Archive for December, 2020

ஸ்ரீ வால்மீகி பகவான்-108 வரி ஸ்ரீமத் ராமாயணம்-

December 19, 2020

ஸ்ரீ வால்மீகி பகவான்–108 வரி ஸ்ரீமத் ராமாயணம்
ஸ்ரீ வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

1-பால காண்டம் –

1. அசல நிர்குண ஆத்ம ராமா
2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
3. இந்திரன் முதல் தேவர் வேண்டிட ராமா
4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா
5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா

6. கூடவே பிறந்த தசரத ராமா
7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
9. விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10.சென்று மந்திரம் கற்றனை ராமா

11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா

16. பக்தன் ஞானி ஜனகன் ராமா
17. மகளா முலகத் தாயவள் ராமா
18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20. அடியின் தூளி பட் டெழுந்தனள் ராமா

21. மிதிலை ஸ்வயம்வர சபை சேர் ராமா
22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24. பரசுராமன் பலம் பறி ராமா
25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா

———-

2-அயோத்யா காண்டம்

26. பண்டைப் பகை கூனி தூண்டிட ராமா
27. கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா

31. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32. தசரதன் மாளப் பரதனும் ராமா
33. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா

——–

3-ஆரண்ய காண்டம்

35. தென் திசை ஆரண்யம் புகுந்தனை ராமா

36. முனிவர் பலர் முன் தோன்றினை ராமா
37. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38. தமிழ் முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா

41. கர தூஷணர்கள் அழிந்தனர் ராமா
42. ராவணத் துறவி சீதையை ராமா
43. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44. கபந்தன் கை கண்டஞ் செய்தருளிய ராமா
45. அன்புறு சபரி கை விருந்துண்ட ராமா

———

4-கிஷ்கிந்தா காண்டம்-

46. அநும சுக்ரீவர்க் கு அஞ்சலாம் ராமா
47. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49. வானர வீரன் அநுமான் ராமா
50. தூதனாய்ச் செல்ல ஏவின ராமா

51. கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53. ஜடாயு முன் சம்பாதி சொன்னான் ராமா
54. மஹேந்திரப் பெயருடை மலை மேல் ராமா
55. அடியவன் அநுமான் நின்றான் ராமா

————

5-சுந்தர காண்டம்-

56. அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57. லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59. அசோக வனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா

61. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62. லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63. கண்டேன் சீதையை என்றனன் ராமா
64. தேவியின் முடிமணி தந்தனன் ராமா

———-

6-யுத்த காண்டம்-

65. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
66. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68. ஆழிக்கு அணையும் கட்டினை ராமா
69. அணிலும் ஆழிக்கு அணைக்கு மணலை அளித்து ராமா

70. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
71. தந்திரன் மேல் போர் தொடுத்தாய் ராமா
72. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74. இந்திரஜித்தன் மடிந்தான் ராமா

75. அஹி மஹி ராவணர் அழித்த பின் ராமா
76. விடுத்து நின் கூரிய அம்பினை ராமா
77. ராவணன் கவசம் பேதித்த ராமா
78. ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79. அழியா முக்தி தந்தாய் ராமா

80. விபீஷணன் முடி சூட்டினை ராமா
81. கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82. புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83. பரதன் உயிரைக் காத்தனை ராமா
84. அயோத்தி புகுந்து குடிகளை ராமா

85. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
86. பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87. பாரைப் பரம் செய்து ஆண்டனை ராமா
88. மாயப் பழியது தீர்க்கும் ராமா
89. கருப்பிணி யிருந்து காக்கும் ராமா

90. கவி வரன் வால்மீகி பாடிய ராமா
91. லவ குசர் தந்தை யாகிய ராமா
92. அசுவ மேதம் நடத்திய ராமா
93. கோமள ஜானகி நாயக ராமா
94. மறைகள் போற்றிடும் மன்மத ராமா

95. பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
96. ஞானம் தந்தே நிற்கும் ஓ ராமா
97. துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98. நல்லோர் காப்பும் அமைத்த பின் ராமா
99. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா

100. முனிவர் கதையும் முடிந்ததே ராமா
101. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102. கதிரவ குலத்துத் திலகமே ராமா
103. பயமழி மங்கள புங்கவ ராமா
104. நர ஹரி ராகவ நாரண ராமா

105. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
106. அநுமானிதயத் துறையும் ராமா
107. ராம ராம ஜய ராஜா ராமா
108. ராம ராம ஜய சீதாராமா.

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/ஆரணிய காண்டம்–மிகைப் பாடல்கள்–

December 18, 2020

1. விராதன் வதைப் படலம்-

ஆதியானிடம் அமர்ந்தவளை
அன்பின் அணையா,
ஏதில் இன்னல் அனசூயையை
இறைஞ்ச, ‘இறையோய்!
வேத கீதம் அவை வெண் கடல்
வெறிப்பு அரு புவி
ஓது முன் பிறவி ஒண்
மதி தண்டம் உமிழ்வோய்.–1-/3-1-

ஆதியான் – சிவன்; இடம் அமர்ந்தவள் – உமை

———-

‘உன்ன அங்கி தர,
யோகிபெலை யோக சயனன்-
தன்னது அன்ன சரிதத்
தையல் சமைத்த வினை இன்று
உன்னி, உன்னி மறை உச்ச
மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து
மன வேகம் உதவி.–2-/3-2-

அங்கி – நெருப்பு; யோக சயனன் – திருமால்

———

பருதியைத் தரும் முன்
அத்திரி பதத்து அனுசனைக்
கருதி உய்த்திடுதல் காணுதி,
கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனைப் பொதி
சுமந்து கொள்’ எனா,
தருதல் அங்கு அணைச் சயத்து
அரசி சாரும் எனலும்.–3-/3-3-

பருதி – சூரியன்; அனுசன் – பின் பிறந்தோன் (தம்பி); சுருதி-
வேதம்.

———–

பாற்கடல் பணிய பாம்புஅணை
பரம் பரமனை
ஏற்கை ஏத்தி இவண்
எய்துதலின், என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென
கரத்தின் அணையா,
ஊர்க்க முன், பணி உவந்து அருள்
எனப் பெரிது அரோ.–4-/3-4-

பரம் பரமன் – மேலுக்கு மேலானவன்

————-

அன்றது அக் கடல் அளித்து
அகல நின்று அளிதுஅரோ;
சென்று தக்க பணி சேர் முனி
திறத்து எனின்அரோ;
வென்று இதற்கு மொழி மேல்
இடுதல் வேண்டுதல்அரோ;
இன்று இதற்கும் ஓர் எல்லை
பொருள் உள்ளுள் உளரோ.–5- / 3-5-

அளிது – இரங்கத்தக்கது.

——–

யோசனைப் புகுத யோகி முனி
யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று
அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன
எனப் பெரிது உவந்து,
ஆசை உற்றவர் அறிந்தனர்
அடைந்தனர் அவண். –6 /4-1-

——–

ஆதி நான்மறையினாளரை
அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது
நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர
துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின்
மாயையினில் வஞ்ச நடமே. –7 / 4-2-

———

விண்ணை ஆளிசெய்த மாயையினில்
மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும்
என அப்பி நடமாம்
என்ன உன்னி, அதை
எய்தினர் இறைஞ்சி, அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர்
அசைந்தனன் அரோ.–8-

——-

ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்,
ஊடு வந்து கூட, இக்
கூடு வந்து கூடினேன்.–9 / 62-1-

ஆடு அரம்பை – நடனமாடும் ரம்பை என்னும் பெயருடைய
தேவசாதிப் பெண்; கூடு – உடம்பு.

———

வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன்.–10 /64-1-

நலிஞ்சு – நலிந்து, துன்புறுத்தி; நலிஞ்சு, பொலிஞ்ச – போலி
(நலிந்து, பொலிந்த); நாம வேல் – அச்சம் தரும் வேல்; கிலிஞ்சன்
என்பது ஓர் அரக்கனின் பெயர்.

——

வெம்பு விற்கை வீர! நீ
அம்பரத்து நாதனால்,
தும்புருத்தன் வாய்மையால்,
இம்பர் உற்றது ஈதுஅரோ.–11/65-1-

வெம்பு வில் – வெதும்புகின்ற வில்; அம்பரத்து நாதன் –
தேவருலகத் தலைவன்; இம்பர் – இவ்வுலகு.

——

3. அகத்தியப் படலம்-

‘அருந் திறல் உலகு ஒரு
மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து
ஒருவன், பொன்றிலாப்
பெருந் தவம் செய்தவன்,
பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல் –
வரத! – யாம் எலாம்.–12/14-1-

தசமுகத்து ஒருவன் – பத்துத் தலை கொண்ட இராவணன்;
பொன்றிலா – அழியாத.

———-

‘தேவர்கள்தமைத் தினம்
துரந்து, மற்று அவர்
தேவியர்தமைச் சிறைப்படுத்தி,
திக்கு எலாம்
கூவிடத் தடிந்து, அவர்
செல்வம் கொண்ட போர்
மா வலித் தசமுகன்
வலத்துக்கு யார் வலார்?–13 / 14-2-

துரந்து – விரட்டி.

—————

அவன் வலி படைத்து,
மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை,
தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை,
மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர் –
இறைவ! – இன்னுமே.–14 / 14-3-

புங்கவர் – உயர்ந்தோர்.

———

ஆயிர கோடி என்று
உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே
மேவல் அல்லதை,
தூய சீர் அமரர் என்று
உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று
அறிந்திலோம், ஐயா!–15 / 14-4-

மேவல் அல்லதை – வாழ்கின்றார்களே யல்லாமல் (ஆயிரங்
கோடி அண்டங்களிலும் பொருந்தினவர்கள் அரக்கர்களே தவிர
அமரர் முதலியோர்க்கு இடம் இல்லை).

———–

“வெள்ளியங் கிரியிடை
விமலன் மேலை நாள்,
கள்ளிய அரக்கரைக்
கடிகிலேன்” எனா,
ஒள்ளிய வரம் அவர்க்கு
உதவினான்; கடற்
பள்ளி கொள்பவன் பொருது
இளைத்த பான்மையான்.–16 /4-5-

வெள்ளியங்கிரி – கயிலை மலை; விமலன் – இயல்பாகவே
மலங்களின்று நீங்கியவன்; கடற் பள்ளி கொள்பவன் – திருமால்.1

———–

‘நான் முகன் அவர்க்கு
நல் மொழிகள் பேசியே
தான் உறு செய்
வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ்சுடர் முதல்
வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ்
சிறைப்பட்டு மீண்டுளார்.’–17 /14-6-

வினைத்தலை – வினைப் பயனிலே.

———–

என்று, பினும், மா தவன்
எடுத்து இனிது உரைப்பான்:
‘அன்று, அமரர் நாதனை
அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச
முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர்
வலிமைக்கு நிகர் யாரே!–18 / 53-1-

தச முகப் பதகன் – இராவணனாகிய பாதகன்.

———-

‘ஆயவர்கள் தங்கள் குலம்
வேர்அற மலைந்தே,
தூய தவ வாணரொடு
தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின்
கடனது’ என்றான்;
நாயகனும், ‘நன்று!’ என
அவற்கு நவில்கின்றான்:–19 / 53-2-

ஆயவர்கள் தங்கள் – அரக்கர்களாகிய அவர்கள்.

———–

4. சடாயு காண் படலம்

‘தக்கன் நனி வயிற்றுஉதித்தார் ஐம்பதின்மர்
தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
புணர்ந்தனன்; அத்தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து
முக் கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக் கருங் கண் திதி என்பாள் அதின்
இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்.–20 / 24-1-

ஐம்பதின்மர் – ஐம்பது பேர்; விண்ணோர் – தேவர்கள்;
இரட்டி – இரண்டு மடங்கு.

———-

தானவரே முதலோரைத் தனு பயந்தாள்;
மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள
பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,
ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள்.–21 / 24-2-

தானவர் – அரக்கர்; வயிறு வாய்த்தாள் – கர்ப்பம் உற்றாள்.

———-

மழை புரை பூங் குழல் விநதை, வான்,
இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல்
பெரும் பறவைதம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல்,
காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழைஎனும் அக்கொடிபயந்தாள், கொடியுடனே
செடி முதலாக் கண்ட எல்லாம்.–22 / 24-3-

மழை புரை பூங்குழல் – மேகம் போன்ற பொலிவு பெற்ற
கூந்தல்; கூகை – ஆந்தை; இழை புரையும் தாம்பிரை – (மகளிர்க்கு)
ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையால்.

———-

வெருட்டி எழும் கண பணப்பை வியாளம்
எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம்
எலாம் கதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி,
உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம்
ஆகிய பலவும், தெரிக்குங்காலை.–23-/24-4-

கண பணப் பை வியாளம் – கூட்டமாயுள்ள படமும்
நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட
பாம்புகளைக் குறித்தது); மருள் – அச்சம்; புயங்கம் – பாம்பு;
செலசரம் – நீரில் இயங்கும் உயிரினங்கள்.

———-

‘அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை,
கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கத்துருவுடனே, குரோதவசை,
தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதிமுறையே, இவைஅனைத்தும் பயந்தனர்கள்;
விநதை சுதன் அருணன் மென்தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப்
புணர, உதித்தனம் யாம், புவனிமீதே.–24 / 24-5-

புது மதி சேர் நுதல் – (அமாவாசைக்குப் பின்) புதிதாகத்
தோன்றும் (பிறைச்) சந்திரன் போன்ற நெற்றி. 24-5

———

என்று உரைத்த
எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித்
தொழுது, கண்
ஒன்றும் முத்தம்
முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன
நீர்மை நிகழ்த்தினார்.–25 / 27-1-

எருவை அரசன் – பருந்துகளுக்கு அரசனாகிய சடாயு; துன்று
தாரவர் – நெருங்கத் தொடுத்த மாலை அணிந்த இராமலக்குவர்கள்;
முத்தம் – முத்துப் (போன்ற).

———

5. சூர்ப்பணகைப் படலம்-

கண்டு தன்இரு வழி
களிப்ப, கா….கத்து
எண் தரும் புளகிதம்
எழுப்ப, ஏதிலாள்
கொண்ட தீவினைத் திறக்
குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை, ‘இவன்
ஆர்?’ என்று உன்னுவாள்.–26 / 11-1-

எண்தரும் புளகிதம் – எண்ணத்தக்க புளகம் (மெய்ச் சிலிர்ப்பு);
அண்டர் நாதன் – தேவர்க்குத் தலைவனாகிய இராமபிரான்; ஓர்
கிலாள் – குறிப்பாக உணராதவளாய்.

———-

பொன்னொடு மணிக் கலை
சிலம்பொடு புலம்ப,
மின்னொடு மணிக்கலைகள்
விம்மி இடை நோவ,
துன்னு குழல் வன் –
கவரி தோகை பணிமாற,
அன்னம் என, அல்ல
என, ஆம் என, நடந்தாள்.–27 / 33-1-

பொன்னொடு மணிக் கலை – பொன்னும் மணியும் சேர்த்துச்
செய்யப்பட்ட மணிமேகலாபரணம்; புலம்ப – ஒலிக்க.

———-

6. கரன் வதைப் படலம்

ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்;
அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;
கூற்றே கூற்றே என் உடலை,
குலையும் குலையும்; அது கண்டீர்;
காற்றே தீயே எனத் திரியும்
கரனே! கரனுக்கு இளையோரே!
தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள்
எல்லா வகையும் தோற்றேனே.–28 / 7-1-

ஆற்றேன் – தாங்க மாட்டேன்; வல்லபங்கள் – வெற்றிகள்.

———

பத்துடன் ஆறு எனப்
பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள்
வீர வேள்வியில்
முத் தலைக் குரிசிலுக்கு
அன்று முக்கணான்
அத்துணைப் படைத்து
அவன் அருள உற்றுளார்.–29/ 35-1-

வித்தக வரத்தர் – சதுரப்பாடு விளங்கும் வரம் பெற்றவர்கள்;
முத்தலைக் குரிசில் – திரிசிரா என்னும் அரக்கர் தலைவன்.

————-

ஆறு நூறாயிரம் கோடி
ஆழித் தேர்,
கூறிய அவற்றினுக்கு
இரட்டி குஞ்சரம்,
ஏறிய பரி அவற்று இரட்டி,
வெள்ளம் நூறு
ஈறு இல் ஆள், கரன்
படைத் தொகுதி என்பரால்.–30 / 38-1

ஆழித் தேர் – சக்கரம் கொண்ட தேர்கள்; குஞ்சரம் -யானை.

——-

276. நடந்து தன் இரு கரத்தினின்
நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்;
தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது;
அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெஞ்சரம் மழை விடு
தாரையின் விதைத்தான்.—31/ 148-1-

சிலைவாய் – வில்லிலிருந்து.

——–

277. விழுந்த வெம் படை தூடணன்
சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை
திசை ஓடினர் அரக்கர்;
எழுந்த காதலின் இடைவிடாது,
இமையவர், முனிவர்,
பொழிந்து பூ மழை போற்றினர்;
இறைவனைப் புகழ்ந்தார்.–32 /161-1-

அழிந்த சிந்தையர் – தளர்ந்த மனத்தவராய்; காதல் – அன்பு.

————

7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

278. பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு
என்று அரன்கொடுத்த வரத்தின் பான்மை
உரைக்கு உவமை பெற, குலிசத்தவன் முதலாம்
உலகு இறைமைக்கு உரிய மேலோர்
இருக்கும் அரித் தவிசு எவைக்கும் நாயகம்
ஈதுஎனக் குறித்து அங்குஇமையோர் தச்சன்
அருக்கர் வெயில்பறித்து அமைத்தஅரிமுகத்தின்
மணிப் பீடத்து அமர்ந்தான் மன்னோ.–33 / 2-1

பரிக்கும் – ஈர்க்கும் (அண்டத்தின் கோளங்கள்
ஒன்றையொன்று ஈர்ப்பன); குலிசத்தவன் – வச்சிராயுதம் ஏந்தும்
இந்திரன்; அரித் தவிசு – சிங்க ஆசனம்; நாயகம் – தலைமை;
இமையோர் தச்சன் – மயன்; அருக்கர் – சூரியர்கள்; அரிமுகத்தின்
மணிப் பீடம் – சிங்க முகம் அமைத்து மணிகள் பதித்த (அழகிய)
பீடம்.

——

பொருப்பினையும் கடந்த புயப் பரப்பினிடைப்
பொழி கதிரின் ஒளி குலாவி,
பரப்பும் இருட் குறும்பு எறிந்த பகல்
ஒளியும் கெடத் துரந்து, பருவ மேகத்து
உருப் பயில் இந்திர நீலச் சோதி தளைத்து
உலகம் எலாம் உவந்து நோக்க,
திருப் பயில் உத்தரிகமொடு செறி
வாகுவலய நிரை திகழ மன்னோ.–34 /5-1-

பொருப்பு – மலை; துரந்து – விரட்டி; உரு – நிறம், அழகு;
உத்தரிகம் – மேலாடை; வாகு – தோள்.

————–

இலங்கு மரகதப் பொருப்பின் மருங்கு தவழ்
இளங் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன,
அலங்கு செம் பொன் இழைப் பயிலும்
அருந்துகிலின் பொலிந்தஅரைத் தலத்தின்மீது,
நலம் கொள் சுடர்த் தொகை பரப்பும்
நவமணிப்பத்தியின் இழைத்தநலம் ஆர்கச்சு
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி
வாள் மருங்கினிடைத் தொடர மன்னோ.–35 / 5-2

வெயில் – ஒளி; வடி – கூர்மை.

——–

281. வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி,
மருவும் எண் திசைப் படு நிருபர்
ஆனவர்தமது புகழ் எலாம் ஒருங்கே
அன்ன மென் புள் உருத் தாங்கி,
தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன்
பதத்து இடைத் தாழ்ந்து தாழ்ந்து எழல்போல்
பால் நிறக் கவரி மயிர்க் குலம் கோடி
பாங்கினில் பயின்றிட மன்னோ.–36 /5-3-

அளிக்கும் – காக்கின்ற; புரந்தரன் – இந்திரன்; கவரி மயிர்க்
குலம் – வெண்சாமரைக் கூட்டம்; பாங்கினில் – பக்கங்களில்.

———–

தேவ கன்னியர்கள், இயக்கர் தம் குலத்துத்
தெரிவையர், சித்தர் மங்கையர்கள்,
மேவ அருந் திறல் சேர் நாகர் மெல்லியர்கள்,
விளங்கு கந்திருவர், மேல் விஞ்சைக்
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள்,
ஆதியாய்க் கணிப்பு இல் பல் கோடிப்
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி,
பலாண்டு இசை பரவிட மன்னோ.–37 / 5-4

கணிப்பில் – கணக்கற்ற; பலாண்டு – பல்லாண்டு.

———

தண் கதிர் பொழியும்
ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு
நிலத்து இருந்து, வேறு வேறு
எண் கடந்து உரு
எடுத்து இருளை ஓட்டல்போல்
வெண் குடைத் தொகை
பல கோடி மேவவே.–38 /7-1-

தவள மா மதி – வெள்ளையாயுள்ள பெருமைக்குரிய சந்திரன்.

———-

284. ஏவலின் புரி தொழில்
எவையும் செய்து, செய்து
ஓவு இலர், துயர்க் கடற்கு
ஒழிவு காண்கிலர்,
மேவரும் பெரும் பயம்
பிடித்து, விண்ணவர்
தாவினர், தலைத் தலை
தாழ்ந்து நிற்கவே.–39 / 7-2-

ஓவு இலர் – நீங்குதல் இலராய் (ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்);
ஒழிவு – முடிவு.

——-

வியக்கும் முப் புவனமும்
வெகுண்டு, மேலைநாள்
கயக்கிய கடுந் திறல்
கருத்துளே கிடந்து,
உயக்கிய பயத்தினர்
அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை
இறைஞ்சி நிற்கவே.–40 /11-1-

கயக்கிய – கசக்கிய.

———

பெருந் திசை இரிந்திடப்
பெயர்த்தும் வென்ற நாள்,
பருந் திறல் புயம்
பிணிப்புண்டு, பாசத்தால்
அருந் தளைப்படும் துயர்
அதனுக்கு அஞ்சியே,
புரந்தரன் களாஞ்சி கை
எடுத்துப் போற்றவே.–41 / 11-2-

களாஞ்சி – காளாஞ்சி, தாம்பூல எச்சில் துப்பும் கலம்.

——–

287. கடி நகர் அழித்துத்
தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம்
குலைந்து கூசியே,
வடதிசைப் பரப்பினுக்கு
இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன்,
இரந்து நிற்கவே.–42/15-1-

கடிநகர் – காவல் மிக்க நகரம்; மாற்றிய- நீக்கிய; நெதி-நிதி.

———–

288. நிகர் அறு புவனம் மூன்று
என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடும்
அண்டச் சூழலில்
வகையினைக் குரு முறை
மரபின் வஞ்சியாப்
புகரவன் விரித்து எடுத்து
இயம்பிப் போகவே.–43 /15-2-

குருமுறை மரபின் வஞ்சியாப் புகரவன் – குரு நெறி
மரபிலிருந்து வஞ்சியாத ஒளி (புகழ்) உடைய சுர குரு.

———-

289. மதியினில் கருதும் முன்
வந்து வேண்டின
எது விதப் பொருள்களும்
இமைப்பின் நல்கியே,
திதி முதல் அங்கம்
அஞ்சுஅவையும் தெற்றென,
விதிமுறை பெறத்
தனி விளம்பிப்போகவே.–44 / 15-3

திதி முதல் அங்கம் அஞ்சு – திதி முதலான ஐந்து
அங்கங்கள், பஞ்சாங்கம்.

———

290. ‘உரிய நும் குலத்து உளேன்
ஒருவன் யான்’ எனப்
பரிவுறும் பழமைகள்
எடுத்துப் பன்னியே,
விரை மலர் சிதறி, மெய்
அன்பு மீக்கொளா,
நிருதி அங்கு அடிமுறை
காத்து நிற்கவே.–45 / 17-1-

நிருதி – தென்மேற்குத் திசைக் காவலன்.

———-

என்ற பொழுதில், கடிது
எழுந்து அலறி, வாய் விட்டு,
அன்று அருகு நின்ற
பல தேவர் கணம் அஞ்ச,
புன் தொழில் அரக்கர்
மனதில் புகை எழும்ப,
கன்றிய மனத்தள்
கழறுற்றிடுவதானாள்.
கடிது எழுந்து – விரைவாக எழுந்து. 49-1

292. என்பதை மனக்கொடு
இடர் ஏறிய கருத்தாள்,
முன்ப! உன் முகத்தின்
எதிர் பொய் மொழியகில்லேன்;
நின் பதம்; நின் ஆணை
இது; நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை
எடுத்து அறைசெய்கிற்பாள்.
மனக்கொடு – மனத்தில் கொண்டு (எண்ணி); முன்ப – வலிமை
உடையவனே. 51-1

293. ‘ஈது அவர்கள்தங்கள் செயல்’
என்று அவள் உரைப்ப,
கோது உறு மனத்து எரி
பிறந்து, குறை நாளில்
மோது வடவைக் கனல்
முகந்து, உலகம் எல்லாம்
காதுறு சினததன்
இதனைக் கழறுகின்றான்.
காதுறு சினத்தன் – சிதைக்கும் சினம் உடையவனாய். 57-1

294. இற்று எலாம் அரக்கி ஆங்கே
எடுத்து அவள் இயம்பக் கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே,
கொண்ட வெங் கோபத் தீயில்
சொற்ற ஆதரத்தின் வாய்மை
எனும் புனல் சொரிதலோடும்
அற்றதால; பின்பு ஆங்கு
அன்னோன் கருத்தும்வேறாயது அன்றே.
கொற்றவாள் அரக்கன் – வெற்றி தரும் வாள் ஏந்திய
அரக்கன் (இராவணன்); ஆதரம் – அன்பு, பற்று. 81-1

8. மாரீசன் வதைப் படலம்

295. ஆயிரம் அடல்
கையுடையானை மழு வாளால்
‘ஏ’ எனும் உரைக்குள் உயிர்
செற்ற எதிர் இல்லோன்
மேய விறல் முற்றும்
வரி வெஞ் சிலையினோடும்
தாயவன் வலித் தகைமை
யாம் உறு தகைத்தோ.
ஆயிரம் அடல் கையுடையான் – ஆயிரம் வெற்றிக் கைகளை
உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் – ஈடு இல்லாதவன் (வாலி);
தாயவன் – கடந்தவன் (இராமன்). 25-1

9. இராவணன் சூழ்ச்சிப் படலம்

296. ஓவரு கவனம்மீது
உற்றுச் சென்றுளான்,
பூ வரு சாலையுள்
பொருந்த நோக்குறா,
‘யாவர், இவ் இருக்கையுள்
இருந்த நீர்?’ என்றான் –
தேவரும் இடர் உறத்
திரிந்த மேனியான்.
ஓவரு – நீக்குதற்கு அரிய; பூவரு சாலை – மலர்கள் மலரும்
(இலைக்) குடில்; நோக்குறா – பார்த்து. 24-1

297. ‘மேனகை, திலோத்தமை,
முதல ஏழையர்,
வானகம் துறந்து வந்து,
அவன் தன் மாட்சியால்,
ஊனம் இல் அடைப்பை, கால்
வருடல், ஒண் செருப்பு,
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே.
ஏழையர் – பெண்கள்; அடைப்பை – வெற்றிலைப் பை
(தாங்குதல்). 43-1

298. ‘சந்திரன், இரவி
என்பவர்கள்தாம், அவன்
சிந்தனை வழி நிலை
திரிவர்; தேசுடை
இந்திரன் முதலிய அமரர்,
ஈண்டு, அவன்
கந்து அடு
கோயிலின் காவலாளரே.
தேசு – ஒளி; கந்து அடு கோயில் – கட்டுத்தறிகளை முறிக்கும்
(களிறுகள் காவல் காக்கும்) அரண்மனை. 43-2

299. என்றனள்; அபயம், புட்காள்!
விலங்குகாள்! இராமன் தேவி,
வென்றி கொள் சனகன் பேதை,
விதியினால் அரக்கன் தேர்மேல்
தென் திசை சிறைபோகின்றேன்;
சீதை என் பெயரும் என்றாள்;
சென்று அது சடாயு வேந்தன்
செவியிடை உற்றது அன்றே.
புட்காள் – பறவைகளே; பேதை – பெண். 43-2

10. சடாயு உயிர் நீத்த படலம்

300. ‘பின்னவன் உரையினை
மறுத்து, பேதையேன்,
அன்னவன்தனைக் கடிது
அகற்றினேன்; பொரு
மன்னவன் சிறை அற
மயங்கினேன்; விதி
இன்னமும் எவ் வினை
இயற்றுமோ?’ எனா,

பின்னவன் – தம்பி (இலக்குவன்); பொரு மன்னவன் –
(இராவணனை எதிர்த்து) போரிட்ட கழுகரசன் (சடாயு). 45-1

301. சடாயுவைத் தடிந்த வாளைச்
சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
‘தடால்’ எனக் கபாடம் சாத்தி,
சாலையுள் சலித்தாள் அந்தோ;
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து
எடுத்து உச்சி வேட்டான்,
குடா மதி கோனைச் சேரும்
கோமுகன்-குறளி ஒத்தான்.
கபாடம் – வாயில் (கதவு). 58-1

302. ‘பெண்ணை விட்டு அமைந்திடின்
பிழையது ஆம்’ என,
உள் நிறை கூடமும்
உவந்த சாலையும்,
மண்ணினில் இராமன் மார்பு
அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி
வேண்டி எய்தினாள்.

303. முன்னமே பூமியை
முகந்து, பாதலம்-
தன்னிலே தரித்தன
சயமும் தந்திலது
என்னவே, மாகம்மீது
ஏகினான் செய
உன்னியே இராவணன்
உவந்ததொத்துஅரோ.
மாகம் – வானம். 58-3

304. சடாயுவும் சாய்ந்தனன்;
சனகி சாய்ந்தனள்;
விடா செயம் ஏதியும் பிற
கதி வேறு உளோள்
தொடா மறைக் கிரியையும்
சுவைத்த கோமகன்
அடாத மேற் செயல் எலாம்
அமைத்தல் என்சயம்?
ஏதி – ஆயுதம். 58-4

305. மூன்று பத்து ஒருபது
முந்து யோசனை
ஏன்றது; பாவையும், ‘ஏது’?
என்று எண்ணும்முன்,
தோன்றினன் சுபாரிசன்;
தொழுது, ‘தொல் உலகு
ஈன்றவள் இவள்’
என, இசைத்து இறைஞ்சியும்.
மூன்று பத்து ஒருபது – நாற்பது. 58-5

306. ‘இசைக் கடல் உறைபவ!
இலங்கை வேந்தன் நீ;
திசைப்படாப் புவனம் உன்
செல்வம்; என்னதோ
வசைக் கடல் வாழ்வு; இது
வழக்கு என்று எண்ணியோ,
துசக் கடல் மொழி செலத்
தொழுது போயினான்?
இசைக்கடல் – புகழ்க்கடல். 58-6

307. தேன்றிரும் இராவணன்
சேற என்று எதிர்ந்து,
ஊன்று செம்பாதி சேய்
தூண்டத் தூண்டிட,
மூன்று தன் பதத்தில்
ஒன்று இழிந்த மொய் கரத்து
ஊன்று தண்டு ஒடிந்தென
வீழ ஓடினான்.
(301 – 307 பாடல்கள் தெளிவில்லை). 59-1
11. அயோமுகிப் படலம்

308. என்று அவள் கூறலும்,
மைந்தனும், ‘இன்னே
நன்றியதாய நறும்
புனல் நாடி,
வெனறி கொள் வீரன்
விடாய்அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன்’
என்று உரைசெய்தான்.
நன்றியதாய – நல்லதான; வென்றி கொள்வீரன் – வெற்றி
கொள்ளும் வீரன் (இராமன்); விடாய் – தாகம். 55-1

12. கவந்தன் படலம்

309. ‘பாரிடமே இது;
பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப்
பரந்த மெய்யது;
பார், இடம் வலம்
வரப் பரந்த கையது:-
பார் இடந்து எடுத்த
மா அனைய பாழியாய்!
பாரிடம் – பெரிய இடம்; பரவை சுற்றும் பார் – கடல் சூழ்ந்த
உலகம்; பாழி – வலிமை. 21-1

310. காவாய் என்பால், தன்
ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, ‘இவ்
வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா, என்ன, அன்னது
கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ,
என் புகல் அம்மா!
இவ்வெய்யோற்கு – இந்தக் கொடியவனுக்கு. 29-1

13. சவரி பிறப்பு நீங்கு படலம்

311. ‘மாங்கனி, தாழையின் காய்,
வாழையின் கனிகளோடும்,
ஆம் கனி ஆவதே என்று அருந்தி,
நான் விரும்பி வைத்தே
பாங்கின் நல் அமுது செய்மின்’
என்று அவள் பரவி, நல்கும்
தேம் கனி இனிதின் உண்டு,
திருஉளம் மகிழ்ந்தான், வீரன்.
அமுது செய்மின் – சாப்பிடுங்கள். 5-1

————- ————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அமுத சார்த்தூலம் -ஸ்ரீ அமுதும் ஸ்ரீ அமுதனும் –ஸ்ரீ வில்லூர் ஸ்ரீ நிதி ஸ்வாமி – ஸ்ரீ ஆராவமுதனைக் குறித்து ஸ்ரீ ஆராவமுத ஸ்லோகங்கள் –ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம்

December 15, 2020

அமுத சார்த்தூலம் -அமுதும் அமுதனும் –ஸ்ரீ வில்லூர் ஸ்ரீ நிதி ஸ்வாமி -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள்
ஆராவமுதனைக் குறித்து ஆராவமுத ஸ்லோகங்கள்

மன்யே ஸப்த பயோ நிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம்
கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத் புன:
லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தா: ஸ்த்ரிய: 1

மன்யே ஸப்த பயோ நிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்-முனிவராக அகஸ்தியர் ஏழு கடல் நீரைப்பருகி
அசுரர்கள் கடலுக்குள் ஒழிந்து கொள்ள-ஆசமனம் -அச்யுதா ஒரு தடவை சொல்லி உறிஞ்சிய உடனே
உப்புக்கடல் முழுவதும் உள்ளே போக ஒற்றையே கடல் நீர்கள் விழுங்க –
மூன்று தடவை வேண்டுமே –ஏழு கடல்களையும் பருகி –மன்யே-நான் இவ்வாறு கருதுகிறேன்
உத்தாம்ருதம்-சாரமான அமுதம் – சாரதமமான திரு நாமமே ஆராவமுதம் -அவன் திரு நாமமும் இதுவே
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம்-அழகுக்கு எல்லாம் இருப்பிடமாக இருக்க
இத்தைப் பருக தேவர்களுக்கு யோக்யதை இல்லையே
கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத் புன:-தாயான குடத்தில் ஒளித்து வைத்து -குட முனிவர் தானே இவர்
லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தா: ஸ்த்ரிய: பெண்கள் ரஹஸ்யம் -வைத்துக் கொள்ள முடியாதே
குட மூக்கின் வழியாக அமுதத்தை உலகுக்கு காட்டி -ஆராவமுதம் -தானே சாரமான அமுதம் –
திருப்பெயர்களுக்குள் இதைப் போல் இனிமை இல்லையே –அபர்யாப்த்த அமுதன்
வண் தமிழ் மா முனி ஆழ்வார்கள் கொண்டாட -நாவால் சொல்லிப் பார்த்ததை -சுவைத்தார் என்கிறார் –
தேவர்கள் இடம் ஒளித்து வைத்தது தேவ பாஷைகளில் இல்லை =விஷ்ணு சாஸ்ரநாமத்தில் இல்லாமல் ஒளித்து வைத்தார்
குட மூக்கு -கோயிலாகக் கொண்டவனே ஆராவமுதம் -கோணம் -மூக்குக்கு ஸமஸ்க்ருதம் பதம் –
ஆராவமுதே -விளித்து நம்மாழ்வார் –நாலாயிரம் மறைந்து இருக்க அளித்ததும இந்த ஆராவமுதன் தானே –
கும்ப கோண திவ்ய தேசத்துக்கு செய்நன்றி சொல்ல வேண்டும்

————————

யஸ்மின் மந்தர பர்வதஸ்ய வஹனம் ஸாகம் ஸமை: மந்தனம்
பூயச்ச ஆக்ரமணம் பலஸ்ய ச மதேர்தானம் த்விஷாமர்தனம்
இதி ஏவம் திஷணான்விதை: ச விபுதை: நாஸ்மாபி: அப்யர்த்திதம்
ந: ஸ்வாமின் அம்ருதம் பவேதி விபுதை: யத்தர்சிபி: தப்யதே –2-

கீழே திவ்ய தேச மஹிமை –
இதில் ஆராவமுதனின் மஹிமை
33 கோடி தேவர்களால் சூழப் பட்டு சேவை கர்ப்பக்கிருகத்தில்

கடல்கடந்த வ்ருத்தாந்தம் -மந்த்ர மலை வாஸூகி –
அசுரர்கள் இடம் ஒப்பந்தம் செய்து -கருடன் வைத்து மலையைக் கொணர்ந்து -அசுரர்கள் வாய் பகுதி
தாங்கிக் கொள்ள ஸ்ரீ கூர்மம் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -ஆலகால விஷம் -நீல கண்டன் –
தன்வந்திரி அம்ருத கலசம் -உப்புச்சாறு-ஆராவமுதமாக அவனையே கேட்க்காமல் இழந்து
அமுதினிலும் ஆற்ற இனியன் -கடைந்தவனே இனியவன் –
இதற்காகவே தேவர்கள் சூழ்ந்து கர்ப்ப க்ருஹத்தில்
11 ருத்ரர் 12 பன்னிருவர் அஸ்வினி தேவர் 2 வசுக்கள் 8 ஒவ் ஒருவருக்கும் ஒரு கோடி கணங்கள்
அனைவரும் சூழ்ந்து ஆராவமுதனின் வடிவு அழகை பருகிக் கொண்டே உள்ளார்கள் –

————–

க்ஷீராப்தே: அம்ருதம் பபௌ இதி பரம் ஜானந்தி மந்தா: ஸுரா:
யத் கிஞ்சித் தத் அஹோ யத் அங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண:
தன்மத்யே பயஸாம் நிதே: அபி ததா ஸ்ரீகும்பகோணே புரே
சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்–3-

க்ஷீராப்தே: அம்ருதம் பபௌ இதி பரம் ஜானந்தி மந்தா: ஸுரா:-பாற் கடலுக்கு அம்ருதம் எப்படி வந்தது –
விபுத புத்தி இல்லாமல் மந்த புத்தி தேவர்கள்
யத் கிஞ்சித் தத் அஹோ யத் அங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண: தன்மத்யே பயஸாம் நிதே: —
ஷீராப்தி சயனம் -அவனது திருமேனியில் சிந்திய வியர்வைத் துளியே அம்ருதமாக
அபி ததா ஸ்ரீகும்பகோணே புரே-அதே போல் இங்கும் ஏரார் கோலம் திகழக் கிடந்த கோமான்
சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்-இது விசித்திர அம்ருதம் –
வாயால் பருக வேண்டாம் கண்ணால் பருகலாம்
அது உடலுக்கு ஜீவனம் -இது ஆத்மாவுக்கு உஜ்ஜீவனம் -இத்தை கண்டு பிறவித் துன்பம் தீர்ப்போம் –

————————————-

ஸ்வர்கே பாதி அம்ருதம் யத் அர்த்தம் அபவம் யோத்தும் ச யத்னான்வித:
திங் மாம் யத் ரஸனாகதம் விதனுதே கிஞ்சித் ருசிம் சாருஜ:
நிர்யுத்தம் ச நியத்னம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத் பாதி இதி க்ருதாஞ்ஜலி: யத் அம்ருதம் பக்ஷிச்வர: ஸேவதே –4-

ஸ்வர்கே பாதி அம்ருதம் யத் அர்த்தம் அபவம் யோத்தும் ச யத்னான்வித:-பெரிய திருவடி –
வேத ஸ்வரபி-அவனைக் காட்டும் கண்ணாடி
அஷ்ட பஜ பெரிய திருவடி கொடிமரம் அருகில் -ஆதர்ஷ கருடன் சந்நிதிக்கு எதிரில் –
துவாதச மண்டபத்தில் சேவை
வினதை -கத்ரு -அம்ருதம் கொண்டு வந்த வ்ருத்தாந்தம் -அத்தை கொண்டு வந்து அடிமைத்தனம்
விடுவித்தத்தை நினைத்துப் பார்த்து –
திங் மாம் யத் ரஸனாகதம் விதனுதே கிஞ்சித் ருசிம் சாருஜ:-ரஸம் பார்க்க -அது கசப்பாக இருக்க –
வியாதி உள்ளவனுக்கே இனிக்குமாம் -உப்புச்சாருக்காக
நிர்யுத்தம் ச நியத்னம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்-நீ ஆராவமுதன் -பருக யத்னமே வேண்டாம் –
கண்களாலே பருகலாம் -எப்பொழுதும் ஆராவமுதனே -அபரியாப்த அம்ருதம் –
தத் பாதி இதி க்ருதாஞ்ஜலி: யத் அம்ருதம் பக்ஷிச்வர: ஸேவதே –அமுதத்தை அமுதனைக்
கை கூப்பிக் கொண்டே பருகிக் கொண்டு இருக்கிறார் –

———————–

கும்பம் நாம நிதாய துக்த ஜலதே: தீரே ஸுராணாம் கணே:
ஸக்தே தன்மதனாய ஹந்த ஸ பவ: தத் கும்பகோணாந்தரா
லீன: கும்பம் அதோ ஜஹார ஸ ஹரோ மோக்தும் விஷோத்தாம் வ்யதாம்
தேனைவ அத்ர பவான் ஸ சாத்ர விதித: கும்பேச்வரோ வர்த்ததே–5-

கும்ப கோணம் பெயர் காரணம் -வானில் உள்ள வானவர்களை வாழ வைக்க விஷம் உண்டான் –
ஹரன் -அபஹரிப்பதுக்கும் சிவன் -என் உள்ளம் கவர் கள்வன் -ஞான சம்பந்தர்
குடத்தின் மூக்கில் உடகார்ந்தாராம் -ஆராவமுதனை அங்கே சேவித்து விஷம் உண்ட கவலை தீர்க்க –
குடத்தையே அபகரித்து போனார் -குட மூக்கு -ஆராவமுதம் -பெருமாள் சேவை –
கும்பம் அபகரித்து கும்பேஸ்வரன் பெயர் -ஆலகால விஷத்தை உண்ட துன்பத்தையே
போக்கும் அழகன் -ஆராவமுத ஆழ்வான் என்கிறார் இதில் –

————

துக்தாப்தே: மதனாய தைவதகண: ஸோயம் ப்ரவ்ருத்த: புரா
கும்பாந்தர் பகவன் பவந்தம் அகரோத் ஆவாஹிதம் தம் புன:
அத்ர ஸ்தாபயதி ஸ்ம தத்ர ச பவம் ஸம்ரக்ஷகம் தம் வ்யதாத்
தேனைஷா கில கும்பகோண நகரீ கும்பேச்வரோயம் பவ:–6-

துக்தாப்தே: மதனாய தைவதகண: ஸோயம் ப்ரவ்ருத்த: புரா-தேவர் கூட்டங்கள் கடைவதற்கு முன்னே
கும்பாந்தர் பகவன் பவந்தம் அகரோத் ஆவாஹிதம் தம் புன:-நாராயணனை ஆவாஹனம் பண்ணி
கும்பத்தில் வைத்த பின்பு திரு ஆராதனம் பண்ணாமல் இருக்கக் கூடாதே -பூஜைகள் பண்ண
அத்ர ஸ்தாபயதி ஸ்ம தத்ர ச பவம் ஸம்ரக்ஷகம் தம் வ்யதாத்-சிவனையே ஆராதனம் பண்ணைச் சொல்லி கடையப் போக
தேனைஷா கில கும்பகோண நகரீ கும்பேச்வரோயம் பவ: -கும்பத்தில் உள்ள பெருமாளே ஆராவமுதன் –
கும்பேஸ்வரனும் இங்கே நித்ய வாஸம் -ஊரின்
நடுப்பகுதியில் ஆராவமுதனும் கும்பேஸ்வரும் நித்ய வாசம் பண்ணி அருளுகிறார்களே

————————

கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமும் யோக்யம் புராரிம் வ்யதாத்
ஸர்வஜ்ஞம் த்ருத கங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:
ஸ்வஸ்யாதோ பஹுபி: ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ்த்வாம் கும்பகம் ஸேவதே–7-

கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமும் யோக்யம் புராரிம் வ்யதாத்-பூஜிக்க வேண்டும் –
சிவனை நியமிக்க -ஆராவமுதனை பூஜிக்க பலர் வேண்டுமே
ஸர்வஜ்ஞம் த்ருத கங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:-ஸர்வஞ்ஞன் –
ருக்கு திரு மொழி வாய் ஈசன் -கங்கை தரித்து ஆச்சாரம் மிக்கு –
ஸ்வஸ்யாதோ பஹுபி: ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:–தானே பல வடிவம்
எடுத்துக் கொண்டு சூழ்ந்து இருந்து பூஜிக்க
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ்த்வாம் கும்பகம் ஸேவதே-மத்யம் சாரங்க பாணி கோயில் –
சூழ்ந்து பல சிவன் கோயில்கள் இன்றும் உண்டே –
ச ஏகதா பவதி ஸஹஸ்ரா பவதி -ஆகும்படி நமக்கும் கைங்கர்ய ஸ்ரீ அருளுவான்

————-

ஸ்வாமின் த்வத் வசஸா விஷம் கில மயா பீதம் சிரோ கூர்ணதே
த்வத் சித்தாத் அம்ருதாம்சும் ஏகம் உதிதம் குர்யாம் சிரஸி அஞ்ஜஸா
இத்தம் ப்ரார்த்தித லாபதோ அதிமுதித: சம்புஸ்து அனேகாக்ருதி:
நைகாகாரகத: புரே அத்ர பகவன் த்வாம் ஸர்வத: ஸேவதே –8-

ஸ்வாமின் த்வத் வசஸா விஷம் கில மயா பீதம் சிரோ கூர்ணதே-நடுவில் ஆராவமுதன் -இருக்க வேறே ஒரு ஹேது இதில் –
விஷம் உண்ட நீலகண்டன் -ஆராவமுத ஆழ்வான் இடம் -நீர் சொல்ல உண்டேன் தலை சுற்றுகிறது
த்வத் சித்தாத் அம்ருதாம்சும் ஏகம் உதிதம் குர்யாம் சிரஸி அஞ்ஜஸா-சந்தரமாம் மனசோ ஜாயதா-
குளிர வைக்க பிறை சந்திரனை கேட்டு வைத்து -விஷ தாக்கம் போக்கப் பெற்றாராம் -கைம்மாறு செய்யவே
இத்தம் ப்ரார்த்தித லாபதோ அதிமுதித: சம்புஸ்து அனேகாக்ருதி:-மிகவும் மகிழ்ந்து அநேக வடிவுடன்
நைகாகாரகத: புரே அத்ர பகவன் த்வாம் ஸர்வத: ஸேவதே -பல பல கோயில்களில் கோயில் கொண்டு
இருந்து நன்றி செய்து கொண்டே இருக்கிறார்

—————-

சந்த்ரோயம் தவ மானஸாத் யத் அபவத் ஜாதோ அம்ருதாம்சு: த்த:
வ்யோம்னச்சாபி பதன் முஹுர்முஹுர் அஹோ வாராம்நிதௌ ஸர்வதா
பங்கேனாங்கித விக்ரஹோ யச இதம் தத்தே கலங்கீதி அஹோ
ப்ரஷ்டோ விஷ்ணு பதாத் ஜலான்வயம் அபி ப்ராப்த: புமான் ஈத்ருச:–9-

சந்த்ரோயம் தவ மானஸாத் யத் அபவத் ஜாதோ அம்ருதாம்சு: த்த:-சந்திரன் உன்னுடைய மனசில் தோன்றியது –
அத்தை ருத்ரனுக்கு கொடுத்து அருளினாய்
அமுதைப் பொழியும் நிலவு
வ்யோம்னச்சாபி பதன் முஹுர்முஹுர் அஹோ வாராம்நிதௌ ஸர்வதா-வானத்தில் சஞ்சரிக்கிறான்
விஷ்ணு பதம் ஆகாசம் -ஆனால் அடிக்கடி கடலில் வானத்தில் இருந்து விழுகிறானே -ஆகையால் களங்கம் அடைகிறான்
பங்கேனாங்கித விக்ரஹோ யச இதம் தத்தே கலங்கீதி அஹோ-அழுக்கு சேறு -பங்கஜம் -சேற்றில் பிறந்த தாமரை
ப்ரஷ்டோ விஷ்ணு பதாத் ஜலான்வயம் அபி ப்ராப்த: புமான் ஈத்ருச:-நமக்கு வாழ்க்கைப் பாடம் –
உயர்ந்த பக்தர் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் -வாழ்வில் நல்ல இடத்தில் இருந்தாலும் ஜடம் -ஜலம் -அறிவு குன்றிய –
தீய ஸஹ வாஸம் ஏற்பட்டால் களங்கம் அடைகிறோம் -சத் சங்கம் வேண்டுமே
நல்ல குணம் குடையார் இடம் கூடி இருந்தால் பூ உடன் சேர்ந்த நாறும் மணக்கும் -மா முனிகள் –
தீய குணம் அடையாமல் இருக்க நமக்கு அறிவுரை –

———-

சேஷ: சப்த குணாநுசாஸன சணோ யத் தேன தஸ்மின் பவான்
சேதே ஹ்ருஷ்டமனா மமாம்ருத விபோ வேதாப்தி மத்யோத்த்ருத:
வேதாத்மா யத் அயம் ப்ரபு: ச வயஸாம் ஸ்கந்தேஸ்ய யாஸ்யத்யத:
வேதே யோ விஹ்ருதிம் தத் அங்கம் அத வா தத்தே ஸ தே ப்ரீதயே–10-

சேஷ: சப்த குணாநுசாஸன சணோ யத் தேன தஸ்மின் பவான்–ஆதி சேஷன் மேலே பள்ளி கொண்டு அருளி
பதஞ்சலி -வியாகரணம் -பண்ணி அருளி -வேதாத்மா -விஹகேஸ்வரன் –
சேதே ஹ்ருஷ்டமனா மமாம்ருத விபோ வேதாப்தி மத்யோத்த்ருத:-வேதாத்மா யத் அயம் ப்ரபு:-திருப் பாற் கடல்
அமுதம் போல் இல்லை வேதம் பாற் கடல் -திருவாய் மொழி -ஆராவமுதம் –
ச வயஸாம் ஸ்கந்தேஸ்ய யாஸ்யத்யத: வேதே யோ விஹ்ருதிம் தத் அங்கம் அத வா தத்தே ஸ தே ப்ரீதயே-வேதம்
வேத அங்கம் தொடர்பு உள்ளவர்களை அடிமை கொண்டு அருளி உகக்கிறாயே –

————-

தஸ்மாத் ஏவ ஹி கும்பகோண நகரே வேதேஷு பாரம் கதை:
யுக்தே வைதிக நாமதேய மஹிதே சேதே விமானே பவான்
வேதம் வேத்மி ந வேத புஸ்தகம் அஹம் ஹஸ்தே பிபர்மி அன்வஹம்
வ்யாஜீக்ருத்ய தத் ஏவ ஹே கருணயா மாம் பச்ய த்ருஷ்ட்யா மனாக்–11

தஸ்மாத் ஏவ ஹி கும்பகோண நகரே வேதேஷு பாரம் கதை:-அதனாலே -கீழே வேத ஸ்வரூபி -பதாஞ்சலி படுக்கை –
வேத அன்வயம் உள்ளார் இடம் பிரியமானவன் -அதனாலே இங்கு எழுந்து அருளி -வேதம் வல்லார் -நிறைந்த –
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வதங்க ஆடு அரவம் அமளியில்
அறி துயில் அமர்ந்த பரமன் அன்றோ இவன் –
யுக்தே வைதிக நாமதேய மஹிதே சேதே விமானே பவான்-வைதிக விமானம் -வேதம் தொடர்பு இதிலும்
வேதம் வேத்மி ந வேத புஸ்தகம் அஹம் ஹஸ்தே பிபர்மி அன்வஹம்-வேதம் அறியாத அடியேன் -நைச்சியம் –
வேத புஸ்தகம் கையிலே -ஏந்தி உனது திரு முன்னே நிற்கிறேன் -பவித்ரா உத்சவத்தில் –
வேத பாதாரண்யம் பண்ணுபவன் போல்
வ்யாஜீக்ருத்ய தத் ஏவ ஹே கருணயா மாம் பச்ய த்ருஷ்ட்யா மனாக் -கடைக்கண் -சிறுச் சிறிதே விழித்து –
கடாக்ஷ லேஸம் அருளி ரஷித்து அருள வேணும் -அடியோங்களையும் ரக்ஷித்து அருள பிராத்திக்கிறார் –

———–

சாந்த்யா நாம ஸம்ருத்தம் ஏகம் அம்ருதம் ப்ராசீன வாசோதிதம்
மாதுர்யைக நிகேதனம் மனஸி யத் யோகீச்வராணாம் ஸ்திதம்
த்ருச்யம் மாம் ஸத்ருசாம் அபி இஹ ஜயதி ஸ்ரீகும்பகோணே புரே
ஸ்ரீமத் கோமளவல்லிகா பரிஸரே ஸ்ரீவைதிகாக்யே க்ருஹே–12-

சாந்த்யா நாம ஸம்ருத்தம் ஏகம் அம்ருதம் ப்ராசீன வாசோதிதம்-சாந்தி ஒன்றே வடிவு –
ஆனந்தம் அமைதி கிட்டும் ஸேவிக்கவே -ஒப்பற்ற அமுதம் அன்றோ இவன் -மாதுர்யம் ப்ரவாஹிக்கும்
சவுந்தர்யம் பிரசித்தம் இங்கு -கோயிலிலே ஐஸ்வர்யம் -தொன்மையான வேதங்களால் போற்றப்பட்டவன் -வைதிக விமானம்
மாதுர்யைக நிகேதனம் மனஸி யத் யோகீச்வராணாம் ஸ்திதம்-மாதுர்யத்துக்கு இருப்பிடம் -யோகிகள் உள்ளத்தில்
த்ருச்யம் மாம் ஸத்ருசாம் அபி இஹ ஜயதி ஸ்ரீகும்பகோணே புரே-தாழ்ந்த நம்மாலும் காணும்படி இங்கே
ஸ்ரீமத் கோமளவல்லிகா பரிஸரே ஸ்ரீவைதிகாக்யே க்ருஹே-ஸ்ரீ கோமள வல்லித்தாயார் அருகில்
வைதிக விமானத்தின் அடியிலே சேவை சாதித்து அருளுகிறார் -கண்களால் கண்டு அநுபவிப்போம்

————-

பீத்வா ஹந்த விஷம் பயோதி குஹராத் ஜாதம் புராரி: புரா
நாகை: ஆபரணை: ச ஸம்வ்ருத தனு: தப்தோ நிதாந்தம் தத:
பர்யாப்த்யா விதுரம் பிபன் இஹ த்ருசா கும்பஸ்ய கோணே அம்ருதம்
கும்பம் ஸ்வீயம் இதீவ ஸம்ப்ரகதயன் கும்பேச்வரோ வர்ததே–13-

அனுபவ பரிவாக ரூபமாக ஸ்லோகம் -பொற்றாமரை குளத்தில் நீராடி அனுஷ்டானம் -முடித்து –
ஆண்டாள் சந்நிதி சேவித்து -போகும் பொழுது -கும்பேஸ்வரர் வைத்து ஸ்தோத்ரம் பண்ண சொல்ல
ஸ்ரீ நிவாஸா பட்டாச்சாரியார் -சக்ரபாணி பட்டாச்சாரியார் திருத்தகப்பனார் -சார்ங்கம் வில்லை சாத்தி ஸ்லோகம் அருளச் சொல்ல
விஷம் அருந்தி -வேதனை போக்க -நாக ஆபரணம் -இவற்றை வைத்து கடிக்க சொல்ல –
முள்ளை முள்ளால் எடுத்து -பலன் இல்லாமல் –அமுதம் -கொண்டும் இல்லாமல்
ஆராவமுதம் -கும்பேஸ்வரர் பின்னால் நின்று -பின் அழகை அனுபவிக்க -ரோதம் தீரப் பெற்றார் –
வேதனை தீரப் பெற்றார் -விளங்குகிறார் -என்று அருளிச் செய்தார்

———-

மர்யாதாதிக மஞ்ஜுதா விஹ்ருதயே க்ரௌர்யாதி தூராத்மனே
கர்யாஜீவன கர்மணி ஸ்யதவதே புர்யா நிஜாயா: புரா
அர்யாமோத விமர்தனைக ரதயே வர்யாய தைத்ய த்விஷாம்
பர்யாப்த்யா ரஹித அம்ருதாய பவதே குர்யாம் ஸபர்யாம் முதா–14-

மர்யாதாதிக மஞ்ஜுதா விஹ்ருதயே க்ரௌர்யாதி தூராத்மனே-அனுபவ ஜனாதி பரிவாக -விளைவே -ஸ்லோகம் –
நாம் அனுபவிக்க ஸ்ரீ நிவாஸ பட்டாச்சாரியார் ஏடு படுத்தி வைத்துள்ளார் -நமக்கு கிடைத்த அவற்றுள் நிறைவு ஸ்லோகம் இது –
எல்லை கடந்த இனிமையின் விளையாட்டு நிலமாக உள்ளவன் ஆராவமுதன் -எல்லை நிலம் -தீய குணங்களுக்கு எதிர் தட்டு –
உபக லிங்கங்கள் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணக்கடலாகவும்
கர்யாஜீவன கர்மணி ஸ்யதவதே புர்யா நிஜாயா: புரா-ஆதி மூலமே -த்வரை உடன் வந்தவன்
அர்யாமோத விமர்தனைக ரதயே வர்யாய தைத்ய த்விஷாம்-அடியார் த்வேஷிகளை நிரசித்து
பர்யாப்த்யா ரஹித அம்ருதாய பவதே குர்யாம் ஸபர்யாம் முதா-போதும் என்ற எண்ணம் வரமுடியாத
ஆராவமுதனான உனக்கு உகந்து பணி செய்ய அருள வேண்டும் —

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோமள வல்லி ஸமேத ஆராவமுதாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்–அயோத்தியா காண்டம்-மிகைப் பாடல்கள்-

December 14, 2020

1. மந்திரப் படலம்

மன்னனே! அவனியை
மகனுக்கு ஈந்து, நீ
பன்ன அருந்தவம்
புரி பருவம் ஈது’ என,
கன்ன மூலத்தினில்
கழற வந்தென,
மின் எனக் கருமை போய்
வெளுத்தது – ஓர் மயிர்.

அவனி – பூமி; கன்ன மூலம் – காதின் அடியில், காது அடியில்
தலைமயில்நரைத்தல் முதுமைக்கு அடையாளம் ஆகும்; சுழறல் –
இடித்துரைத்தல்.

———-

தீங்கு இழை இராவணன்
செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் –
அவனி காவலன்

படிமம் – பிரதிமா என்னும் வடசொல் திரிபு. தன்னுடைய உருவம்.

———-

எய்திய முனிவரன்
இணைகொள் தாமரை
செய்ய பூங் கழலவன்
சென்னி சேர்த்த பின்,
‘வையகத்து அரசரும்
மதி வல்லாளரும்
வெய்தினில் வருக’ என
மேயினான் அரோ.-4-1-

முனிவரன் – வசிட்டன்; செய்ய பூங்கழலவன் – தயரதன்;
மதிவல்லாளர்- அறிவின் வலிமை படைத்தவர், இங்கே அமைச்சர்;
வெய்து – விரைவாக; அரோ- அசை.

————-

ஆளும் நல் நெறிக்கு அமைவரும்
அமைவினன் ஆகி,
நாளும் நல் தவம் புரிந்து,
நல் நளிர் மதிச் சடையோன்
தாளில் பூசையின் கங்கையைத்
தந்து, தந்தையரை
மீள்வு இல் இன் உலகு
ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள்.–66-1-

நளிர் மதிச் சடையோன் – சிவபிரான். சிவனை வழிபட்டுக்
கங்கையைக்கொணர்ந்து தன் முன்னோர்கள் ஆய சகரர்களை நல்லுலகு
சேர்ப்பித்தவன்பகீரதன்.

————

‘நறைக் குழற் சீதையும்
ஞால நங்கையும்,
மறுத்தும், இங்கு ஒருவற்கு
மணத்தின்பாலரோ –
கறுத்த மா மிடறுடைக்
கடவுல் கால வில்
இறுத்தவற்கு அன்றி?’ என்று
இரட்டர் கூறினார்.–76-1-

மறுத்தும் – மீட்டும் – இங்கே ‘வேறும்’ என்பது பொருள்; கடவுள்-
சிவன்; இரட்டர் – இரட்டதேயத்து அரசர்.

———-

‘ஏத்த வந்து உலகு எலாம்
ஈன்ற வேந்தனைப்
பூத்தவன் அல்லனேல்,
புனித வேள்வியைக்
காத்தவன் உலகினைக்
காத்தல் நன்று’ என,
வேத்தவை வியப்புற,
விதர்ப்பர் கூறினார்.-76-2-

பூத்தவன் – திருமால்; வேள்வியைக் காத்தவன் – விசுவாமித்திரனது
வேள்வியைக் காத்தளித்த இராமன்.

——-

பெருமையால் உலகினைப்
பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஒம்புதற்கு
உரிமை பூண்ட அத்
தருமமே தாங்கலில்
தக்கது; ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது’ எனக்
கலிங்கர் கூறினார்.–76-3-

‘தருமமே தாங்கல்’ என்பது இராமனை நினைத்துக் கூறியதாம்.

———

கேடு அகல் படியினைக்
கெடுத்து, கேட இலாத்
தாடகை வலிக்கு ஒரு
சரம் அன்று ஏவிய
ஆடக வில்லிக்கே
ஆக, பார்!’ எனாத்
தோடு அவிழ் மலர் முடித்
துருக்கர் சொல்லினார்.–76-4-

படி – பூமி; ஆடக வில்லி – பொன் வில்லை உடைய இராமன்;
ஆடகம்- பொன் வகைகளுள் ஒன்று. ஆடகம், சாம்பூநதம், கிளிச் சிறை,
சாதரூபம் என்பவை பொன்னின்நான்கு வகைகள். இவற்றைச் செம்பொன்,
கரும்பொன், பசும்பொன், வெண்பொன்என்பர்.

———–

‘கற்ற நான்மறையவர்
கண்ணை, மன்னுயிர்
பெற்ற தாய் என அருள்
பிறக்கும் வாரியை,
உற்றதேல் உலகினில்
உறுதி யாது?’ என,
கொற்றவேல் கனை கழல்
குருக்கள் கூறினார்.–76-5-

வாரி – கடல்; கனை – செருக்கிய; குருக்கள் – குரு
தேசத்தவர்கள்.

——–

வாய் நனி புரந்த மா
மனுவின் நூல் முறைத்
தாய் நனி புரந்தனை,
தரும வேலினாய்,!
நீ நனி புரத்தலின்
நெடிது காலம் நின்
சேய் நநி புரக்க!’ எனத்
தெலுங்கர் கூறினார்.–76-6-

வாய்- இடம்; முறைத்தாய்- முறைப்படி; நின் சேய்- இராமன்.

———

‘வையமும் வானமும்
மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப; திகழும்
யாண்டு எலாம்,
நெய் தவழ் வேலினாய்!
நிற்கும் வாசகம்;
செய் தவம் பெரிது!; எனச்
சேரர் கூறினார்.–76-7-

நிற்கும் வாசகம் – புகழ்.

———

பேர் இசை பெற்றனை;
பெறாதது என், இனி?
சீரியது எண்ணினை;
செப்புகின்றது என்?
ஆரிய! நம் குடிக்கு
அதிப! நீயும் ஓர்
சூரியன் ஆம்’ எனச்
சோழர் சொல்லினார்.-76-8-

ஆரிய – தசரதனை நோக்கிய விளி. மேலோனே என்பதாம். சோழர்
சூரிய குலத்தவர்ஆதலின் ‘நம் குடிக்கு’ என்றார்.

———

ஒன்றிய உவகையர்;
ஒருங்கு சிந்தையர்,
தென் தமிழ் சேண் உற
வளர்த்த தென்னரும்,
‘என்றும் நின் புகழொடு
தருமம் ஏமுற,
நின்றது நிலை’ என
நினைந்து கூறினார்.–76-9-

தென்னர்- பாண்டியர்; ஏமுற- ஏமம்; உற- பாதுகாப்பு அடைய.

———-

‘வாள் தொழில் உழவ! நீ
உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது;
உரிமை மைந்தனைப்
பூட்டினை ஆதலின்,
பொரு இல் நல் நெறி
காட்டினை; நன்று’ எனக்
கங்கர் கூறினார்.–76-10-

வாள் தொழில் உழவ! – தயரதனை நோக்கிய விளி. “வில்லேர்
உழவர்” என்பது போல.

——–

‘தொழு கழல் வேந்த! நின்
தொல் குலத்துளோர்
முழு முதல் இழித்தகை
முறைமை ஆக்கி, ஈண்டு
எழு முகில் வண்ணனுக்கு
அளித்த இச் செல்வம்
விழுமிது, பெரிது!’ என
மிலேச்சர் கூறினார்.–76-11-

முகில் வண்ணன் – இராமன்; இச்செல்வம் – அரசுச் செல்வம்.

———-

‘கொங்கு அலர் நறு விரைக்
கோதை மோலியாய்!
சங்க நீர் உலகத்துள்,
தவத்தின் தன்மையால்,
அங்கணன் அரசு
செய்தருளும் ஆயிடின்’-
சிங்களர் – ‘இங்கு இதில்
சிறந்தது இல்’ என்றார்.-76-12-

கோதை – மாலை; மோலி – மௌலி, அதாவது மகுடம்;
அங்கணன்-அருள் கண்ணையுடைய இராமன்.

———

ஆதியின் மனுவும் நின்
அரிய மைந்தற்குப்
பாதியும் ஆகிலன்;
பரிந்து வாழ்த்தும் நல்
வேதியர் தவப் பயன்
விளைந்ததாம்’ என,
சேதியர் சிந்தனை
தெரியச் செப்பினார்.–76-13-

ஆதியின் மனு – வைவஸ்வத மனு, சூரிய குல முன்னோன்; பரிந்து- அன்புகொண்டு; சேதியர் – சேதி நாட்டவர்.

———–

அளம் படு குரை கடல்
அகழி ஏழுடை
வளம் படு நெடு நில
மன்னர் மன்னனே!
உளம் படிந்து உயிர் எலாம்
உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது!’ என
விராடர் கூறினார்.–76-14-

அளம் – வயல், உப்பளம் என்பது போல.

———-

பொன்னும், மா மணியும்.
புனை சாந்தமும்,
கன்னி மாரொடும்
காசினி ஈட்டமும்,
இன்ன யாவையும்
ஈந்தனள், அந்தணர்க்கு,
அன்னமும் தளிர்
ஆடையும் நல்கினான்.–9-1-

அந்தணர்க்கு ஈந்தனள் என முடிக்க. நல்கினாள். கோசலை.

—————

நல்கி, நாயகன்
நாள்மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி,
வணங்கி, புரை இலா
மல்லல் மாளிகைக்
கோயில் வலங்கொளா,
தொல்லை நோன்புகள்
யாவும் தொடங்கினாள்.-9-2-

புரை – குற்றம். உயர்ச்சி என்பதும் ஆம்; தனக்கு மேல் உயர்ச்சி
இல்லாத எனஉரைக்க. நோன்பு – விரதம்.

————

கடி கமழ் தாரினான்,
கணித மாக்களை
முடிவ உற நோக்கி, ஓர்
முகமன் கூறி, பின்,
‘வடி மழுவாளவற்
கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள்
மொழிமின்’ என்றனன்.–9-3-

கணித மாக்கள் – சோதிடர்; வடி மழுவாளவன் – பரசு ராமன்.

——–

3. கைகேயி சூழ்வினைப் படலம்-

வந்து மன் நகரில் தம்தம்
வகைப்படும் உருவம் மாற்றி,
சுந்தரத் தடந்தோள் மாந்தர்
தொல் உருச் சுமந்து தோன்றாது,
அந்தரத்து அமரர், சித்தர்,
அரம்பையர், ஆதி ஆக
இந்திரை கொழுநற் போற்றி
இரைத்துமே எய்தி நின்றார்–75-1

மன் நகர் – அரச நகரம், அயோத்தி. அமரர், சித்தர், அரம்பையர்
முதலியோர் வடிவம் மறைத்து மனித வடிவில் அயோத்தியில் வந்து நின்றார்
என்பதாம்; இந்திரை – திருமகள். 75-1

——

4. நகர் நீங்கு படலம்-

விழுந்து பார்மிசை,
வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, ‘என் நாயகனே!
துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது
செப்புதி நீ’ எனா,
அழுந்தினாள்; பின்னர்
அரற்றத் தொடங்கினாள்.-29-1-

வெய்து உயிர்த்து – வெப்பமாக மூச்சு விட்டு, பெருமூச்சு விடுதலாம்;
அழுந்தினாள்- துன்பத்தில் மூழ்கினாள்.

————

அன்னாள் இன்ன பன்னி
அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின்
மயங்கி, ‘மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ
முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?’
என்றே இரங்கி மொழிவான்;–53-1-

பன்னி – பலமுறை சொல்லி; மன்னர் மன் ஆனவனும் – தயரதனும்.

———-

உணர்வு ஏதும் இலாள் உரையால்
உரை சால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே
போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா;
இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ? – துணைவா!’ என்றாள்;
‘துயரேல் ! துயரேல்!’ என்றாள்.–53-2-

குமரன் – இராமன்; இணர் – பூங்கொத்து.

———-

சேல் ஆகிய மா முதல்வன்
திரு உந்தியின் நீள் மலரின்-
மேல் ஆகிய நான்முகனால்,
வேதங்களின் மா முறையின்-
பால் ஆகிய யோனிகளின்
பல ஆம் வருணம் தருவான்,
நால் ஆகியது ஆம் வருணம்தனின்,
முன் எமை நல்கினனால்.–76-1-

சேல் ஆகிய மா முதல்வன் – மீனாக அவதாரம் செய்த திருமால்;
முன் -முதல் வருணம், அந்தணர் பிறப்பில்.

———–

‘ “அந் நான்மறையோன் வழியில்,
அருள் காசிபன் நல் மைந்தன்,
மின் ஆர் புரி நூல் மார்பன்,
விருந்தேசனன் மெய்ப் புதல்வன்,
நல் நான்மறை நூல் தெரியும்
நாவான் சலபோசன் எனச்
சொன்னான் முனிவன் தரு
சுரோசனன் யான்” என்றான்.–76-2-

பிரமன் – காசிபன், விருத்தேசனன், சலபோசன், சுரோசனன் எனக்
குல முறைக்காண்க.

———

தாவாத அருந்தவர் சொல்
தவறாததானால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா
மகவு உண்டு’ என்றே
ஓவாதவர் முன் நின்றறேன்;
ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள்பொன்றி,
பொன் – நாடு அதனின் புக்கார்.’–86-1-

தவறாது அதனால் – எனப் பிரிக்க; ஒரு சொல் உடையாது –
ஒன்றும் பேசாது.

———

இம் மா மொழி தந்து அரசன்
இடர் உற்றிடுபோழ்தினில், அச்
செம் மா மயில் கோசலையும்,
திகையா, உணர்வு ஓவினளால்;
மெய்ம்மாண் நெறியும், விதியின்
விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு
அவலம் தரு நெஞ்சினனாய்.–87-1-

ஓவினள் – ஒழிந்தாள்; மாதவன் – வசிட்டன்

——

என்று என்று சீற்றத்து
இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின்
பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம்
மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான்
மருமான் இவை கூறலுற்றான்;–127-1-

மருமான் – பரம்பரையில் வந்தவன். இராமன்.

———–

ஆய் தந்த மென் சீரை அணிந்து
அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினள்,
சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேண் தந்த மென் தோளி தன்
மென் முலை பால் உகுப்ப –
தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி
தழைத்தி!’ என்றாள்.–147-1-

ஆய் – தாய், கைகேயி; தாய் – சுமித்திரை.

—————

‘வானமே அனையது ஓர்
கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன்,
உலகம், யாவையும்,
கானமே புகும்எனின்,
காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை?’
என்றார் சிலர்.–191-1-

ஊனம் வேறு இலான் – இராமன். இராமனுடன் அனைவரும் காடு
சென்றால் கைகேயியும்,பரதனுமே ஆள்வார்களோ இப்பூமியை என்பது
மக்கள் கூற்று,.

———–

போயினான் நகர்
நீங்கி – பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி,
துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி,
உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி,
அளித்தருள் ஆதியான்.–234-1-

பேரொளி ஆகி, மும்மூர்த்திகள் ஆகிய பிரமன், திருமால், சிவன்
ஆகி; உயிர்த்தொகைக்கு ஆயும் ஆகி – உயிர்களுக்குத் தாயும் ஆகி
உள்ள இராமன்.

———–

5. தைலம் ஆட்டு படலம்-

தொடுத்த கலிடைச் சிலர்
துவண்டனர், துயின்றார்;
அடுத்த அடையில் சிலர்
அழிந்தனர் அயர்ந்தார்;
உடுத்த துகில் சுற்று
ஒரு தலைச் சிலர் உறைத்தார்;
படுத்த தளிரில் சிலர்
பசைந்தனர் அசைந்தார்.–16-1-

கல் இடை – கல்லிடத்து; அடை – இலை; பசைந்தனர் – அன்பு
கொண்டவராய்.

———

ஒரு திறத்து உயிர் எலாம்
புரந்து, மற்று அவண்
இரு திறத்து உள வினை
இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத்
தாங்கி, தாழ்வு இலாப்
பொரு திறல் சுமந்திரன்
போய பின்னரே.–46-1-

இரு திறத்து உள வினை – நல்வினை, தீவினை.

———-

துந்துமி முழங்க, தேவர்
தூய் மலர் பொழிந்த வாழ்த்த,
சந்திர வதனத்து ஏயும்
அரம்பையர் தழுவ, தங்கள்
முந்து தொல் குலத்துளோரும்
முக்கணான் கணமும் சூழ,
அந்தரத்து அரசன் சென்றான்,
ஆன தேர்ப் பாகன் சொல்லால்.–59-1-

அரசன் – தயரதன்.

———

6. கங்கைப் படலம்-

அன்ன காரணத்து
ஐயனும், ஆங்கு அவர்
உன்னு பூசனை
யாவும் உவந்தபின்,
மின்னு செஞ் சடை
மெய்த் தவர் வேண்டிட,
பன்ன சாலையின்
பாடு இருந்தான் அரோ.–27-1-

பன்ன சாலை – தவத்தோர் தங்கும் குடில்; பர்ண சாலை – பன்ன
சாலை ஆயிற்று; இலை, தழைகளால் வேயப்பெற்றது. ‘அரோ’ அசை.

———–

7. குகப் படலம்

நின்றான் நெஞ்சில்
நிரம்புறும் அன்பால்,
இன்றே நின் பணி
செய்திட, இறைவா!
நன்றே வந்தனென்;
நாய் அடியேன் யான்’
எயினரின் இறையோன்.–10-1-

எயினர்- வேடர்; இறைவா- இராமனே;கூவினன்- அழைத்தான்.

——–

வெயில் விரி கனகக் குன்றத்து
எழில் கெட விலகு சோதிக்
கயில் விரி வயிரப் பைம் பூண்
கடுந் திறல் மடங்கல் அன்னான்
துணில் எனும் அணங்கு வந்து
தோன்றலும், அவளை, ‘நாமே
எயிலுடை அயோத்தி மூதூர்
எய்து நாள் எய்துக!’ என்றான்.–22-1-

கனகக் குன்றத்து….சோதி என்றது இலக்குவன் திருமேனியை; கயில்-
மூட்டு; மடங்கல் – சிங்கம். சிங்கம் அன்னான் இலக்குவன். தூக்கம் என்னும்
மகள்அங்கே வந்தாள். அவளை நாம் அயோத்திக்கு வருகின்ற நாளில்
எம்பால் வருக என்றான்இலக்குவன்; பதினான்கு ஆண்டுகளும் உறங்காமல்
இருந்தான் ஆதலின் ‘உறங்காவில்லி’ என்பது அவனுக்கு ஒரு பெயர்.

———-

மறக் கண் வாள் இளைய வீரன்
ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும், அண்ணல்
உபய பங்கயங்கள் போற்றி,
‘துறக்கமாம், என்னல் ஆய
தூய மதில் அயோத்தி எய்தி
இறுக்கும்நாள், எந்தை பாதம்
எய்துவல்’ என்னப் போனாள்.–22-2-

உபய பங்கயம் – இரண்டாகிய தாமரை – இங்கே திருவடிக்கு
உருவகம். துயில் மடந்தைஇலக்குவனைத் தீண்டாது சென்றாளாம்.

——–

மற்றவள் இறைஞ்சி ஏக,
மா மலர்த் தவிசின் நீங்காப்
பொற்றொடி யோடும் ஐயன்
துயில்தரும் புன்மை நோக்கி,
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி,
இரு கண் நீர் அருவி சோர,
உற்ற ஓவியம்அது என்ன,
ஒரு சிலை அதனின் நின்றான்.–22-3-

ஒரு சிலை – ஒரு கல். இனி ஒரு வில் எனலும் ஆம் ‘வில்லை
ஊன்றிய கையோடும்நின்றான்’ என வருதலின்.

———

9. சித்திரகூடப் படலம்-

நெய் கொள் நீர் உண்டு,
நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த
வை கொள் வேல் எனக்
காலனும் மறுகுறும் கண்ணாய்!
மெய்கள் நோகின்ற பிடிகளை
விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின
நிற்பன காணாய்!’–36-1-

மெய் நோவுற்ற பெண்யானைகளை ஆண் யானைகள் தம் கை நோவு
கருதாது தாங்கிக்கொண்டுநிற்பனவாம்.

———-

விடம் கொள் நோக்கி! நின்
இடையின் மின் என வெருவி,
படம் கொள் நாகங்கள் முழை
புகப் பதைப்பன பாராய்!
மடங்கள் ஆளிகன் எனக்
கொடு மழைஇனம் முழங்க,
கடம் கொள் கார் மதக்
மைம்மலை இரிவன காணாய்!–36-2-

மின்னலைக் கண்டு பாம்பு அஞ்சும். இடிகேட்டு வெருளும் நாகம். இடி,
மின்னல் இரண்டும்ஒன்றே. சிங்கம் போல மேகம் முழங்க யானைகள்
ஓடுகின்றன.

——–

எய்த இன்னல் வந்த போது
யாவரேனம் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க;
சேண் நெறிக்கண் நீங்கிட,
மைய கண்ணி செய்ய பாதம்
வல்ல ஆய; எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை
கட்ட வல்ல ஆயவே.’–50-1-

‘துன்பம் வந்த போது யாரும் எவையும் செய்ய வல்லவர்’ என்ற உலக
நீதி இங்குக்கூறப்படுகிறது.

———-

‘தினைத் துணை வயிறு
அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை
வருத்தி வாழ்வன;
அனைத்து உள உயிர்களும்
யாவும் அங்ஙனே;
மனத்து இடர் நீங்கினார்
இல்லை. மன்னனே!’–55-1-

எறும்பும் யானையை வருத்துகிறது. எல்லா உயிர்களும் ஒன்றையொன்று
வருத்துகின்றன. துன்பம்அற்றவர் யாரும் இல்லை என்றபடி.

————

10. பள்ளிபடைப் படலம்

ஆய காதல்
தனையனைத் தந்த அத்
தூய தையல்
தொழிலுறுவார், ‘உனைக்
கூயள் அன்னை’ என்றே
சென்று கூறலும்,
ஏய அன்பினன்தானும்,
சென்று எய்தினான்.–41-1-

தொழில் உறுவார் – ஏவல் மகளிர்; அன்பினன் – இராமன்.

————-

தீ அன கொடியவள்
செய்த செய்கையை
நாயினேன் உணரின், நல்
நெறியின் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து
உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி
அதனின் வீழ்க, யான்’–116-1-

தோம் – குற்றம். நல்லவர்க்குத் தீங்கு செய்யும் கயவர்கள் செல்லும்
நரககதியில் நான் செல்வேனாக.

———

உந்து பொன்
தடந் தேர் வலானொடும்,
மந்திரப் பெருந்
தலைவர், மற்றுளோர்,
தந்திரத் தனித்
தலைவர், நண்பினோர்,
வந்து சுற்றும் உற்று,
அழுது மாழ்கினார்.–125-1-

தேர் வலான் – சுமந்திரன்; மாழ்கினார் – மயங்கினார்,

————–

என்று கொண்டு மா
தவன் இயம்பலும்,-
நின்று நின்று தான்
நெடிது உயிர்த்தனன்;
‘நன்று, நன்று!’ எனா
நகை முகிழ்த்தனன்;-
குன்று குன்றுறக்
குலவு தோளினான்.–131-1-

மா தவன் – வசிட்டன்; முகிழ்த்தல் – மொக்குவிட்டு மலர்தல்,
அங்குச் சிரித்தான் என்பது பொருள்; தோளினான் – பரதன்.

———

அன்னதாக, அங்கு,
ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம்
தோகைமார்களும்,
துன்னி வந்தனர்-
சோர்வு இலாது, அவர்
மின்னும் வாள்
எரிமீது வீழவே.–136-1-

அறுபதினாயிரம் மனைவியர்களும் தீக்குளித்தனர்.

————

11. கங்கை காண் படலம்

வந்து எதிரே விழுந்தவனும்
வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள்
புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ
எங்கு எழுந்தாய் – இமையோர்தம்
சிந்தையினும் சென்னியினும்
வீற்றிருக்கும் சீர்த்தியாய்!– 32-1-

2334 ஆம் பாடலின் மாற்றுருவம் இப்பாடல்.

———

ஏறினர் இளவலோடு,
இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும்
உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி
நீங்கி, பெட்போடும்
கூறு தென் கரையிடைக்
குழீஇய போதிலே.–63-1-

பேறு உள பெருநதி – புண்ணியப் பயன் உடைய கங்கை.

————

தன் அன தம்பியும்,
தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும்,
தூய தோழனும்,
துன்னினர் ஏறலும்,
துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால்
நடத்தல் மேயினான்.–63-2-

தம்பி – சத்துருக்கனன்; தேர் வலவன் – சுமந்திரன்; தோழன் –
குகன்; துழா துடுப்பு – துழாவுகின்ற துடுப்பு. இனி துழாவும், துடுப்பும்
என்னும் இரண்டுகால்களால் படகை நடத்துதல் என்றும் ஆம். துழா
என்பது நீரைத் துழாவும் நீண்ட கோல் ஆகும். துடுப்பு – மட்டை
ஆகும்.

———-

அன்ன காதல்
அருந் தவர், ‘ஆண் தகை!
நின்னை ஒப்பவர் யார்
உளர், நீ அலால்?’
என்ன வாழ்த்திடும்
ஏல்வையில், இரவியும்
பொன்னின் மேருவில்
போய் மறைந்திட்டதே.–5-1-

ஏல்வை – பொழுது.

————-

இன்ன ஆய
எறி கடல் சேனையும்,
மன்னர் யாவரும்,
மன் இளந் தோன்றலும்,
அன்ன மா முனியோடு
எழுந்து, ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு
ஏகிய சொல்லுவாம்.–19-1-

ஆண்தகை துன்னு – இராமன் தங்கியுள்ள.

—————–

ஐய! நின்னுடைய
அன்னை மூவரும்,
வைய மன்னரும்,
மற்றும் மாக்களும்.
துய்ய நாடு ஒரீஇத்
தோன்றினார்; அவர்க்கு
உய்ய நல் அருள்
உதவுவாய்’ என்றான்.–89-1-

ஒரீஇ – நீங்கி.

————-

கங்குல் வந்திடக்
கண்டு, யாவரும்
அங்கணே துயில்
அமைய, ஆர் இருள்
பொங்கு வெம் பகை,
போக, மற்றை நாள்,
செங் கதிர் குண
திசையில் தோன்றினான்.–94-1-

அங்கணே – அவ்விடத்தே.

———–

‘வானின் நுந்தை சொல்
மரபினால் உடைத்
தானம் நின்னது என்று
இயைந்த தன்மையால்,
ஊனினில் பிறந்து
உரிமையாகையின்
யான் அது ஆள்கிலேன்’ என,
அவன் சொல்வான்.–111-1-

2485 ஆம் பாடலின் மாற்றுவரும் இது. இராமன் கூறும் பாட்டைத்
திருப்பிப் பரதன் கூற்றாகமாற்றியதாகும். தயரதன் சபையில் கூறிய
சொல்லால் அரசு நின்னதாயிற்று; ஊனினில் பிறந்து- தயரதனிடத்தில்
பிறந்து; நீ உரிமையாகையின் – நீ மூத்தவனாய் உரிமைபெற்றபடியால்.
யான் அது ஆள்கிலேன் என்றான் பரதன் என்க. இதை இராமன்
கூற்றாகவும்உரைக்கலாம்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/ 12- கங்கை காண் படலம்–

December 13, 2020

பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.–1-

பூவிரி – பூத் தொழிலாற் சிறப்புற்ற; பொலன்கழல் – பொன்னாற்
செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்த; பொருஇல் தானையான் – ஒப்பற்ற
சேனையை உடையபரதன்; காவிரி நாடு அன்ன – காவிரி நதியால்
வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த;
கழனி நாடு ஒரீஇ- வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு
நீங்கி; தாவர சங்கமம் என்னும் தன்மையயாவையும் – நிலைத்திணை;
இயங்கு திணை என இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்;
இரங்கிட – (தன் நிலை கண்டு) வருந்த; கங்கை எய்தினான் -கங்கைக்
கரையை அடைந்தான்.

——–

எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது,
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால்,
உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே.–2-

கண் அகன் – இடம் அகன்ற; பெரும் புனல் – மிக்க நீரை உடைய;
கங்கை – கங்கையாறு; அண்ணல் – பெருமையுடைய; வெங்கரி – கொடிய
யானைகளின்; மதத்து அருவி – மத நீர்ப் பெருக்காகிய அருவி; எங்கணும்
பாய்தலால் – எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; எண்ண அரும்
சுரும்பு தம் இனத்துக்கல்லது – கணக்கிட முடியாத வண்டுக்
கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); உண்ணவும் – குடிக்கவும்;
குடையவும் – குளித்து மூழ்கவும்; உரித்தன்று ஆயது –
உரிமையுடையதல்லாததாக ஆயிற்று.

———–

அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே.–3-

அடிமிசைத் தூளி புக்கு – (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த
தூசி(அமரருலகத்தில்) புகுந்து; அடைந்த தேவர்தம் – அங்கே உள்ள
தேவர்களது; முடி உற- தலைமீது படும்படி; பரந்தது – (தேவருலகு
முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் – ஒரு
தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் – பெருமூச்சு
விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் – (நீரில்) நீந்திக்கொண்டு
இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் – மண்ணில் விழுந்து
புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)

———–

பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையை மடுத்தது, அக் கங்கை வெள்ளமே.–4-

அக் கங்கை வெள்ளம் – அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு;
பாலை ஏய்நிறத்தொடு – பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான்
பண்டு படர் – தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்-
ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று இல்லை – சென்று
கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை
பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய; மன்னன் சேனை ஆம்
வேலையே – பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது – உண்டு விட்டது.

———

கான்தலை நண்ணிய காளைபின் படர்
தோன்றலை, அவ் வழித் தொடர்ந்து சென்றன –
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே.–5-

கான் தலை நண்ணிய – காட்டிடத்திற் சென்ற; காளை பின்படர் –
இராமன்பின்னே (இராமனை நாடிச்) சென்ற; தோன்றலை – இராமன்
பின்னே (இராமனை நாடிச்)சென்ற; தோன்றலை – பரதனை; அவ்வழி –
அந்த வழியிலே; தொடர்ந்து சென்றன – பின்பற்றிச் சென்ற சேனைகள்;
முற்றும் -; ஆன்றவர் உணர்த்திய -பெரியோர்களால் கணக்கிட்டு
உணர்த்தப்பெற்ற; மூன்று பத்து ஆயிரத்து இரட்டி -அறுபதினாயிரம்;
அக்குரோணிகள் – அக் குரோணிகள் ஆகும்.

அக்குரோனி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது (21870), தேர்இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது
(21870). குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள்
இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (190350) ஆக இரண்டு
இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர்
அக்குரோணி. இப்படிஅறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன்
சென்றன என்க-அகௌஹிணீ என்னும் வடிசொற் சிதைவு என்பர்

———-

அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
‘துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?’ என்று, எடுத்த சீற்றத்தான்.–6-

அப்படை – அந்தச் சேனை; கங்கையை அடைந்த ஆயிடை –
கங்கைக் கரையைநெருங்கிய அச்சமயத்தில் (அது கண்டு) ‘குகன் எனப்
பெயரிய கூற்றின் ஆற்றலான்’ (2309); இப்படை எடுத்தது – இந்தச் சேனை
புறப்பட்டது; துப்பு உடைக் கடலின் நீர் சுமந்தமேகத்தை – பவளம்
உடைய கடலிலிருந்து நீரை முகந்து சூல் கொண்ட கரு மேகத்தை; ஒப்பு
உடை அண்ணலோடு – உவமையாகப் பெற்ற கரிய திருமேனியுடைய
இராமபிரானோடு; உடற்றவேகொல் – பேர் செய்வதற்காகவேயோ;
என்று – எனக் கருதி; எடுத்தசீற்றத்தான்- மேல் எழுந்த கோபம் உடையவனாய் தென்கரை வந்து
தோன்றினான்

இதுமுதல் ஆறு பாடல்கள்
தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்’ என்கின்ற இப்படலத்துப்
பதினொராம்பாடலில் முடியும்.

———

குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் –
நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில்
புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான்.–7-

குகன் எனப் பெயரிய – குகன் என்ற பெயரை உடைய; கூற்றின்
ஆற்றலான் – யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்;
தொகை முரண் சேனையை – கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்)
சேனையை; துகளின் நோக்குவான் – ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்;
நகை மிக – (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற –
கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற – (உள்ளே
எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெறிவர; குனிப்புறும் –
(கோபத்தால்) மேலேறிவளைந்த; புருவப் போர்விலான் – புருவமாகிய
போர்க்குரிய வில்லை உடையனானான்.

———-

மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ – ஐந் நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான்.–8-

மை உற – தீமை உண்டாக; இறுதி உயிர் எலாம் வாங்குவான் –
இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின்
உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறுகவர் அயில் பிடித்த காலன்
தான்- கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே;
ஐ – அழகிய; ஐ நூறாயிரம் உருவம் ஆயின – ஐந்து இலட்சம் வடிவம்
எடுத்தாற் போன்ற; உறு மெய் தானையான் – வலிய உடம்புடைய
சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் – வில்வித்தையில்
தேர்ந்தவன்.

——-

கட்டிய கரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
‘கிட்டியது அமர்’ எனக் கிளரும் தோளினான்.–9-

கட்டிய – (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; கரிகையன் –
உடையவாளை உடையவன்; கடித்த வாயினன் – (பற்களால்) உதட்டைக்
கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன்- கடுமையாகப் பேசும்
சொற்களை உடையவன்; விழிக்கும் தீயினன்- (கண்கள்) விழித்துப்
பார்க்கும் நெருப்புத் தன்மை உடையவன்; கொட்டிய துடியினன் –
அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்; குறிக்கும் கொம்பினன் –
(போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘அமர்
கிட்டியது’ – ‘போர் அருகில்வந்துவிட்டது;’ எனக் கிளரும் தோளினான்-
என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன் (ஆகி..)
(வரும் பாடலில் முடியும்).

———-

‘எலி எலாம் இப் படை; அரவம், யான்’ என,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் –
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே.-10-

‘இப்படை எலாம் எலி – இந்தச் (பரதன்) சேனை முழுவதும்
எலிகளாகும்; யான்அரவம் – யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும்
பாம்பாவேன்;’ என – என்று வீரவார்த்தை பேசி; வலி உலாம் – வலிமை
நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி
எலாம் – வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரு வழிப் புகுந்த
போல- ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; ஒலி
உலாம் சேனையை- (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை;
உவந்து கூவினான் – மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.(ஆகி).

——–

மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் –
ஒருங்கு அடைநெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அருங் கடையுகம்தனில், அசனி மா மழை
கருங் கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே,–11-

ஒருங்கு அடை நெடும் படை – ஒன்று சேர்ந்து வந்த பெரிய
(வேட்டுவச்) சேனை; அருங் கடை உகம்தனில் – அரிய கடையூழிக்
கூாலத்தில்; அசனி மா மழை – இடியோடுகூடிய மேகமும்; கருங்கடல் –
கரிய கடலும்; கிளர்ந்து என – (ஒலித்து) மிக்குஎழுந்தார் போல;
கலந்து சூழ – ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றிவர; மருங்கு அடை-
பக்கத்தில் உள்ள; தென்கரை – (கங்கையாற்றின்) தெற்குக் கரையில்; வந்து
தோன்றினான் – (குகன் என முடிக்க)

———–

தோன்றிய புளிஞரை நோக்கி, ‘சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென், என் உயிர்த் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம்’ என்றான்.–12-

(தென்கரை வந்து சேர்ந்த குகன்) தோன்றிய புளிஞரை நோக்கி –
(தென்கரையில்தன்னால் அழைக்கப்பட்டுத் தன்முன் வந்து) தோன்றிய
வேடர்களைப் பார்த்து; ‘ஆன்ற பேர்அரசு – நிரம்பிய பெரிய
அரசாட்சியை; என் உயிர்த் துணைவற்கு – என் உயிர்போலச் சிறந்த
தோழனாகிய இராமனுக்கு; ஈகுவான் – தருவதற்காக; சூழ்ச்சியின்ஊன்றிய
சேனையை – (அதனை அவன் பெறாமல் தடுக்கும்) ஆலோசனையோடு
எதிரில் (வடகரையில்)கால் ஊன்றி நிற்கும் (இப்பரதனது) சேனையை;
உம்பர் ஏற்றுதற்கு – (போரில்தொலைத்து) வீரசுவர்க்கத்தே செல்ல
விடுதற்கு; ஏன்றனென் – தொடங்கியுள்ளேன்; நீர் அமைதி ஆம்’ –
நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாக; என்றான் – என்றுசொன்னான்.

———

துடி எறி; நெறிகளும், துறையும், சுற்றுற
ஓடியெறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி, பட’ எனா, பெயர்த்தும் கூறுவான்.–13-

‘துடி எறி – போர்ப் பறைகளை அடியுங்கள்; நெறிகளும் துறையும்-
வருவதற்குரிய வழிகளையும் (தென்கரையில்) ஏறுதற்குரிய துறைகளையும்;
ஓடியெறி – அழித்துநீக்கி, இல்லாமல் செய்யுங்கள்; அம்பிகள் யாதும்
ஒட்டலிர் – தோணிகளுள்ஒன்றையும் (கங்கையில்) ஓட்டாதீர்கள்; கடி எறி
கங்கையின் – விரைந்து அலைவீசிவருகின்ற கங்கையாற்றின்; கரை
வந்தோர்களை – தென்கரைக்கு (தரமாக முயன்று)வந்தவர்களை; பிடி –
பிடியுங்கள்; பட எறி’ – இறக்கும்படி அழியுங்கள்; எனா – என்று (குகன்)
கூறி; பெயர்த்தும் -மேலும்; கூறுவான் – சில வீரவார்த்தைகளையும் சொல்லுவான் ஆனான்.

———-

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
என்று, எனை ஓதாரோ?–14-

‘என் ஆருயிர் நாயகன் – என் அரிய உயிர்த் துணைவனாகிய;
அஞ்சனவண்ணன்- மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய
இராமபிரான்; அரசு ஆளாமே – ஆட்சிஉரிமை எய்தாதபடி;
வஞ்சனையால் – சூழ்ச்சியால்; எய்திய -(அவ்வரசாட்சியைக் கைப்பற்றி)
அடைந்த; மன்னரும் – அரசரும் (பரதரும்); வந்தாரே – (இதோ
என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!; தீ உமிழ்கின்றனசெஞ்சரம் –
நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்; செல்லாவோ –
(இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?-; இவர் உஞ்சு போய்விடின்-
இவர்கள்(என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும்
இடத்துக்குப்) போய்விட்டால்; ‘நாய்க்குகன்’ என்று – (உலகோர்) குகன்
றாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்று; எனை – என்னைப் பற்றி;
ஓதாரோ’ – சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்)

———

‘ஆழ நெடுந் திரை ஆறு கடந்து
இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு
விலங்கிடும் வில்லாளோ?
‘‘‘தோழமை” என்று, அவர்
சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்” என்று
எனை ஏசாரோ?–15-

‘இவர் -; ஆழம் – ஆழத்தையும்; நெடுந் திரை – நீண்ட பெரிய
அலைகளையும் உடைய; ஆறு – கங்கையாற்றை; கடந்து – தாண்டி;
போவாரோ- அப்பால் ( தென்கரைப் பகுதிக்குச் ) செல்வார்களா?
(மாட்டார்); வேழ நெடும்படை- யானைகளை உடைய நீண்ட பெரிய
சேனையை; கண்டு – பார்த்து (பயந்து); விலங்கிடும்- புறமுதுகு காட்டி
விலகிச் செல்லுகின்ற; வில் ஆளோ – வில் வீரனோ (நான்); ‘தோழமை’
என்று- (உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல்-
அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ –
(காப்பாற்ற,மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா?
(அந்நட்புக்கு மாறாக இவர்களைப்போகவிட்டால்); ஏழைமை வேடன் –
அற்பனாகிய இந்த வேடன்; இறந்திலன் -(இவ்வாறு இராமனோடு நட்புச்
செய்து, இப்பொழுது சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும்பரதனோடு
நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும்
செய்தானிலனே; என்றுஎனை ஏசாரோ – என்றிவ்வாறு உலகத்தார்
என்னைப் பழியாமல் விடுவார்களா – (பழிப்பர்)(தொடரும்)

ஏழை ஏதலன் கீழ்மகன்
என்னாது…..தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும்
இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று
இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம்.

——–

“முன்னவன்” என்று நினைந்திலன்;
‘மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன்” என்றிலன்;
அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது?
இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில்,
வேடர் விடும் சரம் வாயாவோ?–16-

‘இவன் – இப் பரதன்; “முன்னவன்” என்று நினைந்திலன் –
(இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை;
“மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்” – வலிமை
நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக
உடன் உள்ளான்; என்றிலன் – என்று கருதினானும் இல்லை; அன்னவை
பேசானேல் -அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி
நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் – (இடையே கங்கைக்
கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என
கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ – (இவன் இராமன்பால்
போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?;
வேடர் விடும் சரம் – வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர்
நெஞ்சினில் – அரசர்கள் மார்பில்; வாயாவோ’ -தைத்து உள் நுழைய
மாட்டாவோ?

——–

பாவமும் நின்ற பெரும் பழியும்,
பகை நண்போடும்,
ஏவமும், என்பவை மண்
உலகு ஆள்பவர் எண்ணாரோ?
ஆவது போக, என் ஆர்
உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும ஆர் உயிரும்
கொடு போய் அன்றோ?–17-

மண் உலகு ஆள்பவர் – (இப்) பூவுலகத்தை ஆள்கின்ற அரசர்கள்;
பாவமும் -(தாம் ஒரு செயலைச் செய்கிறபோது அதனால் விளையும்)
பாவத்தையும்; நின்ற பெரும் பழியும்- (செயல்முடிந்த பிறகு அதனால்)
தம்மேல் நின்ற பெரும் பழியையும்; பகை நண்போடும்-பகைவர் இன்னார்,
நண்பர்கள் இன்னார் என்பவற்றையும்; ஏவமும் – விளையும்குற்றங்களையும்;
என்பவை – என்று இதுபோலச் சொல்லப்படுபவைகளையும்; எண்ணாரோ-
நினைக்கமாட்டார்களோ?; ஆவது போக – அது கிடக்கட்டும்; என்
ஆருயிர்த்தோழமை தந்தான் மேல் போவது – எனக்கு அரிய
உயிரோடொத்த நட்புறவைத் தந்தஇராமன்மேல் படையெடுத்துச் செல்வது;
ஆர் உயிரும் சேனையும் கொடு போயன்றோ – தம்முடைய அரிய
உயிரையும் சேனைகளையும் (எனக்குத் தப்பி) உடன் கொண்டு சென்ற
பிறகல்லவா(முடியும்)?

———-

‘அருந் தவம் என் துணை ஆள,
இவன் புவி ஆள்வானோ?
மருந்து எனின் அன்று உயிர்?
வண் புகழ் கொண்டு, பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை
உகந்தவர்தம்மொடு போகாதே
இருந்தது நன்று; கழிக்குவென்,
என் கடன் இன்றோடே.–18-

என் துணை – எனக்கு நண்பனாகிய இராமன்; அருந் தவம் ஆள-
அரியதவத்தைச் செய்துகொண்டிருக்க; இவன் – இந்தப் பரதன்; புவி
ஆள்வானோ? -உலகத்தை ஆட்சி செய்வானோ? (அதையும்
பார்த்துவிடுவோம்); உயிர் – என்னுடையஉயிர்; மருந்து எனின் –
(கிடைத்தற்கரிய) தேவர் அமுதமோ என்றால்; அன்று -அல்ல (நான்
அப்படி அதை அரிதாக எண்ணிப் பாதுகாக்க நினைக்க வில்லை);
வண்புகழ்கொண்டு- (இராமனுக்காகப் பரதனை எதிர்த்து) அதனால் சிறந்த
புகழைப் பெற்று; பின் மாயேனோ- அதன் பிறகு உயிர் துறக்க
மாட்டேனோ?; பொருந்திய கேண்மை – மிகவும் ஒட்டியஉறவை;
உகந்தவர் தம்மொடு – என்பால் கொண்டு மகிழ்ந்த இராம
இலக்குவர்களோடு; போகாதே – உடன் செல்லாமல்; இருந்தது நன்று –
(நான்) இங்கேயே தங்கியது நல்லதாய்ப் போயிற்று; என்கடன் – (நான்)
இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமையை; இன்றோடு கழிக்குவென் –
இன்றைக்கே செய்து முடிப்பேன்.

———–

‘தும்பியும் மாவும் மிடைந்த
பெரும் படை சூழ்வு ஆரும்,
வம்பு இயல் தார் இவர்
வாள் வலி கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்!
துறை ஓடம் விலக்கீரோ?
நம்பி முன்னே, இனி நாம்
உயிர் மாய்வது நன்று அன்றோ?–19-

தும்பியும் – யானைகளும்; மாவும் – குதிரைகளும்; மிடைந்த –
நெருங்கிய; பெரும்படை – பெரிய சேனையால்; சூழ்வு ஆரும் –
சுற்றப்படுதல்பொருந்திய; வம்பு இயல் தார் இவர் – மணம் வீசுகின்ற
மாலையணிந்துள்ள இவர்கள்; வாள்வலி – படையின் ஆற்றல்; கங்கை
கடந்து அன்றோ – இக் கங்கையாற்றைக்கடந்து போன பிறகு அல்லவா
(காட்டமுடியும்?); வெம்பிய வேடர் உளீர்! – (இவர்களைக்கண்டு) மனப்
புழுக்கம் அடைந்துள்ள வேடர்களாய் உள்ளவர்களே!; துறை ஓடம்
விலக்கீரோ – நீர்த்துறையிலே இவர்களுக்கு ஓடம் விடுவதை
நிறுத்திவிடுங்கள். (ஒருவேளை இவர் நம்மைத்தடுத்து மேற்செல்லும்
ஆற்றல் உடையவராயினும் இவரோடு போரிட்டு); நம்பி முன்னே –
இராமபிரானுக்கு முன்னாலேயே; நம் உயிர் மாய்வது – நமது உயிர்
அழிந்து போவது; இனி நன்று அன்றோ? – இனிமேல் நல்லது அல்லவா?

———-

போன படைத் தலை வீரர்தமக்கு
இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின்,
சிலை மா மேகம்
சோனை பட, குடர் சூறை பட,
சுடர் வாளொடும்
தானை பட, தன் யானை பட,
திரள் சாயேனோ?–20-

போன – (நம்முடன்) வந்துள்ள; படைத்தலை வீரர் தமக்கு –
சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா – (ஒருவேளைப்)
போர்க்கும் பற்றாத; இச்சேனை – இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு-
கிடக்கட்டும்; தேவர்வரின்- தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை
மா மேகம் – என் வில்லாகியகரிய மேகம்; சோனை பட – அம்பு
மழையைச் சொரிய; குடர் சூறைபட -எதிரிகளது குடர்கள் சிதைந்து
அலைய; தானை சுடர்வாளோடும் பட – எதிரிச் சேனைகள்தம்கையிற்
பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட – ஒப்பற்ற
யானைகள்அழிய; திரள் சாயேனோ – (அப்படைக்) கூட்டத்தை
நிலைகுலைக்காமல் விடுவேனோ?

——

‘நின்ற கொடைக் கை என்
அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவன் மைந்தர் பலத்தை,
என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை
கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல்,
கங்கை மடுத்து இடை தூராதோ?–21-

அன்று – (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை – (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்- என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க – பெரியமரவுரியை உடுக்குமாறு;
கொடுத்தவள் – (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்; மைந்தர்
பலத்தை – மகனார் ஆன பரதன் சேனையை; என் அம்பால் கொன்று
குவித்த – என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை – கொழுப்பு மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை – இந்தக் கங்கா நதி; கொண்டு ஓடி – இழுத்துக் கொண்டு விரைந்து சென்று; துன்று
திரைக்கடல் – நெருங்கிய அலைகளை உடைய கடலில்; மடுத்து –
அவற்றைச் சேர்த்து; இடை தூராதோ?- அக்கடல் இடத்தைத் தூர்த்து
விடாதோ? (தூர்த்துவிடும்)

———-

‘ “ஆடு கொடிப் படை சாடி,
அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார்” எனும் இப்
புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு
இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி,
எடுத்தது காணீரோ?–22-

ஆடு – அசையும்; கொடி – கொடிகளை உடைய; படை –
சேனைகளை; சாடி – கொன்றழித்து; அறத்தவர் ஆள – தருமத்தின்
துணைவர்களாய இராமஇலக்குவர்கள் ஆளும்படி; வேடு- வேடர்கள்; பார்
கொடுத்தது – (இந்தப்)பூமியை மீட்டுக் கொடுத்தனர்; எனும் இப்புகழ்
மேவீர் – என்கின்ற இந்தப் புகழைஅடையுங்கள்; நாடு கொடுத்த என்
நாயகனுக்கு – (இவர்கள் ஆளும்படி) தான் ஆட்சியுரியவேண்டிய
நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்கு; இவர் –
இந்தப்பரதர்; நாம் ஆளும் காடு – நாம் ஆட்சி செயும் நமக்கு
உரிமையாகிய இந்தக்காட்டையும்; கொடுக்கிலர் ஆகி – ஆட்சி செய்ய
மனம் பொறாதவராய; எடுத்தது- படை எடுத்து வந்த படியை;
காணீர் – காணுங்கள்.

———-

‘ “ மா முனிவர்க்கு உறவாகி
வனத்திரைடயேவாழும்
கோ முனியத் தகும்” என்று,
மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு கடற்
படை என்றாலும்,
ஆ முனையின் சிறு கூழ்
என இப்பொழுது ஆகாதோ?’-23-

‘மா முனிவர்க்கு – பெரிய தவசிகளுக்கு; உறவாகி – இனிய
சுற்றமாகி; வனத்திடையே வாழும் – காட்டிடத்தில் வாழும்; கோ –
இராமன்; முனியத் தகும்’- (தன் தம்பியான பரதனை எதிர்த்தால் என்னை)
வெறுத்துக் கோபிப்பான்; என்று -; மனத்துஇறை கொள்ளாது –
மனத்தின்கண் சிறிதும் நினையாமல்; ஏ முனை உற்றிடில் – போர்முனையில்
சென்று (பரதனைச்) சந்தித்துப் போரிட்டால்; இப்பொழுது -இந்நேரத்தில்;
ஏழு கடற் படை என்றாலும் – ஏழு கடல் அளவு சேனை என்றாலும்; ஆ
முனையின் சிறு கூழ் என – பசு தின்பதற்கு முனைந்தவழி அதன் எதிரில்
கிடந்த சிறிய புல்என்று சொல்லும்படி; ஆகாதோ – அனைத்தும் அழிந்து
போகாதோ (போகும்.)

——-

என்பன சொல்லி, இரும்பு அன
மேனியர் ஏனோர்முன்,
வன் பணை வில்லினன், மல் உயர்
தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது
கண்டு, அரிஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன்.
மூரிய தேர் வல்லான்;–24-

வன் பனை வில்லினன் – வலிய கட்டமைந்த பருத்த வில்லை
உடையவனும்; மல்உயர் தோளினன் – மல் தொழிலால் சிறப்புற்ற
தோளை உடையவனும்; வாள் வீரற்குஅன்பனும் – வாளாற் சிறந்த
வீரனாகிய இராமனுக்கு அன்பு பூண்டவனும் ஆய குகன்; இரும்பு
அனமேனியர் ஏனோர்முன் – இரும்பை ஒத்த வலிய உடம்பை உடைய
வேடுவ வீரர்களுக்கு முன்னால்; என்பன சொல்லி – என்ற இச்
சொற்களைச் சொல்லி; நின்றனன் -; நின்றது கண்டு – (குகன்) நின்ற
படியைப் பார்த்து; மூரிய தேர்வல்லான் – வலிய தேரைஓட்டுதலில்
வல்லவனாகிய சுமந்திரன்; அரி ஏறு அன்ன முன்பனில் – ஆண்
சிங்கத்தைஒத்த வலிமை படைத்த பரதனுக்கு முன்னால்; வந்து
மொழிந்தனன் – வந்து சிலசொற்களைக் கூறுவானானான்.

——–

‘கங்கை இரு கரை உடையான்;
கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
குகன் என்னும் குறி உடையான்.–25-

‘கங்கை – கங்கையாற்றின்; இருகரை – இரண்டு கரைப் பகுதியில்
உள்ளநிலங்களையும்; உடையான் – தனக்குச் சொந்தமாக உடையவன்;
கணக்கு இறந்த -அளவில்லாத; நாவாயான் – படகுகளை உடையவன்;
உங்கள் குலத் தனி நாதற்கு -உங்கள் சூரிய வம்சத்தில் திருவவதாரம்
செய்தருளிய ஒப்பற்ற தலைவனான இராமனுக்கு; உயிர்த் துணைவன் –
ஆத்ம நண்பன்; உணர் தோளான் – உயர்ந்த தோள்களைஉடையவன்;
வெங்கரியின் ஏறு அனையான் – (மதம் பிடித்த) கொடிய ஆண்
யானையைஒத்தவன்; வில் பிடித்த வேலையினான்- வில்லைக் கையில் பிடித்துக் கொண்டுள்ள
(வேட்டுவவீரராகிய) சேனைக் கடலை உடையவன்; கொங்கு அலரும் நறுந்
தண்தார்- மணம் வீசித் தேன் பிலிற்றும் குளிர்ந்த மாலையைஅணிந்துள்ள;
குகன் என்னும் குறி உடையான்- குகன் என்கின்ற பெயரை உடையவன்;’
(அடுத்த பாட்டில் முடியும்)

——–

‘கல் காணும் திண்மையான்;
கரை காணாக் காதலான்;
அற்கு ஆணி கண்டனைய
அழகு அமைந்த மேனியான்;-
மல் காணும் மணி நிறத்தாய்!-
மழை காணும் மணி நிறத்தாய்!-
‘நிற் காணும் உள்ளத்தான்,
நெறி எதிர் நின்றனன்’ என்றான்.–26-

‘மல் காணும் திரு நெடுந்தோள் – மற்போரில் எல்லை கண்ட
அழகிய நெடிய தோளைஉடைய; மழை காணும் மணி நிறத்தாய் –
கார்மழையைக் கண்டால் போன்ற நீலமணி போலும்நிறம் வாய்ந்த
திருமேனி அழகனே!; கல்காணும் திண்மையான் – மலையைக் கண்டாற்
போன்ற வலிமை உடையவன்; கரை காணாக் காதலான் – (இராமன் பால்)
எல்லை காணமுடியாத பேரன்பை உடையவன்; காணில் -வடிவத்தைப் பார்த்தால்; அல் கண்டு அனைய அழகு அமைந்த
மேனியான் – இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை
உடையவன் (ஆகிய இத்தகைய குகன்); நெறி எதிர் – நீசெல்கின்ற
வழியின் எதிரில்; நின்காணும் உள்ளத்தான் – உன்னைப் பார்க்கும் மனம்
உடையவனாய்; நின்றனன் ‘என்றான் – நின்று கொண்டுள்ளான்’ என்று
சொன்னான்சுமந்திரன்.

———–

தன் முன்னே, அவன் தன்மை,
தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
யானே சென்று’ என எழுந்தான்.–27-

தன்முன்னே – தன் எதிரில்; அவன் தன்மை – அந்தக் குகனது
நல்லியல்புகளை; தந்தை துணை – தன் தந்தையாகிய தயரதனின்
நண்பனான சுமந்திரன்; முந்து உரைத்த – முற்பட்டுச் சொல்லிய;
சொல்முன்னே – சொல்லுக்கும் முன்பாக;உவக்கின்ற – மகிழ்ச்சி
அடைகின்ற; துரிசு இலாத் திரு மனத்தான் – குற்றம்சிறிதும் இல்லாத
நல்ல மனத்தை உடையவனாகிய பரதன்; ‘மன் முன்னே தழீஇக்
கொண்ட -நம் அரசனாகிய இராமன் வனம் புகுந்த முன்னமே (அன்பு
செய்து) தழுவிக் கொண்டுள்ள; மனக்குஇனிய துணைவனேல் – அவன்
மனத்துக்கு இனிய துணைவன் ஆனால்; என் முன்னே – என்னை(அவன்
வந்து பார்ப்பதற்கு) முன்னமே; யானே சென்று அவற் காண்பென்’ –
நானே(முற்பட்டு) சென்று அவனைக் காணுவேன்;’ என – என்று சொல்லி;
எழுந்தான் -புறப்பட்டான்.

——-

என்று எழுந்த தம்பியொடும்,
எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
துண்ணென்றான்.–28-

(பரதன்) என்று – இவ்வாறு சொல்லி; எழுந்த தம்பியொடும் –
தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்; எழுகின்ற காதலொடும் –
(இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப்
பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே
மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது
என -ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர்
கங்கைக் கரை குறுகி- குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி;
நின்றவனை – நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்-
நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய
குகன்; நோக்கினான் – கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்;
திருமேனி நிலை – வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின்
வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் – திடுக்குற்றான்.

———

வற்கலையின் உடையானை,
மாசு அடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன
நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக்
கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ,
விம்முற்று, நின்று ஒழிந்தான்.–29-

வற்கலையின் உடையானை – மரவுரியாலாகிய ஆடையை
உடுத்துள்ள; மாசு அடைந்தமெய்யானை – புழுதி படிந்த உடம்பை
உடைய; நற் கலை இல் மதி என்ன – நல்லகலைகளில்லாத (ஒளியற்ற)
சந்திரன் போல; நகை இழந்த முகத்தானை – ஒளி இழந்தமுகத்தை
உடைய; பரதனை; கண்ணுற்றான் – (குகன்) கண்ணால் சந்தித்துப் பார்த்து;
கையினின்று வில்இடை வீழ – தன் கையிலிருந்து வில்லானது தானே
சோர்ந்து நிலத்தின்கீழ் விழும்படி; விம்முற்று – துன்பத்தால் கலக்கமுற்று;
நின்று ஒழிந்தான் -ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

———-

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்;
அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம்
தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?’ என்றான்.–30-

‘நம்பியும் – ஆடவரிற் சிறந்த இப்பரதனும்; என் நாயகனை – என்
தலைவனாகியஇராமனை; ஒக்கின்றான் – ஒத்திருக்கிறான்; அயல்
நின்றான் – அருகில்இருக்கின்றவன் (ஆகிய சத்துருக்கனன்); தம்பியையும்
ஒக்கின்றான் – இராமனது உடன்பிரியாத் தம்பியாகிய இலக்குவனை
ஒத்திருக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான் – (இப்பரதன்)
தவத்துக்குரிய வேடத்தை மேற்கொண்டுள்ளான்; துன்பம் ஒரு முடிவு
இல்லை -(இப் பரதன்) படுகிற துன்பத்துக்கோ ஓர் அளவே இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்- இராமன் சென்ற திசையாகிய
தென்திசையைப் பார்த்து அவ்வப்போது வணங்குகிறான்; (இவற்றால்இவன்
துயர்நிலை விளங்குதலின்) எம்பெருமான் – எம்கடவுளாகிய இராமனுக்கு;
பின்பிறந்தார் – தம்பிகள்; பிழைப்பு இழைப்பரோ’ – (தவறு
செய்வார்களா)’தவறு செய்வர் என்று நான் எண்ணியது பெரும் தவறு);
என்றான் – என்று நினைத்தான்.

——

‘உண்டு இடுக்கண் ஒன்று
உடையான், உலையாத அன்பு உடையான்,
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான்
குறிப்பு எல்லாம்
கண்டு, உணர்ந்து, பெயர்கின்றேன்’
காமின்கள் நெறி’ என்னா,
தண் துறை, ஒர் நாவாயில், ஒரு
தனியே தான் வந்தான்.–31-

‘உண்டு இடுக்கண் ஒன்று உடையான்- புதிதாக உண்டாகிய துன்பம்
ஒன்றை உடையவனும்; உலையாத அன்பு உடையான் -இராமன்பால் சிறிதும் தளர்ச்சியுறாத அன்பு கொண்டவனும்; கொண்ட தவ
வேடமே – (அந்த இராமன்) கொண்டிருந்த தவ வேடத்தையே;
கொண்டிருந்தான் – தானும்கொண்டுள்ளவனும் ஆகிய இப்பரதனது;
குறிப்பு எல்லாம் – மனக் கருத்து எல்லாம்; கண்டு- நேரில் பார்த்து
அறிந்து; உணர்ந்து – அதனை என் அநுபவத்தாலும் நுகர்ந்து;
பெயர்கின்றேன் – திரும்பி வருகின்றேன்; நெறி காமின்கள் – (அதுவரை)
வழியைப்பாதுகாத்திருங்கள்;’ என்னா – என்று சொல்லி; தண்துறை –
(கங்கையின்) குளிர்ந்தநீர்த்துறையில்; தான் ஓர் நாவாயில் ஓரு தனியே
வந்தான்- (குகன்) தான் ஒருபடகில் வேறு யாரும் இன்றித் தனியே வந்து
சேர்ந்தான்.

———–

வந்து எதிரே தொழுதானை
வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும்,
அவன்த அடிவீழ்ந்தான்.
தந்தையினும் களிகூரத் தழுவினான் –
தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிறுக்கும்
சீர்த்தியான்.–32-

வந்து – (கங்கையின் வடகரைக்கு) வந்து; எதிரே தொழுதானை –
தன்னைஎதிரிலே கும்பிட்ட பரதனை; வணங்கினான் – (குகன்) தானும்
வணங்கினான்; மலர்இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும் –
(திருமாலின் திருவுந்தித்) தாமரையில்வீற்றிருக்கும் வேதியனாகிய பிரமனும்
தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும்; அவன் அடிவீழ்ந்தான் –
அந்தக் குகனது அடித்தலத்தில் விழுந்து வணங்கினான்; (அதுகண்டு) தகவு
உடையோர் சிந்தையினும் சென்னி யினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் –
நடுவுநிலைமையிற்சிறந்த மேலோர்களது மனத்திலும், தலையிலும் ஏற்றிப்
போற்றப்படும் புகழ் உடைய பண்பு நலம்செநிந்த உத்தமனாகிய குகனும்;
தந்தையினும் களிகூர – பெற்ற தந்தையினும் மகிழ்ச்சிமிக; தழுவினான் –
(அந்த அடி வீழ்ந்த பரதனை எடுத்து) மார்போடு அணைத்துக்கொண்டான்
(தொடரும்)

——-

தழுவின புளிஞர் வேந்தன்
தாமரைச் செங்கணானை,
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
எய்தியது என்னை?’ என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
முந்தையோர் முறையினின்றும்
வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக்
கொணர்வான்’ என்றான்.–33-

தழுவின புளிஞர் வேந்தன்- (அவ்வாறு பரதனைத்) தழுவிக்
கொண்ட வேடர் தலைவனான குகன்; தாமரைச் செங்கணானை –
செந்தாமரை போலும் கண்களை உடைய பரதனைப் (பார்த்து); ‘எழுவினும்
உயர்ந்த தோளாய்!- கணைய மரத்தினும் வன்மைமிக்குயர்ந்த தோள்களை
உடைய பரதனே!; எய்தியது என்னை’ என்ன- (கங்கைக் கரைக்
காட்டிற்கு) நீ வந்த காரணம் என்ன என்று வினாவ; (பரதன்) உலகு முழுது
அளித்த தந்தை – உலகம் முழுவதையும் ஒரு குடை நீழலில் ஆட்சி செய்த
சக்கரவர்த்தியாகியஎன் தந்தை தயரதன்; முந்தையோர் முறையினின்றும்
வழுவினன் – தன் மரபில் முன்னுள்ளாரது நீதிமுறையிலிருந்தும்
தவறிவிட்டான்; அதனை நீக்க – அந்த அநீதியை நீக்கும் பொருட்டு;
மன்னனைக் கொணர்வான்’ – முறைப்படி அடுத்து அரசனாகிய
இராமனைத் திரும்ப அழைத்துக்கொண்டு செல்வதற்காக (வந்தேன்);
என்றான் – என்று சொன்னான்.

——–

கேட்டனன், கிராதர் வேந்தன்;
கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டு்ம், மண் அதனில் வீழ்ந்தான்;
விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன்
சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல்
உள்ளத்தன், புகலலுற்றான்;–34-

கிராதர் வேந்தன்- வேடர் தலைவனாய குகன்; கேட்டனன் –
(பரதன் சொல்லிய வார்த்தைகளைக்) கேட்டு; கிளர்ந்து எழும் உயிர்ப்பன்
ஆகி – மேல் எழுந்து மிகும் பெருமூச்சு உடையவனாகி; மீட்டும் – (முன்
வணங்கியதோடு அன்றித்) திரும்பவும்; மண் அதனில் வீழ்ந்தான்-
பூமியில் விழுந்து வணங்கி; உவகை வீங்க – மன மகிழ்ச்சி மேல் பெருக;
விம்மினன் – உடம்பு பூரித்து; தீட்ட அரு மேனி மைந்தன் –
எழுதலாகாததிருமேனியையுடைய பரதனது; சேவடிக் கமலப் பூவில் –
திருவடிகளாகிய தாமரை மலரில்; பூட்டிய கையன் – இறுக அணைத்த
கையுடனே; பொய்யில் உள்ளத்தன் – பொய்யற்ற புரைதீர்ந்த மனத்தால்;
புகலல் உற்றான் – சில வார்த்தைகள் சொல்லலானான்.

—–

தாய் உரைகொண்டு தாதை உதவிய
தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
தெரியன் அம்மா!–35-

‘புகழினோய்! – புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு – (உன்)
தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு; தாதை
உதவிய – (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த; தரணி தன்னை –
(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து – தீயவினை வந்து
சேர்ந்தது போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி –
முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை – (வனத்துக்கு) வந்தாய்;
என்ற போழ்து – என்ற காலத்தில்; தன்மை கண்டால் – (உனது)
நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் – ஆராய்ந்தால்; ஆயிரம்
இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின்
ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

——–

‘என் புகழ்கின்றது, ஏழை
எயினனேன்? இரவி என்பான்-
தன் புகழ்க் கற்றை,
மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள்
மரபினோர் புகழ்கள் எல்லாம்.
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் –
உயர் குணத்து உரவுத் தோளாய்!
‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- 36-

உயர்த்த உத்தமக்
குணங்களையும், வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயின
னேன் – அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? – எவ்வாறு
புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது;
புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா
போல் – மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக்
கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை
நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – எல்லா அரசர்களாலும்
பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய
அரசர்களது எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் –
உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.

——–

என இவை அன்ன மாற்றம்
இயைவன பலவும் கூறி,
புனை கழல், புலவு வேற் கை,
புளிஞர்கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான்;
ஆ அவற்கு அன்பு இலாதார்?-
இராமன்மேல் நிமிர்ந்த காதல்?–37-

புனை கழல்- அலங்கரிக்கப் பெற்ற வீரக்கழலை அணிந்த; புலவு
வேற்கை – புலால் மணம் வீசும்வேலைப் பிடித்த கையை உடைய; புளிஞர்
கோன் – வேடர் தலைவனாகிய குகன்; என இவைஅன்ன மாற்றம்
இயைவன புலவும் கூறி – என்று இதுபோன்ற பொருந்திய சொற்கள்
பலவற்றையும்சொல்லி; பொரு இல் காதல் அனையவற்கு –
இராமன்பாலும் அதனால் தன்பாலும் ஒப்பற்றபேரன்பினை உடையனாகிய
பரதனுக்கு; அமைவின் செய்தான் – பொருந்தியநல்லுபசரிப்புகளைத்
தகுதியாகச் செய்தான்; அவற்கு அன்பு இலாதார் யார்-அப்பரதனிடத்தில்
அன்பு செலுத்தாதவர் யார்உளர்?; இராமன் மேல் நிமிர்ந்த காதல்-
இராமனிடத்து மேல் சென்று உயர்ந்த அன்பு (அவன் சக்கரவர்த்தித்
திருமகள் என்பதாலா?அன்று); நினைவு அருங் குணம்கொடு அன்றோ-
நினைக்கவும் முடியாத நற்குணங்களின்நிலையமாக அவன் இருந்தான்
என்பதனால் அல்லவா? (அக்குணங்கள் இவன்பாலும் இருத்தலால்
இவனிடமும் அன்பு நிமிர்ந்தது.)

———–

அவ் வழி அவனை நோக்கி,
அருள் தரு வாரி அன்ன
செவ் வழி உள்ளத்து அண்ணல்,
தென் திசைச் செங் கை கூப்பி,
எவ் வழி உறைந்தான் நம்முன்?’
என்றலும், எயினர் வேந்தன்,
‘இவ் வழி , வீர! யானே காட்டுவல்;
எழுக!’ என்றான்.–38-

அருள் தரு வாரி அன்ன – கருணைப் பெருங்கடலை ஒத்த;
செவ்வழி உள்ளத்து அண்ணல் – நேரிய வழியிற் செல்லும்மனத்தை
உடைய பரதன்; அவ் வழி – அப்போது; அவனை நோக்கி – குகனைப்
பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி – இராமன் சென்றுள்ள
தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து வணங்கி;
‘நம்முன் – நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ – எந்த
இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் – என்றுகேட்டவுடனே; எயினர்
வேந்தன் – வேட அரசனாகிய குகன்; ‘வீர! – வீரனே!; இவ் வழி –
இவ்விடத்தில்; யானே காட்டுவல் – நானே (அவ்விடத்தை உனக்குக்)
காண்பிப்பேன்; எழுக’ – என்னுடன் புறப்படுவாயாக; என்றான் -.

———-

கார் எனக் கடிது சென்றான்;
கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
பருவரற் பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்.–39-

(குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் –
மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் –
கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய –
தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே
பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் – பார்த்து;
பார்மிசை – பூமியின் மேல்; பதைத்து – துடித்து; வீழ்ந்தான் – விழுந்து;
பருவரல் பரவை புக்கான் – துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப்
புனலால்- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்;
மண்ணை – பூமியை; மண்ணு நீர் ஆட்டும் – திருமஞ்சனத் தண்ணீரால்
குளிப்பாட்டுகின்ற; கண்ணான் – கண்ணுடையவனாக ஆனான்.

——

இயன்றது, என் பொருட்டினால்,
இவ் இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை, கிழங்கும் காயும்
அழுது என; அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி துறந்திலென்;
சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும்செல்வமும்
கொள்வென் யானே!”–40-

உனக்கு இவ் இடர் என்பொருட்டினால் இயன்றது என்ற
போழ்தும் – (இராம!) உனக்கு இவ் வனவாசமாகிய துன்பம் என்காரணமாக
உண்டாகியது என்று அறிந்த அந்தநேரத்திலும்; (அதன் பிறகு) கிழங்கும்
காயும் அழுது என அயின்றனை – கிழங்கு, காய்முதலியவற்றை
(அரண்மனையில் இருந்து உண்ணும்) அமுது போல உண்டாய்; அரிய
புல்லில்துயின்றனை- உறங்குதற்கு இயலாத புற்படுக்கையில் உறங்கினாய்;
எனவும் – என்றுஅறிந்த இந்த நேரத்திலும்; யான் ஆவி துறந்திலென்-
யான் உயிர் போகப் பெற்றேன்இல்லை, (அம்மட்டோ); சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் – ஒளி விடும் பொன்னாற்செய்யப்பெற்று உயர்ந்த
திருமுடியை; சூடும் செல்வமும் கொள்வேன் – சூட்டிக்கொள்ளும்அரசச்
செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும்.

—-

தூண்தர நிவந்த தோளான்
பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
எயினர்கோன், இதனைச் சொன்னான்;–41-

தூண்தர – தூணை ஒப்பாக; நிவந்த தோளான் – உயர்ந்த
தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் – மீண்டும்
குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது
எனின் – அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்;
நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ்
இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து
அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது நீத்தது – இரவுப்
பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என – என்று; இனிது
கேட்டான் – இனிமையாக வினாவினான்;எயினர்கோன் – வேட
வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் – இந்த விடையைக்கூறினான்.

——–

‘அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்,
வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-
கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
இமைப்பிலன் நயனம்’ என்றான்.–42-

‘கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- மலையைக் கீழ்ப்படுத்தி
உயர்ந்ததோள்களை உடையவனே!; அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும்- இருளைப் பயன்படுத்தி அமைத்தால் ஒத்த கரிய
திருமேனியுடைய அழகிற் சிறந்த இராமனும்; அவளும் – அந்தப்
பிராட்டியும்; துஞ்ச – உறங்க; வீரன் – இலக்குவன்; வில்லை ஊன்றிய
கையோடும்- வில்லின் மேல் வைத்த கையுடன்; வெய்து உயிர்ப்போடும்-
வெப்பமான மூச்சுடையவனாய்; கண்கள் நீர் சொரிய – தன்னிரண்டு
கண்களும் நீரைச்சொரிய; கங்குல் எல்லை காண்பளவும் – இரவு தன்
முடிவான விடியலைப் பார்க்குமளவும்; நயனம் இமைப்பிலன் – கண்கள்
இமைகொட்டாமல் (உறங்காமல்); நின்றான்’ -நின்றுகொண்டே (காவல்
செய்து) இருந்தான்; என்றான் –

——–

என்பத்தைக் கேட்ட மைந்தன்,
‘இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில்,
யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவன்,
அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ? அழகிது,
என் அடிமை!; என்றான்.–43-

என்பத்தை- என்று (குகன் ) சொன்னதை; கேட்ட மைந்தன் –
கேட்ட பரதன்; இராமனுக்குஇளையார் என்று – இராமனுக்குத் தம்பிகள்
என்று சொல்லும்படி; முன்பு ஒத்ததோற்றத்தேமில் – பிறக்கும்பொழுது
ஒத்த தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள்இருவரிலும்; யான் –
பரதனாகிய யான்; என்றும் முடிவு இலாத துன்பத்துக்கு ஏது ஆனேன்-
எக்காலத்தும் கரைகாணாத பெருந்துன்பத்தை இராமன் அடைதற்குக்
காரணமாக ஆய்விட்டேன்; அவன் -அந்த இலக்குவன்; அது –
அத்துன்பத்தை; துடைக்க நின்றான் – இராமனிடமிருந்து நீக்கத் துணையாக
இராமனுடன் நின்றான்; அன்புக்கு எல்லை உண்டோ? – அன்புக்கு ஒரு
வரையறை உள்ளதோ; என் அடிமை அழகிது’ – நான் இராமனுக்குச்
செய்யும் அடிமைத்திறம்நன்றாயிருந்தது; என்றான் – என்று கூறினான்.

———

அவ் இடை, அண்ணல்தானும், அன்று,
அரும் பொடியின் வைகி,
தெவ் இடைதர நின்று ஆர்க்கும்
செறி கழல் புளிஞர் கோமா அன்!
இவ் இடை, கங்கை ஆற்றின்
ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி,
வேந்தன்பால் விடுத்தது’ என்றான்.–44-

அண்ணல் தானும்- பரதனும்; அவ் இடை – அந்த இடத்தில்;
அன்று – அன்றையிரவு; அரும்பொடியின் வைகி- தற்குதற்கியலாத புழுதி
மண்ணில் தங்கியிருந்த, (பொழுதுவிடிந்ததும்); ‘தெவ் இடை தர –
பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும்செறிகழல்- தங்கி ஒலிக்கும்
கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! -வேடர்களுக்கு
அரசனாகிய குகனே!; இவ் இடை – இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின்-
கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின்- எம்மைப் கரையேற்றிச்
(தென்கரை)சேரச் செய்தால்; வெவ இடர்க்கடல் நின்று ஏற்றி – கொடிய
துயரக் கடலிலிருந்துகரையேற்றி; வேந்தன்பால் விடுத்தது’ – இராமன்பால்
அனுப்பியது ஆகும்;’ என்றான்- என்று சொன்னான்.

——-

நன்று’ எனப் புளிஞர் வேந்தன்
நண்ணினன் தமரை; ‘நாவாய்
சென்று இனித் தருதிர்’ என்ன, வந்தன-
சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என,
குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு
உருவு கொண்டனைய ஆன,–45-

(பரதன் கூறியது கேட்டு) புளிஞர் வேந்தன் – வேடர் வேந்தனாய
குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை
நண்ணினன் – தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய்
தருதிர்’ என்ன – (நீங்கள்) சென்று இனிமேல்படகுகளைக் கொண்டு
வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று
என- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்)
வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என –
(அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு
மலையாகிய) பொன்மலை போல; குபேரன் மானம் என – (வடதிசைக்கு
அதிபனாகிய) குபேரனது புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி –
(இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு
உருவு கொண்டனைய ஆன – அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு
வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன-
(கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

———

நங்கையர் நடையின் அன்னம்
நாண் உறு செலவின் நாவாய்.
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன –
கலந்த எங்கும், –
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின்,
அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்
இருவினை என்னல் ஆன,—46-

நங்கையர் நடையின்- பெண்கள் நடைபோன்ற நடையையும்;
அன்னம் நாணுறு செலவின் – அன்னப் பறவைகள்நாணப்படும் படியான
நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அங்கொடு இங்கு – அக்கரையில்
உள்ளாரை இக்கரையிலும்; இழித்தி ஏற்றும் அமைதியின் – ஏற்றி
இறக்கும்தன்மையினால்; அமரர் வையத்து அங்கொடு – தேவருலகமாகிய
அவ்வுலகத்தோடு; இங்கு – இவ்வுலகில்உள்ளாரை; இழித்தி ஏற்றும் –
ஏற்றி இறக்கும்; இருவினை – புண்ணியம், பாவம்என்னும் இருவினை;
என்னல் ஆன – என்று சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கையும்
இடம் இலாமை மிடைந்தன- கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி
நெருங்கின; எங்கும் கலந்தன – எல்லா இடங்களிலும் சேர்ந்தன.

——–

வந்தன, வரம்பு இல் நாவாய்;
வரி சிலைக் குரிசில் மைந்த!
சிந்தனை யாவது?’ என்று,
சிருங்கிபேரியர்கோன் செப்ப,
சுந்தர வரி விலானும்
சமந்திரன்தன்னை நோக்கி,
‘எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி,
விரைவின்’ என்றான்.–47-

சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில்
உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்; (பரதனை நோக்கி) ‘வரிசிலைக்
குரிசில் மைந்த – கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி
பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன – கணக்கில்லாத படகுகள்
வந்துள்ளன; சிந்தனையாவது’ – (உன்) மனக்கருத்து என்ன?; என்று
செப்ப – என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் – அழகிய கட்டமைந்த
வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி – (மதியமைச்சருள்
மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை – என்தந்தையே!;
இத்தானை தன்னை – இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப்
படகில் ஏற்றுக; என்றான் – என்று சொன்னான்.

————-

குரிசிலது ஏவலால், அக்
குரகதத் தேர் வலானும்,
வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி
வகையின் ஏற்ற,
கரி, பரி, இரதம், காலாள்,
கணக்கு அறு கரை இல் வேலை,
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு
ஏறிற்று அன்றே!–48-

குரிசிலது ஏவலால்- பரதனது கட்டளையால்; அக் குரகதத்
தேர்வலானும் – குதிரைகள் பூட்டிய தேரைச்செலுத்தலில் வல்ல
அச்சுமத்திரனும்; வரிசையின் வழாமை நோக்கி – முறைப்படி தவறாமல்
பார்த்து; மரபுளி வகையின் ஏற்ற – அவரவர்க்குள்ள மரபுகளின்படி
(படகுகளில்)ஏற்றியனுப்ப; கரி, பரி, இரதம், காலாள் – யானை,
குதிரை, தேர், வீரர் என்றுசொல்லப்பெறும்; கணக்கு அறு –
எண்ணிக்கையில் அளவுபடாத; கரை இல் வேலை – கரையற்றசேனைக்
கடல்; எரிமணி திரையின் வீசும் – ஒளிவீசும் மணிகளை அலைகளால்
(கரைக்கண்)எறிகின்ற; கங்கை யாறு – கங்கையாற்றை; ஏறிற்று – கடந்து
அக்கரை சென்றுஏறியது.

——-

இடிபடு முழக்கம் பொங்க,
இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி
இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியோடு வங்கம் வேலை
கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின,
நெடுங் கை வேழம்.–49-

இன மழை – கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க –
ஒன்றுடன் ஒன்றுமோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி
இறுதியின் – யுகப்பிரளயகாலத்தே; மகர நீரை – கடல் நீரை; முடிவுஉற
முகப்ப – அடியோடு வற்றும்படிமொண்டு உண்பதற்காக; மொய்ப்ப
போல – நெருங்கி யுள்ளவை போலவும்; கொடியோடுவங்கம் –
கொடியோடு கூடிய கப்பல்; வேலை – கடலின்கண்; கூம்பொடு –
பாய்மரத்தோடு; படர்வ போல – செல்வன போலவும்; நெடுங்கை வேழம் –
நீண்டதுதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி –
தமது நீண்ட துதிக்கையை உயரத்தூக்கி; நீந்தின- (கங்கையில்) நீந்திச்
சென்றன.

———

சங்கமும் மகர மீனும்,
தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து
தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க,
கரை ஒரீஇப் போயிற்று அம்மா –
கங்கையும் இராமற் காணும்
காதலது என்ன மாதோ!–50-

மானம் – பெருமை பொருந்திய; பொங்கு – மேல்கிளம்பிய;
வெங்களிறு -கொடிய யானைகள்; நூக்க – தள்ளுதலால்; சங்கமும்
மகரமீனும் தரளமும் மணியும்தள்ளி – சங்கு, சுறாமீன், முத்து,
மணிக்கற்கள் ஆகியவற்றைத் தள்ளி; வங்க நீர்க் கடலும் –
மரக்கலங்களையுடையநீர்மிகுந்த கடலும்; தன்வழி வந்து படர –
தன்னிடத்து வந்து பரவும்படி; கங்கை -கங்கா நதியும்; இராமன் காணும்
காதலது என்ன – இராமனைக் காணும் அன்பு மீக்கூர்ந்தது என்னும்படி;
கரை ஒரீஇப் போயிற்று – கரை கடந்து சென்றது.

————–

பாங்கின் உத்தரியம் மானப்
படர் திரை தவழ, பாரின்
வீங்கு நீர் அழுவம்தன்னுள்,
விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற,
ஒளித்து அவன் உயர்ந்த கும்பம்,
பூங் குழற் கங்கை நங்கை முலை எனப்
பொலிந்த மாதோ!–51-

பாங்கின் -அருகில்; உத்தரியம் மான – பெண்கள் அணிந்துள்ள
மேலாடைபோல; படர் திரை தவழ – கரைமேல் சென்று தவழும்
அலைகள் செல்ல; பாரின் வீங்குநீர் அழுவம் தன்னுள் – உலகில்
மிகுந்த நீர்ப்பரப்பையுடைய யாற்றுப் பள்ளத்துள்; விழும் மதக் கலுழி
வெள்ளத்து ஓங்கல்கள் – விழுகின்ற மதநீர்ப்பெருக்காகிய கலங்கள்
வெள்ளத்தை உடைய மலைபோன்ற யானைகள்; ஒளித்துத் தலைகள்
தோன்ற – உடல் முழுவதும்நீரால் மறைக்கப்பட்டுத் தலைகள்மட்டும் மேல்
தோன்ற; அவண் உயர்ந்த கும்பம் -அங்கே கங்கைப் பரப்பின் மேல்
உயர்ந்து தோன்றுகின்ற மத்தகங்கள் (தலைமேடுகள்); பூங்குழல் கங்கை
நங்கை முலை எனப் பொலிந்த – அழகிய கூந்தலை உடைய கங்கை
மகளின்தனங்களைப்போல விளங்கின.

———

கொடிஞ்சொடு தட்டும், அச்சும், ஆழியும்,
கோத்த மொட்டும்,
நெடுஞ் சுவர்க் கொடியும்; யாவும்,
நெறி வரு முறையின் நீக்கி,
விடும் சுவல் புரவியோடும்
வேறு வேறு ஏற்றிச் சென்ற –
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என –
வயிரத் தேர்கள்.–52-

வயிரத் தேர்கள்- வலிய இரதங்கள்; கொடிஞ்சொடு –
கொடிஞ்சியுடன்; தட்டும் -தேர்த்தட்டும்; ஆழியும் – சக்கரமும்; கோத்த
மொட்டும் – இணைத்தமொட்டும்; நெடுஞ்சுவர்க் கொடியும் – நீண்ட
இருபக்கச் சுவர்களின் மேல் கட்டியகொடியும்; யாவும் – பிறவற்றையும்;
நெறிவரு முறையின் நீக்கி – முறைப்படியான வகையில்தனித்தனியாகப்
பிரித்து; விடும் சுவல் புரவியோடும் – (கத்தரியாது) விட்டு வளர்ந்த
பிடரியை உடைய குதிரையோடும்; வேறு வேறு – தனித் தனியாகப்
படகுகளில் எற்றி அக்கரை கொண்டுசெல்லப்பட்டன. (எவ்வாறு உளது
எனில்); மடிஞ்சபின் – இறந்த பிறகு (அவ்வுயிர்க்கு); உடம்பு கூட்டும்
வினை என – வேறு உடம்பினைக் கூட்டுகின்ற வினைபோல; ஏற்றிச்
சென்ற- ஏற்றிச் செல்லப்பட்டன.

———-

நால் – இரண்டு ஆய கோடி, நவை இல்
நாவாய்கள் மீதா,
சேல் திரண்டனைய ஆய கதியொடும்,
நிமிரச் சென்ற –
பாலி திரண்டனைய மெய்ய,
பயம் திரண்டனைய நெஞ்ச,
கால் திரண்டனைய கால,
கடு நடைக் கலினப் பாய் மா.–53-

பால் திரண்டனைய மெய்ய- பால் திரண்டாற்போன்ற (வெள்ளிய)
உடம்பை உடையன; பயம் திரண்டனைய நெஞ்ச -அச்சம்
திரண்டாற் போன்ற (திடுக்கிடும்) மனம் உடையன; கால் திரண்டனைய
கால – காற்று ஒன்றுகூடினாற்போன்ற (வேகமாகச் செல்லும்) காலினை
உடையன; கடுநடை – விரைந்து செல்லும்நடையை உடைய; கலினம் –
சேணம் அணிந்த; பாய்மா – பாயும் குதிரைகள்; நால் இரண்டு ஆய
கோடி- எட்டுக்கோடியானவை; சேல் திரண்டனைய ஆய கதியொடும் –
சேல்மீன்கள் கூடிச் சென்றாற்போன்ற செலவோடும்; நவை இல் நாவாய்கள்
மீது-குற்றமற்ற படகுகளின் மேலாக; நிமிரச் சென்ற- நிமிர்ந்து சென்றன.

——–

ஊடு உற நெருக்கி, ஓடத்து,
ஒருவர்முன் ஒருவர் கிட்டி,
சூடகத் தளிர்க் கைம் மாதர்
குழமினர் துவன்றித் தோன்ற,
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம்
கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன,
மிடைந்தன குரவுக் கொங்கை.–54-

சூடகம் – வளையல் (அணிந்த); தளிர்க் கைம் மாதர் – தளிர்
போன்ற(மென்மையான) கையினை உடைய மகளிர்; ஊடு உற நெருக்கி –
இடையே புகுந்து நெருங்கிநெருக்கி; ஒடத்து – நாவாய்களில்; ஒருவர்
முன் ஒருவர் கிட்டி – ஒருவர்க்குமுன்னால் ஒருவர் அண்மி; குழுமினர்
துவன்றித் தோன்ற – திரண்டு நெருங்கித்தோன்றுதலால்; பாடு இயல் –
பெருமை பொருந்திய; களி நல் யானை -மதமகிழ்வுடைய உத்தம யானை;
பந்தி – வரிசையில்; அம் கடையின் குத்த -அழகிய முனைகளால்
குத்துமாறு; கோடுகள் மிடைந்த அன்ன – கொம்புகள் நெருங்கின என்று
சொல்லும்படி; குவவுக் கொங்கை – (அம்மகளிரின்) திரண்ட முலைகள்;
மிடைந்தன- நெருங்கின.

———

பொலங் குழை மகளிர், நாவாய்ப்
போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும்
மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி
அழிதர, அங்கம் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும்
கயற்குலம் நிகர்த்த, கண்கள்.–55-

நாவாய்- (மகளிர் ஏறிச் செல்லும்) மரக்கலங்கள்; போக்கின் –
செல்லும் வேகத்தில்; ஒன்று ஒன்று தாக்க- ஒன்று மற்றொன்றோடு மோத;
பொலங்குழை மகளிர் – (அக்கலத்தில்உள்ள) பொன்னாலியன்ற குழை
அணிந்த மகளிர்; மலங்கினர் – மனம் கலங்கி; மறுகினர் – மயங்கி;
வெருவி – அச்சமுற்று; இரண்டு பாலும் நோக்க – இரண்டுபக்கமும்
பார்க்க; கண்கள் – (இவ்வாறு மிரண்டு பார்க்கு அவர்களின்) கண்கள்;
அலங்கும் நீர் வெள்ளம் தள்ளி அழிதர – அசைகின்ற நீர்ப்பெருக்குத்
தள்ளி நிலைகெட; அங்கும் இங்கும் கலங்கலின் – ஆற்று நீர் அங்கும்
இங்குமாகக் கலங்குவதனால்; வெருவிப் பாயும் – பயந்து துள்ளுகின்ற;
கயற்குலம் நிகர்த்த – மீன் கூட்டத்தைஒத்துள்ளன.

——–

இயல்வு உறு செலவின் நாவாய்,
இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடிப்பு வீசும்
துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு
அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு
அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!–56-

இயல்பு உறு செல்வின் நாவாய்- இயல்பாகப் பொருந்திய
செலவினை உடைய மரக்கலங்கள்; இரு கையும் எயினர் தூண்ட –
இருபக்கத்தும் வேடர்கள் உந்துதலால்; துயல்வன துடுப்பு –
அசைவனவாகிய துடுப்புகள்; வீசும் துவலைகள் – வீசுகின்ற நீர்த்துளிகள்;
மகளிர் – (கலத்தில் உள்ள) மகளிரது; மென்தூசு – மெல்லிய ஆடை;
உயல்வு உறு – மறைந்து பொருந்திய; பரவை அல்குல் – பரந்த
அல்குலை; ஒளிப்பு அற தளிப்ப – மறைவு நீங்க வெளித் தோன்றச்
செய்ய; உள்ளத்து அயர்வுறும் – (இராமன் வனம் புகுந்த நாள்முதலாகப்
போகம் இழத்தலின்) மனச்சோர்வுஅடைந்த; மதுகை மைந்தார்க்கு –
மனவலிமை உடைய வீரர்களுக்கு; அயா வுயிர்ப்பு- வருத்தத்திலிருந்து
நீங்குதலை; அளித்தது – உண்டாக்கி (உற்சாகப்படுத்தி)யது.

———

இக் கரை இரைத்த சேனை
எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன
அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன
போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும்
அகல் மழை நிகர்த்த அம்மா!–57-

இக் கரை – (கங்கையின்) வடகரையில் உள்ள; இரைத்த சேனை
எறிகடல் -ஒலித்துக்கொண்டுள்ள சேனையாகிய அலைகடலை; வெஃகி
முகந்து – விரும்பிஏற்றுக்கொண்டு; அக்கரை – தென்கரையில்; அடைய
வீசி – முழுவதும் இறக்கிவிட்டு; வறியன – ஒன்றும் இல்லாதனவாய்;
அணுகும் – (வடகரை வந்து) சேரும்; நாவாய் – மரக்கலம்; அலை ஆழி
புக்கு – அலை வீசும் கடலின் கண் புகுந்து; நல் நீர் -மிகுதியான நீரை;
பொறுத்தன – சுமந்தனவாய்ப் (புறப்பட்டு); போக்கிப் போக்கி –
(மழைப்பெய்து) கழித்துக் கழித்து; அக்கணத்து – அடுத்த கணத்திலேயே;
உவரிமீளும் – (மீண்டும் முகப்பதற்காகக்) கடலுக்குத் திரும்புகின்ற; அகல்
மழை- அகன்ற மேகத்தை; நிகர்த்த – ஒத்திருக்கின்றன.

——–

அகில் இடு தூபம் அன்ன
ஆய் மயிர் பீலி ஆர்த்த
முகிழுடை முரண் மாத் தண்டு
கூம்பு என, முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம் பொன்
தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா,
நவ் எனச் சென்ற நாவாய்–58-

நாவாய் – மரக்கலங்கள்; அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில்
பீலி ஆர்த்த- அகிற்கட்டைகளால் உண்டாக்கப்பெற்ற புகையைப்
போன்ற அழகிய மயில் தோகைகள்கட்டப்பெற்ற; முகிழுடை முரண்மாத்
தண்டு – அரும்புபோன்ற உறுப்பைத் தலையிற் கொண்ட(தேரிலிருந்து
பிரித்த) தண்டுகள்; கூம்பு என – பாய்மரமாகத் தோன்ற; முகிலின்
வண்ணத் துகிலொடு தொடுத்த – மேகநிறமான துணியொடு கட்டப்பெற்ற;
செம்பொன் தகட்டிடைதொடுத்த – செம்பொன்னால் ஆகிய தகட்டின்
இடையே அழகுறத் தைத்த; முகத்தின் நகுகொடி -முத்துக்களால் விளங்கும்
கொடிகள்; நெடிய பாயா – நீண்ட பாயாகத் தோன்ற; நவ் எனச்சென்ற –
பெரிய பாய்மரக் கப்பல்கள் போலச் சென்றன.

———–

ஆனனம் கமலத்து அன்ன,
மின்அன்ன, அமுதச் செவ் வாய்
தேன் நனை, குழலார் ஏறும்
அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என, விரிந்த கங்கை
விண் என, பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊறும்
மானமே நிகர்த்த மாதோ!–59-

விரிந்த கங்கை – அகன்ற கங்காநதி; விண் என – ஆகாயம் ஆக;
சிந்து முத்தம் மீன் என – (கங்கையாறு) சிந்துகின்ற முத்துகள்
விண்மீன்களாக; கமலத்து அன்ன ஆனனம் – தாமரை மலர் போன்ற
முகம்; அமுதச் செவ்வாய் – அமுதமூறும் சிவந்தவாய் ஆகியவற்றை
உடைய; மின் அன்ன தேன் நனை குழலார் – தேன் சிந்தும் கூந்தலை
உடைய மின்னலை ஒத்த மகளிர்; ஏறும் அம்பிகள் – ஏறிச் செலுத்தும்
ஒடங்கள்; வானவர் மகளிர் பண்ணை முற்றி – தேவ மகளிர்கள் நீர்
விளையாட்டை முடித்து; ஊறும்மானமே நிகர்த்த – மேலேறிச்
செல்லுகின்ற விமானங்களை ஒத்தன.

———-

துளி படத் துழாவு திண் கோல்
துடிப்பு இரு காலின் தோன்ற,
நளிர் புனல் கங்கை ஆற்றில்
நண்டு எனச் செல்லும் நாவாய்,
களியுடை மஞ்ஞை அன்ன,
கனங் குழை, கயல் கண், மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட,
உயிர் படைத்தனவே ஒத்த.–60-

துளிபட – துளிகள் உண்டாகும்படி; துழாவு – (நீரைத்) துழாவுகின்ற;
திண்கோள்- வலிய கோலை உடைய; துடுப்பு – துடுப்புகள்; இரு காலின்
தோன்ற -இரண்டு கால்களைப் போலத் தோன்ற; நளிர் புனல் கங்கை
ஆற்றில்- குளிர்ந்த நீரைஉடைய கங்கா நதியில்; நண்டு எனச் செல்லும்
நாவாய் – நண்டு என்று சொல்லும்படிசெல்கின்ற மரக்கலம்; களி உடைய
மஞ்ஞை அன்ன – களிப்பை உடைய மயிலை ஒத்த; கணங்குழை-
பொற்றோடு அணிந்த; கயல்கண் – மீன் போன்ற கண்ணை உடைய;
மாதர் -மகளிரது; ஒளிர் அடிக் கமலம் தீண்ட – விளங்குகின்ற அடித்
தாமரைகள் படுதலால்; உயிர் படைத்தனவே ஒத்த – உயிர் பெற்றனவே
போன்றிருந்தன

———

மை அறு விசும்பில், மண்ணில்,
மற்றும் ஓர் உலகில், முற்றும்
மெய் வினை தவமே அன்றி
மேலும் ஒன்று உளதோ? கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்;
மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக,
தேவரின் முனிவர் போனார்.–61-

(இவ்வாறு நாவாய் ஏறிப் பலரும் செல்ல) முனிவர் – முனிவர்கள்;
கீழோர்செய்வினை நாவாய்- கீழான மனிதச் சாதியினரால் செய்யப்பெற்ற
தொழிலமைந்தமரக்கலத்தை; ஏறித் தீண்டலர் – தீண்டி ஏறாதவர்களாய்;
மனத்தில் செல்லும்மொய்விசும்பு ஓடமாக – மனத்தால் நினைத்த
மாத்திரையில் செல்லும் ஆகாயமே தாம் ஏறிச்செல்லும் ஓடமாகக் கருதி;
தேவரின் – தேவர்களைப் போல; போனார் – வான் வழியேசென்றார்கள்;
மை அறு விசும்பில் – குற்றமற்ற விண்ணுலகிலும்; மண்ணில் –
மண்ணுலகிலும்; மற்றும் ஓர் உலகில் – வேறோர் உலகிலும்; மெய்வினை –
உண்மையானதொழில்; தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ – தவமே
அல்லாமல் அதற்கு மேற்பட்டதாகவேறு ஒரு தொழில் உள்ளதா? இல்லை
என்றபடி,

——-

‘அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று
இறுதி செய் சேனையும், எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும், மகளிர் வெள்ளமும்,
செறி திரைக் கங்கை, பின் கிடக்கச் சென்றவே.–62-

அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று இறுதிசெய் சேனையும் –
அறுபதாயிரம் அகௌஹிணிகள் என்று (கணக்கு) முடிவு செய்யப்பட்ட
சேனைகளும்; எல்லைதீர் நகர் – அளவுகடந்த அயோத்தி நகரத்து; மறு
அறு மாந்தரும் – குற்றம் அற்ற மக்களும்; மகளிர் வெள்ளமும் –
பெண்கள் கூட்டமும்; செறி திரைக் கங்கை – நெருங்கிய அலைவீசுகின்ற
கங்கை; பின் கிடக்கச் சென்ற – கங்கையாறு பின்னிடும்படி போயின.

————-

சுழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான்தானும் ஏறினான்.–63-

சூழ்படை – (பரதன்) தன்னைச் சுற்றியுள்ள சேனை; நீர் கழித்து
வருதுறையாற்றை – நீர் கழியுண்டாக்கிப் பெருகும் கரையமைந்த
கங்கையாற்றை; கழித்து நீங்கியது என – கடந்து சென்றதாக; கள்ள
ஆசையை அழித்து – வஞ்சகமானமண்ணாசையைப் போக்கி; அவனி
பண்டு ஆண்ட வேறு வேந்தரை இழித்து – (இம்) மண்ணுலகைமுன்பு
ஆட்சி புரிந்த மற்ற அரசர்களையெல்லாம் கீழ்ப்படுத்தி; மேல்
ஏறினான்தானும் -மேற்சென்றவனான பரதனும்; ஏறினான் – (நாவாயின்
கண்) ஏறினான்.

———–

சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற
கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று
குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான்
பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.–64-

குகன்-; சுற்றத்தார்- உறவினர்கள்; தேவரொடும் – தேவர்களோடு;
தொழ – வணங்குமாறு; நின்றகோசலையைத் தொழுது நோக்கி –
இருந்த கோசலைப் பிராட்டியை வணங்கிப் பார்த்து; ‘கொற்றத்தார்க்
குரிசில்! – வெற்றிமாலை சூடிய பரதனே!; இவர் ஆர்? என்று வினவ-
இவர் யாராவார் என்று கேட்க; (அதற்குப் பரதன்) ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் -அரசர்கள் (திறை தரக் குழுமித்) தங்கியிருக்கும் முன்றிலை
உடைய தயரதனது; முதல் தேவி- முதல் பட்டத்தரசி; மூன்று உலகும்
ஈன்றானை -மூவுலகங்களும் (முன்பு) உண்டாக்கியபிரமதேவனை; முன்
ஈன்றானை – முன்னால் (தனது திருஉந்திக் கமலத்தில்)தோற்றுவித்தருளிய
(ஸ்ரீ நாராயணன் திரு அவதாரமாகிய) இராமனை; பெற்றதால் பெறுஞ்
செல்வம்- (தன் மகனாகப்) பெற்ற காரணத்தால் பெறவேண்டிய அரசச்
செல்வத்தை; யான் பிறத்தலால்- நான் (கைகேயி மகனாகப் பின்னே)
பிறந்த காரணத்தால்; துறந்த – இழந்த; பெரியாள்’ – பெருமையுடையாள்;
என்றான் -.

———

என்றலுமே, அடியின்மிசை நெடிது வீழ்ந்து
அழுவானை, ‘இவன் யார்?’ என்று,
கன்று பிரி காராவின் துயர் உடைய
கொடி வினவ, கழல் கால் மைந்தன்,
‘இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,
இளையவற்கும், எனக்கும், மூத்தான்;
குன்று அனைய திரு நெடுந் தோள் குகன்
என்பான், இந் நின்ற குரிசில்’ என்றான்.–65-

என்றலுமே – என்று பரதன் கூறிய – அளவிலேயே; அடியின்
மிசை -கோசலையின் திருவடிமேல்; நெடிது – நெடுநேரம்; வீழ்ந்து –
நிலம்தொட்டு வீழ்ந்து; அழுவானை – அழுகின்ற குகனை; கன்று பிரி
காராவின் துயர் உடைய கொடி – கன்றைப்பிரிந்த காராம் பசுவின்
(துன்பம் போன்று மகனைப் பிரிந்த) துன்பத்தை உடைய கொடி
போல்பவளாகிய கோசலை; ‘இவன் யார்?’ என்று வினவ – (இதோ காலில்
விழுந்துகிடக்கிற) இவன் யார்? என்று கேட்க; கழல் கால் மைந்தன் –
வீரக் கழலணிந்த கால்உடைய பரதன்; ‘இந் நின்ற குரிசில் – இதோ
தொழுது நிற்கின்ற ஆண்மகன்; இராகவனுக்கு இன்துணைவன் –
இராமனுக்கு இனிய சகோதரன்; இலக்குவற்கும் இளையவற்கும்எனக்கும்
மூத்தான் – இலக்குவனுக்கும் சத்துருக்கனனுக்கும், எனக்கும் அண்ணன்;
குன்றுஅனைய திருநெடுந் தோள் குகன் என்பான்’ – மலையொத்த
திரண்ட அழகிய நெடிய தோள்களைஉடைய குகன் என்ற பெயரை
உடையவன்; என்றான் –

———-

‘நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்;
நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று
ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன்
தன்னொடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங்
காலம் அளித்திர்’ என்றாள்.–66-

(அதுகேட்ட கோசலை அவர்களைப் பார்த்து); ‘மைந்தீர்’ – என்
பிள்ளைகளே!; இனித் துயரால் நைவீர் அலீர் – இனிமேல் நீங்கள்
துன்பத்தால் வருந்தாமல்இருப்பீர்களாக; மெய்வீரர் – சுத்த வீரர்கனாகிய

இராம இலக்குவர்கள்; நாடு இறந்து – கோசல நாடு கடந்து; காடு
நோக்கி -வனத்தை நோக்கி; பெயர்ந்ததுவும் – புறப்பட்டுச் சென்றதுவும்;
நலம் ஆயிற்று ஆம்அன்றே! – (இத்தகைய சிறந்த சகோதரனைத்
தருதலால்) நன்மைக்குக் காரணமாயிற்றல்லவா!; விலங்கல் திண்தோள் கை
வீரக் களிறு அனைய காளை – மலை போன்ற வலிய தோளைஉடைய
துதிக்கையாற் செய்யும் வீரச் செயலை உடைய ஆண் யானையை ஒத்த
ஆண் மகனாகிய; இவன்தன்னோடும் – இந்தக் குகனோடும்; கலந்து –
ஒன்றுபட்டு; நீவிர் ஐவீரும் -நீங்கள் ஐந்து பேரும்; அகல் இடத்தை –
அகன்ற பூமியை; நெடுங்காலம் -நீண்டகாலம்; அளித்தீர்’ – அரசாட்சி
செய்து காப்பாற்றுவீர்களாக; என்றாள்- என்று சொன்னாள்.

————–

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை
நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’ என்ன, ‘நெறி திறம்பாத்
தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி; யாவர்க்கும்
தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்
பயந்த பெரியாள்’ என்றான்.–67-

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை- அறக்கடவுளே
என்று சொல்லத் தக்கவளாய்ப் பக்கத்தில் நின்ற சுமித்திரா தேவியை;
நோக்கி – (குகன்) பார்த்து; ‘ஐய! – பரதனே!; அன்பின் நிறைந்தாளை-
அன்பால் நிறைந்த கொள்கலமாகிய இப் பெருமாட்டியை; உரை’ – (யார்
என்று எனக்குச்)சொல்; என்ன – என்று கேட்க; (பரதன்) ‘நெறி திறம்பா-
சத்திய வழியில்சிறிதும் மாறுபடாத; தன் மெய்யை – தன் வாய்மையை;
நிற்பது ஆக்கி – என்றும் நிலைபெறுவதாகச்செய்து; இறந்தான்தன் –
தன் (மெய் எனும் பொய்யுடலைக் கைவிட்டு) இறந்தவனாகியதயரதனது;
இளந்தேவி – இளைய பட்டதரசியாவாள்; (அதன் மேலும் இவள்) யாவர்க்கும் – எல்லா மக்களுக்கும்; தொழுகுலம் ஆம்
இராமன் -வணங்கத்தக்க குல தெய்வமாகிய இராமனுக்கு; பின்பு
பிறந்தானும் உளன் என்ன – பின்னேபிறந்த தம்பியும் (ஒருவன்) உளம்
என்று அனைவரும் அறிந்து சொல்லுமாறு; பிரியாதான் தனை-
(இராமனை விட்டு) நீங்காத இலக்குவனை; பயந்த – பெற்றெடுத்த;
பெரியாள்’ -பெருமை உடையவள்; என்றான் – என்று சொன்னான்.
சொன்னான்.

———

சுடு மயானத்திடை தன் துணை ஏக,
தோன்றல் துயர்க் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி
ஏக, கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்,
தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால், அளந்தாளை, ‘“ஆர் இவர்?”
என்று உரை’ என்ன, குரிசில் கூறும்;–68-

(பின்னர்க் குகன்) தன் துணை கடு மயானத்திடை ஏக – தன்
கணவனாய தயரதன்(இறந்தாரைச்) சுடுகின்ற சுடுகாட்டிடத்தே செல்ல;
தோன்றல் – (தன் மகனாகிய) பரதன்;துயர்க் கடலின் ஏக – துன்ப
வெள்ளத்தினிடையே செல்ல; கருணை ஆர்கலி – அருட்கடலாகிய
இராமன்; கடுமை ஆர் கானகத்து ஏக – கொடுமை பொருந்திய
காட்டிடத்தே செல்ல;(இவ்வாறு செய்து) கழல்கால் மாயன் – கழலணிந்த
காலையுடைய திருமால்; நெடுமையால் -(வாமனனாக வந்த மாவலி)
பால் மூவடி மண் கேட்டுப் பின்னர் எடுத்த) நெடிய திருவுருவத்தால்;
அன்று -முற்காலத்தே; அளந்த உலகு எல்லாம் – மூவடியில் ஈரடியால்
அளந்த எல்லா உலகங்களையும்; (திருமால் போல அவதாரம் எடுத்துச்
சிரமப்படாது) தன் மனத்தே நினைந்து செய்யும்கொடுமையால்
அளந்தாளை – தன் மனத்தின்கண் தானே எண்ணிச் செய்கிற
கொடுமையினால்(எளிதாக) அளவு செய்தவளாகிய கைகேயியை; “ஆர்
இவர்” என்று உரை’ என்ன- இவர் யார்என்று சொல்லுக என்று கேட்க;
குரிசில் – பரதன்; கூறும் – சொல்வான்ஆயினன்.

———–

படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்
செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,
இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’–69-

‘படர் எலாம் படைத்தாளை – துன்பங்களை எல்லாம்
உண்டாக்கினவளை; பழிவளர்க்கும் செவிலியை – உலக நிந்தை
என்கின்ற பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத் தாயை; தன் பாழ்த்த பாவிக்
குடரிலே – தனது பாழான தீவினையுடைய வயிற்றில்; நெடுங்காலம்
கிடந்தேற்கும் -நீண்டநாள் (பத்துத் திங்கள்) தங்கியிருந்த எனக்கும்;
உயிர்ப்பாரம் குறைந்து தேய – உயிர் என்கின்ற சுமை குறைந்து
தேயும்படி; உடர் எலாம் உயிரிலாஎனத் தோன்றும் உலகத்தே –
உடல்கள் எல்லாம் உயிரில்லாதன என்று தோன்றும்படி உள்ள
உலகத்தின்கண்; ஒருத்தி அன்றே இடரிலா முகத்தாளை – இவ் ஒருத்தி
மட்டும் அல்லவாதுன்பமே இல்லாத முகம் உடையவள்;
இவளை, அறிந்திலையேல் – (இவ்வளவு நேரம் முகத்தைக் கண்டே
அறிந்து கொண்டிருக்கவேண்டும், அப்படி) அறியவில்லையானால்; இந்
நின்றாள் – இதோ இருக்கின்றவள்; என்னைஈன்றாள் – என்னைப்பெற்ற
கைகேயி யாவாள்,’

———-

என்னக் கேட்டு, அவ் இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என;
அன்னப் பேடை சிறை இலது ஆய்க் கரை
துன்னிற்று என்னவும் வந்தது, தோணியே.–70-

என்னக் கேட்டு- (குகன்) பரதன் இவ்வாறு சொல்லக் கேட்டு; அவ்
இரக்கம் இலாளையும் – அந்தஇரக்கமற்றவளாகிய கைகேயியையும்; தன்
நல் கையின் – தன் நல்ல கைகளால்; தாய் எனவணங்கினன் – தனக்குத்
தாய் எனக் கருதி வணங்கினான்; தோணி – மரக்கலம்; அன்னப் பேடை-
பெண் அன்னம்; சிறை இலது ஆய் – சிறகுகள் இல்லாமல்; கரை
துன்னிற்றுஎன்னவும் – கரையை வந்து அடைந்தது என்று
சொல்லலாம்படி; வந்தது – கரையை வந்தடைந்து.

————–

இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்-
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் –
கழிந்தனன், பல காவதம் காலினே.–71-

(தோணியிலிருந்து) இழிந்த – இறங்கிய; தாயார் – தாய்மார்கள்;
சிவிகையின் ஏற- பல்லக்கில் ஏறி உடன்வர; (பரதன்) கண்ணின் பொழிந்த
புதுப் புனல்போயினான் – கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில்
நடந்து சென்றான்; குகனும்ஒழிந்திலன் உடன் ஏகினான் – குகனும்
தன் நாட்டில் தங்காமல் பரதனுடன் சென்றான்; காலில் பல காவதம்
கழிந்தனன் – (இங்ஙனம் பரதன்) காலால் பல காவத வழிகளை நடந்து
கடந்தான்.

————

பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்.–72-

(பின்பு பரதன்) பரத்தின் நீங்கும் – வினைச் சுமையிலிருந்து விலகிய;
பரத்துவன் – பரத்துவாசன்; என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர்
மாதவன் வைகு இடம்- என்கின்ற பேரை உடைய மேன்மையிற் சிறந்த
உயர்ந்த முனிவன் தங்கிய ஆச்சிரமத்தை; அருத்தி கூர – அன்பு மிக;
அணுகினன் – சேர்ந்தான்; அவன் – அப்பரத்துவாசன்; ஆண்டு –
அவ்விடத்தில்; விருத்தி வேதியரோடு – அறுதொழில் உடைய
அந்தணரோடு; எதிர்மேவினான் – எதிர்கொண்டு வந்தான்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/11-ஆறு செல் படலம்–

December 13, 2020

வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும், ஆண்டையான், என,
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர்.–1-

வரன்முறை தெரிந்து உணர் – அரச குலத்தின் மரபு முறைகளை
ஆராய்ந்து உணர்ந்த; மறையின் மாதவத்து – வேதவழியில் செய்யப்படும்
தவங்களைச் செய்துள்ள; அருமறை முனிவனும் – வேதத்திற்சிறந்தவசிட்ட
முனிவனும்; ஆண்டையான் என – (பரதன் உள்ள) அவ்விடத்தில்
இருக்கின்றான் என்றறிந்து; விரகின் எய்தினர் -(மந்திரக் கிழவர்கள்) ஆலோசனைக்குரிய சூழ்ச்சியோடு; விரைவின் வந்து-
விரைந்துஅரசவைக்கு வந்து; ஈண்டினர் – நெருங்கி; பரியும் நெஞ்சினர்
பரதனை வணங்கினர்- அன்பினால் இரங்கும் மனம் உடையவராய்ப்
பரதனை வணங்கினார்கள்.

———

மந்திரக் கிழவரும், நகர மாந்தரும்,
தந்திரத் தலைவரும், தரணி பாலரும்,
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்,
சந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார்.–2-

அந்தர முனிவரோடு- ஆகாய வழியில் இயங்கவல்ல
முனிவர்களோடு; மந்திரக் கிழவரும் – மந்திராலோசனைக்குஉரிமை
உடைய அமைச்சர்களும்; நகர மாந்தரும் – நகரத்தில் உள்ள மக்களின்
பிரதிநிதிகளாய் உள்ளவர்களும்; தந்திரத் தலைவரும் – சேனைத்
தலைவர்களும்; தரணிபாலரும் – அரசர்களும்; அறிஞர் யாவரும் –
அவ்வத் துறையில் முறைபோகிய வல்லார்களும்ஆகிய அனைவரும்;
சுந்தரக் குரிசிலை – அழகிற் சிறந்த பரதனை; மரபின் -அவரவர்க்
குள்ள வரிசை முறையின்படி; சுற்றினார் – (நெருங்கிச்) சூழ்ந்து
கொண்டார்கள்.

———-

சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான்,
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்,
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான்.–3-

சுற்றினர் இருந்துழி- (வசிட்ட முனிவனும், மந்திரக் கிழவரும்,
அறிஞரும்) சூழ இருந்தபோது; கொற்றவர்க்குஉறுபொருள் அரசர்க்குரிய
சிறந்த பொருள்களை; குறித்த கொள்கையான் – நன்குஉணர்ந்து
நிறைவேற்றம் கொள்கைப் பிடிப்பு உடைய; புலமை உள்ளத்தான் –
அறிவால்நிறைந்த மனம் உடைய; சுமந்திரப் பெயர்ப் பொன் தடந்
தேர்வலான் – பொன்னால்இயன்ற பெரிய தேரைச் செலுத்துதலின் திறன்
வாய்ந்த சுமந்திரன் என்னும் பெயருடைய (அமைச்சர்தலை)வன்; முற்று
உணர் முனிவனை – எல்லாம் முழுதுணர்ந்த வசிட்ட முனிவனை; முகத்து
நோக்கினான் – (தன் மனக்கருத்தை வாயால் உரைக்க வேண்டாது அது
தோன்றும்படி) நேரேபார்த்தான்.

——–

நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை,
வாக்கினால் அன்றியே உண்ர்ந்த மா தவன்,
‘காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்’ எனக்
கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்;–4-

சுமந்திரன் -; நோக்கினால் – மனத்தொடு பட்ட பார்வைக்
குறிப்பினால்; நுவலலுற்றதை – சொல்லியதை; வாக்கினால் அன்றியே –
(அவன்) வாயினாற்சொல்லாமலே; உணர்ந்த – தெரிந்துகொண்ட;
மா தவன் – பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; ‘உலகம் காக்குதி –
இந்த அரசாட்சியைப்பாதுகாப்பாய்; இது – இத்தரணி தாங்குதல்; நின்
கடன் ஆம் – நீ (எற்றுச்)செய்யவேண்டிய கடமையாகும்; என -; கோக்
குமரனுக்கு – அரச குமாரனாகிய பரதனுக்கு; அது – அரசின் சிறப்பும்
இன்றியமையாமையும; தெரிய – விளங்கும்படி; கூறுவான்-
எடுத்துரைக்கலானான்.

——

வேதியர், அருந் தவர், விருத்தர், வேந்தர்கள்
ஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது,
கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால்–5-

‘கோதறு குணத்தினாய்!- குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே)
வனே!; வேதியர் – அந்தனர்; அருந்தவர் – அரியதவம் செய்த முனிவர்;
விருத்தர் – (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் – அரசர்கள்;
ஆதியர் – முதலானோர்; நின்வயின் -உன்னிடத்து; அடைந்த காரியம் –
வந்து சேர்ந்த செயல்; நீதியும் -(மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச
நீதியையும்; தருமமும் – (அவரவர் செயலை அவரவர்செய்தற்குத்
தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ – (அரசன் இல்லாமையால்
சிதையாவண்ணம்)நிலை நிறுத்தவே; நீ-; இது – இச்செயலை; மனத்துக்
கோடி – மனத்தின் கண்நினைத்துக் கொள்வாயாக.’

———-

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய! நீ
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,
தெருள் மனத்தார் செய்யும் செயல் இது ஆகுமால்.–6-

ஐய! நீ-;தருமம் என்று ஒரு பொருள் – அறம் என்று சொல்லப்
படுகின்ற ஒப்பற்ற ஒரு பொருளை; தந்து – உலகிற்குத் தந்து (மக்கள்
அனைவரையும் மேற்கொள்ளுமாறு செய்து); நாட்டுதல்-நிலைநிறுத்துதல்;
அருமை என்பது – மிகவும் அருமையான செயல் என்பதனை; பெரிது
அறிதி – நன்கு அறிவாய்; ஈண்டு – இவ்விடத்தில்; இது – இவ்வறம்;
இருமையும் -இம்மை, மறுமை ஆகிய இரண்டையும்; தருவதற்கு -;
இயைவது – பொருந்தியதாகும்; இது -இவ்வறம்; தெருள்மனத்தார் –
தெளிவுபெற்ற மனம் உடைய மேலோர்; செயும் செயல்ஆகும் – செய்யும்
செயலாகும்.

———-

‘வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்,
நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின்,
உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே.–7-

‘தேர்தரின்- ஆராயும்பொழுது; வள்உறு வயிரவாள் அரசு –
வளமை பொருந்திய வன்மையான வாளையுடையஅரசனை; இல்வையகம் –
பெறாத உலகம்; நள் உறு கதிர் இலாப் பகலும் – (எல்லோராலும்)
விரும்பப்படுகின்ற சூரியன் இல்லாத பகலையும்; நாளொடும் –
விண்மீன்களோடும்; தெள்ளுறு மதி இலா இரவும் – தெளிந்த
வெண்மையான சந்திரன் இல்லாத இரவையும்; உள்உறைஉயிர் இலா
உடலும் – உள்ளே பொருந்திய உயிர் இல்லாத உடலையும்; ஒக்கும் –
போலும்.’

——–

‘தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம்.–8-

‘தேவர்தம் உலகினும் – தேவலோகத்திலும்; தீமை செய்து உழல்-
பிறர்க்குத் தீமையே செய்து திரிகின்ற; மா வலி அவுணர்கள்
வைகும் நாட்டினும்- பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள
நாடுகளிலும்; ஏ எவை உலகம் என்று இசைக்கும்அன்னவை – எவை
எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய்
தலைவரை இன்மை – தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல்
இருத்தலை; கண்டிலம்- (யாம்) பார்த்திலோம்.’

——-

‘முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம்,–9-

‘முறை தெரிந்து – முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய
நோக்குறின் -ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன –
பிரமனால் படைக்கப்பட்டனவாகிய;மண்ணில் வானிடை – நிலத்திலும்,
விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் – நிறைந்துவிளங்கும்
பேரியல்போடு; நிற்ப -நிலைத்து நிற்பன; செல்வன – இயங்குவன (வாகிய
பொருள்களில்); இறைவரை இல்லன – தலைவரைப் பெற்றிராத
பொருள்கள்; யாவும் எவையும்; காண்கிலம் – காண்கின்றிலோம். (யாம்)’

——–

‘பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து, வான் புகழினர், இன்றுகாறும் கூக்
காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால்.–10-

‘பூத்த – (திருமாலின் திருஉத்தியில்) உண்டான; நாள்மலர் –
அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன் முதல
புண்ணியர் – பிரமதேவன்முதலிய மேலோர்களால்; ஏத்து – பாராட்டப்
பெறுகின்ற; வான் புகழினர் -சிறந்த புகழைப் பெற்ற (உன்) முன்னோர்கள்;
இன்றுகாறும் – இன்று வரையிலும்; கூ -(இந்தப் ) பூமியை; காத்தனர் –
(அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் -இப்போது; ஒரு களைகண்
இன்மையால் – (நீ அரசன் ஆகாதபடியால்)தமக்கொரு துன்பம் நீக்கிப் பாதுகாப்பாரை இல்லாமையால்; (இவ்வுலகம்)
நீத்த நீர் – கடலின்கண்; உடைகல நீரது – உடைந்த கப்பல் தத்தளிப்பது
போன்றது; ஆகும் -.’

———

உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு’ எனத் தெரிந்து கூறினான்.-11-

‘மைந்த! – பரதனே!; உந்தையோ இறந்தனன் – உன் தந்தையாகிய
தயரதனோஇறந்துபட்டான்; உம் முன் – உன் தமயனாகிய இராமனோ
(தந்தை சொற்கேட்டு); நீத்தனன் – (அரசைக்) கைவிட்டுக் கானகம்
புகுந்தான்; வந்ததும் – (இந்த அரசுஉனக்குக்) கிடைத்திருப்பதும்;
அன்னை தன் வரத்தில் – உன் தாயாகிய கைகேயியின்வரத்தால் ஆகும்;
நீ அந்தம் இல் பேரரசு அளித்தி – நீ அழிவற்றதாகிய இந்தக்கோசலத்
தரசை ஏற்று நடத்துக; அன்னது – (அவ்வாறு) நீ அரசு ஏற்பது; எமக்குச்
சிந்தனை – எங்களுக்கு எண்ணம்;’ என – என்று; தெரிந்து கூறினான் –
ஆராய்ந்து சொன்னான்.

———-

தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்’ எனச்
செஞ்சேவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் – அருவிக் கண்ணினான்.–12-

‘இவ் உலகம் – இந்த உலகம்; தஞ்சம் – (உனக்கு) அடைக்கலம்; நீ
தாங்குவாய் – நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்; என – என்று;
முனிவரன் -முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவே –
செம்மையாக; செப்பக் கேட்டலும்- சொல்லக் கேட்டவளவில்; அருவிக்
கண்ணினான் – அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும்பரதன்; ‘நஞ்சினை
நுகர்’ என – விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல; (அதுகேட்டு)
நடுங்குவாரினும் – நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன்த-
பயந்து சோர்ந்தான்.

———

நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,
தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்;–13-

(பரதன்), நடுங்கினன் – (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்கி;
நாத்தடுமாறி – (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் –
கண்கள்(குழிவிழுந்து ) உள்செல்லப் பெற்று; மகளிரின் – பெண்களைப்
போல; இரங்கும் நெஞ்சினன்- நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய
உயிரினன்- மூச்சு ஓடுங்கப்பெற்று(மூர்ச்சித்து); உணர்வு கைதர – (பின்னர்)
மூச்சு எழும்பி உணர்வு வரப்பெற; அரசவைக்கு- அரசவையில் உள்ளவர்க்கு;
உள்ளம் – தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் – சொல்லத்
தொடங்கினான்.

——–

மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்
தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,
ஈன்றவன் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ?-14-

‘மூன்று உலகினுக்கும்- மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில்
உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன்ஆய் – ஒப்பற்ற
முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க – (எனக்கு) முன்னே
பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே; யான் மகுடம் சூடுதல் –
யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்;
சான்றவர் உரைசெய – பெரியோர்கள்தக்கதே என்ற தம் வாயால்
எடுத்துரைக்க; தருமம் ஆதலால் – அறம் என்று கருதப்படுகின்றது
ஆதலாம்; ஈன்றவள் செய்கையில் – (இதே செயலைச் செய்த) என்னைப்
பெற்றதாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்; இழுக்கு உண்டாகுமோ –
தவறு உளதாகுமா?’

———

அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், “நன்று இது” என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் நீ நெறி்க் கிலியின் ஆட்சியோ!–15-

‘நடை வரும் தன்மை நீர்- உயரிய ஒழுக்கத்திற் செல்லும் தன்மை
உடைய சான்றோர்களாய நீவிர்; அடைவு அருங்கொடுமைஎன் அன்னை
செய்கையை – ஓரிடத்திலும் சென்று அடைதற்கு அரிய பெருங்கொடுமை
உடைய என்தாய் கைகேயியின் செயலை; ‘இது நன்று’ -; என்றிரேல் –
என்று சொல்வீராயின்; இது- இக்காலம்; ஈண்டு – இவ்விடத்தில்;
இடைவரும் காலம் இரண்டும் நீத்து -திரேதாயுகம், துவாபரயுகம்
என்னும் இரண்டு காலமும் கடந்து சென்று; கடைவரும் – நான்குயுகங்களில்
இறுதியில் உள்ள; தீ நெறி – தீயவழியில் (மக்களைச்) செலுத்துகின்ற;
கலியின் ஆட்சியோ! – கலிபுருடனின் ஆட்சிக்காலமாகிய கலியுகமோ?’

அறத்தின் ஆட்சி மங்கிக் கொடுமை மலிந்திருப்பது கலியின் இயல்பு
என்பதனைப் ‘பொலிக. கலியும் கெடும் கண்டு கொண்டீர்” (திவ்யப். 3352.)
“கலியிருள் பரந்த காலை”(கலிங்கத். அவதாரம். 30 ) “தருமந் தவிர்ந்து
பொறைகெட்டுச்சத்தியஞ் சாய்ந்து தயை, தெருமந்து தண்பூசனை முழுதுஞ்
சிதையக், கலியே பொருமந்தக் காலம்”(திரு அரங்கத்துமாலை. 75.) என
வருவன கொண்டு அறியலாம்.

————

வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில்
பூர்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்,
மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்
காத்தவர் உளர்எனின், காட்டிக் காண்டிரால்.-16-

‘வேத்தவை இருந்த நீர்- அரசவையில் அமர்ந்துள்ள நீவிர்;
விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் -திருமாலின் திருவுந்தித்
தாமரையில் தோன்றிய பிரமதேவன் முதலிய; புவியுள் தோன்றினர்-
மண்ணுலகத்தில் தோன்றிய (அரசு புரிந்த) அரச குலத்தினருள்; மூத்தவர்
இருக்கவே -உடன் பிறந்தவர்களுள் வயதால் முதிர்ந்தவர் இருக்க; நிலம்
முறைமையால் காத்தவர் – உலகத்தைமுறைப்படி (அரசு நடத்திக்)
காத்தவர்கள்; உளர் எனின் – இருப்பார்கள் ஆயின்;காட்டி – அவர்களைச் சான்றாகக் காட்டி; காண்டிர் – உம் கருத்தையும்
ஒப்புக் காண்பீர்களாக.

———

நல் நெறி என்னினும், நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன்தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால்.–17-

‘நான் -; நல் நெறி என்னினும் – (அரசு புரிவது) தரும நெறியே
என்று நீங்கள்சான்றுகளால் நிரூபித்த வழியும்; இந் நானில மன்
உயிர்ப்பொறை – இப்பூமியில்உயிர்களைப் பாதுகாக்கும் சுமையை; சுமந்து
இருந்து வாழ்கிலேன் – தூக்கி அரசனாக இருந்துவாழ உடன்
படமாட்டேன்; அன்னவன்தனைக் கொணர்ந்து – அந்த (அரசாட்சிக்குரிய)
இராமனைக் கொண்டு வந்து; அலங்கல் மாமுடி – மலர் மாலையோடு கூடிய
மகுடத்தை; தொல்நெறி முறைமையின் – தொன்று தொட்டு வரும் மரபு
வழிப்படி; சூட்டிக் கண்டிர் -(அவன் தலையில்) அணிவிக்கக் காணுங்கள்.’

———

அன்று எனின், அவனொடும் அரிய கானிடை
நின்று, இனிது இருந் தவம், நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்’
என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை,–18-

‘அன்று எனின் – (இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வந்து முடி
சூட்டல்) இயலாதுஆயின்; அவனொடும் – அந்த இராமனோடும்; அரிய
கானிடை – வாழ்தற்கரியகாட்டிடத்து; நின்று – வாழ்ந்து; இருந்தவம் –
பெரிய தவத்தை; இனிது -இனிமையாக; நெறியின் – செய்தற்குரிய
முறைப்படி; ஆற்றுவென் – செய்வேன்; இனி -இதற்குமேல்; ஒன்று
உரைக்கின் – (மாறாக) ஒன்றை நீங்கள் சொன்னால் (என்னை ஏற்றுநடத்த
வற்புறுத்தினால்); என் உயிரை நீக்கு வென் – என் உயிரை அழித்துக்
கொள்வேன்; என்றனன் – என்று சொன்னான்; என்றபோது – என்று பரதன் சொல்லியபோது; இருந்த பேர்
அவை -அங்கே அமர்ந்திருந்த அரசவையில் உள்ளார்……

அரசவையில் உள்ளார்….‘வாழ்த்தினார்’ (2263) எனப் பின்வரும் கவியிற்
சென்றுமுடியும்.

———-

‘ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும்
ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ,
வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்?-19-

ஆன்ற – குணங்களான் அமைந்த; பேர் அரசனும் – பெருமை
மிக்க தயரதனும்;இருப்ப – உயிரோடு இருக்கின்றபோதே; ஐயனும் –
இராமனும்; மணிமுடி ஏந்த -மணிகள் அழுத்திச் செய்யப்பெற்ற
மகுடத்தைத் (தலையில்) தாங்க; ஏன்றனன் -உடன்பட்டான்; ஏந்தல் நீ –
பெருமையின் உயர்ந்த பரதனே! நீ; வான் தொடர்திருவினை – மிக
உயர்ந்த பாரம்பரியமாக வருகின்ற அரசச்செல்வத்தை; மறுத்தி -வேண்டாம்
என்கிறாய்; மன் இளந்தோன்றல்கள் – அரசகுலத்தில் தோன்றிய இளைய
குமாரர்களில்; நின்னின் தோன்றினார்? – உன்னைப் போலப் புகழுடன்
தோன்றியோர்;யார் உளர் – யார் இருக்கின்றார்கள்?’ (எவரும் இல்லை
என்றபடி)

——–

ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,
வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ?
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்,
வாழிய நின் புகழ்!’ என்று வாழ்த்தினார்.–20-

‘ஆழியை உருட்டியும்- (அரசேற்று நடத்தி) ஆனைச்சக்கரத்தைச்
செலுத்தியும்; அறங்கள் போற்றியும் -பல்வகையான அறச்செயல்களைப்
பாதுகாத்தும்; வேள்வியை இயற்றியும் – (அரசர்க்குரியபரி மேதம், இராயசூயம் முதலிய) யாகங்களைச் செய்தும்; வளர்க்க
வேண்டுமோ? – (நின்புகழைஇனி நீ) வளர்க்க வேண்டியதில்லை;
நின்புகழ் – (இத்தகைய நற்குண நற்செயல்களால்இப்போது பெற்றுள்ள)
நின்புகழே; ஏழினோடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும் – பதினான்கு
உலகமும் அழிந்திட்டாலும்; வாழிய – வாழ்வதாக;’ என்று வாழ்த்தினார்-.

———-

குரிசிலும், தம்பியைக் கூவி, ‘கொண்டலின்
முரசு அறைந்து, “ இந் நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு” என்பது சாற்றி, தானையை,
“விரைவினில் எழுக!” என, விளம்புவாய்’ என்றான்.–21-

குரிசிலும் – பரதனும்; தம்பியைக் கூவி – (தன்) இளவலான
சத்துருக்கனனைஅழைத்து; கொண்டலின் – மேகம் போல; முரசு
அறைந்து – இடியென ஒலிக்கும்முரசினை அடித்து; இந் நகர் முறைமை
வேந்தனை – இந்நகரத்திற்கு மரபு வழிப்படி அரசனாகவேண்டிய
இராமனை; ஈண்டுத் தருதும்’ – காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து
வரப்போகிறோம்; என்பது சாற்றி – என்னும் செய்தியை அறிவித்து;
தானையை – நம்சேனைகளை; ‘விரைவினில் எழுக’ என – (இராமனை
அழைத்து வர) விரைவாகப் புறப்படுக என்று;விளம்புவாய்’ –
சொல்லுவாயாக;’ என்றான் – என்று கட்டளை இட்டான்.

———-

நல்லவன் உரைசெய, நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்தலால் – உயிர் இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே.–22-

நல்லவன் உரை செய- நற்குணத்தாற் சிறந்த பரதன் பணிக்க; நம்பி-
சத்துருக்கனன்; கூறலும் – (இராமனைஅழைத்து வரும் செய்தியைச்)
சொல்லுதலும்; அல்லலின் – துன்பத்தால்; அழுங்கிய- இரங்கிக்கெட்ட;
அன்பின் மாநகர் – இராமன்பால் அயரா அன்பினை உடைய; அயோத்தி
மாநகர மக்கள்; உயிர் இல் யாக்கை- உயிர் இல்லாத உடம்புகள் எல்லாம்;
அச்சொல் எனும் அமிழ்தினால்- அந்த வார்த்தை என்னும் அமுதத்தால்;
துளிர்த்தது -(மீண்டும் உயிர் பெற்றுத்) துளிர்விட்டது; என்ன – என்று
சொல்லும்படி; ஒல்லென -பேராலி உண்டாகுமாறு; இரைத்தது – மகிழ்ச்சி
ஆரவாரம் செய்தனர்.

——–

அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி
கவிக்கும்’ என்று உரைக்கவே, களித்ததால் – அது
செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?–23-

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய்- ஐம்புலன்களை
அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக; புவித்தலை உள உயிர்
எலாம் -உலகத்திடத்து உள்ள உயிர்கள் எல்லாம்; ‘இராமன் பொன்முடி
கவிக்கும்’ – இராமன்பொன்மயமான மகுடம் சூடப்போகிறான்; என்று
உரைக்கவே என்று (முரசொலி மூலம்சத்துருக்கனன்) சொல்லவே;
களித்தது – பெரு மகிழ்ச்சி அடைந்தன; அது – அந்தச் சொல்;
செவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொல் – செவி யென்னும்
பொறி,கேள்வி என்னும் புலம் அனுபவிக்கும்படியான ஒப்பற்ற
தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

———

படு முரசு அறைந்தனர், ‘பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும்
முடுகுக’ என்ற சொல் மூரி மா நகர்,
உடுபதி வேலையின் உதயம் போன்றதே!–24-

‘பரதன் – ; தம் முனை- தன் அண்ணனாகிய இராமனை; கொடி
நகர் – கொடிகள் கட்டப்பெற்றுள்ள அயோத்தி மாநகர்க்கு;தரும் –
அழைத்துவரப் போகிறான்; அவன் கொணர – அந்த இராமனை
அழைத்துவர; சேனையும் முடுகுக’ – சேனைகளும் புறப்படுவதற்கு
விரைவாக; என்ற படுமுரசு அறைந்தனர் சொல்- என்றிவ்வாறு ஒலிக்கும்
முரசினை அடித்தவர்கள் கூறிய சொல்லானது; மூரி மா நகர் -பெருமையும்
சிறப்பும் உடைய அயோத்தி நகரமாகிய; வேலையின் – சமுத்திரத்திலே;
உடுபதி – விண்மீன்களுக்குத் தலைவனாகிய சந்திரனின்; உதயம்
போன்றது -தோற்றம் போன்றது.

———

எழுந்தது பெரும் படை – ஏழு வேலையின்,
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ,
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க்
கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே.–25-

பெரும் படை – பெரிய (அந்தச்) சேனை; மொழிந்த பேர்
ஊழியின் -(எல்லோராலும்) பேசப்படுகின்ற உலக இறுதிக் காலத்தில்; ஏழு
வேலையின் – ஏழுகடல்களும் பொங்கி எழுந்தது போல; முழங்கி –
பேரொலி செய்து; முந்து எழ -முற்பட்டுப் புறப்பட; (அதனால்) கேகயன்
மடந்தை ஆசை – கைகேயியின் (தன் மகன்அரசாள வேண்டும் என்னும்)
ஆசை; அழிந்தது – கெட்டழிந்தது; பானது உள் நின்றுசெலுத்திவிட;
துயர் – (இராமனைப் பிரிந்ததனாலும், பிரித்ததனாலும்) உண்டாகியதுன்பம்;
போய்க் கழிந்தது – மிகவும் அதிகமாகியது.

———

பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்,
மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி
விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள்,
கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே–26-

பண்ணின – அலங்கரிக்கப்பெற்றனவாகிய; புரவி, தேர், பகடு,
பண்டியும்- குதிரை, தேர், யானை, வண்டி ஆகியவை; மண்ணினை
மறைத்தன – (வெற்றிடம்இல்லாமல் பரந்திருத்தலின்) மண்ணை
மறைத்துவிட்டன; மலிந்த மாக் கொடி -(சேனைகளில் அங்கங்கே)
நிரம்பியுள்ள பெரிய கொடிகள்; விண்ணினை மறைத்தன – (ஆகாயம்எங்கும்
கட்புலன் ஆகாதபடி பரந்திருத்தலின்) ஆகாயத்தை மறைத்து விட்டன;
விரிந்த மாத்துகள் – சேனைகள் செல்வதால் மேல் எழுந்து விரிந்த
பெரிய புழுதித் துகள்கள்; கமலத்தோனை – (சத்திய லோகத்தில் உள்ள)
பிரமதேவனது; கண்ணினை மறைத்தன -கண்களை மறைத்துவிட்டன.

——

ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;
காசையின் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே.–27-

‘ஒல்’ என் பேர் ஒலி – (சேனைகளின் எழுச்சியால் உண்டாகிய)
‘ஒல்’ என்றபெரிய ஆரவாரம்; ஈசன் – (அழித்தற் கடவுளாகிய) சிவன்;
இவ் உலகினை அழிக்கும்நாள் – இந்த உலகினை அழித்துச் (சர்வ
சங்காரம்) செய்யும் காலத்தில்; எழும்ஓசையின் – எழுகின்ற
பேரோசையைவிட; நிமிர்ந்துளது – மேற்சென்றுளது; அவ்அனிகராசி –
அந்தச் சேனைத் தொகுதி; காசையின் கரியவன் – காயாம்பூப் போலும்
கருநிறமுடைய இராமனை; காண மூண்டு எழும் ஆசையின் –
காண்பதற்காக உள்ளே கிளர்ந்து எழுகின்ற ஆசையைக் காட்டிலும்;
நிமிர்ந்தது – மேற்சென்றுவிட்டது (அதிகமாய் உள்ளது.)

———

படியொடு திரு நகர் துறந்து, பல் மரம்
செடியோடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன – பெருங் கை வேழமே.–28-

பெருங்கை வேழம்- (சேனையில் உள்ள) பெரிய துதிக்கையையுடைய
களிற்று யானைகள்; பிடியொடு – (தம்) பெண் யாணைகளுடனே; படியொடு
திருநகர் துறந்து – பூவுலகஆட்சியோடு அழகிய அயோத்தி நகரத்தையும்
விட்டு; செடியொடு பல்மரம் தொடர் வனம்நோக்கி – செடிகளோடு
பல மரங்கள் ஒன்றை ஒன்று பற்றி நெருங்கியுள்ள காட்டை நோக்கி;சீதை
ஆம் கொடியொடு – சீதாபிராட்டி யென்கின்ற கொடியுடனே; நடந்த –
நடந்து சென்ற; அக் கொண்டல் ஆம் என – அந்த மேச நிறனாகிய
இராமன் போல; நடந்தன – நடந்து சென்றன.

——-

சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமா ரொடும் –
ஏற்று இளம் பிடிக்குலம் – இகலி, இன் நடை
தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே.–29-

சேற்று இள மரை மலர் – சேற்றின்கண் தோன்றுவன ஆகிய
இளமையான தாமரை மலர்; சிறந்தவாம் என – எம்மைக் காட்டிலும்
சிறந்தனவோ; என – என்று கேட்பது போல; கால்தளம் – பாதமாகிய
மலரிதழ்; பொலிதரு – விளங்குகின்ற; கன்னிமாரொடும் – இளம்
பெண்களுடனே; இளம் பிடிக்குலம் – இளைய பெண்யானைக்கூட்டம்;
இன் நடை இகலி – இனிய நடையால் பகைத்து; ஏற்று – (எதிர்) ஏற்று;
தோற்று – நடை அழகில் அவர்கள் விஞ்சியபடியால்) தோல்வியடைந்து;
(அதற்குத்தண்டனையாக) இள மகளிரைச் சுமப்ப போன்ற –
இளம்பெண்களை (இப்போது) சுமந்து திரிவனபோன்றன.

—-

வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன;
கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா
மாதரி்ன் நுடங்குவ, வரம்பு இல் கோடியே.–30-

வேதனை – வருத்தத்தைத் தரும்; வெயிற்கதிர் தணிக்க –
சூரியனால் ஆகியவெம்மையை (இராமனை அழைத்து வரச் செல்லும்
சேனைகளுக்கு) இல்லாதவாறு போக்க; (வானளாவிநின்று) மென்மழைச்
சீதநீர் தொடு – மெல்லிய மேகங்களது குளிர்ச்சி பொருந்தியநீரைத்
தொட்டுக் கொண்டு (கீழ்த் துளித்து); சென்றன – (சேனைகளின் இடையே)
சென்றன வாகிய; வரம்பு இல் கோடி – கணக்கற்ற கோடியளவான;
நெடுங்கொடியும் -நீண்ட கொடிகளும்; கோதை – கையுறை அணிந்த;
வெஞ்சிலையவன் – கொடிய(கோதண்டம் எனப்பெறும்) வில்லை ஏந்திய
இராமனது; கோலம் – பட்டாபிடேகக் கோலத்தை; காண்கிலா – காணப்பெறாத; மாதரின் – பெண்கள் போல;
நுடங்குவ – அசைகின்றனவாயின.

——-

வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,
அண்ணல் வெங்கதிரவன், அளவுஇல் மூர்த்தி ஆய்,
மண்ணிடை இழிந்து ஒரு வழிக்கொண்டாலென,
எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார்.–31-

எண்ண அரு மன்னவர் – கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல்
வெங் கதிரவன்- பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை
உடைய சூரியன்; அளவு இல் மூர்த்திஆய் – அளவுபடாத பல
வடிவங்களை எடுத்துக்கொண்டு; மீ வெண்மதி செல – தன்மேலே
வெண்மதியானது சென்றுகொண்டிருக்க; மேகம் ஊர்ந்து – (தான்)
மேகத்தின் மேல்ஊர்தியாக ஏறி; மண்ணிடை இழிந்து – பூமியில் இறங்கி;
ஒரு வழிக் கொண்டால் என- ஒரேவழியில் பயணம் செய்தாற் போல;
களிற்றின் ஏகினார் – (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள்.

———

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்திது, பதாதிப் பௌவமே.–32-

ஓர் பரவை – (சேனை வீரர்களாகிய) ஒரு கடல்; தேர் மிசைச்
சென்றது -தேர்மேல் சென்றது; ஓர் உவரி – (யானை வீரர்களாகிய) ஒரு
சமுத்திரம்; செம்முகக் கார் மிசைக் சென்றது – சிவந்த (புள்ளிகளை
உடைய) முகத்தை உடைய மேகம்(போன்ற யானை) மேல் சென்றது;
கார்க்கடல் – கரிய (குதிரை வீரர்களாகிய) கடல்; ஏர்முகப் பரிமிசை
ஏகிற்று – அழகிய முகத்தை உடைய குதிரைகளின் மேல் சென்றது; பதாதிப் பௌவம் – காலாட் படை வீரர்களாகிய கடல்;
பார்மிசைஎங்கணும் படர்ந்தது – மண்ணில் மேல் எல்லா இடங்களிலும்
படர்ந்து சென்றது.

——–

தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு
பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும்,
பேரியும், இயம்பல சென்ற – பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே.–33-

தாரையும் – தாரை என்ற நீண்ட ஊது கொம்பும்; சங்கமும் -;
தாளம் -; கொம்பு – வளைந்த ஊது கருவியும்; பம்பையும் – பம்பை
என்னும் பறையும்; துடியும் -; பேரியும் – பெருமுரசும்; மற்றவும் –
ஏனைய வாத்தியங்களும்; பார்மிசை – மண்ணின் மேல்; பேதைமைப்
பூரியர் குழாத்திடை – அறியாமையுடையபுல்லர்கள் கூட்டத்தின்கண்;
அறிஞர் போல – (கற்றுத் துறைபோகிய) நல்லறிவாளர்ஒன்றும் பேசாமல்
மௌனமாக இருத்தல் போல; இயம்பல சென்ற – ஒலிக்காமல் சென்றன.

——

தா அரு நாண் முதல் அணி அலால், தகை
மே வரு கலங்களை வெறுத்த மேனியர்,
தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.–34-

தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர் – தேவர்களும்
திகைக்கும் ஒளிர்கின்றதோற்றமுடைய; மகளிர் – பெண்கள்; தா அரு-
குற்றம் அற்ற; நாண் முதல்- நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனப்பெறும்;
அணி அலால் – அணிகலன்கள் அல்லாமல்; தகை மேவரு – அழகு
பொருந்திய(பொன்னாலும் மணியாலும் புனைந்த); கலன்களை –
அணிகளை; வெறுத்த மேனியர் -வேண்டாம் என்று நீக்கிய உடம்போடு;
பூ உதிர் கொம்பு என – பூக்களை உதிர்த்துவிட்டபூங்கொம்பு போல;
போயினார் – (அக்கூடத்தில்) சென்றார்கள்.

———–

அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே.–35-

அதிர் கடல் – ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற; வையகம்
அனைத்தும் – உலகம் முழுவதையும்; காத்தவன் – (நீதி வழுவாது)
காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்; விதிவரு – மரபுவழியில்
பாரம்பரியமாக வருகின்ற; தனிக்குடை- ஒப்பற்ற வெண்கொற்றக்குடை;
மீது இலா – மேலே பிடிக்கப்படாது உள்ள; படை- அச்சேனை;
பொதி பல கவிகை மீன் – நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்)
வெண்குடைகளாகிய விண்மீன்கள்; பூத்தது ஆகிலும் – வானம் எங்கும்
நிரம்பித்தோன்றின ஆயினும்; கதிர் மதி – ஒளியுடைய சந்திரன்;
நீங்கிய கங்குல் – இல்லாத இரவை; போன்றது -.

———-

செல்லிய செலவினால், ‘சிறிய திக்கு’ எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, ‘ஓர்
மெல்லியல்’ என்றவர் மெலியரேகொலாம்.?–36-

செல்லிய செலவினால் – பரந்து செல்கின்ற செல்கையால்;
‘திக்கு சிறிய’- திசைகள் இடம் போதாமல் சிறியன; எனச் சொல்லிய
சேனையை – என்று பிறரைச்சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச்
சேனையை; சுமந்தது எனில் – (இந்தப் பூமி)சுமந்து கொண்டுள்ளது
என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை – ஒல்லென்றுஒலிக்கின்ற
கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல்-
மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்; மெலியர்
கொல் – மெலியர்போலும்.

———-

தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில,
குங்குமம் கொட்டில, கோவை முத்து இல, –
பொங்கு இளங் கொங்கைகள் – புதுமை வேறு இல
தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய.–37-

பொங்கு இளங் கொங்கைகள் – (மகளிரது) பருத்துக் கொண்டுள்ள
இளமையானதனங்கள்; தங்கு செஞ்சாந்து அகில் கலவை சார்கில –
(தம்மிடம் பூசப்பெற்று எப்பொழுதும்) தங்கியிருக்கப்பெற்ற செஞ்சந்தனம்,
அகில் குழம்பு, கலவைச் சாந்து இவை(இப்போது) சாரப் பெறாமல்;
குங்குமம் கொட்டில – குங்குமக் குழம்பு பூசப்பெறாமல்; கோவை முத்து
இல – முத்துவடம் அணியாமல்; வேறு புதுமை இல – வேறு புதிய
செயற்கை நலன்கள் இல்லாமல் (இருப்பதால்); தெங்கு – தென்னையின்;
இளநீர்எனத் தெரிந்த காட்சிய – இளநீர்க் காய்கள் போலத் தோற்றம்
உடையவாயின.

———-
இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன – குலவுத் தோள்களே.–38-

குலவுத் தோள்கள் – (ஆண்களின்) திரண்ட தோள்கள்; இன்
துணைவர் -(அவர்களுடைய) இனிய மனைவியரது; முலை எழுது
சாந்தினும் – முலை மேல் தொய்யில்எழுதப்பெற்ற சாந்தினால்; மன்றல்
அம் தாரினும் – (தாமே அணியும்) மணம் வீசும்மாலையால்;
மறைந்திலாமையால் – இப்பொழுது மறையாமல் (இயற்கையாகஉள்ளபடி) விளங்கித் தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் –
நெருங்கிய இளைய கொடிமுதலாகிய; தூறு நீங்கிய – புதர்கள் இல்லாமற்
போன; குன்று என – மலைபோல;பொலிந்தன – தோன்றின.

————

நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன – கொற்றம் முற்றுவான்.
கறை அறக் கழுவிய கால வேலையே.–39-

நறை அறு கோதையர் – வாசனைப் புகை ஊட்டாத கூந்தலை
உடைய மகளிர்; நாள்செய் கோலத்தின் துறை அற – நாள்தோறும்
செய்யப்படுகின்ற அலங்காரத்தின் தன்மைகள்நீங்கினமையால்; அஞ்சனம்
துறந்த – மை தீட்டப் பெறாத (இயற்கையான தோற்றத்தோடுஉள்ள)
கண்கள்; கொற்றம் முற்றுவான் – (போர்செய்து) வெற்றியை முடித்த
ஒருவன்; கறை அறக் கழுவிய – போர்காலத்துப் படித்த போன்ற
வேற்படையை; குறை அற நிகர்ந்தன- குறைவில்லாமல் ஒத்திருக்கின்ற
ஆயின.

——–

விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல், தார் ஒலி இல்தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி,
அரிஇனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே.–40-

தெரிவையர் அல்குல் – மகளிரது இடைப்பகுதி; தார் ஒலி இல்
தேர் என -மணி ஒலி இல்லாத (அலங்கரிக்கப்பெறாத) தேர் போல; மணி
விரி மேகலை விரவி ஆர்க்கில- மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை
அணியப்பெற்றிலாமல் ஒலி யற்றவையாய் இருந்தன; பவளச் சீறடி –
பவளம் போன்ற சிவந்த நிறம் வாய்ந்த சிறிய அடி; அரி இனம்
ஆர்க்கிலாக் கமலம் என்ன – வண்டுக் கூட்டங்கள் ஒலிக்காத தாமரை
மலர் போல; பரிபுரம் ஆர்க்கில – சிலம்புகள் ஒலிக்கப்பெறாமல், உள்ளன.

——–

மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!
புல்கிய மணிவடம் பூண்கிலாமையால்,
ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே.–41-

ஒல்கிய – (மகளிரது ) வளையும் தன்மை உள்ளனவாகிய இடைகள்;
புல்கிய -(எப்பொழுதும் தம்மைத்) தழுவிக் கிடக்கும்; மணிவடம் –
மணிகள் பதிக்கப்பெற்றவடங்களை; பூண்கிலாமையால் – (இப்பொழுது)
அணியாமையால்; ஒருவகைப் பொறைஉயிர்த்த – ஒருபடியாகப் பாரம்
நீங்கி இளைப்பாறின; (எனவே) கேகயன் மடந்தைமல்கிய வாசகம் –
கைகேயியின் வளமான வரம்; நல்கியது – அருள் செய்தது; அரிவையர்
நடுவிற்கே கொல் – மகளிரது இடைக்கு மட்டும் போலும்.

——-

‘கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்’
காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம்’ என, நிகழ்ந்தது – அவ் அளவு இல் சேனையே.–42-

அவ் அளவு இல் சேனை – அந்த அளவற்ற சேனையானது;
கோமகன் பிரிதலின் -அரச குமாரனாகிய இராமன் நாடு விட்டுக் காடு
சென்றபடியால்; கோலம் நீத்துள – தன்அலங்காரத்தைத் துறந்துள்ள;
தாமரைச் செல்வியும் – இலக்குமியும்; தவத்தைமேவினாள் – (தானும்)
தவம் செய்ய விரும்பிச் சென்று விட்டாள்; காமனும் -மன்மதனும்;
அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம் – (இன்பம் நுகர்வார் எவரும்
இன்மையின் தன்தொழில் இறந்தது என்று) அரிய துன்பக் கடலில்
மூழ்கிவிட்டானாகும்; எனநிகழ்ந்தது – என்று சொல்லுமாறு பொலிவும்
மகிழ்ச்சியும் இன்றிச் சென்றது.

————-

மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும் , கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது – அவண் எழுந்த சேனையே.–43-

அவண் எழுந்த சேனை – அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட
சேனை; மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் – பூமி,
ஆகாயம், திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர்
கடல் – உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது
என் – ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல்
தன் – (படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும்,
எண்ணினும் நெடிது – (படைத்த பொருளைக் காணும்) கண்ணையும்,
நினைக்கும்) மனத்தையும்,(நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து
நீண்டதாகும்.

———-

அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு
மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த்
தலைவனை நிகர்த்தது – அத் தயங்கு தானையே.–44-

அத் தயங்கு தானை – விளங்குகின்ற அந்தச் சேனை; அலை
நெடும் புனல் அறக்குடித்தலால் – கடந் நீரை முற்றும் வற்றக்
குடித்தலாலும்; அகம் நிலைபெற நிலைநெறிநிறுத்தலால் – பூமி இடம்
(ஒரு புறம் சாயாது) நிலைபெறும்படி நிலையான முறையில் நிற்கச்
செய்வதாலும்; நெடு மலையினை மண் உற அழுத்தலால் –
பெருமலைகளை மண்ணிற் புகும்படிஅழுத்திவிடுதலாலும்; தமிழ்த்
தலைவனை – தமிழன் தலைவனாகிய அகத்திய முனிவனை; நிகர்ந்தது –
ஒத்துள்ளது.

———-

அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்
மறிகடல் ஒத்தது – அவ் அயோத்தி மாநகர்.–45-

அவ் அயோத்தி மாநகர் – அந்த அயோத்தி மா நகரமானது;
அறிஞரும்,சிறியரும் ஆதி அந்தமா – அறிவானமைந்த பெரியோர்
முதல் சிறியவர் வரை (அனைவரும்); செறி பெருந் தானையும் –
நெருங்கியுள்ள பெரிய சேனையும்; திருவும் -செல்வமகளும்; நீங்கலால் –
நீங்கிக் காடு நோக்கிச் சென்றுவிட்டபடியால்; குறியவன் – அகத்திய
முனிவன்; புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – (தன்)நீரை
யெல்லாம் வயிற்றில் அடக்கிய அந்நாளில்; மறிகடல் ஒத்தது- அலைவீசும்
கடல்வறிதானாற் போன்றது.

———–

பெருந் திரை நதிகளம், வயலும், பெட்புறு
மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத்
திருந்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அருந்தெரு ஒத்தது – அப் படை செல் ஆறு அரோ.–46-

அப்படை செல் ஆறு – அந்தப் படைகள் செல்கின்ற வழி;
பெருந்திரை நதிகளும்- பேரலைகளைக் கொண்ட நதிகளும்; வயலும் -;
பெட்புறு – விரும்புதல் அமைந்த; மரங்களும் -; மலைகளும் -;
மண்ணும் -; கண்ணுற – பக்கங்களில் கட் புலனாகத் தோன்ற, (அதனால்);
அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோத்தியாகிய தெய்வத் தன்மை
வாய்ந்த பெரு நகரத்தின்; திருந்தல் இல் அருந்தெரு ஒத்தது –
திருத்தமற்ற அரியதெருவைப் போன்றது.

——

‘தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை
ஏர்கள்தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால் –
கார்கள்தாம் என மிகக் கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே.–47-

அம் மன்னன் சேனை – (அந்தப் ) பரதன் ஏவிய சேனையில்;
கார்கள்தாம் என- மேகங்களே என்று சொல்லும்படி; மிகக் கடுத்த
கைம்மலை – மிகவும் பொருந்த அமைந்தயானைகள்; வார்கடாம்
அல்லது – பெருகவிடும் மதசலம் அல்லது; ‘தார்கள் தாம், கோதை தாம்,
தாமம் தாம், ஏர்கள் தாம், கலவை தாம் – தார், கோதை, தாமம்,
பல்வசைச் சிறப்பான அழகுப்பொருள்கள், கலவைச் சாந்து (இவற்றின்);
கமழ்ந்தின்று’ -மணம் வீசப் பெறவில்லை; என்பர் – என்று சொல்லுவர்.

——–

ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல்,
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் –
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே.–48-

ஆள் உலாம் கடலினும் – மக்கள் மரக்கலத்தில் ஏறி உலாவுதற்
கிடனாக உள்ளகடலைக்காட்டிலும்; அகன்ற அக்கடல் – விரிந்து
பரந்துள்ள அச் சேனைக்கடலில்; வாள் உலாம் நுதலியர் – ஒளி பரந்த
நெற்றியுடையமகளிரது; மருங்குல் அல்லது – (மின்னல் போன்ற) இடையே
அல்லாமல்; (வேறாகிய) தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி –
தோளின்கண் தவழ்கின்ற காதணியாகிய குண்டலம்முதலாகிய பழமையாக
அணியும் அணிகளின்; கேழ் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை –
நிறம் விளங்குகின்ற மின்னல் ஒளி மிக்கு ஒளிர்வது இல்லை.

——

மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின், உரை இலாமையின்,
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது – அப் படையின் ஈட்டமே.–49-

அப் படையின் ஈட்டம் -அந்தச் சேனைத் தொகுதி; மத்தளம்
முதலிய வயங்கு பல்இயம் – மத்தளம் முதலாகிய விளங்குகின்ற பல
வாத்தியங்கள்; உரை இலாமையின் ஒத்தனசேறலின் – ஒலிக்காமல்
பொருந்திச் செல்கின்ற படியால் (ஒலியவிந்த படைச்செலவு); நெடுஞ் சுவர்-
நீண்ட சுவரில்; சித்திரம் தீட்டிய – சித்திரமாக வரைந்த; சேனைப்
பத்தியை நிகர்த்தது – சேனை வரிசையை ஒத்துள்ளது.

———-

ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை.
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது –
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே.–50-

கண்ணன் – கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய
இராமன்; காடு உறவாழ்க்கையை நண்ண – காட்டின்கண் வசிக்கும்
வாழ்க்கையை மேற்கொள்ள, (அச்செயல்); ஆடவர்க்கு – ஆண்களுக்கு
எல்லாம்; ஏடு அறு கோதையர் – புறவிதழ் நீக்கிய மலர் கொண்டு
தொடுத்த மாலை அணிந்த மகிளிர்; விழியின் எய்த கோல் –
கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது; உரம் ஊடு உறத்
தொளைத்து உயிர் உணா வகை- மார்பினை ஊடுருவிச் சென்று அவர்கள் உயிரைப்
போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது- அரிய பெரிய கவசம்
அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது.

——–

கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம் –
அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில, மகளில் கொங்கையே?–51-

அனங்கன் ஐங்கொடுங்கணை அடரும் ஆடவர் மனம் – மன்
மதனது (பிறரை வருத்தும்)ஐந்து கொடிய கணையால் நெருக்கப்படும்
ஆண்களது மணம்; மகளிர் கொங்கை – பெண்களது முலைகளில்;
கிடந்து உண்கில – இருந்து தங்கி அநுபவியாமல் போயின; கனம் குழை
கேகய மகளின் கண்ணிய சினம் – கனமான காதணி அணிந்த
கைகேயியின்மேல் (மகளிர்) கருதியசினம்; கிடந்து – பெண்கள் இடத்தே
தங்கி; எரிதலின் – எரிகின்றகாரணத்தால்; தீர்ந்தவே கொல் –
(கொங்கைகள் கடும் என்று கருதித்)தவிர்ந்தனவோ?

———–

இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,
நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான்.–52-

இன்னணம் – இவ்வாறு; நெடும்படை ஏக – பெருஞ்சேனை செல்ல;
ஏந்தலும் – பரதனும்; தன்னுடைத் திரு அரை – தன்னுடைய அழகிய
இடுப்பிலே; சீரைசாத்தினான் – மரவுரியைத் தரித்து; பின்
இளையவனொடும் – பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய
சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் – (மனத்துள்) தோன்றியதுக்கத்
தோடும்; நல்நெடுந் தேர்மிசை – நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல்
மேயினான் – (வனத்துக்குச்) செல்லத் தொடங்கினான்.

———-

தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்
ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,
தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்
போயினன் – திரு நகர்ப் புரிசை வாயிலே.–53-

தாயரும் – (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்;
அருந்தவத்தவரும் – செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும்;
தந்தையின் ஆயமத்திரியரும் – தன் தந்தையாகிய தயரதன் கண்
பொருந்திய மந்திரிமார்களும்; அளவுஇல் சுற்றமும் -அளவிட முடியாத
பலவாகிய சுற்றத்தார்களும்; தூய அந்தணர்களும் -தூய்மையான
வேதியர்களும்; தொடர்ந்து சூழ்வர – தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர;
திருநகர்ப் புரிசை வாயில் போயினன் – அழகிய அயோத்தி நகரத்து
மதிலின் (முதன்மையான)வாயிலைச் சென்றடைந்தான்.

———–

மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்;–54-

இளவல் – நால்வரினும் இளையவனாகிய சத்துருக்கனன்; வழிச்
செல்வாரொடும் -(இராமனைக் கண்டு அழைக்கக் காடு நோக்கி)
வழிச்செல்லும் அவர்களோடு; மந்தரைக் கூற்றமும்- மந்தரையாகியயமனும்;
உந்தியே போதல் கண்டு – மற்றவர்களைத் தள்ளிக்கொண்டுமுந்திச்
செல்லுதல் கண்டு; ஓடி – விரைந்து சென்று; ஆர்த்து – பேரொலிசெய்து;
அழன்று – கோபித்து; அந்தரத்து எற்றுவான் – ஆகாயத்தில் மேலே
வீசுமாறு; பற்றலும்- (கையாற்) பற்றிக் கொள்ளுதலும்; சுந்தரத் தோளவன்-
அழகிய திருத் தோள்களை உடைய பரதன்; விலக்கி – (அவ்விடத்திலிருந்த
மந்தரையை); விடுவித்துச் சொல்லுவான் – (தம்பிக்குச்) சொல்லலானான்.

——

‘முன்னையர் முறை கெட
முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து, என்
சினத்தைத் தீர்வெனேல்,
“என்னை இன்று என் ஐயன் துறக்கும்”
என்று அலால்,
“அன்னை” என்று, உணர்ந்திலென்,
ஐய! நான்’ என்றான்.–55-

ஐய! – சத்துருக்கனனே!; ‘முன்னையர் முறைகெட – (நம் குலத்து)
முன்னோர்களின் முறைமை சிதைய; முடித்த பாவியை – (வரத்தின்
மூலமாகத்) தன் ஆசையைநிறைவேற்றிக் கொண்ட (என் தாயாகிய) பாவியை;
சின்ன பின்னம் செய்து – கண்டதுண்டம் செய்து; என் சினத்தைத்
தீர்வெனேல் – என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேனானால்; என்
ஐயன் – என் தலைவனாகிய இராமன்; இன்று என்னைத் துறக்கும்-
இன்றே என்னைத் தம்பியல்லன் என்று துறந்துவிடுவான்; என்று அலால் –
என்றுகருதி அதனால் அமைதியாக இருந்தேனே அல்லாமல்; (இவளை)
‘அன்னை’ என்று நான் உணர்ந்திலென்- ‘தாய்’ என்று கருதி நான்
அமைதியாக இருந்தேனில்லை; என்றான் -.

——————-

ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்,
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்!
போதும் நாம்’ என்று கொண்டு, அரிதின் போயினான்.–56-

‘கோது இலா அருமறை குலவும் நூல்வலாய்! – குற்றம் இல்லாத
அரிய மறை பொருள்களைத்தன்னிடத்தே கொண்டுள்ள வேத நூலில்
தேர்ச்சி பெற்றவனே!; அந்தம் இல் வேதனைக் கூனியை- முடிவில்லாத
வேதனைகளை அனைவர்க்கும் உண்டாக்கிய கூனியை;
வெகுண்டும் என்னினும்- மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்;
ஐயன் முனியும் ஆதலால் -இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்;
என்று – என்று கருதி; நாம் போதும்- நாம் அவளை விட்டுப் போவோம்;
என்று அரிதின் கொண்டு – என்று சொல்லிச்சிரமப்பட்டு (அவனைத்
தடுத்து) அழைத்துக்கொண்டு; போயினான் – சென்றான்.

———-

மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்.–57-

மொய் பெருஞ் சேனையும் – நெருங்கிய பெரிய சேனையும்; மூரி
ஞாலமும் – பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்; கைகலந்து –
ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட – பரதனின் பக்கல் ஒரு கடல்
போலச் சுற்றியிருப்ப; ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய
சோலையில் – இராமனும், சீதையும், இளைய யாளிபோல்வானாகிய
இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே; தானும் – (பரதன்)
தானும்; வைகினான் – (அன்று) தங்கினான்.

———

அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,
வில் அணைந்து உயர்ந்த தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான்.–58-

(பரதன்) அல்- இரவில்; நெடுங்கண் அனை நீர் அருவி ஆடினன்-
(தன்)நீண்ட கண்களிலிருந்து வருகின்ற நீராகிய அருவியில் மூழ்கி; கல்
அணை கிழங்கொடு கனியும்உண்டிலன் – மலையில் விளையும்
கிழங்குகளோடு பழங்களையும் புசியாது; வில் அணைத்து உயர்ந்த தோள் வீரன் வைகிய- வில்லைத் தழுவியிருக்கும் உயர்ந்த
தோள்களை உடைய இராமன் தங்கியிருந்த; புல்லணைமருங்கில் –
புல்லாலாகிய படுக்கையின் பக்கத்தில்; தான் -; பொடியின் –
மண்புழுதியின்கண்; வைகினான் – தங்கியிருந்தான்.

———–

ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி’ என, தானும் ஏகினான் –
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடர, காலினே,.–59-

‘ஆண்டு நின்று – அங்கிருந்து; ஆண்தகை – ஆடவர் திலகனாய
இராமன்; ஈண்டிய நெறி – நெருங்கிய வழியிலே; அடியின் ஏகினான் –
காலால் நடந்துசென்றான்; என – என்று (அறிந்து); தானும் – பரதனும்;
தூண்டிடு தேர்களும்- செலுத்தப்படும் தேர்களும்; துரகராசியும் –
குதிரைத் தொகுதிகளும்; காண்தகுகரிகளும் – காட்சிக்குப் பொருந்திய
யானைகளும்; தொடர – (தன்னைப்)பின்பற்றிவர; காலின் ஏகினான் –
காலால் நடந்து சென்றான்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்—-அயோத்யா காண்டம் —

December 10, 2020

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

ஏனையமூன்று பிள்ளைகளை அவன்நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை.
பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன்.
பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன்.
“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” (324)
“மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்” (1514)
“போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்”(1898)
“சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னனே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு” (1654)
“உன் கழுத்தின் நாண், உன் மகற்கு காப்பின் நாண் ஆம்”(1653)

——–

“இளவல் உன் இளையான்இந் நன்னுதலவள் நின் கேள் (1994)

“இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,இளையவற்கும், எனக்கும் மூத்தான்” (2367)
என்று குகனைக் கோசலைக்கு பரதனும் கூட,அறிமுகம்

“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?” (1966)

“ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ” (2317)

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல். நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்” (2332)

“எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” (2332)

“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!”(2337)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் ; தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவில்லை ; திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்
(II 12.30)

———

“நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த!
விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது?”(கம்பன் 1734)

“நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம்”(கம்பன் 1741)

——–

அந்தத் தவச்சாலையைப் பார்த்த இராகவன் தம்பியைஏற
இறங்கப் பார்த்து,”என்று கற்றனை நீ இதுபோல்” (2096)

மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா இல் எம்பி கை சாலை சமைத்தன
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே’ (2095)

———

வான்மீகி ராமாயணம் மட்டும் தசரதனின் கிரகநிலை பற்றியும், அவன்
கண்ட தீக்கனா பற்றியும்இராமனிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறது.:

இராம, ஆகாயத்திலிருந்து கொள்ளிக் கட்டையொன்று இடியோசையுடன்
வீழ்வதாகக் கனவு கண்டேன்.மேலும் எனது ஜன்ம நட்சத்திரத்தில்
சூரியன், செவ்வாய், இராகு என்னும் மூன்று கிரகங்களும் ஒருங்கு
வந்து கூடியிருப்பதாகச் சோதிடர்கள் கூறுகின்றனர். இவற்றின்
காரணமாய் அரசனுக்கு மரணம்நேரலாம்; அல்லது அவனுக்கு மிகப்
பெரிய தீங்கு உண்டாகலாம் என்பது சோதிட நூற் கொள்கை. மேலும்
மனிதர்களின் எண்ணங்கள் நிலையானவை அல்ல. ஆகையால், எனக்கு
இறுதி நேர்வதற்கு முன்னரே, என் மனம் உறுதியாக இருக்கும்பொழுதே
உனக்கு முடிசூட்டி மகிழ விரும்புகிறேன். (II4.17-20)

உயிர்க்கு உறுதி பயக்கும் துறவற நெறியை மேற்கொள்ள விரும்புவதாக
வான்மீகம் கூறுவில்லை.கம்பன் படைத்த தசரதன் இக்கருத்துடையவனாக
இருந்தான் என்பதை,

மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். (II.1.14)

ஆதலால் இராமனுக்கு அரசை நல்கியிப்
பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறு
மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
யாதுநும் கருத்து?….. (1.30)

———–

சம்பரா சூரனுடன் பொருது வென்றபோது தசரதன் உனக்கு அருளிய
இரண்டு வரங்களை இப்போது கேள்என்று கூனி உபாயம் செப்பியதாகக்
கம்பராமாயணம் கூறுகிறது. (II. 2.89)

உந்தன் மணவாளரும் கோசலையும்
உகந்து ரதம் ஏறி வரும்போது
தேர்வண்டி அச்சுதான் முறிய
சிறப்பாய் உன் கரத்தினால் ஏந்திக்கொண்டாய்
அப்போது உன் கணவன் தான் பார்த்து
ஆயிழையே உனக்கென்ன வரம் கேளும் என்றார்.
கேளுமென்று ராசன் உரைத்த போது
கெம்பீரமா யுன் மகன் பரதாள் வார்க்கு
எந்தன் மகன் பரதாள் வானுக்கு
யேத்த முதப்பட்டங் கட்டவேணும்
யென்று நீவரங் கேட்டபடி
யிசைந்து வரமது தந்து விட்டார்
அந்த வரம் சற்றும் நினையாமல்
ஆயிழை கைகேசி மறந்து விட்டாய்.26

எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவதுண்டேல்
உய்ந்தனன் அடியேன்…
தந்தையும் தாயும் நீரே, தலைநின்றேன் பணிமின் (II.3.110)

இப்பொழுது எம்மனோரால் இயம்புவதற்கு எளிதோ யாரும்
செப்பருங் குணத்து இராமன் திருமுகச் செவ்விநோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.

தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருளுடைய உலகம் தாங்கும் இன்னலுக்கு இளைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த காரேறு
அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்
(II.3 . 112 – 13)

மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோஎன்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என்இனி உறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும்
கொண்டேன்(II.3.114)

———–

நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?

சுமித்திரைகோயில்புக்கு அவள் இணையடிம இறைஞ்சி
விடைபெறாநிற்கையில் சுமித்திரை.

ஆகாதது அன்றால் உனக்கு; அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்……

பின்னும் பகர்வாள் மகனே இவன்பின் செல், தம்பி
என்னும் படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா, அஃது அன்றேல்
முன்னம் முடி…….

———————

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த
மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப –
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.

கூனும் – கூனியாகிய மந்தையும்; சிறிய கோ தாயும் – இளைய
பட்டத்து அரசியும் தாயுமாகிய கைகேயியும்; கொடுமை இழைப்ப-
தனக்குப் பொல்லாங்கு செய்ய ; கோல் துறந்து – அரசாட்சியை நீத்து;
கானும்கடலும் கடந்து – காட்டையும் கடலையும் தாண்டிச் சென்று ;
இமையோர் இடுக்கண்தீர்த்த – (இராவணனைக் கொன்று) தேவர்களின்
துன்பத்தை கிழங்கெடுத்த ; கழல்வேந்தன் – வீரக்கழலை அணிந்த
இராமபிரானே ; வரம்பு இகந்த – எல்லைகடந்து பரந்த ; மா பூதத்தின்
வைப்பு எங்கும் – பெரிய பூதங்கள் ஐந்தினால்ஆகிய உலகத்தில் உள்ள
பொருள்கள் எல்லாவற்றிலும் ; ஊனும் உயிரும் உணர்வும் போல்-
உடலும் உயிரும் போலவும் உடலும் உணர்வும் போலவும் ; உள்ளும்
புறத்தும் உளன்என்ப – அகத்தேயும் புறத்தேயும் நிறைந்திருக்கின்றான்
என்று ஞானிகள் கூறுவர்.

இப்பாட்டு இராமாயணச் சுருக்காய் இருப்பது மூலப் பகுதியிலிருந்தும்
தோன்றிய உலகத்தில் உள்ள பொருள்களின் உள்ளேயும் வெளியேயும்
நிறைந்திருக்கும் பரம்பொருளேஇராமனாக அவதரித்தான் என்பது கருத்து.
இழிந்து என்னும் வினையெச்சம் இகந்த என்னும் பெயரெச்சவினைகொண்டு
முடிந்தது. ‘வானின்று இழிந்து வரம்பு இகந்த வைப்பு’ என்றும், ‘மாபூதத்தின்
வைப்பு’என்றும் இயைத்துப் பொருள் கொள்க. வானிலிருந்து காற்றும்,
காற்றிலிருந்து நெருப்பும்,நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும்
தோன்றியது என்னும் மறை முடிபினையொட்டி‘வானின்றிழிந்து……. வைப்பு’
என்றார். உணர்வு -ஆன்மாவின் பண்பாய் வெளிப்பட்டு நிற்கும் அறிவு. இறைவன்
பொருள்களுக்குஉள்ளே உடம்புக்குள் உயிர் இருப்பது போலவும், வெளியே
உயிரில் உணர்வு வெளிப்பட்டு இருப்பதுபோலவும் இருக்கிறான் என்பார்
‘ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப’
என்றார். பரம்பொருள் உயிர்களைத் தனக்கு உடம்பாகக் கொண்டு தான்
உள்ளேயும், உயிர்களுக்குஉடம்பாக அமைந்து தான் புறத்தேயும் உள்ளான்
என்பது சமய நூற் கொள்கையாதலின் இவ்வாறுகூறினார் என்க.

இக் காண்டம் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இப்
பெயர் பெற்றது. இதில் மந்திரப் படலம் முதலாகத் திருவடி சூட்டு படலம்
ஈறாக மொத்தம்பதின்மூன்று படலங்கள் உள்ளன. தயரதன் இராமபிரானுக்கு
முடிசூட்டக் கருதுவது தொடங்கி, காடு சென்றஇராமனைப் பரதன் சென்று
கண்டு திரும்புவது வரையிலான கதை நிகழ்ச்சிகள் இதில் இடம்
பெறுகின்றன. தாய் தந்தையர் சொல் தட்டாத இராமன் பண்புச் சிறப்பும்,
அரசின்மீது சிறிதும்ஆசையில்லாத பரதன் பெருஞ்சிறப்பும், கைகேயியின்
கொடுமையும், ஏழை வேடன் குகன் இராமன்மீதுகாட்டும் பரிவும் இக்
காண்டத்தில் நன்கு வெளிப்படுகின்றன
———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்-பால காண்டம்-மிகைப் பாடல்கள்-1-187- –

December 10, 2020

1-ஆற்றுப் படலம்

ஒன்றாய். இரண்டு சுடர் ஆய்.
ஒரு மூன்றும் ஆகி.
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு.
ஐம் பூதம் ஆகி.
அன்று ஆகி. அண்டத்து அகத்து ஆகி.
புறத்தும் ஆகி.
நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல்
நெஞ்சில் வைப்பாம்.–1-

ஒன்றாய் – பரம்பொருள் ஒன்றால்;
இருசுடர் – பரிதி. மதி என்று இருசுடர்;
ஒரு மூன்று – பிரமன்-திருமால்-சிவன்;
பொன்றாத வேதம் – அழியாத வேதம்;
அன்று – இல்லை;
நீள்கழல் – நெடிய பாதம்.

———–

நீலம் ஆம் கடல். நேமி அம் தடக் கை
மாலை மால் கெட. வணங்குதும் மகிழ்ந்தே.–2-

நீலம் ஆம் கடல் – கடல் போன்ற நீல நிறமும்;
நேமி அம் தடக்கை – திரு வாழி ஏந்திய நீண்ட கைகளையும் உடைய;
மாலை – திருமாலை;
மால்கெட – மயக்கம் நீங்க;
மகிழ்ந்து வணங்குதும் -மகிழ்ந்து வணங்குவோமாக.

————

காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை.
மேய நான்மறை தொழ. விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம்.–3-

கடு – நஞ்சு;
விழித்து உறங்கல்- அறிதுயில்;
ஆயிரம் பணா முடி
ஒப்பு பரிபாடல். ‘கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிறு’
முருகாற்றுப்படை; மாயன் – கரியன்; மாயம் வல்லவன்.

———–

மாதுளங் கனியை. சோதி
வயங்கு இரு நிதியை. வாசத்
தாது உகு நறு மென் செய்ய
தாமரைத் துணை மென் போதை.
மோது பாற்கடலின் முன்நாள்.
முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
போது தாயாகத் தோன்றும்
பொன் அடி போற்றிசெய்வாம்.–4-

மாதுளங்கனியை – மாதுளங்கனி போன்ற நிறத்தினளை;
சோதி -ஒளி;
வயங்குதல் – விளங்குதல்;
நிதி – செல்வம்;
தாது – மகரந்தம்;
உகு – சிந்தும்;
துணை – இரண்டு;
போது – மலர்;
தாய் – இலக்குமி.

———-

பராவ அரு மறை பயில் பரமன். பங்கயக்
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான்.
அரா – அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய
இராகவன். மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம்.–5-

பராவ அருமறை-போற்றுதற்கரிய வேதங்கள்;
பங்கயம் – தாமரை;
கராதலம் – கைகள்;
அராவனை – பாம்புப்படுக்கை;
இராகவன் -இராமன்;
இறைஞ்சி – வணங்கி.

———

கலங்கா மதியும். கதிரோன் புரவிப்
பொலன் கா மணித் தேரும். போகா இலங்கா
புரத்தானை. வானோர் புரத்து ஏறவிட்ட
சரத்தானை. நெஞ்வே! தரி.–6-

கலங்கா- கலங்காத;
மதி – சந்திரன்;
கதிரோன் – சூரியன்;
பொலன் – அழகிய;
இலங்காபுரத்தான் – இராவணன்;
சரம் – அம்பு;
சரத்தான் – இராமன்;
தரி – தரிக்கச் செய்

———-

‘நாராயணாய நம!’ என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து. ஏத்துமாறு அறியேன்;
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே.–7-

நல் நெஞ்சர்- நல்ல மனமுடைய சான்றோர்;
ஏத்துமாறு -போற்றும் வகை;
கார் – மேகம்;
கருணாகரன் – கருணை வடிவினன்;
மூர்த்தி – வடிவம்;
ஆராதனை – நிவேதனம்.

———–

பராவரும் இராமன். மாதோடு
இளவள் பின் படரக் கான் போய்.
விராதனை. கரனை. மானை.
கவந்தனை. வென்றிகொண்டு.
மராமரம். வாலி மார்பு.
துளைத்து. அணை வகுத்து. பின்னர்.
இராவணன் குலமும் பொன்ற
எய்து. உடன் அயோத்தி வந்தான்.–8-

பராவரும் – துதிப்பதற்கு அரிய;
மாது – சீதை;
இளவல் -இலக்குவன்;
பின்படர – பின்தொடர்ந்து வர;
கான் – காடு;
துளைத்து- துளைசெய்து;
அணை வகுத்து – அணை அமைத்து;
பொன்ற -அழிய;
எய்து – அம்பெய்து.

———–

தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட.
குருகை நாதன் குரை கழல் காப்பதே.–9-

தருகை – தருகின்ற கை (வினைத் தொகை) ; வேழம் – யானை;
திருகை வேலை – சூழ்ந்துள்ள கடல்; குருகைநாதன் – திருக்குருகை
நாதனான நம்மாழ்வார்; குரை – ஒலிக்கும்; கழல் – பாதங்கள்;
காப்பதே – காக்குமாக.

——–

அஞ்சிலே ஒன்று பெற்றான்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
அவன் எம்மை அளித்துக் காப்பான்.–10-

அஞ்சிலே ஒன்று – காற்று; அஞ்சிலே ஒன்றை – கடலை;
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக – வான் வழியாக; ஆருயிர் –
சீதாபிராட்டியின் உயிர்; அஞ்சிலே ஒன்று பெற்ற – நிலமகள் பெற்ற;
அணங்கு – சீதை; அயலார் – பகைவர்; அஞ்சிலே ஒன்று – நெருப்பு.

———

எவ் இடத்தும். இராமன் சரிதை ஆம்
அவ் இடத்திலும். அஞ்சலி அத்தனாய்.
பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல்
தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம்அரோ.-11-

சரிதை- கதை; அஞ்சலி அத்தம் – கூப்பிய கை (அத்தம் – கை) ;
பவ்வமிக்க புகழ் – கடல் போல் திரண்ட புகழ்; தெய்வ தாசன் –
தெய்வத்தின் தொண்டன் (இங்கு அனுமன்).

——–

பொத்தகம். படிகமாலை. குண்டிகை.
பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங் கை
விமலையை. அமலைதன்னை.
மொய்த்த கொந்து அளக பார
முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய்
அணங்கினை. வணங்கல் செய்வாம்.-12-

பொத்தகம் – ஏட்டுச்சுவடி; படிகமாலை – வெண் பளிங்கு மாலை;
குண்டிகை – கமண்டலம்; ஞான வித்தகம் – ஞானமுத்திரை; விமலை
– குற்றமற்றவள் (கலைமகள்); கொந்து – கொத்து; அளக பாரம் –
கூந்தல்; தவளமேனி – வெண்மைநிறமான உடம்பு; மைத்தரு – மை
போன்ற; அணங்கு – தெய்வ மகள்.

———-

தழை செவி. சிறு கண். தாழ் கைத்
தந்த சிந்துரமும். தாரை
மழை மதத் தறுகண் சித்ர
வாரண முகத்து வாழ்பவை.
இழைஇடைக் கலசக் கொங்கை
இமகிரி மடந்தை ஈன்ற
குழவியைத் தொழுவன். அன்பால் –
‘குறைவு அற நிறைக’ என்றே.–13-

தழை செவி- தழைத்த காது; சிறுகண் – சிறியகண்; தாழ்கை –
நீண்டகை; தாரை மழை மதம் – மழைத்தாரையாய்ப் பொழியும்
மதநீர்; தறுகண் – வலிமை; சித்ரவாரணம் – அழகிய யானை; இழை –
நூல்; கலசம் – குடம்; இமகிரிமடந்தை – இமயமலை யரசன் மகள்;
குழவி – குழந்தை (விநாயகன்); தொழுவன் – வணங்குவேன்; குறைவு
அற – குறைகள் நீங்க; நிறைக – நன்மை நிறைய.

——–

எக் கணக்கும் இறந்த பெருமையன்.
பொக்கணத்தன். புலி அதள் ஆடையன்.
முக்கண் அத்தன். வரம் பெற்ற மூப்பனை.
அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம்.–14-

எக்கணக்கும் – எந்தக் கணக்கையும்; பொக்கணம் – ஒரு வகைப்
பை; புலிஅதள் – புலித் தோல்; முக்கண் அத்தன் – முக்கண் மூர்த்தி
(சிவபெருமான்); அப்பன் – தலைவன்; அக்கணத்தின் – அந்தக்
கணத்திலே.

———

நாரணன் விளையாட்டு எல்லாம்
நாரத முனிவன் கூற.
ஆரணக் கவிதை செய்தான்.
அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத்
திருவழுந்தூருள் வாழ்வோன்.
கார் அணி கொடையான். கம்பன்.
தமிழினால் கவிதை செய்தான்.–15-

நாரணன் விளையாட்டு- திருமாலின் திருவிளையாடல்; ஆரணம் –
வேதம்; சீர்அணி – சிறப்புடைய; திருவழுந்தூர்- தேரழுந்தூர்;
கார்அணி – மேகம் போன்ற; கொடை – ஈகை; கவிதை – செய்யுள்.

———-

அம்பிலே சிலையை நாட்டி
அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன. தானும்
தமிழிலே தாலை நாட்டி.
கம்ப நாடு உடைய வள்ளல்.
கவிச் சக்ரவர்த்தி. பார்மேல்
நம்பு பாமாலையாலே
நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான்.–16-

அம்பு – தண்ணீர் (இங்குப் பாற்கடல்); சிலை – மலை (மந்தர
மலை); அமரர் – தேவர்கள்; அமுதம் ஈந்த தம்பிரான் – திருமால்;
தால் – நாவு; நரர்க்கு – மானிடர்களுக்கு; ஈந்தான் – தந்தான்.

———–

வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச்
சடையப்பன் வாழ்த்துப் பெற.
தாழ்வார் உயர. புலவோர்
அகஇருள் தான் அகல
போழ் வார் கதிரின் உதித்த
தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு
யாதும் அரியது அன்றே.–17-

வாழ்வு ஆர்தரு- நல்வாழ்வு பொருந்திய;அகஇருள் – உள் இருள்
(அகம் – மனம்); அகல – நீங்க; போழ்வார் கதிர் – காலத்தில் மிக்குப்
பொலியும் பரிதி; சிந்திப்பவர்க்கு – நினைப்பவர்களுக்கு; அரியது –
செய்தற்கரியசெயல்.

——–

அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால். முனிவரால். யோகரால். உயர்
இம்பரால். பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம்.–18-

அம்பு- நீர் (கங்கை); அரா – பாம்பு; அணி – அணிந்த; உம்பர் –
தேவர்; இம்பர் – இவ்வுலகத்தோர்; பிணிக்க – கட்ட; வேழம் –
யானை; கருத்து – உள்ளத்தில்; இருத்துவாம் – இருக்கச் செய்வோம்.

———-

சம்பு. அ(ந்)நாள். தன் உமை செவி சாற்று பூங்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம்.–19-

சம்பு – சிவபிரான்; உமைசெவி – உமாதேவியின் காதுகளில்;
பூங்கொம்பு அன்னாள் – மலர்க் கொம்பு போன்றவள் (சீதை) ;
கொழுநன் – கணவன்; பாச்செய்த – பாக்களால் செய்த; பம்ப –
பொலிய.

———-

இம்பரும் உம்பர்தாமும்
ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல்
சத்தியம் சத்தியம்மே;
அம்பரம் தன்னில் மேவும்
ஆதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன் செங் கமல பாதம்
கருத்துற இருத்துவாமே.–20-

இம்பர் – இவ்வுலகத்தோர்; உம்பர் – விண்ணுலகத்தோர்; ஏத்திய –
போற்றிய; தம்பம் – பற்றுக்கோடு; ஞானக் கம்பன் -ஞானத்தை உடைய கம்பன்;
செங்கமலம் – செந்தாமரை; கருத்துற- உள்ளத்தில் பொருந்தி நிற்க;
ஆதித்தன் – கம்பனது தந்தையின் பெயர் என்பர்.

———

ஆதவன் புதல்வன். முத்தி
அறிவினை அளிக்கும் ஐயன்.
போதவன் இராம காதை
புகன்றருள் புனிதன். மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான்.
கொண்டல் மால்தன்னை ஒப்பான்.
மா தவன் கம்பன் செம் பொன்
மலர்அடி தொழுது வாழ்வாம்.–21-

ஐயன் – தலைவன்; அளிக்கும் – கொடுக்கும்; போதவன் – அறிவு
மிக்கவன்; புகன்று – கூறி; புனிதன் – தூய்மையாளன்; கோது –
குற்றம்; அவம் – வீணான; கொண்டல்மால் – மேகம் போன்ற
திருமால்; செம்பொன் – செம்மையானபொன்.

———

ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து.
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு – மூவலூர்ச்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
கார் ஆர் காகுத்தன் கதை.–22-

ஆவின் கொடை – ஆக்களைக் கொடையாக அளித்த;
திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர்- திருவழுந்தூர் நாட்டைச் சேர்ந்த
மூவலூர்; குண ஆதித்தன் – நல்ல குணம் உள்ள ஆதித்தன்; சேய் –
பிள்ளை; கார்ஆர் – மேகம் போன்று நிறம்; காகுத்தன் – இராமன்.

——-

எண்ணி சகாத்தம் எண்ணூற்று
ஏழின்மேல். சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர்
தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை
பங்குனி அத்த நாளில்.
கண்ணிய அரங்கர் முன்னே.
கவி அரங்கேற்றினானே.-23-

சகாத்தம் – சாலிவாகன சகாப்தம் (807) ; பங்குனி அத்த நாள் –
பங்குனி மாதம் அஸ்தம நட்சத்திரத்தன்று; அரங்கர் முன்னே –
திருவரங்கப் பெருமான் முன்பு; அரங்கேறினான் – அரங்கேற்றம்
செய்தான்.

——–

கழுந்தராய் உன கழல் பணியாதவர்
கதிர்மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ!
அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன்.
மறை வேதியருடன் ஆராய்ந்து.
எழுந்த நாயிறு விழுவதன்முன்
கவி பாடியது எழுநூறே.–24-

கழுந்தராய் – கழுந்து போன்றவராய் (கழுந்து – உலக்கை); உன
கழல் – உனது பாதங்களை; வாளி – அம்பு; தொடு – எய்த; சிலை –
வில்; அபிநவம் – புதுமை; கவிநாதள் – கவிஞர்தலைவன்; நாயிறு –
சூரியன்.

———

கரை செறி காண்டம் ஏழு.
கதைகள் ஆயிரத்து எண்ணூறு.
பரவுறு சமரம் பத்து.
படலம் நூற்றிருபத்தெட்டே;
உரைசெயும் விருத்தம் பன்னீ
ராயிரத்து ஒருபத்தாறு;
வரம் மிகு கம்பன் சொன்ன
வண்ணமும் தொண்ணூற்றாறே.–25-

காண்டம் எழு ;கதைகள் ஆயிரத்து எண்ணூறு;போர்கள் பத்து;
படலம் நூற்று இருபத்தெட்டு; வண்ணம் (சந்தம்) தொண்ணூற்று ஆறு;
வரம் மிகு கம்பன் – வரபலம் மிகுந்த கம்பன்.

————-

தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே -இராவணன்மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி.-26-

தராதலம்- உலகம்;அரம் – இரும்பை ராவும் கருவி; அம்பு நாட்டு
ஆழ்வான் – அம்பை நாட்டி ஆழ்த்தியவன் (இராமன்); கம்ப
நாட்டாழ்வான் – கம்பன்.

———-

இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம்
எய்தி. அரசு ஆண்டு இருந்தாலும்.
உம்பர் நாட்டில் கற்பகக் கா
ஓங்கும் நீழல் இருந்தாலும்.
செம்பொன்மேரு அனைய புயத்
திறல் சேர் இராமன் திருக் கதையில்
கம்பநாடன் கவிதையில்போல்.
கற்றோர்க்கு இதயம் களியாதே.–27-

இம்பர் நாட்டின் – இவ்வுலகத்தின்; எய்தி- அடைந்து; அரசாண்டு
– ஆட்சி செய்து; உம்பர் நாட்டின் – விண்ணுலகத்தின்; கற்பகக் கா –
கற்பகச் சோலை; நீழல் – நிழல்; மேரு அனைய – மேரு மலை
போன்ற; புயம் – தோள்; திறல் – வலிமை; கவிதை – பாடல்; இதயம்
– மனம்; களியாது – மகிழாது.

———-

நாரதன் கருப்பஞ் சாறாய்.
நல்ல வான்மீகன் பாகாய்.
சீர் அணி போதன் வட்டாய்.
செய்தனன்; காளிதாசன்.
பார் அமுது அருந்தப் பஞ்ச –
தாரையாய்ச் செய்தான்; கம்பன்.
வாரம் ஆம் இராமகாதை
வளம் முறை திருத்தினானே.–28-

கருப்பஞ்சாறு – கரும்புச் சாறு; பாகு – சக்கரைப் பாகு; வட்டு –
வெல்லக்கட்டி; பஞ்சதாரை – சர்க்கரை; பார் அமுது அருந்த –
உலகம் அமுதாக உண்ண; வாரம் – அன்பு.

——–

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே-
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்.–29-

நல்கும்- வழங்கும்; தின்மை – தீமை; தேயும் – தேய்ந்து போகும்;
சென்மம் – பிறப்பு;மரணம் – இறப்பு; இன்றி – இல்லாது; இம்மையே –
இவ்வுலகிலேயே;

———

ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே.
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
‘இராம’ என்று ஒரு மொழி இயம்பும்காலையே.-30-

மகம்- வேள்வி;உய்க்கும் – சேர்க்கும்; நராதிபர் – அரசர்; விராய்
– கலந்து; எணும் – எண்ணும்; பவம் – பிறப்பு; இயம்பும் காலை –
சொல்லும் போது; வேர் அறுக்கும் – வேருடன் அழிக்கும்.

——–

மற்று ஒரு தவமும் வேண்டா;
மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல்
தெளிந்து. அதில் ஒன்றுதன்னைக்
கற்றவர். கேட்போர். நெஞ்சில்
கருதுவோர். இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும்
உம்பராய் வீட்டில் சேர்வார்.-31-

மணி மதில் -அழகிய மதில்; மூதூர் – பழமையான ஊர்; விசயம் –
வெற்றி; செற்றவன் – வென்றவன்; உம்பராய் – தேவராய்; வீட்டில் –
பேரின்ப வீட்டில்.

——–

வென்றி சேர் இலங்கையானை
வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில்
நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும்.
உரைத்திடக் கேட்டோர் தாமும்.
‘நன்று இது’ என்றோர் தாமும்.
நரகம்அது எய்திடாரே.–32-

வென்றி- வெற்றி; இலங்கையான் – இராவணன்; மால் – திருமால்;
ஓத – கூற; நின்ற – நிலைபெற்ற; நிகழ்ந்திடு- நடைபெறுகின்ற; நரகம்
அது எய்திடார் – நரகத்தை அடைய மாட்டார்கள்.

——–

இறு வரம்பில் ‘இராம’ என்றோர். உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்.
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ?–33-

இறுவரம்பு – இறுதிக்காலம் (உயிர் விடும் போது); உம்பர் –
சுவர்க்கம்; நிறுவர் – நிலைப்பர்; மறு இல் – குற்றமில்லாத; மாக்கதை
– சிறந்த கதை; பெறுவர் – அடைவர்; பேசவும் – சொல்லவும்.

——–

அன்னதானம். அகில நல் தானங்கள்.
கன்னி தானம். கபிலையின் தானமே.
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்குஅரோ.–34-

அன்னம்- சோறு;அகிலம் – எல்லாம்; கபிலை- பசு; சொன்னம்
– பொன்; மன் – நிலைபெற்ற; மறவார்க்கு – மறக்காதவர்க்கு.

——–

வட கலை. தென் கலை. வடுகு. கன்னடம்.
இடம் உள பாடை யாது ஒன்றின்ஆயினும்.
திடம் உள ரகு குலத்து இராமன்தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே.-35-

வடகலை- வட மொழி; தென்கலை – தென் மொழி (தமிழ்); வடுகு
– தெலுங்கு; பாடைகள் – மொழிகள் (பாஷை) ; திடம் – வல்லமை;
ரகுகுலம் – சூரிய குலம்; அடைவுடன் – முறையாக; அமரர் –
விண்ணவர்.

———-

இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து. ‘பரிவுடன் கேட்பரேல்.
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே.–36-

இத்தலத்தின் – இவ்வுலகத்திலே; இராமாவதாரம் – இராமாயணம்;
பத்தி – பக்தி; பரிவுடன் – அன்புடன்; அத்தலம் – மறு உலகம்;
அவன்பதம் – பரமபதம்; எய்தும் – அடையும்.

———–

‘ஆதி “அரி ஓம் நம” நராயணர் திருக் கதை
அறிந்து. அனுதினம் பரவுவோர்.
நீதி அனுபோக நெறி நின்று. நெடுநாள் அதின்
இறந்து. சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய் அரசு செய்து. உளம் நினைத்தது
கிடைத்து. அருள் பொறுத்து. முடிவில்
சோதி வடிவு ஆய். அழிவு இல் முத்தி பெறுவார்’ என
உரைத்த. சுருதித் தொகைகளே.

நராயணர்- நாராயணர்; அனுதினம் – நாள்தோறும்; பரவுவோர் –
சொல்லுவோர்; சகதண்டம் – உலகம் முழுவதுக்கும்; ஆதிபர் –
அதிபர் (உரியவர்); சோதி வடிவு – ஒளி வடிவம்; சுருதித் தொகை –
நூல்களின் தொகை.

———–

இராகவன் கதையில். ஒரு கவிதன்னில்
ஏக பாதத்தினை உரைப்போர்.
பராவ அரும் மலரோன் உலகினி. அவனும்
பல் முறை வழுத்த. வீற்றிருந்து.
புராதன மறையும் அண்டர் பொன் பதமும்
பொன்றும் நாள் அதனினும். பொன்றா
அரா-அணை அமலன் உலகு எனும் பரம
பதத்தினை அடைகுவர் அன்றே.–38-

இராகவன் – இராமன்; ஏக பாதம் – ஒரு வரி; பராவரும் –
பரவுதற்கு அரிய; மலரோன் – பிரமன்; வழுத்த – துதிக்க; புராதன –
பழமையான; அண்டர் பொன்பதம் – தேவருலகம்; பொன்றும் –
அழியும்; அரா அணை – பாம்புப் படுக்கை; அமலன் – திருமால்.

————-

இனைய நல் காதை முற்றும்
எழுதினோர். வியந்தோர். கற்றோர்.
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு
அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர்.
கனை கடல் புடவி மீது
காவலர்க்கு அரசுஆய் வாழ்ந்து.
வினையம் அது அறுத்து. மேல் ஆம்
விண்ணவன் பதத்தில் சேர்வார்.–39-

இனைய – இத்தகைய; காதை – கதை; முற்றும் – முழுவதும்;
அரும்பொருள் – அரிய செல்வம்; கனைகடல் – ஒலிக்கும் கடல்;
புடவி மீது – உலகத்தின் மேல்; காவலர் – மன்னர்; வினையம் –
தீவினை; விண்ணவர் பதம் – பேரின்ப வீடு.

———–

நாடிய பொருள் கைகூடும்;
ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்;
வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டு அழிய. வாகை
சூடிய சிலை இராமன்
தோள் வலி கூறுவோர்க்கே.–40-

நாடிய – விரும்பிய; ஞானம் – மெய்யறிவு; வீடு – பேரின்ப வீடு;
வேரி – மணம்; கமலை – மலர்மகள்; நீடிய – நீண்ட; நீறு – புழுதி;
வாகை – வெற்றிமாலை; சிலை – வில்.

———–

வான் வளம் சுரக்க! நீதி
மனு நெறிமுறை எந் நாளும்
தான் வளர்ந்திடுக! நல்லோர்
தம் கிளை தழைத்து வாழ்க!
தேன் வளர்ந்து அறாத மாலைத்
தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல்
இடையறாது ஒளிர்க. எங்கும்!–41-

வான் – வானம் (மழை); கிளை – சுற்றம்; அறாத – நீங்காத;
தெசரத ராமன் – தசரத ராமன் (மோனை கருதி ‘தெச’ என்றார்);
இடை அறாது – இடைவிடாமல்; ஒளிர்க – விளங்குக.

———–

எறிகடல் உலகம்தன்னுள்
இன்தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக
மொழிந்தனென்; மொழிந்த என்சொல்
சிறுமையும். சிலை இராமன்
கதைவழிச் செறிதல் தன்னால்.
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம்
அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே.–42-

எறிகடல் – ஒலிக்கும் கடல்; இன்றமிழ் – இனிய தமிழ்; முறுவல் –
புன்சிரிப்பு; மொழிந்த – கூறிய; சிறுமை – தாழ்வு; செறிந்த – சேர்ந்த;
அமிழ்தம் – அமுதம்; ஒத்து – போல

——–

2 நாட்டுப் படலம் –

காளையர் சேறுதன்னைக்
கலந்து. உடன் மிதித்து. நட்ட
தாள்களும் கழுநீர் நாறும்;
தடக் கையும் அதுவே நாறும்;
ஆளையும் சீறிப் பீறி.
அணி மலர்க் கமுகில் பாய்ந்த
வாளையும். பாளை நாறும்;
வயல்களும் அதுவே நாறும்.–43-

காளையர் – காளை போன்றவர் (மழவர்); கழுநீர் – செங்கழு நீர்
மலர்; தடம் கை – பெரிய கை; அணிமலர் கமுகு – அழகிய மலரை
உடைய கமுகு.

உழவர்கள் சேற்றை மிதிக்க அங்கு மலர்ந்துள்ள செங்கழுநீர்
மலரின் மணத்தால் தாள்களும் கைகளும் அந்த மலர்மணமே கமழும்.
வாளைமீன்கள் கமுகில் பாய்வதால் அந்த வாளை மீன்களும்
வயல்களும் கமுகம் பாலை மணம்கமழும்.

———–

3 நகரப் படலம்

எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி.
எவ் உயிரும்
மங்கும் பிறவித் துயர் அற.
மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி.
தரணி மீது
பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து
யாம் எவன் புகல்வோம்?

பொலியும்- விளங்கும்; பரஞ்சுடர் – மேலான ஒளி; தரணி –
உலகம்; புத்தேள் – இறைவன்; தருமத்து உரு – அறத்தின் வடிவம்.

——–

வேதம்அதனுள் விளை பொருள்
விகற்பத்துள் அடங்காச்
சோதி மயமாய்த் துலங்கி.
தொல்உயிர்த் தொகை பலவாய்.
ஓது புவனம் உதரத்துள்
ஒடுக்கியே. பூக்கும்
ஆதி முதல்வன் அமர் இடம்
அயோத்தி மா நகரம்.–45-/74-2-

விளைபொருள்- விளைந்த பொருள்; விகற்பம் – வேறுபாடு;தொல்
உயிர் – பழைமையான உயிர்; புவனம் – உலகம்; உதரம் – வயிறு;
ஆதி முதல்வன் – ஆதியாகிய முதல் பொருள்; அமர் –
அமர்ந்திருக்கும்.

————

4 அரசியற் படலம்-

விரி கதிர் பரப்பி. மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில். பார்த்திவன்
இரகு. மற்று அவன் மகன் அயன் என்பான். அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே.–46 /

விரிகதிர் – விரிந்த கிரணங்கள்; பருகுறும் – உண்ணுகின்ற;
பார்த்திபன் – அரசன்; பெருகு – பெருகிய; தோன்றல் – மகன்
(தயரதன்).

———-

5 திரு அவதாரப் படலம்

‘பொறை இலா அறிவு. போகப்
புணர்ப்பு இலா இளமை. மேவத்
துறை இலா வனச வாவி.
தூசு இலார் போலித் தூய்மை.
நறை இலா மலரும். கல்வி
நலம் இலாப் புலமை. நன்னீர்ச்
சிறை இலா நகரும். போலும்.
சேய் இலாச் செல்வம்’ என்றான்.–47-/ 4-1-

பொறை – பொறுமை; போகப்புணர்வு – இன்ப நுகர்ச்சி; துறை –
இறங்குதுறை; வனசவாவி – தாமரைத் தடாகம்; நறை – மணம்; சேய் –
குழந்தை.

————

கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்
முறைமையின் கடன் முறை முற்றி. முண்டகத்து
இறைவனும். அவரொடும் இனிதின் ஏகினான்.–48 / 5-2-

கறை மிடறு- கறுத்த மிடறு; அண்ணல் – சிவபிரான்; மறை –
வேதம்; கிழவன் – பிரமன்; முண்டகம் – தாமரை; இனிதின் –
மகிழ்வுடன்.

——–

என்று இனையன பல இயம்பி. ‘எங்கணும்.
கன்றி. அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்.
ஒன்றிய உயிர்களும். உலகு யாவையும்
இன்று நீ படைத்தி’ என்று இசைத்து. பின்னரும்.–49-/5-4-

இனையன – இத்தகைய; ஒன்றிய – நெருங்கிய; எங்கணும் –
எங்கும்; காத்தியேல் – காப்பாயானால்; இசைத்து – கூறி; பின்னரும் –
மறுபடியும்.

————-

ஆயவர் அயன் முதல் அமரர். ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து. சிந்தைமீது
ஓய்வு இலாது. அவன் அரு மறைகள் ஓதியே.
நேயமோடு இருந்து. இவை நிகழ்த்தல் மேயினார்.–50-/ 8-1-

ஆயவர் – அத்தகையோர்; ஈறு இலா – முடிவில்லாத; பதம் –
பாதம்; அருமறை – அரிய மறைகள்; ஓதி – கூறி; மேயினார் –
தொடங்கினர்.

————–

‘காத்தி நீ எமை; காக்கிலர் தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
பார்த்தியோ? – திருப் பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்!–51 / 8-2-

காத்தி- காப்பாயாக; காக்கிலர் – காக்க இயலாதவர்கள்; இடர் –
துன்பம்; ஏத்தி – துதித்து; முகில் – மேகம்; மேனி – உடல்.

————-

‘அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்.
நொந்துளோம்! இறைவா! நொடிப் போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
எந்தையே! கருணாகரனே!’ எனா.–52- / 8-3-

அந்தகாரம் – பேரிருட்டு; செய்தீமை – செய்த தீமை (வினைத்
தொகை) ; நொடிப் போதினில் – ஒரு நொடிப் பொழுதில் (விரைவாக)
எனா – என்று.

———

அறி துயில் எழுந்தனன். அமரர் கூப்பிடும்
மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை.
இறைவனும். திரு உளத்து அறிந்து. அங்கு எய்தவே.–53 .15-1-

அறிதுயில்-யோக நித்திரை; அமரர் – தேவர்கள்; மறை – வேதம்;
இசைக்க – கேட்க; இறைவன் – திருமால்; எய்த – அடைய.

———-

வானவர் அம் முறை வழங்க. மா மதித்
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர்தமைக் கரம் அமைத்து. அங்கு. ஐயனைத்
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான்.–54 / 9-1-
வானவர் – தேவர்கள்; இதழி – கொன்றை; தெரியல் – மாலை;
வேணி – சடைமுடி; சாற்றல் மேயினான் – சொல்லத் தொடங்கினான்.

——

எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
தனைச் சொல. தரணிபர்க்கு அரசன்தான் மகிழ்ந்து.
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய. தம்
மனத் துயர் அகன்றிட. வணங்கிக் கூறுவான்.-55 / 78-1

கலை மாமுகம் – மான்முகம்; தரணிபர் – அரசர்; உய்ய -வாழ.

——–

மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின். ஏகாதசர் நால்வர் உச்சரே.–56 / 106-1

ஓடை – நெற்றிப் பட்டம்; களிறு அனான் – யானை போன்றவன்
(இராமன்); உதயம் – இலக்கினம் (கடகம்); மதி மேடம் – திங்கள்
சித்திரை; மீன் – நட்சத்திரம்; கழை – புனர் பூசம்; மால் – புதன்; ஐ
– பத்தாமிடம்; கோள் – கிரகங்கள்; நால்வர் – செவ்வாய். குரு.
சுக்கிரன். சனி. ஜென்ம இலக்கினத்திலிருந்து பதினொன்று.
பதினொன்றுக்குரியவர் நால்வரும் தங்களது உச்ச வீடுகளான நான்கில்
இருந்தனர் என்பது கருத்து.

——-

என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில். தாம் தெரிந்து.
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
வன் திறல் சுரர்குரு வாழ்த்து எடுப்பவே.–57 / 106-2-

ஈசன் – இறைவனாகிய இராமன்; தகும் முறை – தகுந்த முறையில்;
தமனியம் – பொன்; ஓதினார் – படித்தார்கள்; சுரர்குரு –
வியாழன்.

———-

நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி. ‘ஐய! என்
பாக்கியம் பலித்தது. இப் பாலர்’ என்று. பார்
காக்குறும் அரசனும். கழறல் மேயினான்.–58-/ 107-1-

நோக்கினன் – பார்த்தான்; பாக்கியம் – பேறு; பார்காக்குறும்
அரசன் – தயரதன்; கழறல் – கூறல்.

———

சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து. தையலார்
பந்தியில். சிவறியால் சிதற. பார்மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே.–59-/ 115-1-

சுந்தரப் பொடி- மணப் பொடி; பொற்சுண்ணம் – பரிமளப் பொடி;
தையலார் – பணிப் பெண்கள்; பந்தியில் – வரிசையில்; சிவிறி –
விசிறி; இந்திரவில் – வானவில்; பார்மிசை – தரை மேல்.

———–

அரு மறை நெறி வழி. அரசனும். அன்னப்
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி.
கரை அறு திரு நகர் விழவொடு களியா.
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான்.–60 / 120-1-

அன்னப் பிரசனம் – முதன் முதல் குழந்தைக்கு
உணவூட்டுதலாகும்; கரை அறு – அளவற்ற; களியா – களிப்படைய;
இருமை – இம்மை. மறுமை.

———

6- கையடைப் படலம்

அப் பெருந் திருவொடும் ‘அகில நாதன்’ என்று.
எப் பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே.
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே.
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள்.–61-/ 1-1-

பெருந்திரு – பெருஞ் செல்வம்; அகில நாதன் – அகிலத்துக்குத்
தலைவன்; புவனம் – உலகம்; தப்ப அரும் – தப்ப அரிய; தயா –
கருணை; ஒப்புரவு – பரோபகாரம்; உவந்து – மகிழ்ந்து.

——-

அரி – அணைமிசைதனில். அழகு மன்றினில்.
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய. அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ.–62 / 1-2-

அரியணை – சிம்மாசனம்; மன்று – மன்றம் (அரசவை) ; நீடு –
நீண்ட; படி அணைய – நிலத்தில் பட; பொனின் – பொன்னின்; உரை- உரையும்.

———-

‘“இனைய சோலை மற்று யாவது?” என்று. மா
முனிவ! கூறு’ என முதல்வன் கூறலும்.
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்.
‘தனு வலாய்! இதன் தன்மை கேள்’ எனா.–63- / 24-1-

இனைய- இத்தகைய; முதல்வன் – இராமபிரான்; பனுவல் – நூல்;
பகரும் – சொல்லும்; தனுவல்லாய் – விற்போரில் வல்லவனே.

———

‘சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்.
வெம்பி. மற்று அவன் வெற்றி கொண்ட போது.
அம்பரம் இழந்து. அவனி வந்தனன்;–64-/ 24-2-

தானவன் – அரக்கன்; உம்பர் கோமகன் – தேவர்களுக்கு அரசன்;
அமர் – போர்; உடன்று – புரிந்து; அம்பரம்-விண்ணுலகம்.

———

‘அவனி வந்து. மன்னவர் இடம்தொறும்.
தவனன் என்னவே தான் உழன்று. அறிந்து.
“இவனில் வேறு மற்று இல்லை எற்கு” எனா.
உவன் விரும்பி வந்து. உந்தை நாடு உறா.–65-/24-3-

அவனி – மண்ணுலம்; தவனன் – சூரியன்; உழன்று – திரிந்து;
இவனில் – இவனை விட; எற்கு – எனக்கு; உந்தை – உனது தந்தை
(தயரதன்); எனா – என்று; உறா – உற்று; இரண்டும் செயா என்ற
வாய்ப்பாட்டு வினை எச்சங்களாகும்.

———–

‘இந்த இவ் இடத்து எய்தி. இந்திரன்.
“சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க” எனா. மன நினைப்பின்முன்.
முந்து வந்து மா முரல நின்றவால்.–66 / 24-4-

எய்தி – அடைந்து; சந்த – அழகிய; வார் – நீண்ட; தரு – மரம்
(கற்பகம் முதலிய ஐந்து); நினைப்பின் முன் – நினைக்கும் முன்;
மாமுரல – வண்டுகள் ரீங்கரிக்க.

———-

‘நின்ற சோலைவாய். நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு. அவன்
நன்றியால் இருந்து. அரசை நண்ணியே.
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான்.-67 / 24-5-

சோலைவாய்- சோலையிடம்; குன்றல் – குறைதல்;அரசை நண்ணி
– அரசை விரும்பி; துன்று சோலை – நெருங்கிய சோலை.

—-

‘உருவம் மாறி. வேறு உருமாகியே.
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்.
பரிவின் நோக்கி. “நீ பகர்தியால்” எனத்
தருவின் நாயகன்தான் விளம்பினான்;–68 / 24-6-

உருவம் மாறி – வேறு வடிவம் கொண்டு; நிருப – அரச; பரிவு –
அன்பு; பகர்தியால் – கூறுக; தருவின்

———

‘“சதமகன்தனைச் சம்பரன் எனும்
மத மகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து. உன்னை மேவினேன்.”–69 /24-7-

சதமகன் – இந்திரன்; மதுமகன் – மதம் கொண்ட அரக்கன்
(சம்பரன்); துரந்து – வென்று; கதம் – கோபம்; மேவினேன் -அடைந்தேன்.

——

என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று. மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று. வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து. மீண்டு அயோத்தி மேவினான்.–70 / 24-8-

என்றபோது – எனக் கூறிய போது; உக – அழிய; வாசவன் –
இந்திரன்; கொள்ள – அடைய; அளித்து – ஈந்து; மேவினான் –
சேர்ந்தான்.

———

‘அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம். இச் சோலை’ என்றலும்.
மன்னர்மன்னவன் மதலை. ‘நன்று’ எனா.
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார்.–71 / 24-9-

அவனி – பூமி; கா – சோலை; இன்ன நாமம் – இந்தப் பெயர்;
மன்னவர் மன்னவன் – தயரதன்; மதலை – மகன்; பின்னை -பிறகு.

————

7 தாடகை வதைப் படலம்

‘கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து.
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:–72 / 20-1-

கல்நவில் தோள்- கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் –
பிரமன்; வாய் மடுத்து – வாயில் பெய்து; கூற்றம் – எமன்; அறைய -கூற.

———-

‘இயக்கர்தம் குலத்துளான்.
உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான்.
எரியின் வெம்மையான்.
மயங்கு இல் சற்சரன். எனும்
வலத்தினான். அருள்
துயக்கு இலன் சுகேது என்று
உளன் ஒர் தூய்மையான்.–73-/20-2-

இயக்கர் – கந்தருவர்; மொய்ம்பு – வலிமை; வியக்குறும் –
வியப்படையும்; வெம்மை – வெப்பம்; துயக்கு – குற்றம் (சற்சரன் மகன் சுகேதுவாம்).

———–

‘அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்.
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி. நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.–74 / 20-3-

அன்னவன்- அந்த சுகேது; மகவு – குழந்தை; இலாது – இல்லாது;
வைகுறும் – தங்கும்; முதல்வன் – பிரமன்; வழுத்தி – வணங்கி;
பல்நெடும் பகல் – பல நாட்கள்; பயின்ற – செய்த; பான்மை -தன்மை.

————

‘முந்தினன் அரு மறைக்
கிழவன். “முற்றும் நின்
சிந்தனை என்?” என.
“சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க” என.
“நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இல்லை; ஒரு மகள்
உண்டாம்” என்றாள்.–75-/ 20-4-

முந்தினன் – முன் வந்தான்; அருமறை – அரிய மறை; கிழவன் –
தலைவன்; சிந்தனை – எண்ணம்; நுணங்கு கேள்வி – நுட்பமான
கேள்வியறிவு.

——–

“பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்.
ஏமுறு மதலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும் . தனயை தோன்றும்; நீ
போ” என. மலர் அயன் புகன்று போயினான்.–76 / 20-5-

பூ மட மயில்- அழகிய இளமையான மயில்; பொருவும் – ஒக்கும்;
பொற்பு – அழகு; மதமலை – மதங் கொண்ட யானை; ஈர்ஐந்நூறு –
ஆயிரம்; வலி – வலிமை; தனயை – மகள்; மலர் அயன் – பிரமன்.

——–

‘ஆயவன் அருள்வழி. அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு. “இவட்கு
ஆயவன் யார்கொல்?” என்று ஆய்ந்து. தன் கிளை
நாயகன். கந்தன் என்பவற்கு நல்கினான்.–77-/ 20-6–

ஆயவன் – அந்த பிரமன்; அலர்ந்த – மலர்ந்த; சேயவள் –
திருமகள்; செவ்வி – தன்மை; இவட்கு ஆயவன் – இவளுக்கு உரிய
கணவன்; நாயகன் – தலைவன்; என்பவற்கு – என்பவனுக்கு;
நல்கினான் – தந்தான்.

—–

‘ “காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்” என. இயக்கனும் அணங்கு அனாளும். வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்.
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார்.–78-/20.7 –

காமன் – மன்மதன்; இயக்கன் – சுந்தன்; அணங்கு – தெய்வ
மகள்;அனாளும் – அன்னாளும்; யாமம் – இரவு; ஈறு – முடிவு; சலதி
– கடல்; பெருங்களி – பெரும் களிப்பு; தாம் உறு – தாம் உற்ற.

———–

‘பற்பல நாள் செலீஇ. பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை. புவனம் ஏங்கிட.
வெற்பு அன புயத்து மாரீசனும். விறல்
மல் பொரு சுவாகுவும். வந்து தோன்றினார்.–79 / 20-8-

செலீஇ- சென்று; பதுமை – பாவை;போலிய – போன்ற; புவனம் –
உலகம்; வெற்பு – மலை; விறல் – வலிமை.

——-

மாயமும். வஞ்சமும். வரம்பும் இல் ஆற்றலும்.
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஒணாது.
ஆயவர் வளர்வுழி. அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும். களிப்பின் மேன்மையான்.–80 / 20-9

வரம்பு- எல்லை; இல் – இல்லாத; தேர்வு ஒணாது- தேர இயலாது;
வளர்வுழி – வளரும் போது; இயக்கன் – கந்தர்வனாகிய சுந்தன்.

———

தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர.
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மா தவன் உறைவிடம் அதனின் வந்து. நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.–81 / 20-10

தீது உறும்- தீங்குடைய; அவுணர் – அரக்கர்; தீமை தீர்தர –
தீங்கு தீர; எலாம் – எல்லாம்;மாதவன் – அகத்தியன்; நீள் பாதவம் -பெரிய மரம் (மலையுமாம்.)

——

‘விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை. கலை. இரலையை உயிர் உண்டு. ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப. மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.–82 / 20-11-

விழைவு – விருப்பம்; உழை – பசு (மானுமாம்); கலை – கலைமான்;
இரலை – புல்வாய்; வழை – சுரபுன்னை; மரன் – மரம்; மடிப்ப –
அழிக்க; தழல் – நெருப்பு; என – என்னும்படி; விழித்தனன் -விழித்தான்.

——

‘மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு. வெங் கனலின் பொங்குறா.
‘முற்றுற முடிக்குவென் முனியை’ என்று எழா.
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.–83 / 20-12-

விளிந்தமை – இறந்ததனை; பொற்றொடி – பொன் வளையல்
அணிந்த தாடகை; கனல் – தீ; பொங்குறா – பொங்கி; முற்றுற –
அடியோடு (முழுதும்); எழா – எழுந்து; நற்றவன் – அகத்தியன்;
நண்ணினான் – அடைந்தான்.

———

‘இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அண்டமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே.–84 / 20-13-

வளி – காற்று; அடங்கலும் – எல்லாமும்; கடிகெட – மகிழ்ச்சி
நீங்க; கதிர் – சூரியன்; தடி உடை – மின்னலை உடைய; மண்ட – நெருங்க.

—-

தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!” என உரைத்தனன். அசனி எஞ்சவே.–85 / 20-14

அளப்ப அரும் சலதி- அளக்க அரிய கடல்; தந்தவன் – தந்த
அகத்தியன்; கனல் உமிழ் – நெருப்பை உமிழ்கின்ற; உங்கரித்து –
ஊங்காரம் செய்து; இழிக – இழிந்தவர்களாகுக; அசனி – இடி.

——-

‘வெருக்கொள. உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி. எவ் உயிரும் உண்டு. உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர். அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர்.–86 / 20-15

வெருக்கொள – அஞ்ச; முருக்கி – அழித்து; உழலும் – திரியும்;
உருக்கிய செம்பு – உருக்கப்பட்ட செம்பு; உமிழ் கண் – உமிழ்கின்ற கண்.

———

‘ஆங்கு அவன். வெகுளியும். அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்.
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து. “நிற்கு யாம்
ஓங்கிய புதல்வர்” என்று. உறவு கூர்ந்தனர்.–87 / 20-16

வெகுளி- சினம்; அறைந்த – கூறிய; தருக்கு – வலிமை; நேர்ந்து
– அடைந்து; நிற்கு – உனக்கு; கூர்ந்தனர் – அணுகினர்.

———–

‘அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ.
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என. புடைத்து அழித்து. உலகம் எங்கணும்
பவனனின் திரிகுநர். பதகி மைந்தவர்கள்.–88 / 20-17

அநேக நாள் செலீஇ- பல நாட்கள் சென்று; தவன் – தவம்;
தசமுகன் – இராவணன்; மாதுலர் – மாமன்மார்; பவனன் – சூரியன்;
திரிகுநர் – திரிபவர்கள்; பதகி – பாதகி (தாடகை).

———

‘மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா.
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே.-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள். – அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள்.–89 / 20-18

மிகும் திறல்- மிகுந்த வலிமை;நீங்குறா – நீங்காத; சலம் – சினம்;
வகுந்துவின் – வழிவழியாக; வசுவரி – வசுக்களின் தலைவனான
இந்திரனது குற்றக் குறி; வதிந்தது – தங்கியது; அழல் – நெருப்பு.

———-

‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்.
முன் ஒர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது’
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான்.–90 / 39-1-

மன்னர் மன்னவன்- தயரதன்; மற்றும் ஒன்று – இன்னும் ஒன்று;
உரைக்கின்றது – சொல்லுவது; ஓதல் – கூறுதல்; ஈறுஇலான் – முடிவில்லாதவன்.

———

பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை
வரு கயல் கண் கியாதி. வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற. உறவாதலே
கருதி. ஆவி கவர்ந்தனன். நேமியான்.–91- / 39-2

பிருகு- பிருகு முனிவன்; கயல்கண் – கயல் போன்ற கண்; வல்
ஆசுரர்க்கு – வலிய அசுரர்களுக்கு; உறவாதல் – உறவு
உடையவதனால்; கருதி – எண்ணி; ஆவி – உயிர்; நேமியான் -ஆழிப்படையுடைய திருமால்.

———-

வானகத்தினில். மண்ணினில். மன்னுயிர்
போனகம் தனக்கு” என்று எணும் புந்திய
தானவள் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்.–92-/ 39-3-

போனகம்- உணவு; எணும் – எண்ணும்; புந்தி – மனம்; ஊன்
ஒழித்தல் – கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் – இந்திரன்.

———–

‘ஆதலால். அரிக்கு. ஆகண்டலன்தனக்கு.
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால். இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!’–93 / 39-4

அரி- திருமால்; ஆகண்டலன் – இந்திரன்; கீர்த்தி – புகழ்; ஏதம்- குற்றம்; சொலாய் – சொல்லாய்;
தாது – மகரந்தம்; அடர்ந்து -செறிந்து; தயங்கிய – விளங்கிய; தார் – மாலை.

———-

ஏக்கமோடும் இமையவர் எங்கணும்.
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்.
மூக்கும் வார் செவியும் முறை போயிட.
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான்.–94-/ 48-1-

வாக்கின்- பேச்சுக்கு; முந்துற – முன்னம்; மாயை – மாயைச்
செயல்; போயிட – போக; இளவல் – இலக்குவன்.

——–

விலக்கி நின்று. அவன் வெங் கணை
விரைவினில் விலக்கி.–95-

——–

கலக்கம் வானவர் தவிர்ந்திட.
காலனும் கலங்கத்
துலக்கி. வையகத்து இடுக்கணும்
முனிவர்தம் துயரும்
உலக்க. ஊழித் தீ ஒப்பது ஓர் கணை
தொடுத்து எய்தான்.–96-/ 48 -2 –

வெங்கணை – கொடிய அம்பு; காலன் – எமன்; இடுக்கண் –
துன்பம்; உலக்க – நீங்க; ஊழித்தீ – ஊழிக்காலத்துத் தீ; ஒப்பது – ஒத்தது.

————
8 வேள்விப் படலம்

‘குசன். குசநாபன். கோது இல்
குணத்தின் ஆதூர்த்தன். கொற்றத்து
இசை கெழு வசு. என்று ஓதும்
இவர் பெயர்; இவர்கள் தம்முள்
குசன் கவுசாம்பி. நாபன்
குளிர் மகோதயம். ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம். மற்றை
வசு கிரிவிரசம். வாழ்ந்தார்.–96-/ 4-1

கோது இல்- குற்றமில்லாத; இசை கெழு – புகழ் விளங்கும்; ஓதும்
– கூறும்; குளிர் – குளிர்ந்த; வசை இல் – குற்றமில்லாத.

———–

குறியவன் கையில் நீர் விழாமல். குண்டிகை
மறிபட. வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்.
செறிவது நீக்கிட. சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.–97 / 23-1

குறியவன்- வாமனன்; குண்டிகை – கமண்டலம்; மறிபட – தடுத்து
நிற்க; செறிவது – செறிந்து நிற்பது; உடைந்து – கெட்டு; உறுதுயர் -மிக்க துயர்.

——-

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம்அது அகத்துளான். சிலம்பின் நாமத்தான்.
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ.
வாட்டம் இல் அந்தணன் மலர்க்கை நீட்டினான்.–98 / 23-2-

வேலை – சமயம்; சிலம்பின் நாமத்தன் – வெள்ளி; அந்தணர் –
வாமனன்; வாட்டம் இல் – வாட்டமில்லாத; மலர்க் கை – மலர் போன்ற கை.

——–

9 அகலிகைப் படலம்

‘இனைய சோலை மற்று யாது?’ என
இராகவன் வினவ.
வினை எலாம் அற நோற்றவன்
விளம்புவான்; ‘மேல்நாள்
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே.
காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள்.
இவண்’ என வலித்தான்.–99 /3-1-

வினை எலாம் அற நோற்றவன்- விசுவாமித்திரன்; வலித்தான் – தெளிவாகச் சொன்னான்.

காசிபன் மனைவி திதி என்பவள் தன் மக்களான அசுரர்கள்
தேவர்களால் அடியுண்டு மடிந்து போனதால் மிகத் துயரம் அடைந்து
இந்திரனைக் கொல்லவும். மூவுலகையும் ஆளவும் ஒரு மகனைப்
பெறுமாறு தன் கணவனிடம் அனுமதி பெற்றுப் பல காலம் தவம்
புரிந்த இடம் இது என்று விசுவாமித்திரன் கூறினான்.

——

‘அண்ட கோளகைக்கு அப்புறத்து.
என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி. ஓர்
விஞ்சையர் கோதை.
புண்டரீக மென் பதத்தியைப்
புகழ்ந்தனள்; புகழ.
வண்டு அறா மது மாலிகை
கொடுத்தனள் மகிழ்ந்து.–100-/ 3-2

நீள்பதம் – வைகுண்டம்.

ஒரு வித்தியாதரப் பெண். செந்தாமரையில் உள்ள திருமகளைப்
பாடித் துதித்தாள். அது கேட்டு மகிழ்ந்த இலக்குமி மனமுவந்து தனது
பூமாலையை அவள் கையில் கொடுத்தாள் என்பது.

——–

‘அன்ன மாலையை யாழிடைப்
பிணித்து. அயன் உலகம்.
கன்னி மீடலும். கசட்டுறு
முனி எதிர் காணா.
என்னை ஆளுடை நாயகிக்கு
இசை எடுப்பவள்” என்று.
அன்னள் தாள் இணை வணங்கிநின்று
ஏத்தலும். அனையாள்.–101 / 3-3

அந்த வித்தியாதரப்பெண் பூமாலையை யாழிலே கட்டிக்கொண்டு
பிரம்மலோகம் திரும்பினாள். அப்பொழுது துருவாச முனிவன்
அவளை எதிரே கண்டு அவளடிகளில் வீழ்ந்து வணங்கினான் என்பது.
இதனால் துருவாசரின் திருமால் பக்தி புலனாகிறது. இவன் பிறரைச்
சபிக்கச் சபிக்கத் தவம் வளரும் வரம் பெற்றவன். இவன் அத்திரி முனிவன் மகன்.

——–

‘ “உலகம் யாவையும் படைத்து. அளித்து.
உண்டு. உமிழ். ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து. உயிர்
யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில்
சூடிய தெரியல்.
அலகு இல் மா முனி! பெறுக” என
அளித்தனள் அளியால்.–102-/ 3-4 –

உலகம் யாவையும் படைத்து. அளித்து. உண்டு உமிழ் ஒருவன்-திருமாலின் முத்தொழில் பேசப்பெறுகின்றன.

அவ்வித்தியாதர மகள் தன் யாழில் கட்டிய அப் பூமாலையைத் துருவாச முனிவனுக்குக் கொடுத்தாள் என்பது.

——————-

‘ “தெய்வ நாயகி சென்னியில்
சூடிய தெரியல.
ஐய! யான் பெறப் புரிந்தது
எத் தவம்?” என ஆடி.
வெய்ய மா முனி சென்னியில்
சூடியே. வினை போய்
உய்யும் ஆறு இது
என்று உவந்து வந்து. உம்பர் நாடு அடைந்தான்.–103-/ 3-5-

வினை போய் உய்யுமாறு- கருமம் ஒழிந்து நற்கதி பெறும்விதம்
இதுவென்று; தெய்வ நாயகன் – திருமால்; தெய்வ நாயகி – திருமகள்.
தேவர்களின் தலைவியான திருமகளின் பூமாலையைத் தான்
பெறுவதற்கு என்ன மாதவம் செய்தேன் என மகிழ்ந்து அதைத்தன்
முடியிலே சூடிக்கொண்டு தெய்வலோகம் சென்றான் என்பது –

——

‘பெய்யும் மா முகில் வெள்ளிஅம்
பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம்
மலர்ந்து. செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய
முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு. அயிராவதக்
களிற்றின்மேல் விளங்க.–104 / 3-6-

யானைக்கு மலை உவமை – வலிமை. பெருமை. மதநீர்
அருவியுடைமை பற்றி; ஐராவதம் – இந்திரனது பட்டத்து யானை;
நான்கு தந்தங்களையுடையது; வெண்மை நிறமுடையது.

இந்திரன் ஐராவத யானைமேல் வீற்றுள்ள சிறப்பைச் சொல்வது
இப்பாடல். ஐராவதத்தின் மேல் வீற்றிருப்பதால் இந்தரனுக்குச் சிறப்பு;
இந்திரன் வீற்றிருப்பதால் ஐராவதத்திற்குச் சிறப்பு.

——–

‘அரம்பை. மேனகை. திலோத்தமை.
உருப்பசி. அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி
நூபுரம் தழைப்ப.
கரும்பையும் சுவை கைப்பித்த
குதலையர். விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர்.
வீதிகள் நெருங்க.–105 / 3 -7-

அரம்பை – நளகூபரனின் போகமடைந்தை; திலோத்தமை –
பிரமனால் படைக்கப்பட்டவள்; ஊர்வசி – நாராயண முனிவனது
தொடையிலிருந்து (ஊரு) தோன்றியவள்.

அரம்பை முதலான தேவதாசிகள் நால்வரும் பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும் தெருக்களில் சென்றார்கள் என்பது.

———

‘நீல மால் வரை தவழ்தரு
கதிர் நிலாக் கற்றை
போலவே. இரு புடையினும்.
சாமரை புரள.
கோல மா மதி குறைவு அற
நிறைந்து. ஒளி குலாவி.
மேல் உயர்ந்தென
வெள்ளி தம் தனிக் குடை விளங்க.–106 / 3-8-

நீல மலையின் இருப்பக்கத்தும் சஞ்சரிக்கும் நிலாக்கற்றைபோல
இந்திரனின் இரு பக்கங்களிலும் வெண் சாமரங்கள் அசையவும்.
வானத்தில் விளங்கும் முழுமதிபோல ஒற்றைக் குடை ஒளிரவும்
சென்றான் என்பது.

——-

‘தழங்கு பேரியும். குறட்டொடு
பாண்டிலும். சங்கும்.
வழங்கு கம்பலை மங்கல
கீதத்தை மறைப்ப.
முழங்கு நான்மறை. மூரி நீர்
முழக்கு என. உலகை
விழுங்க. மால் வரும் விழா அணி
கண்டு உளம் வியந்தான்.–107 / 3-9-

‘மங்கல கீதத்தை மறைப்ப’ – இந்திரனுக்கு இனிமேல்
வரவிருக்கின்ற துன்பத்தைக் குறிப்பாக உணர்த்துவது – அமங்கலம்.
பூமிக்கு முன்பு கடல் படைக்கப்பட்டது – அதனால் ‘மூரிநீர்’ என்றார்.

பேரிகை முதலான பலவகை வாத்தியங்கள் முழங்கும் ஓசை
ஓங்கவும் நான்மறை ஓசை ஒலிக்கவும் இந்திரன் உலாவரும் திருவிழாக்
காட்சியைக் கண்டு துருவாசன் வியந்து நின்றான் என்பது.

———

‘தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால்.
வாசவன்தன் கை
வனையும் மாலையை நீட்டலும்.
தோட்டியால் வாங்கி.
துனை வலத்து அயிராவதத்து
எருத்திடைத் தொடுத்தான்;
படை செய் கையினால் பறித்து
அடிப்படுத்தது. அப் பகடு.–108 / 3 -10-

வாசவன் – இந்திரன். அஷ்ட வசுக்களுக்குத் தலைவன். எல்லாச்
செல்வங்களும் உடையவன். ஐராவதத்தின் துதிக்கைக்குப் பனைமரம்
உவமை. (திரட்சி. உருட்சி. நீட்சி வடிகால்).
துருவாசன் அம் மாலையை இந்திரனுக்குக் கொடுக்க. அவன்
அங்குசத்தால் அதைப்பெற்று யானையின் தலைமேல் வைக்க. அந்த
யானை அதைக் காலால் தேய்த்தது என்பது

——

‘ “கண்ட மா முனி விழி வழி
ஒழுகு வெங் கனலால்.
அண்ட கூடமும் சாம்பராய்
ஒழியும்”என்று. அழியா.
விண்டு நீங்கினர் விண்ணவர்;
இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது;
சுழன்றது எவ் உலகும்.–109-/ 3-11-

அதைக்கண்ட துருவாசன் பெருங்கோபம் கொள்ள வானவர்
யாவரும் ஓடிப்போகத் திசைகள் எங்கும் இருண்டன என்பது. சந்திர
சூரியரும் தம் கதியிற் செல்லத் தடுமாறினர் என்றார்.

——–

‘புகை எழுந்தன. உயிர்த்தொறும்;
எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம்.
நல் நுதலில;
சிகை எழும் சுடர் விழியினன்.
அசனியும் திகைப்ப.
“மிகை எழுந்திடு சதமக!
கேள்” என வெகுண்டான்.—110 / 3-12-

சதமகன்- இந்திரன் – நூறு அசுவமேத வேள்விகளைச்செய்து
இந்திர பதவி பெற்றவன்; எயில் – பட்டணம் – ஆகுபெயர்.

கோபத்தால் துருவாச முனிவனின் மூச்சில் புகை கிளம்பியது;
சிரிப்பு எழுந்தது; புருவங்கள் நெற்றியில் ஏறின என்றார்.

——–

‘ “பூத நாயகன். புவிமகள்
நாயகன். பொரு இல்
வேத நாயகன். மார்பகத்து
இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு
தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென்.
முயன்ற மா தவத்தால்.–111-/ 3-13

பூத நாயகன் – பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை
நியமிப்பவன்; ஆதி நாயகி – கலைமகள். மலைமகள். இந்திராணி
முதலான தேவியர்களுக்கு நாயகி என்றபடி.

துருவாச முனிவன் அந்த மலரைப்பெற்ற பாங்கினை எடுத்துரைப்பது இப்பாடல்

———

‘ “இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு.
உவகையின் ஈந்த
மன்றல்அம் தொடை இகழ்ந்தனை;
நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும்
உவரி புக்கு ஒளிப்ப.
குன்றி. நீ துயர் உறுக” என
உரைத்தனன். கொதித்தே.–112 / 3-14-

உவரி- உப்புச் சுவையுடையது; இங்கே பாற்கடலைக் குறித்தது;
குன்றி – பெருமை குறைதல். மனவேதனையால் உடல் குன்றுதல்.

‘உலா வருகின்ற உன் சிறப்பைக் கண்டு இம் மாலையை
உனக்குத் தந்தேன்; நீயோ அதனை இகழ்ந்தாய். ஆதலால். உன்
பெருநிதிகளும். செல்வங்களும் மறையட்டும்’ என்று துருவாசன்
இந்திரனை நோக்கிச் சபித்த செய்தி கூறுவது இப்பாடல்.

———

‘அரமடந்தையர். கற்பகம்.
நவ நிதி. அமிர்தம்.
சுரபி. வாம் பரி. மதமலை.
முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே
உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின. கண்ணன் வாழ்
வெண்ணெய் மேவாரின்.–113 / 3-15-

நவநிதி – மகா பதுமம். பதுமம். சங்கம். மகரம். கச்சபம். முகுந்தம்.
குந்தம். நீலம். வரம் என்பன;புதியனவாகிய சங்க நிதி. பதுமநிதி.

துருவாசன் சாபத்தால் இந்திரன் செல்வங்களான தேவ மாதர். கற்ப
மரங்கள். நவநிதிகள். பாலைக்கறக்கும் காமதேனு. வெண் குதிரை.
ஐராவத யானை ஆகியன பாற்கடலில் மறைந்தன என்பது.

——-

‘அந்த வேலையில். இந்திரன்
சிந்தை நொந்து அழிந்து.
வந்து. வானவ முனிவனை
வழிபட்டு வழுத்த.
“நந்தும் நின் பெருஞ் செல்வம் மால்
அருளினால். நயக்க
முந்தும்” என்று சாபத்தினின்
மோக்கமும் மொழிந்தான்.–114 / 3-16-

நந்துதல் – குறைதல். செழித்தல்.

இந்திரன் மனம் நொந்து துருவாசனை வழிபட்டு நிற்க. ‘தேய்ந்த
உன் செல்வம் திருமால் அருளால் உனக்குக் கிடைக்கும்’ என்று
அம்முனிவன் சாப விமோசனம் தருவது என்பது.

————

‘வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய. வானோரும்.
தையல் பாகனும். சதுமுகக் கடவுளும். கூடி.
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார்.–115 / 3 -17

மறு- திருமாலின் மார்பில் உள்ள உத்தமக்குறி. திருமகள் பிறர்
மார்பை மறுத்தற்குக் காரணமான மார்பு; தையல் பாகன் – சிவன்.

வானுலகு எங்கும் வறுமை நோய் வாட்டத் தேவர்களும். சிவனும்.
நான்முகனும் திருமாலை அடைந்து முறையிட்ட செய்தியைக் கூறுவது.
செல்வத்தை இழந்த தேவர்கள் அச்செல்வத்திற்குத் தலைவியான
திருமகளின் கணவனை அடைந்தனர் என்றார்.

———–

‘வெஞ் சொல் மா முனி வெகுளியால்
விளைந்தமை விளம்பி.
கஞ்ச நாள்மலர்க் கிழவனும்.
கடவுளர் பிறரும்.
“தஞ்சம் இல்லை; நின் சரணமே
சரண்” எனச் செப்ப.
“அஞ்சல். அஞ்சல்! என்று உரைத்தனன்.
உலகு எலாம் அளந்தோன்.–116 /3-18-

உலகெலாம் அளந்தோன்- மூவுலகங்களையும் தன் அடிகளால்
அளந்தவன் – திருமால்; தஞ்சம் – புகலிடம்.
தேவர்கள் துருவாச முனிவனது சாபத்தின் விளைவைத்
திருமாலிடம் எடுத்துச் சொல்ல. அத்திருமாலும். ‘அஞ்சாதீர்’ என்று
அவர்களுக்கு அபயம் தரும் பாங்கு இதில் கூறப்படுகிறது.

———-

“மத்து மந்தரம்; வாசுகி
கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர்
வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்;
ஓடதி கொடுத்து.
கத்து வாரிதி மறுகுற.
அமிழ்து எழக் கடைமின்;–117 / 3 -19-

மந்தர மலை- மத்து; வாசுகி என்னும் பாம்பு – கடை கயிறு;
சந்திரன் – அடை தூண்; தேவர். அசுரர் – இருபக்கமும் கயிற்றைப்
பிடித்துக் கடைபவர்; ஓடதி – ஓஷதி;அமிர்த வல்லி என்னும் மூலிகை.

இழந்த செல்வங்களைப் பெறும் பொருட்டுப் பாற்கடலைக்
கடையுமாறு அத்தேவர்களுக்குத் திருமால் கட்டளையிட்டான் என்பது.

——–

‘ “யாமும் அவ் வயின் வருதும்; நீர்
கதுமென எழுந்து
போமின்” என்று அருள்புரிதலும்.
இறைஞ்சினர் புகழ்ந்து.
“நாமம் இன்று” எனக் குனித்தனர்.
நல்குரவு ஒழிந்தது
ஆம் எனும் பெருங் களி துளக்
குறுதலால். அமரர்.–118 / 3-20-

நாமம் – அச்சம்; துளக்குறுதல் – ஆட்டுதல்; குனித்தனர் –
கூத்தாடினர்.

பாற்கடல் கடையுங்கால் தானும் துணை வருவதாகக் கூற.
அத்தேவர் மகிழ்ந்து இனித் தம் வறுமை அகலுமென்று துணிந்து
கூத்தாடினர் என்றார்.

———

மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட. அனந்தனும் கீழுற நெளித்தான்.–119 / 3-21-

பயோததி – பயஸ் – பால்; உததி – கடல்;பாற்கடல்; அனந்தன் –
பிரளய காலத்தும் அழிவில்லாமல் என்றும் ஒரு தன்மையாக
நித்தியனாயிருப்பவன்; இவன் பூமியின் கீழ் இருந்து
ஆயிரந்தலைகளாலும் பூமியைத் தாங்குகின்றான் என்பது நூற்கொள்கை.

தேவர்களும் அசுரர்களும் கடல் கடையப் பூமி நிலைகுலைய
ஆதிசேடனாகிய பாம்பும் உடல் நெளித்தான் என்றார்.

—–

‘திறல் கொள் ஆமை ஆய்.
முதுகினில் மந்தரம் திரிய.
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள்
பரப்பி. மீ வலிப்ப.
மறன் நிலாம் முனி வெகுளியால்
மறைந்தன வரவே.
அறன் இலா மனத்து அடைகிலா
நெடுந் தகை அமைத்தான்.–120 / 3-22

மறன் இல் ஆம்- கோபத்துக்கு இடமான;மறன் நில்லா – கோபம்
மனத்தில் அடங்கி நிற்கப் பெறாத; மறன் நிலாம் – கோபம் உலாவி
விளங்குதற்கு இடமான.

திருமால் ஆமை வடிவெமடுத்துத் தன் முதுகின் மேல் மந்தர மலை
சுழலும்படி. மந்தர மலையை மேலே அழுத்தும்படி ஆயிரம்
கைகளைப் பரவச்செய்தும் நீங்கின பொருள்கள் மீண்டு வர உதவினான் என்பது.

———

‘இறந்து நீங்கின யாவையும்.
எம்பிரான் அருளால்.
பிறந்த; அவ்வயின் சுராசுரர்
தங்களில் பிணங்க.
சிறந்த மோகினி மடந்தையால்.
அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து
அமரர்கள் துய்த்தார்.–121 / 3-23

மோஹிநீ – மோகினி (தன்னைக்கண்டவரை); மதிமயங்கச்
செய்யும் அழகுடைய தெய்வமகள்.

கடலில் சென்று ஒளித்த தெய்வலோகப் பொருள்கள் யாவும்
மீண்டும் தோன்றின; அவ்வாறு தோன்றிய அமிர்தம் காரணமாகத்
தேவர் அசுரர்க்குப் பிணக்கு உண்டாகத் திருமால் சூழ்ச்சி செய்து
அவ் அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தான் என்பது.

——-

‘வெருவும் ஆலமும் பிறையும்
வெள் விடையவற்கு அளித்து.
தருவும் வேறு உள தகைமையும்
சதமகற்கு அருளி.
மருவு தொல் பெரு வளங்களும்
வேறு உற வழங்கி.
திருவும் ஆரமும் அணிந்தனன்.
சீதர மூர்த்தி.–122 / 3 -24 —

ஆலகாலம். பிறை நிலா- சிவனுக்கு பஞ்ச தருக்கள். தேவமாதர்.
நிதிகள். உச்சைச் சிரவம்; ஐராவதம். சிந்தாமணி – இந்திரனுக்கு;
புட்பகம் – குபேரனுக்கு; இலக்குமி. இரத்தினம் – திருமாலுக்கு; சீ –
இலக்குமி. ஒளி; பிறை – பிறப்பது (இளஞ்சந்திரனுக்கு) – காரணக்குறி.

பாற்கடலில் தோன்றிய பொருள்களைப் பங்கிட்ட வகை இதிற் கூறப்பெறுகிறது.

———

‘அந்த வேலையில் திதி பெருந்
துயர் உழந்து அழிவாள்.
வந்து காசிபன் மலரடி
வணங்கி. “என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால்
இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள். அவர்தமை
மடித்தலுக்கு” என்றாள்.–123 / 3 -25

வேலை – காலம்; காசிபன் – திதியின் கணவன்.

அசுரர்களைக் கொன்ற தேவர்களைப் பழிவாங்கும் பொருட்டு ஒரு
மகனைத் தரவேண்டும் என்று திதி என்பவள் தன் கணவனிடம்
கேட்டாள் என்பது.

———

‘என்று கூறலும். “மகவு உனக்கு
அளித்தனம்; இனி. நீ.
சென்று பாரிடை. பருவம்
ஓர் ஆயிரம் தீர.
நின்று. மா தவம் புரிதியேல்.
நினைவு முற்றுதி” என்று
அன்று கூறிட. புரிந்தனள்.
அருந் தவம். அனையாள்.–124 / 3 -26

திதி தவம் செய்த இடம் – குசப்லவம்.

காசிபன் தன் மனைவியான திதிக்குத் தவம் செய்து மகவு பெற
அனுமதி தந்தான்; அவளும் ஆயிரம் ஆண்டு கடுந்தவம் செய்தாள் என்பது.

———

‘கேட்ட வாசவன். அன்னவட்கு
அடிமையில் கிடைத்து.
வாட்டம் மா தவத்து உணர்ந்து.
அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்
திடுதலும். விம்மி.
நாட்டம் நீர் தர. “மருத்து” எனும்
நாமமும் நவின்றான்.–125 / 3 -27

மருத்து -வாயு.

திதி என்பவள் தன்னைக் கொல்லும் மகனைப் பெறத் தவம்
புரிகிறாள் என்பதையறிந்த இந்திரன் அவளுக்குப் பணியாளாக
அமைந்தான்; அவளது கருப்பத்தைப் பிளந்து சிதைத்தான்; அவள்
விருப்பப்படி அந்த ஏழு துண்டங்களுக்குச் சப்த மருத்துக்கள்
என்னும் பெயரிட்டான் என்பது.

———

‘ஆயது இவ் இடம்; அவ் இடம்
அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின்
தோன்றியே. தொல்லை
வாயுவும் புனல் கங்கையும்
பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம்
என்பதும் தெரித்தான்.’–126 / 3 -28

சரம் – நாணல்; வனம் – காடு; சரவணம் – நாணற்காடு.

சிவனுக்கு உமை வாயிலாகப் பிறந்த சுப்பிரமணியக்கடவுள் வளர்ந்த
சரவணக் காடு இது என்று விசுவாமித்திரன் கூறினான் என்பது.

——–

‘இந்த மா நதிக்கு உற்று உள
தகைமைய யாவும்.
எந்தை! கூறுக’ என்று இராகவன்
வினவுற. ‘எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான்.
அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன். சகரன்.
இம் மேதினி புரந்தான்.–127 / 5-1

சகரன் – நஞ்சோடு பிறந்தவன்; கரம் – விடம்;
மேதிநீ – திருமாலால் வதைக்கப்பட்ட மதுகைடபர்களின் மேதசால் (கொழுப்பு) நனைந்தது என்னும் பொருளது.

சூரிய குலத்தவன் அயோத்தியை ஆண்டவன் சகரன் என்பவன்.
விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றை இராமனுக்குச் சொல்ல
முற்படுகையில் அச்சகரனைக் குறித்துக் கூறுகிறான் என்பது.

———

விறல் கொள் வேந்தனுக்கு உரியவர்
இருவரில். விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு
அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென்
சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதி
னாயிரர் வலத்தார்.–128 / 5-2-

சுமதி – காசிபனுக்கு விநதையிடம் தோன்றியவள்; சுமதி –
நல்லறிவுடையவள் என்பது பொருள்.

சகரனுக்கு இரு மனைவியர். முதல் மனைவியான கேசினிக்கு ஒரு
மகன் – அசமஞ்சன்;இளையவள் சுமதிக்கு அறுபதினாயிரவர்.

——–

திண் திறல் புனை சகரனும்.
தனையர் சேவகங்கள்
கண்டு. முற்றிய அய மகம்
புரிதலும். கனன்று.
வண்டு துற்று தார் வாசவற்கு
உணர்த்தினர். வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது
இடையினில் ஒளித்தான்.–129 / 5-3-

அசுவமேத யாகம் செய்யக் கருதிய சகரன் குதிரையை
அனுப்பினான்; அக்குதிரையை இந்திரன் மாயையால் கவர்ந்துசென்று
தவத்திலுள்ள கபில முனிவனுக்குப்பின்னே ஒரு மரத்தில்
கட்டிச்சென்றான் என்பது.

நூறு அசுவமேத யாகங்கள் செய்பவன் இந்திர பதவி அடைவான்.
அதனால் இந்திரனால் அந்த யாகத்தை ஏற்க முடியவில்லை.

————

‘வாவு வாசிபின் சென்றனன்
அஞ்சுமான் மறுகி.
பூவில் ஓர் இடம் இன்றியே
நாடினன் புகுந்து.
தேவர் கோமகன் கரந்தமை
அறிந்திலன். திகைத்து.
மேவு தாதைதன் தாதைபால்
உரைத்தனன். மீண்டு.–130 / 5-4-

வாசி – குதிரை; பூ – பூமி.

குதிரைக்குக் காவலாக இருந்த அம்சுமானுக்கு இந்திரனது வஞ்சகம்
தெரியவில்லை; காணாத குதிரையை அம்சுமான் பூமியெங்கும்
தேடியும் கிடைக்கவில்லை; தந்தை சகரனிடம் சொன்னான் என்பது.

———-

‘கேட்ட வேந்தனும். மதலையர்க்கு
அம் மொழி கிளத்த.
வாட்டம் மீக்கொள. சகரர்கள்
வடவையின் மறுகி.
நாட்டம் வெங் கனல் பொழிதர.
நானிலம் துருவி.
தோட்டு நுங்கினர் புவியினை.
பாதலம் தோன்ற.–131 / 5-5

வடவை – பெண்குதிரை (நெருப்பு) – இடவாகு பெயர். கடலிடையே
வாழும் ஒரு பெண் குதிரையின் முகத்திலே நெருப்பு எப்பொழுதும்
அவியாமல் உள்ளது என்றும். பிரளய காலத்தில் அது வெளிப்பட்டு
உலகை எரித்து அழிக்குமென்றும் கூறுவர்.

வேள்விக் குதிரை காணாதுபோன செய்தியைச் சகரன் தன்
மக்களிடம் கூறல் – அவர்கள் மிக்க கோபத்தோடு சென்று எங்கும்
தேடுதல் – காணாமையால் பூமியைத் தோண்டுதல் – என்பது.

——

‘நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர். என்பரால். வட குணதிசையின்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு. எரியின்
சீறி. வைதனர்; செருக்கினர். நெருக்கினர்; செறுத்தார்.–132 / 5-6

யோசனை – பேரளவு – சமணநூல் வழக்கு; குணக்கு – கிழக்கு.

சகர குமாரர் வடகிழக்குத் திசையிலே நூறு யோசனை அகலமும்
ஆழமும் அமையத் தோண்டினர்;கபிலன் பின் இருந்த குதிரையைப்
பார்த்தனர்; கோபத்தால் அம் முனிவனை ஏசினர் என்பது.

———-

‘மூளும் வெஞ் சினத்து அருந் தவன்
முனிந்து. எரி விழப்ப.
பூளைசூடிதன் நகையினில்
எயில் பொடிந்தனபோல்.
ஆளும் மைந்தர் ஆறு – அயுதரும்
சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு
உரைத்தனர். வேயர்.–133 / 5-7-

பூளை சூடி – சிவன்; பூளை – (மலர்) – முதலாகுபெயர். இதனை
உழிஞை என்பர்.

தவம் கலைந்த கபில முனிவன் கோபத்தால் சீறினான் – அவனது
சாபத்தால் அரச மைந்தர் அறுபதினாயிரவர் சாம்பரானார்கள் –
இச்செய்தி சகரனுக்கு எட்டியது என்பது.

——–

‘உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்;
உணர்வு ஒழியா.
அழைத்து மைந்தன்தன் மைந்தனை.
“அவர் கழிந்தனரேல்.
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?”
என. அவன் எழுந்து.
தழைத்த மா தவக் கபிலன் வாழ்
பாதலம் சார்ந்தான்.–134 / 5-8-

ஏல் – (என்னில்) எதிர்கால வினையெச்சத்திரிபு; அம்சுமான் –
சகரனுடைய மைந்தனுக்கு மைந்தன்.
தன் மைந்தர் அறுபதினாயிரவர் மாய்ந்தது கேட்டுச் சகரன்
வருந்தினான். அங்ஙனம் வருந்தினும் வேள்வியைச் செய்து முடிக்க
உறுதி கொண்டான் என்பது.

———–

‘விண்டு நீங்கினர் உடல் உகு
பிறங்கல் வெண் நீறு
கண்டு. துண்ணெனும் மனத்தினன்.
கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது
எழுந்தனன் புகழ.
“கொண்டு போக. நின் இவுளி!” என்று
உற்றதும் குறித்தான்.–135 / 5-9-

அம்சுமான் இறந்துவிட்ட தன் தந்தையரின் சாம்பல் மலைபோலக்
குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். கபில முனிவனை
வணங்கிக் குதிரையைக் கொண்டுபோகக்கேட்டான். கபிலனும் உடன்
பட்டான் என்பது.

—–

பழுதிலாதவன் உரைத்த கொல்
கேட்டலும். பரிவால்
தொழுது. வாம் பரி கொணர்ந்து. அவி
சுரர்களுக்கு ஈயா.
முழுதும் வேள்வியை முற்றுவித்து.
அரசனும் முடிந்தான்-
எழுது கீர்த்தியாய்! – மைந்தனுக்கு
அரசியல் ஈந்து. –136 / 5-10

பழுது- காமம். வெகுளி. மயக்கம் என்பன; எழுது கீர்த்தி –
எழுதப்படுகின்ற புகழ்.

அம்சுமான் கொண்டுவந்த குதிரையை வைத்துச் சகரன் வேள்வியை
முடித்தான். தேவர்களுக்கு அவிசு தந்தான். பெயரனான
அம்சுமானுக்கு முடிசூட்டி இறந்தான் என்பது.

——–

‘சகரர் தொட்டலால். “சாகரம்”
எனப் பெயர் தழைப்ப.
மகர வாரிதி சிறந்தது;
மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்;
இவன் நெடு மரபில்.
பகிரதன் எனும் பார்த்திபன்
பருதி ஒத்து உதித்தான்.–137 / 5-11-

அக்கடல் சகரர் தோண்டியதால் சாகரம் எனப்பட்டது;அம்சுமான்
மரபிலே பகீரதன் என்பவன் தோன்றினான் என்பது.

அம்சுமான் மைந்தன் திலீபன்; திலீபன் மகன் பகீரதன்.

———-

‘உலகம் யாவையும் பொது அறத்
திகிரியை உருட்டி.
இலகும் மன்னவன் இருந்துழி.
இறந்தவர் சரிதம்.
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு
உரைத்திட. அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று.
ஒரு மொழி செப்பும்:–138 / 5 -12-

பொது அற – பல அரசர்க்குப் பொது என்னும் தன்மை நீங்கித் தனக்கே உரிமையாகும்படி.

பகீரதன் தன் குலகுருவான வசிட்டனிடம் தன் முன்னோர் வரலாறு கேட்டான் என்பது.

——

‘ “கொடிய மா முனி வெகுளியின்
மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில்
அழுந்திடு முறைமை
கடியுமாறு. எனக்கு அருந் தவம்
அமைகுறு கருமம்.
அடிகள்! சாற்றுக” என்றலும்.
அந்தணன் அறைவான்:–139 / 5-13

பகீரதன். தன் முன்னோர் நரகத்தில் அழுந்திடும் தன்மையை
நீக்கும் விதமே தனக்கு அருந்தவம் என்றும் அதற்கு இசைவான
செயலைச் சொல்லுக என்றும் வசிட்டனிடம் கூறினான் என்பது.

முனிவர்களின் சாபத்தால் இறக்கின்றவர்களுக்கு நற்கதியில்லை என்பது நூல் துணிபு.

———

‘ “வையம் ஆளுடை மன்னவர்
மன்னவ! மடிந்தோர்
உய்ய. நீள் தவம் ஒழிவு அறு
பகல் எலாம் ஒருங்கே.
செய்ய. நாள்மலர்க் கிழவனை
நோக்கி. நீ செய்தி;
நையல்!” என்று இனிது உரைத்தனன்.
நவை அறு முனிவன்.–140 / 5-14

மலர்க்கிழவன் – நான்முகன்; நவையறு முனிவன் – வசிட்டன்.

பிரமனை நோக்கி நீ தவம் செய்தால் உனது முன்னோர்
நற்கதியடைய வேண்டும் என்ற உனது எண்ணம் ஈடேறும் என்று
வசிட்டன் பகீரதனிடம் உரைத்தான் என்பது. 5

——

‘ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி.
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி.
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப.
மூல நான்மறைக் கிழவனும் வந்து. இவை மொழிவான்:–141 / 5-15

சுமந்திரன் – நல்ல ஆலோசனையுடையவன் என்பது பொருள்.

வசிட்டனது மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாயிரம் ஆண்டு
பகீரதன் கடும் தவம் செய்தான்; அத் தவத்திற்கு மகிழ்ந்த பிரமனும்
அம் மன்னன்முன் தோன்றினான் என்பது.

———

‘ “நின் பெருந் தவம் வியந்தனம்;
நினது நீள் குரவர்.
முன்பு இறந்தனர். அருந் தவன்
முனிவின்; ஆதலினால்.
மன் பெரும் புவிஅதனில்.
வான் நதி கடிது அணுகி.
என்பு தோயுமேல். இருங் கதி
பெறுவர்” என்று இசைத்தான்.–142-/ 5-16

கதி – இறந்தபின் அடையும் பதவி; வான் நதி – ஆகாய கங்கை.

‘சாம்பரான சகரர் நற்கதியடைய வானகங்கை மண்ணுலகம் வந்து
அவ்வெலும்புகள் மேல் படிய வேண்டும் என்று பிரமன் பகீரதனிடம் கூறினான் என்பது.

———-

‘ “மாக மா நதி புவியிடை நடக்கின்.
மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு
அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி. நீ
அருந் தவம் தொடங்கு” என்று
ஏகினான். உலகு அனைத்தும் எவ்
உயிர்களும் ஈன்றான்.–143-/ 5-17

வேறு- (வேற்றோர்) – பண்பாகு பெயர்; கண்ணுதல் –
அன்மொழித்தொகை; தோகை பாகன் – சிவன்.

ஆகாய கங்கையைத் தாங்கும் வல்லமை பூமிக்கு இல்லை;
அவ்வல்லமை சிவனிடமே உள்ளது; அவனை நோக்கித் தவம்
செய்யுமாறு பகீரதனிடம் நான்முகன் கூறினான் என்பது.

————-

‘மங்கை பாகனை நோக்கி. முன்
மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும்.
தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து.”நின் கருத்தினை
முடித்தும்” என்று அகன்றான்;
கங்கையைத் தொழ. காலம்
ஐயாயிரம் கழித்தான்.–144 / 5-18

மங்கை பாகன் – சிவன்; தழல் நிறக் கடவுள் – சிவன்.

பகீரதன் சிவன் அருளை வேண்டிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம்
செய்தான்; சிவனும் அரசனின் கருத்துக்கு இசைந்தான்; பின்னர்க்
கங்கையை நோக்கி ஐயாயிரம் ஆண்டுகள் தவம் கிடந்தான் பகீரதன் என்பது.

——

‘ஒரு மடக் கொடி ஆகி வந்து.
“உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின். அவள்
வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்;
மற்று இன்றும் நீ அறிந்து.
பெருகு நல் தவம் புரிக!” என.
வர நதி பெயர்ந்தாள்.–145 / 5-19

அரன் – ஊழிக் காலத்தில் எல்லா உயிர்களையும் அழிப்பவன்;
எப்பொழுதும் தன்னைச் சரண் புகுந்தவர்களின் துயரை அழிப்பவன்;
வரநதி – சிறந்த நதியான கங்கா தேவி.

பகீரதனது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட கங்காதேவி இந்தக்
கங்கை மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தைச் சிவனால் தாங்க
முடியுமா என்பதை அறியுமாறு கேட்டாள் என்பது.

— —–

கரந்தை. மத்தமோடு. எருக்குஅலர்.
கூவிளை. கடுக்கை.
நிரந்த பொற் சடை நின்மலக்
கொழுந்தினை நினையா.
அரந்தை உற்றவன். இரண்டரை
ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர.
வரை உறை புனிதன்.–146 / 5 -20

கரந்தை – ஒரு பூண்டு; கூவிளை – (இலை) – முதலாகு பெயர்
(வில்வம்); மத்தம் – உன்மத்தம். ஊமத்தம்: முதற்குறை: வரைமகள்
புனிதன்- பார்வதி கொழுநனான சிவன். கரந்தை. ஊமத்தம். எருக்கு.
வில்வம். கொன்றை ஆகியன சிவனுக்கு உரியவை.

கங்காதேவியின் மொழியைக் கேட்டுப் பகீரதன் மீண்டும் சிவனை
நோக்கிக் தவம் புரிந்தான் என்பதும் சிவன் அவன்முன் தோன்றிக்
காட்சி தந்தான் என்பதும் இதிற் சொல்லப்பெறுகின்றன.

———

‘எதிர்ந்து. “நின் நினைவு என்?” என.
இறைஞ்சி. “எம் பெரும!
அதிர்ந்து. கங்கை ஈது அறைந்தனள்”
என்றலும். “அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்”
என்று ஏகிய பின்றை.
முதிர்ந்த மா தவம் இரண்டரை
ஆயிரம் முடித்தான்.–147 / 5-21-

பிதிர்ந்திடாவகை- கங்கை நீர் சிந்தாதபடி; முதிர்ந்த மாதவம் –
சிறந்த பெருந்தவம்.

பகீரதன் முன் எழுந்தருளிய சிவன் கங்கையைத் தாங்குவதாகப்
பகீரதனுக்கு உறுதி தந்தான் என்பதும். மீண்டும் அவ் வரசன்
கங்கையை நோக்கித் தவமிருந்து தனது கருத்தை நிறைவு செய்தான் என்பதும்
இதிற் சொல்லப்பெறுகின்றன.

——–

‘பெருகும் நீரொடு. பூதியும்.
வாயுவும். பிறங்கு
சருகும். வெங் கதிர் ஒளியையும்.
துய்த்து. மற்று எதையும்
பருகல் இன்றியே. முப்பதி
னாயிரம் பருவம்.
உருகு காதலின் மன்னவன்
அருந் தவம் உழந்தான்.–148 / 5-22

பகீரதனின் தவச் சிறப்பு. சொல்லப்பெறுகிறது. அவன் பிரமனைக்
குறித்துப் பதினாயிரமும். கங்கையைக் குறித்து. ஏழாயிரத்தைந்நூறும்.
சிவனை நோக்கிப் பன்னீராயிரத்து ஐந்நூறும் ஆக முப்பதாயிரம்
ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான் என்பது.

அவன் சருகு. சாம்பல். நீர். காற்று. வெயில் ஆகியவற்றையே
உண்டும். இறுதியில் அவ் வெயிலையும் நுகராமலும் தவம் செய்தான் என்றார்.

———

‘உந்தி அம்புயத்து உதித்தவன்
உறைதரும் உலகும்.
இந்திராதியர் உலகமும்.
நடுக்குற இரைத்து.
வந்து தோன்றினள் வர நதி;
மலைமகள் கொழுநன்
சிந்திடாது. ஒரு சடையினில்
கரந்தனன் சேர.–149 / 5-23

அம்புயம்- நீரில் பிறப்பது; உந்தி அம்புயத்து உதித்தவன் –
பிரமன்.

கங்கா நதி சத்திய லோகமும். சொர்க்கலோகமும் நடுங்கும்படி
ஆரவாரித்துக்கொண்டு மண்ணுலகிற்கு வந்தது; அதனைச் சிவன்
தனது சடையில் சிறிதும் சிதறாமல் தாங்கினான் என்பது.

———-

புல் நுனித் தரு பனி என.
வர நதி. புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும்.
வணங்கினன். திகைத்து.
மன்னன் நிற்றலும். “வருந்தல்; நம்
சடையள். வான் நதி இன்று”
என்ன விட்டனன். ஒரு சிறிது;
அவனி போந்து இழிந்தாள்.–150 / 5 -24

போந்து- புகுந்து – மருஉ மொழி; புல் நுனி தரு பனி என –
கங்கைக்கு உவமை.

கங்கை சிவனது சடையில் மறைந்துவிட்டதைப் பகீரதன் கண்டு
திகைத்தான். அச்சிவன் அவன் கலக்கத்தைப் போக்கிக் கங்கையில்
சிறிதுவிட அது பூமியில் பெருகியது என்பது.

——

இழிந்த கங்கைமுன். மன்னவன்
விரைவொடும் ஏக.
கழிந்த மன்னவர் கதி பெற
முடுகிய கதியால்.
அழுந்தும் மா தவச் சன்னுவின்
வேள்வியை அழிப்ப.
கொழுந்து விட்டு எரி வெகுளியன்.
குடங்கையில் கொள்ளா.–151 / 5 -25

பூவுலகில் இறங்கிய கங்கையின் பின்னே பகீரதன் விரைந்து
வந்தான்; அக் கங்கையின் வேகத்தால் சன்னு முனிவனின் தவம்
கலைந்தது; வெகுண்ட அம் முனி அந் நீரை உள்ளங் கையில்
மொண்டு கொண்டான் என்பது.

சன்னு முனிவன் பருகிக் காதுவழி வெளியிட்டதால் கங்கைக்குச் சானவி’ என்னும் பெயர் உண்டு

————

உண்டு உவந்தனன். மறை முனிக்
கணங்கள் கண்டு உவப்ப.
கண்ட வேந்தனும் வணங்கி. முன்
நிகழ்ந்தன கழற.
“கொண்டு போக!” என. செவிவழிக்
கொடுத்தனன்; குதித்து.
விண்டு நீங்கினர் உடல் உகு
பொடியில் மேவினளே.–152-/ 5 -26

சன்னு முனிவன் அக் கங்கை நீரைப் பருகினான். பகீரதனும்
அம்முனிவனை வணங்கிச் செய்திகளைச் சொல்ல இரங்கிய
முனிவனும் காது வழியாக அந்த நீரை விட்டான் என்பது.
மறைமுனிக் கணங்கள்- வேதங்களைத் தாம் ஓதுதலும். பிறர்க்கு
ஓதுவித்தலும். அவற்றின் விதிப்படி ஒழுகுதலையுமுடைய முனிவர்

——–

நிரையம் உற்று உழல் சகரர்கள்
நெடுங் கதி செல்ல.
விரை மலர் பொழிந்து ஆர்த்தன.
விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம்
முறை முறை முழங்க.
அரைசன் அப்பொழுது. அணி மதில்
அயோத்தி மீண்டு அடைந்தான்.–153 / 5-27

முறை முறை – அடுக்கு மிகுதிப் பொருள் பற்றியது.

நரகத்திற் புகுந்த சகரர் நற்கதி உற்றனர்; விண்ணவர் மகிழ்ந்து
மலர் சொரிந்தனர்; பல்லியங்கள் ஆர்த்தன; பகீரதனும் அயோத்தி அடைந்தான் என்பது.

——-

‘அண்ட கோளகைப் புறத்தது ஆய்.
அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப்
பிறந்து. பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய். பகிரதன்
தவத்தினால் கொணர.
மண்தலத்து வந்து அடைந்தது.
இம் மா நதி. மைந்த!–154 / 5-28

திருமால் உலகம் அளந்த காலத்தில் அப்பரமன் திருவடி
சத்தியலோகம் செல்லப் பிரமன் தன் கைக் கமண்டல நீர் கொண்டு
அத்திருவடியைக் கழுவினான். அந்தப் புனித நீரே கங்கையாகியது
என்பது அக் கங்கையைப் பகீரதன் தவத்தால் பூவுலகு கொணர்ந்தான்
என்றான் விசுவாமித்திரன்.

——–

‘சகரர்தம்பொருட்டு அருந் தவம்
பெரும் பகல் தள்ளி.
பகிரதன் கொணர்ந்திடுதலால்.
“பகிரதி” ஆகி.
மகிதலத்திடைச் சன்னுவின்
செவி வழி வரலால்.
நிகர் இல். “சானவி” எனப் பெயர்
படைத்தது. இந் நீத்தம்.–155 / 5 -29

பகல் – (நாள்) – ஆகு பெயர்.

கங்கை நதி பகீரதன் கொண்டு வந்ததால் ‘பாசீரதி’ என்னும்
பெயரைப் பெற்றது; பூவுலகிலே சன்னுவின் காது வழியாக
வெளிப்பட்டதால் ‘சானவி’ என்னும் பெயரை அடைந்தது என்பது

——–

என்று கூறலும். வியப்பினோடு
உவந்தனர். இறைஞ்சி.
சென்று தீர்ந்தனர் கங்கையை;
விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து.
அடி இணை குறுக.
நின்று. நல் உரை விளம்பி.
மற்று அவ் வயின் நீங்கா.–156 / 5-30

விசாலை – இட்சுவாகு – அலம்புசை மகனான விசாலன்
ஏற்படுத்தியது.

விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றைக் கூறியபின். மூவரும்
கங்கையைக் கடந்து விசாலையை அடைந்தார் என்பது.

————-

மது மலைந்த வெண் தரளமும்.
(வயிரமும்). மணியும்.
கதிர் வளம் செயும் பவளமும்.
கழுத்திடைக் காட்டி.
எதிர் மலைந்த பைங் கூந்தலை
இன வண்டு (நணுக).
புது மணம் செயும் மடந்தையர்
போன்றன – பூகம்.–157 / 7-1

முத்தும். வயிரமும். மணியும் கழுத்தை அலங்கரிக்க. மது நிறைந்த
கூந்தலில் வண்டுகள் மொய்க்கப் புது மணத்தை எங்கும் பரப்பும்.
மடந்தையரைப் போன்றன கமுகுகள்.

———-

அந்த இந்திரனைக் கண்ட
அமரர்கள். பிரமன் முன்னா
வந்து. கோதமனை வேண்ட.
மற்று அவை தவிர்த்து. மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து.
சிறந்த ஆயிரம் கண் ஆக்க.
தம் தமது உலகு புக்கார்;
தையலும் கிடந்தாள். கல் ஆய்.–158 / 23 -1

இந்திரனுக்கு நேர்ந்த சாபத்தைப் போக்குமாறு தேவர்கள்
கௌதமனை வேண்டினர்; அக் கௌதம முனிவனும் ஆயிரம்
கண்களாகுமாறு அருளிச் சென்றான்; அகலிகை கல்லாய்க் கிடந்தாள் என்பது.

——–

‘வண்ண வார் குழலினாட்கும்
வானவர்தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம்.
முனிவ! நீ பொறுத்தி’ என்ன.
‘பண்ணிய உறுப்பில் கோடல்
பத்து நூறு அவையும் போக.
அண்ணிய விண்ணில் ஆளிக்கு
ஆயிர நயனம்’ என்றான்.–159 -23 -2

இந்திரன் அகலிகையைச் சேர விருப்பமுடையவனாயினும்
பெருந்தவமுடைய கௌதமன் முன் தோற்றான்; தன்
தவற்றையுணர்ந்த. இந்திரனும் முனிவனிடம் மன்னிப்புக் கோரினான்;
ஆயிரம் கண்கள் பெற்றான்.

————

10 மிதிலைக் காட்சிப் படலம்

இன்ன பல் வளங்கள் எல்லாம்
இனிதுற நோக்கி. யார்க்கும்
முன்னவன் ஆய தேவும்.
முனிவனும். இளைய கோவும்.
பொன்னகர் இறையும் மற்றைப்
பூதலத்து அரசும் ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில்
மணி மதில் புறத்தைச் சேர்ந்தார்.–160-/ 20 -1

முன்னவன் ஆய தேவு – இராமன்; கோயில் – அரண்மனை.

வழியிலே மூவரும் பல காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
இராமனும். இலக்குவனும். விசுவாமித்திரனும் சிறந்த மன்னவனாகிய
சனகனின் அரண்மனையின் மதில்புறம் சேர்ந்தார்கள்.

——–

நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய். அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்.
அங்கு அவர்க்கு அமுதும் ஆய். வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ?–161 / 32 -1

சீதை பெண்களின் கண்களுக்குச் சிறந்த காட்சிப் பொருளாக.
அவர்கள் தொழுது வணங்கும் தெய்வமாக. அவர்களுக்கு அமுதமாக
ஆயவள் எங்கள் நாயகனான இராமனுக்கு இனி எவ்வகை அமைவாளோ என்பது.

——-

தீங்கு செய் அரக்கர்தம் வருக்கம் தீயவும்.
ஓங்கிய தவங்களும். உலகும். வேதமும்
தாங்கி மேல் வளரவும். தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள்.–162 / 52 -1

அரக்கரை அழிக்கவும். உயர் தவங்களும். உலகும். வேதமும்
மேன்மேல் வளரவும் தோன்றிய சீதை இராமனது திருமேனியைத் தன்
உள்ளத்தில் எண்ணினாள் என்பது. அரக்கரை அழிக்கவே சீதை பிறந்தாள்.

——-

அப் புறத்து அலை கடல் அர்ந்த தாமரை
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெங் கதிர் பரப்ப. விண் எலாம்
கொப்புளங் கொண்டென. உடுக்கண் கூர்ந்தவே.–163 / 76-1

கடலிடத்து மலர்ந்த தாமரை போலத் தோன்றிய சந்திரனாகிய
நெருப்பு வெம்மைக் கதிர்களைப் பரப்பியது; வானம் எங்கும்
கொப்புளங்கள் ஏற்பட்டன போல விண்மீன்கள் பரவின என்றார்.

——–

நின்றனன் அரசன் என்றான்;
நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான்.
நல்கிய தாயை நோக்கி.
‘இன்று எனைக் கொடுத்தியோ?’ என்று
இறைஞ்சினன் கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத்
தழுவலும். அவனை நோக்கி.–164 / 121-1-

நடுக் குமரனான சுனச்சேபன் தன்னைப் பலியிடக் கொண்டு
போகுமாறு மன்னனிடம் சொன்னான்; தன்னைப் பெற்ற தாயை
நொந்து கொண்டான்; வருந்திய தாயும் அவனைத் தழுவி உருகினாள்

————–

என்று கூறி. இமையவர் தங்கள்முன்
வன் தபோத வசிட்டன் வந்து. என்னையே
“நின்ற அந்தணனே” என நேர்ந்தவன்
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற.–165-135-1

தபோத வதிட்டன் – தவ வலிமை மிக்க வசிட்டன்.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற வசிட்டன் அவர்கள் முன்
விசுவாமித்திரனை நோக்கித் தவ முனிவரே! அந்தணரே என்று
தேவர்களும் வியப்புற அழைத்து வாழ்த்தினான் என்பது.

———-

காதலால் ஒருத்தியை நினைப்ப. கண் துயில்
மாதராள் அவன்திறம் மறுப்ப. கங்குல் மான்.
‘ஏதிலான் தமியன்’ என்று. ‘ஏகலேன்’ என.
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்?–166-143-1

அன்பினால் அவளைத் தழுவக் கருதினான்;தூங்குகின்ற அவளோ
அவனது எண்ணத்தை மறுத்தாள்; இரவோ இவன் அயலான்.
தனித்துள்ளான். நான் அகலமாட்டேன் என்று கூறத் தலைவனும் காம
வேதனையோடு இருந்தான். அதைத் தவிர அவன் வேறு என்னதான்
செய்வான்! என்பது.

————

11 குலுமுறை கிளத்து படலம்

அந்தரத்தில் உருள்சேர.
அடு சனி வந்து உறும் அளவில்.
சிந்தை மகிழ் தசரதனும் சென்று அவன்மேல்
சரங்கள் தொடுத்து.
‘இந்த வழி போகு அரிது’ என்று
இயைந்தவனை எந்நாளும்
உந்தும் என உலகுதனக்கு
உறுதுயர் தீர்த்திடும் உரவோன்.–167-15-1

தசரதன் சனியை அம்புகளால் வதைத்து மக்களின் துயர் துடைப்பவன் என்பது.

——–

‘கோதமன் தன் மனைக்கிழத்திக்கு
உரைத்த கொடுஞ் சாபம் எனும்
ஓத அருங் கல் உருத் தவிர்த்து.
முன்னை உருக் கொடுத்தது இவன்
பாதமிசைத் துவண்டு எழுந்த
பசும் பொடி மற்று அது கண்டாய்;
ஈது இவன்தன் அருள் வடிவம்
வரலாறும்’ என உரைத்தான்.–166

‘கோதமன் தன் மனைவியான அகலிகையைக் கல்லாகச் சபித்தான்;
அக் கல்லுருவத்தை நீக்கி அவளது முன்னை உருவைத் தந்தவன்
இந்த இராமன்; அவனது பாத தூளிப்பட்டுச் சிதைந்து பொடியாகிக்
கிடப்பது அக்கல்; இது அவனது அருள் புலப்படுத்தும் வரலாறு’
என்று விசுவாமித்திரன் உரைத்தான் என்பது. அகலிகையின் சாபத்தை
நீக்கிப் பெண்ணுருத் தந்தவன் இராமன்.

————-

12 கார்முகப் படலம்

புக்கனர்; சனகர் கோன்.
‘பொரு இல் நீங்கள்தாம்
ஒக்கவே வில்லினை
உரத்து அடுத்து எடுத்து.
இக் கணத்து எய்துவீர்’
என்றனன்; என.
மிக்கவர் அவ் உரை
விளம்பினார் அரோ.–169 / 2-1

சனகன் இராம லக்குவரை நோக்கி. ‘நீங்கள் இவ்வில்லை எடுத்து
நாணேற்றி அம்பு எய்யுங்கள் என்று கூறினன் என்பது.

———-

புக்கனர். அவர்களைப் பொருந்த நோக்கி. ‘இம்
முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு
இக் கணத்து அளித்திர் என்று. எம்மை ஆளுடை.
மிக்குறு சனகனும் விளம்பினான்’ என்றார்.–170 / 2-2

உள்ளே புகுந்த இராமலக்குவரைப் பார்த்து ‘இச் சிவ தனுசை
உங்கள் ஆற்றலால் வளைத்திட வேண்டும். இது இந்நாட்டு மன்னன்
வேண்டுவது’ என்று சதானந்தன் உரைத்தான் என்பது.

———

என்று சாலவே வெதும்பி
இன்ன இன்னவாறெலாம்
ஒன்றலாது பன்னி ஆவி
ஊசலாட வாடுவாள்
மன்றல் நாறு மாலை மீளி
மான யானை போல முன்
சென்ற வீதியூடு பார்வை
செல்லநிற்கும் எல்லையே.–171 / 54-1

சீதை இவ்வாறு இராமனை நினைந்து பலவாறு சொல்லித் தன்
உயிர் ஊசலாட வருந்துவாள்; சிறந்த வீரனைப் போலவும் யானை
போலவும் வீதியிலே சென்ற வீரனைக் காணத் துடிக்கிறாள்
என்பது.

———–

என்று மாதராள் நினைந்து. இவ்
இடரின் மூழ்கு போதினில்.
குன்றுபோல் எழுந்த கொங்கை
மங்கை கொம்பை அன்னவள்.
வென்றி வீரன் இங்கு வந்து
வில் இறுத்த மேன்மையை
சென்று கூறுவோம்’ எனத்
தெளிந்து சிந்தை முந்துவாள்.–172-/ 55-1

சீதை அவ்வீரனை (இராமனை) நினைந்து வருந்துகையில் இராமன்
வில் இறுத்த செய்தியைக் கூறுவதற்காகத் தோழி விரைந்து
செல்கின்றாள் என்பது. 55-

———

13 எழுச்சிப் படலம்

‘ஓது நீதியின் கோசிக
மா முனி ஓலை
தாது சேர் தொடைத் தயரதன்
காண்க! தற் பிரிந்து
போது கானிடைத் தாடகை
பொருப்பு எனப் புகுந்து.
வாது செய்து நின்று. இராகவன்
வாளியால் மாண்டாள்.–173 /3-1

கோசிக முனிவன் தசரதனுக்குத் தூதுவர் மூலம் ஓலை
போக்குகிறான்; காட்டில் தாடகை என்னும் அரக்கி மலையென வந்து
போர் செய்து இராமனது அம்பினால் மடிந்தாள் என்பது.

———–

‘சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென்;
அதுதனைச் சிதைக்க.
இறந்த தாடகை புதல்வர் ஆம்
இருவர் வந்து எதிர்த்தார்;
அறம் கொள் மாலவன்
வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன்; ஒருவன் போய்க்
குரை கடல் குளித்தான்.–174 /3-2

விசுவாமித்திரன் அமைத்த வேள்வியைச் சிதைக்க இறந்து போன
தாடகையின் மைந்தர் இருவர் வர. அவர்களுள் ஒருவன் இராமனது
கணையால் மடிய. மற்றவன் கடலில் சென்று ஒளிந்து கொண்டான்
என்பது. 3-

————

கூட மேவு போர் அரக்கரை
இளையவன் கொன்று.
நீடு வேள்வியும் குறை படாவகை
நின்று நிரப்பி.
பாடல் மா மறைக் கோதமன்
பன்னி சாபத்தை.
ஆடல் மா மலர்ச்சோலையில்.
இராகவன் அகற்றி.–175 / 3-3

எதிர்த்த அரக்கரை இலக்குவன் கொல்ல. வேள்வியும் இனிதாக
முற்றியது; கௌதமன் மனைவி அகலிகைக்கு நேர்ந்த சாபத்தை
இராமன் போக்கினான் என்பது.

————-

பொரு இல் மா மதில் மிதிலையில்
புகுந்து. போர் இராமன்
மருவு வார் சிலை முறித்தலின்.
சனகன் தன் மகளை.
“தருவென் யான்” என இசைந்தனன்;
தான் இங்கு விரைவின்
வருக’ என்பதாம் வாசகம்
கேட்டு. உளம் மகிழ்ந்தான்.–176 /3-4

பின்னர் மூவரும் மிதிலை சேர்தல்;அங்கே இராமன் சிவ தனுசை
முறித்தது; மகிழ்ந்த சனகன் தன் மகளான சீதையை இராமனுக்கு
மணமுடிக்க இசைந்தது; தசரதனை விரைந்து வருமாறு வேண்டியது
ஆகிய செய்திகளைக் கூறுவது இப் பாடல்.

————–

பன்னும் நான்மறை வசிட்டனாம்
பராவ அரு முனிக்கும்.
அன்னைமார்க்கும். தன் அமைச்சர்க்கும்.
சோபனம் அறிவித்து.
இன்ன வாசக ஓலை அங்கு
இட்ட தூதர்க்குச்
சொன்னம் ஆயிரம் கோடியும்
தூசுடன் கொடுத்தான்.–177 / 3-5-

சொன்னம் – பொன்; தூசு – ஆடை.

நான்மறை வசிட்டன். அரசியர் அமைச்சர் ஆகியோர்க்குத்
தசரதன் மங்கலச் செய்தி தெரிவித்தது;ஓலை தாங்கி வந்த தூதர்க்குப்
பொன்னும். பட்டாடையும் தந்தது – இச்செய்திகளை இப்பாடல்
எடுத்துரைக்கிறது.

————

மாண்ட பின்னரும் மந்திர வேள்வியும் இயற்றித்
தூண்டு அரும் பெரும்……… ……………… ……………….
……………. …………. ……………. ………….. ………………
……………. ………….. சனகனும் மகட்கொடை நேர்ந்தான்.–178/3-6

விசுவாமித்திரன் வேள்வியை நிறைவு செய்ததும். தசரதன் இராமன் –
சீதை மணத்தை ஏற்றுக் கொண்டதும் இப்பாடலால்
கூறப்பெறுகின்றன.

——-

மன்னன் அங்கு அவர் பெருமகம்
காணிய வருவான்
அன்ன வசிட்டன் அந்தணர்
அரசர் ஆபாலர்
இன்னர் இன்றியே வருக என
எழுதினன்; இச் சொல்
சொன்ன வாசகம் சொல்தொறும்
அமுது எனச் சொரிந்த.–179 /3-7

தசரதன் அவர்களின் திருமணத்தின் பொருட்டு வசிட்டன்.
அந்தணர். அரசர் ஆகியோரை உடனே புறப்படுமாறு ஓலை விடுத்த
செய்தி இதில் கூறப்படுகிறது. 3-7

——–

சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்.
கோல் தொடி மகளிரும். கோல மைந்தரும்.
வேல் தரு குமரரும். வென்றி வேந்தரும்.
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினார்.–180 / 8-1

மண முரசு முழங்கியது;கேட்ட மகளிர் ஆடவர். வேல் தாங்கிய
வீரர். அரசர் ஆகியோர் காற்றினால் பொங்கும் கடலென மகிழ்ந்தனர்
என்னும் செய்திகள் இதிற் சொல்லப் பெறுகின்றன.

———-

எதிர் கொண்டு ஏந்தி ஓர் ஏந்திழை கொங்கை பூண்
அதிர. மார்பம் அழுந்தத் தழுவினான்.
‘முதிரும் தோள் மலையோ முலைக் குன்றமோ
அதிகம் என்பது அறிக வந்தேன்’ என்றான்.–181 / 37-1

சேனைகள் மிதிலை செல்லும் காட்சி- வீரன் ஒருவன் தன்
மனைவியை மார்போடு தழுவிய செய்தி இப் பாடலால்
கூறப்பெறுகிறது.

———-

18 உண்டாட்டுப் படலம்–182 / 66-1

அரம்பையரினும். இவர் ஆடல் நன்று எனப்
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி. வான்
நிரம்பிய கண்களை முகிழ்ந்து. நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே.

புரந்தரன் – இந்திரன்; உடு – தாரகைகள்; கரத்தல் – ஒளித்தல்.

——–

22 கடிமணப் படலம்

எரி கால் சுடர் ஏக. எழுந்த நிலா
வரும் ஈரமும். மா மயில் சானகிதன்
திருமேனியின்மீது சினந்து சுட.
தரியாது. உளம் நொந்து. தனித்து உறைவாள்.–183 / 2-1-

தரியாது – பொறாது.

——–

என்று. ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க. அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம்.–184 / 18-1

துன்றும் – பொருந்தும் இது கவிக்கூற்று.

———–

கதிரவன் எழலோடும். கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல்போலும். மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு. கோலம் புனைதலை முயல்வுற்றார்.–185 / 21 -1

கடி – காவல்; விதி – பிரமன்; முயல்வுறல் – முயற்சி
தலைப்படுதல்.

————

என்றும். நான்முகன் முதல் யாரும். யாவையும்.
நின்ற பேர் இருளினை நீக்கி. நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே.–186 / 48-1

நாமம் – பெயர். திருமண்; திருமண் இடல் சிறப்பு
உரைத்தவாறு.

———

23 பரசுராமப் படலம்

கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன்
அயிலைப் புக விடர்விட்டதுபோல் ஏழ் வழியாகச்
சயிலத் துளைபட எய்தனை. அயில் தெற்றிய அதனால்
முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான்.–187 / 14-1

அன்றில் கிரி- கிரௌஞ்சம்; அயில் – வேல்; சயிலம் – சைலம் –
சிலா – கல் – மலை; நிருபக்குலம் – மன்னர் மரபு.

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூக்திகள்–

December 7, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——–

ஸ்ரீ பெரியாழ்வார்-ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

——-

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-

———

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

———

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்-ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-

————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2

———-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலி யுருவில் திரி சகடம்
தளர்ந் துதிற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெரு நிலம் ஈரடி நீட்டி நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

சிந்தனையைத் தவ நெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம்–14

——————-———————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

December 6, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8-8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

———-

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

———

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

————-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

————–

ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

———————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்