ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-7-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-7-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாகத் திருப் பாற்கடல் திருக் குடந்தை தொடக்கமாகயுள்ள தேசங்களில் வந்து திருவவதாரம் பண்ணி
அருளின எம்பெருமானுக்கு குடியடியாரான இவர்களை இப்படி மடந்தையர் வாழ்த்தும் அளவிலே
மருத்துக்களும் வஸூ க்களும் தம் தாமுடைய லோகங்கள் அன்றியே
லோகாந்தரங்களிலும் தொடர்ந்து தொடர்ந்து ஸ்துதித்தார்கள் என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-7-

மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஆஸ்ரித அர்த்தமாக நிரதிசய ஸுந்தரிய உக்தனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி அங்குச் செல்ல மாட்டாதவர்களுக்காக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின கோபாலனுடைய க்ரமாகதமான அடியார்க்கு –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-7-

அநந்தரம் ஷீரார்ண சாயியாய் சர்வாதிகனாய் அர்ச்சாவதார ஸூ லபனானவனுடைய சேஷ பூதருக்கு
மருத் கணங்களும் வஸூ கணங்களும் பின் தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–-அகாதமான கடலிலே –
தொடுதல் -தூண்டுதலால் ஆழத்தைக் காட்டுகிறது -கண் வளர்ந்து அருளி
என் போல்வாரோடு ப்ரஹ்மாதிகளோடே நித்ய ஸூரி களோடு வாசியற எல்லார்க்கும் உத்பாதகனான கேசவனாய் –
எங்களை அனுபவிக்கிற அந்த சேஷித்வ ஸூ சகமாய் கிளர்ந்து ஒளியை யுடைத்தாய் மணிமயமான
திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சந்தானமாக அடிமையானவர்களை பற்ற
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் –தாமதாமுடைய ஸ்த்ரீகள் வாழ்த்தினை
அளவிலே மருத்துக்களும் அஷ்ட வஸூக்களும் -பகவத் அனுபவ த்வரையால்
அவர்கள் சீக்ரகாமிகளாகையாலே எங்கும் தொடர்ந்து சென்று ஸ்தோத்ரங்களைப் பண்ணினார்கள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-7-

மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

மடந்தையர் வாழ்த்தலும் -அந்த தேவ ஸ்த்ரீகள் புகழ்ந்த அளவில்
மருதரும் வசுக்களும்-மருத் கணங்களும் வஸூ கணங்களும் –
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எல்லாம் சென்று புகழ்ந்தார்கள் -ஒரு நிமேஷ மாத்திரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள் ஆகையால் தங்கள் எல்லைக்கு உள்ளுப் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள் -அவர்கள் தாங்கள் சடக்கென போகிறதுக்கு அடி என் என்னில் -காண்பது எஞ்ஞான்று கொலோ-என்று இருக்குமவர்கள் ஆகையாலும் -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் –
தொடு கடல்-கிடந்த எம் கேசவன்- பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் -அத்தை விட்டு -ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படி –தொடு கடல் -தோண்டப்பட்ட கடல் -ஆழ்ந்த கடல் –
எம் கேசவன்- கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன்–ஆஸ்ரித அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ரஷித்தவன் -அவதாரத்துக்கு பிற்பாடார் இழவாத படி திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறவன் —எம் கோவலன்—கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளினான் என்கிறது -அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள் -/ கிளர் ஒளி மணி முடி-மிக்க ஒளியை யுடைத்தாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம் –பர வ்யூஹ வித்துவான்கள் அளவன்றிக்கே திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையிலே தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

—————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-7-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஷீரார்ணவ சாயி -சர்வாதிகன் -அர்ச்சாவதார சுலபம் -கோவலன் -வைபவம் -அனைத்தையும் சேர்த்து சொல்லி –
பர வாசுதேவன் விஷயமாக -என் கேசவன் -அந்தர்யாமி -சொல்லி –
சேஷ பூதர்களுக்கு மருத் கணங்கள் -திதி தேவி கர்ப்பம் -இந்திரனை வெல்ல -ஆசாரம் குறைந்தால் வீணாகும்
-காலை மடித்து மாலை படுக்க தலை கூந்தல் காலில் பட்டு ஆசார குறைவு -இந்திரன் வஜ்ராயுதம் ஏழாக வெட்டி மீண்டும் ஏழாக
வாயு கணங்கள் -அஷ்ட வசுக்கள் –
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்-தம் தாம் ஸ்த்ரீகள் வாழ்த்த -அனுபவ த்வரையால்-
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்-
வேகமாக தொடர்ந்து சென்று -முக்தன் -பகவத் அனுபவ த்வரையால் போலே இவர்களும் தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ண –
தொடு -தொண்டப் பட்டதால் சாகரம் -சகரன் பிள்ளை தோண்டிய தொடு கடல்
ஆழம் காண முடியாத கடல் -ப்ரஹ்மாதிகள் உத்பாதகன் என் போல்வாருக்கும் உத்பாதகன் –
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி-அனுபாவ்யமான திரு அபிஷேகம் சேஷிக்கு அடையாளம் -சர்வாதிகன் ஆதிராஜ்ய -ரத்னகசிதமான திரு அபிஷேகம் –
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-திருக் குடந்தை -குடந்தை கிடைத்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே
தொடக்கமும் -சூழ் புனல் குடந்தையே தொழுது -ஆறு பிரபந்தங்களும் இவனுக்கே -இதனால் தானே
திவ்ய பிரபந்தம் கிடைக்க மூல கர்த்தா -திராவிட ஸ்ருதி தர்சனகாயா நம -அர்ச்சனை உண்டே –
குடைத்தையன் -கோவலன் -கண் வளர்ந்து அருளி -கிருஷ்ணன் -சந்தானமாக அடிமை -குடி குடி வந்து ஆட் செய்த –

மருத்துக் கணங்களும்-வசுக் கணங்களும்-தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை துதி செய்தார்கள்-என்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் –
அத் தெய்வப் பெண்கள் புகழ்ந்த அளவிலே-

மருதரும் வசுக்களும் –
மருத்துக் கணங்களும் வசுக் கணங்களும் –

தொடர்ந்து எங்கும் –
தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எங்கும் சென்று-

தோத்திரம் சொல்லினர் –
புகழ்ந்தார்கள் –
ஒரு காண நேரத்தில்-ஒரு உலகத்தின் நின்றும் வேறு உலகத்துக்கு ஏறப் போமவர்கள் ஆகையாலே
தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் -எங்கும் தொடர்ந்து -என்கிறார் –
அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே-
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் ஆம் –

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு-பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக-
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ -இத்யாதி –
தொடு கடல்-
தோண்டப்பட்ட கடல்-ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்-
அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி-திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே-கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது-

கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-
பரத்வன்- ஷீராப்தி நாதனாகவும்- ஸ்ரீ கிருஷ்ணனாகவும் -அந்தர்யாமியாகவும் -அர்ச்சாவதாராமாகவும்
ஆவிர்பவித்து பட்ட பாடு எல்லாம் பலித்ததே -நீர்மை சொல்லப் பட்டது –
அவன் சென்று பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று அன்றோ ஸ்தோத்ரம் செய்வார்கள் –
ஆதி ராஜ்யம் -கோள் சொல்லிக் கொடுக்கும் -நீர்மையில் தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்த அடியவர்கள் அன்றோ இவர்கள் –
அடியார்களை தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம் சொன்னார்கள் என்றபடி
குடந்தையன் கோவலன் -குடந்தை எம் கோவலன் பாட பேதங்கள்

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading