(இதிலும் அடுத்த பாசுரத்தில்
போதரிக் கண்ணினாய் –ஞானம் -தனக்கு உஜ்ஜீவனம்
நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க
இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே
கள்ளம் தவிர்ந்து கலக்க வேண்டும் என்கிறார்
பாகவதர் கோஷ்ட்டியில் கலக்காமல் கண்ணனை அனுபவிக்காதே என்றவாறு –
ராவல் வர்ஸானா -சங்கேத்- ராதா தேவி பிறந்த இடம் என்பர் –
சங்கேத ஸ்தலம் -அதுவே இங்கு பாவைக்களம்
நன்னாளால் இதிலும் -முதல் பாட்டில் போல் )
தன் கண் அழகை நினைத்து –
இக் கண் அழகு உடைய நான் இருந்த இடத்தே எல்லாரும் வரும் அத்தனை அன்றோ
நானோ போவேன் என்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் —
மனத்துக்கு இனியானைப் பாடவும் என்று இவர்கள் சொன்ன பாசுரத்தை
அசல் திரு மாளிகையில் கேட்டுக் கிடப்பாள் ஒரு பெண் பிள்ளை –
நம் அபராதம் தீர –
இவர்களுக்கு வார்த்தை சொல்வோம் என்று
பெண்காள் இங்கே ராம விருத்தாந்தம் சொன்னார் உண்டோ என்ன –
ராம விருத்தாந்தமும் சொன்னோம் –
கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும்
ஸ்ரீ பாரதமும்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்படச் சொன்னோம் -என்கிறார்கள் –
(இத் திருப் பாவையில் இல்லாததே இல்லையே )
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்-
பதவுரை
புள்ளின் வாய் கீண்டானை–பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை-கொடியனான இராவணனை முடித்து
(அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய
கீர்த்திமை பாடி போய்-லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும்-எல்லாப் பெண் பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார்-நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற்புகுந்தனர்;
வெள்ளி எழுந்து-சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று-ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான், (அன்றியும்)
புள்ளும்-பறவைகளும்
சிலம்பின–(இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன;
போது அரி கண்ணினாய்–புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே;
பாவாய்–பதுமை போன்றவளே!
நீ –நீ
நல் நாள்-கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து-(கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து –எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே-உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தியோ-படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல்-ஆச்சரியம்!
புள்ளின் வாய் கீண்டானை
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )-
கள்ளச் சகடம் -என்னுமா போலே –
மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் –
பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –
புள்ளின் வாய் கீண்டானை
இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –
இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –
விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –
இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை
(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் )
கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் –
தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்-
அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு
அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –
கீழில் பாட்டிலும்
இப் பாட்டிலும் ராம விருத்தாந்தத்தைச் சொன்னால் –
ஒருகால் சொன்னதையே சொல்லா நின்றார்கள் என்று
நினைக்கக் கூடும் என்று
தங்கள் பாழியான கிருஷ்ண விருத்தாந்தத்தையும் கூட்டிச் சொல்கிறார்கள் –
தங்களுக்கு பள்ள மடையான கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லிற்றாகில் –
பின்னை ராம விருத்தாந்தம் என் என்னில்
தங்களோடு ஒரு கோவையான பிராட்டி பிரிவு பொறுக்க மாட்டாதவன்
விருத்தாந்தம் என்று சொல்கிறார்கள் –
பொல்லா அரக்கனைக்
உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த
நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –
முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி
அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –
துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே
இத் தண்மையை பிராட்டியும் –
த்வன் நீச -என்றாள் இறே
(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )
பொல்லா அரக்கனை-
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று
நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே
பொல்லா அரக்கனை
ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற நிலை மாறி
தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி
(கோபத்தால் ஜகத்தையும் மலைகளையும் இல்லையாம் படி அம்பின் நுனியால் முடிப்பேன்
என்று தண்டகாரண்யத்தில் சொன்ன நிலை
மாறி பொல்லா அரக்கனை -என்ற இடத்தில் பர்யவசிக்கிறது )
அரக்கனை-
மாயா மிருகத்தைக் காட்டுவார் –
மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய்
ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்
கிள்ளிக் களைந்தானைக்
வீர பத்னி யாகையாலே
கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –
திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –
தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி
கீர்த்திமை பாடிப்
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று
எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம்
உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –
எதிர் அம்பு கோத்த சம்சாரிகள் –
நமோ நாராயணாய -என்று
தங்களுடைய தோல்விக்கும்
அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும்
மேல் எழுத்து இட்டுக் கொடுத்தால் போலே
ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான் –
தங்கை அழகிலே கலங்கினாள் –
தம்பி சீலத்துக்கு இலக்கானான் –
விரஹ துர்ப் பலைகள் ஆனவர்கள் போன படி என் என்னில்
பாடிப் போய்
பாட்டே தாரகமாகப் போனார்கள் –
கால் நடை தருகைக்கு தாரகம் திரு நாமம் இறே
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம்
சாஷாத் பாதேயம் திரு நாம சங்கீர்த்தனம் —
தன் தாள் பாடி (திரு நெடும் தாண்டகம் -6-)-என்னக் கடவது இறே
பாடிப் போய் –
பகவதோ பலேன -என்கிறபடியே
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
நாம் சென்று எழுப்பிக் கொண்டு போக வேண்டும் படி பாலைகளான பெண்கள்
எல்லாரும் உணர்ந்து புறப்பட்டு
கிருஷ்ணன் பெண்களை மெய்க் காட்டுக் கொள்ளும் சங்கேத ஸ்தலத்தே ஏறப் போனார்கள் –
பாவைக் களம் என்று –
இந்திராணியை- ரதியை -நோற்கைக்கு பெண்கள் திரளும் இடம் –
திரளும் இடத்தை
நெற் களம்
போர்க்களம் என்னுமா போலே
பாலைகள் ஆகையால் அவர்கள் காலம் அறியாமே போகக் கூடும் –
அறிந்த நாம் அகாலத்தில் போக ஒண்ணாது இறே
சுக்ரன் உதித்தான் ஆகில் பாருங்கோள் என்ன
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
சுக்ர பகவானும் மத்யகதனானான்-
ப்ரஹஸ்பதியும் அஸ்தமித்தான் –
நீங்களும் அபி நிவிஷ்டைகள் ஆகையால் நக்ஷத்ர சாத்ருஸ்யத்தைக் கொண்டு
நக்ஷத்ரம் எல்லாம் சுக்ர ப்ருஹஸ்பதிகளாய் இறே தோற்றுவது-
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே (திருவாய் -4-4-4 ) என்னுமவர்கள் அன்றோ –
ஆகையால் இது விடிவுக்கு உடல் அன்று
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன
நாங்கள் இத்தனை பேர் திரண்டு வந்தது அடையாளம் அன்றோ என்கிறார்கள் –
பிரிந்தார் திரளில் அன்றோ திரட்சி யாவது –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்றும் ஒரு காலும் பிரிகிலேன் என்றும் திரியுமவர்கள் அன்றோ நீங்கள்
உங்கள் திரட்சி விடிவுக்கு உடல் அன்று –
வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன
புள்ளும் சிலம்பின காண்
கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது –
அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று
இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –
திர்யக்குகளினுடைய விருத்தாந்தம் கொண்டோ கால நியதி பண்ணுவது
என்று அவள் பேசாதே கிடந்தாள்-
நாங்கள் சொன்ன வார்த்தைகளுக்கு எல்லாம் விபரீதம் சொல்லுகிறது
உன் கண் அழகை நினைத்து இறே
போதரிக் கண்ணினாய்-
உபாஸ்யம் இருந்த இடத்தில் உபாசகன் வரும் அத்தனை அன்றோ –
அஸி தேஷணை–புண்டரீகாக்ஷன் இருந்த இடத்திலே போகக் கடவளோ-என்கிறார்கள் –
நெடும் கண் இள மான் அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் (6-7)-என்று
அவனுடைய விபூதியும் இவள் கண்ணில் பரப்பில் ஒரு மூலைக்கும் போராது என்றது இறே –
போது அரிக் கண்ணி
1-பூவும் மானும் போன்ற கண் –
2-பூவில் படிந்த வண்டு போன்ற கண் என்னவுமாம் –
3-பூவோடு சீறு பாறு என்ற கண் என்னவுமாம்
4-உலாவுகின்ற மான் போலே இருக்கிற கண் என்னவுமாம் –
5-அரி என்று -மான் -வண்டு -சத்ரு -என்னக் கடவது இறே
குள்ளக் குளிரக்
ஆதித்ய கிரணம் பட்டு கொதிப்பதுக்கு முன்னே ஆழ முழுகினாலும்
விரஹ தாபம் அங்கும் புகுந்து சுடும் என்னும் இடம் அறியார்கள்
குடைந்து நீராடாதே
சரயூமவகாஹதே-என்னுமா போலே
(பரதன் ஊரார் வரும் முன் நீராட சரயு போவான் -பெருமாள் லஷ்மணன் பேசி –
கோதாவரியில் குள்ளக் குளிர பேசிக்கொண்டது –
தாபம் இல்லாம்நாள் லஷ்மணனுக்கு குளிரும் –
அவன் அத்யந்த ஸூ குமாரன் அபர ராத்திரியில் எப்படி நீராடுவானோ )
கிருஷ்ண விரஹ தாபம் அற நீராடப் போராதே-
1-நமக்குச் செல்லும் கிருஷ்ண விரஹ தாபம் சமிக்கைக்கும் –
2-இனி ஒருக்காலும் கிருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களை அவகாஹித்து அனுபவிக்கப் போராதே –
உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து அவன் கண்ணாலே குமிழ் நீர் உண்ணப் போராதே
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே நாங்கள்-
உன்னுடைய ஸுந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அங்கனம் அன்றோ
பள்ளிக் கிடத்தியோ
நாமும் அவனுமாய் அவன் முழுக்கூட்ட அவனோடே ஜலக்ரீடை பண்ணி அவன் மடியிலே சாயக் கடவ –
அத்தை விட்டு –
அவன் ஒருக்கால் கிடந்த படுக்கை என்று அத்தை மோந்து கொண்டு கிடக்கிறாயோ —
தவாஙகே சமு பாவிசம்-
(சீதா வார்த்தை -ஜலக்ரீடை பண்ணி உனது மடியில் படுத்து இருந்தேனே -என்று நினைத்து வருந்திய இடம் )
பார்த்த பார்த்த இடம் எங்கும் விளைந்து கிடவா நிற்க உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரைப் போலே
பாவாய் நீ
கிருஷ்ணனுடைய கண்ணுக்கு இலக்காம் படியான நிருபாதிக ஸ்திரீத்வத்தை யுடைய நீ
தனிக்கிடை கிடக்க வில்லையோ
நன்னாளால்
காலம் பரிணாமி -என்னும் இடம் அறி கிலையோ-
அநந்தரம்
வ்யோஸ்யா ஹயதி வர்த்ததே -என்று சோகிக்கும் படி யன்றோ இருப்பது
(சீதா பிரிந்தாளே –இவை எல்லாம் கவலை இல்லை –
பிரிந்த பத்து மாதங்களை மீண்டும் பெற முடியாதே என்று சோகித்த ராமன் வார்த்தை )
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளவர்களும் ஆறி இரா நின்றார்களோ –
அன்றிக்கே
நன்னாளால்
இனி சற்று போது கழிந்தால் எங்களைத் தான் உன் வாசலில் நிற்க ஓட்டுவார்களோ
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்கிற நாட்டார் இசைந்து
கிருஷ்ணன் முகத்திலே விழிக்கப் புகுகிற நாள் அன்றோ -ஆறி இருக்கிறது என்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்
கள்ளமாவது (அடியார்கள் உடன் சேராமல் )தனியே கிருஷ்ணன் குண சேஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை –
அத்தைத் தவிர்ந்து எங்களோடு கலந்து
கள்ளம் தவிர்ந்து
அவனோடே கலந்து யுடம்பு காண உகக்குமவர்கள் அன்றோ நாங்கள் –
எங்களுக்கு மறைக்கிறது என்
அந்த ஆத்ம அபஹாரத்தைத் தவிர்ந்து எங்களோடு கலக்கப் பார்
சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை
(இந்த பெண் தானே இவளுக்கு சேஷி
பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்
அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )
ஆன் பின்பு எங்களுடைய குற்றம் போல் அன்று காண்
அவனோடே கலந்த உடம்பைக் காட்டாத உன்னுடைய குற்றம் –
கள்ளம் தவிர்ந்து கலந்து -குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே -பாவாய் நீ நன்னாளால் –
பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம் –
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply