(அவதார ரஹஸ்ய ஞானத்துடன் பக்தி செய்பவனுக்கு அதுவே இறுதி பிறவி
ஜென்மம் கர்மம் மே திவ்யம் -எனக்கும் பிறந்தவாறும் வளர்ந்தவாறும் திவ்யமாக இருக்குமே
யோ வேத்தி தத்வத -உண்மையாக -நம் பிறவி தழையை வெட்டவே -நாம் மீண்டும் பால் குடிக்காமல் இருக்கவே – அவதாரம் என்று அறிய வேண்டுமே
வருத்தமும் தீர்ந்து -அநிஷ்டங்கள் கழிந்து -மகிழ்வோம் -பகவத் ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமும் பெறுவோம்
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னிடம் எதையும் கேட்க்காமல் -உன்னையே அர்த்தித்து வந்தோம் –
தருதியாகில் என்பதால் அர்த்தித்தது உபாயமாகாத் -உணவின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
பேற்றுக்கு நினைவு -உன் மனத்தினால் என் நினைந்து இருந்தாய்)
(யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
இரங்கு
உன்னை அர்த்தித்து வந்தோம்
போஷித்து பின்பு சிற்றம் சிறுகாலையில் அறிவிப்பார்கள்)
அவதாரிகை —
இப்பாட்டில் –
கீழ்ப் பாட்டில் -ஏற்றிப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் -இரங்கு -என்று
இவர்கள் அபேஷிக்கையாலே
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –
நெடுமாலே -நீ புருஷார்த்தத்தை கொடுத்தாயாகில் –
நாமும்
உன்னையும் உன் குணங்களையும்
ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி
பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து
மகிழக் கடவோம் –
என்கிறார்கள் –
(அத்புதம் பாலகம் -அவதரித்த திவ்ய மங்கள விக்ரஹத்தையும் உடனே ஒளித்தார்
சரித்திரமும் சொல்லி பின்பு மறக்கவும் பண்ணினார் அன்றோ –
ரூபம் குணம் பரத்வம் அனைத்தையும் ஒளித்தார் அன்றோ
ஸ்வரூபம் மறைக்க முடியாதே
வேண்டித் தேவர் இரக்க –காண்டல் இன்றி வளர்ந்து-ப்ரீதி -அன்பு -வெளிப்பாடாகப் பாட துக்கம் தீர அதனால் -மகிழ்ந்து -இரண்டு நிலைகள் )
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
பதவுரை
ஒருத்தி–தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–(அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திருத் தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;
ஏல் ஓர் எம் பாவாய்–.
வியாக்யானம்
ஒருத்தி மகனாய் பிறந்து –
அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்-
குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்
அவதரித்து –
(பெறப் பெறாத பேறாக தாய் தந்தை பெற்றதால் மகிழ்ந்து சிரிக்க அந்த ஒளியாலே கண்டார்கள்)
(ம து ரா -இங்கும் த்ரயம் -அகாரம் -நாராயணன் -நார சப்தத்தில் குணங்கள் விபூதி விக்ரஹம் அடங்குமே)
ஓர் இரவில் ஒருத்தி மகனாய் –
லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில்
வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் –
(ஸ்வரூப ரூப குண சேஹ்டிதங்கள் அனைத்தயும் வியக்தம் அஷ்டாக்ஷர மந்திரத்தில் மட்டும் தானே
ஸ்வரூபம் மட்டும் வியக்தம் துவாதச அக்ஷர மந்திரத்தில்)
பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் –ஸ்ரீ முமுஷுப்படி-சூரணை-8-
அவை தான-வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –சூரணை -9
அவ்யாபகங்களில் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் –சூரணை -10
இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்-சூரணை -11-
இந்த வியாபக மந்திர த்ரயமும் தன்னில் ஒக்குமோ என்ன –
அதாவது
அவ்யாபகங்களில் காட்டில் ஸ்ரேஷ்டமாய் இருந்துள்ள இவ் வியாபக மந்த்ரங்கள்
மூன்றிலும் வைத்து கொண்டு
நாராயணாய வித்மஹே என்று பிரதமோபாத்தம் ஆகையாலும் –
அர்த்த பூர்த்தி யாதிகளாலும் –
நாஸ்தி சாஷ்டாஸ்ராத்பர , ந மந்த்ரோஷ்டாஷராத் பர -என்னும்படியான பெருமை உடைய பெரிய திரு மந்த்ரம்
பிரதானமாய் இருக்கும் என்கை –
மற்றவை இரண்டுக்கும் அசிஷ்ட பரிக்ரஹமும் அபூர்த்தியும் உண்டு –சூரணை -12
மற்ற வியாபக த்வயத்துக்கும் தாழ்வு என்ன –
அதாவது
வாஸூதேவ விஷ்ணு சப்தங்களான மற்றை வியாபக மந்த்ரங்கள் இரண்டுக்கும்
நாராயண சப்தம் போலே
ஸ்வரூப ரூப குணாதிகளை எல்லாம் பிரதிபாதியாதே –
ஸ்வரூப மாத்ரத்தை பிரதி பாதிக்கையாலே –
நிர் விசேஷ சிந்மாத்ரா வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் மிகவும் ஆதரித்துப் போருகையாகிற
அசிஷ்ட பரிக்ரஹமும் –
வியாப்ய அத்ய ஆகாராதிச அபேஷதை ஆகிற அபூர்த்தியும் உண்டு என்கை –
(ஆதி சப்தம் விபூதிகளைச் சொல்லுகிறது
குத்ருஷ்டிகள் -சங்கராதிகள்-நிர்விசேஷ சின் மாத்ர வஸ்து வாதிகள் )
ஷட் அஷரி -வியாப்ய பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் -வியாபகனுடைய குணங்களையும்
சொல்லாதே -வியாப்தி மாத்திர பிரகாசம் ஆகையாலே -அபூர்ணம் –
வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் -வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
சர்வம் வசதி-என்ற அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் –
அதில் குணம் அன்வயியாமையாலும் இனி குண சித்திக்காகா பகவந் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் -திரு த்வாதச அஷரியும் அபூர்ணம்
ஷட் அஷரி ஓம் நமோ விஷ்ணவே என்பது
திரு துவாதச அஷரி -ரெங்கநாதனுக்கு ஆராதன மந்த்ரம் -ஸர்வத்ர வசதீதி வாஸூ தேவ)
இம் மந்த்ரம் அவை போலே அன்றி –
வியாப்ய பதார்த்தங்களோடு
வியாபன பிரகாரத்தோடு
வியாபன பலத்தோடு
வியாபனுடைய குணங்களோடு
வாசி அற சாப்தமாக காட்டுகையாலே -அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த
பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு –
பரந்த ரகசியம் -என்று மற்ற வியாபக மந்த்ரங்கள் இரண்டினுடைய அபூர்தியையும்
திருமந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் ஸூ ஸ்பஷ்டமாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே)
ஒளித்து வளரத்-
குண விக்ரஹ விபூதி களாலே
சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –
(அஹம் வோ பாந்தவ ஜாத என்று பரத்வத்தை மறைத்து அந்தோ வளர்ந்தான்)
தரிக்கிலானாகித் –
ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –
தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –
அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே
அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய்
பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே –
தானே
த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி
அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே
நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய
வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –
(நெருப்பன்ன நின்ற நெடுமாலே –சீரிய ஸிம்ஹமாயும் பூவைப் பூ வண்ணனாயும் ஒரே சமயத்தில் இருக்கமா போல்)
யுன்னை அருத்தித்து வந்தோம் –
உன்னை அபேஷித்து வந்தோம்
பறை தருதியாகில்-
நீ புருஷார்த்தத்தை கொடுப்பாயாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் –
பெரிய பிராட்டியாருக்கு தகுதியான
ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய்
இருக்கிற செல்வத்தையும் வீர சரிதையையும் –
யாம் பாடி-
அதுவே தாரகமான நாம் பாடி –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம்
நிஸ் சேஷமாக தீர்ந்து
ஆனந்திக்கக் கடவோம் –
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply