Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ தசாவதார பரமான அருளிச் செயல்கள்/ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

March 27, 2024
ஸ்ரீ தசாவதார பதிகங்கள்
பெரிய திருமொழி -8-8-/9-1/11-4/
————–
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  -பெரியாழ்வார்-1–5-10-
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3- 3-7 –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-
———–
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-
——-
அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –திருச்சந்த விருத்தம் -35-
——————-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—2-7-10-
கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்* 
அண்டமும் சுடரும் அல்லா*  ஆற்றலும் ஆய எந்தை* 
ஒண் திறல் தென்னன் ஓட*  வட அரசு ஓட்டம் கண்ட* 
திண் திறலாளர் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  –4-5-6-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10-

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலமான பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான ஐஸ்வர்யம் பெறப் பெறுவார்கள்
ஒன்றினோடு -வ்யூஹ மூர்த்தி
நான்கும் -2-4-5-10- விலங்கான ரூபமாகிய விபவ மூர்த்திகள் பாசுரங்கள்
ஓர் ஐந்தும் -கஜேந்திர ரக்ஷண /வாமன /ராம /கிருஷ்ண திரு வவதாரங்கள் பாசுரங்கள்-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–8-6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே  –9-2-10-
குப்ஜா குள்ள மா மரமாகவும்
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-நம்மாழ்வார்
எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——மூன்றாம் திருவந்தாதி -52-
மீனாமை கோலநெடு நரசிங்கமாகி நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு நாராயணாய நமவே (மகாபாரதம், சல்லிய பருவம். 1)
என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.
———-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம

——————————————————————————-

மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில் துன்னிய பரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும் மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர் வானாரின்ப மிங்குற வருதி.” (மும்மணிக்கோவை. 4)

[கேழல் – வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி – பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)
மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்க வுற்றனை.– (நவமணிமாலை. 2)

(மகரம் – மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் – இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் – இரணியகசிபு, மதலை – பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் – அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் – இராவணன் ; வரை – கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)
——————

ஸ்ரீ ரெங்கம் தசாவதார சந்நிதி —
திருமங்கை -பாடியவாளன் படித்துறை -வாள் வீசும் பரகாலன் அன்றோ –
28 ஸ்தோத்ர நூல்களில் தசாவதார ஸ்தோத்ரம் ஓன்று
வர்ஷா பிந்து சத்தை பெற பெய்து கடலில் சேருவது போலே அன்றோ ஸ்தோத்ரங்களுக்கு பெருமை –
கொடி சுற்றி மரத்துக்கு சத்தை இல்லை -வாக்கு சுத்திக்கும் நம் சத்தையும் தானே ஸ்துதி
ஸ்ரீ ரெங்கநாதன் தானே இந்த தசாவதாரம் செய்து அருளினான் முதல் ஸ்லோகம்
10 ஸ்லோகம் 10 அவதாரங்களும்
ஒரே ஸ்லோகம் பத்துக்கும் சேர்த்து 12 வது ஸ்லோகம்
13 -பல சுருதி சொல்லி தலைக் கட்டுகிறார்

——————————————————————————————————-

தேவோ ந ஸூபமாத நோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ் வநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-

யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –

தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தசதா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்

சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –

ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –

———————————————————————————–

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-

கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –

சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பதி உமா பதி இந்திரா பதி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்

———————————————————————————————–

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம நிப்ருதம் கண்டூயா நைரத்ரிணா
நித்ரா ணஸ்யா பரஸ்ய கூர்ம வபுஷோ நிஸ் வாஸ வாதோர் மய
யத் விஷே பண சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள பர்யங்கிகா
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே தேவ சஹவை ஸ்ரியா -3-

மலையோடு அழுந்த சொரிந்து கொண்டதால் உறங்குகின்ற ஆமை வடிவமான பரம புருஷனுடைய
எந்த மூச்சுக் காற்றின் அவைகளின் எழுச்சியால் அசைக்கப் பெற்ற கடல் நீர் ஆகிய அசையும் கட்டிலில்
எப்பொழுதும் ஏறி இருப்பதால் இன்பம் உற்று பிராட்டியுடனேயே விளையாடுகிறானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம-மூன்று உலகத்தையும் ரக்ஷிக்கட்டும் -வேதமே மூச்சு காற்று –
பிராண வாயுவாக பெருமாள் ரக்ஷிக்கட்டும்
நிப்ருதம் -எப்போதும் மலையாலே
கண்டூயா நைரத்ரிணா -சொரிதல் –
நித்ரா ணஸ்யா -நன்கு தூங்க
பரஸ்ய கூர்ம வபுஷோ -பெரிய பெருமாள் -ஆமையான கேசனே -லக்ஷம் யோஜனை
நிஸ் வாஸ வாதோர் மய-நிஸ் வாசம் உஸ் வாசம் –
யத் விஷே பண-காற்று வெளி வர -அலைகள் கிளம்பி
சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள-அசைகின்ற
பர்யங்கிகா -படுக்கையில் -கடல் அரசன் கைங்கர்யம் -வேதப்படுக்கை என்றுமாம்
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே -ஸ்திரமான
ஆரோஹண –அங்கு உஊஞ்சல் -நித்யம் சொல்ல வில்லை -இங்கு ஆமை என்பதால் -நித்யம் –
ஸூ கப்பட்டு -பிராட்டி ஈன்று எடுத்த தாயார் தானே திருப் பாற் கடல்
தேவ சஹவை ஸ்ரியா-நித்ய கச்சபை – ஆமையான ஸ்ரீ யபதி –
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக்க அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து திரிந்த வித்தகன் கலங்கல் முந்நீர் கண்ணபுரம் -ஆமையாய் –முந்நீர் –
வேதம் ரக்ஷிக்க மத்ஸ்யம்
அதுவே தனமாக கொண்ட தேவர்களுக்கு ஆமை
பர்வதம் பாக்யம் பெற்றதே ஸ்பர்சத்தாலே –
நன்கு தூங்கி மூச்சு விட –

மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே எங்கு தொட்டாலும் மஹா லஷ்மி –
உத்ஸாஹமாக விளையாடி -இதுவே வாழ்க்கை கை கொள்ள வேண்டும் –
ஸ்ரீ கூர்மம் -கை கால் மறைத்து -இந்திரியங்கள் பாடு போக்க -விஷய ஸூ கம் தேடித் போகாமல் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –
ஊஞ்சல் உத்சவம் -பர்யன்காசனம் அடுத்து -புறம் சூழ்ந்து காப்ப-ஆதி சேஷன் மட்டுமா கைங்கர்யம் செய்ய வேண்டுமோ –
திருப் பாற் கடல் -காட்டில் -அம்ருத மதனம் காலம் -இதிலும் வாசுகி கைங்கர்யம் உண்டே -கயிறாக –
பல தலை பாம்புகளில் ஆதி சேஷன் சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கிறேன் என்பான் கீதையில் –
மந்தர பர்வம் -தங்கி கொள்ள -ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி–அப்பன் சாறு கொண்ட நான்றே
தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தோள்கள் ஆயிரத்தாய் —
கொசித் –நிறைய நடக்க -வைகுண்ட கபடம் குதிரை யானை அமிருதம் சந்திரன் -கவலை படாமல் தூங்க
-பிராட்டி வந்ததும் முழித்து அமுதினில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் -சங்கல்ப சூரியோதயம்
பச்யதாம்-பெண்களுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கம் இல்லையே -பட்டர் புருஷோத்தமன் அவன் மட்டும் தானே
கட்டில்-இருந்தால் மிதுனமாக இருக்க வேண்டுமே –

————————————————————————————————————

கோபா யேதநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட பிரளய யோர்மி கோஷ குருபீர் கோணா ரவைர்க்குர்குரை
யுத்தம் ஷ் ட் ராங்குர கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ் திதி
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -4-

யாருடைய கோரைப்பல் ஆகிய முளையின் நுனிப்பகுதியை இறுகப் பற்றியதால் எப்பொழுதும் அசையாது
நிலையாய் நிற்கும் பெருமை உள்ள இந்த பூமி தேவி கோரைக் கிழங்கு போல் நின்று
பிரமன் முதல் பீபிலி வரை எல்லாவற்றையும் படைத்தாளோ
யார் பிரளய காலத்தில் கடல் அலைகளின் ஒலியைப் போலே பெரிய குர் குர் என்ற மூக்கின் ஒலியால்
ப்ரஹ்மாண்டங்களைப் பரிசுத்தம் ஆக்கினானோ போலியான மஹா வராஹ வடிவம் கொண்டவனுமான
அந்த எம்பெருமான் உலகங்களை எப்போதும் ரக்ஷித்து அருள வேணும் –

கோபா யேதநிசம் ஜகந்தி-அனைத்து உலகத்தையும் ரக்ஷிக்க வேண்டும்
குஹநா போத்ரீ -வேஷம்
பவித்ரீ க்ருத -ப்ரஹ்மாண்ட- பவித்ரம் அடைந்தது
பிரளய யோர்மி கோஷ குருபீர்-பிரளய கடல் அலையில் பேர் இரைச்சலை ஒன்றும் இல்லாத படி
கோணா ரவைர்க்குர்குரை-குரு குரு சப்தம் -மூச்சு காற்று -இதுவே நம்மை ரக்ஷிக்கட்டும் –
யுத்தம் ஷ்ட்ராங்குர -கோரை பல்லின்
கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ்திதி -நுனியில் -நன்கு சேர்ந்து -ஸ்திரமாக -அசையாமல் -நடுக்கம் இல்லாமல்
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு -கோரிக் கிழங்கு இன்றும் ஸ்ரீ முஷ்ணம் -முஸ்தா-முளை தான் ப்ரஹ்மா –
ஜகத் காரணம் ஸ்ரீ வராஹம் என்றவாறு
பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -கல்யாண குணங்கள் படைத்தவள் -பூமி பிராட்டி

ஸ்ரீ வராஹ அவதார அனுபவம் -சனகன் சனத்குமாரர் நால்வரும் -ஜய விஜயர்கள் -சாபம் –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் -சேர்த்தி அனுபவம் –
கோலா வராகம் -ஏனமாய்-க்ரோட – வராஹ –
கேழலாய் உலகம் கீண்ட பூ கெழு வண்ணனாரை -போதரக் கனவில் கண்டு —
வாக்கினால் மனத்தினால் கருமம் தன்னாலே
வேட்க்கை மீதூர வாங்கி-ஆண்டாள் போலே கலியன் திருக் குறும் தாண்டகம் –
ரகஸ்ய சிகாமணி -ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் விளக்க தேசிகன் அருளிச் செய்து –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
-வானத்தவர்க்கும் -எல்லா எவர்க்கும் ஞானப் பிரான் அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே
பட்டர் -தசாவதாரம் பற்றி அருளிச் செய்த வார்த்தை -ஸ்மரிப்பது
ஸ்ரீ கூர்மம் -ஸ்ரீ தேவி அடைய -ஸ்ரீ வராஹம் -ஸ்ரீ பூமி பிராட்டியை பெற -எங்கும் தம் கார்யம் –
பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் ஒருங்கே -சிலம்பினை சிறு பரல் போலே -மேரு கண கணப்ப —
கோமான் -மஹா வராஹ ஸ்புட பத்ம லோசனன்
யஜ்ஜை வராகன் -ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் -இடந்தமை குலுங்கவோ -குடந்தையுள்-கிடந்தவாறு –
ஆயாசம் தீர -பேசு வாழி கேசனே
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே –
பாசி தூர்த்து கிடந்த -மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் -பேசி இருப்பதுவும்
ரஷ்யத்தில் உள்ள பாரிப்பு -அடியார்க்கு என் செய்வான் என்று இருத்தி
கோலா வராகம் ஒன்றாய் -திருவாய் மொழி இறுதியிலும் ஆழ்வார் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
பொழில் எழும் ஏனம் ஒன்றாய் கோட்டின் நுனியில் வைத்தாய் –நுன பாதம் சேர்ந்தேன் –
ஏரார் உருவில் எடுத்த ஆற்றல் அம்மானே –ஸ்வேத வராஹம் கல்பம் -திரு வெள்ளறை ஸ்வேத கிரி சிபி சக்கரவர்த்தி
ஆதி முன் ஏனமாகி –நம்மை ஆளும் அரசே
ஜகத் சர்வம் சரீரம் -பூமி கோரைப் பல்லின் நுனியில் ஒட்டிக் கொண்டு -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
உச்சாரணம் -குரு குரு சப்தம் ஆச்சார்ய க்ருத்யம் -சப்தம் மூ உலகும் வியாபித்து -நித்ய ஸூ ரிகள்-வந்து சேவிக்கும் படி
ப்ரஹ்மாண்டம் பவித்ரம் ஆக்கியது நிர் ஹே துகமாக தம்முடைய பேறாக -நிர் வியாஜ கிருபை
தாய் -குழந்தை -எவ்வுயிர்க்கும் தாய் அன்றோ –
விஸ்வம் பரா -ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் -விஸ்வம் பரா பரா -அவன் -ஆழ்வார் விஸ்வம் பரா பரா பரஸ்ய —

—————————————————————————————————————–

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம க்ஷணம் பாணி ஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவா
யத் ப்ராதுர் பவநாத வந்த்ய ஜடரா யாதிருச்சிகாத் வேத சாம்
யா காசித் ஸஹஸா மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத் –5-

எதிர்பாராது உண்டான எவனுடைய அவதாரத்தால் ஏதோ ஒரு பெரிய அசுரனுடைய வீட்டின் தூண்
மலட்டுத் தன்மை நீங்கி உடனே பிரமனைப் பெற்ற பாட்டியாக ஆயிற்றோ
க்ஷண நேரத்தில் -யார் தனது திருக் கை திரு நகங்களால் மறுக்கப் பட்ட பழைமையான திவ்ய ஆயுதத்தின்
கூட்டத்தை உடையவனாயும் வீணாகாதே சக்தி உடையவனாகவும் ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய வடிவு கொண்டவனாயும் உள்ளானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம-தள்ளப் பட்ட பழம் காலத்து திவ்ய ஆயுதங்கள் ஒதுங்கப் பட்டன –
க்ஷணம் பாணி ஜை-கையில் இருந்து பிறந்த நகங்கள் இருப்பதால் மற்ற திவ்ய ஆயுதங்களை
ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்க சொன்னானாம் –
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய -மூ வகை லோகங்களையும் க்ருத அக்ருத க்ருதாக்ருத -ரக்ஷிக்கட்டும்
அகுண்ட மஹிமா -தடை யற்ற மஹிமை
வைகுண்ட கண்டீரவா -ஸ்ரீ வைகுண்ட ஸிம்ஹன்-பாலும் சக்கரையும் கலந்தால் போலே –
யத் ப்ராதுர் பவநாத-வெளித்தோற்றம்
அவந்த்ய ஜடரா-மலடி இல்லாத வயிறு
யாதிருச்சிகாத் வேத சாம் -யதேச்சை பெருமாள் -ப்ரஹ்மாக்களுக்கு பாட்டியாக -இச்சை -அதிதி திதி பார்க்காமல் வருவார்
யா காசித் ஸஹஸா -த்வரையால்-அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான்
மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத்-தூண் பாட்டி ஆனதே உலகத் -தாத்தாவுக்கு பாட்டி இது தானே -அபூத்-ஆனதே
பிதாமகன் ப்ரஹ்மா -பெற்றவர் நாராயணன் -அவனை பெற்றதால் –
பேரன் பிறந்த பின்பு பாட்டி பிறக்கும் அக்கடிதகடனா சாமர்த்தியம் -ஸ்தம்பம் சொல்லாமல் –ஸ்தூணா ஸ்த்ரீ லிங்க சப்தம்

நார சிம்ஹ வபு ஸ்ரீ மான் -ஸ்ரீ லஷ்மி நரசிம்மன் -அழகியான தானே அரி உருவம் தானே –
வரத்தினில் சிரத்தை வைத்து —
கயாது-கர்ப்பத்தில் பிரகலாதன் -நாரதர் மூலம் -கர்ப்ப ஸ்ரீ மான் ஆனான் -கருவிலே திருவிலாதீர் காலத்தை கழிக்கின்றீரே-
கருவரங்கத்தில் இருந்து கை தொழுதேன் -சரவணம் கீர்த்தனம் –நவ வித பக்தன் –
நானும் சொன்னேன் நமரும் சொல்மீன் -நாராயணா என்னும் நாமம் –
எங்கும் உளன் கண்ணன் –அளந்திட்ட தூணை அவன் தட்ட -அங்கே வாள் உகிர் சிம்ஹ உருவாய் உளம் தொட்டு –
ஹிரண்ய வைத்த -புறப்பட்டது செங்கண் சீயம் -அங்கோள் ஆளரியாய் –சிங்க வேழ் குன்றமே –
ஆழ் துயர் செய்து -பிளந்து வளைந்த உகிர் -பரியனாகி -பள்ளியில் ஓதி –தெள்ளிய சிங்கம் -உளம் தொட்டு
தீய புஞ்சிக் கஞ்சன் -நினைத்த கருத்தை பிழைப்பித்த -சிந்தையினால் இகழ்ந்த இரணியன் -வரம் கெடுக்காத வரம் கேட்டான்
குலத்து உதித்தோரை கொல்லேன் -விரோசனன் பிள்ளை மஹா பாலி பிரகலாதன் பேரின்
நாதனை நரசிங்கனை –ஏத்தும் பாத தூளி படுத்தலால் பாக்கியம் செய்தது –

—————————————————————————————————————

வ்ரீடா வித்த வதான்ய தாநவ யசோ நா சீர தாடீ பட
த்ரை யக்ஷம் மகுடம் புநன் நவது நஸ் த்ரை விக்ரமோ விக்ரம
யத் பிரஸ்தாவ சமுச்சரித த்வஜ படீ வ்ருத்தாந்த சித்தாந்திபி
ஸ்ரோதோபி ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே –6-

எதன் ஆரம்பத்திலேயே உயர ஏற்றப்பட்ட கொடி வஸ்த்ரத்தின் செய்தி பரப்பும் செயலை வெள்ளங்களாலே தேவ கங்கை
(திருவடி உயர ஏற்றிய கொடி ஸ்தானம் -தேவ வெண் கங்கை வஸ்திரம் ஸ்தானம் -)
ஆறு எட்டு திசைகள் ஆகிய மேல் மாடங்களிலே விரைவாக ஆடுகிறதோ
வெட்கத்தால் மனம் வருந்திய பெரிய கொடையாளியான மஹா பலி என்னும் அசுரனுடைய புகழ் ஆகிய சேனையின்
முன் செல்லும் சேவகன் போலே மூன்று கண்களுடைய சிவனின் முடியைத் தூய்மை ஆக்கிய
த்ரிவிக்ரமனுடைய திருவடிகள் நம்மை ரக்ஷித்து அளிக்கட்டும்

வ்ரீடா வித்த வதான்ய தாநவ-மஹா பலி புகழை பரப்ப
லஜ்ஜை வேட்க்கை -யால் பீடிக்கப் பட்ட பெரும் கொடை வள்ளல் -மஹா பலி -கொஞ்சமாக கொடுத்தோம் என்று
அன்றோ வெட்க்கினான் -இத்தாலேயே மூவடி கேட்ப்பாய் என்று நினைத்தான் -காமரு சீர் அவுணன்
யசோ நா சீர தாடீ பட -ஓடுகிற வேகம் -கட்டியம் சொல்லி பின்னே வரும் புகழை சொல்லிக் கொண்டே போனதே திருவடி –
அக்ர பாகம் -நுனிக்கு முன்னே போகும் -எச்சரிக்கை சொல்லிக் கொண்டே -புகழை சொல்லவே திருவவதாரம்
-அளக்கவே தானே புகழ் பரவிற்று -பறை சாற்றி போனதே
வதா அந்நிய வேறு கேளு என்றுமாம் –
தீர்த்தங்கள் இரண்டுக்கும் போட்டி என்றுமாம்-
த்ரை யக்ஷம் -முக்கணான்
மகுடம் புநன் நவது நஸ் -முடியை புனிதம் ஆகிற்றோ -ச சிவ சிவ பூத் -ஆளவந்தார்
த்ரை விக்ரமோ விக்ரம -மூன்று அடிகள் -ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியம் -அப்பன் –உலகம் கொண்ட வாறே –
ஆழி எழ –ஸ்வஸ்தி -வாழி சொல்ல
முன்பு சொன்னவை மூன்று அடிக்கு விசேஷணங்கள்-
விக்ரம-வைத்த அடி -திருவடி பதித்த
யத் பிரஸ்தாவ சமுச்சரித -பிரஸ்தாவம் தொடங்கி-உயர்ந்து எடுத்துக் கட்டப்படட
த்வஜ படீ-கொடிகள் எட்டு திக்குகளிலும் கங்கை நீர் இந்த புகழுக்கு -ஆகாசத்தில் ஓடும் கங்கை நீரை கொடி போலே
ஒல்லை வா என்று கூப்பிடுவது போலே மிதிலை கொடிகள் இருந்தனவே –
கோவலன் -இங்கே வராதே என்று சிலப்பதிகாரம் -தார் குறிப்பு ஏற்று அணி -அலங்கார சாஸ்திரம் –
வ்ருத்தாந்த சித்தாந்திபி -சரித்திரம் -போன்ற -உயர்ந்த கோடி போன்ற ஒப்பானவை –
ஸ்ரோதோபி-ப்ரவாஹங்களினால்
ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே
தேவ கங்கை -அஷ்ட ஸூ எட்டு திசைகள் அசையும் -திஸா ஸுதேஷூ மொட்டை மாடிகள்
அவது- இப்படி பண்ணிய திருவடிகள் எங்களை ரக்ஷிக்கட்டும் –
மூன்று லோகம் காக்க நரசிம்மர் இடம் அபேக்ஷித்தத்தை திரிவிக்ரமன் நிறைவேற்றினான் -என்றுமாம்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் அபேக்ஷிதத்தை திருப் பாண் ஆழ்வார் இடம் கொடுத்தால் போலே –

கவி தார்க்கிக ஸிம்ஹம் அன்றோ -மஹா பலி உதார குணம் புகழ் பரவ -திருவடி தாவி விரைந்து அளக்க –
உபேந்த்ரன் — வாமனன் — அதீந்த்ரன் -தேவ யோனி எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –
சுருக்குவார் இன்றியே சுருங்கி -பெருக்குவாறும் இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய் – ஓங்கிஉலகு அளந்த உத்தமன்
நித்ய ஸ்ரீ இருக்கவே ப்ரஹ்மச்சாரியாய் போவதே
அலம் புரிந்த நெடும் கை கொண்டு இரப்பதே-வாங்கிப் போவார்களா உதாரர் என்றவன் தானே இரப்பதே –
புலன்களை வாமனன் போலே சுருக்கினால் பக்தி ஞானம் ஓங்கி வளரும் –
வாமானி சுகானி நியதி -ஸூ கங்களை கொடுப்பவன் தன் திருவடிகளை சேவிப்பார்களை
கோட்டங்கை வாமனன் செய்த கூத்துக்கள் -கை நீட்டி பழகி கொண்டே போனானாம் –திரட்டுப்பால் -போலே அன்றி –
சுக்ல பக்ஷ த்வதசி விஜயா முகூர்த்தம் -காயத்ரி மந்த்ரம் சூரியன் உபதேசிக்க -பிரஜாபதி -தானே வந்து பிரஹஸ்பதி பூணல் கொடுக்க
-பூமி மான் தோல் கொடுக்க -தண்டம் சந்திரன் -அதிதி குடை -கமண்டலம் ப்ரஹ்ம -தர்ப்பங்கள் சப்த ரிஷிகள் குபேரன் பிக்ஷை பாத்திரம்
உமா பிக்ஷை ஐடா -பிறந்தார் அன்றே உபநயனம் -அன்றே 7 வயசு -ஆல மரத்தின் விதை–
அரும் குறள் ஆனான் -நீல நிறத்து நெடும் தொகை அன்றோ –
நர்மதா நதிக் கரையில் யஜ்ஜை வாடம்-இருந்ததாம்
கொள்வன் நான் –மாவலி -மூவடி –
சுக்கிரன் அன்னை துரும்பால் கிளறின சக்கரக் கையன் -ஒண் மிதியில் –அப்பால் மிக்கு -தாவி -உலகம் -கொண்டான்
-சலம் பொதி உடம்பு சந்திரன் வெங்கதிர் அஞ்ச –மால் புருடோத்தமன் வாழ்வு –
நாரணம் பாத துழாய் கொன்றை மலர் கலந்து இழி புனல்
சது முகன் கையில் –சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில் தங்கி ஜடா தரன் கங்கா தரன்
அந்தரம் –பாதம் நம்மை ஆளும் அரசே -மதியினால் குறள் மாணாய-நிமிர்ந்த நீல் முடியின்
ஓ மண் அளந்த தாளாளா-நின் முகம் கண் உளவாகில் நீ இங்கே நோக்கிப் போ
சிறுவன் வார்த்தையை தன்னை மாவலி இடம் சென்று கேள் –
திருவோணத்தான் உலகு ஆளும் -வருக நம்பி வாமன நம்பி -வாமணாஸ்ரமம் -பக்ஸர் சித்தாஸ்ரமம் –
ஆகாச கங்கை நாலாக பிரிந்து ஓன்று துருவன் மேலே தங்க
மூன்று ஆகாசம் பூமி அந்தரிக்ஷம்
ஆகாச கங்கை சிவன் பெற்று சிவன் ஆக –
பின்பு ஏழாக பிரிந்து -இவ்வளவுக்கும் பேர் உண்டே
ஒன்றை பகீதரன் பிரார்த்தித்து -சாப விமோசனம் பெற பாகீரதி அலக்நந்தா ஜங்கவி
கங்கை -வாசகத்தால் கடுவினை கடுவிக்கும்

————————————————————————————————————–

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத்
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் த்ரி சப்த க்ருதவ ஷிதிம்
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் ஆஸ்கந்தய சிந்தும் வசந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி –7-

எந்த முனிவர் தனது தந்தையான ஜமதக்னி முனிவரைக் கொன்றதால் உண்டான கோபக்கனலை திருப்தி செய்வதற்காக
இந்த பூமியை இவ்வுலகில் மன்னர் குலமே இல்லாதபடி 21-தலை முறைகள் வரிசையாக வெட்டி எறிந்தாரோ
ஒரு வேள்வியில் அந்த பூமியை கஸ்யப முனிவருக்கு தக்ஷிணையாகக் கொடுத்து
-தஷிணை கொடுத்த இடத்தில் வாசம் பண்ணைக் கூடாது என்று மேற்கு திக்கில் கடலில் கோடரியால் வீசி எறிந்து-
அந்த அளவு கடல் இவருக்கு இடம் அளிக்க – அவ்விடத்தை தன் வசமாகக் கொண்டு வசித்தாரோ-இதுவே கேரளா இப்பொழுது –
பெருமை உள்ள அந்த பரசுராம முனிவர் பிரமன் முதல் புழு வரையில் எல்லாருடைய தீங்கையும் ஒழித்து அருள வேண்டும் –

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் -ஜாமதக்னீ -பரசு ராமன் -ஜமதக்கினி குமாரர் -க்ரோதம் அக்னியால் -பீடிக்கப் பட்டு –
சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத் -அக்னியை -திருப்தி செய்யப் பெற்று -அலம் புத்தி இல்லாத அக்னி கோபம் –
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் -ஷத்ரியர்கள் இல்லாத படி
த்ரி சப்த க்ருதவ ஷிதிம்-21 தலை முறை இல்லாமல் பண்ணி
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் -கஸ்யபர் இடம் தக்ஷிணையாக கொடுத்து ஏதோ ஒரு யாகத்தில்
ஆஸ்கந்தய சிந்தும் வசந்-சமுத்திரம் வசமாக கொண்டு இருந்து
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி -மங்களம் போக்க வேண்டும் –
முனிவரான பரசுராமன் ப்ரஹ்மா தொடங்கி புல் வரை

அப்ரதான அவதாரங்கள் -பரசு ராம-பல ரா அவதாரங்கள் -ஸ்வரூப ஆவேச அவதாரங்கள் –
உபாசனம் அர்ஹம்
முழு சக்தி -ஸ்வரூப ஆவேசம் -சொல்ப -சக்தி ஆவேசம் ஒரு காரியத்துக்காக மட்டும் –
கார்த்த வீர்யார்ஜுனன் -பரசுராமன் -ராமர் -முக்கிய அவதாரம்
கண்ணன் பலராமன் -சந்திக்கலாம் -முக்கிய அவதாரங்கள் சந்தித்து கொள்ளாதே
-ரிசிகர் பாயாசம் -மாற்றி கொண்டு -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் தேஜஸ் –
சத்யவதி க்கு அதீத கோபம் கொண்ட பிள்ளை சாபம் -இந்த பிள்ளை சாந்தம் அவன் பிள்ளை கோபிஷ்டர் –
ரேணுகா தேவி ஜமதக்கினி –தாய் தந்தை பரசுராமனுக்கு பிறப்பால் ப்ராஹ்மணர் வளர்ந்தது
விசுவாமித்திரர் –பிறப்பால் க்ஷத்ரியர் -ப்ரஹ்ம ரிஷி ஆனார்
இரு நில மன்னர் இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் -உடனே –
கோகுல மன்னரை மூ ஏழு கால் -மழு ஏந்தி –
விசித்ரன் கந்தர்வன் -ரேணுகா தேவி -தலை வெட்டி –
கர்வ பங்கம் ராமர் சந்தித்ததால் -தவத்தின் வலிமையில் பானம் விட்டு -கேரளா பரசுராம ஷேத்ரங்கள் –
கங்கை தீர்த்தமாடி 21 தலை முறை புண்ணியம் ஆகுமே –

—————————————————————————————————————-

பராவாரா பயோ விசோஷண கலா பாரீண காலா நல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வியாபார கோர க்ரம
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
தர்மோ விக்ரஹ வான தர்ம விரதிம் தன்வீ ச தன்வீ த ந–8-

கடலின் நீரை வற்றைச் செய்யும் கலையில் வல்லமை யுடையவனும்
பிரளய காலத்தின் அக்னியின் ஜ்வாலைக் கூட்டத்தின் விளையாட்டை வெல்பவனும்
அம்புகள் செயல்களின் கொடிய முறைகளை உடையவனும்
எல்லா நிலையிலும் உள்ள ஒரு முறை சரணம் அடைந்த மக்களை ரஷிப்பதையே முக்கிய வ்ரதமாகக் கொண்டவனும்
தர்மமே உரு எடுத் து வந்தது போலே -தர்ம ஸ்வரூபமாய் -உள்ளவனும் ஒப்பற்ற வில்லாள ரான அந்த
ஸ்ரீ ராம பிரான் நமக்கு அதர்மங்களை ஒழித்தலைச் செய்து அருள வேணும் –

பராவாரா-சமுத்திரம்
பயோ விசோஷண -தண்ணீரை வற்ற அடிக்க
கலா பாரீண-வித்யையில் கை தேர்ந்த
காலா நல-நெருப்பு -ஜாடராகினி வயிற்றில் போலே இது ஊழி தீ
ஜ்வாலா ஜால -தீ பிழம்பு கூட்டம் -சுடர்கள் ஸமூஹம்
விஹார ஹாரி-பெரும் விளையாட்டையும் அபஹரிக்கும்
விசிக வியாபார-பாணங்கள் உடைய செயல்கள்
கோர க்ரம-உக்ரமான விளையாட்டுகள் –
ஸ்ரீ ராம பணம் இப்படி சொல்லி -சாந்த ஸ்வரூபன் அன்றோ
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
எந்த திசையிலும் -ஒரு தடவை சரணம் புகும் ஜானகி கூட்டங்கள் -ரக்ஷணத்தில் ஒரே விரதம் கொண்டவன்
தர்மோ விக்ரஹ வான-தர்மம் உரு எடுத்த பிரசித்தர்
அதர்ம விரதிம்-அதர்ம விரதி-வெறுப்பு கொள்பவராக ஆக்கட்டும் -தீய செயல்களில் இருந்து ஒய்வு ஏற்படுத்தட்டும் –
தன்வீ ச தன்வீ த ந–சாரங்க பாணி -கோதண்ட பாணி –

வில்லாண்டான் தன்னை -நாண் தழும்பு -சீதா பிராட்டி விரும்பும் -வீர பத்னி -அடியார்களை ரசிப்பவன் –
ஆலிங்கனம் செய்து -ரிஷிகளை ரஷித்ததும் –
நெருப்பில் இருந்து தானே தண்ணீர் -ஸ்ருஷ்டியில் —
பாடபாகனி குதிரை வடிவத்தில் கடலுக்கு உள்ளே -ஏரி மலை -போன்றவை நேருமே
தண்ணீர் நெருப்பில் சேரும் லயத்தின் பொழுது -இது ஊழி தீ
அனல -அலம் புத்தி இல்லாத நெருப்பு
சமுத்திர ராஜன் -விருத்தாந்தம் ராம பானம் மஹிமை அறிவோம் -குணக்கடல் ஜலக் கடலில் கிடந்ததே மூன்று நாள்கள்
ஜிதக்ரோதன் கோபம் வச்யமானானே -ஜாபா மானய –சாகரம் சோக்ஷயிஷ்யாமி -சாராம்ச -ஆசீர் விஷம் –
ஒரு வில்லால் -ஓங்கு முந்நீர் அடைத்து –
ரகாரம் கேட்டே பயந்து மாரீசன் பேசினான் –
அக்னியை வெல்லும் பானம் -விபீஷணன் ராவணன் இடம் -வாயு தாண்டி போகும் -அக்னியை பெற்ற வாயுவையும் வெல்லும் என்றானே
ராமோ விராம -ஒய்வு -அம்பும் கையுமாக வந்தால் வரமும் வரம் கொடுத்தவர் வரம் வாங்கினவர் மூவரும் -ஒய்வு கொள்ளும் படியாகும்
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி -அவன் தவத்தை முற்றும் செற்றாய் –
வடிவாய் மழு ஏந்தி உலகம் ஆண்டு -திருக் கோவலூர் ஆயன் –
சார்ங்கம் உதைத்த சர மழை-சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்றானே –
பொன்னார் சார்ங்கம்கி உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
கிள்ளிக் களைந்தான் –
கல்விச்சிலையால் -தாடகை -அழித்து–ராமன் சஸ்திர வ்ருத்தர் கண்ணன் கீதையில்
சாரங்க பாணி தளர் நடை நடவாய் -அலங்காரம் -ஆபரணம் ஆயுதம் -சவுரி ராஜர் -உத்சவர் நெற்றியில் வடு –
அரையர் தாளம் எறிந்த வ்ருத்தாந்தம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றும் யாரும் இல்லை –
ஏழு வேலையும் -உலகங்கள் எழும் ஏழு குன்றமும் புரவியும் சப்த கன்னிகைகள் ரிஷிகள் நடுங்க
ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கு -வில் கை வீரன் பெருமாள் -நாம்
வெறும் கை வீரன் -கோயம் குண -இன்று போய் நாளை வா –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் —தர்மஞ்ஞன் -தர்மம் அறியா குறும்பன் -அவன்
மனத்துக்கு இனியான் பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் -கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
சத்ருக்களும் கொண்டாடும் மஹிமை -ராமோ விக்ரகவான் தர்மம் -சர்வ பூத தயை -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –

—————————————————————————————————————-

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய ப்ராஸ்த ப்ரலம்பாதய
தாலங்கஸ்ய தாதாவிதா விஹ்ருதயஸ் தன்வந்து பத்ராணி ந
ஷீரம் சர்க்கர ஏவ யாபிர ப்ருதக் பூதா ப்ரபூதைர்க் குணை
ஆ கௌமார கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய–9-

எந்த பலராமனுடைய லீலைகளால் சர்க்கரை கலந்த பால் போலே இளம் பருவம் முதல் பிரியாமல் கலந்த
கண்ணனுடைய அந்த லீலைகள் மிக அதிகமான குணங்களால் உலகுக்கு சுவையாக இருந்ததோ
அந்த கௌரவர்களின் நகரம் முதலியவற்றை கவிழ்தல்-ப்ரலம்பன் முதலியவர்களை ஒழித்தல் –
இன்னும் இது போன்ற பல ராமனுடைய லீலைகள் நமக்கு நன்மைகளை செய்ய வேண்டும் –
கலப்பை ஆயுதம் -பனை மரம் கொடி

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய -இந்திர பிரஸ்தம் தொடக்கமான பட்டணங்கள் -ஆச்சார்யம் படும் படி -பக்கத்
யமுனை ஆற்றை இழுத்து போக்கை மாற்றி -கலப்பையால் பட்டணம் யமுனையில் தள்ளி
ப்ராஸ்த ப்ரலம்பாதய-ப்ரலம்பன் போன்ற அசுரர்கள் கொல்லப் பட்டவர் –
தாலங்கஸ்ய -பனை மரம் தேர் கொடி
தாதாவிதா விஹ்ருதயஸ் -விளையாட்டுகள்
தன்வந்து பத்ராணி ந -மங்களங்கள் செய்யட்டும்
ஷீரம் சர்க்கர ஏவ -பாலும் சக்கரையும் போலே சேஷ்டிதங்கள் கொண்டவர்கள் அன்றோ
யாபிர ப்ருதக் பூதா-விட்டுப் பிரியாமல் -ஒன்றாகவே செய்யப் பட்டவை
ப்ரபூதைர்க் குணை-கல்யாண குணங்கள்
ஆ கௌமார -சைஸவம் பால்யம் -6 வயசில் வரை 9 வயசு வரை கௌமாரம் –
ஆ தொடக்கமான -ஆ பாத சூடம் போலே ஆ மௌலி பாதாந்தம் போலே
கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய-லீலைகள் -உலகம் ரசிக்கும் –
அஸ்வதந்த நன்கு ரஸ்யமாக இருக்கின்றன –

ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன் –அஹம் அன்னம் –அஹம் அந்நாத-நெஞ்சம் பெரும் செய்யுள் –
பேரமர் காதல் விளைவித்த –
ஈர நெல் வித்து விளைத்து -கண்ணன் கடியனே –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -கலப்பை கொண்டே -கிருஷிகன் –
ஹிரண்ய கசிபு தம்பி – கால நேமி பிள்ளைகள் -ஆறு பேர் -உக்ரசேனர் பிள்ளை கம்சன் –
கால நேமியே கம்சனாக பிறந்தான் -சாபம்-மக்கள் அருவரை கல்லிடை மோத-
சூட்டு நன் மாலைகள் -அவதார பிரயஜன ஸூ ஷ்மம் ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
கர்ஷணம் இழுத்தல் – சங்கர்ஷணன் -சம்ஹாரம் –
யோக மாயா -தங்கை -நவமி இவள் கண்ணன் அஷ்டமியில் –
செற்ற கொற்றத் தொழிலான்- கங்கையிலும் யமுனையில் நகரங்களை இழுத்து தள்ளிய வ்ருத்தாந்தம் உண்டே
ஒற்றை குழையும் நாஞ்சிலும் -ஒரு பால் தோன்ற தான் தோன்றி
ராஜாக்கள் -ஒரு காதில் தனித்த தோடு குண்டலம் -இடுப்பில் சாதிக் கொத்து இருக்குமே -மேல் காத்து குத்தி –
சேஷ சேஷிகள் உடைய சக்கரை பால் போலே பிரியாத -இருவர்
லக்ஷ்மணன் –ஆதி சேஷனே -பல ராமன் -ஆதி சேஷன் அம்சத்துடன் அவதரித்தவர்
சேஷி ராமானுஜன் -கண்ணன் -சேஷ ராமானுஜர் உடையவர் -சங்கராதி-எதிராஜ விம்சதியில் தேசிகன் காட்டி
சங்கரர் கௌரவம் அடக்கி -யாதவ பிரகாசர் மதம் -யது குலம் பிரகாசம் கண்ணன் –
பர கத அதிசய –ஆதேநாய இச்சையா -சேஷத்வம் –
பால் பிரதானம் -கண்ணன் -சேஷி ராமானுஜன் -அப்ருதக் சித்த விசேஷணம் நாம் அனைவரும் சார்ந்தே
விட்டுப் பிரியாமல் -அவனை தாரகன் –
பிரகாரம் -வேற சரீரம் வேற -உடல் மீசை உயிர் என கறந்து எங்கும் பரந்துளன்
உடல் தேகம் -பெருக்கும்–சரீரம் -இளைக்கும் தாது அர்த்தம் -சீரியதே இது சரீரம் தாது
யஸ்ய சேதனஸ்ய -யது த்ரவ்யம் எப்போதும் தாங்கப் பட்டு தன் பொருட்டு நியமிக்கப் பட்டு
ஸர்வதா நியாந்தா தாராயிதும் அதன் பொருட்டேயாக இருப்பதே
இதே போலே ஆத்மாக்கள் ஈஸ்வரனுக்கு சரீரம் என்றவாறு -பிரகாரம் இன்றியமையாமல் சார்ந்து இருப்பது –
மணம் புஷபம் /மாணிக்கம் ஒளி போலே
பலராமன் – கூட போகாத நாள் தான் காளியன் உச்சியில் நட்டம் ஆடி
அகாசுர வதம் அன்றும் -கூட போக வில்லை -மலைப்பாம்பு -வடிவம் -பிள்ளைகள் அண்ணாந்து வாய்க்குள் போக –
திருமேனி வளர்ந்து வெளியில் வர –
தன்னேராயிரம் பிள்ளைகளும் சுற்றி உட்க்கார்ந்து -மஸ்ரன கவளம் -தத்யோன்னம் -ப்ரஹ்மாவுக்கு பாடம் புகட்டிய வ்ருத்தாந்தம் –
வெள்ளி மலை போலே முன்னே போக -பைய ஊர்வது போலே கரு மலை குட்டன் பெயர்ந்து நடப்பான் -கண்ணன்
நம்பி மூத்த பிரான் -சம்ப்ரதாயம் -செம் பொன் கழல் அடி செல்வன் பல தேவன் –

——————————————————————————————————————

நாதா யைவ நம பதம் பவது நஸ் சித்ரைஸ் சரித்திர க்ரமை
பூயோ பிர்புவ நான்ய மூநி குஹனா கோபாய கோபாயதே
காளிந்தீ ரசிகாய காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா பர்யாய சர்யா யதே–10-

ஆச்சர்யமான சேஷ்டிதங்களால் இந்த உலகங்களை ரக்ஷிப்பவனும் -யமுனை நதியில் சுவை உள்ளவனும் –
காளியன் என்றும் சர்ப்பத்தின் அகன்ற படம் ஆகிய நாட்டிய மண்டபத்தின் நடுவில் அச்சம் இன்றி
நடனம் புரிதல் ஆகிய பெரும் செயல் போன்ற செயல்களை செய்பவனும்
போலியான இடைய வேஷம் கொண்ட நாதனான கண்ணனுக்கே நமது நம என்னும் சொல் ஆகக் கடவது –

நாதா யைவ நம பதம் பவது நஸ்-
-நாதன் ரக்ஷகன் -அவன் ஒருவனுக்கே நமஸ்காரம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி
சித்ரைஸ் சரித்திர க்ரமை -விளையாட்டு வரிசை -பூதனை நிரசனம் தொடக்கமாக கேசி ஹந்த ஈறாக பல சேஷ்டிதங்கள் அன்றோ
பூயோ பிர்புவ நான்ய -மூநி குஹனா கோபாய கோபாயதே-கோக்களை ரக்ஷிக்கும் -மூ உலகையும் ரக்ஷிக்கும் -கோப வேஷம் கொண்டு
-ஷத்ரியனாக பிறந்து இடைப்பிள்ளையாகி -ஏறிட்டுக் கொண்டு -இரண்டு தாய் தந்தைகள் குலம் -மஹிஷிகள் -வார்த்தை உட்பட இரண்டு
மாலாய் பிறந்த -ஏலாப் பொய்கள் சொல்லுமவன் -பச்சைப் பசும் பொய் -கூட்டு வெளிப்படும் -நேர் எதிர் பெருமாள் –
காளிந்தீ ரசிகாய -யமுனை ஆற்றங்கரையில் விளையாடிய
காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா -காளியன் தலை -விரிய -வீதிகளில்
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா-துரந்தரன் தலைவன் -நாட்டியம் கற்பார் களுக்கு முன்னோடி -அச்சம் அற்றவராக விசங்க நர்த்தனம்
பர்யாய சர்யா யதே-ஒப்பான நடத்தைகள் -பெரும் கூத்தாடி ஜல க்ரீடை ராசிக் க்ரீடை குரவை கூத்து –
மாயக் கூத்தன் -குடமாடு கூத்து -ஆரார் என்று ஆடுமது கண்டு –

கருடன் வரமுடியாத சாபம் ஸுபரி கொடுக்க காளியன் பொய்கையில் இருக்க -அத்தை ஒழிக்க வில்லை கடலை நோக்கி துரத்தி விட்டு
சூர்யா தனயன் -யமுனை காளிந்தி யமுனை சூரியன் தங்கை -கிருஷ்ணன் ஆனந்தம் கொடுப்பவன் பூமிக்கு –
பூத் தடம் கடம்பு ஏறி காளியன் தலையில் நர்த்தனம் ஆடி –
அம்ருத கலசம் பட்டு பூத்தது திருவடி ஸ் பர்சத்தால் பூத்தது
கோகுலம் போர்க்களம் ஆகும் படி ஆனதே –
காளிங்கன் பண்ணும் பாக்யம் என்னே -திருவடி ஸ்பர்சம் -எண்ணிக்கை நாட்டியம் –
கிருஷ்ணாஸ்ராயா க்ருஷ்ண பலாயா க்ருஷ்ண நாதாஸ்ய -சர்வம் கிருஷ்ண மயம் ஜகத் -அவனே நாதன்
-நம அவனுக்கே -ஏவ -நாராயணனே நமக்கே பறை தருவான் போலே -மாம் ஏகம் சரணம் வ்ரஜ –
நாகணை மீசை நம்பிரான் சரணே சரண் -உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
அம்பரமே தன்னாரே சோறே -கண்ணனைக் கொடுத்தால் ஏவ காரம் உம்மை யாகுமே -உண்ணும் சோறு -வா ஸூ தேவம் சர்வம் அன்றோ
அவதார ரகஸ்யம் -ஜென்ம கர்ம மே திவ்யம் -பிறந்தவாறும் வளர்ந்த வாறும்–

—————————————————————————————-

பாவிந்யா தசயா பவன் நிஹ பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா கலி கதா காலுஷ்ய கூலங்கஷ
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே தாரா ஐலவ் கைர்த்ருத்வம்
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி யன் நிஸ்த்ரிம்ச தராதர –11-

எவனுடைய கத்தி ஆகும் மேகம் -துஷ்டர்களாகிய முட்களை மீதி இல்லாமல் ஒழிக்க பூமியில்
தன் முனை ஆகிய நீர் வெள்ளத்தால் க்ருத யுகத்தின் தர்மத்தை நிச்சயமாக முளைக்கச் செய்கின்றவோ –
சம்பளம் என்னும் ஊரில் அந்த விஷ்ணு யஸஸ் என்னும் அந்தணனுக்கு பிள்ளையாய் அவதரிக்கப் போகின்றவனும்
கலி யுகத்தினால் வரும் குழப்பத்தை வெண் குதிரையினில் மேல் ஏறி முழுவதும் அழிக்கப் போகிறவனுமான
கல்கி பகவான் வர போகின்ற நிலைமையோடு இவ்வுலகில் அர்ச்சையாய் நிற்பவனும்
நம்முடைய சம்சார பந்தங்களை அழிப்பதற்கு முற்படட்டும்

பாவிந்யா-அனந்தர பாவி
தசயா-அவதார தசை
பவன் நிஹ -இந்த ஸ்ரீ ரங்கத்தில் அர்ச்சா மூர்த்தியாக உள்ளவனே –
போன யுகம் கல்கி கொண்டே விக்கிரகம்
மிதிலை செல்வி -தன் சரிதை கேட்டான் -தாய் தந்தை கூப்பிட்டு வர சொல்லி –
11000 வருஷம் அப்புறம் தன்னுடைச் சோதி போவதையும் சொல்லி –
அது போலே ஸ்லோகமும் விக்கிரகமும் முன்னே இங்கே
பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா -விஷ்ணோ யசஸ்-பிள்ளை
கலி கதா காலுஷ்ய கூலங்கஷ-கலக்கமாக உள்ள நிகழ்வுகள் அக்கிரமத்தை -கரை புரண்டு ஓடும் -கல்கம் குதிரை –
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே-ஒன்றும் மிச்சம் இல்லாமல் முள்ளை நாசம் ஆக்கி
தாரா ஐலவ் கைர்த்ருத்வம் -ஜல பிரவாஹத்தால் –
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி -கிருத யுக வர்ணாஸ்ரம தர்மத்தை உறுதியாக வ்ருத்தி பண்ணும் வாள் ரக்ஷிக்கட்டும்
யன் நிஸ்த்ரிம்ச தராதர-இரண்டும் கத்தியையே சொல்லும்
கத்தி வைத்து தீயவரை போக்கி -கிருதயுகம் உண்டாக்கி -இரண்டுக்கும் ஒரே திவ்ய ஆயுதம்
மலையை தன்னுள் தாங்கிய மேகம் போலே தாராதக –

சம்பள கிராமம் -விஷ்ணு யசஸ் ப்ராஹ்மணர் திருக் குமாரராக அவதாரம் -கல்கி -வெள்ளை குதிரை
கல்கம்-பெயரில் -வாஹனம் நீண்ட வாள் கையில் கொண்டு -கடும் பரி மேல் கல்கியை நான் கண்டு கொண்டேன்
தீயவர்களை கழித்து கலி யுகம் கிருத யுகம் பற்றி
1000 சதுர் யுகம் முடிந்தால்–ப்ரஹ்மாவின் பகல் காலம் தான் பிரளயம் வரும் -மூன்று லோகங்கள் அழியும்
ப்ரஹ்மா ஆயுள் காலம் முடிந்தால் தான் 14 லோகங்கள்
த்வீத பரார்த்தே -நாம் இருக்கும் -இரண்டாவது ஐம்பதில் -உள்ளோம் -ஸ்வேதா வராஹ கல்பம் –
விவஸ்வான் மனு 77 மனுக்கள் ஒரு கல்பத்தில் –
71 சதுர் யுகம் ஒரு மனுவின் காலம் -28 சதுர் யுகத்தில் உள்ளோம் -அப்புறம் வேறு மனு வருவார்
ஒவ் ஒரு சதுர் யுகத்திலும் தசாவதாரங்கள் உண்டே -5117 வருஷம் தான் ஆகி உள்ளது
இந்த கலி யுகத்தில் -கல்கியும் ஆனான் தன்னை –

———————————————————————————————

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –

இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://

இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.”
– (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் -பெரியாழ்வார்
மூ உருவில் ராமனாய் பெரியாழ்வார் 4 பத்து
மீனாய் –கல்கியும் -இன்னம் கார் வண்ணனே நம்மாழ்வார்
அன்னமும் -2-7 திருமங்கை
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும்
குப்ஜா குள்ள மா மரமாகவும்
கேழலும் அரியும் 5-4-
நாகை -9-2-அன்னமும் –கேழலும் மீனுமாகிய ஆதி

————————————————————————————————-

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ் ஜாதம் ஜகன் மங்களம்
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவஷேத ய
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ பக்தி பரா மனசே
ஸூ த்தி காபி தநவ் திஸாஸூ தச ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே -13-

கலைகள் உறையும் கடலான வேங்கடேசன் என்னும் கவியிடத்தில் தோன்றிய உலகுக்கு நன்மை பயக்கும்
தேவாதி தேவனான திரு அரங்கனுடைய பத்து அவதாரங்களைப் பற்றின இந்த ஸ்தோத்ரத்தை
எவன் சொல்ல விரும்புகிறானோ அவனுடைய வாயில் சரஸ்வதி தேவி பலவகையாக ஓங்கி நிற்பாள் –
மனசில் உயர்ந்த பக்தி மலரும் -சரீரத்தில் அத்புதமான தூய்மை வளரும்
இப்படி முக்கரணங்களுக்கும் சிறப்பு வருவது மட்டும் இல்லாமல்
பத்து திக்குகளிலும் சிறந்த புகழ் வளரும்

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ்-வித்யை -கல்வி கடலாக -ஸ்ரீ வேங்கட நாதன் –
ஜாதம் ஜகன் மங்களம் -உண்டான -பண்ண வில்லை -கர்த்ருத்வ புத்தி இல்லை -ஷேமங்கரமாக
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம்-ஸ்ரீ ரெங்க நாதன் அருளிச் செய்த தசாவதாரங்கள் பற்றிய ஸ்தோத்ரம்
விவஷேத ய -சொல்ல விரும்பினால் போதும் -பாடவும் மனனனம் பண்ணவும்
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ -அவர்கள் உடைய வாயில் வாள் வைபவம் –கங்கா -பிரவாஹம் போலே
பக்தி பரா மனசே -மனசில் பக்தி குடி கொண்டு இருக்கும்
ஸூ த்தி காபி தநவ் -காய ஸூ த்தி வரும் -முக்கரணங்களும் சொல்லி –
திஸாஸூ தச -ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே-பத்து திக்குகளிலும் -கொண்டாடப்படும் யசஸ் பெறுகிறான்

திருவவதாரம் பண்ணவே பக்தி வளர்க்கவும் வாயினால் பாடி தூ மலர் தூவி தொழவும்
முக்கிய பிரயோஜனம் என்றவாறு

—————————————————————————————————-

பரமபத ஸோபாநம்.

“பரமபத ஸோபாநம்” என்ற ரஹஸ்ய கிரந்தத்தில் ஶ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பரமபதமென்னும் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்கியிருக்கிறார்.
அவற்றின் வரிசை இவர் தாமே
 “விவேக நிர்வேத விரக்தி பீதய: ப்ரஸாதஹேதூத் க்ரமணார்ச்சிராதய: ப்ரக்ருத்ய திக்ராந்த பதாதிரோஹணம் பராப்திரித்யத்ரது பர்வணாக்ரம: ” . என அருளிச்செய்துள்ளார்.
அதாவது :- இக்கிரந்தத்திலே பகுத்தறிவு, வெறுப்பு, வைராக்கியம், பயம், பகவானுடைய அநுக்ரஹத்திற்குக் காரணமான பக்தி, ப்ரபத்தி, சரீரத்தை விட்டு ஆத்மா வெளியேறுதல், அர்ச்சிராதிமார்க்கம், ப்ரகிருதி மண்டலத்திற்கு மேற்பட்டதான பரமபதத்தையடைதல், அங்கு பரமாத்மாவை அநுபவித்தல் என்பன படிகளுடைய வரிசை.
எனவே இதிலுள்ள ஒன்பது பர்வங்களாவன —
 (1) விவேகபர்வம் (தத்துவங்கள் முதலியவற்றை அறிதல்); (2) நிர்வேத பர்வம் (ஸம்ஸாரத்தில் வெறுப்பு); (3) விரக்திபர்வம் (உலக சுகங்களில் ஆசையறுதல்) ; (4) பீதி பர்வம் (தன் பாபங்களின் மிகுதியால் இனி வரக்கிடக்கும் நரகாநுபவம் முதலிய துன்பங்கட்கு அஞ்சுதல்); (5) ப்ரஸாதநபர்வம் (எம்பெருமான் மோக்ஷத்தை அருள் வதற்குக் காரணமான உபாயங்களை அநுஷ்டித்தல்); (6) உத்க்ரமண பர்வம் (இச்சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறு தல்); (7) அர்ச்சிராதிபர்வம் (அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்); (8) திவ்ய தேச ப்ராப்திபர்வம் (ஸ்ரீ வைகுண்ட மென்னும் திவ்யலோகத்தைச் சேர்தல்); (9) ப்ராப்திபர்வம் (அங்கு பகவானைக் கண்ணாரக்கண்டு, களித்து, அநுபவித்து, அந்த அநுபவத்திலேயே மூழ்கிக்கிடத்தல்)
 “தேனேறு தாமரையாள் திருமார்பன்றன்
     திண்ணருளால வனடியில் விவேகம் பெற்றிங்கு
 ஊனேறு பவக்குழியை வெறுத்ததற்பின்
     ஊர் விரத்தியுடன் வினையின் திரளுக்கஞ்சிக்
 கூனேறு பிறை யிறையோன் சாபந் தீர்த்தான்
     குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு
 வானேறும் வழிப் படிகளடைவே கண்ட 
 வண்புகழ்த் தூப்புல் வள்ளலருள் பெற்றோமே.”
 என்ற தனியனும் காண்க. இங்கு ஸோபாந அடைவு அமைக்கப்பெற்றுள்ளது குறிக்கொள்க.
இக்கிரந்தத்தின் இருபதாவது பாசுரமான ,
” மண்ணுலகில் மயல் தீர்த்து மனந்தளும்பி 
     மன்னாத பயனிகந்து மாலேயன்றிக் 
 கண்ணில தென்றஞ்சி யவன் கழலே பூண்டு 
     கடுஞ்சிறை போய்க்கரையேறுங் கதியே சென்று 
 விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு 
     விண்ணவர்தங் குழாக்களுடன் வேதம் பாடிப் 
 பண்ணுலகிற்படியாத விசையாற் பாடும் 
     பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே.” 
 [(1) மண் உலகில் மயல் தீர்ந்து (விவேகம்); (2) மனந் தளும்பி (நிர்வேதம்); (3) மன்னாத பயன் இகந்து (விரக்தி); (4) மாலே யன்றிக் கண் இலதென்று அஞ்சி (பீதி); (5) அவன் கழலே பூண்டு (ப்ரஸாதநம்); (6) கடும் சிறைபோய் (உத்க்ரமணம்); (7) கரையேறும் கதியே சென்று (அர்ச்சிராதி); (8) விண் உலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு (திவ்யதேச ப்ராப்தி) ; (9) விண்ணவர்தம் குழாங்களுடன் வேதம் பாடி (ப்ராப்திபர்வம்).)
என்பதில் இக்கிரந்த பர்வங்களின் அர்த்தத்தை அடைவாக அமைத்துள்ள அழகு அறிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளவல்லது.
————————-
ஸ்ரீ தசாவதார-ஸ்தோத்ரம் (கீதா-கோவிந்தத்திலிருந்து) ஜெயதேவ கோஸ்வாமி–இது ஒவ்வொன்றும் எட்டு வரிகள் கொண்ட வசனங்களில் எழுதப்பட்டிருப்பதால், இது அஷ்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது.(1)
பிரளய-பயோதி-ஜலே த்ரிதவான் அசி
வேதம் விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ரித-மின-சரீர ஜெய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! மீனாக உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! பேரழிவின் கொந்தளிப்பான கடலில் மூழ்கிய
வேதங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே ராட்சத மீன் வடிவில் படகாக எளிதாகச் செயல்பட்டாய் .(2)
தவிபுல் க்ஷித்ரீவத்ர
இத்ஹ தாரன-கின-சக்ர-கரிஷ்டே
கேசவ த்ரித-கூர்ம-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஆமை வடிவில் வீற்றிருக்கும் ஹரியே! எல்லா புகழும் உனக்கே! இந்த அவதாரத்தில் ஒரு தெய்வீக ஆமையாக பெரிய மந்தார மலை உங்கள் பிரம்மாண்டமான முதுகில் பாற்கடலைக் கலக்க ஒரு மையமாக உள்ளது. மிகப் பெரிய மலையை உயர்த்திப் பிடித்ததிலிருந்து, உங்கள் முதுகில் ஒரு பெரிய வடு போன்ற தாழ்வு நிலை உண்டாகிறது , அது மிகவும் புகழ்பெற்றதாக மாறிவிட்டது.(3)
வஸதி தஸன-சிகரே தரணி
தவ லக்ன சசினி
கலங்க-கலேவ நிமக்ன கேசவ த்ரித- ஸுகர-ரூப ஜய ஜகதீஸ தவ
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஓ ஹரி, பன்றியின் வடிவம் கொண்டவனே! எல்லா புகழும் உனக்கே! பிரபஞ்சத்தின் அடியில் கர்ப்போடகப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமி, சந்திரனில் ஒரு புள்ளியைப் போல உனது தந்தத்தின் நுனியில் நிலையாக அமர்ந்திருக்கிறது.(4)ஹரே-
அத்பூத-ஸ்ரீங்கம்
தலித-ஹிரண்யகசிபு-தனு-பிருங்கம்
கேசவ த்ரித-நரஹரி-ரூப ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! ஒருவரது விரல் நகங்களுக்கு இடையே குளவியை எளிதில் நசுக்குவது போல, குளவி போன்ற அரக்கன் ஹிரண்யகசிபுவின் உடலையும் உங்கள் அழகான தாமரை கைகளில் உள்ள அற்புதமான கூர்மையான நகங்களால் பிளவுபடுத்தியது(5)
சலயஸி விக்ரமணே பலிம் அத்பூத-வாமன
பாத-நக-நிர-ஜனித-ஜன-பவனா
கேசவ ஹரிதா-ஜவமன் த்ரித
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஓ ஹரி, வாமன-பிராமண வடிவத்தை எடுத்தவனே! எல்லா புகழும் உனக்கே! ஓ அற்புதமான குள்ளே, உன்னுடைய பாரிய அடிகளால் பாலி மன்னனை ஏமாற்றுகிறாய், உன் தாமரை பாதங்களின் நகங்களிலிருந்து வெளிப்பட்ட கங்கை நீரால் , இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நீ விடுவிக்கிறாய்.(6 )
க்ஷத்ரிய-ருத்திர-மயே ஜகத்-அபகத-பாபம்
ஸ்நபயஸி பயஸி ஸமித-பவ-தபம் கேசவ
த்ரித-பிரிகுபதி-ரூப ஜெய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! பிருகுபதியின் [பரசுராமன்] அவதாரம் எடுத்த ஹரியே! எல்லா புகழும் உனக்கே! குருக்ஷேத்திரத்தில் நீ கொன்ற அசுர க்ஷத்திரியர்களின் உடலில் இருந்து இரத்த ஆறுகளில் பூமியை நீராடுகிறீர்கள் . உலகின் பாவங்கள் உன்னால் கழுவப்படுகின்றன, மேலும் உன்னால் மக்கள் பொருள் இருப்பு என்ற எரியும் நெருப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.(7)
விதராசி திக்ஷு ரனே திக்-பதி-கமணியம் தாஸ-முகாவ
-மௌலித்-மௌலித்-முகா
-மௌலித். -சரீர ஜய ஜகதீஸ ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ராமச்சந்திர ரூபம் எடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! இலங்கைப் போரில், பத்துத் தலை அரக்கன் ராவணனை அழித்து, அவனது தலைகளை இந்திரனின் தலைமையில் உள்ள பத்துத் திசைகளின் அதிபதிகளுக்குப் பிரியமான காணிக்கையாகப் பகிர்ந்தளிக்கிறீர்கள். இந்த அசுரனால் மிகவும் துன்புறுத்தப்பட்ட அவர்கள் அனைவராலும் இந்த நடவடிக்கை நீண்ட காலமாக விரும்பப்பட்டது(8)
வஹஸி வபுஷி விஸதே வசனம் ஜலதாபம்
ஹல-ஹதி-பீதி-மிலித
-யமுனாபம் கேசவ த்ரித-ஹலதர-ரூப ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! கலப்பையை அமுக்கி பலராமனாக உருவெடுத்த ஹரி பகவானே ! எல்லா புகழும் உனக்கே! உங்கள் புத்திசாலித்தனமான வெள்ளை உடலில் நீங்கள் புதிய நீல மழையின் நிற ஆடைகளை அணிந்திருக்கிறீர்கள்-மேகம். இந்த ஆடைகள் யமுனை நதியின் அழகான இருண்ட சாயல் போன்ற நிறத்தில் உள்ளன, அவர்
உனது கலப்பையின் தாக்கத்தால் பெரும் பயத்தை உணர்கிறார்.(9)
நிந்தஸி யஜ்ஞ-விதேர் அஹஹ-
ஸுதிஹ்ரத்யஜாதம் ஸ்ருதி-ஹதிதாயதம்
கேசவ த்ரித-புத்த-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! புத்தரின் வடிவம் கொண்ட ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! கருணையுள்ள இதயத்தின் புத்தரே, வேத யாகத்தின்
விதிகளின்படி செய்யப்படும் ஏழை விலங்குகளை அறுப்பதை நீங்கள் கண்டிக்கிறீர்கள் .(10)
ம்லேச்ச-நிவாஹ-நிதாநே கலயஸி ​​கரவலம்
தூமகேதும் இவ கிம் அபி கரலாம்
கேசவ த்ரித-கல்கி-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! கல்கி அவதாரம் எடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! நீங்கள் ஒரு வால் நட்சத்திரத்தைப் போல தோன்றி, கலியுகத்தின் இறுதியில் தீய காட்டுமிராண்டிகளை அழித்தொழிப்பதற்காக பயங்கரமான வாளை ஏந்துகிறீர்கள் .(11)
கதம்ஸ்ரீ-ஜயதேவ-கதாம்ஸ்ரீ
-ஜயதேவா- தம் பவ-சரம்
கேசவ த்ரித-தாஸ-வித-ரூப ஜய ஜகதீஸ ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! இந்த பத்து விதமான அவதாரங்களை எடுத்த ஹரி பகவானே ! எல்லா புகழும் உனக்கே! ஓ வாசகர்களே, கவிஞர் ஜெயதேவாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள், இது மிகச் சிறந்த, மகிழ்ச்சியை வழங்குபவர், ஐஸ்வர்யத்தை அளிப்பவர், இந்த இருண்ட உலகில் சிறந்தது.(12)
வேதாந் உத்தாரதே ஜகந்தி வஹதே பூ-கோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே ஹலம் அத்ஸயந்துர்வதேக் உப்யம் நமঃ
ஓ பகவான் கிருஷ்ணரே, இந்தப் பத்து அவதாரங்களின் வடிவங்களில் தோன்றிய உமக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். மத்ஸ்ய வடிவில் நீ வேதங்களைக் காப்பாற்றுகிறாய், கூர்மமாக மந்தார மலையை உன் முதுகில் தாங்குகிறாய். வராஹாவாக நீ உன் தந்தத்தால் பூமியை உயர்த்துகிறாய், நரசிம்ம வடிவில் தைத்ய ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழிக்கிறீர்கள். வாமன வடிவில் தைத்ய மன்னன் பாலியிடம் மூன்றடி நிலம் மட்டும் கேட்டு ஏமாற்றி, உனது படிகளை விரிவுபடுத்தி முழு பிரபஞ்சத்தையும் அவனிடமிருந்து பறித்து விடுகிறாய். பரசுராமராக நீங்கள் தீய சத்திரியர்கள் அனைவரையும் கொன்று, ராமச்சந்திரனாக ராக்ஷச மன்னன் ராவணனை வெல்கிறீர்கள். பலராமன் வடிவில் நீங்கள் கலப்பையை ஏந்தி, துன்மார்க்கரை அடக்கி, யமுனை நதியை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். பகவான் புத்தராகிய நீங்கள் இவ்வுலகில் துன்புறும் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுகிறீர்கள், கலியுகத்தின் முடிவில் நீங்கள் கல்கியாக தோன்றி மிலேச்சர்களை [தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மனிதர்களை] திகைக்க வைக்கிறீர்கள். ஜெயதேவ கோஸ்வாமி அல்லது அனைத்து வைஷ்ணவ ஆச்சார்யர்களின் பஜனைகளுக்குத் திரும்பு .

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ (பிள்ளை )குமார லோகாச்சார்ய பிரபத்தி- மங்களா ஸாஸனம் -ஸ்ரீ ஜீயர் நாயனார்

March 11, 2024

ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஆராதனப்பெருமாள் -ஸ்ரீ இள வாயர் கொழுந்து
ஸ்ரீ பெரிய ஜீயருடைய திருக் குமாரரான ஸ்ரீ ராமானுஜ ஐயன்

ஸ்ரீ ராமானுஜ ஐயன் அவர்களின் திருக் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்ற திரு நாமம் சூட்ட ஸ்ரீ பெரிய ஜீயர் பணித்தார்
அவருக்கு இரண்டாம் திருக் குமாரரும் திரு அவதரிக்க -அவருக்கு ஸ்ரீ பெரியாழ்வார் ஐயன் என்ற திரு நாமம் சூட்டப் பணித்தார்
விளக்கு ஏற்றின பெரு விளக்கு போல் பிரகாசித்தனர்

ஸ்ரீ ஜீயர் நாயனாருக்கு ஸ்ரீ பாஷ்யம் பிரதிவாதி பயங்கர அண்ணனும்
ஈடு கால க்ஷேபம் கோயில் கந்தாடை அண்ணனும் ப்ரசாதித்து அருளினார்கள்
இவர் உபதேச ரத்ன மாலையை வடமொழியில் ஸ்லோகமாக அருளிச் செய்துள்ளார்
பராங்குச நக்ஷத்ர மாலையையும் சாதித்து அருளி உள்ளார்

சீராரும் வர முனிவன் செழும் குலத்தோன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோம் வாழியே
பாராரும் எதிராசன் பதம் பணியுமவன் வாழியே
பாடியத்தின் உட் பொருளை பகருமவன் வாழியே
ஆரம் சூழ் குருகையில் அவதரித்தோன் வாழியே
ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆதரிப்போன் வாழியே
வரத குரு கருணையால் வாழ்வுடையோன் வாழியே
வான் சீர் நயினார் மலர்ப்பதங்கள் வாழியே

பாகவதர் வாழ பராங்குசன் தன் சீர் வாழ
தமுடன் வந்து அணைந்தோன் தாம் வாழ
போதமிகு தென்னரங்கம் வாழ சீயர் நயினார்
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

————-

அஸ்மாஸூ வத்சல தயா க்ருபயா ச பூயஸ் ஸ்வேச்சா வதீர்ணமிவ -ஸும்ய வரம் முநீந்த்ரம் –
ஆச்சார்ய பவ்த்ரம் அபிராம வரர்பிதாநம் அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமிதனியன்

மா முனிகளே வாத்சல்யம் கிருபை அடியாக நித்ய விபூதியில் இருந்து மீண்டும் திருவவதரித்தாரோ என்று சங்கிக்க வேண்டும் படி –
அவரோடு ஓக்க ஞான அனுஷ்டானங்கள் உடையவராய் -அவருடைய திருப் பேரனார் -பரம காருணிகராய்-அபிராமவராச்சார்யர் என்று வட மொழியிலும்
ஜீயர் நாயனார் என்று தென் மொழியிலும் -வழங்கப் பெற்ற ஆசிரியரை வணங்குகின்றேன் –

லோகார்ய வர்ய சரணாம் புருஹே ப்ரபத்திம்
லோகாவநாய க்ருதவான் சமுதார தீர்ய
ஸும்யோ பயந்தரு முனி பவுத்ர மஹம் ப்ரபத்யே
ஸும்யோ பயந்தரு குரும் ஆத்ம விதாம் ப்ரதாநம்–தனியன் –

லோகார்ய வர்ய சரணாம் புருஹே ப்ரபத்திம்-பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் -குமார லோகாச்சார்யார் ஸ்வாமிகள் இடம் பிரபத்தி
புருஷகார ரூபமாக -பற்றுகிறார்–அடியார்க்கு என்னை ஆட்படுத்தி அருளிய விமலன்
செல்வர் பெரியர்–அவர் தம் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது நாம் காணவோமே
மார்கழி -மார்க்க ஸீர்ஷம்
லோகங்களே வரிக்கும் படியான பிரபாவம் கொண்டவர்
லோகாவநாய க்ருதவான் சமுதார தீர்யம் -உலகமே வாழும் படி
தொண்டர்க்கு அமுது -பக்தாம்ருதம் -தீ -ஞான விசேஷம் -ப்ரகாஸிதமான —
ஸும்யோ பயந்தரு முனி பவுத்ர மஹம் ப்ரபத்யே-சாஷாத் மா முலைகளின் பேர -அபிராம வரதாச்சார்யரை சரணம் அடைவோம்
ஸும்யோ பயந்தரு குரு மாத்ம விதாம் ப்ரதாநம் -பிரதானமாக இத்தையே கொண்டு -அவரே இவர் என்னும்படி திரு அவதரித்தவர் அன்றோ

ஸ்ரீ மன் யதீந்த்ர சரண ப்ரவண அந்தரங்க
தீ பக்தி சாந்தி முக ஸத் குண வாரி ராஸே
ஸ்ரீ வத்ஸ வம்ஸ வர மௌத்திக கார்ஷ்ண பாதே
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

ஸ்ரீ மன் யதீந்த்ர சரண ப்ரவண அந்தரங்க -யதீந்த்ர பிரவணத்து அந்தரங்கர்
தீ பக்தி சாந்தி முக ஸத் குண வாரி ராஸே –ஞானம் –தீ விழித்து -ஞான கடாக்ஷம் –
ஞானம் கனிந்த நலம் -மயர்வற மதி நலம் -சாந்தி -வைராக்யம்
போன்ற ஸத் குணக்கடல் –அனைத்துக்கும் கொள் காலம் இவரே
வாக்குல பூஷண பாஸ்கர –கலி திவாகரன் ராமானுஜ திவாகரம் -நாமும் ஸூர்ய குலமே
ஸ்ரீ வத்ஸ வம்ஸ வர மௌத்திக கார்ஷ்ண பாதே -வள்ளல் வடக்குத் திரு வீதிப்பிள்ளை திருகுமாரர்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -தேவாதி ராஜர் -பேர் அருளாளப் பெருமாள் அம்சம்
நம்பிள்ளை திருநாமம் சாத்தப் பெற்றவர்
இவரது அடி இணைகளே நமக்குத் தஞ்சம் –
ந்யாஸம் -அடைக்கலம் -நித்தியமாக -வர்த்தமானம் போக்யம் அன்றோ –

————

ஸ்ரீ மத் பராங்குச வஸோ அம்ருத வார்தி லப்த
ஸ்ரீ காந்த ஸத் குண மணே ஸ்ரித பவ்ய மூர்த்தே
நாதார்ய யாமுந முநீந்த்ர முகார்ய ஸூக்தி
தத்வார்த்த நிஷ்ட சரணவ் சரணம் ப்ரபத்யே -2-

ஸ்ரீ மத் பராங்குச வஸோ அம்ருத வார்தி லப்த -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலை –
இதுவே பக்தாம்ருதம் தனியனாக நாதமுனிகள் அருளிச் செய்தார்
வார்தி லப்த -வ்ருத்தி யாக வியாக்யானங்களில் அருளிச் செய்யப்பட்டவை அனைத்தையும் கிடைக்கப் பெற்ற
ஸ்ரீ காந்த ஸத் குண மணே -திருமாலின் கல்யாண குணங்களின் கொள் காலமாக உள்ளவரே
ஸ்ரித பவ்ய மூர்த்தே -ஆஸ்ரித வர்களையும் பவ்யமாக இருந்த திவ்ய மங்கள விக்ரஹம்
சம்பந்தி சம்பந்திகளுக்கும் மோக்ஷம் என்றதுமே ஜந்துக்கள் மரங்கள் இவற்றையும் ஸ்பர்ஸித்து பேற்றை அளித்தவர் அன்றோ
மாதவிப்பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் -அருளிச் செய்த இனிய வியாக்கியானங்கள்
பராங்குச அங்கி -அனைத்து அங்கங்களையும் உப அங்கங்களையும் ராமானுஜ நூற்றந்தாதியையும் சொன்னவாறே
நாதார்ய யாமுந முநீந்த்ர முகார்ய ஸூக்தி தத்வார்த்த நிஷ்ட –பூர்வாச்சார்யர்களுடைய அனைத்து ஸ்ரீ ஸூக்தி களையும் கொண்டே ஸ்ரீ வசன பூஷணம் அருளிச் செய்துள்ளார் அன்றோ-திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருந்து –
முனி த்ரய -நாத யமுன ராமானுஜ மணவாள ஜீயர் பர்யந்தம்
சரணவ் சரணம் ப்ரபத்யே -இவரையே தஞ்சமாகப் போற்றுவோம்

————

பத்மா ஸஹாய கமநீய பாதாப்ஜ யுக்ம
ப்ரேமாப்தி மக்ந ஹ்ருதய ஆஸ்ரித கல்ப வ்ருஷ
ஸ்ரீ மத் சடாரி கலிஜிந் முக ஸூரி ஸூக்தி
நித்ய ஆஸ்பதாந்தர குரோ சரணவ்  ப்ரபத்யே -3-

பத்மா ஸஹாய -ரக்ஷிக்க பிராட்டி சந்நிதி அவஸ்யம் –
கமநீய பாதாப்ஜ யுக்ம -பரதனுக்கு புண்யமே பாபமானது -குகனுக்கு பாபமே புண்யம் ஆனதே
பாபமும் புண்ணியமும் அவன் திரு உள்ளக் கருத்துக்கு மாறியும் ஒத்தும் போவதே
ப்ரேமாப்தி மக்ந ஹ்ருதய ஆஸ்ரித -படியாய் கிடந்தது அவன் பவள வாய் காண வேண்டுமே
அவனது திரு முக விலாஸமே வேண்டுவது
அப்தி -சமுத்திரம் -அதில் மக்நம் -ஆழ்ந்து -இருக்கும் ஆஸ்ரிதர்கள்
கல்ப வ்ருஷ -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
மாலுக்கு -மாலை நண்ணி தொழுது எழுமினோ வினை கெட
பூர்வாச்சார்களே இங்கு கற்பகம்
ஸ்ரீ மத் சடாரி கலிஜிந் முக ஸூரி ஸூக்தி -அருளிச் செயல்களில் உள்ள அர்த்தங்களையே திரு உள்ளத்தில் கொண்டு
நித்ய ஆஸ்பதாந்தர –இதுவே கால ஷேப அர்த்தமாகக் கொண்டு -அவற்றிலே ஆழ்ந்து அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷணாதிகள் அருளிச் செய்த
குரோ சரணவ் ப்ரபத்யே -சரணம் அர்த்தாத ஸித்தம் -ஸ்ரோத்ரியம் -ஸமித் பாணிம் ப்ரஹ்ம நிஷ்டர்

ராமாநுஜார்ய கருணாதிசய ப்ரணீத
ஸ்ரீ பாஷ்ய நித்ய பரி ஸீலந ஸீல சேத
தத் பாத பத்ம யுக லார்ப்பித ஸர்வ பார
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -4-

ராமாநுஜார்ய கருணாதிசய ப்ரணீத ஸ்ரீ பாஷ்ய –ஸ்வாமி யுடைய அதிசய கருணையால் -அருளிச் செய்த -9000 கிரந்தங்கள் -இவற்றில் ப்ரவணம் மிக்கு
நித்ய பரி ஸீலந ஸீல சேத -நித்தியமாக பரி ஸீலநம் பண்ணிக் கொண்டு -பகவத் ஸீல குண அனுபவத்தில் ஆழ்ந்து இவரும் ஸீலவான் ஆகி அருளி
ஸ்ருத பிரகாசிகா பட்டர் -வேத வியாச பட்டர் உடைய திருப்பேரனார்-36000 படி வியாக்யானம் –
ஸ்நேஹிதனுக்கு லக்ஷணம் மூன்று பாஷ்யகாரர் -முதலில் அஸ்தான பய சங்கித்தவம்
தோஷம் கண்ணில் பட்டாலும் காணாக் கண் இட்டு இருந்து-அதிலேயே குணம் பார்ப்பவன்
இது போன்ற விஷயங்களில் ஆழ்ந்து -அதிலேயே ப்ரவணராய் இருந்த பிள்ளை லோகாச்சார்யார்
தத் பாத பத்ம யுக லார்ப்பித ஸர்வ பார -உடையவர் இடம் ஸர்வ பாரங்களை பொகட்டு –
நம்முடைய -ஸர்வ பாரங்களை நமக்காகவே அவரிடம் பொகட்டு -அருளிய
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -பிள்ளை லோகாச்சார்யரை தஞ்சமாகப் பற்றுவோம்

————

கோவிந்த ஸூரி குருகேஸ்வர கூர நாத
ஸ்ரீ தேவ ராஜ முனி ஸூக்திஷு ஸம் ப்ரவீண
தத்வார்த்த சார ரசிதாதுல ஸூ ப்ரபந்த
தேஷாம் ப்ரியார்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -5-

கோவிந்த ஸூரி ஸூக்திஷு ஸம் ப்ரவீண–எம்பார் பூர்வாஸ்ரம திரு நாமம் -ஸம்யக் ந்யாஸம் சந்நியாசி -எம்பெருமானார் இடம் நன்றாக ந்யாஸம் செய்து
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க பட்டருக்கு உபதேசம்
குருகேஸ்வர -ஸூக்திஷு ஸம் ப்ரவீண-திருக்குருகைப்பிரான் பிள்ளான் -ஆறாயிரப்படி
கூர நாத -ஸூக்திஷு–ஸம் ப்ரவீண–ஆழ்வான் ப்ரஸித்தி -ஸ்தவங்கள் -உபய காவேரி நடுவில் சாதித்து -ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ தேவ ராஜ முனி ஸூக்திஷு ஸம் ப்ரவீண–தேவ ராஜன் பேர் அருளால் -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் –
ஞான சாரம் ப்ரமேய சாரம் -இவற்றில் நன்றாக ப்ராவண்யம் கொண்டவர்
ஸம் ப்ரவீண–இவை அனைத்திலும் அதீத ப்ராவண்யம் கொண்ட ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்
தத்வார்த்த சார ரசித அதுல ஸூ ப்ரபந்த -சமானம் இல்லாத அஷ்டாதச ரஹஸ்யங்கள் -பூர்வர் வசன பூஷணங்களைக் கொண்டு சாதித்த பிரபந்தங்கள்
தேஷாம் ப்ரியார்ய –பூர்வாச்சார்யர்கள் அனைவருக்கும் மானசீகமான பிரியம் கொண்டவர்
அவர்கள் உகக்கும்படியான பிரபந்தங்கள் சாதித்து அருளிய ஸ்வாமியை
சரணவ் சரணம் ப்ரபத்யே –

—————–

பட்டார்யா ஸூரி நிகமாந்த முனீந்த்ர நிஷ்டா
நிஷ்ணாத தத் பத ஸரோஜ நிவிஷ்ட பக்தே
அஸ்மா த்ருசாம் ச ஜகதாம் மஹதாம் ஸ்ரவ்யவ்
ப்ராப்யவ் ஸூஸீல சரணவ் சரணம் ப்ரபத்யே -6–

பட்டார்யா ஸூரி நிஷ்டா நிஷ்ணாத -பராசர பட்டர் ஸ்ரீ ஸூக்திகளிலும் –மிதுன லாலி தத்வம் –
யாம் பெரும் சம்மணம் -தோள் மாலை சாத்தப்பெற்றாள் -கேட்டதும் திருவடிகளைப் பற்றி போர நடவாதே என்றார் பெருமாள் என்று ஐந்து வயதில் சொன்னதைக் கேட்டு ஆழ்வான் உகந்தான் அன்றோ
நிகமாந்த முனீந்த்ர நிஷ்டா நிஷ்ணாத -நஞ்சீயர் ஸ்ரீ ஸூக்திகளிலும் –பட்டர் படுக்கையில் ஈரம் கண்டு உகப்பவர் –
ஒன்பதினாயிரப்படி -பல வியாக்கியானங்களை அருளிச் செய்தவர்
நிஷ்டா நிஷ்ணாத –இவற்றிலே மக்நராய் இருந்து
தத் பத ஸரோஜ நிவிஷ்ட பக்தே –இவர்கள் இடம் பக்தி கொண்டே
அஸ்மா த்ருசாம் ச ஜகதாம் மஹதாம் ஸ்ரவ்யவ் –சரங்கள் -போல் சமர்ப்பணம் பண்ணியவர்
அஸ்மாத் நம்மையும் சேர்த்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –
ப்ராப்யவ் ஸூஸீல சரணவ் சரணம் ப்ரபத்யே -இவரது திருவடிகளே நமக்குத் தஞ்சம்
வர்த்த மானம் -அப்பொழுதைக்கு அப்போகுது நவம் நவமாய் இருக்குமே

————–

ஸ்வாமின் ஜகத் குரும் அஹோ கலி வைரி தாஸம்
த்யாயந் நிதாந்தம் அநகம் புலகாந் விதாங்க
ஸேவ்யவ் ஸமஸ்த ஜகதாம் நிகிலாத்ம பந்தோ
கம்யவ் தவ  ஆர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -7–

ஸ்வாமின் ஜகத் குரும் அஹோ கலி வைரி தாஸம்-நம்பூர் வரதாச்சார்யாருக்கு கந்தாடை தோழப்பர் சாத்திய திரு நாமம் கொண்டே
நமது ஸ்வாமிக்கும் ஆச்சார்யர் அருளால் திரு அவதரித்ததால் வள்ளல் வடக்கு திருவீதிப்பிள்ளையும் சாத்தி அருளினார் அன்றோ
பிள்ளாய் -பஸ்மம் சன்ன இவா -நீர் பூத்த நெருப்பு போல் ஞானம் மிக்கு இருந்தார் அன்றோ
ஈடு சாதித்த பெருமை நம்பிள்ளைக்கும் உண்டே -பெரிய பெருமாள் தமது அர்ச்சா திரு மேனியையும் குலைத்து எழுந்து இருந்த பெருமையும் உண்டே
நடுவில் திரு வீதிப் பிள்ளை -ஸத்யேந லோகான் ஜயதி –வ்ருத்தாந்தம் –
கவியின் பொருள் எல்லாம் கற்கலாம் –திருக்கலி கன்றி தாஸர்
த்யாயந் நிதாந்தம் அநகம் புலகாந் விதாங்க–குற்றம் அற்ற -புழக்கங்க தேகம் -ஈடுபாடு
ஸேவ்யவ் ஸமஸ்த ஜகதாம் நிகிலாத்ம பந்தோ–ஸமஸ்த ஆத்மாக்களும் பந்து இவரே
கம்யவ் தவ ஆர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே-மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைகிறோம்

துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்————51-

————-

ஸ்ரீ கிருஷ்ண பாத கருணார்ப்பித வேத மௌலி
யுக்ம அகிலார்த்த கருணா நிலய த்வதீயவ்
வஜ்ர த்வஜ அங்குச ஸரோஜி நிசங்க சிஹ்னவ்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -8–

ஸ்ரீ கிருஷ்ண பாத கருணார்ப்பித -வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஈடு ஏடுபடுத்தி அருளிய வள்ளல் —
வேத மௌலி யுக்ம -வேத வேதாந்த -தமிழ் மறைகளையும்
அகிலார்த்த -அனைத்து பொருள்களையும் தேக்கி வைத்து அருளி
கருணா நிலய த்வதீயவ் வஜ்ர த்வஜ அங்குச ஸரோஜி நிசங்க சிஹ்னவ் –சிஹனங்கள் பதிந்த திருவடிகள்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -அடியேன் தஞ்சம் அடைகிறேன்


காந்தோ பயந்த்ரு குரு வர்ய ஸதா நுபாவ்யவ்
கூராந்வ யோத்தம ஸூரம்ய வராபி நந்த்யவ்
போம் யாவ நந்த புர பாஹ்ய வநாந்த வாஸி
நாராயணேட்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -9-

காந்தோ பயந்த்ரு குரு –திருவாய் மொழிப்பிள்ளை
வர்ய ஸதா நுபாவ்யவ் —எப்பொழுதும் அனுபவித்து இருக்கும் -விளாஞ்சோலைப்பிள்ளை – நாராயணன் இயல் திரு நாமம்
ஸப்த காதை இயற்றி அருளியவர்
கூராந்வ யோத்தம ஸூரம்ய வராபி நந்த்யவ்-கூர குலோத்தம தாஸர்-இவரும் பிள்ளை லோகாச்சார் ஸத் சிஷ்யர்
போம் யாவ நந்த புர பாஹ்ய வநாந்த வாஸி -திருவனந்தபுரத்தில் வெளியிலே நித்ய வாஸம் செய்து அருளி –திருவாய் மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ வசன பூஷணார்த்தம் அருளிச் செய்து
புத்ர க்ருத்யம் -சரம கைங்கர்யமும் செய்து அருளினார் இவருக்கும் –
நாராயணேட்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –

———

ஸ்ரீ ஸைல நாத குரு தீப்ரஸ யார்ய வந்த்யவ்
ஸும்யோ பயந்த்ரு முனி மானஸ ராஜ ஹம்சவ்
அஸ்மாகம் அப் யதிஸய அநக நித்ய போக்யவ்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே–10-

ஸ்ரீ ஸைல நாத குரு -மானசீகமான குரு பிள்ளை லோகாச்சார்யார்
தீ ப்ரஸ யார்ய வந்த்யவ்–ஞான கடாக்ஷம் மூலம் பெற்ற ப்ரஸாத லப்ய
ஸும்யோ பயந்த்ரு முனி மானஸ ராஜ ஹம்சவ் -சாரதமம் அள்ளிக் கொடுக்கும் கோ ததாதி —
மந்த்ர ராஜ மந்த்ர ரத்னம் -திருவாய் மொழியின் சாரங்கள் -ஆஸ்ரித பாரதந்த்ரன் -சேஷனாக —
வேண்டிய வேதங்கள் ஓதும் பெரியாழ்வார் -மங்களா ஸாஸன பரர்கள்
அஸ்மாகம் அப் யதிஸய அநக நித்ய போக்யவ் –பொய்யில்லாத மா முனிகள் -மெய்யயையே காட்டி அருளும் –
அதிசய பர ப்ரஹ்மத்தைக் காட்டி அருளி -ரஷ்ய ரக்ஷக -ஸ்வாமி சொத்து பாவம் போல்வன காட்டி அருளி –
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -தஞ்சம் புகுகிறேன்

——

அஸ்மத் குலாதிப ஜகத் குரு வர்ய தேவ
வாதீப கேஸரி முனீந்த்ர ஸமாஸ்ரிதாங்க்ரே
அஞ்ஞம் க்ருதாக ஸம் அபீஹ பவத் கிருபாயா
பாத்ரம் குருஷ்வ பகவன் ஸரணாகதம் மாம் –11-

அஸ்மத் குலாதிப ஜகத் குரு வர்ய தேவ –குரு பரம்பரையில் அந்வயம் உண்டே -ஜெகதாசார்யர்
வாதீப கேஸரி முனீந்த்ர ஸமாஸ்ரிதாங்க்ரே -ப்ரதிபாத பயங்கரர் போல்வாரும் ஆஸ்ரயிக்கும் படியான திருவடித் தாமரைகள்
அஞ்ஞம் க்ருதாகஸம் அபீஹ -நைச்யாநு சந்தானம்
பவத் கிருபாயா பாத்ரம் குருஷ்வ பகவன் ஸரணாகதம் மாம் –இசைவித்து அடியேனை ஆட் கொண்டு அருள வேண்டும்

கைங்கர்ய பிரார்த்தனை -அல்ல -சேதனன் பாசுரம் கேட்டவாறே திருமுகம் உகக்குமே-ஸித்த உபாயம் உபேயம் -ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம்

——————————–

ஸ்ரீ குமார லோகாச்சார்ய மங்களா ஸாஸனம்

——————————————————–———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கூரேச விம்சதி–ஸ்ரீ கூரநாத பஞ்சாஸத்

March 9, 2024

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ சீராமப்பிள்ளை என்னும் வேத வியாஸ பட்டரின் திரு மகனாரான ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ கூரேச விம்சதி

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ கூரேச பஞ்சாஸாத்

——-

ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம் ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் ஸூப குணம் வாஸாம் ஜயி ப்ராதரம்
லோகார்ய ப்ரணவம் ததுக்தி ரஸிகம் ஸர்வஜ்ஞ பட்டாரகம்
வந்தே தம் புவி விம்சதிம் வ்யதநுத ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய ய
–ஸ்வாமி பற்றிய தனியன் இவர் வம்சத்தவர் அருளிச் செய்தது

ய-யாவர் ஒருவர்
புவி -உலகில்
ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய–கூரத்தாழ்வானைப் பற்றிய
விம்சதிம்-இருபது ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்தோத்ரத்தை
வ்யதநுத- –அருளிச் செய்தாரோ
தம் -அப்படிப்பட்ட
ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம்-ஸ்ரீ ரெங்கத்தில் விளங்குகிற நடுவில் திருவீதியை இருப்பிடமாகக் கொண்டவரும்
ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம் -வேத வியாஸ பட்டர் என்னும் ஸ்ரீ ராம மிஸ்ரரின் திருக்குமாரரும்
வாஸாம் ஜயி ப்ராதரம் –வாக் விஜயி பட்டரின் ஸஹோதரும்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் –ஸ்ரீ பராசர பட்டரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்
லோகார்ய ப்ரணவம்-லோகாச்சார்யராகிய நம்பிள்ளையிடம் பக்தியை யுடையவரும்
ததுக்தி ரஸிகம் –அந்த நம்பிள்ளையின் ஸ்ரீ ஸூக்திகளின் சுவை யறிந்தவரும்
ஸூப குணம் –நல்ல குணங்களைக் கொண்டவருமான
ஸர்வஜ்ஞ பட்டாரகம் –ஸர்வஜ்ஞ பட்டரை
வந்தே –வணங்கி ஸ்துதி செய்கிறேன்

கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் இருவருக்கும் ரெங்கநாதன் ராம மிஸ்ரர் இயற் பெயர்கள்
எம்பெருமானார் இவர்களுக்கு பராசர பட்டர் என்றும் வேத வ்யாஸ பட்டர் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்-இவரது சகோதரரே வாக் விஜயீ பட்டர்

———

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா
ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே
ஸ்ரீ மச் சட ப்ரமதநே ஸ்திர பாவ பந்தம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரு மந்வஹம் ஆஸ்ரயாமி
–1-

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே–திருவரங்க நாதனுடைய கருணை பொங்கிய திருக்கண் பார்வையினால் அடையப் பெற்ற ஸகல ஸத் குண ஸமூஹங்களாலே மிகவும் விளங்குகின்ற
ஸ்ரீ மச் சட ப்ரமதநே -ஸ்ரீ கிருஷ்ண பக்தியாகிற செல்வத்தைப் பெற்ற சடகோப முனிவரிடத்தில்
ஸ்திர பாவ பந்தம்–நிலை பெற்ற திரு உள்ளப் பிணைப்பை யுடையவரான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –கூரத்தாழ்வானாகிய ஆசார்யரை-திரு மறு மார்பன் -ஆழ்வானுக்கு தந்தையரால் இந்த திரு நாம கரணம்
அந்வஹம் –தினந்தோறும்
ஆஸ்ரயாமி –ஆஸ்ரயிக்கிறேன் -ஸேவிக்கிறேன்

ஆழ்வார் இடம் பக்தியை ஆழ்வானுக்கு முதல் யோக்யதையாக அருளிச் செய்கிறார்
சடவாயுவை ஹூங்காரத்தாலே ஒறுத்து ஒட்டிய ஆழ்வார்
சட -வஞ்சனை -வேதத்தை இல்லை செய்யும் பாஹ்யர் -விபரீத அர்த்தங்களை சொல்லும் குத்ருஷ்டிகள் -ஆகிய வஞ்சகர்களை நிரஸித்து அருளியவர் என்றுமாம்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –

ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன்
மற்ற அரசு தானே

இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள்
என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்

லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை
–இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை
–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும்

அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
–என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம்
-என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே
-என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே
ஸ்ரீ லஷ்மணே முநிவரே அர்ப்பித ஸர்வ பாரம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அன்வஹம் ஆஸ்ரயாமி
–2-

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே –ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளில் ஈடுபட்ட திரு உள்ளமுடையவரும்
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே -பெரிய நம்பிகள் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டரிடம் இருந்து பெறப்பட்ட மோக்ஷ உபாயம் யுடையவருமான
ஸ்ரீ லஷ்மணே முநிவரே –பகவத் ராமானுஜராகிய முனிவர் இடத்திலே
அர்ப்பித ஸர்வ பாரம் –ஒப்படைக்கப்பட்ட -தம்மைக் காக்கும் -பொறுப்பு அனைத்தையும் யுடைய
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –ஸ்ரீ வத்ஸ சிஹ்நர் என்னும் ஆச்சார்யரை
அன்வஹம் ஆஸ்ரயாமி –தினந்தோறும் ஸேவிக்கிறேன்

பெரிய நம்பிகளுடைய இயற்பெயர் ஸ்ரீ மத் பராங்குஸர் -பெரிய வண் குருகூர் நம்பி -என்பதனுடைய ஸங்க்ரஹம் என்பர்
யோ நித்யம் அச்சுத -ஸ்லோகத்தில் ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -ப்ரஸித்தம் அன்றோ -பர ஸமர்ப்பணம் சரணாகதனுக்கு ஏற்படும் ஸ்வ பாவம் தானே
லஷ்மீ வாந் லஷ்மண -ஸ்ரீ இவ ஸ்ரீ மான் -இளைய பெருமாள் தானே பெரிய திருமலை இவருக்குச் சாற்றிய திரு நாமம்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

விஞ்ஞாபநாம் வநகிரீஸ்வர சத்யரூபாம்
அங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய
–ஸூந்தர பாஹு ஸ்தவம்-129-

ஆச்சார்ய விஸ்லேஷம் அஸஹ்யமாய் இருக்கையாலே இந்த விஸ்லேஷ வியசனம் நீங்கப் பெற பிரார்த்திக்கிறார்
கருணார்ணவ -வநகிரீஸ்வர-
சத்யரூபாம் –மாமகீநாம்-விஞ்ஞாபநாம் -அங்கீ குருஷ்வ –யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை
திரு உள்ளம் பற்றி அருள வேணும்
அஹம் யதாபுரம் ஸ்ரீ ரெங்க தாமநீ ஏகத-ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –

ஆசார்ய வர்ய விபவஸ்ய ச ஸிஷ்ய வ்ருத்தே
ஸீமேதி தேஸிக வரை பரி துஷ்யமாணம்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அந்வஹம் ஆஸ்ரயாமி –
-3-

ஆசார்ய வர்ய விபவஸ்ய -மஹா ஆச்சார்யருக்கு உரிய பெருமையும்
ச ஸிஷ்ய வ்ருத்தே –சத் சிஷ்யருக்குத் தக்க நடத்தையும்
ஸீமேதி –இவரே எல்லை நிறமானவர் என்று
தேஸிக வரை –ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களாலே
பரி துஷ்யமாணம் –மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப் பெற்றவரும்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம் –எப்போதும் உள்ளதாய் குற்றம் அற்றதுமான கருணையினால் குளிர்ந்து விளங்குகின்ற கடைக்கண் பார்வையை யுடையவருமான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் -கூரத்தாழ்வானை
அந்வஹம் ஆஸ்ரயாமி –தினமும் ஸேவிக்கிறேன்

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-சூர்ணிகை -203-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று பேர் அருளாளன் இடம் வேண்டிக் கொண்டதால் இவருடைய ஆத்ம குணம் தோன்றும்
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே -என்கிறோம்
எம்பெருமானார் திருமேனி ரக்ஷணம் இவர் சோழ ராஜன் இடம் அவரது காஷாய த்ரி தண்டங்களைத் தாங்கிச் சென்று பரத்வ நிர்ணயம் செய்து நம் தர்சனத்திக்காக தர்சனம் இழந்தார் அன்றோ

வ்யக்தீ குர்வன் நிகம சிரசாமர்த்த மந்தர் நிகூடம்
ஸ்ரீ வைகுண்ட ஸ்துதி மக்ருத ய ஸ்ரயசே சஞ்சநாநாம்
கூரா தீசம் குரு தர தயா துக்த சிந்தும் த மீடே
ஸ்ரீ வத் சாங்கம் ஸ்ருதி மத குருச் சாத்ர சீலைக தாமா–வைகுந்த ஸ்தவம்-முடிவு தனியன்

வேதாந்தங்களிலே பொதிந்து கிடக்கிற பொருள்களை விஸதீ கரித்து அருள நினைத்து
சத் புருஷர்களின் ஸ்ரேயஸ்ஸுக்காக
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தை அருளிச் செய்தவராயும்

மிகுந்த கருணைக் கடலாயும்
சாஸ்த்ர ஸித்தமான ஆச்சார்ய லக்ஷண
சிஷ்ய லக்ஷணங்களுக்கு
முக்கிய வாஸஸ் ஸ்தானமாயும்
உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்துதிக்கிறேன்

ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன்
புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான்  –
கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே
சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன்
ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க
புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள்  காண் -என்கின்றான் –பெரிய திருமொழி -8-1- வியாக்யானத்தில் அருளிச் செய்யப்பட ஐதிக்யம்

———-

ராமாநுஜார்ய மத ஸிந்து விதோ குத்ருஷ்டி
பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே தயாளோ
–4-

ராமாநுஜார்ய மத ஸிந்து –எம்பெருமானாருக்கு இஷ்டமான விசிஷ்டாத்வைத மதம் என்கிற கடலுக்குப் பொங்குதலை யுண்டு பண்ணும் சந்த்ரனே
விதோ குத்ருஷ்டி பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ –வேதத்துக்கு அவப்பொருள் கூறும் சங்கராதிகளாலும் வேதத்துக்குப் புறம்பான ஜைன புத்தாதிகளாலும் உண்டாக்கப்பட்ட அஞ்ஞானமாகிய இருளின் திரட்சியைப் போக்கும் ஸூர்யனே
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய –அடியேனுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பராசர பட்டருக்கு தந்தையானவரே
தயாளோ –தயையை யுடையவரே
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே –கூரத்தாழ்வானே தேவரீர் அடியேனுக்கு தஞ்சமாக வேணும்

கீழ் மூன்று ஸ்லோகங்களாலே தாம் ஆஸ்ரயிப்பதாகக் கூறி –
இதில் அவரையே ஸம் போதித்து அடியேனுக்கு உபாயமாக வேணும் என்று பிரார்திக்கிறார்
ஆச்சார்யரை சரண் அடைவது போல் பரமாச்சார்யாரையும் சரணம் அடைய வேண்டும் என்பதை
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-என்ற அநந்தரம்
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2–என்று மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்க ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணார விந்த
ஸேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூ பூர்ணாந்
பட்டார்ய வர்ய நிகமாந்த முனீந்த்ர லோக
குர்வாதி தேஸிக வராந் சரணம் ப்ரபத்யே
–5-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் –கூரத்தாழ்வான் தேவரீருடைய
சரணார விந்த ஸேவாம்ருதைக ரஸிகாந் –திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யமாகிய அம்ருதம் ஒன்றையே சுவைப்பவர்களும்
கருணா ஸூ பூர்ணாந் –தயையினால் மிகவும் நிறையப் பெற்றவர்களுமான
பட்டார்ய வர்ய –தேவரீர் திருக்குமாரராய் அடியேனுக்கு ஆசார்யரான ஸ்ரீ பராசர பட்டர் என்ன
நிகமாந்த முனீந்த்ர லோக குர்வாதி தேஸிக வராந் -அவரை ஆஸ்ரயித்த நஞ்சீயர் என்ன -அந்த நஞ்சீயர் சிஷ்யரான நம்பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களை
சரணம் ப்ரபத்யே –சரணம் பற்றுகிறேன்

கீழ் ஆழ்வானைச் சரணம் பற்றியவர் அவருடைய உகப்புக்கு இலக்காகிய சிஷ்ய பரம்பரையும் சரணம் புகுகிறார்
லோக குரு –நம்பிள்ளைக்கு -கந்தாடை தோழப்பரால் உகந்து சாற்றப் பெற்ற நாமம்
தேசிக திசதி –உபதிசநீதி தேசிக வ்யுத்பத்தி -ஹித உபதேசம் பண்ணும் ஆச்சார்யனுக்குப் பெயர் ஆயிற்று
புருஷகார சரணாகதியாகவும் ஆழ்வானுக்கு ப்ரீதி கார்யமாகவும் சரணம் புகுகிறார்

மா முனிகளும் ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாநி மூர்த்நா என்றும் ஸ்ரீ வத்ஸ சிஹ்ந சரணம் யதிராஜ மீடே –
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாதாநு சிந்தந பர –என்று அருளிச் செய்துள்ளார் அன்றோ

——————

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய பராஸரஸ்ய
குர்யாம் மதந்வய குரோ குருதாம் கதஸ்ய
கூராதி பஸ்ய குண சிந்த மந்தரங்கை
–6-

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந –ஸ்ரீ ரெங்க நாச்சியாரால் தமது திருக்கைகளாலே எடுத்துச் சீராட்டப் பெற்றதனால்
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய –நன்றாகக் பெற்ற எல்லாப் பெருமைகளையும் யுடையவரும்
மதந்வய குரோ-அடியேனுடைய குலத்திற்குத் தலைவருமான
பராஸரஸ்ய -ஸ்ரீ பராசர பட்டருக்கு
குருதாம் கதஸ்ய –தமப்பனார் உகந்த தன்மையை அடைந்த
கூராதி பஸ்ய –கூரத்தாழ்வானுடைய
குண சிந்தநம் –குண அனுபவத்தை
அந்தரங்கை (ஸஹ )–நெருங்கிய நண்பர்களுடன் கூடி
குர்யாம் -செய்யக் கடவேன்

கீழ் ஆழ்வானுடைய சிஷ்ய பரம்பரைகளைச் சரணம் பற்றி இதில் அவர்களுடன் சேர்ந்து ஆழ்வானுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறார்
ஸதாச்சார்யனுடைய குண அனுசந்தானம் அன்றோ ஸச் சிஷ்யனுக்கு உத்தாரகம்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உசாத்துணையாக இருந்த ஞானமும்
பகவத் குணங்களில் ஆழங்கால் பட்டதால் ஆழ்வான் என்று உடையவரால் திரு நாமம் சாத்தப் பெற்றவரும்
வெள்ளித் தட்டையும் வீசி எறிந்து வைராக்யத்தையும் காட்டியதால்
நாலூரானுக்கும் பேற்றை பிராரத்த தயை போன்ற குணங்கள்
ஓரிருவர் அனுபவித்தாள் பரியாப்தி பிறவாமல் அந்தரங்கற்களான பலருடன் சேர்ந்து ஆனந்திக்க ஆசைப்படுவது யுக்தம் இறே
தமது ஆச்சார்யரான பராசர பட்டருக்கு பிதாவையும் ஆச்சார்யராகவும் இருக்கும் பெருமையும் அசாதாரணம் அன்றோ

பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று

காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம்
–திருவாசிரியம் முதல் பாசுர வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின்
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்17-

கிந்து பிரபத்தி பல–ஆனாலும் பிரபத்தியின் மிடுக்காலே
தாரித விஷ்ணு மாய-தாண்டுவிக்கப்பட்ட எம்பெருமானுடைய மாயையை யுடையவர்களான
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –

மத் வம்சய ராஜ குல துர் லலிதம்–எனது முன்னோர்களுடைய சிறந்த குலத்தினில் பிறந்ததனால் உண்டான செருக்கு
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு வம்ச பிறப்பால் வந்த செருக்கு
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ எம்பெருமானார் முதலான முன்னோர்களைக் கடாக்ஷித்துத் தம்மை க்ஷமிக்கக் கூடும்
என்ற தைர்யத்தால் என்றபடி

துர் லலிதம்-துஷ்ட சேஷ்டிதம் என்றவாறு
கில ஏவம்-இப்படி ஸ்தோத்ரத்தில் கை வைக்கும்படி யாயிற்று அன்றோ –

யத்வா-அல்லது
ஸ்ரீ ரெங்க ராஜ –ஸ்ரீ ரெங்க நாதன் என்ன
கமலா -ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்ன –
இவர்களுடைய
பத லாலி தத்வம்–திருவடிகளில் சீராட்டி வளர்க்கப் பெற்றமை –
புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்டு சீராட்டி வளர்த்ததால்
எனது மழலைச் சொற்கள் இனிதாக அவர்களுக்கு இருக்குமே -இதனால் உண்டான ப்ரேம அதிசயத்தாலோ

மம -எனக்கு உண்டான
ஸ்துதி சாஹசே அஸ்மின் –-இந்த ஸ்தோத்ரம் ஆகிற துணிந்த ஸாஹஸச் செயலிலே
அபராத்யதி-குற்றவாளி யாகின்றது –

—————

வைராக்ய பக்தி ஜலதே க்ருதி நஸ்ச ஸத்ய
ஸங்கல்பநஸ்ய ம்ருதி தாரிகணஸ்ய நாத
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந புரதஸ்தவ கந்து மேவ
நார்ஹோ அஹமேவமதுநா ப்ரலாபமி ஹந்த –
-7-

நாத ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
வைராக்ய பக்தி ஜலதே -வைராக்யத்துக்கும் பக்திக்கும் கடல் போன்றவரும்
க்ருதி நஸ் ச -பண்டிதரும்
ஸத்ய ஸங்கல்பநஸ்ய -நினைத்த மாத்திரத்திலேயே அனைத்தையும் சாதிக்க வல்லவரும்
ம்ருதித அரிகணஸ்ய –காமம் வெகுளி மயக்கம் போன்ற உட் பகைக்கூட்டத்தை அழித்தவருமாகிய
புரதஸ் தவ –தேவரீருடைய எதிரில்
கந்து மேவ -சென்று நிற்பதற்கும் கூட
ந அர்ஹோ அஹம் -குற்றங்கள் நிறைந்து குண லவ லேசமும் இல்லாத அடியேன் தகுந்தவன் அல்லன் -இப்படி இருக்க
ஏவம் அதுநா ப்ரலாபமி ஹந்த -இப்போது இங்கனம் ஸ்தோத்ரம் என்றிட்டு எதையோ பிதற்றுகிறேன் -கஷடம் அந்தோ -நைச்ய அனுசந்தானம் செய்கிறார்

க்ருதிந் -சப்தத்துக்கு தீ மான் ஸூரி க்ருதீ –க்ருதீ குசல -அமரகோசம் -பண்டிதன் -சமர்த்தன் –பண்டா ஞானம் -ஞானமுடையவன் என்றபடி

————

மயா விதூர மநஸாம் மதுராக்ருதீநாம்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அந்தர் கதோ அஸ்ய மஹோ விபயஸ் சராமி –
-8-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–வாரீர் கூரத்தாழ்வானே
மயா விதூர மநஸாம் –கபடத்திற்கு வெகு தூரத்தில் உள்ள மனதை யுடையவர்களும்
மதுராக்ருதீநாம் –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவர்களும்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம் –பொறாமை உலோபித்தனம் விஷய போகக்களிப்பு செருக்கு இவற்றால் அடியோடு விடப்பட்டவர்களுமான
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் –தேவரீர் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினவர்களுக்குள்ளே
அஹம் அபி -அடியேனும்
அந்தர் கத –உட் பட்டவனாய்க் கொண்டு
விபயஸ் சாராமி -பயமற்றவனாய்த் திரிகிறேன்
அஹோ –ஆச்சர்யம்

ரூபமேவ அஸ்ய ஏதத் மஹிமாநம் வ்யாஸஷ்டே –திருமேனி அழகே இவருடைய பெருமையை விளக்கும்
ஆழ்வானுடைய அடியவர்களின் பெருமையைச் சொன்னபடி
அவர்களில் ஒருவனாய்த் திரிகிறேனே

————-

கூராதிப த்ரி வித தாப நிதாந மேதத்
ஸம் ரஷ்ய ஹேயதர மேவ கலே பரம் ஹா
ஆத்ம ஸ்வரூபமதி நிர்மல மத்யுபேஷ்ய
தஸ்யா நுரூப பல ஸூந்ய இஹைவ வர்தே
–9-

ஹே கூராதிப –கூரத்தாழ்வானே
த்ரி வித தாப நிதாநம் அத ஏவ –மூன்று வித தாபங்களுக்கும் மூல காரணமாகையாலே
ஹேயதரம் –அடியோடே விடத்தக்கதான
ஏதத் -இந்த அசுத்தமான
மேவ கலே பரம் –சரீரத்தை மட்டுமே
ஸம் ரஷ்ய –நன்றாகக் காப்பாற்றி
அதி நிர்மலம் -மிகவும் பரி சுத்தமான
ஆத்ம ஸ்வரூபம் -பகவச் சேஷமான எனது ஆத்ம ஸ்வரூபத்தை
அதி யுபேஷ்ய -மிகவும் அலக்ஷியம் செய்து
தஸ்யா நுரூப பல ஸூந்ய -அத்தகைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தக்க மோக்ஷமாகிய பயன் பெறாதவனாய்
இஹைவ வர்தே –இவ்வுலகிலேயே இருக்கிறேனே
ஹா -கஷ்டம் -அந்தோ

மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்றே ஆத்மாவை ஆதரிக்கிறது –
தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் ஆத்ம யாத்திரையில் அபேக்ஷையும் வேணும்
இவ்விரண்டும் இப்போது இல்லாவிட்டாலும் ஆழ்வான் சிஷ்யர்களோடு சேர்ந்து அவற்றையும் சம்பாதித்திக் கொண்டு ஆச்சார்ய அபிமானத்துக்கு இலக்காகி நிச்சயமாக முக்தி பெறலாம் என்று இந்த ஸ்லோகத்தினால் கருதினார் ஆயிற்று

————

ஜ்ஞாத்வாப் யக்ருத்ய கரணம் விஹிதா ப்ரவ்ருத்திம்
க்ரூர ப்ரமத்த இவ ஜாத்வநுதாபா ஸூந்ய
பாபாக்ருதிஸ் த்வதநு பந்தி ஷுஸஜ் ஐநேஷு
கூராதி பாஹமபி ஹ்ருஷ்ட மநாஸ் சராமி –
-10-

கூராதிப -கூரத்தாழ்வானே
யக்ருத்ய கரணம்-செய்யத் தகாத கார்யங்களை நாம் செய்கிறோமே என்றும்
விஹிதா ப்ரவ்ருத்திம் -ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட நல்ல கார்யங்களை நாம் செய்கிறோம் அல்லன் யென்றும்
ஜ்ஞாத்வா அபி -அடியேன் அறிந்து வைத்தும்
க்ரூர ப்ரமத்த இவ -கொலையாளியாக காம வெறியும் பிடித்தவன் போலே
ஜாது -ஒருக்காலும்
வநுதாபா ஸூந்ய -பச்சாதாபம் அற்றவனாய்
பாபாக்ருதிஸ் -மேலும் பாபாபிகளைச் செய்து -பாபமே வடிவு எடுத்தவனாக
அஹமபி -அடியேனும்
த்வதநு பந்தி ஷு ஸஜ் ஐநேஷு-தேவரீரைச் சேர்ந்த நல்லோர்கள் நடுவில்
ஹ்ருஷ்ட மநாஸ் -மனம் மகிழப்பெற்று
சராமி –ஸஞ்சரிக்கிறேன்
ஹா -கஷ்டம் அந்தோ

————

கூராந் வயஸ்ய தவ தோஷ சயஸ் தவேஹம்
ஸர்வ ஆத்மநாபி மத ஏவ ஹி வத்ஸலஸ்ய
ஸ்வாமிந் ஸ்ததாபி மம தத் கரேண து ஹந்த
தாபோ பவத் யஹரஹ கத முத்ஸஹேய –
-11-

ஸ்வாமிந் –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
தோஷ சயஸ் தவே–சொற் குற்றம் பொருள் குற்றமே வடிவெடுத்த தேவரீரைப் பற்றிய ஸ்தோத்ரம் செய்யும் விஷயத்தில்
கூராந் வயஸ்ய –அடியேன் போல் கூர குலத்தில் உதித்தவரும்
வத்ஸலஸ்ய-தோஷங்களைக் குணமாக நினைப்பவருமாகிய
தவ –தேவரீருக்கு
அஹம் –அடியேன்
ஸர்வ ஆத்மந-எல்லா வகையாலும்
அபி மத ஏவ ஹி –இஷ்டமானவனே அன்றோ
ததாபி -அப்படி இருந்தாலும்
மம து -எனக்கோ என்றால்
தத் கரேண -அத்தகைய ஸ்தோத்ரம் செய்வதில்
யஹரஹ -தினம் தோறும்
தாப பவதி –கஷ்டம் உண்டாகிறது
கத முத்ஸஹேய –எங்கனம் இதில் முயல்வேன்
ஹந்த -கஷ்டம்

நம் குலக்கொழுந்து வாயில் இருந்து ஏதாவது வருமோ -என்று எதிர்பார்த்து உள்ளீர் -குலக்கொழுந்தோ இறாய்க்கிறாரே என்று அன்றோ உள்ளீர்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந தவ பூரி தயாபகாயாம்
ஸ்நாத்வாதி நிர்மல மோபி மிதம்ப சோஹம்
நிந்த்யேஷு கர்ம நிசயேஷு நிரூட புத்தி
மஜ்ஜாம்யத ஸ்தமஸி ஹா தவ நிர் பரோஸ்மி
–12-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –வாரீர் ஆழ்வானே
தவ –தேவரீருடைய
பூரி தயா ஆபகாயாம் –பெரும் கருணை யாகிய ஆற்றில்
ஸ்நாத்வா–நீராடியதனால்
அதி நிர்மல மோபி -மிகப் பரி ஸூத்தனாய் இருந்த போதிலும்
மிதம்ப சோஹம் –நீசனான அடியேன்
நிந்த்யேஷு –இகழத்தக்க
கர்ம நிசயேஷு –பாப காரிய ஸமூஹங்களிலே
நிரூட புத்தி -வேரூன்றிய எண்ணம் யுடையவனாய்
தமஸி-தம குணம் நிறைந்த இந்த ஸம்ஸாரத்திலே
மஜ்ஜாமி -மூழ்கிறேன் -ஆகையால்
தவ -தேவரீருடைய
நிர் பரோஸ்மி -ரக்ஷணப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்
ஹா -ஐயோ

பெரியோர்கள் எதிரில் ஸ்வ தோஷங்களை விண்ணப்பம் செய்வதும் ஸ்தோத்ரங்களிலே அடங்குமே

தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–
வைகுண்ட ஸ்தவம்-90-

எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு
உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ஸ்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்

————-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அஸ்மாக மப்யநுசிதேஷு பவேச் சிகீர்ஷா
ஸா ஸர்வதா பவதி துக்கரீ தவைவ
தஸ்மாத் த்வமேவ ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –
-13-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந -ஆழ்வானே
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் அபி -தேவரீருடைய திருவடிகளை ஆஸ்ரயித்து இருந்த போதிலும்
அஸ்மாகம் –அடியோங்களுக்கு
யநுசிதேஷு –தகாத காரியங்களில்
சிகீர்ஷா -செய்ய வேண்டும் என்னும் ஆசையானது
பவேத் -உண்டாக்க கூடும்
ஸா -அந்த ஆசை
ஸர்வதா –எல்லா வகையிலும்
தவைவ-தவ ஏவ -தேவரீருக்கே
பவதி துக்கரீ –வருத்தத்தை உண்டு பண்ணுவதாக ஆகிறது
தஸ்மாத் –ஆகையால்
த்வமேவ –தேவரீரே
ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –அத் தீய செயகைகளைப் பற்றிய சிந்தனையைப் போக்கி அருள வேணும்

——–

கூராதி பால மதி வேல க்ருதேந கர்ம
மூலேந யத் ஸூகமவாப்த மதாபி துக்கம்
தச் சக்நுமோநு ந நிவாரயிதும் ச சோடும்
தத் சங்க மேவ விநிவர்த்தய தே ப்ரபாவாத்
–14-

கூராதிப-கூரேசரே
அதி வேல க்ருதேந -அடியேனால் எல்லை கடந்து செய்யப்பட
கர்ம மூலேந –தீ வினை என்னும் காரணமானது
அலம் -இனி வேண்டாம் –செய்தன போதும்
யத் அவாப்தம் -அதனால் எது அடையப்பட்டதோ
தத் ஸூகம் அபி -அது ஸூகம் என்று மேல் எழத் தோன்றினாலும்
துக்கம் -ஆராய்ந்து பார்த்தால் துக்கமே யாகும்
தத் -அந்தத் துக்கத்தை
நிவாரயிதும்-வராமல் தடுப்பதற்கும்
ச சோடும் -வந்தால் பொறுத்துக்க கொள்ளுவதற்கும்
சக்நுமோநு ந -அடியோங்கள் வல்லமை யுடையோமோ -அல்லோம் ஆகையால்
தே ப்ரபாவாத் –தேவரீருடைய மஹிமையினாலேயே
தத் சங்க மேவ -அது தீ வினையில் அடியோமுக்கு உண்டாகும் ஆசையை
விநிவர்த்தய -நன்றாகக் போக்கி அருள வேணும்

————-

ஸ்ம்ருத்வா மதீய விபரீத கதீஸ் ததைவ
பக்நாஸயோப் யத ச ஹ்ருஷ்ட மநஸ் சராமி
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் த்வதி வேல ஸீல
வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் விம்ருஸ்ய
–15-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–ஆழ்வானே
மதீய விபரீத கதீஸ்–அடியேனுடைய நியாய விருத்தமான நடத்தைகளை
ஸ்ம்ருத்வா –நினைத்து
பக்நா ஸ யோபி –நமக்கு நன்மை கிடைக்கப் போகிறது இல்லை என்று மனம் உடையப் பெற்றவனாக இருந்த போதிலும்
அஹம் -அடியேன்
அத ச -அதற்கு அடுத்த ஷணத்திலேயே
பவத -தேவரீருடைய
அதி வேல ஸீல வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் -எல்லை கடந்த நீர்மை பேர் அன்பு நல்ல மனமுடைமை கருணை முதலிய நற் குணங்களை
விம்ருஸ்ய து -ஆராய்ந்து பார்த்தாலோ என்றால்
ஹ்ருஷ்ட மநஸ் –நமக்கு கிடைப்பது உறுதி என்று மனம் மகிழப் பெற்றவனாய்
சராமி -ஸஞ்சரிக்கிறேன்

———–

கூராதி நாத குண சந்ததி சிந்தநேந
கஸ்யாஸயஸ் தவ ந யாதி பரம் ப்ரமோதம்
நிஸ் ஸம்ஸயத்வமத நிர் பயதாம் ச ஸம்யக்
வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் பரமாம் விரக்திம் –
-16-

கூராதி நாத –வாரீர் கூரேசரே
தவ -தேவரீருடைய
குண சந்ததி சிந்தநேந –குண ஸமூஹத்தை நினைப்பதனால்
கஸ்யாஸயஸ் -எவனுடைய மனம் தான்
பரம் ப்ரமோதம் -உயர்ந்த மகிழ்ச்சியையும்
நிஸ் ஸம்ஸயத்வமதம் -உய்வு பெறுவதில் ஸந்தேஹம் இல்லாமையும்
அத -மேலும்
நிர் பயதாம் -ஸம்ஸார பயம் இல்லாமையும்
ஸம்யக் வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் -நல்ல பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யத்தில் உண்டாகும் முயற்சியில் விருப்பத்தையும்
பரமாம் –மிக உயர்ந்த
விரக்திம்–இதர விஷயங்களில் பற்று இல்லாமையும்
ந யாதி -அடைய மாட்டாது

————

ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி
ஸ்ருத்வா ப்ர ஹ்ருஷ்ட மநஸா யதி சேகரேண
உக்தாம் ஸூபாக்ஷித ஸூதாம் ச நிஸம்ய நாத
த்வத் பந்து தாஸ்தி மம சேத் யபயஸ் சராமி
–17-

நாத –ஸ்வாமீ ஆச்சார்யனே
ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி –ஸ்ரீ ரெங்கநாதனால் தேவரீருக்கு அருளிச் செய்யப்பட்ட விடை வார்த்தைகளை
ஸ்ருத்வா –கேட்டு
ப்ர ஹ்ருஷ்ட மநஸா -ஸந்தோஷமுடையவரான
யதி சேகரேண -யதிராஜரான எம்பெருமானாராலே
உக்தாம் –அருளிச் செய்யப் பெற்ற
ஸூபாக்ஷித ஸூதாம் –அமுதம் போல் இனிய நல் வார்த்தையை
நிஸம்ய -கேட்டு
மம ச -அடியேனுக்கும்
த்வத் பந்துதா–தேவரீரோடு உறவானது
அஸ்தி இதி -இருக்கிறது என்று நினைத்து
யபயஸ் சராமி –ஸம்ஸார பயம் அற்றவனாய் அடியேன் திரிகிறேன்

ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளுக்கு எல்லாம் மோக்ஷம் அளிப்பதாக ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ததால்
எம்பெருமானாரும் சந்தோஷித்து உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தில் எறிந்து ஏற்றுக் கொண்ட ஐதிக்யம்
இவரும் பயம் கெட்டுத் திரிகிறார் என்கிறார்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவாதாப் யபிமாநி தோஹம்
இத்யா தரேண ஸததம் மயி ரங்க நாத
குர்வந் தயாம் ந விஜஹாதி க்ருதாக ஸம் மாம்
ரக்ஷத்யஹோ த்வயிது கீத்ருக நுக்ர ஹோஸ்ய
–18-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஆழ்வானே
பவதா அபி -தேவரீ ராலும்
அஹம் -அடியேன்
யபிமாநித–இவன் நம்முடையவன் என்று அபிமானிக்கப் பட்டவன்
இதி -என்ற காரணத்தினால்
ரங்க நாத-திருவரங்க நாதன்
யா தரேண –அன்புடன்
ஸததம் -எப்போதும்
தயாம் குர் வந்-தயை புரியுமவராய்
க்ருதாக ஸம் -பாபங்களை செய்திருக்கிற
மாம்-அடியேனை
ந விஜஹாதி -அது காரணமாக விடுவது இல்லை
ரக்ஷதி -அதற்கு எதிராக காப்பாற்றுகிறார்
யஹோ -ஆச்சர்யம்
அஸ்ய –இந்தத் திருவரங்க நாதனுக்குத் தான்
த்வயி–தேவரீர் திறத்தில்
கீத்ருக் அநுக்ரஹ–எத்தகைய அநுக்ரஹம்

பெரிய பெருமாளின் ஆழ்வான் மீது உள்ள அனுக்ரஹம் இவ்வாறு தமது அளவும் ஏறிப் பாய்வதே என்று ஆச்சார்யப் படுகிறார்

—————-

ஸ்ரீ வத்ஸ லக்ஷண சரீரவ ஸோபி நித்யம்
நாதாநு தப்த இவ ச ப்ரலபாமி தே அக்ரே
மைத்ர்யா ஸடஸ் ச கல ஏஷ இதீஹ மத்வா
மாமந் வஹம் ஸமபி ஷிஞ்ச க்ருபா கடாஷை
–19-

நாத ஸ்ரீ வத்ஸ லக்ஷண –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
அஹம் –அடியேன்
நித்யம் -எப்போதும்
சரீரவ ஸோபி -சரீர பரதந்த்ரனாய் அஃது ஒன்றையே பேணுமவனாய் இருந்த போதிலும்
அநு தப்த இவ -பச்சா தாபப்படுகின்ற நல்லவன் போலே
தே அக்ரே–தேவரீர் திரு முன்பே
ச ப்ரலபாமி -வந்து நிற்பதே யன்றிச் சிலவற்றைப் பிதற்றவும் செய்கின்றேன்
ஸடஸ் ச கல ஏஷ-இவன் வஞ்சகனாயும் துஷ்டனாகவும் இருக்கிறான் -இவனுக்குத் தாம் அல்லது வேறு கதியில்லை
இதி மத்வா –என்று திரு உள்ளம் பற்றி
இஹ மாம் -இப்போது அடியேனை
மைத்ர்யா -ஸ்நேஹத்துடன்
க்ருபா கடாஷை –கிருபையிதே கூடிய திருக்கண் பார்வை களாலேயே
அந் வஹம் அபி ஷிஞ்ச –தினம் தோறும் நீராட்டி அருள வேணும் –

————————

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ
விஜ்ஞ்ஞாபநம் த்வி ஹ மயோதித முக்தி மாத்ரம்
ஸார்த விசார்ய ஸஹ ஸாத்ய தவைவ பூர்த்யா
கூராதி போந்ந மய மாமிஹ ஸர்வ தாத்வம் –
-20-

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ –ஆபத்தை அடைந்து அதனால் இரங்கத் தக்க ஜனங்களை ரக்ஷிப்பதில் விரதம் பூண்டவரே
கூராதிப –கூரத்தாழ்வானே
இஹ -இப்போது
மயோதி தம் -அடியேனால் சொல்லப்பட்ட
உக்தி மாத்ரம் –அர்த்தம் இல்லாமல் வெறும் பேச்சான
விஜ்ஞ்ஞாபநம் து -விண்ணப்ப வார்த்தைகளையே
தவைவ பூர்த்யா -அடியேனுடைய தோஷ பூர்த்தியைப் பாராமல் -தேவரீருடைய குண பூர்த்தியினாலேயே மட்டுமே
ஸார்த்தம் விசார்ய -அர்த்தத்தோடு கூடியதாக எண்ணி
அத்ய இஹ –இப்போது இவ்விடத்தில்
ஸஹஸா–தாமதம் செய்யாமல்
த்வம் -தேவரீர்
மாம் -அடியேனை
உந்ந மய –உத்தரித்து அருள வேணும் -முக்தி நல்க வேணும் –

அடியேனுடைய இந்த விண்ணப்பமும் மனப்பூர்வகமாக செய்தது அன்று
வெறும் வேஷமே தான்
இருந்தாலும் தேவரீருடைய குண பூர்த்தியாலேயே அடியேனை இந்த சம்சாரக் கடலில் இருந்து எடுத்து
பரமபத அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து
இந்த கூரேச விம்சதியைத் தலைக்கட்டி அருளினார் ஆய்த்து-

———————————-

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் அருளிச் செய்த-ஸ்ரீ கூர நாத பஞ்சாஸத்

ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் சரணாப்ஜ யுக்மம்
ஸ்ரேயஸ் கரம் தநு ப்ருதா மகிலாக ஹந்தரு
நத்வா கரோமி விபுதா வலி துஷ்டயே அஹம்
கூராதிப ஸ்துதி மிமாம் குஸல ப்ரதாத்ரீம்
–மங்கள ஸ்லோகம்

தநுப்ருதாம் –உடல் எடுத்த மனிதர்களுக்கு
ஸ்ரேயஸ் கரம்–நன்மைகளை செய்ய வல்லதும்
அகில அக ஹந்தரு–எல்லாப் பாபங்களையும் அழிக்க வல்லதுமான
ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் –திருவேங்கட ராமானுஜ முனிவருடைய
சரணாப்ஜ யுக்மம்-திருவடித்தாமரை இணையை
நத்வா –வணங்கி
அஹம்-அடியேன்
விபுத ஆவலி துஷ்டயே –ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தின் சந்தோஷத்தின் பொருட்டு
இமாம் -இந்த
குஸல ப்ரதாத் ரீம் -க்ஷேமத்தை அளிக்க வல்லதான
கூராதிப ஸ்துதிம் –கூரத்தாழ்வானைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கரோமி -இயற்றுகிறேன்

இந்த கிரந்தத்தில் இறுதியில் -ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா பஞ்சா ஸத் கூர நாத்தஸ்ய ஸ்தோத்ரமீரிதம் உத்தமம் -என்ற ஸ்லோகத்தில் இதன் கர்த்தாவின் திரு நாமமும்
இவர் ஆச்சார்யர் ஸ்ரீ சைல லஷ்மண முனி -என்பவர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பார் ஜீயர் திருமடத்தை ஸ்தாபித்த முதல் ஜீயரான திருவேங்கட ராமானுஜ ஜீயர்
இவர் ஸ்ரீ வான மா மலை மடத்தைச் சேர்ந்தவர்
இவர் திருமாளிகை 2 ஸ்வாமி -திருவாழி அண்ணன் ஸ்வாமிக்குத் திருத் தகப்பனார்

——-

ஜய ஜய யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம
ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க
ஜய ஜய குமதேப வ்ராத ஹர்யஷ வித் வந்
மணி வர நிகமாந்தா கல்ப கூராதி நாத
–1-பல்லாண்டு பாடித் தொடங்குகிறார்

யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க –யதிராஜரான அம்பெருமானாருடைய திருவடித் தாமரை இணையில் இருந்து பெருகுகின்ற தேனைச் சுவைப்பதில் ஆசை கொண்ட திரு உள்ளமுடையவரே
குமதேப வ்ராத ஹர்யஷ–நீசச் சமயிகள் என்கிற யானைகளின் கூட்டங்களுக்கு ஸிம்ஹம் போன்றவரே
வித் வந் மணி வர –பண்டித ஸ்ரேஷ்டர்களிலே தலைவரே
நிகமாந்தா கல்ப –வேதாந்தங்களுக்கு அணி செய்தவரே-மங்கள ஸூத்ரம் போன்ற ஸ்தவங்களை அருளிச் செய்தவர் அன்றோ
கூராதி நாத –கூரத்தாழ்வானே
ஜய ஜய -ஜய ஜய –தேவரீர் எல்லோரினும் மேம்பட்டு விளங்க வேணும்

————

ஜயதி ஜகதி நைஜோத் வேல மேதா விசேஷாத்
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித க்ஷித கூர நாத –
-2-

ஜயதி ஜகதி
நைஜோத் வேல மேதா விசேஷாத் –தமக்கு இயற்கையாக ஏற்பட்டதும் எல்லை கடந்ததுமான அறிவின் மேன்மையினாலே
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால -நன்றாக அறியப்பட்ட போதாயன முனிவர் இயற்றிய வ்யாஸ ஸூத்ர வ்ருத்தியின் அர்த்த ஸமூஹத்தை உடையவரும் –
அது காரணமாக
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத –உண்டாக்கப்பட்ட யதிராஜர் திரு உள்ளத்தில் எல்லையற்ற உகப்பை யுடையவரும்
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித -தம்மை அடைந்த ஜனங்களை நன்றாகக் காப்பாற்றுவதில் விரதம் பூண்டவருமான
கூர நாத –ஜயதி -கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

————-

ஜயதி ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத்
உப நிஷது பகூடாந் ந்யாய தோர்த்தாந் விவ்ருண்வந்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ
சமித விமத வாத ஸாந்திமாந் கூர நாத –
-3-

ஜயதி
ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத் –திருமாலின் பரம் பொருட்டாண்மையை நிலை நாட்டுவதில் எல்லை கடந்த மகிழ்ச்சியினால்
உப நிஷது பகூடாந் –உப நிஷத்துக்களில் மறைந்து கிடக்கிற
அர்த்தாத் -அர்த்தங்களை
ந்யாயத -உபய மீமாம்ஸா யுக்திகளைக் கொண்டு
விவ்ருண்வந் –விளங்கா நின்றவராய்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ –வெல்லப்பட்ட சிவனுடைய பரத்வத்தைத் தம்மிடம் கேட்க விரும்பிய சோழ அரசனை யுடையவரும்
அது காரணமாக
சமித விமத வாத -ஓயச் செய்யப்பட சிவனே பரண் என்று கூறுமவர்களின் எதிர் வாதத்தை யுடையவரும்
ஸாந்திமாந் –பொறுமை யுடையவருமாகிய
கூர நாத –ஜயதி –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

———-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே பத்த தீஷா
கிமு புவமவ தீர்ண ஸ்ரீ பதி கிந்நு ஸைந்யேட்
உத ஸடரிபுரித் யுல்லிக் யமாநோ மஹத்பி
ஜயதி குரு வரேண்ய கூர நாதோ மஹாத்மா –
-4-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே –ஸம்ஸாரமாகிய கடலிலே ஆழ அழுந்தியவர்களை உயரத் தூங்குவதில்
பத்த தீஷா –நியமம் பூண்டவராய்
புவமவ தீர்ண –பூ உலகில் அவதரித்த
ஸ்ரீ பதி கிமு –திருவின் மணவாளனோ
கிந்நு ஸைந்ய ஈட–சேனை முதல்வரோ
உத ஸடரிபு -நம்மாழ்வாரோ
இவர்
இதி -என்று
மஹத்பி–பெரியோர்களால்
யுல்லிக் யமாந-ஊகிக்கப் படுமவரும்
குரு வரேண்ய –ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும்
மஹாத்மா–பரந்த மனமுடையவருமான
கூர நாத ஜயதி – கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

மூவரைச் சொன்னது திரு மகளுக்கும் உப லக்ஷணம் -திருமால் திரு மகள் சேனை முதலியார் நம்மாழ்வார் –உத்தர உத்தர கருணையில் மிக்கு
அனைவருமாகச் சேர்ந்தே கூரத்தாழ்வான் -காரேய் கருணை எதிராஜரை ஆஸ்ரயித்து அவருக்கு பவித்ரம் ஸ்தானீயம் ஆனார்

————

நிரவதிக தயாப்திர் நாயமாவிர்ப வேச் சேத்
இஹ புவி விமலாத்மா கூர நாதோ மஹீ யாந்
விவித விஷய நக்ரக் ராம ஜூடம் கதம் வா
பவ ஜல நிதி பூரம் நிஸ் தரே யுர்ஜ நவ்கா
–5-

நிரவதிக தயாப்திர் -எல்லையற்ற கருணைக்கு கடல் போன்றவரும்
விமலாத்மா-மலம் அற்ற மனம் படைத்தவரும்
மஹீ யாந்-அதனால் மிகப் பெரியவருமான
அயம் கூர நாதோ –இந்தக் கூரத்தாழ்வான்
இஹ புவி-இந்த உலகில்
ந ஆவிர்பவேத் சேத்-அவதரிக்கவில்லை என்றால்
விவித விஷய நக்ரக்ராம ஜூடம்-பலவகைப்பட்ட ஸப்தாதி விஷயங்கள் ஆகிய முதலைகளின் கூட்டங்களால் அடையப்பட்ட
பவ ஜல நிதி பூரம் –ஸம்ஸாரமாகிய கடல் வெள்ளத்தை
ஜந ஓகா–மனிதர்கள் திரள்கள்
கதம் வாநிஸ்தரேயுர்–எப்படித்தான் தாண்ட முடியும் –

கடலில் முதலைகள் இருக்குமே -சம்சாரக் கடல் என்றதால் இங்கு ஸப்தாதி விஷயங்களை முதலைகள் என்கிறார்
ஸ்வரூப நாசத்தை உண்டாக்கும் அன்றோ

————–

ஸூ சரித பரி பாகோஸ் மாத் ருசாம் கிந்நு பத்மா
கமிது ரகில நேது ப்ரேம ஸார க்ருதாத்மா
விலஸதி புவி கூரேசாத்ம நோதீர்ய மாண
ஜயதி விபுத வர்யை கூர நாத க்ருபாலு –
-6-

ய –யாவர் ஒருவர்
கூரேசாத்ம-கூரேசர் என்னும் உருவமுடையவராக
விலஸதி புவி -உலகில் விளங்குகிறாரோ
ஸ க்ருபாலு –கூர நாத -அந்த தயை மிக்க கூரத்தாழ்வான்
அஸ் மாகம் – நம்முடைய
ஸூ சரித பரி பாகஸ் –புண்ணியத்தின் பயனானது
க்ருதாத்மா கிந்நு-வடிவெடுத்து வந்தவரோ –
அல்லது
பத்மா கமிது-திருமகள் மணவாளனாய்
அகில நேது–ஸர்வேஸ்வரனாகிய எம்பெருமானுடைய
ப்ரேம ஸார –சிறந்த ப்ரீதியானது
க்ருதாத்மா கிந்நு -வடிவெடுத்து வந்தவரோ
இதி -என்று
விபுத வர்யை –ப்ராஹ்மண உத்தமர்களால்
உதீர்ய மாண –புகழப் பட்டவராய்க் கொண்டு
ஜயதி -மேம்பட்டுத் திகழ்கிறார்

ஆழ்வான் அவதரிக்க நாம் செய்த புண்ணியம் எல்லாம் சேர்த்தாலும் செய்ய முடியாமையைக் கருதி பகவானுடைய பேர் அன்பே ஆழ்வானாக அவதரித்ததோ என்று பெரியவர்கள் கூறுவதாக அருளிச் செய்கிறார்-

———–

அபஹ்ருத பவதாப (பை )பாவநை ப்ரேம சாந்த்ரை
அம்ருத ரஸ நிதாநை ஆத்ம பாஜாம் கடாஷை
அநு கலமுப குர்வன் ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா
ஜலதி துஹி த்ருஜாநே ப்ராஜதே கூர நாத –
-7-

கூர நாத –கூரத்தாழ்வான்
ப்ரேம சாந்த்ரை -அன்பு செறிந்தவைகளும்
பாவநை –பரிசுத்தியை உண்டாக்குமவைகளும்
அம்ருத ரஸ நிதாநை-மோக்ஷ ஆனந்துக்கு மூல காரணமானவைகளுமான
கடாஷை -தமது கடைக்கண் பார்வைகளாலே
ஆத்ம பாஜாம் –உடல் எடுத்த ஜீவாத்மாக்களுக்கு
ஜலதி துஹித்ரு ஜாநே–கடல் அரசன் பெண்ணான திருமகள் மணவாளனைக் குறித்து
ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா-நாம் எல்லாருக்கும் அடிமை என்னும் அறிவை
அநு கலமுப குர்வன் –க்ஷணம் தோறும் உண்டாக்கிக் கொண்டு
அதனால்
அபஹ்ருத பவதாப (பை )-அவர்களுடைய ஸம்ஸார தாபத்தைப் போக்குமவராய்
ப்ராஜதே –விளங்குகிறார்-

ஞானக்கை தா என்றார் இறே ஆழ்வாரும்
சேஷத்வ ஞானத்தை உண்டாக்கி ஸம்ஸார தாபத்தைப் போக்கி மோக்ஷம் அடைவிப்பர் ஆழ்வான் என்கிறார் இதில்
ஆழ்வானுடைய கடாக்ஷமே இவற்றைச் செய்யுமே –

—————-

க்ருத குவலய மோத கோச பூத கலாநாம்
த்விஜ பதிரகிலாசா சோபயந் நைஜதாம்நா
ப்ரஸமித பரிதாப ப்ராப்ய விஷ்ணோ பதம்தத்
விலஸதி விபு தேட்ய கூர நாதவ்க்ஷதீ ச
–8-

க்ருத குவலய மோத –1-பூ மண்டலத்துக்கு மகிழ்ச்சியைத் தருமவராய் -2- நெய்தல் மலருக்கு மலர்ச்சியைத் தருமவனாய்
கோச பூத கலாநாம் –1- ஸாஸ்த்ரங்களுக்கு நிதியானவராய் -2-சந்த்ர கலைகளுக்கு நிதியானவனாய்
த்விஜ பதிர் -1- ப்ராஹ்மணர்களுக்குத் தலைவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையால் யாகம் செய்யும் ப்ராஹ்மணர்க்குத் தலைவனாய்
நைஜதாம்நா -1- தனது ஞான ஒளியாலே -2- தனது காந்தியாலே -நிலாவினால் –
அகில ஆசா –1-எல்லாத் திக்குகளில் உள்ளவர்களையும் -எ2-ல்லாத் திக்குகளையும்
சோபயந் -1-2- விளங்கச் செய்து கொண்டு
ப்ரஸமித பரிதாப -1- ஸம்ஸார தாபத்தைத் தணிப்பவராய் -2- வெயிலின் வெப்பத்தைத் தணிப்பவனாய்
விபுதேட்ய-விபூத ஈடய -1- ப்ராஹ்மணர்களாலே ஸ்துதிக்கத் தக்கவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையாலே யாகத்தில் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொள்ளுகிற தேவர்களால் ஸ்துதிக்கத் தக்கவனாய்
தத் -1-2- பிரஸித்தமான
ப்ராப்ய விஷ்ணோ பதம்–1- பரமபதத்தை அடைந்து -2- ஆகாசத்தை அடைந்து
கூர நாத ஓக்ஷதீ ச -1- கூரத்தாழ்வான் ஆகிற 2- சந்திரன்
விலஸதி -விசேஷமாகப் பிரகாசிக்கிறான்
ஆழ்வான் சந்திரன் போன்றவர் என்று கொண்டு உபம அலங்காரம்
ஆழ்வானையே சந்த்ரனாகக் கொண்டு ரூப அலங்காரம் -ரூபகம் -உருவகம்

———–

ஸூ ஜந ஹ்ருதய பத்மோல்லா ஸமாராத் விதந்வந்
குஜந குவலயாநாம் மீலநம் சாபி குர்வன்
உதய மதி கதோ அசவ் கூர நாதாம் ஸூமாலீ
துரித திமிர ஜாலம் தேஹ பாஜாம் ஹி நஸ்தி-
-9-

அசவ் கூர நாதாம் ஸூமாலீ -அந்த கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
உதய மதி கதோ -உதயத்தை அடைந்தவனாய்க் கொண்டு
ஆராத் –தூரத்தில் இருந்தே
ஸூ ஜந ஹ்ருதய -நல்லோர்களுடைய மனமாகிய
பத்மோல்லா ஸம் -தாமரையின் மலர்ச்சியை
விதந்வந்-செய்து கொண்டும்
குஜந குவலயாநாம் –தீயவர்களாகிய ஆம்பல் மலர்களினுடைய
மீலநம் சாபி குர்வன் –கூம்புதலையும் செய்து கொண்டும்
தேஹ பாஜாம்–உடல் எடுத்த மனிதர்களுடைய
துரித திமிர ஜாலம் –பாபங்களாகிய இருளின் திரட்சியை
ஹி நஸ்தி–நாஸம் செய்கின்றான் –

கீழ் சந்தனுக்கு ஒப்புமை சிலேடையில்
இங்கு அடை மொழிகளில் உள்ள பொருள்களை -ஒன்றை மற்ற ஒன்றாக உருவகம் க்ருத குவலய மோத –என்பதன் கண் குவலயம் என்பதற்கு பூ மண்டலம் என்றும் நெய்தல் மலர் என்றும் காட்டி அருளுகிறார்

————–

அம்ருத ஜநந பூமி ஸம்ஸ்ரிதா நந்த தாயீ
ஸகல ஸூகுண ரத்நா வாஸபூ பூர்ண ஸத்த்வ
விமதகத கவர்யைர் நாவிகைரப்ய லங்க்ய
ஸ்புரதி புவி கபீர கூர நாதாம் ருதாப்தி –
-10-

அம்ருத -1- மோக்ஷத்திற்கு -2-அம்ருதத்திற்கு
ஜநந பூமி –பிறப்பிடமாய்
ஸம்ஸ்ரிதா நந்த தாயீ –தன்னை அடைந்த 1- முமுஷுக்களுக்கு -2- இந்த்ராதி தேவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமவராய்
ஸகல ஸூகுண ரத்ந ஆ வாஸபூ -எல்லா 1- நல்ல குணங்களாகிற 2- ரத்னங்களுக்கு இருப்பிடமாய்
பூர்ண ஸத்த்வ –1- சத்துவ குணம் நிறைந்தவராய் -2- முதலை முதலிய பிராணிகளால் நிறைந்ததாய்
விமத கதக வர்யைர் -1- வாதம் செய்யும் புறமதத்தவர்களாகிய 2- படகோட்டிகளாலே
அஸங்க்ய –1- எதிர்க்க முடியாதவராய் -2- தாண்ட முடியாததாய்
கபீர-1- ஆழ்ந்த மனமுடையவருமான -2- ஆழமுடையதுமான
நாவிகைரப்ய ல
கூர நாதாம் ருதாப்தி –1-கூரத்தாழ்வானாகிய -2- அமுதக்கடல் -பாற் கடல்
புவி -பூமியில்
ஸ்புரதி –விளங்குகிறது

——————

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரிதோஷயோ ஜடாஸ யோதயோ
கலங்க பாவ பாஸூரோ நிராக்ருதோக்ர சங்கம
விராஜ மாந விக்ரஹோ திவாபி மித்ர ஸந்நிதவ்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ விபாதி கூர ராட் விது
–11-

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரித-எப்போதும் வளர்ச்சியை அடைந்ததும்
அஷய –தேய்வில்லாததும்
அஜடாஸயோதயோ –ஜலா சயமான கடலில் தோன்றாததும் புத்திமான்களுடைய மனதில் தோன்றுவதும்
அகலங்க பாவ பாஸூரோ -மறு -குற்றம் -இல்லாமையால் பிரகாசிக்குமதும்
நிராக்ருதோக்ர சங்கம–சிவபெருமானுடைய -தலையோடு சேர்த்தியை மறுத்ததும்
மித்ர ஸந்நிதவ் -ஸூர்யனுடைய சமீபத்தில்
திவாபி-பகலிலும்
விராஜ மாந விக்ரஹோ –பிரகாசிக்கின்ற பிம்பத்தை -திருமேனியை உடையதும்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ –மேற்கு மலையை அடைந்து அஸ்தமியாததுமான
விபாதி கூர ராட் விது -கூரத்தாழ்வான் ஆகிய மதி சந்திரன் விளங்குகிறது

கீழ் 8 ஸ்லோகத்தில் சந்திரனுக்கு உள்ள தன்மை அனைத்தும் ஆழ்வான் இடம் உள்ளமையைக் காட்டி அருளி
இதில் அதில் உள்ள தீமைகள் ஒன்றுமே ஆழ்வான் இடம் இல்லை என்று கூறப்படுகிறது
ஸதா -என்பதை அனைத்திலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
ஜலாசய -என்பதே ஜடாசய என்றதாயிற்று டலயோ அபேத -தகரமும் லகாரமும் ஒன்றே -ஜலாசய -ஜலம் தங்கும் கடல் ஜடாசய -ஜடம் அறிவில்லாதவன்

———-

ப்ரஸாத மேயிவாந் ஸதா ப்ரகாம வீஷ்ய விக்ரஹ
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததி
ஸதோத்தராயணாந் விதோ விமுக்ததாம ஸக்ரஹ
த்ரயீ மயோத்ர கூர ராட் வாகரோ விராஜதே
–12-

ஸதா–எப்போதும்
ப்ரஸாத மேயிவாந் -1-அநுக்ரஹத்தை அடைந்தவராய் -2-உக்ரமாக அல்லாமல் தெளிவை அடைந்தவனாய்
ப்ரகாம வீஷ்ய விக்ரஹ -1- நன்றாக ஸேவிக்கத்தக்க திருமேனியை யுடையவராய் -2-கண் கூசாமல் காணத்தக்க பிம்பத்தை யுடையவனாய்
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் -மனிதர்களுக்கு நல்ல அறிவை உண்டாக்குமவராய் –2- மனிதர்களுக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பை உண்டாக்குமவனாய்
ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததிம் -1- அறியாமைத் திரட்சியை அழிப்பவராய் -2- இருளின் திரட்சியை அழிப்பவனாய்
ஸதா -எப்போதும்
உத்தராயணாந் விதோ -1- உயர்ந்த வழியில் சேர்ந்தவராய் -2-உத்தராயணத்தில் சேர்ந்தவனாய்
விமுக்ததாம ஸக்ரஹ –1-தமோ குணமுடையவர்களால் பற்றப்படாதவராய் 2- ராகுவினால் பீடிக்கப்பட்டாதவனாய் -கிரஹணம் இல்லாதவனாய்
த்ரயீ மயீ -1- வேத விசாரம் செய்வதனால் வேத மயராய் -2- மொன்று வேதத்தையே உருவமாக யுடையவனாய் இருக்கிற
கூர ராட் வாகரோ –கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
அத்ர-இவ்வுலகில்
விராஜதே-மிகவும் விளங்குகிறான்–இதில் தீமை அற்ற ஸூர்யனாக ரூபணம்

—————-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ
பரீத வாக்ஜ ரீபரோ விரக்த முக்ய ஸம்ஸ்ரய
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி விசித்ரதாது பிர்யுத
விபாதி கூரராண் மஹீதர புமர்த்த ஸித்தயே –
-13-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ –தன்னுடையதாக ஹ்ருதயமாகிய குகையில் கிடந்தது உறங்குகிற புண்டரீகாக்ஷனாகிய -ஸ்ரீ யபதியான -ஸிம்ஹத்தை யுடையதும்
பரீத வாக்ஜ ரீபரோ –நிறைந்த ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிய அருவிகள் மிகப் பெற்றதும்
விரக்த முக்ய ஸம்ஸ்ரய–ஆசை அற்றவர்களுக்கு முக்கியமான புகலிடமானதும்
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி –சிறந்த ஸ்ரீ ஸூக்திகளாகிய
விசித்ரதாது பிர் –பலவகைப்பட்ட தாதுக்களோடு
யுத –கூடியதுமான
கூரராண் மஹீதர-கூரத்தாழ்வான் ஆகிய பர்வதமானது
விபாதி புமர்த்த ஸித்தயே -மோக்ஷ புருஷார்த்தம் ஸித்திப்பதன் பொருட்டு மிகவும் விளங்குகிறது
சந்த்ர ஸூர்யர்கள் குதிப்பதும் அஸ்தமிப்பதும் மலையிலே ஆகையாலே மலையாக ரூபணம் இதில்
மலை முழைஞ்சில் ஸிம்ஹம் -ஆழ்வான் திரு உள்ளத்தில் சீரியஸிம்ஹமான நரஸிம்ஹப் பெருமாள்
ஆழ்வானுக்குத் திருவாராதனப் பெருமாள் அழகிய சிங்கர் என்று பெரிய திருமுடி அடைவில் உள்ளமை காண்க

———-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ
த்ரயீ ஸிரோர்த புங்கிதா ஸூ யுக்தி ஸாய காவலீ
ஸ்ருஜந் குவாதி வித்விஷ ப்ரகாலயந் குரோ பதே
அபி ஷிக்த ஏஷ கூரராட் ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம்
–14-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ –யதிராஜருடைய ஸ்ரீ ஸூக்திகளாகிய அம்ருதத்தின் வெல்லத்தை எப்போதும் அனுபவிப்பதனால் செருக்குக் கொண்ட அறிவையுடையவராய்
த்ரயீ ஸிரோர்த புங்கிதா –வேதாந்த அர்த்தங்களை மூலமாகக் கொண்ட தொடுக்கப்பட்ட
ஸூ யுக்தி ஸாய காவலீ –நல்ல யுக்திகளாகிய பாணங்களின் வரிசைகளை
ஸ்ருஜந் -விடுமவராய்க் கொண்டு
குவாதி வித்விஷ –துர் வாதம் செய்யும் புற மத்தவராகிய பகைவர்களை
ப்ரகாலயந் –மிகவும் அழிப்பவராயும் -மறுப்பவராயும் –
குரோ பதே –ஆச்சார்யருடைய ஸ்தானத்திலே
அபி ஷிக்த –பட்டாபிஷேகம் செய்யப் பட்டவராயும் உள்ள
ஏஷ கூரராட் –இந்தக் கூரத்தாழ்வான்
ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் செல்வத்தை ஆளுகிறார்
ஆச்சார்ய ஸ்தானத்தில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைப் பரிபாலனம் செய்யும் வகையை அருளிச் செய்கிறார்

———–

கதாஹவோந் முகாந் பஹுந் கபர்தி துர்மதாஸ் ரயாந்
முதாக்ருதாக மஸ்ரமாந் விதாய வாதி ந பராந்
புதாத ரீக்ருதி க்ஷமை ஸ்வ வாக் ஜரீ பரை ரஸவ்
புதா வலீ ஸமீடி தஸ் சகாஸ்தி கூர பூபதி –
-15-

அஸவ் கூர பூபதி –அந்தக் கூரத்தாழ்வான் –
கதா ஆஹவ உந் முகாந் –வாதம் என்று போர் செய்வதற்காகத் தம்மை எதிர் நோக்கி நின்றவர்களும்
கபர்தி துர்மதாஸ் ரயாந் –சிவனுடைய கெட்ட மதத்தைப் பின்பற்றியவர்களுமாகிய
பஹுந் வாதி ந-பல வாதம் செய்யுமவர்களை
புத அதரீ க்ருதி க்ஷமை –புற மதப் புலவர்களை வெல்வதற்கு உரிய
ஸ்வ வாக் ஜரீ பரைர் -தமது ஸ்ரீ ஸூ க்திகளாகிற அதிகமான வெள்ளப் பெருக்கினால்
முதாக்ருத ஆகம ஸ்ரமாந் -பயன் அற்றதாகச் செய்யப்பட தமது சைவ ஆகமப் பயிற்சியை யுடையவர்களாக
விதாய –செய்து விட்டு
புதா வலீ ஸமீடி தஸ் -மத்யஸ்தரான பண்டிதர்களின் திறலினால் மிகவும் ஸ்துதிக்கப் பட்டவராய்
சகாஸ்தி –விளங்குகிறார்-

————-

விபூதிமைஹி கீப்த்ய ஜந்வி மோஹதாயி நீம் ப்ருசம்
விதாத்ரு முக்ய ஸேவிதாம் அஹந்தயா அதி தூஷிதாம்
ஸ்ருதீடி தாம நிந்தி தாம் ஸ்வரூப ஸேமுஷீ மதாம்
ஸ்ரியம் ஸமாஸ்ரயந் சவ் விபாதி கூர பூ பதி –
-16-

அசவ் கூர பூ பதி —அந்தக் கூரத்தாழ்வான்
விதாத்ரு முக்ய ஸேவிதாம்-பிரமன் முதலியவர்களாலே வஹிக்கப் பெற்றதும் -அதனால்
அஹந்தயா அதி தூஷிதாம் –அஹங்காரத்தால் மிகவும் கெடுக்கப்பட்டதும் -அதனால்
வி மோஹ தாயி நீம் ப்ருசம் –விஷயங்களே அனுபவிக்கத்தக்கவை என்ற அஞ்ஞானத்தை மிகவும் தரக்கூடியதுமான
விபூதிமைஹிகீம் -இந்த உலகத்தை
த்ய ஜந் –விட்டு ஒழிப்பவராய்க் கொண்டு
அநிந்தி தாம் -இகழப்படாததும்
ஸ்ருதீடி தாம –வேதத்தால் புகழப் பட்டதுமான
ஸ்வரூப ஸேமுஷீ மதாம் –ஜீவாத்ம ஸ்வரூப ஞானமுடையவர்களுடைய
ஸ்ரியம் –மோக்ஷமாகிய செல்வத்தை
ஸமாஸ்ரயந் விபாதி –அடைந்தவராய் விளங்குகிறார்

நித்ய ஸூரிகள் போல் இவ்வுலகிலே ஸ்வரூப ஞானம் பெற்று நீதி வானவர் போல் இருக்கும் கூரத்தாழ்வானைப் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்

——————–

ம்ருஷா மதம் விதாய தந் ம்ருஷா ஸ்வ யுக்திபிர் ஜகந்
ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி ராத்மநாம்
அநேக தாம ஸேக்ஷதாம் ப்ரகாஸயந் வ்யபோஹயந்
ப்ரமாத்ருஸேக ரஸ்துத ப்ரகாஸ தேத்ர கூரராட்
–17-

கூரராட் –கூரத்தாழ்வான்
ஜகந் ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி –உலகம் பொய் என்பதை மறுக்கிற அறிவை வெளிப்படுத்துகின்ற
ஸ்வ யுக்திபிர்-தம்முடைய யுக்திகளாலே
தத் ம்ருஷா மதம் -உலகம் பொய் என்கிற அந்த அத்வைத மதத்தை
விதாய ம்ருஷா –பொய்யாக ஆக்கி மறுத்து
ஆத்மநாம் –ஆத்மாக்களுடைய
அநேக தாம் –பன்மையை
ப்ரகாஸயந்-வெளிப்படுத்துமவராயும்
அஸேக்ஷதாம் -ஆத்மாக்கள் பகவானுக்கு அடிமையல்ல என்பதை
வ்யபோஹயந் –மறுத்து உரைப்பவராயும் ஆகி
ப்ரமாத்ருஸேக ரஸ்துத -உண்மை அறிவுடையவர்களில் தலைவர்களாலே புகழப்பட்டவராய்க் கொண்டு
ப்ரகாஸ தேத்ர -இவ்வுலகில் திகழ்கிறார்

கீழ் சைவ மத நிரசனம் இதில் அத்வைத மத நிரசனம்

————-

ஸ்ருதிம் த்ருட ப்ராமணயந் ஜகத் விதாத ரீஸ்வரே
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வ மப்யதோ நயந்
அணோர் ஜகந் நிதாந தாம போஹயந் விராஜதே
ஸ்வ ஸூ க்திபிர் ஸ்வ யுக்திபிர் ஸூதீவ ரோத்ர கூரராட்
–18-

ஸூதீவ ரோத்ர கூரராட் –புக்திமான்களில் சிறந்தவராகிய
ஜகத் விதாத ரீஸ்வரே–உலகத்தைப் படைத்த ஈஸ்வரனாகிய ஸ்ரீ மன் நாராயணன் விஷயத்தில்
ஸ்ருதிம் –வேதத்தை
த்ருட ப்ராமணயந் -அசைக்க முடியாத திடமான அத்தாட்சி நூலாகக் கொண்டு
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வம் –கணாதர் மதம் -வை சேஷிகர்களால் சொல்லப்பட்ட(பரம அணு வாதிகள் ) ஸ்ருஷ்டி கர்த்தாவான சிவன் அனுமான ப்ரமாணத்தினால் ஸித்திக்கிறான் என்ற விஷயத்தை
யதோ நயந் –கீழே தள்ளுகிறவராயும்
அணோர் -பரம அணுவுக்கு
ஜகந் நிதாந தாமபி –உலகத்தைக் குறித்து முதல் காரணமாய் இருத்தலையும்
ஸ்வ ஸூ க்திபிர் –தமது பேச்சுக்களாலும்
ஸ்வ யுக்திபிர் –தம்முடைய யுக்திகளாலும்
அபோஹயந் –மறுப்பவராயும்
விராஜதே –மிகவும் விளங்குகிறார்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -போன்ற ஸ்ருதி வாக்யங்களைக் கொண்டு ஸூவ மத ஸ்தாபனம்

———–

ஸிவாத் பரம் நஹீதி வை லிகேதிசோல பூபதே
வசஸ் ஸ்ருதேரநந்தரம் ததுத்தரம் வாஸோ லிகந்
அபாஹஸந் மஹீ ஸூரைர்ய ஈடிதோ மஹீ பதிம்
விபாதி கூரராட் குருஸ் ஸஸர்வ ஸாஸ்த்ர பாரக
–19-

ஸர்வ ஸாஸ்த்ர பாரக –எல்லா ஸாஸ்த்ரங்களையும் கரை கண்டா -நன்றாக அறிந்த
ய -யாவர் ஒருவர்
ஸிவாத் பரம் –சிவனை விட உயர்ந்த தத்வம்
நஹீதி வை –இல்லவே இல்லை என்றே
லிகேதி–நீர் எழுதும் என்று
சோல பூபதே வசஸ் –சோழ ராஜன் கூறிய வார்த்தையை
ஸ்ருதேரநந்தரம் –கேட்ட வுடனே
ததுத்தரம் வாஸோ -அத்தை எழுதாமல் அதன் விடையான வார்த்தையை
லிகந் –எழுதுமவராய்
மஹீ பதிம் –அச் சோழ ராஜன்
அபாஹஸந் –பரி ஹாஸம் -ஏளனம் -செய்தாரோ
மஹீ ஸூரைர்ய ஈடிதோ விபாதி கூரராட் குருஸ் ஸ -அந்த கூரத்தாழ்வான் ஆகிய ஆசார்யர் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்துதிக்கப்பட்டு விளங்குகிறார்
த்ரோணம் அஸ்தி தத பரம் -என்று எழுதிக் கையெழுத்திட்ட வ்ருத்தாந்தம் -சிவ சப்தம் எட்டுப்படி அளவு கொண்ட குறுணிக்கும் பெயர்
பதினாறு படியளவு கொண்ட பாதைக்கு குறுணியை விடப் பெரியது
நம் தரிசனத்துக்காக தம் தரிசனத்தை இழந்தார் -தர்சனம் சித்தாந்தம் -கண்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந

————–

யதீஸ்வர க்ரஹாகதாந் படாந் விலோக்ய பூபதே
ஸ்வயம் த்ரி தண்டிதாம் பஜந் ததீய ரக்ஷண இச்சயா
ஸிலீ முகால் பகீடயோர் நயம் ஸதார்ய ஸிஷ்யயோ
ப்ரதர்ஸயந் ஸ்வசர்யயா சகாஸ்தி கூர பூபதி —
20-யதீஸ்வர ஆஸ்ரம ஆகதாந் -பாட பேதம் –

கூர பூபதி –கூறத்துக்கு அரசரான ஆழ்வான்
யதீஸ்வர க்ரஹாகதாந் -யதீஸ்வரரான எம்பெருமானாரைப் பிடித்துப் போவதற்காக வந்த
படாந் விலோக்ய பூபதே –அரசனுடைய வேலையாட்களைப் பார்த்து
ததீய ரக்ஷண இச்சயா –அவருடைய ரக்ஷணத்தில் தாம் கொண்ட ஆசையினால்
ஸ்வயம் –தாமே
த்ரி தண்டிதாம் பஜந் –த்ரி தண்டத்தைக் கைப்பற்றியவராய்
ஸ்வசர்யயா–இத்தகைய தமது நடத்தையினால்
ஸிலீ முக அல்ப கீடயோர் –குளவிக்கும் சிறு புழுவுக்கும் உண்டான நியாயத்தை
ஸதார்ய ஸிஷ்யயோ –நல்ல ஆச்சார்யருக்கும் நல்ல சிஷ்யருக்கும் உள்ளதான
ந்யாயம் -நியாயத்தை
ப்ரதர்ஸயந் சகாஸ்தி –வெளிப்படுத்திக் கொண்டு விளங்குகிறார்
ஒரு குளவி சிறு புழுவைக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து அதை எப்போதும் கொட்டிக்கொண்டு இருந்தால் அப்புழு அக்குழவியின் உருவத்தையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்து அக்குளவியாகவே ஆகி விடும் என்னும் நியாயம்
எம்பெருமானாராலேயே வளர்க்கப் பட்ட கூரத்தாழ்வான் அவரையே தியானித்து தியானித்து அவரைப் போலவே திரிதாண்டா காஷாயங்களைத் தரித்து எம்பெருமானாராகவே ஆகி விட்ட படியால் இந்த நியாத்தைக் காட்டி அருளினார்

———–

நிரா கர்த்தும் மோஹம் நிகில ஐந சித்தாஸ் ரயம் அசவ்
தயா ஸிந்து ஸாந்த்ராத் நிரவதிக விஞ்ஞாந விபவாத்
மஹீ பாகே மாஸே மகர மஹிதாக்யே ஸமஜநி
ப்ரஸஸ்தே ஹஸ்தர்ஷே சுப குண நிதி கூர ந்ருபதி
–21-

சுப குண நிதி–நல்ல குணங்களுக்கு நிதியான
அசவ் கூர ந்ருபதி —-அந்த கூரத்தாழ்வான்
தயா ஸிந்து ஸந்–அக்குணங்களில் முக்கியமான தயைக்குக் கடலாய் இருந்து
ஸாந் த்ராத்-அதிகமான
நிரவதிக–எல்லையில்லாத
விஞ்ஞாந விபவாத் –தமது ஞானத்தின் பெருமையினாலே
நிகில ஐந சித்தாஸ் ரயம் -எல்லா மக்களுடைய மனத்தையும் பற்றி இருக்கிற
நிரா கர்த்தும் மோஹம் –அறியாமையை அகற்றுவதற்காக
மஹீ பாகே -இந்த பூ ப்ரதேசத்திலே
மகர மஹிதாக்யே -மகரம் -தை -எனப்படுகின்ற கௌரவிக்கப்பட்ட
மாஸே –மாதத்தில்
ப்ரஸஸ்தே-கொண்டாடப்பெற்ற
ஹஸ்தர்ஷே -ஹஸ்தம் என்னும் நக்ஷத்திரத்தில்
ஸமஜநி -திரு அவதரித்தார்
மகரம் -மங்களம் கரோதி -உத்பாதயதி இதி மகர
அலங்காரம் ததாதி இதி மகர -சோபையைத் தரும் மாதம்
ஹஸ்த நக்ஷத்ர அதி தேவதை ஸூர்யன்
திருமழிசைப் பிரான் போல் பரதத்வ நிர்ணயம் பண்ணவே இவரும் இந்த மாதத்தில் அவதரித்தார்
பேர் அருளாளன் ஆறு வார்த்தைகள் அருளிச் செய்து உபகரித்தார் போல் இவரும் வ்ருத்தி கிரந்தத்தை நினைவில் கொண்டு விண்ணப்பித்து உபகாரம் புரிந்தார்
ஆகவே இவரும் பேர் அருளாளன் போலவே தயா ஸிந்து

——————-

அநாத் ருஷ்யாம் ப்ரஹ்மாதி பிரபி ஸூரைரத்ம க்ருதிபிர்
ஸதாப் யேகா காராம் அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம்
அஹந்தா மஜ்ஞாநாம் ப்ரக்ருதி மநு ரூபாம் மம க்ருதே
பரா குர்வன் கூர ப்ரபு ரகில நிரூணாம் விஜயதே
–22-

கூர ப்ரபு-கூரத்தாழ்வான்
ப்ரஹ்மாதி பிரபி ஸூரை–பிரமதேவன் முதலிய தேவர்களாலும்
அநாத் ருஷ்யாம் –போக்க முடியாததும்
அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம் –வளர்வது தேய்வது என்னும் பேச்சைக் கூட அறியாததும்
ஸதாப்யே காகாராம் –ஸதாபி ஏக ஆகாரம் –பூரணமான வளர்ச்சி என்கிற ஒரே விதமான வடிவை யுடையதும்
மம க்ருதே -மமகாரத்துக்கு
ப்ரக்ருதிம் அநு ரூபாம்–ஏற்ற மூல காரணமானதுமான
அஜ்ஞாநாம்–அறிவிலிகளான
அகில நிரூணாம்–எல்லா மனிதர்களுடையவும்
அஹந்தாம் -அஹாங்காரத்தை
பரா குர்வன் ஸந் விஜயதே –போக்கடித்துக் கொண்டே வெற்றி பெறுகிறார்
கீழ் அஞ்ஞானம் போக்கவே ஆழ்வான் அவதாரம் -இதில் அதனால் உண்டாகும் அஹங்கார மமகாரங்களைப் போக்கும்படி கூறப்படுகிறது
ஸ்வரூப ஞானத்தை உண்டாக்குவதன் வாயிலாகப் போக்கி பகைவர்களை வென்று முடி சூடிய அரசர் போல் விளங்குகிறார் என்கிறார்-

அமோகைருத் கூலைரநு பதி ஸமுத்தை ரநுபமை
கடாஷை ப்ரேமார்த்ரை கலி மலம ஸேக்ஷம் வ்யபநயந்
ஜநாநாமா நந்தம் நிரவதிக மத்யாபி ஜநயந்
ஜயத்யேக்ஷ ஸ்ரீ மாந் மம குல குரு கூர ந்ருபதி
–23-

மம குல குரு–அடியேனுடைய குல குரு வானவரும்
ஸ்ரீ மாந்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையவருமான
யேக்ஷ கூர ந்ருபதி -இந்தக் கூரத்தாழ்வான்
அமோகை–வீணாகாதவையும்
அநுபமை -நிகரில்லாதவையும்
ப்ரேமார்த்ரை-அன்பினால் குளிர்ந்தவையும்
அநு பதி ஸமுத்தைர் –நிர் ஹேதுகமாக உண்டானவையும்
உத் கூலைர–கரை கடந்தவையுமான
கடாஷை –தமது கடைக்கண் பார்வை களாலேயே
கலி மலம் –கலியினால் உண்டாகிற தோஷத்தை
அஸேக்ஷம் வ்யபநயந் –மிச்சம் இல்லாமல் போக்குவராய்க் கொண்டும் -அதனால்
ஜநாநாம் -மக்களுக்கு
ஆநந்தம் நிரவதிகம் -எல்லையில்லா மகிழ்ச்சியை
அத்யாபி ஜநயந் -இன்றும் உண்டாக்குமவராய்க் கொண்டும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்
கீழ் அஹங்கார மமகாரங்களைப் போக்கியமையை அருளிச் செய்து இதில் அவை காரணமாக உண்டாகும் பாபங்கள் -கலியுகக் குற்றங்கள் அனைத்தையும் போக்கி மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறார் என்கிறார்
கடாக்ஷங்களுக்கு அனைத்து விசேஷணங்களையும் அருளிச் செய்து -ஆழ்வானுடைய கடாக்ஷம் தயை அசாதாரணம் என்கிறார்
இவ்வாசிரியர் ஆழ்வான் திருவம்சத்தவர் போலும் -மம குல குரு என்பதால் -மஹாந்த ப்ரமாணம்

—————

அவித்யா மஹாத்ம்யாத விதித நிஜாகார விபவாந்
அசேஷா நுத்தர்த்தும் பவ ஜலதி மக்நாந் ஜநிப்ருத
அசவ் கூராதீஸ ஸ்வயமவதரந் பூரிக்ருபயா
நயந் நாவம் விஷ்ணும் விகததர பண்யாம் விஜயதே –
-24-

அசவ் கூராதீஸ –அந்தக் கூரத்தாழ்வான்
அவித்யா மஹாத்ம்யாத் –தீ வினையின் மஹிமையால்
அவிதித நிஜாகார விபவாந் –அறியப்படாத தமது உண்மை வசிவமாகிய -பகவத் சேஷத்வமாகிய -பெருமையை உடையவர்களாய் –
அதனால்
பவ ஜலதி மக்நாந் –இவ்வுலக வாழ்வாகிய துன்பக்கடலில் மூழ்கி இருக்கிற
அசேஷாந் ஜநிப்ருத –பிறவி எடுத்த அனைவரையும்
உத்தர்த்தும்–உயரத் தூங்குவதற்காக
பூரிக்ருபயா-பெரும் கருணையினாலே
ஸ்வயமவதரந் -தாமே அவதரித்து நின்று
நாவம் விஷ்ணும் –விஷ்ணு என்னும் படகை
விகததர பண்யாம்-ஓடக்கூலி இல்லாமல்
நயந் -ஓட்டுமவராய்
விஜயதே –விளங்குகிறார்

ஸ்வரூப ஞானம் உண்டாக்கப் பெற்ற சம்சாரிகளைத் தானே படகு போல் இருந்து முகுந்தன் ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பானே
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -அன்றோ

———-

பலாயத்வம் வேகாத் க்வசந கதகா காநந தலே
நிலீநா பூயாஸ்த ப்ரதிகதக மத்தேப ம்ருகராட்
ஜயீ நாநா தந்த்ர ப்ரவசந சணை ப்ரவ்ட வசநை
ஸமேத ஸிஷ்யவ்கை ரடதி வஸூதாம் கூர ந்ருபதி
–25-

ப்ரதிகதக மத்தேப ம்ருகராட் –எதிர்வாதம் செய்யுமவர்களாகிய மதம் பிடித்த யானைகளைக் கொள்ளும் ஸிம்ஹமாகிற
கூர ந்ருபதி -கூரத்தாழ்வான்
நாநா தந்த்ர ப்ரவசந சணை-பலவகையான ஸாஸ்த்ர அர்த்தங்களை விளக்குவதில் ஆற்றல் படைத்த
ப்ரவ்ட வசநை -கம்பீரமான தமது ஸ்ரீ ஸூக்திகளாலே
ஜயீ –உங்களை வெல்லுமவராய்க் கொண்டு
ஸமேத ஸிஷ்யவ்கை-தம்மைப் போன்ற சிஷ்ய ஸமூஹங்களோடு கூடியவராய்
அடதி வஸூதாம் –பூமியில் ஸஞ்சரிக்கிறார்
கதகா–வீண் வாதம் செய்யுமவர்களே
வேகாத்-விரைவாக
பலாயத்வம் க்வசந –எங்கேயாவது ஓடிப்போய் விடுங்கள்
காநந தலே –காட்டிடத்திலே
நிலீநா பூயாஸ்த –ஒளிந்து கொள்ளுங்கள்

ஆழ்வானை ஸிம்ஹமாகவும் -புறச் சமயிகளை மத யானைகளாகவும் உருவகம்

————–

ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடாய ஸமுஸல மாதாய ஸடஜித்
வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ ஜ்ரும்பித மத
ப்ரதாவந் நப்யேதி ப்ரதிகதக வாதாஹவ ருசிம்
நிருந்தந் கூரேஸ த்விரத ந்ருபதிர்ப்ரும் ஹிதரவை
–26-

ஹே கதகா –ஓ வாதம் செய்யுமவர்களே
ஸடஜித் வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ -திருவாய் மொழி முதலிய ஸ்ரீ ஸூக்தி திரளை எப்போதும் அனுபவிப்பதில் மிகவும் விருப்பமுடையதாயும்
ஜ்ரும்பித மத–வளர்ந்த மதத்தை யுடையதாயும் இருக்கிற
கூரேஸ த்விரத ந்ருபதிர்–கூரத்தாழ்வானாகிய உயர்ந்த யானை
ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடா ஆயஸ முஸலம் -உபநிஷத்துக்களாகிய இரும்பு உலக்கையை
ஆதாய -எடுத்துக் கொண்டு
ப்ரும் ஹிதரவை –பிளிறல்களின் ஒலிகளாலே
ப்ரதிகதக வாத ஆஹவ ருசிம் –எதிர்வாதம் செய்பவர்களின் -வாதப்போரில் உண்டான ருசியை
நிருந்தந் –தடை செய்து கொண்டு
ப்ரதாவந் அப்யேதி –உங்களை நோக்கி ஓடி வருகிறது
எங்காவது ஓடி விடுங்கள் -காட்டில் ஒழிந்து கொள்ளுங்கள் -என்று முன் ஸ்லோகத்தில் உள்ளதை இங்கும் சேர்த்து கொள்ள வேண்டும்
கதகா -என்பதையும் அத்யாஹாரம்-கூட்டிக் கொள்ள வேண்டும்
கீழ் கலி மிக்க செந்நெல் –வலி மிக்க சீயம் போல் ஸிம்ஹம்
இங்கு பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் ராமானுஜ முனி வெள்ளம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாத்தியார்கள் உங்கள் வாழ்வற்றதே -போல் மதயானையாக உருவகம்

அஸாரம் ஸம்ஸாரம் பஹுலதர துக்கா கரம் இமம்
விஸ்ருஜ்ய ஸ்ரீ மந்தம் பஜத விபுமாநந்தபரிதம்
உதாரஸ் ஸர்வேப்யோ விதரதி ஜநா ஸ்வேந ஸமதாம்
அஸாவித் யத்ரத் யாநுபதிஸதி கூராதிப குரு
–27-

ஹே ஜநா –ஓ மக்களே
கூராதிப குரு –கூரத்தாழ்வானாகிய ஆச்சாரியர்
பஹுலதர துக்கா கரம்–மிகவும் அதிகமான துன்பங்களுக்குப் பிறப்பிடமானதும்
அஸாரம் -ஸாரமான ஆனந்தம் சிறிதும் இல்லாததுமான
ஸம்ஸாரம் இமம் இந்த உலக வாழ்க்கையை
விஸ்ருஜ்ய –அறவே விட்டுத் தொலைத்து
ஆநந்த பரிதம் –ஆனந்தம் நிறைந்தவனாய்
விபும் -எல்லாம் வல்லவனான
ஸ்ரீ மந்தம் –திருவின் மணாளனான திருமாலை
பஜத –அடையுங்கள்
உதாரஸ் அசவ் –கொடையாளியாகிய அத் திருமால் ஸர்வேப்யோ -இன்னார் இனையார் என்று பாராமல் தன்னை அடைந்த அனைவருக்கும்
ஸ்வேந ஸமதாம் –தன்னோடே ஒப்புமையை -சமானமான ஆனந்தத்தை
விதரதி –அளிக்கிறான்
இதி -என்று
அத்ர த்யாம் -இவ்வுலகில் உள்ள மக்களைக் குறித்து
உபதிஸதி–உபதேசிக்கிறார்

தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்குத் தம்மையே ஓக்க அருள் செய்வர் –பெரிய திருமொழி –11-3-5-

——————–

விரக்தா நாமக்ர்யோ விமல சரிதோ வைதிக வர
விநேதா ஆசாராணாம் விகத மத மோஹாதிம குண
அஸூயா நிர்முக்த ஸமதம முகாநந்த ஸூகுண
ஸதாஸ்ரோத்ரா நந்தம் கலயதி பரம் கூர ந்ருபதி
–28-

விரக்தா நாம் –ஆசை யற்றவர்களில்
அக்ர்யோ –முதல்வரும்
விமல சரிதோ –குற்றமற்ற நடத்தை யுடையவரும்
வைதிக வர –வேதத்தைப் ப்ரமாணமாகக் கொள்பவர்களில் சிறந்தவரும்
ஆசாராணாம்-அவ்வேதத்தில் கூறப்பட்ட ஆசாரங்களை
விநேதா –சிஷ்யர்கள் அனுஷ்ட்டிக்கும் படி செய்பவரும்
விகத மத மோஹ ஆதிம குண –செருக்கு அறியாமை முதலான கெட்ட குணங்கள் இல்லாதவரும்
அஸூயா நிர்முக்த –பொறாமையினால் விடப்பட்டவரும்
ஸம தம முகாநந்த ஸூகுண –மனவடக்கம் புலன் அடக்கம் முதலிய எல்லையில்லாத நற் குணங்களை உடையவருமான
கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
ஸதா-எப்போதும்
ஸ்ரோத்ரா நந்தம் -செவிக்கு இனிமையை
கலயதி பரம் –மிகவும் உண்டாக்குகிறார்

ஆசிநோதி ஹி ஸாஸ்த்ரார்தாந் ஆஸாரேஸ்தாப யத்யபி ஸ்வயம் ஆஸரதே ஸோ அபிதீயதே –ஆசார்ய லக்ஷணம்

————

யதீயோஷா பாத்ரம் பஜதி மநுஜ ப்ரேம பததாம்
பரம் பத்மா பர்த்து பதித ஐந ஸூடாமணிரபி
யதீயா ஸ்ரீ ஸூக்தி நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி
ஸ ஜீயாத் கூரேஸ ஸகல ஸூப ஸந்தாந ஸரணி
–29-

யதீயோஷா பாத்ரம் –யாருடையதான பார்வைக்கு இலக்கான
மநுஜ-மனிதன்
பதித ஐந ஸூடாமணிரபி-ஜாதி ஆசாரங்களில் இருந்து நழுவி விழுந்தவர்களில் தலைவனாய் இருந்த போதிலும்
பரம் பத்மா பர்த்து–திருமகள் மணவாளனாகிய திருமாளுடைய
ப்ரேம பததாம் -அன்புக்கு இலக்காகும் தன்மையை
பஜதி -அடைகிறானோ
யதீயா ஸ்ரீ ஸூக்தி -யாருடையதான நல் வார்த்தையானது
நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி –எல்லா வேதாந்தப் பொருள்களுக்கும் விளக்க வுரை யாகிறதோ
ஸ -அந்த
ஸகல ஸூப ஸந்தாந ஸரணி –ஸகல மங்கள சமூஹத்திற்கும் வழியான -உபாயமான
ஸ ஜீயாத் கூரேஸ –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குக

—————-

விஸூத்த ஜ்ஞாநாப்தி விகத மமகார ஸ்வ பரயோ
விநேதா ஸர்வேஷா மதி விமல போதஸ்ய விதுஷாப்
விஹர்த்தா ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ
ப்ரஹர்த்தா அசவ்ம்யாநாம் பவதி பவிநாம் கூர ந்ருபதி
–30-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
விஸூத்த ஜ்ஞாநாப்தி –மிகத் தூய்மையான அறிவுக்கு கடலாகவும்
ஸ்வ பரயோ-தன்னிடத்திலும் பிற பொருள்கள் இடத்திலும்
விகத மமகார –யான் என்னுடையவன் இவை எல்லாம் எனது -என்று செருக்குக் கழியப் பெற்றவராகவும்
ஸர்வேஷாம் விதுஷாம் -அறிவுடையார் அனைவருக்கும்
அதி விமல போதஸ்ய –தமது அறிவைப் போன்றே மிகவும் நிர்மலமான -தூய்மையான அறிவை
விநேதா -நன்றாக அடைவிப்பராகவும்
ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ-ஸ்ரீ ரெங்கநாதனுடைய அன்பிற்கு மிகவும் இலக்காகிய யதிராஜருடைய திருவடிகளில்
விஹர்த்தா -விளையாடுமவராகவும்
அசவ்ம்யாநாம்-முரடர்களான
பவிநாம்-ஸம்ஸாரிகளை
ப்ரஹர்த்தா பவதி –துன்புறுத்துமவராகவும் இருக்கிறார் –

————-

புராணா நாம்பும் ஸாம் ஸரணி மநுயந் தத்த்வ விவ்ருதவ்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம் பரமதபாஸ்யந் நந்ருததாம்
பரா குர்வந் தத்த்வ ப்ரமிதபதயோ ஜீவ தமஸோ
ஸமிந்தே கூரேஸ ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம்
–31-

கூரேஸ–கூரத்தாழ்வான்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம்-மூல ப்ரக்ருதி ஜீவாத்மா பரமாத்மா என்ற மூன்றினுடையவும்
தத்த்வ விவ்ருதவ் -ஸத்யத்வத்தை விளக்குவதில்
புராணா நாம் பும் ஸாம் –பூர்வர்களான புருஷர்களுடைய
ஸரணி மநுயந் -வழியைப் பின் செல்லுமவராயும்
தத்த்வ ப்ரமிதபதயோ–உண்மைப் பொருள்கள் என்று வேதத்தின் மூலமாக அறியப்பட்ட பொருள்களாகிய
ஜீவ தமஸோ -ஜீவாத்மா மூலப்பிரக்ருதி என்ற இவற்றினுடைய
அந்ருததாம் –பொய்ப் பொருளாம் தன்மையை
பரா குர்வந் –மறுப்பவராய் -மறுப்பதில் வாயிலாக
பரமதம் –அத்வைத மதத்தை
அபாஸ்யந்–வெகு தூரத்தில் தள்ளுமவராயும்
ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம் — வேதாந்த வாக்ய ஸமூஹங்களை ரக்ஷிப்பவராய்க் கொண்டு
ஸமிந்தே –நன்றாக விளங்குகிறார்

பூர்வர்கள் -பராசர வ்யாஸ போதாய நாதி மஹரிஷிகள் என்ன -நம்மாழ்வார் நுதலிய ஆழ்வார்கள் என்ன -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ஆகிய ஆசார்யர்கள் என்ன –தத்வத்ரயமும் நித்யம் ஸத்யம் என்ற வேதாந்த வாக்கியங்கள் அனைத்தையும் காப்பாற்றிக் கொண்டு விளங்குகிறார்
தத்த்வ ப்ரமித பதயோ –என்ற இடத்திலுள்ள பதம் -கால் இடம் வஸ்து
தமஸ் -தமோ குணத்தை அதிகமாகப் பெற்ற மூல பிரக்ருதியைச் சொன்னவாறு –

—————-

ஸ்வரூபாபி வ்யக்திம் ஸ்ருதி ஸிகர ஸித்தாமபித தத்
நிரூப்யாம் வ்ருத்த்யை வாகில தநு ப்ருதாம்தாம் ச கதயன்
ததீ யார்ச்சா ஸீமாம் ஸ்வயமபி விதன்வந் யதி பதே
அசேஷம் கைங்கர்யம் ஜயதி ஸூமதி கூர ந்ருபதி
–32-

ஸூமதி கூர ந்ருபதி –நல்லறிவு படைத்த ஆழ்வான்
அகில தநு ப்ருதாம்–எல்லா ஸம்ஸாரி ஜீவர்களுடையவும்
ஸ்ருதி ஸிகர ஸித்தாம் –வேதாந்த ஸாஸ்த்ரத்தில் இருந்து தேறிய
ஸ்வரூபாபி வ்யக்திம் –இது வரையில் மறைத்து இருந்த ஸ்வரூபத்தை ப்ரகாசமான மோக்ஷத்தை
வ்ருத்த்யைவ –பகவத் கைங்கர்யத்தைக் கொண்டே
நிரூப்யாம்-அறுதியிடத் தக்கதாக
அபித தத் –கூறுமவராயும்
தாம் ச -அந்த வ்ருத்தியாகிய பகவத் கைங்கர்யத்தையும்
ததீ யார்ச்சா ஸீமாம் -பாகவத கைங்கர்யத்தைத் தனது எல்லையாக உடையதாக
கதயன்-சொல்லுமவராயும்
ஸ்வயமபி-தாமும்
யதி பதே -யதிராஜருடையதான
அசேஷம் கைங்கர்யம்-கைங்கர்யங்கள் அனைத்தையும்
விதன்வந் –பரக்கத் செய்பவராயும்
ஜயதி –மேம்ப்பட்டு விளங்குகிறார்

ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய் பரம் ஜ்யோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிபத்யதே
அபஹத பாப்மா விஜர விம்ருத்யு விசோக விஜிகத்ஸ அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப —
யதிபதே-ஷஷ்ட்டி விபக்தி -யாதிபதிக்கு அபிமதமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் தம் கைங்கர்யம் ஆகிய மூன்றையும் நேராகவே குறிக்கும் என்றுமாம்

———

நிரா லம்பம் கௌதஸ் குதம ஸாரம் நிஜ வச
ப்ரபஞ்சை வேதாந்த ப்ரசுர பணி தார்த்தா நநுக தை
பரா குர்வன் ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர் லஷ்மண முநே
பரிஷ் குர்வன் பாஷ்யம் ப்ரதயதி மதம் கூர ந்ருபதி
–33-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
வேதாந்த ப்ரசுர பணி தார்த்தாந் –உப நிஷத்துக்களில் ஒரு பொருளைப் பற்றிய பெரும்பாலான வாக்கியங்களின் அர்த்தங்களை
அநு கதை–பின்பற்றியவைகளும் -அதனால்
ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர்–பரிபக்குவமான தெளிந்த அறிவை உண்டாக்குமவைகளுமான
நிஜ வச ப்ரபஞ்சை -தம்முடைய வார்த்தைகளின் பரப்பினால் -விளக்கமான பேச்சுக்களினால்
நிரா லம்பம் -ஆதாரம் ஏற்றதும்
அஸாரம்–ஸாரமான பொருள் அற்றதுமான
கௌதஸ் குத மதம் -ஏன் ஏன் என்று கேட்க்கும் -விதண்டா யுக்தி மாத்ர வாதிகளின் மதத்தை
பரா குர்வன் -மறுப்பவராயும்
லஷ்மண முநே -பகவத் ராமானுஜருடைய
பரிஷ் குர்வன் பாஷ்யம் -ஸ்ரீ பாஷ்யத்தைப் ப்ரகாசப்படுத்துமவராயும்
லஷ்மண முநே மதம் -ஸ்ரீ ராமானுஜ முனிவரின் மதத்தை
ப்ரதயதி -ப்ரஸித்தமாக்குகிறார் –

கிம் சாதன க்வ நிவசந் கிம் உபாதநாந
கஸ்மை பலாய ஸ்ருஜதீச இதம் சமஸ்தம்
இத்யாதி அநிஷ்டித குதர்க்கம் அதர்க்கயந்த
த்வத் வைபவம் சுருதி வித விது அப்ரதர்க்யம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்38-

பகவான் எதை சாதனமாகக் கொண்ட எவ்விடத்தில் இருந்து கொண்டு எப்பொருளை உதானமாகக் கொண்டு
எந்தப் பலனுக்காக இவ்வுலகங்களை எல்லாம் படைக்கிறான் -என்று இப்படி எல்லாம்
அமர்யாதமாகச் சிலர் செய்யும் குதர்க்கங்களைச் சிறிதும் பொருள் படுத்தாத வேதாந்திகள் –
எம்பெருமானே -தேவரீருடைய வைபவத்தை அப்ரமேயமாக அறிந்துள்ளார்கள்

யஸ் ஸர்வஞ்ஞஸ்
பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஸ்வே மஹிம்நி ப்ரதி டித
க்ரீடதோ பாலகஸ்யேவ சேடாம் தஸ்ய நிசாமய -விஷ்ணு புராணம் -1-2-18-

—————

பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித
ப்ரகாமமது ராக்ஷரைரபி நவை ஸ்வ வாக் கும்பநை
ஸதாவ்ய வஹரந்கலா ஸமிதி ஸாத்த்வி காக்ரேஸராந்
தநோதி பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் கூரப —
34-

கூரப –கூரத்தாழ்வான்
பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித –பவழம் போல் அழகிய உதடுகளில் விளங்குகிற அழகான புன் சிரிப்பை உடையவராய்
ப்ரகாமமது ராக்ஷரைர் –மிகவும் இனிமையான எழுத்துக்களைக் கொண்டவர்களும்
அபி நவை –இதற்கு முன்பு கேட்டிராதவைகளுமான
ஸ்வ வாக் கும்பநை –தமது சொற்களின் சேர்க்கைகளால்
ஸமிதி–வாதப்போரில்(ஸமித் -யுத்தம் -இங்கு வாத யுத்தம்)
ஸதா–எப்போதும்
கலா -ஸாஸ்த்ர அர்த்தங்களை
வ்ய வஹரந்–தெரிவித்துக் கொண்டு
ஸாத்த்வி காக்ரேஸராந் -ஸத்வ குணம் படைத்தவர்களின் தலைவர்களை
பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் –பலவகைப்பட்ட ஆஸ்சர்யங்களின் மிகுதியினால் சித்திரத்தில் எழுதப்பட்டவர் போல்
தநோதி –செய்கிறார்

திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6-9- –

—————-

கதாஹவக்ருதோத் யமாந் கலிமலாநுலிப்தாஸயாந்
ததாக தமதாநுகாந் ததிதராந் த்விஷத்வாதி ந
முதாக்ருத பரிஸ்ரமாந் முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்
விதாய விபுதஸ்துதோ ஜயதி கூர நாதோ குரு –
-35-

கூர நாதோ குரு –கூர நாதர் என்னும் ஆச்சார்யர்
கலி மல அநுலிப்த ஆஸயாந்–காளியின் குற்றத்தினால் கெடுக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாய்
கத ஆஹவ க்ருதோத் யமாந் –வாதமாகிய போரிலே மூண்டவர்களான
ததாக தமதாநுகாந் –புத்தனுடைய மதத்தை பின்பற்றியவர்களையும் (ததாகத -புத்தன் )
ததிதராந் –அவர்களை விட வேறான
த்விஷத்வாதி ந –எதிரிகளாய் வாதம் செய்யுமவர்களையும்
முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்-மூடப்பட்ட தமது பேச்சின் வளர்ச்சியை யுடையவர்களாயும்
முதாக்ருத பரிஸ்ரமாந் –பயன் அற்றதாகச் செய்யப்பட தமது உழைப்பை யுடையவர்களாகவும்
விதாய –செய்து
விபுத ஸ்துதோ ஜயதி -ஸாத்விக பண்டிதர்களால் ஸ்துதிக்கப்பட்டவராய்க் கொண்டு மேம்பட்டு விளங்குகிறார்-

——————-

நிராக்ருதது ரீஹிதை நிகம ஸார ஸந்தர்ஸிபி
நிரஸ்தது ரிதாலிபி நிகில ஸம்ஸயச் சேதி பிர்
நிதாந்த்தை மதுரைஸ் ஸூபை நிகில சவுக்ய ஸம்பாதகை
நிஜைர் வசந கும்பநை ஜயதி கூர நாதோ குரு –
-36-

கூர நாதோ குரு –ஆழ்வானாகிய ஆச்சார்யர்
நிகம ஸார ஸந்தர்ஸிபி –வேதாந்தங்கள் ஸாரார்த்தங்களை அறிவிப்பனவும்
நிகில ஸம்ஸயச் சேதி பிர் –எல்லா சந்தேகங்களையும் அறுக்க வல்லனவும்
நிதாந்த்தை மதுரைஸ் –மிகவும் இனியனவாகவும்
ஸூபை –நன்மை பயப்பனவாகவும்
நிகில சவுக்ய ஸம்பாதகை –எல்லா விதமான சவுக்யத்தை உண்டாக்குவனவும்
நிராக்ருத துரீஹிதை –போக்கடிக்கப்பட்ட மாறுபட்ட கருத்துக்களை யுடையனவும்
நிரஸ்த துரிதாலிபி –மாறுபட்ட கருத்து உண்டாவதற்குக் காரணமான பாப ஸமூஹத்தைத் தூக்கி எறிவனவாவுமான
நிஜைர் –தம்முடைய
வசந கும்பநை –ஸ்ரீ ஸூக்திகளின் சேர்த்திகளால்
ஜயதி -வெற்றி பெறுகிறார்-

—————

கலிர் ஹதபவோ அபவத் கலுக்ஷ ஜாதமுந் மூலிதம்
தமஸ் ச ரஜஸா ஸமம் விலய மாப ஸத்த்வம் புந
ஸமேத் யுபசிதம் ந்ருணா முதயமேதி தீ வல்லரீ
மஹீதல முபாகதே மஹதி கூர நாதே குரவ்-
-37-

மஹதி கூர நாதே குரவ்–கூரத்தாழ்வானாகிற மஹாச்சார்யார்
மஹீதல முபாகதே –பூமியை அடைந்த அளவிலே
கலிர் ஹதபவோ –கலியுகமானது நாசம் செய்யப்பட உண்மையை யுடையதாக
அபவத்–ஆயிற்று –
எப்படி எனில்
கலுக்ஷ ஜாதம் –பாப ஸமூஹமானது
உந் மூலிதம் –வேரோடு களைந்து எறியப்பட்டது
தமஸ் ச ரஜஸா ஸமம் –தமோ குணம் ரஜோ குணத்தோடு
விலய மாப –அழிவை அடைந்தது
ஸத்த்வம் புந –ஸத்வ குணமோ என்னில்
ஸமேத் யுபசிதம் –வளர்ச்சியை மிகவும் அடைந்து கொண்டே இருக்கிறது
அதனால்
தீ வல்லரீ –அறிவு என்னும் கொடியானது
உதயமேதி –வளர்ச்சியை அடைகிறது

கலியும் கெடும் -கண்டு கொண்மின் –அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாயனாருக்கு ஆளாயினரே -க்ருதயுக தர்மமான ஸத்வ குணம் வளர்ந்து ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றனர்-

————-

தயாதி ஸூகுணா வலி தநுஜ வைரிணா ஸ்வாமிநா
நியாந்த்ரித நிஜாக்ருதி நிலயமேத்ய கூராதிபம்
ப்ரதி க்ஷண விஜ்ரும்பிதாக்ருதிரவாப்ய லஷ்யம் பரம்
ப்ரகாஸ மதி கச்சதி ப்ரதி ஹதாத்ம துலயாதிக
–38-

தநுஜ வைரிணா–அஸூர ஸத்ருவான
ஸ்வாமிநா–எம்பெருமானாலே
நியாந்த்ரித நிஜாக்ருதி –குறைக்கப்பட தத் தம் வடிவுகளை யுடைய
தயாதி ஸூகுண ஆவலி –தயை முதலிய நற் குணங்களின் கூட்டமானது
நிலயமேத்ய கூராதிபம் –கூரத்தாழ்வானாகிற ஒளி விடத்தை அடைந்து
ப்ரதி க்ஷண விஜ்ரும்பித ஆக்ருதிர் –க்ஷணம் தோறும் வளர்ந்த தத்தம் வடிவுகளை யுடையதாய்
அவாப்ய லஷ்யம் பரம் –வளர்ச்சியில் உயர்ந்த குறிக்கோளை அடைந்து
ப்ரதி ஹதாத்ம துலயாதிக–தன்னோடு ஓத்ததும் மிக்கதுமான குணத்தொகுதி மற்று ஓன்று இல்லாதாய்க் கொண்டு
ப்ரகாஸ மதி கச்சதி –விளக்கத்தை அடைகிறது
தயாதி –ஆதி சப்தத்தால் வாத்சல்யம் ஸுசீல்யம் ஸுலப்யம் உதாரகுணம் போன்றவற்றையும் சொன்னவாறு-

————–

ஸ்ரீ யபதி உதாரதீ ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம்
விஹாய பரமேஸதாம் புவி யதாத்மநா ஆசார்யதாம்
அவாப்து மவதீர்ய தத் ஸமுப லப்தயே ஸிஷ்ய தாம்
அவாப யதி பூபதே விஜயதாம் ஸ கூராதிப —
39-

ஸ்ரீ யபதி உதாரதீ –உயர்ந்த திரு உள்ளம் கொண்ட ஸ்ரீ மந் நாராயணன்
ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம் –வேத வாக்ய ஸமூஹத்தினால் ஒரு மிடறாக ஸ்தோத்ரம் செய்யப்பட
விஹாய பரமேஸதாம் –மிக உயர்ந்த ஸர்வேஸ்வரத் வத்தை விட்டு ஒழித்து
ஆசார்யதாம் அவாப்தும் –ஆச்சார்யத்வத்தை அடைவதற்காக
புவி யதாத்மநா வதீர்ய –பூமியில் யாருடைய வடிவுடையவனாக அவதரித்து
தத் ஸமுப லப்தயே -அவ்வாச்சர்யத்வத்தைப் பூர்ணமாகப் பெறுவதற்காக
யதி பூபதே -யதிராஜரான எம்பெருமானாருக்கு
ஸிஷ்ய தாம் –சிஷ்யராக தன்மையை
அவாப்ய –அடைந்தானோ
விஜயதாம் ஸ கூராதிப –அந்தக் கூரத்தாழ்வான் வெற்றி பெற்றிடுக-

————-

வஸோபிர் அந்ருதேதரை அகில ஜீவ ஜீவாதுபிர்
முமுஷு ஜநதாமுதே முரரிபோர் மஹா வைபவம்
ஸ பாஷப நயநம் ப்ருவந் ஸ புல கோத்கமம் ஸாதரம்
ஸமித்த மதுரஸ்மிதோ ஜயதி கூர ப்ருத்வீ பதி
–40-

கூர ப்ருத்வீ பதி –கூரத்தாழ்வான்
அகில ஜீவ ஜீவாதுபிர் –எல்லா ஜனங்களுக்கும் ஜீவ ஒவ்ஷதமாய்
வஸோபிர் அந்ருதேதரை –பொய்யில்லாத-ஸத்யமான -வேத வாக்யங்களைக் கொண்டு -பொய்யில் பாடலான திருவாய் மொழி முதலியவற்றைக் கொண்டு
முரரிபோர்-முர அசுரனை அழித்த எம்பெருமானுடைய
மஹா வைபவம் –மிக உயர்ந்த பெருமையை
முமுஷு ஜநதாமுதே –முக்தி பெற விரும்பும் மக்களின் மகிழ்ச்சிக்காக
ஸ பாஷப நயநம் –கண்ணீர் பெருகும் கண்களோடும்
ஸ புல கோத்கமம் –மயிர் கூச் செறிதலோடும்
ஸமித்த மதுரஸ்மிதோ -மிக விளங்கிய இனிய புன் சிரிப்பை யுடையவராய்க் கொண்டு
ஸாதரம் –ப்ரீதியோடே
ப்ருவந் –பேசுமவராய்
ஜயதி –மேம்பட்டு விளங்குகிறார்-

————–

பவாக்ய மருமேதி நீவலந ஜாததாபாதுராந்
ஜநாந் ஹரி கதாம்ருதை மதுர ஸீதலைர் ஜீவயன்
ததீய பத ஸேக்ஷ தாதி யமபாரமுத்பாத யந்
விபாதி புவி கூரராட் விபுத சங்க ஸம்ஸேவித
–41-

கூரராட்–கூரத்தாழ்வான்
பவாக்ய மருமேதி நீவலந ஜாத–ஸம்ஸாரம் என்று பெயர் பெற்ற பாலை நிலத்தில் ஸஞ்சரிப்பதனால் உண்டான்
தாப ஆதுராந் –தாபத்தினால் வருந்திய
ஜநாந் –மக்களை
மதுர ஸீதலைர் –இனியவனாய்க் குளிர்ந்தவையுமான
ஹரி கதாம்ருதை –பகவத் கதைகளாகிற அமுதப் பெருக்குகளால்
ஜீவயன் –பிழைப்பிப்பவராயும்
ததீய பத ஸேக்ஷ தாதி யம் –ஜீவாத்மாக்கள் அவ்வெம்பெருமான் அடியார்களுடைய அடியவர்களுடைய திருவடிகளுக்கு அடியவர்கள் என்னும் அறிவை
அபாரம் உத்பாத யந் –அதிகமாக உண்டாக்குமவராயும்
விபுத சங்க ஸம்ஸேவித –வித்வத் கோசடியினால் ஸேவிக்கப் பெற்றவராய்
விபாதி புவி –பூமியில் விளங்குகிறார்

அழகிய மணவாளன் திருவேங்கடமுடையான் பேர் அருளாள பெருமாள் மூவரும் தமது அடியரான திருப்பாண் ஆழ்வார் தொண்டைமான் சக்ரவர்த்தி எம்பெருமானார் ஆகிய மூவரையும் முன்பே தமக்கு அடியவராய் இருக்கிற லோக ஸாரங்க மா முனிகள் -குறும்பறுத்த நம்பிகள் -திருக்கச்சி நம்பிகள் என்னும் மூவருக்கும் அடியவைகளாக ஆக்கி இவ்வர்த்தம் காட்டி அருளினார்கள் அன்றோ-

————

அஸத்பிர் அநுபத்ருதாம் அநிதமாதி வாணீம் ஸதீம்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் ஹரி பதாநு ஷக்தாம் பரம்
ஜநார்தன பரத்வ தீ ஜநித பாவ பத்தாஸயை
வஸோபி ருபலாலயந் ஜயதி கூர நாதோ குரு –
-42-

கூர நாதோ குரு –கூரேசர் என்றும் ஆசாரியர்
அநிதமாதி வாணீம் -இது தான் பிறந்த காலம் என்பது இல்லாத -அநாதியான -வேத வாக்கை
ஜநார்தன பரத்வ தீ ஜநித –எம்பெருமானையே பரம் பொருளாகக் கொண்டது வேதம் என்னும் அறிவினால் உண்டு பண்ணப்பட்ட
பாவ பத்த ஆஸயை –மனதில் ஊன்றிய கருத்தைத் தெரிவிக்கிற
வஸோபி–தமது ஸ்ரீ ஸூக்திகளினால்
ஸதீம் -பதி வ்ரதையாகவும்
அஸத்பிர் –அசத்துக்களான புறச் சமயிகளாலே
அநுபத்ருதாம்–தமக்குத் தோற்றிய படி எல்லாம் பொருள் சொல்லிக் கெடுக்கப் படாததாகவும்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் -மற்ற ஒரு தேவர்களின் காலில் குனியாததாகவும்
பரம்-மிகவும் மேம்பட்ட
ஹரி பதா அநு ஷக்தாம் –எம்பெருமான் திருவடிகளிலே ஆசை கொண்டதாகவும்
உபலாலயந் ஜயதி –உபதேசித்திக் கொண்டாடப்படுமவராய் மேம்பட்டு விளங்குகிறார்-

—————-

அநந்த குண மவ்க்திகை அகில சேதநா மோதகை
அநந்த நய ஸாகராத் ஸ்வயமுபாஹ்ருதைஸ் ஸோபநை
அநந்த பத ஸம்ஸ்ரிதாநபி விபூஷயன் ஸோபதே
ஹ்யநந்த குண ஸேவதிர் ஜயதி கூர நாதோ குரு
–43-

அநந்த குண ஸேவதிர் –எல்லையில்லா நற் குணங்களுக்கு நிதியான
கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
அநந்த நய ஸாகராத் –எல்லையில்லா ஸாஸ்திரங்களாகிய கடலில் இருந்து
ஸ்வயம் –தானாகவே
உபாஹ்ருதைஸ் –எடுக்கப்பட்டவைகளும்
அகில சேதந ஆமோதகை-மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்டுவனவும்
ஸோபநை–நல்லவைகளுமான
அநந்த –நற் குணம் நிறைந்த எம்பெருமானுடைய
குண மவ்க்திகை –நற் குணங்களாகிய முத்துக்களினாலே
அநந்த பத ஸம்ஸ்ரிதாந் –எம்பெருமான் திருவடிகளை பற்றிய பக்தர்களை
அபி விபூஷயன் ஸோபதே ஹ்யஜயதி – –நன்றாக அலங்கரிப்பவராய்க் கொண்டு பிரகாசித்து விளங்குகிறார்-

———————–

அவாங் மநஸ கோசர அமல தயா குணைகாஸ் பதம்
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ ஸ்வயம்
யதீஸ்வர மகா பஹம் நிகில தேஹிநாம் தர்சயந்
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி கூர நாதோ குரு –
-44-

அவாங் மநஸ கோசர அமல தயா குண ஏகாஸ் பதம் –வாக்குக்கும் மனஸ்ஸூக்கும் எட்டாத குற்றமற்ற தயையாகிய குணத்துக்கு ஒரே கொள் காலமாகிய
கூர நாதோ குரு –ஆழ்வான் என்னும் ஆச்சார்யர்
ஸ்வயம்-தாமாகவே -யாரும் வேண்டாமல் –
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ –நற் குலப்பிறப்பு முதலியவற்றால் உண்டான செருக்கினால் கெடுக்கப் பட்டவர்களை ,மோக்ஷம் அடைவிப்பதில் விரதம் பூண்டவராய்
நிகில தேஹிநாம் –எல்லா மக்களுக்கும்
யதீஸ்வரம் –யதிராஜரான எம்பெருமானாரை
அகா பஹம் –பாபம் போக்கி மோக்ஷம் அடைவிப்பராக -உத்தாரக ஆச்சார்யராக
தர்சயந் –காட்டுமவராய்க் கொண்டு
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி –உயர்ந்த ஜனங்களால் அடையப்பட்டு மேம்பட்டு விளங்குகிறார் –
தயா குண ஏக ஆஸ்பதம் என்பதால் ஆழ்வானுடைய தயை எம்பெருமானுடைய தயையைக் காட்டிலும் மேம்பட்டது என்றவாறு-

———

யதீஸிதுரதீ ஸதாம ஸஹதோ அபி ரங்க அம்ருதாத்
ஸ்வகைஸ் ஸம முகை
குண ஸ்வபத ஸிஷ்யதாமே யுஷா
குரோஸ் ஸமுபலப் தயா நிகில யாபி ரங்கஸ்ரியா
யதீஸமபி நந்த யந் ஜயதி கூர நாதோ குரு
–45-

கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
யதீஸிதுர் –யதிராஜரான எம்பெருமானுடைய
அதீ ஸதாமபி -மஹா ஆசார்யத்வத்தையும்
அஸஹதோ -பொறுக்காதவராய்
ஸ்வகைஸ் ஸம முகை குண –தம்முடையவையான சாந்தி முதலிய குணங்களினாலே
ஸ்வபத ஸிஷ்யதாம் –தம் திருவடிகளில் சிஷ்யராய் இருத்தலை
ஏயுஷ-அடைந்தவருமான
ராங்க அம்ருதாத் குரோஸ் –திருவரங்கத்து அமுதனார் என்ற ஆசார்யரிடம் இருந்து
ஸமுபலப் தயா -பெறப்பட்ட
நிகில யாபி ரங்கஸ்ரியா –ஸமஸ்த மான ஸ்ரீ ரெங்க ஐஸ்வர்யத்தாலும்
யதீஸம் -எம்பெருமானாரை
அபி நந்த யந் ஜயதி –மிகவும் மகிழ்விப்பவராய் விளங்குகிறார்
தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -31
குரும் பிரகாசயேத் தீ மான் –அமுத்தனாரைத் திருத்தி எம்பெருமானாருக்கு ஆளாக்கி பிரபன்ன காயத்ரியையும் அருளிச் செய்ய அருளினை பெருமை
ஆக 28 ஸ்லோகம் தொடங்கி இது வரை 18 ஸ்லோகன்களால் ஆழ்வானுடைய பெருமைகளை அருளிச் செய்தார் ஆயிற்று-

————

அநர்க விபுலாம் ஸூவ ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத
கிரீட கடகாதிபிர் விவித பூஷணைர் பூஷித
ஸமா வஹதி கூர ராட் அகில லோக நேத்ரோத்ஸ வம்
–47-

அநர்க விபுல அம் ஸூவ –விலை மதிப்பில்லாத பெரிய திருப்பரிவட்டங்களை அணிந்தவரும்
ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித –பளிச்சு என்று விளங்குகிற திருமண் காப்புக்களால் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ குறியை யுடையவரும்
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத –தாமரை மணி துளஸீ மணிகள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப் பட்டவரும்
கிரீட கடகாதிபிர் கிரீடம் காப்பு முதலிய
விவித பூஷணைர் பூஷித –பல வகையான திரு ஆபரணங்களால் பூஷிக்கப் பட்டவருயுமாய்க் கொண்டு
கூர ராட் –கூரத்தாழ்வான்
அகில லோக நேத்ரோத்ஸ வம் –மக்கள் அனைவரின் கண்களுக்கு ஸந்தோஷத்தை
ஸமாவஹதி –உண்டாக்குகிறார்

இது முதல் மேல் ஐந்து ஸ்லோகன்களால் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமும் திருத் தை திரு ஹஸ்த அவதார உத்ஸவ மகிமையையும் அருளிச் செய்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டி அருளுகிறார்-

—————-

மஹார்க மகுடோஜ்வல ஸ்புரது தாரீ ஹாராவலி
விலோல மணி குண்ட லோல் லஸித பீந கண்டஸ்தல
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித
விபாத மது ராக்ருதி ஜயதி கூரராட் தேஸிக
–47–

விபாத மது ராக்ருதி -மிக விளங்குகிற –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவரான
கூரராட் தேஸிக –கூரத்தாழ்வான் என்னும் ஆச்சார்யர்
மஹார்க மகுடோஜ்வல –பெரு விலையனான திரு அபிஷேகத்தினால் விளங்குமவராகவும்
ஸ்புரத் உ தாரீ ஹார ஆவலி –மின்னுகின்ற பெரிய முத்து மாலைகளின் வரிசைகளை அணிந்தவரும்
விலோல மணி குண்டல உல் லஸித பீந கண்டஸ்தல –அசைகின்ற ரத்ந குண்டலங்களாலே ஒளி வீசப் பெற்ற பருத்த கன்னங்களை யுடையவராகவும்
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித -பல நிறமுள்ள மலர்த் தொகுதிகளால் தொடுக்கப் பட்ட மாலைகளினால் அலங்கரிக்கப் பற்றவராகவும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்-

———————–

உபாருடே பாநாவுதய மதி ருஹ்யாநு திவஸம்
விசித்ரா மாந்தோ லீம் விவித மணிபிர் காஞ்சந மயீம்
அலங்குர்வந் வீதீ அநு பத க்ருதா கல்ப ஸூபகா
ஸமிந்தே கூரேஸோ மகர மஹ காலே அதிருசிர
–48-

கூரேஸோ–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே–தைமாத உத்ஸவ சமயத்தில்
யநு திவஸம் -ஒவ்வொரு நாளும்
உபாருடே பாநாவுதய -ஸூர்யன் உதயத்தை அடைந்த அளவில்
விவித மணிபிர்–பலவகையான ரத்னங்களால்
விசித்ராம் –பல வர்ணங்களை யுடையதான
காஞ்சந மயீம் -ஸ்வர்ண மயமான
ஆந்தோ லீம் –திருப் பல்லக்கை
அதிருஹ்ய –ஏறி வீற்று இருந்து
அதிருசிர –முற் கூறிய இருவகை அழகுகளும் மிகப்பெற்றவராய்
அநு பத க்ருத ஆகல்ப ஸூபகா –அடி தோறும் செய்யப்பட கோலம் வாழை மரம் பாக்குமரம் மாலிலைத் தோரணம் முதலிய அலங்காரங்களால் அழகு பெற்று இருக்கிற
வீதீ-திரு வீதிகளை தமது புறப்பாட்டினால்
அலங்குர்வந் ஸமிந்தே –அலங்கரித்துக் கொண்டு மிகவும் பிரகாசிக்கிறார்

———————–

ஸமாஸ்தாய ஸ்ரீ மாந் நிஸி புஜா போக்ய மதுலம்
மஹாயாநம் ப்ரஹ்ம ப்ரபமகில பூஷாஞ்சிததநு
த்ரயீ காதா ஸக்தைர் நிபிட ஸவிதோ வைஷ்ணவ வரை
சரந் ஸ்ரீ வத்சாங்கே ஜயதி விஸிகாம் கூர நகரே –
-49-ஸ்ரீ மாந் ஸ்ரீ வத்சாங்கே–திருவாளரான கூரத்தாழ்வான்
கூர நகரே –கூரம் என்னும் நகரத்தில்
நிஸி நிஸி–இரவுகள் தோறும்
ஸமாஸ்தாய புஜா போக்ய மதுலம்
அகில பூஷா அஞ்சிததநு –ஸமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்ட திருமேனியை யுடையவராய்
ப்ரஹ்ம ப்ரபம் -ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையதும்
அதுலம் -நிகரற்றதும்
புஜா போக்யம் மஹாயாநம் –தோளுக்கு இனியான் என்ற பெரிய வாஹனத்தை
ஸமாஸ்தாய –ஏறி வீற்றிருந்து
த்ரயீ காதா ஸக்தைர் –ருக் யஜுஸ் ஸாம வேதங்களைப் பாடுவதில் ஊற்றமுள்ள
வைஷ்ணவ வரை –ஸ்ரீ வைஷ்ணவ உத்தமர்களாலே
நிபிட ஸவிதோ –நெருக்கமுடைய ஸமீப ப்ரதேசத்தை யுடையராய்க் கொண்டு
சரந் ஜயதி விஸிகாம் –பெரிய தெருவில் எழுந்து அருளுமவராய் விளங்குகிறார் –
மஹா யாநம் -புஜா போக்யம் -இரண்டையும் சேர்த்து பெரிய தோளுக்கு இனியான் –மங்கள கிரி என்றுமாம்-

————

ஸதாம் பூலைந்தை குஸூம ஸஹிதை க்ஷய நிவஹை
குடாந் நாத்யை ரந்நைரபி நிஜ மஹாஸ்வாதா மஹிதை
க்ருதார்த்தா நாதந்வந் நிகில மநுஜாந் கூர ந்ருபதி
ஸ்வ ஜந்மர்ஷே ஹஸ்தே மகர மஹ காலே விஜயதாம்-
-50-

கூர ந்ருபதி–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே-தைமாத யுத்ஸவ சமயத்தில்
ஸ்வ ஜந்மர்ஷே –தமது திரு அவதார நக்ஷத்திரமான
ஹஸ்தே –ஹஸ்தத்திலே
நிஜ மஹாஸ்வாதா மஹிதை –தாம் அனுபவித்துச் சிறப்பிக்கப் பட்டவைகளான
ஸதாம் பூலை-வெற்றிலை பாக்குக்களோடு கூடியவைகளும்
குஸூம ஸஹிதை–புஷபங்களோடு கூடியவைகளுமான
கந்தை –சந்தனங்களாலும்
குடாந் ந ஆத்யை–சக்கரைப்பொங்கல் முதலான
அந்நைரபி –ப்ரஸாதங்களாலும்
பஷ்ய நிவஹை –பஷண ஸமூஹங்களாலும்
நிகில மநுஜாந் -மக்கள் அனைவரையும்
க்ருதார்த்தாந் ஆதந்வந் –தன்யர்களாக ஆக்குமவராய்க் கொண்டு
விஜயதாம்-வெற்றி பெற்று வாழ்க

ஜய ஜய -என்று முதலில் செய்த மங்களா ஸாஸனத்தை விஜயதாம் என்று நிகமித்து அருளிச் செய்கிறார்

————–

ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா
பஞ்சாஸத் கூர நாதஸ்ய ஸ்தோத்ர மீரிதம் உத்தமம்

ஸூத்த ஸத்வேந–ஸூத்த ஸத்த்வம் என்று கூறப்படும் வம்சத்தில் தோன்றியவராய்
மஹாத்மநா -பரந்த மனம் படைத்தவராய்
ஸ்ரீ மதா தொட்டார்யேண –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யால் நிறைந்தவருமான தொட்டாச்சார்யராலே
கூர நாதஸ்ய–கூரத்தாழ்வான் விஷயமான
பஞ்சாஸத் ஸ்தோத்ர மீரிதம் உத்தமம் –50 ஸ்லோகங்களைக் கொண்ட மிக உயர்ந்த ஸ்தோத்ரமானது விண்ணப்பிக்கப்பட்டது
கன்னட மொழியில் தொட்ட -என்பது பெரிய என்னும் பொருள் யுடையது


—————————————–

ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11

அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥

அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥

அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥

  1. அமானித்வம் – பணிவு
  • இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.
  • முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.
  1. அதம்பித்வம் – செறுக்கின்மை
  • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.
  1. அஹிம்ஸா – வன்முறையின்மை
  • ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.
  1. க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை
  • எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
  • இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.
  1. ஆர்ஜவம் – நேர்மை
  • ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.
  • பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.
  1. ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது
  • எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.
  1. சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை

இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

  • சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.
  1. ஸ்தைர்யம் – மன உறுதி
  • “ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.
  1. ஆத்ம-வினிக்ரஹ: – சுய கட்டுப்பாடு (வைராக்யம்)
  • அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
  • எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.
  1. இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்
  • திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
  1. அனஹங்கார – தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்
  • மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான்  அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
  1. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் – எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்பது
  • ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
  1. அஸக்திர் – பற்றின்மை
  • எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.
  1. புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க– குழந்தைமனைவி வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்
  • அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
  • ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.
  • இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.
  1. இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம்  ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்
  • கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
  1. மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி
  • மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.
  1. விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்
  • ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.
  1. அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்
  • சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
  1. அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்
  • தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.
  1. தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது
  • அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.

முடிவுரை

இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக  வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

—————–————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

March 8, 2024

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணுஸ் ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஞ்ஞாபனம் இதம் விலோக்ய வரதம் குரும்
–1-

யதிகளின் தலைவரே சரியான வழி மூலம் உமக்கு அளிக்கப்படும் என்னுடைய விண்ணப்பத்தை நீவிர் கேட்ப்பாராக

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரணம் நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிர்வாசய வாசநாம்
-2-

எண்ணற்ற காலங்கள் பாபங்களையே செய்து அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது
யதிராஜரே இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்த படி செய்து கொண்டே இருக்கிறேன்
இவ்விதம் இருக்கும் எனது புலன்களை உலக விஷயங்களில் இருந்து மீட்டு அருளப் பிரார்த்திக்கிறேன்

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவ அத்ர ஹித காரின் யதீந்த்ரந
–3-

யதிராஜரே நான் உம்மிடம் புத்ரன் வீடு செல்வம் முதலானவற்றைக் கேட்க்க கூடும்
ஆனால் அவற்றை விலக்கி நீவிர் எனக்கு வைராக்கியத்தை அளித்து அருள வேண்டும்
காரணம் தேவரீர் எனக்கு நன்மையையே மட்டுமே அளிக்க திரு உள்ளம் கொண்டுள்ளீர்

யத் அபராதா நஸ்யுர்மே பக்தேஷூ பகவத்யபி
யதா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய
–4-

யதிராஜரே முக்தி அடையும் வரையில் இந்த உடலுடன் இங்கு வாழும் நான் ஒரு போதும் பகவானையே அடியார்களையோ அவமதிக்காமல் இருக்கவும் தேவரீரே அருள வேண்டும்

ஆ மோக்ஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலஷேப அஸ்து ந சத்பி ஸஹ வாசம் உபேயுஷாம் –
-5-

லஷ்மண முனியே இந்த உடல் பிரியும் காலம் வரை அடியேன் உமது பிரபந்தங்களையே ஆராய்ந்த படி-அவற்றிலேயே கால க்ஷேபம் செய்யும் படி அருள வேண்டும்

பராங்குச முனீந்த்ராதி பரமாச்சார்ய ஸூக்தயா
ஸ்வாதந்தாம் மம ஜிஹ்வா ஸ்வத ஏவ யதீஸ்வர–
6

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது 

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த தனியன்

இத்யேதத சாதாரம் வித்வான் பிரார்த்தனா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–
7-

யதிராஜரின் திருவடிகளின் மேல் வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களா அவர்கள் எம்பெருமானாருடைய திருவடிகளிலே மேலும் அதீத பக்தி யுடையவர்கள் ஆவார்கள்

பிரார்த்தனா பஞ்சகம் ஸமாப்தம்

———–

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்ட த்ரயோஜ் ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள்-ஸ்ரீ கூரத் தாழ்வான்-என்பர் – அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் -ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள்

February 29, 2024

ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ருபி⁴ரநுக்³ரு’ஹீதம்
॥ ஶ்ரீ: ॥
॥ ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ॥
॥ ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ரவே நம: ॥

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந் வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்–ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள்   தனியன் :

திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம்

அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே)

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: தமது திருக் குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

அருளிச்செயல்கள்:

  • ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள்.
  • பராசர பட்டரின் அஷ்ட ஸ்லோகீ வ்யாக்யானம்
  • மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களாசாசனம் –
  • வரவரமுனி சதகம் (மாமுனிகளை மேன்மைப்படுத்தி 100 ஸம்ஸ்க்ருத ச்லோகங்கள் )
  • வரவரமுனி மங்களம்
  • வரவரமுனி ஸுப்ரபாதம் –
  • மாமுனிகளின் வாழி திருநாமமாகிய “செய்ய தாமரைத் தாளினை வாழியே…” (அருளிச்செயல் கோஷ்டியில் இறுதியில் சேவிக்கப்படும்)
  • மற்றும் பல ஸ்லோகங்கங்கள் — ஸ்தோத்ர க்ரந்தங்கள்.

முடும்பை நம்பி திருவம்சத்தில் “ஹஸ்திகிரிநாதர்” என்னும் திருநாமம் கொண்டு அவதரித்தார். இவரை அண்ணா என்றும் அழைப்பார்கள். ப்ரதிவாதி பயங்கரர் என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.

எப்படி கூரத்தாழ்வான் எம்பெருமானாருக்கு முற்பட்டு அவதாரம் செய்திருந்தாலும் எம்பெருமானாருடைய ப்ரியமான சிஷ்யரானாரோ, அதேபோல் அண்ணாவும் மாமுனிகளுக்கு முற்பட்டு அவதாரம் பண்ணியிருந்தாலும் மாமுனிகளுக்கு இவர் ப்ரியமான சிஷ்யரானார். இவர் மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் (மாமுனிகளின் எட்டு முக்கிய சிஷ்யர்கள்) ஒருவருமாவார்.
——————–

ஜய ஜய யதி ஸார்வபௌ⁴ம அமல ஸ்வாந்த ! துப்⁴யம் நம:
ஜய ஜய ஜநி ஸிந்து⁴மக்³நாத்மஸந்தாரகக்³ராமணீ: ! ।
ஜய ஜய ப⁴ஜநீய ! கூரேஶ முக்²யை: ப்ரஸீத³ ப்ரபோ⁴ !
ஜய ஜய விது³ஷாம் நிதே⁴ ! ஜாக்³ரு’ஹி ஶ்ரீநிதே⁴ ! ஜாக்³ரு’ஹி ॥ 1॥

பூர்ணார்ய பூர்ண கருணா பரிலப்³த⁴ போ³த⁴ !
வைராக்³ய ப⁴க்தி முக² தி³வ்ய கு³ணாம்ரு’தாப்³தே⁴ ! ।
ஶ்ரீ யாமுநார்ய பத³பங்கஜ ராஜ ஹம்ஸ !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 2॥

ஆநேதுமத்³ய வரத³ஸ்ய க³ஜாத்³ரி ப⁴ர்து:
பாநீய மச்ச²மதிஶீதம் அகா³த⁴ கூபாத் ।
த்⁴வாந்தம் நிரஸ்தம் அருணஸ்ய கரைஸ் ஸமந்தாத்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 3॥

ஶ்ரீரங்க³ராஜ பத³பங்கஜயோர் அஶேஷ
கைங்கர்யம் ஆகலயிதும் ஸகுதூஹலஸ் த்வம் ।
உத்திஷ்ட² நித்ய க்ரு’திம் அப் யகி²லாம் ச கர்தும்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 4

த்வாம் வீக்ஷிதும் ஸமுபயாதி வ்ரு’ஷாசலேந்த்³ர:
த்வத் ஸம் ப்ரக்ல்ரு’ப்த வர ஶங்க²ரதா²ங்க³பாணி: ।
ஸம் யோஜிதாம் உரஸி மாம் ப⁴வ தைவ பி³ப்⁴ரத்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 5॥

ஶ்ரீமத் குரங்க³பரிபூர்ண விபு⁴ஸ்த்வது³க்தம்
ஶ்ரீபா⁴ஷ்ய ஶாஸ்த்ரமமலம் த்வயி ப⁴க்தி யுக்த: ।
ஶ்ரோதும் ஸமிச்ச²தி யதீந்த்³ர ! ஸிதோர்த்⁴வ புண்ட்³ர:
தம் போ³த⁴யார்த²மகி²லம் தவ ஸுப்ரபா⁴தம் ॥ 6॥

ஶ்ரீபா⁴ஷ்யமாலிகி²துமாத்த விஶாலலேக்²ய:
ஶ்ரீவத்ஸ சிஹ்ந கு³ருராநத தி³வ்ய கா³த்ர: ।
வேதா³ந்த ஸூத்ரமபி வக்தும் அமுஷ்ய ஸர்வம்
உத்திஷ்ட² லக்ஷ்மண முநே ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 7॥

ஶ்ரீமாந் ஸ பூர்ண வடுராத³ரத: ப்ரக்³ரு’ஹ்ய
ஶ்ரீபாது³காம் யதிபதே ! பத³யோ: ப்ரயோக்தும் ।
த்³வாரி ஸ்தி²திம் விதநுதே ப்ரணதார்தி ஹாரிந் !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 8॥

காஷாய வஸ்த்ர கடி ஸூத்ர கமண்ட³லூம்ஶ்ச
ஶ்ரீத³ந்தகாஷ்ட²மபி தே³ஶிக ஸார்வபௌ⁴மா: ।
பாணௌ நிதா⁴ய நிவஸந்தி விஶுத்³த⁴கா³த்ரா:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 9॥

த்வாம் போ³த⁴யந்தி கு³ரவ: ப்ரதி²தா மஹாந்த:
ஶ்ரீவைஷ்ணவாஶ்ச யமிநஸ்தவ பாத³ப⁴க்தா: ।
ஏகாந்திநஶ்ச விமலாஸ்த்வத³நந்யபா⁴வா:
தாந் பாலயாத்³ய யதிஶேக²ர ! ஸுப்ரபா⁴தம் ॥ 10॥

ப்³ராஹ்மே ப்ரபு³த்⁴ய விபு³தா:⁴ ஸ்வ கு³ரூந் ப்ரணம்ய
ராமாநுஜாய நம இத்யஸக்ரு’த் ப்³ருவாணா: ।
அஷ்டாக்ஷரம் ஸசரமம் த்³வயமுச்சரந்தி
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 11॥

ப்ராத: பட²ந்தி பரம த்³ரவிட³ப்ரபந்ந
கா³யத்ரி மந்த்ர ஶதமஷ்ட ஶிரஸ்கமச்ச²ம் ।
ஶ்ரீவைஷ்ணவாஸ் தவ பதா³ப்³ஜ நிவிஷ்டபா⁴வா:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 12॥

ஆராத⁴நம் ரசயிதும் கமலாஸக²ஸ்ய
ஶ்ரீயாத³வாசலபதே: விவிதோ⁴பசாரை: ।
பாதும் ச த்³ரு’ஷ்டி கமலேந நதாந ஶேஷாந்
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 13॥

ஸஸேவ்ய ! ஸப்த ஶத ஸம்யமி ஸார்வபௌ⁴மை:
ஸத்³தே³ஶிகை: ஸகல ஶாஸ்த்ர விதா³ம் வரிஷ்டை:² ।
ஏகாந்திபி:⁴ பரம பா⁴க³வதைர் நிஷேவ்ய !
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 14॥

க³த்³ய த்ரயம் நிக³ம ஶேக²ரதீ³பஸாரௌ
வேதா³ர்த²ஸங்க்³ரஹமபி ப்ரதி²தம் ச நித்யம் ।
கீ³தார்த²பா⁴ஷ்யமபி தே³ஶிக புங்க³வாநாம்
தா³தும் ப்ரஸீத³ யதி ஶேக²ர ! ஸுப்ரபா⁴தம் ॥ 15

பாதா³ம் பு³ஜம் யதிபதே ! ஶரணம் விஹர்தும்
ஸங்க³த்ய ஸம் ஸரண வாரி விலங்க⁴நோத்கா: ।
ஆயாந்தி ஹஸ்த கமலாபி⁴த்⁴ரு’தோபசாரா:
தாந் பாஹி கருணயா தவ ஸுப்ரபா⁴தம் ॥ 16॥

ஸ்நாதும் கவேர தநயா ஸலிலேஷு ஶிஷ்யை:
ஆசார்ய பூருஷ வரை: யதிபி⁴ர் விஶுத்³தை:⁴ ।
ஶ்ரீவைஷ்ணவைஶ்ச ஸஹ ஸேவ்ய ! மஹாநுபா⁴வை:
ராமாநுஜார்ய ! ப⁴க³வந் ! தவ ஸுப்ரபா⁴தம் ॥ 17॥

ராமாநுஜார்ய ! ரமணீயகு³ணாபி⁴ராம !
ராகா³தி³ தூ³ரக³ கு³ரோ ! கு³ரு ஸார்வபௌ⁴ம ! ।
ஸத்த்வ ப்ரதா⁴ந ! ஶரணாக³த வத்ஸல !
த்வத் பாதா³ப்³ஜ யோரிஹ பரத்ர ச கிங்கர: ஸ்யாம் ॥ 18

இதி ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ருபி⁴ரநுக்³ரு’ஹீதம் ஶ்ரீராமாநுஜஸுப்ரபா⁴தம் ।
॥ ஶ்ரீவாதி³பீ⁴கரகு³ரவே நம: ॥

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ மன் நாத -யாமுன முனிகள்–ஸ்துதிகள் –

February 14, 2024

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

———

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ மன் நாத  முனிகள்–ஸ்துதிகள்

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம் த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-

வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்

ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –

ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே

ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ

ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ

இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ

நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்

சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்

இந்த ஸ்லோகம் வசந்த திலக வ்ருத்தம் –

————

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹி
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்––1-5-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –பகவத் ஞான பக்திகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல

—————

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–5-

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

தேவாதி நாத கமலா ப்ருதனேசா பூர்வாம்
திபிதந்தரம் வகுளா பூஷணா நாதா முக்யை
ராமானுஜ ப்ரப்ருதிபி பரி பூஷிதாக்ராம்
கோப்த்ரீம் ஜகந்தி குரு பங்க்தி அஹம் ப்ரபத்யே -ஸ்ரீ தேவ நாயக பஞ்சாசத்-2-

குரு பரம்பரை -தேவாதி நாதன் தொடங்கி -கமலா -ப்ருதனேசர் -ஸ்ரீ விஷ்வக்சேனர் -வகுளா பூஷணர்-
நாதா முக்யை-ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமாக -பெரிய நம்பி -ஸ்ரீ ராமானுஜர்-அஸ்மத் ஆச்சார்யர் வரை – –குரு பங்க்தி-

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபஞ்ஞம் அசேஷ த: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ:–ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் -2-

பரதாய பரம் நமோ அஸ்து -அந்த பரதாழ்வான் பொருட்டு நமஸ்காரங்கள் –
ஜடா பரதர் துஷ்யந்த மகனும் பரதன் -நாட்டிய சாஸ்திரம் அருளிய பரதன் -போன்ற பலர் உண்டே
தஸ்மை பிரதமோதாஹரணாய பக்தி பாஜாம் -பக்தர்களுக்கு முதல் உதாரணம் -மற்றவர்களை வியாவர்த்தித்து –
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -கோடி ராமரும் அண்ணல் உனக்கு ஒப்போ கௌசல்யை –
யத் உபஞ்ஞம் அசேஷத ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா பிரபாவ-பாதுகையின் பெருமையை உலகோர் அறியும்படி

ஸ்ரீ ராமனுடைய ஸ்ரீ பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தி உள்ளதை உலகுக்கு எடுத்துக் காட்டிய
பரம பாகவதனாகிய பரதனை சேவிக்கின்றேன்

பரதன் -என்றது ஸ்ரீ நாத முனிகளையும் குறிக்கும் -பாவ ராக தாள கொண்டு அருளிச் செயலை அளித்தார் அன்றோ –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் ஸ்ரீ நாத முனி-
பாதுகையான நம்மாழ்வார் பெருமை உலோகர் இவரால் தானே பரவப் பெற்றது
ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருவாய் மொழியும் தானே உலகை உஜ்ஜீவிக்கும் பரம சக்திகள்

ஸ்ரீபரதாழ்வானால் தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிற தென்பது எல்லா வுலகத்திற்கும் தெரிந்தது.
ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத் தான் ஸேவிக்கிறேன்.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில்
“பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது.
அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்கு தெரிந்தது
“பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும்
மஹா பண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்

——————-

ஸ்ரீ பூர்வ ஆச்சார்யர்களின் -ஸ்ரீ யாமுன முனிகள்–ஸ்துதிகள் –

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்—

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள்,
ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு,
யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் –
அவர் தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத் தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.

ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில்
ஸ்ரீ இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம்.
ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதா விலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
அகில புவன–ஆசீர் வசனம் ஆசீர்வாத ரூப -வஸ்து நிர்த்தேச-இரண்டும்
அசேஷ -விஷ்ணவே நம -நமஸ்கார ரூப
வஸ்து நிர்த்தேச மங்களா சாசனம் -இரண்டும்
ஆக மூன்று வகை

இரண்டாவது மங்கள ச்லோஹம்-
பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹ மங்கள ஸ்லோகம்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-
நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தாருக்கு அருளிச் செய்த தனியன்

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் –

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தடங்கல் இல்லாமல் நிறைவு பெறவும் -உலகில் பரவவும் தமது ஆச்சார்யரை நமஸ்கரிக்கிறார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கும் மங்கள ஸ்லோகம்

யத் -என்னும் பதம்
எந்த -என்று பிரசித்தமான -ஆச்சார்ய குண பூர்த்தி உள்ள மேன்மையைக் காட்டும்
பத -அம் போருஹ-
தாமரை மலர் போன்ற என்ற உதாஹரணம் -அந்த திருவடிகள் அனுபவிக்க வல்லவை
அந்த த்யானம் மகிழ்வோடு இணைந்து உள்ளதால் பக்தி என்றும் கூறப்படும்
த்யான
துரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே தான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு என்றத்தைக் காட்டும்

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

யதா பதாம் —அம்போருஹம் தாமரை திருவடிகளை தியானித்து
அசேஷ கல்மஷம்
வஸ்துத்வத்வம் அடைந்தேன் -இரண்டும்
த்யாநேன–கண்டு -இடைவிடாமல் நினைப்பதே-விமல சரீர சேவையால்
ஸ்ரீ ஆளவந்தாரை குறித்து மட்டும்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களில் ஆசை நீங்குவது இல்லை –
ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் –

ஆத்மாவை கண்டாலே போகும்
முயன்றாலும் -இந்திரியங்கள் மனத்தை இழுத்து செல்லும்
அன்யோன்ய ஆஸ்ரயம் வரும்
இத்தை போக்க அடுத்த ஸ்லோகம்

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சத.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –
பிரத்யனம் செய்தாலும் –இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

இந்திரியங்களை விலக்கி என்னிடம் செலுத்து -த்யானம் பண்ண பண்ண சத்வ குணம் வளர்ந்து
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை வைத்து
அதே போலே திருவடித் தாமரை த்யானம்
வஸ்துத்வம் அடைந்தது -அடுத்த நிலை
இருப்பு -தன்மையுடன் -ஸத்வித்யா பிரகரணம் -சங்கல்பித்து ஸ்ருஷ்ட்டி செய்தது -சங்காத்வம்-உள்ளே புகுந்து
தேறி இருத்தல் -சஸாபி ராம –பரிஷத் கத சனையி அனுபவிக்க ஆசை உடன் –
பூ சத்தாயாம் சத்தை பெற ஸ்ரீ ராமாயணம் கேட்க இறங்கி-

கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமியின் ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்–

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே
குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு, யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட ஸ்ரீ எம்பெருமான், ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ நாதமுனிகளின் திருவடிகள்,
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவர்தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால்.
ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத்தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்ரீ ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமம்.

இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.
ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் ஸ்ரீ சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில் ஸ்ரீ இராமானுசருக்கு
அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம். ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதாவிலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தமியேனுக்கு அருளாய் முந்திய பாசுரம்
அறிவித்து சத்தாக ஆக்கி
வஸ்துவை உருவாக்கி உஜ்ஜீவனமும் கொடுத்து
அசந்நேவ பவதி–
நான்கு நிலைகள் பார்த்தோம்
1-இருத்தல் 2-நிலை பெருத்து இருத்தல் -3-பகவத் ஞானம் -4-கைங்கர்யம்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -4 –

மருள் சுரந்த முன்னை வினை -சூழலாக அஞ்ஞானம் கர்மா இரண்டும் உண்டே –
வேர் அறுத்து அசேஷ -சவாசனமாக ருசி யுடன் போக்கி
பன்ன பணித்த –ஆராய -பரன் பாதம் சென்னியில் தரிக்க வைத்தான்
பொருள் ஆக்குதல் இல்லை -ஒரு பொருள் -அத்விதீயமாய் -ஒருத்தி மகனாய் போலே
சேஷ பூதனாக அறிந்து அடிமை
ஆச்சார்ய நிஷ்டை ஸ்ரீ வடுக நம்பி நிலை
ஸ்ரீ அமுதனார் -அதுக்கும் மேலே -அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்கீழ் –
இந்த தனித்தன்மை ஒரு பொருள் பாகவத சேஷத்வம்

ஸ்ரீ ஸ்வாமி தனித்தன்மையுடன் அழகாக பிரமாணங்களைத் தொகுத்து அருளிச் செய்தார்
ஆச்சார்யர் கடாக்ஷத்தாலும் வாக் அம்ருத வர்ஷீயான இவர் பிதா மஹரின் ஆசீர்வாதத்தாலும்
இவர் பிதாவின் ஆசீர்வாதத்தாலும் ஸ்ரீ ஸ்வாமி நம்மை எல்லாம்
அமுத மொழிகளால் நீண்ட ஆண்டுகள் நனைக்கட்டும்

———–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

——————-

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

விதாய வைதிகம் மார்க்கம் அகௌதஸ் க்ருத கண்டகம்
நே தாரம் பகவத் பக்தேர் யாமுநம் மநவாமஹை –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்-4-

விதாய வைதிகம் மார்க்கம் -வைதிக நெறியை செய்து அருளி

அகௌதஸ் க்ருத கண்டகம் விதாய -தூர்வாதிகள் ஆகிற முள் அற்றதாக செய்து அருளி
சித்தி த்ரயம் -ஆகம பிராமண்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் இத்யாதி திவ்ய பிரபந்தங்களைச் செய்து அருளி -என்றவாறு
குத குத அது என் இது என் என்று துர் ஆக்ஷேபங்கள் செய்து கொண்டு இருக்கும் தூர்வாதிகளே கௌதஸ்குதர்-

நே தாரம் பகவத் பக்தேர் -ஸ்ரீ பகவத் பக்தியை தழைத்து ஒங்கச் செய்து அருளிய
யாமுநம் மநவாமஹை -ஸ்ரீ ஆளவந்தாரை த்யானிக்கக் கடவோம்

வேதமார்க்க பிரதிஷ்டாபன ஆச்சார்யரான ஸ்ரீ யமுனைத் துறைவனை சிந்திக்கக் கடவோம் என்றதாயிற்று

குண அனுபவத்தால் தமக்கு பிறந்த நாநா பாவத்தால் ஸ்வ கீயரையும் கூட்டிக் கொண்டு பஹு வசனம் –

———-

விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–8-

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ

February 13, 2024

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத ஸ்ரீமான் ஸ்ரேயசே மேச்து பூயஸே ||

ஸ்ரீ ரங்கநாதன் என்னும் அழகிய மணவாளனுக்கு ஆசிரியராகவும், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரரும் ஆன செல்வம் நிறைந்த ஸ்ரீ பராசர பட்டர் எனக்கு மிகுந்த ச்ரேயஸ் அளிப்பாராக.

பராசர பட்டர் ரஹஸ்ய த்ரயத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்தும் நோக்குடன் அஷ்ட ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார். இதுவே ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை வெளிப்படுத்த ஏடுபடுத்தப்பட்ட முதல் ப்ரபந்தம்.

இந்தப் ப்ரபந்தத்தில் உள்ள எட்டு ச்லோகங்களுடன், ப்ரபந்த கர்த்தாவான பராசர பட்டரைக் கொண்டாடி அருளப்பட்ட தனியனும் உள்ளது.

ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்டஸ்லோகி
முதல் நான்கும் திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் சரம ஸ்லோக விவரணம் –

பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும்

————

அகாரார்த்தோ விஷ்ணு: ஜகதுதய ரக்ஷாப் ப்ரலய க்ருத்
மகாரார்த்தோ ஜீவ: ததுபகரணம் வைஷ்ணவமிதம் |
உகாரோ அநந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ:
த்ரயீ ஸாரத்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் சமதிஸத் ||
1-

உலகத்தின் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் புரியும் விஷ்ணுவே “அ”காரத்துக்குப் பொருள்; “ம”காரப் பொருள் ஜீவன்; வியாபித்திருக்கிற இவ்வுலகம் சேதனனுக்கு உபகரணமாக அமைந்தது. “உ”காரம் இருவர்க்கும் இடையில் மற்றொருவர்க்குப் பொருந்தாத ஒரு ஸம்பந்தத்தை நியமிக்கிறது. வேத ஸாரமான மூவகைப்பட்ட இந்த ப்ரணவம் இந்தப் பொருளை விளக்குகிறது.

அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்
சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்-
மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்–மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட  –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது
சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல்
ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்-
இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் –
த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம்
சமதிசத்–தெரிவித்தது –

ஒமிதி ஏக அஷரம்-சம்ஹிதாகாரத்தில் நோக்கு -சாந்தி பெற்ற ஆகாரம் -மூலம் ஒரே அஷரம் -ஒரே பதம்
அசம்ஹிதாகாரம் -சந்திபெறாத  -ஆகாரத்தால் மூன்று அஷரம் மூன்று பதம் –

—————

மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –

————————

அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: |
|-3-

நான் எம்பெருமானுக்கே உரியவன். ஆகையால் எனக்குரியனல்லன். ஆத்மாக்கள் அழிகிற பொருள்களின் திரள் இரண்டுக்கும் கதி எம்பெருமான் என்பதை நாராயண பதம் கூறுகிறது. கைங்கர்யம் உடன் பிறந்தது. கால வரையறை இன்றி எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் கைங்கர்யத்தை வலியுறுத்துகிறது.

அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
அஹம் அகார்த்தாய ஏவ ஸ்வம்-
மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே சேஷ பூதன் -பிரணவார்த்தத்தை
அத
அதற்க்கு மேலே
அஹம் மஹ்யம் ந –
நான் எனக்கு உரியேன் அல்லேன் -நம பதார்த்தத்தை அனுவதித்தபடி-

அகாரம் லுப்த சதிர்த்தி உகாரம் மகாரம் நான்கினுடைய அர்த்தமும் அடைவே பொருந்தி இருக்கும் படி அருளிச் செய்கிறார்
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
நாராயண பதம் -நாராயண பதமானது
நராணாம் நித்யா நாம் -நிவஹா -தேஷாம் -அய நம் இதி
-நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரபூதன் -தத் புருஷ சமாசம்
நராணாம் நித்யா நாம் -நிவஹா யஸ்ய அயனம் –
நித்ய வஸ்துக்களின் திரளை ஆதாரமாக யுடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்-

யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ-
யாம் ஆஹ-அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-
யாவன் ஒரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ
அசமி -இந்த எம்பெருமானுக்கு
காலம் சகலம் அபி -எல்லா காலங்களிலும்
சர்வத்ர -எல்லா இடங்களிலும்
சகலா ஸூ அவஸ்தா ஸூ -எல்லா அவச்தைகளிலும்
மம-என்னுடைய
சஹஜ கைங்கர்ய விதய -இயற்கையான அடிமைத் தொழில்
ஆவிஸ் ஸ் யு -விளையக் கடவன
சரமபதத்தின் அர்த்தத்தை அனுவதித்தபடி –

————

தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
ஆத்மத்ராணோந்முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸலோல:
சப்தம் நாராயணாக்யம் விஷய சபலதீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||
-4-

பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்தச்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. ​தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ​’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும்போது நாராயண என்னும் பதப்பொருள் நோக்கத்தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம்போது சதுர்த்தியின் பொருள் உணரத்தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ்விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக்கொள்ள வேண்டியது.

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

————

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

——————

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம: ||–6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
ஈசாநாம் ஜகதாம் -ஜகதாம் ஈசா நாம்
உலகங்களுக்கு
அதீச தயிதாம் –
சர்வேஸ்வரனுக்கு பிராண வல்லபையுமாய்
நித்ய அநபாயாம் –
ஒரு பொழுதும் விட்டுப் பிரியாத வளாய் இருக்கின்ற –
ச்ரியம்-
பெரிய பிராட்டியாரை-

சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே-இஷ்ட உபாயதயா-
சம்ச்ரித்ய –
புருஷகாரமாகப் பற்றி
ஆஸ்ரயணோசித அகில குணச்ய –
சரண வரணத்துக்கு   பாங்கான சகல குணங்களையும் யுடைய
அங்க்ரீ ஹரே –
எம்பெருமானுடைய திருவடிகளை
ஆஸ்ரயே இஷ்ட உபாயதயா –
இஷ்ட உபாயதயா ஆஸ்ரயே –
இஷ்ட சாதனமாகப் பற்றுகிறேன்
ஆக பூர்வ கண்டார்த்தம் அனுசந்தித்த படி –

ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய -கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-
பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ள
சர்வ சேஷியான நாராயணனுக்கு
அஹம் நிர்மம-
கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதும் இல்லாத அடியேன் –
தாஸ்யம் அசேஷம் –
அசேஷம் தாஸ்யம் –
சகலவித கைங்கர்யத்தையும்
அப்ரதிஹதம் நித்யம் –
இடையூறின்றி நித்யம்
அர்த்தயே கர்த்தும் –
செய்யும் பொருட்டு பிரார்த்திக்கிறேன் –

கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது  வாக்யார்த்த  பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –

————

மத் ப்ராப்த்யர்த்த தயா மயோக்தமகிலம் ஸந்த்யஜ்ய தர்மம் புன:
மாமேகம் மதவாப்தயே சரணமித்யார்த்தோவசாயம் குரு |
த்வாமேவம் வ்யவஸாய யுக்தமகிலம் ஞாநாதி பூர்ணோஹ்யஹம்
மத்ப்ராப்தி ப்ரதிபந்தகம் விரஹிதம் குர்யாம்சுசம் மாக்ருதா: ||
-7-

என்னை அடைவதற்குறுப்பாக நான் கூறின எல்லா உபாயங்களையும் விட்டு என்னை அடைய என்னையே ரக்ஷகமாக அடைவாய். மிக துக்கத்துடன் நிச்சயித்திரு. இப்படிப்பட்ட நிச்சயத்தை உடைய உன்னை, எல்லா வகையான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான், என்னை அடைவதற்குத் தடையாக உள்ளவைகளிலிருந்து உன்னை விடுதலை அடையச் செய்வேனாக. நீ சோகிக்க வேண்டா.

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந மாம் ஏகம்-
மத் ப்ராப்தி அர்த்ததயா –
என்னைப் பெருகைக்கு யுபாயமாக
மயா உக்தம் –
உன் மனத்தை சோதிப்பதாக என்னாலே சொல்லப் பட்ட
அகிலம் சம்த்யஜ்ய தர்மம் –
சகல தர்மங்களையும் விட்டு
புந மாம் ஏகம் –
மாம் ஏகம் புன –
என் ஒருவனையே குறித்து-

மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
மநவாப்தயே சரணம் இத் யார்த்தோ வஸாயம்-
ஆர்த்தி மிகுந்தவனாய்
என்னைப் பெறுகைக்கு நானே உபாயம் என்கிற அத்யவசாயத்தை
குரு-
செய்வாயாக –

த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் –
ஏவம் விவசாய யுக்தம் த்வாம் -இத்தகைய அத்யாவசாயத்தோடே கூடிய என்னை
அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்-
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான் –

மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகைர் விரஹிதம் குர்யாம் –
என்னைப் பெறுகைக்கு இடையூறாய் யுள்ள
பாபங்கள் அற்றவனாய் செய்யக் கடவேன்
சுசம் மா க்ருதா-
துக்கம் கொள்ளாதே-

—————

நிஸ்சித்ய த்வததீநதாம் மயி ஸதா கர்மாத்யுபாயான் ஹரே:
கர்த்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம் ஸீதாமி து:காகுல: |
ஏதத் ஞாநமுபேயுஷோ மம புனஸ் ஸர்வாபராதக்ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோஸ்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் ஸாரதே! ||
8-

என்னிடம் உள்ள கர்மம் முதலிய உபாயங்களை எப்போதும் உன் அதீநமாகவே நிச்சயித்து, எம்பெருமானே! கர்மங்களைச் செய்யவும், விடவும் அல்லது சரணாகதி செய்வதற்கும் திறமையற்றவனாக வருந்துகிறேன். மிக வருத்தத்தால் கலங்குகிறேன். இந்த அறிவை அடைந்துள்ள எனக்கு உள்ள எல்லா வகையான குற்றங்களையும் அழித்து ரக்ஷிக்கக் கடவாய் என்பதை உனது கடைசியான வார்த்தையைக் கேட்டுத் தெளிகிறேன்.

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா
மயி சதா த்வத் அதீந தரம் நிச்சித்ய –
அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்திகளை யுடையவன் என்பதை நிச்சயித்து –
கர்மாதி உபாயான் –
கர்மாதி உபாயான் -கர்ம யோகம் முதலான் உபாயங்களை
ஹரே-
எம்பெருமானே-
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
கர்த்தும் த்யக்தும் அபி –
செய்வதற்கும் விடுவதற்கும்
பிரபத்தும் –
பிரபத்தி பண்ணுவதற்கும் –
அநலம் ஸீதாமி துக்காகுல-
அசமர்த்தனாய் -மிகவும் துக்கப்படா நின்றேன்-

ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
ஏதத் ஞானம் உபேயுஷே மம –
பகவானே உபயம் என்று துணிந்து இருக்கை யாகிற
இந்த அத்யாவசாயத்தை பெற்று இருக்கும் அடியேனுக்கு
புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
சகல பாப  நிவ்ருத்தியையும்
தேவரீரே பண்ணித் தர வல்லீர் என்று கொண்டு-

த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-
த்ருடோச்மி-த்ருட அஸ்மி –
துக்கம் அற்று நிர்ப்பரனாய் இருக்கின்றேன்
தே சாராதே –
பார்த்த சாரதியாய் நின்ற தேவரீருடைய
து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே
கடைசியான வாக்யத்தை ஸ்மரித்துக் கொண்டு –

நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே சுகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

பூர்வார்த்தத்தில் சீதாமி -என்றும்
உத்தரார்த்தத்தில் த்ருடோச்மி-என்றும் சொன்ன இவற்றால்
தன்னை நோக்கும் அளவில் அவசாதமும்
எம்பெருமானை நோக்கும் அளவில் தந் நிவ்ருத்தி பூர்வகமான நிர்பரத்வ அனுசந்தானமும்
இவ்வதிகார்க்கு யாவாஜ் ஜீவனமும் அனுவர்த்திக்கும் -என்றது ஆயிற்று –

———————————————————————————–

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ 108 திவ்ய தேச எம்பெருமான் ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி பாடல் —

January 23, 2024

திருவரங்கன் கோயில் திருவரங்கேசன்
திருமகள் அழகிய மணவாளன் உறையூர்
திருத் தஞ்சை நீல மேக நரஸிம்ஹம்
திரு அன்பில் அமர் வடிவு அழகிய நம்பி

மரு கமழ் சோலை கரம்பனூர் உத்தமன்
மலர் மகள் வெள்ளறை புண்டரீகாக்ஷன்
திருப் புள்ளம் பூதங்குடி அமர் வேந்தே
திருப் பள்ளி உணர்த்தருள் புரிந்திடுவாயே

வார் புனல் பேரில் -அரவணைக் கிடந்தான்
வரம் திகழ் ஆதனூர் அளந்தருள் ஐயன்
பார் புகழ் தொல் நிறை நாதன் அழுந்தூர்
மணி துயில் உரு கடல் திரு சிறு புலியூர்

கார் மலி தண் சேறை திருச்சேறை நாதன்
கார் கடல் மல்லை தலைச் சங்கம் நாண் மதியே
ஏர் திகழ் குடந்தைக் கிடந்த என் அமுதே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கண்டியூர் ராமர் சாப விமோசனர்
கருணை பொழிந்திடும் விண்ணகர் அப்பன்
எண் திசை புகழ் கமழ் ஊர் சவுரி ராஜன்
எழில் மிகு திருவாலி வயலாலி அப்பன்

கண்டம் கமழ் சோலை இந்தளூர் மைந்தா
காசினியில் உயர் திருச்சித்ர கூடம்
அந்தணர் தேவன் அரன் அயன் காழி
யரும் தவ முனி தொழும் தில்லைக் கோவிந்தர்

சிந்தை கவர்ந்திடும் ஸ்ரீ ராமா விண்ணகர்
சீராக அளந்திடும் தாடாளன் அம்மா
நந்தருக்கு அருள் கூடலூர் ஜகன்னாதா
நாராயணா பள்ளி எழுந்தருளாயே

மாதவன் மகிழ்ந்து உறை தேவானார் தொகை
மறை திகழ் வண் புருஷோத்தமத்தானே
ஸ்ரீ நாதன் அருள் நாதன் செம் பொன் செய் கோயில்
திருத் தெற்றி அம்பல செங்கண் மாலே

போது அலர் பொழில் சூழும் மணிக் கூடல் நாதன்
புகழ் காவளம்பாடி வேணு கோபாலன்
சீர் மலி சோலை வெள்ளக்குளத்து அண்ணா
ஸ்ரீ தரா சீர் பள்ளி எழுந்தருளாயே

கண்ணங்குடி நின்ற கார் மேக வண்ணா
திருக்கண்ண மங்கை அபிஷேக ஈஸா
கரிக்கு அருள் பிரிந்திடும் கபிஸ்தா நாதா
கருணை புரி வெள்ளி யங்குடி ராமா
விண்ணோர் பணி மணி மாட விளக்கே
வைகுண்ட விண்ணகர் வைகுந்த நாத
எழில் அரி மேய விண்ணகர் அரவிந்தா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
பார் புகழ் கூடலூர் ஆடுதுறை பெருமாள்
கார் கடல் நாகை அழகியார் பள்ளி எழுந்தருளாயே

தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி
கருணா வளம் தரு சோழ நன் புவியில்
மா மகள் கோன் உறை நாற்பது பதிகள்
மறை ஒலி புகழ் கமழ் மா நகர் என்பர்

காமனைப் படைத்த தோர் மா மேனி அழகர்
மாலிருஞ்சோலையில் மால் அலங்காரர்
சேமமுடை சவும்ய நாராயணான் கோஷ்ட்டி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

மெய்யத்து உறைகின்ற சத்ய கிரீஸ்வரன்
தெய்வச் சிலை நாதன் திகழும் புல்லாணி
வையத்து உயர் திருத் தண் காலில் அப்பன்
வழித்துணையாம் காள மேக ஸ்ரீ மோகூர்

வைகை நதி தீரம் தென் கூடல் அழகர்
வள நகர் ஸ்ரீ வில்லி புத்தூர் அரங்கர்
ஐயன் திருக்குருகூரில் பொலிந்தார்
அன்பனே திருப்பள்ளி எழுந்தருளாயே

தென் உயர் திருக்குறுங்குடி வைஷ்ண நம்பி
நிக்ஷேப மா நிதி நிறை திருக்கோளூர்
பொங்கும் பொருநல் சூழ் பாண்டிய நாட்டில்
புகழ் பெரு பதினெட்டு திருப்பதி என்பர்

பங்கஜ நாதன் அனந்த புரம் தன்னில்
வண் பரிசாரத்தில் திரு வாழும் மார்பன்
தங்கும் பெரும் புகழ் காட்கரை அப்பா
தாமோதரா பள்ளி எழுந்தருளாயே

செல்வம் திகழ் திரு மூழிக் களத்தான்
சேர் திகழ் மாயப்பிரான் திருப்புலியூரில்
நல் திருச் செங்கனூரில் மெய்ய வரை யப்பன்
நாரணன் அமர்ந்திடும் தென் திரு நாவாய்

வல்லவள் வாழ்ந்திடும் வல்லி மணாளா
வண்டூர் உறையும் என் பாம்பணை அப்பா
அல்லல் தவிர்ந்திடும் திரு வட்டாத்தில் ஆதி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

பக்தர் தொழும் திரு வித்துவக் கோடு
வண் குல சேகரன் பாடிடும் அம்மான்
அற்புதன் நாரணன் அமர் திருக்கடித்தானம்
அணி பொழில் விரலாழி வேய் குறள் அப்பன்

செப்புடை மலை நாடு ஓர் பதின்மூன்றும்
தெய்வ நாதன் திரு ஹரி நாதன் நகரே
முத்துடை பெண்ணை நிறை புவியில் திரு
விக்ரமாப் பள்ளி எழுந்தருளாயே

ஹரி ஹரி உறைந்திடும் அருளாள வரதா
கடு வினை களைந்திடும் அழகிய சிங்கா
நெடு பொழில் கச்சியில் அஷ்ட புஜத்தான்
தீபப் பிரகாசன் விளக்கொளி தண்கா

விரி பொழில் வேளுக்கை ஆளரி நாதன்
ஜெய் தூதன் பாடகம் சேர்வை விளங்கும்

நீள் கருணாகரன் திருக்காராகத்தாள் நிலையிலா
மணி மாட கார்வானக் கள்வன் விமல வராஹன்
திருக்கள்வனூரே மலி புகழ் பரமேஸ்வர நகர் நாதா
பவள வண்ணா திருப்பள்ளி எழுந்தருளாயே

புள்ளுக்கு அருள் செய்த புட் குழி ராமா
புனிதன் உறைகின்ற ஊர் பத்தராவி
உள்ளம் கவர் கின்ற வீர ராகவன் எவ்வுள்
உத்தம நீர் மலி நீர் வண்ணன் எம்மான்

துள்ளும் இடவெந்தை நித்ய கல்யாணர்
திரை கடல் மல்லை தலை சங்கம் நாண் மதியே
தெள்ளிய யோகத்தில் அமர் திருக்கடிகை
சிங்கப்பிரான் பள்ளி எழுந்தருளாயே

சீராரும் வேத வல்லி மணாளா
செல்வம் திகழ் திருவல்லிக்கேணி மன்னாதா
பார் புகழ் ருக்மிணி பார்த்தன் ஸஹாயன்
பக்தருக்கு அருள் புரியும் சக்ரவர்த்தி குமாரன்

வாரணம் துயர் தவிர் தேவப் பெருமான்
வல்வினை தீர்த்திடும் தெள்ளிய சிங்கா
ஏர் தொண்டை நாடும் ஓர் நாலாறும் மூவாறும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் திரு வேங்கடத்து அப்பன்
அரியா ஒண்ணாத நர சிங்க வேள் குன்றம்
தொண்டர்கள் வாழும் திரு ராமன் அயோத்யா
தொல் வன ரூபன் வாழ் நைமிசாரண்யம்

கொண்டல் தவழ் திரு சாளக்கிராமம்
குரு நர நாராயணன் பதரி உறை கோயில்
மண்டலம் தாம் தொழும் கண்டம் கடி வாழ்
மாதவனே பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் கொண்டல் தவழ் திருப் ப்ரிதி
பார் புகழ் ருக்மிணி துவராகா தீசன்
கோபிகள் கொண்டாடும் ஆய்ப்பாடி நாதன்
குன்று குடையாக எடுத்த கோவர்த்தன நேசா
நாச்சியார் உகந்து அருளும் வட மதுரையார் மைந்தன்
தேவர்கள் குறை தீர்க்கும் பாற் கடல் நாதா
வைகுந்தக் குட்டன் மகிழ்ந்து உறையும் பரம பத நாதா
உடையவர் போற்றிடும் சம்பத் குமாரா
ஸ்ரீ தரனே பள்ளி எழுந்து அருளாயா

மாதவன் பூ மகள் சேனையர் கோன் அருள் பெற்ற
மறைத் தமிழ் கூறும் மகிழ் மாறன்
முனி நாதன் புண்டரிகாஷர் மணக்கால் நம்பி
ஸ்ரீ யமுனா ஸ்ரீ மஹா பூர்ணர் பூதூரில் எதிராஜர்
பொருநல் குருகூரில் வந்தார் மணவாள மா முனி
முதலார் ஆதாரத்தோடும் உன்னைத் தொழ வந்தோம்
அந்த அச்யுதனே பள்ளி எழுந்தருளாயே

வேதம் தமிழ் செய்த மாறன் கொள் ஈசன்
விமலர்களாம் பொய்கை பூதம் பேயாழ்வார்
கோதை விஷ்ணு சித்தன் தொண்டர் அடிப்பொடி
குறையல் கலி கன்றி மா மழிசைப் பிரான்

நாதன் திருப்பாணான் நம்மாழ்வார் தம் கவி
நல் தமிழ் பாசுரம் பல்லாண்டு இசைப்பார்
ஏதங்கள் வாராது உலகினில் வாழ்வார்
எம்பெருமான் உன் தன கிருபையினாலே

ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்ரம் –ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரார்த²நா–ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர–ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்ட சக்ர பீ³ஜ ஸ்தோத்ரம்–ஶ்ரீ த³த்தாத்ரேய வஜ்ர கவச ஸ்தோத்ரம்–

January 22, 2024

ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்ரம்

ஜடாத⁴ரம் பாண்டு³ராங்க³ம் ஶூலஹஸ்தம் க்ருபாநிதி⁴ம் ।
ஸர்வரோக³ஹரம் தே³வம் த³த்தாத்ரேயமஹம் ப⁴ஜே ॥ 1 ॥

அஸ்ய ஶ்ரீத³த்தாத்ரேயஸ்தோத்ரமந்த்ரஸ்ய ப⁴க³வாந்நாரத³ருஷி꞉ । அநுஷ்டுப் ச²ந்த³꞉ । ஶ்ரீத³த்த꞉ பரமாத்மா தே³வதா । ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரீத்யர்தே² ஜபே விநியோக³꞉ ॥

நாரத³ உவாச 

ஜக³து³த்பத்திகர்த்ரே ச ஸ்தி²திஸம்ஹாரஹேதவே ।
ப⁴வபாஶவிமுக்தாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥

ஜராஜந்மவிநாஶாய தே³ஹஶுத்³தி⁴கராய ச ।
தி³க³ம்ப³ர த³யாமூர்தே த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

கர்பூரகாந்திதே³ஹாய ப்³ரஹ்மமூர்தித⁴ராய ச ।
வேத³ஶாஸ்த்ரபரிஜ்ஞாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

ஹ்ரஸ்வதீ³ர்க⁴க்ருஶஸ்தூ²லநாமகோ³த்ரவிவர்ஜித ।
பஞ்சபூ⁴தைகதீ³ப்தாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

யஜ்ஞபோ⁴க்தே ச யஜ்ஞாய யஜ்ஞரூபத⁴ராய ச ।
யஜ்ஞப்ரியாய ஸித்³தா⁴ய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

ஆதௌ³ ப்³ரஹ்மா ஹரிர்மத்⁴யே ஹ்யந்தே தே³வஸ்ஸதா³ஶிவ꞉ ।
மூர்தித்ரயஸ்வரூபாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 6 ॥

போ⁴கா³ளயாய போ⁴கா³ய யோக³யோக்³யாய தா⁴ரிணே ।
ஜிதேந்த்³ரிய ஜிதஜ்ஞாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 7 ॥

தி³க³ம்ப³ராய தி³வ்யாய தி³வ்யரூபத⁴ராய ச ।
ஸதோ³தி³தபரப்³ரஹ்ம த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 8 ॥

ஜம்பூ³த்³வீபே மஹாக்ஷேத்ரே மாதாபுரநிவாஸிநே ।
ஜயமாந ஸதாம் தே³வ த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 9 ॥

பி⁴க்ஷாடநம் க்³ருஹே க்³ராமே பாத்ரம் ஹேமமயம் கரே ।
நாநாஸ்வாத³மயீ பி⁴க்ஷா த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 10 ॥

ப்³ரஹ்மஜ்ஞாநமயீ முத்³ரா வஸ்த்ரே சாகாஶபூ⁴தலே ।
ப்ரஜ்ஞாநக⁴நபோ³தா⁴ய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 11 ॥

அவதூ⁴த ஸதா³நந்த³ பரப்³ரஹ்மஸ்வரூபிணே ।
விதே³ஹதே³ஹரூபாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 12 ॥

ஸத்யரூப ஸதா³சார ஸத்யத⁴ர்மபராயண ।
ஸத்யாஶ்ரயபரோக்ஷாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 13 ॥

ஶூலஹஸ்தக³தா³பாணே வநமாலாஸுகந்த⁴ர ।
யஜ்ஞஸூத்ரத⁴ர ப்³ரஹ்மந் த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 14 ॥

க்ஷராக்ஷரஸ்வரூபாய பராத்பரதராய ச ।
த³த்தமுக்திபரஸ்தோத்ர த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 15 ॥

த³த்த வித்³யாட்⁴ய லக்ஷ்மீஶ த³த்த ஸ்வாத்மஸ்வரூபிணே ।
கு³ணநிர்கு³ணரூபாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 16 ॥

ஶத்ருநாஶகரம் ஸ்தோத்ரம் ஜ்ஞாநவிஜ்ஞாநதா³யகம் ।
ஸர்வபாபம் ஶமம் யாதி த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 17 ॥

இத³ம் ஸ்தோத்ரம் மஹத்³தி³வ்யம் த³த்தப்ரத்யக்ஷகாரகம் ।
த³த்தாத்ரேயப்ரஸாதா³ச்ச நாரதே³ந ப்ரகீர்திதம் ॥ 18 ॥

இதி ஶ்ரீநாரத³புராணே நாரத³விரசிதம் ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்ரம் ।

——————–

ௐ நமஸ்தே ப⁴க³வந் ஶ்ரீஸத்³கு³ருதே³வ-த³த்தாத்ரேயாய நமோ நம: ॥ 1॥

த்வம் ப்³ரஹ்மமயோऽஸி । த்வம் ஆநந்த³மயோऽஸி । த்வம் விஜ்ஞாநமயோऽஸி ।
த்வம் ஸத்யமயோऽஸி । த்வம் ஶாந்திமயோऽஸி । த்வம் ப்ரேமமயோऽஸி ।
த்வம் நிராகாரோ நிராலம்போ³ நிர்விகல்போ நிர்விஷயோ நிரஞ்ஜநோ நிரங்குஶோ
நிரந்தரோ நிராஶயோ நிராமயோ நிர்தூ⁴தகல்மஷோऽஸி ॥ 2॥

த்வதா³ஜ்ஞயா தபந்தி ரவிஶஶி-தாராமண்ட³லா: ।
த்வதா³ஜ்ஞயா விபுலத⁴நதா⁴ந்யவதீ வஸுதா⁴ ।
த்வதா³ஜ்ஞயா வஹதி வாயுஸ்ஸந்த³ஹத்யநல: । த்வதா³ஜ்ஞயாऽऽகாஶம் ஸர்வம் வ்யாப்நோதி ।
த்வதா³ஜ்ஞயா யதா²காலம் வர்ஷதி பர்ஜந்ய: । த்வதா³ஜ்ஞயா விகஸந்தி குஸுமாநி।
த்வதா³ஜ்ஞயா ப²லந்தி பாத³பா: । த்வதா³ஜ்ஞயா கா³யந்தி விஹங்க³ம: ।
த்வதா³ஜ்ஞயா ஜீவந்தி சதுர்வித⁴யோநய: ।
த்வதா³ஜ்ஞயா தே³ஹே ப்ராண: ஸஞ்சரதி நிர்க³ச்ச²தி தே³ஹாத் ॥ 3॥

த்வம் மநஶ்சித்தாந்த:கரணபு³த்³த்⁴யஹங்கார-ப்ரேரகோऽஸி ।
த்வம் ஶமத³ம-திதிக்ஷாவைராக்³ய-ப⁴க்திப்ரதா³யகோऽஸி ।
த்வம் த்³வந்த்³வது:³க²-திமிர-வித்⁴வம்ஸகோऽஸி । த்வம் மாயாபாஶ-நிக்ரு’ந்தகோऽஸி।
த்வம் ஸம்ஸார-ப³ந்த⁴நச்சே²த³கோऽஸி ।
த்வம் ஸர்வஸத்³கு³ணகர்தாऽஸி । த்வம் ஸர்வது³ர்கு³ணஹர்தாऽஸி । த்வம் ஶாந்திப்ரதோ³ऽஸி ।
த்வமாநந்த³ப்ரதோ³ऽஸி । த்வம் ப்ரேமப்ரதோ³ऽஸி । த்வம் ஸகலவிக்⁴நஹரோऽஸி ।
த்வமப⁴யகரோऽஸி । த்வம் வரத³வரோऽஸி । த்வம் நிஜபத³-ப்ரதா³நகரோऽஸி ॥ 4॥

ரு’தே த்வத் கோऽபி நேதரோ வதா³ந்ய: । ரு’தே த்வத் கோऽபி நேதர: ஸமர்த:² ।
ரு’தே த்வத் கோऽபி நேதரோ த³யாலு: । ரு’தே த்வத் கோऽபி நேதர: க்ஷமாஶீல: ।1
ஶ்ரீத³த்தாத்ரேயப்ரார்த²நா
ரு’தே த்வத் கோऽபி நேதரோ ப⁴க்தபாலக: ॥ 5॥

த்வத்த: ஸகலைஶ்வர்ய-போ⁴க³க்ஷமத்வம் । த்வத்த: ஸகலவஸ்து-ரமணீயத்வம் ।
த்வத்த: கர்மஜ்ஞாநேந்த்³ரிய-க³ணஸமர்த²த்வம் । த்வத்த: ஸகலயோக³ஶக்திமத்த்வம் ।
த்வத்த: பரமவைராக்³ய-பரபு³த்³தி⁴மத்த்வம் ॥ 6॥

த்வயி ஸமுபஸ்தி²தம் ப்³ரஹ்மாண்டோ³த்பத்தி-ஸ்தி²திலயபீ³ஜம் ।
த்வயி ஸுப்ரதிஷ்டி²தம் ஸம்ஸ்ரு’திநாஶநாத்³வைத-பா⁴வநாமூலம் ।
த்வயி ஸந்நிஹிதம் ஜந்மம்ரு’த்யுப⁴ய-ஸம்ஹநநஸாமர்த்²யம் ॥ 7॥

கநக-காமிநீ-கமநீயத்வாத் த்ராஹி த்ராஹி மாம் ।
காம-க்ரோத⁴-மோஹ-மத³-மத்ஸரகோலாஹலாத் த்ராஹி த்ராஹி மாம் ।
ஜந்ம-ஜரா-மரண-த்ரிதோ³ஷாத் த்ராஹி த்ராஹி மாம் ।
ஸம்ஸ்ரு’தி-தா³வாநல-த³ஹ்யமாநம் பாஹி பாஹி மாம் ।
விஷயகர்த³ம-நிமஜ்ஜமாநம் பாஹி பாஹி மாம் ।
ப⁴யகர-காலத³ண்ட³-நிபீட³யமாநம் பாஹி பாஹி மாம் ।
த⁴ர்மாசரண-தி³ங்மூடோ⁴ऽஹம் தை⁴ர்யம் தே³ஹி தே³ஹி மே ।
அஹங்காரமலிந-சித்தோऽஹமப⁴யம் வரம் தே³ஹி தே³ஹி மே ।
த்வத் பத³பங்கஜ-ஶரணாக³திம் தே³ஹி தே³ஹி மே ॥ 8॥

விநா த்வயா நாஸ்தி கோऽப்யந்ய ஆபத்திநிவாரக: । த்வம் ப்ரியதமா மாதாऽஸி மே ।
த்வம் ப்ரியதம: பிதாऽஸி மே । த்வம் ப்ரியதமோ ப³ந்து⁴ரஸி மே ।
த்வம் ப்ரிய தமம் மித்ரமஸி மே । த்வம் பூஜ்யதம: ஸத்³கு³ருவர்யோऽஸி மே ।
தே க்ரு’பாஹஸ்தம் தே³ஹி மே ஶிரஸி । தே பத³தலகஞ்ஜம் தே³ஹி மே மநஸி ।
தே ஸுக²கர-வாஸோऽஸ்து மே வபுஷி ।
அநந்த-ஜந்மபர்யந்தம் தே ஸ்மரணம் மே சித்தேऽஸ்து ॥ 9॥

ௐ நமஸ்தே அத்ரிபுத்ராய । ௐ நமஸ்தே அவதூ⁴தாய । ௐ நமஸ்தே ஹம்ஸதே³வாய ।
ௐ நமஸ்தே ஸத்³கு³ருநாதா²ய । ௐ நமஸ்தே யதிநாதா²ய । ௐ நமஸ்தே ஶக்திநாதா²ய।
ௐ நமஸ்தே ஸித்³தி⁴நாதா²ய । ௐ நமஸ்தே முக்திநாதா²ய । ௐ நமஸ்தே ஜக³ந்நாதா²ய।
ௐ நமஸ்தே ப⁴க³வதே த³த்தாத்ரேயாய ।
ௐ நமஸ்தே பரப்³ரஹ்மணே ஸச்சிதா³நந்த³மூர்தயே முநிவர்யாய நமோ நம: ॥ 10॥

ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரார்த²நா

இதி ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரார்த²நா ஸம்பூர்ணா ।

———————

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர

ந்ரு’ஸிம்ஹரூபிணே சிதா³த்மநே ஸுக²ஸ்வரூபிணே ।
பதை:³ த்ரிபி:⁴ ததா³தி³பி:⁴ நிரூபிதாய வை நம: ॥ 1॥

ஸாங்க்ரு’தி: முநிவர்யோ அஸௌ பூ⁴தயே யோக³லிப்ஸயா ।
பு⁴வம் ஸர்வாம் பரிப்⁴ராந்யந்நைமிஷாரண்யமாப்தவாந் ॥ 2॥

ஸுக³ந்தி⁴நாநாகுஸுமை: ஸ்வாது³ஸத்ப²லஸம்யுதை: ।
ஶாகி²பி:⁴ ஸஹிதம் புண்யம் ஜலகாஸாரமண்டி³தம் ॥ 3॥

ஸ: முநி: விசரஸ்தத்ர த³த³ர்ஶாம்ரதரோ: அத:⁴ ।
வேதி³காயாம் ஸமாஸீநம் த³த்தாத்ரேயம் மஹாமுநிம் ॥ 4॥

ப³த்³த⁴பத்³மாஸநாஸீநம் நாஸாக்³ரார்பிதயா த்³ரு’ஶா ।
ஊருமத்⁴யக³தோத்தாநபாணியுக்³மேந ஶோபி⁴தம் ॥ 5॥

தத: ப்ரணம்யாகி²லம் த³த்தாத்ரேயம் மஹாமுநிம் ।
தத் ஶிஷ்யை: ஸஹ தத்ரைவ ஸம்முக²ஶ்சோபவிஷ்டவாந் ॥ 6॥

ததை³வ ஸ: முநி: யோகா³த் விரம்ய ஸ்வபுர: ஸ்தி²தம் ।
உவாச ஸாங்க்ரு’திம் ப்ரிதிபூர்வகம் ஸ்வாக³தம் வச: ॥ 7॥

ஸாங்க்ரு’தே கத²ய த்வம் மாம் கிமுத்³தி³ஶ்யேஹாக³த: ।
இதி ப்ரு’ஷ்டஸ்து ஸ: ப்ராஹ யோக³ம் ஜ்ஞாதுமிஹாக³த: ॥ 8॥

யோகோ³ ஹி ப³ஹுதா⁴ ப்³ரஹ்மந்தத்ஸர்வம் கதயாமி தே ।
மந்த்ரயோகோ³ லயஶ்சைவ ஹட²யோக³ஸ்ததை²வ ச ।
ரஜயோக³ஶ்சதுர்த:² ஸ்யாத்யோகா³நாமுத்தமஸ்து ஸ: ॥ 9॥

ஆரம்ப⁴ஶ்ச க⁴டஶ்சைவ ததா² பரிசய: ஸ்ம்ரு’த: ।
நிஷ்பத்திஶ்சேத்யவஸ்தா² ச சதுர்தீ² பரிகல்பிதா ।
ஏதேஷாம் விஸ்தரம் வக்ஷ்யே யதி³ த்வம் ஶ்ரோதுமிச்ச²ஸி ॥ 10॥

அங்கே³ஷு மாத்ரு’கா பூர்வம் மந்த்ரம் ஜபந் ஸுதீ:⁴ ।1
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ய கசநாபி⁴ஸித்³த⁴யை ஸ்யாத் மந்த்ரயோக:³ ஸ கத்²யதே ॥ 11॥

ம்ரு’து:³ தஸ்யாதி⁴காரீ ஸ்யாத்³த்³வாத³ஶாப்³தை:³ து ஸாத⁴நாத் ।
ப்ராயேண லப⁴தே ஜ்ஞாநம் ஸித்³தி⁴ஶ்சைவாணிமாதி³கா: ॥ 12॥

அல்பபு³த்³தி:⁴ இமம் யோக³ம் ஸேவதே ஸாத⁴காத⁴ம: ।
மந்த்ரயோகோ³ ஹ்யயம் ப்ரோக்தோ யோகா³நாமத⁴மஸ்து ஸ: ॥ 13॥

லயயோக³ஶ்சித்தலய: ஸங்கேதை: து ப்ரஜாயதே ।
ஆதி³நாதே²ந ஸங்கேதா அஷ்டகோடி ப்ரகீர்த்திதா: ॥ 14॥

ஸாங்க்ரு’திருவாச –
ப⁴க³வந்நாதி³நாத:² ஸ: கிம் ரூப: க: ஸ: உச்யதாம் ।
த³த்தாத்ரேய உவாச –
மஹாதே³வஸ்ய நாமாந்யாதி³நாதா²தி³காந்யபி ।
ஶிவேஶ்வரஶ்ச தே³வோऽஸௌ லீலயா வ்யசரத்ப்ரபு:⁴ ॥ 15॥

ஶ்ரீகண்ட²பர்வதே கௌ³ர்யா ஸஹ ப்ரமத²நாயகாந் ।
ஹிமாக்ஷபர்வதே சைவகத³லீவநகோ³சரே ॥ 16॥

கி³ரிகூடே சித்ரகூடே ஸுபாத³பயுதே கி³ரௌ ।
க்ரு’பயைகைகஸங்கேதம் ஶங்கர: ப்ராஹ தத்ர தாந் ॥ 17॥

தாநி ஸர்வாணி வக்தும் து ந ஹி ஶக்நோமி விஸ்தராத் ।
காநிசித்கத²யிஷ்யாமி ஸஹஜாப்⁴யாஸவத்ஸுக²ம் ॥ 18॥

திஷ்ட²ந் க³ச்ச²ந்ஸ்வபந்பு⁴ஞ்ஜந்த்⁴யாயந்ஶூந்யமஹர்நிஶம் ।
அயமேகோ ஹி ஸங்கேத: ஆதி³நாதே²ந பா⁴ஷித: ॥ 19॥

நாஸாக்³ரத்³ரு’ஷ்டிமாத்ரேண ஹ்யபர: பரிகீர்தித: ।
ஶிரஸ்பஶ்சாச்ச பா⁴க³ஸ்ய த்⁴யாநம் ம்ரு’த்யும் ஜயேத் பரம் ॥ 20॥

ப்⁴ரூமத்⁴யத்³ரு’ஷ்டிமாத்ரேண பர: ஸங்கேத: உச்யதே ।
லலாதே ப்⁴ரூதலே யஶ்சோத்தம: ஸ: ப்ரகீத்தித: ॥ 21॥

ஸவ்யத³க்ஷிணபாத³ஸ்யாங்கு³ஷ்டே லயமுத்தமம் ।
உத்தாநஶவவத்பூ⁴மௌ ஶயநம் சோக்தமுதமம் ॥ 22॥

ஶிதி²லோ நிர்ஜநே தே³ஶே குர்யாச்சேத்ஸித்³தி⁴மாப்நுயாத் ।
ஏவம் ச ப³ஹு ஸங்கேதாந் கத²யாமாஸ ஶங்கர: ॥ 23॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ஸங்கேதை: ப³ஹுபி⁴ஶ்சாந்யை: யஸ்ய சித்தலயோ ப⁴வேத் ।
ஸ ஏவ லயயோக:³ ஸ்யாத் கர்மயோக³ம் தத: ஶ்ரு’ணு: ॥ 24॥

யமஶ்ச நியமஶ்சைவாஸநம் ச தத: பரம் ।
ப்ராணாயாமஶ்சதுத:² ஸ்யாத் ப்ரத்யாஹாரஸ்து பஞ்சம: ।
ததஸ்து தா⁴ரணா ப்ரோக்தா த்⁴யாநம் ஸப்தமமுச்யதே ॥ 25॥

ஸமாதி:⁴ அஷ்டம: ப்ரோக்த: ஸர்வபுண்யப்ரத:³ ।
ஏவமஷ்டாங்க³யோக³ம் ச யாஜ்ஞவல்க்யாத³யோ விது:³ ॥ 26॥

கபிலாத்³யாஸ்து ஶிஷ்யாஶ்ச ஹட²ம் குயுஸ்ததோ யதா² ।
தத்³யதா² ச மஹாமுத்³ரா மஹாப³ந்த⁴ஸ்ததை²வ ச ॥ 27॥

தத: ஸ்யாத்கே²சரீமுத்³ர ப³ந்தோ⁴ ஜாலந்த⁴ர: ததா² ।
உட்³டி³யாணம் மூலப³ந்தோ⁴ விபரீதகரணீ ததா² ॥ 28॥

வஜ்ரோலி: அமரோலிஶ்ச ஸஹஜோலிஸ்த்ரிதா⁴ மதா ।
ஏதேஷாம் லக்ஷணம் வக்ஷ்யே கர்த்தாவ்யம் ச விஶேஷத: ॥ 29॥

யமா: யே த³ஶ: ஸம்ப்ரோக்தா: ரு’ஷிபி:⁴ தத்த்வத³ர்ஶிபி:⁴ ।
லக்⁴வாஹாரஸ்து தேஷ்வேகோ முக்²யோ ப⁴வதி நாபரே ।
அஹிம்ஸா நியமேஷ்வேகா முக்²யா ப⁴வதி நாபரே ॥ 30॥

சதுரஶீதிலக்ஷேஷ்வாஸநேஷ்வுத்தமம் ஶ்ரு’ணு ।
ஆதி³நாதே²ந ஸம்ப்ரோக்தம் யதா³ஸநமிஹோச்யதே ॥ 31॥

உத்தாநௌ சரணௌ க்ரு’த்வோரூஸம்ஸ்தௌ² ப்ரயலத: ।
உரூ மத்⁴யே ததோ²த்தாநௌ பாணீ க்ரு’த்வா ததோ த்³ரு’ஶௌ ॥ 32॥

நாஸாக்³ரே விந்யஸேத்³ராஜத்³த³ந்தமூலம் ச ஜிஹ்வயா ।
உத்தப்⁴ய சிபு³கம் வக்ஷ: ஸம்ஸ்தா²ப்ய பவநம் ஶநை: ॥ 33॥

யதா²ஶக்தி ஸமாக்ரு’ஷ்ய பூரயேது³த³ரம் ஶநை: ।
யதா²ஶக்த்யேவ பஶ்சாத்து ரேசயேத்பவநம் ஶநை: ॥ 34॥

இத³ம் பத்³மாஸநம் ப்ரோக்தம் ஸர்வவ்யாதி⁴விநாஶநம் ।
து³ர்லப⁴ம் யேந கேநாபி தி⁴மதா லப்⁴யதே பு⁴வி ॥ 35॥

ஸாம்ஸ்க்ரு’தே ஶ்ரு’ணு ஸத்த்வஸ்தோ² யோகா³ப்⁴யாஸக்ரமம் யதா² ।
வக்ஷ்யமாணம் ப்ரயத்நேந யோகி³நாம் ஸர்வலக்ஷணை: ॥ 36॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யுவ அவஸ்தோ²ऽபி வ்ரு’த்³தோ⁴ வா வ்யாதி⁴தோ வா ஶநை: ஶநை: ।
அப்⁴யாஸாத்ஸித்³தி⁴மாப்நோதி யோகே³ ஸர்வோऽப்யதந்த்³ரித: ॥ 37॥

ப்³ராஹ்மண: ஶ்ரமணோ வா பௌ³த்³தோ⁴ வாப்யார்ஹதோऽத²வா ।
காபாலிகோ வா சார்வாக: ஶ்ரத்³த⁴யா ஸஹித: ஸுதீ:⁴ ।
யோகா³ப்⁴யாஸோऽதோ நித்யம் ஸர்வஸித்³தி⁴மவாப்நுயாத் ॥ 38॥

க்ரியாயுக்தஸ்ய ஸித்³தி:⁴ ஸ்யாத³க்ரியஸ்ய கத²ம் ப⁴வேத் ।
ந ஶாஸ்த்ரபாட²மாத்ரேண காசித்ஸித்³தி:⁴ ப்ரஜாயதே ॥ 39॥

முண்டி³தோ த³ண்ட³தா⁴ரீ வா காஷாயவஸநோऽபி வா ।
நாராயணவதோ³ வாபி ஜடிலோ மஸ்மலேபந: ॥ 40॥

நம: ஶிவாயவாசீ வா பா³ஹ்யார்சா பூஜகோऽபி வா ।
த்³வாத³ஶஸ்தா²நபூஜோ வா ப³ஹ்யவத்ஸலபா⁴ஷிதம் ।
க்ரியாஹீநோऽத²வா கூர: கத²ம் ஸித்³தி⁴மவாப்நுயாத் ॥ 41॥

ந வேஷதா⁴ரணம் ஸித்³தே:⁴ காரணம் ந ச தத்ததா² ।
க்ரு’பைவ காரணம் ஸித்³தே:⁴ ஸத்யமேவ து ஸாங்க்ரு’தே ॥ 42॥

ஶிஶ்நோத³ரார்த²ம் யோக³ஸ்ய கத²யா வேஷதா⁴ரிண: ।
அநுஷ்டா²நவிஹீநா: து வங்சயந்தி ஜநாந் கில ॥ 43॥

உச்சாவசை: விப்ரலம்பை:⁴ யதந்தே குஶலா: நரா: ।
யோகி³நோ வயமித்யேவம் மூடா:⁴ போ⁴க³பராயணா: ॥ 44॥

ஶநைர்ததா²விதா⁴ந் ஜ்ஞாத்வா யோகா³ப்⁴யாஸவிவர்ஜிதாம் ।
க்ரு’தார்தா²ந்வசநைரேவ வர்ஜயேத்³வேஷதா⁴ரிண: ॥ 45॥

ஏதே து விக்⁴நபூ⁴த்தாஸ்தே யோகா³ப்⁴யாஸஸ்ய ஸர்வதா³ ।
வர்ஜயேத்தாந் ப்ரயத்நேநேத்³ரு’ஶீ ஸித்³த்⁴தா³ க்ரியா ॥ 46॥

ப்ரத²மாப்⁴யாஸகாலே து ப்ரவேஶஸ்து மஹாமுநே ।
ஆலஸ்யம் ப்ரத²மே விக்⁴ந: த்³விதீயஸ்து ப்ரகத்த²நம் ।
பூர்வோக்ததூ⁴ர்த்தகோ³ஷ்டீ² ச த்ரு’தீயோ மந்த்ரஸாத⁴நம் ॥ 47॥

சதுர்தோ² தா⁴துவாத:³ ஸ்யாத்பங்சம: கா²த்³யவாத³கம் ।
ஏவம் ச ப³ஹவோ த்³ரு’ஷ்டா: ம்ரு’க³த்ரு’ஷ்ணா: ஸமா: முநே: ॥ 48॥

ஸ்தி²ராஸநஸ்ய ஜாயந்தே தாம் து ஜ்ஞாத்வா ஸுதீ:⁴ த்யஜேத் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ப்ராணாயாமம் ததஸ்குர்யாத்பத்³மாஸநக³த: ஸ்வயம் ॥ 49॥

ஸுஶோப⁴நம் மட²ம் குர்யாத்ஸூக்ஷ்மத்³வாரம் து நிர்கு⁴ணம் ।
ஸுஷ்டு² லிப்தம் கோ³மயேந ஸுத⁴யா வா ப்ரயத்நத: ॥ 50॥

மத்குணை: மஶகை: பூ⁴தை: வர்ஜிதம் ச ப்ரயத்நத: ।
தி³நே தி³நே ஸுஸம்ம்ரு’ஷ்டம் ஸம்மார்ஜந்யா ஹ்யதந்த்³ரித: ।
வாஸிதம் ச ஸுக³ந்தே⁴ந தூ⁴பிதம் கு³க்³கு³லாதி³பி:⁴ ॥ 51॥

மலமூத்ராதி³பி:⁴ வர்கை³ரு’அஷ்டாத³ஶபி⁴ரேவ ச ।
வர்ஜிதம் த்³வாரஸம்பந்நம் ॥। ॥ 52॥

॥। வஸ்த்ரம் வாஜிநமேவ வா ।
நாந்யத்ரஸ்தரணாஸீந: பரஸம்ஸர்க³வர்ஜித: ॥ 53॥

தஸ்மிந் ஸ து ஸமாஸ்தீர்யாஸநம் விஸ்த்ரு’தாம்ஶகம் ।
தத்ரோபவிஶ்ய மேதா⁴வீ பத்³மாஸநமந்வித: ॥ 54॥

ஸமகாய:ப்ராஞ்ஜலிஶ்ச ப்ரணம்ய ஸ்வேஷ்டதே³வதாம் ।
ததோ த³க்ஷிணஹஸ்தஸ்யாங்கு³ஷ்டே²நைவ பிங்க³லாம் ॥ 55॥

நிருத்⁴ய பூரயேத்³வாயுமிட்³யா ச ஶநை: ஶநை: ।
யதா²ஶக்திநிரோதே⁴ந ததஸ்குர்யாத்து கும்ப⁴கம் ॥ 56॥

ததஸ்த்யஜேத்பிங்க³லயா ஶநை: பவநவேக³த: ।
புந: பிங்க³லயாபூர்ய பூரயேது³த³ரம் ஶநை: ।
யதா² த்யஜேத்ததா² தேந பூரயேத³நிரோத⁴த: ॥ 57॥

ஏவம் ப்ராத: ஸமாஸீநஸ்குர்யாத்³விம்ஶதிகும்ப⁴காந் ।
கும்ப⁴க: ஸஹிதோ நாம ஸர்வக்³ரஹவிவர்ஜித: ॥ 58॥

ஏவம் மத்⁴யாஹ்நஸமயே குர்யாத் விம்ஶதிகும்ப⁴காந் ।
ஏவம் ஸாயம் ப்ரகுர்வீத புந: விம்ஶதிகும்ப⁴காந் ।
ஏவமேவார்த⁴ராத்ரே அபி குர்யாத் விம்ஶதிகும்ப⁴காந் ॥ 59॥

குர்வீத ரேசபூராப்⁴யாம் ஸஹிதாந் ப்ரதிவாஸரம் ।
ஸஹிதோ ரேசபூராப்⁴யாம் தஸ்மாத்ஸஹிதகும்ப⁴க: ॥ 60॥

குர்யாதே³வம் சதுர்வாரமநாலஸ்யோ தி³நே தி³நே ।
ஏவம் மாஸத்ரயம் குர்யாந்நாடீ³ஶுத்³தி⁴ஸ்ததோ ப⁴வேத் ॥ 61॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யதா³ து நாடீ³ஶுத்³தி:⁴ ஸ்யாத்ததா³ சிஹ்நாநி பா³ஹ்யத: ।
ஜாயந்தே யோகி³நோ தே³ஹே தாநி வக்ஷ்யாம்யஶேஷத: ॥ 62॥

ஶரீரலகு⁴தா தீ³ப்தி: ஜட²ராக்³நிவிவர்த⁴நம் ।
க்ரு’ஶத்வம் ச ஶரீரஸ்ய ததா³ ஜாயேத்து நிஶ்வதம் ॥ 63॥

ததா³ வர்ஜ்யாநி வக்ஷ்யாமி யோக³விக்⁴நகராணி து ।
லவணம் ஸர்ஷபம் சாம்லமுஷ்ணம் ரூக்ஷம் ச தீக்ஷ்ணகம் ॥ 64॥

அதீவ போ⁴ஜநம் த்யாஜ்யம் ஸ்த்ரீஸங்க³மநமேவ ச ।
அக்³நிஸேவா து ஸந்த்யாஜ்யா தூ⁴ர்த்தகோ³ஷ்டிஶ்ச ஸந்த்யஜேத் ॥ 65॥

உபாயம் ச ப்ரவக்ஷ்யாமி க்ஷிப்ரம் யோக³ஸ்ய ஸித்³த⁴யே ।
க்⁴ரு’தம் க்ஷீரம் ச மிஷ்டா²ந்நம் மிதாஹரஶ்ச ஶஸ்யதே ॥ 66॥

பூர்வோக்தகாலே குர்வீத பவநாப்⁴யாஸமேவ ச ।
தத: பரம் யதே²ஷ்டம் து ஶக்தி: ஸ்யாத்³வாயுதா⁴ரணே ।
யதே²ஷ்டம் தா⁴ரணாத்³வாயோ: ஸித்³தே⁴த்கேவலகும்ப⁴கம் ॥ 67॥

கேவலே கும்ப⁴கே ஸித்³தே⁴ ரேசபூரகவர்ஜிதே ।
ந தஸ்ய து³ர்லப⁴ம் கிஞ்சித்த்ரிஷு லோகேஷு வித்³யதே ॥ 68॥

ப்ரஸ்வேதோ³ ஜாயதே பூர்வம் மர்த³நம் தேந காரயேத் ।
ததோऽப்திதா⁴ரணாத்³வாயோ: க்ரமேணைவ ஶநை: ஶநை: ॥ 69॥

கம்போ ப⁴வதி தே³ஹஸ்யாஸநஸ்த²ஸ்ய தே³ஹிந: ।
ததோऽதி⁴ரதராப்⁴யாஸாத்³த³ர்து³ரீ ஜாயதே த்⁴ருவம் ॥ 70॥

யதா² து த³ர்து³ரோ க³ச்சே²து³த்ப்லுத்யோத்ப்லுத்ய பூ⁴தலே ।
பத்³மாஸநஸ்தி²தோ யோகீ³ ததா² க³ச்ச²தி பூ⁴தலே ॥ 71॥

ததோऽதி⁴கதராப்⁴யாஸாத்³பூ⁴மித்யக³ஶ்ச ஜாயதே ।
பத்³மாஸநஸ்த² ஏவாஸௌ பூ⁴மிமுத்ஸ்ரு’ஜ்ய வர்த்ததே ॥ 72॥

நிராதா⁴ரோऽபி சித்ரம் ஹி ததா³ ஸாமர்த்²யமுத்³ப⁴வேத் ।
ஸ்வல்பம் வா ப³ஹு வா பு⁴க்த்வா யோகீ³ ந வ்யத²தே ததா³ ॥ 73॥

அல்பமூத்ரபுரீஷஶ்ச ஸ்வல்பநித்³ரஶ்ச ஜாயதே ।
க்ரிமயோ தூ³ஷிகா லாலா ஸ்வேதோ³ து³ர்க³ந்தி⁴தா தநோ: ।
ஏதாநி ஸர்வதா³ தஸ்ய ந ஜாயந்தே தத: பரம் ॥ 74॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ததோऽதி⁴கதராபா⁴ஸாத்³ப³லமுத்பத்³யதே ப்⁴ரு’ஶம் ।
யேந பூ⁴சரஸித்³தி:⁴ ஸ்யாத்³பூ⁴சராணாம் ஜயே க்ஷம: ॥ 75॥

வ்யாக்⁴ரோ லுலாயோ வந்யோ வா க³வயோ க³ஜ ஏவ வா ।
ஸிம்ஹோ வா யோகி³நா தேந ம்ரியந்தே ஹஸ்ததாட³நாத் ।
கந்த³ர்பஸ்ய யதா²ரூபம் ததா² தஸ்யாபி யோகி³ந: ॥ 76॥

தஸ்மிந் காலே மஹாவிக்⁴நோ யோகி³ந: ஸ்யாத்ப்ரமாத³த: ।
தத்³ரூபவஶகா:³ நார்ய: கங்க்ஷந்தே தஸ்ய ஸங்க³மம் ॥ 77॥

யதி³ ஸங்க³ம் கரோத்யேஷ பி³ந்து³ஸ்தஸ்ய விநஶ்யதி ।
ஆயு:க்ஷயோ பி³ந்து³நாஶாத³ஸாமர்த்²யம் ச ஜாயதே ॥ 78॥

தஸ்மாத்ஸர்வப்ரயத்நேந பி³ந்து³ராக்ஷ்யோ ஹி யோகி³நா ।
ததோ ரஹஸ்யுபாவிஷ்ட: ப்ரணவம் ப்லுதமாத்ரயா ॥ 79॥

ஜபேத்பூர்வா: ஜிதாநாம் ச பாபாநாம் ச நாஶஹேதவே ।
ஸர்வவிக்⁴நஹரஶ்சாயம் ப்ரணவ: ஸர்வதோ³ஷஹா ॥ 80॥

ஏவமப்⁴யாஸயோகே³ந ஸித்³தி:⁴ ஆரம்ப⁴ஸம்ப⁴வா ।
ததோ ப⁴வேத்³க⁴டாவஸ்தா² பவநாப்⁴யாஸிந: ஸதா³ ॥ 81॥

ப்ராணாபாநௌ மநோவயூ ஜீவத்மபரமாத்மநௌ ।
அந்யோந்யஸ்யாவிரோதே⁴நைகதாம் க⁴டதோ காநிசித் ॥ 82॥

ததா³ க⁴டாத்³வயாவஸ்தா² ப்ரஸித்³த⁴ யோகி³நாம் ஸ்ம்ரு’தா ।
ததஶ்சிஹ்நாநி யாநி ஸ்யு: தாநி வக்ஷ்யாமி காநிசித் ॥ 83॥

பூர்வம் ய: கதி²தோऽப்⁴யாஸஶ்சதுர்தா⁴ தம் பரித்யஜேத் ।
தி³வா வா யதி³ வா ராத்ரௌ யாமமாத்ரம் ஸமப்⁴யஸேத் ॥ 84॥

ஏகபா³ரம் ப்ரதிதி³நம் குர்யாத்கேவலகும்ப⁴கம் ।
ப்ரத்யாஹாரோ ஹி ஏவம் ஸ்யாதே³வம் கர்து: ஹி யோகி³ந: ॥ 85॥

இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யோ யத்ப்ரத்யாஹரதி ஸ்பு²டம் ।
யோகீ³ கும்ப⁴கமாஸ்தா²ய ப்ரத்யாஹார: ஸ உச்யதே ॥ 86॥

யத்³யத்பஶ்யதி சக்ஷுர்ப்⁴யாம் தத்ததா³த்மநி பா⁴வயேத் ।
யத்³யஜ்ஜிக்⁴ரதி நாஸாப்⁴யாம் தத்ததா³த்மநி பா⁴வயேத் ॥ 87॥

ஏவம் ஜ்ஞாநேந்த்³ரியாணாம் ஹி தத்ஸங்க்²யா ஸந்த⁴ரயேத் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யாமமாத்ரம் ப்ரதிதி³நம் யோகீ³ யத்நாத³தந்த்³ரித: ॥ 88॥

ததா³ விசித்ரஸாமர்த்²யம் யோகி³நாம் ஜாயதே த்⁴ருவம் ।
தூ³ரஶ்ருதி: தூ³ரத்³ரு’ஷ்டி:க்ஷணாத்³தூ³ரக³மஸ்ததா² ॥ 89॥

வாக்ஸித்³தி:⁴ காமசாரித்வமத்³ரு’ஶ்யகரணம் ததா² ।
மலமூத்ரப்ரலேபேந லோஹாதீ³நாம் ஸுவர்ணதா ।
கே²சரத்வம் ததா²ந்யத்து ஸததாப்⁴யாஸயோகி³ந: ॥ 90॥

ததா³ பு³த்³தி⁴மதா பா⁴வ்ய யோகி³நா யோக³ஸித்³த⁴யே ।
ஏதே விஹதா: மஹாஸித்³தே:⁴ ந ரமேத்தேஷு பு³த்³தி⁴மாந் ॥ 91॥

ந த³ர்ஶயேச்ச கஸ்மைசித்ஸ்வஸாமர்த்²ய ஹி ஸர்வதா³ ।
கதா³சித்³த³ஶயேத்ப்ரீத்யா ப⁴க்தியுக்தாய வா புந: ॥ 92॥

யதா² மூர்கோ² யதா² மூடோ⁴ யதா² ப³தி⁴ர ஏவ வா ।
ததா² வர்தேத லோகேஷு ஸ்வஸாமர்த்²யஸ்ய கு³ப்தயே ॥ 93॥

நோசேச்சி²ஷ்யா: ஹி ப³ஹவோ ப⁴வந்தி ஸ்வ ந ஸம்ஶய: ।
தத்கர்மகரணவ்யக்³ர: ஸ்வாப்⁴யாஸே விஸ்ம்ரு’தோ ப⁴வேத் ।
அப்⁴யாஸேந விஹீநஸ்து ததோ லௌகிகதாம் வ்ரஜேத் ॥ 94॥

அவிஸ்ம்ரு’த்ய கு³ரோ: வக்யமப்⁴யஸேத்தத³ஹர்நிஶம் ।
ஏவம் ப⁴வேத்³க⁴டாவஸ்தா² ஸதா³ப்⁴யாஸஸ்ய யோகி³ந: ॥ 95॥

அநப்⁴யாஸேந யோக³ஸ்ய வ்ரு’தா² கோ³ஷ்ட்²யா ந ஸித்⁴யதி ।
தஸ்மாத்ஸர்வப்ரயத்நேந யோக³மேவ ஸதா³ப்⁴யஸேத் ॥ 96॥

தத: பரிசயாவஸ்தா² ஜயதே அப்⁴யாஸயோக³த: ।
வாயு: ஸம்ப்ரேரிதோ யத்நாத³க்³நிநா ஸஹ குண்ட³லீம் ॥ 97॥

போ³த⁴யித்வா ஸுஷும்நாயாம் ப்ரவிஶேத³விரோத⁴த: ।
வாயுநா ஸஹ சித்தம் து ப்ரவிஶேச்ச மஹாபத²ம் ॥ 98॥

மஹாபத²ம் ஶ்மஶாநம் ச ஸுஷும்நாபி வேத்யஸௌ ।
யஸ்ய சித்தம் ஸபவநம் ஸுஷும்நாம் ப்ரவிஶேதி³ஹ ॥ 99॥

பா⁴வ்யாநர்தா²ந் ஸ: விஜ்ஞாய யோகி³ ரஹஸி யத்நத: ।
பஞ்சதா⁴ தா⁴ரண குர்யாத்தத்தத்³பூ⁴தப⁴யாப²ஹம் ॥ 100॥

ப்ரு’தி²வீ தா⁴ரணம் வக்ஷ்யே பார்தி²வேப்⁴ய்ப் ப⁴யாபஹம் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
நாபே:⁴ அத:⁴ கு³த³ஸ்யோத்⁴வம் க⁴டிகா: பஞ்ச தா⁴ரயேத் ॥ 101॥

வாயும் ப⁴வேத் ததோ ப்ரு’த்²வீதா⁴ரணம் தத்³ப⁴யாபஹம் ।
ப்ரு’தி²வீ ஸம்ப⁴வ: தஸ்ய ந ம்ரு’த்யு: யோகி³நோ ப⁴வேத் ॥ 102॥

நாபி⁴ஸ்தா²நே ததோ வாயும் தா⁴ரயேத் பஞ்ச நாடி³கா: ।
ததோ ஜலாத்³ப⁴யம் நாஸ்தி ஜலம்ரு’த்யு: ந யோகி³ந: ॥ 103॥

நாப்⁴யுர்த்⁴வமண்ட³லே வாயும் தா⁴ரயேத்பஞ்ச நாடி³கா: ।
அக்³நேயதா⁴ரணா ஸேயம் ந ம்ரு’த்யு: தஸ்ய வஹ்நிநா ॥ 104॥

ஸதா³ விசித்ரஸாமர்த்²யம் யோகி³நோ ஜாயதே த்⁴ருவம் ।
ந த³ஹ்யதே ஶரீரம் ச ப்ரக்ஷிப்தோ வஹ்நி குண்ட³கே ॥ 105॥

நாபி⁴ப்⁴ருவோ: ஹி மத்⁴யே து ப்ரதே³ஶத்ரயஸம்யுதே ।
தா⁴ரயேத் பஞ்ச க⁴டிகா: வாயும் ஸாஇஷா ஹி வாயவீ ।
தா⁴ரணாந்ந து வாயோஸ்து யோகி³நோ ஹி ப⁴யம் ப⁴வேத் ॥ 106॥

ப்⁴ரூமத்⁴யாது³பரிஷ்டாத்து தா⁴ரயேத் பஞ்ச நாடி³கா: ।
வாயும் யோऽஸௌ ப்ரயத்நேந ஸேயமாகாஶதா⁴ரணா ॥ 107॥

ஆகாஶதா⁴ரணாம் குர்வந்ம்ரு’த்யும் ஜயதி தத்த்வத: ।
யத்ர தத்ர ஸ்தி²தோ வாபிஸுக²மத்யந்தமஶ்நுதே ॥ 108॥

ஏவம் ச தா⁴ரணா: பஞ்ச குர்யாத்³யோகீ³ விசக்ஷண: ।
ததோ த்³ரு’ட⁴ஶரீர: ஸ்யந்ம்ரு’த்யுர்தஸ்ய ந வித்³யதே ॥ 109॥

இத்யேவம் பஞ்சபூ⁴தாநாம் தா⁴ரணாம் ய: ஸமப்⁴யஸேத் ।
ப்³ரஹ்மண: ப்ரலயே வாபி ம்ரு’த்யு: தஸ்ய ந வித்³யதே ॥ 110॥

ஸமப்⁴யஸேத்ததா³ த்⁴யாநம் க⁴டிகா: ஷஷ்டிமேவ ச ।
வாயும் நிருத்⁴ய த்⁴யாயேத்து தே³வதாமிஷ்டதா³யிநீம் ॥ 111॥

ஸகு³ணத்⁴யாநமேவம் ஸ்யாத³ணிமாதி³கு³ணப்ரத³ம் ।
நிர்கு³ணம் க²மிவ த்⁴யாத்வா மோக்ஷமார்க³ம் ப்ரபத்³யதே ॥ 112॥

நிர்கு³ணத்⁴யாநஸம்பந்ந: ஸமாதி⁴ம் ச ததோऽப்⁴யஸேத் ।
தி³நத்³வாத³ஶகேநைவ ஸமாதி⁴ம் ஸமவாப்நுயாத் ॥ 113॥

வாயும் நிருத்⁴ய மேத⁴வீ ஜீவந்முக்தோ ப⁴வேத்³த்⁴ருவம் ।
ஸமாதி:⁴ ஸமதாவஸ்தா² ஜீவாத்மபரமாத்மநோ: ॥ 114॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யதி³ ஸ்யாத்³தே³ஹமுத்ஸ்ரஷ்டுமிச்சா² சேது³த்ஸ்ரு’ஜேத்ஸ்வயம் ।
பரப்³ரஹ்மணி லீயேத்த்யக்த்வா கர்மஶுபா⁴ஶுப⁴ம் ॥ 115॥

அத² சேந்நோ ஸமுத்ஸ்ரஷ்டும் ஸ்வஶரீரம் யதி³ ப்ரிஅயம் ।
ஸர்வ லோகேஷு விசரேத³ணிமாதி³கு³ணாந்வித: ॥ 116॥

கதா³சித்ஸ்வேச்ச²யா தே³வோ பூ⁴த்வா ஸ்வர்க³யபி ஸஞ்சரேத் ।
மநுஷ்யோ வாபி யக்ஷோ வா ஸ்வேச்ச²யா ஹி க்ஷணாத்³ப⁴வேத் ॥ 117॥

ஸிம்ஹோ வ்யாக்⁴ரோ க³ஜோ வா ஸ்யாதி³ச்ச²யா ஜந்துதாம் வ்ரஜேத் ।
யதே²ஷ்டமேவ வர்த்தேத யோகீ³ வித்³வாந்மஹேஶ்வர: ॥ 118॥

கவிமார்கோ³ऽயமுக்த: தே ஸாங்க்ரு’தே அஷ்டாங்க³யோக³த: ।
ஸித்³தா⁴நாம் கபிலாதீ³நாம் மதம் வக்ஷ்யே தத: பரம் ॥ 119॥

அபா⁴ஸபே⁴த³தோ பே⁴த:³ ப²ல து ஸமமேவ ஹி ।
மஹாமுத்³ராம் ப்ரவக்ஷ்யாமி பை⁴ரவேணோக்தமாத³ராத் ॥ 120॥

பார்ஷ்ணிவாமஸ்ய பாத³ஸ்ய யோநிஸ்தா²நே நியோஜயேத் ।
ப்ரஸார்ய த³க்ஷிணம் பாத³ம் ஹஸ்தாப்⁴யாம் தா⁴ரயேத்³த்³ரு’ட⁴ம் ॥ 121॥

சிபு³கம் ஹ்ரு’தி³ விந்யஸ்ய பூரயேத் வாயுநா புந: ।
கும்ப⁴கேந யதா²ஶக்த்யா தா⁴ரயித்வா து ரேசயேத் ।
வாமாங்கே³ந ஸமப்⁴யஸ்ய த³க்ஷிணாங்கே³ந சாப்⁴யஸேத் ॥ 122॥

ப்ரஸாரிதஸ்து ய: பாத³ஸ்தமுரூபரி விந்யஸேத் ।
அயமேவ மஹாப³ந்தோ⁴ முத்³ராவச்சாமுமப்⁴யஸேத் ॥ 123॥

மஹாப³ந்த⁴ஸ்தி²தோ யோகீ³ ஸ்பி²சௌ ஸந்தாட³யேச்ச²நை: ।
அயமேவ மஹாப³ந்த:⁴ ஸித்³தை:⁴ அப்⁴யஸ்யதே நரை: ॥ 124॥

அந்த: கபாலகுஹரே ஜிஹ்வாம் வ்யாவர்த்ய ப³ந்த⁴யேத் ।
ப்⁴ரூமத்⁴யே த்³ரு’ஷ்டி: அப்யேஷா முத்³ரா ப⁴வதி கே²சரீ ॥ 125॥

கண்ட²மாகுஞ்ச்ய ஹ்ரு’த³யே ஸ்தா²பயேத்³த்³ரு’ட⁴மிச்ச²யா ।
ஜலந்த⁴ரோ ப³ந்த⁴ ஏஷ அம்ரு’தத்³ரவபாலக: ॥ 126॥

நாபி⁴ஸ்தோ²ऽக்³நி: கபாலஸ்த²ஸஹஸ்ரகமலச்யுதம் ।
அம்ரு’தம் ஸர்வதா³ தாவத³ந்தர்ஜ்வலதி தே³ஹிநாம் ॥ 127॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யதா² சாக்³நிஸ்தத³ம்ரு’தம் ந பிபே³த்து பிபே³த்ஸ்வயம் ।
யாதி பஶ்சிமமார்கே³ணைவமப்⁴யாஸத: ஸதா³ ।
அம்ரு’தம் குருதே தே³ஹம் ஜலந்த⁴ரமதோऽப்⁴யஸேத் ॥ 128॥

உட்³யாணம் து ஸஹஜம் கு³ணௌகா⁴த்கதி²தம் ஸதா³ ।
அப்⁴யஸேத³ஸ்ததந்த்³ரஸ்து வ்ரு’த்³தோ⁴ऽபி தருணோ ப⁴வேத் ॥ 129॥

நாபே:⁴ ஊர்த்⁴வமத⁴ஶ்சாபி தாநம் குர்யாத்ப்ரயத்நத: ।
ஷண்மாஸமப்⁴யஸேந்ம்ரு’த்யும் ஜயேதே³வ ந ஸம்ஶய: ॥ 130॥

மூலப³ந்த⁴ம் து யோ நித்யமப்⁴யஸேத்ஸ ச யோக³வித் ।
கு³தே³ பார்ஷ்ணிம் து ஸம்பீட்³ய வாயுமாகுஞ்சயேத்³ப³லாத் ।
வாரம் வாரம் யதா² சோர்த்⁴வம் ஸமாயாதி ஸமீரண: ॥ 131॥

ப்ராணாபாநௌ நாத³பி³ந்தூ³ மூலப³ந்தே⁴ந சைகதாம் ।
க³த்வா யோக³ஸ்ய ஸம்ஸித்³தி⁴ம் யச்ச²தோ நாத்ர ஸம்ஶய: ॥ 132॥

கரணம் விபரிதாக்²யம் ஸர்வவ்யாதி⁴விநாஶநம் ।
நித்யமப்⁴யாஸயுக்தஸ்ய ஜட²ராக்³நி: விவர்த்³த⁴தே ॥ 133॥

ஆஹாரோ ப³ஹுல: தஸ்ய ஸம்பாத்³ய: ஸாங்க்ரு’தே த்⁴ருவம் ।
அல்பாஹாரோ யதி³ ப⁴வேத³க்³நி: தா³ஹம் கரோதி வை ।
ஊர்த்⁴வம் பா⁴நுரத⁴ஶ்சந்த்³ரஸ்தத்³யதா² ஶ்ரு’ணு ஸாங்க்ரு’தே ॥ 134॥

அத:⁴ ஶிரஶ்சோர்த்⁴வபாத:³க்ஷணம் ஸ்யாத்ப்ரத²மே தி³நே ।
க்ஷணாத்து கிஞ்சித³தி⁴கமப்⁴யஸேந தி³நே தி³நே ॥ 135॥

வலிஶ்ச பலிதஶ்சைவ ஷண்மாஸோர்த்⁴வம் ந த்³ரு’ஶ்யதே ।
யாமமாத்ரம் து யோ நித்யமப்⁴யஸேத்ஸ து ஓக³வித் ॥ 136॥

வஜ்ரோலிம் கத²யிஷ்யாமி கோ³பிதம் ஸர்வயோகி³பி:⁴ ।
அதீவைதத்³ரஹஸ்யம் து ந தே³யம் யஸ்ய கஸ்யசித் ।
ஸ்வப்ராணைஸ்து ஸமோ யோ ஸ்யாத்தஸமை ச கத²யேத்³த்⁴ருவம் ॥ 137॥

ஸ்வேச்ச²யா வர்த்தமாநோऽபி யோகோ³க்தநியமை: விநா ।
வஜ்ரோலிம் யோ விஜாநதி ஸ யோகீ³ ஸித்³தி⁴பா⁴ஜந: ॥ 138॥

தத்ர வஸ்து த்³வயம் வக்ஷ்யே து³ர்லப⁴ம் யேந கேநசித் ।
லப்⁴யதே யதி³ தஸ்யைவ யோக³ஸித்³தி⁴கரம் ஸ்ம்ரு’தம் ॥ 139॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
க்ஷீரமாங்கி³ரஸம் சேதி த்³வயோராத்³யம் து லப⁴தே ।
த்³விதீயம் து³ர்லப⁴ம் பும்ஸாம் ஸ்த்ரீப்⁴ய: ஸாத்⁴யமுபாயத: ।
யோகா³ப்⁴யாஸரதா ஸ்த்ரீ ச பும்ஸா யத்நேந ஸாத⁴யேத் ॥ 140॥

புமாந் ஸ்த்ரீ வா யத³ந்யோந்யம் ஸ்த்ரீபும்ஸ்த்வாநபேக்ஷயா ।
ஸ்வப்ரயோஜநமாத்ரைகஸாத⁴நாத்ஸித்³தி⁴மாப்நுயாத் ॥ 141॥

சலிதோ யதி³ பி³ந்து:³ தமுர்த்⁴வமாக்ரு’ஷ்ய ரக்ஷயேத் ।
ஏவம் ச ரக்ஷிதோ பி³ந்து:³ ம்ரு’தும் ஜயதி தத்த்வத: ॥ 142॥

மரணம் பி³ந்து³பாதேந ஜீவநம் பி³ந்து³தா⁴ரணத் ।
பி³ந்து³ரக்ஷாப்ரஸாதே³ந ஸர்வம் ஸித்⁴யதி யோகி³ந: ॥ 143॥

அமரோலிஸ்தத்³யதா² ஸ்யாத்ஸஹஜோலிஸ்ததோ யதா² ।
தத³ப்⁴யாஸக்ரம: ஶஸ்ய: ஸித்³தா⁴நாம் ஸம்ப்ரதா³யத: ॥ 144॥

ஏதை: ஸை: வைஸ்து கதி²தைரப்⁴யஸேத் காலலாலத: ।
ததோ ப⁴வேத்³ராஜயோகோ³ நாந்தரா ப⁴வதி த்⁴ருவம் ।
ந தி³ங்மாத்ரேண ஸித்³தி:⁴ ஸ்யாத³ப்⁴யஸேநைவ ஜாயதே ॥ 145॥

ராஜயோக³ம் வரம் ப்ராண்ய ஸர்வஸத்த்வவஶங்கரம் ।
ஸர்வம் குர்யாந்நவா குர்யாத்³யதா²ருசிவிசோஷ்டிதம் ॥ 146॥

யதா²ந்தரா ச யோகே³ந நிஷ்பந்நா யோகி³ந: க்ரியா ।
யதா²வஸ்தா² ஹி நிஷ்பத்திர்பு⁴க்திமுக்திப²லப்ரதா³ ॥ 147॥

ஸர்வம் தே கதி²தம் ப்³ரஹ்மந் ஸாம்ஸ்க்ரு’தே யோக³மாசர ।
இதி தஸ்ய வச: ஶ்ருத்வா ஸாம்ஸ்க்ரு’தி: யோக³மாப்தவாந் ।
ஸர்வாஸித்³தீ⁴ரவாப்யாஸௌ த³த்தாத்ரேயப்ரஸாத³த: ॥ 148॥

ய இத³ம் பட²தே நித்யம் ஸாது⁴ப்⁴ய: ஶ்ராவயேத³பி ।
தஸ்ய யோக:³ க்ரமேணைவ ஸித்⁴யத்யேவ ந ஸம்ஶய: ॥ 149॥

யோகி³நோऽப்⁴யாஸயுக்தா: யே ஹ்யரண்யேஷு க்³ரு’ஹேஷு வா ।
ப³ஹுகாலம் ரமந்தே ஸ்ம ப³ஹுகாலவிவர்ஜிதா: ॥ 150॥

தஸ்மாத்ஸர்வப்ரயத்நேந யோக³மேவ ஸதா³ப்⁴யஸேத் ।
யோகா³ப்⁴யாஸோ ஜந்மப²லம் விப²லா ஹி ததா² க்ரியா ॥ 151॥

மஹாமாயாப்ரஸாதே³ந ஸர்வேஷாமஸ்து தத்ஸுக²ம் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ஏதத்ஸர்வம் யதா²யுக்தம் தாமேவாராத⁴யேத்தத: ॥ 152॥

ய: ஸம்ஸ்ம்ரு’த்யா முநீநாமபி து³ரிதஹரோ யோக³ஸித்³தி⁴ப்ரத³ஶ்ச ।
காரூண்யாத்³ய: ப்ரவக்தா ஸுக²து:³க²ஸுஹ்ரு’த்³யோக³ஶாஸ்த்ரஸ்ய நாத:²॥ 153॥

தஸ்யாஹம் ப⁴க்திஶுந்யோऽப்யகி²லஜநகு³ரோ: ப⁴க்திசிந்தாமணே: ஹி ।
த³த்தத்ரேயஸ்ய விஷ்ணோ: பத³நலிநயுக³ம் நித்யமேவ ப்ரபத்³யே ॥ 154॥

——————–

ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்ட சக்ர பீ³ஜ ஸ்தோத்ரம்

ஶ்ரீத³த்தஷட்சக்ரஸ்தோத்ரம் அஜபாஜபஸ்தோத்ரம் ச ।
ஶ்ரீக³ணேஶாய நம: । ஶ்ரீ கு³ரவே நம: ।
அத² த்⁴யாநம் ।
தி³க³ம்ப³ரம் ப⁴ஸ்மஸுக³ந்த⁴லேபநம்
சக்ரம் த்ரிஶூலம் ட³மரும் க³தா³ம் ச ।
பத்³மாஸநஸ்த²ம் ரு’ஷிதே³வவந்தி³தம்
த³த்தாத்ரேயத்⁴யாநமபீ⁴ஷ்டஸித்³தி⁴த³ம் ॥

ௐ மூலாதா⁴ரே வாரிஜபத்ரே சதுரஸ்ரம் (ஸசதுஷ்கே)
வம்ஶம்ஷம்ஸம் வர்ணவிஶாலம் ஸுவிஶாலம் ।
ரக்தம் வர்ணம் ஶ்ரீக³ணநாத²ம் ப⁴க³வந்தம்
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 1॥ (மூலாதா⁴ர)

ஸ்வாதி⁴ஷ்டா²நே ஷட்த³லபத்ரே தநுலிங்கே³
பா³லாந்தேதத்³வர்ணவிஶாலம் ஸுவிஶாலம் ।
(வாதி³ம் லாந்தம் வர்ணவிஶேஷம் ஸுவிஶேஷம் ।)
பீதம் வர்ணம் வாக்பதிரமணம் த்³ருஹிணம் தம் (வாக்பதிரூபம், து³ஹிலாந்தம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 2॥ (ஸ்வாதி⁴ஷ்டா²ந)

நாபௌ⁴பத்³மம் பத்ரத³ஶாங்கம் ட³ப²வர்ணம் (நாபௌ⁴ஸ்தா²நே பத்ரத³ஶாப்³தே³)
லக்ஷ்மீகாந்தம் க³ருடா³ரூட⁴ம் நரவீரம் । (மணிபூரே ।)
நீலம்வர்ணம் நிர்கு³ணரூபம் நிக³மாந்தம் (நிக³மாக்ஷம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 3॥ (மணிபூர)

ஹ்ரு’த்பத்³மாந்தே த்³வாத³ஶபத்ரே க: வர்ணே (கண்ட²வர்ணே)
ஶம்போ⁴ஶைவம் பூர்ணமயந்தம் ஶஶிவர்ணம் । (ஶம்போ⁴ஶேஶம் ஜீவவிஶேஷம்
ஸ்மரயந்தம் ।)
(ஸ்ரு’ஷ்டிஸ்தி²த்தம் குருவந்தம் ஶிவஶக்திம்
அநாஹதாந்தே வ்ரு’ஷபா⁴ரூட⁴ம் ஶிவரூபம் ।)1

ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்டசக்ரபீ³ஜஸ்தோத்ரம்
ஸ்வர்க³ஸ்தி²த்யம் குருவிந்தூ³தம் ஶிவஶக்திம் (குர்வாணம் த⁴வளாங்க³ம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 4 ॥ (அநாஹத)

கண்ட²ஸ்தா²நே சக்ரவிஶுத்³தே⁴ கமலாந்தே
சந்த்³ராகாரே ஷோட³ஶபத்ரே ஸ்வரவர்ணே ।
மாயாதீ⁴ஶம் தைஜஸரூபம் ப⁴க³வந்தம் (ஜீவஶிவம் தம் நிஜமூர்திம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 5॥ (விஶுத்³த⁴)

ஆஜ்ஞாசக்ரே ப்⁴ரு’குடிஸ்தா²நே த்³வித³லாந்தே (அக்³நிஶ்சக்ரே)
ஹம் ஸம் பீ³ஜம் ஜ்ஞாநஸமுத்³ரம் கு³ரூமூர்தி: । (ஹம் க்ஷம், கு³ரூமூர்திம்)
வித்³யுத்வர்ணம் ஜ்ஞாநமயம் தம் விருபாக்ஷம் (நிடிலாக்ஷம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 6॥ (ஆஜ்ஞா)

மூர்த்⁴நிஸ்தா²நே வாரிஜபத்ரே ஶஶிபீ³ஜம்
ஶுப்⁴ரம் வர்ணம் பத்ரஸஹஸ்ரம் ஸுவிஶாலம் । (லலநாக்²யே ।)
ஹம் பீ³ஜாக்²யம் வர்ணஸஹஸ்ரம் துரியம் தம் (துர்யாந்தம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 7॥ (ஸஹஸ்ரார)

ப்³ரஹ்மாநந்த³ம் ப்³ரஹ்மமுகுந்த³ம் ப⁴க³வந்தம்
ப்³ரஹ்மஜ்ஞாநம் ப்³ரஹ்மமயம் தம் ஸ்வயமேவம் । (ஜ்ஞாநமயம்)
(ஸத்யம் ஜ்ஞாநம் ஸத்யமநந்தம் ப⁴க³ரூபம் ।)
ப்³ரஹ்மாத்மாநம் ப்³ரஹ்மமுநீத்³ரம் ப⁴ஸிதாப⁴ம் (பரமாத்மாநம் ப்³ரஹ்மமுநீத்³ரம் ப⁴ஸிதாங்க³ம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 8॥ (பூர்ணப்³ரஹ்மஸ்வரூப)

ஶாந்தாகாரம் ஶேஷஶயாநம் ஸுரவந்த்³யம்
காந்தாநாத²ம் கோமலகா³த்ரம் கமலாக்ஷம் ।
சிந்தாரத்நம் சித்³க⁴நபூர்ணம் த்³விஜராஜ்யம் (த்³விஜராஜம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 9॥

சிதஓங்காரம் த்⁴வநிநாதே³ ச ஸ்வச்ச²ந்தே³
ஆகாராந்தேऽக்ஷரவணீதே கு³ணரூபே ।
வேதா³ந்தார்த²ம் ஜ்ஞாநஸ்வரூபம் நிஜபோ³த⁴ம்
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 9॥

இதி ஶ்ரீ அஜபாதந்த்ரே த³த்தாத்ரேயஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் । ஶுப⁴ம் ப⁴வது ।

ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்டசக்ரபீ³ஜஸ்தோத்ரம்

(இதி ஶ்ரீமத்³ஶங்கராசார்யவிரசிதம் ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்டசக்ரபீ³ஜஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।)

———————————————-

॥ ஶ்ரீ த³த்தாத்ரேய வஜ்ர கவசம் ॥
ருஷய ஊசு꞉ |
கத²ம் ஸங்கல்பஸித்³தி⁴꞉ ஸ்யாத்³வேத³வ்யாஸ கலௌயுகே³ |
த⁴ர்மார்த²காமமோக்ஷாணாம் ஸாத⁴னம் கிமுதா³ஹ்ருதம் || 1 ||

வ்யாஸ உவாச |
ஶ்ருண்வந்து ருஷயஸ்ஸர்வே ஶீக்⁴ரம் ஸங்கல்பஸாத⁴னம் |
ஸக்ருது³ச்சாரமாத்ரேண போ⁴க³மோக்ஷப்ரதா³யகம் || 2 ||

கௌ³ரீஶ்ருங்கே³ ஹிமவத꞉ கல்பவ்ருக்ஷோபஶோபி⁴தம் |
தீ³ப்தே தி³வ்யமஹாரத்ன ஹேமமண்ட³பமத்⁴யக³ம் || 3 ||

ரத்னஸிம்ஹாஸனாஸீனம் ப்ரஸன்னம் பரமேஶ்வரம் |
மந்த³ஸ்மிதமுகா²ம்போ⁴ஜம் ஶங்கரம் ப்ராஹ பார்வதீ || 4 ||

ஶ்ரீதே³வீ உவாச |
தே³வதே³வ மஹாதே³வ லோகஶங்கர ஶங்கர |
மந்த்ரஜாலானி ஸர்வாணி யந்த்ரஜாலானி க்ருத்ஸ்னஶ꞉ || 5 ||

தந்த்ரஜாலான்யனேகானி மயா த்வத்த꞉ ஶ்ருதானி வை |
இதா³னீம் த்³ரஷ்டுமிச்சா²மி விஶேஷேண மஹீதலம் || 6 ||

இத்யுதீ³ரிதமாகர்ண்ய பார்வத்யா பரமேஶ்வர꞉ |
கரேணாம்ருஜ்ய ஸந்தோஷாத் பார்வதீம் ப்ரத்யபா⁴ஷத || 7 ||

மயேதா³னீம் த்வயா ஸார்த⁴ம் வ்ருஷமாருஹ்ய க³ம்யதே |
இத்யுக்த்வா வ்ருஷமாருஹ்ய பார்வத்யா ஸஹ ஶங்கர꞉ || 8 ||

யயௌ பூ⁴மண்ட³லம் த்³ரஷ்டும் கௌ³ர்யாஶ்சித்ராணி த³ர்ஶயன் |
க்வசித் விந்த்⁴யாசலப்ராந்தே மஹாரண்யே ஸுது³ர்க³மே || 9 ||

தத்ர வ்யாஹர்துமாயாந்தம் பி⁴ல்லம் பரஶுதா⁴ரிணம் |
வத்⁴யமானம் மஹாவ்யாக்⁴ரம் நக²த³ம்ஷ்ட்ராபி⁴ராவ்ருதம் || 10 ||

அதீவ சித்ரசாரித்ர்யம் வஜ்ரகாயஸமாயுதம் |
அப்ரயத்னமனாயாஸமகி²ன்னம் ஸுக²மாஸ்தி²தம் || 11 ||

பலாயந்தம் ம்ருக³ம் பஶ்சாத்³வ்யாக்⁴ரோ பீ⁴த்யா பலாயத꞉ |
ஏததா³ஶ்சர்யமாலோக்ய பார்வதீ ப்ராஹ ஶங்கரம் || 12 ||

ஶ்ரீ பார்வத்யுவாச |
கிமாஶ்சர்யம் கிமாஶ்சர்யமக்³ரே ஶம்போ⁴ நிரீக்ஷ்யதாம் |
இத்யுக்த꞉ ஸ தத꞉ ஶம்பு⁴ர்த்³ருஷ்ட்வா ப்ராஹ புராணவித் || 13 ||

ஶ்ரீ ஶங்கர உவாச |
கௌ³ரி வக்ஷ்யாமி தே சித்ரமவாங்மானஸகோ³சரம் |
அத்³ருஷ்டபூர்வமஸ்மாபி⁴ர்னாஸ்தி கிஞ்சின்ன குத்ரசித் || 14 ||

மயா ஸம்யக் ஸமாஸேன வக்ஷ்யதே ஶ்ருணு பார்வதி |
அயம் தூ³ரஶ்ரவா நாம பி⁴ல்ல꞉ பரமதா⁴ர்மிக꞉ || 15 ||

ஸமித்குஶப்ரஸூனானி கந்த³மூலப²லாதி³கம் |
ப்ரத்யஹம் விபினம் க³த்வா ஸமாதா³ய ப்ரயாஸத꞉ || 16 ||

ப்ரியே பூர்வம் முனீந்த்³ரேப்⁴ய꞉ ப்ரயச்ச²தி ந வாஞ்ச²தி |
தே(அ)பி தஸ்மின்னபி த³யாம் குர்வதே ஸர்வமௌனின꞉ || 17 ||

த³லாத³னோ மஹாயோகீ³ வஸன்னேவ நிஜாஶ்ரமே |
கதா³சித³ஸ்மரத் ஸித்³த⁴ம் த³த்தாத்ரேயம் தி³க³ம்ப³ரம் || 18 ||

த³த்தாத்ரேய꞉ ஸ்மர்த்ருகா³மீ சேதிஹாஸம் பரீக்ஷிதும் |
தத்க்ஷணாத் ஸோ(அ)பி யோகீ³ந்த்³ரோ த³த்தாத்ரேய꞉ ஸமுத்தி²த꞉ || 19 ||

தம் த்³ருஷ்ட்வாஶ்சர்யதோஷாப்⁴யாம் த³லாத³னமஹாமுனி꞉ |
ஸம்பூஜ்யாக்³ரே விஷீத³ந்தம் த³த்தாத்ரேயமுவாச தம் || 20 ||

மயோபஹூத꞉ ஸம்ப்ராப்தோ த³த்தாத்ரேய மஹாமுனே |
ஸ்மர்த்ருகா³மீ த்வமித்யேதத் கிம் வத³ந்தீ பரீக்ஷிதும் || 21 ||

மயாத்³ய ஸம்ஸ்ம்ருதோ(அ)ஸி த்வமபராத⁴ம் க்ஷமஸ்வ மே |
த³த்தாத்ரேயோ முனிம் ப்ராஹ மம ப்ரக்ருதிரீத்³ருஶீ || 22 ||

அப⁴க்த்யா வா ஸுப⁴க்த்யா வா ய꞉ ஸ்மரேன்னாமனந்யதீ⁴꞉ |
ததா³னீம் தமுபாக³ம்ய த³தா³மி தத³பீ⁴ப்ஸிதம் || 23 ||

த³த்தாத்ரேயோ முனிம் ப்ராஹ த³லாத³னமுனீஶ்வரம் |
யதி³ஷ்டம் தத்³வ்ருணீஷ்வ த்வம் யத் ப்ராப்தோ(அ)ஹம் த்வயா ஸ்ம்ருத꞉ || 24 ||

த³த்தாத்ரேயம் முனிம் ப்ராஹ மயா கிமபி நோச்யதே |
த்வச்சித்தே யத் ஸ்தி²தம் தன்மே ப்ரயச்ச² முனிபுங்க³வ || 25 ||

ஶ்ரீ த³த்தாத்ரேய உவாச |
மமாஸ்தி வஜ்ரகவசம் க்³ருஹாணேத்யவத³ன்முனிம் |
ததே²த்யங்கீ³க்ருதவதே த³லாத³முனயே முனி꞉ || 26 ||

ஸ்வவஜ்ரகவசம் ப்ராஹ ருஷிச்ச²ந்த³꞉ புரஸ்ஸரம் |
ந்யாஸம் த்⁴யானம் ப²லம் தத்ர ப்ரயோஜனமஶேஷத꞉ || 27 ||

அஸ்ய ஶ்ரீத³த்தாத்ரேய வஜ்ரகவச ஸ்தோத்ரமந்த்ரஸ்ய, கிராதரூபீ மஹாருத்³ரருஷி꞉, அனுஷ்டுப் ச²ந்த³꞉, ஶ்ரீத³த்தாத்ரேயோ தே³வதா, த்³ராம் பீ³ஜம், ஆம் ஶக்தி꞉, க்ரௌம் கீலகம்।
ஓம் ஆத்மனே நம꞉
ஓம் த்³ரீம் மனஸே நம꞉
ஓம் ஆம் த்³ரீம் ஶ்ரீம் ஸௌ꞉
ஓம் க்லாம் க்லீம் க்லூம் க்லைம் க்லௌம் க்ல꞉
ஶ்ரீ த³த்தாத்ரேய ப்ரஸாத³ ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக³꞉

கரன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் அங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரீம் தர்ஜனீப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரூம் மத்⁴யமாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரைம் அனாமிகாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரௌம் கனிஷ்டி²காப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ர꞉ கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம꞉ |

ஹ்ருத³யாதி³ன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் ஹ்ருத³யாய நம꞉ |
ஓம் த்³ரீம் ஶிரஸே ஸ்வாஹா |
ஓம் த்³ரூம் ஶிகா²யை வஷட் |
ஓம் த்³ரைம் கவசாய ஹும் |
ஓம் த்³ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட் |
ஓம் த்³ர꞉ அஸ்த்ராய ப²ட் |
ஓம் பூ⁴ர்பு⁴வஸ்ஸுவரோமிதி தி³க்³ப³ந்த⁴꞉ |

த்⁴யானம் |
ஜக³த³ங்குரகந்தா³ய ஸச்சிதா³னந்த³மூர்தயே |
த³த்தாத்ரேயாய யோகீ³ந்த்³ரசந்த்³ராய பரமாத்மனே || 1 ||

கதா³ யோகீ³ கதா³ போ⁴கீ³ கதா³ நக்³ன꞉ பிஶாசவத் |
த³த்தாத்ரேயோ ஹரி꞉ ஸாக்ஷாத் பு⁴க்திமுக்திப்ரதா³யக꞉ || 2 ||

வாராணஸீபுரஸ்னாயீ கொல்ஹாபுரஜபாத³ர꞉ |
மாஹுரீபுரபீ⁴க்ஷாஶீ ஸஹ்யஶாயீ தி³க³ம்ப³ர꞉ || 3 ||

இந்த்³ரனீல ஸமாகார꞉ சந்த்³ரகாந்திஸமத்³யுதி꞉ |
வைடூ⁴ர்ய ஸத்³ருஶஸ்பூ²ர்தி꞉ சலத்கிஞ்சிஜ்ஜடாத⁴ர꞉ || 4 ||

ஸ்னிக்³த⁴தா⁴வல்ய யுக்தாக்ஷோ(அ)த்யந்தனீல கனீனிக꞉ |
ப்⁴ரூவக்ஷ꞉ஶ்மஶ்ருனீலாங்க꞉ ஶஶாங்கஸத்³ருஶானந꞉ || 5 ||

ஹாஸனிர்ஜித நிஹார꞉ கண்ட²னிர்ஜித கம்பு³க꞉ |
மாம்ஸலாம்ஸோ தீ³ர்க⁴பா³ஹு꞉ பாணினிர்ஜிதபல்லவ꞉ || 6 ||

விஶாலபீனவக்ஷாஶ்ச தாம்ரபாணிர்த³லோத³ர꞉ |
ப்ருது²லஶ்ரோணிலலிதோ விஶாலஜக⁴னஸ்த²ல꞉ || 7 ||

ரம்பா⁴ஸ்தம்போ⁴பமானோரு꞉ ஜானுபூர்வைகஜங்க⁴க꞉ |
கூ³ட⁴கு³ல்ப²꞉ கூர்மப்ருஷ்டோ² லஸத்வாதோ³பரிஸ்த²ல꞉ || 8 ||

ரக்தாரவிந்த³ஸத்³ருஶ ரமணீய பதா³த⁴ர꞉ |
சர்மாம்ப³ரத⁴ரோ யோகீ³ ஸ்மர்த்ருகா³மீ க்ஷணேக்ஷணே || 9 ||

ஜ்ஞானோபதே³ஶனிரதோ விபத்³த⁴ரணதீ³க்ஷித꞉ |
ஸித்³தா⁴ஸனஸமாஸீன ருஜுகாயோ ஹஸன்முக²꞉ || 10 ||

வாமஹஸ்தேன வரதோ³ த³க்ஷிணேனாப⁴யங்கர꞉ |
பா³லோன்மத்த பிஶாசீபி⁴꞉ க்வசித்³ யுக்த꞉ பரீக்ஷித꞉ || 11 ||

த்யாகீ³ போ⁴கீ³ மஹாயோகீ³ நித்யானந்தோ³ நிரஞ்ஜன꞉ |
ஸர்வரூபீ ஸர்வதா³தா ஸர்வக³꞉ ஸர்வகாமத³꞉ || 12 ||

ப⁴ஸ்மோத்³தூ⁴ளித ஸர்வாங்கோ³ மஹாபாதகனாஶன꞉ |
பு⁴க்திப்ரதோ³ முக்திதா³தா ஜீவன்முக்தோ ந ஸம்ஶய꞉ || 13 ||

ஏவம் த்⁴யாத்வா(அ)னந்யசித்தோ மத்³வஜ்ரகவசம் படே²த் |
மாமேவ பஶ்யன்ஸர்வத்ர ஸ மயா ஸஹ ஸஞ்சரேத் || 14 ||

தி³க³ம்ப³ரம் ப⁴ஸ்மஸுக³ந்த⁴ லேபனம்
சக்ரம் த்ரிஶூலம் ட⁴மரும் க³தா³யுத⁴ம் |
பத்³மாஸனம் யோகி³முனீந்த்³ரவந்தி³தம்
த³த்தேதினாமஸ்மரணேன நித்யம் || 15 ||

பஞ்சோபசாரபூஜா |

ஓம் லம் ப்ருதி²வீதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
க³ந்த⁴ம் பரிகல்பயாமி|

ஓம் ஹம் ஆகாஶதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
புஷ்பம் பரிகல்பயாமி |

ஓம் யம் வாயுதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
தூ⁴பம் பரிகல்பயாமி |

ஓம் ரம் வஹ்னிதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
தீ³பம் பரிகல்பயாமி |

ஓம் வம் அம்ருத தத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
அம்ருதனைவேத்³யம் பரிகல்பயாமி |

ஓம் ஸம் ஸர்வதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
தாம்பூ³லாதி³ஸர்வோபசாரான் பரிகல்பயாமி |

(அனந்தரம் ‘ஓம் த்³ராம்॥।’ இதி மூலமந்த்ரம் அஷ்டோத்தரஶதவாரம் (108) ஜபேத்)

அத² வஜ்ரகவசம் |

ஓம் த³த்தாத்ரேயாய ஶிர꞉பாது ஸஹஸ்ராப்³ஜேஷு ஸம்ஸ்தி²த꞉ |
பா⁴லம் பாத்வானஸூயேய꞉ சந்த்³ரமண்ட³லமத்⁴யக³꞉ || 1 ||

கூர்சம் மனோமய꞉ பாது ஹம் க்ஷம் த்³வித³லபத்³மபூ⁴꞉ |
ஜ்யோதிரூபோ(அ)க்ஷிணீபாது பாது ஶப்³தா³த்மக꞉ ஶ்ருதீ || 2 ||

நாஸிகாம் பாது க³ந்தா⁴த்மா முக²ம் பாது ரஸாத்மக꞉ |
ஜிஹ்வாம் வேதா³த்மக꞉ பாது த³ந்தோஷ்டௌ² பாது தா⁴ர்மிக꞉ || 3 ||

கபோலாவத்ரிபூ⁴꞉ பாது பாத்வஶேஷம் மமாத்மவித் |
ஸர்வாத்மா ஷோட³ஶாராப்³ஜஸ்தி²த꞉ ஸ்வாத்மா(அ)வதாத்³ க³லம் || 4 ||

ஸ்கந்தௌ⁴ சந்த்³ரானுஜ꞉ பாது பு⁴ஜௌ பாது க்ருதாதி³பூ⁴꞉ |
ஜத்ருணீ ஶத்ருஜித் பாது பாது வக்ஷஸ்த²லம் ஹரி꞉ || 5 ||

காதி³டா²ந்தத்³வாத³ஶாரபத்³மகோ³ மருதா³த்மக꞉ |
யோகீ³ஶ்வரேஶ்வர꞉ பாது ஹ்ருத³யம் ஹ்ருத³யஸ்தி²த꞉ || 6 ||

பார்ஶ்வே ஹரி꞉ பார்ஶ்வவர்தீ பாது பார்ஶ்வஸ்தி²த꞉ ஸ்ம்ருத꞉ |
ஹட²யோகா³தி³யோக³ஜ்ஞ꞉ குக்ஷிம் பாது க்ருபானிதி⁴꞉ || 7 ||

ட³காராதி³ ப²காராந்த த³ஶாரஸரஸீருஹே |
நாபி⁴ஸ்த²லே வர்தமானோ நாபி⁴ம் வஹ்ன்யாத்மகோ(அ)வது || 8 ||

வஹ்னிதத்த்வமயோ யோகீ³ ரக்ஷதான்மணிபூரகம் |
கடிம் கடிஸ்த²ப்³ரஹ்மாண்ட³வாஸுதே³வாத்மகோ(அ)வது || 9 ||

வகாராதி³ லகாராந்த ஷட்பத்ராம்பு³ஜபோ³த⁴க꞉ |
ஜலதத்த்வமயோ யோகீ³ ஸ்வாதி⁴ஷ்டா²னம் மமாவது || 10 ||

ஸித்³தா⁴ஸன ஸமாஸீன ஊரூ ஸித்³தே⁴ஶ்வரோ(அ)வது |
வாதி³ஸாந்த சதுஷ்பத்ரஸரோருஹ நிபோ³த⁴க꞉ || 11 ||

மூலாதா⁴ரம் மஹீரூபோ ரக்ஷதாத்³ வீர்யனிக்³ரஹீ |
ப்ருஷ்ட²ம் ச ஸர்வத꞉ பாது ஜானுன்யஸ்தகராம்பு³ஜ꞉ || 12 ||

ஜங்கே⁴ பாத்வவதூ⁴தேந்த்³ர꞉ பாத்வங்க்⁴ரீ தீர்த²பாவன꞉ |
ஸர்வாங்க³ம் பாது ஸர்வாத்மா ரோமாண்யவது கேஶவ꞉ || 13 ||

சர்ம சர்மாம்ப³ர꞉ பாது ரக்தம் ப⁴க்திப்ரியோ(அ)வது |
மாம்ஸம் மாம்ஸகர꞉ பாது மஜ்ஜாம் மஜ்ஜாத்மகோ(அ)வது || 14 ||

அஸ்தீ²னி ஸ்தி²ரதீ⁴꞉ பாயான்மேதா⁴ம் வேதா⁴꞉ ப்ரபாலயேத் |
ஶுக்ரம் ஸுக²கர꞉ பாது சித்தம் பாது த்³ருடா⁴க்ருதி꞉ || 15 ||

மனோபு³த்³தி⁴மஹங்காரம் ஹ்ருஷீகேஶாத்மகோ(அ)வது |
கர்மேந்த்³ரியாணி பாத்வீஶ꞉ பாது ஜ்ஞானேந்த்³ரியாண்யஜ꞉ || 16 ||

ப³ந்தூ⁴ன் ப³ந்தூ⁴த்தம꞉ பாயாச்ச²த்ருப்⁴ய꞉ பாது ஶத்ருஜித் |
க்³ருஹாராமத⁴னக்ஷேத்ரபுத்ராதீ³ன் ஶங்கரோ(அ)வது || 17 ||

பா⁴ர்யாம் ப்ரக்ருதிவித் பாது பஶ்வாதீ³ன் பாது ஶார்ங்க³ப்⁴ருத் |
ப்ராணான் பாது ப்ரதா⁴னஜ்ஞோ ப⁴க்ஷ்யாதீ³ன் பாது பா⁴ஸ்கர꞉ || 18 ||

ஸுக²ம் சந்த்³ராத்மக꞉ பாது து³꞉கா²த் பாது புராந்தக꞉ |
பஶூன் பஶுபதி꞉ பாது பூ⁴திம் பூ⁴தேஶ்வரோ மம || 19 ||

ப்ராச்யாம் விஷஹர꞉ பாது பாத்வாக்³னேய்யாம் மகா²த்மக꞉ |
யாம்யாம் த⁴ர்மாத்மக꞉ பாது நைர்ருத்யாம் ஸர்வவைரிஹ்ருத் || 20 ||

வராஹ꞉ பாது வாருண்யாம் வாயவ்யாம் ப்ராணதோ³(அ)வது |
கௌபே³ர்யாம் த⁴னத³꞉ பாது பாத்வைஶான்யாம் மஹாகு³ரு꞉ || 21 ||

ஊர்த்⁴வம் பாது மஹாஸித்³த⁴꞉ பாத்வத⁴ஸ்தாஜ்ஜடாத⁴ர꞉ |
ரக்ஷாஹீனம் து யத் ஸ்தா²னம் ரக்ஷத்வாதி³முனீஶ்வர꞉ || 22 ||

கரன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் அங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரீம் தர்ஜனீப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரூம் மத்⁴யமாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரைம் அனாமிகாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரௌம் கனிஷ்டி²காப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ர꞉ கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம꞉ |

ஹ்ருத³யாதி³ன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் ஹ்ருத³யாய நம꞉ |
ஓம் த்³ரீம் ஶிரஸே ஸ்வாஹா |
ஓம் த்³ரூம் ஶிகா²யை வஷட் |
ஓம் த்³ரைம் கவசாய ஹும் |
ஓம் த்³ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட் |
ஓம் த்³ர꞉ அஸ்த்ராய ப²ட் |
ஓம் பூ⁴ர்பு⁴வஸ்ஸுவரோமிதி தி³க்³விமோக꞉ |

ப²லஶ்ருதி ||

ஏதன்மே வஜ்ரகவசம் ய꞉ படே²த் ஶ்ருணுயாத³பி |
வஜ்ரகாயஶ்சிரஞ்ஜீவீ த³த்தாத்ரேயோ(அ)ஹமப்³ருவம் || 23 ||

த்யாகீ³ போ⁴கீ³ மஹாயோகீ³ ஸுக²து³꞉க²விவர்ஜித꞉ |
ஸர்வத்ர ஸித்³த⁴ஸங்கல்போ ஜீவன்முக்தோ(அ)த்³யவர்ததே || 24 ||

இத்யுக்த்வாந்தர்த³தே⁴ யோகீ³ த³த்தாத்ரேயோ தி³க³ம்ப³ர꞉ |
த³லாத³னோ(அ)பி தஜ்ஜப்த்வா ஜீவன்முக்த꞉ ஸ வர்ததே || 25 ||

பி⁴ல்லோ தூ³ரஶ்ரவா நாம ததா³னீம் ஶ்ருதவானித³ம் |
ஸக்ருச்ச்²ரவணமாத்ரேண வஜ்ராங்கோ³(அ)ப⁴வத³ப்யஸௌ || 26 ||

இத்யேதத்³ வஜ்ரகவசம் த³த்தாத்ரேயஸ்ய யோகி³ன꞉ |
ஶ்ருத்வா ஶேஷம் ஶம்பு⁴முகா²த் புனரப்யாஹ பார்வதீ || 27 ||

ஶ்ரீ பார்வத்யுவாச |

ஏதத் கவச மாஹாத்ம்யம் வத³ விஸ்தரதோ மம |
குத்ர கேன கதா³ ஜாப்யம் கியஜ்ஜாப்யம் கத²ம் கத²ம் || 28 ||

உவாச ஶம்பு⁴ஸ்தத் ஸர்வம் பார்வத்யா வினயோதி³தம் |

ஶ்ரீபரமேஶ்வர உவாச |

ஶ்ருணு பார்வதி வக்ஷ்யாமி ஸமாஹிதமனாவிலம் || 29 ||

த⁴ர்மார்த²காமமோக்ஷாணாமித³மேவ பராயணம் |
ஹஸ்த்யஶ்வரத²பாதா³தி ஸர்வைஶ்வர்ய ப்ரதா³யகம் || 30 ||

புத்ரமித்ரகளத்ராதி³ ஸர்வஸந்தோஷஸாத⁴னம் |
வேத³ஶாஸ்த்ராதி³வித்³யானாம் விதா⁴னம் பரமம் ஹி தத் || 31 ||

ஸங்கீ³த ஶாஸ்த்ர ஸாஹித்ய ஸத்கவித்வ விதா⁴யகம் |
பு³த்³தி⁴ வித்³யா ஸ்ம்ருதி ப்ரஜ்ஞா மதி ப்ரௌடி⁴ப்ரதா³யகம் || 32 ||

ஸர்வஸந்தோஷகரணம் ஸர்வது³꞉க²னிவாரணம் |
ஶத்ருஸம்ஹாரகம் ஶீக்⁴ரம் யஶ꞉கீர்திவிவர்த⁴னம் || 33 ||

அஷ்டஸங்க்²யா மஹாரோகா³꞉ ஸன்னிபாதாஸ்த்ரயோத³ஶ |
ஷண்ணவத்யக்ஷிரோகா³ஶ்ச விம்ஶதிர்மேஹரோக³கா꞉ || 34 ||

அஷ்டாத³ஶது குஷ்டா²னி கு³ல்மான்யஷ்டவிதா⁴ன்யபி |
அஶீதிர்வாதரோகா³ஶ்ச சத்வாரிம்ஶத்து பைத்திகா꞉ || 35 ||

விம்ஶதி꞉ ஶ்லேஷ்மரோகா³ஶ்ச க்ஷயசாதுர்தி²காத³ய꞉ |
மந்த்ரயந்த்ரகுயோகா³த்³யா꞉ கல்பதந்த்ராதி³னிர்மிதா꞉ || 36 ||

ப்³ரஹ்மராக்ஷஸ வேதாலகூஷ்மாண்டா³தி³ க்³ரஹோத்³ப⁴வா꞉ |
ஸங்க³ஜா தே³ஶகாலஸ்தா²ஸ்தாபத்ரயஸமுத்தி²தா꞉ || 37 ||

நவக்³ரஹஸமுத்³பூ⁴தா மஹாபாதக ஸம்ப⁴வா꞉ |
ஸர்வே ரோகா³꞉ ப்ரணஶ்யந்தி ஸஹஸ்ராவர்தனாத்³ த்⁴ருவம் || 38 ||

அயுதாவ்ருத்திமாத்ரேண வந்த்⁴யா புத்ரவதீ ப⁴வேத் |
அயுதத்³விதயாவ்ருத்த்யா ஹ்யபம்ருத்யுஜயோ ப⁴வேத் || 39 ||

அயுதத்ரிதயாச்சைவ கே²சரத்வம் ப்ரஜாயதே |
ஸஹஸ்ராயுதத³ர்வாக் ஸர்வகார்யாணி ஸாத⁴யேத் || 40 ||

லக்ஷாவ்ருத்த்யா ஸர்வஸித்³தி⁴ர்ப⁴வத்யேவ ந ஸம்ஶய꞉ || 41 ||

விஷவ்ருக்ஷஸ்ய மூலேஷு திஷ்ட²ன் வை த³க்ஷிணாமுக²꞉ |
குருதே மாஸமாத்ரேண வைரிணம் விகலேந்த்³ரியம் || 42 ||

ஔது³ம்ப³ரதரோர்மூலே வ்ருத்³தி⁴காமேன ஜாப்யதே |
ஶ்ரீவ்ருக்ஷமூலே ஶ்ரீகாமீ திந்த்ரிணீ ஶாந்திகர்மணி || 43 ||

ஓஜஸ்காமோ(அ)ஶ்வத்த²மூலே ஸ்த்ரீகாமை꞉ ஸஹகாரகே |
ஜ்ஞானார்தீ² துலஸீமூலே க³ர்ப⁴கே³ஹே ஸுதார்தி²பி⁴꞉ || 44 ||

த⁴னார்தி²பி⁴ஸ்து ஸுக்ஷேத்ரே பஶுகாமைஸ்து கோ³ஷ்ட²கே |
தே³வாலயே ஸர்வகாமைஸ்தத்காலே ஸர்வத³ர்ஶிதம் || 45 ||

நாபி⁴மாத்ரஜலே ஸ்தி²த்வா பா⁴னுமாலோக்ய யோ ஜபேத் |
யுத்³தே⁴ வா ஶாஸ்த்ரவாதே³ வா ஸஹஸ்ரேண ஜயோ ப⁴வேத் || 46 ||

கண்ட²மாத்ரே ஜலே ஸ்தி²த்வா யோ ராத்ரௌ கவசம் படே²த் |
ஜ்வராபஸ்மாரகுஷ்டா²தி³ தாபஜ்வரனிவாரணம் || 47 ||

யத்ர யத் ஸ்யாத் ஸ்தி²ரம் யத்³யத் ப்ரஸக்தம் தன்னிவர்ததே |
தேன தத்ர ஹி ஜப்தவ்யம் தத꞉ ஸித்³தி⁴ர்ப⁴வேத்³த்⁴ருவம் || 48 ||

இத்யுக்தவான் ஶிவோ கௌ³ர்வை ரஹஸ்யம் பரமம் ஶுப⁴ம் |
ய꞉ படே²த் வஜ்ரகவசம் த³த்தாத்ரேய ஸமோ ப⁴வேத் || 49 ||

ஏவம் ஶிவேன கதி²தம் ஹிமவத்ஸுதாயை
ப்ரோக்தம் த³லாத³முனயே(அ)த்ரிஸுதேன பூர்வம் |
ய꞉ கோ(அ)பி வஜ்ரகவசம் பட²தீஹ லோகே
த³த்தோபமஶ்சரதி யோகி³வரஶ்சிராயு꞉ || 50 ||

இதி ஶ்ரீ ருத்³ரயாமளே ஹிமவத்க²ண்டே³ மந்த்ரஶாஸ்த்ரே உமாமஹேஶ்வரஸம்வாதே³ ஶ்ரீ த³த்தாத்ரேய வஜ்ர கவச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹயக்ரீவர் திரு நாமங்கள்—495-502வரை—ஸ்ரீ மஹா பாரதம்-சாந்தி பர்வம் மோக்ஷ தர்மம் -அத்யாயம் 357- ஸ்ரீ நாராயணீயம்–ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம்–ஸ்ரீ ஹயக்ரீவ திரு அவதார பரமான ஸ்ரீ அருளிச் செயல்கள் –

January 20, 2024

ஸ்ரீஹயக்ரீவர். பிரம்மானந்த, ஞானானந்த மயமாக, தூய்மையான ஸ்படிகம் போலத் துல்லியமாகப் பிரகாசிப்பவர்
எல்லா விதமான வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே.
ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் சகலகலாவல்லியான சரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் – ஸ்ரீ ஹயக்ரீவர்.
ஸ்ரீவித்யா உபாசகர்கள் புகழும் லலிதா சஹஸ்ர நாமத்தை அகஸ்தியருக்கு வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவர்!

நமக்கு ஞானமும் கல்வியும் இரண்டு கண்கள். இதன்படி பார்த்தால், நாம் ஹயக்ரீவரை வழிபட வேண்டிய அவசியம் புரியும்.
நாம் கற்பது கல்வி. கற்றதை உள்ளத்தில் வைத்து நன்றாக உணர்ந்து, அதன்படி நடந்து, அனுபவத்தில் உண்மையைக் காண்பது ஞானம்.
இந்த ஞானம், கல்வி இரண்டும் இல்லாதவர்கள் பார்ப்பது, அறியாமை என்ற இருளை மட்டுமே.
இந்த இருள் விலகி ஒளி கிடைக்கவும், ஞானம் பிறக்கவும் நமக்கு ஒரு சிறந்த ஞான ஆசார்யர் தேவை.
அவரும் ஈடு-இணை சொல்ல முடியாதவராக இருக்க வேண்டும்.இதற்கு உரிய வழியை நமது ஞான நூல்கள் விரிவாகச் சொல்கின்றன.
அவற்றில் ஆழ்ந்து, அலையாழி அறிதுயிலும் மாயனின் அவதார மகிமைகளை நன்கு அனுபவித்த
மகான்களும் ரிஷிகளும் நமக்குக் காட்டிய ஞான ஆசார்ய வடிவம் – ஸ்ரீ ஹயக்ரீவர்.
கலைகளில் திறமை, கல்வியில் உயர்வு, தெளிந்த ஞானம் ஆகியவற்றை விரும்பி, ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள் பலர்.
உ லகம் ஞானம் பெறுவதற்காக மகா விஷ்ணு, குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராகத் திரு மேனி கொண்டிருக்கிறார்.
குதிரை முகமும், மனித உடலும் கொண்ட மகாவிஷ்ணுவை ‘ஹயமுகன்’ என மகாபாரதம் கூறுகிறது.

பழங்காலத்தில் இருந்தே நமது நாட்டில் ஹயக்ரீவ வழிபாடு இருந்து வருகிறது என்பதையும் அவரின் மகிமையையும்
ஹயக்ரீவ உபநிடதம், தலபுராணங்கள், மகான்களது வரலாறு, சிற்ப ஆகம நூல்கள் போன்றவை வெளிப்படுத்துகின்றன.
அவற்றில் இருந்து சில:
நான்கு வேதங்களையும் மது-கைடபர் என்ற கொடிய அரக்கர்கள்,
குதிரை வடிவில் வந்து நான்முகனான பிரம்ம தேவரிடம் இருந்து, பறித்துச் சென்றனர்.

வேதங்களை இழந்த உலகெல்லாம் இருள் சூழ்ந்தது. என்ன செய்வதென்று தெரியா மல் திகைத்தார் பிரம்மன்.

எனவே, மகாவிஷ்ணுவிடம் போய், ‘‘ஸ்வாமி! அரும்பெரும் வேதங்களை அரக்கர்கள் கவர்ந்து கொண்டு போய் விட்டார்கள்.
அவற்றை மீட்டுக் காத்தருள வேண்டும்!’’ என வேண்டினார் பிரம் மன்.
அவருக்கு திருவருள் புரியத் தீர்மானித்த மகாவிஷ்ணு, ஹயக்ரீ வராக வடிவம் கொண்டார்.

குதிரை முகம். மனித உடம்பு. சூரியனை மிஞ்சக் கூடிய ஒளி. கண்களாக சந்திர – சூரியர்கள்.
கங்கையும் சரஸ்வதியும் கண் இமைகள். தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்ட
மகாவிஷ்ணு வேதங் களை மீட்பதற்காக அரக்கர்களைத் தேடிப் புறப்பட்டார்.
வேதங்களுடன் மறைந்திருந்த மது- கைடபர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார். பின்பு அவர்களுடன் போரிட் டார்.
ஒளி வந்தால் இருள் தானாகவே மறைவதைப் போல, ஞானத்தின் முழு வடி வான ஹயக்ரீவரின் எதிரில் அகம்பாவத்தின் வடிவங்களான மது- கைடபர் அழிந்தனர்.
அவர் களிடம் இருந்து வேதங்களை மீட்டு பிரம்மதேவரிடம் ஒப்படைத்து வேதநெறி தழைத்தோங்க வழி வகுத்தார் ஹயக்ரீவர்.
——–

495-502வரை-ஸ்ரீ ஹயக்ரீவர் திரு நாமங்கள்

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய புராதன
சரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தஷிண –53-

இந்த ஐம்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

496-உத்தர:, 497. கோபதி:, 498. கோப்தா, 499. ஞானகம்ய:, 500. புராதன: |

501-ஶரீரபூதப்ருத், 502. போக்தா, 503. கபீந்த்ர:, 504. பூரிதக்ஷிண: ||

சம்சாரத்தின் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் அடிமைத்தனத்திலிருந்து பகவான் நம்மை விடுவிக்கிறார். அவர் உலகத்தின் இறைவன் மற்றும் அவர் உலகின் காவலராக அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கிறார். அவர் ஆன்மீக அறிவின் மூலம் அடையக்கூடியவர், சடங்குகள் அல்லது சடங்குகள் மற்றும் படிப்புகளின் கலவையால் அல்ல. பகவான் காலத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர், அவர் மற்றவர்களை விட பழமையானவராக இருந்தாலும், அவர் நித்தியமானவர். அவர் அனைத்து உயிரினங்களின் அடிப்படை கட்டமைப்பான பூமி, நெருப்பு, நீர், காற்று மற்றும் ஈதர் ஆகிய 5 கூறுகளை ஆதரிக்கிறார். அவர் தூய மகிழ்ச்சி அல்லது முழுமையான பேரின்பத்தை அனுபவிப்பவர். மனித மனம் பெரும்பாலும் ஒரு குரங்குடன் ஒப்பிடப்படுகிறது, அது ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகிறது. குரங்குகளின் இறைவன் (ராமரைக் குறிக்கும்) கபிந்த்ராவைப் பற்றி தியானிப்பது, சுயம் மற்றும் கடவுளை உணருவதற்கு அவசியமான நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்த உதவும்.

உத்தர: — இழந்ததை மீட்டுக் கொடுப்பவர்; பிரம்மாவிற்கு வேதத்தையும், ஜீவர்களுக்கு முக்தியையும் கொடுப்பவர்
கோபதி: — கோ என்னும் வேதவாக்குகளைக் காப்பவர்
கோப்தா — அனைத்து வித்யைகளையும் போற்றிக் காப்பவர்
ஜ்நாநகம்ய: — வேதஞானத்தால் அடையப்படுபவர்
புராதந: — கல்பம்தோறும் அவரே ஞானத்தை அனைவருக்கும் அளிக்கின்றார்
சரீரபூதப்ருத் — சித் அசித் அனைத்தும் தம் சரீரமாய்க் கொண்டிருப்பவர் எப்பொழுதும்
போக்தா: — அவரே அத்தனை யக்ஞ பலன்களின் பயன்களையும் துய்ப்பவராய் இருந்து அதில் ஜீவர்களுக்குப் பங்களிப்பவர், ஜீவர்களின் நலனுக்காக.
கபீந்த்ர: — உலகம் உய்ய வேண்டி வானரர்களாக வந்த தேவர்களின் தலைவர்
பூரிதக்ஷிண: — யக்ஞங்களில் அளவற்ற நலன்கள் பெருகுமாறுச் செய்பவர்

பிறப்பையும், அழிவையும் கடந்தவன் {உத்தரன்},
(கிருஷ்ணனின் வடிவில்) பசுக்களைப் பாதுகாத்து வளர்ப்பவன் {கோபதி},
அனைத்து உயிரினங்களையும் ஊட்டி வளர்ப்பவன் {கோப்தா},
அறிவால் மட்டுமே அணுகப்படக்கூடியவன் {ஜ்ஞானகம்யன்},
பழைமையானவன் {புராதநன்},
உடலாக அமையும் பூதங்களை நிலைநிறுத்துபவன் {சரீரபூதப்ருத்},
(ஜீவனின் வடிவில் இன்ப துன்பங்களை) அனுபவிப்பவன் {போக்தா},
பெரும்பன்றியின் வடிவை ஏற்றவன் (அல்லது, ராமனின் வடிவில் இருந்த போது பெரும் குரங்குக்கூட்டத்தின் தலைவனாக இருந்தவன்) {கபீந்த்ரன்},
தன்னால் செய்யப்பட்ட மகத்தான வேள்வியில் அபரிமிதமான கொடைகளை அனைவருக்கும் வழங்கியவன் {பூரிதக்ஷிணன்};(66)

தர்மத்தின் வடிவம் –

496-உத்தர -ஆபத்துக் கடலில் இருந்து தேவர்களைக் கரை ஏற்றுபவர் –
497-கோபதி -வேதங்கள் மொழிகள் ஆகிற பேச்சுக்குத் தலைவர் –
498-கோப்தா -அனைத்து வித்யைகளையும் காப்பவர் –
499–ஜ்ஞான கம்ய -சமாதி என்னும் த்யான நிலையால் -பர வித்யையால்-அறியப் படுபவர் –
500-புராதன -இப்படியே முன் கல்பங்களிலும் வித்யைகளை வெளியிட்டவர் –
501-சரீர பூதப்ருத்-தனக்கு உடலாக இருக்கும் பஞ்ச பூதங்களை தாங்குபவர் –
502-போக்தா -தேவர்களுக்குக் கொடுக்கப் படும் ஹவ்யத்தையும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் கவ்யத்தையும்
ஹயக்ரீவராக குதிரை முகத்தோடு உண்பவர்-

தர்மத்தைக் காக்கும் ஸ்ரீ இராமன் –

503-கபீந்திர -இராமாவதாரத்தில் தனக்கு குரங்கு வடிவில் வந்த தேவர்களுக்குத் தலைவர் –
504-பூரி தஷிண -தான் முன் மாதிரியாக இருந்து யாகங்களை நடத்தி நிரம்ப தஷிணை கொடுத்தவர் –

3-28-தர்ம ஸ்வரூபி -471-502-திரு நாமங்கள்–31-திரு நாமங்கள்
3-29-ஸ்ரீ ராமனாய் தர்ம ரஷகத்வம் -503-513-திரு நாமங்கள்–14 திரு நாமங்கள்


496-உத்தர –கரை ஏற்றுபவன்

ஏவம் ப்₃ரஹ்மாதே₃ரா ஸுராபது₃த் தாரணாத்
உத்தர꞉
ஏவம் ஸ்துத ச பகவான் புருஷ சர்வதோமுக ஜஹவ் நித்ராம் அத ததா தேவ கார்யர்த்தம் உத்யத -சாந்தி பர்வம் —
அனைத்து திசைகளிலும் திரு முகங்கள் கொண்ட பகவான் தேவ கார்யம் செய்ய நித்திரையை விட்டு எழுந்தான்

தேவாசுரம் செற்றவனே -8-1-4-
திரு நாவாய் என் தேவே -9-8-8-

அசுரர்களால் உண்டான ஆபத்தில் இருந்து பிரம்மாதிகளைக் கரை ஏற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

சம்சாரக் கடலில் இருந்து கரை ஏற்றுபவர் -மிக உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர்

உயர்ந்த தகுதி உள்ளவர்களை சம்சாரத்தில் இருந்து கரை ஏற்றுபவர் -மிகவும் உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

  1. ஓம்உத்தராயநம:

ஜன்மஸம்ஸார பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின்

பந்தனாத் தளைகளிலிருந்து

உத்தரதி (நம்மை) விடுவிக்கிறார்

இதி உத்தர: எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சாரத்தின் தளைகளிலிருந்து (நம்மை) விடுவிக்கிறார். எனவே, பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸர்வ அனைவரைக் காட்டிலும்

உத்க்ருஶ்ட மேலானவராதலால்

இதி வா உத்தர: பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக்காட்டிலும் மேலானவராதலால், பகவான் ‘உத்தர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வஸ்மாதிந்த்ர உத்தர:’

அனைவரைக் காட்டிலும் பரம்பொருள் (இந்த்ர) உயர்ந்தவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

இங்கு இந்த்ர என்ற பதம் பரம்பொருளான பரமாத்மாவையே குறிக்கிறது. தேவர்களின் தலைவரான இந்திரனை அல்ல.

————–

  1. உத்தரா – மீட்பவர்

ஸ்ரீஆதிசங்கரர் இந்த நாமத்திற்கு இரண்டு விளக்கம் தருகிறார். முதலாவது, ‘ஜன்ம சம்சார பந்தனாத் உத்தராதி இதி உத்தரா – அவர் சம்சாரத்தின் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார், எனவே அவர் உத்தரா’ என்று அழைக்கப்படுகிறார். சங்கரரின் இரண்டாவது விளக்கம், ‘சர்வோத்கிருஷ்ட இதி வா – அவர் அனைவரையும் விட உயர்ந்தவர்’. ‘விஸ்வஸ்மாத் இந்திரன் உத்தராஹ் – எல்லாவற்றின் மீதும் உயர்ந்த இறைவன்’ என்கிறார் ஸ்ருதி.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம், ‘யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம சம்சார பந்தனாத் விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே பிரபவிஷ்ணவே – அவருடைய நாமத்தை தியானிப்பதன் மூலம் அவர் உங்களை சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்கிறார்’ என்று கூறுகிறது.

பகவத் கீதை அத்தியாயம் 12, வசனம் 7:
தேஷாம் அஹம் ஸமுத்தர்தா மிருத்யுஸம்ஸார சாகாரத்
பவாமி ந சிரத் பார்த்த மய் அவேசித-சேதசம் ||  ஓ அர்ஜுனா, யாருடைய மனம் என் எண்ணங்களில் மூழ்கியிருக்கிறதோ, அத்தகைய பக்தர்களை நான் இந்த சம்சாரத்தின் ஜட வாழ்வில் மரணக் கடலில் இருந்து விரைவாக மீட்கிறேன்.

ஸ்ரீ டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இதை “பிறப்பின் எல்லையைத் தாண்டியவர்” என்று விளக்கியுள்ளார். ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், ‘ஆப்-வாட்டர்ஸ்’ மற்றும் ‘தாரா கடக்க, நீந்துதல்’ ஆகிய வார்த்தைகளிலிருந்து அர்த்தத்தைப் பெறுவதன் மூலம் இந்த விளக்கங்களை ஆதரிக்கிறார்.

மாற்றாக, ‘உட்’ என்பது உத்கர்ஷா அல்லது அதிஷயத்தைக் குறிக்கலாம், அதாவது அசாதாரணமானது, உயர்ந்தது, மற்றும் தாரா என்பது கடப்பதைக் குறிக்கிறது. அந்த உத்திரத்தையும் இணைத்தால், சம்சாரப் பெருங்கடலைக் கடப்பதற்கு பகவானே சிறந்த வழி (உண்மையில் ஒரே ஒருவரே!) என்று பொருள்.

தர்ம சக்கரம் எழுத்தாளர் நம் அன்றாட வாழ்வில் இந்த நாமத்தின் முக்கியத்துவத்தை தருகிறார். நம் மனம் பொதுவாக எல்லாவிதமான ஆசைகளாலும் கிழிகிறது. இந்த சம்சாரப் பெருங்கடலைப் பாதுகாப்பாகக் கடக்க வேண்டிய படகுதான் இந்த எண்ணங்கள் நம் மனதில் தொடர்ந்து துளைகளை ஏற்படுத்துகின்றன. அஹங்காரா, மம்காரம் போன்ற வடிவங்களில் உள்ள பாறைகள் இந்தப் படகை உடைக்க முயல்கின்றன. இந்த ஆயுட்காலத்தை கடக்கும் வரை, இந்த படகு பழுதடையாமல், துளையிடாமல் அப்படியே இருக்க வேண்டும். எனவே இதை நிறைவேற்ற பகவானை தியானிப்பது அவசியம். திருவள்ளுவரின் வசனம் இச்சூழலில் பொருத்தமானது – “பிறவிப் பெரும் காதல் நீடித்தவர், நீண்டார் இறைவன் அடி சேராதார் – அவர்கள் பெரும் பிறவிப் பெருங்கடலை நீந்துவார்கள். இல்லாதவர்கள் கடவுளின் பாதம் எட்டாதவர்கள்”.


497-கோ பதி-சொற்களுக்கு ஸ்வாமி

அஸேஷச் ச₂ந்தோ ₃பா₄ஷா வேஷ வாங் நிர்வாஹக꞉
கோ₃பதி꞉
* வாக்பதயே இதி தந் (ஹயக்ரீவ பெருமாளுடைய )மந்த்ர வர்ணே ॥
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே யாவான் -1-9-8-

ச₂ந்தோ –வேதங்களும்- பா₄ஷா வேஷ –மொழிகளும் ஆகியவற்றை நடத்துபவர் -ஸ்ரீ பூமி தேவியின் கணவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களைக் காத்தவர் -ஸ்ரீ சங்கரர்

பூமி பசுக்கள் வாக்கு இவற்றைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————

  1. ஓம்கோபதயேநம:

கவாம் ஆவினங்களை

பாலனாத் காப்பவராக (பசுக்களை மேய்ப்பவராக)

கோபவேஶதரோ இடையனாக (ஆயர்குலத்தவராக) தோன்றியதால்

கோபதி: பகவான் (கிருஷ்ணர்) ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது கிருஷ்ணாவதாரத்தில் ஆவினங்களை காப்பவராக, இடையனாக தோன்றியதால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கௌர்மஹீ: பூமாதேவியே ‘கௌ’ என்றும் அழைப்பர்

தஸ்யா: பதித்வாத்வா அவரின் (பூமாதேவியின்) கணவரானபடியால்

கோபதி: பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, ‘கௌ’ என்று அழைக்கப்படும் பூமாதேவியின் கணவரானபடியால் பகவான் ‘கோபதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. கோபதி – அனைத்து வார்த்தைகளுக்கும் மாஸ்டர்

‘கோ’ என்ற சொல்லுக்கு பசு, சொற்கள், வேதங்கள், பூமி போன்ற பொருள்கள் உள்ளன. இவ்வாறு இந்த நாமத்திற்குப் பல விளக்கங்கள் உள்ளன.

  1. அனைத்து வார்த்தைகளின் மாஸ்டர் (வேதங்கள்)
  2. அவர் தனது சொந்த வார்த்தையைக் காப்பாற்றுகிறார்
  3. அவரது பக்தரின் வார்த்தைகளின் பாதுகாவலர்
  4. பசுக்களின் பாதுகாவலர்
  5. சுற்றி நகரும் அனைத்தையும் பாதுகாப்பவர்
  6. தாய் பூமியின் இறைவன்
  7. (வான) உலகத்தின் இறைவன்

‘கம் – கடௌ’ என்ற வார்த்தைகளுக்கு ‘போவது’ என்றும், ‘பா-ரக்ஷனே’ என்றால் ‘பாதுகாப்பது’ என்றும் பொருள். இந்த சூழலில், ‘கோ’ என்பது பல விஷயங்களையும் குறிக்கலாம்:

  • இந்திரியங்கள் ஜடப் பொருட்களை நோக்கி அலைவதால்;
  • மனம் எல்லாவிதமான எண்ணங்களிலும் அலைந்து திரிவதால் மனதில்;
  • ஆத்மா ஒரு உடலிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதால் ஆத்மாவிற்கு;
  • உடல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் என்பதால், மேலும் மேலும் மேலும்.

இவை அனைத்திற்கும் பகவான் பதிஹ் அல்லது மாஸ்டர்.–அவர் எஜமானராகவோ அல்லது பதியாகவோ இருக்கும் அவரது படைப்புகளில், வேதம் கேட்கப்படுவதும், பிரபஞ்சம் பார்க்கப்படுவதும் ஆகும். வேதங்கள் உலகின் வாழ்க்கை முறையை விளக்குகின்றன, மேலும் உலகம் வேதங்களின் வெளிப்பாடாகும், மேலும் அவர் இவற்றுக்கு மாஸ்டர் அல்லது பதிஹ்.

ஸ்ரீ ஆதிசங்கரர் 2 விளக்கங்களைத் தருகிறார். முதலாவது ‘கவாம் பலனாத் கோபவேஷதரஹ் கோபதிஹ் – பசுக்களைப் பராமரித்து (ஆயர்பாடியில்) பசு மேய்க்கும் பாத்திரம் வகிக்கிறார், எனவே அவர் கோபதி’ என்று அழைக்கப்படுகிறார்.

இரண்டாவது விளக்கம், ‘கௌ மஹீ தஸ்யாஹ் பதித்வாத் வா – கௌ என்றால் உலகம் என்றும், கோபதி என்றால் உலகத்தின் அதிபதி என்றும் ‘. விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் – அவர் பிரபஞ்சத்தின் இறைவன்’ என்று பலஸ்ருதி கூறுகிறது.

பகவான் எல்லா வார்த்தைகளுக்கும் எஜமானர் என்ற கருத்து ஸ்ரீ பராசர பட்டரால் நமக்கு வேதங்களையும் அனைத்து மொழிகளையும் வழங்கியவர் என்று விளக்குகிறது.

தர்ம சக்கரம் எழுத்தாளர் இந்த நாமத்தை விளக்குகிறார், மேலும் பகவான் தனது பக்தர்களுக்கு கொடுத்த வார்த்தையைக் கடைப்பிடிக்கிறார், மேலும் அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறார். தம்மிடம் சரணடைபவர்களை நிபந்தனையின்றிப் பாதுகாப்பதாக பகவான் கூறியதை நாம் அறிவோம், மேலும் கிருஷ்ணரை தனது சொந்த வாக்குறுதிக்கு எதிராகப் போரில் ஆயுதம் ஏந்தச் செய்யும் பீஷ்மரின் சபதம் நிறைவேறுவதை அவர் உறுதிசெய்தார் என்பதையும் நாம் அறிவோம்.

இளைஞரான பிரஹலாதனை ஹிரண்யகசிபு சவால் விட்டபோது தூணிலிருந்து தோன்றி பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற பிரஹலாதனின் வார்த்தைகளை உண்மையாக்கினார்.

————–

498-கோப்தா – வித்யா ரஷகன்

ஏவம் ஸர்வ வித்₃யா பாலநாத்
கோ₃ப்தா ।
* ஸர்வ வித்₃யேஶ்வராய, இதி தந் மந்த்ர வர்ண ꞉
கற்கும் கல்வி செய்வான் யானே என்னும் கற்கும் கல்விச் சாரம் யானே என்னும் -5-6-2-

ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் -வித்யா ஸ்வரூபி

இப்படி எல்லா வித்யைகளையும் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

உலகங்கள் அனைத்தையும் காப்பவர்-ஸ்ரீ சங்கரர்

காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————

  1. ஓம்கோப்த்ரேநம:

ஸமஸ்தபூதாநி அனைத்து உயிரினங்களையும்

பாலயன் காக்கிறார்

ரக்ஷகோ ஜகத: இந்தப் ப்ரபஞ்சம் முழுவதையும் காக்கிறார்

இதி கோப்தா எனவே, பகவான் ‘கோப்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் காக்கிறார். எனவே பகவான் ‘கோப்தா’ என்று திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. கோப்தா – இரட்சகர்

ஸ்ரீ ஆதிசங்கரர், ‘சமஸ்தபூதானி பாலயன் ரக்ஷகோ ஜகதா இதி கோப்தா – அவர் எல்லா உயிரினங்களையும் பாதுகாக்கிறார், எனவே அவர் கோப்தா, உலகத்தின் காவலர்’ என்று கூறுகிறார். எதையும் எதிர்பாராமல் எல்லா உயிர்களையும் காப்பாற்றுகிறார்.

‘குப்’ என்ற வார்த்தையின் மற்றொரு பொருள் மறைத்தல், மறைத்தல். இதன் அடிப்படையில், ஸ்ரீ சங்கரர் தனது மாயா மூலம் தன்னை (பக்தர்கள் அல்லாதவர்களிடமிருந்து) மறைத்துக் கொள்கிறார் என்று பொருள்படும்.

நாமா என்பது ‘பாதுகாப்பது’ என்று பொருள்படும் ‘குப்-ரக்ஷனே’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது. ஸ்ரீ பராசர பட்டர் இந்த நாமத்தை பகவான் எல்லா அறிவுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார், இவ்வாறு முந்தைய நாமத்தில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை விரிவுபடுத்துகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அதர்வ சிராஸ் 5 – சம்ஸ்ரிஜ்ய விஸ்வ புவனானி கோப்தா – எல்லா உயிரினங்களையும் உருவாக்கி அவற்றை நிலைநிறுத்துபவர்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ‘குப்’ என்பதன் மறை மற்றும் பாதுகாப்பு என்ற இரண்டு அர்த்தங்களையும் பயன்படுத்தி, பகவான் தனது பக்தர்களை எதிரிகளிடமிருந்து மறைத்து, எல்லா தடைகளிலிருந்தும் பாதுகாப்பதால், கோப்தா என்று விளக்கம் தருகிறார்.

தான் படைத்த அனைத்தையும் தொடர்ந்து பாதுகாத்து வருபவர் பகவான் என்பதை இந்த நாமம் நமக்கு நினைவூட்ட வேண்டும் என்று தர்ம சக்கரம் எழுத்தாளர் கவனிக்கிறார். தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம் அல்லது வேறு சில மனிதர்களால் பாதுகாக்கப்படுகிறோம் என்று நினைப்பவர்கள் மாயையிலும் சுத்த அறியாமையிலும் இருக்கிறார்கள். இந்த எளிய உண்மையை இந்த நாமம் நமக்கு நினைவூட்ட வேண்டும்.


499-ஜ்ஞான கம்ய —அறிவினால் அடையப் படுபவன்

பர வித்₃யா வேத்₃ய꞉ ஸமாதி₄க₃ம்யோ
ஜ்ஞாந க₃ம்ய꞉ ।
* போரது₃பதா₄த் இதி யத் ப்ரத்யய꞉ ।
வரவாஜி முகம் த்யாயேத் அத வாகீஸ்வரம் ப்ரபும்–வாக்கின் நாயகன் ஸ்ரீ ஹயக்ரீவரை தியானிப்போம்

கற்கும் கல்விப் பயன் யானே என்னும்-5-6-2-

பர வித்யை யாகிற சமாதி ஞானத்தால் அறியத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்

கர்மத்தால் ஞான கர்மங்களால் அன்றி ஞானத்தால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சங்கரர்

ஞானத்தாலும் ஞானிகளாலும் அடையைப் பெறுபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

———

  1. ஓம்ஞானகம்யாயநம:

ந கர்மணா வெறுமனே கடமைகளை ஆற்றுவதால் அல்ல

ந ஞானகர்மப்யாம் ஞானமும், செயலும் கலந்து செயல்படுவதால் அல்ல

வா கம்யதே அவரை (பகவானை) அடைவது

கிந்து ஆயினும்

ஞானேன (வேதங்கள், உபநிடதங்கள், அற நூல்களின் மூலம் பெறப்படும்) அறிவினால்

கம்யதே அவர் அடையப்படுகிறார்

இதி வா ஞானகம்ய: எனவே, பகவான் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கடமைகளை ஆற்றுவதாலோ, ஞானமும், கர்மமும் கலந்து செயல்படுவதாலோ அடையமுடியாதவர் (அறியப்பட முடியாதவர்) பகவான். ஆயினும், வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் அறநூல்கள் மூலம் பெறப்படும் தூய அறிவால் பகவானை அறியவும், அடையவும் முடியும். எனவே, அவர் ‘ஞானகம்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————-

  1. ஞான-கம்யா – அறிவால் உணரப்பட வேண்டியவர்

ந கர்மனா ந ஞான கர்மப்யாம் வா கம்யதே கிந்து ஞானேன கம்யதே இதி ஞானகம்யஹ் – அவர் ஆன்மீக அறிவின் மூலம் அடையக்கூடியவர், சடங்குகள் அல்லது சடங்குகள் மற்றும் படிப்புகளின் கலவையால் அல்ல’ என்பது ஸ்ரீ ஆதி சங்கரரின் விளக்கம். இங்கே ஞானம் என்பது ஆத்மா ஞானம் அல்லது தன்னைப் பற்றிய அறிவு – நீங்கள் யார், நீங்கள் என்ன என்பது போன்ற உயர்ந்த அறிவைக் குறிக்கிறது. இந்த உன்னதமான மற்றும் உன்னதமான அறிவு இல்லாமல், வெறும் சடங்குகள் நம்மை பகவானிடம் கொண்டு செல்லாது. அதுபோலவே வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் பற்றிய அறிவும், ஆத்ம ஞானம் இல்லாத சடங்குகளை மேற்கொள்வதும் பகவானை அடைய நம்மை அழைத்துச் செல்லாது.

பகவத் கீதை அத்தியாயம் 7 வது வசனம் 19 இல், பகவான் கூறுகிறார்:
பஹூனாம் ஜன்மனம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாசுதேவா ஸர்வம் இதி ச மஹாத்மா ஸு-துர்லபஹ் || — பல பிறப்புகள் மற்றும் இறப்புகளுக்குப் பிறகு, உண்மையில் அறிவில் உள்ளவன், எல்லா காரணங்களுக்கும், எல்லாவற்றுக்கும் காரணமானவன் என்பதை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். இவ்வளவு பெரிய ஆன்மா மிகவும் அரிது.

ஸ்ரீ எம்.வி. ராமானுஜா ஆச்சாரியார் இங்கு குறிப்பிடப்படும் அறிவு ‘பரா வித்யா’ என்று குறிப்பிடுகிறார் – தியான ஒற்றுமையால் மட்டுமே அடையக்கூடிய பரமாத்மாவின் அறிவு – சமாதி நிஷ்டா.

அறிவை இரண்டு வகையாகக் கருதலாம் என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் விரிவாகக் கூறுகிறார் – கண்கள், காதுகள் போன்ற வெளிப்புற இந்திரியங்களால் அல்லது சிந்தனையால் மனத்தால் பெறப்படுவது – அபர வித்யா. இந்த ‘பர’ அறிவை அடைய உதவும் வழிகளில் ஞானம், பக்தி, கர்மா மற்றும் யோகா ஆகியவை அடங்கும். நாம சம்கீர்த்தனம் (பகவானின் நாமத்தை உச்சரித்தல்), ஸ்ரவணம் (பகவானின் நாமம், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றைக் கேட்பது), கைங்கர்யம் (கோயில் சேவைகளுக்கு ஆதரவான கடமைகளைச் செய்தல், மாலைகள் செய்தல், கோயில் வளாகத்தை சுத்தம் செய்தல் போன்றவை) போன்ற செயல்களை வழக்கமாகப் பயிற்சி செய்யுங்கள். நமது மனதை (சித்த சுத்தி) தூய்மைப்படுத்தவும், பக்தியை வளர்க்கவும் உதவுகிறது. சிந்தனையில் நிதானமும், வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை பொறுமையுடன் தாங்கி, நம் வாழ்வில் நடக்கும் நல்ல விஷயங்களை ஈஸ்வர பிரசாதமாக ஏற்று, பகவானுக்கு அர்ப்பணம் செய்தல், நம் மனதை அவரை நோக்கி செலுத்த உதவும். நமது சூழலில் ஞானம் என்பது நமக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவையும் தொடர்பையும் உணர்த்துவதாகும். அவருடைய அருளால்தான் இந்த ஞானம் நமக்குப் பலிக்கும். ஆத்ம ஞானத்தின் மூலமே பகவானை உணர முடியும் என்பதையும், அவர் ஒருவரே நமக்கு இந்த ஞானத்தை அருளக்கூடியவர் என்பதையும் இந்த நாமம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் அவர் நம்மை ஆசீர்வதிக்க முடிவு செய்யும் போது நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்.


500-புராதன-மிகப் பழையவன்

நேத₃ம் வித்₃யா ப்ரத்₃யோதந மத்₃யைவ, கிம் து ப்ரதி கல்பமிதி
புராதந꞉ ।
* ஸாயஞ்சிரம் இத்யாதி₃நா ட் யுட் யுலௌ துடா₃க₃மஶ்ச ॥
ஊழி தோறு ஊழி வையம் காக்கும் ஆழி நீர் வண்ணன் -7-3-11-

வேதத்தால் ப்ரஹ்மம் அறியப்படுகிறார்
ஸாஸ்த்ர ஞானத்தால் தான் ப்ரஹ்மம் அறியப்படுகிறார்
அநாதி
கட ஞானம் பட ஞானம் போல் ப்ரஹ்ம ஞானம்

முந்தைய கல்பங்களிலும் இப்படியே வித்யைகளை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

கால வரையரை யில்லாமல் முந்தியும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

தேஹத்தில் அல்லது ஸ்ரீ வைகுண்டம் முதலிய இடங்களில் வசிப்பவர் -தொன்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———

  1. ஓம்புராதனாயநம:

காலேன காலத்தால்

அபரிச்சின்னத்வாத் வரையறுக்கப்படாதவர், ஆதலால்

புராபி (அனைவருக்கும்) மிகவும் முற்பட்ட காலத்திலிருந்தே

பவதீதி இருப்பவர்

புராதன: பகவான் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் காலம் என்னும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டவர். காலத்தால் வரையறுக்கப்படாதவர். எனவே, அவர் அனைவருக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே (எவரும் தோன்றும் முன்னரே) இருப்பவர். எனவே அவர் ‘புராதன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. புராதனா – அவர் பண்டைய மற்றும் நித்தியமானவர்

புராதனா என்றால் மிகவும் பழமையான ஒருவர் என்று பொருள். ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘காலேன அபரிச்சின்னத்வாத் பூரா அபி பவதி இதி புராதனாஹ் – அவர் காலத்தின் தடைகளுக்கு அப்பாற்பட்டவர், அவர் எவரையும் விட பழமையானவர் என்றாலும், அவர் நித்தியமானவர்’ என்று விளக்குகிறார்.

ஸ்ரீ வி.வி. ராமானுஜன் நம்மாழ்வாரின் திருவாய் மொழி (7.3.11) பற்றி குறிப்பிடுகிறார்: ஊழி தோர் ஊழி வையம் காக்கும் ஆழி நீர் வண்ணன் – பல கல்பங்களாக உலகைக் காக்க பல வடிவங்களையும் அவதாரங்களையும் எடுத்துக் கொள்கிறார்.

ஸ்வாமி சின்மயாஆனந்தா இங்கு “பழங்காலம்” என்பது காலத்தின் கருத்து எதிலிருந்து தோன்றியதோ அதைக் குறிக்கிறது என்றும் அவர் காலத்தின் அடிப்படையில் அளவிட முடியாத உண்மை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

தர்ம சக்கரம் எழுத்தாளர், இந்த நாமம் இன்னும் பல எண்ணங்களை வெளிப்படுத்துகிறது என்று கவனிக்கிறார் – அதாவது. பகவான் ஆரம்பம் இல்லாதவர், பிறக்கவில்லை, காலத்தால் ஆளப்படவில்லை, மனத்தால் புரிந்து கொள்ளப்படவில்லை, இருக்கும் அனைத்தின் தோற்றம் முதலியவை.


இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
ஐந்தாம்  நூறு திரு நாமங்கள் வியாக்யானம் ஸம் பூர்ணம்

ஐந்தாம்  சதகம் முடிந்தது-

—————

501-ஶரீர பூத ப்ருத்
தத்தவங்களை சரீரமாகக் கொண்டு தாங்குமவன்

பிரகிருதி மஹான் அஹங்காரம் -மூன்று -பூதங்கள் தன்மாத்திரைகள் கர்மா இந்திரியங்கள் ஞான இந்திரியங்கள் -இருபது -மனஸ் ஓன்று -ஆக 24 தத்தவங்களை சரீரமாகக் கொண்டு தாங்குமவன்-விபுவான அவன் இடம் இவை அனைத்துமே ஒரு லவ கேசம்

ஶரீர பூ₄தம் தத்த்வ ஜாதம் பி₃ப₄ர்தீதி
ஶரீர பூ₄த ப்₄ருத்

யஜுர் தஸ் சிரஸ்--இதுவே அவனது தலையாகும்

தஸ்ய மூர்த்தா சமபவத் த்யை ச நக்ஷத்ர தேவதா இதி –சாந்தி பர்வம்–348-49-
நக்ஷத்ர தேவதைகளுடன் கூடிய ஆகாயம் அவனது தலையானது

ஏதத் ஹய சிரஸ் க்ருத்வா நாநா மூர்த்திபி ஆவ்ருதம் இத்யந்தம்–சாந்தி பர்வம்–348-49-இதுவும் சரீர வர்ணனை
குதிரை போன்ற தலையைக் கொண்டும் -பலவிதமான ரூபங்களில் சரீரம் கொண்டும் –

தானேயாகி நிறைந்து எல்லா வுலகும் உயிரும் தானேயாய் நின்று ஒழிந்தான் –10-7-2-

தம் சரீரமாக உள்ள பிரகிருதி முதலிய தத்துவங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சரீரத்திற்குக் காரணமான பஞ்ச பூதங்களை பிராண ரூபியாகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சரீரங்களையும் பூதங்களையும் தாங்குபவர் -பிரளயத்தின் போது-தம்முடைய சரீரத்தில் பூதங்களைத் தரித்தவர் –
சரீர பூதப்ருத் என்ற பாடத்தில் சரீரம் உடையவர் -பூதங்களைத் தரிப்பவர் -என்று இரண்டு திரு நாமங்கள் –
அல்லது தம்முடைய சரீரங்களாக அந்தர்யாமி பிராமணத்தில் பிருத்வி முதலிய சப்தங்களால் கூறப் பட்ட
ஸ்ரீ கருடன் முதலியோரை தரிப்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம்ஶரீரபூதப்ருதேநம:

ஶரீர (ஒவ்வொரு உயிரினத்திற்கும்) உடலை

ஆரம்பக தோற்றுவிக்கும்

பூதானம் (நீர், நிலம், நெருப்பு போன்ற) பூதங்களை

பரணாத் தாங்குகிறார்

ப்ராணரூபதர: (அவற்றின்) உயிராக இருந்து

ஶரீரபூதப்ருத் எனவே, பகவான் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு உயிரினத்தின் உடலும் பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களால் ஆனது. அந்த பஞ்சபூதம் முதலிய தத்துவங்களையும் அவற்றின் உயிராக இருந்து பகவான் தாங்குகிறார். எனவே அவர் ‘ஶரீரபூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. ஷரீரா-பூதப்ரித் – ஷரீராவை உருவாக்கும் அனைத்து தத்துவங்களையும் ஆதரிப்பவர்

ஸ்ரீஆதிசங்கரர், பகவான் உடலின் உறுப்புகளை ஊட்டுவதால், அவரே பிராணன் (முக்கிய காற்று) என்பதால், அவர் ஷரீர-பூதப்ரித் என்று விளக்கம் தருகிறார்.

ஸ்ரீ சங்கரர் இதை மேலும் விளக்குகிறார், ‘ஷரீரம்பக பூதாநாம் பரணாத் ப்ராணரூபதாரா ஷரீரபூதப்ரித் – அவர் பூமி, நெருப்பு, நீர், காற்று மற்றும் ஈதர் ஆகிய 5 கூறுகளை ஆதரிக்கிறார், அவை அனைத்து உயிரினங்களின் அடிப்படை அமைப்பாகும், அவர் ஷரீர-பூதபிரித் என்று அழைக்கப்படுகிறார்.

பூதம் என்பது பஞ்ச மகா பூதங்கள் (பூமி, நெருப்பு, நீர், காற்று மற்றும் ஈதர்), 24 தத்துவங்கள் (5 மகாபூதங்கள், 5 தன்மாத்ராக்கள், 5 ஜனநேத்ரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், மனம், அகங்காரம், புத்தி மற்றும் பிரகிருதி) அல்லது முழுவதையும் குறிக்கலாம். அனைத்து உயிரினங்களின் பிரபஞ்சம். இவ்வாறு இந்த நாமாவிற்கு பல்வேறு விளக்கங்கள் உள்ளன.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் ஒரு மாற்று விளக்கம் தருகிறார். வெவ்வேறு தேவதாக்கள் நம் உடலின் வெவ்வேறு பாகங்களுடன் தொடர்புடையவை – கண்களால் சூரியன், மனத்துடன் சந்திரன், வாயுவுடன் கூடிய தோல், நிறம் அல்லது ஈஷாவுடன் வர்ணம் போன்றவை. பகவான் இந்த ஷரீர-பூதங்கள் அல்லது தேவதாக்களின் பாதுகாவலராக இருக்கிறார். அவர் ஷரீர-பூத-பிரித் என்று அழைக்கப்படுகிறார்.

————-

502-போக்தா —உண்பவன் –அஸ்நாமி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -அனுபவத்தையே சொன்னவாறு
யத்து தத் கதிதம் பூர்வம் த்வயா ஹய ஸீரோ மஹத் ஹவ்ய கவ்ய பூஜோ விஷ்ணோ உதக் பூர்வே மஹோததவ் –சாந்திபர்வம்–348-3
ஹவ்யம்-தேவர்களைக் குறித்து / கவ்யம் -பித்ருக்களைக் குறித்து கொடுப்பது –
வடகிழக்கு திசையில் முன்னர் ஹவ்ய கவ்யங்களை அனுபவிப்பவனாகிய விஷ்ணுவைப் பற்றி உரைத்தீர்கள்
அப்படிப்பட்ட ஹயக்ரீவர் சரித்திரம் பற்றிக் கூறுங்கள் -என்று ஜனமேஜயன் கேட்பது

செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -அனுபவத்தையே சொன்னவாறு
முன்பே 145 பார்த்தோம்

ஸ்ரீ ஜனார்த்தனம் பிரியதாம் –

ஹய சிரஸ் ரூபமாக ஹவ்ய கவ்யங்களை புஜிப்பவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

காப்பவர் -தம்முடைய ஸ்வரூபம் ஆகிய ஆனந்தத்தை அனுபவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம்போக்த்ரேநம:

பாலகத்வாத் (அனைவரையும்) காப்பாற்றுவதால்

போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஸ்ரீமன் நாராயணன் காக்கும் கடவுளாவார். அனைவரையும் காப்பாற்றுவதால் அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரமானந்த உயரிய ஆனந்தத்தை

ஸந்தோஹ அளவிடமுடியாத

ஸம்போகாத்வா அனுபவிப்பவராதலால்

போக்தா பகவான் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, பகவான் எப்பொழுதும் உயர்ந்த, அளவிடமுடியாத ஆனந்தத்தை இடைவிடாது அனுபவிக்கிறார். எனவே அவர் ‘போக்தா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதி நாம்னாம் பஞ்சமம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (போக்தா என்னும் இந்த திருநாமம் வரையில்) ஐநூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.

———-

போக்தா – அனுபவிப்பவர்

இந்த நாமத்தை ‘புனக்தி – ஆதரிக்கிறது‘ அல்லது ‘புங்க்தே – அனுபவிக்கிறது‘ என்று பொருள் கொள்ளலாம். இந்த இரண்டு வெவ்வேறு அர்த்தங்களைப் பயன்படுத்தி ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘பாலகத்வாத் போக்தா – அனைவரையும் ஆதரிக்கிறார், எனவே அவர் போக்தா’ என்று அழைக்கப்படுகிறார். மாற்றாக அவர் ‘பரமானந்த சந்தோஹ சம்போகாத் வா போக்தா – அவர் தூய மகிழ்ச்சி அல்லது முழுமையான பேரின்பத்தை அனுபவிப்பவர், எனவே அவர் போக்தா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் இந்த போக்தாவின் குணத்தை கடவுள்களுக்கு (ஹவ்யா) பிரசாதம் மட்டுமல்ல, காவியம், நம் பித்ருக்கள் அல்லது இறந்த முன்னோர்களுக்கு பிரசாதம் – ஹவ்ய காவ்ய பூஜோ விஷ்ணோஹ் உதக்-பூர்வே மஹோதாதௌ (மஹாபாரத சாந்தி பர்வ 348.3) ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவுபடுத்துகிறார். ) – பகவான் வடகிழக்கு சமுத்திரத்தில் நிலை கொண்டு, நேர்மையுடன் வழங்கப்படும் ஹவ்யத்தையும் காவியத்தையும் உட்கொள்கிறார்.

ஸ்ரீ வி.வி. ராமானுஜன் விளக்கத்தை ஆதரிக்க பல குறிப்புகளை கொடுக்கிறார்:

  • செய்கைப்-பயன் உண்பேனும் யானே என்னும் – எல்லாச் செயல்களின் பலனையும் அனுபவிக்கிறேன் (நம்மாழ்வாரின் திருவாய் மொழி 5.6.4);
  • அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அதோஹம் அன்னதோஹம் அன்னதா – – நான் என் பக்தர்களுக்கு உணவு அல்லது இன்பப் பொருளாக இருக்கிறேன், மேலும் நான் என் பக்தர்களின் பிரசாதங்களை அனுபவிப்பவன் அல்லது நுகர்வோர் (தைத்திரீய உபநிஷத் 9.10.1 );
  • வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணிலென்று
    ஆர்வுற்ற வென்னை  யொழிய என்னில் முன்னம்
    பாரித்து தானென்னை முற்றப் பருகினான்
    காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. (திருவாய் மொழி – 9.6.10) -: எப்பொழுதாவது அவனைக் கண்டால் அவனைக் கவ்வி விடுவேன் என்று நினைத்தேன், ஆனால் நான் முடியும் முன்னே, அவன் என்னை ஏமாற்றி, அவசரமாக அனைத்தையும் குடித்துவிட்டான். என் இருண்ட திருக்காட்டுக்கரை இறைவன் ஒரு படி மேலே!·
  • அவா அறச் சூழ் அறிவாய் – தன் பக்தர்களுடன் நெருக்கமாகவும், மனதுக்கு இணங்கவும் பழகுபவர். (திருவாய் மொழி 10.10.11).

குசேலரின் கைப்பிடி அரிசியை கண்ணன் மிகுந்த மகிழ்ச்சியுடன் உண்பதும், துரியோதனன் வழங்கியதை விட விதுரர் அளித்த உணவை அவன் ஏற்றுக்கொள்வதும், அன்புடனும் பக்தியுடனும் செய்யப்பட்ட பிரசாதத்தை அவன் அனுபவிக்கிறான் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ராமர், ஷபரி அன்புடன் அளித்த பழங்களைச் சாப்பிட்டார்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இதை அழகாக வெளிப்படுத்துகிறார் – ரக்ஷகோ பக்ஷனாஷ்ச. பிரளய காலத்தில் படைத்து, காத்து, விழுங்குகிறான்.

தர்ம சக்கரம் எழுத்தாளர், பகவானின் செயல்பாடுகளை, நமது அன்றாட வாழ்க்கைக்கும் பொருந்தும் வகையில் விளக்குகிறார். பகவான் நம் அனைவரிடத்திலும் இருக்கிறார் – சில சந்தர்ப்பங்களில் அவர் பார்வையாளர், சிலவற்றில் அவர் வழிகாட்டி, இன்னும் சிலவற்றில் அவர் அனுபவிப்பவர், முதலியன (பகவத் கீதை அத்தியாயம் 13 வசனம் 22). உலக நோக்கத்தில் நேரத்தை செலவிடுபவர்களுக்கு, அவர் ஒரு பார்வையாளன் மட்டுமே. தர்மத்தின் வழியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, பாண்டவர்களைப் போலவே – தேவைப்படும் காலங்களில் அவர் பர்தாவாக இருக்கிறார். தமக்குக் கிடைக்கும் புகழ் முதலிய உலக ஆதாயங்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்பவர்களுக்கு, அவரே போக்தா, அதாவது, இவற்றைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பதிலாகத் தன் அனுபவத்தைத் தருகிறார். நமது செயல்களையும் இந்த செயல்களின் பலன்களையும் எவ்வளவு அதிகமாக அவருக்கு அர்ப்பணித்து, அவரைப் போக்தாவாக ஆக்குகிறோமோ, அவ்வளவு அதிகமாக உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர், பகவானின் அவதாரமான ஸ்ரீ ராமனின் குண அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த சில நாமங்களை விளக்குகிறார்.

———

ஸ்ரீ  மஹாபா⁴ரதம்-ஶாந்திபர்வம்-மோக்ஷத⁴ர்மம்-ஸ்ரீ நாராயணீயம் 357 அத்⁴யாயம்)

ஶாஸந உவாச ।
ஶ்ருதம் ப⁴க³வதஸ்தஸ்ய மாஹாத்ம்யம் பரமாத்மவ: ।
ஜந்ம த⁴ர்மக்³ரு’ஹே சைவ நரநாராயணாத்மகம் ॥ 1॥

மஹாவராஹஸ்ரு’ஷ்டா ச பிண்டோ³த்பத்திஸ்ஸநாதநீ ।
ப்ரவ்ரு’த்தா ச நிவ்ரு’த்தா ச யோ யதா² பரிகல்பித: ॥ 2॥

ததா² ஸ ந ஶ்ஶ்ருதோ ப்³ரஹ்மந்! வத்⁴யமாநஸ்த்வயாऽநக⁴ ।
ஹவ்யகவ்யபு⁴ஜோ விஷ்ணுருத³க் பூர்வே மஹோத³தௌ⁴ ॥ 3॥

யச்ச தத்கதி²தம் பூர்வம் த்வயா ஹயஶிரோ மஹத் ।
தச்ச த்³ரு’ஷ்டம் ப⁴க³வதா ப்³ரஹ்மணா பரமேஷ்டி²நா ॥ 4॥

கிம் தது³த்பாதி³தம் பூர்வம் ஹரிணா லோகதா⁴ரிணா ।
ரூபம் ப்ரபா⁴வம் மஹதாமபூர்வம் தீ⁴மதம் வர ॥ 5॥

த்³ரு’ஷ்ட்வா ஹி விபு³த⁴ஶ்ரேஷ்ட²மபூர்வமமிதௌஜஸம் ।
தத³ஶ்வஶிரஸம் புண்யம் ப்³ரஹ்ம கிமகரோந்முநே! ॥ 6॥

ஏதந்ந: ஸம்ஶயம் ப்³ரஹ்மந்! புராணம் ப்³ரஹ்மஸம்ப⁴வம் ।
கத²யஸ்வோத்தமமதே! மஹாபுருஷஸம்ஶ்ரிதம் ॥ 7॥

பாவிதா: ஸ்ம த்வயா ப்³ரஹ்மந்! புண்யா: கத²யத: கதா:² ।
ஸௌதிருவாச ।
கத²யிஷ்யாமி தே ஸர்வம் புராணம் வேத³ஸம்மிதம் ॥ 8॥
உத்பந்நஸம்ஶயோ ராஜா ஏவமேதத³சோத³யத் ।

ஜநமேஜய உவாச ।
யத்தத்³த³ர்ஶிதவாந் ப்³ரஹ்மா தே³வம் ஹயஶிரோத⁴ரம் ॥ 9॥
கிமர்த²ம் தத்ஸமப⁴வத்³வபுர்தே³வோபகல்பிதம் ।

வைஶம்பாயந உவாச ।
யத்கிஞ்சிதி³ஹ லோகே வை தே³ஹப³த்³த⁴ம் விஶம்பதே! ॥ 11॥

ஸர்வம் பஞ்சபி⁴ராவிஷ்டம் பூ⁴தைரீஶ்வரபு³த்³தி⁴ஜை: ।
ஈஶ்வரோ ஹி ஜக³த்ஸ்ரஷ்டா ப்ரபு⁴ர்நாராயணோ விராட் ॥ 12॥

பூ⁴தாந்தராத்மா வரத:³ ஸுகு³ணோ நிர்கு³ணோऽபி ச ।
பூ⁴தப்ரலயமத்யந்தம் (வ்யக்தம்) ஶ்ருணுஷ்வ ந்ரு’பஸத்தம ॥ 13॥

த⁴ரண்யா மத² லீநாயாமப்ஸு சைகார்ணவே த⁴ரா ।
ஜ்யோதிர்பூ⁴தே ஜலே சாபி லீநே ஜ்யோதிஷி சாநிலே ॥ 14॥

வாயௌ சாகாஶஸம்லீநே ஆகாஶே ச மநோऽநுகே³ ।
வ்யக்தே மநஸி ஸம்லீநே வ்யக்தே சாவ்யக்ததாம் க³தே ॥ 15॥

அவ்யக்தே புருஷே யாதே பும்ஸி ஸர்வக³தேऽபி ச ।
தம ஏவாப⁴வத்ஸர்வம் ந ப்ராஜ்ஞாயத கிஞ்சந ॥ 16॥

தமஸோ ப்³ரஹ்மஸம்பூ⁴தம் தமோமூலாம்ரு’தாத்மகம் ।
தத்³விஶ்வபா⁴வஸஞ்ஜாதம் பௌரீஷம் தநுமாஶ்ரிதம் ॥ 17॥

ஸோऽநிருத்³த⁴ இதி ப்ரோக்த: தத்ப்ரதா⁴நம் ப்ரசக்ஷதே ।
தத³வ்யக்தமிதி ஜ்ஞேயம் த்ரிகு³ணம் ந்ரு’பஸத்தம! ॥ 18॥

வித்³யாஸஹாயவாந் தே³வ: விஷ்வக்ஸேநோ ஹரி: ப்ரபு:⁴ ।
ஆதி³கர்தா ஸ தே³வாநாமப்ரமேயோ ஜநார்த³ந: ॥ 19॥

அப்ஸ்வேவ ஶயநம் சக்ரே நித்³ராயோக³முபாக³த: ।
ஜக³தஶ்சிந்தயந் ஸ்ரு’ஷ்டிம் சித்ராம் ப³ஹுகு³ணோத்³ப⁴வாம் ॥ 20॥

தஸ்ய சிந்தயத: ஸ்ரு’ஷ்டிம் மஹாநாத்மகு³ணம் ஸ்ம்ரு’த: ।
அஹங்காரஸ்ததோ ஜாதோ ப்³ரஹ்மா ஶுப⁴சதுர்முக:² ॥ 21॥

ஹிரண்யக³ர்போ⁴ ப⁴க³வாந் ஸர்வலோகபிதாமஹ: ।
பத்³மேऽநிருத்³தா⁴த்ஸம்பூ⁴த: ததா³ பத்³மநிபே⁴க்ஷண: ॥ 22॥

ஸஹஸ்ரபத்ரே த்³யுதிமாநுபநிஷ்டஸ்ஸநாதந: ।
த³த்³ரு’ஶேऽத்³பு⁴தஸங்காஶோ லோகாநாபோமயாந் ப்ரபு:⁴ ॥ 23॥

ஸத்த்வஸ்த²ம் பரமேஷ்டீ² ஸ ததோ பூ⁴தக³ணாந் ஸ்ரு’ஜந் ।
பூர்வமேவ ச பத்³மஸ்ய பத்³மே ஸூர்யாம்ஶு(க்³நி) ஸப்ரபே⁴ ॥ 24॥

நாராயண(ணா) க்ரு’தௌ பி³ந்தூ³ அபாமாஸாம் கு³ணோத்தரௌ ।
தாவபஶ்யத்ஸ ப⁴க³வாநநாதி³நித⁴நோऽச்யுத: ॥ 25॥

ஏகஸ்தத்ரா ப⁴வத்³பி³ந்து³ர்மத்⁴வாபோ⁴ ருசி(தி⁴)ரப்ரப:⁴ ।
ஸ தாமஸோ (மாமதோ) மது⁴ர்ஜாதஸ்ததா³ நாராயணாஜ்ஞயா ॥ 26॥

கடி²நஸ்த்வபரோ பி³ந்து:³ கைடபோ⁴ ராஜஸஸ்து ஸ: ।
தாவப்⁴யதா⁴வதாம் ஶேஷ்டௌ² தமோரஜகு³ணாந்விதௌ ॥ 27॥

ப³லவந்தௌ க³தா³ஹஸ்தௌ பத்³மநாலாநுஸாரிணௌ ।
த³த்³ரு’ஶாதேऽரவிந்த³ஸ்த²ம் ப்³ரஹ்மணமமிதப்ரப⁴வம் ॥ 28॥

ஸ்ரு’ஜந்தம் ப்ரத²மம் வேதா³ம்ஶ்சதுரஶ்சாருவிக்³ரஹாந் ।
ததோ விக்³ரஹவந்தஸ்தாந் வேதா³ந் த்³ரு’ஷ்ட்வாऽஸுரோத்தமௌ ॥ 29॥

ஸஹஸா ஜக்³ரு’ஹதுர்வேதா³ந் ப்³ரஹ்மண: பஶ்யத்த ஸ்ததா³ ।
அதா²தௌ தா³நவஶ்ரேஷ்டௌ² வேதா³ந் க்³ரு’ஹ்ய ஸநாதநாந் ॥ 30॥

ரஸாம் விவிஶது ஸ்தூர்ணமுத³க் பூர்வே மஹாத³தௌ⁴ ।
ததோ ஹ்ரு’தேஷு வேதே³ஷு ப்³ரஹ்மா கஶ்மலமாவிஶத் ॥ 31॥

ததோ வசநமீஶாநம் ப்ராஹ வேதை³ர்விநாக்ரு’த: ।
வேதா³ மே பரமம் சக்ஷு: வேதா³ மே பரமம் த⁴நம் ॥ 32॥

வேதா³ மே பரமம் தா⁴ம வேதா³ மே ப்³ரஹ்மசோத்தர(ம)ம் ।
மம வேதா³ ஹ்ரு’தாஸ்ஸர்வே தா³நவாப்⁴யாம் ப³லாதி³த: ॥ 33॥

அந்த⁴காரா ஹி மே லோகா ஜாதா வேதை³ர்விநாக்ரு’த: ।
வேதா³ந்ரு’தே கிம் குர்யாம் லோகாநாம்(வை)ஸ்ரு’ஷ்டி(ஸுஷ்டு²)முத்தமாம்(முத்³யத:)॥34॥

அஹோ! ப³த! மஹத்³து:³க²ம் வேத³நாஶநஜம் மம ।
ப்ராப்தம் து³நோதி ஹ்ரு’த³யம் தீவ்ரஶோகபராயணம் ॥ 35॥

கோ ஹி ஶோகார்ணவேமக்³நம் மாமிதோऽத்³ய ஸமுத்³த⁴ரேத் ।
வேதா³ம் ஸ்தாம்ஶ்சாநயேந்நஷ்டாந் கஸ்ய சாஹம் ப்ரியோ ப⁴வே ॥ 36॥

இத்யேவம் பா⁴ஷமாணஸ்ய ப்³ரஹ்மணோ ந்ரு’பஸத்தம ।
ஹரே: ஸ்தோத்ரார்த²முத்³பூ⁴தா பு³த்³தி⁴ர்பு⁴த்³தி⁴மதாம் வர ॥ 37॥

ததோ ஜகௌ³ பரம் ஜப்யம் ஸாஞ்ஜலிப்ரக்³ரஹ: ப்ரபு:⁴ ।

ப்³ரஹ்மோவாச ।
நமஸ்தே ப்³ரஹ்மஹ்ரு’த³ய! நமஸ்தே மம பூர்வஜ! ॥ 38॥

லோகாத்³ய பு⁴வநஶ்ரேஷ்ட²! ஸாங்க்²யயோக³நிதே⁴! ப்ரபோ⁴! ।

வ்யக்தாவ்யக்தகராசிந்த்ய க்ஷேமம் பந்தா²நமாஸ்தி²த! ॥
விஶ்வபு⁴க் ஸர்வபூ⁴தாநாமந்தராத்மந்நயோநிஜ ॥ 39॥

அஹம் ப்ரஸாத³ஜஸ்துப்⁴யம் லோகதா⁴ம ஸ்வயம்பு⁴வ: ।
த்வத்தோ மே மாநஸம் ஜந்ம ப்ரத²மம் த்³விஜபூஜிதம் ॥ 40॥

சாக்ஷுஷம் வை த்³விதீயம் மே ஜந்ம சாஸீத் புராதநம் ।
த்வத்ப்ரஸாதா³த்து மே ஜந்ம த்ரு’தீயம் வாசிகம் மஹத் ॥ 41॥

த்வத்த: ஶ்ரவணம் சாபி சதுர்த²ம் ஜந்ம மே விபோ⁴ ।
நாஸிக்யம் சாபி மே ஜந்ம த்வத்த: பஞ்சமமுச்யதே ॥ 42॥

த்வத்த: ஶ்ரவணஜம் சாபி சதுர்த²ம் ஜந்ம மே விபோ⁴ ।
நாஸிக்யம் சாபி மே ஜந்ம த்வத்த: பஞ்சமமுச்யதே ॥ 42॥

அண்ட³ஜம் சாபி மே ஜந்ம த்வத்த: ஷஷ்ட²ம் விநிர்மிதம் ।
இத³ம் ச ஸப்தமம் ஜந்ம பத்³மஜந்மேதி வை ப்ரபோ⁴ ॥ 43॥

ஸர்கே³ ஸர்கே³ऽப்யஹம் புத்ரஸ்தவ த்ரிகு³ணவர்ஜித ।
ப்ரத²ம: புண்ட³ரீகாக்ஷ! ப்ரதா⁴நகு³ணகல்பித: ॥ 44॥

த்வமீஶ்வரஸ்வபா⁴வஶ்ச பூ⁴தாநாம் த்வம் ப்ரபா⁴வநா ।
த்வயா விநிர்மிதோऽஹம் வை வேத³சக்ஷுர்வயோऽதிக³ ॥ 45॥

தே மே வேதா³ ஹ்ரு’தாஶ்சக்ஷுரந்தோ⁴ ஜாதோऽஸ்மி ஜாக்³ரு’ஹி ।
த³த³ஸ்வ சக்ஷூம்ஷி மம ப்ரியோऽஹம் தே ப்ரியோऽஸி மே ॥ 46॥

ஏவம் ஸ்துதஸ்ஸ ப⁴க³வாந் புருஷஸ்ஸர்வதோமுக:² ।
ஜஹௌ நித்³ராமத² ததா³ வேத³கார்யார்த²முத்³யத: ॥
ஐஶ்வர்யே(ரே)ண ப்ர(ஸு)யோகே³ந த்³விதீயம் தநுமாஸ்தி²த: ॥ 47॥

ஸுநாஸிகேந (ஸமாநகேந) காயேந பூ⁴த்வா சந்த்³ரப்ரப⁴ஸ்ததா³ ।
க்ரு’த்வா ஹயஶிரஶ்ஶ்ருப்⁴ரம் வேதா³நாமாலயம் ப்ரபு:⁴ ॥ 48॥

தஸ்ய மூர்தா⁴ ஸமப⁴வத் த்³யௌஸ்ஸநக்ஷத்ரதாரகா ।
கேஶாஶ்சாஸ்யாப⁴ந் தீ³ர்கா⁴ரவேரம்ஶு ஸமப்ரபா:⁴ ॥ 49॥

கர்ணா வாகாஶபாதலே லலாடம் பூ⁴ததா⁴ரிணௌ ।
க³ங்கா³ஸரஸ்வதீ புண்யே ப்⁴ருவா வாஸ்தாம் மஹாத்³யுதீ ॥ 50॥

சக்ஷுஷீ சந்த்³ரஸூர்யௌ தே(து) நாஸா ஸந்த்⁴யா புந: ஸ்ம்ரு’தா ।
ஓங்காரஸ்த்வத² ஸம்ஸ்காரோ வித்³யுஜ்ஜிஹ்வா ச நிர்மிதா ॥ 51॥

த³ந்தாஶ்ச பிதரோ ராஜந்! ஸோமபா இதி விஶ்ருதா: ।
கோ³லோகோ ப்³ரஹ்மலோகஶ்ச ஓஷ்டா² வாஸ்தாம் மஹாத்மந: ॥ 52॥

க்³ரீவா சாஸ்யா ப⁴வத்³ராஜந் காலராத்ரிர்கு³ணோத்தரா ।
ஏதத்³த⁴யஶிர: க்ரு’த்வா நாநாமூர்திபி⁴ராவ்ரு’தம் ॥ 53॥

அந்தர்த⁴தௌ⁴ ஸ விஶ்வேஶோ விவேஶ ச ரஸாம் ப்ரபு:⁴ ।
ரஸாம் புந: ப்ரவிஷ்டஶ்ச யோக³ம் பரமமாஸ்தி²த: ॥ 54॥

ஶைக்ஷம்(க்ஷ்யம்) ஸ்வரம் ஸமாஸ்தா²ய உத்³கீ³த²ம் ப்ராஸ்ரு’ஜத் ஸ்வரம் ।
ஸஸ்வரஸ்ஸ்வாநுநாதீ³ ச ஸர்வஶ: ஸ்நிக்³த⁴ ஏவ ச ॥ 55॥

ப³பூ⁴வாந்தர்ஜலக³த: ஸர்வபூ⁴தக³ணோதி³த: ।
ததஸ்தா வஸுரௌ க்ரு’த்வா வேதா³ந் ஸமயப³ந்த⁴நாந் ॥ 56॥

ரஸாதலே விநிக்ஷிப்ய யதஶ்ஶப்³த³ஸ்ததோ த்³ருதௌ ।
ஏதஸ்மிந்நந்தரே ராஜந்! தே³வோ ஹயஶிரோத⁴ர: ॥ 57॥

ஜக்³ராஹ வேதா³நகி²லாந் ரஸாதலக³தாந் ஹரி: ।
ப்ராதா³ச்ச ப்³ரஹ்மணோ பூ⁴ய: தத: ஸ்வா ப்ரக்ரு’திம் க³த: ॥ 58॥

ஸ்தா²பயித்வா ஹயஶிர(ரா) உத³க் பூர்வே மஹோத³தௌ⁴ ।
வேதா³நா மாலயஶ்சாபி ப³பூ⁴வாஶ்வஶிராஸ்தத: ॥ 59॥

அத² கிஞ்சித³பஶ்யந்தா தா³நவௌ மது⁴கைடபௌ⁴ ।
புநராஜக்³மதுஸ்தத்ர வேகி³தௌ பஶ்யதாம் து தௌ ॥ 60॥

யத்ர வேதா³ விநிக்ஷிப்தாஸ்தத் ஸ்தா²நம் ஶூந்யமேவ ச ।
தத்ர உத்தமமாஸ்தா²ய வேக³ம் ப³லவதாம் வரௌ ॥ 61॥

புநருத்தஸ்த²துஶ்ஶீக்⁴ரம் ரஸாநா மாலயாத்ததா³ ॥
த³த்³ரு’ஶாதே ச புருஷம் தமேவாதி³கரம் ப்ரபு⁴ம் ॥ 62॥

ஶ்வேதம் சந்த்³ரவித்³தா⁴ப⁴மநிருத்³த⁴தநௌ ஸ்தி²தம் ।
பூ⁴யோऽப்யமிதவிக்ராந்தம் நித்³ரயோக³முபாக³தம் ॥ 63॥

(64 Shloka not there in the list may be typographical error)

ஆத்மப்ரமாணரசிதே அபாமுபரி கல்பிதே ।
ஶயநே நாக³போ⁴கா³ட்⁴யே ஜ்வாலாமாலாஸமாவ்ரு’தே ॥ 65॥

நிஷ்கல்மஷேண ஸத்த்வேந ஸம்பந்நம் ருசிரப்ரப⁴ம் ।
தம் த்³ரு’ஷ்ட்வா தா³நவேந்த்³ரௌ தௌ மஹாஹாஸமமுஞ்சதாம் ॥ 66॥

ஊசதுஶ்ச ஸமாவிஷ்டௌ ரஜஸா தமஸா ச தௌ ।
அயம் ஸ புருஷ: ஶ்வேத: ஶேதே நித்³ராமுபாக³த: ॥ 67॥

அநே ந நூநம் வேதா³நாம் க்ரு’தமாஹரணம் ரஸாத் ।
கஸ்யைஷ! கோ நு க²ல்வேஷ! கிஞ்சஸ்வபிதி போ⁴க³வாந் ॥ 68॥

இத்யுச்சாரிதவாக்யௌ து போ³த⁴யாமாஸதுர்ஹரிம் ।
யுத்³தா⁴ர்தி²நௌ து விஜ்ஞாய விபு³த்³த:⁴ புருஷோத்தம: ॥ 69॥

நிரீக்ஷ்ய சாஸுரேந்த்³ரௌ தௌ ததோ யுத்³தே⁴ மநோ த³தே⁴ ।
அத² யுத்³த⁴ம் ஸமப⁴வத்தயோர்நாராயணஸ்ய வை ॥ 70॥

ரஜஸ்தமோவிஷ்டதநூ தாவுபௌ⁴ மது⁴கைடபௌ⁴ ।
ப்³ரஹ்மணோऽபசிதிம் குர்வந் ஜகா⁴ந மது⁴ஸூத³ந: ॥ 71॥

ததஸ்தயோர்வதே⁴நாஶு வேதா³பஹரணேந ச ।
ஶோகாபநயநம் சக்ரே ப்³ரஹ்மண: புருஷோத்தம: ॥ 72॥

தத: பரிவ்ரு’தோ ப்³ரஹ்மா ஹரிணா வேத³ஸத்க்ரு’த: ।
நிர்மமே ஸ ததா³ லோகாந் க்ரு’த்ஸ்நாந் ஸ்தா²வரஜங்க³மாந் ॥ 73॥

த³த்த்வா பிதாமஹாயாக்³ர்யாம் மதிம் லோகவிஸர்கி³கீம் ।
தத்ரைவாந்தர்த³தே⁴ தே³வோ யத ஏவாக³தோ ஹரி: ॥ 74॥

தௌ தா³நவௌ ஹரிர்ஹத்வா க்ரு’த்வா ஹயஶிரஸ்தநும் ।
புந: ப்ரவ்ரு’த்தித⁴ர்மார்த²ம் தாமேவ வித³தே⁴ தநும் ॥ 75॥

ஏவ மேஷ மஹாபா⁴கோ³ ப³பூ⁴வாஶ்வஶிரா ஹரி: ।
பௌராணமேதத் ப்ரக்²யாதம் ரூபம் வரத³மைஶ்வரம் ॥ 76॥

யோ ஹ்யேதத்³ப்³ர(த்³ப்³ரா)ஹ்மணோ நித்யம் ஶ்ருணுயாத்³தா⁴ரயீத வா ।
ந தஸ்யாத்⁴யயநம் நாஶமபக³ச்சே²த் கதா³சந ॥ 77॥

ஆராத்⁴ய தபஸோக்³ரேண தே³வம் ஹயஶிரோத⁴ரம் ।
பாஞ்சாலேந க்ரம: ப்ராப்தோ ராமேண பதி² தே³ஶிதே ॥ 78॥

ஏதத்³த⁴யஶிரோ ராஜந்! ஆக்²யாநம் தவ கீர்திதம் ।
புராணம் வேத³ஸஹிதம் யந்மாத்வம் பரிப்ரு’ச்ச²ஸி ॥ 79॥

யாயாமிச்சே²த்தநும் தே³வ: கர்தும் கார்யவிதௌ⁴ க்வசித் ।
தாம் தாம் குர்யாத்³விகுர்வாண: ஸ்வயமாத்மாநமாத்மநா ॥ 80॥

ஏஷ வேத³நிதி:⁴ ஶ்ரீமாந் ஏஷ வைத பஸாந்நிதி:⁴ ।
ஏஷ யோக³ஶ்ச ஸாங்க்²யம் ச ப்³ரஹ்ம சாக்³ய்ரம் ஹரி (ஹவி) ர்விபு:⁴ ॥ 81॥

நாராயணபரா வேதா³ யஜ்ஞா நாராயணாத்மகா: ।
தபோ நாராயணபரம் நாராயணபரா க³தி: ॥ 82॥

நாராயணபரோ த⁴ர்ம: புநராவ்ரு’த்தி து³ர்லப:⁴ ।
ப்ரவ்ரு’த்தி லக்ஷணஶ்சைவ த⁴ர்மோ நாராயணாத்மக: ॥ 83॥

நராயணாத்மகோ க³ந்த:⁴ பூ⁴மேஶ்சேஷ்டகம: ஸ்ம்ரு’த: ।
அபாம் சாபி கு³ணா ராஜந்! ரஸா நாராயணாத்மகா: ॥ 84॥

ஜ்யோதிஷாம் ச பரம் ரூபம் ஸ்ம்ரு’தம் நாராயணாத்மகம் ।
நாராயணாத்மகஶ்சாபி ஸ்பர்ஶோ வாயுகு³ண: ஸ்ம்ரு’த: ॥ 85॥

நாராயணாத்மகஶ்சைவ ஶப்³த³ ஆகாஶ ஸம்ப⁴வ: ।
மநஶ்சாபி ததோ பூ⁴தமவ்யக்த கு³ணலக்ஷணம் ॥ 86॥

நாராயணபர: காலோ ஜ்யோதிஷாமயநம் ச யத் ।
நாராயணபரா கீர்தி: ஶ்ரீஶ்ச லக்ஷ்மீஶ்ச தே³வதா: ॥ 87॥

நாராயணபரம் ஸாங்க்²யம் யோகோ³ நாராயணாத்மக: ।
காரணம் புருஷோ ஹ்யேஷாம் ப்ரதா⁴நம் சாபி காரணம் ॥ 88॥

ஸ்வபா⁴வஶ்சைவ கர்மாணி தை³வம் யேஷாம் ச காரணம் ।
அதி⁴ஷ்டா²நம் ததா² கர்தா கரணம் ச ப்ரு’த²க்³வித⁴ம் ॥ 89॥

விவிதா⁴ ச ததா² சேஷ்டா தை³வம் சைவாத்ர பஞ்சமம் ।
பஞ்சகாரணஸங்க்²யாதோ (தா) நிஷ்டா² ஸர்வத்ர வை ஹரி:(ரே)॥ 90॥

தத்த்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபி⁴ஸ்ஸர்வதோமுகை:² ।
தத்த்வமேகோ மஹாயோகீ³ ஹரி: நாராயண: ப்ரபு:⁴ ॥ 91॥

ப்³ரஹ்மாதீ³நாம் ஸலோகாநாம் ரு’ஷீணாம் ச மஹாத்மநாம் ।
ஸாங்க்²யாநாம் யோகி³நாம் சாபி யதீநாம் சாத்மவேதி³நாம் ॥ 92॥

மநீஷிதம் வி(தாநி) ஜாநாதி கேஶவோ ந து தஸ்ய வை ।
யே கேசித் ஸர்வலோகேஷு தை³வம் பித்ய்ரம் ச குர்வதே ॥ 93॥

தா³நாநி ச ப்ரயச்ச²ந்தி தப்யந்தே ச தபோ மஹத் ।
ஸர்வேஷாமாஶ்ரயோ விஷ்ணுரைஶ்வரம் விதி⁴(ஸர்க³) மாஸ்தி²த: ॥

ஸர்வபூ⁴தக்ரு’தாவாஸோ வாஸுதே³வேதி சோச்யதே ॥ 94॥

அயம் ஹி (ஏஷோ ஹி) நித்ய: பரமோ மஹர்ஷி: மஹாவிபூ⁴திர்கு³ணவாந் கு³ணாக்²ய:(நிர்கு³ணாக்²ய:)।
கு³ணைஶ்ச ஸம்யோக³முபைதி ஶீக்⁴ரம் காலோ யதா²ர்தாவ்ரு’துஸம்ப்ரயுக்த: ॥ 95॥(யதா²ர்த²ம் வ்ரதஸம்ப்ரயுக்தே)

நைவாஸ்ய விந்த³ந்தி(பு³த்³த்⁴யந்தி) க³தம் மஹாத்மநோ ந சா (நைவா) க³தம் கஶ்சிதி³ஹாநுபஶ்யதி
ஜ்ஞாநாத்மிகாஸ்ஸம்யமிநோ மஹர்ஷய: பஶ்யந்தி நித்யம் புருஷம் கு³ணாதி⁴கம் ॥96॥

இதி ஹயஶிரோபாக்²யாநம் ஸம்பூர்ணம் ।

———-

ஸ்ரீ விஷ்ணு புராணம் 3 அம்சம் 5 அத்யாயம் ஹயக்ரீவர் பற்றி விளக்கும்

03_05. யஜுர் வேதமும் இப்படி வைசம்பாயனரால் இருபத்தேழு பிரிவுகளாக்கப்பட்டு அவர் சிஷ்யர் பலருக்கும் ஓதுவிக்கப்பட்டது. ஒரு சமயம் பல மஹரிஷிகள் ஒன்று கூடி ஸபை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு எல்லா மஹரிஷிகளும் வரவேண்டும் என்றும், அப்படி வராதவர்களுக்கு ஏழு நாட்களுக்குள் ப்ரஹ்மஹத்தி தோஷம் ஏற்படும் என்றும் முன்னதாக விதித்தனர். அந்த நாள் வந்த போது வைசம்பாயனர் மட்டும் வரவில்லை. தன் ஸஹோதரியின் ஆண் குழந்தை வழியில் இருப்பதை அறியாமல் அதை இடறிவிட அதுவும் உடனே இறந்து விட்டது. வைசம்பாயனருக்கும் இதைக் காரணமாகக் கொண்டு ப்ரஹ்மஹத்தி பற்றிக் கொண்டது.

அவர் உடனே தன் சிஷ்யர்களை அழைத்து நான் தெரியாமல் தான் இதைச் செய்து விட்டேன். எனினும் தெரிந்தே செய்தால் வரும் ப்ரஹ்மஹத்யா தோஷத்திற்கான ப்ராயச்சித்தத்தை அறிந்து, அதை உடனே அனுஷ்டித்து என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். ப்ரஹ்மராதனின் புத்ரர் யாக்ஞவல்க்யர் என்பவரும் வைசம்பாயனரின் ஒரு சிஷ்யர். தர்மங்களனைத்தையுமறிந்தவர். குரு சிஷ்ரூஷையில் பற்றுள்ளவர். அவர் ஆர்வத்தால் “இதற்கு எதற்கு அனைத்து சிஷ்யர்களும். நான் ஒருவனே போதுமே இதைத் தாங்கவும், போக்கவும். அவர்களுக்கு இதைத் தாங்க ஆற்றலும், தவமும் போதாதே” என்று கேட்டுக் கொண்டார். குருவின் மேலுள்ள பக்தி மேலீட்டால் இப்படிக் கூறிய யாக்ஞவல்க்யரை வைசம்பாயனர் கோபித்துக் கொண்டார்.

“நீ மற்ற ப்ராஹ்மணர்களை அல்ப சக்தியுள்ளவர்கள் என்றாய். இப்படி ப்ராஹ்மணர்களை அவமதிக்கும் சிஷ்யன் எனக்கு வேண்டாம். நீ என்னிடமிருந்து கற்றவை அனைத்தையும் உடனே கக்கிவிடு” என்று கூறி விட்டார். யாக்ஞவல்க்யர் வருத்தமடைந்தாலும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல், கோபித்துக் கொள்ளும் இந்த ஆசார்யரும் இனி நமக்கு வேண்டாம் என்று தன் வாயில் விரல்களை விட்டு யஜுர் வேதத்தை ரூபங்களாக, ரத்தத்துடன் வாந்தி எடுத்து விட்டுப் போய் விட்டார். மற்ற சிஷ்யர்கள் ரத்தத்துடன் இருந்ததால் அந்த பாகங்களை தித்திரி எனும் பறவை உருவங்கொண்டு அவற்றை உண்டனர். தைத்திரீயர்கள் என்று பெயரும் பெற்றனர். அந்த பாகமும் தைத்திரீயம் என்று பெயர் பெற்றது.

வேறு சில சிஷ்யர்கள் வைசம்பாயனரின் ப்ரஹ்மஹத்யா தோஷத்தைப் போக்குவதற்காக ஆத்வர்யவம் (அத்வர்யுவின் வேலை) என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தனர். அவர்களுக்கு சரணாத்வர்யு என்ற பெயர் உண்டாயிற்று. வேதங்களைக் கக்கிவிட்ட யாக்ஞவல்க்யர் மீண்டும் யஜுர் வேதங்களைக் கற்க விரும்பி ஸூர்யனை உபாஸித்தார். “பகவானே! நீரே மோக்ஷத்திற்கு வழியாயிருக்கிறீர். அளவற்ற தேஜஸ்வியும் நீரே. வேதங்களின் ஸ்வரூபமாயும், ப்ரகாசத்துடனும் இருக்கிறீர். வெயிலைக் கொடுக்கிறீர். சந்த்ரனைப் போஷிக்கிறீர். ஜகத்துக்குக் காரணமாயிருக்கிறீர். கலை, காஷ்டங்களும் உன்னைக் கொண்டே உலகத்தார் கணிக்கிறார்கள். நீரே த்யானிக்கத்தக்கவர். ப்ரபஞ்ச ஸ்வரூபியும் நீரே, பரப்ரஹ்ம ஸ்வரூபியும் நீரே, ப்ரணவ ஸ்வரூபியும் நீரே.

நீரே சந்த்ரனையும் வளர்த்து தேவதைகளையும், பித்ருக்களையும் ரக்ஷித்து வருகிறீர். த்ருப்தி ஸ்வரூபமாயிருப்பவரும் நீரே. பனி, வெப்பம், மழைகளை உண்டுபண்ணுபவரும் நீரே. முக்கால ஸ்வரூபியும் நீரே. இருளைப் போக்கி உலகிற்குப் பதியாய் இருப்பவரும் நீரே. உன் உதயமின்றி உலகில் ஒருவரும் ஸத்கர்மங்களை அனுஷ்டிக்கத் தகுதியடைய மாட்டான். தண்ணீரும் உன்னாலேயே சுத்தியடைகிறது. ஆதி தேவனும் நீரே. உமது தேரின் ஒளியே உலகிற்கு இதமாக இருக்கிறது. ஞான ரூபமாகவும், அம்ருத ரூபமாகவுமிருந்து உன் குதிரைகள் உமது தேரைத் தாங்குகின்றன. உலகிற்குக் கண் நீர்” என்று பலவாறுத் துதித்து வணங்கினார். குதிரை வடிவில் ஸூர்யனும் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரத்தை அளிப்பதாக மகிழ்வுடன் கூறினார். யாக்ஞவல்க்யர் என் முந்தைய குருவான வைசம்பாயனர் அறியாத யஜுர் வேதங்களை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். வ்யாஸர் வைசம்பாயனருக்கு உபதேஸிக்காத அயாதயாமம் என்ற யஜுஸ்ஸுக்களை ஸூர்யனும் யாக்ஞவல்க்யருக்கு உபதேசித்தார். குதிரையின் (வாஜி) உருவிலிருந்து உபதேஸித்ததால் இதை அத்யயனம் செய்பவர் வாஜிகள் என்றழைக்கப்பட்டனர். இந்த வாஜஸனேய சாகையை காண்வ சாகை முதலான பதினைந்து பிரிவுகளாகப் பிரித்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார்.

——–

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம் நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத் தஸ்ய நிஸ்ஸர தேவாணீ ஜன்ஹீகன்யாப்ரவாஹவத்

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி விசோபதே ஸ வைகுண்ட கவாடோத் காடனக்ஷம ச்லோக த்ரயமிதம் புண்யம்

ஹயக்ரீவ பதாங்கிதம் வாதி ராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்.

———-

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———

தேவநாதப் பெருமாளை ‘தாழக் கோவிலில்’ வழிபட்டு விட்டு, கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், சிறிய செந்நிற மலை காணப்படும். ‘அவ்ஷதகிரி’ என்று அழைக்கப்படும் இந்த மலை மீது 74 படிகள் உள்ளன.
இந்த மலை மீதுள்ள அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து தான், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.
ஆயக் கலைகள் 64-ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். நான்கு வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் கைப்பற்றிச் சென்றனர். பெருமாள், ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அந்த அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு, பிரம்மதேவரிடம் ஒப்படைத்தார்.
ஹயக்ரீவர் கல்வி, ஞானம் ஆகிய வற்றிற்கு ஆதாரமாக உள்ளவர். லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியருக்கு அருளிச் செய்தவர். கருடனால் தனக்கு உபதேசிக்கப்பட்ட ஹயக்ரீவ மந்திரத்தை உபாசித்து, ஹயக்ரீவரின் அருள் காட்சியை கண்டார் தேசிகன்.
திருக்காட்சி தந்த ஹயக்ரீவர், தேசிகனுக்கு சகல கலைகளும் கைவரச் செய்தார்.
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம். மேலும் ஞானம், வித்தைகளில் மேன்மையும் கிட்டும். இத்தலத்தில் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
நாம் தினந்தோறும் தேசிகன் இயற்றிய ‘ஹயக்ரீவ ஸ்தோத்திரம்’ படித்து வந்தால், கல்வியில் உயர் நிலையையும், ஞானத்தையும், செல்வத்தையும் பெறலாம். இந்த தலத்தில் லட்சுமி நரசிம்மர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
இவரை ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும், சுவாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, பானகம் நைவேத்தியம் செய்தால் வறுமை, கடன் தொல்லை அகலும். செவ்வாய் தோஷமும் விலகும்.
———–

ஜ்ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் —
ஆதாரம் சர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே– 1-

அறிவின் திருவுருவமான ஸ்ரீ ஹயக்ரீவரைத் தியானியுங்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவர் அறிவு மற்றும் ஆனந்தத்தின் ஒருங்கிணைந்த வடிவம்.
குதிரையின் முகத்தையும் கழுத்தையும் உடையவனும்,
தூய வெண்ணிறப் படிகத்தைப் போன்ற பளபளப்பான, பளபளப்பான உடலையும் உடையவனும்,
எல்லாக் கல்விக்கும் இருப்பிடமானவன். எல்லா அறிவுக்கும் முதல் கடவுள் அவர்.

ஜ்ஞான ஆனந்த மயம் -தேவம் – -தீவு கிரீடா தாது –கல்வியே சிறு விளையாட்டு -ஸூ லபமாக அருளுவான் –
தீவு பிரகாசம் மிக்கு என்றுமாம் –ஒளி எத்தால் ஆக்கப்பட்டது —
ஜ்ஞானம் ஆனந்தம் கூட்டுக் கலவையால் –அறிவும் இன்பமும் –ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –
ஆனந்தம் அனுபவிக்கவும் ஞானம் வேண்டுமே –
வித்யா -விநயம் -பாத்ரதாம் -பெரியவர் ஆசீர்வாதம் அன்பு பெற்று -தனம் -சேரும் ஆப் நோதி -ஸூ கம் -வரும்-என்பர் –
முக்குறும்பு அறுக்க வேண்டுமே –
நிர்மல ஸ்படிகாக்ருதிம் –அழுக்கே இல்லாத ஸ்படிகம் -தெளிவு பிறக்கும் -அறிவால் ஆனந்தம் தெளிவு கிட்டும்
ஆதாரம் சர்வவித்யாநாம் -இருப்பிடம்–இவை அனைத்தையும் -தாங்குபவனே இவன் –
ஹயக்ரீவம் உபாஸ்மஹே– தொழுவோம் -நம்மை தம்மை ஓக்க அருளுபவர்

————

ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—2-

ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —

தம் பக்தர்களின் உலகத் துன்பங்களைப் போக்குவதற்காக உருவான ஒளி மயமான
ஸ்ரீ ஹயக்ரீவரின் மகிமைகளைப் பாடுங்கள்.
அவரது அருள் உருவம் தூய வெள்ளை படிகத்தை ஒத்திருக்கிறது.
ஸ்ரீ ஹயக்ரீவர் பளபளப்பான அமிர்தத்தை ஒத்த வெண்மையான கதிர்களை பிரகாசிக்கிறார்,
இதனால் மூன்று உலகங்களையும் வெண்மையாக்கி, தூய்மையாக்குகிறார்.
மூன்று உலகங்களுக்கும் தன் அருளை வழங்குகிறார்.

குதிரை வடிவில் இருந்து வெளிப்படும் ஹலா ஹல சப்தம் உபநிடதங்களின் சாரத்தையும்,
அவரது கால்களில் அலங்காரத்தின் தொனியையும் உள்ளடக்கிய ஒரு நெய்யிங் ஓசையாகும்.
நெய்யிங் என்பது வேதங்களால் தொடர்ந்து எதிரொலிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஹயக்ரீவரின் நெய்தல், ஹேஷா ஹலா ஹலம், அசுபங்கள் மற்றும் பாவங்கள்
மற்றும் ஒருவரின் பாதையில் இருந்து தடைகளை நீக்குகிறது.
துரதிர்ஷ்டங்களை நீக்க ஸ்ரீ ஹயக்ரீவரை ப்ரார்த்தனை செய்து, ஒருவருடைய சாதாரண
துன்பங்களுக்கு சாந்தமான தைலமாகச் செயல்படும் அவரது அருளான நேயத்தை
கேட்கும் திறனைப் பெறுங்கள்.

——————

சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –3-

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –

ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீகத் தொண்டையில் இருந்து வெளிப்படும் ஹலா ஹலா என்ற ஒலிகள்
சாம வேதங்களின் தொகுப்பு, ரிக் வேதங்களின் சுருக்கப்பட்ட பொருள்
மற்றும் யஜுர் வேதங்களின் உச்சரிப்பின் சாராம்சம்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் வடிவமே மந்திரங்களின் சாரமாக உள்ளது, ஏனெனில்
அவை அவருக்குள் பொதிந்துள்ளன.
தூய அறிவைப் பெற விரும்பும் எந்தவொரு நபரின் வழியில் நிற்கும் அனைத்து தடைகளையும்
ஹயா ஹயா ஒலிகள் நீக்குகின்றன.
அவர்கள் உண்மையான அறிவுக் கடலில் இருந்து இடைவிடாத அலைகளைப் போன்றவர்கள்.
அவர்கள் அறிவின் விளக்கை ஏற்றி, மோக்ஷம் (முக்தி) நோக்கிய நமது பாதையை ஒளிரச் செய்கிறார்கள்.

ஹலா ஹல த்வனியின் சப்தங்களே, வேதங்களின் உண்மையைத் திரித்துக் கூறும்
வீண் விவாதங்களால் எழும் உள் இருள் மற்றும் குழப்பத்தை நீக்குகின்றன.
அப்பாவிகளும் பாதிக்கப்படக்கூடியவர்களும் தங்கள் மாயையான கருத்துக்களைப் பாதுகாக்கும்
ஆதரவாளர்களால் எழுப்பப்படும் சத்தத்திலிருந்து மீட்கப்படுகிறார்கள்.
அக்கம்பக்கத்தின் தெய்வீக ஒலிகள் நம் உணர்வைத் தடுக்கும் கருமேகங்களை அழித்து,
கொள்கைகளைப் பற்றிய உண்மையான புரிதலையும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து
நம்மை விடுவிக்கின்றன.

———–

ப்ராஸீ சந்த்யா காசிதந்தர் நிசாயா ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜன ஸ்ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –4-

வக்த்ரீ வேதான்– அடியேனுக்கு வேதார்த்தங்களை விளங்க அருளினவன்

ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீகமான ஹலா ஹலாவின் சக்தியானது எந்த ஒரு இருளைப் போக்க ஸூரிய உதயத்தைப் போன்றது.
இந்த பளபளப்பான படம் இரவின் பயங்கரத்தை விரட்டும் சக்திவாய்ந்த ஊடகமாக செயல்படுகிறது.
அவர் வேதங்களின் பிரச்சாரகர் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களிலும்
மனிதர்களிலும் வாழும் உள்ளார்ந்த ஆன்மா.

அவர் பேச்சின் கடவுள், உண்மையில் ஸ்ரீ வைகுண்டத்தின் பரம வாசுதேவனின் அவதாரம்.
பிரம்மதேவருக்கு வேத உபதேசம் தந்த சக்தி வாய்ந்த வித்யா மூர்த்தி அவர்.
அவர் நமக்கு தூய அறிவை வெளிப்படுத்த உதவும் தெய்வீக சக்தி.
அக இருளை விரட்டும் அந்த தனித்துவமான காலை வெளிச்சம் அவரே,
மேலும் இந்த மங்களகரமான மற்றும் தெய்வீக வடிவம் மனிதகுலத்திற்கு முன்பாகவும்
உள்ளேயும் பிரகாசிக்க ஜெபிக்க வேண்டும்.
மனிதர்கள் இதுவரை அறியாததைக் காணக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

பிரம்ம தேவன், மது மற்றும் கைடப ஆகிய இரு அசுரர்களிடம் வேதங்களை இழந்தபோது,
​​பரம பாதுகாவலரான விஷ்ணு, அவரைக் காப்பாற்ற வந்தார்.
கடவுள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து இரண்டு அசுரர்களையும் தண்டித்தார்.
அவர் வேதங்களைக் காப்பாற்றினார்
மற்றும் பிரம்மா தனது கடமையைத் தொடர உதவினார்.
பிரம்ம தேவனுக்கு நான்கு வேதங்களைப் பற்றி உபதேசித்தபடியால் அவர் கற்றலின் உயர்ந்த கடவுள்.

——————-

விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம்
தயா நிதிம் தேஹ ப்ருதாம் சரண்யம் தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே –5-

தூய மற்றும் தெய்வீக அறிவின் உயர்ந்த வடிவமான ஸ்ரீ ஹயக்ரீவரை பக்தர்கள் அடைக்கலம் தேடுகிறார்கள்.
அவர் முழுமையான தூய்மையானவர்.
நிரம்பி வழியும் கருணைக் கருணை இல்லம், தன்னைச் சரணடையும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து அவர்களை விடுவிக்கும் தனது தெய்வீக அறிவால் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
அவர்களை அறியாமை இருளில் இருந்து விடுவிப்பதாக சபதம் எடுத்துள்ளார்.
அவர் ஒரு கலங்கரை விளக்கமாக, அவர்களின் ஒரே அடைக்கலமாக நிற்கிறார்.
அவர் அனைவரையும் தவறாது காப்பவர்.

—————

அபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்
ஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ காருண்யதோ நாத கடாக்ஷணீய —6-

அளியல் நம் பையல் -அறியாத சிறுவன் -முக்த்த பிராயன் -என்று திரு உள்ளம் பற்றி –
உனது தயை க்ஷமை கொண்டு அருளுவாய் –

ஸ்தோத்திரத்தின் இயற்றிய ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஹயக்ரீவரைப் பற்றி உரையாற்றுகிறார்.
அவர் தனது மட்டுப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் திறன்களால் தனது மகிமைகளைப் பாடுவதற்கான
முட்டாள்தனமான ஆனால் தைரியமான முயற்சிக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறார்.
வேதங்கள் மிகப் பெரியவை, ஆசிரியர் இல்லை.
இன்றும் கூட, ஸ்ரீ ஹயக்ரீவரின் தனித்துவமான குணங்கள், அவரது புனிதமான அமைப்பு
மற்றும் முடிவில்லாத தெய்வீக பண்புகளை வரையறுக்க மக்கள் போராடுகிறார்கள்.
பெரிய வேதங்களால் கூட அவரது பெருமைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு போற்ற முடியாது.

ஒரு தாழ்மையான பக்தரான இசையமைப்பாளர், ஸ்ரீ ஹயக்ரீவரைத் துதிக்க,
முட்டாள்தனமாக இருந்து தைரியமாக முன்னேறியதாக கூறுகிறார்.
தனக்கு எந்த அறிவும் இல்லாத குழந்தை என்றும்,
ஸ்ரீ ஹயக்ரீவரின் பெருமைகளைப் பாடுவதற்குத் தகுதியற்றவர் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த அசாத்தியமான பணியில் ஈடுபட அவர் தனது குறைபாடுகளுக்கு மன்னிப்பு கேட்கிறார்.

————–

தாக்ஷிண்ய ரம்யா கிரி ஸஸ்ய மூர்த்தி தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-

ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்து அறிவு மற்றும் கற்றல் கடவுள். அவர் நித்திய ஆதாரம்.

ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து தெய்வீக ஞானத்தைப் பெற்றவர்களில் முதன்மையானவர் தட்சிணாமூர்த்தி.
அவர் ஒரு தங்க ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து உள்வாங்கிய உயர்ந்த உண்மையை,
நான்கு புகழ்பெற்ற மற்றும் மூத்த முனிவர்களான அகஸ்தியர், புலஸ்தியர், தக்ஷர் மற்றும்
மார்க்கண்டேயர் ஆகியோருக்கு மௌனத்தின் மூலம் போதித்தார்.

ஞானத்தின் தெய்வீக ஆதாரமும், பிரம்மாவின் மனைவியுமான சரஸ்வதி தேவி,
வெள்ளைத் தாமரையின் இருப்பிடம்,
மற்றும் வலிமை மிக்க முனிவர் வேத வியாசர், அனைவரும் தங்கள் தெய்வீக உரையை
ஸ்ரீ ஹயக்ரீவரின் சக்தியின் ஒரு சிறிய துண்டிலிருந்து பெற்றனர். அறிவு.
ஸ்ரீ ஹயக்ரீவர் தெய்வீக அறிவின் உயர்ந்த ஆதாரம்.
பெரியவர்களும் புகழ் பெற்றவர்களும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அறிவின்
ஒரு பகுதிக்கு கூட அவருக்கு கடன் பட்டிருக்கிறார்கள்.

————

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-

மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக
அன்றோ மீண்டும் வழங்கினாய் –

ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்து அறிவின் பொக்கிஷம்.
தனது கவனச் சிதறல் தருணத்தில் மது மற்றும் கைடப ஆகிய இரு அசுரர்களிடம் வேதங்களை இழந்த
பிரம்மாவுக்கு அவர் வேதங்கள் பற்றிய தெய்வீக அறிவுரைகளை தெளிவற்ற
விவரங்கள் பற்றிய அர்த்தத்துடன் வழங்கினார்.
மொத்த நஷ்டத்தில், பிரம்மாவுக்கு எப்படி செயல்படுவது என்று தெரியவில்லை.
பிரம்மாவின் அவல நிலைக்கு கடவுளின் அனுதாபம் அவரை வேதங்களை மீட்டெடுக்கவும்,
வேதங்கள் மற்றும் அவற்றின் அர்த்தத்தை மீண்டும் பிரம்மாவை மீண்டும் கற்பிக்கவும் அவரைத் தூண்டியது.

ஸ்ரீ ஹயக்ரீவர் பிரம்மாவின் அதிர்ஷ்டத்தையும் படைப்பாளி என்ற அந்தஸ்தையும் மீட்டெடுக்க
சரியான நேரத்தில் செயல்பட்டார்,
தவறினால் அவர் தனது கடமைகளைச் செய்ய இயலாது.
பிரம்மா தேவர் தனது படைப்புக் கடமைகளைத் தொடரும் பாக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற,
தலையிடுமாறு பரமாத்மாவிடம் வேண்டினார்.
கடவுள் பிரம்மாவின் பிரார்த்தனைக்கு பதிலளித்தார்
மற்றும் அவரது தெய்வீக அறிவை மீட்டெடுத்தார்.

———-

விதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்
தேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம் அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –9-

பரம அறிவான ஸ்ரீ ஹயக்ரீவர், தேவ குருவான பிருஹஸ்பதியை நேர்மையான பாதையில்
இருந்து விலகவிடாமல் நிலைப்படுத்தினார்.
பிருஹஸ்பதி, பிரம்மாவின் மனதின் பத்து சந்ததிகளில் ஒருவரான அங்கிராச பிரஜாபதியின்
சிறந்த ஆசிரியரும் மகனும் ஆவார்.
அவர் தனது சிறந்த புத்திசாலித்தனம் மற்றும் பேச்சு ஆற்றலுக்காக அறியப்பட்டவர்
மற்றும் வானியல் மற்றும் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

பாவம் செய்ய முடியாத வம்சாவளி மற்றும் சந்ததியினர்,
ஒரு காலத்தில், பிருஹஸ்பதி தர்ம சாஸ்திரங்களை விளக்கும் போது சிக்கலில் சிக்கினார்.
அவர் தேவர்களுக்கான போதனைகளின் விரிவான தொகுப்பான பிரஹஸ்பதி சம்ஹிதையை எழுதினார்.
அவரது மனம் ஊசலாடத் தொடங்கியது, அவர் மிகவும் குழப்பமடைந்தார்,
அவர் கடவுள் இருப்பதை முற்றிலும் மறுக்கும் ஒரு உலக அமைப்பை உருவாக்கினார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் தலையிட்டு பிருஹஸ்பதியின் மனதை நிலைப்படுத்தினார்,
அவரை சாத்விக் மார்க்கத்தில் (நீதியின் பாதையில்) நிறுத்தினார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் பிருஹஸ்பதி மற்றும் அவரது சீடர்கள் இருவரையும் தவறான பாதையில் செல்லாமல் காப்பாற்றினார்.
அவரது சரியான நேரத்தில் தலையீடு தேவர்களின் ராஜ்யங்கள் காட்டு அலைவுகளிலிருந்தும்
அசுரர்களின் செல்வாக்கின் கீழ் விழுவதையும் தடுத்தது.

பிருஹஸ்பதி தவறான தர்க்கத்திலிருந்து காப்பாற்றப்பட்டு தனது தெய்வீக அறிவை மீண்டும் பெற்றார்.
அவர் ஸ்ரீ ஹயக்ரீவரை தனது சரியான நேரத்தில் பாதுகாவலராகவும் அருளாளராகவும் ஏற்றுக் கொண்டார்.

————

அக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ ஆதஸ்திவாந் மந்த்ர மயம் சரீரம்
அகண்ட சாரைர்ஹவிஷாம் ப்ரதாநை ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே —10-

ஒரு யாகம் (சடங்கு யாகம்) நடத்தும் போது, ​​விழாவை நிகழ்த்தும் நபர் தேவர்களை
தங்கள் ஹவிஸ் (காணிக்கை) பங்கைப் பெற அழைக்கிறார்.
பெயர் சொல்லி அழைக்கப்படும் தேவர்கள், முன் வந்து, தங்கள் கைகளை நேரடியாக நீட்டி,
தங்கள் ஹவிஸ் பங்கைப் பெறுகிறார்கள்.
பெரும்பாலான நேரங்களில், அக்னி தேவதை தேவர்களின் பிரதிநிதியாக வருகிறது.
யாகத்திலிருந்து ஹவிஸ்களைப் பெறுவதில் இடைத்தரகராகச் செயல்படுகிறார்.

ஹஸ்தி கிரியின் மேல் பிரம்மதேவர் நடத்திய யாகத்தில், யக்ஞ குண்டத்தின் (புனித நெருப்புக்கான இடம்)
நெருப்பின் கோபுரச் சுடர்களுக்கு மத்தியில் ஸ்ரீ ஹயக்ரீவரே வரதராஜன் வடிவில் தோன்றினார்.
அவர் நேரடியாக ஹவிஸ்களைப் பெற்றார்,
இது பிரம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது.
தேவர்கள் தங்கள் பெயர்கள் அழைக்கப்பட்டபடி வந்து கூடியிருந்தனர்.
அவர்கள் கைகளை நீட்டியபோது, ​​ஹவிஸ் அவர்களைத் தவிர்த்து விட்டார்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவர் நேரடியாக புனிதப் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டார்,
மேலும் பிரம்மா தேவர்களுக்கு அவர் ஒரு சிறப்பு யாகம் செய்கிறார்,
மேலும் அவரது நோக்கம் குறிப்பிட்டது என்று விளக்கினார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் ஹவிஸ்ஸை நேரடியாகப் பெற்று தேவர்களுக்கு விநியோகித்தார்.
அவர் தேவர்களுக்கு சுவையான ஹவிஸ்ஸை பரிசளித்தபோது, ​​அது அவர்களுக்கு முழு மன நிறைவை அளித்தது.

————–

யந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் யா மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்
தத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம் –11-

ஸ்ரீ ஹயக்ரீவர் பிரணவத்தின் வடிவம்.
அவர் அனைத்து எழுத்துக்களுக்கும் ஆதாரமாகவும், பிரபஞ்சத்தின் முக்கிய காரணமாகவும் இருக்கிறார்.
பிரபஞ்சம் தேவர்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கிய பிற உயிரினங்களால் ஆனது.
காற்று, வானம், நீர், நெருப்பு, பூமி மற்றும் பிற உண்மைகளை உள்ளடக்கிய இயற்கையின் அடிப்படை சக்திகள் உள்ளன.
அவை பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போன்ற வேதங்களின் உதவியுடன் உருவாக்கப்படுகின்றன.
அனைத்து வேதங்களுக்கும் முதன்மையான மூலமானது பிரணவம் எனப்படும் மந்திரம் ஆகும்.
ஏக அக்ஷரம் என்றும் அழைக்கப்படும்
இது அழியாத அக்ஷரம் (எழுத்து) மற்றும் முதன்மையானது.
ஸ்ரீ ஹயக்ரீவர் பிரணவத்தின் மூல வடிவம் என்பதை நேர்மையான வழியில் செல்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
எல்லா எழுத்துக்களுக்கும் ஆதாரமாகவும், எல்லா அறிவுக்கும் ஆதாரமாகவும் இருக்கிறார்.

———

அவ்யாக்ரு தாத் வ்யாக்ருத வாநசி த்வம் நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்
சம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம் வாகீஸ்வர த்வாம் த்வது பஞ்ச வாச —12-

ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்து அறிவுக்கும் கடவுள் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறார்.
பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எந்த வடிவமும் பெயரும் இல்லை.
இயற்கையின் மூலத்திலிருந்து, அவர் அகங்காரங்களையும் பஞ்ச பூதங்களையும்
(காற்று, நீர், நெருப்பு, வானம் மற்றும் நிலம்) உருவாக்கினார்.
அவர் அவர்களுக்கு பெயர்களையும் ஒரு உறுதியான வடிவத்தையும் கொடுத்தார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் பின்னர் அந்தராயாமியாக (ஸர்வஞ்ஞராக எல்லாம் அறிந்தவராக ) அவர்களுக்குள் நுழைந்தார்.
அவர் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார்-மற்றும் இறுதி இலக்காக இருக்கிறார்.
அவரிடமிருந்து தோன்றிய வேதங்கள் அவரை முதன்மையான ஆதாரமாகவும்
பிரபஞ்சத்தின் குறிக்கோளாகவும் வாழ்த்துகின்றன.
ஸ்ரீ ஹயக்ரீவர் சிருஷ்டிகர் மட்டுமல்ல,-இறுதி இலக்கும் கூட என்பதை பரந்த அறிவையும்,
வேத வாக்கியங்களையும் பெற்றவர்கள் உணர்கிறார்கள்.
அவர் பிரஜாபதி (அரசர்) மற்றும் அனைவரையும் உருவாக்குகிறார்,-பின்னர் அவர்களில் வசிக்கிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் அனைத்தையும் உள்ளடக்கியவர்
மற்றும் சமமானவர் அல்லது உயர்ந்தவர் இல்லாத ஒப்பில்லா அப்பன்

————–

முக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம் மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்
விபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே வேலா முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —13-

சுத்த சத்வம் -வெண்மை -உதய சந்திரன் நீராக்கியோ -பாற்கடலோ -என்னும் படி அன்றோ —

ஸ்ரீ ஹயக்ரீவர் இங்கே ஒரு தூய படிகமாக விவரிக்கப்படுகிறார்,
அதன் சாயல் சந்திரனின் ஒளிரும், குளிர்ச்சியான வெண்மையான கதிர்களுடன் ஒப்பிடத்தக்கது,
அவை ஆறுதலளிக்கும் மற்றும் அனைத்து உலகத் துன்பங்களையும் நீக்குகின்றன.
ஸ்ரீ ஹயக்ரீவரின் இந்த திருவுருவம், அவரை ஆழ்ந்து தியானிப்பவர்களுக்கும்,
அவரது களங்கமற்ற புனித பிரசன்னத்தை தரிசனம் செய்யும் (பார்க்கும்) பெரும்
பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஸ்ரீ ஹயக்ரீவரின் உருவம் பாற்கடலில் இருந்து உருவாகும் அலைகளுடன் ஒப்பிடப்படுகிறது.
பெரிய வணக்கத்துக்குரியவர்களும் அறிவாளிகளும் இந்த உருவத்தில் தியானம் செய்து பேரின்ப நிலையில் உள்ளனர்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீக உருவம் ஒரு அழகிய தூய வெண்மை மற்றும் அழகைக் கொண்டுள்ளது,
அவர் புத்துணர்ச்சியூட்டும் அமிர்தத்தை ஒத்த சந்திரனின் குளிர்ச்சியான கதிர்களைப்
போன்ற சாயல்களை வெளிப்படுத்துகிறார்.
இந்த மகிழ்ச்சியான அலைகள் தியானம் செய்பவர்கள் மீது தெறித்து, விவரிக்க முடியாத
பேரின்ப நிலையில் அவர்களை ஆழ்த்துகின்றன.

————-

மநோ கதம் பஸ்யதி ய சதா த்வாம் மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–14-

யோகிகள் மற்றும் சன்யாசிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச ஸ்வான்ஸ் தெய்வீக ஏரியான
மானசரோவரில் வசிப்பிடத்தை மேற்கொள்கின்றனர்,
மேலும் ஸ்ரீ ஹயக்ரீவர் அவர்களின் மனதிலும் இதயத்திலும் தங்குவதைத் தேர்வு செய்கிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித வடிவத்தை தியானிக்கும் யோகிகள், அவரது இதயத்தில்
ஒரு வெள்ளை தாமரை மீது அமர்ந்திருப்பதைக் காட்சியளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
அவர்கள் தெய்வீக உரையின் கட்டளையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
கடவுள் இந்த பக்தர்களைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்து அவர்களின் தியான முயற்சிகளுக்கு உதவுகிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரைத் தங்கள் உள்ளத்தின் மையத்தில் தரிசனம் செய்யும் யோகிகளுக்குச் சேவை செய்ய
அனைத்து வகையான அறிவுகளும் விரைகின்றன. -புண்ணியவான்கள் எல்லா அறிவுக்கும் ஆதாரமாகிறார்கள்.

————

அபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம் ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை
வாசம் ப்ரவாஹைர நிவாரிதைஸ்தே மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–15-

க்ஷணம் நேரம் கூறு போட்டு சிறிய அளவிலும் த்யானித்தாலும் பேர் அருளை அளிக்கும் தேஜோ மயன் அன்றோ –

ஸ்ரீ ஹயக்ரீவரின் பக்தர்கள், அவரது ஒளிரும், வெண்மையும், பளபளப்பும் கொண்ட
அவரது வடிவத்தை அரைக் கணம் மட்டுமே தியானிக்க வேண்டும்,
அதனால் அவரது வடிவில் இருந்து வெளிப்படும் கறையற்ற வெண்மையான கதிர்கள்,
எப்போதும் பாயும் அமிர்தத்தைப் போல, மூடப்பட்டு நனைந்த பலனைப் பெறுவார்கள்.
நிலவு. அவரிடமிருந்து வரும் தூய வெண்ணிறக் கதிர்களில் இருந்து பக்தர்கள் பெறும் நனைதல்,
மலைகளில் இருந்து பாயும் ஆகாச கங்கையை விட வேகமான தெய்வீக பேச்சின்
தூய்மையையும் வேகத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது.
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் தெய்வீக பேச்சின் வேகத்துடன் ஒப்பிடும் போது
ஆகாச கங்கையின் வேகம் அற்பமானது.
அப்படிப்பட்ட புண்ணியவான்களுக்கு வேத மந்திரங்களின் வரம் உண்டு.

————–

ஸ்வாமின் பவத் த்யான ஸூதாபிஷேகாத் வஹந்தி தன்யா புலகாநு பந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் அங்கேஷ் விவா நந்ததும் அங்கு ரந்தம்–16-

ஸ்ரீ ஹயக்ரீவரின் பக்தர்கள் தங்கள் கவனத்தை அவரது தூய வடிவில் செலுத்தும்போது
மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். விடாமல் அவரையே தியானிக்கிறார்கள்.
ஆழ்ந்த தியானத்தில், அவர்கள் அமிர்தத்தில் மூழ்கிய மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
அவர்களின் இதயத்தின் ஆழமான மையத்தில் கடவுளை அனுபவிப்பதன் மகிழ்ச்சி
அவர்களின் முடிகளை முடியை நிலைநிறுத்துகிறது.
ஸ்ரீ ஹயக்ரீவரைப் பற்றிய அவர்களின் தியானம் அவர்களின் இதயங்களில் முடிகளை வேர்களாக உயர்த்துகிறது,
பின்னர் அவை வெளிப்புறமாக உயிரை எடுத்து, கைகால்களில் துளிர் விடுகின்றன,
அங்கு அவை முடிவில் நிற்கின்றன.
மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஒரு உயிரினத்தின் மையமும் ஆதாரமும் இதயம். ஆனந்தக் கண்ணீரும்
உள் உள்ளத்தில் இருந்து வெளி உறுப்புகள் வரை துளிர்க்கும் மகிழ்ச்சியும் பேரின்ப அனுபவத்தின் சின்னம்.

————

ஸ்வாமின் ப்ரதீச ஹ்ருதயேந தந்யா த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்
அமாந்தமாநந்த பயோதி மந்த பயோபி ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –17-

யோகிகள் ஸ்ரீ ஹயக்ரீவரின் தியானத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அவர்களின் மனம் வெளிப்புற கவனச் சிதறல்களிலிருந்து விலகி உள்நோக்கி இழுக்கப் படுகிறது.
அவர்களின் கவனம் கடவுள் மீது மட்டுமே உள்ளது.
ஆழ்ந்த தியான நிலையில், அவர்கள் தெய்வீக மற்றும் மங்களகரமான ஸ்ரீ ஹயக்ரீவரின்
வடிவத்தைக் காட்சிப்படுத்துகிறார்கள்.
அவர்களின் மனம் மேன்மையடைந்து, வானத்தில் உதிக்கும் சந்திரனைக் கண்டு
பெருங்கடல் எழுவது போல, மகிழ்ச்சியின் எழுச்சியை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
அந்த அபரிமிதமான மகிழ்ச்சி அலையை கட்டுப்படுத்த முடியாது,
அணை உடைகிறது. பக்தர்கள் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாத அளவுக்குக் கசிந்து விடுகிறார்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவரை தரிசனம் செய்யும்போது (புனிதக் காட்சி) அவர்களின் கண்களில் நித்திய கண்ணீரை வரவழைக்கும்
இத்தகைய எழுச்சி யூட்டும் அனுபவங்களைக் கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

————–

ஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே —18-

ஸ்ரீ ஹயக்ரீவரை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் உண்மையாகவே பரிணாம வளர்ச்சியடைந்து
பரமாத்மாவுடன் இணைந்திருக்கிறார்கள்.
இந்த ஞானிகள் தங்கள் மனதை ஸ்ரீ ஹயக்ரீவரின் பாதத்தில் வைக்கின்றனர்.
அவர்கள் தங்கள் மகத்துவத்தில் புகழப்படுகிறார்கள்.
அவர்கள் ஸ்ரீ ஹயக்ரீவரின் பாதத்தில் குவிந்திருப்பதால் அவர்கள் அபரிமிதமான பலத்தைப் பெறுகிறார்கள்.
பக்தி யுள்ளவர்கள் ஸ்ரீ ஹயக்ரீவரிடம் பிரார்த்தனை செய்து, அவரிடம் முழு சரணாகதியை உறுதிப்படுத்துகிறார்கள்.
தொடக்கமும் முடிவும் இல்லாமல் ஓடும் மாயாவை (மாயையை) கடக்க அவர்கள் அவருடைய உதவியை நாடுகிறார்கள்,
அது அவர்களுக்கு கடவுளின் உண்மையான தரிசனத்தை மறுக்கிறது.

அறிவுள்ள பக்தர்கள் மாயாவின் எல்லையை கடந்து, ஒரு மந்திரவாதி தனது பார்வையாளர்களை
வசீகரிக்கும் விதத்தில் மனிதர்களை ஹிப்னாடிஸ் செய்கிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவர் தனது தீவிர பக்தர்களுக்கு இந்த கடினமான மாயையை (மாயையை) தடையின்றி கடக்க அருள் புரிகிறார்.
கடவுளுக்கு மாயா உள்ளது, இது அவர் முன்வைக்கும் ஒரு பெரிய சக்தியாகும்,
அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்காத வரை அதன் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
கடவுள் தனது பக்தர்களின் பக்தியின் அளவைக் கவனிக்கிறார்,
அது அவரது இதயத்தை உருக்குகிறது, மேலும் அவர் தனது மாயாவைக் கடக்க அவர்களுக்கு உதவுகிறார்.

———–

அடுத்து எட்டு ஸ்லோகங்களால்-19-முதல் -26-வரை திவ்ய மங்கள விக்ரஹ சோபனம் அனுபவம்
32-ஸ்லோகத்தில் இவற்றை தொகுத்து த்யான ஸ்லோகமாக அமைத்து அருள்கிறார் –
திருவடி அனுபவம் -மூன்று ஸ்லோகங்களில் -19-/-20-/-21-ஸ்லோகங்களில் –
திருக் கணைக் கால் அழகு அனுபவம் –22-
ஞான முத்ரா ஜெப மாலை கொண்ட திருக் கைகள் அனுபவம் –23-/-24-
இடது திருக்கையில் புஸ்தகம் -வேதங்கள் -25-ஸ்லோகம்
சுத்த சத்வ வெண்மையான ஆசன பத்மத்தில் அமர்ந்த சுத்த சத்வ ஸ்படிக வெண்மை திருமேனி அனுபவம் -26-ஸ்லோகம்

ப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா ப்ரத்யக்ரநி ச்ரேயஸே சம்பதோ மே
சமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –19-

ஸ்ரீ ஹயக்ரீவரின் திருவடிகளை வணங்கும் பாக்கியம் கிடைப்பது எளிதல்ல என்பதை
அறிவாளிகளும், பக்தியுள்ளவர்களும் அறிவர்.
முந்தைய பிறவிகளில் கடுமையான தவம் செய்தாலே மோட்சம் (முக்தி) அடைய முடியும்.
ஒரு பக்தன் பரமாத்மாவின் பாதங்களை வணங்கினால், அது அரிய செல்வம், முக்தியின் வரம்.
பரமாத்மாவைத் தாண்டி மற்ற பலன்களை அடையலாம்.
இருப்பினும், கடவுளின் புனித பாதங்களை வணங்குவது சிந்தாமணி ரத்னம் (அரிய ரத்தினங்கள்) போன்றது,
அது விரும்பிய அனைத்து ஆசீர்வாதங்களையும் அளிக்கிறது.

ஸ்ரீ ஹயக்ரீவரின் பாதங்களில் அருளினால் முக்தி கிடைக்கும்.
புனிதமான தாமரை பாதங்களின் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற தியானத்திற்காக ஒருவர் பிரார்த்தனை செய்கிறார்.

——————-

விலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம் ஸூ ரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்
த்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம் பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் —20-

பிரம்மா தேவன் ஒருவர் பிறக்கும் போது ஒரு நபரின் மண்டை ஓட்டில் உள்ள பிரம்ம லிபியை (விதி) குறியீடாக்குகிறார்.
மனிதனின் வாழ்க்கை அந்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறது.
பிரம்ம லிபிஸ், மோட்சத்தை (முக்தி) தேடும் ஒரு பக்தருக்கு, அவரது தியானம் மற்றும்
அவர் செய்யும் தவம் ஆகியவற்றில் குறுக்கிடுகிறது.
அத்தகைய நபரின் வாழ்க்கை பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை அனுபவிக்கிறது,
மேலும் முக்திக்கான உன்னத ஆசீர்வாதங்களை அடைவது பற்றிய கருத்து மேலும் மேலும் விலகிச் செல்கிறது.

இருப்பினும், ஸ்ரீ ஹயக்ரீவரின் தாமரை பாதங்களில் உள்ள புனித தூசியின் சக்தி ஒப்பற்றது
மற்றும் பிரம்மா மற்றும் பிற தேவர்களின் தலையில் காணப்படுகிறது,
பின்னர் அவர்கள் தங்கள் துன்பங்களை சமாளிக்க முடியும்.
தாமரை பாதங்களின் புனித தூசியை அணுகுவது ஒரு மனிதனின் தலைவிதியை மாற்றும்.
அந்த புனித தூளின் சக்தி பக்தர்களின் தலையில் நிரந்தரமாக படிந்து
பிரம்மா லிபிகளை அழித்து அவர்களை தாங்க முடியாதபடி செய்யும்,
ஏனெனில் புனித தூசி ஒருவரின் மண்டை ஓட்டில் எழுதப்பட்ட பிரம்ம லிபிகளை முற்றிலும் அழிக்கும் சக்தி கொண்டது.
பக்தியுள்ளவர்கள் மோட்சத்தை (முக்தி) அடையட்டும்.

————

பரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச நிர்த் தூத தமோ நுஷங்காம்
பத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த ப்ரபோத ராஜீவ விபாத ஸந்த்யாம் –21-

ஸ்ரீ ஹயக்ரீவரின் புனிதமான தாமரை பாதங்களை பக்தர்கள் தியானிக்கும் போது கவனம் செலுத்தப்படுகிறது,
அங்கு கணுக்கால்களில் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கணுக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கற்களில் இருந்து வரும் பிரகாசம் சூரியனின் பிரகாசத்துடன் பொருந்தக் கூடிய சக்தியைக் கொண்டுள்ளது
மற்றும் விடியலின் ஆரம்பக் கதிர்களாக மாறும், இருளின் எந்த தடயங்களையும் துரத்துகிறது.
கடவுளின் புனித பாதங்களின் பிரகாசத்தால் அறியாமையின் எந்த குறிப்பையும்
அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
தாமரையை மலரச் செய்யும் சூரியனின் உதயத்தை, ஸ்ரீ ஹயக்ரீவரின் புனிதப் பாதங்களில் கவனம் செலுத்தி
அவர்களுக்குள் இருக்கும் பக்தியின் எழுச்சியையும் வளர்ச்சியையும் அறிவாளிகள் ஒப்பிடுகிறார்கள்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் தாமரை பாதங்களின் பிரகாசம் அறியாமையின் எந்தச் சுவடுகளையும் நீக்குகிறது.
ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுளின் பளபளப்பான பாதங்களை
தியானம் செய்வது கருமேகங்களை அகற்றும்,
அதே நேரத்தில் தெய்வீக அறிவின் வளர்ச்சியானது சுருங்கிய நிலையில் இருந்து முழு மலராக மலர்கிறது.

————–

த்வத் கிங்கரா லங்க ரனோசிதாநாம் த்வ கல் பாந்தர பாலிதா நாம்
மஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் ப்ரதீம —22-

வேத மந்த்ரங்கள் அனைத்தும் உன் நூபுரத்துக்குள் அடங்கி கல்பம் தோறும் அதன் சப்தம் வழியாக வழங்குகிறாய்

வேத அறிவால் உருவான தெய்வீகப் பேச்சு, ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித பாதங்களில் உள்ள
கணுக் கால்களை அலங்கரிக்கும் விலைமதிப்பற்ற ரத்தினங்களுடன் ஒப்பிடப்படுகிறது.
மனிதர்கள் பொதுவாக தங்களுடைய நகைகளை பாதுகாப்பான பெட்டியில் பாதுகாக்க முனைகிறார்கள்.
பக்தர்களுக்கு விலையுயர்ந்த நகைகளைக் குறிக்கும் வேத மந்திரங்கள் ஒருவரது தலையில்
அதே போல் சேமிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கடவுள் பிரம்மாவுக்கு வழங்கிய அறிவுரைகளின் மூலம்
வேதங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித பாதங்களில் அணியும் கணுக்கால்களில்
இணையற்ற விலையுயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.
இந்த கணுக்கால்கள் அசையும் போது மின்னும் மற்றும் புனிதமான ஒலிகளை எழுப்புகின்றன,
அவை பக்தர்களின் காதுகளுக்கு இனிமையானவை.
கணுக்கால்களின் ஒலிகள் வேதங்களின் ஆழமான பொருளை வழங்குகின்றன.
புனிதமான கணுக்கால்கள் விலைமதிப்பற்ற வேதங்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பான பெட்டிகள் போன்றவை.

வேதங்கள் புனிதமான கணுக்கால்களில் உள்ள விலைமதிப்பற்ற ரத்தினங்களுடன் ஒப்பிடப்படுகின்றன,
அவை நகர்த்தப்படும்போது, ​​​​இனிமையான, புனிதமான ஒலிகளை உருவாக்குகின்றன.
கணுக்கால் சிறிய தங்கப் பந்துகளால் ஆனது,
ரத்தினங்கள் சுதந்திரமாக உள்ளே உருளும்.
மேலும் தங்க பந்துகள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளே ரத்தினங்களுடன் கணுக்கால்களை உருவாக்குகின்றன.
கடவுள் நடக்கும்போது, ​​அவர் புனித பாதங்களை தியானிக்கும் பக்தர்களுக்கு
தெய்வீகமாக ஒலிக்கும் கணுக்கால்களிலிருந்து ஒலிகளை உருவாக்குகிறார்.
புனிதமான கணுக்கால்களால் எழுப்பப்படும் ஒலிகளில் தங்களை இழந்து,
பக்தியுள்ளவர்கள் தெய்வீக அறிவை அடைகிறார்கள்.

———-

சஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான் சந்துஷயந்தம் சமய ப்ரதீபாந்
விஜ் ஞான கல்ப த்ரும பல்லவாபம் வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -23-

ஸ்ரீ ஹயக்ரீவரின் வலது கரம், பக்தர்களுக்கு வேதங்களின் அர்த்தத்தை வழங்குவதற்காக
விளக்குகளில் உள்ள திரியை எரியச் செய்யும் கருவியாக செயல்படுகிறது,
மேலும் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டிய காட்சிகளின் ஆழமான அர்த்தத்தை கற்பிக்க
வலது கையின் நிலை கருவியாக உள்ளது. .
கடவுளின் புனிதமான மற்றும் அறிவுள்ள ஆளுமை கல்பக மரமாகும்,
இது பக்தர்களின் தியானத்தின் போது வரங்களை வழங்குகிறது.

வலது கரம் அருளும், ஞான முத்திரையுடன் இருப்பதும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இது கல்பகா மரத்தின் மென்மையான தளிர் மற்றும் அறிவை பிரதிபலிக்கிறது.
இது பிரகாசமான புத்தியால் ஒளிரும் நித்திய வேதங்களின் அறிவைத் தூண்டுகிறது,
மேலும் ஸ்ரீ ஹயக்ரீவரால் போஷிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் நித்திய தீபமாகும்.
புனிதமான வலது கை அனைத்து அறியாமையையும் நீக்குகிறது,
மேலும் கையின் நிலை பக்தருக்கு அறிவைக் கொடுப்பதைக் குறிக்கிறது.

———-

சித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம் சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்
ஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம் லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –24-

ஸ்ரீ ஹயக்ரீவரின் வலது கரத்தில் ஜப மாலை (பிரார்த்தனை மணிகள்) உள்ளது,
அது கதீ யந்திரம் (தண்ணீர் இறைக்கும் இயந்திரம்) போன்றது.
ஒவ்வொரு திருப்பத்திலும் இயந்திரம் சுழன்று தண்ணீரை மேலே கொண்டு வருவதைப் போல,
கடவுளின் வலது கையில் மணிகளின் அசைவு உள்ளது,
இது அவரது ஆழ்மனதில் இருந்து தெய்வீக ஞானம் என்ற அமிர்தத்தை பக்தர்களுக்குக்
கொண்டு வரும் போது, ​​அவரது பக்தர்கள் ஆதாயமடைவார்கள்.
ஞானம். அவர் பக்தி யுள்ளவர்களுக்கு தெய்வீக அறிவை மிகுதியாக ஆசீர்வதிக்கிறார்.

————

ப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்
விபாவயே தேவ ச புஸ்தகம் தே வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –25-

ஸ்ரீ ஹயக்ரீவரின் கீழ் வலது கரம் அவரது மனைவியான மஹா லட்சுமியைத் தழுவுகிறது.
கையிலும் புத்தகம் இருக்கிறது.
ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தின் இசையமைப்பாளரான ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கு, அறிவுக் கடலின்
ஆழத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பவளப்பாறைகளை நினைவுபடுத்தும் வகையில்
இடது கை சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது.
இந்தக் கை சக்தி மற்றும் மகிமையைப் பிரதிபலிக்கிறது,
இது பக்தியுள்ள மற்றும் அறிவுள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரங்களை ஆசீர்வதிக்கிறது.

ஸ்ரீ ஹயக்ரீவரின் இடது கரத்திலிருந்து வெளிப்படும் சிவப்பு நிற ஒளிவட்டம்,
அவரது புனித பாதங்களை அடைக்கலம் தேடுபவர்களை மீட்க வரும் ஞானத்தை நினைவூட்டுகிறது.
புனித கரம் பக்தர்களின் மனதில் உள்ள அறியாமையை நீக்குகிறது.

———–

தமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை சம்ப்ரீணயந்தம் விதுஷஸ் சகோரான்
நிசாமயே த்வாம் நவ புண்டரீக சரத்கநே சந்த்ரமிவ ஸ்புரந்தம் –26-

அடியார்கள் அஞ்ஞானங்களை அறவே போக்கி அருளுகின்றாயே–
பாற் கடல் போன்ற வெள்ளை ஆசன பத்மத்தில் அமர்ந்த உனது உனதே தேஜஸ் காந்தியாலேயே

ஸ்ரீ ஹயக்ரீவரின் பிரகாசம் அனைத்து அறிஞர்களின் இதயங்களையும் அவர்
வியாபித்திருக்கும் இருளை அழித்து மகிழ்விக்கிறது.
கடவுள் புதிதாக மலர்ந்த கதிரியக்க வெள்ளைத் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறார்,
மேலும் அவர் களங்கமற்ற வெண்மையான கதிர்களை வீசுகிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் புனித வடிவத்தைக் காணும் பக்தர்களுக்கு, இரவின் இருளை நீக்கும்
இலையுதிர்கால நிலவின் வெண்மையான மற்றும் அலையில்லாத வண்ணங்கள் நினைவுக்கு வருகின்றன.
வெண்ணிற நிலாக் கதிர்கள் சகோரா பறவைகளை மகிழ்ச்சியடையச் செய்கின்றன,
ஏனெனில் அவை அவற்றின் ஒரே உணவாகும்.

கதிரியக்க வெள்ளைத் தாமரையின் மீதுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர், இலையுதிர்காலத்தில்
முழு நிலவு, வெண்மை மற்றும் களங்கமற்ற ஒளிக்கற்றைகளை
பரப்பும் சந்திரனுடன் ஒப்பிடப்படுகிறது.
நிலவுக் கதிர்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளக் கவலையுடன் காத்திருக்கும்
சகோரப் பறவைகளுக்கு அறிஞர்கள் ஒப்பிடத்தக்கவர்கள்.
உலகெங்கிலும் உள்ள அறியாமையை அழிக்கும் கடவுளின் ஒளியின் வெண்மையான கதிர்களால்
அறிஞர்கள் நிலை நிறுத்தப் படுகிறார்கள்.

————

திசந்து மே தேவ சதா த்வதீயா தயா தரங்கா நுசார கடாக்ஷ
ஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம் ஷரந்தீம் சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —27-

பக்தர் ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீகப் பார்வையை அவருக்குத் துதிக்கும்
சக்தியை அளிக்கும்படி வேண்டுகிறார்.
வேதங்களின் ஸ்தோத்திரங்கள் பக்தர்களின் செவிகளுக்கு சொர்க்க இசையின் அமிர்தமாக ஒலிக்கின்றன.
ஸ்தோத்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு ஐஸ்வர்யம் உண்டாகட்டும்.

ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்,
கடவுளின் நித்திய அருளால் கவிதைகளை உருவாக்க தெய்வீக பேச்சால்
அவருக்கு அதிகாரம் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்.
அவர் விவாதங்களுக்குத் தயாராகும் போது தனது ஆசீர்வாதங்களைப் பொழியுமாறு கடவுளிடம் மன்றாடுகிறார்,
மேலும் அவர் தெளிவு மற்றும் மன வலிமையுடன் விவாதம் செய்ய வேத மந்திரங்களால்
அவருக்கு அதிகாரம் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்.
வேத மந்திரங்களின் அமிர்தம் பக்தர்களின் செவிகளில் பாய்ந்து, அவர்களின் விருப்பங்களை
நிறைவேற்ற ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்கிறார்.
ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது பேச்சில் தேர்ச்சி பெறவும், கூடியிருந்தவர்கள்,
தலை சிறந்த கவிஞர்கள் மற்றும் தர்க்கவாதிகளுடன் விவாதங்களில்
வெற்றி பெறும் சக்திக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்.

———–

விசேஷ வித் பாரிஷதேஷூ நாத விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ
ஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந் ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —28-

அடியேன் நா நுனியில் இருந்து அருளி தற்க சமணர் சூது செய்யும் வாதியார்
வாதங்களை வெல்ல அருள் புரிகிறாய் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் இங்கு கவிஞர்கள் மற்றும் தர்க்கவாதிகளை வெல்லும் வகையில் பேச்சு சக்தியை வேண்டி நிற்கிறார்.
மிகவும் கற்றறிந்த அறிஞர்கள் விவாதங்களுக்கு மத்தியஸ்தம் செய்யும் போட்டியாளர்களின்
போர்க்களத்தில் சேர அவர் ஸ்ரீ ஹயக்ரீவரின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்.
பெரிய மதங்களின் (மத மையங்கள்) பிரதிநிதிகளை வெல்ல அவர் ஆசீர்வாதம் தேடுகிறார்.
சத்தியத்தை நிலைநாட்டும் வேத மந்திரங்களின் சக்திக்காக அவர் பிரார்த்தனை செய்கிறார்.
சித்தாந்தத்தை (சித்தாந்தத்தை) பாதுகாக்கும் தனது முயற்சிகளில் வெற்றியடைய வேண்டும்
என்று ஸ்ரீ ஹயக்ரீவரை வேண்டிக் கொள்கிறார்,
மேலும் தெய்வீக உரையை வெளிப்படுத்த கடவுள் தனது நாக்கின் நுனியில் அமர்ந்திருக்க
வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்.
போட்டி சித்தாந்தங்கள் பற்றிய விவாதத்தில் கடவுளின் பிரசன்னம் அவசியம்.

———–

த்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபந்ந த்வா முத்க்ருணந் சப்தமயேந தாம்நா
ஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –29-

புறச்சமயிகள் தர்க்க வாதங்களை வெல்லும் படி அருள்கிறாய் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீக வடிவத்தை தியானிக்க ஆசீர்வதிக்கிறார்.
அவர் தனது பண்புகளை உள்வாங்குவதற்கும், அவருடன் ஒற்றுமையாக இருக்கவும் கடவுளின் உதவியை நாடுகிறார்.
போட்டி சித்தாந்தங்களுடனான விவாதங்களின் போர்க்களத்தை வெல்ல உதவும் புனித மந்திரத்தை அவர் ஜபிக்க விரும்புகிறார்.
அவர் ஒரு போர் வீரராகவும், ஸ்ரீ ஹயக்ரீவரின் ஆசியுடன் வெற்றி பெறவும்,
விவாதங்களில் வாதிடுவதில் முடிவில்லாத வலிமையைப் பெறவும் முயல்கிறார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ வேதாந்த தேசிகனின் நாக்கில் அமர்ந்தவுடன், பக்தர் ஆழ்ந்த
தியானத்திற்குச் சென்று கடவுளுடன் ஐக்கியமான நிலையை அடைகிறார்.
அவர் ஹயக்ரீவ மந்திரத்தை தியானத்தில் மீண்டும் செய்கிறார்.
ஸ்ரீ வேதாந்த தேசிகனை ஒரு கருவியாகக் கொண்டு இந்த விவாதங்களில் வெற்றி பெற்றவர் ஸ்ரீ ஹயக்ரீவர்.

———-

நாநாவிதா நாமகதி கலா நாம் ந சாபி தீர்த்தேஷூ க்ருதாவதார
த்ருவம் தவா நாத பரிக்ர ஹாயா நவம் நவம் பாத்ரமஹம் தயாயா –30-

அஹம் நாநா விதாநம் அகதி — பல வித கலைகளை கற்றேன் அல்லேன்
தீர்த்தேஷூ ச ந அபி க்ருத அவதாரா —ஆச்சார்யர்களை அடி பணிந்து கற்றேனும் அல்லேன்
அநந்த பரிக்ரஹயா தவ தயயா நவம் நவம் பாத்ரம் த்ருவம் —அடியேன் எனது தயை கருணைக்கு உற்ற பாத்ரம்-
புகல் ஒன்றும் இல்லாத நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவன் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஸ்ரீ ஹயக்ரீவரின் கருணைக்கு வேண்டுகோள் விடுக்கிறார்,
அவர் நம்பிக்கையற்றவராகவும், மகிழ்ச்சியற்றவராகவும் இருப்பதாகவும்,
கடவுளின் கருணை மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அவர் சிறந்தவர் என்றும் கூறுகிறார்.
பக்தர் ஸ்ரீ ஹயக்ரீவரை பிரார்த்தனை செய்கிறார்,
அவர் சித்தாந்தங்களைப் பற்றிய தெளிவான புரிதலுக்காக அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்,
இதனால் அவர் திறமையானவராகவும் விவாதங்களில் அவற்றைப் பாதுகாக்கவும் முடியும்.
பக்தர் ஸ்ரீ ஹயக்ரீவரிடம் தனது குறைபாடுகளை விளக்குகிறார்,
அவர் எந்த அறிவையும் திறமையையும் கற்க நேரம் ஒதுக்கவில்லை,
புனித நீரில் நீராடி எந்த ஆசீர்வாதத்தையும் குவிக்கவில்லை என்று கூறுகிறார்.
வர் தனது ஆசிரியர்களுக்கு அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற எந்த உதவியையும்
சிறந்த சேவையையும் செய்யவில்லை.
நம்பிக்கை யற்றவர்களையும், ஆதரவற்றவர்களையும் இருகரம் நீட்டி வரவேற்க
அளவற்ற இரக்கமும் கருணையும் கொண்ட கடவுளிடம் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
தன்னைப் போன்ற வரம்புகளைக் கொண்ட ஒரு நபர்,

—————

அகம்பநீ யாந்யப நீதி பேதை அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்
சங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி தத்த்வாநி சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –31-

உனது பேர் அருளால் அடியேன் மனத்தில் உள்ள துர் ஞானங்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகள் அள்ளி தெளித்தவை -போக்கி
யாதாம்யா தாத்பர்ய ஞானம் தெளிவு பெரும் படி அருள்வாய் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஹயக்ரீவரின் ஆசீர்வாதத்தை நாடுகிறார்,
இதனால் அவர் தனது சித்தாந்தத்தைப் பற்றி அவர் மனதில் வளர்க்கும் எந்த சந்தேகமும் துடைக்கப்படும்.
அவர் தனது இதயத்தில் பதிந்திருக்கும் உண்மையான மற்றும் உண்மையான அர்த்தங்களைப் பெற கடவுளின் கருணையை நாடுகிறார்,
அது நிலையான மற்றும் அசைக்க முடியாத சிறந்த தர்க்கத்தால் நிலைத்திருக்கும்
மற்றும் உண்மையை வெளிப்படுத்தி, உண்மையைப் பற்றிய அனைத்து சந்தேகங்களையும்
தவறான கருத்துக்களையும் நிறுத்துகிறது.
ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் விவாதத்தில் ஈடுபடும் அறிஞர்கள் இருப்பார்கள்,
அவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்,
ஆனால் அவரது சித்தாந்தத்தின் உண்மையான அர்த்தத்தைத் தாக்க முடியாது.
அவர் தனது ஆன்மீக பாரம்பரியத்திற்கு ஆதரவாக சேவைகளை நிறைவேற்ற
ஸ்ரீ ஹயக்ரீவரிடம் ஆசி பெறுகிறார்.

ஸ்ரீ ஹயக்ரீவரின் உருகிய இதயம் பக்தரின் மீது முழு இரக்கத்துடன் உள்ளது,
மேலும் அவர் முன்னோக்கிச் சென்று அவர் நிலைநிறுத்தப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்தின்
நற்பண்புகளைப் போற்றும்படி அவரை மனதார ஆசீர்வதிக்கிறார்.

———

வ்யாக்யா முத்ராம் கர சரசிஜை புஸ்தகம் சங்க சக்ரே பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –32-

த்யான ஸ்லோகம் –இது –மனசுக்குள் வைத்து கொள்ள வர்ணனை —
வ்யாக்யா முத்ராம்-வ்யாக்யானம் -உபதேச முத்திரை –அர்த்தங்களை நமக்கு புரிய வைக்க -ஞான முத்திரை —
ரத்ன கல்லை நன்றாக தேர்ந்து தங்கத்துக்குள் பதிக்க –
பூ தொடுப்பார் -போலே -கல்விக் கடல் அவன் -அவற்றுள் உள்ள ரத்னம் நமக்கு ஏற்றபடி அளிக்க
கர சரசிஜை -தாமரை போன்ற திருக்கரங்கள் -வர்ணம் -நாற்றம் -மென்மை-இத்யாதிகளை சத்ருசம் -சூர்யன் உதிக்க மலரும் –
பால ஸூர்யர்களை பார்த்து நம் பாக்கள் கேட்டு அறிய வந்தார்கள் என்று மலருவான் அன்றோ —
புஸ்தகம் சங்க சக்ரே–நான்கு திருக்கரங்கள் –ஸூதர்சனர் -அஞ்ஞானம் போக்கி –
சங்க தாழ்வான் -வெளுத்த -அறிவுகளை கொடுத்து அளிக்க
வேத கடல் – புஸ்தகம் இடது திருக்கையில் வைத்து –
உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் கொக்கு போலே நமக்கு வேண்டியவற்றை அளிப்பான்
ஞான முத்திரை கொண்டு -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே — பிப்ரத் –இவற்றைத் தாங்கி
பிந்ந ஸ்படிக ருசிரே–ஸ்படிகம் உடைத்தால் போல சுத்த சத்வ திரு மேனி
புண்டரீக நிஷண்ண –தாமரைக்கு கண்கள் கடாக்ஷம் ஒன்றாலே –செங்கண் சிறு சிறிதே –விழித்து – தாமரையில் அமர்ந்தும் –
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் –
அம்ருத கடாக்ஷம் -அனுக்ரஹம் தேன்- தோய்த்து -அடியேனை -சருகாய் உள்ள நம்மை –
ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –ஞானம் வளர –
அநக மஹிமை குற்றம் இல்லாத மஹிமை –உண்டே -தன் பேறாக-நிர்ஹேதுகமாக –
வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே-பிச்சை புகினும் கற்கை நன்றே–ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் இடம்–
ஆதி பகவான் பிச்சை கேட்டு பெற வேண்டுமே
தம்மையே ஓக்க அருள் செய்வான் -கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக-
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் தானே அடியேன் நெஞ்சில் திகழட்டும் —

பக்தர்கள் ஸ்ரீ ஹயக்ரீவரின் தெய்வீக வடிவில் ஆழ்ந்த தியானத்தில் உள்ளனர்.
தாமரை, சுதர்சன சக்கரம் (புனித சக்கரம்), பாஞ்ச ஜன்யம் (புனித சங்கு), ஞான முத்திரை (அறிவின் சைகை)
மற்றும் ஒரு புத்தகம் போன்ற மென்மையான மற்றும் மென்மையான நான்கு கைகளில் கடவுள் இருக்கிறார்.
மலர்ந்த ஒரு புதிய வெள்ளை தாமரையின் மீது அமர்ந்து, கடவுள் புதிதாக திறக்கப்பட்ட
ஒரு தூய வெள்ளை படிகத்தின் ஒளியை தனது பக்தர்களுக்கு நினைவூட்டுகிறார்.
ஸ்ரீ ஹயக்ரீவரின் பிரகாசம் பக்தர்களை ஈர்க்கிறது மற்றும் ஒருபோதும் மங்காது.
அவருடைய மகிமைகள் நிரந்தரமானவை,
அவற்றைப் புகழ்ந்து பாடுவதை நிறுத்த முடியாது.
ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஸ்ரீ ஹயக்ரீவரை தனது அமிர்தத்தின் தெய்வீக, வெண்மையான,
குளிர்ந்த கதிர்களை அவருக்கு அருளும்படி வேண்டிக் கொள்கிறார்,
மேலும் அவரது இதயத்தின் உட்பகுதியில் வசிக்கும்படி கெஞ்சுகிறார்.

————-

வாகர்த்த சித்தி ஹேதோ படத ஹயக்ரீவ சம்ஸ்துதிம் பக்த்யா
கவி தார்க்கிக கேஸரிணா வேங்கட நாதேந விரசிதா மேதாம் –33-

பக்தி பாவத்துடன் இந்த ஸ்தோத்ரம் அப்யசிக்குமவர்கள் வாக் சாதுர்யமும் உள்ளுறை வேதாந்த உள்ளுறை
யாதாம்யா -தத்வ த்ரய ஞானமும் பெறுவார்கள் –
வெள்ளைப் பரிமுகர் தேசிகரை விரகால் அடியோம் –உள்ளத்தெழுதியது ஓலையில் இத்தனம்
யாம் இதர்க்கென்–ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் –
என்னைக் கொண்டு தானே இதனை பாடுவித்தான் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன், கவிஞர்கள் மற்றும் தர்க்கவாதிகள் மத்தியில், வேங்கடநாதன் என்ற பெயரால்
ஸ்ரீ ஹயக்ரீவரைப் பற்றி இயற்றப்பட்ட ஸ்தோத்திரத்தைக் கற்றுக்கொள்வதற்காக,
நேர்மையும் உண்மையும் உள்ள மக்களை இந்த வசனம் ஈர்க்கிறது என்று கூறுகிறார்.
ஒவ்வொருவரும் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்,
இதனால் அவர்களும் கவிதை இயற்றும் ஆற்றலைப் பெறவும்,
கொள்கைகளின் உண்மையான அர்த்தம்
மற்றும் வாழ்க்கையின் நோக்கங்களைப் பற்றிய அறிவைப் பெறவும் முடியும்.
அர்த்தங்களுடன் வேத மந்திரங்களின் ஆசீர்வாதங்களைப் பெற ஸ்தோத்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம் கடவுளை வழிபடும் மிகவும் மங்களகரமானது.
ஒருவரின் பக்தி ஸ்ரீ ஹயக்ரீவரின் அருளைப் பெறுவதற்கு உறுதியான மற்றும் உறுதியானதாக இருக்க வேண்டும்.

——————

இதி ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————-

ஸ்ரீ ஹயக்ரீவ -ஸ்ரீ பரி முகமாய்-அவதார பரமான அருளிச் செயல்கள் –

முன் இவ் உலகு எழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை
எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்மின் –அணி அழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே

ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானானன் என்னில் தானாய சங்கே
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
சூதென்று களவும் சூதும் செய்யாதே வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே

வேதம் அருளினை நீர்
வேதத்தில் சொல்லப்பட்ட கைங்கர்யம் தர வேண்டாவோ
விரோதிகளை கிழங்கு எடுத்தது மட்டும் போதாதே
அதிகாரி புருஷணனான அயனுக்கு கண் கொடுத்தது போல் வேதங்களைக் கொடுத்தீரே
அதில் சொல்லப்பட்ட கைங்கர்ய பிரார்த்தனை இதில்

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-

முன் பரி முகமாய் —
ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால்
இவன் இறாய்க்கும்-என்று
இவன் தன்னை தாழ விட்டு ஹயக்ரீவனாய்
நின்று யாய்த்து உபதேசித்தது –
சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –

இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
நல்ல நாதத்தை உடைத்தாய் இருந்துள்ள வேதம் இதிஹாசாதிகள்
இவற்றை உண்டாக்கினவனே
என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
நூல் -என்று சாஸ்த்ரங்களை சொல்லவுமாம்
அன்றிக்கே –
அல்லாத இதிஹாச புராணங்களை சொல்லிற்றான போது
தத் சர்வம் வை ஹரேஸ் தநு -என்கையாலே
அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று தான்
சொல்லுகையாலே அவன் சொன்னான் என்னத் தட்டு இல்லை –
(முனிவரை இடுக்கி -ஹயக்ரீவர் கொடுத்ததாக சொன்னதுக்கு இந்த பிரமாணம் )

—————————-

தேவாதி ராஜனே இவர் அமரர் கோவே என்றும் பலகாலும் அருளிச் செய்கிறார் –
பாற் கடல் ஷீராப்தி நாதன் அனுபவம் =கீழ்
அங்கு நின்றும் போந்து விபாவமான
ஹயக்ரீவன் இதில் வேத பிரதானம் செய்து அருளி

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி  பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே -ஸ்ரீ பெரிய திருமொழி -7-8-2-

பண்டு இவ் உலகங்கள் ஏழையும்
அந்தகாரமானது தான் கண்ட படியே பரந்து புஜிக்க –

முனிவரோடு தாநவர்கள் திசைப்ப –
சாத்விகரோடு அசாத்விகரோடு வாசி அற அறிவு
கெட்டுக் கலங்க –
வந்து அவதரித்து –

பரம்பின கலைகளை உடைத்தான நாலு வகைப் பட்ட வேதங்களின் உடைய
அர்த்தத்தை எல்லாம்
ஸ்ரீ ஹயக்ரீவ முகத்தாலே
அருளிச் செய்த சர்வ ஸ்மாத் பரன் கிடீர் –

முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து 
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம் பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின் 
செந்நெல் மலி கதிர்க்கவரி வீசச் சங்கமவை முரலச் செங்கமல மலரையேறி 
அன்னமலி பெடையோடுமமரும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே!( பெரிய திருமொழி -7-8-ஏழாம் )

வசையில் நான்மறை கெடுத்த அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய் 
இசைகொள் வேத நூலென்றிவை பயந்தவனே! எனக்கருள் புரியே! 
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய மாருதம் வீதியின் 
வாய் திசையெல்லாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே.( பெரிய திருமொழி-5-3-)

பரிமுகன் அருளாலே இவை நாலு கவிப்பெருமாள்

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் முதலிலே ஹயக்ரீவரை -மது ஜித் அங்க்ரி -மங்களா சாசனம்

யஜஜ வழக்கியருக்கும் ஹயக்ரீவரே அருளி தைத்ரியம்
சரீர ஆத்ம பாவம் முதலிலே உள்ளது

ஸ்ரீ பாஷ்யம் பட்டம் சாதித்து ஹயக்ரீவர் அர்ச்சாவதாரமும் ஸரஸ்வதி -அருளினாள்

எங்கள் ஆழ்வான் -விஷ்ணு புராணம் -6000 படி கிரந்தத்துக்கு வியாக்யானம் -விளக்கம் -4000 படி விஷ்ணு சித்தீயம்
மங்கள ஸ்லோகம் விதேச விதூயாம் இஷ்டதாயிநே தார்ஷ்ய வாஹன் நம -நாம துரக துண்டனே –

தேசிகருக்கும் ஹயக்ரீவர் அருள் -கருட மந்த்ரம் அப்புள்ளார் உபதேசிக்க -ஹதக்ரீவ மந்த்ரம் உபதேசம் லஷ்மீ ஹயக்ரீவர் -லாலா அம்ருதம் அருளி
வெள்ளைபரி முகர் தேசிகனாய் வந்து -தானே அருளிச் செய்கிறார் கவி தார்க்கிக ஸிம்ஹமாக ஆனார்

—————–

ஸ்ரீ செட்டிப்புண்ணியம்: சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் சென்று
அங்கிருந்து 6 கி.மீ. பயணித்தால் செட்டிப்புண்ணியத்தை அடையலாம்.

இந்த ஊரில் உள்ள ஸ்ரீ தேவநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் தரிசனம் தருகிறார்.
இந்த ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேசிகனால் ஆராதிக்கப்பட்டவர் என்றும்
ஸ்ரீ திருவஹீந்திபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள்.
ஸ்ரீ சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு.

——————————————————————————————————-————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –