ஸ்ரீ 108 திவ்ய தேச எம்பெருமான் ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி பாடல் —

திருவரங்கன் கோயில் திருவரங்கேசன்
திருமகள் அழகிய மணவாளன் உறையூர்
திருத் தஞ்சை நீல மேக நரஸிம்ஹம்
திரு அன்பில் அமர் வடிவு அழகிய நம்பி

மரு கமழ் சோலை கரம்பனூர் உத்தமன்
மலர் மகள் வெள்ளறை புண்டரீகாக்ஷன்
திருப் புள்ளம் பூதங்குடி அமர் வேந்தே
திருப் பள்ளி உணர்த்தருள் புரிந்திடுவாயே

வார் புனல் பேரில் -அரவணைக் கிடந்தான்
வரம் திகழ் ஆதனூர் அளந்தருள் ஐயன்
பார் புகழ் தொல் நிறை நாதன் அழுந்தூர்
மணி துயில் உரு கடல் திரு சிறு புலியூர்

கார் மலி தண் சேறை திருச்சேறை நாதன்
கார் கடல் மல்லை தலைச் சங்கம் நாண் மதியே
ஏர் திகழ் குடந்தைக் கிடந்த என் அமுதே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கண்டியூர் ராமர் சாப விமோசனர்
கருணை பொழிந்திடும் விண்ணகர் அப்பன்
எண் திசை புகழ் கமழ் ஊர் சவுரி ராஜன்
எழில் மிகு திருவாலி வயலாலி அப்பன்

கண்டம் கமழ் சோலை இந்தளூர் மைந்தா
காசினியில் உயர் திருச்சித்ர கூடம்
அந்தணர் தேவன் அரன் அயன் காழி
யரும் தவ முனி தொழும் தில்லைக் கோவிந்தர்

சிந்தை கவர்ந்திடும் ஸ்ரீ ராமா விண்ணகர்
சீராக அளந்திடும் தாடாளன் அம்மா
நந்தருக்கு அருள் கூடலூர் ஜகன்னாதா
நாராயணா பள்ளி எழுந்தருளாயே

மாதவன் மகிழ்ந்து உறை தேவானார் தொகை
மறை திகழ் வண் புருஷோத்தமத்தானே
ஸ்ரீ நாதன் அருள் நாதன் செம் பொன் செய் கோயில்
திருத் தெற்றி அம்பல செங்கண் மாலே

போது அலர் பொழில் சூழும் மணிக் கூடல் நாதன்
புகழ் காவளம்பாடி வேணு கோபாலன்
சீர் மலி சோலை வெள்ளக்குளத்து அண்ணா
ஸ்ரீ தரா சீர் பள்ளி எழுந்தருளாயே

கண்ணங்குடி நின்ற கார் மேக வண்ணா
திருக்கண்ண மங்கை அபிஷேக ஈஸா
கரிக்கு அருள் பிரிந்திடும் கபிஸ்தா நாதா
கருணை புரி வெள்ளி யங்குடி ராமா
விண்ணோர் பணி மணி மாட விளக்கே
வைகுண்ட விண்ணகர் வைகுந்த நாத
எழில் அரி மேய விண்ணகர் அரவிந்தா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
பார் புகழ் கூடலூர் ஆடுதுறை பெருமாள்
கார் கடல் நாகை அழகியார் பள்ளி எழுந்தருளாயே

தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி
கருணா வளம் தரு சோழ நன் புவியில்
மா மகள் கோன் உறை நாற்பது பதிகள்
மறை ஒலி புகழ் கமழ் மா நகர் என்பர்

காமனைப் படைத்த தோர் மா மேனி அழகர்
மாலிருஞ்சோலையில் மால் அலங்காரர்
சேமமுடை சவும்ய நாராயணான் கோஷ்ட்டி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

மெய்யத்து உறைகின்ற சத்ய கிரீஸ்வரன்
தெய்வச் சிலை நாதன் திகழும் புல்லாணி
வையத்து உயர் திருத் தண் காலில் அப்பன்
வழித்துணையாம் காள மேக ஸ்ரீ மோகூர்

வைகை நதி தீரம் தென் கூடல் அழகர்
வள நகர் ஸ்ரீ வில்லி புத்தூர் அரங்கர்
ஐயன் திருக்குருகூரில் பொலிந்தார்
அன்பனே திருப்பள்ளி எழுந்தருளாயே

தென் உயர் திருக்குறுங்குடி வைஷ்ண நம்பி
நிக்ஷேப மா நிதி நிறை திருக்கோளூர்
பொங்கும் பொருநல் சூழ் பாண்டிய நாட்டில்
புகழ் பெரு பதினெட்டு திருப்பதி என்பர்

பங்கஜ நாதன் அனந்த புரம் தன்னில்
வண் பரிசாரத்தில் திரு வாழும் மார்பன்
தங்கும் பெரும் புகழ் காட்கரை அப்பா
தாமோதரா பள்ளி எழுந்தருளாயே

செல்வம் திகழ் திரு மூழிக் களத்தான்
சேர் திகழ் மாயப்பிரான் திருப்புலியூரில்
நல் திருச் செங்கனூரில் மெய்ய வரை யப்பன்
நாரணன் அமர்ந்திடும் தென் திரு நாவாய்

வல்லவள் வாழ்ந்திடும் வல்லி மணாளா
வண்டூர் உறையும் என் பாம்பணை அப்பா
அல்லல் தவிர்ந்திடும் திரு வட்டாத்தில் ஆதி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

பக்தர் தொழும் திரு வித்துவக் கோடு
வண் குல சேகரன் பாடிடும் அம்மான்
அற்புதன் நாரணன் அமர் திருக்கடித்தானம்
அணி பொழில் விரலாழி வேய் குறள் அப்பன்

செப்புடை மலை நாடு ஓர் பதின்மூன்றும்
தெய்வ நாதன் திரு ஹரி நாதன் நகரே
முத்துடை பெண்ணை நிறை புவியில் திரு
விக்ரமாப் பள்ளி எழுந்தருளாயே

ஹரி ஹரி உறைந்திடும் அருளாள வரதா
கடு வினை களைந்திடும் அழகிய சிங்கா
நெடு பொழில் கச்சியில் அஷ்ட புஜத்தான்
தீபப் பிரகாசன் விளக்கொளி தண்கா

விரி பொழில் வேளுக்கை ஆளரி நாதன்
ஜெய் தூதன் பாடகம் சேர்வை விளங்கும்

நீள் கருணாகரன் திருக்காராகத்தாள் நிலையிலா
மணி மாட கார்வானக் கள்வன் விமல வராஹன்
திருக்கள்வனூரே மலி புகழ் பரமேஸ்வர நகர் நாதா
பவள வண்ணா திருப்பள்ளி எழுந்தருளாயே

புள்ளுக்கு அருள் செய்த புட் குழி ராமா
புனிதன் உறைகின்ற ஊர் பத்தராவி
உள்ளம் கவர் கின்ற வீர ராகவன் எவ்வுள்
உத்தம நீர் மலி நீர் வண்ணன் எம்மான்

துள்ளும் இடவெந்தை நித்ய கல்யாணர்
திரை கடல் மல்லை தலை சங்கம் நாண் மதியே
தெள்ளிய யோகத்தில் அமர் திருக்கடிகை
சிங்கப்பிரான் பள்ளி எழுந்தருளாயே

சீராரும் வேத வல்லி மணாளா
செல்வம் திகழ் திருவல்லிக்கேணி மன்னாதா
பார் புகழ் ருக்மிணி பார்த்தன் ஸஹாயன்
பக்தருக்கு அருள் புரியும் சக்ரவர்த்தி குமாரன்

வாரணம் துயர் தவிர் தேவப் பெருமான்
வல்வினை தீர்த்திடும் தெள்ளிய சிங்கா
ஏர் தொண்டை நாடும் ஓர் நாலாறும் மூவாறும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் திரு வேங்கடத்து அப்பன்
அரியா ஒண்ணாத நர சிங்க வேள் குன்றம்
தொண்டர்கள் வாழும் திரு ராமன் அயோத்யா
தொல் வன ரூபன் வாழ் நைமிசாரண்யம்

கொண்டல் தவழ் திரு சாளக்கிராமம்
குரு நர நாராயணன் பதரி உறை கோயில்
மண்டலம் தாம் தொழும் கண்டம் கடி வாழ்
மாதவனே பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் கொண்டல் தவழ் திருப் ப்ரிதி
பார் புகழ் ருக்மிணி துவராகா தீசன்
கோபிகள் கொண்டாடும் ஆய்ப்பாடி நாதன்
குன்று குடையாக எடுத்த கோவர்த்தன நேசா
நாச்சியார் உகந்து அருளும் வட மதுரையார் மைந்தன்
தேவர்கள் குறை தீர்க்கும் பாற் கடல் நாதா
வைகுந்தக் குட்டன் மகிழ்ந்து உறையும் பரம பத நாதா
உடையவர் போற்றிடும் சம்பத் குமாரா
ஸ்ரீ தரனே பள்ளி எழுந்து அருளாயா

மாதவன் பூ மகள் சேனையர் கோன் அருள் பெற்ற
மறைத் தமிழ் கூறும் மகிழ் மாறன்
முனி நாதன் புண்டரிகாஷர் மணக்கால் நம்பி
ஸ்ரீ யமுனா ஸ்ரீ மஹா பூர்ணர் பூதூரில் எதிராஜர்
பொருநல் குருகூரில் வந்தார் மணவாள மா முனி
முதலார் ஆதாரத்தோடும் உன்னைத் தொழ வந்தோம்
அந்த அச்யுதனே பள்ளி எழுந்தருளாயே

வேதம் தமிழ் செய்த மாறன் கொள் ஈசன்
விமலர்களாம் பொய்கை பூதம் பேயாழ்வார்
கோதை விஷ்ணு சித்தன் தொண்டர் அடிப்பொடி
குறையல் கலி கன்றி மா மழிசைப் பிரான்

நாதன் திருப்பாணான் நம்மாழ்வார் தம் கவி
நல் தமிழ் பாசுரம் பல்லாண்டு இசைப்பார்
ஏதங்கள் வாராது உலகினில் வாழ்வார்
எம்பெருமான் உன் தன கிருபையினாலே

ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading