Archive for January, 2017

ஸ்ரீ திருப்பாவை —-முப்பத்து மூவர் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 10, 2017

துயில் எழ ஒட்டாய் காண் தகவன்று என்று பெண்கள் ஆற்றாமையாலே
நம்மை  சில குற்றம் சொன்னார்களே யாகிலும்
திரு உள்ளம் பார்த்து இடம் பெற்ற போதிலே விண்ணப்பம் செய்ய வேணும் என்று
நப்பின்னை பிராட்டி பேசாதே பள்ளி கொண்டு அருள

இவளைப் பற்றினாலும் கார்யம் செய்யக் கடவனான அவன்
இவள் தன்னையும் திறக்க ஒட்டாதே போக ப்ரஸக்தனாய்
பேசாதே கிடந்தாய் என்றவாறே
சிவிட்க்கு என்று கிடக்கிறானாகக் கூடும் என்று பார்த்து

நீ முன்பு ஆர்த்த ரக்ஷணம் பண்ணி (முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்றுகப்பம் தவிர்)
ஆர்ஜித்த குணங்கள் எல்லாம் (செப்பமுடையாய் திறல் உடையாய்)
இப்போது எழுந்து இராமையாலே
இழக்கக் கிடாய் புகுகிறாய் என்ற இடத்திலும்
அவன் வாய் திறவாமையாலே

நப்பின்னை பிராட்டி திறத்தில் ப்ரணய ரோஷத்தால் சொன்னதையும் இவனுக்கு
அஸக்யம் போலே இருந்தது என்று புரிந்து
(மீண்டும் )
இவளுடைய தேஹ குணங்களையும் (செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்)
ஆத்ம குணங்களையும்(நப்பின்னை நங்காய்) சொல்லி ஏத்தி

அவன் தனக்கு உரியனோ –
பரதந்த்ரனானவனை நலிகிறது என் (உன் மணாளனை) என்று
எங்களுக்கும் (எம்மை நீராட்டேலோ) அவனுக்கும் கடவையான நீயே
எங்கள் அபேக்ஷிதம் தலைக் கட்டித் தர வேண்டாவோ என்று
நப்பின்னை பிராட்டியை அர்த்திக்கிறார்கள்-

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-

பதவுரை

முப்பத்து மூவர் அமரர்க்கு–முப்பத்து முக் கோடி தேவர்கட்கு
முன் சென்று–(துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி-இடம் காலம் இரண்டாலும் முன்
கப்பம்–(அவர்களுடைய) நடுக்கத்தை
தவிர்க்கும்–நீக்கி யருள வல்ல
கலியே–மிடுக்கை யுடைய கண்ண பிரானே!
வெப்பம்-(பயமாகிற) ஜ்வரத்தை
கொடுக்கும்–கொடுக்க வல்ல
விமலா–பரி சுத்த ஸ்வபாவனே!
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
அமலன் விமலன் நிமலன் நின்மலன்
போழ்ந்த புனிதன் போல்
துயில் எழாய்-படுக்கையினின்றும் எழுந்தருள்
’செப்பு அன்ன –பொற் கலசம் போன்ற
மென் முலை–விரஹம் பொறாத முலைகளையும்
செம் வாய்-சிவந்த வாயையும்
சிறு மருங்குல்-நுண்ணிதான இடையையுமுடைய
நப்பின்னை நங்காய்-நப்பின்னைப் பிராட்டியே!
திருவே-ஸ்ரீ மஹா லக்ஷ்மியே!
’துயில் எழாய்–படுக்கையினின்றும் எழுந்தருள்
செப்பம் உடையாய்-(ஆஸ்ரித ரக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே
திறல் உடையாய்-பகைவர் மண்ணுன்னும் படியான வலிமை யுடையவனே!
நல்லவனாயும் வல்லவனாயும் இருக்க வேண்டுமே
செற்றார்க்கு–சத்துருக்களுக்கு
(துயிலெழுந்த பின்பு.)
உக்கமும்–(நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்தையும் (விசிறியையும்)
தட்டொளியும்–கண்ணாடியையும்
உன் மணாளனை-உனக்கு வல்லபனான கண்ணபிரானையும்
தந்து-கொடுத்து
எம்மை-(விரஹத்தால் மெலிந்த) எங்களை
இப்போதே-இந்த க்ஷணத்திலேயே
நீராட்டு–நீராட்டக் கடவாய்’-கண்ணனுடன் அனுபவிப்பிக்க வேண்டும் என்றபடி
ஏல் ஓர் எம் பாவாய்-.

முப்பத்து மூவர் –
நீ ரஷிக்கும் இடத்தில்
சங்க்யா நியதி வேணுமோ –
க்ரம விவஷை தான் உண்டோ

அஞ்சு லக்ஷம் குடியில் உள்ளாருமாய் -நோவு பட்டால் உதவலாகாதோ –
ஆண்களுமாய் பிரபலரும் ஆனாலோ ரஷிக்கலாவது-
பெண்களும் அபலைகளும் ஆனால் ரஷிக்கல் ஆகாதோ –

சமிதை பாதியாய் சாவித்ரி பாதியாய் -ஸ்வ ரக்ஷணத்தில் அதிகரிப்பார்க்கோ உதவலாவது-
உன்னையே பற்றி தம் தாமும் ஒரு தலைப் பற்றாதார்க்கு உதவலாகாதோ

ஈஸ்வரோஹம் என்று இருப்பார்க்கோ உதவலாவது –
அடியோம் என்று இருப்பார்க்கு உதவலாகாதோ

அநந்ய பிரயோஜனரைப் போலே பதர் கழித்து கார்யம் தலைக் கட்டினவாறே
அஞ்ஞதை கொண்டு எதிர் இடுமவர்களையோ ரஷிப்பது –
கார்யம் செய்யா விடிலும் அகதிகளாய் அநந்ய ப்ரயோஜை களாய் இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாதோ

நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் (திரு விருத்தம் 92)-என்று
உன்னை எழுப்பி அம்புக்கு இலக்காகுவார் கார்யமோ செய்வது
உன் அழகு காண ஆசைப்பட்டார் கார்யம் செய்யலாகாதோ

அமரர் –
கொன்றாலும் சாவாதார்க்கோ உதவல் ஆவதோ –

வியதிரேகத்தில் பிழையாதே நாங்கள் இருக்க
உன்னை ஒழிய வேறு ஓன்று தாரகம் என்று முகாந்தரத்திலே ஜீவிப்பார்க்கோ உதவுவது –

உன் முகமும் உன் நோக்கும் ஜீவனமாய் இருப்பார்க்கு உதவல் ஆகாதோ

சக்தர்க்கோ கார்யம் செய்வது -அசக்தர்க்கு கார்யம் செய்யலாகாதோ-

நோவு பட்டு ஆற்ற வல்லார்க்கோ கார்யம் செய்யலாவது

முன்
நோவு வருவதற்கு முன்னே -ஏற்கவே பரிஹரிக்கக் கடவ நீ –
நோவு பட்ட எங்களை ரஷியாது ஒழிகிறது என் –

நினைவுக்கும் முற்படக் கார்யம் செய்யக் கடவ நீ –
எங்கள் நினைவைக் குற்றம் ஆக்கினாயோ –

சென்று
நீ இரந்து சென்று கார்யம் செய்வார்க்கோ செய்யலாவது –
நாங்கள் வந்து இரந்தால் ஆகாதோ –

உன்னை அழைத்து விட்டு கார்யம் கொள்வார்க்கோ உதவல் ஆவது –
உன் வாசலிலே வந்து நின்று துவளுகிற எங்கள் கார்யம் செய்யலாகாதோ

நாங்கள் உன் வாசலிலே வருகை குற்றம் என்று இருக்கிறாயோ –

ஸ்மராமி என்னுமவனுக்கு -நினைக்கை குற்றம் –

உவாசா என்னுமவனுக்கு வார்த்தை சொல்லுகை குற்றம் –

பத்ப்யாம் அபிகமாத் -என்னுமவனுக்கு வருகை குற்றம்

(அஹம் ஸமாராமி மத பக்தம் -வராஹ சரம ஸ்லோகம்
உவாசா ச மஹா ப்ராஞ்ஞா -விபீஷணன் வந்ததே அதிகம் பேசவும் செய்தானே
ஸ்னேஹ சந்தர்த்த -குக ஸஹ்யம்)

உன் மனத்தால் –(திருவிடவெந்தை )
வார்த்தை என்னே -(பாம்பணையான் வார்த்தை என்னே )
திருமாலும் போந்தானே-
எழுதும் என்னும் இது மிகையாய் யன்றோ (9-3 )அவ்விடத்துக்கு இருப்பது –

(நினைவுக்கும் வார்த்தைக்கும் வருகைக்கும் பிரமாணங்கள் காட்டிய அழகு )

கப்பம் தவிர்க்கும்-
கப்பம் -என்கிறது கம்பம் -என்கிறபடி -அதாவது நடுக்கம் –
கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துக் கிடக்கிறது –

தேவாஸ் ஸ்வர்க்கம் பரித்யஜ்ய -என்று
அஸூர ராஷசராலே குடி இருப்பு உள் பட இழந்து
புகலிடம் அற்றுப் படுகிற நடுக்கைத்தை தவிர்க்கை –

நாட்டார் நடுக்கத்தை தவிர்க்கக் கடவ நீ –
எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய்

அவர்கள் நடுக்கத்துக்கும் எங்கள் நடுக்கத்துக்கும் வாசி அறிய வேண்டாவோ –

அவர்கள் நடுக்கம் எதிரிகள் நிமித்தமாக

நீ உணரும் படி காணாது ஒழியப் புகுகிறோமோ –
உன்னைக் கிடையாது ஒழியப் புகுகிறதோ -என்று எங்களுக்கு நடுக்கம்

கப்பம் -என்று இறை யாகவுமாம் –
ராவணாதிகளுக்குப் பணிப் பூ விட்டு திரியாமைக்காக

கலியே
மிடுக்கு உடையவனே –
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேரமா போலே உன் மிடுக்குக்கு எங்கள் பல ஹானியும் நேர் அன்றோ –
அபலைகளான எங்களுக்கு கிருஷ்ண பலா -என்கிற உன் மிடுக்கு அல்லது உண்டோ –

துயில் எழாய்
தேவதைகளுக்குப் போலே எங்களுக்கு குடி இருப்புப் பண்ணித் தரவும் –
மார்பிலே அம்பு ஏற்கவும் வேண்டா –
உணரும் போது அருகு காண்கையே -எங்களுக்கு குடி இருப்பும் ஜீவனமும்

துயில் எழாய்-
நீ யுகக்குமவர்களான முப்பத்து மூவராக நினை —
ஆண்களாக நினை –
பிரயோஜனாந்த பரர்களாக நினை –
மருந்து தின்று சாவதாரக நினை –
உன்னை ரஷ்யமாக நினையாதே ரக்ஷகனாக நினைக்கும் பேராக நினை

எங்களுக்கு நீ உணரும் படியும் –
நீ நோக்கும் படியும் –
நீ வார்த்தை சொல்லும் படியும் தொடக்கமான வற்றை காண்கையே வேண்டுவது என்கிறார்கள் –

முப்பத்து மூவர் இத்யாதி
அஷ்ட வஸூக்கள் –
ஏகாதச ருத்ரர்கள் –
துவாதச ஆதித்யர்கள் –
அஸ்வினி தேவதைகள் இவர்கள் தொடக்கமாக ப்ரஹ்மா எல்லையாக யுண்டான தேவதா வர்க்கம்

கிருஷ்ணன் திரு அவதரித்த போதே தொடங்கி தொட்டில்கள் தொடக்கமான பிள்ளைப் பணிகள் வரவிட்டு-
தாங்களும் மந்தர மா மலர் கொண்டு சிலநாள் மறைவது வெளிப்படுவதாய் திரிந்து –
ஆயர்பாடி நிறையப் புகுந்து இடைச்சிகள் பின்னாக ஒதுங்குகையாலும் –
இவர்கள் கார்யம் கிருஷ்ணனே செய்து திரிகையாலும்
இடைப் பெண்கள் அறிகையாலே இவ் விருத்தாந்தத்தைச் சொல்லுகிறார்கள் –

கலி -என்று மிகுதியாய் –
சகல தேவதைகளையும் ரஷிக்கையாலே சர்வாதிகனானே -என்றுமாம்
இப்படி தேவ கார்யம் செய்து வியாபரியா நின்றால் தனக்கு ஒரு தீங்கு வரும் படி இருக்குமோ என்னில்

செப்பமுடையாய்
தனக்கு ரக்ஷை யுண்டாம்படி வியாபாரிக்கு அரணிமையை யுடையவன் என்கிறார்கள் –
அன்றிக்கே
செப்பம் -என்று செவ்வையாய் –
ஆஸ்ரிதரோடு செவ்வி அழியாமே பரிமாறும் ஆர்ஜவ குணத்தை யுடையவன் என்னுதல் –

ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய -என்கிற சாமான்ய தர்மத்தால் வந்த தரம் அழிந்தாலும் –
ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா -என்கிற இவ் விஷயத்தையும் இழக்கவோ-

எங்கள் செவ்வைக் கேடும் உன் செவ்வையாலே நிரப்ப இருந்தோம் –
அது தன்னையும் அசத் சமம் ஆக்கா நின்றாய்-நாங்கள் வரக் கிடந்து உறங்குகையாலே
விரகாலே நீரை மேட்டில் ஏற்றுமா போலே உன்னுடைய வாத்சல்யம் எங்கள் பக்கலிலும் ஏறிப் பாய வேண்டாவோ
இச் செவ்வை தானே அநாஸ்ரிதர் விஷயத்திலும் ஒக்குமாகில் பாதகமாம் இறே –
அது வாராமைக்காக

திறல் உடையாய்
என்கிறார்கள் –

திறல் ஆவது பராபிபவன சாமர்த்தியம் –
ஆஸ்ரிதரோடு செவ்வியனான செயல் தன்னிலே அநாஸ்ரிதர்க்கும் அனபிபவ நீயன் ஆனவனே
பாண்டவர்கள் விஷயத்தில் செவ்வியனான நிலையிலே துர்யோத நாதிகளை அழிக்கும் படியை நினைக்கிறது
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையும்
பகலை இரவாக்குகையும் தொடக்கமானவை –

(இவை திறல்
செப்பம் -ஆஸ்ரித பக்ஷபாதமே
ராமர் தர்மம் படி நடக்க
கிருஷ்ணன் நடந்த படி தர்மம் ஆகும் )

அனுகூலர்களான எங்கள் பக்கலிலோ திறல் காட்டுவது –
அது எங்களுக்கு அணுக ஒண்ணாத படியாயோ –

அத் திறலால் பலித்த அம்சம் சொல்லுகிறது மேல் –

செற்றார்க்கு-வெப்பம் கொடுக்கும் –
செற்றார் ஆகிறார் சத்ருக்கள் –
ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்று இருக்கிற தனக்கு சத்ருக்கள் இல்லை இறே –
ஆஸ்ரிதருடைய சத்ருக்களே இறே தனக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் –
ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணிக் கொடுக்கும் –

செற்றார்
ஸாத்ரவம் இருவருக்கும் பொதுவாய் இருக்கும் படி –
இவர்கள் சத்ரோஸ் ஸகாசாத்-என்பார்கள் -(சுக்ரீவன் சத்ருக்கள் இடம் இருந்து வந்தான் -)
அவன் த்விஷ தன்னம் -என்னும் (சத்ருக்கள் வீட்டில் உண்ண மாட்டேன் )

வெப்பம் கொடுக்கும்
பய ஜ்வரத்தைக் கொடுக்கும் –
பாண்டவர்களுடைய கலக்கம் எல்லாம் அவர்களுக்கு எதிரிகள் பக்கலிலே யாக்குகை –
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் —
சந்தம் மல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி-

கொடுக்கும்
அருள் கொடையான உதார குணம் இருந்த படி

விமலா
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஆஸ்ரிதற்காக கண்ணற்று முடிக்கையாலே
வந்த சுத்தியைச் சொல்லுகிறது
செய்குந்தா வரும் தீமை -இத்யாதி –

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-

ஆஸ்ரிதர் கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாய் இருக்கை-
போழ்ந்த புனிதன்-

அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)

அநாஸ்ரிதற்கு முடிகைக்கு வேண்டுமவற்றை கொடுத்து
ஆஸ்ரிதற்கு உஜ்ஜீவன ஹேதுவான தன்னைக் கொடுக்கும் சுத்தி

துரியோதனனுக்கு பரிகரத்தைக் கொடுத்து
அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்ததை நின்ற நிலை –

துயில் எழாய்-
பிரயோஜனாந்தர பரர்க்கு கார்யம் செய்ததால் வந்த புகழும் –
ஆஸ்ரித ரஷணத்தால் வந்த ஏற்றமும் எல்லாம் அழியக் கிடாய் புகுகிறது –
சடக்கென எழுந்து இருந்து அவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாய் –

அவன் தாழ்ந்து இருந்தவாறே அவன் பக்கல் மறுமாற்றம் பெறாமையாலே
தன்னைப் பிரியில் தரியாதவனை சிறையிலே இட்டு வைத்து
முரட்டு தேவர்கள் கார்யம் செய்து திரியுமவனை கிடீர் என்று
திரியவும் நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள்

செப்பன்ன மென்முலைச்
பரதந்த்ரனான இவனைக் கிடந்து நலிகிறது என் –
நம் ஆர்த்த த்வனி கேளாத படி உள்ளே பொதித்துக் கிடக்கிறவளை சொல்லாதே

செப்பன்ன
செப்புக்கு உள்ளே பொதிந்து வைத்த ஆபரணம் நினைத்த போதே பூணக் கிடையாதாப் போலே
செப்பு போலே இருக்கிற ஸந்நிவேசத்தை யுடைத்தான அவள் முலையிலே அழுந்திக் கிடக்கிறவனை
நமக்கு கிடைக்கப் புகா நின்றதோ –
மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்-

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——மூன்றாம் திருவந்தாதி–3-

ஷாம காலத்துக்கு அஞ்சினார் கடற்கரையைப் பற்றிக் கிடத்தல்
பர்வதத்தை பற்றிக் கிடத்தல் செய்யக் கடவதே

இவனும் கடலும் மலையும் விடான் –
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே

திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனது உடலே*
அருமாமாயத்து எனது உயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒரு மா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2)

செப்பன்ன
விலக்ஷணமான பண்டம் இட்டு வைக்கும் செப்பு அவன் –
அவன் தன்னை அடக்கும் செப்பு இவள் முலைகள்
சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை திருமங்கை மணாளனை -(பெரிய திருமொழி -7-10 )

மென் முலை –
விரஹ ஸஹமான முலை படைத்தாள் ஆகில் இறே இழந்து இருக்கலாவது –
அவன் உணரவும் வினவவும் உள்ள விளம்பம் பொறாத முலை –

செவ் வாய்ச்
அம் முலையிலே வர்த்திப்பார் நுகரும் கனியும் தேனும் –
தொண்டை யம் செங்கனி வாய் நுகர்ந்தான் -என்னும்படியே

செவ் வாய்
கிருஷ்ணனையும் தனக்கு ஆக்கிக் கொண்ட அதரமும் ஸ்மிதமும் –

கோவை வாயாள் பொருட்டு –
தள வேழ் முறுவல் பின்னைக்காய் –

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை
கோவை வீயச் சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பொசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தம் என் நெஞ்சமே –4-3-1-

வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை யருவினையேன்
கள வேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா வென்பன் பின்னையும்
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இள வேறு தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

இவ் வதரமும் முறுவலும் புஜிக்கைக்கு இறே ஏறுகள் பொறுதது –

காந்த ஸ்மிதா –
ஜகத் ச சைலம் பரிவர்த்தயாமி –

(கோதாவரி நீச்சல் போட்டியில் வாய் விட்டு சிரித்தது
திரும்ப கொண்டு வந்து கொடுக்க விட்டால் ஜகத்தையே புரட்டி விடுவேன் என்றாரே பெருமாள் )

அவன் நெஞ்சை வருத்துமது எந்த அம்பாலே என்னில் –
நாட்டை அழிப்பன் என்று கலங்கப் பண்ணுவது இவ் வதரமும் முறுவலும் இறே

ஈஷ துன்னம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம் -என்று இருக்குமவனைப் பெற்றால் விடு மோ –

செவ்வாய்
செம் பவள திறல் வாயன் தோற்ற வாய்

சிறு மருங்குல்
அம் மலையில் இருந்து பக்குவ பலத்தை புஜிப்பார்க்கு ஸூகமாய் இருக்க ஒண்ணாத படி இருக்கிறதோ –
முடிகிறதோ என்று துணுக் என்னப் பண்ணும் பய ஸ்தானமும் சந்தேக ஸ்தானமும்

மேலும் கீழும் கொண்டு நடுவு யுண்டு என்று அநுமிக்கும் அத்தனை –
இது ஒரு நிராசர்ய ஸ்திதி இறுக்கியபடி –
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-

நப்பின்னை நங்காய்
அநுக்த ஸுந்தர்ய சமுச்சயம் –
சொல்லிச் சொல்லாத ஸுந்தர்யங்கள் எல்லா வற்றாலும் பூர்ணை யானவளே

நங்காய்
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பியினுடைய பூர்த்திக்கும் அடியான பூர்த்தியை யுடையவளே –

திருவே
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்நுதே-என்னும்படியாய் இருக்கை –
அழகு அவளாலே –
குணங்கள் அவளாலே –
மேன்மை அவளாலே –
நீர்மை அவளாலே –
நிரூபித்தால் அனைத்தும் அடங்கலும் அவள் தோயலாய் இருக்குமே –
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை –

பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -1-7-8-

செப்பன்ன மென்முலை என்று தொடங்கி
இச் சுழிகளிலே அகப்பட்டவன் தப்பி ஏறினால் இறே நம் கார்யம் செய்வது

(இருவரையும் திருத்துவது உபதேசத்தால் உபதேசத்தால்
மீளாத போது அவனை அழகாலே திருத்தும் நம்மை அருளாலே திருத்தும் )

திருவே –
இனி அவ்வருகு இல்லை என்னும்படி யாதொரு பதார்த்தம் சர்வதோ உத்க்ருஷ்டம் –
அதுக்கு வாசக சப்தம் இது போலே
(யத் யத் விபூதி மத் சர்வம் ஸ்ரீ மத் ஊர்ஜிதம் ஏவ வா –மம அம்சம் -ஸ்ரீ கீதா ஸ்லோகார்த்தம்)
சர்வாதிகனானவன் தனக்கும் ஏற்றம் சொல்லும் போது இச்சப்தம் இட்டாய்த்து சொல்வது –

கச் ஸ்ரீஸ் ஸ்ரீய –
ஸ்ரீய ஸ்ரீய-
திருவுக்கும் திருவாகிய என்றும் சொல்லக் கடவது இறே
யஸ்யா கடாக்ஷணம் -இத்யாதி –

கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க  புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-12-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —-பெரிய திருமொழி-7-7-1-

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வரானாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீ நமேதத்
ஸ்ரீஸ் சேதி ஸூந்தர நிஷே வணதோ நிராஹூ
தம் ஹி ஸ்ரிய ஸ்ரியம் உதாஹு ரு தாரவாச ––ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம்-69 –

உதார வாக்குகள் ஆகிறார் –
திருமங்கை ஆழ்வாரும்
ஆளவந்தாரும்
ஆழ்வானும்
பட்டரும்

யஸ்யா கடாக்ஷணம் –யாவள் ஒரு பிராட்டியின் கடைக் கண் பார்வை யானது
ஈஸ்வரானாம் -அநு க்ஷணம்-
ஐஸ்வர்ய ஹேதுரிதி ஏதத் சர்வ ஜநீ நம் –ஈஸ்வரர் என்று பேர் பெற்றவர்களுக்கு எல்லாம் அடிக்கடி
ஐஸ்வர்ய ஹேது வாகிறது என்பது நிர்விவாதமாய் இருக்கின்றதோ
சா ஸூந்தர நிஷே வணதோ ஸ்ரீ இதி நிராஹூ -அந்தப் பிராட்டி தானும் அழகரை ஆஸ்ரயிப்பதானாலேயே
ஸ்ரீ என்று பேர் பெறுகிறாள் என்று ஸ்ரீ சப்த நிர்வசன கர்த்தாக்கள் கூறுகின்றனர்

திருவே –
உன்னாலே அவனுக்கு பெருமை யுண்டாம்படியான ஏற்றம் யுடையவளே

திருவே துயில் எழாய்
அவள் பேர் படைத்தாள் செய்வதும் அவளை போலே இருக்க வேண்டாவோ –
அவளுடைய வாசக சப்தத்தை
உனக்குச் சொல்லும் போது தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் யுண்டானாலும்
பத்து மாசம் ஆஸ்ரித அர்த்தமாக உறங்காது இருந்த அவள் படி உனக்கும் உண்டாக வேணும் காண் –

திருவே துயில் எழாய்
பெண்ணின் வருத்தம் அறியாதவனைப் போலே உறங்கலாமோ சஜாதீயையாய் பிறந்த உனக்கு
நீ உணர்ந்து எழுந்து இருந்து எங்கள் சத்தையை யுண்டாக்காய் –

நான் உறங்குகிறேன் அல்லேன்-
அவனை விடுவித்து உங்களுக்கு தருமவை மநோ ரதிக்கிறது அத்தனை
நான் எழுந்து இருந்து செய்ய வேண்டுவது சொல்லுங்கோள் என்ன –

ஆகில் அவற்றைக் கேள் என்கிறார்கள்

உக்கமும் தட்டொளியும் தந்து
ஆல வட்டமும் கண்ணாடியும் –
நோன்புக்கு வேண்டும் உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம்

உன் மணாளனை
இவற்றோபாதி உனக்கு உபகரண கோடியிலேயாய்-
தன் கார்யம் உன் புத்தி அதீனமாம் படி இருக்கிறவனை
நீ புருவம் நெறித்த இடத்தே கார்யம் செய்யும் படி பவ்யன் ஆனவனை –

இப்போதே
அனந்தர க்ஷணத்தில் ஊராரும் இசையார் –
நாங்களும் ஜீவியோம் –

எம்மை
பிற்றைப் போதைக்கு இராத எங்களை

எம்மை
ஏஹி பஸ்ய சரீராணி -என்று வசனம் சொல்ல வேணுமோ -என்று
விரகம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்

எம்மை
என்ற இந்த பன்மையாலே –
பேய்ப் பெண்ணே -என்னுதல் –
பிள்ளாய் -என்னுதல் –
நாயகப் பெண் பிள்ளாய் என்னுதல்
எத்தனை இழிச்சம் சொன்னார்களே யாகிலும் பல தசையில் எல்லாரும் ஒத்து இருக்கிறபடி

எல்லார்க்கும் உபாயம் ஒன்றே ஆனால் போலே
உபாயமும் ஒன்றாயே இருக்கை

ஒருத்தன் திருவடிகளை பலர் ஆஸ்ரயித்தால் ஸூஹ்ருத தாரதம்யத்தாலே விளம்பம் உண்டானாலும்
பலம் எல்லாருக்கும் ஓத்தே இறே இருப்பது

எம்பெருமான் பக்கல் ந்யஸ்த பரனானால்
தேஹ யாத்திரையில் அல்பம் சத்தற்கும்
அவனை ஒழியச் செல்லாதார்க்கும்
இங்கு உள்ள வைஷம்யம் ஒழிய பல தசையில் ஒப்புச் சொல்லா நின்றது இறே
(கோவிந்த ஸ்வாமிக்கு அல்பம் ஆசை இருக்க இருந்து அனுபவித்து வரச் சொன்னார் அன்றே
சாதனாந்தர பரருக்கு கொஞ்சம் வாசி உண்டே பலத்தில் )

உன் மணாளனை -எம்மை – நீராட்டேலோ ரெம்பாவாய்
எங்களையும் அவனையும் கூட முழுக் கூட்ட வேணும்

நீராட்டு
தாரா பித்ரு க்ருதா இதி-என்று
பெருமாள் பிராட்டி யுடைய ஸுந்தர்யங்கள் எல்லாம் கிடக்க -ஐயர் செய்வித்த விஷயம் -என்று
பிராட்டியை ஆதரித்தால் போலே –
கிருஷ்ணனை நீ தந்த விஷயம் என்றாய்த்து நாங்கள் விரும்புவது

உன் மணாளனை -எம்மை நீராட்டு
ஏஷ ப்ரஹ்மஸ் ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவஹ்ரதம் –
அப்பன் திருவருள் மூழ்கினள்-(8-9 )
எங்கள் விடாயும் கெட்டு-எங்களை எல்லாரும் கொண்டாடும்படி பண்ணு

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புதுக் கணிப்பும்,
நினையும் நீர்மையதன்றிவட்கிது நின்று நினைக்கப் புக்கால்,
சுனுயி னுள் தடந் தாமரை மலரும் தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே.

திருவே –எம்மை நீராட்டு
எங்களையும் அவனையும் ஒரு துறையிலே சேராத போது
நீ திருவாகைக்கு உபாயம் உண்டோ
ஸ்ரீயதே ஸ்ரயதே -என்று இறே ஸ்ரீ யாயத்து –
ஸ்வ தந்திரரோடு பரதந்த்ரரோடு வாசி இல்லை –
இவள் கை பார்த்து இருக்க வேணும்

உன் மணாளனை எம்மை
உனக்கு ஒருக்கால் எழுதித் தந்து பிரதி க்ஷணம் எழுத்து வாங்குகிறவனை –
நீராட்டம் அமைத்து வைத்தேன் -என்று
உனக்கும் அவனுக்கும் கூட குளிக்கச் சமைத்த நீரிலே எங்களையும் கூட முழுக்கூட்டு

உக்கம் -இத்யாதி
எங்கள் சிரமத்தை ஆற்றும் பரிகரத்தையும் –
எங்கள் வை லக்ஷண்யத்தை நாங்கள் கண்டு உகக்கும் பரிகரத்தையும் தந்து
எங்கள் விரஹ தாபம் ஆறும்படி
வாஸத் தடத்தில் அவகாஹிக்கும் படி பண்ண வேண்டும்

ஞான
தர்சன
ப்ராப்திகளை பண்ணித் தர வேணும் என்றபடி –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை —குத்து விளக்கு எரிய–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 10, 2017

ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி –
சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -என்றவாறே எழுந்து இருந்து கதவைத் திறக்கப் புக்காள் –

நம்மை ஆஸ்ரயித்தவர்களை இவள் தன்னுடையார் என்று இருக்குமோபாதி –
இவளைப் பற்றினார் நம்முடையார் என்று அன்றோ இவனும் இருப்பது –

நம்முடையார்க்கு இவள் முற்பட்டவளாக ஒண்ணாது –
இவளைத் திற என்றார்க்கு
நாம் முற்பாடராக கார்யம் செய்தோம் என்னும் தரம் பெற வேணும் என்று –
இவளைத் திறக்க ஒட்டாதே பின்னிட்டு வந்து
மல்கட்டாக கட்டிக் கொண்டு போய் படுக்கையிலே விழ விட்டு

இவளுடைய ஸ்பர்சத்தாலே தானும் மயங்கி
இவர்கள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க

அவனை எழுப்பின அளவிலே அவன் எழுந்து இருந்து
இவர்களுக்கு பிரதி வசனம் பண்ணாத படி அவனுக்கு முற்பட்டு கொடாதே
கட்டிக் கொண்டு கிடந்து உறங்குகிறவள் தன்னையே
திரியட்டும் எழுப்புகிறார்கள் மீளவும் அவனை உணர்த்துகைக்காக

இத்தால்
ஆஸ்ரிதற்கு மாறி மாறி ஒருவர்க்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே
நமக்குத் தஞ்சமாய் இருபத்தொரு மிதுனம் உண்டு என்கிறது –

இப்படிக்கு ஒத்த மிதுனத்தையே
தனித் தனியே பற்றுமவர்கள் ராவண சூர்பண கைகளோடு ஒப்பர்

பெருமாளைப் பற்றி திருவடி
பிராட்டி திருவடிகளில் செல்ல அவனைக் கடாக்ஷித்து
இளைய பெருமாள் அறியாத காக வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்தாள்

பிராட்டியைப் பற்றி வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை –
விபீஷணர்க்கு வேறாக நல்லான்(பெரிய திருமொழி-6-8-5 ) -என்னும் படி
விசேஷ ஸ்நேஹம் பண்ணி அருளினார் பெருமாள்

ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவளையும் –
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்னுமவனையும் காண்
நாம் தஞ்சமாக பற்றி இருக்கிறது-

நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து(திருவாய் 9-2-1 ) -என்றார் இறே ஆழ்வார்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறையுடையோம் வாள் கெண்டை ஒண் கண் –(திருவாய் 10-4 )
கூர் அம்பன் (நான்முகன் )என்று
பகவத் பிரபன்னர் அம்பின் கூர்மையையும் புகரையும் நினைத்து இருப்பார்கள்-

த்வய நிஷ்டர்
இவள் கண்ணின் கூர்மையையும்
புகரையையும் நினைத்து இருப்பார்கள்-

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-

பதவுரை

குத்து விளக்கு–நிலை விளக்குளானவை
எரிய–(நாற்புரமும்) எரியா நிற்க,
கோடு கால் கட்டில் மேல்–யானைத் தந்தங்களினாற் செய்த கால்களை யுடைய கட்டிலிலே
மெத்தென்ற–மெத்தென்றிருக்குமதாயும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி–(அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும்)
ஐந்து குணங்களையுடைய துமான படுக்கையின் மீதேறி
விசாலம் என்றுமாம் -ஐந்து லக்ஷம் பெண்களும் கலக்கலாம் படி -பஞ்சாலான படுக்கை என்றுமாம் –
கொத்து அலர் பூ குழல்–கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான
நப்பின்னை–நப்பின்னைப் பிராட்டியினுடைய
கொங்கை–திருமுலைத் தடங்களை
மேல் வைத்து–தன் மேல் வைத்துக் கொண்டு
கிடந்த–பள்ளி கொள்கின்ற
மலர் மார்பா–அகன்ற திருமார்பை யுடைய பிரானே!
வைத்தபடியாலே மலர்ந்த மார்பன் என்றுமாம்
வாய் திறவாய்–வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்-
இதுவே உபாயப் பிரார்தனை -பிராட்டி பரிகரமான உடன் தைரியமாக பிரார்த்திக்கலாம் அன்றோ –
மை தட கண்ணினாய்–மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணை யுடைய நப்பினாய்!
நீ–நீ
உன் மணாளனை–உனக்குக் கணவனான கண்ண பிரானை
எத்தனை போதும்–ஒரு நொடிப் பொழுதும்
துயில் எழ ஒட்டாய்–படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிறாயில்லை;’
எத்தனையேலும்–க்ஷண காலமும்
பிரிவு ஆற்ற கில்லாய்–(அவளைப்) பிரிந்து தரித்திருக்க மாட்டுகிறாயில்லை;’
ஆல்–ஆ! ஆ!!.
தகவு அன்று–நீ இப்படி இருப்பது உனக்குத்) தகுதியானது’
தத்துவம்–(இஃது) உண்மை’
ஏல் ஓர் எம் பாவாய்

தத்துவமும் அன்று -ஸ்வரூபத்துக்கும்-புருஷகார பாவத்துக்கும் சேராது
தகவும் அன்று -ஸ்வ பாவத்துக்கும் -கிருபைக்கும் சேராது

குத்து விளக்கு எரிய
நம்மைப் போல் வூரார் இசைவும் வேண்டாதே-
விடிகிறது என்கிற பயமும் இன்றிக்கே-
இருள் தேடவும் வேண்டாதே –
பகலை இரவாக்கவும் வேண்டாதே
விளக்கில் கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து படுக்கை படுத்துக் கொண்டு
கிடக்கப் பெறுவதே இவள் ஒருத்தி –
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள்

காணில் ஒட்டார்-(நாச்சியார் )என்னும் படி தங்களுக்கு ஊரார் இசைவும் தேட்டமாய்-
கீழ் வானம் வெள்ளென்றது என்கிற பயமும் நடந்து
நள்ளிருட்கண் (நாச்சியார் 12 )-என்று இருளும் தேட்டமாய் –
இரா பகலாம் படி விஸ்லேஷத்தோடே கிருஷ்ணன் முகத்தில் விழிக்கவும் பெறாதே
தறைக் கிடை கிடப்பதாய் இறே நாங்கள் படுகிற பாடு –
சோரார்க்கு (திருடருக்கு )விளக்கும் நிலவும் பகை இறே

இவளுக்கு பிரசித்தமான முறை யுண்டாகையாலே விளக்கில் படுக்கை படுக்க தட்டில்லையே –

கிருஷ்ணனைப் பற்றினவர்கள் அவனோடே சாதர்ம்யம் பெறுமோ பாதி –
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய என்று
உன்னுடைய மாளிகையோடு சாதர்ம்யம் பெற்று
எங்களுடைய மாளிகைகளில்
உன்னைப் பற்றின நாங்களும் உன்னோடு சாதர்ம்யம் பெற்று
கிருஷ்ணனும் நாங்களும் எங்கள் அகங்களும் இப்படி விளக்கும் படுக்கையும் ஆனால் அன்றோ
உன்னுடைய அனுபவத்துக்கு பிரயோஜனம் உள்ளதும் –
இது உனக்குப் பொறுப்பதும்-

(கடி மா மலர் பாவையுடன் சாம்யம் ஆறும் உண்டே
அவன் உடன் சாதர்ம்யம் எட்டு உண்டே
ந பின்னை பிரியாமல் இருப்பதே நம்மை சேர்ப்பதற்காகவே
போக மயக்குகளால் மயங்கப்பண்ணி இருக்க வேண்டாமோ )

இரா உண்ணாதார்க்கு உண்டார் அடியர் அன்றோ

குத்து விளக்கு
வேண்டின இடத்திலே பேர்த்து வைக்கலாம் விளக்கு —
நீயும் அவனும் கண் வளரும் போது வேண்டும் இடங்களிலே
எடுத்து வைத்து அடிமை செய்கைக்கு நாங்களும் வேண்டாவோ –
ரம மாணா வநே த்ராய -என்னும் படியே –
(தண்டகாரண்யத்தில் மூவருக்கும் – சமமான ஆனந்தம் )

எரிய
புறம்பே ஒரு கொடி விளக்கு புகர் அழிந்து கிடக்க-
ஒரு நிலை விளக்கு உள்ளே நின்று பிரகாசியா நின்றது –

எரிய
அப்ரகாசகமுமாய்-
அந்நிய அதீன பிரகாசமுமாய் இருபத்தொரு விளக்கு யுண்டாம் படி
ஸ்வயம் பிரகாசமுமாய்
பர பிரகாசமுமாய் நின்று எரிகிற தொரு விளக்கு
(முதலில் சொன்னது கண்ணன் -அடுத்து சொன்னது இவள்
நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்து )

தன்னையும் காட்டாதே –
தன்னைக் கொண்டு காணக் கடவ அவனையும் காட்டாதே இருப்பதே இவள்

பாஸ்கரேண பிரபா யதா-
பிரபை தன்னையும் காட்டி ஆதித்யனையும் காட்ட வற்றாய் இறே இருப்பது

ஆயர் பாடிக்கு அணி விளக்கு
பிரகாசிகைக்கு இட்ட நிலை விளக்கு இறே இவை (இவள் )தான்

ஓன்று ஸ்வயம் பிரகாசமுமாய் பர பிரகாசமுமாய் இருக்கும் –
ஓன்று அப்ரகாசமுமாய்-அந்நிய அதீன பிரகாசமுமாய் இருக்கும் –

தன்னைத் தான் காட்டாமையால் அப்ரகாசம் என்கிறது –
கிருஷ்ணன் பார தந்தர்யத்தாலே அந்நிய அதீன பிரகாசம் என்கிறது –

இவள் தன்னைக் காட்டுகையாலே ஸ்வயம் பிரகாசம் என்கிறது –
ஸ்வ ஆஸ்ரயத்தை விளக்குகையாலே பர பிரகாசம் என்கிறது-

அவனுக்கு விளக்கு ஆனவள் இறே இவள் –
அதீவ ராமஸ் ச சுசுபே -என்கிறவனுக்கு
பிரகாசகையாய்
ஓஜ்ஜ்வல் யாவஹையாய் இறே இவள் இருப்பது –
திகழ்கின்ற திரு மார்வில் திருமங்கை தன்னோடும் –

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திரு மாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

கோட்டுக் கால் கட்டில் மேல்
இருள் தேட்டம் இன்றிக்கே பிரகாசம் பொறுத்து நிலை விளக்கு எரிகிறதுக்கு மேலே –
எங்களைப் போலே
ஸ்ரீ ப்ருந்தாவனமும் மணல் குன்றும் தேடித் போக வேண்டாதே
உள்ளகத்துக்கு உள்ளே படுக்கை படுத்து கூச்சம் அற கிடக்கப் பெறுவதே
இது என்ன பாக்ய பலன் –

கோட்டுக்கால்
ஆனைகளை உயிர்ப் பிடியே பிடித்து –
அவற்றின் கொம்புகளைப் பறித்து –
அவற்றை ஆதாரமாகக் கடைந்து மடுத்துச் செய்த கட்டில்

வீர பத்னி யாகையாலே இப்படி சமைந்த கட்டில் ஒழிய
மற்றையவற்றில் கண் உறங்குவது ஆகாதே

கஜம் வா விஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா அபி வரா நநா-நாஹாரயதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய –
பிராட்டிக்கு காட்டிலே ஆனை உள்ளிட்டன கண்டால்
அபூர்வ தர்சனத்தாலே வந்த முக விகாசம் போக்கி –
ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான அச்சம் குடி போய்த்து
அதுக்கு அடி என் என்னில் –

பாஹு ராமஸ்ய சம்ஸ்ரிதா –
தனக்கு என்ன தோள் படைக்கையாலே –
உயிரோடு பிடித்த கொம்பை வாங்க வல்ல வீரருடைய பத்னிக்கு அஞ்ச வேண்டாவே –

வீர பத்னிக்கு நாயகனோடு அணையும் போது கையிலே நாண் தழும்பால் வந்த சரசரப்பு கண்டதில்லை யாகில்
தங்களோட்டை பெண்களை அணைத்தால் போலே இருக்கும் –

பர்த்தாரம் பரிஷஸ் வஜே -என்று
பிராட்டி பெருமாளுடைய வீரக் கோலம் கண்ட பின்பு இறே ஆண்-என்று அணைந்தது –
மற்ற போது ஸ்த்ரீயம் புருஷ விக்ரஹம் -என்று இறே இருப்பாள் –
ஜ்யாகிண கர்க்கசமான தோளால் அணைக்க வேணும்

மாதங்க இவ ஸிம்ஹயேண –
ராவணன் ஆகிற யானையை உயிர்ப் பிடி பிடித்த ஸிம்ஹம் இறே பெருமாள் –
உபதாய புஜம் தஸ்ய லோக நாதஸ்ய-என்னும்படியான தோள்கள் யாயத்து –

லோக நாதஸ்ய -என்கிறது
பதிம் விஸ்வஸ்ய-என்கிறபடியே அவனுக்கும் தங்களுக்கும் உண்டான முறையை உணர்ந்து
இருப்பார்க்குப் பயப்பட வேண்டாம் -என்கிறது

ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் -வீர பத்னிகள் படி பிரபன்னர் படி போலே –

தம்தாமுக்கு என்ன மிடுக்கு அற்றவர்களுக்கு அவனுடைய பலமே பலமாக வேண்டாவோ –

ஆனு கூல்யத்தில் தாரதம்யம் கொண்டு தியாக ஸ்வீகாரம் பண்ணுவது அவன் அபரி பூர்ணன் ஆகில் இறே
பரி பூர்ணன் மானவனுக்கு இவன் விலக்காமையே இறே வேண்டுவது
(ஆத்ம ஞானமும் அப்ரதிஷே தமுமே பேற்றுக்கு வேண்டுவது )

இவன் பண்ணின பிராதி கூல்யத்துக்கு அபுத்தி பூர்வகமான பிரபத்தி பிராய்ச சித்தமாம் போது
சரண்யன் நீர்மையே இறே பலிக்கிறது அத்தனை –
பலத்தோடு சந்திப்பிக்குமதே இறே உபாயம் ஆவது –

சர்வ ஸ்வதானம் பண்ணின வெறுவியனுக்கு நன்மை யுண்டாம் போது
வேறே ஒருவன் அனுக்ரஹத்தால் பலமாக வேண்டாவோ –

இரண்டு கிரியையாலும் அன்றிக்கே இருந்தது இறே பலம்
(நிர்ஹேதுக அனுக்ரஹம்
வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிதானதே )

அத்தாலே இறே ஆர்த்தோவா யதிவா த்ரூப்த-என்கிறது –

அங்கனே யாகில் பிரபத்தி தான் என் என்னில் –
சைதன்ய கார்யம் வேண்டுகையாலே –

இவனுடைய சத்தை உபாயமாம் அன்று இறே ஸ்வீகாரமும் உபாயத்தில் புகுவது –

ரஷித்வய க்ருதாத்மா -அவன் க்ருதாத்மா வாகையாலே
இவன் பக்கல் பெற்றது கொண்டு தன நீர்மையாலே ரஷித்து விடும் அத்தனை –

கோட்டுக் கால் காட்டில்
குவலயா பீடத்தின் கொம்பை பறித்துக் கொண்டு போந்து சமைந்த காட்டில் –

ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய -என்று பார்த்து கொண்டு நின்ற பெண்கள் எல்லாம் கிடக்க
கோடுகள் கொண்டு கட்டில் சமைப்பது
ஒக்கப் பட்டம் கட்டின பிரதான மஹிஷியான இவளுக்கு இறே –
கோட்டிடை யாடிற்றும் இவளுக்கு –
கொடுத்ததும் இவளுக்கு –
வேழமும் யேழ் விடையும் (பெரியாழ்வார் -1-5 )

கோட்டுக்கால்
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு(திருவாய் -10-4 ) -என்று மிதுனத்தின் காலிலும் –
அம் மிதுனத்தை சுமக்கிற காலிலே தலையை மடுக்கிறார்கள்

கிருஷ்ணன் படுக்கையின் காலைப் பற்றினவர்கள் இறே

பர்யங்க வித்தையில் சொல்லுகிற படுக்கையில் கால் இட்டு ஏறுவார்கள் –
ஆசனத்தின் காலைக் கட்டின சர்ப்பம் ஆசனத்தின் ஆகத்திலே ஏறினால் போலே

கட்டில் –
பெரு விலையனான பொன்னாலும் ரத்னத்தாலும் சமைத்தாலும்
இடையர் ஆகையால் கட்டில் என்று ஜாதிப் பேச்சு

கட்டில் மேல்
ப்ரஹ்மாதிகள் வர விட்ட சிறு தொட்டில்கள் ஆகில் இறே கிழிய உதைத்து பொகட்டுவது
படுக்கை பற்றில் படுக்கையாகையாலே ஆதாரத்தோடு பேணிக் கொண்டு போரும்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
மெத்தன்ற பஞ்சாலே செய்த படுக்கை

மெத்தென்ற
நாங்கள் ஆர்த்தைகளாய் வந்து கிடக்க
படுக்கையின் உள் மானம் புற மானம் கொண்டாடி கண் உறங்குவதே

மெத்தென்ற
நாங்கள் புறம்பே நின்றால் படுக்கை கடினமாக வேண்டாவோ –
அவனோடு கிலாய்த்த போது சீறுவது அவன் படுக்கையை இறே

தம் பாம்பு போலே (நாச்சியார் -10-3 )–
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்று
திருவனந்த ஆழ்வானை
பெரிய ஆழ்வாரோ பாதி நினைத்து இருப்பது

பஞ்ச சயனம்
பஞ்ச வித சயனம் –
1-சீத பரிஹாரமுமாய் -உஷ்ண பரிஹாரமுமாய் –
2-தர்ச நீயமாய் –
3-பரிமளத்துவமாய்-
4-விஸ்தார
5-பாண்டரோ பேதமுமாய் இருக்கை-

சயனத்தில் மேல் ஏறி –
நாங்கள் உள்ளுப் புகுரப் பெறாதே புறம்பே நின்றால்
படுக்கை காலிட்டு ஒண்ணாத படி உறுத்த வேண்டாவோ –

புத்ராதிகள் துகையாத படுக்கை பித்ராதிகளுக்கு அஸஹ்யமாம் போலே நாங்கள் துகையாத படுக்கை
வெம்பள்ளி (திருவாய்-9-9 )ஆகாமல் தண் பள்ளி யாவதே –

அவர்களுக்கு நெருப்பு நீராம் ஒளஷதம் உன் கையில் உண்டே

மேல் ஏறி
நாங்களும் மிதித்து ஏறினால் அன்றோ நீ ஏறுவது –

பாதே நா த்யாரோஹாதி-என்று ஸ்ரீ யபதியினுடைய
பர்யங்க வித்யையில் சொல்லுகிற படியே குறைவற்ற படுக்கையிலே சென்று ஏறக் கடவன் -இந்த முக்தாத்மா

அவன் கோசி என்னக் கடவன் –
இவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்னக் கடவன் –

யஸ்யாஸ்மி என்கிறவன் ப்ரஹ்மாஸ்மி என்கிறது
ப்ரஹ்ம பிரகார பூதன் நான் என்றபடி –
இவர்களும் அத்தை இறே கணிசிக்க்கிறது-

(யாருடைய சொத்தோ நான் அவனைத் தாண்ட மாட்டேன் என்பவன்
நானே ப்ரஹ்மம் என்றது
அவனுக்கு பிரகாரம் -விட்டுப்பிரியாமல் சார்ந்து இருப்பதால்
இரண்டும் சொல்லலாம் என்றபடி )

ஏறி
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து உறங்குகிறவன்
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய -இங்கே ஏற வர –
விட்ட படுக்கை –
இங்கே தனக்கும் முற்பட அந்த விஸ்மயத்தைக் கண்டு
ஆச்சர்யத்தாலே ஸ்திமிதனாய்-
அதிலே ஏறின வருத்தத்தைச் சொல்கிறது –

இப்படிக்கொத்த படுக்கையிலே துகைக்கைக்கு நிதானம் சொல்லுகிறார்கள்

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை-
திருக் குழல் ஸ்பர்சத்தால் கொத்துக் கொத்தாக அலரா நின்றுள்ள
பூவை யுடைத்தான குழலை யுடைய நப்பின்னை

கொத்தாக பறித்து குழலிலே சூட்டினால் தன்னிலத்திலே போலே குழலிலே இருந்து
செவ்வி மாறாமல் அலருமாய்த்து-

கொம்பினின்றும் போந்து குழலிலே இறே அலருகிறது –

இவள் மயிரில் பூ அலருகைக்கு
காலத்தோ பாதி யாகாதே –
கால கலயதாமஹம் -என்றவனுடைய ஸ்பர்சம் –

கொத்தலர்
ஒரு பிரளய கலகத்திலே எடுப்பும் சாய்ப்புமாக மஹா பாரதம் நடவா நின்றால்
பூ அலராது ஒழியும் படி எங்கனம்

பூங்குழல்
மலரிட்டு நாம் முடியோம் -என்று
எங்கள் குழல் பூவும் மாறி செவ்வித் பூவை வாக்கிலும் தொங்காதே-
தொங்கின பூ விரஹ அக்னியால் சரு காம் படி இருக்க
நீ முடிப்பது எங்கள் தலையில் பூ பொறுத்தால் அன்றோ

இவளை இழவு சொல்லும் போது தங்களோடு கூட்டுவார்கள் –
பேறு சொல்லும் போது அவனோடு கூட்டுவார்கள்
அவளுக்கு இரண்டு தலையும் விட ஒண்ணாது

நப்பின்னை கொங்கை மேல்-வைத்துக் கிடந்த
பூங்குழல் நப்பின்னை விலக்ஷணமான நிரதிசயமான குழலை யுடையவள்
கேசவனையும் பிச்சேற்ற வல்ல குழலை யுடையவள் –
இவள் குழல் வாருகைக்கு அக் காக்கை வருவது
பின்னை மணாளனை என்று இவளோட்டை சம்பந்தம் சொன்னாலாய்த்து

கொங்கை மேல் வைத்துக் கிடந்த
நப்பின்னை பிராட்டியினுடைய திரு முலைத் தடத்தை தன் மேலே வைத்துக் கிடந்த என்னுதல்-
கொங்கை மேல் தன்னை வைத்துக் கிடந்த என்னுதல் –

ந சாஸ்த்ரம் நசைவ க்ரம-என்று இறே ப்ரணயம் இருப்பது
பர்யாயேண ப்ரஸூப்த்த-என்னக் கடவது இறே

மலராள் தனத்து உள்ளான் -(மூன்றாம் 3 )
பர்வத பார்ஸ்வத்தை ஜீவிப்பாரைப் போலே

கிடந்த
திறக்க கணிசித்தவன் நஞ்சுண்டாரைப் போலே பரவசனாய் மயங்கிக் கிடக்கிறபடி

மலர் மார்பா
அவன் அண்டை கொண்ட அரணும்-
இவள் ஜீவனமும் –

முலையைப் பற்றி அவன் கிடைக்கும் –
மார்பைப் பற்றி இவள் கிடக்கும் –

இவள் முலைப் பரப்பு எல்லாம் ஒரு முலைக்குப் போராத படி அகன்ற மார்பை யுடையவன்
பெரிய வரை மார்பு இறே அது –

முற்றாரா வன – முலையாள் அகலத்துள் இருப்பாள் (திருநெடும் -19 )-என்னக் கடவது இறே

மலர் மார்பா
திரு முலைத் தடங்கல் உறுத்தும் படி அணைத்த ஸ்பர்ச ஸூ கத்தாலே
பூ அலருமா போலே விகசிதமான மார்பை யுடையவன்

சதைக ரூப ரூபாய -என்னச் செய்தே
மலர் மார்பா -என்கிறது இறே

இவ்விகாரத்தோடு விரோதியாமையாலே
கர்ம நிபந்தனாய் வரும் வ்ருத்தி ஹ்ராசங்கள் தோஷாவஹங்கள் ஆகையால்
அவை இல்லை என்கிறது அத்தனை –

நித்ய அநபாயினியாய் இருக்கிறவர்களுடைய சம்ஸ்லேஷத்தால் வரும் விகாரம் இல்லை என்கிறது அன்றே –
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்தவம் அவத்யம் அத்தனை இறே
இவ்விகாரம் உண்டானால் கல்யாண குணங்களே யாம் அத்தனை –
மலராது குவியாது என்றது ஸ்வரூபம் இறே –

யசோதை பிராட்டி காட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தனபந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
புடைக்கலந்தானை —
வரை நெடும் தோள் -மூர்த்தி கண்டீர் -(பெரிய திருமொழி 4-4)
(தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் அன்றோ அடிக்கவும் அணைக்கவும் அலர்வானே )
இவளோடு அணைந்த பின்பு இவ் விகாசம் பிறவாதாகில் இவர்களுக்குத் தான் என் செய்ய –

அவனுக்கு விகாசத்தைப் பண்ணி ஸ்வரூபம் பெற இருக்கிறவர்கள் இறே இவர்கள்
நித்ய கிங்கர –
கோவிந்தர்க்கு ஒரு குற்றேவல் –
அவனை விகசிப்பிக்கை இவர்களுக்கு ஸ்வரூபமாய் இறே இருப்பது

சேஷியை விகசிப்பிக்கும் போது சேஷ வஸ்து வேணும்-
இல்லையாகில் ஸ்வதந்திரமாய் இருபத்தொரு வஸ்து யுண்டாய் விகசிப்பிக்கிறது அன்றே
இச்சானுகுணமாக விளையுமது சைதன்ய ப்ரயுக்தம் இறே

வாய் திறவாய்
அவன் ஊமத்தங்காய் தின்று கிடக்க இவர்கள் தான் ஆரை எழுப்புகிறது –

வாய் திறவாய்
கிடந்த இடத்தே கிடந்து உன் கம்பீரமான மிடற்று ஓசை கேட்க்கும் படி ஒரு வார்த்தை சொல்லாய்
அனன்யா -என்கிறபடியே

ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே
ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்

வாய் திறவாய்
ஆர்த்தோவா யதிவா த்ருப்தா-
(ஆர்த்தனோ திருப்தனோ பிராணனை விட்டாவது விரோதியைக் கூட ரஷிப்பேன் )
என்று சொல்லி வைத்து
உன்னால் அல்லது செல்லாது இருக்கிற எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என் –

திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே
நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்
கிடந்த இடத்தே கிடந்து மாஸூச என்று சொல்லுமதும் அரிதோ

மலர் மார்பா வாய் திறவாய்
மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ –

கொங்கை மேல் இத்யாதி -(நாச்சியார் 8-7)
மார்பது முலையானால் வாயது முத்தோ

வாய் திறவாய் என்றத்தைக் கேட்டு போர நொந்தார்கள் ஆகாதே என்று
அவன் மறு மாற்றம் சொல்லப் புக
ஆர்த்த விஷயத்தில் நம்மில் முற்பாடானாக ஒண்ணாது என்று
கண்ணாலே வாய் வாய் என்று கழுத்தைக் கட்டி அமுக்கிக் கொண்டு கிடந்தாள்

மைத் தடங்கண்ணினாய் –
என்கிறார்கள் –
நாம் ஆரேனையும் இன்னாது ஆகிறது என் –
நம் பரிகரம் நமக்கு உதவாதே கண்ணாலே வாயை நெரியா நிற்க

நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்-
உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது இழவுக்கு உடலாவதே

மைத்தடம் கண்ணினாய்
மையிட்டு எழுதோம் என்று இருக்கிற எங்களையும் மையிடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மையிடுவது –
இரண்டு கண்ணுக்கும் ஒரு மை இறே இடுவது –
மைப்படி மேனி இறே
(அஞ்சன வண்ணனே மை -பக்தி ஸித்தாஞ்சனம் )

மைத்தடங்கண்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னப் பண்ணும் கண் இறே

தடங்கண்
இக் கடலைக் கரை கண்டால் இறே அவன் நம்மைப் பார்ப்பது –

நீ யுன் மணாளனை
அவன் நினைவே நினையாய் இருக்கும் நீ –
உன் நினைவே நினைவாய் இருக்கும் அவன் –

அவனை பெறுகைக்கு அடியான நீ –
உன் புருவம் நெறித்த இடத்தில் குட நீர் வார்க்கும் படி பவ்யனாய் இருக்கிறவனை விலக்கக் கடவையோ –

உன்னுடைய யோக்யதையிலே அவன் துவக்குண்கிறது
உனக்கு இஷ்ட விநியோக அர்ஹனாய் எங்களுக்கு பெறுகைக்கு உடல் என்று இருந்தோம்
இனி உனக்கே சேஷம் என்றே இருக்கிறோம்

பண்டு இருவரும் கூட தங்களுக்கு ஸ்வம் என்று இருக்கையாலே கூடச் சொல்லிப் போந்தார்கள்-
இப்போது அந்யத்வம் தோற்ற பிரணய ரோஷத்தாலே வேறு இடுகிறார்கள் –
பேறு அவளாலே யானால்
இழவும் அவளாலே யாகத் தட்டில்லை இறே

உன் மணாளனை
லோக பர்த்தாரம் -என்கிற நாட்டுப் பொதுவைத் தனித்து -புஜிக்கக் கடவையோ-
(ஏக தாரா விரதனை லோக பார்த்தா -சர்வ ஸ்வாமி -உலக மணாளன் )
கோபீ ஜன வல்லபன் -என்று விருது பிடிக்கிற ஊர் பொதுவை உன்னாலே உண்டு அறுக்கலாமோ

உன் மணாளனை
இவளை இட்டு இறே அவனை இவர்கள் அறிவது –
என் திருமகள் சேர் மார்பனே -(7-2 )
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய
அவனும் அவ்வழியாலே இறே உகப்பது

எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
ஒரு க்ஷணமும் அவனை எழுந்திருக்க ஒட்டுகிறிலை
சம்போக வர்த்தமாக கட்டின கை நெகிழ்க்கிலும் உடம்பு வெளுப்புதி-
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய் –
புணர்ச்சிக்காக பிரிவிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி –
இவர்கள் புகுந்தாலும் போகத்துக்கு வர்த்தகர் என்று அறிகிறிலை –
இவர்கள் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரிக்க ஆசைப்பட்டு இறே வருகிறது
இருவருக்கு ஒருவர் அடிமை செய்தாக இறே உத்தார்த்தத்தில் சொல்லுகிறது –

கொண்டு புறப்பட்டாள் ஆகில் உத்தரார்த்தில் படியே அடிமை செய்கைக்கு உடலாகிறது –
உள்ளே கிடந்து தாழ்த்தால் ஆகில் பூர்வார்த்தில் படியே புருஷகாரத்துக்கு உடலாகிறது –

எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
ஒரு க்ஷணம் பிரியில் புறம்பு நிற்கிற நாங்கள் பட்டது படா நின்றாய் –
நாங்கள் அகல நின்று படுகிறது எல்லாம் கூடி இருந்து படா நின்றாயீ –
நெகிழ்த்து அணைக்கில் பத்து மாசம் பிரிந்தவள் பட்டது படா நின்றாய் –
இவ்விடத்தில் இவள் வைலக்ஷண்யம் சொல்லுகிறது –

ஆற்ற கில்லாயால்
உனக்காக அன்றோ அவன் புறப்பட மாட்டாது ஒழி கிறது –
பிரியில் நீ பிழையாய்-உன்னை இழக்கில் ஒன்றாக முடியும்
உன்னை இழவாமைக்கு எங்களையும் (உள்ளே )விட்டு
உன்னோடே பணி (கைங்கர்யம்)போரும்படி யாக்குவதே

தத்துவம்
இது உண்மை சொல்லுகிறோம் –
எங்கள் ஆற்றாமையால் கண்ணும் சுழலை இட்டுச் சொல்லுகிறோம் அல்லோம்

தகவன்று
இது மெய்யே -நீர்மைக்கு உடல் அல்ல தர்மமன்று

தத்துவம் தகவன்று
சத்யமே கிருபை அன்று –
மெய்யே உனக்கு கிருபை இல்லை என்னுதல் –
தகவு தத்துவம் அன்று என்னுதல்
உனக்கு நீர்மை யுண்டு என்று சொல்கிறது பரமார்த்தம் அன்று
ந கச்சின் நபராத்யதி -என்னாலாவது அவன் பரிகரம் நலிகிற போதோ –
உன் பரிகரம் அவனாலே நோவு படப் பார்த்து இருக்கும் எத்தனையோ

ஷிபாமி என்றவனோடு
ந கச்சின் நபராத்யதி
தகவேலோ ரெம்பாவாய் என்ற உன்னோடு வாசி இல்லை –

அஹத்வா ராவணம் சங்க்யே-என்று
கொன்று அல்லது படைவீட்டில் புகோம் என்றவனோடு
அவன் தனக்கே மித்ர மௌ பயிகம் -என்ற
உன்னோடு வாசி இல்லை என்று இருக்கிறோம் –

பதிம் விசுவஸ்ய-என்று அவன் நினைத்து இருக்குமோபாதி –
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -என்கிற முதன்மையே உள்ளது என்று நினைத்து இருக்கிறோம் –

இவளுக்கு குறை சொல்லுகையாவது
அவனோடு ஒக்கும் என்னும் இத்தனை இறே

நீர்மையால் விஞ்சினாரை –
நீர்மையால் குறைந்தவர்களோடு ஒப்பர்கள் -என்னும் இத்தனை இறே குற்றம் –
(லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி அன்றோ
ஈஸ்வரீம் பதிம் விஸ்வஸ்ய-ஸ்வ தந்திரம் உள்ளவனோடே ஓக்க பேசுவது இழுக்கு அன்றோ)

த்விதா பஜ்யேயம் -என்று இருக்குமவனோடு
சரணம் கத -என்று இருந்தவனோடு வாசி அறக் கைக் கொள்வன் என்றவனை
கபோத ஸ்தாநீயனாக்கினால்
கபோதியில் கெட்ட பிராட்டி இல்லை இறே –
அரை க்ஷணம் தாழ்த்தது பொறுக்க மாட்டாமல் சொல்லுகிறவை இறே இவை –

(ராவணனையும் விபீஷணனையும் ஏற்றுக் கொள்வேன் என்றானே –
புறா கதை அறிவோம்)

அன்றிக்கே
தத்துவம் அன்று தகவும் அன்று
உன்னுடைய ஸ்வரூபத்துக்கும் போருமது அன்று –
ஸ்வ பாவத்துக்கு போருமது அன்று
புருஷகாரமாய் நின்று சேர்ப்பாருடைய ஸ்வரூபத்துக்கும் ஸ்வபாவத்துக்கும் சேருமதோ இது

அகில ஜெகன் மாதரம் -என்கிறதுக்கும் சேராது —
அசரண்ய சரண்யாம் -என்கிறதுக்கும் சேராது –
தேவ தேவ திவ்ய மஹிஷீம்-என்று கட்டின பட்டத்துக்கு சேரும் அத்தனை –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை —உந்து மத களிற்றன்–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 8, 2017

கீழ் நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்பி நின்றது –
இந் நேரத்தி எல்லாம் பட்டால் பிரயோஜனம் என்
பேற்றுக்கு அடியானவள் தன்னைப் பற்ற வேண்டாவோ –
இவ்விட்டு நீட்டுதலால் பிரயோஜனம் உண்டோ –

உறங்காது எழுந்திராய் என்ற இடத்திலும் எழுந்திராது ஒழிந்தது
திருவாசல் காக்கும் முதலிகள் ஸ்ரீ நந்தகோபர் உள்ளிட்டார் தொடக்கமானவர்களை எழுப்பினாலும்
பல வியாப்தியாவது நப்பின்னையை முன்னிட்டால் அன்றோ என்று
கிருஷ்ணன் இருந்தானாகக் கொண்டு

பேற்றுக்கு அடியானவள் தன்னையே பற்றுவோம் என்று நப்பின்னை பிராட்டி தன்னை எழுப்புகிறார்கள் –
எம்பெருமானைப் பற்றுகைக்கு பிராட்டி புருஷகாரமாக வேணும் –
இவள் திருவடிகளை பற்றுகைக்கு அவன் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையே அமையும் –

நமோஸ்து ராமாய ச லஷ்மணாய தேவ்யை சதஸ்யை ஜனகாத் மஜாயை -என்று
ஸ்ரீ ஜனக ராஜனுக்கு நீயே யுன்னைக் காட்டினால் போலே
அடியேனுக்கும் நீயே வந்து உன்னைக் காட்டி அருள வேணும் என்கிறாள் –

நெருப்பை ஆற்றுகைக்கு நீர் வேணும் –
நீரை ஆற்றுகைக்கு நீர் தானே அமையும்

பல தேவா என்று கீழ் இவர்கள் எழுப்பின கிருஷ்ணனுடைய தமையனார் தாம்
தம்பியாய் பிறந்த அவஸ்தையிலே-
ஸீதாம் உவாசா தியசா ராகவஞ்ச மஹாவ்ரதம் -என்று
பிராட்டி முன்னிலையாக சரணம் புக்கு
பெருமாள் போக ஒண்ணாது -நீ நில் -என்ற சங்கல்பத்தையும் அழித்து-
அவரைப் பெற்றுப் போனான் இறே-

காகம் அபராதத்தினுடைய எல்லையில் நின்றும் -பிராட்டி சந்நிதி உண்டாகையாலே
பிரபன்னர் பெறும் பேற்றைப் பெற்றது –
வாதார்ஹம் அபி காகுத்ஸ்த –

மஹா ராஜரும் -அராஜராய் -நாலு முதலிகளும் தானுமாக இருக்க பிராட்டி தன் திரு ஆபரணத்தை
திரு உத்தரீயத்தில் கட்டி விழ விட -அது முன்னாக இறே பெருமாளை பற்றினார் -திருவடியும்
இத்தால் பெருமாளைக் கண்டு வீரத்துக்கும் அழகுக்கும் தோற்றார்

பிராட்டி ஒழிய பெருமாள் அழகுக்குத் தோற்ற சூர்ப்பணகை அநர்த்தப் பட்டு ஒழிந்தாள் இறே

பிராட்டி ராவணனைக் குறித்து அருளிச் செய்த ஹிதத்தை சிம்சுபா வருஷத்தில் மறைந்து இருந்து கேட்டு –
ஸீதாம் ஆச்ரித்ய தேஜஸ்வீ-என்று
அதிகாரி சுத்தி யுண்டாய் –
தன் ஸ்வரூபம் பெற்று முறை அறிந்து அடிமை புக்கு
தூதோ ராமஸ்ய என்ற வாயாலே
தாஸோஹம் கோச லேந்திரஸ்ய-என்பதும் செய்து
தன் ஸ்வரூபமும் பெற்று –
ஏஷ ஸர்வ ஸ்வ பூதஸ்து -என்று
ஸ்வரூப அனுரூபமான பலம் பெற்றதும் பிராட்டியை ஆஸ்ரயித்த பின்பு இறே

புருஷகார பூதையான பிராட்டியை பேர வைத்து பூஜிக்க வந்த சூர்ப்பணகை துறை அறியாமல் அநர்த்தப் பட்டாள்
தன்னை நயந்தாளை -என்கிறது குற்றம் உண்டாய் அன்றே –
கொல்லை அரக்கி யாகையாலே இறே அநர்த்தப் பட்டது –

பிராட்டி தன்னை முறை தப்பப் பற்றின ராவணன் முடிந்து போனான் –

இருவரையும் சேரப் பற்றின விபீஷணன் அல்லல் தீர்ந்து வாழ்ந்து போனான் –

மா சதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா (2-7-1 )-என்றார் இறே ஆழ்வார்
தன்னுடைய கர்மா ஞானாதி உபாயங்களாலே எம்பெருமானை பெற இருக்குமது இளிம்பு –
அவற்றை விட்டு எம்பெருமானுடைய கிருபையால் பெறுகை சதிர் –
அந்த கிருபைக்கு அடியான பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெறுகை மா சதிர்

எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் (2-7-6 )-என்ற ஆழ்வார் –
அதற்கு அடி-
மாதவன் என்று என்றதே என்றார் இறே

உபாயத்தில் வந்தால் யுக்தி மாத்திரமே அமைந்தது –
பலத்தில் வந்தவாறே சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்ல வாழ்ந்து போய்த்து என்கிறார்

திருக் கண்டேன் என்று தொடங்கி-
தேனமரும் பூ மேல் திரு –சார்வு நமக்கு என்றும் -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானாரும் இவை அடியாக இழிந்து –
கத்யத்திலே முதலிலே தமக்கு த்வய நிஷ்டை யுண்டாக வேணும் என்று பிராட்டியை சரணம் புக்கார்

இவர்களும் அப்படியே ஒரு பாட்டாலே நப்பின்னை பிராட்டியை சரணம் புக்கு –
அனந்தரம்
அந்தப்புர பரிகரமாய் நின்று பயம் கெட்டு-
ஒரு பாட்டாலே
உபாய சித்திக்கு உடலாக அவனைப் பற்றி
ஒரு பாட்டாலே
உபேய சித்திக்கு உடலாக அவனையும் அவளையும் பற்றி –

ஆக மூன்று பாட்டாலே
நப்பின்னை பிராட்டியை எழுப்பி –
அவள் வழியாக எம்பெருமானை எழுப்புகிறார்கள் –

அபி நிவேச பிரேரிதைகள் ஆகையால் கலகத்தாலே கிருஷ்ணன் பக்கலிலே மேல் விழுந்தார்கள் –
ஆச்ரயண தசையும்
போக தசையும்
பேதிக்க ஒட்டாத படி உபக்ரம தசையில் கலக்கும் இறே விஷய ஸ்வ பாவம் –

பிராட்டி முன்னாக சரணம் புக அன்றோ பிரமாணங்கள் சொல்லிற்று
இங்கு நப்பின்னை பிராட்டியை அன்றோ சரணம் புகுகிறது என்னில்
பெரிய பிராட்டியாருக்கு அல்லாத நாய்ச்சியார்
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதி உபகரண கோடிகள் ஆகையாலும்
இவர்களை அவயவ கோடியிலே அவள் நினைத்து இருக்கையாலும்
பிராட்டிக்கு திருவடிகளோபாதியாக நினைத்து இருக்கையாலே இவளைப் பற்றுகிறார்கள் –

பர தசையில் நாய்ச்சிமார் மூவரையும் முன்னிடக் கடவது–
கூந்தல் மலர் மங்கை இத்யாதி
(ஏவம் பூத பூமி நீளா நாயக என்றார் அன்றோ )

வ்யூஹ அவஸ்தையில் நாய்ச்சிமார் இருவரையும் முன்னிடக் கடவது –
சந்தணி மென் முலை மலராள் தாரணி மங்கை -என்னக் கடவது இறே

ராமாவதாரத்தில் பெரிய பிராட்டியார் ஒருவரையுமாய் இருக்கும் –

ஸ்ரீ வராஹ ப்ராதுர்பாவத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டியை முன்னிடும்

கிருஷ்ணாவதாரத்துக்கு பிரதான மஹிஷி இவள் ஆகையால்
நப்பின்னை பிராட்டியை முன்னிடுகிறார்கள் –
(ருக்மிணி சத்யபாமை சமேத கிருஷ்ணன்
அங்கு எல்லாம் இள -பால கிருஷ்ணன் மஹிஷி அல்லவே
இவள் தானே இளைய வயசில் -ஏக குல ஜென்மம்
ஆகவே ஆழ்வார்கள் இங்கேயே ஈடுபட்டு அருளிச் செய்கிறார்கள் )

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

உந்து மத களிற்றன்–(தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும்
தோள் வலியன்–புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன்–நந்த கோபானுக்கு
மருமகளே–மருமகளானவளே!
நப்பின்னாய்–ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ–பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய்–தாழ்ப்பாளைத் திறந்திடு’
கோழி–கோழிகளானவை
எங்கும் வந்து-எல்லா விடங்களிலும் பரவி
அழைத்தன காண்–கூவா நின்றனகாண்’ (அன்றியும்),
மாதவி பந்தல் மேல்–குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள்–குயிற் கூட்டங்கள்
பல்கால்-பல தடவை
கூவின காண்-கூவா நின்றன காண்’
ஓடாத–போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி –பந்து பொருந்திய விரலை யுடையவளே!
(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட-உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து–சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால்–செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய்-(எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத், திறந்திடு’
ஏல் ஓர் எம் பாவாய்

உந்து மத களிற்றன்
கிருஷ்ணனை -நந்தகோபன் குமரன் என்று ஆதரிக்குமா போலே –
இவர்கள் பற்றுவார்க்கும் இவள் உகப்பது சொல்ல வேண்டுகையாலே
ஸ்ரீ நந்த கோபரை பிரசங்கித்து
அவரை சிலாக்கிக்கை இவளுக்கு உகப்பு என்று அவர் மிடுக்கை சொல்கிறாள்

நாங்கள் வந்து பற்றும் படி வாரணம் பைய நின்று ஊர்வது போல்
மகன் செருக்குத் திரிந்தது இவர் வயிற்றில் பிறப்பு இறே

உந்து மத களிற்றன்-
மத்த கஜத்தின் மிடுக்கு போலே ப்ராபல்யம் கனக்க உண்டாகையாலே
களிற்றைத் தள்ளா நின்றுள்ள மிடுக்கை யுடையவர் என்றுமாம் –

ஆனைகளோடு பொருது அவற்றை நூக்கும் படியான மிடுக்கை யுடையவர் என்கை –

கிருஷ்ணன் ஆனை கொன்றது சர்வ சக்தித்வத்தால் அன்று இறே –
இவர் மகன் ஆகையால் இறே

உந்து மத களிற்றன்
மத்த கஜங்களை யுடையவர் என்றுமாம் –

ஆனை யுண்டோ இவர்க்கு என்னில் –
ஸ்ரீ வஸூ தேவரும் தாமும் ஒரு மிடறாய் இருக்கையாலே
அங்குள்ளது இங்குள்ளதாய் இங்குள்ளத்து அங்கேயாய் ஒன்றாய்ப் போருகையாலும் –
தத்த புத்திரனுக்கு இரண்டிலும் பிராப்தி யுண்டாகையாலும்
ஆனை யுண்டாகத் தட்டில்லை –

வாரணம் ஆயிரம் சூழ -என்று திருவாய்ப்பாடியிலே
ஆனைகளும் பசுக்களும் கலந்து திரியும் அத்தனை இறே –

ஓடாத தோள் வலியன்-
யுத்தே சாப்ய பலாய நம் -என்கிறபடியே
எதிரிகளைக் கண்டால் பிரதிபக்ஷம் இறே என்று பிற்காலியாத தோள் வலியை யுடையவன் –

கம்சன் மாளிகைக்குக் கீழே பிள்ளை வளர்க்க வல்ல வலி இறே –
குடியுடன் பட கடமை கொண்டு இருந்தான் ஆகில் இருக்கிறான்
மிகைத்தான் ஆகில் உழக்கோல் கொண்டு தகர்க்கிறோம் என்று இருப்பர் –

அவனும் அது அறிந்தே
புகுந்து அபிபவித்தல்-
விட்டுக் காட்டுங்கோள் என்னுதல் செய்யாதே
தான் முடியும் தனையும் களவிலே நலியப் பார்த்தது –

அங்கோர் ஆய்க் குலம்-என்று அஞ்சினான் புகலிடமூர் இறே –
கம்சன் படை வீடு என்று அஞ்சினார் அச்சம் கெடுவது இவ் விடைச் சேரியை நினைத்து இறே –

தோள் வலியன் –
நித்ய சம்சாரியானவன் தன்னுடைய அநீதிகளை நினைத்து அஞ்சினால் –
நபிபேதி குதச்சன–என்றும்
அதஸோ பயங்கதோ பவதி-என்று
எம்பெருமானுடைய குணங்களை அனுசந்தித்து புத்தி பூர்வகமான பாபத்துக்கு பயம் கெட்டு
மார்பிலே கை வைத்து உறங்குமா போலே
கிருஷ்ணன் தீம்பை அனுசந்தித்து அஞ்சின பெண்களுக்கு இவர் தோள் மிடுக்கை நினைத்து
அச்சம் கெட்டு இருக்கலாய் இருக்கை –

பாஹு ராமஸ்ய சமஸ்ரிதா-என்று பிராட்டி
பெருமாள் தோளை அண்டை கொண்டு அச்சம் கெட்டு இருக்குமா போலே

தோள் வலியன்
எம்பெருமானுக்கு என் புகுகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
மங்களா சாசனம் பண்ணுமவர்கள் ஆகையால்
கிருஷ்ணன் போலே பின்னை நெடும் பணைத் தோளை விரும்புதல்
அல்லாத பெண்களை போலே பின்னை தன் காதலன் தன் தன் பெரும் தோள் நலம் பேணுதல் செய்யாதே
தங்கள் தனமான அம் மிதுனத்துக்கு காவல் உண்டு என்று
இவருடைய தோள் மிடுக்கை அனுசந்திக்கிறார்கள் தங்கள் பய நிவ்ருத்திக்காக

ஓடாத தோள் வலியன்
கிருஷ்ணன் தோளில் சாந்து அழியாமல் மல்லரை தகர்க்க வல்லனாய்த்து-
புஜ பலமுடைய இவர் வயிற்றில் பிறப்பு இறே

ஓடாத
நாட்டில் நடையாடாத தோள் வலியை யுடையவன் என்றுமாம்

நந்த கோபாலன்
ஐஸ்வர்யத்தாலும் புஜ பலத்தாலும் உண்டான மேன்மைக்கு தமக்கு அவ்வருகு இல்லாதாப் போலே
நந்த கோபாலா எழுந்திராய் என்று
பெண்களோடு ஓக்க எழுப்பலாம் படி தாழ்ந்தாருடைய ரக்ஷணத்திலே
அதிகரித்து தம்மை அமைத்த நீர்மையைச் சொல்கிறது

மருமகளே
ஸ்ரீ கும்பர் மகளே-என்றால் அறியாள்-
ஸ்ரீ நந்தகோபர் சம்பந்தமே யாய்த்து அறிந்து இருப்பது –

ஸ்ரீ நந்த கோபர் மாமனாய் –
கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் –
இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் –
இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் –
இவள் உகக்குமது ஆகையாலும்
இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –

மருமகளே
முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் –
புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –

மனிசர் நோவு அறிந்து கார்யம் செய்யும் இடத்தில் –
அறம் செய்யும் நந்த கோபாலனுக்கு மருமகள் -என்னலாய் இருக்கும்

ஸ்னுஷா தசரதஸ் யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபி ந -என்று
எங்கள் மாமனார் இருந்தார் ஆகில் நான் இவர்கள் நடுவே
இவ் விருப்பு இருக்கவும் –
இவ் வார்த்தை சொல்லவும் வையார் இறே – என்றாள் பிராட்டி

திருவாய்ப்பாடியில் கிருஷ்ணன் பிறந்ததுக்கு பின்பு கம்புக் கற்றையும் ஒழிந்தார் –
இந்த பிராப்தி இல்லாதார் யுண்டோ –
பஞ்ச லக்ஷம் குடியில் கோபிகள் எல்லார்க்கும் சாதாரணம் அன்றோ –
நமக்கு விசேஷணம் என் என்று பேசாதே கிடந்தாள்

நப்பின்னாய்
என்கிறார்கள் –
தங்களுடைய கிலேசம் தீர்க்கைக்கும் –
தங்களுடைய ஆர்த்தி இவள் நெஞ்சிலே படுத்துகைக்காகவும்
நப்பின்னாய் -என்று பேரைச் சொல்கிறார்கள் –

தங்கள் ஆர்த்தைகளாய் -நம் வாசலிலே வர நம்முடைய நீர்மையால் உள்ளது தாங்கள் பெறாத படியால்
ஹே கிருஷ்ணா ஹே யாதவ ஹே ஸஹ என்று
அர்ஜுனன் கிருஷ்ணனை அஸத் கரித்து வார்த்தை சொல்லுமா போலே –
நப்பின்னாய் -என்று சிவிட்க்கு என்கிறார்கள் –

இங்கு வெறும் கிருஷ்ணனே யாய் நாம் இல்லை என்னும்
இடம் தோற்ற வேணும் என்று பேசாதே கிடந்தாள்

கந்தம் கமழும் குழலீ
என்கிறார்கள் -நீ இல்லையாகில் உள்ளு இப்படி யாமோ –
சமுதாய பரிமளமும் வ்யாவ்ருத்த பரிமளமும் நாங்கள் அறியோமோ –

சர்வ கந்த என்கிற வஸ்துவுக்கும்
வாசம் செய் பூம் குழலாள் ஆகையால் நாற்றம் கொடுக்கும் குழலை யுடையவள் அன்றோ –

கந்தம் கமழும்
நீ பிரதி வசனம் பண்ணிற்று இல்லை யாகிலும்
உன் குழலில் பரிமளம் பிரதி வசனம் பண்ணா நின்றது காண்-

கந்தம் கமழும் குழலீ
பரிமளம் தான் நிறம் பெறுவது இவள் குழலில் சேர்ந்த பின்பு –
வாசப் பூங்குழல் பின்னை தோள் மணந்ததும் (6-4-2)-என்னக் கடவது இறே

கடை திறவாய்
மலரிட்டு நாம் முடியோம் -என்கிற ப்ரதிஞ்ஜைக்கு விபரீதமாக
பூ முடித்தோம் என்று நினைக்கிறார்களாக கொண்டு பேசாதே கிடக்க
நாங்களும் எங்கள் சென்னிப் பூவை சூடும் படி வாசலை திறவாய் என்கிறார்கள் –
அமரர் சென்னிப்பூவை சூடும்படி (திரு நெடும் தாண்டகம் )

அப் பரிமளத்தை தலை நீர்ப் பாட்டிலே அனுபவித்து
அப் பரிமளத்தினுடைய வெள்ளத்திலே அழுந்திக் கிடந்து-அவனைத் தனியே அனுபவிக்க அமையுமோ –
வாசலைத் திறந்து எங்களையும் கூட்டிக் கொண்டு அனுபவிக்கப் பாராய்

கடை திறவாய்
கிண்ணகத்தை அணை செய்து கொடு கிடப்பாரைப் போலே
அடைத்துக் கொடு கிடவாதே கிருஷ்ணனுடையவும் உன்னுடையவும்
தேங்கி நிற்கிற பரிமளத்தை கடை வெட்டி விட்டு எல்லாரும் வாழும் படி புறப்பட விடாய்

பெரு வெள்ளத்தை அணை செய்வார் உண்டோ —
எங்கள் ஆர்த்தி தீராய் ஆகில் பெரு வெள்ளத்திலும் போக்கு விட வேண்டாவோ
உன்னுடைய போக்யதையில் அவன் அழுந்திக் கொடுக்கும் –
அவனை அனுபவிக்கைக்கு நாங்கள் வேண்டாவோ –
அனுபவிப்பார் தான் -அவயவங்களோடும் ஸ்ரக் சந்த நாதிகளோடும் அன்றோ அனுபவிப்பது –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் (10-3)-என்னக் கடவது இறே –

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
மத்திய ராத்திரியில் எழுப்புகிறது என் –
கதவு திறக்கும் போது விடிய வேண்டாவோ என்ன –

போது விடிந்தது காண் -என்ன –

விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –

விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ கோழி கூவுகிறது என்ன –

ஒரு கோழி கூவிற்று ஆகில் விடிந்ததாக வேணுமோ என்ன –

திரள் கூவா நின்றது என்ன –

ஒன்றினுடைய சப்தத்தைக் கேட்டு பலவும் உணர்ந்தது என்ன

எங்கும் –
சர்வோதிக்கமாக கோழி கூவா நின்றது காண் என்ன

உணர்ந்தவை எல்லாம் கூட எங்கும் ஒக்கக் கூப்பிட்டு
பின்னையும் உறங்கும் ஆகையால் இப்போதே கூப்பிட்டு அடங்கும் என்ன

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
என்கிறார்கள் –
வாசலைப் பற்றி திற என்பாரைப் போலே அன்றோ அழைக்கின்றன

கோழி அழைத்தன காண்
கோழி கூவும் என்னுமால் -என்று
உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே

எங்களைப் போலே கோழி அழைப்பதன் முன்னம் குளிக்கவும் வேண்டாவே
உனக்கு எங்கும் சாமக் கோழி கூவக் கடவதாய் அன்றோ இருப்பது –

அவை இப்போதே கிளர்ந்து அடங்கும்
இது அடையாளம் ஆக மாட்டாது –
வேறே அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன –

மாதவிப்-பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்-
குயில் கூவினது அடையாளம் அன்றோ என்ன –

ஒரு குயில் கூவும் காட்டில் விடிந்ததாக வேணுமோ என்ன –

குயில் இனங்கள் கூவிற்று என்ன –
ஒரு திரளாக ஒருக்கால் கூவும் போது விடிவுக்கு உடலோ என்ன –

திரள் திரளாக பல கால் கூவுமது உடலன்றோ என்ன –

உறக்கத்தாலே அனந்தலிலே பலகால் வாய் வெருவிற்று அத்தனை காணுங்கோள் என்ன

மாதவிப் பந்தல் மேல்
இப்பூம் படுக்கையினின்றும் இவை யுணரும் போது விடிந்ததாக வேண்டாவோ –
நோ பஜனம் ஸ்மரன் -என்று
முக்தன் சம்சார யாத்திரையை மறக்குமா போலே
படுக்கை வாய்ப்பாலே கிடந்து உறங்குகிறவையும் உணரும் போது விடிந்ததாக வேண்டாவோ

பல் கால்
உன் நோக்கும் உன் பேச்சுமே தாரகமாக இருக்கக் கடவ இவை
உன்னைக் காணாமே கதறி நாக்கு ஓட்டக் காண் புகுகிறது –
தயிர்ப் பழம் சோற்றோடு –

இனங்கள்
மேலே ஒரு திரள் கூவா நின்றது –
கீழே ஒரு திரள் கூவா நின்றது –
இவை ஒன்றும் கேளாதே உறங்குகிறாய் நீயே இறே

கண் படை கொள்ளும் இளங்குயிலே (5-6)-என்று
உறங்குகிற குயில்களையும் எழுப்பிக் கூவச் சொல்லுமவர்கள் ஆகையால்
கூவாத போது நீங்கள் இங்குத்து நின்றும் துரத்தி விடுவிகோள் (5-10 )என்று
ஊரில் இருக்கிறத்தைக் கூலியாகக் கொண்டு கூப்பிடுகிறது இத்தனை –
விடிந்தது அன்று என்று பேசாதே கிடந்தாள்

பந்தார் விரலி
நாங்கள் சொன்னவற்றுக்கு எல்லாம் ஒரோ உத்தரம் சொல்லி
உள்ளே கிடக்கிறது உன் குறை அறுகை இறே

பந்தார் விரலி
நாங்கள் சொன்னது எல்லாம் உன் நெஞ்சில் படாது ஒழிகிறது உன் செருக்கு இறே
கிருஷ்ணனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும் காணும் அணைத்துக் கொண்டு கிடக்கிறது –
லீலா உபகரணங்களை உறங்கும் போதும் கை விடாத படி யாய்த்து மௌக்த்யம் இருந்த படி –

இவளுக்கு போக உபகரணம் கிருஷ்ணன் –
பந்து லீலா உபகரணம் –

அவன் செண்டை ஒரு கையாலும் இவளை ஒரு கையாலும் அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
அவனுக்கு லீலா யஷ்டி போலே இவளுக்கு பந்து –

ஒரு கையாலே விபூதி –
விபூதிமான் ஒரு கையிலே —

நாரம் ஒரு கையிலே
அயனம் ஒரு கையிலே –

சேஷி ஒரு கையிலே
சேஷம் ஒரு கையிலே –

போக்யம் ஒரு கையிலே –
போக ஸ்தானம் ஒரு கையிலே

பந்தார் விரலி –
நாங்களும் அசேதனம் ஆனோம் ஆகில்
பந்தோபாதி-எங்களையும் பேணி உன் கைக்கு உள்ளே கிடக்கலாய்த்தே-

நீயும் அவனும் கூட இருந்த சேர்த்தியிலே நாங்கள் கிட்டி
எங்கள் கையில் இருக்க வேண்டாவோ பந்து –
எங்கள் கையிலும் பண்ணி பந்து பிடிக்க வேண்டாவோ உனக்கு

உனக்கு சேர்த்தியாலே பந்து கையிலே பொருந்திற்று –
எங்களுக்கு தழும்பும் கூட மறைந்து போயிற்று –

ஜ்யா கிண கர்க்கஸை -என்று
அவனுக்கு வில் பிடித்த தழும்பு போலே
இவளுக்கு பந்து பிடித்த தழும்பு –

செருக்காலே யுங்களை நினைத்திலேனாகச் சொல்லா நின்றி கோள்-
நீங்கள் தான் வந்த கார்யம் ஏது-
என் செய்ய நினைக்கிறது என் என்ன

உன் மைத்துனன் பேர் பாடச்
நீயும் அவனும் மைத்துனமை கொண்டாடி –
ஒருவருக்கு ஒருவர் உத்தரம் சொல்லி –
ஒத்து நில்லாமே
உன் பக்ஷத்தில் நின்று உனக்காக அவனை ஒத்தனை சொல்ல

நீ ஒன்றுக்கு ஒன்பது சொல்லும் போது –
நாங்கள் அவனுடைய தோல்வியும் உன்னுடைய வெற்றியும் தோற்ற
(அவனுக்கு பரிஹாஸமாக ) உனக்கு வேண்டுவன எல்லாம் சொல்லி உபகரிக்க வந்தோம் –

இருவரும் ஒன்றாய்ச் செல்லும் அன்றும் பிரிந்த அன்றும்
தாய் கூற்றிலே இறே பிரஜைகள் நிற்பது –

அஸ்மின் மயா ஸார்த்தம்-என்று
பெருமாள் தோல்வியைப் பிராட்டி இளைய பெருமாளுக்கு அருளிச் செய்ய
அவர் பிராட்டி பக்ஷத்தில் நின்றால் போலே

உன் மைத்துனன்
த்வயத்தில் பிரதம பதத்தில் படியே சொல்லுகிறார்கள்

பேர் பாட –
நாமும் பலவுடை நாரண நம்பி இறே –
இன்னாள் அடியான் இன்னாள் அடியான் -என்று
படைத்த பேருக்கு ஒரு அவதி இல்லை இறே

நாரணன் நம்பி
நீர் ஊர் பொதுவாம் படி சர்வாதிகர் அன்றோ –

நம்பி
உனக்கு நாங்கள் வேணுமோ –
எங்களை ஒழியவே பூர்ணர் அன்றோ என்று
இப்படி அவனுக்கு உள்ளன சொல்லிக் கொடுக்க –
ஆகில் கிருஷ்ணா திற என்றாள்

உன்னுடையாருக்கு நான் திறப்பேனோ என்றான்

நீங்கள் வருவுதி கோள் என்று யந்த்ரத்தால் திறக்கலாம் படி வைத்தேன் –
திறந்து கொண்டு புகுருங்கோள் -என்றாள் –

எங்களால் பெற இருக்குமவர்களோ நாங்கள் –
உன்னாலே பெற இருக்குமவர்கள் அன்றோ –
உன் கை பார்த்து இருக்கிறவர்கள் அன்றோ நாங்கள்

செந்தாமரைக் கையால்
மாஸூச என்னும் கை பார்த்து இருப்பவர்களோ நாங்கள் –
பவேயம் சரணம் ஹிவ என்னும் கை பார்த்து இருப்பவர்கள் அன்றோ நாங்கள்

‘மாதர் மைதிலி ராக்ஷஸீஸ்த்வயிததை வார்த்ராபராதாஸ்த்வயா
ரக்ஷந்த்யாபவநாத்ம ஜால்லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா’

நீங்கள் பண்ணின பாவத்துக்கு அஞ்ச வேண்டா என்கிறது –
பெருமாளுடைய அஞ்சேல் என்னும் திருக்கை –

ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு அஞ்ச வேண்டா என்கிறது
பெரிய பிராட்டியார் வைத்த அஞ்சேல் என்ற கை-

அவனும் ஆசைப்படும் கை இறே

தன் கை மேல் என் கை வைத்து -என்று
அணி மிகு தாமரைக் கைக்கு (10-3 )மேலே இருக்கும் கை –

செந்தாமரைக் கையால் –
பந்து பிடித்து சிவந்த கை –
இவர்கள் உறாவி இருக்க வளை ஓசை செவிப்பட ஒண்ணாது என்று
வளையை ஏற கடுக்கி திறக்கப் புக்காள்-

சீரார் வளை ஒலிப்ப
மேகம் முழங்கி வர்ஷிக்குமா போலே

சீரார் வளை
கலியார் சோற்றை வர்ணிக்குமா போலே
வளையைக் கொண்டாடுகிறார்கள் –

வளைக்கு சீர்மை யாவது –
கையில் நின்றும் கழலாது ஒழிகை –
விஸ்லேஷ வியசனம் அநுபவியாத வளை –

சங்கு தங்கு முன்கை —
ஒண் டொடியாள் திரு மகள் என்னக் கடவது இறே
இரு கையில் சங்கிவை நில்லா இறே –
கழல் வளையே ஆக்கினார் என்று வெறுக்கிறவர்கள் அன்றோ இவர்கள் –

சூடகமே தோள் வளையே -என்று
இவர்கள் பிரார்த்தித்த படியே அவர்கள் பூட்டினால் இறே இவர்களுக்கு வளை உள்ளது –

ஒலிப்ப —
கிருஷ்ணனும் ஓசையிலே உணர்ந்து –
நாங்களும் இத் த்வனி கேட்டு வாழும்படியாக வேணும் –
கிருஷ்ண சம்ஸ்லேஷத்துக்கு விரோதமாக ஒண்ணாது என்று கிடந்த இடந்ததே கிடந்து திறக்கப் புக்காள்

வந்து திறவாய்
எங்களுக்காக நாலடி வந்தாய் என்னும் தரம் நாங்கள் பெறும்படி வந்து திறக்க வேணும் –
நாலடி போய் வந்தாகிலும் திறக்க வேணும்
அவனும் நாங்களும் உன் நடை அழகைக் கண்டு வாழும் படி வர வேணும் –

மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
பெண்கள் ஆர்த்தர்களாய் வந்தார்கள் என்று சாஸ்த்ரார்த்தம் கொண்டாட ஒண்ணாது –
உகந்து வந்து திறக்க வேணும்

மகிழ்ந்து-
மார்கழி நீராட என்று நாங்கள் நோற்ற நோற்றுக்கு
உன்னுடைய மகிழ்ச்சி காண்கை அன்றோ யதோ உபாசனம் பலமாக வேண்டாமோ –

மகிழ்ந்து –
தர்மத்துக்கு திறக்க ஒண்ணாது –
பேறு உன்னதாக வேணும் –

அவன் பக்கலிலும் காட்டில் அவனுடையார் பக்கல்
நீ இருக்கும் இருப்பு உன்னுடைய முக விகாசங்களிலே தோற்றும்படியாக-

வந்து திறவாய்
கண்ணுக்கு இரை இட வேணும் வேணும் –

வளை ஒலிப்ப –
செவியின் பட்டினி தீர வேணும்

பேர் பாட
நாக்குப் பட்டினி ஒழிய வேணும்

செந்தாமரைக் கையால் –
ஸ்பர்ஸ இந்திரியம் வயிறு நிறைய வேணும் –

கந்தம் கமழும் குழலீ
க்ராண இந்த்ரியத்துக்கு இரையிட வேணும் –

மகிழ்ந்து
இப்படி சர்வ இந்திரியங்களுக்கும் விடாய் தீர்ந்தால்
மாநஸமான உகப்பு உன்னதாக வேணும் –

எம்பெருமானார் விசேஷித்து உகந்து இருக்கும் பாட்டு இப்பாட்டு

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை — அம்பரமே தண்ணீரே சோறே–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 7, 2017

நேச நிலைக் கதவம் நீக்கு -என்றார்கள் திரு வாசல் காப்பானை –
அவன் கருந்தாளை யுருவி உள்ளே புக விட்டான் –

ஒருவரை ஒருவர் சென்று எழுப்புகிற போது அங்கே தனித் தனியே பட்டதை
இங்கே எல்லாரும் திரள படுகிறார்கள் –

இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைப் பெற்று (திரு விருத்தம் -97)
அனுபவிக்கிற திரள் இறே உள்ளுத் திரள்

பெறுகைக்குப் படுகிற திரள் –
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள்-
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –

அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் -(4-6-8 )
கால நல் ஞானத் துறை படிந்து ஆடி (திரு விருத்தம் -93)–என்னுமா போலே –

நல் ஞானம் ஆகிறது –
ப்ராப்ய
ப்ராபகங்கள்-இரண்டும் அவன் என்கை –
விஞ்ஞானம் யதிதம் பிராப்தம் -என்னுமா போலே –

துறை யாகிறது –
முறை தப்பாமே குரு பரம்பரை வழியே பற்றுகை –

த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாத ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –

வேதம் வல்லார்கள் -என்ற இடத்தில் குரு பரம்பரையை நினைத்து
கீழ்ப் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –

விண்ணோர் பெருமானில்-
விண்ணோர் ஆகிறவர்கள்-த்வார பாலகர் தொடக்கமாக திவ்ய மஹிஷிகள் ஈறாக உள்ளவர்கள் இறே

திரு வாசல் காப்பாரை அனுமதி கொண்டு உள்ளே புகுந்த அளவிலே
முதல் கட்டிலிலே பிள்ளைக்கு காவலாகக் கிடந்தார் ஸ்ரீ நந்த கோபர் –
கிருஷ்ணனை பெண்கள் களவு காண்பார்கள் என்று நோக்கிக் கிடப்பர் –

அநிருத்தனை அகப்பட களவு காண்கிற பெண்கள்
இவனுடைய சம்பந்தம் கொண்டு அவன் அழகுக்கும் வாய்த்தலையான இவனைப் பெற்றால் விடார்களே
சாஷான் மன்மத -என்கிற கிருஷ்ணனைப் பெற்றால் விடார்கள் என்று
நோக்கிக் கொண்டு கிடக்கிறவரைச் சென்று பற்றினார்கள்

உள்ளுக் கிடக்கிறது வைத்த மா நிதியுமாய் –
தாம் எடுத்த பேராளனுமாய் –
நிதி எடுத்தவருமானால் நோக்காது இரார் இறே –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

அம்பரமே–வஸ்த்ரங்களையே
தண்ணீரே–தீர்த்தத்தையே
சோறே–சோற்றையே
அறம் செய்யும்–தருமமாக அளிக்கின்ற
எம் பெருமான் நந்த கோபாலா–எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே!
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்.
கொம்பு அனார்க்கு எல்லாம்–வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம்
கொழுந்தே–முதன்மை யானவளே!
குலம் விளக்கே–(இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே
எம்பெருமாட்டி–எமக்குத் தலைவி யானவளே!
அசோதாய்–யசோதைப் பிராட்டியே!
அறிவுறாய்–உணர்ந்தெழு’
அம்பாம் ஊடு அறுத்து–ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு
ஓங்கி–உயர வளர்ந்து
உலகு அளந்த–எல்லா) உலகங்களையும் அளந்தருளின
உம்பர் கோமானே–தேவாதி தேவனே!
உறங்காது–இனிக்) கண் வளர்ந்தருளாமல்
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்
செம் பொன் கழல் அடி–சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய
செல்வா–சீமானே!
பலதேவா! –பல தேவனே!
உம்பியும் நீயும்–உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல்–உறங்காதொழிய வேணும்’

அம்பரமே- தண்ணீரே சோறே
எங்கள் அபிமதம் பெறாமைக்கு லுப்தன் வாசலிலேயே நாங்கள் துவண்டு கூப்பிடுகிறது –
அர்த்திகள் கொண்டு அல்லது தரியாதாப் போலே-
கொடுத்து அல்லது தரியாத உம்முடைய வாசலிலே நாங்கள் வந்தது
எங்கள் குறை தீர்க்கைக்காகவோ –
உம்முடைய குறை தீர்க்கைக்கு நாங்கள் வந்து நிற்க நீர் உறங்குவது என்

தன் பக்கல் கார்யம் கொள்ளுமவர்களை உதார என்று கிருஷ்ணன் சொல்லுவது
உம்முடைய வயிற்றில் பிறப்பால் அன்றோ
பெற்றாலும் அங்கனேயோ என்று பெறா விட்டாலும் தரிக்கலாமவையோ நீர் கொடுப்பது

அர்த்தித்தவர்களுக்கு ரூப சாதனமான வஸ்திரம் –
தாரகமான தண்ணீர் –
போஷகமான சோறு –
வேண்டுவார்க்கு வேண்டுவது எல்லாம் கொடுக்கிற உமக்கு
நாங்கள் வேண்டிற்று எல்லாம் தர வேண்டாவோ –

அம்பரமே என்கிற அவதாரணத்தாலே
ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கத் தக்கது என்னும் படி இருக்கையும் –
அது தான் புஷ்கயசஸ் ஸூ க்கு கொடுக்கை இன்றிக்கே-
பல அபிசந்தி ரஹிதமாகக் கொடுக்கையும்
கர்த்தவ்யம் என்கிற பிரதிபத்தியோடே -தன் பேறாக ஆன்ரு சம்சயத்தாலே கொடுக்கையும் –

செய்யும்
மஹதா தபஸா ராம -என்று சக்கரவர்தியைப் போலே
அவதாரத்துக்கு அதிருஷ்ட யத்னம் பண்ண வேண்டா இறே-
எடுத்த பேராளன் ஆகையால்

இனி பண்ணுகிறது பிள்ளையினுடைய மங்களார்த்தமாகவும்
விஜயார்த்தமாகவும் அத்தனை -இறே

பெறிலுமாய் இழக்கலு மானவையையோ இப்படி கொடுக்கலாவது –

எங்கள் தாரகாதிகளை தரலாகாதோ
பல கூடி தாரகமானவையோ தரலாவது
எல்லாம் ஒன்றேயான வஸ்துவைத் தரலாகாதோ
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவா -என்று எல்லாம் கண்ணன் என்று இருக்குமவர்கள் -நாங்கள் –

எம்பெருமான்-
எங்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி யானவனே

எம்பெருமான்
நாட்டில் பெண்களுக்கு தானம் கொடுப்பார் இல்லை கொள்ளுகைக்கு அதிகாரிகள் அல்லாமையாலே
வாஸூதேவஸ் சர்வம் என்று இருக்கிற எங்களுக்கு
கிருஷ்ணனை உபகரிக்கையாலே விசேஷித்து எங்களை எழுதிக் கொண்டவனே

நந்த கோபாலா
நந்தகோபன் குமரன் என்று உம்முடைய ஆன்ரு சம்சயத்தைக் கொண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது –

பெற்றுத் தந்த நீர்
குறையும் தாரீரோ நாங்கள் அனுபவிக்கும் படி –
தாரா பித்ரு க்ருத இதி என்னப் பண்ணீர்-
கிருஷ்ணனையும்
(ஐயர் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டுமே )

பெருமாள் பிராட்டியை உகப்பது
ஆபி ஜாத்தியத்தாலும் (மம ஸூதா)
அழகாலும் (இயம் சீதா)
குணத்தாலும் அல்ல -(ஸஹ தர்ம சாரிணி )
ஐயர் விவாஹம் பண்ணி வைத்தவள் என்றே

எழுந்திராய்
உதாரர்க்கும் உறங்க விரகுண்டோ-
உதாரா என்றது இவர் சம்பந்தம் கொண்டே காணும் மகனுக்கும் –

குணைர் தசரதோ உபம -என்னக் கடவது இறே சக்கரவர்த்தி திருமகனையும் –
ஸர்வேஸ்வரத்வ குணங்களும் பிறந்து படைத்த குணங்களும் எல்லாம் கூடத் தும்பு கூட்டினால்
சக்கரவர்தியோடே ஓப்பன் என்னப் போரும் அத்தனை

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் –
அறம் செய்கிறவர் ஆகையாலும்-
எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும்
நீர் தாம் கோபாலர் ஆகையாலும்
ஜீவ லோக ரக்ஷணம்
ஸ்வ ஜன ரக்ஷணம் –
ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் –
இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –
இனிது மறித்து நீரூட்டுகிறதும்
வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும்
இவர் வயிற்றில் பிறப்பால் இறே
ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –

உள்ளே புகுருங்கோள் என்னாதே உணர்ந்து
அனுமதி பண்ணினமை தோற்றக் கிடந்தார் –

அவர் அனுமதியைப் பெற்று
நடுவில் கட்டிலிலே புக்கு யசோதை பிராட்டியை எழுப்புகிறார்கள் –

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
பிராட்டியை எழுப்பி அவள் முன்னாக அவன் பக்கலிலே கார்யம் கொள்ளுமா போலே
யசோதை பிராட்டியை எழுப்பி
பின்னை ஸ்ரீ நந்தகோபரை எழுப்ப ப்ராப்தமாய் இருக்க –
முற்பட அவரை எழுப்பி பின்னை இவளை எழுப்புவான் என் என்னில்

பிள்ளை பக்கல் உண்டான ஸ்நேஹத்தாலே என் புகுகிறதோ என்னும் பயத்தால் –
கூர் வேல் கொடும் தொழிலன்-என்னும்படி
உருவிப் பிடித்த வேலும் தாமுமாய் புறக் கட்டிலிலே கிடப்பர் ஸ்ரீ நந்தகோபர்

இவள் பிள்ளை பக்கல் வாத்சல்யத்தாலும்
பர்த்ரு சங்கத்தாலும் உள் கட்டிலிலே நடுவே யாய்த்து கிடப்பது –

இவைகள் இடைப் பெண்கள் ஆகையால் கண்டதுக்கு மேற்பட்ட
அடைவு அறிந்து எழுப்புமவர்கள் அல்லரே-
ஆகையால் பிற்பட்ட எழுப்புகிறது

ஸ்ரீ நந்த கோபருடைய படுக்கைத் தலையையும் விடாள்-
பிள்ளையுடைய தொட்டில் காற்கடையையும் விடாள் –
அவரைத் தன் முலையால் அணைக்கைக்கும்
இவர்களுக்கு முலைப் பால் கொடுத்து வளர்க்கைக்கும் நடுவிலே கட்டிலே கிடக்கும்
பிராட்டி சர்வேஸ்வரனையும் விபூதியையும் கை விடாதே இருக்குமா போலே –

இது இறே விபூதி த்வயத்துக்கும்
நிருத்தி த்வயத்துக்கும் விஷயம் -(ஸ்ரீ யதே ஸ்ரியதே

த்ரயாணாம் பரதாதி நாம் ப்ராத்ரூணாம் தேவ தாசய
ராமஸ்ய சமன காந்தா ப்ராணே ப்யோபி கரீ யஸீ —
(மைத்துனன் மார்கள் மூவரும் சீதா பிராட்டியை வணங்க இவள் பெருமாளை ஆஸ்ரயித்து )

உன் திரு (10-10-2 )–
நங்கள் திரு -(இரண்டாம் திருவந்தாதி 56)
திவ்ய மஹிஷீம் அகில ஜெகன் மாதரம்
யஸ்ய காடாஷா லக்ஷணம் –
ஜனன பவன ப்ரீதியா-

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே
இரண்டுக்கும் கடவ அவன் உணர்ந்தால் ஒன்றுக்கும் கடவ நீ உறங்கக் கடவையோ –
வஞ்சிக் கொம்பு போலே இருந்துள்ள ஸ்திரீகளுக்கு எல்லாம் தலையானவளே

கொழுந்தே
பெண்களுக்கு ஒரு குறை வரில் உன் முகம் அன்றோ வாடுவது –
நாரீணாம் உத்தமா என்கிற பதம் பெறும் போது அவள் படி உனக்கு உண்டாக வேண்டாவோ
தன்னை நலிகிற ராக்ஷஸிகளுக்கு பவேயம் சரணம் ஹிவ-என்று அவள் சொன்னால் போலே
ஆர்த்தைகளாய் வந்த எங்களையும் அஞ்சாதே என்ன வேண்டாவோ –

குல விளக்கே
எங்களுக்கும் உன்னுடைய குலத்துக்கும் மங்கள தீபையாய்க் கொண்டு ப்ரகாசகை ஆனவளே-
விளக்கு அந்நிய நிரபேஷமாக பதார்த்த தர்சனத்துக்கும்
தன்னுடைய தர்சனத்துக்கும் ஹேது வாமா போலே –

கொழுந்தே குல விளக்கே
ஆயர் கொழுந்தையும்
ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் –
நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –

எம்பெருமாட்டி –
எங்களுக்கு கிருஷ்ணணைப் பிள்ளையாக பெற்று உபகரித்து
எங்களுக்கு ஸ்வாமி நியானவளே

எம்பெருமாட்டி
நானயோர் வித்யதே பரம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-அந்த மிதுனத்தில் சொல்லுகிறது எல்லாம் இங்கே சொல்லுகிறார்கள் –
கண்ணன் எம்பெருமான் (6-7-1 )-என்று கிருஷ்ணனைச் சொல்லும் பாசுரம் —
எம்பெருமான் நந்த கோபாலா என்று
ஸ்ரீ நந்த கோபரைச் சொல்லக் கடவதானால்-
எம்பெருமாட்டி என்பது இவளை இறே

நாரீணாம் உத்தமைகள் அகப்பட உன் கை பார்த்து இருக்கும் படி அன்றோ உன் வேண்டற்பாடு
கிருஷ்ணன்
நீளா நாயகனாய்
கோபி ஜன வல்லபனாய் இருக்கும் அளவன்றிக்கே-
மண் மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் (பெரிய திருமொழி 10-7-)-என்று
இடைச்சேரியாய் சொல்லும் படி
ஸ்ரீ பூமி வல்லபன் ஆகையால்
பிரதான மஹிஷிகளும் கும்பிடும் படி அன்றோ உன்னுடைய ஏற்றம் இருப்பது –

யசோதாய்
சஜாதீயை யாகையாலே
வியதிரேகத்தில் தங்கள் நோவு அறியும் என்கிறார்கள்

யசோதாய்
கிருஷ்ணனும் பெண்களுமான சேர்த்திக்கு உகக்குமவள் என்று இருக்கிறார்கள் இவளை
ஹித காமரான ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்று இறே
பிரிய காமையான நீ –
(அறம் செய்யும் அவன் ஹித புத்தி -இவள் பிரிய காமை )

அஞ்ச யுரப்பாள் யசோதை (நாச்சியார் -3-9 )-என்கிற
இது பற்றாசாகக் கொண்டு நாங்கள் வந்தது –
இவள் பிள்ளையுடைய அருமையாலே ஊர் இத்தனையும் திரிந்து அழிவு செய்து மூலை அடியே திரிந்தாலும்
ஏதேனும் ஒரு படி செய்து இவன் ஸூகமே இருக்க அமையும் என்று
ஒரு நாள் ஒழியாமே தீம்புக்கு பெரு நிலை நிற்கும்

ஊரடைய முறைப்பட்டவாறே ஸ்மிதம் பண்ணிக் கொண்டு செய்தாயோ என்றும்
இங்குத்தை அளவு அறிவோம் என்று துணிகைக்கு உடலாய் இருக்கும் –
இது பற்றாசாக அன்றோ வந்தது

அறிவுறாய்
இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும்
இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால்
நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் –
அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்

அம்பரமூடறுத்து
மாதா பிதாக்களுக்கு நான் பரதந்த்ரன் அன்றோ என்று
உனக்கு கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி அக்குறை தீர்ந்து
அவள் அனுமதி கொண்டு வந்து புகுந்தோம் –
நீ இனி உறங்குகிறது என் என்கிறார்கள்

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
திருக் கையில் நீர் விழுந்தவாறே ஆகாசம் அவகாசம் அடைய விம்ம வளர்ந்து வரையாதே எல்லார் தலைகளிலும்
திருவடியை வைத்து பூமியை அளந்து கொண்டு தேவ ஜாதிக்கு குடியிருப்பைக் கொடுத்து
இந்த்ராதிகளை எழுதிக் கொண்டவனே –
இரு விசும்பினூடு போய் இத்யாதி -(திரு நெடும் தாண்டகம் )

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
இத்தால் நிருபாதிக ரக்ஷகன் ஆகையால் ரக்ஷகமே விளைநிராக வளர்ந்த படி

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –

உம்பர் கோமானே –
இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே

உறங்காது எழுந்திராய்
ரக்ஷகராய் இருப்பாற்கு உறங்க விரகுண்டோ –
ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்களாய் மானவர்களுக்கோ கார்யம் செய்யலாவது –
அபலைகளுமாய் அனன்யா பிரயோஜனைகளுமான வர்களுக்கு கார்யம் செய்யலாகாதோ
வரையாதே உகப்பாரையும் யுகவாதாரையும் தீண்டுகிற நீ -ஆசைப்பட்ட எங்களைத் தீண்டல் ஆகாதோ
நீயே அர்த்தியாய் கார்யம் செய்யக் கடவ யுனக்கு நாங்கள் அர்த்திக்கை குற்றமோ –
நீ நிபுணரான இந்த்ராதிகளுக்கோ கார்யம் செய்யலாவது -அநிபுணரான எங்கள் கார்யம் செய்யலாகாதோ
உறங்குவாரை தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தாரை தழுவல் ஆகாதோ
அவிசேஷஞ்ஞமான விபூதிக்காக உன்னைக் கொடுத்தால் வாசி அறிவார்க்கு உன்னைக் கொடுக்கலாகாதோ –
கழஞ்சு மண்ணை ஆசைப்படாதே உன்னை ஆசைப்பட்டது இழவுக்கு உடலாயத் தாகாதே

உம்பர் கோமானே
நித்ய ஸூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு நிற்கிற இருப்பாகவுமாம் –
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளையிட்டோ காடும் மோடையும் அளப்பது –
இது ஒரு வாத்சல்யமே -என்று
அவர்களும் தோற்கும் படி இருக்கை-

உறங்காது எழுந்திராய்
சதா பஸ்யந்தி என்று இமை கொட்டில் மூச்சடங்கும் படியான வர்களை படவடித்து-
எங்களை உகந்து
எங்களுக்கு முகம் காட்டாதே உறங்கி எங்களையும் படவடியாதே எழுந்திராய்

உறங்காது எழுந்திராய் –
இங்கு இருக்கவும் அளக்கவும் வேண்டா -அவ்வடிவை அனுபவிக்க அமையும்
உலகு அளந்த இளைப்பாலே உறங்குகிறாய் -என்கிற எங்கள் வயிறு எரிச்சலை தீர்க்க அமையும் —

நடந்த கால்கள் நொந்தவோ -(திருமழிசை )
இப் படி தான் நீண்டு தாவிய அசைவோ -(8-3-)
அன்று இவ் வுலகு அளந்த அசைவே கொல்-(பேயாழ்வார் )
தாளால் உலகு அளந்த அசைவே கொல் (பெரிய திருமொழி )-என்று இறே இவர்கள் வயிறு எரிவது –

உறங்காது எழுந்திராய்
எல்லிப் பகல் என்னாது எப்போதும் (பெரிய திருமொழி ) -என்கிறபடியே
இரா உறக்கமும் இன்றி -பகல் உறக்கமும் இன்றி -பாண்டவர்கள் கார்யம் செய்து திரிந்து –
அது தலைக் கட்டின பின்பும் –
ரிணம் ப்ரவ்ருத்தம் -என்று புண் பட்ட பின்பும் தான் உறங்காதவன் அன்றோ –

அனித்ரஸ் சததம் ராம -என்று கேட்டு இருந்த படி அழகியதாய் இருந்தது –

கோவிந்தா என்ற சொல்லோடே அவள் முன்னே நிற்கப் பெற்றிலோம் –
அவதார பிரயோஜனம் பெற்றிலோம் என்று இருந்தபடிகள் எல்லாம் அறிந்தோம் -இறே

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
உபய விபூதி யோகத்தால் வந்த செருக்கடைய பிரணயிநிகளோடேயோ காட்டுவது –

இப்படி இவர்கள் சொல்லச் செய்தேயும்
அண்ணனை எழுப்பி நம்மை எழுப்பிற்றிலர்கள்-முறை தப்பினார்கள்
எழுந்திருக்கில் நாமும் கூட்டாவுதோம் என்று பேசாதே கிடந்தான் –

ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா-(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளும் )என்றும்
ப்ரேஷி தஜ் ஞாஸ்து கோசலா (நினைப்பதை அறிவார்கள் கோசல குலத்தார் )-என்று
நினைவும் பார்வையும் அறியுமவர்கள் ஆகையால்
க்ரமம் தப்பினோம் ஆகாதே என்று நம்பி மூத்த பிரானை எழுப்புகிறார்கள் –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –
இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –

லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்ற
அவரைப் போலே முன் பிறந்து கைங்கர்ய ஸ்ரீ யைப் படைத்தால் –
அவரைப் போல் உறங்காது இருக்கவும் வேண்டாவோ –
பெருமாளும் பிராட்டியும் கண் வளரும் போது புறம்பு மதிளாய் நின்று நோக்கும் அத்தனை இறே அவர்

கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –
சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர்விதை ராமேனாச்வா சீதா கோபியோ ஹரினா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுகிற உனக்கு உறங்க விரகு உண்டோ

பல தேவா
பல தேவர் என்று திரு நாமம் -பலைகதாமநி

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உனக்கு பவ்யனான தம்பியும் -அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காது ஒழிய வேணும் –

அவனும் பிறப்பால் பாரதந்தர்யம் கொண்டாட –
நீ உன் ஸ்வரூபத்தால் பாரதந்தர்யம் கொண்டாட நாங்கள் இழந்தே போம் எத்தனையோ –
திரு வனந்த ஆழ்வானுக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம் இறே –
சென்றால் குடையும் -இத்யாதி

உம்பியும் நீயும்
உன்னுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிறவனும் –
அவனுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிற நீயும் –
அவன் பாரதந்தர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும் –
இவன் ஆற்றாமையால் கட்டிக் கொண்டு கிடக்கும் –

புல்கும் அணையாம்-என்று
நாய்ச்சிமாரைப் பிரிந்தால் ஆற்றலாய் இறே இருப்பது –

பிராட்டியைப் பிரிந்து நெடு நாள் இருந்தார் –
இளைய பெருமாளை பிரிந்த பின்பு அமுது செய்திலர்
லஷ்மனேந கதாம் கதிம்-என்று
என் தம்பி போன வழியே நானும் போம் அத்தனை என்று எழுந்து அருளினார்

உம்பியும் நீயும் உறங்கேல்
படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி
படுக்கைக்கு உறக்கம் உண்டோ

அவன் படுக்கையான நீ உணர்ந்து
எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )

உம்பியும் நீயும் உறங்கேல்
இப்போது கிடந்தது உறங்க –
நாங்கள் அர்த்திகளாய் வந்து எழுப்பின பின்பு எழுந்து இராதே
நாங்கள் பட்டது எல்லாம் நீ எங்கள் வாசலிலே பட விறே புகுகிறாய்

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
நாங்கள் உன்னைக் கால் காட்டுகிற போதே எழுந்து இராதே
பின்னை தனித் தனியே கால் கட்ட இறே நீ புகுகிறது
(ஸ்வரூப நாசம் ஆகுமே பாகவத அபசாரம்
அம்பரீஷன் துர்வாசர் )

இழவிலே-
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தி-என்பார்கள்

ஊடின போது –
தீ முகத்து நாகணை -என்பார்கள்

உகந்த போது –
நாகணை மிசை நம்பிரான்

ஸ்ரீ குஹப் பெருமாள் -மஹா ராஜர் -திருவடி -விபீஷண ஆழ்வான்-எல்லார்க்கும்
இளைய பெருமாள் இறே புருஷகாரம்
ஆன பின்பு அவனையும் எழுப்பி நீயும் எழுந்திராய் என்கிறார்கள் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை — -நாயகனாய் நின்ற –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 6, 2017

முதல் ஐந்து பாட்டாலே
பகவத் அனுபவ உபகரணங்கள் அருளிச் செய்யப் பட்டன

ஆறாம் பாட்டாலே –
பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அநந்ய பிரயோஜனராய் -இவ்விஷயத்தில்
தேசிகர் இன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே
தேசிகர் ஆக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்று இருக்கை
ஸ்ரீ வைஷ்ணத்வ லக்ஷணம் என்று அவர்களுடைய ஸ்வ பாவத்தை சொல்லுகிறது –

ஏழாம் பாட்டாலே –
பகவத் விஷயத்திலே ஞாதமான அர்த்தம் ஒருத்தனுக்கு விஸ்திருதம் ஆனால்
தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் என்கிறபடியே அறிவிக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

எட்டாம் பாட்டில் –
பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பாரைக் குறித்து சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைப் பற்றுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

பத்தாம் பாட்டில் –
ஞாநித்வாத்மைவமே மதம் -என்றும் –
அஹம் சச மம ப்ரிய என்றும் –
அவன் பக்ஷபதித்து இருப்பார் பக்கல் நித்ய சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

11-பாட்டில் –
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது

12-பாட்டில்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார்கள் நமக்கு உத்தேச்யராம் அளவு அன்றிக்கே
தத் சம்பந்தி சம்பந்திகளும் உத்தேசியர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
13-பாட்டில்
பகவத் அனுபவ பரிகரமான ஞான வைராக்ய பக்திகளால் பூர்ணராய் இருப்பார் திறத்து
ததர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர் சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது

14-பாட்டில்
பகவத் விஷயத்திலே மூட்டுகையாலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னாக
பகவத் அனுபவம் செய்கை ஸ்வரூபம் என்கிறது –

15-பாட்டில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸமூஹம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த சமூகமாக அவர்களை உகத்தல் ஸ்வரூபம் என்கிறது –

பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும் தனித்தனியே எழுப்பின படிக்கு உப லக்ஷணம் –
இப் பத்து பெண்களையும் எழுப்பினது –

முற்பட உணர்ந்த பெண்கள் உறங்குகிறவர்களையும் எழுப்பி –
எல்லாரையும் கூட்டி பெரும் கூட்டமாகத் திரண்டு
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும்
திரு வாசல் காக்கும் முதலிகளையும்
திருவாசல் திருக் காப்பு நீக்க வேணும் என்று இரக்கிறார்கள்-

செய்யாதன செய்யோம் -என்று
பண்ணின ப்ரதிஞ்ஜையை அனுஷ்டான பர்யந்தம் ஆக்க வேணும் இறே –

உகந்து அருளின நிலங்களில் உள்ளுப் புகும் போது
ஷேத்ராதிபதிகளையும்
த்வாராத்யஷர்களையும் அனுமதி கொண்டு
புக வேணும் என்று ஸ்ரீ பகவத் சாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தம்
இவர்கள் ஆயர் சிறுமியர்களாய் அறிந்திலர்களே ஆகிலும்
உள்ளே புகுர விட வேணும் என்னும் ஆசை யோடே இருக்கையாலே
ஞானாதிகருடைய அனுஷ்டானமும் கோல் விழுக்காட்டாலே பலிக்கிறது –

ஜனபத சரி தந்த ரீப–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
ஸ்மேராநநா ஷிக மலை–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
த்வதீய கம்பீர மநோ நு சாரிண (ஸ்ரீ ஆளவந்தார் )-என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரத்தை வைதிக விதிகள் பின் செல்லும் அத்தனை இறே

ராகத்தால் ஸ்வயம் ஏவ ப்ரவ்ருத்தாராம் இடத்தில் ராகத்துக்கு விதி முற்பட மாட்டாது

ராகம் தனக்கும் விதி அடி ஆகாதே –
அருளினன்(1-1-1 ) என்கிற பகவத் பிரசாதம் அடி யாய்த்து இறே

இனி ஓர் அடி இட வேண்டினாலும் ருசி கார்யம் ஆகையால்
ருசி உத்பாதகனான அவன் தானே அடியாம் அத்தனை இறே

இது தான் இதர விஷயத்திலே ருசி அன்றே –
வகுத்த விஷயத்திலே ருசி இறே –
காம்ய கர்மாதிகாரிகளுக்கும் த்யாஜ்யமாய் இறே இது இருப்பது

தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம -என்கிறது ஜென்மமாய்-
சா வித்யா யா வி முக்தயே–என்கிறது வித்யையாய் –
யன்ன பந்தாய -என்கிறது கர்மமாய் –
வரும் வழி அறியும் போது
சாஸ்த்ர சங்கத்தை வரியடைவே கற்று அர்த்த நிர்ணயத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் நெடும் காலம் செல்லும்

அத்தை அப்யசித்தவர்கள் அதனுடைய தாத்பர்யத்தை கேட்ட அநந்தரம் அனுஷ்ட்டிக்கலாய் இருக்கும்

குளிகை கைப் பட்டால் இரும்பு பொன்னாமா போலே பலிப்பதும் செய்யும்

நஞ்சீயர் நம் பிள்ளைக்கு -ரச வாதம் கைப்பட்டவன் இருந்த இடம் எல்லாம் பொன்னாமா போலே
ப்ரமேயம் கைப் பட்டவனுக்கு சொல்லிற்று எல்லாம் வார்த்தையாம் -என்றார் –

முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய
உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே
நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில்
அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை
இப் பாட்டாலே சொல்லுகிறது –

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

நாயகன் ஆய் கின்ற–(எமக்கு) ஸ்வாமி யாயிருக்கிற
நந்தகோபனுடைய–நந்த கோபருடைய
கோயில்–திரு மாளிகையை
காப்பானே-காக்குமவனே!
கொடி-த்வஜ படங்கள்
தோன்றும்-விளங்கா நிற்கப் பெற்ற
தோரணம் வாசல்–தோரண வாசலை
காப்பானே–காக்குமவனே!
மணி-அழகிய
கதவம்-கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோ முக்கு–இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன்–ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்
நென்னலே–நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான்–ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ–(அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான்-பாடுகைக்காக
தூயோம் ஆய்–பரிசுத்தைகளாய்
வந்தோம்–(அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா–ஸ்வாமி!
முன்னம் முன்னம்–முதல் முதலிலே
வாயால்–(உமது) வாயினால்
மாற்றாதே–மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம்–கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையை யுடைய கதவை
நீ–நீயே
நீக்கு–நீக்க வேணும்’

நாயகனாய் நின்ற –
நாயகனாய் என்கிற நாயகத்வம் திரு வாசல் காக்கும் முதலிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம் –
ஸ்ரீ நந்த கோபர்க்கு விசேஷணம் ஆகவுமாம் –
உத்தேச்யமாய் பாவிக்கிற கிருஷ்ணன் பக்கல் சொல்லாது (செல்லாது )ஒழியும் அத்தனையே வேண்டுவது
(நாயகனாய் நின்ற மணி வண்ணன் மாயன் சேராதே இப்பொழுது )
கடகரை சேஷி என்று இருக்குமவர்கள் இறே இவர்கள் –

ஆளவந்தார் எம்பெருமானை ஸ்தோத்ரம் பண்ண என்று புக்கு ஆச்சார்ய ஸ்தோத்ரத்திலே இழிந்தார் –
அதுக்கு அடி –
ஒருத்தன் ரத்னத்தைக் கொடுத்தால் அதன் விலை அறிய -அறியக்
கொடுத்தவன் பக்கல் விருப்பம் பிறக்குமா போலே
சாஸ்திரங்கள் எங்கும் அப்யஸித்து பார்க்கும் இடத்து
உபாயமாகத் தோற்றுகிற கர்ம ஞான பக்திகள் பேற்றுக்கு சாதனமாக மாட்டாது –

பகவத் சம்பந்திகளை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுமது பேற்றுக்கு உடல் என்று
ஸ்வ பிரபந்தத்தில் முதலிலும் முடிவிலும்
பரமாச்சார்யரான பெரிய முதலியாரைப் பற்றினார் –

த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்று
தாம் பண்ணின ப்ரபத்தியையும் கீழில் அவற்றோடு காற்கடைக் கொண்டு –
நாத முனிம் வி லோக்ய -என்று பெரிய முதலியாரை முன்னிட்டார் –

பிரபத்தி பண்ணுகிறவன் இவன் ஆகில் –
பேறு அவனாலே யாகில் –
இவர்களை முன்னிடுகிறது என் என்னில்

சாபராதனான இவன் பிரபத்தி பண்ணுகிறான் என்று இவனுடைய பூர்வ அவஸ்தையை நினைத்து
ஈஸ்வரன் சிவிட்க்கு என்னவும் கூடும்
அது செய்யாத படி மறுக்க ஒண்ணாத மனிசரை இட்டுப் பொறுப்பிக்கவும் வேணும் –

இவனுக்குப் பிறக்கும் அத்யவசாயமும் போட்கனாகையாலே
மெய்யான வியவசாயம் யுடையாரை முன்னிட்டு அல்லது கார்யகரம் ஆகாது என்று முன்னிடுகிறது

பாபிஷ்ட -க்ஷத்ர பந்துச் ச புண்டரீகச் ச புண்யக்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் –

வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -(நான்முகன் )
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -(திருவாய் -7-10-11 )
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -(பெரிய திருமொழி -2-6)
ஆர் தொழுவார் பாதமவை தொழுவது அன்றே (இரண்டாம் )-என்றும் இவை இறே ஆழ்வார்கள் படி –

உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் —
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -ஈஸ்வரனுடைய கிருஷிக்கு பலம் இவர்களோடு சம்பந்திக்கை இறே –
செல்வனைப் போலே -ஏத்த வல்லார் அடியோம் -என்ற பெரியாழ்வார் இருக்கை இறே
தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று ஆண்டாள் இருந்தது

பட்டர் -நஞ்சீயரை -பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகன் முழு வேழ் உலகுக்குமாய் (6-4 )-என்றும் –
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும் –
சகல லோகங்களுக்கும் சகல தேவதைகளுக்கும் நாயகனான சர்வேஸ்வரன் நம்முடை நாயகன் என்று
யசோதை பிராட்டி உட்பட சொல்லும் படி ஆயர் நாயகனாய் நிற்க

உந்தம் அடிகள் முனிவர் -என்று
பிரசித்தமாம் படி ஸ்வாமிகளாய் நியமிக்கிறார் ஸ்ரீ நந்தகோபர் ஆகையால்
உபய விபூதி நாயகனான கிருஷ்ணனுக்கும் நாயகர் ஆகையால்
ஸ்ரீ நந்த கோபரை-
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்கிறார்கள் –

நந்த கோபனுடைய கோயில்
கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்
நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி
தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால்
அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற
கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே
நந்த கோபனுடைய கோயில் என்கிறது

யுவராஜா மம அந்நிய -என்று சக்கரவர்த்தி ஆசைப்பட்டு பெறாத போனதை –
நந்தகோபன் இளவரசு என்கையாலே
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் –

வாசுதேவன் மதுரை மன்னன் -என்கையாலே –
இப் பேறு ஸ்ரீ வாசுதேவர்க்கும் இல்லை

நந்தன் பெற்றனன் வாசுதேவன் பெற்றிலன் -என்று
ராஜ குலங்களில் பிரசித்தம் இறே

பரம பதம் தன்னிலும் வான் இளவரசு இறே –
அதுவும் வானவர் நாடாய் –
கடவர்கள் முடியுடை வானவராய்-
அவர்கள் தான் (மூத்தவராய் )மூதுவராய் -(ஸாத்ய சந்தி தேவர் )
இவன் அவர்கள் மடியிலே கிடப்பது –
சிறகில் ஒதுங்குவது –
பிரம்புக்கு அஞ்சி சொன்னதுக்கு எல்லாம் அப்படி அப்படி என்னும் இளவரசாய் இறே வளருவது –

தத்ர காஷாயிநோ வ்ருத்தான் —
மேலாப்பின் கீழ் வருவான் –
அனந்த போக பர் யங்கே நிஷண்ணம் -என்றும் சொல்லக் கடவது இறே –

பக்வனான பின்பு ஸ்ரீ சத்ய பாமை பிராட்டி பக்கலிலே ராஜ்ய தூரை ( பொறுப்பை ) வைத்து
தூதுவ சாரத்யங்களிலே இறே அதிகரித்தது –

நந்த கோபனுடைய கோயில் –
ராஜ தாநீ பிதுர் மம(பெருமாள் சீதா பிராட்டி இடம் திரும்பி வரும் பொழுது சொன்னது )

கோயில் காப்பானே
தங்களுடைய மவ்க்த்யத்தாலும்-
அவன் உகக்குமதாகையாலும் அவன் தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள்

கோயில் காப்பானே
இத்தால்
சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் என்னும் இடம் தோற்றுகிறது
யதோசிதம் சேஷ இதீரி தேஜநை (ஆளவந்தார் )-என்றும் –
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய நைவ க்ராம குல -என்றும் சொல்லக் கடவது இறே

கோயில் காப்பானே
தான் காக்கும் இயல்வினன் ஆகையால் –
பொழில் ஏழும் காவல் பூண்டு சகல லோக ரக்ஷணம் பண்ணுகிற எங்கள் நிதியை
செப்போடே நோக்குகிறவன் அன்றோ –

ஸ்ரீ நந்தகோபர் தாழ்த்தார் –
கம்சன் வெட்டியன் –
காப்பாரும் இல்லை –
என்று நாங்கள் வயிறு எரிந்து இருக்க –
எங்கள் வயிறு எரிதல் தீர்க்கிறவன் அன்றோ –

கோயில் காப்பானே –
ஏஷ ஸூப்தேஷூ ஜாகர்த்தி -என்று
சம்சாரிகள் பக்கல் உணர்த்தி பெறுவதற்கு முன்பு தான் உணர்ந்து இருக்கும்

இவர்கள் அனுமதி பெற்ற பின்பு
நிஸ் ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூ ச (ஸ்ரீ இராமாயண யுத்த காண்டம் )-என்று
தன்னுடைய ரக்ஷகத்வத்தை இவர்கள் தலையில் வைத்து
தான் உறங்கா நிற்கும் –
மஹேந்திர கல்பம் பரிபாலயம்ஸ் ததா -என்னக் கடவது இறே
(குகன் மஹேந்திரனைப் போன்று இருந்த பெருமாளை நானும் லஷ்மணனும் ரஷித்தோம் என்று பரதன் இடம் )

காப்பானே –
இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப-என்று
பலர் நோக்கும் இடத்தில் ஆறில் ஓன்று கொள்ளாதே எல்லாருடைய காவலும் நீ ஒருவனே கொள்ளுகிறவனே –
(கோலார்ந்த நெடும் சங்கம்-பஞ்சாயுதம் கருடன் ஆறும் அங்கு )

கோயில் காப்பானே
உன்னைக் காவலாக வைத்தது
உகவாதார் புகுராமைக்கும்
உகப்பாரை புகுரா விடுகைக்கும் அன்றோ –
ஆன பின்பு அவனை ஆசைப்பட்ட எங்களுடைய ஆர்த்தியையும் ஆராய வேண்டாவோ –

அவன் கண்ணாலே போங்கோள்-என்று சொல்ல –
திரு வாசல் காக்கும் முதலியை எழுப்புகிறார்கள் –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
இரண்டும் ஒருவனையே சொல்லிற்று ஆகவுமாம் –
கோயில் காப்பானே என்று ஷேத்ராதிபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

யாராலே விக்னம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –

சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலிலே விழச் சொல்ல வேணுமோ

கொடித்  தோன்றும
அல்லாத மாளிகைகள் எல்லாம் தன் மாளிகையோடு ஒத்து இருக்கையாலே
பெண்கள் மத்திய ராத்திரியில் வந்தால் தடுமாற ஒண்ணாது
அவற்றில் காட்டில் நம் மாளிகைக்கு வாசி தெரிய வேணும் என்று கொடியும் தோரணமும் நட்டு வைத்தார் –

பெருமாளைக் காணப் பெறாதே ஆர்த்தனான ஸ்ரீ பரத ஆழ்வான்
ராம ஆஸ்ரம ஸூ சகமான தூம வல் கலங்களைக் கண்டு தரித்தால் போலே
கொடியையும் தோரணத்தையும் கண்டு இவர்கள் தரிக்கைக்காக வாய்த்து நட்டு வைத்தது

தண்ணீர் பந்தல்கள் தடாகங்கள் சமயத்தவர்கள் த்ருஷார்த்தற்கு தூரத்திலே தோற்ற வேணும் என்று
கொடியும் தோரணமும் நட்டு
தண்ணீர் பந்தலையும் கடையையும் காட்டுமா போலே அன்றோ
அடையாளங்களையும் பண்ணி எங்களுக்காக அன்றோ உன்னை இங்கு வைத்தது

வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது –
க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு
கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று
கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும் –

வாசல் காப்பானே
கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால் அழைக்க மாட்டாது –
உள்ளுக் கொண்டு புகாது –
நீ சேதனனான வாசி நாங்கள் பெற வேண்டாவோ –

அர்ஜுனன் ஸூபத்ரையைக் கொண்டு போகக் கடவன் என்று
வாசல் காக்கும் முதலைகளை அனுமதி பண்ணி இருங்கோள் என்று அருளிச் செய்து வைத்தால் போலே
இவனுக்கும் பெண்கள் புகுரக் கடவர்கள் என்று கிருஷ்ணன் சொல்லி வைக்கும்
அத்தாலே இவன் நம்மை உள்ளும் புக அனுமதி பண்ணும் என்று இருக்கிறார்கள் –

மணிக் கதவம்
மாமன் மகளே மணிக் கதவம் -என்று
பெண்கள் மாளிகை எல்லாம் மணிக் காதவமாம் படி சாதரம்யம் கொடுக்கிற
கிருஷ்ணன் மாளிகை வாசல் மணிக் கதவமாகச் சொல்ல வேணுமோ

மணிக் கதவம்
பூவியில் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு-(திருவாய் -6 -7) புற வாயில் போக்யதை வாசலில் வர ஒட்டாது –
கார்ய வசத்தால் வருந்தி வாசலில் வந்தவர்களை –
சதத் அந்தப்புர துவாரம் என்று வாசல்
தன் அழகால் உள்ளுப் புகுவாரைக் காற்கடைக் கட்டும் –

அவன் புக்காரை புறப்படாத படி நுழையும் சிந்தையராக்கி-(திருவாய்- 6-5-5) கால் கட்டும் தன் போக்யத்தையாலே –
உள்ளுப் புகும் போது ஒரு வண்ணம் சென்று புக வேணும் -(திருவாய் -6-1 )
உள்ளுப் புக்கால் –
மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும் –

மணிக் கதவம் தாள் திறவாய்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு (பெரிய திருமொழி )-என்னுமா போலே
கதவில் போக்யதையில் நெஞ்சும் கண்ணும் பிணிப்பு உண்ணாமல் திறந்து உள்ளே விடுகிறிலையே –

தாள் திறவாய் -என்றவாறே –
மத்திய ராத்திரியிலே வந்து திறக்க அழைக்கிறவர்கள் தான் யார் பயம் மிக்க தேசத்திலே என்ன

பயாநாம அபஹாரி இருந்த தேசத்தில் பயம் என் என்ன –

த்ரேதா யுகம் ஆகையால் காலமும் நல்லடிக் காலமுமாய் –
தமப்பனார் ஸம்ப்ராந்தகனுமாய்
பிள்ளைகள் தாமும் ஆண் புலிகளாய் –
அவர்கள் தான் வழியே போய் வழியே வருமவர்களாய்-
ஊரும் திரு அயோத்யையாய் –
அஞ்சாதே பாலில் உண்டு பனியில் கிடக்கிறதோ

காலம் கலிக்குத் தோள் தீண்டியான த்வாபராந்தமாய் –
தமப்பனார் சாது ஸ்ரீ நந்தகோபராவது –
இவர்கள் சிறு பிள்ளைகளாவது –
அதிலே தீம்பாராவது –
ஊர் இடைச்சேரி யாவது –
அது தான் கம்சன் படை வீட்டுக்கு அணித்தாய் –
அவனுக்கு இறை இறுக்கும் ஊராவது
கம்சன் தான் சத்ருவாவது –
எழும் பூண்டு எல்லாம் அசுர மயமாவது –
ஆன பின்பு பயம் கெட்டோ இருக்கிறது

பயப்பட வேண்டும் இடத்தில்
மத்திய ராத்திரியில் கதவு திறக்கச் சொல்லுகிறவர்கள் தான் யார் என்றான் –
எங்களுக்கு அஞ்ச வேணுமோ -நாங்கள் பெண் பிள்ளைகள் அல்லவோ என்ன –

சூர்ப்பணகை ஸ்த்ரீ அன்றோ –
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்-(பெரிய திருமொழி 3-7)என்று
பிற்பாடாரும் (பரகால நாயகி )கூட அஞ்சும் படியாக அன்றோ அவள் நலிந்தது-
ஒரு மாளிகையும் வாசல் காப்பாரும் இல்லாமை அன்றோ என்ன –

அவள் ராக்ஷஸி -நாங்களோ இடைப்பெண்கள் அன்றோ என்ன

பூதனை இடைச்சி அன்றோ -இடைச்சிகளுக்கு அன்றோ மிகவும் அஞ்ச வேண்டுவது என்றான்

ஆயர் சிறிமியரோமுக்கு
இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு பிறந்த க்ருத்ரிமம் அறியாத கன்னிகைகள் அன்றோ –
எட்டும் இரண்டும் அறியாத எங்கள் பருவத்தைப் பாராய் –
பூதனையைப் போலே தனித்து வந்தோம் அல்லோம்
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்கள் எல்லாரும் கூடி அன்றோ வந்தது -என்று -ஆயர் சிறுமியரோம் -என்கிறார்கள்

பாலைகள் என்ன ஒண்ணுமோ –
கன்றாய் அன்றோ வந்து நலியப் பார்த்தது –
பருவம் கொண்டு விசுவசிக்க ஒண்ணாது
உங்கள் வார்த்தையிலே அறியலாம் -வந்த கார்யம் சொல்லுங்கோள் என்றான் –

அறை பறை
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் என்று தங்கள் மௌக்யம் தோற்ற சொன்னார்கள்

பறை வேண்டி வந்தோம் என்றவாறே –
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்த வாறே விண்ணப்பம் செய்து தருகிறோம் நில்லுங்கோள் என்றான்

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
நீ இன்று அறிவிக்க வேண்டாத படி நென்னேற்றே தருவதாக அருளிச் செய்தான்

மாயன் –
பெண்கள் கோஷ்ட்டியில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின படி

மாயன்
எங்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன்

மணி வண்ணன்
தாழ நில்லாதே அபவ்யனாய் காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்

மணி வண்ணன்
இவர்களைக் கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாதே இப்படி படுத்துகிற வடிவு அழகு

நென்னலே –
இப்படி நிவாரகர் இன்றிக்கே கிட்டி அனுமதி கொள்ளப் பெற்ற நென்னேற்றும் ஒரு நாளே
இன்று உன்னை அனுமதி கொள்ளுகைக்கு உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ
அவன் காலைக் கையைப் பிடிக்க இருக்கும் நென்னேற்று நாள்
எங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணின நாள்

வாய் நேரந்தான்
நென்னலே வாய் நேரந்தான்
திருமூளையினன்று நென்னேற்றை கையார் சக்கரமும் ஒரு நாளே என்னுமா போலே

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
சோதி வாய் திறந்து –(9-2 )

நேர்ந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை அருளிச் செய்தானாகில் -அத்தை மெய் என்று இருக்கவோ –
அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாவோ -என்றான்

சொல்லாது ஒழிந்தவன்-செய்யலாவது இல்லை –
இத்தனை சொன்ன பின்பு அவன் வார்த்தையில் பழுது உண்டோ
ராமோ த்விர் நாபிபாஷதே —
அன்ருதம் நோக்த்த பூர்வம் மே —
ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
செய்ய நினைக்கிலேன் ஆகில் சொல்லான் –
சொன்னான் ஆகில் தப்பாது –

அவன் உங்கள் கார்யம் செய்கிறோம் என்றான் ஆகிலும் எங்களை இங்கு வைத்ததுக்கு பிரயோஜனம் வேண்டாவோ
பத்து எட்டு திரு முகம் மறுக்கப் பெற்று உடையோம் அன்றோ நாங்கள் –
எங்கள் பணிக்கு அவனோ கடவான்-
ஆராய இருக்கிற எனக்கு உங்களுடைய அகவாய் அறிய வேண்டாவோ
உங்கள் நினைவு தெரியாதே ஆராய்ந்து அன்றி விடேன் என்றான்

தூயோமாய் வந்தோம்
நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை
எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னமாதல்
ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –
உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –

தூயோமாய் வந்தோம்
தூய்மை யாவது தான்
சிலவற்றை ஏறிட்டுக் கொள்ளாதே நம்முடைய ரக்ஷை அவனாலேயே என்று இருக்கை
ராவண பவனத்தை விட்டுப் போந்தவன் வழியிலே முழுகி வந்தான் என்று இல்லையே –
தூசி ஏறின படை நடுவே நின்று இறே பரம ரகஸ்யம் கேட்டது

தூயோமாய் வந்தோம்
திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்
ஹனுமான் விலலாபஹ –
உவாஸ பிராணா தச்ச மஹா நேஷ –ஸ்வ ரேண மஹாதா மஹான் -என்று ஆர்த்த நாதம் கேட்டவாறே
ஆநயைநம் -என்றும்
அஸ்மாபிஸ் துலயோ பவது -என்னவும் பண்ணிற்று இறே

(அவனிலும் தண்ணியன்-அவன் பிறந்த வயிற்றில் பிறந்தேன் என்று சொல்லிக் கொண்டான் விபீஷணன்
இவர்கள் தூயோமாய் வந்தோம்
அவன் அசுத்தியும் இவர்கள் சுத்தியும் கார்யகரம் இல்லை
அவன் நினைவே கார்யகரம் ஆகும் )

வந்தோம் –
எங்கள் வரவிலே தெரியாதோ பாவ சுத்தி –
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமை இல்லையே
அவன் செய்யக் கடவதை நாங்கள் செய்தோம் –
எங்களை ஒத்த ஆர்த்தி உடையார் இருந்த இடத்திலே அவன் சென்று
கார்யம் செய்ய வேண்டி இருக்க நாங்கள் அல்லவோ வந்து கொடு நின்றோம் –

உங்கள் தூய்மை நாடி அறியும் படி நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு அடையாளம் சொல்லுங்கோள்-
உங்கள் ஆற்றாமை வந்த போதே பறையின் அளவுள்ள வென்றான் –

துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் –
அவன் உணர்ந்து அருளும் போதை அழகுக்கும் மங்களா சாசனம் பண்ண வன்றோ நாங்கள் வந்தது –
பிரயோஜனாந்தர பரர்கள் அன்றோ ஓலக்கத்தில் புகுவார் –
அநந்ய பிரயோஜனர் இறே கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே புகுரப் பெறுவார் –

துயில் எழப் பாடுவான்
ச மயா போதிதஸ் ஸ்ரீ மான் -என்று
பிராட்டி உறங்குகிற படி கண்டு உகந்தாள்-
இவர்கள் உணரும் படி காண ஆசைப்படுகிறார்கள் –

உறகல் உறகல் -என்று உணர்ந்து இருப்பாரையும் உணர்த்தி அசிர்க்கும் பெரியாழ்வார்
பெண் பிள்ளைகள் உன்னையும் அசிர்ப்போம் சிலர் –
மடியாது இன்றே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -என்றும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்றும்
எழுப்புமவர்களோட்டை வாசனையால் இப்போது பள்ளி உணர்த்த வந்தோம் –

இவர்கள் பாவ சுத்தியை அறிந்து குணக்ரஹணம் பண்ணி வைத்தே
இவர்கள் பேச்சு கேட்க்கைக்காக இன்னமும்
ஒரு நிலை நின்று புகுர விட வேண்டும் என்று நினைக்குமே-
அத்தை இவர்கள் பாவஞ்ஞஜை களாகையாலே அறிந்தார்கள்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
நெஞ்சால் சில நல்லது நினைத்தாயாகிலும்
வாயாலே நெருப்பைச் சொரிந்தால் போலே நிஷேதியாது ஒழிய வேணும்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள் –
வாசா தர்மம் அவாப்னுஹி-என்று ஒரு வாய்ச் சொல்லாலே
தண்ணீர் பந்தல் வைக்கலாய் இருக்க ஏன் தான் இழக்கிறாயே

மாற்றாதே –
என்று நிஷேதிக்கிறது என்ன பிராப்தி கொண்டு என்ன –
சேஷ பூதராய் இருப்பாரை முட்டத் தொடரலாமா பிரானே -என்கிறார்கள்

அம்மா –
பிரதான சேஷிகளை நாங்கள் அறிந்தோமோ –
த்வார சேஷிகள் அன்றோ எங்களுக்கு கடவர்கள்-
அவன் வாய் நேர்ந்தாலும் கார்யம் தலைக் காட்டித் தருவாய் நீ அன்றோ-
வத்யதாம் என்றவர்களே
அஸ்மா பிஸ் துல்யோ பவது-என்ன வேண்டிற்று இறே
தாநஹம் த்விஷத -என்றவன் –
ததாமி -என்றாலும் -நீங்கள் வேண்டாத இடத்தில் ந ஷமாமி -என்னும்

(அசுரர் யோனியில் தள்ளுவேன்
சரண் அடைந்தால் புத்தி யோகம் தருவேன்
அவனும் பாகவத அபசாரம் செய்தால் பொறுக்க மாட்டேன் என்றானே )

அம்மா
தாரா பித்ரு க்ருதா இதி -என்று நீ புக விட்டால் அன்றோ எங்களை உகப்பது
இவர்கள் அர்த்தித்தவத்தையும்-
தனக்கேற பாவ சுத்தியையும் கண்டவாறே
நான் நிஷேதிக்கிறேன் அல்லேன் –
தள்ளிக் கொண்டு புகுருங்கோள் என்றான்

நீ-நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
அது உன்னிலும் பரிவுடைய கதவு -எங்களால் தள்ளப் போகாது –
நீயே திறக்க வேணும் –
இவன் விலக்குகிறது ஸ்நேஹத்தாலே யானால் தள்ளப் போகாதே இருக்கிறது ஸ்நே ஹத்தாலே என்று இருக்கிறார்கள்
திறந்து கொள்வார் முகத்திலே அறையும் போலே –

கம்சன் பரிகரம் அடைய பிரதி கூலமாய் இருக்குமா போலே
திருவாய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியிலே எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது
அகால பலிநோ வ்ருஷா–அபி வ்ருஷா பரிம்லாநா –என்று அன்வய வியதிரேகங்களில்
ஹர்ஷ சோகம் உண்டானால் ஸ்நேஹம் உண்டாக்காத தட்டில்லை-

சகடத்திலே அசுரன் கிடந்தவோபாதி-
அனுகூலரும் சேதன சமாதியில் அங்குத்தைக்கு உறுப்பாவாறே

படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்னும் படியாய் கிடக்கிறாரோபாதி
நிலையும் கதவுமாய் நிற்பாரையும் கிடக்கும் இறே

நேச நிலைக் கதவம்
நிலையும் கதவும் பொருந்தின பொருத்தம் ஆகவுமாம் –
ஆன பின்பு நீயே திறந்து புகுர விட வேணும் என்கிறார்கள் –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை — -எல்லே இளங்கிளியே –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 6, 2017

(அத்யாபயந்தி -அவனும் இவள் வாயால் சொல்லக் கேட்டு நடக்கும் படி வைத்த சீர்மை
கரை ஏற்றும் அவனுக்கும் நாலு ஆறும் உபதேசித்தார் அன்றோ நம்மாழ்வார்
இப்பாசுரம் பாகவர் நடக்க வேண்டியவை
சிற்றம் சிறு காலை பகவான் நடக்க வேண்டியவை
ஆகவே இப்பாசுரங்கள் திருப்பாவை ஆகிறது -என்பர் )

பெண்கள் எல்லாருடையவும் திரள் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
கீழ்ப் பத்துப் பட்டாலும் சொன்ன யுக்தி ப்ரத்யுக்தியை முக்த கண்டமாகச் சொல்லுகிறது இப்பாட்டில் –
(மாயனை பாசுரத்தில் யுக்தி ப்ரதி யுக்தி உண்டே
ராமர் பட்டாபிஷேகம் நின்றதே என்ற கோபிக்குப் பதில் தானே அது
அன்றிக்கே இப்பாசுரம் சேர்த்தே பத்து என்கிறார் )

அன்விதாபிதானம் பண்ணி இறே கிடக்கிறது –

(அபிஹித அபிதானம் –பட்டர் மீமாம்சகர்
பானையைச் செய்கிறான் -பானை -செய்தல் செய்யும் அவனையும் இது குறிக்கும் –
பானையை செய்யும் தொழிலுக்கு ஆஸ்ரயம் குயவன்
க்ருதி ஆஸ்ரயம்
செய்யப்படுவது -தன்மை -சப்தத்தால் போதிக்கப்படும்
கீழ் பாட்டைப் பார்த்தால் தெரியாது -அபிஹித அபிதானம்
இப் பாட்டு அன்விதாபிதானம்-பிரபாகர் மீமாம்சகர் –
சொல்லிலே இருக்கும் பொருள் )

திருப்பாவை யாகிறது இப் பாட்டு இறே-
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் சிற்றம் சிறு காலையிலே சொல்லுகிறது –
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப் பாட்டில் சொல்லுகிறது –

பங்கயக் கண்ணானைப் பாட -என்று
அசலத்தில் பெண் பிள்ளையை எழுப்புகிற பாசுரத்தைக் கேட்டு இவர்கள் பாசுரத்தை
தன் மிடற்றிலே இட்டு நுடங்கிப் பாடுகிற படியைக் கேட்டு
த்வனி வழியே சென்று
பேச்சில் இனிமையாலே எல்லே -இளங்கிளியே -என்கிறார்கள் –

(பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே–திருவாய்மொழி -3-4-6-)

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

பதவுரை

இளம் கிளியே–இளமை தங்கிய கிளி போன்றுள்ளவளே!
எல்லே–(இஃது) என்னே! WOW
இன்னம்–இத்தனை பெண் பிள்ளைகள் திறண்டு வந்த பின்பும்
உறங்குதியோ–தூங்குகின்றாயோ? (என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
நங்கைமீர்–பெண்காள்!
போதர்கின்றேன்–(இதோ) புறப்பட்டு வருகிறேன்;
சில் என்று அழையேல்மின்–சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள்; (என்று உறங்குகிறவள் விடை சொல்ல)
இளங்கிளியே !
வல்லை –(நீ வார்த்தை சொல்லுவதில்) வல்லமை யுடையவள்;
உன் கட்டுரைகள்-உனது கடுமையான சொற்களையும்
உன் வாய்-உன் வாயையும்
பண்டே-நெடு நாளாகவே
அறிதும்-நாங்கள் அறிவோம்; (என்று உணர்த்த வந்தவர்கள் சொல்ல,)
நீங்கள் வல்லீர்கள்–இப்படிச் சொல்லுகிற) நீங்கள் தான் (பேச்சில்) வல்லமை யுமையீர்
(அன்றேல்)–
நானே தான் ஆயிடுக–(நீங்கள் செல்லுகிறபடி) நான் தான் (வல்லவளாய்) ஆகக் கடவேன்;
(உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளுறங்குமவள் கேட்க;
நீ–நீ
ஒல்லை–சீக்கிரமாக
போதாய்–எழுந்து வா
உனக்கு–(தனியே) உனக்கு மட்டும்
வேறு என்ன உடையை–(நீ) வேறு என்ன (அதிசயத்தை) உடையையாயிரா நின்றாய்? என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க;)
எல்லாரும்–(வர வேண்டியவர்கள்) எல்லாரும்
போந்தாரோ–வந்தனரோ? (என்று உறங்குமவள் கேட்க)
போந்தார்–(எல்லோரும்) வந்தனர்;
போந்து எண்ணிக் கொள்–(நீ எழுந்து வந்து) எண்ணிப் பார்த்துக் கொள்;
(என்று உணர்த்த வந்தவர்கள் கூற,)
(என்னை ஏதுக்காக வரச் சொல்லுகிறீர்களென்று உறங்குமவள் கேட்க;)
வல் ஆனை–(குவலயாபீட மென்னும்) வலிய யானையை
கொன்றானை–கொன்றொழித்தவனும்
மாற்றாரை–சத்ருக்களான கம்ஸாதிகளை
மாற்று அழிக்க வல்லானை–மிடுக்கு அழிந்தவர்களாகச் செய்தருள வல்லவனும்
மாயனை–அற்புதனுமான கண்ணபிரானை
பாட–பாடுகைக்காக
(ஒல்லை நீ போதாய், என்றழைக்கிறார்கள்)
ஏல் ஓர் எம்பாவாய்

எல்லே இளங்கிளியே
யாழில் இட்டுப் பாடி –
அது பண் பட்டு இனிதானவாறே
தம் தாம் மிடற்றிலே மாற்றுவாரைப் போலே தங்கள் பேச்சுக்கு இவள் பேச்சு

எல்லே இளங்கிளியே
திருவான மிடறும் பாட்டும் இருந்தபடி என் தான் –
பேச்சில் இனிமை இருந்தபடி –
எழுப்புகை சால தர்ம ஹானியாய் இருந்ததீ –
பேச்சில் இனிமையாலே -எல்லே -என்று ஆச்சர்யப்படுகிறார்கள்

எல்லே
சம்போதனை ஆகவுமாம்

இளங்கிளியே –
என்று கிளியை வியாவ்ருத்திக்கிறது-
பசுமைக்கும் பேச்சுக்கும் கிளி ஒப்பாம் அத்தனை -பருவத்துக்கு ஒப்பாக மாட்டாது –
ஒக்கிலும் பிராட்டிமார் பருவத்துக்கு ஒப்பாம் அத்தனை –

இவர்கள் கீழ் -தாம்
இளங்கிளி –
மென் கிளி போலே மிக மிழற்றும் –
அணி மழலைக் கிளி மொழியாள்-என்னக் கடவது இறே –

கல் உயர்த்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே!என்றும்
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே ––திரு நெடும் தாண்டகம்–15–

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே-திருவாய்மொழி-9-7-11-

நாணாதாய் நா உடையாய் -என்று கீழ் பாட்டிலே அவளை உட்பட வெறுத்தவர்கள்-
அவளிலும் பிற்பாடையாய்
சாபரதையாய் கிடக்கிற நம்மை ஸ்லாகிக்கக் கூடாது –

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து (1-8 )-என்னும் படியே
தங்கள் உடம்பு விவர்ணமாய் வாயும் வெளுத்து இருக்க
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே உடம்பு பசகு பசகு என்று
வாயும் சிவந்து நாம் குறி அழியாது இருந்தோம் என்று நம்மை நிந்திக்கிறார்கள்
இவ்வளவில் இவர்களுக்கு வாய் திறக்கில் வெறுப்பாம் என்று பேசாதே கிடக்க

இன்னம் உறங்குதியோ-
என்கிறார்கள் –
நாங்கள் வருவதற்கு முன்பு உறக்கத்தை பொறுத்தோம் ஆகிலும்
நாங்கள் வந்தால் உறங்கக் கடவதோ

இன்னம் உறங்குதியோ-
கிருஷ்ண விரஹத்தாலும்
உன் கடாக்ஷம் படாமையாலும்
துவண்ட எங்கள் ஆர்த்த த்வனி கேட்டும் கண் உறங்குவதே உனக்கு

இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தால் உறங்குவார் உண்டோ –
கிருஷ்ண அனுபவத்துக்கு ஏகாந்தம் பெற்றாலும் உறங்கக் கடவதோ

தான் அனுபவிக்கிற பங்கயக் கண்ணனுடைய அனுசந்தானத்துக்கு –
இளங்கிளியே -என்பது –
இன்னம் உறங்குதியோ -என்பது –
இவர்கள் சொல்லுகிறவை விக்னம் ஆகையால் சிலுக்கிடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

சில்லென்று அழையேன்மின்
திருவாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுகையும் அஸஹ்யமாம் போலே –
(கூட்டம் கலக்கியவர் என்று சொல்வார்களே செல்வரை )
பிராட்டிமாரும் சர்வேஸ்வரனும் கூட எழுந்து அருளி இருந்தால்
ஒட்டு வட்டில் காளாஞ்சியோ பாதி பிரியாதே இருக்கக் கடவ – ஸ்ரீ நாரத பகவானையும்
ஸ்வேத தீபத்திலே எழுந்து அருளுகிற போது
உன் வன்மை யவர்கள் பொறாதே இருக்கக் கூடும் என்று –
நான் வரும் அளவும் இங்கேயே இரு என்று அருளிச் செய்து எழுந்து அருளினார் இறே

(ஸ்வேத தீப வாசிகள் ஸநகாதிகள் பரம மென்மை என்று நாரதரை நிற்க வைத்து போனார் அன்றோ )

தன்னால் அல்லது செல்லாத எங்களை சிவிடக்கு என்பதே -என்று இன்னாதாய் –
நாங்களும் –
எங்கள் தரிசனமும்
எங்கள் பேச்சும்
அஸஹ்யமாம் படி உன்னுடைய பூர்த்தி இருந்த படி என் என்ன

நங்கைமீர் போதர்கின்றேன்
என் பிரகிருதி அறியாதே -இளங்கிளியே என்று என்னை பாதிக்கின்ற நீங்களே
அன்றோ பூர்ணைகள்-
வாய் திறவாது இருக்க வல்லி கோள் ஆகில் –
நான் புறப்படுகிறேன் என்ன

வல்லை யுன் கட்டுரைகள்
எங்கள் தலையிலே குற்றம் சொல்லலாவது எல்லாம் சொல்லி
உன் தலையிலே குற்றம் இல்லை என்னலாம் படி உபபாதிக்க வல்லை இறே

பண்டே யுன் வாய் அறிதும்
நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ –
பண்டே அறியோமோ –

குண தோஷங்கள் என்று ஓன்று உண்டோ –
நீ சொல்லிற்று வார்த்தையாம் அத்தனை அன்றோ –
உன் வாசலிலே நாங்கள் எத்தனை காலம் உண்டு துவளுகிறது-என்ன

வல்லீர்கள் நீங்களே –
உங்கள் வாசலிலே நான் வந்து துவளப்
பேசாதே கிடந்து வெட்டிமை சொல்லிப் படுத்த வல்லி கோளே நீங்கள் அன்றோ –
உங்கள் வாசலிலே வந்து எழுப்ப நான் எத்தனை பண்ணைக் கேட்டேன் என்ன –

அது சாத்தியம் –
இது சித்தம் –
ப்ரத்யக்ஷம் கிடக்க அனுமானத்தைக் கொள்ளவோ என்ன –

பதகம் மூட்டினவாறே

நானே தான் ஆயிடுக
பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது

இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்றால் இல்லை செய்யாதே இசைகை இறே வைஷ்ணவ லக்ஷணம் –

மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று
பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக
ராம பக்தன் -விரல் விட ஒருவனே ப்ராதா என்பதால் அல்ல பரதன் என்பதால் -பாதுகா சஹஸ்ரம் )

ஸ்வ குண அபதானத்துக்காக கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணலாகாது என்றும் வேதார்த்தம் பிரகாசிக்கிறது –

இப்படி தோஷ துஷ்டையான நான் உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன

ஒல்லை நீ போதாய்
உன் குற்றத்துக்கு இசைந்த பின்பு சடக்கென புறப்பட்டு இத் திரளில் புகுந்து பொருப்பித்துக் கொள்ளாயோ-
(அபராத ஷாமணம் -பாகவதர்கள் இடம் தான் பெற வேண்டும் )

ஒல்லை
ஒல்லைக் கூடுமினோ -என்றார் இறே –
சாதி கோட்டியுள் கொள்ளப்படுவார்(பெரியாழ்வார் – 3-6-10 )-என்று
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியுள் புகுருகை ஏற்றம் என்று அருளிச் செய்தார் இறே

ஒல்லை நீ போதாய் –
உன்னை அரை க்ஷணம் காணாது ஒழியில் எங்களுக்கு பிராண ஹானி –
புறப்படாது ஒழியில் உனக்கு அநர்த்தமாய்த் தலைக் கட்டும்
ஆகில் புறப்பட நின்றேன் என்ன

துடித்துக் கொண்டு புறப்பட்டு நின்று நாங்கள் பட்டது படாமையாலே
சிவிட்க்கு என்று

உனக்கென்ன வேறுடையை
என்கிறார்கள் –
இவள் ஒரு சற்று விளம்பித்து புறப்படும் காட்டில் அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களுக்கு ஒழிய
உனக்கு என்ன ஒரு ஸ்வயம் பாகம் வேணுமோ –
உன் ஸ்வயம் பாகம் தவிர்ந்திலையோ பெருமானைக் கண்ட பின்பும்
வைஷ்ண விஷயத்தை பஹிஷ்கரித்து பற்றும் பகவத் விஷயத்தோடு தேவதாந்தரத்தோடு வாசி இல்லை –

இளைய பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வானுடைய விரோதம் என்கிற அதி சங்கையால் உத்தியோகித்து –
வில்லிலே நாண் ஏறிடுவது -அம்பைத் திரிப்பது ஆகிற படியைக் கண்டு
பெருமாளுக்கு அஸஹ்யமாய்
அவனுக்கு ராஜ்யத்தில் ஸ்ரத்தை இல்லை –
உனக்கு அபேக்ஷை உண்டாகில் வாங்கித் தருகிறோம் என்று
அருளிச் செய்த போது
இளைய பெருமாள் தரைப் பட்டால் போலே இவளும் –
உனக்கு என்ன வேறுடையை -என்றது பொறுக்க மாட்டாமே

எல்லாரும் போந்தாரோ
உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –
நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –
உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –
எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன

எல்லாரும் போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடக்கிறது

நான் எழுந்து இருக்கைக்காக ஒன்றைச் சொல்லுகிறீர்கள் அத்தனை அன்றோ –
வந்தார்கள் யாகில் உள்ளே புகுரா விடுங்கோள்-என்ன

வந்தமை நிச்சிதம் –
புறப்பட்டு மெய்க்காட்டுக் கொள்-
மெய்க் காட்டு கொள்ளுகைக்கு பிரயோஜனமாக இவர்கள் நினைக்கிறது –
தனித் தனியே பார்க்கையும் –
பேர் சொல்லுகையும் –
தொட்டு எண்ணுகையும்-
ஸ்பர்ச ஸூகம் அனுபவிக்கையும்-
பெண்களுக்கு ஸங்க்யை இல்லாமையால் எண்ணி முடிக்கும் தனையும் இவளைப் பிரியாதே அனுபவிக்கையும் –

நாம் எல்லாரும் கூடிச் செய்யப் பார்த்தது என் என்ன –

கிருஷ்ணனுடைய விஜயங்களை நீ பாட நாங்கள் கேட்க வேணும் என்கிறார்கள்

வல்லானை கொன்றானை-
குவலயா பீடத்தை கொன்று நம் ஜீவனமான தன்னை நோக்கித் தந்தவனை –
பெரு மிடுக்கு உண்டாம் படி மதப் படுத்தி நின்ற குவலயா பீடத்தை கொன்று –
ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய -என்று
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வந்து நம்மோட்டை பெண்களை வாழ்வித்தவனை –
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்று இறே பெண்கள் வாய் வெருவுவது

கவள மால் யானை கொன்ற கண்ணன் -(பெரிய திரு மொழி 4-8-1/திருமாலை -45)-என்று
ஆண்களை எழுதி முடிக்கப் பண்ணினது –
பெண்களை எழுத்து வாங்குவிக்கச் சொல்ல வேணுமோ –

வெஞ்சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்-(9-2 )என்னக் கடவது இறே
வாரணத்தை மருப்பு ஒடித்த பிரான் மாதவனே –
பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன்-
பின்னை மணாளனாகி கரும் தாள் களிறு ஓன்று ஓசித்தான்-
என்று பிரதான மஹிஷிகள் மூவரும் இவ்வாபத்தானத்துக்கு இறே தோற்றுக் கிடப்பது –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்த்திலும் காட்டிலும்
இத்தை குணமாக
ஓர் ஆனை காத்து ஓர் ஆனை கொன்று (திருச்சந்த )-என்று அருளிச் செய்தார் இறே –

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை –
சக்கரவர்த்தி திருமகனைப் போலே -கச்ச -என்று விடாதே –
குவலயா பீடத்தின் கொம்பைப் பிடுங்கி –
மல்ல ரங்கத்திலே புக்கு
சாணூர முஷ்டிகர் தொடக்கமான மல்லரைக் கொன்று –
உயர்ந்த மஞ்சத்தில் இருந்த கஞ்சனை மயிரைப் பிடித்து இழுத்து
பூதலத்திலே புரட்டி –
திருவடிகளாலே உதைத்து –
மதிப்பு அறுத்து –
குஞ்சி பிடித்து அடித்து -தன்னை உபகரித்து
நசமம் யுத்தம் இத்யாஹு -என்று அஞ்சின பெண்களை வாழ்வித்தவனை

வார் கடா வருவியில் செய்தவற்றை எல்லாம் நினைத்து சொல்கிறார்கள் –

வார் கடா வருவி யானை மா மலையின்
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து
அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக் கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–(திருவாய் -8-4-1)

மாயனைப்
தன் கையிலே எதிரிகள் படுவது எல்லாம் -நம் கையில் தான் பட்டு நமக்குத் தோற்று –
அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை

வல்லானை கொன்றானை மாயனை
குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி –
மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி
எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே
நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –

பாடேலோ ரெம்பாவாய்-
நம்முடைய தோல்வியையும்
அவனுடைய வெற்றியையும் -தோற்ற பாட –

ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே

வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கேசவனைப் பாட (7)-என்றும்
பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி

சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும்
அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி

இங்கு (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –
தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –

1-எல்லே இளங்கிளியே -என்று பகவத் விஷயத்திலே ருசி உடையார் பேச்சும் உத்தேச்யம் என்கிறது –

2-இன்னம் உறங்குதியோ -என்று பாகவத ஸஹவாசம் சித்தித்தால் புறம்பு அந்நிய பரதை பண்ணும் இடம் தப்பு என்கிறது –

3-சில்லென்று அழையேன்மின் -என்றதால் ருசி உடையார்க்கு எல்லாம் சொன்னாலும் பொறுக்க வேணும் என்னும் இடம் சொல்லுகிறது

4-நங்கைமீர் போதர்கின்றேன்-என்கிறதால் சாபலத்தால் சில பிறந்தாலும் பகவத் விஷயத்திலே அவகாஹித்தவர்களை
சாபலத்தால் பிறந்தவற்றை நினையாதே கௌரவதை தோற்றச் சொல்ல வேணும் என்கிறது –

5-வல்லையுன் கட்டுரைகள்-என்றதால் -சில்லென்று அழையேன்மின்-என்றது இவர்களுக்கு உத்தேசியமானவோ பாதி
உன் வெட்டிமை அறிந்தோம் என்றதும் அவளுக்கு உத்தேச்யமாகக் கடவது என்கிறது

6-வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக-என்கிற இத்தால் பர தோஷத்தையும் ஸ்வ தோஷமாகக் கொள்ளவும்
கௌரவ்யரை அதி நிர்பந்தம் பண்ணக் கடவது அல்ல என்னும் இடத்தையும் சொல்லுகிறது

7-ஒல்லை நீ போதாய் -என்கிற இத்தால் -பாகவத சம்ச்லேஷம் சத்தா சித்தி என்கிறது –

8-உனக்கென்ன வேறுடையை-என்கிற இத்தால் –
யதா தேத தத்ர வர்த்தேர தன்-என்கிற வேதாந்த பிரகிரியையாலே
ஸ்ரேஷ்டர் வர்த்தித்தபடி வர்த்தியாது ஒழிகை தப்பு என்கிறது

9-எல்லாரும் போந்தாரோ -என்கிற இத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் உத்தேசியர் என்கிறது

10-போந்து எண்ணிக் கோள்-என்கிற இத்தால் ஒருவர் குறைந்தாலும் பகவத் அனுபவத்துக்கு குறை என்கிறது

11-வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க-வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-என்று
திரண்ட பாகவதர்களுக்கு உஜ்ஜீவனம் -உண்ணும் சோறு இத்யாதி படியே பகவத் விஷய அனுபவமே என்கிறது –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை — உங்கள் புழைக்கடை –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 5, 2017

இத் திரளுக்கு எல்லாம் நிர்வாஹகையாய் –
எல்லார்க்கும் முன்னே உணர்ந்து
எல்லாரையும் எழுப்பக் கடவேன் என்று சொல்லி வைத்து
அத்தை மறந்து
சுருக்கம் ஒழிய உணர்ந்து கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

(பாசுரத்தில் இன்னும் தூங்கிக் கொண்டு இருப்பதாக இல்லையே –
எழுந்திராய் என்பதால் தூங்கிக் கொண்டு இருப்பது ஸூசகம்
சுருக்கம் ஒழிய -குறை இல்லாமல் )

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-

பதவுரை

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்-உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர்-செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து-விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின-ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின;
(அன்றியும்,)
செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்–காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த
பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்,
தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான்-தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக
போகின்றார்–போகா நின்றனர்;
எங்களை-எங்களை
முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்-முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே!
நாணாதாய்-(‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய்-(இனிய பேச்சுக் பேச வல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்-சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை-தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை
பாட-ப்ரீதிக்குப் போக்குவீடாக பாடுகைக்கு
எழுந்திராய்-எழுந்திரு;
ஏல் ஓர் எம் பாவாய்!

நாங்கள் வந்து உன் வாசலிலே நிற்க எழுந்து இராதே ஒழிவதே என்ன –

விடிவுக்கு அடையாளம் என் –
எழுந்து இருக்கும் போது விட வேணுமே என்ன

(செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்–செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
இப்படி ஒவ்வொன்றாகக் கூட்டி வியாக்யானம் )

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-

செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டிக்குமது அடையாளம் அன்றோ -என்ன

நீங்கள் இவ் வாசலிலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே உங்கள் கண்கள் அலர்ந்து –
நான் வார்த்தை சொல்லா விட்ட வாறே நீங்கள் வெறுத்து லஜ்ஜித்து வாய் மூடினதும்-
செங்கழு நீர் அலர்ந்ததாகவும் ஆம்பல் மொட்டிட்டதாகவும் தோற்றுகிறது என்ன –

அது ஊரிலது இறே-
வாவியுள் செங்கழு நீர் காண் என்ன —

வயல் எல்லாம் உலாவி -அலருவன அலர்த்தி
மொட்டிப்பன மொட்டுவிக்கை யன்றோ உங்களுக்கு இரவு எல்லாம் பணி என்ன

தோட்டத்து வாவியுள்
தடமணி வயல்களிலும் -(திருவாய் 10-1-1-திரு மோகூர் வயல்)
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனிகளிலும் (பெரிய திருமொழி 7-5-10-தேரழுந்தூர் கழனி )உள்ளவை அல்ல –
தோட்டத்தில் அவை காண் என்ன —

அவ்விடங்களிலும் நீங்கள் உலாவினி கோளாம் அத்தனை என்ன

புழக்கடை தோட்டங்காள்–என்ன –

அத்தனை இடம் போக வேண்டாதே
அணித்தான அத்தனை அன்றோ என்ன –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-என்கிறார்கள் –

அஸூர்யம் பஸ்யமான உன்னுடைய தோட்டத்தில் வெய்யில் பட அன்றிக்கே –
கால பாகத்தாலே அலர்ந்தவையும் மொட்டைத்தவையும் அடையாளம் அன்றோ –
சோலைச் செறிவாலே உச்சிப்பட்டாலும்
ஆதித்ய ரஸ்மி காண ஒண்ணாத உன்னுடைய புழக்கடையில் அவை அன்றோ –

தாங்கள் புறம்பே உள்ளுப் புகுரப் பெறாதே நிற்கிறவர்கள் –
இவள் புழக்கடையில் அவை அலர்ந்தவை அறிந்தபடி என் என்னில்

புறம்பு உள்ளவை அலர்வன மொட்டிப்பன வானபடியைக் கண்டு
அநு மித்திச் சொல்லுகிறார்கள்

இவள் எழுந்து இராத இன்னாப்பாலே உங்கள் புழக்கடை -என்று
வேறு கூறிட்டுச் சொல்கிறார்கள் – –

நீர் நுமது -என்றும்
யானே என் தனதே -என்றும்
அஹங்காரம் மமகாராம் த்யாஜ்யமாக உணர்ந்தவர்கள் –
உங்கள் எங்கள் -என்கை விருத்தம் அன்றோ என்னில்

தேஹாத்ம அபிமானத்தால் வரும் அஹங்காரம் த்யாஜ்யம் ஆவதும்
பகவத் சம்பந்தத்தால் வரும்து உபாதேயம் ஆவதும் –

அச்யுத அஹம் தவ அஸ்மி சம்சார பேஷஜம் -என்றும் –
அபிமான துங்கன் செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்றும் –
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -என்றும் -சொல்லிற்று இற்று இறே
(ஆத்மஞானம் கை வந்த தால் -நீர் உன்னுடையது – அதுவே எனக்கு உத்தேச்யம்
என்றானே மின்னுடைய மடவார் பதிகத்தில்
சாத்விக அஹங்காரம் உபா தேயம் உத்தேச்யம் என்பதற்கு இந்த பிரமாணங்கள் )

பதார்த்தங்கள் ஆகின்றன –
கால க்ருத பரிணாமியாய் யன்றோ இருப்பது என்ன –

(ப்ராத)சந்த்யா சமயத்தில் படியாய் அன்றே
மத்திய ராத்திரியில் படி இருப்பது –

அலர உபக்ரமித்த மாத்திரமே கொண்டு கழிய அலர்ந்ததாகவும் –
மொட்டிக்கத் தொடங்கின போதே மொட்டித்ததாகவும்
உங்கள் த்வரையாலே பிரதம தசையில் இப்படியே தோற்றுகிறது –
இது ப்ராதர் லக்ஷணம் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ என்கிறார்கள் –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அளற்றுப் பொடியில் புடைவையைப் புரட்டி –
இரவு எல்லாம் வெற்றிலை தின்று கிடந்து
ப்ரஹ்மசர்யமும் விரக்தியும் தோற்ற பல்லை விளக்கி
சபையார் பெரியவர்கள் கோமுற்றவர் தண்டம் கொள்வார் என்று
தபோ வேஷத்தை யுடையரான சிவ த்விஜரும் கூட பயப்பட்டு
உணர்ந்து தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலமாய்த்து

திருக் கோயில் -என்றது
அவர்கள் சொல்லும் படி —

சங்கு -என்று பரிகரத்துக்கும் கொத்துக்கும் உப லக்ஷணம்

சங்கிடுவான் என்றது குச்சி இடுவான் என்றுமாம்

தாமச பிரக்ருதிகளை சொல்லுகிறது -என்று எம்பார் –

தமஸ் பிரசுரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது என்று
அவள் நினைத்து இருக்கும் என்று
சத்துவ நிஷ்டரான ஸந்நியாசிகளை சொல்லுகிறது என்று திருமலை நம்பி –

யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று
பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று
பகவத் விஷயத்தில் சக்தராய்
இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய்
சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி
அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆயத்து என்ன

சததம் கீர்த்த யந்தோமாம்–நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே -என்றும்
அநவரதம் ஸ்நேஹத்தோடே உபாசிப்பவர்கள் என்றும் சொல்லப் படுபவர்கள்
விடிவோரே ஒருக்கால் சமாராதானம் பண்ணி
அல்லாத போது பேசாதே இருப்பார்களோ
இது விடிவுக்கு அடையாளம் அன்றே –
இது தான் பிரமாணமும் அன்றே -என்ன –

அதுக்கு உத்தரமாகச் சொல்லுகிறது மேல் –
எங்களை முன்னம் எழுப்புவான்-
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாச் ச –யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட
(வேதமும் பிரமாணம் என்று இவர்கள் செயல்களே முக்ய பிரமாணம்-)என்றும் –
மேலையார் செய்வனகள் -என்னுமது பிரமாணமாக நீ சொன்னாயே

சாத்விக அக்ரேசசரையாய் இருக்கிற நீ எங்களை எழுப்புவதாகச் சொல்லி வைத்து
அத்தை மறந்து கிடந்து உறங்குகிறாய் அன்றோ
தர்மஞ்ஜையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இறே என்கிறார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது உன் பக்கல் கண்டிலோமே

வாய் பேசும்
ஹிருதயத்தில் இல்லாதது வாயாலே பேசலாமோ தான் –
யுக்தி மாத்ரமேயாய் அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை
நினைவும் சொல்லும் விபரீதமாய் இருக்கும்
கிருஷ்ணனோடு பழகிச் சேர்த்தியாய் இருக்கிற உனக்கு பொய் சொல்லுகை வம்போ –

நங்காய் –
உன்னுடைய லாபத்துக்கு நாங்கள் வேண்டாத படியாய் இருந்ததே இறே –
எங்களை ஒழிய நீ நிரபேஷையாய் இருந்தாய் இறே
எனக்கு உங்களை ஒழியச் செல்லாது -என்று இருந்தது எல்லாம் கண்டோம் இறே
சொல்லும் செயலும் சேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –
இரண்டும் சேர்ந்த இடத்தில் அன்றோ பூர்த்தி உள்ளது
அது இல்லாத இடத்தில் ஆதித்யர்கள் பக்கல் ஒவ்பசாரிகமாகச் சொல்லும் பகவத் சப்தம் போலே அன்றோ
ஒரு காலும் பிரிகிலேன்(பெரிய திருமொழி – 7-4 )என்றதும் பொருள் இதுவோ

எழுந்திராய்
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்

நாணாதாய்
நீ தான் எழுந்து இருக்க வேணுமோ –
நாம் பிற்பாடார் ஆனோமே என்று கிடந்த இடத்தே கிடந்து
சொன்ன படி செய்யப் பெற்றிலோமே என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –
நீ இருந்த ஊரிலே பூசணியும் காயாதோ –
ஹ்ரீ ரேஷா ஹி மமாதுல-(ராமபிரானே ரிஷிகள் இடம் வெட்கப்பட்டாரே )-என்னுமவனோடே அன்றோ உனக்கு வாசனை
எங்களை லஜ்ஜிப்பிக்கத்தான் பெற்றோமோ –
நாட்டார் அளவோ உனக்கு நாக்கு

நாவுடையாய்
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என் என்ன –

நாவுடையாய்
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –

நான் உங்களுக்குத் செய்ய வேண்டுவது என் என்ன

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்
ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை

(தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –
தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்
கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே
ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )

கூராழி வெண் சங்கு ஏந்தி —
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை –
ஆசைப்படப் பண்ணுமதுவும்
அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –
ஆங்கு மலரும் குவியும் என்கிற
திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் –
எப்போதும் உண்டு –
அது பெண்களுக்குத் தோற்றும் –
ஆண்களுக்குத் தோற்றாது

உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை

(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்
கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே –
இயற்கையாகவே உண்டே )

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்

பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 5, 2017

(இதிலும் அடுத்த பாசுரத்தில்
போதரிக் கண்ணினாய் –ஞானம் -தனக்கு உஜ்ஜீவனம்
நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க
இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே
கள்ளம் தவிர்ந்து கலக்க வேண்டும் என்கிறார்
பாகவதர் கோஷ்ட்டியில் கலக்காமல் கண்ணனை அனுபவிக்காதே என்றவாறு –
ராவல் வர்ஸானா -சங்கேத்- ராதா தேவி பிறந்த இடம் என்பர் –
சங்கேத ஸ்தலம் -அதுவே இங்கு பாவைக்களம்
நன்னாளால் இதிலும் -முதல் பாட்டில் போல் )

தன் கண் அழகை நினைத்து –
இக் கண் அழகு உடைய நான் இருந்த இடத்தே எல்லாரும் வரும் அத்தனை அன்றோ
நானோ போவேன் என்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் —

மனத்துக்கு இனியானைப் பாடவும் என்று இவர்கள் சொன்ன பாசுரத்தை
அசல் திரு மாளிகையில் கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளை –
நம் அபராதம் தீர –
இவர்களுக்கு வார்த்தை சொல்வோம் என்று
பெண்காள் இங்கே ராம விருத்தாந்தம் சொன்னார் உண்டோ என்ன –

ராம விருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும்
ஸ்ரீ பாரதமும்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்படச் சொன்னோம் -என்கிறார்கள் –
(இத் திருப் பாவையில் இல்லாததே இல்லையே )

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

புள்ளின் வாய் கீண்டானை–பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை-கொடியனான இராவணனை முடித்து
(அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய
கீர்த்திமை பாடி போய்-லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும்-எல்லாப் பெண் பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார்-நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்;
வெள்ளி எழுந்து-சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று-ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான், (அன்றியும்)
புள்ளும்-பறவைகளும்
சிலம்பின–(இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன;
போது அரி கண்ணினாய்–புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே;
பாவாய்–பதுமை போன்றவளே!
நீ –நீ
நல் நாள்-கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து-(கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து –எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே-உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தியோ-படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல்-ஆச்சரியம்!

புள்ளின் வாய் கீண்டானை
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )-
கள்ளச் சகடம் -என்னுமா போலே –
மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் –
பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –

புள்ளின் வாய் கீண்டானை
இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –
இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –
விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –

இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை
(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் )
கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் –
தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்-
அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு
அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –

கீழில் பாட்டிலும்
இப் பாட்டிலும் ராம விருத்தாந்தத்தைச் சொன்னால் –
ஒருகால் சொன்னதையே சொல்லா நின்றார்கள் என்று
நினைக்கக் கூடும் என்று
தங்கள் பாழியான கிருஷ்ண விருத்தாந்தத்தையும் கூட்டிச் சொல்கிறார்கள் –

தங்களுக்கு பள்ள மடையான கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லிற்றாகில் –
பின்னை ராம விருத்தாந்தம் என் என்னில்
தங்களோடு ஒரு கோவையான பிராட்டி பிரிவு பொறுக்க மாட்டாதவன்
விருத்தாந்தம் என்று சொல்கிறார்கள் –

பொல்லா அரக்கனைக்
உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த
நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –

முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி
அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –
துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே

இத் தண்மையை பிராட்டியும் –
த்வன் நீச -என்றாள் இறே
(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )

பொல்லா அரக்கனை-
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று
நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே

பொல்லா அரக்கனை
ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற நிலை மாறி
தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி

(கோபத்தால் ஜகத்தையும் மலைகளையும் இல்லையாம் படி அம்பின் நுனியால் முடிப்பேன்
என்று தண்டகாரண்யத்தில் சொன்ன நிலை
மாறி பொல்லா அரக்கனை -என்ற இடத்தில் பர்யவசிக்கிறது )

அரக்கனை-
மாயா மிருகத்தைக் காட்டுவார் –
மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய்
ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்

கிள்ளிக் களைந்தானைக்
வீர பத்னி யாகையாலே
கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –

திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –
தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி

கீர்த்திமை பாடிப்
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று
எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம்
உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

எதிர் அம்பு கோத்த சம்சாரிகள் –
நமோ நாராயணாய -என்று
தங்களுடைய தோல்விக்கும்
அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும்
மேல் எழுத்து இட்டுக் கொடுத்தால் போலே

ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகிலே கலங்கினாள் –
தம்பி சீலத்துக்கு இலக்கானான் –

விரஹ துர்ப் பலைகள் ஆனவர்கள் போன படி என் என்னில்

பாடிப் போய்
பாட்டே தாரகமாகப் போனார்கள் –
கால் நடை தருகைக்கு தாரகம் திரு நாமம் இறே
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம்
சாஷாத் பாதேயம் திரு நாம சங்கீர்த்தனம் —
தன் தாள் பாடி (திரு நெடும் தாண்டகம் -6-)-என்னக் கடவது இறே

பாடிப் போய் –
பகவதோ பலேன -என்கிறபடியே

பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
நாம் சென்று எழுப்பிக் கொண்டு போக வேண்டும் படி பாலைகளான பெண்கள்
எல்லாரும் உணர்ந்து புறப்பட்டு
கிருஷ்ணன் பெண்களை மெய்க் காட்டுக் கொள்ளும் சங்கேத ஸ்தலத்தே ஏறப் போனார்கள் –

பாவைக் களம் என்று –
இந்திராணியை- ரதியை -நோற்கைக்கு பெண்கள் திரளும் இடம் –
திரளும் இடத்தை
நெற் களம்
போர்க்களம் என்னுமா போலே

பாலைகள் ஆகையால் அவர்கள் காலம் அறியாமே போகக் கூடும் –
அறிந்த நாம் அகாலத்தில் போக ஒண்ணாது இறே
சுக்ரன் உதித்தான் ஆகில் பாருங்கோள் என்ன

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
சுக்ர பகவானும் மத்யகதனானான்-
ப்ரஹஸ்பதியும் அஸ்தமித்தான் –

நீங்களும் அபி நிவிஷ்டைகள் ஆகையால் நக்ஷத்ர சாத்ருஸ்யத்தைக் கொண்டு
நக்ஷத்ரம் எல்லாம் சுக்ர ப்ருஹஸ்பதிகளாய் இறே தோற்றுவது-
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே (திருவாய் -4-4-4 ) என்னுமவர்கள் அன்றோ –
ஆகையால் இது விடிவுக்கு உடல் அன்று
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

நாங்கள் இத்தனை பேர் திரண்டு வந்தது அடையாளம் அன்றோ என்கிறார்கள் –

பிரிந்தார் திரளில் அன்றோ திரட்சி யாவது –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்றும் ஒரு காலும் பிரிகிலேன் என்றும் திரியுமவர்கள் அன்றோ நீங்கள்
உங்கள் திரட்சி விடிவுக்கு உடல் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன

புள்ளும் சிலம்பின காண்
கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது –
அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று
இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –

திர்யக்குகளினுடைய விருத்தாந்தம் கொண்டோ கால நியதி பண்ணுவது
என்று அவள் பேசாதே கிடந்தாள்-

நாங்கள் சொன்ன வார்த்தைகளுக்கு எல்லாம் விபரீதம் சொல்லுகிறது
உன் கண் அழகை நினைத்து இறே

போதரிக் கண்ணினாய்-
உபாஸ்யம் இருந்த இடத்தில் உபாசகன் வரும் அத்தனை அன்றோ –
அஸி தேஷணை–புண்டரீகாக்ஷன் இருந்த இடத்திலே போகக் கடவளோ-என்கிறார்கள் –

நெடும் கண் இள மான் அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் (6-7)-என்று
அவனுடைய விபூதியும் இவள் கண்ணில் பரப்பில் ஒரு மூலைக்கும் போராது என்றது இறே –

போது அரிக் கண்ணி
1-பூவும் மானும் போன்ற கண் –
2-பூவில் படிந்த வண்டு போன்ற கண் என்னவுமாம் –
3-பூவோடு சீறு பாறு என்ற கண் என்னவுமாம்
4-உலாவுகின்ற மான் போலே இருக்கிற கண் என்னவுமாம் –
5-அரி என்று -மான் -வண்டு -சத்ரு -என்னக் கடவது இறே

குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணம் பட்டு கொதிப்பதுக்கு முன்னே ஆழ முழுகினாலும்
விரஹ தாபம் அங்கும் புகுந்து சுடும் என்னும் இடம் அறியார்கள்

குடைந்து நீராடாதே
சரயூமவகாஹதே-என்னுமா போலே
(பரதன் ஊரார் வரும் முன் நீராட சரயு போவான் -பெருமாள் லஷ்மணன் பேசி –
கோதாவரியில் குள்ளக் குளிர பேசிக்கொண்டது –
தாபம் இல்லாம்நாள் லஷ்மணனுக்கு குளிரும் –
அவன் அத்யந்த ஸூ குமாரன் அபர ராத்திரியில் எப்படி நீராடுவானோ )
கிருஷ்ண விரஹ தாபம் அற நீராடப் போராதே-

1-நமக்குச் செல்லும் கிருஷ்ண விரஹ தாபம் சமிக்கைக்கும் –
2-இனி ஒருக்காலும் கிருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களை அவகாஹித்து அனுபவிக்கப் போராதே –

உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து அவன் கண்ணாலே குமிழ் நீர் உண்ணப் போராதே
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே நாங்கள்-
உன்னுடைய ஸுந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அங்கனம் அன்றோ

பள்ளிக் கிடத்தியோ
நாமும் அவனுமாய் அவன் முழுக்கூட்ட அவனோடே ஜலக்ரீடை பண்ணி அவன் மடியிலே சாயக் கடவ –
அத்தை விட்டு –
அவன் ஒருக்கால் கிடந்த படுக்கை என்று அத்தை மோந்து கொண்டு கிடக்கிறாயோ —
தவாஙகே சமு பாவிசம்-
(சீதா வார்த்தை -ஜலக்ரீடை பண்ணி உனது மடியில் படுத்து இருந்தேனே -என்று நினைத்து வருந்திய இடம் )
பார்த்த பார்த்த இடம் எங்கும் விளைந்து கிடவா நிற்க உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரைப் போலே

பாவாய் நீ
கிருஷ்ணனுடைய கண்ணுக்கு இலக்காம் படியான நிருபாதிக ஸ்திரீத்வத்தை யுடைய நீ
தனிக்கிடை கிடக்க வில்லையோ

நன்னாளால்
காலம் பரிணாமி -என்னும் இடம் அறி கிலையோ-
அநந்தரம்
வ்யோஸ்யா ஹயதி வர்த்ததே -என்று சோகிக்கும் படி யன்றோ இருப்பது
(சீதா பிரிந்தாளே –இவை எல்லாம் கவலை இல்லை –
பிரிந்த பத்து மாதங்களை மீண்டும் பெற முடியாதே என்று சோகித்த ராமன் வார்த்தை )
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளவர்களும் ஆறி இரா நின்றார்களோ –

அன்றிக்கே
நன்னாளால்
இனி சற்று போது கழிந்தால் எங்களைத் தான் உன் வாசலில் நிற்க ஓட்டுவார்களோ
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்கிற நாட்டார் இசைந்து
கிருஷ்ணன் முகத்திலே விழிக்கப் புகுகிற நாள் அன்றோ -ஆறி இருக்கிறது என்

கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்
கள்ளமாவது (அடியார்கள் உடன் சேராமல் )தனியே கிருஷ்ணன் குண சேஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை –
அத்தைத் தவிர்ந்து எங்களோடு கலந்து

கள்ளம் தவிர்ந்து
அவனோடே கலந்து யுடம்பு காண உகக்குமவர்கள் அன்றோ நாங்கள் –
எங்களுக்கு மறைக்கிறது என்
அந்த ஆத்ம அபஹாரத்தைத் தவிர்ந்து எங்களோடு கலக்கப் பார்

சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை

(இந்த பெண் தானே இவளுக்கு சேஷி
பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்
அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )

ஆன் பின்பு எங்களுடைய குற்றம் போல் அன்று காண்
அவனோடே கலந்த உடம்பைக் காட்டாத உன்னுடைய குற்றம் –

கள்ளம் தவிர்ந்து கலந்து -குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -பாவாய் நீ நன்னாளால் –
பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை –கனைத்திளம் கற்று எருமை -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 5, 2017

(ஸ்ரீ பெரும் புதூர் இப் பாசுரம் இரண்டு தடவை சேவிப்பார்கள்
அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –
எம்பெருமானார் -உலகு-உயிரை – உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை –
நண்ணறு ஞானம் பெற்று நாரணற்கு ஆளானார் நம் அண்ணல் ஸ்வாமி வந்து தோன்றிய
அப்பொழுதே அனைத்தில்லத்தாரும் அறிந்தார்கள் அன்றோ -)

பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து
கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே
ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

அவர்களுடைய அனுஷ்டானமும்
இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் –
விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

இள கன்று எருமை-இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை
கனைத்து–(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி–(தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து–(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர-முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)
இல்லம்-வீட்டை
நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன்-சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
கிருஷ்ண கைங்கர்யமாகிய நல்ல செல்வம் உடையவன்
தங்காய்-தங்கையானவளே!
பனி-பனியானது
தலை வீழ-எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி-உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,
பந்தல் நிற்க தண்டியம் கட்டி இருக்க அத்தைப் பற்றி
சினத்தினால்-(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை-தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
தென்-திருவடி மதித்த ஐஸ்வர்யத்தைச் சொன்னபடி
செற்ற-கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை–சிந்தனைக்கு இனியனுமான இராம பிரானை
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணனுக்கு இவள் கொடுக்கும் பட்டம்
பாடவும்-(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ-நீ
வாய் திறவாய்-வாய் திறந்து பேசுகிறாயில்லை,
இனித் தான்-எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய்-எழுந்திரு;
ஈது என்ன பேர் உறக்கம்-இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும்-(இச் சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து-(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிற விது) அறியப் பட்டதாயிற்று:

கனைத்து
உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே –
ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் –
ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –

ப்ராப்த காலத்திலேயே கறப்பார் இல்லாமையாலே முலை கடுத்து –
இவ் வாசலிலே கன்று காலியாய் நாம் பட்டதோ என்று குமுறி
கறக்க வேண்டும் போதிலே இவற்றைக் கறவாதே
காற்கடைக் கொள்ளுவான் என் என்னில்

இளைய பெருமாளுக்கு அக்னி காரியத்தில் அந்வயம் உண்டாம் அன்று
இவனுக்கு இவற்றினுடைய ரக்ஷணத்தில் அந்வயம் உள்ளது –

இளைய பெருமாளுக்கு பெருமாளை பிரிய மாட்டாமையாலே –
இவன் கிருஷ்ணனை பிரிய மாட்டாமையாலே –
(சயமே அடிமை கோதில் அடியார் பிரியா அடியார் -மூன்றும் உண்டே )
இப்படி பகவத் விஷயத்தில் ப்ரேமத்தாலே பிரிய அவசரம் இல்லாமை –
ஸ்வ தர்மத்தை அனுஷ்டியாது ஒழிகை –

விடுகை யாவது -அல்லது –
ஆலஸ்யத்தாலே(சோம்பலால் ) விடுமது விடுகை என்று –
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்தப் பொழுது எனக்கு மற்றதுவே போதும் -என்னும் படியே –

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் தொழில் எனக்கு -நான்முகன் திருவந்தாதி–85–

இளம் கற்று எருமை
இளம் கன்றான எருமை என்னுதல்-
இளம் கன்றை யுடைய எருமை என்னுதல் –
இரண்டாலும் பாடு ஆற்றாமை சொன்ன படி

கறவா மட நாகு தன் கன்று உள்ளினால் போலே-(7-1) என்னக் கடவது இறே
(அங்கு கன்று தாயை உள்ளினது
இங்கு எருமை கன்றை உள்ளினது )

கன்றுக்கிரங்கி
தன் முலைக் கடுப்பு கிடக்க கன்று என் படுகிறதோ -என்று இரங்கி-
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில்
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று
அவன் படும் பாட்டுக்கு நிதர்சனமாய் இருக்கிறது –

அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை –
நாங்கள் உன் வாசலிலே வந்து நின்று புகுரப் பெறாமையாலே படா நின்றோம்

நினைத்து
மனஸா சிந்த யத்தரிம் -என்று (கஜேந்திரன்)நினைத்த அநந்தரம் –
த்வராயை நம -என்னும் படி திரு உள்ளம் அங்கே ப்ரவணம் ஆனால் போலே
(கஜேந்திர வரதன் நிலை போல் அன்றோ இந்த எருமை பாடு )

நினைத்து முலை வழியே நின்று பால் சோர–
கன்றை அகல கட்டி வைப்பார்கள் -அத்தை நினைத்து -பாவன பிரகர்ஷத்தாலே –
கன்று முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு
கை வழியும் அன்றிக்கே –
கன்றின் வாய் வழியும் அன்றிக்கே
முலை வழியே பால் சொரியா நிற்கும் –

நின்று பால் சோர
மேகங்களுக்கு கடலிலே புக்கு முகந்து கொண்டு வர்ஷிக்க வேணும் —
அவ் வருத்தமும் இவற்றுக்கு இல்லை –
நினைவு ஊற்றாக சொரிகிற பால் ஆகையால் –
(அவன் சங்கல்பத்தாலே அனைத்துமே பண்ணுமா போல் )
நினைவு மாறாமையாலே –
திரு மலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே செல்லும்

பால் சோர-
பகவத் விஷயம் கேளாதே இருக்க தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே –
அர்ஜுனன் கேளாதே இருக்க –
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணுமே பரமம் வச-என்றவன் தன்னைப் போலே

(பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச:
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா-ஸ்ரீ பகவத்கீதை–10-1-

ஸ்ரீபகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
மஹாபாஹோ-பெருந்தோளுடையாய்,
ப்ரீயமாணாய-மிகவும் அன்பு கொண்டவனான,
தே அஹம்-உனக்கு நான்,
ஹிதகாம்யயா-உன் நலம் கருதி,
யத் பூய ஏவ வக்ஷ்யாமி-எதை மீண்டும் கூறுவேனோ,
மே-என்னுடைய
பரமம் வச:-மிகவும் உயரிய அந்த வாசகத்தை,
ஸ்ருணு-கேள்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்;
நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே )

நனைத்தில்லம் சேறாக்கும்
பால் வெள்ளம் இருக்கையாலும் –
எருமைகள் துகைக்கையாலும் சேறாய்க் கிடக்கும்-

இல்லம் சேறாக்கும்-
எத்தனையேனும் ஏறிப் பாயாதே மேடும் பால் வெள்ளத்தால் சேறான படி
கடலை அகழ் செய்து கொண்டு கிடந்தால்-
ஓடம் ஏறிப் புகுதல் –
சேற்றுக்கு அளற்றுப் பொடி இட்டுப் புகுதல் செய்ய வேண்டும் படி இருக்கை –

நற் செல்வன்-
கர்மத்தாலே யாதல் –
தேவதாந்த்ர பஜனத்தாலே யாதல் வரும் ஐஸ்வர்யம் அந்தவத்தாய் இருக்கும்
பெருமாளை பிரியாத இளைய பெருமாள் உடைய ஐஸ்வர்யம் போலே –
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அன்றிக்கே
அவனை நோக்குகிற ஐஸ்வர்யம் இறே நிரந்தர சேவை போலே நிலை நின்ற ஐஸ்வர்யம் –

லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -கைங்கர்ய சம்பத் இறே
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –

நதேவ லோகாக்ரமணம் -என்னும் படியே
ப்ராப்ய விரோதிகளில் நசை அற்ற படியால் தோற்றி மாயும் சம்பத் அன்றியிலே இருக்கை –

லஷ்மீ சம்பன்ன –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று ஆழ்வாருடைய கைங்கர்ய ஸ்ரீ
விசேஷஞ்ஞரோடே அவிசேஷஞ்ஞரோடே வாசி அற ஏறிப் பாய்ந்தது போலே –
இவனுடைய கைங்கர்ய ஸ்ரீயும் நாட்டுக்கு எல்லாம் குறை யற்று இருக்கை –

தங்காய்-
உங்களுக்கு ரஷ்ய வர்க்கத்தை நோக்காமை ஜென்ம சித்தம் இறே

நற் செல்வன் தங்காய் –
ராவணஸ்ய அனுஜோ பிராதா -என்று
தமையனுடைய தண்மை சொல்ல வேண்டாத ஏற்றம் உண்டு இறே உனக்கு –

ஸ்ரீ விபீஷண ஆழ்வானிலும்
அவன் மகளான த்ரிஜடை
பிராட்டிக்கு அடிமை செய்தது போலே
கிருஷ்ணனை நோக்கின தமையினில் காட்டிலும் எங்களை நோக்க வேண்டாவோ
கிருஷ்ணன் ரஷ்யமான போதே நாங்களும் அந்தர் பூதைகள் அன்றோ –

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
ஆழி மழைக் கண்ணனில் வர்ஷிக்க நியமிக்கையாலே-மேல் வர்ஷமாக-
கீழ் பால் வெள்ளம் இட நின்று அலைகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே தண்டியத்தைப் பற்றிக் கொண்டு நின்றோம் –

ப்ராப்ய பூமியில் ஐஸ்வர்யம் இங்கே கை புகுரச் செய்தே
அவ் வருகே போகத் தேடுகிறது எங்களுடைய அபி நிவேச அதிசயம் இறே
ஈஸ்வரன் அபிநிவேசம் அறிந்து –
விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு (1-6-5 )தன்னைக் கொடுக்குமா போலே
இவர்கள் அபி நிவேசம் அறியும் அளவும் பேசாதே கிடக்க
அவள் நினைவு அறியாதே தங்கள் செல்லாமையாலே சொல்லுகிறார்கள்

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —-திருவாய்மொழி-1-6-5-

சினத்தினால்
பெண்களுக்காகில் சேர்க்கைப் பல்லி போலே கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுகை பணி இறே
அதவா கிம் ததா லாபை-என்று
பெண்களை தீரா மாற்றமாக நெஞ்சாரல் படும் படி பண்ணுமத்தை நினைத்து கிடக்கிறாள்

உண்ணாது உறங்காது –
அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று
பெண்களை பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே
பெண் பிறந்தார்க்கு தஞ்சமான சக்கரவர்த்தி திருமகனை சொல்லுவோம் இவள் எழுந்து இருக்கைக்காக என்று
ராம விருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –

உண்ணாது உறங்காது* ஒலிகடலை ஊடறுத்துப்*
பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம்*
திண்ணார் மதில் சூழ்* திருவரங்கச் செல்வனார்*
எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே*

விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –
ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –

தண்ணீர் போலே இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கும் சினம் உண்டோ என்னில் –
தன் திரு மேனியில் அம்பு பட்ட போது ஆறி இருந்தார் –
திருவடி மேலே அம்பு பட்ட போது சீறினான் இறே –

ததோ ராமோ மஹா தேஜோ ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபஸ்ய வசமே இவான்

ததோ ராமோ மஹா தேஜோ -திருவடி மேல் அம்பு பட்ட அநந்தரம்
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே பெருமாள் அநபிபவ நீயரானார்

ராவணேன க்ருத வ்ர்ணம் த்ருஷ்ட்வா -தான் பருவம் நிரம்பாத காலத்தில் பண்ணிக் கொண்டது அன்றிக்கே
தரம் அல்லாத ராவணனால் நோவு படக் கண்டவாறே

ப்லவக சார்த்தூலம் -திருவடி தன் மேல் அம்பு படப் பட
வர்ஷம் காணப் பணைக்கும் பதார்த்தங்கள் போல்
மேநாணித்து கொடுத்தான் –

கோபஸ்ய வசமே இவான்-திருவடி -தரம் அல்லாத ராவணன் கையிலே புண் பட்டவாறே

க்ரோதம் ஆஹாரயத் என்று இருக்கக் கடவ தாமும்
கோபம் இட்ட வழக்கானார்

ஆஸ்ரித கார்யம் என்றும் தம் கார்யம் என்றும் இரண்டு அன்று –
மஹா ராஜர் சீற்றம் பிறந்து வாலியைக் கொல்ல வேணும் என்ற போது எய்தார்
அவனுக்கு ஸவ்ப்ராத்ரம் பின்னாட்டி கண்ண நீர் பாய்ந்த வாறே தாமும் கூட அழுதார் –

தென்னிலங்கை
பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –
அத் திக்குக்கும் அஸஹ்யமான படி

தென்னிலங்கை கோமானைச் செற்ற
யத் யதர்மோ ந பலவான்-என்றும் –
அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே

ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –
படையைக் கொன்று –
புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து
ஆயுதங்களை முறித்து –
அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-
பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி

தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

மனம் ராவணன்- விவேகம் சரம் -பத்து தலை பத்து இந்திரியங்கள்

யோ வஜ்ரா பாத அசனி சந்நிபா தான் நசு ஷூ பே நாபி சசால ராஜா -ச ராம பாணாபிஹதோட் ரு சார்த்தச்-
சசால சாபஞ்ச முமோச வீர மாதங்க இவசிம் ஹேந கருடே நேவ பன்னக
அபிபூதோ பவத் ராஜா ராகவேண மஹாத்மனா -கச்சா நுஜானா மிரனார்த்தித்த ஸ் த்வம் பிரவிசய ராத்ரிஞ்ச ரராஜா லங்காம்
ஆசுவாஸ்ய நிர்யாஹிர தீச தன்வீத தா பலம் த் ரக்ஷ யசி மே ரதஸ்த

(சசால சாபஞ்ச முமோச வீர-ராமன் முன் கதி அற்று வில் இல்லாமல் வெறும் கையாக இருந்தால் வீரன்
சிங்கம் யானை -கருடன் பாம்பு போல்
இன்று போய் நாளை வா )

மனத்துக் கினியானைப்
அர்த்திகள் ஒருத்தன் பக்கல் பெறா விட்டால் –
சொல்லாய் சீமான் என்னுமா போலே பெண்களை ஓடி இருந்து துடிக்க இட்டு வைத்து
பின் இரக்கம் இன்றிக்கே துடிப்பைக் கண்டு இத்தனை கண்ண நீரும் விழ விடாதே
படு குலை படிக்கும் தீம்பனான கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே

ரீபூணாம் அபி வத்சலனாய் சத்ருக்களுக்கும் கூட கண்ண நீரை விழா விடுபவனை அன்றோ பாடுகிறது

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று
நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு
இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக
சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

உயிர்க்கு அது காலன் என்று* உம்மை யான் இரந்தேற்கு நீர்*
குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்*
தயிர்ப் பழஞ்சோற்றொடு* பால் அடிசிலும் தந்து* சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்* பண்பு உடையீரே! –9-5-8-

வேம்பேயாக வளர்த்தாள்-என்று
பெற்ற தாயையும் குற்றம் சொல்லும் படி இறே இவன் படி
கௌசல்யா லோக பார்த்தாராம் -என்று
பெற்றவளையும் கொண்டாடும் படி இறே அவன் படி –

வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே–நாச்சியார்

பாடவும் நீ வாய் திறவாய்
பிறர் அநர்த்தத்துக்காக நீ விசேஷஞஜை யாவதே –
எங்களுக்காக அன்றிக்கே
உன் ஹர்ஷத்துக்காக போக்கு விட வேண்டாவோ

இனித் தான் எழுந்திராய்
எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால்
உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ –
எங்கள் ஆற்றாமையை அறிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே

யீதென்ன பேருறக்கம்
வைதிகமும் இன்றிக்கே
லௌகீகமும் இன்றிக்கே இருபத்தொரு உறக்கம் உண்டாவதே –

பரார்த்தமாக
உலகு எல்லாம் நன்கு ஒடுங்க உறங்கும்
ஈஸ்வரன் உறக்கமும் இன்றிக்கே
தாபார்த்தராய்
தமோ குண அபிபூதராய் கிலேசம் போக உறங்கும்
சம்சாரிகள் படியும் இன்றிக்கே
இரண்டிலும் வியாவிருத்தமாய்-
இது ஒரு பத்தொன்பதாம் பாஷையாய் இருந்ததீ

பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவன் உடன் பழகி வைத்தும்
இங்கனம் உறங்குவதே

அனைத்து இல்லத்தாரும்
பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –
அது எல்லாம் செய்தற்றது –

நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –
இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

இனித் தான் எழுந்திராய்-
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை –

புறம்பு இதுக்கு ஆள் உண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய ப்ரஸித்தமாய்த்து என்றுமாம்

எம்பெருமானார் அவதரித்தது போலே காணும் இப் பெண் பிள்ளையும் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை –கற்றுக் கறவைக் கணங்கள் -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி –

January 5, 2017

அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணன் ஊருக்காக ஒரு பிள்ளையாய் எல்லாராலும் கொண்டாட வளர்ந்தால் போலே –
ஊருக்காக ஒரு பெண் பிள்ளையாய் –
பதி சம்யோக ஸூலபம் -என்னும் படி பருவத்தை உடையளாய்
அவனைப் பெறுகைக்கு நோற்பேன் நானோ
அவன் தானே வேனுமாகில் நோற்று வருகிறான் என்று
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-

பதி அமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து – அம்
கோல் தேடி ஓடும் கொழுந்து – அதே போன்றதே ,
மால் தேடி ஓடும் மனம் ! இரண்டாம் திருவந்தாதி -27

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–

பதவுரை

கன்று கறவை–கன்றாகிய பசுக்களின்னுடைய
பல கணங்கள்–பல திரள்களை
கறந்து–கறப்பவர்களும்
செற்றார்–சத்துருக்களினுடைய
திறல் அழிய–வலி அழியும்படி
சென்று–(தாமே படையெடுத்துச்)சென்று
செரு செய்யும்-போர் செய்யுமவர்களும்
குற்றம் ஒன்று இல்லாத-ஒரு வகைக் குற்றமும் அற்றவர்களுமான
கோவலர் தம்-கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த)
பொன் கொடியே-பொன் கொடி போன்றவளே!
புற்று அரவு அல்குல் புன மயிலே–புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில்
(இஷ்டப்படி திரிகிற) மயின் போன்ற சாயலையுமுடையவளே!
செல்வம் பெண்டாட்டி-செல்வமுள்ள பெண் பிள்ளாய்!
போதராய்–(எழுந்து) வருவாயாக.
சுற்றத்து தோழிமார் எல்லாரும்-பந்து வர்க்கத்திற் சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லாரும்
வந்து-(திரண்டு) வந்து
நின் முற்றம் புகுந்து-உனது (திரு மாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து
முகில் வண்ணன் பேர் பாட–கார் மேக வண்ணனான கண்ண பிரானுடைய திருநாமங்களைப் பாடச் செய்தேயும்
நீ-(பேருறக்கமுடைய) நீ
சிற்றாது-சலியாமலும்
பேசாது-(ஒன்றும்) பேசாமலும்
உறங்கும் பொருள் எற்றுற்கு-உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்)
ஏல் ஓர் எம் பாவாய்-

கற்றுக் கறவைக்
கறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே கன்று நாகாய் இருக்கை –
முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய்
கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே
இவையும் இளகிப் பதித்து இருக்கும் –
அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே –
இவை மனுஷத்தவே பரனான கிருஷ்ணனுடைய கர ஸ்பர்சத்தாலே

முலை சரிந்தாரைப் பாராத ராஜ குமாரனைப் போலே
கன்று மேய்க்கப் பெற்றால்
பசுக்களை பாரான் –

கன்று மேய்த்து இனிது உகந்த —
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்று பசு மேய்த்து உகக்கும் –
கன்று மேய்த்து இனிது உகக்கும் –
ரஷ்ய வர்க்கத்தில் தன் கை கால் நீட்ட மாட்டாதவர்களை இறே உகப்பது –
கன்று மேய்க்கை ஒரு தலை யானால் பசுக்களும் நித்ய ஸூரிகள் ஸ்தானேயாம் அத்தனை –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்*
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்*
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்*
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (திருநெடும் தாண்டகம் -2)

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்எ டை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே–திருவாய்

(ரோகிணி தோறும் ராஜ ராஜன் திருக்கோலம் மன்னார்குடி கோபால வேஷம் சேவிக்கலாம் )

காளாய்-
அவற்றை இளகிப் பதித்து அவற்றோடு சம்பந்தத்தால்
தானும் இளகிப் பதித்து இருக்கும் –
வத்ஸ மத்திய கதம் பாலம்-
(கன்றுகள் சூழ இருக்க பார்த்தார் அக்ரூரர் தேடிப் போனவர் )-என்னும் படியே –

கற்றுக் கறவை –
பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று
சக்கரவர்த்தி இளகினால் போலே

(சக்கரவர்த்திக்கு இளகிபிப் பதித்ததே
வா போகு–பின் ஒரு கால் வந்து போகு -முன்னிலும் பின் அழகு
பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே–தேவ குமார ரூபம் என்று ரிஷி கரி பூசுகிறார் )

இவனுக்கு கண் அழிக்கலாம் படி
புக்க இடத்தே புக்கு
புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
இவனுக்கு முன்னோட்டுக் கொடுக்க வற்றாய்
இவனுக்கு ஒதுங்க நிழலாய் இறே இருப்பது –
இட்டமான பசுக்கள் இனிது மறித்து நீரூட்டி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–நாச்சியார்

கணங்கள் பல –
தனியே எண்ண முடியாமை அன்றிக்கே
சமூகங்களும் எண்ண முடியாது
ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமான்- என்னுமா போலே
பல என்னும் அத்தனை –

கணங்கள் பல
நாரா என்று -ஆத்ம சமூகங்கள் பல –
பஹு நாம் –
பற்பல்லாயிரம் உயிர் (3-2)-என்று ஆத்மாக்களுக்கு ஸங்க்யை யுண்டாகிலும்
பஹுவோன் ரூப கல்யாண குணான் புத்ரஸ்ய –(அயோத்யா வாசிகள் சக்கரவர்த்திக்கு சொன்ன வார்த்தை )
பாஹ்வோ துர்லபாச்சைவ –(நாரதர் வால்மீகி சம்வாதத்தில் )
எண்ணில் பல் குணங்கள்(பெரிய திருமொழி -5-7-2)-என்றும் சொல்கிற
பகவத் குணங்களுக்கு எல்லை உண்டாகிலும் இப் பசுக்களுக்கு எல்லை இல்லை

பல கறந்து –
அநேக ரித்விக்குகள் செய்யக் கடவ சடங்கை
அதிலே கூர்மை யுடையவன் ஒருவனே செய்யுமா போலேயும்
ப்ராஹ்மணர் வேதத்தை அடைய அதிகரிக்குமா போலேயும்
ஷத்ரியன் பருவம் நிரப்புவதற்கு முன்பே யுத்தத்தில் நிலவன் ஆனால் போலேயும்
ஈஸ்வரன் ஒருவனுமே சர்வ ஆத்மாக்களினுடையவும் கர்ம அனுகுணமாக நாம ரூபங்களை பண்ணி
நியமனாதிகளைப் பண்ணுமா போலேயும்
பசுக்கள் அநேகம் ஆகிலும் ஜாதியில் மெய்ப்பாட்டாலும் –
ஜாதி உசிதமான விருத்தி யாகையாலும்
ஒருத்தன் அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம் –

அரியது செய்ய வல்ல குடியிலே பிறந்தோம் என்னா –
உன்னை அல்லது அறியாத எங்களுக்கு அரியையாக ஒண்ணாது காண் –

செற்றார்
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் -கிருஷ்ணனுடைய மினுக்கம் பெறாதவர்கள் –
சத்ரோஸ் சகா ஸாத் ஸம்ப்ராப்த -என்று
ராவண சஹாசத்தின் நின்றும் வந்தான் என்னாதே
நம் எதிரியான பையல் ஓலக்கத்தின் நின்றும் வந்தான் என்று அங்கதப் பெருமாள் பேசினால் போலே
(வாலிக்கு நண்பனாக இருந்தாலும் சத்ரு என்றாரே அங்கதன் )
ஆண்டாளும் இவ்வூரில் ஸம்ருத்தி பொறாதவர்களை சத்ருக்கள் என்கிறாள் –

பகவத் ஸம்ருத்தி பொறாதார் பாகவதருக்கு சத்ருக்கள் –
பாகவத ஸம்ருத்தி பொறாதார் எம்பெருமானுக்கு சத்ருக்கள் –

இரண்டும் உண்டு இறே கஞ்சனுக்கு –
தீய புந்திக் கஞ்சன் (பெரியாழ்வார் 2-2)-இத்யாதி –
சாது சனத்தை நலியும் (திருவாய் -3-5-

பாண்டவர்களுக்கு சத்ருக்கள் நமக்கு சத்ருக்கள் என்று
த்விஷதன்னம்-என்றான் இறே கிருஷ்ணன்
இவள் தானும் மாயன் இராவணன் -(நாச்சியார் 5-3 )என்று
செவ்வைப் போர் அறியாத பையல் -என்று அருளிச் செய்தாள்

செற்றார் திறலழியச்
பஸ்மதாரியான ருத்ரன் –
ப்ராஹ்மணரைப் போலே ஒத்துச் சொல்லித் திரியும் ப்ரஹ்மா –
அப்சரஸ் ஸூக்களை மெய்க்காட்டுக் கொள்ளும் இந்திரன்
அந்நிய பரனாய்க் கொண்டு உறங்கும் ஈஸ்வரன் –
இவர்கள் அடங்கலும் நமக்கு எதிரோ-என்று இருக்கும் கம்சனுடைய மிடுக்கு அழிய –

சென்று செருச் செய்யும்
எதிரிகள் வந்தால் பொர இருக்கை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –
அபியாதாப் ரஹர்த்தாச -என்ற
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே இவர்கள் வீரம் –
எதிரிகள் வந்து ஊரை அடை மதிகள் படுத்த வெல்லுகை குற்றம் ஆனால் போலே
நாங்கள் வர புறப்படாதே இருக்கை உனக்கு குற்றம் அன்றோ –
ராஜாக்கள் எதிரிகளைத் தோற்பிக்கும் படி வியாபாரித்தார்களே யாகிலும் அந்த புரத்தில் வந்தால் எளியராய் அன்றோ இருப்பது –

குற்றம் ஓன்று இல்லாத
1-எடுத்து வரப் பார்த்து இருக்கும் குறை இல்லை –
2-எதிரிகள் கையில் ஆயுதத்தை பொகடக் கொன்றார்கள் என்னும் குறை இல்லை –

3-அழியச் செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால் –
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் படி பிறந்தவர்கள்

குற்றம் ஓன்று இல்லாத கோவலர் –
அபிசேத் ஸூதுராசாரோ பஜதே மாம் அநந்ய பாக் –சாது ரேவ சமந்தவ்யஸ் சம்யக்வ்ய வசிதோ ஹிஸ (கீதை )-என்று இறே அவன் படி
நிர்த் தோஷம் வித்திதம் ஐந்தும் பிரபாவாத் பரமாத்மன-(சாத்விக சம்ஹிதை )

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்

கோவலர் தம் பொற் கொடியே
சீதா தேவி ஜனகாநாம் குலே கீர்த்தி –ஊருக்காகாக ஒரு பெண் பிள்ளை என்கிறபடியே இவளும்
தர்சநீயமாய் உபகனத்தோடே சேர்க்க வேண்டிய படியான அவஸ்தை – கொள் கொம்பு
பதி சம்யோக ஸூ லபம் -(தந்தை கவலைக் கடலில் ஆழ்ந்தார் சீதா தேவி அனசூயை இடம் )
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் 10-10-3-
அவனை ஒழிந்தாலும் உங்களை ஒழிய நிற்க மாட்டேன் என்று சொல்லி வைத்தே
உபகனத்தை விட நிற்க வல்லதோ கொடி
எங்களையும் கூட்டிக்கொண்டு கிருஷ்ணனை அனுபவிக்கப் பாராய்

புற்று அரவு அல்குல் புன மயிலே
புறம்பே புறப்பட்டு-தன்னிலத்திலே வர்த்திக்கும் சர்ப்பம் போலே -ஒளி படைத்த கழுத்தும்
சுருக்கமான இடையும் -ஊகித்தே இருப்பதை அறியும்படி
பும்பாவாம் மனஸா யயியு -பெண்கள் ஆணாகும் தன்மை
கம்பர் ஆண்கள் பெண்ணாக அவாவும் தோளினான் –
பாஞ்சாலியா –இடை பார்த்து மனசால் சஜாதீயைன பெண்களும் நாயக சமாதியால்
கண்டவர்கள் மனம் வழங்கும் –
பெண்களை ஆண்களாக ஆசைப்படும்படும் இவளது அல்குல்
தன்னிலத்தில் இருக்கும் மயில் தோகை போல் தலைக் குழல்
கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல
தோகை மா மயிலார்கள் –6-2-

பொற் கொடி சமுதாய சோபை -லாவண்யம்
புற்றரவல்குல்-அவயவ சோபை -சவுந்தர்யம்

போதராய்
எங்களை அவன் இடம் சேர்க்க வேண்டாம்
எங்களுக்குத் தாரகமாக நீ நடக்க நாங்கள் பின் பற்றி வர வேண்டுமே
இவளது ஆச்சாரம் பக்தி தானே உத்தேச்யம் இவர்களுக்கு
சோபயன் தண்டகாரண்யம் நீலமானது போல் நாங்கள் நிறக்கும் படி புறப்பட்டு
புனத்தை மயில் சிறப்பிக்குமா போல் இந்த ஸ்த்ரீதவத்தையும் -நம் கோஷ்ட்டியை நீயே சிறப்பிக்க வேண்டும்

நாம் புறப்பட எல்லக்காரும் வந்தீர்களோ என்ன
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து-
இவ்வூர் அடங்க இவளுக்கு தோழிமார் உறவு -இவளுடைய சம்பந்தம்
இவள் போல் அனன்ய ப்ரயோஜனராய்
அது தான் தோழமை
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெரில் ஓன்று நூறாயிரமாக –
கொண்டத்துக்குக் கைக் கூலி கொடுக்கும் ஜாதி
எல்லாரும் வந்து உன்னை ஒழிய வேறு பிரயோஜனம் இல்லாமல்
நீயே பிரயோஜனம்

நின் முற்றம்
திரிபாதி விபூதியை விட விசாலம்

புகுந்து
ப்ராப்ய ஸ்தலத்தே புகுந்து
உத்தரம் தீரமாஸ்ய -ராமன் இருக்கும் இடம் விபீஷணன்

இவர்களுக்கு ப்ராப்யம் ஆனபடி என்
சிற்றில் கட்ட ஸங்கேதம் பேசி புகுந்த முற்றம் அன்றோ
முற்றத்தோடு புகுந்து முகம் காட்டி –சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -10-8-கலியன்
சேஷிக்கு ப்ராப்யமாகும் போது சேஷ பூதருக்கு சொல்ல வேண்டுமோ

முறுவல் செய்து
ஏக ரூபனாய் இருப்பவனையும் விகாரம் செய்ய வைக்கும் முற்றம்

முற்றும் புகுந்து செய்ய வேண்டியது என் என்ன
முகில் வண்ணன் பேர் பாட
மேகம் போல் பொழியும்
ச சர்வா நர்த்திநோ த்ருஷ்ட்வா —
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
முகில் வண்ணன் -நிறம் -வள்ளல் தன்மையைப் பாட வேண்டும் –
நீ பாட

எனக்கே தன்னைத் தந்த -என்று உதார குணத்தையும் சொல்லி நீ பாட –
நாங்களும் உன் பக்கமே நின்று அத்தைப் பெறுகைக்காக-
நீ உகக்கும் வடிவு அழகிலும் உதார குணத்திலும் ஈடு பட்டுத் திரு நாமத்தை பாடச் செய்தேயும்

சிற்றாதே பேசாதே
அவ்வடிவை நினைத்து அங்கங்களை பரிஸ்பந்திப்புதல் (புரண்டு படுத்தல் )
வார்த்தை பேசுதல் செய்யாதே கிடக்க –
இவள் சேஷ்டிதமும் வார்த்தையும்
கண்ணுக்கும் செவிக்கும் போக்யமாகையாலே
கண்ணையும் செவியையும் சேர பட்டினி கொள்ள வேணுமோ என்று இன்னாதாகிறார்கள்

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னை நீ பிரிந்து அறியாயே-
உன்னோடே கூடுவதே எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ –
உன்னுடைய உத்தேச்யம் நீ கூடு பூரித்து வைத்தால் எங்களுக்கு உத்தேச்யம் பெற வேண்டாவோ
இங்கு கூடு பூரித்து கிடக்கிறதோ என்ன

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
உள்ளு கூடு பூரித்த தில்லை யாகில் எங்கள் ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகிற இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இருக்கும் படி அழகிதாய் இருந்தது –
அவனைத் தனியே அனுபவிக்கை கைவல்ய மோஷத்தோடே ஒக்கும் அத்தனை –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்று இருக்க வேண்டாவோ –

(கேவலம் -ஓன்று மட்டும் -பாகவதர் இல்லாமல் பகவானையே அனுபவித்தாலும் கைவல்யம் போல் ஆகுமே )

எற்றுக்கு உறங்கும் பொருள்
உன்னுடைய உத்தேச்யத்தை பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே –
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
ஏதுக்காகக் கிடக்கிறாய் –

எற்றுக்கு உறங்கும் பொருள் –
அவனை உகப்பிக்கப் பார்த்தாய் ஆகில் அவன் உடையாரையும் உகப்பிக்க வேணும் காண்
ஸ்வ பிரயோஜனமாக கைங்கர்யத்தில் காட்டிலும் ஒரு வாசி கண்டிலோமே உனக்கு

1-உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேணும்
2-அவனைப் பிரிந்த அன்று -வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கைக்கு நாங்கள் வேணும்
3-நீயும் அவனும் அனுபவியா நின்றால்–எடுத்துக் கை நீட்ட நாங்கள் வேணும் –

ஆன பின்பு எங்களை ஒழிய உனக்கு விரகு உண்டோ –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.