ஸ்ரீ திருப்பாவை -அங்கண் மா ஞாலத்து -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

சத்வ நிதானம் இருள் தரும் வென்னும் ஜன்மம் ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்–ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை-7

அதாவது
சத்வ இதரங்களான ரஜஸ் தமஸ்களுக்கு நிதானம்
இருள் தரும் மா ஞாலத்தில் இனி பிறவி நான் வேண்டேன் –வாட்டாற்றான் அடி வணங்கே-என்கிற
அஜ்ஞான அவஹமான சம்சாரத்தில் ஜன்மம் –
அவிவேக தின்முகம் -துக்க வர்ஷினி –சம்சாரம் –ஸ்ரீ ஆளவந்தார்

சத்வத்துக்கு நிதானம் –
ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சது விஞாயேஸ் ச வை மோஷார்த்த சிந்தக-மோக்ஷ தர்மம்-
என்கிற படியே ஜாயமான காலத்திலேயே –அவன் கண்களால் –கமலக்கண்ணன்–அமங்கலங்களாக விளிக்கும் -திருவாய்-1-9-9–என்கிற
நிரமலத்வகரமான பகவத் கடாஷம் என்கை-
இந்த ஸ்லோகத்தில் நான்கு படிகளும் உண்டே -கடாக்ஷம் தொடங்கி மோக்ஷ அர்த்த சிந்தக –
அங்கண் மா ஞாலம் பாசுரம் அர்த்தம் -த்யான ஸ்லோகம் இதுவே
பூதாத்தி ரகு நந்தன -பூதராக்கின நெடு நோக்கு -அசுத்தி போக்கினை கடாக்ஷங்கள்

ஜாயமான கடாக்ஷம் -கருவிலே திரு -உபாசகனும் தாமரைக் கண்ணையே உபாசித்து

(அஹல்யைக்கு சாப நிவர்தனம் திருப்  பாத தூளி -ருத்ரனுக்கு திரு மார்பு வியர்வை -சபரி ரிஷி பத்னிகளை  முதலானோரை பூதராக்கியது இவனது நெடு நோக்கு)

(விழியாவோ–வருத்தமோ கோபமோ பிரார்தனையோ அல்ல -ஆற்றாமையை வெளியிட்டவாறு
கதிர் மதியம் போல் திங்களும் ஆதித்யனும் இங்கு -)

அவதாரிகை –

கீழ் பாட்டில்
தங்கள் அபிமான ஸூன்யதையைச் சொல்லி
இப் பாட்டில் –
தங்கள் அனன்யார்ஹ சேஷத்வத்தைச் சொல்லுகிறார்கள்-

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-

(கீழ் வலி தொலைந்து –ஆற்றாது வந்து அடி பணிந்து -வலிமை தொலைந்தது நோக்கம்
அபிமானம் தொலைந்தால் மட்டும் பெருமான் இடம் பிடிமானம் வந்து விடாதே-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே வேண்டுவது
இங்கு நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்-அநந்யார்ஹராய் -பிரியாமல் இருப்பதில் நோக்கம்)

பதவுரை

அம் கண் மா ஞாலத்து அரசர்–அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து–(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே–உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல்–திரள் திரளாக இருப்பது போலே
வந்து–நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடை கொண்டு
தலைப் பெய்தோம்–கிட்டினோம்’-எங்கேயோ திரிந்து இருந்த நாங்களும் வந்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த–கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதி விகஸிதமான)
தாமரைப் பூ போலே–செந்தாமரைப் பூப் போன்ற
செம் கண்–சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது–கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல்–எங்கள் மேலே
விழியாவோ-விழிக்க மாட்டாவோ?
திங்களும்–சந்திரனும்
ஆதித்யனும்–ஸுர்யனும்
எழுந்தால் போல்–உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதிஏல்–எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம்–எங்கள் பக்கலிலுள்ள பாபம்
இழிந்து–கழிந்துவிடும்’
ஏல் ஓர் எம் பாவாய்

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்-
அழகியதான இடங்களை உடைய
மகா ப்ருதிவியை தன்னது என்று
அபிமானித்து இருக்கிற ராஜாக்கள்
அந்த அபிமானம் போய் –வந்து
உன் திருப் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் சங்கமாக இருப்பாரைப் போலே

(சங்கத் தமிழ் மாலை நிகமனத்தில் கூட்டமாக)

நாங்களும்
பக்ன அபிமாநிகளாய்க் கொண்டு
ஒருபடிப் பட வந்து கிட்டப் பெற்றோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ-
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்-
அறைவடத்தில் கிண்கிணி போலே
அர்த்த விகசிகதமான தாமரைப் புஷ்பம் போலே இருக்கிற-சிவந்த திருக் கண் மலர்களை பொறுக்கப் பொறுக்க
உன் கடாஷம் பெறாதே உறாவிக் கிடக்கிற நம் மேல் விழியாவோ –

அதாவது
1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிந் ஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வாந் வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன–அஷ்ட ஶ்லோகீ–ஸ்லோகம் -4-

தேஹ ஆஸக்த ஆத்ம புத்திஸ் பவதி யதி – தேஹத்திலே யூன்றின ஆத்ம புத்தியை யுடையவனாகில் [தேஹாத்ம ப்ரமமுடையவனாகில்],
த்ருதீயம் பதம் ஸாது வித்யாத் – ப்ரணவத்தில் மூன்றாவது பதமான மகாரத்தை நன்கு நோக்கக் கடவன்;
ஸ்வாதந்த்ர்ய அந்தஸ் ஸ்யாத் யதி – ஸ்வத்ந்த்ராத்ம ப்ரமமுடையவனாகில்,
ப்ரதமம் பதம் வித்யாத் – முதல் பதமான (லுப்த சதுர்த்தியோடு கூடின) அகாரத்தை நோக்கக் கடவன்;
இதர ஶேஷத்வதீஸ் சேத் – அந்ய சேஷத்வ ஜ்ஞானமுடையவனாகில்,
த்விதீயம் பதம் வித்யாத் – இரண்டவது பதமான உகாரத்தை நோக்கக் கடவன்;
ஆத்ம த்ராண உந்முகஸ் சேத் – ஸ்வ ரக்ஷணத்தில் ஊக்கமுடையவனாகில்,
நமஸ் இதி பதம் வித்யாத் – நமஸ் என்கிற நடுப் பதத்தை நோக்கக் கடவன்;
பாந்தவாபாஸ லோலஸ் – ஆபாஸ பந்துக்களிடத்தில் ஆஸக்தி யுடையவன்,
நாராயணாக்க்யம் சப்தம் வித்யாத் – நாராயண பதத்தை நோக்கக் கடவன்;
விஷய சபலதீஸ் சேத் – சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்,
சதுர்த்தீம் வித்யாத் – நாராயண பதத்தின் மேலுள்ள வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்.
(இப்படி யெல்லாம் நோக்க வேண்டிய அதிகாரி யாவனென்னில்)
ப்ரபந்நঃ – ப்ரபந்நாதிகாரி.

முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-
இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது
தேகாத்ம அபிமானனுக்கு-பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர ஸூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற
அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது
பரம பக்தியை உண்டாக்குகை-

(கீழ் 13 படிகளும் அவன் கடாக்ஷம் அடியாகவே பெறுகிறோம்)

அத்தால்

எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்
அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற
விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்-உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது அவன் கடாஷம்
ஸூக ரூபமாயும்
அஞ்ஞான நிவர்தகமாயும்
இருக்கையாலே –

(அடி பணிந்து அநந்யார்ஹரானவர்களுக்கு அவன் தானே அடியனாகி பரதந்த்ரனாகி செய்ய வேண்டியவை என்ன என்பானே
இது முதல் இவ்வாறு விழிக்க வேண்டும் -மேல் நடை அழகு காட்டி அருள வேண்டும் என்று பட்டியல் இடுவார்கள்)

(ப்ரமேய சேகரம்–பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —)

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading