(நடை அழகு காண ஆசைப்படுகிறார்கள் -இவை எல்லாம் நம் பெருமாள் பக்கலிலே இன்றும் காணலாம்
நர ஸிம்ஹம் ராகவ ஸிம்ஹம் யாதவ ஸிம்ஹம் ரெங்கேந்திர ஸிம்ஹம்-தேஜஸ் காட்டி —
நடத்தை -அழகு -வந்த காரியத்தை=ப்ரீதி காரித கைங்கர்யம் -சிற்றம் சிறு காலையில் தானே அருளிச் செய்வார்கள் )
அவதாரிகை –
இப்பாட்டில்
வஸதா சாந்த இத்யேகம் லோசனாம் என்னுமா போல் -பெண்காள் -என் செய்தி கோள் -என் பட்டி கோள்
பெண்களை எழுப்புவது
கோயில் காப்பான் முதலானாரை எழுப்புவது
நப்பின்னை பிராட்டியை எழுப்புவது
நம்மை எழுப்புவதாக
பஹு ஸ்ரமப் பட்டி கோளே
உங்களுக்கு நான் செய்ய வேண்டுவது என் -என்ன –
பேரோலக்கமாய்
சிம்ஹாசனத்தில் இருந்து
கேட்டருள வேணும் –
என்கிறார்கள் –
(நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் -ஆசைப்படா இருப்பார்கள் அன்றோ)
(1-அறிவுற்றுத்
2-தீ விழித்து
3-வேரி மயிர் பொங்க
4-வெப்பாடும் பேர்ந்துதறி
5-மூரி
6-நிமிர்ந்து
7-முழங்கிப்
8-புறப்பட்டு
9-போதருமா போலே
நவ செயல்கள் -நவ நரஸிம்ஹர் அஹோபிலத்தில் ஸேவை)
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
பதவுரை
மாரி–மழைக் காலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னிக் கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளை மயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து
முழங்கி–கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவை பூ வண்ணா–காயம் பூப்போன்ற நிறத்தை யுடைய பிரானே!
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக் கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய–லோகோத்தரமான
சிங்காசனத்து-எழுந்தருளி யிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்
வியாக்யானம் –
மாரி மலை இத்யாதி –
வர்ஷா காலத்தில் -பர்வத குகையிலே -பர்வத சிகரம் என்னலாம் படி
தன் பேடையோடே ஏக த்ரவ்யம் என்னலாம் படி
கிடந்து உறங்கும் அத்தசை தன்னிலும்
சூத்திர மிருகங்கள் முழுக்காயாய் அவியலாம்படி
பராபி பவன் சாமர்த்தியத்தை உடைய சிம்ஹமானது
காலம் உணர்த்த உணர்ந்து
பிரதம கடாஷத்திலே தன் பேடைக்கும் அணுக ஒண்ணாதபடி
க்ரூரமாக விழித்து
ஜாதி உசித கந்தம் -மயிர்க்கால் தோறும் -அபிவிருத்தமாக –
நாலு பர்ஸ்வத்திலும்
துல்யமாக எழுந்திருந்து அவயவங்களை தனித் தனியே உதிர்த்து
முன்னும் பின்னும் ஏக ரீதியாய் நீண்ட முதுகு உயரும்படி
நிமிர்ந்து
கர்ஜித்து குகையில் நின்றும் வெளிப்பட்டு வருமா போலே
நீயும் தம பிரசுரமான காலத்திலே வேதாந்தங்களில் அதில்
ஏக தேசம் என்னலாம் படி கிடந்து –
பிராட்டியோடு ஏகவஸ்து என்னலாம்படி கிடந்து என்னவுமாம் –
யோக நித்தரை பண்ணா நிற்கிற அளவிலும்
தமோ வித்வம்சன சக்தியை உடைய நீ –
காலம் உணர்த்த உணர்ந்து பிராட்டிக்கும் அணுக ஒண்ணாதபடி
தீயதாகக் கடாஷித்து
தன்னுடைய கந்தம் திருமேனியில் மயிர்க் கால் வழியே
எங்கும் பரிமளிக்கும் படி
ஜகத் சிருஷ்டியில் உத்யோகித்து
தன்னோடு அவிபக்த நாம ரூபங்களாய்
ஸ்வா வயங்களான சேதனாசேதனங்களை
விபக்த நாம ரூபங்கள் ஆம்படி பண்ணி
இப்படி ஸ்வா வயவ விசிஷ்டனான தான் தண்டாகாரமாய் நீண்டு
பிண்டாகாரமாய் நிமிர்ந்து
மகா சம் ப்ரமத்துடனே
மகதாதி ரூபேண பிரகிருதியில் நின்றும் வேறு பட்டு வருமா போலே
பூவைப் பூ வண்ணா -நீ
உன் கோயில் நின்று -இத்யாதி –
உன்னுடைய திவ்ய அந்தப்புரத்தின் நின்றும்
திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு
எழுந்தருளி –
கோப்புடைய இத்யாதி –
ஏழு உலகும் தொழிலாக வகுப்புண்டதாய்
நினைப்பிட்ட கார்யம் தலைக் கட்டும் படியான சீர்மையை
உடைய சிம்ஹாசனத்திலே
எழுந்தருளி இருந்து உனக்கு அனன்யார்ஹ சேஷ பூதரான
நாங்கள் வந்த
கார்யத்தை விசாரித்து அருள வேணும்-
சஞ்சரண யோக்யம் அல்லாத ராத்திரி காலத்திலே
அரண்மனையிலே திவ்ய அந்தபுரத்திலே
நப்பின்னை பிராட்டி யாரோடு ஏக தத்வம்
என்னலாம் படி படுக்கையிலே சாய்ந்து உறங்கும்
அவ்விருப்பிலே தானே
சத்ருக்கள் மண் உண்ணும்படி வீர ஸ்ரீ யை உடையவனாய்
காலம் உணர்த்த உணர்ந்திருந்து அருகிருந்த
நப்பின்னை பிராட்டிக்கும் அணுக ஒண்ணாதபடி
க்ரூரமாக திருக் கண்களை விழித்து
திருமேனி கந்தம் மயிர்க்கால் வழியே பரிமளிக்க
நாலு பாடும் ஒக்க எழுந்திருந்து
அவயவங்களைத் தனித் தனியே உதறி
நீண்டு நிமிர்ந்து சிம்ஹ நாதத்தைப் பண்ணி
பூவைப் பூ வண்ணா
நீ இத்யாதி ஆகவுமாம் –
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply