அவதாரிகை –
நோற்றால்
அவன் பக்கல் பெறக் கடவ பேறு
சொல்லுகிறார்கள் –
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
பதவுரை
கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா–கண்ண பிரானே!
ஊன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப் பூவும்
பாடகம்–பாதகடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட்ட யாம் நன்றாக அணிவோம்–,
ஆடை–சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும் படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடி யிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–
வியாக்யானம் —
கூடாரை வெல்லும் –
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –
அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –
சீர் –
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –
வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –
அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-
அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம்
நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –
கோவிந்தா –
கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே ரஷித்த படி –
வுன் தன்னைப் பாடிப் –
ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து
வகுத்த உன்னுடைய பேரை
ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை –
கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –
பறை கொண்டு –
பிராப்யத்திலே
பிரபாக வ்யவஹாரம் –
ஊருக்கு -பறை -என்கிறது -தங்களுக்கு பிராப்யம்-
யாம் பெரும் சம்மானம் –
தோளில் மாலையை வாங்கி இடுகை -இவருக்கு பெறாப் பேறு -என்கை
பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டரும் பணிக்கும்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை –
நாடு புகழும் பரிசினால் –
ஒருவன் கொடுக்கும்படியே
சிலர் பெறும்படியே-
என்று நாட்டார் கொண்டாட வேணும் –
நன்றாகச் –
இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பெருமாளும் பிராட்டியும் கூட இருந்து
திருவடிக்கு பூட்டினாப் போலே பூண வேணும் –
சிலரை இட்டு ஒப்பிக்கை அன்றிக்கே
தானும் பிராட்டியும் கூட இருந்து ஒப்பித்த தன்னேற்றம் –
ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்து இராது ஒழிகை -என்றுமாம்
சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி
மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –
தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே
அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –
தோடே –
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடு இட்டாலும்
அவன் இட்டாப் போலே இராது இறே –
செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –
பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –
என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –
நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –
யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்
பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-
ஆடை யுடுப்போம்-
பண்டு உடுத்தார்களோ -என்னில்
அவன் உடுத்து உடாதது உடை அன்று இறே என்று இருப்பது –
அவன் திருப் பரியட்டம் இவர்கள் அறையிலே யாம்படி கூறை
மாற வேணும் -என்றுமாம் –
நோன்பை முடிக்கையாலே நல்ல பரிவட்டம் உடுக்க -என்றுமாம் –
உடுத்துக் களைந்த -என்னுமவர்கள் இறே இவர்கள்
ஸ்வேத கந்த உக்தமாய் அவன் உடுத்து முசிந்த ஆடை -என்றுமாம் –
அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து –
அதுக்கு மேலே பாற்சோறு மூடும்படியாக நெய் பெய்து –
இத்தால்
பகவத் சம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியிலே
சம்ருத்தி எல்லாம் பிரியமாய் இருக்கும்படி –
முழங்கை வழி வாரக்
நம்பி திரு வழுதி வளநாடு தாசர் -நெய் படாதோ -என்ன
கிருஷ்ண சன்னதியாலே த்ருப்தைகளாய் இருந்தவர்களுக்கு
சோறு வாயில் தொங்கில் அன்றோ
நெய் வாயில் தொங்குவது -என்று பட்டர் அருளிச் செய்தார் –
வ்யதிரேகத்தில் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று
சொன்னவர்கள் இன்று ஆசைப் படுகிறார்கள் –
கூடி இருந்து –
பிரிந்து பட்ட கிலேசம் தீரக்
கூடி தொட்டுக் கொண்டு இருக்கையே பிரயோஜனம் –
புஜிக்கை பிரயோஜனம் அன்று –
குளிர்ந்து –
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி –
நம்பெருமாள் திருநாள் -என்று ஒரு பேரை இட்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமா போலே
ஒருவருக்கு ஒருவர் போக்கியம் இறே
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது —
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.