பு உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் -என்று கேட்க வேண்டி இருந்தேன்
-பதில் சொல்லாமல் பதில் கிடைக்கப் பெற்றேன் -சிரிக்க -புரிந்து கொண்டார் -மயர்வற மதி நலம் அருள பெற்றார் அன்றோ –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்-பிரதம கடாக்ஷம் பெற்ற -மயர்வற மதிநலம் அருள பெற்ற பின்
-இக்காலம் -முன்பு அசன்னேவா -என்று கிடந்த என்னை -சந்தமேவ -வஸ்துவாக்கி -ஹேயமான என் நெஞ்சுக்குள் அவனை தானே வைத்தான்
-அனுமதி கெடுக்காமல் எதுவும் செய்யாது இருக்க இன்று செய்தாய் என்றால்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்-முன்பு உபேக்ஷித்து- தான் இட்ட வழக்காக பராதீனனான என்னை –
எப்பொழுதும் அடிமைப் பட்டவன் தானே ஜீவாத்மா -ருசி எதிர் பார்த்து இருந்தேன் சொல்லலாமே –
இன்று எதனால் கொடுக்கிறாய் கேட்க்கிற நான் முன்பு கேட்க வில்லையே –
பராதீனப் பட்டதாக சொல்ல வில்லையே -சோற்றை உண்ண பசி வேண்டுமே -ருசி வேண்டுமே
தன் பக்கல் விமுகனாய் விஷயாந்தரங்களில் கை கழிந்து போம் படி சங்கல்பித்தது எதனால்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மாடங்கள் சூழ்ந்த திவ்ய தேசம்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே-இன்று அருளியவற்றுக்கு ஹேதுவோ அன்று உபேக்ஷித்தத்துக்கு ஹேதுவோ
ஒன்றை உணர்த்தி அருள வேணும் -நித்ய தத்வம் காருண்யம் நித்யம் சாதன பாவம் என்னிடம் அன்றும் இன்றும் இல்லையே
இத்தை கேட்க நினைத்து இருக்கிறேன் -உணர்த்தல் உற்றேன் -உத்தியோகித்து இருந்தேன்
ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-9

இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

இன்று என்னைப் பொருள் ஆக்கி -அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –
தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை
என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்–பர தந்த்ரனான என்னை புறம்போகப் பண்ணிற்று என் செயகைக்காக -பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை -புறம் போக விட்டானும் அவனே என்று இருக்கிறார் -ஸ்வ சத்தை பர அதீனமாய் இருக்கை -இவ் வஸ்துவுக்கு போக்கு வரவு ஆவது என் -இரண்டுக்கும் காரணம் சொல்ல வேணும் –
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மலைகள் போன்று விளங்கா நின்றுள்ள மாடங்களாலே சூழப் பட்ட திருப் பேர் நகரான் –
ஓன்று எனக்கு அருள் செய்ய -இன்று விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்ல வேணும் –முன்பு உபாசித்தத்துக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே–அறிவிக்க வேண்டி இரா நின்றேன் -இதுக்கு ஈஸ்வரன் இவருக்கு சொன்ன உத்தரம் ஏது என்று சீயர் பட்டரைக் கேட்க -இவர் தலையிலே ஒரு பழி ஏறிட்டு நெடு நாள் இழந்த நாம் சொல்லுவது என் -என்று லஜ்ஜா விஷ்டனாய் நின்றான் -என்று அருளிச் செய்தார் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-9

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

நிதான பாசுரம் -இன்று நிர்ஹேதுகமாக உபகரித்தவன் -முன்பு உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் -என்று கேட்க வேண்டி இருந்தேன்
-பதில் சொல்லாமல் பதில் கிடைக்கப் பெற்றேன் -சிரிக்க -புரிந்து கொண்டார் -மயர்வற மதி நலம் அருள பெற்றார் அன்றோ –
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்-பிரதம கடாக்ஷம் பெற்ற -மயர்வற மதிநலம் அருள பெற்ற பின்
-இக்காலம் -முன்பு அசன்னேவா -என்று கிடந்த என்னை -சந்தமேவ -வஸ்துவாக்கி -ஹேயமான என் நெஞ்சுக்குள் அவனை தானே வைத்தான்
-அனுமதி கெடுக்காமல் எதுவும் செய்யாது இருக்க இன்று செய்தாய் என்றால்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்-முன்பு உபேக்ஷித்து- தான் இட்ட வழக்காக பராதீனனான என்னை –
எப்பொழுதும் அடிமைப் பட்டவன் தானே ஜீவாத்மா -ருசி எதிர் பார்த்து இருந்தேன் சொல்லலாமே –
இன்று எதனால் கொடுக்கிறாய் கேட்க்கிற நான் முன்பு கேட்க வில்லையே –
பராதீனப் பட்டதாக சொல்ல வில்லையே -சோற்றை உண்ண பசி வேண்டுமே -ருசி வேண்டுமே
தன் பக்கல் விமுகனாய் விஷயாந்தரங்களில் கை கழிந்து போம் படி சங்கல்பித்தது எதனால்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மாடங்கள் சூழ்ந்த திவ்ய தேசம்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே-இன்று அருளியவற்றுக்கு ஹேதுவோ அன்று உபேக்ஷித்தத்துக்கு ஹேதுவோ
ஒன்றை உணர்த்தி அருள வேணும் -நித்ய தத்வம் காருண்யம் நித்யம் சாதன பாவம் என்னிடம் அன்றும் இன்றும் இல்லையே
இத்தை கேட்க நினைத்து இருக்கிறேன் -உணர்த்தல் உற்றேன் -உத்தியோகித்து இருந்தேன்
ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –

இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு-என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் –இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்-விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்-இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே
என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு –
இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-

நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று-
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி –
அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்

இன்று என்னைப் பொருள் ஆக்கி –
அசேதனத்தைப் போலே இருந்த என்னை-ஒரு பொருளாம் படி செய்து-
பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை-

தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –

என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை-முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –

அன்று –
என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு-முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும்சொல்கிறார் –
இன்று -என்கிறது-மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`-

என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் –
பரதந்த்ரனான என்னை-புறம்பு போகப் பண்ணிற்று என் செய்கைக்காக-
புறம்போகப் பண்ணுகையாவது-பராமுகம் செய்தல் –
இழந்த நாள் இழந்ததும் அவனாலே –
பெற்ற இன்ற பெற்றதும் அவனாலே -என்று இருக்கிறார் –
ஸ்வதந்த்ரம் இல்லாத பொருள் செல்ல நிற்க வற்றோ –வர நிற்க வற்றோ –

குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இப்படி மதிப்பனானவன்-மலைகளை சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள-
மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் –

ஓன்று எனக்கு அருள் செய்ய –
முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –
இன்று என்னை அங்கீகரித்ததற்கு காரணம் சொல்லவுமாம் –

உணர்த்தல் உற்றேனே –
இதற்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேண்டும்-என்று திரு உள்ளத்தில் படும் படி-
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன்-

உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பனி செய்து -என்று சமாதானம் அடைகிறார்-
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்-அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்-
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே-
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே-பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –

இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று
நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி-வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்-
மாமியர் குழுவில் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப -கம்பர் -தாரை முன்னால் இளைய பெருமாள் நிலை –

தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்.


அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்-
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்-
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்-படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்-வைஷம்யம் நைர்கருண்யம் வருமே –
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ என்னில் -அது செய்யாது-சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
அடியிலே வெறுப்பின்மையும்-இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி-அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –அதிகாரி விசேஷணம் -ருசி –

கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே-
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்-
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து-விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்-
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்-
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே-
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று-
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது-என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9-
என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட-அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் எனபது எனக்கு-மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிறபாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ-
இவர் தாம் -லஜ்ஜித்த அவனை -எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை-
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே-
சைத்தன்ய பிரயுக்தமான ருசி -ஸ்வரூபத்துடன் சேர்ந்தது -உபாயம் ஸ்வரூபம் உடன் சேராதே -பற்ற வேண்டுமே –
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன-அதுவே அமையும் -என்கிறார்-
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ-விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-வரவாறு ஒன்றி இல்லை -வாழ்வு இனிதானதே என்றாரே –

பசியும் ருசியும் உபாயம் ஆகாதே -அனுபவத்துக்கு வேண்டிய அதிகாரி விசேஷணம் தானே

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-8-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-8-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாக் மனஸ் அகோசர ஸ்வரூபனாய் பரம போக்யனாய் இருந்த திருப்பேரான் கண்ணுள் நின்று அகலான் –
தன்னாலும் விஸ்லேஷிக்க ஒண்ணாத தொருபடி என் நெஞ்சிலே புகுந்து செறிந்தான் –
இன்னம் இவ்வளவன்று இவனுடைய பாரிப்பு என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-8-

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து ஹிருதயத்திலே புகுந்தான்

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-8-

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து ஹிருதயத்திலே புகுந்தான்

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து என் பக்கல் வியாமோஹத்தைப் பண்ணி –ஹிருதயத்திலே புகுந்தான்-என்கிறார்

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

கண்ணுள் நின்று அகலான்-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்
கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –
எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து -ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இ றே பிரதானம் –
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –தேசத்தில் போக்யத்தையும் -மேன்மையும் இருக்கிற படி -நாநா வர்ணமாய் மஹார்க்கமான ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களாலே சூழப் பட்ட தேசம் –
என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –தன்னை ஆதரித்து இருக்கிற என்னுடைய ஹிருதயத்திலே தன் வியாமோஹம் எல்லாம் தோன்றும் படி வந்து புகுந்தான் –
திண்ணம்-சர்வேஸ்வரன் ஒரு சம்சாரி ஹிருதயத்திலே இப்படி மேல் விழக் கூடுமோ -என்று சங்கிக்க வேண்டாம் -இது த்ருடம் —

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-8-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

சர்வ பிரகாரத்தாலும் செறிந்து –நிரதிசய போக்யனாகக் கொண்டு புகுந்தான்
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்-பாஹ்யமான கண்ணுக்கு விஷயமாகி -நித்யம் விஷயமாய் -விபவ வடிவத்திலே –
நினைவைப் பார்த்த இடத்தில் பெரிய பாரிப்புடன் இருந்தான் -பரம பதம் கூட்டிப் போக -வீடு திருத்தி வைத்து
-பெரிய திட்டம் -தேச விசேஷம் கொண்டு போய் அனுபவிக்கைக்கு ஈடாக
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே-தாம் தாம் அறிய எண்ணும் அளவில் அதி ஸூஷ்மமான
நுண்ணிய ஸ்வ பாவன்-சப்த ராகங்களின் சுவையுடன் -சாரஸ்யம் -இவனை அனுபவித்தே ஆழ்வார் பல பண்களால் திருவாய் மொழி அருளி
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்-நாநா வர்ணம் -மாணிக்கங்களால் சமைந்த மாடங்கள்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே-இன்றே புகுந்தான் -செறிந்து புகுந்தான் -திண்ணம் புகுந்தான் –
நிர்ஹேதுகமாக -நிச்சயமாக திரும்பிப் போகாத படி புகுந்தான் –

எல்லை இல்லாத இனியனான-திருப் பேர் நகரான்-என் பக்கலிலே காதலை வைத்து
ஒரு நாளும் போகாதபடி-என் நெஞ்சிலே வந்து புகுந்தான் –என்கிறார் –

கண்ணுள் நின்று அகலான் –
எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –
சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன் -என்றபடி –

கருத்தின் கண் பெரியன் –
உபய விபூதி நாதனாய் இருத்தலால் வரும்-வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து
இவரை அவ்வருகே கொண்டு போகையிலும் -ஆதி வாஹிகரை ஏவுகையிலும்-
வீடு திருத்த -தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் -பாரியா நின்றான் –
அன்றிக்கே -நம் கார்யத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று -என்னுதல் -என்றது –
இவ்வளவினன் -என்று எண்ண முடியாதவன் -என்றபடி –
யச்யாமதம் தஸ்ய மதம் –அவிஞ்ஞாதம் விஜாநதாம் – கௌஷீகிதி உபநிஷத்
இது தான்- எவனுக்கு அறியப் படாதது -என்கிற -ஸ்வரூபத்தால் -பொது நோக்கால் அன்று -பின்னர் எதில் எண்ணில்
நம் கார்யத்தில் இங்கனே இருக்கும்-
என் மனத்துப் புகுந்தான் -என்றதனோடு சேர வேண்டும் அன்றோ -கருத்தின் கண் பெரியன் -என்கிற இதுவும்

எண்ணில் நுண் பொருள் –
அவன் தானே இப்படி மேல் விழில்-விழும் அத்தனை போக்கி-தம் தாமே அறியப்பார்ப்பார்க்கு-அறியப் போகாது –

பஹூ மநோ ரத்தங்களைப் பண்ணுகிறான் –
பாரிப்பு எண்ண முடியாத அளவு / என் கார்ய விஷயத்தில் பெரியவன் / இயத்தா ரஹிதன் அப்படிப்பட்டவன் என்ற அளவு அல்லன் -/
ஸ்வரூப அபரிச்சின்னன் என்று சொல்ல முடியாதே மனத்தில் செறிந்தான் திண்ணம் என்பதால் பிரகரணத்துக்கு சேராது – என்றவாறு /
விசார அவ்விஷய பூதன்-என்று சொன்னாலோ என்னில்-ஸூ ஷ்ம விஷயம் -எண்ணில் நுண் பொருள் –

அறிய அரியன் என்று கை வாங்கி இருக்கலாம் பொருள் அன்று –
ஏழிசையின் சுவை தானே –
வருந்தியும் மேல் விழ வேண்டும் பொருள் ஆயிற்று-இது இனிமை இருந்தபடி –

வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –
இது மேன்மை இருந்தபடி –

என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –
சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்-
எனது ஆவியுள் கலந்த -8-8-4- என்னுமாறு போலே-
அறப் பெரியவன் ஆனவன் இப்படி நம் பக்கல் மேல் விழக் கூடுமோ -என்று தாமும் ஐயம் கொண்டார்-
அதற்கு வேறு போக்கடி கண்டிலர்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-7-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-7-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

என்னுள் அடங்காதே பொங்கிப் புறப்படுகிற பரம பத்தி அவசான ரூபமாய் –
இவ்வாத்மாவினுடைய பகவத் சேஷத்வ ப்ரதிபாதகமான திரு மந்திரத்தினால் ப்ரதிபாத்யமாய் இருந்த பகவத் கைங்கர்ய
ஏக ரதித்வத்தைப் பெற்ற நான் கண்கள் ஆர அளவும் நின்று கண்டு களிக்கும் படியாகத்
திருப்பேரான் என் கண்ணுள் நின்று அகலான்-
இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனிமேல் அநவாப்தவ்யமாய் இருபத்தொரு ப்ராப்யம் உண்டோ என்கிறார் –

—————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-7-

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

மேலான தாஸ்ய ரசம் பெருகினால் -அதன் முடிவில் ஆற்றாமை சொல்லும் -நம-என்கிற சொல்லைச் சொல்லப் பெற்றேன் -வண்டு களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரான்-நான் கண்டு க்ருதார்த்தனாம் படி கண்ணுள்ளே நின்று அகலுகிறிலன்-இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி குறை யுண்டோ –

———————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-7-

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

மேலான தாஸ்ய ரசம் பெருகினால் -அதன் முடிவில் ஆற்றாமை சொல்லும் -நம-என்கிற சொல்லைச் சொல்லப் பெற்றேன் -வண்டு களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரான்-நான் கண்டு க்ருதார்த்தனாம் படி கண்ணுள்ளே நின்று அகலுகிறிலன்-இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி குறை யுண்டோ –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-7-

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

உண்டு களித்தேற்கு –ஞான அனுபவத்தால் களிக்கப் பெற்ற எனக்கு -இதுக்கு மேலே ஒன்றுமே வேண்டா -இதுவே அமையும் என்னும் படி ஞான அனுபவம் தானே இனிதாய் இ றே இருப்பது –
உம்பர் என் குறை -மேலே என்ன குறை யுண்டு –உம்பர் -மேல் –
மேலைத்தொண்டு உகளித்து –மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இ றே கீழான தாஸ்யம் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் -நம இத்யேவ வாதின -இ றே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகள் மது பானம் பண்ணி களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரிலே வர்த்திக்கிறவன் -ஞானாதிகரோடு திர்யக்குகளோடு வாசி அறக் களிக்கும் தேசம் –
கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –
கண்ணுள் நின்று அகலானே--நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்திலும் நின்றும் போகிறிலன் -விஷய பிரவணரை போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு போகாதாப் போலே -இப்படி அவனை அனுபவித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி மேல் ஒரு குறை யுண்டோ –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-7-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

நித்ய அனுபவம் பண்ணும் படி சந்நிஹிதன் -அனுபவிப்பதால் மேல் என்ன வேண்டும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்-தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அதிகமான தாஸ்யம் -முடிவிலே நம தொழுகைக்கு வாசகம் சொல்லப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகள் மது பானம் பண்ணி
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே -கண்டு ஹர்ஷிக்கும் படி -கண்ணுக்கு விஷயம் ஆன பின்பு

அவனுடைய ஆதாரத்தால்-தமக்கு குறை இல்லாமையை-அருளிச் செய்கிறார் –

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை –
இப்படி அனுபவித்துக் களிக்கப் பெற்ற-எனக்கு ஒரு குறை உண்டோ –
மயர்வற மதிநலம் அருளப் பெற்று-
அவனுடைய குணங்களை அனுபவித்த எனக்கு மேலே வேண்டுவது ஓன்று உண்டோ -என்கிறார் –
ஞானத்தை அடைந்த பிறகு -அவ்வருகில் உள்ள பரம பதத்தை-பெற்றிலோம் என்று வருவது ஒரு குறை உண்டோ –
உம்பர் -என்றது -மேல் -என்றபடி –

மேலைத் தொண்டு உகளித்து –
மேலான அடிமை இன்பம் மிகுந்து-
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி – பரம சம்ஹிதை –
பரம் பொருள் எந்த எந்த வழியில் செல்கிறானோ அவ்வவ் வழியிலே உயிரும் செல்கிறது –என்கிற இன்பத்தை அனுபவித்து –
சேவா ஸ்வவ்ருத்தி ஆக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் – மனு ஸ்ம்ருதி -4-4-8
ஒருவனுக்கு அடிமையாக இருப்பது இழிந்த செயல் -என்றது போல் அன்றே –ஸ்வரூப அனுரூபமாக உள்ளதன்றோ இது –
தொண்டு உகளித்து –
தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –

அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-
அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று
மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –
முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின -பாரதம் மோஷம் -என்கிறபடியே –
அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்
யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே
மேலைத் தொண்டு –
அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான் –
வண்டுகள் தேனைக் குடித்துக் களிக்கிற பொழிலாலே சூழப்பட்ட திருப் பேரிலே வசிக்கிறவன் -என்றது –
ஞானத்தாலே மேம்பட்டவர்களோடு-திர்யக்குகளோடு வாசி அறக் – களிக்கும் தேசம் -என்றபடி –

கண்டு களிப்ப –
மெய் கொள்ள காண விரும்பும் என் கண்கள் -3-8-4-என்று-விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –

கண்ணுள் நின்று அகலானே –
நான் போகச் சொல்லினும் கண் வட்டத்தில்-நின்றும் அகலுகின்றிலன்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவர்கள் போகச் சொன்னாலும்-தூணைக் கட்டிக் கொண்டு போகாதவாறு போலே –
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு-மேல் ஒரு குறை உண்டோ –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-6-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-6-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

திருப்பேரையும் திருமாலிருஞ்சோலையையும் தனக்கு கோயிலாக யுடையவன் தனக்கு ஓர் இருப்பிடம் இல்லாதாரைப் போலே
இன்று வந்து இருப்பேன் என்று என்னை இரந்து கொண்டு என் நெஞ்சு நிறைய புகுந்தான் –
பின்னையும் ஒரு நாளைக்கு ஒரு நாள் அவனுக்கும் ஸ்ப்ருஹணீயனாய்
நானும் அவனுடைய குணங்கள் ஆகிற அம்ருதத்தைப் புஜித்துக் களிக்கப் பெற்றேன் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-6-

தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

திருப் பேர்  நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

பொருப்பு–மலை /  பிரான்-உபகாரகன் / விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே-அவனாலே பஹு மானம் பெற்று-அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேனே–அவனுடைய குண அம்ருதத்தைப் பணம் பண்ணிக் களித்தேன் -என்றுமாம் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-6-

அநந்தரம் அல்லாத உகந்து அருளின தேசங்களில் காட்டில் என் நெஞ்சிலே ஆதரித்துப் புகுந்து அனுபவிக்க –
அனுசந்தித்து ஆனந்தி யானேன் என்கிறார்

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து–என்னைக் கிட்டுக்கைக்காக
திருப்பேர் நகரிலேயாய் அநந்தரம் ஆசன்னமாக திருமாலிருஞ்சோலை என்று திரு நாமமான திரு மலையிலே
நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன் இன்று ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தானே வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-இங்கே இருக்கக் கடவென என்று சங்கல்பித்து என் நெஞ்சு பூர்ணமாம் படி புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய நிரதிசய பஹுமானத்தை ஒரு படிப்படப் பெற்று
குண அனுபவ ரூபமான அம்ருத பானத்தைப் பண்ணி ஆனந்தியானேன் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-6-

தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

திருப் பேர்  நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்–திரு அயோத்யையில் வாசம் போலே யாய்த்து திருப் பேரில் இருப்பு -திருச் சித்ர கூடத்தில் இருப்பு போலே யாய்த்து திருமலையில் வாசம் -அதிகம் புரவா சாச்ச –என்றும் -ஜஹவ் ச துக்கம் புரவி ப்ரவாசாத் -என்றும் குபேர இவ நந்தநே–என்றும் சொல்லக் கடவது இ றே-
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து— / பொருப்பு -மலை / பிரான் -உபகாரகன் /-இன்று வந்து-பூர்வ க்ஷணத்தில் நினைவு இன்றியிலே இருக்க -வந்து கொடு நிற்கக் கண்டது அத்தனை –
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்–இஹ வத்ஸ் யாமி ஸுமித்ரே சார்த்தமே தேநபஷீணா–என்கிறபடியே -தன் பேறாக பிரதிஜ்ஜை பண்ணி -இருந்திடுவானுக்கு என்று இராதே என் நெஞ்சிலே குறைவறப் புகுந்தான் –
விருப்பே பெற்று -அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்று
அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் / அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் /
ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இ றே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ —

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-6-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

மூன்று இடங்கள் அயோத்தியை சித்ரகூடம் ஜடாயு பரிசரம்/
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் சென்று திருவரங்கம் கிடந்தான் –
அல்லாத உகந்து அருளினை தேசங்களில் காட்டில் நெஞ்சில் புகுந்து அவன் அனுபவிப்பிக்க -நான் ஆனந்தப் பட்டேன் –
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து–மகா உபாகாரகன் தானே வந்து மூன்று திருக் கோலம்
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-பூர்ணமாகும் படி இருக்கக் கடவேன் என்று சங்கல்ப்பித்து-
ஜகத் உத்தாரண ஹேது -மிதுனம் திருக் கல்யாண மந்த்ரம் -உபாய புருஷகார சம்பந்தம் -போலே
இங்கு ஆழ்வார் திரு உள்ளம் விட மாட்டேன் என்று சங்கல்பித்துக் கொண்டானாம் –
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -நிரதிசய பகுமானம் ஒருபடியாகப் பெற்று குண அனுபவ ரூபமான அமுத பானம் பெற்றேன் –
தாண்ட காருண்யம் ரிஷிகள் ஆஸ்ரமம் ஒவ் ஒன்றாக போனால் போலே இவரும் ரிஷி முனி பிரார்த்தனை இல்லாமல் உள்ளே வந்து இருந்தான் –

தனக்கு இருப்பிடமான கோயில்கள்-பல உளவாக இருக்க –ஓர் இடம் இல்லாதாரைப் போலே-
என் மனத்திலே ஒரு காரணமும் இல்லாமல்-வேண்டிக் கொண்டு வந்து புகுந்தான்-என்று பிரீதர் ஆகிறார்

திருப் பேர் நகரான் –
திரு அயோத்தியை போலே ஆயிற்று –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்-
ஊரையையும் மலையையும் சொல்லி-பொருப்பே – ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்புகின்றதையும் சொல்லி –
சித்ர கூடத்தில் வசிப்பது -அயோத்தியில் வாசிப்பதைக் காட்டிலும் மேலாக விரும்பிய பெருமாளைப்போலே-
ஸூ ரம்யம் ஆசாத்யது சித்ரகூடம் நதீஞ்ச தாம் மால்யவதீம் ஸூ தீர்த்தாம்
நநந்த ராம ம்ருகபஷி ஜூஷ்டாம் ஜஹௌ ச துக்கம் ப்ரவிப்ரவாசாத் -அயோத்யா -57-38-
மால்யவதி என்னும் நதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெருமாள் போலே யும் –
ஸூ பக சித்ரகூட அயம் கிரிராஜோபமோ கிரி-யஸ்மின் வசதி காகுத்ச்த குபேர இவ நந்ததே -அயோத்யா -99-12-
குபேரன் போலே மகிழ்ந்தார் பெருமாள்-
குறைவு அற்றவன் நந்தவனத்திலே வசிக்குமாறு போல ஆயிற்று
எல்லா வகையாலும் குறைவு அற்றவனுக்கு அன்றோ லீலா ரசத்தில் தொடர்பு உள்ளது –

இன்று வந்து –
இவ்வத்மாவுக்கு நேற்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க-வந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –

இருப்பேன் என்று –
இருப்பேன் இருப்பேன் -என்னா நின்றான் ஆயிற்று
யதீஹ சரத அநேக த்வயா சார்த்தம் அநிந்திதே-லஷ்மனேந ச வத்ச்யாமி ந மாம் சோக பிரதர்ஷயதி -அயோத்யா -94-15
இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் –
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்-
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
இருந்திடுவானுக்கு -என்று இராத என் நெஞ்சிலே நிறையப் புகுந்தான் –

விருப்பே பெற்று –
ஆணையைப் பின் பற்றாமையாலே உண்டான வெறுப்பு-கார்யமாக அன்றிக்கே –
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்-ஷிபாமி அஜஸ்த்ரம் அசூபான் ஆசூரீஷ் வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -18-19
அந்தப் பகைவர்களான கொடியவர்களை அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்-என்று இருப்பதும் ஒரு இருப்பு உண்டு அன்றோ –
அங்கன் அன்றிக்கே –அவனுடைய விருப்பத்தை உடையவனாய் –

அமுதம் உண்டு களித்தேனே –
விஷ உணவினை உண்டு நரகத்துக்குப் போகா நிற்க-
நடுவே நின்று களிக்கை அன்றிக்கே -அமுதம் உண்டு களித்தேனே —
அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேனே –என்னுதல் –
அவனுடைய குணங்கள் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேன்-என்னுதல்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவனாய்-நரகத்துக்கு கிருஷியைப் பண்ணி வைத்து களிக்குமது அன்றோ அது-
அதாவது-அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார் -4-1-5-என்றபடி –
களித்தேனே –
நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-5-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-5-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

நமக்கு அவன் திரு நாட்டைத் தந்து அருளுகைக்கு நம் பக்கலிலே பிரதிபந்தகங்கள் இல்லையோ என்னில் –
திருப்பேர் நகரான எனக்கு வானே தருவானாய் நான் ஓட்டேன் என்னிலும் என்னை வென்று
ப்ரஸஹ்யவாகிலும் புகுரக் கடவனாய் ஒட்டிக் கொண்டு
அத்யந்த ஹேயமான என்னுடைய இந்த பிரக்ருதியிலே புகுந்து தானே
அந்த பிரதிபந்தகங்களையும் போக்கி அருளினான் என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-5-

திருப் பேர் நகரான் எனக்குத் திரு நாடு தரக் கடவனாக-என்னோடே பூணித்து-தானே தடுமாற்ற தீ வினைகள் தவிர்த்தான் -என்கிறார்  –

வானே  தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே நிர்ஹேதுகமாக வந்து புகுந்து -தன்னைப் பிரிந்து தடுமாறப் பண்ணும் புண்ய பாப ரூபமான கர்மங்களை -தேன்-என்று வண்டாகவுமாம் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-5-

அநந்தரம் இப்படி புருஷார்த்தத்தைத் தருவானாகக் கோலி ஸமஸ்த விரோதிகளையும் போக்கினான் என்கிறார்

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–வண்டு செறிந்த பொழிலை யுடைத்தாய்
தர்ச நீயமான திருப்பேராகிற நகரத்திலே வர்த்திக்கிறவன் எனக்கு
தேன்-மதுவாகவுமாம் –
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி-பரமபதத்தைத் தருவானாகக் கொண்டு சங்கல்பித்து என்னோடே ப்ரதிஞ்ஜை பண்ணி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று-மாம்சம் செறிந்த கூடாய் இருக்கிற இஸ் சரீரத்துக்குள்ளே -அபேஷா நிரபேஷமாக இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-தானே வந்து புகுந்து தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாபங்களை போக்கினான் –

———————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-5-

திருப் பேர் நகரான் எனக்குத் திரு நாடு தரக் கடவனாக-என்னோடே பூணித்து-தானே தடுமாற்ற தீ வினைகள் தவிர்த்தான் -என்கிறார்  –

வானே  தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி-எனக்கு வானே தருவானாய் -சம்சாரியான எனக்கு நித்ய ஸூ ரிகள் இருப்பை தருவானாக –
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து -என்னோடே பூணித்து -நான் அர்த்தியாய் இருக்கச் செய்தேயும் -அராவணம ராமம் வா -என்கிறபடியே -என்னோடே சமயத்தைப் பண்ணி மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே தானே புகுந்து -நிர்ஹேதுகமாக வந்து புகுந்து
இன்று-நென்னேற்று ஒரு நினைவு இல்லை
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–மது மிக்க பொழில் —தேன் என்று வண்டு ஆகவுமாம் -இவனுக்கு என்ன குறை யுண்டாய் என் பக்கல் இங்கனே படுகிறான்

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-5-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

புருஷார்த்தம் தருவானாய் கோலி ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினான் –
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி-பரம பதம் தர சங்கல்பித்து என்னுடன் பிரதிக்ஞ்சை பண்ணி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று-மாம்சம் செறிந்த சரீரம் என்பு நாட்டி ரோமம் -புகுந்து அபேஷா நிரபேஷமாக
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-பிரிந்து தடுமாறும் பிரதிபந்தகங்கள் போக்கி அருளினான் –
புகுந்ததும் இன்று -தவிர்ந்ததும் இன்று –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே-வண்டுகள் -பொருந்திய பொழில் -மதுவுமாம் –

திருப் பேர் நகரான் பரம பதத்தை எனக்கு-தருவானாக-என்னோடு பூணித்து-
தானே இரு வினைகளையும் போக்கினான் –என்கிறார் –

வானே தருவான் எனக்காய் –
எனக்கு வானே தருவானாய் –
இங்கே வைத்து கார்யம் கொள்ளும் அதனையும் தவிர்ந்தான் –இன்னம் ஒரு பிரபந்தம் இடுவித்துக் கொள்ளுகையும் தவிர்ந்தான்-
வானே -ஏவகாரம்-பிரமன் முதலாயினோர்கள் குடி இருப்பும்-இவருக்குத் தரம் அன்று -என்று அதனையும் தவிர்ந்தான்-
இவ் உலகுள் உழன்று திரிகின்ற எனக்கு-நித்ய சூரிகள் இருப்பை தருவானாக –

என்னோடே ஒட்டி –
என்னோடே பூணித்து –நான் விரும்பாது இருக்க –
அஸ்மின் முகூர்த்தே ந சிரான் சத்யம் பிரதி ஸ்ருனோமி வ-அராவணம் அராமம் வா ஜகத் த்ரஷ்யத வானர -யுத்தம் -21
என்கிறபடியே -என்னோடு சூளுறவு -என்றது –இன்றே என்று சமயம் பண்ணி –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்ற-என்னோடு உமக்கு -எம்மா வீடே -தரக் கடவோம் என்று ஒட்டி -என்றபடி –

ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று –
ஊனேய் குரம்பை இதனுள் -இன்று -புகுந்து -செஞ்சொல் கவியின் பிரமேயம் -–இவ் உடம்போடு உம்மைக் கொடு போக வேண்டும் -என்று-
விளம்பித்தேன் ஆகில் இதனை ஒழியக் கொடு-போகப் பார்த்த பின்பு-ஆறி இருப்பேனோ -என்னா நின்றான்-

தசைகள் மிக்கு இருப்பதாய்-
ஆத்மாவுக்கு இருப்பிடமாய் இருக்கும் சரீரத்தில்-மேல் எழக் கலக்கை அன்றிக்கே-
விடாயர் மடுவிலே புகுமாறு போலே புகா நின்றான் –
எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-ஒரு மா நொடியும் பிரியாதே இதனுள் புகுந்து நின்றான் –

இன்று –
நேற்று ஒரு நினைவு இல்லை-

தானே
கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-
இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே-
இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-
இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ
தானே-
புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –

தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் –
தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –
அவை யாவன
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே –
தேன் மிக்க பொழிலை உடைத்தான-திருப் பேர் நகரை உடையவன் காண்
என்னுடைய சரீரத்திலே புகுந்து
கண நேரமும் விட மாட்டாதே ஒழிகிறான்-என்ன குறை உண்டாய் இப்படிப் பட்டான் –

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே-வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று-தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-என்று அந்வயம்

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-4-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-4-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

திருப்பேர் நகரனைப் பெற்று என்னுடைய சர்வ கரணங்களோடும் கூட நான் களிக்கின்றேன்-
இப்படி திருப்பேரிலே தான் எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டித் தந்து அருளின இவன்
இனித் திருநாட்டையும் தந்து அருளும் என்கிறார்

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-4-

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் –

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

செறிந்த திருச் சோலையை யுடைய திருப் பேரன் ரஜஸ் தமஸ் காலுஷ்யம் இன்றிக்கே சுத்த சத்வ மயமாகையாலே தெளிந்து இருந்துள்ள ஸ்ரீ வைகுண்டத்தைத் தரும் –

——————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-4-

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் –

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

செறிந்த திருச் சோலையை யுடைய திருப் பேரன் ரஜஸ் தமஸ் காலுஷ்யம் இன்றிக்கே சுத்த சத்வ மயமாகையாலே தெளிந்து இருந்துள்ள ஸ்ரீ வைகுண்டத்தைத் தரும் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-4-

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் –

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்-ஸூ துர்லபமான விஷயம் இங்கனே எளிதாவதே என்று -காணக் கருதும் என் கண்ணே -என்று விடாய்த்த கண்கள் களிக்கும் படி
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்-களித்த மனசை யுடையேனாய் -நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சம் -என்ற நெஞ்சும் களிக்கப் பற்றது -கூவியும் காணப் பெற்றேன் -என்ற நான் களியா நின்றேன் -முடியானேயில் தாமும் தம்முடைய கரணங்களும் விடாய்த்த படி சொல்லிற்று -இங்கு தாமும் தம்முடைய கரணங்களும் களித்த படி சொல்லுகிறது
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்-செறிந்த சோலையை யுடைய திருப் பேரை நிரூபகமாக யுடையவன் -அக்காலத்திலே யுண்டாய் பின்பு இல்லையாகக் கூடும் –அத்தாலே சொல்லுதல் -பகவத் பரிக்ரஹமான இடத்துக்கு எல்லா நன்மையையும் யுண்டு என்பதினால் சொல்லுதல்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–சுத்த சத்வ மயம் ஆகையால் தெளிந்து இருந்துள்ள பரம பதத்தை தந்தே விடும் -/ சேண் விசும்பு-ப்ரஹ்ம லோகத்துக்கு அவ்வருகே உயர்ந்து இருந்துள்ள ஆகாசம் –

———————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-4-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

பரமபதம் தருவானாய் விரைய நெஞ்சும் கண்ணும் மகிழ காலாந்தரத்தில் தேகாந்தரத்தில் கிடைப்பதை இக்காலத்தில்
என் கண்கள் துர்லபமான ப்ராப்யம் சுலபம் ஆனதே ஹர்ஷா விஷ்ட சிந்தை -இதுக்கு அடி
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்-சோலைகள் சூழ்ந்த
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே-வைகுந்த மா நகரம் -தர -பரம சத்வ மயம்-ப்ரகாசாத்மகம் -மிக உயர்ந்த
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்-உபாய பாவத்தில் கண் வைக்க வேண்டாமே -இப்படி சுலபமானதே என்று கண்கள் களிக்க-
-அவன் உபாய பாவம் ஏற்றதால் ஹர்ஷிக்கின்றேன் -ஆனந்த கைங்கர்யம் செய்ய வேண்டும்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்-பகவத் த்வராயை நம போலே -மனஸ் ஆர்ப்பரிக்க -நீர்மையை அனுசந்தித்து –

தமக்கு பரம பதத்தை தருவானாய்-இருக்கிறவனுடைய நீர்மையை நினைந்து
என் உறுப்புகளும் களிக்க-நானும் களியா நின்றேன் –என்கிறார்

எளிது ஆயினவாறு –
அரியது எளிது ஆகும் -இரண்டாம் திருவந்தாதி -22-பெறுதற்கு அரியனான பகவானை பெறுதலும் எளிதாகும் –
எங்கே கண்டோம் -என்றால்
கரியது ஒரு வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே-தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து –
அவன் தானே அரை குலையத் தலை குத்திய-மடுவின் கரையிலே விழ அன்றோ யானை பெற்றது –
புண்டரீக மகரிஷி பெற்றார் -கைகளால் கடல் நீரை இரைக்கப் புக்கு-
அரியதான பகவல் லாபம் -சக்தி யோகம் -ஸூ ரக்ஷண அர்த்தமாக இவன் பண்ணும் பிரவர்திகளை மாற்றி
நம்மை பெறுக அவன் முயல்வானாக இருக்க –
எளிது ஆயினவாறு -என்று என் கண்கள் களிப்பக் –
காண்பதற்கு அரிய விஷயம் இங்கனே எளிது ஆவதே என்று-காணக் கருதும் என் கண்ணே -9-4-1-என்கிறபடியே
விடாய்த்த கண்கள் களிக்கும் படி –

களிது ஆகிய சிந்தையனாய்க் –
களித்த மனத்தினை உடையனாய் -என்றது-
-நெடியானே என்று கிடக்கும் என் மனம் களிக்கப் பெற்றது-8-8-1- என்றபடி

களிக்கின்றேன் –
கூவியும் காணப் பெற்றேன் -8-8-7-என்று நானும்-களியா நின்றேன்-
உறுப்புகளும் தாமும் ஒக்க விடாய்த்தவர்-உறுப்புகளும் தாமும் ஒக்க களிக்கப் பெற்றார் –

கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் –
எப்பொழுதும் மலர்களோடு கூடி இருக்கிற-சோலைகளாலே சூழப் பட்ட திருப் பேரான் –நித்ய வசந்தம் –

தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே
இருள் தரும் மா ஞாலம் போல் அன்றிக்கே-நாள் செல்ல நாள் செல்ல தெளிவினை செய்யக் கூடியதாய்
மீண்டு வருதல் இல்லாத தாய் இருக்கிற-சேண் விசும்பு-உண்டு
பிரமன் சிவன் முதலாயினோர்கள் குடி இருப்புக்கும்-அவ்வருகான பரம பதம்-
அதனை எனக்கு தருகையிலே துணிந்து இருந்தான் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-8-3-

May 8, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-8-3-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

எம்பெருமானை இனி ஒரு நாளும் விஸ்லேஷியாதபடி பற்றினேன் –
ஸூர நர திர்யகாதி நாநா வித தேஹ பிரவேச ரூப ஜன்மத்தையும் ஜென்ம நிபந்தனமான துக்கத்தையும் போக்கினான் –
தத் துக்க ஹேது வாய் அநாதி காலம் தொடங்கி இன்று அளவும் செல்லுகிற இந்த பிரகிருதி சம்பந்தத்தையும் நிவர்த்திப்பித்தேன் –
இப்படி திருப்பேரான் அடி சேர்வது எனக்கு எளிது ஆவதே -என்று களிக்கிறார்-

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-8-3-

எம்பெருமான் நிர்ஹேதுகமாக தம்மோடே வந்து சம்ச்லேஷித்த படியை அனுசந்தித்து -இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிதாவதே –என்கிறார் –

பிடித்தேன்  பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

எம்பெருமான் திருவடிகளை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜென்மங்களை போக்கினேன் -ஜென்ம நிமித்தங்களான துக்கங்களை சாரேன்-சம்சாரத்தில் நிற்கைக்கு உறுப்பான பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-8-3-

அநந்தரம் ஆஸ்ரித ஸூலபனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கிட்டுகை எனக்கு எளிதான படி –
அது அடியாக ஸமஸ்த துரிதமும் நிவ்ருத்தமாம் படி யாய்த்து -என்கிறார்

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்–கொடிகளை யுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட
திருப்பேரை வாஸஸ் ஸ்தானமாக வுடைய ஸூலபனானவனுடைய
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–திருவடிகளைச் சேருகை எனக்கு எளிதான பிரகாரம் இருந்தபடி
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-நிர்ஹேதுகமாக அவன் திருவடிகளை பிரதமத்திலே பிடிக்கப் பெற்றேன் –
அது அடியாக ஜென்ம சம்பந்தத்தை அறுத்தேன் -அத்தாலே வரும் துக்கங்களைச் சேரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை-சம்சாரத்தில் நிற்கையாகிற அஞ்ஞானத்தை நிவ்ருத்தம் ஆக்கினேன் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-8-3-

எம்பெருமான் நிர்ஹேதுகமாக தம்மோடே வந்து சம்ச்லேஷித்த படியை அனுசந்தித்து -இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிதாவதே –என்கிறார் –

பிடித்தேன்  பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை–-தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் -/ மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்-கொடிகளை யுடைத்தான கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப் பட்ட திருப் பேரிலே நித்ய வாசம் பண்ணுகிறவனுடைய
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–திருவடிகளைக் கிட்டுகை -எனக்கு அநாயாஸம் ஆவதே -சாஸ்திரங்களில் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் கிடைக்க -கிட்டலாவது ஒரு விரகு பெறுவதே -ஸ்வயம் பிரபா புலத்தில் புக்க முதலிகளைக் கண்ணைச் செம்பளிக்கச் சொல்லி அவன் கரையிலே ஏற விட்டால் போலேயும் -ஸ்ரீ மதுரையில் உறங்கினவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலேயும் -சிலரை ஆபந் நிவ்ருத்தி பூர்வகமாக ஸூ கிகளாக்கும் போது அவர்கள் கண் செம்பளிக்க வேண்டுமா போலே காணும் –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-8-3-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

ஆச்ரித சுலபம் சர்வேஸ்வரன் திருவடிகளை பெற்றேன்
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்-மாடங்கள் –
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே-சுலபன் திருவடிகளை பிடிப்பது எளிதானதே -அதனால்
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-ஜென்ம சம்பந்தம் இல்லாதபடி ஆனதே -இத்தைப் பிடித்து
-அற்றது பற்று எனில் புல்கு பற்று அற்றே –பற்றின படியால் விட்டேன் -துக்கங்களில் சேரேன்-
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை-சம்சார அஞ்ஞானம் நிவர்த்தகம் ஆனதே –

அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து
இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

பிடித்தேன் –
தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே
அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –

பிறவி கெடுத்தேன் –
பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –

பிணி சாரேன் –
பிறவி புக்க இடத்தே புகக் கூடிய-பிணியைக் கிட்டேன் –
தஸ்ய பிரிய -புண்ணியம் பிரிய தாயாதிகளுக்கும் – அப்ரிய தாயாதிகளுக்கு பாபம் போகும் சாஸ்திரம் -தாத் காலிக பாப புண்ணியங்கள்

மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை –
மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –சூஷ்ம சரீர விமோசனம் –
இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –
சூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-
எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-
எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-
ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –

கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே –
கொடிகளை உடைத்தான கோபுரங்களையும் மாடங்களையும்-
உடைத்தான திருப் பேரிலே நிற்கிறவன் அடி சேருகை யாகிறது எனக்கு எளிது ஆயினவாறே
அறுகம் புல்லை இட்டு கண்ணை புதைத்து கொள்-சாணகச் சாற்றைக் குடி-
தலையைக் கீழே நடு-காலை மேலே எடு-என்று அருந்தேவைகளை சாஸ்திரம் சொல்லா நிற்க-
எனக்கு இங்கனே இருப்பதொரு மூலை யடி வழி உண்டாவதே –
ஐம்புல இன்பங்களின் கால் கடையிலே துவண்டு போந்தவர்-அவன் திருவடிகளில் கிட்டிக் கொடு-நிற்கக் கண்ட இத்தனை-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –