ஸ்ரீ திருப்பாவை – மாலே மணி வண்ணா -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

(வேதம் அனைத்துக்கும் வித்து
பரமம் ஸாம்யம் உபைதி -ஸஹ ப்ரஹ்மண-குண அனுபவமும் கைங்கரியமும் மோக்ஷம் -அந்தமில் பேரின்பம் –
துன்பம் தீருவதே மோஷம் பாஷாண கல்பமே முக்தி -ஜீவன் முக்தி -பக்ஷங்கள் நிரஸனம்
வித்வான் புண்ய பாப விதூய -நிரஞ்சன -குற்றங்கள் அற்று பரமம் சாம்யம்
அபஹத பாப்மத்வாதி -விஜூர ஸத்ய காம ஸத்ய சங்கல்ப அஷ்ட குண சாம்யம்
ப்ரஹ்மத்துடன் கூடி ப்ரஹ்மத்தின் குணங்களை அனுபவிக்கிறான்
ஸாயுஜ்யம் -சேர்ந்து அனுபவம் கடைசி நிலை
சாம்யா பத்தி அடைந்தாள் தான் இந்த அனுபவம் கிட்டும்
அடியார்கள் உடன் கூடி அனுபவமும் கைங்கர்யமும் -இறுதி நிலை
மாலே -சாம்யாபத்தி -அவன் இடம் உள்ளவை எல்லாம் -கேட்டு அஷ்ட குண ஸாம்யம்
கூடாரை -ஸாயுஜ்யம்)

(மா மாயன் மாதவன் வைகுந்தன் கீழே-ஸுலப்யம் -ஸ்ரீ யபதித்தவம் -பரத்வம் கலந்த பசும்கூட்டம் பார்த்தோம்)

(பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் -மூன்றும் சேர்ந்த பசும்கூட்டம் மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்)

(வந்த கார்யம் ஆராய்ந்து என்றும் இரங்கு என்றும் சொல்லி வந்து இப்பாசுரத்திலும் வந்த கார்யம் அருளிச் செய்ய வில்லை
சிற்றம் சிறு காலையில் வைத்து அருளுகிறாள்)

(ஸ்ரீ வில்லிபுத்தூரில் நீராட்ட உத்சவம் -வடபத்ரசாயி அனைத்தையும் அருளுவார் -பிரியாவிடை ஸேவை அட்புதம் -யாம் பெரும் ஸம்மானம் -ப்ரத்யக்ஷமாக ஸேவிக்கிறோம்
ஆழ்வார் திருவடி தொழ அனைத்தையும் தந்து தான் மாலை கூட இல்லாமல் ஸேவை ஸாதிப்பார்
பாசுரங்கள் படியே உத்சவங்களை நடத்தி ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜைப்படி நடக்கிறதே)

(இதுவரை பரத்வம் கொண்டாடி அருளிச் செய்தார்கள்
இவன் திரு முகத்தைக் கண்டவுடன் -அவன் வ்யமோஹம் கண்டு மாலே -என்கிறாள்
அவன் பாரிப்பு கடல் போல் என்றும் இவர்கள் பறிப்பு குளப்படி என்றும் உணர்ந்தார்கள்
சரணாகதி ரக்ஷணம் பெருமாள் இடமும் ஆஸ்ரித பாரதந்தர்யம்-வ்யாமோஹம் கண்ணன் இடம் அசாதாரணம் அன்றோ

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

அஷ்டபதி -ஜெயதேவர் -ராதை பாதங்களைத் தலையில் கொண்ட கண்ணனைப் பாட
திருவேங்கடமுடையான் அனந்தாழ்வான் திருப்பாத தூளி தரித்து இன்றும் சேவை உண்டே)

(ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்த ப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி–சேதன லாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ)

அவதாரிகை –

இப்பாட்டில்
பகவத் சம்ஸ்லேஷத்துக்கு வேண்டும்
உபகரணங்களை வேண்டிக் கொள்கிறார்கள் –

(நோன்பு நீராட்டம் என்றாலே பகவத் சம்ஸ்லேஷம் தானே)

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

பதவுரை

மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா–நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தம புருஷர்கள்
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம்-பூமி யடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற்கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம் –

மாலே மணி வண்ணா –
சர்வாதிகனாய்
சர்வ சுலபன் ஆனவனே -என்னுதல் –
ஆஸ்ரித வ்யாமோஹமே ஸ்வரூபமாய்
அதி மநோஹரமான விக்ரஹத்தை
உடையவனே -என்னுதல் –

இப்படி சம்போதித்தவாறே -நீங்கள் வந்த கார்யம் என் -என்ன –
மார்கழி நீராடுவான்-
மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை –

இந் நோன்பு தான்
காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ் காமருக்கு நித்தியமாயும்
பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்

ஆகையாலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்
சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய
கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகும் அன்று என்றது ஆய்த்து

(சாதன புத்தியைத் தான் பரித்யஜ்ய என்கிறது -பகவத் முக உல்லாசத்துக்காக கைங்கர்ய ரூபமாகப் பண்ண வேண்டும்)

அதில் பிரமாணம் என் என்ன –
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
பிரமாணங்களில் தலையான
சிஷ்டாசார்யம் -என்ன
அதுக்கு வேண்டுவது என் என்ன

கேட்டியேல்–பராக்கில்லாமல் கேட்டாயாகில் சொல்லுகிறோம் -என்ன
ஆகில் -இதுவும் உங்கள் பேச்சு அன்றோ -கேட்கிறேன் -சொல்லுங்கோள் என்ன
சொல்லுகிறார்கள் –

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து-பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
பூமிப் பரப்பில் உள்ள அஹங்கார சேதனரடைய நடுங்கும்படி த்வநிக்குமதாய் –
அதுக்குத் தக்க குடைகையை உடைத்தாய் -(சுரி சங்கு வலம்புரி சங்கு )
அதி போக்யமாய்
அதி பரிசுத்தமாய்
உன் திருக் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற
பல சங்கங்கள் வேணும்

இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது –
சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே
ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே
லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –

போய்ப் பாடுடையனவே-சாலப் பெரும் பறையே –
மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான
ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்
சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ
போக்த்ருத்வங்களையும்
நிவர்ப்பிக்குமதாய்
மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்
உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

(அந்நியரில் அந்நிய தமர் தானே என்று உணர வேண்டுமே
தானே தனக்கு ரக்ஷகன் என்பது காதுகன் கையிலே தனது குழந்தையைக் கொடுப்பது போல் ஆகும்)

(ஓம் விட நமஸ் உயர்ந்தது
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ய போக்யங்கள் -ஆகவே சாலப் பெரும் பாறை -பெரிய த்வனி இதுக்கு)

(மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜரக்ஷணம்  சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத—ஸ்ரீ பராசுர பட்டர் அருளிய அஷ்ட ஸ்லோகி -ஸ்லோகம் -2–

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –)

பல்லாண்டிசைப்பாரே-
சத் சஹ வாசம் வேணும் –

கோல விளக்கே –
பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு
அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற
பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

(ஒலியும் ஒளியும் வேண்டுமே -ஒளிக்கு ஏற்றம் உண்டே)

(அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அல்லிக் கமலக் கண்ணனாய் இருப்பான் அன்றோ பாகவத சேஷத்வம் உணர்ந்தவன் இடம்)

கொடியே –
கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான
கைங்கர்யமும் வேணும் –

(ஆய -பிரார்த்தனாய சதுர்த்தி அர்த்தம்)

விதானமே-
அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்

(ப்ரபல தர விரோதி அன்றோ இது-சாலப் பெரும் பறை பாரதந்தர்ய ஞானம் வேணும் என்றது
ஸூவ போக்த்ருத்வ புத்தியும் வேண்டுமே )

இல்லாததை உண்டாக்கவோ -என்ன
ஆலினிலையாய் –
முன்பு இல்லாததை உண்டாக்கினவன் இல்லையோ –

அருள்
கிருபை உண்டாகில்
செய்யத் தட்டில்லை –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading