ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-10-9-1-

ஸ்ரீ ஆறாயிரப்படி –10-9-1-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

திருநாடு ஏறப் போகையில் பிரவ்ருத்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு உகந்து
மேகங்களும் கூட இவர்கள் போக்க தடவிய ஆகாசத்தை எல்லாம் பூஷித்துக் கொண்டு நின்று தூர்ய கோஷத்தைப் பண்ணின –
கடல்கள் ஆகிறவை திரைகள் ஆகிற கை எடுத்து ஆடின –
இப்படி சர்வ லோகங்களும் மங்களமான செயல்களை செய்தன -என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –10-9-1-

திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

இடமுடைத்தான ஆகாசத்தில் அழகிய மேகங்கள் தூர்ய கோஷத்தை பண்ணிற்றன-ஆழ் கடல் அலையா நின்று இருந்துள்ள திரையாகிற கையை எடுத்துக் கொண்டு ஆடிற்றன-
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தார் என்றுமாம் –
எனக்கு பரம பந்துவாய் ஆஸ்ரிதர் எல்லாம் உஜ்ஜீவிக்கும் புகழை யுடைய நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –10-9-1-

முதல் பாட்டில் அர்ச்சிராதி மார்க்க கமனத்தில் ஒருப் பட்டவர்களாய் போக்ய குண பூர்ணனான சர்வேஸ்வரனுடைய
சேஷ பூதரான பாகவதரைக் கண்டு சராசராத்மகமான ஜகத்துக்கு உண்டான ப்ரீதி விகாரத்தை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –எனக்கு அசாதாரண பந்துவாய் குண பிரதையையுடைய
நாராயணனுக்கு அசாதாரண பந்துக்களான சேஷ பூதரைக் கண்டு பிரியப்பட்டு
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின–சர்வ பிரதேசத்திலும் சூழ்ந்த ஆகாசத்தில் திரண்டு தோன்றின
மேகங்களானவை தூர்ய கோஷத்தைப் பண்ணிட்டன
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின-ஆகாயமான கடல்களானவை அலைந்து வருகிற திரையை கையாக எடுத்து ஆடிற்றான
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய -சப்த த்வீபங்களும் உபகார ரூபமான நல்ல வஸ்துக்களை ஏந்திற்றின
வளம் என்று புதுக்கணிப்பு ஆகவுமாம்-

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -10-9-1-

திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

சூழ் விசும்பு –-பூமியை சூழும் படி இடமுடைத்தான ஆகாசத்தில் –
அணி முகில்-ஆபரணமான முகில் என்னுதல் -/ ஆகாசப் பரப்பு அடங்கலும் அணியப் பட்ட முகில் என்னுதல் /அழகிய முகில் என்னுதல் –
தூரியம் முழக்கின–தூர்ய கோஷத்தை பண்ணிற்றன –
அணி முகில் தூரியம் முழக்கின-ஒப்பித்து நின்று கொட்டுவரைப் போலே -மந்தம் ஜகரஜ்ஜூர் ஜலதா -இவன் போக்குக்கு அடியான அவன் வரவில் பிறந்த விக்ருதி இ றே இது –இவன் தானே போகப் புக்கால் சொல்ல வேண்டா இ றே -அவற்றுக்கு அபிமானிகளான இந்திர வருண பார்ஜ்ஜனியரைச் சொல்லிற்று ஆகவுமாம் –
ஆழ்கடல்-அலைதிரைக் கை எடுத்து ஆடின–தன்னுள்ளே அடக்க வற்றான அளவுடைய கடல் தைர்ய பங்கம் பிறந்து -அலையா நின்று இருந்து உள்ள  திரை யாகிற கையை எடுத்துக் கொண்டு -கூத்தாடிற்றன –
-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய–சப்த த்வீபங்களும் புதுக் கணித்தன -உபஹாரங்களை தரித்தன என்றுமாம் -இது எல்லாம் ஆரைக் கண்டால் என்னில் –
என் அப்பன்-எனக்கு பரம பந்து வானவன் -இவர்களோடு நிருபாதிக சம்பந்தம் அவனுக்கு உண்டானால் -அவனோடு சம்பந்தம் உள்ளவை எல்லா வற்றுக்கும் ஆதரிக்க வேண்டி இருக்கும் இ றே -ராஜ புத்ரன் போகா நின்றால் ராஜ சம்பந்தம் யுடையார்க்கு எல்லாம் அங்கீ கரிக்க வேண்டுமா போலே –
வாழ் புகழ் நாரணன் -ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –
தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –10-9-1-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

அர்ச்சிராதி மார்க்கம் கமனத்தில் ஒருப்பட்டவராய் -சர அசர ஸ்தாவரங்கள் ஜங்கங்கள் ப்ரீதியால் விகாரம் அடைந்து –
தமர்கள் -அந்யாபதேசம்-போக்கிய குண பூர்ணன் சர்வேஸ்வரன் குணங்களை அனுபவிக்க –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-எல்லா இடமும் சூழ்ந்து -சர்வ பிரகாரத்தாலும் –
ஆகாசத்துக்கு அலங்காரமாக மேகங்கள் தூரிய வாத்யம் போலே முழங்க
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின-ஆகாத பகவத் பக்தி சிந்த -ஆழ்ந்த -அலைகள் ஆர்ப்பரிக்க
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்-சப்த தீபங்களை உபகார வஸ்துக்கள் சமர்ப்பித்து -புதுக் கணிப்பு என்றுமாம் –
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
கல்யாண குணங்கள் பாட வாழ்க்கை கிட்டும் இதுவே திருவாய் மொழி உடைய சாரம் –
அசாதாரண பந்து -ஆனந்தாவாஹமான குணங்கள் சீர்மை -அசாதாரண பந்துக்கள் சேஷ பூதர் –

ஸ்தாவர ஜங்கமங்கள்-கடல் முகில் விகாரம் அடைந்ததை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-
பூமியை சூழ்ந்த ஆகாசத்தில்
ஆபரணமாக -விசும்புக்கு -முகில்
ஆகாசப் பரப்பு அளவிலிலும் அணியப்பட்ட முகில் -ஒப்பனை செய்தால் போலே வியாபிக்கப் பட்ட
தூரியம்-முழங்க -கந்தர்வர்கள் -அப்சரஸ் கணவர்கள் —
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
மத்திய ராத்ரீ புஷப வ்ருஷடீ-ஜாய மானே ஜனார்த்தனே -விஷ்ணு தர்மம் –தூ வானம் போலே மழை பொழிய –
இயற்க்கை மேகம் -விகாரம் –
இவன் போக்குக்கு அடியான அவன் வரவிலே பிறந்த விக்ருத்தி – இ றே- இவன் போகும் போகும் பொழுது சொல்ல வேண்டுமோ
அவற்றுக்கு அபிமானிகள் இந்திரன் வருணன் -பர்ஜன்யங்கள் -சொன்னதாகவுமாம்
எல்லா வற்றையும் தன்னுள்ளே அடக்க வல்ல கடல்கள் -தைர்ய பங்கம் பிறந்து –
அஷோபியாம் -கலக்க முடியாத கடல் -சமுத்திர இவை காம்பீர்யம்
-அலையா நிற்கும் அலைகள் கைகள் கொண்டு ஆர்ப்பரிக்க
அவன் அவதாரம் நம்மை அங்கே கூட்டிச் செல்லவே –
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
புதுக் கணித்தன -உபகாரங்களை தரித்தன
அப்பன் வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-
என் ஸ்வாமி உடைய -பரம பந்து -நிருபாதிக்க சம்பந்த -சம்பந்திகளையும் -ஆத்ம பந்து -ஆதரிக்க வேண்டி இருக்கும்
யாரையும் எள்ளி நடையாடக் கூடாதே -பகவத் சம்பந்தம் வெட்டக் கூடாதே -சம்பந்தம் சாதாரணம் –
தாழ்ந்தவர்கள் என்று கீழ் நோக்கி பார்க்கக் கூடாது –
பிரகிருதி மண்டலம் முழுவதும் ஆர்பரித்தவாறு
ராஜா புத்ரன் போகா நின்றால்-ஆனந்தமாக -செய்ய வேண்டுமே –
சர்வேஸ்வரன் ஆழ்வார் சம்பந்திகளை பின் தொடர்ந்து விஷயீ கரிப்பானே
அடியார்கள் வாழும் படியான கல்யாண குணங்கள்
கேட்க்கும் என்னும் பீதியாலேயோ
உகந்தே –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading