Archive for the ‘Ashtaadasa Rahayangal’ Category

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரின் ஸ்ரீ மடிபிடி ரகஸ்யம்

December 1, 2024

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று ஸ்ரீ முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

பாசுரத்தை கேட்டு இவர் கால்வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச்சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

கால் வாசி அறிந்தவர்
லீலா விபூதி அறிந்தவர் -த்ரிபாத் விபூதி அறிய வேண்டியவர்
திருவடி வைலக்ஷண்யம் அறிந்தவர் திவ்ய மங்கள விக்ரஹ வைலக்ஷண்யம் அறிய வேண்டுபவர்

ஆழ்வார் திருமுடியில் அசைந்தாடும் பூ மாலைகளை சூடி இருப்பதைக் கண்ட மா மதலைப் பிரான்
ஆஹா அவற்றின் மீது புனுகுத் தைலம் பரிபூர்ணமாக கோருவது போல் நமது திருவடிகளை சிரம் மீது வைக்கப் புகுந்தான்

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம் கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

அவர்கள் எங்கே உளர்-இருள் தரும் மா ஞானத்தில் அன்றோ இவர்கள் இருப்பது என்ன- என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-2-6-4—விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே வாடினேன் வாடி என்று-நம்மைக் கவி பாட என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜ புருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை
விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் வைபவம் /ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

September 16, 2024

திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம்

அவதார ஸ்தலம்: திருவரங்கம்

ஆசார்யன்: வடக்குத் திருவீதிப் பிள்ளை

ஶிஷ்யர்கள்:  கூர குலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப் பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட் குழி ஜீயர், திருக் கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்.

பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)

அருளிச் செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

நம்பிள்ளையின் திருவருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்குத் திருவரங்கத்திலே திருக்குமாரராய் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர். அயோத்தியில் பெருமாளும் இளையபெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட் பார்வைக்கும் வழி காட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றை பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது திருத் தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச் சிறப்பு யாதெனில் இவ் விருவரும் தங்கள் வாழ் நாளில் நைஷ்டிக ப்ரஹ்ம சர்யம் அனுட்டிக்கப் போவதாய் ஶபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .

ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் ஶிஷ்யனுக்கு உபதேஶிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் ஶிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேஶித்து வந்தார். மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப் பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேஶங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேஶங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேஶங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்

யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதஶையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்)  திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேஶிக்குமாறு உத்தர விடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாஶாஸனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும்  உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .

நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருமவை மிக முக்கியமானவை .

  • முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா  மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை  எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் . 
  • தத்வ த்ரயம்  – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது.  பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது . 
  • ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் –  ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து  ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் . 

நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணர வேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ் வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணி ப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன்  ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேரிரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.

ப்ரமாண ரக்ஷணம் செய்ததோடன்றி ப்ரமேய ரக்ஷணமும் செய்து கொடுத்த வள்ளல் இவரே. திருவரங்கத்தில் அனைத்தும் நலமாக நடந்து வந்து கொண்டிருக்கும் வேளையிலே தான் திடீரென்று துலுக்கர்களின் படையெடுப்பு செய்தி காட்டுத் தீ போல் பரவியது. கோயில்களிலே இருக்கும் செல்வங்களை சூறையாடும் துலுக்க மன்னர்களின் போக்கை அறிந்தவர் அனைவரும் இச் செய்தியை அறிந்து துன்புற்று நிற்க, அக்காலத்தின் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் எழுந்தருளி இருந்த பிள்ளை உலகாரியர் அரங்கனை காக்கும் திருப் பணியில் ஈடுபட்டார். பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு , இவர் உத்ஸவ பேரரான நம்பெருமளுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டார். தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது நம்பெருமாளுடன் இவர் பயணமானார். காடுகள் வழியாக நம்பெருமாள் எழுந்தருளிச் செல்லும் போது  சில திருடர்கள் நம்பெருமாளின் திருவாபரணங்களை திருடினர். சற்றே முன்னே சென்று கொண்டிருந்த பிள்ளை லோகாசாரியர் இதனைச் செவியுற்று வந்து திருடர்களுக்கு நன்மையை போதித்து அவர்களைத் திருத்திப் பணி கொள்ள, அவர்களும் சரணடைந்து பெருமாளின் திருவாபரணங்களை மீளவும் ஸமர்ப்பித்தனர்.

மதுரையில் ஆனை மலைக்குப் பின்புறம் உள்ள ஜ்யோதிஷ்குடி என்ற சிறு க்ராமத்தைச் சென்றடையும் நேரத்தில், வயோதிகத்தால் திரு நோவு சாற்றிக் கொண்ட பிள்ளைலோகாசாரியர், திருநாட்டிற்கு எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.அச் சமயம் பிள்ளை லோகாசாரியர் தனது சீடர்களில் ஒருவரான திருமலை ஆழ்வாரை நினைத்து, அவரே தமக்கடுத்து ஸம்ப்ரதாய தலைவர் ஆக வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். கூர குலோத்தம தாஸர் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களை அழைத்து, திருமலை ஆழ்வாரை அவரது அரசாங்க பணியிலிருந்து விடுவித்து தரிஶன ப்ரவர்த்தகர் ஆகும் படிக்குத் திருத்திப் பணி கொள்ளுமாறு நியமித்தார். இறுதியாய் தனது சரம திருமேனியை துறந்து இன்பமிகு விண்ணாடு என்று போற்றப்படும் பரமபதத்தை அலங்கரித்தார்.-ஜ்யோதிஷ்குடி – பிள்ளை உலகாரியன் பரமபதம் அடைந்த இடம்

பிள்ளை உலகாரியன் மற்றும் சீர் வசன பூஷண ஶாஸ்த்ரத்தைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு விஶதவாக் ஶிகா மணியான மணவாள மா முநிகள் உபதேஶ ரத்தின மாலையை அருளினார். இதில் மணவாளமாமுநிகள் ஆழ்வார்கள் திருவவதார விஷயமாகவும், ஆசார்யர்கள் திருவவதார விஷயமாகவும், ஆசை உடையோருக்கெல்லாம் ஸத் ஸம்ப்ரதாயத்தைத் திறந்து வைத்த எம்பெருமானாரின் பேரிரக்கத்தின் விஷயமாகவும் , திருவாய்மொழி வ்யாக்யானங்களின் திருவவதார விஷயமாகவும் விளக்கி, பின்னர், பிள்ளை உலகாரியரின் திருவவதாரம் விஷயமாய் ஸாதிக்கத் துவங்கி, சீர் வசன பூஷணத்தின் பெருமைகள் மற்றும் அது கொண்டுள்ள சீரிய அர்த்தங்களின் பெருமைகள் தனை விளக்கி, இறுதியாய், அவ்வர்த்தங்கள் காட்டும் பாங்கிலே நாம் வாழ வேண்டும் என்றும் அவ்வாறாக வாழ்ந்தோமே ஆனால், எந்தை எதிராசரின் (எம்பெருமானாரின்) இன்னருளுக்கு இலக்காகுவோம் என்றும் உபதேஶிக்கிறார். மேலும் பூர்வாசார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் மீது நம்பிக்கை வைக்காது , நம் புரிதலை கொண்டும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் நாமாகவே இவை தான் அர்த்தங்கள் என்று உரைக்க முற்பட்டால், நாம் மூர்க்கர் என்று ஆவோம் என்று ஸாதிக்கிறார். மூர்க்கர் போன்ற அப ஶப்தங்களை ஒரு போதும் உபயோகிக்காத அழகிய மணவாளமாமுநிகளே இவ்வாறாக ஸாதித்துள்ளார் என்றால், பூர்வர்களின் நிலைக்கு மாறாக நடப்பது அத்தனை பெரிய குற்றம் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். இதுவே ஸ்ரீ வசன பூஷணத்தின் ஸாரம் என்றும் பெரிய ஜீயர் தனது அரிய உபதேஶ ரத்தின மாலை பிரபந்தத்தில் எடுத்துக் காட்டுகிறார் .

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளுவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .

ஸ்ரீ வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் உபகார ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் விசுவாசத்துடன் பிள்ளை லோகாசாரியர் இடத்தில் இருத்தல் வேண்டும். பிள்ளை உலகாரியன் இல்லையேல், நம்பெருமாளையோ எம்பெருமானார் தரிசனத்தின் ஆழ்பொருள்களையோ  நாம் காணவே முடியாது .

எம்பெருமானார் திருவடிகளிலும் நம் ஆசார்யன் திருவடிகளிலும் மாறாத பக்தி ஏற்பட நாம் பிள்ளை லோகாசாரியர் திருவடிகளை வணங்குவோம்.

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் – 006 – உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல?

அயோத்தியில் பெருமாளும் இளைய பெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது தம்பி  அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட்பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றைப் பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலேயே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச்சிறப்பு யாதெனில் இவ்விருவரும் தங்கள் வாழ்நாளில் நைஷ்டிக ப்ரஹ்மசர்யம் அனுட்டிக்க போவதாகச் சபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .

சம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் கனவில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேசித்து வந்தார். ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். (இவனே பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று பெயர் சூட்டிக் கொண்டான்). கிபி 1321 ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.  

தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். இவனது வெறிகொண்ட படை வீரர்கள் கடந்து வந்த பாதை தோறும் சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப் பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோவில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்து போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும். சமயபுரம் என்று அழைக்கப் பெறும் கண்ணனூரில் கடுமையான போர் நிகழ்ந்தது.  

படையெடுப்பு என்பது ஒரு துயரவியல் நிகழ்வு.  அமைதியாய் வேதவாய் மொழி அந்தணர்களை வாழ்ந்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத துயரம்.  ஆக்கிரமிக்கும் படை –  ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், செல்வங்களையும் கவர்ந்து,  திருவரங்கம் வாழ் மக்களுக்கு சொல்லொணாத் துயரம் தருகிறது. அரங்கன் தங்கள்  குலதனம் என்று எப்போதும் வாழும்   ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் அரங்கனிடத்திலே தங்களை அர்ப்பணித்து கைங்கர்யம் செய்த தேவதாசிகள், செந்தமிழும் வேதமும் சிறப்புற அறிந்த கைங்கர்ய பரர்கள், அச்சமயத்தில் வாழ்ந்திருந்த  வேதாந்தாச்சார் மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் போன்றோர் பலர் சேர்ந்து அரங்கனை காப்பாற்றப் பாடுபடுகின்றனர்.  

பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு,  உற்சவரின் அதி சௌந்தர்யமான திருமேனியை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார்  சில வீரர்களுடன்,  சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார்.  

திருக்கோபுரத்து நாயனாரும், பிள்ளைலோகாசாரியரும் அவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடு பல்லக்கில் எழுந்தருளிப் பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள். காட்டு வழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்துச் சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். இவை எல்லாம் நடந்த கொடிய காலத்தில் உலகாரியருக்கு  தள்ளாடும் பருவம் – நூற்றை தாண்டி நாம் நடக்கக் கூட சிந்திக்கும் பிராயம்.   

தன் தள்ளாத வயதில், அரங்கன் மீது கொண்ட பிரேமையாலே பல நாட்களுக்குப் பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தைச்  சென்றடைந்தார்கள்.  வெறி பிடித்த அரக்க மனம் கொண்ட கொள்ளையர்கள் கூட்டம்  ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்றதாகக் கோவில் ஒழுகு உரைக்கிறது.  இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.  

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118 ஆவது வயதில் உலகாரியர்  திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து மதுரை ஆனைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளி படுத்தி திருவரசு எழுப்பினார்கள்.  அப்படி உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல என்கிறாள் திருவல்லிக் கேணி பெண்பிள்ளை.

திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம்  என சென்று, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துக்  திருப்பதிக்கு செல்கிறார்.  உலுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.

1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்த பிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்ய காலத்திற்குச் சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக் கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு).  

(பிள்ளை லோகாச்சாரியர் 1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் திருநாடு அடைந்ததாக வரலாறு குறிக்கிறது.  இதில் கால வேறுபாடுகள் வரலாற்றில் இருந்தாலும் நமது இந்துக்கள் வரலாறு முகலாயர் வரலாறு போல தெளிவாக எழுதப் பெறவில்லை.  சிலர் அவர் 1311 ஆம் ஆண்டு தமது 106ஆம் அகவையில் திருநாடு அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  அதில் இப்படிப் பல குழப்பங்களை அன்றைய வரலாற்று அறிஞர்கள் வேண்டும் என்றே எழுதி நம் இந்து குருமார்களின் பல சாதனைகளைச் சந்தேகிக்க வைத்து விட்டனர்.)

மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று பயிலத் துவங்கினார் , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு சம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதசங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேசங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கிப் பயணித்துக் காட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேசங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” (பெண் பிள்ளை வாக்கியம் 2ஐ இங்கு நினைவு கூர்க) என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.

யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதசையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்)  திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேசிக்குமாறு உத்தரவிடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாசாசனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும்  உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .

நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருபவை மிக முக்கியமானவை .

இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக அஷ்டதச ரகசியம் என வைணவர்களால் அழைக்கப்படுகிறது. முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவகளை முதன்முறையாக எழுத்துக்களில் கொணர்ந்த பெருமை இவரையே சாரும். 

  • தத்துவத் திரயம் – வடமொழியில்
  • முமுக்‌சுப் படி – மணிப்பிரவாள நடையில்
  • வசன பூசணம் – தமிழில் வைணவம், ஆழ்வார்கள் குறித்து
  • முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா  மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை  எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் . 
  • தத்வ த்ரயம்  – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது.  பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது . 
  • ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் –  ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து  ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் . 

நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணரவேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ்வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணிப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன்  ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேர் இரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:பிள்ளை லோகாசாரியரின் தனியன்: 

வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம்                      வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார்  இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.பிள்ளை லோகாசாரியரின் வாழி திருநாமம்:

———–

ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

—————————–

முதல் -10-ஸ்லோகங்களால் ஸ்ரீ ரெங்க நாதன் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ விஷ்வக் சேனர் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் /ஸ்ரீ பட்டர் / ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம் பிள்ளை / ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை /
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் / ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் -இவ்வாறு குரு பரம்பரை ஸ்தோத்தம் செய்து அருளி
11-ஸ்லோகம் தொடங்கி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை ஸ்லோகம் செய்து அருளுகிறார் –

காவேரி புலி நாந்தராள லஹரி கல்லோல மாலா லசித்
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ் நித்ரா நிபத்தாதரம்
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமலஜே நாராதிதம் ஸ்ரீ சகம்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத
–1–

காவேரி புலி நாந்தராள-ஸ்ரீ காவேரி மணல் திட்டிலே
லஹரி கல்லோல மாலா லசித் -சிறிய பெரிய அலைகளால் தீண்டப் பட்டு –
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ்-திரு அனந்தாழ்வான் மேலே திருப் பள்ளி கொண்டு அருளி –
நித்ரா நிபத்தாதரம்-யோக நித்திரை செய்து அருளி
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமல ஜே நாராதிதம் ஸ்ரீ சகம் -ஸ்ரீ கஸ்தூரி திலகம் பூண்டு -சத்ய லோகத்தில் சதுர் புஜ பிரமனால்
ஆராதிக்கப் பட்டு -பெரிய பிராட்டியார் உடன்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத –ஸ்ரீ கௌஸ்துபம் பூண்டு திரு ஆர மார்பன் –
ஸ்வ பாவிக -பராத் பரன் -நமக்கு அருளை பொழியட்டும் –

—————————-

நாத லோக பால நதியா மருத் வ்ருதா
புளிநம் ஜகாம நளிநம் விஹாய யா
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா
கருணா தரங்க விததீர பாங்க ஜா
–2-

நாத லோக பால நதியா மருத் வ்ருதா-புளிநம் -திருக் காவேரி மணல் திட்டின் மேலே -ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்துக்காகவே
ஜகாம நளிநம் விஹாயயா -தாமரை மலர் வாசம் விட்டு வந்து அருளி
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா-கருணா தரங்க விததீர் அபாங்க ஜா -ஸ்ரீ ரெங்கநாதன் மேலே அளவு கடந்த பிரியத்துடன் இருப்பவள்
கடாக்ஷித்து அருளும் அருள் அலைகள் நம்மிடம் வீசட்டும் –

—————————————–

யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ
ஸ்பந்தஸ் ஸூரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா
வைகுண்ட ஸூரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே
–3-

யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ –தாமரைக் கரங்களில் -ஸ்வர்ண ஒளிமயமாக திருப் பிரம்பின்
ஸ்பந்தஸ் ஸூ ரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா-சிறு அசைவாலேயே அசுரர்கள் நிரசனத்தால் தேவர்கள் பயங்களைப் போக்கி அருளி
வைகுண்ட ஸூ ரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம-நித்ய ஸூரிகள் தலைவராக இருந்து
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே –ஸூ த்ரவதி பதியாக இருந்து -உலகோரை மகிழ்விக்கிறார்

————————————-

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே
ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்
மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது
–4–

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே –ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே –ஸமஸ்த வித பாபங்களையும் ஆஸ்ரிதர்க்குப் போக்கி அருளுபவர் –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி நிலைகளான ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரே சரண் ஆவார் -அவர் திருவடிகளை மீண்டும் மீண்டும் அடியேன் தலையால் வணங்கி
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்-மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது-அவர் திரு முடியில் சாத்தி இருக்கும்
வகுள மாலை கந்தம் அடியேன் வாக்குக்கும் மொழிக்கும் மனம் அருளிச் செய்ய வேண்டி ஸ்துதிக்கிறேன் –
வகுளாபரணர் அன்றோ -அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே என்றவர் திருவடிகளை பற்றி தம் வாக்குக்கும் அமுதூட்ட சரண் அடைந்து பிரார்த்திக்கிறார்

——————————————————–

விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய
சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம்
ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம்
ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம
–5-

ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம் -ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம –ஸ்ரீ பாஷ்யகாரர் -யதிராஜா ஸார்வ பவ்ம்யர் –
பர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் நன்றாகக் காட்டி அருளி
விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய -சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம் -விகசித்து -ஸ்ரீ பாஷ்யம் மூலமாக
ஸ்தாபித்து அருளியவர் நம்மை ரஷித்து அருளட்டும் –

—————————————————–

கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண –
6-

கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா –ஸ்ரீ கூரேசர் ஸ்ரீ எம்பார் திருவடிகளில்
கைங்கர்யத்தால் விளைந்த உகந்த திரு உள்ளம் உடைய
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண -ஸ்ரீ பராசர பட்டர் வேதாந்தியான
ஸ்ரீ நஞ்சீயர் உடன் -அடியேனை கடாக்ஷித்து அருள் பொழியட்டும்

———————————–

யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம்
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்
–7-

யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம் -சரஸ்வதி -சகல கலா வல்லவள் நாக்கு நுனி நாட்டிய அரங்கத்தில் ஆட விரும்பி
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்-நம் பூர்வாச்சார்யர்கள் -திராவிட வேதாந்தாசார்யர்கள்
ஆழ்வார்கள் அருளிச் செயல் வியாக்கியானங்களை உகப்புடன் நமக்க அருளிச் செய்ய அருளி
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே -ஸ்ரீ கலிகன்றி தாசர் –நம்பிள்ளை -ஸ்ரீ கந்தாடை தோழப்பர்
லோகாச்சார்யார் என்று உகந்து சூட்டி அருளி -பின்பு நஞ்சீயர் நம்பிள்ளை என்று அன்புடன் சூட்டி அருளப் பட்டவரும்
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்—ஸ்ரீ கிருஷ்ண என்பவரான ஸ்ரீ -வடக்கு திரு வீதிப் பிள்ளை யுடைய
ஆச்சார்யருமான அவர் அடியேனை கடாக்ஷித்து வாக் வன்மை அருளட்டும் –

——————————————————

அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா
–8-

அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ-அந்த ஸ்ரீ நம்பிள்ளை திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற கொடிக்கு மரம் போன்றவரும்
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா -ஸ்ரீ கிருஷ்ண என்ற திரு நாமம் உடையவரும்
வடக்குத் திரு வீதியில் வாழ்பவருமான அவர் அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும் –
முடும்பை நம்பிகள் திரு வம்சம் -ஸ்ரீ ஈடு படுத்தி அருளியவர் -மட் அம்பி -மண் பானையில் தண்ணீர் என்பதே முடும்பை என்பர் –

————————————————————–

வத்ஸான் வவாய வரணீய பய பயோதே
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ்
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்
லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்
–9–

வத்ஸான் வவாய வரணீய பய பயோதே—
பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றிய -குல விளக்கான –
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ் –உலகில் ஒளி மிக்கு விளங்கிய ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் சந்திரன் போலேயும்-
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்-லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்–ஸ்ரீ வடக்கு திரு வீதி பிள்ளையும்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் -இருவரையும் தியானிக்கிறேன் –

——————————————————

வாணீ புண்ய ஸூதா பாகம் ஷட ஜித ஸ்வைரம் விகாஹ் யாதராத்
ஆநீயாம்ருத மத்ர சக்ர துருபவ் பா நீயஷாலாத்மகம்
யவ் வாக் பூஷண தேசிகேந்த்ர ஹ்ருதயாபிக்ய பிரபந்த த்வயம்
தவ் வந்தே புவ நார்ய ஸூந்தர வரவ் க்ருஷ்ணாத் மஜவ் தேஷி கவ்
–10-

ஸ்ரீ நம்மாழ்வார் உடைய இனிய திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ அவற்றில் ஆழ்ந்து
நாம் பருகும் படி -ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -என்ற இரண்டு
வடக்கு திருவீதி பிள்ளை திருக் குமாரர் இருவரையும் வணங்குகின்றேன் –

—————————————–

மது ரிபு மஹி லாயா ஸ்பிதவீஷா சரோஜாத்
மதுரக்பாணி திப்ருங்கீ நிர்கதா காசி தோஷா
புவன குரு பாதாப்ஜ த்வன்ட்வ நிர்யன் மரந்டான்
அநுதினம நு பூயா அனந்த சாந்த்ரா மமாஸ்து
–11-

அடியேனுடைய ஸ்ரீ ஸூ க்திகள் இனிமையையாயும் திவ்யமாயும் இருப்பது ஸ்ரீ மது சூதனன் திவ்ய மஹிஷியான
ஸ்ரீ மஹா லஷ்மி கடாக்ஷத்தின் பயனாக வந்தாலே தானே –
அவை மேலும் வன்மையும் திடமும் அடைய அடியேன் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் மேல் ஸ்தோத்ரம் பண்ணி
அவருடைய ஸ்ரீ ஸூ க்திகளை நித்யமும் அனுசந்திக்கிறேன் –

—————————————————–

மணி பிரவாளாந் ஜித ஸூக்தி ஸூநை
விபூஷி தாஷேஷ சஹஸ்ர ஷாகம்
அகல்பயத் கந்ஜந கல்ப வ்ருக்ஷம்
க்ருஷ்ண ஷிதவ் லோக குரூத்த மாக்யம்
–12–

ஒப்பில்லா கற்பக வ்ருக்ஷம் போலே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்உடைய -மணி பிரவாள – திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் நம்மை ரக்ஷிக்கட்டும் –
செழும் கற்பகத்தை -கற்பகச் சோலை -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கற்பக வல்லிம்–என்னை ஆள வந்த கற்பகம் -என்பர்கள் –

————————————–

தேவீஷூ பத்ம நிலயா தயிதா பபூவ
பக்தேஷூ ஸோ அபி வகுளங்க முநிர் வரேண்ய
ஆர்யேஷூ நிர்மல குணஸ் த்வய மந்தரங்க
ரங்காதி பஸ்ய ந்ருபதே ஜகதார்ய நாமா
–13–

மலர் மகளான பெரிய பிராட்டியாரை போலவும் வகுளாபரணரான ஸ்ரீ நம்மாழ்வாரை போலவும்
ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களில் நிர்மல குணம் உடைய ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை அந்தரங்கமாக கொண்டு அருளுபவர் ஸ்ரீ ரெங்க நாதர்

—————————————————-

ஹ்ருதய முகுர பிம்பம் யத் த்வ ஹங்கார பங்க
ஸ்தகித விமல ரூபம் ஸ்வோக்தி ஷூத் தாம்பு பூரை
புவன குருவர ஸ்தச்சோத யித்வா ஜனாநாம்
சிதசித திபதீம் த்ரீன் தர்ஷயன் பாதி தத்ர–
14-

அஹங்காரம்-போன்ற அஞ்ஞானங்கள் -மனக் கண்ணாடியில் அழுக்கு போலே -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
தம் ஸ்ரீ ஸூக்திகளால் இவற்றை அகற்றி -தத்வ த்ரயம் ஞானமும் ஸ்வரூப யாதாம்ய ஞானமும் அருளுபவர்

———————————————–

ஜனி ஜலதி பரீ தாகரா லீநா ஆத்ம பங்க்த்யை
த்ரிவித விஷய த்ருஷ்ணா ராக்ஷஸீ பீடிதாயை
புவன குருவரோ அதாத் ஸ்ரீ மதீம் ஸூ க்தி பூஷாம்
பவந ஜ இவ தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து
–15-

பவந ஜ இவ–திருவடியை போலே
தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து -ஸ்ரீ சீதா பிராட்டிக்கு பெருமாள் உடைய கணை யாழி கொடுத்து அருளியது போலே –
சம்சாரிகள் -பூமி தங்கள் பெண்ணாசை போன்ற ராக்ஷஸிகள் -இவற்றில் இருந்து ரஷிக்க பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷணம் –

———————————————————————————-

பணி தி கிரண ஜாலைர் மாநயன் மாந சாப்ஜம்
சர நமுஷித தோஷா அரூட காடாந்த கார
அபர இவ வபுஷமாநம் ஷூ மா லீ ஜனாநாம்
பதமிவ புவ நார்யோ பாசயன் பாதி விஷ்ணோ –16-

ஸூர்யன் இருளை போக்கி ஒளி தருமா போலேயும் தாமரையை விகசிக்க செய்யுமா போலேயும் -இவரது திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
நம் அந்தகாரம் போக்கி -அகங்கார மமகாரங்கள் ஆகிய தோஷங்களை விலக்கி-ஹ்ருதய தாமரை விகசிக்க செய்து
அந்தர்யாமி பகவானை சாஷாத்கரிக்கவே செய்யுமே –
வகுளா பூஷண பாஸ்கரர் -இராமானுஜ திவாகரர்-ஆச்சார்யர்கள் கடாக்ஷம் கொண்டே அவன் அருள்வான் –
நீரில் உள்ள தாமரையை தானே ஆதித்யன் உலர்த்தக் கடவன் –

—————————————————

அந்தர் விலோசனம் அனந்த தமோ நி கூடம்
ஆலோக்ய ஐந்து நிவஹஸ்ய தயாரித்த்ரா சேதா
உன்மீலயந்நு பஹி தேந ரஹஸ்ய த்ரயார்த்த
தீபேன யோ ஜயதி லோக குரும் தமீடே –1
7-

பரம காருணிகரான பிள்ளை லோகாச்சார்யார் தம் தயை உந்த ரகசிய த்ரய அர்த்தங்களை முமுஷுப்படி இத்யாதி
திவ்ய அஷ்டாதச ரகசியங்கள் மூலமாக நம் ஹிருதய அந்தகாரங்களைப் போக்கி
யாதாம்ய ஞானம் பெரும் படி செய்து அருளினார் -அவர் திருவடிகளைப் பற்றுவோம் –

——————————————

புவன குருத்தம சதுர ரெங்கபுர அபணிக
கலி ரிபு தாச வர்யா கலிதாமல ஸூ க்தி மணீந்
குண பண ஸங்க்ரஹேண நிபுணாய ததாதி ஹிதான்
அத புனரேவ வ்ருத்தி முப யாந்தி விசித்ரமிதம்–
18-

நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் விசேஷார்த்தங்களை சாத்விக சிஷ்யர்களுக்கு வழங்கி மேலும் மேலும் பிள்ளை லோகாச்சார்யார் கீர்த்தி வளருவது
நல்ல நகைக் கடை வியாபாரி நல்ல நகைகளை நல்ல முறையில் வியாபாரம் செய்து விருத்தி அடைவது போலே உள்ளது என்றவாறு –
பெருமாள் ஜடாயு மஹாராஜருக்கு சத்யத்தாலே லோகங்களை வென்றதாலேயே மோக்ஷம் கொடுத்ததாக சொல்லிய -அரசன் சங்கை போக்கிய – ஐதிக்யம் –

————————————————–

த்ருட மபவத வித்யா வல்லரீ வாசநா அத்பி
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி
சதருரப்ருதா ச ஷேத்ரினோ பக்நமூலா
–19-

ஷேத்ரினோ -ஜீவாத்மா உடைய
அவித்யா வல்லரீ-அவித்யை -கொடி போல –
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே –கர்ம வசப்பட்டு மேலும் மேலும் விருத்தி அடைய
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி — பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்கிற
சூறாவளிக் காற்றாலே கர்மங்கள் தொலைக்கப் பட்டு
பக்நமூலா சதருரப்ருதா ச -அந்த கொடியானது வேருடன் அழியுமா போலே வாசனை ருசி உடன் அழித்து முடிக்கும் –

————————————————————————

யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம்
ஜகத் குரு வலா ஹக படு வவர்ஷ பூமவ் ஜலம்
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா
ப்ரவாஹ பஹுலா அபவத் நிகம மௌலி வித்யா நதீ
–20-

ஜகத் குரு வலா ஹக -லோகாச்சார்யார் -நம் பிள்ளை -ஆகிய மேகம் /பிள்ளை லோகாச்சார்யார் ஆகிய மேகம்
யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம் -யதிராஜர் ஸ்ரீ ஸூ க்திகள் -நஞ்சீயர் ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற அமுதாக கடலை முற்றப் பருகி
படு வவர்ஷ பூமவ் ஜலம் -பூமியில் பொழியுமா போலே பொழிந்து
நிகம மௌலி வித்யா நதீ–வேதாந்த நதியாக ஓட
ப்ரவாஹ பஹுலா அபவத் -வெள்ளமாக -பரவுமா போலே
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா -பரவி ஆஸ்ரிதர்கள் மலர்ந்தார்கள்

நம்மாழ்வார் -மேகம் -அவன் சமுத்திரம் என்பர் சம்பிரதாயத்தில் -அதே போலே
நஞ்சீயர் / யதிராஜர் / நம்பிள்ளை / பிள்ளை லோகாச்சார்யார் இங்கு -லோகாச்சார்யார்கள் இருவரும் என்பதால்
ஸ்ரீ ராமானுஜர் திரு உள்ளக் கருத்துக்களையே கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்றவாறு –

————————————————————

படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா
பவப் ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா
–21-

படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே–அநேக பிரபந்தங்களால் -பூர்வர்கள் பலரும் முன்பே அருளிச் செய்து
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம் -ரகஸ்ய த்ரய விவரங்களை விளக்கி இருந்தாலும்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா -பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த
அஷ்டாதச ரகசியங்களும் -ஸூ ர்யன் இருட்டை போக்குமா போலே
பவப்ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா -சம்சாரத்தில் உழன்று மாரி மாரி பல பிறவி எடுத்து
உழலும் அஞ்ஞான அந்தகாரத்தை நன்றாக போக்கி அருளிற்றே-

————————————————————–

அகம்ய மஹிமா ஜநைர் நிகம மௌலி காந்தார பூ
விஹார ரசிகோ வ்ருஷ ஷிதிப்ருதோ வசன் கந்தரே
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன
ஷமோக்தி நகரோ மஹான் ச ஜகதார்ய கண்டீரவ
–22–

அகம்ய மஹிமா ஜநைர்-எவராலும் எளிதில் அரிய முடியாத மஹிமையை யுடைய
நிகம மௌலி காந்தார பூ -விஹார ரசிகோ -வேதாந்தம் ஆகிற காட்டுக்குள் அனுபவித்து உகந்து சஞ்சரிக்க
வ்ருஷ ஷிதிப்ருதோ -வசன் கந்தரே-தர்மம் ஆகிற மலையிலே -முழஞ்சிலே வசிக்கும் –திருவேங்கட திரு மலையிலே –
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன -ஷமோக்தி நகரோ –இவர் ஸ்ரீ ஸூ க்திகள் சிம்மத்தின் திரு உகிர்கள்
யானையின் தலையை உடைத்து -தெள்ளிய சிங்கம் ஹிரண்யன் ஆகம் பிளந்தால் போலே –
மஹான் ச ஜகதார்ய கண்டீரவ -மகத்தான பிள்ளை லோகாச்சார்யார் உடைய ஸ்ரீ ஸூக்திகள் பண்ணி அருளிற்று
எங்கள் இராமானுஜ முனி வேழம் –வலி மிக்க சீயம் போலே -யாதாம்ய ஞானம் அருளிற்று என்றவாறு –

———————————————————–

விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி
–23-

விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
விஷாந்தரங்களில் நசை அற்று ஸ்ரீ கிருஷ்ணனே உண்ணும் சோறு -இத்யாதி -எல்லாமாகப் பற்றிய
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான -நம்மாழ்வாரைப் போலே முக்கிய ஆச்சார்யராக -பிள்ளை லோகாச்சார்யரும்
-அவர் அருளிச் செய்த நான்கு திவ்ய பிரபந்தங்கள் போலே இவர் அருளிச் செய்த அஷ்டாதச திவ்ய கிரந்தங்களும்
நம்மாழ்வார் கண்ணனே எல்லாமாகக் கொண்டது போலவே இவரும் வடக்கு திரு வீதிப் பிள்ளையையே எல்லாமாக கொண்டவர் –
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே இந்த பஞ்சாஷத்தும்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி -இத்தால் பிள்ளை லோகாச்சார்யர் உடைய சிறப்பையும்
அவர் அருளிச் செய்த திவ்ய கிரந்தங்களில் சிறப்பையும் அருளிச் செய்கிறார் –

———————————————–

சுலுகித பவ சிந்தும் சித்த ஜக்ரோத தைத்ய
ப்ரமத நபடுபுத்தும் ஸ்ரீ ஜகத் தேசி கேந்திரம்
த்ரவிட பணிதஷம் தக்ஷிணா ஷானி ஷண்ணம்
கலஷத நயமன்யம் மன்யதே மே மனஸ் த்வாம்
–24–

அகஸ்திய முனி சமுத்திர ஜலத்தை ஆசமனமாக உறிஞ்சி வாதாபி அசுரனை நிரசித்தால் போலே பிள்ளை லோகாச்சார்யாரும்
சம்சார ஆர்ணவம் -காம க்ரோத -அசுரர்களை நிரசிக்க அஷ்டாதச ரகஸ்ய கிரந்தங்கள் அருளிச் செய்தார் என்றதாயிற்று –

————————————————

ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -அப்யரதி ப்ரியா தே –
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-
லோகா வலீ விமல லோசன கோசராங்க –
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி
–25-

ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -மன்மதன் போல அழகானவர் –
மன்மதன் தாதை கிருஷ்ணன் -இவர் தாதை கிருஷ்ணன் என்னும் வடக்குத் திரு வீதி பிள்ளை
அப்யரதி ப்ரியா தே -அவனுக்கு ரதி மனைவி உமக்கோ அரதி-உலக விஷயாந்தரங்களில் ப்ரீதி அற்று -இருப்பதால்
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-வசந்த ரித்து மது அவனுக்கு பிடிக்கும் -நீரோ மது அசுரனை நிரசித்த கண்ணன் மேலே ஆசை கொண்டவர்
அவன் சிவனை கண்டால் பயப்படுவான் -பவ-சிவனின் பெயர் -பவ சம்சாரம் உம்மைக் கண்டு அஞ்சும் –
லோகா வலீ விமல லோசன கோசராங்க -அவன் அங்கம் இல்லாமல் அநங்கன் ஆனான் -நீரோ அனைவரும் கண்டு மகிழும் படி
-அனைவர் கண்களுக்கும் விருந்தாகும் படி -இருக்கிறீர்
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி-கிருஷ்ணர் தாதை என்பது மட்டுமே உங்களுக்குள் பொருத்தம் –

———————————————

த்ருஷ்ட்வா தே புவநார்ய ஸூந்தர வபு கேசித் பாவம்போதி நிதிம்
சந்தீர்ணா ஷ்ரவணாம் ருதம் தவ குணம் ஷ்ருத்வா ஸக்ருத் கேசந
அன்யே கே அபி ஸூ தா சகோதர பீத்வா அப வன் நிர்மலா
தஸ்மாத் ஸம்ஸ்ருதி வர்த நீ ஷிதி தலே ஷீனா பபூவ ஷணாத்
–26–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -தம் திருமேனி அழகாலும் -குணங்களாலும் -ஸ்ரீ ஸூக்திகளாலும் சம்சாரம் கடலை தாண்டுவித்து அருளுகிறார் –
ஆகையால் க்ஷணம் பொழுதில் சம்சாரம் அழிந்தது -உம்முடைய ஸ்வரூப ரூப குண திவ்ய ஸ்ரீ ஸூக்திகளாலே -என்கிறார் –

———————————————————————

தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித்
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ
பவன குருவர ஸ்ரீ பத்ம நா பஸ்ய பாதே
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான
–27–

தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித் –உமது திருவடித் தாமரை பலத்தால் ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ -திரு வனந்த புரத்திலே நித்ய வாசம் செய்யப் பட்டவராய்
பவன குருவர ஸ்ரீ பத்ம நாபஸ்ய பாதே-பிள்ளை லோகாச்சார்யார் திரு அருளாலே திரு பத்ம நாபன் திருவடி தாமரைகளை அடையப் பெற்று –
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான -அனைவரும் பார்த்து புகழும் படி ஆனார்

சப்த காதை திவ்ய பிரபந்தம் அருளப் பெற்றவர் –
கூர குலோத்தமை தாசரும் விளாஞ்சோலை பிள்ளையும் -பிள்ளை லோகாச்சார்யார் ஆணைப் படி
திருவாய் மொழிப் பிள்ளையை சம்பிரதாயத்துக்கு கொண்டு வந்தார்கள் -விளாஞ்சோலைப் பிள்ளைக்கு அந்திம கைங்கர்யமும்
திருவாய் மொழிப் பிள்ளை செய்வித்தார் -பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு செய்தால் போலே –

————————————-

சஞ்சீவநீ சரண ரேணு கணாவலீ தே
சம்சார தக்ஷக முக ஷத முக்த ஐந்தோ
லோகார்ய வர்ய கருணாம்ருத சாரணீ து
சமவில்லதாம் கலயதே ஹ்ருதயே ப்ரரூடாம்
–28-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடி துகள்களே-சம்சார விஜ ஜந்துவால் கடி பட்டவர்களுக்கு மருந்து ஆகும் –
ஐந்தலை நாகத்தால் கடி பட்டது போலே பஞ்ச இந்த்ரியங்களால் இழுப்புண்டு இருப்போர்க்கு மருந்தாகும்
கடி பட்டு பாம்பு கடி உண்ட பாம்பு -அனந்தாழ்வான் ஐதிக்யம்
அவரது கருணை அமிர்த ஆறே இருதயத்தில் மலரும் ஞானச் செடிக்கு நீராகி பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்து அடைய உதவும் –

————————————————-

ஷிஷ்யேஷூ வாக் பூஷண போஷி தேஷூ
ஜகத் குரோ தே கருணா அபி ஷே காத்
ச கூரவம் ஷோத்தம தாச நாமா
மாந்யோ குருணாம பவந் மஹிம்நா
–29-

உம்முடைய கருணாம்ருதத்தால் அன்றோ ஸ்ரீ கூர குலோத்தம தாசர் -ஸ்ரீ வசன பூஷண அர்த்தங்களில் ஆழ்ந்து
-திருவாய் மொழிப் பிள்ளைக்கு அவற்றை அருளி ரகஸ்ய கிரந்த குரு பரம்பரையில் உமக்கும்
திருவாய் மொழிப் பிள்ளைக்கும் நடு ஸ்தானம் பெற்று உலகம் புகழும் படி ஆனார் –

———————————————–

ரூபம் புராண மணிபி ஷ்ருதி வஜ்ர தீப்தம்
பத்மா பதேர் முனி ஜன ஸ்தத லந்ஜகார
தத்ர த்வயா விரசித்தம் து மணி ப்ரவாள
வாக் பூஷணம் ஹி நிதராம் புநார்ய பாதி
–30-

ஸ்ரீ பராசர ஸ்ரீ வியாசாதிகள் புராண ரத்தினங்களை கொண்டு வேத மயனான ஸ்ரீ யபதிக்கு அலங்கரித்தனர்
அவன் திருமேனியில் மிக்க தேஜஸ் இதன் ஸ்ரீ வசன பூஷணம் -மணி பிரவாளமாக -திகழ்கிறதே –

——————————————-

காமம் பவந்து குரவோ விவிதாக மார்த
விஜ்ஞ்சான விஷ்வ விதிதா விஹித பிரபந்தா
த்வத் ஸூ க்தி மௌக்தி ககனோ யதலன் ஐகார
ரங்காதி பஷ்ருதியுகம் புவநார்ய கிம் தை
–31-

உமது திவ்ய ஸூக்திகள் ஸ்ரீ ரெங்கநாதன் திருக் காதுக்கு அணியாக இருக்க -மற்றைய ஆச்சார்ய
ஸ்ரீ ஸூக்திகள் நமக்கு எதற்க்காக -ரகஸ்ய த்ரயார்த்தமே சரமம் என்றவாறு –

—————————————

ஸ்ருதி நிகரக பீர கான நந்தர்
விஹரண விஷ் ருத புத்திநாத் வயைவ
ப்ரபதன சரணிர் விஷோதி தாச பூத்
புவன குரோ புவி லோக சாத நீயா
–32-

வேதத்தில் பிரபத்தி சொல்லப் பட்டு இருந்தாலும் அரிய அறியதாய் இருக்க நீர் உம்முடைய ஸ்ரீ ஸூக்திகளால் பிரபன்னர் சர்வாதிகாரம்
-சர்வ காலத்திலும் தேசத்திலும் -நின்ற நின்ற நிலைகளில் செய்யலாம் -அதிகாரி நியமமே உண்டு -என்று அருளிச் செய்தீரே

————————————————-

த்வயி விலசதி ரெங்கே சேஷ தல்பேந பும்ஸா
ஜகதி குருவர ஸ்ரீ த்ருஷ்ட்டி பூராபி ஷிக்தே
கதமிவ புவ நார்ய த்வாம் விநா அந்நியம் பஜந்தே
சதிதி நகர பிம்பே கே ப்ரதீபம் வஹந்தி
–33-

அரவணையில் பள்ளி கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கநாதன் பூர்ண கடாக்ஷம் பெற்று தேஜஸ் உடன் விளங்கும் நீர் –
வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரர் -ராமானுஜ திவாகரர் போலேயும் இருக்க
பூர்ண சந்த்ரன் போலேயும் ஸூ ர்யன் போலேயும் இருக்க மற்றவர்கள் வெறும் தீபம் போலே தானே -நஹி நிந்தை நியாயம் –
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு வெங்கதிரோன் குல விளக்கு வேண்டாமே என்றுமாம் –

——————————————

அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம்
ததநு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ
ரசயதி ஸூக நித்ராம் ராகவாணாம் குலேந்திர
–34–

ராகவாணாம் குலேந்திர –ராகு குல தனமான ஸ்ரீ அரங்க நாதன்
அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ — க்ரமேண உபகார பரம்பரைகள் பல செய்து அருளி -கரண களேபரங்கள் கொடுத்து அருளி
-சாஸ்திரங்கள் கொடுத்து அருளி –ரகஸ்ய த்ரயங்கள் கொடுத்து அருளி –
அவதாரங்கள் பண்ணி அருளி -அனுஷ்டானங்கள் மூலம் காட்டி அருளி -ஆழ்வார்கள் மூலம் அருளிச் செயல்களைக் கொடுத்து அருளி –
நாதமுனிகள் தொடக்கமான ஆச்சார்யர்கள் மூலம் வியாக்கியானங்களை கொடுத்து அருளி -இவ்வளவும் செய்து அருளி
தத நு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ -அரவணை மேல் உறங்குவான் போலே யோக நித்திரை செய்து அருளி
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம் -பிள்ளை லோகாச்சார்யரை தோன்று வித்து -பின்பு தானே
ரசயதி ஸூ க நித்ராம் -நன்றாக -ஸூ கமாக ரசித்து உறங்குகின்றான் –

————————————————–

பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத
புலி நதட மவாப்ய த்வாம் புவம் சாபயித்வா
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த–
35–

பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத –புலி நதட மவாப்ய -ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பிராட்டியார் உடன்
காவேரி மணல் திட்டிலே வந்து சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடந்து
த்வாம் புவம் சாபயித்வா-உம்மை தோன்று வித்த பின்பு தானே அன்றோ
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே —தனது அபேக்ஷிதம் கிட்டப் பெற்றான் –
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த-இதனாலே தானே அவன் திருமுகத் தாமரையும் நன்றாக மலர்ந்து விகாசம் அடைந்து உள்ளது –

——————————————————–

பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான்
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா
–36-

பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம் -பலவித துக்க சூழலில் அகப்பட்டு உழலும்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்-த்வயம் போலவே இரண்டு திருக் கரங்களைக் கொண்டு உஜ்ஜீவிக்க
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான் -அனைவரும் அறியும் படி த்வயார்த்தம் தெளிவித்து கரை ஏறும் படி
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா -பரம காருண்யரான பிள்ளை லோகாச்சார்யார்
ஸ்ரீ ஸூக்திகளை அஷ்டாதச ரகஸ்யங்களாக அருளிச் செய்தார் –

——————————————————-

வக்த்ரேந்தோர் புவ நார்ய வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம்
–37-

வக்த்ரேந்தோர் புவ நார்ய- வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ -பரம காருண்யரான -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் உடைய
சந்திரன் போன்ற குளிர்ந்த திருக் கண் கடாக்ஷத்தாலே -உதித்த அஷ்டாதச ரகஸ்ய ஸ்ரீ ஸூ க்திகள் என்ற அமுத வெள்ளமானது
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத -18-கால்வாய்கள் மூலம் -சம்சார பூமியில் -நதி மாத்ருகம் –
மழை நீர் தேவ மாத்ருகம் என்றும் ஆறுகள் நீர் நதி மாத்ருகம் -என்றும் சொல்வர் –
இந்த நதி மாத்ருகம் ஜீவர்கள் உஜ்ஜவிக்க அன்றோ வந்தது –
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா -இவர் அருளிச் செய்த இந்த நதி மாத்ருகத்தால் அன்றோ
சம்சாரம் கரை என்ற ஜீவர்கள் உணர்ந்தார்கள்
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம் -இதனால் அன்றி காள மேக ஸ்யாமளனான
ஸ்ரீ கிருஷ்ணனை நன்கு அறிந்து உஜ்ஜீவித்தோம் என்றவாறு-

————————————————————-

க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத்
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி
–38-

க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத் –கோபம் கடலிலே விழுந்து மறைந்ததே -/ காமங்களும் ஒழிந்தனவே
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர -டம்பம் பாம்பு போலே காட்டிலே மறைந்ததே –
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா-அஹங்காரம் டம்பம் -கார்யம் – கோபம் காமம் காரணம்
-அனைத்தும் மூலையிலே ஒடுங்கிப் போயினவே
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி –நல்ல ஞானம் உள்ளவர்கள் வணங்கும்
பிள்ளை லோகாச்சார்யார் தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைப் பெய்தினரே –

———————————————-

தயா முத முபாக மத்த மஷமஷமா பூஷிதா
விரக்தி ரபிஷோ பதே விமல வித்யயா அலங்க்ருதா
முஹுஸ் ஸூமதி சம்ஸ்க்ருதா லஸதி விஷ்ணு பக்கத்து குணா
விவேக ஜனகம் ஜகத் குரு முபாஷ் ரிதா பாந்த்யமீ –
39–

நீர் அருளிய விவேக ஞானத்தால் விஷ்ணு பக்தி வளர்ந்து -விரக்தி மிக்கு -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் வர பெற்றோம் –

—————————————————

ஜகத் குரு வரா நிஷாம் சரண சம்ப்ருதா பூ ஸூ ரா
முமுஷூ ஜனஷேகராஸ் த்விதி ந சித்ர மத்ராவ நவ்
விவிஸ்ய சிதசித் ப்ரபூம் ஸ்தவ க்ருபாஞ்ஜநோத் யத்ருஷா
நிவ்ருத்தி பதகாமி நீ சபதி பாமி நீ கா அப்யபூத–40-

வையத் தேவர்கள் தேவரீர் திருவடியை ஆஸ்ரயித்து தத்வ த்ரய ஞானம் பெற்று உந்து போனார்கள் –
திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாயார் போன்ற பல பெண்மணிகளும் அன்றோ உமது கடாக்ஷ பலத்தால் தத்வ த்ரய ஞானம் பெற்று
நிவ்ருத்த தர்மம் -பிரபத்தி -மார்க்கம் மூலம் உந்து போனார்கள் -உம்முடைய திருவடி பலம் என்னே –

———————————————–

சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு
–41-

சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா –நான்முகன் பத்னி சரஸ்வதி உம் தாமரை திரு முகம் அடைந்தாள்
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி -ஸ்ரீ லஷ்மீ தேவி போலவே உம்முடைய பக்தி லஷ்மி திரு உள்ளம் நிறைய இருக்கிறாள் –
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா-நீல கண்டன் பத்னி பார்வதி தேவி போலே உலக விஷய விரக்தி உம்மிடம் பொலிகின்றதே –
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு –இப்படி இருக்க -உம்மை நைஷடிக்க ப்ரஹ்மச்சாரி என்று சொல்வது எங்கனம்
ஸ்வாமி உடைய வித்யா பக்தி விரக்தியை கொண்டாடும் படி –

—————————————————–

ஜகத் குருவர ஷிதவ் ஷபித கல்மஷவ் காம் கலாம்
சதுர்த்த புருஷார்த்த தாமபி கலவ் விதத்ய த்வயி
க்ருதவ தரனே புன க்ருத யுக க்ரம ஷோபதே
நகோபி புவி த்ருஷ்யதே நரக வர்த்தமகாமீ நர
–42-

தேவரீர் திருவவதரித்த பின்பு -சாஸ்த்ர யாதாம்ய ஞானம் பிறந்து மோக்ஷம் ஒன்றே புருஷார்த்தமாக கொண்ட பின்பு கலி கெட்டு க்ருத யுகம் போலே ஆனதே –
நரகமும் புல் மூடி ஒழிந்தே-போனதே — கலியும் கெடும் கண்டு கொண்மின் –நலியும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை –
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து பெரிய க்ருத யுகம் பற்றிப் பேரின்ப பெறுக

——————————————————

ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம்
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம்
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே–
43–

ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே –பக்தி மூலம் தமஸ் அந்தகாரம் நீக்கி அவனை அடைவதோ
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம் –பிரபத்தி மூலம் பிரபல கர்மாக்களை நிர்மூலம் ஆக்கி அவனை அனுபவிப்பதோ
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம் -இரண்டுமே சாதனங்கள் -என்றாலும் நீர் திருவவதரித்த பின்பு அன்றோ
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே-அவன் திருவடித் தாமரைகளை பற்றி அஞ்ஞானம் அந்தகாரங்கள்
களையப் பெற்று சர்வ பாபங்களையும் போக்கப் பட்டு –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி -பிரபத்தியில் அசக்தனுக்கு இது -என்று
நீர் பஞ்சம உபாயம் அருளிச் செய்து காட்டிக் கொடுத்தீர் அன்றோ –

———————————————-

குருர் பவதி தேஹி நாம் புவனதே ஷிகஸ் யாதராத்
அபாங்கலவ விப்ருஷ பரிபதந்தி யஸ்யாங்ககே
ஷூபானி கில தம் பஜந்த்யத கலா சமுஜ்ஜ்ரும்பதே
பவந்தி நவ சம்பதோ பஜதி மோக்ஷ லஷ்மீ ஸ்வயம்
–44-

உமது கடாக்ஷ லேசத்தாலே -ஆச்சார்யாக விரும்பி சிஷ்யர்களுக்கு சாஸ்த்ர ஞானம் உபதேசித்து -பாபங்களை போக்கி
மோக்ஷ லஷ்மியையும் அருளும் படி அன்றோ ஆகிறார்கள்-

———————————————-

ஷ்ருனோமி யதி வைதிகான் மகவிதீன் ஜகத் தேஷிக
ப்ரக்ருஷ்ட ஜன சேவிதான் அஹஹ மே மனா கம்பதே
அஹேதுக யார சைரவாதி தீன ஜீவான் முதா
ரமாபதி ரிதி த்வயா ரசிதஸூக்திபிர் மோததே
–45–

உபாயாந்தரங்களை பின் பற்றி கர்ம யோகாதிகளை பண்ணி பக்தி மார்க்கம் வழியாக எம்பெருமானை அடைவதில் உள்ள
கஷ்டங்களை நினைத்து வருந்தி இருக்கும் உள்ளத்தை -உம்முடைய நிர்ஹேதுக கிருபையால்
ஆச்சார்ய அபிமானம் -பஞ்சம -உபாய சீர்மையை அருளிச் செய்து
அவனே நம்மை அடையும் படி செய்து அருளினீரே –

—————————————-

ஆ சக்ர வாலமவநவ் புவ நார்ய சர்வே
ஷம் சந்தி மங்கள குணான் விபூத ப்ரியாம் சதே
தேஷூ த்வதீய கருணாம் ப்ரகுணாம் து மன்யே
ரஷாம் யயா கலயஸே பவபீத ஐந்தோ
–46–

சகல உலகத்தாருக்கும் -சக்கரவாள மலைப் பிரதேசம் -உள்ளாறும் தேவரீர் உடைய அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டாடினாலும்
தேவரீருடைய பரம காருண்யமே -அஷ்டாதச ரகசியங்களை அருளிச் செய்து -நிர்ஹேதுகமாக அவனே தன் சொத்தை தன்னிடம் சேர்த்துக் கொள்வான் –
என்று அருளிச் செய்து சம்சார பயத்தை நீக்கும் படி பண்ணி அருளினீரே -ஸ்ரீ நிவாஸன் தயை போலே இதுவே சிறந்த கல்யாணம் குணம் என்கிறார் –

—————————————–

ஸூ க்ருத லவவி ஹீனம் ஷூத்த பாவைர் விமுக்தம்
துரிதஷத நிகேதும் தூரயாதம் தயாயா
புநரபி ஜன மேநம் வீக்ஷஸே ரஷிதம் தவம்
புவன குருர சீத்தம் கோ அபி வாத்சல்ய சிந்து
–47–

குண ஆர்ணவம் நீர் -பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு அருளி
-நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் கை விட்டாலும் –
அபார காருண்யத்தாலே நிர்ஹேதுகமாக கைக் கொண்டு அருளி லோகாச்சார்யராக இருக்கிறீர்

————————————–

விமத குமதி பீடா மானஸே சம்ரரூடா
த்ருட மமுமிஹ ஜீவம் க்ருந்ததி க்ரூர வ்ருத்தயா
அம்ருத ரஸ சகீ பிஸ்தாம் நிவார்யாஷூ த்ருக்பி
விரசய விதி ஷக்தம் ஸ்ரீ ஜகத் தேஷி கேந்திர
–48-

கெட்ட புத்திகள் மூலம் தூண்டப்பட்ட கொடிய செயல்களால் தாழ்ந்து உள்ளவர்களை
உம்முடைய கடாக்ஷ லேசத்தாலே மீட்டு நாரணனுக்கு ஆளாக்கி அருளிச் செய்தீர் –

—————————————————

தோஷா யேன க்ருதா முராரி கருணா சாரா பகாரோ தகா
ஷைலேந்திரா ஷதஷோ வசந்தி ந குணஸ்யானோர ணுர்த் த்ருஷ்யதே
லோகாச்சார்ய ஜனம் தமே நமலசம் ரஷேத் பவாம்ஷ் சேத் தத
பத்மா காந்ததயா தயோ வர குணாஸ்தஸ்மிம்ஸ்து தேப்யோ நம –
49–

நாம் அபராத சக்க்ரவர்திகளாக இருப்பதால் –மலை போன்ற அபராதங்கள் -எம்பெருமான் தண்டனைக்கு பாத்திரம் ஆகிறோம் –
ஆச்சார்யர் திருத்தி பணி கொள்வதால் -நம்மால் அவனை அணுக முடிகிறது -சம்சார போகி சந்தஷ்டந் ஜீவ ஜீவாதே நம -என்றவாறு –

————————————–

யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம
–50-

யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக –உம்முடைய குல தைவம் பெருமாளால் ஆராதிக்கப் பட்ட ஸ்ரீ ரெங்க நாதன்
-ஸ்ரீ ரெங்க நாயகி கேள்வன் -என் திருமகள் சேர் மார்பன் –
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ –உமது வாஸஸ் ஸ்தானமோ காவேரி நடுவில் உள்ள
பூ லோக வைகுண்டம் -திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி –உம்முடைய திருத் தகப்பனாரோ உபய வேதாந்த ச்ரேஷ்டரான வடக்குத் திரு வீதி பிள்ளை
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம -உம்முடைய திரு சகோதரரே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்
-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் அருளிச் செய்தவர் –
நீரோ பிள்ளை லோகாச்சார்யார் -மிகப் பொருத்தமாக சாத்திய திரு நாமம் -உமக்கு யார் நிகர் ஆவார் –

——————————————–

காவேரீ யுகலாம் புபூர லலிதே புண்யந்தரீ பே அஸ்ம் யஹம்
லோகார்யோ வ்ரஜ தத் விஜேதி வரத ப்ரோவாச பக்தாய ஹி
இத்யேவம் குரு ஸூ க்தி பிர் குருவர த்வாம் மன்யமான ஸ்த்வஹம்
வந்தே வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம் -51-

வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம்–திருக் ஹஸ்தி நகரில் பெரும் தேவி சமேதனாக சேவை சாதிக்கும்
ஸ்ரீ வரதாச்சார்யனே – -மணல் பாக்கத்து நம்பியிடம் அருளிச் செய்த படியே -அவனே பிள்ளை லோகாச்சார்யராக திருவவதரித்தார்
இரண்டு ஆற்றுக்கு நடுவில் சென்று குறையும் ஸ்ரீ வசன பூஷணம் கேட்டுக் கொள்ள சொல்லி அருளினான் –
சேதனர்கள் உஜ்ஜீவனத்துக்காகவே இப்படி வந்து அவதரித்து ஸ்ரீ வசன பூஷணம் முதலியவற்றை அருளிச் செய்தான் பேர் அருளாளன் –

————————————————

வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம் ராமானுஜம் மத்குரும்
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை
–52-

வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே -வேதாந்தங்களில் விதித்த கர்ம யோகங்களுக்கு சக்தன் அல்லேன்
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய -வாக் இத்யாதி இந்திரியங்கள் பட்டி மேய்கின்றன
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம்-பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையே தாரகமாக கொண்டு அத்தாலே ஷாந்தியையே தனமாக கொண்டவருமான
ராமானுஜம் மத்குரும் -அடியேன் ஆச்சார்யரான -ஆத்ரேய ராமானுஜர் -கிடாம்பி ராமானுஜ பிள்ளான் -உடைய சிஷ்யன் என்றதையே கொண்டு
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை-அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ மன் நாதமுனிகளை பார்த்து தம்மை அங்கீ கரித்து அருளும் படி ஸ்தோத்ர ரத்னத்தின் அருளிச் செய்தது போலே இங்கும் –

———————————————————–

ப்ரணம்ய சரணவ் தவ ப்ரணததே அஹினாம் காமதவ்
இதம் கிமபி வாஞ்ஜிதம் புவன தேஷிக பிரார்த்தயே
அஸார பணி திஷமா சரணமத்ய ஹித்வா மன
ப்ரயாது பதவீம் ஷூபாம் வசன பூஷண அலங்க்ருதாம் –
53-

தேவரீர் திருவடி அபேக்ஷிதர் அபேக்ஷித்தவை எல்லாம் தர வல்லது –சம்சாரத்தில் பிரயோஜனாந்தரங்கள் பலவற்றிலும் அளந்து அவதி படாமல்
தேவரீர் அருளிச் செய்த ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதில் திட விசுவாசம் உடையவனாய் தேவரீர் ஆக்கி அருள வேணும் –

—————————————————–

இத்தம் ஜகத் குரு வர ப்ரவணந ஸர்வ
தந்த்ர ஸ்வதந்த்ர கவிதார்க்கிக ஸிம்ஹநா நாம்
ஸ்ரீ வேங்கடேஷ கவிநா கலிதாம் ஸ்துதிம் யே
ஸ்நிக்தா படந்தி புவி யாந்தி பராம் ஷ்ரியம் தே –5
4–

நிகமத்தில் பலமாக இந்த ஸ்தோத்ரம் கற்பவர்களுக்கு ஆச்சார்ய அபிமானம் கிட்டி பரம புருஷார்த்தம் பெறுவார் என்று அருளிச் செய்கிறார் –

———————————————

கவிதார்க்கிக சிம்ஹாயா கல்யாண குண ஷாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேஷாய வேதாந்த குரவே நாம –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அதிகார சங்கிரகம் –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

September 7, 2024

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————-

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவு ஒக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே யாவதரிக்கும் ஆயன் நிற்க
வருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–2-

சுவாமி தேசிகர் இப்பாசுரங்களை வகைப்படுத்தி அருளியது போல இன்பத்தில்,இறைஞ்சுதலில், இசையும் பேற்றில்,இகழாத பல்லுறவில், இராகமாற்றில், தன் பற்றில், வினை விலக்கில், தகவோக்கத்தில், தத்துவத்தை உணர்த்துதலில், இவைகளோடு மேற்சொன்ன அனைத்தையும் நமக்குள் உட்புகுத்தி நம்மை தகுதிப் படுத்திய தன்மை குறித்துப் பாடுகிறார் மதுரகவிகள்.

அர்த்த பஞ்சகம் எனப்படும் (1)ஆன்மாவின் இயல்பு (2)ஆண்டவனின் இயல்பு (3)ஆன்மா அடையும் பயன் (4)அப்பயனை அடைவதற்கான வழி (5)அப்பயனை அடையப் பகையாய் உள்ளவை …

இது போன்ற, தான் அறிந்த, உணர்ந்த அறிய விஷயங்களை, மனித குலத்தின் மீதான தன் கரிசனத்தால், அவர்களுக்கு உபதேசிக்க நினைத்தார் நம்மாழ்வார்..

ஒரு சில ஆசிரியர்கள் பலகாலம் மாணவர்களை அலைக்கழித்தே போதிப்பார்கள்..

இராமனுஜரை திருக்கோட்டியூர் நம்பி எனும் ஆச்சார்யன் 18 முறை நடையாய் நடக்க விட்டுத்தான் திருமந்திரத்தை அருளினார்…யாருக்கும் சொல்லக்கூடாது எனும் நிபந்தனையோடு…ஆனால் இராமனுஜரோ தன் பொருட்டான கவலை இன்றி பிறர் பொருட்டான நன்மை கருதி கோபுரம் ஏறி, திரு எட்டெழுத்து மந்திரத்தைக் கூவினார்..

தாயான சீதைக்கும் , மகனான பிரஹலாதனுக்கும். தம்பியான விபீஷணனுக்கும், இவருக்கும் [நம்மாழ்வார் ], இவரடி பணிந்தாருக்கும்[இராமானுஜர் ] மட்டுமே இவ்வாறான, மற்றவர் மீது கருணை கொள்வதே தனக்கான பெரும்பேறாகக் கருதி, தாங்களே மனமுவந்து உதவும் குணம் உள்ளதாக பெரியோர்கள் கூறுவர்.

திருக்குறள்…

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.

….. கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள், கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் என்கிறது…

பிறருக்கு உபதேசிப்பதால் தனக்கு யாதொரு பயனும் இல்லை என்றாலும், அதற்கு அவர்கள் ஒத்துழைக்க மறுத்தாலும், அறிவு மட்டுமன்றி அதை செயல்படுத்தும் திறனும் கொண்டவர் நம்மாழ்வார்.

குயில்கள் யாருக்காகவும் எதற்காகவும் தன் கூவுதலைக் கைவிடுவதில்லை.அது எப்போதும் போல அதிகாலையில் [ 3.45 am ] தன் விருப்பம் போல் எதிர் பலன் நோக்காமல் செயல்படுகிறது.

அவ்வாறான குயில்களால் ஆரவாரம் செய்யும் சோலைகளையுடைய திருநகரியிலே எழுந்தருளியிருக்கும் என் ஆழ்வாரே..

உம்முடைய சிறந்த திருவடிகளின்பால் பற்று கொள்ளவே முயற்சி செய்கின்றேன்…

என்று உருகுகிறார் மதுரகவிகள்..

திருவாய்மொழி கல்லாரை இருகால் மாடுகளாக்கி,

தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே …

….என்று முக்கூடற்பள்ளு சொல்கிறது.

பராங்குச தாசர் மதுரகவிகளைத் தியானித்துக்கொண்டு ’இன்பத்தில்’ என்ற வார்த்தையைக் கூறி முதல் பாசுரத்தை இனிய ராகத்துடன் பாடினார். 

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே – 1

நாதமுனிகள்  பாடலை ஆழ்ந்து அனுபவித்தார்.  யசோதைப் பிராட்டி, உடம்பில் உறுத்தும்படி பல முடிகளுடன்,  நீளம் போதாமல் அந்தச் சிறிய தாம்புக் கயிற்றால் கண்ணன்  தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட அந்த மாயக் காட்சியை மனக் கண்ணில் கண்டார். ஆனந்தக் கண்ணீர் பெருகி இந்த இன்பத்தின் சுவை என்னது ? அறுசுவை அடிசிலா ? நெய் சுவை தேறலா ? கனியின் சுவையா ? பாலின் சுவையா ? என் ஆரா அமுதமே ! பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் தருகிறது.  இந்த அமுது ஊறும் இன்பத்தைத் தரும் தென் குருகூர் நம்பியின் நாமம் மேலும் என் நாவுக்கு இன்பமாக இருக்கிறது ! கண்ணீர் அருவியாகப் பெருகி ஆனந்த ரூபமான அனுபவித்தார். 

பராங்குச தாசர் ‘இறைஞ்சுதலில்’ என்ற வார்த்தையைக் கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார். 

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே – 2

குருகூர் நம்பி, சடகோபன் என்ற திருப்பெயர்களைப் பல தடவை துதித்துப் பார்த்த போது அமுது ஊறும் என் நாவுக்கே எனது போல இன்பச் சுவையை உணர்ந்தார்.  புகல் ஒன்று இல்லாத தனக்குக் குருகூர் சடகோபனைச் சரணம் அடைந்தால்,  பெருமாளின் அடிக்கீழ் அமர்ந்து புகும் பேற்றைப் பெற்றேனே! என்று எண்ணிப் பூரிப்படைந்தார். மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே, தேவு மற்றறியேன் குருகூர் நம்பியே தஞ்சம் என்று சரணம் அடைந்து உள்ளம் உருகினார். 

பராங்குச தாசர் ‘இசையும் பேற்றில்’(1) என்ற வார்த்தையைக் கூறிவிட்டு அந்தாதியின் அடுத்த பாடலை பாடினார். 

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. 3

வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற பேறு அதனால் தேவபிரானுடையக் கரிய கோலத் திருவுருவம் காண்கிறேன். இனி ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்து உற்றேன் உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது ? இனி குருகூர் சடகோபனுக்கே தான் அடியேன் என்று உளமார ஏற்றுக்கொண்டு கைகூப்பி நின்றார். 

’இகழாத பல்லுறவில்’ என்ற வார்த்தையை உச்சரித்துவிட்டு பராங்குச தாசர் நான்காம் பாடலைப் பாடினார். 

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான்  சடகோபன் என் நம்பியே.  4

என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து அத்தா! சடகோபன் குணம் நிறைந்த என் தலைவராக ஏற்றுக்கொண்டேன். என்னை விட்டு நீங்காத பலவிதச் சம்பந்தம் பெற்றேன் என்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். 

பராங்குச தாசர் ‘இராகம் மாற்றில்’(2) என்று கூறிவிட்டு, அடுத்த பாசுரத்தை இசையுடன் பாடினார். 

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும், முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே. 5

நாதமுனிகளுக்கு அந்தப் பாடல் இன்ப வெள்ளமாக உள்ளே சென்றபோது அவர் உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்தது.  ‘சாமர்த்தியம் பெற்றேன் !’ என்று கூறி.  கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பங்களான தகாத விஷயங்களில் பற்றுதலை ஒழித்து,  திருகுருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே! என்றார்.  

’தன் பற்று’ என்று கூறிவிட்டு,  பராங்குச தாசர் ஆறாம் பாடலைப் பாடினார்.  

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே. 6

நாதமுனிகளின் உள்ளத்தில் சடகோபனே எங்கும் பரவியிருந்தார். குருகூர் சடகோபன் அன்புடன் நாதமுனிகளைப் பற்றியிருக்கப் பூரிப்புடன் ‘இன்று முதல் ஏழேழு பிறவியிலும் என் ஆசாரியனான குருகூர் சடகோபன் புகழ் பாடுவேன்!  அதற்கு அருள் செய்தவரும் அவரே. என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப் இன்தமிழில் என் நாமுதல் புகுந்து என் வாய்மூலம் பாட வைத்து எக்காலத்திலும் இகழ்ச்சி இன்றி ஆதரவு செய்வார்!’ என்றார் தீர்மானமாக. 

பராங்குச தாஸர் நாதமுகளை வணங்கி ‘வினை விளக்குதல்’ என்ற சொல்லைக் கூறிவிட்டு, ஏழாம் பாடலைப் பாடினார். 

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே.  7

’காரியார் புதல்வரான மாறன் தானாகவே என்னைப் அன்புடன் பற்றியதால் தீவினைகள் தீர வழி செய்தார்! உலக மக்கள் பலருக்கு இந்த விஷயம் சென்று சேர வேண்டும் அல்லவா ? அதனால் திசை எட்டும் அறியும்படி புகழ்ந்து பேசப் போகிறேன்!’ என்றார். 

பராங்குச தாசர் ‘தகவு ஒக்கம்’(3) என்று கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார்.

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.   8

பெருமாளின் கருணை  அபிவிருத்தியை கொண்டாடும்படி அடியார்கள் இன்புறக் குருகூர் சடகோபன் வேதத்தின் பொருளை இனிய தமிழில் அருளினார். இந்தப் பூவுலகில் இந்த அருள் ஒன்று மட்டுமே மிகவும் பெரியது. வேதத்தின் சாரமான கண்ணனின் கீதை, அதன் சாரமாக அமைந்த குருகூர் நம்பியின் ஆயிரம் பாடல்கள் கிடைக்க வேண்டும் என்று சடகோபனைத் தியானித்து அருளாழி அம்மானை வேண்டிக்கொண்டார். 

’தத்துவத்தை உணர்த்துதல்’ என்று கூறிய பராங்குச தாசர் அடுத்த பாசுரத்தைப் பாடினார். 

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.   9

சடகோபனுக்கே அடிமை செய்து, அவர் திருவடிகளின் மீது ஏற்பட்ட பக்தியின் பயனாக வேதத்தின் உண்மைப் பொருள்களை அறிந்துகொண்டு நெஞ்சுள் நிலை நிறுத்தி அவனுடைய உணர்வு கொண்டுணர்ந்தே இருந்த மதுரகவிகள் போல அடியேனுக்கும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

’தன்மையாக்கில்’ என்ற வார்த்தைக்குப் பிறகுப் பத்தாவது பாசுரத்தைப் பாடினார். 

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே.  10

திருத்துவதால் எந்தப் பயன் இல்லாத போதிலும், திருத்தி ஆட்கொண்டு தன்னைப் போல் ஆக்குகிறார் பெருமாள்.  இதுவே அவருடைய சுபாவம். அந்தச் சுபாவத்தையே நமக்கும் சடகோபன் அருளுகிறார் என்று நாதமுனிகள் மனம் முழுவதும் குருகூர் சடகோபனின் திருவடிகளைத் தியானித்தார். அந்தச் சமயம் பராங்குச தாசர் கடைசி பாசுரம் 

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன்  தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.   11

என்று பாடி முடிக்க நாதமுனிகள் ஆனந்தக் கண்ணீர் மல்கப் பராங்குச தாசர் பிள்ளையின் திருவடி தொழுது பராங்குச தாசரே மதுரகவிகள் என்ற பெயருக்கு ஏற்றார் போலப் பத்துப் பாசுரங்களும் அதன் உட்பொருளையும் உங்களால் உபதேசம் பெற்றது என் பாக்கியம் என்று மேற்கூறிய பத்து வார்த்தைகளையும் நாதமுனிகள் வரிசையாகக் கூறினார். (4)

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் 

என்று கூறிவிட்டு மேலும் 

அன்பர்க்கே அவதாிக்கு மாயன் நிற்க
அரு மறைகள் தமிழ்செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே.. 

என்று கூறினார்(5) . நாதமுனிகள் கூறிய இந்தச் செய்யுளின் பொருள் பற்றி அறிந்துகொள்ள,(9) உலக வாழ்கையில் பொருள்களின் மீது நாம் எப்படிப் பற்று வைத்துள்ளோம் என்று அறிந்துகொள்வது அவசியமாகிறது. 

இந்த உலகில் ஒருவன் ஏதோ ஒரு பொருளின் மீது பற்று வைத்து நாளடைவில் அப்பற்று பெருகி அளவற்றதாக மாறினால் அப்பற்று அப்பொருளுடன் நின்றுவிடாமல், அதனோடு சம்பந்தம் பெற்ற எல்லாப் பொருள்களிலும் படர்ந்து பெருகிச் செல்லும் என்பதை நாம் அனுபவத்தால் அறியலாம்.  இதே போல் பெருமாள் மீது உள்ள அளவு கடந்த பற்றின் வெளிப்பாடே நான் அவரின் பாதுகைகளை ஆதரத்துடன் தலையில் வைத்துக்கொள்வதும், அவர் சூடிக் களைந்த மாலைகளை நாம் சூட்டிக்கொள்வதும், அவர் நீராட்டிய தீர்த்தத்தைப் பருகுவதும், அவர் காலடி பட்ட பிருந்தாவனம் போன்ற இடங்களில் அம்மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வதும் இதற்குக் காரணம். எப்படி பெருமாள் சம்பந்தம் பெற்ற பாதுகைகள், மாலைகள், தீர்த்தம் முதலியவற்றை அன்புடன் ஏற்றுக்கொள்கிறோமோ அதே போலத் தான் பகவானின் சம்பந்தம் பெற்ற ஆசாரியர்களும், அடியார்களும். 

மதுரகவிகள் தாம் வாழ்ந்த காலத்திலேயே கண்ணன் இப்பூமியிலே அன்பர்களுக்கு அருள் புரிய மாயனாக இருந்தான். ஆனால் அவரிடம் ஈடுபடாமல் மதுரகவிகள் குருகூர் நம்பியையே(6)  தேடிக்கொண்டு அவரையே கதியாகப் பற்றித் தன் குருபக்தியை வெளிப்படுத்தி, அவர் சம்பந்தப்பட்ட பெருமாளைப் பற்றினார். 

மேற்கொண்டு நாம் இந்தக் கதையில் பயணிக்கச்  சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற இரண்டு வார்த்தைகளை நாம் நேயர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. பரம்பொருளான நாராயணனைச் சாஸ்திரம் பரபிரம்மம் என்று கூறும், சம்பிரதாயம் பெருமாள் என்று கூறும். எல்லா ஜீவன்களும் பெருமாளைப் பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறும் ,சம்பிரதாயம் ஆசாரியனைப் பற்ற வேண்டும் என்று கூறும். சாஸ்திரம் பகவான் எல்லா ஜீவராசிகளிடமும் பாரபட்சம் காண்பிக்க மாட்டான் என்று கூறும், ஆசாரியனையும், அடியார்களையும்(7) பற்றியவனிடத்தில் பெருமாளுக்கு அபிமானம் அதிகம் என்கிறது நம் வைணவ சம்பிரதாயம். 

நாதமுனிகள் பராகுச தாசரை பார்த்து “பெருமாள் அடியவர்களிடத்தே தனிப்பட்ட அன்பு காட்டக் காத்துக்கொண்டு இருக்க, தென்குருகூர் நம்பியான சடகோபன் இப்பகவானுக்கு அடிமைப்பட்ட பாகவதர்களிடத்தே பக்தி கொண்டார். 

சத்ருக்னன் பரதனையே பற்றி ராம சௌந்தரியத்தை ஜயித்தது போல் மதுரகவியார் தேவுமற்றியேன் என்று சடகோபனைத் தவிர வேறு தெய்வத்தை அறிய மாட்டேன் என்று இருந்தார்.  ஆசாரியனை அடைதல் என்ற சம்பிரதாய மதுரகவிகள் வம்சத்தில் தோன்றிய உங்களுடைய அடியவனாக அடியேனை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.

“நாதமுனிகளே! சடகோபனின் பாசுரங்களை மீட்டுத் தரப்போகும் உங்களுக்கே நாங்கள் அடியவர்கள்.  நிச்சயம் உங்களுக்கு மதுரகவிகள், சடகோபன் அருள் பூரணமாக உண்டு. தாங்கள் தேடி வந்த பாசுரங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடியேனும் எங்கள் வசமும், இந்தப் பூவுலகமும் காத்துக்கொண்டு இருக்கிறது. சென்று வாருங்கள்!” என்று வணங்கி விடைகொடுத்து அனுப்பினார். 

சடகோபனின் அடியார் மதுரவியாரின் வம்சத்து அடியார் சம்பந்தம்  பெற்ற பின் பெருமாளின் பரிபூரண அருள் நாதமுனிகளுக்குக் கிடைக்காமல் போகுமா ?  அடியார் சம்பந்தத்துடன் சிறுத்தாம்பு என்ற சாவியுடன் புறப்பட்டார் நாதமுனிகள். 

—————-

ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”

* குருப்யஸ்தத் குருப்யஸ்ய நமோவாக மதீமகே |
வ்ருணீமகே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ ||

அர்த்தம் —— அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி ”நம ” என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்

* பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி
வையமெலாம் மறை விளங்க வாள் வேலேந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே– ——————அதிகார ஸங்க்ரஹம்——-

அர்த்தம்– பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மிக்க குளிர்ச்சியான
தாமிரவருணி நதிக்கரையில் அவதரித்த நம்மாழ்வார் (குருகேசன் )
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார், தூய உள்ளமுடைய
குலசேகர ஆழ்வார், நம்முடைய திருப்பாணாழ்வார் , தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
திருமழிசையில் வந்து அவதரித்த, திருமழிசைப் பிரான், உலகம் எங்கும்
வேதங்களின் ஒலி ,சப்தம் விளங்க—வாள் ஆயுதமும், வில் ஆயுதமும்
ஏந்திய திருமங்கை மன்னன் –ஆகிய ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய (அருளிய )
இனிமையான பாசுரங்களை நாம் நன்கு தெளிந்து ஓதி, அத்யயனம் செய்து,
எளிதில் பொருள் தெரிந்து கொள்ள இயலாத வேதங்கள், உபநிஷத்துக்கள் –
இவைகளின் உண்மையான பொருள்களைத் தெரியாத இடங்களில், தெளிந்து(குழப்பமே இல்லாமல், தெளிவாக ) அறிந்தோம்

செய்ய தமிழ்மாலைகள்
1.பொய்கை ஆழ்வார்—–முதல் திருவந்தாதி ——————————–100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார் ——–2ம் திருவந்தாதி——————-————————–100 பாசுரங்கள்
3. பேயாழ்வார் ———-3ம் திருவந்தாதி ———————————————100 பாசுரங்கள்
4. ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்–ருக் வேத ஸாரம் —————– 100 பாசுரங்கள்
—-திருவாசிரியம் –யஜுர் வேத ஸாரம் ———- 7 பாசுரங்கள்
—பெரிய திருவந்தாதி –அதர்வண வேத ஸாரம்– 87 பாசுரங்கள்
—திருவாய்மொழி——ஸாமவேத ஸாரம் ———- 1102 பாசுரங்கள்
5. பெரியாழ்வார் —-பெரியாழ்வார் திருமொழி —————————– 473 பாசுரங்கள்
6. குலசேகரப் பெருமாள்—பெருமாள் திருமொழி ————————– 105 பாசுரங்கள்
7. திருப்பாணாழ்வார் ——அமலனாதிபிரான் ——————————— 10 பாசுரங்கள்
8. தொண்டரடிப் பொடி ஆழ்வார் ————திருமாலை —————————45 பாசுரங்கள்
———–திருப்பள்ளியெழுச்சி ——— 10 பாசுரங்கள்
9. திருமழிசை ஆழ்வார் ——————நான்முகன் திருவந்தாதி ———- 96 பாசுரங்கள்
————திருச்சந்த விருத்தம்———————— 120 பாசுரங்கள்
10. திருமங்கை மன்னன் ——————பெரிய திருமொழி ———————-1084 பாசுரங்கள்
——- திருக்குறுந்தாண்டகம் ———————- 20 பாசுரங்கள்
————திருநெடுந்தாண்டகம் ————————- 30 பாசுரங்கள்
—————திருவெழுகூற்றிருக்கை ————– 1 பாசுரம்
————–சிறிய திருமடல் —————————– 40 பாசுரங்கள்
————–பெரிய திருமடல்———————-——– 78 பாசுரங்கள்
ஆக ———————————————————————————– 3,708 பாசுரங்கள் இந்தச் செய்யத் தமிழ் மாலைகள் 3708 பாசுரங்களை,
அர்த்தங்கள் நன்கு புரியும்படி பாராயணம் (படித்து/சொல்லி ) செய்து, வேதங்களும் ,உபநிஷத்துக்களும் சொல்லும்
கடினமான அர்த்தங்களை ,நன்கு தெளிந்தோம் —என்கிறார் ,ஸ்வாமி தேசிகன்

* இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராக மாற்றில் தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில் அன்பர்க்கே அவதரிக்கு மாயனிற்க
அரு மறைகள் தமிழ்ச்செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே .

அர்த்தம்—- ஆயன்—-அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் —பக்தர்களுக்காகவே அவதாரம் செய்பவன்
கண்ணன் , நிற்க—–ஸ்ரீ க்ருஷ்ணன் தயாராக இருக்க —– எதற்கு—-? தனது பக்தர்கள்ளுக்கு ஆனந்த ரூபமான அனுபவத்தைக் கொடுக்க
சரணம் என்று இறைஞ்சுபவரைக் காக்க புருஷார்த்தத்தை உணர்த்த இகழ்ச்சியே இல்லாத பலவித ஸம்பந்தத்தை உணர்த்த ,
உலக விஷயங்களில் வைத்துள்ள பற்றுதலை–அதாவது, தகாத விஷயங்களில் பற்றை அழிக்க, தன் விஷயத்தில் பற்றுதலை உண்டாக்க
பாபங்களை ஒழிக்க கருணையை வெளிப்படுத்த. தத்துவ விளக்கங்களைச் சொல்ல
தன்னுடைய சுபாவத்தை அருள —ஆகியஇந்தப் 10 விஷயங்களுக்காகத் தயாராக இருந்தான்.
ஆனாலும், அவரை ஏறெடுத்தும் பாராமல், குற்றமில்லாக் கவியான மதுரகவி ஆழ்வார் , அறிவதற்கு மிகக் கடினமான
வேதங்களின் பொருளைத் தமிழில் அருளிய ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளையே சரணமாகப் பற்றினார்.

இவர் துன்பற்ற மதுரகவி (குற்றமில்லா மதுரகவி )
இவருக்குத் தோன்றிய வழி— இதுவே தொல்வழி —தொன்மையான வழி/ பழமையான வழி — என்றும்,
நல்வழி–ஸம்ஸார பந்தத்திலிருந்து வெளியே வர மிக நல்ல வழி என்றும் நமக்கு காண்பித்தார் .
யாருக்கு—? எது தொன்மையான வழி என்று துணிந்து வருவார்க்கும், ஸம்ஸாரம் என்கிற காட்டிலிருந்து
விடுதலை பெறத் துணிந்தவர்கட்கும் நாயகன் கிருஷ்ணன் ,அருளுவதற்குத் தயாராக இருந்தாலும்,
மதுரகவிகள் நம்மாழ்வாரான ஆசார்யன் திருவடிகளைச் சரணம் என்று வந்து அடைந்தார்– இதை அனுஷ்டித்து நமக்கு காண்பித்தார்.

மதுரகவி ஆழ்வார் அருளியது—கண்ணிநுண் சிறுத்தாம்பு–10 பாசுரங்கள். இந்தப் 10 பாசுரங்களின் பொருளை,
இந்த ஒரே பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இப்படிப் 10 விஷயங்களாலே ஸ்ரீ நம்மாழ்வார் , பகவானைச் சரணடைந்தார்.
மதுரகவிகளோ, ஆசார்யனை—ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணடைந்தார். மோக்ஷத்துக்கு உபாயம் ஆசார்யனே —ஆசார்ய பரம்பரையை அநுசந்திக்க வேணும்

பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் | ஆசார்ய வத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
என்று ஆசார்யவத்தையே ஸர்வருக்கும் மோக்ஷ காரணமென்று அறுதியிட்டார்கள் .
முமுக்ஷுவுக்கு ஆசார்ய வம்சம் பகவானானளவுஞ் செல்ல அநுசந்திக்க வேண்டுமென்று ஓதப்பட்டது.

வ்யாக்யானம் :—–
ஸ்ம்ருதி சொல்கிறது—பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் |
ஆசார்ய வத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி,
அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால் தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது

க்ஷத்ர பந்து சரிதம் :—- ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் சொல்லப்படுகிறது ——–
க்ஷத்ர பந்து ஒரு அரசன்–எப்போதும் பாபச் செயல்களையே செய்துவந்தான்.
அதனால் ராஜ்யத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்து வந்தான்.
பிறரைத் துன்புறுத்தி ,ஜீவ ஹிம்ஸை செய்வதே வழக்கமாக இருந்தது. ஒருநாள், நட்ட நடுப்பகல் உச்சி வெய்யிலில்,
வழி தவறி வந்த முனிவரைப் பார்த்து, இரங்கினான். தண்ணீர் தாகத்தால் தவித்த அவர், தண்ணீர் அருந்த அருகில் உள்ள
குளத்தில் இறங்கும் போது அதில் விழுந்துவிட, க்ஷத்ரபந்து அவரைக் காப்பாற்றி,
அவரது பசிக்குத் தாமரைக் கிழங்குகளைக் கொடுத்து, உபசரித்தான். முனிவர் , அவனது வ்ருத்தாந்தத்தைக் கேட்க,
அவன் தனது பாப கார்யங்களை எல்லாம் சொல்லித் திருந்தவும் இயலாத நிலையில் இருப்பதாகச் சொல்ல,
அந்த முனிவர், ”கோவிந்தா, கோவிந்தா” என்றாவது சொல்லிக் கொண்டிரு என்று புத்திமதி சொன்னார்.
க்ஷத்ர பந்துவும், அப்படியே சொல்லக் சொல்ல, பாபச் செயல்களை ஒழித்து, மோக்ஷத்துக்கான உபாயத்தைச் செய்து மோக்ஷம் அடைந்தான்.

உபதேச பரம்பரையில் உள்ளது——-
க்ஷத்ர பந்து ஒரு கெட்ட அரசன். கெட்ட நடத்தை உடையவன். உறவினர்கள்,அரசனைக் காட்டில் தள்ளி விட்டார்கள்.
அங்கும் கெட்ட வழியில் முனிவர்களைத் துன்புறுத்தினான். ஒரு நாள், அந்த வழியில் நாரதர் வந்தார்.அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான்.
அவர், ”ஹே —அரசனே–உன்குடும்பத்தாரைக் காப்பாற்ற, நிறைய பாபச் செயல்களை செய்கிறாய் ;
இதில் ஒரு பங்கையாவது உன் குடும்பத்தார் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்வார்களா — என்று கேட்டு வா ” என்று சொல்லி அனுப்பினார்.
நாரதரின் தர்சனத்தால் ,சிறிதளவு ஞானம் உண்டான க்ஷத்ர பந்து, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்றான்.
திரும்பி வந்த அரசன், ”எல்லோரும் மறுக்கிறார்கள்; நிறையப் பாபங்களைச் செய்திருக்கிறேன்; என்னைக் காத்தருள்க —என்று நாரதரை வேண்ட,
அவர், அவனுக்கு மோக்ஷ உபாயங்களை உபதேசித்து, அவன் மோக்ஷம் அடையுமாறு செய்தார்.

புண்டரீகனின் சரிதம் :— ஸ்ரீ பாத்மோத்தர புராணம் சொல்கிறது—— இவன் ப்ராம்மணன் —பெரிய செல்வந்தன். வேதாத்யானம் செய்தவன்.
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தவன். புண்ய தீர்த்தங்களில் நீராடியவன். பக்தி யோகத்தில் இழிந்தும்,
பகவானின் அருள் கிட்டவில்லை.ஒரு சமயம் நாரதரைத் தரிசிக்க, அவர் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்து, நல்வழிகாட்ட,
இந்த பிராம்மணன் , அஷ்டாக்ஷர மந்த்ர ஜபத்தால், பகவானின் அருளை பெற்று மோக்ஷம் அடைந்தான்.இப்படியாக,
ஆசார்யன் அருளினால்தான் மோக்ஷம் சித்திக்கும் என்று தெளிந்தது.மோக்ஷம் அடையத் தீராத ஆசை உடையவன்,
தனது ஆசார்ய பரம்பரையை ,பகவான் வரையிலும் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனே முதல் ஆசார்யன்
தம் இமம் ஸர்வ ஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் என்றும்,
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : என்றும் ,
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ என்றும், குருரஸி கதிச்ச ஸி ஜகதாம் என்றும் , சொல்லுகிறபடியே
ஸர்வ லோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் —-
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும் இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும்
2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகத விஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹித ப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ,
3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளை யிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,
4.க்ருஷ்ண த்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற
வ்யாஸாதிகளை அனு ப்ரவேசித்து மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,
5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,
6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு முதலிப்பித்தும்
7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச என்கிறபடியே
அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்
8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ர ஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும்
அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்
9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ சாட்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும்
10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் .

இத்தைக் கணிசித்து :
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம்–
எம்பெருமானே , எல்லா உலகங்களுக்கும் முதல் ஆசார்யன் –பரமாசார்யன் என்பதை பல உதாரணங்களிலிருந்து உணரலாம்.

தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் (மஹாபாரதம்–ஸபா பர்வம்) எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும்,
முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப் பெற்றிருப்பவனும்,தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் ,
பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்—
( ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் ,
அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் .
வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு )
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : —-விஷ்ணு புராணம் (5–1–14) எல்லா உலகங்களுக்கும் குருவான நாராயணன்,
எனக்கும் குரு —ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் சொல்கிறது—–தனக்கென்று ,எந்த ஆசார்யனும் இல்லாத , பரமாசார்யன் –நாராயணன்.
(இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே ).
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ —–நீரே பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி,
க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம் குருரஸி கதிச்ச ஸி ஜகதாம்—-

ஸ்தோத்ர ரத்னம் (60 ) பிதா த்வம் , மாதா த்வம், தயிததநயஸ்த்வம் , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி கதிஸ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதிஅஹமபி தவைவாஸ்மி ஹி பாரா : ||
ஸ்தோத்ர ரத்னம் (60 ) முழு ச்லோகம்
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா பந்துவும்;
அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும் நவவித ஸம்பந்தம் –ஒன்பதுவிதமான உறவுகள் பகவான் நாம் 1.பரமாத்மா ஜீவாத்மா 2.யஜமானன் கிங்கரர்கள் –வேலையாட்கள் 3.பிதா புத்ரன் /புத்ரி 4.ஆசார்யன் சிஷ்யன்
5.பதி பத்னி 6.போக்தா –அனுபவிப்பவன் போக்யம் –அனுபவிக்கப்படும் பொருள் 7.ரக்ஷிப்பவன் ரக்ஷிக்கப்படுபவர்
8.நியமிப்பவன் நியமிக்கப்படுபவன் 9.சேஷீ சேஷன் –சேஷபூதன் இப்படிப்பட்ட எல்லா லோகங்களுக்கும் பரமாசார்யனான எம்பெருமான்,

நமக்குச் செய்த உபாயங்களை, ஸ்வாமி தேசிகன் இப்போது சொல்கிறார்.
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும்
இவன் முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் —-

வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவுக்குத் தொடக்கத்திலே வேதங்களைக் கொடுத்தான், ,காணாமல் போன வேதங்களைக் கண்டுபிடிப்பதாக வாக்குக் கொடுத்து,
அப்படியே கண்டுபிடித்து, வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, அவன் மூலமாகவே , வேத சாஸ்த்ர ஞானத்தை உலகத்தாருக்கு வழங்கியும்,

2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : (பாரதம்–சாந்தி பர்வம் )என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹித  ப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ——,
வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவின் புத்ரர்களான ஸநத்குமாரர்கள் ,—இவர்கள்–தானாகவே ஞானிகள், நிவ்ருத்தி தர்மத்தில் இழிபவர்கள்—–
இவர்கள் மூலமாக நன்மைகளைச் செய்தும்,

3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளை யிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,

வ்யாக்யானம் —- மற்றும், நாரதர், பராசரர், சுகப்ரம்மம் , சௌனகரிஷி இன்னும் பல மஹரிஷிகள் மூலமாக,
அத்யாத்ம ஸம்ப்ரதாயமான ஜீவாத்மா –பரமாத்ம விஷயமான உபதேச க்ரமம் அழியாதபடி செய்தும்,

4.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து
மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,

வ்யாக்யானம் —–
.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ
பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? (விஷ்ணு புராணம் ) க்ருஷ்ணத்வைபாயனர் என்று கொண்டாடப்படும்
வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே !ஹே—-மைத்ரேயரே , மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் (மஹாபாரதம் —ஆதிபர்வம் )
மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும் போது, பீஷ்மர், கைகளைக் கூப்பிய வண்ணம் பேசினார்.
பகவான் நாராயணன், வ்யாஸாதி மஹரிஷிகளிடம் அநுபிரவேசித்து, சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்ம ஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும்,

5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,

வ்யாக்யானம்—- பகவான் நாராயணனே, ஹம்ஸ , மத்ஸ்ய ,ஹயக்ரீவ,நரநாராயண, கீதாசார்ய க்ருஷ்ண அவதாரங்கள் எடுத்து,
தத்வங்களையும்,ஹிதத்தையும், புருஷார்த்தத்தையும் ப்ரகாசமாக எடுத்துச் சொல்லியும்——

ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—–
இவர்கள், தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்ம யோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.
இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.
பகவான் மிகவும் கருணையுடன் ஹம்ஸ ரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும்,
விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவ பர—சரீர ஆத்ம பாவ ரூபத்தை உபதேசித்தார்.

மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும்.
உலகங்கள் யாவும் ,கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,
அப்போது, அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார்.
ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்த போது,
அவர், ஜல தர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து,
அவராலேயே, கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,
கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய் சிலிர்த்த ஸத்யவ்ரதன்
இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார்.
எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி, ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து,
வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார்

ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது—
ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில் தங்கத் தூள்கள் ஒட்டுவதுபோல,
மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள்.
பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளி கொண்டு இருக்கிறான்;யோக நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது.
யோக நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்து,
அவர்கள் உய்வதற்கு வழி காணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும், அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் .
தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின.
இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,
தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித் தொழிலை உபதேசித்து,
அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில்,
தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் ) அபஹரித்துக் கொண்டு
பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்து வைத்தனர். ப்ரஹ்மா பதறினான்; நான்கு வேதங்களின் உதவி இல்லாமல்,
ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான், பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து,
பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்” என்கிற ஸ்வரத்தை எழுப்ப, இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது,
ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக நித்ரை செய்யலானார்.
அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட, பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார்.

நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின் பெண் மூர்த்தி என்பவள்–அவள்,
தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .
நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம யோகத்தை உபதேசித்தார் இவரால்,
தன்னுடைய ”இந்த்ர ”பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க, அப்ஸரஸ்களை அனுப்ப,
நாராயண ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை அவர்களுக்குக் காண்பித்து,
இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல,
அவர்களும் ,மிகவும் வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல, இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் .

கீதாசார்யன் —– குருக்ஷேத்ர யுத்தத்தில், அர்ஜுனனுக்கு, பகவான் அருளிய உபதேசங்கள்—18 அத்தியாயங்கள்– பகவத் கீதை
என்கிற மிக உயர்ந்த, தத்வ விளக்கம்–இதனாலும் பகவான் ஆசார்யன்

6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு மூதலிப்பித்தும்

வ்யாக்யானம்——– தான் அருளிய எல்லாவற்றையும், பீஷ்மர் முதலான ஞானிகள் மூலமாக வெளியில் பரவச் செய்தான்

7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச
என்கிறபடியே அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்

வ்யாக்யானம்–விளக்கம்–
பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் —-மஹாபாரதம்—சாந்தி பர்வம்– பகவான் நாராயணனே,
பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில், அவனே மறுபடியும் உபதேசித்தான்.
நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான்.
இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் ”பஞ்ச சம்ஸ்காரம்”செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.

8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை
ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்

வ்யாக்யானம்—விளக்கம்–
பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத —-விஷ்ணு தர்மம் சொல்கிறது—
கலியுகத்தில் அந்தந்த ஜீவன்களுக்குள் புகுந்து, அச்யுதன், தனக்கு விருப்பமானத்தைச் செய்கிறான், என்பதற்கு ஏற்ப,
பராங்குச (நம்மாழ்வார் முதலாக ), பரகால ( திருமங்கை ஆழ்வார்) என்கிற பத்து அவதாரங்களை எடுத்தான்.
இப்படி, பகவான் செய்த உபகாரம் என்ன ? மேகங்கள், சமுத்ரத்திலிருந்து, நீரை உறிஞ்சி எடுத்து, அந்த நீரை,
எல்லா ஜீவன்களுக்கும் மழையாகப் பொழியுமாப்போலே ,வேதங்களின் சாரத்தை எல்லாம் எடுத்து, எல்லோருக்கும் எளிதில் புரியும்படி,
நாலாயிர திவ்ய ப்ரபந்தமாகத் தமிழில் அளித்தான்.

9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ ஸாக்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ் சாஸ்த்ர பாணினா ஏ என்றும்

வ்யாக்யானம்—–விளக்கம் — இப்படியாகத் தான் ஸங்கல்பித்த –ஏற்படுத்திய நல்ல பாதைக்கு, நாராயணனை, மற்ற பரிவார தெய்வங்களோடுச் சமமாக நினைப்பவர்கள்,வேத நெறிப் படையாக வாழ்க்கையை வாழாத- பாஷாண்டிகள்,நாராயணனைத் தாழ்வாக எண்ணுபவர்கள், —
இவர்களைப்போல் உள்ளவர்களால், இடைஞ்சல்–தடங்கல் ஏற்படாதிருக்க, பகவான் செய்தது என்னவெனில் ?
ஏ சாக்ஷாத் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான்
உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ ——— (ஜயாக்ய ஸம்ஹிதை )
நாராயணன், மனுஷ்ய சரீரத்தை எடுத்து, ஸம்ஸாரத்தில் மூழ்கி இருக்கிற ஜீவாத்மாக்களை, சாஸ்த்ரம் என்கிற
கையினால், கருணையுடன், தானே , கரையேற்றுகிறான்.

10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :

வ்யாக்யானம்—-விளக்கம் —– ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதில்கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே ————பெரியாழ்வார் திருமொழி
அவன் பகவான், நாராயணன்—பீதாம்பரதாரி—என்னுள்ளே வந்தான்—எப்படி ? பிரமகுருவாக வந்தான் —வந்து ஹ்ருதயத்திலே புகுந்தான்—
புகுந்தவன் , என் சிரஸ்ஸில் திருவடியை வைத்து , அது அழியாத அடையாளமாக ஆயிற்று— என்று இப்படி விவரிக்கிறார்—
பகவான், ஆசார்ய ரூபமாக வந்து, ப்ரஹ்மோபதேசம் செய்கிறானாம்.
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம் —விளக்கம் ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது—-
இந்தக் கலியுகத்தில், நாராயணனையே உபாயமாகவும் உபேயமாகவும்
கொண்ட விஷ்ணு பக்தர்கள், தமிழ் பேசும் பிரதேசத்தில் ,தாமிரவருணி, வைகை,பாலாறு, காவேரி, மேற்கே கடலில் கலக்கும் மகாநதி (பெரியாறு )
இந்த நதிகளின் கரைகளில் பிறப்பார்கள். ஸ்ரீ உடையவர் வரை ஆசார்ய பரம்பரை இவ்வாசார்யர்களில் ,
ஈச்வரமுனிகள் பிள்ளை நாதமுனிகள் . இவர் ந்யாயதத்துவமென்கிற சாஸ்த்ரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார்.
இவருக்கு ஸ்ரீ மதுரகவிகள் முதலாக ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும்
யோக தசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் .
நாதமுனிகள் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான் . ஈச்வரப்பட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஆகம ப்ராமாண்யமும் புருஷ நிர்ணயமும் , ஆத்ம ஸித்தி–ஈச்வர ஸித்தி –ஸம்வித் ஸித்தி என்கிற ஸித்தித்ரயமும் ,
கீதார்த்த ஸங்க்ரஹமும் ,சதுச்லோகியுமாக எட்டு.
ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டை நம்பி பிள்ளை என்னாச்சான் . என்னாச்சான் பிள்ளைகள் நால்வர்.
இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்.பிள்ளையப்பர் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப் பெண்பிள்ளைகள் இருவர்.

வ்யாக்யானம்—-விளக்கம்—- கலியுகத்தில் ,நதிதீரங்களில் ,ஆசார்யர்கள் ,அவதரிப்பார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னதை ,மேற்கோள் காட்டியவர்,
இப்போது ஆசார்யர்களைப் பற்றிக் கூறுகிறார்.
முதலில் ஸ்ரீமந் நாதமுனிகள் . இவர் ஈச்வரமுனியின் குமாரர். இவர், ந்யாயதத்வம், யோகரஹஸ்யம் என்கிற இரண்டு பொக்கிஷ க்ரந்தங்களை அருளினார்.
இவருக்கு, மதுரகவி ஆழ்வாரின் உபதேச பரம்பரையும், திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்று, யோகத்தில் இழிந்ததால்,
நேரிடையாகவே ஸ்ரீ நம்மாழ்வாரை ,ஆசார்யனாகப் பெரும் பாக்யத்தைப் பெற்றார்.
நாதமுனிகள் குமாரர் ஈச்வர பட்டாழ்வான். இவருடைய பிள்ளை ஆளவந்தார்.
ஸ்ரீ ஆளவந்தார் அருளியவை–ஆகமப்ரமாண்யம்,புருஷ நிர்ணயம், ஆத்ம ஸித்தி ,ஈச்வர ஸித்தி ,ஸம்வித் ஸித்தி ,
கீதார்த்த ஸங்க்ரஹம் , ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி –ஆகிய எட்டு.
பிள்ளை , சொட்டை நம்பி. சொட்டை நம்பியின் பிள்ளை எண்ணாச்சான்.இவரது பிள்ளைகள் நால்வர்.
அதில் ஒருவரான பிள்ளையப்பரின் குமாரர் தோழப்பர். இவருக்கு இரண்டு பெண்கள்.

நாதமுனிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள்,உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,
உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான்
வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் என்பர் .

உய்யக்கொண்டார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர்.
அவர்களாகிறார், மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை.

மணக்கால் நம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர் .அவர்களாகிறார், ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்
திருவிண்ணகரப்பன் , சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி

வ்யாக்யானம்—விளக்கம்—
ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் என்றால், அவரது திருவடிகளைப் பற்றிய சிஷ்யர்கள் என்று பொருள்.
நாதமுனிகளை ஆச்ரயித்தவர்கள்–உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,
நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான் , வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் ஆகிய எண்மர்

உய்யக்கொண்டாரை ஆச்ரயித்தவர்கள்—-மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை ஆகிய ஐவர்

மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவர்கள்—-ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன் ,
சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி ஆகிய ஐவர்

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் பதினைவர் .அவர்களாகிறார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான்,
ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான், சிறியாண்டான் , திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் ,
தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் , மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர்

வ்யாக்யானம்—-விளக்கம்– நாதமுனிகள் திருப்பேரரான ஆளவந்தாரை -ஆச்ரயித்தவர்கள்—-பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி,
திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான்,சிறியாண்டான் ,
திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் , தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் ,
மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர் .

பெரியநம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார், எம்பெருமானார், மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி

வ்யாக்யானம்—-விளக்கம்–
பெரியநம்பிகளை ஆச்ரயித்தவர்கள்—-எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பிகள் ஆகிய அறுவர் .
எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ரகஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்.
திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்.
ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும், அருளிச் செய்யும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார்.
திருமலைநம்பி ஸ்ரீபாதத்திலே ஸ்ரீமத் ராமாயணம் கேட்டருளினார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஸ்ரீபாஷ்யமும், தீபமும், ஸாரமும் , வேதார்த்த ஸங்க்ரஹமும் , ஸ்ரீ கீதாபாஷ்யமும்
சிறிய கத்யமும், பெரிய கத்யமும் ஸ்ரீ வைகுண்ட கத்யமும் ,நித்யமும் ஆக ஒன்பது.
இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளை, தம் தம் ஸம்ப்ரதாயப்படிகளிலே அறிந்து கொள்வது

வ்யாக்யானம்—–விளக்கம் —
எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரஹஸ்யார்த்தங்களையும் ,
திருமாலையாண்டானிடத்திலே திருவாய்மொழிஅர்த்தங்களையும்,கற்றார்.
ஆளவந்தாராழ்வார் பக்கலில் திருவாய்மொழியும் , ஸ்தோத்ர ரத்னம், அருளிச் செயலும், கற்றார்.
திருமலை நம்பிகளிடம் , ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்டார்.
இவர் அருளிய க்ரந்தங்கள் —— ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம் , வேதார்த்த ஸங்க்ரஹம் , கீதா பாஷ்யம்,
ஸ்ரீரங்க கத்யம் ( சிறிய கத்யம் ), ஸரணாகதி கத்யம் ( பெரிய கத்யம் ), ஸ்ரீவைகுண்ட கத்யம்,நித்யம் ஆக ஒன்பது க்ரந்தங்கள் .
எம்பெருமானாரின் சிஷ்யர்களை, அவரவர் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்ப அறிந்துகொள்ளவேண்டும்.

ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்றார்கள்
குருவை ஒருவன் ப்ரகாசிப்பிக்கிறதவும் ஒருவன் ப்ரகாசிப்பியாதொழிகிறதுவும் குரு பக்தியில் தாரதம்யத்தாலேயிறே .
பகவத் விஷயத்தில் போலே குருவிஷயத்திலும் பரையான பக்தியுடைவனுக்கு அபேக்ஷிதார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும்
என்னுமிடம் கட —ஜாபாலாதி ச்ருதிகளிலும்
ஸஞ்சயாதி வ்ருத்தாந்தங்களிலும் ப்ரஸித்தம் .
இங்ஙனல்லார்க்கு இப்படி ஞான ஸம்பத்து உண்டாகாது என்னுமிடம் சிஷ்யர்களுடைய ஞானதாரதம்யத்தாலே கண்டுகொள்வது.
மிகவும் குணாதிகரனான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை ப்ரகாசிப்பியாதார்க்கு நிஷ்ட்டை குலையாது என்னுமிடம்
ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே ப்ரஸித்தம் .
பெற்றது குணமாக உபதேசித்தால் , சிஷ்ய பாபம் குரோரபி என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்ட்டை குலையும்படியாமென்னுமிடம் ,
வருவது விசாரியாதே இந்த்ரனுக்கு உபதேசித்துத் தானும் ப்ரஹ்மவித்யையை மறந்து , தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு
ஸர்வேச்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படியிருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டுகொள்வது.
இப்படி, அப்ரகாசப்ரகாசாப்யாம் என்கிற இரண்டுக்கும் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்கிற பலங்களை
ஒளசித்யத்தாலும் ப்ரமாண ப்ரஸித்தியாலும் க்ரமத்தாலே உதாகரித்தவித்தனை,
இரண்டிலும் இரண்டு அந்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை.
ஆகையால், சர்வாவஸ்தையிலும் குருபக்தியின் பரீவாகமாக குருவை ப்ரகாசிப்பிக்கவும் மகாரத்னகர்ப்பமான மாணிக்கச் செப்புப்போலே
இருக்கிற திருமந்த்ரத்தினுடைய சீர்மையும் தன் நிஷ்ட்டையும் குலையாமைக்காக சிலவான ப்ரயோஜனங்களைப் பற்ற
சிஷ்யகுணபூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே , மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் ப்ராப்தம் .
இவ்விடத்தில் குரு சப்தம் பரமகுருக்களுக்கும் உபலக்ஷணம் ஸாமான்யமாகவுமாம் மந்த்ர சப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரகஸ்யங்களுக்கும் ப்ரதர்சனபரம் .
தான் இந்த ரகஸ்யங்களை அநுஸந்திக்கும்போதெல்லாம் ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கையும் விதிபலப்ராப்தம் .
இவ்வாசார்யர்களுடைய அநுஸந்தானம் , ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்

வ்யாக்யானம்——விளக்கம்—- சேஷ ஸம்ஹிதை கூறுகிறது.
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ புத்திசாலியானவன் ,
தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம் போலப் பாதுகாக்க வேண்டும்.
இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால், ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும்.
ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் , புகழாமலும் இருப்பதும், குருவிடம் அவன் வைத்துள்ள
அதிக பக்தியும், குறைந்த பக்தியுமே காரணமாகிறது.
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோ அதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும்.
அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும்
ஆசார்யபக்தி பரிவாஹத்தால் ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..
சிஷ்யர்கள் மிக குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும்,
ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது. சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார்.
ஜாபாலை என்கிற ஸ்திரீயின் குமாரன்–ஸத்யகாமன் . இவன், ப்ரஹ்மவித்யைக் கற்க ஆசார்யரை அணுகினான்
ஜானஸ்ருதி ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து, இவனுக்கு, உபதேசித்தார்.
ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை.

ஆனால் சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால்
அந்தத் தகுதியில்லா சிஷ்யன் செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன.
இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான் என்று அதைப் பெருமையாக நினைத்து, ப்ரஹ்மா
அவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார்.
இதன் பலன் அவருக்கு, பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின.
பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார். பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று,
ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது.

ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன் ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர்.
அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,
போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம் வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு சொன்னவர்.
”அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர்மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும்,
செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும் அவச்யம்; சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு,
ஆசார்யன் உபதேசிக்கலாகாது; சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .

ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——கௌதம தர்ம ஸுத்ரம் -சொல்கிறது-
பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்து விட்டால்,அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை மனதில் த்யானிக்க வேண்டும்.

என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன் அமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே

வ்யாக்யானம் —விளக்கம்
இந்த ஆத்மா, எம்பெருமானுக்கு ”சேஷன்” என்கிற ஞானத்தைக் கொடுத்து, ஆத்மாவைக் காப்பாற்றிய என் ஆசார்யனை
சரணம் என்று அடைந்து, அவரது ஆசார்யர்களை வரிசைக் க்ரமமாக நமஸ்கரித்து, பின்பு கருணையுடன்
ஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த வள்ளலான ஸ்ரீ பாஷ்யகாரர் , பெரியநம்பி ஆசார்யன், ஆளவந்தாராகிய ஆசார்யன் ,
மணக்கால்நம்பி என்கிற ஆசார்யன், ப்ரபத்தி மார்க்கத்தை மணக்கால் நம்பிக்கு உபதேசித்த உய்யக்கொண்டார்,
அவரது ஆசார்யன் நாதமுனிகள், அவரது ஆசார்யன் சடகோபன் என்கிற ஸ்ரீ நம்மாழ்வார், பிறகு ஸ்ரீ விஷ்வக் ஸேனர் ,
இனிமையான அமுதம் போன்ற பெரியபிராட்டியார், இவர்களை முற்பட நமஸ்கரித்து,
எம்பெருமானின் திருவடிகளை அடைகின்றேன்

ஏதே மஹ்யம் அபோட மன்மத ஸார உன்மாதாய நாதாதய : த்ரய்யந்த ப்ரதிநந்தனீய விவித உதந்தா : ஸ்வதந்தாமிஹ |
ஸ்ரத்தாதவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா : ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவீ வைதேஸிகா தேஸிகா : ||

வ்யாக்யானம்—விளக்கம்
வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும் ,
திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி
இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட இவர்கள்,
(மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன் பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய ,
இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் .

ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக — ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ— க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம் | திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந — ஸ்பாதிநிர்த்தூததத்தத் — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா ||

வ்யாக்யானம்—-விளக்கம் ஸ்ரீ ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை
எதிர்ப்பவர்களை,அவர்களின் கர்வத்தை அடக்க உதவுகிறான்.இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் ,
திசைகள் தோறும் உள்ள வெற்றித் தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது.அந்தத் தூண்களில் உள்ள கொடிகள்,
மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப் போலே விரட்டித் தள்ளுகின்றன.
விமரிசையாக இருக்கிற ,நல்மார்க்க தர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது.

ஆரணநூல் வழிச்செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாயவர் வாதக்கதலிகள் மாய்த்த பிரான் என்றநகீர்த்தி
இராமாநுசமுனி இன்னுரைசேர் சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே

வ்யாக்யானம்—-விளக்கம் வேதங்களின்உட்கருத்தை விளக்கும் நூல் ”ப்ரஹ்மஸுத்ரம் ”.
அது கூறும் உண்மையான வழியை ,தவறான வாதங்களை சொல்லிப் பலரும் அழித்தபோது,
அவற்றையெல்லாம்,வாழைத் தோப்பை நாசம் செய்யும் ஒப்பற்ற யானையைப் போல , உபகாரகர் ,
உலகுக்கு பொருத்தமான அலங்காரமான சிறந்த புகழை உடைய இராமாநுச முனி என்னும் ஸ்ரீ பாஷ்யகாரர்
இனிமையான தன்னுடைய ஸ்ரீ ஸூக்திகளால் சாய்த்தார்.ஸ்ரீ பாஷ்யகாரரின் இன்சொற்களிலும்
அவரது சிறந்த குணங்களிலும் எங்கள் மனம் முழுதும் ஈடுபட்டுள்ளது .
இனி நாங்கள், வேறு சாஸ்த்ரங்களையும்கர்மாக்களையும் ,தீயச் செயல்களையும் மனதால்கூட நினைக்கமாட்டோம் .

நீளவந்தின்று விதிவகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னும் வினையுடம்பொன்றி விழுந்துழலாது
ஆள வந்தாரென வென்று அருள்தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோம் இனி அல்வழக்கே

வ்யாக்யானம்—-விளக்கம்
நாம், நீண்ட நெடுங்காலமாக சம்ஸாரப் பிடியில் சிக்கி இருக்கிறோம்.இந்தப் பிறவிக்குப் பிறகும் கர்மவினையின் காரணமாக ,
வேறொருப் பிறவியை எடுத்து அல்லல்படாமல், நம்மைக்காக்க ,ஆளவந்தார் அவதரித்தார்.
அவர் எதிர்வாதம் செய்பவர்களை வென்று, கருணை புரிந்தார் , அத்தகு கல்யாண குணங்களை உடைய ஆளவந்தாருக்குத் தாஸரான நாம்,
இனிமேலும் ஸத்தில்லாத –அஸத்தான சாஸ்த்ரங்களைப் படிக்கமாட்டோம் .

காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த
வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே

வ்யாக்யானம்—விளக்கம் திருச்ச்சின்னம் வாத்யம்போலும் ,வலம்புரிச் சங்குபோலும் நல்ல பக்திமான்களான
கீழையகத்தாழ்வான் ,மேலையகத்தாழ்வான் ஆகிய இரண்டு சிஷ்யர்களுக்கு, தாள வித்யையைச் சொல்லிக்கொடுத்து,
தமிழ்வேதமெனப் போற்றப்படும் திவ்யப்ரபந்தத்தின் இனிமையான கானத்தையும் உபதேசித்து,
மஹா உதாரகுணவள்ளலும் யோகமார்க்கத்தை உலகில் பரவச் செய்தவருமான ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவடிகளைத் தினமும் ஸேவித்து வாழ்வோம் .

நான்கு வகையான இந்தப்பூமியில் நமக்குச் சமமானவர் யார் உள்ளார்கள் ? எவருமில்லை !

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் ரஹஸ்ய த்ரய சார அர்த்தங்கள்

August 31, 2024

ரஹஸ்யார்த்த நிர்வாஹங்களில் சார தமமாகக் கொள்ளப்படும் மூன்று விஷயங்கள்
1- சேஷத்வமே ஞான ஆனந்தங்களை விட ஜீவாத்மாவுக்கு அந்தரங்க நிரூபகம்
2-ஸ்வ கத ஸ்வீ காரத்தைக் காட்டிலும் பர கத ஸ்வீ காரமே ஸ்ரேஷ்டம்
3- சேதன லாபம் எம்பெருமானுக்குப் புருஷார்த்தமே ஒழிய எம்பெருமானைப் பெறுவது சேதனனுக்குப் புருஷார்த்தம் அன்று

மற்ற விஷயங்கள் இவற்றுள் அந்தர்பவிக்கும்

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –8-8-2-
மற்ற இடங்களில் -அடியேன் -என்பது தேஹ விஸிஷ்ட ஆத்மாவைக் குறிக்கும்
அடியேன் சிறிய ஞானத்தன் -1-5-2- என்கிற இடத்தில் ஞானமுடைமை தேஹத்துக்கு அஸம்பாவிதம் என்பதால் இங்கு ஆத்மாவையே சொல்லுமோ என்னில்
காண்பான் அலற்றுவன் என்ற கிரியையுடன் இது அந்வயிக்கிற படியால்
வெறும் ஆத்மா அலற்ற முடியாதாகையாலே தேஹ விஸிஷ்ட ஆத்மாவையே குறிக்கும்
இவ் விடத்தில் மட்டுமே ஆத்மா என்பதும் அடியேன் என்பதும் பர்யாயம் –
அதாவது ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம் என்பது ஆழ்வாரது திரு உள்ளம்

இந்த மஹா அர்த்தம் ஸ்வாமியுடைய திரு உள்ளத்தில் நன்கு ஊறி இருந்து-

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–7-16-

৷৷7.16৷৷ஸுக்ருதிநஃ புண்ய கர்மாணோ மாஂ ஷரணம் உபகம்ய மாம் ஏவ பஜந்தே. தே சே ஸுக்ருத தார தம்யேந சதுர்விதாஃ, ஸுக்ருத கரீயஸ் த்வேந ப்ரதிபத்தி வைஷேஷ்யாத் உத்தரோத்தராதிகதமாஃ பவந்தி.–(புண்ய மிகுதி மிகுதியால்-பிரதிபத்தி – விருப்பத்தின் வேறுபாட்டால் -விரும்பியதை அருளுகிறேன் )

ஆர்த்தஃ ப்ரதிஷ்டா ஹீநோ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத் ப்ராப்தி காமஃ.

அர்தார்தீ அப்ராப் தைஷ்வர்ய தயா ஐஷ்வர்ய காமஃ, தயோஃ முக பேத மாத்ரம், ஐஷ்வர்ய விஷய தயா ஐக்யாத் ஏக ஏவ அதிகாரஃ.(அண்டக் குலத்துக்கு அதிபதி-புதிய ஐஸ்வர்ய காமன் பாசுரம் -அசுரர் இராக்கதர் இண்டைக் குலத்தை எடுத்துக் கலைந்த இருடீகேசன் -இழந்த ஐஸ்வர்யம் மீண்டு பெற பாசுரம் )

ஜிஜ்ஞாஸுஃ ப்ரகரிதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சுஃ ஜ்ஞாநம் ஏவ அஸ்ய ஸ்வரூபம் இதி ஜிஜ்ஞாஸுஃ இதி உக்தம்.(ஞான ஸ்வரூபமான ஆத்ம பிராப்தி காமன் )

ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைக ரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )

(அபர்யவஸ்யந்–தேசிகன் -மர நிழலில் தங்கி விட்டுப் போவது -கைவல்யான் நிலை -அக்காரக் கனியை சேவிக்க கால தாமதம்
இங்கேயே தங்கி விடுகிறான் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
8 அத்யாயம் இத்தை மேலே விவரிக்கும்)

৷৷7.16৷৷’சதுர்விதா பஜந்தே’ இத்யத்ர பஜந பர்யவஸிதா ப்ரபத்திர் விதித்ஸிதா; பூர்வ ஷ்லோகே தந்நிஷேதா தத்ர தத்விதாநஸ்யைவோ சிதத்வாதித் யபிப்ராயேண’ஷரணமுபகம்யேத் யுக்தம்’. ஸுகரிதித்வாவிஷேஷே கதமதிகாரி பேத இத்யத்ரோக்தஂ’ஸுகரிததாரதம்யேநேதி’. தாரதம்யஂ விவரிணோதி’ஸுகரிதகரீயஸ்த்வேநேதி’. விஷ்வாஸாதேஃ ஸாதாரணத்வேபி ப்ரபத்தேர்வைஷிஷ்ட்யஂ பலேச்சாபேதாத். ஆர்தஷப்தோத்ரார்தி மூலபூர்வஸ்திதிஷை தில்ய பர இத்யபிப்ராயேணாஹ ’ப்ரதிஷ்டாஹீந’ இதி. ஆர்தஸ்ய ஹி பரபஜநமார்தி நிவரித்த்யர்தமேவேத் யபிப்ராயேணாஹ’ ப்ரஷ்டைஷ்வர்யஃ புநஸ் தத்ப்ராப்திகாம’ இதி. பாடக்ரமாதப்யர்தக்ரமஸ்ய ப்ரபலத்வாஜ் ஜிஜ்ஞாஸோஃ ப்ராகேவார்தார்திந உபாதாநம். ஆர்தாத்தஸ்ய விஷேஷஂ தர்ஷயதி’அப்ராப்தேதி’. அர்தஷப்தோத்ரார்தநீய போக விஷேஷ பரஃ. பல த்வாரா ஹ்யதிகாரி பேதோபிதீயதே; பலஂ சார்தஸ்யார்தார்திநஷ் சைஷ்வர்யமேகமேவ. யதா புநஸ்ததவாந்தர பேதேந பேதக்லரிப்திஃ ததா பேதாந்தரமபி வக்துஂ ஷக்யமித்யத்ராஹ’தயோரிதி’. ப்ரஸித்தேநாவாந்தரபேதேந விஷேஷ வ்யபதேஷ மாத்ரமிதி பாவஃ. ஜிஜ்ஞாஸு ஷப்தேந ஜ்ஞாநார்தி மாத்ரஂ கிஂ ந கரிஹ்யதே. பகவந்தமேவ வா ஜிஜ்ஞாஸுஃ பக்தி ஷ்ரத்தா ரஹிதஃ குதூஹல மாத்ரேண பகவந்தஂ ஜிஜ்ஞாஸமாநோ வா, யதைகதமே த்விததாதயஃ’யூயஂ ஜிஜ்ஞாஸவோ பக்தாஃ’ இதி.’ஆரோக்யஂ பாஸ்கராதிச்சேச் ச்ரியமிச்சேத் துதாஷநாத். ஈஷ்வராஜ் ஜ்ஞாநமந்விச்சேந் மோக்ஷமிச்சேஜ் ஜநார்தநாத்’৷৷[ம.பு.77.49] இத்யுக்தாதிகாரி சதுஷ்டயே சாத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநே ஜிஜ்ஞாஸுரபி ஸ ஏவ பவிதுமர்ஹதி; தத்ராஹ’ப்ரகரிதீதி’. பகவந்தஂ ஜிஜ்ஞாஸோ ரந்ததோ பகவாநேவ ப்ராப்யதயாபிமத இதி ந புருஷார்தபேதஃ; தத்பேதாச் சாத்ராதிகாரி பேதஃ ப்ரதிபாத்யதே.’ஆர்தஃ, அர்தார்தீ’ இதி பாஹ்ய புருஷார்தாபிலாஷிணோ நிர்திஷ்டாஃ. பகவதர்தீ ச’ஜ்ஞாநீ’ இதி; ஜீவாத்ம ஸ்வரூபஂ சாதிகாநந்தஸ்வரூபஂ ப்ராப்யஂ சாந்யத்ர ப்ரஸித்தம்; அத்ராபி பரஸ்தாததிகாரி பேதஃ ஸமர்தயிஷ்யதே; அதஃ பரிஷேஷாதாத்மார்திவிஷயோயஂ ஜிஜ்ஞாஸுஷப்த இதி பாவஃ. ஜ்ஞாநார்திவாசகே ஜிஜ்ஞாஸுஷப்தே கதமாத்மார்தித்வஂ வ்யாக்ரியதே? இத்யத்ராஹ ‘ஜ்ஞாநமேவேதி’. ஜ்ஞாநமிஹ ஷுத்தாத்மா நுபவரூபஂ விவக்ஷிதமிதி பாவஃ. ஜ்ஞாநிநோதி கார்யந்தரத் வாநுகுணாந் வக்ஷ்யமாணாந் விஷேஷா நநுஸந்தாய விஷிஷ்ட ஜ்ஞாநத்வஂ தர்ஷயதி’இதஸ்த்வந்யாமி த்யாதிநா’.’கேவலாத்மந்ய பர்யவஸ்யந்நிதி’ நகரஂ ப்ரவிவிக்ஷோரத் வகஸ்ய ச்சாயாதரு மூலஸ்வாபவதாத்மா நுபவவிலம்ப இதி பாவஃ. அத்ர ஜிஜ்ஞாஸோர் வக்தவ்யஂ ஸர்வமஷ்டமே ப்ரபஞ்ச யிஷ்யாமஃ. விஷிஷ்ட ஜ்ஞாந பல பூதஂ புருஷார்தாந்தர பரிக்ரஹமாஹ’பகவந்தஂ ப்ரேப்ஸுரிதி’. தத்ர ஹேதுமாஹ ‘பகந்வதமிதி’. ’பகவந்த மேவேத்யாத்மாநுபவ விலம்பாக்ஷமத்வ மபிப்ரேதம்’.

இங்கு சங்கரர்
ஞானீ –விஷ்ணோஸ் தத்வ வித்
ஸ்வாமியோ
ஜ்ஞாநீ ச’இதஸ் த்வந்யாஂ ப்ரகரிதிஂ வித்தி மே பராம்’ (கீதா 7.5) இத்யாதிநா அபிஹித பகவச் சேஷதைகரஸாத்ம ஸ்வரூப வித் ப்ரகரிதி வியுக்த கேவலாத்மநி அபர்யவஸ்யந் பகவந்தஂ ப்ரேப்ஸுஃ பகவந்தம் பரம ப்ராப்யஂ மந்வாநஃ.(ஜ்ஞாநீ-பகவத் ஸ்வரூப ஞானம் உடையவன் )

இப்படி இந்த ஒரு இடம் மட்டும் இல்லாமல் ஞாநீ என்று வரும் இடங்களில் எல்லாம் ஸ்வாமியுடைய பாஷ்யம் இவ்வாறே அமைந்துள்ளது-ஜீவாத்மாவின் ஞானத்துக்குப் பிரயோஜனம் தன்னுடைய சேஷத்வத்தை அறிவது தான் என்று ஆழ்வாருடைய அருளிச் செயல்களில் அவகாஹநம் இருப்பதாலேயே ஸ்வாமியின் திரு உள்ளம் இவ்வாறு என்பது தெளிவாகத் தெரிகிறது

——-

ஸ்வ கத ஸ்வீகாரம் -மர்க்கட கிசோர நியாயம்
பர கத ஸ்வீ காரம் –மார்ஜார கிசோர நியாயம்

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:–8-14-

    பார்த: ய:-பார்த்தா! எவன்,
    அநந்யசேதா:-பிரிது நினைப்பின்றி,
    நித்யஸ: ஸததம் மாம் ஸ்மரதி-என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ,
    நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகிந:-அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு,
    அஹம் ஸுலப:-நான் எளிதில் அகப்படுவேன்

    ஏவம் ஐஷ்வர்யார்திநஃ கைவல்யார்தி நஷ்ச ஸ்வ ப்ராப்யாநுகுணஃ பகவதுபாஸந ப்ரகார உக்தஃ. –கீழ் இவரைப்பற்றி சொல்லி முடிக்கப் பட்டன )அத ஜ்ஞாநிநோ பகவதுபாஸந ப்ரகாரஂ ப்ராப்தி காரஂ ச ஆஹ — பகவத் லாபார்த்தி பற்றி இப்பொழுது சொல்லப்படுகிறது )

    ৷৷8.14৷৷நித்யஷோ மாம் உத்யோக ப்ரபரிதி ஸததஂ ஸர்வ காலம் அநந்ய சேதாஃ யஃ ஸ்மரதி அத்யர்தஂ மத் ப்ரியத்வேந மத் ஸ்மரித்யா விநா ஆத்ம தாரணம் அலபமாநோ நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதிஂ யஃ கரோதி தஸ்ய நித்ய யுக்தஸ்ய நித்ய யோகஂ காங்க்ஷமாணஸ்ய யோகிநஃ அஹஂ ஸுலபஃ அஹம் ஏவ ப்ராப்யஃ ந மத் பாவ ஐஷ்வர்யாதிகஃ.

    ஸுப்ராபஷ்ச தத் வியோகம் அஸஹமாநஃ அஹம் ஏவ தஂ வரிணே; (விட்டுப் பிரிய சகியாமல் நான் இருப்பதால் நானே வரிப்பதால் )மத் ப்ராப்த் யநு குணோபாஸந விபாகஂ தத் விரோதி நிரஸநம் அத்யர்தஂ மத் ப்ரியத்வாதிகஂ ச அஹம் ஏவ ததாமி இத்யர்தஃ.'(-காதல் அவஸ்தையை வளர்த்து -சிறுச் சிறிது விழித்து -அல்வழக்குகளை சமஸ்தமாகப் போக்கி -ஞானீயை ஞானவானாக ஆக்குகிறேன் )யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ’ (மு0 3.2.3) இதி ஹி ஷ்ரூயதே வக்ஷ்யதே ச.’தேஷாஂ ஸதத யுக்தாநாஂ பஜதாஂ ப்ரீதி பூர்வகம். ததாமி புத்தி யோகஂ தஂ யேந மாமுபயாந்தி தே৷৷தேஷாமேவாநுகம் பார்த மஹ மஜ்ஞாநஜஂ தமஃ. நாஷயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞாந தீபேந பாஸ்வதா৷৷’ (கீதா 10.10-11) இதி.

    அதஃ பரம் அத்யாயஷேஷேண -(இதற்க்கு மேல் அத்யாய சேஷத்தில் )ஜ்ஞாநிநஃ கைவல்யார்தி நஷ்ச அபுநராவரித்திம் -(திரும்பி வராத மோக்ஷத்தையும் )ஐஷ்வர்யார்திநஃ புநராவரித்திஂ ச ஆஹ –(திரும்பி வரும் நிலையையும் )

    ৷৷8.14৷৷ஸங்கத்யர்தமநுவததி — ‘ஏவமிதி’. அத்யாயாரம்பகதப்ரஷ்நோத்தரயோஸ்தத்ப்ரஸஞ்ஜகே பூர்வாத்யாயாந்தே சாயஂ க்ரமோ ந விவக்ஷிதஃ அதியஜ்ஞாந்திமப்ரத்யயயோஃ ஸாதாரண்யேந ப்ரதிபாதநே தாத்பர்யாத். இஹ து ப்ரதிநியதார்தோபதேஷரூபத்வாதுத்தரோத்தரஂ உத்கரிஷ்டதாப்ரதர்ஷநாயைஷ்வர்யாக்ஷரயாதாத்ம்யஂ பகவச்சரணார்திநஃ க்ரமேணோக்தமிதி பாவஃ. அத்ர ச’ஏவம்’ இதி நிர்தேஷாத்’ஸ்வப்ராஷ்யாநுகுணஂ’ இதி நிர்தேஷாச்ச ப்ரகரணஸ்யாதிகாரித்ரயவிஷயத்வவ்யவஸ்தாபகஹேதவஃ ப்ரதர்ஷிதாஃ. ததாஹி — ஏவமத்ர கஷ்சிச்சங்க்யேத — நநு’தே ப்ரஹ்ம தத்விதுஃ’ [7.29]’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1]’அக்ஷரஂ ப்ரஹ்ம பரமம்’ [8.3] இதி ப்ரஹ்மஷப்தஸ்ய ஸாக்ஷாத்ப்ரஹ்மவிஷயத்வே கோ பாதஃ? தஸ்யைவ ச ஸர்வாத்மத்வாதத்யாத்மஷப்தேநாபி தத்கதஂ ஸர்வஂ க்ரஹீதுமுசிதம்;’பூதபாவோத்பவகரோ விஸர்கஃ’ [8.3] இத்யபி ஜகத்ஸரிஷ்டிக்ரஹணஂ யுக்தஂ தேவதோத்தேஷேந த்ரவ்யத்யாகோ வா; ஸ சாத்ர நிவரித்திலக்ஷணோ யஜ்ஞஃ;’அதிபூதஂ க்ஷரோ பாவஃ’ [8.4] இதி ச அதிபவதீதி வ்யுத்பத்தேஃ ப்ராணிஜாதம். புருஷஷ்ச அதிதைவதமிதி பரப்ரஹ்மாவஸ்தாவிஷேஷஃ ஸமஷ்டிபுருஷாதிர்வா; அதியஜ்ஞஃ ஸர்வயஜ்ஞாபிமாநிநீ விஷ்ண்வாக்யா தேவதா’யஜ்ஞோ வை விஷ்ணுஃ’ [ஷ.ப்ரா.1.3.1] இதி ஷ்ருதேஃ;’அந்தகாலே ச’ [8.5] இத்யாதி ஷ்லோகத்ரயமபி முமுக்ஷோரேவாந்திமப்ரத்யயமதிகரித்யோக்தம்; ப்ரஷ்நப்ரதிவசநஷ்லோகாநாஂ பூர்வாத்யாயே ப்ரஸ்துதாதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயபரத்வேப்யுபரிதநாஃஷ்லோகாஃ ப்ரதாநதயா ஸுதுர்லபத்வேந நிர்திஷ்டஜ்ஞாநிபரா யுக்தாஃ அந்யதா’மாமேவ ஸ்மரந்’ [8.5]’மாமேவைஷ்யஸி’ [8.7] இத்யாதேர்பாதாத்; அத ஏவ’ப்ரயாணகாலே ச கதம்’ [8.2]’அந்தகாலே ச மாம்’ [8.5] இதி ஷ்லோகயோரதிகாரித்ரயபரத்வேபி தத்விவரணேத்ர ததைகார்த்யஂ க்ராஹ்யமித்யபி நிரஸ்தம். தத்ராபி சாதிகாரித்ரயபரத்வஂ ந ப்ரதீயதே நசைஷ்வர்யார்திநஃ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ பஷ்யாமஃ; ஏவமுத்தரேஷ்வபி ஷ்லோகேஷ்வேக ஏவாதிகாரீ தத்வேத்யஂ சைகமேவ புநஃ புநரநூத்ய விஷேஷதோ விஷதீக்ரியதே; நச புநருக்திதோஷஃ அப்யாஸஸ்ய ஜ்ஞாநிப்ராதாந்யலிங்கத்வாத்;’ஸஂஸித்திஂ பரமாஂ கதாஃ’ [8.15]’ஸ யாதி பரமாஂ கதிஂ’ [8.13]’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இத்யமீஷாமைகார்த்யஂ ச ப்ரதீதஂ த்வபரித்யாஜ்யம்; ந ச பரமகந்தவ்யாதிரிக்தா பரமஸஂஸித்திஃ.’தமாஹுஃ பரமாஂ கதிம்’ [8.21] இதி பரோக்ஷநிர்தேஷஷ்ச’புருஷஃ ஸ பரஃ பார்த!’ [8.22] இதிவத்ஸ்யாத்;’பரமஂ புருஷஂ திவ்யஂ’ [8.8]’ஸ தஂ பரஂ புருஷமுபைதி திவ்யஂ’ [8.10]’புருஷஃ ஸ பரஃ பார்த! பக்த்யா லப்யஸ்த்வநந்யயா’ [8.22] இத்யமீஷாஂ பிந்நார்தத்வகல்பநஂ சாயுக்தம்; பரைரபி ச ஸர்வைஃ ப்ராயஷ ஏவமைககண்ட்யேந வ்யாக்யாதம் — இதி. அத்ரைவஂ பரிஹாரக்ரமஃ — ‘அதியஜ்ஞோஹமேவ’ இதிவத்’அஹமேவ ப்ரஹ்ம’ இத்யநுக்தேரத்யாத்மாதிவதத்ர ப்ரஹ்மஷப்தார்தஸ்யாப்யர்தாந்தரத்வஂ தாவத்ப்ரதீதம் நச ப்ரஹ்மஷப்தாதக்ஷரஷப்தஸ்ய பரமாத்மநி ரூட்யதிஷயஃ யேந ததஸ்தத்வ்யாக்யாநஂ ஸ்யாத்.’ஏவஂ ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாஂ பர்யுபாஸதே. யே சாப்யக்ஷரமவ்யக்தம்’ [12.1] இத்யாதிஷு ச பரமாத்மநோந்யதேவோபாஸ்யத்வமக்ஷரஷப்தேந ப்ரதீயதே;’த்வே ரூபே ப்ரஹ்மணஸ்தஸ்ய மூர்தஂ சாமூர்தமேவ ச. க்ஷராக்ஷரஸ்வரூபே தே ஸர்வபூதேஷு ச ஸ்திதே৷৷அக்ஷரஂ தத்பரஂ ப்ரஹ்ம க்ஷரஂ ஸர்வமிதஂ ஜகத்’ [வி.பு.1.22.55;56] இத்யாதிஷு சாக்ஷரபரப்ரஹ்மஷப்தௌ பரிஷுத்தாத்மவிஷயௌ ஷாரீரகபாஷ்யே ஸமர்திதௌ; அதோத்ர’கிஂ தத்ப்ரஹ்ம’ [8.1] இத்யுக்தேஹமேவ ப்ரஹ்மேத்யவ்யாக்யாநாத்ஸ்வேதரவிஷயப்ரஹ்மஷப்தஃ பரமஷப்தவிஷேஷிதாக்ஷரஷப்தாநுகுண்யாச்ச ப்ரகரிதேரீஷ்வராச்சாந்யஸ்மிந்பரிஷுத்தாத்மந்யுபசாராத்வர்ததே; பஷ்சாச்சாயமேவ’அவ்யக்தோக்ஷர இத்யுக்தஃ’ [8.21] இதி வக்ஷ்யதே; ந சாஸௌ ஷ்லோகஃ பரமாத்மபர இதி ஷங்கநீயம்’யே சாப்யக்ஷரமவ்யக்தஂ’ [12.1]’யே த்வக்ஷரமநிர்தேஷ்யஂ’ [12.3]’க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச’ [15.16] இத்யாதிஷ்விவாத்ராபி அக்ஷரஷப்தஸ்ய பகவத்வ்யதிரிக்தவிஷயத்வப்ரதீதேஃ ஸஂஸித்திஷப்தஷ்ச பரமகதிஷப்தநிர்திஷ்டப்ராப்யவிலக்ஷணாஂ ஸமீசீநாஂ ஸித்திஂ ஸ்வரஸத உபஸர்கஷக்த்யா வ்யநக்தி அதஏவ ஸ்வபாவாதிஷப்தா அதிகாரித்ரயஜ்ஞாதவ்யோபாதேயவஸ்துவிஷேஷபரா உக்தாஃ. ஏவஂ ஸ்வவாக்ய பர்யாலோசநயா பூர்வாத்யாயப்ரகரிதபராமர்ஷேந ச ப்ரஷ்நப்ரதிவசநவாக்யாநாமதிகாரித்ரயவிஷயத்வே ஸித்தே ததநந்தராணாமபி க்ரந்தாநாஂ யதாஸம்பவஂ ஸர்வவிஷயத்வஂ யுக்தம். ப்ரக்ராந்தே சாதிகாரித்ரயே யத்வரித்தத்ரயேணாநூத்யமாநே கைவல்யபகவத்ப்ராப்திகாமயோரநந்தரஂ ஸ்பஷ்டமபிதாநாத்’அப்யாஸ’-[8.8] இத்யாதிகஂ பரிஷேஷாதைஷ்வர்யார்திவிஷயம்; யச்சைஷ்வர்யார்திநாஂ பரமபுருஷவிஷயாந்திமப்ரத்யயஸாபேக்ஷதாயாஂ ப்ரமாணஂ நாஸ்தீதி; ததபி ந ஷ்ரீமத்பாகவதே புராணே த்ருவசரிதே தத்தரிஷ்டேஃ — ‘பக்திஂ ஹரௌ பகவதி ப்ரவஹந்’ இத்யாதிநா. அதோ யதோக்த ஏவார்தஃ. யத்யபி ப்ரஹ்மபுருஷபரகத்யாதிஷப்தைரிஹ ஸர்வத்ர பரமாத்மபஜநதத்ப்ராப்த்யாதிரேவ ப்ரதீயதே; ததாபி தாவதைவாதிகாரிவிஷயத்வஂ வக்துஂ ந யுஜ்யதே பூர்வத்ர ப்ரயாணகாலே ப்ரூமத்யே ப்ராணாவேஷஸ்ய தத்ரைவ பரமாத்மத்யாநஸ்ய ச விஹிதத்வாத் அநந்தரஂ ச ஹரிதி த்யாநஸ்ய மூர்த்நி ப்ராணாவேஷஸ்ய ச தத்கால ஏவ விதாநாத்; ததிதஂ த்வயஂ பரஸ்பரவிருத்தஂ கிஂ காலபேதாத்வ்யவஸ்தாப்யேதாதிகாரிபேதாத்வா?; தத்ர ந தாவத்காலபேதஃ ஷ்ருதஃ; ப்ரத்யுத காலைக்யமேவ ஷ்ரூயதே; அதஃ பரிஷேஷாத்ஸித்தோதிகாரிபேதஃ. கிஞ்ச “ஷதஂ சைகா ச” [சாஂ.உ.8.6.6] இத்யாதிபிர்மூர்தந்யநாட்யா நிஷ்க்ரமணஂ மோக்ஷஹேதுஃ அந்யாபிர்நிஷ்க்ரமணஂ பலாந்தரஹேதுரித்யவகதே ப்ரயாணகாலே ப்ரூமத்யே மூர்த்நி ச ப்ராணாவேஷஸ்யோத்க்ரமணஷேஷதயா தத்தத்தேஷகதநாட்யோத்க்ரமணே ப்ரதீதே ஸித்தஸ்தததிகாரிபேதஃ. பூர்வத்ர சாத்யாயே’சதுர்விதா பஜந்தே மாம்’ [7.16] இத்யாதாவயமதிகாரிபேதஃ ப்ரஸ்துதஃ; ததந்தே ச’ஜராமரணமோக்ஷாய’ [7.29]’ஸாதிபூதாதிதைவஂ மாம்’ [7.30] இதி ஷ்லோகயோர்யச்சப்தாவரித்த்யாதிகாரிபேதப்ரதீதிர்பாஷ்யே ப்ரதிபாதிதா; ஸா சாத்ராபி ஸ்புடா’அணோரணீயாஂஸமநுஸ்மரேத்யஃ’ [8.9]’யஃ ப்ரயாதி த்யஜந் தேஹஂ’ [8.13]’யோ மாஂ ஸ்மரதி நித்யஷஃ’ இதி. ஏததகிலமபிப்ரேத்யோக்தஂ’ஏவமைஷ்வர்யார்திந’ இத்யாதி.

    உக்தஷ்சாஸ்யாதிகாரீ’அநந்யசேதாஃ’ இத்யுச்யத இதி பரோக்தஂ நிராகுர்வந்’அநந்யசேதாஃ’ இதி ஷ்லோகஸ்யார்தமாஹ — ‘அதேதி’.’நித்யஷஃ’ இத்யநேநாத்மாநுபவாதிபலாந்தரவ்யவதாநநைரபேக்ஷ்யஂ விவக்ஷிதமித்யாஹ — ‘உத்யோகப்ரபரிதீதி’. அந்யதா’ஸததம்’ இத்யநேந புநருக்திஃ ஸங்கோசக்லேஷோ வா ஸ்யாதித்யபிப்ராயேணாஹ — ‘ஸததஂ ஸர்வகாலமிதி’. அநந்யசேதஷ்ஷப்தேநாபிப்ரேதஂ ஸ்மரிதேர்பக்திரூபாபந்நத்வஂ தர்ஷயதி — ‘அத்யர்தேதி’. அநந்யசேதஸ்த்வாதேவ ச ஸ்மரணஸ்யாச்சித்ரத்வம். உத்கண்டநேபி ச ஸ்மரதிஃ ப்ரயுஜ்யதே — ‘ப்ராதரௌ ஸ்மரதாஂ வீரௌ’ [வா.ரா.2.13] இத்யாதிஷு.’நித்யயுக்தஸ்ய யோகிநஃ’ இத்யுக்தாநுவாதஃ பலஸ்யாவ்யவஹிதத்வத்யோதநாய. அத்ர அஹஂஷப்தேநேஷ்வரஸ்ய ப்ரத்யகர்தோபிப்ரேதஃ. தேந தத்விஷேஷணபூதாக்ஷராதிபலப்ராப்திவ்யவச்சேதோ விவக்ஷித இத்யபிப்ராயேணாஹ — ‘அஹமேவேதி’. ததேவ விவரிணோதி — ‘ந மத்பாவ’ இதி. பகவத்ப்ராப்தேஃ பலாந்தரேப்யோதிஷயிதபலத்வாத்தத்ப்ராப்தௌ ப்ரயாஸாதிரேகஸம்பாவநாவ்யவச்சேதாய ஸுலபபதமித்யபிப்ராயேணாஹ — ‘ஸுப்ராபஷ்சேதி’. அகரிச்ச்ரேண ப்ராப்ய இத்யர்தஃ.’ஈஷத்துஸ்ஸுஷு கரிச்ச்ராகரிச்ச்ரார்தேஷு கல்’ [அஷ்டா.3.3.126] இத்யநுஷிஷ்யதே. ஆஷ்ரிதவத்ஸலஸ்யேஷ்வரஸ்ய ஸௌலப்யஂ ராகப்ராப்தமித்யாஹ — ‘தத்வியோகமிதி’. உக்தஸ்யாதிவாதமாத்ரத்வஷங்காவ்யுதாஸாய ஷ்ருதிமூலதாமாஹ — ‘யமேவேதி’. அத்ர வரணஷப்தேந கிமுச்யதே? ந தாவச்சேஷத்வஷரீரத்வாத்யாகாரேண ஸ்வீகாரஃ தஸ்ய நித்யஸித்தத்வாத்; ந ச தத்விபரீதஃ விருத்தத்வாதேவ; நச ப்ராப்திப்ரதாநஂ’தேந லப்யஃ’ இத்யநேந பௌநருக்த்யப்ரஸங்காத்; நசாந்யோத்ர ப்ரகாரஃ அஸம்பவாதித்யத்ராஹ — ‘மத்ப்ராப்த்யநுகுணேதி’. விபாகோத்ர த்ருவாநுஸ்மரிதிரூபத்வதர்ஷநஸமாநாதிகாரத்வாதிரூபஃ. தத்விரோதிநோ துஷ்கரிதரஜஸ்தமோராகத்வேஷமோஹாதயஃ.’அத்யர்தமத்ப்ரியத்வஂ’ நிரதிஷயபக்தித்வம். ஆதிஷப்தேந பரமபதபர்யந்தாஸத்திபர்யந்தஂ யந்மத்யேபேக்ஷிதஂ தத்ஸர்வஂ விவக்ஷிதம்.’அஹமேவேதி’ பரமகாருணிகஸ்ய மமைவாயஂ பர இத்யபிப்ராயஃ.’தஸ்யாஹஂ ஸுலபஃ’ இத்யாதேருக்தார்தபரத்வஸ்திரீகரணாயாஸ்யைவார்தஸ்ய வக்ஷ்யமாணஂ விஸ்தரகுதாஹரிதஷ்ருத்யுபபரிஂஹணரூபஂ தர்ஷயதி — ‘வக்ஷ்யதே சேதி’.,

    என்னோடு எப்போதும் கூடி இருக்க வேணும் என்கிற விருப்பம் யுடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன் –
    மிக எளியதாக அடையத் தகுந்தவனுமாகிறேன் -என்கிறான்
    அதாவது
    அவனது பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் -அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாதவனாய் நானே அவனை வரிக்கிறேன்
    என்னை அடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும்
    அதற்குற்ற இடையூறுகளை நீக்குதலையையும்
    என்னிடத்தில் அதிகமான ப்ரீதி
    முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன்
    நாயமாத்மா ஸ்ருதி ப்ரஸித்த அர்த்தமும் இதுவே
    மேலே 10-10/10-11 ஸ்லோகங்களின் அர்த்தங்களும் இதுவே

    10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
    ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே

    ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில்,
    ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும்,
    தேஷாம்-அவர்களுக்கு,
    யேந-எந்த உபாயத்தின் மூலம்,
    மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ,
    தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.

    ৷৷10.10৷৷தேஷாஂ ஸதத யுக்தாநாஂ மயி ஸதத யோகம் ஆஷஂ ஸமாநாநாஂ மாஂ பஜமாநாநாம் அஹஂ தம் ஏவ புத்தி யோகஂ விபாக தஷாபந்நஂ (தரிசன -மானஸ சமானாகாரம் -பர ஞானம் -மநோ விகாரம் )ப்ரீதி பூர்வகம் ததாமி யேந தே மாம் உபயாந்தி.கிஂ ச —

    (ப்ரீதி பூர்வகம் பஜதாம் என்று இல்லாமல் ப்ரீதி பூர்வகம் ததாமி -தான் கொடுப்பதுடன் சேர்த்து –
    பக்தி செய்கிறான் என்றாலே ப்ரீதி பூர்வகம் இருக்க வேண்டுமே –
    வெகு நாள்களாக கிருஷீ பண்ணுபவன் அவன் தானே -நிர்ஹேதுகமாக தனது பேறாக கொடுக்கிறான் என்றவாறு)

    ৷৷10.10৷৷பகவத்குணவிபூதிஜ்ஞாநஸ்ய பக்த்யுத்பத்திவிவரித்திஹேதுத்வமுக்தம்; ததாவிதவிவரித்தபக்தேர்பகவத்ப்ராப்திபூர்வபாவிவிஷததமஸாக்ஷாத்காரரூபாவஸ்தாவிஷேஷஹேதுத்வஂ பகவத்ப்ரஸாதாவாந்தரவ்யாபாரகமுச்யதே’தேஷாமிதி’.’மயி ஸததயோகமாஷஂஸமாநாநாமிதி’. நஹி ஸததஂ ஸமாதாநரூபோ யோகஃ ஷக்யஃ. ஸததஷப்தேந ப்ரதிதிநவிவக்ஷா ச ந ஸ்வாரஸிகீ? ந ச ப்ராப்திரூபஸததயோக இதாநீஂ வரித்தஃ; அத ஆஷஂஸார்தத்வமேவ யுக்தமிதி பாவஃ.’தமேவேதி’ ஆஷஂஸாவிஷயாந்தர்கதமேவேத்யர்தஃ. ஸததயோகாஷஂஸயைவ பஜநே ப்ரீதிரூபத்வஸ்ய பலிதத்வாத்’ப்ரீதிபூர்வகம்’ இத்யஸ்ய பஜநாந்வயே ப்ரயோஜநஂ நாஸ்தி’ததாமி’ இத்யநேநாந்வயே து பஜநாவாந்தரவ்யாபாரகதநரூபேண பரமோதாரத்வாதிபகவத்குணகணப்ரகாஷநேந ச மஹத்ப்ரயோஜநமித்யபிப்ராயேண’ப்ரீதிபூர்வகஂ ததாமீத்யந்வய’ உக்தஃ.’மாமுபயாந்தி’ இத்யத்ராபராமரிஷ்டபதபதார்தைர்மூடைரைக்யாபத்திர்வ்யாக்யாதா.

    ——————

    பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

    11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:
    நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா

    தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான்,
    ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று,
    அஹம் ஏவ-நானே,
    அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை,
    பாஸ்வதா-ஒளிமயமான,
    ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால்,
    நாஸயாமி-அழிக்கிறேன்.

    ৷৷10.11৷৷தேஷாம் ஏவ அநுக்ரஹார்தம் அஹம் ஆத்ம பாவஸ்தஃ தேஷாஂ மநோ வரித்தௌ விஷய தயா அவஸ்திதோ மதீயாந் கல்யாண குண கணாந் ச ஆவிஷ்குர்வந் மத் விஷய ஜ்ஞாநாக்யேந பாஸ்வதா தீபேந ஜ்ஞாந விரோதி ப்ராசீந கர்ம ரூப அஜ்ஞாந ஜஂ மத் வ்யதிரிக்த விஷய ப்ராவண்ய ரூபஂ பூர்வ அப்யஸ்தஂ தமஃ நாஷயாமி.

    ஏவஂ ஸகலேதர விஸஜாதீயஂ பகவத அஸாதாரணஂ ஷ்ரரிண்வதாஂ நிரதிஷயாநந்த ஜநகஂ கல்யாண குண கண யோகஂ ததைஷ்வர்யவிததிஂ ச ஷ்ருத்வா தத் விஸ்தாரஂ ஷ்ரோது காமஃ அர்ஜுந உவாச —

    ৷৷10.11৷৷உக்தபுத்தியோகோத்பத்திப்ரதிபந்தநிரஸநஂ’தேஷாமேவ’ இதி ஷ்லோகேநோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘கிஞ்சேதி’.’அநுகம்பாஷப்தேநாத்ர’ அநிஷ்டநிவரித்திபூர்வகேஷ்டப்ராப்திஹேதுஃ’மதநுக்ரஹாய’ [11.1] இதி வக்ஷ்யமாணப்ரஸாதவிஷேஷோ விவக்ஷிதஃ. ஸஹஜகாருண்யமாத்ரபரத்வேர்தஷப்தஸ்ய வ்யர்தத்வாதித்யபிப்ராயேணோக்தஂ — ‘அநுக்ரஹார்தமிதி’. அத்ர சாஹஂஷப்தேநாநுக்ரஹௌபயிகஜ்ஞாநஷக்திகருணாதிவ்யமங்கலவிக்ரஹாதிவிஷிஷ்டஸ்வரூபஂ விவக்ஷிதம்.’மநோவரித்தாவிதி’ — ஆத்மபாவஷப்தஸ்யாத்ராத்மத்வஸ்வஸ்வபாவாதிபரத்வேதிகப்ரயோஜநஂ நாஸ்தி; மநோவரித்திவிஷயத்வஂ து புத்தியோகஸ்யாத்யந்தோபயுக்தமிதி பாவஃ. வ்யாப்தஸ்யேஷ்வரஸ்ய கீதரிஷீயமபூர்வா ஸ்திதிஃ இத்யத்ரோக்தஂ — ‘விஷயதயேதி’. தீபதயா ரூபிதஸ்ய ஜ்ஞாநஸ்ய பாஸ்வரத்வஂ பரிதஃ ப்ரகாஷநம்? தச்ச ப்ரகாரவிஷேஷப்ரகாஷநஂ பவிதுமர்ஹதி. ததாவிதவிஷதாநுபவாதஜ்ஞாநநிவரித்திஃ? ஷப்தாதிப்ராகரிதகுணப்ராவண்யநிவரித்திஷ்சேத்யபிப்ராயேணாஹ — ‘மதீயாந்கல்யாணகுணகணாஂஷ்சாவிஷ்குர்வந்நிதி’. ஹேதுகார்யபாவேந வ்யபதேஷாதஜ்ஞாநதமஷ்ஷப்தயோரத்ரார்தாந்தரஂ வாச்யம்; கர்மணி ச ஜ்ஞாநவிரோதித்வேநாஜ்ஞாநஷப்தஃ; யதோக்தம் — ‘அவித்யா கர்மஸஂஜ்ஞாந்யா’ [வி.பு.6.61] இதி. கர்மஜந்யஂ பகவத்ஸாக்ஷாத்காரரூபப்ரகாஷப்ரதிபந்தகஂ ச தமோர்தஸ்வபாவாத்விஷயாந்தரப்ராவண்யமேவ. நிரதிஷயபோக்யபகவஜ்ஜ்ஞாநஸ்ய போக்யாந்தரப்ராவண்யநிவர்தகத்வஂ யுக்தஂ?’தவாமரிதஸ்யந்திநி பாதபங்கஜே நிவேஷிதாத்மா கதமந்யதிச்சதி. ஸ்திதேரவிந்தே மகரந்தநிர்பரே மதுவ்ரதோ நேக்ஷுரகஂ ஹி வீக்ஷதே’ [ஸ்தோ.ர.] இத்யாதிந்யாயாத்; ததேததபிப்ரேத்யோக்தஂ’ஜ்ஞாநவிரோதீத்யாதி’. தமஷ்ஷப்தேந தமோவரித்திலக்ஷணாதிபக்ஷோப்யநேந நிரஸ்தஃ. யத்யபி விஷயப்ராவண்யநிவரித்திபூர்வகஂ பஜநஂ? ததாபி,ஸஂஸ்காரஷேஷாதநுவரித்தஂ ஸூக்ஷ்மஂ ப்ராவண்யமிஹ பஜநவிநாஷ்யதயோக்தமிதி நாந்யோந்யாஷ்ரயஃ.

    ———————-

    சூரணை -142-

    இவன் அவனைப் பெற நினைக்கும் போது
    இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

    இப்படி பிரஸ்துதையான  பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
    இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் –
    கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –

    ப்ராப்தா ப்ராப்யன் பாவம் இருவருக்கும் –சம்பந்தம் -/சரியான தலையில் இருக்க வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு-
    இது முதல் -மேல் -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் – இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242 – சித்த உபாய வைபவம்
    கீழ்ச் சொன்ன பிரபத்தி —பரதந்த்ரனான இவன் ஸ்வதந்த்ரனான அவனை தான் -பலியாய் -ப்ராப்தாவாய் –
    பெற நினைக்கும் பொழுது -அவன் நினைவு கூடாதாகில் –
    ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இதுவும் அவனை இழக்க ஹேது வாகுமே /
    வேறே முகத்தால் இங்கு அருளிச் செய்கிறார் -அடுத்த நான்கு சூரணைகளால்-
    ஆனந்தமயன் அறிந்தவன் அடைகிறான்–தூ மணி விஷய வாக்கியம்
    அவன் இவனுக்கு ஆனந்தம் கொடுக்கிறான் -நோற்காமலே பெற்ற கோபி -நோற்று ஸ்வர்க்கம் பாசுரம் /
    இயற்கையால் பரதந்த்ரன் நான் ஸ்வீ கரிக்கிறேன் என்ற ஸ்வ தந்த்ர நினைவு வந்தால் சாதனம் ஆகாது -பாதகம் ஆகும்
    பிரபத்தியும் -கீழ் சொன்ன ஏற்றங்கள் இருந்தாலும் உபாயாந்தர கோஷ்ட்டிக்குள் புகும் –
    சரண்ய ஹிருதய அனுசாரியாக இருப்பதும் இல்லாமையும் -வேறு முகமாக இதில் —
    அபராத கோடி கடித அப்ரயுக்த ஷாமணீயத்வாதிகள் -பொறுத்து அருள் -என்று பண்ணின பிரபதிக்கும் கேட்க வேண்டுமே
    அபராத கோடியில் சேராமல் -அவன் திரு உள்ளத்துக்கு சேரும் படி இருக்க வேண்டும் -/
    பிரபத்வ்யன் ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாகும் / பக்தியும் ஸ்வா தந்தர்ய அபிமானதுடன் பண்ணி உபாயத்வம் வருமே /
    இது– யாதிருச்சிகமாக –அவன் ஸ்வா தந்தர்யம் குறைக்க நாம் யார் —
    ஸ்வரூப அனுரூபமாகவும் உபாயத்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே /
    உபாய பிரபத்திக்கு -உபாஸனாதிகளைப் போலே அஹங்கார கர்ப்பம் குற்றம் வரும் போலே அனுரூபமாய் இருக்காதே
    பரத ஆழ்வான்-ஸ்ரீ பாஷ்ய காரர் பிரபத்திகள் –அதிகார விசேஷண பிரபத்தி -பல பிரபத்தி -அனுபாய பிரபத்தி -பர்யாய சப்தங்கள் —
    அதிகாரி விசேஷணமாய் ஸ்வரூப அனுரூபமாய் உபாயத்வம் இல்லாமல் –இருந்தாலும் -பரத பிரபத்தி பலம் கிடைக்காதது –
    ஷாமணியத்வம் -கத்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் -பொறுத்து கொள்ள பிரார்த்திக்கிறாரே பிரபத்தி பண்ணினத்துக்கும் /
    இருவருக்கும் கேட்டே பொழுதே இல்லையே –
    சரண்ய ஹிருதய அனுசாரியாய் -இல்லாமல் பலம் இல்லை என்பது கண்டால் உபாய பிரபத்திக்கு சொல்ல வேணுமோ –
    ஆகவே அவன் திரு உள்ள நினைவே உபாயம் என்றவாறு -உடைமையை -உடையவன் -ஸ்வாமி தானே அங்கீ கரிக்க வேண்டும் –
    சொத்தை ஸ்வாமி தானே ரஷிப்பாரே/ நாதன் உள்ளவர் தங்கள் ரக்ஷணம் கார்யம் செய்ய மாட்டார்களே /

    அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –
    அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
    அதாவது –
    உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
    பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
    அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி –

    —————————————-

    சூரணை-143-

    அவன் இவனை பெற நினைக்கும் போது
    பாதகமும் விலக்கு அன்று —

    இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –

    ஸூவ இச்சையால் -ஸ்வ தந்த்ர ஸ்வாமி / பரதந்த்ர சொத்தை பெற நினைக்கும் பொழுது -அநாதிகாலமாக புத்தி பூர்வகமாக
    அநேக மஹா பாதகங்களும் -அவனை பெறுகைக்கு விலக்கு அன்று -/ பாவங்கள் பாதகங்களை விட சிறியவை /
    லாப கிரியா நிஷ்பத்தி -இச்சாயம் சத்தா நிவாரகர் இல்லா ஸ்வா தந்திரம் –சங்கல்பத்தாலே அடைகிறான் /
    லப்தவ்யம் அடையப்படும் பொருள் சொத்து /
    நரகங்களில் விழப்பண்ணுவதால் பாதகம் -நிலையில் இருந்து நழுவுதலால் பாதகம் -என்றுமாம் –

    அதாவது –
    ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
    ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
    பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
    இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
    பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
    சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–

    —————————————–

    சூரணை -144-

    இவை இரண்டும்
    ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
    ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
    காணலாம் –

    இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன –
    அருளிச் செய்கிறார் –

    உறவுள்ள ஸ்ரீ பரத ஆழ்வான் இழக்க / தோஷமே பச்சையாக பெருமாள் உறவு கொண்ட-
    ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி – – ஸ்ரீ குகப் பெருமாள் பெற்றானே/

    ————————————-

    சூரணை -145-

    ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
    ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

    அவர்கள்  தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –

    தானே ப்ராப்தாவாக நினைத்த ஸ்ரீ பரத ஆழ்வான் -பிரபதனமான நன்மை தானே -அனைத்துக்கும் பிராயச்சித்தம் இது என்ற நன்மை இருந்தாலும் – –
    பெருமாள் திரு உள்ளம் கன்னி -அவ்வருகே -சித்ர கூடம் விட்டு தண்ட காரண்யம் போகும் படி பண்ணிற்றே
    ஸ்ரீ குகப் பெருமாளுக்கு அஞ்ஞானம் இத்யாதிகள் நன்மையாயிற்றே –
    ராச க்ரீடை -கொண்டாட்டம் -உன் திரு உள்ளம் உகந்து இருந்தால் புண்யம் -ஈஸ்வர ப்ரீதியும் கோபமும் / பாபம் புண்யம் இந்த லக்ஷணமே –
    சிரஸா யாஜிதோ மயா பிராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹதி –தானே ப்ராப்தா என்ற மநோ ரதம்–ஆர்த்தி யுடன் –
    இன்றே திரு அபிஷேகம் -ஆர்த்த பிரபத்தி இது -துடிப்பு –முன் நின்றே செய்தான் -ஆர்த்த பிரபத்திக்கு அங்கங்கள் எல்லாம் சரி -பூர்ணம் –
    ராமஸ்ய பாதவ் சிரஸா ஜாக்ர -விதிவத் புன -விதி வழி திருவடிகளில் மேல் தலையை வைத்தான் –
    -தேவ ப்ரபத்தியிவ் வ்யாவர்த்தி அது திருப்த பிரபத்தி -/ஆனாலும் பலம் விளம்பப் பெற்றானே —
    சீக்ர கால சரணாகதி ராவண வதம் -ரூபம் அது –
    தேவ பரத பிரபத்தி விருத்த பலன்கள் –காரண கிரமத்தால் கொடுத்தான் என்று சொல்ல முடியாதே –
    இந்த பிரபத்தி லக்ஷணம் உடனே கொடுத்து இருக்க வேண்டுமே /
    பிரபல பிரதபந்தகங்களும் இல்லை –பரத ஆழ்வான் அகர்ம வஸ்ய அவதாரம் அன்றோ –
    பித்ரு வசனத்தில் பெருமாள் மனம் வைத்து –இவன் பண்ணின ஆர்த்த பிரபத்தியும் –நன்மையாகிய இது தீமையாகப் போனதே
    நியதி சாதனத்வம் உண்டே பிரபத்திக்கு -இருந்தாலும் சாத்தியம் இல்லையே இங்கு –சாஸ்த்ர விசுவாசம் குறையுமே —
    பலம் தள்ளி வந்ததே -உபாயம் ஆகாது என்று சொல்ல வந்தீரே அத்தை சொல்ல முடியாதே என்னில் -இவனது ஆர்த்த பிரபத்தி -அன்றோ /
    திருப்த பிரபத்தி போலே பலன் கிடைத்தது -சர்வஞ்ஞனுக்கும் நித்ய சூரிக்கும் அங்கம் குறை சொல்ல முடியாதே /
    அப்ராமாண்ய பிரசங்கம் இல்லை சாஸ்த்ரங்களுக்கும்/ சரண்ய ஹிருதய அனுசரணமாக இருக்க வேண்டும்
    மதி -இச்சா / கமனம் அநிஷ்டம் -தத் த்வாரா இதுவும் அநிஷ்டம் /
    சரண்யனுக்கு அதீனப்பட்ட பலன் கிடைக்காதே –திரு உள்ளம் – விருப்பம் இல்லையே /
    ஏழை இத்யாதி ஞான ஹீனன் -இத்யாதி தோஷங்கள் / மீனை பிடித்து வெட்டுவது அவனுக்கு ஜீவனம் /
    பெருமாளுக்கு ரக்ஷகமே ஜீவனம் /
    புண்ய பாபங்கள் கடம் படம் போலே இல்லை -இந்த தேசம் இந்த காலம் புண்யம் வேறே மாறலாம் -நியதங்கள் இல்லை /
    அவன் திரு உள்ளத்தைப் பொறுத்தே
    இஷ்டாவஹம் புண்யம் அனிஷ்டவஹம் பாபம் / நன்மையையும் தீமையும் தீமையாகவும் நன்மையாகவும் குறை இல்லை –

    வந்த கார்யம் இன்னது என்பதை சிற்றம் சிறுகாலையில் வைத்தாள் ஆண்டாள் –
    அசமயத்தில் கேட்க்கும் பரத ஆழ்வானைப் போலே அசடு இல்லையே /
    சர்வ லோக சரண்யன் -வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு ராக்ஷசர் விஷயங்களில் தான் முற்பாடானாய் –
    அவர்கள் இருக்கும் இடத்தில் தானே சென்று அனுக்ரஹிக்க திரு உள்ளம் இருக்க -அனுஷ்டான சேஷம் ஆக்கிக் காட்ட வேண்டும் –
    பித்ரு வாக்ய பரிபாலனம் வியாஜ்யமாக -அனலோசித அசேஷ சரண்யன் என்று லோகத்துக்கு காட்ட வேண்டுமே /
    பரதன் சொல்வதை சுமந்திரன் நிறை வேற்றாமல் -பண்ணாமல் இருக்க -பெருமாள் திரு உள்ளம் அறிந்து -அந்த பரதனோ என்னில் –
    திரு உள்ளம் அறியாதவன் என்று –
    அந்த திரு முகத்தையும் பார்த்த பின்பு தர்பம் தானே பரப்பி -கூட்டிக் கொண்டு போக துடிப்பாலே -ஆர்த்தியால் கலங்கி -திரு முன்பே
    பிராய உபவாசம் வடக்கு பார்த்து பட்டினி இருந்து உயிர் விட இருக்க -விஸ்லேஷ பயத்தால் பெருமாளும் கலங்கி –
    சர்வஞ்ஞான அவனும் ஸூவதந்திரத்தால் —
    செய்த காரியத்தால் -ராஜன் என்று அவள் ஏத்தியதால் அழுதவன் தானே தலையில் ஏறிட்டுக் கொண்டு
    ஸ்வ ரூப விரோதமான ஸூவ பிரவ்ருத்தியில் அன்வயித்து –
    அக்ருத்யம் -செய்யக் கூடாதே–சேஷிக்கு சேஷ பூதனை -எதேஷ்டம் விநியோகம் கொள்ளுகை-சேஷிக்கு உண்டே – –
    ஸ்வரூப அனுரூபம் தானே பிராயோ உபவாசம் -பிரபத்தி போலே
    -அதை நடத்த என் திரு உள்ளம் இல்லையே –இருந்தால் தான் உனக்கு ஸ்வரூப அனுரூபம் /
    எனக்கு தாண்ட முடியாதே – கடல் கரையை தாண்ட முடியாதபடி –
    சரணாகதன் படி நடக்க வேண்டுமே இவனுக்கும் உன்னைப் பார்த்து வரவா என்னைப் பார்த்து போகவா -தர்ம சங்கடம் /
    உபவாசமும் ஷத்ரியனுக்கு ஆகாது என்றும் அபிஷிக்த ராஜாவுக்கும் கூடாதே என்ற பெருமாள் சொன்னது நியாயம் இல்லை
    -இவரே சமுத்திர ராஜன் இடம் செய்தாரே-
    தனது பாதுகையே பட்டாபிஷேகம் -இரண்டு காரணத்தாலும் கூடாதே / சேது பந்தம் -சாகரம் வற்ற தபஸாக –
    பிராய உபவாசம் -பிரதம ஹேதுவாக பண்ணினார் /
    சாமர்த்தியம் உள்ள ஷத்ரியன் பண்ணக் கூடாதே /ஜலக்கடல் முன்னே குணக்கடல் கிடந்ததே /
    மரணமோ தரணமோ இரண்டில் ஓன்று நடக்கும் என்று நிச்சயித்து -/
    சர்வாதிகார பிராயோ உபவாச ரூப பிரபத்தி –யாரும் பண்ணலாம் -ஷத்ரியனும் பண்ணலாம் முடி சூடியவனும் பண்ணலாம் –
    இவரே பண்ணி உள்ளாரே
    சில அதிகார தோஷங்களை தப்பாக சொல்லி அத்தை அக்ருத்ய கரணமாக்கி –பிராயச்சித்தம் பண்ண சொல்ல-பெருமாள் தன்னைத் தொட்டு
    நிஷ்கிருஷ்ட வேஷ பிராயச்சித்தம் பண்ண சொல்லியும் பரத ஆழ்வான் செய்யாமல் -நான் பண்ணினது உபாயம் இல்லை –
    மடல் தூது போன்றவை தானே இவை –
    ப்ராப்ய அந்தர்கதம் தானே -அதனால் பண்ணவில்லை பரதனும் துடிப்பால்— லோக அபவாதம் வரக் கூடாதே
    மந்தாகினி தீர்த்தம் மட்டும் ஆடினான் அதனால் -விசிஷ்ட வேஷம் அனுகுணம் இது லோக அபவாதம் வரக் கூடாதே /

    ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -விண்ணப்பம் கூட செய்யாமல் இருக்கவும் அங்கீ கரித்தானே -/ அகிஞ்சனன் -அநந்ய கதித்வம் -/
    துக்க தர்சன மாத்ரத்தால் இரக்கம்
    விஷய சபலமும் ஏழை / ஏதலன் – ஸ்வாபாவிக சர்வ ஐந்து சத்ருத்வம் / கீழ் மகன் – அத்யந்த கீழ் ஜென்மமும்
    ஜென்ம ஞான விருத்த குறைகளைக் கண்டு –உத்கர்ஷ விரோதிகளைக் கண்டு -பெருமாள் இரங்கினான்
    நன்மையே தீமையாயிற்று / தோஷமே பற்றாசாக – பசிக்குத் தகுந்த தொரு அன்னம் போலே மேல் விழுந்து அன்றோ அங்கீ கரித்தான் -/
    வாத்சல்யத்துக்கு கிடைத்த அன்னம் -மூக்கு சுழியாமல் செய்தாரே / அபராத ஆலயமாக இருப்பான் ஒருவன் உண்டோ என்று தேடிக் கிடைத்த லாபம் /
    நெஞ்சு உடையாமல் பெற்ற திருப்தி -இது ஒரு விஷயம் தெய்வாதீனத்தாலே கிடைக்கப் பெற்றேன் என்று சாஷாத் தர்மமே சொல்லிக் கொள்ளும் படி –
    இது நிலைக்குமோ –நீசதைக்கு நின் இருள் என் கண் அன்றி புகல் ஒன்றுமே இல்லை -அருளுக்கும் அதே புகல் பயன் இருவருக்குமான பின்பு /
    இனி நான் பழுதே அகலும் படி என் /உமக்கே லாபம் -ராம ராமானுஜர் நிலைகள் / அங்கே ஒரே குகன் இங்கு நாம் அனைவரும் /
    தம்மோடு ஓக்க சமான -ஆத்ம சம சக /பர கத ஸ்வீ கார நிரூபகமே ஸ்ரீ குகப் பெருமாள் மட்டுமே தானே /
    தனக்கு தாரகமாக நினைத்து -ஞானீத் ஆத்மை மே மதம் -அறிவார் உயிரானார் /
    சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் வியாபாரம் -பிரதியுபகாரம் கனீசியாமல் இங்கு மட்டுமே தானே –
    அங்கு எல்லாம் வேறே பிரயோஜனம் இல்லையே –
    மற்ற நதிகளை இவர்களே தாண்டினார்களே
    சீரணிந்த தோழமை கொண்டதும் ஒரு அடையாளம் –குகன் உடன் உம் ராமரை தவிர வேறு யாரால் முடியும் என்றவாறு /
    இங்கு ஒழி–நீ இங்கு இரு –பிரிந்தால் தான் பின்பு சேரும் பொழுது கூடினால் ரசிக்கும் -தேன் உள-நாய் குகன் உளன் சொன்னாலும் /
    வழி அடி கெடாமைக்காக -இங்கு ஒழி -வழி பறிப்ப்பாகிய இவனுடைய ஹீன விருத்தியையும் இப் பாசுரம் சொன்ன ஆழ்வாருடைய வழி
    பறியைப் போலே போக்யமாக கொள்ளுவார் -புத்த விக்ரஹத்தை வைதிகம் ஆக்கி –
    ஒழுங்காக திருந்தி வாழாமல் வழி பறி பண்ணிக் கொண்டு –
    உன் குற்றத்தை பச்சையாக கொண்டதாகவே இருக்க வேண்டுமே –
    படை வீடு கெடாமைக்கு ஒருத்தனை வைத்தோம் காடு கெடாமைக்கு உன்னை வைத்தோம் –
    வழி பறிப்பாகிய வழி அடி -ஜென்ம ஸித்தமான ராஜ்ய பரிபாலனம் உகப்பது போலே உன்
    ஜென்ம ஸித்தமான வழி பறி வேடனுக்கு இது தானே பிரியதமம் எனக்கு /
    பிராணி ஹிம்சை -ஆட்டு -ஹோமத்தில் உண்டே -அதே போலே /சாஸ்த்ர சம்மதம் பெருமாளுக்கு பிடித்தது போலே வழி பறிப்பும் –
    சிங்கி பேர புரத்தில் நான் வைக்க இருந்து கொண்டு -பரதனை நாட்டில் வைத்தது போலே -இந்த கார்யம் செய்து இரு –
    ராமன் இருக்க சொல்லி இருப்பதால் -அவர் திரு உள்ளபடியே இருவரும் /
    தான் போன பின்பு –அயோத்யை-என் வழி அடி அறியான் -காட்டி கொடும் ஆதி வாஹிகர் போலே காட்டவே இவனை வைத்து போந்தார் பெருமாள் /
    காள மேகப் பெருமாள் –ஆப்தன் / குகனும் கரிய திரு மேனி / ராமன் உள்ள இடமே ஸ்ரீ வைகுண்டம் /
    அயோத்யை மதுரை பெற்றும் பேர் இழக்க / காடு கோகுலமும் பூ முடி சூடிற்றே /
    பராத் பர புருஷன் -சாஸ்த்ர மரியாதா லங்கனம் பண்ணலாமா– அந்தராத்மா இவன் தானே அனைவர் இடமும் /
    கணவனோ பிள்ளையோ குரு ஜனங்களோ
    புண்ணியமான படியாலோ அவனுக்கு அபிமதம் என்பது இல்லை / அவனுக்கு அபிமதம் என்பதால் புண்ணியம் /
    அவன் இடம் உள்ளவற்றுக்கு நல்ல குணம் என்ற பெயர் கிட்டும் / ஸ்வ தந்த்ரனான படியால் இதுக்கு குறை இல்லையே –
    ஸ்வாதந்திரத்தால் ஏற்றுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம் அவனுக்கு

    மஹா பாப ரூபமான அது ஜென்ம சித்தம் என்றாலும் அது பெருமாளுக்கு பிரியம் என்பதால் புண்ணியம் ஆகுமே /
    பாபமானது அனுமதிக்கலாமா கேள்விக்கு
    அவருக்கு அபிமதம் ஆனதாலேயே புண்ணியம் ஆகுமே
    அவரை ஒதுக்கி சாஸ்திரம் மட்டும் பார்க்கக் கூடாதே -அதனாலே புண்ய பாப லக்ஷணம் மேலே அருளிச் செய்கிறார் /
    ராஸக்ரீடை -கோபிகள் செய்த அதிக்ரமம் அபிமதமானால் போலே –

    அதாவது –
    பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
    தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
    ஏபிச்ச  சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
    வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
    திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
    சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமையாய் விட்டது –
    ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள்  தாமே வந்து
    அங்கீகரிக்கப்   பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே –
    பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
    யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
    ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –

    இத்தால் ஸ்வாமி கீதா பாஷ்யத்தில் வடமொழியில் அருளிச் செய்தவற்றையே பின்பு மா முனிகளும் ஸ்ரீ வசன பூஷண வியாக்யானத்தில் அருளிச் செய்துள்ளார் என்பது தெளிவு

    நாம் பற்றும் பற்றன்று
    எம்பெருமான் தானே பற்று வித்து அருளினான்
    அவனுடைய க்ருஷி பலித்தது அத்தனை அன்றோ என்று உள்ளூற அனுசந்திக்கையே ப்ராப்தம்

    —————————————————————–

    இனி மூன்றாம் ஸாரார்த்தம்
    ஈஸ்வரனுக்கு சேதன லாபம் புருஷார்த்தம்
    மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
    மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34-

    மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
    மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
    மத்யாஜீ-என்னைத் தொழு,
    மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
    ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
    மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

    மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
    இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

    ৷৷9.34৷৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே
    ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )

    (இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )

    புண்டரீக தல  அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )

    இனி ஒப்பனை அழகு விவரணம்
    அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,

    இனி கல்யாண குண விவரணம்

    அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

    (இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.

    ৷৷9.34৷৷’பஜஸ்வ’ [9.33] இத்யுக்தபக்திஸ்வரூபநிஷ்கர்ஷோநந்தரஂ க்ரியத இதி ஸங்கதிஂ தர்ஷயதி — ‘பக்திஸ்வரூபமாஹேதி’. ஸாமாந்யேந ஸர்வாஸு பரவித்யாஸூபாஸ்யதயா ததுபயுக்ததயா ச ப்ரமாணஷதைஃ ப்ரதிபாதிதாஃ ஸ்வரூபரூபகுணாதயோத்ராஸ்மச்சப்தேந விவக்ஷிதா இத்யபிப்ராயேணாஹ — ‘மயீதி’. “தமீஷ்வராணாஂ பரமஂ மஹேஷ்வரஂ” [ஷ்வே.உ.6.7] “ந தஸ்யேஷே கஷ்சந” [தை.நா.1.9] இத்யாதேரர்தமாஹ — ‘ஸர்வேஷ்வரேஷ்வர’ இதி. ந ஹ்யஸமர்தஸேவயா கிஞ்சில்லப்யதே; நச ப்ரஹ்மாண்டாந்தராதேரநீஷ்வரா ப்ரஹ்மேஷாதயோபி மோக்ஷதாநஷக்தா இதி பாவஃ. ‘க்ஷேத்ரஜ்ஞஸ்யேஷ்வரஜ்ஞாநாத்விஷுத்திஃ பரமா மதா’ [யா.ஸ்மரி.3.34] இதி ஹ்யுச்யதே. ஹேயாஸ்பதஸ்ய குணரஹிதஸ்ய ச பஜநீயத்வாபாவாதிதரவ்யாவரித்த்யர்தஂ ஸகுணநிர்குணஷ்ருதீநாஂ விஷயவ்யவஸ்தயோபயலிங்கத்வமாஹ — ‘நிகிலேதி’. ஸமஸ்தாநிஷ்டநிவர்தகத்வாதநந்தபோக்யமயத்வாச்சாயமேவோபாஸ்ய இதி பாவஃ. அநந்தமங்கலகுணோபலக்ஷகதயா த்யேயலக்ஷணஜகத்காரணத்வமோக்ஷப்ரதத்வௌபயிகஂ குணத்வயஂ’ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்ப’ இத்யுக்தம். “யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்ய ஜ்ஞாநமயஂ தபஃ. தஸ்மாதேதத்ப்ரஹ்ம நாமரூபமந்நஂ ச ஜாயதே” [முஂ.உ.1.9] இதி? “ஸத்யகாமஃ ஸத்யஸங்கல்பஃ” [சாஂ.உ.8.1.5] இதி ச அநிஷ்டநிவரித்த்யாதௌ சாந்யாஜ்ஞாதஂ ஸஹகாரிஸாபேக்ஷத்வஂ ச நாஸ்தீதி பாவஃ. “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” இத்யுபக்ரம்ய “தத்விஜிஜ்ஞாஸஸ்வ” [தை.உ.3.1.1] “காரணஂ து த்யேயஃ” [அ.ஷிகோ.3] இத்யாத்யபிப்ராயேண — ‘நிகிலஜகதேககாரண’ இத்யுக்தம். நிகிலஷப்தேநாவ்யக்தாதேர்ப்ரஹ்மருத்ராதேஷ்ச ஸங்க்ரஹஃ. வ்யோமாதீதநிர்குணவாதாதிநிராகரணஂ? ஸாமாந்யவிஷேஷஷப்தயோரைகரஸ்யஂ சாபிப்ரேத்ய’பரஸ்மிந் ப்ரஹ்மணி புருஷோத்தம’ இத்யுக்தம். அநேந ஸர்வாத்மகத்வஂ ஸர்வவிலக்ஷணத்வஂ சாவிருத்தமுபதர்ஷிதஂ பவதி. நாராயணாநுவாகபுருஷஸூக்தாதிகஂ ச ஸ்மாரிதம். ஏதாவதா விஷிஷ்டஂ ஸ்வரூபமுக்தம்;.

    அத ஸர்வஷாகாதிபடிதபுருஷஸூக்தாதிஸித்தஂ ஷுபாஷ்ரயப்ரகரணப்ரபஞ்சிதஂ ச விக்ரஹதத்குணாதிகமுச்யதே.’தஸ்ய யதா கப்யாஸஂ புண்டரீகமேவமக்ஷிணீ’ [சாஂ.உ.1.6.7] இத்யாத்யுக்தபரத்வசிஹ்நமாஹ — ‘புண்டரீகதலாமலாயதாக்ஷ’ இதி.’ஸ்வச்சேத்யாதிநா’ “நீலதோயதமத்யஸ்தா” [தை.நா.11.12] இத்யாதிகமநுஸஂஹிதம். ஸ்வச்சத்வஂ மணிமுகுரஸலிலகாசாதிவத்வ்யவஹிதப்ரகாஷப்ரதிபிம்பாதியோக்யஃ ப்ரஸாதவிஷேஷஃ.’திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய’ [11.12] இத்யாதி வக்ஷ்யமாணஂ “தமேவ பாந்தம்” [முஂ.உ.2.2.10] இத்யாதிஷ்ருதிஂ சாபிப்ரேத்யோக்தஂ — ‘யுகபதித்யாதி’. ஷ்ருத்யாதிப்ரஸித்தஂ பஹூநாமுதாரத்வமௌர்ஜித்யமபிமதபலப்ரதத்வஂ ச. யத்ர ரூபாந்தரஂ ந விஷிஷ்டஂ? தத்ர வக்துர்வஸுதேவநந்தநஸ்ய ரூபஂ விவக்ஷிதம்; தச்ச ஸர்வாவதாரோபலக்ஷணம். சதுர்புஜத்வஂ பகவதஃ கரிஷ்ணஸ்ய பரரூபஸ்ய ஸாஂஸித்திகம்; த்விபுஜத்வஂ ஸஹஸ்ரபுஜத்வாதிகஂ சாஹார்யமித்யாஷயேநோக்தஂ — ‘சதுர்பாஹாவிதி’. அதவாபி சதுர்புஜத்வஂ — ‘புஜைஷ்சதுர்பிஃ ஸமுபேதமேதத்ரூபஂ விஷிஷ்டஂ திவி ஸஂஸ்திதஂ ச. பூமௌ கதஂ பூஜயதாப்ரமேயஂ ஸதா ஹி தஸ்மிந்நிவஸாமி தேவாஃ!’ இத்யாதிகமிஹ பாவ்யம். திவ்யாம்பரயோகமாஹ — ‘அத்யுஜ்ஜ்வலிதேதி’. மூர்தாதிபாதாந்ததிவ்யாவயவகதஸமஸ்தாபரணவர்கோபலக்ஷணதயா கிரீடாத்யுக்திஃ.’த்யேயஃ ஸதா’ இத்யுபக்ரம்ய’கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ’ [ப.உ.பு.ஆ.ஹரி.155] இத்யாதிகமிஹ த்ரஷ்டவ்யம். மகரஷப்தோ மகராகாரகுண்டலபரஃ. தேஜஃப்ராசுர்யஂ ப்ரதிகூலைர்துஷ்ப்ரேக்ஷத்வஂ சாபிப்ரேத்ய’யுகபதித்யாதிகமுக்தம்’.

    ‘லாவண்யேத்யாதிநா’ து தஸ்யைவாநுகூலபோக்யத்வாகர்ஷகத்வாதிகமபிப்ரேதம். சக்ஷுராநந்தஜநகஸ்தேஜோவிஷேஷோ ஹி லாவண்யம். தத இதமுச்யதே — ‘லோசநைரநுஜக்முஸ்தே தமாதரிஷ்டிபதாத்புநஃ. மநோபிரநுஜக்முஷ்ச கரிஷ்ணஂ ப்ரீதிஸமந்விதாஃ৷৷அதரிப்தமநஸாமேவஂ தேஷாஂ கேஷவதர்ஷநே. க்ஷிப்ரமந்தர்ததே ஷௌரிஷ்சக்ஷுஷாஂ ப்ரியதர்ஷநஃ৷৷அமரிதஸ்யேவ நாதரிப்யந் ப்ரேக்ஷமாணா ஜநார்தநம்’ [ம.பா.2.2.26-28]’நஹி தஸ்மாந்மநஃ கஷ்சிச்சக்ஷுஷீ வா நரோத்தமாத். நரஃ ஷக்நோத்யபாக்ரஷ்டுமதிக்ராமதி ராகவே’ [வா.ரா.2.17.13] இதி.’அபாரேத்யாதிநா’ ஸௌலப்யோபயோகிநோமிதாஃ ஸுந்தரத்வாதிமிஷ்ராஃ ஸமாஷ்ரயணீயத்வேத்யந்தாபேக்ஷிதாஃ ஸ்வரூபரூபயோர்குணா உக்தாஃ.’ஸர்வலோகஷரண்யாய’ [வா.ரா.6.17.17]’ஸுதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா’ [வா.ரா.6.18.5]’விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி வா ராவணஃ ஸ்வயம்’ [வா.ரா.6.18.34] இத்யாதிகமநுஸந்தாய காருண்யாதிபலிதமாஹ — ‘அநாலோசிதேதி’. ஆஷ்ரிதஸஂரக்ஷணஂ ஸ்வலாபஂ மத்வா ப்ரவர்தத இத்யபிப்ராயேணோக்தஂ — ‘ஸர்வஸ்வாமிநீதி’.’கரிஷ்ணஸ்ய ஹி கரிதே பூதமிதஂ விஷ்வஂ சராசரம்’ [ம.பா.2.38.23] இத்யுக்தம். “நிதித்யாஸிதவ்யஃ” [பரி.உ.2.4.5;4.5.6] “த்யாயத” [முஂ.உ.2.2.6] “த்ருவா ஸ்மரிதிஃ” [சாஂ.உ.7.26.2] “ஆவரித்திரஸகரிதுபதேஷாத்” [ப்ர.ஸூ.4.1.1] இத்யாத்யநுஸந்தாநேந மநஷ்ஷப்தஸ்யாத்ர த்யாநாக்யமநோவரித்திவிஷேஷவிஷயதாமாஹ — ‘தைலதாரேதி’.’மய்யேவ மந ஆதத்ஸ்வ’ [12.8] இத்யுச்யத இதி. அத்ர’மாமேவைஷ்யஸி’ இதி ஸாத்யகதாவதாரணாத்ஸாதநேப்யவதாரணஂ விவக்ஷிதமிதி கம்யதே. தேந சாநந்யமநஸ்த்வாதிகஂ ஸித்தம். ததஷ்ச தைலதாராதிவதவிச்சேதோபி பலித இதி பாவஃ.

    “யமேவைஷ வரிணுதே தேந லப்யஃ” [கடோ.1.2.22] இதி ஷ்ருத்யுபபரிஂஹணதாமபிப்ரேத்யாஹ’ததேவேதி’. பக்தேரபி ஜ்ஞாநவிஷேஷரூபத்வாத்விஷேஷகத்வமுபபத்யத இத்யபிப்ராயேணாஹ’அத்யர்தேதி’. ஸ்வதந்த்ரார்தாந்தரவிதாநஷங்காநிராஸாயாஹ ‘புநரபீதி’. பக்திஸ்வரூபவிஷேஷநிஷ்கர்ஷபரத்வாத்ததஸாதாரணஷாஸ்த்ரவிஷேஷப்ரதிபாதிதபூஜாவிஷேஷபரோயஂ யஜநஷப்த இத்யபிப்ராயேணாஹ — ‘யஜநஂ நாமேதி’. ஷேஷவரித்திஃ கைங்கர்யம். இதஂ ச’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதிநா ப்ரதர்ஷிதஸ்ய பகவச்சாஸ்த்ரப்ரபஞ்சிதஸ்ய ஸங்க்ரஹஷாஸநம். அதோத்ர யஜிர்தர்ஷபூர்ணமாஸாதிவிஷய இதி ந ப்ரமிதவ்யம்.’யஜ தேவபூஜாயாம்’ [தா.பா.1.1027] இத்யேவ ச பட்யதே.’தேவதாமுத்திஷ்ய த்ரவ்யத்யாகோ யாகஃ’ இதி சாஹுஃ. அக்நிஹோத்ராதிவ்யதிரிக்தேஷ்வபி பஞ்சமஹாயஜ்ஞாதிஷு யஜிர்நிரூடஃ. அந்யத்ராபி’கரிஷ்ணோ வாக்யைரிஜ்யதே ஸம்மரிஷாநைஃ’ [ம.பா.13.18.6] இத்யாதயஃ ப்ரயோகாஃ. அதோத்ர பகவச்சாஸ்த்ராதிப்ரபஞ்சிதவிஷயோயஂ யஜிரித்யபிப்ராயேணாஹ — ‘ஔபசாரிகேதி’. ஔபசாரிகாஃ நீராஜநாதயஃ; ஸாஂஸ்பர்ஷிகாஃ ஸ்ரக்சந்தநாதயஃ; ஆதிஷப்தேந ஸாந்தரிஷ்டிகதீபாதிக்ரஹணம்.’மத்யாஜீ’ இத்யநேந பாஹ்யக்ரியாபரேண மந்மநஸ்த்வஂ கதஂ விஷேஷ்யத இத்யத்ராஹ — ‘யதேதி’.

    ‘புநரபீத்யாத்யபி’ பூர்வவத். பூர்வோக்தாததிகரூபத்வஂ தர்ஷயிதும் — ‘அபர்யவஸ்யந்நித்யந்தமுக்தம்’.’அத்யர்தஷப்தேந’ தாஸ்யஸ்ய ஸ்வரூபப்ராப்ததா விவக்ஷிதா.’அதிமாத்ரஷப்தேந’ தஸ்ய நிரதிஷயபோகரூபத்வஂ ஸூசிதம். த்ரிவிதப்ரதிஸங்க்ரஹாய நமதாதுஸ்வரூபநிரூபணேந ப்ரஹ்வீபாவஷப்தஃ.’ப்ரேக்ஷாவதஃ ப்ரவரித்திர்யா ப்ரஹ்வீபாவாத்மிகா பரா. உத்கரிஷ்டஂ பரமுத்திஷ்ய தந்நமஃ பரிகீயதே’ [அஹிர்பு.ஸஂ.52.10] இதி ஹி நமஷ்ஷப்தோ விவரிதஃ. ஜ்ஞாநவிஷேஷகத்வவ்யக்த்யர்தஂ’வ்யவஸாயஷப்தஃ’.’பராயணஃ’ இத்யத்ர பரஷப்தவிஷேஷணஸாமர்த்யாதவதாரணஂ விவக்ஷிதமித்யபிப்ராயேண’அஹமேவேத்யுக்தம்’. பலிதமாஹ — ‘மயா விநேதி’. ஏஷைவ பக்தேஃ பரமா காஷ்டா ப்ராப்தேரவ்யவஹிதபூர்வபாவிநீதி பலாபிலாஷஜ்ஞாபநார்தோ மத்பராயணஷப்த இத்யபிப்ராயஃ. ஏவஂஷப்தாநூதிதமாகாரமாஹ — ‘அநவதிகேத்யாதிநா’.’ஆத்மாநஂ”யுக்த்வா’ இதி பதயோரத்ரோசிதார்தப்ரதர்ஷநஂ’மநஃ ப்ராப்யேதி’. யுஜிரத்ர யோகார்தஃ ஸமாத்யர்தோ வா.’மந்மநா பவ’ இத்யுக்தார்தபரத்வஂ’ஏவமாத்மாநம்’ இத்யநுவாதேந ப்ரதீயத இத்யபிப்ராயேணாஹ — ‘ஆத்மஷப்தோ ஹீதி’. மநஸோத்ர நிர்தேஷோ த்யாநாதிகரணத்வேநேதி ப்ரதர்ஷயந் ஷ்லோகஸ்ய பிண்டிதார்தமாஹ — ‘ஏவஂ ரூபேணேதி’. நிரதிஷயப்ரீதிமதேத்யர்தஃ. த்யாநாதிகஂ மத்பக்த இதி விஷேஷணாத்போகரூபமித்யபிப்ராயேண’மாமநுபூயேத்யுக்தம்’.

    அத ஸுகக்ரஹணாத்யாயப்ரதாநார்தபூதஸாங்கோபாங்கபலஷிரஸ்கபக்திஸ்வரூபஂ ஸங்க்ஷேபேண நிஷ்கரிஷ்ய வதந்நுபஸஂஹரதி — ‘ததேவமிதி’. தத் தஸ்மாதித்யர்தஃ. தவ துஃகபஹுலஸஂஸாரஸாகரபதிதத்வாத்? மம ச பரத்வஸௌலப்யாதியுக்தஸ்ய ஸமஸ்ததுஃகஸாகரோத்தரணஸாஂயாத்ரிகத்வாத்? உபாயஸ்ய சாத்யந்தஸுகரத்வாதிகுணயுக்தத்வாதித்யர்தஃ.’ஏவமிதி’ பூர்வக்ரந்தைருக்தப்ரகாரேணேத்யர்தஃ.’லௌகிகாநீத்யாதி குர்வந்நித்யந்தஂ”யத்கரோஷி’ இத்யாதேரர்தஃ;’மந்நியாம்யமித்யாதிகஂ”மயா ததம்’ [9.4] இத்யாதேரபிப்ரேதகதநம்;’அத்யர்தப்ரியமத்குணகணமிதி”ஸமோஹம்’ [9.29]’பத்ரஂ புஷ்பம்’ [9.26] இத்யாதேரர்தஃ. குணாநுஸந்தாநாத்பக்தேஃ புருஷஸாத்யத்வஂ யுஜ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘மத்குணகணஂ சாநுஸந்தாயாஹரஹருக்தலக்ஷணமிதமுபாஸநமுபாததாந’ இதி.’இதி மத்வா பஜந்தே மாம்’ [10.8] இத்யாதிகமத்ராநுஸஂஹிதம்.’அஹரஹரித்யாதிகஂ”மந்மநாஃ’ இத்யாதேர்விவக்ஷிதம். ஆப்ரயாணத்வஸித்த்யர்தம்’அஹரஹரித்யாத்யுக்தம்’.’உக்தலக்ஷணமிதி’ — அநந்யப்ரயோஜநநமஸ்காராதிப்ரேரகமதேகதாரகத்வதஷாபர்யந்தநிரதிஷயப்ரீதிரூபமித்யர்தஃ.இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு ஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ நவமோத்யாயஃ৷৷9৷৷

    ஸ்ரீ பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய
    ஸ்ரீ பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.

    ஆஸ்ரித ஸம் ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
    ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
    ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவிலும்-அநா வ்ருத்தி ஸப்தாத் -ஸூத்ர பாஷ்யத்திலும்
    ந ச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞாநிநம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யத்
    ஸ்வ தந்த்ரனே யானாலும் ஸத்ய ஸங்கல்பம் உடையவன் அன்றோ
    பேற்றுக்குத் த்வரிக்கையும் நம்மால் விளைவது அல்ல
    நிதானம் தத்ர அபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண –
    ஜீவாத்மாவுக்கு அசித்வத் பாரதந்தர்யத்துக்கு சைதன்யம் இடையூறு என்பதால் அத்தையும் கல்மஷம் என்கிறது என்றுஆச்சார்யர்கள் நிலைநாட்டி அருளுகிறார்கள்
    வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
    ஸ மஹாத்மா ஸூ துர்லப –

    ———-————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ரஹஸ்யங்கள் –ஆத்ம விவாஹம்-முமுஷு க்ருத்யம்-ஸாமக்ரீ பரம்பராநாதம்-அவஸ்தா த்ரயம்–

    July 27, 2024

    நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
    யஸ்ய வாகம்ருத ஸார பூரிதம் புவந த்ரயம்நஞ்சீயருடைய தனியன்:

    மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன்.

    திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்திரம்

    அவதார ஸ்தலம்: திருநாராயண புரம்

    ஆசார்யன்: பராசர பட்டர்

    ஶிஷ்யர்கள்: நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர்

    பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

    அருளிச் செய்தவை: திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம்,  திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப் பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை.

    இவருடைய பெற்றோர்கள் ஸ்ரீமாதவர் என்ற திரு நாமத்தை இவருக்குச்  சூட்டினார்கள். சிறிய வயதில் மிகப் பிரபலமான அத்வைத பண்டிதராக ஆனார். இறுதியில் பட்டர் இவருக்கு நஞ்சீயர் என்ற திரு நாமத்தைச் சூட்டினார். இவருக்கு நிகமாந்த யோகி மற்றும் வேதாந்தி என்ற திருநாமங்களும் உண்டு.

    தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
    சீ மாதவனென்னும் செல்வனார் வாழியே
    பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
    பங்குனியில் உத்தர நாள் பாருதித்தான் வாழியே
    ஒண்டொடியாள் கலவி தன்னை யொழித்திட்டான் வாழியே
    ஒன்பதினாயிரப் பொருளை யோதுமவன் வாழியே
    எண்டிசையும் சீர் பட்டர் இணை யடியோன் வாழியே
    எழில் பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியேநஞ்சீயருடைய வாழி திருநாமம்:

    ————-

    ஆத்ம விவாஹம்

    ஸ்ரீ யபதி யாகிற
    காள மேகத்தில் இருந்து ஸுஹார்த்தம் என்கிற தொரு பாட்டம் மழை பொழிந்து
    கிருபையாகிற நிலத்திலே
    ஜீவனாகிற ஒவ்ஷதி முளைத்து(
    இது சரீர ஜென்மம்)

    ஆசார்யனாகிற பிதா
    விரஹம் என்கிற ஸங்கமத்தாலே
    ஞானமாகிற மாதாவின் பக்கலிலே சேர்ந்து
    ஜீவாத்மா என்கிற பெண் பிள்ளை பிறக்க
    (இது ஞான ஜென்மம்-அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்)

    (ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —
    யாதிருச்சா ஸூஹ்ருதம்
    விஷ்ணோ கடாக்ஷம்
    அத்வேஷம்
    ஆபி முக்யம்
    சாத்விக சம்பாஷணம்
    ஆச்சார்ய பிராப்தி )

    (கிருபை -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அஸஹிஷ்ணுத்வம்)

    (வித்யைத் தாயாகப் பெற்று ,
    பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே
    திரு மகள் போல் வளர்த்த
    தஞ்சமாகிய தந்தை
    மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல்
    விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
    நாலு இரண்டு இழை கொண்டு
    முப்பிரியான
    ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
    பரம் புருடன் கைக் கொண்ட பின்
    சதுர்த்தியுள் புக்கு
    இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து
    ஜன்ம பூமியை விட்டகன்று
    சூழ் விசும்பிற் படியே உடன் சென்று
    குடைந்து நீராடி
    வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு
    நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு
    நோக்கியர் அலங்கரித்துப்
    பல்லாண்டு இசைத்துக்
    கவரி செய்ய
    நிறை குடம் விளக்கம் ஏந்தி
    இள மங்கையர் எதிர் கொள்ள
    வைகுந்தம் புக்கிருந்து
    வாய் மடுத்து பெரும் களிச்சியாக
    வானவர் போகமுண்டு
    கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து
    ஆரோஹித்து
    பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
    குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு
    மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -121-)

    ருசி யாகிற ஜீவனத்தை யிட்டு வளர்த்துக் கொண்டு போந்து
    விவேகமாகிற பக்வம் பிறந்தவாறே
    பரம சேஷிகளாகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து
    எம்பெருமானாகிற வரன் கையில்
    ஸ்வரூப ஞானம் என்கிற தாரை வார்த்துக் கொடுக்க

    அவனும் சேஷத்வமாகிற மந்த்ர வாஸஸ்ஸை யுடுத்தி(எட்டு இழையாய் மூன்று சரடாய் -திருமந்திரம்)
    சேஷ வ்ருத்தி யாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி
    ரூப (
    ராமானுஜ தாஸ்ய)நாமங்களாகிற ஆபரணங்களையும் பூட்டிக்
    கையைப் பிடித்துக் கொண்டு போந்து
    அத்யவசாயம் என்கிறதொரு ஆஸனத்திலே கொண்டிருந்து

    வ்யாபக ஞானம் என்கிற ஸமிதைகளை இட்டு
    ஸித்த உபாய ஸ்வீ காரம் என்கிற ப்ரதாந ஹுதியைப் பண்ணி
    ஸாஸ்த்ரங்கள் ஆகிற பொரியைச் சிதறி
    ஸம்பந்த ஞானம் என்கிற பூர்ணாஹுதியாலே பிராப்தி பிரதிபந்தங்களை நிஸ் ஸேஷமாக்கி

    நிர்ப் பரத்வ அநுஸந்தானம் பண்ணுவிக்கிற பூர்வாச்சார்களாகிற பந்துக்கள் முன்னிலையாக
    மாதா பிதாக்கள் (
    ஞானமும் ஆச்சார்யரும் )சேர இருந்து காட்டிக் கொடுக்க

    ஆழ்வார்கள் ஈரச் சொல்லாகிற மூப்போடே சேர விட்டு(பொழுது போக்கு அருளிச் செயல்களே அன்றோ)
    வாத்சல்யாதி குண யுக்தனானவன் தான் பர்த்தாவான ஆகாரம் குலையாதபடி அணைத்துக் கொண்டு போந்து
    தானும் தன் ப்ரதான மஹிஷிகளும் கூட அந்தப்புரக் கட்டிலிலே கொண்டு போய்

    அந்தமில் பேரின்பத்து அடியாராகிற பந்துக்களோடே கொண்டு சேர்த்து
    ஹர்ஷ ப்ரகர்ஷத்தோடே அங்கீ கரித்து
    ப்ரீதி வெள்ளமாகிற படுக்கையிலே கொண்டு போய்
    விஷய வைலக்ஷண்யங்களாலே போக யோக்யங்களோடே ஸகல வித கைங்கர்யங்களாகிற அனுபவத்திலே மூட்டி

    ஆனந்தமாகிற பெருக் காற்றூடே ஆழங்கால் பட்டு
    நமஸ் என்பது
    போற்றி என்பது
    ஜிதம் என்பது
    பல்லாண்டு என்பதாகா நிற்கும்

    விவாஹம் -இரண்டு வியக்திகள் -ஸஹ தர்ம ஸாரிணீ –ஐக்யம் இல்லை
    தர்ம ப்ரஜாப்யாம் விரீஹீ மம–தர்மத்துக்கவும் நல்ல பிரஜைகளை பெறவும் உனது கையைப் பிடிக்கிறேன்

    பக்தி -ப்ராப்ய ருசி -கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவி -சாதனமாக இல்லை-

    மிலேச்சனும் பக்தனானால் ஆகலாம்–துர்லபம் -அபி சேத் துசாச்சார-

    பக்தன் வர்ணம் -பிறந்தவுடன் கிட்டும் -ஆஸ்ரமம் -கைங்கர்ய நிஷ்டை -வர்ணாஸ்ரம தர்மம்
    சம்சாரத்தில் விவாஹம்
    அங்கு புகுந்து போக அனுபவம்

    —————

    முமுஷு க்ருத்யம்(ஞானமும் அனுஷ்டானமும் க்ருத்யங்கள்)

    நான்கு நிலைகள் —
    முதல் படிக்கட்டு -58–யத்னம் முயலுவது முதல் நிலை
    வ்யதிரேக
    ஏகேந்த்ர
    வசீகரா சமஞ்ஞா –
    இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி -பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் –
    வ்யதிரேகம் அடுத்து மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம்
    வசீகரம் அனைத்தையும் அடக்குவது

    அஞ்ஞர்
    ஞானி
    ஞான விசேஷஞ்ஞர்
    ஸர்வஞ்ஞன்–இவ்வாறு நான்கு வகை ஆழ்வார் உபதேசம்-

    அஞ்ஞான சமயத்திலும்
    ஞான சமயத்திலும்
    ஞானம் பக்குவமான சமயத்திலும்
    ஞான பலமான ப்ராப்தி சமயத்திலும்

    1-மாதா பிதாக்களோடு
    2-ரூப நாமங்களோடு
    3-போஜநாதிகளோடு
    4-ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு
    5-விதி நிஷேதங்களோடு
    6-தேச வாஸங்களோடு
    7-பந்து வர்க்கத்தோடு
    8-ஐஸ்வர்யாதிகளோடு
    9-ப்ரார்த்தனைகளோடு
    வாசியற பேதித்து இருக்கும்

    முதல் அடியான அஞ்ஞான ஸமயத்தில்
    விவேகம் சஞ்சரியாமையாலே -சரீரமேவ மாதா பிதரவ் ஜனயத -என்று கேவலம் (
    மட்டுமே -ஞான ஜென்மத்தை அறியாமல்)சரீரத்தைப் பெற்றவர்களையே மாதா பிதாக்களாக அபிமானித்து
    அவர்களிட்ட பேரும்
    அவர்கள் நியமித்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும்
    அவர்களை அனுவர்த்தித்து
    அத்தாலே வந்தேறியான (
    ஸ்வா பாவிகம் அன்றே)ரூப நாமங்களும்
    அவர்கள் விரும்பின பந்து வர்க்கமும்
    அவர்கள் வம்ஸ அபிமானமும் ஐஸ்வர்யமும்
    அவர்கள் கற்பித்த ஸம்ஸார வர்த்தகமாய் இருப்பன சில பிரார்த்தனைகளுமாய்
    ஸம்ஸாரத்தில் என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாதிக தரித்ரனாய் அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும்

    ஞானம் பிறந்த சமயத்தில்
    அஞ்சு சேர் ஆக்கையான கேவல சரீரமே அன்று
    ப்ரக்ருதே பரனாய்
    பஞ்ச விம்சகனாய்
    ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசனாய்(
    அஜடமாய்-தர்ம பூத ஞானமும்- தர்மி ஞானமும் உண்டே ஜீவாத்மாவுக்கு-தானே பிரகாசிக்கும் -தனக்கு பிரகாசிக்கும்)
    ஏக ரூபனாய்
    ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
    அச்சேத்யனாய்
    அதாஹ்யனாய்
    அக்லேத்யனாய்
    அசோஸ்யனாய்

    (நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
    ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷

    இவ் வாத்மாவை
    ஆயுதங்கள் வெட்டுவது இல்லை –
    நெருப்பு எரித்து அழிப்பது இல்லை –
    நீர் கரைத்து அழிப்பது இல்லை –
    காற்று உலர்த்தி அழிப்பது இல்லை-
    வெட்ட முடியாதே -கொழுத்த முடியாதே -நனைக்க முடியாதே -உலர்த்த முடியாதே – -இங்கு சோகம் இல்லாதவனாய்)


    ஜனன மரணாதிகள் இன்றிக்கே இருப்பவனாய்
    நித்யனாய் இருப்பானொரு ஆத்மா உண்டு
    வேத ஸாஸ்த்ரங்களும் உண்டு
    புண்ய பாபங்களும் உண்டு
    வர்ணாஸ்ரமங்களும் உண்டு
    கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தால் ப்ரமித்த இத்தனை என்று உணர்ந்து நெகிழ்ந்து

    ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயதி -(போதாயன தர்ம ஸாஸ்த்ரம்)-என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை மாதாவாகவும்
    தத் ப்ரதாநம் பண்ணினவனை பிதாவாகவும் அபிமானித்து
    அந்த ஸாஸ்த்ரம் விதித்தபடியே போஜனாதிகளும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி நிஷேதங்களும்
    வேத ஸாஸ்த்ரம் சொன்னவர்களையே பந்துக்களாகவும்(
    இவர்களே ஆத்ம பந்துக்கள்) அந்த ஸாஸ்த்ர அபிமானத்தாலே வந்தேறின ரூப நாமங்களும்-ஸாஸ்த்ர அப்யாஸம் பண்ணுவதான தேஸம் தேஸமாயும்
    ஸாஸ்த்ரத்தையே ஐஸ்வர்யமாகவும் (
    அந்தணர் மாடு)பிரார்த்தனைகளாகவும் அபிமானிகளாகவும்
    ஆத்ம அபிமானிகளில் (
    ஆத்ம அபிமானிகளாய் -சேஷன் பரதந்த்ரன் புரியாமல்)என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாதிக தரித்ரனாய் அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும்-

    ஞானம் பக்குவமான ஸமயத்தில்
    ஸகல வேத ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வா தந்தர்யம் விநாஸகம் என்றும்
    ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யம் இவனைக் கரை ஏற்றும் என்னும் இடமும்
    பரவா-நஸ்மி -(
    உனக்கு உரியவனாக இருக்கிறேன்)என்றும்
    தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மநஸ் பரமாத்மநஸ் நான்யதா லக்ஷணம் தேஷாமே –என்றும்
    ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸதா ஸ்மர –என்றும்
    இத்யாதி ப்ரமாணங்களாலும்
    ஆலோக்ய ஸர்வ சாஸ்த்ராணி -என்று பிரமாணங்கள் சொல்லுகையாலும்

    (அறிந்து அறிந்து தேறி தேறி)கீழ் நின்ற நிலைகள் அடைய நெகிழ்ந்து
    தத்வ த்ரய ஞான விஷயத்தையும்
    தத்வ த்வய விஷய வைராக்யத்தையும்(
    அளவில்லா சிற்றின்பமும் -கைவல்யமும் ஒழித்து)
    தத்வ ஏக விஷய பக்தியையும் யுடையனாய்

    (மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷)
    தத்வ ஹிதங்களை அறியும் போது கைப் பறி பறித்துக் கிடந்தானை கண்டு ஏறி அறியுமது அல்லாமையாலே
    லோகத்தில் அர்த்த காம உபஹதன் அன்றியிலே
    வேத ஸாஸ்த்ர நிதான ஞானனாய் -லோக பரிக்ரஹமும் யுடையனாய் இருந்துள்ள ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்தில் சென்று கண்ணும் கண்ணீருமாய்
    கீழ் தேஹாத்ம அபிமானியுமுமாய்
    கேவல அபிமானியுமாய்
    தான் பட்ட அநர்த்தம் எல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய

    ஆச்சார்யன்
    தன் நிரவதிக கிருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து இரண்டு பங்குக்கு ஒரு கை யோலை போலே
    ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்துக்கும் ஆத்ம பாரதந்தர்யத்துக்கும் வாசகமாய்
    அகாரோ விஷ்ணுர் இத் யுக்தோ -மகாரோ ஜீவ வாசக -தாயோஸ் து நித்ய ஸம்பந்த -உகாரேண ப்ரகீர்த்தித -என்று
    இவ் வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்துக்கு(
    விதி வாய்க்கின்றது காப்பார் யார் -நிர்ஹேதுக நிரவதிக கிருபா வர்ஷம்)
    எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பது (
    எட்டு அக்ஷரங்கள் மூன்று பதங்கள்-லோகத்தில் இரண்டும் பதினாறுமாய் இருக்குமே)ஒரு மங்கள ஸூத்ரம் உண்டு என்று திரு மந்த்ரத்தை ஆச்சார்யன் தன்னிரக்கத்தாலே அருளிச் செய்து
    ஸ்வரூபத்தில் உணர்த்தியோடும்
    ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியோடும்
    ஈஸ்வரனையே பேணிக் கொண்டு அர்த்தி என்று அருளிச் செய்து அருளினால்

    தான் நின்ற நிலைகளை அடைய உணர்ந்து நெகிழ்ந்து
    பெற்றார் பெற்று ஒழிந்தார் என்றும்
    பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ -என்றும்
    பெற்றாரும் சுற்றமும் என்ற இவை பேணேன்-நான் என்றும்
    தாயே தந்தை என்று தொடங்கி -நோயே பட்டு ஒழிந்தேன் -என்னும் அளவும் சொல்லுகிறபடியே

    (பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை-முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே)

    (பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ–மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோமாய -மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ அம்மா காட்டும் நெறி?-பெரிய திருவந்தாதி -5)

    (பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*மற்றுஆரும் பற்றுஇலேன்* ஆதலால் நின்அடைந்தேன்*உற்றான்என்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!)

    (நைமிசாரண்யத்தில் முதல் சரணாகதி திருவேங்கடத்தில் இரண்டாவது சரணாகதி –தாயே தாரமே நோயே ஏவகாரங்கள் மிக்கு அருளிச் செய்கிறார்)

    அல் வழக்கு ஒன்றும் இல்லா தேஹாத்ம பிரமம் முதல் அல் வழக்கு -அஷ்ட ஸ்லோஹீ அனைத்தையும் விளக்கும்

    தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
    ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
    ஆத்ம த்ராணோந் முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸ லோல:
    சப்தம் நாராயணாக்யம் விஷய சபல தீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||
    -அஷ்ட ஸ்லோஹீ-4-

    பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்த ஸ்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. ​தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ​’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹ ஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும் போது நாராயண என்னும் பதப் பொருள் நோக்கத் தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம் போது சதுர்த்தியின் பொருள் உணரத் தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ் விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக் கொள்ள வேண்டியது.

    தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
    தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
    த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
    பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
    ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
    ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
    ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
    பிரதம பதம் வித்யாத் –
    முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
    இதர சேஷத்வதீ சேத்-
    அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
    த்வதீயம் பதம் வித்யாத்
    இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
    ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
    ஆத்மத்ராண உந்முக சேத் –
    ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
    நம இதி பதம் வித்யாத் –
    நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
    பாந்த ஆபாஸ லோல –
    ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
    நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
    நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

    விஷய சபலதீச் சேத சதுர்தீம்
    சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
    நாராயண பதத்தின் மேல் யுள்ள
    வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

    ப்ரபன்ன
    இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
    பிரபன்ன அதிகாரி –

    திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
    உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
    பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
    முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
    நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
    இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
    நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
    ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
    தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

    மேல் ஏழாவதாக உற்றதும் உனது அடியார்க்கு அடிமை-
    ஏழு நாழிகையுடன் -தொண்டமான் சக்கரவர்த்திக்கு -ஏழு அல் வழக்குகள்
    அடுத்து ஸ்வார்த்த கைங்கர்யம் இல்லாமல் அவனுக்கே என்று இருந்து -படியாய்க் கிடந்தது பவள வாய் காண்பது எட்டாவது –

    —–

    திருமந்திரத்தை மாதாவாகவும்
    ஆச்சார்யனைப் பிதாவாகவும் -அபிமானித்து
    ஆச்சார்யன் திரு உள்ளமான ரூப நாமங்களும் -போஜ நாதிகளும் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி நிஷேதங்களும்
    ஆச்சார்யன் விரும்பி வர்த்திக்கும் தேஸம் நித்ய தேஸ வாஸமாகவும்
    ஆச்சார்யன் திரு உள்ளத்தாலே ஸஹ வாஸ யோக்யராய் கற்பித்த பரம ஸத்வ நிஷ்டரான-ஸ்ரீ வைஷ்ணவர்களையே தனக்குப் பந்துக்களாகவும்
    அவர்கள் தங்களுக்கு ஐஸ்வர்யமாக அபிமானித்து இருக்கும் ஆச்சார்ய கைங்கர்யமே தனக்கு ஐஸ்வர்யமாகவும்
    அந்தக் கைங்கர்யத்தின் மேலுண்டான ப்ரார்த்தனையையே தனக்கு தேஹ யாத்ரையாகவும் நினைத்து

    குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் –நின்னிலங்கு பாதம் இன்றி மற்றோர் பற்றிலேன் -(குலங்களாய ஈரிரண்டில்* ஒன்றிலும் பிறந்திலேன்,* நலங்களாய நற்கலைகள்* நாலிலும் நவின்றிலேன்,* புலன்கள் ஐந்தும் வென்றிலேன்* பொறியிலேன் புனித,* நின்-இலங்கு பாதம் அன்றி* மற்றுஒர் பற்றுஇலேன் எம் ஈசனே!)என்றும்
    கற்றிலேன் கலைகள் –நற்றுணையாகப் பற்றினேன் அடியேன் -(
    கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* -பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*-செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி*  நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.)என்றும்
    போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புணைய மாட்டேன் -ஏதிலேன் அரங்கர்க்கு (
    போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலேஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே)என்றும்
    நாட்டோரோடு இயல் ஒழிந்து -என்றும்
    நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது -என்றும் சொல்லுகிறபடியே
    தன் வேறுபாடு தோற்ற இந் நிலத்தில் பொருந்தாமையும்
    பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும் ஆகிய
    பேகணிப்பு அடியிலே தோன்றும்படி
    நிர் மமனாய்
    மோக்ஷ ப்ரதானனான எம்பெருமானைக் கிட்டி வாழும் அளவும் ஞான ப்ரதானனான ஆச்சார்யன் நிழலிலே ஒதுங்கி
    அவன் ப்ரீதிக்கு வர்த்தகனாய் இருந்தவிடம் அறியாமல் இருக்கும்

    (கொக்கு போலே -கோழி போலே -உப்பு போலே உம்மைப் போலே
    ஸ்வார்த்ததை இல்லாமல் இருக்க வேண்டுமே)

    ——————

    ஞானப் பலமான பகவத் ப்ராப்தி ஸமயத்தில்
    தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து
    ஆச்சார்யன் கட்டின ஸ்வரூப அநு பந்தியான மங்கள ஸூத்ரத்தில் அர்த்த அநு ஸந்தானத்துடனே வர்த்தியா நிற்கச் செய்தேயும்

    பகவத் ஸ்வரூப திரோதாந கரமாய் -விபரீத ஞான ஜனகமுமான சரீர ஸம்பந்தத்தை ருசி வாசனைகளோடே விட்டு

    ஆற்றிலே குளித்து
    அக்கரை ஏறி
    புக்ககத்தில் உள்ளோர் அலங்கரிக்கப் போய்
    வகுத்த தேசத்திலே முகம் பழகின திரளிலே சென்று புக்கு இருந்து

    (இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி இவ் வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய் அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த வைகுந்தம் புக்கு மணி மா மண்டபத்துச் சென்று நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும் நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!–24-)

    தனக்கு என்ன ஒரு மாதா பிதாக்களாதல் -ரூப நாமங்களாதல் -போஜநாதிகள் ஆதல் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாதல் –
    விதி நிஷேதங்களாதல் -பந்துக்களாதல் -ஐஸ்வர்யமாதல் -ப்ரார்தனைகளாதல் இன்றிக்கே

    அஹம் அன்னம் அஹம் அன்னம் –என்னுதல்
    சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஏற்றி நிற்றல்
    ஸதா பஸ்யந்தி என்று வைத்த கண் வைக்காதே பார்த்து இருத்தல்
    சாயா வாசஸ்த்வம் அநு கச்சேத் –என்கிறபடியே சாயாவத் பர தந்த்ரனாய் வர்த்தித்தல் எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை

    இவ் வர்த்தம் ஒரு ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு நாடோறும் ஆராய வேண்டுவது ஓன்று
    எங்கனே என்னில்

    ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே கையைப் பிடித்தல் பூர்வ அவஸ்தைகளில் நிலைகளை அடைய நெகிழ்ந்து பார்த்தாவினுடைய அபிமானத்தில் ஒதுங்குகிறாப் போலேயும்

    அநுப நீதனானவன் ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே ஸதா யஜ்ஜோபவீதத்தைத் தரித்தால் பூர்வ அவஸ்தைகளில் நிலையை அடைய நெகிழ்ந்து த்விஜன் என்று பேர் ஆகிறாப் போலேயும்

    யஞ்ஞத்தில் ஒருவன் தீஷித்தால் பூர்வ அவஸ்தைகளில் நிலையை யடைய நெகிழ்ந்து அவப்ருத ஸ்நானத்து அளவும் யஜமான வேஷத்துக்குத் தக்க அநுஷ்டானம் ஆகிறாப் போலேயும்

    ஸந்யாஸி கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து ஆஸ்ரமத்துக்கு உசிதமான வ்ருத்தியோடு வர்த்திக்கிறாப் போலேயும்

    இந்த ஜீவன் முக்தனான முமுஷுவும் கீழ் நின்ற நிலைகளை யடைய நெகிழ்ந்து -பகவத் கைங்கர்யம் ஒன்றிலுமே நிரதனாய் வர்த்திப்பது எப்போதோ என்று
    தன் நெஞ்சை இறுக்கித் தன் வேறுபாடு தோற்ற வர்த்திக்கையே முமுஷுவுக்கு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

    முமுஷு க்ருத்யம் ஸம்பூர்ணம்

    —————–

    ஸாமக்ரீ பரம்பரா நாதம்

    (ஸாமக்ரீ -காரணம்
    பரம்பரா-தொடர்ச்சி
    நாதம்-ஒலி)

    காரண கார்ய பாவங்கள் தொடர்ந்து -ஆரோஹணம் -அவரோஹணம் -இரண்டையும் அருளிச் செய்கிறார் இதில்

    பொய் நின்ற ஞானம் -ஞானம் பொய்யல்லவே -அசித் தத்வம் பற்றிய ஞானம் -ஸகல பரிமாணங்கள் -ஷட் பாவ சதத பரிணாமம் -நிலை நில்லாமை -இல்லாமை அல்லவே -இதுவே அவித்யா இங்கு
    பொல்லா ஒழுக்கும்
    அழுக்கு உடம்பும்

    ஜீவாத்மா தன்மையை மாற்றி -பரதந்த்ரன் என்பதை ஸ்வ தந்த்ரன் என்று நினைப்பது அந்யதா ஞானம்
    தேஹமே ஆத்மா என்று நினைப்பது விபரீத ஞானம்

    அநாதி அவித்யா அடியாக அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் உண்டாம்
    அவ் வன்யதா ஞானங்கள் யுண்டாக அப்ராப்த விஷயங்களிலே ராக த்வேஷம் யுண்டாகும்
    அந்த ராக த்வேஷம் அடியாக ஸத் அஸத் ப்ராப்தி யுண்டாகும்
    ஸத் அஸத் ப்ராப்தி அடியாக புண்ய பாப ரூப கர்மங்கள் யுண்டாம்
    அக் கர்மங்கள் அடியாக சதுர்வித தேஹ ஸம்பந்தங்கள் யுண்டாம்
    தேஹ ஸம்பந்தங்கள் அடியாக தேஹ அநு பந்தியான ஸூக துக்கங்களை ஆர்ஜிப்பது அனுபவிப்பதாகா நிற்கும்

    (ஆத்மாவுக்கு கர்மங்களை ஆர்ஜிப்பதும் அவற்றின் பலன்களான ஸூக துக்கங்களை அனுபவிக்கவும் தேஹம் வேண்டுமே—–பிரயாணம் செய்யவும் ஆத்மாவுக்கு சரீரம் வேண்டுமே–முக்தனுக்கும் ஸூஷ்ம ஸரீரம் பெற்று பிரயாணம்)

    (ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி –போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து –நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை-பிறவிகளின் நடுவிலே -ஸம்ஸார சுழற்சிகளின் நடுவில் -என்றும் அந்த ஒரு பிறவியின் நடுவிலே என்றுமாம்
    உஜ்ஜீவனத்துக்காக வந்ததால் -பிறவியின் இறுதியில் சொல்லாமல் -அவன் வந்ததால் பிறவி முடியும்)

    நன்மை என்று பேரிடலாவது தீமையைக் கொண்டு -நாமும் அறியாமல்-சாஸ்திரமும் அறியாமல் -தானே கற்பித்து(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —யாதிருச்சா ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம்-அத்வேஷம்-ஆபி முக்யம்-சாத்விக சம்பாஷணம்-ஆச்சார்ய பிராப்தி-ஆச்சர்ய சம்பந்தம் அடியாகவே விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றதை உணர்கிறோம்-ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் -த்யான யோக லப்த ஞாநம் -பஹு கிலேசம் – )

    இந்த ஸூகம் செல்லா நிற்கவே -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -என்கிறபடியே
    யாதிருச்சிக ஸூஹ்ருத நிமித்த பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸதாசார்ய ஸமாஸ்ரயணம் யுண்டாகும்
    அந்த ஸதா சார்ய ஸமாஸ்ரயணத்தாலே ஸ்ரவண ஞானம் பிறக்கும்
    அந்த ஸ்ரவண ஞானத்தாலே -(
    அது பரிணமித்து )யதா ஞானம் பிறக்கும்-அது பரிணமித்து ஸம்யக் ஞானம் பிறக்கும்-
    அந்த ஸம்யக் ஞானத்தாலே அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் நிவ்ருத்தமாம்
    அத்தாலே ராக த்வேஷங்கள் நிவ்ருத்தமாம்
    அத்தாலே துஷ் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தமாம்
    அத்தாலே பந்த கர்மம் நிவ்ருத்தமாம்
    அத்தாலே சரீர விமோசநம் பிறக்கும்
    அத்தாலே துக்க நிவ்ருத்தி பிறக்கும்
    பின்பு ஈஸ்வரன் நயாமி க்ரமத்தாலே ஆனந்தயாதி என்னும்படி யாக்குவிக்கும்
    ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்

    (தூ மணி மாடம் ஆனந்த ப்ரஹ்மணோ வித்வான்–ஸ்வ கத ஸ்வீ காரம்
    நோற்றுச் ஸ்வர்க்கம் ப்ரஹ்மமே ஆனந்தமூட்டும் பர கத ஸ்வீகாரம்)

    (அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
    மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
    உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
    உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
    சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –சூரணை-5-

    ஏதம் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான
    அசித் அயன அநாதி சம்பந்தங்கள்-சூர்ணிகை -10-

    அநாதி அசித் சம்பந்தம் அடியாக அவித்யையாய்
    அதன் அடியாக புண்ய பாப ரூப கர்மமாய்
    அது அடியாக அஜ்ஞான ஹேதுவான ஜென்மமாய்
    அது அடியாக ரஜோ தமஸ் அவிருத்தயாய்
    அது அடியாக அர்த்த பஞ்சக ஞான அபாவமாய்
    அது அடியாக அஜ்ஞாநாத் சம்சார என்கிற படியே சம்சார துக்கம் வரும்-

    அநாதி அயன சம்பந்தம் அடியாக
    பகவத் சௌஹார்த்தம் உண்டாய்
    அது அடியாக கிருபை உண்டாய்
    அது அடியாக விசேஷ கடாஷம் உண்டாய்
    அது அடியாக சத்வ விருத்தி உண்டாய்
    அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் உண்டாய்
    அது அடியாக ஞானான் மோஷம் -என்கிறபடியே
    மோஷ ஸுகம் உண்டாம் என்று ஆய்த்து-)

    ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்-அர்த்த அனுசந்தானம் பண்ணும் ப்ரகாரம்
    பகவத் ஏக ரஷ்யன்
    ஈஸ்வர சேஷ பூதன்
    அநந்யார்ஹ சேஷன்
    ததீய பரதந்த்ரன்
    ஸம்பந்த யுக்தன்
    கைங்கர்ய ஸ்வபாவன் -என்று இத்தாலே சொல்லிற்று ஆயிற்று

    ரக்ஷகத்வ ப்ரதி சம்பந்தி பூர்வகமான ரஷ்யத்வமும்
    சேஷித்வ ப்ரதி சம்பந்தி பூர்வகமான சேஷத்வமும்
    அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அநந்யார்ஹ சேஷத்வமும்
    அசேதன நிவ்ருத்தி பூர்வகமான சேதன வை லஷ்யமும்
    ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமான அத்யந்த பாரதந்த்ரயத்தினுடைய மேல் எல்லையும்
    ஸோ பாதிக பந்து நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தமும்
    அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த வை லக்ஷண்யமும் இறே ஸகல ஸாஸ்த்ரங்களிலும் ப்ரவ்ருத்தமாயிற்று

    சொல்லினால் சொல்லப்படாத -என்றும்
    யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்றும்
    அரும் பொருளாதல் என்றும் –சொல்லுகிற பிரமாணங்களால்
    காண வரிய தனக்கு அன்று
    அந்நிய பரரான ஸம்ஸாரிகளைக் குறித்து அன்று
    அநந்ய பரரான நித்ய முக்தரைக் குறித்தன்று

    முமுஷுவுக்கு

    (சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
    சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
    சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
    சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-)

    (அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
    அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
    அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
    அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-)
    அசித்திலும்
    அசித் ப்ராயரான ஸம்ஸாரிகளிலும்
    நித்ய முக்தரிலும்
    எம்பெருமானிலும் –வ்யாவ்ருத்தமாயும்
    இந்நிலத்தில் பொருந்தாமையும்
    பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும் யுடையனாய்
    ஆக்கை விழும் பொழுது எண்ணே -என்பது
    பணி கண்டாய் சாமாறே -என்பது
    அடைய அருளாய் என்பது
    கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –என்பதாய்
    ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி வேறுபட்டு இருந்துள்ள முமுஷுவுக்கே பிரமாண அபேக்ஷை உள்ளது

    (இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை

    ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
    விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

    நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
    எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?
    கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
    தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

    படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
    மடைநின்று அலரும்* வயல்ஆலி மணாளா,*
    இடையன் எறிந்த மரமே* ஒத்துஇராமே,*
    அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே.

    ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
    பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
    தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
    கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

    அங்கு போய் பெறும் பேறு இதனிலும் தண்ணியதோ -திருக் குருகைப் பிள்ளான் நஞ்ஜீயருக்கு சாதித்த ஸ்ரீ ஸூக்தி)

    ஸகல ஸாஸ்த்ரங்களுக்கும் தாத்பர்யம்
    ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்தையும்
    ஆத்ம பாரதந்தர்யத்தையும்
    இசைவிக்கையாய் இறே இருப்பது

    ஸாமக்ரீ பரம்பரா நாதம் ஸம் பூர்ணம்

    ————–

    அவஸ்தா த்ரயம்

    கீழ் முமுஷு கிருத்யத்தில் இவ் வுலகில் உள்ள மூன்றையும் -அதாவது
    அஞ்ஞான நிலை
    ஞாந உதய நிலை
    ஞான பரிபக்குவம் முடிந்த நிலை
    இவற்றையே விளக்கி அருளுகிறார் இதில்

    (ப்ரஞ்ஞா த்ரயங்கள்
    திருத் தாயார் -சம்பந்த உணர்த்தி
    தோழி -உபாயத்தில் துணிவு
    தலை மகள் பேற்றில் த்வரை)

    அநாதி மாயயா ஸூப்த யதா ஜீவ ப்ரவ்ருத்தே -என்கிற அநாதி அவித்யையாலே
    ஞான அநுதயமாய்
    அத்தாலே அந்யதா ஞான விபரீத ஞானமாய்
    அத்தாலே அஹங்கார மமகாரங்களாய்
    அத்தாலே ராக த்வேஷங்களாய்
    அத்தாலே புண்ய பாப ரூப கர்மங்களாய்
    அத்தாலே சதுர் வித ஸரீரமாய்

    அத்தாலே -பெரும் துயர் இடும்பையில் பிறந்து -1-1-1-)-என்றும்
    சதிரம் என்று தம்மைத் தாமே ஸம்மதித்து-9-1-5-
    உளனாக எண்ணி-3-9-5
    தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டி-8-
    கண்டவா தொண்டரைப் பாடி-1-1-
    விலைக்கு ஆட்பட்டு
    வள்ளல் புகழ்ந்து
    காசுக்கும் கறையுடைக் கூரைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இட்டு
    விசாதி ஏற்றுண்டு
    தலைக்காட் பலி திரிந்து
    ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நின்று
    சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து-1-6-3
    பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டி-1-1-8-
    ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்று-1-6-6-
    வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி-1-1-4-
    சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து -1-6-2–அவர் தரும் கலவியே கருதி ஓடி-1-1-1-
    பண்டு காமர் ஆனவாறும் பாவையர் வாயமுது யுண்டவாறும் வாழ்ந்தவாறும் ஓக்க உரைத்து இருமி
    -1-3-

    அந்திம சமயத்திலும்
    அன்னை யத்தன் என் புத்திரர் பூமி வாஸவார் குழலாள் என்று மயங்கி
    –4-5-

    அதுக்கும் மேலே
    நமன் தமர் பாஸம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் -3-2-10-என்கிற உத் க்ராந்தி தசையிலே வேதந அநுபவம் பண்ணி

    அதுக்கும் மேல்
    துஞ்சினார் செல்லும் தொன்னெறி –1-6-7-என்று வழியில் படும் வேதந அனுபவம் பண்ணி

    அதுக்கும் மேலே
    நமன் தமர் செய்யும் வேதனை —என்கிற நரக வேதனை அனுபவம் பண்ணி

    அதுக்கும் மேலே
    வயிற்றுக் குழியில் உழைக்கும் -6-2–என்கிற வேதனை அநுபவம் பண்ணி

    அதுக்கும் மேலே
    மக்கள் தோற்றக் குழி -11-8-1–என்னும் வயிற்றில் நின்றும் புறப்படுகிற போதையில் வேதனை அநுபவம் பண்ணி

    இப்படி ஒரு ஜென்மத்திலே உத் க்ராந்தி மார்க்கம் -நரக யோநி -கர்ப்ப ஸங்கடம் -என்று சொல்லுகிற
    நாலு ஐந்து நரகத்தை அனுபவித்துப் போரக் கடவனான சேதனன் துஷ் கர்மத்தில் மூளக்
    கர்மம் ஜென்மத்திலே மூட்ட
    அந்தாதியாக
    தேவனாவது மநுஷ்யனாவது திர்யக் யாவது ஸ்தாவரமாவதாய்
    யாதானும் ஒரு ஆக்கையிலே புக்கு -அங்கு ஆப்புண்டு -ஆப்பவிழுந்து –மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -95-என்கிறபடியே
    ஸரீரங்கள் தோறும் அதி ப்ராவண்யம் பண்ணக் கடவனாய்

    அலை வாயில்-அலை வாயில் அலை மாறுமாப் போலே
    அம்மை வயிற்றோடும்
    எமன் கழுவோடும் போவது வருவதாய்
    இயக்கறாத பல் பிறப்பு -120-என்கிறபடியே
    ஒழுக்கறாமல் பட்டது மறந்தான் என்று விடு தூதாய் அநாதி காலம் தேஹாத்ம அபிமானம் தலை மண்டையிட்டு பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் -என்கிறபடியே ஒன்றும் மறவாமல் பிறந்து போருகிற நாட்டாரோபாதி பிறந்த ஜன்மத்தை
    அன்று நான் பிறந்திலேன்-என்கிறார்

    (இது வரை அஞ்ஞான தசை -ஞான ஜென்மம் கிடைக்காத தசை)

    (நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)

    இனிப் பிறக்கை யாவது
    ஸதாசார்ய உபதேஸ முகத்தாலே
    வாகாதி கரணங்கள் அன்று ஆத்மா -இந்திரியங்கள் அன்று ஆத்மா-மனஸ் அன்று ஆத்மா-ப்ராணன் அன்று ஆத்மா-அவித்யம் அன்று ஆத்மா
    அக்னி இந்த்ராதி சேஷம் அன்று –பிரம்மா ருத்ராதி தேவதாந்தர சேஷம் அன்று ஆத்மா-ஏகாயன எம்பெருமானுக்கு சேஷம் அன்று ஆத்மா-மிதுன சேஷத்து அளவு அன்று ஆத்மா-
    ததீய சேஷத்வ பர்யந்தமாகப் பிறக்கப் பிறந்த இஜ் ஜன்மத்தை-நான் பிறந்த பின் மறந்திலேன் -என்றார்

    இந்த ஞானத்தை அவன் மயர்வற மதி நலம் அருளிப் போன பின்பு
    பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி–அடிமை கொண்டாய்–5-7-3- -என்றும்
    இன்று என்னைப் பொருளாக்கி –10-8–என்றும்
    அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11-(
    அறிந்தே பிறந்தார் -உயர்ந்தே பிறந்தார்)என்றும்

    பெருமாள்
    உடல் பிறவி வேண்டேன் உயிர் பிறவி வேண்டுவேன் -என்றும்

    திருமங்கை யாழ்வார்
    மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –என்றும் இறே
    இவர்கள் தங்களை நினைத்து இருப்பது

    ஆழ்வார்கள் வசனங்களாக இவற்றையே ப்ரமாணமாகக் கொண்டு முமுஷுக்களும் இந்த ஞானம் பிறப்பதற்கு முன்பு ஒரு ஜந்மமும் -பின்பு ஒரு ஜென்மமுமாக அநு சந்திப்பார்கள்-

    முன்பு சரீர உத்பாதகன் பிதாவாயும் -சுமந்து பெற்றவள் மாதாவாயும் -அவர்கள் பெற்றவர்கள் ப்ராதாக்களாயும் -இவர்களுடன் அந்வயமுடையவர்கள் பந்துக்களாயும்-
    பிறந்த தேஸம் ஜன்ம தேஸமாயும்-
    குலம் பிறந்த வர்ணமாயும்-
    க்ஷேத்ரம் பூமியாயும்-
    தானாகிறான் -மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமாய் -துருப்புக் கூடான சரீரமாயும்
    மாதா பிதாக்கள் சொன்னதுவே நாம மாத்ரமாயும் -அன்ன பாநாதிகளே தாரகமாயும் -ஸ்நேஹ த்ரவ்யங்கள் போஷக மாயும்-
    அதற்குப் பரிகாரம் அர்த்த பவ்ருஷங்களாயும் -வாத பித்தாதிகள் (
    ஆதி -கபம்)வ்யாதி களாயும் -அதுக்குப் பரிஹாரம் வைத்யன் சொன்னது மருந்தாயும்-
    த்ருஷ்ட ஐஸ்வர்யம் பேறாயும் -அது இல்லாமை மிடியாயும்-ப்ரக்ருதி ப்ராக்ருத லாபம் சுகமாயும் -அலாபம் துக்கமாயும்-
    வர்ணாந்தர ஸ்பர்ஸம் தீட்ட மாயும் –ஜல ஸ்பர்ஸம் சுத்தமாயும் -புத்ர பசு அன்னாதிகள் ப்ராப்யமாயும்-
    பர ஹிம்ஸை பர த்ரவ்ய அபஹாரம் -பர அநு வர்த்தனங்கள் ப்ராபகமாயும்-
    மிண்டரும் தொழும்பரும் தூர்த்தரும் ஸஹ காரிகளாயும்-
    மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்கை தொழிலாயும்-3–
    புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை -1-6-என்கிற பொழுது போக்காயும்-
    சரீர வியோகம் முடிவாயும் இருக்கும்

    பின்பு ப்ரஹ்மதஸ் பிதா என்று-சொல்லுகிற ஆசார்யன் பிதாவாகவும்-
    திருமந்திரம் மாதாவாகவும்-
    ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் யுடையவர்கள் ப்ராதாக்களாயும்-
    திரு மந்திரத்தோடும் ஆச்சார்யனோடும் அந்வயம் யுடையவர்கள் பந்துக்களாயும்-
    திரு மந்திர அர்த்தம் பெற்ற இடம் ஜன்ம தேஸமாயும்-
    குலம் தாஸ்யமான தொண்டக் குலமாயும்-
    க்ஷேத்ரம் உகந்து அருளின திவ்ய தேசங்க ளாயும்-
    தானாகிறான் -24 தத்வம் கழிந்த ஆத்மாவாகவும்-
    நாமம் தாஸ்ய நாமமாகவும்-
    பகவத் ஸம்பந்த ஞானம் தாரகமாயும்–
    ஆச்சார்ய அநு வர்த்தநம் போஷகமாயும்-
    அடியார்கள் இன்ப மிகு பெரும் குழுவு போக்யமாயும்-
    வியாதி தாய் தாரகங்க ளாயும்-
    அதுக்குப் பரிஹாரம் செடியார் வினைகள் தீர் மருந்தான உபாய பூதன் அருளிச் செய்த சரம ஸ்லோக அர்த்தமாயும்-
    ஆபத்து அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வாதந்தர்ய -தேஹாத்ம அபிமானமாயும்-
    அதுக்குப் பரிஹாரம் திருமந்த்ரார்த்த ஞானமாயும்-
    ஐஸ்வர்யம் வ்யவசாயமாயும்-
    அது இல்லாமை மிடியாயும்-
    பகவத பாகவத ஸம்ஸ்லேஷம் ஸூகமாயும்-
    அது இல்லாமை துக்கமாயும்-
    அஹங்கார ஸ்பர்சம் தீட்டமாயும்-
    ஞான ஸ்பர்சம் ஸூத்தமாயும்-
    ப்ராப்யம் அடிமையாயும்-
    ப்ராபகம் அருளாயும்-
    உஸாத் துணை பேராளன் பேரோதும் பெரியோருமாயும் உயர்ந்தோருமாயும்-
    தொல்லை மால் தன் நாமம் ஏத்துகை தொழிலாயும்-
    வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது என்கிற பொழுது போக்காயும்-
    ஞான வியோகம் முடிவாயும் இருக்கும்

    இந்தப் பிரதிபத்தி இறே பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் –
    நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -என்றும்
    நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் -என்றும்
    அருளிச் செய்து அருளிற்று

    நாட்டாருக்குப் பெயர் ஸம்ஸாரிகள்
    நாகரிகருக்குப் பெயர் ஸ்ரீ வைஷ்ணவர்கள்

    இதில் ஸம்ஸாரிகள் அஞ்ஞருமாய் -அஸக்தருமாய் -அபூர்ணருமாய் -அயோக்யருமாய் -துர்மானிகளுமாய் -துர் வ்ருத்தருமாய் -தோஷ துஷ்டருமாய்-
    எம்பெருமானையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்கிற பரிபாவ நிவர்த்தருமாய்-
    பூமி பாரங்களுமாய்-
    பரிக்ரஹ நியதி இல்லாமல் உண்டியே உடையே உகந்து ஓடுகையாலே ஸம்ஸாரிகள் என்று பெயர் ஆயிற்று

    இனி ஸ்ரீ வைஷ்ணத்வமாவது
    விசேஷ ஞானம் -அதாவது வாசி அறிகை-
    குருக்களுக்கும் ஸத் குருக்களுக்கும் வாசி அறிகையும்-
    மந்த்ராந்தரத்துக்கும் மந்த்ர ரத்னத்துக்கும் உள்ள வாசி அறிகையும்-
    தேவதாந்தரங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசி அறிகையும்-
    உபாஸகனுக்கும் ப்ரபன்னனுக்கும் உள்ள வாசி அறிகையும்-
    ஸம்ஸாரிகளுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உள்ள வாசி அறிகையும்-
    பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசி அறிகையும்-
    புருஷார்த்தத்துக்கும் அபுருஷார்த்தத்துக்கும் உள்ள வாசி அறிகையும்

    இதில் குருக்கள் ஆகிறார் -ஸம்ஸார ஸம்பந்தகருமாய் -அஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும்
    ஸத் குருக்கள் ஸம்ஸார நிவர்த்தகருமாய் -ஞானப் ப்ரதருமாய் இருப்பார்கள் என்று அறிகை

    தேவதாந்தரங்கள் -அஞ்ஞருமாய் -அஸக்தருமாய் -அப்ராப்தருமாய் இருப்பார்கள் என்றும்
    ஈஸ்வரன் ஸர்வஞ்ஞனுமாய் -ஸர்வ ஸக்தனுமாய் -ப்ராப்தனுமாய் இருக்கும் என்று அறிகை

    தேஹம் ஜடமாய்- துக்க ரூபமாய் இருக்கும் என்றும்
    ஆத்மா அஜடமுமாய் -ஆனந்த ரூபமாயும் இருக்கும் என்று அறிகை

    ஆத்மா வ்யாப்தமுமாய் -சேஷமாய் இருக்கும் என்றும்
    ஈஸ்வரன் வ்யாபகனாய் -சேஷியாய் இருக்கும் என்று அறிகை

    உபாஸகனுக்கு ஆனுகூலஸ்ய ஸங்கல்பமும் -பிரதிகூல்ய
    வர்ஜனமும் வேண்டும்
    ப்ரபன்னனுக்கு அஹம் அஸ்ய அபராதனாம் ஆலய அகிஞ்சன -என்று இருக்கும் என்று அறிகை

    ஸம்ஸாரிகள் அநாசார ப்ரவர்த்தகருமாய் -துர்மான ப்ரவர்த்தகருமாய் இருப்பார்கள் என்றும்
    ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார ப்ரவர்த்தகருமாய்-துர்மான நிவர்த்தகருமாய் இருப்பார்கள் என்றும் அறிகை

    பரத்வம் துர்லபமுமாய் -ஸ்வ தந்திரமாயும் இருக்கும் என்றும்
    அர்ச்சாவதாரம் ஸூலபமுமாய்- பரதந்த்ர ப்ரகாசகமுமாய் இருக்கும் என்றும் அறிகை

    (மேல் ஞானம் பக்குவமான மூன்றாம் அவஸ்தை-உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகள்-என்று இருக்கை-மனமுடையீர் என்ற படி ஸ்ரத்தையே அமையும்)

    இந்த ஞானம் நிலை நின்றதாவது -அநுஷ்டான சேஷமானால் -அனுஷ்டானமாவது வர்ணாஸ்ரம தர்மம் (மட்டுமே) அன்று -அதாவது வந்தேறியான தோல் புரையிலது அன்று –ஸ்வரூப அநுரூபமான வ்ருத்தம்

    அவையாவன
    ஸ்வரூப அநு கூலமான ரக்ஷகத்வம்
    ஸ்வரூப அநு கூலமான சேஷத்வம்
    ஸ்வரூப அநு கூலமான ஸேவை
    ஸ்வரூப அநு கூலமான ஸஹ வாஸம்
    ஸ்வரூப அநு கூலமான கால க்ஷேபம்
    ஸ்வரூப அநு கூலமான இருப்பு
    ஸ்வரூப அநு கூலமான பரிக்ரஹம்
    ஸ்வரூப அநு கூலமான போஜனம்
    ஸ்வரூப அநு கூலமான அத்யவசாயம்
    ஸ்வரூப அநு கூலமான அபேக்ஷை

    இவற்றில்
    ஸ்வரூப அநு கூலமான ரக்ஷகத்வம் ஆவது
    தேச ரக்ஷகன் என்றும்
    தேஹ ரக்ஷகன் என்றும்
    பதார்த்த ரக்ஷகன் என்றும்
    பவ்ருக்ஷ ரக்ஷகன் என்றும் –சொல்லுகிற ரக்ஷகத்வங்களைத் தவிர்த்து
    தேச நிவர்த்தகன் என்றும்
    தேஹ நிவர்த்தகன் என்றும்
    விஷய நிவர்த்தகன் என்றும் பற்றுகை

    அதாவது
    கொடு உலகம் என்று அஞ்சினவாறே(4-9-7)
    கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்(5-2-11)
    பொல்லா வாக்கை 3-2-என்று அஞ்சினவாறே செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும்
    ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்று அடைந்தேன் என்று அஞ்சினவாறே 7-7-7அடியாரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்1-7-2
    நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கியவாறே -1-6-3 –நமன் தமர் என் தமரை வினவப் பெறுவாரலர் என்னும்-10-6-5-
    அடியார் படு துயராயின எல்லாம் நிலந்தரம் செய்யும் -1-1-9-என்னக் கடவது–இறே

    ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
    நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
    நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
    கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

    கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
    மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
    கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
    ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

    கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
    யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
    பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
    சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

    அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
    கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
    செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
    அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

    ஸ்வரூப அநு கூலமான சேக்ஷத்வம் ஆவது
    இதர சேஷத்வம் என்றும்
    கிருஹ சேஷத்வம் என்றும்
    பித்ரு சேஷத்வம் என்றும்
    தேவதாந்த்ர சேஷத்வம் என்றும் –சொல்லுகிற ஆபாஸ சேஷத்வங்களைத் தவிர்த்து
    ஸர்வேஸ்வரனே
    தாரகன் என்றும்
    வ்யாபகன் என்றும்
    ஸரீரீ என்றும் பற்றுகை

    அதாவது
    ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்-10-10-3-
    உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -7-2-1–என்றும்-என்னுடை வாழ் நாள் -என்றும்
    அடியார்க்கு அகலலாமே என்றும் இருக்கை

    கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
    ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
    மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
    நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
    கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
    ‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
    ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
    ‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
    இரு நிலம் கை துழா இருக்கும்;
    செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
    இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

    ஸ்வரூப அநு கூலமான ஸேவை யாவது
    சேதனாந்தர ஸேவையையும்
    தேவதாந்தர ஸேவையையும்
    பகவத் ஸேவையைத் த்ருஷ்ட-துஷ்டப் ப்ரயோஜனத்துக்காக ஸேவிக்கையும் -அத்ருஷ்டத்துக்கு ஹேது என்கிற ஸேவைகளையும் தவிர்த்து
    ஸ்வரூப ப்ரயுக்தம் என்று சேவிக்கை

    (ஈஸ்வரன் முக விலாசத்துக்காக ஸேவைகொடுத்துக் கொள்ளாதேகொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்க வேண்டுமே)

    அதாவது
    ஸேவியேன் உன்னை அல்லால் என்றும்
    உன்னைச் சேவித்தேன் என்றும்
    சீதனையே தொழுவார் -(திருவிருத்தம் -79)என்றும்
    விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் -(பெரியாழ்வார்-5-1-2)என்றும் இருக்கை

    ஸ்வரூப அநு கூலமான ஸஹ வாஸம் ஆவது
    விஷயாந்தரத்துக்காகச் சேருதல்
    த்ரவ்யாந்தரத்தக்காகச் சேருதல்
    கால ஷேபத்துக்காகச் சேருதல் தவிர்ந்து
    ஸம்ஸாரத்தில் அருசி பிறக்கைக்கும்
    பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கும்
    ஸ்வரூபத்தில் தெளிவு பிறக்கைக்கும்
    ஆசார ப்ரவர்த்தகரோடு சேருகை

    அதாவது
    பேராளன் பேரோதும் பெரியாரை ஒருகாலும் பிரிகிலேன்- என்றும்
    உயர்வேன் உயர்ந்தவரோடு அல்லால் -(முதல் திருவந்தாதி-64)என்றும் இருக்கை –

    ஸ்வரூப அநு கூலமான கால க்ஷேபம் ஆவது
    சூது சதுரங்கம் பொருதும் -பாட்டுக் கூத்துக் கேட்டு வாயிட ஆட் பார்த்துச் செல்லுகையும் -பகவத் குண அனுபவத்தை பிறரில் வ்யாவிருத்தமாக சொல்லுகிற போது போக்கைத் தவிர்ந்து
    தெறிந்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் -நான்முகன்-63-என்கிறபடியே போது போக்குகை அதாவது
    ஸ்வரூபம் என்றும்
    தாரகம் என்றும்
    போஷகம் என்றும்
    போக்யம் என்றும்
    மறக்க மாட்டாமையாலும் சொல்லுகை

    அதாவது
    தாள்கள் தலையிலே வணங்கி –நாட் கடலைக் கழிமின் -1-6-7–என்றும்
    கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -8-3-என்றும்
    கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன் நெஞ்சே ஓவாத ஊணாக உண் -(பெரிய திருவந்தாதி-78)-என்றும்
    ஏது செய்தால் மறக்கேன் மனமே -(9-3-திருப்புல்லாணி)என்றும்
    பொழுது போக்குகை –

    ஸ்வரூப அநு கூலமான இருப்பு ஆவது
    த்ரவ்யார்ஜனத்துக்கு ஏகாந்தம் என்றும்
    இவ் வருகு யுண்டான பய நிவ்ருத்திக்கு உறுப்பு என்றும்
    ஸஜாதீய விஸ்லேஷம் பொறாமைக்கு என்றும்
    க்ஷேத்ர வாஸம் யோக்யதைக்கு உறுப்பு (மோக்ஷம் பெற என்ற எண்ணம் இல்லாமல்)என்றும்
    இருக்கிற விருப்பைத் தவிர்ந்து
    தேசத்திலே ப்ரேமம் விளைவிக்கைக்கு உறுப்பு என்றும்
    தேசிகரை நித்ய ஸேவை பண்ணலாம் என்றும்
    தேச வர்த்திகளான ஸாத்விகர்களைக் கலந்து பரிமாறுகைக்கு என்றும்
    விபரீதங்கள் புகுராத இடம் என்றும் இருக்கை

    அதாவது
    தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி 1-1-6-என்றும்
    அதனுட் கண்ணா -(9-6-திருக் காட்க்கரை)என்றும்
    கற்றார் சேர் கண்ணபுரம்( 8-10-5)-என்றும்
    விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே (பெரியாழ்வார் திருக்கோட்டியூர்)-என்றும்
    இருக்கை

    ஸ்வரூப அநு கூலமான பரிக்ரஹம் ஆவது
    அநுகூலரை நெருக்கியும்
    பிரதிகூலர் பக்கல் ஸா பேஷனாய் ஸ்வீ கரிக்கையும்
    ஸ்வரூப ப்ரயுக்தமானவற்றை பதார்த்தங்ளுக்கு உறுப்பாக்கி ஸ்வீ கரிக்கையும்
    அமுதுபடி சாத்துப்படிக்கு ஆகாரமானவற்றை பரிக்ரஹிக்கையும் தவிர்ந்து
    கிருஷி பண்ணுதல்
    முஷ்டி புகுதல்
    சிஷ்யன் பிரியத்தால் தருமதாதல்-ஸாத்விகர் திரு உள்ளப் ப்ரஸாதத்தாலே தருமதாதல்
    பரிக்ரஹிக்கை

    அதாவது
    மெய் வருத்திக் கை செய்தும்மினே -(3-9-6)-என்றும்
    பிச்சை புக்காகிலும் -(பெரியாழ்வார் -4-6-3)என்றும்
    ஸரீரம் அர்த்தம் பிராணன் ச ஸத் குருப்யோ நிவேதிய-என்றும்
    வருவிருந்தை அளித்து இருப்பார் -(பெரியாழ்வார் -4-8-2-)என்றும்
    சொல்லுகிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீ கரிக்கை-

    ஸ்வரூப அநு கூலமான போஜநம் ஆவது
    க்யாதியைப் பற்றாதல்
    லாபத்தைப் பற்றாதல்
    பூஜையைப் பற்றாதல் என்னது நான் இடுகிறேன் என்கிற போஜநத்தைத் தவிர்ந்து
    நெய்யமர் இன்னடிசில்-(6-8-) என்றும்
    நல்லதோர் சோறு என்றும்
    உண்ணும் சோறு (6-7-1)என்றும் சொல்லுகிறவற்றைப் புஜிக்கை-

    ஸ்வரூப அநு கூலமான அத்யவஸாயம் ஆவது
    தனக்கு உண்டான ரஷ்யத்வ ஸ்வீ காரங்கள் இன்றியிலே ஒழிந்தாலும் ஸ்வரூப விரோத்யாதி நிவ்ருத்தி பூர்வகமாக பரம புருஷார்த்தத்தைத் தரும் என்கிற மஹா அத்யவசாயம்

    அதாவது
    யானே நீ என்னுடைமையும் நீயே -2-9-9
    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -5-8-8-என்றும்
    உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் –5-8-3-என்றும்
    நின்னருளே புரிந்திருந்தேன் -(5-4-1)என்றும்
    இறைவா நீ தாராய் பறை என்றும்
    மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை –

    ஸ்வரூப அநு கூலமான அபேக்ஷை யாவது
    புத்ர பசு அன்னாதி புருஷார்த்தங்களையும்
    ஸ்வர்க்காத் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களையும்
    பகவத் அனுபவ கைங்கர்யங்கள் என்னது என்கிற புருஷார்த்தம் தவிர்ந்து
    மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் –இராப்பகல் இன்றியே (9-3-7)என்றும்
    அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவது என்று கொலோ (8-3-10)-என்றும்
    மலர்த் தாமாரை பாதங்களைக் காண்பது எஞ்ஞான்று கொலோ (5-9)-என்றும்
    வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் (3-3-1)-என்றும் அபேக்ஷித்து

    இந்த அனுஷ்டானம் நிலை நின்றதாவது
    ஷாம ஷோப வியாதி மிடிகளில் தொலையாத அத்யவசாயம் உண்டானால் யாயிற்று –

    இந்த அத்யவசாயம் தான்
    தத்வ த்ரய ஞான அத்யவசாயம் என்றும்
    தத்வ த்வய விஷய ஞான அத்யவசாயம் என்றும்
    தத்வ ஏக விஷய ஞான அத்யவசாயம் என்றும்
    த்ரிவிதமாய் இருக்கும்

    தத்வ த்ரய ஞான அத்யவசாய விஷயம் யாவது
    அசித்துக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாட்டையும்
    ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் வேறுபாட்டையும் ஸம்பந்தத்தையும் அறிகை

    அசித்துக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாட்டை அறிகை யாவது
    அசித்து ஜடமாகையாலும் -ஆத்மா அஜடமாகையாலும்
    அசித்து துக்க ரூபமாகையாலும் -ஆத்மா ஸூக ரூபமாகையாலும்
    அசித்து அசுத்த மாகையாலும் -ஆத்மா சுத்தனாகையாலும்
    அசித்து பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமாகையாலும் -ஆத்மா பகவத் ப்ராப்திக்கு பிரதி சம்பந்தி யாகையாலும்
    வேறுபாடு யுண்டு என்று அறிகை –

    ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள ஸம்பந்தம் அறிகை யாவது
    ஆத்மா ரஷ்யனாகையாலும் -ஈஸ்வரன் ரக்ஷகனாகையாலும்
    ஆத்மா சேஷனாகையாலும்- ஈஸ்வரன் சேஷியாகையாலும்
    ஆத்மா ஸ்வம் மாகையாலும் -ஈஸ்வரன் ஸ்வாமி யாகையாலும்
    ஆத்மா கார்யமாகையாலும் -ஈஸ்வரன் காரணமாகையாலும்
    ஆத்மா வ்யாப்யமாகையாலும் –ஈஸ்வரன் வ்யாபகமாகையாலும்
    ஆத்மா விசேஷண மாகையாலும் ஈஸ்வரன் விசேஷ்யமாகையாலும்
    ஆத்மா சரீரமாகையாலும் -ஈஸ்வரன் சரீரீ யாகையாலும்
    ஆத்மா சரணாகதனாகையாலும் -ஈஸ்வரன் சரண்யனாகையாலும்
    ஆத்மா ஸேவகனாகையாலும் –ஈஸ்வரன் சேவ்யனாகையாலும்
    ஆத்மா கைங்கர்ய நிஷ்டனாகையாலும் ஈஸ்வரன் கைங்கர்ய பிரதிசம்பந்தியாகையாலும்
    இப்படி இவனுடைய ஸம்பந்தமே ஸம்பந்தம் என்று அறிகை-

    இந்தத் த்ரய ஞான அத்யவசாயம் அறிந்தானாவது எப்போது என்றால்
    உடம்புடன் பொருந்தாமை பிறந்த வன்று -அசித்தை அறிந்தானாம்
    தான் பரதந்த்ரனான வன்று -சித்தை அறிந்தானாம்
    ஈஸ்வரனை ஒழியச் செல்லாமை பிறந்த வன்று -ஈஸ்வரனை அறிந்தானாம்

    இத்தை ஆழ்வார்களும்
    மேம்பொருள் போக விட்டு என்று –யுடம்புடன் பொருந்தாமையையும்
    எம் தம்மை விற்கவும் பெறு வார்கள் என்று -ததீய பாரதந்த்யத்தையும்
    உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -(7-2-1)என்று -எம்பெருமானை விட்டுச் செல்லாமை பிறந்த படியையும்
    அருளிச் செய்தார்கள் –

    இனி தத்வ த்வய ஞான அத்யவசாயமாவது
    தனக்கு தானும் பிறரும் தஞ்சம் அன்று என்று இருக்கை

    அதாவது
    தானாகிறான்
    ரஷ்யனாகையாலும்
    சேஷனாகையாலும்
    அநந்ய பரதந்த்ரனாகையாலும்
    அஞ்ஞனாகையாலும்
    அசக்தனாகையாலும்
    அபூர்ணன் ஆகையாலும்
    அப்ராப்தன் ஆகையாலும்
    அயோக்கியன் ஆகையாலும்
    தஞ்சம் அன்று

    பிறராகிறார்
    சேதனாந்தர தேவதாந்த்ரங்கள்
    இவர்கள் தானும்
    தேஹாத்ம அபிமானிகளுமாய்
    துர்மான வர்த்தகருமாய்
    துர் விருத்தருமாய்
    தோஷ துஷ்டருமாய்
    எம்பெருமானுக்கு பரதந்த்ரருமாய்
    அஞ்ஞருமாய்
    அசக்தருமாய்
    அபூர்ணருமாய்
    அப்ராப்தருமாய்
    அயோக்யருமாய்
    தம் தாமுக்கு ஒரு ஆபத்து வந்தால் ஈஸ்வரனை சரண் புக்கு போக்கிக் கொள்ள வேண்டுகையாலும்
    தஞ்சம் அன்று

    ஆகையாலே
    அவ் வருள் அல்லன அருளுமல்ல -(9-9-6)நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது -(முதல் திருவந்தாதி)என்றும்
    நின்னருளே புரிந்திருந்தேன் -என்றும் இருக்கை

    தத்வ ஏக சக்த அத்யவசாய ஞானாகையாவது
    தேஹ போகமும்
    ஸ்த்ரீ புத்ராதி போகமும்
    இந்த்ரியாதி போகமும்
    கைவல்ய போகமும் தனக்கு என்னப் பண்ணும் பகவத் அனுபவமும் கட்டடங்க விட்டு
    உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-(10-10-6)
    முற்றக் கரந்து ஒளித்தாய்(10-10-8)
    பத்திமைக்கு அன்புடை யேன் ஆவதே பணியாய் (திருக்குறும் தாண்டகம்-10)என்று இருக்கை

    இப்படி அத்யவசாயம் வுடைய அதிகாரிக்கு
    க்ருதஜ்ஜையும்
    செய்ய வேண்டுவதுக்கு அபேக்ஷையும்
    ஸதா அனுசந்தேயம்

    நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதுவே
    யஸ்ய வாக் அம்ருத சார பூரிதம் புவன த்ரயம்

    ———————–

    வார்த்தா மாலை வார்த்தை -421-
    1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் –
    2-ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் –
    3-ஸ்வரூப அனுகூலமான சேவை –
    4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
    5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
    6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு –
    7-ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் –
    8-ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
    9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் –
    10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

    1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது –
    தேச ரஷகன் என்றும்-
    தேக ரஷகன் என்றும் –
    பதார்த்த ரஷகன் என்றும் –
    பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற ரஷகத்வங்களைத் தவிர்ந்து –

    தேச நிவர்தகன் என்றும் –
    தேக நிவர்தகன் என்றும் –
    விஷய நிவர்தகன் என்றும் –
    பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –

    அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே –
    கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு அருள் செய்யும்

    பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே –
    செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்

    ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே
    அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2-

    நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே –
    நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும்
    அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இறே

    2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது –
    இதர சேஷம் என்றும் –
    க்ருஹ சேஷம் என்றும் –
    பித்ரு சேஷம் என்றும் –
    தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து

    சர்வேஸ்வரனே தாரகன் என்றும் –
    வியாபகன் என்றும் –
    சரீரி என்றும் –
    சேஷி என்றும் பற்றுகை -அதாவது –

    ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-
    உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —
    என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —
    அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

    3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது –
    சேதனாந்தர சேவையையும் –
    தேவதாந்தர சேவையையும் –
    பகவத் சேவையையும் –
    த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் –
    அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து –
    ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை -அதாவது

    4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
    சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -என்றும் –
    உன்னை சேவித்து -புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து

    5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
    தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் –
    தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் –
    தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை –

    6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு -அதாவது –
    தஞ்சை மா மணிக்-திருவாய்மொழி -9-6-7-என்றும் –
    கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் –
    விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-என்றும் இருக்கை

    7-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
    அனுகூலரை நெருக்கி ஸ்வீகரிக்கையும்
    பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஸ்வீகரிக்கையும்-
    ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ஸ்வீகரிக்கையும் –
    அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து –

    க்ருஷி பண்ணுதல் -அதாவது
    மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6-
    முஷ்டி புகுதல் -அதாவது -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3-
    சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் -அதாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
    சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது –
    வரு விருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2 பரிகிரஹிக்கை -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீகரிக்கை

    8-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது –
    க்யாதியைப் பற்றவாதல் –
    பூஜையைப் பற்றவாதல் –
    என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து –

    நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும்
    நல்லதோர் சோறு -திருவாய்மொழி -6-7-1-என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

    0-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது –
    இவ்வருகு உண்டான ரசாக ஸ்வீகாரங்கள் அன்றியே ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான
    புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
    நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் –
    உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் –
    நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

    10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது –
    புத்ர பச்வன்னாதி பதார்த்தத்தையும்
    ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் –
    கைவல்ய புருஷார்த்தத்தையும் –
    பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
    மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-
    அடியார்கள் குழாம் -களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
    காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும்
    வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

    ———————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீவாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ தத்வ நிரூபணம்”

    April 7, 2024

    ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம்புஜம்|
    ஸம்ஸாரார்ணவ ஸம் மக்ந ஜந்து சந்தார போதகம்||-
    தனியன்

    ஸம்ஸாரக் கடலில் அமிழ்ந்த ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான (வாதிகேஸரி) அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரையை ஸரணடைகிறேன்.

    உவமானம் சொல்லி உபமேயம் பின்-அல்லது மாற்றியும் சொல்லுவது உண்டே
    சரணாம்புஜம் -புருஷ வ்யாக்ர -திருவடித்தாமரை
    பவ அடவி -ஸம்ஸாரம்
    ஐந்து -ஜெனியையுடைய-திருநாவாய் -முகுந்தன் -நாவாய் முகுந்தன்

    ———–

    1242-திருவவதரித்து 1350 வரை 108 ஸம்வத்ஸரம் –இருந்தவர்
    நாயனார் ஆச்சான் பிள்ளை ஸச் சிஷ்யர்-

    அன்போடு அழகிய மணவாளச் சீயர்
    பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
    போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
    ஏதமில் பன்னீராயிரம் —
    ———45-

    தம் பெரிய போதம் உடன் -தமது பெரிய ஞானத்தினால் -ஆசார்ய க்ருபாதீனமான போதம் அன்றிக்கே -ஸ்வ தந்த்ரமான போதம் -என்றபடி
    ஏதமில் -குற்றமற்றதான –
    பிரதி பதார்த்த ரூபமான வியாக்யானம் -எளிய உரை -என்பதால் பின்போரும் அன்போடு கற்று அறிந்து பேசுகைக்காக-என்கிறார்

    நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
    எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
    வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
    செய்யுமவை தாமும் சில
    ———-47-

    மன்னார் கோயில் -ஜென்ம ஸ்தானம்– குலசேகரப் பெருமாள் திருவரசு

    சிஷ்யர்கள் :  யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர்.

    பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

    அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச வ்யாக்யானம், த்ராவிடோபநிஷத்  சங்கதி – திருவாய்மொழி சங்கதி ச்லோகங்கள், அத்யாத்ம சிந்தை, ரஹஸ்ய த்ரய விவரணம், தீப ஸங்க்ரஹம், தத்வ தீபம், தீப ப்ரகாசிகை, தத்வ நிரூபணம், பகவத் கீதை வெண்பா – ஸ்ரீ பகவத் கீதையின் ஸ்லோகங்களுக்குத் தமிழ் பாசுரங்கள், பகவத் கீதையின் வ்யாக்யானம் மற்றும் பல.

    ————————–

    அஸ்மத் ஹித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
    வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம்
    -க்ரந்த கர்த்ரு தனியன்

    அஸ்மத் ஹித பரித்ராண-அன்பு பெருகி –
    வாதி கேஸரி-வாதிகளில் ஸிம்ஹம்

    இவர் அருளிய நூல்களில் ஒன்றான “தத்வ நிரூபணம்” என்னும் க்ரந்தத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அர்த்தம்:

    ஆஸீர் வாதம் -நமஸ்காரம் -வஸ்து நிர்தேசம் -மங்களா ஸாஸனம்

    அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
    யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||
    –ஆச்சார்ய வந்தனம்

    ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

    ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
    யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
    –பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

    யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

    மாந மேய மயம் ஸர்வம் மதம் யஸ்மிந் நவஸ்திதம்
    ஸமஸ்த ஜகதா தாரம் தந் நமாமி ஸ்ரீ யபதிம்

    பிரமாணம் ப்ரமேயம் இவற்றுக்குள் அனைத்தும் சேரும்
    ப்ரஹ்மத்திடமே நிலை நிற்கும்
    மதம் -ஞானம்
    அவரே ஜகத்துக்கு ஆதாரம்
    அந்த ஸ்ரீயப்பதியை வணங்குகிறேன்

    பகவந்தம் யதி வரம் ப்ரணிபத்ய குரூநபி
    தத் ப்ரஸாதாத் கரிஷ்யேஹம் ஸம்யக் தத்வ நிரூபணம்
    –மங்களா சரணம்

    பிரணிபத்ய குருக்களுக்கும் சேர்த்து
    கரிஷ்யே -செய்யப்போகிறேன்-தத்துவங்களை உண்மையாக நிரூபிக்கப் போகிறேன் என்றும் கிரந்த திருநாமம் என்றும் கொள்ளலாம்

    ஸ்ருதப்பிரகாசர் -13 மங்கள ஸ்லோகங்கள் பாடி விக்னங்களை போக்க வேண்டுகிறார்

    ————–

    அதிகாரம் 1 – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
    அதிகாரம் 2 – ஸ்ருஷ்டி – காரணத்வம்
    அதிகாரம் 3 – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
    அதிகாரம் 4- நரக நிரூபணம்
    அதிகாரம் 5 – ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
    அதிகாரம் 6 – கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
    அதிகாரம் 7 – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்

    —————

    விஷய ஸூசி கா
    பிரதம அதிகாரம்– – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
    1- மங்களா ஸாஸனம்
    2- பிராமண நிரூபணம்
    3-ப்ரத்யஷாதி நிருபணம்
    4-வேதஸ்ய பூர்வ உத்தர பாக த்வய ஆத்மதத்வ கதநம்
    5-தஸ்ய பரமாத்ம ப்ரதிபாதிகத்வ கதநம்
    6- உபமாநாதி பஞ்சகஸ்ய ப்ரத்யக்ஷ அநுமானாக மேஷு அந்தர்பூதகத்வ கதநம்

    7- வேத அங்காத்மக சிஷாதி ஸ்வரூப நிரூபணம்
    8-பூர்வ உத்தர மீமாம்ஸயோர் ஐக ஸாஸ்த்ர கதநம்
    9-ஸ்ம்ருதே இதிஹாஸ புராணயோஸ் ச பூர்வ உத்தர பாக உப ப்ருஹ்மணத்வ கதநம்
    10- புராண லக்ஷண நிரூபணம்
    11-இதிஹாஸ நிரூபணம்
    12-புராண அபேக்ஷய இதிஹாஸஸ்ய பிரா பல்ய கதநம்

    13- அஷ்டாதஸ வித்யா ஸ்வரூப நிரூபணம்
    14-புராணஸ்ய ஸாத்விகத்வாதி நிரூபணம்
    15- அஷ்டாதஸ புராணஸ்ய ருத்ர பரத்வ சங்கா பூர்வக நாராயண பரத்வ ஸமர்த்தநம்
    16-வேதஸ்ய நித்யத்வ ஸமர்த்தநம்
    17- ஸாங்க்யாதி தந்த்ரஸ் யாபி பரமாத்ம ப்ரதிபதிகத்வ கதநம்
    18-ஸாங்க்ய யோக பாஸூபத மத நிரூபணம்

    19- பாஞ்ச ராத்ரஸ்ய ப்ராமண தமத்வ ஸமர்தநம்
    20- ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபணம்
    21-தஸ்ய காரணத்வ நிரூபணம்

    லோகத்தில் பரீஷகரானார் ப்ரமாணத்தாலே ப்ரமேயத்தை நிஸ்ஸயிக்கக் கடவர் களாய் இருப்பார்கள்
    ப்ரமாணமாவது யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்
    ஆகையால் ஸம்யக் அநுபவ ஸாதனம் பிரமாணம் என்று சொல்லுகிற நையாயிகாதிகளைப் போலே கரண பிரமாணம் சொல்லுகை அன்றியே ஞானப் பிரமாணம் சொல்லுகை ஸித்தாந்திகளுக்கு அபிமதமாய் இருக்கும்

    பிரமாணம் கருவி ப்ரமேயம் -அறிவால் இது என்று காட்டும்-யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்-உண்மை நிலையைக் காட்டும்-

    பிரமாணம் தான்
    1-ப்ரத்யக்ஷம் என்றும்
    2- அநு மானம் என்றும்
    3- ஆகமம் என்றும்
    4-உபமானம் என்றும்
    5-அர்த்தா பத்தி என்றும்
    6-அபாவம் என்றும்
    7-ஸம்பவம் என்றும்
    8- ஐதிஹ்யம் என்றும் -எட்டு வகையாகச் சொல்லுவார்கள்

    ப்ரத்யக்ஷ மேகம் ஸார்வாகா —
    கணாத ஸூகதவ் புந அநுமாநாஞ்ச –தச்சாஹு

    சாங்க்யாஸ் சப்தஞ்ச தே அபி
    நியாய ஏக தேஸி நோப்யேவம் உபமா நஞ்ச கேசந
    அர்த்தா பத்த்யா ஸஹைதாநி ஸத்வார்யாஹ ப்ரபாகர
    அபாவ ஷஷ்டாந் யேதாநி பாட்டா வேதாந்திநஸ் ததா
    ஸம்பவ ஐதிஹ்ய யுக்தாநி தாநி பவ்ராணிகா ஜகு

    இதில் ஸார்வாகர் -(லோகாயகர்-)ப்ரத்யக்ஷம் ஒன்றுமே பிரமாணம் என்பர்
    வைசேஷிகரும் புத்தர்களும் அத்தோடே அனுமானத்தையும் கூட்டிக் கொண்டு இரண்டு பிரமாணங்கள் என்பர்கள்
    நையாயிகரில் பூஷண மதத்தில் உள்ளோர் அவற்றோடு ஆகமத்தையும் கூட்டிக் கொண்டு மூன்று பிரமாணங்கள் என்பர்
    உதயந மதித்தில் உள்ளோர் (
    புது நியாய சாஸ்த்ரா ப்ரவர்த்தகர்)அதோடு உபமானத்தையும் கூட்டிக் கொண்டு நான்கு பிராமணர்கள் என்பர்
    பிரபாகரர் அவற்றோடு அர்த்தா புத்தியையும் கூட்டி ஐந்து பிரமாணங்கள் என்பர்
    பாட்டர் அவற்றோடு அபாவத்தையம் கூட்டி ஆறு பிரமாணங்கள் என்பர்
    ஐதி ஹாசிகர் அவற்றோடு சம்பவத்தையும் ஐதிஹ்யத்தையும் கூட்டிக் கொண்டு எட்டு பிரமாணங்கள் என்பர்

    நிச்சயிக்கப்பட்ட ஹேது அனுமானம்
    தேவதத்தன் பருத்து இருக்கிறான் -பகலில் உண்ணவில்லை -இரவில் உண்ணுகிறான் -ஹேது மாறலாம் -இதுவே அர்த்தா பத்தி-

    இன்மை காணாமை -அபாவம் -தனி பிரமாணமாக கொள்ளுவார் சிலர்-அனுப லப்தி -இல்லை நான் காணாமையாலே-

    ஐதிஹ்ய -வாழ்வும் வாக்கும் -தனி பிரமாணம் -முன்னோர் மொழிந்த முறை செவி வழி

    1-இவற்றில் ப்ரத்யக்ஷமாவது –இந்திரியங்களுக்கு அர்த்தங்களோடு உண்டான சன்னிகர் க்ஷத்தாலே அபரோஷமாகப் பிறக்கும் ஞானம்(அக்ஷம் கண்ணைச் சொன்னது அனைத்து புலன்களுக்கும் உப லக்ஷணம்)
    2- அநுமானமாவது -வியாப்தமான லிங்க பார்மர்சத்தாலே வியாபகமான ஸாத்ய விஷயக ஞானம்
    அதாவது தூம அக்னிகாதிகளுடைய நித்ய ஸஹ சார்யத்தை மஹாந ஸாதிகளிலே கண்டவன் பர்வத கதமான தூம தர்சனத்தாலே அக்னி உண்டு என்று அறுதியிடுகை

    லிங்கம் அடையாளம்
    பெரியது வியாபகம்
    நெருப்பு இருக்கும் இடத்தில் புகை இருக்கும் தேவை இல்லையே -மின்சாரம் -புகை இல்லையே
    புகை குறைவு -நெருப்பு அதிகம்

    3-ஆகமமாவது -ஆப்த உபதேஸம் -அதாவது வேத வைதிக வசனங்கள்)வேத நூல் ஓதுவது உண்மை-ஆப்த -நம்பத்தக்க -அபவ்ருஷேயம்)
    4- உபமானமாவது –ஸத்ருஸ வஸ்து தர்சனத்தில் பூர்வ த்ருஷ்ட்ய ஸாத்ருஸ்ய ஞானம் -அதாவது
    முன்பு கோவைக் கண்டவன் பின்பு கவயத்தைக் கண்டால் கோ ஸத்ருசம் கவயம் என்று பிறக்கிற ஸாத்ருஸ்ய புத்தி
    5-அர்த்தா பத்தியாவது -அநுப பத்யமான அர்த்தத்தைக் கண்டால் அதுக்கு உப பாதகமான அர்த்தாந்தரத்தைக் கல்பிக்கை -அதாவது
    ஜீவிக்கிற புருஷனை க்ருஹத்தில் காணாது ஒழிந்தால் புறம்பே போனானாகக் கல்பிக்கிற ஞானம்
    6- அபாவமாவது -ஒன்றினுடைய இல்லாமையை ஸாதித்துக் கொடுக்கிற ஞானம் -அதாவது
    இந்த பூ தலத்தில் கடம் முதலானவை இல்லை என்று பிறக்கிற ஞானம் முதலானவை
    7- ஸம்பவமாவது -ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் கூடும் என்று பிறக்கும் அறிவு
    8-ஐதிஹ்யமாவது -லோக ப்ரஸித்தமான வார்த்தையைக் கொண்டு அர்த்த நிஸ்ஸயம் பண்ணுகை

    இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும் அனுமானத்தையும் ஆகமத்தையும் -இம்மூன்றை வைதிகர் பிரமாணமாக பரிக்ரஹிக்கிற அளவில்
    ஆப்த உபதேஸ ரூபமான ஆகமத்தை அபவ்ருஷேய மாகையாலே பிரம விப்ர லம்பாதி (
    ஐயம் திரிபு)தோஷ ரஹித நித்ய பிரமாமாகையாலே
    ஆப்த உபதேஸம் என்று வேதத்தையும்
    தந் மூலமான முநி வசநாதிகளையும் சொன்னார்கள்
    (ஆர்ஷம் தர்ம உபதேசம் -வேதத்தை மூலமாகக் கொண்ட முனி வசனங்கள்)

    இவை ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாம் இடத்தில்
    பவ்த்தாதிகளைப் போலே ப்ரமாண்யம்–
    (அ
    பிராமண்யம் இதி -ஸ்வா பாவிகமாய் )அப்ராமாண்யம் -(ப்ராமாண்யம்) -குண க்ருதமாயும் –
    நையாயிதிகளுக்குப் போலே அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் – ப்ராமாண்யம் குண க்ருதமாயும் இருக்கை

    யன்றியே ஸர்வ ப்ரகாரத்திலும் ப்ராமாண்யம் ஸ்வதஸ் ஸித்தமாய் அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் இருக்கும்-

    இயற்கையில் பொய் அறிவு -புத்தர்
    வேதாந்திகள் இயற்க்கையில் நல் அறிவு-தோஷங்களால் பொய்யாகிறது

    இப்படி ஸ்வ ஸித்த ப்ரமாணங்களான இம் மூன்றிலும்
    ப்ரத்யக்ஷ அனுமானங்கள் இந்த்ரிய க்ரஹண யோக்யங்களில் பிரமாணங்களாய் இருக்கும்
    அதீந்த்ரிய அர்த்தத்தில் பிரமாணம் அறிவது -வேதம் ஒன்றுமே
    இது தான் தனக்கு ப்ரகாரங்களான -உபகரணங்களான -ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ந்யாய மீமாம்ஸைகளோடே கூடி ஸ விபூதிகனான ஸர்வேஸ்வரனுடைய வைபவத்தைப் ப்ரதிபாதிக்கையிலே தத் பரமாய் இருக்கும்

    அதில் கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாகம்
    பகவத் ஆராதன விதியிலே தத் பரமாய் இருக்கும்
    ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாகம்
    பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அறிவித்து அவனை பிராபிக்கையில் தத் பரமாய் இருக்கும்
    ஆகையால் -வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய 15-15–என்று பகவா
    ன் தானே அருளிச் செய்த படியே க்ருத்ஸ்ன வேதமும் ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும்

    இந்த ப்ரத்யக்ஷ அநுமான ஆகமங்கள் மூன்றிலும் –
    அல்லாத ஐந்து பிரமாணங்களை அந்தர் பவிக்கும்
    அதில் உபமானமும் அர்த்தா பத்தியும் ஸம்பவமும் வ்யாப்தி ஸஹ க்ருதமாகையாலே அனுமானத்திலே ஸம்பவிக்கும்
    ஐதிஹ்யம் ஸப்த ஜன்யமாகையாலே ஆகமத்த்திலே அந்தர் பவிக்கும்
    அபாவம் -பாவாந்தர பர்யவசாயி யாகையாலே யதா யோகம் ப்ரத்யாஷிகள் மூன்றிலும் அந்தர் பவிக்கும்-

    இப்படி ஸ்வத ஸித்த பிரமாண பாவத்தை யுடையவையாய் -ருக் யஜுஸ் ஸாம அதர்வண ரூப சாதுர் வித்யத்தை யுடைய வேதங்களுக்கு
    1-சிஷா
    2-வியாகரணம்
    3-நிருக்தம்
    4-ஸந்தோ விஸிதி
    5-கல்ப ஸூத்ரம்
    6-ஜ்யோதிஸ் ஸாஸ்த்ரம் -(ஆபஸ் தம்ப தர்மே -2)- அங்கங்கள் ஆறாய் இருக்கும்

    1- அதில் சிஷையாவது -வர்ண ஸ்வர மாத்ராதி நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
    2- வியாகரணமாவது -ப்ரக்ருதி ப்ரத்யயாதி முகத்தாலே அர்த்தாபி தாயகமான பதங்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
    3- நிருக்தமாவது -அக்ஷர ஸாம்ய மாத்ரத்தாலே பதங்களில் அர்த்தத்தை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
    4-சந்தோ விசிதியாவது –காயத்ரீ உஷ்ணிக் அநுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹநீ பங்க்தி ஜகததீ -சர்வரீ இதி ஸர்வத்ர பா என்கிற ஸப்தஸ் சந்தஸ்ஸூக்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
    (பாதத்தில் 6 எழுத்துக்கள் தொடங்கி)
    5-கல்ப ஸூத்ரமாவது -வேதார்த்த அனுஷ்டான பிரகார நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
    6-ஜ்யோதிஷமாவது -அத்யயன அனுஷ்டானங்களுடைய கால நியமம் பண்ணும் ஸாஸ்த்ரம்

    (சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
    சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
    கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
    அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா
    –உத்தர சதகம்-18-

    ஹே ரங்க நாத

    சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்

    வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –

    பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
    ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –

    சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
    முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்

    கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –

    கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

    ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட

    நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்

    அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்

    புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்

    தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
    இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே

    தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –விசாரிக்கின்றன -என்றவாறு-பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே

    நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

    நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
    தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
    சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
    பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே)

    ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
    வ்யாக்ரணம் -இலக்கணம்
    ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
    சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
    ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
    கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
    நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
    உன்னையே தேடியபடி இருக்கும்
    வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
    தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது

    —————-

    சந்த பாதவ் ஸப்த ஸாஸ்த்ரம் ச வக்த்ரம் கல்ப பாணிர் ஜ்யோதிஷம் சஷுஷீ ச -சிஷா கிராணம் ஸ்ரோத்ரமேதத் நிருக்தம் வேதஸ் யாங்காந் யாஹுரேதாநி ஷட் ச -என்று
    அவயவ ரூபங்களாகவும் நிரூபிப்பர்கள்

    இப்படி ஸ அங்கமான வேதங்களினுடைய அர்த்த தவ்சித்யத்தை பிரமாணாதி நிரூபணங்களாலும் தர்க்க மர்யாதையாலும் ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் நியாய ஸாஸ்த்ரம்(ஆர்ஷம் தர்ம உபதேசம் -கண்டு -எழுதி -நியாய வேத சாஸ்திரம் அவிரோதமாக இருப்பதே தர்மம்)

    மீமாம்ஸை யாவது -வேத வேதாந்த அர்த்தங்களுடைய அர்த்த கமஹத்வத்துக்கு உபயுக்தமாக பூர்வ பக்ஷ ஸித்தாந்த ரூபேண உண்டான விசாரம்
    இது தான் பூர்வ மீமாம்ஸை -உத்தர மீமாம்ஸை என்கிற பேதேந ப்ரஸித்தமாகையாலும்
    கர்ம ப்ரஹ்ம ரூபேண ப்ரதிபாத் யர்த்த பேதத்தாலும் ஜைமிநீயம் பாதாராயணீயம் என்கிற கர்த்ரு பேதத்தாலும்
    ஸாஸ்த்ர பேதம் உண்டு என்கிற சங்கைக்கு விஷயமாய் இருந்ததே யாகிலும் நிரூபணீயமான வேதம் உபநிஷத் விசிஷ்டமாகையாலே ஏகமாகையாலும்
    ரத கோபுராதி நிர்மாணத்தில் போலே கர்த்ரு பேதம் அப்ரயோஜனகமாகையாலும்
    ஸூ மந்தம் ஜைமிநீம் பவ்வம் (பைலர்
    )ஸூகஞ்சைவ ஸ்வ மாத்மஜம் -வேதாநத்யாபயாமாஸ –மோக்ஷ -341-19-என்கிற இத்யாதி வசனத்தாலே ஜைமினி ஸ்ரீ வேத வ்யாஸ பகவானுக்கு நேரே சிஷ்யனாகையாலும்
    த்வீபே பதரி காமத்யே பாதராயணம் அச்யுதம் -பராசராத் சத்யவதீ

    (ஸர்வ கர்ம ஆராதனாய்
    சர்வ தேவ அந்தர்யாமியாய்
    ஸர்வ பல பிரதானனாய் ப்ரஹ்மம் இருக்கும்
    20 அத்தியாயங்கள்
    ரஹஸ்ய த்ரய அக்ஷரங்களும் 20
    யதிராஜ விம்சதி -20 ஸ்லோகங்கள் இதனாலே)

    புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
    யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
    கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
    கார்ய ரூபம் வேதார்த்தமானாலும்

    புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
    யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
    கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
    கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்நதே ஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும் உபாஸன ரூபமான கார்யத்திலே அதி

    புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
    யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
    கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
    கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்ந தேஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும்

    (கார்ய அர்த்தம் -விதி வாக்கியமும் பல வாக்கியமும்
    ஜ்யோதிஷட ஹோமம் செய்து சுவர்க்கம்-இரண்டையும்
    ராத்ரீ சத்ர விதி வாக்கியம் உண்டு பலம் இல்லையே
    வேறே இடத்தில் பிரதிஷ்டா பலம் கொண்டு கூட்டிக்கொள்ளுவது போல்)

    உபாஸன ரூபமான கார்யத்திலே அதிக்ருத்தனான புருஷனுக்கு பலமான ப்ரஹ்ம ஸ்வரூப ரூப குண விபவாதிகள் ஸ்வ அர்த்தங்களில் வேதாந்த வாக்கியங்கள் ப்ரமாணமாகையாலும்

    ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைமிநீ யேந ஷோடஸ லக்ஷணேந இது ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி -போதாயன வ்ருத்திகார வசனம் உண்டாகையாலும்(ஸூத்ர -விருத்தி -பாஷ்யம் -மூன்றும் வ்யாஸர் போதாயனர் பாஷ்யகாரர்)
    மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-இத்யாரப்ய -அநா வ்ருத்தி ஸப்தாத் அநா வ்ருத்தி ஸப்தாத் -இத்யேதத் அந்தம் சங்கதி விசேஷண விஸிஷ்ட க்ரமம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் வசனம் உண்டாகையாலும் ஏக ஸாஸ்த்ரமாய் இருக்கும்

    அதில் ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரதஸ் இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்த அர்த்த ப்ரகாஸ் யதே வாயு புராணம் பூர்வ -4-10–என்கிறபடியே ஆசார்ய வ்யவஹார பிராயச்சித்த ரூப ப்ரதிபாதகமான தர்ம ஸாஸ்த்ரம் -கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது-இதிஹாச புராணங்கள் -ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது
    தர்ம சாஸ்திரங்களும் இதிஹாச புராணங்களும் வேதத்தினுடைய அர்த்தத்துக்கு வைஸத்ய ஹேதுவாய்க் கொண்டு உப ப்ருஹ்மணங்களாய் இருக்கும்

    அதில் புராணமாவது
    சர்க்கஞ்ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச வம்ச அநு சரிதம் சேதி புராணம் பஞ்ச லக்ஷணம் -வாயு புராணம் -என்று
    ஸ்ருஷ்ட்டிகளும்
    ஸம்ஹாரங்களும்
    வம்ஸங்களும்
    மன்வந்தரங்களும்
    வம்ஸ அநு சரிதங்களும்
    ஆகிற பஞ்ச லக்ஷணத்தை யுடைத்தாய் இருக்கிற
    ப்ரஹ்ம பாத்ம வைஷ்ணவம் முதலான கிரந்த ராஸி

    பஞ்ச லக்ஷண லஷிதமான புராணங்கள் அல்ப புராணம் என்றும் தச லக்ஷண லக்ஷிதமானவைகள் மஹா புராணம் என்றும் சிலர் சொல்லுவார்கள்
    அப்படியே பாகவதத்தில் 12 வது சர்க்கத்தில் 7-8-9–ஸ்லோகங்களில்–சர்க்கோஸ்யாத வி சர்க்கஸ் ச வ்ருத்தி ரஷாந்தராணி -வம்சோ வம்ச அநு சரிதம் ஸம்ஸ்தா ஹேதுர் உபாஸ்ரய தசபிர் லக்ஷணைர் யுக்தம் புராணம் தத் விதோ விது-கேஸித் பஞ்ச விதம் ப்ரஹ்மன் மஹத் அல்ப வ்யவஸ்தயா -என்று சொல்லப்பட்டது

    இந்த வசனத்துக்கு விரோதம் வாராமல் கொள்ளவும்

    1-சர்க்கோஸ்யாத
    2-வி சர்க்கஸ் ச
    3-வ்ருத்தி -ஜீவ ஸாதனம்
    4-ரஷா
    5-அந்தராணி -மன்வந்தரம் -14 மன்வந்தரம் 1000 சதுர்யுகம் ஒரு கல்பம் -நாம் 7 வது மன்வந்தரத்தில் உள்ளோம் -மனு தேவர் மனு புத்திரர்கள் ஸப்த ரிஷிகள் மாறாமல் இருப்பார்கள்
    6-வம்சோ
    7-வம்ச அநு சரிதம்
    8-ஸம்ஸ்தா -பிரளயம்
    9-ஹேதுர் -கர்மகாரணம்
    10-அபாஸ்ரய -ஆதாரம்


    இதிஹாஸமாவது -இந்த லக்ஷண நியம அபேக்ஷை இன்றியே ஸ்ரீ ராமாயணம் மஹா பாரதம் ஸ்ரீ விஷ்ணு தர்மாதியான கிரந்த ராஸி

    இவற்றில் புராண நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ர அங்க மிஸ்ரதா -வேதா ஸ்தாநாநி வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்த்த ஸ -மனு என்று தர்ம வித்யா ஸ்தானங்கள் பதினாலாக மனுவும் சொன்னான் –

    (வேதங்கள் நாலு
    அங்கங்கள் 6
    உப அங்கங்கள் 4 என்றும் 8 என்றும் சொல்வர்
    அங்க உப அங்கங்கள் -14
    வேத சதுஷ்ட்யத்துக்கு-நம்மாழ்வாரது நான்கும் -பரகாலரது ஆறும் -மற்ற எட்டு ஆழ்வார்களது அருளிச் செயல்களும்

    நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.
    வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.
    இவையே நான்கு உபவேதங்கள்-
    ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்
    அர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்
    தனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்
    காந்தர்வ வேதம்– நுண்கலைகள்


    இவ்விடத்தில் வித்யா ஸ்தானமாக புராணம் ஒன்றுமே பரிகணிதமாயிருக்க இதிஹாஸத்தையும் கூட்டுவான் என் என்னில்
    இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ருஹ்மயேத் -பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மா மாயம் ப்ரதர்ஷ்யதி -ஆதி பர்வம் -1-2-3-
    வேதத்துக்கு ப்ரதாரணமாவது தத் அபி ப்ரேத விபரீத அர்த்த வர்ணநமே என்று வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பரிக்ருஹீத மாகையாலும்
    இதிஹாஸ புராணம் -ப்ருஹ உப -6-1-2-
    இதிஹாஸன் புராணாநி இதி -என்று
    ஸ்ருதியிலும் ஸஹ படிதமாகையாலும்
    இதிஹாஸ புராணம் பஞ்சமம் -சாந்தோக்யம் -7-1-1- என்று அல்ப அஸ்த்ரம் அன்றி இருக்க அப்யரஹிதமாகையாலே பூர்வ ப்ரயுக்தமான இதிஹாசத்துக்கு புராணாத் வை லக்ஷண்யம் உண்டாகையாலும்(
    அத்தாலே அது முற்பட்டது)
    இந்த புராண ஸப்தம் இதிஹாஸத்துக்கும் உப லக்ஷணமாகக் கடவது

    அங்காநி வேதாஸ் ஸத்வார மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யாஹ் யேதாஸ் சதுர்தச -விஷ்ணு புராணம் -3-6-27-என்று
    எண்ணப்பட்ட இந்த பதினாலு வித்யைகளோடே
    ஆயுர்வேதா தநுர் வேதோ வேதோ காந்தர்வ ஏவ ச அர்த்த ஸாஸ்த்ரம் இதி ஹ்யேதா வித்யாஹ் யஷ்டா தச ஸ்ம்ருதா -விஷ்ணு புராணம் -3-6-28- என்று
    சரீர ஸ்திதி ஹேதுவான ஆயுர் வேதமும்
    ஸத்ரு நிவாரண அர்த்தமான தனுர் வேதமும்
    போக உபயுக்தமான காந்தர்வ வேதமும்
    ஸம்பத் அர்த்தமான அர்த்த ஸாஸ்த்ரமுமான நாலு உப வேதமும்
    சத்வாரமாக உப யுக்தமாகையாலே பதினெட்டு வித்யை என்று சொல்லப்பட்டது இறே
    ஆயுர் வேதோ
    வைத்ய ஸாஸ்த்ரம் காந்தர்வோ கீதி சாஸநம் -அர்த்த ஸாஸ்த்ரம் தண்ட நீதி தநுர் வேதோ அஸ்த்ர சாஸநம் -ஸத்வார உப வேதாஸ்தே இதி வைஜயந்தீ

    இந்தப் புராணங்கள் தான் -யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா –தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே–மாத்ஸ்ய புராணம் -289–15-என்று
    ஸர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மாவாய் -அவனுக்கு யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தில் யாதொரு குணம் விஞ்சி இருக்கும் அந்தக் குண அனுபவ குண தேவதையினுடைய மஹாத்ம்யத்தை அந்த புராணங்களிலே சொல்லக் கடவனாகையாலே
    அக்நேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்தியதே ராஜஸேஷு ச மஹாத்ம்யம் அதிகம் ஹரே(
    ப்ரஹ்மணோ விது) -தேஷ்வேவ யோக ஸம் ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் -சங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே -மாத்ஸ்ய புராணம் -289-என்று தாமஸ கல்பங்களிலே புராணங்களாலே அக்னி சிவர்களுடைய மஹாதம் யத்தையும் ராஜஸ கல்பங்களில் புராணங்களாலே ப்ரஹ்மா தன்னுடைய மஹாத்ம்யத்தையும் -ஸாத்விக கல்பங்களிலே புராணங்களாலே ஸர்வேஸ்வரனான ஹரியினுடைய மஹாத்ம்யத்தையும் -ஸங்கீர்ண கல்பங்களிலே ஸரஸ்வதியினுடையவும் பித்ருக்களினுடைய மஹாத்ம்யத்தையும் சொல்லக் கடவனாய் இருக்கும்

    இதில் ஸாத்விக புராண ஏக நிஷ்டரானவர்கள் யோக முகத்தாலே ஞானத்தைப் பெற்று பர கதியைப் பெறுவார்கள் என்று சொல்லுகையாலே பகவத் பிரதி பாதகங்களான ஸாத்விக புராணங்களே ப்ராமாண்யத்தில் ப்ரக்ருஷ்டங்களாய் இருக்கும் -ஆனால் இதர தேவதா ப்ரதிபாதகங்களான ராஜஸ தாமஸ ஸங்கீர்ண புராணங்கள் அப்ரமாணம் இத்தனையோ என்னில் -அவற்றிலும் பகவத் உத்கர்ஷ ப்ரதிபாதகத்வம் விசிஷ்டமாகையாலே (பொதுவாகையாலே)தன் நிபந்தமான ஸாத்விக்யம் உண்டான அம்சத்தில் யதா ஞான சாதகத்வம் அடியான ப்ராமாண்யத்தில் குறை யில்லை-

    அஷ்டா தஸ புராணேஷு தசபிர் கத்யதே சிவ -என்று பதினெட்டு புராணத்திலும் பத்து புராணத்தாலே சிவன் சொல்லப்படுகிறான் என்று உண்டாய் இருக்க -ஸகல புராணங்களும் பகவத் ப்ரதி பாதகங்கள் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
    அஷ்டா தச புராணாநி புராணாஜ்ஞா ப்ரசக்ஷதே -1-ப்ராஹ்மம் 2-பாத்மம் 3-வைஷ்ணவஞ்ச 4-சைவம் 5-பாகவதம் ததா -ததாந்யம் 6-நாரதீயஞ்ச 7-மார்க்கண்டே யஞ்ச ஸப்த தமம்–ஆக்நேய மஷ்ட மஞ்சைவ பவிஷ்யந் நவமம் ஸ்ம்ருதம் -தசமாம் ப்ரஹ்ம கை -வை -வர்த்தம் 11-லைங்க மேகா தசம் ஸ்ம்ருதம் -12-வராஹம் த்வாதஸஞ்ச 13-சைவ ஸ்காந்தம் ஸாத்ர த்ரயோதஸம் -சதுர்த ஸம் வாமநஞ்ச கௌர்மம் பஞ்சத ஸம் ததா –மாத்ஸ்யஞ்ச காருடஞ்சைவ பிரஹ்மாண்டஞ்ச தத பரம் சர்க்கஸ் ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச -ஸர்வேஷ் வேதேஷு கத்யந்தே வம்ஸ அநு சரிதஞ்ச யத் யதேதத் தவ மைத்ரேய புராணம் கத்யதே மயா ஏதத் வைஷ்ணவ ஸம்ஜ்ஞம் வை பாத்மஸ்ய சமனந்தரம் சர்க்கே ச ப்ரதி சர்க்கே ச வம்ஸ மன்வந்த்ராதி ஷு கத்யதே பகவான் விஷ்ணு அஸேஷேஷ்வேவ சத்தம -என்று
    ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே புராணங்கள் பதினெட்டையும் அநுக்ரமித்து இப் புராணங்கள் எல்லாவற்றிலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப்படுகிறான் என்று சொல்லுகையாலும்

    ஏவமேவ புராணேஷு தச ஸ்வஷ்டஸூ நான்யதா -என்று பதினெட்டு புராணத்திலும் பகவானே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாத்யன் அல்லது தத்வாந்தரம் அன்று என்று புராணாந்தர வசனம் உண்டாய் இருக்கையாலும் இனி ஸர்வ புராணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாத்யன்
    தேவதாந்த்ர உத் கர்ஷம் சொல்லுகிற இடம் பகவான் நிஸ்ருஷ்ட காரண புருஷத்வாதி (
    ஆதி ஸம்ஹார புருஷன்)பத பிராப்தி உடையராகையாலே தத் விபூதி நிபந்தமான உத்கர்ஷ ப்ரதிபாதனத்திலே தாத்பர்யமாகக் கடவது

    1-புராணாதிகளிலே (ஆதி ஸ்ம்ருதி போல்வன)ஸர்வ ஜகத்தினுடைய யுகபத் (ஒரே சமயத்திலே)ஸம்ஹாரதிகளைச் சொல்லுகையாலும்–2- ஆகாச விசேஷ குணமான சப்தத்துக்கும் ஸ்வ ஆஸ்ரயமான ஆகாஸத்தோடே ஸம்ஹாரம் உண்டாகையாலும் (தன் மாத்திரை பூத ஸூஷ்மம் தத்வம் -சப்தாதி குணங்கள் வேறே -24 தத்துவங்களில் இவை இல்லையே)3-வர்ணாத்மகமான சப்தத்துக்கு புருஷனுடைய தால்வாதி (தாலு -தாடை)வ்யாபார ஜன்யத்வம் உண்டாகையாலே கர்த்ரபேஷை உண்டாகையால் புருஷ புத்த் யன்வய மூலத்வம் ஸம்பாவிதமாகையாலும் -4-இதா நீ மிவ ஸர்வத்ர த்ருஷ்டாந்தாதி கமிஷ்யதே -என்கிற மீமாம்ஸக மர்யாதையாலே வேதத்துக்கு அவிச்சின்ன பாட ஸம் ப்ரதாயம் அசம்பாவித மாகையாலே (குரு முக உச்சாரண அநு உச்சாரண அத்யயனம்
    (வேத அத்யயனம் குரு பூர்வகம் )அக்ஷர ராசி கிரஹணம்ஸம்பாவிதம் இல்லையே) வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்கள் கூடும்படி எங்கனே என்னில் -ஸப்த நித்யத்வம் கொள்ளுகிற பக்ஷத்திலும் அத்யேத்ரு புருஷா அவிச்சேத நிபந்தமான பாட ஸம்ப்ரதாய விச்சித்தி இறே நித்யத்வாதிகளுக்கு மூலமாயிற்று –

    அது ஸகல ஸம்ஹார அவஸ்தையிலும் குறையில்லை -அதாவது ஸூப்த ப்ரபுத்தரான உபாத்யாயாதிகள் பூர்வ உச்சாரண க்ரமத்தை ஸ்மரித்து சிஷ்யாதிகளை அத்யயனம் பண்ணுவிக்குமா போலே -ஸம்ஹ்ருதி சமயங்களிலே ஸர்வேஸ்வரன் இந்த வேத சந்தர்ப்பத்தைத் (ஆனு பூர்வியை வரிசைக் கிரமத்தை)தன் திரு உள்ளத்திலே ஸம்ஸ்கார விசேஷத்திலே இட்டு வைத்து ஸ்ருஷ்ட்டி காலத்திலே இந்த வேத ஸப்தங்களாலே ஸ்மரிக்கப்பட்ட நாம ரூபங்களை ஸ்ருஷ்ட மான அவ்வோ அர்த்தங்களிலே வ்யாகரித்து -வ்யாபரித்து -(பிரித்து வைத்து)உறங்கி உணர்ந்த பிரஜைகளை பிதா ஓதி வைக்குமா போலே ப்ரஹ்ம ப்ரமுகரான ஸர்வ ப்ராணிகளையும் யோக்யதா அநு கூலமாக அத்யயனம் பண்ணுவித்து அவ்வவருடைய ஹிதங்களையும் சாஸித்துக் கொண்டு போருகையாலே அஸ்மர்யமாண (நினைவிலே வராததான)கர்த்ருத்வாதி நிபந்தநமான வேத ப்ராமாண்யம் வ்யவஸ்திதம் என்றதாயிற்று(தேவதாதிகரணம் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தவை ஒற்றியே இங்கு)

    வாஸா விரூப நித்யயா -என்று ஸந்தர்ப்ப விசேஷண ரூபத்தாலே வாக்கு நித்யையாய் இருக்கும் என்று ஸ்ருதி தன்னிலும் சொல்லிற்று(சப்தம் நித்யம் அல்ல ஆனு பூர்வி நித்யம் என்றதாயிற்று)
    ஏததேவ ச வேதாநாம் அபவ்ருஷேயத்வம் நித்யத்வஞ்ச -யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார விஸேஷேண தமேவ க்ரம விஸேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யமாணத்வம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -என்று பாஷ்யகாரரும் வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்களை ஸம்ஸ்கார ரூபமான ஸந்தர்ப்ப நித்யதா நிபந்தனமாக அருளிச் செய்தார் இறே
    இப்படி புருஷ புத்தி மூலத்வாதி தோஷம் இல்லாமையாலே நித்தியமான வேத ராஸி ஸ்வத ஏவ ஸூத்ருட ப்ரமாணம் என்றதாயிற்று
    (சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்)

    இப்படி ஸ அங்க உப அங்கமான ஸகல வேதங்களும் ஸர்வேஸ்வரனையே ஏக கண்டமாக ப்ரதிபாதிக்கும் அளவில் சாங்க்ய யோக பாஸூபத -பாஞ்ச ராத்ர ரூப தந்த்ர விசேஷங்கள் ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாகிற படி என் என்னில்
    1-சாங்க்யம் 2-யோக 3-பஞ்ச ராத்ரம் 4-வேதா 5-பாஸூ பதம் ததா -கிமேதான் யேக நிஷ்டாநி ப்ருதங் நிஷ்டாநி வா முநே -மோஷ -350-1- என்று மஹா பாரதத்தில் நிஷ்டா நிர்ணயாத் யாயத்திலே பஞ்ச ஸித்தாந்த நிர்ணயத்திலே -ஸாங்க்யாதி பஞ்ச ஸித்தாந்தங்களும் ஏக தத்வ ப்ரதிபாதகங்களோ – ப்ருதக் தத்வ ப்ரதிபாதகங்களோ -என்று ப்ரஸ்னம் பண்ண
    பஹவோ ஹி யதா மார்க்கா வி சந்தி ஏகம் மஹா புரம் -தத் ஞாநாதி ஸர்வாணி பிரவிசந்தி தமீஸ்வரம் -பாரத வசனமாக -நாரஸிம்ஹ புராணம் -ச 64-68-என்று
    பல வழியும் ஒரு படை வீட்டிலே புகுருமாப் போலே ஸர்வ ஞானங்களும் ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும் என்று உத்தரம் சொல்லுகையாலே ஸர்வ ஸித்தாந்தங்களும் ஸர்வேஸ்வரனையே பிரதிபாதிக்கக் கடவது
    (ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு-வ்யாபனாத் தாரணாத் ஸ்வாமித்வாத் இத்யாதி புருஷோத்தமன் ஒருவனே)

    அதிலே வேதமானது கர்த்ராத்ய பாவத்தாலே நிர்த் தோஷமாய்க் கொண்டு பகவத் ப்ரதி பாதனத்திலே ப்ரபல பிரமாமாகையாலே அல்லாத நாலு ஸித்தாந்தங்களும் தன் மூலங்களாய்க் கொண்டு ப்ரமாணங்களாகக் கடவன-
    அதில் சாங்க்ய -யோக -பாஸூ பாதிகள் வேத விருத்த அம்சம் ஒழிய ப்ரமாணங்களாகக் கடவன-அதாவது
    1-சாங்க்யன் ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரனுடைய ஸகல இதர வ்யாவ்ருத்தமாய் வேதாந்த வேத்யமான ஸ்வரூபத்தை இசையாதே பஞ்ச விம்சதி தத்வ மாத்ரத்த்லேயே பர்யவசித்து அந்த பஞ்ச விம்சதி புருஷனை உதா ஸீனனாகவும் சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-1-

    பிரதானம் புருஷன் -இரண்டையும் -செம்பருத்திப்பூ ஸ்படிக்கல் இரண்டும் அருகில் -இருக்க அசித்தின் தன்மை ஏறிட்டு –
    குருடன் நொண்டி -சேர்ந்து -வழி சொல்ல நடக்க -கர்த்ருத்வம் ஒருவன் இடம் ஞாத்ருத்வம் ஒருவனிடம் -உலகம் நடக்கும் –
    விவேக ஞானத்தால் மோக்ஷம்
    நிரீஸ்வர சாங்க்யன் -ஸ்ரீ பாஷ்யத்தில்
    கபிலர் –
    தேவபூதி கடைசிப்பிள்ளை -தாயாருக்கு உபதேசம் -பக்தி ஈஸ்வரன் எல்லாம் சொல்லுவார்
    சேஸ்வர சாங்க்ய மதம்

    ஸூத்ரம் –171–ரசன அனு பபத்தேச் ச ந அனு மானம் ப்ரவ்ருத்தேச் ச –2-2-1-

    அனுமானம் -பிரதானமானது
    ந -ஜகத் காரணம் அல்ல
    ரசன அனு பபத்தேச் ச -ப்ராஞ்ஞனான பரம புருஷனாலே அதிஷ்டிதம் இல்லாத
    அசேதனமான பிரதானத்திற்கு விசித்ரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி கூடாததால்
    ப்ரவ்ருத்தேச் ச -ரதம் முதலியவற்றுக்குக் காரணமான த்ரவ்யங்கள் -அசேதனங்கள் –
    ரதத்தைப் படைக்கத் தெரிந்து கொண்ட சேதனனால் தலைமை தாங்கப்பட்டு -அதிஷ்டிதமாய் –
    தான் அதன் படைப்பு தொடங்கப்படுவதால் ஒரு பொருளின் குணங்களான
    வெண்மை முதலிய போலவே த்ரவ்யங்களான ஸத்வ ரஜஸ் தமஸ் என்பவற்றுக்கும்
    உபாதான காரணத்வம் கூடாது என்று
    ச என்ற சொல்லால் குறிக்கப் படுகிறது

    2-யோகி யானவன் யோக ஸாஸ்த்ரத்தில் ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்வம் யோக ஜன்யமாய்க் கொண்டு ப்ரதி பலநம் போலே ஓவ்பாதிகமாம் ஒழிய ஸ்வ பாவிகம் அல்ல என்று சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-3-

    இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –-ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-

    வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
    ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
    ப்ரமாணமே –
    ஏன் எனில்
    முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
    யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
    என்பது பூர்வ பக்ஷம் –

    ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
    என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
    அந்த ஸூத்ரத்தாலே

    ஏதேந யோக ப்ரத் யுக்த
    கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
    அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
    சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
    ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –

    3- பாஸூ பதன் பிச்சையுண்ணி எம்பெருமான் என்னுமாப் போலே சாப உப ஹதனான ருத்ரனை பரமேஸ்வரனாக ப்ரமித்தான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-

    இவர்கள் மூவருக்கும் இந்த வேத விருத்த அம்சங்கள் ஒழிய -1-தத்வ க்ரம உத்பத்தி கதநத்திலும் -2-யோக ஸ்வரூப ப்ரதிபாத நத்திலும் -3-யோக பிரகார உப பாத நத்திலும் -4-உபாஸ்ய உபாஸக பாவாதி ப்ரதிபாதனத்திலும் விரோதம் இல்லாமையாலே அந்த அந்த அம்சங்களில் இந்தத் தந்திரங்கள் ப்ரமாணங்களாகக் குறையில்லை

    ஆனால் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும்
    வாஸூ தேவாத் ஸங்கர்ஷணோ நாம ஜீவோ ஜாயதே (
    சங்கர்ஷணன் இடம் இருந்து பிரத்யும்ன என்னும் மனஸ் பிறக்கிறான்-என்று மேலும் சொல்லும்)-ப்ரஹ்ம ஸம்ஹிதா -என்று வேதாந்த விருத்தமான ஜீவ உத்பத்தியாதிகளைச் சொல்லுகையாலே அதிலும் தந்த்ர சாமான்யத்தாலே வேத விருத்த அம்சம் உண்டாய் இருந்ததே என்னில் -ப்ரஹ்ம ஸூத்ர -2-2-39-40- அங்கே ஜீவ அதிஷ்டாத்ரு ரூபமான ஸங்கர்ஷண வ்யூஹத்தினுடைய உத்பத்தி சொல்லுகிறது –
    ஆகையாலே ஜீவ உத்பத்திக்கு ப்ரஸங்கம் இல்லாமையாலும்
    இதம் மஹ உபநிஷதம் ஸர்வ வேத ஸமந்விதம் -சாந்தி பர்வ -340-111-என்று ஸகல வேத அநு கூலத்வம் இந்த பாஞ்சராத்ர வசனத்திலே ஸித்தமாகையாலும்
    பகவான் தான் பர வ்யூஹ விபவாதிகளுடைய யாதாத்ம்யத்தை ஸ ப்ரகாரமாக ஸாத்விகாதிகளிலே -ஸாத்விக ஸம்ஹிதைகளிலே -அருளிச் செய்கையாலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸனமும் ப்ரமாணமாகக் கடவது(ஒன்றும் இடாமல் எல்லாம் -சகல எல்லாம் விட இதுக்கு முழுமை உண்டே) -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-41-42-

    (2-2-எட்டாவது அதிகரணம் –உபபத்ய சம்பவ (பாஞ்சராத்ரம் )அதி கரணம்

    ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

    வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
    ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
    பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
    நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப் பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
    வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

    ———

    ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

    சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
    மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
    ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
    கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
    மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

    இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

    ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-

    வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
    விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
    அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
    அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
    ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
    விஞ்ஞான ஸ்வரூபமாய்
    ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

    அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
    முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிரமாண தர்மம் என்பதாகிறது
    அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
    வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
    இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை
    இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
    ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
    ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
    ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
    நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
    உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
    செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
    அதாவது
    வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
    பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

    ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42-

    இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
    இது வேதத்துக்கு முரண் அற்றது

    அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
    த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
    வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
    ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

    பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
    ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

    கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
    ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து

    ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
    ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
    புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
    பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
    நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

    பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுக்யத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
    காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
    ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
    சூன்ய அத்வைதமே முக்தி என்பது
    கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
    உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
    தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்

    இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று
    இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
    கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம்
    அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

    ————–

    இங்கன் அன்றிக்கே
    சாங்க்யாதிகளுக்கும் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸ ப்ரமாணமாம் கொள்ளத் தேடில் ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ ப்ரசங்க இதி சேத் ந அந்நிய ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ பிரசங்காத் –ப்ரஹ்ம ஸூத்ர -2-1-1-என்கிற அதிகரணத்திலே -ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளுக்கு ப்ராமாண்யம் கொள்ளுமளவில் ஜகத்துக்கு ப்ரஹ்ம உபாதாந காரத்வம் சொல்லுகிற மன்வாதி ஸகல ஸ்ம்ருதிகளுக்கு அநவகாசமாகிற தோஷம் வரும் என்று வேதாந்த ஸூத்ரத்திலே உப பாதிக்கையாலும்
    யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய -யாஸ் ச காஸ் ச குத்ருஷ்டய -ஸர்வாஸ்தா நிஷ்பலா ப்ரேத்ய நமோ நிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா -மநு -12-95- என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸ்ம்ருதிகள் தமஸ் கார்யமான அஞ்ஞாந வர்த்தகைகள் ஆகையாலே நிஷ் பிரயோஜனங்களாய்க் கொண்டு ஸம்ஸார வார்த்திகைகளாம் -என்று மநு வசனம் உண்டாகையாலும் சாங்க்யாதிகளுக்கு ப்ராமாண்யம் கவாசித்தகமாய் ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்துக்கு ப்ராமாண்யம் சார்வத்ரிகம் என்றதாயிற்று

    (ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1–ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-

    முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
    விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
    விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்

    ஏன் எனில்
    ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று மின்
    பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும் இன்
    வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
    தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
    அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –

    ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
    கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
    அது அல்ல -ஏன் எனில்
    கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
    ஏன் எனில்
    ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
    பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
    ஆதலின் அது அன்று என்கிறோம் –

    அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
    மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
    அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
    இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
    ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
    இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்

    ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
    ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
    தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
    விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
    மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
    பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லா விட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
    என்ற தோஷம் வரும் என்பதாம்

    இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
    அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –

    ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-

    வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
    யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
    மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
    வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து)

    ஆகையால் ஸ அங்க உப ப்ரும்ஹண ஸர்வ தந்த்ர ஸஹிதமான ஸமஸ்த வேதங்களும் ஸகல விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய ஸமாப் யதிக ரஹிதமான வைபவத்தையே ஸம்யக் ப்ரதி பாதனம் பண்ணுகின்றன என்றதாயிற்று(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்)

    இதி தத்துவ நிரூபணே பிரமாண நிரூபணம் நாம பிரதம அதிகாரம் ஸம் பூர்ணம்

    ————–

    த்விதீயதிகாரம்– – ஸ்ருஷ்டி – காரணத்வம்
    1-தஸ்ய திரிவித காரணத்வ நிரூபணம்
    2- தஸ்ய உபாதாந காரணத்வ நிரூபணம்
    3-ஸ்ருஷ்டி த்வைவித்ய கதநம்
    4- சமஷ்டி ஸ்ருஷ்டி நிரூபணம்
    5-அவ்யக்த நிர்ணயம்
    6-மஹத் தத்துவ நிர்ணயம்
    7-தத்ர ஸாத்விக புத்தி நிரூபணம்
    8-தத்ர ராஜஸ புத்தி நிரூபணம்
    9-தத்ர தாமஸ புத்தி நிரூபணம்
    10-மஹத் தத்தவாத அகங்கார உத்பத்தி கதநம்
    11-வைகாரிக அஹங்காராத் ஏகாதஸ இந்த்ரிய உத்பத்தி கதநம்
    12- ஏகாதஸ இந்த்ரியாணாம் பூதாதே உத்பத்தி கத ந வசநாநாம் அந்நிய பரத்வ கதநம்
    13-ஞான இந்திரிய பரிகணநா
    14-கர்ம இந்திரிய பரிகணநா
    15- மனஸ-ஞான கர்ம இந்த்ரிய உபய ஸஹ காரித்வ கதநம்
    16-இந்த்ரியாணாம் அணுத்துவ சமர்த்தனம்
    17-பூதாதேஸ் தன்மாத்ராத் யுத்ப்பத்தி கதநம்
    18- பரமாத்மந பூத உத்பத்தி கதந வசநாநாம் தாத்பர்ய கதநம்
    19-தன்மாத்ராதே ராகாஸாத் யுத் பத்தி க்ரம நிரூபணம்
    20- பஞ்சீ கரண பிரகார கதநம்
    21-அண்ட ஸ்ருஷ்டி பிரகார நிரூபணம்
    22-சதுர்முக ஸ்ருஷ்டி கதநம்

    ———-

    இப்படி வேத வேத்யமாய் -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான பரதத்வம் ஓன்று -அதுவே முமுஷுக்களுக்கு ஞாதவ்யம் -அதுக்கு ஞாபகமான லக்ஷணங்கள் ஏதென்னில்
    யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த் யபி -ஸம் விஸந்தி – தத் விஜிஜ்ஞாஸஸ்வ -தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு -1-1-என்று(
    வர்ணன் பிள்ளை பிருகு -அவனுக்கு உபதேசம்)
    ஜகஜ் ஜென்ம ஸ்திதி லயங்கள் வேதாந்தங்களிலே யுக்தம்
    அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்ம ஸூத்ரம் 1-1-1- என்று ப்ரஹ்ம ஞானத்தை விதித்த வேதாந்த ஸூத்ரம் அந்த ப்ரஹ்மதுக்கு லக்ஷணமாக –
    ஜந்மாத் யஸ்ய -1-1-2- என்கிற ஸூத்ரத்தாலே ஜகத்தினுடைய ஜன்ம ஸ்தேம லயங்களை ஸூசிப்பித்ததே இறே

    ஜகத்துக்கு ப்ரஹ்மத்தின் பக்கல் உண்டான ஜென்ம ஸ்தேம லயங்களாவன உத்பத்தி ஸ்திதி விநாஸங்கள்

    அதிலே ப்ரஹ்மத்துக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வமாவது
    கடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான காரத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ -என்னில் -அப்படி அன்று –
    லோகாதி கார்ய உத்பத்தியில்
    உபாதாநம் என்றும்
    நிமித்தம் என்றும்
    ஸஹ காரி என்றும்
    காரணங்கள் மூன்று
    அதில் உபாதாந காரணமாவது -கார்ய ஸ்வரூபத்திலே அந்தர் பவிக்கும் படி யாதொரு வஸ்துவினுடைய ஸ்வரூபத்தை உபாதாநம் பண்ணி (
    பரிணாமத்தை உண்டாக்கி)காரியத்தை உத்பாதிக்கிறான் -அது உபாதாந காரணம் -அதாவது
    கடமான கார்யத்திலே ம்ருத்தான காரண ரூபத்தை ஸ்வீ கரித்து அத்தை உண்டாக்கினாப் போலே
    நிமித்த காரணமாவது -அந்த உபாதாந ஸ்வரூபமான ம்ருத்தை குலாலன் விகரிக்குமா போலே கார்யா காரேண விகரிக்குமது
    ஸஹ காரி காரணமாவது -குலாலன் ம்ருத்தாலே கடத்தை உத்பாதிக்குமளவில் தண்ட சக்ராதிகளைப் போலே கார்ய உத்பத்திக்கு உபகரணமாமவை
    இவை மூன்றும் லோகத்தில் ஒன்றினுடைய சக்தி ஒன்றுக்கு இல்லை -(
    இயத்தா ராஹித்யம்)
    ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாம் அளவில் இவை மூன்றும் தானேயாய் இருக்கும் என்று ஸ்ருதி சொல்லிற்று

    சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்-பரிணாமம் அடையலாம்
    ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்–பஹு ஸ்யாம் ப்ரஜாயேய
    ஞான சக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹ காரி காரணம்-வேர் முதல் வித்தாய்

    அதாவது -கிம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் -யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு -( நிஷ்ட தஷு-என்கிற இடத்தில் (ஆற்றல் உடன் படைக்கப்பட்டவை)பஹு வசனம் விவஷிதமன்று -ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் திவஞ்ச ப்ருதி வீஞ்ச -என்று த்யாவா ப்ருத்வியாதிகளுக்கு ஏக கர்த்ருகத்வ ஸ்ரவணத்தாலே கர்த்ரு பஹுத்வம் ஸம்பவியாமையால் இப்படியே ஸ்ருத ப்ரகாஸி காச்சார்யர் அருளிச் செய்தது -1-4-25-)
    மநீஷிணோ மனஸா ப்ருச்ச தேது தத் யதத் யுதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் அஷ் -2-8-7-8–என்று
    லோக த்ருஷ்டி மர்யாதையாலே நிமித்த உபாதாநாதிகளை பின்னமாக பிரதிபத்தி பண்ணி யாதொரு வஸ்து புவனங்களைத் தரித்துக் கொண்டு நின்று நிமித்தத்தைச் சொல்லி
    யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு -என்று யாதொன்றாலே த்யாவா ப்ருத்விகளை வகுத்தார்கள் -அந்த வனம் எதுவென்றும் அந்த வ்ருக்ஷம் எதென்றும் உபாதானத்தையும் ததிதர உபகரணத்தையும் பிரித்து ப்ரஸ்னம் பண்ணி
    ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு மநீஷிணோ மனஸா விப்ரவீ மிவ –ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் -2-8-9-8-என்று
    அதிஷ்டிக்கும் நிமித்த காரணமும் உபாதான காரணமும் ப்ரஹ்மம் என்று த்ரிவித காரணமும் ப்ரஹ்மமாகச் சொல்லிற்று-

    (சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25–வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
    யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
    மநீஷிணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
    காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே-நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-)

    (கிம்ஸ்வித் -இத்யாதி –
    அத்ர ஸாயநாசார்ய பாஷ்யம் -லோகே ஹி க்ருஹம் சிகீர்ஷு புமான் வனம் கத்வா –தத்ர கஞ்சித் வ்ருக்ஷம் சித்வா ததீயை காஷ்டை -க்ருஹம் நிர்மிமீதே –தத் த்ருஷ்டாந்தேன அத்ராபி (
    இன்புறும் இவ்விளையாட்டுடை விமலன் -தன்னை தனது பயனுக்காக உருவாக்கினான்)-யத யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதிவீ -த்யு லோக பூ லோகவ் நிஷ்டதஷு- தக்ஷணேந நிர்மிதார -நிர்மிதவந்த தாத்ருசம் வனம் கிம்ஸ்வித் பவேத் கஸ் ச தாத்ருஸ ஸ வ்ருக்ஷ ஆஸீத்- ஹே மநீஷிண -புத்தி மந்த -மனஸா -ஸ்வ கீயேந விசார்ய- ததித மரத்த த்வயம் ஆசார்ய ஸமீபே ப்ருச்சத மிஞ்ச -யத் காரண பூதம் வஸ்து புவநாநி -ஸர்வாந் லோகான் ஸ்வாத்மநி தாராயன் அத்யதிஷ்டத் -நியமன கரோத் -ததிது ததபி ப்ருச்சத யதுக்தம் மநீஷிணாம் ப்ரஸ்ன த்ரயம் (காடு எது வனம் எது)தஸ்ய ஆச்சார்ய உத்தரம் ப்ரூதே -யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதி வ்யவ் நிர்மிமீதே (தாங்குவது யார்)தத் வந ஸ்தாநீயம் வ்ருக்ஷ ஸ்தா நீயம் ப்ரஹ்ம ஏவ -தஸ்ய ஸர்வ சக்தித்வாத் -யஸ்ய உத்பாத் யஸ்ய சா சாமக்ர் யபேஷிதா ஸா ஸர்வா தஸ்மிந் வித்யதே ததேவ ப்ரஹ்ம ஸர்வாணி புவநாநி அஸ்மின் தாரயதி நியமயதி ச ஹே மநீஷிண ஆசார்யோஹம் மனஸா நிச்சித வ -யுஷ்மத்ப்யம் விப்ரவீமி விவிதம் உத்தரம் ப்ரவீமி இதி )

    (அபூர்வ அர்த்த ப்ரதிபாதனமே வேதம் -யதார்த்த கதனம் வேதம் -அனைத்துக்குள்ளும் ப்ரஹ்மம் -அனைத்தையும் ஸ்ருஷ்டித்து தரித்து நியமித்து -ஸ்வாமித்வம் ப்ரஹ்மமே -வேதம் கொண்டே அறிகிறோம்-ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் -ஒன்றை அறிந்தால் அனைத்துமே அறிந்ததாகுமே-ஒன்றை அறிந்தால் -ப்ரஹ்மத்தை அறிந்தால் -அது சத்தாகவே இருந்தது -ஒன்றாகவே இருந்தது -இரண்டாவது அற்றதாகவே இருந்தது-ஸஹ காரி அற்றதாக இருந்தது -ஒன்றாகவே இருந்ததுஉபாதானமும் ப்ரஹ்மமே -இதன் காரியமே ஸகலமும்
    அசத்தைக் காரணமாக் கொண்டது ஜகத்து இல்லையே-பஞ்ச ஸ்தவம் -சத்- -ஆத்மா-ஞானமுடையது -ப்ரஹ்மம் -பெரியது -யவன் அவன் -விவரித்து -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-தத்வம் ஆத்மா ஜ்யோதிஸ் -பரம் ஒவ்வொன்றுக்கும் நாராயணனே )

    இந்த அர்த்தம் -ஸதேவ ஸோம்யேத மக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் –6-2-1- என்று காரண வாக்யத்தில் ஜகத்து ஏகமாகக் கொண்டு லயிக்கும்படி உபாதான ஸச் ஸப்த வாஸ்ய வஸ்து -அத்விதீயம் என்று சொல்லுகையாலே அதிஷ்டாந்தர்த்தைக் கழித்து நிமித்த உபாதாநாதிகள் எல்லாம் ஏக பூத வஸ்து என்றும் சொல்லப்பட்டது

    அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதாநத்வ ரூப உபய லிங்க விஸிஷ்ட நித்ய பரி ஸூத்த ஸ்வ பாவ பர ப்ரஹ்மம்
    ஜடத்வ துக்கித்வ யுக்தமான சித் அசித் மக பிரபஞ்சத்துக்கு உபாதாநமாம் படி எங்கனே என்னில்
    நிர்தோஷ ப்ரமாணமான வேதாந்த பாகத்தில் காரண வாக்யங்களாலே சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தினுடைய உபாதானாதி பாவத்துக்கு அந்யதா ஸித்தி இல்லாமையாலே ப்ரமாண அனுக்ராஹகமான உபபத்தி விசேஷங்களாலே இவ் வர்த்தத்தை வேதாந்த வித்துக்கள் நிஷ்கர்ஷியா நின்றார்கள் –
    எங்கனே என்னில்

    ப்ருதிவ் யப்ஸூ லீயதே -ஸூபா உபநிஷத் -என்று துடங்கி தத்துவ க்ரமத்திலே லயத்தைச் சொல்லி – மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் (விபக்த)தமஸ் லீயதே -தமஸ் பரே தேவ ஏகீ பவதி -என்று
    மஹத் தத்துவத்துக்கு லய ஸ்தானமான அவ்யக்தம் தன்னுடைய ஸூஷ்ம தஸா ரூபமான அக்ஷர தமோ அவஸ்தமாய்க் கொண்டு பர தேவதை பக்கலிலே ஏகீ
    பவிக்கும் என்கையாலே

    (அவ்யக்தம் அக்ஷரம் விபக்த தமஸ் அவிபக்த தமஸ் -நான்கும்-பிரகிருதியின் நான்கு அவஸ்தைகள்-விதை-தண்ணீர் பருத்து வெடித்து –முளை விட்டு மேல் -வருவது போல்-மெழுகு தங்கத் துகள்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் ஜீவ சமஷ்டிகள் ஒட்டிக்கொண்டு இருக்கும் பிரகிருதி அக்ஷரம்–குணங்கள் சமமாக இருப்பது அவ்யக்தம் –ஸூஷ்ம பரிணாமங்கள் இவை -ஸ்தூல பரிணாமங்கள் மேல் மஹான்-குண வைஷம்யம் மஹானில் -அஹங்காரம் -ஸூஷ்மம் -கண்ணுக்குப் புலப்பாடாதது -விபுவாக இருந்தாலும்
    ப்ரஹ்மம் பிரகிருதி – -காலம் இவை அனைத்துமே விபு ஸூஷ்மம்
    ஏகீ பவதி ஒன்றாக -ஒன்றி விடும் -ஒன்றாம் என்னும் இவ் வல்லல் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-ஜீவ த்வாரா அதிஷ்டானம் -நேராக அதிஷ்டானம் இரண்டு வகை அசித்க்குள் உண்டே-)

    சித் அதிஷ்டித்தமான அவ்யக்தினுடைய ஸூஷ்ம அவஸ்தை அக்ஷரமாய் -அக்ஷரத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையை தமஸ்ஸாகாச் சொல்லுகையாலே புஷபத்தினுடைய முகுள கோரகத்ய வஸ்தைகள் போலே தத்வாந்தரம் இன்றியிலே ஒன்றினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே மஹாதாதிகளோ பாதி நாம ரூப விபாகத்துக்கு அர்ஹமில்லாத ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை தமஸ் ஸப்தத்தாலே சொல்லி அதுக்கு பரமாத்மாவின் பக்கல் ஏக பாவம் சொல்லுகையாலே காரண பூத பர ப்ரஹ்மதுக்கு ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டத்வம் அவர்ஜனீயம்
    ஆகையிறே –
    ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தாவ்யக்த ஸ்வ ரூபிணீ -புருஷஸ் சாப்யு பாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39-என்று

    சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பரமாத்மாவின் பக்கலிலே லயத்தைச் சொல்லிற்று –
    இப்படி ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மத்தை இதிலே ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் -சாந்தோ -6-2-1- என்று முதலான வாக்கியங்கள் ஜகத் காரணமாகச் சொல்லுகிறன
    இப்படி இவைகளுக்கு லய ஸ்தானமாகையாலே ப்ரஹ்மம் ஜகத் உபாதான காரணம் என்றதாயிற்று

    இந்த ப்ரஹ்மம் ஜகத் உபாதாநமாம் இடத்து
    நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் -ஸ்வே -6-18-
    ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்த -1-1-என்று
    விகாராதி ரஹிதமாக ஸ்ருதி ஸித்தமான ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதோ என்னில்
    ஸூஷ்ம சித் அசித் மிஸ்ரமான பர ப்ரஹ்மம் ஸ்தூல சித் அசித் மிஸ்ரமான ஜகதாகாரத்தை உடைத்தாமளவில் ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதபடி ஜகத்துக்கு உபாதாநமாய் பரிணமிக்கக் குறையில்லை-

    அதாவது –
    சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய அசித் அம்சத்திலே ஸ்வரூப பரிணாமம்
    சித் அம்சத்திலே ஞானமாகிற ஸ்வ பாவத்திலே சங்கோச விகாஸ ரூப பரிணாமமுமாய் -சித் அம்சத்துக்கு ஸ்வரூப பரிணாமம் இன்றியிலே ஒழிகிறவோ பாதி –
    உபய நியந்தாவான ப்ரஹ்ம அம்சத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டிலும் பரிணாமம் இன்றியிலே பஹு ஸ்யாம் -சாந்தோ -6-2-3–என்கிற தாதாத்மிக ஸங்கல்ப ரூப பரிணாமமே யாகையாலே சித் அசித்துக்களோ பாதி ஸ்வரூப விகாரம் ஸ்வ பாவ விகாஸ சங்கோசாதிகளாகிற தோஷ ரூப பரிணாமம் இன்றியே கர்த்ருத்வ லக்ஷணாதி ஸித்தமான ஸத்ய சங்கல்பாதிகளும் நியந்த்ருத்வ ஸித்தமான ஞான சக்த்யாதி குண உத்கர்ஷமுமாகிற வைலக்ஷண்ய அதிசயம் பிரகாசிகையாலே விகாரத்துக்கும் கல்யாண குண யோகத்துக்கும் ஒரு குறை இல்லை
    இப்படி உபாதானமான பர ப்ரஹ்மம் தானே தன்னுடைய ஸத்ய சங்கல்பத்வாதிகளாலும் ஞான சக்த்யாதி குண யோகத்தாலும் ஸ்வ சரீர பூத சித் அசித்துக்களை அதிஷ்டித்து கார்ய ரூபமான அவஸ்தாந்தரா பத்தியைப் பண்ணுவிக்கையாலே நிமித்த காரணமாய் இருக்கும்
    தன்னுடைய ஸர்வ ஸக்தி யோகத்தாலே இதர நிரபேஷமாக காரியத்தை உத்பாதிக்கையாலே ஸஹ கார்யாந்தர ஸா பேஷமுமாய் இராது
    ஆகையால் ஜகத்துக்கு த்ரிவித காரணமும் ப்ரஹ்மம் என்றதாயிற்று

    இப்படி ப்ரஹ்மாத்மகமான ஸூஷ்ம சித் அசித்துக்கள் ஸ்தூலமான ஜகதாகாரமாய்க் கொண்டு ஸ்ருஷ்டமாமளவில்
    சமஷ்டி என்றும்
    வ்யஷ்டி என்றும்
    ஸ்ருஷ்டி த்விவிதமாய் இருக்கும்
    அதில் சமஷ்டியாவது -பிரம உத்பத்தி பர்யந்தமான ஆத்ய ஸ்ருஷ்டி
    வ்யஷ்டி ஸ்ருஷ்டி யாவது – அண்டாந்தர வர்த்தியான லோக லௌகிக ஸ்ருஷ்டி-

    அதில் சமஷ்டி ஸ்ருஷ்டியில் -ஆஸீதி தம் தமோ பூதம் அப்ரஜ்ஞாதம் லக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்த மிவ ஸர்வத-மநு -1-5- என்று ஞான சூன்யமாய் விபாக லக்ஷண ரஹிதமாய் -விசார யோக்யம் இன்றியிலே விசேஷ ஞான விஷயம் இல்லாதபடி ஸூப்தமாய்க் கொண்டு அவிசேஷிதமாய் தமோ வஸ்தமாய்க் கொண்டு தன் பக்கலிலே ஏகீ பவித்த இந்த ஜகத்தை –
    ப்ராது ராஸீத் தமோ நுத -மநு -1-6- என்று ஸ்வரூபாத் விபக்தமாம்படி ப்ரேரித்து ஸ்ருஷ்டி யுன்முகனாய் தமஸ்ஸை அக்ஷரமாக்கி -அக்ஷரத்தை அவ்யக்தமாக்கும்
    இவ் வக்ஷர தமஸ் ஸுக்கள் அவ்யக்தத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே தத்வாந்தரம் அல்ல என்று முன்பே சொல்லப்பட்டது-

    இந்த அவ்யக்த்தமாவது -த்ரி குணம் தஜ் ஜகத் யோநி அநாதி பிர்பவாப்யயம் -ஸ்ரீ விஷ்ணு புராண -2-21-1- என்கிறபடியே
    ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயத்தை ஸ்வ பாவமாக உடைத்தாய் மஹதாதி சமஷ்டி வ்யஷ்டி ரூப ஜகத்துக்குக் காரணமாய் உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்தியமாய்
    தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா –கீதா -7-13- என்கிறபடியே பகவானுக்கு லீலோ பகரணமாய் -ஸ்வ ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு துரத்யயமாய் பகவானுக்கு ப்ரகார தயா சேஷமாய் -சதத பரிணாமியாய் இருக்கும்
    ஆக விறே -விகார ஜநநீம் அஜ்ஞாம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம் -மாந்த்ரீக உபநிஷத் -3–என்றும்
    (அவ்யக்தம் மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் ஆகிய அஷ்ட)அசேதநா பரார்த்தா ச நித்யா சதத விக்ரியா -பரம ஸம்ஹிதா -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் இதினுடைய ஸ்வபாவங்களை பஹு ஸ ப்ரதிபாதித்தது-

    இதனுடைய விகாரமாவது –
    ஸூஷ்ம ரூபமாய் ஸ்தூல ரூபமாய் இருந்துள்ள த்வி விதமான ஸ்வரூப பரிணாமம்
    அதில் ஸூஷ்ம பரிணாமம் நாம ரூப விபாக நிர்தேச அநர்ஹமாய் இருக்கும்
    ஸ்தூல பரிணாமம் மஹதாதியான கார்யமாகையாலே நாம ரூப விபாக நிர்தேச அர்ஹமாய் இருக்கும்
    இந்த மஹதாதி பரிணாமியாய் ஜகத் உத்பத்திக்கு உபயுக்தமாய் அறுவது ஸூஷ்ம பரிணாமம்
    இந்த அவ்யக்தத்துக்கு ஸ்வரூப ப்ரயுக்தமான ஆகார விசேஷம் இத்தனை இறே
    பரிணாமமாவது ஸூஷ்ம தசையோடு ஸ்தூல தசையோடு வாசியற உண்டான பூர்வ அவஸ்தா பரித்யாக பூர்வகமான அவஸ்தாந்தர ப்ராப்தி
    அது ஸ்தூல தசையிலே வந்தவாறே கார்யம் என்று சொல்லப்படும்
    அவஸ்தாந்தரா பத்தி ரேவ ஹி கார்யதா ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-என்று இறே ஸ்ரீ பாஷ்யகார வசனம்
    அந்த அவ்யக்தம் குண ஸாம்யம் அநுத் ரிக்தம் ந்யூ நஞ்ச மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-34- என்று காரண தசையிலே ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயங்களாகிற ஸ்வ பாவங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று ந்யூநாதி ரேகங்கள் உண்டாதல் -க்ருத்ஸ் உத்ரேகம் உண்டாதல் செய்யாதே சம ஸ்வ பாவமாய் இருக்கும் –

    குண ஸாம்யாத் ததஸ் தஸ்மாத் ஷேத்ரஞ்ஞாதிஷ்டி தான்மு நே -குண வ்யஞ்ஜன ஸம் பூதி சர்க்க காலே த்விஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -1-2-33- என்று
    இப்படி குண ஸாம்யமுடைத்தாய் ஷேத்ரஞ்ஞானான பத்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யக்தத்தில் நின்றும் வ்யக்த குணோந்மேஷ ஹேதுவாகையாலே குண வ்யஞ்ஜனம் என்று பேரான மஹத் தத்வம் உத்பன்னமாம்
    அந்த மஹத் தத்வம் -ஸாத்விகோ ராஜஸஸ் ச ஏவ தாமஸஸ் ச த்ரிதா மஹாந் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-2- என்று ப்ரகாஸ ப்ரவ்ருத்தி மோஹோன்நேயமான சத்வ ரஜஸ் தமோ ரூப குணான்வயத்தாலே
    சாத்த்விகம் (ப்ரகாஸ
    )ராஜஸம் (ப்ரவ்ருத்தி)தாமஸம் (மோஹ)என்று மூன்று வகையாய் இருக்கும் –

    1-இதில் ஸாத்விக புத்தியாவது -ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்யாகார்யே பயாபயே –பந்த மோக்ஷஞ்ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ —கீதா 18-30- என்று
    ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளினுடையவும் கார்யா கார்யங்களினுடையவும் பயாபயங்களினுடையவும் பந்த மோஷங்களினுடையவும் யதாவத் வ்யவசாயம் -என்றும்

    2- ராஜஸ புத்தியாவது -யயா தர்ம மதர்மஞ்ச கார்யஞ்சா கார்யமேவ ச -அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ –18-31-என்று
    தர்மாதர்மங்களையும் கார்யா கார்யங்களையும் அந்யதாவாக அறுதியிடுகை என்றும்

    3-தாமஸ புத்தியாவது -அதர்மம் தர்மமிதி யா மன்யதே தமஸா வ்ருதா ஸர்வார்த்தான் விபரீதாம்ஸ் ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ -18-32–என்று
    அதர்மத்தைத் தர்மமாகவும் தர்மத்தை அதர்மமாகவும் -இப்படி ஸர்வார்த்தங்க ளையும் விபரீதங்களாகவும் நிஸ்ஸயிக்கை என்றும் கீதாச்சார்யன் கீத உபநிஷத்திலே புத்தி த்ரை வித்யத்தை அருளிச் செய்தான் இறே

    இப்படி புத்தி லக்ஷணமான மஹானை ஸ்வ காரணமான ப்ரதான தத்த்வம் ஆவரிக்கும் -அங்குர உத்பாதகமான பீஜத்தை அதனுடைய த்வக்கு -தோல் -ஆவரித்து இருக்குமா போலே -அவ்யக்தத்தாலே ஆவ்ருத்தமான மஹத் தத்துவத்தில் நின்றும் அபிமான கார்ய உன்னேயமான அஹங்காரம் உத்பன்னமாம் –
    இவ் வஹங்காரம் அபிமான ஹேதுவாகையாவது -தேஹாத்ம அபிமாநாதிகளான அதஸ் மிம்ஸ் தத் புத்தியை ஜநிப்பிக்கை
    இவ் வஹங்காரம் தான் வைகாரிகஸ் தேஜஸஸ் ச பூதாதிஸ் சைவ தாமஸ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-35- என்று ஸாத்விக ராஜஸ தாமஸ ரூப பேதத்தாலே
    வைகாரிகம் என்றும்
    தைஜஸம் என்றும்
    பூதாதி என்றும்
    மூன்று வகையாய் இருக்கும்
    ஏவம் விதமான அஹங்காரத்தை ஸ்வ காரணமான மஹத் தத்வம் ஆவரித்து இருக்கும்
    குண க்ருதமான த்ரை வித்யத்தை யுடைத்தான மஹத் தத்துவத்தால் உண்டான ஆவரணம் இறே அஹங்கார த்ரை வித்யத்துக்கு ஹேது

    இதில் வைகாரிகமாவது -ஸாத்விக -அஹங்காரமாகையாலே இதில் நின்றும் சத்த்வ கார்யமான லகுத்தவ ப்ரகாஸகாத்வங்களை உடைத்தான இந்த்ரியங்கள் உத்பன்னமாம்
    ஸாத்விக அஹங்காரத்தில் நின்றும் –இத்யாதி கபாட –
    இந்த்ரியங்களை -தைஜஸாநி இந்த்ரியாண்யாஹு தேவா வைகாரிகா தச –ஏகாதஸம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-49- என்று வைகாரிக -தேவாதிஷ்டிதங்களாகையாலே தேவ ஸப்த இந்த்ரி யங்கள் பதினொன்றும் தைஜஸமான ராஜஸ அஹங்கார கார்யமோ -வைகாரிகமான ஸாத்விக அஹங்கார கார்யமோ என்று மத பேதத்தாலே விகல்பித்து வைகாரிக கார்யங்கள் என்று ஸ்வ ஸித்தாந்தத்தாலே ஸ்ரீ பராசர பகவான் நிஸ்ஸயிக்கையாலே இந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்கார கார்யங்களாகையாலே நையாயிக மர்யாதையாலே பூத விசேஷ பரிணாமங்களும் அல்ல என்னும் இடம் ஸம் பிரதிபன்னம்

    இவ் விந்த்ரியங்களுக்கு இதிஹாஸத்திலே பூத சர்க்கம் சொல்லுகிற இடம் -பாரதம் சாந்தி -291-10-11-பூதங்களால் உண்டான ஆப்யாயந மாத்ரத்தைப் பற்ற இந்த்ரியங்கள் தான் ஞான இந்த்ரியங்கள் என்றும் கர்ம இந்த்ரியங்கள் என்றும் இரண்டு
    1- அதில் ஞான இந்த்ரியங்களாவன -ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்கள் ஆகிற விஷய பஞ்சகத்தையும் ப்ரதி நியாமாய்க் கொண்டு க்ரஹிக்கிற ஸ்ரோத்ர -த்வக் -சஷு ர் -ஜிஹ்வா -கிராணங்கள் என்கிற ஐந்தும்
    2-கர்ம இந்த்ரியங்களாவன -வசன -தான -கமன -மூத்ர -புரீஷ நிஸ் சரண ஹேதுவான வாக் -பாணி -பாத -பாயூ பஸ்தங்கள் என்கிற ஐந்தும் -ஸப்தாதி பஞ்சகத்தையம் அடைவே ஒட்டி யிருக்கும் –

    ஸ்ரோத்ர க்ராஹ்யமான ஸப்த விஷயமாயும் -த்வக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும் -சஷுர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருதஹி ஹேதுவாயும் -ரஸநா விஷய ரஸாஸ்ரயமான ஜலத்தினுடைய நிஸ் சரண ஹேதுவாயும் -க்ராண விஷய கந்த ஆஸ்ரய பிருதிவி யம்சமான அந்நாதிகளில் ருஜீஷோத்ஸர்ஜ்ந ஹேதுவாயும் இருக்கும்

    பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
    தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
    மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
    நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

    பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
    புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
    தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
    சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
    சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
    மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
    வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
    நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
    நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
    யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

    மனஸ் ஸூ உபய ஸஹ காரியாகையாலே ஞான இந்த்ரியமுமாய் கர்ம இந்த்ரியமுமாயும் இருக்கும் -உபயாத் மகம் மந -என்று இறே சொல்லுவது –
    இந்திரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வ்யஷ்டி விஷயம் அன்று -சமஷ்டி விஷயம்

    தேஷாம் து அவயவான் ஸூஷ்மான் ஷண்ணாம் அப்யமிதவ் ஜஸாம் -சன்னிவேஸ்ய ஆத்ம மாத்ரா ஸூ ஸர்வ பூதாநி நிர்மமே –மநு -1-16-என்று அணுக்களாகையாலே ஸூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்ம மாத்ரைகளிலே (தன் மாத்ரைகளிலே)பிரவேசிப்பித்து ஸர்வ பூதங்களையும் ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்டித்தான் என்று மனு வசனம் உண்டாகையாலே –

    இதில் ஸூஷ்மான் -என்கையாலே -அணவஸ் ச -ப்ரஹ்ம ஸூத் -2-4-6- என்கிற ஸூத்ர மர்யாதையாலே இந்த்ரியங்கள் அணு என்றும்
    அவயவான் -என்கையாலே இந்த்ரியங்கள் தோறும் வ்யக்தி பாஹுள்யம் உண்டு என்றும்
    ஆத்ம மாத்ரைகளிலே கூட்டினான் என்கையாலே அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத் ஸம்ஹாரம் அனுவர்த்திக்கும் என்றும்
    சரீரம் யதவாப்நோதி யச்சாப் யுத் க்ராம தீஸ்வர –க்ருஹீத் வைதாநி ஸம்யாதி வாயுர் கந்தாநி வாசயாத்–கீதை -15-8- என்கிறபடியே சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போதும் இந்த்ரியங்களைக் கிரஹித்து கொண்டு போம் என்று தோற்றுகிறது
    ஷண்ணாம் -என்றும் மனஷ் ஷஷ்டாநி என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை -இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே
    (ருசி வாசனைகளை இவையே கொண்டு செல்லும்)

    (ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6--இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
    இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
    ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –என்று பூர்வபக்ஷம்–அத்தை நிரசிக்கிறார்-அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
    பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
    இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
    அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
    இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –)

    இனி பூதாதி ஸப்த வாஸ்யமான தாமஸ அஹங்காரத்தனின்றும் தன் மாத்ரா பஞ்சகமும் -தத் விசேஷமான ஆகாசாதி பூதங்களும் உத்பன்னமாம்
    ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத -ஆகாஸாத் வாயுர் -வாயோர் அக்னி -அக்னேர் ஆப அத்ப்ய பிருதிவீ -தைத்த ஆனந்த -1-2- என்று
    பரமாத்மாவின் பக்கல் நின்றும் ஆகாசாதி பூதங்கள் க்ரமேண உத்பன்னமாம் என்று ஸ்ருதி சொல்லா நிற்க -தாமஸ அஹங்காரத்தினின்றும் பஞ்ச தன்மாத்திரைகளும் பூதங்களும் உத்பன்னலாம் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
    அஷ்டவ் ப்ரக்ருதய ஷோடஸ விகாரா -என்று அவ்யக்த மஹத் அஹங்காரங்களும் தன் மாத்ராதி பஞ்சகமும் காரணமாகவும் இந்த்ரியங்கள் பதினொன்றும் பூத பஞ்சகங்களும் கார்யங்களாகவும் ஸ்ருதி சொல்லுகையாலும்
    மூல ப்ரக்ருதிர் அவி க்ருதிர் மஹதாத்யா ப்ரக்ருதி விக்ருதயஸ் ஸப்த -ஷோடஸ கஸ் ச விகாரோ ந ப்ரக்ருதிர் ந விக்ருதி புருஷ -சாங்க்ய கௌமு -3-என்று சாங்க்யன் தத்வ விபாகம் சொல்லுகிற இடத்தில் மூல ப்ரக்ருதி ஒன்றின் கார்யாமன்றியிலே தான் எல்லாவற்றுக்கும் காரணமாய் இருக்கையாலே ப்ரக்ருதி என்றும் மஹதாதி சப்தகமும் ப்ரக்ருதி காரியமாய் ஒன்றுக்கு ஓன்று காரணமாயும் கார்யமாயும் உண்டாய் இருக்கையாலே ப்ரக்ருதி விக்ருதிகளாய் இருக்கும் என்றும்
    புருஷன் ஒன்றுக்கு காரணமாய் இருத்தல் காரியமாய் இருத்தல் செய்யாமையாலே ப்ரக்ருதியும் அல்லன் விக்ருதியும் அல்லன் என்று சொல்லுகையாலும் இங்கு தன்மாத்ர உத்பத்தி ஒழிய பூத உத்பத்தி கூடாமையாலும் பூதங்களுக்கு தன் மாத்ரா பூர்வகத்வமும் அவற்றுக்கு அஹங்கார கார்யத்வமும் கொள்ள வேணும் இறே
    ஆனால் பரமாத்மாவின் பக்கல் நின்றும் பூதங்கள் உத்பன்னமாம் என்று சொல்லுகிற ஸ்ருதிக்கு தாத்பர்யம் என் என்னில் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டமாய் ஸச் ஸப்த வாஸ்யமான பர ப்ரஹ்மமே ஸகல ஜகத்துக்கும் உபாதானமாகையாலே ப்ரக்ருத்யாதி தத் தத் அவஸ்தா வஸ்திதனான பரமாத்மாவின் பக்கல் நின்றும் தன் மாத்ரா ஸஹிதமான பூத உத்பத்தியைச் சொல்லுகையிலே ஸ்ருதிக்கு தாத்பர்யமாகக் கடவது-

    ஆகை யிறே -ததைஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி -சாந்தோ -6-2-3- என்று சாந்தோக்யத்திலே காரண வஸ்துவினுடைய ஈக்ஷண அந்வயத்தைச் சொல்லுகிற இடத்தில் -தத் தேஜஸ் ஐக்ஷத -சாந்தோக் -6-2-2-4- என்றும் தா ஆப ஐஷந்த -6-3-2- என்றும் ததன்நமைக்ஷத -என்றும் தேஜோ பன்னங்களான பூதங்களுக்கு (தேஜஸ் அப்பு அன்னம்)ஈஷண அந்வயம் சொல்லிற்று -அநு ப்ரவேஸம் அடியாக தத் தச் சரீர விஸிஷ்டனான பரமாத்ம அந்வய முகத்தாலே இறே -அல்லது அசேதனங்களான இவற்றுக்கு ஸங்கல்ப ரூப ஞானம் ஸம் பாவிதம் அல்ல -ஆகையிறே
    ஹந்தாஹமி மாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று இந்த அசித் தத்வங்களினுடைய நாம ரூப ஸித்தி அநு ப்ரவேஸ நிபந்தந மேயாகச் சொல்லிற்று
    இங்குச் சொன்ன தேஜோ பன்ன மாத்ரங்கள் ஸ்ருத் யந்திரத்தில் சொன்ன ஆகாஸ வாயுக்களுக்கும் அவ் யக்த மஹத் அஹங்காராதிகளுக்கும் உப லக்ஷணம்

    தச குணித உத்தரம் ஆவரண ஸப்தகம் -ஒன்றுக்கு ஓன்று தச மடங்கு -ஏழு ஆவரணங்கள் -ஸப்த ஆவரணங்கள்-இமையோர் வாழும் தனி முட்டை -ஷீராப்தி ஆறாவது –

    ஏவம் பூதமான தாமஸ அங்காரத்தின் நின்றும் ஆகாசத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையான ஸப்த தன் மாத்ரை பிறக்கும்
    தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தன் மாத்ரம் தேந தன் மாத்ரதா ஸ்ம்ருதா –தன் மாத்ராண் யவிசேஷாணி அவிசேஷாஸ் ததோ ஹி தே ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாஸ் சா விஸேஷிண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-84-85- என்று அவ்வோ பூத விசேஷங்களினுடைய அவ்யக்தா விசேஷ குணோந் மேஷமான ஸூஷ்ம ஆகாஸத்துக்கு தன் மாத்ரம் என்று பெயர்

    தன் மாத்ராண் ய விசேஷாணி என்று இவற்றுக்கு ஸ்தூல அவஸ்தா பூதங்களான பூதங்களைப் போலே சாந்தத்வாதி விசேஷம் தோற்றாமையாலே இவற்றை அவிசேஷங்கள் என்று சொல்லக் கடவது
    இந்த ஸப்த தன் மாத்திரத்தில் நின்றும் இதினுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த ஸப்த குணகமான ஆகாஸம் உத்பன்னமாம் -இந்த ஸப்த தன்மாத்ரையும் ஆகாஸத்தையும் பூதாதியான தாமஸ அஹங்காரம் ஆவரிக்கும் -இப்படி தாமஸ அஹங்கார ஆவ்ருதமான ஸ்தூல ஆகாஸ ஸஹ க்ருதமாய்க் கொண்டு விக்ருதமான ஸப்த தன் மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை உத்பன்னமாம் -இதில் நின்றும் ஸ்பர்ச குணமான வாயுவானது பிறக்கும் -இந்த ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவையும் ஸ்வ காரணமான ஸப்த தன்மாத்திரை ஆவரிக்கும் -ஸப்த தன் மாத்ராத்தாலே
    ஆவ்ருதமான வாயு ஸஹ க்ருதமாய் விகரித்த ஸ்பர்ச தன் மாத்திரத்தில் நின்றும் ரூப தன் மாத்ரம் உத்பன்னமாம் -இதில் நின்றும் ரூப குணமான தேஜஸ்ஸூ பிறக்கும் –வாயோர் அக்னி -தைத்த -1-2- என்று தேஜோ விசேஷத்தை ஸ்ருதி சொல்லிற்றே யாகிலும் தேஜஸ் ஸாமான்யத்துக்கும் உப லக்ஷணமாகவே கடவது -இந்த ரூப தன் மாத்ரையும் தேஜஸ்ஸையும் ஸ்வ காரணமான ஸ்பர்ச தன் மாத்திரை ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் தேஜஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரூப தன் மாத்ரையில் நின்றும் ரஸ தன் மாத்ரை பிறக்கும் -அதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் -இந்த ரஸ தன் மாத்ரையும் ஜலத்தையும் ஸ்வ காரணமான ரூப தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் அம்பஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரஸ தன் மாத்திரத்தில் நின்றும் கந்த தன் மாத்ரம் உத்பன்னமாம் -அதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வி பிறக்கும் -அந்த கந்த தன் மாத்ரையும் ப்ருதிவியையும் ஸ்வ காரணமான ரஸ தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் –
    இப்படி உத்தர உத்தர தன் மாத்திரைகளுக்கு பூர்வ பூர்வ தன் மாத்ர ஆவ்ருதத்வமும் பூர்வ பூர்வ பூத ஸஹ காரத்வமும் சொல்லுகிற இது
    ஆத்யாத் யஸ்ய குணாநேதான் ஆப்நோதி ச பரஸ்பர -மநு -1-20- என்று உத்தர உத்தர பூத குணங்களிலும் பூர்வ பூர்வ பூத குணங்கள் அநு வர்த்திக்கைக்காக

    ஆகையால் ஆகாஸத்துக்கு ஸப்தம் ஒன்றுமே குணமாய்
    வாயுவுக்கு ஸப்த ஸ்பர்சங்கள் இரண்டும் குணமாய்
    தேஜஸ் ஸுக்கு ஸப்த ஸ்பர்ச ரூபங்கள் மூன்றும் குணமாய்
    ஜலத்துக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் நான்கும் குணமாய்
    ப்ருதிவிக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ காந்தங்கள் ஐந்தும் குணமாய்ச் சொல்லப்பட்டது ஆய்த்து

    ஆகாஸம் ஸப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் சாமாவிசத் -ரூபம் ததைவ விசத ஸப்த ஸ்பர்ச குணா வுபவ் –ஸப்த ஸ்பர்சஞ்ச ரூபஞ்ச ரஸ மாத்ரம் சாமாவிசத் தஸ்மாச் சதுர் குணாஹ் யாபோ -விசேஷாஸ் சேந்த்ரிய க்ரஹா -விஜ்ஜே யாஸ்து ரஸாத் மிகா –லிங்க -90-43-44-என்கிற புராணாந்தர வசனத்தாலும்
    தேப்யஸ் தன்மாத்ரேப் யோ யதா சங்க்யமேகே த்வி த்ரி சது பஞ்சப்யோ பூதான் யாகாஸ நில நல ஸலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே -என்று இதில் அதி க்ருதனான சாங்க்ய வாசஸ்பதி வசனத்தாலும் பூர்வ பூர்வ தன் மாத்ரா ஆவ்ருதத்வம் அவஸ்யம் கொள்ள வேணும்

    இப்படி உப பன்னங்களான மஹதாதி விசேஷாந்தமான பதார்த்தங்கள் அண்டமாகப் பரிணமிக்கும் அளவில் பரஸ்பர சங்கங்களானால் அல்லது அண்ட உத் பாதகங்கள் ஆக மாட்டாது
    நாநா வீர்யா ப்ருதக் பூதா ததஸ்தே ஸம் ஹிதம் விநா நா ஸக்நுவந் பிரஜா-ஸ்ரஷ்டும் அஸமாகம்ய க்ருத்ஸ்ந ஸ -ஸமேத யாந்யோந்ய ஸம் யோகம் பரஸ்பர சமாஸ்ரயா -ஏக சங்காத லஷ்யாஸ் ச ஸம் ப்ராப்யைக்ய மஸேக்ஷத — மஹ தாத்யா விசேஷாந்தாஹ் யண்ட முத்பாத யந்திதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-52-53-54-என்கிறபடியே
    சாந்தத்வ -கோரத்வ -மூடத்வங்களாலே நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் இருக்கிற இம் மஹதாதி பதார்த்தங்களை பரஸ்பர ஸம்ஹதி யாவது ஏது என்னில்
    ஆகாஸாதி பூதங்களுக்கு புராணங்களிலே ஏவம் ஜாதேஷு பூதாநி ப்ரத்யேகம் ஸ்யுர்த் விதா தத –சதுர்த்தா பின்னமேகைகம் அர்த்த மர்த்தம் ததா ஸ்திதம் வ்யோம் நோர்த்தா பாகாஸ் ஸத்வாரோ வாயு தேஜஸ் பயோ புவாம் –அர்த்தாநி யாநி வாயோஸ் து வ்யோம தேஜஸ் பயோ புவாம் -என்று துடங்கி விபஜித்து பஞ்சீ கரணம் சொல்லப்பட்டது -அதாவது
    ஆகாசாதி பூதங்கள் ஐந்தினையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி -அவற்றிலே ஒரு கூறை நாலு கூறாக்கி -அந்தக் கூறுகளை பூதாந்தரங்கள் நாலிலும் விபக்தர்த்தங்களிலே கூட்டி -ஸர்வ பூதங்களிலும் ஸர்வ பூதங்களும் உண்டாம்படி பண்ணுகை
    இப்படி பஞ்சீ க்ருதமானாலும் அவிபக்தங்களான அர்த்தங்கள் ப்ரதானங்களாய் நிற்கையாலே ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்குக் குறையில்லை
    இப் பஞ்சீ க்ருத பூதங்களோடே கூட மஹத் அஹங்காரங்களும் ண்ட உத்பாதகங்களாகச் சொல்லுகையாலே அவற்றினுடைய ஸம்மேளந ஸித்திக்காக சப்தீ கரணம் என்றும் சொல்லுவார்கள் –

    (அனைத்து நதிகளும் கங்கையில் கலந்த பின்பும் கங்கை என்ற பெயரிலே ஓடும் -அதே போல் இவை அவற்றின் பெயராலே வ்யவஹாரம் பண்ணக் குறையில்லையே)

    ஆனால் தாஸாம் த்ரி வ்ருதம் த்ரி வ்ருதம் ஏகைகாம் கரவாணி –சாந்தோ -6-3-3- என்று சாந்தோக்யத்திலே த்ரி வ்ருத் கரணத்தைச் சொல்லுவான் என் என்னில்
    அங்கு தேஜோ அப ந்ந தத்வ த்ரய மாத்ர உத்பத்தியைச் சொல்லிற்று ஆகையாலே அவ்வளவிலே பர்யவசித்தது -ஸ்ருத் யந்தர ஸித்தமான பூதாந்தர உத்பத்தியிலும் ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே இங்கும் ஸித்தம் என்று கொள்ள வேணும் -ஆகையாலே தேஜோ ஆபந்ந ஸ்ருஷ்டி தத்வாந்தரங்களுக்கும் உப லக்ஷணமானாப் போலே த்ரி வ்ருத்த கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கு உப லக்ஷணம் என்றதாயிற்று

    அண்டத்துக்குள்ளே மஹதாதி காரியங்களும் காண்கையாலே மஹதாதி பதார்த்தங்கள் எல்லாவற்றுக்கும் ஸம் மேளனம் அவர்ஜநீயம் -ஆகையாலே பூதேப்யோண்டம் மஹா புத்தே ப்ருஹத் ததுதகே ஸயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-55-என்று
    பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் -அது உதகத்திலே கிடக்கும் –
    அப ஏவ ஸ ஸர்ஜாதவ் தாஸூ வீர்யமபாஸ்ருஜத்–ததண்ட மபவத்தை மம் ஸஹஸ்ராம் ஸூ ஸம ப்ரபம் –மனு -1-8 என்று
    அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னவிடம் பூதாந்தரத்துக்கும் உப லக்ஷணம் -அதாவது
    பூர்வ பூதங்களோடே ஸம் ஸ்ருஷ்டமாய் பிருத்வியும் தன் அகவாயிலே லீனையாகக் கிடக்கிற ஜல தத்துவத்தில் நின்றும் அண்டம் உத்பன்னமாய் அதிலே கிடக்கும் என்று -என்றபடி

    இந்த அண்டம் க்ரமேண பரிணமிக்குமோ -ஏக காலத்திலே பரிணமிக்குமோ என்னில் -ஒரோருப்படையாக -இட்டு அகமெடுக்குமா போலே க்ரமேண பரிணமிக்கை யன்றியே -தத் க்ரமேண விவ்ருத்தம் ஸத் ஜல புத் புத வத் சமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2–55- என்று நீர்க் குமிழி போலே ஏக காலத்திலே உத்பன்னமாம்

    இப்படி அண்டம் உத்பன்னமாம் போது -அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்ய யுதாநி ச -ஈத்ருஸா நாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27- என்று புராணங்களிலே பரஸ்பர ஸத்ருசமாய்க் கொண்டு அஸங்கயாதமான அண்டங்கள் –
    ஏக காலே அபி ஸ்ருஜ்யந்தே ஸம் ஹ்ரூயந்தே ச பூர்வ வத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-17- என்கிற படியே க்ரமத்தாலே தனித் தனியே உத்பத்தி விநாசங்கள் உண்டாகை யன்றியே யுகபதேவ ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை உடையவையாய் இருக்கும்

    இவ் வண்டத்துக்குள்வாயிலே பரிணதங்களான ஆகாசாதி பூதங்களை அதிஷ்டித்து (14)லோகங்களை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் தேவாதி சதுர்வித பூத விபாகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் கர்ம வஸ்ய ஸமஸ்த சேதன ஆஸ்ரய சரீரனாகையாலே பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவானவன்(ஆதார ஆதேய பாவம் மட்டுமே
    அப்ருதக் ஸித்த விசேஷணம் பரமாத்மா ஒருவன் இடமே
    மூன்று லோகம் அழியும் பொழுது கீழ் 7 லோகங்களும் இந்த மூன்று லோகங்களும் நான்முகன் இடம் ஆஸ்ரயம் என்றவாறு)தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதா மஹ -மநு -1-9- என்கிறபடியே ஜகத் உத்பாதகரான ப்ரஜாதி ப்ரப்ருதிகளுக்கும் உத்பாதாகனாகையாலே பிதா மஹ ஸப்த வாச்யனாயக் கொண்டு வ்யஷ்டி ஸ்ருஷ்டி யர்த்தமாக பகவத் ஸங்கல்பத்தாலே உத்பன்னனாம்

    இப்படி அண்ட உத்பன்னனான ப்ரஹ்மாவுக்கு பத்ம ஜத்வாதி சொல்லுகிற பிரமாணங்கள் ஆத்ய ஸ்ருஷ்டிகளில் உத்பத்தி பேத விவேக தையாலே யாகக் கடவது
    இந்த ப்ரஹ்ம உத்பத்தி பர்யந்தையான மஹதாதி சமஷ்டி ஸ்ருஷ்டி ஸத்ய ஸங்கல்பனான ஸர்வேஸ்வரனுடைய பஹு ஸ்யாம் -சாந்தோ -6-3-2- என்கிற அவ்யவ ஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
    ப்ரஹ்மோ பஞ்ஞமான வ்யஷ்டி ஸ்ருஷ்டி தத் அந்தர்யாமியான பரமாத்மாவினுடைய வ்யவஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
    ஆகை யாலே –
    தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11
    ப்ரஹ்மணோ அஸ் ருஜத் ப்ரபு
    மாம் த்வம் பூர்வம் அஜீஜந -உத்தர காண்டம் -104-4
    என்று பகவத் ஸ்ருஷ்டனாக பிரமாணங்கள் சொல்லுகின்றன இறே

    நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
    தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
    அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
    சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

    மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
    சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
    அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
    உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
    –3–

    இதி தத்துவ நிரூபணே சமஷ்டி ஸ்ருஷ்ட்டி நிரூபணம் நாம த்விதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –

    ———————

    த்ருதீய அதிகாரம்- – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
    1-சதுர் தச புவந நிர்ணயம் -ஸப்த பாதாள நிரூபணம்
    2-அநந்தஸ்ய பாதாளாதி தாரகத்வ கதநம்
    3-தஸ்மாத் காலாக்நி ருத்ர உத்பத்தி கதநம்
    4-பூ மண்டல ஸ்வரூப கதநம்
    5- பூ மண்டல உபரி வர்த்தமாந மேரு ஸ்தான நிரூபணம்
    6-மேரோ பார்ஸ்வஸ்த வர்ஷ பர்வத நாமாதி கதநம்
    7-பாரத வர்ஷாதி நிரூபணம்
    8- பாரத வர்ஷ ஸ்ரேஷ்டதாக கதநம்
    9-பாரத வர்ஷ நவ பேதக கதநம்
    10-ப்லஷ த்வீப வர்ண நம்
    11-ஸால் மலித்வீப வர்ணநம்
    12-குஸ த்வீப வர்ணநம்
    13-கிரௌஞ்ச த்வீப வர்ணநம்
    14-ஸாக த்வீப வர்ணநம்
    15-புஷ்கர த்வீப வர்ணநம்
    16-பஞ்சாஸத் கோடி பூ மண்டல நிர்ணயம்
    17-யோஜநாதி சங்க்யா நிரூபணம்

    இப்படி உத்பன்னரான ப்ரஹ்மாதி சேதனர்க்கு அந்தர்யாமியாய் ஹ்ருதயத்திலே நின்று ஸங்கல்ப ரூப ஞாநிதிகளை ஜநிப்பித்து ஸ்ருஷ்ட்யாதிகளிலே பிரவர்த்திகைக்கையாலே ஸர்வ ப்ரவ்ருத்திக்கும் ஹேது ஸர்வேஸ்வரனே என்னக் குறையில்லை
    ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநம் அபோ ஹநஞ்ச –கீதா -15-15- என்று
    ஸகலருக்கும் சரீரியாய்க் கொண்டு ஸர்வ காரியங்களுக்கும் ப்ரவரத்தகன் தானேயாக அருளிச் செய்தான் இறே

    இவ் வண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்குப் பிரயோஜனம் ஏது என்னில்
    பத்தாத்மாக்களுடைய கர்மம் அடியாக போக்ய போக உபகரண போக ஸ்தானமாம் படி அண்டத்தை பரிணமிப்பிக்கை -அதாவது
    தஸ்மிந் அண்டே ஸ பகவான் உஷித்வா பரி வத்ஸரம் -ஸ்வயமேவ ஆத்மநோ த்யாநாத் ததண்ட மகரோத் த்விதா –தாப்யாம் ஸ சகலாப் யாஞ்ச திவம் பூமிஞ்ச நிர்மமே -மத்யே வ்யோம திஸஸ் ஸ ஷ்டாவ் அபாம் ஸ்தாநஞ்ச ஸாஸ்வதம் -மநு -1- என்று
    மநுவும் அண்டாந்தர் வர்த்தியான லோக விபாகத்தையும் ஆகாஸம் அஷ்ட திக்குகள் ஸமுத்ரங்கள் இவற்றினுடைய விபாகத்தையும் ஸ்ரஷ்டாவான பகவான் ஸ்ருஷ்ட்டித்தான் என்றான் இறே-

    பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியா பவனம் மெய்யா
    செவ்வி மாதிரம் ஏதும் தோளா அண்டம் திருமுடியா நின்றான் பக்கல் செல்ல கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே

    1-இவற்றில் போக்ய அநு ரூபமான ஸூக துக்க அநுபவத்துக்கு விஷயமாகையாலே போக்யம் என்பது சப்தாதிகளை
    2-இவ்வநுப ரூப ஞானங்களுக்கு உபகரணமாகையாலே போக உபகரணம் என்பது இந்த்ரி யாதிகளை
    3-இந்த போகத்துக்கு அதிகரணங்கள் ஆகையாலே போக ஸ்தாநங்கள் என்கிறது தேவாதி ஸரீரங்களையும் -சதுர் தச புவனங்களையும்

    இஸ் சரீர விஸிஷ்ட பத்தாத்மாக்களுக்கு ஆவாஸ ஸ்தானமான சதுர் தச புவனங்களாவன
    பூமிக்குக் கீழ் அண்ட கபாலத்துக்கு மேலாக 83 100 50000 யோஜனை உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே
    ஸப்ததிஸ் து ஸஹஸ்ராணாம் த்விஜ உச்சாராயோ அபி கத்யதே -தச ஸாஹஸ்ர மேகைகம் பாதாளம் முநி சத்தம –
    அதலம் விதலஞ்சைவ நிதவஞ்ச கபஸ்திமத் மஹாக்யம் ஸூதலம் சாக்ர்யம் பாதலாஞ்சாபி ஸப்தமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-என்கிறபடியே
    ஓரொன்று தனித்தனியே 16000 யோஜனத்தளவு உயர்த்தியையும் பரப்பையும் உடைத்தாய்
    தைத்ய தாநவ பந்நக ஸூ பர்ணாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
    ஸிதா க்ருஷ்ண ருணா பீதா சர்க்கராஸ் ஸை காஞ்சநா -பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ரஸாத ஸோபிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-3-என்கிறபடியே
    ஸூத்த வர்ணங்களாயும் -க்ருஷ்ண வர்ணங்களாயும் அருண வர்ணங்களாயும் பீத வர்ணங்களாயும் வாலுகா மயமான (
    கூழாங்கல்)சர்க்கரா ரூபங்களாயும் ஸைல ரூபமாயும் ஸூவர்ண மயமாயும் இருக்கிற ஸ்தல விசேஷங்களை உடையவையாய் விலக்ஷணமான மாளிகைகளாலேயும் ப்ரஸாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
    ஸ்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமாய்
    1- அதலம் என்றும்
    2- விதலம் என்றும்
    3- நிதலம் என்றும்
    4-கபஸ்தி மத் -என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
    5-மஹாதலம் என்றும்
    6- ஸூ தலம் என்றும்
    7-பாதாலம் என்றும்
    பேரை யுடைத்தான அதோலங்கள் ஏழாய் இருக்கும்

    இந்த ஸப்த பாதாலங்களுக்குக் கீழே -30 000 யோஜனை அளவில்
    பாதாலாநாம் அதஸ் சாஸ்தே விஷ்ணோர்யா தாமஸீ தநு -சேஷாக்யா தத் குணாந் வக்தும் ந ஸக்தா தைத்ய தாநவா யோ அநந்த பட்யதே ஸித்தை தேவ தேவர்ஷி பூஜித யஸ் ஸஹஸ்ர ஸிரா வ்யக்த ஸ்வஸ்திகா மல பூஷண -பணா மணி ஸஹஸ்ரேண யஸ் ஸ வித்யோதயன் திச —-ஸ பிப்ரத் ஸேகரீ பூதம் அஸேக்ஷம் ஷிதி மண்டலம் –ஆஸ்தே பாதால மூலஸ்த –ஸேஷோ அசேஷா ஸூரார்ச்சித –ஸ்ரீ விஷ்ணு புரா -2-5–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
    பாதாளே ப்யோப் யத ஸ்தாத் த்வாத்ரிம் ஸத் ஸஹஸ்ர யோஜநோ -(32000-)அநந்த -பாகவதம் -5 ஸ்கந்தம் -இவ் வாக்யம் ஸ்ரீ மத் பாகவதத்தில் காணவில்லை
    தஸ்ய மூல தேஸே த்ரிம்ஸத் யோஜந ஸாஹஸ்ராந்தர ஆஸ்தே யா வை கலா பகவத தாமஸீ சமாக்யாதா நந்த – என்று 5-24-1- இருக்கின்றன
    பாதாளாநாம் –இதி பூர்வோ தாஹ்ருதஸ் லோக வ்யாக்யானத்திலும் தஸ்ய இத்யாதி வாக்யத்தையே ஸ்ரீ விஷ்ணு சித்தரும் எடுத்து அருளினது –
    இவ் வாக்கியத்தில் அதிக சங்க்யா தோஷமும் காண்கிறது -சரியானபடி கண்டு கொள்க என்று ஸ்ரீ பாகவதத்தில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனுடைய தாமஸ மூர்த்தியாய் அநந்த ஸப்த வாஸ்யனான சேஷனானவன் தன் ஆயிரம் பணாங்களாலும் பாதாள ஸஹிதமான அசேஷ பூதளத்தையும் ஒரு புஷ்ப மாலையைத் தரிக்குமா போலே அநாயாசேன தரித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும்
    கல்பாந்தே யஸ்ய வக்தேரேப்யோ விஷாநல ஸிகோஜ்வல – சங்கர்ஷணாத் மகனான காலாக்நி ருத்ரனானவன் த்ரைலோக்ய ஸம்ஹார அர்த்தமாக இந்த மஹா ஷேத்ரனுடைய முகத்தில் நின்றுமிறே உத்பன்னனாய் ஜகத்தை ஸம் ஹரிப்பது –

    இது வரை கீழே உள்ள லோகங்களை விவரித்தார்
    இப் பாதாளங்களுக்கு மேலே 70000 யோஜனம் அகலத்தை யுடைத்தாய் ஸப்த த்வீப சாகர பர்வதாதி விஸிஷ்டமாய் பாதாசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய் பத்மகாரமான பூ மண்டலம் இருக்கும்
    யத் தத்தி கர்ணிகா மூலம் இதி ஸத் ஸம் ப்ரகீர்த்திதம் -தத் யோஜந ஸஹஸ்ராணாம் ஸப்த தீநாமத ஸ்ம்ருதம் -இதி வாயு புராண யுக்தே
    இந்த பூ பத்மத்துக்கு கர்ணிகை போல் கனக மயமான மஹா மேரு பர்வதமாய் இருக்கும் – இம்மேரு பூமிக்கு மேலே 84000 யோஜநம் உயர்த்திய யுடைத்தாய் -பூமிக்கு உள்ளே 16000 புதைந்து ஆக ஒரு லக்ஷம் யோஜனமாய் நிற்கும் -முப்பத்து ஈராயிரம் யோஜனை பரப்பை யுடைத்தாய் 16000 யோஜனை அடிப்பரப்பை யுடைத்தாய் அச்சு வெல்லத்தை அடி மேல் பண்ணினாப் போலே சதுரஸ்ரமுமாய் இருக்கும் -இம்மேருவுக்கு தெற்கே நிஷதம் என்றும் ஹேம கூடம் என்றும் ஹிமவான் என்றும் மூன்று வர்ஷ பர்வதமாய் இருக்கும் –
    மேருவுக்குக் கிழக்கே மால்யமான் என்றும் தெற்கே கந்த மாதநம் என்றும் வர்ஷ பர்வதங்களாய் இருக்கும் –
    அதற்குத் தெற்குக் கடை எல்லை பாரத வர்ஷம் –
    அதுக்கு அநந்தரம் கிம் புருஷ வர்ஷம்
    அதற்கு அநந்தரம் ஹரி வர்ஷம்
    மத்யமான மேருவைச் சூழ இலா வ்ருத வர்ஷம்
    மேருவுக்கு வடக்கே இலா வ்ருதத்தை அண்டை கொண்டு ரம்ய வர்ஷம்
    அதுக்கு அநந்தரம் ஹிரண்மய வர்ஷம்
    அதுக்கு அநந்தரம் கடை எல்லை உத்தர குரு வர்ஷம்
    மேருவுக்குக் கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
    மேற்கே கேது மூல வர்ஷம்
    என்று ஒன்பது வர்ஷமாய்
    ஜம்பூ த்வீப ப்ருதிவீ நவ கண்ட மாய் இருக்கும் –
    இவற்றிலே இலா வ்ருதம் பத்ராஸ்வம் கேது மூலம் ஒழிந்த ஆறு வருஷமும் ஓரொன்றும் ஒன்பதினாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் இருக்கும் –

    மத்யமான இலா வ்ருதம் மேருவைச் சூழ நாலு திக்கும் 9000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் மேரு ஸ்தானத்தோடே ஆயாம விஸ்தாரம் 34000 யோஜனையாய் சதுரஸ்ரமுமாய் இருக்கும் –
    கிழக்கு பத்ராஸ்ரவமும் மேற்கு கேது மூலமும் கீழ் மேல் முப்பத்தீராயிரம் யோஜனை நீளமாய் இருக்கும்
    பத்ராஸமம் கேது மூலமுமான வர்ஷங்களில் வர்ஷ பர்வதமான மால்யவானும் கந்த மாதநமும் ஆயிரமாயிரம் யோஜனை உயர்த்தியையும் நீளத்தையும் உடைத்தாய் இருக்கும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் 34000 யோஜனை நீளத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
    இதில் முதல் சொன்ன வர்ஷ பர்வதங்களின் நடுவாக மஹா மேருவை அணைந்த ஹேம கூடமும் ஸ்வேத பர்வதமும் 90000 –90000- யோஜனை நீளத்தை யுடையவையாய் இருக்கும்
    இவ்வாறு வர்ஷ பர்வதங்களும் தனித்தனியே 2000 யோஜனை உயர்த்தியையும் பரப்பையும் யுடையவைகளாய் இருக்கும் –
    இந்த மஹா மேருவில் நான்கு எல்லைகளிலும் 16000–16000-யோஜனை உயர்த்தியை யுடைத்தாய் இருக்கும்
    பூர்வே து மந்தரஸ் தஸ்ய தஷிணே கந்த மாதந –விபுல பஸ்சிமே பார்ஸ்வே ஸூ பார்ஸ்வஸ் சோத்தரே ஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புரா -3-2-18- என்கிறபடியே
    மந்த்ர பர்வதம் கிழக்காய் -கந்த மாதநம் தெற்காய் -விபுலம் மேற்காய் ஸூ பார்ஸ்வம் வடக்காய் இருக்கும்
    இவை கீலம் போலே மஹா மேருவை எல்லை யறாமல் பற்றி நிற்கையாலே விஷ்கம்பங்கள் (
    தடுப்புக்களாய்)என்று மேரோ தாரகா கீலா விஷ்கம்பா –பேராய் இருக்கும்
    இந்த பர்வதங்களின் மேலெ 1500 யோஜநம் உயர்த்திய யுடையவைகளாய்-அம் மலைத் தலைகளுக்குக் கோடித்த தண்டு போலே அலங்கார ரூபங்களாய் இருப்பனவான நாலு வ்ருக்ஷங்களாய் இருக்கும்
    அவைகளில் கிழக்குத் திக்கிலது கதம்பம் -தெற்கு திக்கிலது ஜம்பு -மேற்கு திக்கிலது அரசு -வடக்குத் திக்கிலது ஆலை
    இவைகளில் கிழக்கில் கதம்பையாவது ஸஹஸ்ரா லம்ப ஸாகா நிசயங்களாலும் மஹா ஸ்கந்தங்களாலும் உப ஸோபிதமாய் மஹா கும்ப ப்ரமாணங்களாய் விகசித கேஸரங்களாய் -ஸர்வ கால ஜங்களாய் -மஹா கந்தங்களான புஷ்ப வாஸனையாலே 1000 யோஜநம் பரிமிளிதமாய் பத்ராஸ்வ தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்

    தெற்குத் திக்கிலான ஜம்பு வ்ருக்ஷமானது மஹாஸாகோப ஸோபிதமாய் ஸதா புஷ்ப் பலா கீர்ணமாய் ம்ருது ஸ்வாதுக்களாய் மஹா கஜ ப்ரமாணமான பழங்கள் மலைத் தலையில் விழுந்து உடைத்து சாறாய் ஆறாய் ஜம்பூ நதீ என்று பேராய மேருவைச் சூழ ப்ரவஹியா நிற்கும்
    அதின் ரஸத்தை பாநம் பண்ணுகிற அத் தேச வாசிகளுக்கு -நஸ்வேதோ நச தவ் கந்த்யம் ந ஜரா நேந்த்ரியக்ஷய -என்றும்
    வேர்ப்பும் -வியர்வையும் -தவ்ர் கந்த்யமும் ஜரையும் இந்த்ரிய க்ஷயமும் உண்டாகாது
    அந்த ரசத்தாலே அந்தக் கரையில் ம்ருத்து ஸூத்த ஜாம்பூநதம் என்கிற பொன்னாய் ஸித்தாதிகளுக்கு பூஷணமாகா நிற்கும்
    இந்த ஜம்பு வானது ஜம்பூ த்வீ பத்தினுடைய நாமத்துக்கு ஹேதுவாம் படி ப்ரதாநமாய் இருக்கும் –

    மேற்கு திக்கிலான வ்ருக்ஷமானது -மஹாச்ச் ராய மஹாஸ்கந்தங்களை யுடைத்தாய் ஸர்வ காலீந மஹா கும்ப பிரமாண பலவத்தாய் கேது மூல தேசத்துக்கு கேது வ்ருஷமாய் இருக்கும்
    உத்தர திக்கில் வட வ்ருஷமும் விபுலோச்ச் ராய ஸ்கந்தோப ஸோபிதமாய் ப்ரவாள ஸத்ருஸ மஹா கும்ப பிரமாண பலங்களை யுடைத்தாய் உத்தர குரு தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்

    இந்த விஷ்கம்ப பர்வதங்கள் நாலுக்கும் புறம்பே -பூர்வம் சைத்ரரதம் நாம தக்ஷிணம் கந்த மாதநம் -வைப்பராஜம் பஸ்சிமே தத்வ துத்தரே நந்தநம் வநம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-25- என்கிறபடியே
    கிழக்கே சைத்ரரதம் என்றும் -தெற்கே கந்த மாதநம் என்றும் மேற்கே வைப்ராஜம் என்றும் வடக்கே நந்த நவநம் என்றும் நாலு வனமாய் இருக்கும்
    அதுக்குப் புறம்பாக -அருணோ தந்து பூர்வேண தஷிணே மாநஸம் ஸ்திதம் -சிதோதம் பஸ்சிமே மேரோ -மஹா பத்ரம் ததோத்தரே –லிங்க புரா -பு பூ 49-38- என்கிறபடியே
    கிழக்கிலது அருணோதம் என்றும் தெற்கே மாநஸ ஸரஸ் என்றும் மேற்கே ஸிதோதம் என்றும் -வடக்கே மஹா பத்ரம் என்றும் நாலு சரஸ்ஸாய் இருக்கும்
    அருணோத ஸர பூர்வம் தக்ஷிணம் மாநஸம் ஸ்ம்ருதம் -ஸிதோதம் பஸ்சிம ஸரோ மஹா பத்ரம் ததோத்தரம் – என்று லிங்க வாராஹாதி புராண பாடம் –

    இதுக்குப் புறம்பே சிதாந்த குமுதஸ் சைவ கர வீரா சலோத்தம மஹா நிலோத குஞ்ஜாஸ் ச மாஷாக்யஸ் சாச லோத்தம -வீருங்கோ மணி ஸ்ருங்கஸ் ச ஸ பிந்துர் மந்தரஸ் ததா வேணுமாம் ச ஸ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வதா -லிங்க பு பூ -43-42-43–
    சிதாம்பஸ் ச குமுத் யாம்ஸ் ச குரரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்க ப்ரமுகா மேரோ பூர்வத கேஸராஸவா இதி -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-27-
    பாட சிதாந்தஸ் ச குரண்டஸ் ச குரரஸ் சாசலோத்தம விகாரோ மணி சைலஸ் ச வ்ருஷ வாம்ஸ் சாச லோத்தம – மஹா நீலோத ருசக ஸ பிந்துர் தர்து ரஸ் ததா -வேணுமாம்ஸ் ச ஸூ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வத -இதி லிங்க பாட -49-1-
    சிதாந்தஸ் ச குமத்வாம்ஸ் ச குவரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்கோமணி ஸைலஸ் ச ருக்ஷவாம்ஸ் சாச லோத்தம —-ஸ பிந்துர் மந்தரஸ் ததா -இதி கௌர்ம புராண பாட -பூ -44-
    சிதாந் தஞ்ச குமுஜ் ஐஸ் ச ஸூ வீரஸ் சா ச லோத்தம -வி கங்கோ மணி ஸீலஸ் ச வ்ருஷபஸ் சா ச லோத்தம –இதி வாயு புராண பாட -பூ -36-18-
    அந்யத்ராபி பஹு தா பாடாந்தர முப லப்யதே நாம பேத மத்ரேண கோ அபி ந விரோத இதி பாதி ஏவம் அந்யத்ர அபி த்ரஷ்டவயம் -என்கிறபடியே
    சிதாந்தம் முதலான இப் பர்வதங்கள் மேருவுக்குக் கிழக்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும்

    மானஸ சரஸ்ஸுக்குப் புறம்பே -ஸைலஸ் த்ரி ஸிரஸஸ் சைவ சிகரஸ் சா ச லோத்தம கபிங்கஸ் ச பதங்கஸ் ச ருசகஸ் சைவ ஸாநுமாந் -தாம் ராபஸ் ச விசாலஸ் ச ததா ஸ்வேதோதரோ கிரி -ஸூ மூலோ வஸூ தாரஸ் ச ரத்ந தாரஸ் ச பர்வத -ஏக ஸ்ருங்கோ மஹா மூ ஸூலோ கஜஸைல பிஸாசக –பஞ்ச ஸைலஸ் ச கைலாஸோ ஹிமவாம்ஸ் சா ச லோத்தம –லிங்க புரா -49-46-47-48-வாயு ச பூ 36-22-24- என்கிறவை தெற்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும் –

    ஸிதோ தத்துக்குப் புறம்பே கபில பிங்க லோ பத்ர ஸூரஸஸ் ச மஹா சல குமுதோ மது மாம்ஸ் சைவ அஞ்ஜநோ மகுடஸ் ததா -க்ருஷ்ணஸ் ச பாண்டரஸ் சைவ ஸஹஸ்ர சிகரஸ் ததா -பாரிஜாதஸ்ய சைலேந்திர ஸ்ரீ ஸ்ருங்கஸ் சா ச லோத்தம –லிங்க புரா பூ 49-50-51- என்கிற கேஸரபர்வதங்கள் மேருவுக்கு மேற்காய் இருக்கும்

    மஹா பத்ரத்துக்குப் புறம்பே -சங்க கூடோ மஹா சைலோ வ்ருஷ போஹம் ஸ பர்வத நாகஸ் ச கபிலஸ் சைவ இந்த்ர சைலஸ் ச ஸா நுமாந் -நீல கண்டக ஸ்ருங்கஸ் ச சதசிருங்கஸ் ச பர்வத புஷ்கரோ மேக சைலஸ் ச விரஜஸ் சா ச லோத்தம -ஜாருதிஸ் ச த்ரி ஸ்ருங்கஸ் ச இத்யேத உத்தராஸ் ஸ்ம்ருதா -லிங்க புரா -49-54-55- என்கிற கேஸர பர்வதங்கள் மேருவுக்கு வடக்காய் இருக்கும் –

    இவற்றில் நிஷதாதிகள் வர்ஷ பர்வதங்களாகச் செய்தேயும் கேஸரங்களிலும் அந்தர் பவிக்கும்-இவ்வர்ஷ பர்வதங்கள் அவ்வோ வர்ஷ பர்வதங்களுக்கு எல்லைகளாய் இருக்கும் -இதில் கிழக்கில் மால்யவானும் -மேற்கில் கந்த மாதனமுமாகிற வர்ஷ பர்வதங்கள் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை உடைத்தாய் இருக்கும்
    பத்ராஸ்வமும் பாரதமும் கேது மூலமும் உத்தர குருவும் மர்யாதா சைலங்களுக்குப் புறம்பான இந்நாலு வர்க்ஷ பர்வதங்களும் பூ பத்மத்துக்கு சதுர் தளங்களாய் இருக்கும் மர்யாதா சைலங்களாவன -கீழை திக்கில் பத்ராஸ் வத்துக்கு மர்யாதைகளான வர்ஷ பர்வதமான மால்யவானோபாதி ஜடரமும் தேவ கூடமும் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை யுடைத்தாய் இருக்கும் -தெற்குத் திக்கில் கந்த மாதநமும் கைலாசமும் ஹிமவானோபாதி இரண்டு கடலுக்கு நடுவு கீழை எல்லை இரண்டு கடலையும் தட்டி-தாண்டி – 80000 யோஜநம் நீளமாய் இருக்கும் -மேலை திக்கில் நிஷதமும் பாரியாத்ரமும் வர்ஷ பர்வதமான கந்த மாத நத்தோபாதி ஆ நீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளமாய் இருக்கும் -இதில் கிழக்கு மேற்கு தென் வடக்கு நீளமான பர்வதங்கள் 34000 யோஜனமாய் இருக்கும் வடக்குத் திக்கில் மர்யாத சைலங்களான த்ரி ஸ்ருங்கமும் ஜாருதியும் கீழை மேலை இரண்டு கடலுக்கு நடுவு ஸ்ருங்க வானோடொத்த 80000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் தட்டி தாண்டி இருக்கும்

    பத்ராஸ் வத்துக்கு கேது வ்ருக்ஷமான கதம்பத்தடியிலே ஹயக்ரீவ ரூபியாயும் -பாரத வருஷத்துக்கு கேது வ்ருஷகமான ஜம்புவின் அடியிலே கூர்ம ரூபியாயும் -கேது மூலத்துக்கு கேது வ்ருக்ஷமான பிப்பலத்தடியில் வராஹ ரூபமாகவும் உத்தர குருவுக்கு கேது வ்ருக்ஷமான ந்யக்ரோதத் தடியிலே மத்ஸ்ய ரூபமாயும் ஸர்வேஸ்வரன் ஸமாராதனம் கொண்டருளும் -அல்லாத வர்ஷங்களில் தத் தத் அநு ரூபமான ஸமஸ்த ரூபங்களாலும் ஸமாராதானம் கொண்டு அருளும்

    ஏவம் பூதமான பூ பத்மத்துக்கு கர்ணிகாகாரமான மஹா மேருவின் தலையிலே 14000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் ப்ரஹ்மாவினுடைய படை வீடாய் இருக்கும் -இதுக்கு எட்டுத் திக்கிலும் லோக பாலகராய் இந்த்ராதிகளான எண்மருக்கும் படை வீடாய் இருக்கும் -இதில் ப்ரஹ்மாவின் படை வீட்டைச் சூழ திரி விக்ரமன் திருவடி விளக்கின தீர்த்தமான கங்கை விழுந்து நாலு திக்கிலும்
    சிதை என்றும்
    அலக நந்தை என்றும்
    சஷு என்றும்
    பத்ரை என்றும்
    நாலு ஸ்ரோதஸ்ஸாய் ப்ரவஹிக்கும்

    அதில் கீழைத் திக்கில் -சிதை மலைத் தலைகளால் ஆகாசத்தில் கிளம்பி பத்ராஸ் வத்திலே சென்று கடலிலே பிரவேசிக்கும்
    தெற்கில் அலக நந்தை முன்னே த்ருவ பதத்தில் சென்று த்ரை லோக்யத்திலும் வந்து ஊர்தவே மந்தாகிநீ -என்றும் அதோ போகவதீ என்றும் -காம் கதேதி கங்கா என்றும் சொல்லப்பட்டு ப்ரவாஹ த்ரயத்தை யுடைத்தாய் த்ரிபதகையாய் ப்ரவஹித்து பூ லோகத்தில் ப்ரவாஹம் ருத்ரன் தலையிலே விழுந்து ஏழு வகையாய் ப்ரவஹித்து கீழே சகர புத்ரர்களையும் உத்தரிப்பித்துக் கடலிலே பிரவேசிக்கும்
    மேலை திக்கில் சஷு வானது பர்வத சிகரங்களாலே கேது மூலத்தில் சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்
    வடக்கில் பத்ரையானது பர்வதங்களாலே உத்தர குருவிலே சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்

    இம் மஹா மேருவுக்குக் கீழை திக்கிலே கேஸர பர்வதங்களான சிதாந்த குமுத பர்வதங்களின் நடுவே 300 யோஜநம் நீளமாய் 100 யோஜனை அகலமான தொரு த்ரோணி சரச மல பா நயமான ஸ்ரீ ஸரஸ்ஸாய் இருக்கும் – அது த்ரோண பாத்ர (சிவம் த்ரோணம் அளவுகோல்கள்)ப்ரமாணமான புண்டரீக ஷண்டங்களாலும் ஹம்ஸ காரண்ட வாதி பக்ஷி சங்கங்களாலும் விளங்கா நின்று கொண்டு ஸரோ மத்யத்திலே சத ஸஹஸ்ர தள பத்ம வந மத்யே கோடி தள யுக்த ஸ்வர்ண பங்கஜ கர்ணிகார் கூடையாய் ஸாஷாத் லஷ்மி இரா நிற்கும் -அந்த பில்வ வனம் 100 யோஜனை விஸ்தீர்ணமாய் 100 காதம் நீளமாய் ஸாகா ஸஹஸ்ர கலிதார்த்த க்ரோஸ பிரமாண (1 க்ரோசம் 2 மைல்)மஹா வ்ருஷ க்ஷண்ட மஹா கும்ப பிரமாண ஸூகந்தி ஸ்வாது பலவத்தாய் ஸ்ரீ வனம் என்று சொல்லப்படும் -அங்கேயே ஸ்ரீ யானவள் ஸித்த சங்க நிஷேவிதையாய் இருக்கும்

    பின்னையும் வைகங்க மணி சைலாந்தரத்திலே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி ஸத ஆயாம யுக்த த்ரோணி விமல பங்கஜ (வெண் தாமரை)வன ஸோபிதமாய் இருக்கும் -தத் தீரத்தில் அதி மாத்ர ப்ரமாணமான ஸதா புஷ்ப பலவத்தாய் மஹாஸ் கந்தோப ஸோபி தார்த்த க்ரோஸோச் ச வ்ருஷ ஷண்டங்களின் நடுவே கஸ்யபனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்

    பின்னையும் மஹா நீல குமுஜ்ஜ சைலாந்தரே பத்ம ஷண்டோப ஸோபிதமாய் ஸூக நதீ என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலும் பஞ்சா ஸத் யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதார்த்த க்ரோஸோச் சதாள வனமாய் இருக்கும் -ஐராவத தேவ சைலாந்தரே வ்ருஷ வீருத வர்ஜிதமாய் பாத மாத்ர பிரமாண ஸவிலா வ்ருதமாய் ஸஹஸ்ர யோஜந ஆயாம சத யோஜந விஸ்திருதைக சிலாதல பூமி -ஐராவத கஜஸ்ய க்ரீடா சிலாதலமாய் இருக்கும் –

    மேருவுக்குத் தெற்கே கேஸர பர்வதங்களான த்ரிஸர பதங்க யோர் மத்யே –ஸிஸிர பதங்க -என்று வாயு பு பூ -38-2-வராஹ பு 80-1–ப்ரசன்னா ஸ்வாது சலிலமாய் பஹு தகம் -பஹுதகா நத்யோ வஹந்தி -என்று வராஹ பு -80-3-என்கிற நதீ ப்ரவஹிக்கும் –தத் தீரத்திலேகோஸத்திலே -தத் தீரத்திலே சத யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதமாய் -எண்டு பாடம் காண்கிறது –வாராஹாதி புராணங்களில் சத யோஜந விஸ்த்ருதம் என்றே இருக்கிறது
    சத் யோஜந விஸ்த்ருதமாய் ப்ருது ஷே போச்ச யவ்தும்பரா வனம் –ப்ருது ஷேபோச்ச சிகரை –இதி வாயு புராண -38-3- அநு சாரேண த்ருத இஷுஷேப- என்று வராஹாதி பு -80-1-
    சர்வர்த்துஜ ப்ரவாள ஸத்ருச மஹா கும்ப பிரமாண பலோப ஸோபிதமாய் கர்த்தம ப்ரஜாபதிக்கு ஆஸ்ரமாய் இருக்கும் –
    தாம்ராப பதங்க சைல யோரந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத ஆயாம யுக்தமாய் பால ஸூர்ய சங்காச ரக்தோத் பல ஸோபிதமாய் மஹத் ஸரஸ்ஸாய் இருக்கும் -அந்த ஸரோ மத்யே சத யோஜந உந்நதமாய் த்ரிம் ஸத் யோஜநம் விஸ்தீர்ணமாய் இருபத்தொரு கிரி சிகரத்திலே ரத்ன பிரகார தோரணோல் லசிதமான வித்யாதர புரமாய் இருக்கும்-

    விசாகாசல ஸ்வேத பர்வத யோரந்தரே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோஜந ஆயாமமான ஸரஸ் தீரத்திலே மஹதாம்ர வனம் (மாந்தோட்டம்)-கநக சங்காஸாதி ஸூ கந்த மஹா கும்ப மாத்ர பலோப ஸோபிதமாய் இருக்கும் –
    ஸூமுலாச லேந்த்ர வஸூதாரயோர் மத்யே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோனாயாதமாய் வில்வஸ்தவி என்கிற வனம் இருக்கும் என்று இப்படியும் ஒரு வாக்யம் இங்கிருக்க வேணும் என்று ஸூமுலஸ்யாச லேந்த் ரஸ்ய வஸூ தாரஸ்ய சாந்தரே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணே பஞ்சாஸத் யோஜநாயதே -வில் வஸ்தலீ நாம -என்று வராஹ புராணத்திலும் -அது -80-வாயு புராணத்திலும் -பூ 38-23- இருக்கையாலே தோற்றுகிறது
    வஸூ தார ரத்நதாரயோர் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் -வராஹ புராணத்தில் அது -80- வஸூதார ரத்ந தாராயோர் மத்யே விம்சத் யோஐந விஸ்தீர்ணம் என்று பாடம் காண்கிறது -வாயு புராணாதிகளில் -பூ 38-27-த்ரிம் ஸத் யோஜனை என்றே பாதாம் – சத யோஜநா யாமமான ஸூ காந்தி கிம் ஸூக வனமாய் இருக்கும் -ஸார்வ காலீ ந ஸூ கந்த கிம் ஸூக வந புஷ்ப ஆமோதம் சத யோஜநம் வாஸியா நிற்கும் -அதிலே ஆதித்யனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்
    இவ்விடத்தில் பஞ்ச கூடஸ்ய கைலாஸஸ்ய சாந்தரே ஸஹஸ்ர யோஜநா யாமம் விஸ்தீர்ணம் சத யோஜநம் ஹம்ஸ பாண்டூரம் ஷூத்ர ஸத் வைர நாத் ருஷ்யம் ஸ்வர்க்க ஸோபாந மிவ பூ மண்டலம் –

    அத பஸ்சிமதி க்பாகே —-ஸூ பார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே சமந்தாத் யோஜந சதமேகம் பவ்ம சிலாதலம் நித்யதப்தம் துஸ் ஸ்பர்சம் -என்கிற வாராஹ புராண -அது 80- ப்ரகரண வாக்ய அநு சாரேண -சில வாக்யங்கள் வேணும் – தாள கோசங்களில் இல்லை -ஆகையால் புராண அநு சாரேண வாக்யங்களைச் சேர்த்துக் கொண்டு அநு சந்திக்கவும் –

    மேருவுக்கு மேற்கே கேஸர பர்வதங்களான ஸூபார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே ஆயாம விஸ்தாரம் சத யோஜநம் வஹ்நி சந்தப்தஸ்தலம் துஸ் ஸ்பர்சமாய் இருக்கும் -தன் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணம் வஹ்நி மண்டலமாய் இருக்கும் -அதிலே லோக க்ஷய காரியான ஸம்வர்த்தக அக்னி இந்தநம் இல்லாதே ஜ்வலியா நிற்கும்

    அநந்தரம் குமுதாஞ்ஜந யோர் மத்யே புண்ய ஹ்ரதம் என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலே ஸதா பலித பீத வர்ண மஹா பலாவ்ருத மாதுளங்க வனம் தச யோஜந விஸ்தீர்ணமாய் இருக்கும்
    மாதுளங்க ஸ்தலீ தத்ர ஹ்யா யாமா தச யோஜநா -என்று வாயு புராணே -பூ 38-42- வாராஹேது -அது-80- அந்தரே ச சைல வரயோ குமுதாஞ்ஜந யோஸ் சத யோஜந விஸ்தீர்ணா மாதுலங்க கஸ்தலீ ஸர்வ ஸத்வா நாம கம்யா பீத வர்ணை பலைராவ்ருதா ஸாஸ்தலீ ஸோபதே -தத்ர ச புண்யோ ஹ்ரதஸ் ஸித்தை ருபேத ப்ருஹஸ் பதேஸ் தத் வனம் -இதை பாடம்
    அதிலே ப்ருஹஸ்பதிக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

    பிஞ்சரம் கௌர சைலேந்தரே -அநேக சத யோஜந ஆயாம விஸ்த்ருத மஹாத் ரோணி ஸரஸ்ஸாய் இருக்கும் –பிஞ்சர கௌர யோரந்தரே ஸரோத்ரோண்யோ ஹ்யநேக சத யோஜநா யாதா –இதி வாராஹே -அது -80-
    பங்கஜ க்ஷண்ட சம்யுக்தமானவதிலே விஷ்ண்வாயதந மாய் இருக்கும்

    க்ருஷ்ண பாண்டர ஸைலாந்தரத்திலே வ்ருஷ வீருத் விவர் ஜிதமாய் த்ரிம்சத் யோஜந விஸ்தீர்ணமாய் நவத்யாதமான நிஷ் கம்பா தீர்க்கிகையாய் இருக்கும் -அதிலே பஞ்ச யோஜந விஸ்தீர்ணமான ந்யக்ரோதம் ஸரோ மத்யே நிற்கும் -க்ருஷ்ண பாண்டு ராயோரபி த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணம் நவத் யாயத யோஜநம் –இதி வாயு பு பூ 38-49-ஸூக்ல பாண்டு ராயோரபி இதி வாராஹபு -அது -80-அவ் வ்ருக்ஷத்தில் சந்த்ர ப்ரபனாய் ஸஹஸ்ர வதநன் என்கிற எம்பெருமான் யஷாதிகளாலே ஆராதிக்கப்படும்

    தஸ் யாஸ் ச மத்யே பஞ்ச யோஜந ப்ரமாணோ ந்யக்ரோதோ வ்ருஷ தஸ்மிம் ஸ் சந்த்ர ஸேக ரோமா பதிர் நீல வாஸாஸ் ச தேவோ நிவஸதி யஷாதி பிரீட்யமாந -இதி வாராஹே -அது 80- வாயு புராணே ச மத்யே தஸ்யாஸ் ச பத்மின்யா பஞ்ச யோஜந மண்டல -ந்யக்ரோதோ விபுலஸ் கந்தோ ஹ்யநேகாரோஹ மண்டித -தத்ர சந்த்ர ப்ரப ஸ்ரீ மான் பூர்ண சந்த்ர நிபாநந ஸஹஸ்ர வதநோ தேவோ நீல வாஸாஸ் ஸூராரிஹா பத்ம மால்ய தரஸ் தல்யாம் மஹா பாகோ அபராஜித-இஜ்யதே யக்ஷ கந்தர்வை வித்யாதர கணைஸ் ததா தஸ்மிந் ஆயதநே ஸாஷாத் அநாதி நிதநோ ஹரி -பத்மோ பஹாரைர் விவிதை இஜ்யதே ஸித்த சாரணை -இதி -பூ 38-55-58–

    ஸஹஸ்ர சிகர குமுதாந்தரத்திலே பஞ்சாஸத் யோஜந விஸ்த்ருதமாய் -இஷுஷே போச்சமான மது ஸ்ரவ பலோப ஸோபிதமான வனம் –பஞ்சாஸத் யோஜந ஆயாமம் விம்சத் யோஜந விஸ்த்ருதம் இஷுஷே போச்ச சிகரம் இதி வாராஹே –80- ததா ஸஹஸ்ர சிகர குமுதஸ் யாந்தரேண ச பஞ்சாஸத் யோஜநா யாமம் த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதம் –இஷு ஷே போச்ச சிகரம் –இதி வாயு பு பூ 38-60–சந்திரனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும் –

    சந்த்ரஸ்ய மஹா நாஸ்ரம –இதி வாராஹே ஸூக்ரஸ்ய இதி வாயு பு-மேருவுக்கு வடக்கே கேஸர பர்வதங்களான சங்க கூட நிஷதங்களுக்கு நடுவே புருஸ் தலம் –புருஷஸ்தலீ இதி வாராஹே புருஷஸ்தலீ இதி வாயு பு – என்று பேரை யுடைத்தாய் அநேக யோஜந விஸ்த் ருதமாய் அத் யுச்சராய வ்ருஷ ஷண்டங்களை யுடைத்தாய் மஹோத்ரிக்த கஜங்களை யுடைத்தாய் இருக்கும் -கபிஞ்ஜல நாக சைல யோந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத யோஜநா யாதமாய் ஸ்வாது பல ஸம் புஷ்டத்ராஷா கர் ஜுர வனமாய் இருக்கும்

    புஷ்க்ரமேக சைல யோரந்தரே சத யோஜனா யதமாய் ஷஷ்டி யோஜந விஸ்த்ருதமாய் தரு குல்ம லதாஹீநமாய் பாணி தல ப்ரக்யமான சிலா தலமாய்
    இருக்கும் -அதனுடைய நாலு பார்ஸ்வத்திலும் மஹா விஸ்த்ருதமான நாலு சரஸ்ஸும் நாலு வனமுமாய் இருக்கும்

    கேஸர மர்யாதவர்ஷ பர்வதங்களின் மேலே அஷ்ட வித தேவ ஜாதிகளுக்கும் படை வீடு களாய் இருக்கும் -இந்த பாரதம் ஒழிந்த எட்டு வர்ஷமும் பவ்மமான ஸ்வர்க்கங்கள் என்னலாம் படி போக பூமியாய் பாப காரிகளுக்கு ப்ரவேஸ யோக்யம் இன்றிக்கே அதி ஸயித ஸூக கரங்களாய் அநு பவிதாக்களான புருஷர்கள் 16000-பன்னீராயிரம் வயஸ்ஸுக்களில் இருந்து அநுபவிக்கலாம் படி ம்ருத்யு பயமற்று இருக்கும்
    இவ் வர்ஷங்கள் தனித் தனியே ஸப்த குல பர்வதங்களும் நதிகளும் தேச விபாகங்களும் யுண்டாய் இருக்கும்

    அப்படி யன்றி இந்த பாரத வர்ஷம் கர்ம பூமியாய்- ஸ்வர்க்க மோக்ஷ பலன்களுக்கு சாதன அநுஷ்டானம் பண்ணுகைக்கு ஸ்தலமுமாய் -நிஷித்த அநுஷ்டானங்களாலே நரக ப்ரவேசத்துக்கும் திர்யக் யோநி ஜாதிகளுக்கும் ஹேதுவாய் -அதிசயித புண்ய ஆர்ஜிதத்துக்கும் ஹேதுவான ஸ்தலமாகையாலே தேவாதிகளும் ஆசைப்படும் படி நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கும் –

    அத்ர ஜன்ம சஹஸ்ராணாம் ஸஹஸ்ரை ரபி சத்தம -கதா சில் லபதே ஐந்து மாநுஷ்யம் புண்ய சஞ்சயாத் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-23- என்று ஆயிரம் கோடி ஜென்மம் புண்யத்தைத் திரட்டினால் இந்த தேசத்திலே ஒருக்கால் மநுஷ்யனாய்ப் பிறக்கப் பெறும் என்னும் படியாயும் -காயந்தி தேவாகில கீதகாநி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே ஸ்வர்க்காப வர்க்காஸ் பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷா ஸூரத்வாத் கர்மாண்ய ஸங்கல்பித தத் பலாநி சந்யஸ்ய விஷ்ணவ் பரமாத்ம ரூபே அவாபியதாம் கர்ம மஹீம நந்தே தஸ்மிந் லயம் யே த்வமலா ப்ரயாந்தி -ஜாநீம நைதத் க்வ தே மநுஷ்யா யே பாரதே நேந்த்ரிய விப்ர ஹீநா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-24-26- என்று
    ஸ்வர்க்க வாசிகளான தேவர்களும் ஸ்வர்க்க மோஷங்கள் இரண்டையும் அடைகைக்கு மார்க்க பூதமான பாரத பூ பாகத்திலே தேவத்வத்தை விட்டுப் போய்ப் பிறக்கிறவர்கள் தன்யர் என்றும் –அந்த பாரதமாகிற கர்ம பூமியைப் பெற்று பல ஸங்கல்பங்களை ஒழிந்த கர்மங்களை பரமாத்மாவான விஷ்ணுவின் பக்கலிலே ஸமர்ப்பித்து நிர்மலனாய் அபரிச்சின்னனானவன் பக்கலிலே யாவர் சிலர் ஏகீ பாவத்தை அடைகிறார்கள் -அவர்கள் தன்யர் என்றும்- இந்த ஸ்வர்க்க ப்ரதமான கர்மம் லயித்து அவ் வளவிலே அவ் விடத்திலே தேஹ ஸம்பந்தத்தை நாம் அடைகிறோம் என்று இருக்கிலோமே -பாரத வர்ஷத்திலே ஜிதேந்தியராய்க் கொண்டு இருக்கிறார்கள் யாவர் சிலர் -அந்த மநுஷ்யர் தன்யர் இறே -என்றும் -அவர்கள் அங்கிருந்து பாடும்படியாயும் இறே இத் தேசத்தில் வைபவம் இருப்பது

    இந்த பாரத வர்ஷம் நவ பேதமாய் இருக்கும் -அவையாவன –
    1-இந்த்ர த்வீபம்
    2-கஸேரு
    3-தாம்ர பர்ணம்
    4- கபஸ்தி மாந்
    5- நாக த்வீபம்
    6-சவும்யம்
    7-கந்தர்வம்
    8-வாருணம்
    9- பாரதங்கள்
    இவற்றில் பாரதம் ஒழிந்த எட்டும் கடலுக்கு உள்ளாய் தென் வடல் ஆயிரமாயிரம் யோஜனமாக பாரதம் கூட்டி சாகராந்தரிதங்களான த்வீபங்கள் ஒன்பதாய் இருக்கும் -இந்த பாரத வர்ஷம் -மஹேந்த்ரோ மலயஸ் ஸஹ்ய ஸூக்திமாந் ருஷ பர்வத விந்த்யஸ் ச பாரியாத் ரஸ்ச சப்தாத்ர குல பர்வதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-3- என்று மஹேந்த்ரம் முதலான ஏழு குல பர்வதத்தை யுடைத்தாய் இருக்கும்

    அவைகளில் கங்கா -ஸிந்து – ஸரஸ்வதீ சதத்ரூ சந்த்ர பாகை முதலான ஆறுகள் ஹிமவத் பர்வதத்திலே பிறந்தன–வேகவதி முதலானவை ஸூக்திமாந் பர்வதத்திலே பிறந்தன -நர்மதை ஸூரஸை முதலானவை ருக்ஷ பர்வதத்திலே பிறந்தன
    நர்மதா ஸூர ஸாத்யாஸ் ச நத்யோ விந்த்ய விநிர் கதா தாபீ பயோஷ்ணீ நிர் விந்த்யா ப்ரமுகா ருஷ ஸம்பவா என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -2-3-11-இருக்கையாலே அப்படியே இவ்விடத்திலும் பாடம் கொள்ள வேண்டும் –
    தாபீ பயோஷ்ணீ முதலான ஆறுகள் விந்த்ய பர்வதத்தில் பிறந்தன கோதாவரீ பீமரதி முதலான நதிகள் ஸஹ்ய பர்வதத்திலே பிறந்தன -க்ருத மாலை தாம்ர பர்ணீ துடைக்கமான ஆறுகள் மலய பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -ருஷீகா குமாரை முதலான நதிகள் ஸ்ரீ ஸூக்திமத் பர்வதத்திலே பிறந்தன

    இந்த பாரத வர்ஷத்திலே க்ருத -த்ரோதா -த்வாபர -கலி யுகங்களாகிற யுக பேதத்தால் யுண்டான வேறுபாடு உள்ளது -போக பூமி யாகையாலே அல்லாத எட்டு வர்ஷங்களுக்கு இவையில்லை -நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைய இந்த ஐம்பூ த்வீ பத்தை நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் வலயா காரமான லவண ஸமுத்ரம் ஆவரித்து இருக்கும் -இப்படி ஜம்பூ ப்லஷாஸ் ஸால் மலிஸ் ச குஸ கிரௌஞ்சவ்வ ததைவ ச -சாகஸ் ச புஷ்கரஸ் சேதி ஸப்த த்வீபா ப்ரகீர்த்திதா -கா பு பூ -45-4- என்று காருட புராணத்திலும்
    ஜம்பூ ப்லஷா ஹ்வயவ் த்வீபவ் ஸால்ம விஸ் சாபரோ த்விஜ -குமஸ் ததா க்ரவஞ்ச ஸாக புஷ்கரஸ் சைவ சப்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5- என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப்பட்ட ஸப்த த்வீ பங்களையும் -ஏதே த்வீபாஸ் ஸமுத்ரைஸ் து ஸப்த ஸப்தபி ராவ்ருதா -லவணே ஷுஸாரா சர்ப்பிர் ததி துக்த ஜலைஸ் சமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-6- என்று சொல்லுகிறபடியே த்வீப சமங்களான லவணாதி ஸமுத்ரங்களும் ஸப்த த்வீ பங்களையும் ஆவரித்து இருக்கும் -அதில் ஜம்பூ த்வீபா வரணமான லவண சமுத்திரத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ப்லஷ த்வீ பம் ஆவரித்து இருக்கும் –

    அந்த ப்லக்ஷ த்வீபமும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே
    1-சாந்தா பயம் என்றும்
    2-ஸஸிரம் என்றும்
    3-ஸூ கதம் -ஸூமுகோதயம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
    4-ஆனந்தம் என்றும்
    5-சிவம் என்றும்
    6-ஷேமகம் என்றும்
    7-த்ருவம் என்றும் ஏழு வர்ஷமாய் இருக்கும் –
    இவற்றில்
    1- கோமேதம் என்றும்
    2-சந்த்ரம் என்றும்
    3- நார்த்தம் என்றும்
    4- துந்துபி என்றும்
    5- ஸோ மகம் என்றும்
    6- ஸூநாவம் -ஸூமநா -இதை புராணம் -என்றும்
    7-வைப்ராஜம் என்றும் ஏழு வர்ஷ பர்வதமாய் இருக்கும்
    இப்பவாதங்களிலே பிறந்து சமுத்ர காமிநிகளான நதிகள்
    1-அநு தப்தை-என்றும்
    2- ஸிகி என்றும்
    3- விபாயை என்றும்
    4- த்ரிதிவை என்றும்
    5-க்லமை என்றும்
    6-அம்ருதை என்றும்
    7- ஸூக்ருதை என்றும் பாப ஹரைகளான இவைகள் ஏழும் இருக்கும்

    இவ் வேழு வர்ஷத்திலும்–யுக பேத வ்யவஸ்தைகள் இல்லை -ஸர்வ காலமும் த்ரேதா யுக ஸமானமாய் இருக்கும் -இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்களுக்கு ஆர்யர்கள் குரர்கள் விதேஸ்யர்கள் -விதம் ஸத்துக்கள் பாவிகள் என்று பேராய் இருக்கும் -இவர்களுக்கு யுக பேதங்களாலே வரும் ஹ்ராஸ வ்ருத்த் யவஸ்தைகளும் இல்லை

    இந்த ப்லக்ஷ த்வீபம் தொடங்கி ஸாக த்வீபம் ஈறாக ஐந்து த்வீ பத்திலும் மனுஷ்யர் நோயற்று 5000 வயஸ்ஸு புகுருவர்கள் -வர்ணாஸ்ரம அநு ரூபமான தர்மங்களும் அவிகலமாக நடக்கும் -ஜம்பூ த்வீ பத்தில் ஜம்புவோ பாதி பிரமாணத்தை யுடைத்தாய் இருந்த ப்லக்ஷ த்வீ பத்தினுடைய மத்யத்திலே நிற்கும் -இந்த த்வீ பத்தில் ஸோம ரூபியான ஸர்வேஸ்வரன் அந்த ப்ராஹ்மணாதி களாலே ஆராதிக்கப்படா நிற்கும் -இந்த ப்லக்ஷ த்வீ பத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான இஷுரஸாத் மகமான ஸமுத்ரம் ஆவரித்த இருக்கும்

    இந்த இஷுர சாத்மகமான ஸமுத்ரத்தை இதிலிரட்டு நாலு நூறாயிரம் பரப்பை உடைத்தான் ஸால் மலி த்வீ பம் ஆவரித்து இருக்கும் -அதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
    1-ஸ்வேதம்
    2-ஹரிதம் என்றும்
    3-ஜீமுதம் என்றும்
    4-ரோஹிதம் என்றும்
    5-வைத்யுதம் என்றும்
    6- மாநஸம் என்றும்
    7- ஸூப்ரபம் என்றும் பெரி யுடையவையாய் இருக்கும்
    இவற்றில் வர்ஷ பர்வதங்கள் ரத்ந உத்பத்தி ஸ்தா நமாய்க் கொண்டு
    1-குமுதம்
    2-உன்னரம்
    3-பலாஹகம்
    4- மஹவ்க்ஷதி ஸ்தானமான த்ரோணம் என்றும்
    5- கங்கம் என்றும்
    6- மஹிதம் என்றும்
    7- ககுத்மாந் என்றும் ஏழுமாய் இருக்கும்

    இவற்றில் ஆறுகளும்
    1- யோநி என்றும்
    2- தோயை என்றும்
    3-வித்ருஷணை என்றும்
    4- சந்த்ரை -என்றும்
    5-ஸூக்லை என்றும்
    6-விமோசநி என்றும்
    7- நிவ்ருத்தி என்றும் ஏழாய் இருக்கும்
    இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -கபிலர்கள் என்றும்
    அருணர் என்றும் பீதர் என்றும் கிருஷ்ணர் என்றும் பேராய் வாயு சரீரியான பகவானை அங்கே ஆராதிப்பர்கள்
    இந்த ஸால் மலி த்வீ பம் என்கிற பேருக்கு ஹேதுவான ஸால் மலமாகிற வ்ருக்ஷம் முன்பு சொன்ன ஜம்பு ப்லஷங்களோ பாதி த்வீப நிர்வாஹக மாயிருக்கும் -இந்த ஸால் மலி த்வீ பம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான மதுர சாத்மகமான ஸமுத்ரத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும்

    இந்தக் கடல் இதிலிரட்டியான எட்டு நூறாயிரம் யோஜநம் குஸ த்வீ பத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்
    இதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன –
    1-உத்பிதம் என்றும்
    2-வேணுமான் -என்றும்
    3-ஸ்வைரதம் -என்றும்
    4- லம்ப நம் என்றும்
    5-த்ருதி என்றும்
    6-ப்ரபாகரம் என்றும்
    7-கபிலம் என்றும் பேராய் இருக்கும்
    இதில் வர்ஷாசலங்கள்
    1-வித்ருமம் என்றும்
    2-ஹேம சைலம் என்றும்
    3-த்யுதிமான் என்றும்
    4-புஷ்பவான் -என்றும்
    5-குஸேஸயம் என்றும்
    6-ஹரி என்றும்
    7-மந்த்ரம் என்றும் ஏழாய் இருக்கும்
    இதில் பிறந்த ஆறுகளும்
    1-தூதபாபை என்றும்
    2-சிவை என்றும்
    3-பவித்ரை என்றும்
    4-ஸூ மதி என்றும்
    5-வித்யுதை என்றும்
    6-அம்பை என்றும்
    7-மஹீ என்றும் ஏழாய் இருக்கும்
    இதை ப்ராஹ்மண-ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -தமிநர் என்றும் ஸூஷ்மிணர் என்றும் சைஹர் என்றும் மந்தேஹர் என்றும் பேராய் ப்ரஹ்ம ரூபியான ஸர்வேஸ்வரனை அந்த த்வீ பத்திலே தந்தாமுடைய கர்மா விதி பாரதந்ர்ய ரூபமான அதிகார ரஷார்த்தமாக ஆராதியா நிற்பர்கள் -இந்த குஸத்வீ பத்தினுடைய பேருக்கு நிர்வாஹகமான குசஸ்தம்பம் அந்தத்த்வீப மத்யத்திலே நிற்கும் -இந்த குசத்வீபாம் அத்தோபாதி பரப்பை யுடைத்தான நெய்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்

    இந்த நெய்க் கடல் -இதிலிரட்டியான பதினாறு நூறாயிரம் பரப்பை யுடைத்தான கிரௌஞ்ச த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் – இதுவும் முன்பு போலே -ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
    1-குஸலம் என்றும்
    2-மநுகம் என்றும்
    3-உஷ்ணம் என்றும்
    4-ஸீவரம் என்றும்
    5-அந்தகாரகம் என்றும்
    6-முனி என்றும்
    7-துந்துபி என்றும் பேராய் இருக்கும்
    இதில் வர்ஷ பர்வதங்கள்
    1-கிரௌஞ்சம் என்றும்
    2-வாமனம் என்றும்
    3-அந்த காரகம் என்றும்
    4-ப்ரகாஸ கரமான ரத்ன சைலம் என்றும்
    5-திவாவ்ருத் என்றும்
    6-புண்டரீகவான் என்றும்
    7-துந்துபி என்றும் ஏழாய் இருக்கும் –
    இவற்றில் ஆறுகளும்
    1-கௌரி என்றும்
    2-குமுத்வதி என்றும்
    3-ஸந்த்யை என்றும்
    4-ராத்ரி என்றும்
    5-மனோஜவை என்றும்
    6-க்யாதி என்றும்
    7-புண்டரீகை என்றும் ஏழாய் இருக்கும்
    இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -புஷ்கரர் என்றும் புஷ் கலர் என்றும் தன்யர் என்றும் திஷ்யர் என்றும் பேராய் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரனை யாகாதி கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள்
    இந்த கிரௌஞ்ச த்வீ பாம் என்கிற பேருக்கு நிர்வாஹம் இதில் ப்ரதமமான வர்ஷ பர்வதமாயுள்ள கிரௌஞ்ச பர்வதம் தானேயாய் இருக்கும் -இந்த கிரௌஞ்ச த்வீ பாம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தயிர்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்

    இந்தத் தயிர்க் கடல் இதிலிரடித்த 32 நூறாயிரம் யோஜனம் பரப்பை யுடைத்தான ஸாக த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் -இதுவும் ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
    1-ஜலதம் என்றும்
    2-குமாரம் என்றும்
    3-ஸூ குமாரம் என்றும்
    4-மரீ சகம் என்றும்
    5-குஸூ மோதம் என்றும்
    6-ஸம்மோதம் என்றும்
    7- மஹா த்ருமம் என்றும் ஏழாயிருக்கும்
    இதில் வர்ஷ பர்வதங்கள் -கிழக்கே
    1-உதயகிரி என்றும்
    2-ஜலதார கிரி என்றும்
    3-ரைவதகம் என்றும்
    4-ஸ்யாமம் என்றும்
    5-அம்போகிரியான அஸ்த கிரி என்றும்
    6-ஆம்பி கேயம் என்றும்
    7-ரம்யம் என்றும் ஏழாயிருக்கும்
    இவற்றில் ஆறுகள்
    1-ஸூ குமாரி என்றும்
    2-குமாரி என்றும்
    3-நளினி என்றும்
    4-வேணுகை என்றும்
    5-இஷுமதி என்றும்
    6- தேனுகை என்றும்
    7-கபஸ்தி என்றும் ஏழாயிருக்கும்
    இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் வங்கர் என்றும் மா கதர் என்றும் மாநஸர் என்றும் மந்தகர் என்றும் பேராய்
    ஸூர்ய ரூபியான ஸர்வேஸ்வரனைத் தம் தம்முடைய வர்ண அநுரூப கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள் – இவ்வர்ஷங்களிலே ஸ்வர்க்கத்திலும் புண்ய வசத்தாலே போந்த புருஷர்கள் பரஸ்பரம் ராக த்வேஷாதிகள் அற்று இந்த புண்ய நதிகளுடைய ஜலத்தை விநியோகம் செய்து கொண்டு நித்ய ஸூகி களாய் வர்த்திப்பார்கள்
    இந்த சாக த்வீ பத்தினுடைய பேர்க்கு நிர்வாஹகமான சாக ஸ்தம்பமாகிற மஹா வ்ருக்ஷம் அந்த த்வீப மத்யே நிற்கும் -இந்த த்வீ பங்கள் ஆறிலும் யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஜம்பூ த்வீ பம் தொடங்கி ஒன்றுக்கு ஒன்று இரட்டியான த்வீ பங்களோ பாதி பர்வதங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்த நீளத்தையும் அகலத்தையும் உயர்த்தியையும் யுடைத்தாய் இரண்டு சமுத்ரங்களையும் பற்றி இருக்கும் -அதாவது

    இரண்டு ஸமுத்ரத்துக்குள் நடுவு ஜம்பூ த்வீ பத்துக்கு ப்ரதாநங்களாய்க் கொண்டு நூறாயிரம் யோஜநம் கீழை மேலை நீளமும் இரண்டாயிரம் யோஜநம் உயர்த்தியையும் -அவ்வளவு பரப்பை யுமுடைத்தான நீல நிஷதங்களில் காட்டில் ப்லக்ஷ த்வீ பத்தில் வர்ஷ பர்வதங்கள் லவணேஷு ஸமுத்ரங்களுக்கு நடுவு இரண்டு நூறாயிரம் யோஜநா யாமத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் பற்றி நாலாயிரம் யோஜநம் உயர்த்தி யையும் அவ்வளவு விஸ் தாரத்தையும் யுடைத்தாய் இருக்கும்

    இப்படி ஜம்பு ப்லக்ஷ மால் மலி குச கிரௌஞ்ச சாக பர்யந்தமாக யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று -இந்த சாக த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான ஷீராப்தி ஆவரித்து இருக்கும்
    இந்த ஸாக த்வீ பத்துக்குள் அந்தர் பூதம் ஸ்வேத த்வீபம் -ஸாக த்வீபம் ஸமா வ்ருத்ய ஷீரோத சாகரஸ் ஸ்தித –ஸ்வேத த்வீபஸ் ச தந் மத்யே நாராயண பராயணா -என்று துடங்கி கூர்ம புராணத்தில் பூர்வ பாகத்தில் 48 வது அத்யாயத்தில் விஸ்தரேண ஸ்வேத த்வீப வர்ணநமும் தத்ரஸ்த புருஷர்களுடைய ரூபாதி வர்ணநமும் அவ் விடத்தில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரியா ஸார்த்தம் ஸ்ரீ மன் நாராயணனுடைய ஸ்வரூபாதி வர்ணநமும் சொல்லப் பட்டது இறே-

    இந்த ஷீரார்ண வத்தை இதில் இரட்டித்து அறுபத்து நாலு நூறாயிரம் பரப்பை யுடைத்தான புஷ்கர த்வீ பம் ஆவரித்து இருக்கும் -இந்த புஷ்கர த்வீபம் நிர்வாஹக ராஜ பேதத்தாலே –
    1- மஹா பீதம் என்றும்
    2-தாடகீ ஸம்ஜ்ஞம் என்றும் -இரண்டு வர்ஷமாய் இருக்கும் –
    இரண்டுக்கும் நடுவே மாநஸோத் தரம் என்று பேராய் 50000 யோஜநம் உயர்த்தியை யும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய்க் கொண்டு மதிள் இட்டால் போலே மண்டலமாகார மானதொரு வர்ஷ பர்வதமாய் இருக்கும் -இதில் மஹா பீத மலை புறம்பில் வலயமாய் இருக்கும் -தாடகீ உள்ளில் வவலயமா யிருக்கும் -இவற்றில் வர்த்திக்கிற புருஷர்கள் 16000 வயஸ் ஸு புகுருவர்கள் -ஆதி வ்யாதி களும் ராக த்வேஷாதி களும் அற்று இருப்பர்கள் -ஸர்வரும் உத் க்ருஷ்ட ராகையாலே அதம உத்தம விபாகம் இல்லை-ஸத்யம் ஒழிய நடவாமையாலே ஸத்யாந்ருத விபாகம் இல்லை -அவ் விடத்தில் பர்வதங்களும் நதிகளும் அபேக்ஷிதங்கள் இல்லை-

    அவ் விடத்தில் மனுஷ்யர்கள் தேவர்களோடு ஒத்த வடிவை யுடையவர் களாய் இருப்பர்கள் -பவ்மமான ஸ்வர்க்கமாய்க் கொண்டு போக பூமியாய் இருக்கையாலே வர்ணாஸ்ரம ஆசார அபேக்ஷையும் பல சாதந தர்மார்ஜந அபேக்ஷை யும் அற்று யுத்தமமான தேசமாய் இருக்கும் இந்த புஷ் கரத்திலே ப்ரஹ்மா வுக்கு ஸ்தானமாய் புஷ்கரம் என்று பேராய் இருபத்தொரு ஆலயத்திலே பதினாயிரம் தளமாய் இருபத்தொரு தாமரைப் பூவின் மேலே ப்ரஹ்மா தேவா ஸூரராலே ஆராதிதனாய் இருக்கும் அந்த புஷ்கரம் இந்த த்வீ பத்தினுடைய பேருக்கு ஹேதுவாய் இருக்கும் -இந்த புஷ்கர த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தண்ணீர்க் கடல் ஆவரித்து இருக்கும்

    இப்படி ஸப்த த்வீப ப்ரமாணமான ஸப்த ஸமுத்ரங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று –இந்த ஸமுத்ர ஜலங்களுக்கு சந்த்ர உதய அஸ்தமிதங்களில் வ்ருத்தி ஷயங்களாய் இருக்கும் -இப்படி ஸப்த த்வீப ஸமுத்ர ஸஹிதமான பூ மண்டலம் மேரு மத்யமாக இரு பக்கமும் (வடக்கும் தெற்கும் சேர்ந்து)ஐந்து கோடி ஏழு நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைத்தாய் இருக்கும் -இது மநுஷ்யாதி ஜனங்களுக்கு ஆவாஸ யோக்யமான பூ மண்டல பரிணாமம் இதுக்குப் புறம்பே மநுஷ்யாதி ஸஞ்சார யோக்யம் இன்றியிலே லோகாலோக பர்வதத்தளவும் கண்ணாடிப் புறம் போலே நிர்மலமாய் ஸ்வர்ண மயமாய் முன்பு சொன்ன பூ மண்டலத்துக்கு இரட்டியாய்- பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ஸ்தல விசேஷத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும் -இத்தைப் பதினாயிரம் யோஜநம் உயர்த்தியையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தான லோகாலோக பர்வதம் ஆவரித்து இருக்கும் -இதில் மஹா மேருவைத் தொடங்கி சக்ர வாளாத்ரி முடிவாகப் பன்னிரண்டரை கோடி பதினேழு நூறாயிரத்து அறு பதினாயிரம் அளவாய் இருக்கும் –

    எங்கனே என்னில் -முன்பு லோக பரிமாணாகச் சொன்ன ஐந்து கோடி ஏழு நூறாயிரத்தில் மத்யமான மேருவுக்கு ஒரு பக்கம் இரண்டரை கோடி மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமும் -இதுக்குப் புறம்பான ஜன ஸூந்ய தர்ப்பண தேஸம் பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜனமும் சக்ர வாளாத்ரி பதினாயிரம் யோஜனமுமாய் பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் யோஜனமுமாய் இருக்கும் என்றதாயிற்று -இந்த சக்ர வாளத்ரிக்கு அப்பால் அண்ட கடாஹ பர்யந்தமாகப் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் குறைந்த பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் இருக்கும்

    ஆக மஹா மேருவுக்கு ஒரு பக்கம் 25 கோடியாய் மற்ற பக்கமும் இப்படியாகையாலே ஆயாம விஸ்தாரங்கள் பஞ்சாஸத் கோடியாய் பூ பரி மண்டலம் -இதில் மும் மடங்கான 150 கோடி யோஜனம் ஆயாம விஸ்தாரமாய் இருக்கும் -இத்தை வராஹ புராணத்திலே பூ மண்டலந்து சத கோடி விஸ்தாரம் ச ண்ட கடாஹம் என்று மஹா மேருவைச் சூழ பஞ்சாஸத் கோடியாய் பூ மண்டலம் அடைய சத கோடி விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது

    இப்படியே -ஸ்கந்த புராணத்தில் சிவ ரஹஸ்யத்திலும் விஸ்தரேண சொல்லப்பட்டது -கோடி த்வயம் த்ரி பஞ்சாஸத் லஷாணி ச தத பரம் -பஞ்சாஸச் ச ஸஹஸ்ராணி ஸப்த த்வீபாஸ் ஸ ஸாகரா –ததோ ஹிரண் மயீ பூமி தச கோட்யோ வராநநே தேவா நாம் க்ரீட நார்த்தாய லோகாலோகஸ் தத பரம் பர்வதோ வலயகாரோ யோஜநாயுத விஸ்த்ருத –தஸ்மாத் பாஹ்யம் தமோ கோரம் துஷ் ப்ரேஷம் ஜீவ வர்ஜிதம் -பஞ்ச த்ரிம் ஸத் ஸ்ம்ருதா கோட்யோ லஷாண்யே கோந விம்சதி ஸத்வாரிம் ஸத் ஸஹஸ்ராணி யோஜநாநாம் வராந நே -ஸப்த சாகர மாநம் து கர்த்தோதஸ் ததனந்தரம் -கோடி யோஜந மா யாநந்து கடாஹஸ் ஸம் வ்யவஸ்தித -என்று சொல்லுகையாலே

    மேருவுக்கு ஒரு பக்கம் ஐம்பது கோடியாய்- மற்ற பக்கமும் அப்படியே ஆகையாலே -ஆக சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுகிற பக்ஷம் ஸாஸ்த்ரீயமான மாநாங்குளாதிகளைப் பற்ற லௌகிக மாநாங்குளம் அர்த்தாம்சமாகையாலேயும் ஹஸ்தமாகிற தச்ச முழத்தில் அவிதஸ்தி யாகிற லௌகிக ஹஸ்தம் அர்த்தாத்சமாய் அதில் இரட்டிப்பாலே சொல்லிற்றாம் இத்தனை
    ஸாஸ்த்ரீ யாங்குள சித்தைர் யோஜனை பஞ்சாஸத் கோட்ய ஏவ லௌகிகாங்குளி ஸித்த யோஜனை சத கோட்யஸ்ஸ்யு –இதி ஸ்ரீ விஷ்ணு சித்தீய அநு ஸாரேண அவிரோதேந நேதவ்ய இத் யபிப்ராய —
    பஞ்சஸாத் கோடியே ஸர்வத்ர அவிருத்தமாகக் கடவது -இதில் சக்ர வாளாத்ரிக்கு அவ் வருகு தாமஸ பூதங்கள் வர்த்திக்கும் தேசமாய் கோராந்த காரமுமாய் கர்த்தோத முமாய் இருக்கும் -அதுக்கு அவ் வருகு மஹா புருஷ ஸ்தானமாய் அண்ட கடாஹத்துக்கு நடுவே எங்கும் ஒக்கக் கீழ் மேல் எங்கும் சூழ்ந்து வைகுண்டாக்ய மஹா லோகங்களாய் இருக்கும்

    இப்படி ஸ்ரீ பாகவதத்திலும் -10-8-9- வைதிக புத்ர ஆநயன வ்ருத்தாந்தம் -பார்க்கவும் –
    ஹரி வம்சம் மூன்று ஸ்லோகத்திலும் வைதிக புத்ர ஆநயன ப்ரஸ்தாவத்திலே இந்த பகவஸ்லோகங்கள் வர்ணிக்கப் பட்டன
    ஹரி வம்சே விஷ்ணு பர்வணி -115–11-12-13-ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்டவா நஸி- அஹம் ஸ பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸனாதனம் -ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்தா வ்யக்தா ச பாரத -தாம் ப்ரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரத சத்தம –ஸா சாங்க்யா நாம் கதி பார்த்த யோகி நாஞ்ச தத் பரம் பரமம் ப்ரஹ்ம ஸர்வம் விபஜதே ஜகத் — கோடி யோஜந மாநந்து கடாஹ ஸம் வ்யவஸ்தித -என்று அண்ட கடாஹம் ஒரு கோடி யோஜநம் அடிப்பத்தை (
    அகலத்தை தடிமனை)உடைத்ததாகச் சொல்லப்பட்டது

    இப்படி அண்ட கடாஹத்துக்கு நடுவுள்ள பூ விஸ்தாரம் பஞ்சாஸத் கோடியானவோபாதி ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவுள்ள உயர்த்தியும் பஞ்சாஸத் கோடியாய் இருக்கும் –

    யோஜனமாவது –
    ஜால காந்த ப்ரவிஷ்டே அர்க்க ரஸ்மவ் த்ருஸ்யாத்ருசாஸநை –ஏதே அணவ இதி க்யாதாஸ்த -ஏவ பரமாணவ -தேப்ய பரதரம் நாஸ்தி பரமாணு கதஞ்சன -ஏஷாம் அஷ்ட குணோ ரேணுபிஸ் -ச அஷ்டபி பரைஸ் ரோமாக்ர இதி நிர் திஷ்டம் லிக்யா லோம பிர் அஷ்டபி -லிக்ய அஷ்ட குணிதா யூகா- யூகாஷ்ட குணிதா யவா -யவாஷ்ட குணிதம் யத் தன்மாநாங்குளம் உதா ஹ்ருதம் -ஸ்வஸ்ய தக்ஷிண ஹஸ்தஸ்ய மத்யமாங்குளி பர்வணா மத்யமேந மிதம் யத் தன்மாத்ராங்குள மிதி ஸ்ம்ருதம் ஹஸ்தோங்குளி விம்ஸத்யா சதுரஞ்சி தயா சதுஷ் கரோ தண்ட -தண்டா நாம் பஞ்ச சதம் கோஸம் ச த்வி குணம் அர்த்த கவ்யூதம் -தத் த்வி குணம் கவ்யூதம் த்வி குணம் யோஜநம் வித்யாத் -என்று சொல்லுகிறபடியே

    ஜாலக ரந்தரத்திலே ஆதித்ய கிரணங்களிலே தோற்றுகிற த்ரச ரேணுகளுக்கு அணு என்று பேராய -அந்த பரமாணுக்கள் எட்டுக் கொண்டது ரேணுவாய் -ரேணு எட்டுக் கொண்டது மயிர் நுனியாய் -ரோமாக்ரம் எட்டுக் கொண்டது ஈராய் -ஈரு எட்டுக் கொண்டது பேனாய் -பேன் எட்டுக் கொண்டது நெல்லாய் -நெல் எட்டுக் கொண்டது மானாங்குளமாய் -மா நாங்குளம் இருபத்து நாலு கொண்டது ஹஸ்தம் என்று சொல்லப்பட்ட தச்ச முழமாய் – ஹஸ்தம் நாலு கொண்டது கோலாய் -கோல் 500 கொண்டது கோஸமாய் -கோஸம் இரண்டு கொண்டது அரத்த கவ்யோதியாய் -அது இரட்டித்தது கவ்யூதியாய்-கவ் யூதி இரட்டித்தது யோஜனம் என்கிற மாநாங்குள மர்யாதையாலும் புருஷனுடைய தக்ஷிண ஹஸ்தத்தில் மத்யமாங்குளி மத்யம பர்வத்தாலே பரிமிதமான மாத்ராங்குள மர்யாதையாலும் ஹஸ்த விதஸ்தி பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று அர்த்தாம்சமாய் இருக்கையாலும் பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ணை யான பூமியை சத கோடி ப்ரமாணை என்கிற வாராஹாதி வசனங்களுக்கு விரோதம் இல்லை

    இதி தத்வ நிரூபணே ஸாதாரண பூ மண்டல நிரூபணம் நாம த்ருதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –———

    சதுர்த்தாதிகாரம்— நரக நிரூபணம்
    1- நரக நிரூபணம்
    2-நரக ஸ்தாந நாமாதி நிரூபணம்
    3-பிராயஸ் ஸித்த நிரூபணம்
    4-அந்தரிக்ஷ லோகாதி நிரூபணம்
    5-ஆதித்ய சந்த்ர நக்ஷத்ர புத ஸூக்ர அங்காரக ப்ருஹஸ்பதி ஸநி ஸப்த ரிஷி த்ருவாதி பத நிரூபணம்
    6-பூர் புவஸ் ஸூவ ராதி லோக நிர்ணயம்
    7-ஸத்ய லோக அந்தர்கத சதுர் முக ஸிவ விஷ்ணு லோக நிரூபணம்
    8-அக்ருதக க்ருதக க்ருதாக்ருதக ஸப்தார்த்த நிரூபணம்

    இப்படி புண்ய பாப அர்ஜநாதி களுக்கு யோக்யமான பூ மண்டல நிரூபணம் பண்ணிற்றாய் அநந்தரம் இவற்றினுடைய பல போக ஸ்தானம் நிரூபிக்க ப்படுகிறது -அது போக்தாவான சேதனனுக்கு வைராக்ய ஹேதுவாகையாலே முதல் பாப பல ரூபமான நரகங்கள் நிரூபிக்கப் படுகின்றன

    இந்த நரகங்களுக்கு ஸ்தானம் -அந்தராள ஏவ த்ரி ஜகத்தியஸ் (க்ருதக -அக்ருதக -க்ருதக்ருதக என்று மூன்றும் -10-1-3-இவற்றுக்கு உள்ள)ச திசி தஷிணஸ் யாம் அதஸ்தாத் பூ மேருபரிஷ்டாச் ச அண்ட ஜலாஸ்யஸ்ய –பாகவதம் -5-26-5- என்று ஸ்ரீ பாகவதத்திலேயும்
    ததஸ்து நரகா விப்ரா புவோதஸ் ஸலிஸ்ய ச பாபிநோ யேஷு பஸ்யந்தே தான் ஸ்ருணுஷ்வ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -கீழே அண்ட கடாஹத்தின் மேலான கர்ப்போதக ரூபமான ஜலாசயத்தின் மேலான பாதாளத்திலே நரக ஸ்தானங்களாய் இருக்கும் –

    அவையாவன -ரௌரவஸ் ஸூகரோ ரோதஸ்தாலோ விஸஸநஸ் ததா மஹா ஜ்வாலஸ் தப்த கும்போ லவண உத விலோஹித ருதி ராம்போ வைதரணி க்ரிமிஸ க்ரிமி போஜன -அஸி பத்ர வனம் கிருஷ்ணோ லாலாபஷஸ் ச தாருண ததா பூத வஹ பாபோ- வஹ்நி ஜ்வாலோ ஹ்யதஸ் ஸிரா -சந்தம் ஸ க்ருஷ்ண ஸூத்ரஸ் ச தமஸ் சா வீசி ரேவ ச ஸ்வ போஜனஸ் சா ப்ரதிஷ்டோ ஹ்யவீசிஸ் ச ததா பர இத்யேவ மாதயஸ் சாந்யே நரகா ப்ரு ஸதாருணா யமஸ்ய விஷயே கோராஸ் சஸ்த்ர க்நி பய தாயிந பதந்தி யேஷு புருஷா பாப கர்ம ரதாஸ்துயே –ஸ்ரீ விஷ்ணு புரா -2-6- என்று விஷ்ணு புராணத்திலும்
    பூ மேரதஸ்தி தோ கோர உஷ்ணாத்மா ரௌரவோ மஹான் ஸூதாரணஸ் து ஸீதாத்மா தஸ்யாதஸ்தாத் தமஸ் ஸ்ம்ருத நிக்ருந்தந க்ருஷ்ண ஸூத்ரோ மோஹஸ் சாப்யதிதாருண அகோரஸ்து வத ப்ரோக்தோ நவ ஸ்தாநோ ப்ரதிஷ்டித -ஏகீ பூத சரீரஸ் ச விவேச் யோ அவீசிரேவ ச ஸூ கோரோ தாருணோ ரோத மஹா ரௌரவ ஏவ ச –வாயு உ 39-175-176- என்று வாயவ்யத்திலும் சொல்லுகிறபடியே நரகங்கள் அசங்க்யாதங்களாய் இருக்கும் –

    பாகவதம் -5-26-தத்ர ஹைகே நரகா நேக விம்சதிம் கண யந்தி என்று தொடங்கி அஷ்டா விம்சதி நரக நாமாதிகளை விஸ்தாரமாகக் காணலாம்
    இவற்றில் ரௌரவம் என்று பேராய் பரிதாப ரூபமான நரகத்திலே ஸாக்ஷி அறிந்து சொல்லாது இருக்குமவனும்- அந்யதாகச் சொல்லுமவனும் -கூழை ஸாக்ஷியும் தர்மாதி க்ருதனாய் வைத்து அஸம்யக் பாஷணம் பண்ணுமவனும் -பக்ஷ பாதியும் -அஸத்யவாதியும் ப்ரவேசிப்பார்கள்
    கூட ஸாஷீ ததா ஸம்யக் பக்ஷ பாதேந யோ வதேத் -யஸ் சான்ய தந்ருதம் வக்தி ஸ நரோ யாதி ரௌரவம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-7-இத்யாதி ஸ்லோகங்களைப் பற்றியே மேலில் வாக்யங்கள் என்று கண்டு கொள்க –

    இந்த ரௌரவ ஸூகரங்களாகிற நரகங்கள் ருருவும் ஸூ கரமுமாகிற மான் பன்றிகளைக் கொல்லும் ப்ரகாரத்திலே பீடிக்கை என்று ஸ்ரீ பாகவதத்திலே சொல்லப்பட்டது -5-26-11-
    ப்ரூண ஹாவும் புர ஹந்தாவும் கோக்நனும் உச்ச்வாஸ நிரோதகனும் குழியைக் கல்லில் புதைக்கை யாகிற ரோதம் என்கிற க்ரூர நரகத்தை அடைவர்கள் -இதில் ப்ரூண ஹாவாகிறான் -கர்ப்ப வாஸம் பண்ணினவனாதல் -விஸிஷ்ட ப்ராஹ்மண ஹந்தாவாதல் -அதாவது -உப நீத மாத்ரோ ப்ரஹ்ம சாரீ வேதாநாம் கிஞ்சித் அதீத்ய ப்ராஹ்மண -ஏகாம் ஸாகாம் அதீத்ய ஸ்ரோத்ரிய -அங்காத் யாயீ ஹ்யநூசாந- கல்பாத் யாயீ ருஷி கல்ப -ஸூத்ர ப்ரவச நாத் யாயீ ப்ரூண –சதுர் வேத தரோ ருஷி -அத ஊர்த்வம் தேவா -என்று போதாயந பகவான் சொன்னபடியே
    ப்ரூணனாகிறான்-சூத்ர ப்ரவசந த் யாயியான விஸிஷ்ட ப்ராஹ்மணன் -ஸூராபனும் ப்ரஹ்ம ஹந்தாவும் ஸூவர்ணத்தை ஷோடஸ மாஷத்தளவு (
    16 உளுந்து அளவு)அபஹரித்தவனும் -குருதல்பகனும்-இவர்களோடு ஓக்க ஒரு ஸம்வத்ஸரம் வசித்தவனும் ஸூkara நரகத்திலே விழுவர்கள்

    ராஜாவையும் வைஸ்யர்களையும் கொன்றவனும் குரு தல்பகனும் தாலமாகிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது மஹா ப்ரமாணமான பனை மரத்திலே ஏறவிட்டுத் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-10–ஸாத்வியான ஸ்திரீயை விற்றவனும் சிரைக் கூறு செய்யுமவனும் குதிரை விற்குமவனும் பக்த பரித்யாகியும் ஸ்வ ஸாகாமியும் ராஜ பட ஹந்தாவும் தப்த கும்பத்திலே விழுவர்கள் -அதாவது காய்ந்த எண்ணெய்க் குடத்திலே புகட்டு எரிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-

    குருக்களை அவமதி பண்ணினவனும் வேதத்தை தூஷித்தவனும் -வேதத்தைக் கூலிக்கு விற்பவனும் மாதுளை ஸ்த்ரீ கமநம் பண்ணினவனும் லவணம் என்கிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது அக்னி மையமாக எரிகிற உப்பு மண்ணிலே புரட்டு சுடுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-12-13-

    ஸதாசாரங்களாலே ஸித்தமான மர்யாதா தூஷகனும் -தேவ ப்ராஹ்மண குரு பித்ருக்கள் பக்கலிலே த்வேஷம் பண்ணினவனும் க்ரிமி பஷ்யத்திலே விழுவர்கள் -அதாவது ஸூ தீஷ்ண தம்ஷ்ட்ராஸ்ய ஜலூகாதி க்ரீமி கீடம் கடித்து அந்த தாமிரஸ்ர கூபத்திலே சுழற்றித் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-15-
    பித்ரு வேத ஸூரரைப் புறம்பிட்டு பஞ்ச மஹா யஜ்ஞ பராங்முகனாய் முதலிலே தனக்கு என்னாக்கி உண்கிறவன் லாலாபக்ஷத்திலே விழுவார் -அதாவது காறி யுமிழ் எச்சிலை பஷிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-16- –
    சிலுக்கோலான அம்புமுத் கரங்கள் பண்ணுமவனும் வாள் சொட்டை தொடக்கமான ஆயுதங்கள் பண்ணுமவனும் விசசனத்திலே விழுவர்கள் -அதாவது எரி எழக் காய்ந்து ஷுரப்ரங்களான ஆயுத கூபத்தில் விழுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-17-

    அசத்தான பதார்த்தங்களை பரிக்ரஹித்தவர்கள் அதோ முகத்திலே விழுவர்கள் -அதாவது -தப்த்த ஸ்ருங்க லயா பத்தராய் அதோ முகோர்த்வ பாதராய் ஜ்வாலா ஸூராப கூபத்திலே நலிவு படுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-18–

    சாஹஸியும் தனித்து ம்ருஷ்டான்ந யஜனம் பண்ணுமவனும் -அரக்கு மாம்ஸ ஷீர மத்வாதி ரஸ த்ரவ்யங்களையும் எள்ளுப் பூ விற்குமவனும் ப்ரயவஹத்திலே விழுவர்கள் -அதாவது கோர துர்க் கந்தா வஹமான சீயாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-20-

    அல்லுப் பொரி விற்று யதேஷ்டமாகப் பானையோடே உண்ணுமவனும் -விஷத்தை இடுமவனும்- ராஜ காமியாம் படிக் கோள் சொல்லுமவனும்- ஸ்த்ரீ முகத்தாலே ஜீவித்தல் பர்வமன்றி இருக்க அபர்வத்திலே கார்யம் செய்யுமவனும்- பர்வத்திலே நிஷித்தமான தைல ஸ்த்ரீ மாம்ஸாதி ஸேவை பண்ணுமவனும் -அகங்களை நெருப்பு வைத்துச் சுடுமவனும் மித்ர வஞ்சகனும் பக்ஷி நிமித்தம் சொல்லுமவனும் பக்ஷி பிடித்து விற்று ஜீவிக்குமவனும் ஸ்ரம யாஜகனான ஷடங்கியும் இவர்கள் ருதி ராம்பத்திலே விழுவர்கள் -அதாவது பூய ஸோணித ஸம் பூர்ண அக்னி ஜ்வாலா ரூப கூபம் –ஸ்ரீ விஷ்ணு புரா 2-6-22-

    தேன் கூண்டைக் கலக்குமவனும் க்ராமத்துக்குக் கேடு செய்யுமவனும் வைதரணியை அடைவர்கள் -அதாவது -அக்னி மயமான நெய்யாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-26-24-
    தனத்தாலும் யவ்வனத்தாலும் மத்தராய் க்ராமஸீ மாதிகளை பேதித்தவர்களும் அஸூத்தரும் இந்த்ர ஜாலாதிகள் காட்டி ஜீவித்தல் ஸடராய் ஜீவித்தல் செய்யுமவர்களும் க்ருஷ்ணம் என்கிற நரகத்திலே விழுவார்கள்-அதாவது அக்னி மயமான கறுத்த இரும்பு முளைகளாலே செறிந்த தரையிலே நடக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-25-

    கிடாய் வளர்ப்பாரும் ம்ருகம் பிடிப்பாரும் வ்ருஷச் சேதகரும் ப்ரஹ்மசாரியாய் இருந்து பகல் உறங்கி ஸ்வப்ன இந்த்ரிய பதனம் பிறந்தவனுக்கு ஸ்வ போஜனத்திலே விழுவர்கள் -அதாவது நாயாலே இழுப்புண்டு கடியுண்டு க்லேசிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா-2-6-29-

    பர ஸ்த்ரீ கமனம் பண்ணுவாரும் அகம்யாகமநம் பண்ணுவாரும் எரி எழுகிற செம்பினாலே இயன்ற பாவையைக் கட்டி ஆலிங்கனம் பண்ணுவர்கள் –

    இப்படி அபஷ்ய பக்ஷணம் -அபோஜ்ய போஜனம் -அபேய பாநம் -அயாஜ்ய யாஜனம் அஸத் பரிக்ரஹம் -பர தாரா அபி கமநம்- நீச பாபிஷ்ட ஸேவை -பர த்ர வ்யாபஹாரம் -ப்ராணி ஹிம்ஸை முதலானவை என்று காயிகமாகச் சொல்லுகிறவையும் –இவ்விடத்திற்கு அனுகுணமான வசனங்கள் -மநு ஸ்ம்ருதியில் -12-7- காண்க –
    பாருஷ்யம் அன்ருதம் பை ஸூந்யம் -அசம்பத்த ப்ரலாபம் -விவாதம்- ஸ்ருதி விக்ரயம் -பராப வாதம் முதலானவை -மனு-12-6- என்று வாசகமாகச் சொல்லுகிறவையும்
    பரோபதாபநம்- பராபி த்ரோஹம்- க்ரோதம்- காமம் -லோபம் -மோகம் -மதம் -மாத்சர்யம் அஹங்காரம் விததாபி நிவேசம்-மநு -12-5- என்று மாநஸமாகச் சொல்லுகிறவையும் தொடக்கமான த்ரிவித கரண தோஷங்களை ஆராய்ந்து யாத்ருச சரீரே யதவஸ்தா வஸ்திதானாய்ச் செய்கிறான் -தாத்ருஸ சரீர தத்வஸ்தா ரூபமாய் தஹந சேதன பேத நாதிகளிலும் விடாதே யாம்ய யாதனைகளை அனுபவிக்கைக்குக் உடலாக ஸூத்ருடமாய் இருபத்தொரு ஸரீரத்தை பரிக்ரஹிப்பித்து நரக யாதனைப் படுத்தும் -மநு- யாதிரு ஸேநது பாவேந யத் யத் கர்ம நிஷேவதே தாத்ருஸேந சரீரேண தத் தத் பலமுபாஸ் நுதே -12-18-

    இத் தோஷங்களினுடைய யாதனை எங்கனே என்னில் -இவனை ஈர வளாலே அறுத்து உவடி தரையிலே புரட்டி ஜம்பீர ரஸ மய வாபியிலே அழுத்தி அக்னி மயமான தைலத் ரோணியிலே பொகட்டு எரித்தும் தீக்ஷண பர ஸூவினாலே சந்தி பந்தங்களிலே சேதிக்கப் பட்டு காகோலுக கங்க க்ருத் ரங்களுக்கும் பேய்க்கும் நாய்க்கும் சதை பறியுண்டு க்லேசிப்பித்தும் -அதுக்கும் மேலே அஸி பத்ரவனமாகிற வஜ்ர மய ஸிதாக்ரதாரா யுக்த -இலைக் கள்ளிக் காட்டிலே பட்ட விடமெங்கும் கண்டிக்கும் படி விட்டு எறிந்து கவணிலே வைத்து எறிந்தும் அத் யுச்சராய பர்வத சிகரத்திலும் ஸர்வ அவயவங்களும் சூர்ணித்தமாம் படி தலை கீழாய்த் தள்ளியும்
    காஞ்ச காறாலும் -வறுத்த மணலிலும் இட்டுப் புரட்டுவது சந்தப்த கும்பத்திலே அறுத்துண்டு மூடி மஹா ஜ்வாலாக்னியாலே பசிப்பது-இப்படிக் கட்டுமது வெட்டுமது நெருக்குண்பது தள்ளுண்பதான நாநா வித நரகங்களிலே யாதனைப் படுவர்கள் -இந்நரகங்கள் தேஷாம் சங்க்யா ந வித்யதே -என்கிறபடியே அசங்க்யா தங்களாய் இருக்கும் -இனி மஹா பாதகங்களைப் பண்ணின புருஷர்களை இங்குச் சொன்னவை முதலாகக் கொண்டு அல்லாத வற்றிலும் பர்யாயேண ப்ரவேசித்து யாதனைப் படுவர்கள்

    இப்படி வாங் மன காயங்களாலே வர்ணாஸ்ரம விருத்தமான துஷ் கர்மங்களைப் பண்ணி நரகத்திலே நின்று யாதனைப் படுவர்கள் -ஸ்வர்க்கத்திலே இருக்கும் தேவர்களை அந் நிலையிலே கண்டு தங்கள் துக்கத்துக்கு மிகவும் கிலேசியா நிற்பர்கள் -அந்த தேவர்களும் அதோ முகராய் கிலேசிக்கிற நரகங்களைக் கண்டு நாமும் புண்ய ஷயத்திலே இந்நரகங்களிலே வீழில் செய்வது என் -என்று -ஸ்வர்க்கோபி பாத பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி –ஸ்ரீ விஷ்ணு புரா -6-5-50-அஸந்தோக்ஷஸ் ச பவதி த்ருஷ்ட்வா தீப்தம் பரஸ்ஸ்ரியம் -என்கிறபடியே அங்கிருந்து பண்ணுகிற ஸூக அனுபவமும் நெஞ்சில் படாதே உண்டது உருக்காட்டாதே கிலேசியா நிற்பர்கள் –

    பஹுன் வர்ஷ சதான் கோரான் நரகான் ப்ராப்ய தத் ஷயாத் சம்சாரான் ப்ரதிபத்யந்தே மஹா பாதகி நஸ்த்விமான் -மநு -12-54- என்கிறபடியே ஒவ்வொரு க்ஷணங்களிலே பண்ணின பாபங்களுக்கு பலமாக அநேகமாயிரம் ஸம்வத்சரங்கள் அதி கோரமான நரகங்களிலே ஐயோ என்பாரும் அன்றியே தனியே கிடந்து உழைந்து இந் நரகங்களிலே புக்த சேஷமான கர்மங்களை அநுபவிக்கைக்காக அங்கே அவ்வோ யோநி விசேஷங்களிலே வந்து பிறக்கும்படியும் இப்படிப் பிறக்கும் போது வாசிகை பசி ம்ருகதாம் மாநஸை அந்த்ய ஜாதிதாம் -சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -மநு -12-9- என்று வாசிகாபராதத்துக்கு பக்ஷி ம்ருகங்களாயும் மானஸா பராதத்துக்கு சண்டால மாதங்கனாயும் காயிகத்துக்கு வ்ருஷ குல்ம லதாதிகளாயும் பிறக்கும்படியும் எந்த கரணம் கொண்டு அபராதம் பண்ணினான் அந்தக் கரணத்தை குண்டிதமாக்கி விடும்

    அதில்ப்ரஹ்மஹத்யா பலமாக -ஸ்வ ஸூகர கரோஷ்ட்ராணாம் கோஜாவி ம்ருக பக்ஷிணாம் -சண்டால புல்க ஸாநாம் து ப்ரஹ்மஹா யோநி ம்ருச்சதி -மனு -12-55- என்று நாய் பன்றி
    கழுதை ஒட்டகம் வஸூ ஆடு செம்பிலிமான் பக்ஷி சண்டாலர் தொடக்கமான யோனிகளிலே -க்ரமஸோ யாந்தி லோகேஸ்மின் -12-53- என்று அடைவே பிறக்கும் படியாகவும் –

    க்ரிமி கீட பதங்காநாம் விட் புஜாம் சைவ பக்ஷிணாம் ஹிம்ஸ்ரா நாஞ்சைவ சத்வாநாம் ஸூராபோ ப்ராஹ்மணோ வ்ரஜேத் -12-56- என்று ஸூரா பாந பலமாக கிருமி கீட பதங்கா மேத்ய புக்கான பக்ஷிகள் மற்றும் ஹிம்ஸா செல்லமான பதார்த்தங்கள் தொடக்கமான யோனிகளிலே ஒரு தடவை பிறக்கை இன்றிக்கே மடித்து மடித்துப் பிறக்கும்படியும்

    லூதாஹி சரடா நாம் ச திரஸ் சாம் ச அம்பு சாரிணாம் ஹிம்ஸ்ராணாம் ச பிஸாசாநாம் ஸ்தேயோ விப்ரஸ் ஸஹஸ்ரஸ -12-57-என்று பர த்ரவ்ய அபஹாரத்துக்கு பலமாக சிலந்தி பாம்பு ஹிம்ஸா சீல ஐந்து ஜலசர ஜந்துக்கள் பர பார்த்தகமான பேய்கள் தொடக்கமான யோனிகளிலே நாலு பத்து பர்யாயம் பிறகும் அளவன்றியிலே நாலாயிரம் பர்யாயம் மடித்து மடித்துப் பிறக்கும் படியும் –

    த்ருண குல்ம லதா நாஞ்ச க்ரவ்யாதாம் தம்ஷ்ட்ரிணாம் அபி க்ரூர கர்ம ரதா நாஞ்ச சதாசோ குருதாபக -என்று குரு தல்பாகமான பாபத்துக்கு பலமாகப் புல்லு தூறு கொடி காயும் மாம்ஸாசிகளான ஸ்வாநாதி யோனிகளிலும் க்ரூர கர்மரதமான மனுஷ்ய யோனிகளிலும் பிறந்து சத ஸஹஸ்ர வாரம் கிலேசிக்கும் படியாகவும் –

    ஸம் யோகம் பதிதைர் கத்வா பரஸ் யைவ ச யோஷிதாம் அபவ்ருத்யாபி விப்ரஸ்வம் பவந்தி ப்ரஹ்ம ராக்ஷஸா -12-60-என்று பதித ஸம் சர்க்க தோஷத்தாலே ப்ரஹ்ம ராக்ஷஸ யோனியிலே மடித்து மடித்துப் பிறக்கும்படியாகவும்

    இப்படி -இந்த்ரியாணாம் ப்ரசங்கேந தர்மஸ்யாஸேவ மேந ச பாபாஸ் ஸம் யாந்தி ஸம்சாராந வித்வாம்ஸோ நராதமா -மனு 12-52-என்றும்
    ஸ்வேப்ய ஸ்வேப்யஸ் து கர்மப்ய ஸ்யுத வர்ணா ஹ்யநாபதி பாபாஸ் ஸம் ஸ்துத்ய ஸம் ஸாராத் பரே ததாம் யாந்தி தஸ்யுஷு -12-70-என்றும்
    யத்வா தத்வா பர த்ரவ்ய மப ஹ்ருதய பலான் நர அவஸ்யம் யாதி திர்யக்த்வம் ஜக்த்வா சைவாஹுதம் ஹவிஸ் -மனு -12–68-என்று
    விஷயாதி பிரசங்கத்தாலும் தர்ம அனுஷ்டானத்தில் உபேக்ஷையாலும் ஆபத்தன்றியிலே இருக்க ஸ்வ தர்ம அனுஷ்டான பிரஸ் யுதியாலும் அந்த பாப அநு ரூபமாக ப்ராயச் சித்தங்களில் பராங்முகனாகையாலும் பாப யோனிகளிலே பிறந்து -அனந்த்ரம் பேய்களாக பிறந்து பின்னையும் சோரர்களாய் பிறப்பார்கள்

    ஸ்த்ரி பார்யாஸ் த்வ முப யாந்தி தா -மனு -12-69- என்று ஸ்த்ரீகளாய் ஸுர்யாதி பாபத்தைப் பண்ணினவர்கள் ஸ்வ ஸூகராதி யோனிகளிலே பிறந்தவர்களுக்கு பார்யைகளாய்ப் பிறக்கும் படிகளையும் ஆராய்ந்து பிறந்த பிறந்த ஜென்மங்கள் தோறும் பிரிய வஸ்து வியோகத்தாலும் அப்ரிய வஸ்து சங்கத்தாலும் ஜரா பீடையாலும் வியாதி பீடையாலும் கிலேசிக்கும் படியும் -தோஷ த்ரய உத்ரேகத்தாலும் விகாரமான ரோக ஸஹஸ்ரத்தாலும் யம கிங்கரனுடைய பீடையாலும் புத்ராதி பரித்யாக ஹேதுவான புத்தி கிலேசங்களாலும் நிரவதிக துக்கங்களை அநுபவித்தது கிலேசிப்பார்கள்

    நமனும் முற் கலனும் பேச நரகில் நின் றார்கள் கேட்க
    நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
    அவனதூ ரரங்க மென்னாது அயர்த்து வீழ்ந் தளிய மாந்தர்
    கவலை யுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.-12

    காவலிற் புலனை வைத்துக் கலி தனைக் கடக்கப் பாய்ந்து
    நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
    மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
    ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.-1-

    இப்படி ஜகத்திலே சேதனர் கர்ம தாரதம்யம் அடியாக -ஸ்தாவரா க்ரிமி யோப் ஜாஸ்ச பக்ஷிண பசவோ நரா -தார்மிகா த்ரிதஸா தத்வத் மோக்ஷிணஸ் ச யதாக்ரமம் ஸஹஸ்ர பாக ப்ரதம த்விதீய அநு க்ரமாஸ் ததா -ஸர்வேப்யேதே மஹா பாக யாவன் முக்திம் ஸமாஸ்ரயா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-34-35-என்றும்
    பூதாநாம் ப்ராணிந ஸ்ரேஷ்டா பராணிநாம் புத்தி ஜீவிந புத்தி மத் ஸூ நரா ஷ்ரேஷ்டா நரேஷு ப்ராஹ்மணாஸ் ஸ்ம்ருதா ப்ராஹ்மணே ஷு ச வித்வாம்ஸோ வித்வத் ஸூ க்ருத புத்தய க்ருத புத்தி ஷு கர்த்தார கர்த்ரு ஷு ப்ரஹ்ம வாதி ந ப்ரஹ்ம வித்ப்ய பரம் பூதம் ந கிஞ்சி திஹ வித்யதே -மனு -1-96-97- என்று
    ஒன்றுக்கு ஓன்று ஸூஹ்ருத தாரதம்யத்தாலே பூர்வ பூர்வ ஜென்மங்களுக்கு உத்தர உத்தர ஜென்ம லாபம் துர் லபமாகையாலும் அந்த பூர்வ ஜென்ம ஸஹஸ்ர ஏக தேசத்திலே என்னலாம் படி ஸங்கோசித்துப் போருகையாலே முமுஷுத்வம் அத்யந்தம் துர் லபமாய் இருக்கும் –

    இப்படி இருக்கிற ஆத்மாக்கள் அஸங்க்யாத ராகையாலே ஸ்வர்க்கத்தோடு நரகத்தோடு வாசி இல்லை -போக்தாக்களான ஆத்மாக் களுடைய ஆனந்தத் யத்துக்கு -ஆகை யிறே -யாவந்தோ ஜந்த வஸ் ஸ்வர்க்கே தாவந்தோ நரகௌகஸ -ஸ்ரீ விஹனு புரா 2-6-36- என்று சொல்லிற்று

    இந்த பாபம் அடியான நரக பிரவேசம் பிராயச்சித்தம் பண்ணாத விமுகனுக்கு இறே -பிராயச்சித்தம் பண்ணினவனுக்கு நரகத்திலே ப்ரவேசிக்க வேண்டுவது இல்லை -அப்படியே பாபங்கள் தாரதம்யத்தை நிரூபித்து தாதாத்மிக பிராயச்சித்த விசேஷங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் இறே –

    பாபே குரூணி குரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத் வித -ப்ராயச்சித்தாநி மைத்ரேய ஜகுஸ் ஸ்வாயம்பு வாதய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-38- என்று குருவான பாப விஷயமாக குரு ப்ராயச்சித்தங்களையும் அல்ப பாபத்துக்கு அல்ப பிராயச் சித்தங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் -அதாவது 1-புத்தி பூர்வகமாக 2-மஹா பாதகாதிகளைப் 3-பலகாலுமாய் வர்த்தித்த குரு பாதகத்திலே அவ்யவஹித கர்த்தாவினுடைய ப்ராணாந்தி காதியான ப்ராயச்சித்தங்கள் விதிக்கப் பட்டது –

    அல்ப பாபமாவது -1-ஸக்ருத் க்ருதமாதல் -2-அஞ்ஞான க்ருதமாதல் 3-ப்ரகாசி தமாதல் அ4-நுமதி மாத்ரமாதல் தொடக்கமானவை -தத் விஷயமான அல்ப பிராயச்சித்த மாவது -ரஹஸ்ய ப்ராயச்சித்தம் –

    அவ் விடத்திலே அஞ்ஞான க்ருதமான ப்ரஹ்ம ஹத்த்யாதி மஹா பாதகத்தில் (தசரதன் ரிஷி குமாரன் மேல் தெரியாமல் அம்பு விட்டது போல்)பிராயச்சித்தம் த்வாதஸ வார்ஷிகம் புத்தி பூர்வகத்தில் இரட்டி -அத்யந்தா வ்ருத்தியில் அதில் இரட்டி -இது சாஷாத்கார்த்தாவுக்கு

    அனுக்ராஹகனுக்கும் இதில் ஓன்று முக்கால் -ப்ரயோஜகனுக்குப் பாதி -அனுமந்தாவுக்குக் காலே அரைக்கால் -ப்ரோத்ஸா ஹகனுக்குக் கால் -புத்தி பூவாக மஹா பாதகத்துக்குச் சொன்ன த்வாதஸ வார்ஷிகம் கர்த்தாவினுடைய ஸூத்த் யர்த்தம் -அதாவது கர்ம யோக்யத்வ ஸம் வியவஹார யோக்யத்வ காரணமல்லது நிரய நிவ்ருத்தகம் -நிவர்த்தகம் -அன்று –

    புத்தி பூர்வ க்ருத்தங்களுக்கு ஸ்ம்ருதியில் சொன்ன ப்ராணாந்திக ப்ராயச்சித்தம் வ்யாவஹார யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -புத்தி பூர்வகத்தில் இரட்டித்த த்வாதஸ வார்ஷிகமும் வ்யவஹார்ய கரத்வமாம் இத்தனை -நரக நிவர்த்தகம் அன்று

    யஸ் ஸக்ருத் பாபம் குர்யாத் ஹ்ரியதே தத்தபோ பரம் –என்று சுருதி சொன்ன படியே பாப ப்ரவ்ருத்தி ஸஜாதீய பாபாந்தர ப்ரவ்ருத்தியிலும் மூட்டும்படியாய் இருக்கும் -அதாவது கர்மத்துக்கு விஸஜாதீய கர்ம யோக்யதா கரத்வமும் ஸஜாதீய கர்ம ப்ரவர்த்தகத்வமும் தத் அநுரூப பல ப்ரவர்த்தகத்வமும் என்று ஸக்தி த்ரயாத்வமும் உண்டு -அதில் பாவத்துக்கு விசஜாதீயமான புண்ய கரணத்துக்கு அயோக்யனாக்குகையும் அநிஷ்ட பல ப்ரதத்வமும் -ஸஜாதீய பாபாந்தரத்திலே ப்ரவர்த்திப்பிக்கையும் ஸ்வ பாவமாகையாலே ப்ராயச்சித்தங்கள் வை மூன்று சக்தியையும் கழிக்க மாட்டாது

    அதில் சிலவை விஜாதீயமான புண்ய கரண யோக்யதையைப் பிறப்பித்து ஸூத்தனாக்கும் -பிராணாந்த காதிகளான சில ப்ராயச்சித்தம் புண்ய கரண யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -பாபாந்தர ருசி ஜனகமான வாஸனா ரூப ஸக்தி விசேஷத்தைப் போக்க வல்லதொரு பிராயச்சித்தம் இல்லை இறே –

    அது உள்ளது க்ருஷ்ண விஷயம் ஒன்றுக்குமே இறே -எங்கனே என்னில் -ஸூத்திர் பவதி ஸம் ஸ்ம்ருத்ய ஸ்நாதோ பவதி தர்சநாத் -ப்ரணிபாதேந ஸூத்தாத்மா த்ரய க்ருஷ்ணே மஹா குணா -என்று இறே மஹ ரிஷிகள் ஸ்மரித்தது-அதாவது -ஸ்மரண மாத்ரத்தாலே புண்ய கர்ம யோக்யதா ரூபையான ஸூத்தி பிறக்கும் – கண்ணிட்டு விக்ரஹத்தைக் கண்ட அளவே பர லோபம் பிறவாத ஸ்தாநம் உண்டாம் -திருவடிகளில் ப்ரணாமத்தாலே பாப வாஸனா நாஸம் பிறக்கும்படி அந்தக்கரண ஸூத்தி உண்டாம் என்று பகவத் விக்ரஹத்துக்கு இந்த மஹா குணம் மூன்றும் சொல்லப்பட்டது –

    ஆகையால் -ப்ராயச்சித்தாநி அசேஷாணி தப கரமாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-39- என்று ஸ்ரீ பராசர பகவானும் குருகுல பூத ஸமஸ்த ப்ராயச்சித்தங்களும் ஒரு தட்டும் -தத் ப்ரதிநிதியான கிருஷ்ண அநு ஸ்மரணத்தை உத்க்ருஷ்டமாகவும் சொல்லிற்று –

    இவ் விடத்தில் அநு ஸ்மரணமாவது-அநுர் நிஹீநார்த்தே -என்று சேஷத்வ அனுரூபமான அநு ஸ்மரணம் -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர என்று தாஸ்யத்தை ஸ்மர்த்தவ்யமாக விதித்தது இறே -இவ் விடத்தில் கிருஷ்ண ஸப்தம் -க்ருஷிர் பூ வாசகஸ் ஸப்தோ ணஸ் ச நிர்வ்ருதி வாசக -விஷ்ணுஸ் தத் பாவ யோகஸ் ச கிருஷ்ண இத்யபி விஸ்ருத -உத்யோக -69-5- என்று ஆனந்த ரூபத்துக்கு வாசகமாக நிர்வசிக்கப் படுகையாலே நிரதிசய ஆனந்த ஸ்வரூபனான கிருஷ்ணனைச் சொல்லுகிறது

    ஸக்ருத் ஸ்ம்ருதோ அபி கோவிந்தோ ந்ரூணாம் ஜன்மஸ தார்ஜிதம் -பாப ராஸிம் மஹத் யாஸூ தூல ராஸி மிவாநல -என்று ஒருக்கால் ஸ்மரித்த மாத்ரத்திலே அநேக ஜென்ம ஆர்ஜித பாப ராஸி பஞ்சுப்பொரி போலே சுடும்
    யதேஷீகா தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -சாந்தோ -5-24-3- என்று நெருப்பிலிட்ட பஞ்சு போலே பகவத் த்யான பனுடைய ஸர்வ பாபங்களும் வெந்து போம் என்கிற பிரகாரத்தை ஸ்ருதியும் சொல்லிற்று இறே

    இப்படி அதி மஹத்தாயும் அல்பங்களுமாயும் உள்ள ஸமஸ்த பாபங்களுக்கு அஞ்சி அநு தப்தனாய் தந் நிவர்த்தக ப்ராயச்சித்தங்களிலே அபிமுகனான வனுக்கு பாபாநாம் ஆனந்தயத்தாலே- ப்ராயச்சித்தங்களும் அசங்க்யா தங்களாகையாலே ஜென்ம சத ஸஹஸ்ரங்கள் கூடினாலும் பிராயச்சித்த அனுஷ்டானத்தாலே பாப நிவர்த்தகம் அஸக்யமாகையாலே இந்த ஸமஸ்த பாபங்களையும் ஸக்ருத் அநுஷ்டே யமாய் இருபத்தொரு ப்ராயச்சித்தத்தாலே போக்கிக் கொள்ளப் போகிறோமோ என்னும்படி பாகம் பிறந்தவனுக்கு விஹிதமானது இறே ஸ்ரீ கிருஷ்ண விஷயமான ஸக்ருத் ஸ்மரணம் –

    எங்கனே என்னில் -க்ருதே பாபே அநுதாபோ வை யஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பிராயச்சித்தம் து தஸ்யைகம் ஹரிஸம் ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-40- என்று பாப பயத்தால் பிறந்த அனுதாபத்தை அனுவர்த்தித்து பகவத் ஸ்மரணத்தையும் விதிக்கிற அளவில் ஏகம் என்று ஸக்ருத் கரணத்தையும் ஸம் ஸ்மரணம் என்று -ஸம் இத்யேகீ பாவே -என்கிறபடியே சரீராத்மா நிபந்தமான அப்ருதக் பாவ ஸ்மரணத்தையும் விதித்தது இறே –

    இந்த ஸக்ருத் ஸ்மரணம் கேவலம் பாப க்ஷய அர்த்தமே யன்று-ஸ்வ அபி லஷித ஸமஸ்த புருஷார்த்த ப்ரதமமாய் இருக்கும் – ஆகை யிறே ப்ரஹ்லாதனும் -ஆயாஸ -ஸ்மரணே கோஸ்ய- ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -பாப க்ஷய ச பவதி -ஸ்மரதாம் தமஹர்நிகம் –ஸ்ரீ விஷ்ணு புரா -1-17-78- என்று உபதேசித்தது -அதாவது ஸ்மரண அநந்தரம் சோபனமான புருஷார்த்தகத்தை ஸர்வ காலமும் கூடா நிற்கும் -பிரதிபந்தகமான பாபம் ஸ்மரணத்தினுடைய ஆவர்த்தன மாத்திரத்திலே ஆதித்ய ஸந்நிதியில் அந்தகாரம் நசிக்குமா போலே ஸ்வயமேவ நஸியா நிற்கும் –இதுக்கு தேச கால அதிகாரி நியதியும் இல்லை என்றபடி –
    ஆகையிறே -ப்ராதர்நிஸி ததா ஸந்த்யா மத்யாஹ் நாதி ஷு ஸம் ஸ்மரந் நாராயணன் அவாப்நோதி ஸத்ய பாப ஷயான் நர-ஸ்ரீ விஷ்ணு புரா –2-6-41- என்று ஸ்ரீ பராசர பகவானும் சொன்னார் இறே
    இந்த ஸ்மரணம் ஸர்வ பல ப்ரதமே யாகிலும் முமுஷுவுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் அளவில் ஸ்வர்க்க பிராப்தியும் ப்ராப்ய பிரதிபந்தகமாம் படி ஸ்வயமேவ ரஸியா நிற்கும்

    ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
    என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
    வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
    வைகுந்தம் என்று அருளும் வான்–53-

    விஷ்ணு ஸம் ஸ்மரணாத் ஷீண ஸமஸ்த க்லேச சஞ்சய -முக்திம் ப்ரயாதி ஸ்வர்க்காப்தி தஸ்யந்தராய மைத்ரேய தேவேந்த்ரத்வாதிகம் பலம் -ஸ்ரீ விஸ்ணு புரா -2-6–42-43-என்று ஸ்மர்தவ்ய விஷய ஸ்வாரஸ்ய ப்ரீதி நிபந்தமான ஜப அர்ச்சநாதி கைங்கர்ய விசேஷங்களிலே அத்யர்த்த ப்ரியத்வத்தாலே இந்த்ராதி பத்யமும் அந்தராயம் என்று சொல்லப்பட்டது –

    இந்த ஸ்மரணம் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்டப் ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்குமளவில் அநிச்சயா க்ருதமாகிலும் வஸ்து சாமர்த்யத்தாலே அவ்யபி சரிதமாய் இருக்கும் –
    ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைர் அபி ஸ்ம்ருத -அநிச்சயாபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவக -ப்ருஹந் நார –11-99- என்று இச்சை இன்றியே ஸ்பர்சித்தாலும் அக்னி சுடுமா போலே ப்ரத் விஷ்டமான –(இவ் விடத்தில் சில வாக்கியங்கள் நஷ்டமானதாகக் காண்கிறன -அவை கோசாந்தரத்தில் காண்க) — நெஞ்சாலே நினைத்த ஸிஸூ பாலனுக்கு பலிக்கக் கண்டது இறே -இந்த ஸ்மரணம் கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் –

    அவஸே நாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பதாகை -புமான் விமுச்யதே ஸத்யஸ் ஸிம்ஹத்ரஸ்தைர் ம்ருகைரிவ -ஸ்ரீ விஷ்ணு புரா -6–8-19
    க்வ நாக ப்ருஷ்ட கமநம் புநரா வ்ருத்தி லக்ஷணம் க்வ ஜபோ வாஸூ தேவேதி முக்தி பீஜ மநுத்தமம்-ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-44-
    ஸாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலந மேவ வா வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷாக ஹரம் வித்து -பாகவதம் -6-2–13-அஜோமில வ்யாக்யானம்
    ஹத்யாயுதம் பாந ஸஹஸ்ர முக்ரம் குர்வங்க நாகோடி நிஷேவணஞ்ச ஸ்தேயாந்ய சங்க்யாநி ஹரே ப்ரியேண கோவிந்த நாம்நா நிஹதாநி ஸத்ய –
    சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்த்தயேத் நா சவ்சம் கீர்த்தநே தஸ்ய ஸ பவித்ர கரோ யத –பாத்மோத்தர
    பத்த பரிகரஸ் தேந மோஷாய கமநம் ப்ரதி ஸக்ருத் உச்சரிதம் யேந ஹரிரித் யஷர த்வயம் -காருட பூ 114-3-
    நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வஸ வர்த்திநீ -ததா அபி நரகே கோரே பதந்தீஹ கிமத் புதம் –காருட -பூ 220-9

    நாவாயில் உண்டே*  ‘நமோ நாரணா’ என்று,*
    ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* – மூவாத-
    மாக்கதிக்கண் செல்லும்*  வகைஉண்டே,*  என்ஒருவர்-
    தீக்கதிக்கண் செல்லும் திறம்


    ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ் ச பீதா கோரேஷு ச வ்யாதி ஷு வர்த்தமாநா -சங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்தது காஸ் ஸூகிநோ பவந்தி
    ஏதாவதால மகா நிர் ஹரணாய பும்ஸாம் ஸங்கீர்த்த நம் பகவதோ குண கர்மநாம்நாம் –ஆக்ருஸ்ய புத்ரம் அகவான் யத ஜாமிளோபி நாராயணேதி ம்ரியமாண உபைதி முக்திம்
    கதவான் பரமம் பதம் தத –பதம் யத் என்றும் -இயாய முக்திம் என்றும் பாதாம் – -என்றும்
    இது முதலான பிரமாண சதங்களாலே

    பகவன் நாம ஸங்கீர்த்தனமும் ஸகல அநிஷ்ட சாந்தி பூர்வகமாக ஸர்வ அதிசயித புருஷார்த்த ப்ரதமாகச் சொல்லப்பட்டது இறே -இப்படி க்ருத ப்ராயச்சித்தனாகையாலே ஷீண பாபனானவனுக்கு ஸ்வ அனுஷ்டித புண்ய தாரதம்ய அநு ரூபமாக அநு பாவ்யங்களாய் இறே ஊர்த்வ லோகங்கள் இருப்பது –
    இவ்விடம் தொடங்கி மேல் வாக்யங்களுக்கு அநு குணமாக ஸ்ரீ விஷ்ணு புராண -2-7- வசனங்களைக் கண்டு கொள்வது

    இதில் கீழ் யுக்தமான பூ மண்டலத்துக்கு மேலே ஆதித்ய பதத்தளவும் நூறாயிரம் யோஜநம் உயர்த்தியாய் ஸித்த கந்தர்வாதிகள் ஸஞ்சரிக்கும் தேசமான அந்தரிக்ஷ லோகமாய் இருக்கும்
    யாவத் பிரமாணா ப்ருதிவீ விஸ்தார பரி மண்டலாத் நபஸ் தாவத் பிரமாணம் வை வ்யாப்தம் மண்டலாதோ த்விஜ-ஸ்ரீ விஷ்ணு புரா -2-9-4- என்று அந்தரிக்ஷ லோகமும் பூமியோ பாதி விஸ்தாரத்தையும் சுற்றுடைமையையும் யுடைத்தாய் இருக்கும்

    அந்த ஆதித்ய மண்டலத்துக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே சந்த்ர பதமாய் இருக்கும் -அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே நக்ஷத்ர பதமாய் இருக்கும்
    அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே புதனுடைய பதமாய் இருக்கும்
    அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸூக்ர -வெள்ளி
    பதமாய் இருக்கும்
    அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே அங்காரக -செவ்வாய்
    பதமாய் இருக்கும்
    அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ப்ருஹஸ்பதி பதமாய் இருக்கும்
    அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸநி பதமாய் இருக்கும்
    அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸப்த ரிஷி மண்டலமாய் இருக்கும்
    அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஜ்யோதிஸ் சக்ர கூடஸ்தமான த்ருவ பதமாய் இருக்கும்
    ஆக பூமி அந்தரிக்ஷ ஸ்வர்க்கங்கள் மூன்றினுடைய உயர்த்தி சொல்லப்பட்டது –

    அதில் பாதாசாரிகள் வர்த்திக்கும் தேசம் பூ லோகம்
    பூமிக்கும் ஆதித்யனுக்கும் நடுவு புவர் லோகம்
    ஆதித்யனுக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாலு நூறாயிரம் யோஜநம் உயர்த்தியை யுடைத்தாய் ஸாதிகாரர்களான க்ரஹ நக்ஷத்ராதிகள் வர்த்திக்கும் தேசமான ஸ்வர்க்க லோகமாய் இருக்கும்

    இதுக்கும் மேலே -த்ருவ பத்துக்கும் மேலே – ஒரு கோடி யோஜனம் உயர்த்தியை யுடைத்தாய் -விநிவ்ருத்தாதி காராஸ்து மஹர் லோக நிவாஸிந –சைவ புராணே என்று நிவ்ருத்தி அதிகாரராய் அதிகார அபேக்ஷையை யுடையராய் கல்பாந்த ஸ்தாயிகளான இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேஸமாயுள்ள மஹர் லோகமாய் இருக்கும் –

    அதுக்கும் மேலே இரண்டு கோடி யோஜநம் உயர்த்தியாய் ப்ரஹ்ம புத்ரர்களாகிற ஸநகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான ஜனர் லோகமாய் இருக்கும் –

    அதுக்கும் மேலே அதில் நாலு மடங்காம் படி எட்டு கோடி யோஜனம் உயர்தியான -உயர்த்தியை யுடைத்தாய் வைராஜாக்யரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேசமான தபோ லோகமாய் இருக்கும் – என்று தத்வ த்ரய வ்யாக்யான அநு ரோதேந பாடம் இருந்தால் நலம்
    இது விஷ்ணு புராண ஸ்லோகத்துக்கும் -2-7-14-சேரும் –
    தபோ லோகம் ஓங்காராதி பரம ரிஷிகள் வர்த்திக்கும் தேசமாய் இருக்கும் –

    அதுக்கும் மேலே அதில் ஆறு மடங்காய் நாற்பத்தெட்டு கோடி உயர்த்தியை யுடைய ஸத்ய லோகமாய் இருக்கும்
    இப்படி இத்யாதி வாக்ய அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -2-7-14-காண்க –
    இப்படி ஸ்வர்க்க பர்யந்தமாக ஏக கோடியுமாய் கீழ் மேல் மஹர் லோகம் தொடங்கி ஐம்பத்து ஒன்பது கோடியாய் அறுபது கோடி உச்சாராயம் என்பாரும்- ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு அண்ட உச்ச்சராயம் ஐம்பது கோடியாய் -ஸூர் யாண்ட கோலயோர் மத்யே கோட் யஸ்ஸ்யு பஞ்ச விம்சதி -சைவ புராணே -என்கையாலே ஸூர்ய மண்டலத்துக்குக் கீழே 25 கோடியும் மேல் 25 கோடியுமாக 50 கோடியாய் இருக்கும் என்பாருமாய் இருக்கும் –அப்போது ஸூர்ய பதத்துக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாறு லக்ஷமும் மஹர் லோகம் ஒரு கோடியும் ஜனர் லோகம் இரண்டு கோடியும் தபோ லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 8 கோடியும் சத்ய லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 12 கோடியும் இந்த ஸத்ய லோகத்துக்கு மேற்பட நாலு லக்ஷம் குறைந்த இரண்டு கோடி அண்ட கடாஹ ஊர்த்தளவாக இருக்கும்

    இனி ஸூர்யனுக்குக் கீழ் அண்டாத கடாஹத்து அளவும் அந்தரிக்ஷ லோகம் பூ லோகம் ஸப்த பாதாளங்கள் அநந்த ஸ்தானம் கார்ப்போதகம் அளவாகச் சொன்ன ஸங்க்யைகளை நீக்கி உள்மானம் என்று அவிரோதேந கொள்ளக் கடவது -இப்படி உத் ஸேதத்தை யுடைத்தான -இவ்விடத்திற்கு அனுகுணமாக -2-9-15–ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் காண்க –

    சதுர் தச புவனத்திலும் ஊர்த்வ லோகமான ஸத்ய லோகத்திலே -தேஷாமேஷாம் கேசந ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யான்யே சந்தி தத்ரைவ லோகா விஷ்ணோ ரன்யே சந்தி லோகா விஸாலாஸ் தாம் ஸ்தான் லோகாம்ஸ் தாநு பாஸ்ய வ்ரஜந்தி -என்று அம்ச பேதத்தாலே சில ப்ரஹ்ம லோகங்களாய் -சில சிவ லோகங்களாய் -சில விஷ்ணு லோகங்களாய் -அவ் வவரை உபாஸித்தவர்களுக்கு ப்ராப்யங்களாய் இருக்கும் –

    இந்த சத்ய லோக வர்த்திகள் -வேதாந்த விஞ்ஞாந ஸூநிஸ் சிதார்த்தா ஸந்யாஸ யோகாத் யதயஸ் ஸூத்த ஸத்வா – தே ப்ரஹ்ம லோகே து பராந்த காலே பராம்ருதாத் பரி முச்யந்தி ஸர்வே -தைத்த ஆனந்த -6-10-22- என்றும்
    ப்ரஹ்மணா ஸஹ தே ஸர்வே ஸம் ப்ராப்தே ப்ரதி சஞ்சரே -பரஸ் யாந்தே க்ருதாத்மாந பிரவிசந்தி பரம் பதம் -கூர்ம பு பூ 12-269- என்றும்
    ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறபடியே பரமான ஸம்ஹார காலம் வந்தவாறே ப்ரஹ்மாவோடே கூடி மோக்ஷத்தை பிராபிப்பர்கள்

    ஆப்ரஹ்ம புவநால் லோகா புநரா வ்ருத்தி நோர்ஜூந -கீதை -8-16- என்று ப்ரஹ்ம லோகத்திலே போனவர்களுடைய ஆவ்ருத்தி வசனம் -ப்ராஹ்மம் ஸந்யாஸி நாம் ஸ்ம்ருதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-6-37- இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ணாஸ்ரமாதி தர்ம சர்யையாலே ப்ரஹ்ம லோக பிராப்தி பண்ணின அவித்வத் விஷயம் யோகாதி சயத்தாலே பிராபித்த வித்வத் விஷயம் அன்று என்று கொள்ள வேணும்

    இந்த லோகங்களில் -ஜனஸ் தபஸ் ஸத்யம் என்று சொல்லப்பட்ட ஊர்த்வ லோகங்கள் மூன்றும் ஆதி ஸ்ருஷ்டி தொடங்கி ப்ரஹ்மாவினுடைய ஆயுரவஸாநத்தளவும் நிற்கையாலே நடுவு அழிவு வந்து ஸ்ருஷ்டிக்க வேண்டாமையாலே அக்ருதகம் என்று பேராய் இருக்கும் -இதுக்கு அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு புரா -7-7-19-21-ல் காணலாம்

    கீழ் பூம் யந்தரிக்ஷ ஸ்வர்க்க ரூபமான த்ரை லோக்யமும் (இந்த மூன்றும் கீழ் உள்ள ஏழும்)ப்ரஹ்மாவினுடைய அஹரவஸா நத்திலே ஸம் ஹ்ருதமாயும் கல்பாதிகளிலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டும் இப்படி ப்ரஹ்மாவினுடைய திநே திநே ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்கள் உண்டாகையாலே க்ருதகம் என்று பேராய் இருக்கும் –

    நடுவில் மஹர் லோகமானது த்ரை லோக்ய ஸம்ஹாரத்தில் -யாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந –பாடாந்தரம் கோஸாந்தரங்களில் காண்க -த்ரி லோக்யாம் தஹ்யமா நாயாம் கஸ்த்யா சங்கர்ஷணாக்னிநா யாந்த் யூஷ்மணா மஹா லோகாத் ஜனம் ப்ருக்வா தயோர்த்திதா -என்கிற ஸூக வசனத்தில் இவ் வர்த்தம் காண்க -என்கிறபடியே தாபாதிகள் பொறுக்க மாட்டாதே மஹர் லோகத்தார் குடி வாங்கி ஜனர் லோகத்தே குடி புகுருகையாலே லோகம் ஸூன்யமாய் கல்பாதிகள் தோறும் குடி புகுருகையாலே க்ருதா க்ருதங்களுக்கு நடுவு என்றிட்டு க்ருதாக்ருதம் என்று பேராய் இருக்கும் –

    இந்த த்ரை லோக்யம் இஜ்யா ரூபமான கர்ம அநுஷ்டான ஸ்தானமுமாய் இஜ்யா பல போக ஸ்தானமுமாய் இருக்கும்
    அல்லாத லோகங்கள் யோக ஜனித் புண்யாதிஸயத்தினுடைய பல போகத்துக்கு ஸ்தானங்களாய் இருக்கும்

    இதி தத்வ நிரூபநீ போக பூமி நிரூபணம் நாம சதுர்த்த அதிகாரம் ஸம் பூர்ணம் –

    ——-

    பஞ்சம அதிகாரம்— ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
    1-ஸம்ஹார நிரூபணம்
    2-நித்ய நைமித்திக ப்ராக்ருதாத் யந்திக ப்ரளய ஸ்வரூப நிரூபணம்
    3-ஸம்ஹார ப்ரகார நிரூபணம்
    4-சதுர் முக க்ருத பத்தாத்ம ஸ்ருஷ்டி நிரூபணம்
    5-அணிமாத் யஷ்ட ஐஸ்வர ஸ்வரூப நிரூபணம்
    6-த்வாதஸாதித்ய நாம நிரூபணம்
    7-ஆதித்யாதி ஸப்த கண நாம க்ருத்ய நிரூபணம்
    8- த்வாதஸ மாஸேஷு த்வாதஸாதித்யாதி ஸப்த கண பரி ப்ரமண நிரூபணம்
    9-ஆதித்ய மண்டலாதிஷ்டித புருஷ அந்தர்யாமி -ஸ்ரீ மன் நாராயண ஸ்வரூப நிரூபணம்

    ——–

    ஸம்ஹாரம் இருக்கும் படி எங்கனே என்னில்
    1-நித்யம் என்றும்
    2-நைமித்திகம் என்றும்
    3-ப்ராக்ருதம் என்றும்
    4-ஆத்யந்திகம் என்றும் நாலு வகைப்பட்டு இருக்கும்
    ஸம்ஹாரப் ப்ரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-3-4-

    அதில் 1-நித்யமாவது -உத்பன்ன சேதனருக்கு யமாதிகளால் வருகிற சரீர வியோகம்
    2-நைமித்தகமாவது – ப்ரஹ்மாவினுடைய ராத்ரிகள் தோறும் உண்டாகிற த்ரை லோக்ய விநாஸம்
    3- ப்ராக்ருதமாவது -ப்ரஹ்மாவினுடைய ஆயுர் அவஸா நத்திலே ப்ரக்ருதி பர்யந்தமாக உண்டாகும் விநாஸம்
    4-ஆத்யந்திகமாவது -உத்பன்னமான அவித்யாதிகளோடே கூட புனர் உத்பத்தி வாராதபடி உண்டாகும் சரீர விநாஸம்

    இதில் பிரகிருதி நாஸ பர்யந்தமான ஸம்ஹாரம் ப்ராக்ருத ஸம்ஹாரமாகையால் -அது கீழ்ச் சொன்ன உத்பத்தி கிரமத்துக்கு உடலாகையாலே அறிய வேணும் –
    அப்யவ பூர்விகையாய் இறே ஸ்ருஷ்டி இருப்பது –
    இதில் முதல் நைமித்திக ஸம்ஹார க்ரமத்திலே நூறு வர்ஷம் அநா வருஷ்டியாய்க் கிடக்கும்
    அனந்தரம் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரன் -1-ஸூஷும்நோ 2-ஹரி கேஸஸ் ச 3-விஸ்வ கர்மா ததைவ ச 4-விஸ்வஸ்ய 5-ஸாஸ்வதா 6-ஸம்யத் வஸூரர் வாக்வ 7-வஸூஸ் ததா –கூர்ம பு பூ 42-3- என்று சொல்லுகிற ஸூஷும் நாதிகளான ஆதித்ய கிரணங்கள் ஏழிலும் பிரவேசித்து நின்று- பூமியிலும் ப்ராணிகளுடைய சரீரங்களிலும் உண்டான நீர்ப் பசையை அறுக்கும் -இப்படி லோகத்திலே துவட்டித்த நீர் கனத்தாலே அதிசயித்த தேஜஸ்ஸை யுடைத்தான இந்த ஏழு ஆதித்ய கிரணங்களிலும்
    1-ஆரோகன் என்றும்
    2-ப்ராஜன் என்றும்
    3-படரன் என்றும்
    4-பதங்கன் என்றும்
    5- ஸ்வ வர்ணன் என்றும்
    6- ஜ்யோதிஷ்மான் என்றும்
    7-விபாஸன் என்றும்
    ஆரோகோப்ராஜ படர பதங்க ஸ்வ வர்ணரோ ஜ்யோதி ஷீமான் விபாஸ -இதி ஸப்த ஸூர்யோ இதி ஸ்ருதே –யஜுஸ் ஆ -1-7-1-என்கிற பேர்களை யுடைத்ததாய்க் கொண்டு ஏழு ஆதித்யர்களாய் பரிணமிக்கும்
    அவ் வேழும் இவ் வேழு லோகங்களையும் காறு காலில் பொறி கூறுபட்டது படுத்தித் தீயப் பண்ணும் –
    இப்படித் தீய்கையாலே லோகத்தில் உண்டான மலைகளும் சுண்ணாம்புக் கல் போலே வெந்து நீராய் -நீறாய் -(பஸ்மமாய்
    -) வ்ருஷ குல்மாதிகளும் வெந்து சாம்பலாய் பூ மண்டலம் அடைய ஒரு துரும்பு காண ஒண்ணாத படி ஆமை முதுகு போலே கிடக்கும்

    இப்படி இவ் வாதித்யர்களாலே இந்த லோகத்தில் நெய்ப்பு நீர்ப் பசையும் அற்றவளவிலே ஈஸ்வரன் காலாக்கினி ருத்ர ரூபத்தைத் தரித்துக் கொண்டு பாதாள கதனான அநந்தன் முகத்திலும் குதித்து வைக்கோல் போரை அடியே தொடங்கிச் சுட்டுக் கொண்டு ஏறுமா போலே பாதாளம் தொடங்கி லோகங்களை அடைவிலே சுட்டுக் கொண்டு எரித்த அநந்தரம் முக நிஸ் வாசத்தாலே புஷ்கலா வர்த்தங்களான மேகங்களை ஸ்ருஷ்டிக்கும் -அம் மேகங்கள் ஆகாஸம் அடைய இடமடையும் படி மின்னலும் இடியுமாய் நூறு வர்ஷம் வர்ஷிக்கும் -அவ் வர்ஷ ஜலத்தால் எரிகிற நெருப்பும் அவிந்து லோகமடைய வெள்ளம் கோக்கும் -அநந்தரம் இப்படி வர்ஷிக்கிற மேகங்கள் அடையப் பாரிப் பரந்து போம்படி பகவன் முக நிஸ் வாசமாகிற காற்று நூறு வர்ஷம் ப்ரஹ்மாண்ட மடையக் குலுங்கும்படி அடிக்கும் -ஆன பின்பு நிரம்பி நிற்கிற ஜல தத்வம் அண்டாந்தர வர்த்தியான பூமியினுடைய பூமித்வ வ்யவஸ்தாபகமான கந்த குணத்தை க்ரஸிக்கும் -அக் கந்தையான பூமி ஜல தத்வமாயே விடும் –(குடம் உடைய மண் ஆகுமா போல் காரியப் பொருள் காரணப் பொருளாகவே ஆகி விடுமா போல்)

    அந்த ஜலத்தினுடைய ரஸாத் மகமான குணத்தை தேஜஸ்ஸு க்ரஸிக்கும் -அந்த ரஸமான ஜலம் தேஜஸ்ஸாயே விடும் -அந்த தேஜஸ்ஸினுடைய ரூப குணத்தை வாயு க்ரஸிக்கும் பின்பு அந்த தேஜஸ்ஸு வாயுவாயே விடும் -வாயு குணமான ஸ்பர்சத்தை ஆகாசம் க்ரஸிக்கும் -பின்பு அந்த வாயு ஆகாசமாயே விடும் -ஆகாஸ குணமான ஸப்தத்தை பூதாதி க்ரஸிக்கும் -பின்பும் ஆகாஸமும் இந்த்ரியங்களும் ஒருக்காலே அஹங்காரத்திலே லயிக்கும் -அஹங்காரம் மஹானிலே லயிக்கும்

    உர்வீ மஹாம்ஸ் ச ஜகத ப்ராந்தே அந்தர் பாஹ்யதஸ் ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-29- என்று அண்டத்துக்கு உள் வாயோடு புற வாயோடு வாசியற ஒரு ப்ராந்தத்திலே ப்ருதிவியும் ஒரு ப்ராந்தத்திலே மஹானும் என்று சொல்லுகையாலே -இதற்கு அநு குணமாக -6-4-29- விஷ்ணு சித்தீயத்திலே காண்க
    உள் வாயில் ப்ரதம கோடியானபிருத்வி தொடங்கி சரம கோடியான மஹான் அளவும் செல்ல இவ் வண்டமான கார்யம் இப்படி அழிந்து ஆவரண ஜலமே சேஷித்து நிற்கும்

    இஜ் ஜலம் தொடக்கமான ஆறு ஆரணமும் ஒன்றிலே ஓன்று லயித்து ப்ரக்ருதியே சேஷிக்கும் -அந்த ப்ரக்ருதி தானும் புருஷ சமஷ்டி யாத்மகமான அக்ஷர அவஸ்தையை பஜித்து- தத் அவஸ்தமான ப்ரக்ருதியும் புருஷனும் -ஆஸீதிதம் தமோ பூதம் அப்ரஞ்ஞாதம லக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்தமிவ ஸர்வத–மநு -1-5- என்கிறபடியே அநிர்த் தாரணீயமாகச் சொல்லப் படுகிற ஒரு அவஸ்தையை அடைந்து -ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வ ரூபிணீ புருஷஸ் சாப் யுபாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39- என்கிறபடியே தமோ வஸ்தரான ப்ரதான புருஷர்கள் இருவரும் பரமாத்மாவின் பக்கலிலே விபாக நர்ஹ தஸா பத்தி லக்ஷண லயத்தை அடைந்து கிடப்பர்கள்-இப்படி பரமாத்மாவையே அடைந்து ப்ரக்ருதி புருஷாதி சகல விகல்ப ஸூன்யமாய்க் கொண்டு பரார்த்த காலம் கிடக்கும் -இது பிராகிருத ஸம்ஹார ப்ரகாரம்

    இப்படி பகவாதாத்மகனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டமான லோகங்களில் கர்ம பல பேத ஸ்தானமாக நாநா வித சரீர பரிக்ரஹரம் பண்ணி உத் பன்னரான பத்தாத்மாக்களுடைய ஸ்ருஷ்டி ப்ரகாரம் நிரூபிக்கப் படுகிறது–ஸ்ருஷ்டி பிரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5- காண்க –

    அதில் ஸ்ருஷ்டியிலே உபக்ரமித்த ப்ரஹ்மாவுக்கு அபுத்தி பூர்வக -விஷேத்யாந ரஹித -தமஸ் ப்ரசுரமாய் குல் மதியான (புதர் தொடக்கமான)சர்க்கம் முந்துற உண்டாயிற்று -இது தான் 1-தமஸ்ஸு 2-மோஹம் 3-மஹா மோஹம் 4-தாமிஸ்ரம் 5-அந்த தாமிஸ்ரம் என்று பஞ்ச ப்ரகாரமான அவித்யா ரூபமாய் இருக்கும் –

    வ்ருஷாதிகளுக்கு ஸப்தாதி பாஹ்ய ப்ரகாஸமும் ஸூக துக்காத் யந்த ப்ரகாசமுமாகிற ப்ரக்ருஷ்ட விஞ்ஞாநம் இன்றியே ஜலாத் யாதாநம் ஷத பங்க ஸம் ரோஹணம் -தோஹதாதி ஸம் பர்க்கங்களுக்கு வேண்டுமதுவே யாம்படி இருக்கும் -மஹீருஹாதி களுக்கு கிஞ்சித் ஞாத்ருத்வம் இறே உள்ளது -ஆகை யிறே -அந்தஸ் ஸம்ஜ்ஞா பவந்த்யேதே ஸூக துக்க ஸமன்விதா -என்று சொல்லப்பட்டது -இதற்குச் சொன்ன பஞ்ச ப்ரகாரத்வம் ஆவது -வ்ருக்ஷம் -குல்மம் – லதை வீருத் த்ருணம் என்று அஞ்சு வகையாய் இருக்கும் –
    வ்ருக்ஷமாவது -உள் காள் புண்டான மரங்கள்
    குல்மமாவது -தூறுகள்
    லதையாவது -கொடிகள்
    வீருத்தாவது -பற்றமான பூண்டுகள்
    த்ருணமாவது -உள் ஈரம் இல்லாதவைகள்
    இந்த வ்ருஷாதி சர்க்கம் திர்யக் ஸ்ருஷ்ட்யாதி களுக்கு முன்பாகையாலே முக்ய சர்க்கம் என்று சொல்லப்படும்
    அபுத்தி பூர்வகம் என்றும் சொல்லப் படுகையாலே ப்ரஹ்மாவினுடைய ஸ்ரஷ்டத்வம் பகவத் ஸங்கல்ப அதீனம் என்றும் இந்த சர்க்கத்தினுடைய தமஸ் பிராஸுர்யத்துக்கு இதுவே ஹேது என்றும் தோன்றுகிறது –

    இந்த தமோ மோஹாதிகள் அஞ்ஞாந பேதமாய் பத்த சேதனர் எல்லாருக்கும் உண்டாய் இருக்கும் -எங்கனே என்னில்
    1- ப்ரக்ருதி மஹத் அஹங்கார மாத்ரா பஞ்ச காத்மகமான அஷ்ட பேத கர்ப்பமாய் இருந்துள்ள அநாத்மாவில் ஆத்ம புத்தி தமஸ்ஸு
    2-அணிமாத்ய ஐஸ்வர்ய லாபத்தில் மமத்வம் மோஹம்
    3-திவ்ய மானுஷ பேதத்தாலே தஸதா பின்னமான ஸப் தாதிகளில் ராகம் -மஹா மோஹம்
    4- இந்த அஷ்ட ஐஸ்வர்ய தச விஷயங்களுக்கு பரரால் விரோதம் வந்தால் பிறக்கும் க்ரோதம் -தாமிஸ்ரம்
    5- இவற்றினுடைய போகத்தில் நடுவே விநாஸம் வருகிறதோ என்கிற பயம் -அந்த தாமிஸ்ரம்
    இவை யதார்த்த ஞான விரோதிகள் –

    இவை ஐந்தையும் -அவித்யை -அஸ்மிதை -ராகம் -த்வேஷம் -அபி நிவேசம் -என்று சொல்லப்பட்ட கிலேச பஞ்சகமாகவும் சொல்லுவார்கள்
    யோக ஸூத்ர காரர்கள் சொல்லுவார்கள் என்றபடி – அவித்யாஸ்மிதா ராக த்வேஷாபி நிவேசா பஞ்ச கிலேசா இதி ஸூத்ரம் –

    இந்த பஞ்ச பர்வையான 1-அவித்யையில் தமஸ்ஸு எட்டு வகையும் 2-மோஹம் எட்டு வகையும் 3-மஹா மோஹம் பத்து வகையும் 4-தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் 5-அந்த தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் -ஆக ஐம்பத்து இரண்டு பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் -என்று சாங்க்யத்திலே சொல்லப்பட்டது

    அணிமாத் யஷ்ட ஐஸ்வர்யமாவன -அணிமா மஹிமா சைவ கரிமா லகிமா ததா ஈஸத் வஞ்ச வஸித் வஞ்ச பிராப்தி ப்ராகாம்ய மேவ ச -லிங்க பு பூ -88-9- என்கிறபடியே யோக பலமாய்க் கொண்டு முமுஷுவுக்கு மோக்ஷ ப்ரதிபந்தகமாய் வரும் ஐஸ்வர்ய விசேஷங்கள்

    இதில் 1-அணிமா வாவது -அத்யந்தம் அணுவான பதார்த்தங்களை உள்ளே யுள்ள அடங்க வல்லனாம்படி தன் சரீரத்தைச் சிறுக்குகை
    2- மஹிமா வாவது – சதுர்த் தச புவனங்களையும் வியாபிக்கும் படி தன் சரீரத்தைப் பெருக்குகை
    3- கரிமா வாவது புவநோத்தரண க்ஷமமான அதிசய சக்திகளாலும் சலிக்க ஒண்ணாத கனத்தை உடையனாகை
    4-லகிமா வாவது -நிலா வெய்யில் தொடக்கமான ஸ்வச்ச பதார்த்தங்களும் தன்னைத் தரிக்கும் படி கன சரீரத்தை நொய்த்தாக்குகை
    5-ஈஸத்வமாவது -அப்ரதிஹதமான ஸ்வச் சந்த ப்ரவ்ருத்தியை உடையனாகை
    6-வஸித்வமாவது -ஜனன மரணாதி களும் ஸ்வ அதீனமாகை
    7-பிராப்தி யாவது அதீத நாகத தூரஸ்தமான விஷயங்களையும் ப்ரத்யஷித்து பிராபிக்கை
    8-ப்ராகாம்ய மாவது -யத்ர காம வஸா யித்வமாகையாலே தன் அபிமத விஷயங்கள் துர்லபங்களே யாகிலும் தான் நினைத்த படியே பர காய ப்ரவேசத்தாலே யாதல் -சாயாநு ப்ரவேசத்தாலே யாதல் -தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தாலே அதிஷ்டித்து அநு பவிக்கை
    லிங்க புரா பூ 88-10-
    இந்த தமோ மோஹாதி பேத பஞ்சகம் நக -ஸ்தாவர சர்க்கத்தில் (
    நக -மலை)வந்தால் வ்ருஷாதியான வஸ்து பேதத்துக்கு ஸூசகமாய் இருக்கும்

    இந்த நக சர்க்கம் கர்மாதிகாரத்தை உடைத்தல்லாமையாலே சம்சார ப்ரவ்ருத்திக்கு யோக்யமல்ல என்று நினைத்து பின்னையும் சர்க்காந்தரத்தில் வந்தால் உபக்ரமித்த ஸ்ரஷ்டாவானவன் த்யானம் பண்ணின அளவிலே பஸ்வாதியான திர்யக் ஸரோதஸ் ஸானது உத் பன்னமாயிற்று – திர்யக்க்காக ஸஞ்சரிக்கையாலே திர்யக் ஸ்ரோதஸ் என்று பேராகிறது –
    அந்த பஸ்வாதிகள் தமஸ் ப்ரசுரங்களாய் -அத்தாலே ஸம்யக் அநுபவ ஞானம் இன்றியிலே இருக்கச் செய்தே ஸம்யக் ஞான அபிமானிகளாய் அவிவேகிகளாய் ஸாஸ்த்ர வஸ்யம் இல்லாமையாலே மாத்ருகமநாதி துர் மார்க்க ப்ரவ்ருத்தங்களாய் ஸூக துக்காத் யநுபவத்தாலே அந்த ப்ரகாஸ யுக்தங்களாய்
    அஹங்க்ருதா அஹம் மாநா -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5-11- என்று கர்விதங்களுமாய் -தேஹாத்ம அபிமானிகளுமாய் ஸ்வ பர ஸ்வரூப ஞானம் இல்லாதபடி ஆவ்ருத சித்தங்களுமாய் -அஷ்டா விம்சத்வதத்தை யுடையவையாய் இருக்கும்

    அஷ்டா விம்சத் வதமாவது
    ஏகாதஸ இந்த்ரிய வதா மதா-இந்த பங்க்திக்கு அனுகுணமாக ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -1-5-11- காண்க – வாயு புராணத்திலும் பூ -6-42-சொல்லுகிறபடியே
    இந்த்ரிய வைகல்யம் பதினொன்றும்
    அம்பாதி துஷ்டிகள் ஒன்பதும்
    தாரகாதி ஸித்திகள் எட்டும்
    ஆக அஷ்டா விம்சத் வதம் என்று சொல்லப்படும்

    இவற்றில் இந்த்ரிய வைகல்யமாவது -பதிரத்வமும் -த்வக் தோஷமும் -ஆந்த்யமும் வைரஸ்யமும் -நாஸாத்வம்ஸமம் ஞான இந்த்ரிய வைகல்யம்
    மூகத்வமும்- குணித்வமும் -பங்குத்வமும்- க்லீபத்வமும் -யூதா வர்த்தத்வமும் கர்ம இந்த்ரிய வைகல்யம்
    ஜடத்வம் மநோ வைகல்யம்
    அம்பாதி நவ துஷ்டிகளுக்கும் தாரகாத் யஷ்ட ஸித்திகளுக்கும் வைகல்யம் புத்தி வதம் என்று பேராய் பதினேழு படியாய் இருக்கும் -இது திர்யக்குகளுக்கும் மனுஷ்யாதிகளுக்கும் பிரதான்யமாய் இருக்கும்
    இதில் நவ துஷ்டிகளாவது -அம்பை ஸலிலை ஆபை வ்ருஷ்டி ஸூதாரை ஸூபாரை ஸூநேத்ரை மாரீசிகை யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்

    அதில் அஷ்ட வித ப்ரக்ருதி பரிணாம விசேஷத்தாலே -சித்த லயத்தில் நீண்டும் முக்தனாகா நின்றேன்- த்யானத்தாலே என்ன பிரயோஜனம் என்கிற துஷ்டிக்கு அம்பை என்று பெயர்
    ஸன்யாஸ வேஷோபாதாந மாத்ரத்தாலே க்ருதார்த்தனாகா நின்றேன் என்கிற துஷ்டிக்கு ஸலிலை என்று பேர்
    காலாந்தரத்திலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு ஆபை என்று பேர்
    பாக்ய வசத்தாலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு வ்ருஷ்டி என்று பேர்
    இவை நாலும் ஆத்யாத்மிகங்களாய்க் கொண்டு 1-ப்ரக்ருதி 2-உபாதானம் 3-காலம் 4-பாக்யம் என்கிற காம்யாந்தரங்களை யுடையவையாய் இருக்கும்

    அர்த்தத்தினுடைய ஆர்ஜனத்திலும் -ரக்ஷணத்திலும் -ஷயத்திலும் கிலேச தர்சனத்தாலே மீண்டு இருக்கிற துஷ்டிகளுக்கு ஸூதாரை –ஸூபாரை ஸூநேத்ரை என்று பேர்களாய் இருக்கும்
    ஸப்தாதி விஷய போகத்தில் திருப்தி பிறவாதே தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு மாரீசிகை என்று பேர்
    விஷய போகத்தில் திருஷ்ணை கழியாது ஒழிந்தால் பாபாதி தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்

    அஷ்ட ஸித்திகளில் அநு பதிஷ்டமான அர்த்தத்தைப் பற்ற புத்தியால் உண்டான ஊஹம் ஸ்தாராக்யையான ஸித்தி –ப்ராசங்கிக்கமான ஸப்த ஸ்ரவணத்தாலே யாதல்- லோக யாத்ரா தர்சனத்தாலே யாதல் -அர்த்த ஞானம் பிறக்கை ஸூதாராக்யையான ஸித்தி –
    குரு உபதேசத்தாலே எதிலும் அதிகமான அர்த்த ஞானம் பிறக்கை தாராயந்த்யாக்யையான ஸித்தி
    ஆத்யாத்மிக ஆதி பவ்திக ஆதி தைவீக ரூப தாப த்ரய ஜய லாபத்தாலே மூன்று வகைப்பட்ட மோத -பிரமுதித மோதமாநாக்யைகளான ஸித்திகள்

    இவ் விடத்தில் ஆத்யாத்மிக தாபத்துக்கு ஆயுர் வேதத்தாலே ஜயம்
    ஆதி பவ்திகத்துக்கு லௌகிகங்களான தத் தத் அநு ரூப உபாய விஷயங்களாலே ஜெயம்
    ஆதி தைவிகமான சீதோஷ்ண வாதாதிகளுக்கு ப்ரதிஸ்ர யாச்சாத ந சய்யா கௌதுக மங்களா சரணாதிகளாலே ஜயம்
    ஆதி தைவிகஸ்ய ப்ரதிஸ்ர யோசிச்சாந ப்ரதிஷ்டாதாந சய்யா கௌதுக மங்களா சரணாதி நா ஜய –இதிஹி -1-5-11- விஷ்ணு சித்தீய வாக்யம்

    மித்ர யோக வசத்தாலே -அர்த்த ஸித்தி உண்டாகை அதிக மாக்யையான ஸித்தி
    வித்வத்த பஸ்விஜந ஸூஸ் ரூஷையாலே லப்யையான அர்த்த ஸித்தி ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்தி

    ஆக தாராக்யை-ஸூ தாராக்யை-தார யந்த்யாக்யை -மோதாக்யை -பிரமுதி தாக்யை -மோதமாநாக்யை -அதிகமாக்யை -ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்திகள் எட்டும்
    அம்பாதி நவ துஷ்டியும்
    புத்தி விபர்யாஸ ஜனிதங்களாய்க் கொண்டு புத்தி வதாத்மிகங்களான இவை பதினேழும்
    இந்த்ரிய சக்திகள் பதினொன்றும்
    மோஷாந்தராயங்களாக சாங்க்யத்திலே சொல்லப்பட்டது

    ஏகாதஸ இந்த்ரிய வதாஸ் ஸஹ புத்தி வதைர ஸக்தி ருத்திஷ்டா -ஸப்த தச தாது புத்தேர் விபர்ய யாத் துஷ்டி ஸித்தீ நாம்
    ஆத்யாத்மிகாஸ் ச தஸ்ர -ப்ரக்ருத் யுபாதாந கால பாக்யாக்யா–பாஹ்யா விஷயோ பரமா பஞ்ச நவ துஷ்டயோர் அபி ஹிதா -யூஹஸ் சப்தா அத்யயனம் துக்க விகாதாஸ் த்ரயஸ் ஸூஹ்ருத் பிராப்தி -தாநஞ்ச ஸித்தய அஷ்டவ் ஸித்தே பூர்வோங்குஸஸ்த்ரி வித -என்று ஸித்தே மோக்ஷஸ்ய -அங்குஸ அந்தராய த்ரிவித விபர்யாய ஸக்தி துஷ்டிரிதி

    இப்படி அஷ்டா விம்சத் வதாத்மகமான திர்யக் சர்க்கம் ஸ்ருஷ்ட்யாதி ஜகத் ப்ரவ்ருத்தி ஹேது அல்லாமையாலே பின்னையும் ஸ்ருஷ்ட் யுன்முகனான ப்ரஹ்மாவினுடைய த்யான ரூப ஸங்கல்பத்தாலே யூர்த்வ ஸ்ரோதஸ் ஸப்த வாஸ்யமான தேவ சர்க்கம் உண்டாயிற்று
    அநிமிஷ த்ருக்களாய் ஊர்த்வ ஸஞ்சார யுக்த ராகையாலே ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்கள் என்கிறது –
    அந்த தேவர்களாகிறார் -ஸத்வ உத்ரிக்தராய் ஸூக ப்ரீதி பஹுளராய் -உள்ளோடு புறம்போடு வாசியற ஞாநாதி ரோதநம் இன்றியே ஸர்வதா ஸந்துஷ்ட சித்தராய் இருப்பார்கள் -அவர்களும் ஜகத் ப்ரவ்ருத்தி நிரபேஷராய் இருக்கையாலே கீழ்ச் சொன்ன முக்யமான நக சர்க்கம் (
    ஸ்தாவர ஸ்ருஷ்டி)திர்யக் சர்க்கங்களோடு வாசியற அஸாதகமாக நினைத்து குண த்ரய விசிஷ்டராகையாலே ப்ரகாஸ ப்ரவ்ருத்தியாதி சீலரான மநுஷ்யர்களை ஸ்ருஷ்ட்டித்தான் -இந்த மனுஷ்ய சர்க்கம் -தேவ சர்க்கத்துக்குக் கீழாய் இருக்கையாலே அர்வாக்ஸ் ரோதஸ் என்று பேராய் இருக்கும் –

    இப்படி ஸ்தாவ ராதிகளான நாலு ஸ்ருஷ்டிகளும் அந்விதங்களாய்க் கொண்டு கீழ்ச் சொன்ன ஸக்தி வதாதிகளான அநுக்ரஹ ஸ்ருஷ்டிகளோடே கூடி இருக்கும் –
    1-மஹதாதி ஸ்ருஷ்டியும் 2-தன் மாத்ராதி பூத ஸ்ருஷ்டியும் -3-இந்த்ரிய ஸ்ருஷ்டியும் என்று ப்ராக்ருத ஸ்ருஷ்டி மூன்றாய்– (
    ப்ரக்ருதி ஸ்ருஷ்ட்டியையும் சேர்த்து நான்காய்)ஸ்தாவராதிகளான நாலாயிருந்த அநுக்ரஹம் கூடி எட்டு ஸ்ருஷ்டிகளாய் இருக்கும் –

    இது தான் அஷ்டம அநுக்ரஹஸ் சர்க்க ஸ சதுர்தா வ்யவஸ்தித -விபர்யயேண அசக்த்யா ச ஸித்தயா துஷ்ட்யா ததைவ ச -ஸ்தாவரேஷு விபர்யாசாத் திர்யக்யோ நிஷ்வ ஸக்தித -ஸித்த்யாத்மநா மனுஷ்யேஷு துஷ்ட்யா தேவேஷு க்ருத்ஸ் ந ஸ -என்று வாயவ்யத்திலே சொல்லுகிறபடியே ஸ்தாவர ஜாதியில் இந்த இந்த்ரியாதிகளுடைய ஸ்வரூப விபர்யாசத்தாலும் -திர்யக் ஜாதியில் ஸக்தி குண்ட நத்தாலும் -மநுஷ்ய ஜாதியில் ஸித்தி ரூபத்தாலும் -தேவ ஜாதியில் துஷ்டி ரூபத்தாலும் தத் தத் ஸ்வ பாவ அநுக்ரஹ ரூபம் என்றதாயிற்று

    ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்களான தேவர்கள் ஆகிறார் -ஸநகாதி பரம யோகிகளும் நவ ப்ரஹ்மாக்களும் முதலானாரும் -இன்னமும் ஊர்த்வ லோக வாசிகளான தேவ வர்க்கங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களாகிறார் –ஏகாதஸ ருத்ரர்களும்- (திருநாம்கூர் 11 திவ்ய தேசங்களும் இந்த 11 ருத்ரர்களுக்கு)த்வாதஸ ஆதித்யர்களும் (துவாதச ஆதித்ய சீலம் பிருந்தாவனத்தில் உண்டு -பிரச்சந்தன தீர்த்தம் வியாவை தீர்த்த குளமும் உண்டு)-அஷ்ட வஸூக்களும் அஸ்விநீ தேவதைகளும்(குதிரைமுக வைத்தியர்கள் -இந்திரன் பிரஜாபதி இருவரும் என்றும் பிரமாணம்) என்று சொல்லப்பட்டு இருக்கிற த்ரயஸ் த்ரிம்ஸத் கோடி நிர்வாஹகமான தேவதா வர்க்கங்கள்
    ஏதே த்ரயஸ்ரிம் சத்தேவா இதி – கதமேந த்ரயஸ் த்ரிம் ஸதித் யஷ்டவ் வஸவ ஏகாதஸ ருத்ரா த்வாதஸாதித்யா த ஏக த்ரிம் ஸத் இந்த்ரஸ் சைவ பதிஸ் ச த்ரயஸ் த்ரிம்ஸா விதி –இதி ப்ருஹதாரண்யக ஸ்ருதி -5-9-2-

    இவர்களில் த்வாதஸ ஆதித்யர்கள் ஆகிறார் -தாதார்யமா ச மித்ரஸ் ச வருணஸ் ச இந்த்ர ஏவ ச -விவஸ்வாம்ஸ் த்வத பூஷா ச பர்ஜன்யஸ் சாம்ஸ ஏவ ச -பகஸ் த்வஷ்டா ச விஷ்ணுஸ் ச ஆதித்யா த்வாதஸ ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புரா -1-15-131-
    ஸர்வ புராணங்களிலும் பாட வ்யத்யாஸம் காண்கிறது என்று செல்லப்பட்டவர்கள்
    ஸ ரதோ அதிஷ்டிதோ தேவை ராதித்யை ருஷிபிஸ் ததா -கந்தர் வைரப் ஸரோபிஸ் ச க்ராமணீ ஸர்வ ராக்ஷசை –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-2- என்கிறபடியே
    தந்தாமை அநு வர்த்திப்பார் ஆதித்யர்கள் -ஸப்த ரிஷிகள் -கந்தர்வர்கள் -அப்சரஸ் ஸுக்கள் -யக்ஷர்கள் -சர்ப்பங்கள் -ராக்ஷசர்களாகிற ஏழு வர்க்கத்தோடு கூடி அம்மண்டலத்துக்கு வாசஸ் ஸ்தானமான ரதத்திலே இருப்பார்கள்

    இவர்களில் -புலஸ்த்ய புலஹஸ் சாத்ரி வஸிஷ்டோ அதாங்கிரா ப்ருகு கௌதமஸ் ச பரத்வாஜ காஸ்யப க்ருதுரேவ ச ஜமதக்நி கௌசிகஸ் ச முநயோ ப்ரஹ்ம வாதிந ஸ்துவந்தி தேவம் விவிதை சந்தோபிஸ் தே யதாக்ரமம் –கூர்ம பு பூ -4-1-5- என்று பன்னிரண்டு ருஷிகளும் வேதாத்யயந பரராய்க் கொண்டு ஸ்துதிப்பார்கள்

    தும்புரு நாரதோ ஹாஹா ஹுஹுர் விச்வா வஸூஸ் ததா -உக்ரேஸேநோ வஸூ ருசிர் விச்வாவ ஸூரதாபர -சித்ரஸேநஸ் ததோர்ணாயுர்த்ரு தராஷ்ட்ரோ த்விஜோத்தமா ஸூர்ய வர்ச்சா த்வாத ஸைதே கந்தர்வா காயதாம் வரா –கூர்ம பு பூ -41-12-13- என்று
    பன்னிரண்டு கந்தர்வர்களும் காந பரராய் இருப்பார்கள்

    க்ருதஸ்தலாஸ் ஸரோவர்யா ததான்யா புஞ்ஜிகஸ்தலா மேனகா ஸஹ ஜன்யா ச ப்ரம்லோசாபி த்விஜோத்தமா அநும்லோ ச க்ருதாசீ ச விச்வாசீ சோர்வஸீ ததா -அன்யா ச பூர்வ சித்திஸ் ஸ்யாத் அன்யா சைவ திலோத் தமா -கூர் பு பூ 41-14-15- என்று
    சொல்லப்பட்ட அப்சரஸ் ஸுக்களும் ந்ருத்த பரராய் இருப்பார்கள்

    ரதஜிச் ச ரதவ்ஜாஸ் ச க்ராமணீஸ் ச ரதஸ்வந -சித்ரஸ் ஸ்ரோதா பூரணஸ் ச ஸூஷேணஸ் ஸேந ஜித் ததா -தார்ஷ்யஸ் சாரிஷ்ட நேமிஸ் ச ருதஜித் ஸத்ய ஜித்ததா -கூர்ம பு பூ 41-6- என்கிற பன்னிரண்டு யக்ஷர்களும் குதிரை பிடித்து ஸேவிப்பர்கள்

    வாஸூகி கச்ச வீரஸ் ச தக்ஷக ஸர்ப்ப புங்கவ ஏலா பத்ரஸ் சங்க பால ததைராவத ஸம்ஜ்ஞக தனஞ்சயோ மஹா பத்மஸ் ததா கார்க்கோடகோ த்விஜ -கம்ப லோஸ்வ தரஸ் சைவ வஹந்த்யேநம் யதா க்ரமம் -கூர்ம பு பூ 41-10-11- என்று
    பன்னிரண்டு நாகங்களும் தேரை நடத்துவார்கள்

    அத ஹேதி ப்ரஹேதிஸ் ச பவ்ருஷேயோ வதஸ் ததா சர்ப்போ வ்யாக்ரஸ் ததா பஞ்ச வாதோ வித்யுத் திவாகர -ப்ரஹ்மோ பேதஸ் ச விப் ரேந்திர யஜ்ஜோ பேதஸ் ச ராஷஸா –கூர்ம -பு பூ 41–42- என்கிற பன்னிரண்டு ராக்ஷஸர்களை அநு சரராய் இருப்பார்கள்

    இப்படி ஆதித்யாதி ஸப்த கணங்களும் சைத்ராதியான பன்னிரண்டு மாஸங்கள் தோறும் மாறி மாறி பர்யாயேண நிர்வஹித்துப் போருவார்கள்

    (ஆட்டுமுக நக்ஷத்ர மண்டலம் மேஷ ராசி-இதுவே ஸூர்யன் மேஷ ராசியில் நுழைகிறான் என்கிறது-சித்திரை மது மாஸம் -வைகாசி மாதவ மாதம்-கேசவ மார்கழி -தாமோதர மாசம் கார்த்திகை -வடக்கில் சொல்வர்)

    அதில் -தாதா க்ருதஸ் தலா சைவ புலஸ்த்யோ வாஸூகிஸ் ததா ரத ப்ருத் க்ராமணீர் ஹேதிஸ் தும்புருஸ் சைவ சப்தம ஏதே வஸந்தி வை சைத்ரே மது மாஸே ஸதைவ ஹி –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-3- என்கிறபடியே
    தாதா என்கிற ஆதித்யனும் க்ருதஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் புலஸ்த்யன் என்கிற ரிஷியும் வாஸூகி என்கிற சர்ப்பமும் ரதப்ருத் என்கிற யக்ஷனும் ஹேதி என்கிற ராக்ஷஸனும் தும்புரு என்கிற கந்தர்வனும் ஆகிற ஏழு பேரும் சைத்ரமாகிற மது மாஸத்தில் எப்போதும் வசிப்பர்கள்

    மதுஸ் ச மாதவஸ் ச வா சந்திகா வ்ருதூ -ஸூக்ரஸ் ச ஸூதிஸ் ச க்ரைஷ்மா வ்ருதூ- நபஸ் ச தபஸ் யஸ்ய ஸைஸி ராவ்ருதூ என்கிற ஸ்ருதியை -யஜுர் -4-4-11-29- உட்க்கொண்டு மது மாஸம் இத்யாதி

    அர்யமா புலஹஸ் சைவ ரதவ்ஜா புஞ்ஜிகஸ் தலா ப்ரஹேதி கச்ச வீரஸ் ச நாரதஸ் ச ரதே ரவே -மாதவே நிவசந்த்யேன –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-5- என்கிறபடியே
    அர்யமா என்கிற ஆதித்யனும் புலஹன் என்கிற ருஷியும் ரதவ்ஜா என்கிற யக்ஷனும் புஞ்ஜிகஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் ப்ரஹேதி என்கிற ராக்ஷஸனும் கச்ச வீரன் என்கிற சர்ப்பமும் நாரதன் என்கிற கந்தர்வனும் ஆகிய எழுவரும் வைகாஸி மாசமாகிற மாதவ மாஸத்திலே வசிப்பர்கள்

    மித்ரோத்ரிஸ் தக்ஷகோ ரக்ஷ பவ்ருஷேயோ அத மேநகா ஹாஹாரதஸ்வ நஸ் சைவ மைத்ரே யைதே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-7- என்கிறபடியே
    மித்ரன் என்கிற ஆதித்யனும் அத்ரி என்கிற ருஷியும் தக்ஷகன் என்கிற சர்ப்பமும் பவ்ருஷேயன் என்கிற ராக்ஷஸனும் மேநகை என்கிற அப்சரஸும் ஹாஹா என்கிற கந்தர்வனும் ரதஸ்வநன் என்கிற யஷனுமாகிற எழுவரும் ஆனி என்கிற ஸூசி மாஸத்திலே வஸிப்பர்கள்

    வ்ருணோ வஸிஷ்டோ ரம்பா ச ஸஹ ஜன்யா ஹுஹுவத ரதசித்ரஸ் ததாஸ் வாஸோ வஸந்த் யாஷாட ஸம்ஜ்ஞகே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-8- என்கிறபடியே
    வருணன் என்கிற ஆதித்யனும் வஸிஷ்டன் என்கிற ருஷியும் ஸஹ ஜன்யை என்கிற ரம்பையாகிற அப்சரஸ்ஸும் ஹுஹு என்கிற கந்தர்வனும் வதன் என்கிற ராக்ஷஸனும் அஸ் வாஸன் என்கிற சர்ப்பமும் ஆகிற எழுவரும் ஆடியாகிற ஸூக்ர மாஸத்திலே வசிப்பார்கள்

    இந்த்ரோ விஸ்வாவஸூஸ் ஸ்ரோதா ஏலா புத்ரஸ் ததாங்கிரா ப்ரம்லோசா ச நபஸ்யதே ஸர்ப்பஸ் சார்க்கே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-9- என்கிறபடியே
    இந்த்ரன் என்கிற ஆதித்யனும் விஸ்வா வஸூ என்கிற கந்தர்வனும் ஸ்ரோதா என்கிற யக்ஷனும் ஏலா புத்ரன் என்கிற சர்ப்பமும் அங்கிரா என்கிற ருஷியும் ப்ரம் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சர்ப்பன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் ஆவணியாகிற நபோ மாஸத்திலே வசிப்பார்கள்

    விவஸ்வாநுக்ரஸே நஸ் ச ப்ருகு ராபூரணஸ் ததா -அநும் லோசா சங்க பாலோ வ்யாக்ரோ பாத்ர பதே ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-1-10- என்கிறபடியே
    விவஸ்வான் என்கிற ஆதித்யனும் உக்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் ப்ருகு என்கிற ருஷியும் ஆபூரணன் என்கிற யக்ஷனும் அநும் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சங்க பாலன் என்கிற சர்ப்பமும் வ்யாக்ரன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் புரட்டாசி யாகிற நபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்

    பூஷா வஸூ ருசிர் வாதோ கௌதமோ அத தனஞ்ஜய ஸூ ஷேணஸ் ச க்ருதாஸீ ச வஸந்த் யாஸ்வ யுஜேரதே-ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-11-என்கிறபடியே
    பூஷா என்கிற ஆதித்யனும் -வஸூ ருசி என்கிற கந்தர்வனும் வாதன் என்கிற ராக்ஷஸனும் கௌதமன் என்கிற ருஷியும் தனஞ்சயன் என்கிற சர்ப்பமும் ஸூஷேணன் என்கிற யக்ஷனும் க்ருதாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் ஐப்பசி மாசமாகிற இஷ மாஸத்தில் வசிப்பர்கள்

    விஸ்வா வஸூர் பரத்வாஜ பர் ஜன்யை ராவதவ் ததா விஸ்வாஸீ ஸேநஜிச் சாப கார்த்திகே ச தி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-12-என்கிறபடியே
    விஸ்வா வஸூ என்கிற ஆதித்யனும் -பர்ஜன்யன் என்கிற கந்தர்வனும் ஆபன் என்கிற ராக்ஷஸனும் பரத்வாஜன் என்கிற ருஷியும் இராவதன் என்கிற சர்ப்பமும் ஸேநஜித் என்கிற யக்ஷனும் விஸ்வாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் கார்த்திகை மாசமாகிற ஊர்ஜத்திலே வசிப்பர்கள்

    அம்ச காஸ்யப தார்ஷ் யாஸ்து மஹா பத்மஸ் ததோர் வஸீ சித்ரஸே
    நஸ் ததா வித்யுந் மார்க்க ஷீர்ஷாதி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-13-என்கிறபடியே
    அம்சன் என்கிற ஆதித்யனும் -சித்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் வித்யுத் என்கிற ராக்ஷஸனும் காஸ்யபன் என்கிற ருஷியும் மஹா பத்மன் என்கிற சர்ப்பமும் தார்ஷ்யன் என்கிற யக்ஷனும் ஊர்வசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மார்கழி மாசமாகிற ஸஹோ மாஸத்திலே வசிப்பர்கள்

    க்ரதுர் பகஸ் ததோர்ணா யுஸ் பூர்ஜ கார்க்கோடகஸ் ததா அரிஷ்ட நேமிஸ் சைவான்யா பூர்வ சித்திர் வராப்ஸரா பவ்ஷ்மாஸே வஸந்த்யேதே ஸப்த
    பாஸ்கர மண்டலே ஷ்ய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-14-என்கிறபடியே
    பகன் என்கிற ஆதித்யனும் -ஊர்ணாயு என்கிற கந்தர்வனும் ஸ்பூர்ஜன் என்கிற ராக்ஷஸனும் க்ரது என்கிற ருஷியும் கார்க்கோடகன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் பூர்வ ஸித்தி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் தை மாசமாகிற
    பவ்ஷ்ய மாஸத்திலே –ஸஹஸ்ய மாஸத்திலே இதி பாரதம் – வசிப்பர்கள்

    (குரு புஷ்ய உத்சவம் -பூசம் பரதனுக்கு நக்ஷத்ரம் -ராமானுர் திவ்ய மங்கள விக்ரஹ பிரதிஷடை)

    த்வஷ்டா ச ஜமதக்நிஸ் ச கம்ப லஸ் ச திலோத்தமா ப்ரஹ்மோபேதோத ரதஜித் த்ருதராஷ்ட் ரஸ் ச சப்தம மாக மாஸே வஸந்த்யேதே ஸப்த மைத்ரேய பாஸ்கரே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-16-என்கிறபடியே
    த்வஷ்டா என்கிற ஆதித்யனும் –த்ருதராஷ்ட்ரன் என்கிற கந்தர்வனும் ப்ரஹ்மோ பேதன் என்கிற ராக்ஷஸனும் ஜமதக்நி என்கிற ருஷியும் கம்பளன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் திலோத்தமை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மாசி மாசமாகிற
    தபோ மாஸத்திலே வசிப்பர்கள்

    விஷ்ணுரஸ்வதரோ ரம்பா ஸூர்ய வர்ச்சாஸ் ச ஸத்யஜித் விச்வா மித்ரஸ் ததா ரஷோ யஜ் ஜோ பேதோ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-18–என்கிறபடியே
    விஷ்ணு என்கிற ஆதித்யனும் –ஸூர்ய வர்ச்சஸ் என்கிற கந்தர்வனும் யஜ்ஜோ பேதன் என்கிற ராக்ஷஸனும் விஸ்வாமித்ரன் என்கிற ருஷியும் அஸ்வதரன் என்கிற சர்ப்பமும் ஸத்ய ஜித் என்கிற யக்ஷனும் ரம்பை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் பங்குனி மாசமாகிற தபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்

    மாஸேஷ்வேதேஷு மைத்ரேய வஸந்த்யேதே த்ரி ஸப்தகா ஸவிதுர் மண்டலே ப்ரஹ்மன் விஷ்ணு சக்த்யுப ப்ரும்ஹிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-19–என்கிறபடியே
    இம் மாஸங்கள் தோறும் இவ் வாதித்யாதி ஸப்த கணங்களும் பகவச் சக்தியாலே உப ப்ரும்ஹிதராய்க் கொண்டு த்ரயீ மயமாய் பகவச் சக்தி மயமாயுள்ள ஆதித்ய மண்டலத்தை ஆஸ்ரயித்து இருப்பர்கள் -அதில் ஆதித்யன் மண்டலாதி பதியாய்க் கொண்டு ப்ரதானனாய் இருப்பன்
    அல்லாதார் அவனை அநு சரித்து இருப்பர்கள் -அவ் வாதித்யனுடைய ஹ்ருதயத்திலே உபாஸ்யனாய்க் கொண்டு
    வித்யா சஹாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் ஸநாதநம் கபிலம் ப்ராஹூ ராசார்யாஸ் சாங்க்யயோக விசக்ஷநா -மோ -347-69–352-30- என்று
    செய்யாளான வித்யா ஸப்த வாஸ்யையான லஷ்மியோடே கூடி ஹிரண்மய விக்ரஹ விஸிஷ்டனாய் மத்யஸ்த நீல தோயத வித் யுல்லேகா பாஸ்வர காந்தியாலும் அத்தை முட்டாக்கிடுகிற லோஹித வர்ண ஸூதர்ஸந காந்தியாலும் காபிலச் சாயமாய் இருக்கையாலே கபிலன் என்று சொல்லப்பட்ட என்னை ஆதித்ய மண்டல மத்யஸ்தனாக சாங்க்ய யோக வித்தமர்கள் சொல்லுவார்கள் என்று பகவத் வசனம் உண்டாகையாலே ஸூர்ய அந்தராத்மாவாய் ஸ்ரீய பதி எழுந்து அருளி இருக்கும்

    இதி தத்த்வ நிரூபணே தேவாதி நிரூபணம் நாம பஞ்சம அதிகாரம் ஸம் பூர்ணம் –

    ———-

    ஷஷ்டாதிகாரம்–கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
    1-ஆதித்ய ரத பரிமணாதி நிரூபணம்
    2-ஸம்வத்ஸர பரிவத்ராதி நிரூபணம்
    3-சாந்த்ரஸாவந ஸுவ்ர நக்ஷத்ர ரூப சதுர்வித ஸம்வத்ஸர பேத நிரூபணம்
    4- ஸோம ரத நிரூபணம்
    5-புத ரத நிரூபணம்
    6-ஸூக்ர ரத நிரூபணம்
    7-பவ்ம ரத நிரூபணம்
    8-ப்ருஹஸ்பதி ரத நிரூபணம்
    9-ஸநி ரத நிரூபணம்
    10-ராஹு ரத நிரூபணம்
    11-கேது ரத நிரூபணம்
    12-ஆதித்யாதீ நாம் ஸஞ்சார நிரூபணம்
    13-சாதுர் வர்ண்ய க்ரம ஸ்ருஷ்ட்யாதி நிரூபணம்
    14-ப்ராஹ்மணாதி க்ருத்ய நிரூபணம்
    15- கால ஸ்வரூப நிரூபணம்
    16-ஸப்த ரிஷி -அஷ்ட வஸூ -ஏகாதஸ ருத்ர -சதுர் தச மநு -சதுர் தச இந்த்ர திக் பாலகாநாம் நாம நிரூபணம்
    17-யுகாதி ஸித்தி நிரூபணம்
    18-யுகாதி தர்ம நிரூபணம்
    19-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ரூப த்ரிவித காரணத்வமபி பரமாத்மந இத்யர்த்த நிரூபணம்

    ———

    ஏவம் பூதனான மண்டல வியாப்தமான ரதாம்சம் ஒன்பதினாயிரம் யோஜனமாய்
    கந்தர்வாதி பரிவாராதிஷ்டிதமான அம்சம் ஆயிரம் யோஜனமாய்
    ஆயாம விஸ்தாரங்கள் பதினாயிரம் யோஜனம் நீளத்தையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் ருக்கும் என்று புராணங்களிலே
    யோஜநாநாம் ஸஹஸ்ராணி பாஸ்கரஸ்ய ரதோநவ -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-2- என்றும்
    தச யோஜந ஸாஹஸ்ரோ விஸ்தாரயாமதோ ரத -வாயு பு பூ -5-5- என்றும் சொல்லப்பட்டது இறே

    ஏற் கால் -18 நாழிகை பகல் 12 நாழிகை இரவு –சித்திரை மாதம்-மாற்றி அடுத்த ஆறு மாசங்களில்

    இத் தேரினுடைய ஈஷா தண்டமான பாரானாது -ஈஷா தாண்டஸ் ததை வாஸ்ய த்வி குணோ முநி சத்தம என்று
    இதில் இரட்டிப்பாய் 20000 யோஜனமாய் இருக்கும்
    இது எல்லாம் தேஜோ மயமாகையாலே தூரத்திலே மண்டல ஆகாரமாய்த் தோன்றும்
    இத் தேரினுடைய அச்சு ஒன்றைக் கோடி எழு நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமாய்
    மேரு தொடங்கி மாநஸோரத்தத்தளவும் நீளத்தை யுடைத்தாய் மகாஷம் என்று பேராய் -பூமிக்கு மேல் 84000 யோஜனமான மஹா மேருவுக்கு மேலே 16000 யோஜனத்தளவும் ஒரு தலைப்பும் மற்றைத் தலைப்பு புஷ்கரத்வீப மத்யத்திலே 50000 யோஜனம் உயர்த்தியை யுடைத்தான மாநஸோத்தர ஸைலத்துக்கு மேலே 50000 யோஜனத்து அளவிலேயாய் அத் தலையிலே கால சக்ர மயமான வேக சக்ரம் கோப்புண்டு இரண்டு தலையும் வாயு பாச பத்தமாய் மேல் த்ருவன் பக்கலிலே துவக்குண்டு இருக்கும்
    ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-3- ல் இவ்
    வினிடத்துக்கு அநு குணமாகக் காண்க
    இதனுடைய ஹ்ரஸ் வாஷமமும் யுகமும் தனித் தனியே 45000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் த்ருவ கதமான வாயு பாஸங்களிலே இரண்டு தலையும் பத்தங்களாய் இருக்கும்

    இவ் வாதித்யனுக்கு இடமான யுகத்திலே
    காயத்ரி
    ப்ருஹதி
    உஷ்ணிக்
    ஜகதி
    த்ரிஷ்டுப்
    அனுஷ்டுப்
    பங்க்தி -என்கிற ஸப்த சந்தஸ்ஸுக்களும் பச்சைக் குதிரைகள் ஏழாய்க் கொண்டு ரதத்தை வஹிக்கும்
    (புரவி ஏழு ஒரு காலுடைய தேர்)ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம் -யஜோர் ஆற -3-11- ருக்வேத -2-3-14-1-22-164-2-என்னக் கடவது இறே
    ஆகில் ஏகோ அஸ்வோ வஹதி ஸப்த நாம – அதர்வ வேத -2-3-14–என்கிற ஸ்ருதியோடே விரோதியாதோ என்னில்
    வேத ரூபமான ஹரி ரதஸ்வம் ஸப்த ஸந்தோ மயமான ஏழு ரூபத்தையும் ரூப அநு குணமான ஏழு பேரை யுடைத்தாய் ரதத்தை வஹிக்கும் என்று வஸ்து ஐக்யத்தைச் சொல்லிற்று இங்கு
    ஸப்த யுஞ்ஜந்தி என்கிற ஸ்ருதி வ்யக்தி பின்னத்தைச் சொல்லிற்று -ஆகையால் விரோதம் இல்லை

    (வடக்கு ராசி ஆறு
    தெற்கு ராசி ஆறு
    பூ மத்திய ரேகையில் இருந்து கடக்க ரேகை வரை வடக்கே செல்வதும்
    மகர ரேகை வரை தெற்கே செல்வதும் உண்டு
    12 ராசி -27 நக்ஷத்திரங்கள் -ஒரு ராசிக்கு இரண்டேகால் நக்ஷத்திரங்கள்-கால பேதம் -உஜ்ஜயின் திரும்பும் இடத்தில் -அங்கு இருந்து தான் விக்ரமாதித்யன் இருந்து –கடகரேகை – ஜ்யோதிஷம் கணித்தார்-)

    இந்த மஹா ரதத்த்திலே -ஆதித்யனுடைய தக்ஷிண உத்தராயண கதிக்கு உறுப்பாக நூற்று எண்பத்து மூன்று ரேகையாய் அதுக்கு மேலே ஹ்ரஸ்வாக்ஷ பத்தமான ரதமாய்
    அது வாயு பாஸ பத்தமாய்க் கொண்டு த்ருவ கதமாகையாலே மேருவுக்கு ஆஸந்நமாம்படி த்ருவன் ஆகர்ஷிக்கும்
    தஷிணாயநத்தில் விப்ரக்ருஷ்ட மாம்படி பாஸத்தை நெகிழ விடும் -அதில் தை மாஸம் ப்ரதம திநம் தொடங்கி மாசி பங்குனி மூன்று மாஸமும் நித்யம் ஒரு வீதியாக வடக்கே போய்
    சித்திரை மாஸம் ப்ரதம தினத்திலே வைஷு வதீ யாகிற வீதியிலே சென்று
    மேலும் நித்யம் ஒரு வீதியாகச் சித்திரை வைகாசி ஆனி அளவும் வடக்கே போய்
    ஆடி முதலாக தக்ஷிண யநத்திலும் ஆடி ஆவணி புரட்டாசி அளவும் நடந்து
    ஐப்பசியிலும் விஷு வாகிற மத்ய வீதியிலே
    வந்து மார்கழி மாச முடிவாக தக்ஷிண காஷ்டையிலே நடக்கும்
    இப்படி மஹா மேருவை ப்ரதக்ஷிணம் வருமளவில் உத்தராயணத்தில் ப்ரதம தின ஸம்பந்தமாய் இருக்கும் -தஷிணாயநத்தில் தூரத்வ அநு ரூபமாக ஸீக்ர கதியாய் இருக்கும்

    இப்படி வருகிற ஆதித்யனுக்கு தேச பேதேந வருகிற தர்சன அதர்சனங்கள் ஒழிய உதய அஸ்தமயங்கள் ஒருக்காலும் இல்லை –அதாவது
    மேருவுக்குக் கிழக்கே -மத்யாஹ்நமாம் அளவில் தெற்குத்தைக்கு உதயமாம் – (
    ஜப்பான் போன்ற இடம் மேருவுக்கு கிழக்கே-நாம் இருப்பது மேருவுக்கு தெற்கு)தெற்குத்திக்கு மத்யாஹ்நமாம் அளவில் கிழக்குத்தைக்கு அஸ்தனமாம் -மேற்குத்தைக்கு உதயமாய் தெற்குத்தைக்கு அஸ்தமயமாம் அளவில் கிழக்குத்தைக்கு அர்த்த ராத்ரியாம் -மேற்குத்தைக்கு மத்யாஹ்நமாம் –
    இப்படி திக்குகள் எல்லாவற்றிலும் கண்டு கொள்வது –

    இந்த ரதத்தில் மஹாஷத்தில் கோப்புண்ட ஏக சக்ரம் கால சக்ரமான படி என் என்னில்
    த்ரி நாபி மதி சஞ்சாரே ஷண்ணேமிந் யக்ஷயாத்மகே -ஸம்வத்ஸரமயே க்ருத்ஸ்னம் கால சக்ரே ப்ரதிஷ்டிதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-4- என்கிறபடியே
    சாதுர்மாஸ்ய த்ரயாத்மகமான –(இங்குத்தைக்குத் தகுதியான அர்த்தங்களை -2-8-4-ஸ்ரீ விஷ்ணு ஸித்தீயத்திலே காண்க )-நாபியை உடைத்தாய்
    ஸம்வத்ஸரம் –
    பரி வத்ஸரம் –
    இதா வத்ஸரம் –
    அநு வத்ஸரம் –
    இத் வத்ஸரம் என்று சொல்லப்பட்ட ஐந்து வத்ஸரத்தையும் அரங்களாக யுடைத்தாய்
    வஸந்த
    க்ரீஷ்ம
    வர்ஷ
    ஸரத்
    ஹேமந்த
    ஸிஸி ரங்களாகிற ஷட் ருதுக்களையும் ஆறு நேமியாக யுடைத்தாய்
    ப்ரவாஹ பரி வ்ருத்தியாலே அக்ஷய ரூபமாய் இருக்கிற கால சக்ரத்திலே ஸர்வமும் ப்ரதிஷ்டித மாகையாலே இந்த சக்ராத்மாவும் உபாஸ்யம் என்றபடி

    இந்த பஞ்ச விதமான வத்சரங்களாவன -யதா மாகஸ்ய ஸூக் வஸ்ய ப்ரதி பச்சோத்தரா யணம் -ஸஹோயம் ஸ்ரவிஷ்டாபிஸ் ஸோமார்க்கவ் பிரதிபத்யத -ப்ரதமஸ் ஸோக்நி தைவத்யோ நாம்நா ஸம்வத்ஸரஸ் ஸ்ம்ருத -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் -)என்று
    யாதொரு போது மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ப்ரதமை ஸ்ரவிஷ்டா நக்ஷத்ரங்களோடே கூடி நிற்கும் –
    சந்த்ர ஆதித்ய ஸமவாயம் உண்டாகிறது -அது முதலான அக்னி தைவத்யமான ஸம்வத்சரம் என்று பேராய் இருக்கும்
    (முதல் 12 ஆண்டுகள்)
    யதா மாகஸ்யஸூக்லஸ்ய த்ரயோதஸ் யாமுதக்ரவி –யுக்தே சந்த்ரமஸா ரௌத்ரே வாஸநம் ப்ரதிபத்யதே -த்வீ தீய்யஸ் ஸோ அர்க்கதை வத்ய(த்விதீய ஸோமதைவத்ய -இதி விஷ்ணு சித்தீயே -2-8-72- பாடோ த்ருஸ்யதே )ப்ரோச்யதே பரிவத்ஸர -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் ) என்று
    யாதொரு போது மாக மாஸத்தில் த்ரயோதசியிலே திருவாதிரை சந்த்ர மாவோடே கூடின அளவிலே ஆதித்யன் அவ்விடத்தை அடையும் – அது ஆத்யதைவமான த்விதீயமான பரிவத்சரம் என்று பேராய் இருக்கும்

    ஸூக்லே -க்ருஷ்ணே இதி ச பார -மாகஸ்ய தஸமீம் வாஸ வாதவ் திவாகரே சந்த்ராத்ருதீயம் ஸம் பிராஹு ரிதா வத்சரகம் புதா -( வ்ரு கா )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் தசமியிலே ஆதித்யன் அவ்விடத்திலேயாம் –
    அது கூடுங்கால் சந்த்ர தைவத்யமாய் த்ருதீயமான இதா வத்சரமாகச் சொல்லா நின்றார்கள் –
    ஸப்தமீ மாக ஸூக் லஸ்ய வாஸ வாதவ் திவாகரே சதுர்த்த மிந்த்ரதைவத்யம் தமாஹுரநு வத்ஸரம் -(வ்ரு க )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ஸப்தமியிலே ஆதித்யன் -அவ்விடம் முதலானதிலே கூடி யுள்ள விதத்தில் இந்த்ரதைவத்யமாய் சதுர்த்தமான அநு வத்ஸரம் என்று சொல்லா நின்றார்கள்
    யத் யுத்தராயணம் க்ருஷ்ணே சதுர்த்யாம் ஸ்ரவஸோ பவேத்- இத்வத்ஸரஸ் ஸ விஜ்ஜேய பஞ்சமோ ம்ருத் யுதைவத -மாக மாஸத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்த்தியில் ஆதித்யன் ஸ்ர விஷ்டாதி நக்ஷத்ரங்களிலே நிற்கிறான் -அது ம்ருத்யு தைவத்யமாய் பஞ்சமமான இத் வத்சரமாக அறியப்படும் –

    இப்படி பஞ்சவிதமான இவ்வத்சரங்கள் –
    சாந்த்ரம் என்றும்
    ஸாவநம் என்றும்
    ஸவ்ரம் என்றும்
    நாஷத்ரம் என்றும் சதுர் விதமாயும் இருக்கும்
    தர்ஸாத் தர்ஸஸ் சாந்த்ரஸ் த்ரிம் ஸத் திவஸஸ்து ஸாவநோ மாச ஸுவ்ரோர்க் கராஸி போகான் நாஷத்ரஸ் சேந்து மண்டலாத் கதித -என்கிறபடியே
    அமாவாஸ்யை தொடங்கி மேல் அமாவாஸ்யை அளவும் செல்ல ஸாந்த்ர மாஸம்(
    27 நாள் கணக்கு-இதனால் அதிக மாசம் மூன்று வருஷங்களுக்கு ஒரு தடவை வைப்பார்கள்)
    முப்பது நாள் ஸாவந மாஸம்
    ஆதித்யனுடைய ராஸி போகம் ஸுவ்ர மாஸம்
    அஸ்வின்யாதி ரேவத் யந்தமான சந்த்ர பரிவ்ருத்தி நாஷத்ரமான மாஸம்
    ஏவம் விதமான பரிகணிதங்களாலே பரிகணி தங்களான வத்ஸரம் அஞ்சு படியாகச் சென்றால் ஏக காலத்திலே ஏகோத் யோகத்திலே முடியும் காலத்துக்கு யுக விபாகம் என்று பேராய் இருக்கும்

    (இவ்வாறு ஐந்து பன்னிரண்டு ஸம்வத்சரங்கள் சேர்ந்து அறுபது ஸம்வத்சரங்களாய் மீண்டும் மீண்டும் வரும் என்றதாயிற்று)

    ஸோமனுடைய ரதம் -மூன்று சக்ர யுக்தமாய் -குதிரைகள் வெளுத்து குந்தா பங்களாய் வாரி கர்ப்ப ஸமுத் பவங்களாய் -பத்தாய் இரண்டருகும் பூண்டு த்ருவனை ஆதாரமாக உடையவையாய் இருக்கும் -ஸ்ரீ விஷ்ணு பு -2-12-
    இந்த சந்திரனுக்கு க்ஷய வ்ருத்திகளில் வந்தால் பூர்வ பக்ஷத்தில் பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் ஆதித்யனால் சங்க்ருஹீதமாய் அம்ருதமயமான பதினாலு களையும் -தேவர்கள் -ப்ரதமாம் பிபதே வஹ்நிர்த்விதீயாம் பிபதே ரவி -என்கிற அடைவிலே புஜிப்பார்கள்
    அவசிஷ்டமான ஏக கலையோடே ஆதித்யனைக் கிட்டி அமை என்கிற ரஸ்மியிலே வசிக்கையாலே அமாவாஸ்யை என்று பேராகிறது
    அமாவாஸ்யையில் ஆஹா ராத்ரத்திலே சந்திரன் பூர்வம் அப்பிலே ப்ரவேசித்து அநந்தரம் வீருத் ப்ரமுகமான வ்ருஷாதிகளிலே ப்ரவேசித்து -பின்னை ஆதித்யனைக் கிட்டுகையாலே அமாவாஸ்யையில் வ்ருஷாதிகளுடைய சேத நாதிகள் பண்ணும் இடத்தில் ப்ரஹ்ம ஹத்யா சமம் என்று சொல்லப்பட்டது –

    புதனுடைய தேர் -வாய் வக்னி ஸம் பூதமாய் பொற் குன்று நிறத்தை யுடைய எட்டுக் குதிரையோடே கூடி இருக்கும்

    ஸூக்ரனுடைய தேர் -பூ சம்பவங்களாய் இருக்கிற வெளுத்த நிறத்தை யுடைய எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்

    செவ்வாயினுடைய தேர் -அக்னி சம்பவங்களாய் சிவந்த குதிரைகள் எட்டுக்களோடே கூடி இருக்கும்

    காஞ்சன மயமான வெளுப்பு நிறத்தை உடைத்தான எட்டுக் குதிரைகளை யுடைத்தான தேரிலே ப்ருஹஸ்பதி இருக்கும்

    ஆகாஸ சம்பவங்களாய் கிருஷ்ண வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடின தேரிலே ஸநை சரன் மெள்ள நடவா நிற்கும்

    ராஹுவினுடைய தேர் கறுத்த குதிரை எட்டு பூண்டு நடவா நிற்கும்

    கேதுவினுடைய தேர் சித்ர வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்

    கிரஹண காலத்திலே ராஹு வானவன் தான் நிற்கிற த்ருதீய ஸ்தானத்திலும் கீழே போந்து ப்ரதிபத் பர்வ சந்நிதியிலே தூ சரமான சந்த்ராதித்யர்களை பூசாயை யாகிற தமஸ்ஸாலே உப ப்ரும்ஹிதனாய் திரோதானம் பண்ணும்
    இது கேதுவுக்கும் ஒக்கும் இறே

    இவர்களில் ஆதித்யனும் புதனும் ஸூக்ரனும் மேற்கே ராசியை ஒரு மாஸத்திலே சஞ்சரிப்பர்கள்
    சந்த்ரன் இரண்டே கால் நாளிலே ஸஞ்சரிக்கும் –
    செவ்வாய் ஒன்றரை மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
    ப்ருஹஸ்பதி ஒரு வத்சரத்திலே ஸஞ்சரிக்கும்
    ஸநைஸ் சரன் இரண்டரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
    ராஹு ஒன்றரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
    கேது இருபது மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
    இவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் ஸப்தம ராஸியிலே இருப்பர்கள்

    இந்த கிரஹங்கள் எல்லாம் ப்ரத்யங் முகமாய்க் கொண்டு மேருவை ப்ரதக்ஷிணமாய் வரச் செய்தே ராஸி போகத்தில் ப்ராங்முகராய்க் கொண்டு பிற் காலித்து புஜியா நிற்பர்கள் –
    ஆகையால் நக்ஷத்ர மண்டலத்துக்கு ப்ரத்யக் கதி ஒழிய ப்ராக் கதி ஒருக்காலும் இல்லை
    இப்படி ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரமான ஜ்யோதிர் மண்டலம் எல்லாம் தனித் தனியே வாயுபாஸ பத்தங்களாய்க் கொண்டு ஸிம்ஸூமார ப்ரஜாபதி புச்சஸ்திதனான த்ருவனை ஆதாரமாக யுடைத்தாய் பரி ப்ரமியா நிற்கும்
    அந்த ஸிம்ஸூமார ப்ரஜாபதிக்கு ஆதாரம் -த்யவ்ஸ் ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திஸோ பூர் மஹோததி –வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந -பாரத ஆநு -149-121- என்று வாஸூ தேவஸ்ய வீர்யேண -என்கையாலே ஸங்கல்ப ரூப ஞாந விஸிஷ்டனான தத் அந்தர்யாமியான நாராயணானேயாய் இருக்கும் –

    இந்த வாயு பாஸங்கள் -மேகங்களும் அர்க்கனும் இந்திரனும் நக்ஷத்ரங்களும் க்ரஹங்களும் ஸப்த ரிஷிகளும் த்ருவனுமாகிற ஏழு ஆஸ்ரயத்தையும் பற்றி
    ஆவஹ ப்ரவஹஸ் சைவ ததைவ அநுவஹ பர -ஸம்வஹோ விவஹஸ் சைவ ததூர்த்வம் ஸ்யாத் பரோவஹ -ததா பரிவஹஸ் சோர்த்வம் வாயோர்வை ஸப்த நேமய -கூர்ம பு பூ -40-6- என்கிறபடியே
    ஆவஹம் -என்றும்
    ப்ரவஹம் என்றும்
    அநு வஹம் என்றும்
    ஸம் வஹம் என்றும்
    விவஹம் என்றும்
    பரோ வஹம் என்றும்
    பரி வஹம் என்றும் வாயு நேமிகள் ஏழு வகையாய் இருக்கும்
    இவை தன்னாலே பத்தங்களான ஸப்த பதார்த்தங்களுக்கும் ஆதார பூதனான த்ருவனுக்கும் ஆதாரமான ஸிம்ஸு மாரனுக்கும் ஆதார பூதன் நாரங்களுக்கு எல்லாம் அயநமான நாராயணனே என்றதாயிற்று

    ஏவம் பூதரான தேவர்களை ஆராதித்து வர்ஷாதி ஸித்தியாலே ஸஸ்ய ஸம்ருத்தியைப் பெற்று யஜ்ஞாதி கர்மங்களைப் பண்ணுகைக்கு உறுப்பாக
    ஸஹ யஜ்ஞ ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோ வாச ப்ரஜாபதி -அநேந ப்ரஸவிஷ்யத்வம் ஏஷாவோஸ் த்விஷ்ட காம துக் தேவான் பாவ யதாநேந தே தேவா பாவயந்து வ -பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத –கீதை -3- என்றும்
    அஃனவ் ப்ராஸ்தாஹுதிஸ் ஸம்யகாதித்ய முபதிஷ்டதே – ஆதித்யாஜ் ஜாயதே வ்ருஷ்டிர் வ்ருஷ்டேர் அன்னம் தத ப்ரஜா –ப்ரஹ்ம பு -29-4- என்றும் சொல்லுகிறபடியே
    யஜ்ஞாத் யாராதிதரான ஆதித்யாதி தேவர்களாலே வ்ருஷ்டி ஸஸ்ய ப்ரஜா வ்ருத்திகளானவை ப்ரதிபாதிக்கப்படா நின்றது இறே
    ஆகையால் -சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ -கீதை -4-13- என்கிறபடியே
    யஜ்ஞாத் யநுஷ்டான நிஷ்பத்தி பிறக்கைக்காக சாதுர் வர்ண் யமானது ஸர்வ ஸ்ரஷ்டாவான ஸர்வேஸ்வரனாலே முக பாஹுருபாத ஜாதரான ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ர விபாகத்தாலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது

    (முகம் ப்ராஹ்மணர்
    தோள்கள் க்ஷத்ரியர்
    கைகள் வைஸ்யர்
    திருவடி ஸூத்ரர்
    )

    ப்ராஹ்மணர் ஆகிறார் –
    அத்யயனம்
    அத்யாபநம்
    யஜநம்
    யாஜநம்
    தானம்
    ப்ரதி க்ரஹம் -என்கிற ஷட் கர்மத்துக்கும் கடவராய்
    தபோ தமஸ் ஸமஸ் சவ்சம் ஷாந்திர் ஆர்ஜவமேவச ஞான விஞ்ஞாநம் ஆஸ்திக்யம் ப்ராஹ்மம் கர்ம ஸ்வபாவஜம்
    என்கிற ஸ்வபாவஜ கர்ம நிரதராய் இருப்பர்கள்
    (ஆறு தொழில் அந்தணர்)

    ஷத்ரியர் ஆகிறார்
    அத்யயன
    யஜன
    தானங்கள் ஆகிற த்ரி கர்மத்துக்கும் கடவராய்
    ப்ரஜா பாலந தத் பரராய்
    சவ்ர்யம் தேஜோ த்ருதிர் தாஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் தாநமீஸ்வர பாவஸ் ச ஷாத்ரம் கர்ம ஸ்வ பாவஜம் –கீதை -18-42-43- என்கிற
    ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்

    வைஸ்யர் ஆகிறார்
    அத்யயநாதி கர்ம த்ரயத்துக்கும் அதிகாரிகளாய்
    க்ருஷி கோ ரக்ஷ வாணிஜ் யங்களாகிற ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்

    ஸூத்ரராகிறார்
    இந்த வர்ண த்ரய ஸூஸ்ருஷை பண்ணுகையே ஸ்வா பாவிக கர்மமாக யுடையராய் இருப்பார்கள்

    இவர்கள் வர்ணாஸ்ரம அநு ரூபமான கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் இடத்தில் -காலேஹ்நி கர்ம சோஸ்யதே -என்கிறபடியே கர்ம அனுஷ்டானம் காலாதீனம் ஆகையால் -கால ஸ்வரூபம் நிரூபணீயம் –
    காலமாவது -அநாதிர் பகவான் காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே -அவிச்சிந்நாஸ் ததஸ்த்வேதே சர்க்க ஸ்தித் யந்த ஸம்யாமா –தைத்த-நா -6-1-8-என்கிறபடியே
    ஸர்வேஸ்வரனுடைய ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு பரிகர பூதமாய்
    உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்யமாய்
    கலா முஹுர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ -விஷ்ணு பு -1-2-26- இத்யாதி ஸ்ருதி மர்யாதையாலே
    கலா முஹுர்த்தாதி மயமான அவயவ விபாகத்தை யுடைத்தாய் இருபதொரு அசித் விசேஷமாய் இருக்கும்

    அதில் –காஷ்டா பஞ்சத ஸாக்யாதா -நிமேஷா முநி சத்தம காஷ்டா த்ரிம் ஸத் கலாத்ரிம்ஸத் கலா மவ்ஹுர்த்திகோ விதி -தாவத் ஸங்க்யைர் அஹோ ராத்ரம் முஹுர்த்தைர் மாநுஷம் ஸ்ம்ருதம் – அஹோ ராத்ராணி தாவந்தி மாஸ பக்ஷ த்வயாத்மக -தைஷ் ஷட்பிர் அயனம் வர்ஷம் த்வே அயநே தஷிணோத்தரே அயனம் தக்ஷிணம் ராத்ரி -தேவாநாம் உத்தரம் திநம் – திவ்யைர் வர்ஷ ஸஹஸ்ரைஸ் து க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞகம் -சதுர் யுகம் த்வாதஸபி ஸ்தத் விபாகம் நிபோதமே -ஸத்வாரி த்ரீணி த்வே ஸைகம் க்ருதாதி ஷு யதாக்ரமம் திவ்யாப்தாநாம் ஸஹஸ்ராணி யுகேஷ்வாஹு புராவித -தத் ப்ரமாணைஸ் சதைஸ் சந்த்யா பூர்வா தத்ராபிதீயதே -ஸந்த்யாம் ஸஸ்சாபி தத் துல்யோ யுக ஸ்யா நந்தரோ ஹி ஸ -ஸந்த்யா ஸந்த்யாம் ஸயோரந்தர்ய காலோ முநி சத்தம
    யுகாக் யஸ்ஸது விஜ்ஜேய க்ருதத்ரேதாதி ஸம்ஜ்ஜித -க்ருதம் த்ரேதா த்வாபரஸ் ச கலிஸ் சேதி சதுர்யுகம் ப்ரோச்யதே தத் ஸஹஸ்ரஞ்ச ப்ரஹ்மணோ திவஸம் முநே ப்ரஹ்மணோ திவஸே ப்ரஹ்மன் மந வஸ்து சதுர் தச -பவந்தி பரிணாமஞ்ச தேஷாம் கால க்ருதம் ஸ்ருணு – ஸப்தர்க்ஷயஸ் ஸூராஸ் சக்ரோ மநுஸ் தத் ஸூநவோ ந்ருபா –ஏக காலே ஹி ஸ்ருஜ்யந்தே ஸம்ஹ்ரி யந்தே ச பூர்வவத் சதுர் யுகாணாம் சங்க்யாதா ஸாதிகாஹ்யேக ஸப்ததி –மந்வந்தரம் மநோ கால ஸூராதீ நாஞ்ச சத்தம -அஷ்டவ் சத ஸஹஸ்ராணி திவ்யயா சங்க்யா ஸ்ம்ருதம் -த்விபஞ்சா ஸத் ததான்யாநி சஹஸ்ராண்யதிகாநி து -த்ரிம் ஸத் கோட் யஸ்து ஸம் பூர்ணாஸ் சங்க்யாதாஸ் சங்க்யயா த்விஜ -ஸப்த ஷஷ்ட்டிஸ் ததான்யாநி நியுதாநி மஹாமுநே -விம்சதிஸ் ச ஸஹஸ்ராணி காலோயமதிகம் விநா மந்வந்த்ரஸ்ய சங்க்யேயாம் மானுஷை வத்ஸரை த்விஜ -சதுர்தச குணோஹ்யேஷா காலோ ப்ராஹ்மஹ ஸ்ம்ருதம் ப்ராஹ்மோ நைமித்திகோ நாம தஸ்யாந்தே ப்ரதி சஞ்சர -ததா ஹி தஹ்யதே ஸர்வம் த்ரை லோக்யம் பூர் புவாதி கம் ஜநம் ப்ரயாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந -ஏகார்ணவே து த்ரை லோக்யே ப்ரஹ்மா நாராயணாத்மக போகி ஸய்யாக தஸ்ஸேதே த்ரை லோக்ய க்ராஸ ப்ரும்ஹி -ஜனஸ்தைர்யோகி பிர் தேவஸ் சிந்த்யமாநோப்ஜ சம்பவ -தத் பிரமணாம் ஹி தாம் ராத்ரிம் ததந்தே ஸ்ருஜதே புந -ஏவஞ்ச ப்ரஹ்மணோ வர்ஷம் ஏவம் வர்ஷ சதம் து தத் -சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத்மந -ஸ்ரீ விஷ்ணு பு -1-3- என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

    பதினைந்து நிமேஷம் கொண்டது காஷ்டையாய்
    முப்பது காஷ்டை கொண்டது கலையாய்
    முப்பது கலை கொண்டது முஹூர்த்தமாய்
    முப்பது முஹூர்த்தம் கொண்டது மானுஷ்யமான அஹோ ராத்ரமாய்
    முப்பது அஹோ ராத்ரம் கொண்டது பக்ஷ த்வயாத்மகமான மாஸமாய்
    ஆறு மாஸம் கொண்டது அயனமாய்
    தக்ஷிண உத்தரமான அயனம் இரண்டு கொண்டது வர்ஷமாய்

    இந்த தஷிணாயனம் தேவர்களுக்கு ராத்ரியாய்
    உத்தராயணம் பகலாய்
    ஸம்வத்ஸரம் தேவர்களுக்கு நாளாய் இருக்கும்
    இப்படி முந்நூற்று அறுபது கொண்டது தேவர்களுக்கு ஒரு வத்சரமாய்
    தேவ வத்சரம் பன்னீராயிரம் கொண்டது க்ருத த்ரேதா த்வாபர கலி யுகம் என்று சொல்லப்பட்ட சதுர் யுகமாய் இருக்கும்

    இதில் நாலாயிரம் தேவ ஸம்வத்ஸரம் க்ருத யுகமாய் இருக்கும்
    மூவாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்ரேத யுகமாய் இருக்கும்
    இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்வாபர யுகமாய் இருக்கும்
    ஆயிரம் தேவ வத்ஸரம் கலியுகமாய் இருக்கும்

    நிற்கிற இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரமும் -க்ருத த்ரேதாதி கணக்கிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமாயும் பிரியும்
    இதில் க்ருத யுகத்திலே பூர்வ உத்தரங்களிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமுமாயும் தேவ ஸம்வத்ஸரம் நானூறு நானூறு கழியும்
    த்ரேதையில் பூர்வ உத்தரங்களில் முந்நூறு முந்நூறு கழியும்
    த்வாபரத்தில் பூர்வ உத்தரங்களில் இருநூறு இரு நூறு கழியும் கலி யுகத்தில் பூர்வ உத்தரங்களில் நூறு நூறு கழியும்

    இப்படி விபக்தமான சதுர் யுகங்கள் ஆயிரம் ப்ரஹ்மாவினுடைய ஒரு பகலாய் இருக்கும்
    இந்த ஒரு பகலிலே பதினாலு மந்வந்தரமாய் –
    மந்வந்தரம் தோறும் –
    ஸப்த ரிஷிகள்
    அஷ்ட வஸூக்கள்
    ஏகாதஸ ருத்ரர்கள்
    த்வாதஸ ஆதித்யர்கள்
    அஸ்வின தேவதைகள் என்கிற த்ரயஸ்த்ரிம்ஸமும்(முப்பத்து மூவரும்
    )
    சதுர் தச மநுக்கள்
    சதுர்தச இந்த்ராதி திக் பாலரும்
    கல்பாதியிலே ஸ்ருஷ்டருமாய்
    கல்பாந்தே ஸம் ஹ்ருதருமாய்க் கொண்டு போருவர்கள்

    இவர்களில் ஸப்த ரிஷிகள் ஆகிறார்
    அத்ரி
    ப்ருகு
    வஸிஷ்ட
    அகஸ்த்ய
    அங்கிரச
    கௌதம
    பரத்வாஜர் என்று சொல்லப் பட்டவர்கள்
    ஒவ்வொரு மந்வந்தரத்தில் ஸப்த ரிஷிகள் பேதிப்பர்கள் என்று அறியவும்
    இவை ஸ்ரீ விஷ்ணு பு -3-1-ல் காணலாம்

    அஷ்ட வஸூக்கள் ஆகிறார்
    ஆபோ
    த்ருவன்
    ஸோமன்
    தரன்
    அநிலன்
    அநலன்
    ப்ரத் யூஷன்
    ப்ரபாஸன்–என்று செல்லப்பட்டவர்கள்

    ஏகாதஸ ருத்ரர்கள் ஆகிறார்
    ஹரன்
    பஹு ரூபன்
    த்ர்யம்பகன்
    அபராஜிதன் வ்ருஷாகபி
    சம்பு
    கபர்தீ
    ரைவதன்
    ம்ருக வ்யாதன்
    சர்வன்
    கபாலீ -என்று செல்லப்பட்டவர்கள்
    ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ர்யம்ப கஸ் ச அபராஜித வ்ருஷாகபிஸ் ச சம்புஸ் ச கபர்தீ ரைவதஸ் ததா ம்ருக வ்யாதஸ் ச ஸர்வஸ் ச கபாலீ ச மஹா முநே ஏகாதஸைதே கதிதா ருத்ராஸ் த்ரி புவநேஸ்வரா –இதி ஸ்ரீ விஷ்ணு புராணே பாட
    வ்ருஷாகபி சங்கரஸ் ச இதை ப்ராமாணத் திரட்டில் –1-5-3- –
    பாரதம் புராணாந்தரங்களில் நாம பேதம் காண்கிறன
    மாத்ஸ்யத்தில் -அ -5- அஜைக பாதஹிர் புத்ன்ய -விரூபாஷோ அத ரைவத ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ரயம்பகஸ் ச ஸூரேஸ்வர -சாவித்ரஸ் ச ஜயந்தஸ் ச பிநாகீ ச அபராஜித ஏதே ருத்ராஸ் ஸமாக்யாதா ஏகாதஸ கணேஸ்வரா -என்று காண்கிறன
    கல்ப பேதேந நாம பேத பரன்களாக இவைகளைக் கண்டு கொள்வது
    ஸ்ரீ விஷ்ணு பு-3-1-ல் காண்க

    த்வாதஸ ஆதித்யர்கள் கீழே சொல்லப்பட்டது

    இனிப் பதினாலு மனுக்கள் ஆகிறார்
    ஸ்வயம்புவன்
    ஸ்வாரோ சிஷன்
    உத்தமன்
    தாபசன் -தாமஸன் என்று புராணத்தில் பாடம்
    ரைவதன்
    சாஷுஸன்
    வைவஸ்வதன்
    ஸாவர்ணிகன்
    தஷஸா வர்ணிகள்
    ப்ரஹ்ம சா வர்ணிகள்
    தர்ம ஸா வர்ணிகன்
    ருத்ர ஸா வர்ணிகன்
    ரோசமாநன்
    பவ்மன் என்று செல்லப்பட்டவர்கள்

    சதுர்தச இந்த்ரராகிறார்
    ஸஸீ பதி
    விபஸ்சித்
    ஸூசாந்தி
    ஸிபி
    விபு
    மநோஜவ
    புரந்தர
    விரோசந ஸூதபலி
    மஹா வீர்ய
    சாந்தி
    வைவ்ருஷா
    ருதுதாமா
    திவஸ்பதி
    ஸூசி -என்று செல்லப்பட்டவர்கள்

    திக் பாலகர்கள் ப்ரஸித்தம் இறே
    இந்த்ர அக்னி
    யம நைர்ருத
    வருண வாயு
    குபேர ஈஸாந-என்று செல்லப்பட்டவர்கள் திக் பாலர்கள் என்று அறியவும்

    ஒரு மந்வந்தரம் எழுபத்து ஒன்றே சிலவான சதுர் யுகமாய் இருக்கும் -1000 வகுத்தல் 14
    அது தேவ ஸம்வத்ஸரம் என்று நூறாயிரத்து ஐம்பத்து ரீராயிரமாய் இருக்கும்
    இது மானுஷ ஸம்வத்சரத்தில் முப்பது கோடியே அறுபத்து ஏழாயிரமும் இருபதினாயிரமும் அதிக அம்சம் இருபதினாயிரமுமாக முப்பது கோடியும் லக்ஷத்து ஏழாயிரமுமாய் இருக்கும்
    இது ஒரு மந்வந்தரமாய் இருக்கும்
    இப்படி பர்யாயமான மன்வந்தரம் பதினாலு ப்ரஹ்மாவுக்கு ஒரு பகலாய் –
    அவ் வஹர் அவசாநத்திலே பூர் புவஸ் ஸூவ என்கிற த்ரி ஜகத் ப்ரளயமாய் இருக்கும்
    பின்னை சதுர் யுக ஸஹஸ்ர ஆவ்ருத்தி காலம் அளவாக ராத்ரியாய்
    ததந்தே ஸ்ருஷ்டியாய் இருக்கும்
    இப்படியான அஹோ ராத்ரத்தாலே ப்ரஹ்மாவுக்கு பரம ஆயுஸ்ஸு வர்ஷ சதமாய் இருக்கும்

    இப்படிச் சொன்ன சதுர் யுகங்களில் வைத்துக் கொண்டு க்ருத யுகத்திலே
    க்ருதே து மிதுன உத்பத்தி ஸித்திஸ் சாபி ரஸோல்லஸா ஸக்ருத் வ்ருஷ்டி மயீ சான்யா க்ரஹ வ்ருஷாத் மிகா பரா பஸ்சாத் ஸங்கல்ப ஸித்திஸ் ச கல்ப வ்ருஷாத்மிகா பரா –
    ப்ரகாம வ்ருஷ்டிஸ் சாக்ருஷ்ட பஸ்ய ஸித்திஸ் ததாஷ்டமீ -லிங்க பு -பூ 39-14-15—கௌர்மே ச பூ 28-21-22-முத்ரித புராணே கோஸே து கிஞ்சித் அந்யதா பட்யதே –என்கிறபடியே
    ரஸோல்லாஸாதி யான -எல்லாக் கோசங்களிலும் ரஸோல்லாஸாதி -என்று தொடங்கிக் காண்கிறது ஸ்லோக பாட அநு குணமாகக் காணவில்லை
    அஷ்ட ஸித்தியும் ஸ்வத ஏவ ஸம்பவியா நிற்கும்

    அதில் ரஸோல்லாஸை யாவது
    யோக அப்யாஸத்தாலே தன்னுடைய மூர்த்தாவில் சந்த்ர மண்டலம் உருகி ஒழுகின அம்ருதத்தாலே திருப்தி பிறந்து தாஹாதிகள் அற்று இருக்கை

    மிதுன உத்பத்தி யாவது
    ஸ்த்ரீ நிரபேஷமாக ஸூகம் பிறக்கை

    ஸக்ருத் வ்ருஷ்டி மயியாவது
    ஒருக்கால் வர்ஷிக்க ஸஸ்யங்கள் உண்டாகை

    க்ரஹ வ்ருஷாத்மிகை யாவது
    தன்னுடைய இச்சையால் க்ரஹத்தில் வருஷங்கள் உண்டாகை

    ஸங்கல்ப ஸித்தி யாவது
    தான் நினைத்த போதே அபிமதம் ஸித்திக்கை

    கல்ப வ்ருஷாத்மிகை யாவது
    பரத்வாஜனைப் போலே நினைத்தது எல்லாம் உண்டாகை
    ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டத்தில் காண்கிறோம்

    ப்ரகாம வ்ருஷ்டியாவது
    வேண்டும் அளவிலே கநக்க வர்ஷிக்கை

    அக்ருஷ்ட பஸ்ய ஸித்தியாவது
    க்ருஷி பண்ணாமல் விளைகை

    இப்படி அயத்ன லப்யங்களான இந்த ஸித்திகள் யுகாந்தரங்களில் ஸ்வ யத்னத்தாலே ஸாதித்துக் கொள்ளப்படும்
    இதில் -த்யாயன் க்ருதே யஜன் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரேர்ச்சயன் -யதாப்னோதி ததாப்னோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு பு -6-2-17 என்று
    யுகாந்தரங்களில் யாகாதிகளாலே லபிக்கும் பலத்தை கலி யுகத்தில் ஸங்கீர்த்தன மாத்ரத்தாலே லபிக்கும்

    இப்படி நிஜமான மாநத்தாலே பரிகணிதமான த்வி பரார்த்த கால வர்த்தியான சதுர் முகனை சரீரமாகக் கொண்டு ஸ்ருஷ்டியைப் ப்ரவர்த்திப்பித்தும்
    ஸ்வேந ரூபேண ரக்ஷணத்தைப் பண்ணியும்
    ருத்ர ரூபியாய் ஸம்ஹரித்தும்
    ஸகல ஜகத்தையும் ஸர்வேஸ்வரன் தானே லீலைக ப்ரயோஜனமாய்க் கொண்டு நிர்வஹிக்கும் என்னும் இடம்
    அப்ரமேயா அநியோஜ்யஸ் ச யத்ர காம கமோ வஸீ மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ-சபா பர் -61-31-
    அப்ரமேயத்வம் -பரிபூர்ணத்வம் -அநியோஜயத்வம்-அநிதர சேதன ப்ரேர் யத்வம் -யத்ர காமகம இத்யநேந வாயூதகாதி ப்ரேரணாதீநா அபுத்தி பூர்வகஸ் பந்தாதி சேஷ்டாவ்யாவ்ருத்தி -ஸ்வேச்சா க்ருத ப்ரவ்ருத்தி விகாத வ்யுதா ஸோ வா –ஸ்வா தீந லீலோப கரணத்வம்
    வஸீ ஸப்தார்த்த –விஸ்வம் –வஸம் -யஸ்ய ஸ வஸீ —
    இந்த்ரிய பராதீன சேஷ்டா வ்யாவ்ருத்த் யர்த்தோ வா வஸீ ஸப்த -பாலக த்ருஷ்டாந்தேந -லீலாயா -ப்ரயோஜனாந்தர நைர பேஷ்யம் -அபி ப்ரேதம்
    அநேந ராஜ்ஞாம் பண பந்த பூர்வக த்யூதாதி வ்யாவ்ருத்தி கார்ய வர்க்க பேஷயா பகவன் மஹிம்நோ விபுல தரத்வம் -க்ரீட நகை -இத்யேநேந பலிதம்
    இத்யஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ வர்ணித ஸ்ருத ப்ரகாசிகாயாம் மங்கள ஸ்லோக வ்யாக்யாந வஸரே
    ஸ்ருஷ்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் -ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு பு -1-2-66–அஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ பாஷ்ய காரேண வேதார்த்த ஸங்க்ரஹே வர்ணித தத்ர த்ரஷ்டவ்ய-என்று இத்யாதியாலே சொல்லப்பட்டது இறே

    ஆனால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு தஷாதிகளை கர்த்தாக்களாகச் சொல்லுவான் என் என்னில்
    ப்ரஹ்மா தஷாதய காலஸ் ததைவ கில ஜந்தவ -விபூதயோ ஹரே ரேதா ஜகதஸ் ஸ்ருஷ்டி ஹேதவ -விஷ்ணுர் மன்வாதய -கால ஸர்வ பூதாநி ச த்விஜ -ஸ்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய -ருத்ர காலாந்த காத் யாஸ் ச ஸமஸ்தாஸ் சைவ ஜந்தவ சதுர்தா பிரளயாயைதா ஜநார்த்தன விபூதய –ஸ்ரீ விஷ்ணு பு -1-22- என்கிற படியே
    பகவத் விபூதித்வேந ஸ்ருஷ்ட் யாத் யன்வயமாகக் கடவது
    இவ் விடத்தில் விஷ்ணுத்வமாவது
    ராமஸ் ஸஸ்த்ர ப்ருதாம் அஹம் –ஸ்ரீ கீதை 10-31- என்கிற இடத்தில் போலே அவதார ரூபேண விபூதியாக விவஷிதம்

    இதி தத்வ நிரூபணே வர்ண நிரூபணம் நாம ஷஷ்ட்டி அதிகாரம் ஸம் பூர்ணம்

    ———–

    ஸப்தம அதிகாரம் – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்
    1-நியந்த்ருத்வ நிரூபணம்
    2-ஈஸ்வரா நங்கீகாரே தோஷ நிரூபணம்
    3-காரண வாக்யஸ்த ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் விசேஷ ஸப்த பர்யவஸாந நிரூபணம்
    4-இந்த்ர அக்னி யாதித்ய சந்த்ர வைஸ்ரவண யம வருண வாயு ப்ரப்ருதி தேவதா ஸமூஹஸ்ய காரணத்வாத் யஸம்பவ நிரூபணம்
    5- ருத்ர ஜகத் காரணத்வ மத நிரூபணம் -ருத்ரஸ்ய ஸ்வே தாஸ்வர உப நிஷத் ப்ரதிபாத்யத்வம்
    6-தஸ்ய சாந்தோக்ய தஹர வித்யா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    7-தஸ்ய ப்ருஹதாரண்யக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    8-தஸ்ய அதர்வண ஸிகா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    10- தஸ்ய தைத்ரீய ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    11- தஸ்ய அதர்வ ஸிர உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    12- சதுர்முக காரணத்வ மத நிரூபணம்
    13- தஸ்ய அம்பஸ்யநுவாக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    14- தஸ்ய முக்த ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    15-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸப்தவத் ஸிவாதி ஸப்தாநாம் ஸாதாரணத்வ ஸமர்த்தநம்
    16- ருத்ரஸ்ய ஜன்யத்வ ப்ரதிபாதநம்
    17-நாராயண பரத்வ சமர்த்தந ஆரம்ப
    18-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் நாராயண ஸப்த பர்யவஸாந சமர்த்தனம்
    19-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் இதி வாக்யார்த்த விசார
    20-நாராயணஸ்ய மோக்ஷ ப்ரதத்வாதி நிரூபணம்
    21-தஸ்ய நாராயண உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    22-தஸ்ய மஹா உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
    23-தஸ்ய ஸ்வேதாஸ்வதர உப நிஷத் கடித சிவ ஸப்த வாஸ்யத்வ ஸமர்த்தனம்
    24- சதுர்முக ருத்ரயோ நாராயண ஜன்யத்வ ஸம்ஹார்யத்வாதி நிரூபண முகேந காரணத்வாபாவ ஸமர்த்தனம்
    25-காரண வாக்ய கடித ஹிரண்ய கர்ப்பாதி ஸப்த நாமபி பரமாத்ம பரத்வ ஸமர்த்தனம்
    26-ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்ததாக்ரே இத்யஸ்ய பரமாத்ம பரதயா அர்த்த வர்ணனம்
    27-அம்பஸ்யபாரே -இத்யனுவாகஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    28-புருஷ ஸூக்தஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    29-தாதா யதா பூர்வம் -என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    30-ப்ரஜாபதேஸ் ஸபாம் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    31-தத் ஸ்வயம் பூர் பகவான் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    32-நாராயண அநு வாக ப்ரதிபாத்ய நிரூபணம்
    33-நாராயண பரம் இத்யாதியில் சொல்லும் பஞ்சமீ ஸமா ஸகண்டநம்
    34-த்ருஷ்டாந்த ப்ரதர்சன பூர்வகம் நியாய விரோத ப்ரதர்சன பூர்வகஞ்ச தத் வாக்யார்த்த நிரூபணம்
    35-த்ருஷ்டாந்தரங்களைக் கொண்டு பூர்வ யுக்த சமர்தன பூர்வக நிகமனம்
    36-ஸ்வேதாஸ்வ தரஸ்த -ததோ யதுத்தரதரம் இத்யாதி வாக்ய கத சங்கா நிராகரணம்
    37-உபக்ரமாதி கரண நியாய நிரூபணமும் தத் ஸமன்வயமும்
    38-பூர்வ யுக்த -ததோ யதுத்தர தரம் இத்யாதி வாக்யத்தில் சங்காந்தரமும் தத் சமதானமம்
    39-தத்ரைவ ஹேத்வந்தரங்கள்
    40-தத் ப்ரகரணகத-ஸர்வாநநஸிரோக்ரீவ -இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    41-அத யதிதமஸ்மிந் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    42-யுக்த அர்த்தத்தில் வாக்யகார ஸம்வாதம்
    43-துல்ய ந்யாயாத் -தஹ்ரம் விபாப்மம் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    44-யத் வேதாதவ் இத்யாதி ஸ்ருத்யர்த்த வர்ணனம்
    45- காரணந்து த்யேய =இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
    46-பரமே வ்யோமன் -என்கிற இடத்தில் பரம வ்யோம ஸப்தத்துக்கு பரமபத வாசகத்வாபாவ நிராகரணம்
    47-அஹமேவ ப்ரதம மாஸம் -இத்யாதி ஸ்ருதிக்கு பாவமும் அதுக்கு த்ருஷ்டாந்தங்களும்
    48-இதுக்கு ஸூத்ரகார ஸம்வாதம்
    49-இதுக்கு மஹா பாரதத்தில் ஸம்வாதம்
    50-அதர்வ ஸிரோத்வி தீய கண்டஸ்த -யோவை ருத்ர -இத்யாதிக்கு ருத்ர பரத்வாபாவோப பாதநம்
    51- அதர்வ ஸிரோத்ருதீய சதுர்த்த கண்டஸ்த -ஸ ஓங்காரோ ய ஓங்கார -இத்யாதிக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
    52-அதர்வ ஸிரோ பஞ்சம கண்டத்துக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
    53-இதுக்கு த்ருஷ்டாந்தம்
    54-ததுக்த பஸ்மஸ்பர்ஸ விதிக்கு பாஸூ பத விரத மாத்ரார்த் தத்வம்
    55-விஸ்வாதி கோ ருத்ரோ மஹர்ஷி -இத்யாதிக்குத் தாத்பர்யம்
    56-ஸ்ரீ ருத்ராதிகளுக்கு ருத்ர ஐஸ்வர்ய பரத்வாபாவ ஸமர்த்தனம்
    57-ஏக ஏவ ருத்ர -இத்யாதிக்கு தாத்பர்யம்
    58-ஸ்ருத் யந்தரங்களில் யுக்த ந்யாயாதிதேஸம்
    59-ஸ்ருத் அநுஸாரி புராணங்களை ப்ராமாண்யமும் தத் இதரங்களுக்கு அப்ராமாண்யமும்
    60-நாராயண பர புராணாதிகளுக்கு ஸாத்விகத்வாத் ப்ராமாண்யமும் -தத் இத்தரங்களுக்கு தத் அபாவாத் அப்ராமாண்யமும்
    61-வக்தவ்ய அம்ஸாநுக்தியால் வந்த ந்யூனதைக்கு பரிஹாரம்
    62-ப்ரபந்தார்த்த நிகமனம்

    ————

    ஏவம் பூதமான சேதன அசேதன பிரபஞ்சத்துக்கு நியந்தாவாக
    க்ஷரம் ப்ரதானம் -அம்ருத அக்ஷரம் ஹர
    – (அபஹரித்து உண்ணும் ஜீவாத்மா) ஷராத்மாநாவீஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ் -1-10–
    ஹர –ஜீவ -அம்ருத அக்ஷரம் ஹர இதி -போக்தா நிர் திஸ்யதே –ப்ரதாநம் ஆத்மநோ போக்யத்வேந ஹரதீதி ஹர -இதி ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-
    தேவ ஏக -அத்விதீயோ நாராயண –திவ்யோ தேவ ஏகோ நாராயண -இதி ஸுபாலிக ஸ்ருதே
    ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -ஸ்வேதா -6–16-

    குணேஸ -குணா -ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
    தேஷாம் -ஈஸ -நியந்தா இத்யர்த்த -என்று வேதாந்தங்களிலே ப்ரதிபாதிக்கப் பட்டு
    பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம்-தைத்த -6-11-3
    பதித்வம் -சேஷித்வம் -சேஷித்வம் பதித்வம் -இதி கீதா பாஷ்யம் -3-30-
    பா -ரக்ஷண -இதி தாதோர் நிஷ் பந்நத்வாத் பதி ஸப்தோ -ரஷா -வாஸீ -நது சேஷி வாஸீ – இதி ந வாஸ்யம் -சேஷிணி ரூடத்வாத்
    (ப்ரஸித்த ரூடி அர்த்தம்)அந்யதா கமேர் டோ இதி டோ ப்ரத்ய யாந்த -கமி தாதோர் நிஷ் பந் நத்வாத் கோ ஸப் தஸ்ய மானுஷ்யாதி வாசகத்வ ப்ரசங்க -கதி மத்ஸூ ஸர்வேஷு ப்ரயோக அபாவாத் -அத பதி ஸப்த சேஷிணி ரூட இதி -என்று விஸ்வத்துக்குப் பதியாகவும்

    (பதி ரக்ஷணமா சேஷியா -விசாரம் -திருப்பல்லாண்டு -வயசான தந்தைக்கு பிள்ளை ரக்ஷணமாய் இருந்தாலும் சேஷி ஆகமாட்டான் அன்றோ)

    ஆத்மேஸ்வரம் -தைத் -6-11-3- என்று தனக்குத் தானே ஈஸ்வரனாகவும்
    ந தஸ்ய ஈஸே கஸ்ஸன-தைத்த -6-1-10-என்று-அவனுக்கு நியாந்தாக்களாய் இருப்பார் ஒருவரும் இல்லையாகவும்
    ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே –ஸ்வேதா -6-8- என்று-அவனுக்கு ஓத்தாரும் இல்லை மிக்காரும் இல்லையாகவும்
    (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -)
    ஸ காரணம் கரணாதிப அதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ந ஜநித ச அதிப –ஸ்வே -6-9-
    கரணாநாம் -ஸ்ரோத்ராதீ மாம் அதி பா ஜீவா தேஷாமதிப ஸர்வோ பாஸ்யத்வ ஸர்வ சேஷித்வ மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வ விஸிஷ்ட நாராயண இத்யர்த்த -என்று
    ஸமஸ்த வஸ்துக்களினுடைய உத்பத்திக்குக் காரணமுமாகவும்
    கரணாதிப ஸப்த வாஸ்யனான ஷேத்ரஞ்ஞனுக்கு அதிபனாகவும் -தனக்கு ஜனகரும் -அதிகரும் இல்லையாகவும்
    தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்- தம் தேவதாநாம் பரமம் ச தைவதம் -பதிம் பதீநாம் -பரமம் பரஸ்தாத்- விதமா தேவம் புவநேஸ மீட்யம்–ஸ்வேதா -6-7-
    மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வம் நாராயணஸ் யைவேதி வஹ்யதே -என்று
    நியாந்தாக்களுக்கு எல்லாம் பரம உபாஸ்யனாகவும் -சேஷிக்களுக்கு எல்லாம் பரம சேஷியாகவும் -உப நிஷத்துக்களிலே ஓதப்பட்டு ஸர்வ லோக நியந்தாவான ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன்

    அவன் இவ் வசித் ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு பந்த நிவ்ருத்த் யர்த்தமாக ஞாதவ்யனாகையாலே அவனுடைய யாதாத்ம்யமும் நிரூபணீயம்(பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் அறிய வேண்டுமே)

    (ஸ்வேதாஸ்வர உபநிஷத் வாக்யங்கள் பிறரையும் பரனாகச் சொல்லும் படி அமைந்துள்ளதால்-வேதார்த்த ஸங்க்ரஹத்தில் அவற்றை எடுத்து விளக்கி உள்ளார் -அதே போல் இங்கு இவரும் இவற்றை எடுத்து விளக்குகிறார்)

    ஏவம் பூதனாய் இருப்பானோர் ஈஸ்வரனைக் கொள்ளாத போது -இந்த ஷேத்ரஞ்ஞனானவன் இப்படி ஸூக துக்க அநுபவம் பண்ணக் கூடாது –எங்கனே என்னில்
    நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் -ஸ்வேதா -6-13- கட -2-5-13- என்று
    நித்யராய்
    சைதன்ய குணகராய்
    அசங்கயாதரான ஆத்மாக்களுக்கு–நித்யனாய் -சைதன்ய குணகனாய் -அத்விதீயனாய் இருப்பான் ஒருவன் அபிமதங்களைக் கொடா நிற்கும் என்று சொல்லுகையாலும் -துக்காத் யநுபவத்தில் வந்தால் அவற்றுக்கு ஹேதுவான அவித்யா கர்ம தேஹாதிகள் அசேதனங்களாகையாலே சேதன அதிஷ்டாநம் இல்லாத போது -புருஷா அநதிஷ்டிதமான வாஸ்யாதி கரணங்கள் ரத நிர்மாணத்துக்கு ஷமம் அல்லாதவோபாதி -அநுபவிப்பிக்க மாட்டாது -அநு பவிக்கிற சேதனன் தான் ஸூக அனுபவ ஸ்ரத்தை உண்டாகிலும் தன் மூலமான ஹேதுக்களை அறிந்து அதிஷ்டிக்க வேண்டும் –அதுக்கு யோக்யதையை உடையனாக இரான்
    சேதனர்கள் தந்தாமுடைய கர்மாதிகளையும் அறியாது இருக்கப் பிறருடைய கர்மாதிகளையும் அறிந்து அதிஷ்டிக்கைக்கு யோக்யர் அல்லர்
    ஆகையால் இவர்களுடைய கர்மாதிகளையும் அறிகைக்கு ஸர்வஞ்ஞனுமாய் -அறிந்தபடியே அதிஷ்டிப்பித்து அனுபவிப்பைக்கு ஸர்வ சக்தனுமாய் -இச் சேதனனுடைய விதி நிஷேத (அநுஷ்டான
    நுஷ்டான)அநு வர்த்தந திவர்த்தநங்களில் அநுக்ரஹ நிக்ரஹங்களைப் பண்ணும்படி நியாந்தாவுமாய் –
    தத் தத் ஆகார புண்ய பாப கர்மங்களுக்கு பலமான ஸூக துக்கங்களைக் கொடுக்கைக்குக் கீழ்ச் சொன்ன அசேதன ஜாதீயனும் இன்றியே உபய விலக்ஷணனாய் இருப்பானோர் ஈஸ்வரன் உண்டு என்று கொள்ள வேணும்

    ஆகை இறே -போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோதம் த்ரி விதம் ஸர்வ மேதத் –ஸ்வே -1-12- என்று
    போக்த்ரு போக்ய ப்ரேரயித்ரு ரூபமான சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயாத்மகமாக ஜகத்தை உபநிஷத் பாகத்திலே ஓதப்பட்டது

    இந்த நியந்த்ருத்வ விஸிஷ்டமான ப்ரஹ்மத்தை -காரணம் து த்யேய – அதர்வஸிகோப -என்று ஜகத் காரண தயா ஜிஜ்ஞாஸ்யமாக உப நிஷத்திலே ஒதுகையாலே
    காரண வாக்யங்களில் ஸத் ப்ரஹ்மாத் மாதி ஸப்தங்களாலே சொல்லப்பட்ட வஸ்து இது விறே என்று நிஸ்ஸயிக்கப் படும்
    எங்கனே எனில்

    (ப்ரஹ்ம ஸத் ஆத்மா -பொதுவான சொற்கள்
    என் மூல காரணம் -ஸ்ருஷ்டி ப்ரகரணம்
    ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் ப்ரதிஜ்ஜை
    சத்தாகவும் பெரியதாகவும் -ஆத்மா சேதனமாகவும் இருக்க வேண்டுமே
    கூரத்தாழ்வான் பஞ்ச ஸ்தவத்திலும் இவற்றைக் காட்ட அருளுகிறார்)


    சாந்தோக்யத்திலே -ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -6-2-1- என்று
    பிருஹத் அப்ருஹத் சாதாரணமான ஸச் சப்தத்தாலே சொல்லப்பட்ட காரண வஸ்துவானது
    வாஜஸ நேயத்திலே -ப்ரஹ்ம வா இதமே வாக்ர ஆஸீத் -ப்ரு -3-4-9- என்று ப்ருஹத்த்வைகாந்தமான ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப்பட்டது
    அவ் விடத்திலே ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே காரண வாக்யங்கள் எல்லாவற்றுக்கும் ஏக விஷயத்வம் வேண்டுகையாலே பஸூ மால பேத – சதபத ப்ரா -6-1-2-14-13- என்று சாமான்யமான பஸூ ஸப்தம் -சாகோ வா மந்த்ர வர்ணாத்-என்கிற ஸூத்ரத்தில் விசேஷ உபஸ்தாபகமான சாக பஸூ விலே பர்ய வசிக்குமாப் போலே இங்கும் ஸாமான்யமான ஸச் ஸப்த வாஸ்யம் என்று நிஸ்ஸயிக்கப் படுகிறது
    ஏகம் வா ஸம்யோக ரூப சோதநாக்யா விசேஷாத் -என்று பூர்வ மீமாம்ஸை யில் -2-4-9- சொன்ன சாகாந்தர அதிகரண ந்யாயத்தாலே என்றபடி
    ப்ரதீயதே யத் தத் ப்ரத்யயம் ப்ரதீயமாநம் இத் யர்த்த –ஸர்வ ஸாகா ஸூ ப்ரத்யயம் ஸர்வ ஸாகா ப்ரத்யயம் -தத்ர த்ருஷ்டோ ந்யாய ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாய என்று விக்ரஹம் கண்டு கொள்வது –

    (அஞ்ஞானம் அறிவிக்கும் வேதம் மீண்டும் மீண்டும் சொல்வதால் வேறே வேறே கர்மங்களை சொல்லுகின்றனவா அல்லது வேறே வேறே பலன்களை சொன்னவையாஅல்லது வேறே வேறு அதிகாரிகளுக்குச் சொன்னவையா-ஒரே குணம் சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் இருப்பதாக பொதுத் தன்மை
    சமாக்யா சோதனா பொது போல் இங்கும்-ஆகவே ஒருவரையே சொன்னதாக)

    இந்த ப்ரஹ்ம ஸப்தம் தான் -மம யோநிர் மஹத் ப்ரஹ்மா -கீதை -14-3- என்றும் தத் ஞானம் ப்ரஹ்ம ஸம்ஜிதம் -என்றும்
    சித் அசித் ஸாதாரணமாகையாலே -ஐத ரேயத்திலே ஆத்மா வா இதமேக ஏவ க்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் -ஐதரேய -1-1-1-என்று சேதநைக அசாதாரணமான ஆத்ம ஸப்தத்தாலே விசேஷித்தது

    இந்த ஆத்மாக்களில் ஜகத் காரண பூதர் ஆர் என்று விசேஷா காங்ஷையிலே –
    அந்த விசேஷமாவது –ஸர்வம் ததிந்த்ர தேவஸே –ஸாம -2-1-4-2—விஸ்வஸ் மாதிந்த்ர உத்தர இத்யாதிகளாலே சர்வோத்தரனாய்ச் சொல்லப்படுகிற இந்த்ரனோ
    =

    தமக்நேந்த்ரே வ்ருஷபஸ் ஸதாமஸி த்வம் விஷ்ணுருரு காயோ நமஸ்ய-த்வம் ப்ரஹ்மா ரயிவித் ப்ரஹ்மணஸ் பதே த்வம் விதத்தாஸ் ஸச ஸே புரந்த்ரிய -என்றும்
    த்வம் அக்நே ருத்ரோ அஸூரோ மஹோதிவ -யஜுர் காடகே -2-2-என்றும்
    இத்யாதிகளிலே ஸர்வாத்மகனாய்ச் சொல்லப்படுகிற அக்னியோ

    தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி -யஜுர் ஸம் -1-5-24
    சித்ரந் தேவாநாம் உதகாதநீ கஞ்சா ஷுர் மித்ரஸ்ய வருணஸ் யாக்நே ராப்ராத் யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்து ஷஸ்ச -யஜுர் 1-4-43
    ஹம்ஸஸ் ஸூசிஷத் -யஜுர் -4-2-1-5-இத்யாதிகளிலே உபாஸ்யனாக ஓதப்படுகிற ஆதித்யனோ

    ஸோம பவதே ஜனிதா மதீநாம் ஜனிதா திவோ ஜனிதா ப்ருதிவ்யா ஜனிதா அக்னேர் ஜனிதா ஸூர்யஸ்ய ஜனிதா இந்த்ரஸ்ய ஜனிதோத விஷ்ணோ -சாம -6-1-4-5
    ஏவமாதிகளிலே ஸர்வ உத்பாதகனாய்ச் சொல்லப்படுகிற சந்திரனோ-

    ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே நமோ வயம் வைஸ்ரவணாய ததாது யஜுர் ஆர -1-21-
    இத்யாதிகளிலே ஸர்வ பல பிரதனாகச் சொல்லப்படுகிற வைஸ்வரணோ-

    யோஸ்ய க்ருஷ்ட்ய ஜகத பார்த்தி வஸ்ய ஏக இத்வசீயமம் பங்க்யஸ்ரவோ காயயோ ராஜாந பரோத்த்ய யமம் காய பங்க்யஸ்ரவோ யோ ராஜாந் அபரோத்த்ய-யஜுர் -ஆ -6-5-12-1-2-3-
    இத்யாதிகளில் உத்க்ருஷ்டனாக ஓதப்படுகிற யமனோ-

    இமம் மே வருண ஸ்ருதீ ஹவமத்யாச ம்ருடய த்வாமவஸ்யு ராசகே தத் வாயாமி ப்ரஹ்மணா வந்த மாநஸ் ததா ஸாஸ்தே யஜமானோ ஹவிர்பிரஹேட மானோ வருணே ஹபோத் யுரு ஸம் ஸமான ஆயுர் ப்ரமோஷீ -யஜுர்
    இத்யாதிகளில் ஆராத்யனாகச் சொல்லப்படுகிற வருணனோ

    இன்னமும் பிரதேசாந்தங்களிலே உத்க்ருஷ்டராக ஓதப்படுகிற வாயு முதலான தேவதா விசேஷங்களோ என்னில்

    அவர்களாக மாட்டார்கள் -எங்கனே என்னில்
    ப்ரஹ்மாவினுடைய பக்கலிலே மந்வந்தரம் தோறும் பதினாலு பர்யாயம் பதங்கள் இட்டு மாறும்படியாய்-அவ்வோ காலங்களிலே ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்கு கர்மீ பவிப்பாருமாய்
    பீஷாஸ் மாத் வாத பவதி -பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத் அக்னிஸ் சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம -தைத்ரம் -என்று
    தங்களை ஒழிந்தானோர் ஈஸ்வரனுடைய ஆஜ்ஜைக்கு அஞ்சி வர்த்திப்பாருமாய் -அவனை ஆராதித்து பதம் பெற்றாருமாய் -சாஸ்திரத்தினுடைய அநு வர்த்த நத்திலும் புண்ய பாபங்களைப் பெற்று- தத் தத் பலமான ஸூக துக்கங்களை அநுபவிப்பாருமாய் -பரிச்சின்ன விபூதிகராய்ச சொல்லிப் போருகையாலே
    இப்படி அஸ்மாதாதிகளோ பாதி ஸர்வ சாதாரணமான ஸ்வ பாவங்களை உடைய –
    இந்த்ர -யம -வருண -குபேராதிகள் ஈஸ்வரத்வ சங்கைக்குக் கூட அர்ஹர் அல்லர்

    ருத்ர ஜகத் காரணத்வ வாத ஆரம்ப
    இப்படி ஸ்வேதாஸ்வர உபநிஷத்திலே -யதா தமஸ் தந் ந திவா ந ராத்ரிர் ந ஸந் ந ச அஸச் சிவா ஏவ கேவல -என்றும்-தத் அக்ஷரம் தத் ஸவிதுர் வரேண்யம் ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -4-18- என்கிற இத்தாலே
    அந்தக் காரண விசேஷம் சிவன் என்று புத்தி பண்ணப்படா நின்றது
    ஸத் ப்ரஹமாத்மாதி சாமான்ய சப்தங்களுக்கு விசேஷ ஸப்த ஸா பேஷத்வம் உண்டாகையாலே ஸர்வ நிஷேத பூர்வக அவதாரண கடித சிவ ஸப்தத்திலே அவைகள் பர்யவசிக்கின்றன (சிவா ஏவ கேவல
    )-இதி தேஷாம் அபிப்ராய

    (நம் பூர்வர்கள் இவ்வாறு பூர்வ பக்ஷ விளக்கம் அருளிச் செய்தபின்பே ஸித்தாந்த நிர்ணயம் பண்ணி அருள்வார்கள்)

    அங்கன் அன்றியே -ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -என்று மஹா உப நிஷத்திலே சொல்லப்பட்ட நாராயணன் அந்த விசேஷமானாலோ என்னில்
    இவ் வுப நிஷத் வாக்யம் -ஹவை -என்கிற ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அனுவாத ரூபமாய் இருக்கையாலே
    (அனுவாத வாக்கியம் என்றாலே முன்பு புரோ விதி வாக்கியம் உண்டாய் இருக்க வேண்டும் அன்றோ-இந்த வாதத்தால் ஆஹாஸ ப்ராண ஸப்தம் காரணமாக மாட்டாது என்று நிர்த்தேசித்ததை த்ருஷ்டாந்தமாகக் காட்டுகிறார்) ஸ்வயம் விசேக்ஷ உபஸ்தாபநம் பண்ண மாட்டாது -எங்கனே என்னில்

    சாந்தோக்யத்தில் -ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத் யந்தே -1-9-1-
    ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ பி ஸம் விசந்தி பிராண மப்யுஜ்ஜி ஹதே –1-11-5- என்று(
    ஸ்ருஷ்டிக்கப்படுவதையும் லயிக்கும் படியையும் காட்ட இரண்டு பிரமாணங்கள்)
    இவ் வாக்கியங்கள் இரண்டுக்கும் -ஹவை -என்கிற ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே யாதொருபடி அநு வாதத்வம் உண்டாயிற்று
    ஆஹாஸஸ் தல் லிங்காத் -அத ஏவ ப்ராண -ப்ரஹ்ம ஸூத் 1-2-23-24-என்கிற அதிகரணங்களிலே
    ஸர்வாணி ஹ வா என்கிற வாக்யத்துக்கு அநு வாதத்வம் ஸ்தாபிக்கப் பட்டதாகையாலே அநு வாதத்வம் உண்டாயிற்று -இத் யுக்தம்

    அப்படியே இங்கும் ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே அநு வாதமாகையாலே ஆகாஸ ப்ராண ஸப்தங்களோ பாதி நாராயண ஸப்தமும் அநுவாத லிங்க ரஹிதமான- ஏவ காராத் யுபாதாந லிங்க விஸிஷ்டமாயுள்ள -சிவ பரமாக ப்ராப்தம் ஆகையால் ருத்ரனே ஜகத் காரணம் என்று நிச்சயிக்கப் படுகிறது-
    ஆகையாலே மோக்ஷ ப்ரதத்வமும் அவனுக்கே என்று அர்த்த சித்தம்
    (ஜகத் காரணம் யாரோ அவனுக்கே மோக்ஷ பிரதத்வம் -அனுமானத்தால் அர்த்த சித்தம்)

    எங்கனே என்னில்
    யதோ வா இமாநி பூதாநி -தைத்ரியம் – இத்யாதியாலே
    1-ஜகத் காரண பூதனும் -2-முமுஷு உபாஸ்யனும் -3-மோக்ஷ ப்ரதனும் -என்று சொல்லப்படுகையாலே
    இன்னமும் ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் ஸ்வேதாஸ்வர உப நிஷத்திலே நேரே சொல்லப்படா நின்றது
    வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் (இந்த மஹானை நான் அறிகிறேன்)ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி நான்ய பந்தா வித்யதேயநாய –யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கிஞ்சித் -வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேக தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் ததோ யதுத்தர தரம் ததரூபமநா மயம் -ய ஏதத் விதுரம்ரு தாஸ்தே பவந்தி- அதே தரே துக்க மேவாநு யந்தி -ஸர்வாநந ஸிரோக்ரீவ ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச பகவான் -தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ –ஸ்வேதா -3- என்று
    வ்யாபகனான பரம புருஷனில் காட்டில் உத்தரமாய் இருபத்தொரு தத்வத்தைச் சொல்லி -அதினுடைய ஞான அஞ்ஞானங்களாலே மோக்ஷ ஸம்ஹாரங்களாகவும் சொல்லி -அத் தத்வம் ஸர்வ வ்யாபியான ஸிவன் என்று நிகமித்தது

    அப்படியே சாந்தோக்ய தஹர வித்யையிலும் -அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர அஸ்மிந் நந்தர ஆகாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் தத் அந்வேஷ்டவ் யந் தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று இத்தாலே
    ஹ்ருதய புண்டரீக மத்ய வர்த்தியான ஆகாஸ ஸப்த வாஸ்யமாக ஒரு வஸ்துவை நிர்தேசித்து -அதுக்குள்ளே இருக்கிற வஸ்து முமுஷுக்களுக்கு அன்வேஷ்டவ்யம் என்று சொல்லப்படா நின்றது

    இவ் விடத்தில் ஆகாஸ ஸப்தம் -தத் ப்ரகரண உப ஸம்ஹாரத்திலே -ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யத் அந்தரா தத் ப்ரஹ்ம -8-14-1- என்று
    நாம ரூப நிர்வோட்ருத்வ ஸ்ருதியாலே புருஷ ஸூக்தத்திலே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபி வதன் யதாஸ்தே -என்று
    நாம ரூப நிர் வாஹகனாகச் சொல்லப்பட்ட பரம புருஷனுக்கு வாசகமாகையாலே அந்த ஆகாஸ ஸப்த வாஸ்யனான பரம புருஷனுக்கு அந்தர் வர்த்தியாய் இருபத்தொரு வஸ்து முமுஷுக்களுக்கு உபாஸ்யம் என்று இவ் வாக்கியத்திலே தோன்றா நின்றது

    தைத்ய தஹர வித்யையிலே -தஹ்ரம் விபாப்மம் வர வேஸ்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்ய ஸம்ஸ்தம் –தத்ராபி தஹ்ரம் ககநம் விசோகஸ் தஸ்மிந் யதன்தஸ்தது பாஸி தவ்யம்- யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தோ- வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ்ச மஹேஸ்வர -6-10- என்று
    சாந்தோக்ய வாக்கியத்தில் போலே ஹ்ருதய அந்தர் வர்த்தியாயும் உபாஸ்ய ஆதாரமாகவும் ஆகாஸ ஸப்த பர்யாயமான ககந ஸப்தத்தாலே பரம புருஷனை நிர்தேசித்து ததாதேயமாய் இருபத்தொரு வஸ்துவை உபாஸ்யமாகச் சொல்லி -அந்த விஷயம் -யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர என்று மஹேஸ்வரனாக நிஷ்கர்ஷிக்கப் படா நின்றது –

    அப்படியே ப்ருஹதாரண்யகத்தில் -யஸ் ஏஷ அந்தர் ஹ்ருதய ஆகாசஸ் -தஸ்மிஞ் சேதே ஸர்வஸ்ய வஸீ– ஸர்வஸ் யேஸாந -6-4-22- என்று ஹ்ருதய மத்யஸ்தமாக ஆகாஸ ஸப்தத்தாலே சாந்தோக்யத்தில் போலே பரம புருஷனைச் சொல்லி- தத் அந்தர் வர்த்தியாக ஈஸாநன் ப்ரதிபாதிக்கப் படா நின்றான்

    அப்படியே அதர்வ சிகையிலே -காரணந்து த்யேய ஸர்வ ஐஸ்வர்ய ஸம்பன்னஸ் ஸர்வேஸ்வர சம்பு ராகாஸ மத்யே த்யேய -என்று ஹ்ருதய மத்யஸ்தமான ஆகாஸ வர்த்தியாகக் கொண்டு உபாஸ்யமான வஸ்துவை சம்பு ஸப்தத்தாலே விசேஷித்து -சிவ ஏகோ த்யேய -சிவங்கரஸ் ஸர்வம் அந்யத் பரித்யஜ்ய -என்று அந்த ஷம்புவை சிவ ஸப்தத்தாலே நிகமியா நின்றது

    அப்படியே தைத்ரியத்திலும் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -ஸோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி –1-1-2- என்று
    குஹா ஸப்த நிர் திஷ்டமான ஹ்ருதய அந்தர் வர்த்தியாய் -உபாஸ்யமான ப்ரஹ்மத்துக்கு ஆதாரமுமாக -ப்ரஸித்த ஆகாஸ வ்யாவர்த்தகமான- பர ஸப்த விசேஷிதமாய் இருக்கிற வ்யோம ஸப்தத்தாலே புருஷோத்தமனைச் சொல்லி -அவன் பக்கலிலே இருக்கிற ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான உபாஸ்ய வஸ்து -முன்பு சொன்ன அநேக ஸ்ருதிகளோடு உண்டான ஐகார்த் யத்தாலே சிவன் என்று அறுதி இடப்படா நின்றது
    காமாத் யதிகரணத்தில் ஸர்வே வேதாந்த படித தஹர வித்யை களுக்கு ஐக்யம் சொல்லி இருக்கையாலே ஸர்வ ஸ்ருதிகளுக்கு ஐகார்த்யம் ஸித்தம் என்று கருத்து

    ஆகையாலே நாராயணனுக்கு பரனாய் தத் அந்தர் வார்த்தியான உபாஸ்யன் சிவனே என்னும் இடம் ஸர்வ ஸ்ருதிகளிலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது என்னும் இடம் நிஸ்ஸயிக்கப் பட்டதாகிறது

    இப்படியே அதர்வ சிரஸ்ஸில் ப்ரதம கண்டத்திலே -தேவா ஹ வை ஸ்வர்க்கம் லோக மகமந் -தே தேவா ருத்ரம் அப்ருச்சன்–கோபவா நிதி ஸோ அப்ரவீத் -அஹமேக ப்ரதம மாஸம் -வர்த்தாமி ச பவிஷ்யாமி ச -நான்ய கஸ்ஸின் மத்தோ வ்யதிரிக்த -என்று
    முதலான வாக்யத்தாலே தேவர்களாலே ப்ருஷ்டனான ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தைப் பரக்கச் சொன்னான்

    அநந்தரம் தேவர்கள் அத்தை எடுத்து ருத்ரனை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்று தொடங்கி
    ததோ தேவா ருத்ரம் நாபஸ்யன் தே தேவா ருத்ரம் த்யாயந்தி -ததோ தேவா ஊர்த்வ பாஹவ ஸ்துந் வந்தி என்கிற ஸ்ருதி அர்த்த அநு வாதம்

    த்விதீய கண்டத்திலே -யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா -தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச விஷ்ணுஸ் தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச மஹேஸ்வரஸ் தஸ்மை வை நமோ நம –
    யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா பூர் புவஸ் ஸூவஸ் தஸ்மை வை நமோ நம -இதி பாரதம் -என்று முதலான
    வாக்யத்தாலே ருத்ரனுடைய ஸர்வ ஐஸ்வர்யமானது ஸூ வ்யக்தமாகச் சொல்லப்பட்டது

    த்ருதீய சதுர்த்த கண்டங்களிலே -ஸ ஏகோ ருத்ரஸ்ய ஈஸாந ஸ பகவான் ஸ மஹேஸ்வர ஸ மஹாதேவ -இதி தத் அசாதாரணாநேக நாம நிர்தேச தந் நிர்வசன முகத்தாலே ருத்ரனுடைய ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கப் படுகிறது

    த்ருதீயேதி –இவ் விடத்தில் அதர்வ சிரஸ்ஸை ஐந்து கண்டமாகவே திரு வுள்ளம் பற்றி இருக்கிறதாகத் தோற்றுகிறது -தத்வ சேகர- ஸ்ருத ப்ரகாசிக -அதர்வ ஸிகா விலாஸாதிகளில் ஆறு கண்டமாகத் திருவுள்ளம் பற்றி வ்யாக்யானம் பண்ணி இருக்கிறார்கள்
    அநேக தத்வ நிரூபண கோசங்களில் ஐந்து கண்டமாகவே தோற்றுகையால் பரிஷ்கரிக்க சாமர்த்தியம் உடையோமாகிறிலோம்

    தேவா ஹ வை –தொடங்கி ஸ்வேந தேஜசா பர்யந்தம் பிரதம கண்டம்
    ததோ தேவா ஆரப்ய –யச்ச ஸத்யம் தஸ்மை நமோ நம -இத்யந்தம் த்விதீய கண்டம்
    ஓமாதவ் மத்யே -தொடங்கி பாதோய உத்தர –பர்யந்தம் த்ருதீய கண்டம்
    ஸ ஓங்கார -தொடங்கி -மஹா தேவ -பர்யந்தம் சதுர்த்த கண்டம்
    ததேகஸ்மாதுச்யதே –தொடங்கி – தஸ்மா துச்யதே மஹா தேவ – பர்யந்தம் பஞ்சம கண்டம்
    ததே தத் ருத்ர சரிதம் தொடங்கி ஸத்ய மித் யுப நிஷத் -இத்யந்தம் ஷஷ்ட கண்டம்
    இவ்வர்த்தம் ஸர்வ வ்யாக்யாநாதி கரண -1-4-29- ஸ்ருத பிரகாசிகையில் ஸ்பஷ்டம்
    அஸ்மதீய தத்வ சேகரப்படிப் பணியில் விசதமாகக் காண்க

    அப்படியே பஞ்சம கண்டத்திலே -ததேதத் ருத்ர சரிதம் -ஏஷோ ஹ தேவ ப்ரதி ஸோநு ஸர்வா –பூர்வோ ஹி ஜாதஸ் ஸ உ கர்ப்பே அந்த -ஸ ஏவ ஜாதஸ்ஸ ஐநிஷ்யமாண -ப்ரத்யஞ்ஜ நாஸ்திஷ்டதி விஸ்வதோமுக —ததேதத் உபாஸி தவ்யம் -என்று தொடங்கி
    வாலாக்ர மாத்ரம் ஹ்ருதயஸ்ய மத்யே விஸ் வந்தேவம் ஜாத வேதம் வரேண்யம்-தாமத்மஸ்தம் யேநு பஸ்யந்தி தீராஸ் -தேஷாம் சாந்திஸ் ஸாஸ்வதீ நேதரேஷாம் என்று
    ஹ்ருதய மத்ய வர்த்தியான ருத்ரனுடைய உபாஸனத்தை மோக்ஷ பலமாகச் சொல்லி –
    வ்ரதம் ஏதத் பாஸு பதம் -என்று தொடங்கி
    அக்னிரித்யாதி நா பஸ்மம் க்ருஹீத்வா விம்ருஜ் யங்காநி ஸம்ஸ் ப்ருஸேத் –தஸ்மாத் வ்ரதமேதத் பாஸு பதம் -ப ஸு பாஸ விமோஷாயா – என்றதும் அங்கமாக சமந்த்ரகமான ஸர்வாங்க பஸ்ம ஸ்பர்ஸ லக்ஷணமான பாஸு பத வ்ரதமும் சொல்லப்பட்டது இறே

    இப்படி ருத்ரனுடைய சர்வஸ்மாத் பரத்வம் ப்ரத்யக்ஷ ஸ்ருதி சத ப்ரஸித்தமாயுள்ள விடத்தில் பவ்ருஷேய வசஸ் ஸுக்களான புராணாதிகள் தத் அநு குணமாக நயிப்பிக்க வேண்டுகையாலே அந்த ஸ்ருதிகளோடே அநு குணங்களான இதிஹாஸ புராணாதிகள் ப்ரமாணங்களாய் -அத்தை உப ப்ரும் ஹிக்கின்றவாகக் கடவன-
    அல்லாத ப்ராபத்யாதி ஸ்ம்ருதிகளும்- ஸ்ரீ விஷ்ணு புராணாதி புராணங்களும்- ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதத்தாலே- விரோதேத் வநபேஷம் ஸ்யாத் –பூ மீ -1-3-3-
    விருதே த்வ நபேஷம் ஸ்யாத் அஸதிஹ் யநுமாநம் – ப்ரத்யக்ஷ ஸ்ருதி விருத்தம் ஸ்ம்ருதி வசனமநபேஷ்யம் – அநாதரணீயம் -ஸ்ம்ருதேரபி ஸ்ருதி மூலத்வ அநு மாநாத் ஆதரணீயத்வம் இத்யத்ராஹ –அஸ்தி ஹ்யநுமாநமிதி அசதி -ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதே ஹி ஸ்ம்ருதி மூல ஸ்ருத் யநுமாநம் இத்யர்த்த –இதை ஸ்ருத பிரகாசிகாயாம் -2-1-1-அஸ்யார்த்த உக்த -என்கிற நியாயத்தாலே அநாதரணீ யங்களாகக் கடவன-

    மனுவும் -யா வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாஸ்ச காஸ்ச குத்ருஷ்டய –தாஸ் ஸர்வா நிஷ் பலா -ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா –மநு -1-2-95- என்று
    வேத விருத்த ஸ்ம்ருதியாதிகள் த்யாஜ்யமாகச் சொன்னான் இறே –


    ஆகையால் சிவனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று ஸோப ப்ரும்ஹண ஸ்ருதி சத ஸித்தம் என்றதாயிற்று –

    ————-

    சதுர் முக காரணத்வ வாத ஆரம்ப
    இவ் விடத்திலே சதுர் முகனான ஹிரண்ய கர்ப்பனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று சிலர் ப்ரத்ய வஸ்தானம் பண்ணினார்கள் எங்கனே என்னில்
    காரண வாக்ய கதங்களான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம -ஸப்தங்கள் சாதாரண ஸப்தங்களாகையாலே -சேதன விசேஷ பர்யவஸாநத்தை அபேக்ஷித்தால்
    ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத்–ருக் 8ம் அஷ்டகம் 7 அத்யாயம் -வர்க்க –10 ம் மண்டலம் -10 அநு –121 சூத்ரே 1ம் வாக்கியம் -என்று
    துல்ய ப்ரகரணஸ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்தாலே சொல்லப்பட்ட சதுர்முகனாகிற விசேஷத்திலே பர்யவஸியா நின்றது

    அப்படியே -அம்பஸ் ய பாரே -தைத்த -6-1-1- என்கிற அநுவாகத்திலே -யஸ்மின் நிதம் சஞ்ச விசைதி ஸர்வம் –யத ப்ரஸூதா ஜகத ப்ரஸூதீ –ந தஸ்யேஸே கஸ்ஸன– தஸ்ய நாம மஹத் யஸ — ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம் –ஹ்ருதா மநீஷா மநஸாபி க்லுப்தோ ய ஏநம் விதுரம்ரு தாஸ்தே பவந்தி –தைத்த -6-1-2-4-10-11- என்று ஜகத் காரணமாகவும் மோக்ஷ ப்ரதனாகவும் ஒரு புருஷனைச் சொல்லி பின்பு
    அத்ப்யஸ் ஸம் பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் –தைத்த -6-1-12- என்று
    முன்பு சொன்ன வாக்யத்தோடே ஏக வாக்கியமாக -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகத்தையும்
    ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே -என்கிற எட்டு ருக்கையும் உதா ஹரித்துக் கூட்டுகையாலே ஜகத் காரண பூதனாய் -அநந்ய ஈஸ்வரனாய் -மோக்ஷ ப்ரதனாக முன்பு சொல்லப்பட்ட புருஷன் ஹிரண்ய கர்ப்பன் என்று ஸ்பஷ்டமாயிற்று

    ஆகில் -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகமும் -பூர்வ உக்தத்தோடு ஏக வாக்யமாகையாலே -ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ் –என்கிற ஸ்ரீ யபதித்வ லிங்கம் முன்பு சொன்ன புருஷன் நாராயணன் என்று காட்டாதோ என்னில் -(ஸ்ருதி சொல்லே -அடுத்து லிங்கம்-அடையாளம் சொல் இல்லாமல் – -வாக்கியம் -பிரகரணம் -ஸ்தானம் -சமாக்கியம் -ஆறு படிகள் -முதலில் சொன்னதே பிரபலம்-கையால் எடுத்து ஆஹுதி கொடு -கரண்டியால் எடுத்து -கத்தியால் எடுத்து -மூன்றும் -அன்னம் நெய் வஸ்து சாமர்த்தியம் -சொல் இல்லாத இடத்தில் கொள்ளலாம்) லிங்கத்தில் காட்டில் ஸ்ருதி ப்ரபலை யாகையாலே ஸ்ரீயபதித்வ லிங்கத்தில் காட்டில் ஹிரண்ய கர்ப்ப ஸப்த ரூடையான ஸ்ருதி தானே விசேஷத்தை நிரபேஷமாகக் காட்டவற்று
    ஏக பத ஸாமர்த்யம் ஸ்ருதி வஸ்து ஸாமர்த்யம் லிங்கம் -என்று இறே மீமாம்சகர் நிஷ்கர்ஷித்தது
    ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் -தைத் -6-1- என்று ஜகத் ஸ்ரஷ்டாவை ஹிரண்ய கர்ப்ப பர்யாயமான தாத்ரு ஸப்தத்தாலே சொல்லிற்று இறே

    ப்ரஜாபதி ப்ரஜா அஸ்ருஜத -தைத்த ப்ரா -1-4-2- என்று முதலான காரண விஷய ஸ்ருதிகளும் ப்ரஜாபதியையே காரணமாகி சொல்லா நின்றன

    ப்ரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1-என்று சாந்தோக்ய -தஹர வித்யையிலே பிராஜா பத்ய ஸ்தாநத்தை முக்த ப்ராப்யமாகச் சொல்லிற்று இறே

    ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம ஸப்தங்கள்
    சிவ சம்பு மஹேஸ்வராதி ஸப்த வாஸ்யமான வஸ்து விசேஷத்திலே பர்யவசிக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது அன்றோ -என்னில்
    அது சொன்னாலும் விஷயமாக மாட்டாது – எங்கனே என்னில்
    ஸத் ப்ரஹ்ம ஆத்ம ஸப்தங்களோ பாதி ஸிவாதி சப்தங்களும் சாதாரணங்கள் ஆகையாலே
    அப்படி ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சாதாரணம் அல்ல

    ஸிவாதி ஸப்தம் சாதாரணமான படி எங்கனே என்னில்
    சிவமஸ்து ஸர்வ ஜகதாம்(
    உலகு எங்கும் மங்களம் ஏற்படட்டும்) -என்றும்
    ஸிவா நஸ் சந்து பந்தாந —
    சிவம் கர்மாஸ்து என்றும்
    சிவா ருதவஸ் சந்து -என்றும்
    சிவா நஸ் சந்தமா பவ -அதர்வ 7-17-68-என்றும்
    சிவஸ் சிவா நாம சிவோ அஸிவா நாம் -உத்யோக பர் -42-6- என்றும்
    யோவஸ் சிவ தமோ ரஸ -தைத் -6- என்றும்
    லோக வேதங்களிலே ஸூத்தி மங்கள்யா குண யோகத்தால் அநேக வஸ்துக்களிலே சிவ சப்தம் ப்ரயோகிக்கக் காணப் படா நின்றது –

    இப்படி சம்பு ஸப்தமும் –சம்புஸ் ஸ்வயம்பூர் த்ருஹிண -என்று ப்ரஹ்மாவின் விஷயமாகவும் காணப்படா நின்றது(காம க்ரோதங்களையும் துஷ்டர்களை அழிப்பதால்)

    மஹேஸ்வர ஸப்தமும் மஹான் ஈஸ்வர என்கிற அவயவ ஸக்தியாலே ராஜாதிகளிலேயும் பிரயோகிக்கப் படா நின்றது

    இனி ருத்ர ஸப்தமும் -ருத்ரோ வா ஏஷ யதக்னி-யஜுக்கே அஷ் -2-3-
    வீரான்மா நோ ருத்ர பம்மிதோவதீ ஹவிஷ் மந்தோ நமஸா விதேம தே -யஜுர் ஸம் -4-5-10-23- என்று க்ரவ்ர்யாதி குண யோகத்தாலே அக்னி யாதிகளிலும் பிரயோகம் காணப்படா நின்றது

    இப்படி ஹிரண்ய கர்ப்ப சப்தத்துக்கு சதுர்முகனை ஒழிய வேறு ஒருவர் இடத்தில் காணப்பட்டது இல்லை
    அப்போது இறே ஸிவாதி ஸப்தங்களோ பாதி ஸாதாரணம் என்னாலாவது

    ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் – கட உப -1-1-1- இத்யாதி வாக்கியங்கள் ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அநுவாதமாகையாலே விசேஷ உப ஸ்தாபகம் அன்று என்று முன்பே சொல்லப்பட்டது

    ஆகையாலே -ப்ருகுடீ குடிலாத் தஸ்ய லலாடாத் க்ரோத தீ பி தாத் ஸமுத் பன்னஸ் ததா ருத்ர –மத்யாஹ் நார்க்க சம ப்ரப –
    அர்த்த நாரீ தர வபு ப்ரஸண்டோதி சரிரவான் -ஸ்ரீ விஷ்ணு பு -1-7-12 என்கிறபடியே
    அர்த்த நாரீதர சரீரியான ருத்ரனுக்கும் உத்பாதகனான ஹிரண்ய கர்ப்பமே முமுஷு உபாஸ்யமான பர ப்ரஹ்மம் என்று வேதாந்தங்கள் ப்ரதிபாதிக்கின்றன என்னும் இடம் ஸித்தம்

    புராணங்களும் ப்ரஹ்ம பரத்வ ப்ரதி பாதக ஸ்ருதிகளை உப ப்ரும்ஹிக்கிறவையே பிரமாணங்கள் –அல்லாதவை ஸ்ருதி விரோதத்தாலே உபேஷணீ யங்கள்
    ஆகை இறே மநுவும் ததஸ் ஸ்வயம் பூர் பகவான் -11-6- என்று ஸ்வயம்பு சப்ததத்தாலே ஜகத் காரணத்தைச் சொல்லிற்று
    ஸ்வயம்பு ஸப்தம் -சதுர்முகனுக்கு பர்யாய பதம் என்னும் இடம் ப்ரஸித்தம்

    ஆகையாலே சதுர்முகனே பர ப்ரஹ்மமாக ஸ உப ப்ரும்ஹணமான வேதாந்தத்தில் ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்னும் இடம் ப்ரஸித்தம் என்றதாயிற்று –

    ——————-

    அத ஸித்தாந்த ஸ்தாபநம்-இவ் விடத்தில் பரிஹாரமான ஸித்தாந்தம்
    நாராயண ஸப்த வாஸ்யமான வஸ்துவே பர ப்ரஹ்மமாகக் கடவது
    காரண வாக்கியங்களில் இவனையே காரணமாகச் சொல்லுகையாலும்
    மோக்ஷ பிரகரணங்களில் இவனையே மோக்ஷ பிரதனாகவும் முக்த ப்ராப்யனாகவும் சொல்லுகையாலும்
    எங்கனே என்னில்

    காரண வாக்கியங்களில் சாதாரணமான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மாதி ஸப்தங்கள் விசேஷ பர்யவஸாந ஆகாங்ஷங்களாய்க் கொண்டு
    ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருதிவீ ந நக்ஷத்ராணி ந ஆபோ ந அக்னிர் ந சோமோ ந ஸூர்ய- ஸ ஏகாகீ ந ரமேத- தஸ்ய த்யாநாந்தஸ் தஸ்ய -ஏகா கந்யா (கந்யா-மநஸ் –ப்ரகாசகத்வாத் –கந தீப்தவ் இதி தாது -இதி ஸ்ருத ப்ர-4-4-17) தச இந்த்ரியாணி —-ஜாயந்தே –மஹா உப -1-1-1 இத்யாரப்ய
    அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -தா இமா ஆபாச தத் தேஜோ ஹிரண்மய மண்டலபவத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜயதே –1-2-1-
    அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -ஸ்வேதாத் புத்புதம பவத் புத் புதாத் த்ர்யஷ ஸூல பாணி புருஷோ ஜாயதே -1-3-1- என்று
    முதலான மஹா உபநிஷத்தாலே காட்டப்பட்ட நாராயணனாகிற விசேஷத்திலே பர்யவசியா நின்றன –

    இந்த வாக்யம் அநுவாத ரூபம் என்று முன்பே சொல்லப்பட்டதன்றோ என்னில் -அப்படி யன்று -பின்னை எங்கனே என்னில்
    ஸாஸ்த்ரமானது அப்ராப்த ப்ராபகமாய் இருக்கும்
    -(அறியாதது அறிவித்த அத்தா போல்)அதாவது இவ் விடத்தில் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் பிரமாணாந்தரங்களால்(பிரத்யஷத்தாலும் அனுமானத்தாலும்) ப்ராப்தம் அன்று -ஆகாஸ ப்ராணாதி களோபாதி ப்ரஸித்த வந் நிர்தேசம் அன்று –ப்ரஸித்த வந் நிர்தேசம் அநுவாத ஸூசகமன்றோ என்னில்
    ஸர்வாணி ஹா வா இமாநி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத் யந்தே –சாந்தோ -1-9-1-என்கிற இடத்தில் ஹ வை என்கிற ப்ரஸித்த வந் நிர்தேச மாத்ரம் -அநுவாத ஸூசகம் அன்று
    யதாக் நேயோஷ்டாகபால -யஜுர் -2-5-2-
    உபரி ஹி தேவேப்யோ தாரயதி-என்று முதலான வாக்யங்களிலும் -அப்போது அனுவாதத்வம் ப்ரசங்கிக்கும் –
    (ஸமித் -கரண்டி எங்கே பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஸ்ருதி-திருஷ்ட அக்னி ஹோத்த்ரம் -சரீரமே சாதனம் இவர்களுக்கு -பிரதிபத்தி கர்மா
    சமித்தை கரண்டிக்கு கீழே வைத்து செல்ல வேணும்
    தேவர்களுக்கு மேலே அன்றோ -ஹி -சமித்தைப் பிடிக்கிறான்
    விதி வாக்யமே இது தான் -அனுவாதம் அல்லவே)

    அவ் விடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் – வசநாநி த் வபூர்வத்வாத் –பூ மீ -3-5-21-என்றும்
    விதிஸ் து தாரணே அபூர்வத்வாத் –பூ மீ -3-4-15- என்றும் பூர்வ மீமாம்ஸா ஸூத்ரங்களாலே விதித்வம் ஸமர்த்திக்கையாலே ஸித்தம்

    ஸர்வாணி ஹ வா -இத்யாதி வாக்யங்களால் ஆகாஸ ப்ராணங்களுக்கு ப்ரமாணாந்தரங்களாலே -கார்யத்வ -ஹேயத்வங்கள் ஸம் பிரதிபன்னங்கள் ஆகையாலே இவற்றுக்கு
    பரம காரணத்வம் -ப்ராப்யத்வம் -தத் அநு குண கல்யாண குண யோகத்வம் இவற்றினுடைய ப்ரதிபாதனம் கூடாமையாலே -உபக்ரமத்திலே லோக கதியாக ப்ரதீதமான பரத்வமே -ஆகாஸ ப்ராணங்களாக பரத்வ விஸிஷ்ட லிங்கங்களாகையாலே -தத் தச் ஸப்த வாஸ்யங்களாக -சாரீரக மீமாம்ஸா ஸூத்ரங்களாலே -11-22-23-அநுவாதமாக ப்ரதிபாதிக்கப் பட்டதாயிற்று
    ப்ரஸித்த வந் நிர்தேசத்வம் அநுவாதத்துக்கு ஹேதுவாகச் சொல்லப் பட்டது என்றதாயிற்று

    ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -மஹா -1-1-1- என்கிற மஹா உப நிஷத்தில் -நாராயணனையே பரம காரணனாகச் சொல்லி -தத் வ்யதிரிக்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஸம் ப்ரதிபந்தங்களான கார்யாந்தரங்களோ பாதி நாராயணனாலே ஸ்ருஜ்யராகவும் -ஸம்ஹார்யராகவும் சொல்லுகையாலே -வேறு ஒரு வஸ்து காரணமாக விதிக்கப் படுகிறது என்கிற ப்ரசங்கமே இல்லை
    ப்ரஹ்மா விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே -அதர்வசிகா என்கிற இடத்தில் விஷ்ணு உத்பத்தி கார்யத்வா பாதகம் அன்று –
    உபேந்த்ர – ராம – கிருஷ்ணாத் அவதாரங்களோபாதி ஜகத் ரக்ஷண அர்த்தமாக ப்ரஹ்ம ஈஸ மத்ய கதமான அவதார விசேஷமாக பிரமாண ஸித்தம்
    ஆகையால் இவ் வாக்யத்துக்கு அப்ரமாணத்வம் இல்லை என்று இந்த வாக்யத்தில் சொல்லுகிற விசேஷமான நாராயணன் பக்கலிலே ஸதாதி ஸப்தங்களுக்கு பர்யவஸாநம் யுக்தம்
    இந்த வாக்யம் அநுவாதமானாலும் அநுவாத லிங்க ரஹிதமாக நாராயணத்வத்தைச் சொல்லுகிற ஸ்ருதி அர்த்தத்தை அநுவதிக்கக் குறையில்லை

    அதில் ஸூபால உப நிஷத்திலலே
    கிம் ததாஸீத் நைவேஹா மிஞ்ச நாக்ர ஆஸீத் -அமூல மநாதாரா இமா ப்ரஜா- ப்ரஜாயந்தே திவ்யோ தேவ ஏகோ நாராயண என்றும்
    புருஷ ஸூக்தத்திலும்
    தஸ்மாத் விராட ஜாயத – விராஜோ அதி பூருஷ -என்றும்
    இத்யாதியாலே நாராயண காரணத்வத்தைச் சொல்லி
    கட வல்ல்யாதிகளும் அவனுடைய மோக்ஷ பிரதத்வத்தையும் சொல்லுகையாலே
    ஜகத் காரணத்வமும் அர்த்தாத் ஸித்தமாய் இருக்கும் –

    யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -தைத் -1-1-
    அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -ததோ வை சத ஜாயத ததாத்மாநம் ஸ்வய மகுருத – தஸ்மாத் தத் ஸூஹ்ருதம் உச்யத இதி -யத்வை தத் ஸூஹ்ருதம் ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி –தைத் -7-1-
    இத்யாதி வாக்யங்களிலே ஜகத் காரணமே இறே -மோக்ஷ ப்ரதமாகவும் -முக்த ப்ராப்யமாகவும் ப்ரதிபாதிக்கப் படுகிறது

    ஆகையாலே மஹா உபநிஷத் வாக்கியம் அநுவாதமாம் இடத்திலும் -தேவதாந்தர காரணத்வத்தை அநுவதிக்கிற பிரசங்கமே இல்லை
    ப்ரஸித்த வந் நிர்தேசம் உண்டானாலும் -அபூர்வ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கும் இடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப்பட்டது

    இப்படி நாராயண உபநிஷத்திலும்
    அத புருஷோ ஹ வை நாராயணோ அகாமயத- ப்ரஜாஸ் ஸ்ருஜேயமிதி -அதாப ஸ சர்ஜ —நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –நாராயணாத் ருத்ரோ ஜாயதே –நாராயணாத் இந்த்ரோ ஜாயதே- நாராயணாத் ப்ரஜா ப்ரஜாயந்தே –நாராயணாத் த்வாதஸ ஆதித்யா ஏகாதஸ ருத்ரா வஸவ ப்ரஜாபத யஸ்ச ஸர்வே தேவாஸ் ஸமுத் பத்யந்தே -ஸர்வே லோகாஸ் ஸர்வாணி ச பூதாநி நாராயணா தேவ ஸமுத்பத்யந்தே -நாராயணே ப்ரலீ யந்தே -என்று நாராயணனையே ஸர்வ காரணமாகவும் சொல்லிற்று

    மஹா உப நிஷத்திலும்
    ஸர்வஸ் யாயதநம் ஹரிம் -என்று தொடங்கி
    யந் நாபி பத்மாத் அபவந் மஹாத்மா ப்ரஜாபதிர் விஸ்வஸ்ருக் விஸ்வ ரூப -தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நாந்ய பந்தா வித்யதே அயநாய -என்று
    ஸகல ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் காரணமாக- நாராயண பர்யாய பதமான ஹரி ஸப்தத்தாலே நாராயணனைச் சொல்லுகையாலே- காரண வாக்யங்கள் எல்லா வற்றிலும் நாராயணனே பரனாக ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்றதாயிற்று

    ஆகையாலே -ந சத் ந அசத் சாச் சிவ ஏவ கேவல -ஸ்வே -4-18- என்கிற இடத்தில் சிவ ஸப்தம் அர்வாசீந சிவனுக்கு வாசகம் அன்றியிலே– ஸூத்த மங்கள்ய குண யுக்தமான அநேக அர்த்தங்களிலும் ப்ரயோகம் காண்கையாலே- பவித்ராணாம் பவித்ரனாய் -மங்களா நாம் மங்களனான – ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -தைத் -6-11-3- என்று நாராயண அநுவாகத்திலே சொன்ன ஸாஸ்வத சிவனான நாராயணனுக்கே வாசகமாம் இத்தனை-
    இப்படி நாராயண சப்தத்துக்கு வ்யக்த்யந்தரத்தில் ப்ரயோகம் கண்டது இல்லை இறே-
    இப்படி பஹு உப நிஷத்திலும் -பஹு ஸ அப்யஸ்யமாந நாராயண ஸப்த வாஸ்யனே -பரம காரண தயா நிர்ணீதனாகையாலே -க்வாசித் கதமாய் வ்யக்த்யந்த்ர ப்ரயோகத்தாலே ஸாவகாஸமான சிவ ஸப்தம் நாராயண வாசகமாகை யாலே யுக்தம் என்றதாயிற்று

    இன்னமும் ஆகாஸ பிராணாதி களோபாதி
    ந ப்ரஹ்மா நேஸாந -மஹா உப -1-1-
    நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே- நாராயணாத் ருத்ரோ ஜாயதே -நாராயண உப-1
    த்ர்யக்ஷ ஸூல பாணி -புருஷோ ஜாயதே -மஹா உப -1-3-
    யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேஷ ந்ரும்ண
    இத்யாதிகளிலே ஸ்ருஷ்டி ஸம்ஹார கர்ம பாவத்தையும்
    அஸ்ய தேவஸ்ய மீடுஷோ வயோ விஷ்ணோர் அக்ஷஸ்ய அவப்ருதே ஹவிர்பிர் விதேஹி ருத்ரோ ருத்ரியம் மஹத்வம் -என்று பஹ்வ்ருச ஸ்ருதியிலே ருத்ரனுக்கு பகவத் ஸமாராதநத்தாலே ஸ்வ மஹிம ப்ராப்தியையும் சொல்லுகையாலே அர்வாசீந சிவனுக்கு பரம காரணத்வம் அநுப பன்னம் என்றதாயிற்று-

    இப்படியே காரண வாக்ய கதமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சதுர்முகனை பரம காரணமாக ப்ரதிபாதிக்க மாட்டாது -எங்கனே என்னில்
    கார்யதயா ஸம் பிரதி பன்னனான ஹிரண்ய கர்ப்பனுக்கு பரம காரணத்வம் கூடாமையாலே
    தா இமே ஆபஸ் தத் தேஜோ ஹிரண்ய மய மண்டமபவத் தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ ஜாயத -மஹா உப -1-2-
    ஆப ஏவ ஸ சர்ஜா தவ் தாஸு வீர்யமபாஸ்ருஜத் -ததண்டம பவத் ஹைமம் ஸஹஸ்ராம்ஸு சம ப்ரபம் -தஸ்மிந் ஜஜ்ஜெ ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதாமஹ -மநு -1-8-9- என்று
    ஸ்ருதி ஸ்ம்ருதி களிலே சொல்லுகிறபடியே
    ஹிரண்ய மஸ்ய கர்ப்போ பூத் -லிங்க பு -பூ 70-106—வாயு பு பூ 5-42- என்கிற
    வ்யுத்பத்தி ப்ரகாசத்தாலே ஹிரண்மயமான அண்டம் இவனுக்கு உத்பத்தி ஸ்தானம் என்று தோன்றுகையாலே இவனுடைய கார்யத்வம் ஸித்தம் என்றதாயிற்று-

    ஸ பிரஜாபதி ரேக புஷ்கரபர்ணே ஸமபவத்-ந்ரு தாபா வீரயோப -பூ 1-1-ப்ருஹ்ஜ்ஜா பால் யுப -1-1-
    விராஜோ அதி புருஷ -ருக் வேத -8-4-17-10-7
    ப்ரஹ்மாணம ஸ்ருஜத் ப்ரபு
    மாம் த்வம் பூர்வமஜீ ஜந – உத்தர ரா -104-4-
    தத் விஸ் ருஷ்டஸ் ஸ புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11-என்று
    முதலான ப்ரமாணங்களும் சதுர் முகனுடைய கார்யத்வ ப்ரதிபாதகங்களாய் இருக்கும்

    ஆகையால் -ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் -யஜுர் – ஸம் -4-2-34-என்கிற
    வாக்யத்துக்குப் பொருள் – ஹிரண்ய கர்ப்பன் ஸ்வ கார்யமான ஸ்ருஷ்டிக்கு பூர்வ பாவியாய் -ஸ்வ ஸ்ருஷ்டங்களான பூதங்களுக்கு பதியுமாய் இருக்கும் என்றதாயிற்று-ஜாத பதிர் ஆஸீத் என்கையாலே இவனுடைய பதித்வம் ப்ரதமஜத்வ ரூப நிபந்தன மாகையாலே ஒவ்பாதிகம் என்று தோற்றுகிறது

    (பிரஜாபதி -முதலில் பிறந்தவன் என்பதால் பெற்ற பெயர்)

    ஆகையாலே இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் பரம காரண விஷயமான போது -ஹித ரமணீய கர்ப்பத்வாத் ஹிரண்ய கர்ப்ப -என்று உபாய உபேய மான ஸ்வரூபத்தை யுடையவன் என்கிற அவயவ ஸக்தியாலே யாதல் – ஹிரண்ய கர்ப்ப சரீரியான பரமாத்மாவின் பக்கல் பர்யவசான வ்ருத்தியாலே யாதல் – ஸர்வ காரண பூதனான நாராயணனுக்கே வாசகமாகக் கடவது

    அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே(கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும்) -என்கிற அநுவாகத்தில் –
    யமந்தஸ் ஸமுத்ரே கவயோ வயந்தி –
    ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி-என்று
    ஸமுத்ர ஸாயித்வ-வித்யுத் வர்ண புருஷத்வங்களாகிற லிங்கங்களாலே- நாராயண ஸப்த வாஸ்யனான பரம புருஷனைச் சொல்லி
    ந தஸ்யேஸே கஸ்சந தஸ்ய நாம மஹத் யஸ –ய ஏவம் விதுரம்ருதாஸ்தே பவந்தி -என்று
    இவனுக்கே அநந்ய ஈஸ்வரத்வத்தையும் -மோக்ஷ ப்ரதத்வத்தையும் சொல்லி
    அத்ப்யஸ் சம்பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் -என்று
    பூர்வ உக்தத்தோடு ஏக வாக்கியமாக
    ஹிரண்ய கர்ப்ப -இத்யாதி ருகஷ்ட கத்தையும் உதா ஹரித்துச் சொல்லுகிற வாக்யமானது இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு நாராயண பரத்வத்தை அடைவிப்பியா நின்றது –

    இன்னமும் இந்த ஹிரண்ய கர்ப்ப வாக்யத்தோடே
    அத்ப்யஸ் ஸம்பூத -என்கிற அநுவாகத்துக்கும் ஏக வாக்யத்வம் உண்டாகையாலே
    ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் -என்று அங்குச் சொல்லுகிற ஸ்ரீயபதித்வத்தாலும்
    புருஷ ஸூக்த ப்ரகரணத்தவத்தாலும்
    நாராயண விஷயத்வம் நிஸ்சிதமாகையால் இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் நாராயண பரம் என்று அறியப்படும்
    ஸ்ரவ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் லிங்கமான ஸ்ரீ ய பதித்வத்தில் காட்டில் ப்ரபலமாய்க் கொன்டு சதுர் முக வாசகம் என்கிற விடம் அநுப பன்னம்
    காரண விஷய ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு கார்ய பூத சதுர் முக பரத்வம் கூடாமையாலே ஸ்ருதி அசித்தை யாகையாலும்
    (பொய்யாகி விடுமே )- ஏக பத ஸாமர்த்ய ரூபமான ப்ராமாண்யம் -அக்னிநா சிஞ்சேத் (அக்னியாலே நனை -காரணத்தைச் சொல்லி கார்யம் தண்ணீரால் நனை-தேவ லோக பசுக்கள் தலை கீழ் நடக்கும் அர்த்த வாதம் அங்கு )-இத்யாதி வாக்கியங்களில் போலே அநுப பன்ன அர்த்தங்களில் ஸம்பவியாமையாலும்- ஸ்ருதிக்கு ப்ராபல்யம் சொல்ல ஒண்ணாது –

    புருஷ ஸூக்தம் நாராயண பரம் என்னுமிடம் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட
    ஸஹஸ்ர ஸீர்க்ஷ –விஸ்வாக்ஷ –புருஷ இத்யாதி லக்ஷணமான புருஷ ஸூக்தாதி லஷிதமான –நாராயண அநு வாகாதி — என்று பாடமாகில் நலம் -தாள கோசங்களில் புருஷ ஸூக்தாதி -என்றே காண்கிறது
    1-ப்ரத்யபிஜ் ஞாநத்தாலே ஸித்தம் என்று லிங்க பூயஸ்த்வாத் -3-3-44- என்கிற வேதாந்த அதி கரணத்திலே ப்ரஸித்தம் இறே

    2-அதர்வண வேதத்தில் அஷ்டாதஸ மஹா சாந்தி ப்ரகரணத்திலே — வைஷ்ணவ்யாம் புருஷ ஸூக்த மீதம் -என்று
    வைஷ்ணவியான மஹா சாந்தியிலே புருஷ ஸூக்தத்தை விநியோகிக்கையாலே இதினுடைய விஷ்ணு விஷயத்வம் ப்ரதீத மாயிற்று
    3-இந்த வாக்யத்துக்கு உத்தர நாராயண அநு வாகத்திலே சொல்லப்பட்ட லஷ்மீ பதித்வ லிங்கத்தாலும்
    4-புருஷஸ்ய ஹரே ஸூக்தம் -என்கிற ஸ்ம்ருதி வசனத்தாலும்
    5-கல்ப ஸூத்ரங்களிலும் புருஷம் நாராயணம் -என்று (புருஷ இத் யுபஹிதாம் புருஷேண நாராயணனை யஜமான உப திஷ்டதே –ஸஹஸ்ர சீர்ஷா புருஷ இதி புருஷேண நாராயணேந பராஞ்சோநு ஸம் சந்தி -இதி போதாயந ஆபஸ்தம்ப கல்ப ஸூத்ரே ) என்று
    இரண்டு அநுவாகத்தையும் சொல்லுகையாலும் நாராயண பரம் என்னும் இடம் நிஸ்ஸயம்

    உக்த ந்யாயத்தாலே -தாதா யதா பூர்வ மகல்பயத் -தைத்த -6-1- என்கிற இடத்தில் தாத்ரு ஸப்தம் பரம காரணத்வத்தில் பகவத் விஷயமாகவும்
    அவாந்தர காரணத்வத்தில் சதுர் முக விஷயமாயும் இருக்கும்
    பிரஜாபதி ஸப்தமும் அப்படியே
    பிரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1- என்று
    முக்த ப்ராப்யத்வம் சொல்லுகிற விடம் சதுர் முக பரமன்று –
    கட வல்லி நாராயண அநுவாகம் தொடக்கமான அநேக உப நிஷத்துக்களிலே நாராயணனையே முக்த ப்ராப்யனாகச் சொல்லுகையாலும்
    பகவத் பர தயா நிர்ணீ தவ்யமான தஹர வித்யாகதமான இந்த வாக்யத்துக்கு தத் பரதை யுக்தமாகையாலும்
    ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -4-3-14-ப்ரஹ்ம ஸூத் -என்று
    சதுர்முகனுடைய முக்த ப்ராப்யத்வம் வேதாந்த விருத்தமாகையாலும்
    இந்த ப்ரஜாபதி ஸப்தம் அவயவ ஸக்தியாலே ஸர்வ சேஷியான நாராயணனையே சொல்லுகிறதாகக் கடவது-

    தத ஸ்வயம் பூர் பகவான் -மநு -1-6- என்கிற இடத்தில் ஸ்வயம்பு ஸப்தம் நாராயண பரமாகக் கடவது
    அநந்தரத்தில் -தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயணஸ் ஸ்ம்ருத -மநு -1-10- என்று அவனை நாராயணனாகச் சொல்லி
    தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -என்று அவனாலே ஸ்ருஷ்டனாக ப்ரஹ்மாவைச் சொல்லுகையாலே
    நாராயணனே பரம காரண பூதன் -சதுர் முகன் அல்லன் -என்றதாயிற்று

    நாராயண அநுவாகமானது – ஸஹஸ்ர ஸீர்க்ஷம் தேவம் -6-11-1- என்று தொடங்கி –
    ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ் ஸோக்ஷர பரம ஸ்வராட் -6-11-1-என்று முடிவாக ஸர்வ சாகைகளிலும் பரத்வ ப்ரதிபாதகமாக ப்ரஸித்தமான தேவ -சம்பு -அக்ஷர -ப்ரபு -பதி -சிவ -அச்யுத -ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு-ப்ரஜாபதி -ஸ்வயம் பூ -விஸ்வாத்ம -பரம் ப்ரஹ்ம -பர தத்வ -பரஞ்ஜ்யோதி -பரமாத்ம – ப்ரப்ருதிகளான ஸப்தங்களாலே நியாய நிரபேஷமாக நாராயண ஸாமாநாதி கரண்யத்தாலே கண்டோக்தி பண்ணி -பரத்வேந சங்க நீயரான பிரம்மா ஸிவர்களுக்கு தத் விபூதித் வத்தையும் சொல்லி நிகமித்தது

    இப்படி ஸர்வ வேதாந்த நிகமன பூமியான இந்த அநுவாகம் உபாஸந விசேஷ விதி பரமாத்ரமும் அன்று – ப்ரக்ருதமான தஹர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பர மாத்ரமும் அன்று -ஸர்வ பர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பரம் என்று வேதாந்தத்திலே –(ப்ரஹ்ம ஸூத் -3-3-44–சாரீரிக மீமாம்ஸாயாம் லிங்க பூயஸ்த்வாதி கரணே யமர்த்தஸ் ஸமர்த்தித )– நிர்ணயிக்கப் பட்டது-

    நாராயண பரம் ப்ரஹ்ம –நாராயண பரோ ஜ்யோதி –தைத் -6-11-4-3- என்கிற இடத்தில் பஞ்சமீ ஸமாஸ சங்கையாலே (நாராயணனைக் காட்டிலும் என்ற சங்கை)நாராயணாத் பரமாய் இருபத்தொரு வஸ்து என்று சொல்லுகிற விடம் அயுக்தம்
    1-தத்வம் நாராயண பர -இத்யாதிகளிலே வ்யஸ்தமான ப்ரயோகம் காண்கையாலும்
    2-அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித —
    ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்தர –இத்யாதிகளிலே நாராயணனே ஸர்வ ஸ்மாத் பரன் -அல்லாதார் அவனுக்கு விபூதி பூதர் என்று தோற்றுகையாலும்
    இவ் விடத்தில் ப்ரதமா விபக்தி -ஸூபாம் ஸூலுக் -பாணிநி ஸூ -7-11-39-இத்யாதி ஸூத்ரத்தாலே
    ( லுப்த்தை என்கிற விபாக நிர்தேசத்தாலே இந்த ஸம்சயத்தை நிவர்த்திப்பித்து ஸமாஸத்திலும் அப்படியாய்க் கிடக்கிறதாகக் கடவது ) லுப்த்தையாய்க் கிடக்கிறதாகக் கடவது-

    மஹா உப நிஷத்திலும் -நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பாரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர -என்று வ்யக்தமாகக் கிடக்கிறது –
    நிஷாத ஸ்தபதி ந்யாயத்தாலே பஞ்சமீ ஸமாஸத்தில் காட்டில் ஸாமாநாதி கரண்ய ஸமாஸம் யுக்தம்

    (நிஷாத ஸ்த பதீதி –ஸ்த பதிர் நிஷாதஸ் ஸ்யாத் ஸப்த ஸாமர்த்யாத் –இதி ஸூத்ரம் பூர்வ மீமாம்ஸா ஷஷ்டாத்யாய கதம் -6-1-51–ஏதயா நிஷாத ஸ்த பதிம் யாஜயேத் -இதி ஸ்ருதி தஸ்ய விஷய தத்ர நிஷாதாநாம் ஸ்தபதிரிதி விக்ரஹேண -நிஷாத அபின்ன ஸ்தபதி ப்ரதீயதே வா-சம்பந்தி ஸ்தபதி ப்ரதீயதே வா -இதி ஸம்ஸய ஷஷ்டீ தத் புருஷாஸ்ரயணே ஸ்த பதேஸ் சமர்த்தத்வாத் -வித்வத்வாத் -அக்னி மத்வாச்ச யஜ்ஞாத் யநுஷ்டானம் யுஜ்யத இதி பூர்வ பக்ஷ -ஸித்தாந்தஸ்து -ததாஸதி ஸ்ருதி கத நிஷாத பதஸ்ய லக்ஷணா பத்த்யா கர்ம தாரய பக்ஷ ஏவ ஆஸ்ரயணீய -இதி தாத்ருஸ ந்யாயேத் யர்த்த )

    (நிஷாத ஸ்த பதீதி -நிஷாதர்களுக்குத் தலைவன் என்றும் நிஷாதரனாகவும் தலைவனாகவும் என்றும்
    ராஜ சேவகன் -ராஜா சேவகன் -ராஜாவினுடைய சேவகன்-இருவரும் வேறுபட்டவர் அல்லர் அபேத அந்வயம்-
    தத் புருஷ ஸமாஸம் -ராஜா என்பதற்கு ராஜாவினுடையவனான -லக்ஷணையால் கொள்கிறோம்
    நேர் பொருள் சொல்ல முடியாமல் லக்ஷணையால் சொல்கிறோம்)

    ஆகையாலே இந்த அநுவாகத்தில் ஸர்வ வேதாந்தங்களிலும் 1-முமுஷுபாஸ்ய மாகவும் -2-முக்த ப்ராப்யமாகவும்- 3-ஜகத் காரணமாகவும்- 4-ஜகத் அந்தராத்மாவாகவும் ப்ரஸித்தமாய் -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மதத்வம் ஜ்யோதி-ஆதி ஸாமான்ய ஸப்தத்தாலே நிர் திஷ்டமான வஸ்துவை தத் ப்ரத்யபிஜ் ஞாபகமான அவ்வோ ஸப்தங்களாலே அநுவதித்து அந்த வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது என்றதாயிற்று –

    ஜூஹ்வா ஜூஹோதி என்று ஹோம சாதனதயா விஹிதமான ஜூஹு வுக்கு(மரப் பாத்திரம் -யாக அங்கம்) -யஸ்ய பர்ண மயீ ஜூஹுர் பவதி (அப் பாத்திரம் இலையாகவே இருக்கும்)-என்று ஜூஹு ஸப்தத்தாலே அநு வதித்து பர்ண மயத்வ விதாநம் பண்ணினாப் போலே

    இப்படி மைத்ராயணீய உப நிஷத்திலும்
    தத் ஸவிதுர் வரேண்யம் த்ருவம் அசலம் அம்ருதம் விஷ்ணு ஸம்ஜ்ஞம் ஸர்வ ஆதாரம் தாம -என்று
    த்ருவத்வ -அசலத்வ -அம்ருதத்வ -ஸர்வாதாரத்வ விசிஷ்டமாக ஸர்வ வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மம் விஷ்ணு ஸம்ஜ்ஞமாக விசேஷிக்கப் பட்டது

    கட வல்ல் யாதி யிலும் -ஸர்வே வேதா யத் பதமாம நந்தி -என்று தொடங்கி
    தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவீமி -என்று சொல்லி
    ஸோத் வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் –கட -1-3-9- என்று
    ஸர்வ வேதாந்த ப்ரதிபாத்யமாய் -முக்த ப்ராப்யமான வஸ்து வைஷ்ணவமான பதம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டது

    ஆகையால் நாராயணனே மோக்ஷ ப்ரதனும் -முக்த ப்ராப்யனும் -பர தத்வமும் என்று ஸர்வ வேதாந்த ஸித்தம் என்றதாயிற்று-

    இனி ஸ்வேதாஸ்வதர உப நிஷத்திலே -ததோ யதுத்தர தரம் –3-10-என்று தொடங்கி ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வம் சொல்லுகிறது என்கிற விடம் அநுப பன்னம்- உப க்ரமத்தோடு சேராமையாலே
    உபக்ரமத்தில் -வேதாஹம் ஏதம் புருஷம் மஹாந்தம் என்று மஹா புருஷனைச் சொல்லி –தமேவ விதித்வா அதி ம்ருத்யு மேதி நான்ய பந்தா வித்யதே அயநாய -என்று
    தத் வேதநமே மோக்ஷ ஹேது -வேறு ஓன்று அன்று -என்கிற அர்த்தத்தினுடைய ப்ரதிஜ்ஜை பண்ணப்பட்டது
    அநந்தரம் அத்தை உப பாதிக்கைக்காக -யஸ்மாத் பரம் நா பரமாஸ்தி கிஞ்சித் -யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்ஸித் -வ்ருஷ இவ ஸ்தப்தோதி விதிஷ்டத் யேக- தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -ஸ்வேதாஸ் –3-9- என்று
    யாவன் ஒருவனில் காட்டில் வேறு பரமாய் இருபத்தொரு வஸ்துவில்லை – மஹத் தரமாய் இருபத்தொரு வஸ்து இல்லை
    நிஸ் தரங்க ர்ணவோபமனான பரமபத நிலயனாலே இந்த விஸ்வம் வ்யாப்தமாய் இருக்கும் என்று கொண்டு-nஸர்வ ஸ்மாத் பரனான பரம புருஷனைச் சொல்லி
    ததோ யதுத்தர தரம் என்று அவனில் காட்டில் உத்க்ருஷ்டமாய் இருபத்தொரு வஸ்து உண்டு என்கை உபக்ரமத்தோடு சேராது

    ஸேயம் ஸ்ருதி பரமாத்ம பர தயா பார்க்கவஸ் ஸ்ம்ருத்யாதிஷு மஹர்ஷிபி ருப ப்ரும்ஹிதா -ததாஹி -யஸ்மாத் பர தரம் நாஸ்தி புருஷாத் பரமேஷ்டிந- ந ஜ்யா யோஸ்தி ந சாணீயா ஸ து நாராயணோ ஹரி -யேநேதா மகிலம் பூர்ணம் புருஷேண மஹவ்ஜசா -ஸ து நாராயணோ தேவ -இதீயம் வைதிகீ ஸ்ருதி இதி அத்ர வக்தவ்யம் ஸர்வமபி தத்வ ஸேகரடிப் பண்யாம் ப்ரபஞ்சிதம் தத்ர த்ரஷ்டவ்யமிதி உபக்ரம அநு குணமாக உப ஸம் ஹாரம் -என்று சொல்லுகை உபக்ரமாதி கரண ஸித்தம்

    (ததோ யதுத்தர தரம்-ஆகையால் என்றும் அதை விட என்றும் -இரண்டு
    அத்தைக் காட்டிலும் மிக உயர்ந்தது என்றும் அதனால் மிக உயர்ந்ததாக -என்றும் கொள்ளலாமே)

    (நின் புகழில் வைக்கும் சிந்தையிலும் இனிதோ நீ அருளும் வைகுந்தம் என்னும் வான்-
    கல்யாண குணங்களே அவனைக் காட்டிலும் அம்ருத மாயம்
    குணங்கள் மூலம் உபாசனம் ஸ்வரூப உபாசனத்தை விட உயர்ந்தது என்றதாயிற்று)


    (உபக்ரமாதி கரணமிதி -பூர்வ மீமாம்ஸா த்ருதீயாத்யாய ப்ரதமாதி கரணம் -3-3-1-கைஸ்சித் வேத தர்மதாதி கரணம் இத்யபி பட்யதே–தததிகரணே ஹி -ப்ரஜாபதிர் வா இதமக்ர ஆஸீத் -ஸ தபோதப்யதா–தஸ்மாத் தபஸ் தேபா நாத் த்ரயோ வேதா அஜாயந்த -அக்நிர் வாயுர் ஆதித்யஸ்தே தபோதப்யந்த -தேப் யஸ்தேபா நேபியஸ் த்ரயோ வேதா (தேவா பாட பேதம் சிறக்கும்)அஜா எந்த அக்னே ருக் வேதோ -வாயோர் யஜுர் வேத- ஆதித்யாத் சாம வேத இத் யுபக்ரம்ய ஸ்ரூயதே –தஸ்மா துச்சை ருசா க்ரியதே உபாம்ஸு யஜுஷா உச்சைஸ் ஸாம்நா இதி அத்ர ஸம்ஸய –(அநுபூத விரோதம் –பொருந்தாதது இன்னும் உருவாக வில்லை -உப ஸம்ஹாரத்தில் விரோதம் வந்தால் -உபக்ரமத்துக்குத் தக்கபடி மேல் கொண்டு அர்த்த சொல்லலாம்
    வேறே சாகைகளுக்கு விரோதம் வாராமல் இருந்தால் அப்படிக் கொள்ளலாம்
    இந்த்ரன் மாம் உபாஸ்வ உபக்ரமத்தில்
    மேல் பர ப்ரஹ்ம லக்ஷணம் சொல்லி அவனை உபாஸிக்கச் சொல்லும் பொழுது
    உபக்ரமத்தில் மாம் -என்னை அந்தராத்மாவாகக் கொண்ட நாராயணன் அர்த்தம் கொள்ளுகிறோம் -அன்றோ
    இங்கு ருக்கை சொல்லும் போது உச்ச சுவரத்தாலும் யஜுஸ் முனு முனு குரலிலும் சாமத்தை மீண்டும் உச்ச ஸ்வரம்
    அபிக்கு வேத சப்தம் இல்லாமல் –
    ருக் யஜுர் சாம மந்த்ரம் என்று கொள்ள வேண்டுமா
    ருக் வேதத்தை -யஜுர்வ்தாத்தை சாம வேதத்தைச் சொல்ல வேண்டுமே சங்கை
    ருக் வேதத்தில் மூன்று மந்திரங்களும் உண்டே -)தத்ர கிம் உச்சைஷ்ட் வாதய ருகாதி தர்மா உத வேத தர்மா இதி -உபக்ரமே வேத ஸப்த ஸ்ரவணாத்-உப ஸம்ஹாரே ச ருகாதி ஸப்த ஸ்ரவணாத்-வேத சப்தஸ்ய ஹி மந்த்ர ப்ராஹ்மண சமுதாயத்வா வச்சிந்நே ஸக்தி (வேதம் ரூக்கின் சமுதாயத்தைச் சொல்லும்)-ந து ஏகை கஸ்மின் மந்த்ர வாக்யே- ப்ராஹ்மண வாக்யே வா -ததா ஸதி மந்த்ராதி ரூப ஏக த்வி -த்ரி வாக்ய -அத்யயநேபி – வேதாநதீத்ய வேதவ் வா வேதம் வாபி யதாக்ரமம் -இதி ஸாஸ்த்ராநுஷ்டாந பிரசங்காத் –பாத வ்யவஸ்தாவத் மந்த்ரத்வா வச்சிந்நே ருக் சப்தஸ்ய மந்த்ரத்வ ஸமாநாதி கரண கீதித்வா வச்சிந்நே ஸாம சப்தஸ்ய ருக் ஸாம பின்ன மந்த்ரத்வாவச்சிந்நே ச யஜுஸ் சப்தஸ்ய ஸக்தி –-(ருக் ஸப்தம் -பாதம் ஒரே மாதிரி எழுத்து -கட்டளை இருக்கும்
    ஸாம சப்தம் -யஜுர் ஸப்தம் -இதுக்கு இந்த கட்டளைகள் இருக்காது)தேஷாம் ம்ருக் யத்ரார்த்த வஸேந பாத வ்யவஸ்தா –கீதுஷு ஸாமாக்யா ஸேஷி யஜுஸ் ஸப்த –இத்யாதி ஸூத்ர த்ரயேண ததா வ்யவஸ்தாபநாத் -அத்ர உபக்ரம உப ஸம்ஹார யோர் விரோதாத் த்வயோ ரவிரோதே வர்ணநீயே உப ஸம்ஹாரஸ்ய விதித்வேன் ப்ரபலத்வாத் தத் அநு ரோதேந உபக்ரமஸ்தவேத பதஸ்யாபி ததேகதே ஸ ருகாதி மந்த்ர பரத்வம் இதி பூர்வ பக்ஷே –உபக்ரமஸ் யாநுத் பூத விரோதித்வேந ப்ரபலத்வாத் உபக்ரமகத வேத பதாநுஸாரேந உப சம்ஹாரஸ் ருகாதி பதா நாமேவ ருக் வேதாதவ் லக்ஷணேதி ஸித்தாந்திதம் ஏதத் அதி கரணார்த்தம் ஸங்க்ரஹேண பிரதிபாதயாத்தி
    எங்கனே என்னில்
    (லக்ஷனையால் ருக் மந்த்ரம் சொல்லாமல் வேதத்தைச் சொல்லுகிறது என்றே கொள்ள வேண்டு இது ஸித்தாந்தம்)

    உபக்ரமாதி கரணத்தில் உப ஸம்ஹாரத்தில் காட்டில் உபக்ரமம் ப்ரபலமாகச் சொல்லப்பட்டது இறே -எங்கனே என்னில்
    உச்சை ருசா க்ரியதே -உச்சைஸ் ஸாம்நா உபாம்ஸூ யஜுஷா -என்று
    உச்சைஷ்ட் வாதியானது ருகாதியான மந்த்ர மாத்ரத்துக்குத் தர்மமோ -தத் தன் மந்த்ர பிராயமான வேத தர்மமோ என்று சம்சயித்து- மந்திரத்துக்கு வாசகமான ருகாதி ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே மந்த்ர தர்மத்வத்தைச் சொல்லி -உபக்ரம வேத ஸப்தம் -வேதயதீதி வேத -என்கிற வ்யுத்பத்தியால் அநுஷ்டே யார்த்த ப்ரகாசகமாய்க் கொண்டு மந்த்ர பரமாகக் கடவது –
    வேத ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே வேத தர்மமாகச் சொல்லில் ருகாதி பதங்களுக்கு லாஷணிகத்வம் ப்ரசங்கிக்கும்

    ஆகையாலே–உச்சைஷ்ட்வாதி மந்த்ர மாத்ர தர்மம் என்று பூர்வ பக்ஷமாக -மந்த்ர ப்ராஹ்மண ஸமுதாய ரூபமான வேத தர்மத்வமே உச்சைஷ்ட்வாதிகளுக்கு உபக்ரம ஸ்வாரஸ் யத்தாலே யுக்தம் -எங்கனே என்னில்
    உபக்ரமமானது அநுத் பூத விரோதியாகையாலே சரம பாவியான உப சம்ஹாரத்தில் காட்டில் பலவான் -யாதொருபடி அக்னியின் அனுஷ்ணத்வ ப்ரதிபாதகமான அநு மானத்தில் காட்டில் அக்னியினுடைய ஒவ்ஷ்ண்ய க்ராஹியான ப்ரத்யக்ஷம் பலவத்து -யாதொரு படி அநுத் பூத விரோதியான ஸ்ருத் யாதிகளில் பூர்வ பூர்வங்கள் உத்தர உத்தரங்களில் காட்டில் பிரபலங்கள்
    (ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தாந ஸமாக்யாநாம் சமவாயே பாரதவ்ர் பல்யம் அர்த்த விப்ரகர்ஷாத் -இதி பூர்வ மீமாம்ஸா ஸூத்ரே -3-3-14- அயமர்த்தோ த்ரஷ்டவ்ய)
    அப்படியே பலவானான உபக்ரமத்தினுடைய ஸ்வாரஸ்ய அநு குணமாக துர் பலமான உப ஸம்ஹாரத்தினுடைய பாக்தத்வம் யுக்தம் -என்று கொண்டு உச்சைஷ்ட் வாதிகள் வேத தர்மங்கள் என்று ஸித்தாந்திக்கப் பட்டது

    ஆகையால் உபக்ரம விரோதம் உண்டாகையாலே
    ததோ யதுத் தர தரம் -என்கிற உப ஸம்ஹார வாக்யமானது உபக்ரம கதனான பரம புருஷனை ஒழிய வஸ்த்வந்தரத்தை ப்ரதிபாதிக்க மாட்டாது
    கோபலீ வர்த்த ந்யாயத்தாலே ஸாமான்ய ஸப்தத்துக்கு விசேஷ ஸந்நிதியில் அர்த்த ஸங்கோசம் உண்டாகையாலே (
    கோ ஆநய பலி ஆநய -பெண் மாடு காளை மாவு இரண்டுக்கும் கோ -பின் சொல்லியதால் பெண் மாட்டையே குறிக்கும் -அர்த்த சங்கோசம் உளது கோ -இல்லாதது பலீ சப்தம்)இவ் விடத்தில்
    ததோ யதுத் தர தரம் —தஸ்மாத் ஸர்வ கத தஸ் ஸிவ –ஸ்வேதாஸ் -3-11- என்கிற விசேஷ ஸந்நிதியில்
    நான்ய பந்தா வித்யதே அயனாய யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -ஸ்வேதாஸ் -3-9- என்று ஸர்வ விஷயமாகத் தோற்றுகிற ஸாமான்யத்துக்கு- அர்த்த ஸங்கோசம் பிறந்து -பரம புருஷனைக் காட்டில் வ்யதிரிக்தனைச் சொன்னாலோ என்னில்
    அது கூடாது –
    பதாந்தரத்தினுடைய வையர்த்த பரிஹார அர்த்தமாக பதாந்தரத்துக்கு அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டா
    ததோ யதுத் தர தரம் என்கிறதுக்கு வையர்த்ய ப்ரசங்கமும் இல்லை -கீழ் ப்ரதிஜ்ஞாதமான அர்த்தத்தை தத என்று ஸ ஹேதுகமாக நிகமிக்கையாலே
    (ஆகையால் -ஹேதுக்களைச் சொல்லி கல்யாண குணங்களையே உபாஸிக்கச் சொல்லிற்று என்று சித்தாந்தம்)

    இன்னமும் -ஸர்வ கத ஸிவ என்று சொல்லி
    மஹாந் ப்ரபுர்வை புருஷஸ் ஸத்வஸ்யைக்ஷ ப்ரவர்த்தக -ஸ்வே -3-12- என்று மோக்ஷ உப யோகியான ஸத்வத்துக்கு ப்ரவர்த்தகமான மஹா புருஷனை ப்ரத்யபிஜ்ஜை பண்ணி வைக்கிறது
    (ஏஷ சாராய சப்தம் முன்பு சொன்ன சிவ -சப்தத்தைக் குறிக்கும்
    அது -என்று சொல்லி ஒன்றைக் காட்டி-அவரோ நீர் –அவர் ஸ்ம்ருதி
    நீர் ப்ரத்யக்ஷம்
    அவரோ நீர் ப்ரத்யபிஜ்ஜை)

    இன்னமும் -அதயோ ஹ வை கலு வாஸ்ய ராஜ ஸாம்ஸ்ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ப்ரஹ்மா -அதயோ ஹ வை கலு வாஸ்ய ஸாத்விகாம்ஸஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் விஷ்ணு -அதயோ ஹ வை கலு வாஸ்ய தாமஸ ஆம்ஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ருத்ர -4 வது ப்ரபாடக கண்டம் –என்று மைத்ராயணீய உப நிஷத்திலும்
    ஸத்வ ப்ரவர்த்தகம் விஷ்ணும் – ஸர்வ பூத குஹாஸயம் என்று ஸ்ம்ருதியிலும் விஷ்ணுவுக்கு ஸத்வ ப்ரவர்த்தகத்வம் ஓதப்படா நின்றது

    இவ் விடத்தில்
    ஸர்வாநந ஸிரோ க்ரீவஸ் -ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச -பகவான் தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ -ஸ்வே -3-11 என்கிற சப்தங்கள்
    புருஷ ஸூக்த நாராயண அநு வாக்கங்களில் பரம புருஷனுக்கு அசாதாரணமான- ஸஹஸ்ர ஸீர்ஷத்வ –ஸர்வ அந்தராத்மத்வ – ஸர்வ வ்யாபித்வ -ஸாஸ்வத ஸூத்தி மாங்கள்யாதி குண யோகங்களை ப்ரத்யபிஜ்ஜை பண்ணா நின்றது
    ஆகையால் இந்த ப்ரகரணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப் படுகிறான் -என்றதாயிற்று-
    (அந்தராத்மா =உருவத்துடன் -அந்தர்யாமீ -நியமிப்பவன்-ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -நாராராயணனே)

    இன்னமும் -சாந்தோக்ய தஹர வித்யையிலே –
    அத யதித மஸ்மிந் ப்ரஹ்ம புரே –8-1-1- இத்யாதியாலே நாம ரூப நிர்வோட் ருத்வ விசேஷிதமான ஆகாஸ ஸப்தத்தாலே பரம புருஷனைச் சொல்லி
    தஸ்மிந் யதந்த –8-1-2- என்று
    தத் அந்தர் வர்த்தியானதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லப்படுகிறது என்றதுவும்
    அஸ்ரோத்ரியனுடைய ஆசா மாத்ர விலஸிதம் –
    (ஸாஸ்த்ரம் தெரியாதவன் ஆசைக்காகப் பேசுவது போல்)

    அந்த ஸ்ருதி தானே இத்தை ப்ரஸந பூர்வகமாக பரிஹரிக்கையாலே
    தஹரோஸ்மிந் நந்தர ஆகாஸஸ் -தஸ்மிந் யத் அந்தஸ் -ததன்வேஷ்டவ்யம் -தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று சொல்லி
    கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ் டவ்யம் -யத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-2-என்று சோத்யம் பண்ணி
    தத் பரிஜிஹீர் ஷையாலே
    யாவான்வாய மாகாஸஸ் தாவாநேஷோந்தர் ஹ்ருதய ஆகாஸ உபே அஸ்மின் த்யாவா ப்ருதிவீ அந்தரேவ ஸமாஹிதே -உபாவக்நிஸ் ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம ஸாவுபவ் -வித்யுந் நக்ஷத்ராணி -யச்சாந்யே ஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் ததஸ்மிந் ஸமாஹிதம்—–நாஸ்ய ஜரயை தஜ் ஜீர்யதி -ந வதே நாஸ்ய-ஹந்யதே ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் -சாந்தோக் -8–1-3-5- என்று கொண்டு ப்ராக்ருதமான தஹர ஆகாஸத்துக்கு அதி மஹத்த்வ ஸர்வ ஆதாரதவாதியைச் சொல்லி
    அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா -8-1-5- என்று
    தத் அந்தர் வர்த்திகளாய்க் கொண்டு உபாஸ்யங்களாகச் சொல்லப்பட்டவை காமங்கள் (காமங்கள் -கல்யாண குணங்கள்
    )என்று பரிக்ரஹித்து
    மேல் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விஸோகோ விஜிகத்ஸோ அபிபாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப –8-1-5- என்று
    தகர ஆகாஸ நிர் திஷ்ட பரமாத்மா -தத் அந்தர் வர்த்தியாய் இருக்கிறது
    காம் யந்த இதி காமா -(
    விரும்பப் படுபவையே குணங்கள் காமங்கள்)என்று கல்யாண குணங்களாய்
    அபஹத பாப்மத்வாதியான குண அஷ்டகம் என்று சொல்லி
    ய இஹாத்மா நமநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ஸ்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –8-1-6–என்று
    ஏதத் குண அஷ்டக விஸிஷ்டனான பரமாத்மாவினுடைய உபாஸனமும்- தத் பலமும் சொல்லப்பட்டது

    இது வாக்ய காரராலேயும்
    தஸ்மிந் யத் அந்தரிதி காம வ்யபதேஸ -என்று சொல்லப்படுகையாலே
    தஸ்மிந் யத் அந்த -என்றது
    கல்யாண குண ஜாதம் என்றதாயிற்று

    தைத்ரீயத்திலே
    தஹ்ரம் விபாப்மம் -6-10-23- இத்யாதியாலே
    பரம புருஷாந்தர வர்த்தியாய் இருபதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லி
    அதினுடைய விசேஷ ஜிஜ்ஞாஸை உண்டாய் உள்ள வளவில்
    ய பரஸ் ஸ மஹேஸ்வர -6-10–24- என்று
    விசேஷ நிர்ணயம் பண்ணப்படுகிறது என்றதும் இத்தாலே ப்ரத்யுக்தம்

    (ஸர்வ வேதாந்த படித தஹர வித்யாயா ஐக்யம் சாரீரக மீமாம்ஸா யாம்
    காமாதீ தரத்ர தத்ர சாயதநாதிப்ய -3-3-38- இத்யஸ்மிந் நதி கரணே ஸமர்த்திதம் –
    ததபி ப்ரேத்ய –இத்தாலே ப்ரத்யுக்தம் இத்யுக்தம் )

    யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தா -வேதாந்ததே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய- ய பரஸ்ச மஹேஸ்வர -6-10-24 -என்றது
    வேதத்துக்கு முதலாக யாதொரு ப்ரணவ ரூப ஸ்வரூபமானது சொல்லப்பட்டது -அது வேதாந்தத்திலும் உத் கீத ப்ரகரணங்களிலே சொல்லப்பட்டது
    அந்த ஸ்வரத்தினுடைய முதலில் எல்லா வாசகங்களுக்கும் ப்ரக்ருதி பூதமான ஆகாரத்துக்கு வாஸ்யனானவன் யாவன் ஒருவன் அவன் மஹேஸ்வரன்
    அகாரோ விஷ்ணு வாசக –
    அ இதி ப்ரஹ்ம -ருக் வேத ஆர
    அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதம அபிதாநம்
    அக்ஷராணாம் அகாரோஸ்மி -கீதா -10-என்று
    அகார வாஸ்யனான நாராயணனே மஹேஸ்வர ஸப்த வாஸ்யன் என்றதாயிற்று

    (அஸ்யா ஸ்ருதே பாத்மோத்தரே-அ -226-ஸ்ரீமன் நாராயண பரத்வேந உப ப்ரும்ஹிதத்வாத் ததபி ப்ரேத்ய–(அகார வாஸ்யனான –என்றதாயிற்று –இத்யநுக்ருஹீதம்)

    ததாஹி பார்வதீம் ப்ரதி ஸர்வஜ்ஜோ ருத்ர –
    யோ வேதாதவ் —ஸ மஹேஸ்வர -யோஸா வகார வாஸ்யோவை விஷ்ணுர் நாராயணோ ஹரி -ஸ ஏவ புருஷோ நித்ய பரமாத்மா மஹேஸ்வர -தஸ்யாம்ஸ பூதம் ஐஸ்வர்யம் யஸ்மின் கஸ்மின் ஹி வர்த்ததே -தஸ்மிந் ஈஸ்வர ஸப்தாதி ப்ரோச்யதே முநிபிஸ் ததா–நிருபாதீஸ் வரத்வம் து வாஸூ தேவ ப்ரதிஷ்டிதம் -ஆத்மேஸ்வர இதி ப்ரோக்தோ வேதவாதைஸ் ஸநாதநை –தஸ்மான் மஹேஸ்வரத்வம் து வாஸூ தேவே ப்ரதிஷ்டிதம்-அசவ் த்ரிபாத் விபூதேஸ் து லீலாயா அபி சேஸ்வர விபூதி த்வயம் ஐஸ்வர்யம்- தஸ்யைவ சகலாத்மந ஸ்ரீ பூ நீளா பதிர்யோசவ் ஈஸ்வரஸ் ஸ உதாஹ்ருத–தஸ்மான் மஹேஸ்வரத் வந்து வாஸூதேவே ப்ரதிஷ்டிதம்-இதி )
    மஹேஸ்வர ஸப்தமும் அவயவ வ்யுத்பத்தியாலே ராஜாதிகளிலும் ப்ரஸித்தம் என்று முன்பே சொன்னோம்

    அதர்வ சிகையிலே
    காரணம் து த்யேய –இத்யாதியாலே
    பரம புருஷ அந்தர் வர்த்தியாய் -சம்பு ஸிவாதி நாமகனான ருத்ரனுக்கு உபாஸ்யத்வம் தோன்றுகிறது என்றதுவும் யுக்த ரீதியாலே நிரஸ்தம்

    இந்த ஆகாஸ ஸப்தம் ஹ்ருதய ஆகாஸ வாஸி யாகையாலே பரம புருஷ பரமாக மாட்டாமையாலும் -தத் அந்தர் வர்த்திக்கு காரணத்வாதியான பகவத் ஸாதாரண குணங்களைக் கொள்ளுகையாலும்-
    சம்பு ஸிவாதி ஸப்தங்களுக்கு ருத்ரனை ஒழியவும் லோக வேதங்களிலே ப்ரஸித்தி உண்டாகையாலும்
    விஸ்வாக்ஷம் விஸ்வ ஸம்புவம் –ஸாஸ்வதம் சிவம் அச் யுதம் –தைத்-6-11-1-3 என்று
    நாராயணன் பக்கலிலும் பிரயோகம் காண்கையாலும் இவ் விடத்தில் நாராயணனே த்யேயன் என்றதாயிற்று

    இன்னமும்
    ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே –அதர்வ ஸிகா -என்கிற இடமும்
    யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -ஸ்வே -6-18-
    ஸ ப்ரஜாபதிரேக புஷ்கர பர்ணே சம பவத் – ந்ருஸிம்ஹதாபபூ 1-1
    யன் நாபி பத்மாத் பவன் மஹாத்மா ப்ரஜாபதி
    தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ அஜாயதே -மஹா உப -1-2-
    யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேக்ஷ ந்ரும்ண
    அதவா இதம் தர்ஹி ப்ரஜாபதவ் ஹர ஆஸீத்
    த்ர்யக்ஷ ஸூல பாணி புருஷ ஜாயதே -மஹா உப -1-3-
    விரூபாஷாய -ப்ரஹ்மண புத்ராய- ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
    தத் விஸ்ருஷ்டஸ் -ஸ புருஷ லோகே ப்ரஹமேதி கீர்த்யதே –தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதாமஹ -மனு-1-11-9-
    ருத்ர சர்க்கம் ப்ரவஹ்யாமி -ஸ்ரீ விஷ்ணு பு -1-8-2-
    ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் ப்ரஸாத க்ரோதஜவ் ஹரே –ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகவ் -மோக்ஷ பர் -389-18
    க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம் –ஆவான் தவாங்கே ஸம் பூதவ் தஸ்மாத் கேஸவ நாமவான் -ஹரி வம்சே –131-48
    ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத் அந்தர் வ்யவஸ்திதா -ப்ராணிந கர்ம ஜெனித ஸம்ஸார வச வர்த்தி ந -வி த 104-23-இத்யாதிகளாலே
    ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு கர்ம நிமித்த ஸ்ருஜ்யத்வ லக்ஷணையான உத்பத்தி ப்ரஸித்தியாலும்

    ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந -யஜுர் தாய் ப்ரா -3-6–1-3
    அஜாயமாநோ பஹுதா விஜாயதே -முண்டக -3

    இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-84
    ஸம்பவாமி யுகே யுகே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -ஏவம் யோ வேத்தி தத்வத -ஸ்ரீ கீதை -4-என்று
    ஜகத் உபகார அர்த்தமாக பரம புருஷனுக்கு இச்சா ஜென்மம் உண்டாகையாலும்
    (பல பிறப்பால் ஒளி வரும் ஜென்மம் இவனுக்கே)

    ஸாஷான் நாராயணோ தேவ ஸர்வ பூதேஸ்வரேஸ்வர –ரஷார்த்தம் ஸர்வ லோகாநாம் விஷ்ணுத்வம் உப ஜிக்மிவான் -உத்தர ராமாயணே -என்கையாலும்
    உபேந்திர ராம கிருஷ்ணாத் யவதாரங்கள் போலே ப்ரஹ்ம ருத்ர மத்ய வர்த்தியான விஷ்ணுத்வம் உண்டாகையாலும் யுக்தம் –

    இவ் விடத்தில் த்யேயத்துக்கு விரோதமான வாக்யத்திலே இது சொன்னது -த்யேயத்வ உப யோகி ஸுலப்ய ப்ரதர்சந அர்த்தமாகையாலே

    இன்னமும்
    ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத்ரி -ஆ -1-1- என்கிற இடத்தில்
    பரம வ்யோம ஸப்தம் பரம பதத்தைக் காட்டுகிறதன்று என்கிற இடம் அசாரம்
    (பரமபதத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்ட நாதனை விட-தனது ஹிருதய வ்யோமம் -அடியார் உள்ளமே அவனுக்கு பரம வ்யோமம் –இங்கேயே இருந்து அனுபவித்து ஆனந்தம் -ஆனால் இது அசாரம் -1000 தூண்கள் உள்ள ஆயிரம் கால் மண்டபத்துக்குள் இத்யாதிகள்-)


    ராஜாநாவநபி த்ருஹவ் த்ருவே ஸதஸ் யுத்தமே ஸஹஸ்ரஸ் தூணே ஆஸாதே -என்றும்
    சாமான்ய பி யுக்தே தூரே -அந்தே த்ருவே பதே தஸ்தது ஜாக ரூகே -என்றும்
    ததஷரே பரமே வ்யோமன் -தைத் -6-1-2-
    யோ அஸ்யாத் யக்ஷ பரமே வ்யோமன் -யஜுர் அஷ் -2-8-2-
    நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் தைத் -6-1-1-
    தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
    ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ் கலம் – தச் சுக்லம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்ம வைத்தோ விது -முண்டக -32-9–என்றும்
    அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந –ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை – பாரதம் அர -163-19-என்றும்
    ஏகாந்தி நஸ் ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகி நோ ஹி யே -தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் -யத்வை பஸ்யந்தி ஸூரய –ஸ்ரீ விஷ்ணு பு -1-6-39-என்றும்
    அண்ட கோஸாத் ஸாவரணாத் அமுஷ்மாத் பரத ப்ரபோ -ஸ்தி தோஹம் பரமே வ்யோம்நீ அப்ராக்ருத சரீரவான் -என்றும்
    இப்படி பஹு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண சத ப்ரமாணத்தாலே ஸித்த பர லோகத்தைச் சொல்லுகிறதாகையாலே-

    இன்னமும் அதர்வ சிரஸ்ஸிலே பிரதம கண்டத்தில் ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தை கோஷித்ததும்
    ஸோந்தரா தந்தரம் ப்ராவிஸத் –அதர்வ -1–என்கிற வாக்யத்தாலே
    பரமாத்மா அநு ப்ரவேசத்தாலே என்றதாயிற்று -எங்கனே என்னில்
    கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் ப்ரதர்தந வித்யையிலே –
    ப்ரதர்த நோ ஹ வை தைவோதா ஸிரிந்த்ரஸ்ய ப்ரியம் தாமோபஜகாம -3-1- என்று கொண்டு
    த்வமேவ மே வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே –3-1- என்று
    மோக்ஷ உபாயத்தை ப்ரஸ்னம் பண்ணின ப்ரதர்சனனுக்கு
    மாமேவ விஜாநீஹி –ப்ராணோஸ்மி- ப்ரஞ்ஞாத்மா- தம் மாம் ஆயுர் அம்ருதமித்
    யுபாஸ்வ –3-1-2- என்று
    இந்த்ரன் தன் அந்தராத்மாவினுடைய உபாஸநம் மோக்ஷ சாதனம் என்று உபதேஸித்தான்-

    இன்னமும் -ஸ்ருத்யந்தரத்திலே
    தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாம தேவ ப்ரதி பேதே –அஹம் மநு ரபவம் -ஸூர்யஸ் ச
    -அஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர -இத்யாதியாலே
    ப்ரஹ்மத்துக்கு ஸர்வ அந்தராத்மத்தையையும்-ஸர்வ ஸப்தங்களுக்கும் தத் பர்யவஸாயி த்வத்தையும் சொல்லி
    யஸ் யாத்மா ஸரீரம் –யஸ்ய ப்ருதிவீ சரீரம்–ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும்
    ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –என்று தொடங்கி
    அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூப வ்யாகரவாணி -என்றும்
    ஸோகாமயத பஹுஸ்யாம் –என்று தொடங்கி தத் அநு ப்ரவஸ்ய ஸச் ச த்யச்சா பவத் –ப்ரும்ஹ உப -3-4-10- இத்யாதி
    ஸ்ருதி ஸித்தமான ஸமாதியாலே ஸாஷாத் கரித்த வாம தேவன் -அஹம் -ஸப்தத்தாலே தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவைச் சொல்லி
    தத் ஸாமா நாதி கரண்யத்தாலே மனுஷ்யாதிகளையும் வ்யபதேஸித்தான் இறே
    (ஐக்யம் -அனைவருக்குள்ளும் ப்ரஹ்மமே சொல்வதில் அல் வழக்கு ஒன்றும் இல்லை -ஏக -நாராயணன் -ஒருவன்
    அங்கு சென்று அவனுடன் ஒன்றும் என்று சொல்லும் அல்லலை ஒழித்தான் ராமானுஜன்)


    ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானும்
    ஸர்வ கத்வாத் -அநந்தஸ்ய ஸ ஏவாஹ மவஸ்தி த –மத்தஸ் ஸர்வம் அஹம் சர்வம் மயி ஸர்வம் ஸநாதநே –ஸ்ரீ விஷ்ணு பு -1-19–85-என்றான் இறே

    இது எல்லாம் –
    ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா து உபதேஸோ வாம தேவ வத் -ப்ரஹ்ம ஸூ -1-1-30- என்று ஸூத்ர காரராலே நிர்ணயிக்கப் பட்டது இறே

    (கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்)

    ஸ்ரீ மஹா பாரதத்திலும்
    விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவ்ஸ்ய மி தேஜஸ –தஸ்மாத் தநுர் ஜ்யா ஸம் ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர -என்றும்
    பின்னும் அந்த மஹா பாரதத்திலே ப்ரஹ்ம ருத்ர ஸம்வாதத்திலே
    த்வாந்தராத்மா -மம ச யே ச ந்யே தேஹி ஸம்ஜ்ஞக –ஸர்வேஷாம் ஸாஷி பூதோசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் – மோக்ஷ -352-4 என்றும் சொல்லுகிற ப்ரமாணங்களாலே விஷ்ணுவுக்கு ருத்ராந்தராத்மத்வம் ஸூ ப்ரஸித்தம்

    இனி த்விதீய கண்டத்தில்
    யோவை ருத்ரஸ் ஸ பகவான் -இத்யாதி வசனமும் ருத்ர வாக்ய அநு வாதமாகையாலும்
    தத்ர பூஜ்ய பதார்த்த உக்தி பரிபாஷா ஸமன்வித –சப்தோயம் நோபசாரேண ஹ்யன்யத்ர ஹ்யுப சாரத –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-77 -என்று
    பரம புருஷ அசாதாரணமான பகவச் ஸப்தத்தாலும் ருத்ர ஐஸ்வர்ய பரம் அன்று என்று ஸித்தம்-

    மூன்று நாலாம் கண்டங்களிலும்
    ஸ ஓங்காராய ஓங்காரஸ் ஸ ப்ரணவோ யஸ் ப்ரணவ -என்று
    ஓங்காராதி மஹா தேவ அந்தமான் ப்ரணவ நாம நிர்தேச தந் நிர்வசன பரதையாலும்
    இவ் வாக்கியத்திலும் பகவத் ஸப்த ஸாமாநாதி கரண்யத்தாலும்
    பகவத் பரத்வமே யுக்தம்
    (பிரகர்ஷமாக இத்தால் ஸ்துதிக்கப்படுகிறவன் அகார வாஸ்யனான -ஸ்த்வயம் ஸ்துதி இரண்டுமே பிரணவம்)

    பஞ்சம கண்டத்தில் ருத்ர உபாஸநம் மோக்ஷ சாதந தயா ஸித்தம் என்றது யுக்த ரீதியாலே
    மோக்ஷம் இச்சேத் ஜநார்த்தநாத் – மாத்ஸ்யபு -67-41 என்ற பகவத் உபா ஸநம் என்று அவஸேயம்
    (நிச்சயிக்கப் பட வேண்டும் -மார்கண்டேனயனும் கரியே
    ஆரோக்யம் பாஸ்கரன் ஞானம் ருத்ரன் –இங்கு ருத்ரன் -நாராயண உபாசனமே)


    சாந்தோக்ய மது வித்யையிலே
    அசவ் வா ஆதிதியோ தேவ மது –3-1-1- இத்யாதியாலே
    வஸ்வாதி தேவதைகளுக்கு போக்யனான ஆதித்யனுடைய உபாஸநம் மோக்ஷ சாதநம் என்று விதித்தது -அந்த ஆதித்யனுக்கு அந்தர் யாமியான பரமாத்ம உபாஸந பரம் என்று
    மத்வாதிஷ்வ ஸம்பவாத் –ப்ரஹ்ம ஸூத் -1-3-31 என்கிற அதிகரணத்திலே யாதொருபடி நிர்ணீதம் ஆயிற்று -இங்கும் அப்படியேயாகக் குறையில்லை
    (வஸூ ருத்ர ஆதித்யர்களைக் குறித்து உபாஸனம் -அவர்களுக்கும் மது உபாஸனம் விதிக்கிறதே-அந்தராத்மா உபாசனமே)

    இன்னமும் இவ் விடத்திலே உபாஸந அங்கமாகச் சொன்ன பஸ்ம ஸ்பர்ச விதியும் ஸர்வ உபாஸந விஷயமன்று –பாஸூபத விரத அங்கம் என்று சொன்னபடி
    சவ்த்ராமணீ சேஷமான ஸூ ராக்ரஹத்துக்கு ஸர்வ க்ரது விஷயத்வம் இல்லாதப் போலே-
    (ஸூத்ராமா -இந்திரனுக்கு இந்தப்பெயர் -மூன்று கும்ப கள்ளும் மூன்று கும்ப பாலும் -கண்டு வருவது அங்கு அங்கம்)

    அணோர் அணீயான் -தைத்து -6- என்கிற அநு வாகத்தில்
    யோ வை தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி -ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத ஜாயாமாநம் ஸ நோ தேவ ஸூபயா ஸ்ம்ருத்யோ ஸம்யு நக்து -என்றது
    ஈஸ்வராத் ஞானம் இச்சேத் -என்கையாலே
    பகவத் உபாஸந உப யோகியான உபகாரகத்வம் சொல்லிற்று

    மஹா பாரதத்தில் உமா மஹேஸ்வர ஸம்வாதத்திலே
    உபாஸ்யோயம் ஸதா விப்ரா உபாயோஸ்மின் ஹரேஸ் ஸ்ம்ருதவ் -ஹரி வம்ச -133-18- என்கையாலே
    ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத் ஜாயமாநம் -தைத் -6-என்றதுவும்
    ருஷி யாகையாலே யோக ப்ரபாவத்தாலே ஹிரண்ய கர்ப்பனுடைய ஜந்ம -தர்சித்வம் – ஞாந கோசரம் அல்லது -சஷுர் கோசரம் அன்று -ஹிரண்ய கர்ப்பாத் ப்ராகவ ஸ்திதி இவனுக்கு இல்லை இறே-

    (தந்தை பிறப்பைப் பார்த்தவன் –மோக்ஷ பிரதன் நல்ல எண்ணம் -ஞானம் வளர்ப்பவன் -ருத்ரன் -பஸ்யதே-மனக்கண்ணால் தியானத்தால் பார்த்தவன்

    ஸ்ரீ ருத்ராதிகளும் ருத்ர ஐஸ்வர்ய பரமன்று – ஜகத் காரணத்வ -மோக்ஷ ப்ரதத்வாதிகளான ஸர்வேஸ்வரனுடைய அசாதாரண தர்மத்தாலும் -அக்னி சயனத்திலே அர்த்தாந்தர பரமாக விநியோகிக்கையாலும் -பூர்வ யுக்தமான அநந்ய பரங்களான அநேக ஸ்ருதி விரோதம் வருகையாலும்
    இத்தால் பஞ்ச ப்ரஹ்மாதி மந்த்ரங்களுக்கும் ருத்ர வைபவ பரத்வம் இல்லை

    (தண்டிலம் ஹோம குண்டம் -வேறே வேறே வடிவில் வைப்பார்கள்
    செங்கற்களைக் கொண்டு கட்டும் பொழுது ருத்ரம் வாசிக்கச் சொல்லி
    யாகம் சபலமாக வேறே வித அர்த்தங்கள் சொல்லுவார்கள்)

    (பஞ்ச ப்ரஹ்மாக்ய மந்த்ரமாவது
    சத்யோ ஜாதம் -இத்யாரப்ய-ஸதா ஸிவோம் -இத்யந்தமான ஸ்ருதிகள்
    நாராயண அநுவாக ஸமாக்ய அந்தர் கதத்வத்தாலே நாராயண பரத்வம் இதுக்கு ஸித்தம் என்று விஸ்தரேண தத்வ சேகர அடிப்பணியில் -குறிப்பில்
    சொல்லப்பட்டது
    ஸ்காந்த புராணத்தில் நிர்வாண கண்டத்தில் ராம கீதையில் இந்த ஸ்ருதியை பரமாத்ம விஷய மாகவும் உப ப்ரும்ஹித் தார்கள்
    ப்ரவ்ருத்திஸ் ச ப்ரதிஷ்டா ச வித்யா சாந்திஸ் ததோத்தமா சாந்த்யதீதா பரா ஸூஷ்மா ஸமாநா சோந்மநா ததா –ஸீதா விலஸிதம் ஸர்வம் நாநாகாரேண த்ருஸ்யதே -ததாநுக்ர ஹர சக்த்யாவ- த்வதை க்ய லப்யதே –ஸத்யோஜாத ப்ரவ்ருத்தேஸ் த்வம் ஈஷ்டே நக்ஷத்ர ரஷக (சந்திரன்
    )வாமதேவ ப்ரதிஷ்டாய வாஸநாதருமாஸ்ரித -வித்யாநா மப்ய கோராஸ் த்வம் தேஜஸாம் நிதிரக்ஷய –ப்ரணாந்தத் புருஷஸ் சாந்தைஸ் தத் ராஸாம் யாத்ர வாஹக ஈசாநஸ் சாந்த்ய தீதாயா வ்யாபகோ வ்யோம விக்ரஹ -விஷ்ணுஸ் ச ஸமநா யாந்த்வம் உந்மநாயாம் நிரஞ்ஜந )
    ஸர்வோவை ருத்ர -தைத் -நா -6-என்றதும்
    ப்ராஹ்மணோ வை ஸர்வா தேவதா என்றும்
    ஆபோ வா இதம் சர்வம் என்றும்
    இத்யாதி போலே ஆகக் கடவது-

    ஏக ஏவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -ஸ்வே -3-2- என்றும்
    யஜ்ஞ அம்சமான பாக்த்வ -பரத்வ -பரம் -பரத்வ பரமன்று
    ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் ஸ இந்த்ரஸ் ஸ அக்ஷர பரமஸ்வராட் -என்கிறவிடம்
    யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய ய பத்ம பூ –(புநஸ் த்ரை லோக்யதாத் ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூஸ்ரும -இதிஹாஸ சமுச்சயே -114-8-என்றும்
    மஹா தேவஸ் ஸர்வ மேதே மஹாத்மா ஹுத்வ த்மாநம் தேவ தேவோ பபூவ –ராஜதர்ம -20-12-
    இத்யாதிகளாலே ஸ்ருஜ்யத்வ -ஸ்ரஷ்ட் ருத்வ -அர்ச்ச கத்வ -அர்ச் யத்வாதி பேதம் தத் அந்தர் வர்த்தித்வ நிபந்தனம் என்றதாயிற்று
    ஏவம் விதங்களான ஸ்ருத் யந்தரங்களும் யுக்த ரீதியாலே நிர்வாஹ்யங்கள்
    ஆகையாலே ஸகல வேதாந்தங்களும் நாராயணனையே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாதிக்கிறான் -ப்ரஹ்ம ருத்ரர்களை அன்று என்று ஸித்தம்

    ஆகையால் இப்படி ப்ரத்யக்ஷ ஸ்ருதி சதங்களினாலே நாராயணனுக்கே பரத்வம் தோற்றுகையாலே -பவ்ரு ஷேயங்களான புராண இதிஹாஸாதி களுக்கும் தத் அநுரோதேந ப்ராமாண்யம் உண்டாகையாலே -தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளும் உபாதேயங்கள் -ததிதரங்கள் அநு பாதேயங்கள் இறே
    கிஞ்ச
    நாராயண பரங்களான புராண இதிஹாஸாதிகளுக்கு ஸத்வ மூலத்வாத் ப்ராமாண்யம் உண்டு
    தத் அந்யங்களான புராண விசேஷ வசனங்களுக்கு ரஜஸ் தமஸ் ஸங்கீர்ண தயா அப்ராமாண்யம் ஸித்தம் இறே
    ப்ரஹ்மாணம் ஸிதி கண்டம் ச யாஸ்ச அன்யா தேவதாஸ் ஸ்ம்ருதா -ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –(தஸ்மாத் இதி ச பாடோ த்ருஸ்யதே –மோக்ஷ தர்மம் -350-36 என்று இத்யாதி பிரமாண சதங்கள் எல்லாம் (ராமானுஜர் சாதித்து அருளிய
    )வேதார்த்த ஸங்க்ரஹ -(ஆளவந்தார் சாதித்து அருளிய மஹா)புருஷ நிர்ண யாதி ப்ரபந்தங்களிலே ஸூ வ்யக்த மாகக் கண்டு கொள்வது

    ஆகையாலே ஸ்ரீ மன் நாராயணனே
    ஜகத் காரண பூதன்
    ஸர்வ ஸ்மாத் பரண்
    முமுஷு உபாஸ்யன்
    மோக்ஷ ப்ரதன்
    முக்த ப்ராப்யன் -என்று ஸித்தமாய் நின்றது

    இதி தத்வ நிரூபணே பரதத்வ நிர்ணயோ நாம சப்தம அதிகாரம் ஸம் பூர்ணம்

    ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த் ருத்ய புஜமுச்யதே
    வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம்

    ஸ்ரீ தத்வ நிரூபண பிரபந்தம் ஸமாப்தம்

    —————————————————————-

    27 தத்துவங்களின் வ்யஷ்டி ஸ்ருஷ்டி
    மூலப்ரக்ருதி -அவ்யக்தம் -ப்ரதாநம் -முக்குணங்கள் வெளிப்படாத நிலை –
    மஹான் -முக்குணங்கள் வெளிப்படும் நிலை
    அஹங்காரம்-வெளிப்பட்ட முக்குணங்கள் பயன்படும் நிலை
    ஸாத்விக அஹங்காரம் -வைகாரிகம்
    ராஜஸ அஹங்காரம் -தைஜஸம்
    தாமஸ அஹங்காரம் -பூதாதி
    ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து வாக் பாணி பாதம் பாயு உபஸ்தம் ஆகிற கர்ம -ப்ரவ்ருத்தி -இந்தியர்களும்
    செவி தோல் கண் நாவு நாசி மனம் ஆகிற ஞான இந்திரியங்களும் உண்டாகின்றன
    தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தம் ஆகிற பஞ்ச தன்மாத்திரங்களும்–அவை மூலமாக ஆகாஸம் வாயு தேயு அப்பு ப்ருத்வீ -அதாவது விண் கால் தீ நீர் நிலம் ஆகிற பஞ்ச பூதங்களும் உண்டாகின்றன
    ராஜஸ அஹங்காரம் இவை இரண்டுக்கும் உதவி செய்கிறது

    ————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம்

    March 5, 2024

    ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
    யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா–ஸ்ரீ
    பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

    யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

    திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
    அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
    ஆசார்யன்: நம்பிள்ளை
    சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

    நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
    யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்)உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார்.

    ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தை பெற்றார்.

    மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
    கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
    கற்கலாம் கவியின் பொருள்தானே
    “[ திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை 7-10-10 ]

    என்று திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம்கற்றுக்கொள்கிறேன் என்று அவதார ரஹஸ்யத்தை கூறினார். “உமது அவதாரத் திருநட்சத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே உமது திருநாமமான ’திருக்கலிகன்றி தாஸர்’என்ற திருநாமத்துடன் இந்த சோழநாட்டில் அவதரிக்கப் போகிறீர். அப்போது அதே சோழநாட்டில் என் அவதார திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியில் கண்ணன் என்னும் பெயருடன் அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டுஅருளிச் செயல்களின் பெருள்களையும் உம்மிடமிருந்தே கற்றறிந்து இவ்வுலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று அருளிச் செய்தான். அதன்படியே கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய நம்பிள்ளையாகவும், கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியார் கூறுவர்.

    பெரியவாச்சான் பிள்ளைக்கு “பரம காருணிகர்” மற்றும் “அபார கருணாம்ருத சாகரர்” என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் “அபயப்ரதராஜர்” என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், “இராமாயணப் பெருக்கர்” என்றும் இவருக்கு ஒரு பெயர்உண்டு.

    பெரியவச்சான் பிள்ளை 95 வயது வாழ்ந்து, கிபி 1262ல் ஆசாரியன் திருவடிகளை அடைந்தார். பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை; ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான “நாயனாச்சான் பிள்ளை” என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.

    பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
    தெரிய வியாக்கியைகள் செய்வால்
    அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
    அருளிச்செயலாய்த் தறிந்து.

    அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும் நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும் அறிந்து கொள்ளலாம். அவைகளில் சில கீழே:

    1. “நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
      அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம் உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம் [நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள். ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.
    2. இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று. பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது, உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது (சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது. இவையே பாரதந்த்ரியம்”.
    3. மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?  நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”. பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல. எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.
    4. ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”. அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து, அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
    5. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது, பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார். பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ – பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும் அதுவும் நன்மைக்கே’ என்கிறான். ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார். இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே, அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.
    6. ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது  வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது  எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
    7. ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச்செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

    தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
    திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
    ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
    ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
    ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
    உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
    ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
    எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே.”
    -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :

    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த திவ்ய கிரந்தங்கள்

    1. அபய ப்ரதான வியாக்கியானம்
    2. அனுசந்தான ரஹஸ்யம்
    3. ஸ்தோத்திர ரத்ந வ்யாக்யானம்
    4. உபகார ரத்னம்
    5. கத்ய த்ரய வ்யாக்யானம்
    6. கலியன் அருள்பாடு
    7. சகல ப்ரமான தாத்பரியம்
    8. சரம ரகசியம்
    9. தனி ஸ்வோகி வ்யாக்யானம்
    10. திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
    11. நவரத்னமாலை
    12. நிகமனப் படி
    13. பரந்த படி
    14. பரந்த ரகசிய விவரணம்
    15. பாசுரப்படி இராமாயணம்
    16. மாணிக்கமாலை

    இந்த விரிவுரை நூல்களுடன் பிரபந்த ரகசியம் என்னும் தனி நூலும் இவர் எழுதியுள்ளார். 1. ரகஸ்யத்ரய விவரணம் 2. திருப்பல்லாண்டு வ்யாக்யாநம் 3. பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம் 4. திருப்பாவை மூவாரயிரப்படி வ்யாக்யாநம் 5. நாச்சியார் திருமொழி வ்யாக்யாநம் 6. பெருமாள் திருமொழி வ்யாக்யாநம் 7. திருசந்தவிருத்தம் வ்யாக்யாநம் 8. திருமாலை வ்யாக்யாநம் 9. திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யாநம் 10. அமலனாதிபிரான் வ்யாக்யாநம் 11. கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநம் 12. பெரியதிருமொழி வ்யாக்யாநம் 13. திருக்குறுந்தாண்டகம் வ்யாக்யாநம் 14. திருநெடுந்தாண்டம் வ்யாக்யாநம் 15. முதல் திருவந்தாதி வ்யாக்யாநம் 16. இரண்டாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 17. மூன்றாந்திருவந்தாதி வ்யாக்யாநம் 18. நான்முகன் திருவந்தாதி வ்யாக்யாநம் 19. திருவிருத்தம் வ்யாக்யாநம் 20. திருவாசிரியம் வ்யாக்யாநம் 21. பெரிய திருவந்தாதி வ்யாக்யாநம் 22. திருவெழுகூற்றிருக்கை வ்யாக்யாநம் 23. சிறிய. திருமடல் வ்யாக்யாநம் 24. பெரிய திருமடல் வ்யாக்யாநம் 25. திருவாய்மொழி இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநம் 26. பரந்த ரஹஸ்ய விவரணம் 27. மாணிக்கமாலை 28. நவரத்னமாலை 29. ஸகல ப்ரமாண தாத்பர்யம் 30. உபகார ரத்னம் 31. கத்யத்ரய வ்யாக்யானம் 32. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம் 33. சதுச்லோகி வ்யாக்யானம் 34. சரம ரஹஸ்யம் 35. அநுஸந்தான ரஹஸ்யம் 36. நிகமனப்படி 37. ஸ்ரீ ராமாயண தனிஸ்லோகி 38. பாரதாதி தனி ஸ்லோகம் 39. அபய ப்ரதான சாரம் 40. ரகஸ்ய தீபிகை 41. பரந்தபடி 42. திரிமத சித்தாந்த சார சங்கிரகம் 43. கலியனருள்பாடு 44. திவ்யப்பரபந்த பாசுரப்படி ராமாயணம் பெரியவாச்சான் பிள்ளை 60 க்ரந்தங்கள் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

    ————-

    ஸ்ரீ யபதியாய்
    விஷ்ணு வாஸூதேவ நாராயணாதி ஸப்த வாஸ்யனான
    ப்ரஹ்மம் ஒன்றுமே முமுஷுவுக்கு ஜ்ஞாதவ்யம் என்று
    ஸகல ப்ராமண தாத்பர்யம்

    (ப்ரமாணம் -நல்ல அறிவுக்கு வழி –ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் போல்வன-தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி ந அந்நிய பந்தா-பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் -திருவில்லாததேவரை தேறேன் மின்

    ப்ரஹ்மம் தான் பெரியவனாய் தன்னை ஆஸ்ரயித்த அனைவரையும் பெரியவனாக்கும்
    அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
    விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
    ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
    பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா
    ||-)

    அந்த ப்ரஹ்மம் தான் விசேஷணம் என்றும் விசேஷ்யம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
    விசேஷணம் ஆகிறது விசேஷ்யத்தோடே பிரிந்து இராத தர்மம் –
    விசேஷ்யம் ஆகிறது ஸ்வ விசேக்ஷணத்தோடே பிரித்து இராத தர்மம்

    (விசேஷணம் -சார்ந்து இருக்குமது -பூவைச் சார்ந்த மணம் –ரத்னத்தைச் சார்ந்த ஒளி -தர்மம் குணம் -குணியை- தர்மியைச் சார்ந்து இருக்கும்-விசேஷணங்கள் வ்யாவர்த்தி அர்த்தம்-வேறுபடுத்திக் காட்டும்-சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸமஸ்த குண -ஞான ஸக்த்யாதி -விஸிஷ்ட ப்ரஹ்மம் -திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஸர்வ வியாபகம் ஸர்வாந்தர்யாமி)

    (ஸரீராத்மா பாவம் நமது அசாதாரண தர்மம்–யஸ்ய சேதனஸ்ய யத்த்ரவ்யம் ஸர்வாத்மனா ஸ்வார்தே நியந்தும் தாரயிதம் ச ஷக்யம் தத் .அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷ சாயினேI நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று-சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்-நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்)

    (யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -(எந்த சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம்-அசைத்து சரீரமாகத்தானே இருக்கும் அதுக்கு சரீரம் இல்லையே )
    சர்வாத்மநா (எப்பொழுதுமே-அனைத்துப் படிகளாலும் )ஸ்வார்த்தே (தன் பொருட்டே )தாரயிதும் (தாங்கப்பட்டும் )நியந்தும் ச (நியமிக்கப்பட்டுமுள்ள ) சக்யம் சேஷதைக ஸ்வரூபஞ்ச தாது தஸ்ய சரீரம்உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –சேஷத்வம்– பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் –-உடையவனுக்கு பெருமை செய்யவே அனைத்து ப்ரவ்ருத்திகளும் கொண்டதுசர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -தத் ஜலான் –(தத் ஜ -தத் ல -தத் ஆன் )சாந்த உபாஸீத -ஸாமாநாதி கரண்யம்-நீராய் நிலனாய் இத்யாதி அனைத்தும் சரீரம் ப்ரஹ்மம் ஜகத் -மட்குடம் –விசேஷணம்- விசேஷ்யம்)

    விசேஷணமும் போக உபகரணம் என்றும்
    லீலா உபகரணம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
    போகமாகிறது
    இஷ்ட பல அநு பாவம்
    லீலையாகிறது காலாந்தரத்திலே ஒரு பலம் அன்றிக்கே தாத் காலிக ரஸ ஹேதுவான வியாபாரம்

    (கர்த்தா உபகரணங்களைக் கொண்டு கர்மாவைச் செய்கிறான்
    குயவன் சக்கரம் கொண்டு மண் குடம் பண்ணுகிறான்
    ப்ரஹ்மமே ப்ரஹ்மத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் -போக ஸ்ரீ நிவாஸன் -பேரர் உண்டே திருமலையில்-
    இதற்கு லோக த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே)

    போக உபகரணமும் சேதனம் என்றும் அசேதனன் என்றும் த்விவிதம்
    சேதனமாகிறது ஞான ஆஸ்ரய வஸ்து
    அசேதனம் ஆகிறது ஞான சூந்ய வஸ்து

    அதில் சேதன ஜாதி நித்ய வர்க்கம் என்றும் முக்த வர்க்கம் என்றும் த்வி விதம்
    நித்ய வர்க்கமாகிறது ஒரு நாளும் ஸம்ஸாரத்தை ஸ்பர்ஸியாதே பகவந் நித்ய கைங்கர்ய நிரத ரஸராய் இருந்துள்ள அநந்த வைநதேய விஷ்வக் ஸேநாதி ஸூரி (வர்க்கம்)சங்கம்
    -(அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தமே இல்லாதவர்-ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் கூரத்தாழ்வான் -இவர்களையும் கீழே அனுப்பி கார்யம் கொள்ளுவான்)
    முக்த வர்க்கமாகிறது (
    நிர்ஹேதுகமான)பகவத் கிருபையால் அநாதியான அசித் சம்பந்தத்தில் நின்றும் விடப்பட்டு நித்ய வர்க்கத்தோடே கலந்து அது முதலாக யாவதாத்மபாவி (நித்தியமாக)பகவத் கைங்கர்ய பரராய் இருக்குமவர்கள் –

    அசேதனம் ஆகிறது ஸூத்த ஸத்வாத்மகமாய் தன்னோடே சம்பந்தித்த சேதனர்க்கு ஸ்வரூப ப்ரகாசகமாய் –நித்யமாய்- ஸ்வயம் ப்ரகாசகமாய் -கர்ம நிரபேஷமான பகவத் இச்சையாலே திவ்ய விக்ரஹங்களாய் -திவ்ய ஆபரணங்களாய் -திவ்ய ஜன பதங்களாய் அபரிச்சின்னமாய் நித்யருக்கும் முக்தருக்கும் பகவானுக்கும் கைங்கர்ய போக பரிகரமாய் இருக்கும்

    (உபய விபூதி நாயகன் உத்தம புருஷன் திரு வயிற்றில் மூன்று மடிப்புக்கள்- த்ரிவித சேதன அசேதன –கீழ் போக -நித்ய விபூதி பார்த்தோம் -மேல் லீலா விபூதி பார்க்கப் போகிறோம்)

    இனி லீலா உபகரணமும் சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
    அதிலே சேதன ஜாதியும் -சம்சாரிகளை யென்றும் முமுஷுக்கள் என்றும் த்வி விதம்
    ஸம்ஸாரிகள் ஆகிறார் அநாதியான அசித் ஸம் ஸம்பந்தத்தாலே திரோஹிதங்களான ஸ்வரூப ஸ்வ பாவங்களை உடையராய்
    அது அடியாக அந்யதா ஞான விபரீத ஞானங்களை யுடையராய் -(
    அந்யதா ஞான-குணமே மாறாடுவது -வெளுத்த சங்கத்தை மஞ்சளாகப் பார்ப்பது -சேஷத்வம் அடிமைத்தனம்-குணம் பார்க்காமல் ஸ்வ தந்திரம் என்று நினைக்க-விபரீத ஞானங்களை –பொருளையே மாறாடிப் பார்ப்பது யுடையராய் -தேஹமே ஆத்மா என்று பிரமித்து)
    தத் கார்யங்களான ராக த்வேஷாதி (விருப்பு வெறுப்பு முதலாக)ஜன்யங்களான புண்ய பாப ரூப நாநா வித கர்மங்களை யுடையராய் அது மூலமாக தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர் வித நாநா சரீரங்களிலே நிரந்தரமாக ப்ரவேசியா நின்று கொண்டு அந்த சரீரங்களிலும் சரீர அனுபந்திகளிலும் அஹங்கார மமகாரங்களாலே வருகிற துக்கங்களில் ஸூக புத்தி பண்ணா நின்று கொண்டு விஷய ப்ரவணராய் தாப த்ரய தஹ்மானராய் நிரந்தர துக்க சாகர நிமக்நராய் இருக்குமவர்கள்

    (காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
    வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
    ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
    ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“

    ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
    உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
    ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
    வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
    உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
    தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
    உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
    இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?)

    முமுஷுக்களும் (ஸம்ஸாரம் விடுபட ஆசை கொண்டவர்)ஆத்ம பிராப்தி காமர் என்றும் பகவத் பிராப்தி காமர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்ஆத்ம பிராப்தி காமர் ஆகிறார் (கேவலர்)-ராஜ பதம் அளவாக யுடைத்தான ஐஹிக ஐஸ்வர்யமும் பிரம பதம் பர்யந்தம் உள்ள ஆமுஷ்மிக ஐஸ்வர்யமும் அல்பம் அஸ்திரம் ஆகையால் விவேகித்து -ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் இருக்கையாலே ஆத்ம போகமே புருஷார்த்தம் என்று தத் ப்ராப்திக்கு யத்னம் பண்ணுமவர்கள் -இவர்கள் தத் அதிகமான பகவத் பிராப்தி ஸூகத்தை விமர்சியாதவர்கள்

    பகவத் பிராப்தி காமர் ஆகிறார் -ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -நிர்மலனாய் -ஞான ஆனந்த மயனாய் -அபரிச்சின்னமான குணகனுமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷமாகையாலே -அநந்ய போக்யமான ஆத்மாவுக்கு ஸ்வ அனுபவம் அணுவாய் -ஸ்வ தந்திரமுமாகையாலே -ஸ்வரூப விருத்தம் என்று விஷம் போலே அநாதரித்து –
    நித்தியமாய் -நிர்மலமாய் -அபரிச்சின்ன ஞான ஆனந்த மயமான ஸ்வரூபத்தை யுடையனாய் -ஸர்வ சேஷியாய் -ஸர்வ சரண்யனாய் -ஸர்வ ப்ராப்யனான -ஸ்ரீ யபதியுடைய திருடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பரம புருஷார்த்தமாக நிச்சயித்து -ஒரு தேச விசேஷத்திலும் தேஹ விசேஷத்திலும் அன்றியே சித்திப்பதாகையாலே தத் ப்ராப்திக்கு விரோதியான தேச சம்பந்தமும் தேஹ சம்பந்தமும் விட வேணும் என்று ஆசைப்படுமவர்கள்

    இவர்களும் உபாஸக நிஷ்டர் என்றும் ந்யாஸ நிஷ்டர் என்றும் த்வி விதம்
    உபாஸக நிஷ்டர் ஆகிறார் -பல சங்க பரித்யாக பூர்வகமாக -யஜ்ஞ தாநாதி கர்மங்களை அனுஷ்ட்டிக்க விபரீத ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ்ஸுக்கள் நன்றாக நசித்து -யதா ஞான ஹேதுவான ஸத்வம் பிரகாசித்து -அதனாலே பகவத் ஞானம் யுண்டாய்
    அது ஸாஷாத் கார ஸமானமாய் -அந வரத பாவனை யுண்டாய் -பக்தி ரூபா பன்னமாய்
    ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிலே ஸூக துக்கனாகப் பண்ணுவதாய்-
    ஸாஸ்திரங்களிலே மோக்ஷ சாதன தயா விஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள்

    (வேதந – ஸ்மரண – த்யான -உபாஸன–அன்பு கலந்த பக்தி -அறிந்து -உபாயம் -சமீபத்தில் அழைத்துச் செல்லும்-நம் யத்னம் -சாதன உபாயம் -ஸாத்ய உபாய நிஷ்டை -ஞான தர்சன பிராப்தி தசைகள் -பர பக்தி பர ஞான பரம பக்தி –

    மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
    மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

    என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
    அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
    அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
    என்னை வணங்குவாயாக
    என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
    நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக-


    ஸ்வா தந்திரம் லேசமும் இல்லாமல் பாரதந்த்ரம் கொண்டு – -அவனைப் பற்றுவதே சரணாகதி பிரபத்தி ந்யாஸம் -ப்ரஹ்மமே ந்யாஸம் -ஸித்த உபாயம்
    சரணம் இதி ஆகதி -நீயே உபாயம் என்று வந்து விடுவதால் -நம்புவதே சரணாகதி -ஸித்த உபாய நிஷ்டை -அவனே உபாயம் என்கிற மஹா விஸ்வாஸம் -)

    ந்யாஸ நிஷ்டராகிறார் -உபாஸனமும் அநேக ஜன்ம ஸாத்யமாகையாலே துஷ் கரம் என்றும் -தேச கால அதிகாரி ப்ரப்ருத் யனேக நியம அபேக்ஷமாகையாலே ஸ அபாயம் என்றும்
    ப்ராரப்த கர்மாவஸாந பலமாகையாலே ஸ விளம்பம் என்றும்
    அசேதனமாகையாலே அஸமர்த்தம் என்றும்
    ஸ்வ யத்ன ஸாத்யமாகையாலே ஸ்வரூப விருத்தம் என்றும்
    பின்னையும் சொல்லப்படுகிற உபாய ஆபாசங்கள் எல்லாவற்றையும் ஸ அங்கமாகவும் ஸ வாஸநமாகவும் விட்டு

    அந்த உபாயங்கள் போல் அன்றிக்கே
    நிவ்ருத்தி சாத்யமாகையாலும்
    ஸக்ருத் அநுஷ்டேயமாகையாலும்
    ஸூ கரமாயும்
    ஒரு நியமமும் வேண்டி இராமையாலே நிர் அபாயமாயும்
    தேஹ அவஸாந பலிதமாகையாலே சீக்ர பல ப்ரதமாயும்
    பரம சேதனமாகையாலே பல ப்ரதாநத்தில் ஸ்வயம் ஸமர்த்தமாயும்
    நிருபாதிகமாகையாலே ஸ்வரூப அநு ரூபமான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளையே விலக்ஷண உபாயமாக நிச்சயித்து
    அதிலே ந்யஸ்த பரராய் இருக்குமவர்கள்

    இந்த ந்யாஸ நிஷ்டரும் ஸ்வயம் ந்யஸ்த பரர் என்றும் பர ந்யஸ்த பிறர் என்றும் த்வி விதம்
    ஸ்வயம் ந்யஸ்த பரராகிறார் -ஸதாச்சார்ய கிருபையாலே லப்த ஞானராய் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து ஹித பரனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீ பாதத்தைத் தாங்களே ஆஸ்ரயிக்க அஞ்சி -ஸர்வேஸ்வரனுக்குப் பத்நியாய் -வல்லபையாய் -ஸர்வ ஆத்மாக்களுக்கு ஸ்வாமிநியாய் -மாதாவாய் -அவனோடே நித்ய ஸம் யுக்தையான பிராட்டி பிரஸாதத்தாலே பயம் கெட்டு
    வாத்சல்யாதி ஸமஸ்த கல்யாண குண கண விஸிஷ்டனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளைத் தம்முடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் உபாயமாக ஆஸ்ரயிக்குமவர்கள்

    பர ந்யஸ்த பரராகிறார் -தங்களுக்காக ஆசார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட ஏதாத்ருஸ ந்யாஸத்தை யுடையவர்கள்
    இவரும் ஸ நிபந்தன பர ந்யஸ்த பரர் என்றும் நிர் நிபந்தன பர
    ந்யஸ்த பரர் என்றும் த்வி விதமாய் இருப்பார்கள்

    ஸ நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தம்முடைய அநு வர்த்தநாதிகளாலே மந்த்ர பிரதனனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

    நிர் நிபந்தன பர ந்யஸ்த பரராகிறார் -தனக்கு ப்ராப்தமான புருஷார்த்தத்தினுடைய யுக்த வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து அது இவர்களுக்கு இல்லாத மாத்திரம் அன்றிக்கே இவர்கள் படுகிற துர்க் கதியைக் காணப் பொறாத கேவல கிருபையாலே ப்ரீதனான ஆச்சார்யனாலே அனுஷ்ட்டிக்கப்பட்ட பர ந்யாஸத்தை யுடையவர்கள்

    இவர்களில்
    ஸம்ஸாரிகள் ஈஸ்வரனுடைய சிக்ஷைக்கு விஷயமானவர்கள்
    கேவலர் -உபேக்ஷைக்கு விஷயமானவர்கள்
    உபாஸகர் அனுக்ரஹத்துக்கு விஷயமானவர்கள்
    ப்ரபன்னர் கிருபைக்கு விஷயமானவர்கள்

    (அருள் தயா அனுக்ரஹம் கிருபை அனுகம்பா -பர்யாய பதங்கள்
    அனு க்ரஹம் பின் தொடர்வது அனு பத பிரயோகம் -யாத்திரை அனு யாத்ரை -யாகம் அநுயாகம்
    அனு க்ராஹதம் -பண்ணினதால் பலன் -பக்தி செய்வதால் அருள் -சோபாதிகம் -உபாதி இருக்க வேண்டுமே
    கிருபா -நிருபாதிகம் -அளவுக்கு உட்படாமல் -)

    ப்ரபன்னர் எல்லாருக்கும் தேஹ அவசானத்திலே பலமே ஒக்கும்
    உத்தர உத்தர அதிகாரிகள் பாக்யாதிகாரிகள்
    இவர்கள் ஆர்த்த அதிகாரிகள் என்றும் த்ருப்த அதிகாரிகள் என்றும் த்வி விதம்
    ஆர்த்த அதிகாரிகள் ஆகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் (
    கூண்டுக்குள்)இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோற்றித் தந் நிவ்ருத்திக்குத் த்வரிக்குமவர்கள்

    (இனி இனி இருப்பதின் கால் -திரு விருத்தத்தில் 3 தடவையும் திருவாய் மொழியில் 17 தடவையும் கூப்பிடடாலும் இங்கேயே வைத்தான்
    இனி என்றதும் உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று ஆக்காமல்
    பிரபந்தம் தலைக் கட்ட -நச்சுப் பொய்கை ஆகாதற்காக -ஆர்த்தி பெருக்க -வீடு திருத்த -இங்கே வைத்தான்-த்யாஜ்ய தேகத்தில் பிராவண்யம் மிக்கு இத்துடன் கூட்டிச் செல்லப் பார்த்தான் -அவனுக்கும் மங்க ஒட்டு உன் மா மாயை உபதேசித்தார் அன்றோ)


    த்ருப்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான தேஹாந்தர ஸம்பந்தமும் ஸ்வர்க்க நரகாதி பிரவேசத்தில் விரக்தியும் பீதியும் யுண்டாய் தந் நிவ்ருத்திக்கு பகவானை ஆஸ்ரயித்து வர்த்தமான சரீர வியோகத்துக்கு த்வரியாதவர்கள்

    இவரும் ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் என்றும் ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் என்றும் த்வி விதரராய் இருப்பார்கள்
    ஸ்வ தேஹ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் –சரீர அவசானத்திலே போகம் எத்தனையேனும் விலக்ஷணமானாலும் ருசி வாசனைகளாலே இத்தை விட்டு விட த்வரியாதவர்கள்

    ஸ்வ தேஹீ ஸம்பந்த த்ருப்தர் ஆகிறார் -தனக்கும் அவனுக்கும் உண்டான நிருபாதிக சரீர சரீரி ஸம்பந்தத்தை அனுசந்தித்து அவனுடைய கார்யம் என்று த்வரியாதே ஐஹிக போக தாஸ்யத்திலே மண்டி இருக்குமவர்கள்

    ஆர்த்தராகிறார் -பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் இருப்புப் போலே அத்யந்த துஸ் ஸஹமாய்த் தோன்றி தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள்
    இவரும் பிரதி கூல போக ர்த்தர் என்றும் அநு கூல போக ர்த்தர் என்றும் த்வி விதம்

    பிரதி கூல போக ர்த்தர் ஆகிறார் -ப்ரத்யக்ஷ ஸித்தமான தாப த்ரய துக்கம் அதி துஸ் ஸஹமாய்த் தோன்றி அதுக்கு ஹேதுவான தேக சம்பந்தத்தையும் தேச சம்பந்தத்தையும் தேசிகருடைய ஸஹ வாஸத்தையும் பொறாதே ஸாஸ்த்ர த்ருஷ்டிகளாலும் ஆச்சார்யர்களுடைய வசனங்களாலும் அறியப்படுமதாய் -அந்த துக்க கந்தமும் இன்றிக்கே நிரதிசயமான பகவத் பிராப்தி ரூப ஸூகத்திற்கு த்வரைப் படுமவர்கள்

    அநு கூல போக ர்த்தர் ஆகிறார் -நிரந்தரமான த்வய அநு சந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரம பதத்தில் நித்ய வாசத்தினுடைய வைலக்ஷண்யம் விசதமாக பிரகாஸிக்க அது இல்லாத க்ஷண காலமும் கல்ப ஸஹஸ்ரமாய்த் தோன்றும்படி (ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ)ஆர்த்தராய் -ஏதத் ப்ராப்திக்கு த்வரிக்கின்றவர்கள் –

    இந்த ப்ரபந்ந விஷயமான உபாய க்ருத்யம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்தியும் என்று த்வி விதமாய் இருக்கும்(அநிஷ்டமும் இஷ்டமும் அதிகாரிகளுக்குத் தக்க வேறு வேறாகவே இருக்கும்)
    அநிஷ்டம் தான் பூர்வாகம் என்றும் உத்தராகம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
    அகமாகிறது புண்ய பாப ரூபமான கர்மம் –
    ஸ்வர்க்காதி சாதனமாக புண்யமும் பாபம் போலே பேற்றுக்கு பிரதிபந்தகமாகையாலே அகம் எனப்பட்டது

    இதிலே பூர்வாகம் ஆகிறது -ஆஸ்ரயணத்துக்கு முன்பு அநாதி காலம் பண்ணப் பட்ட கர்மம் –
    இதுவும் ஸஞ்சிதம் என்றும் ப்ராரப்தம் என்றும் த்வி விதமாய் இருக்கும்

    ஸஞ்சிதமாகிறது -பல ப்ரதானத்துக்கு உத் யோகியாமல் இருக்கிறது
    ப்ராரப்தமாகிறது -பல பிரதானத்துக்கு உத் யோகிக்கிறது

    ப்ராரப்தமும் வர்த்தமான சரீராரப்தம் என்றும் சரீராந்தராரப்தம் என்றும் த்வி விதம்

    உத்தராகமாகிறது –ஆஸ்ரயணக்கு அநந்தரம் தேஹ அவசான பர்யந்தம் வாஸநா பலத்தாலே செய்யப்பட கர்மம்
    இதுவும் ஞான க்ருதம் என்றும் அஞ்ஞான க்ருதம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
    இதுவும் ஸ அநுதாபம் என்றும் நிரநுதாபம் என்றும் ஓர் ஒன்றே த்வி விதமாய் இருக்கும்

    இப்படிப்பட்ட பேதங்களை யுடைத்தான அநிஷ்டத்தை இவன் இடத்திலே ப்ரீதி அதிசயத்தாலே உபாய பூதனான ஈஸ்வரன் போக்கும்படி எவ்வாறு என்னில்

    (ஸஞ்சித பிராரப்த ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -நானும் வேண்டா நீயும் வேண்டா -தன்னடையே போகும்)

    (போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-மாரீசனை ஒட்டி ஸூ பாஹுவை முடித்தால் போல்-ஏழு வர்க்க பாபங்கள் -ஸஞ்சித கர்மா மூட்டை பெரியது –
    பக்தி உபாசகனுக்கும் ப்ரபன்னனுக்கும் முடிக்கும் முறை -அநுகூல பிரதிகூல இடம்
    சரீராராப்த ஆரப்த கர்மம் -தீயில் இட்ட பஞ்சு போல் அழித்தே விடுகிறான் -பக்தனுக்கு இது இல்லை
    மூன்றாவது வர்த்தமான சரீர ஆரப்த கர்மாவை ப்ரபன்னனுக்கு தேக அவசா னத்திலே அதற்குள்ள அனுபவம் கொடுத்து தீர்க்க வேண்டும்
    ஆகவே ஸரணாகதி செய்த உடன் ஸுகமீ என்று சொல்ல முடியாது -மோக்ஷம் நிச்சயம்-அஜ் ஞான க்ருத பாபம் அப்படியே காணாக் கண் இட்டு இருப்பான்-

    சிந்தையந்திக்கு அப்போதே -வேணுகானம் கேட்டு ஆனந்தம் புண்யங்களைப் போக்கி -கண்ணனைப் பார்க்கப் போகாமல் துக்கப்பட்டு பாபங்களை போக்கி அப்போதே பேறு -அவள் ஆர்த்த ப்ரபந்தனை
    நம்மாழ்வார் தீர்க்க சிந்தையந்தி)


    வர்த்தமான சரீரார்ப்பத்தை ஒழித்து பூர்வாகத்தில் புண்ய அம்சத்தை இவனை ஸ்நேஹித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
    பாப அம்சத்தை த்வேஷித்தவர்களை அநு பவிப்பிக்கும் –
    ஸரீராரப்தத்தை ஸரீரத்தோடே போக்கும்
    இவனுக்கு எப்போதும் அநு கூல போகார்த்தி யுண்டாம்
    அந்த ஆர்த்தி ரூபமான மஹா துக்கத்தினாலும் தத் ஹேதுவான அநுபவ ஆஹ்லாத ரூபமான மஹா ஸூகத்தினாலும் சரீர அநுபாவ்யத்தை எல்லாம் அப்போதே போக்கும்
    உத்தராகத்தில் அஞ்ஞான க்ருதமும் அவனுடைய வாத்சல்யத்தினாலே திரு உள்ளத்துக்கு விஷயம் இன்றிக்கே போம்
    ஸ அநுதாபமான ஞான க்ருதமும் அவனுடைய க்ஷமைக்கு விஷயமாம்
    அது பகவத் விஷயமானால் பகவத் விஷயமான அநு தாபத்தாலே போம்
    பாகவத விஷயமானால் பாகவத விஷயத்தில் அநு தாபத்தாலே போம் –
    நிரநுதாப ஞான க்ருதமும் சரீர அநு பாவ்யம் போலே அனுபவித்துப் போக்குவன்

    ஸாமான்ய நிஷித்த அநுஷ்டானமும் பகவந் நிக்ரஹ ஹேதுவாகையாலும் சிஷ்ட ஐந கர்ஹிதமாகையாலும் க்ரூரம்
    பகவத் விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தரம்
    பாகவத விஷயமான அநுதாப சூன்யமும் க்ரூர தமம்
    ஆகையாலே ப்ரபந்நன் பகவத் பாகவத் ப்ரஸாதத்துக்கு ஒழிய க்ஷமைக்கு விஷயமாகை அநுரூபம் அல்லாமையாலே ஸாவதாநத்தோடே நடக்க வேணும்
    ஆகையாலே ஞான க்ருதமான் ஸ அநு காமமும் உதிக்கைக்கு அவகாசம் இல்லாமையாலே அநுதாப சூந்யமும் தூரதோ நிரஸ்தம்
    ஆனாலும் ஈத்ருஸ கடிந ப்ரக்ருதிகள் உண்டாகுவாரோ என்று ஸாஸ்த்ரம் சொல்லிற்று ஆயிற்று

    இப்படி ஸர்வமான கர்மங்களும் நிவர்த்யங்கள் யாகையாலே தத் கார்யமான தேஹ ஸம்பந்தம் இல்லை
    தேஹ ஸம்பந்தம் இல்லாமையாலே தத் கார்யமான அவித்யை இல்லை
    இம் மூன்றும் இல்லாமையாலே தத் தத் வாஸநா ருசிகள் இல்லை
    ஆகையாலே ப்ரபன்னனுக்கு சரீர அவசானத்திலே தேச கால அதிகாரி நியமங்களும் உத்தர க்ரியைகளும் உபாயம் அன்று
    ஆனாலும் உத்தர க்ரியைகளும் ஆந்ரு ஸம்ஸ்யத்தாலும் பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் செய்யப்படும் அத்தனை

    இனி இஷ்ட பிராப்தியும் ஐஹிகம் என்றும் ஆமுஷ்மிகம் என்றும் த்வி விதம்
    ஐஹிகம் பகவத் கைங்கர்யம் என்றும் பாகவத கைங்கர்யம் என்றும் த்வி விதம்
    கைங்கர்யமாவது -இஷ்டம் செய்கை (
    கிம் கரோ -என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்து கேட்டு செய்ய வேண்டுமே)-அது தான்
    ஸாமான்ய விஹித அநுஷ்டானமும் (
    வர்ணாஸ்ரம தர்ம அநுஷ்டானம்)பகவத் ஸந்தோஷமாகையாலே கைங்கர்யம் என்னக் கடவது இறே
    பகவானுக்கு இஷ்டம் ஸாஸ்த்ர முகத்தாலே அறிய வேணும்
    பாகவதருக்கு இஷ்டம் அவர்கள் நினைவிலே அறிய வேணும் –

    ஆக கைங்கர்யமும் மாநஸம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
    மாநஸ மாகிறது -அந்நிய பரமாகாமல் தத் பரமாக்குகை (
    கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை நாம் கொள் சிறப்பே)-அதுவும் செய்த உபகாரத்தை ஸ்மரிக்கையும் -செய்யக் கடவ உபகாரத்தை அபேக்ஷிக்கையும் என்று த்வி விதம்
    இதில் ஈஸ்வரன் செய்த உபகாரமாகிறது -ஸதாசார்யனை ஆஸ்ரயிப்பிக்கையும் -தத் அர்த்தமான அதிகாரி ஸம்பத்தும்
    ஆமுஷ்மிகமான கைங்கர்யமும் இதுவே
    அந்தக் கைங்கர்யமும் வாசிகம் என்றும் காயிகம் என்றும் த்வி விதம்
    வாஸிகமாகிறது -ஸ்துதி -திருநாம ஸங்கீர்த்த நாதிகள்(
    வாசிகமான அங்கு கைங்கர்யம் செய்தான் மொய் மாம் பொழில் -பதிகம்)
    காயிகமாகிறது -ஸம்மார்ஜமான மாலா
    பந்தநாதிகள்

    பாகவத கைங்கர்யமும் ஆசார்ய கைங்கர்யம் என்றும் தத் துல்யரான பாகவத கைங்கர்யமும் என்றும் த்வி விதம்

    ஆசார்யரும் மந்த்ர ப்ரதர் என்றும் -மந்த்ர ரத்ன பிரதாரி யென்றும் த்வி விதம்
    இவர்கள் பக்கல் செய்யும் பிரதிபத்த ஸமமாய் இருக்கும்
    பகவானுடைய திருவடிகள் இரண்டிலும் வைஷம்யம் உண்டாகில் இறே ஆசார்ய விஷயத்தில் வைஷம்யம் உண்டாவது

    (மந்த்ரத்திலும் மந்த்ர ப்ரதிபாத்ய வஸ்துவிலும் மந்த்ர ப்ரதான ஆச்சார்யன் பக்கலிலும் ப்ரேமம் கணக்கா உண்டாக வேணுமே -பெரிய திருமொழி முதல் நான்கு பதிகமும் இத்தைக் காணலாம்
    மந்த்ரம் கொடுத்த திருநறையூர் நம்பி மந்த்ரார்த்தம் கொடுத்தக திருக்கண்ணபுரத்துக்கும் 100 பாசுரங்கள் மங்களா சாசனம்
    ஸ்ரீ ரெங்கம் மட்டுமே 50 பாசுரம் -வேறே யாருக்கும் இல்லையே)


    இப்படிப்பட்ட ஆசார்யர்கள் செய்த உபகாரமாகிறது -அநாதி காலம் விமுகனான சேதனனை பகவத் விஷயத்தில் அபி முகனாகச் செய்கையும் -மந்த்ரார்த்த முகத்தாலே அஞ்ஞானத்தை நிரஸித்து ஞானத்தை யுண்டாக்கி தத் அநு ரூபமான வ்ருத்தியிலே நியமித்து ததீய அந்தர் பவாத்தை உண்டாக்குகையும் -கைங்கர்யம் கொள்ளுகையும்
    தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
    அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
    விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
    நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

    ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
    னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
    தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
    தானே வைகுந்தம் தரும் ————61-

    உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
    வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
    பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
    கையிலங்கு நெல்லிக் கனி ————-62-

    ஆசார்யன் செய் உபகாரமானவது
    தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
    தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
    இருத்தல் இனி ஏது அறியோம் யாம் ——–63-

    தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
    இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
    அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
    பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு ———-64-

    இனி பாகவதர் செய்த உபகாரமாவது -குண லேசமும் இன்றிக்கே தோஷங்களினாலே பூர்ணனான தன்னை ஆசார்ய ஸம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூப அநு ரூபமான போகத்திலே கூட்டிக் கொண்டு கைங்கர்யத்துக்கு விஷயமாக்குகை

    (-அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் ஆஸ்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்.-திருவேங்கடமுடையான் அனந்தாழ்வானுக்கு சமர்ப்பித்த தனியன்)

    இனி லீலோ உபகரணமான அசேதனமும் ப்ரக்ருதி என்றும் காலம் என்றும் த்வி விதம்
    ப்ரக்ருதி யாகிறது -ஸத்வ ரஜஸ் தமோ குணாத்மகமாய் நித்யமாய்- தன்னோடே சம்பந்தித்த சேதனருக்கு தத் தத் கர்ம அநு குணமான தேஹ இந்த்ரியாதி ரூபமாய் -அநேக விகாரங்களை யுடைத்தானதாய் -ஸப்தாதி விஷய ப்ராவண்யத்தையும் பகவத் விஷய வைமுக்யத்தையும் பிறப்பிக்குமதாய் இருக்கும் அசித் விசேஷம்

    காலமாகிறது -நித்தியமாய் -நிமேஷ காஷ்டாதி ரூபமான பஹு விகாரங்களை யுடைத்தாய் சேதனருடைய கர்மத்துக்கும் தத் அநு குண ரூபமான போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்

    இனி லீலா பரிகரமும் போக பரிகாரமுமான சேதன அசேதன வர்க்கம் -ஸ்வ விஸேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு வ்யாப்யமாய் –தார்யமாய் -நியாம்யமாய் -சரீரமாய்- சேக்ஷமாய் இருக்கும்

    இனி விசேஷ்யமும் அகில ஹேய ப்ரத்ய நீகமாய்- கல்யாணை கதாநமாய் -ஸதைக ரஸமாய் -விபுவாய்- நித்யமாய் -ஞான ஆனந்தங்களை ஸ்வரூபமாக யுடையதுமாய் -ஞான ஸக்த்யாதி அநந்த குண கண பூஷிதமாய் -ஸ்வ விசேஷணமான ஸகல சேதன அசேதனங்களுக்கும் வ்யாபகமாய் -தாரகமாய் -நியாமகமாய் -ஸரீரியாய் -சேஷியாய் -விலக்ஷண விக்ரஹ யுக்தமாய்- லஷ்மீ பூமி நீளா ஸமேதமாய் -நித்ய முக்தர் அநு பாவ்யமாய் -ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாய் -ஸர்வ லோக சரண்யமாய் -ஸகல பல ப்ரதமாய் -ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளுக்கும்- ஸநக ஸநந்தாதி யோகிகளுக்கும் -அவாங் மநஸகோசரமாய் -ஸ்ருத் ஏக ஸமதி கம்யமாய் -ஸமாஸ்ரித ஏக ஸூலபமாய் -தத் உஜ்ஜீவந ஏக ப்ரயோஜனமாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார ரூபங்களை யுடைத்தாய் இருக்கும்

    இப்படிப்பட்ட ஸமஸ்த விசேஷண விஸிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி வேறு ஒன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன்
    இந்த அதிகாரியே ஞானாதிகரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நித்ய முக்தர்களுக்கும் ஆசார்யனுக்கும் பிராட்டிக்கும் ஸ்ரீ யபதிக்கும் அத்யந்த பிரிய தமன்

    ஸ்ரீ ஸகல பிரமாண தாத்பர்யம் முற்றிற்று

    ——————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

    ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ

    February 13, 2024

    ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
    ஸ்ரீவத்ஸாங்க ஸுத ஸ்ரீமான் ஸ்ரேயசே மேச்து பூயஸே ||

    ஸ்ரீ ரங்கநாதன் என்னும் அழகிய மணவாளனுக்கு ஆசிரியராகவும், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரரும் ஆன செல்வம் நிறைந்த ஸ்ரீ பராசர பட்டர் எனக்கு மிகுந்த ச்ரேயஸ் அளிப்பாராக.

    பராசர பட்டர் ரஹஸ்ய த்ரயத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்தும் நோக்குடன் அஷ்ட ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார். இதுவே ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை வெளிப்படுத்த ஏடுபடுத்தப்பட்ட முதல் ப்ரபந்தம்.

    இந்தப் ப்ரபந்தத்தில் உள்ள எட்டு ச்லோகங்களுடன், ப்ரபந்த கர்த்தாவான பராசர பட்டரைக் கொண்டாடி அருளப்பட்ட தனியனும் உள்ளது.

    ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
    அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்டஸ்லோகி
    முதல் நான்கும் திருமந்தரம் விவரணம்
    மேல் இரண்டு ஸ்லோகங்கள் த்வயம் விவரணம்
    அடுத்த இரண்டும் சரம ஸ்லோக விவரணம் –

    பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -திருவரங்கக் கலம்பகம் –
    ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும்

    ————

    அகாரார்த்தோ விஷ்ணு: ஜகதுதய ரக்ஷாப் ப்ரலய க்ருத்
    மகாரார்த்தோ ஜீவ: ததுபகரணம் வைஷ்ணவமிதம் |
    உகாரோ அநந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ:
    த்ரயீ ஸாரத்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் சமதிஸத் ||
    1-

    உலகத்தின் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் புரியும் விஷ்ணுவே “அ”காரத்துக்குப் பொருள்; “ம”காரப் பொருள் ஜீவன்; வியாபித்திருக்கிற இவ்வுலகம் சேதனனுக்கு உபகரணமாக அமைந்தது. “உ”காரம் இருவர்க்கும் இடையில் மற்றொருவர்க்குப் பொருந்தாத ஒரு ஸம்பந்தத்தை நியமிக்கிறது. வேத ஸாரமான மூவகைப்பட்ட இந்த ப்ரணவம் இந்தப் பொருளை விளக்குகிறது.

    அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
    பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
    சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்
    சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

    மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்-
    மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்–மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
    தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட  –
    வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

    உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
    உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
    பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது
    சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
    அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல்
    ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

    த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்-
    இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
    த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் –
    த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
    ஓங்காரம்
    சமதிசத்–தெரிவித்தது –

    ஒமிதி ஏக அஷரம்-சம்ஹிதாகாரத்தில் நோக்கு -சாந்தி பெற்ற ஆகாரம் -மூலம் ஒரே அஷரம் -ஒரே பதம்
    அசம்ஹிதாகாரம் -சந்திபெறாத  -ஆகாரத்தால் மூன்று அஷரம் மூன்று பதம் –

    —————

    மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
    சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
    ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
    தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
    2-

    பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

    மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
    மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

    நமஸா –
    நமஸ் ஆனது

    பும்ஸ ஸ்வரூபம் –
    ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

    கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
    சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

    புரத ஈஷிதேன நமஸா –
    முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

    ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
    ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

    கதிர் சிஷிதா –
    உபாயம் சிஷிக்கப் பட்டது –

    பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
    பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

    கம்யம் சிஷிதம் –
    உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

    இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

    ஸ்வா தந்த்ர்யம்
    நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
    சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

    நாநியோசித-
    அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

    தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
    தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
    இதி -இவ்வண்ணமாக
    விவிச்ய கதிதம் –
    வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
    தத -ஆதலால்
    ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
    கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
    நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
    பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
    ஓம் நம -நம நம -நாராயண நம –

    ————————

    அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
    நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
    யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
    அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: |
    |-3-

    நான் எம்பெருமானுக்கே உரியவன். ஆகையால் எனக்குரியனல்லன். ஆத்மாக்கள் அழிகிற பொருள்களின் திரள் இரண்டுக்கும் கதி எம்பெருமான் என்பதை நாராயண பதம் கூறுகிறது. கைங்கர்யம் உடன் பிறந்தது. கால வரையறை இன்றி எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் கைங்கர்யத்தை வலியுறுத்துகிறது.

    அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
    அஹம் அகார்த்தாய ஏவ ஸ்வம்-
    மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே சேஷ பூதன் -பிரணவார்த்தத்தை
    அத
    அதற்க்கு மேலே
    அஹம் மஹ்யம் ந –
    நான் எனக்கு உரியேன் அல்லேன் -நம பதார்த்தத்தை அனுவதித்தபடி-

    அகாரம் லுப்த சதிர்த்தி உகாரம் மகாரம் நான்கினுடைய அர்த்தமும் அடைவே பொருந்தி இருக்கும் படி அருளிச் செய்கிறார்
    நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
    நாராயண பதம் -நாராயண பதமானது
    நராணாம் நித்யா நாம் -நிவஹா -தேஷாம் -அய நம் இதி
    -நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரபூதன் -தத் புருஷ சமாசம்
    நராணாம் நித்யா நாம் -நிவஹா யஸ்ய அயனம் –
    நித்ய வஸ்துக்களின் திரளை ஆதாரமாக யுடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்-

    யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ-
    யாம் ஆஹ-அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-
    யாவன் ஒரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ
    அசமி -இந்த எம்பெருமானுக்கு
    காலம் சகலம் அபி -எல்லா காலங்களிலும்
    சர்வத்ர -எல்லா இடங்களிலும்
    சகலா ஸூ அவஸ்தா ஸூ -எல்லா அவச்தைகளிலும்
    மம-என்னுடைய
    சஹஜ கைங்கர்ய விதய -இயற்கையான அடிமைத் தொழில்
    ஆவிஸ் ஸ் யு -விளையக் கடவன
    சரமபதத்தின் அர்த்தத்தை அனுவதித்தபடி –

    ————

    தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
    ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
    ஆத்மத்ராணோந்முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸலோல:
    சப்தம் நாராயணாக்யம் விஷய சபலதீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||
    -4-

    பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்தச்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. ​தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ​’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும்போது நாராயண என்னும் பதப்பொருள் நோக்கத்தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம்போது சதுர்த்தியின் பொருள் உணரத்தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ்விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக்கொள்ள வேண்டியது.

    தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
    தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
    தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
    த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
    பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
    ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
    ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
    ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
    பிரதம பதம் வித்யாத் –
    முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
    இதர சேஷத்வதீ சேத்-
    அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
    த்வதீயம் பதம் வித்யாத்
    இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
    ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
    ஆத்மத்ராண உந்முக சேத் –
    ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
    நம இதி பதம் வித்யாத் –
    நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
    பாந்த ஆபாஸ லோல –
    ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
    நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
    நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

    விஷய சபலதீச் சேத சதுர்தீம்
    சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
    நாராயண பதத்தின் மேல் யுள்ள
    வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

    ப்ரபன்ன
    இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
    பிரபன்ன அதிகாரி –

    திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
    உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
    பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
    முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
    நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
    இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
    நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
    ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
    தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

    ————

    நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
    கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
    ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
    தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
    -5-

    இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

    நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
    நேத்ருத்வம் –
    புருஷகாரத்வத்தையும்
    நித்யயோகம்-
    ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
    சமுசித குணஜாதம் –
    இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
    தநுக்யாப நம் ச-
    திரு மேனியைக் காட்டுதலையும் –
    உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
    உபாயம் –
    உபாயத்தையும் –
    கர்த்தவ்யபாகம் –
    சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
    த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
    இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
    மேவம் ப்ரசித்தம்-
    இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

    ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
    ஸ்வாமித்வம் –
    சர்வ சேஷித்வத்தையும்
    ப்ரார்த்த நாஞ்ச –
    கைங்கர்ய பிரார்த்தனையையும் –
    பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
    மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
    தசைதான்

    மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
    மந்தாரம் –
    மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
    த்ராயதே இதி
    காப்பாற்றுகின்றது என்று
    சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
    அயம்
    அந்த த்வயம் மந்த்ரமானது
    ஏதான் தச
    இந்த பத்து அர்த்தங்களையும்
    அதிகத நிகம
    வேத ப்ரதீதமாயும்
    த்வீ கண்ட
    இரண்டு கண்டங்களை யுடையதாயும்
    ஷட்பத
    ஆறு பதங்களை யுடையதாயும்-

    த்ராயதே இதி
    காப்பாற்றுகின்றது என்று
    ஏவம் ப்ரசித்தம்-
    இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
    1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
    2- மத்-நித்ய யோகத்வம்
    3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
    4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
    5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
    6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
    7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
    8-நாராயண -ஸ்வாமித்வம்
    9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
    10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
    கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

    ——————

    ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
    ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
    இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
    கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம: ||–6-

    பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

    ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
    ஈசாநாம் ஜகதாம் -ஜகதாம் ஈசா நாம்
    உலகங்களுக்கு
    அதீச தயிதாம் –
    சர்வேஸ்வரனுக்கு பிராண வல்லபையுமாய்
    நித்ய அநபாயாம் –
    ஒரு பொழுதும் விட்டுப் பிரியாத வளாய் இருக்கின்ற –
    ச்ரியம்-
    பெரிய பிராட்டியாரை-

    சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே-இஷ்ட உபாயதயா-
    சம்ச்ரித்ய –
    புருஷகாரமாகப் பற்றி
    ஆஸ்ரயணோசித அகில குணச்ய –
    சரண வரணத்துக்கு   பாங்கான சகல குணங்களையும் யுடைய
    அங்க்ரீ ஹரே –
    எம்பெருமானுடைய திருவடிகளை
    ஆஸ்ரயே இஷ்ட உபாயதயா –
    இஷ்ட உபாயதயா ஆஸ்ரயே –
    இஷ்ட சாதனமாகப் பற்றுகிறேன்
    ஆக பூர்வ கண்டார்த்தம் அனுசந்தித்த படி –

    ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய -கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-
    பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ள
    சர்வ சேஷியான நாராயணனுக்கு
    அஹம் நிர்மம-
    கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதும் இல்லாத அடியேன் –
    தாஸ்யம் அசேஷம் –
    அசேஷம் தாஸ்யம் –
    சகலவித கைங்கர்யத்தையும்
    அப்ரதிஹதம் நித்யம் –
    இடையூறின்றி நித்யம்
    அர்த்தயே கர்த்தும் –
    செய்யும் பொருட்டு பிரார்த்திக்கிறேன் –

    கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
    இது  வாக்யார்த்த  பிரதிபாதாக ஸ்லோஹம்
    சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
    அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
    ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
    ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
    சத் சம்ப்ரதாய சாராம்சம் –

    ————

    மத் ப்ராப்த்யர்த்த தயா மயோக்தமகிலம் ஸந்த்யஜ்ய தர்மம் புன:
    மாமேகம் மதவாப்தயே சரணமித்யார்த்தோவசாயம் குரு |
    த்வாமேவம் வ்யவஸாய யுக்தமகிலம் ஞாநாதி பூர்ணோஹ்யஹம்
    மத்ப்ராப்தி ப்ரதிபந்தகம் விரஹிதம் குர்யாம்சுசம் மாக்ருதா: ||
    -7-

    என்னை அடைவதற்குறுப்பாக நான் கூறின எல்லா உபாயங்களையும் விட்டு என்னை அடைய என்னையே ரக்ஷகமாக அடைவாய். மிக துக்கத்துடன் நிச்சயித்திரு. இப்படிப்பட்ட நிச்சயத்தை உடைய உன்னை, எல்லா வகையான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான், என்னை அடைவதற்குத் தடையாக உள்ளவைகளிலிருந்து உன்னை விடுதலை அடையச் செய்வேனாக. நீ சோகிக்க வேண்டா.

    மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந மாம் ஏகம்-
    மத் ப்ராப்தி அர்த்ததயா –
    என்னைப் பெருகைக்கு யுபாயமாக
    மயா உக்தம் –
    உன் மனத்தை சோதிப்பதாக என்னாலே சொல்லப் பட்ட
    அகிலம் சம்த்யஜ்ய தர்மம் –
    சகல தர்மங்களையும் விட்டு
    புந மாம் ஏகம் –
    மாம் ஏகம் புன –
    என் ஒருவனையே குறித்து-

    மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
    மநவாப்தயே சரணம் இத் யார்த்தோ வஸாயம்-
    ஆர்த்தி மிகுந்தவனாய்
    என்னைப் பெறுகைக்கு நானே உபாயம் என்கிற அத்யவசாயத்தை
    குரு-
    செய்வாயாக –

    த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
    த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் –
    ஏவம் விவசாய யுக்தம் த்வாம் -இத்தகைய அத்யாவசாயத்தோடே கூடிய என்னை
    அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்-
    ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான் –

    மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-
    மத் ப்ராப்தி ப்ரதிபந்தகைர் விரஹிதம் குர்யாம் –
    என்னைப் பெறுகைக்கு இடையூறாய் யுள்ள
    பாபங்கள் அற்றவனாய் செய்யக் கடவேன்
    சுசம் மா க்ருதா-
    துக்கம் கொள்ளாதே-

    —————

    நிஸ்சித்ய த்வததீநதாம் மயி ஸதா கர்மாத்யுபாயான் ஹரே:
    கர்த்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம் ஸீதாமி து:காகுல: |
    ஏதத் ஞாநமுபேயுஷோ மம புனஸ் ஸர்வாபராதக்ஷயம்
    கர்த்தா ஸீதி த்ருடோஸ்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் ஸாரதே! ||
    8-

    என்னிடம் உள்ள கர்மம் முதலிய உபாயங்களை எப்போதும் உன் அதீநமாகவே நிச்சயித்து, எம்பெருமானே! கர்மங்களைச் செய்யவும், விடவும் அல்லது சரணாகதி செய்வதற்கும் திறமையற்றவனாக வருந்துகிறேன். மிக வருத்தத்தால் கலங்குகிறேன். இந்த அறிவை அடைந்துள்ள எனக்கு உள்ள எல்லா வகையான குற்றங்களையும் அழித்து ரக்ஷிக்கக் கடவாய் என்பதை உனது கடைசியான வார்த்தையைக் கேட்டுத் தெளிகிறேன்.

    நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
    நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா
    மயி சதா த்வத் அதீந தரம் நிச்சித்ய –
    அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
    ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்திகளை யுடையவன் என்பதை நிச்சயித்து –
    கர்மாதி உபாயான் –
    கர்மாதி உபாயான் -கர்ம யோகம் முதலான் உபாயங்களை
    ஹரே-
    எம்பெருமானே-
    கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
    கர்த்தும் த்யக்தும் அபி –
    செய்வதற்கும் விடுவதற்கும்
    பிரபத்தும் –
    பிரபத்தி பண்ணுவதற்கும் –
    அநலம் ஸீதாமி துக்காகுல-
    அசமர்த்தனாய் -மிகவும் துக்கப்படா நின்றேன்-

    ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
    ஏதத் ஞானம் உபேயுஷே மம –
    பகவானே உபயம் என்று துணிந்து இருக்கை யாகிற
    இந்த அத்யாவசாயத்தை பெற்று இருக்கும் அடியேனுக்கு
    புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
    சகல பாப  நிவ்ருத்தியையும்
    தேவரீரே பண்ணித் தர வல்லீர் என்று கொண்டு-

    த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-
    த்ருடோச்மி-த்ருட அஸ்மி –
    துக்கம் அற்று நிர்ப்பரனாய் இருக்கின்றேன்
    தே சாராதே –
    பார்த்த சாரதியாய் நின்ற தேவரீருடைய
    து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே
    கடைசியான வாக்யத்தை ஸ்மரித்துக் கொண்டு –

    நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
    மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
    பிரபத்தும் அபி அநலம்-
    ஸ்வரூப அனுரூபத்வம்
    சுக ரூபத்வம்
    நிரபாயத்வம்
    சித்தத்வம்
    ச்வத பல சாதனத்வம்
    நிரபேஷத்வம்
    அவிளம்பித பலபிரதத்வம்
    ஏகத்வம்
    முதலானவற்றாலே சுகரமாய் இரா நின்ற உபாயமானது
    சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
    அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
    ஆர்த்தி இல்லாமையாலும்
    ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
    மகா விசுவாசம் இல்லாமையாலும்
    சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
    துக்காகுல சீதாமி –
    சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

    பூர்வார்த்தத்தில் சீதாமி -என்றும்
    உத்தரார்த்தத்தில் த்ருடோச்மி-என்றும் சொன்ன இவற்றால்
    தன்னை நோக்கும் அளவில் அவசாதமும்
    எம்பெருமானை நோக்கும் அளவில் தந் நிவ்ருத்தி பூர்வகமான நிர்பரத்வ அனுசந்தானமும்
    இவ்வதிகார்க்கு யாவாஜ் ஜீவனமும் அனுவர்த்திக்கும் -என்றது ஆயிற்று –

    ———————————————————————————–

    ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
    பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை -7-21-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

    January 8, 2024

    சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயமார்ஜிதம் போலே –
    திரு மந்தரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –சூரணை -7-

    இப்படி சிஷ்யனாய் நின்று இம் மந்திர சிஷை பண்ணி இவ்வழி யாலே ஞானம் பிறக்க வேணுமோ ?
    ஞானக் கலைகள் என்கிறபடியே சகல சாஸ்திரங்களும் ஞான சாதனமாய் அன்றோ இருப்பது –
    அவற்றை அப்யசித்து அவ்வழியாலே ஞானம் பிறந்தாலோ என்ன –

    சாஸ்திர ஜன்ய ஞானத்துக்கும் இம் மந்திர  ஜன்ய ஞானத்துக்கும் உண்டான விசேஷத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-

    அதாவது தத்வ ஞான ஜனகங்களான ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல சாஸ்த்ரங்களாலும்
    சேதனருக்கு பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜித தனம் போலே அத்யாயாச லப்யமாய் இருக்கும் -என்கை-
    சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம் புதேச்சல நகாரணம்  உபதேசாத் ஹரிம் புத்த்வா விரமேத் சர்வ கர்மஸூ -என்னக் கடவது இறே –

    இத்தால் சாஸ்த்ரங்களில் காட்டிலும் தத் ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆயிற்று

    ————————————

    பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் –சூரணை-8-

    ஆனால் சாஸ்திரங்கள் ஒழிந்தாகிறது-பகவந் மந்த்ரம் தான் இது ஓன்று அன்று இறே-
    பின்னையும் பல இல்லையோ -என்கிற சங்கையிலே மந்த்ரங்களில் காட்டில் இதுக்கு
    உண்டான வைபவத்தை அருளி செய்வதாக திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –

    ஆஸ்தாம் தே குண ராசிவத் குணா பரிவாஹ ஆத்மாநாம் ஜன்மனாம் சங்க்ய்யா-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்த்வம்-2-74-
    ஸ்ரீ ரெங்க நாதா உன் கல்யாண குணங்களை போல அவற்றை  உணர்த்தும் உன் அவதாரங்களும் பல –

    (ஆஸ்தாம் தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜன்மனாம்
    சங்க்யா பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரெங்கேஸ்வர
    அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி
    ப்ரீணீஷே ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே –74-

    ஹே ரெங்கேஸ்வர தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் –தேவரீருடைய குண சமூகங்களுக்குப் போலே ஆத்ம குணங்களுக்கு பரிவாக ரூபமான

    ஜன்மனாம் சங்க்யா ஆஸ்தாம்–அவதாரங்களும் எண்ணிக்கை யானது கிடக்கட்டும்

    ஆஸ்தாம் – அநாதார யுக்தி–எண்ணிறந்த வித்துவான்கள் சேஷ்டிதங்கள் இருந்தாலும் அர்ச்சாவதாரங்களைப் பார்த்தால் பரத்வ ஸ்தானமே

    பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு -இப் பூ மண்டலத்தில் உள்ள ஆலயங்களிலும் க்ருஹங்களிலும் ஆஸ்ரயங்களிலும்

    அர்ச்சயஸ் –ஆராதிக்க அரியவராயும்

    சர்வ ஸஹிஷ்ணு –எதையும் சகிப்பவராயும்

    அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி–அர்ச்சகர்களுக்கு பரவசப்பட்ட சகல நிலைமைகளையும் உடையராய்

    ப்ரீணீஷே –உகந்து அருளா நின்றீர்-

    ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே–அப்படிப்பட்ட தேவருடைய சீல குணத்தினால்

    ச ஹ்ருதயர்–ஆழ்வாராதிகள் – மோஹிக்கிறார்கள்

    குணங்களும் அவதாரங்களும் எண்ணிறந்தவையாய் இருந்தும் ஸ்ரீ கோயில்கள் வீடுகள் ஆசிரமங்களில்
    அர்ச்சக பராதீனமாக மகிழ்ந்து இருக்கும் ஸுவ்சீல்யம் என்னே-

    பின்னானார் வணங்கும் ஜோதி -நம் போல்வாருக்கு அன்றோ
    ஸ்ரீ ரெங்கா
    நீ உன் கடாக்ஷ வீக்ஷணங்களை வழங்கி யோக நித்திரை பண்ணி அருள்கிறாய்-

    அர்ச்சாவதார பரமான ஸ்லோகம் -தேவருடைய ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள் போலே
    அவற்றுக்கு பிரகாசகங்களான வ்யூஹ விபவ அவதாரங்களும் அசங்க்யாதங்கள் ஆகையால் பேச முடியாது–

    குணங்களைப் போலவே ப்ரவாஹ ரூபமான அவதாரங்களும் எண்ணிறந்தவை அன்றோ – அது இருக்கட்டும் –

    தேவர் பூமியில் உண்டான ஸ்ரீ கோயில்களிலும் மாளிகைகளும் ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற
    எல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் –
    மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து ஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய்
    அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –

    அப்படிக்கொத்த அந்யாத்ருசமான தேவர் ஸீல குணத்தால் சஹ்ருதயர் எல்லாம் ஈடுபடும்படி யாய்த்து என்கிறார் –

    மத்துறு கடை வெண்ணெய் எத்திறம் என்று ஈடுபடுவபர்கள் இதில் ஈடுபடச் சொல்ல வேணுமோ -என்றபடி –)

    பாகவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய ஸந்தி தே -அயோத்யா காண்டம் -2-26-
    தசரதனே உனது புத்ரனுக்கு கல்யாண குணங்கள்

    பல த்வாநந்த குணச்யாபி ஷாட் ஏவ பரதமே குணா –
    பஹுநீ மே வ்யதீதானி ஜன்மானி தவசார்ஜுனா-என்றும்

    எண்ணில் தொல் புகழ்-திரு வாய் மொழி -3-3-3–என்றும்

    எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –திரு விருத்தம் -1-என்றும்-இத்யாதிகளில் சொல்லுகிற படியே

    பகவத் குணங்களும் -குண பரிவாக ரூபங்களான அவதாரங்களும் –
    அசங்க்யாதமாய் இருக்குமா போலே -அவற்றை அனுபந்தித்து இருக்கும்
    மந்திர விசேஷங்களும் -அநந்தா வை பகவந் மந்த்ரா -என்கிறபடியே அநேககங்களாய்  இருக்கும் என்கை-

    —————————————–

    அவை தான-வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –சூரணை -9

    அவை எல்லாம் தான் ஏக வர்க்கமோ என்ன -இரண்டு வர்க்கம் என்கிறார் –
    அதாவது
    சர்வ வியாபகமான பகவத் ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கையாலே வியாபகங்கள் என்றும் –
    பகவத் அவதார குண சேஷ்டிதங்களில் ஓர் ஒன்றை பிரதிபாதிக்கையாலே -அவ்யாபகங்கள் என்றும் –
    உபய வர்க்கமாய் இருக்கும் என்கை –

    ————————————————–

    அவ்யாபகங்களில் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் –சூரணை -10

    வர்க்க த்ரயமும் தன்னில் ஒக்குமோ -என்ன –
    அதாவது –
    அவ்யாபகங்களாய் இருந்துள்ள சகல மந்த்ரங்களிலும் –
    நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் –
    என்று விஷ்ணு காயத்ரியில் ஒதப்படுகிற -வியாபக மந்த்ரங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்களாய்  இருக்கும் என்கை –

    இந்த விஷ்ணு காயத்ரியில் -நாராயண வாஸூதேவ -விஷ்ணு -சப்தங்கள்
    அந்த மந்திர த்ரயத்துக்கும் பிரதான பூத நாம த்ரயங்கள் ஆகையாலே -சாதாரண பிரணவ நமஸூ க்களோடு கூடின
    மந்திர த்ரயத்துக்கும் உப லஷணமாகக் கடவது –

    (நாமங்களுக்கு ஓம் ஆய நம மூன்றும் -சேர்த்தால் மந்த்ரங்கள் ஆகும்
    இந்த மூன்றுக்கும் தான் நம முன்னாக வரும் -மற்றவை ஓம் கேசவாயா நம போல இருக்கும்

    ——————————————–

    இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்-சூரணை -11-

    இந்த வியாபக மந்திர த்ரயமும் தன்னில் ஒக்குமோ என்ன –
    அதாவது
    அவ்யாபகங்களில் காட்டில் ஸ்ரேஷ்டமாய் இருந்துள்ள இவ் வியாபக மந்த்ரங்கள்
    மூன்றிலும் வைத்து கொண்டு
    நாராயணாய வித்மஹே என்று பிரதமோபாத்தம் ஆகையாலும் –
    அர்த்த பூர்த்தி யாதிகளாலும் –
    நாஸ்தி சாஷ்டாஸ்ராத்பர , ந மந்த்ரோஷ்டாஷராத்  பர -என்னும்படியான பெருமை உடைய பெரிய திரு மந்த்ரம்
    பிரதானமாய் இருக்கும் என்கை –

    (ஆதி சப்தம் சிஷ்ட பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது
    நாஸ்தி சாஷ்டாஸ்ராத்பர , ந மந்த்ரோஷ்டாஷராத்  பர -யாதொருபடி ஸர்வ தேவதைகளிலும் வைத்துக் கொண்டு நாராயணனைக் காட்டிலும் பரனில்லை
    அப்படியே ஸர்வ மந்திரங்களிலும் வைத்துக் கொண்டு திரு அஷ்டாக்ஷரியில் காட்டில் பரமில்லை
    பூத்வேதி -புத்திரர்கள் சிஷ்யர்களைக் குறித்து கை எடுத்து சபதம் பூர்வகமாகச் சொல்கிறேன்
    திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமமான ஒரு மந்த்ரம் இல்லை
    பெரிய திருமந்திரம் ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளால் ஸ்ரேஷ்டமாகப் ப்ரதிபாதிக்கப்பட்ட பெருமையை யுடைய திருமந்திரம் ஸ்ரேஷ்டமாய் இருக்கும் என்று மூலார்த்தம்)

    ————————————————–

    மற்றவை இரண்டுக்கும் அசிஷ்ட பரிக்ரஹமும் அபூர்த்தியும் உண்டு –சூரணை -12

    மற்ற வியாபக த்வயத்துக்கும் தாழ்வு என்ன –
    அதாவது
    வாஸூதேவ விஷ்ணு சப்தங்களான மற்றை வியாபக மந்த்ரங்கள் இரண்டுக்கும்
    நாராயண சப்தம் போலே
    ஸ்வரூப ரூப குணாதிகளை எல்லாம் பிரதிபாதியாதே –
    ஸ்வரூப மாத்ரத்தை பிரதி பாதிக்கையாலே –
    நிர்  விசேஷ சிந்மாத்ரா வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் மிகவும் ஆதரித்துப் போருகையாகிற
    அசிஷ்ட பரிக்ரஹமும் –
    வியாப்ய அத்ய ஆகாராதிச அபேஷதை ஆகிற அபூர்த்தியும் உண்டு என்கை –

    (ஆதி சப்தம் விபூதிகளைச் சொல்லுகிறது
    குத்ருஷ்டிகள் -சங்கராதிகள்-நிர்விசேஷ சின் மாத்ர வஸ்து வாதிகள் )

    ஷட் அஷரி -வியாப்ய பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் -வியாபகனுடைய குணங்களையும்
    சொல்லாதே -வியாப்தி மாத்திர பிரகாசம் ஆகையாலே -அபூர்ணம் –

    வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் -வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
    சர்வம் வசதி-என்ற அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் –
    அதில் குணம் அன்வயியாமையாலும் இனி குண சித்திக்காகா பகவந் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
    வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் -திரு த்வாதச அஷரியும் அபூர்ணம்

    (ஷட் அஷரி ஓம் நமோ விஷ்ணவே என்பது
    திரு துவாதச அஷரி -ரெங்கநாதனுக்கு ஆராதன மந்த்ரம் -ஸர்வத்ர வசதீதி வாஸூ தேவ)

    இம் மந்த்ரம் அவை போலே அன்றி –
    வியாப்ய பதார்த்தங்களோடு
    வியாபன பிரகாரத்தோடு
    வியாபன பலத்தோடு
    வியாபனுடைய குணங்களோடு
    வாசி அற சாப்தமாக காட்டுகையாலே -அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த
    பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு –
    பரந்த ரகசியம் -என்று மற்ற வியாபக மந்த்ரங்கள் இரண்டினுடைய அபூர்தியையும்
    திருமந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் ஸூ ஸ்பஷ்டமாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே

    —————————————————–

    இத்தை வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –சூரணை -13-

    இதுக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்
    அதாவது

    விஷ்ணு காயத்ரியிலே வியாபக மந்திர த்ரயத்தையும் சொல்லுகிற அளவில்
    பிரதமத்தில் நாராயண சப்தத்தை பிரதானயேன பிரதி பாதிக்கையாலும் –

    விச்வம் நாராயணம்  -என்று தொடங்கி
    நாராயண பரம் ப்ரஹ்ம தத்தவம் நாராயண பர
    நாராயண பரோ ஜ்யோதி ராதமா நாராயணா பர யச்ச
    கிஞ்சிஜ் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர்பகிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித –
    என்று சகல வேதாந்த சார பூதமான நாராயண அனுவாகத்திலும் –

    (விஸ்வம் நாராயணம் -ஸ்வா தீன ஸர்வ தத்வ த்ரயம் -பத்த முக்த நித்ய த்ரிவித ஆத்மாக்களுக்கும் போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண த்ரிவித
    அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து தாரண நியமன ரக்ஷணங்களைப் பண்ணிக்கொண்டு இருக்குமவனாய்)

    (பர ப்ரஹ்ம வாஸ்யனும் நாராயணனே -பர தத்துவமும் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே -பரமாத்வாவும் நாராயணனே
    இந்த ஜகத்தில் ப்ரத்யக்ஷத்தால் காணப்படும் -ஸ்ருதியால் கேட்கப்பட்டும் இருக்கிறது யாதொரு வஸ்து -அந்த ஸகல பிரமாண
    ப்ரதிபின்னமான ஸகல வஸ்துக்கள் எல்லாவற்றிலும் உள்ளோடும் புறம்போடும் வாசியற வியாபித்து அந்தராத்மாவாய்க் கொண்டு நிற்குமவன் நாராயணனே)

    ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மோ நேசானோ நேம த்யாவாப்ருதிவி -என்று மகா உபநிஷத்திலும்
    (ஒன்றும் தேவும் இத்யாதியால் -நம்மாழ்வார் இத்தை அருளிச் செய்கிறார் )

    (நாராயணன் ஒருவனே உளனாவான் -பிரம்மாவும் இல்லை -ருத்ரனும் இல்லை -இந்த்ராதிகளும் இல்லை நக்ஷத்ரங்களும் இல்லை)

    சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -என்று தொடங்கி-
    திசச்ச பிரதிசச்ச நாராயணா -என்று முடிவாக நடுவு அடைய ஸூபால உபநிஷத்திலும்
    (கண்ணும் கருவியும் பார்க்க வேண்டியவையும் நாராயணனே )

    யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதுவீ  சரீரம் -என்று தொடங்கி
    யஸ்ய ம்ருத்யு சரீரம் -என்கிறது ஈறாக நடுவு உள்ள பர்யாயங்கள் தோறும்
    ஏஷ சர்வ பூதாந்த்ராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவா ஏகோ நாராயணா -என்று
    அந்தர்யாமி ப்ரஹ்மாணத்திலும்

    (காண்கின்ற கண்ணும் காணப்படும் பொருள்களும் நாராயணனே -கேட்க்கிற செவியும் கேட்க்கிற பொருள்களும் நாராயணனே
    திக்குகளும் விதிக்குகளும் நாராயணனே -யாவன் ஒருவனுக்கு ஜீவாத்மா சரீரமாய் இருக்கிறது –
    யாவன் ஒருவனுக்கு பிருத்வி சஈரமாய் இருக்கிறதோ யாவன் ஒருவனுக்கு ம்ருத்யு சரீரமாய் இருக்கிறதோ
    அவன் ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவாய் தத்கத தோஷம் தட்டாதபடி -அபஹத பாப்மாவாய் -பரமபத நிலையனாய் திவ்யமாய் இருக்கிற
    லீலா விபூதி யோகத்தால் தேவனாய் இப்படி சர்வாதிகனாகையாலே அத்விதீயனான நாராயணன்)

    வாஸூ தேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து-நாராயண சப்தத்தை இட்டு பகவத் ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும் –
    அபௌ ருஷேயமாய்
    நித்ய நிர்தோஷமாய்
    ஸ்வத பிரமாணங்களான வேதங்களும் விரும்பிற்றன

    எதா சர்வேர்ஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர
    ததா சர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாஷராத் பர-என்றும் நாரதீயம்

    (ஸ்வரூபாதிகளை–ஆதி ஸப்தத்தாலே குண சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது
    யாதொருபடி ஸர்வ தேவர்களிலும் வைத்துக் கொடு நாராயணனைக் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
    அப்படியே ஸர்வ மந்திரங்களில் வைத்துக் கொண்டு திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை)

    பூத்வோர்தவ பாஹூ ரதயாத்ர சர்வ பூர்வம் ப்ரவீமிவ
    ஹே புத்திர சிஷ்யா ஸ்ருணுத ந மந்த்ரோஷ்டாஷராத் பர-என்றும்

    சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிரஷ்டாஷரோ
    ந்ருனாம் அபு நர்ப்பவ காங்க்ஷினாம் ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச-என்றும்

    (புத்ர சிஷ்யர்களைக் குறித்து கை எடுத்து சபத பூர்வகமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள் -திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
    ஸர்வ வேதாந்த ஸாரமான அர்த்தமாய் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்துவதான திரு அஷ்டாக்ஷரம் மோக்ஷ காங்க்ஷி களான புருஷர்களுக்குப் புகலிடம்)

    பீதா கோரேஷு சவ்யாதிஷு வர்த்த மாநா சங்கீர்த்தாயா நாராயண  சப்த மாதரம்
    விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்தி நாரயணோதி சப்தோச்தி வாகச்தி வசவர்த்திநீ-என்றும்

    ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -என்றும்

    கிம் தத்ர பஹூபிர்  மந்தரை கிம் தத்ர பஹூபிர் விரதை
    நமோ நாராயண  யேதி மந்திர  சர்வார்த்தாதா   சாதகா -இத்யாதிகளாலே –

    வேதார்த்த உப ப்ரஹ்மணங்களாய் இருக்கிற ஸ்வ பிரபந்தங்களிலே பல இடங்களில்
    இத்தை ஸ்லாகித்துக் கொண்டு சொல்லுகையாலே –
    வேதார்த்த விசதீ கரண பிரவ்ருத்தரான வ்யாசாதி பரம ருஷிகளும் விரும்பினார்கள்

    (நாராயணன் என்கிற ஸப்தம் உண்டு -அதைச் சொல்லுவதற்கு வாக் இந்திரியம் உண்டு
    இப்படி இருக்க கோரமான நரகத்தில் எவ்வாறு விழுகின்றார்கள் -இது ஒரு பெரிய ஆச்சார்யமே
    திரு மந்திரமானது ஸர்வ அர்த்தத்தையும் சாதித்துக் கொடா நிற்கும் -அது உண்டாய் இருக்க அநேக மந்திரங்களால் என்ன பிரயோஜனம் உண்டு –
    வியாஸாதிகள் -ஆதி ஸப்தத்தாலே பராசர வால்மீகி ஸூக ஸுநகாதிகளைச் சொல்லுகிறது)

    வண் புகழ் நாரணன் -1-2-10
    செல்வ நாரணன் -1-10-8–என்று தொடங்கி
    வாழ் புகழ் நாரணன் –10-9-1-
    என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

    நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
    ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று பெரிய ஆழ்வாரும் –

    நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
    நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

    நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
    எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று திரு மழிசைப் பிரானும்
    (நான்முகன் திருவந்தாதி முதலிலும் திருச்சந்த விருத்தம் பின்பும் )

    நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
    மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று திரு மங்கை ஆழ்வாரும்
    உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

    நன் மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
    நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
    ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
    நாரணன் தன் நாமங்கள் 2-2-
    பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
    நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

    மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
    சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –

    (நம்மாழ்வாரை முந்துற அருளிச் செய்தது அவயவி பூர்வகமாக அருளிச் செய்ய வேணும் என்னும் அபிப்ராயத்தாலே)

    இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
    உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
    உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-

    இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில்
    இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

    ———————————————

    வாஸ்ய பிரபாவம் போலே அன்று வாசக பிரபாவம் –சூரணை-14-

    இனி வாஸ்யம் தன்னிலும் இதுக்கு உண்டான வைபவத்தை அருளிச் செய்கிறார் –
    அதாவது
    இதுக்கு வாஸ்யனாய் இருந்துள்ள ஈஸ்வரனுடைய பெருமை போல அன்று
    தத் வாஸகமான இதன் பெருமை என்ற படி –

    ———————————————-

    அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்–சூரணை -15-

    அது தான் ஏது என்ன அருளிச் செய்கிறார்
    அதாவது
    இதுக்கு வாஸ்யன் ஆனவன் ஸந்நிஹிதன் அன்றிக்கே தூரஸ்தனாய் இருந்த காலத்திலும் –
    வாஸகமான இது ஆசந்னமாய் நின்று
    தன்னை அத்யவசித்தவர்கள் அபேஷிதங்களைச் சாதித்துக் கொடுக்கும் என்கை-

    ————————————————-

    திரௌபதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது திருநாமம் இறே–சூரணை -16

    இப்படி வாச்யன் தூரஸ்தனாய் இருக்க வாசகம் உதவின இடம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்

    அதாவது
    மகா சதச்சிலே துச்சாசனன் வஸ்த்ர அபகாரம் பண்ணுகிற போது-
    மகாத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
    முன்பே  ஸ்ரீ வசிஷ்ட மக ரிஷி சொல்லி வைத்ததை நினைத்து –
    சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலய அச்யுத  கோவிந்த புண்டரீ காஷா ரஷமாம் சரணா கதாம் -என்று
    சரணம் புகுந்த த்ரௌபதிக்கு  அவ் வபத்திலே கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணமாம் தூரா வாசினம்-என்கிறபடியே

    வாச்யனான கிருஷ்ணன் தூரஸ்தனாய் இருக்கச் செய்தேயும் –
    வஸ்த்ரத்தை வர்த்திப்பித்து கொடுத்தது அவ் வவதாரத்துக்கு வாசகமான கோவிந்தன் என்கிற திரு நாமம் இறே என்கை –

    நாராயண சப்த்தத்தில் ஏக தேசத்துக்கு வாசகமான ஒரு திரு நாமம் செய்த படி கண்டால் இதின் பிரபாவம்
    கிம்புநர் நியாய சித்தம் இறே என்று கருத்து –

    (மஹா சதஸ்ஸிலே -பீஷ்ம த்ரோணாதிகள் போன்ற மஹான்கள் உள்ள சதஸ்ஸிலே -பெரிய சதஸ்ஸிலே என்றுமாம்
    இறே –மஹா பாரத ப்ரஸித்தம்
    திருநாமம் இறே –கிருஷ்ணாவதாரத்துக்கு வாசகமான கோவிந்தன் என்னும் திருநாமம் அன்றோ)

    ———————————————–

    சொல்லும் க்ரமம் ஒழிய சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது –சூரணை -17-

    இன்னும் ஒரு பிரகாரத்தாலே இதின் பிரபாவத்தை அருளிச் செய்கிறார்

    அதாவது
    ஏதேனும் ஒரு மந்த்ரம் தன்னை தஞ்சமாக விச்வசித்து சொன்னவர்களுக்கு ஒழிய
    தன் கார்யம் செய்யாதே ஆகிலும் –
    இது அங்கன் இன்றி தன்னை தஞ்சமாக விச்வசித்து சொல்லுகிற க்ரமம் ஒழிய –
    சாங்கேத்யம்-பாரிஹாச்யஞ்ச ஸ்தோபம் ஹேளநம் ஏவ வா -என்கிற படியே சொல்லிலும்
    சொன்னவர்களுக்கு ரஷகம் ஆகையாகிற தன் ஸ்வரூபத்தில் நின்றும் நழுவ நில்லாது என்கை –

    அஜாமிளன் -சிசு பாலன் போன்றவர்களுக்கு உதவிற்றே-

    (சாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநம் ஏவ வா வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷ அநக ஹரம் விது —)

    (பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
    ஆரே யறிவார் அது நிற்க நேரே
    கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
    னடிக் கமலம் தன்னை யயன் —முதல் திருவந்தாதி—56-)

    ———————————————-

    இது தான் குலம் தரும் என்கிறபடியே எல்லா அபேஷிதங்களையும் கொடுக்கும் –சூரணை -18-

    இனி இதன் சர்வ அபேஷித பிரதித்வம் ஆகிற வைபவத்தை அருளிச் செய்கிறார் –
    அதாவது
    இம் மந்த்ரம் தான் குலம் தரும் என்று தொடங்கி -ஆழ்வார் அருளிச் செய்தபடியே –
    அதிகார  அனுகுணமான அபேஷிதங்களை எல்லாம் கொடுக்கும் என்கை –

    (குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 
    வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். )

    ——————————————

    ஐஸ்வர்ய கைவல்ய பகவ லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றை கொடுக்கும் –சூரணை -19

    அத்தை விசதீகரிக்கிறார்

    அதாவது
    ஐஹா லௌகிகம் ஐஸ் வர்யம் ஸ்வர்காத்யம் பார லௌகிகம் கைவல்யம்
    பகவன் தஞ்ச மந்த்ரோயம் சாதா இஷ்யதி -என்கிறபடியே
    ஐஹிஹமாகவும் பரலோககிகமாயும் இருக்கும் ஐஸ்வர்யத்தையும்
    ஆத்ம ப்ராப்தி ரூபமான கைவல்யத்தையும்
    பரம புருஷார்த்த பகவ லாபத்தையும்
    ஆசைப்பட்ட அதிகாரிகளுக்கு ஜப ஹோமாதிகளாலே ஸ்வயம் சாதனமாய் நின்று
    அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்கை –

    —————————————————-

    கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி
    அவற்றை தலைக் கட்டிக் கொடுக்கும் –சூரணை -20

    இனி கர்மா யுத்பாய சஹா காரித்வ ரூபமான இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
    அதாவது
    கர்ம யோகத்தில் இழிந்தவர்களுக்கு ஜப ஹோமாதிகளால் தன்னை சஹாயமாக கொள்ளும் அளவில் –
    கர்ம யோக ஆரம்ப விரோதியான -பாபத்தைப் போக்கி –
    அந்த கர்மத்தின் உடைய அவிச்சேதா பாதகமாய்க் கொண்டு
    அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும் –

    (கர்ம யோகமாவது -யஞ்ஞ தான தபோ த்யான ஸந்த்யாவந்தன மஹா யஞ்ஞ அக்னி ஹோத்ர தீர்த்த யாத்ர புண்ணிய க்ஷேத்ர வாஸ காசர
    சாந்தராயண புண்ய நதீ ஸ்நான சாதுர் மாஸ்ய பல மூலாசன ஸாஸ்த்ர அப்யாஸ ஸமாராதன ஜப தர்ப்பணாதி
    காய சோஷணத்தாலே பாப நாசம் பிறந்து
    அத்தாலே இந்திரிய த்வாரா பிரசரிக்கிற தர்ம பூத ஞானத்திற்கு ஸப்தாதிகள் விஷயம் அல்லாமையாலே விஷய சாபேஷை பிறந்து
    யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண த்யான ஸமாதி ரூப அஷ்டாங்க ரூப கிரமத்தாலே
    யோக அப்யாஸ காலத்து அளவும் ஞானத்துக்கு ஆத்மாவை விஷயம் ஆக்குகை
    இது தான் ஞான யோகத்துக்கு ஸஹ காரியாகவும் ஐஸ்வர்யத்துக்கு ப்ரதான சாதனமாயும் இருக்கும்)

    பிரதமத்திலே ஞான யோகத்தில் இழிந்தவர்களுக்கு தன்னை சஹாயமாக கொள்ளும் அளவில்
    கர்ம சாத்தியமான ஞான ஆரம்ப விரோதி பாப நிவ்ருத்தியைப் பண்ணி
    அந்த ஞானத்துக்கு நாள் தோறும் அதிசயத்தை பண்ணா நின்று கொண்டு –அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும்

    (ஞான யோகமாவது –யோக ஜன்ய ஞானத்திற்கு ஹ்ருதய கமலம் ஆதித்ய மண்டலம் தொடக்கமான ஸ்தல விசேஷங்களிலே
    எழுந்து அருளி இருக்கிற ஸர்வேஸ்வரனை விஷயமாகி அவ்விஷயம் தன்னை சங்கு சக்ர கதா பீதாம்பர க்ரீடாதி நூபுர அந்தமான்
    திவ்ய பூஷண அலங்ருத்தமாய் லஷ்மீ ஸஹிதமாயும் அனுபவித்து யோக அப்யாஸ கிரமத்தாலே அனுபவ காலத்தைப் போக்கி அனவ்ரத பாவனா ரூபம் ஆக்குகை)

    பக்தி யோகத்தில் இழிந்தவர்களுக்கு தன்னை சகாயமாக கொள்ளும் அளவில்
    பக்தி ஆரம்ப விரோதியான பாபத்தை போக்கி
    பக்தி விருத்தி  ஹேதுவாய்க் கொண்டு அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும் என்கை..

    (பக்தி யோகமாவது -தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி ஸநாதன ரூபமான அனுபவத்தை ப்ரீதி ரூபா பன்னம் ஆக்குகையும்
    அது தன்னை அறியப் பார்த்தால் ப்ராரப்த கர்மம் கழியும் படி சாதன ஸாத்யங்களை அனுஷ்ட்டித்து அதனுடைய
    சங்கோச விகாசமாம் படி பரிணமிப்பிக்கை)

    ————————————————–

    பிரபத்தியில் இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து
    காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் —சூரணை-21

    இங்கன் அன்றி பிரபன்னருக்கு இது செய்யும் உபகார வைபவத்தை அருளிச் செய்கிறார் –
    அதாவது –
    கீழ் சொன்னவை போலே
    துஸ் ஸகமுமாய்
    ஸ்வரூப விருத்தமாய் -இருக்கை அன்றிக்கே –
    ஸூசகமுமாய் –
    ஸ்வரூப அனுரூபமான பிரபத்தி உபாயத்தில் இழிந்தவர்களுக்கு

    தத் அனுரூபமான – பகவத் பாரதந்த்ய ரூப ஸ்வரூப ஞானத்தை விசதமமாகப் பிறப்பித்து-
    அர்த்த அனுசந்தாதிகளாலே  போது போக்குக்கைக்கும் ஹேதுவாய் –
    எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6- என்கிறபடியே –
    பிரதிபாத்ய வஸ்துவைப்   போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
    போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை-

    (ஸ்வரூப விருத்தமாய் -பாரதந்தர்ய ஸ்வரூப விருத்தமாய்
    ஸ்வரூப அனுரூபமாய் -பாரதந்த்ர ஸ்வரூப அனுரூபமாய்
    பிரபத்தி யுபாயத்திலே -ததேக உபாயத்வ பிரார்த்தனை யாகிற பிரபத்தி யுபாயத்திலே
    தத் அனுரூபமான -அந்த பிரபத்தி அனுரூபமான
    அர்த்த அநு சந்தானம் -ஸ்வார்த்த அனுசந்தானம்
    ஆதி ஸப்தத்தாலே மந்த்ர அனுசந்தானம்)

    (ப்ரதிபாத்ய வஸ்துவைப் போல் ஸ்வயம் போக்யமாகையாலே -ரஸோ வைஸ -என்றும்
    எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -என்றும் இத்யாதியில் படியே ப்ரதிபாத்ய வஸ்து ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே
    போகத்துக்கும் -ஸதா அனுபவத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்

    ப்ரபத்தியலே இழிந்தவர்களுக்கு ஸூ ஸகமாய் பாரதந்தர்ய ஸ்வரூப அனுரூபமாய் இருக்கும் பிரபத்தி உபாயத்திலே பிரவேசித்தவர்களுக்கு
    ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து–தத் அனுரூபமான பகவத் பாரதந்தர்ய ஸ்வரூப ஞானத்தை விசதமாக பிறப்பித்து
    காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்–போது போக்குகைக்கும் ப்ரதிபாத்ய வஸ்துவைப் போலே ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்று மூலார்த்தம்)

    (கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
    மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
    தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
    நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-)

    ————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ முமுஷுப்படி -திருமந்திர பிரகரணம்-ஸூர்ணிகை -1-6-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –/ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

    January 8, 2024

    முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று -ஸூரணை-1-

    ——

    முமுஷு ஆகிறவன் மோஷத்திலே இச்சை உடையவன் ஆவான் –
    யே முசில மோஷணே இறே தாது –
    இத்தால் சம்சார விமோசனத்தில் இச்சை பிறந்தவனுக்கு என்ற படி-

    (இத்தால் -இந்த முமுஷு பதத்தால்
    ஸம்ஸாரமாவது -புண்ய பாப நிபந்தமான அசித் சம்பந்தம்-அதாவது சித் ஸ்வரூபனான ஆத்மாவுக்கு அவித்யாதி காரணமான தேஹ சம்பந்தம்
    விமோசனம் -விடுகை
    இச்சை பிறந்தவனுக்கு -நிவ்ருத்தியிலே அபேக்ஷை பிறந்தவனுக்கு )

    (சம்சார நிர்வேதம் முதல் படி அன்றோ-விட்டே பற்ற வேண்டுமே-
    பகவத் ப்ராப்தியில் இச்சை வந்தால் தான் சம்சார நிவ்ருத்தியில் இச்சை உண்டாகும்

    மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு- என்றபடி

    மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
    நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
    வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
    பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

    எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
    விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –
    வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி–அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –
    அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம்-
    சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால எளிதாம் –

    பலம் ப்ராப்யம் உபேயம் புருஷார்த்தம் பேறு -பர்யாய சொற்கள்
    உபாயம் பிராபகம் ஆறு-பர்யாய சொற்கள் )

    ஆத்ம ப்ராப்தி காமனுக்கும் முமுஷ்த்வம் உண்டே ஆகிலும் இவ்விடத்தில் அவன் விவஷிதன் அன்று –
    அவனுக்கு ரகஸ்ய த்ரய ஞான அபேஷை இல்லை இறே –
    ஆகையால் இவர் முமுஷு என்கிறது –
    பகவத் ப்ராப்தி காமதயா சம்சார நிவ்ருத்தியிலே இச்சை பிறந்தவனை –

    (ஆத்ம பிராப்தி காமனுக்கு -ஆத்ம அனுபவத்தில் அபேக்ஷை பிறந்தவனுக்கு
    முமுஷ்த்வம் உண்டே ஆகிலும்-முமுஷு பத வாஸ்யத்வம் சிலர் அபிப்ராயத்தாலே உண்டே யாகிலும்
    இவ்விடத்தில் அவன் விவஷிதன் அன்று-இந்த முமுஷுவுக்கு என்ற பதத்தில் வாஸ்யனன் அன்று
    இவ்வர்த்தம் ஸ்ரீ கீதா ஸாஸ்த்ர ப்ரஸித்தம் )

    ஏவம் பூதன் ஆனவனுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று என்றது –
    இவனுக்கு அவசியம் ஞானதவ்யமாய் உள்ளது ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் ஆகையாலும்
    அவற்றை இந்த ரகஸ்ய த்ரயம் உள்ளபடி பிரதிபாதிக்கை யாலும் –
    ரகஸ்ய த்ரயமே அறிய வேண்டும் என்கை–
    ஸ்வ ஞானம் பிராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷுபி ஞான த்ரய உபாதேயம் ஏதத் அந்யந்ந கிஞ்சன –
    என்னக் கடவது இறே –

    (ஆச்சார்ய உபதேச பூர்வகமாக அறிய வேண்டும் எனது மேல் இக்கிரந்தத்திலேயே ஸூ ஸ்பஷ்டம்
    சகல வேதாந்த சார அர்த்தமாவது -அர்த்த பஞ்சகத்தைப் ப்ரதிபாதியா நின்று கொண்டு அதி குஹ்யங்களாய் இருக்கும் அன்றோ)

    ரகஸ்யம் மூன்று என்று இவர் உத்தேசிக்கிறது
    திருமந்த்ரமும்
    த்வயமும்
    சரம ஸ்லோகமும் ஆகிற
    இவற்றை என்னும் இடம் மேலே ஸூஸ்பஷ்டம்-

    இவற்றை ரகஸ்யங்கள் என்கிறது –
    சகல வேதார்த்த சாரார்த்த பிரதிபாதகதயா பரம குஹ்யங்கள் ஆகையாலே

    ஆக
    இவ் வாக்யத்தால் –
    அதிகாரி நிர்தேசமும் –
    தத் ஞாதவ்ய நிர்தேசமும்
    பண்ணி அருளினார் ஆய்த்து-

    (முமுஷுவுக்கு- என்றதால் அதிகாரி நிர்த்தேசமும்
    அறிய வேண்டிய ரஹஸ்யம் மூன்று -என்றதால் ஞாதவ்ய நிர்த்தேசமும் )
    (நான் யார் -என்ன அறிய வேண்டும் -இவற்றைச் சொன்னவாறு
    கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -திருமந்திர யாதாம்யார்த்தம் )

    ———————————————

    அதில் பிரதம ரகஸ்யம் திருமந்தரம் -ஸூரணை -2-

    இனி அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதம ரகஸ்யம் ஏது என்னும் ஆகாங்கஷையிலே அருளிச் செய்கிறார் –
    அதாவது –
    அந்த ரகஸ்ய த்ரயத்திலும் வைத்து கொண்டு -இவ் அதிகாரிக்கு பிரதமம் -ஞாதவ்யமான ரகஸ்யம் –
    ஸ்வரூப யாதாம்ய பரமாய் –த்யாஜ்ய  உபாதேய  விபாக ஞானத்தை
    பரிபூர்ணமாக பிறப்பிக்குமதான திரு மந்த்ரம் என்கை –

    இனி என்கிறது -அதிகாரி நீர்த்தேசியமும் ஞாதவ்ய நீர்த்தேயமும் பண்ணின அநந்தரம் என்றபடி
    இவ்வதிகாரிக்கு என்றது -பகவத் பிராப்தி காமதயா ஸம்ஸார நிவ்ருத்தியிலே இச்சை யுடையவனாய் ப்ரஸ்துதமான அதிகாரி என்றவாறு

    (ஸ்வரூப யாதாத்ம்ய பரம் – ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரதிபாதக பரம்-விபாக ஞானம் -விபாக விஷய ஞானம் )

    அநந்யார்ஹ சேஷத்வம்–அநந்ய சரணத்வம் –அநந்ய போக்யத்வம் -ஆகிற
    ஆகார த்ரயத்தையும் -பிரதிபாதிக்கையாலே –
    சேதன ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாய் –

    தத் அனுகுண த்யாஜ்ய உபாதேய விபாகத்தையும் –
    ஸூஸ்பஷ்டமாய் பிரதி பாதியா நின்று உள்ள இம் மந்த்ரத்தாலே -ஸூஷிததானவனுக்கு இறே
    மற்றை ரகஸ்யங்கள் இரண்டிலும் பிரதிபாதிக்க படுகிற உபாய  உபேயங்கங்களில் அபேஷை ஜனிப்பது –
    ஆகையால் ஸ்வரூப யாதாம்ய பரமான திரு மந்த்ரம் பிரதம ரகஸ்யம் என்னக் குறை இல்லை –

    (தத் அனுகுண-என்றது -பூர்வ யுக்த ஆகார த்ரய அனுகுணமான
    த்யாஜ்ய உபாதேய விபாகத்தையும் ஸூஸ்பஷ்டமாய்  -என்றது– ஸ்ரீ யபதித்வமு ம் -தத் ஏக உபாயத்வமும் -பாகவத சேஷத்வமும் -பகவத் பாகவத கைங்கர்ய பிரார்த்தனையும்
    ஸூஷிததானவனுக்கு-என்றது–நன்றாக சிஷிதனானவனுக்கு
    உபாய  உபேயங்கங்களில் அபேஷை ஜனிப்பது -என்றது -பகவானாகிற உபாயத்திலும் பகவத் கைங்கர்யமாகிற உபேயத்திலும் அபேக்ஷை உண்டாகிறது என்கிறபடி
    ஆகையால் என்றது -உபாய உபேயங்களிலே அபேக்ஷை ஜனிப்பது ஸ்வரூப யாததமய ஞான பூர்வகமாகையாலே என்றபடி
    ஸ்வரூப யாதாம்ய பரமான திரு மந்த்ரம் பிரதம ரகஸ்யம் என்னக் குறை இல்லை-என்றது -சம்சயம் இல்லை என்றபடி)

    இன்னமும் பிரணவத்துக்கு மந்திர சேஷம்  விவரணமாப் போலே –
    மந்திர சேஷத்துக்கு த்வயம் விவரணமாய் –
    த்வயத்துக்கு சரம ஸ்லோகம் விபரணமாய் இறே  இருப்பது –
    அந்த நியாத்தாலும் இதனுடைய பிரதாம்யம்  சித்தம் இறே –

    மந்த்ர சேஷம் என்றது -மந்திரம் என்று சொல்லப்படும் பிரணவத்துக்கு சேஷம்
    சேஷம் என்கிறது அதுக்கு வியாப்தமாகையாலே
    இங்கு மந்த்ர சேஷம் என்கிறது நம பதத்தையும் நாராயணாய பதத்தையும்

    (அ விளக்கம் உ ம -ஓம்
    அதுக்கு விளக்கம் நமோ நாராயணாயா
    அதுக்கு விளக்கம் த்வயம்
    அதுக்கு விளக்கம் சரம ஸ்லோகம்
    விவரண விவரணி பாவம்-இம் மூன்றுக்கும் உண்டே )

    ஆக இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி ஆய்த்து –
    பிரதம ரகஸ்யம் திரு மந்த்ரம் -என்று இவர் அருளிச் செய்தது –

    இத்தை மந்த்ரம் என்கிறது –
    மந்தாராம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
    சப்த சக்தியாலும் –
    அர்த்த போதனத்தாலும் –
    தன்னை அனுசந்திப்பார்க்கு ரஷகம் ஆகையாலே –

    மந்தாரம் என்றது அநுசந்தாதாரம் -என்றபடி
    சப்தத்துக்கு சக்தியானது பல பிரதான ஸாமர்த்யம்

    சப்த சக்தியாலே ரஷகமாம் –ஜப ஹோமாதிகளாலே கார்யம் கொள்ளும் உபாசகருக்கு –ஆதி ஸப்தத்தாலே –தர்பபண ப்ராஹ்மண போஜன தஷிணைகளைச் சொல்லுகிறது
    அர்த்த போதனத்தாலே ரஷகமாம் –ஈச்வரனே உபாயம் என்று இருக்கும் பிரபன்னருக்கு –

    அர்த்த போதனத்தாலே ரஷகம் ஆகையாவது –
    தேகாசக்தாத்ம புத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
    ஸ்வாதந்த்யாந்தோ யதி ஸ்யாத்  பிரதமம்
    இதர சேஷித்வ தீச்சேத் த்வதீயம்
    ஆத்ம த்ரானோந் முகச்சே நம இதி ச பதம்
    பாந்தவாபாச லோலச் சப்தம் நாராயணாக்யம்
    விஷய சபல தீச்சேத சதுர்த்தீம் பிரபன்ன -ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி தன்னை அனுசந்திப்பார்க்கு –

    1-தேக ஆத்மா அபிமானமும் (த்ருதீய -மகாரம்-ஞானமயன் – அறிந்து போக்க வேண்டும்- )
    2-ஸ்வாதந்த்ரியமும் (பிரதமம் -அகாரம் அறிந்து போக்க வேண்டும்–அறிவுடையவன் என்று அறிந்து
    நிமிந்து செருக்கி ஸ்வ தந்திர அபிமானம் போக்க -அ ஆய ம-அவனுக்கு அடிமை )
    3-அந்ய சேஷத்வமும் (த்விதீயம் உகாரம் -அவனுக்கே அடிமை )
    4-ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வயமும்
    5-அபந்து சங்கமும்
    6-விஷய பிராவணயமும்
    மேலிடாத படி பண்ணி ஸ்வரூப அனுரூபமாக நடக்கும் படி நோக்குகை –

    ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி பண்ணி நோக்குகையாவது -சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக யதேஷ்ட விநியோக அர்ஹமாக
    யதேஷ்ட விநி யுஜ்ய மாநனால் அநந்ய போக்யமாக நடக்கும்படி பண்ணி நோக்குகை

    —————————————–

    திருமந்த்ரத்தின் உடைய சீர்மைக்கு போரும்படி பிரேமத்தோடே பேணி அனுசந்திக்க வேணும் -ஸூரணை -3-

    இனி மேல் இம் மந்த்ரத்தின் உடைய வைபவத்தை விஸ்தரேண பிரதிபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
    பிரதமம் இதனுடைய அனுசந்தான க்ரம கதன முகத்தாலே இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –

    திரு மந்த்ரத்துக்கு சீர்மை யாவது –
    ரூசோ யஷும்ஷி சாமானி ததைவ ஆதர்வணா நிச சர்வ அஷ்டாஷரச்ந்தச்தம்என்கிறபடியே
    (சகல வேத ஸங்க்ரஹமாய் -மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே ஞாதவ்ய சகலார்த்த பிரதிபாதகமாய் –)

    (சகல வேத ஸங்க்ரஹமாய்-என்றது -லௌகிக சப்தங்களுக்கு வேதம் காரணமாய் -அந்த வேதம் தனக்கும் ப்ரணவம் காரணமான வழியாலே)

    (ஞாதவ்ய சகலார்த்தங்களாவன –அர்த்த பஞ்சகம் -தத் ப்ரதிபாதமாய என்றபடி)

    மந்த்ரானாம் பரமோ மந்திர குஹ்யானாம் குஹ்ய முத்தமம் பவித்ரம் ச பவித்ராணாம் மூல மந்த்ரஸ் சநாதன-என்கிறபடியே –
    மந்த்ரங்களில் வைத்து கொண்டு பரமமான மந்த்ரமாய் – குஹ்யங்களில் வைத்து கொண்டு உத்தமமான குஹ்யமாய் –
    பவித்ரங்களிலும் பவித்ரமாய் இருக்கிற கௌரவம்-
    சீர்மைக்கு போரும் படி -என்றது -தகும்படி என்கை –

    பிரேமத்தோடு  பேணி அனுசந்திக்கை ஆவது -இத்தை அனுசந்திக்கும் அளவில்
    சுஷ்க ஹ்ருதயனாய் )வறட்டு நெஞ்சம்) இருந்து அனுசந்திக்கை அன்றிக்கே -இதன் வைல்ஷண்ய ஞானம் அடியாக இதின் பக்கல் தனக்கு உண்டான பிரேமத்தோடே
    குஹ்யானாம் குஹ்யமான இது அசல் அறியாதபடி -( அநதகாரிகள் செவிப்படாத படி )
    மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற படி பேணிக் கொண்டு அனுசந்திக்கை –
    இப்படி அனுசந்திக்க வேணும் என்கையாலே -பிரகாரந்தரேண அனுசந்திக்க லாகாது என்கிற நியமம் தோற்றுகிறது-

    இதன் வைலஷண்ய ஞானம் அடியாக-என்றது இம் மந்திரத்தினுடைய ஸகல வேத ஸங்க்ரஹத்வ ஞாதவ்ய சகலார்த்த ப்ரதி பாதகத்வ
    பரம மந்த்ரத்வ –உத்தம ரஹஸ்யத்வ -பரம பவித்ரத்வ ரூப வைலக்ஷண்யம் அடியாக என்றபடி
    அசல் அறியாதபடி -( அநதகாரிகள் செவிப்படாத படி )-என்றது முமுஷுக்கள் அல்லாத வர்களுடைய செவியில் யாதிருச்சிகமாகவும் செவிப்படாத படி
    பிரகாரந்தரேண அனுசந்திக்க லாகாது என்கிற நியமம் தோற்றுகிறது–என்றது -நியம அதிக்ரமம் பண்ணினால் ஸன்மார்க்க பிரச் யுதனாவான் -என்றபடி

    ——————————————-

    மந்த்ரத்திலும்
    மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
    மந்திர பிரதனனான ஆசார்யன் பக்கலிலும்
    ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது -ஸூரணை -4-

    (கார்ய கரமாவது-என்றது ஞாதவ்ய அர்த்த ஞாபகம் -அர்த்த பஞ்சக ப்ரதிபாதிதம்)

    இப்படி தன் பக்கல் பிரேமம் உண்டாகவே
    இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரமோ என்ன அருளிச் செய்கிறார் –
    அதாவது

    ஞாதவ்யார்த்த ஞாபகமான இம் மந்த்ரம் தன்னிலும் –
    சேஷித்வ சரண்யத்வ பிராப்யத்வங்கள் ஆகிற
    ஆகார த்ரய யுக்ததயா இம் மந்த்ரத்துக்கு வாச்ய வஸ்துவாய் இருக்கிற சர்வேஸ்வரன் விஷயத்திலும் –

    (சேஷித்வமாவது -சேஷ பூதரால் உண்டான அதிசயத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்கை
    சரண்யத்வமாவது –அச்சரண்யனானவர்களுக்கு ஸர்வ பிரகாரத்தாலும் ரஷகனாய் இருக்கை
    பிராப்யத்வமாவது –பரம புருஷார்த்த தயா அபிமதமாய் இருக்கை
    ஆகார த்ரய யுக்ததயா-ஆகார த்ரயத்தோடே கூடி இருக்கையாலே
    இம் மந்த்ரத்துக்கு–பத த்ரய ஆத்மகமான இந்தத் திரு மந்திரத்துக்கு
    ப்ரணவத்தில் –சேஷித்வேநவும் —
    நமஸ் பதத்தில் -சரணயத்வேநவும் –
    நாராயண பதத்தில் கர்மணி வியுத் பத்தியாலே ப்ராப்யத்வேநவும்)

    தன் மந்த்ரம் ப்ராஹ்மாணாதீனம் – என்கிறபடியே
    இம் மந்த்ரம் ஆச்சார்யா அதீனமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
    இத்தை யதா பிரதி பத்தி யுக்தனாய் கொண்டு -தனக்கு உபகரித்த ஆச்சர்ய விஷயத்திலும் –

    தத் தத் வை லஷண அனுரூபமாக ப்ரேமம் அதிசயம் உண்டானால்
    இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரம் ஆவது என்கை –

    மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரவ த்ரிஷூ பக்திஸ்
    சதா கார்ய சாஹி பிரதம சாதனம் -என்னக் கடவது இறே —

    (ஒன்றை விட அடுத்தத்தில் பிரேமம் கனக்க உண்டாக வேண்டும் -)

    (இத்தை –ஆச்சார்ய ஆதீனமான இந்தத் திருமந்திரத்தை
    யதா பிரதி பத்தி யுக்தனாய் கொண்டு-என்றது உபதேஷ்டாவான தன்னை ஆச்சார்யனாக நினைக்கையும்
    உபதேச பாத்ரனான சிஷ்யனைத் தனக்கு சிஷ்யன் என்று நினைக்கையும்
    உபதேசித்ததற்கு அர்த்த ஸுஸ்ரூஷாதி தர்ஷ்ட ப்ரயோஜனத்தை பலமாக நினைக்கையும் ஆகிற
    விப்ரதிபத்தி இன்றிக்கே
    உபதேஷ்டாவான தன்னை உபதேஸ சமயத்தில் தன்னுடைய ஆச்சார்யானையே இவனுக்கு உபதேஷ்டாவாகவும்
    தான் அங்குத்தைக்குக் கரண பூதனாயும்
    உபதேஸ பாத்ரனான சிஷ்யனையும் தன்னோபாதி தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யனாக பிரதிபத்தி பண்ணுகையும்
    பர உபதேசம் பண்ணும் அளவில் இவ்வாத்மா திருந்தி ஆளுமாளார் என்கிற விஷயத்துக்கு மங்களா ஸாஸனத்துக்கு
    ஆளாக வேணும் என்னும் அதுவே பலமாக உபதேஸிக்கை யதா பிரதிபத்தி யுக்தனாய்க் கொண்டு -என்றபடி
    தனக்கு -என்றது அதி நீசனான தனக்கு என்றபடி
    ஆச்சர்ய விஷயத்திலும் -பகவத் ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க வல்லனான ஆச்சார்யர் விஷயத்திலும்
    மந்திரத்துக்கு வை லக்ஷண்யமாவது –ஸகல வேத ஸங்க்ரஹத் வாதிகள்
    ஈஸ்வரனுக்கு வை லக்ஷண்யமாவது -ஸர்வ சேஷித்வாதிகள்
    ஆச்சார்யனுக்கு வை லக்ஷண்யமாவது –உப தேஷ்டாவான தன்னை என்று தொடங்கி யதா பிரதிபத்தி யுக்தனாய் என்னும் அளவாகச் சொன்னது எல்லாம்)

    ————————————–

    சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து –
    ஈஸ்வர கைங்கர்யத்தையும்  இழந்து –
    இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
    சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட –
    சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி –
    தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று –
    திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் -ஸூரணை-5-

    (நர நாராயணன் -சிஷ்யன் ஆச்சர்யனுமாய் -முதலில் சொன்னது நாம் தானே இழந்து உள்ளோம்)

    இனி இம் மந்த்ரத்தின் உடைய அவதரண பிரகார கதன முகத்தாலே இதனுடைய அப்ரிதம வைபவத்தை அருளிச் செய்கிறார் –
    சம்சாரிகள் ஆகிறார் அநாதி அசித் சம்பந்தத்தால் பிரவாக ரூபேண வருகிற –
    அவித்யா கர்ம வாசன ருசி விவசராய் -ஜன்ம மரணாதி க்லேச பாகிகளாய் திரிகிற -பக்த சேதனர் —

    தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -என்றது –
    தாஸாபூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மான பரமாத்மனா
    நான்யதா லஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -என்கிற படியே –
    ஸ்வத சித்தமான பகவத் சேஷத்வத்தை லஷணமாக உடையராய் இருக்கிற தங்களையும் –

    பதிம் விஸ்வஸ்ய ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -இத்யாதிகளில் சொல்லுகிற படியே
    தங்களுக்கு நிருபாதிக சேஷியாய் இருக்கிற ஈஸ்வரனையும் அறியாது என்கை-

    ஆனால் அறியாமல் என்னாதே–மறந்து என்பான் என் ?-
    முன் ஒரு கால் நினைத்து பின்பு
    அந் நினைவுக்கு பிரச்யுதி வந்த இடத்தில் இறே மறந்து என்னாலாவது என்னில் –
    மறந்தேன் உன்னை முன்னம் -பெரிய திரு மொழி -6-2-2-என்கிறபடியே
    ஸ்வத சித்தமான சம்பந்தத்தை உணர்ந்தால் முன்பு நினைத்து இருந்த அர்த்தத்தை மறந்தால் போலே
    இருக்கும் சம்பந்தத்தில் உறைப்பை நினைத்து அருளிச் செய்தாராம் இத்தனை –

    (சம்பந்தத்தில் உறைப்பை நினைத்து என்றது –நிருபாதிக சம்பந்தம் ஆகையாலே யாவதாத்ம பாவி திருடமாய் இருக்கையை நினைத்து என்றபடி)

    ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -என்றது
    கீழ் சொன்ன அஞ்ஞானத்தாலே வகுத்த சேஷியான ஈஸ்வர விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற பரம புருஷார்த்தையும்
    ப்ராபிக்கப் பெறாதே என்கை —

    புருஷார்த்தத்தின் உடைய கௌரவத்தையும் -அதுக்கு இட்டுப் பிறந்து வைத்து
    கிட்டப் பெறாமல் கிடந்த படியையும் நினைத்து -இழந்து என்கிறார் –

    (அதுக்கு இட்டுப் பிறந்து வைத்து–அந்தக் கைங்கர்ய ரூப பரம புருஷார்த்தத்துக்காகப் பிறந்து -என்றபடி –வைத்து -சாரியைச் சொல்லு
    கிட்டப் பெறாமல் கிடந்த படியையும்–அது செய்யப் பெறாமல் விஷயாந்தர ப்ரவணராய் இருந்த பிரகாரத்தையும் என்றபடி)

    இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே-என்றது
    ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஞானமும் புருஷார்த்த ஞானமும் இல்லாமையாலே –
    ஸ்வ சேஷத்வ அனுரூபமான சேஷி விஷய கைங்கர்ய ரூப புருஷார்த்தத்தை
    இழந்தோம் என்கிற அலாப க்லேச அனுசந்தானமும் இன்றிக்கே என்கை-

    சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட என்றது –
    சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே –
    அநந்த க்லேச பாஜனமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே கரை காண அரிதாம் படி இருக்கிற
    சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்துக்கு உள்ளே விழுந்து -தாப த்ரய அபிபூதராய் கொண்டு -க்லேசப்பட என்கை –

    இத்தால் –
    தங்களையும் -ஈஸ்வரனையும் அறியாமையாலும் –
    புருஷார்த்தத்தை  அறியாமையாலும் –
    சம்சார சாகரத்துக்கு உள்ளே கிடந்தது நோவு படா நிற்க -விரோதியான சம்சாரம் தன்னையும்
    தந் நிஸ்த்ரண உபாயத்தையும் -அறியாமையாலும் –
    ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்திலும் ஒன்றையும் அறியாமல் கிடந்தார்கள் என்கை –

    ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதிப்படியே -சகல சாஸ்த்ரங்களுக்கும் பிரதிபாதிப்பது
    அர்த்த பஞ்சகத்தையும் இறே –
    இவ்வர்த்தங்களை இவர்களுக்கு ஸூக்ரகமாக அறிவிக்கைக்காக சகல சாஸ்திர ஸங்க்ரஹமான
    திரு மந்த்ரத்தை சர்வேஸ்வரன் வெளி இட்ட பிரகாரத்தை சொல்லுகிறது மேல் –

    சர்வேஸ்வரன் தந் கிருபையால் என்றது –
    ஈசேசித வியசம்பந்தாத் அநிதம் பிரதமாதபி -என்கிற படியே அநாதியாக ஈச்வரனோடு உண்டான ஈசே சிதவ்ய
    சம்பந்தத்தை உடையனான எம்பெருமான் –
    ஏவம் சம்ஸ்ருதி  சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி
    ஜீவே துக்கா குலே விஷ்ணோ க்ருபா காப்யு பஜாயதே -என்கிறபடியே –
    இவர்கள் படுகிற துக்க தர்சன மாத்ரத்தால் உண்டான தன்னுடைய நிர்கேதுக கிருபையாலே என்கை –

    இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி -என்றது –
    இப்படி சம்சார சாகரத்திலே கிடந்தது நோவுபடுகிற இவர்கள் –
    த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷின-என்றும்
    சம்சார ஆர்ணவ மக்நானாம் விஷயாக்ராந்த சேதஸாம்
    விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் -என்றும் சொல்லுகிறபடி
    சம்சார நிஸ்தரண உபாய பூதனான தன்னை அறிந்து சம்சார சாகரத்தை கடந்து
    அக்கரை படும்படி என்கை –
    (வைகுந்தன் என்னும் தோணி -நாவாய் முகுந்தன் )

    தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று -என்றது
    நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி–10-6-1- என்கிறபடியே
    நர நாராயண ரூபேண அவதரித்து -நரனான தான் சிஷ்யனுமாய்
    நாராயணனான தான் ஆச்சார்யனுமாய் நின்று என்கை –

    திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் -என்றது
    சகல சாஸ்திர சங்க்ரகமாய்-அந்த சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும்
    ஸூஸ்பஷ்டமாக பிரதிபாதியா நிற்கும் திரு மந்த்ரத்தை பிரகாசிப்பித்தது அருளினான் என்கை-

    (ஸூஸ்பஷ்டமாக பிரதிபாதியா நிற்கும் திரு மந்த்ரத்தை-ப்ரணவத்தாலே ப்ரத்யகாம ஸ்வரூபத்தையும்
    நமஸ்ஸாலே -விரோதி உபாய ஸ்வரூபங்களையும்-நாராயண ஸப்தத்தாலே பர ஸ்வரூபத்தையும்
    அதில் சதுர்த்தியாலே பல ஸ்வரூபத்தையும் சப்ததயா பிரதிபதியா நிற்கிறது என்றபடி)

    அருளிச் செய்தான் என்னாதே வெளி இட்டு அருளினான் -என்றது –
    இப்போது தான் ஒன்றை நியமித்து சொன்னான் அல்லன் –
    அநாதி யானத்தை பிரகாசிப்பித்தான் இத்தனை என்னும் இடமும்
    அதி குஹ்யமாய் உள்ளதை இவர்கள் துர் கதி கண்டு சகிக்க மாட்டாமையாலே
    பிரகாசிப்பித்தான் என்னும் இடம் தோற்றுகைக்காக–

    ———————–

    சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு -நாட்டார் அறியாமையாலே 
    அத்தை அறிவிக்கைக்காக -ஸூரணை-6-

    ஆனால் ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருள அமையாதோ ?
    சிஷ்யனாய் நின்றது எதுக்காகா ?-என்ன அருளிச் செய்கிறார் –
    அதாவது

    ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருளின  அளவு அன்றிக்கே -தானே சிஷ்யனுமாய் கொண்டு நின்றது –

    ஆஸ்திகோ தர்ம சீலஸ்த சீலவான் வைஷ்ணவ ச சுசி கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே -என்றும் –
    ஸாஸ்த்ர விஸ்வாசமுடையவனாய் -ஸாஸ்த்ர யுக்த தர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் என்ற மனமுடையவனாய்
    தத் அநுரூபமான ஆசாரமுடையவனாய் -ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யமான விஷ்ணு பக்தியை யுடையவனாய்
    பூர்வ யுக்த குணங்களால் வந்த உதகர்ஷ ரூப அஹங்காரம் நெஞ்சில் தட்டாதவனாய்
    ஆச்சார்ய விஷயத்தில் தனக்குண்டான பாவ பந்தம் பிறரால் அறிய ஒண்ணாத ஸ்வ பாவம் யுடையவனாய்
    ஆச்சார்ய அநு வர்த்தனத்தில் அவன் முக மலர்த்திக்கு உறுப்பான ஆச்சார்ய கைங்கர்யங்களிலே ஸ்தைர்யம் யுடையவனாய் இருக்குமவன் சிஷ்யன் என்றும்

    சரீரம் வஸூ விஞ்ஞானம் வாசா கர்ம குணா நஸூன் குர்வர்த்தம் தாரேயேத் யஸ்து ச சிஷ்யோ நேதர ஸ்ம்ருத -என்றும் –
    சரீர அர்த்த ப்ராண க்ரஹ க்ஷேத்ர புத்ர தாராதிகள் ஒன்றும் தனக்கு சேஷம் என்று நினையாதே அங்குத்தைக்கே சேஷமாக்கி
    ப்ரவர்த்தக ப்ரயத்னம் ஒன்றுமே இன்றிக்கே அவன் நினைவிலே ஒதுங்கி கிரய விக்ரய அர்ஹனாய் இருக்குமவனே சிஷ்யன் எனப்படுவான் என்றும்

    சத்புத்திஸ் சாதுசேவி சமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷி
    ஸூஸ்ருஷி ச த்யக்தமான ப்ரணிபாதன பர பிரச்னகால பிரதீஷ
    சாந்தோ தாந்தோ அநஸூயஸ் சரண முபகதஸ் சாஸ்திர விசுவாச சாலி
    சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவிதபிமத்தஸ் தத்வதச் சிஷணீய–நியாஸ விம்சதி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியும்

    (சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
    சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
    சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
    தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
    ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
    த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
    ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்கமாக தண்டன் இடும் பழக்கம் யுடையவனாயும்
    ப்ரஸ்ன கால ப்ரதீஷ-ஆச்சார்யன் இடம் தக்க காலம் எதிர்பார்த்து கேள்வி கேட்டு சங்கைகளைப் போக்கிக் கொள்பவனாயும்
    சாந்தோ -மனத்தை அடக்கி வைப்பவனாயும்
    தாந்தோ -வெளி இந்திரியங்களை அடக்கி வைப்பவனாயும்
    அநஸூயு -பொறாமை இல்லாதவனாயும்
    சரணமுபகத -ஆனு கூல்ய சங்கல்பாதி ஐந்து அங்கங்களோடே கூடிய விதிப்படி ஆச்சார்யன் இடம் சரணாகதி செய்பவனாயும்
    சாஸ்த்ர விசுவாஸ சாலீ–ஸாஸ்த்ரங்களிலே விஸ்வாஸம் கொண்டவனாயும்
    ப்ராப்த பரீஷாம் -ஒரு வருஷமா ஆறு மாதங்களோ தக்கபடி ஆச்சார்யனால் பரீக்ஷிக்கப் பட்டவனாயும்
    க்ருதவித் -நன்றி யுடையவனாயும்
    ஆகிய
    சிஷ்ய-சிஷ்யன்
    அபிமதம் தத்த்வத –தத்வ அர்த்தங்களில் விரும்பியதை -இஷ்டப்பட்டவற்றை
    சிக்ஷணீய -உபதேசிக்கத் தக்கவன்
    அல்லது அபிமதமாம்படி இருக்கும் படி தத்வார்த்தங்களைப் போதிக்கத் தகுந்தவன் –

    சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —

    சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம் -அடிபணிந்து போக்கற்ற நிலையை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன் போன்றவனே நல்ல சீடன்)

    சாத்யாந்திர நிவ்ருத்தியும் –
    பல சாதன சிஸ்ருஷையும் –
    ஆர்த்தியும்
    ஆதரமும்
    அனசூயையும்
    உடையனாய்  இருக்கையும் ஆகிற சிஷ்ய லஷணம் லோகத்தில் உள்ளார் அறியாமையாலே –
    அத்தை ஸ்வ அனுஷ்டானத்தாலே அறிவிக்கைக்காக என்கை-

    உபதேசத்தால் அறிவிக்கும் அளவில் -ஸ்வோத்கர்ஷம் தேடிக் கொள்ள வந்தான் இத்தனை என்று நினைக்கவும் கூடும் –
    அனுஷ்டானத்தில் அறிவிக்கும் அளவில் நமக்கும் இது வேணும் என்று விஸ்வசித்து பரிக்ரஹிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே-

    (சாத்யாந்திர நிவ்ருத்தி யாவது -ஸ்வரூப விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்களை ஆகிய ப்ராப்யாந்தரங்களில் மறந்தும் அந்வயம் அற்று இருக்கை
    பல சாதன சிஸ்ருஷை யாவது -ஆச்சார்யர் உபகரிக்கிற தத்வ ஞான -(ஆச்சார்ய முக உல்லாசத்துக்கு என்றுமாம் ) பல சித்திக்கு ஸாதனமாய் இருக்கும் ஆச்சார்ய பரிசர்யை
    ஆர்த்தி யாவது -இருள் தரும் மா ஞாலத்தில் பிறந்த ஞானத்துக்கு விரோதியாய் இருப்பதால் கடுக எடுக்கப் பெறாமையால் வரும் கிலேசம் அடியாக வரும் ஆர்த்தி
    நித்தியமாக ஆச்சார்ய விக்ரஹ அனுபவ அலாபத்தால் வரும் கிலேசத்தைப் பொறாமல் உண்டான கிலேசத்தால் வரும் ஆர்த்தி யாகவும்
    ஆதரம் யாவது –உத்தர உத்தர அநு புபுஷை விழையும்படி ஆச்சார்யர் அருளிச் செய்கிற பகவத் குண கண அனுபவத்தில் அபிநிவேசம்
    அநசூயை யாவது -ஆச்சார்யர் பாகவத கைங்கர்யங்களைப் பறக்க உபபாதியா நின்றாள் அதில் அநசூயை அற்று இருக்கை

    இறே –கீதா ப்ரஸித்தம்)

    ———————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –