Archive for November, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

November 22, 2013

இப்பேறு
எனக்கும்
என் சுற்றத்தாருக்கும்
என்றும்
வாய்க்க வேண்டும்
என்கிறார்-

————————————————————————————————————————————————–

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழிஊழி
மாகாயாம்
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே

—————————————————————————————————————————————————-

வாய்க்க தமியேற்கு-
தமியேற்கு வாய்க்க
புருஷார்தத்தின் எல்லையிலே மூழ்குதலாலே
உபமானம் இல்லாதவனான எனக்கு
இப்பேறே வாய்க்க வேண்டும் –

ஊழி தோறு ஊழிஊழி-
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் இடைவிடாதே
உயிர் உள்ள வரையிலும்
இதுவே புருஷார்த்தம் -என்கை –

மாகாயாம் பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் –
அழகிய காயாம்பூ போலே இருக்கிற திருமேனியையும்
கற்பகத் தரு பணைத்தால் போலே இருக்கிற திருத் தோள்களையும்
கற்பகம் பூத்தாப் போலே இருக்கிற திரு ஆழியையும்
காட்டி
என்னை
தனக்கே அடிமை ஆக்கினவன் –

நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் –
பிரிய நினைக்கில்
என்னை அடிமை கொள்ள வேண்டும் -என்ன வேண்டும்படி –
குருஷ்வம் மாம் அநுசரம் வை தர்ம்யம் ந இஹ வித்யதே
க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே -அயோத்யா -31-22-
பிரிய மாட்டாதவர்களில் எல்லை நிலம் ஆனவர்கள்
என் ஸ்வாமிகள்-
தமர்கள் தமர்கள் தமர்களாம் – என்று முடித்த எல்லையை
முதலாகத் தொடங்குகிறார்
சயமே அடிமை தலை நின்றார் ஆகிறார் -ஸ்ரீ பரத ஆழ்வான் போல்வார் –
சயமே -ஸுயம் பிரயோஜனமாக -கைப்பட்ட ராஜ்யத்தை பொகட்டவர்
கோதில் அடியார் ஆகிறார் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வார் போல்வார் –
ஸ்ரீ ராம பக்தி என்னும் கோது இல்லாமையாலே
நீக்க மில்லா அடியார் ஆகிறார் -இளைய பெருமாள் போல்வார் –

அவர்க்கே குடிகளாய்ச் –
இரு கரையராய் இராதே –
வேண்டும் பலன்களை தருவதில் மிக உயர்ந்த
ராமானுஜ -என்னும் நான்கு எழுத்து உள்ள மந்த்ரமாவது இல்லை யாயின்
என்னைப் போன்ற உயிர் கள் எத்தனை கொடிய நிலையை
அடைவார்களோ -அறியேன் –
ஆச்சர்யம் -என்று இருக்கை போலே காணும் அடுப்பது –
நசேத் ராமானுஜேதி ஏஷா சதுரா சதுரஷரீ
காம் அவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவ ஹந்த மாத்ருஷ -கூரத் ஆழ்வான்

அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு
அவர்களுக்கே என் குடி முழுவதும்
அடிமைப் பட்டவர்களாய்ச் செல்லும்
நல்ல கட்டளை –
வாய்க்க தமியேற்கு
கோட்பாடு -கட்டளைப் பாடு –

இப் பிராப்யம் -எல்லை நிலை
எனக்கும்
என் சம்பந்திகளுக்கும்
வாய்க்க வேண்டும்
நல்ல கோட்பாடு கொள்கை
நீக்க மில்லா அடியார் –அடியார் -வாய்க்க தமியேற்கு
கால தத்வம் உள்ள அளவும் நிலைத்து இருக்க
காயம் பூக்கள் மேனி
நான்கு திரு தோள்கள்
அவனை பிரியாதவர்
அவன் நெஞ்சை விட்டு விரியாதவர்கள்
இடைவிடாமல் யாவதாத்மாபாவி
அழகிய திருமேனி ‘
கல்பக
நீக்க மில்லா -ஜலம் விட்ட மீன்
குருஸ்வமாம் அநு ஷணம்
சரம அவதி
என் சுவாமிகள்
முடிந்த நிலையை முதலாக கொண்டு
சயமே அடியார் பரத ஆல்வான் -சுயம் பிரயோஜனமாக கொண்டான்
எம்பெருமான் திரு உள்ளம் பின் சென்று செய்ததால் –
சந்தோஷத்துடன் தேரில் ஏறி திரும்பினான் -அவன் திரு உள்ளம் பின் செல்லும் பேறு கிட்டியதே
கோதில் சத்ருக்ன ஆழ்வான் -ராம பக்தி யாகிய குற்றம் இல்லை -அனககா -பாபமே இல்லாதவன் அயோத்தியில் இவநோருவன்
உத்தேச்ய விரோதி பாப சப்தம் -பரத ஆழ்வான் மேல் கண்ணை செலுத்த –
நீக்க மில்லா இளைய பெருமாள் -போல்வார்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் பணிக்கும் இப்படி –
இரு கரையராய் இல்லாமல்
ரகுவம்சம் காளிதாசன் –
பிரவாகம் இரு கரையும் தொட்டுக் கொண்டு போவது போலே
மாறி மாறி நீந்து இங்கும் அங்கும் சென்று வெள்ளத்தில் கிட்டி –
எம்பெருமான் பாகவதர்
ஆழ்வான் ஆண்டான் இருவரையும் வடுக நம்பி
சதுரா சதுர அஷரீ
ராமா னுச இதி சாதுர்யம்
இல்லையாகில் நாம் என்ன செய்வது ஹந்த -என்ன அவஸ்தை அடைந்து இருப்போம் –
யேவகாரம்-அவர்க்கே -என்று இருப்பது அடுப்பது
நல்ல கோட்பாடு வாய்க்க

—————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

November 22, 2013

ஸ்ரீ வைஷ்ணவர்களோடு சேர்ந்து இருக்கும் சேர்க்கை தான் வேண்டுமோ –
அவர்களுடைய அடிமையிலே முடிந்த நிலமாக அமையும் என்கிறார் –

—————————————————————————————————————————————————————

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தாமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே

—————————————————————————————————————————————————————

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளுக்கு வரும் வல்வினையை
நாசம் செய்யும்
அன்றிக்கே –
தமர்களுடைய திரண்ட வல்வினையை நாசம் செய்யும் -என்னுதல்
அன்றிக்கே –
தமர்கள் வல்வினையைக் கூட்ட
அத வல்வினைகளை நாசம் செய்யும் -என்னுதல் -என்றது –
இவர்களுக்கு வல் வினையை கூட்டுகையே தன்மை ஆனாப் போலே
அவனுக்கு அந்த வல்வினைகளை நாசம் செய்கையே யாத்ரையாய் இருக்கும்படி யைத் தெரிவித்தவாறு –

சதிர் மூர்த்தி –
விரோதிகளை போக்குகைக்கு தக்கனவான
பல வடிவுகளையும் கொள்ளா நிற்கும் -என்றது
இவர்கள் கைங்கர்யம் செய்வதற்கு பல வடிவுகள் கொள்ளுமாறு போலே ஆயிற்று
அவன் காத்தல் நிமித்தம் பல வடிவுகளை கொள்ளுகிறபடி
என்பதனை தெரிவித்தவாறு –

அமர் கொள் ஆழி சங்கு வாள்வில் தண்டாதி பல்படையன் –
விரோதிகளை அழிப்பதற்கு உறுப்பாக
போரை நோக்கி உள்ள திரு ஆழி தொடக்கமான
திவ்ய ஆயுதங்களை உடையவன் –
குமரன் –
எப்பொழுதும் இளையோனாய் இருப்பவன் –

கோல வைங்கணை வேள் தாதை –
ஐந்து பானங்களை உடையனான காமனுக்கும் தந்தை யானவன் என்றது –
அழகுக்கு தனக்கு மேல் இல்லை என்று இருக்கும் காமனுக்கும்
அழகுக்கு தோற்றுவாயாய் இருக்கும் -என்றபடி –

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க –
அப்பருவத்துக்கும்
அழகுக்கும் தோற்று இருக்கும்
வேறு பிரயோஜனம் ஒன்றையும் கருதாதவரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய அடிமையில்
முடிந்த நிலமாக வேண்டும் -என்கிறார் –
இந்த மிக உயர்ந்த புருஷார்த்தம் என்றும் ஒக்க வாய்க்க வேண்டும்
என்பார் -சதிரே வாய்க்க -என்கிறார் –

தமியேற்கே –
சென்ற காலத்திலும் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைத் தேடித் பிடிக்க வேண்டி
இருக்கையாலே -இப்பொழுது நடக்கும் காலத்திலும்
தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை –
கேசவன் தமர் -என்ற திருவாய் மொழிக்கு பின்பு தனியார் அல்லாமையாலே
மேல் நங்கட்கு -என்றார்
இங்கு தமியேற்கு -என்கிறது சம்சாரிகளில் தமக்கு உபமானம் இல்லாமையாலே –

அவர்களின் அடியவர் அடியவர் -பிடித்தார் பிடித்தாரைப் பற்றி
தேர் பிடிப்பாரை பிடிக்க
குரங்குகள் மலையை நோக்க
பன்மை
குரங்குகள்
மலை -ஒருமை
ஒரே குரங்கே பல மலையை தூக்க சாமர்த்தியம்
குரங்குகள் நிறைய
கைங்கர்யம் ஆசையால் தொட்டு கொண்டு இருக்குமே
பாகவத சேஷத்வ பெருமை அருளி –
கோதில் அடியார் –
கோது குற்றம்
தமர்கள் தமர்கள் —
தமர்கள் கூட்ட வல்வினை –
பாபக் கூட்டங்கள் நாசம் செய்யும் சதிர மூர்த்தி -சாமர்த்தியம்-
திவ்ய பஞ்சாயுதங்கள் ஏந்தி போக்கி
யுவாகுமாரா
யுவா அகுமாரா -அர்த்தம் நாடு பருவம்
மன்மதன் தாதை -அழகுக்கு ஊற்றுவாய்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளுக்கு வரும் வல்வினை
தமர்கள் உடைய கூட்டமான வல்வினை
தமர்கள் வல்வினையை கூட்ட கூட்ட நசிப்பிக்கும்
அடுத்த ஷணம்
கூட்டுகையே ஸ்வாபம்
நசிப்பதே ஸ்வாபம் அவனுக்கு
சதுர மூர்த்தி பல வடிவு -நாலு விதம் பல விதம்
கைங்கர்யத்துக்கு பல வடிவு போலே
காப்பதற்கும் அவன் பல வடிவு கொண்டு
குமரன்-
காமனுக்கும் உத்பாதகன்
காமனைப் பயந்த காளை –
பிரசவம் ஆனா பின்பு பெற்ற யௌவனம்
பருவத்துக்கும் அழகுக்கும் தோற்ற அடியவர் அடியவர்
என்றும் ஒக்க வாய்க்க வேண்டும்
தமியேற்கே
தனிப்பட்டார்
தாச தாச –கடைசி-சரமாவதௌ யக தது தாச -மா முனிகள் –
முதல் தீர்த்த காரர் அப்புறம் தீர்த்தம் சாதிக்க கேட்டு கடைசியில் பெற்ற கதை –
இப்படி தமியேற்கே
மனப்பான்மை கிடைப்பது
அடியார் -அடியோங்களே
பூத காலத்திலும் சத்ருக்ன ஆழ்வானை தேடித் பிடிக்க
மதுர கவி ஆழ்வார்
வடுக நம்பி
போல்வார்
வர்த்தமான காலத்தில் யாரும் இல்லை
நம் கட்கே -கீழே சேர்த்து
இங்கே தமியேற்கு

———————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

November 22, 2013

பாகவதர்கள் உடைய கலவி இன்பம் வேண்டும் என்றார் மேல்
அது தான் வேண்டுமோ
அவர்கள் திரளை கண்களால் காண அமையும் –
என்கிறார் இதில் –

——————————————————————————————————————————————————-

நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே

————————————————————————————————————————————————————–

நாளும் வாய்க்க நங்கட்கு-
இதுவே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கு
இது நாள் தோறும் வாய்க்க வேண்டும் –

நளிர் நீர்க் கடலைப் படைத்து –
குளிர்ச்சியையே தன்மையாக உடைய கடலை உண்டாக்கி –
திருக் கண் வளர்க்கைக்கு ஒத்ததான தண்ணீர் -என்கை –

தன்-தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத –
சமன் இலாத -தன்-தாளும் தோளும் முடிகளும்-
உபமானம் இல்லாதவையான திவ்ய அவயவங்கள் –

பல பரப்பி-
அந்த கடலிலே பாழ் தீரும்படி
வடிவாலே அலங்கரித்து –

நீளும் படர் பூங்கற்பகக் காவும் –
எல்லை இல்லாத இனிய பொருளான
பூ போலே இருக்கிற தாளும்
கற்பகக் காவைப் போலே இருக்கிற தோளும்-
தாளும் தோளுமிருக்கிறபடி –

நிறை பல் நாயிற்றின் கோளும் –
முடிகள் ஆயிரத்தாய் –8-1-10-என்றதனைச் சொல்லுகிறது –
பல நாயிறு -ஒவ் ஒரு திரு முடிக்கும் ஒரு நாயிறு
அன்றிக்கே
ஆயிரம் கோடி சூரியர்களை திரட்டி முடியாக வகுத்தாப் போலே இருக்கிற முடி -என்னுதல் –
கொள் -என்பன கிரஹங்கள்
அவை தான் ஒளி பொருள்கள் ஆகையால் ஒளியைக் காட்டுகிறது இலக்கணை –

உடைய மணி மலை போல் கிடந்தான் –
ஓர் இரத்தின மலை சாய்ந்தாப் போலே ஆயிற்று
கண் வளர்ந்து அருளிய படி –

தமர்கள் கூட்டமே-நாளும் வாய்க்க –
இப்படி வைத்த கண் வாங்க ஒண்ணாத படி
கண் வளர்ந்து அருளா நிற்குமவனை
அன்று நாளும் வாய்க்க -என்கிறது
கிடந்தோர் கிடக்கை -திருமாலை -23–என்று கிடை அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் கள் திரளிலே
நானும் ஒருவனாய் சேர வேண்டும் என்கிறார் ஆதல்
அன்றிக்கே –
அத் திரளை கண்களால் காண அமையும் என்கிறார் -என்னுதல்
பசியர்-கல் அரிசிச் சோறு உண்ண வேண்டும் என்னுமா போலே –
தம் காதல் எல்லாம்தோற்ற அருளிச் செய்கிறார் –
பெரியோர்கள் கூட இருக்க வேண்டும் -என்றும் –
சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வித சங்கமம்
சத்பி விவாதம் மைத்ரம்ச ந அசத்பி கிஞ்சித் ஆசரேத் -மார்கண்டேய புராணம் –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -பெருமாள் திருமொழி -2-1-
என்றும் சொல்லக் கடவது அன்றோ –
அவன் செய்த உபகாரத்துக்கு தோற்று இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கூடி இருக்க வேண்டும் -என்றார் மேல் –
கிடை அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளை
கண்களாலே காண அமையும் -என்கிறார் இதில் –

திரளை கண்ணாலே காண அமையும்
ஒப்பூண் உண்ண வேண்டாம்
தமர்கள் கூட்டமே -நாளும் வாய்க்க –
எம்பெருமான் தமர்கள்
தாளும் தோளும் முடிகளும் பரப்பி
கற்பக கா போலே சயனித்து
மாணிக்க மலை
சூர்யா பிரகாசம்
பாகவத சமாகதம்
பகவானை இட்டே பாகவதர்கள்
பிரதம பர்வதம் ஆச்சார்யா கைங்கர்யம் –
ஒன்றை விட்டு ஓன்று இல்லையே
ஆச்சார்யன் பிரீதிக்காக -தேவ பிரான் கரிய உரு காண்பான்
சக்கரம் போலே ஒன்றை விட்டு ஓன்று இல்லையே
கடலை படைத்தது
குளிர்ந்த கண் வளர சதுர்சமான
சமன் இல்லாத திவ்ய அவயவங்கள்
பாழ் தீரும் படி பரப்பி
தோள்கள் கற்பகப் பூ
திருவடிகள் பூ
ஆயிரம் கோடி ஆதித்யர் ஜோதி உள்ள முடி
தேஜஸ் -கோள் போலே உள்ள திரு முடி
ரத்ன பர்வதம் போலே
செக்கர் மா -மரகத குன்றம் -திருவாசிரியம்
வைத்த கண் வாங்க ஒண்ணாத படி
கிடந்ததோர் கிடக்கை -அனுபவிக்கும் அடியவர்
திரளை கண்ணாலே காண
பசியர் நாக்கு நனைக்க கவளம் சொட்டு நீர்
பரி பூர்ண அனுபவம் தான் ஆழ்வாருக்கும் ஆசை
ஈட்டம் கண்டிட கூடுமேல்
கண்ணாலே காண அமையும் என்கிறார் இதிலும் –

—————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – வங்கக் கடல் கடைந்த -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் -மூவாயிரப்படி –

November 4, 2013

(வையத்து வாழ்வீர்கள் -உபக்ரமம் இங்கு அங்கு அப்பறை கொண்ட வாற்றை-திருவாய்ப்பாடியிலே
கற்பார் -ராமபிரானை -புற்பா -நான்முகன் பெற்ற நாட்டுள்ளே -இங்கேயே பரமபதம் போல் வாழ்ச்சி போல்
நான்கு பாகம் -அனுஷ்டித்த -அனுகரித்த -அப்யஸிக்கும் -அனுசந்திக்கும் அவர்கள் பாசுர ஸ்ரவணத்தாலே-ஏந கேநாபி -ஏதோ ஒரு வித சம்பந்தத்தால் பேறு துல்யம் )

(லஷ்மீ கல்யாணமே பாடி நிகமனம் இப் பாசுரம்-வங்கக் கடல்-வைகுந்தன் என்பானோர் தோணி–விஷ்ணு போதம் கூப்பீடு கேட்க கிடக்கும் திருப் பாற் கடல் )

(கேசவன் -பிள்ளை பேரன் ஸத் சந்தானத்துடன் வாழ்ச்சி)

(அங்கு ஒரு தாயார் இங்கு பஞ்ச லக்ஷம் -தேவர் கார்யம் போல் செய்து -விண்ணவர் அமுது உண அமுத்தினாள் வந்த பெண்ணமுதம் உண்டவன்
இங்கு நோன்பு வியாஜ்யம் நாட்டாருக்கு மழை -இவனுக்கு பஞ்ச லக்ஷம் கோபிகள்-)

(அங்கு அப்பறை -கதிர் த்ரய மூலத் வாத் -வ்வ்வ்ர் இடத்தில் உள்ள வெவ்வேறு அதிகாரிகள் அபேக்ஷித்த அனைத்தையும் -கொண்டவாற்றை)

(ஏல் ஓர் இதில் இல்லை -இனி கேட்டு ஆராய வேண்டாமே -எங்கும் திருவருள் பெற்று அனுபவிப்பதே வேண்டியது
அவனது மட்டுமே இருந்தால் சீறி அருளாகவே இருக்கும் -மிதுனமாக -இவர்களது சீரிய அருள் ஆகுமே)

அவதாரிகை –

நிகமத்தில்
இப்பிரபந்தம் கற்றாருக்கு உண்டாகும்
பலத்தை சொல்கிறார்கள்-

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திரு முகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-

பதவுரை

வங்கம் கடல்–கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த–(தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை–கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார்–சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று–அடைந்து
இறைஞ்சி–வணங்கி
அங்கு–அத் திருவாய்ப் பாடியில்
பறைகொண்ட ஆ ஆற்றை–(தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான்–பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான
குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
சொன்ன–அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே–தப்பாமல்
இங்கு–இந் நிலத்தில்
இ பரிசு–இவ் வண்ணமே
உரைப்பார்–ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்–பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்,
செம்கண் திருமுகத்து-சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம்–ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால்–ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும்–எவ்விடத்தும்
திருஅருள் பெற்று-(அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர்-ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய்–.

வியாக்யானம் –

வங்கம் -இத்யாதி –
மரக்கலத்துக்கு ஒரு சலனம் பிறவாதபடி
பாற்கடலை
மந்தரத்தை மத்தாக நாட்டி
வாசுகியால் சுற்றி
தன் கையாலே கடைந்து
பிராட்டியை லபித்தால் போலே

(பெண்ணமுதம் தான் கொண்டு உகந்தது போல்)

சேதனர் பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல்
சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி
கிருபையாகிற கயிற்றாலே சுற்றி
கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து
பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் –

(விஷ்ணு கடாக்ஷம் -சபரியாதிகளைப் பூதராக்கிய நெடு நோக்கு-பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன்-கிம் கார்யம் சீதயா மம என்பவன் அன்றோ -)

இத்தால் இந்த சரீரத்தோடு இருக்கும் போது
அவனை சந்தமேனும் விது என்ன பண்ணுபவன்
(வையத்தில் வாழ்ச்சி)

கேசவனை
கேசியை நிரசித்தாப் போலே
ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது
அவ்வனுபவ விரோதியாய் இச் சேதனனுக்கு பிறக்கும்
போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

(என்னில் முன்னம் பாரித்து பருக வந்தாலும் -வாரிக் கொண்டு விழுங்க-நாம் பாரித்து இருந்தாலும் – எதிர் விழி கொடுக்க வேண்டுமே)

திங்கள் -இத்யாதி –
சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான
திருமுக மண்டலம் உடையவர்களாய்
தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய்
அனந்யார்ஹரான பாகவதர்கள்
ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று
பூஜித்து

த்வாபர யுகத்திலே நாட்டாருக்கு -பறை -என்ற வ்யாஜ மாத்ரமாய்
தங்களுக்கு உத்தேச்யமான கைங்கர்யத்தை பரிக்ரஹித்த பிரகாரத்தை –
பூமிக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூரிலே எழுந்து அருளி இருக்கிற
விஸ்த்ருதமாய் குளிர்ந்துள்ள தாமரை மணிகளாலே
செய்யப் பட்ட மாலைகளை உடைய
பெரியாழ்வார் திரு மகளாரான சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிச் செய்த

சங்கா நுபாவ்யமாய் -கூட்டம் கூட்டமாய் இருக்கிறதாய் –
தமிழாலே செய்யப் பட்ட
மாலை போலே போக்யமாய்
சிரசாவாஹ்யமாய்
ஸ்லாக்கியமான இப்பிரபந்தத்தை
ஒரு பாட்டு குறையாதே

பிற்பட்ட காலத்திலே
இப் பிரபந்த ரூபமான பாரத்தை அனுசந்திக்கும் அவர்கள்
இப் பாசுர ஸ்ரவணத்தாலே
பணைத்து-பலிஷ்டமான-பெரிய மலை போலே இருக்கிற நாலு திருத் தோள்களை உடையவனாய்
வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை உடையவனாய்
விகசிதமான திரு முக மண்டலத்தை உடையனாய்
உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான
ஸ்ரீயபதியாலே

த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்
பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி
கிருபையை லபித்து
ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-

(பிற்பட்ட காலத்திலே-கோபிமார்களுக்கு -ஆண்டாளுக்கு -பட்டருக்கு பிற்பட்ட காலத்திலே-நமக்கும் -தோல் கன்று போல்வாருக்கும்
ஈரிரண்டு -பணைக்கும் இரண்டு மடங்காகப் பாசுரம் தோறும் –
ஏந கேநாதி பிரகாரமாக இதில் ஸம்பந்தமே ஹேதுவாக -பேறு துல்யம் அன்றோ -ஏந கேநாபி -ஏதோ ஒரு வித சம்பந்தத்தால் பேறு துல்யம்)

(த்ருஷ்ட விஷய ஞானம் த்யாஜ்ய புத்தியில் உறுதி -தோஷ ஞானம்
அதிருஷ்ட விஷய  ஞானம் -அவன் குண விஷயம் -உபா தேயத்துக்கு ஸ்வீ காரத்துக்கு வேண்டுமே
பாதம் அடையும் பாசத்தினால் மற்ற வன் பாசங்கள் முற்ற விட வேண்டுமே-இசைவித்து அவன் தனது தாளிணைக் கீழ் இருத்தும் பொழுது விலக்காமை வேண்டுமே )

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – வங்கக் கடல் கடைந்த -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

November 4, 2013

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தம் கற்றார் –
பிராட்டியாலும் எம்பெருமானாலும்
சர்வ காலமும்
விஷயீ கரிக்கப் படுவார்கள் -என்கிறார்கள் –

கற்றாருக்கு
அனுஷ்டித்தாரோபாதியும்
அனுகரித்தாரோபாதியும்
பலம் சித்திக்கும் -என்கை

கன்று இழந்த தலை நாகு
தோற்கன்றுக்கும் இரங்குமா போலே
இப் பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும் –
என்று பட்டர் அருளிச் செய்வர்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

பதவுரை

வங்கம் கடல்–கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த–(தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை–கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார்–சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று–அடைந்து
இறைஞ்சி–வணங்கி
அங்கு–அத் திருவாய்ப் பாடியில்
பறைகொண்ட ஆ ஆற்றை–(தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான்–பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான
குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
சொன்ன–அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே–தப்பாமல்
இங்கு–இந் நிலத்தில்
இ பரிசு–இவ் வண்ணமே
உரைப்பார்–ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்–பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்,
செம்கண் திருமுகத்து-சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம்–ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால்–ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும்–எவ்விடத்தும்
திருஅருள் பெற்று-(அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர்-ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய்–.

வியாக்யானம் –

வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க
மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –
கடைந்த போது சுழன்று வருகையாலே
கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து
அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –

கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக
கடல் கடைந்தபடி –

ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த
கிருஷ்ணன் உடைய
ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்
லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –
ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து
அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –

கடல் கடைந்த மாதவனை –
கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை –

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை –
ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்
அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

திங்கள் திருமுகத்து-
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே குளிர்ந்து -மலர்ந்த முகம் –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று அநபிபவ நீயத்வமும் உண்டு அங்கு –
அனுகூலர்க்கே ஆன முகம் ஆகையாலே -திங்கள் திரு முகம் -என்கிறார்கள் -இங்கு
இவனை அனுபவிப்பார் முகமும் இப்படி இறே இருப்பது
மதி முக மடந்தையர் இறே –

சேயிழையார் –
சூடகமே -இத்யாதியில்
தாங்கள் அபேஷித்த படியே -அவனும் அவளும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை உடையவர்கள் –
கிருஷ்ண விஷயீ கார யோக்யதை ஆகிற ஆபரணத்தை உடையவர்கள் —
கிருஷ்ண விஷயீ காரத்தாலே புகுந்த புகராலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருப்பவர்கள் –

சென்று-
இவ் ஒப்பனை உடன் வரப் பார்த்து இருக்கும் அளவு அல்லாத த்வரையைச் சொல்லுகிறது –

இறைஞ்சி –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி –

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அப் பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
அடிமை கொண்ட படியை –

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு
தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

பட்டர்பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன –
பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே
சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –

சங்கத் தமிழ் மாலை –
குழாங்களாய்-என்னுமா போலே
திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இ றே

தமிழ் மாலை –
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே
உபநிஷத் தமிழ் ஆனபடி –

மாலை –
பாவனமான அளவன்றிக்கே
போக்யமுமாய் இருக்கையும்
தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே
விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே –
அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –
இங்கு –
பிற்பட்ட காலத்திலே -என்னுதல்
சம்சாரத்திலே -என்னுதல்

இப்பரிசு உரைப்பார்-
இப் பாசுரம் மாத்ரத்தைச் சொல்லுவார்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணிப் பெற்றார்கள்
ஆண்டாள் அனுகாரத்தாலே பெற்றாள்
ஆகையால் இந்த பிரபந்தம் கற்றார்க்கு இந்தப் பலம் கிடைக்கும் –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே
அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும்
இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –

செங்கண் திரு முகத்து –
அலாப்ய பலத்தாலே சிவந்த கண்கள் –

செல்வத் திருமாலால் –
உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –
இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி
முடிவிலும் சொல்லுகையாலே
த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –

எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்
பிராட்டியும் தானும் சந்நிஹிதமாம் படி
பிரசாதத்தைப் பெற்று

இன்புறுவர் எம்பாவாய் –
பகவத் சம்ஸ்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவார் –
விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – சிற்றம் சிறுகாலே வந்து -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 3, 2013

(வேதம் அனைத்துக்கும் வித்து -வேதத்துக்கு ஓம் என்பது போல் -ரஹஸ்ய த்ரய விளக்கம் -ஸர்வாதிகாரம்
ஸ்வரூப உபாய உபேயங்களை சொல்லும் மந்த்ர விதி அனுசந்தான ரஹஸ்யங்கள் விளக்கும் திருப்பாவை –
மந்த்ர ரத்ன பூர்வ வாக்கியம் கீழ் கறவைகள் பின் சென்று
இதில் உத்தர வாக்கியம் -சரணாகதிக்குப் பலன் –
யதா ஸ்ருத ஞானம் இல்லாமல் பேரி வாத்யம் அல்ல நாங்கள் பிரார்த்தித்தது

கோவிந்தா உனக்கு அகார ஆய
நாம் -மகாரம்
கோவிந்தா உனக்கே -உகாரம்
கோவிந்தா உனக்கே ஆட் செய்வோம் -அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்
மற்றை நம் காமங்கள் மாற்று -உனது ஆனந்தத்துக்காகவே கைங்கர்யம்-திருமந்திர த்வய சரமஸ்லோக அர்த்தங்கள் சொன்னவாறு

மூன்றாவது கோவிந்தா -திரு நாமம் இதில் -தாத்பர்ய ஞானம் இல்லாதவனே -இதில்-இற்றைப் பறை கொள்வான் அன்று  காண் கோவிந்தா)

(காலை -சிறு காலை -விண்ணோர் பள்ளி எழுச்சி -சிற்றம் சிறுகாலை -அதுக்கு முன்பே எழுந்து இருந்து மற்ற கோபிகளைத் திருப்பள்ளி எழுப்பியது
பொற்றாமரை அடியே–திருக்கமல பாதம்–பாவானத்வமும் போக்யத்வமும்)

(உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது -எதிர்மறை -இதில்-உன் தன்னோடு உற்றோமே யாவோம்)

அவதாரிகை –

இப் பாட்டில்
உபேய ஸ்வரூபத்தை
விவரிக்கிறார்கள் –

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

பதவுரை

கோவிந்தா–கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ(உண்ணாத நீ )
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்-யாவதாத்ம பாவி -பக்தி சாத்யமாவதால் எங்கும் தொடரும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை
மாற்று–தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம் –

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து –
சத்வோத்தரமான காலத்திலே
ஆற்றாமை யாலே வந்து
வருகை மிகை என்று இருக்கும்
உன்னைச் சேவித்து –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-
பிராப்தமாய்
ஸ்ப்ருஹணீயமாய்
சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்யங்களாலே
பரம போக்யமான
உன் திருவடிகளையே
மங்களா சாசனம் பண்ணுகைக்கு
பிரயோஜனத்தைக் கேளாய் –

(ஸ்தனந்த்ய பிரஜைக்கு முலை போல் ப்ராப்தமான திருவடிகள்
லாவண்யம் -ஸமுதாய சோபை -திருவடிகள் -உப லக்ஷண முறையால் திருமேனியையே குறிக்குமே)

(தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -அவன் திருவாய் மலர்ந்து பேச வேண்டாமே)

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே-
ஸ்வ ரஷ்ய ரஷணம் பண்ணி தான் ஜீவிக்கிற குலத்திலே பிறந்த நீ
ரஷகனான நீ ரஷ்யரான எங்களை கைங்கர்யம் கொள்ளாமல் இருக்க ஒண்ணாது –
ரஷண ரூப கார்யம் இல்லாத போது ரஷ்ய ரஷ்க பாவம் ஜீவியாது இறே –

(அநஸ்யன் –உண்ணாதவன் -மரம் இரண்டு பறவைகள் -கர்ம வஸ்யம் இல்லாதவன் எங்கள் குலத்தில் பிறந்தாய்)

(ரக்ஷணம்–கைங்கர்யம் கொடுத்து உனது ஸ்வரூபம் -கைங்கர்யம் செய்வதே எங்களுக்கு தாரகம் உணவு)

(லோக பர்த்தா -ஆவதற்காக கௌசல்யை பெற்றாள் -ஒருத்தியை விட்டால் -பேர் கெடுமே
நாரணன் பெயர் நிலைக்க ரக்ஷணம் அனைவரையும் பண்ண வேண்டுமே)

இப்படி அபேஷிக்க –
கைங்கர்யம் ஆவது என் –
நீங்கள் முதலில் சொன்ன படி பறையை கொள்ளுங்கோள்
என்று பறையைக் கொடுக்க –

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-
இந்த பறையை கொள்ளுகின்ற பேர்கள் அன்று நாங்கள்
நீ தாத்பர்ய க்ராஹி அன்றியே
யதாஸ்ருத க்ராஹியாய் இருந்தாய்
ஆனால் அத்தால் உங்களுக்கு ஏது என்ன –

(இஷ்வாகு குலத்தில் பிறந்து இருந்தால் மனதில் நினைப்பதையே அறிபவர் -)

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு-
சர்வ தேச
சர்வ கால
சர்வ அவஸ்தைகளிலும்
உன்னோடு ஏக தர்மி என்னலாம் படி சம்பந்தித்து இருக்கக் கடவோம்

(கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81)

(பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82-)

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்-
சம்பந்தித்து இருந்து
எங்கள் ரசத்துக்கு உறுப்பாகையும் அன்றிக்கே
உனக்கும் எங்களுக்கும் பிறர்க்கும் ரசத்துக்கு உறுப்பாகையும் அன்றிக்கே
உன்னுடைய ரசத்துக்கே உறுப்பாக
அனன்யார்ஹ சேஷ பூதரான நாம்
தாச வ்ருத்தியைப் பண்ணக் கடவோம் –

(எனக்கே யாட்செய் யெக்காலத்து மென்று,என்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னி,
தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே,
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.)

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-
இதுக்கு புறம்பான
நம்முடைய அபிமான க்ரஸ்தமான
பிரயோஜனங்களைப் போக்கு-

(படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -பிரதான ஆனந்தம் அவனுக்கு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத)

(உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-)

(நம் காமங்கள் -உனக்கும் எங்களுக்கும் சேர்ந்து -தமிழில் தன் இவ்வாறு பதபிரயோகம் -நமது வீடு -எமது வீடு -our house)

கீழ்
பறை என்று மறைத்து சொன்ன அர்த்தத்தை
இப்பாட்டில்
அவனுக்கு உகப்புக்காக புகராகப் பண்ணும் அடிமை என்று
விசதீகரித்துச் சொல்லுகிறார்கள் –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம்என்று
ஜ்ஞான ஜன்மத்தைச் சொல்லுகிறது
ஜ்ஞாதாக்கள் ஆன்ரு சம்சய பிரதானராய்
பரர் அநர்த்தம் பொறுக்க மாட்டாதே
பிறர் உஜ்ஜீவிக்கும்படி
ஹித பிரவர்த்தனம் பண்ணுகையைப் பற்ற –

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –
என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று
கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே
கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே
மங்களா சாசனத்துக்கு பலமாக
அவன் கொடுக்க வேண்டியதும்
இவர்கள் கொள்ள வேண்டியதும்
மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –

(எல்லா கைங்கர்யங்களும் மங்களா ஸாஸனம் உட்க்கொண்டே இருக்கும்
பெரியாழ்வார் -இங்கு பல்லாண்டு பாட அங்கும் பல்லாண்டு
இவர்களோ ஆயர் குலத்துக்கு மேல் ஒன்றும் ரியாமல் இங்கேயே பல்லாண்டு
அங்கு அப்பறை கொண்டவாற்றை -இங்கு கேட்டுப் பெற்றவர்கள்-திவ்ய தேச கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்றதாயிற்று )

(கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-குற்றேவல் -திருமணம் புரிந்து கைங்கர்யமும் அடங்குமே )

சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே
ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி
தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள்
அபேஷித்தாலும்
ஹித பரனான நீ
கேள்வி கொள்ளவும் கடவை அல்லை
கொடுக்கக் கடவையும் அல்லை –
என்றது ஆய்த்து –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – சிற்றம் சிறுகாலே வந்து -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

November 3, 2013

அவதாரிகை –

கீழ்ப் பாட்டிலே –
உபாய ஸ்வரூபத்தை சொல்லி
தங்கள் உத்தேச்யம் கைங்கர்யம் என்று பிரபந்த தாத்பர்யத்தைச் சொல்லி
முடிக்கிறார்கள் –

இதில் –
பிராப்ய ருசியையும்
பிராப்யம் தான் இன்னது என்னும் இடத்தையும் –
அத்தை அவனே தர வேணும் என்னும் இடத்தையும் –
தங்கள் பிராப்ய த்வரையையும்
அறிவிக்கிறார்கள் –

திருவாய் மொழியில்
எம்மா வீட்டிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷித்து
அதில் சரம தசையான அர்த்தத்தை
நெடுமாற்கு அடிமையிலே -அனுபவித்து முடித்தது –

இதில் முந்துற -சரம தசையான -நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை அனுபவித்து
அது நிலை நிற்கைகாகவும்
அத்தை காத்தூட்டுகைக்காகவும்
எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது –

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

பதவுரை

கோவிந்தா–கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை
மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப்
பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை
மாற்று–தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம் –

சிற்றம் சிறுகாலே –
சிறு பெண்கள் எழுந்திருக்க ஒண்ணாத குளிர் போதிலே –
சத்வம் தலை எடுத்த காலத்திலே-
அநாதி அஞ்ஞான அந்தகாரம் நீங்கி
பகவத் விஷயம் வெளிச்செறித்த காலத்தில் -என்றுமாம் –

நாரணனைக் கண்டேன் –பகல் கண்டேன் -என்னக் கடவது இறே –

சிற்றம் சிறுகாலே -என்று ஜாதி பேச்சு
வெட்ட விடியாலே-என்னுமா போலே –

வந்து –
சேதனருக்கு பகவத் லாபம் அவன் வரவாலே இருக்க
வந்து -என்றது ஆதர அதிசயத்தாலே –
இது தான் அங்குத்தைக்கும் மிகையாக இருப்பது –

எங்கனே என்னில் –
பெருமாள் ரிஷிகள் இடம் அருளிய வார்த்தை –
நீ இருந்த இடத்தே வந்து
ராகம் க்ரம பிராப்தி சஹியாது இறே –

உன்னைச் சேவித்து –
பலம் வேண்டாதே -சாதனா காலத்திலே ரசிக்கும் உன்னைச் சேவித்து –
பலமுந்து சீர் என்று இறே இருப்பது –
அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத

உன்னைச் சேவித்து –
தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து –
சேவ்யரான நாங்கள் சேவகராம்படி அத்தலை இத்தலை யாவதே –

உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்
போக்யமுமாய்
பிராப்தமுமாய்
இருந்த திருவடிகளிலே –

அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து –
வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை

போற்றும்-
போற்றுகை யாவது
ஸ்வாமிக்கு மங்களா சாசனம் பண்ணுகை –

பொருள் கேளாய் –
முன்பே இருக்கிறவனை -கேளாய் -என்பான் என் என்னில் –
இவர்களுடைய ஸ்தநாத்ய அவயவங்களிலே
அந்ய பரனாய் இருக்கையாலே
உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் -என்கிறார்கள் –

அவனும் இவர்கள் பேச்சு அன்றோ –
என்று கேட்டான் –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ
பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான
இடைச் சாதியிலே வந்து பிறந்த எங்களை அடிமை
கொள்ளாது ஒழிய ஒண்ணாது –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் –
ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது
தாங்கள் உண்ணாத குலம் –

உன் பிறப்பாலும்
எங்கள் கார்யம் தலைக் கட்ட வேணும் -என்று கருத்து –

குற்றேவல் –
அந்தரங்க வ்ருத்தி –
அன்றிக்கே –
உசிதமான அடிமை -என்றுமாம் –

எங்களைக் –
பசுக்களுக்கு வேறு ரஷகர் உண்டானாலும்
உன்னை ஒழிய ரஷகர் இல்லாத எங்களை –

கொள்ளாமல் போகாதே
உனக்கு விஹிதம் –
சப்தாதி விஷயங்களே தாரகமாய் இருக்கிறது எங்களை
உன் வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்னும்படி பண்ணி
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம்
தாராதே போகை-உனக்குப் போருமோ -என்கை –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்கிறார்கள் –

இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே
நீங்கள் நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது
வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று
பறையைக் கொடுக்கப் புக –

இற்றைப் பறை கொள்வான் அன்று -காண் –
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –

கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-

அபிதா வ்ருத்தியைப் போக்கி
தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே –
ஆனால் நீங்கள் சொல்லுகிறது என் என்ன –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்
ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை
காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை
செய்தாப் போலே யாக வேணும் –

உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –
நீ ஸ்வாமியாகவும்
நாங்கள் ஸ்வம் ஆகவும்
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்

ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது
எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –

மற்றும் வேண்டுவது என் என்ன –

உனக்கே நாம் ஆட்செய்வோம் –
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே
இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –

உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து
நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே
நீ உகந்த அடிமை யாக வேணும் –
அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –
நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்
நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும்
இவை இரண்டும் விரோதி யாகையாலே
அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – கறவைகள் பின் சென்று -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 3, 2013

(மந்த்ர ரஹஸ்யம் -விதி ரஹஸ்யம் -அனுஷ்டான ரஹஸ்யம் -ஷேம கரம்
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம் -நடுவில்
ஓம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ஸயதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் இவாவசிஸ்யதே –
குண பூர்ணம்-சரணாகதியும்-கல்யாண குண பூர்த்தியையும் கைங்கர்ய பிரார்த்தனையும் -மூன்றும் சேர்ந்தே -ஸ்ருதியில் உள்ளன
அகிஞ்சனன் அகதி விண்ணப்பம் செய்தே சரணாகதி
நோற்ற நோன்பிலேன் -குளித்து மூன்று-ந தர்ம நிஷ்டோஷ்மி -லோக விக்ராந்த சரணவ்-மூலம்
ஒன்றும் இல்லை என்றும் இருந்து விட்டதாகவும் -பரித்யஜ்ய மாயா லங்கா -பிதரம் மாதரம் -போன்றவை உண்டு
விட்டே பற்ற வேண்டும் விட்டதும் பற்றுவதும் உபாயம் இல்லை -விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம்
த்வயத்தின் பூர்வ வாக்கியம் இது உத்தர வாக்கியம் சிற்றம் சிறு காலையில்-)

(ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

பூர்ணம் – முழுமை: அத: – அது: இதம் – இங்கே: பூர்ணாத் – முழுமையிலிருந்து: உதச்யதே – உதித்தது அல்லது வந்தது:
பூர்ணஸ்ய – முழுமையிலிருந்து: ஆதாய – எடுக்கப்பட்டது: பூர்ணம் ஏவ – முழுமையாகவே: அஸிஷ்யதே – இருக்கிறது.)

(இதிலும் பிரார்த்தனை என்னது சொல்ல வில்லை-ஆறு பாகங்களாக இப் பாசுரம் பிரித்து வியாக்யானம்
1-கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்–கர்மா ஞான பக்தி யோகங்கள் ன்றும் இல்லை
2-அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து -மேல் இவை வரை யோக்யதை இல்லாத குலத்தில் பிறந்தோம்
3-உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -மூல ஸூ ஹ்ருதம் நீரே எண்களைத் தேடி வந்தீர் அன்றோ
4-உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது-நித்ய சம்பந்த ஞானம்
5-அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே-அபராத ஷாமணம்
6-இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-நீயே உபாயம்)

அவதாரிகை –

முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன
பிராப்ய
பிராபகங்கள் இரண்டையும்
மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக
இப் பாட்டில்
பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்

(நாராயணனே பறை
நாராயணனே தருவான்
என்பதின் விவரணம் இப்பாசுரமும் அடுத்த பாசுரமும்)

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்

பதவுரை

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேர்ந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத-அறிவு ஞானம் யோகம் அறிவு ஓன்று கர்ம யோகம் அறிவு ஒன்றும் பக்தி யோகம் -மூன்றுமே இல்லை
ஆண் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும் தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோடு உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–நாராயணனே இத்யாதி சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆஸ்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருள வேணும்;
எல் ஓர் எம் பாவாய்

வியாக்யானம் –

கறவைகள் -இத்யாதி –
ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து
சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி –
தேக போஷண ஏக பரராய்
இருந்தோம்
இது இறே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –

அறிவொன்றும் இல்லாத
ஞானமும்
ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –

ஆய்க் குலம் –
உபயாந்தரங்கள் இல்லாமையாலே
தோஷமாகாத குலத்திலே பிறந்தவர்கள் நாங்கள் –

இத்தால் –
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –

(ஏழை ஏதலன் கீழ் மகன் போல்)

ஆகில் –
புருஷார்த்தத்தை இழக்கும் இத்தனை யன்றோ -என்ன –
புண்ணியம் இல்லாதார் அன்றோ இழப்பது -என்ன
உங்கள் புண்ணியம் ஏது -என்ன –

உன் தன்னை -இத்யாதி –
எங்கள் குலத்தில் அவதரித்த உன்னையே புண்ணியமாக
அநந்ய சாதனரான யாம் உடையோம் –

குறை ஒன்றும் இல்லாத –
எங்கள் அபூர்த்தி ஆராயும்படியாயோ உன்னுடைய பூர்த்தி இருப்பது –
சர்வ நிரபேஷன் அன்றோ நீ என்று கருத்து –

கறைவைகள் இத்யாதி –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
இவ்வளவும் தங்கள் உடைய
ஆகிஞ்சன்யத்தையும்
அநந்ய கதித்வத்தையும்
உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும்
சொன்னார்கள் ஆய்த்து –

குறைவாளர்க்கு நிறைவாளர் குறை தீர்க்க வேணும்
என்கிற நிர்பந்தம் என் என்ன –

அதுவோ –
கோவிந்தா -உன் தன்னோடு உறவு –
எங்கள் குலத்தில் பிறந்த அசரண்ய சரண்யனான -உன் தன்னோடு –
அநந்ய சரண்யரான எங்களுக்கு –
உண்டான ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த நிர்பந்தம் -என்ன
அதுவோ ஒரு குட நீரோடு போகிறது என்ன –

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –
உன்னோடு நமக்கு உண்டான உறவை ஆராய்ந்து பார்த்தால்
சோபாதிகம் அன்றிக்கே
நம் இருவர் உடையவும் ஸ்வரூபமாய் இருக்கையாலே
அது தானும் நித்யம் ஆகையாலே
சர்வ சக்தியான உன்னாலும் போக்க ஒண்ணாது –
பிராக்ருதரான நம்மாலும் போக்க ஒண்ணாது –
க்ருத சங்கே திகளான இருவராலும் போக்க ஒண்ணாது –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது –

(விதி வாய்க்கின்றது காப்பார் யார் -கருணை பிரவாகம் தடுப்பார் யார்
யாவதாத்மபாவி ஸ்வாமி சொத்து சம்பந்தம் இருக்குமே)

சம்பந்த ஞான ரூபம் ஆகையாலே இதுக்கு விஸ்மிருதி இங்கே வரக் கூடாதோ என்ன
பிறந்த பின் மறந்திலேன் -என்கையாலே வரக் கூடாது

(நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)
ஆனாலும் எதோ உபாசனம் அன்றோ பலம்

நீங்கள் நம்மை சிறு பேரிட்டு அழைத்தி கோள்
உங்கள் சிறுமை தீரும்படி -எங்கனே -என்ன

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
அறியாமையாலும்
பால்யத்தாலும்
பிரேமத்தாலும்
உன்னை சிறு பேராலே அழைத்தோமே யாகிலும்
சர்வஞ்ஞனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
பிரேம பரவசனான
நீ
சீறி அருளாது ஒழிய வேணும் –

இறைவா சீறி அருளாதே –
சீறினால் வரும் அநர்த்தம் உன்னது அன்றோ -(ஸ்வாமிக்குத் தானே பேறும் இழவும்)

ஆகையால்
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
நீ -தாராய் –அத் தலையில் குறை யன்றியிலே ஒழிய அமையும் இறே –
பேற்றுக்கு அத்வேஷம் இறே இத் தலைக்கு வேண்டுவது
பேற்றின் கனத்துக்கு கீழே விளைந்தது எல்லாம்
அத்வேஷ மாத்ரமாய் இருக்கும் இறே –

(பேற்றுக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டும்)

இறைவா-
வானோர் இறையை நினைத்தன்று –
ஆய்க் குலமாக வந்து தோன்றின நம் இறை –

(திருவாய்மொழி (1-5-1-)அருளிச் செய்த இறை அன்று -திருவிருத்தத்தில் -(61)- அருளிச் செய்த இறை)

(வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-)

(வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –)

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – கறவைகள் பின் சென்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

November 3, 2013

அவதாரிகை –

முதல் பாட்டில் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
சங்கரஹேண சொன்ன-பிராப்ய பிராபகங்களை-
இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது –

அதில் இப்பாட்டாலே –
நாட்டார் இசைகைக்காக -நோன்பு -என்று ஒரு வ்யாஜத்தை இட்டு புகுந்தோம் இத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் அது அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யமே -என்று
தங்களுக்கு உத்தேச்யமான புருஷார்த்த சித்திக்கு –
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் -பிராப்தியையும் -முன்னிட்டு –

நீயே உபாயமாக வேணும் -என்று அபேஷித்து
இதுக்கு ஷாமணம் பண்ணிக் கொண்டு
பிராப்ய பிரார்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –

மேலில் பாட்டாலே -பிராப்ய பிரார்தனம் பண்ணா நின்றதாகில்
இங்குப் பண்ணுகிறது என் என்னில்
பிராபகம் பிராப்ய சாபேஷம் ஆகையாலே சொல்லுகிறார்கள் –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்

பதவுரை

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத
ஆண் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோகி உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆச்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருளவேணும்;
எல் ஓர் எம் பாவாய்

வியாக்யானம் –

கறவைகள் –
அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –

பின் சென்று –
நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி –
இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை –
எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் –
பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –

கானம் சேர்ந்து –
தம் தாமுடைய வ்ருத்திகளாலே ஒரு நன்மைக்கு உடலாம் மனுஷ்யர் திரியும் நாட்டிலே வர்த்தித்திலோம்-
புல் உள்ள காட்டிலே வர்த்தித்தோம் இத்தனை –
இருப்பாலே நன்மையை விளைவிக்கும் தேசத்திலே வர்த்தித்திலோம்-
காட்டிலே வர்த்தித்தோம் -என்றுமாம் –

சேர்ந்தோம் –
ஊரில் கால் பொருந்தாத படி இ றே காட்டில் பொருந்தின படி –

உண்போம் –
வைச்யருக்கு -கோ ரஷணம் தர்மம் ஆனால் -தத் அனுரூபமாக காட்டிலே வர்த்திக்கையும்
வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி தர்ம ஹேது ஆகிறது என்ன –
காட்டில் வர்த்தித்தாலும் -வீத ராகராய் -வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி
சரீரத்தை ஒறுத்து அவ்வருகே ஒரு பலத்துக்காக வர்த்தித்தோம் அல்லோம் –
கேவலம் சரீர போஷண பரராய் வர்த்தித்தோம் இத்தனை –
இத்தால் –
வ்ருத்தியில் குறை சொல்லிற்று
இது இறே உன்னைப் பெறுகைக்கு நாங்கள் அனுஷ்டித்த கர்ம யோகம்-என்கிறார்கள் –

அறிவொன்றும் இல்லாத –
இப்போது இல்லை யாகில் விடுங்கோள்-
விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த
ஞானம் தான் உண்டோ -என்னில்
அதுவும் இல்லை –

ஒன்றும் –
பகவத் ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானமும் இல்லை –
தத் சாத்யமான பக்தியும் இல்லை -என்கை –
பக்தி இல்லை -என்கிறது -பக்தி யாவது ஞான விசேஷம் ஆகையாலே –
இவர்கள் அலமாப்பு பக்தி அன்றோ வென்னில் –
அது ஸ்வரூபம் ஆகையாலே -உபாயமாக நினையார்கள்

ஆக
இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –
ந தர்மோஷ்டமி ந பக்திமான்
நோன்ற நோன்பிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி –
இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை
அவர்களோடு ஒத்து இருக்கிறார்களோ -என்ன –

ஆய்க் குலத்து –
அறிவு உண்டு என்று சங்கிக்க ஒண்ணாத குலம் –
கீழ் சொன்ன உபாய ஹானி தோஷம் ஆகாதே குணமாம் படியான ஜன்மம் –
எங்கள் ஜன்மத்தைக் கண்டு வைத்து அறிவு உண்டு என்று சொல்லுகிற நீ அறிவு கேடன் -இத்தனை –
ஆனால் விடும் அத்தனையோ -என்ன –

உன் தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம் –
பேற்றுக்கு உடலான புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை அன்றோ வென்ன –
அங்கன் சொல்லலாமோ எங்களை –
புண்யத்துக்கு சோறிட்டு வளர்கிறவர்கள் அன்றோ –
சாஷாத் தர்மமான உன்னை –
ராமோ தர்ம விக்ரவான் –

பிறவி பெறும் தனை –
நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்
அவர்களைப் போலேயோ நாங்கள்
ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே
எங்களோடு சஜாதீயனாய் வந்து
அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –

புண்ணியம் யாம் உடையோம் –
புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –

நாமுடையோம்
சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில்
இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான
ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் –
நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ

அறிவொன்றும் இல்லை
புண்ணியம் யாம் உடையோம்
என்பதாய்க் கொண்டு வ்யாஹத பாஷணம் பண்ணா நின்றி கோள்-என்ன
கண்டிலையோ –
இது தானே அன்றே அறிவு கேடு
ஆனால் விடும் அத்தனையோ -என்ன

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி
உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ
சர்வ நிரபேஷன் -என்கை

எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ
உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –
எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –
உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –
இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –
எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து
இத்தால்
உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –

கோவிந்தா –
நீங்கள் என்னைப் பூர்ணனாக பேசின படியால்
வேண்டி இருந்தோமாகில் செய்தல் -இல்லையாகில் தவிர்த்தல் அன்றோ -என்ன
நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –
எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து
எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ
நாங்கள் அபேஷிக்கிறது –
இத்தால்
சௌலப்யம் சொல்லுகிறது

குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று
ஓன்று உண்டாகில் அன்றோ
என் பூர்த்தியும் உங்கள் அபூர்த்தியும் சொல்லுவது என்ன
அதுவோ –

உன் தன்னோடு உறவு –
நீ எங்களுக்கு உறவு அன்றோ –
எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -என்ன

அது கொண்டோ
ஆனால் ஒரு குட நீரோடு போகிறது -என்ன –

உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –
உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –
எங்களாலும் விட ஒண்ணாது –
இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –

இப்படி சொல்லுகிறது என்ன உரப்பு -என்ன –
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -என்ற
பிரமாணத்தைக் கொண்டு -என்ன –

அவர்கள் உங்களைப் பெற்றவர்கள் அன்றோ என்ன –
ஆனால் நீ எங்கள் கையிலே தந்த மூலப் பிரமாணத்தில் முதல் எழுத்தைப்
பார்த்துக் கொள்ளாய் -என்கிறார்கள் –

அதாவது
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –
நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே
நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்-
தயா பூர்ணனான உன்னோடு
தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –

அறியாத -இத்யாதி
கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்கள் –

அறியாத
அநவதாநத்தாலே வந்த அஞ்ஞானம் –

பிள்ளைகள்
பால்யத்தாலே வந்த அஞ்ஞானம் –

அன்பு –
பிரேமத்தாலே வந்த அஞ்ஞானம் –
இந்த ஹேதுக்களால் வந்த அறியாத் தனம் பொறுக்க வேணும் –
ப்ரேமாந்தரைக் குற்றம் கொள்ளுகையாவது –
ஒரு படுக்கையிலே இருந்து -கால் தாக்கிற்று கை தாக்கிற்று -என்கை இறே-

உன் தன்னை -இத்யாதி
கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு
முதல் திருநாமம்
சொல்லுகை குற்றம் இறே
நாராயணன் -என்றார்கள் கீழ் –
நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்தே மேன்மை சொல்லுகை குற்றம் இறே –

இறைவா –
தன கை கால் தப்புச் செய்தது என்று
பொடிய -விரகு -உண்டோ –
உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –

இறைவா –
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –
ஐயர் தடுக்கின் கீழே இருந்து கேட்டு அறியாயே –
நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு –

நீ தாராய் பறை –
விலக்காமை பார்த்து இருக்கும் நீ
எங்கள் அபேஷிதம் செய்யாய் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -கூடாரை வெல்லும் சீர் -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 3, 2013

அவதாரிகை –

இப் பாட்டில்
நோற்றால் -அவன் பக்கல் பெருமவற்றைச்
சொல்கிறார்கள்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா–கண்ண பிரானே!
ஊன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப் பூவும்
பாடகம்–பாதகடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட்ட யாம் நன்றாக அணிவோம்–,
ஆடை–சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும் படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடி யிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–

வியாக்யானம்

கூடாரை வெல்லும் சீர் –
கரண களேபர பிரதானம் –
முதலாக சாங்க சாஸ்திர பிரதானம் பண்ணின விடத்திலும்
ந நமேயம் என்று இருப்பாரை
தன்னுடைய சௌர்யாதி குணங்களாலும்
சீலாதி குணங்களாலும் வெல்லும் இத்தனை –

(ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் -ஆதாரம் பெறுக வைத்த அழகன்)

வில் பிடியைக் காட்டி ராவணனை ஜெயித்தான் -(ச சால சாபஞ்ச விமோச -வெறும் கை வீரன்-ஸுசீல்யம் காட்டி வெல்லப் பார்த்தான் )

இது பிரதம யுத்தத்திலே இவனும் அதுக்கு எதிர்பார்த்து போந்தவன் தோலாமை இல்லை இறே
ஆனால் மறுபடியும் யுத்தமுண்டான படி எங்கனே என்னில்(கச்சாநு ஜாநாமி-இன்று போய் நாளை வா – என்று )
பெருமாளுடைய நிரதிசய சௌர்யத்தை
பிரகாசிப்பிக்கைக்காக மறுபடியும் யுத்தம் பண்ணினான் இத்தனை
என்று நம்முடைய ஆச்சார்யர் அருளிச் செய்வர்

(ராமத்வம் உலகுக்கு காட்டவே -வீரம் காட்டவே -ஒருவர் இருவர் மூவர் என்று -உருவு கரந்து -இறுதி யுத்தம்
சத்ருக்களும் புகழும் வீரம் -மனோ ரஞ்சனம்(

தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்(ஸாஷாத் மன்மதன் )
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய
வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்

இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

கோவிந்தா –
சர்வ ஸூலபன் ஆனவனே -(மாடுகளின் பின்னே போகும் எளியவன் )

வுன் தன்னைப் பாடிப் –
சர்வ ஸ்மாத் பரனாய்
சர்வ ஸூலபனான உன்னை(தன்னை -ஸூ லபன் -இயற்க்கை)
த்வத் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி –

பறை கொண்டு –
புருஷார்த்தத்தை லபித்து –

யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக-
நாடு ஸ்வ அபிப்ராயத்தால் கொண்டாடும் பிரகாரத்தாலே
உன் பக்கல் கை பார்த்து இருக்கும் நாங்கள் லபிக்கிற பஹூமானம்
உன் பக்கல் நன்றாக யாம் பெரும் சம்மானம் -என்றுமாம் –

(முனிவர் யோகிகள்- வைகுந்தத்து அமரரும் முனிவரும் -கைங்கர்ய நிஷ்டர்களும் குண அனுபவம்
யோகத்தால் ஞானம் -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் -ஆச்சார்ய உபதேச ஞானம் –
ஆச்சார்யருக்கு ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் தனது ஆச்சார்ய உபதேச ஞானமும் வேண்டும்
யோகத்தால் -மீண்டும் மீண்டும் த்யானம் -தபஸ் -பலம் கொடுக்கவும் ப்ரஹ்மம் வேண்டுமே –
அதீந்த்ர -இந்திரியங்களுக்கு அப்பால் பட்ட ஆத்மா பரமாத்மா த்யானம் -வற்றைச் சொல்ல ஸாஸ்த்ரம் வேண்டுமே
யோகம் பற்றி அறியவும் ஸாஸ்த்ரம் வேண்டும் ஆகவே எல்லா ஞானமும் வேண்டுமே
அனைவரும் அவன் இடம் கை பார்த்தே இருக்க வேண்டுமே)

(பல அடியார் முன்பு அருளிய -பாம்பணை அப்பன் அமர்ந்து உறையும்-
பெரியநம்பி பின்பு கூரத்தாழ்வான் கோயில் வலம் வந்த விருத்தாந்தம்
எங்கும் பக்கம் நோக்கம் அறியாமல் கடாக்ஷம் ஒருமடையாக ஆழ்வார் பெற்றது போல்)

சூடகமே –
காப்பே

(கைத்தலம் பற்றி உபக்ரமம் –திருவடியில் விழுந்தது பர்யந்தம்)

(திருவெள்ளறை காப்புப்பதிகம்)

தோள் வளையே –
திரு இலச்சினையே

தோடு –
திரு மந்த்ரமே

செவிப்பூவே
த்வயமே(அனுபவத்துக்கு )

பாடகமே
சரம ஸ்லோகமே

இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் –
பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன

(முமுஷுவுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் ரஹஸ்ய த்ரயங்கள் அன்றோ)

(வளையாதி பூஷணங்கள் சம்பந்தத்துக்கு அடையாளம் போல் இவையும் -அம் தண் துழாய் கமழ்தல் குட்டநாட்டுத் திருப்புலியூர் உடன் ஸம்ஸ்லேஷ அடையாளம் போல்)

இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான
பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே –
திருமந்த்ரத்தை சொல்லுகிறது –

(பிரணவம் -இத்தை விவரிக்க -பிரணவ சேஷம் -நம நாராயண -ஆகவே ப்ரணவத்தைச் சொன்னது திருமந்திரம் முழுவதையும் சொன்னவர்
வேதத்துக்கு ஓம் என்பது சுருக்கம் -தான் மங்களமாதலால்)

செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –

(மந்த்ர ரத்னம் சந்தத ஸ்புரித -நித்ய அனுசந்தானம் -ப்ரபத்யே -வர்த்தமானம்-அனுசந்தான ரஹஸ்யம் தானே இது )

பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –

(தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக்கீழ் வாழ்ச்சி)

இம் மூன்று ரகஸ்யங்களாலும்
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது
அது எங்கனே என்னில்

திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –

என்று அனைய
என்று சொல்லப் படுகிற

பல் கலனும்
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே-
ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –

(ஸ்வரூப ஞானம் -அர்த்த பஞ்சக ஞானம்
பரபக்தி பரஞானம் பரமபக்தி
ஐஸ்வர்ய கைவல்ய வைராக்யம் அஸேவ்ய சேவை -ஆபாச பந்துக்கள் தேவதாந்த்ர த்யாஜ்யம் )

யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்
இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –

(ஏறாளும் இறையோனில் -அவனுடன் இல்லாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாமே)

ஆடை உடுப்போம்
சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்

(நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-)

அதன் பின்னே –
அதுக்கு மேலே

பால் சோறு
கைங்கர்யம் ஆனது

மூட நெய் பெய்து
மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு

கூடி இருந்து குளிர்ந்து –
போக்தாவான உன்னோடு
போக்யரான நாம்
சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-அவனே போக்தா நாம் போக்யம் )

(ஸோஸ்னுதே -ஸர்வான் காமான் ஸஹ -ப்ரஹ்மணா ஸஹ –சாதர்மய -சாம்யா பத்தி சுருதிகள் ஸாயுஜ்யம் சொன்னவாறு)

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.