Archive for the ‘Madurakavi Aazlvaar’ Category

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 9- மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஒன்பதாம் பாட்டில் –
ஆழ்வாருடைய அருள் உலகினில் மிக்கது -என்கைக்கு அடி என் என்னில் –
என்னுடைய தண்மை பாராதே-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை பாடி –
அத்தை எனக்கு உபகரித்தார் -என்கிறார் -(வேதம் -பொருள் -பகவத் சேஷத்வம் -உட் பொருள் பாகவத சேஷத்வம் )-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -என்று அவ் விஷயத்தில் ஆழ்வார் அருளிச் செய்தத்தை-ஆழ்வார் திருவடிகளிலே இவர் அருளிச் செய்கிறார்-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

மிக்க வேதியர் –
ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே –
அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –

வேதத்தின் உட் பொருள் –
சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இ றே
வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-

நிற்கப்பாடி –
துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –
எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இ றே-

என் நெஞ்சுள் நிறுத்தினான் –
பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –
கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே
நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்
இது இ றே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் -(ஆழ்வார் ஏவ கைங்கர்யம் இவருக்கு -ஆழ்வாருக்கு அர்ச்சை பெருமாள்  ஏவ மாட்டாரே  -ஏவிப் பணி கொள்ளப் படுவது அங்கே தானே )

தக்க சீர் சடகோபன் –
இது தொடங்கி (இப்பாட்டில் சேஷமும் மேல் பாட்டுக்களாலும் ) உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேசத்தை பேசுகிறார் –
தக்க சீர் சடகோபன் –
சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் தகுதியான கல்யாண குணங்களை உடைய ஆழ்வார் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றால் சர்வேஸ்வரத்துக்கு போரும்படி இருக்குமா போலே-சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் போரும்படி யாயிற்று ஆழ்வார் இருக்கும் படி –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இ றே-

என் நம்பிக்கு –
அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –
ஆட் புக்க காதல் –
அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )

அடிமைப் பயன் அன்றே –
இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாகபிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இ றே இருப்பது –
அங்கன் அன்றிக்கே
ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா
அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கு அவ்வருகு இ றே பேறாயிற்று
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது –
அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 8-அருள் கொண்டாடும் அடியவர் இன்புற -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

எட்டாம் பாட்டில் –
எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு ஹேது என் -என்னில் –
ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
கபளீ கரித்து இருக்கையாலே -என்கிறார் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் -(சீறி அருளாதே -சீற்றத்தையும் அருள் -கொண்ட சீற்றம் ஓன்று உளது -என்றும் கொண்டாடுவார்கள் அன்றோ )
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே -கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் -தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்-அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் –
நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் -(கிருபையால் பக்தியை பெற்றோம் என்பார்கள் –சரணாகதி கிருபா ஜனகமா -கிருபா ஜன்யமா –சரணாகதி கிருபையை தூண்டாது –கிருபா ஜனகம்  இல்லை ஜன்யம் தானே -கிருபைக்கு பலம் தான் பக்தி -சரணம் நாக்கு பிறந்ததே தேவரீர் பிரசாதம் கூரத் தாழ்வான்-வைஷம்யம் இல்லை -அனைவரையும் -வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்தே  -பண்ணுவதற்காக கொடுத்தால் சாதிய உபாயம் -அவனே கொடுப்பதால் சாத்தியம் நிர்ஹேதுகம் –உபாயம் எதிர் பார்க்காமல் -அதிகாரி ஸ்வரூபம் -அடைய ஆசை இச்சை வேண்டும் -ஆசை தகுதி -என்றவாறு -புருஷ சாபேஷமாய் புருஷகார சாபேஷமாய் இருக்கும் -)

இன்புற –
ஆநந்த நிர்பரராக –
எண்ணாதனகள் எண்ணு நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்கிறபடியே –
சாதநத்தில் அந்வயம் இன்றிக்கே -பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படியாக -(உபாயமாக ஒன்றையும் செய்ய வேண்டாம் கைங்கர்யத்துக்காக அனைத்தையும் பண்ண வேண்டும் )

வருளினான் அவ் வருமறையின் பொருள் –
அவ்வரு மறை –
பிரசித்தமாய் -பெறுதற்கு அரிதாய் இருக்கிற மறை -அதாகிறது –
வேத ரஹஸ்யமான உபநிஷத் இ றே –
அவ்வரு மறையின் பொருளை அருளினான் –
நித்ய சத்வஸ்தர்க்கு அல்லது தோன்றாத உபநிஷத் அர்த்தத்தையும் அருளிச் செய்தார் –
பரம சாத்விகர்க்கு நித்தியமான ஐஸ்வர்யமும் -உபநிஷத் ரஹஸ்யமே   இ றே-
சா ஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இ றே -அதாவது சர்வ ரச என்றும் ரசோ வை ச -என்றும்-சொல்லுகிற விஷயத்தை தத் ப்ரசாதத்தாலே லபிக்கை
ஏஷ ஹ்யேவா நந்தயாதி – என்றும் -தத்ஹேது  வ்யபதேசாச்ச -ப்ரஹ்ம ஸூ த்ரம்-1-1-15–என்றும் சொல்லக் கடவது இ றே

அருள் கொண்டு –
இவர் தாம் ஸுவ புத்தியாலே அருளிச் செய்தார் அன்று –
மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே -ப்ரசாத லப்த ஜ்ஞாநத்தை முதலாகக்
கொண்டு -தத் ப்ரேரிரதராய் கொண்டு ஆயிற்று அருளிச் செய்தது –
என்னாகியே தப்புதலின்றி தன் கவி தான் சொல்லி -என்கிறபடியே
பிறரோபாதி -கவி பாடுகிற் தாமும் -விஸ்மிதர் ஆம்படி நிரவத்யமாக இ றே
கவி பாடுவித்துக் கொண்டது –

ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
சதுர்விம்சாஸ் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்தவான் ருஷி -என்றாப் போலே-(500 சர்க்கம் ஆறு காண்டம் / 24000 ஸ்லோகம் -630 சர்க்கம் ஏழு காண்டம் -உத்தர காண்டம் சேர்த்தே 24000 ஸ்லோகங்கள் )ஆயிரமாக ஆயிற்று பாடிற்று –
ஓர் ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு ஒரோ பாட்டே அமையும் படி இ றே இருப்பது –
இன் தமிழ் பாடினான் –
துர் அவகாஹமான வர்த்தத்தை -பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-ரசகநகமகவும் -சர்வாதிகாரமாம் படியும் பாடினார் –

பாடினான் அருள் கண்டீர்-
மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –
அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –
ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த
ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை

இவ் உலகினில் மிக்கதே –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –
அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான
அபிநிவேசத்தளவும் போருமாயிற்று- என்னளவில் -கிருபையும்-(நீசனேன் நிறை ஒன்றும் இல்லா என்னளவும் என்றவாறு )

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு-7 – கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஏழாம் பாட்டில் –
ஆழ்வார் தம் பக்கலில் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தை கண்டு –
இவ் விஷயீ காரத்துக்கு யோக்யதை உண்டாய் இருக்க நாட்டார் இழக்கைக்கு அடி என் –
என்று அனுசந்தித்து –
இவருடைய பெருமையை அறியாமையாலே இருக்கிறார்கள் -என்று
எல்லாரும் அறியும்படி சொல்லக் -கடவேன் என்கிறார் –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

கண்டு கொண்டு-
காணாததை கண்டு கொண்டு -தேடினதை கண்டு கொண்டு –
நான் கிட்டின அளவிலே ஆழ்வாருக்கு உண்டான திரு உள்ளம் நிதி எடுத்தாற் போலே
இருந்தது -என்கிறார் -(கண்ணால் கண்டார் -கைகளால் கொண்டார் –புதையல் போலே -கண்டுகொண்டார் -)
தம்மைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்தார் இவர் -என்று தோற்றும்படி இருந்தது -என்கிறார் –
அவருடைய கிருபைக்கு அனுத்தமமான பாத்ரம் இ றே நான் -(ந உத்தமம்-உத்தமம் இல்லை  / யத்தை காட்டிலும் உத்தமம் இல்லையோ அது அநுத்தமாம் -என்றுமாம் -நம்மாழ்வார் பாத்திரம் ஆக நீசத் தன்மை நிறைந்து இருக்க வேணுமே -)
என்னை –
நாட்டாரில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வாசி யறியாத என்னை -(இயம்புகேன் -என்றாலே- என்னை -வேண்டாமே -ஆழ்வார் பிரபாவம் தெரியாத என்னையும் என்றவாறு)
தம்முடைய நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ப்ரதிபத்தி பண்ணவும் கூட மாட்டாத என்னை –என்றுமாம்-

காரி மாறப் பிரான் –
ஆழ்வார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை நினைத்துப் பிரான் என்கிறார் –
காரி மாறப் பிரான் -என்கிற விசேஷணத்தாலே -ஆழ்வாருக்கு உபகாரகரான
ஈஸ்வரன் பக்கலில் போகாமைக்காக விசேஷிக்கிறார்-
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் என்கிறபடியே அவனுடைய உபகாரகம் சர்வ சாதாரணமாய் ஆயிற்று இருப்பது -(காரி மாறனைக் கொடுத்த பிரான் என்றுமாம் -உலக பிள்ளை இல்லையே -லோகத்துக்கு கொடுத்த உபகாரகன் -எதில் மாறி இருந்தார் -புன்மையாக கருதுவதால் கைக் கொண்டார் அன்றோ  )
அந்த சாமான்யத்தில் புகாமைக்கு தம்முடைய ஸூ ஹ்ருதத்தை விசேஷிக்கிறார்-(என்னை காரிமாறப் பிரான் -)

பண்டை பல்வினை –
1-அநாதி காலம் சஞ்சிதமாய் -விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபம்
2-சூர்ப்பணகையை போலே -வகுத்த விஷயத்தை பற்றுகைக்கு வழி யல்லா வழியே
இழிகைக்கு ஈடான பாபம் –
3-பிரதம அவதியான பகவத் விஷயமே புருஷார்த்தம் -என்கிற புத்திக்கு அடியான பாபம்
இவை யாயிற்று பண்டை பல் வினை யாவது –
வல் வினை
பிராய சித்த சாத்தியமும் அன்றிக்கே-அனுபவ விநாச்யமே அன்றிக்கே -இருக்கை-

பாற்றி யருளினான் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி-சும்மனாதே கைவிட்டோடி தூறுகள் சாய்ந்தனவே -என்று சொல்லும் பிரகாரங்கள் அன்றிக்கே-உரு மாய்ந்து போம் படி பண்ணினான் –

தன் புகழ் ஏத்த அருளினான் என்றபடி தம்மையே வாய் புலத்தும்படி பண்ணினார் –
எண் திசையும் அறிய இயம்புகேன் –
விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற-ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்
அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-

ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் –
அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இ றே
ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின
அருளுக்கு மேலே இ றே என்னை விஷயீ கரித்த அருள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 6-இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஆறாம் பாட்டில் –
ஆழ்வார் இப்போது இங்கே விஷயீ கரித்தாலும் -நீர் தாம் அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த-விஷயம் ஆகையாலே மறுவல் இடிலோ -என்ன –
அங்கன் மறுவல் இடும்படியாயோ ஆழ்வார் பிரசாதம் என் பக்கல் இருப்பது -என்கிறார் –
ஆழ்வார் -கிருபை -ஸூசீநாம் ஸ்ரீ மதாம் கேஹே யோகப் ரஷ்டோபி ஜாயதே -என்றும் -சமாதி பங்கஸ் தஸ்யா சீத்-என்றும் பிரம்சம் பிரசங்கிக்கும்-பகவத் கிருபை அளவில் நினைத்து இருக்கலாமோ-(நழுவுதல் உண்டு என்பதற்கு பிரமாணம் –பிராப்யா புண்ய க்ருதா லோகம் –பூர்வ பாதி ஸ்லோகார்த்தம் -மான் குட்டி ஜடபிரதர் -)

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–

இன்று தொட்டும்-
விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே ஆஸ்ரயிப்பதொரு காலமும்-பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –
விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ  இருப்பது

எழுமையும் –
ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –

எம்பிரான் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை
உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்-(அருளின பின்பு தான் பிரான் -இங்கே பிரான் முன்பே சொல்லி –உபகார ஸ்ம்ருதி யால் அருளி -உயர்வற –நடுவில் மயர்வற அருளியதை சொல்லி அயர்வரும் அமரர்கள் அதிபதி அருளியது போலே-சதிர்த்தேன் -சொன்னதும் உபகார ஸ்ம்ருதியால் பிரான் முன்பே இங்கே  )
எம்பிரான் –
என் ஸ்வாமி-

நின்று –
ஒருபடிப்பட நின்று
உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து
பின்பு அது கிட்டினவாறே
அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –

தன்  புகழ் ஏத்த –
ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ
ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து )

அருளினான் –
நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறா இ றே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி –
தம்மையும் ஏத்தி இன்னம் ஒரு விஷயத்தை ஏத்த வேண்டும்படியோ ஆழ்வார் உடைய
பூர்த்தி இருப்பது –
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் -என்று ஆழ்வார் அருளிச் செய்யும் அது இ றே-இவர் நெஞ்சில் வாஸிதமாய் இருப்பது -அத்தைச் சொல்லுகிறார் –

என்றும் என்னை இகழ்விலன் –
என்றும் இகழ்விலன் –
என்னை இகழ்விலன் –
யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .
என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ
தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை
புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
காண்மினோ
இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – -5-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

ஐந்தாம் பாட்டில் –
உம்மை புன்மையாகவும்
உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர்
உம்முடைய புன்மையையும் –
உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும்
சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-நம்பினேன் மடவாரையும் முன் எலாம் –
இவருடைய புன்மை -இருந்தபடி
பிறர் நன் பொருள் நம்பினேன் –
பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை
நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை
பிறர் நன் பொருள்-த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் -(அசேதனம் போலே -ஜடம் இல்லை -சேதனம் போலே பரதந்தர்யம் இல்லையே -ஷரம்-பத்த  ஜீவன்  அக்ஷரம் முக்த ஜீவன் -ஸ் வ இதர ஸமஸ்த வஸ்து  விலக்ஷணம் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்திய ஆத்மனி திஷ்டயே -கட்டை விரல் போலே -உண்ண  கண்ட விரல் இல்லை எண்ண கண்ட விரல் – )
விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே –பிறர் -என்கிறது -உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இ றே
பொருள் -என்று த்ரவ்யம்
நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இ றே
அத்தை இ றே நான் அபஹரித்தது
நம்புதல் –ஆசைப்படுதல்
பர த்ரவ்யதை ஆசைப்படுகை இ றே -அபஹாரம் -வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார்
அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –
பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ
ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது-(நன் நன் பொருள் அன்றோ இது )
ததீய சேஷமான வன்று இ றே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது
அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்
அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இ றே –
ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இ றே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்-த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இ றே-விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இ றே ரத்னம் களவு காண்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இ றே -இருப்பது-

நம்பினேன் மடவாரையும்
ஈஸ்வரனுக்கு அபிமதமான வஸ்துவை அபஹரித்த நான் –
தேஹாத்ம அபிமாநிகள் -என்னது -என்று அபிமானித வஸ்துவை அபஹரிக்க சொல்ல -வேணுமோ
ராஜ ரத்னம் அபஹாரம் பண்ண அஞ்சாத  நான் –
ஷூ த்ரர் உடைய விற்கும் வைக்கோலும் அபஹரிக்க அஞ்சுவேனோ
-இத்தால்
ஈஸ்வர அபிமான வஸ்துவை அபஹரித்தேன்
அந்யர் உடைய அபிமத வஸ்துவையும் அபஹரித்தேன் -என்றபடி –
மடவார் -என்கையாலே -அங்கும் அனந்யார்ஹங்களை அபஹரித்தேன் -என்கை-

முன் எலாம் –
இப்படி தேஹாத்ம -அபிமாநியாயும் –
விஷய -ப்ரவணனாயும் –
போந்த காலம் தான் சாவதியாகப் பெற்றதோ –
ஈச்வரனோபாதி ஆத்மாவும் நித்யம்
காலமும் அநாதி
அசித் சம்பந்தமும் அநாதி
ஆகையாலே -முன்புள்ள காலம் எல்லாம் இதுவே யாத்ரை -என்கை-

உம்முடைய புன்மை குறைவற்று -இருந்தது
ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்த அளவு ஏது என்ன –
அத்தைச் சொல்லுகிறார் மேல் –
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு –
என்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஆராயும் அத்தனை அபூர்ணரோ ஆழ்வார்
என்னை உபேஷித்த காலம் இவ்வளவு பாபம் இவ்வளவு என்று பார்க்கும் படி அன்றே
ஆழ்வார் உடைய பூர்த்தி
ஆத்ம அபஹாரம் பண்ணினான் நான் -விஷய பிரவணன் ஆனேன் என்று கை விடும்படி அன்றே
ஆழ்வார் திருவடிகளை நீர் தான் கிட்டின படி என் -என்ன
விஷயங்களுக்கு அர்த்தம் தேடி –
அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க –
அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் –
இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இ றே-(திருக் கோளூர்-சொல்லாமல் திருக் குருகூர் என்கிறார் அன்றோ )
ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே
திருநகரியைக் கவி பாடுகிறார் –

இன்று அன்பனாம் –
இதுக்கு முன் எனக்கு ஒரு நினைவு இன்றிக்கே இருக்க அசிந்திதமாக ஆழ்வார் திருவடிகளிலே
ப்ரவணனாகக் கண்டேன் –
அநாதி காலம் ஆத்ம அபஹாரம் -பண்ணியும் விஷய ப்ரவணனாயும் போந்த இது
இழவுக்கு உடலாகை அன்றிக்கே –
சரண்ய ப்ரபாவத்தாலே
பேற்றுக்கு உடலாக கிருஷி பண்ணினாரைப் போலே பலித்துக் கொண்டு நிற்க கண்டேன் –
நான் -என்னது -என்று இருக்கை தவிர்ந்து
இதர விஷயங்களில் விரக்தராய்
பகவத் சேஷத்தளவு நில்லாதே அதின் எல்லையான ததீய சேஷத்தளவிலே நின்றார் ஆழ்வார்
இந்த க்ரம அபேஷை அன்றிக்கே
முதல் அடியிலே நான் ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணனாகப் பெற்றேன் –

அடியேன் –
ஆழ்வார் உடைய வைபவத்தை அனுசந்தித்து -அதுக்கு -தோற்று  அடியேன் -என்கிறார் -குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே அதுக்குத் தோற்று அடியேன் என்கிறார்
ஆச்சார்யர்களை நம்பி என்னக் கற்பித்தார் போலே
ஆசார்யர்கள் அழைத்தால் -அடியேன் -என்கிறதும் ஸ்ரீ மதுரகவிகள் வாசனையாலே யாயிற்று
-சதிர்த்தேன்
சதிரை உடையேன் ஆனேன்
ஈஸ்வர சேஷமான வஸ்துவை -என்னது -என்று இருக்கைக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் மேல் பட்ட சதிர் கேடு இல்லை இ றே
அவற்றை விட்டு –
பகவத் விஷயத் தளவில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படி சதிரை உடையேன் ஆனேன் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு -4- நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 10, 2013

நாலாம் பாட்டில் –
என் அப்பனில் -என்று காற் கடைக் கொண்ட விஷயத்தை -ஆழ்வார் உகந்தார் -என்று
விரும்புகைக்கு அடி என் என்னில் –
என் தண்மையைப் பாராதே -என்னை விஷயீ கரித்த நீர்மையை அனுசந்தித்தால் –
அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவேனோ -என்ன –
உம்முடைய தண்மை யேது -அது பாராதே அவர் விஷயீ கரித்த படி என் -என்ன -அத்தைப் பேசுகிறார் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4

நன்மையால் இத்யாதி –
ஆத்ம குணங்களால் ப்ரசுரராய் -சம்சாரிகளுக்கு சுபாஸ்ரய பூதராய் இருப்பாரில் –
ஆழ்வாரை ஒழிந்தார் அடைய -இவன் அவஸ்து -என்று கை விடும்படி யன்றோ என்னுடைய-ஸ்திதி இருக்கும்படி –
ஒருத்தனுக்கு –நன்மையாவது
தோஷ குணங்களே ஆஸ்ரய ஸ்தலங்களாய் இருந்தால் தோஷத்தைவிட்டு குணாம்ஸத்தை-ச்வீகரிக்கை –
அதில் மிகுதி யாவது –
குணம் என்று பேரிடல் ஆவது ஓன்று இன்றிக்கே தோஷமேயாய் இருந்தால்
அது தானே பற்றாசாக கைக் கொள்ளுகை-

நான்மறையாளர்கள் –
அதுக்கடியாக ஹித அனுசானம் பண்ணக் கடவ வேதங்களிலே அவகாஹித்து இருக்குமவர்கள்
நாலு வகைப்பட்ட வேதங்களுக்கும் வ்யாசபதம் செலுத்த வல்லவர்கள்
அவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளார் -ஆதல்
கூரத் ஆழ்வான் -ஆதல்
இத்தால் -சொல்லிற்று ஆயிற்று -வேதார்த்த தாத்பர்யம் கைப் படுகை
அதாவது-ஆன்ரு சம்சய ப்ரதானர் ஆகை -என்றபடி-

புன்மையாகக் கருதுவர் –
புன்மை என்று ஒரு -தர்மமும் அதுக்கு ஆஸ்ரயமான தர்மியுமாய் இருக்கை அன்றிக்கே
புன்மை தான் ஒரு வடிவு கொண்டது -என்று இருப்பர்கள்
புன்மை யாவது -துக்கம் ஆதல் -பொல்லாங்கு ஆதல் -விஷயாந்திர ப்ராவண்யம் ஆதல் -துர்மானம் -ஆதல் -இது தான் மேலில் பாட்டில் ப்ரசக்தமாகக் -கடவது-

ஆதாலில் அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் –
அப் புன்மையே ஹேதுவாக -இவ்வளவில் நாம் அல்லது ரஷகர் இல்லை -என்று எனக்கு
சர்வ வித பந்துவுமானவர்
ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று-காகத்தோபாதி இவனுக்கும் புறம்பு ஒரு பற்றாசில் இல்லை என்றதே ஹேதுவாக-சர்வ வித ரஷகர் ஆனவர் –
பிரியமே செய்யக் கடவ மாதா செய்யுமதுவும் –
ஹிதமே செய்யக்கடவ பிதா செய்யுமதுவும் –
ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும் நாயகன்  செய்யுமதுவும் -செய்யுமவர்-

தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில்
ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

தன்மையான் –
அக்நிக்கு ஔஷண்யம் போலேயும் –
ஜலத்துக்கு சைத்யம் போலேயும் –
இஸ் ஸ்வபாவாங்களை நிரூபகமாக உடையவர் –
அதாகிறது -இவனுக்கு உபகரித்தோம் -என்று தான் நினைத்தல்
இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் -செய்யாது ஒழிகை-

–சடகோபன்
என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –
கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்
இப் பாட்டிலே சடகோபன் என்றார் இ றே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலே
என் நம்பி
தாய் செய்வது தகப்பன் செய்ய மாட்டான்
அவன் செய்வது இவள் செய்ய மாட்டாள்
ஆச்சார்யன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்
நாயகன் செய்யுமது அடியான் செய்ய மாட்டான்
எல்லார் செய்வதும் செய்ய வல்ல பூர்த்தியை உடையவர் –
என் நம்பியே –
என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்த ஆறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் என்னும் இத்தனை-
இவருக்கு கீழ்ச் சொன்ன த்ர்ஷடாந்தங்கள் சர்வதா சாம்யம் அல்ல
கர்ம ஔபாதிகமாக வந்த சம்பந்தம் ஆகையாலும்
பூர்ண ஸ்தலம் ஆகையாலும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 3- திரி தந்தாகிலும் தேவபிரானுடை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 9, 2013

மூன்றாம் பாட்டில் -தேவு மற்று அறியேன் -என்று -புருஷார்தங்களோடே கூட பகவத்
விஷயத்தையும் காற் கடைக் கொள்ளக் கடவீரோ -என்ன –
எனக்கு அபுருஷார்த்தம் என்னும் அளவாயிற்று காற் கடைக் கொண்டது –
ஆழ்வார் உகந்த விஷயம் -என்னும் இவ்வழியாலே -தேவு மற்று அறியிலும் அறிவன் என்கிறார் –
1-சூர்ப்பணகையைப் போலே கிடந்தானை கண்டு ஏறும் அது இ றே தவிர்த்துக் கொண்டது -2–விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று
3-பெரியாழ்வாரை முன்னாகப் பற்றும் ஆண்டாளைப் போலே ஆழ்வார் முன்னாகப் பற்றும் பற்றுத் தவிர்ந்திலரே –
ஆழ்வார் முன்னாக வரும் உத்தேச்யத்தை தவிர்ந்திலர் இ றே
பவத பரமோ மத -என்று கேட்க -தர்மோதிகதாமோ மக என்று ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதமாய் வருமது ஆதரணீயம் இ றே இவர்க்கு –

4-திரிபுரா தேவியார் வட கீழ் மூலையில் தத்வத்தையும் ஆஸ்ரயணீயாம் என்று உடையவர்-அருளிச் செய்தார் ஆகில் -எனக்கும் அதுவாம் அத்தனை அன்றோ -என்றாள் –
5-குணமலைப் பாடி உடையார் காங்கேயர் தெற்கே எடுத்து விட்ட போது
பிள்ளை ஆத்தான்  (கோயில் ஆச்சான் என்றும் சொல்வர் )-அங்கே  குறைவறுப்புச் சமைக்க -அவர் -உமக்கு வேண்டுவது என் –
என்று கேட்க -இவர் உம்மைக் கொண்டு பண்டே உபகாரம் கொண்டோம் காணும் -என்ன-ஆவது என் என்னை அறியாதே வருவதோர் உபகாரம் உண்டோ -என்ன-
எங்கள் ஆச்சார்யர் நான் கோயிலில் மண் பெற்றது அவ் வேளானாலே -என்று
அருளிச் செய்ய கேட்டு இருந்தோம் -இதுக்கு மேற்பட்டதோர் உபகாரம் உண்டோ -நமக்கு -என்றார் –
6-உடையவர் வெள்ளை சாத்தி எழுந்து அருளின காலத்தில் அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையாரை-பெருமாளை திருவடி தொழ வேண்டா -என்று விலக்க
ஆழ்வானை -நீர் ஆர் எனக்கு விரோதிகளோ நீர் புக்குத் திருவடி தொழல் ஆகாதோ -என்ன-ஆத்ம குணம் மோஷ ஹேது என்று இருந்தோம் -அது பந்த ஹேதுவான பின்பு
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யறுத்துக் கொள்ளவோ -என்று மீண்டு போந்தார்-

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

 

திரி தந்தாகிலும் –
திரி தருகை -யாவது மீளுகை –மீண்டாகிலும்
திரிதல் -என்றது கடைக் குறையான சொல்லாய் –திரி தந்தாகிலும் -போன வழி எல்லாம் மீண்டாகிலும் –
-அதாவது –
திருவாய்மொழிப் பாவை விட்டு –
இசைகளை விட்டு –
ஆழ்வாரை விட்டு –
அவர் உகந்த விஷயம் என்று பிரதம அவதியில் வந்து

தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் –
தேவபிரான்
நித்ய ஸூ ரிகளுக்கு தன்னை முற்றூட்டாக அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும் உபகாரகன் –
இவர் நின்ற நிலை குலைந்து –
பகவத் விஷயத்திலே நிற்கும் போதும் -அதின் எல்லையான நித்ய ஸூரிகள் யாத்ரையாய்-ஆயிற்று இருப்பது –
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு- (கரிய உரு –கோல உரு -திரு உரு )
நித்ய ஸூ ரிகளுக்கு படிவிடும் வடிவு -காளமேக நிபஸ்யாமமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே-இ றே இருப்பது –
கோலமே தாமரைக் கண்ண தோர் அஞ்சன நீலமே -என்று ஆழ்வார் வாய் புலத்து
கேட்டிருக்குமவர் ஆகையாலே பேசுகிறார் – (திரும்பி வராத இடத்தில் உள்ள அமரர்கள் அதிபதியை திரி தந்தாகிலும் காண்பேன் -திரும்பி வந்த பொழுதும் -நம்மால் போக முடியாத இடம் என்கிறாரே என்னை தைர்யம் -)

பரம யோகிகள் யோகம் கை புகுந்தால் -ஊர்வசி உடைய வடிவை வர்ணிக்குமா போலே
இவரும் இவ் விஷயத்தை வர்ணிக்கிறார்-(உத்தேச்ய புத்தியால் இல்லை என்றவாறு )
கரிய கோலம் என்று ஸ்ப்ருஹை பண்ணும்படி ஆழ்வார் வர்ணிக்க கேட்டு இருந்த படியாலே
காண்பன் –
சாஷாத் கரித்து அனுபவிக்கிற இவரை விட்டால் -பரம பத நிலையனை யாயிற்று சாஷாத் கரிப்பது –
நான் –
தேவு மற்று அறியேன் -என்று
பகவத் விஷயத்தை சந்யசித்த நான் –

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
மஹா உதாரராய்க் கொண்டு -திரு நகரியிலே திரு வவதரித்த ஆழ்வாருக்கு –
சர்வேஸ்வரன் உடைய ஔதார்யம் ஜீவியாத காலத்திலே தன் வாசி யறிவித்த ஔதார்யம் இ றே
குருகூர் நகர் -என்று –
வைகுந்த  மா நகரை வ்யாவர்த்திக்கிறது
பரம பதம் –என்பதது -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்பதாய் ஆழ்வார் படுமது எல்லாம்
இவரும் -திரு நகரி -என்றாலும் -ஆழ்வார் -என்றாலும் அப்படியே யாயிற்று அனுபவிப்பது-

நம்பிக்கு –
நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது –
அதாவது -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை-(குருகூர் நகரான என்னாமல் குருகூர் நம்பி -இதற்குள் குறுங்குடி நம்பியும் அந்தரபூதம் –இருப்பிடம் வேங்கடம் இத்யாதி -பூர்ணர் -அன்றோ -)
ஆள் உரியனாய் –
உரிய அடியனாய்
உரிய அடியாருக்கு -தம்தாமுக்கு -என்ற ஒரு பிரிய அப்ரியங்கள் இன்றிக்கே
ஸ்வாமி உகந்ததையே பற்றி
அவன் கை விட்டதை விட்டு இருக்கும் அது இ றே ஸ்வரூபம்
அடியேன் –
ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இ றே
பெற்ற நன்மை –
பெற்ற பகவத் லாபம் –
ஆழ்வாருக்கு உரிய அடியேனாய் பெற்ற பேறு இது இ றே
ப்ராப்த அப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மை அன்று -என்கை-

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

கண்ணி நுண் சிறுத் தாம்பு -2- நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 9, 2013

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

முதல் -பாட்டில் ஆழ்வார் -என்றால் தமக்கு ரசிக்கிற படியை சொன்னார் –
-இப்பாட்டில் அவருடைய பாசுரமே தேக யாத்ரையாம் படி-தாரகமான படியை சொல்லுகிறார் –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார் -அதில்
உண்டான ஆதார அதிசயத்தாலே –
மனஸ் -சஹ காரம் இல்லாத வுக்தி மாத்ரம் அடியாக -நிரதிசய சுகம் பிரயோஜனம்
ஆனால் பின்னாட்டுகை தவிராது இ றே-

நாவினால் நவிற்று –
-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –
-பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு
அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்
ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-

இன்பம் எய்தினேன் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற
பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி )-

மேவினேன் அவன் பொன்னடி –
ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் –
ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய
விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )
நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
ஆளவந்தார் அத்ரபத்ர -என்கைக்கு அடி இவர் இ றே- (3-மனஸ் ஸஹ காரம் இல்லாமல் நாவினால் நவின்றாலும் -மெய்ம்மையே மேவினேன் -உண்மையாகவே பேற்றைப் பெற்றேன் -)

தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று-
புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இ றே
அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே
சாஸ்திர வாசனையாலே யாதல் –
ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –

குருகூர் நம்பி-
இவரையும் பற்றி வேறு ஒரு விஷயத்தையும் பற்ற வேண்டும்படியோ இவருடைய
பூர்த்தி இருப்பது-(அரை வயிறு இல்லையே அந்த நம்பி போலே  )
குருகூர் நம்பி பா -என்கிறது -ஆழ்வார் திருவாயாலே அருளிச் செய்தது என்றது ஆயிற்று
திருவாய்மொழி தன்னையும் ஆதரிப்பது –அதிலே குருகூர் சடகோபன் -என்று அருளிச் செய்தார் இ றே -அவ்வழியால் யாயிற்று திருவாய் மொழியில் ஆதாரம் – (என் முன் சொல்லும் -யானே தன்னைத் தான் பாடி -அவன் சொல் அன்றோ -என்னில் -)
ஆழ்வார் ப்ரதிபாத்யர் ஆகையாலே –குருகூர் நம்பி பா -என்றது கண்ணி நுண் சிறுத் தாம்பை -சொல்லுகிறது என்னவுமாம் –

பாவின் இன்னிசை –
பாவோடே கூடப் புணர்ப்புண்ட இனிய இசை –
பாடித் திரிவனே-
உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –
ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –
உண்டு திரிவன் -என்னுமா போலே –பாடித் திரிவன் -என்கிறார்-
நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு உழி தருகின்றோம் -என்னுமா போலே இதுவே
யாத்ரையாய் இருக்கிற என்னுடைய கதி நிவ்ருத்தியை பண்ண வல்லார் உண்டோ-என்றுமாம் –
ப்ராக்ருத கர்ம பலத்தை யநுபவிக்கும் யமன் -கதி பங்கம்  பண்ணவோ
அதுக்கடியான விஷயாந்தரங்கள் கதி பங்கம் பண்ணவோ –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – 1-கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ண -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

May 9, 2013

முதல் -பாட்டில் -ஆழ்வார் உடைய நிரதிசய போக்யதையை -சொல்லுகிறது –
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –
ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர் -ப்ரதம அவதியான பகவத் விஷயத்தில்-இழிவான் என் -என்னில் –
ஆழ்வார் உடைய போக்ய  அதிசயம் தோற்றுகைக்காகவும் –
ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –
பையவே நிலையும் -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் –
ஆழ்வார் பக்கலில் இவர்க்கு உண்டான உத்தேச்யதை இருந்தபடி –
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின ஒரு கயிற்றின் உடைய உன்மானம் புறமானம்-ஆராயும்படி -ஆயிற்று இவர் பகவத் விஷயத்தில் கை ஒழிந்த படி –
இவர் ஆழ்வார் பக்கலிலே ந்யஸ்த பரர் ஆனபடி –

கண்ணித் -தாம்பு
உடம்பிலே கட்டப் புக்கால் உறுத்தும்படி பல பிணைகளை உடைத்தாய் இருக்கை
கண்ணி -முடி

நுண் தாம்பு –
உடம்பிலே அழுந்தும்ப்படி நேரியதாய் இருக்கை

சிறுத் தாம்பு –
இவனை கட்டின பின்பு உரலோடு சேர்த்த போராதாய் இருக்கை

கட்டுண்ணப் பண்ணிய-
உரலை நேரிதாகச் செதுக்கப் போகாது-அப்போதாகக் கையிற்றை நெடுக விடப் போகாது-இனி இவன் தன்னை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான்
காற்றில் கடியனே ஓடும் -இனிச் செய்வது என் என்று அவள் தடுமாறிய படியைக் கண்டான்

கட்டுண்ணப் பண்ணிய –
சதைக ரூப ரூபாய என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கொண்டு கட்டுண்ணும் படி பண்ணினான் –
கட்டுகைக்கு பரிகரம் இல்லை என்று நிவ்ருத்தை -யாமாகில்
பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் இத்தனை இ றே
ஆகையாலே திருமேனியிலே இடம் -கொடுத்தான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று -இருந்தான் என்றும் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் -என்றும் –
எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது -தான்
தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லன் -என்று இருந்தான் இ றே-

ஸ்வ வ்யதிக்ர்த்தரை யடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர் –
தாம்நா சைவயதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித -என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான்இ றே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது-ஸ்வ வியதிரிக்தரை அடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர் இப்போது
ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அன்றிக்கே -இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் -அபிமத விஷயத்தின் கையிலே அகப்பட்ட ஒரு
கரு முகை யாலே கட்டுண்டு அகலுவதற்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே
இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே யிருந்த யிருப்பும் –
பிறர் உடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது –
தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் -போகாது என்கை
ஆழ்வார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
உயர்வற உயர்நலம் உடையவன் -என்று அவன் குணத்தை வர்ணித்தார் –
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மை பற்றுகையாலே –
அவன் திருமேனியில் ஸ்பர்சித்த ஒரு தாம்பை வர்ணிக்கிறார் –
அவருடைய உத்தேச்ய வஸ்து இவர்க்கு வெளியதாய் கழிகிறது இ றே-

இவன் தன்னைக் -கட்டுவது-
ஒரு பெண்ணைக் களவு கண்டான் -வெண்ணெயை களவு கண்டான் -ஊரை மூலை
யடியே -நடத்தினான் -என்று இ றே -இவன் சாமான்யன் என்று இடும் ஈடெல்லாம் இடும் கோள்
என்று இருந்தான் -அதாவது களவிலே தகண் ஏறின படி -இவை கட்டி வைத்து அடிக்கப் புக்க வாறே
தொழுகையும் -என்ற படி தொழுக தொடங்குமே
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
போக்கடி அற்ற தசையில் அபிமத ஸித்திக்கு அஞ்சலியே சாதநம் -என்று அறிந்தவன் இறே-

அதி சஞ்சல சேஷ்டித –
துரு துருக்கையனாக கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் இல்லையோ –
இத்யுக்த்வா
ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சாசகார
-அவள் தான் கறப்பது கடைவது ஆகத் தொடங்கினாள் –
குடும்பிநீ
இவனைப் போலே நியமிக்க வேண்டுவது அநேகம் உண்டு இ றே-

பெரு -மாயன்
நிரதிசய ஆச்சர்ய -உக்தன்
-இத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் –
அது தன்னை ஷூ த்ரரைப் போலே களவாகிற வழி யல்லா வழியிலே இழிந்து
சர்வசக்தியானவன்
அது தன்னையும் தலைக் கட்ட மாட்டாதே
வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டு
அடியுண்டு
பையவே நிலையும்
என்று உடம்பு வெளுத்து நின்ற நிலை யளவும் செல்ல -நினைக்கிறார்-

என் -அப்பனில்
ஆழ்வார் இவருக்கு உத்தேச்யராய் நிற்க -இங்கனம் சொல்லுவான் என் -என்னில்
பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டார் ஆவர் இ றே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா –
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் -என்கிறபடியே
அவ்வருகே போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே துவக்குண்டு -சொல்லுகிறார் என்னவுமாம்-

என் அப்பனில் நண்ணி-
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் விஷயத்தில் கிட்டி
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தில் கிட்டுகையில் உள்ள அருமை போல் அன்றி
ப்ரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டு சரம அவதியான ததீய சேஷத்வத்தை கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் அதின் தோஷ தர்சநத்தாலே
இங்கன் ஒரு தோஷம் காண விரகு இல்லை யாகையால் இது அதிலும் அரிது

தென் குருகூர் -நம்பி-
நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இ றே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
எங்கனே என்னில் –
பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இ றே-
ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இ றே என்று ஜீயர் அருளிச் செய்வர் –

என்றக்கால்-
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு –
ஒரு உக்தி மாத்ரமே அமையும் இவ் விஷயத்துக்கு
பூர்தியால் வந்த ஏற்றமே அன்று -சௌலப்யத்தாலும் வந்த ஏற்றம் உண்டு என்கை-

அண்ணிக்கும்
தித்திக்கும்
பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆழ்வாருக்கு பிறக்கும் ஆநந்தம் எல்லாம்
இவ்விஷயத்தில் ஒரு உக்தி மாத்ரத்திலே எனக்கு சித்தித்தது –

அமுதூரும்
அமுதூற்று மாறாதே நிற்கும்
அவ்விஷயம் ஆழ்வாருக்கு தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே
எனக்கும் ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக செல்லப் பெற்றேன்

என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்
முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு
அதின் எல்லையில் நிற்கிற எனக்கு
ரசிக்குமா போலே ரசிக்குமோ

என் நாவுக்கே
அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம்
ரசிக்கிறது –என்றுமாம்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பு – தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் -/ ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த- வியாக்யானம் –

May 9, 2013

ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்கள்-

அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து —

அவிதித விஷயாந்தரச்-நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தை அறியாதவரும்
சடாரே ருபநிஷததாம் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸூ க்திகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
முபகான மாத்ர போக -இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
அபி ச குண வசரத் -குண வசிரதபிர -குணம் அடியாகவும்
த தேக சேஷீ -அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு சேஷியாகக் கொண்டவருமான
மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் ஆவிர்பவிக்கக் கடவர் –

தனியன் அவதாரிகை

அவிதித விஷயாந்தர -இத்யாதி
இதில் வேறு ஒன்றும் நான் -அறியேன் என்று -ஆழ்வாரை ஒழிந்த விஷயங்கள்
அவிவிதங்களாய் இருப்பாராய் –
சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையரான -ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய
அநுபவ பரிவாஹ ரூபமான -திருவாய்மொழியின் -காநமே -போகமாய் இருப்பாராய் –
அவ்வளவிலும் நில்லாதே -அதுக்கும் மேலே அவர் வாத்சல்யாதி குணத்தாலும் -தோற்று -அவரையே தம்மை அடிமை கொள்ளும் சேஷி -என்று அறுதி இட்டு இருக்கும்
ஸ்ரீ -மதுரகவிகள் -தன் நிஷ்டை -நிலை உண்டாகும்படி என் ஹ்ருதயத்தில்
ஸூ ப்ரதிஷ்டராய் ஆகக் கடவர் –என்கிறது

தனியன் வியாக்யானம் –

அவிவித விஷயாந்தர –
ஆழ்வாரை ஒழிந்த விஷயங்களிலே வ்யத்புத்தி பண்ணி யறியார் -என்கிறது –
சிந்தைமற்று ஒன்றின் திறத்தல்லா –என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி –மற்று ஒன்றினைக் காணாவே -என்னக் கடவது இறே –
இங்கு விஷயாந்தரங்கள் ஆகிறது –
பாட்டுக் கேட்கும் இடமான பர -விஷயமும்
கூப்பீடு கேட்கும் இடமான வ்யூஹ விஷயமும்
குதித்த இடமான விபவ விஷயமும் –
வளைத்த விதமான அந்தர்யாமி விஷயமும் –
ஊட்டும் இடமான அர்ச்சாவதாரவிஷயமும் —
எல்லாம் வகுத்த விஷயமான ஆழ்வாரே ஆகையாலே மற்று ஒரு விஷயங்களையும்
அறியாதே இருப்பர் –

மாதா பிதா இத்யாதி
அன்னையாய் -அத்தனாய் -சர்வம் யதேவ –
சமஸ்த சாம்சாரிக விஷய சுகங்களும் சடகோபாச்சார்யர் என்று அறுதி இட்டு –
தத் அந்யங்களை அறியாதவர் –என்றுமாம்
ஆழ்வார் -எல்லாம் -கண்ணன் என்று இருக்குமா போலே
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த
வம்மான் கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் -என்றும் –
மொய்த்தே திரை மோது தண் பாற்கடல் உளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம் பரனை
வைத்தேன் மதியால் -என்கையாலே -அவனும் கிடந்தது என் நெஞ்சு -அகலான் -என்றும் –
உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் -புணர்ந்தான் என்றும் –
எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப வுள்ளே இருக்கின்ற பிரான் -என்றும்
கண்கள் சிவந்திலே -அப்படியே -ஒருவன் அடியேன் உளான் -என்றும் –
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் -புகுந்தான் என்றும் –
விண் மீது இருப்பாய் -என்கிற -ஐந்தும் எனதாவியுள் மீதாடி -என்றும் –
தேவர் கோலத்தோடுமானான் என்கிற தெய்வ உருவில் இவர்க்கு எல்லாம் உண்டாகையாலே
அவற்றை அறியத் தேவை இல்லை இ றே-
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியர் ஆகையாலே ஆயிற்று –
கரிய கோலத் திரு உருக் காண்பன் -என்றதும் –

அதவா –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்கையாலே –
சடாரியைக் காட்டிலும் அறியாமல் இருப்பதான -அந்ய விஷயங்களை உடையவர்
என்கிறது –
அதாவது -ஆழ்வார் கழிக்குமது -இளம் தெய்வத்தை யாயிற்று –
இவர் கழிக்குமது –கழி பெரும் தெய்வமாய் -கரும் தெய்வமான -கண்ணனான
பெரும் தேவனை யாயிற்று –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணி -என்றார் இ றே-
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் –
ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமே -என்றும் –
தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர்கள் பேச்சு இருப்பது –
இப்படி ஆழ்வாரில் வ்யாவருத்தராய் இருக்கிற இவர்-

சடாரே ருபநிஷதர முபகாநமாத்ரே போகர் -ஆகையாவது –
நாட்டியல் ஒழிந்து சடரை ஒட்டின சடகோபன் மொழி பட்டோடும் கவி அமுதமான
யாழின் இசை வேதத்தின் பண்ணார் பாடலின் அநுபவ ரச ஜ்ஞராய் –
பாவின் இன்னிசை பாடித் -திரிவேன் என்றும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே –
என்று இருக்கை -என்றபடி-
இத்தால் –
அவரோபாதி அவர் சம்பந்தம் உடையதும் உத்தேச்யம் -என்று ஆயிற்று இவர் விரும்புவது –

அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்று ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் -சொல்லிற்று
அபிச குணவ ஸாத்தா தேக தேஷீ -என்று குணாக்ருத தாஸ்யமு+ம் உண்டு என்கிறது
அபிச -கீழ் சொன்ன அளவு அன்றிக்கே பின்னையும் –
குணவ ஸாத் -என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது –
ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -என்றும் –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்றும்
அனுசந்தித்த வாத்சல்யாதி குண பூர்த்தியாலும் குணைர்த் தாஸ்யம் உபாகதராய்
தத் ஏக சேஷியாய் இருப்பார் ஆயிற்று –

ஏவம் பூதரான –மதுரகவி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னும்படியான
வாக் மாதுர்யத்தை உடையவர்
மம ஹ்ருதயே –
மதுரகவி நிஷ்டையை அபேஷிக்கிற என் மனச்சிலே -நின்று இருந்து
பட்டோலை கொண்ட நிலையோடே
ஆவிரஸ்து
ஆவிர்ப்பிக்கக் கடவர் –
சந்நிதானம் பண்ணக் கடவர்
இத்தால் -அனுகூலரான ஆசார்ய பரதந்த்ரர் ஆதரணீயர் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

————————————————————————–

வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
யாள்வார் யவரே யரண் –

வேறு ஒன்றும் நான் அறியேன் –
ஆழ்வாரை ஒழிய தேவு மற்று அறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரஷகரும் அவரே என்கிறது –
வேறு ஒன்றும் நான் அறியேன் -வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் -என்னும் அளவும் மதுரகவி சொல்லை அனுகரித்து சொன்னபடி
மேல் ஏவம்வித ரானவர் நமக்கு சேஷியும் சரண்யரும் -என்கிறது –
தேவு மற்று அறியேன் –என்றத்தை –வேறு ஒன்றும் நான் அறியேன் -என்றது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சினுள் -நிறுத்தினான்
என்றத்தை –வேதம் தமிழ் செய்த -என்றது –
காரி  மாறப் பிரான் -சடகோபன் என் நம்பி -என்றத்தை –மாறன் சடகோபன் -என்கிறது
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே
என்றத்தை –வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் -என்றது

எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்றத்தை –ஏறு எங்கள் வாழ்வாம் என்று -ஏத்தும் என்றது
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி -என்றத்தை-வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும்-எம்மை யாள்வார் -என்றது –
அவரை ஆளுகிறவர் ஆழ்வார் -நம்மை ஆளுகிறவர் இவர்
யவரே யரண் –
ரஷை
சரண் -என்ற பாடமான போதும் ரஷை என்றே அர்த்தம் –
மதுரகவிக்கு எல்லாம் ஆழ்வாரே ஆனால் போலே-நமக்கு எல்லாம் மதுரகவி -என்கிறது

————————————————————————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த-வியாக்யானம்-

பிரவேசம்-

த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே -ஐஸ்வர்யாதி சகல புருஷார்த்தங்களையும் யதாதிகாரம் விதிக்கிற-வேத மர்யாதையிலேநின்றார்கள் ருஷிகள் –
அதாகிறது வேத உப ப்ரும்ஹண முகத்தாலே சேதனருடைய குண அநுகூலமாக
ஐஸ்வர்யாதி ஷூத்ர புருஷார்த்தங்களையும் -பரம புருஷார்த்த  லஷணமான
மோஷத்தையும் உபதேசிக்கை –
கேவல சரீர  அனுஷ்டானங்களே ஐஸ்வர்ய விசேஷங்களுக்கு சாதனமாக உபதேசித்து –
கைவல்ய நிஷ்டருக்கு ஆத்ம ப்ராப்தியை உபதேசித்து -நித்ய சத்வஸ்தருக்கு பகவத் ப்ராப்தியை உபதேசித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –

இந்த ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு நெடு வாசி உண்டு -எங்கனே என்னில் –
வேத தாத்பர்யமாய் -உத்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தியில் நிஷ்டராய் –
பிறருக்கும் உபதேசிக்கும் இடத்திலும் சாஸ்திர சித்தமான ஐஸ்வர்யாதிகளையும்
த்யாஜ்யமாக உபதேசிக்குமவர்கள் இ றே
இவ் விலஷண புருஷார்தத்தின் காஷ்டையான ததீய சேஷத் வத்தளவிலே
வரப் புகுர நின்றார் ஸ்ரீ மதுர -கவிகள்

இவர்க்கு இவ் வேற்றம் வந்தபடி எங்கனே என்னில் –
ஆழ்வார் -பொய் நின்ற ஞானம் -தொடங்கி -அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
செல்ல அனுபவித்த இடத்தில் ஆழ்வார் தமக்கு புருஷார்த்த காஷ்டையாக அபிமதமான
ததீய சேஷத்வத்தைப் பற்றுகிறார் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதரான அர்த்தமே சாத்விகருக்கு-பரிக்ராஹ்யம் -என்னும் இடம் மகாபாரத சாரமான ஸ்ரீ சஹஸ்ரநாம அத்யாயத்திலே-சொல்லிற்று இ றே

ஸ்ரீ  பீஷ்மர் பக்கலிலே சகல அர்த்தங்களையும் குறைவறக் கேட்ட தர்ம -புத்திரன்
இவ்வர்த்தம் தமக்கு உத்தேச்யமாக ஸ்வீகரித்த தத்வ ஹிதங்களே நமக்கு உத்தேச்யம் என்று-நினைத்து –கேட்க தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசித்தான் இ றே –
த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலோ -எம்பிரானே ஆஸ்ரயணீ யன் -என்று
நீங்கள் பற்றிற்று -என்ன -அது ஒன்றும் அன்று –எம்பெருமானார் காழிச்சால் மூலையில்-தேவதையை ஆஸ்ரயித்தார் ஆகில் அதுவும் எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக்--கடவது -என்றாள் –
அந்த ந்யாயத்தாலே -ஆழ்வார் தமக்கும் தஞ்சமாக நினைத்து இருக்கும் ததீய சேஷத்வத்தையே-இவரும் தமக்கு புருஷார்த்தமாக அத்யவசிக்கிறார்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

————————————————————————–

ஸ்ரீ கோவில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –