Archive for the ‘Madurakavi Aazlvaar’ Category

ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -திரு தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -மங்களா சாசனம் செய்து அருளிய ஸ்ரீ திவ்ய தேசங்கள்

January 19, 2013

ஸ்ரீ பெரியாழ்வார்
ஆனி  ஸ்வாதி -பெரிய திருவடி அம்சம் -பிராமண  குலம்
திருப்பல்லாண்டு -12
பெரியாழ்வார் திருமொழி -461-

மங்களா சாசனம் அருளிய  திவ்ய தேசங்கள் -19

1-திருவரங்கம் -2-திருவெள்ளறை -3-திருப் பேர் நகர் -4-திருக் குடந்தை –
5-திருக் கண்ண புரம் -6-திரு மால் இரும் சோலை -7-திருக் கோட்டியூர் –
8-ஸ்ரீ வில்லி புத்தூர் -9-திருக் குறுங்குடி -10-திரு வேங்கடம் -11-திரு அயோத்யை –
12-திரு சாளக் க்ராமம் -13-திரு பத்ரி காஸ்ரமம் -14-திருக் கண்டம் என்னும் கடி நகர் –
15-திரு த்வாரகை -16-திரு வட மதுரை -17-திரு ஆய்ப்பாடி
18-திருப்பாற் கடல் -19-திரு பரமபதம் –

———————————————————————–

ஸ்ரீ ஆண்டாள்
திரு ஆடிப் பூரம் பூமி தேவி அம்சம்
திருப்பாவை -30-
நாச்சியார் -திருமொழி 143-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -11
1–2-திருவரங்கம் திருக் குடைந்தை -3-திருக் கண்ண புரம்
4-திருமால் இரும் சோலை
5-ஸ்ரீ வில்லி புத்தூர்
6-திருவேம்கடம் -7-திரு த்வாரகை 8-திரு வட மதுரை
9-திரு ஆய்ப்பாடி
10-திருப்பாற்கடல்
11–திரு பரமபதம் –

———————————————————————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள்-
மாசி புனர்பூசம் -திரு வஞ்சிக் களம் திரு அவதாரம்

ஸ்ரீ கௌஸ்துப அம்சம்

பெருமாள் திருமொழி -105-

மங்களா சாசனம் செய்து அருளின திவ்ய தேசங்கள் -10
1-திருவரங்கம் 2-திரு வேங்கடம்
3-திரு வித்துவக்கோடு 4-திருக் கண்ண புரம்
5-திருச் சித்ர கூடம் -தில்லை நகர்
6-திருவாலி 7-திரு அயோத்யை -8-திரு வட மதுரை 9-திருப்பாற்கடல் -10-திரு பரம பதம்

—————————————————————

ஸ்ரீ திரு மழிசைப்  பிரான்
தை -மகம் சக்கரத் தாழ்வார் அம்சம்
உறையில் இடாதவர்
ஸ்ரீ ஆரா அமுத ஆழ்வான் -ஸ்ரீ திரு மழிசைப் பிரான்
திரு சந்த விருத்தம்-96-
நான்முகன் -திருவந்தாதி -120-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -16
1-திருவரங்கம் -2–அன்பில் 3-திருப் பேர் நகர் 4-திருக் குடந்தை
5-கபிஸ்தலம் 6-திருக் கோட்டியூர் 7-திருக் குறுங்குடி
8-திரு ஊரகம் -9-திருப் பாடகம் 10-திரு வெக்கா
11-திரு எவ்வுள்ளூர் 12-திரு வல்லிக்கேணி
13-திரு வேங்கடம் 14-திரு த்வாரகை
15-திருப் பாற்கடல் 16-திரு பரம பதம் –

——————————————————————————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
திரு மண்டங்குடி -மார்கழி கேட்டை திரு அவதாரம்
ஸ்ரீ வைஜயந்தி அம்சம்
திரு மாலை -45-
திருப் பள்ளி -எழுச்சி -10-
மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -3-

1-திருவரங்கம்
2-திருப்பாற்கடல்
3-திரு பரம பதம்

————————————————————————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார்
திருக் கார்த்திகை ரோகிணி  உறையூர் திரு அவதாரம்
ஸ்ரீ வத்சம் அம்சம்
அமலனாதி பிரான் -10-

ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ தேவ பெருமாளுக்கு போலே இவரும்
ஸ்ரீ திருவரங்க ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கர் முநிவாஹனர் –

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -3-
1-திரு வரங்கம்
2-திரு வேங்கடம்
3-திரு பரம பதம்

———————————————-

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
சித்திரை யில் சித்திரை -திருக் கோளூரில் திரு அவதாரம்
குமுதன் நித்ய சூரி கணாதிபர் அம்சம்
கண்ணி நுண் சிறு தாம்பு -11-

மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசங்கள் -2
1-திருக் குருகூர் 2-திரு பரம பதம் –

———————————————–

ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே .சரணம்-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –கண்ணி நுண் சிறு தாம்பு —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 16, 2013

224
திரு உருக் காண்பன் நான் -3
கோவிந்தனை கை தொழுது அன்றி அவன் உறையும் திருவாறன்விளை தொழ -திருவாய் மொழி -7-10-3-
மதுரகவிகள் -நம் ஆழ்வார் வணங்கும் கண்ணனை கண்டார் இறே
பெரிய திருவடி மேல் வரும் கோவிந்தனை கண்டாலும் அவனைத் தவிர்த்து திருவாறன்விளை தொழ நம் ஆழ்வார் –
இப்படி வகுத்த விஷயத்தை விட்டு வேறு ஒன்றில் ஈடுபட்டமை இருவரும் அருளுகிறார்கள் –

—————————————————————
225
நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள் -4
நலம் கொள் நான் மறை வாணர்கள் -திருவாய்மொழி -10-1-2-
நன்மையால் மிக்க -நலம் கொள் -விசேஷணங்கள் -நான்மறைகள் இடமும்
வைதிகர்கள் இடமும் அன்வயித்து பொருள் கொள்ளலாம்-

———————————————————————–

226
சதிர்த்தேன் இன்றே -5
திருக் கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இன்று -மூன்றாம் திருவந்தாதி -1
வரவாறு ஓன்று இல்லை –வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி -56
அன்று மடவாரை நம்பினேன் -இன்று திருக் குருகூர் நம்பிக்கு அன்பன் ஆனேன்
இதற்க்கு எனது கையிலே ஹேது ஒன்றுமே கண்டிலேன்
நிர்ஹேதுகமாக ஸ்ரீ பேய் ஆழ்வாருக்கு காட்சி கொடுத்து அருளினான் போலே
பரகத ஸ்வீகாரத்தை பிரதம சரம பர்வங்களில் அருளி காட்டுகிறார்கள் ஆழ்வார்கள் –

————————————————————-

227-
ஆயிரம் இன் தமிழ் -8
கோவை இன் தமிழ் -பெரிய திருமொழி -9-10-9-
திருவாய் மொழியையும் பெரிய திரு மொழியையும் இன் தமிழ் என்று அருளுகிறார்கள்

———————————————————————

228-
இவ்வுலகினில் மிக்கதே -8
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய் மொழி -10-3-10-
இரண்டிலும் இல் -ஏழாம் வேற்றுமை உருபாகவும்
ஐந்தாம் வேற்றுமை உருபாகவும் கொண்டு பொருள் கூறுவர் நம் பெரியவர்கள் –

————————————————————–

229
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -8
அதனில் பெரிய என் அவா -திருவாய் மொழி -10-10-10-
ஆழ்வார் உடைய அருள் தத்வ த்ரயத்தையும் கபளீ கரிக்கும் -மதுர கவி ஆழ்வார்
தம்முடைய பகவத் பக்தி யாகிய அவா தத்வ த்ரயதையும் கபளீ கரிக்கும் என்கிறார் ஆழ்வார்
இப்படி இறே ஆழ்வார் உடைய பக்தி காருண்யங்கள் –

பிரதம பர்வ நிஷ்டர் நம் ஆழ்வார் -சரம பர்வ நிஷ்டர் மதுர கவி ஆழ்வார்
நம் ஆழ்வாரே சாஷாத் பகவான் -அவர் திருவடிகளே உபாயம் -அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் –
அவருடைய முகோலாசமே பரம பிரயோஜனம் -அவர் எழுந்தி அருளி இருக்கிற இடமே பரம ப்ராப்ய பூமி –
அவருடைய விக்ரஹ தய அனுபவமே உண்ணும் சோற்றில் படியே தாரகாதிகள் –

————————————————————

230
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே -திருவாய்மொழி -2-5-4-

———————————

231-
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -2
மலக்கு நாவுடை யேற்கு மாறுளதோ -திருவாய்மொழி -6-4-9-

————————————————

232
மேவினேன் அவன் பொன்னடி -2
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -திருவாய்மொழி -6-10-10-

——————————————
233-
தேவு மற்று அறியேன் -2
கண்ணன் அல்லால் தெய்வம் -இல்லை திருவாய்மொழி -4-2-7-

———————————————–
234-
பாடித் திரிவனே -2
பாடி இளைப்பிலம் -திருவாய்மொழி 1-7-10-

—————————————————
235
நம்பிக்கு ஆள் உரியன் -3
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -திருவாய்மொழி -6-9-11-

——————————————

236-
திரி தந்தாகிலும் -3
இங்கே திரிந்தேற்கு -திருவாய் மொழி -8-10-4-

———————————————–
237
அடியேன் -3
அடியேன் -திருவாய் மொழி -6-1-3-

—————————————–
238-
அன்னையாய் அத்தனாய் -4
தாயாய் தந்தையாய் -திருவாய் மொழி -7-8-1-

——————————————–

239
என்னை ஆண்டிடும் தன்மையான்
ஆள்கின்றான் ஆழியான் -திருவாய் மொழி -10-4-3-

—————————————–
240-
தக்க சீர் சடகோபன் -9
கடியனாய் கஞ்சனைக் கொன்ற -திருவாய் மொழி -9-6-11-

———————————————
241-
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் -5
யானே என் தனதே -திருவாய் மொழி -2-9-9-

——————————————–
242-
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் -6-
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் -திருவாய் மொழி –2-8-1-

———————————————
243-
நின்று தன் புகழ் ஏத்த -6
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -திருவாய் மொழி –7-9-1-

————————————————–
244-
என்றும் என்னை இகழ்விலன் -6
ஒட்டுமோ  இனி என்னை நெகிழ் க்க -திருவாய் மொழி –1-7-7-

————————————————
245-
சடகோபன் அருளையே -7
மயர்வற மதி நலம் அருளினன் -திருவாய் மொழி –1-1-1-

——————————————————
246-
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -8
அருள் உடையவன் -திருவாய் மொழி –2-10-11-

———————————————–
247-
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினன் -9
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய -திருவாய் மொழி –10-8-2-

—————————————-
248-
ஆட் புக்க காதல் அடிமைப் பயன் -9
வழு இலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய் மொழி –3-3-1-

———————————————-
249
ஆட் புக்க காதல் -9
ஆராத காதல் -திருவாய் மொழி –2-1-11-

———————————————
250-
பயன் அன்றாகிலும் –பணி கொள்வான் -9
பொருள் அல்லாத என்னை –அடிமை கொண்டே -திருவாய் மொழி –5-7-3-

———————————————-
251-
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -11
மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பே -திருவாய் மொழி –10-10-7-

————————————————–
252-
மதுர கவி -11
படைத்தான் கவி -திருவாய் மொழி -3-9-10-

———————————————————-
253-
நம்புவார் பதி வைகுந்தம் -11
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -திருவாய் மொழி -5-3-11-

—————————————–
இப்படி ஸ்ரீ நம் ஆழ்வார் பகவத் விஷயத்தையும்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஆசார்ய விஷயத்தையும் அனுபவித்த படி –
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-8-11–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

December 13, 2012

கண்தலங்கள் செய்ய கருமேனி அம்மானை
வண்டுஅலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்தலையில் சொன்னதமிழ் ஆயிரத்துஇப் பத்தும்வல்லார்
விண்தலையில் வீற்றிருந்து ஆள்வார்எம் மாவீடே.

பொ-ரை : சிவந்த கண்களையும் கரிய திருமேனியையுமுடைய இறைவனை, வண்டுகள் அலைகின்ற சோலைகளையுடைய திருவழுதிவள நாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்களிலே வைத்துப் பாடிய ஆயிரம் தமிழ்ப்பாசுரங்களிலே இப்பத்துப் பாசுரங்களையும் வல்லர்கள், பரமாகாசத்தில் சிறப்போடு இருந்து எனக்கும் என் சம்பத்திகளுக்கும் தருவதாக இருக்கிற அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டிலே இன்பத்தினை அனுபவிப்பார்கள்.

    வி-கு : அலம்புதல் – ஒலித்தலுமாம். ‘வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர்’ என மாற்றுக. ‘வீற்றிருத்தல் – வேறு ஒன்றற்கு இல்லாத சிறப்போடு தங்கியிருத்தல்’ என்பர் நச்சினார்க்கினியர்.

    ஈடு : முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்கவல்லவர்கள் இத்திருவாய்மொழியிற்சொன்ன முத்தப் பிராப்பிய போகத்தைப் பெறுவர் என்கிறார்.

    கண் தலங்கள் செய்ய கருமேனி அம்மானை – 2‘பூதலங்கள்’ என்னுமாறு போலே திருக்கண்களின் பரப்பைச் சொல்லுகிறது. பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும், அவற்றுக்குப் 3பரபாக மாம்படி கருமை நிறைந்த திருமேனியையுமுடைய சர்வேஸ்வரனை. வண்டு அலம்பும் சோலை வழுதி வளநாடன் பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் – வெள்ளத்திலே அலைவாரைப் போலே, தேன் வெள்ளத்திலே வண்டு அலையாநின்றுள்ள சோலையையுடைய திருவழுதி வளநாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்ணிலே சொன்ன தமிழ் ஆயிற்று இப்பிரபந்தந்தான்; இதன் பாசுரங்கள் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். பண் தலையிற் சொன்ன – பண்ணின் மேலே சொன்ன என்று பொருள் கூறலுமாம். விண் தலையில் வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர் – பரமபதத்திலே தங்கள் வேறுபாடு தோன்ற இருந்து எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷமானது தங்களுக்கு

உரிமையாம்படி பெறுவர். விண்தலை – தலையான விண்ணிலே என்னுதல்; விண்ணின்மேலே என்னுதல். அங்குள்ளார் தங்கள் ஆணையைப் பின் பற்றும்படியாகப் பெறுவர் என்றபடி. ஆத்தும இலாபத்து அளவே அன்றி, பரம்புருஷார்த்த இலட்சண மோட்சத்தை ஆளப் பெறுவராதலின், ‘எம் மா வீடு ஆள்வர்’ என்கிறார். தொடர்ந்து வருகிற பிறவிகளாய் உண்டான துன்பங்கள் எல்லாம் தீரும்படி வீறுபட்டு இருப்பராதலின், ‘வீற்றிருந்து’ என்கிறார். இனி, ‘எம் மா வீடு ஆள்வர்’ என்பதற்கு, 1‘தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்’ என்கிறபடியே, 2‘எனக்கும் என் சம்பந்திகட்கும் தருவானாகச் சமைத்து நிற்கிற பரமபதத்தை ஆளப் பெறுவர்’ எனலுமாம்.            

(11)

    முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்யாநின்றுகொண்டு, ‘சம்சாரமாகிற இக்கடலைக் கடக்க வேண்டும்’ என்று இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்; இரண்டாம் பாட்டில், ‘அவன் வேண்டுமோ? அவனுடைய சம்பந்தமே கடத்தும்’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் எங்கும் காணலாம்’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அந்தம் இல் பேரின்பத்தைப் பெறவேண்டும் என்றிருப்பீர்! அவனைப் பற்றுங்கோள்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், மேல் ‘இணைவன் ஆம் எப்பொருட்கும்’ என்றதனை விவரித்தார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வுயர்வுகள் எல்லாம் அவனுக்கு உண்டோ?’ என்ன, ‘நாம் ஆராய வேண்டாதபடி அருச்சுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான்’ என்றார்; எழாம் பாட்டில், ‘ஒருவன் 3அநுவர்த்தனம் கொண்டு அறிய வேண்டுமோ? அவன் விரும்பிச் செய்கிற எல்லாக் காரியங்கட்கும் உரியதாக அன்றோ இவ்வுலகம் இருக்கிறது?’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘எங்கும் பரந்திருத்தல் தொடக்கமான அவனுடைய செயல்கள் ஒருவரால் அளவிட முடியாது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘அவனுடைய எங்கும் பரந்திருக்கும் தன்மையை இசையாதார் இரணியன் பட்டது

படுவர்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘இந்த விதமானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்காட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        அணைந்தவர்கள் தம்முடனே ஆயன்அருட்கு ஆளாம்
குணந்தனையே கொண்டுஉலகைக் கூட்ட – இணங்கிமிக
மாசில்உப தேசம்செய் மாறன் மலர்அடியே
வீசு புகழ்எம்மா வீடு.

1. ‘விண்தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே’ என்றதனைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2 ‘கண்’ என்னாது, ‘கண் தலங்கள்’ என்றது, திருக்கண்களின் பரப்பைச் சொல்லுதற்கு
என்று திருவுள்ளம் பற்றி, அதற்கு மேற்கோள் காட்டுகிறார். ‘பூதலங்கள்’ என்று.
‘அரங்கத்து அமலன் முகத்து, கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட
அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே’ என்றார் பாண் பெருமாள்.

3. பரபாகம் -வண்ணப்பொயிவு; வர்ண உத்கர்ஷம்.

இங்கு ‘எம்’ என்பதற்கு ‘எங்கள்’ என்பது பொருள்; இந்தப் பொருளையே ‘எனக்கும்
என் சம்பந்திகட்கும்’ என்று விரித்து அருளிச் செய்கிறார். முன்னைய பொருளுக்கு ‘எ,
மா, வீடு’ எனப் பிரிக்க.

நிகமத்தில் -முக்த பிராப்ய போகத்தை பெறுவார் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார் –
கண் தளங்கள் செய்ய -சிவந்த திருக் கண்கள்
கரு மேனி அம்மான்
வண்டுகள் ரீங்காரம் -சோலைகள்
பண  உச்சத்தில் உள்ள பாசுரங்கள்
விண் தலையில் இருந்து உபய விபூதியும் ஆள்வார்
தளங்கள் -பூதலங்கள் போல் விசாலமான கரிய வாகி புடை பரந்து
பரபாகமான திரு மேனி கருத்தும்
வெள்ளத்தில் அலைவாரைப் போலே தேன் வெள்ளத்தில் வண்டுகள் அலையா நின்றுள்ள சோலைகள்
பண -தலையில் -ஒவ் ஒரு பத்துக்கும் ஒரு பண உண்டே –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
வேத சாம்யம் போல் மூன்று சுரம் -சப்த சுரங்களும் உண்டே -பண தலை -உண்டே
விண் தலை -பரம பதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோன்ற அங்குள்ளார் இவர் சொன்னதை கேட்கும் படி
நியமிக்கும்படி -பரம புருஷார்த்த லஷணம்
சம்சார சந்கொசங்கள் தீர்ந்து வீற்று இருப்பார்கள் –
வீடு திருத்த -தம் பால் மனம் வைக்க -வீட்டைத் திருத்த தொடக்கி
கேசவ தமருக்கு அப்புறம் ஆழ்வார் தனியார் அல்லர்
பத்து பாசுர அர்த்தம் இதுக்கும் அருளி –
முதல்பாட்டில் சந்க்ரேகென அருளி
அவன் சம்பந்தமே போதும் –
வ்யாப்தி தொடக்கமான அவனது -சொல்லி முடிக்க முடியாதே

அணைந்தார்கள் தம்முடனே –
கேசவ தமர் சம்பந்தம்
ஆயன் அருளுக்கு ஆளாகி
உலகை கூட்ட இணங்கி
உபதேசம் செய்தார் –
மாறன் மலர் அடியே நமக்கு மோஷம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் ..

November 15, 2012

ஸ்ரீ ராமன் பாமாலை -ஆழ்வார்கள் உகந்த  ஸ்ரீ ராமன்

..                      முதலாயிரம்
திருப்பல்லாண்டு
– 1-    இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான் -3 –

பெரியாழ்வார் திருமொழி-
– 2-    பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை -இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலை கலங்க சரம் தொட்ட கையான் — 1-6 7- –
– 3-    குரக்கினத்தாலே குரை  கடல் தன்னை நெருக்கி அணை  கட்டி நீணீ ரிலங்கை
அரக்கர்  அவிய  அடு  கணையாலே நெருக்கிய கையான் – – 1-6 8- –

-4-  கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும்  பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கானடை அங்கண்ணன் — –2-1-8-

– 5-  வல்லாளிலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் – – 2-1 10- –
– 6-  சிலை ஓன்று  இறுத்தான்  -2 -3 -7 –
– 7-   நின்ற மராமரம் சாய்த்தான் –2 -4 -2 –
– 8-  பொற்றிகழ் சித்ரகூடப் பொருப்பினில் உற்ற வடிவிலொரு கண்ணும் கொண்ட
வக்கற்றைக் குழலன் —2 -6 -7 –
– 9-    மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லா சிலைகால் வளைத்திட்ட மின்னுமுடியன்  –2 -6 -8 –
– 10- தென்னிலங்கை மன்னன் சிரம் தோள்  துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண  நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலன்காரன் — 2- 6- 9- –
-11 –  கள்ள  வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் — – -2 -7 -5
– 12- என்  வில்வலி கண்டு போ  என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும்  தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து
முது பெண் உயிர்  உண்டான் – 3- 9- 2-
-13 – மாற்றுத் தாய் சென்று வனம் போகே  என்றிட
ஈற்றுத்  தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றமிலாத சீதை மணாளன்    – -3 -9 -4

– 14- முடி ஒன்றி மூ வுலகங்களுமாண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தான் —3- 9- 6- –
– 15- தார்கிளந்தம் பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற் கொண்டு போகி
நுடங்கிடை சூர்பணகாவை    செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தான்  — -3- 9- 8-
– 16- காரார்  கடலை அடைதிட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு
ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராமுதன் – – 3–9 -10 – –
– 17- செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து  சீதையை கொணர்ந்தது
அறிந்து அரசுகளை கட்ட அரும் தவத்தோன் இடை விளங்க
செறிந்த சிலைகொடு தவத்தை சிதைத்தான்   -3 -10 -1 – –
-18 –  எல்லியம்போது  இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க விருந்தான் – – -3- 10- 2-
– 19-   கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய்
மன்னவனும் மறாது ஒழிய குலக்குமரா காடுறையப் போ என்று
விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அன்கேகினான்   -3- 10- 3- –
-20 –  கூரணிந்த வேல்வலவன்  குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த
தோழமை கொண்டான் – – -3 -10 -4 –
– 21-  கானமருங்  கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழில் சாரல் சித்ரகூடத்து இருக்க
பரத நம்பி பணிய நின்றான் — -10 -5 –
– 22-  சித்ரகூடத்து இருப்ப  சிறு காக்கை முலை  தீண்ட அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே யிராமா  ஒ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் –3–10 -6 –
– 23-  பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -சிலை பிடித்து
எம்பிரான் ஏக பின்னே யங்கு  இலக்குமணன் பிரிய நின்றான்  – – —3 -10 -7 –
– 24-  அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியர் கோன் — -3- 10- 8- –

25- திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே
வில்லிறுத்தான் — 3- 1- 9-
– 26-  கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண்  முடியன் எதிரில்
பெருமை இராமன் — 4- 1- 1-
– 27 – நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து  பெருமை யிராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்
கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்
தன்  வேள்வியில் காண நின்றன்   -4 -1 -2
– 28- சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று
தடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான்  –4 -1 -3 –
– 29- அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ்
படுத்து குல விளக்காய் நின்ற கோன்   — -4 -2 -1
– 30- வல்லாளன் தோளும்  வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத
மூக்கும் போக்குவித்தான்  -4 -2 -2 –
– 31-  கனங்குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
கழுவேற்றுவித்த  எழில் தோள்  எம்மிராமன் – -4 -3 -7 –
– 32- எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க்கோட்டம் தவிர்ந்துகந்த அரையன் – – 4- 3- 8-
-33 –  தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் சாரதி – – 4- 7- 1-
– 34-  கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் – -4 -8 -4 –

–35 –  பெரும் வரங்கள் அவை பற்றி  பிழக்கு உடைய இராவணனை
உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தான் — 4- 8- 5-
– -36 – கீழுலகில் அசுரர்களைக் கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய
கருவழித்த அழிப்பன்   — 4- 8- 6-
– 37- கொழுப்புடைய செழும்  குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு  உடைய அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4 -8 -7
–  38- பருவரங்களவை பற்றி படையாலித்து எழுந்தானை
செருவரங்க பொறாது அழித்த திருவாளன் —4 -8 -10
– 39 – மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு  உடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் -4 -9 1-
– 40- மன்னுடைய விபீடணற்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி
மலர் கண் வைத்தான் –4-9 -2-
திருப்பாவை –
– 41- சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்  -12 –
– 42- பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்தான் -13 –
– 43-  சென்று அங்கு தென்னிலங்கை செற்றான்  -24 –
நாச்சியார் திருமொழி –
– 44- கடலை யடைத்து யரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையைப்
பூசலாக்கிய சேவகன்    – -2 -6 –

45- சேது பந்தம் திருத்தினான்  – -2 -7 –
-46 –  சீதை வாய் அமுதுண்டான்  – 2–10
– 47-  வில்லால் இலங்கை அழித்தான்  -3 3
– 48 – இலங்கை அழித்த  பிரான் – – 3 -4 –
– 49 –  மாதலி   தேர்  முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல்
சரிமாரி தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன்  – 3 3
-50- கொல்லை யரக்கியை  மூக்கரிந்திட்ட குமரனார்  – 10- 4-
பெருமாள் திருமொழி

– 51 – சுடர் வாளியால்  நீடு மாமரம் செற்றவன்  – 2 2
-52–முன்னிராமனாய் மாறடர்த்தான்   -2-3-
-53 – மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவன்
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தான்  – 8 -1 –
– 54 -திண்  திறலாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தான் – 8-2-
55-  கொங்குமலி  கரும் குழலாள் கௌசலை தன குல மதலை
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகன் தாசரதி  – 8 -3
56 -தயரதன்  தன் மா மதலை மைதிலி தன்  மணவாளன் ஏமரு
வெஞ்சிலை வலவன்   -8 -4-
57- பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் – 8 -5

58-சுற்றம் எல்லாம் பின் தொடர தொல்  கானம் அடைந்தவன்
அயோத்தி நகர்க்கதிபதி சிற்றவை  தன்  சொல் கொண்ட சீராமன் – 8-6-
59–வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவன்  – 8-7-
60-மலையதனால் அணை  கட்டி மதிள் இலங்கை அழித்தவன்
சிலை வலவன்  சேவகன் சீராமன்  -8 -8
61-தளைய விழு நறும் குஞ்சித் தயரதன் தன் குல மதலை
வளைய ஒரு சிலையதனால் மதிள்  இலங்கை அழித்தவன்
இளையவர் கட்கு அருளுடையான் -8-9-
62-ஏவரி வெஞ் சிலை வலவன் இராகவன்  -8 -10-
63-வன்  தாளிணை  வணங்கி வள  நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றான்
அரி இணை மேல் இருந்தானாய் நெடும் கானம் படரப் போக நின்றான் -9-1-
64-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மையாவாய களிறு ஒழிந்து
தேர் ஒழிந்து  மா ஒழிந்து வனமே மேவி நெய்வாய வேல் நெடும் கண்
நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக நடந்தான்  – 9- 2-
65-கொல் லணை மேல் வரி நெடும் கண் கௌ சலை தன் குல மதலை
குனி வில்லேந்தும் மல்லணைந்த  வரைத் தோளன் வியன் கான
மரத்தினீ ழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்ற காகுத்தன் – 9-3-
66-வேய்  போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன்
வில்லைச் செற்றான் – 9-4-
67-பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிகள் குருதி சோர விரும்பாத
கான் விரும்பி வெயில் உறைப்ப வெம்பசி நொய் கூரப் போனவன் -9-5-
68-பூ மருவி நறும் குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு  தோள் புதல்வன் வனம் சென்றான் – 9-7-
69-70–பொன் பெற்றோர் எழில் வேதப்புதல்வன் முன்னொரு நாள் மழு வாளி சிலை
வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றான் – 9-8-

71-தேனகு மாமலர்க்கூந்தல் கௌ சலையும் சுமத்ரையும் சிந்தை நோவக்
கூனுருவில் கொடும் தொழுத்தை சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு
கானகமே மிக விரும்பி வன நகரைத் துறந்தான் – 9- 10-
72 -ஏரார்ந்த கரு  நெடு மால் இராமன் -9-11-
73-அம் கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும்
விளங்கும் சோதி வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும்
உய்யக் கொண்ட வீரன் செங்கண் நெடும் கரு முகில் இராமன் – 10-1-
74-வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி வரு குருதி பொழி தர வன் கணை
ஒன்றேவி மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -10-2-
75-செவ்வரி நற் கரு நெடும் கண் சீதைக்காகி சினவிடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்
எவ்வரி  வெஞ்சிலை தடக்கை இராமன்  -10-3-
76 –தொத்தலர் பூஞ் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து
துறைக் கங்கை தன்னை பக்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்திர கூடத்து இருந்தான் – 10-4-

77-வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி
கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி சிலை வணக்கி மான் மரிய  எய்தான் -10-5-
78- தன மருவு வைதேகி பிரியலுற்று தளர் வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன  மருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைக் கொன்று இலங்கை நகர்
அரக்கர் கோமான் சினமடங்க மாருதியால் சுடுவித்தான் – – 10-6-
79-குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன்
தம்பிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன்  -10-7-
80- அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய்
தான் முன்கொன்றான் தன்  பெரும் தொல்  கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம் பவளத் திரள் வாய்த் தன்
சரிதை கேட்டான்  -10-8-
81-  செறி தவச் சம்புகன் தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர்  மீட்டு
தவத்தோன் ஈந்த நிறை மணிப்பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட திறல்  விளங்கும் இலக்குமனைப்
பிரிந்தான் –10-9-
82-அன்று சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றி அடலரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்றி
இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவிச்
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் – 10-10-
83–தில்லை திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதி யோடு அமர்ந்தான்
எல்லையில் சீர்த் தயரதன் தன்  மகன் -10-11

திருச் சந்த விருத்தம்
84–குரங்கை யாளுகந்த எந்தை -21-
85-கூனகம் புகத் தெறித்த கொற்ற வில்லை –30-
86-வேலை வேவ வில் வளைத்த வெல்  சினத்த வீரன் –31
87–குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கரங்க வெஞ்சரம் துரந்த வாதி -32
88-மின்னிறத்து எயிற்றரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோன் —-
89-வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டினான்  -39
90–வெற்பு  எடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்தான் –39
91–கொண்டை  கொண்ட கோதை  மீது   தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்ட ரங்கவோட்டி உண் மகிழ்ந்த நாதன் -49
92-வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னோர் நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் –50-
93-  சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள்
பத்தறுத்து உதிர்த்த செல்வர்  -51
94-இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் –54-
95-இலங்கை மன்னன் ஐந்தோடு ஐந்து பைந்தலை நிலத்து உகக்
கலங்கவன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரன்  -56
96-மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச்
சரந்துரந்த உம்பராளி யெம்பிரான் -73
97-உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்தான்  – 81
98- பண்ணுலாவு மென் மொழிப் படைத் தடம் கணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினான்  -91
99- இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லிராமன்  -93
100- குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் -102
101–கடுங்கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து
கூறு செய்த பல் படைத் தடக்கை மாயன்  -104
102-மாறு செய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -116

திருமாலை

103-சிலையினால் இலங்கை செற்ற தேவன் -7 –
104-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -11-
திருப் பள்ளி எழுச்சி
105-இலங்கையர் குலத்தை  வாட்டிய  வரி சிலை வானவர் ஏறு மா முனி வேள்வியைக் காத்து
அவபிரதமாட்டிய அடு  திறல் அயோத்தி எம்மரசு -4-

அமலனாதி பிரான்
106-அன்று நேர்ந்த நிசாசரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் -2-
107-சதுரமா மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை  உய்த்தவன்
இரண்டாவதாயிரம் -பெரிய திருமொழி –

108–வாலி மாவலத் தொருவன துடல் கெட வரி சிலை வளைவித்தான் – 1-2-1-
109- கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மாநகர் பொடி  செய்த அடிகள்  -1-2-2-
110-தானவனாகம் தரணியில் புரள தடஞ்சிலை குனித்த வென் தலைவன் -1-4-1
111-கானிடை வுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த எம்பெருமான்  -1-4-2
112-இலங்கையும் கடலும் அடலருந்  துப்பின் இருநிதிக் கிறைவனும்
அரக்கர் குலங்களும்  கெட முன் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் -1-4-3
113-மான் முநின்தொருகால் வரி சிலை வளைத்த மன்னவன்  -1-4-8
114-கலையும்  கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாக சென்றான் மலை கொண்டலை
நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து
அறுத்து உகந்தான் -1-5-1
115-கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த
கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான் -1-5-2-
116-ஒருகாலிருகால் சிலை வளைய தேராவரக்கர் தேர் வெள்ளம் செற்றான்  -1-5-4-
117-அடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய்  விட்டலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் -1-5-5-
118-மராமரம் ஏழும் எய்த  வலத்தினன் -1-8-5
119-கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம்
பிளக்கச் சரம் செல உய்த்தான் -1-10-1-
120-இலங்கைப் பதிக்கன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர்
மாளக் கொடிப்  புள் தெரித்தான் -1-10-2-

121 -காசையாடை மூடி யோடிக் காதல் செய் தானவனூர் நாசமாக
நம்பவல்ல நம்பி நம்பெருமான் -2-2-1
122 -தையலாள்  மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று செய்த
வெம்போர்  தன்னிலங்கு ஓர் செஞ்சரத்தால் உருள எய்த எந்தை எம்பெருமான் -2-2-2-
123- முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால்  மாள  முனிந்தான் -2-2-3-
124-சிற்றவை பணியால் முடி துறந்தான் -2-3-1

125-பரதனும் தம்பி சத்ருக்னனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்
பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகன் –2-3-7

126- மாலும் கடலார மலைக்குவடிட்டு அணை  கட்டி வரம புருவ மதிசேர்
கோல மதிளாய  இலங்கை கெடப் படைதொட்டு ஒருகால் அமரில் அதிரக்
காலமிது வென்று அயன் வாளியினால் கதிர் நீண்  முடி பத்தும்
அறுத்தமரும்  நீல முகில் வண்ணன்  -2-4-5-
127-கிளர்  பொறிய மறி  திரிய அதனின் பின்னே படர்ந்தான் – 2-5-6
128-தென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலங்கை
வாய்ச் சரங்கள் ஆண்டான் -2-5-9-
129-விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல்லியலார் கொண்டாடும்
மல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டார் -2-6-4-
130-தடங்கடல் நுடங்கு எயில் இலங்கை வன் குடி
மடங்க வாள் அமர் தொலைத்தான் –2-7-6-
131–குடைதிறல் மன்னவனாய்  ஒரு  கால் குரங்கைப் படையா மலையால்
கடலை யடைத்த வன் எந்தை பிரான் -2-9-8-
132-தாங்கரும் போர் மாலிபட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை
முடித்த தன்மையான் –2-10-4-
135-மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீண்  முடி பொடி  செய்த மைந்தன் –3-1-7
136-நெய்  வாய் அழல் அம்பு துரந்து  முந்நீர் துணியப் பணி  கொண்டு
அணி யார்ந்து இலங்கு மையார் மணி வண்ணன் –3-2-6-

137-பைம்கண் விறல் செம்முகத்து வாலி மாளப்  படர் வனத்துக் கவந்தனோடும்
படையார் திண் கை வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் -3-4-6-
138-பொருவில் வலம்  புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போல
புவிமேல் சிந்தச் செருவில் வலம்  புரி சிலைக்கை மலைத் தோள் வேந்தன் -3-4-7
139-மரம் எய்த மா முனிவன் -3-5-5-
140-அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன் –3-7-3-
141-சிறையாரு வணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் இரியச் செருவில்
கறையார் நெடு வேலரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் – 3-8-4-
142-கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியை காதொடு
மூக்குடன் அரியக் கதறி அவள் ஓடி தலையில் அம் கைவைத்து
மலை இலங்கு புகச் செய்த தடம் தோளன் –3-9-4-
143-மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன்
முடி ஒருபதும் தோள்  இருபதும் போய் உதிர  தன்  நிகரில் சிலை
வளைத்து அன்று இலங்கை பொடி  செய்த தடம் தோளன் –3-9-5
144 –வாள்  நெடும் கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள்  இருபதும் போய் உதிர தாள் நெடும் திண்  சிலை வளைத்த தயரதன் சேய் –3-10-6-

145- வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண்
சிலை இறுத்த தனிக்காளை –4-1-8
146–கம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால்
அறுத்து அரசவன் தம்பிக்கு அளித்தவன் –4-2-1-
147-தீ மனத்து அரக்கர் திறல்  அளித்தவனே என்று -சென்று அடைந்தவர் தமக்கு தாய்
மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலை  –4-3-5-
148- மல்லை  மா முந்நீர் அதர்பட மலையால் அணை  செய்து மகிழ்ந்தவன்
கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டான் – 4-3-6-
149- தான் போலும் என்று எழுந்தான் தரணி யாளன் அது கண்டு தரித்து இருப்பான்
அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றமன்ன இருபது தோள்
உடன் துனித்த ஒருவன்   -4-4-6-
150-இலங்கை வவ்விய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த  வெந்தை  -4-5-2-
151-  கருமகள்  இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன்  மேல் வருமவள்
செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை  – 4-5-5
152-  உருத் தெழு வாலி மார்வில்  ஒரு கணை வுருவ வோட்டி கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர்முடி யரசளித்தான்  -4-6-3-

153- முனை முகத்தரக்கன் மாள முடிகள் பத்தறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு
இளையவற்கே அரசு அளித்து அருளினான்  -4-6-4-
154-  கல்லால் கடலை அணை  கட்டி  உகந்தான் – 4-7-6-
155-  மல்லை  முந்நீர் தட்டிலங்கை கட்டு அழித்த  மாயன்  -4-8-4-
156-  அரக்கர் ஆவி மாள  யன்று ஆழ்கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன்
கோலவில்லி  -4-8-5-
157- அலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ் சிரங்களை வுருட்டினான்  -4-10-2-
158 – காற்றிடை பீளை கரந்தன வரந்தை வுறக் கடலரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த  கோல வில்லி ராமன்  -4-10-6-
159 — மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்தான்   -5-1-3-
160 –  விறல்  வாள்  அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும்
துணித்த வல் வில் ராமன்  -5-1-4-

161- ஆறினோடு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக
வில்லது வளைத்தவன்   -5-3-7-
162-  விளைத்த வெம்போர் விறல்  வாள்  அரக்கன் நகர் பாழ்  பட வளைத்த
வல் வில் தடக்கையவன் -5-4-4-
163 –  வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால்
முனிந்த அழகன்  -5-4-5-
164 –  மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலை யாளன்  -5-5-2-
165 -சுரி குழல் கனிவாய் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசைஅரக்கன்
எரி விழித்து  இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி  கடல் நெறிபட மலையால்
அரி  குலம் பணி  கொண்டு அலை கடல் அடைத்தான் -5-7-7-
166-  இலங்கை மலங்க வன்று அடு  சரம் துரந்தான்  -5-7-8-
167 –  ஏழை ஏதலன்  கீழ் மகன் என்னாது இரங்கி  மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை  மான் மட நோக்கி வுன்  தோழி உம்பி எம்பி என்று உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்றான்  -5-8-1-
168 – வாதமா மகன் மற்கடம் விலங்கு  மற்றோர் சாதி என்று ஒழியாது உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்றான்  -5-8-2-
169 –  விலங்கலால்  கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு  வில்லால் இலங்கை
மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் -5-9-6-
170 – பிறையின் ஒளி யெயிறிலக முறுகி எதிர் பொருதும் என வந்தவசுரர்
இறைகளவை நெறு நெறு  என வெறியவவர் வயிறழல நின்ற பெருமான் -5-10-4-
171-  மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்து மென வந்த வசுரர் தோளும்
அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியா மள  வெய்தான் -5-10-5-
172 – தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி எரி கானகம் வுலாவுமவர்  -5-10-6-
173- வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றான் – 6-3-5-
174- தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு  எரி ஊட்டினான்  -6-4-6-
175- ஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையை
சாடி இலங்கை செற்றான் – 6-5-3-
176-  விண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணி வெய்த சுடு வெஞ்சிலை
வாய்ச் சரம் துரந்தான்   -6-7-1-
177- துள்ளா வருமான் விழ வாளி துரந்தான்  -6-7-3-
178 – கல்லார் மதிள்  சூழ் கடி இலங்கைக் காரரக்கன் வல்லாகம் கீழ வரி
வெஞ்சரம் துரந்த வில்லான் -செல்வ  விபீடணற்கு வேறாக நல்லான் -6-8-5-

179- பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகளவை சிதற அழலாரும்
சரம்  துரந்தான்  -6-9-2-
180-எறிஞர் அரண் அழியக் கடியார் இலங்கை கடந்த நம்பி  -6-10-1

181-இலங்கைக் கோன்  வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை

விபீடணற்கு நல்லான் -6-10-4-
182 – தென்னிலங்கை  அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வென்கூற்றம்
நடையா உண்ணக் கண்டான்  -6-10-5-

183- கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர் மானம்
அழித்து நின்ற வென்றி யம்மான் -6-10-6-
184-  வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணி  வுடன் கல்லார் கடும் கானம்
திரிந்த களிறு – 7-1-5-
185-  சினவில்  செம் கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –மரம்
ஏழு எய்த மைந்தன் -7-3-1-
186 – ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் – 7-3-4-
187 – தழலே  புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்  படச் சூழ் கடல் சிறை வைத்தான் -7-3-9-
188-  மீதோடி வாள்  எயிறு மின்னிலக முன்விலகு முருவினாளைக் காதோடு
கொடி மூக்கன்று உடன் அறுத்த கைத் தலத்தன்   -7-4-3-

189 – தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி  வீழ
போராளும்  சிலையதனால் பொரு  கணைகள் போக்குவித்தான்  -7-4-4-
190 – செம்பொன் மதிள்  சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு  இலக்காக உதிர்த்த வுரவோன்  -7-5-3-
191 – அடையார் தென்னிலங்கை யழித்தான்  -7-6-3-
192 – பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை
வேந்தன் அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து
உகந்த வம்மான் -7-8-7-
193- தார்மன்னு  தாசரதி  — வாளரக்கர்  காலன் -8-4-7-
194-  ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் -8-5-5-
195 – முரியும்  வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி  யம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தன்  -8-5-6-
196-  கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகள் -8-5-7-
197-  துளங்கா  வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளைய
சிறிதே முனிந்த திரு மார்பன் -8-6-1-
198 – பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்றவன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி
தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை யிருந்தோர் தம்மை வுடன் கொண்டு
அங்கு எழிலார் பிலத்துப்புக்கு ஒளிப்பக் கரும் தாள் சிலை கைக்கொண்டான்  -8-6-2-
199 -வல்  இடையாள்  பொருட்டாக மதிள் நீர் இலங்கையர் கோவை அல்லல் செய்து
வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட
முனிதன் வேள்வியைக் கல்வி சிலையால் காத்தான் -8-6-3-

200 – மல்லை  முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை
விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத் தொல்லை
மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை எடுத்தான் -8-6-4-
201 – சேம  மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணிந்தான்  -8-6-5-
202- திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ வுன்ணச் சிவன்தான் -8-6-6-
203- அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை  மா சிலையால் எய்தான் -8-6-7-
204- விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி  எழக் கண்டவர் -8-7-5-
205- வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடி இலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து  செய்த
வெம்போர் நம்பரன் -8-8-7
206-வானுளார வரை வலிமையால் நலியும் மறிகட லிலங்கையார்
கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலேப் பருமுடி உதிர
வில் வளைத்தோன் -9-1-7-
207-கலைவுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும்படை எடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்றான் -9-1-10-
208- வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன்   -9-4-5-
209 -தென்னிலங்கை மலங்கச் செற்றவன்  -9-5-10-
210 -சிரமுனைந்து மைந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த  உரவோன் -9-6-4-
211 -சிலையால் இலங்கை செற்றான் -9-6-10-
212 -சுடு சரமடு சிலைத்துரந்து நீர்மை இலாத தாடகை மாள  நினைந்தவர் -9-8-4-
213 – வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன்தான் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள்  -9-8-5-
214 – காவலன்  இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம்  தவிர்த்தான் -9-10-6-

215-அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்  -10-2-10-
216- இராவணற்கு காலன் -10-3-3-
217 – மணங்கள்  நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தை
புன்மையாளன்  பொன்ற வரி சிலையால் கணங்கள் உண்ண
வாளி  யாண்ட  காவலன் -10-3-4-
218 – கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் நடந்து இலங்கை அல்லல் செய்தான் -10-3-6-
219- கவள  யானை பாய் புரவித் தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தவள மாட நீடயோத்திக்
காவலன் தன்  சிறுவன் – 10-3-8-
220 -ஏ டொத்து ஏ ந்தும் நீளிலை வேலி ராவணனார் ஓடிப் போகா நின்றார் -10-3-9-
221 – தெளியா வரக்கர் திறல் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப்
படையா விலங்கல்  புகப் பாய்ச்சி விம்மக் கடலை அடைத்திட்டவன் -10-6-7-
222- நெறித்திட்ட  மென் கூழை நன்நேர் இழை யோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இறுத்திட்ட  வளின்பமன் போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு  இலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
வறுத்திட்டவன்  -10-6-8-
223 -வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும்  எய்து மலை போல் உருவ த்தோர் இராக்கதி
மூக்கரிந்திட்டவன் -10-6-9-
224 – இலங்கை ஒள்ளெரி  மண்டி வுண்ணப் பணித்த ஊக்கமுடையான் -10-9-1-
225 – அரக்கியராகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச்
செருக்கு அழித்து  அமரர் பணிய முன் நின்ற சேவகன் -10-9-6
226 – பெரும்தகைக்கு இரங்கி வாலியை முனைந்த பெருமையான் -10-9-8-
227- அரக்கரை வென்ற வில்லியார்  -11-1-1-
228 – சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் -11-1-6-
229 -பொருந்து மாமரம் ஏழும் எய்த புனிதனார்  -11-1-6-

230 – இலை மலி பள்ளி எய்தி யிது மாயம் என்ன இனமாய மான்பின் எழில் சேர்
அலை மலி வேல் கண்ணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானையமையாக்
கொலை மலி  வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் -11-4-7-
231 – கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு  செஞ்சரங்கள்
செல உய்த்த நாங்கள் திருமால் -11-4-10 –
232 – மானமரு மென்னோக்கி வைதேகி இன் துணையாக்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   -11-5-1-

திருக் குறும் தாண்டகம்

233- கடி மதிள் இலங்கை செற்ற வேறு –2
234 – முன் பொலா  இராவணன் தன்  முது மதிள்  இலங்கை  வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றான் -15
235-  மாயமான் மாயச் செற்றான் -16

திரு நெடும் தாண்டகம்

236- வில்லிறுத்து  மெல்லியல் தோள் தோய்ந்தான் -13
237 -வென்றசுரர் குலம்  களைந்த  வேந்தன் -16
238- தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச்
செந்தீ ஒல்கிப் போராளன் -20
239- தென்னிலங்கை அரண் சிதறிய வுணன் மாளச்  சென்றான் -28
240 – அலை கடலைக் கடைந்து அடைத்த வம்மான் குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடும் சிலை வாய் சரம் துரந்து  குலம்  களைந்து வென்றான் -29

மூன்றாவது ஆயிரம் -இயற்பா
முதல் திருவந்தாதி
241- சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27
242 – பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீண்  முடியைப்
பாதமத்தால் எண்ணினான் -45
243- நுடங்கு இடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன்  விலங்கை வைத்தான் -59
244 – மேலொரு நாள் மான் மாய வெய்தான் -82
இரண்டாம் திருவந்தாதி –
245 -சீதையை மான் பின் போய் அன்று பிரிந்தான் – 15
246 – இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் – 25
247 – தென்னிலங்கை  நீறாக வெய்து  அழித்தான் -29
248-அன்று காரோதம் பின்னடைந்தான்  -30
249- தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும்
வீழச் சரம் துரந்தான்  -43
மூன்றாம் திருவந்தாதி –
250- இலங்காபுரம் எய்து எரித்தான் -51
251 – எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தானம் மான் மறியை
ஏந்து இழைக்காய் தென்னிலங்கை கோன் வீழ வெய்தான் -52
253- வாள்  அரக்கன் ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77
நான்முகன் திருவந்தாதி –
254- ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட
வீரந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் -8
255- தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் -28
256- மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29
257- தண்டவரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் -44
258- கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53

மூன்றாவது ஆயிரம் -இயற்பா
முதல் திருவந்தாதி
241- சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27
242 – பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீண்  முடியைப்
பாதமத்தால் எண்ணினான் -45
243- நுடங்கு இடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன்  விலங்கை வைத்தான் -59
244 – மேலொரு நாள் மான் மாய வெய்தான் -82
இரண்டாம் திருவந்தாதி –
245 -சீதையை மான் பின் போய் அன்று பிரிந்தான் – 15
246 – இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் – 25
247 – தென்னிலங்கை  நீறாக வெய்து  அழித்தான் -29
248-அன்று காரோதம் பின்னடைந்தான்  -30
249- தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும்
வீழச் சரம் துரந்தான்  -43
மூன்றாம் திருவந்தாதி –
250- இலங்காபுரம் எய்து எரித்தான் -51
251 – எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தானம் மான் மறியை
ஏந்து இழைக்காய் தென்னிலங்கை கோன் வீழ வெய்தான் -52
253- வாள்  அரக்கன் ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77
நான்முகன் திருவந்தாதி –
254- ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட
வீரந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் -8
255- தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் -28
256- மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29
257- தண்டவரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போம் குமரன் -44
258- கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53

266- சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை மாட்டே துயர்
இழைத்த மாயவன் -66
267- கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன்  -78
திரு எழு கூற்று இருக்கை
268 – ஒருமுறை இரு சுடர் மீதினி லியங்கா மும் மதிள் இலங்கை
இருகால் வளைய ஒரு சிலை ஒன்றிய வீர் எயிற்று அழல் வாய்
வாளியில்  அட்டான் –
சிறிய திரு மடல்
269- இலங்கை பொடி  பொடியா  வீழ்த்தவன்
270- தன்  சீதைக்கு நேராவான் என்ற ஓர் நிசாசரி தான் வந்தாளைக்  கூரார்ந்த வாளால்
கொடி  மூக்கும் காத்து இரண்டும் ஈரா  விடுத்தவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே
சிலை குனித்தான் -செந்துவர் வாய் வாரார் வன முலையாள் வைதேகி காரணமா ஏரார் தடம்
தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்

பெரிய திருமடல்
271- போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே
புலம்ப வலம்  கொண்டு  மன்னும்  வள நாடு கை விட்டு கொன்னவிலும் வெங்கானத்தூடு
கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த  வெம் பரல் மேல் பஞ்சடியால் வைதேவி
என்று உரைக்கும் அன்ன நடைய வணங்குடன் நடந்த மன்னன் இராமன்
272- வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை
மாமண்டு வெஞ்சமத்து பொன் முடிகள் பத்தும் புரளச் சரந் துரந்து தென்னுலகம்
ஏற்றுவித்த சேவகன்

273- தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன்
நல்  தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்து சூர்பணகா சோர்வு எய்தி
பொன்னிறம்  கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளை
தான் முனிந்து மூக்கு  அரிந்தான் ,வாய்த்த மலை போலும் தன்னிகர் ஒன்றிலாத
தாடகையை மா முனிக்கா தென்னுலகம்  ஏற்றுவித்த திண்  திறலோன்
நான்காவதாயிரம் –     திருவாய் மொழி –
274- கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தான்  -1-5-5-
275- சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்  செய்த சிரீ தரன்  -1-5-6-
276 – நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்  -1-6-7-
277 – மராமரம் எய்த மாயவன் -1-7-6-
278- தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான்  -2-1-3-
279- அரக்கியை மூக்கீர்ந்தான் -2-3-6-
280 – குழாம் கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவன் -2-3-11-
281-  அரக்கன் இலங்கை செற்றான் -2-4-3/2-4-4-
282- கிளர் வாழ்வை வேவ  விலங்கை செற்றான்  -2-4-10-
283- தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்தான் -2-5-7-
284- பாறிப் பாறி யசுரர் தம் பல் குழாம் கள் நீறு எழப் பாய் பறவை ஒன்றேறி வீற்று இருந்தான் -2-6-8-
285 – இலங்கை செற்றான் -மராமரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லான் -2-6-9-
286- இலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -2-9-10-
287- ஏர் கொள் இலங்கை நீறே செய்த நெடுஞ்சுடர் சோதி  -2-7-10-
288 – தென்னிலங்கை எரி  எழச் செற்ற வில்லி -3-6-2-
289 – தயரதற்கு மகன் -3-6-8-
290 – தண் இலங்கைக்கு இறையச் செற்ற நஞ்சன் -3-8-2-
291 – சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில் ஒண்மை உடைய
வுலக்கை  ஒள்  வாள்  தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில் வன்மை வுடைய
வரக்கர் அசுரரை மாளப்  படை பொருத நன்மை வுடையவன் -3-10-1-
292 – கொம்பு போல் சீதை பொருட்டிலங்கை நகர் அம்பெரி  வுய்த்தவர்  -4-2-8-
293-  மதிள்  இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தான் -4-3-1-
294-  கிடந்து நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்து மணம்
கூடியும் கண்ட வாற்றால் தனதே வுலகென நின்றான் -4-5-10-
295- குலம் குலமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் -4-8-1-
296 – தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள்  காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் -4-8-5-
297- காயும் கடும் சிலை என்  காகுத்தன் -5-4-3-
298 – கொடியான் இலங்கை செற்றான் -5-6-9-
299 -இலங்கை செற்ற வம்மான் -5-7-3-
300- மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10-
301 – மன்னுடை இலங்கை யரண்  காய்ந்த மாயவன் -6-2-1-
302 – காண்  பெரும் தோற்றத்துக் காகுத்த நம்பி -6-6-9-

303- ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வானாள் மேல்
தீவாய் வாளி பொழிந்த சிலையான் -6-10-4-
304 – புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில்  வலவன்  -6-10-5-
305 – அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் ஒருங்கறுத்தான்  -7-1-5-
306 -காகுத்தன்
307- பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -7-3-7-
308 – மாறு நிரைத்து  இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா நீறு பட இலங்கை செற்ற வப்பன் -7-4-7-
309 – புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்த இராமபிரான் -7-5-1-
310 – நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்தான் – 7-5-2-
311 – ஆளியைக்  காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கரூளை யிட்டன்று இலங்கை கடந்து
பிலம்புக்  கொளிப்ப மீளி யம் புள்ளைக் கடாய் விறல்  மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான்  -7-6-8-
312 – ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை  தடிந்து மீண்டும் அவன் தம்பிக்கே
விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன்  சோதி புக்க வமரர் வரி ஏறு –7-6-9-
313 – அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடு படை யவித்த யம்மான் –
314 – செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை வுருக்கெட வாளி பொழிந்த வொருவன் -8-6-2-
315 – புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான்  -8-9-3-
316 – கணை ஒன்றாலே யேழ் மரமும் எய்த வெங்கார் முகில் -9-1-2

317- காய்ச்சின பறவை ஊர்ந்து பொன் மலையில் மீமிசைக் கார்முகில்போல்

மாசின மாலி மாலிமான் என்று அங்கு அவர்படக் கனன்று முன் நின்ற

              காய்ச்சின வேந்தன் — -9 -2 -6 –
 -318 – கூற்றமாய அசுர குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே – 9- 2- 9-
 – 319- – என் ஆர் உயிர் காகுத்தன் — 9- 5- 6-
— -320 –  பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த
                தயரதன் பெற்ற மரகத மணித் தடம் –10 -1 -8 –
                 ஸ்ரீ சீதா ராம ஜெயம்
             ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 4, 2012

 வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்அளந்த
மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.

    பொ – ரை : ‘கேசியினது வாயைப் பிளந்து, இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து உலகத்தையெல்லாம் அளந்த, காரியத்தில் சோம்புதல் இல்லாத முதல்வனே! சில நாள் வருந்த, அதனோடு அமையாது, மேன்மேலும் வருந்தும்படி வளர்ந்துகொண்டே செல்லுகின்ற வேட்கை நோயானது மிருதுவான உயிரை உள்ளேயுள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, இடைவிடாது எல்லாக் காலங்களிலும் உன் குணங்களைக் காட்டி, என்னை, உன்பக்கல் விழ விட்டுக்கொண்டு, நீ கடக்க நின்றாய்; இனிமேல் நான் தளரும்படி விடாதொழியவேண்டும்; என்கிறாள்.

    வி – கு : ‘வேவ ஆரா’ என்பது, ‘வேவாரா’ என விகாரப்பட்டது. ‘வேவ ஆரா நோய்’ என்றும், ‘உலர்த்த வீழ்த்து ஒழிந்தாய்’ என்றும், ‘பிளந்து போய் அளந்த முதல்வா’ என்றும் முடிக்க. வீழ்த்தொழிந் தாய் – ஒரு சொல்லுமாம். ‘இருந்தொழிந்தாய்’ (1. 4 : 8) என்றார் முன்னும். ‘வேட்கை – பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம்’ என்பர் நச்சினார்க்கினியர் (தொல். எழுத். 288.) சோரேல்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது.

 ஈடு : பத்தாம் பாட்டு. இவள் துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து, ‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறாள்.

    வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான், ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த – சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.

    ஓவாது இராப்பகல் – வேவ ஆராத வேட்கை நோய் போன்று, இராப்பகலும் ஓவாது ஒழிதலின் ‘ஓவாது இராப்பகல்’என்கிறாள். உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய். இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு

‘வீழ்த்தொழிந்தாய்’ என்பன இரண்டு சொற்கள்.  மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா – கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய், மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உதவிகளைச்செய்து, பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் இரக்ஷணத்திலே முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே! இனி, 1‘மூவா முதல்வா’ என்பதற்கு, ‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’ என்று பொருள் கூறலும் ஒன்று.

    இனி எம்மைச் சோரேல்2 – கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி, அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள். இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே ‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.’ என்று கோடலுமாம். 3‘கழிந்து போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும் என்பாள், ‘இனி’ என்கிறாள். ‘போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள் என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.

அவசானதம் எல்லாம் தீர சம்ச்லேஷித எம்பெருமான் –

இனி ஒரு நாளும் விடாதே ஒழிய வேணும் என்கிறாள்
மூவா முதல்வா இனி எம்மை சோரேல் -வைத்து அவதாரிகை –
வேவ்வாரா வேட்கை நோய் –வெந்தாலும் போகாத -நொந்தாரா காதல் நோய்
சரீரத்தில் உள்ளசொவ்குமார்யம் -ஆத்மாவுக்கும் உண்டே இவளுக்கு
மெல்லாவி –
உக்க காலுக்கும் -விளக்கு உளையுமே -அணியுமே
காற்று பட்டாலே அழியும் –
உள்ளே பிடித்து புறம்பு வரை வேவா நின்றது
வேரிலே வேட்கை தட்டி செடி வாடுமே –
அடியிலே நெருப்பு -கூடோக்னி பரதன் –
அதாக்யோயம் நெருப்பாலே எரிக்க முடியாது ஆத்மா
அக்னியால் முடியாதது -காதல் நோய் எரிக்குமே –
வெந்த இடமே விறகாக வேவா எரிகிறது மகதா -நெருப்பு மலை போலே
அக்னி பர்வதம் எரி மலை போல் நொந்தாரா காதல் நோய் வேவேரா வேட்கை நோய்
இராப்பகல் ஒழியாமல்
உன் பால் விழும் படி செய்து விட்டு
விழ விட்டு கொண்டே முகம் காட்டாமல் கடக்க நின்றாய்
மாவாய் பிளந்து கேசி வாயை அனாயசமாக கிழித்து
மருதிடை போய்
மண் அளந்த
உபகாரங்களை பண்ணி ஒன்றும் செய்யாமல் குறை பட்டு –
மூவா முதல்வா -ஜகத் சிருஷ்டி யாதிகளை
விரோதிகளை போக்கினது போல் முகம் காட்டி
ஆபத்தின் கனத்தால் வந்து முகம் காட்டுபவன் விசுவாசத்தால் சொல்கிறாள்
அண்டத்து குலத்துக்கு அதிபதி போல்
ரஷகன் நம்பிக்கை உண்டே
இனி -இருப்பதன் கால் இனி
முன்பு உள்ள காலம் இழந்தது தான் மீட்க முடியாதே
பெருமாள் -பிரியா தூரே -சொகிக்கிறேன் இல்லை பயணம் எடுக்க தீரும்
வழிய ரஷசால் பிரிய நோவா தலையை அறுக்க தீரும்
வயகா அஸ்ய-பிரிந்த காலம் திரும்பி வராதே -இனி -எம்மை சோரேல் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 2, 2012

கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்!
அடல்கொள் படைஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம்நோய் உற்றாயோ, ஊழிதோறு ஊழியே?

    பொ-ரை : ‘வடக்கிலிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றே! கடலும் மலையும் ஆகாயமும் ஆகிய இவற்றைத்தடவிக்கொண்டு, சந்திர சூரியர்களைக் கொண்ட இரவிலும் பகலிலும் எம்நைப் போன்று தூங்குகிறாய் இல்லை; பகைவர்களுடைய மிடுக்கைக் கொள்ளுகின்ற சக்கரப்படையினையுடைய தலைவனைக் காணுவதற்கு, காலமுள்ள வரையிலும் உடலோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயோ?’ என்கிறாள்.

    வி. – கு : ‘துழாய்த் துஞ்சாய்’ என முடிக்க. துழாய் – வினையெச்சம். சுடர் – ஆகுபெயர், வாடை – விளியேற்றலின், ‘ஆய்’ ஈறாகத் திரிந்தது. காண்பான் – வினையெச்சம். ‘சுடர்கொள் இரா’ என்பதற்கு ‘வெப்பத்தைக்கொண்டுள்ள இரவு’ எனப் பொருள் கூறலுமாம்.

    ஈடு : நாலாம் பாட்டு. காற்று என்று ஒரு 2வியாபகதத்வமாய், அதுதான் காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால், 3இருந்த இடத்தில் இருக்கமாட்டாமல், மடல் ஊருவாரைப்போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய், 1சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.

    கடலும் மலையும் விசும்பும் துழாய் – அளவு அற்ற பெரிய கடலும், செறிந்த மலையும், இடவெளியினைக் கொடுக்கிற ஆகாயமும் என்னும் இவற்றைத் தடவி. எம் போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடாய் – ஆதித்தன் மறைந்த இரவோடு ஆதித்தனையுடைய பகலோடு வேற்றுமை அற எம்மைப் போன்று உறங்குகின்றாய் இல்லை; குளிர்ந்த வாடாய்! சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று முடியுமளவினை அடைந்தாய் என்பாள்,‘தண்வாடாய்’ என்கிறாள். ‘சுடர் கொள்’ என்றது, சிலேடை: ‘சுடரைக் கொண்ட’ அதாவது, ‘மறைந்த’ எனவும், ‘சுடரையுடைய’ எனவும் இரு பொருள்படும். மறைந்த என்பதனோடு இரவையும், உடைய என்பதனோடு பகலையும் கூட்டிப் பொருள் கோடல் வேண்டும். ‘ஆயின், ‘துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின், 2காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவ, லூரே ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினால் என்க. ‘ஆயின், இங்குத் திருப்பாற்கடலும் பரமபதமும் கூறினாள் இலளே?’ எனின், அவையும் இறைவன் தங்கியிருக்கின்ற இடங்களேயாதலின், ‘ஊராய எல்லாம்’ என்றதனால் பெற வைத்தாள். ஆக, ‘திருப்பாற்கடலோடு திரு மலையோடு பரமபதத்தோடு வாசியறத் 3தேடுவார்க்குப் போலியாய் இருக்கின்றது’ என்றபடி.

    இனி, ‘கடலும் மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள் வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக்கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.

    அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் – ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? 1‘இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு 2ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.

    நீ உடலம் நோய் உற்றாயோ – கைம்மாறு கருதாது உதவி செய்யும் நீ.  எல்லாப் பொருள்களுக்கும் ரக்ஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் ஆகாதே! சஞ்சாரம் இதற்கு எப்பொழுதும் உள்ளதொரு தன்மை; இதனை அறியாது, எப்பொழுதும் சஞ்சரிக்கையை நோவு கண்டது என்று இருக்கிறாள். ஊழிதோறு ஊழி – கல்பந்தோறும். காலம் மாறிக்கொண்டே வரவும் நோய் மாறாது ஒரே தன்மையாகச் செல்லுகின்றதாதலின், ‘ஊழிதோறு ஊழி’ என்கிறாள். ‘சரீரத்தோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயே என்பாள், ‘ஊழி உடலம் நோய் உற்றாயே’ என்கிறாள்.

2. ஏஹ்யேஹி – கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி
மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை
மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்
பாதய – ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்
இருக்கிறவரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
லோகநாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது
அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள். (பார. பீஷ்ம.
59 : 98)

  ‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’

  என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
உள்ள செய்யுள்களில் காண்க.

காற்று -வ்யாபக தத்வம்
அபிமத விரக விசனத்தால் இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல்
மடலூருவாரை போலே உடம்பில் புழுதியை ஏற் இட்டு கொண்டு
வடிவு தெரியாத படி -ரூபம் இல்லை
ஜுரம் சன்னிதர் போலே குளிர்ந்து
இவள் போல
திரிந்து
புழுதி ஏறிட்டு
வடிவு அடையாளம் இன்றி -தண் வாடை
ஜுரத்தால் குளிர்ந்து
இவளுக்கும் காற்றுக்கும் பொருத்தம் இவை எல்லாம்
கடல் மலை விசும்பு துழாவி என்னை போல்
அம்மானை காண்பதற்கு -சீரார் திருவேம்கடமே திரு கொவலஊரே அவனை தேடி போவது போல்
காரார் திரு மேனி காணும் அளவு
ஷீராப்தி திருவேம்கடம் பரமபதம் -தேடுவார்க்கு போலி
வநானி க்ரீ -தசரதார்மாஜர் சீதை தேடி திரிந்தது போல் –
சீதம் தேடிக் கண்டிலோம் ஆரி இருக்க முடியாத விஷயம்
தேட பிறந்தவர் அல்லர் இருந்தும் தேடி
அவர்கள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ –
ஜீவிதும் ந சக்த -இழந்த வஸ்து வை லஷண்யம்
நீட்டும் துழாவி
அபரிசின்னமான கடல் -நிர்விமரமான மலை ஓட்டை இன்றி -சுத்தமான ஆகாசம்
துஞ்சாள்
த ண் வாடை -ஜுரத்தில் விழுந்து -ஜனனி கண்டது போல்
சுடர் ஆதித்யன் கொள்ள விழுங்கிய இரவு –
சுடர் கொள் பகலும் இரவும் விழுங்கிய -கொண்டு   இருக்கிற இரண்டும் –
உறங்காமல்-இருக்கிறாய்
அடல் கொள் படை
அடல்மிடுக்கு -எதிரிகள் மிடுக்கை அபஹரிக்கும்
மிடுக்கு உள்ள ஆழி
அதனால்தான் ஏமாந்தாய்
ஆஸ்ரித எதத் வரதம் மாம -வைத்து கொண்டு
-பொய் கூட சொல்வான் ரஷிக்க -உன்னை ஏமாற்ற தான் இப்படி பண்ணினான்
தன்னை நம்புவார்கள்
ஏமாற்றலாம்
மதியினால் குறள் மாண் ஆய –  இப்படி அர்த்தம்-பாவம் – அங்கு பார்த்தோம்
புத்தி சாதுர்யத்தால்
வஞ்சகன் மகா பலி வஞ்சித்து– பிள்ளான் நிர்வாகம்
எம்பெருமானார் நிர்வாகம் இது -ஆழ்வாரை வஞ்சித்து
நம்பிக்கை விளைத்து
அழகில் ஈடு பட்டு -அவளை வஞ்சிக்க முன்னே ஏற்பாடு செய்தான் .
அம் சிறைய மட நாராய் முன்பு பார்த்தோம்
அடல் கொள் -வஞ்சனம் இங்கும்  அகப்பட்டாய்
அசத்திய பிரதிக்ஜன் ஆஸ்ரிதர்க்கு
பஷ பாதம்
பரத சமரத்திலே -அடல் கொள் படை ஆழி அம்மான் –
ஆயுதம் எடுக்க வைப்பேன் பீஷ்மர்
கண்ணன் எடுக்க -தான் அசத்திய பிரக்ஜன் தான் கொண்ட வ்ரதம் கை விட்டான் –
அர்ஜுனன் இளைத்து கை வாங்கினவாறே -பீஷ்மரை தொடர்ந்து போக –
புல்லாம்புஜா பத்ர பீஷ்மர் லோக நாத பூத சரண்யா சங்க்ய
ஏகி ஏகி எழணும் வா வா
கெட்டு ஓடுகிறவன் –நடை அழகை சேவித்து -எம்மை கொல்ல வந்தவனும் –
ஓடினவர் பிற் காலித்து நின்று -எங்கள் அம்மை நாயனார் -மாதா பிதா சர்வ லோகம் -மாறி மாறி இடுகிற அழகு –
புள்ளம்புஜா பத்ரம் தாமரைக் கண்ணா
சீறி சிவந்த கண் அழகு ஆணை மறுத்தால் –
சேஷி எம்பெருமான் -ஆயுதம் எடுக்க மாட்டேன் -ஆயுதம் எடுக்க வைப்பேன் –
திரு கண் சேவை கிடைக்க இதுவும் தப்பு இல்லை ஆணை மறுத்தாலும் சேதமஎன் என்ன குறை
சீறி சிவந்த கண் அழகை சேவிக்க
பிரசக்ய மாம் பாதைய –ஷமிக்க வேண்டும் –
ஆயுதம் எடேன் ஆயுதம் எடுத்தாலும் -என் கையில் ஆயுதம் இருக்க தோற்க மாட்டேன் –
அடியேன் -அஞ்சலி ஹச்தராய் பிராத்திக்க -தோற்க மாட்டேன்
அஞ்சலிக்கு தோற்று விடுவான்
பிரத்யஸ்தரம் -அஸ்தி தேசிகன் -அஞ்சலி ரசவ் -ப்ரஹ்மாச்த்ரமும் முனை மழுங்கி போகும் –
பாதைய கீழே விழும்படி பண்ணும்-ஆயுதம் பொகட சொல்லி -தலை அறுக்கலாம் –
லோக நாதா வீரத்துக்கும் முதன்மைக்கும் தோற்க மாட்டேன்
அடியவன் சத்யம்நிரைவேற்ற தன் சத்ய வாக்கை பொய் ஆக்கி –
மிடுக்கை உடைய –
நீயும் காண ஆசை பட்டு உடலும் நோய் பட்டாயே
பிரத் உபகாரமஎதிர் பார்க்காமல் காற்று
உனக்கு நோவு சர்வ ரஷகன் நீ
சஞ்சாரம் நியத ஸ்வபாவம்
நோவு பட்டதாக நினைத்து
கல்பம் தோறும் ஊழி
காலம் மாறினாலும் நோவு மாறாமல் இருக்க –
உடலம் நோய் உற்றாயே நீங்கத நோவு

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -1-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

August 31, 2012

உடல்ஆழிப் பிறப்புவீடு உயிர்முதலா முற்றுமாய்க்

கடல்ஆழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்

அடல்ஆழி அம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி

விடல்ஆழி மட நெஞ்சே! வினையோம்ஒன் றாமளவே.

பொ-ரை : ‘ஆழ்ந்ததாய், சுவாதீனமாக உள்ள மனமே, உடலினுடைய வட்டமான பிறப்பு, அவ்வவ்வுடல்களில் தங்கியிருக்கின்ற உயிர்கள் முதலாகவுள்ள எல்லாவற்றையும் உண்டாக்குவதற்காக ஆழ்ந்துள்ளதான நீரையுடைய கடலை உண்டாக்கி, அக்கடல் நடுவண் யோகநித்திரை செய்கிற, பகைவரைக் கொல்லுகிற சக்கரத்தையுடைய இறைவனைக் கண்டால், இதனைச் சொல்லி, வினையினையுடைய நாம் அவனோடு சேருமளவும் அவனை விடாதேகொள்,’ என்கிறாள். வி-கு : உயிர் தங்குதற்கு இடமாக இருத்தலின் உடலை ‘வீடு’ என்கிறாள்; விடுதல்-தங்குதல். ‘ஆய்’ என்னும் எச்சத்தைக் ‘கண்வளரும்’ என்பதுடன் முடிக்க. கண்டக்கால்-வினையெச்சம், ‘பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்’ (குறள். 196.) என்புழிப் போன்று, ஈண்டு ‘விடல்’ என்பது எதிர்மறை வியங்கோள். ‘வினையோம்’ என்றது, மனத்தை உளப்படுத்திய பன்மை.

 ஈடு : பத்தாம் பாட்டு. ‘அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர். அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதேகொள்’ என்பது பொருளாம். அன்றி, மேல் பாசுரத்தில் ‘வைக்கவே வகுக்கின்று’ என்று தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’ ‘தாய்முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது; நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதேகொள்’ என்கிறாள் என்னுதல்;

உயிர் உடல் ஆழிப் பிறப்பு வீடு முதலா முற்றும் ஆய்-உயிரானது, சரீரத்தினுடைய வட்டமான பிறப்பினது வீடு உண்டு மோக்ஷம்; அது முதலான உறுதிப்பொருள்களைப் பெறுகைக்காக, அன்றி, ‘ஆழிப்பிறப்பு’ என்பதற்கு, ஆழி என்று கடலாய், அத்தால் கம்பீர்யமாய், ‘எல்லை அற்ற பிறப்பு’ என்று பொருள் கூறலும் ஒன்று. ‘ஆயின், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனுள், வீட்டினை முன்னர்க் கூறுவான் என்?’ எனின், படைத்தலுக்குப் பயன் மோக்ஷம் ஆகையாலே அதனை முன்னர்க் கூறுகின்றாள். இனி, ‘உடல் ஆழிப்பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்’ என்பதற்கு, ‘உடலினுடைய எல்லை இல்லாத பிறப்புகள்தோறும் உண்டாகின்ற தேவர்கள் முதலான சரீரங்களில் தங்கியிருக்கின்ற உயிர்கள் முதலான காரியக்கூட்டத்தை உண்டாக்குகைக்காக’ என்று பொருள் கூறலும் ஆம். 1‘எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள். ஆழி நீர் கடல் தோன்றி- 2‘அப்பரம்பொருள் முதன்முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே, மிக்க தண்ணீரையுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி. அதனுள்ளே கண்வளரும்-இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண்வளர்ந்தருளும். அடல் ஆழி அம்மானை-படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக 3ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண்வளர்ந்தருளுவது. கண்டக் கால்-என்னிலும் உனக்கு அன்றோ பேறு முற்பட்டு இருக்கிறது?1சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்; ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு? இது சொல்லி-‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி. இனி, 2‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கைகால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச்சரீரமானது முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும் இதனைச் சொல்லி என்று கூறலும் ஆம். ஆழி மடம் நெஞ்சே-ஞானத்தினையுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று. வினையோம் ஒன்றாம் அளவும் விடல்-படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க, பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.

முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகவும்

நெஞ்சை தூது விடுகிறார் என்பதாகவும்
விடேல் -விடாதே கொள்
கைங்கர்யர்யம் ப்ரஸ்துதம் ஆனவாறே தாய் முலையை  நினைத்து  ஓடும்  கன்று -குழந்தை
உடல் ஆழி பிறப்பு-அனைத்தும் சர்வேஸ்வரன் -இது சொல்லி
ஆழி மட நெஞ்சே விடேல்
அவனை விட்டுவிடாமல் கொள்
வினையோம் ஒன்றாம் வரைக்கும் சேர்த்து வைக்கும் அளவும்
என்னை விட்டு விடாதே -என்பதாகவும்
உடல் ஆழி பிறப்பு-ஆத்மாவின் சகஜமான பிறப்பு
வீடு -மோஷம் பர்யந்தமாக
ஆழி பிறப்பு ஜன்ம பரம்பரை
ஆழி கடல் -அளவிட்டு அறியாதமுடியாத பிறப்பு
பிரவாகத்வோ நித்யம்
வீடு -பர்யந்தம் அவன் நிர்வாகம்
வீடு உயிர்-சரீரத்தில் வீடாக கொண்டு உள்ள உயிர் –
இவை எல்லாம் உண்டாக்கிய பகுச்யாம்மயிலுக்கு தோகை போலே விரித்து கொள்கிறான் -பகு சாம் -ஆக கடவேன் -ஆய்

தன விகாசமே ஆகையாலே
இதை செய்ய
ஆழி நீர் -ஆழமான கம்பீரமான
யேகார்ணவம் உண்டாக்கி – இவ்வருக்கு உண்டான ஸ்ருஷ்டியாய்ஹிகளுக்கு -அவன் சயனித்து
கடல் ஆழி நீர் தோற்றி -அதன் உள்ளே கண் வளரும்
அடல் ஆழி அம்மான் -பிடித்து கொண்டே
ஆசிலே வைத்த கையும் -விரோதி நிரசனம் -ஆசு =பிடி
விளம்பம் அசகநிவ சதாபஞ்சாயுதம் -பிரணவ ரஷாயம் -சதா -சித்தமாக கொண்டு இருக்கிறான் கண்டக்கால் -என்னிலும் உனக்கு அன்றோ பேரு -நெஞ்சை பார்த்து –

அவனை கண்ட நெஞ்சை -திருவடி பார்த்த பிராட்டி கண்டு ஆசுவாசம் பட்டது போல் –
சந்தரன் திருஷ்டி -சீதை பார்க்கிற சந்த்ரனை கண்டு பெருமாள் ஆசுவாசம்
கண்டவர்களை கண்டு
இது சொல்லி -கீழ் சொல்லிய -நாடாத மலை வைக்கவே வகுக்க என்று
ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் இது தானே
விசித்ரா தேக சம்பந்தி ஹி ஈச்வராய நிவேதுதம் -கைங்கர்யம் செய்யவே
இது சொல்லி
விடலஎன்கிற பதம் மேலே அன்வயிக்கிறது
ஆழி மட நெஞ்சே கம்பீரம்
சுற்றி மயங்கி
வினையேன் ஒன்றாம்   அளவும் விடேல்
விட்டுடாதே சிருஷ்டிக்கு பிரயோஜனம் -அவனை கைங்கர்யம்
இது செய்யாமல் செய்த பாவி –
விடாது ஒழிய வேணும்
அவனை
என்னை
விடாதே என்று இரண்டு நிர்வாகம்
இது சொல்லி -வினையோம் ஒன்றாம் அளவும் என்னை விடேல்

நம் கார்யம் அறுதி பெரும் அளவும் அவனை விடேல் கொள் என்று அன்வயம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

கண்ணி நுண் சிறு தாம்பு- அன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 8, 2011

அன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –11-

நிகமத்தில் -இப் பிர பந்தமே தஞ்சமாக நினைப்பவருக்கு வாச பூமி ஸ்ரீ வைகுண்டமே

ஆழ்வார் அங்கு இருப்பதால் -ஆதி நாதர் நம் ஆழ்வார் தேவஸ்தானம் -இருவர் ஆட்சி அது வானவர் நாடு ஆழ்வார் ஆட்சியே அது –
எம்பெருமான் ஆட்சி இல்லை
அன்பன்-வாத்சல்யன் -கருணை-அருள்-இரண்டு குணமும் இந்த பிரபந்தத்தில்
எம்பெருமானுக்கே அன்பன் பெயர் -ஆழ்வாருக்கு வரும்
அவனை அடைந்தவர் -அவர்கள் இடத்தில் அன்பன் ஆழ்வார்
ஆழ்வார் அன்பன் மதுர கவி ஆழ்வார்
ஆக மூன்று அன்பர் இதில்
இன்னாருக்கு அன்பன் இல்லை பொது நின்ற பொன்னம் கழல்- வேண்டாதவர் இல்லாத  சர்வ விஷயம்-சத்ருக்கள் இடமும் வாத்சல்யம் ரிபூனாம் அபி வத்சல்யன் தோஷ போக்யத்வம் வாத்சல்யம்– வச்தம் அழுக்கை பசு மாடு நாக்கால் -தான் போட்ட மூத்ரம் -புல்லை சாப்பிடாத பசு–தர்மம் அறிந்தவன் என்று அறிந்து கொள் சரணா கத வத்சலன் பெருமாள்- குற்றமே நற்றமாக கொள்வான் செய்த குற்றம் நற்றமாக திரு சந்த விருத்தம்- மாறு செய்த -அவனுக்கும் –சர்வேஷாம் மாதா பிதா மாதவன்–ஜனகத்வம் -பிறப்பித்தவன் அவன் -வாத்சல்யம் பொதுவாக இருக்கும்
ஆழ்வார் உபாதி-அவன் அடியார் இடம் மட்டு தான் -எந்த ஜாதியில் பிறந்தாலும் -சண்டாளர் ஆகிலும் மணி வண்ணற்கு ஆள் இருந்தால் போதும் –
பரமனை பயிலும் திரு உடையார் எவர் என்னை ஆளும் பரமர் கைங்கர்ய ஸ்ரீ பாரதந்த்ர்யம் செல்வம் -ஆத்மாவுக்கு தானே -காரணம் அடிக்கு
தம்மை போலே அடி கீழ்  அமர்ந்து புகுந்த அனைவரையும் தமக்கு நாதர்
அடியார் அடியார் -அடியான் என்ற பூர்த்தி நம்பி ஒவ் ஒரு பாசுரத்திலும் நம்பிக்கு வேற விஷயம் -அன்பு பூண்ட பூர்த்தி
அடுத்து ஆசார்யர் விஷயத்தில்
பகவத் விஷயம் அன்றிக்கே ததீயர் விஷயம் அன்றிக்கே  ஆழ்வார் பற்றி-
பகவான் உகப்புக்கு பாகவதர் -நம் ஆனந்தத்துக்கு இன்றி -ஈஸ்வரன் உகப்பே -மம பிராணன் பாண்டவர்

உதாரா அனைவரும் –உயிர் நிலை தாரகம் அறிவார் உயிர் ஆவாய் அறிவாருக்கு உயிர் ஆக இருப்பவன் அறிவாராய் உயிர் ஆக கொண்டவன் அவன் மதம் -ஆச்சர்யனை கொண்ட புருஷனே சிறந்தவன்-திருத்தி பணி கொண்டவன்- தாமரை நீரை விட்டு பிரிந்தால் உலர்துமே ஆதித்யன்–மலர பண்ணிய அதே ஆதித்யன் –அது போல் -செம் தழலே வந்து அழல செய்திடினும்-அலராதே திரு வித்துவ கோடு அநந்ய கதித்வம் காட்டும்–ஆச்சர்ய சம்பந்தம் ஒன்றே மோட்ஷம் கொடுக்கும் -தாலி கிடந்தால் பூஷணம் பண்ணி கொள்ளலாம்-ஞான பக்தி வைராக்கியம் இருகிறதே ஆச்சார்யர் இன்றி அவனை கிட்டினால்-தாலி ஸ்தானம் ஆச்சார்யர் -பூஷணம் ஞான பக்தி வைராக்கியம் —
சொரூப ஞானம் பிரதமத்தில் கொடுத்து –அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து -அறியாத அறிவித்த அத்தா -நெறி எல்லாம் எடுத்து உரைத்த -பகவத் சமாஸ்ரையான வேளையில் புருஷகாரம் பூதை- அனுஷ்டானத்தல் நல் வழி –பிராப்தி தசையில் கைங்கர்யம் வளர செய்து -வேதாந்த சார சாஸ்திரம்-திரு மந்த்ரம் -கைங்கர்ய வளர்ச்சி -பகு முக உத்தேச்யன்-
மதுர கவி சொன்ன சொல்- ஆழ்வாரை தான் சொன்ன பாசுரம் தமக்கு இனிதாக இருப்பதால் மதுர கவி -இன் கவி போல்
இனிதாக இல்லா விடிலும்-நம் போல்வாருக்கு-இப் பிர பந்தம் தஞ்சமாக இருப்போர்க்கு வச்தவ்யம் ஸ்ரீ வைகுண்டம்
ஆழ்வார் திரு நகரி இரு புரியாய் செல்லும் அங்கும் திரு அரங்கம் நம் ஊர் உன் கோவில் நின்றும் இங்கனே போந்து அருளி நந்த கோபன் கோவில் புள்ளரையன் கோவில்- பிரணவம் போல் -ஜீவனை பற்றி தான் திரு மந்த்ரம் -யாருக்கு சேஷ பூதன் சொல்ல எம்பெருமான் அர்த்த தகா -அவன் சப்த தக ஜீவன்- பிரணவம் உபய பிரதான -இருவருக்கும் பொலிந்து நின்ற பிரான்-ஆழ்வார்  பரே சப்தம் பொலியும் -பாசம் வைத்த -நிகரில் வாச்தல்யம்-ஒப்பு இல்ல யாவர் நிகர் அகல் வனத்தே வாத்சல்யம் உஜ்வலம் -திரு வேம்கடம் முதலில் அடுத்து திரு குறுங்குடி திரு மால் இரும் சோலை- பரத்வம் வியூகம் விபவம் அர்ச்சை-அசாதாரண குணம்-அந்தர்யாமி-வாத்சல்யம்-திரு மலை-கோவில் சௌகார்தம் – திரு மலை சொல்லி -விபவ லாவண்யம் திரு குறுங்குடி நான்காவது ருசி ஜனகம் விளைக்க -அடுத்து வரிசையாக -திரு மால் இரும் சோலை இறுதியில் சொல்லி முடிக்கிறார் –வரிசைக்கு மா முனிகள் காரணம் சொல்கிறார் –
ஓம்காரம் விஷ்ணு -அர்த்தம் நோக்கு-சப்த நோக்கு ஜீவாத்மா
நம்மை நோக்கா நாணினார் போல் வெட்க்கி- தேவர் என்று அஞ்சினோம்-அங்கு திரு அரங்கம் நம் ஊர் -இது அன்றோ எழில் ஆலி-என் ஊர் -பொதுவாக சொல்லி –பார்த்தன் செல்வ தேர் போல்-அர்ஜுனன் கண்ணன் இருவருக்கும் ரதி சாரதி-குருகூர் -ராச கிரீடை-கோபிகள் கண்ணன் இருவருக்கும் பிரதானம் –ஆழ்வார் ஆணையாய் செல்லும் ஸ்ரீ வைகுண்டம்-கண்ணாவான் -விண்ணோர் வெற்பனே -இது அவர்களுக்கு -வானோர் மால் இரும் சோலை–நித்யர்களுக்கு –

உரைக்க வல்லருக்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் திரு வழுதி நாடு தாசர் நிர்வாகம்
பெற்றி  நம் ஜீயர் சிஷ்யர் பணித்தார் இடை சுவர் தள்ளி பட்டர் -அங்கு அனுபவம் இங்கே ஆய்ப்பாடி இங்கே அனுபவம்- ஒரே போகி-
நாயனார் வியாக்யானம்
ஆழ்வாருடைய போக்யதையும் -முதல் பாசுரம் -அண்ணிக்கும் அமுது ஊரும்
அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடமும் -இரண்டாம் பாசுரம்-தேவு மற்று அறியேன்
தமக்கு கால ஷேபம் அவருடைய பிரபந்தம்-பாவின் இன் இசை பாடி திரிவனே -இரண்டாம் பாசுரம்
ஆழ்வார் ஓட்டை சம்பந்தத்தால் அவன் மேல் விழுந்து -கரிய கோல திரு உரு காண்பன் மூன்றாம் பாசுரம்
தம்முடைய தோஷம் பாராமல் விஷயீ கரித்த படியும் நான்காம் பாசுரம்
தோஷம் அவர் கடாஷத்தால் போக்கின படியும்-தேச பிரேவச மாத்ரத்தில் கழன்று -ஐந்தாம் பாசுரம்
பின்பு அவர் குண கீர்த்தனை -கால யாத்ரை-ஆகும் படி அவர் திருத்தின படியும் நின்று தன புகழ் ஏத்த அருளினான்  -ஆறாம் பாசுரம்
அவருடைய கிருபை விசேஷத்தை லோகத்தில் பரப்பின படியும் -எலாம் பாசுரம்
உள் பொருளை -அவர் சொன்னது பொருள் -ஒன்பதாம் பாசுரம்
பிரத் உபகாரம் பண்ண முடியாமல் தான் அலமந்த படியும் -பத்தாம் பாசுரம்
வாசக பிர பந்தம் –ஆதரவு உள்ளவருக்கு தங்கள் நாட்டை நித்ய சூரிகள் கொடுப்பார்கள் ஆண்மின்கள் வானகம் –
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்து திரு அரங்கம்-வர வளைக்குமாம் அனைவரையும்
அங்கு போய்  ஆழ்வாரை அனுபவிக்க -அவா அற்று வீடு பெற்ற சடகோபன் -பெறுவார்கள்

கவி பாட்டு உண்ட விஷயத்தையும் -நம் ஆழ்வாரை -அன்பன் தன்னை அடைந்தவர்–தென் குருகூர் நம்பி
கவி பாடின தம்மையும் -மதுர கவி
கவி தன்னையும் -சொன்ன சொல்
கவி ஏதேனும் ஒரு வழியால் கற்றவர்க்கு பலமும் சொல்கிறது -விச்வசித்து இருந்தால் போதும் நம்பும் –
தன்னை அடைந்தவர் கடக்கு எல்லாம் அன்பன்
தன் திரு அடி ஆச்ரயித்த என் போல்வார்க்கு அன்பன்- இவர் மட்டும் இப்படி வியாக்யானம்
புன்மையாக கருதினாலும் கை கொண்டாரே இவர் -அன்னையாய் அத்தனாய் -ஆண்டிடும் -கைங்கர்யமும் கொண்டார்
தோஷம் பார்க்காமல் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
எம்பெருமானையே அன்பன் சொல்லலாம் அன்றிக்கே அன்பன் -சர்வேஸ்வரன் திரு நாமம்
அவனை ஆச்ரயித்த-எல்லாரும் அன்பு பாராட்டும் ஆழ்வார்
எட்டு விதமான தன்மை -முதல் பிரகரணம் சூரணை மிலேசனும் பக்தன் ஆனால்-மத பக்த ஜன வாத்சல்யம்-
பூஜா -எட்டு விஷயம் -முனி ஸ்ரீமான் ..கருட புராண ஸ்லோகம் -வாத்சல்யம் திரு ஆராதனம்ம்பண்ண ஆமோதித்து தானே திரு ஆராதனம்-ஆள் இட்டு அந்தி தொழுதல் கூடாது-டம்பம் இன்றி -கதை கேட்க பக்தி கொண்டு -சரித்ரம் கேட்க கண்கள் நீர் -சிந்தித்து கொண்டே -நினைத்து கொண்டே பிரயோஜனம் எதிர்பார்க்காமல்- மிலேசன் ஆக இருந்தாலும் அவனே பண்டிதன் -என்னை போல் பூஜிக்க தகுந்தவன் பிரதம லஷணம் இது தான்

இன்ன படி அன்பன்  என்று இன்றி -எல்லாருக்கும் எல்லா வழியிலும் சுக்ருது உயிர் நண்பன் போல் -இயல்பாகவே காரணம் அடி இன்றி-
ஏவம் நிசர்க சுக்ருது -ஆளவந்தார் -பிரளய காலத்தில் கடாஷித்து -கரண களேபரம் கொடுத்து-அசித் போல் இருந்தோமே-தயமானம் -இயல்பான கருணையால் அருளி-அனைத்து காரியங்களுக்கும் காரணன் –சொவ்கார்த்த காரியமே வாத்சல்யம் சர்வ லோக வத்சல்யன் சரணாகத வத்சல்யன் ரிபூணாம் அபி வத்சல்யன் –என்னும் படி
லோகதுக்காகா வத்சல்யனாய்–அதில் ஆஸ்ரிதர் அளவில் தோஷம் இருந்தாலும் ஏற்று கொள்வேன்-விபீஷணன்-தோஷம் உள்ளவனை ஏற்று கொண்டால் தான் பிரயோஜனம்- அடியார்கள் பிழை அறியாத பெருமாள்-கொண்டாட்டம் -பிரதி கூலமே பண்ணி போரும் அவர்களுக்கும் வத்சல்யன் மாறு செய்த வாள் அரக்கன்-
பிரதி -பவம்- சிசுபாலன்-ஆளவந்தார்- அவனுக்கே மோஷம் கொடுத்தாயே -கேட்பார்கள் செவி சுடும் -பல பல நாளம் சொல்லி -குல மலை திரு மால் இரும் சோலை-வாய் விட்டு சொல்ல முடியாத வசவுகள்-வையும் கோஷ்ட்டி-ஏற்பாடு செய்தவனும் காதை பொத்தி கொள்ளும் படி-கேட்பார்கள் செவி சுடும்–காகம்-தஞ்ச -விபீஷணம்-தமேவ சரணம் கத -விழுந்தவனை ரஷித்தாய் – கண்ணன் பெயரை சொன்னான் சிசுபாலன்-இந்த நன்மை கூட இல்லை ஷமை விலை போக என் இடம் காட்டு பெரிய பெருமாள் ஆயர் குலத்து ஈற்று இளம் பிள்ளை ஈறு இளம் பிள்ளை வார்த்தை முக்த சிசு- –
தன்னை ச்நேகித்தாருக்கு தான் ஒருவனே விஷயீ பூதனாய் –ஸ்ரியதே ஸ்ரேயதே-நாம் அவளை பற்ற அவள் அவனை பற்ற -தான் சினேகிக்கும் இடத்தில் விபூதி அனைத்திலும் -தன்னை சிநேகிதவன் புறம்பே சில இடத்தில் சிநேகித்தால்  தன்னை பெற விரகு இல்லை -உதாரா -நான்கு வித அதிகாரிகள்–விரகு-உபயம் தான் சிநேகிக்காவிடில் தான் இன்றி ஒழியும்-தயா சிந்து ஆளவந்தார் வாத்சல்ய ஏக ஜலதே -வாத்சல்ய மகோ ததே -கத்யம்-கடலுக்குள் குண கடல்- பல குணம் உண்டு வாத்சல்யம் சிறந்தது-கருணை இல்லா விடில் பிரகாசிக்காது -மனச இன்றி புலன்கள் வேலை செய்யாது போல் –மாணிக்கங்கள் பல இருக்கும் கடலில்-நிகரில் புகழாய் சொரூபம்-வாத்சல்யதுக்கு சமமாக ஓன்று இல்லை -புகழப் படுவது புகழ் ஒப்பு இல்லாத புகழ்- ஆஸ்ரித வாத்சல்யம்-துவயம் முன் அடி ஸ்ரீ மத நித்ய யோகம்- எப்போதும் கூடி இருப்பவன்-தலை எடுக்கும் குணங்கள் நாராயண -அவளை பார்த்து அவனை பார்த்து -வாத்சல்யம் முதலில்- எடுத்து -ஏற்று கொள்ள ஸ்வாமி-சௌசீல்யம் தாழ்ந்தவன் கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் -நாராயண பதம் அர்த்தம் இங்கு திரு மந்த்ரத்தில் சர்வ சேஷி -ஆஸ்ரித சௌகர்யம் குணம்- ஆச்ராயண கார்ய -நிகரில் அமரர் -இங்கும் ஒப்பு இல்லை-ஆஸ்ரித வாச்தல்ய -தனியாக கத்யத்தில் போட்டு -குண கணங்கள் உடன் சௌசீல்யம் இருந்தும் -நிகரில் அமரர்-நித்யர்- சொரூபத்தால் பர தத்வம் இத்தால் எளிதாக பற்றலாம் சரணத்வ சித்தி சௌசீல்யம் வியாமோகம் பித்து பிடித்தவன் –
வாங்குபவன் உதாரன் என்கிறான்
அன்பன்-முதல் பாசுரத்தில் மூன்று குணம்-காட்டி
கட்டு உண்ண பண்ணிய சௌசீல்யம்
 மாயன் -சௌலப்யம்
என் அப்பன்-ஸ்வாமித்வம்
இங்கு அன்பன்
அவை ஒரு தட்டு இவை ஒரு தட்டு-சீதை கலா -கலை துண்டு-சந்தரன்-விச்வம் சகல சப்த -தரை லோகய ராஜ்ஜியம் ஒரு தட்டு -அழகில் ஒரு பகுதி ஒரு தட்டு -தென் அரங்கர் -பிறர் மினுக்கம் பொறாமை- ஏழு அடி ஒரு தட்டு இது ஒரு தட்டு -இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உகந்து இருக்காய் தனி தட்டு-புறம்பு உண்டான -சர்வ தரமான் பரித்யஜ்ய -பேற்றுக்கு துவரிக்கை- வேஷம் போடுகிறான் இவ்வளவு பண்ணினாலும் -இந்தலத்தில் தாமரை பூத்தால் போல் இது வேறு தட்டு
சீலம்-குணம்-சீல சௌலப்ய ஸ்வாமித்வம் — சீலாதி குண –சொல்லி -சர்வ லோககை வாத்சல்ய  என்கிறார்
இத்தை பற்ற இறே சீலாதி குணம் -ரிஷிகளும் சொன்னார்கள்–சீலாதி குண சம்பனவ் சர்வ லோக வாத்சல்ய ரிஷிகளும் சொன்னதையும் பிரமாணம்

இந்த குணத்துக்கு தோற்று அடிமை குண தாஸ்யம்- உயர்வற உயர் நலம் -சமஸ்த கல்யாண குணம் இருப்பை காட்டி தோற்படித்தான் எவன் சொரூபம் அடுத்து ஞானம் திவ்ய மங்கள விக்ரகம் விபூதி காட்டி -குணம் கண்டதும் தலை சாய்க்க பார் -மரங்கள் கதை -சொரூப கிருத தாஸ்யம் குணம் தூண்ட அடிமை குண கிருத தாஸ்யம் இரண்டு வகை –சொரூப கிருத தாச்யமே சிறந்தது –பிராட்டி அனசூயைக்கு அருளிய வார்த்தை ஸ்மார்பிப்பது- -கணவன் அன்பு பாராட்டுவது கடமை -ஸ்ரீமான் வாக்மி-இல்லா விடிலும் அன்பு வைத்து இரு-குணம் பிரிக்க முடியாதே -இல்லா விடிலும் இருப்பை காட்டுவேன்- கடியன்  கொடியன் -வைய நான் தான் வையணும் நெடிய மால் உலகம் கொண்ட -சிசுபாலனும் வைய இவள் இடம் கற்று கொள்ள வேண்டுமே –அத்வைதி போல் நிர் குணனாக இருந்தாலும்-ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்குமே -அவன்-வார்த்தை வைத்து வியாக்யானம்- தாசோஹம் திருமாலே நானும் உனக்கு பழ அடியேன்-எம்மா வீட்டு திறமும் இளைய பெருமாளும் பஞ்சவடியில் பாரதந்த்ர்யம் காட்டினது சொன்னதே
அவனுக்கே எல்லோரோடும் பந்தம்-இவரோ அவன் இடம் அன்பை வைத்தவர் இடம் -பரமனை பயிலும் திரு உடையார் எவரேலும் கண்டீர் என்னை ஆளும் பரமர்-கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து -எண்ணாத மானிடத்தை  எண்ணாத பொது எல்லாம் இனிது –காண்பரோ கேட்பாரோ–இவரை போல் வைராக்கியம் அவனுக்கு இல்லை -அவனுக்கு சொரூபம் நிபந்தமான -சொத்து இவருக்கு உபாதி காரணம்- அவனது நிரூபாதகம் ஜாதி நியமம் பாராதே சம்பந்தமே ஹேதுவாக -எவரேலும்-கும்பி நகரர் எத்துவரேலும்-நம்பனை திரு மார்பனை- நம்பதக்கவன்-

தனக்கும் தான் தஞ்சம் அல்ல -பிறரை நம்புகிறான்-அது போல் காகாசுரன்-பிறரும் தஞ்சம் இல்லை நம்பனை-திரு மார்பினை
-அடுத்த படி வலம்தாங்கு சக்கரத்து அண்ணலை-அங்கும்  வடிவாய் நின் வலமார்பினில் மங்கை சொல்லி  வடிவார் ஜோதி வலது உறையும் —
நரகத்தில் அப்பா அண்ணா நினைத்தாலும்-கஷ்டம் படும் பொழுது தானே நினைப்போம்-அப்படி சொன்னாலும் -நரகமே சுவர்க்கம் ஆகும்-அப்படி சொன்னவனும் எனக்கு ஸ்வாமி-அவன் மட்டும் இல்லை அவன் குலம் எனக்கு சந்தானம்-என்கிறார் ஆழ்வார் –தொழு குலம் தாங்கள்–குலம் தாங்கு  சாதி நாலிலும்- சண்டாளர் ஆகிலும் மணி வண்ணற்கு என்று  உள் கலந்தார் குறி இருந்தால் போதும்-மனசுக்குள் இருக்குமே —உபாதி நிபந்தனம்
அன்பன்-வைஷ்ணவ சமவாய சேர்ந்து இருப்பது-குணம் கர்மம்பொருளில் இருப்பது போல் –அவன் அடியார் -நாளும் வாய்க்க -அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன்-சேஷி உறவு முறை ஏதாவது விதமாக -உபாயதுக்கு உபேயதுக்கு ஏதேனும் ஒரு  வகை–அப்பா அம்மா தாயே சொன்னாலும் போதும் நரகத்தில் கூப்பிடுவானே -அதனால் இங்கு அதை சொல்கிறார்-பொருளை சொன்னால் அதனுள் அவன் இருக்கும் வரை போகுமே -தாத் பர்ய ஞானம் வேதாந்தா சாரம் பரி பூர்ணம் –
திரு நகரி மண் விளைவிகிறது இவரை–ஊற்று வாய் -துறை வாய்ப்பாலே பயிர் விளையுமே

இவருக்கு காதல் கடல் புரைய விளைந்தது அடி இந்த நகர வாசி -சார அசார விவேகம் பெற்ற பூர்ணர்
நம்பிக்கு அன்பனாய்-ஞான பக்தி வைராக்ய பூர்ணர் இடம் -ஆத்மா குணம் கண்டு இவருக்கு சிநேகம்
இவருக்கு நிரூபகம் -அன்பை கொண்டே ஆழ்வார் கிருஷ்ண த்ருஷ்ண தத்வம்  -ஆராத காதல் கொண்டே நிரூபகம்
இவருக்கு ஆழ்வார் காதலே நிரூபக தர்மம்
 புஷ்பம் மணம் நிரூபகம் நிரூபித்த சொரூப விசே ஷணங்கள் பல வெண்மை மேன்மை போல்வன
நிரூபிக்க வட்ட வஸ்துவில்
பிரணவம்-எம்பெருமானுக்கு அதில் நின்று நம அர்த்தம்  பாகவத சேஷத்வம் வரை
இவர் நம ஒன்றிலே மத்திம பதத்தில்
அவர் இன் கவி சத் விஷயம் கவி பாடி
இவர் ஆழ்வாரை கவி பாடி மதுர கவி நெஞ்சுக்கு பணி ஆழ்வார் பக்கல் சிநேகம்
 வாய்க்கு பணி அவர் குணம் ஸ்தோத்ரம்
சொன்ன சொல்- இதுவும் ஒரு சொல் விச்வமிகிறார்
நம்புவார் ஆசை பட்டு நம்பிக்கை உடையவர் இரண்டு அர்த்தம்
நசை கொண்டு எப்பொழுதும் சொல்லி கொண்டு -ஆழ்வார் பிரபாவம் ஈடு பட்டு மயிர் கூச்சுஅடைந்து
விரும்பி-கை தவம் அல்ல -உண்மை சத்யம்- தஞ்சமாக விச்வசித்து
பத்தி வைகுந்தம் வாஸ்தவ பூமி பரம பதம்
பரம பதம் தம் ஊர் ஆகுமே
ஆழ்வார் -சேதனனுக்கு பிரதிகூல்யத்தில் ஈஸ்வரன் பக்கம் சிநேகித்து -அடியார் -ஞான பிரதன் ஆச்சார்யர் -திரு நாட்டை பிராப்தம்
திரு நாடு -இடை சுவர் தள்ளி ஒரு போகி ஆகும்-
———————————————————————————————————————————————————–
நம்ஜீயர் திரு அடிகளே சரணம் .
நம் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
அழகியமணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

கண்ணி நுண் சிறு தாம்பு- பயன் நன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 8, 2011

பயன் நன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும்

செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி !

முயல்கின்றேன் உன் தன் மொய் கழல்க்கு அன்பையே –10

ஆழ்வார் விஷயத்தில் முன்பு நின்ற நிலைகள் அடங்க முதல் அடி இட்டிலராகி தோற்றுகையாலே -பிரத்யு உபகாரம் ஒன்றும் இல்லையே – ஆச்சர்யர் இருவருக்கும் உபகாரன் ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்து இழந்து -ஸ்வாமி சொத்து இன்றி -நமக்கு சேஷி யாரு காட்டி உபகரித்தார் ஈசவரனும் ஆச்சார்யர் ஆசை கொண்டு -கீதாசார்யன் -திரு அடி தூது வைபவம் கண்டு யின்னார் தூதன் என்று -குரு பரம்பரையில் இடம் பிடித்தான் -அபய பிரதானத்திலும் -விபூதி சதுஷ்டையும் – ஈஸ்வர துவயமும் உண்டாகில் பிரதி உபகாரம் –இன்னும் இரண்டு இருந்தால் பண்ணலாம் –ஸ்ரீ வசன பூஷணம் பூர்வர் வசனம் நிறைந்த அபூர்வ கிரந்தம் -கடக சமாச்ரயம்-புள் இனம் தூது பொன் உலகு ஆளீரோபுவனி எல்லாம் ஆளீரோ -அடுத்து நீராய் நிலனாய் -அடுத்து உலகம் உண்ட பெருவாயா இரண்டு விபூதிகளும் கொடுக்கிறார் நப்பின்னை எருது சீதை வில் பராங்குச நாயகிக்கு இரண்டு விபூதி பிரகிருதி உடன்பரம பதம் கொடுக்கிறார் ஜடாயு உடம்பு இழந்தான் சேர்க்க பார்த்து –இரண்டையும் கொடுத்து எங்கு குடுத்தனம் குருவி காட்டின இடத்திலே –இவரே கை பட்டதை கொடுத்து பின்பு தானே -காட்டின வழியே சொல்கிறார் அமரர்கள் அதிபதி நித்ய இலனது உடையானது லீல விபூதி காட்டின அடைவில் ஞானம் வந்த பின்பு அது கிட்டே இருக்கும் அக்கரை அனர்த்த கடலுள் அழுந்து இக்கரை ஏறி–இளைத்து இருந்தேன் –பொன் உலகு கொடுத்த பின் புவனி எதற்கு-உதவிக்கு என்ன கொடுப்போம் அறியாமல் பெருமாள் ஜடாயு அனுப்பும் பொழுது -சொன்ன வார்த்தை போல் சர்வாதிகாரமான மிதுனத்தை உபகரித்த அவருக்கு ஒன்றும் செய்திலனாய் -என்றும் ஒக்க குறைவாளனாய்–உதவி கைம்மாறு எனது ஆவியும் நீ யான் யார் -கொண்டு ஆக்கினையே-ஜனக ராஜன்- பிராட்டி அவன் சொத்து மீண்டும் கொடுத்தான் -மகா பலி தானம் போல் உதவி கைம்மாறு -விவரிக்கிறார் இதை எல்லாம் எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் –ஆத்மா திருத்தின ஆச்சர்யருக்கு கொடுக்க ஒன்றும் இல்லை-

நாட்டில் பிரயோஜனம் செய்வது பலன் எதிர் பார்த்து -பயன் அன்றாகிலும் -அப்படி ஒன்றும் இல்லாவிடிலும் -ஆத்மா திருத்தும் பொழுது பலன் எதிர் பார்க்காமல் பாங்கு அலர் தகுதி இன்றி அதிகாரி இல்லை – இப்படி இருந்தாலும் அனர்த்தம் பொறுக்க மாட்டாமல் -அனுவர்த்தி பிரசன்னாச்சர்யர் கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர்-துவண்டு கஷ்டம் பட்டு-காரே ய் கருணை ராமானுசா –பூர்வர் முறை மாற்றி- இன் அருளால் ஆரியர்காள் வரம்பு அறுத்தார்-தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தாருக்கும் -அனைவரையும் போதுமினோ போந்தார் -மித்திரன் போல போக உபதேசித்தாள் பிராட்டி-

விரோதிக்கும் உபதேசம்-வீடு முன் முற்றவும் முதல் கண்ணன் கழலினை வரை ஆழ்வார் உபதேசம் கிருபை அடியாக

உபதேசம் ஆழ்வார் -ஞாலத்தாரின் மந்த புத்தி கருதி -நித்யர் போல அனுபவிக்க பிராப்தி அனர்த்தம் கண்டு கிருபையால் உபதேசிக்கிறார் -சாஸ்திரம் -வேதாந்த சாரம் ஸ்ரீ பாஷ்யம்- பிரமத்தை அறிந்தவன் சம தம -வெளி உள் இந்த்ர்யம் அடக்கி -உபதேசிக்க சொல்லி இருக்க -பிரம நிஷ்டர் இப்படி பட்டவர்களுக்கு -யாரும் பிரார்த்திக்காமல் -ஏ பாவம் பரமே ! ஆழ்வார் சொல்கிறார் -ஆச்சார்யர் சிஷ்யருக்கு ஒரு சம்வச்ர காலம் பணிவிடை செய்த பின் -அப்படி இல்லை ஆழ்வாருக்கு பாங்கு அல்லர்- கைங்கர்யம் செய்ய வில்லை-ஆச்சார்யர் யுக்தி ஏ பாவம் பரமே ! சிஷ்யர் யுக்தி பயன் நன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும்-கிருபை ஒன்றாலே அறுதி இடுகிறார் ஆச்சர்ய ஹிருதயத்தில் வேத வேத்ய வைதிகன் உபதேசம் விட ஆழ்வார் உபதேசம் சிறந்தது -நண்பனாக கொள்ள புருஷோத்தமன்- ஹிதம் பிராட்டி சொல்ல -தலைகடையும் புளக் கடையும் பூட்டி அஹம் நெருப்பு -அபேஷிக்காமல் அணைக்கும் போல் -தனக்கு பிரயோஜனம் இன்றி சிஷ்யரை திருத்தி -தகுதி இல்லாமை இருந்தாலும் –உஜ்ஜீவிக்க எல்லாம் நன்றாக ஆகும் படி பண்ணி -செயலாலே திருத்தி -இவன் செயல் நன்றாக ஆகும் படியுமாம் -ஞானம் கொடுத்து தானும் அனுஷ்டித்து அதை கண்டு அவனும் அனுஷ்டிக்கும் படி -திருத்தி பணி கொள்வான்-தீர்ந்த அடியவர் தம்மை திருத்தி பணி கொள்ள வல்ல -எம்பெருமானே பிராப்யம் பிராபகம் -என்பவரை அவன் திருத்துவான்-வாசி உண்டே இவர் திருத்துவதற்கும் அவன் திருத்துவதற்கும்  –அஹம் சர்வம் கரிஷ்யாமி-ஏவி பணி கொள்ள வேண்டும் தேவிமார் மற்றும் -ஏவ மற்று அமரர் ஆள் செய்வார் -கட்டளை இட வேண்டுமே இவை ஒன்றும் இன்றிக்கே தீர்ந்த அடியார் இல்லாமல்-புன்மையாக இருந்தாலும் பணி கொள்வான் குருகூர் நம்பி –குயில் நின்றார் பொழில் சூழ் –காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவன்று –யாவர் இனி நிகர் அகல் வானத்தே–பிரபாவம் மிகுந்தவர் ஆழ்வார் – மார் தட்டி கொள்கிறார் இங்கு பகவத் அனுபவம் செய்வதால்-தண் தாமரை சுமக்கும் பாத பெருமானை- தோற்றவர் சுமக்கும்–ஆசன பத்மம்-குயில்கள் கேட்டு கொண்டு இருக்கும் இந்த பாசுரங்களை-புன்னை மரம்-போற்றி யாம் இரந்தேன்- புன்னை குருக்கத்தி பொருப்பினில் வாழும் குயில்கள்-குயில்- பர -காக்கை இடம் போட்டு வளர்க்க படுவதால் பர பரமம்-மதுர கவியே குறிக்கும்-திரு வாய் மொழி அர்த்தம் மனம் கமழும் புன்னை மரம்-பாடும் குயில்காள் -ஆழ்வான் போல்வார் செவ்வாய் கிளியே நான் மறை பாடும் – திரு சித்ர கூடம்-சிவந்த வாய் உடன்–மற்றை நாள்களில் திரு வாய் மொழி பாடுமே -வட மொழி வேதமே கிளி படும் பொழுது குயில் திரு வாய் மொழி பாட கேட்க வேண்டுமா குயில் நின்று ஆர் -நின்றால் பாட பேதம் -கற்று கொண்டு சொல்கின்றன குருகூர் நம்பி ஊரும் நாடும் உலகமும் திர்யக்கும் பிதற்ற வைத்தார்

ச்லாக்கியமான -மொய் முயற்சி செய்கிறேன் -முயல்கின்றேன் அன்பையே -செய்கிற கைங்கர்யம் போதும் அலம் புத்தி இன்றி -என்னை தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்

நாயனார் வியாக்யானம்

சர்வ பிரகார வைபவம் கீழே சொல்லி -உள் பொருளை உபதேசித்து -தோஷத்துக்கு எதிர் தட்டு ஆழ்வார் வைலஷண்யம்-பிரத் உபகாரம் காணாமையால் தடுமாறுகிறார் –ச ஏவ தேவதை அசத்தை சத்தாக்கி முமுஷு ஆக்கி -அவரே தெய்வம்–சம்சாரிகள் அன்ன பாதிகள் முமுஷு அப்படி இல்லையே –ஆச்சர்ய லஷணம் பிரதி உபாகாரம் எதிர்பாராமல் உபதேசிப்பது-சிஷ்ய லஷனம் பிரதி உபகாரம் செய்ய ஆசை கொள்ள வேண்டும் -உபகாரம் பிரதி உபகாரம் பண்ண வைக்கும் -என்ன செய்தாலும் சதிர்சம் இருக்காது -எத்தை செய்வோம் தலை சீப்போடு ஏக்கத்தோடு – எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டு ஆக்கினையே -அவன் வஸ்துவை அவனுக்கு தருகிறோம் ஆச்சார்யர் திருத்தின பின்பு-திருத்தி தருகையாலே -ஆத்மா சமர்ப்பணம் பண்ணி பண்ணினதற்கு தவித்தும் -இருப்போம் –

தர்மம் அர்த்தம் -பணிவிடை செய்யாதவனுக்கு உபதேசம் செய்ய கூடாது பயன்-தர்மம் அர்த்தம்-அத்ருஷ்ட திருஷ்ட பயன் திரு ஆரதனதுக்கு த்ரவ்யம் கொடுத்து -அவனுக்கு சந்தொஷம்தர்மம்-இவை இருந்தால் உபதேசிக்கலாம் ஆச்சர்யருக்கு -பணி விடை செய்தால் அவன் உகப்பான்-அர்த்தத்தை தந்தால் தர்மம் தந்தால்சிஸ்ருஷை செய்தால் உபதேசிக்கலாம்-கீதையிலும்-உபதேசம் பிரார்த்தித பின் -அர்ஜுனன் மனசில் புகுந்து சேனையை உபயோர் மத்யத்தில் ரதம் விட்டு தூண்டி விட்டான் -கிளப்பி –

நிரவதிக வத்சல்யன் சிஷ்யனை பிரார்த்திக்க வைத்தான் -இவர் அப்படி அன்றிக்கே துர் கதியே பற்றாசாக உபதேசித்தார் -புன்மையாக கருதினதே பற்றாசாக கொண்டு அன்னையாய் அத்தனாய் இருந்து உபதேசித்தார் -பிரகலாதன் தனக்கு பிரயோஜனம் அசுர புத்ரர்களுக்கு நல்லது கேட்டு கொள்ள – தனக்கு ஆசை இன்றி இன்றி -ந அதர லோபாகாரணம்- அசுர யோனி-துர் கதி- கேட்காமால் இருக்கும் பொழுதே -ஆப்தன்-வாக்கியம்-நம்ப தகுந்தது-

அனுஷ்டான பர்யந்தமாக திருத்தி செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்-பட்டர் எனக்கு இதுவும் வேண்டாம்- உனக்கு அதுவும் போதாது எப்பொழுதும் அவனையே நினைந்து -திரு ஆராதனம் -ஐதீகம்-என் அளவிலே அன்றி தம் அளவிலே உபதேசிக்கிறார் -ஆச்சர்யார் அவர் நிலையில்-ஷத்ர பந்து பராம்கதி துர் கதியே பற்றாசாக -ஊரும் நாடும் பேரும் தாறும் அலற்றும் படி -அத்யவசாய பர்யந்தமாய் அனுஷ்டான சேஷமாய் -சரவணம் மனனம் உறுதி அத்யவசாயம் தியானம்-சத் அனுஷ்டானம் படி நிறுத்தினார் -ஞானம் அனுஷ்டானம் நன்றாகவே அடைந்த குரு -மகா விசுவாசம் முக்கியம் -கப்பலில் பிரயாணம் சிறாங்காயை நம்பி போகிறானே -எம்பெருமான் கரை ஏற்றுவான் விஷ்ணு போதம்–செயல் நன்றாக -கிட்டே இருந்து திருத்தினார் கை தொடனாய் -இவற்றில் என் கையில் என்னை கை விடாதே

பணி கொள்வான்-பகவத் பாகவத கிஞ்சித் கைங்கர்யம் திருத்திய பலன் -அவர் உகப்புக்கு இரண்டு கைங்கர்யம் -பகவத் ஆச்சர்ய பாகவத கைங்கர்யம்-ஆச்சார்யர் உகப்பு -பகவானுக்கும் பாகவதர்க்கும்/சொரூபதுக்கும் பிராப்யதுக்கும் சேர்ந்து இருக்க வேண்டும் பிராபகம் -சொரூப உபாய புருஷார்த்தம்-ஒரு வகை- சொரூபம் புருஷார்த்தம்-உபாயம்-சொரூபம் பகவானுக்கு நாம் அடிமை அதற்க்கு அவனை உபாயம் அவனுக்கு கைங்கர்யம் பலன்–செஷத்வத்துக்கு சேர்ந்த கைங்கர்யம்-சேர்ந்த உபாயம் —பாகவத சேஷத்வம் பாகவத கைங்கர்யம் பாகவத உபாயம் –பிரதம பர்வம் போல் சரம பர்வம்-ஆச்சர்ய பிரதம -பகவத் -மத்யம பாகவத -சரம –//பகவானுக்கு செய்யும் கைங்கர்யம் -ஆசார்யன் உகப்புக்கு பகவானுக்கு செய்யும் கைங்கர்யம் பிரதம கைங்கர்யம் -திரு மலை அப்பனுக்கு அனந்தாழ்வான் ராமானுஜர் உகப்புக்கு –பகவான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன்–பகவான் உகப்புக்கு பாகவதர் செய்யும் கைங்கர்யம் பகவத் கைங்கர்யம்– பாகவதர் உகப்புக்கு ஆச்சார்யர் கைங்கர்யம்- நாடு நாயக கல் போல் இது

முதலில் செய்து கடைசியில் சேர்ப்பான் நடு நாயக கல் அவஸ்தா விசேஷம் நிர்மாண அவஸ்தை வேற -அபாரமான மூளை பூர்வர் -அவர் அவர் உகப்புக்கு என்று கொள்ள வேண்டும்-திரு மந்தரத்தால் கிடைக்கும் -சொரூப பிராப்தி எட்டு கல்யாண குணம் இல்லை சேஷத்வம் இருந்தால் கைங்கர்யம் முக்கியம்-மா முனிகள் அழகாக கட்டினார் -பத த்ரய  நிஷ்டை-அனந்யார்க்க சேஷத்வ அனந்யார்க்க உபாயம் அனந்யார்க்க கைங்கர்யம் போல் கிஞ்சித் கார நிஷ்டையும் அபேஷதையாய் இருக்கும் -ஆள் பார்த்து உழி தருவான்-கோவில் காப்பானே -சொரூபம் பகவத் கிஞ்சித் காரத்தில் மூட்டும் –பகவத் பிரீதி பாகவத கிஞ்சித்காரத்தில் மூட்டும் -பாகவத் ப்ரீதியும் வியக்தி த்வயம் -ஆச்சர்ய கிஞ்சித் காரத்தில் மூட்டும்

இதில் ஓன்று நிருபாதிக சம்பந்தம்-ஓன்று பகவத் சம்பந்தம் ஒழிக்க ஒண்ணாத -மற்றவை இரண்டும் சோபாதிகம்-குணம் அடியாக காரணம் மூலமாக உபாதி=காரணம் ஓன்று உதேச்யத்தை= பகவத் அடியார்கள் என்பதால் பாக்கவத -ததீய -தத் -பகவான் ததீய -பாகவதர் -ஒரு காரணம் இது ஆச்சார்யர் உபகாரம் செய்ததால் ஏற்றம்-செயல் நன்றாக திருத்தி பணி கொள்வதால் -அதிகாரத்தில் மேல் எல்லையில் நிறுத்தி -நிஷ் பலனான என்னை-

தீர்ந்த அடியவர் தன்னை அவன் திருத்துவான் இவர் கரும் தரையில் வெற்றிடம்-திருத்துவான் அவன் அதிகாரம் உண்டாகில் செய்வான்-ச்வாதந்த்ர்யம் உடையவன் -இவன் அதிகாரம் கொடுத்து -அதிகாரம் கொடுப்பது ஆச்சார்யர் –புருஷார்த்தம் கொடுப்பது ஈஸ்வரன் –ஞான அனுஷ்டானம் மிகுந்து இருப்பதே அதிகாரம் –புரை அறுதி பொங்கி அற்று -அவராலே இவருக்கு உண்டானது —

துர் கதியே பார்த்து தானாகவே தன் நிலைக்கு சேர -தன் உபதேசத்தால் ஞானம் உண்டாக்கி தானும் அனுஷ்டித்து அவன் தன்னில் மிஞ்சி அனுஷ்டிக்க பண்ணி பகவத் கைங்கர்யம் அர்ஹதை அக்கி-திருத்தி பணி கொள்ள வல்ல ஆர்த்த புகழ் அச்சுதன்-விட மாட்டான்-பற்றினாரை விட மாட்டான் என்ற பதட்ட பெயர் பெற்றான்-ஒரு காலத்திலும் நழுவ விட மாட்டான்

பணி கொள்ளும் அவர் -கைங்கர்யம் ஏற்று கொள்ள -திரு நகரிக்கு நிர்வாகர் குயில் அசேதனம் கூட திரு வாய் மொழி பாட நின்றால் நான் என் திருந்த மாட்டேன் -சாகாசம் -சாகை கிளை இதுவும் ஆயிரம் பாசுரம் கிளை -மதுர கவி தொண்டர் அடி பொடி ஆழ்வார் போல் உடையவர் உடையார் போல்வர் ராமானுஜ உடையார் பெரிய நம்பிகள் வம்சம் –பாடும் குயில்கள் தம்பிரான் போல் அரையர் ஆரம்பித்து சாதித்து அருள சொல்வது போல்–தேச சம்பந்தாதாலே செவ்வாய் கிளி பாட வல்லது ஆனால் இவை பாட கேட்க வேண்டுமா தாம் மதுர வாக்கு கொண்டவர் இயல் பெயர் இன்றி மதுர கவி அவர் இன் கவி குயில் போல் மதுர கவி-குயிலை இட்டு பொழிலை சிறப்பிக்கிறார்குருகூர் நம்பி-பிரத்யு உபகாரம் -செய்ய முடியாது ஏங்கி தவிப்பான்-காட்டி-அதற்க்கு அடியான பூர்த்தி-பகவத் கிஞ்சித்காரம் துவாரம் பெறினும் ஆச்சர்ய கிஞ்சித்காரம் துவாரம் இல்லை-அர்ச்சையில் கைங்கர்யம் செய்ய வாய்ப்பு உண்டு ஸ்நானம் பானம் பிரசாதம் எதிர் பார்த்து இருக்கிறான் –ஆச்சார்யர் -இந்த நில உலகில் இருக்க காரணம் கர்மமஎன்ற நினைவு-இவன் த்ருஷ்டம் கர்மத்தில் -அதிர்ஷ்டம் ஈஸ்வரன் கையில் புகட்டு இருப்பான் ஒன்றும் செய்ய முடியாதே –

உன் தன மொய் – பரம போக்யமான  கழல்கள்- கைங்கர்யம் செய்ய ஆசை படுகிறேன் -உனக்கு என் செய்கேன் எனக்கு தீ மனம் கெடுத்தாய் -ஆழ்வார் பிரதம பர்வத்தில் அருளியது போல் –மொய் கழலே ஏத்த முயல்- திரு அந்தாதி பாசுரம் -கேட்டு போன வாசனை
பொன்னடி முதலில் சொல்லி  மொய் கழல் -ஆரம்பம்  முடிவில்-உபன்யாசம் ருசி வரவைக்க கால ஷேமம் ஞானம் வர
பொன்னடி பாவனத்வம்-தோஷம் -நான் தீண்டினாலும் -அங்கு–தங்கத்துக்கு தோஷம் இல்லை மிற் கடம் போல இல்லையே பொன் கடம் திருமாலை முதல் உழி தற்கின்றோம் பாவனத்வம் அடுத்து இச் சுவை போக்யத்வம்-தப்பு போக்கி-பயம் போனால் தானே ரசிக்கும் -பிரசாத்துக்கும் பாவனத்வம் போக்யத்வம் உண்டு ரிஷிகளுக்கும் -திரு நெடும் தாண்டகம் வியாக்யானம் -இங்கு போக்யத்வம் மகிழ் மாலை மார்பன்-இந்த திரு அடி போக்யதை அன்பு கொடுத்தது அன்பு பிரத் உபகாரத்தில் மூட்ட அதற்க்கு இடம் இன்றி திகைத்து தேடி கொண்டு இருக்கிறேன்-
———————————————————————————————————————————————————————
நம்ஜீயர் திரு அடிகளே சரணம் .
நம் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
அழகியமணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

உபதேச ரத்ன மாலை-21-29 – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 6, 2011

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி

ஆழ்வார் எதிராசராம் இவர்கள் –வாழ்வாக
வந்து உதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோற்கு உரைப்போம் யாம் -21
மூவரையும் ஒரே பாசுரத்தால் அருளி- மேலே மூன்று பாசுரங்களால் ஆண்டாளையும்–இரண்டு பாசுரங்களால் மதுர கவி ஆழ்வாரையும் -மேலே மூன்று பாசுரங்களால் எம்பெருமானாரையும் அருளுகிறார் அடுத்து ..பிராட்டி உடன் இருந்து அவனது ச்வாதந்த்ர்யம் குலைத்து நம்மை சேர வைக்க -ஸ்ரீ தேவியே சீதை பிராட்டியும் ருக்மிணி தேவியும்..பூமி பிராட்டி-ஆண்டாள்–பத்து ஆழ்வார்களையும் சொல்லி முடித்து..–சரம பார்வை நிஷ்ட்டை உள்ள மூவரும் -வாசி-பிரதம பர்வத்தில் இல்லாமல்–ஆச்சர்ய அபிமாம்னமே உத்தாரகம் –விஷ்ணு சித்தர் தங்கள் தேவர்  என்றும் தேவு மற்று அறியேன் என்றும் மாறன் அடி பணிந்து உய்ந்தவன்..என்றும் இருந்து காட்டியவர்கள்..வேந்தர் குலமும் வேயர் குலமும் -சீதை -வேயர் குலம் ஆண்டாள் இருவருக்கும் –அயோநிஜர் யோனி சம்பந்தம் இல்லை..அபிமான புத்ரிகள்..ராமனுக்கு மாலை இட்டாள் அர்ச்சகன் -அவர் அர்ச்சித்த அரங்கனுக்கு மாலை இட்டாள் ஆண்டாள்..-மதுர கவி இவர் ஆழ்வார் கவி முனி-பாவின் இன் இசை பாடி திரிவனே திரு வாய் மொழி இன் இசை பாடி திரிவதால் மதுர கவி–ராமானுஜர் மாறன் அடி பணிந்த வாசி–வாழ்வாக -நம் போன்றவர்களுக்கு வாழ்ச்சிசர்வேச்வரனுக்கும் வாழ்ச்சி தனம் சம்பத்து மேவினேன் அவன் பொன் அடி-சர்வச்வரன் இடம் சம்சாரிகளை சேர்த்து வைத்து இருவருக்கும் வாழ்ச்சி–உலகோருக்கு -தெரியாது பகவானை அறியாதவர்-பாகவதர் அடியாரை அறிவாரா –அறியானவை அறிவிப்பது ஆச்சார்யர் பண்ண வேண்டிய கார்யம் அதை செய்கிறார்..ஸ்வாமி ஆச்சார்யர் பிள்ளைகள் உள்ளிடம் சென்று -கூட்டி வந்து உபதேசம் பண்ணிய ஐதீகம் 700சன்யாசிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்தும் இவர்களை தேடி சென்று நீர் நம்மை விட்டாலும் நான் உம்மை விட மாட்டோம்–

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
இன்று தான் கிடைக்காதது கிடைக்க பெற்றோம்–வைபவம் -ஆதரவு அதிசயம்–திரு தேர் தட்டில் ஆண்டாளும் ஸ்ரீ ரெங்க மன்னாரும் –நமக்கு என்று அவதரித்தாள்..-குழந்தை கிணற்றில் விழ -தாயும் விழுந்து ரட்ஷிபது போல் ஆபத்து நீக்கும் அன்னை–இங்கு-துஷ்டமான தேசம் காலம்..கலி யுகம்–குன்றாத வாழ்வு-ஷணம் கூடம் விசசேதம் இல்லை–கண் இமைக்காமல் அனுபவித்து போகுவார் அங்கு–வைகுந்த வான் போகம்–இகழ்ந்து-வேண்டாம் என்று–உகந்து இங்கு அவதரித்தாள்-குழந்தையை காக்கும் ஆர்வத்துடன்–கட்டிலையும் கார் கடை கொண்டு பிரஜை தொட்டிலையை பிடிக்க –நான்கு தடவை பல்லாண்டுஅருளினார் பெரி யாழ்வார்—மனுஷ /தேவ ஆய்சு கணக்கில்/பிரம்மா/ஆயிரம் ஆயிரம் பிரம்மா உண்டு என்பதால் நாலாவது பல்லாண்டு..கிரியா பதம் வினை சொல் இன்றி–பல்லாண்டு உண்டாகட்டும் -இட வில்லை–போதும் என்ற நினைவு இல்லை..நான்கு தடவை  சொன்னது போதும் என்ற நினைவு இல்லை–இயம் சீதா -மம சுதா மம காரம் விட்டவனின் மம காரம் –எங்கு பார்த்தாலும் சீதை தெரிய இயம் சீதா  என்று ஜனகன் காட்டினான்..வித்யாரண்யர் தேசிகர் காலத்தில் இருந்தவர்-நிர்பந்தித்து ராஜ்ய சபை கூப்பிட -நிதி நிறைய -ஹஸ்தி மலை மேல் பிரம்மா சேத்து வைத்த மகா நிதி இருக்க –பட்டர்குரடு-வீர சுந்தர பிரம்மா ராயர்–நம் பெருமாள் கை மாறினாலும் மாறலாம் குறடு விட மாட்டோம் மாறன் சொல்லே உணவாக பெற்றோம்-விரக்தி–ஒரு மகள் தன்னை உடையேன்-இயம் சீதா மம சுதா– திரு மகள் போல் வளர்த்தேன்–பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்-பிறக்க –பட்டர் பிரான் கோதை சொல்வதே ஆண்டாளுக்கு –திரு ஆடி பூரம் சீர்மை -ஆண்டாளுக்கும் ஒப்பு இல்லை -ஏற்றம் சீதை பிராட்டி விட -தோற்றித்து ஒரு குரங்கை கேட்டாள்–சங்கரையா உன் செல்வம் சால அழகியதே கற் பூரம் நாறுமோ-நித்யம் அதர அமுதம் பருகி கொண்டே இருக்கும் பாஞ்ச சன்யம் பார்த்துகேட்டாள்–உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்— கண் படை கொள்ளில் கடல்வண்ணன்  கை தலத்தே-கையது வாயதாக  கருதும் இடம் போற சக்கரத் ஆள்வான் பிரிய வேண்டுமே அது கூட இல்லை..–திரிசடை சொப்பனம் கண்டு சொல்ல சீதை பிராட்டி ஆற இவளோ ஆயனுக்காகா தான் கண்ட கனவினை..ருக்மிணி மடுத்து  ஊதிய சங்கொலி- சீதை பிராட்டிக்கு சாரங்க வில் நாண் ஒலியும்–ஆண்டாளுக்கோ  இரண்டும் வேண்டும்..

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து  -24
பெண்ணாக பிறந்து அவன அனுபவிப்பது தண்ணீர் பள்ள மடை நோக்கி பாயுவது போல் தென் திசை இலங்கை நோக்கி சயனம் -உண்மையாக கோதா பிராட்டிக்கு தான் ..தேசிகன்–என் செய்கேன் உலகத்தீரே -தொண்டர் அடி பொடி- வியாதி இல்லா நம்மி பார்த்து கேட்கிறார் உருகாமல் இருக்கிறோமே–கோதா ஸ்துதியில் தேசிகன்–தன்னை பெண்ணை பார்த்து கிடக்கிறான் சொல்ல வெட்க்கி விபீஷணனுக்கு என்கிறார்..-வேதம் அனைத்துக்கும் வித்து–திரு பாவை ஜீயர்-வேற என்ன ஏற்றம் வேண்டும்-ததீய சேஷத்வம் காட்டி-அடியார்கள் கூட்டம் ஆசை பட்டாள்–எல்லோரும் போந்தாரோ போந்தார் போது எண்ணி கொள்..
பரிஷித் போல்- 7 ஆழ்வார்களையும் முதல் ஆழ்வார் மூவரையும் ஒன்றாக கொண்டு அஞ்சு குடி– அஞ்சும் குடி–அவனுக்கு என் வருமோ என்று அஞ்சும்..திரு அடி பிராவனயமான சொத்து இவளுக்கு மட்டும்–இவளும் பல்லாண்டு போற்றி ஆறு தடவை– அச்சோ ஒருவர் அழகிய வா சொல்வார்கள் அவர்கள்..-மடல் ஊருவார்கள்–அவன் ஒருவனே உபாயம்-அதி பிராவர்த்தி பண்ணி–இவளும் உன்னையும் உம்பியையும் தொழுதோம் காம தேவனை பற்றி அவனை அடைய விஞ்சி நிற்கிறாள்..பிஞ்சாய் பழுத்தால்-ஐந்து வயசில்–ஏற்ப்பட்டது–சரம பார்வை நிஷ்ட்டை இறுதியில் மற்றவர்கள் அறிந்த ஆழ்வார்–கொடு மா வினையேன்-நேர் இளையீர் போதுமினோ முதலிலே அருளி-பக்தி உடன் மகிந்து –உற்றேன் உகந்து பணி செய்து-
கர்ம ஞான பக்தி மார்க்கம்-சிரமம் நிறைய ஜன்மம் வேண்டும்–சொரூப அனுரூபம் இல்லை–இதில்  ச்வாதந்த்ர்யம் தோன்றும்–குறை பாடு–விலைப்பால் போல் முலை பால்  இல்லை..பிர பத்தியே -நீயே உபாயம்–பிராப்தி –பக்தியில் அசக்தனுக்கு பிர பத்தி– பிர பத்தில் அசக்தனுக்கு -சரணா கதி கூட உபாயம் இல்ல –அவனின்-ச்வாதந்த்ர்யம்- ஈஸ்வரனின் ச்வாதந்த்ராயம் தாழ்ச்சி– கொண்டாலும் கொள்வான் தள்ளினாலும் தள்ளுவன் பட்டத்துக்கு உரிய யானை செய்வது ஆராய்ச்சிக்கு அப்பால் பட்டது –உலகம் ஏத்தும் தென் ஆனாய் –வட ஆனாய் –நான்கு யானை போல அவன்–முதல் குற்றம் இது சரணா கதிக்கு அடுத்து –விசுவாசம் -பிறப்பது கஷ்டம்–இரண்டு குற்றம்–பிர பத்தியில் அசக்தனுக்கு இது..ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்..கையை பிடித்து கார்யம் கொள்ளுமா போல அவனை பற்றுவது –காலை பிடித்து கார்யம் கொள்ளுமா போல இது…ஆச்சார்யர் தானே அவன் திருவடி–அந்த நிஷ்ட்டையில் இருந்த மூவரையும் பார்த்து வருகிறோம்..
ஏரார் மதுர கவி இவ்வுலகில் வந்து உதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் –பாருலகில்
மற்று உள்ள ஆழ்வார்கள் வந்து உதித்த நாள்களிலும்
உற்றது எமக்கு என்று நெஞ்சே !ஓர் ..25
நெஞ்சுக்கு உபதேச இதில்–ஏரார் மதுர கவி–வைபவம்–ச்வதந்த்ரனை பற்றினதால்-உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தை பேசுபவர்கள் பத்து -அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே–ஆச்சர்ய அபிமானம்–பிரமாணம்-பகவான் அன்னம்-விச்லேஷம் சம்ச்லேஷம்–ஆனந்தமாக கூடி -இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-பிரிந்த பொழுது கதறி-உடன் கூடுவது என் கொலோ என்பர்.–ஆச்சர்ய அபிமானத்தால் நிச்சியம்-வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர்–பரம அந்தரங்கர் இருவரும்–ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்–சமாசனமாகவிட வேண்டும் ராமானுச சதுரா சதுர அஷரம் இவை–நாராயணா நான்கு அஷரத்துக்கு இந்த சாமர்த்தியம் இல்லை–உபாயமும் கைங்கர்யமும் எம்பெருமானார் திரு அடிகளே..-லோக திவாகரர்- உதித்தார்-ஆதித்ய உதயம் வரும் முன் அருணோதயம்–வகுள பாஸ்கரன் -அவரை பேச வைத்த வைபவம் இவருக்கு..-சீரார் மாசம்-சித்தரை-ராமன்–அவதரித்த ஸ்ரிமத்வம்–ஆச்சர்யரே தெய்வம் என்றுமதித்த ஸ்ரீ மத்வம்–கஜேந்த்திரன்-ஸ்ரீ மான்-கை எடுத்து அலற-காரணமே அகில அத்புத நிஷ் காரணாயா–இதுவே ஸ்ரீ மத்வம்..-பரம சிவனை வால்மீகி ஸ்ரீ மான் என்கிறார்–நாட்டுக்கு போய் பரதனுக்கு அனுக்ரகம் அயோதியை வாசிகளுக்கு அனுக்ரகம் பட்டாபிஷேக ஷாட் அர்த்த நயனா ஸ்ரீ மான் முக் கண்ணன் ஸ்ரீ மான் ராம கார்யம் பார்த்த ஸ்ரீ மத்வம்..சித்ரா நட்ஷத்ரம் பவதி-சீரார் சித்தரை–
வாய்த்த  திரு  மந்த்திரத்தின் மத்திமாம் பதம் போல்
சீர்த்த மதுர கவி செய் கலையை –ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளி செயல் நடுவே
செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து -26
ஆர்த்த புகழ் உயர்ந்த புகழ்–தாத்பர்யம் =உண்மையாம்ன விஷயம்–திரு மந்த்ரத்துக்கு வாய்ப்பு-வேதம் சொல்வதை எல்லாம் சொல்லும்-நேரே ஆச்சார்யர் இதை  உபதேசிப்பார்..-மந்திரத்தை மந்திரத்தால் –அந்தணர்மாடு அந்தி வைத்த மந்திரத்தை–பகவான் சொல்லும் மந்திரம் திரு மந்த்ரம் -நிதி மாடு–செல்வம் –வேதாந்தம் உபநிஷத் –மறவாமல் சொல்லி வாழலாம் –பகவத் மந்த்ரங்கள் அநேகங்கள்..வ்யாபக மந்த்ரம்–திரு நாமம் -பிரணவமும் நமவும் சேர்ந்து மந்த்ரம் ஆகும்….நாராயண //வாசுதேவ-விஷ்ணு/ முன்னால் சொல்ல பட்ட -கோவிந்த-பசுமாடுகளை சம்ரட்ஷன -குச்சி வடைநியாயம்–அதற்கே வைபவம் என்றால் நாராயணா வைபவம் கேட்க வேண்டுமா ..நம சப்த அர்த்தம்–கண் நுண் சிறு தாம்பு சொல்லும்..எட்டு இளையாய் மூன்று சரடாய் இருப்பது திரு மந்த்ரம்..அவனுக்கே அற்று தீர்ந்து சேஷ பூதன்–மூன்று பதம் எட்டு எழுத்து–சொரூப உபாய புருஷார்த்தம் -மூன்றும் சொல்லும்  நம -அவனே வழி காட்டும்–ரத்னா ஹாரம் நடுவில் இருந்தும் இரண்டுபக்கமும் ஒளி வீசும் தேகளி தீப நியாயம் போல்–ஓம் நம -நமோ நம /நாராயண நம /சொரூப சிஷா– நானே நீ என் உடைமையும் நீயே /உபாயா சிஷா -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்/புருஷார்த்த  சிஷா –மற்றை நம் காமங்கள் மாற்று–ஆந்தர உள் உரை பொருள் –ததீய சேஷத்வம்–உற்றதும் உன் அடியார்க்கு அடிமை–/எனக்கு நான் அல்லேன்–நம சப்தம் சொல்லும்–உனக்கும் அல்லன்-அடியார் அடியான்—-சீர்த்த செய் கலை/ சீர்தமதுற கவி-ஆழ்வாரை அண்டி கிடந்த சீர்மை..-சரம பர்வ  நிலை காட்டும் சீர்மை–வேதத்தின் உள் பொருள் நெஞ்சில் நிற்கும் படி உபதேசம் பண்ணினார் ஆழ்வார்–விழுமிய பொருள் ஆச்சார்யா அபிமானமே உத்தாரம்..–ஜாம்பவான் ௩௨ உலகு அளந்த  தடவை பகவான் ஜகம் ஜயித்தான் பறை அடித்து சொன்னது போல் மூன்று பதங்களில் மூ வடி மண்ணில் நோக்கு ஆழ்வாருக்கும் மூவடி திரு மந்த்ரம் எட்டு திக்கும் அறிய இயம்ப போகிறேன் –மேல் திசை பரம பதம் கண் வைக்க மாட்டான் கீழ் திசை ஆழ்வாரை பற்றினவன் கீழே போக மாட்டான் ஆகையால் எண் திசை–இந்த பிர பந்த இருந்ததால் தான் நாத முனி நாலாரிரமும் பெற்றார் ஆர்த்த புகழ்–ஆராய்ச்சி பெற்று பெற்ற புகழ் ஆர்த்த புகழ்–வியாக்யானம் நம் பிள்ளை நஞ்சீயர் பெரிய வாச்சான் பிள்ளை நாயனார் நால்வரும் வியாக்யானம்..ஆயிரத்துக்கு இல்லாத வைபவம்-பால் காய்ச்சி திரட்டு பால் போல் இது..திரண்ட பொருளான அஆச்சர்யர் வைபவம் காட்டும்–பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை பதிகம் போல் சீர்த்த -முகம் அறிந்து கோக்கும் ரத்னா ஆசாரி  போல் ரத்னா ஹாரம்–திரு அவதாரமும் நாடு–ஐப்பசி ஆழ்வார்கள் தொடக்கம்- சித்தரை நடுவில்–நட்ஷத்ரமும் நடுவில்—முதல் ஆயிரம் -நானும் உனக்கு பழ அடியேன் திரு பல்லாண்டு—நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-நாராயணனே வாராய் என் ஆர் இடரை தீராய்–பெரிய திரு மொழி நாராயணா சப்த அர்த்தம்..வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -அப்பனில்-ஆழ்வார் குருகூர் நம்பி என்றால் அமுது ஊரும் என் நாவுக்கே–உங்களுக்கு கண்ணன் என்றாலே அமுது வூர வில்லை–நாவினால் நவிற்று-என்னக்கால்-மனசால் நினைக்காமல் வாய் வார்த்தையாக சொல்லியும் பெறா பேரு பெற்றேன்..பகவானை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுதால் கிட்டினாலும் கிட்டும் இங்கு எய்தினேன் –நிச்சயமாக கிடைத்தது–

இன்று உலகீர் !சித்திரையில் ஏய்ந்த திரு வாதிரை நாள்
என்றை இனும் இன்றி இதனுக்கு ஏற்றம் என் தான்?–என்றவர்க்கு
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நால் திசையும் கொண்டாடும் நாள் -27
ராமானுஜ திவாகரன் –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் குறையால் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்–ஆழ்வார் திரு அடி உள்ளத்தே இருத்தும் -தேக விலஷணன் ஜீவாத்மா ம காரம் சொல்லும்..ச்வதந்த்ரன் இல்லை அடிமை-பகவத் சேஷ பூதன்-அவன் ஒருவனுக்கே அனந்யார்க்க சேஷத்வம் சொல்லும் பிரணவம் -அநந்ய சரணத்வம் நம /அவனை தவிர வேறு பந்து இல்லை அவன் ஒருவனையே அனுபவிக்க அநந்ய பந்தித்வம்போக்யத்வம் நாரயநாயா -இப்படி அறிந்த ஸ்ரீ வைஷ்ணவனையே உபாயம் புருஷார்த்தம் என்று அறிந்து இருக்க வேண்டும்..—சத்ருகன ஆழ்வான் படி/மதுர கவி ஆழ்வார்//சேஷத்வம் பார தந்தர்யம் லஷ்மணன் பரதன் காட்ட -நிழல் போல் சத்ருக்னன் கச்சதா–புறப் பட்டான் மாதுல குலம் மாமன் குலம்– இவனுக்கு தாய் வேறு இருந்தாலும்..மாதுல குலம் பந்தித்வம் ஆச்சார்யர் பந்துக்கள் நமக்கும்..புஷ்ய நட்ஷத்ரம் நாள் பார்த்து பரதன் புறபட்டான்–சத்ருகளை வென்றவன் குற்றம் இல்லாதவன் ராம பக்தி இல்லாதவன்..–கார் கடை கொண்டு பரதனை கொண்டான்..கைங்கர்யம் பண்ண  நடக்கிற ராமனை பார்க்காதே என்றாள் சுமத்ரை –பொலிந்து நின்ற பிரானை கால் கடை கொண்டு ஆழ்வாரை கொண்டார் மதுர கவி .. திரி புரா தேவியார் -காழி சாய் மூலையில் எம்பெருமானார் காட்டினால் ஆச்ரயிப்போம்..–கேசவ சோமயாஜி-திரு குமாரர்–இன்று-நடப்பது போல்-அதி மாத்திர பிராவண்யம்..சித்தரை திரு வாதிரை–நாயகனாய் -நென்னலே வாய் நேரந்தான்-ஆண்டாள்-எங்கள் அடிகளில் கண்ணன் விழுந்து இருந்த நாள் உண்டே –இன்று நாங்கள் உன் காலில் விழுந்து இருக்கிறோம் அன்றை நினைத்து -அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -இன்று யாம் வந்தோம் அடிமை ஞானம் வந்தது இன்று அன்று நாங்கள் பிறக்க வில்லை அன்று நடந்த வைபவம் இன்று நாம் கொள்வோம் எனபது போல்–ஏய்ந்த -சித்தரை அற்புத மாதம் ஸ்ரீமான்கள் ராமன்/பூத்து குலுங்கும்..பலம் பழுப்பதை சூசனம் –எம்பெருமானார் -நாரணர்க்கு ஆட படுவர் கலியும் கெடும் கண்கொண்டு கொண்மின்.-மந்தி பாய்-அந்தி போல்நிரத்தாடையும்..பிராத சாயம் சந்த்யா-சிகப்பு-எழில் உந்தி-காந்தி வீச செக்க சிவந்து காட்டும்..சூசனம் மேல் ஞான விகாசம் காட்டும் தாமரை அலற போகும்..அது போல் இங்கும்..தோள் தீண்டிய நட்ஷத்ரம் திரு வாதிரை புனர் பூசம்….பரதன் ராஜ்ஜியம் திருப்பி கொடுக்கும் பொழுது ஒன்பது மடங்காக ஆக்கி பாதுகை பிரபாவம்..ராமானுஜர் இடம் சொத்து பெருகும் தென் அரங்கசெல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே–  சேராத செல்வம் உளதோ  .பெரும் செல்வருக்கு .நாலாரியமும் அவனுக்கே -.எம்பெருமான் வளர்த்த அந்த செயல் அறிக்கைக்கா எம்பெருமான் தரிசனம்….வாலி-தயரதன் பிள்ளை/பரதனுக்கு முன் பிறந்து/குற்றம்..ஆவியை பிரிந்து பண்ணினாய்/ வாமனன் சீலன் ராமானுசன்–ஜாம்பவான் பறை பண்ணினது போல் மாமுனிகள் ராமானுஜர் சீர் அருள /கண்ணனுக்கே ஆம் அது காமம் -மற்ற மூன்றும் அங்கம்-வாமன் சீலன் ராமானுசன் காட்டி /சீரை /கல்யாண குணங்கள் நிறைந்தவர்/ வாமனன் பெருமை காட்டி கொடுத்தவர்..திருவடி தீண்டினார் கேட்க்காமலே–உபதேசம் அபேஷா நிரபேஷமாக –கேண்மின்-வேற ஒன்றும்வேண்டாம் காத்து கொடுத்து கேளுங்கோ–காத்து திறந்து தான் இருக்கிறது–பரிஷித் சுகர்–கிருஷ்ண விருத்தாந்தம் சுருக்க சொன்னதும்–ராஜ பச தாகம் அதிகம் சொவ்குமார்யம்-இனி பசி தாகம் இல்லை ..ஹரி கத அமிர்தம் பானம் பண்ணிய பின்பு-ஜனமேயன் வைசம்பாயர் மகா பாரதம்–18 பர்வம்–இரண்டு அதிகாரி துர்யோதனன் தசனணன் -கோ கிரகணம் -அறிவிலி இல்லை தூதன் பிரபாவம் அறிந்தும் –கேட்டு கொண்டு இருப்பதே புருஷார்த்தம்..கதை அமிர்தம்.அதுபோல் சாற்றுகின்றேன் -கேண்மின்–.மெய்யே கட்டு விச்சி சொல்…வேறா விதிர் விதிர சீரார் சுளகில்..-உமக்கு அறிய கூறுகின்றேன் மிக்க பெரும் தெய்வம்..ஆரால் இவ் வையம் அடி அளக்கப் பட்டது.போல்..எதிராசர் தம் பிறப்பால்- நால் திசை..திக்கு உற்ற கீர்த்தி–ஜகதா சார்யர் இவர் ஒருவரே..குற்றம் நீக்கி மேகத்தை மேவும் நல்லோர்..எக் குற்றம் எது பிறப்பு எது இயல்பு –அதுவே ஆளும்..அமுதனார்..

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண் உலகீர் ! –எழ பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை-28

சப்த லோகமும் உஜ்ஜீவிக்கும் படி…அவதரிப்பதே இருள் நீங்க தான்..ஆழ்வாரை இனி இனி என்று 20 தடவை கூப்பிட்டாலும் –அரங்கம் -திரு விண்ணகரம்-திரு குடந்தை மாருத்யம் காட்டி-அக்கார கனி காட்டி-இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-உற்றேன் உனது பாதம் பெற்றேன் உடனே சொல்ல வில்லை–நாடு திருத்த–பிர பந்தம் தலை கட்ட– நச்சு பொய்கை ஆகாமல்..மூன்று காரணங்கள்..வாழ்வு-அடியான நாள்-திருவடியில் கைங்கர்யம் கொடுக்க வல்ல–சித்திரையில் செய்ய திரு ஆதிரையே வாழ்வு–தோள் மாறாமல்..இவரே தாரகம் போஷகம் போக்கியம்–நாளே புருஷார்த்தம்..அவரே தாய்  தந்தை –என் தனக்கு நீயே எதிராசா மாதா பிதா வகுளாபிராமம் ஆளவந்தார்..எதிராஜ விம்சதி உபாயம் ஆர்த்தி பிர பந்தம் புருஷார்த்தம்..எம்பெருமானார் மட்டுமே ..-மண் உலகீர்-அவர் காலத்தில் இருந்து அனுபவித்த ஆழ்வான் ஆண்டான் எம்பார் –போல்வார் தீர்த்தம் ஆடி வரும் அழகை அனுபவிக்க –பரம பதமும் வேண்டாம் வையத்து வாழ்வீர்காள் –செல்வா சிறுமீர்காள் வையத்தில் கண்ணன் பிறக்க இங்கு தான் வாழ்ச்சி பார் உய்ய -ஸ்ரீ பாஷ்யம் சரணா கதி உதித்து அருளும்–உய்ய உபதேசம்/ஸ்ரீ பாஷ்யம்/சரணா கதி அனுஷ்டானம்/ கத்யம் அருளி-இப் படி பல வழியாலும் உய்ய வைத்தவர்.. உய்வித்தார். ஆசை உடையோர்க்கு எல்லாம் அருளி–ஸ்ரீ சைல தயா பாத்ரம்–யோக்யதை உண்டு கிருபையை பெற்று கொள்ள..-நரகம் கிடைத்தாலும் உலகம் வாழ்ந்து போனால் போதும்-எம்பெருமானார் பெயர் பெற்றார்..சரம ஸ்லோக அர்த்தத்தை வெளி இட்டு அருளினார் எம்பெருமானார்-முமுஷுபடி-வெளி இட்ட சப்தம் கேட்டு திரு கோஷ்டியூர் நம்பி ஆலிங்கனம் பண்ணி கொண்டு எம்பெருமானார் திரு நாமம் சாத்தினார்…வேதம் அர்த்தம் புரியாமல் இருக்க -ஸ்ரீ பாஷ்யம் வெளி இட்டு அருளி- ஆளவந்தார் மனோ ரதம்.நிறை வேற்றி கொடுத்தார் ..சராதாபீடம் சரஸ்வதி-சங்கை கெடுத்தாண்ட தவராசா–இதி சர்வம் சமச்யம்-ஒருங்க விட்ட வைபவம்..-லஷ்மி நரசிம்கனை ஆராதனைசேராதவற்றை சேர்த்து–காரண வஸ்து-நிர்த்தேசம்–பண்ணி உய்யும் படி–உபாயம் சரணா கதி-அனுஷ்டித்து பங்குனி உத்தரம்-மூன்று கத்யம் அருளி-பிராட்டி இடம்முதலில் அனுஷ்டித்து அடுத்து அவன் இடம்–நமக்காக சேர்த்து தானே அனுஷ்டித்து காட்டினார்..ஏலா பொய்கள் உரைப்பானே-ராமன் -இரண்டு வார்த்தை-சம்பந்திகளுக்கும் மோட்ஷம் பிரார்த்தித்து பெற்றார்..எம்பெருமானார் திருவடி சம்பந்தம் மோட்ஷம் கொடுக்கும் -உய்ய–உதித்து அருளினார் லோக திவாகரன்–அஞ்ஞானம் விலகும் நாட்டிய நீச சமயங்கள் வீழ -சங்கர பாஸ்கர ..கிருமி கண்ட சோழன்-தானே அழிந்தான் -உதித்த பின்பு தானே இருள் போகும் –அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே –மேல் நாட்டில் வேறு அறுத்தார் சமணர்களை..மாதவனே கண்ணுற நிற்கிலும்..அண்ணல் ராமானுசர் வந்து தோன்றிய அப்  பொழுதே –நாரணர்க்கு ஆள் ஆனாரே –திரு குருங்குடி நம்பி-வைஷ்ணவ நம்பி–ஸ்தானம் இட்டு யது குலம்  அவன்..எதி குல இவர்.. தேர் தட்டில் பார் தட்டில் ஒரு அர்ஜுனனுக்கு இவரோ அனைவருக்கும்..–அப்ரியம் என்று முடிக்க பட்டது இல்லை..பட்டம் இழந்த குலம் எதி சேகரர் இவர்..ஜெயந்தி என்றாலே ஸ்ரீஜயந்தி..கோவில் என்றாள் திரு அரங்கம்/பெருமாள் நம்பெருமாள் ஒருவனே/ஸ்வாமி என்றால் எம்பெருமானார் ஒருவரே குறிக்கும்….திரு நட்ஷத்ரம் என்றால் சித்தரை திரு வாதிரை ஒன்றையே உரைக்கும்..பரியனாகி வந்த –அவுணன் உடல் கீண்ட -அரங்கத்து அமலன்– அரங்கன்குற்றம் இல்லாதவன்.. நரசிம்கன் குற்றம்–ஒரு தூணில் -ஒருவனுக்கு–உலகத்தோர் அனைவர்க்கும் ஒரே முகூர்த்தம் கருட வாகனும் நிற்க கிடக்கிறான் -அது போல் ஸ்வாமி.. நெஞ்சுக்கு பாசுரம் அடுத்து சொல்லுகிறார்..

எந்தை எதிராசரிவ் வுலகில் எம் தமக்கா
வந்து உதித்த நாள் என்னும் வாசியினால்-இந்தத்
திரு வாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே !
ஒருவாமல் எப் பொழுதும் ஓர் -29
தேவர்கள் ஹவிர்பாவம் வாங்க வரும் பொழுது -முகம் திரும்பி-இவ் உலகில் நமக்கு என்று –அனந்தன்-இவர்-எமக்கு என்று-கோபத்தில் விழுந்த குழவி ஆபத்தை போக்கும் தாய் போல்– உன்னை போல் பொறுக்க வல்லார் யார் –தாய் மருந்து குடித்து முலைப் பால் வழியே குழந்தைக்கு தருவது போல்-சரணா கதி தான் பண்ணி காட்டி கொடுத்தார் அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார்-காமாதி -தோஷ கரம்-போக்கி கொடுப்பார் –நமக்கு என்று அவதாரம்…நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்
பிள்ளை லோகம்ஜீயர்  திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .