ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-5-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
இவர்கள் போகிற வழியில் வர்த்திக்கும் தேவர்கள் இவர்கள் மாதவன் தமர் என்று உகந்து
தம் தம்முடைய ஸ்த்தானங்களையும் ஐஸ்வர்யங்களையும் இவர்களுக்கு இவற்றைக் கொள்ள வேணும் என்று சமர்ப்பித்தார்கள்-
கீதங்கள் பாடினார் கின்னரர் கருடர் –
வேத நல் வாயவர் ஜ்யோதிஷ்டோமாதி யாக ஸித்தமான தங்கள் ஸம்ருத்தியைக் கொடுத்தார்கள் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-5-
ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
வாசலில் வானவர்–வழியில் தேவர்கள் -வந்து எங்கள் அதிகாரங்களைக் கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிற அளவிலே கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களை பாடினார்கள் -மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் தங்களுடைய சமாராதான பலங்களை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
———
ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-5-
அநந்தரம் வழியில் வருண இந்திர ப்ரஜாபதிகளானவர்கள் ஸ்ரீயபதியானவனுக்கு
சேஷ பூதர் என்று ஆதரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்–வருண இந்த்ர ப்ரஜாபதிகள் ஆகிற ஆதி வாஹிக தேவர்களானவர்கள்
தம் தாம் பதங்களில் தலை வாசலிலே வந்து நின்று ஸ்ரீ யபதிக்கு சேஷ பூதர்கள் இவர் என்று ஆதரித்து
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-இங்கனே எழுந்து அருளுங்கோள் -எங்கள் அதிகாரமான ஸ்த்தலங்களில்
பிரவேசியுங்கோள்-என்று பஹுமானமாக சத்கரித்த அளவிலே –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–அவ்விடங்களில் கர்மஜ தேவராய்-வேத உச்ச்சாரணத்தாலே விலக்ஷண முனிவரானவர்கள்
தங்கள் யாகாதி கர்மங்களை சபலமாகப் பெற்றதே என்று
சாதரமாய்க் கொண்டு இவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்து
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்- கின்னர்களும் கருடர்களும் கீதங்களை பாடினார்கள் –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-5-
ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்–பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயித்த அந்தப்புர பரிகரம் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் சொல்லுவது –வழியில் தேவர்கள் -அவர்கள் ஆகிறார் வருண இந்திர பிரஜாபதிகள் –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-–கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–இங்கனே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிற அளவிலே -கின்னர்களும் கருடர்களும் கீதங்கள் பாடினர் –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–மேலில் லோகங்களில் வைதிகராய்க் கொண்டு சமாராதானம் பண்ணுமவர்கள் சமாராதானங்களை இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள்-நிறபேஷாராய்ப் போகிற இவர்களுக்கு -தம் தாம் அதிகாரங்களைக் கொடுப்பார் -பாடுவார் -யாக பலங்களைக் கொடுப்பார்கள் ஆகிறார்கள் இ றே தம் தாம் ஆதரத்தாலே –ப்ரீதி கச்சின் முனிஸ் தாப்யாம் ஸம்ஸ்த்தித கலசம் ததவ்-என்று தம் தாமுக்கு உள்ளவற்றை கொடுக்கும் அத்தனை இ றே –
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-5-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
கைவல்யார்த்தி -முக்தி அடைந்தாலும் அர்ச்சிராதி கதியில் போக வில்லை -அங்கே உபாசனமோ பிரபத்தியோ பண்ண முடியாதே –
அத்துடன் ஆத்மாவை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் -ஏடு நிலைத்து இடுவதன் முன்னம் —சரீரம் முடிந்தால் திரும்ப முடியாதே –
குருகா நீளா- பற்று அற்றது எனில் வீடு பெறும்-உற்றது வீடு உயிர் -பெற்றது அது மண் உரில்–
விரஜைக்கு இப்பால் தான் கைவல்யார்த்தி திரும்பலாம் என்பர் தேசிக சம்ப்ரதாயம் –
ப்ரஹ்ம நிஷ்டன் -பஞ்சாக்கினி நிஷ்டன் -உபாசனம் படியே பலன் -பிரதீக உபாலம்பம் -அவயவங்கள் உடன் சேர்ந்து –
ஜைமினி வேத வியாசர் -ஸுமந்து பைலர் வைசம்பாயனர் ஜைமினி -நான்கு சிஷ்யர்
ஜைமினி -பஞ்சாக்கினி நிஷ்டர்
வியாசர் ப்ரஹ்ம நிஷ்டர் -ப்ரதீக உபாலம்பம் பண்ண மாட்டான் -ஆறு வித உபாசகர் -அசேதனம் -ப்ரஹ்மம் உடைய அவயவம்
கைவைளயார்த்தி ஆத்மா
ஆத்மா அசேதனம்
கூடிய ப்ரஹ்மம் உபாசனம்
ஆறு பேருக்கும் பரம பத பிராப்தி இல்லை
அவயவம் இல்லாத நிஷ்டர்க்கு உண்டு -பரமாத்மாவை விசேஷமாக -கொண்டு தன்னை பிரதானமாகக் கொண்டு
இருவரும் பேறு பெறுவார்கள் -நேராக கொண்டால் ப்ரஹ்ம நிஷ்டர்
பிராப்தியில் தாரதம்யம் உண்டு பிள்ளை லோகாச்சார்யார்
தேசிகன் -இல்லை என்பர்
ஜீவனை முக்கியமாக கொண்ட பஞ்சாக்கினி நிஷ்டனுக்கு ப்ரஹ்மம் அடைந்தாலும் வாசி உண்டு
பாதராயனார் இருவரும் அர்ச்சிராதி மார்க்கம் –
ஜைமினி பஞ்சாக்கினி நிஷ்டர்க்கு இல்லை என்பர் –
குரு சிஷ்ய கிரந்த விரோதம் –
இவை எல்லாம் உபாசகனைப் பற்றியே -நமக்கு சம்பந்தம் இல்லையே -பிரபன்னர் ஆண்மின்கள் வானகம் என்று ப்ரீதனாய் அளிக்கிறான்
கௌஷீதகி உபநிஷத் –
ப்ருஹதாரணீயம்
சாந்தோக்யம் –
கொஞ்சம் வாசி சம்வத்சரம் அப்புறம்
வருஷம் -அப்புறம் வாயு -ஆறாவது வியாசர் -தேவ லோகம் தேவர்கள் உடைய வாயு பகவான் –
அவிசேஷ சொல்லாலும் வாயு விசேஷ சொல்லாலும் சொன்னதால்
மின்னல் லோகம் மேலே வருணன் சம்பந்தத்தால் –
மின்னல் தான் அமானவன் –சத்ய லோகம் அடைந்தால் குருக்கே வருணன் -இந்திரன் –
கூடி வருவார்களாம் -சத்ய லோகம் வரை -பரஞ்சோதி ஸ்வரூபம் அடைகிறான் -ஜோதி சப்தம் ப்ரஹ்மாவை குறிக்காதே –
சத்ய லோகம் போனால் திரும்பி வருவானே-
வித்யுத் இந்திரன் வருணன் -கூட வந்து -விராஜா தாண்ட முடியாதே -போக ஆசை கொள்ளலாம் –
ஆதிவாஹிஹா தத் லிங்காத்-
அடையாளங்கள் -என்பர்
போக பூமி என்பர்
இவை இல்லை ஆதி வாஹ்யகர்கள் -தான் குறிக்கும் –
பிரகிருதி மண்டலம் -வருண இந்திர பிரஜாபதிகள் -சுக்ல பக்ஷ சம்வத்சர வாயு சொல்லாமல் இங்கு -ஸ்ரீ யபதி சேஷ பூதர் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்-தலை வாசலில் வந்து நின்று ஸ்ரீ யாபதிக்கு சேஷ பூதர் என்று பொன்னடி சாத்தி தங்கு வேட்டையாக –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-இங்கு புகுந்து பஹு மானம் சதிகரித்து-
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே-வேதங்களை ஓத கூடியவர்கள் -திருவடியில் யாக பலம் சமர்ப்பித்து
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–குதிரை வடிவம் கின்னர்கள் -ஆனந்த வல்லி-பெருக்கி பெருக்கி -கர்மஜ தேவர்
ஆதி வாஹிகத் தலைவர்களான-வருணன் இந்த்ரன் முதலானவர்களும்-மற்றும் உள்ளாறும்-
இவனுக்குச் செய்யும் உபகாரங்களை-அருளிச் செய்கிறார் –
மாதவன் தமர் என்று –
பிராட்டி புருஷகாரமாக பற்றின -அந்தப் புரத்துக்கு உரியவர்கள் அன்றோ –என்று ஆயிற்று அவர்கள் சொல்லுவது-
ப்ரஹ்மசாரி எம்பெருமானைப் பற்றினவர்கள் அன்றே –
வாசலில் வானவர் –
வழியில் தேவர்கள்-
வாசல் -வழி-அவர்கள் ஆவார் -வருண இந்திர பிரஜாபதிகள் –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் –
இங்கனே எழுந்தருள வேண்டும்-
எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேண்டும்-என்று வேண்டிக் கொள்கிற அளவிலே –
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் –
கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள் –
கின்னர தேசத்தில் உள்ளாறும் கெருட தேசத்தில் உள்ளாறும் பாடினார்கள் –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –மடுக்க -எச்சத திரிபு
மேலே உள்ள லோகங்களிலே-வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்-
தங்கள் யாகங்களின் பலன்களை-இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு-
தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் பாடுவார்-
யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்-தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
அதனைக் கேட்டு-
பிரீத கஸ்சித் முநி தாப்யாம் சம்ஸ்தித கலசம் ததௌ-பிரசன்ன வல்கலாம் கஸ்சித் ததௌ தாப்யாம் மகாயஸா -பால 4-20-
ஒரு முனிவர் மகிழ்ந்து அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார்-
புகழ் பெற்ற மற்று ஒரு முனிவர் எதிரே வந்து மர உரியை கொடுத்தார் -என்கிறபடியே-
தங்கள் தங்களுக்கு உள்ளனவற்றை கொடுக்கும் அத்தனை -அன்றோ –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply