(மங்களா ஸாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசங்கள்
பொங்கும் பரிவால் -பெற்றார் பெரியாழ்வார் என்னும் பெயர் -ப்ரேமத்தால் ரஷ்ய ரக்ஷக பாவம் தட்டு மாறிக் கிடக்குமே
இன்றும் நித்ய கைத்தல சேவையில் பெரியாழ்வார் தாளம் இசைத்து பல்லாண்டு சேவை உண்டே
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி என்பதே நமது கர்தவ்யம்
ஆழ்வார்கள் தம் செயலில் விஞ்சி நிற்கும் தன்மையளாய் -அஞ்சும் குடிக்கு ஓர் ஸந்ததியாய் அன்றோ நம் நாச்சியார்
ஞானம் வைராக்யம் பக்தி மங்களா ஸாஸனத்தில் விஞ்சி இருப்பவள் அன்றோ)
*அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -அன்று பல்லாண்டு பாடாக குறை தீர இன்று நாம் வந்தோம் இரங்கு
இரக்கமே உபாயம் -இனிமை பல்லாண்டு பாடுவதே புருஷார்த்தம் -இச்சை அதிகாரம் தெரிவிக்கிறார்கள்)
(இருந்த இடத்தில் இருந்து அளந்த திருவடிக்கும்
எவ்வாறு நடந்தாய் எம் இராமாவோ -என்ற திருவடிக்கும்
குழந்தையாய் சகடம் உதைத்த திருவடிகளுக்கும்
கன்றை எறிந்த போது காட்டி அருளிய குஞ்சித பாதங்களுக்கும்
இந்திரனை ரஷித்த குணத்துக்கும்
இவை உன்னது செயல்கள் அல்ல உனது திருக்கையில் ஆயுதங்கள் செய்தன -அவற்றுக்குப் பல்லாண்டு என்று என்று
பல தடவை நாவுக்கு இடும் ஷட் ரசம்-பல்லாண்டு பாடுவதே பறை)
அவதாரிகை –
இப்பாட்டில் –
இவர்கள் பிரார்த்தித்த படியே அவன்
திருப் பள்ளி அறையில் நின்றும்
திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்து அருள
அந்நடை அழகிலே ஈடுபட்டு
வந்த கார்யத்தை மறந்து
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
(யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -என்றார்கள் அன்றோ கீழ் -அத்தை மறந்தார்கள் -)
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-
பதவுரை
அன்று–(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் கலிவு பட்ட) அன்று அக் காலத்தில்
இ உலகம்–இந்த லோகங்களை
அளந்தாய்–(இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி-(உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி–பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’
அங்கு–பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
கன்று–கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)
குணிலா–எறி தடியாக் (கொண்டு)
எறிந்தாய்–(கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே
கழல்–(உன்னுடைய) திருவடிகள் போற்றி!-’
குன்று–கோவர்த்தன கிரியை
குடையா–குடையாக
எடுத்தாய்–தூக்கினவனே;
குணம்–(உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள்
போற்றி!-’-பல்லாண்டு வாழ்க’
வென்று–(பகைவரை) ஜபித்து
பகை–த்வேஷத்தை
சென்று–எழுந்தருளி
தென் இலங்கை-(அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய்–அழித்தருளினவனே!
திறல்–(உன்னுடைய) மிடுக்கு
போற்றி-பல்லாண்டு வாழ்க’
சகடம் பொன்ற-சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ்-(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!-
கெடுக்கும்-அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி–உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
என்று என்று–என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே–உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி–புகழ்ந்து கொண்டு
யாம்’–அடியோம்
இன்று–இப்போது
பறை கொள்வான் வந்தோம்–பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு–கிருபை பண்ணி யருள்’
ஏல் ஓர் எம் பாவாய்-.
வியாக்யானம்
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம்
ஜகத்தை ஆக்ரமித்த அன்று –
அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு
தன் திருவடிகளாலே அளந்து
தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –
(இங்கு அஹங்காரம் குணம் -மேல் அஹங்காரம் 24 தத்வங்களில் ஓன்று -மஹான் விகாரம் அடைந்த அஹங்காரம் -இதுவே இலங்கை)
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான
அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –
உன்னுடைய யசஸ் ஸுக்கு பல்லாண்டு –
சகடம் ஒருமை -காம க்ரோதங்கள் இரண்டும் ஒன்றாகவே கொள்ளலாம் -காமமே க்ரோதமாக மாறும்)
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-
லோபத்தை எறிதடியாக எறிந்து மோஹத்தை நசிப்பித்தவனே –
உன்னுடைய குஞ்சிதமான திருவடிகளுக்கு பல்லாண்டு –
(லோபத்தை எறிதடியாக எறிந்து-மால் பால் மனம் சுழிப்ப -மோஹத்தை நசிப்பித்தவனே –மங்கையர் தோள் கைவிட்டு)
இவ்வளவில் பிரதிகூலர் விஷயத்தில் செய்யும் அம்சத்தைச் சொல்லிற்று –
இனி அனுகூலர் (ப்ரபந்ந ஜனகர்-ப்ரயோஜனாந்த பரராக இருந்தாலும் )பிரதி கூலித்தால் செய்யும் அம்சத்தைச் சொல்லுகிறது –
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது
பர்வதத்தை குடையாக கொண்டு
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்
இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு
பிரதி கிரியையாக வைதிகமாய் கைங்கர்ய ரூபமான
விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே
உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –
(கல் மழைக்கு கல் எடுத்து ரஷித்தது போல்
அஞ்ஞானம் -பொய் நின்ற ஞான கார்யமான அஹங்காரம் மூலமாக விஷயாந்தர ப்ராவண்யம் -தான் கல் வர்ஷம்
ஆத்மாவுக்கு இதுவே ஆபத்து
ஆகவே அந்த ப்ராவண்யத்தை மாற்றி தமது விஷயத்தில் -கைங்கர்யமாக விதித்து
ஐம் புலன்களுக்கும் அவனையே விஷயமாக்கி -இது குன்று போல் -இது ஸ்திரம் அநந்தம்
அவை கல் போல் அல்பம் அஸ்திரம்)
(குணம் -பொதுவாகச் சொன்னாலே சீலம் -குணவான் பெருமாளுக்கும் பார்க்கிறோம்)
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி-
அஹங்காரத்தை ஜெயித்து
தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்
நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –
(அனைத்து திவ்ய ஆயுதங்களும் திரு வாழி ஆழ்வானது அம்சமே–சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே-)
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய
வீர சரிதத்தையே ஏத்தி
புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று
உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்
வந்தோம்
நீ கிருபை செய்து அருள வேணும் –
ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்
யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்
யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –
இரங்கு -என்று
கிருபையே சாதனம் என்கையாலே
வந்தோம் -என்று
ருசி காரித்தைச் சொல்லுகிறது –
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply