ஸ்ரீ கம்ப ராமாயணம்—-அயோத்யா காண்டம் —

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

ஏனையமூன்று பிள்ளைகளை அவன்நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை.
பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன்.
பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன்.
“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” (324)
“மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்” (1514)
“போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்”(1898)
“சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னனே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு” (1654)
“உன் கழுத்தின் நாண், உன் மகற்கு காப்பின் நாண் ஆம்”(1653)

——–

“இளவல் உன் இளையான்இந் நன்னுதலவள் நின் கேள் (1994)

“இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,இளையவற்கும், எனக்கும் மூத்தான்” (2367)
என்று குகனைக் கோசலைக்கு பரதனும் கூட,அறிமுகம்

“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?” (1966)

“ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ” (2317)

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல். நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்” (2332)

“எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” (2332)

“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!”(2337)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் ; தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவில்லை ; திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்
(II 12.30)

———

“நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த!
விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது?”(கம்பன் 1734)

“நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம்”(கம்பன் 1741)

——–

அந்தத் தவச்சாலையைப் பார்த்த இராகவன் தம்பியைஏற
இறங்கப் பார்த்து,”என்று கற்றனை நீ இதுபோல்” (2096)

மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா இல் எம்பி கை சாலை சமைத்தன
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே’ (2095)

———

வான்மீகி ராமாயணம் மட்டும் தசரதனின் கிரகநிலை பற்றியும், அவன்
கண்ட தீக்கனா பற்றியும்இராமனிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறது.:

இராம, ஆகாயத்திலிருந்து கொள்ளிக் கட்டையொன்று இடியோசையுடன்
வீழ்வதாகக் கனவு கண்டேன்.மேலும் எனது ஜன்ம நட்சத்திரத்தில்
சூரியன், செவ்வாய், இராகு என்னும் மூன்று கிரகங்களும் ஒருங்கு
வந்து கூடியிருப்பதாகச் சோதிடர்கள் கூறுகின்றனர். இவற்றின்
காரணமாய் அரசனுக்கு மரணம்நேரலாம்; அல்லது அவனுக்கு மிகப்
பெரிய தீங்கு உண்டாகலாம் என்பது சோதிட நூற் கொள்கை. மேலும்
மனிதர்களின் எண்ணங்கள் நிலையானவை அல்ல. ஆகையால், எனக்கு
இறுதி நேர்வதற்கு முன்னரே, என் மனம் உறுதியாக இருக்கும்பொழுதே
உனக்கு முடிசூட்டி மகிழ விரும்புகிறேன். (II4.17-20)

உயிர்க்கு உறுதி பயக்கும் துறவற நெறியை மேற்கொள்ள விரும்புவதாக
வான்மீகம் கூறுவில்லை.கம்பன் படைத்த தசரதன் இக்கருத்துடையவனாக
இருந்தான் என்பதை,

மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். (II.1.14)

ஆதலால் இராமனுக்கு அரசை நல்கியிப்
பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறு
மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
யாதுநும் கருத்து?….. (1.30)

———–

சம்பரா சூரனுடன் பொருது வென்றபோது தசரதன் உனக்கு அருளிய
இரண்டு வரங்களை இப்போது கேள்என்று கூனி உபாயம் செப்பியதாகக்
கம்பராமாயணம் கூறுகிறது. (II. 2.89)

உந்தன் மணவாளரும் கோசலையும்
உகந்து ரதம் ஏறி வரும்போது
தேர்வண்டி அச்சுதான் முறிய
சிறப்பாய் உன் கரத்தினால் ஏந்திக்கொண்டாய்
அப்போது உன் கணவன் தான் பார்த்து
ஆயிழையே உனக்கென்ன வரம் கேளும் என்றார்.
கேளுமென்று ராசன் உரைத்த போது
கெம்பீரமா யுன் மகன் பரதாள் வார்க்கு
எந்தன் மகன் பரதாள் வானுக்கு
யேத்த முதப்பட்டங் கட்டவேணும்
யென்று நீவரங் கேட்டபடி
யிசைந்து வரமது தந்து விட்டார்
அந்த வரம் சற்றும் நினையாமல்
ஆயிழை கைகேசி மறந்து விட்டாய்.26

எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவதுண்டேல்
உய்ந்தனன் அடியேன்…
தந்தையும் தாயும் நீரே, தலைநின்றேன் பணிமின் (II.3.110)

இப்பொழுது எம்மனோரால் இயம்புவதற்கு எளிதோ யாரும்
செப்பருங் குணத்து இராமன் திருமுகச் செவ்விநோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.

தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருளுடைய உலகம் தாங்கும் இன்னலுக்கு இளைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த காரேறு
அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்
(II.3 . 112 – 13)

மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோஎன்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என்இனி உறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும்
கொண்டேன்(II.3.114)

———–

நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?

சுமித்திரைகோயில்புக்கு அவள் இணையடிம இறைஞ்சி
விடைபெறாநிற்கையில் சுமித்திரை.

ஆகாதது அன்றால் உனக்கு; அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்……

பின்னும் பகர்வாள் மகனே இவன்பின் செல், தம்பி
என்னும் படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா, அஃது அன்றேல்
முன்னம் முடி…….

———————

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த
மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப –
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.

கூனும் – கூனியாகிய மந்தையும்; சிறிய கோ தாயும் – இளைய
பட்டத்து அரசியும் தாயுமாகிய கைகேயியும்; கொடுமை இழைப்ப-
தனக்குப் பொல்லாங்கு செய்ய ; கோல் துறந்து – அரசாட்சியை நீத்து;
கானும்கடலும் கடந்து – காட்டையும் கடலையும் தாண்டிச் சென்று ;
இமையோர் இடுக்கண்தீர்த்த – (இராவணனைக் கொன்று) தேவர்களின்
துன்பத்தை கிழங்கெடுத்த ; கழல்வேந்தன் – வீரக்கழலை அணிந்த
இராமபிரானே ; வரம்பு இகந்த – எல்லைகடந்து பரந்த ; மா பூதத்தின்
வைப்பு எங்கும் – பெரிய பூதங்கள் ஐந்தினால்ஆகிய உலகத்தில் உள்ள
பொருள்கள் எல்லாவற்றிலும் ; ஊனும் உயிரும் உணர்வும் போல்-
உடலும் உயிரும் போலவும் உடலும் உணர்வும் போலவும் ; உள்ளும்
புறத்தும் உளன்என்ப – அகத்தேயும் புறத்தேயும் நிறைந்திருக்கின்றான்
என்று ஞானிகள் கூறுவர்.

இப்பாட்டு இராமாயணச் சுருக்காய் இருப்பது மூலப் பகுதியிலிருந்தும்
தோன்றிய உலகத்தில் உள்ள பொருள்களின் உள்ளேயும் வெளியேயும்
நிறைந்திருக்கும் பரம்பொருளேஇராமனாக அவதரித்தான் என்பது கருத்து.
இழிந்து என்னும் வினையெச்சம் இகந்த என்னும் பெயரெச்சவினைகொண்டு
முடிந்தது. ‘வானின்று இழிந்து வரம்பு இகந்த வைப்பு’ என்றும், ‘மாபூதத்தின்
வைப்பு’என்றும் இயைத்துப் பொருள் கொள்க. வானிலிருந்து காற்றும்,
காற்றிலிருந்து நெருப்பும்,நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும்
தோன்றியது என்னும் மறை முடிபினையொட்டி‘வானின்றிழிந்து……. வைப்பு’
என்றார். உணர்வு -ஆன்மாவின் பண்பாய் வெளிப்பட்டு நிற்கும் அறிவு. இறைவன்
பொருள்களுக்குஉள்ளே உடம்புக்குள் உயிர் இருப்பது போலவும், வெளியே
உயிரில் உணர்வு வெளிப்பட்டு இருப்பதுபோலவும் இருக்கிறான் என்பார்
‘ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப’
என்றார். பரம்பொருள் உயிர்களைத் தனக்கு உடம்பாகக் கொண்டு தான்
உள்ளேயும், உயிர்களுக்குஉடம்பாக அமைந்து தான் புறத்தேயும் உள்ளான்
என்பது சமய நூற் கொள்கையாதலின் இவ்வாறுகூறினார் என்க.

இக் காண்டம் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இப்
பெயர் பெற்றது. இதில் மந்திரப் படலம் முதலாகத் திருவடி சூட்டு படலம்
ஈறாக மொத்தம்பதின்மூன்று படலங்கள் உள்ளன. தயரதன் இராமபிரானுக்கு
முடிசூட்டக் கருதுவது தொடங்கி, காடு சென்றஇராமனைப் பரதன் சென்று
கண்டு திரும்புவது வரையிலான கதை நிகழ்ச்சிகள் இதில் இடம்
பெறுகின்றன. தாய் தந்தையர் சொல் தட்டாத இராமன் பண்புச் சிறப்பும்,
அரசின்மீது சிறிதும்ஆசையில்லாத பரதன் பெருஞ்சிறப்பும், கைகேயியின்
கொடுமையும், ஏழை வேடன் குகன் இராமன்மீதுகாட்டும் பரிவும் இக்
காண்டத்தில் நன்கு வெளிப்படுகின்றன
———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading