Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்-ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகள்-ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம் —

December 13, 2023

ஸ்ரீ ஹனுமத் பஞ்ச ரத்னம்

வீத அகில விஷயேச்சம் ஜாத ஆனந்த அஸ்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜ மத்ய பாவயே ஹ்ருத்யம்-1-

எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும்,
சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும்,
ஸ்ரீ வாயு குமாரனுமான ஸ்ரீ ஹனுமனை தியானிக்கிறேன்.

உலகத்திலேயே லௌகிக அல்ப அஸ்திர அனுபவங்களை எல்லாவற்றையுமே நினைத்தே பார்க்காதவர் ஹனுமான்.
ஸ்ரீ ராம நாம கீர்த்தன ஆனந்தத்திலேயே திளைத்து மயிர்கூச்சலோடு கண்களில் ஆனந்தக்கண்ணீர் மல்கப் பரவசமடைபவர்.
ஸ்ரீ ராமதூதன். ஹனுமான்.பரமபரிசுத்தர்.
இலக்கியங்களிலேயே- முதல் முதலாகக் காணப்படுகின்ற ‘தூது’- என்ற இலக்கிய மரபை ஆரம்பித்தவர் ஸ்ரீ ஹனுமான். என் இதயத்திலே உறைபவர்.
அத்தகைய வாயு குமாரனை த்யானிக்கிறேன்

——————

தருணாருண முக கமலம் கருணா ரஸ பூரபூரிதா பாங்கம்
ஸஞ்சீவன மாஸாஸே மஞ்சுல மஹிமான அஞ்ஜனா பாக்யம்–2-

பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த
கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப்
பிழைக்கும்படி செய்தவரும், புகழத் தக்க மகிமை உள்ளவரும்,
ஸ்ரீ அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஸ்ரீ ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

பூத்த சிவப்பு ரோஜா நிறமுடைய முக விலாஸம்.
கடைக் கண்களிலே எப்பொழுதுமே கருணை அமுத நீர்
ஊற்றெடுக்கும்.
நன்கு வாழ வைப்பவர்.
மனத்திற்கு இனிய மஹிமை பொருந்தியவர்.
அஞ்ஜநாதேவியின் பாக்கியமே உருவெடுத்தவர். அவரையே கொண்டாடுவேன்.

———–

ஸும்பரவைரி ஸராதிகமம் புஜதள விபுல லோசனோதாரம்
கம்புகளமநில திஷ்டம் பிம்ப ஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே–3-

மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும்,
சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், ஸ்ரீ வாயுதேவரின் பாக்கிய பூதருமான
ஸ்ரீ ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

மன்மதனின் ஏவுகணைக்கு அப்பாற்பட்டவர்.
தாமரை இதழ் போல அகன்றும் ஓரத்தில் கூராகவும் விரிந்த திருக் கண்களை உடையவர்.
வெண்சங்கு போல நடுவில் பருத்து வழுவழுவென்று ஜொலிக்கின்ற கழுத்து அழகன்.
வாயு தேவனின் புண்ணியப் பயனானவர்.
கோவைப் பழம்போல சிவந்து, பளபளவென்று ஜ்வலிக்கின்ற உதடுகலை உடைய
ஸ்ரீ அநுமானைச் சரணம் அடைகிறேன்.

————-

தூரீக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீ க்ருத ராம வைபவஸ் பூர்த்தி:
தாரித தஸ முக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி–4

ஸ்ரீ சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும்,
ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீ ஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

ஸீதாதேவியின் துயர்கள் அனைத்தையும் துடைத்தவர்.
தனி ஒருவனாக லங்கையின் வீதிகளில் -‘‘எடுத்த காரியங்களில் ஒன்றில் கூட தோல்வியடையாத
ஸ்ரீராமனின் அடிமை நான்’’ -என்று பெருமையோடு ராமனுடைய புகழைப் பரப்பியவர்.
ராவணனுடைய புகழைப் பொடி யாக்கினவர்.
அந்த ஸ்ரீ ஹநுமானுடைய திருவுருவம் என் முன்னே விளங்கட்டும்.

————–

வானரநிகராத் யக்ஷம் தானவ குல குமுத ரவிகர ஸத்ருஸம்
தீன ஜனவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜமத்ராக்ஷம்--5-

வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு
சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை
ரட்சிப்பதில் உறுதி கொண்டவரும், ஸ்ரீ வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான
ஸ்ரீ ஹனுமனை நேரில் தரிசித்தேன்.

சூரியன் உதித்தால் -இரவு முழுவதும் மலர்ந்திருந்த ஆம்பல் மலர்களும் கூம்பி விடுமாம்.
அதுபோல ஹனுமானைக் கண்டதும் ராவணனின் அரக்கர் படைகள் எல்லாம் வணங்கி ஒளிந்து கொண்டன.
ஏழ்மையினால் செய்வது அறியாமல் செயலற்று வாடி வதங்கி கிடக்கின்றவர்களெல்லோரையும்
ஸ்ரீ ராம நாம கர்ஜனை செவிப்பட்டு
‘‘இதோ ராமதாஸன் நான் இருக்கிறேன். உங்களை கை தூக்கி விடுவேன் சொல்லுங்கள் ’’ ராம ராம’’- என்று
ஏழைகளைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ ஹனுமானை –
வாயு பகவானின் திருக் குமாரரானவரை உயிர்கள் அனைத்தையும் ரக்ஷித்தே தீருவேன்
என்ற பெரும் தவத்தை ஓயாமல் ஆற்றி வருகின்ற
வாயு பகவானின் உயர்ந்த பயனான ஸ்ரீ ஹனுமானைக் கண்டு கொண்டேன்.

———–

ஏதத் பவன ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீ ராம பக்தி பாக்பவதி

ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்-என்ற இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறவர்களுக்கு – ஆயுஸ்ஸூ வளமுண்டு.
வாழ்க்கை பூராவும் கஷ்டமே தொடர்ந்து வந்தால் ஆயுஸ் ஸூ எதற்கு?
ஸ்ரீ ஹனுமானை நினைத்து ஸ்ரீ ராம நாமம் சொன்னால் கஷ்டமே வராது. விரும்பிய சுகங்கள் எல்லாம் கிடைக்கும்.
பிறகு இத்தனை சுகங்களைக் கொடுத்த ஸ்ரீ ராமனின் நாமத்தையே ஜபிப்போமே!
அவனுடைய சரித்திரத்தையே படிப்போமே!
அவனுடைய சரணங்களில் நறு மலர்களால் அர்ச்சிப்போமே!
நமக்கு கிடைத்த நல்ல பொருள் களை எல்லாம் அவருக்கே சமர்ப்பணம் பண்ணுவோமே!
நாமே அவனுடைய சொத்தாகவே என்று ஆவோமே! என்று ஆசை வளரும்.
இது தான் ராம பக்தி.-என்னும் உயர்ந்த பேறு
பாவோ நான்யத்ர -என்று இச்சுவை பெற்ற பின்பு அச்சுவை வேண்டோமே

———–

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம்

ஹனுமார் – கிழக்கு முகம்
நரசிம்மம் – தெற்கு முகம்
கருடன் – மேற்கு முகம்
வராகர் – வடக்கு முகம்
ஹயக்ரீவர் – மேல் முகம்

ஹனுமார்(கிழக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே !

ஸகல சத்ரு ஸம்ஹா ரணாய ஸ்வாஹா ! 1–பகைவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கும் .

நரசிம்மம்(தெற்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே !

கரால வதனாய நிருஸிம்ஹாய !

ஸகல பூத ப்ரேத ப்ரமதனயா ஸ்வாஹா ! 2–எல்லாவித பயங்கள், தோஷங்கள், துர் தேவதைகள் தோஷங்கள், நீங்கும் .

கருடன்(மேற்கு முகம் )

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம !

முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா ! 3–எல்லாவித உடல் உபாதைகள் , விஷக்கடி , விஷ ஜுரங்கள் நீங்கும் .

வராகர்(வடக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே !

ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா ! 4--தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்

ஹயக்ரீவர்(மேல் முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே !

ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ! 5–ஜன வசீகரம் ,வாக்கு பலிதம் , கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கடலைத் தாண்டும் போது கருடன் ஆனார்.
ஸீதா தேவிக்கு ஆறுதல் கூறி தைரியமூட்டின போது வாநரனாகவே இருந்தார்.
அசோக வனத்தில் அரக்கர்களை அழித்த போது நரசிம்ம ஸ்வாமியாகவே ஆனார்.
ராவணனுக்கு உபதேசம் அருளிய போது குதிரை முகத்துடன் ஹயக்ரீவராகவே ஆனார்.
சத்ருவின் நகரத்தை அழித்த போது வராஹ ஸ்வாமியாக ஆனார்
அந்த மந்தர மூர்த்தியான ஹநுமான் நமது உள்ளத்திலே ஸ்ரீராம சரணங்களில் பக்தியை வளர்க்கட்டும்.

———–

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,

—————-

ஸ்ரீ ஹனுமத்  ஸ்தோத்திரம்  

அஞ்ஜநா நத்தநம் வீரம் !ஜாநகீ ஶோக நாஶநம் !கபீஶ மக்ஷஹந்தாரம் !வந்தே லங்கா பயங்கரம் ! 1

ஆஞ்சஜநேய மதிபாடலாநநம் !
காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸிநம் !
பாவயாமி பவமாந நந்தநம் !  2
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தநம் !
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம் !
பாஷ்பவாாி பாிபூா்ண லோசநம் !
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் !   3
மநோஜவம் மாருத துல்ய வேகம் !
ஜிதேந்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம் !
ஶ்ரீ ராம தூதம் ஶிரஸா நவாமி !
ஆஞ்ஜநேய மதிபாடலாநநம் காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம்  !
பாாிஜாத தருமூல வாஸிநம் பாவயாமி பவமாந நந்தநம்  !   4புத்திர்பலம் யஶோ தைர்யம் !
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச !
ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ! 5

அஸாதீய ஸாதக ஸ்வாமிந் !
அஸாதீயம் தவ கிம் வத !
ராம தூத க்ருபாஸிந்தோ !
மத் கார்யம் ஸாதய ப்ரபே !  6

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே !
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே ! 7

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் !
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா !
அலகிலா விளையாட்டுடை யாரவர் !
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே ! 8

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே !
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே !
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே !
இம்மையே இராமஎன் றிரண்டெ ழுத்தினால் !  9

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி !
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி !
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கை கண்டயலார் ஊரில் !
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான் !  10
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் !
வீடியல் வழிய தாக்கும் வோியம் கமலை நோக்கும் !
நீடிய அரக்கா் சேனை நீறுபட் டழிய வாகை !
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோா்க்கே !  11
மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந் திரத்தை முற்றும் !
தம்மையே தமா்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே !
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் (என்னும்) !
செம்மைசோ் நாமம் தன்னைக் கண்களில் தொியக் கண்டான் !    12

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவடி மஹாத்ம்யம் —

December 13, 2023

ஸ்ரீ வேதங்களில் ஸ்ரீ திருவடி –ஸ்ரீ மந்த்ர ராமாயணம்

தே வாஸ ஆயந் பர சூ ர பி ப் ரந் 
வநா வ்ருக்ஷந்தோ அபிவிட் பி ராயந் 
நி ஸுத்ருவம் தத தோ லக்ஷணாஸு 
யத்ரா க்ருபீட மநு தத்த ஹந்தி

ஸீதையைத் தேடிச் சென்ற ஹநுமான் லங்கையிலே அசோக வனத்திலே ஸீதையைக் கண்டு பிடித்த
ஆனந்தத்தில் பல பெரிய மரங்கஷீமீ அடர்ந்த அசோக மரங்களை அழித்து விடுகிறார்.
இதைக் கண்ட அரக்கர்கள் எட்டத்தில் இருந்தபடியே வனம் நாசமாவதைக் கண்டு -ராவணனிடம் சென்று முறையிடுகிறார்கள்

தேவர்கள் கோடாலிகளை தூக்கி வந்தார்கள். அங்கே காவல் காக்கின்ற எங்களையும் சேர்த்து காட்டை அழித்துக் கொண்டே வந்தார்கள்
வெகு வேகமாகப் பரவுகின்ற காட்டுத் தீ போல கட்டிடங்களுக்கு தீ வைத்துக் கொண்டு –
பின்னால் உயர்ந்த மர அடுக்குகளையும் எரித்து தொடர்ந்து மற்ற மரங்களையும் கொளுத்துகிறார்கள்
ஹநுமான் ஒருவன் செய்த காரியத்தை பல தேவர்கள்கூடிச் செய்ததாக புகார் செய்கிறார்கள்.

ச ச : க்ஷுரம் ப்ரத்யஞ்சம் ஜகாரா த்ரிம்
லோகே ந வ்ய பே த மாராத் ।
ப்ருஹந்தம் சிதூ ஹதே ரந்தயாநி
வயத் வத்ஸோ வ்ருஷப ம் சூ சு வாந: ॥

ராவணன் அலட்சியமாகச் சிரிக்கிறான். கூறுகிறான்.குட்டி முயல் பட்டாக் சக்தியை விழுங்கிவிடுமோ?
தூரத்திலிருந்த மணல் முட்டைக் கலைத்துவிட்டதனால் பர்வதத்தையே உடைத்ததாகி விடுமோ?
இப்போது தான் பிறந்த காளைக் கன்று வளர்ந்து காளை ஆகி பெரிய காளையைச் சீண்ட முடியுமா?
ஆனாலும் நான் பரமாத்மாவை சிற்றின்ப வேட்கையினால் துன்புறுத்தி பெரிய பாவத்தைக் கட்டிக் கொள்கிறேன்
ராவணன் தன் தவற்றை உணருகிறான் என்று பொருள்

ஸுபர்ண இத்தா நக மா ஸிஷாயா வருத்த :பரிப தம் – ந ஸிம்ஹ: ।
நிருத்தச் சிந்மஹிஷஸ் தர்ஷ்யாவாந் கோ தா தஸ்மா அயத ம் கர்ஷதே தத்

பட்சி போல ஆகாசத்திலே ஸஞ்சரிக்கின்ற ராவணன் எவ்வளவு அடிபட்டும் கூட அயராதவன்.
கம என்றால் வேதனை, துக்கம் என்று பொருள் .“ந கம்” என்றால் துயரப்படாதவன் ஹநுமான்.
அந்த ஹநுமானை பிரம்மாஸ்திரத்தினால் கட்டிப் போடச் சொன்னான் .
ஹநுமான் சிங்கம் போலே அங்கும் இங்கும் தாவிக் குதித்தான்
“ந”என்றால் வேதத்தில் சில இடங்களில் ‘‘போலே’’ என்று பொருள் .
அவரை அடக்கிப் போட முடியவில்லை. தண்ணீர் வேட்கை கொண்ட எருமை தண்ணீரை நோக்கித் தாறுமாறாக ஓடுமே
அது போல தரி கெட்டு ஒடுகின்ற ஹநுமானை அரக்கர்கள் கயிற்றினால் கட்டி இழுத்துச் சென்றார்கள் .

பிரஹ்மாஸ்த்ர பாசத்தினால் கட்டி இழுத்துச் சென்ற போது -ஹநுமானை தேவ கணங்கள் பிராத்தனை புரிந்தனர்.

அக்ஷா நஹோ நஹ்யதநோத ஸோம்யா
இஷ்க்ருணுத்வம் ரசநா ஓத பிம்சத

அஷ்டாப ந்துரம் வஹதா பிதோ ர தம்
யேந தே வாஸோ அநயந்நபி ப்ரியம் ॥

ராம பக்தரான ஹனுமான் அவர்களே! (இங்கு
ஹனுமானை அழைக்கின்ற தேவர்கள் அவரைப் பன்மையில் அழைக்கிறார்கள்

(ஏகத்துவம் ந ச தாத்வ்யம் கு ராவாத்மநி சேச்வரே)

குருவையும் தன்னையும் ஈச்வரனையும் பற்றிக் கூறும் போது -ஏகவசனத்தில் ஒருமையில் பேசக்கூடாது என்று ஒரு சாஸ்திரம் கூறுகிறது.
அது போல அரக்கர் கூட்டம் ஹநுமானைச் சுற்றி வளைத்தாலும் கூட்டம் கூடி அடக்க முடியவில்லை. அநுமானைப் பாசத்தினால் கட்டி இழுத்தனர்.

அக்ஷா நஹோ நஹ்யத நோத ஸோம்யா
இஷ்க்ருணுத்4 வம் எச + நா ஞத பிம்சத
அஷ்டா பந்து4ரம் வஹதா பி4 தோ ரத 2 ம்
யேந தே வாஸோ அநயடந்நபி ப்ரியம்

ராமாயணத்தில் இந்திரஜித்து தான் ஹநுமானை¨பிரஹ்மாஸ்திரத்தினால் கட்டி வீதி வழியே ஊர்வலமாக
இழுத்துப் போனான் -என்று வருகிறது.
இங்கு ராவணனுடைய இளைய குமாரன் அக்ஷன் இழுத்துப் போவதாக ஸூசனை
உங்களைக் கட்டி இழுக்கின்ற அக்ஷன். போன்ற அரக்கன் (ராமாயணத்தில் வரும் இந்திரஜித் பெயர்)
தன்னையே ம்ருத்யு பாசத்தினால் கட்டிக் கொண்டு விட்டான்.
தற்போது தயவு செய்து இந்த ப்ரஹம்ம பாசத்திற்கு மதிப்புகொடுங்கள் -(ராவணன் முன் சென்றவுடன்) விரும்பினால்
ப்ரஹ்ம பாசத்தைத் துண்டு துண்டாக அறுத்து எறியுங்கோள்
இரண்டு கைகள். இரண்டு கால்கள். இரண்டு முஷ்டிகள். இரண்டு முழங்கால் இவ்விதம் எட்டு இடங்களில்
கட்டப் பட்டிருக்கின்றன.
தேர் போன்ற உங்கள் திருமேனியே லங்கையில் ஊர்வலமாக வரட்டும். அதனால் தேவதைகள்
தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள் .
ராவணன் அநுமானின் வாலில் தீ வைத்து ஊர் முழுவதும் இழுத்துப் போகிறான் -என்று கேள்விப்பட்ட
ஸீதாதேவி அக்நி தேவனை வேண்டுகிறாள்

ரக்ஷோஹணம் வாஜிநமா ஜிகர்மி
மித்ர ப்ரதிஷ்ட ணிாயாமி ச ர்ம ।
சி சா னோ அக்னி: க்ரதுபி:
ஸ நோ தி வா ஸ ரிஷ: பாது நக்தம் ॥

அரக்கர்களை வதைக்கின்ற வேகமுடைய ஸ்ரீராம தூதனை இந்த நிலையில் கண்டு -துயரத்தினால் கண்ணீர் வடிக்கின்றேன். –
வாயு தேவனின் பரம மித்ரன் அக்நி தேவன். அவரிடம் ஹநுமானுக்கு க்ஷேமத்தை பிராத்திக்கிறேன்.
என்கணவரால் பல யாகங்கள் செய்யப் ப்பெற்று நன்கு வளர்க்கப்பட்டிருக்கிறார். –
அந்த அக்னி நமக்கு நம் ஹனுமானை இரவு பகலாகக் கொடுமை செய்கின்ற அரக்கர்களிடமிருந்து காப்பாற்றட்டும்.

அயோ த ம்ஷ்ட்ரோ அர்சிஷா யாதுதா நான் உப
ஸ்ப்ருச ஜாதவேத : ஸமித்த :
ஆ ஜிஹ்வயா மூரதேவாந் ரப ஸ்வ
க்ரவ்யாதோவ்ருக்வ்யபி தத்ஸ்வாஸந்

இரும்பினால் ஆன -கடைவாயில் பல கோரைப் பற்களை உடைய அக்நி தேவனே! தீ நாக்கினால் அரக்கர்களைத் தீண்டுங்கள் :
நடந்ததெல்லாம் (ராவணன் ஸீதா தேவியை கொண்டு வந்ததெல்லாம்) உங்களுக்குத் தெரியுமே!
கொழுந்து விட்டு எரிகின்ற -தீ நாக்கினால் தேவர்களுக்கு
மூத்தவர்களான அசுரர்களை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு எரித்து விடுங்கள் . அவர்கள் மாமிசம்
சாப்பிடுபவர்கள் தானே! -ஒரு சுருட்டாகச் சுருட்டி வாயில் அடைத்துக் கொள்ளுங்கள்

ஹரிம் ம்ருஜந்த்யருஷோ ந யுஜ்யதே
ச ஸம் தேநுப: கல ஸோமோ அஜ்யதே
உத்வாச மீரயதி ஹிந்வதே மதீ
புருஷ்ருதஸ்ய கதிசிக் பரிப்ரிய:

ஸீதையைக் கண்டுபிடித்து விட்டு திரும்பிய ஹநுமான் ஸ்ரீராமனிடம் வருகிறார்.
சத்ருவிடம் கூட பகை கொண்டாடாத (ரிபூணவமபி வத்ஸல:=வால்மீகி ) ராமன் ஹநுமானின் தோளில் அன்புடன்
கைபோட்டுக் கொண்டார்.
பசுவினிடம் கிடைக்கின்ற பஞ்சகவ்யம் கலந்த கலசத்தில் ஸோமக் கொடியின் ரஸம் நன்கு கலக்கப்படுகிறதே
அதுபோல ஹநுமான் பவித்திரமான ப்ரேமையே நிரம்பிய ஸ்ரீ ராமனுடைய இதய கலசத்தில் ஸீதா தேவியின் அன்புச் சேதியை நிரப்புகிறார்.
ராமனுடைய திரு உள்ளம் பூரிக்கிறது. ப்ரம்ஹ தேவன் சிவபெருமான் முதலியோர் ராமனைக் கொண்டாடுகிறார்கள்
இப்படி கொண்டாடப்படுகின்ற ராமனுக்கு ஹநுமானுடைய ஸீதாதேவியின் ப்ரேம வசனங்களுக்கு முன்னால்
அவையெல்லாம் நிறைவு பெறவில்லை.

நீலகண்ட ஸூரியின் இந்த விளக்க உரை பெருமளவு வலிந்து கூறப்பட்டதுதான்.
அவரே ‘‘ஸூசனை தெரிகிறது’’ என்று சொல்லுகிறாரே தவிர, ஹநுமானுடைய சரிதம்
ருக்வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது -என்று சொல்லவில்லை.

———————–

ருக்வேதத்தில் முதல் மந்த்ரமே ஹநுமானைத்தான்
குறிப்பிடுகிறது. என்று ருக்வேதத்தின் சாந்த்ரபாஷ்யத்தின்
ஆதாரத்தில் எடுத்துக் கூறுகிறார்.

அக்நிம் ஈளே புரோஹிதம்
யஜ்ஞஸ்ய தே வம் ருத்விஜடி
ஹோதாரம் ரத்ந தாதமம்
புரோஹிதம் -யஜ்ஞஸ்ய என்ற
பதங்களுக்கு முதலில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம்

அக்நிம் தூ தம் வ்ருணீமஹே
ஹோதாரம் விச்வ வேதஸம்
அஸ்ய யஜ்ஞடய ஸுக்ரதும்

இந்த மந்த்ரத்தில் ஸுக்ரீவன் ஸ்ரீராமனுடைய
நட்பைப் பெறுவதற்காக ஹநுமானை அனுப்புகிறான்
என்பதை தூதம் என்ற சொல் ஸூசனை செய்கிறது.

புரோஹிதம் -என்ற பதம் கார்யத்துவக்கத்திலே
அநுகூலமாக இருப்பவன் என்ற கருத்தை கூறுகிறது.
இங்கு ஸீதாதேவியை தேடுவதற்காக ஸ்ரீராமன் ஹநுமானை அனுப்பினார்.
ஹநுமான் செய்த இந்த முதல் உதவி தான் தேவியை அடைவதற்கு முதலில் கிடைத்தது. ஆகவே ஹநுமான் புரோகிதன்.

யாகத்தில் ஹோதா -தேவதைகளை அழைப்பவர். ஹநுமான் முன்னே இலங்கை சென்று அரக்கர்களை போருக்கு அறைகூவி அழைக்கிறார்.
அதனால் ஹோதா என்ற மந்த்ரத்தின் சொல் ஹநுமானைக் குறிக்கிறது.
ரித்விஜம் -ருத்வா ஏஜம் கடலைக் கடந்து சென்று
அரக்கர்களின் உள்ளங்களை கலக்கினார்.
ஆகவே ருத்விஜம் என்ற சொல் ஹநுமானைக் குறிக்கிறது.

இந்த மந்த்ரத்தில் –உஷீமீள ரத்நதா4தமம் -என்ற சொல் ஹநுமானைக் குறிக்கும் விஷயத்தில் மிகவும் அர்த்த புஷ்டி உடையது.
ராமன் அடையாளமாக ஹனுமானிடம் ரத்நக்கணையாழியை அளித்தார். அதை ஏந்திச் சென்றார் ஹநுமான்.
இந்த ஒருசொல்லே இந்த மந்த்ரம் ஹநுமானைக் குறிப்பது என்பதற்கு முக்கியச் சான்று. சங்கமும் சக்ரமும் கதாயுதமும்
ஏந்தியவர் சங்க சக்ர கதாதர : என்ற அடைமொழி –
ஹரி என்று சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும் -இங்கு நாராயணனையே குறிப்பிடுமோ அதுபோல
யஜ்ஞஸ்ய தேவம்& ஸ்ரீராமனுக்கும் ஸுக்ரீவனுக்கும் -தோழமை -என்ற வேஷீமீவியை –
அக்நி ஸாக்ஷியாக நடத்தி வைத்தவர் அல்லவா ஹநுமான் இந்த அடைமொழிகளால் அக்நிம் -என்ற சொல் ஹநுமானையே குறிக்கிறது -என்று ஊர்ஜிதம் செய்யலாம்.

அக்ரே நயதி அக்நி: ஒரு கார்யத்தை முன் நின்று நடத்துபவன் -அக்நி. ஸீதையை மீட்பது -என்ற காரியத்தை
முன்னே நின்று நடத்திக் கொடுத்தவர் ஹநுமான்.
ஈளே அவனைத் துதிக்கிறேன். என்று ருக் வேதம் ஆரம்பிக்கிறது.
அக்நிம் தூதம் என்ற மந்த்ரம் இதே கருத்தை விவரமாகக் கூறுகிறது.
அஸ்ய யஜ்ஞடய தூ தம் ஸீதையை மீட்பது – என்ற வேஷீமீவிக்கு -தூதனாக அமைந்தவர் ஹநுமான்.

அரக்கர் நகரத்தையே கொளுத்திய அக்நி. -அஸ்ய யஜ்ஞஸ்ய தூதம் -யஐஞம் என்ற சொல் நாராயணனைக் குறிக்கும்.
டீஐளதீவயஜ்ஞபதி: யஜ்வா- என்று ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ராமனாக அவதாரம் செய்த விஷ்ணுவை வேஷீமீவிகளின் ஸகல வடிவங்களாகவும் குறிப்பிடுகிறது.
அந்த யஜ்ஞ புருஷனுடைய தூதன் ஹநுமான் அஸ்ய யஜ்ஞஸ்ய ஸுக்ரதும் ராமன் எடுத்துக்கொண்ட ஸீதையை மீட்பது என்ற – வேஷீமீவியை செவ்வனே நடத்திக்
கொடுத்தவன் ஹநுமான். எப்படி அவனால் அதை சாதிக்க
முடிந்தது?
அவன் விச்வவேதா: அவன் எல்லாச் செயல்களையும் நன்கு அறிந்து செம்மையாகச் செய்வதில் ஸமர்த்தன். அதனால் முடிந்தது.

வ்ருணீமஹே -அவனையே நாமும் -நமது
நல்ல கார்யங்களைச் செவ்வனே நடைபெறுவதற்கு துணையாக ஏற்போம்.

இந்த மந்த்ரத்தில் வருகின்ற அக்நி என்ற சொல்
பொருட் செரிவு உள்ளது.
அஞ்ஜனை பெற்ற பிள்ளைக்கு ஹநுமான் . என்ற
பெயர் எப்படி வந்தது. இதையும் ருக்வேதம்
ஸூசிப்பிக்கிறது.
மமச்சந தே மகவன் வ்யம்ஸோ
நிவி வி த்வாம் அபஹந¨ஜகாந
அதா நிவித்த உத்தரோ
ப பூவாந் சி ரோ தாஸஸய
ஸம் பிணக் வதே ந ॥

இந்திரனே ! நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே விசாலமான தோஷங்களை உடைய ஹநுமான்
ஸூர்யனை விழுங்க முனைந்தான்.
அவனைத் தடுப்பதற்காக அவனுடைய தாடைகளை வஜ்ராயுதத்தினால் = ராமதூதனாக வரப் போகிறவனுடைய = தலையின் பகுதியான தாடையை -நன்றாக தாக்கிவிட்டீர்கள்
விரிந்த தோள்களுடைய ஹநுமான் இப்படி அடிபட்டு
சிறந்த வீரன் ஆனான்.
வேதங்களை முக்கியமான செய்திகளை
மறைத்துத் தான் சொல்லும் ‘‘பரோக்ஷப்ரியா இவ ஹி தேவா ’’ தேவர்களும் மறைந்திருப்பதையே விரும்புவார்கள் .
அடுத்த மந்த்ரத்தில் இது நன்கு விளங்கும்.

அநுஸ்வதாம க்ஷரந்நாபோ
அஸ்யா வர்த் த மத் ய ஆநாவ்யாநாம
ஸத் ரீ சீநேந மநஸா தமிந்த்ர
ஓஜிஷ்டே ந ஹந்மநா ஹந் நபி. த்யூந்

ஆகாயத்தில் ஒரு நீலக்கடல் (மேகம்) அந்தக் கடலின்
உஷீமீள நீல நீர் தேவர்களுக்கு யாகத்தில் ஹோமம்
செய்யப் படுகின்ற ஹவிஸ்.
நெல் போன்ற தானியங்களை உற்பத்தி செய்கின்ற தண்ணீர் நிறைந்த ஆகாயத்தில் கப்பல்கள்
போகின்ற அளவுக்கு பெருத்த மேக வெள்ளத்தின் இடையே
ஹநுமான் மூழ்கிவிடாமல் மிதந்தார்.
இந்திரன் மேக மண்டலத்தில் மிதந்த ஹநுமான் மீது தன் வாஹனமான ஐராவதத்தை ஏவினார். ஐராவதத்தையே கபளீகரம் செய்த மனதினுடைய வேகத்தை மிஞ்சுகின்ற ஹநுமான்
(இங்கு ஹனுமநா என்ற சொல்லுக்கு – ஹநுமானால் என்று பொருளில் -ஹநுமதா என்ற சொல் மருவி ஹந்மநா என்று
ஆகியிருக்கிறது.)
துரத்தப்பட்ட இந்திரன் வஜ்ராயுதத்தால் அடித்தான்.

இவ்விதம் ருக் வேதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட
ஹநுமானைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

ஹிரண்ய ரூப : ஸ ஹிரண் யஸம்த் ருக்
அபாம் ந பாத் ஸேதுஹிரண்ய வர்ண:

ஹிரண்ய யாத் டரி யோநேர் நிஷக்யா
ஹிரண்யதா த த த்யத்ர மஸ்மை ॥

தங்க மயமான சரீரம் உடையவர் ஹநுமான்-ஹிரண்ய, தங்க மயமான புலன்களை உடையவர். கண்களும்
காதுகளும் மூக்கு முதலியன தங்கமயமானவை.

அபாம் நபாத்& முன் மந்த்ரத்தில் கூறிய படி
ஆகாயக்கடல் நீரை அபாம் என்று சொல் குறிப்பிடுகிறது.
ஆகாசத்தின் குமாரன் வாயு. ‘‘ஆகாசாத் வாயு:’’ வாயுவின்
குமாரன் ஹநுமான். ஆகவே ஹநுமான் ஆகாசத்தின் பேரன்
அபாம் நபாத் (நப்தா என்பது நபாத்). ஸேது ஹிரண்ய வர்ண = உண்மையான ஹநுமான் ஸ்வர்ண காந்தி உடையவன்.
தங்கமயமான ஸூர்யமண்டலத்தின் மீது உட்கார்ந்து தங்கத்தை வழங்குபவன் ஹநுமான். அவனுக்கு சாப்பிட
கொழுக்கட்டைகளை அளிப்போம். அஸ்மை அத்ரம்
(அன்னடி) மருத்பி: என்ற ஒன்பது தடவை வருகின்ற
மந்த்ரங்களில் -வாயுவின் குமாரன். அக்நி -ஹநுமான் என்றே பொருள் .
இதையே மருத்பி : அக்ந என்ற தொடர்
குறிப்பிடுகின்றது

இவ்வாறு கேசவாநந்தஜீ அழுத்தமாக
‘‘வேதங்கள் ஹநுமானின் அவதாரத்தை சிறப்பிக்கின்றன’’
என்று ஸித்தாந்தம் கூறுகிறார்.

————–

புராணங்கள் -ஏழு மஹநீயர்களை சிரஞ்ஜீவிகள் என்று கூறுகின்றன.

அச்வத்தாமா பலி: வ்யாஸ : ஹநுமான்- ச விபீஷண: । க்ருப : பரசுராம ஸப்த ஏதே சிரஜீவிந

அச்வத்தாமா-துரோணாசாரியரின் குமாரன்-பலி சக்ரவர்த்தி-வ்யாஸ: பகவான் -பராசரமுனிவரின் குமாரர்.

க்ருப:  மஹா பாரதத்தில் கௌரவர்களுக்கு ஆசார்யராக இருந்தவர். பரசுராம: -ஜமதக்நி முனிவரின் குமாரர்.

———-

.1. தேஜோ –நல்ல முக விலாஸம்-கபடமில்லாத
வனிடம் மட்டுமே இந்த முக விலாஸம் பளீர் என்று
துலங்கும்.
2.த் ருதி: -மன உறுதி. எடுத்துக் கொண்ட காரியம் உலகுக்கு
நன்மை தரும் என்பதில் உறுதியாக நம்பிக்கையோடு பிறந்த தைரியம்.
3.யசோ -இத்தகைய நல்லெண்ணம் கொண்டவன் இவன் என்ற புகழ் பெற்றிருக்க வேண்டும்.
4.தாக்ஷ்யம் -செயல் திறன்-ஒரு கருவியைக் கையாளுவதில் கூட லாகவம் வேண்டும்
5. ஸாமர்த்த் யம் -இந்த செயல்திறன் பயிற்சியினால் பழகிப் போன பின்பு செய்யும் போது லகுவாகத் தெரியும்.-இதுதான் ஸாமர்த்தியம் எனப்படுவது.
6. விநயோ –இத்தனை இருந்தாலும் அவற்றை
படாடோபமாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. இயல்பாக
இருப்பது போல நடந்து கொள்ள வேண்டும்.
7.நய: -செய்வதில் நியாயம் இருக்க வேண்டும்.யாரும்
தவறு கண்டு பிடிக்கக்கூடாது.
8.பௌருஷ -ஆளுமை வேண்டும்
9.விக்ரம்:-பணிகளில் பணியாளர்கள் அலட்சியம்
காட்டினால்-எதிர்ப்பு காட்டினால் அவர்களை உறுதியாக
அடக்க அதிகார தோரணை வேண்டும்.
10. பு த்தி : இந்த ஒன்பது திறன்களையும் வரிசையாக
முறைப்படி வெளிப்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டம்
யஸ்மிந்நேதாநி நித்யதா ॥ :
இவ்வனைத்தும் ஹனுமானிடம் இருந்தது என்கிறார்
ராமன்

———————————-

ருச்யமூகப் பர்வதம்

(1)ருச்யமூகப் பர்வதம் கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகே உள்ளது -.
பெல்லாரி மாவட்டத்தில் ஹாஸ்பெட்டிலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவு.
ஹம்பியில் தான் விரூபாட்ச பரமேச்வரன் ஆலயம். அதற்கு முன்னே ஸந்நிதி வீதியில் -நேரே சென்றால் ருச்யமூக அடிவாரத்தில் கொண்டுவிடும்.
இங்கு தானே வாலிக்கு பயந்து கொண்டு சுக்ரீவன் ஒளிந்து கொண்டிருந்தான்?
அதன் அடிவாரத்தில் தானே ஹநுமான் ஸ்ரீராம லட்சுமணர்களை முதலில் கண்டார்
இங்கு இந்த மலையை பிரதட்சிணமாக வில் வளைவாக துங்க பத்ராநதி ஓடுகிறது. அங்கே அதற்குச் சக்கர தீர்த்தம் என்று பெயர்.
அதன் கரையில் மலை அடிவாரத்தில் ஸ்ரீராம மந்திர் உள்ளது.
அங்கே ஸீதா லட்சுமண ராமர்களை ஸேவித்துக் கொண்டு
ஹநுமான் ஸேவார்த்திகளுக்கு வரம் அருளுகிறார்.

கிஷ்கிந்தை
ஹம்பிப் பிரதேசத்திலேயே விட்டல நாத ஆலயத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சென்றால்
சாலை வடக்கே திரும்புகிறது.
ஸ்படிக சிலா – என்ற இடத்திலிருந்து வருகின்ற சாலை இந்தச் சாலையில் சேருகிறது.
அதே வழியில் சற்று தூரம் போனால் துங்கபத்ரா நதி. அதன் அக்கரையில் அரைமைல் தூரத்தில் அநாங்குடி
என்ற கிராமம்.
இது தான் ராமாயண காலத்திய கிஷ்கிந்தை.
இங்கு பக்கத்தில் தான் ஸ்ரீராமன் ஒரே அம்பினால் துளைத்த ஏழு மாமரங்கஷீமீ இருந்தன.
சுக்ரீவன் ராமனுடைய அபார திறமையை மெச்சி வணங்கினான். அங்கு ஸ்ரீராமன் தன்னுடைய அடிபுறாத் தூணியை கழற்றி வைத்திருக்கிறார்.
அந்த அடையாளம் தெரிகிறது அங்கு தான் வாலி சுக்ரீவ
போர்கள் நிகழ்ந்தன. துங்க பத்ரா நதிக்கரையில் வாலி
ராமபாணத்தில் அடிபட்டு வீழ்ந்தான்.
அங்கெல்லாம் பாறைக பளீரென்று கண்களைப் பறிக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு குகை.
அங்கு ராமன் மழை நாட்களில் தங்கி இருந்திருக்கிறார்.

ஹநுமான் பஹாடீ
அந்த குகையின் பக்கத்தில் ஹநுமான் பஹாடீ என்ற
ஸ்தலம். பக்கத்தில் குன்று -சுக்ரீவன் குன்று.
ஹாஸ்பெட் அருகில் கமலாபுரத்தில் மதுவனம் என்ற கிராமம். லங்கையிலிருந்து ஸீதையைக் கண்டு திரும்பிய பின்பு வாநரப்படை அங்கு தான் வெற்றி கொண்டாடி தேன் குடித்தது.
இனிய பலாப் பழங்களைச் சுவைத்தது. அங்கு ஒரு ஹநுமான் ஆலயம். பம்பா ஸரஸ். நினைத்து நினைத்து மேனி சிலிர்த்து ஆஞ்ஜநேயரை தர்சித்து பிறவிப் பயன் பெறலாம்.
பக்கத்தில் ஆஞ்ஜநேய மலை சற்று உயரமான இடத்தில்
ஒரு குகை. அதில் அஞ்ஜனி -பால ஹநுமான் தர்சனம்.

மால்யவான் மலை
மால்யவான் மலை -அதற்கு இன்று ஸ்படிக சிலா
என்று பெயர். விரூபாக்ஷ ஆலயத்திலிருந்து ஆறு
கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
பக்கத்தில் ப்ரவர்ஷண கிரி. மால்யவான் மலையில் ஸ்படிக சிலை மீது அமர்ந்து ஸ்ரீராமன் ஸீதையின் பிரிவு தாங்காமல் -ஓயாமல் கண்ணீர் விட்ட இடம்.
ப்ரவர்ஷணக் குன்றிலிருந்து ஒரு சிற்றருவி கலகல
வென்று நீரைப் பெருக்குகின்றது.
ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 27,28 ஸர்க்கங்களின் ஸ்லோகங்களை வரிவரியாக நிறுத்திப் படித்தால் புலம்பிய ராமன் தோன்றுவான்.
அவருடைய கண்களைத் துடைத்து விடலாம். அந்தப் பெரும் பேறு கிடைக்கும். நான்கு மாதங்கள் அங்கே ராம லட்சுமணர்களைத் தாங்கி இருந்திருக்கிறார்களே.
ஹநுமான் லங்கையிலிருந்து திரும்பி வந்து இங்கு தான் ‘‘ஸீதாதேவி உயிருடன் இருக்கிறாள் ’’ என்று மங்களச்சேதி கூறியிருக்கிறார்.
அந்த ஹநுமானை அங்கு தர்சிப்பவர் பெரும் புண்ணியம் செய்தவர்களாகும்

———

பொதுவாக தென்னாட்டில் பக்தர்கள் மார்கழி க்ருஷ்ண சதுர்தசி மூல நக்ஷத்திரத்தில் ஸ்ரீ ஹநுமத் ஜயந்தி கொண்டாடுகிறார்கள்

வட நாட்டில் சித்ரா பூர்ணிமையன்றும் -சைத்ர சுக்ல ஏகாதசியிலும் சில இடங்களில் மாறுதலாக ஸ்ரீ ஹநுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

மைவார் நறும் கூந்தல் அஞ்சனை அமைந்த திருமஞ்சறூக்களை மாட்டி
வார் நறும் சுண்ணம் திமிர்ந்து, திருநெற்றி மிசைமணிநிலக்காப்பு மிட்டு
கைவார் நறும் குஞ்சிசூட்டி, மணிநூபுரக் காலணிகலன்களைப் பூட்டிக்
கைவிரல் சுவைத்தன்னை, மெளிணி விரற்சிந்தூர காந்தி கொஷீமீ இரேகை தீட்டிப்
பெளிணி வாளிணி நறுத் தேறல் ஒழுக, ஒழுக்கக்கால்பெயர்த்த முலை உண்டு, விம்பிப்
பெரு விழிக்கடை சிவந்தங் காந்து குறுநதை பெருக்கி மணி முத்தமாடிச்
செவ்வாளிணி திறந்து, பலர் சீராட்ட வளர் குழவி செங்கீரை யாடி அருளே
தீர திரி நேத்ரம் உள வீர அநுமந்தனே? செங்கீரை ஆடி அருளே –அருணாச்சலக் கவிராயர். பிள்ளைத் தமிழ் பாடல்

பிறந்த நாற்பது நாட்களுக்குள் கமகம வென்று நறும் கூந்தல் அழகியான அஞ்ஜனை – குழந்தையை கணுக்கால்களிடையே போட்டுக் கொண்டு –
தரையில் அமர்ந்து -கஸ்தூரிகோரோசனை கலந்து காளிணிச்சிய நல்லெண்ணையை தலையிலும் கண்களிலும் பார்த்து வழித்துக்
கை கால்களைப் பிடித்து விட்டுக் களபமாட்டி குழந்தையை பூந்துகில் கொண்டு ஒத்தி ஒத்தித் துடைத்து விட்டு, கண்களுக்கு மைதீட்டி –
நெற்றியில் பொடித்த முத்துத்துகளால் திலக மிட்டு -சுருஷீமீ சுருளான கேசங்களை கை விரலினால் கோதிவிட்டுப் பதிய வைத்து
ரத்தினச்சரம் சூட்டி கால்களில் மணி நூபுரக் காலணிகளைப் பூட்டி குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தம் வாயினால் சுவைத்து முத்தமிட்டு
விரல்களில் சிந்தூரம் தீட்டி உள்ளங்கைகளில்
சிந்தூர ரேகை எழுதி வாயில் விரலிட்டுக் குதப்பும் கடை வாளிணி வழியே நறும் தேன் ஒழுக –
அப்படி ஒழுக்கக்கால் – குழந்தை கையினால் குச கலசத்தைப் பெயர்த்து முலை உண்ணத் தாளிணி
விடுகிறாள்
குழந்தை பரபரப்பாக பெரு விழிக்கடை சிவந்து, அண்ணாந்து தாயின் முகம் பார்த்து குறு நகை பெருக்குகிறது.
தாய் குழந்தை வாயில் முத்தமிடுகிறாள் குழந்தை கால்களை உதைத்து -கைகளை ஆட்டி ஆட்டி அங்கிங்கு உங்க என்றெல்லாம்
செவ்வாயினைத் திறந்து மழலை பேசும் போது – ஓடி
வந்து சிறு பெண்கள் கை கொட்டி குழந்தை என்னோடு
பேசுகிறான் – என்று குலவும் போது
தீரனே – த்ரிநேத்ரம் உள்ள முக்கண்ணனின் அவதாரமே! வீர அநுமந்தனே -என்று அழைத்து செங்கீரை பாடி அருளே -என்று பாடுகிறார்

————–

ஸீதாராம பதாம் புஜே மதுபவத் யந் மாநஸம் லீயதே
ஸீதாராம கு ணாவளீ நிசி திவா யஜ்ஜிஹ்வயாssச்ரீயதே
ஸீதாராம ஸுபத்ர ரூபம நிசம் யச்சக்ஷுஷோ: பூஷணம்
ஸீதாராம ஸுநாம தேய ரஸிகம் தம் வாதஸூநும் பஜே ॥

ஸீதாராமர்களுடைய திவ்ய சரணத் தாமரைகளில் தேன் வண்டுகளே போல மனது எப்போதும் மொய்த்துக் கொண்டே உள்ளது
ஸீதாராம கல்யாண குணங்களை நாக்கு இரவு பகலாகப் பாடிக் கொண்டே இருக்கிறது –
ஸீதா ராமர்களுடைய மங்கள ஸ்வரூபம் கண்களுக்கு அழகூட்டுகின்றது.
ஸீதாராமர்களுடைய திருநாமத்தையே சொல்லிச் சொல்லிச் சுவைத்துக் கொண்டிருக்கின்ற அந்த வாயு குமாரனை சரண் புகுகின்றேன்.

அஞ்ஜநா கேஸரீ புண்யாய மங்களம்
ஸ்ரீராம பக்தாக்ர கண்யாய மங்களம்
ஸ்ரீராம நாமைக வத நாய மங்களம்
ஜாநகீ சோகாத் ரி தமநாய மங்களம்
ஸஞ்ஜீவிதாநுஜ ராமமோதாய மங்களம்
த்வம் ஜீவஸர்வதேத்யாசி ஷே மங்களம்
காத்ராச்லிஷத்ராம ப த்ராய மங்களம்
ஆத்ரேய ஸாபல்யதாயிநே மங்களம்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் / ஸ்ரீ ராம மங்களம்–

November 24, 2023

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஸ்ரீ ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரம் ஸ்ரீ ஸூர்ய மண்டலா வர்த்தியான ஸ்ரீ மன் நாராயணனுடைய அருளைப் பெறுத்தும்
என்பதாலேயே ஸ்ரீ கோவிந்த ராஜர் இதற்கும் வியாக்யானம் செய்து அருளி உள்ளார்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||–பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

———–

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராமராம மஹாபாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது. குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதிபரமனின் ஹிருதயம் – மந்திரம் நல்வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரமசிவம்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

ஸகல லோகங்களுக்கும் ஸ்வாமியான அந்த ஸூர்ய மண்டல அந்தரவர்த்தியான ஸ்ரீ மன் நாராயணி நீர் பூஜியும்

————–

ஸர்வ தேவாத்மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

எல்லா வஸ்துக்களையும் பிரகாசிக்க வல்ல கிரணங்களை யுடையவன்
தனது கிரணங்களாலே தேவாதி ஸர்வ பூதங்களையும் ரக்ஷித்து அருளுகிறான்
ஆகையாலே ரஸ்மி பாவந -என்னும் திரு நாமம் உடையவன்

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

அனைவரும் இவனே -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ருதுகர்த்தா ப்ரபாகரஹ: || 9-ருது கர்த்ர ப்ரபாகரஹ–பாட பேதம்

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கருமவசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவலோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ருதுகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

ஸாஷாத் விஷ்ணுவே பாலந கர்த்தாவாக இந்த ஸமஸ்த தேவதைகளுக்கு எல்லாம் அந்தர்யாமியாய் இருந்து அருளுகிறவன்

—————-

இப்படி ஸ்வரூபத்தை அருளிச் செய்து ஸ்தோத்ரம் அருளிச் செய்கிறார்

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸூவர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10–ஸூ வர்ண ஸ்தபநோ பாநு –-பாட பேதம்

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸ¤வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).-பச்சைப்பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் / உலகங்கள் / நிறங்கள் / நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக்கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.
திமிரோன் மதன – இருளை / அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.-பொன்மயமான கருப்பையை உடையவன்.
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.
பாஸ்கரோ -ஒளியானவர்/ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாத ஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்ய வீதீ ப்லவங்கமஹ: || 13-விந்த்ய பீதீ ப்லவங்கமஹ–பாட பேதம்

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.-தஷிணாயத்தில் விந்த்யத்தின் வழியாகப் போகிறவன்

(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.

ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.
விஷ்வோ- அண்ட வடிவானவன்.
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் / சூரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால்வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

ஒரு மாதத்திற்கு ஒன்றாக  பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லையில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்-அதிதியின் பிள்ளையான உனக்கு நமஸ்காரங்கள்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷெ நம ஹ: || 19 ||

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,-ஜனங்களுடைய புண்ய பாப ரூப கர்மங்களுக்கு சாஷியானவரே உமக்கு நமஸ்காரங்கள்
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

இப்படி ஸ்தோத்திரங்களை அருளிச் செய்து
மேலும் அவனது ஸ்வரூபத்தைப் பற்றி அருளிச் செய்கிறார்

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும்முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத்தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதஸ் ஸ்ருத்வா மஹா தேஜா நஷ்ட சோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ-ஸுப்ரிதோ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ர்தோ-பவது || 30

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச்சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

———

மகிமைகள்
ஆதித்ய ஹ்ருதயம் எவ்வளவு மகிமை பொருந்தியது என்பதை இராமாயணத்தில் காணலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் – அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் (உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
ஜயாவஹம் (வெற்றி தருவது)
ஜபேத் நித்யம் – நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் – அழிவற்றது பொங்கி பெருக கூடியது.
பரமம் – மிகப்பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் (அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது)
ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
சிந்தா சோக ப்ரஸமனம் (மனக்கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது)
ஆயுர்வர்த்தனம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
உத்தமம் – சிறந்தது

———–

வத்ரு வைலக்ஷண்யம் ,ஸ்தல வைலக்ஷண்யத்துடன் கூடிய அவதாரிகையுடன் – முன்னுரையுடன்
ஆதித்ய மண்டலத்தில் மத்யமத்தில் எழுந்தருளியிருக்கும் சூரியநாராயணன் பீடு கொண்டு அத்புதமாய் உதயமானார் .
ஆதித்ய ஹ்ருதயத்தை அருளிய அகஸ்தியர் மஹரிஷி நாமம் மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் பிறந்த கதை – விவரணம் அருமை .
ஆரோக்கியத்திற்கு – பாஸ்கரரையும் ,
ஞானத்திற்கு – ஈஸ்வரனையும்
தனத்திற்கு – அக்னிபகவானையும் மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் வல்லமை படைத்த ஜனார்தனனான
நாராயணனையும் மோக்ஷபலத்திற்கு ஸ்துதிக்க வேண்டும் .தன்யோஸ்மின் .

சுந்தர காண்டத்தில் குறிப்பிட்டது போல் ஹனுமன் சீதாப்பிராட்டியுடன் உரையாட அருமையான
பொன்மொழியாகிற செந்தமிழை தேர்ந்தெடுத்து பேச தீர்மானித்ததின் மூலம் செம்மொழியாகிற
செந்தமிழ் – தீந்தமிழின் ஏற்றம் உலகுக்கு புலப்படும் .
ஸ்ரீ ராமாயணத்தில் ராவணனுடன் ராமன் போர் புரியும்போது சற்று சோர்வு அடைந்த தருணத்தில்
அகஸ்தியர் மகரிஷியால் ராமருக்கு புத்துணர்ச்சி ஊட்ட உத்திராயண புண்ய காலத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்கபட்டது
ஆதித்ய ஹ்ருதயத்தில் முதல் இரு ஸ்லோகத்தின் அர்த்தவிசேஷங்கள் அருமை .
உலகமெங்கும் சூரியனாருக்கென்று ப்ரத்யோகமாய் பல கோவில்கள் எழுப்பப்பட்டுள்ள – அரிய பெரிய தகவல்கள்
விவரம் மற்றும் சூரியபகவானை ஆராதனை தெய்வகமாக கருதி வணங்கும் சௌராஷ்டிர வகுப்பினர் செய்தி அத்புதம் .

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட’ சூரிய ஸுக்தம் ‘ ,ஸ்ரீ இராமாயணத்தில் அகஸ்திய மகரிஷியால் வழஙகப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம் ,
மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் ,த்ரௌபதியும் கூறிய சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி மற்றும்
மஹநீயர் அப்பய்ய தீக்ஷிதராரால் இயற்றப்பட்ட சூரிய சதகம் – இவைகள் சூரியநாயனாரின் பெருமைகளை உணர்த்தவல்லது .

ஆதித்யஹ்ருதயத்திற்கு கோவிந்த ராஜ்ஜிய பூஷணம் என்ற பெயரில் தனி வ்யாக்யானம் மற்றும்
மஹேஸ்வர தீர்த்தர் அருளிய ‘தத்துவ தீபிகா ‘ போன்ற பெரிய வ்யாக்யாத்தாக்களால் போற்றப்பட்ட
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் என்பதின் மூலம் இந்த ஸ்லோகத்தின் ப்ராதான்யத்தை ஆஸ்த்ரிகர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது .

சூரியனை சஞ்சாரிக்கும் பாதை ஒரு எல்லைக்குள் உட்படாத நீண்ட பாதையாக இருப்பதாலும் ,
சூர்ய ரதத்திற்கு ஏக சக்ரம் அதை சாரத்யம் செய்யும் கருடனின் தமையனார் அங்க ஹீனம் கொண்ட அருணன் ,
அதில் பூட்டப்பட்ட 7 குதிரைகளுக்கு ஓரே ஒருசக்ரம் என பொருத்தமில்லாமல் சூரிய ரதத்தை செலுத்தும் பிரபாவம்
நமக்கு எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதில் வென்று விடலாம் என்ற உத்வேகத்தை கொடுக்க வல்லது
சூரியநாயனாரின் பிண்ணனி என்பது வெட்ட வெளிச்சம் .ஆதித்ய ஹ்ருதயத்திற்கு குரு அகஸ்திய மகரிஷி .
இது போன்ற பலபல அரிய பெருமைகளை அறிய வைக்கும் ஆதித்ய ஹ்ருதயம்

கும்பகோணத்தைச் சுற்றி சோழர்கள் கால நவக்ரஹ ஸ்தலங்களைப்போலவே சென்னையச் சுற்றி
பல்லவர் கால நவக்ரஹ ஸ்தலங்கள் ௨ள்ளன.கொளப்பாக்கத்தில் சூரிய ஸ்தலம். ௮கஸ்த்தீஸ்வரர் ஆலயம்.
நல்ல வேலை கிடைக்க இப்போதும் இளைஞர் கூட்டம் ௮லைமோதும்.

வந்தவாசியில் உள்ள இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோவில் திருமணிச்சேறையில் அகஸ்திய முனிவர் குகை உள்ளது.
அவர் தெற்கு நோக்கி வந்த போது அந்த மலையில் கால் பதித்து தெற்கை தாழச்செய்து சமப்படுத்தியதாக கூறப்படுகிறது

ஆதித்ய ஸ்தோத்ர ரத்னம் -அப்பயா தீக்ஷிதர்
வால்மீகி பெயராலே திருவான்மியூர்
திரு நீர் மலை எழுந்து அருளு உள்ளார்
பூஷணம் கோவிந்தராஜர் -ஸ்ரீ ராமாயண வியாக்யானம்

ப்ரணவத்துடன் சேர்த்து ஸ்மரிக்கும் இம்மந்திரம் காம க்ரோத மத மாத்ஸயலயாதிகள் உட்பட
எல்லா விரோதிகளையும் போக்க வல்லது .
இந்த ஸ்லோகத்தை ஜபிப்போருக்கு அழிவு இல்லாத பலத்தையும் பரம மங்களத்தையும் கொடுக்கும் .
இதை கேட்பவருக்கு கவலை ,துக்கம் ஒழிந்து, பக்தி ரூபாவண்ண ஞானம் பிறந்து ,
நல்ல ஆரோக்யத்துடன் கூடிய தீர்காயுசை பெற்றுத்தரும் .
இந்த ஸ்லோகத்தை சொன்னவர் – அகஸ்திய மகரிஷி கேட்டவர் – ராமர் ,
இதை தொகுத்தவர் தபஸ்வி வாலமீகி.ஜ்வாஜலயமாய் – அதீத பிரகாசத்துடன் ஸ்வர்ணத்தை ஒத்த எண்ணற்ற
சூர்ய கிரணங்கள் பஞ்ச இந்திரியங்கள் வழியாய் – சரீரத்திற்குள் ஊடூரூவி சைதன்யமான- ஞானத்தை பிறப்பிக்கிறது .
அக்னி ,இந்திரன் ,வருணாதிகள் போன்ற தேவர்களுக்கு மிஸ்ர ஸத்வத்தையும் அசுரர்களை ரஜஸ் தமஸ் போன்ற குணங்களையும் கொடுத்து
தேவர்கள் ,இந்திரர்களால் ஏக ஸ்துதியாய் போற்றப்படுபவனாகவும் ஆதித்யன் திகழ்கிறான் .
இங்கனம் அவனை துதிப்போருக்கு நல்ஞானத்தை கொடுக்க வல்ல சூரிய பகவானை நமஸ்கரிக்கிறேன் .

தேவாஸுர நமஸ்க்ருத்தாய நமஹ வைவஸ்தே நமஹ ,பாஸ்கராய நமஹ ,புவனேஸ்வராய நமஹ ,தேஜஸ்வியே நமஹ ,
ரஷ்மி பாவ்னாயே நமஹ ,ப்ரஹ்மணே நமஹ ,ப்ரஜாபதியே நமஹ மஹேந்திராய நமஹா –
இந்த ஆதித்யனாய் விளங்கும் சூரிய நாராயணனை குறிக்கும் நவ நாமாவளிகளின் அணிவரிசை –
அவைகளின் அர்த்த விசேஷங்கள் அத்புதம் .தன்யோஸ்மின் .

எவன் ஒருவன் – யஞயத்திற்கு ப்ரஜாபதியாய் இருப்பதாலும் (ப்ரஜாபதியே நமஹ ),இந்திரனின் ஐராவத மஸ்தகத்தில்
சூர்யகிரணங்கள் பட்டு தெறித்து அக்கற்றைகள் தாமரைத்தடாகம் வரை பரவி அதையும் பிரகாசிக்க வைப்பதால் –
மஹேந்திராய நமஹ என போற்றப்படுவதாய் , ஸ்வாமி திலகர் வ்யாக்யானத்தின் படி தனம் என்ற ஞானத்தை பெற்று தந்து ,
பின் தனதான்யத்தையும் குபேரன் போல் கொடுப்பதால் தநதாந்யய் நமஹ எனவும் ,

செவந்தகமணி ப்ரபாவத்தை எடுத்துரைத்து – அதற்கு உடையவனான சத்யஜித் அதனுடன் நடந்தது வரும் தோற்றம் –
சூரியன் ஆகாசத்திலிருந்து இறங்கி பூமியில் பவனி வரும் தோற்றத்தை ஒத்து இருந்தது என அதன் பெருமைகளையும் கூறி ,
காலனாயும் சூரியன் இருப்பதால் கால மண்டல ஸ்பந்தனாய நமஹ எனவும் போற்றப்பட்டு ,
பின் ம்ருத்யுக்கும் ம்ருத்யுவையை சூர்யநாராயணனாய் திகழ்வதால் எமனாய நமஹ எனவும் ,
சோமனாகிய சந்திரனும் சூரியனிடத்திலிருந்து ஒளிக் கற்றைகளை பெற்று தான் பிரகாசிப்பதாலும் ,
சிவனார் தன் உடலின் பாதி பாகத்தை உமையவளைக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் என பெயர் பெற்று
தன் சக்தியை வெளிப்படுத்திய- சக்தியுடன் கூடிய ஆதித்யனாய் கருதுவதாலும் -சோமாய நமஹ என ஸ்துதிக்க படுகிறார் ஆதித்யன் .

இங்கனம் அக்னியாய ,திவாகராய பித்ருதேவதாய மருதமூர்த்தாய ,வசுமூர்த்திய சத்ய மூர்த்தியே ,வாயுவே ,ப்ராணாய ,
ருது கர்த்தயே ,பிரபாகராய , ஆதித்யாய சவித்ரே ,ஸ்வர்ணசத்ருயை பானுவே பூஷனோ ,கபஸ்திதே ,பானுவேஷாய ,
திவகராய சாயாதிபதே – போன்ற பற்பல ப்ரபாவத்தை உள்ளடக்கியதால் பல்வேறு பெருமைகள் வாய்ந்த
திரு நாமங்களால் சூர்ய நாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட ஆதித்யன் போற்றப்படுகிறார் என்பதை அழகாய் ஸ்வாமி வருணித்தார் .

As per Rig Veda (8:72:16) says :
Adhukshat pipyushimisham urjam saptapadimarih Suryasya sapta rashmibhih
It means, 7 different colors of rays emitting from Sun, will give 7 different energies.
Sun temples built in Konark etc places in india are seen with 7 colored horses chariot.

ஆரோக்கியத்திற்கு பாஸ்கரனையும் ,தனதான்ய வ்ருத்திக்கு அக்னி பகவானையும் ,ஞானத்திற்கு சிவபெருமானையும் பிரார்தித்தாலும்
இவர்கள் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக ஸ்ரீமன் நாராயணன் உறைந்து அவரவர் தம்தம் தொழில்களை புரிய வைக்கிறார் என்றும்
மோக்ஷத்தை பெற்றுத்தர ஜனார்தனனான ஸ்ரீமந் நாராயணன் அனுகிரஹிக்கிறார்

ஸ்வாமி மயூர கவி அருளிய சூரிய சதகம் சதஸ் – ஸ்வாமி வேதாந்த தேசிகரின் கருட பஞ்சாசத்த்தை
ஓத்து இருப்பதை கோடிட்டு .கூர்நாராயணஜீயர் சாதித்த சுதர்ஷன் சதகமும் ஆதித்யனின் பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறது என்றார் .
மேலும் அகஞானம் என்கின்ற இருளை போக்குவதால் திமிரோன் மதனாய நமஹ என ஆதித்யன் போற்றப்படுகிறார்.
மற்றும் ,ரக்ஷிமிப்பதயே நமஹ,ஹரிதஸ் வஹாய நமஹ ,த்வவுட்ரே நமஹ மார்த்தாண்டாய நமஹ ,ஹயன சந்தயே நமஹ
அம்சுபதயே நமஹ ,ஹிரண்ய கர்ப்பாய

ஹரண்யகர்ப்பாயை ,சிசிராய ,தபாநாய யஸ்கரோ ரவிகி or பாஸ்கரோ ரவிகி ,ரவயே ,அக்னிகர்ப்ப ,அதிதே புத்ராய ,
சங்காய ,சிசிரநாசன ,வ்யோமநாதாய ,
தபோபேதியை ,ரிக் யஜுர் சாம பாரகாயை ,கண்வருஷ்டயே ,அபா மித்ராயே ,விந்த்யவீதி ப் ல வங்க மாணாய ,
ஆத்மீனே ,மண்டலினே ,ம்ருத்யவே ,பிங்களாய ,ஸர்வதாபனாயே ,
கவயே , விஸ்வஸ்மை, மஹாதேஜஸே சர்வேஷ்வரேலூ ரக்தக ,ரக்தாய ,ஸர்வ ப்யோத்பலாயே ,சூரியனாவே ,விஸ்வபாலனாக –
போன்ற இந்த நாமக்களுடன் ‘நமஸ் ‘ சப்தத்தை கூட்டி நாமாவளியாக நாராயணனை அந்தர்யாமியாக கொண்ட
சூரியபாகவனை ஸ்துதி செய்யக்கடவோம் என்றார் .

இந்த விஸ்வத்தில் ப்ரத்யக்ஷமாய் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு ஸ்வரூப ரூபமாக ஒளிவிட்டு காப்பதால்
விஸ்வபாலனாயே நமஹா என போற்றப் படுகிறார் .
மஹா தேஜஸ்வியாய் ஒளியை கொடுக்கும் ஸ்ரீமன் நாராயணனை அந்தர்யாமியாய் கொண்ட தேஜஸ்வியான
சூரியபகவான் என்றபடியால் தேஜஸாமபி தேஜஸ்வி என அழைக்கப்படுகிறார் .
இதுபோல் துவாதச மாதங்களுக்கும் சுடர் விடும் பெரும் ஜ்யோதியாய் – நாயகனாய் திகழ்வதால் த்வதசாத்மனே என ஸ்துதிக்கப்படுகிறார் .

நம பூர்வாய நமஹ – தொண்டரடிபொடி ஆழவார் திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் சாதித்தபடி
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி என்றாற்போல் திருவரங்கப்பெருமான் –
குணதிசையாக போற்றப்படும் கிழக்கு திசையில் தன் திருவடிதாமரைகளை நீட்டிக்கொண்டு அடியார்களுக்கு திருவடி சேவை சாதிப்பதாலும் ,
மேலும் எம்பெருமானின் கால்களை தொழ ஹேதுவாய் சூரியன் காலையில் கிழக்குத்திசையில் உதித்தும் ,
பின் மாலை வேளையில் மால் ஆன திருமாலின் கடாக்ஷம் பெற்று மேற்கு திசையில் அஸ்தமிக்கிறார் என்கிற வேங்கடகவியின் கூற்றை .

இந்த வகையான காரணங்களால் சூரியன் முறையே – பூர்வாயாகிரனே நமஹ என்றும் ,பஸ் சிமாத்ரயே நமஹ எனவும்
அழைக்கிக்கப்படுகிறார் .வாரத்தின் எழு நாட்களுக்கும் அதிபதியாய் விளங்குவதில் தினாதிபதியே என வணங்கப்படுகிறார்.
மேலும் ஜெயமூர்த்தயே ,ஜெயபத்ராய ,ஹர்யஸ்வாய ,ஸ்யமாஸ் வாய வாய, சஹஸ்ராக்ஷீ ,ஆதித்யாய,உக்ராய ,வீராய சாரங்காய ,பத்மபிரதாய
பிரசாண்டாய ,ப்ரஹ்மாவிஷ்ணு சிவாத் மிகாயை ,- ஏஷ நாராயனாக – ப்ரஹ்மாச்சுத்தாயே ,பாஸ்வதே ,சர்வபக்ஷயாயே ,ரௌத்ரவடிவே ,தமோக் நாய ,ஹிமக் நாய சத்ருக்கினாயே என அந்தந்த நாமாவளிக்கு ஏற்ப அர்த்தங்களை தாங்கிக்கொண்டு ஜ்வாஜால்யமாய் பிரகாசிக்கிறார்

ஆதித்யா கிருதய நாமாவளியை நிறைவாய் வரிசைப்படுத்தியத்திலிருந்து –
சத்ருக்னாயே ,அமிதாத்மினே ,க்ருதகனனாகி ,தேவாய ,ஜ்யோதிஷயாம் பதயே ,தப்தகாமிக்கரா பாய ,
ஹரவே விஸ்வகர்மனே ,தபோயீ நிர்ணாயே ,ருசயே ,லோகஸாக்ஷினே ,பூதநாஸாயே ,பூத சிரஷ்டரே ,ப்ரபவே பாத யே ,
தபதே ,வர்ஷதே சுக் தேவி ஜாக்ரதே ,அந்தர்யாமிஸ்திதாயே ,அக்னிஹோத்ராயா ,அக்னிஹோத்ரபலப்ரதா யே
பதுமஸ்ம்ருத்தாயே பகவதே ப்ரஹ்மணே ,ருதேஹு விஜயஸ் யசு நிசந்தேகமாயே – போன்ற இந்த நாமாக்களை
‘நமஸ் ‘ சப்தத்தைக்கூட்டி 125-நாமாவளியாக்கி ஸ்வாமி ராமவர்மா என்ற திலகர் ,ஸ்வாமி சுதாகர் போன்றோரின் வ்யாக்யானத்த –

மேலும் அகஸ்திய மகரிஷி அருளிய இந்த ஸ்லோகம் ஸ்ரீராமாயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது.
மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூரியநாராயணனை அந்தர்யாமியாகக் கொண்ட சூரியபகவானை ப்ரார்தித்து
அக்ஷய பாத்திரத்தை பெற்றதாலும் சூரியசதகத்தில் இதன் ப்ராதான்யத்தைக் குறிப்பிட்டதாலும் –
இதிகாசங்கள் புராணங்களில் இதன் முக்கிய பங்கு அனைவரும் அறியும் வண்ணம் புலப்படுகிறது .
இத்தகைய பெருமைகள் வாய்ந்த ஆதித்ய ஹ்ருதயத்தின் ச்லோகர்த்தங்களை எளிமைப்படுத்தி
ஆஸ்த்ரிகர்கள் அனைவரும் ஆச்ரயிக்கும் வண்ணம் அத்புதமாய் இதன் முக்கியத்துவத்தையும் பலாப லனையும் உணர வேண்டும்

——

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி–ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்–

November 24, 2023

“ஶ்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவநம்

அர்ச்சநம் வந்தநம் தாஸ்யம் ஸக்ய மாத்ம நிவேதநம்”–ஸ்ரீ பாகவதம்

எம்பெருமானுடைய திவ்ய சரணாரவிந்த பரிசர்யையாகிற மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவதற்குப் பக்தி என்பது
ஒரு சிறந்த உபாயம். பகவானிடம் அந்தப் பக்தியை ஒன்பது விதமாகச் செலுத்தலாம். (நவதா பக்தி)

  1. ஶ்ரவணம் பகவானுடைய கதைகளைக் கேட்பது
  2. கீர்த்தனம் பகவத் கல்யாண குணக்களைப் பாடுவது
  3. ஸ்மரணம் அவனை மனத்தில் நினைப்பது
  4. பாத ஸேவநம் அவன் திருவடி ஸேவை புரிவது
  5. அர்ச்சநம் அவன் திருவடிகளில் தூமலர் தூவித் தொழுவது
  6. வந்தனம் ஸாஷ்டாங்கமாக அவன் திருவடிகளை வணங்குவது
  7. தாஸ்யம் குற்றேவல் புரிவது
  8. ஸக்யம் பகவானிடம் தோழமை கொள்வது
  9. ஆத்ம நிவேதனம் தன்னையே பகவானுக்கு அர்ப்பணிப்பது

இந்த ஒன்பதில் நடுநாயகமான அர்ச்சனை என்பது, பகவானுடைய நாமங்களை ஒவ்வொன்றாக வாயால் உச்சரித்து, புஷ்பம், துளஸி போன்றவைகளை அவன் திருவடிகளில் ஸமர்ப்பித்தலாகும். பாராயணத்தைக் காட்டிலும் அர்ச்சனைக்கு அதிக பலன் உண்டு. ஒவ்வொரு நாமத்தையும் முன் “ஓம்” என்ற பிரவணத்தையும், பின் “நம:” என்ற சொல்லையும் சேர்த்து சொல்வது. ‘விஶ்வம்’ என்று சொல்வதைக் காட்டிலும், ‘ஓம் விஶ்வாய நம:’ என்று சொன்னால், அந்த நாமம் ப்ரணவ ஸம்பந்தத்தாலும், நம: சப்தத்தாலும் மந்த்ர ரூபம் பெற்று, பகவானை நம் பக்கம் திருப்பி அநுக்ரஹம் அளிக்கும்படிச் செய்கிறது.

அர்ச்சனையின் பெருமையை ஆழ்வார்கள் பல இடங்களில் பாடியிருக்கிறார்கள்.

புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள் தூவி,
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்– திருவாய்மொழி 10-2-4

நாடீர் நாடோறும், வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம், வீடே பெறலாமே– திருவாய்மொழி 10-5-5

———-

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் அச்’யுதாய நம:
ஓம் அதீந்த்ராய நம:
ஓம் அனாதி நிதனாய நம:
ஓம் அனிருத்தாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அரவிந்தாய நம:
ஓம் அஶ்வத்தாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஆதிதேவாய நம:
ஓம் ஆனந்தாய நம:    –10-

ஓம் ஈஸ்வராய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் ஏகஸ்மை நம:
ஓம் ஓஜஸ் தேஜோத் யுதிதராய நம:
ஓம் குமுதாய நம:
ஓம் க்ருதஜ்ஞாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் கேஶவாய நம:
ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:
ஓம் கதாதராய நம: –20-

ஓம் கருடத்வஜாய நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் கோவிதாம்பதயே நம:
ஓம் சதுர்ப் புஜாய நம:
ஓம் சதுர் வ்யூஹாய நம:
ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஓம் ஜ்யோதிஷே நம:    –30-

ஓம் தாராய நம:
ஓம் தமனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தீப்த மூர்த்தயே நம:
ஓம் து:ஸ்வப்ன நாஶனாய நம:
ஓம் தேவகீ நந்தனாய நம:
ஓம் தனஞ்சயாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாரஸிம்ஹ வபுஷே நம:  –40-

ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்மினே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் ப்ரணவாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் புண்டரீகாக்ஷாய நம:
ஓம் ப்ருஹத் ரூபாய நம:  –50-

ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் மது ஸூதனாய நம:
ஓம் மஹா தேவாய நம:
ஓம் மஹா மாயாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் முக்தானாம் பரமா கதயே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் யஜ்ஞ குஹ்யாய நம:
ஓம் யஜ்ஞ பதயே நம:   –60-

ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் லக்ஷ்மீ பதே நம:
ஓம் லோகாத் யக்ஷாய நம:
ஓம் லோஹி தாக்ஷாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வராரோஹாய நம:
ஓம் வஸு ப்ரதாய நம:  –70-

ஓம் வஸு மனஸே நம:
ஓம் வ்யக்தி ரூபாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் வாயு வாஹனாய நம:
ஓம் விக்ரமாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஷ்வக் ஸேனாய நம:
ஓம் வ்ருஷோதராய நம:
ஓம் வேத விதே நம:
ஓம் வேதாங்காய நம:     –80-

ஓம் வேதாய நம:
ஓம் வைகுண்டாய நம:
ஓம் ஶரணாய நம:
ஓம் ஶாந்தாய நம:
ஓம் ஶார்ங்க தன்வனே நம:
ஓம் ஶாஶ்வத ஸ்தாணவே நம:
ஓம் ஶிகண்டனே நம:
ஓம் ஶிவாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஸ்ரீ நிவாஸாய நம: –90–

ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஶுபாங்காய நம:
ஓம் ஶ்ருதி ஸாகராய நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ஸதா யோகினே நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:–100

ஓம் ஸுதர்ஸனாய நம:
ஓம் ஸுரா நந்தாய நம:
ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் ஹிரண்ய நாபாய நம:
ஓம் ஹ்ருஷீகேஶாய நம: –198–

——————————————————-

 

ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்

பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

சரணம்

தசரத பாலனுக்கு சக்ரவர்த்தி ராமனுக்கு
தசாவதாரனுக்கு சங்கு சக்ர பூஷனுக்கு
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்கிர ஆளனுக்கு
தண்டுளவத் தோளனுக்கு ஜானகிமணாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒத்தக்கடை நரசிங்கமங்கலம்– திரு நாராயண நல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

November 24, 2023

யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது. யானைமலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.

கி.பி. 770 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.

யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் ” இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்” என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. “இவ” என்பது “இபம்” என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் “யானை” என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் “இவ குன்றம்” என்றால் யானைமலை என்று பொருள். பா’ என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் “தங்குவதற்கான கற்படுக்கை” என பொருள் படும். “ஏரிஆரிதன்”, “அத்துவாயி அரட்டக்காயிபன்” ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.

யானைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கிஅம்பிகா,தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் 2000 ஆண்டுகளுக்கு பின்பும் பார்பவர்களை வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

இங்கு கருவறையில் நரசிங்கப் பெருமாள் யோக நரசிம்மராகக் காட்சி தருகிறார். சுமார் 6 அடி அகலமும் நீண்டு உயர்ந்த பிரமாண்டத் திருமேனியராக அமர்ந்திருக்கும் நரசிம்மப் பெருமாளின் திருமேனி இம்மலையின் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் அற்புதத் திருவுருவம் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். அந்தத் தருணத்தில் நம் கவலைகள் எல்லாம் மறந்து மனம் லேசாவதை இங்கு தரிசனம் செய்யும் அனைவரும் உணர்வார்கள்.

இக்கோயிலில் நின்றகோலத்தில் நரசிம்ம மூர்த்தியின் உற்சவத் திருமேனி உள்ளது. ஆனால் இத்திருமேனி ஆலய வளாகத்தை விட்டு வெளியே வருவதில்லை. மாறாக, உற்சவ காலங்களில் அருகில் இருக்கும் காளமேகப் பெருமாள் உற்சவ மூர்த்தியே இங்கு எழுந்தருள்கிறார்.

இங்கு கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபம், பிற மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்களே எனலாம். ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் சந்நிதியும் பிற்காலக் கட்டுமான பாணியிலேயே அமைந்துள்ளது.

இங்கு ஆலயத்தை ஒட்டியே நன்னீர்ப் பொய்கை அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தம் கங்கைக்கு இணையான புண்ணிய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இந்தத் தீர்த்தம் உடல் மற்றும் மன நோய்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது என்கின்றன தலபுராணங்கள்.

இங்கு பெருமாளுக்கு மாசி மாதப் பௌர்ணமித் திருவிழா மிக விசேஷமாக நடைபெறும். குறிப்பாக கஜேந்திர மோட்சம் இத்திருக்குளத்தில் நிகழ்த்தப்படும்

———-

காலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை.

வேகமாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் புரவியை இளைஞன் கணுக்கால் அசைவில் நிறுத்தினான். அதைக் கண்டு, பின்னால் வந்த அனைவரும் சற்று அதிர்ச்சியோடு, ‘இவர் இந்த காட்டுப் பகுதிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லையே’ என்று எண்ணியபடி, என்னவென்று அறிய அவனை நோக்கி வேகமாக விரைந்தார்கள்.

சப்தம் வந்த திசையில், அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது ஸ்ரீவைஷ்ணவ இராமானுஜ அடியார்கள் போன்று அந்த இளைஞனுக்குத் தெரிந்தது. அந்த இடத்திலிருந்து மேற்கே சற்று தூரத்தில் ஒரு ஏரி இருந்தது. அங்கிருந்து வரும் இதமான குளிர்க் காற்றில் இவர்கள் மேலாடைகள் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் அந்த ஏரியை நோக்கிச் செல்வதற்கு முற்பட்டு அதை நோக்கி நடந்து கொண்டிருப்பதையும் அந்த இளைஞன் கவனித்தான். இந்த அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அந்த இளைஞனுக்கும் அறிந்து கொள்ளத் தோன்றியது. அவர்களை நோக்கி விரைந்தான். தங்களை நோக்கி ஒருவர் வருவதைக் கண்டு, சற்றே தயங்கி நின்றார்கள். இதைக் கவனித்த இளைஞனோடு வந்த மற்றவர்களும் அங்கு விரைந்தார்கள்.

“தாங்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த அடர்ந்த காட்டுப் பாதையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் என்னிடம் சொல்லுங்கள்” என்றார் இளைஞன்.

ஏற்கெனவே ஒருவித பயத்தில் இருந்த அந்த அடியார்கள், இந்தக் காட்டுப்பகுதியில் யாரோ ஒருவர் திடீரென்று வந்து கேட்டதால் மேலும் அதிர்ந்தார்கள். அதை இளைஞனும் புரிந்துகொண்டான. அவர்களின் தோற்றம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் போல் தெரியவில்லை.

‘தயங்காமல் கூறலாம், நீங்கள் அனைவரும் வேற்று ஊரிலிருந்து வருபவர்கள் போல் தெரிகிறது’ என்ற இளைஞனின் மொழிக்கு, ‘நாங்கள் ஸ்ரீரங்க தேசத்தவர்கள். இங்கு திருமாலிருஞ்சோலை வந்தோம். உச்சியானதால் இந்தப் பொழுதின் கர்மாக்களைச் செய்ய அந்த ஏரியை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்’ என்று அந்த நால்வரில் ஒருவர் பதில் தந்தார். இளைஞனுக்கு அவர்களிடமிருந்து மேலும் சில விஷயங்கள் தெரியக்கூடும், அதனால் அவர்களைப் பின்தொடர்வது நல்லது என எண்ணினான்.

‘சரி, நானும் வருகிறேன். புரவிக்கும் கொஞ்சம் நீர் தேவைப்படுகிறது’ என்று கூறி பின்தொடர்ந்தான்.

‘இப்போது திருவரங்கம், திரிசிராமலை சோழ தேசத்தில் உள்ளது. உங்களுக்கு இந்த ஏரி பற்றி எதுவும் தெரியாதென்று நினைக்கிறேன்’ என்றான் இளைஞன்.

‘இல்லை. நாங்கள் இப்போதுதான் இந்த வழி வருகிறோம். நரசிங்க மங்கலம் சென்று கொண்டிருக்கிறோம்’ என்றார் ஒருவர்.

‘ஓ! நல்லது. நானும் அவ்வழிதான் போகிறேன். நரசிங்கமங்கலம் இதே சோழர்களோடு போரிட்டு வென்ற பின் நெடுஞ்சடையன் பராந்தகப் பாண்டியன் நரசிம்மர் திருக்கோவிலும், சதுர்வேதி மங்கலமும் கட்டமைத்தார். பின்னர் இந்தப் பகுதியும் சிலகாலம் சோழர்களுக்குப் போயிற்று. அப்போது பராந்தகச் சோழன் காலத்தில், சோழநாட்டுப் புறங்கரம்பை நாட்டைச் சேர்ந்த அருணிதிகலியன் என்பார் இந்தக் கோவிலுக்குச் சில தானங்கள் தந்து, ஒரு ஏரியும் ஏற்படுத்தினார். அவர் தானமாய் தந்த வயல்கள் இதன் மூலம் நீர் பெறுகிறது. அதன் வருவாய் இறையிலியாக நரசிம்மர் கோவிலுக்கும், அங்கு கைங்கரியம் செய்யும் அந்தணர்களுக்கும் செல்கிறது. பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் இவற்றை முறைப்படுத்தினர்’ என்று அந்த இளைஞன் விளக்கி வரும்போதே அந்த ஏரியும் வந்தது.

‘ஸ்வாமி, அடியேன் ஆரணந் தோழ நின்றான். நீங்கள் சொல்லும் போதே நரசிங்கமங்கலம் பெருமான் கண்முன்னே வருகிறார். இந்த ஏரியின் திருநாமம் என்னவோ?’ என்றார் ஒருவர்

‘கலியனேரி’ என்றான் இளைஞன்.

‘ஆஹா. என்ன புண்ணியம் செய்தோம்’ என்று அவர்கள் அந்த ஏரியை நோக்கி விழுந்து வணங்கினார்கள்.

மிதமான அலைகள் அடித்துக் கொண்டிருந்தன. அந்த அலைகள் அவர்களை அழைப்பது போல் இருந்தது. அவர்களில் ஒரு முதியவர், ‘அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை..’ என்ற திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் ஒன்றைச் சொல்லிக்கொண்டே ஏரி நோக்கி விரைந்தார். அனைவரும் அவரைத் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் உட்பட அனைவரும் உச்சிகால கர்மாவை தங்கள் முறைப்படி முடித்தார்கள்.

‘அரசே தாங்களா?’ என்றார் அந்த நால்வரில் ஒருவர், அந்த இளைஞனைப் பார்த்து. ஆம், அந்த இளைஞர் தன் தலைக்கச்சு எல்லாம் களைந்திருந்தார்.

‘ஆம், நான்தான் விசயா’ என்று விடை பகர்ந்த இளைஞனை விசயன் உட்பட அனைவரும் வியந்து பார்த்தனர்.

‘என்ன சொல்கிறாய் விசயா. அரசரா?’ என்றார் முதியவர்.

‘ஆம் ஸ்வாமி. எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீவல்லபப் பாண்டியன்’ என்றான் விசயன்.

‘இப்போதாவது நீங்கள் எல்லாம் யார், இங்கு பாண்டிய நாட்டில் என்ன விஷயமாய் இருக்கிறீர்கள் என்று சற்றே கூறலாம். என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்’ என்றார் அரசன்.

அங்கு மர நிழலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த முதியவர் தொடங்கினார். ‘அரசே, சோழ மண்டலத்தில் குழப்பங்கள் அதிகம் இருப்பது தாங்கள் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் சோழன் செய்த கொடுமையால் தாயைப் பிரிந்து இருக்கும் சேய் போல் நாங்கள் உள்ளோம். இந்த உலகத்திற்க்கே ஆசாரியரான எங்கள் இராமானுசர் இப்போது வடக்கே இருக்கிறார். சோழன் செய்த கொடுமையால் நாங்கள் அனைவரும் அரங்கமாநகரை விட்டு ஆங்காங்கு இருக்கிறோம்..’ என்று சொல்லும் போதே அவர் அழத் தொடங்கிவிட்டார்.

‘ஆம். யாம் அறிந்தோம். இராமானுஜருக்கும், திருவரங்க வைணவர்களுக்கும் சோழன் செய்த கொடுமைகளைக் கொஞ்சமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் சில திங்கள்களில் நிலைமை அரங்கன் அருளால் சீராகும்’ என்றார் அரசர். பின் ஏதோ சொல்லத் தொடங்கினார். ‘கூரத்தாழ்வானும், பெரிய நம்பியும் கூட…’ என்றவுடன் விசயன், ‘அரசே, இருவரின் கண்களும் சோழனால் பறிக்கப்பட்டன. அந்தக் கொடுமையால் பெரிய நம்பி ஸ்வாமி வைகுந்தம் அடைந்தார். ஸ்வாமி கூரத்தாழ்வான் திருமாலிருஞ்சோலையில் இருந்தார். அங்கிருந்து தான் நாங்கள் வருகிறோம்.’

‘அது பற்றித்தான் கேட்க வந்தேன். ஸ்வாமி கூரத்தாழ்வானைத் தரிசித்தீர்களா? நலமுடன் இருக்கிறாரா?’ என்றார் அரசர்.

‘அழகன் மடியில் இருக்கும் போது கவலையில்லை. ஆனால் ஸ்வாமி திருவரங்கத்து எம்பெருமானையும், எம்பெருமானாரையும் நினைத்து ‘சேர்வது அடியேன் எந்நாளோ?’ என்று உருகிக் கொண்டிருக்கிறார். இந்தத் தசையிலும் அவரையும் மேலிட்டு ‘சுந்தரபாஹு ஸ்தவம்’ என்று திருமாலிருஞ்சோலை அழகர் மீது கவி புனைந்திருந்தார். அவற்றை இப்போதுதான் அனுபவித்து வந்தோம்.’

‘ஆஹா. ஸ்வாமிக்கு ஈடில்லை. இந்தக் கொடிய நேரத்திலும் திடமாய் இருந்து நம் அனைவரையும் அவர்தான் வழிப்படுத்த வேண்டும்’ என்றார் அரசர்.

‘அரசே, அழகனும், பரமஸ்வாமி பெருமானும் ஸாத்சாத் அந்த இராம, கிருஷ்ண அவதாரங்கள்தான். ஆழ்வார்கள், உபநிஷத்துக்கள் அனுபவித்ததை எல்லாம் நம் ஆழ்வான் இந்த ஸ்தவத்தில் காட்டியுள்ளார்.  ‘ஸர்வாபீஷ்டம் மம மத்குருரோச் ச ததஸே நோ கிம் வநாத்ரீச்வர’, எங்களுக்கும், ஆசாரியர் இராமானுஜருக்கும் ப்ரியமானதைத் தந்தருள வேண்டும், முன்பு போல் மீண்டும் திருவரங்கம் வந்து எம்பெருமான் கைங்கர்யம் செய்யவேண்டும்’ என்ற இந்த வரிகளைத்தான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார். எங்களுக்கும் அவ்வாறேதான் அந்த அரங்கனிடம் வேண்டுதலாய் இருந்தது. எங்கள் இராமானுஜர் மீண்டும் திருவரங்கம் பெரிய கோவில் வரவேண்டும். அந்த மாநிதியைக் காப்பாற்றி இந்த தரிசனத்தை மேலும் வளர்க்கவேண்டும்’ என்றார் அந்தப் பெரியவர்.

‘ஆம், அதோடு இந்தப் பாண்டிய நாடும் இழந்த தன் இராஜ்யங்களைத் திரும்ப அடைய வேண்டும். அந்த சோழன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. முன் போல் இப்போது யாருக்கும் தொந்தரவு தரும் நிலையில் சோழ நாடு இல்லை. அரசன் வீழ்ந்த நிலையில் நாடு ஒரு குழப்ப நிலையில்தான் இருக்கிறது. நீங்கள் அனைவரும் இப்போது திருவரங்கம் மீண்டும் செல்லலாம்.’

‘ஆம் மன்னா, இது பற்றி உறங்காவில்லி தாசர் எங்களிடம் சொன்னார்’ என்ற விசயனை இடைமறித்து ‘யார் மல்லர்கள் தலைவன் தனுர்தாசரா?’ என்றார் சீவல்லபன்.

‘ஆம், அவர்தான் அரசே. இப்போது திருமாலிருஞ்சோலையில் எங்களோடு இருந்தார். அவர்தான் இந்த விஷயங்களைச் சொல்லி, கூரத்தாழ்வான் ஸ்வாமியை திருவரங்கம் அழைத்துக் கொண்டு செல்கிறார்.’

‘ஆஹா, நல்ல காரியம். இந்தப் பாண்டியன் செய்ய நினைத்ததைச் செய்திருக்கிறார். அரசாங்கத்தில் இருந்தவருக்கு மதிநுட்பம் சொல்லித்தர வேண்டுமா என்ன? இந்தப் பாண்டிய நாடு மட்டும் இப்போது சோழனுக்கு அடிமைப்பட்டிருக்காவிட்டால், உங்களைப் போன்ற திருமால் அடியார்கள் இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் தஞ்சம்புகும் நிலை இருக்காது. கூடிய சீக்கிரம் இந்த ஆட்சி முடிவுக்கு வரட்டும்’ என்று பெருமூச்சு விட்டு அரசர் தொடர்ந்தார்,

‘ஒரு விந்தை பார்த்தாயா விசயா, இராமனுசரால் திருவரங்கனின் செந்தாமரைக் கண்களைக் காட்டி திருத்தப்பட்ட தாசர், அதே கண்ணழகை தினமும் தரிசித்த ஆழ்வான் இப்போது தன் கண்களை இழந்து, அந்த அரங்கனை மனக்கண்ணால் தரிசிக்க தாசரோடு திருவரங்கம் செல்கிறார். எல்லாம் அந்த அரங்கன் விளையாட்டா?’ என்று அரசரும் வருந்தினார்.

‘மன்னா, சரியாகச் சொன்னீர்கள். அவை என்ன சாதாரண கண்களா? அரங்கருக்கே அந்த அழகு கண்களில்தானே உள்ளது. நீண்ட அப்பெரியவாய கண்கள் எல்லாரையும் பேதமை செய்யாமலா இருக்கும்.

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்*

குழலழகர் வாயழகர் கண்ணழகர்* கொப்பூழில்

எழுகமலப் பூவழகர் எம்மானார்* என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

எப்படி வேதத்தில் ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்னும்படி ‘என்னை உன்னைக்கேயாக்க வேண்டும்’ என்று அந்த செந்தாமரைக் கண்ணழகிற்குத் தோற்றது பற்றி சொல்லியதோ அது போலே ஆண்டாள் நாச்சியார் எவ்வளவு அற்புதமாய்ச் சொல்கிறார், தாம் அந்த அரங்கனின் கண்ணழகுக்குத் தோற்று, கைவளை கழல்வளையாய்ப் போனது என்று. இவற்றை எல்லாம் இப்போது இழந்து நாம் இருக்கிறோமே?’ என்று வருத்தத்துடன் பகிர்ந்தார் அந்த முதியவர்.

‘ஆஹா. அருமை ஸ்வாமி. ஆண்டாள் நாச்சியாரின் அமுத மொழிகளுக்கு ஈடு உண்டா? வேதத்தைத் திரட்டி நம் திராவிட மொழியில் அல்லவா கொடுத்திருக்கிறார். அடியேனுக்கு இந்த இடத்திலும் உங்கள் உபதேசம் கிடைத்தது என் புண்ணியம் ஸ்வாமி’ என்று அரசர் சொல்லும் போதே,

‘மன்னா, வெகு நேரம் கடந்துவிட்டது.’ என்று அமைச்சர் சுந்தர தீரதரன் குரல் கேட்டு திரும்பிய அரசர்,

‘ஆம் அமைச்சரே. நானும் அதைக் கவனிக்கவில்லை. திருமாலடியார்களோடு இருக்கும் போது கிழமை செல்வது கூடத் தெரியாது.’

‘ஸ்வாமி, நான் ஒரு அவசர வேலையாய் சோழ நாடு சென்றுவிட்டு இப்போது மதுரை அரண்மனை சென்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் எதுவும் வேண்டுமானால்..’ என்ற அரசரை முதியவர் வணங்கி,

‘நன்று மன்னா. ’திருவுடை மன்னரைக் காணில்’ என்று ஆழ்வார் சொன்னது போல் இந்த இடத்தில் வந்து எங்களுக்கு ஆறுதலாய் இருந்தீர்கள். நாங்களோ, கானகம் சென்ற இராமனைக் காண கங்கைக் கரையில் பரதன் இருந்தது போல் இந்த ஏரியில் நிற்கிறோம்..’ என்றார் முதியவர்.

‘இராமாநுசரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி அவரையும் திருவரங்கம் அழைத்து வரச் செய்யலாமா?’ என்றார் அரசர்.

‘அதைத்தான் நாங்களும் பேசிக்கொண்டு வந்தோம். இந்த பாலகன் அம்மங்கி வரதன், தான் செல்வதாய்ச் சொல்கிறான்’ என்றார் முதியவர். அந்த பாலகன் மிகுந்த தேஜஸோடு இருந்தார்.

‘ஓ, நல்லது. நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் சில காலம் இங்கு நரசிங்க மங்கலத்தில் வாசம் செய்ய வேண்டும். நான் ஓரிரு நாட்களில் வந்து பார்க்கிறேன்’ என்ற அரசர், அமைச்சரையும், மற்றை சிலரையும் அழைத்து சிறு ஆலோசனை செய்து, ஏதோ உத்தரவுகள் பிறப்பித்தார். அவர்களிடம் விடை பெற்று மதுரை நோக்கி விரைந்தார்.

அரசர் உத்தரவுப்படி சிலர் அந்த திருமால் அடியார்களுக்கு பாதுகாப்பாய் நரசிங்க மங்கலம் சென்றனர். முதியவருடன் சிலர் அங்கு இருக்க, வரதன் மட்டும் திருவரங்கம் நோக்கிப் பயணமானார்.

அங்கிருந்து கிளம்பிய அரசன் மதுரை செல்லாமல், அமைச்சருடன் வழியில் இருக்கும் இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலம் சென்றார். அங்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி நாட்டுத் தலைவர்கள், அரையர்கள், பிரதானிகள் இருந்தனர். அது ஒரு மந்திராலோசனை போல் இருந்தது. சோழ பாண்டியர்களால் சிதறிக் கிடந்த சில பாண்டிய வாரிசுகளும் இருந்தனர்.

‘அவையோரே, இன்றுதான் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருகிறோம். சோழநாடு நல்ல நிலையில் இல்லை. இந்நிலைமை நமக்குச் சாதகமாய்த்தான் இருக்கிறது. நம் மன்னன் வீரகேசரி, வீரராஜேந்திர சோழனோடு நடந்த போரில் வீர சுவர்க்கம் அடைந்தார். அது முதல் இங்கு, ஏற்கெனவே இருந்த சோழபாண்டியன் என்ற சோழ அரசுப்பிரதிநிதி ஆண்டுவருகிறார். இப்போது ஸ்திரமான சோழ மன்னன் இல்லை. இப்போது நாம் சோழ நாட்டைப் பிடிக்க வேண்டாம். அது விவேகமும் இல்லை. நாம் இழந்த பாண்டிய நாட்டில் மீண்டும் யாருக்கும் அடி பணியாத கயல் கொடி பறக்க வேண்டும். அதற்கே நாம் இங்கு கூடியிருப்பது. இப்போது கூட சோழன் பெயரில் இருக்கும் ஊரில்தான் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்’ என்று முழங்கினார் ஸ்ரீவல்லபன்.

‘மன்னா, உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம். படைகள் எல்லாம் மறைவிடங்களில் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆபத்துதவிகள், நாட்டுத் தலைமை அனைவரும் ஆங்காங்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். இன்னும் ஒரு இரவில் நாம் மதுரையம்பதி கோட்டையை முற்றுகையிட்டு, சோழபாண்டியர்களையும் வெளியேற்றி, நம் சுதந்திர மீன் கொடியைப் பறக்க விடலாம்’ என்றார் அமைச்சர் தீரதரன்.

‘சரி, இதுதான் நல்ல சந்தர்ப்பம். இப்போது அவர்களை வெளியேற்றினால் சோழப் படைகளும் இங்கு வராது. இவர்களை நிரந்தரமாய் மதுரைவிட்டே வெளியேற்றி, இனி திரை செலுத்தாத பழைய பாண்டிய மண்டலமாய் இருக்கலாம்’ என்ற மன்னன், மேலும் சில ஆலோசனைகளைச் சொல்லி, ஆங்காங்கு இருக்கும் சோழ பிரதிநிதி, படைகளை வெளியேற்ற வியூகம் வகுத்தார்.

மறுநாள் அந்தந்த நாட்டுத் தலைவர்கள் தங்களின் சிறுபடையுடன், சோழ படையை எதிர்கொண்டனர். சோழப் படைகள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்குக் கட்டளையிட சோழபாண்டிய பிரதிநிதிகள் அப்போது பாண்டிய நாட்டில் இல்லாதது ஸ்ரீவல்லபனுக்குக் கை கொடுத்தது. இரண்டு நாட்களில் சோழ நாட்டிலிருந்தும் உதவி கிடைக்காததால், சோழப்படைகள், மற்றை பிரதானிகள் எல்லாம் சோழ தேசம் திரும்பினர். அங்கும் உள்நாட்டுக் குழப்பம் இருந்தது. ஏற்கெனவே இருந்த பாண்டியர்களின் தாயாதி பிரச்சினை இருந்தது. ஆனாலும், ஸ்ரீவல்லபன் மதுரையின் பிரதான அரண்மையில் அமர்ந்தான்.

அன்றைய பொழுது பாண்டிய நாட்டில் நற்பொழுதாய்ப் புலர்ந்தது. ஆலவாயண்ணல் திருக்கோவிலில் யாழ் கொண்டு மருதம் இசைத்துக் கொண்டிருந்தனர் பாணர்கள். வீதியெங்கும் விழாக்கோலம். மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பாண்டியநாடு தன்னாட்சி அடைந்திருந்தது. வீரப்போர் செய்து ஈட்டிய வெற்றி இல்லாததால், ஸ்ரீவல்லபன் இந்த வெற்றியைப் பெரிதாய்க் கொண்டாட இசையவில்லை. எந்த நேரமும் சோழர்கள் மீண்டும் போர் தொடுப்பார்கள் என்று எண்ணியிருந்தார். சில நாட்களில் அந்த திருமாலடியார் விசயன் அரசரைக் காண சோழ நாட்டிலிருந்து வந்தான்.

‘மன்னா, சோழ மன்னன் இப்போது இல்லை. சோழ நாட்டில் இன்னும் குழப்பம் தீரவில்லை. அடுத்த அரசனாய் குலோத்துங்கன் விரைவில் பட்டமேற்பார் என்ற பேச்சு வருகிறது’ என்றான் விசயன்

‘ஆம் விசயா, இப்போதுதான் அது பற்றி அமைச்சருடன் பேசிக் கொண்டிருந்தேன். நாம் இன்னும் முன்னேற்பாடாய் இருக்க வேண்டும். நீ காவிரிக் கரையில் கண்காணித்து வா. நாங்கள் இங்கு தயாராய் இருக்கிறோம். அப்புறம் வரதன், இராமானுஜரை சந்தித்தானா? ஸ்வாமியும் ஸ்ரீரங்கம் வந்துவிட்டாரா?’ என்று மிகுந்த ஆவலாய்க் கேட்டார் அரசர்.

‘அதைப் பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சோழ நாட்டிலுள்ள நிலையை அறிய மாருதி சிறியாண்டான் என்பாரை இராமானுசர் திருநாராயணபுரத்திலிருந்து அனுப்பியிருந்தார். கூரத்தாழ்வான், திருமாலிஞ்சோலையிலிருந்து திருவரங்கம் செல்வதற்கும், சிறியாண்டான் அங்கு வருவதற்கும் சரியாய் இருந்தது. இராமானுசர் எக்காலமும் அறிந்தவராயிற்றே. வரதனை தாங்கள் சொன்னபடி திருவரங்கப் பெருமான் பிரசாதங்களுடன் மேலும் ஒருவர் துணையோடு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து தகவல் வந்தது. இராமானுஜரை திருநாராயணபுரத்தில் சந்தித்ததாகவும், இங்குள்ள நிலை பற்றிச் சொன்னதாய் இருந்தது. இராமானுஜர் இவர்களைக் கண்டவுடன் மிக சந்தோஷித்து, இன்னும் சில திங்கள்களில் திருவரங்கம் திரும்புவதாய்ச் சொன்னதாகவும் இருந்தது. அதையும் நரசிங்க மங்கலத்தில் இருக்கும் ஸ்வாமியிடம் சொல்லலாம் என்று வந்தேன்’ என்றான் விசயன்.

‘ஆஹா. நன்னாளில் நல்ல செய்தியோடுதான் வந்தாய். இராமானுஜர் விரைவில் திருவரங்கம் திரும்ப வேண்டும். இப்போது நரசிங்க மங்கலம் நானும் வருகிறேன். நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும்’ என்ற அரசனும், விசயனும் அன்று மாலையே சென்றனர்.

அவர்கள் அதே இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலத்தைத் தாண்டித்தான் போனார்கள். சில நாட்கள் முன் மந்திர ஆலோசனை நடந்த அந்த மண்டபம் இருந்தது. மன்னனை அது ஏனோ ஈர்த்தது. அன்று திருமால் அடியார்களுடன் கலியனேரியில் பேசிக்கொண்டிருந்தது, திருவரங்கன் கண்ணழகு பற்றி அந்த ஸ்வாமி சொன்னது, ஆண்டாள் பாசுரம் எல்லாம் அவர் கண் முன் வந்து போனது. திருவரங்கன் கண்கள் ஏதோ சொல்வது போல் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராய் மேலும் பயணத்தைத் தொடந்தார். நரசிம்மரைத் தரிசித்துவிட்டு அங்கேயே இருக்கும் அந்த முதியவரைக் காணச் சென்றார். அவர், அடியார்களுக்கு திருவாய்மொழியின் ஒரு பாடலுக்கு பொருள் விளக்கிக்கொண்டிருந்தார். அது திருவேங்கடம் பற்றியது.

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்

கண்ணன் செங்கனிவாய்க் கருமாணிக்கம்

தெண்ணிறை சுனைநீர்த் திருவேங்கடத்து

எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.

செந்தாமரைக் கண்ணன்’ என்ற இடம் பற்றி விளக்கினார் அவர். அங்கு அமர்ந்து கேட்ட மன்னன், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். பின்னர் அந்த ஸ்வாமியிடம் தனியே சந்தித்து விசயன் சொன்ன விஷயங்களை எல்லாம் சொன்னார். பின் தன் முடிவையும் சொன்னார்.

‘ஸ்வாமி, தாங்கள் இன்னும் சில காலம் இந்த பாண்டிய மண்டலத்தில் இருந்து நல்லுரைகளை வழங்க வேண்டும். இங்குள்ள ஜனங்களை அறவழியில் செலுத்த, மீண்டும் பாண்டிய தேசம் பழைய பொலிவு பெற அருளவேண்டும். இங்கிருந்து சில காத தூரம் இருக்கும் கிராமத்தில் ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும் என்று, வரும்போதுதான் எண்ணிக்கொண்டு வந்தேன். வந்த போதே, நீங்கள் சொன்ன பாடலும் அது போலவே அமைந்தது. எம்பெருமான் திருக்கண் கடாக்ஷம் எப்போதும் நமக்கும் வேண்டும். ஆகவே, ‘செந்தாமரைக்கண் ஆழ்வார் கோவில்’ என்று ஒரு கோவிலை விரைவில் நிர்மாணிக்கப் போகிறேன். தாங்கள் அங்கிருந்து கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். எம்பெருமானார் திருநாராயணபுரத்தில் இருப்பதால், புதிதாய் நிர்மாணிக்கும் கோவில் மற்றை பிடாகை நிலங்களையும் சேர்த்து ‘திருநாராயண நல்லூர்’ என்று பெயர் பெறட்டும். அதற்கான வேலைகளைத் தாங்கள் சம்மதித்தால் இப்போதே தொடங்குகிறேன்’ என்று அரசன் ஒரே மூச்சாய்ச் சொன்னதைக் கேட்டு அவர் திகைத்து நின்றார்.

‘அரசே, நான் சொல்ல என்ன இருக்கிறது. அரங்கனும், அழகனும் அதைத்தான் விரும்புகிறார்கள் போல் இருக்கிறது. எம்பெருமானார் திருவரங்கம் திரும்பியவுடன் நான் சிலகாலம் அங்கு சென்று வர வேண்டும். அதற்க்கு மட்டும் தாங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்றார் முதியவர்.

‘நல்லது. நிலைமை சீரானவுடன், அதற்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். நான் இப்போதே கோவில் திருப்பணிகளைத் தொடங்குகிறேன்’ என்று விடை பெற்றுச் சென்றார். அரண்மனை சென்றவுடன், அருகிருந்த பிடாகையிலிருந்து நிலங்கள் சேர்க்கப்பட்டு, ‘திருநாராயண நல்லூர்’ தனியாய் உருவாகி, மருதூர் என்ற கிராமத்தில் கண்ணாழ்வார் கோவிலுக்கு நிலம், வயல்கள், தீர்த்தக் குளம் என்று எல்லாம் வரையறுக்கப்பட்டு அதற்கான திருமுகம் எழுதப்பட்டு, நாட்டுத் தலைவர்கள் மூலம் பணிகள் நடந்தன.

பாண்டிய மண்டலத்தின் சிறந்த சிற்பிகள் பணி செய்தார்கள். அருகிலிருந்த மலையிலிருந்து தேவையான கற்பாறைகள் கொண்டுவரப்பட்டன. அரசன் அவ்வப்போது வந்து திருப்பணிகளைக் கண்காணித்துப் போனார். அர்த்த மண்டபம், மகாமண்டபம், சதுர கர்ப்பகிரகம் மற்றும் சிறந்த சிற்பவேலைகளோடு மிகவும் பிரமாண்டமாய் திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. பாண்டியக் கட்டடக் கலையான யாளிகள் பிரம்மாண்டமாய்த் தூண்களில் அலங்கரித்தன. தனிக்கோவில் நாச்சியாருடன் கோவில் இருந்தது. கோவில் கர்ப்பகிரகம் சுற்றி மூடிய திருச்சுற்று, பிரதட்சனபாதம் கொண்டு சாந்தார வகைக் கோவிலாய், வேதத்தின் ஆறு அங்கங்கள் போல், கோவிலும் ஆறு அங்கங்களைக் கொண்டு, மூன்று வேதங்களைக் குறிக்க மூன்று தளங்களுடன், த்ரி-தள விமானத்துடன் முழுதும் கற்களால் உருவானது. கோவிலின் வெளியில் சந்திர புஷ்கரணி கட்டப்பட்டு, அது, ஸம்ப்ரோக்ஷணம் செய்யும் இரண்டு நாள்களுக்கு முன் பெய்த மழையில் நிரம்பியிருந்தது. உற்ஸவர், மூலமூர்த்தி நேர்த்தியான திருக்கண்களோடு, எம்பெருமான் திருமேனிகள் அமைந்தன. மங்கள தினத்தன்று, யாரும் எதிர்பாராது போல், உதயத்தில் சூரிய ஒளி, மண்டபங்கள் தாண்டி கர்ப்பகிரஹம் வரை வந்த போது, எம்பெருமான் கண்கள் மேலும் பிரகாசமாய்த் தெரிந்தது. அன்று உறங்காவில்லி தாசர் கண்ட கண்கள் போல், இன்று ஸ்ரீவல்லபன் எம்பெருமானைக் கண்ணாரத் தரிசித்து மகிழ்ந்தார். அருகில் அந்த பெரியவர் ஆழ்வார் பாசுரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.

*

காலம் இருபதாம் நூற்றாண்டு

‘ஆஹா, என்ன உன்னதமான கனவு இன்று. ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது அப்படியே கண்முன் வந்தது போல் இருந்தது. நான் இன்னும் எத்தனை தவம் செய்தாலும் இது போல் அனுபவம் கிடைக்காது. இதைச் சொல்லத்தான் இந்த அதிகாலையில் இங்கு வந்தேன்’ என்று தன் கனவின் அனுபவத்தை உணர்ச்சியாய் சுந்தரராம பட்டர் இராகவ தீக்ஷிதரிடம் சொன்னார். இருவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.

‘அருமை பட்டரே என்னையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர். நான் இன்று இரண்டாம் காலம் பூஜைக்குத்தான் சொக்கலிங்கபுரம் கோவில் செல்கிறேன். இப்போது உங்களோடு மருதூர் வருகிறேன். நீங்கள் சொன்னதிலிருந்து பெருமானை தரிசிக்கவேண்டும் போல் இருக்கிறது’ என்று தீக்ஷிதர் சொல்ல இருவரும் மருதூர் கண்ணாழ்வார் கோவில் வந்தனர். அது மார்கழி மாதம். திருப்பள்ளியெழுச்சி பூஜைகளைச் செய்யத் தொடங்கினார் சுந்தரராம பட்டர். சிறிது நேரத்தில் தீக்ஷிதர், பட்டரை அழைத்துக் கொண்டு, கோபுரத்தடியில் இருக்கும் விரிவான கல்வெட்டைக் காட்டினார். அவர் அன்று கண்ட கனவின் ஒருபகுதி கண்களின் முன்னால் கல்லில் எழுத்துக்களாய் இருந்தது. அதை அவரால் தொடர்ப்புபடுத்திக் கொள்ள முடிந்தது.

ஸ்வஸ்திஸ்ரீ திருமடந்தையுஞ் செயமடந்தையும் திருப்புயங்களில் இனித்திருப்ப இருநிலமும் பெருமை எய்த…

இராஜேந்திரச்சோழ சதுர்வேதிமங்கலத்து மேல்பிடாகை திரவிய நண்ண ஈமருதூர் கண்ணாழ்வார்…

தேவர் மொழிந்தருளினபடி இவ்வாழ்வாற்கு தேவதான இறையிலியாக திருமாற்றுளரு…

கோவிலும் திருமுற்றமும் திருநந்தவனமும் தீர்த்தக்குளமும் திருவீதியும் உட்பட.. போகும் கேசவனேரி குளம் இரண்டும்..

முதலாக்கி இருபத்திரண்டாவது முதல் திருநாராயண நால்லூரென்னும்… ‘

‘அடியேன் இதுவரை இந்தக் கல்வெட்டை விரிவாய்ப் படித்ததில்லை. அடியேன் முன்னோர்கள்தான் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் மதுரை நகரத்திலிருந்து இங்கு கைங்கர்யம் செய்ய வந்ததாகவும், எம்பெருமான் திருமஞ்சனத்தின் போது அவரின் திருமார்பில் இருக்கும் லக்ஷ்மி விக்ரஹம் களையப்பட்டிருக்கும். அப்போது பிரிவாற்றாமை இல்லாமல் இருக்க நாச்சியார் திருமொழி சேவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு முதலில் தரப்பட்ட கைங்கர்யம். இது இராமானுசர் திருமலையில் ஏற்படுத்தியது. அதை பாண்டியன் இங்கும் கொண்டு வந்தார் போலும். பின்னாளில் கோவிலில் அர்ச்சக கைங்கர்யமும் சேர்த்தே கிடைத்தது’ என்று பட்டர் தீக்ஷிதரிடம் சொன்னார்.

பட்டர் மேலும் அன்றைய திருமஞ்சனம், அலங்காரம் எல்லாம் விரைவாய், மிகவும் ஆதுரத்தோடு செய்தார். தீக்ஷிதர் அன்று அந்தக் கோவிலிலேயே வேதங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். அலங்காரம் நிறைவுற்று, உற்ஸவர் மூர்த்திகளைத் தரிசிக்கும் போது முன்பு எப்போது இல்லாதபடி மிகப் பிரகாசமாய் இருந்தார். அவர் கண்களிலிருந்து பேசுவது போல் இருந்தது. அன்று இருவருக்கும் கண்ணாழ்வார், கண்ணழகராகவே இருந்தார். இருவருமே கோவிலைவிட்டு அகல மனம் இல்லாதவராகவே இருந்தனர்.

பட்டர் வீடு வந்தவுடன், மனைவியிடம் அனைத்தையும் சொன்னார். அவரின் பிள்ளை ஸ்ரீதரன் வெளியூரில் குடும்பத்தோடு தங்கி, அரசாங்க உத்யோகம் பார்த்து வருகிறார். பட்டர் அவருக்கு நடந்த அனைத்தையும் கடிதத்தில் அனுப்பினார். இதுபோல் அவ்வப்போது அங்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் கடிதத்தில் அனுப்பிவிடுவார், வீட்டில் கன்று போட்டாலும் கூட.

இவ்வாறாக நாட்கள் சென்றன. பட்டரும் மிகவும் உவப்போடு கைங்கர்யம் செய்துவந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அன்று நடந்திருந்தது.

சிலநாட்களில், மீண்டும் ஒரு கடிதம் ஸ்ரீதருக்கு வந்தது. இம்முறை அவன் அம்மா கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்ததும் ‘ஆ.. ‘ என்ற பெருங்குரலோடு கீழே சரிந்தான். கடிதத்தின் சாராம்சம் இதுதான். ‘தை மாதம் பிறந்து சில நாட்கள் சென்றிருந்தன. பட்டரும் தீக்ஷிதரும் கோவில் சென்றிருந்தனர். கோவில் கருவறைக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உற்ஸவர் வழக்கமான இடத்தில் இல்லை. கடந்த மூன்று நாட்களாய் பட்டரும் தீக்ஷிதரும் எதுவும் உண்ணவில்லை. ஊரே உற்ஸவர்க்காய்க் காத்திருக்கோம்’ என்று உருக்கமாக இருந்தது சில வரிகள் மட்டுமே இருந்த கடிதம்.

ஸ்ரீதரின் மற்றொரு கையில் இருந்த சுதேசமித்திரன் நாளிதழ் தலைப்புச் செய்தியில் ‘மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்’ என்றிருந்தது.

அடிக்குறிப்பு:

  1. நரசிங்கமங்கலம் – இன்று நரசிங்கம் என்று வழங்கப்படுகிறது. மதுரை யானைமலை அடிவாரத்தில், ஒத்தக்கடை – திருமோகூர் வழியில் உள்ளது. திருமாலிருஞ்சோலை – அழகர் கோவில்.
  2. ஒரு சோழ மன்னன் ‘சிவனே முழுமுதற் தெய்வம்’ என்று வைணவர்கள் ஒத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதால், இராமானுஜர் சோழ மண்டலம் விட்டே சென்று, பல ஆண்டுகள் மேல்கோட்டையில் (திருநாராயணபுரம்) இருந்தார். கூரத்தாழ்வானுக்கும், பெரிய நம்பிக்கும் அரசனால் கண்கள் பறிக்கப்பட்டன. பின்னர் சில காலத்தில் அந்த அரசன் இறந்துபட்டான். அந்த மன்னனை ‘கிருமி கண்ட சோழன்’ என்றே வைணவ நூல்கள் சொல்கின்றன.
  3. சோழ நாட்டில் நடந்த விஷயங்களையும், திருவரங்க பெருமாள் பிரசாதங்களையும், திருநாராயணபுரம் கொண்டு சென்றார் அம்மங்கி அம்மாள். அங்கு இராமானுசர் அவரை வாரி அணைத்துக்கொண்டு, மந்த்ர உபதேசம் செய்தார் என்று குருபரம்பரா பிரபாவம், வார்த்தாமாலை போன்ற வைணவ நூல்கள் சொல்கின்றன. மாருதி சிறியாண்டான் பற்றிய குறிப்பும் குருபரம்பரா பிரபாவம் நூலில் வருகிறது.
  4. அரசு தொல்லியல்துறையின் இந்தக் கோவில் கல்வெட்டு பற்றிய குறிப்பில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற பதம் கிரந்த எழுத்தில் இருக்கிறது. இன்றும் இந்தக் கோவில் பாழடைந்து கவனிப்பார் இன்றி இருப்பதாகவே தெரிகிறது.

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்–ஸ்ரீ சம்மோஹன ஸ்ரீ க்ருஷ்ண ஸ்துதி

November 24, 2023

ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, ஸ்ரீவராஹ, நரஸிம்ஹ, வாமந, விஷ்ணு, ஸுதர்சந மூர்த்திகளை ஆவாஹனம் செய்து,
தர்ப்ப கூர்ச்சத்தால் அந்தத் தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் செய்துகொண்டும், பருகியும் பலர் தம் கஷ்டங்களை நீக்கிக் கொண்டுள்ளார்கள்.
துர்தேவதைகளின் தொல்லைகளும், விஷ உபத்ரவங்களும், எதிரிகளின் மந்த்ரம், மாயம் இவற்றால் வரும் இன்னல்களும்,
இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு வராது; வந்தாலும் சிரமம் தராது என்று பெரியோர்கள் அநுபவ பூர்வமாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

ஸ்ரீ தால்ப்ய உவாச:

பகவந் ப்ராணிநஸ் ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை
துஷ்ட க்ரஹாபி காதைஶ்ச ஸர்வ கால முபத்ருதா:    –1–

ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ஶ ரோகைஶ்ச தாருணை:
ஸதா ஸம்பீட்ய மாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம  -2-

கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா:
ந பவந்தி ந்ருணாம் தந்மே யதாவத் வக்து மர்ஹஸி     –3-

ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

வ்ரதோப வாஸ்யைர் விஷ்ணுர் நாந்ய ஜந்மநி தோஷித:
தே நரா முநி ஶார்தூல விஷ ரோகாதி பாகிந:   –4-

யைர்ந தத் ப்ரவணம் சித்தம் ஸர்வதைவ நரை:க்ருதம்
விஷ ஜ்வர க்ரஹாணாம் தே மநுஷ்யா தால்ப்ய பாகிந:     –5-

ஆரோக்யம் பரமாம் ருத்திம் மநஸா யத் யதிச்சதி
தத்ததாப்நோத்ய ஸந் திக்தம் பரத்ராச்யுத தோஷ க்ருத்    –6-

நாதீந் ப்ராப்நோதி ந வ்யாதீந் விஷ க்ரஹ நிபந்தநம்
க்ருத்யா ஸ்பர்ஶ பயம் வாபி தோஷிதே மது ஸூதநே   –7-

ஸர்வ து:க ஶமஸ்தஸ்ய ஸௌம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:
தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந:  –8-

யஸ்ஸமஸ் ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே
உபவாஸாதி தாநேந தோஷிதே மது ஸூதநே      –9-

தோஷகாஸ் தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா:
அரோகாஸ் ஸுகிநோ போகாந் போக்தாரோ முநி ஸத்தம    –10-

ந தேஷாம் ஶத்ரவோ நைவ ஸ்பர்ஶ ரோகாதி பாகிந:
க்ரஹ ரோகாதிகம் வாபி பாப கார்யம் ந ஜாயதே   –11-

அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந்யாயுதாநி ச
ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய: யேந விஷ்ணு ருபாஸித:    –12-

ஸ்ரீ தால்ப்ய உவாச:

அநாராதித கோவிந்தா யே நரா து:கபாகிந:
தேஷாம் து:காபி பூதாநாம் யத் கர்தவ்யம் தயாளுபி:  –13-

பஶ்யத்பிஸ் ஸர்வ பூதஸ்தம் வாஸு தேவம் மஹா முநே
ஸம த்ருஷ்டிபிரீஶேஶம் தந்மம ப்ரூஹ்யசேஷத:   –14-

ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

ஶ்ரோது காமோஸி வை தால்ப்ய ஶ்ருணுஷ்வ ஸுஸமாஹித:
அபாமார்ஜநகம் வக்ஷ்யே ந்யாஸ பூர்வ மிதம் பரம்   –15-

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய  ஸர்வ க்லேஶாப ஹந்த்ரே நம:

அத ந்யாஸ:

அஸ்ய ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ புலஸ்த்யோ பகவாந் ருஷி:
அநுஷ்டுப் சந்த:
ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶநா தேவதா:
ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்
அச்யுதாநந்த கோவிந்தேதி ஶக்தி:
ஜ்வலத்பாவக லோசநேதி கீலகம்
வஜ்ராயுத நகஸ்பர்ஶேதி கவசம்
ஸ்ரீவாராஹ  நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶந ப்ரஸாத ஸித்யர்த்தே—16

வராஹாய அங்குஷ்டாப்யாம் நம:
நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம் ஸ்வாஹா வாமநாய மத்யமாப்யாம் வஷட்
விஷ்ணவே அநாமிகாப்யாம் ஹும்
ஸுதர்ஶநாய கநிஷ்டிகாப்யாம் வௌஷட்
பாஞ்சஜன்யாய கரதலகரப்ருஷ்டாப்யாம் ஃபட் நம:
இதி கர ந்யாஸ:    -17-                                                                                                             1

வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ஐஶ்வர்யாய ஶிரஸே ஸ்வாஹா
நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே ஶக்த்யை ஶிகாயை வஷட்
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே பலாய கவசாய ஹும்
காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய  ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே
நேத்ரத்ர யாப்யாம் வௌஷட்

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே வீர்யாய அஸ்த்ராய ஃபட்
ஓம் பூர்ப் புவஸ் ஸுவரோமிதி திக் பந்த:–18-  எட்டு திக்கில் வலமாக சொடக்கவும்

த்யாநம்
அத த்யாநம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வபாப ப்ரணாஶநம்
வராஹ ரூபிணம் தேவம் ஸம்ஸ்மரந் அர்ச்சயேத் ஜபேத்     –19-

ஜலௌகதாம் ந: ஸசராசரா தரா
விஷாண கோட்யா கில விஶ்வரூபிணா
ஸமுத்த்ருதா யேந வராஹ ரூபிணா
ஸ மே ஸ்வயம் பூர் பகவாந் ப்ரஸீதது   –20-

சஞ்சத் சந்த்ரார்க தம்ஷ்ட்ரம் ஸ்புர துரு ரதநம் வித் யுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத பாஜநய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ர ரௌத்ரம்
த்ரஸ்தாஶா ஹஸ்தி யூதம் ஜ்வலதநல ஸடா கேஸரோ தபாஸமாநம்
ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம்  –21-

அதி விபுல ஸுகாத்ரம் ருக்ம பாத்ரஸ்தமந்நம்
ஸலலித ததிகண்டம் பாணிநா தக்ஷிணேந
கலஶம் அம்ருத பூர்ணம் வாம ஹஸ்தே ததாநம்
தரதி ஸகல து:கம் வாமநம் பாவயேத ய:  –22

விஷ்ணும் பாஸ்வத கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ் ஜ்வலாங்கம்
ஶ்ரோணீ பூஷ ஸுவ க்ஷோ மணி மகுட மஹா குண்டலைர் மண்டிதாங்கம்
ஹஸ்தோதயத் சங்க சக்ராம்புஜ கத மமலம் பீத கௌஶேய மாஶா
வித்யோதத பாஸ முதயத திநகர ஸத்ருஶம் பத்ம ஸ்ம்ஸ்தம் நமாமி 23

கல்பாந்தர்க ப்ரகாஶம் த்ரிபுவந மகிலம் தேஜஸா பூரயந்தம்
ரக்தாக்ஷம் பிங்க கேஶம் ரிபுகுலதமநம் பீம தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்
ஶங்கம் சக்ரம் கதாப்ஜம் ப்ருதுதர முஸலம் ஶூல பாஶாங்கு ஶாக்நீந்
பிப்ராணம் தோர்பிராத்யம் மநஸி முரரிபும் பாவயே சக்ர ஸம்ஜ்ஞம்   –24-

ஸ்தோத்ராரம்ப:

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே
அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே    –25-
நிஷ் கல்மஷாய ஶுத்தாய த்யாந யோக ரதாய ச
நமஸ் க்ருத்ய ப்ரவக்ஷ்யாமி யத்ர ஸித்யது மே வச:   –26-

நாராயணாய ஶுத்தாய விஶ்வேஶா யேஶ்வராய ச
அச்யுதாநந்த கோவிந்த பத்மநாபாய ஸௌஹ்ருதே    –27-

ஹ்ருஷீ கேஶாய கூர்மாய மாதவா ச்யுதாய ச
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே    –28-

ஜநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய ச
த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச    –29-

ப்ரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம:
யோகீஶ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே –30-

பக்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய ஶார்ங்கிணே
அதோக்ஷஜாய தக்ஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே    –31-

வராஹாய ந்ருஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே
வராஹேஶ ந்ருஸிம்ஹேஶ வாமநேஶ த்ரிவிக்ரம   –32-

ஹயக்ரீவேஶ ஸர்வேஶ ஹ்ருஷீகேஶ ஹரா ஶுபம்
அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:  –33-

அகண்டிதா நுபாவைஸ்த்வம் ஸர்வ துஷ்ட ஹரோ பவ
ஹரா முகஸ்ய துரிதம் துஷ் க்ருதம் துரு போஷிதம்    –34-

ம்ருத்யு பந்தார்த்திபயதம் அரிஷ்டஸ்ய ச யத் பலம்
பரமத்வாந ஸஹிதம் ப்ரயுக்தம் சாபிசாரிகம்   –35-

கர ஸ்பர்ஶ மஹா ரோகாந் ப்ரயுக்தாந் த்வரயா ஹர
ஓம் நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே  –36-

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே      –37-

மஹாஹவ ரிபுஸ்கந்த க்ருஷ்ட சக்ராய சக்ரிணே
தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்திமதே நம:    –38-

மஹா யஜ்ஞ வராஹாய ஶேஷ போகோப ஶாயிநே
தப்த ஹாடக கேஶாந்த ஜ்வலத்பாவக லோசந  –39-

வஜ்ராயுத நகஸ்பர்ஶ திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே
காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே  –40-

துப்யம் வாமந ரூபாய க்ரமதே காம் நமோ நம:
வராஹா ஶேஷ துஷ்டாநி ஸர்வபாப பலாநி வை   –41-

மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத்பலம்
நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந   –42-

பஞ்ஜ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஶந
ருக் யஜுஸ் ஸாம ரூபாபி: வாக்பிர் வாமந ரூபத்ருக்    –43-

ப்ரஶமம் ஸர்வ துஷ்டாநாம் நயத்வஸ்ய ஜநார்தந:
கௌபேரம் தே முகம் ராத்ரௌ ரௌத்ரம் ஸௌம்யம் முகம் திவா 44

ஜ்வராந் ம்ருத்யு பயம் கோரம் விஷம் நாஶயதே ஜ்வரம்
த்ரிபாத்பஸ்ம ப்ரஹரண: த்ரிஶிரா ரக்த லோசந:
ஸ மே ப்ரீதஸ் ஸுகம் தத்யாத் ஸர்வாமயபதிர் ஜ்வர:   -45-

ஆத்யந்தவந்த: கவய: புராணா:
ஸந்மார்க வந்தோ ஹ்யநுஶாஸி தார:
ஸர்வ ஜ்வராந் க்நந்து மமாநிருத்த
ப்ரத்யும்ந ஸங்கர்ஷண வாஸுதேவா:   –46-

ஐகாஹிகம் த்வயாஹிகம் ச ததா த்ரிதிவஸ ஜ்வரம்
சாதுர்த்திகம் ததாத் யுக்ரம் ததைவ ஸதத ஜ்வரம்      –47-

தோஷோத்தம் ஸந்நிபாதோத்தம் ததைவாகந்துகம் ஜ்வரம்
ஶமம் நயாஶு கோவிந்த சிந்த்திச் சிந்த்யஸ்ய வேதநாம்  –48-

நேத்ரது:கம் ஶிரோது:கம் து:கம் சோதர ஸம்பவம்
அதிஶ்வாஸ மநுச் ச்வாஸம் பரிதாபம் ஸவேபதும்  –49-

குதக்ராணாங்க்ரி ரோகாம்ஶ்ச குக்ஷி ரோகம் ததா க்ஷயம்
காமாலாதீந் ததா ரோகாந் ப்ர்மேஹாம்ச் சாதிதா ருணாந் –50-

பகந்தராதி ஸாராம்ஶ்ச முக ரோகாம் ஸவல்குளிம்
அஶ்மரீ மூத்ரக்ருச்ஸ்ரம் ச ரோகாந் அந்யாகிச்ச தாருணாந்   –51-

யே வாத ப்ரபவா ரோகா: யே ச பித்த ஸமுத்பவா:
கபோத வாஶ்சயே ரோகா: யே சாந்யே ஸாந்திபாதிகா: –52-

ஆகந்துகாஶ்ச யே ரோகா: லூதாதி ஸ்போடகாதய:
ஸர்வே தே ப்ரஶமம் யாந்து வாஸுதேவாபமார்ஜநாத்   –53-

விலயம் யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணே ந ச
க்ஷயம் கச்சந்து சாஶேஷா: சக்ரேணாபிஹதா ஹரே:   –54-

அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத
ரோகாந் மே நாஶயாஶேஷாந் ஆஶு தந்வந்தரே ஹரே        –55

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஶ்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்      –56-

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேதாச் சாஸ்த்ர பரம் நாஸ்தி நதைவம் கேஶவாத் பரம்    –57-

ஸ்தாவரம் ஜங்கமம் சாபி க்ருத்ரிமம் சாபி யத் விஷம்
தந்தோத்பவம் நகோத்பூதம் ஆகாஶ ப்ரபவம் விஷம்       –58-

லூதாதிஸ்போடகம் சைவ விஷமத்யந்த துஸ் ஸஹம்
ஶமம் நயது தத் ஸர்வம் கீர்த்திதோஸ்ய ஜநார்தந:  –59-

க்ரஹாந் ப்ரேத க்ரஹாந் சைவ ததா வைநாயிக க்ரஹாந்
வேதாளாம்ஶ்ச பிஶாசாம்ஶ்ச கந்தர்வாந் யக் ஷராக்ஷஸாந்    –60-

ஶாகிநீ பூதநாத்யாம்ஶ்ச ததா வைநாயிக க்ரஹாந்
முகமண்டலிகாந் க்ரூராந் ரேவதீந் வ்ருத்த ரேவதீந்   –61-

வ்ருஶ்சிகாக்யாந் க்ரஹாந் சோக்ராந் ததா மாத்ரு கணாநபி
பாலஸ்ய விஷ்ணோஶ் சரிதம் ஹந்து பாலக்ரஹாநிமாந்   –62-

வ்ருத்தாநாம் யே க்ரஹா: கேசித் யேசபால க்ரஹா: க்வசித்
நரஸிம்ஹஸ்ய தேத்ருஷ்ட்யா தக்தா யே சாபி யௌவநே    –63-

ஸடா கராளவதநோ நரஸிம்ஹோ மஹாரவ:
க்ரஹாநஶேஷாந் நிஶ்சேஷாந் கரோது ஜகதோ ஹித:   –64-

நரஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந
க்ரஹாந ஶேஷாந் ஸர்வேஷாம் காதகாதாக்நி லோசந   –65-

யேரோகா யேமஹோத் பாதா யத் விஷம் யே மஹோரகா:
யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாஶ்ச தாருணா:    –66-

ஶஸ்த்ரக்ஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய:
யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச  –67-

தாநி ஸர்வாணி ஸர்வாத்மந் பரமாத்மந் ஜநார்தந
கிஞ்சித் ரூபம் ஸமாஸ்தாய வாஸு தேவாஸய நாஶய –68-

க்ஷிப்த்வா ஸுதர்ஶநம் சக்ரம் ஜ்வாலாமாலாதி பூஷணம்
ஸர்வ துஷ்டோப ஶமநம் குரு தேவவராச்யுத   –69-

ஸுதர்ஶந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத
தீக்ஷ்ண பாவகஸங்காஶ கோடி கோடி ஸமப்ரப   –70-

த்ரைலோக்ய கர்தா த்வம் துஷ்ட த்ருப்த தாநவதாரண
தீக்ஷ்ணதார மஹா வேக சிந்தி சிந்தி மஹா ஜ்வரம்       –71-

சிந்தி பாதம் ச லூதம்ச சிந்தி கோரம் மஹத் பயம்
க்ருமிம் தாஹம் ச ஶூலம் ச விஷ ஜ்வாலாம் ச கர்தமாந்   –72-

ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண
ப்ராச்யாம் ப்ரதீச்யாம் திஶிச தக்ஷிணோத் தரயோஸ் ததா    –73-

ரக்ஷாம் கரோது பகவாந் பஹுரூபி ஜநார்தந:
பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே    –74-

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா விஷ்ணௌ ஜகத் ஸர்வம் ஸதேவாஸுரமாநுஷம்   –75-

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா விஷ்ணௌ ஸ்ம்ருதே ஸத்ய: ஸம்க்ஷயம் யாந்தி பாதகா:  –76-

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா யஜ்ஞேஶ்வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே   –77-

தேந ஸத்யேந ஸகலம் யந்மயோக்தம் ததாஸ்து தத்
ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்  –78-

வாஸுதேவ ஶரீரோத்த: குஶஸ் ஸம் மார்ஜிதம் மயா
அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா   –79-

மமாஸ்து ஸர்வது:காநாம் ப்ரஶமோ யாசநாத் ஹரே:
ஶாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ் ஸர்வ விஷாணி ச   –80-

பூதாநி ச ப்ரஶாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மது ஸூதநே
ஏதத் ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷுச
அபாமார்ஜநகம் ஶஸ்த்ரம்  விஷ்ணூநாமாபி மந்த்ரிதம்      –81-

ஏதே குஶா விஷ்ணு ஶரீர ஸம்பவா:
ஜநார்தநோஹம் ஸ்வயமேவ சாகத:
ஹதம் மயா துஷ்ட மஶேஷஸ்ய
ஸ்வஸ்தா பவத்வேஷ யதா வசோ ஹரே:    –82-

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ப்ரணச்ய த்வஸுகம் ச யத்
ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது   –83-

யதஸ்ய துரிதம் கிஞ்சித் தத் க்ஷிப்தம் லவணார்ணவே
ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்  –84-

ஏதத் ரோகாதி பீடாஸு ஜந்தூநாம் ஹிதமிச்சதா
விஷ்ணு பக்தேந கர்தவ்யம் அபாமார்ஜநகம் பரம்   –85–

அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரஶமம் யாந்த்ய ஸம்ஶய:
ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹி   –86-

குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹ்யோம் நம இதி
இதம் ஸ்தோத்ரம் பரம் புண்யம் ஸர்வ வ்யாதி விநாஶநம்   –87-

விநாஶாய ச ரோகாணாம் அபம்ருத்யு ஜயாயச
இதம் ஸ்தோத்ரம் ஜபேத் ஶாந்த: குஜைஸ்ஸமார்ஜயேத் ஶுசி:  –88-

வ்யாத்யபஸ்மார குஷ்டாதி பிஶாசோரக ராக்ஷஸா:
தஸ்ய பார்ஶ்வம் ந கச்சந்தி ஸ்தோத்ரமேதத்து ய; படேத்  –89-

வாராஹம் நாரஸிம்ஹம் ச வாமநம் விஷ்ணுமேவ ச
ஸ்மரந் ஜபேதிதம் ஸ்தோத்ரம் ஸர்வ து:க்கோபஶாந்தயே

இதி விஷ்ணு தர்மோத்தர புராணே–தால்ப்ய புலஸ்த்ய ஸம்வாதே
அபாமார்ஜந ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்


மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:
1.ரிஷி
2. சந்தஸ்
3. தேவதை
4. பீஜம்
5. சக்தி
6. கீலகம்
7. அங்க நியாசம் என்பன.
1. ரிஷி
மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),.
எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.
பீஜம்: மிகச் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது.
அந்த வித்துக்குப் பீஜம் என்பா். இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்குவந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா்.
பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.
5. சக்தி: அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.
6. கீலகம்: சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்
மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை
மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள்.
பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு
1.நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.
2.நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்
3.நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்
4.காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்
5.ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமைநிறம்
உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக்கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு.
எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும்.
உதாரணமாக ஸ்ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜமந்திரம்
நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை
1.சூரியன்        க்ரீம் (Krim)
2.சந்திரன்        ரீம் (Rim)
3.செவ்வாய்      ஹ்ரீம் (Hrim)
4.புதன்           ஸ்ரீம் (Srim)
5.வியாழன்       ஔம் (Houm)
6.வெள்ளி        கிலீம் (Klim)
7.சனி            ஐம் (Aim)
8.ராகு           ஹ்ரௌம் (Hraum)
9.கேது           சௌம் (Soum)
—————–

ஸ்ரீ சம்மோஹன ஸ்ரீ க்ருஷ்ண ஸ்துதி

ஸ்ரீ க்ருஷ்ணம் கமல பத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதி சுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம் ||
இக்ஷூ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை : |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம்
சம்மோஹனம்  க்ருஷ்ண மாஸ்ரயே ||
————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீவிஷ்ணு புராணே விஷ்ணு ஶத நாம ஸ்தோத்ரம்–ஸ்ரீ ரங்கநாத அஷ்டோத்திரம்–ஸ்ரீ வேங்கடாசல நிலையம்–

November 18, 2023

ஶ்ரீ விஷ்ணோ:ஶதநாமஸ்தோத்ரம்

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.

ௐ வாஸுதேவம் ருஷீ கேஶம் வாமநம் ஜலஶாயிநம் ।
ஜநார்தநம் ஹரி க்ருஷ்ணம் ஶ்ரீவக்ஷம் கருடத்வஜம் ॥ 1॥

வாராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் ।
அவ்யக்தம் ஶாஶ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம் ॥ 2॥

நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜநம் ।
கோவர்தநோத்தரம் தேவம் பூதரம் புவநேஶ்வரம் ॥ 3॥

வேத்தாரம் யஜ்ஞபுருஷம் யஜ்ஞேஶம் யஜ்ஞவாஹகம் ।
சக்ரபாணிம் கதாபாணிம் ஶங்கபாணிம் நரோத்தமம் ॥ 4॥

வைகுண்டம் துஷ்டதமநம் பூகர்பம் பீதவாஸஸம் ।
த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்திம் நந்திகேஶ்வரம் ॥ 5॥

ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம் ।
ஶ்ரீபதிம் ஶ்ரீதரம் ஶ்ரீஶம் மங்களம் மங்களாயுதம் ॥ 6॥

தாமோதரம் தமோபேதம் கேஶவம் கேஶிஸூதநம் ।
வரேண்யம் வரதம் விஷ்ணுமாநந்தம் வஸுதேவஜம் ॥ 7॥

ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் ।
ஸகலம் நிஷ்கலம் ஶுத்தம் நிர்குணம் குணஶாஶ்வதம் ॥ 8॥

ஹிரண்யதநுஸங்காஶம் ஸூர்யாயுதஸமப்ரபம் ।
மேகஶ்யாமம் சதுர்பாஹும் குஶலம் கமலேக்ஷணம் ॥ 9॥

ஜ்யோதீரூபமரூபம் ச ஸ்வரூபம் ரூபஸம்ஸ்திதம் ।
ஸர்வஜ்ஞம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஶம் ஸர்வதோமுகம் ॥ 10॥

ஜ்ஞாநம் கூடஸ்தமசலம் ஜ்ஞாநதம் பரமம் ப்ரபும் ।
யோகீஶம் யோகநிஷ்ணாதம் யோகிநம் யோகரூபிணம் ॥ 11॥

ஈஶ்வரம் ஸர்வபூதாநாம் வந்தே பூதமயம் ப்ரபும் ।
இதி நாமஶதம் திவ்யம் வைஷ்ணவம் கலு பாபஹம் ॥ 12॥

வ்யாஸேந கதிதம் பூர்வம் ஸர்வபாபப்ரணாஶநம் ।
ய: படேத்ப்ராதருத்தாய ஸ பவேத்வைஷ்ணவோ நர: ॥ 13॥

ஸர்வபாபவிஶுத்தாத்மா விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத் ।
சாந்த்ராயணஸஹஸ்ராணி கந்யாதாநஶதாநி ச ॥ 14॥

கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர: ।
அஶ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்நோதி மாநவ: ॥ 15॥

। இதி ஶ்ரீவிஷ்ணுபுராணே விஷ்ணுஶதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

—————-

ஸ்ரீ ரங்கநாத அஷ்டோத்திரம்

1) ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
2) ஓம் தேவேசாய நம:
3) ஓம் ஸ்ரீரங்க ப்ரம்ம ஸம்ஜ்ஞிதாய நம:
4) ஓம் சேஷ பர்யங்க சயநாய நம:
5) ஓம் ஸ்ரீநிவாஸ புஜாந்தராய நம:
6) ஓம் இந்த்ர நீலோத்பல ச்யாமாய நம:
7) ஓம் புண்டரீக நிபே க்ஷணாய நம:
8) ஓம் ஸ்ரீவத்ஸலா ஞ்சிதாய நம:
9) ஓம் ஹாரிணே நம:
10) ஓம் வநமாலிநே நம:
11) ஓம் ஹலாயுதாய நம:
12) ஓம் பீதாம்பர தராய நம:
13) ஓம் தேவாய நம:
14) ஓம் வராய நம:
15) ஓம் நாராயணாய நம:
16) ஓம் ஹரயே நம:
17) ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
18) ஓம் புருஷாய நம:
19) ஓம் மஹாவிஷ்ணவே நம:
20) ஓம் ஸநாதநாய நம:
21) ஓம் ஸிம்ஹாஸ நஸ்தாய நம:
22) ஓம் பகவதே நம:
23) ஓம் வாஸு தேவாய நம:
24) ஓம் ப்ரபா வ்ருதாய நம:
25) ஓம் கந்தர்ப்ப கோடி லாவண்யாய நம:
26) ஓம் கஸ்தூரி திலகோ ஜ்லாய நம:
27) ஓம் அச்யுதாய நம:
28) ஓம் சங்க சக்ர கதா பத்ம ஸுரக்ஷித சதுர்ப்புஜாய நம:
29) ஓம் ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரே நம:
30) ஓம் ஸ்ரீநாதாய நம:
31) ஓம் தேவசிகா மணயே நம:
32) ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
33) ஓம் லக்ஷ்மீ வல்லபாய நம:
34) ஓம் தேஜஸாம் நிதயே நம:
35) ஓம் ஸர்வ சர்ம ப்ரதாய நம:
36) ஓம் அஹீசாய நம:
37) ஓம் ஸாமகாந ப்ரியோத் ஸவாய நம:
38) ஓம் அம்ருதத் வப்ரதாய நம:
39) ஓம் நித்யாய நம:
40) ஓம் ஸர்வ ப்ரபவே நம:
41) ஓம் அரிந்தமாய நம:
42) ஓம் ஸ்ரீபத்ர குங்குமா லிப்தாய நம:
43) ஓம் ஸ்ரீமூர்த்தயே நம:
44) ஓம் சித்தரஞ்ஜிதாய நம:
45) ஓம் ஸர்வ லக்ஷண ஸம்பந்னாய நம:
46) ஓம் சாந்தாத்மனே நம:
47) ஓம் தீர்த்த நாயகாய நம:
48) ஓம் ஸ்ரீரங்கநாயிகீ கேசாய நம:
49) ஓம் யக்ஞ மூர்த்தயே நம:
50) ஓம் ஹிரண் மயாய நம:
51) ஓம் ப்ரணவாகார ஸதநாய நம:
52) ஓம் ப்ரணார்த்த ப்ரதாயகாய நம:
53) ஓம் கோதா ப்ராணேச்வராய நம:
54) ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
55) ஓம் ஜகந் நாதாய நம:
56) ஓம் ஜயப்ரதாய நம:
57) ஓம் நிசுளா புரவல்லீசாய நம:
58) ஓம் நித்ய மங்களதாயகாய நம:
59) ஓம் கந்தஸ் தம்பத்வ யோல்லாஸி காயத்ரீ ரூப மண்டபாய நம:
60) ஓம் ப்ருத்ய வர்க்க சரண்யாய நம:
61) ஓம் பலபத்ர ப்ரஸாதகாய நம:
62) ஓம் வேதச்ருங்க விமானஸ்தாய நம:
63) ஓம் வ்யாக் ராஸுர நிஷூதநாய நம:
64) ஓம் கருடா நந்த ஸேநேச கஜவக்த்ராதி ஸேவிதாய நம:
65) ஓம் சங்கர ப்ரிய மாஹாத்மநே நம:
66) ஓம் ச்யாமாய நம:
67) ஓம் சந்தநு வந்திதாய நம:
68) ஓம் பாஞ்சராத் ரார்ச்சிதாய நம:
69) ஓம் அநேக பக்த நேத்ரோத்ஸவ ப்ரதாய நம:
70) ஓம் கலசாம் போதிநிலயாய நம:
71) ஓம் க்ஷீராம்போதி நிலயாய நம:
72) ஓம் கமலாஸந பூஜிதாய நம:
73) ஓம் ஸநந்த நந்த ஸ்நக ஸுத்ராமா மரஸேவிதாய நம:
74) ஓம் ஸத்ய லோகபராவாஸாய நம:
75) ஓம் சக்ஷஷே நம:
76) ஓம் அஷ்டாக்ஷராய நம:
77) ஓம் அவ்யாய நம:
78) ஓம் இக்ஷ்வாகு பூஜித பதாய நம:
79) ஓம் வஸிஷ்டாதி ஸ்துதாய நம:
80) ஓம் அநகாய நம:
81) ஓம் ராகவா ராதிதாய நம:
82) ஓம் ஸ்வாமிநே நம:
83) ஓம் ராமாய நம:
84) ஓம் ராஜேந்த்ர வந்திதாய நம:
85) ஓம் விபீஷணார்ச்சித பதாய நம:
86) ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
87) ஓம் காவேரி மத்ய நிலயாய நம:
88) ஓம் கல்யாணபுர வாஸ்து காய நம:
89) ஓம் தர்மவர்மாதி சோளேந்த்ர பூஜிதாய நம:
90) ஓம் புண்ய கீர்த்தநாய நம:
91) ஓம் புருஷாத்தம க்ருதஸ்தாநாய நம:
92) ஓம் பூலோக ஜன பாக்யதாய நம:
93) ஓம் அக்ஞானத மனர் ஜ்யோதிஷே நம:
94) ஓம் அர்ஜூன பரிய ஸாரதயே நம:
95) ஓம் சந்த்ர புஷ்கரிணீ நாதாய நம:
96) ஓம் சண்டாதி தவார பாலகாய நம:
97) ஓம் குமுதாதி பரீவாராய நம:
98) ஓம் பாண்ட்யஸா ரூப்ய தாயகாய நம:
99) ஓம் ஸப்தாவரண ஸம்வீத ஸதநாய நம:
100) ஓம் ஸுர போஷகாய நம:
101) ஓம் நவநீத சுபாஹாராய நம:
102) ஓம் விஹாரிணே நம:
103) ஓம் நாரத ஸ்துதாய நம:
104) ஓம் ரோஹிணீ ஜன்ம தாரகாய நம:
105) ஓம் கார்த்திகேய வரப்ரதாய நம:
106) ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
107) ஓம் ஸ்ரீமதே நம:
108) ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:

ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:

—————

ஸ்ரீ வேங்கடாசல நிலையம்

வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)

அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல)

மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல)

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம் –ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராண ஸ்லோகம்/ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம் :

November 10, 2023

வேங்கடேஸோ வாஸூ தேவ ப்ரத்யும்நோ அமித விக்ரம
ஸங்கர்ஷணோ அநிருத்தஸ் ச சேஷாத்ரி பதி ரேவ ச–1-

ஜனார்த்தந பத்ம நாபோ வேங்கடாசல வாஸிந
ஸ்ருஷ்டி கர்த்தா ஜகன் நாதோ மாதவோ பக்தவத்சல–2-

கோவிந்தோ கோ பதி கிருஷ்ண கேஸவ கருடத்வஜ
வராஹோ வாமன சைவ கிருஷ்ண நாராயண அதோக்ஷஷ–3-

ஸ்ரீ தர புண்டரீகாஷா ஸர்வ தேவஸ்துதோ ஹரி
ஸ்ரீ நரஸிம்ஹோ மஹா ஸிம்ஹ ஸூத்ர கார புராதன–4-

ரமா நாதோ மஹீ பர்த்தா பூதர புருஷோத்தம
சோலபுத்ர ப்ரிய சாந்தோ ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத–5-

ஸ்ரீ நிதி ஸர்வ பூதா நாம் பய க்ருத பய நாஸன
ஸ்ரீ ராமோ ராம பத்ரஸ் ச பவ பந்தைக மோசக –6-

பூதா வாஸோ கிரி வாஸ ஸ்ரீ நிவாஸ ஸ்ரீ யபதி
அச்யுத அநந்த கோவிந்தோ விஷ்ணுர் வேங்கட நாயக –7-

ஸர்வ தேவைக சரணம் ஸர்வ தேவைக தைவதம்
ஸமஸ்த தேவ கவசம் ஸர்வ தேவ ஸிகா மணி –8-

இதீதம் கீர்த்திதம் யஸ்ய விஷ்ணோர் அமித தேஜஸ
த்ரி காலே ய படேன் நித்யம் பாபம் தஸ்ய ந வித்யதே -9-

ராஜத்வாரே படேத் கோரே சங்க்ராமே ரிபு ஸங்கடே
பூத ஸர்ப பிஸாதாதி பயம் நாஸ்தி கதாசன –10-

அபுத்ரோ லபதே புத்ரான் நிர்த்தநோ தனவான் பவேத்
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யதே பந்த நாத் –11-

யத் யுதிஷ்ட தமம் லோகே தத் தத் ப்ராப்நோத்ய ஸம்சய
ஐஸ்வர்யம் ராஜ ஸம்மானம் பத்தி முக்தி பல ப்ரதம் –12-

விஷ்ணோர் லோகைக ஸோபாநம் ஸர்வ துக்கைக நாஸநம் —
ஸர்வ ஐஸ்வர்ய பிரதம் நிரூணாம் ஸர்வ மங்கள காரகம் 13-

மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்
ஸ்வாமீ புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே –14-

கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீ மத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஸாய தே நம –15-

இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத ஸம் வாதே
வேங்கடகிரி மஹாத்ம்யே ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம்

ஸ்ரீ வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன
வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதேன ஸத்ய வாக்யேந சர்வார்த்தான் சாதயாம் யஹம்

—-

வேங்கடேஸோ வாஸூ தேவ ப்ரத்யும்நோ அமித விக்ரம
ஸங்கர்ஷணோ அநிருத்தஸ் ச சேஷாத்ரி பதி ரேவ ச–1-

வேங்கடேஸோ -பாபங்களை போக்கும் திருமலைக்குத் தலைவன்
வாஸூ தேவ -எங்கும் வசிப்பவன்-தோஷங்கள் தட்டாமல் திவ்யமானவன் – -இங்கு தான் தன்னை வெளிப்படுத்தி அருள்கிறான்
ப்ரத்யும்நோ -ஞான ஒளி அளிப்பவன்
அமித விக்ரம -அடி வைப்பை விக்ரம -எல்லை இல்லாத -அடி வைப்புகள் –
ஸங்கர்ஷணோ -ஆகர்ஷண சக்தி -கண்டவாற்றால் தனதே உலகு என்று இருப்பவன்
அநிருத்தஸ் ச -தடை இல்லாதவன்
நான்கு வ்யூஹங்கள் -அவற்றையும் நினைவுவூட்டும் திரு நாமங்கள்
சேஷாத்ரி பதி ரேவ ச –ஆதி சேஷனே திருமலை வடிவு -அதற்குத் தலைவன் -பதி

——

ஜனார்த்தந பத்ம நாபோ வேங்கடாசல வாஸிந
ஸ்ருஷ்டி கர்த்தா ஜகன் நாதோ மாதவோ பக்தவத்சல–2-

ஜனார்த்தந -நல்லோர்களை துன்புறுத்தும் துஷ்ட ஜனங்களை துன்புறுத்தி அழிப்பவர்
பத்ம நாபோ -நாம் அடையும் படி எளியவனாய் இருந்தாலும் -நீ யோனிகளைப் படை என்று நான்முகனைப் படைத்தவன்
வேங்கடாசல வாஸிந –மண்ணோர் விண்ணோர் தொழ இங்கு நித்ய வாஸம்
ஸ்ருஷ்டி கர்த்தா -நான்முகனுக்கும் அந்தர்யாமி -த்ரிவித காரணம் -ஸங்கல்பம் ஒன்றே கொண்டு -வேர் தனி முதல் வித்து
ஜகன் நாதோ –படைத்த அனைத்தையும் ரக்ஷிப்பவன்
மாதவோ -சுவையன் திருவின் மணாளன் -ஸ்ரீ நிவாஸன்
பக்த வத்சல -தோஷங்களையே குணமாகக் கொள்பவன் -தோஷங்களைக் காணாக் கண் கொண்டு இருப்பவன்
தயா சதகம் -பர ந்யாஸ இத்யாதி -ப்ரஸாதம் மூடி சமர்ப்பிப்பது போல் நம்மிடம் உள்ள தோஷங்களையே நாம் சரணாகதி துணி மூடி சமர்ப்பிக்கிறோம் –
பரம கருணையால் அமுது செய்து அனுக்ரஹம் அருள்கிறான்-

———–

கோவிந்தோ கோ பதி கிருஷ்ண கேஸவ கருடத்வஜ
வராஹோ வாமன சைவ கிருஷ்ண நாராயண அதோக்ஷஷ–3-

கோவிந்தோ -பசுக்களை ரஷித்த -குன்று ஏந்தி குளிர் மழை காத்தவன் -பசு எருமை ஆடு -முக்குண ஜனங்கள் –
பசு திருவடி நக்க மற்றவை புல் மேய்க்கும் -தமோ எருமை ஆடு ரஜோ குணம்
கோ பதி-வேத வார்த்தைகளுக்கும் தலைவன்
வேதமே கொண்டாடும் திருமலை அன்றோ –
அராஹி – காணே விகடே -சதாங்கே கிரீம் கச்ச ஸ்ரீ பீட -ஸத்வபிகி -பக்தர்களுடன் கோவிந்தா சொல்லிக்கொண்டே போனால்
திருப்பதி வந்தால் திருப்பம் ஏற்படுமே -வேதத்தான் வேங்கடத்தான்
தமிழ் வேதம்
கிருஷ்ண -யசோதைக்கு காணும் படி திருக் கல்யாணம் -பத்மாவதி -வேகவதி -வகுளமாலிகையே யசோதை
மடப்பள்ளியில் இன்றும் ஸந்நிதி உண்டே
கோவர்த்தனம் ஏழு நாள் தாங்கிப் பிடித்ததால் நிரந்தரமாக ஏழு மலைகளாக சுமக்கும்
கார் மேனிக்கண்ணன் –
கேஸவ -கேஸ பாசம் -அழகியான கிருஷ்ண
கருடத்வஜ -புட் கொடி உடைய கோமான்
வராஹோ -கேழல் ஞானப்பிரான் -வராஹ க்ஷேத்ரம்
வாமன சைவ -ஓங்கி உலகளந்த உத்தமனே இவன் -பக்தியை நிலை நாட்டி கலியுகம் -ஸ்ரத்தை ஆன்மிகம் நிலை நாட்டி
நாராயண -நரங்களுக்கு ஆதாரம் -உள்ளும் வெளியிலும் -நியாந்தா
அதோக்ஷஷ – -பக்த பராதீனனாக இருந்தாலும்-பெருமை குன்றாதவன்

———

ஸ்ரீ தர புண்டரீகாஷா ஸர்வ தேவஸ்துதோ ஹரி
ஸ்ரீ நரஸிம்ஹோ மஹா ஸிம்ஹ ஸூத்ர கார புராதன–4-

ஸ்ரீ தர -திருமார்பில் தரித்து -அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் -திருமஞ்சனம் நாச்சியார் திருமொழி அனுசந்தானம் உடையவர்
புண்டரீகாஷா -தாமரைக்கண்ணன் -நிரூபக தர்மம் –
ஸர்வ தேவஸ்துதோ -ஸ்வர்ணமுகி சிவன் -குமாரா தாரகா –
ஹரி -பாபங்களை அபகரிப்பவன் -சுக்ரீவன் வானர முதலைகளை இங்கு தேடாதீர்கள்
நெடிய கொடு வினை நீங்கும் -மோக்ஷம் போவீர்கள் -சீதாப்பிராட்டியைத் தேட வேண்டுமே
காத்து இருந்து சேவிக்க பாபங்கள் போகுமே –
ஸ்ரீ நரஸிம்ஹோ -லஷ்மீ நரஸிம்ஹன் -திருக்கல்யாண ப்ரஸாதம் இவருக்கே -பெரிய பெரிய பெருமாள் –
மஹா ஸிம்ஹ -சீரிய சிங்கம் -காம்பீர்யம் -மத யானைகள் போன்ற பாபக்கூட்டங்களை ஒழிக்கும்
ஸூத்ர (ஸூத்ரா )கார -பொம்மலாட்டம் போல் -நம்மை நடாத்தி -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன்
புராதன -புராண புருஷோத்தமன்-

———

ரமா நாதோ மஹீ பர்த்தா பூதர புருஷோத்தம
சோலபுத்ர ப்ரிய சாந்தோ ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத–5-

ரமா நாதோ -ஸ்ரீ தேவி நாயகன்
மஹீ பர்த்தா -பூமி தேவி கேள்வன்
பூதர -பூமியைத் தாங்கி-ஆதார சக்தி – ஆலிலை அன்று நீருளதோ –
புருஷோத்தம -பத்த ஜீவன் புருஷன் -முக்தன் புருஷோத் -நித்யர் -புருஷ தரர் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் இவன் ஒருவனே புருஷோத்தமன்
சோல புத்ர ப்ரிய -சோழர்கள் முன் ஆண்ட தேசம் -பசு கன்று பிரமன் ருத்ரன் -இங்கு சென்று பால் சொரிய -புற்றில் ஸாஷாத் ஸ்ரீ நிவாஸன் தபஸ் –
அரசனே வர அசுரனாக போக சபிக்க -மன்னிக்க வேண்டி
ஆகாச ராஜன் கிரீடம் சமர்ப்பிக்க சாபம் போகும்
சாந்தோ -அலை பாயாமல் அனுக்ரஹம் அருளுபவர்
ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத -தேவர்களுக்கும் வரம் அளிப்பவன்

————

ஸ்ரீ நிதி ஸர்வ பூதா நாம் பய க்ருத பய நாஸன
ஸ்ரீ ராமோ ராம பத்ரஸ் ச பவ பந்தைக மோசக –6-

ஸ்ரீ நிதி -ஸ்ரீக்கு கொள்கலம் -இருப்பிடம் -தங்கத்தில் ரத்னம் பதிப்பது போல் -மிதுனம் –
ஸர்வ பூதா நாம் பய க்ருத் -அனைவருக்கும் தீயவர்களுக்கு பயம் அருளி
பய நாஸன -அடியவர்களுக்கு பயங்களைப் போக்கி அருளுபவர்
ஸ்ரீ ராமோ –கடைந்த –மராமரம் திருச்சந்த விருத்தம் –வேங்கடம் அடைந்த காகுத்தன் -நமக்கு விஸ்வாசஸம் காட்ட -ஸ்ரீ நிவாஸ ராகவன்
ராம பத்ரஸ் ச -மனத்துக்கு இனியனாய் மங்களங்களும் அருளுபவர்
பவ பந்தைக மோசக –பிறவிப் பிணி நீக்க இவன் ஒருவனே-வேங்கடாசல பதி –

———–

பூதா வாஸோ கிரி வாஸ ஸ்ரீ நிவாஸ ஸ்ரீ யபதி
அச்யுத அநந்த கோவிந்தோ விஷ்ணுர் வேங்கட நாயக –7-

பூதா வாஸோ -ஆவாஸம் இருப்பிடம் இளைப்பாறும் இடம் -பூதங்கள் அனைவருக்கும் -தந்தனன் தன் நிழல்
கிரி வாஸ -திருமலையைத் தனக்கு இருப்பிடம்
ஸ்ரீ நிவாஸ -ஸ்ரீ க்கு இவன் இருப்பிடம்
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன்
அச்யுத அநந்த கோவிந்தோ -இரண்டு விசேஷணங்கள் -பூமியை ரக்ஷிப்பவன் -எல்லாரையும் எல்லா வகையிலும் அநந்த -நழுவ விடாமல் ரக்ஷிப்பவன்
விஷ்ணுர் -எங்கும் நிறைந்தவன் -நுழைந்து வியாபித்து -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
வேங்கட நாயக –ஸ்ரீ திருவேங்கட அப்பன் -அப்பன்

———

ஸர்வ தேவைக சரணம் ஸர்வ தேவைக தைவதம்
ஸமஸ்த தேவ கவசம் ஸர்வ தேவ ஸிகா மணி –8-

ஸர்வ தேவைக சரணம் -ஒரே புகலிடம் -தஞ்சம் -கப்பம் தவிர்க்கும் கலி
ஸர்வ தேவைக தைவதம் –மனிசர்க்குத் தேவர்போல் தேவருக்கும் தேவன்
ஸமஸ்த தேவ கவசம் -காக்கும் கவசம்
ஸர்வ தேவ ஸிகா மணி –முடி மணி -தலை மேல் வைத்துக் கொண்டாடப்படுபவன்


இதீதம் கீர்த்திதம் யஸ்ய விஷ்ணோர் அமித தேஜஸ
த்ரி காலே ய படேன் நித்யம் பாபம் தஸ்ய ந வித்யதே -9-

மூன்று வேளையும் பாராயணம் செய்தால் பாபங்கள் நீங்கும்

ராஜத்வாரே படேத் கோரே சங்க்ராமே ரிபு ஸங்கடே
பூத ஸர்ப பிஸாதாதி பயம் நாஸ்தி கதாசன –10-

அரசனைப் பார்க்கும் பொழுதும் -யுத்தம் போகும் பொழுதும் ஆபத்து வந்தாலும் -சர்வ பயமும் போகும்

அபுத்ரோ லபதே புத்ரான் நிர்த்தநோ தனவான் பவேத்
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யதே பந்த நாத் –11-

பிள்ளைப் பேறு செல்வம் கிட்டும் ஆரோக்யம் கிட்டும்-பிறவிப்பிணி நீக்கும் -முக்தி தரும்

யத் யுதிஷ்ட தமம் லோகே தத் தத் ப்ராப்நோத்ய ஸம்சய
ஐஸ்வர்யம் ராஜ ஸம்மானம் பத்தி முக்தி பல ப்ரதம் –12-

வேண்டிய அனைத்தும் பெறுவோம் -செல்வம் ஆளுமை கிட்டும் -அரசனிடம் ஸம்மானமும் பெறுவோம் – பக்தியும் முக்தியும் சாதிக்கும்

விஷ்ணோர் லோகைக ஸோபாநம் ஸர்வ துக்கைக நாஸநம் —
ஸர்வ ஐஸ்வர்ய பிரதம் நிரூணாம் ஸர்வ மங்கள காரகம் 13-

ஸ்ரீ வைகுண்டம் அடையப் படிக்கட்டுகள் போல் இவை -சரணாகதி அடைவிக்கும் -எல்லா மங்களங்களும் அளிக்கும்

மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்
ஸ்வாமீ புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே –14-

பெரிய மாயன் -ஆனந்தமயன் -ஸ்ரீ வைகுண்ட விரக்தனாய்
ஸ்வாமி புஷ்கரணி தடே ஸ்ரீ லஷ்மீ உடன் உகந்து அருளும் திவ்ய தேசம்

கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீ மத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஸாய தே நம –15-

மங்களங்கள் நிறைந்த அத்புத -ஸமஸ்த அபீஷ்ட பல பிரதனான திருவேங்கடேசப் பெருமாளுக்கு நமஸ்காரம்

இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத ஸம் வாதே
வேங்கடகிரி மஹாத்ம்யே ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம்

ஸ்ரீ வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன
வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதேன ஸத்ய வாக்யேந சர்வார்த்தான் சாதயாம் யஹம்

————-

ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம் :

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பல ஸ்ருதிகள்-ஸ்ரீ பட்டர் பாஷ்யம் — -ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்-ஸ்ரீ துவாதச நாம ஸ்தோத்ரம்–ஸ்ரீ ராம த்யான ஸ்லோகங்கள் –

October 24, 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பல ஸ்ருதிகள்–ஸ்ரீ பட்டர் பாஷ்யம் —

————-

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”
என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

————–

யதிதம் கீர்த்த நஸ்ய கேசவஸ்ய மஹாத்மந
நாம் நாம் சஹஸ்ரம் திவ்யானாம் அசேஷண ப்ரகீர்த்திதம்

நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்
மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

அதா₂ஸ்ய நாம ஸஹஸ்ரஸ்ய கௌரவம் க்₃ராஹயன் ஸாந்தநவ꞉ கௌந்தேய மாஹ
இதீத₃ம்
இதி । யதே ₃தத் கீர்தநம் ப₄க₃வந் மஹிம்நி, அத்₃ய ப்ரப்₄ருதி ப₄க₃வான் கீர்தநாரம்ப₄ மர்ஹதீத்
யுக்தம்
கீர்தநீயஸ்யேதி ।
அத்ர காரணம்
கேஸவஸ்ய மஹாத்மந இதி ।
நாம்நாம் ப்ராக்ருத பரம பத₃ வ்யவஹார யோக்₃யத்வமாஹ
தி₃வ்யாநாமிதி ।
த்வ கௌரவாத் கிஞ்சித₃பி
ஜ்ஞாதவ்யம் ந ஹாபிதமித்யாஹ
அஸேஷேணேதி ॥

—————–

அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் கூறப்படுகின்றன

யதிதம் ஶ்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்
ந சுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் சோமுத்ரேஹ சமாநவ –இங்கும் அங்கும் உள்ள அசுபங்கள் நீங்கி விடும்

அதா₂தி₄காரிப₂லாங்க ₃நிர்ணய ꞉ । ய இத₃ம்
ஶ்ருணு யாதி₃த் யாதி₃ ।
யதா₂தி₄காரம் ஶ்ரவண
மநநயோ ꞉ ஸாமாந்யே நோப₄ய லோகா ஸூப விரோதித்வம் தாவத்ப₂ல முக்தம் ॥

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

————-

வேதாந்தகோ ப்ராஹ்மண ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன சம்ருத்தஸ் ஸ்யாச் சூத்ர ஸூகம் அவாப்னுயாத்-3-

அத₂ சதுர்ணாம் வர்ண விஸேஷாணா மநதி₄ரூட₄ப₄க₃வத்₃ப₄க்தீ நாம நா காங்க்ஷித ப₂ல
விஸேஷாணாம் யதா யோக்யம் ப₂லமாஹ
வேதா₃ந்தக ₃ இதி ॥

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

——

த₄ர்மார்தீ₂ ப்ராப்நுயாத்₃த₄ர்மமர்தா₂ர்தீ₂ சார்த₂மாப்நுயாத் ।
காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்தீ₂ ப்ராப்நுயாத் ப்ரஜா꞉ ॥ 4 ॥

அத₂ வர்ண விஸேஷேண யதா₂காமமப்₄யுத₃ ய ப₂லமாஹ
த₄ர்மார்தீ₂தி ॥

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

————

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் ய ஸ்தோத்தாயா சுசி தத்கத மனச
சஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்–5-

யசஸ் ப்ராப்னோதி விபுலம் ஞாதி ப்ராதான்ய மேவச
அசலாம் ஸ்ரியம் ஆப்நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத் யநுத்தமம்–6-

ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமான் பல ரூப குணாந்வித-7-

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முஸ்யேத பந்தனாத்
பயான் முஸ்யேத பீதஸ்து முஸ்யே தாபந்ந ஆபத–8-

அத₂ நியம விசேஷ வஜ் ஜப ரூப ஸங்கீர்தநே ப₄க்தஸ்ய ஸர்வ ஸம்ருத்₃தி₄மாஹ
ப₄க்திமான்
இத்யாதி₃பி₄ஶ் சதுர்பி₄꞉ । அநுத்தமம் ஶ்ரேயோ முக்தி꞉ । அந்யே (அ)ப்₄யுத₃ யா விசேஷா ꞉ ॥

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

—————

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது

துர்க்காணி அதி தரத் யாசு புருஷஸ் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி சமன்வித–9-

அத₂ ப₄க₃வதே ₃கார்தி₂நோ (அ)நந்ய ப₄க்தேர ப்ரார்தி₂தாமப்ய நர்த₂ நிவ்ருத்திமாஹ
து₃ர்கா₃ணீதி ॥

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

————–

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவோ பராயணா
சர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சனாதனம்–10-

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்

————-

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் வித்யதே க்வசித்
ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே–11-

அத₂ தேஷாம் தத் ப்ராப்திமாஹ வாஸுதே ₃வாஶ்ரய இதி ॥

இதம் ஸ்தவம் அதீ யான ஸ்ரத்தா பக்தி சமன்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி–12-

நியமவதோ ப₄க்தஸ்யாநுஷங்கி₃ணீமப்₄யுத₃ யஸித்₃தி₄மாஹ
இமம் ஸ்தவமிதி ।
ஶ்ரத்₃தா₄ – ஸ கௌரவ த்வரா । ப₄க்திர்வ்யாக்₂ யாதா । ஆத்மா சேதந꞉ । ப₄க₃வதி ப₄க்திர் மஹத꞉
ஸுக்ருதஸ்ய ப₂லம் * கோ₃விந்த₃ப₄க்த் ப்₄ தி₄கம் ஶ்ரேயஶ் சாந்யந்ந வித்₃ யதே , இதி ।

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

—————-

பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந அஸுபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தானாம் புருஷோத்தமே–13-

தத்த்வத ஏதே தோஷா ஸ்வபா₄வத ஏவ நிவர்தந்த இத்யாஹ
ந க்ரோத₄ இதி ।

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

—————–

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அயற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன–14–

நாயம் ப₂லார்த₂வாத₃ஶ்ங்கயோ நிர்பா₄க்₃யை ꞉ குதார்கிகை ꞉, ப₄கவத் ப்ரபா₄வஸ்யா
ஸம்பா₄வ்யாபா₄வேநாதிவாதா₃பவாத₃ யோர ஸம்ப₄வாதி₃த்ய பி₄ப்ரயன் தஸ்ய தம் ப்ரபா₄வமாஹ
த்₃யவ்ஸ் ஸத சந்த்₃ரேதி ।
வித்₄ருதாநீதி நாநாலிங்கா ₃நாம்
* நபும்ஸக மநபும்ஸகேநைக
வச்சாஸ்யாந்ய தரஸ்யாம், இதி நபும்ஸக லிங்க ₃சேஷதா ॥

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

————

அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –

ச ஸூரா அஸூரா கந்தர்வம் ச யஷோரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ச சராசரம்–15-

ஸர்வஸ்ய தச் ச₂க்தி வித்₄ரு தத்வ முக்த்வா தத்₃வஸ வர்த்தித்வமாஹ
ஸஸுராஸுரேதி ।
வர்ததே த ₃மித்யார்ஷீ ஸம்ஹிதா । அவர்ததேத₃மிதி வா ॥

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

————-

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்திரியாணி மநோ புத்தி சத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகானி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞ ஏவ ச–16–

இத₃ம் தத்₃வஸ வர்த்தித்வம் ஸாரீராத்ம பா₄வேந விஶிநஷ்டி
இந்த்₃ரி யாணீதி ।
வாஸுதே ₃வாத்மகாநி – தச்ச₂ரீராணீத் யர்த₂꞉ । ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி சேஷ ꞉ ।

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன

———-

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்

அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

சர்வ ஆகமானாம் ஆசார ப்ரதமம் பரிகல்பித
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–17–

சர்வ ஆகமானாம் –ப்ரமாணமான சாஸ்திரங்கள்
ப்ரதமம் பரிகல்பித -மிகவும் முக்கியமாக உபதேசிக்கும் தர்மம்–

ஆசார -நல் நடத்தை -ஒழுக்கம்
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–தர்மத்தால் போற்றப்பட வேண்டியவன்

ஏவம் தத்த்வ ஸாஸ்த்ரார்தா₂நாம் தாத₃தீ₄ந்யமபி₄தா₄யா நுஷ்டா₂நா ஸாஸ்த்ரார்தா₂நாமபி
தாத₃தீ₄ந்யம் மந்தா₃தி₄காரிணாம் ப₄ யமபநேதுமாஹ –
ஸர்வாக ₃மாநாமிதி ।
ஸர்வாக ₃மாநாம்-ஸர்வ த₄ர்ம ப்ரமாணாநாம் ப்ரத₂மம் பரகல்பித꞉ – ப்ரத₂ம ப்ரதிபாத்₃ய த₄ர்ம꞉ ஆசார꞉
சவ்சாதி₃꞉, தத₃ங்க ₃꞉ ஶ்ரௌதோ த₄ர்ம இதி, தஸ் யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத இதி ॥

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

——-

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷப பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ
ஜங்கம அ ஜங்கம சேதம் ஜெகன் நாராயண உத்பவம்–18–

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

————–

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது

யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞான மேதத் சர்வம் ஜனார்த்தநாத்–19–

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

————–

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் யநேகச
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய–20–

அவனே ஏகம் -அநேகம் -சேஷீ- நியாமகன்–ஆத்மா -ரக்ஷகன் -வ்யாப்த கத தோஷம் தட்டாதவன் –
புங்க்தே-லீலா ரசமும் போக ரசமும் அனுபவிப்பவன்
வாக்குக்கும் மனசுக்கும் கோசரம் அல்லன்

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

———

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேன கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷஸ் ஸ்ரேயஸ் ப்ராப்தும் ஸூகாநி ச

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

———

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத ப்ரபும் அவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் நதே யாந்தி பராபவம்
நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி

இப்படி ஆயிரம் திரு நாமங்களால் -ஸ்ரீ மன் நாராயணனே புருஷோத்தமன் -ஸ்ரீ யபதி –
சரணா கதர்களுக்கு உயிர் அளிக்கும் மருந்தாயும்-
எல்லையில்லா மங்களமான இயற்க்கை நிலை -ஸ்வரூபம் -வடிவம் -ரூபம் -பண்புகள் திரு விளையாடல்கள் –
பரத்வம் சௌலப்யம் ஆகியவற்றை உடையவன் –
அநிஷ்டங்களை களைந்து இஷ்டங்களை வழங்கும் வள்ளல் -சர்வ ரஷகன் -இவனுடைய சஹஸ்ர நாமங்களைச் சொல்பவர்
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச ஸர்வ துக்கம்
உன் மூல்ய ஸம் பதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேந ஸதா க்ரியாஸ்தாம்

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

———

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச சர்வ துக்கம்
உன்மூல்ய சம்மதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீ ச ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேன சதா க்ரியாஸ்தாம்

ஹாரீத குல திலகம் -ஸ்ரீவத்சாங்கர் -திருக்குமாரர்–ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ரெங்கநாதன் திவ்யாஜ்ஜையால் அருளிச் செய்த
ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம் சம்பூர்ணம்
ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் பலனை அளிக்கவும் காரணம் அச்யுதனே

அஸ்மாக மத்ர ச பரத்ர ச ஸர்வது₃꞉க்க ₂-
முந்மூல்ய ஸம்பத₃ம் அசேஷ விதா₄ம் விதா₄ ய।

ஶ்ரீரங்க ₃ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவாநாம்
ஸங்கா₃த் ஸுக₂ம் ஸஹ ஜயேந ஸதா₃ க்ரி யாஸ்தாம் ॥

இதி ஶ்ரீஹரித குலதிலக ஶ்ரீவத் ஸாங்க மிஶ்ர ஸூநோ ꞉ ஶ்ரீரங்க ₃ராஜ தி₃வ் யாஜ்ஞா-
லப்₃த₄ ஶ்ரீபராஸர ப₄ட்ட  அபர நாமதே ₄ யஸ்ய ஶ்ரீரங்க நாத₂ஸ்ய க்ருதௌ
ஶ்ரீமத்₃விஷ்ணு ஸஹஸ்ர நாம விவரணம் ப₄க₃வத்₃கு₃ண த₃ர்பணாக்₂ யம்
பா₄ஷ்யம் ஸமாப்தம் ।
॥ ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து ॥

———————————–

பத்ம பத்ர விசா’லாக்ஷ
பத்ம நாப ஸுரோத்தம |
பக்தானா மனுரக்தானாம்‌
த்ராதா பவ ஜநார்த்தன ||23-அர்ஜுனன் உவாச

தாமரைக் கண்ணனே -உந்தியிலே தாமரையைக் கொண்டவனே –
மனிதர்களுக்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான வனே
சேதனர்களுடைய ஜனியை அறுப்பவனே-ரக்ஷித்து அருள்வாய்

ஸ்ரீ பகவானுவாச-

யோ மாம்‌ நாம ஸஹஸ்ரேண
ஸ்தோதுமிச்சதி பாண்டவ |
ஸோ(அ)ஹம் ஏகேந  ஸ்லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய: ||24

ஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம்‌ நம இதி

இவ்வளவும் கேட்டதும் அர்ஜுனனுக்கு பயம் ஆஸ்வாஸம் படுத்திய கண்ணனைப் போல்
ஆசை ஒன்றே போதும்-ஸோ(அ)ஹம்-அந்த நான் -முதல் ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்த உடனேயே
அதே பூர்ண ஆனந்தம் அடைகிறேன் -இதில் சங்கை ஒன்றுமே வேண்டாம்-மீண்டும் சொல்லி உறுதி படுத்துகிறான்

உதாசீனன் அனுமந்தா தூண்டும் நிலை மூன்றும் உண்டே-செய்வார்களைச் செய் வேனும் யானே என்னும்
ஜீவர்களின் ஸ்வா தந்திரம் மதித்து முதல் ப்ரவ்ருத்தியில் உதாஸீனன்

வ்யாஸ உவாச-

வாஸனாத்‌ வாஸுதேவஸ்ய
வாஸிதம்‌ தே ஜகத் (புவன )த்ரயம்‌ |
ஸர்வபூத நிவாஸோ(அ)ஸி
வாஸுதேவ நமோ(அ)ஸ்துதே ||25

ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி

எங்கும் நீக்கமற நிறைந்து -முன்னும் பின்னும் இருக்க வணங்க வேண்டுமே

ஸ்ரீ பார்வத்யுவாச-

கேனோபாயேன லகுனா
விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரகம்‌ /
பட்யதே பண்டிதைர்‌ நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம்‌ ப்ரபோ ||26–லகு உபாயம் நமக்காக கேட்டு

ஸ்ரீ ஈ’ஸ்வர உவாச-

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத் துல்யம்‌
ராம நாம வரானனே ||27–ஆயிரத்துக்கும் நிகர்

ஸ்ரீராம நாம வரானன ஓம்‌ நம இதி

ராமன் இடத்தில் –மனோரமே-மனதுக்கு இனியான் –ராம ராம ராம சொல்லி ரமே-ஆனந்திப்போம்

இத்தைக் கேட்டதும் –வரானனே-உனது முகத்தில் மகிழ்ச்சி துள்ளுகிறதே

ஸ்ரீ ப்ரஹ்மோவாச-

நமோ(அ)ஸ்த்வநனந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி சிரோரு பாஹவே |
ஸஹஸ்ர நாம்னே புருஷாய சா’ஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம: ||28

ஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம்‌ நம இதி

கால தேச வஸ்து அபரிசசேத்யன்
ஆயிரமான -திருமேனிகள் திருத் தொடைகள் திருக்கைகள் இத்யாதி -திரு நாமங்கள் –
அனைத்தையும் தரிக்கும் அவனுக்கு நமஸ்காரங்கள்

ஸஞ்ஜய உவாச-

யத்ர யோகேச்’வர: க்ருஷ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர்‌ விஜயோ பூதிர்‌
த்ருவா நீதிர்‌ மதிர் மம ||29-

இது என்னுடைய மதம்-நான் கண்ட நல்லதுவே
பார்த்த சாரதி பெயரிலே பாதி கொண்டானே

ஸ்ரீ பகவானுவாச-

அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோக க்ஷேமம் வஹாம் யஹம் ||30

பரித்ராணாய ஸாதூனாம்‌
விநாசா’ய ச துஷ் க்ருதாம்‌ |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ||31

ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை இங்கு சேர்த்து அனுசந்தேயம்-கத்ய த்ரயத்திலும் இதே போல் உண்டே

ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32

திருநாம சப்தம் ஒன்றாலே -துடிப்பு -குழப்பம் -மனம் உடைந்து -பயம் மிக்கு வியாதில் அகப்பட்ட -அனைத்தும் தொலைந்து நித்ய ஸூ கம் ஏற்படும்
அந்த அன்னை நரகம் புகாள் போல் இங்கும்

காயேன வாசா மனஸாஇந்த்ரியைர்‌வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்‌
கரோமி யத்யத்‌ ஸகலம்‌ பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி..

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

இதி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

————————————————

ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
ஸுதர்சனம் சக்ரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
ஸஹஸ்ரார-ஆயிரம் அரங்கள் -நேமியில் சேர-சிகையில் ஜ்வாலா-
அங்கும் இங்கும் வானவர் தானவர் –சங்கு சக்கரக் கையனே-
சக்கரம் மனஸுக்குப் பிரதி நிதி -அஸ்திர பூஷண அத்யாயம் விஷ்ணு புராணம் முதல் ஸ்கந்தம் கடைசி அதிகாரம் -சுற்றும் வேகம்

மிமிதீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண் டது போல பிரகாசமானதும் –
ஸுரத்விஷாம்-அசுரர்களை ப்ராணவிநாஸி-நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென–சுதர்சனம் சொலித்திடும் தீச் சுடராய் –
தேவர் தம்  பகைவரை அழித்து நிற்கும் பெருமான்  கைச் சக்க்ரத்தைச் சரணடைவோம்

பாஞ்சஜன்யம் சங்கு

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் பூரிதஸ்ய-காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஓசையால் –தானவ தர்ப்பஹந்தா-அசுரர்களுக்கு ஒலி அச் சத்தைக் கொடுக்கக்கூடியதும், சுப்ரம்-வெண்மை வண் ணத்தில் சசி கோடி –ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

கடலில் பிறந்து பாஞ்சஜன்யம் உடலில் வளர்ந்து

கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான் கோவைச் செவ்வாய் காற்றொலியால் தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்

தாமஸ அஹங்காரத்துக்கு பிரதிநிதி
பஞ்ச பூதங்கள் பஞ்ச தன்மாத்திரைகள் பிறக்கும்
த்வனி அதனால்

கௌமோதகம் கதை

ஹிரண் மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ரகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

புத்திக்கு -உறுதிக்கு பிரதிநிதி

பொன் மயமான மேரு மலையைப் போன்ற ஒளி யுள்ளதும், தைத்ய குலைக ஹந்த்ரீம்-அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் வாமாக்ர-இடது திருக்கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணமடைகின்றேன்.

பொன்னென மின்னும் மேருவைப் போல் – கெட்ட  தைத்யர் தன் குலம் அழித்து நின்று வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை கௌமோதகீயைச் சரணடைவோம்

நந்தகம் வாள்

ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேத க்ஷரச் சோணித திக்த தாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

ஞானம் வித்யை -பிரதிநிதி
அஞ்ஞானம் உறை
வாள் உறையில்
ஞானான் மோக்ஷம்

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்ப தால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் என்னும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடை கிறேன்.

தேவர் தம் குடியை காத்திடவே – கொடிய ராக்கதர் தந்தலை கொய்தவர் தம்-உதிரத்தில் குளித்த செவ் வாளாம்-நந்தகம் தன்னை சரணடைவோம்

சார்ங்கம் வில்

யஜ் ஜ்யாநீ நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர் முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

ஸாத்விக அஹங்காரத்துக்கு பிரதிநிதி வில்-பஞ்ச கர்ம ஞான இந்திரியங்கள்-அம்புகள்
அஸநி பா வர்ஷ -இடி போன்ற அம்பு வர்ஷம்

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான-யஜ் ஜ்யாநீ நாத- நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக் கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப் போதும் சரணமடைகிறேன்.

மின்னலாய் பய இருள் போக்கி நின்று – பகைவர் பின்னமாய் இடிந்திட நாணொலிக்க சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும் சாரங்கத்தை என்றும் சரணடைவோம்

இமம் ஹரே: பஞ்ச மஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநி ஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

ஸத்ய:-உடனே
பயாநி-பாபாநி-அனைத்துக்கும் பஹு வசனம்

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

காலையில் அனு தினம் கருத்துடனே – ஆயுத மாலையிதை ஓதி நின்றால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி யிங்கு – நித்ய தூயன் அருளில் துய்த்திடலாம்.

வநே ரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்ச யாபத்ஸு மஹா பயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர மாகுலாத்மா
ஸுகி பவேத் தத் க்ருத ஸர்வரக்ஷ:

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.

போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் – கெட்ட பேரிடர் பொழுதின் பயங்களிலும் தோத்திரம் இதனை ஓதி நின்றால் – சுகம் மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.

———————–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||(பஞ்ஜரம்-கூண்டு )

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |

ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய -பொன்னின் நிறம் கொண்டவன் என்றுமாம் -கிலேச நாசகன் -கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.-சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் கதையைத் தரித்தவராய் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
ஆக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென் கிழக்கில், தாமரையைப் போன்றவனும்,  ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வட மேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
வஜ்ராயுதம்  ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத் ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வட கிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சம்மட்டியை -சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியங்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
பட்டாம் பூச்சி வண்ணம் -நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் பாசக் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ரம் அச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத –அச் சித்ரம்-கவசத்துக்குள் கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.–நிச்சயம்

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

துஞ்சும் போது அழைமின் துயர் வரும் பொழுது நினைமின்

——————–

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.-பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன்
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.
——————–———–

ஸ்ரீ ராம த்யான ஸ்லோகங்கள்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம் ||
சகல இடையூறுகளையும் நீக்கி எல்லாருக்கும் தனத்தையும் மகிழ்ச்சியும் அளித்து அருளும் ஸ்ரீ ராமபிரானை மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம் பீதி நாச’னம் |
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

கஷ்டத்தில் துடிப்போரின் வலியையும் பயத்தையும் நீக்கி அடியேனுடைய சத்ருவுக்கு எமனாய் விளங்கும்
அந்த ஸ்ரீ ராமசந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீ க்ருத ச’ராய ச |
கண்டித அகில தைத்யாய ராமாயா ‘ஆபந் நிவாரிணே ||
அசுரர்களை அடக்கி அடியேனுடைய கஷ்டங்களை எல்லாம் தூர விலக்கும் அந்த
சரங்கள் பூட்டியே உள்ள ஸ்ரீ கோதண்ட ராம சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே |
ரகு நாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||
ராமா– ராமபத்ரா- ராம சந்த்ரா – வேதஸே-படைப்பவனுக்கு -ரகுநாதா- நாதா- ஸீதா பதி என்று போற்றி அழைக்கப்படும்
அந்த ஸ்ரீ ஸீதா ராமத் சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
அக்ரதஃ ப்ருஷ்டதச்’ சைவ பார்ச்’வதச்’ச மஹாபலௌ |
ஆகர்ண பூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ ||
ஆகர்ண பூர்ண தன்வாநௌ-காது வரையில் இழுத்துப் பூண்ட நாணுடைய தநுஸ்
தருணவ் ரூப ஸம்பன்னவ் ராமவ் மஹா பலவ் –சூர்ப்பணகை-
மஹா வலிமையும் பலமும் கொண்ட ராம லஷ்மன் இருவரும் எப்போதும் அடியேனுடன் முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் இருந்து
அடியேனை எல்லா திக்குகளிலும் ரக்ஷித்து அருளட்டும்
ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாண தரோ யுவா |
கச்சன் மம அக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண: ||

கவசம் அணிந்து வாளும் வில்லும் அம்புடன் அடியேனுடன்
எந்நேரமும் எனக்குப் பாதுகாப்பாக கூட வரும்
ராமா லஷ்மணா அடியேனை ரக்ஷித்து அருள்வீராக

அகார உகார மகாரங்கள் ராமன் சீதா லஷ்மணன் ஓங்காரம் போல் நடந்து –

ஸன்னத்த-விழிப்புடன் முதலிகளை கடற்கரையில் ரஷித்த்தை நினைத்து தஞ்சம்

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நச்’யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

அச்யுதாநந்த  கோவிந்த-ஆசமனம் பண்ணும் பொழுது சொல்லும் மூன்று திரு நாமங்கள் –

திரு நாம உச்சாரணமே மருந்து
அனைத்து ரோகங்களுக்கும் இதுவே மருந்து -ஸம்ஸாரமும் போகுமே

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே |
வேதாச்’சா’ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேச’வாத் பரம் ||

கையைத் தூக்கி ஸத்யம்
வேதம் ஒன்றே ஸாஸ்த்ரம்
கேசவன் ஒருவனே தெய்வம்

ச’ரீரே ஜர்ஜரி பூதே வ்யாதி க்ரஸ்தே களே பரே |
ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-யார் மருந்து இனி யாகுவார்

ஜாந்ஹவீ தோயம்-கங்கை கங்கை என்னும் வாசகத்தால் கருவினை களையலாம்

ஆலோட்ய ஸர்வ சா’ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் ஸுநிஷ் பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

காரணந்து த்யேய
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்

காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

யதக்ஷர பத ப்ரஷ்டம் மாத்ரா ஹீனம்து யத் பவேத் |
தத் ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||

குற்றங்களுடன் சொன்னோம்
எழுத்து-சொல் அசை உச்சரிப்பு -மாத்ரா -இவற்றால் பலவும் செய்துள்ளோம்
நாராயணனே க்ஷமிக்கட்டும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –குறைவாகச் சொன்னாலும் பேறு தப்பாதே

விஸர்க்க பிந்து மாத்ராணி பத பாத அக்ஷராணி ச |
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||

ந்யூநாநி ச அதிரிக்தாநி-குறைத்தும் கூட்டியும் சொல்லி இருந்தாலும்

——————————————-

ஸ்ரீ இராமாயண அனுபவ துவாதச நாம ஸ்தோத்ரம் -ஸ்ரீ உ -வே -கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –

ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் பரத ப்ரிய ஸத்ரு ஹந்த
ஸூ க்ரீவ மித்ர லங்க அக்நே ராஜன் திவ்ய நமஸ்துதே –1-

நமஸ்கார ஆஸீஸ் ரூப மங்களம்
ஏழு காண்டங்கள் அர்த்த சுருக்கம்
ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் -பால காண்ட சுருக்கம் -திரு அவதாரம் -ஸ்ரீ ஸீதா பிராட்டி திருமணம்
பரத ப்ரிய -அயோத்யா காண்டம் -பாரதந்தர்ய சிறப்பைக் காட்டும்
ஸத்ரு ஹந்த -ஆரண்ய காண்ட சுருக்கம்
ஸூக்ரீவ மித்ர -கிஷ்கிந்தா காண்ட சுருக்கம்
லங்க அக்நே -ஸூந்தர காண்ட சுருக்கம் -திருவடி மூலம் இலங்கா தகனம்
ராஜன் -யுத்த காண்ட சுருக்கம் -ஸ்ரீ பட்டாபிஷேகம்
திவ்ய -உத்தர காண்ட சுருக்கம் -தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினது
நமஸ்துதே

———-

ஸ்ரீ கேஸவ
ஸ்ரீ மன் வரத தேவைஸ் த்வம் ப்ரஹ்மாத்யை ப்ரார்த்திதோ திவி
அவதீர்னோ தசராதாத் லோக த்ராணாய கேஸவ -2-

ஸ்ரீ ப்ரஹ்மாதிகளால் பிரார்த்திக்கப் பட்டு ஸ்ரீ வரத லோக ரக்ஷண அர்த்தமாகவே அன்றோ
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளினீர்

க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம்
ஆவரம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேஸவ நாம பாக்

———

ஸ்ரீ நாராயண
பிதுர் மதே ஸ்திதோ ராம ஸ அநுஐ கௌசிகம் கத
ததத்வரம ரக்ஷஸ் தவம் நாராயண ரிபோர் வதாத் -3-

தந்தை சொல் படி தம்பியுடன் விசுவாமித்திரர் யாக ரக்ஷணம் –
தாடகை ஸூபாஹு -நிரஸனம் -நார ரக்ஷணம் -என்பதால் நாராயண

—————-

ஸ்ரீ மாதவ
ஜனகஸ்ய மீ கே பங்க்த்வா துரா ரோபம் பரைர் தநு
ஸஹ தர்ம ஸரீம் ஸீதாம் பிராப்தஸ் த்வம் மாதவ ஸ்ரீயம் -4-

ஸ்ரீ சீதாப் பிராட்டியைத் திருக்கைப் பற்றி மாதவன் ஆனார்

———-

ஸ்ரீ கோவிந்த
கைகேய்யா ப்ரிய பர்த்ருஸ் த்வம் பிதுர் வசன கௌரவாத்
அபிஷேகம் ஹி கோவிந்த த்யக்த்வா ப்ராப்தோ வநம் முதா -5-

ஹர்ஷத்துடன் வனம் போய் புக்கு –
ராஜ்ஜியம் வா வன வாஸோ மஹோ தய
கோவிந்தா -காம் விந்ததீதி கோவிந்த -வாக்குகளை ரஷிப்பவன்

————

ஸ்ரீ விஷ்ணு
குஹம் க்ருதார்த்தம் குர்வம்ஸ் சித்ர கூடம் கதோ கிரிம்
பாதுகே பரத யாதா விஷ்ணு ஸர்வ அபி ரஷகே -6-

குஹனை க்ருதார்த்தன் ஆக்கி அருளி சர்வ ரக்ஷகமான ஸ்ரீ பாதுகையை பரதனுக்கு அருளி –
ஸ்ரீ விஷ்ணு ஆனீர்

——————–

ஸ்ரீ மது ஸூதனன்
விராதஸ்ய கராதீநாம் தமஸா மிவ பாநுமான்
சேத்தா க்ருத்ர பவஸ்யாபி விபாஸி மது ஸூதந -7-

விரோதன் கரன் போன்றவர் நிரஸனம்
ஜடாயு மோக்ஷம் -அருளியதால் மது ஸூ தனன் ஆனீர்
பிரகிருதி சம்பந்தம் போக்கி -விரோதி நிரஸந சீலத்வம்

—————-

ஸ்ரீ த்ரிவிக்ரம
ஸூக்ரீவேண க்ருபாவத்யை ஸீதாயை ப்ரேஷித கபி
த்ரி விக்ரம அப்திம் வவ்ருதே லங்கிதும் த்வமி வா த்வரே -8-

முதல் பிரிவால் சிறை இருந்தவள் கிருபையை வெளியிட்டு அருளி ஏற்றம் காட்டி அருளினாரே
உம்மைப் போலவே திருவடி வளர்ந்து அருளி த்ரிவிக்ரமனும் நீரே என்று காட்டி அருளினாரே

———-

ஸ்ரீ வாமன
லங்காம் விசித்ய ஹநுமான் த்வத் ரூபோ வாமன அகிலாம்
ஸீதாம் த்ருஷ்ட்வா அக்ஷதாம் தேவீம் ஜகாத ச தவ பிரியம் -9-

உம்மைப் போன்ற வடிவைக் கொண்டு உம்முடைய பிரியத்தை பிராட்டி இடம் அறிவித்த திருவடி
நியதாம் அக்ஷதாம் தேவீம் ராகவாய நிவேதயத் -கற்பு நிலை நின்றதைச் சொல்லிற்றே –

———-

ஸ்ரீ தர
ப்ரபந்நாப்ய தாயீ த்வம் ராவணா தீன் நிஹத்யச
அபி ஷிக்தஸ் ஸீத ஸ்த்வம் ஸ்ரீ தர ஆப்தோ மஹீ மிமாம் -10-

அபய பிரதானம் அளித்த சீர்மை
குண ஸ்ரீ -வீர ஸ்ரீ-ராஜ்ய ஸ்ரீ அனைத்தும் கொண்ட சீர்மை –
பட்டாபிஷேகம் செய்து அருளி பிராட்டி உடன் கூடிய சீர்மை –

————–

ஸ்ரீ ஹ்ருஷீ கேஸ
பார தந்தர்ய ப்ரகாசாய த்வத் விஹீ நாபி ஜாநகீ
கங்கா யாம் நாஜஹத் ப்ராணான் ஹ்ருஷீ கேஸ தவ ப்ரியா -11-

இரண்டாம் பிரிவால் பாரதந்தர்யம் வெளியிட்டு அருளினாள் பிராட்டி
அவனே ஹ்ருஷீ கங்களுக்கு எல்லாம் -ஞான கர்ம இந்திரியங்களுக்கும் அந்தக்கரணத்துக்கும்
அனைத்துக்கும் -ஈசன் –

——————–

ஸ்ரீ பத்ம நாப

ப்ரஹ்மாதீ நாம் ச ஸர்வேஷாம் பஸ்யதாம் ஜாநகீ தவ
ப்ரகாஸ்யா நாய சேஷத்வம் பத்ம நாப புவம் கதா –12-

மூன்றாம் பிரிவால் -அநந்ய சேஷத்வம் –பத்ம சம்பவனான -ப்ரஹ்மாதிகள் பார்க்க
பூமிக்குள் சென்று வெளியிட்டு அருளினாள்
நாபி பத்ம கமலம் உடைய பத்ம நாபன் –

————————–

ஸ்ரீ தாமோதர
த்வம் ஸிராத் பரிபால் யாத ஸா கேதம் தச் சராசரை
ப்ரஹ்மாத் அபிஷ்டுத ப்ராப்த நாகம் தாமோதர ஸ்வகம் -13-

துக்க பூயிஷ்டமான இருள் தரும் மா ஞாலத்தில் அவதரித்ததே ஸுலப்யம் காட்டவே தாமோதரா
அன்று சாரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளி
ப்ரஹ்மாதிகள் ஸ்துதி செய்ய ஸ்வ பரம பதம் எய்திற்றே –

————-

ஏதத் துவாதச நாமார்ந்த தேவ ராஜ வர பிரத
ஸர்வதா தவ ஸர்வம்ச ஸர்வேப்யோபி பவேஸ் ஸூபம் –14-

ஸ்ரீ தேவாதி தேவனே எல்லா வற்றாலும் மங்களம் உண்டாகட்டும் –

———————————-

நெற்றியில் இடும் திருநாமம். பகவானின் திருவடிகளையே குறிக்கும்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் வெள்ளை நிறக்கோடுகள் இரு பக்கமும் இருக்கும்.
நடுவிலே சிவப்பு நிற ஸ்ரீ சூர்ணம் மகா லட்சுமியை குறிக்கும்.
தான் திருமாலின் அடியவர் என்பதைக் காட்டும் விதமாகவும், அவரது திருவடியை தன் தலைக்கு மேல் ஏந்திக்கொள்கிறேன் என்று கூறுவதுமாகும்.

நெற்றியுள் நின்றென் னை யாளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி,
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்,
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றை யமரருமெல்லாம் வந்தென துச்சி யுளானே.
-என்று நம்மாழ்வார் நெற்றியில் திருநாமம் இட்டுக் கொள்வதில் பெருமையை பறை சாற்றுகிறார்.

திருநாமம் இடும்போது நடுவே இடும் ஸ்ரீ சூர்ணம் மகாலட்சுமியோடு பகவான் கூடி இருக்கிறார் என்று காட்டுகிறது.
திருநாமத்தை இடும்போது கீழியிருந்து மேல் நோக்கி இடுகிறோம். இது நாமம் இடுபவருக்கு மேன்மையான எண்ணங்களை உருவாக்கும்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அதாவது அவரது நிலையை மேல்நோக்கி கொண்டு செல்லும்.
திருநாமத்தை நெற்றியில் மட்டுமன்றி உடலில் பல்வேறு இடங்களில் இட்டுக்கொள்ளலாம். அதாவது 12 இடங்களில் திருநாமம் இடவேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் திருநாமம் இடும்போது பகவான் நாமத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாமம்.

நெற்றி – கேசவன்

வயிற்றின் மத்தியப்பகுதி – நாராயணன்

மார்பு மத்தியப் பகுதி – மாதவன்

கழுத்து மத்தியப் பகுதி – கோவிந்தன்

வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு

வலது தோள் – மதுசூதனன்

வலது கழுத்து – திருவிக்ரமன்

இடது வயிறு – வாமனன்

இடது தோள் – ஸ்ரீ தரன்

இடது கழுத்து – ரிஷிகேசன்

கீழ்முதுகு – பத்மநாபன்

கழுத்துக்கு பின்புறம் – தாமோதரன்

என சொல்ல வேண்டும்.

இதுபோல் ஸ்ரீ சூர்ணம் இடும் போதும் மகாலட்சுமி தாயாரின் பன்னிரெண்டு நாமங்களை கூற வேண்டும்.

நெற்றி – ஸ்ரீ

வயிற்றின் மத்தியப்பகுதி – அம்ருத்தோற்பவா

மார்பு மத்தியப் பகுதி – கமலா

கழுத்து மத்தியப் பகுதி – சந்திரசோபனா

வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு பத்தினி

வலது தோள் – வைஷ்ணவி

வலது கழுத்து – வராரோஹா

இடது வயிறு – ஹரி வல்லபா

இடது தோள் – சார்ங்கிணி

இடது கழுத்து – தேவ தேவிகா

கீழ்முதுகு – மகா லட்சுமி

கழுத்துக்கு பின்புறம் – லோகசுந்தரி

திருநாமம் அணிந்த பிறகு கை அலம்பக்கூடாது.
திருமாலும் திருநாமம் இடுவதன் காரணம், தனது பக்தர்கள் எதைச் செய்தாலும் அதை தானும் செய்து பார்த்து மகிழ்வதுதான் திருமாலுக்கு விருப்பமானது.
அந்த வகையில் அவரும் நாமம் இட்டுக்கொள்கிறார்.
தானே தனது திருவடிகளை நெற்றியில் நாமமாக இட்டுப் பார்க்கிறார்

த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே
யதாத்வாம் ஸூஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீஹ் சலா பூதிர் ஹரி ப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சைஹ் பத்ம தாரிணீ ||–ஸ்ரீ லக்ஷ்மி த்வாதச நாம ஸ்தோத்ரம்.

ஸ்ரீ தேவிம் பிரதமம் நாமம்
த்விதீயம் அம்ருத உத்பவ
த்ருதீயம் கமலா ப்ரோக்தா
சதுர்த்தம் சந்த்ர சோபனா
பஞ்சமம் விஷ்ணு பத்னீ ச
ஷஷ்டம் வைஷ்ணவீ ததா
சப்தமம் து வராரோஹா
அஷ்டமம் ஹரி வல்லபா
நவமம் சார்ங்கிணீ
தசமம் தேவ தேவிகா
ஏகாதசம் மஹா லஷ்மீ
த்வாதசம் லோக ஸூந்தரீ –-ஸ்ரீ லஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரம்

ஸ்ரீ தேவீ பிரதமம் நாம த்விதீய அம்ருதோத்பவா
திருதீயம் கமலா ப்ரோக்தா சதுர்த்தியும் லோக ஸூந்தரீ

பஞ்சமம் விஷ்ணு பத்நீ ச ஸஷ்டம் ஸ்யாத் வைஷ்ணவீ ததா
ஸப்தமம் து வராரோஹா அஷ்டமம் ஹரி வல்லபா

நவமம் ஸார்ங்கிணீ ப்ரோக்தா தஸமம் தேவ தேவிகா
ஏகாதஸம் து லஷ்மீ ஸ்யாத் த்வாதஸம் ஸ்ரீ ஹரி ப்ரியா

த்வாதஸை தாநி நாமாநி த்ரி ஸந்த்யம் ய படேந் நர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தஸ்ய புண்ய பல பரதம் –இதி லஷ்மீ த்வாதஸ நாம ஸ்தோத்ரம்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

September 3, 2023

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ ।
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥

ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।
பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம்

 பாலகாண்டம்

ஜய ஜய மஹாவீர !
மஹாதீர தௌரேய !

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !

தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !

தினகர – குல – கமல – திவாகர !

திவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன !

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித !

ப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித !

தனுதர விஶிக விதாடன விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய !

ஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-
ஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித
நிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத !

குஶிகஸுத கதித விதித நவ விவித கத !

மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர !

கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட !

சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந !

மோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க !

பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல !

ஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத
துரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !

க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-
தந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக
ந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக
ப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக !

அயோத்யா காண்டம்

அந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா-
வஜ்ஞாத யௌவராஜ்ய !

நிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர !

பரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத !

அநன்ய ஶாஸனீய !

ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக
நிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம !

பிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ
ஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர
பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய !

த்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ !

தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத !

விராத ஹரிண ஶார்தூல !

விலுலித பஹுபல மக கலம ரஜநிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப
ஸம்ப்ருʼத சீரப்ருʼதனுரோத !

த்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர !

தூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய
கோஷண !

கரதர கர தரு கண்டன சண்ட பவன !

த்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப !

அஸஹாய ஶூர !
அநபாய ஸாஹஸ !

மஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண
விபவ விரோபித விகட வீரவ்ரண !

மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண !

விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா
லக்ஷித-பக்தஜன தாக்ஷிண்ய !

கல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித !

அவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ
மோக்ஷ ஸாக்ஷிபூத !

கிஷ்கிந்தா காண்டம்

ப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய !
தரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய !

த்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர
விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன
விஶ்வஸ்த ஸுஹ்ருʼதாஶய !

அதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத
சித்ரபுங்க வைசித்ர்ய !

விபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக
சதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால
ஶிலாதல தாரண தாருண ஶிலீமுக !

ஸுந்தர காண்டம்

அபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன
ஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான !

யுத்த காண்டம்

அஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ
விஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ !

ஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித !

வீர !
ஸத்யவ்ரத !

ப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந !

ப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர !

ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத
கிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர !

த்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது
லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ !

ககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ
களித விஷ-வதன ஶர கதன !

அக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித
ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப !

கடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத
விஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய
விஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம !

கும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர !

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்
அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி
தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த !

அப்ரதித்வந்த்வ பௌருஷ !

த்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர !

ஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப !

ஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன புனருதய தர
களித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல
நிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத !

அகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந
ஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய
நிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித!

அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத
கிரிஶர முக ஸுரபதி நுதி முதித !

அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ !

விகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக !

ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக !

விபீஷண வஶம்வதீ-க்ருʼத லங்கைஶ்வர்ய !

நிஷ்பன்ன க்ருʼத்ய !

க புஷ்பித ரிபு பக்ஷ !

புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ !

ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித
ஸிம்ஹாஸனாதிரூட !

ஸ்வாமின்!
ராகவ ஸிம்ஹ!

உத்தர காண்டம்

ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில
ந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ !

திவ்ய பௌமாயோத்யாதிதைவத !

பித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன
பூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ !

ஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத !

ஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித !

குஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ !

விதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன
நிஶமன நிர்வ்ருʼத !

ஸர்வ ஜன ஸம்மானித !

புனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண
விஶ்ராவித யஶ: ப்ரபஞ்ச !

பஞ்சதாபன்ன முனிகுமார ஸஞ்ஜீவநாம்ருʼத !

த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த !

அவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண
நிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம !

ஸர்வ கர்ம ஸமாராத்ய !
ஸனாதன தர்ம !

ஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி
தான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ !

பவத-பநாதா-பித பக்தஜன பத்ராராம !

ஶ்ரீ ராமபத்ர !
நமஸ்தே புனஸ்தே நம: !

சதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே ।
நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥

கவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் ।
பவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –