Archive for the ‘Ashtaadasa Rahayangal’ Category

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ ரஹஸ்ய நவநீதம்-

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————–

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் ஐந்தாவது.-இது திருவேங்கடத்தில் அருளிச் செய்யப்பட்டது.

திருமந்த்ரத்தில் ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம் என மூவர்த்தங்களும், த்வயத்தில்-உபாய விசேஷம் புருஷார்த்த விசேஷம், விரோதி நிவ்ருத்தி விசேஷம் என மூவர்த்தங்களும், சரம ச்லோகத்தில் அதிகாரி க்ருத்யம் சரண்ய க்ருத்யம்,
கருதக்ருத்யனுடைய உத்தர க்ருத்யம்
என மூவர்த்தங்களுமாக ஒன்பது அர்த்தங்கள்.

உத்தி திகழும் உரை, மூன்றில் மும்மூன்றும்*
சித்த முணரத் தெளிவித்தார்* முத்திதரும்
மூல மறையின் முடிசேர் முகில்வண்ணர்
சீலம் அறிவார் சிலர்.
–நேரிசை வெண்பா.-

ஸகல சாஸ்த்ரங்களுக்கும், அன்றிக்கே ஸகல புருஷார்த்தங்களுக்கும், முதற்காரணமான வேதத்தின் சிரோபாகமான வேதாந்தங்களில் ப்ரதிபாத்யனாய்ச் சேர்ந்திருக்கிற மோக்ஷத்தைக் கொடுக்கிற மேகம் போன்ற வர்ணத்தையுடைய பகவானுடைய ஸ்வபாவத்தை,-அதாவது அவனுடையஸௌசீல்ய குணத்தை, அறிந்த ஆசார்யர்கள்
சப்தங்களுக்குள் ச்லாக்யமான மூன்று ரஹஸ்யங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று அர்த்தங்களாக ஒன்பது அர்த்தங்களை மனது நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி ப்ரகாசம் செய்தார்கள்.

ஸகல வேத ஸாரமான திருமந்த்ரத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே ஸ்வரூப ஸமர்ப்பணமும் பரஸமர்ப்பணமும் பல ஸமர்ப்பணமும் அநுஸந்தேயம்.
இங்கு ஸ்வரூப ஸமர்ப்பணமாவதுஸர்வோபாதி விநிர்முக்தம் க்ஷேத்ரஜ்ஞம் ப்ரஹ்மணி ந்யஸேத்-தக்ஷ ஸ்ம்ருதி.(சரீரம், இந்த்ரியங்கள், ஸூக்ஷ்ம ப்ரக்ருதி அவித்யை முதலிய) எல்லா உபாதிகளினாலும் விடப்பட்ட ஜீவாத்ம ஸவரூபத்தைபபரமாத்மாவிடத்தில் ஸமர்ப்பிக்கவேண்டும்.)என்கிறபடியே வபுராதிகளில் வேறுபட்டு ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய் ஜ்ஞாநாநந்த குணகனாய் ஸ்வயம் பராகாரனாய் ஸ்வஸ்மை பாஸமாநனாய் அணுவான நான், ஸர்வ ஐகதேக காரண பூதனாய், ஸர்வ ரக்ஷகனாய், ஸர்வ சேஷியான ஸ்ரிய:பதியைப்பற்ற-நானும் உனக்குப் பழவடியேன்-பெரியாழ்வார் திருமொழி 1-1-11.-கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனே–பெரிய திரு-8-9-3-என்கிறபடியே நித்ய நிருபாதிக சேஷபூதன் என்று அநுஸந்திக்கை. இஸ் ஸம்பந்தா நுஸந்தாநம் அர்த்த பஞ்சகா நுஸந்தாநத்திற்கு அஞ்சுருவாணியாய் நிற்கும்.

பர ஸமர்ப்பணமாவது-ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹ்யாத்ம நிஷேப உச்யதே-லக்ஷ்மீ தந்த்ரம்-17-79. தன்னுடையவும், தன்னைச் சேர்ந்த (புத்ரன், ப்ரேஷ்யன் முதலிய)வர்களுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது ஆத்ம நிஷேபம் என்று சொல்லப்படுகிறது.)என்கிறபடியே நித்ய சேஷ பூதனுமாய் நித்ய பரதந்த்ரனுமாய் அபிமத ஸித்திக்குப் புகல் ஒன்றில்லா அடியேனை இனி ஒரு கர்த்தவ்யத்திலே மூட்டாதே அடைக்கலமாகக் கொண்டு ரக்ஷித்தருள வேண்டும் என்கை.

பல ஸமர்ப்பணமாவது-தேந ஸம்ரஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்ய வியுக்ததா-.லக்ஷ்மீ தந்த்ரம்-17-73 அந்தப் பகவானால் ரக்ஷிக்கப்படுகிற தனக்கு ரக்ஷிக்கப்படுவதினால் உண்டாகிய ப்ரயோஜநத்தில் யஜமாநனயிருக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும். ‘கேசவார்ப்பண பாயந்தா ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே ‘ என்று மேல். ‘பகவானிடத்தில் அந்த யஜமாநனாயிருக்கும் தன்மையை ஸமர்ப்பிப்பது வரையில் தனக்கு யஜமாநனாயிருக்கும் தன்மை இல்லாமையே ஆத்மநிஷேபம் என்று சொல்லப்படுகிறது என்று அர்த்தம்.-இத்யாதிகளிற்படியே களையற்ற ஸூரிதுல்ய கைங்கர்யத்திற்கு ஸ்வரூப யோக்யனான ஆரா அன்பில் அடியேனுக்கு உபாதி அடியாக வந்த அயோக்யதைகளை யெல்லாம் கழித்து வழுவிலா அடிமைகொண்டு வாழ்வித்தருள வேண்டும் என்கை.

இப்படி-சேஷ சேஷி பாவத்தாலே இருவரையும் உறவாக்கி, சேஷசேஷி க்ருத்யத்தாலே இருவரையும் வணக்கி, சேஷ சேஷி பலத்தாலே இருவரையும் ஏக ரஸமாக்குகிறது திருமந்த்ரம்.

இதிலே ஸாரீரக க்ரமத்தாலே தோற்றின பர தத்த்வத்தையும், பரம ஹிதத்தையும், பரம புருஷார்த்தத்தையும் ஸ்வரூபாநுரூப விசேஷண விஸிஷ்டமாக வெளியிடுகிற ஸரணாகதி மந்த்ரத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே உபாய விசேஷமும் புருஷார்த்த விசேஷமும், விரோதி நிவ்ருத்தி விசேஷமும் ஸித்த ஸாத்ய ரூபத்தாலே இரு வகையாகச் சேர்ந்து நிற்கும்படி அநுஸந்தேயம். எங்ஙனே என்னில்:- ஸ்ரீமானான நாராயணன் அபிமத ஸித்திக்கு வ்யாஜ மாத்ர ஸாபேக்ஷமுமாய் தத் ப்ரவர்த்தகமுமாய் வ்யவதாந மற்று ப்ரதாநமுமான ஸித்தோபாயம்.

அநந்ய ஸாத்யே–பரதமுனி வாக்யம். ஸ்வாபீஷ்டே மஹா விச்வாஸபூர்வகம் ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : சரணாகதி : ‘ என்று மேல். (தன்னுடைய இஷ்ட பலமானது) வேறொரு உபாயத்தினாலும் ஸாதிக்க முடியாமல் இருக்கும்பொழுது (மஹா விச்வாஸத்தை முன்னிட்டுக்கொண்டு அவன் ஒருவனே உபாயமாகவேண்டும் என்று யாசிப்பது
ப்ரபத்தி, அது தான் சரணாகதி).-அகலகில்லேன் ‘-திருவாய்-6-10-10-இத்யாதிகளிற் சொல்லுகிற ரணாகதி அவனுடைய வஸீகரணமான ஸாத்யோபாயம்.

புருஷார்த்த விசேஷமாவது–.தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’-திருவாய்-2-9-4-என்கிறபடியே தன்னோடும் தான் பண்ணுகிற கைங்கர்யத்தோடும் துவக்கற்று,-கண்டுகேட்டு உற்று,-திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே நிரதிஸய போக்யமான நித்ய ஸித்த ப்ராப்யமும் அதனுடைய பரிபூர்ணாநுபவ பரீவாஹமாய்க் கொண்டு ஸாத்யமான சேஷி யுகந்த கைங்கர்யமும்.

விரோதி நிவ்ருத்தி விஷமாவது–தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்கிறபடியே (தன்னோடும் தான் பண்ணுகிற கைங்கர்யத்தோடும் துவக்கற்று]ஸர்வ அவித்யா நிவ்ருத்தி பிறக்கை. இப்படிப்பட்ட ஸித்த ஸாத்யங்களான புருஷார்த்த ஹேதுக்களையும், ஸித்த
ஸாத்யங்களான புருஷார்த்தங்களையும் சேர்த்து ஸாத்ய புருஷார்த்தத்தில் இருவகையான களையற்ற படியையும் காட்டு கிறது த்வயம்.

இதில் பூர்வோத்தர கண்டங்களுக்கு-(ஸ ப்ராதுஸ் சரணௌ காடம் )-அயோ . . 31-21. ‘நிபீட்ய ரகுநந்தந:, ஸீதாம் உவாசாதியசா: ராகவம்சமஹா ரதம்(ரகுவம்சத்திற்கு ஆநந்தத்தைக் கொடுக்கும் இளையபெருமாள் ஜ்யேஷ்ட ப்ராதாவாகிய ராமனுடைய திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும் ராமனையும் குறித்து சொன்னார்). அதாவது பெருமாளும் பிராட்டியும் சேர்ந்திருந்த ஸமயத்தில் ப்ரார்த்தித்தார் என்பதினால் ஸ்ரீமத் என்னும் பதத்தின் அர்த்தமும், ராகவம்ச மஹா வ்ரதம் ‘ என்று சரணாகதர்களைக் காப்பாற்றுகிற பெரிய வ்ரதத்தை யுடையவன் என்பதினால் நாராயண சப்தத்தின் அர்த்தமும், சரணெள என்று சரண சப்தமும் இருப்பதினாலே இந்த சுலோகம் த்வயத்தின் பூர்வ கண்டத்துடன் சேர்த்தி யாகிறது என்று கருத்து.

(பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-அயோ-31 -27. தேவரீர் ஸீதையோடு கூட, கிரிஸாநஷூ ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதச் ச தே ‘ என்று மேல். மலையின் தாழ்வரைகளில் விளையாடப் போகிறீர் விழித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் இருக்கிற போது தேவரீருக்கு எல்லா விதக் கைங்கர்யத்தையும் நான் செய்யப் போகிறேன், அதாவது செய்யவேண்டும் என்று கருத்து. ஸஹ வைதேஹ்யா ‘ என்பதினால் ஸ்ரீமதே’ என்பதின் அர்த்தமும், ‘ஜாக்ரத: இத்யாதியினால் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யங்கள் கூறப்படுகிற படியினால் சதுர்த்தியின் அர்த்தமும், பவாம்ஸ்து’ என்று நாராயண சப்தத்தின் அர்த்தமும் விவரிக்கப் பட்டபடியினால் இந்த சுலோகம் த்வயத்தின் உத்தர கண்டத்துக்குச் சேர்த்தியாகிறது என்று கருத்து.)

இவற்றில் தோற்றின பரம ஹிதத்தினுடைய அதிகார நைரபேக்ஷ்ய ஸ்வரூப ப்ரபாவங்களையும் வெளியிட்டுக் கொண்டு உப ப்ரும்ஹணமான சரம லோகத்தில் மூன்று வாக்யங்களில் அடைவே அதிகாரி க்ருத்யமும், ஸரண்யக்ருத்யமும், க்ருத க்ருத்யனுடைய உத்தர க்ருத்யமும் அநுஸந்தேயம்.

அதிகாரி க்ருத்யமாவது--மேம்பொருள் ‘-(திருமாலை-38. போகவிட்டு மெய்ம்மையை மிகஉணர்ந்து ‘ என்று மேல். வெளியிலே இருக்கும்படியான வஸ்துக்கள், அன்றிக்கே போக்யமாக அநுபவிக்கப்படும் வஸ்துக்கள், இவைகளை அஸ்த்திரத்வம் முதலிய தோஷங்களுடன் கூடியவை என்று பரித்யஜித்து மெய்யான ஜீவாத்மாவின் ஸ்வபாவத்தை உயர்ந்த வஸ்துவாக உணர்ந்து என்று அர்த்தம்.)இத்யாதிகளிற்படியே விவேகாதி யுக்தனாய்க் கொண்டு,-விடைக்குலங்கள்’-(திருச்சந்த-92. ஏழடர்த்து வென்றி வேற்கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய! வேலை நீர்ப் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்து நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்னவேண்டுமே’ என்றுமேல். வ்ருஷபங்கள் ஏழைச் செருக்கடக்கி ஜயம் பொருந்திய வேல்போல் இருக்கிற கண்களையுடைய லக்ஷ்மீ, நப்பின்னைப்பிராட்டி முதலிய பத்நிகளுடைய வாஸனையோடுகூடிய தோள்களை ஸம்ச்லேஷித்து பசுக்களை மேய்க்கும் இடையனாய் அவதரித்த ஸ்ரீ க்ருஷ்ணனே ! தேவரீருக்கு அடைக்கலம்
ப்ரார்த்தித்தபடி’ புகுந்த என்னை பயப்படாதே என்ன வேண்டும் என்று பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டும் பகவானுடைய ஸௌலப்யாதி குணங்களை முன்னிட்டுக் கொண்டும் சரணம் அடைய வேண்டும என்று கருத்து)என்கிற பாட்டின்படியே ஸநாதந தர்மமான ஸர்வலோக ஸரண்யனுக்கு விண்ணப்பம் செய்கை.

ஸரண்ய க்ருத்யமாவது– தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது
மூர்த்தி’-என்கிறபடியே ஸரணாகதி விரோதிகளை யெல்லாம் கழிக்கைக்கு ஸர்வ சேஷியான தன்னைத் தட்டுமாற்றித் தாழ நின்று, ஏற்றின சுமையெல்லாம் ஏறிட்டுக் கொண்டு இவனைத் தன்னளவாக உயர எடுக்கை.

உத்தர க்ருத்யமாவது–‘அத்தனாகி அன்னையாகி என்கிற பாட்டின்படியே ( திருச்சந்த-115. ஆளும் எம்பிரானுமாய் ஒத்தொவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி
ஏழை நெஞ்சமே’ என்று மேல் பாட்டு. அவனுடைய ஆர்த்தியையும், குணங்களையும், நம்மை ரக்ஷிப்பதற்காக முன்னதாகப் பாரித்து ஒருப் பட்டபடியையும் ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியானபடியையும் சிந்தித்து மனத்தை நிர்ப்பயமாக்கிக்கொள்ள வேண்டும் என்று இப்பாட்டின் கருத்து.)மநஸ்ஸைத் தேற்றி,- ‘சிற்றம் சிறுகாலே’ என்கிற பாட்டின்படியே (திருப்பாவை-29) நானெனக்கு சேஷபூதன்,என்னை ரக்ஷிக்க வேண்டிய பரம் என்னுடையது
, அத்தால் வரும் ப்ரயோஜனம் என்னுடையது என நினைக்காமல்)ஸர்வ ப்ரகாரத்தாலும் அநந்யனாய் ஸ்வயம் ப்ரயோஜந பாஸ்த்ரீய கைங்கர்ய பரனாகை.

இப்படியால் ஓர் அதிகாரியை சரண்யன் ஹித தமத்திலே மூட்டும்படியையும், இவனுக்கு ப்ரிய தமத்தைப் பண்ணும்படியையும், சரணாகதன் வீத சோகனாய் ஸர்வ சேஷிக்கு ப்ரிய தமங்களான ஸர்வ சேஷ வ்ருத்திகளையும் பண்ணும் ப்ரகாரத்தையும் கணிசிக்கிறது சரம ஸ்லோகம்.
இதில் சொன்ன சரண்யனுக்கும் சரணாகதிக்கும் பலத்திற்கும் தேச காலாதி பரிச்சேதமில்லை.ப்ரபத்த்யத் யாயாதிகளெல்லாம் இதின் விஸ்தரம்.

எனக்கு உரியேன் எனது பரம் என் பேறு என்னாது
இவை அனைத்தும் இறை யில்லா இறைக்கடைத்தோம்
தனக்கு இணை ஒன்றில்லாத திருமால் பாதம்
சாதனமும் பயனுமெனச் சலங்கள் தீர்ந்[த்]தோம் *
உனக்கு இதம் என்று ஒரு பாகன் உரைத்தது உற்றோம்
உத்தமனாம் அவன் உதவி எல்லாம் கண்டோம்-எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

நானெனக்கு சேஷபூதன்,என்னை ரக்ஷிக்க வேண்டிய பரம் என்னுடையது அத்தால் வரும் ப்ரயோஜனம் என்னுடையது என நினைக்காமல்-கீழ்க் கூறப்பட்ட இவைகளெல்லாவற்றையும் தனக்கு மேற்பட்ட யஜ மானனில்லாத ஸ்வாமியான ச்ரிய:பதிக்கு ஸமர்ப்பித்தோம், தனக்கு ஸத்ருசமான வஸ்து இல்லாத பகவானுடைய பாதங்களே உபாயமும் பலனும் என அநுஸந்தித்து, ஸ்வாதீனம் என நினைக்கும் தோஷங்களை நிவ்ருத்தி செய்தோம், அத்விதீய ஸாரதியான ஸ்ரீக்ருஷ்ணன் அகிஞ்சனான
உனக்கு இது ஹிதம் என உரைத்த ப்ரபத்தியை அநுஷ்ட்டித்தோம்,-உயர்ந்தவனான அவனுடைய உபகாரங்களை யெல்லாம் அறிந்தோம்,-இதற்கு மேல் அடைய வேண்டிய ப்ரீத்யாதிகள் கவர, துக்கத்தை இகழ்ந்தோம், இனி நாம் இவ்வுலகத்தில் இருக்கும் நாள்களில் ஸூரி களுடன் ஸமம்.

குருபஜந நேத்ரபாஜா மதிதரஹஸ்யேந வேங்கடே சேந|
நவநீதமிவ க்ருஹீதம் இதம் நவகம் நித்யம் ஆஸ்வாத்யம்

ஆசார்ய உபாஸனமாகிற, அன்றிக்கே குருபக்தியாகிற, தயிர் கடையும் கயிற்றை யுடையவராகிய, அன்றிக்கே ஜ்ஞாநக் கண்ணை யுடையவராகிய, கடையப்பட்ட ரஹஸ்யங்களை யுடைத்தாயிருக்கிற வேங்கடேசன் என்கிற ஆசார்யனால் எடுக்கப்பட்ட வெண்ணெயைப் போலே இருக்கிற இந்த ஒன்பது அர்த்தங்களும் எப்பொழுதும் அநுஸந்தானம் செய்யத்தக்கவ.

ப்ரபமிதகலிதோஷாம் ப்ராஜ்ய போகா நுபந்தாம்.
ஸமுதிதகுணஜாதாம் ஸம்யகாசாரயுக்தாம் |
பரிதஜந பஹுமாந்யாம் ஸ்ரேயஸீம் வேங்கடாத்ரௌ
பரியமுபசி நு நித்யம் ஸ்ரீநிவாஸ த்வமேவ |

ஓ! ஸ்ரீநிவாஸனே! தேவரீர்த்தாமே திருவேங்கடமாமலையில்,போக் கடிக்கப்பட்ட கலிகாலத்தினால் உண்டான தோஷத்தையுடையதாயும், அதிகமான போகத்தினுடைய ஸம்பந்தத்தையுடையதாகவும், அதாவது உம்முடைய கைங்கர்ய ரூபமாகையால் உமக்கும், உம்முடைய தாஸர்களான ப்ரபன்னர்களுக்கும் போகத்தை வருத்தி செய்கிறதாயும் என்றபடி, சேர்ந்திருக்கிற குணங்களின் ஸமூஹத்தையுடைத்தானதாயும், நல்ல அநுஷ்டானத்துடன் சேர்ந்ததாயும், உம்முடைய ஆச்ரிதர்களினால் கொண்டாடக்கூடியதாயும், உத்தமமாயுமிருக்கிற (கைங்கர்யமாகிற) ஸம்பத்தை எப்பொழுதும் வ்ருத்தி செய்யும்.

இப்படி கவிதார்க்கிகஸிம்ஹமும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ ரஹஸ்ய நவநீதம் முற்றிற்று.

———————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீதத்த்வ நவநீதம்-

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் நாலாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.

[போக்த்ராதி விபாகம்-போக்த்ரு நிரூபணம்-போக்ய நிரூபணம் -த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம் -ப்ரேரித்ருநிரூபணம்-ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம்.

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்*-பயிரில்
களைபோல் அசுரரைக் காய்ந்தான்தன் கையில்
வளைபோல் * எம் ஆசிரியர் வாக்கு.

நம் பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்தி,ஜீவாத்மாக்களும் அவை களின் சரீரங்களும் தனக்குச் சரீரமாயிருக்கும்படி தான் சேஷியாய் ஸர்வோத்க்ருஷ்டனாய் நின்று, திருவாய்ப்பாடியில் தயிர் வெண்ணெய் முதலியவைகளை இந்தப் பூமியுடன், (இது மற்ற எல்லா லோகங்களுக்கும் உபலக்ஷணம்), அமுதுசெய்தவனாய், பயிரில் களையைப் போலே அஸுரர்களைக் கொன்றவனாகிய பகவானுடைய திருக்கையில் கடகத் (சங்கத்)தைப் போலே (அவற்றைத் தரிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் த்ருப்தியை உண்டு பண்ணுகிறாப் போலே இருக்கிறது,

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ஹஸ்த ஆபரணம் போல் அன்றோ நம் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள்

போக்த்ராதிவிபாகம் –ஸம்ஸ்க்ருத த்ராவிடருதி ஸ்மருதி இதிஹாஸ புராணங்களில் சொல்லுகிற தத்த்வ ஜ்ஞாந பூர்வகமாக மோக்ஷோபாயாநுஷ்ட்டாநம் வேண்டு(மா)கை
யாலே, முமுக்ஷவுக்கு விசேஷித்தறிய வேண்டும் சித் அசித் ஈஸ்வர தத்த்வங்களை போக்தா என்றும், போக்யம் என்றும், ப்ரேரிதா என்றும் உபநிஷத்துச் சொல்லிற்று.

போக்தாவா கையாவது-போகத்தையுடையனாகை. இது-ஸர்வேஸ்வரனுக்கும் பொதுவாயிருக்க, அவனை ப்ரேரிதா என்று பிரியச் சொல்லுகையாலே ஸர்வ ப்ரேரகத்வ மின்றிக்கே பராதீந போகனான ஜீவனை இங்கு போக்தா என்கிறது.

தேகாத்மா பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர பிரமமும்-அந்நிய சேஷத்வ பிரமமும் – போக்க வேண்டுமே-ஜீவனுடைய போக்த்ருத்வம் -பரி பூர்ண நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் சங்கல்பம் அடியாகவே –ஆகவே நியாந்தா ப்ரேரிதா -சர்வேஸ்வரன்

(அதிஷ்ட்டாநம் ததா கர்த்தா -கீதை -18-14 கரணம் ச ப்ருதக் விதம் | விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ‘ என்று மேல் . (மனிதன் சரீரம் வாக்கு மனது இவைகளினால் எந்தக் கர்மத்தைச் செய்கிறானோ,அந்தக் கர்மத்திற்கு) சரீரம்,அப்படியே ஜீவாத்மா (வெவ்வேறாக இருக்கிற இந்த்ரியங்கள், அநேக விதமாயிருக்கிற வேறான வ்யாபாரத்தை யுடைய ப்ராண வாயு, இந்த விஷயத்தில் ஐந்தாவதாகிய பரமாத்மா,இவை ஐந்தும் காரணங்கள்.) என்கிற இடத்தில் கர்த்ரு பதம் பராதீந கர்த்தாவைச் சொல்லுகிறது. சித் அசித் ஈஸ்வரர்கள் என்னும் போது சித் சப்தமும் பராதீந சேதந விஷயம்.

( இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா -வைகுண்ட ஸ்தவம்-36. நித்யம் ப்ரியாஸ்தவ து கேசந தேஹி நித்யா: ‘ என்று மேல். உம்முடைய ஸங்கல்பத்தினாலேயே எல்லா
வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் உண்டாகிறது. ( எவை சில உமக்கு எப்பொழுதும் இஷ்டங்களோ அவை நித்யங்கள் என்னப்படுகின்றன.)இத்யாதிகளிற் படியே ஜீவனுடைய ஜ்ஞாநாநந்த ஸ்வரூபாதிகளும் பராதீநங்களாயிறே இருப்பது. இஜ்ஜீவ வர்க்கத்தில் பீஜாங்குர க்ரமத்தாலே அநாதியான அபராத ப்ரவாஹமடியாக முடிவில் பெரும் பாழான சிறைக்கூடத்திலே முப்பிரியான ஸத்வாதி குணங்களாலே கட்டுண்டு கழல விரகற்றுக் கிடக்கிறவர்கள் பத்தர்கள். இவர்களிலே மோக்ஷ ஸாஸ்த்ரங்களிற் சொல்லுகிறதொரு விரகாலே-(மோக்ஷயிஷ்யாமி) என்னும்படி முனிவு தீர்ந்து நித்யரோடொக்க முகப்பே கூவிப் பணி கொள்ளப் பெற்றவர்கள் முக்தர்கள். நித்ய பகவதனுபவத்தாலே நித்ய கைங்கர்ய பரரான சேஷ சேஷாஸநாதிகள் நித்யர்கள்.

போக்யநிரூபணம் –போக்யம் என்பது அநுபாவ்யம் என்றபடி. இது ஜீவேஸ்வரர்களுக்கும் பொதுவாகையாலே பூர்வாபரபதங்களிற் சொன்ன போக்த்ருத்வமும் நியந்த்ருத்வமும்
இல்லாத விஷயத்தை இங்கு’போக்யம் என்கிறது. இத்தை அசித்து என்றது ஜ்ஞாந ரஹிதம் என்றபடி. அசேதநத்வம் கேவல குணங்களுக்கும் தர்மபூத ஜ்ஞாநத்திற்கும் பொதுவாகிலும் இங்கு த்ரிவித அசேதனம் என்று பூர்வர்கள் நிரூபித்தவை த்ரிகுணமும் காலமும் ஸூத்த ஸத்த்வமும் என்கிற த்ரவ்ய விசேஷங்கள்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது-பரிமித ஸுகத்திற்கும் துக்கத்திற்கும் மோஹத்திற்கும் விசேஷ காரணங்களான ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற குணங்களுக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம். இது கேவல ப்ரக்ருதி என்றும், ப்ரக்ருதி விக்ருதி | என்றும், கேவல விக்ருதி என்றும் மூன்று வகையாய் இருபத்து நாலு தத்த்வ ரூபமாயிருக்கும். இவற்றில் ஸ்வபாவத்தாலும் பஞ்சீகரணாதிகளாலும் தேஸ கால பேதத்தாலே உண்டாம் விக்ருதிகளுக்கு எல்லை யில்லை.-மகான் அஹங்காரம் தன்மாத்திரைகள் -ஆகிய ஏழும் பிரகிருதி விக்ருதிகள்
பஞ்ச பூதங்களும் கர்ம ஞான பஞ்ச இந்திரியங்களும் மனஸ் ஆகிய இவை -16-கேவல விக்ருதிகள்-இவற்றில் ஸ்வ பாவத்தாலும் பஞ்சீ கரணாதிகளாலும் தேச கால பேதத்தாலே யுண்டாம் விக்ருதிகளுக்கு எல்லையில்லை –

கால நிரூபணம்–காலமாவது ஜடத்வ விபுத்வங்களை யுடைத்தாய் பால வ்ருத்தாதி வ்யவஸ்த்தைகளுக்கு விசேஷ காரணமான த்ரவ்யம். இது எப்போதும் அவ்வோ வஸ்துக்களுடைய பூத பவிஷ்யத் வர்த்தமாந வ்யபதேங்களுக்கும் தன் அவச்சேதங்களாலே நியாமகமாயிருக்கும். இதற்கு ஸத்த்வாதி குண த்ரயமின்றிக்கே இருக்க உபாதி விஸேஷங்களாலே ஸீத காலம் உஷ்ண காலம் என்னுமா போலே ஸாத்த்விக ராஜஸ தாஸாதி கால விபாகம் உண்டாகிறது. ப்ரஹ்ம திவஸம் முதலாக மனுஷ்ய திவஸ பர்யந்தமாக எங்கும் இது கண்டு கொள்வது. ஸூத்த ஸத்த்வத்தில் இப்படிப்பட்ட கால விபாகமின்றிக்கே பூர்வாபராதி விபாக மாத்ரமே யாயிருக்கும்.

சுத்தஸத்த்வ நிரூபணம்-சுத்த சத்வமாவது -ரஜஸ் தமஸ்ஸூக்கள் இன்றிக்கே -பிராகிருத சத்வ -விலக்ஷண சத்வத்துக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம்-இது ச பரிகாரனான ஸ்ரீ யபதிக்கு போக்ய-போக உபகரண -போக ஸ்தான ரூபமாய்க் கொண்டு அனந்த ஆச்சர்யமாய் ஹிரண்ய கர்ப்பாதி ஸ்தலங்கள் எல்லாம் நரகமாய்த் தோற்றும்படியான
ஆனுகூல்ய ப்ரகர்ஷத்தாலே பரமபத சப்த வாஸ்யமாய் இருக்கும்

ப்ரேரித்ருநிரூபணம்--இப்படி மூன்று வகையான சேதநாசேதநங்களுடைய ஸ்வரூப ஸ்த்திதி ப்ரவருத்திகள் மூன்றும் தானிட்ட வழக்காம்படி நிற்கிற ஸ்ரிய:பதியை ப்ரேரிதா என்கிறது. இவன் மூன்று ஸம்பந்த நியமத்தாலே ஸர்வ ஸரீரியாய்,மூன்று வ்யாபார விஸேஷங்களாலே ஸர்வ கார்யங்களுக்கும் ஸர்வ காரணமாய், மூன்று காலத்திலும் ஏகரூப ஸ்வரூப ரூபங்களை யுடையவனாய், மூன்று ஸ்த்தாநத்திலே நித்ய வாஸத்தை யுடையவனாய், மூன்று வகையான அர்ச்சாவதாரத்தை யுடையவனாய், மூன்று யுகத்திலே விஸேஷித்து ப்ரகாலிக்குமவனாய்,மூன்று குண யுகத்தாலும் த்ரியுகனாய், மூன்று வ்யூஹங்களாலே மூவிரண்டு ப்ரகாரங்களைப் பண்ணுமவனாய், மூன்று புருஷார்த்தங்களுக்கும் மூலமாய், மூன்று ப்ரமாணங்களாலும் ப்ரதி ஷேதமில்லாதவனாய், மூன்று மாத்திரையான ஒற்றை எழுத்திற்கு முக்க்யார்த்தமாய், மூன்று ரஹஸ்யங்களில் ஸிக்ஷையாலே விஸேஷித்தறியப்படும்.

ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம் –-ப்ரஹ்மத்தற்கு உபநிஷத்துக்களிற் சொன்ன த்ரைவித்யம் போகத்ரு(த்வ) விஸிஷ்ட ரூபத்தாலும், போக்ய(த்) விஸிஷ்ட ரூபத்தாலும், ப்ரோகத்வ விஸிஷ்ட ரூபத்தாலும் உபபந்நம். தன்னையும் ப்ரேரிதாவையும் பிரிய-அறிந்து பற்றினவனுக்கு அவன் ப்ரஸாதத்தாலே மோக்ஷம் என்று இங்கே ஓதுகிறது. இப்படியே பஞ்சதஸாத் யாயாதிகளிற்படியே பராவர தத்த்வ விவேகம் பிறந்தால் (த்யேயோ நாராயணஸ் ஸதா- நரஸிம்ஹ புராணம்-18-34 நாராயணன் எப்பொழுதும் த்யானிக்கத் தக்கவன்,) என்றும்,ஸ்மர்த்தவ்ய:ஸததம் விஷ்ணு:- பாரதம்- விஷ்ணு எப்பொழுதும் ஸ்மரிக்கத் தக்கவன். )என்றும்,துஞ்சும்போதும் விடாது தொடர்-திருவாய்-1-10-4-என்றும் சொல்லுகிற ஸதா நுஸந்தாநம் கருத்ய பேஷமுடையவனுக்கு உபாயோபகார விதி(தை)யாலேவந்த போகம். க்ருதக்ருத்யனுக்கும் கைங்கர்யோபகார விதி(தையாலே வந்த போகம்] போக்யனாய் நித்ய ஸ்ரீயான ஸேஷி ஸமாதிக தரித்ரனானாற்போலே
போகமும் நிஸ் ஸமாப்யதிகமாம்.

அலையற்ற ஆரமுதக் கடல் அக்கடலுண்ட முகில் *
விலையற்ற நன்மணி வெற்பு வெயில் நிலவோங்குபகல்*
துலையொத்தன என்பர் தூய்மறைசூடும் துழாய்முடியாற்கு
இலையொத்தன அவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே.

அலையில்லாத பூர்ணமான அம்ருதத்தையுடைய ஸமுத்திரம், அந்த அம்ருத ஸமுத்திரத்தை முழுதும் குடித்த மேகம், விலையில்லாததான உத்தம ரத்நமயமான மலை, வெயிலினாலும் நிலவினாலும் ப்ரகாசிக்கும் மத்தியான்னம் இவைகள் பரிசுத்தமான வேதங்களினாலே சிரஸ்ஸினால் சூடப்படுகிற துழாய் மாலையைக் கிரீடத்தில் தரித்துக் கொண்டிருக்கிற பகவானுக்கு ஸமமாயிருந்தன, அன்றிக்கே தூக்கிப் பார்ப்பதில் அதாவது நிறையில் ஸத்ருச்யமாயிருந்தன என்று ( பூர்வாசார்யர்கள்) சொல்லுவர்கள், அவனுடைய திருவடிகளை ஆச்ரயித்த பாகவதர்களுக்கு இவைகள் ஸமானம் என எண்ணுதற்கே ஸத்ருசமான வஸ்துக்கள் இல்லை

ஸத் ஸம்ப்ரதாய தத்நஸ் ஸமுத்த்ருதம் வேங்கடேரே ந |
தத்த்வநவநீதமேதத் தநுதே நவநீதநர்த்தகப்ரீதிம் |11

ஸத்ஸம்ப்ரதாயத்தில் உபதேச க்ரமமாக வந்த அர்த்தங்களாகிற தயிரிலிருந்து வேங்கடேசன் என்கிற திருநாமத்தை யுடைய ஆசார்யனால் எடுக்கப்பட்ட இந்தத் தத்த்வ நவநீதம் என்கிற க்ரந்தமானது நவநீதத்திற்காக (க்கோபர்களுடைய க்ருஹங்களில்) நர்த்தநம் பண்ணின பகவானுக்கு ப்ரீதியைச் செய்கிறது.

வரத விரசய த்வம் வாரிதாபேபஷதோஷாம்
புநருபசித புண்யாம் பூஷிதாம் புண்யகோட்யா |
ஸிதமுதித மநோபி: தாவகை: நித்ய ஸேவ்யாம்
ஹதரிபு ஜநயோகாம் ஹஸ்திதாம்நஸ் ஸம்ருத்திம் [1

ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் அர்ச்சாரூபம் கொண்டிருக்கும் வரதனே! போக்கடிக்கப்பட்ட எல்லாத் தோஷங்களையுடையதாயும், மேன்மேலும் வருத்திசெய்யப்பட்ட புண்யத்தையுடையதாயும், புண்யகோடி விமானத்தினால் அலங்கரிக்கப்பட்ட தாயும், பரிசுத்தமாயும், ஸந்தோஷத்தோடு கூடியதாயுமிருக்கிறமனத்தையுடைய உம்முடைய பக்தர்களினால் எப்பொழுதும் ஸேவிக்கத் தகுந்ததாயுமிருக்கிற ஹஸ்திகிரியினுடைய ஸம்பத்தைப் போக்கடிக்கப்பட்ட சத்ரு ஜனங்களுடைய ஸம்பந்தத்தையுடையதாக நீர் செய்துகொள்ளும்,

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்திரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீதத்த்வநவநீதம் முற்றிற்று.

—————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ ரகஸ்ய பதவி–

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் மூன்றாவது.-[காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.)

ரகஸ்ய த்ரயங்கள் தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக காட்டி அளிக்கும் –

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முன் நான்கும் -தோன்றாத் தொலையும் துயர் –

தோன்றி தான் சூரியோதயம் இருளைத் தொலைக்கும் -இம் மூன்றும் தோன்றாமல் சம்சார துரிதங்களை போக்கி அருளும் என்றவாறு –

இதி தத்வ த்ரயஸ்ய ஏஷா ரகஸ்ய த்ரயஸ்ய ச பதவீ வேங்கடேசே
ந ப்ரத்யக் ப்ராச்சீ பிரதர்சிதா–ப்ரத்யக் ப்ராச்சீ-ஆத்ம ஸ்வரூப ஞானம்

ரகஸ்ய த்ரயர்த்தங்கள்
ஸ்ரீ யபதித்தவம் / ஜகத் காரணத்வம் / ஜகத் ரக்ஷகத்வம் / ஸ்வ பாவிக சேஷித்வம் /
ஜீவன் – அநந்யார்ஹ சேஷ பூதன் / ஜீவன் பாகவத -ததீய சேஷ பூதன்/
ஸமஸ்த ஜகத் பாலனத்வம் / ஞானாதி ஸுலப்யாதி குண விசிஷ்டன் / ஜீவன் அணு -பரமாத்மா விபு / ஜீவன் தேக இந்திரியாதி வி லக்ஷணம் /
அவன் சங்கல்பம் அடியாகவே ஜீவனுக்கு ஸ்வ தந்த்ர லேசம்/ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் பிரபன்னனுக்கு /
ரகஸ்ய த்ரய ஞானமே உஜ்ஜீவன ஹேது

உபோத்காதம் -ப்ரணவ சப்தார்த்தம்- நம: சப்தார்த்தம்- நாராயண சப்தார்த்தம் -த்வயத்தில் பூர்வ கண்டார்த்தம் -த்வயத்தில் உத் த ர கண்டார்த்தம் -த்வயத்தின் திரண்டபொருள்-சரமச்லோகத்தில் பூர் வார்த்தவிவரணம்-சரம ச்லோகத்தில் உத்தரார்த்த விவரணம்- நிக மநம் ]

உபோத்காதம் அநாதிகாலம் ஸம்ஸரித்துப் போந்த ஜீவாத்மாக்களுடைய உஜ்ஜீவநார்த்தமாக அத்யாத்ம ஸாஸ்த்ரங்கள் தத்த்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதிக்கும். அவற்றை ஸங்க்ரஹேண ரஹஸ்யத்ரயம் ப்ரகாமிப்பிக்கும்.

ப்ரணவ சப்தார்த்தம் -இவற்றில் திருமந்த்ரம், ஸர்வ ஸங்க்ரஹம். இது தான் மூன்று பதமாய் எட்டுத் திருவக்ஷ ரமாயிருக்கும். இதில் ப்ரதம பதமான ப்ரணவம் ஸாரதம ஸங்க்ர ஹம். இது மூன்று பதமாய் மூன்று அக்ஷரமாயிருக்கும். இதில் ப்ரதமாக்ஷரம் ஸர்வ காரண பூதனாய், ஸர்வ ரக்ஷகனாய் நித்ய நிருபாதிக சேஷத்வ ப்ரதி ஸம்பந்தியான ஸ்ரிய:பதியைச் சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ- சேஷத்வமாகிற ஸம்பந்
தத்தைக் காட்டுகிறது. மத்யமாகூரம் இஸ்ஸம்பந்தத்தை மற்றவரோடு துவக்கற நியமிக்கிறது. த்ருதீயாக்ஷரம் இஸ் ஸம்பந்தத்திற்கு ஆஸ்ரயனாய் ரக்ஷணீயனாய் ஜ்ஞாநாநந்த ஸ்வரூப குணனாய் அணுவாய் தேஹாதி விலக்ஷணனான ஜீவாத்மாவைச்
சொல்லுகிறது. ஆக இப் ப்ரணவத்தால்-கண்ணபுரமொன்று உடையானுக்கு அடியேன் + ஒருவர்க்குரியேனோ* * -(பெரிய திருமொழி-8-9-3)என்கிறபடியே இஜ்ஜீவாத்மா பகவதநந்யார்ஹ க்ஷேஷபூதன் என்றதாயிற்று.

நம : சப்தார்த்தம் -மத்யமபதமான நமஸ்ஸு இரண்டு அக்ஷரமாய் இரண்டு பதமாய் நான் எனக்கு உரியன் அல்லேன்,என் கார்யத்திற்கு நான் நிரபேக்ஷ ஸ்வதந்த்ரனும் அல்லேன் என்கிறது. இங்கே பாகவத சேஷத்வம் பலிதம். இந்நமஸ்ஸுக்கு
ஸரணாகதியிலும் தாத்பர்யம். அநிஷ்ட நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிறதாகவுமாம். இப்படி நமஸ்ஸு தன்னிலே தத்த்வ ஹித| புருஷார்த்த ப்ரகாநமுண்டு.

நாராயண சப்தார்த்தம் -நாராயண ப்தம் நாரங்களுக்கு அயநம் என்றும், நாரங்களை அயநமாகவுடையவன் என்றும், ஸர்வாதாரத்வாதி விஸிஷ்டனான ஸ்ரிய:பதியைச்
சொல்லுகிறது. இதில் சதுர்த்தீ தாதர்த்த்யத்தை முன்னிட்டுக் கொண்டு, அதன் பலமான கைங்கர்யத்தைக் காட்டுகிறது. இத்தால்-ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
திருவாய்-3-3-1-என்றதாயிற்று.-அகாரார்த்தாயைவ) என்கிற லோகத்தை இங்கே அநுஸந்திப்பது.

த்வயத்தில் பூர்வகண்டார்த்தம்-இப்படித் திருமந்த்ரத்தில் ஸங்க்ருஹீதங்களான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக்குகிறது த்வயம். இதில் பூர்வ கண்டம் ஒரு வாக்யமாய் உபாயபரம். உத்தர கண்டம் இரண்டு வாக்யமாய் உபேயபரம், இவை ஓரொன்றும் மூன்று பதமாயிருக்கும். ப்ரதம கண்டத் தில் ப்ரதம பதம் மூன்று பதம் கூட ஸமஸ்த பதமாயிருக்கும்.

இதில் ஸ்ரீமத் ஸப்தம் ஸர்வருக்கும் ஆஸ்ரயணீயையாய் அகலகில்லேன்-(திருவாய்-6-10-10)
என்கிறபடியே தன்னை ஆஸ்ரயித்திருக்கிற பெரிய பிராட்டியா ரோடு பிரிவற்றவன் என்கிறது. நாராயண ஸப்தம்-நிகரில் புகழாய்-இத்யாதிகளிற் சொன்ன வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌஸ்ரீல்ய ஸௌலப்யாதிகளை யுடையவனான ஸர்வேஸ்வரனைச் சொல்லுகிறது. ஸரண ஸப்தம் ஸ்ரண்ய விஷயத்தில் க்ருபோத்தம்பநாதி களுக்காக தாஸ பூதன் பற்றும் துறையான திருவடிகளைக் காட்டுகிறது. ‘ ஸரணம்’ என்கிற பதம் திருவடிகளுடைய உபாய பாவத்தைச் சொல்லுகிறது. ‘ப்ரபத்யே’ என்கிற பதம் அகிஞ்சநாதிகாரி மஹா விஸ்வாஸாதி விஸிஷ்ட ஸரண்யன் திருவடிகளை உபாயமாகக கொண்டு பரந்யாஸம் பண்ணுகிறபடியை ப்ரகாஸிப்பிக்கிறது.

த்வயத்தில் உத்தரகண்டார்த்தம் -‘ஸ்ரீமதே’ என்கிற பதம் ப்ராபகனான நாராயணன் ப்ராப்யனாய்க் கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியாம் போது பத்நீ விஸிஷ்டனா யிருக்கும்படியைக் காட்டுகிறது. இங்குற்ற நாராயண பதம் ஸர்வ ப்ரகார விஷ்டனாய்க் கொண்டு நிரதிய போக்யனான ஸர்வ சேஷியை ப்ரதிபாதிக்கிறது. இதின் சதுர்த்தியிலும் திருமந்த்ரத்திற் போலே கைங்கர்ய ப்ரார்த்தனையைக் கண்டு கொள்ளுவது. இக்கைங்கர்யம் ஸர்வவிரோதி ரஹிதமான படியை இந் நமஸ்ஸு கணிசிக்கிறது.

த்வயத்தின் திரண்ட பொருள் -ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளில் களையற்ற நித்ய
கைங்கர்யம் பெறுகைக்கு ஸ்ரீமானான நாராயணன் திருவடிகள் இரண்டையும் ஸரணமாகப் பற்றுகிறேன் என்று இதில் திரண்ட பொருள்.

சரம ச்லோக பூர்வார்த்தவிளக்கம் -இப்படித் திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் ப்ரகாஸித்த உபாயத்துக்கு அகிஞ்சநாதிகாரித்வ நிரபேக்ஷத்வாதிகளைக் காட்டிக் கொண்டு விதி முகத்தாலே உப ப்ரும்ஹணம் பண்ணுகிறது சரம ஸ்லோகம். இது தான் மூன்று வாக்யமாய்ப் பன்னிரண்டு பதமாயிருக்கும். இப்படி ரஹஸ்ய த்ரயம் உத்தரோத்தரம் பதங்கள் இரட்டிப்பாய் விஸதீகரண மாயிருக்கும். இஸ் ஸ்லோகத்தில் ப்ரதம வாக்யம் உபாய விதாயகம்.மத்யம வாக்யம் பல ப்ரதி பாதகம். உத்தர வாக்யம் கருதக்ருத்யத்வாதி தத் பரம்.

ஸர்வ தர்மங்களையும் விட்டு‘ என்கிற இரண்டு பதங்களாலே ‘நின்னிலங்கு பாதமன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே (திருச்சந்த-90)என்கிறபடியே அபிமத ஸித்திக்கு உபாயாந்தரம் அற்று இருக்கிற அதிகாரி விசேஷத்தையாதல், ப்ர பத்தியினுடைய தர்மாந்தர நைரபேஷ்யாதிகளையாதல் சொல்லுகிறது. என்னை ஒருவனை ‘ என்கிற இரண்டு பதங்களாலே ஸௌலப்யாதி குண விஸிஷ்டமாய் ப்ரதாநோபாயத்வ நிரபேக்ஷத்வ ஸர்வ பல ப்ரதத்வாதி விஸிஷ்டமுமான ஸநாதந தர்மத்தைக் காட்டுகிறது.’ ஸரணமாகப் பற்று’ என்கிற இரண்டு பதங்களாலே மஹாவிஸ்வாஸாதி விஸிஷ்ட பர ந்யாஸத்தை விதிக்கிறது.

சரமச்லோக உத்தரார்த்தவிளக்கம்நான் உன்னை ‘ என்கிற இரண்டு பதங்களாலே பர ஸ்வீகாரம் பண்ணின ஸர்வ ஸக்தியையும், நயஸ்த பரனான சாதக வ்ருத்தியையும் சொல்லுகிறது. ‘எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கக் கடவேன் ‘ என்கிற இரண்டு பதங்களாலே கைங்கர்ய விரோதிகளை நிஸ்பே ஷமாகக் கழிக்கும்படியைச் சொல்லுகிறது. ஸோகிக்க வேண்டாம்’ என்கிற இரண்டு பதங்களாலே புகலற்றுத் தளும்பின பூர்வ தஸையை விலக்கி,-நிஸ் ஸம்யஸ் ஸுகமாஸ்ஸ்வ-(சரணாகதி கத்யம். ஸம்சயம் ஒன்றுமில்லாமல் ஸுகமாயிரு.)என்று அருளிச்செய்த உத்தர தசையை உபலக்ஷிக்கிறது.

த்வயத்தில் பூர்வோத்தர கண்டங்களுக்கு இதில் பூர்வோத் தரார்த்தங்கள் சேர்த்தி யாகின்றன.

மூன்றில் ஒரு மூன்றும் மூவிரண்டும் முந்நான்கும்
தோன்றத் தொலையும் துயர்.
–குறள் வெண்பா.

ரஹஸ்யத்ரயத்தில் அத்விதீயமான மூன்று பதங்கள் அடங்கிய திருமந்த்ரமும், அன்றிக்கே ஒரு அர்த்தத்தை ப்ரதிபாதிக்கிற மூன்று பதங்களையுடைய திருமந்த்ரமும், ஆறு பதங்களையுடைய த்வயமும், பன்னிரண்டு பதங்களையுடைய சரம ச்லோகமும் அர்த்தத்துடன் மனதில் ப்ரகாசிக்கத் துக்கங்கள் நசித்துவிடும்.

இதி தத்த்வத்ரயஸ்யைஷா ரஹஸ்யத்ரிதயஸ்ய ச |
பதவீ வேங்கடேசே ப்ரத்யக் ப்ராசீந ப்ர தர்ஸிலிதா |

இந்த சித், அசித், ஈசுவரன் என்கிற மூன்று தத்த்வங்களினுடையவும், திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம், என்கிற மூன்று ரஹஸ்யங்களினுடையவும் கிழக்கு மேற்காக இருக்கிற,அதாவது ப்ரத்யக் என்று சொல்லப்படும் ஜீவாத்மாவை அடைவதற்குக் காரணமாயி ருக்கிற ப்ரா சீந மார்க்கமானது வேங்கடேசன் என்கிற திருநாமமுடைய ஆசார்யனால் இந்த ப்ரகாரம் காட்டப்பட்டது. இங்கு வேங்கடேசே என்னும் பதம் இந்த க்ரந்தத்திற்கு வக்தா தாமல்லர், ப்ரதமாசார்யனான பகவானே என்கிற அர்த்தமும் த்வனிக்கிறது. ஒரு ஊரிலிருந்து பல இடங்களுக்குச் செல்லும் வழியைச் சுட்டிக் காட்டுகிறாப்போல இங்கும் திங் மாத்திரம் காட்டப்பட்டது என்று கருத்து. ப்ருதக்ப்ராசீ ‘ என்று பாடாந்தரம். அப்பொழுது ப்ராசீநமான இந்தவழி தனித்தனியே காட்டப்பட்டது என்று அர்த்தம்;

ஸ்ரீரங்க த்விரத வ் ருஷாத்ரி பூர்வகேஷு
ஸ்த்தாநேஷ ஸ்த்திரவிபவா பவத் ஸபர்யா
ஆகல்பம் வரத விதூத வைரிபக்ஷா
பூயஸ்யா பவதநுகம்பயைவ பூயாத்!

பக்தர்களுக்கு அபீஷ்டங்களைக் கொடுக்கும் பகவானே ! ஸ்ரீரங்கம், ஹஸ்திகிரி, வேங்கடாசலம் இவை முதலான உகந்தருளின திவ்யதேசங்களில் உம்முடைய திருவாராதனம் அதிகமான உம்முடையதான க்ருபையினால் கல்ப காலம் வரையிலும் போக்கடிக்கப்பட்ட சத்ருக்களினுடைய பக்ஷத்தை யுடையதாகவும் அழிவில்லாத ஐச்வர்யத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இப்படி கவிதார்க்கிகஸிம்ஹமும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ ரஹஸ்ய பதவீ முற்றிற்று.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்த்வ பதவீ

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

——————-

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் இரண்டாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது.

உபோத்காதம்- பர தத்த்வ நிரூபணம்-சேதநநிரூபணம்–அசேதந நிரூபணம் த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம்- தர்மபூத ஜ்ஞாந நிரூபணம் – முக்தி அடையும் ப்ரகாரம்.

ப்ரஸாதாத் தோரிகேந்த்ராணாம் பராவரவிபாகவித்
ப்ரப ந: பரமாத்மாநம் ப்ராப்கோதி பரமம் பதம் I

ஆசார்யர்களினுடைய அநுக்ரஹத்தினால் பர தத்த்வம் அவர தத்த்வம், அதாவது உயர்ந்த வஸ்து தாழ்ந்த வஸ்து, இவைகளின் பிரிவைத் தெரிந்து கொண்டவனாய் உயர்ந்த தத்த்வமாகிய சரிய:பதியினிடம் ப்ரபத்தி செய்தவன் பரமபதத்தை அடை கிறான்.

உபோத்காதம்-ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே பராவர தத்த்வ ஜ்ஞாநம் பிறந்து(தவன்) ஸர்வேஸ்வரன் திருவடிகளை உபாய உபேயங்களாகப் பற்றி உஜ்ஜீவிக்க வேண்டும்.

பர தத்த்வ நிரூபணம் -பரதத்த்வமாவது-ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் சேஷியுமான ஸ்ரிய:பதி இவன் ஸ்வத:ஸர்வஜ்ஞனாய், ஸர்வக்தியாய், பரம காருணிகனாய், ஸர்வ ஸரண்யனாய், பரமோதாரனாய், மோக்ஷ ப்ரதனாய்,-முக்த ப்ராப்யனாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார பாஸ்ரய (திவ்ய மங்கௗ) விக்ரஹ விஷ்டனாயிருக்கும்.

இவனை ஒழிந்தவை அவர தத்த்வம். இது சேத மென்றும்,-அசேதநமென்றும் இரண்டு வகையாயிருககும்.

சேதந நிரூபணம் -சேதநமான அவர தத்த்வம் பரிச்சிநமான அஹமர்த்தம்)-இதற்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் பராயத்தங்களாயிருக்கும். இது பத்த முக்த
நித்ய ரூபத்தாலே த்ரிவிதம். பத்தராவார்-ஸம்ஸரிக்குமவர்கள்.-முக்தராவார் – ஸம்ஸாரம் கழிந்தவர்கள். நித்யராவார்-ஒரு காலத்திலும் ஸம்ஸாரமில்லாத நித்யஸூரிகள்.

அசேதந நிரூபணம் -அசேதநமாவது அறிவில்லாத வஸ்து. அசேதந த்ரவ்யம் த்ரிகுணம் என்றும், காலம் என்றும், த்தஸத்த்வம் என்றும், தர்மபூத ஜ்ஞாநம் என்றும் சதுர் விதமாயிருக்கும்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது ஸத்த்வாதி குணத்ரயாஸ்ரயமான த்ரவ்யம். இது ப்ரக்ருதி விக்ருதி விபாகத்தாலே இருபத்து நாலு வகையாய் பகவல்லீலார்த்தமாக
க்ஷேத்ரஜ்ஞருக்குக் கார்ய கரணாதி ரூபேண பரிணமித்து பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளைப் பண்ணும்.

காலநிரூபணம்-காலமாவது-க்ஷணாதி விபாகத்தையுடைத்தாய் ஸர்வ கர்த்தாவான ஈஸ்வரனாலே ஸஹ காரியாக ஸ்வீக்ருதமாயிருக்கும் த்ரவ்யம்,

சுத்தஸத்த்வ நிரூபணம் –சுத்தஸத்த்வமாவது- ர ஜ ஸ் தமஸ்ஸுக்களின்றிக்கே
ஸத்த்வ குணாஸ்ரயமான த்ரவ்யம்.-இது ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் விக்ரஹாதி ரூபேண விசித்ர (போக்ய)மாயிருக்கும்.

தர்மபூதஜ்ஞாந நிரூபணம் -தர்மபூத ஜ்ஞாநமாவது-பராவராத்மாககளுக்கு ஸ்வாத்மாவையும், ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்களையும் ப்ரகாசிப்பிக்கவற்றான ஜ்ஞாநம். இந்த ஜ்ஞாநத்தாலே ஆத்மாக்களுக்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் உண்டாகின்றன.

முக்தி அடையும் ப்ரகாரம் -பத்தருக்கு நிஷித்த காம்ய கர்த்ருத்வம் ஸம்ஸார ஹேது,
தத்த்வஜ்ஞாநமூல நிவ்ருத்தி தர்ம கர்த்ருத்வம் மோக்ஷ ஹேது.
பத்தன் முன்பு பண்ணின பந்தகங்களுக்கெல்லாம் தன் அதிகாராநுகுணமாக ப்ரபத்த்யாதி
ப்ராயசித்தம் பண்ணி, மேல் அபராதம் பண்ணாதே ப்ராரப்த கர்மத்தையும் ஒரு வழியாலே கழித்து முக்தனாம்.

முத்திக்கு அருள்சூட மூன்றைத் தெளிமுன்னம்
இத்திக்கால் ஏற்கும் இதம்.

ோக்ஷத்திற்குக் காரணமாகிய பகவானுடைய க்ருபையை சிரஸா வஹிக்க முதலில் சித், அசித் , ஈச்வரன் என்கிற மூன்று தத்த்வங்களையும் அவைகளின் அஸாதாரண தர்மங்களுடன் நன்றாகத் தெரிந்துகொள், இந்த வழியாக உபாயம் அநுரூபமாக உண்டாகும்.

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ தத்த்வ பதவீ முற்றிற்று.

————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சில்லறை ரஹஸ்யங்கள்

June 9, 2025

அம்ருத ரஞ்சனி -17-ரகஸ்ய கிரந்தங்கள்

ஸ்ரீ ஸம்ப்ரதாய பரிசுத்தி ‘
தத்த்வ பதவீ
ரஹஸ்ய பதவீ
தத்த்வ நவநீதம்‌
ரஹஸ்ய நவநீதம்‌

தத்வ மாத்ருகை
ரஹஸ்ய மாத்ருகை
தத்த்வ ஸந்தேசம்‌
ரஹஸ்ய ஸந்தேசம்‌
ரஹஸய ஸந்தேச விவரணம்

‌ரஹஸ்ய சிகாமணி
அஞ்சலி வைபவம்

ஸ்ரீ பிரதான சதகம் —
விரோதி பரிக்ரஹம்
தத்வ ரத்னாவளி -தத்வ ரத்னாவளி ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்
ரஹஸ்ய ரத்னாவளி
ரஹஸ்ய த்ரய சுகளம்
சார சங்ஷேபம்
உபகார ஸங்க்ரஹம்-சார தீபம்

சுளகம்‌ என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று  பொருள்‌. அசேதனம்‌ - சேதநன்‌- ஈச்வரன்‌ என்னும்‌  தத்துவங்களைப்‌ பற்றிய விஷயங்களை உள்ளங்கையில்‌ வைத்தாற்‌ 
போல்‌ எளிதில்‌ காட்டுவதால்‌ இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர்‌ வந்தது.
ரஹஸ்ய மாத்ருகை (வடமொழியில்‌ ௮ முதல்‌ க்ஷ வரையில்‌ உள்ள 
ஐம்பத்தொன்று எழுத்துக்களுக்கு -மாத்ருகை” எனப்‌ பெயர்‌. இந்த
ரஹஸ்யத்தில்‌ திருமந்த்ரம்‌ - த்வயம்‌ - சரம ஸ்லோகம்‌ என்னும்‌ மூன்று
ரஹஸ்யங்களின்‌ ஸாரார்ததங்களைச்‌ சுருக்கி ஐம்பத்தொன்று
வாக்கியங்களில்‌ அருளிச்‌ செய்வதால்‌ ரஹஸ்ய மாத்ருகை
எனத்‌
திருநாமம்‌ வந்தது
எம்பெருமானுக்கு ஒர்‌ அணி போல போக்யமாய்‌ விளங்கும்‌ ரஹஸ்ய ரத்நாவளி யென்னும்‌ ரஹஸ்யத்தின்‌  தாத்பர்யத்தை என்‌ அறிவுக்கு ஏற்றவாறு அதன்‌ ஹ்ருதயமென்ற  பெயரால்‌ இவ்வாறு நானே விளக்கி ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தேன.-திருமகள் சேர்‌ மார்வனுக்குக்‌  கோல மா மணி யாரமும்‌' முத்துத் தாமமும்‌ போலே ரஹஸ்ய ரத்நாவளியும்‌  ஹ்ருதயத்துக்கு ஏற்கும்‌ திருவாபரணம்‌- என்றபடி 

வேதார்தத ஸங்‌க்ரஹம் கடைசி ஸ்லோகம்‌ -ஸாரம்‌ அஸாரம்‌ -இவற்றின்‌
பாகுபாட்டை அறிபவர்களாய்‌ மிகப்‌ பெரியராய்‌ பொறாமை யற்றவா்‌ களாய்‌ ப்ரமாணங்களுக்குக கட்டுப்பட்ட வர்களாயுள்ள பலர்‌ உலகில்‌ இருக்கின்றார்களென்று கருதியே இநத வேதார்த்த ஸங்கரஹம்‌ என்னால்‌ இயற்றப்பட்டது.
விஷ்ணு புரா. (2-7-28) மரத்தினுள்‌ தீப் போலவும்‌ எள்ளினுள்‌ எண்ணெய் போலவும்‌ ஜீவாத்மா அசேதநமான சரீரத்தினுள்‌ புகுந்து எங்கும்‌ செல்ல வல்லவனாய் ஞானமுடையனாய்த்‌ தானே தன்னை அறிபவனாயுள்ளான்‌.

பரஹ்ம ஸூ. (3-2-5) * ஜீவனது இயற்கையான ரூபம்‌ ஸம்ஸார தசையில்‌ பரமாத்ம ஸங்கல்பத்தால்‌ மறைந்துள்ளது. அந்த மறைவு ஸ்ருஷ்டி காலத்தில்‌ சரீரமாக மாறுபட்ட அசேதநத்தின்‌ ஸம்பந்தத்தாலும்‌ ப்ரளய தசையில்‌ ஸூக்ஷ்ம நிலையுள்ள அசேதநத்தின்‌ ஸம்பந்தத்தாலும்‌ வருகின்றது.

ப்ரஹ்ம ஸூ. (3-1-4 ப்ரஹ்ம ஜ்ஞாநமின்றி யாகம்‌ தானம்‌ முதலிய புண்ணிய கர்மங்களை மட்டும்‌ செய்பவன்‌ வேறு சரீரத்தைப்‌ பெறும் போது பஞ்ச பூதங்களின்‌ ஸூக்ஷ்மமான அம்சங்களின்‌ தொடர்புடனேயே செல்கின்றான்‌. ஏனெனில்‌ - ஸ்வேதகேதுவை பரவாஹணன்‌ இவ் விஷயங்களைப்‌ பற்றிக்‌ கேட்ட கேள்வியாலும்‌
ஸ்வேதகேது கூறும்‌ விடையாலும்‌ இவ்வம்சம்‌ தெளிவு படுவதால்‌.

பாகவதம்‌ (1717-72-75): எல்லா உயிர்களுக்கும்‌ அந்தாயாமியான்‌ என்னை ஒருவனையே எல்லாவகையாலும்‌ சரணமாகப்‌ பற்று. அங்ஙனம்‌ செய்தால்‌ எவரிடமும்‌ பயமற்ற இருப்பைத்‌ தரும்‌ மோக்ஷத்தை அடைவாம்‌. (உத்தவருக்குக்‌ கண்ணன்‌ உபதேசம்‌).
பாகவதம்‌ ( 11-19-18) * கர்ம பலன்களை அனுபவிககப்‌  பிறந்தவர்களான பிரமன்‌ வரை உள்ள அனைவரும்‌ பிறரின்‌  பாபத்தைப்‌ போக்க வல்லரல்லர்‌ என்பதை உணர்ந்து அவர்களை  அணுக விரும்பாதவர்க்கு வாஸுதேவனே அடையப்படும்‌ சிறந்த  பலனாவான. 

ஸ்ரீ பாஷ்யகாரர்‌ வாக்யம்‌ : ப்ரபத்தியென்பது நம்பிக்கை. அதாவது -
ஒரு தடவை பிரார்த்திப்பதாலேயே வேண்டிய பலனைத்‌ தருவான்‌ என்ற
நம்பிக்கையுடன்‌ பிரார்த்திப்பது


விஷ்ணு புரா. (7-9-78)- எம்பெருமானே! ஸகல பாபங்களையும்‌ ஒழிக்கவல்ல உன்னைச்‌ சரணமடையாத வரையில்‌ தான்‌ மனிதனுக்குத தான்‌ இழந்த ஐச்வர்யத்தை மறுபடி பெற வேண்டுமென்ற கவலையும்‌, புதிய ஜச்வர்யத்தைப்‌ பெற ஆசையும்‌, சரீரததிலும்‌' வேறுபட்ட ஆத்மாவை அநுபவியாமையும்‌, ஸம்ஸார துக்கமும்‌ இருககும்‌.

ப்ரஹ்மபு (50)*+ பக்தி யோகம்‌ செய்யமுடியாமல்‌ உன்னிடம்‌ ப்ரபததியைச செய்தவர்களும்‌ ஸம்ஸார மண்டலத்தைக்‌ கடந்து பரமபதததை அடைகின்றனர்‌


லக்ஷ்மீ தந்‌ (17-76)* நிக்ஷேபம்‌ என்ற வேறு பெயரையுடைய பரநயாஸம்‌ ஐந்து அங்கங்களுடன்‌ கூடியது இதுவே “ஸநநயாஸம்‌, த்யாகம்‌, சரணாகதி' எனற பெயர்களால்‌ வழங்கும்‌.


லக்ஷ்மீ தந (177-100): பக்தியோகாதிகளில்‌ தெளிவான ஞானமோ,
ப்ரபத்தியிலும்‌ ஸூக்ஷ்மமான விசேஷங்களில்‌ அறிவோ
இல்லாதவர்க்கும்‌ இநத ப்ரபததியே ஏற்ற உபாயம்‌. பகதி யோகாதிகளில்‌
தெளிவான ஞானமோ, ப்ரபததிககு வேண்டிய சரண்யனுடைய குண
விசேஷங்களில்‌ ஞானமோ உடையவர்க்கும்‌ இநத ப்ரபத்தியே
உபாயமாகும்‌. விரைவில்‌ ஸம்ஸாரததைக கடக்க விரும்புமவாககும்‌
இதுவே உபாயமாகும்‌. ஸ்ரீவைகுண்டத்தில்‌ விரைவில பரிபூர்ண
பகவதநுபவததைப்‌ பெற விரும்பு மவர்க்கும்‌ இநத ப்ரபததியே
உபாயமாகும்‌.

ஜிதந்தா (1-18) - மிகவும்‌ கெட்ட புத்தியடையனான நான்‌ எங்கே? என்‌ நன்மையை ஆலோசிதது அறிவது எங்கே? ஆதலின எம்பெருமானே! எனக்கு நன்மையை நீயே கட்டளையிட வேண்டும்‌. உன்னைச்‌ சரணமடைந்தேன்‌. உனக்கு அடியனான எனக்கு வேறு கதியில்லை. இப்பொழுதே என்னை உன்‌ திருவடிக்‌ கமலத்தில்‌ சோத்துக
கொண்டு கைங்கரியம்‌ புரியுமாறு செய்‌.
விஷ்ணு புராணம்‌ ( 2- 13- 98) - அரசனே! ஜீவன்‌ தேவனல்லன்‌; மனிதனலலன்‌; மிருகமல்லன்‌; மரமல்லன்‌. சரீரங்களின்‌ அமைப்பினால்‌ ஏற்பட்ட இவ்வேற்றுமைகள்‌ கர்மத்தால்‌ வந்த சரீரங்களைப்‌ பற்றியனவேயாகும்‌.
விஷ்ணு புராணம்‌ (1-1-31) - ப்ரபஞ்சம்‌ எம்பெருமானுடைய ஸங்கலபத்தால்‌ உண்டானது. பிரளயத்தில்‌ அவனிடமே லயத்தை அடைகிறது. இதைக்‌ காப்பவனும்‌ அழிப்பவனும்‌ அவனே. ப்ரபஞ்சமே அவனுக்குச்‌ சரீரம்‌.

பாரதம்‌ - ஸபா (41-23) - கண்ணன்‌ ஒருவனே உலகங்களுக்கு உத்பத்தி ஸ்தாநம்‌. லயிக்கும்‌ இடமும்‌ அவனே. தாவர ஜங்கமமாகிய இவ்வுலகம்‌ முழுதும்‌ கண்ணனுக்காகவே ஏற்பட்டது.
பாகவதம்‌ ( 11-19-18) * கர்ம பலன்களை அனுபவிககப்‌ பிறந்தவர்களான பிரமன்‌ வரை உள்ள அனைவரும்‌ பிறரின்‌ பாபத்தைப்‌ போக்க வல்லரல்லர்‌ என்பதை உணர்ந்து அவர்களை அணுக விரும்பாதவர்க்கு வாஸுதேவனே அடையப்படும்‌ சிறந்த பலனாவான.

எம்பெருமானுடைய திருவடிகளில்‌ நம்மைச்‌ சேர்க்கின்ற பிராட்டியும்‌(1),அவனோடு சேர்ந்திருப்பதில்‌ ஸ்திரமான தன்மையும்‌ (2),சீர்மையால்‌ பெரியனான எம்பருமானுக்குத்‌ தக்கனவாகிய குணங்களும்‌(3),ஆஸ்ரிதர்கள்‌ த்யானிக்க இலக்கான திருமேனியின்‌ பகுதியாகிய இரண்டு திருவடிகளும்‌ (4),சேதநர்களால்‌ ப்ரதாநமாய்க்‌ கருதப்படுகின்ற உபாயமான ஸ்ரீமந்‌ நாராயணனும்‌ (5),உபாயமாகிய எம்பெருமானிடம்‌ மஹா விஸ்வாஸத்துடன்‌ கூடிய பர ந்யாஸமும்‌ (6), வேறு உபாயத்தில்‌ அதிகாரமற்ற நம்முடைய நிலைமையும்‌ (7),நாம்‌ அடைகின்ற ப்ரதாந பலனாகிய ஸ்ரீமந் நாராயணனும்‌ (8),சேதநன்‌ கைக்‌ கொள்கின்ற எல்லைகளாகிய பகவத்‌ பாகவத கைங்கர்யம்‌ முதலியவையும்‌ (9),அஹங்கார மமகாரங்கள்‌ முதலிய எல்லாக் களைகளும்‌ நீங்கப்‌ பெறுதலும்‌ (10)ஆகிய பத்‌து அர்ததங்களையும்‌ த்வயத்தில்‌ அநுஸந்தித்தோம்‌.

சிஷ்யன்‌ மோக்ஷம்‌ பெறுதற்கு முதற் காரணம்‌ –சேதநம்‌ – அசேதநம்‌ – ஈஸ்வரன்‌ ஆகிய மூன்று தத்துவங்களில்‌ விளக்கமான அறிவேயாகும்‌. இந்த அறிவு பெறும்‌ முறையை உபநிஷத்துப்‌ பசு – பால்‌ – நெய்‌ என்ற மூன்று உதாஹரணங்களைக்‌ கூறி விளக்கியுள்ளது. அந்த விளக்கம்‌ வருமாரு – பசுக்கள்‌ பல்வேறு நிறமுமையனவாயினும்‌ அவற்றினின்று தோன்றும்‌ பால்‌ ஒரே வகையாயுள்ளது. அவ்வாறே அசேதநமான சரீரங்கள்‌ தேவர்‌ – மனிதர்‌ முதலிய பிரிவை யுடையனவாயினும்‌ அவற்றுள்‌ .இருக்கும்‌ ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபம்‌ ஒரே வகையதே யாகும்‌–மறைந்துள்ள நெய்‌ நம்‌ கண்ணுக்குப்‌ புலப்படாதது போல்‌ அந்த ஜீவர்களுக்குள்‌ அந்தர்யாமியாய்‌ நிற்கும்‌ எம்பெருமானும்‌ நம்‌ கண்ணுக்குப்‌ புலப்படுவதில்லை யென்பது. இந்தக்‌ கருத்தையே தமிழ்‌ மறை முடியான திருவாய்மொழியும்‌ கறந்த பாலுள்‌ நெய்யே போல்‌? என்று பேசியது. இந்த ஸூக்தியில்‌ சேதநம்‌ மட்டுமன்றி அசேதநத்தையும்‌ கூட்டிக்‌ கொண்டு அவனுக்குச்‌ சரீரமான சேதநம்‌ அசேதநம்‌ இரண்டுடினுள்ளும்‌ உட்புகுந்து எம்பெருமான்‌ அந்தர்யாமியாய்‌ நின்றும் நியமித்த அருளுவதை அநுஸந்தித்துக்‌ கொள்ள வேண்டும்‌.

1-கர்த்தா -2-ப்ரேரகன்‌ (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பல ப்ரதன்‌
(7) பலி (8) உதாஸீநன்‌
என்று அந்த அந்த நிலைகளில்‌
1-கர்த்தா – வஸ்துவினுள்‌ புகுந்து படைப்பு முதலியவற்றைச்‌ செய்பவன்‌.
(2) ப்ரேரகன்‌ – ஜீவனுக்கு அறிவைக்‌ கொடுத்து ஒரு செயலைச்‌ செய்யுமாறு ஏவுபவன்‌.
(3) அநுமந்தா – சேதநன்‌ செயலைச்‌ செய்யும் போது அதைச்‌ செய்விப்பவன்‌.
(4) ஸஹகாரி – சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ பெரும் பகுதியை ஏற்றுத்‌ துணை செய்பவன்‌.
(5) ஸாக்ஷி! சேதனன்‌ செய்யும்‌ செயலை நேரில்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பவன்‌.
(6) பல ப்ரதன்‌ – சேதநன்‌ செயல்களுக்குப்‌ பலனை அளிப்பவன்‌.
(7) பலி -அச்செயலின்‌ பலனை முக்கியமாய்ப்‌ பெறுமவன்‌.
(8) உதாஸீநன்‌ – சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ விசேஷமான தொடர்பற்றுப்‌ பொதுக்‌ காரணமாக இருப்‌பவன்‌

பிரணவத்தில்‌ கடை எழுத்தான மகாரத்தால்‌ கூறப்படும்‌ ஜீவன்‌ முதலெழுத்தான அகாரத்தால்‌ கூறப்படும்‌ எம்பெருமானுக்கும்‌ நடு எழுத்தான உகாரத்தால்‌ கூறப்படும்‌ பிராட்‌டிக்கும்‌ தாஸனாய்‌ நிற்பவன்‌ என்று பொருள்‌ தேறுகின்றது. -ஆனால்‌ இவ்வாறு பொருள்‌ கொண்டால்‌ அவர்கள்‌ இருவருக்கே தாஸன்‌ என்ற வரையறை எவ்வாறு கிடைக்கும்‌ என்று கேட்கலாம்‌. கருத்து வகையில்‌ பெற்று விடலாமென்பது விடை. குறிப்பிட்டு இருவரைக்‌ கூறி அவர்களுக்குச்‌ சேஷமென்றால்‌ வேறு ஒருவருக்கும்‌ சேஷனல்லன்‌ என்று தானாகவே தேறிவிடுமென்றோ?
”ந-ம:” என்பதற்கு எனக்கு நான்‌ உரியனல்லன்‌ ; மற்றவற்றிலும்‌ எனக்கு உரிமை யில்லை? என்று பொருள்‌ தேறுவதால்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ளத்‌ தனக்குச்‌ சக்தி யற்றமை – வேறு புகலற்றமை முதலிய பொருள்களும்‌ கருத்து வகையில்‌ கிடைக்கின்றன. ந என்பது மறுப்பைக்‌ கூறும்‌ சொல்‌. ம: என்பதால்‌ கூறப்‌பட்ட விரோதியான அம்சத்தை ந என்பது கூடாதென்று மறுக்கின்றது-இங்கு சேஷித்வம்‌ என்ற ஒரு சொல்லை. வருவித்துக்‌ கொண்டு
“ம: சேஷித்வம்‌ ந” என்று வைத்து எனக்கு என்னைப் பற்றியும்‌ என்‌ உடைமைகளைப்‌ பற்றியும்‌ உரிமை இல்லை யென்றும்‌ பொருள்‌

நாராயண சப்தம்‌ நார – அயந என்ற இரண்டு பதங்கள்‌ சேர்ந்து உருக்கொண்டதாகும்‌. இதை இரண்டு விதமாய்ப்‌ பிரிக்கலாம்‌. (1) பஹு வ்ரீஹி (அன்மொழித் தொகை) (2) தத் புருஷன்‌
(வேற்றுமைப்‌ புணர்ச்சி) என்று-பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ – நார சப்தார்த்தம்‌-நாரா : அயநம்‌ யஸ்ய – நூராயண:. இது பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ என்று பெயர்‌ கொண்டது. இதனின்று
நாரங்களை அயநமாக வுடையன்‌ எம்பெருமான்‌ என்று தேறும்‌.

நர” என்று ஆகும்போது அழியும்‌ பொருளான அசேதநத்திற்‌ காட்டிலும்‌ வேறுபட்ட அழியாப்‌ பொருளான ஜீவாத்மாவைக்‌ கூறும்‌. நார என்னும்‌ சொல்லுக்கு நராணாம்‌ ஸஹூஹா : ௪ நாரா: என்று கூட்டி ஜீவாத்மாக்களின்‌ கூட்டங்கள்‌ என்று யொருள்‌ கொள்ள வேண்டும்‌. நாரா: என்று பன்மையில்‌ இருப்பதால்‌ ஜீவர்களின்‌ கூட்டங்கள்‌ பலவென்று கூறியதாயிறறு. நர என்னும்‌ சொல்‌ அழியாத ஜீவனைக்‌ கூறுவதாக முன்‌ சொல்லிய வழியாலேயே எவ்வகையிலும்‌ அழியாத ஸர்வேஸ்வரனையும்‌ கூறுமன்றோ? ஆகவே ஸர்வேஸ்வரன்‌ நரனாகிறான்‌. மேலும்‌ –நர சப்தம்‌ *ந்ரு’ என்ற வினைப்பகுதியினின்று தேறுவதும்‌ உண்டு. இந்த வினைப்பகுதிக்கு ”ந்ரு- நமே? என்றபடி வழியில்‌ நடததிச செல்லல்‌ பொருளாகும்‌. ஆகவே எல்லாப்‌ பிராணிகளையும்‌ அந்த அந்த வழியில்‌ நடததுமவனான எம்பெருமானை நர” என்ற சொல்‌ கூறுவதில்‌ தடை என்ன? ஆகவே இவ்விரண்டு வழிகளாலும்‌ நர
சப்தம்‌ எம்பெருமானையே கூறி விடுகின்றது. நார சப்தததை-நரஸம்டாந்தி – நாரம்‌ என்று கூட்டிப்‌ பார்த்தால்‌ ஸர்வேஸ்வரனுடன்‌ தொடர்புள்ளவை என்று பொருள்‌ தேறும்‌. அவனோடு தொடர்பற்ற வஸ்து ப்ரபஞ்சத்தில்‌ ஏது? அதலின்‌ ப்ரமாணங்கள்‌ சொல்லுகிறபடி
அவனுக்குச்‌ சேஷமாகவோ சரீரமாகவோ அவனைச்‌ சேர்ந்த சேதநம்‌ அசேதநம்‌ ஆகிய ஸகல வஸ்துக்களுமே நார சப்தத்திற்குப்‌ பொருளாகி விடுகின்றன. இப்படி நார சப்தத்துக்கு முதவில்‌ ஜீவர்களின்‌ கூட்டமென்றும்‌, பின்பு கூறிய முறையில்‌ சேதந அசேதநங்களின்‌ கூட்டமென்றும்‌ பொருள்‌ தேறி நிற்கின்றது.

நாராணாம்‌ அயதநம்‌” என்ற தத் புருஷ ஸமாஸத்தில்‌ பொருளைப்‌ பார்ப்போம்‌. அயநம்‌ என்ற சொல்லுக்கு “உபாயம்‌ பலன் – ஆதாரம்‌ என்ற மூன்று பொருள்கள்‌ உண்டு. அயநம்‌
என்ற சொல்லை ?ஈயதே அநேந? என்று விரிததால்‌ ஒன்றை அடையக்‌ காரணமாயிருப்பவன்‌ என்று பொருள்‌ தேறுவதால்‌ உபாயம்‌ என்று கிடைத்துவிடும்‌. ?ஈயதே அஸெள? என்று விளக்கினால்‌ அடையப்படும்‌ பலனாயுள்ளவன்‌ என்று பொருள்‌
இடைக்கும்‌. *ஈயதே அஸ்மிந்‌ என்று பிரித்தால்‌ ஆதாரம்‌ என்ற பொருள்‌ தேறி விடும்‌.

பஹுவ்ரிஹி – அயந சப்தார்ததம்‌-அயநம்‌ என்ற சொல்லுக்கு இருப்பிடம்‌ – சூழ்ந்து நிற்கப்‌ பெறும்‌ வஸ்து என்ற இரண்டு பொருள்‌ உண்டு. நாரங்களை அயநமாக வுடையன்‌ என்னும் போது முதற்‌ பொருளில்‌ சேதத அசேதநங்களைத்‌ தனக்கு இருப்‌பிடமாக வுடையன்‌ எம்பெருமான்‌ என்றும்‌ இரண்டாம்‌ பொருளில்‌ சேதந அசேதநங்களைத்‌ தான்‌
சூழ்ந்து நிற்கும்‌ வஸ்துக்களாகக்‌ கொண்டவன்‌
என்றும்‌ பொருள்‌ கிடைக்கின்றது. இங்கு முதற்‌ பொருளில்‌ அவை உள்ளவிடத்தில்‌ தான்‌ இல்லை யென்று சொல்ல முடியாதவாறு கலந்து நிற்பதாகிய அந்தர் வ்யாப்தி கூறப்பட்டதாகின்றது. இரண்டாம்‌ பொருளில்‌ அந்த வஸ்துக்கள்‌ இல்லாதவிடத்திலும்‌ தான்‌ உளன்‌ என்று கூறும்படி திற்றலாகிய பஹிர்வ்யாப்தி சொல்லப்‌ பட்டதாகின்றது. இப்படி அந்த அந்த வஸ்துக்களில்‌ உள்ளும்‌ புறமும்‌ சிறிதும்‌ தப்பாதவாறு பரிபூர்ணமாய்‌ எம்பெருமான்‌ நிற்கின்ற நிலை
வெளியாகின்றது. மேலும்‌ சேதந – அசேதந வஸ்துக்களுள்‌ சாஸ்வதமாகப்‌ புகுந்து நியமித்துக்‌ கொண்டும்‌ சூழ்ந்து கொண்டும்‌ எம்பெருமான்‌ இருப்பதால்‌ அவை இவனுக்குச்‌ சரீரமாயுள்ளமையும்‌ இவன்‌ அவற்றுக்கு ஆத்மாவாய்‌ நிற்பது மாகிய ஸம்பந்தம்‌ விளங்குகின்றது.

நான்கு அத்யாயங்களின்‌ ஸாரார்த்தங்களும்‌ திருமந்திரத்தில்‌ உள்ள நாராயண சப்தத்தில்‌ சுருக்கமாய்க்‌ கூறப்பட்டுள்ளன.எவ்வாறெனில்‌ – நர சப்தத்தால்‌ எம்பெருமானைக்‌ கூறி
அவனிடமிருந்து தோன்றிய சேதந அசேதநங்களை நார சப்தத்துக்குப்‌ பொருளாகக்‌ கூறும்போது ப்ர பஞ்சத்துக்கு அவன்‌ காரணமென்று ஏற்படுவதால்‌ முதல்‌ அத்யாயததின்‌ பொருள்‌ கூறுவதாகக்‌ கொள்ளுதல்‌ பொருந்தும்‌. நரன்‌ என்ற சொல்‌ எம்பெருமானை அழிவு, மாறுபாடு முதலிய குற்றமற்றவனெனக்‌ கூறுவதால்‌ அவனது காரணத் தன்மை தடையற்றதாய்‌ உறுதியாக்கப்‌ பட்டு இரண்டாம்‌ அத்தியாயத்தின்‌ பொருளைக்‌ காட்‌
டுகின்றது.
அயநம்‌ என்ற சொல்லுக்கு உபாயம்‌ என்ற பொருளைக்‌
கொண்டால்‌ சேதநர்களுக்கு உபாயமாயுள்ளவனென்ற மூன்றாவது அத்யாயத்தின்‌ பொருள்‌ கிடைக்கின்றது. அயந சப்தத்தூக்குப்‌ பலன்‌ என்ற பொருளைக்‌ கொண்டு. சேதநர்களால்‌ அநுபவிக்கப்‌ படும்‌ பலனாகவும்‌ உள்ளானென்று நான்காவது அத்யாயத்தின்‌
பொருளையும்‌
இங்குக்‌ கண்டுவிடலாம்‌.

ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரய ஸாரத்தில்‌ கூறாத -சில விஷயங்களைச்‌ சில்லரை 
ரஹஸ்யங்களில்‌ அருளிச்‌ செய்திருப்பதை நன்கு காணப்‌ பெறலாம்‌-
ஸ்ரீ சப்தத்தின்‌ ஆறு பொருள்கள்‌

இந்த ஸ்ரீ என்னும்‌ சப்தததுக்கு இலக்கண முறையைத்‌ தழுவி அறு வகைப்‌ பொருள்களைச்‌ சாஸ்தரம்‌ கூறுகின்றது.
அவையாவன -
(1) ஸ்ரீயதே - ஆஸ்ரயிக்கப்படுகின்றாள்‌. நற்கதியைப்‌ பெற
வேண்டுமென்று விரும்பும்‌ எல்லாச்‌ சேதநர்களும்‌' இவளை வந்து
ஆஸ்ரயிக்கின்றார்கள்‌.
(2) ஸ்ரயதே - அடைகின்றாள்‌. யாரை? ஸர்வேஸ்வரனை... அவன் அபராதம்‌ செய்த சேதநர்களைத தண்டிக்க முற்படும் போது பிராட்டி அவனை அடைந்து அவன்‌ கொண்ட சீற்றத்தை ஆற்றி அவர்களைக்‌ காக்குமாறு செய்து விடுகின்றாள்‌.
(3) ஸ்ருணோதி - கேட்கின்றாள்‌ (செவி சாய்க்கின்றாள் )அபராதிகளான சேதநர்கள்‌ இவளிடம்‌ வந்து தங்களை எம்பெருமான்‌ திருவடிகளில்‌ காட்டிக்‌ கொடுத்து ரக்ஷித்தருள வேண்டுமென்று மனம்‌ நொந்து சொல்லும்‌ சொற்களைக்‌. கேட்டுக்‌
கொள்கின்றாள்‌. .
(4) ஸ்ராவயதி - கேட்கும்படி செய்கின்றாள்‌. அதாவது - எடுத்துச்‌
சொல்லுகின்றாள்‌. சேதநர்கள்‌ ஈனக்குரலோடு கூறியவற்றைக்‌ கூறி
அவர்களின்‌ துயரம்‌ தீர்க்குமாறு ஸர்வேச்வரனிடம்‌ விண்ணப்‌ பிக்கின்றாள்‌.
(5) ஸ்ருணாதி - ஒழிக்கின்றாள்‌. அடியார்களின்‌ குற்றங்களை
யெல்லாம்‌ தகர்க்கின்றாள்‌. இதுவரை உபாயத்தைச்‌ செய்யவும்‌
மோக்ஷ்மாகிய பலனைப்‌ பெறவும்‌ தடையாயிருந்த கர்மங்களை
யெல்லாம்‌ ஒழிக்கின்றாள்‌.
(6) ஸ்ரீணாதி - பரிபக்குவ நிலையை உண்டாக்குகின்றாள்‌. -தன்னை அடைந்தவர்களுக்குத்‌ தன்‌ அருளால்‌ ஜ்ஞாதம்‌ பக்தி முதலிய நற்குணங்களைப்‌ பரிபக்குவ நிலைக்குக்‌ கொண்டு வருகின்றாள்‌-

திரும்ந்திரத்திலே பிறத்தல்‌
திருமந்தரததிலே பிறக்கையாவது
– முதல்‌ ரஹஸ்யமான திரு மந்த்ரத்தையும்‌ அதன்‌ அர்த்தங்களையும்‌ ஆசார்யனால்‌ உபதேசிக்கப்‌ பெற்றால்‌ சேதநனுக்குப்‌ புதிய பிறவி உண்டாகின்றது. இதுவரை விவேகம்‌ பெறாமவிருத்தபடியால்‌ முன்‌ தாய்‌ வயிற்றில்‌ பிறந்த பிறவி நேர்மையானதாகாகாகையால்‌ இவனைப்‌ பிறந்தவனாகவே கருத முடியாது. திருமந்திரத்தின்‌ அர்ததத்தை அறிந்த பின்‌ ஜீஸ்வாத்மாவினுடைய ஸ்வரூபம்‌ –
எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌ – இருவருக்கும்‌ உள்ள ஸம்பந்தம்‌ முதலிய பற்பல முக்கிய விஷயங்களை அறிய முடிவதால்‌ இப்பொழுது தான்‌ அவன்‌ உலகில்‌ பிறந்தவனாகின்றான்‌.

த்வயததில்‌ வளர்தல்‌
த்வயத்தில்‌ வளருகையாவது
– திருமந்திரம்‌ கூறிய அர்த்தங்களை மிக விளக்கமாகக்‌ கூறுகின்றது த்வயம்‌. உயர்ந்த தததுவமாய்‌ எல்லோரையும்‌ காக்கவல்ல எம்பெருமானை த்வயம்‌ நன்கு தெளிவு படுத்துகின்றது. நமக்குப்‌ பெரிய நன்மையை விளைவிப்‌ பதாய்‌ நமக்குச்‌ செய்ய ஏற்றதான சரணாகதியைத்‌ திருமந்திரததிற்‌ காட்டிலும்‌ விளக்கமாய்க்‌ கூறுகின்றது த்வயம்‌.-மேலும்‌ மோக்ஷத்தில்‌ அவனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமாகிய சிறந்த
பலனையும்‌ கூறுகின்றது த்வயம்‌. மேலும்‌ அப் பலனுக்காக ப்ர பத்தியைச்‌ செய்ய வேண்டிய முறையையும்‌ முக்கியமாக வைத்துத்‌ தெளிவாய்க்‌ காட்டுகின்றது இந்த த்வயம்‌.
இவ வுண்மைகளை அறிந்து சரணாகதியைச்‌ செய்தலே -த்வயத்தினால்‌ சேதநன்‌ பெற்ற வளர்ச்சியாகும்‌.
த்வயத்திலேயே நிஷ்டை யுடைமை
த்வயத்திலேயே நிஷ்ட்டனாகையாவது
– ப்ரபத்திக்குப்‌ பின் அவகாசமுள்ள . போதெல்லாம்‌ த்வயத்தையே அநுஸத்திததுக்‌ கொண்டேயிருந்து வேறு உபாயத்தையும்‌ வேறு பயனையும்‌
நாடாமல்‌ த்வயம்‌ காட்டிய சரணாகதியிலும்‌ அவன்‌கைங்கர்யமாகிய பலனிலும்‌ மிக்க ஊற்றத்துடன்‌ நிற்கை.
த்வயத்தின்‌ அமைப்பு
இந்த த்வயம்‌ இரண்டு. பகுதியாயுள்ளது. முற்பகுதி -உபாயமான சரணாகதியையும்‌ பிற்பகுதி பலனான கைங்கர்யத்தையும்‌ ஆக இரண்டையும்‌ தெளிவாய்‌ விளக்குவதால்‌ த்வயம்‌ இரண்டு என்று பெயர்பெற்றது.

ஸ்ரீ எங்களாழ்வான் ஸ்வாமிகள்—ஸ்ரீ நடாதூர் அம்மாள்-ஸ்ரீ குரு வரவத்ஸ்ய வரதாச்சாரியார் ஸ்வாமிகள்–

April 10, 2025

திருநக்ஷத்ரம் : சித்திரை ரோஹிணி

அவதார ஸ்தலம் : திருவெள்ளறை

ஆசார்யன் : எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான்

சிஷ்யர்கள் : நடாதூர் அம்மாள்

பரமபதம் அடைந்த தேசம் : கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்)

க்ரந்தங்கள் : சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணுபுராண வ்யாக்யானம்)

திருவெள்ளறையில் பிறந்த எங்களாழ்வானுக்கு அவருடைய பெற்றோர் விஷ்ணு சித்தர் என்று திருநாமமிட்டனர். பின்னர் இவர் எம்பெருமானாரின் சிஷ்யரானார். இவர் பகவத்விஷய காலஷேபமும் ஸ்ரீபாஷ்ய காலஷேபமும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடியில் அதிகரித்துக்கொண்டார். ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

நடாதூர் ஆழ்வானின் (எம்பெருமானாரின் சிஷ்யர்) சிஷ்யரான நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதாசார்யார்) எங்களாழ்வானின் ப்ரதான சிஷ்யராவார். நடாதூர் அம்மாள் தன் பாட்டனாரான நடாதூர் ஆழ்வானிடம் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் செய்ய ஆசைப்பட்டபோது அவர் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால் பேரனாரை எங்களாழ்வானிடம் சென்று கற்குமாறு அனுப்பினார். நடாதூர் அம்மாள் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். எங்களாழ்வான் “வாசலில் நிற்பது யார்?” என்று கேட்டார். அதற்கு அம்மாள் “நான் வரதன்” என்று பதில் கூறினார். அதற்கு ஆழ்வான் “நான்” செத்த பிறகு இங்கு வரவும் என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். அம்மாள் வீட்டிற்கு சென்று தன் பாட்டனாரிடம் நடந்த விஷயத்தைக் கூறி அதன் அர்த்தத்தைக் கேட்டார். ஆழ்வார் தன் பேரனிடம் “நாம் எப்பொழுதும் நம்மை ‘அடியேன் (தாஸன்)’ என்றே மிகவும் அடக்கத்துடன் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். நாம் எப்பொழுதும் ‘நான்’, ‘என்னுடைய’ என்பது போன்ற அஹங்காரத்தை விளைவிக்கும் வார்த்தைகளை உபயோகப்படுத்தக்கூடது” என்று கூறினார். “நாம் எல்லோரும் எப்பொழுதும் எம்பெருமானார்க்கும் அவன் அடியவர்களுக்கும் அடியவர்” என்று உணர்ந்துகொண்ட நடாதூர் அம்மாள் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று அவரிடம் “அடியேன் வரதன் வந்துள்ளேன்” என்று கூறினார். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த எங்களாழ்வான் அம்மாளை ஆசையுடன் வரவேற்று அவருக்கு எல்லா ரஹஸ்ய க்ரந்தங்களையும் காலக்ஷேபம் செய்வித்து அருளினார். பின்னர் நடாதூர் அம்மாள் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் மிகப்பெரிய இவரின் ஆசார்யரானபடியால், எங்களாழ்வான் “அம்மாள் ஆசார்யன்” என்றே அறியப்பட்டார்.

எம்பெருமானார் தன் அந்திம காலத்தின் போது எங்களாழ்வானை அழைத்து அவரைத் திருகுருகைப் பிரான் பிள்ளான் திருவடிவாரத்தில் இருக்குமாறு அருளினார்.

நம் வ்யாக்யானங்களில் எங்களாழ்வானின் மேன்மையைப் பறைசாற்றும் சில ஐதிஹ்யங்கள் (சம்பவங்கள்) இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கே காண்போம்:

பெரியாழ்வார் திருமொழி 2.9.10 – திருவாய்மொழிப் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் கண்ணனுக்கு நாவல் பழத்தின் மீதுள்ள ஆசையை எடுத்துரைக்கிறார். இப்பாசுர வ்யாக்யானத்தில் எங்களாழ்வானும் நஞ்சீயரும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. எங்களாழ்வான் இரவு படுத்து உறங்கியதும் பாதி உறங்கிய நிலையில் அவர் கனவில் ஒரு சிறுவன் தோன்றி, தனக்குக் கொஞ்சம் நாவல் பழங்களைக் கொடுக்குமாறு கேட்டான். எங்களாழ்வான் அச்சிறுவனை “நீ யார் ?” என்று கேட்க, “நான் ஆயர் தேவு – நஞ்சீயரின் பிள்ளை” (ஆயர் தேவு என்பது நஞ்சீயரின் திருவாராதனப் பெருமாளின் திருநாமமாகும்) என்று பதில் கூறினான். உடனே எங்களாழ்வான் நஞ்ஜீயரிடம் சென்று உங்கள் திருவாராதனப் பெருமாள் என்னிடம் நாவல் பழங்களைக்கேட்டு என்னைத் தூங்கவிடாமல் செய்கிறார் என்று கூற நஞ்சீயரும் திருவாராதனை செய்யும் அறைக்குச் சென்று எங்களாழ்வானைத் தொந்திரவு செய்யாமல் இருக்கும்படி எம்பெருமானை ப்ரார்த்தித்துக் கொண்டார்.
முதல் திருவந்தாதி 44 – நம்பிள்ளை / பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் பொய்கையாழ்வார் எம்பெருமான் எப்படித் தன் பக்தர்கள் ஆசைப்பட்ட உருவத்தையும் பெயரையும் ஏற்றுக்கொள்கிறார் என்பதை நிலை நாட்டுகிறார். முன்பு கூறப்பட்ட திருவாய்மொழிப் பிள்ளையின் பெரியாழ்வார் திருவாய்மொழி வ்யாக்யானத்தில் கூறப்பட்ட ஐதிஹ்யத்தையே வேறு கோணத்தில் எடுத்து கூறுகிறார். எம்பெருமான் எங்களாழ்வான் கனவில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது “ஆயர் தேவு” என்று நஞ்சீயர் சூட்டிய திருநாமத்தைச் சொல்லியே தன்னைக் கூறிக்கொள்கிறார். இதை எங்களாழ்வானிடமிருந்து அறிந்து கொண்ட நஞ்சீயர் தாம் சூட்டிய பெயரைக்கொன்டே எம்பெருமான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதால் மிகவும் பரவசமடைந்தார்.
வார்த்தா மாலையில் எங்களாழ்வான் சம்பந்தப்பட்ட சில ஐதிஹ்யங்களைக் (நிகழ்வுகளை) காண்போம் :

17 – அம்மங்கி அம்மாள் என்பவர் எங்களாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிராதயத்தைப் பற்றிய ஞானத்தை தனக்கு விவரிக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டார். எங்களாழ்வான் அவருக்கு சாரார்த்த சதுஷ்டயத்தை விவரித்துரைக்கிறார். (சாரார்த்த சதுஷ்டயம் என்பது 4 அடிப்படைக் கொள்கைகளும் 4 மிக முக்கியமான கொள்கைகளும்). அவையாவன :
ஸ்வரூப ஞானம் (ஜீவாத்மாவுக்குத் தான் யார் என்பதைப் பற்றிய அறிவு) தன்னைப் பற்றிய ஞானமானது, தான் பகவானுக்கு அடிமை என்று அறிதலும், தான் எப்பொழுதும் பகவான் இட்ட வழக்காக அவர் விரும்பும் கைங்கர்யங்களைச் செய்வதும் ஆகும்.
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் (ஜீவாத்மவுக்கு தான் யார் என்பதைப் பற்றிய உயர்ந்த ஞானம்) – தான் எம்பெருமானுக்கு மட்டும் அடியவன் என்ற எண்ணம் இல்லாமல் அவனுடைய அடியவர்களுக்கும் தான் அடிமை என்ற ஞானம் உடையவராய் இருத்தல்.
விரோதி ஞானம் – (விரோதியைப்பற்றிய அறிவு) – அடியவர்களைப் பிரிந்திருக்கும் பொழுது அதனைப் பொறுக்க மாட்டாமல் தவிப்பது.
விரோதி யாதாத்ம்ய ஞானம் – (விரோதியைப் பற்றிய முதிர்ந்த ஞானம்) எம்பெருமானின் அடியவர்களை (பாகவதர்களை) அடைந்து அவர்களுடன் இருக்கும் காலத்தில் அவர்களிடம் எந்த குற்றமும் இருப்பதாக நினைக்கக் கூடாது.
பல ஞானம் – (இலக்கைப்பற்றிய ஞானம்) அடியவர்களின் கட்டளைகளை சிறிதும் யோசிக்காமல் செயல்படுத்துவது.
பல யாதாத்ம்ய ஞானம் – (இலக்கைப்பற்றிய முதிர்ந்த ஞானம்) இவ்வுலகத்தில் உள்ள எம்பெருமானின் அடியவர்களுக்கு தான் அவர்கள் ஆசைப்பட்ட சேவையைச் செய்வதினால், பரமபதத்தை அடையும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் அவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவது.
உபாய ஞானம் (எம்பெருமானை அடையும் வழிமுறை பற்றிய ஞானம்) எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றித் தெளிவாக அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்வது (இதற்கு மிகவும் விரிவான விளக்க உரை உள்ளது).
உபாய யாதாத்ம்ய ஞானம் – (எம்பெருமானை அடையும் வழிமுறைகளைப் பற்றிய முதிர்ந்த ஞானம்) எம்பெருமானே எல்லாவற்றிற்கும் ஆத்மா (சரீரீ) எல்லா ஜீவாத்மாக்களும் அவனுக்கு சரீரம் என்பதை அறிந்தும், எம்பெருமான் தன்னுடைய உகப்பிற்காகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறான் என்ற ஞானம் பெற்று, மற்ற எல்லா உபாயங்களிலும் மேலுள்ள பற்றுதலை விட்டு எம்பெருமானை அடைய எம்பெருமானே உபாயம் என்ற ஞானத்தைப் பெறுதல்.
118 – எங்களாழ்வான் நடாதூர் அம்மாளுக்குச் சரம ச்லோகத்தின் அர்த்த விசேஷங்களை விரித்து உரைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது “ஸர்வதர்மான் பரித்யக்ஞ” என்ற இடத்தை எங்களாழ்வான் விவரிக்கும்போது, நடாதூர் அம்மாளுக்கு எல்லா சாஸ்த்ரங்களையும் படைத்த எம்பெருமானே எப்படி ஸர்வ ஸ்வதந்த்ரனாய் எல்லா தர்மங்களையும் (உபாயம்) விட்டுவிடும்படிக் கூறுகிறான் என்று ஆச்சர்யம் உண்டாயிற்று. அதற்கு எங்களாழ்வான் பகவானானவன் ஒருவனே எவராலும் குலைக்கமுடியாத நிரங்குச ஸ்வாதந்திரியத்தை உடையவன். அதுவே அவனுடைய உண்மையான ஒரு குணமும் ஆகும். அதனால் அவன் ஒருவன் மட்டுமே “எல்லா தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று ” என்று கூறத் தகுதியுடையவன் ஆவான் என்று பதில் உரைத்தார். மேலும் ஒரு ஜீவாத்மாவின் தன்மையானது, வேறு எந்த உபாயத்திலும் கை வைக்காது “எம்பெருமானே உபாயம்” என்றிருப்பதாகும். எல்லா ஜீவாத்மாக்களும் எம்பெருமானின் அடியவர்களே. அப்படி இருக்கும் பொழுது “எம்பெருமானே தஞ்சம் (உபாயம்)” என்று இருப்பதே ஜீவாத்மாக்களுக்குப் பொருத்தமுடைய ஒன்றாக இருக்கும். இப்படியாக எங்களாழ்வான் எம்பெருமானின் சரம ச்லோக அர்த்தத்தை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் (எம்பெருமான்) ஒருவனாலேயே கூறப்பட வேண்டிய ஒன்று என்பதை விளக்கியுள்ளார்.
153 – இதில் எங்களாழ்வான் ஒரு ஆசார்யனின் திருக்குணங்களை அழகாக எடுத்துரைக்கிறார். ஆசார்யன் என்பவர் சரீராத்ம ப்ரமத்தை (சரீரமே ஆத்மா என்ற அஞ்ஞானம்) அறவே ஒழித்தவராவார். எம்பெருமானுக்குத் தான் அடிமை என்பதை நன்கு உணர்ந்தவராவார். மற்றும் பிற தேவதைகளை மறந்தும் உபாஸிக்காமல் அந்தந்த தேவர்களுக்கும் ஆத்மாவாக இருந்துகொண்டு செயல்படுத்துபவரும் எம்பெருமானே என்றும், எம்பெருமானே ஸர்வ வியாபி என்பதையும் நன்கு உணர்ந்தவராவார். தான் இவ்வுலகிலுருக்கும்வரை அர்ச்சாவதார எம்பெருமானுக்கு கைங்கரியம் செய்வதிலேயே காலத்தைக் கழித்து பின் பரமபதம் சென்றடைகிறார். மற்றவர்களோ (உண்மையான ஆசார்யர்கள் அல்லாதவர்) இந்த ப்ரபஞ்சம் முழுவதற்கும் தாங்களே தலைமையானவர் என்று கூறிக்கொண்டு தம் சிஷ்யர்கள் மூலமாகவே தனத்தை சம்பாதித்து அவர்களுக்கே உதவுவர்.
174 – ஒரு சமயம் பின்பழகராம் பெருமாள் ஜீயர் (நம்பிள்ளையின் மிகவும் அன்புக்குரிய் சிஷ்யர்) உடல்நலம் சரியாக இல்லாமல் இருந்தபோது மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அழைத்துத் தனக்கு விரைவாக குணமடைவதற்கு எம்பெருமானை ப்ரார்த்திக்கும்படி கேட்டுக்கொன்டார். இப்படி பெருமாளை வேண்டிக்கொள்வது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமில்லை – (ஒருவன் எதற்காகவும் எம்பெருமானை வேண்டிக் கொள்ளக் கூடாது – வியாதி போகும்படிகூட ப்ரார்த்தித்துக் கொள்ளக் கூடாது என்றால் அதற்காக மருத்துவரிடம் செல்வதைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ?) இப்படி இருக்கும்போது ஜீயர் எப்படி மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை எம்பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்ளச் சொல்வார் என்று மற்ற சிஷ்யர்கள் நம்பிள்ளையிடம் சென்று கேட்டனர். இப்படி ஜீயர் செய்ததற்குக் காரணம் என்ன என்று மற்ற ஆசார்யர்களிடம் அறிந்து வரும்படி நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அனுப்பினார். முதலில் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்ற எங்களாழ்வானிடம் சென்று சந்தேகத்தைக் கேட்டு பதில் அறிந்து வரும்படி கூறினார். அதற்கு எங்களாழ்வான் “ஜீயருக்கு ஸ்ரீரங்கத்தின் மேலுள்ள பற்றுதல் காரணமாக இன்னும் சில காலம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க ஆசைப்படுகிறார் போலும் என்று கூறினார். பின் நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அழைத்து திருநாராயணபுரத்து அரையர் ஸ்வாமியிடம் இதற்கு காரணம் அறிந்து வரும்படி அனுப்பினார். பின்பழகியராம் பெருமாள் ஜீயருக்கு இன்னும் முடிக்கவேண்டிய முக்கியமான கடமைகள் இருப்பதால் அவர் மேலும் சில காலம் இப்பூமியில் தங்கியிருக்க ஆசைப்படுகிறார் போலும் என்று திருநாராயணபுரத்து அரையர் பதில் கூறி அனுப்பினார். பிறகு நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அம்மங்கி அம்மாள் ஸ்வாமியிடம் சென்று பதில் அறிந்து வருமாறு அனுப்பினார். அதற்கு அம்மாள் “யாருக்குத் தான் நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியை விட்டுப் பரமபதம் செல்ல ஆசையிருக்கும்? அதனால் அவர் மேலும் சில காலம் இங்கேயே தங்கியிருந்து நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை அனுபவிக்க நினைக்கிறார்” என்று கூறி அனுப்பினார். பின் நம்பிள்ளை தன் சிஷ்யர்களை பெரிய முதலியாரிடம் சந்தேகத்தைக் கூறி பதில் அறிந்து வருமாறு அனுப்பினார். அதற்கு பெரிய முதலியார் பின்பழகராம் பெருமாள் ஜீயருக்கு நம்பெருமாளின் மேல் உள்ள மிகுந்த ஈடுபாட்டினால் எம்பெருமானை விட்டு பரமபதம் செல்வதற்கு ஆசையில்லை போலும் என்று கூறினார். பின்னர் நம்பிள்ளை ஜீயரிடம், எல்லா ஸ்வாமிகளும் அவர் இவ்வுலகத்தில் மேலும் சில காலம் இருப்பதற்கு ஆசைப்படுவதின் காரணங்களைக் கூறியவற்றை எடுத்துரைத்து, அவர் அக்காரணங்கள் ஏதோ ஒன்றினால் தான் எம்பெருமானிடம் தனக்கு வியாதி சீக்கிரம் குணமாகும்படி வேண்டிக் கொள்ளச் சொன்னாரோ என்று வினவினார். அதற்கு ஜீயர் “உங்களுக்கு எல்லாம் தெறிந்திருந்தும் உங்களுக்கு என் மேலுள்ள தயை காரணமாக அதை என் வாயினாலேயே அறிய விரும்புகிறீர்கள்” என்று பதில் கூறினார். “நீங்கள் தினமும் நீராடிவிட்டு வரும்பொழுது என்னுடைய ஆசார்யரான உங்களைக் கண்குளிர தரிசித்து உங்களுக்கு ஆலவட்டம் வீசுவது முதலிய அந்தரங்க பணிவிடைகளைச் செய்வதை விட்டு நான் பரமபதம் செல்வதற்கு எப்படி ஆசைப்படுவேன்?” என்று பின்பழகராம் பெருமாள் ஜீயர் மிகவும் உயர்ந்ததான சிஷ்ய லக்ஷணத்தை (ஆசார்யனைப் பிரிந்திருக்கமுடியாத நிலை) வெளிப்படுத்தினார். இந்த பதிலைக் கேட்டு அனைவரும் ஜீயருக்கு நம்பிள்ளை மேலுள்ள குருபக்தியை நினைத்து மெய்சிலிர்த்தனர். குருபக்தியின் மேன்மையைப் பிள்ளை லோகாசார்யர் தம்முடைய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்திரத்தில் (சூத்ரம் 333) விளக்கியுள்ளார் – “ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன்; சிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்”. மணவாள மாமுநிகளும் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் குரு பக்தியின் மேன்மையைப் பாசுர ங்கள் 65, 66 இல் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசாரியன் சிச்சனாருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவனென்னும்
நுண்ணறிவைக் கேட்டுவைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம் (65)

பின்பழகராம் பெருமாள் ஜீயர் பெருந்திவத்தில்
அன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை தன்னெஞ்சே
ஊனமற வெப்பொழுதுமோர் (66)

இப்படியாக நாம் எங்களாழ்வான் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பார்த்தோம். அவர் தம் வாழ்க்கை முழுவதும் பாகவத கைங்கரியத்திலேயே திளைத்திருந்தார். அவர் எம்பெருமானாரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவராயிருந்தார். நமக்கும் சிறிதேனும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டை கிடைக்கப் பெற வேண்டுமென்று அவருடைய திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்

ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண
நோசேந் மமாபி யதிசேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய:

————————————–

ஸ்ரீ நடாதூர் அம்மாள்

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி–நடாதூரம்மாளின் தனியன்:

திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை.
அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்.
ஆசார்யன்: எங்களாழ்வான்.
சிஷ்யர்கள்: ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: காஞ்சிபுரம்.
அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் , கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேய மாலை, எதிராஜ விஜயாபநம் மற்றும் பல.
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது. இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.

காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கு தினமும் இளம் சூடான பாலமுது ஸமர்ப்பிக்கும் சேவை செய்து வந்தார் . எப்படித் தாய் தன் குழந்தைக்குப் பாலை மிகவும் இளம் சூடான தகுந்த பதத்துடன் பருகத் தருவாளோ அப்படியே தேவப் பெருமாளுக்கும் செய்து வந்ததால், தேவப் பெருமாளே அவருக்கு அம்மாள் அல்லது வாத்ஸ்ய வரதாச்சார்யர் என்று அன்புடன் பெயரிட்டு கௌரவித்தார் .

அம்மாள் தன் பாட்டனாரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார். பாட்டனாருக்கு வயது முதிர்ந்த காரணத்தால் அவரை எங்களாழ்வானிடம் சென்று கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். அம்மாள் ஸ்ரீபாஷ்யம் கற்றுக் கொள்ள எங்களாழ்வான் திருமாளிகை (இல்லம் ) அடைந்து கதவைத் தட்டினார். எங்களாழ்வான் யார் அது என்று கேட்க, அதற்கு அவர் “நான் வரதன்” என்று சொல்ல, எங்களாழ்வான் “நான்” செத்தவுடன் திரும்பி வா என்று அனுப்பிவிட்டார் . அம்மாள் இல்லம் திரும்பிப் பாட்டனாரிடம் இதைப் பற்றி வினவினார். அதற்குப் பாட்டனார் நடாதூராழ்வான் சொன்னார் “நாம் எப்பொழுதும் அறிமுகம் செய்யும்பொழுது அடியேன் (தாசன் ) என்று பணிவுடன் கூறவேண்டும். நான், எனது என்ற சொல்லை உபயோக்கப்படுத்தக் கூடாது. அதுவே அஹங்காரத்தின் காரணமாகும்”. இந்த ஸம்ப்ரதாயத்தைப் புரிந்து கொண்டு அம்மாள் மறுபடியும் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். இந்த முறை எங்களாழ்வான் யார் வந்திருப்பது என்று கேட்க, அம்மாள் “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்” என்று பதில் கூறினார் . எங்களாழ்வான் இவரது பணிவை மெச்சி, இவரை மனமுவந்து வரவேற்று சிஷ்யராக ஏற்றுக் கொண்டு அவர்க்கு எல்லா சிறந்த வைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளையும் கற்பித்தார். நடாதூரம்மாளின் ஆசார்யனாக இருந்து அவரைச் சிறந்த அறிஞர் ஆக்கியதால் எங்களாழ்வான் “அம்மாள் ஆசார்யன்” என்று அறியப்படுகிறார்.

அம்மாளின் பிரதான சிஷ்யர் ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன ஸூரி – வேத வ்யாஸ பட்டரின் பேரன் ) ஆவார். இவர் அம்மாளிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தைக் கற்ற பிறகு ச்ருத ப்ரகாஸிகை என்னும் புகழ் பெற்ற விளக்கவுரையையும், வேதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் சரணாகதி கத்யத்திற்கும் விளக்கவுரைகளை அருளிச் செய்தார்.

ஒருமுறை அம்மாள் பல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் உபதேசித்துக் கொண்டிருந்தார். பக்தி யோகம் கடைபிடிப்பதற்கு மிகவும் கடினம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கூறினர். அம்மாளும் அது கேட்டு ப்ரபத்தியை ப் பற்றி விளக்கினார். அவர்களும் ப்ரப்பத்தி நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம் என்றார்கள். அப்பொழுது அம்மாள் ” எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருந்தால் நீங்கள் உய்வடையலாம்” என்று கூறினார்.

இதே போன்ற சம்பவம் ஒன்று சரமோபாய நிர்ணயத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

நடாதூரம்மாள் சில ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் உபதேசித்துக் கொண்டிருந்தார். அச்சயமத்தில் அவர்களில் சிலர் அம்மாளிடம் ” ஜீவாத்மாவினால் பக்தி யோகத்தை கடைபிடிக்க முடியாது (அதற்கு தேவையான ஆண் என்ற அதிகாரத்துவம் , த்ரைவர்ணிகர் (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய என்ற வர்ணங்கள்) என்னும் அதிகாரம், மேலும் இடைவிடாது எம்பெருமானை த்யானித்தும் , தொண்டு செய்துகொண்டும் மற்றும் பல), ப்ரபத்தி செய்ய முடியாது தடுக்கும் ஸ்வரூபம் (எம்பெருமானையே சார்ந்திருக்கும் ஜீவாத்மா இந்தச் சார்ந்திருக்கும் தன்மைக்கு எதிராக, தானே இலக்குக்காக எதனையும் செய்யும் குணம்) என்ற இந்த சூழ்நிலைகளில் ஜீவாத்மா எவ்வாறு தன்னுடைய இலக்கை அடைய முடியும்?” என்று கேட்டனர். ” எவர்களால் இதைக் கடைபிடிக்க முடியவில்லையோ, அவர்களுக்கு எம்பெருமானாரது அபிமானமே இறுதியான வழி, இதைத் தவிர வேறு வழியில்லை, நான் இதை நிச்சயமாக நம்புகிறேன் ” என்று நடாதூரம்மாள் பதிலளித்தார். அம்மாளுடைய சரம உபதேசங்களை விளக்கும் பிரபலமான ச்லோகம், பின்வருமாறு:

ப்ரயாண காலே சதுரச் ச்வஸிஷ்யாந் பதாதிகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷ்ய
பக்தி ப்ரபத்தி யதி துஷ்கரேவ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்

நடாதூரம்மாளின் இறுதிக் காலத்தில் அவரின் சிஷ்யர்கள் அவரிடம் சென்று எங்களுக்குப் புகலிடம் என்ன என்று கேட்க அதற்கு நடாதூரம்மாள் “பக்தியும் ப்ரபத்தியும் உங்கள் ஸ்வரூபத்திற்கு உகந்தது இல்லை, எம்பெருமானாரையே அடைக்கலம் புகுந்து அவரையே முழுமையாக சார்ந்து இருங்கள்; உங்களுடைய குறிக்கோள் நிறைவேறிவிடும்” என்று கூறினார்.

வார்த்தாமாலையில் சில இடங்களில் நாடாதூரம்மாளை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்போது அவற்றை நாம் காண்போம்.

118 – எங்களாழ்வான் நடாதூரம்மாளுக்குச் சரமச்லோகத்தின் அர்த்தத்தை விளக்கிக் கொண்டிருந்தார். “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய“- என்ற ச்லோகத்தின் பகுதியை எங்களாழ்வான் விளக்கிக் கொண்டிருக்கும் வேளையில், “சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்து தர்மங்களையும் (உபாயங்களை) ஸ்வதந்த்ரமாகப் புறக்கணித்து எதற்காக எம்பெருமான் இப்படிக் கூறியுள்ளார்” என்று நடாதூரம்மாள் வியந்தார். இது பகவானுடைய உண்மை ஸ்வரூபம் – மற்றும் அவர் முழு ஸ்வாதந்திரியம் உள்ளவர் ஆவார்- ஆதலால் அவர் கூறுவது முற்றும் பொருந்தும் என்று எங்களாழ்வான் பதிலளித்தார். மேலும் “எம்பெருமான் ஜீவாத்மாவை அதன் இயற்கைக்கு எதிரான மற்ற உபாயங்கள் மேற்கொள்ளுவதிலிருந்து விடுவிக்கிறார், ஏனென்றால் பகவானையே முற்றிலும் சார்ந்திருக்கும் ஜீவாத்மாவுக்கு, அந்த பகவானையே உபாயமாக கொள்ளுவது மிக பொருந்தும்” என்றும் அவர் கூறினார். இதிலிருந்து பகவானுடைய வார்த்தைகள் முற்றிலும் சரியே என்று எங்களாழ்வான் உரைக்கிறார்.
198 – ஒருமுறை நடாதூரம்மாளும் ஆளிப் பிள்ளான் என்ற ஸ்ரீவைஷ்ணவரும் (அப்ராஹ்மண ஸ்ரீவைஷ்ணவர் அல்லது ஆசார்ய புருஷர் அல்லாதவர்) சேர்ந்து ப்ரசாதம் சாப்பிடும் பொழுது பெருங்கூர்ப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர் அவர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் இந்த ஸ்ரீவைஷ்ணவருடன் சுதந்திரமாகப் பழகுவதற்கும், நான் தற்போது கேட்ட பொதுவான விதிமுறைகளான வர்ணாச்ரம தர்மத்தை எப்போதும் மதிக்கவேண்டும் என்ற சாரத்தை முழுவதுமாக அடியேன் இழந்தித்திருப்பேன் என்று உரைத்தார் . அதற்கு அம்மாள் “உண்மையான ஆசார்யனின் தொடர்பு உள்ள யாராயினும்/எதுவாயினும் , அவர்களுடன்/அவற்றுடன் நாமும் தொடர்பு உள்ளவராக இருக்க வேண்டும். ஆதலால் இப்பொழுது அனுஷ்டானத்துடன் இந்த ஸ்ரீவைஷ்ணவருடன் பழகுவது கூட பூர்வாசார்யர்கள் விளக்கியது போல் பாகவத தர்மத்தின் சிறப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்” என்று பதிலுரைத்தார் .
பிள்ளை லோகாசார்யரின் தத்வத்ரயம் சூத்திரம் 35 ல் மணவாளமாமுனிகள் தனது வ்யாக்யானத்தில், அம்மாளின் தத்வ சாரத்திலிருந்து ஒரு அழகான ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியுள்ளார் – ஜீவ ஸ்வதந்த்ரியம் (எம்பெருமான் ஜீவாத்மாவிற்கு அருளிய ஸ்வதந்திரம் )ஒவ்வொரு செயலின் முதல் நினைவாயும், அதை எவ்வாறு எம்பெருமான் ஜீவாத்மாவிற்கு முதல் நினைவாய் இருந்து ஒவ்வொரு செயலிலும் வழி காட்டுகிறான் என்பதையும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார் .

இதுவரை நடாதூரம்மாளின் சிறப்பான வாழ்க்கைச் சம்பவங்களில் சிலவற்றை அனுபவித்தோம். அவர் முற்றும் கற்ற அறிஞர் மேலும் எங்களாழ்வானின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர். நாமும் நமக்கு அத்தகைய பாகவத நிஷ்டை சிறிதாவது கிடைப்பதற்கு அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.

தேவராஜ மகாதேசிகனின் மகன் நடதூர் அம்மாள். இவர் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் சித்ரா நட்சத்திரத்தில் பிறந்தார். (சில ஆராய்ச்சியாளர்கள் அவர் கி.பி. 1165 இல் பிறந்தார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர், அதற்குரிய தமிழ் ஆண்டு ‘பார்த்திவா’). வரதகுரு தனது புலமை மிக்க தந்தையால் அனைத்து பீடங்களிலும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டார், மேலும் தந்தை தனது மகனுக்கு ஸ்ரீ பாஷ்யம் கற்பிக்க முடிவு செய்தார். ஒரு நல்ல நாளில் தேவராஜ மகாதேசிகன் ‘அகில புவனா’ என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் பாடலின் அழைப்போடு கற்பித்தலைத் தொடங்கினார். ‘சகல ‘நிகிலா’ போன்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கும் போது எம்பெருமானார் ‘அகில’ என்ற சொல்லை ஏன் தேர்வு செய்ய வேண்டும்’ என்ற கேள்வியுடன் தந்தையை நிறுத்தினார் இளையவரதகுரு. இருப்பினும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த தந்தை, தனது மகனுக்குப் பதிலளித்தார், உதயவர் தனது மகத்தான படைப்பை நாராயண தேவராஜரைக் குறிக்கும் முதல் எழுத்துக்களைக் கொண்டு தனது மகத்தான படைப்பைத் தொடங்குவதாக இருந்தது, அதே நேரத்தில் அவருக்கு வயதாகிவிட்டதால் அறிவுஜீவிகளை அமைதிப்படுத்த போதுமான வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தார். அவரது பையனின் பசி. எனவே அவரை திருவெள்ளறை எங்காள் ஆழ்வானிடம் அனுப்ப முடிவு செய்தார். ராமானுஜரால் அழைக்கப்பட்ட எங்காள் ஆழ்வான், கூரத்தாழ்வான் பார்வையற்றவராகிவிட்டதால், நடதூர் ஆழ்வானுக்கு வேலை எழுத உதவினார். எங்காள் ஆழ்வான் திருக்குருகைப்பிரான் பிள்ளையிடம் நல்ல பயிற்சி பெற்றுத் தனிமையில் வாழ்வதற்காகத் திருவெள்ளறைக்குச் சென்று ஓய்வு பெற்றார்.

குருவுக்கும் சீடருக்கும் இடையே நடக்கும் ஒரு சுவாரசியமான அத்தியாயம் வெளிச்சம். திருவெள்ளறையில் வரதகுரு எங்காள் ஆழ்வானின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார். ஆசிரியர் “யார் அது?” என்று கேட்டார். அதற்கு மாணவன், “நான் காஞ்சி நடதூர் தேவராஜ மகாதேசிகனின் மகன் வரதன்” என்றார். ஆசிரியர் பதிலளித்தார், “நான் இறந்த பிறகு அது யாராக இருந்தாலும் சரி. குழப்பமடைந்த வரதன் வீடு திரும்பி தந்தையிடம் கேட்டான். “நான்” என்ற சொல் ஈகோ அல்லது அஹம்காரத்தைக் குறிக்கிறது என்று தந்தை விளக்கினார், மேலும் ஆசிரியர் அவரிடம் தனது அகங்காரத்தை விட்டுவிட்டு அவரை அணுகுமாறு மட்டுமே கேட்டுக் கொண்டார். மேலும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி, “நான்”, “நான்” என்று இல்லை, “அடியேன்” என்ற அழகான வார்த்தை மட்டுமே உள்ளது. வரதன் தன் தவறை உணர்ந்து, சிஷ்யனாக மட்டுமின்றி, தன் அன்பு மகனாகவும் தத்தெடுத்துக் கொண்ட எங்காள் ஆழ்வானை வணங்கினான். இருவரும் ஒன்றாகப் பயணம் செய்து, கோயில்களில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொல்லகொண்டா என்ற சிறிய குக்கிராமத்தை அடைந்தனர். எங்காள் ஆழ்வான் ‘விஷ்ணு புராணம்’க்கு விளக்கம் எழுதி, காலப்போக்கில் தனது சொர்க்க வாசஸ்தலத்தை அடைந்தார். கீழ்ப்படிதலுள்ள மகனாக, வரதசூரி அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து, திருவெள்ளறையில் தனது ஆச்சார்யாவின் அர்கா வடிவத்தை நிறுவினார். இந்த உருவ வடிவத்தில் வரதகுரு தனது குருவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர் தனது தத்வசாரப் படைப்பின் தியான ஸ்லோகத்திலும் தனது ஆழ்ந்த ஆச்சார்ய பக்தியைக் காட்டியுள்ளார். திருவெள்ளறையில் அர்ச்சனை செய்யும் பொறுப்பை எங்காள் ஆழ்வானின் மகளின் குடும்பத்திற்கு வரதகுரு வழங்கினார். பின்னர் அவர்கள் ‘அம்மாலாச்சாரியார்கள்’ என்று அழைக்கப்பட்டனர். தன் குருவிடம் தன் கடமையைச் செய்த வரதகுரு காஞ்சிபுரம் திரும்பினார்.

காஞ்சியில், வரதகுரு கோவில் கருவறையின் கிழக்குப் பகுதியில் உள்ள ‘கச்சி வாய்த்தான் மண்டபம்’ அருகே ஸ்ரீ பாஷ்ய போதனையைத் தொடங்கினார். திருக்கச்சி நம்பிகளால் ஸ்ரீ ராமானுஜரால் முன்வைக்கப்பட்ட ஆறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பகவான் தானே ஸ்ரீ பாஷ்ய விதைகளை விதைத்த தலம் என்பதால் அவர் இந்தத் தலத்தைத் தேர்ந்தெடுத்தார்.

வரதகுரு பல யாத்திரைகள் செய்தார். சேதுவில் ஒரு சைவனாகிய சிவசுலர், சோழ மன்னனின் அவையில் ஆனந்த மாதவாச்சாரியார், காசி மன்னன் முன் வெறியன் கும்பிசுதன் உட்பட பலருக்கு எதிராக வாக்குவாதத்தில் வெற்றி பெற்றார். காசி அரசர் அவரை சாரதா பீடத்தில் அமர்த்தி கௌரவித்தார். வரதகுரு ‘ஹேதிராஜஸ்தவம்’ இயற்றி ஒரு பிராமணனைக் காப்பாற்றினார். யாத்திரைக்குப் பின் காஞ்சிக்குத் திரும்பி ஸ்ரீ பாஷ்ய உபன்யாசத்தைத் தொடர்ந்தார். அவரது இனிமையான சொற்பொழிவும், சிறந்த சொற்பொழிவும் அப்புல்லார் என்ற ஆத்ரேய ராமானுஜம், வடக்கு திருவீதிப்பிள்ளை, கூரத்தாழ்வானின் கொள்ளுப் பேரன் சுதர்சன சூரி போன்ற பல சீடர்களைக் கவர்ந்தது.

ஒருமுறை, அம்மாளும் அவருடைய சீடர்களும் திருமலை மலைக்கு யாத்திரை மேற்கொண்டனர். அவர்களின் நேர்த்தியான ஆளுமை மற்றும் நடத்தை அனைவரையும் கவர்ந்தது. லாட இனத்தின் தலைவன் கந்தவரன் அவர்களைக் கண்டு எரிச்சலும் எரிச்சலும் அடைந்தான். அவர்களை தொந்தரவு செய்ய முடிவு செய்தார். தனது மந்திர சக்தியால் சீடர்களை மயக்கமடையச் செய்தார். அம்மாள் தியானம் செய்து, சுதர்சன மந்திரத்தையும், ‘ஹேதிபுங்கவஸ்தோத்ரம்’ என்ற தனது சொந்த இசையையும் உச்சரித்து மந்திரத்தை முறித்தார். கோபம் கொண்ட கந்தவரன், அம்மாளை விவாதத்திற்கு அழைத்தான், தோற்கடிக்கப்பட்டதும் ஆச்சாரியாரிடம் சரணடைந்தான். அருளும் குருவானவர் அவரை மன்னித்தது மட்டுமின்றி, அவருக்கு பஞ்சசம்ஸ்காரங்கள் வழங்கி ஸ்ரீவைஷ்ணவராகவும் ஆக்கினார்.கண்டவரன் வழங்கிய பணத்தில் அம்மாள் அழகிய கிராமத்தை நிறுவி அதற்கு ‘லாடக்ரஹாரம்’ என்று பெயரிட்டார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். வழியில், இறைவன் ஒரு இளம் பிரம்மச்சாரியாக வந்து, தயிர் மற்றும் சாதம் மூலம் பக்தர்களின் பசியைப் போக்கினார். அதேநேரம், நைவேத்தியத்துடன் கூடிய வெள்ளிப் பாத்திரம் திடீரென மாயமானதால், கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெங்கடேசப் பெருமான் தாமே தனது அன்பான அம்மாளுக்கும், சீடர்களுக்கும் உணவளித்ததாகவும், அம்மாளை சகல மரியாதைகளுடன் பெறவும் கோயில் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

வரதகுருவுக்கு வரதராஜப் பெருமானின் மேல் ஆழ்ந்த பக்தி இருந்தது. ஒரு நாள் இரவு, பரவச மனநிலையில் குலதெய்வத்தை வணங்கிக்கொண்டிருந்தபோது, ​​அர்ச்சகர் நிவேதனமாக இறைவனுக்கு மிகவும் சூடான பாலை கொண்டு வந்தார். அத்தகைய சூடான பால் இறைவனின் மென்மையான நாக்கை எரித்துவிடும் என்று வரதகுரு மிகவும் வேதனைப்பட்டார்! அவர் சூடான பாலை வழங்குவதை பாதிரியார் நிறுத்தி, அது குடிக்கும் அளவுக்கு சூடாகும் வரை குளிர்விக்கத் தொடங்கினார். இறைவனே வரதரின் வாத்சல்யத்தால் நெகிழ்ந்து அவரை ‘அம்மா!’ என்று அழைத்தார், அதாவது தமிழில் ‘அம்மா’. அன்றிலிருந்து வரதகுரு நடதூர் அம்மாள் ஆனார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஒரு இரவு கனவில், வரதராஜப் பெருமான் தனது வசந்தோத்ஸவத்திற்காக ஒரு மண்டபம் எழுப்பும்படி அம்மாளுக்குக் கட்டளையிட்டார். அதன்படி, ஒரு தாய் தன் மகனின் விருப்பத்தை கஷ்டங்கள் வந்தாலும் நிறைவேற்றுவது போல, இறைவனின் விருப்பத்தை அம்மாள் நிறைவேற்றினாள்.

ஷ்ருதபிரகாஷிகா ஸ்ரீ ராமானுஜரின் மகத்தான படைப்பான ‘ஸ்ரீ பாஷ்ய’ பற்றிய மிக விரிவான விளக்கமாகும். நடதூர் அம்மாள் ஆற்றிய காலக்ஷேப சொற்பொழிவுகளைக் கேட்டும், சொற்பொழிவுகளில் உள்ளவற்றை எழுதிக்கொண்டும் சுதர்சன சூரி தொகுத்ததால் இதற்கு இப்பெயர் வந்தது.

நடதூர் அம்மாள் மற்றும் சுதர்சன சூரி பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. நடாதூர் அம்மாளின் மாணவர்கள் அவருடைய சொற்பொழிவைக் கவனத்துடனும், தங்களுக்குப் பொருத்தமான கேள்விகளாலும் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஆனால் சுதர்சன சூரி மட்டும் அமைதியாக இருப்பார்; அவரிடம் கேட்க எந்த கேள்வியும் இல்லை. அவரது தோழர்கள் அவரைத் துட் என்று நிராகரித்தனர். ஒரு நாள் வழக்கம் போல் மாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கூடியிருந்தனர். ஆனால் சுதர்சன சூரி வராததால் ஆசிரியர் விரிவுரையைத் தொடங்கத் தயாராக இல்லை. சொற்பொழிவின் போது சுதர்சன சூரி போன்ற கல் இருப்பதும் இல்லாமையும் ஒன்றே என்று மாஸ்டரை வற்புறுத்தி சொற்பொழிவைத் தொடங்க மற்ற மாணவர்கள் வற்புறுத்தினர். மாஸ்டர் இந்த வார்த்தைகளைக் கேட்டு வருந்தினார் மற்றும் சுதர்ஷனா சூரியின் ஆழ்ந்த புலமையை அறிந்து அதை வகுப்பிற்கு நிரூபிக்க முடிவு செய்தார். விரிவுரையின் போது, ​​ஆச்சார்யா சுதர்சன சூரியிடம் ஒரு எளிய சொற்றொடரை விளக்குமாறு கேட்டார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சுதர்சன சூரி முந்தைய சந்தர்ப்பத்தில் தனது மாஸ்டர் வழங்கிய நேரடி அர்த்தத்தை மட்டுமல்ல, ஆழமான அர்த்தங்களையும் கொடுத்தார். ஆசிரியரே இதை எதிர்பார்க்கவில்லை. சுதர்ஷன சூரி ஒவ்வொரு இரவும் பனை ஓலைகளில் சொற்பொழிவின் உள்ளடக்கத்தை எழுதும் பழக்கம் இருப்பதாக விளக்கினார் மற்றும் வரதகுருவிடம் ஸ்கிரிப்டை வழங்கினார். இது ஷ்ருதபிரகாஷிகா என்று அறியப்பட்டது. பின்னர், சுதர்சன பட்டர் அதை விரிவுபடுத்தி 36,000 கிரான்தாக்களில் முடித்தார்.

அதன் பிழைப்பில், மாலிக் கஃபூரின் படையெடுப்பு உட்பட, ஷ்ருதபிரகாஷிகா தேசியக் காட்சியில் பல மாறுபாடுகளைக் கண்டார். ஸ்ரீ ஸ்வாமி தேசிகன், சாவைக் காட்டி, பிணங்களுக்கிடையில் செத்தவனைப் போலக் கிடப்பதன் மூலம் எழுத்தைக் காக்க ஒரு குறிப்பிடத்தக்க சேவை செய்தார். ஸ்வாமி வேதாந்த தேசிகரின் ஆச்சாரியார் அப்புல்லார் (ஆத்ரேய ராமானுஜம்) நடதூர் அம்மாளின் சீடராவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ வரதராஜர் கோயிலின் கிழக்குப் பிரகாரத்தில் ஐந்து வயது ஸ்வாமி தேசிகனுக்கு அருள்பாலிப்பது ஸ்ரீ வைணவ வரலாற்றில் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வின் சித்தரிப்பு இன்றும் அதே இடத்தில் உள்ள கூரை ஓவியத்தில் காணப்படுகிறது. பக்தி கொண்ட ஸ்ரீ வைஷணவர்கள், ஸ்ரீ வரதராஜப் பெருமானை தரிசனம் செய்வதற்கு முன் இந்த இடத்தில் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நடதூர் அம்மாள் தனது ஸ்ரீ பாஷ்ய பிரவச்சனையை நூறாவது வயதிலும் தொடர்ந்தார். ஒருமுறை, அவரது சீடர்களில் ஒருவரான ஆத்ரேய ராமானுஜம் (அப்புள்ளார் என்று அழைக்கப்படுகிறார்), தூப்புளில் உள்ள அவரது சகோதரி தோடராம்பாவைப் பார்க்கச் சென்றிருந்தார்.  அவர் காஞ்சிக்குத் திரும்பியபோது, ​​அவருடைய ஐந்து வயது மருமகன், வேங்கடநாதரும் அவருடன் சென்றார். அவர்கள் காஞ்சியை அடைந்தவுடன், அப்புல்லார் தனது அன்பான ஆசிரியரைக் காணச் சென்றார்.

அப்போது, ​​நடதூர் அம்மாள் ஸ்ரீ பாஷ்யம் என்ற தலைப்பில் விஷ்ணு புராணத்தின் முக்கியத்துவம் குறித்து அங்குள்ள ஒரு பகுதியைக் குறிப்பிட்டு விரிவுரை செய்து கொண்டிருந்தார். பாடாய் பராசராசதம் என்ற ஒரு பாடலின் தொடக்க சொற்றொடரை விளக்கி அதன் ஆசிரியரான பராசர முனிவரின் பெருமையை விளக்கினார். அப்புல்லரும் அவரது மருமகனும் அவர் முன் பணிந்தபோது வரதகுரு தனது சொற்பொழிவை நிறுத்தினார் – அவர் குழந்தையின் பிரம்மவர்ச்சத்தால் ஈர்க்கப்பட்டார். விசாரித்ததில், அப்புல்லார், தனது சகோதரி திருமலை மலைக்கு யாத்திரை சென்ற பிறகு, கோயிலின் பெரிய மணியை விழுங்குவது போல் கனவு கண்டபோது குழந்தை பிறந்ததாகக் கூறினார். குழந்தைக்கு தெய்வீக தோற்றம் இருந்ததில் ஆச்சரியமில்லை! அம்மாள் குழந்தையை ஆசிர்வதித்து, சொற்பொழிவை நிறுத்திய இடத்திலிருந்து எடுக்க முயன்றார். ஆனால், அந்த இணைப்பை அவரால் நினைவில் கொள்ள முடியவில்லை, இருந்த யாராலும் அவரை வழிநடத்த முடியவில்லை. அனைவருக்கும் ஆச்சரியமாக, சிறிய வேங்கடநாதர் பிராகிருத சொற்றொடரைப் பயன்படுத்தி ஆச்சார்யாவை அவர் நிறுத்திய இடத்தை நினைவுபடுத்தினார். குழந்தை ஒரு அவதாரம் என்பதை புரிந்து கொண்ட அம்மாளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்தக் குழந்தை வேதாந்த சமயத்தை நிலைநாட்டவும், மதவெறியர்களுக்கும் அவர்களின் பொய் வாதங்களுக்கும் பயமுறுத்துவதாகவும், தெய்வீகக் குழந்தை வேங்கடநாதரை முழு மனதுடன் ஆசீர்வதித்தார். அவர் மிகவும் வயதானவராக இருந்ததால், அவர் தனது சீடர் அப்புல்லாரை வேங்கடநாதரின் குருவாகவும், ஸ்ரீ பாஷ்யத்தைக் கற்பிக்கவும் கூறினார். நடாதூர் அம்மாளின் அருளே சாதாரண வேங்கடநாதரை வேதாந்த தேசிகனாக மாற்றியது என்பதை ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அவர்களே

அதிகார சரவலி, தத்வ முக்த கலாபம், நியாய சித்தாஞ்சனம் தத்வாதிகா போன்ற நூல்களில் திரும்பத் திரும்ப எடுத்துரைத்துள்ளார் . ஸ்வாமி தேசிகனை அம்மாள் அருளிய அதே ஸ்லோகத்தை ஸ்ரீ தேசிகன் தனது சங்கல்ப சூர்யோதயத்தில் சேர்த்துள்ளார் . நடதூர் அம்மாளின் இந்த அருளைப் பற்றி ஸ்ரீ தேசிகனின் மகனும் தன் தந்தையின் மங்களாசாசனத்தில் பதிவு செய்துள்ளார்.

வரதகுரு ஒரு சிறந்த பக்திமான் ஆவார், அவர் இறைவனிடமே ‘அம்மாள்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அதே சமயம் அம்மாளின் புலமைப் பங்களிப்பையும் மறந்துவிடக் கூடாது.

பின்னர் ஷ்ருதப்பிரகாசமாக மாறியதைக் கூறுவதைத் தவிர, நடதூர் அம்மாள் பின்வரும் பத்தொன்பது படைப்புகளைப் படைத்துள்ளார்:
1. தத்த்வாசரம்
2. பிரபன்ன பாரிஜாதம்
3. பிரமேயமாலா
4. அன்னிகா சூடாமணி
5. ஆராதனா கிராமம்
6. பிரமேய சாரம்
7. மங்களாசாசனம்
8. ஞானநந்தி
8. ஞானநந்தி
10. ஹெதிராஜா ஸ்தவம்
11. ரஹஸ்ய ஸங்க்ரஹம்
12. சதுர்லக்ஷண சங்கிரஹம்
13. பரதத்வ நிர்ணயம்
14. த்ரமிதோபநிஷத் ஸங்க்ரஹம்
15. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்ரஹம்
16. பிரதரனுசதேய ஸ்லோகங்கள்
17. பரமார்த்த ஶ்லோகாத்வயம்
18. பரத்வாதி பஞ்சாங்கத்தில்
பரத்வாதி பஞ்சாங்கம்.

நூற்றுப் பத்து வருடங்கள் நீண்ட ஆயுளுக்குப் பிறகு, யுவா வருடம் (கி.பி. 1275) தமிழ் மாசி மாத சுக்லபக்ஷ பஞ்சமி அன்று நடதூர் அம்மாள் பரமபதத்திற்குப் புறப்பட்டார்.

அம்மாளுக்கு ஸ்ரீ வரதவிஷ்ணு, ஸ்ரீ தேவராஜர், ஸ்ரீ சுதர்சனர் மற்றும் ஸ்ரீ ஹேதிசா ஆகிய நான்கு மகன்கள் இருந்தனர்.

ஸ்ரீ நடதூர் அம்மாளின் வாழ்க்கை வரலாறு வரததேசிகாப்யுதயம் மற்றும் வரததேசிக வைபவ பிரகாசிகா ஆகிய இரண்டு படைப்புகளிலிருந்து இணங்கியுள்ளது. இந்த இரண்டு படைப்புகளின் ஆசிரியரான மீமாம்ச வல்லபா, எட்டு சர்கங்களைக் கொண்ட முன்னாள் காவியம் ஹேமமாலி தேசிகாவின் ஆச்சார்ய தீபத்தின் சுருக்கப்பட்ட வடிவம் என்று கூறுகிறார். இரண்டு ஆசிரியர்களும் நடதூர் அம்மாளின் வழித்தோன்றல்கள். மீமாம்ச வல்லபர் நடதூர் அம்மாள் மீது மட்டும் ஒன்பது படைப்புகளை இயற்றியுள்ளார்:
1. வரததேசிக சுப்ரபாதம்
2. வரததேசிக தண்டகம்
3. வரததேசிக கத்யம்
4. வரததேசிக பஞ்சாஷத் 5. வரததேசிக அஷ்டோத்ர
ஷதநாம ஸ்தோத்ரம் 6. வரததேசிக சம்பிரதாயம் வைபவ 8. வரததேசிக பிரபவ தீபம் 9. வரததேசிகாப்யுதயம்

—————

ஸ்ரீகுரு வரவத்ஸ்ய வரதாச்சாரியாரால் அருளிச் செய்யப்பட பிரபந்த பாரிஜாதம் –

இந்த புத்தகம் 12 ஆம் நூற்றாண்டின் துறவியான வேதாந்த தேசிகத்தின் போதகரின் போதகராக இருந்த ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு (நடத்தூர் அம்மாள் என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது) என்பவரால் எழுதப்பட்டது.

நடதூர் அம்மாள் ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தில் முதன்மையான அறிஞர் மற்றும் வரதராஜப் பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். வரதராஜப் பெருமானிடம் அவர் கொண்டிருந்த அதீத பக்தி அவருக்கு “அம்மாள்” என்ற பெயரைப் பெற்றுத் தந்தது, இறைவனே அவரை “அம்மா!” என்று அழைத்தார். அவரது தாய் பாசத்தால் நெகிழ்ந்தார்.

பிரபந்ந பாரிஜாதா என்ற பெயர் இந்த படைப்பிற்கு ஆசிரியரால் வழங்கப்பட்டது.

பிரபந்ந என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, இதற்கு முழுமையான ‘சரணடைதல்’, ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள். அனைத்து வகையான மக்களுக்கும் எளிதாக்க, ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியத்தின் பெரிய பரம-ஆச்சார்யரான ராமானுஜர், ஒரு நபர் வெறும் ‘பிரபந்நனாக’ இருக்க வேண்டும், அதாவது கடவுளிடம் முழுமையாக சரணடைந்தவர் என்று கூறினார்.

சமஸ்கிருதத்தில் பாரிஜாதா என்பது ‘வம்சாவளி’, ‘பிறந்தவர்’ அல்லது ‘முழு வளர்ச்சியடைந்தது’ போன்ற அர்த்தங்களை வழங்கலாம். ஆசிரியரே பின்னர் உரையில் இதை இவ்வாறு வரையறுக்கிறார்:

“அதாவது, நல்லொழுக்கமுள்ள குணத்தின் அத்தியாவசியத் தேவைகள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன.”

எனவே நான் இங்கு பாரிஜாதத்தை ஆன்மீக பாரம்பரியம் அல்லது கருவூலம் என்ற பொருளில் எடுத்துள்ளேன்.

“பாரிஜாதா” என்ற வார்த்தைக்கு இன்னும் ஒரு பாரம்பரிய அர்த்தம் உள்ளது – வேத மத நூல்களின்படி பாரிஜாதா என்பது ஒரு வான ஆசை-நிறைவேற்ற மரமாகும், அதன் நிழலில் இருக்கும் போது விருப்பங்களைச் செய்பவர்களுக்கு விரும்பிய அனைத்து பழங்களையும் அளிக்கும் திறன் கொண்டது.

வேலை பத்து பத்தாதிகள் அல்லது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அழைப்பிதழ் பகுதியைக் கொண்ட 5 வசனங்களுக்குப் பிறகு பின்வரும் பத்து அத்தியாயங்களில் பின்வரும் தலைப்புகள் கையாளப்படுகின்றன:—

  1. பிரமாண பத்தாதி – பிரபத்திக்கான அதிகாரிகள் மீது
  2. ஸ்வரூப பத்தாதி – பிரபத்தியின் தன்மை மீது
  3. அதிகார பத்தாதி – நடைமுறையின் உரிமை.
  4. குரு உபாஸனா பத்தாதி – குருவின் சேவையில்.
  5. பகவத் பரிச்சார்ய பத்தாதி – கடவுளின் இரட்சிப்பு நடவடிக்கைகள்.
  6. பகவத் பரிஜன உபாசனா பத்தாதி – கடவுளின் உதவியாளர்களின் வழிபாடு
  7. பகவத் உபாஸனா பிரதாதி – நல்லொழுக்கமுள்ளவர்களுக்கு சேவை செய்தல்
  8. விஹிதா-வ்யவஸ்தான பத்தாதி – பரிந்துரைக்கப்பட்ட கர்மாவின் நிர்ணயம்
  9. வர்ஜனிய பத்தாதி வரை –
  10. பலோதய பத்ததி – பழத்தின் விடியலில்

பிரபன்ன பாரிஜிதா

அடைக்கலம் தேடுபவரின் பாரிஜாதம்

  1. ஸ்ரீ பாஷ்யத்தின் வர்ணனையின் அமிர்தத்தைக் கொடுத்து என்னையும் உயிர்ப்பிக்கும் வத்ஸர்களின் குடும்பத்தின் அலங்காரமான வரதார்யாவை நான் வணங்குகிறேன்.
  2. பல சூரியங்களைப் போன்ற ஆசிரியர்களின் பாதங்களுக்கு எண்ணற்ற வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
  3. அழியாத செயல்களின் வரங்களால் முனிவர் குணத்தை அடைந்து பெரும் பிரகாசம் கொண்ட குதிரைத் தலை கடவுளுக்கு (ஹயக்ரீவருக்கு ) வணக்கம்.
  4. லக்ஷ்மியின் கண்ணை இடைவிடாமல் தியானித்து, அதனுடன் உவமை அடைந்து, மீனின் வடிவத்தை (மினவபுஹ்) அடைந்து, வேதங்களை அருளியவரை (பிரம்மா) ஆபத்திலிருந்து விடுவித்த கடவுளுக்கு நமஸ்காரம். .
  5. துறவிகளின் பாதங்களின் தூசியின் கீழ் (ரஜஸ்) தஞ்சம் அடைந்து, உணர்ச்சிகளின் (ரஜஸ்) துன்பத்தை குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது, பிரபன்ன பாரிஜாதா எனப்படும் படைப்பை உருவாக்க முயற்சிப்போம்.

அத்தியாயம் I

பிர பத்திக்கு அதிகாரிகள் மீது

1-2

வேதாந்தம் மற்றும் பிற படைப்புகளின் போதனைகளை சுருக்கமாகக் கூறுவதன் மூலம், இந்த பத்து தலைப்புகளில் நாம் இங்கே கையாள்வோம்:

(1) பிரபத்திக்கு (கடவுளிடம் அடைக்கலம் புகுதல்) பெரிய அதிகாரிகள் –
(2) அதன் இயல்பு –
(3) அதை நடைமுறைப்படுத்த தகுதியுள்ள நபர்கள் –
(4) ஒரு பிரபன்ன (தஞ்சம் அடைபவர்) குருவை நோக்கிய கடமைகள் ( ஆன்மீக போதகர்) –
(5) கடவுளை நோக்கி –
(6) நித்தியங்களை நோக்கி
மற்றும் – (7) மற்ற பக்தர்களிடம் –
(8) பரிந்துரைக்கப்பட்டவர்களிடமிருந்து கடமைகளைத் தீர்மானித்தல் சாஸ்திரங்கள் மற்றும் –
(9) தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும்
(10) அதன் விளைவு.

என்னுடைய ஒரே முயற்சி, தொடர்ந்து சிந்தித்து, பெற்ற போதனையை மனதில் பதிய வைப்பதே தவிர, வேறெதுவும் இல்லை. இதில் காணப்படும் ஏதேனும் தவறுகள் விஷயத்தின் சிக்கலான தன்மையின் காரணமாக நல்லவர்களால் மன்னிக்கப்பட வேண்டும்.

பிரபத்தி (கடவுளிடம் அடைக்கலம் தேடுவது) முதலில் தைத்திரியத்தின் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அங்கு, “வசூரன்யா” என்று தொடங்கும் ஸ்துதி (மந்திரம்) இல், இது நயாஸ (அதாவது ஒருவரின் சுயத்தை கடவுளிடம் ஒப்படைத்தல்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ) அதன் செயல்பாட்டுடன்.

தவத்திற்குப் பொருளானவரும், அனைத்திற்கும் காரணமானவரும், எல்லாவற்றிலும் வியாபித்திருப்பவரும், அனைத்தையும் உருவாக்குபவருமான பரம ப்ரஹ்மன், தேடப்படுவதற்குத் தகுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது – அவரது மகிமை இவ்வாறு பாடப்பட்ட ப்ரஹ்மன். :-

“முந்தைய சுழற்சியைப் போலவே சூரியனுக்கும் (இப்போது) ஒளியைக் கொடுப்பவர் நீங்கள்; நீங்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களைப் போல புத்திசாலித்தனமாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள்!”

” ஜீவாத்மாவை (தன்னை) பிரசாதமாக ஆக்கி, ஒருவன் அதை ப்ரஹ்மனின் மகிமையான நெருப்பில் தியாகம் செய்ய வேண்டும், யாருடைய உடம்பு இருக்கிறதோ, அது வேதங்களின் சாரமான ஓம் என்ற மந்திரத்தை மீண்டும் சொல்கிறது.”

இவ்வாறு பிரபத்தியின் பயன்பாடு புனித நூல்களில் பிரணவ (ஓம் என்ற புனித எழுத்து) வடிவத்தை எடுத்துக் கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது; அதற்கேற்ப அதை அறிந்தவர்களின் உடலில் அது ஒரு தியாகமாக குறிப்பிடப்படுகிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தவங்களில், நயாசா எனப்படும் பிரபத்தி மிக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. பிரபத்தியின் முதன்மை மந்திரமாக கடா வல்லியில் த்வயமாக கருதப்படுகிறது .

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் மிகவும் சாதகமான அதிகாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது [பிரபத்தியின் இந்த விஷயத்தில்]. இந்த உபநிடதம், நடைமுறையின் போக்கைப் பற்றி பேசுகையில் பின்வருமாறு கூறுகிறது: –

“ஆத்ம ஞானத்தைப் பெறுவதற்கு, முக்தியை விரும்பும் ஒருவன், ஆரம்பத்தில் பிரமனைப் படைத்து, வேதங்களைக் கற்றுக் கொடுத்தவனிடம் அடைக்கலம் புக வேண்டும்.”

“ஒரு பிரபன்னன் (அடைக்கலம் தேடுபவன்) கொல்லப்படுவதற்கு தகுதியானவனாக இருந்தாலும் அவன் கைவிடப்படுவதில்லை.” இது போன்ற பல வேதப் பகுதிகளும் இந்த விஷயத்தில் அதிகாரம் பெற்றவை.

மேலும் ஸ்ரீ சாஸ்திரத்தில் (பாஞ்சராத்ர ஆகமம் ) பகவான் (விஷ்ணு)
பிரம்மாவுக்கு ‘ஸ்ரீமன் நாராயணா’ என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் த்வய என்ற மந்திரத்தை லக்ஷ்மி தந்திரத்தில் லக்ஷ்மி இந்திரனுக்கு விளக்கியதைப் போலவே உபதேசித்தார்.

சனத்-குமார சம்ஹிதா, பிரபத்தி எல்லா ஆசைகளின் பலனையும் தருகிறது மற்றும் மற்ற எல்லா வழிகளிலும் இல்லாமல் [ஒருவரின் இலக்குகளை அடைவதற்கு] சுதந்திரமானது என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறது.

இவ்வாறு பிரபத்தி வேறு எந்த வழியிலும் முற்றிலும் சுதந்திரமாக உள்ளது . அது எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா நபர்களுக்கும் எல்லா ஆசைகளின் பலனையும் (தன்னையே) அளிக்கிறது.

சம்சாரத்தின் பந்தத்தை ஒருமுறை கூட உச்சரிக்கும்போது அது துண்டிக்கிறது.

பிரம்மாவின் ஏவுகணை எதிர்க்க முடியாததாக இருந்தாலும் அதைத் தடுத்து நிறுத்தும் திறன், ராக்ஷஸர் (அதன் சக்தியில்) அனுமனைக் கட்டுவதில் இருந்த அவநம்பிக்கையின் காரணமாக, ஒரேயடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதால், பிரபத்தி நம்பிக்கையின்மையிலிருந்து பயனற்றதாகிறது .

எனவே, அதில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு அது சுதந்திரம் (முக்தி) தரும். மற்ற வழிகளுடன் இணைந்தோ அல்லது தானாகவோ, பிரபத்தி பிராணவத்தைப் போலவே முக்தியை விரும்புவோரின் சுதந்திரத்தை நிறைவேற்றுகிறது.

பகவான் (விஷ்ணு) கவனமுள்ள விஸ்வக்சேனரிடம் பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்:

“[சுய விடுதலையின்] பிற வழிகளைப் பின்பற்றுவது கடினம்; ஏனெனில் பயிற்சி செய்யத் தேவையான தகுதிகளை இழக்கும் ஆபத்து எப்போதும் உள்ளது [அந்த வழிமுறைகள்]:

இதன் விளைவாக, அனைவருக்கும் பொதுவான ஒரு [விடுதலை] முறையை நான் இப்போது குறிப்பிடுகிறேன்.

“காலத்தின் எதிர்மறையான செல்வாக்கின் காரணமாக, மனதின் நிலையற்ற தன்மையின் காரணமாக, புலன்கள் அவற்றின் பொருள்களின் மீது பற்றுதல் காரணமாக, தடைசெய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுவதால், செய்ய வேண்டியதைச் செய்யாததன் காரணமாக. , மற்றும் நாம் வாழும் காலங்களின் (பாதகமான) தன்மை காரணமாக, –
சேனைகளின் தலைவரே! சிற்றின்பத்திற்கான உந்துதலை வெல்வது இயலாது.”
“எனவே, பெரிய முனிவரே! அனைவருக்கும் கர்ம யோகம் 10 க்கு தகுதி இல்லை ; ஏனென்றால் [வேதத்தில்] பல பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் உள்ளன, மேலும் அவற்றைச் செய்ய அனைவரும் தகுதியற்றவர்கள் அல்ல

“மிகச் சிலரே ஞான யோகத்தின் பாதையைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர் . அத்தகைய [ஆர்வமில்லாத] பாசமோ (பிரிதி) உயர்ந்த அன்போ (பக்தி) என்மீது எழுவதில்லை

“எனவே, கர்ம யோகத்தையோ அல்லது வேறு எந்த யோகத்தையோ கடைப்பிடிக்க எந்தத் தகுதியும் இல்லாததாலும், பின்பற்றுவதற்கு வேறு எந்த வழியும் இல்லாததாலும், ஒருவன் என் பாதங்களைத் தஞ்சம் அடைய வேண்டும்.”

“ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலையை நன்றாகக் கருதி, எனது [கவர்ச்சிகரமான] குணங்களையும் கருத்தில் கொண்டு, நான் மட்டுமே வழி என்ற முழு உணர்வோடு என்னை நாடுபவன் என்றென்றும் விடுதலை பெறுகிறான்.

[அவரது விருப்பத்திற்கு] இணங்கச் செயல்படுவதற்கான தீர்மானம் [அதற்கு] எதிர்ப்பு [அதற்கு] இல்லாமை, அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை மற்றும் அவரது பாதுகாப்பிற்காக வேண்டுகோள்; ஒருவரின் சுயத்தை ராஜினாமா செய்தல் [அவரிடம் – ஆத்ம-நிக்ஷேபா] மற்றும் உதவியற்ற உணர்வு –
இவையே சரணாகதியின் (அடைக்கலம்) ஆறு அம்சங்களாகும் .

“இந்த [செயல்முறையின்] பிரபத்தியின் மூலம், என்னை மாதவனாக (லக்ஷ்மியின் இறைவன்) அறிந்து, வேறு வழியில்லை என்ற உணர்வால் வழிநடத்தப்பட்டு, என்னிடம் அடைக்கலம் புக வேண்டும். இவ்வாறு என்னில் இளைப்பாறும் ஒருவன் இலக்கின் நிறைவை அடைகிறான்.”

பகவான் (விஷ்ணு) இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இவ்வாறு அறிவித்துள்ளார்: —

“என்னிடம் ஒரே ஒரு முறை பாதுகாப்புத் தேடி, என்னிடம் மன்றாடியவருக்கு; நான் உன்னுடையவன்! எல்லா உயிர்களின் பயத்திலிருந்தும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். இது என் சபதம்”.

“எல்லா சுயமாகத் தொடங்கப்பட்ட விடுதலை வழிகளையும் (தர்மங்களை) துறந்து, தங்குமிடத்திற்காக என்னிடம் தனியாக வாருங்கள்; உன்னுடைய எல்லா கர்ம வினைகளிலிருந்தும் உன்னை விடுவிப்பேன். துக்கப்பட வேண்டாம்” ( கீதை 18:66 )

வசிஷ்டரின் வரத்தின் மூலம் தெய்வத்தைப் பற்றிய உண்மையை அறிந்த பராசரரும் விஷ்ணு புராணத்தில் பின்வருமாறு கூறினார்:

“எல்லாப் பாவங்களையும் அழிப்பவனான உன்னிடம் (விஷ்ணு) அடைக்கலம் புகும் வரை ஒருவன் துன்பத்தையும் ஆசையையும் மாயையையும் துன்பத்தையும் அனுபவிப்பான்!”

“யாமனின் தூதுவர்களே! என்று கூறும் பாவமற்ற மனிதர்களிடமிருந்து வெகு தொலைவில் இருங்கள்: –

‘ஓ தாமரைக் கண்களையுடைய வாசுதேவா! விஷ்ணு (பிரபஞ்சத்தின் வியாபி)! பூமியின் ஆதரவாளனே! மாறாதவர்! சங்கு மற்றும் வட்டு தாங்குபவன்! எங்களுக்கு அடைக்கலமாக இருங்கள்!”

நான்கு சாதிகள் (வர்ணம்) மற்றும் வாழ்க்கையின் நான்கு ஒழுங்குகள் (ஆஷ்ரமம்) ஆகியவற்றின் கடமைகளைக் கூறும்போது, ​​மனு முனிவர் சன்யாசத்தின் (சுய சரணாகதி) மகிமையையும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார்:—

“நாராயண வழிபாடு”.

“உன் இதயத்தில் வாழும், உள்ளிருந்து புலன்களைக் கட்டுப்படுத்துபவன், விவஸ்வானில் வசிப்பவன் – சூரியன், ராஜா – ஆட்சியாளரான யமன் யார் என்பதில் உங்களுக்கு எந்த விவாதமும் இல்லை என்றால், கங்கைக்குச் செல்ல வேண்டாம். குருக்ஷேத்திரத்திற்கும் அல்ல.”

“இதயத்தில் வசிப்பது” என்பது முதன்மையாக தெற்கு திசையின் அதிபதியான யமனை (மரணத்தின் கடவுள்) சார்ந்தது அல்ல, ஆனால் அனைத்து உயிரினங்களின் ஆட்சியாளரான அவருக்கு, அவற்றில் நுழைந்து, அவை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது; சுயத்தில் (ஆத்மன்) மறைந்திருப்பவர் மற்றும் மரணத்தின் கடவுளுக்கு கூட மரணமாக இருக்கிறார்;

எனவே “அவர் இதயத்தில் நிலைத்திருக்கிறார்”; அனைத்திற்கும் அதிபதியான, சூரியனின் வட்டில் வசிப்பவனான “அவருடன் எந்த விதமான சர்ச்சையும் இல்லை” என்பது, அவனுடைய பாதங்களில் தன்னைச் சரணடைவதாகும்.

“உண்மையில் இருந்து வேறுபட்டு சுயத்தை கருத்தரிப்பவர், ஒரு பெரிய பாவி, உண்மையில் சுயத்தை (ஆத்மான்) திருடிய ஒரு திருடன்.”

“ஆகையால், தீர்த்தங்கள் (புனித ஸ்தலங்கள்) முதலியவைகள் கூட, அனைவருக்கும் அதிபதியான, அனைவரின் இதயங்களிலும் நிலைத்திருக்கும் இறைவனிடம் அடைக்கலம் புகுந்தவர்களால் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

இந்த யோசனை ஷௌனகா 13 மற்றும் பிற பெரிய முனிவர்களால் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது : —

“அரசே, உங்கள் மனம் விஷ்ணுவிடம் அர்ப்பணிக்கும் வரை நீங்கள் தீர்த்தங்களை (புனித ஸ்தலங்களை) தொடர்ந்து தரிசிக்கலாம்.”

“ஓ வலிமையான ஆட்சியாளரே! உங்களைப் போன்ற பக்தர்கள் தங்களைப் புனிதமாக ஆக்கிக் கொண்டவர்கள்,
தங்களுக்குள்ளேயே வசிக்கும் மஸ்தாபி (விஷ்ணு) மூலம் தீர்த்தங்களைப் புனிதப்படுத்துகிறார்கள்.”

பிரபத்திக்கு இதுவே போதுமான வேதச் சான்று. சௌனகர் மற்றும் வியாசர் (விஷ்ணு-தர்மம் மற்றும் மகாபாரதத்தில் முறையே இவ்வாறு அறிவித்துள்ளனர்:-

“நீங்கள் பல பிறவிகளை கடந்து வந்திருக்கிறீர்கள். அவர்களில் யாரையாவது நன்றாகக் கருதி, அடைக்கலத்தை நாடுங்கள்!”

“ஓ பாரதா! வீழ்ந்துவிடுமோ என்று பயப்படுகிற நீங்கள், மற்ற எல்லா திட்டங்களையும் கைவிட்டு, உங்கள் முழு மனதையும் நாராயணரிடம் அர்ப்பணியுங்கள்.

——————————

150 ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம்
சரணாகதி -சரணம் -ஆகதி -உபாயத்தை வரவைப்பது

அஹம் மத் ரக்ஷண பரோ மஹா ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதிரேவ இதி ஆத்மாநம் நிஷிபேத் புத்திர்
-1- -ந்யாஸ தஸகம்

—————–

ஆச்சார்ய ஆரியமா பாதேப்யோ நமஸ்யா ததே
யதாஸங்க வஸாத் பும்ஸாம் மந பத்மம் ப்ரபுத்யதே
-1-

ஆச்சார்யர் திருவடிகளே அநேக ஸூர்ய துல்யம்
தேஜோ நிதி -பாவனத்வம் -பரப்ரகாஸத்வம் -வேதமயம் -பகவத் அதிஷ்டிதம் –

இத்தால் தமது குரு பரம்பரை
எங்கள் ஆழ்வான்
திருக்குருகைப் பிரான் பிள்ளான்
எம்பெருமானார்
பெரிய நம்பி
ஆளவந்தார்
மணக்கால் நம்பி
உய்யக்கொண்டார்
நாதமுனிகள்
நம்மாழ்வார்
விஷ்வக்சேனர்
பெரிய பிராட்டிமார்
பெரிய பெருமாள் –
இவர்கள் திருவடித் தாமரைகளைப் பற்றுகிறார்

——————

அபங்குர கலா தான ஸ்தூல லஷ்யாத் வமீயுஷே
துங்காய மஹதே தஸ்மை துரங்காய முகே நம
-2—-ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரைப் பற்றுகிறார்

கீழே சஹஸ்ர ஸூர்ய துல்யம் -இங்கு பூர்ண சந்திர துல்யம் -உபாசகர்களுக்கு அழியாத நித்ய ப்ரஹ்ம வித்யையை அளிப்பவர் –

———–

லஷ்மீ சஷு அநு த்யாநாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே
நமோஸ்து மீந வபுஷே வேதவேதி விபன்முஷே —
3-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வந்தனம்

மத்ஸ்ய ஹம்ஸ ஹயக்ரீவ திரு வவதாரங்கள் -வேத உபதேசம்
ஏக சேஷித்வம் -ஸ்ரீயபதி –

———–

ரஜோ ரஜஸ் பிரசமனம் –ப்ரபந்ந பாரிஜாதாக்ய ப்ரபந்தய யதாமஹே –4-

தொண்டர் அடிப் பொடிகளே ரஜஸ் குணங்களை ஒழித்து விபரீத அஞ்ஞானங்களைப் போக்கி அருளும் என்கிறார்-இதற்காகவே இந்தப் பிரபந்தம்

——————

பிரபத்தே மானஸ ஸுபாஹ்யம் ஸ்வரூபம் அதிகார் யபி |
ப்ரபந்நானாம் குரவ் வ்ருத்தி ஸ்ரீம்ஸே ஸூரிஷு சத்சு ச
விஹிதேஷு வ்யவஸ்தாநம் வர்ஜநீயம் பலம் ததா |
ஏதே தசார்த்தே கத்யந்தே த்ரயந்தாத்ய அர்த்த ஸங்க்ரஹாத் ||
–5-

இதில் வேதாந்த சாரமாக பத்து விஷயங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன –
1-திடமான வேத பிரமாணம் உள்ள பிரபத்தி -பிரமாண பத்ததி -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றில் உள்ள பிரமாணங்கள்
2-ப்ரபத்தியின் ஸ்வரூபம் –ஆர்த்த -திருப்த ப்ரபத்திகள் -அங்கங்கள்
3-அதிகாரி ஸ்வரூபம்
4-ப்ரபந்ந அதிகாரியின் ஆச்சார்யருக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
5- ப்ரபந்ந அதிகாரியின் ஸ்ரீயப்பதிக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்கள் -திருவாராதனம் –
6-ப்ரபந்ந அதிகாரியின் நித்ய முக்தர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
7-ப்ரபந்ந அதிகாரியின் பாகவதர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-என்னைப் போலாவாது நினைக்க வேண்டும் என்று அன்றோ அவன் வார்த்தை
8-ஸாஸ்த்ர விஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
9-ஸாஸ்த்ர நிஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
10-பல ஸ்வரூபம்

—————-

ஸ்ருத்தார்த்த மனனஸ் தேம்நே மம நேதரதா ஸ்ரம |
ஸோதவ்யம் அத்ர ஸ்கலிதம் ஸத்பிர் விஷய கௌரவாத்
||–6-

க்யாதி லாப பூஜார்த்தமாகச் செய்யப்பட வில்லை
தாம் பெற்ற உயர்ந்த ஆச்சார்ய உபதேசங்களின் சாரமே இப்பிரபந்தம்
குற்றம் குறைகளை பெரியோர் க்ஷமிக்கப் பிரார்த்திக்கிறார் இதில்

——————————————————

அத்தியாயம் 9.

கைவிடப்பட வேண்டிய படைப்புகள்:

1.பிர பன்னரால் துறக்கப்பட வேண்டிய உலக மற்றும் வைதீக நடவடிக்கைகள் இப்போது விவரிக்கப்பட்டுள்ளன. ஒருவர் தனது சொந்த நிலை, இடம் மற்றும் நேரம் ஆகியவற்றுடன் பொருந்தாதவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.

2.-மனுவாலும் மற்றவர்களாலும் வர்ண ஆஸ்ரம தர்மத்திற்கு முரணானவை என்றும், பஞ்சராத்ர சாஸ்திரத்தில் ஒருவருடைய திறமைக்கு முரணானவை என்றும் கூறப்பட்டுள்ளதைச் செய்யக்கூடாது.

3 – 4.-பொது சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து செயல்களும் சிறப்புச் செயல்களுக்கு முரணானவை.
குறுக்கு வழிகள் அல்லது குறுக்கு வழியில் வலஞ்சுழியில் சுற்றி வருவது, ஒரு புனித மரம், ஒரு மங்களகரமான பொருள், சந்திர பதினைந்து நாட்களில் (பிரதோஷம்) 13 வது நாளில் சிவ வழிபாடு மற்றும் பாவத்தைப் போக்குவதாகக் கூறப்படும் பிற செயல்கள் போன்றவை. இரு உலகங்களின் இன்பங்களையும், அதாவது சில குறிப்பிட்ட உலகப் பொருள் மற்றும் எதிர்கால பலன்களுக்காக நிகழ்த்தப்படும் (காம்யா)வைணவப் பயிற்சியாளர்கள் (பரம்-ஏகாந்தி) என்று கூறுபவர்களால் செய்யக்கூடாது.
பொது சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட, ஆனால் தொடங்கப்பட்ட வைஷ்ணவர்களின் [நடைமுறைகளுக்கு] முரணான மதிப்பெண்கள் மற்றும் பிற டோக்கன்களை அணிவது.

5.குறிப்பிட்ட ஆகமங்களால் விதிக்கப்பட்ட பாடல் மற்றும் நடனம் போன்றவை யமன் மற்றும் சௌனகர் சான்றளிக்கப்பட்ட வைஷ்ணவரால் செய்யப்பட வேண்டும்:—

6.“ஓ மனிதர்களில் சிறந்தவரே, கடவுளின் மகிமைகளைப் பாடுவதைத் தவிர வேறு எந்த [உலக] பாடல்களையும் ஒரு பிராமணரால் பாடக்கூடாது. எனவே [வேறு பாடல்களைப் பாடினால்] பாவம் செய்தாய்!” (மத்ஸ்ய புராணம்)

7.“விஷ்ணுவைப் பற்றிப் பாடுவதும், விஷ்ணுவைப் பற்றி நடனமும் நாடகமும் ஆடுவதும், பிராமணரே! குறிப்பாகப் பிராமண சாதியைச் சேர்ந்தவர்களால் கட்டாய தினசரிச் செயல்களைப் போலவே செய்ய வேண்டும். (நித்யா கர்மா)

8.கடவுளின் முன்னிலையில் நடனமாடுபவர்களின் உடலில் வசிக்கும் பெரும் பாவங்களின் பறவைகள், கைதட்டல் முதலியவற்றால் பயந்துவிடும்.

9.ஒரு வைஷ்ணவர் விஷ்ணுவின் வட்டெழுத்து மற்றும் சிறப்பு [பாஞ்சராத்ரா] சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற சின்னங்களை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.

10 – 11.-உலகில் மிகக் குறைவான [உண்மையான] பின்பற்றுபவர்கள் இருப்பதாலும், வலிமையான பலனைப் பெறுவதற்கு இது எளிதான வழி என்பதாலும், மேலும் [பிரபத்தியைப் பற்றிய] வினோதமான காரணத்தினாலும் சிலர் விடுதலையை அடைவதற்கான பிரபத்தியின் சாதகத்தை இழிவுபடுத்துகிறார்கள்.

12.அவர்கள் பொல்லாதவர்கள் மற்றும் முட்டாள்கள் மற்றும் மனிதர்களில் மிக மோசமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் மாயையால் மறைக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் ஒரு பேய் இயல்பு பெற்றுள்ளனர்.

13.பிறக்கும் போது விஷ்ணுவின் பார்வையைப் பெறாமல், பிரம்மா அல்லது ருத்ரனின் பார்வையைப் பெறாத பாவிகள், ராஜாசிக் (உணர்ச்சி) அல்லது தாமச (அலவமான) இயல்புடையவர்களாக இருப்பார்கள்; அத்தகைய நபருடன் ஒருவர் பேசக்கூடாது:
“ஏனெனில், அநியாயக்காரரோடு எந்த விதமான தொடர்பும் இருக்காது!”

14.மனு தர்ம சாஸ்திரங்களில் போர்க் குணமிக்கவர்கள் மோசமானவர்கள் என்றும் அவர்களுடன் பேசுவதன் மூலம் கூட அவர்களுடன் உடலுறவைத் தடுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

15.வேதங்களுக்கு முரணான அந்த நூல்களும், பிழையான அந்தத் தத்துவக் கருத்துகளும் மரணத்திற்குப் பிறகு பயனற்றவை;
எனவே அவை உண்மையில் தமஸில் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகின்றன.

16.-தவறான செயல்களில் ஈடுபடும் மதவெறியர்கள், பூனைகளைப் போல செயல்படும் ஏமாற்றுக்காரர்கள் -மற்றும் மத கபடவாதிகள் கொக்குகள் போல நடந்துகொள்பவர்கள் -(மத பாசாங்கு. ஒரு பெரிய மீன் கடந்து செல்லும் வரை, ஒரு காலில் இறந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் கொக்கு, மீன் கடந்து செல்லும் வரை, திடீரென்று அதன் மீது பாய்கிறது)

17.ஒரு பிரபன்னர் பிரபத்தியை [செயலை நடைமுறைப்படுத்த] இடையூறு விளைவிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது.
18 – 21.-விஷ்ணுவைத் தவிர மற்ற தெய்வங்களை வழிபடுதல், தினசரி சடங்கு நடைமுறைகள் , பிரபத்தியைத் தவிர வேறு வழிகளை நாடுதல் [விடுதலை அடைய] மற்றும் புனித மனிதர்களிடம் தீமை,கண்மூடித்தனமான நம்பிக்கை, சிற்றின்ப இன்பங்களில் அதீத ஈடுபாடு, மற்றும் லக்ஷ்மியின் இறைவனான லக்ஷ்மியையும் அவர்களது உதவியாளர்களையும் எந்த விதத்திலும் பழிவாங்குவது, எந்த விதமான பரிகாரமும் இல்லாமல் பெரும் பாவங்களைச் செய்வது, -இவை அனைத்தும் தடைகள், ஒரு பிரபன்னர் அவற்றில் ஈடுபடக்கூடாது.

22.-பக்தர்கள் இந்தச் செயல்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு, அவர்கள் மனம் வருந்தினால், அவர்களுக்காகப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் – தனிப்பட்ட முறையில் மற்றும் பகிரங்கமாக.

23.-மனந்திரும்பிய பிரபன்னருக்கு தனிப்பட்ட முறையில் மட்டும் பரிகாரம் செய்ய அதிகாரம் இல்லை.
இந்திரனின் கேள்விக்கு லக்ஷ்மி இவ்வாறு பதிலளித்தாள்.

24.முந்தைய நாட்களில், பிரபன்னருக்கு இரகசியப் பரிகாரம் பரிந்துரைக்கப்பட்டது.
அதே கருத்தை பராசரரும் பின்வருமாறு கூறினார்:

25″ஒரு தனிமனிதன் மனம் வருந்தினால், கடவுளை மட்டும் நினைவு கூர்வதே மிக உயர்ந்த பரிகாரமாகும்.”

26.“ஓ மைத்ரேயா! ஸ்வயம்புவும் மற்ற முனிவர்களும் பாவத்திற்கு விகிதாசாரமாகப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளனர் – ஒரு பெரிய பாவத்திற்கு கடுமையானது மற்றும் சிறிய பாவத்திற்கு லேசானது.”

27.“அனைத்து பரிகாரங்களும் சிக்கனம் ( தபஸ் ) மற்றும் சடங்கு ( கர்மா ) ஆகியவற்றை உள்ளடக்கியது. அனைத்திலும் கிருஷ்ணரை தொடர்ந்து நினைவு செய்வதே சிறந்தது.

28.”ஒரு யாகத்தில் அலட்சியம் அல்லது நிகழ்ச்சியிலிருந்து விலகுதல் ஆகியவற்றால் ஏற்படும் அனைத்து தவறுகளும் விஷ்ணுவின் நினைவால் மட்டுமே நிவர்த்தி செய்யப்படும் என்று புனித நூல்கள் நமக்குக் கற்பிக்கின்றன.”

29.இறைவனைப் பற்றிய தியானத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவருக்கு, பரிகாரச் சடங்குகள் (க்ரியாக்கள்) தியானத்தின் தொடக்கத்துடன் முடிவடைகின்றன; ஆனால் ஒரு முட்டாள் அவிசுவாசிக்கு பன்னிரண்டு வருட கால அவகாசம் [பரிகாரச் சடங்குகள்] விதிக்கப்படுகிறது.

30-பன்னிரண்டு ஆண்டுகள் செய்ய வேண்டிய பரிகாரச் சடங்குகள் (கர்தவ்யா) ஒரு அவிசுவாசிக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால், விஷயத்தைத் தெளிவுபடுத்துவதன் மூலம் கடுமையான பாவம் மற்றும் லேசானது என்ற குழப்பம் இருக்காது.

31.-“ஈஸ்வரனை (இறைவன்) பற்றிய அறிவிலிருந்து ஒரு உருவம் கொண்ட ஒருவர் (க்ஷேத்ரஜ்ஞர் ) அடையும் தூய்மையானது யாஜ்ஞவல்கியரால் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
உருவானவருக்கும், கடவுளுக்கும் (ஆத்மன் மற்றும் ஈஸ்வரன்) இடையே உள்ள, உரியவர் மற்றும் உரிமையாளரின் (சேஷ-சேஷி) உறவைப் பற்றிய அறிவிலிருந்து எழும் உடலமைப்பின் சுத்திகரிப்பு பற்றியும் விவரித்தார்.

32.”ஒரு நபர் தீங்கான பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும், ஒரு கணம் கூட கடவுளை தியானிப்பதன் மூலம், அவர் மீண்டும் ஒரு சந்நியாசியாகவும் (தபஸ்வின்) ஒரு துறவியாகவும் (தபஸ்வின்) அதே வரிசையில் தம்முடன் அமர்ந்திருப்பவர்களை தங்கள் முன்னிலையில் புனிதப்படுத்துகிற தூய்மையானவராகவும் மாறுகிறார். சாப்பிட (பக்திபாவன)” (விஷ்ணு தர்மோத்தர புராணம்)

33.-ஒருவன் சம்பிரதாய சுத்த நிலையில் இருந்தாலும் சரி, தூய்மையற்ற நிலையில் இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும், தாமரைக்கண்ணை (கிருஷ்ணனை) நினைவு செய்பவன் அகமும் புறமும் தூய்மையானவனாகிறான்.

34.-சௌனகர் மற்றும் பிறரால் குறிப்பிடப்பட்ட கடவுளைத் தியானிப்பவர்கள், ஒரு தவறான செயலைச் செய்யும்போது மனம் வருந்துகிறார்கள், அவர்களின் பரிகாரச் சடங்குகள் அந்தத் தியானத்தின் [கடவுளை] அமைப்பதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

35.ஒரு வைஷ்ணவர் மற்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுடனும், பிரபத்தியைத் தவிர வேறு வழிகளில் ஈடுபடுபவர்களுடனும் தொடர்புகளை விட்டுவிட்டு மற்ற பிரபன்னர்களுடன் வசிக்க வேண்டும்.

36.ஒரு நல்லொழுக்கமுள்ள நபர் (சாது) ஒரு முட்டாளிடமிருந்து உதவியை ஏற்க மாட்டார், அல்லது ஒரு குரு ஒரு முட்டாளுக்குக் கற்பிக்கக் கூடாது; ஏனெனில் அறியாமையில் அடைக்கலம் புகுபவனும் அறியாமையும் தாமஸமுமாகிறான். மேலும் ஒரு முட்டாளுக்குக் கொடுக்கப்பட்ட போதனை தரிசு நிலத்தில் விழுகிறது.

37.குருவும் சிஷ்யனும் ஒருவரையொருவர் ஒருபோதும் துவேஷம் கொள்ள மாட்டார்கள். தீங்கிழைக்கும் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று விடுதலைப் பாதையில் இருந்து விழுகிறது.

38 – 39.-ஒரு குருவால் கொடுக்கப்படாத மந்திரத்தைப் பயன்படுத்தி யாரும் கடவுளுடன் (ஹரி) தொடர்பு கொள்ளக் கூடாது. செல்வத்தின் மீதுள்ள பேராசையால் ஒரு சீடன் ஒருபோதும் நேர்மையான குருவை நிந்திக்கக்கூடாது. புத்திசாலியான ஒருவன், முதலில் குருவிடம் எதையும் காணிக்கையாகக் கொடுக்காமல் அதைச் சொந்தமாக்கக் கூடாது. ஒரு நல்ல வைணவன் குருவை வெறுப்பவர்களை எல்லாம் கைவிடுவான்.

40 – 41.-விஷ்ணுவின் கோவிலை பிரப்பன்னன் ஒருபோதும் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் தீட்டுப்படுத்தவோ கூடாது. அங்கே கால்களைக் கழுவக் கூடாது; தெய்வத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் நடக்கக்கூடாது ; சரியான வாசலைத் தவிர வேறு எந்த வழியிலும் கோவிலுக்குள் நுழையக்கூடாது.

42 – 43.-ஒரு வைஷ்ணவர் ஒருபோதும் கருப்பு கம்பளி போர்வையால் மூடப்பட்ட கோவிலுக்குள் நுழையக்கூடாது; அல்லது விஷ்ணு கோவிலில் புனித மந்திரங்கள் (ஜபம்) ஓதுதல் அல்லது மாலைகள் செய்தல் மற்றும் இது போன்ற பிற சேவைகளைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.

44.-ஒருவர் வணக்கம் செலுத்தக்கூடாது அல்லது வேறு எந்த தெய்வத்தையும் பார்க்கக்கூடாது; வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக்கூடாது, வேறு எந்த சன்னதியிலும் நுழையக்கூடாது.

45.-வராஹ புராணத்தில் கடவுளுக்கு எதிரான முப்பத்திரண்டு குற்றங்கள் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு வைஷ்ணவன் அவை அனைத்திலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.

46.-ஒரு வைஷ்ணவர் வாசனை திரவியங்கள், பூக்கள், ஆடைகள், நகைகள், விலங்குகள், வீடுகள் மற்றும் தனிப்பட்ட இன்பத்திற்கான பிற பொருட்களை தனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடாது.

47.-ஒருவர் தனது மகன்கள் போன்றவர்களை ஒருவருக்கு அடிபணிந்தவர்களாகக் கருதக்கூடாது, மாறாக கடவுளின் (விஷ்ணுவின்) மகிமையின் வெளிப்பாடுகளாகக் கருதக்கூடாது. ஒரு புத்திசாலி நபர் எப்போதும் உடைமை உணர்வு (மமதா) தவிர்க்க வேண்டும்.

48.-ஆன்மிகப் பயிற்சியில் (ஏகாந்தா) முழு ஈடுபாடு கொண்ட ஒருவரை ஒருபோதும் அவரது கிராமம், குடும்பம் போன்றவற்றின் பெயரால் குறிப்பிடக்கூடாது, மாறாக விஷ்ணுவின் பெயர்களால் அழைக்கப்பட வேண்டும், ஏனெனில் விஷ்ணுவே அவனுடைய எல்லாமே.

49.-பல்வேறு பெயர்களைக் கொண்ட நதிகள் கடலில் சேரும்போது, ​​எல்லாப் பெயர்களும் சமுத்திரத்தில் மட்டும் ஒன்றாகிவிடுவது போல, விஷ்ணுவின் சேவையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் ஏகாந்திகள்.

50-முனிவர்களின் நிழலில் ஒருவர் காலடி எடுத்து வைக்கக் கூடாது, அல்லது இதுபோன்ற பிற செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவர் எப்பொழுதும் ஆன்மீக மக்களுடன் பழக வேண்டும், அவர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

51 – 52.-பஞ்சராத்ர ஆகமத்தின் விஷ்வக்சேன ஸம்ஹிதை இவ்வாறு ஒரு பிரப்பன்ன கட்டளையிடுகிறது: —

அவர் வைஷ்ணவ அல்லாத இலக்கியத்தின் மீது ரசனையை வளர்த்துக் கொள்ளவோ ​​அல்லது பொய்யான வேதத்தை விரும்பவோ கூடாது. அவர் தவறான சத்தியம் செய்ய மாட்டார் அல்லது [ஜோதிடர்களிடம்] சுப அல்லது அசுபத்திற்கு [நேரங்கள் மற்றும் நிகழ்வுகள்] ஆலோசனை செய்ய மாட்டார்.

53.-விஷம் எடுக்கவும், பிசாசுகள் மற்றும் பிற ஆவிகளை விரட்டவும் மற்றும் அனைத்து நோய்களைக் குணப்படுத்தவும் பொதுவான மந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது.

54.-ஒருவன் மெத்தை அணியக் கூடாது, சாம்பலைப் பூசிக்கொள்ளக் கூடாது. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து வகையான ஹீட்டோரோடாக்ஸ் அடையாள அடையாளங்களையும் விட்டுவிட வேண்டும்.

55.நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் மற்றும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட வைணவ நடத்தை நடைமுறையில் உள்ள இடங்களில் மட்டுமே ஒருவர் எப்போதும் வசிக்க வேண்டும் என்பதே கருத்து, வேறு எங்கும் இல்லை.

56.-ஒருவர் வாழ்வாதாரத்திற்காக ஒரு சாதாரண தொழிலை எடுக்கக்கூடாது, மாறாக நல்லதை அங்கீகரிக்கும் மற்றும் இடம் மற்றும் காலத்திற்கு இசைவான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; பேராசையால் ஆட்சேபனைக்குரிய ஒன்றைப் பின்பற்ற ஒருவன் ஒருபோதும் ஆசைப்படக்கூடாது.

57 – 58.இது தொடர்பாக பகவான் வியாசர், அறம் சார்ந்தவர்களால் நிராகரிக்கப்பட வேண்டியவற்றைக் கூறினார்:-

“இலக்கியம் (ஷப்த சாஸ்திரம்) மீது மகிழ்ச்சியடைபவருக்கும் , சிறந்த வாழ்விடத்தை விரும்புபவருக்கும் மோட்சம் இல்லை; உணவு மற்றும் உடையில் பிரத்தியேகமாக வெறி கொண்டவருக்கு அல்ல; பிரபலத்தின் மீது குறியாக இருப்பவருக்கும் அல்ல.
ஆனால், ஓய்வுபெறும் மனப்பான்மை உள்ள, ஐம்புலன்களின் இன்பங்களிலிருந்து விலகி, பரம ஞானத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, எப்பொழுதும் ஆக்ரோஷம் இல்லாதவனுக்கு, உறுதியான பயிற்சி உண்டு”.

59.”மரணத்திற்காக ஏங்காமல் அல்லது வாழ்க்கையின் தொடர்ச்சிக்காக ஏங்கவில்லை, மாறாக கூலித்தொழில் செய்பவர் தனது கூலிக்காகக் காத்திருப்பதைப் போல ஒருவர் தனது நேரத்தை ஒதுக்க வேண்டும்.” (மனு 6:45)

60-பொதுவாக தங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடையாதவர்கள் மரணத்தால் கலங்குகிறார்கள்; ஆனால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றியவர்கள் வரவேற்பு விருந்தினரைப் போல மரணத்திற்காக காத்திருக்கிறார்கள்.

61.-பக்தி (பக்தி) மற்றும் ஞானம் (ஞானம்) தவிர வேறு எந்த வெகுமதிக்காகவும் ஒருவர் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யக்கூடாது; ஏனென்றால் மற்ற காரியங்களுக்காக ஜெபிப்பதன் மூலம் ஒருவன் நிச்சயமாக நாசமாகிவிடுவான்.

62.-அலட்சியத்தினாலோ அல்லது நோக்கத்தினாலோ ஒரு முனிவரை புண்படுத்திவிட்டு வருத்தப்பட்டால், அவரைத் தேடி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அமைதி இருக்காது.

63.-கடவுளுக்கு எதிரான குற்றத்தின் விஷயத்தில் கூட இந்த பரிகாரம் [மன்னிப்பு கோருதல்] மீற முடியாதது. ஒரு புத்திசாலி எதிர் பாலினத்தவருடன் [சரீர] தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.

64.-எனவே அறிவுள்ளவன் விஷம் போன்ற சிற்றின்பத்தை முற்றிலும் கைவிட வேண்டும். அறிவில்லாதவன் சாமானியன் என்று அழைக்கப்படுவான் ஆனால் ஞானி வைஷ்ணவன்.

65.-அறிவுள்ளவன் அறியாதவர்களுடன் எந்த விதத்திலும் ஈடுபட மாட்டான். இதை பகவான் பஞ்சராத்ர சாஸ்திரத்திலும், மனு போன்றவர்களும் சொல்லியிருக்கிறார்.

66 – 67.-எனவே பக்தியுள்ள வைஷ்ணவர் சாதாரண உலக மக்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.
சமூகமயமாக்கல் எட்டு வகைகளாகக் கூறப்படுகிறது:
ஒரே படுக்கை அல்லது இருக்கையைப் பகிர்ந்துகொள்வது, ஒரே வரிசையில் அமர்ந்து உணவருந்துதல், ஒரு பானையைப் பயன்படுத்துதல், சமைத்த உணவைக் கலக்குதல், யாகம் செய்தல், வேதங்களைக் கற்பித்தல், திருமணம் மற்றும் உணவு-உணவு -இவை அனைத்தும் பொருள்முதல்வாதிகளுடன் கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.

68.-ஒருவர் உரையாடல், தொடுதல் மற்றும் ஒருவர் மற்றவருடன் உறங்குவது மற்றும் அமர்ந்திருப்பது போன்றவற்றாலும், புரோகிதக் கடமைகள், வேதம் கற்பித்தல் மற்றும் கலப்புத் திருமணம் போன்றவற்றால் சிதைக்கப்படுகிறார்.

69.-புரோகித செயல்பாடு, வேதம் கற்பித்தல் மற்றும் விழுந்துபோன ஒருவருடன் படுத்து, உட்கார்ந்து திருமணம் செய்துகொள்வதன் மூலம் ஒரு வருடத்திற்குள் ஒருவன் சீரழிக்கப்படுகிறான்.

70.பிருஹஸ்பதியும் மனுவும் இந்த சமூகமயமாக்கலை (சங்கரா) அதன் பன்முகத்தன்மையில் விவாதித்துள்ளனர், ஆனால் புரோகித செயல்பாடுகள் மற்றும் பிற செயல்பாடுகள் மூலம் சீரழிவு உடனடியாக உள்ளது.

71.சுய-சரணாகதி (நியாச-வித்யா) நடைமுறையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் உயர்ந்த எண்ணம் கொண்ட வைஷ்ணவர்களுக்கு, பொருள்முதல்வாதிகளால் வழங்கப்படும் பாராட்டு ஒரு தணிக்கை என்று அறிவிக்கப்படுகிறது, மேலும் அவர்களின் கண்டனம் பாராட்டு என்று கூறப்படுகிறது.

72 – 78.“பௌதிகவாதிகளே இனிமேல் நீங்கள் நீங்களே, நாங்கள் நாமே. நீங்கள் உலக செழிப்பு மற்றும் சிற்றின்ப இன்பங்களுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள், நாங்கள் நாராயணனிடம் அர்ப்பணித்துள்ளோம். உங்களுக்கும் எங்களுக்கும் இடையே எந்த உடலுறவும் இருக்க முடியாது. நீங்கள் புலன்களின் சேவகர்கள் ஆனால் நாங்கள் விஷ்ணுவின் ஊழியர்கள்.

ப்ரபத்தி மார்க்கத்தில் தான் பிராட்டி புருஷகார பூதையான நிலைநிற்க அவளை முன்னிட்டு கொண்டு சரணமாக பற்றினால் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை கொடுக்கிறாள். கர்ம ஞான பக்தியோகம் ஸாத்ய உபாயம். சரணாகதிதான் சித்த உபாயம். 10 பத்ததிகளால் ப்ரபத்தி ஸ்வருபத்தை பூரணமாய் அனுபவித்துள்ளார். ஸ்ரீ வத்ஸ குலத்தில் திரு அவதாரம் பண்ணியவர் வரதாச்சாரியார். இந்த ப்ரபன்ன பாரிஜாதத்தில் ப்ரபன்னன் எது தெரிந்து கொள்ளனும் என்று ஆசைப்படுகிறார்களோ அது இங்கே கிட்டும். முதல் பத்ததி – ப்ரமாண பத்ததி – ப்ராமா – நல்ல அறிவு கரணம் – கருவி எது உண்மையை வெளிப்படுத்துகிறதோ அது ப்ரமாணம். ஜீவாத்மாவின் ஞானம் மலர தண்ணீர் சம்பந்தம் வேண்டும். அதுதான் ஆச்சரிய சம்பந்தம். ஆக எந்த ஆச்சார்யன் மூலம் ஞானம் மலர்கிறதோ அந்த ஆச்சரியன் திருவடிகளை வணங்குகிறேன். உம்பத்ததியில் ஆச்சரிய ஸ்தானத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமானை வணங்குகிறேன். 3ம்பத்ததியில் வேத வித்தான ப்ரஹ்மா இடத்தில் ஆபத்து வந்த போது அதிலிருந்து யார் ஒருவர் ரக்ஷித்து கொடுத்தாரோ அந்த மத்ஸ்ய மூர்த்தியை வணங்குகிறேன். இந்த மத்ஸ்யமூர்த்தி மஹாலஷ்மியின் திருக்கண்களையே உற்று பார்த்து அதையே அனுதியானம் செய்ததால் மத்ஸ்ய மூர்த்தியாய் அவதரித்தார். ஆக வேதத்தை மீட்டுக் கொடுத்த மத்ஸ்ய மூர்த்தியை வணங்குகிறேன். 4வது பத்ததியில் ஆச்சர்யன் ஸ்ரீபாத தூளியை நம் தலையில் தரித்தால் நம் முக்குணங்களில் ரஜோ, தமோ குணங்களை போக்குகிறார். 5, 6ம்பத்ததியில் மத்ஸ்ய ரூப ஸ்லோகமாய் எழுதியுள்ளார். ரிக்யஜீர் சாமம் என்ற த்ரை வேதங்களிலிருந்து ப்ரபத்தி ஸ்வரூபத்திற்கு வேண்டியதை ஒரு இடத்தில் சேர்த்திருக்கார். ப்ரபத்யே மான சௌபாக்யம் – வேதத்தில் நன்கு சொல்லப்பட்டுள்ள மானாதீன மேத் – நமக்கு கிடைத்த பெருப்பாக்கியம் வேதத்தில் பரவலாக சொல்லப்பட்டுள்ள ப்ரபத்யே – ப்ரமாண செளபாக்கியம். ஆக வேத சாஸ்திரத்தை அத்யயனம் பண்றவனே ப்ரபத்திக்கு அதிகாரி .7ம்பத்ததியில் ப்ரபன்னானம் குரோ விருத்தி: மந்திரத்திலும் மந்திரத்திற்கு உள்ளீடான வஸ்துவிலும் ப்ரேமம் ஏற்படனும். நித்யசூரிகளான கருடன் ஆதிசேஷன் விஷ்வக்சேனரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறுகிறது. 8ம்பத்ததியில் விஹிதம் விவஸ்தானம் – செய்வன திருத்தச் செய்யனும் செய்யக் கூடாதவைகளை சட்டென்று விடனும். த்வயத்தின் முன்வாக்கியம் ப்ரபத்தியையும் அ தன் பின் வாக்கியம் அதன் பலத்தையும் சொல்கிறது பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கரியம் தான் புருஷார்த்தம். உபநிஷத்திலிருந்தும் மேற்கோளிட்டு ப்ரபன்ன பாரிஜாதத்தை சாதிக்கிறார். இந்த ப்ரபன்ன பாரிஜாத விஷயத்தில் நிறை இருந்தால் அது அவர் ஆச்சாரியன்எங்கள் ஆழ்வானுடையது என்று பணிவுடன்தெரிவித்துக் கொள்கிறார். ஆச்சார்யனின் ஸ்லோகங்களுடன் வந்தனம் முற்றிற்று த்திலி என்ற பறவைதான் தைத்தரிய வேதத்தை காப்பாற்றி கொடுத்தது. கிருஷ்ண யஜுர்வேத உபநிஷத்து பாகத்தில் ப்ரபத்தி இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது. வஸீ ரண்யே என்று தொடங்கும் மந்திரத்தில் ந்யாஸம், அப்யாஸம் என்ற மந்திரம் சொல்லப்பட்டுள்ளது. 32 ப்ரஹ்ம வித்யைகளில் நியாஸம் – ஆத்மாவை பரமாத்மா திருவடிகளில் சமர்ப்பித்தல் பெருமானே விபவாய் இருக்கிறார். இந்த உலகத்திற்கு ஒளியை கொடுப்பதும். அக்னிக்கு எரியும் சக்தியாகவும், சந்திரனுக்கு உள்ள குளிர்ச்சியையும், சூரியனுக்கு இருக்கும் தேஜஸ்ஸையும் தேவரீரே கொடுக்கிறார். சேஷத்துவ ஞானத்துடன் இந்த ப்ரஹ்மம் இடத்தில் ஓம் என்று சொல்லிக் கொண்டு சமர்ப்பிக்கனும். ப்ரஹ்மத்திற்கு ஆக்ருதி கொடுத்தவன் சாம்யத்துவம் அடைகிறான். ஜகத்திற்கு காரணமான ப்ரஹ்மம் உபாஸிக்கத் தக்கது. முமுக்ஷுக்கு பாத்ரமாய் ஸர்வ ஜகத்திற்கும் காரணமாய் விளங்கும் ஸ்ரீமன் நாராயனின் . ஆக ஸர்வ ஜகத்தாரணம் யாரோ அவரிடத்தில் ப்ரபத்தி பண்ண வேண்டும். 1௦வது ஸ்லோகத்தில் தேவரீர் தான் ஜகத்தையே தன் சங்கல்பத்தால் சிருஷ்டிக்கிறார். செல்வத்துடன் அழகான பொன் போன்ற ஒளி படைத்தவராய் இருக்கிறார். 11
வது ஸ்லோகத்தில் இந்த ஜீவாத்மாவை அவிஸ் . ஆக்குகிறார். 12வது ஸ்லோகத்தில் ப்ரபத்தி எப்படி அனுஷ்டிக்க வேண்டுமோ அதை சொல்கிறது. ந்யாஸ வித்யையில் யாருக்கு நம்பிக்கை இருக்கோ அந்த நம்பிக்கை தான் பத்னி நெஞ்சு தான் ஹோம குண்டம் உடம்பு முழுவதும் ரோமம் வளர்ந்ததே தர்ப்பை. யாதொரு பகவான் ஆதிகாலத்தில் ப்ரஹ்ம தேவனை படைத்து அவருக்கு வேதங்களையும் கொடுக்கிறாரோ அந்த பகவானை ப்ரஹ்ம ஞானம் பெறுவதற்காக சரணம் அடைய வேண்டும்

ஸ்ரீவத்ஸ குலத்தில் திரு அவதாரம் பண்ணியவர் வாத்ஸ வரதாச்சாரியார்.
முதல் பத்ததி – ப்ரமாண பத்ததி – எது உண்மையை வெளிப்படுத்துவதோ அது ப்ரமாணம். 2வது பத்ததி – ஸ்வரூப பத்ததி – ப்ரபத்தி ஸ்வரூபத்தை கூறுவது. ப்ரபத்தி என்பது என்ன அதன் தன்மை என்ன என்று சொல்கிறது. 3வது பத்ததி அதிகார பத்ததி – யாருக்கு ப்ரபத்தி செய்ய தகுதி உள்ளது என்பதை கூறுகிறது. 4வது பத்ததி – குருவை உபாசனம் பண்ணும் பத்ததி .5வது பத்ததி – பகவத் பரிசாரிய பத்ததி – இந்த பத்ததியில் பகவானை ஆராதிக்கும் விதத்தை அருளிச் செய்கிறார். 6ம்பத்ததி – பகவத் பரிஜனோ உபாஸந பத்ததி – இந்த பத்ததியில் பகவானுடைய பரிஜனங்களை உபாஸிக்கும் விதத்தை அருளிச் செய்கிறார். 7ம்பத்ததி – நம்பக்கத்தில் இருக்கும் பாகவதர்கள் – பாகவத ஆச்சார்யர்கள் இந்த ஆச்சாரியர்கள் கண்டிப்பாக பாகவதர்களாக இருப்பார்கள் ஆனால் பாகவதர்கள் ஆச்சார்யகளாக ஆக முடியாது. பகவத் உபாசனம் ஆகி பகவத் பரிஜன உபாசனம் ஆகி 7வது சத்து உபாஸன பத்ததி நமக்கு ஆச்சாரியன் யாரு பகவான் யார் என்பது உபதேசித்தது சத்துக்கள். 8ம் பத்ததி – ப்ரபன்னர்கள் பற்ற வேண்டியது. 9வது பத்ததி – வர்ஜநீய பத்ததி – ப்ரபன்னர்களால் விடத்தக்க கர்மங்களை இந்த பத்ததியில் அருளிச் செய்கிறார்.
10 வது பத்ததி – பலோதய பத்ததி – இந்த பத்ததியில் ப்ரபன்னர்களுக்கு பயன் கிடைப்பதை அருளிச் செய்கிறார். பலன் எப்படி கிடைக்கும்? எப்படி அனுபவிக்க போகிறோம் என்பதை பற்றியது.
10ம்பத்ததியில் அருமையாய் சாதித்த
ஸ்லோகார்த்தங்களில் சில –
முதல் ஸ்லோகார்த்தம் – எனக்கு பாண்டவர்கள் ப்ராணனுக்கு சமமானவர்கள். அவரே ஸ்வாமி நாதன் ரக்ஷகன் என்ற உறுதி மாறாமல் இருந்தனர். வாஸீ தேவ ஸர்வமிதி – ஸ மஹாத்மா ஸீதுர்லப: அப்பேர்பட்ட என் திருவடியை தொழும் ப்ரபன்னர்களை பின் தொடர்ந்து விஷ்ணு வருகிறார்.
உம்ஸ்லோகம் – ஜ்ஞாநீ ஆ வாத் மை வ
மே மதம் – அறிவாளியாக இருக்குமிவர் என் உயிரானவர். அதிகமான ப்ரேமத்திற்கு ஆட்பட்ட இவர்களை எம்பெருமானை விட்டு ஒரு போதும் பிரிக்க முடியாது . பலப்பல ஜென்மங்களில் பாக்யசாலிகளாக யார் ஒருவன் பெருமாளை பற்றுகிறானோ , கண்ணனே வாழ்முதல் – பருகுநீர், வளர்முதல் – உண்ணும் சோறு, மகிழ்முதல் – போடும் வத்திலை போகியம். அப்படிப்பட்டவன் தேடினாலும் கிடைக்க மாட்டான். 3ம்
ஸ்லோகம் – ப்ரபன்னன்
செய்ய வேண்டியதை செய்யப்பட்டு விட்டான் . எல்லாரையும் விட பகவான் தான் உயர்ந்தவர் என அறிந்த பின் அவரிடத்தில் அனுத்தமா ப்ரீதி.
4ம் ஸ்லோகம் – விஷ்ணுவை உபாயமாக பற்றி, வேறு உபாயமில்லை என அறிய வேண்டும். 5ம்ஸ்லோகம் – விஷ்ணுவான பெருமானுக்கு கைங்கர்யம் பண்ணுவது தான் பலன். அவரால் மற்றொன்றை அடைந்தால் அதர்மம். மற்றொன்றால் அவரை அடைந்தால் மத்யமம். அவராலே அவரை அடைந்தால் உத்தமம். மாதவன் இரண்டு திருவடிகளே பலம் உபாயம். அவர்கள் இருவரும் சேர்த்தியில் கைங்கர்யம் புரியனும். அவன் தான் உத்தமமான அதிகாரி . இந்த பிறவியிலேயே செய்ய வேண்டியதை செய்தவன் ஆகிறான். 6ம் ஸ்லோகம் – இந்த ப்ரபன்னன் ஒத்துக் கொள்ளப்பட்ட நல்ல கைங்கர்யங்களை பெருமாள் திருவடிகளே உபாயம், அவரே ப்ராப்யம் என்று இருப்பவர்கள் என்னென்ன காரியங்கள் செய்தாலும் அவை அனைத்தையும் தேவதேவனான பெருமான் தன் தலையால் தரிக்கிறான். 7ம் ஸ்லோகம் – தானே வாங்கிப்பார். ஆழ்வார் பாசுரமான –
ஒரு நாயகமாய் ஒட உலகாண்டவர்… பிச்சை தான் கொள்வர். இம்மையிலே இந்த உண்மை பெருமானுக்கு தெரிந்தால் இம்மையிலே தானே வாங்கிப்பர். பக்தர்களின் ப்ரேம பாரத்தை தாங்க முடியாதவனாய் இருக்கிறார். 8ம்ஸ்லோகம் பக்தி இல்லாமல் நிறைய சமர்ப்பித்தாலும் அது அவரை சந்தோஷப்படுத்தாது. பக்தன் – என் – பெருமான்பக்திக்கு விசேஷிப்பவனே ப்ரபன்னன் என கருதப்படுகிறான். 9ம் ஸ்லோகம் – விஷ்வக்சேனர் ஸம்ஹிதையில் இங்கனம் கூறுகிறார். சேவா – பக்தி என்பது ஆசையுடன் நிறைய கொண்டுகளை செய்து தன்னை தாழ்ந்தவன் என நினைக்கச் செய்வது.
10ம்ஸ் லோகம் – இயற்கையில் எல்லோரும் பெருமானுக்கு சேஷபூதன். தாஸன் தான் – அடிமைத்தனத்தின் எல்லையாக இருப்பதே பக்தி. 11ம்
ஸ்லோகம் – லகஷ்மியை புருஷகாரமாய் கொண்டு சரணாகதி பண்ணுபவன் என் ஒன்றையே பற்றுக் கொம்பாக பிடிக்கிறான். என் ஒருவனையே பலமாக அடைகிறான். 12 ம்ஸ்லோகம் – இப்படி என்னை சரணாக பற்றியவன். வருத்தம் துன்பம் எல்லாம் தொலைத்து விடுகிறான். 13ம் ஸ்லோகம் – எப்படிப்பட்ட ப்ரபன்னனும் சம்சார கடலை தாண்டி விடுகிறான். அவன் என்னைத் தவிர வேறு பற்றில் விருப்பம் இல்லாதவன். துளி கூட அகங்காரம்
மமகாரம் இல்லாதவன்.
14ம் ஸ்லோகம் – கர்மயோகத்தாலும் ஞான யோகத்தாலும் நல்ல செயல்கள் செய்தவர்கள் – சரணாகதி அனுஷ்டித்தவர்கள் முன்னே 16000 -ல் ஒரு பங்கு கூட ஒரு சிறு துளி – மஹிமைகூட அந்த கர்ம ஞான நிஷ்டனுக்கு கிடையாது. 15ம்ஸ்லோகம் – இந்த ப்ராப்யத்தை அடைய தடங்கலாய் இருக்கும் பாப புண்ய ரூப கர்மங்கள் தொலைத்தால் தான் போக முடியும். சரணம் என்று வருவதற்கு முன்னால் – பூர்வாகன் நெருப்பிவிட்ட பஞ்சு போல் உருமாறி விடும். சரணாகதிக்கு பின்னால் – உத்தராகன் தாமரையில் இட்ட தண்ணீர் போல் விலகி விடும். 16 ம் ஸ்லோகம் – திருப்த ப்ரபன்னனுக்கு இந்த ஜென்மத்திலேயே எல்லா கர்மங்களும் தொலையாது. பக்தியை உபாயமாக பற்றினால் சஞ்சித கர்மா மட்டும் தொலைப்பர். ப்ராரப்த கர்மா தொலையாது. ஆர்த்த ப்ரபன்னனுக்கு எல்லாமே தொலைந்து அப்போதே மோக்ஷம். உத்தராகத்தில் மதிபூர்வம் – அறிந்து செய்து அதற்கு அனுதாபமே படாது இருப்பவன் அதை அனுபவித்து தான் தீர்க்கனும்.
17ம் ஸ்லோகம் – தப்பு பண்ணிவிட்டு அனுதாபம் படாத வன் தேஹம் கீழே விழும் வரை பட்டுதான் தீர்க்கனும். இப்படி சொல்லப்பட்டதே தவிர வேறு பாபங்கள் எதையும் ஒட்ட விடுவதில்லை. 18ம் ஸ்லோகம் – இதை பெருமானே ஆச்சரியரிடம் சொல்கிறார். உபாய பக்தி – சாதனா பக்தி செய்பவருக்கு சஞ்சித கர்மா மட்டும் தொலையும். சாத்ய பத்தி – (ப்ரபத்தி செய்த பின்) ப்ராரப்த கர்மாவையும் சேர்த்து ஒழிக்கிறார். 19ம் ஸ்லோகம் – இதில் பக்தியோகம் தான் உபாய பக்தி. இதில் பிராரப்த கர்மா ஒழிக்க மாட்டார். 20ம் ஸ்லோகம் – ப்ராரப்த கர்மா – சாத்ய பக்தியில் அழிக்கும். சாதனாபக்தியில் இந்த தேஹம் முடியும் போதுதான் அழியும். 21ம் ஸ்லோகம் – ஆர்த்த ப்ரபன்னர்கள் இந்த ஜென்மத்திலேயே முடித்து விடுவார்கள். ௨௨ம் ஸ்லோகம் – இத்தால் சொல்லப்பட்டது. பக்தி யோகத்தில் பல ஜென்மங்கள் அனுபவித்து தொலைக்கனும். ஆர்த்த ப்ரபன்னனுக்கு உடனே மோக்ஷம். வினைப்பயன் அனுபவிக்கனுமே என சோகப்படுகிறான். அதிலிருந்து உன்னை மோக்ஷம் அடைய வைக்கிறேன் என பெருமாள் கூறுயிருக்கார். 23ம் ஸ்லோகம்
திருப்த ப்ரபன்னன் இருக்கிற ஜென்மத்தில் வருத்தப்பட மாட்டான். 24ம்ஸ்லோகம் – எப்போது இவன் மோக்ஷம் போகும் நிர்ணயம் – ப்ரபன்னனே முடிவு பண்ணுவது. 25 ம் ஸ்லோகம் – ஹ்ருதய கமலத்தில் எழுந்திருக்கும் ஸ்ரியபதியான பெருமாளாலே 101 வது நாடியான ஸுஷும்னா நாடியில் ப்ரயாணிக்கிறான். ஆத்மா இது வழியாக போய் மோக்ஷத்தை அடைவான். 26ம்ஸ்லோகம் – பெருமான் தன் திருமேனி ஒளியாலே இதுதான் ஸீஸீம்னா நாடி என வழிகாட்டுவார். ஆதிவாஹிகள் கையை பிடித்து கூட்டிக் கொண்டு ஆத்மாவை கூட்டிக் கொண்டு போகிறார். 27ம்ஸ்லோகம் – அந்தந்த லோகத்தில் இருக்கும் அமரர்கள் வருவார்கள். அர்ச்சிராதி மார்க்கத்தை தாண்டுகிறார்கள். 28ம் ஸ்லோகம் – விரஜா நதியில் தீர்த்தமாடி அமானவன் ஸ்பரிசத்தாலே ஸ்வரூப விகாரம் பெறுகிறான். 29ம் ஸ்லோகம் – ஸாரூப்யம் – பெருமாள் இருக்கும் அதே உலகம். ஸாமிப் யம் – பெருமாளை ப்போல் சங்கு சக்ரம் பெறுகிறார். ஸாயுஜ்யம் – பெருமானுடன் கூட கல்யாண குணங்களை ஒன்றாக அனுபவிக்கிறான். 30ம் ஸ்லோகம் – ஆசைப்பட்ட உருவம் அவன் எடுத்துக் கொள்கிறான். சாமகானத்துடன் விடாமல் கைங்கரியம் பண்ணுகிறான். அர்ச்சராதி மார்க்கத்தில் போகாமல் அதைவிட விரைவான பாதையில் கூட்டிப் போகிறார் பெருமான். 31 ம் ஸ்லோகம் – தன் ஆசைப்படி சடக்கென்று கூட்டிக் கொண்டு போகிறார். 32ம் ஸ்லோகம் – பூமாதேவி காது கொடுத்து கேட்க – வராஹ சர மஸ்லோகார்த்தத்தை அருமையாய் முன்புதெரிவித்ததை மீண்டும் நினைவு கூர்ந்தார் -ஒருவன் சரீரம் நன்றாக இருக்கும் போது தாதுக்கள் எலும்பு, மஜ்ஜே சமமாக இருக்கும் போது விஸ்வரூபனான என்னை சரணமாக அனுஷ்டித்தால் அவன் ப்ராணன் போகும் தருவாயில் கல்லு போல ஜடமாய் அவன் இருக்கும் போது. நான் என் பக்தனை நினைத்து அழைத்துக் கொண்டு போகிறேன். 33 34, 35 ம்ஸ்லோகங்கள் — எப்போதோ ஒரு வேளை வாதம் பித்தம் கபம் சமமாக இருக்கும் போது பெருமானை நினைக்கக்கடவாய் இவர் தான் செள சீல்யம், ஸ்வாமித்வம், வாத்ஸல்யன் (இதன் பதபதா அர்த்தங்களை விளக்கி ) கொண்ட அப்படிப்பட்ட நான் வராஹன் இறங்கி வருவேன். ஸ்ரீ என்ற பெரிய பிராட்டியுடன் கல்யாண குணங்கள் கொண்ட நான். விருப்பப்படி விக்ரஹத்தை ஏற்றுக்கொண்டு இருப்பேன். 36) ஸ்ரீமன் நாராயணனே ஸ்வாமி. வேறு புகலிடம் அற்ற நான் உன் திருவடிகளை உபாயமாக ப்ராப்யமாக பற்றுகிறேன். 37, அவனுக்கு மற்ற உபாயங்களாலேமறைக்கப்படலை. 38) அவனுக்கு மரணம் ஏற்படும் தருவாயில் கல்லு கட்டை போல கிடக்கான். தேஹத்தில் சலனமில்லை. 39) பிறராலே எழுப்பப்பட்டாலும் புத்தி வரலை. மனம் அழிந்து போயிற்று தனக்கு நன்மை தேட முடியலை. சுற்றி இருப்பவர்களும் ஒன்றும் செய்ய இயலாது. 40) இந்த ஒரு வினாடிக்கு காத்திருக்கிறார் பரமபுருஷர் 41) இவன் ஒவ்வொரு நாள் தூங்கும் போதும் நான் முழித்துக் கொண்டு இருந்தேன். இவனுக்கு விருப்பப்பட்டதையெல்லாம பண்ணிக் கொண்டு இருந்தேன். அப்படிப்பட்ட அடியார்களை ரக்ஷிப்பதில் ஊக்கமுடையவன் பெருமானாகிய நான். இப்போது என்னை அனுபவிக்கும் யோக்யதையை பெற்றாள். அர்ச்சராதி கதி இல்லாமல் கூட்டுக் கொண்டு போகிறேன். 42) நான் அந்த வாகனத்தில் வந்து அந்த குழந்தையை கூட்டிக் கொண்டு போகிறேன். 43) இப்படி ப்ரபாவத்துடன் கூடியவனான ப்ரபன்ன னை – எமதூதர்கள் நெருங்கும் போது இவன் மதுசூதன பெருமாள் திருநாமத்தை சொன்னவன். 44) இவன் வேறு யாருக்கும் ஆட்பட மாட்டாள் என பராசரரும் ஸுகரும் விஷ்ணு புராணத்தில் பேசிக் கொள்கிறார்கள் . 45) அஜாமினோ உபாக்யானத்தை விவரித்தார் . எமதூதர்கள் நரகத்தில் நிற்க – எமன் இவன் திருமால் அடியார் அவர் திருநாமத்தை சொன்னவன் – முடிந்தால் இவனை ப்ரதக்ஷணம் பண்ணி ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கு அவர் தான் எனக்கு ப்ரபு என்றான் எமன் . 46) ஸ்ரீபாகவதம் – யார் ஒருத்தன் பெருமானே சரணம் என்றவனுக்கு தேவகடன் பித்ரு கடன் ரிஷிகடன் கிடையாது.
உபஸம்ஹாரா -சரணாகதி அனுஷ்டித்து சரணமாக பற்றிய வன் இடத்தில் அவனையே பற்றுவேன். ப்ரபத்தியையே அணையாக கொண்டிருக்கிறார். உபநிஷத்து போன்றவைகளால் சின்ன சின்ன கல்லாய் எடுத்து அணையை கட்டினான். அதனாலேயே சேர்த்து கட்டப்பட்ட ப்ரபன்ன சரித்ரமாகிற க்ஷீராப்திக்கு ஸேது. ப்ரபத்தி என்பது க்ஷீராப்தியால் கட்டப்பட்ட சேது .
48) இந்த ப்ரபத்தி என்னும் ஓடத்தில் அமரனும். கார்ப்பனியம் – என்னிடத்தில் ஒன்றுமில்லை என்ற ஆகிஞ்சன்யம் ஏதும் இல்லாமையே அடிப்பலகையாக கொண்டதாய் , மஹா விசுவாசம் தான் ஆணி. தேவரீரே அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும். அப்பேற்பட்ட கயிற்றினால் கட்டி இழுத்து போடப்படும் நியாஸம் என்ற ஓடம். இப்படிப்பட்ட ஓடத்திலே சம்சாரம் என்ற பெருங்கடலை தாண்டிவிக்கும் ஓடம். இந்த ப்ரபத்தியான ஓடம் ஒட்டையில்லாத ஓடம். இந்த ஓடம்தான் தூண்டு விக்க போகிறது. தாண்டி விடுகிறார்கள். . கடைசியாய் நிறைவாய் ப்ரபன்னனுக்கு இந்த ப்ரபன்ன பாரிஜாதம் என்ற க்ரந்தம் எல்லா நன்மைகளும் சொல்லப்பட்டது. எல்லா கோணத்திலிந்தும் சத்துக்கள் விருப்பப்பட்டதை கொண்டு வந்து சேர்த்ததால் பாரிஜாதமாகிறது

—————————–

சுத்த குண விட்டு சித்தன் சுடர் அடியோன் வாழியே
ஸ்ருதப் பிரகாசிகையைச் சொல்லி வைத்தோன் வாழியே
தத்வ ப்ரமேயத்தின் தரம் அறிந்தோன் வாழியே
புத்தி மிகு சாரார்த்த சதுஷ்டயத்தோன் வாழியே
புகழ்ப் பாடியப் பொருளை புதர்க்களிப்போன் வாழியே
சித்திரையில் சித்திரை நாள் கச்சி வந்தோன் வாழியே
சீராரும் அம்மாள் தன் சேவடிகள் வாழியே

திங்கள் போன்ற திருமுகம் வாழியே
திருமங்கை காப்புத் திகழ் நெற்றி வாழியே
தொங்கு முப்புரி நூல் மார்பு வாழியே
தோன்று இலச்சினைத் தோள் மிக வாழியே
தனக்கு கோசம் விளங்கு கை வாழியே
தாங்கு சின் முத்ரை விரல் வாழியே
பொங்கு வத்ஸ குல வரதாரியன்
பொன் மலர்ப்பாதம் வாழியே வாழியே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த அத்யாத்ம சிந்தா –ஜீவாத்மா -பரமாத்மா விசாரணை –

April 3, 2025

ஸ்ரீ ப்ரஹ்ம தேசம் -மன்னார் கோயிலில் 1242-ஆனி -ஸ்வாதி -நக்ஷத்திரத்தில் திருவவதரித்தார் -இயல் பெயர் வரதராஜர் -ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் -விருது பெற்றவர் -சொட்டை மணவாள முனி என்ற விருதும் பெற்றதாக ஸ்ரீ கீதை வெண்பா இறுதிப் பாசுரம் மூலமும் அறிகிறோம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் இறுதிக் காலத்தில் அவதரித்து -அவரை ஆஸ்ரயித்து -அவரது திருக் குமாரரான நாயனார் ஆச்சார்யன் பிள்ளையிடம் ஸம்ப்ரதாய சாஸ்திரங்கள் கற்றவர் –

கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரத்து எம்பெருமான்களே -அழகிய மணவாளன் நாயனாராகவும் -திருமலையப்பன் தேசிகராகவும் வரதராஜ பிள்ளை லோகாச்சார்யராகவும் -திருநாராயணத்த்து எம்பெருமான் அழகிய மணவாள ஜீயராகவும் திருவவதாரம் என்பர்

பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளைப் பற்றுவது என்றும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததையே இவர் அருளிச் செய்த தத்வ தீப கிரந்தத்தில் ஸ்ரீ மத் சரணவ் -சேர்த்து திருவோடு கூடிய நாராயணன் திருவடிகளை -என்றபொருள் அருளிச் செய்துள்ளார் –நாராயணனுடைய ஸ்ரீ சம்பந்தமுடைய திருவடிகளை உபாயமாகப் பற்ற -என்று இவர் நிர்வாகம் -ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ் –இரண்டிலும் பன்மை பிரயோகம் –

இவரது 32 வயதில் பெரியவாச்சான் கைக் கொண்டு முதலில் உபதேசம் -உலக்கைக் கொழுந்து துளிர்க்காதது போல் உனக்கும் ஞானம் வராது என்ற கேலிப்பேச்சு –

முசல கில சயம் -உலக்கை துளிர்க்குமோ -கேலி செய்ய -பெரிய ஆச்சார்யன் கிருபையால் அனைத்து ஸம்ப்ரதாய அர்த்தங்களையும் கற்று அதே பெயரில் கிரந்தமும் சாதித்து அருளி உள்ளார் –

அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||
–ஆச்சார்ய வந்தனம்

ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
–பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

இவர் அருளிச் செய்தவை
தத்வ தீபம்
தத்வ நிரூபணம்
தத்வ ஸங்க்ரஹம்
தத்வ பூஷணம்
ஞான ஆர்ணவம்
சாரீரிகக் கண்டியம்
அத்யாத்ம சிந்தை
சதுஸ்லோகீ
கீதா சாரம்
தீப பிரகாசிகை
நரஸிம்ஹ அஷ்டகம்
திரு விருத்த ஸ்வாபதேச வியாக்யானம்
பன்னீராயிரப்படி
இருபத்து நாலாயிரப்படி பிரமாணத் திரட்டு
ரஹஸ்ய த்ரய விவரணம்
ரஹஸ்ய மணி மாலை
தமிழ்க் கனி பிரபந்தம்
பகவத் கீதை வெண்பா

இவர் 108 திரு நக்ஷத்திரங்கள் இங்கு இருந்தது 1350 திரு நாட்டை அலங்கரித்தார்

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காகத்
தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம்

———–

தனியன் ஸ்லோகங்கள் -2-
அவதாரிகை ஸ்லோகங்கள் -6-
தத்வ ஞான விளக்கம் -ஸ்லோகங்கள் -1-24-
ரஹஸ்ய த்ரய விவரணம் -அஷ்டாக்ஷரீ -விவரணத் தொடக்கம் -ஸ்லோகம் -25-
பிரணவ ஸப்தார்த்தம் -ஸ்லோகம் -26-
மகாரார்த்தம் -ஸ்லோகம் -27-
நமஸ் பதார்த்தம் -ஸ்லோகம் -28-29-
நாராயண ஸப்தார்த்தம்-ஸ்லோகம் -30-34-
த்வய -ரத்ன மந்த்ரம் -விவரணம்-ஸ்லோகம் -35-46-
கீதா சரம ஸ்லோக விவரணம் -ஸ்லோகம் -47-56-
பகவான் உகந்த உபாயம் ஸரணாகதியே -ஸ்லோகம் -57-66-
ப்ராக்ருத சரீரத்தில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஸ்லோகம் -67-69-
அர்ச்சிராதி மார்க்கம் நிரூபணம் -ஸ்லோகம் -70-72-
ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேண்டுதல் -ஸ்லோகம் -73-74-
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற வேண்டுதல் -ஸ்லோகம் -75-
அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் ரூப திருமேனி பெற பிரார்த்தனை -ஸ்லோகம் -76-81-
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா-வர்ணனம் -ஸ்லோகம் -82-122

——————

அஸ்மத் வித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம்

நம்மைப் போன்ற அஞ்ஞர்களைக் காத்து அருளவே ஸ்நேக பாவ திரு உள்ளம் கொண்ட வாதி கேஸரி என்ற விருது பெற்ற ஸூந்தர ஜாமாத்ரு முனியை வணங்குகின்றேன்

ஸிம்ஹம் பூவைப்பூ வண்ணா -ஆண் ஸிம்ஹம் பெண் ஸிம்ஹம் குழந்தை -பாதுகா தேவி பரதனைக் கூட்டிப் போனது-இவரும் நரஸிம்ஹம் போல் ஸ்வாதி திருநக்ஷத்ரத்தில் திருவவதாரம் –

ஸூந்தர ஜாமாத்ர முநே ப்ரபத்யே சரணாம்புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்நஸ் ஜந்து ஸம்ஸார போதகம்

பிறவிக் கடலில் நன்கு அழுந்தி இருக்கும் சேதனர்களை அக்கரைப் படுத்தும் ஓட்டமாக இருக்கும் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரை வணங்குகின்றேன்

ஸ்வாதி ஜாதம் கிருஷ்ண பதாஸ்ரிதம் வாதி கேஸரிம் வந்தே சவும்ய ஜாமாத்ரு யோகிநம்

அத்யாத்ம சிந்தா-ஸ்லோக ரூப-மூல கிரந்தம்
அத்யாத்ம சிந்தாமணி -அதற்கு தாமே அருளிச் செய்த வியாக்யானம்

அத்யாத்ம சிந்தா-சப்த -ஏழாம் வேற்றுமை -ஆத்மா விஷயமான விசாரம் -இதுவே அதி -பத பிரயோகம் –ஆத்மாவை விஷயமாகக் கொண்டவற்றைப் பற்றிய விசாரம் -என்றபடி -ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் -அத்யாத்ம சிந்தாமணி வியாக்யானம் இவரே சாதித்து அருளி உள்ளார்

———-

நமோ அஸ்த் வஸ்மத் குருப்யஸ் ஸ்யாத் தத் குருப்யஸ் ததா நம
பரமேப்யோ குருப்யச்ச நிகிலேப்யோ நமோ நம
-1-

அடியேனுடைய ஆச்சார்யர் பொருட்டு ப்ரணாமங்கள் ஆகுக -அவ்வாறே அவர் தம் ஆச்சார்யர்கள் பொருட்டு ப்ரணாமங்கள்-பரம ஆச்சார்யர்களான அனைவருக்கும் மறுபடியும் மறுபடியும் ப்ரணாமங்கள்-ஸ்வாமி ராமானுஜர் அருளிச் செய்த நித்ய கிரந்தப்படியே –குரு பரம்பரயா பரம குரும் பக வந்தம் ப்ரணம்ய -படியே -நிகிலேப்ய -என்று அனைவருக்கும் தனித் தனியே நமஸ்காரம் சொன்னபடி யாயிற்று -நம நம –பக்தியின் மிகுதியைத் தெரிவித்தபடி

(நித்யம் விததாமி -அத்யாத்ம சிந்தாமணி -ப்ரகாசப்படுத்த-ஆத்ம தத்வ ப்ரகாசகம் -முதல் பிரயோஜனம் -யாதாத்ம்ய தத்வம் அறிந்து மகிழ்வோம் -ஹ்ருதய அபீஷ்டம் -இரண்டாவது பிரயோஜனம் -பாவ பிரதம் -ஆத்ம பர்த்தா ஸ்வரூப ஆகாங்க்ஷை -அழகிய மணவாளப் பெருமானுடைய ஸ்வரூப பிரகாசப் படுத்துவது மூன்றாம் விஷயம் -)

(மந்த்ரத்திலும் மந்த்ரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர ப்ரதானரான ஆச்சார்யர் பக்கலிலும் ப்ரேமம் கனக்க இருக்க வேண்டுமே -ஆகையால் அஸ்மத் குருப்யோ தொடங்கி ஸ்ரீ லஷ்மீ நாதன் வரையிலும் அனுசந்தானம் -மேல் –)

(அசவ் அசவ் –போந்தார் போந்து எண்ணிக் கொள் -ஒவ்வொருவரையும் அனுசந்திக்க இயலாமையால் பொதுவான முதலில் அருளிச் செய்து -மேல் பிரசித்தரான அனைவருக்கும் நமஸ்காரங்கள்)

நமோ ராமானுஜா யேதம் பூர்ணாய மஹதே நம
யாமுநாய முநீந்த்ராய நமஸ் ஸர்வார்த்த வேதிநே —
2-

ஸ்வாமி ராமானுஜருக்கு -பெரிய நம்பிகளுக்கும் -ஸர்வஞ்ஞரான யதிகட்க்கு இறைவனான யாமுனாச்சார்யருக்கும் நமஸ்காரங்கள்(மனனம் -சம்பிரதாயத்துக்கு ராமானுஜரை கொண்டு வரவும் ஸ்ரீ பாஷ்யம் பிரகாசப் படுத்தவும் மனனம் செய்த முனி

நமோ அஸ்து ராம மிஸ்ராய புண்டரீக த்ருசே நம
நாதாய முநயே நித்யம் நம பரம யோகிநீ –3-

ராமமிஸ்ரர் -புண்டரீகாக்ஷர் -நல்ல யோக ஞானமுடைய ஸ்ரீ மந் நாதமுனிகளுக்கு நித்யம் நமஸ்காரங்கள்(மணக்கால் நம்பி ராம மிஸ்ரர் -நான்காவது ராமர் -உய்யக்கொண்டார் -புண்டரீகாக்ஷர் -ரங்க நாத முனி -நாதமுனி -நம்மாழ்வாரை யோகத்தாலேயே சாஷாத்கரித்தவர் -)

ஆத்யாய குல நாதாய நமோ அஸ்து சட வைரிணே
நம சேநாதி பதயே ஞான யாதாம்ய வேதிநே —
4-

ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாருக்கு அவருக்கு தத்வ யதாத்ம்ய ஞான உபதேசம் செய்து அருளிய விஷ்வக் சேனருக்கும் நமஸ்காரங்கள்(சட வாயு -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்த ஆழ்வார் -வைரி -விரோதி -பராங்குசர் -புறம்பாய் உள்ளவரை ஹிம்ஸித்து -அங்குசம் இட்டு தடுத்த பராங்குசர் -பாதத்தின் முன் செல்ல மாட்டான் பரன் கூட -)(ஸூத்ரவதி சமேதராய் திரு மாலிருஞ் சோலையில் விஷ்வக் சேனர் சேவை உண்டு )

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-4-அடி ஒட்டி அருளிச் செய்த ஸ்லோகம்

ஸ்ரீயை ஸ்ரீச அநபாயிந்யை ஜகன் மாத்ரே நமோ நம
ஸ்ரீ தராயாதி குரவே நமோ பூயோ நமோ நம –5-

(ஸ்ரீயை நமோ நம
ஸ்ரீச அநபாயிந்யை நமோ நம
ஜகன் மாத்ரே நமோ நம
கட்டிலையையும் தொட்டிலையும் விடாமல்
)

அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் -உலகுக்கு எல்லாமே தாயார் நாராயண க்ஷண காலமும் பிரியாமல் -அகலகில்லேன் இறையும் -என்று இருக்கும் பெரிய பிராட்டியாருக்கும் முதல் ஆச்சார்யரான பெரிய பெருமாளுக்கும் மறு படியும் மறுபடியும் பலமுறை நமஸ்காரங்கள்-வாத்சல்யம் -தோஷ தர்சித்வம் என்றும் தோஷ போக்யத்வம் என்றும் உண்டே – இதுவரை ஐந்து ஸ்லோகங்கள் –அஸ்மத் குருப்யோ நம -என்று ஆரம்பித்து ஆரோஹண கிரமத்தில் குரு பரம்பரை அனுசந்தானமாயிற்று –முதல் ஸ்லோகத்தில் –ஆ பகவத்த –-பகவான் வரை என்றும் பகவான் முதற்கொண்டும் என்றும் கொள்ளலாம்

இத்தம் ஸம் சிந்த்ய மநசா ஸூபாம் குரு பரம்பராம்
அத் யாத்ம விஷயாம் சிந்தாம் கரோம் யாத்ம விஸூத்தயே
–6-

இவ்விதமான பவித்ரமான ஆச்சார்ய பரம் பரையை மனத்தில் நினைத்துக் கொண்டு ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதற்காக ஆத்ம ஸ்வரூபத்தை குறித்து விமர்சனம் செய்து அத்யாத்ம சிந்தா என்ற இந்த க்ரந்தத்தைப் பணிக்கிறேன்

ஆஸீர் நமஸ் க்ரியா வஸ்து நிர்தேசோ வாபி தந் முகம் -என்றபடி இங்கு ஸூபாம் அடைமொழி-விஸூத்தயே-என்றதால் தேஹ இந்திரிய பிராண விலஷண ஆத்மா –சேஷத்வ -ஞாத்ருத்வ -அணுத்துவ முதலான தர்மங்களைக் வெளிப்படுத்தும் கிரந்தம் என்பதை ஸூசிப்பித்து அருளியவாறு –

(ரஹஸ்ய த்ரய தத்வ த்ரய ஞானம் அளித்ததால் ஸூபாம்)

(இத் யதி தைவம் அத ஆத்மா-இதுவரை தெய்வம் பற்றியது -மேல் ஆத்மாவைப் பற்றியது – உபநிஷத் சொல்லும் -அதே போல் இங்கும் ஆத்மாவைப் பற்றிய விசாரம் என்றும் ஆத்ம ஸ்வரூபன் சொல்லும் ரஹஸ்ய த்ரய விவரணம் என்றும் கொள்ளலாம் -)

———-

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்-

நனு-ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று தேஹத்திலே அஹம் புத்தி வ்யவஹாரம் காண்கையாலே
அஹம் அர்த்த பூதனான ஆத்மா தேஹம் தானாம் அத்தனை –
இந்த அஹம் புத்தி வ்யவஹாரங்களுக்கு தேஹாதிரிக்தன் விஷயம் என்ன ஒண்ணாது –
அவனுக்கு ஸ்தௌல்யாதிகள் கூடாமையாலே –
கட படாதிகளைப் போலே பார்த்திவமான சரீரத்துக்குச் சைதன்யம் கூடாதே என்னில் மத சக்தி போலே
பரிணாம விசேஷத்தாலே கூடும் இறே-ஸ்ரீ தத்வ சேகரம் -ஜீவ ஸ்வரூப நிர்ணய பிரகரணம்

தத் கண்டனம் –
அது அனுபபன்னம் —

தேஹம் அநேக அவயவ சங்காத் மகம் என்னும் இடம் சித்தம் -அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் உண்டாகில்-அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும் -அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும் –அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் -கூடாது –ஒரு அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில் அது விச்சின்னம் ஆனால் அவயவாந்தரம் அது அனுபவித்ததை அவயாந்தரத்திலே ஸ்மரிக்கக் கூடாது –பின்பு அஹம் புத்தி வ்யவஹாரங்களும் மமதா புத்தி வ்யவஹாரப்ங்களும் தவிர வேணும் –சர்வ சரீர வியாபியான ஸூக துக்க அனுபவமும் கூடாது –

அவயவ சங்காதாத்மகம் அன்று சரீரம் -அயவவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –உபலம்ப அனுபபத்திகள் இல்லாமையாலே அவயவ ச்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே –கிஞ்ச -பாலதே ஹோ அஹம் மந்த ஜ்ஞான –யுவதே ஹோ அஹம் பஹூ ஜ்ஞான மம சரீரம் –என்று சரீர அஹம் அர்த்தங்களில் பிறக்கிற பேத பிரதிபத்தியும் பேத வ்யவஹாரமும் கூடாது – மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதகம் இல்லாமையாலே – அன்றிக்கே அஹம் புத்திக்கு சரீரமே விஷயம் என்று கொண்டாலும் ஸ்ருதியாலும் ஸ்ருத் யர்த்தா பத்தி களாலும் தேஹாதிரிக்தனாய் தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரிய விஷயங்களையும் அறிகையாலே — இப்படி கொள்ளாத போது யாவன் ஒருவன் நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் – அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் என்கிற பிரதிசந்தானமும் கூடாது – சஷூஸ்ஸே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும் – ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பத்திரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்-இப்படி மற்ற இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –

அந்த கரணமும் ஆத்மாவாக மாட்டாது — ஸ்மர்த்தாவினுடைய ஸ்மாரணாதி கார்யங்களுக்கு கரணமாகக் கல்பிதங்கள் ஆகையாலே –இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது -ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே –கரணமும் தானே என்ன ஒண்ணாது -விருத்தமாகையாலே –வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணம் ஆகில் அது இல்லாதவனுக்கு ஸ்ம்ருதி கூடாது-ஆந்தர கரணம் ஆகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேர் இட்டாதாய் விடும் –ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்த்ரியார்த்த சம்பந்தம் உண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும் –ஆகையால் மனஸ்ஸூம் ஆத்மாவாக மாட்டாது –பிராணங்களும் ஆத்மாவாக மாட்டாது –சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம் –

ஜ்ஞானமும் ஆத்மாவாக மாட்டாது -எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது -என்று ஷணிகமுமாய்- ஆத்ம தர்மமுமாய்த் தோற்றுகையாலே- ஸ்திரனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்னும் இடம் நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் – என்கிற பிரத்யபிஜ்ஞையாலே சித்தம்

ஞானம் இருப்பதாலும் பரிமாணம் விகாரம் இருப்பதாலும் இரண்டுமே வெவ்வேறு தத்வங்கள் என்றும் கொண்டால் தானே பொருந்தும்

ஆச்சார்யனால் தத்வ த்ரய ஞானம் அறிதல்

ஆத்மா ந தேவோ ந நரோ ந திர்யக் ஸ்தாவரோ ந ச
ந தேஹோ ந இந்த்ரியைவ மந ப்ராணோ ந நாபி தீ –
-1-

ஆத்மா தேவஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -மானுட ஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -பசு பறவை முதலான திர்யக் ஜாதிக்கும் சேர்ந்தவன் இல்லை -சரீரமும் ஆத்மா இல்லை -பிராணனும் கூட ஆத்மா இல்லை -ஞானமும் கூட ஆத்மா இல்லை –

சரீரம் எடுத்துக் கொண்டே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு-ஆத்மா -பிறப்பிலி- நித்யம் சாஸ்த்வத புராணம்- -இருந்தாலும் தேஹ சம்பந்தம் கொண்டு ப்ரவ்ருத்தி -முக்குண மயமான தேஹத்தால் -தூண்டப்பட்டு செயல்பட்டு -கர்மங்களைத் தொலைத்து –ஸூஷ்ம சரீரம் கொண்டே அர்ச்சிராதி கதியில் சென்று விரஜையில் நீராடி அனைத்தையுமே கழித்து-ஸூத்த ஆத்மா -முக்தனாகிறான்

தேஹமே ஆத்மா சாருவாக -லோகாயுத மதம் -கண்டதே காட்சி -கொண்டதே கோலம் –நேஹ நாநா அஸ்தி –ஆண் அல்லன் -ஸ்ருதியும் ஆழ்வாரும் -இல்லை என்பதை சொல்லியவாறு

ந ஜடோ ந விகாரீ ச ஜ்ஞான மாத்ராத்மகோ ந ச
ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாஸ ஸ்யாதேக ரூப ஸ்வரூப்பாக் –
-2-

ஆத்மா ஜட ஸ்வரூபம் -செயலற்ற தன்மை -இல்லை -மாறுபாடுகளை அடைவதும் இல்லை -ஞானம் ஒன்றையே ஸ்வரூபமாக உடையவன் இல்லை -தனக்குத் தானே சுயமாகப் பிரகாசிப்பவன் -எப்போதும் ஒரே விதமான ஸ்வரூபன் உடையவனாய் இருப்பவன் –

விஞ்ஞானம் -ஞானம் முழுவதாக இருப்பதால் ஆத்மாவை ஞானம் என்றும்
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கிருஷ்ண பக்தியே வடிவெடுத்துள்ளார் என்பது போல் -விஞ்ஞாதா என்றும் சொல்லுவோம் –

ஞாதாவுமாகக் கூட இருக்கும் ஆத்மா என்றபடி -தனக்குப் பிரகாசப்பட்டும் -மற்ற ஒன்றின் உதவின இல்லாமல் தானே ஒளி விட்டுக்கொண்டு பிரகாசிப்பார் -அஜடம் -ஸ்வயம் பிரகாசம்-பராக் அர்த்தம்-பிறருக்குத் தோற்றுவித்து -அசேதனப் பொருள்கள் -ப்ரத்யக் அர்த்தம் -தங்களுக்குத் தோற்றுவது -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இவ்வாறு – ஷட் பாவ விகாரம் -அஸ்தி ஜாயதே இத்யாதி பரிணாமங்கள் மாறுதல் – கருவில் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாற்றம் அடைதல், தளர்ச்சி அடைதல், மரணம் என ஆறு நிலைகளுக்கு உட்பட்டது என்பதை குறிக்கும் அசேதனங்களுக்கே உண்டு

தர்மி ஞானம் -அஹம் சப்த கோசரம் -எங்கும் உப்பாகவே உப்புக்கட்டிப் போல் எங்கும் ஞான மயம்-கட்டடங்க ஞான ஆனந்த மயம் -இது மாறாது – -தர்ம ஞானம் இதம் என்று பொருள்களை அறிந்து கொள்வது -இது கர்மம் அடியாக மாறும்

விளக்கு ஒளி ஜ்வாலை ஒளி போல் இரண்டுமே உண்டே -ஓன்று ஒன்றை ஆஸ்ரயிக்கும் – -த்ரவ்யம் -குணம் -ஜாதி -க்ரியா -மூன்றும் சேர்ந்து இருக்கும் -கிரியாவான் குணவான்-என்கிறோம் அன்றோ – குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் -த்ரவ்யம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் –குணத்தை குணம் ஆஸ்ரயிக்காதே -த்ரவ்யம் போக்குவரத்து -கமனக்கிரியா -இருக்கும் ஆஸ்ரயிக்கும் படியாயும் இருக்கும் -ஆத்மா த்ரவ்யம் தான் -ஞான மயமாக இருப்பதால் குணம் என்றும் சொல்வதால் -ஞானம் இதை ஆஸ்ரயித்ததும் இருக்கலாம் –

அஜடமாகை யாவது ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை –சூர்ணிகை -8
ஆனந்த ரூபமாகை யாவது ஸூ கரூபமாய் இருக்கை –9- உணர்ந்தவன் ஸூகமாக உறங்கினேன் என்கையாலே ஸூக ரூபமாகக் கடவது –10- நித்யமாகை யாவது எப்போதும் யுண்டாகை –11- எப்போதும் யுண்டாகில் ஜன்ம மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில் ஜன்மமாவது தேக சம்பந்தம் மரணமாவது தேக வியோகம் –12-அணுவான படி என் என்னில் – ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக் கடவது –14- அணுவாய் ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில் ஸூக துக்கங்களை புஜிக்கிற படி என் என்னில் –15-
மணி த்யுமணி தீபாதிகள் ஓர் இடத்திலே இருக்க பிரபை எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே அவற்றைப் பூஜிக்கத் தட்டில்லை –16-ஏக சரீர மாதரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வயாபதியாலே யாக வேண்டாவோ -என்கிறசங்கையிலே அருளிச் செய்கிறார் –17- அவ்யக்தம் ஆகையாவது கட படாதிகளை க்ரஹிக்கிற சஷூராதிகளாலே தோற்றாது இருக்கை —அவ்யக்தம் அச்சித்தயா அவிகாராய -ஸ்ரீ கீதை-2–25- -சோகம் வர ப்ரமேயம் இல்லை-வியக்தம் புலன்களுக்கு புலப்படும் –18-

அசிந்த்யமாகை யாவது-அசித்தோடு சஜாதீயம் என்று நினைக்க ஒண்ணாது
இருக்கை – சிந்தித்து பழகியவை அசித் -ஆத்ம த்யானம் கைகூடுவது எப்படி –பிரத்யக்ஷம் பார்த்து சிந்திக்க முடியாதே–19-
நிர்வவவமாகை யாவது அவயவ சமுதாயம் அன்றிக்கே இருக்கை – அதாவது –
விஞ்ஞான மய-என்றும் விஞ்ஞான கன-என்றும்சொல்லுகிறபடியே ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை – சரீரத்துக்கு தானே அவயவ சமுதாயம் உண்டு -ஞான வடிவாகவே இருப்பார் -எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் –20-
நிர்விகாரம் ஆகையாவது அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே ஒருபடிப் பட்டு இருக்கை–21-
இப்படி இருக்கையாலே சஸ்த்ரம் அக்னி ஜலம் வாதம் ஆதபம் தொடக்க மானவற்றால் சேதித்தல்–சேத்தா/ சேதனம் கிரியை /சேத்யம் வெட்டப்படும் பொருள் – தஹித்தல் நனைத்தல் சோஷிப்பித்தல் செய்கைக்கு அயோக்யமாய் இருக்கும் -22-ஆர்ஹதர் ஆத்மாவை தேக பரிமாணன் என்றார்கள் –23-அது ஸ்ருதி விருத்தம் –-24-அநேக தேகங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும் –25-
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது-ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை – ஏக தத்வ வாதம் நிரசனம் –26-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே ஜ்ஞானம் மாத்ரம் ஆகில் –27-
நான் அறிவு என்று சொல்ல வேணும் நான் அறியா நின்றேன் என்னக் கூடாது –28-
ஜ்ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னுமிடம் சொல்லிற்று ஆய்த்து-29-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள் ஆகையாலே
அறிவின் நிலைப்பாடுகள் -இவை -தாய் மகள் தோழி அவஸ்தைகள் ஆழ்வாருக்கு போலே-30-சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை-31-ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –13-14-அத்யாய ஸ்லோகங்கள்-என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும் குலையும்-32-
சாம்சாரிக பிரவ்ருதிகளில் கர்த்ருதம் ஸ்வரூப பிரயுக்தம் அன்று –33
குண க்ருதம்-34-
சமசர்க்க கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம்-35-
ஞான ஆச்ரயமாகில் சாஸ்த்ரங்களில் இவனை ஞானவான் என்று சொல்லுவான் என் என்னில்-36-
ஜ்ஞானத்தை ஒழியவும் தன்னை அறிகையாலும் ஜ்ஞானம் சாரபூத குணமாய் நிரூபக தர்மமாய் இருக்கையாலும் -சொல்லிற்று-37-
நியாமகமாகை ஆவது ஈஸ்வர புத்திய அதீனமாக எல்லா வியாபாரங்களும் யுண்டாம்படி இருக்கை —38-
தார்யம் ஆகையாவது அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது தன் சத்தை இல்லையாம்படி இருக்கை –39
சேஷமாகை யாவது சந்தன குஸூம-புஷ்பம் தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹயமாய் இருக்கை- 40-

சேதநோப் யாப்தி சீலச் ச சித் ஆனந்தாத் மகஸ் ததா
அஹமர்த்த ப்ரதி க்ஷேத்ரம் பிந்நோ அணுர் நித்ய நிர்மல–3-

ஆத்மா சைதன்யம் என்கிற ஞானம் குணத்தை உடையவன் -அந்த ஞானம் பரவுதல் மூலமாக உடல் முழுவதும் பரந்து இருக்கும் தன்மை உடையவன் -மேலும் ஞானம் ஆனந்தம் ஆகியவற்றை ஸ்வரூபமாக உடையவன் -நான் என்ற சொல்லாலே அறியப் படுபவன் -ஒவ்வொரு சரீரத்திலும் இயங்கும் ஆத்மா வேறுபட்டவன் -அணு அளவு உடையவன் -எப்போதும் குற்றமற்று இருப்பவன் –

(சேதனம் -ஞானமுடையவன் -சித் -ஞானமயத்வம் -இரண்டையும் சொன்னவாறு-அனுகூல ஞானமே ஆனந்தமாகும்-வ்யாப்தி சீலம் -தேகம் எங்கும் பரந்து–தர்ம பூத ஞானத்தால் ஸ்வ பாவத்தால் சரீரம் முழுவதும் வியாப்தி-அநந்த கோடி சரீரத்துக்குள்ளே பிறவி தோறும் கர்மத்தால் வியாப்தி உண்டு ஆத்மாவுக்கு -ஸ்வரூப வியாப்தி ப்ரஹ்மத்துக்கு-ஏகாத்ம வாதம் நிரஸனம் -ப்ரதிஷேத்ர பின்னம் -இதம் சரீரம் கௌந்தேய –க்ஷேத்ரம் -ஷேத்ரஞ்ஞ-இதி ஞானாதி -13 அத்யாயம் -சரீர ஆத்ம பேதம்-ஆத்மாக்களுக்குள் பரஸ்பர பேதம் -ஜீவ ஈஸ்வர பேதம் -மூன்றுமே உண்டே-நித்யோ நித்யாநாம் சேதனாஸ் சேதனாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமன் [ஸ்வேது 6.13] )

ததா ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ நிஜ தர்மக
பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா (ஸ்வ) ஸ்வத–4-

மேலும் அறியும் தன்மை -ஜ்ஞாத்ருத்வம் -செயல்படுத்தம் தன்மை – கர்த்ருத்வம்-அனுபவிக்கும் தன்மை -போக்த்ருத்வம் -என்ற இயல்பான – நிஜ தர்மக -தர்மங்கள் உடையவன் -இயல்பாக உறுதியாய் இருப்பவனான பரமாத்மாவுக்கே அடியவனாம் தன்மை -பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா ஸ்வ ஸ்வத-என்ற தர்மமும் உடையவன் –

(அநந்யார்ஹ சேஷத்வம் -கோவிந்தா உனக்கே நாம் ஆட்ச் செய்வோம்-பரகத அதிசய ஆதேயத்வம்- தனியாக -நிலை நின்ற ஆந்தர ஸ்வ பாவம்-உள் இதழ் -கீழ் மூன்றும் வெளி இதழ்–இது சத்தா ப்ரயுக்தம் -ஒழிக்க ஒழியாத தன்மை சேஷத்வம்-ஸர்வதா ஸ்வத இயற்கையாகவே இருக்கும் தன்மை -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -அதுவும் அவனது இன்னருளே —-மற்ற மூன்றும் பராயத்வம் -அவன் அதீனம் –சேஷத்வ ஞானமே அறிவாளி -கைங்கர்யங்களே கர்த்ருத்வம் -அவன் நன்மை அனுபவிக்க -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் -)

(ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ர அர்த்தவத்வாத் -பொருள் உள்ளவாக வேண்டுமே -ப்ரக்ருதி தூண்டப்பட்டு செயல்படுகிறான் -அஹங்கார விமூடாத்மா -அழுக்கு இருப்பதால் தானே சரீரம் என்றும் நினைப்பவன் -அவனால் நியமிக்கப்பட்டு முக்குண வஸ்யதையால் -உபாதியால் கர்த்தா-கர்மமும் கைங்கர்யத்தில் புகும் அன்றோ- -நிரீஸ்வர சாங்க்யன் -ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் -நொண்டி குருடன் சேர்ந்து நடக்கலாம் -)

ஏவம் ஸாமாந்யதஸ் ஸித்தி நிஜா கார்யுதோ அப்யஹம்
அநாதேர் குண மாயாயா பலேநைவ திரோஹித –5

இப்படி எல்லா ஜீவர்களுக்கும் இயல்பாக தர்மங்களைக் தன்மைகளாக முக்குணம் உள்ளடங்கப் பெற்ற மூல ப்ரக்ருதியின் ப்ரபாவத்தால் சூழப்பட்ட தன்மைகளைக் உடையவனானேன்

(கடி மா மலர்ப்பாவையோடு ஸாம்யம் -ஷட் குணங்களில் -சாமான்யதஸ் -பொதுவாக -ஸூத்த ஆத்மா -மாயா -பிரக்ருதியால் -முக்குண -பாதிப்பால் -கர்மங்கள் அடிப்படையில் சரீரம் ஏற்றுக் கொண்டு உழல்கிறோம் அன்றோ -)

அப்ரகாச நிஜாகாரோ நித்ய மாந்த்ய முபேயிவாந்
அபதே கர்ம பாசேந க்ருஷ்யமாணோ நிராசய-6

வெளியில் தெரியாத என்னுடைய இயல்பாக தர்மம் உடையவனாய் செயலாற்ற தன்மையை எப்போதும் உடையவனாய் புண்ய பாபம் வடிவில் உள்ள கர்மம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டு வழி யல்ல வழியிலே இழுக்கப்பட்டவனாய் வேறு ஆதாரம் அற்றவனாய் இருக்கிறேன் –

(அவித்யா- கர்மா- வாசனா- ஜென்ம-சுழல் -மறந்தேன் உன்னை முன்னமே- -பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -ஆத்மாவை வெய்யிலே வைத்து தேகத்தை நிழலிலே வைக்க -மந்த்ர உபதேசம் பெற்று திருமங்கை ஆழ்வார் ஆனார் அன்றோ -யானே என்னை அறியகிலாதே – யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ என்னுடைமையும் நீயே –அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்றேன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்-)

அஜாநந் நநு கூலஞ்ச ப்ரதிகூலம் ததாத்மந
அந்யதா தத்துவாரோப்ய ராக த்வேஷவ் ப்ரவர்த்தயன் –7-

அப்படியே தனக்குத் தகுந்தவையும் தகாதவையும் எவையோ என்ற பாகுபாடு தெரியாதவனாய் பயன் அளிக்குமவையைப் பயனற்றதாகவும் பயனற்றவையை பயனளிக்க நல்லதாகவும் எண்ணி அவ்வவற்றின் மேல் விருப்பும் வெறுப்பும் வளர்த்துக் கொண்டவனானேன் –

(அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய், ப்ரபந்நம் – சரணமடைந்தவனான, பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து, ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.)

(அவிவேக கநாந்த திங்முகே பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத: ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஶ்லோகம் 49 –
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே! திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும் இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)

அக்ருத்ய கரணாதாவப் யத்யாந்தோத் பட வ்ருத்திக
மத்த ப்ரமத்தோந் மத்தாநாம் வர்த்தே ஸத்ருச சேஷ்டித–8-

செய்யத் தகாத வேலைகளைச் செய்வது முதலான பாபங்களும் கூட முழுமையாக தடங்கலற்று இழியுமவனாய் மதம் பிடித்தவன் அசட்டையாக இருப்பவன் -பைத்தியம் பிடித்தவன் என்ற இந்த மூன்று வகைப்பட்ட வர்களின் நடவடிக்கை போலே நடப்பவனாய் இருக்கிறேன் –

(மத்தன்-துஷ்ட ஆகாரத்தால் -பிரமத்தன் -வாதம் பித்தம் கபம் இவற்றால் -உன்மத்தன் -பைத்தியம் -மூவரும் போல் தேஹாத்ம அபிமானத்தால் நானே செய்கிறேன் -நர வபு -பசு பிராயர் -வாநரம் போல் -அவித்யா கர்மா -காரணம் -வாசனை ருசி கார்யம் -பலம் ஜென்மம் -ஆத்மா படும் பாடு –)

கர்ப்ப ஜன்மாத்ய வஸ்தாஸூ துக்க மத்யதுஸ் ஸஹம்
ந கிஞ்சித் கணயந் நித்ய சராம் இந்திரிய கோசர –9-

கர்ப்பத்தில் இருப்பு -அதிலிருந்து வெளி வருதல் முதலான நிலைமைகளிலே மிக்க தாங்க இயலாத கஷ்டத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் எப்போதும் இந்த்ரியங்களுக்கு வசப்பட்டவனாகத் திரிகிறேன்

(கர்ப்பம் ஜென்மம் -சைஸவம் பால்யம் யவ்வனம்-பேதை பாலகன் அதாகும் பிணி பசி -மூப்பு -துன்பம் -அவஸ்தைகள்-வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதை பா லகன தாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.)

ஏவம் விஷய த்ருஷ்ணாயா வசகஸ்ய ஜரா மம
தத் போகே கரணாநாம் ச ஸுவ் தில்யம் குருதே ப்ருசம்
–10-

இவ்வாறு பொருள்களின் மீது உண்டான ஆசைக்கு அடிமையான என் கீழத்தனம் அந்த சுகங்களை அனுபவிப்பதில் இந்திரியங்களுக்கு மேலோங்கிய இயலாமையைக் கொடுக்கிறது –

(கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும்  வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-)

ததா து த்ருஷ்ணா மஹாத்ம்யாத் கரணா நாம பாடவாத்
போகாலாப ஸமுத் பூத சோகோ அபி பவதி துவம் –11-

அந்தக் கிழத்தன்மையில் போகத்தின் மேல் ஆசை பெருகுவதாலும் இந்த்ரியங்களில் சக்தி குறைவதாலும் ஆசைப்பட்ட அனுபவம் கிடையாமையாலே பொங்கி வரும் துக்கமும் தவறாமல் ஏற்படும் –

ததா புத்ர களத்ராதி பந்து வர்க்காவ மாநஜம்
துக்கம் துஸ் ஸஹ மேவாபி ஸஹந்நஸ்த்ரா ப்ரதிக்ரிய–12-

அந்த சமயத்தில் பிள்ளைகள் மனைவி முதலானவர்கள் தேஹ ஸம்பந்தம் உடையவர்களால் அவமதிக்கப் பட்டதனால் உண்டான தாங்கமுடியாத மிகுந்த கஷ்டம் இருப்பினும் அதற்க்காகப் பழி தீர்த்துக் கொள்ள முடியாத அவமானமாகிற துக்கத்தைத் தாங்கிக் கொண்டு இருந்தேன் –

ஆதித்யாதி பிரத்யர்த்தம் பீடிதோ மூட சேதன
அர்த்தாதிஷு ததாநீ மப்யபி வ்ருத்த ஸ்ப்ருஹோ அபவம் –13-

மன வருத்தத்தினாலும் சரீரத்தில் வந்த நோய்கள் காரணமாகவும் மிகவும் கஷ்டப் பட்டவனாய் இருந்த சமயத்திலும் செல்வம் முதலான சம்பத்துக்களின் மீது மிகுதியான ஆசை உடையவனாய் இருந்தேன்

(ஆதி -மனப்பீடை -வியாதி -சரீரகத பீடை
சுகுமார் தனுர் கர்ப்ப வாஸத்தில் இருக்கும் பொழுது -பஹு மல-அவள் உடலில் -சூழப்பட்டு -நீர்க்குடத்தால் மூடப்பட்டு துன்பப்படுகிறான் -அவள் உண்ணும் உணவில் சூடு குளிர் -இவற்றால் சுகுமார் உடல் கஷ்டப்படும் அன்றோ -முன் ஜென்மத்தில் பட்ட துன்பங்கள் எல்லாமே கர்ப்பத்தில் இருக்கும் பொழுது நினைவில் வருமாம்-கர்ப்ப காலத்திலும் சரணாகதி செய்து பேறு அடையலாம் -கால தேச நியதி இல்லையே -ஆனால் துர்லபம் -வாய்ப்பு குறைவு தானே -சட வாயு -தூதி மாருதி வீசும் -கர்ப்ப ஸ்ரீ மான்கள் வெகு சிலரே —)

தாபத்ரயங்கள் –ஆத்யாதிகம் இரண்டு வகை -சரீர கதம் -மானஸம் –ஆத்யாத்மீகம் -காமம் க்ரோதம் பயம் கோபம் அசூயை அவமானம் மாத்சர்யம் பொறாமை-போல்வன -முக் குண வசத்தில் இவை விருப்பு வெறுப்பு – ஆதி தெய்விகம் -வெப்பம் குளிர் பூகம்பம் போல்வன -கர்மபலன்களை அனுபவித்தே தீர வேண்டும் -தொலைக்க அவன் காத்துக் கொண்டுள்ளான் -புரியாமல் தவிக்கிறோம் -பலன்களைக் கொடுத்து கர்மங்களைத் தொலைத்து பேறு –மூடன் -இவை சரீர சம்பந்தத்தால் வந்தவை என்றும் அறியாமல் உழல்கிறோம்

தாத்ரும் பந்த்து வியோகேஷு தாத்ருந மஹதா வ்ருத
கால சேஷம் நயாம் யத்ர கர்ம பந்த வசாநுக
–14-

அந்த உறவினர்களில் யாராவது இறந்த போது மிகவும் கஷ்டத்தோடு கூடியவனாய் இந்த உலகில் கர்ம ஸம்பந்தத்துக்கு வசப்பட்டு எஞ்சிய வாழ்க்கையைக் கடக்கின்றேன் –

(வாழ்வு எல்லாமே கால சேஷம் -கர்ப்ப வாசமே பிரதானம் -சடகோபர் போல் சடவாயுவை கோபித்துக் கொண்டு பேறு அடையாலாம் அன்றோ)

அத தேஹா வஸாநே ச துக்க முத்க்ராந்தி ஸம்பவம்
க்ரூச்ச்ரேண தேஹாந் நிஸ்க்ராந்தி யம கிங்கர தர்சன
ம் –15-

பிறகு இந்த சரீர ஸம்பந்தம் அறுத்துக் கொண்டு இதிலிருந்து வெளிக் கிளம்புகையால் உண்டான துன்பத்தைப் மிகப் பெரிய துன்பமாக சரீரத்தில் இருந்து வெளியேறுதல் யம தூதர்களைக் காணுதல் ஆகிய இவற்றை நினைத்து வருந்துகிறேன்

(ஜீவாத்மாவுக்கு சதுர் கதி –கர்மங்களைத் தொலைத்தது -பகவத் ப்ராப்தி-புண்யம் தொலைக்க -ஸ்வர்க்கம் -பாபம் தொலைக்க -நரகம் -மீண்டும் புண்ய பாப மிஸ்ரம் தொலைக்க -ஸம்ஸாரம் -)

(ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-)

(சரம சமயத்திலே (ஆகிலும் )பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்-
இத் திரு மொழியில்-)

(வாயோரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழிக் கண்கள்  மிழற்ற 
தாயொரு பக்கம் தந்தை யொரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலத்த 
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலோடும் சிக்கென சுற்ற 
மாயொருபக்க  நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே -4- 5-9 –)

யாதநா தேஹ ஸம்பந்தம் யாம்யபாசைச் ச கர்ஷணம்
உக்ர மார்க்க கதி கிலேசம் யமஸ்ய புரதஸ் ஸ்திதிம் —
16-

தந் நியோக ஸமாயாதா யாதநாச் ச ஸஹஸ ச
ஸ்ருத்வா ஸ்ம்ருத்வா ச தூயே அஹம் தத் பிரவேச பயாகுல
–17-

நரக வேதனைகளை அனுபவிப்பதன் பொருட்டு ப்ராப்தமாயுள்ள நுண்ணிய சரீர ஸம்பந்தத்தை யம தூதர்கள் கட்டி இழுத்துச் செல்லுகையையும் பயங்கரமான வழியில் செல்லும்போது உண்டாகும் துன்பத்தையும் யமனை எதிரிலே நிற்பவனாகக் காண்கையையும் -அவன் தன் கட்டளையால் நிகழக் கூடிய ஆயிரக் கணக்கான தண்டனைகளைக் கேட்டும் நினைத்தும் அப்படிப்பட்ட நரகத்தில் புகக்கூடும் என்ற பயத்தைப் அடைந்தவனாய் அடியேன் துன்பமடைகிறேன் –

(ஜரா -மூப்பினால் தளர்ந்து -ஜர்ஜரம் -தேகம் சிதிலம் அடைந்து -தூர ப்ரநஷ்ட்ட நயனம் -கரணங்கள் மரண உன்முக -புத்ர தார-அவமானங்கள் ஸ்ம்ருதிக்கு வர -ஆகாரம் இறங்காமல் -எண்ண அலைகளால் துன்பம் -)

(கேசவ-கிலேச நாஸன
காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகருளானே-1-)

புநச் ச கர்ப்ப ஜென்மாதி பிரவேசம் கர்ம நிர்மிதம்
முஹுர் வி சிந்த்ய மச்சித்தம் கம்பதே ஜல சந்த்ரவத்
–18-

மேலும் பழ வினைகளின் பயனால் அடுத்த பிறவிக்காக மற்றொரு கருவறையில் புகுகை எனப்படும் மறு ஜென்மத்தை திரும்பத் திரும்ப நினைத்து என் மனம் நீரில் தெரியும் சந்திர பிம்பத்தின் அசைவுக்கு ஒப்பான நடுக்கம் கொள்கிறது –

ஏவம் மாம் பவ சக்ரே அஸ்மந் பிரமந்தம் பாஹு துக்கிதம்
க்ருபயா கேவலம் ஸ்ரீ மந் ரக்ஷ நாத கடாஷித–19-

லஷ்மீ பதியான ஓ ஸ்வாமியே இந்த மாதிரி இந்த ஸம்ஸார மாகிற சக்ரத்தில் சளைக்காமல் திரிந்து பல துக்கங்களைப் பெறுகின்ற என்னை ஒரு காரணமின்றி இயற்கையான க்ருபையோடு உனது கடைக்கண் பாவையாலே காக்க வேணும் –

(நம்மிடம் ஒன்றுமே எதிர்பார்க்காமல் -எனது உணர்வில் நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே)

அஹ முத்பத்தி வேளாயாம் த்வத் கடாஷாதி வீக்ஷித
சத்த் வோத்ரே கேண ஸம்பந்ந ஸத் கத்யா காங்க்ஷ யாந்வித–20-

நான் பிறக்கும் சமயத்தில் உம்முடைய சீரான கடாஷித்தால் பார்க்கப் பட்டவனாய்-ஸத்வ குணம் வளர்ந்தவனாய் -மோக்ஷம் என்று சொல்லப்படும் உத்தம கதியைப் பெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவன் ஆனேன் –

(ஜாயமானந்தி புருஷம் இத்யாதி -மாக வைகுந்தம் நண்ண எனது மனம் ஏகம் எண்ண வேண்டும் -)

பாஹ்யேஷு விமுகோ நித்யம் வைதிகே அபிமுகஸ் ததா
ஸத்பிஸ் ஸஹைவ நிவஸந் ஸத் கதா ஸ்ரவணே ரதஸ் –21-

எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் மற்ற மதத்தில் முழுமையாக ஆர்வம் அற்று -அவ்வாறே வேதத்தினால் அறிவிக்கப் பட்ட எம்பெருமான் திறத்து ஆர்வமுற்ற தத்வ ஞானம் பெற்ற ஸத் புருஷர்களோடு கூடியிருப்பவனாய் பகவத் பாகவதர்களுடைய சரித்ரங்களைக் கேட்பதில் ஊக்கம் கொண்டவன் ஆனேன் –

சதாசார்ய உபசத்தவ் ச ஸாபிலாஷஸ் த்வாத்மகம்
தத்துவ ஞான நிதிம் தத்வ நிஷ்டம் ஸத் குண சாகரம் –22-

உத்தமமான ஆசார்யனை அடைவதில் விருப்பமுடைய நான் பகவத் ஸ்வரூபமாய் பரதத்வ ஞானத்துக்கு இருப்பிடமாய் அந்தப் பரமனிடத்தில் ஆழ்ந்து அபிநிவேசத்தை யுடையராய் நற்குணக் கடலாகத் திகழ்கின்ற ஆசார்யனை வணங்குகிறேன்

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதா விதி
ப்ரணிபாதந நமஸ்கார ப்ரிய வாக் பிச்ச தோஷயன் –23-

உத்தம சிஷ்யர்களுக்குப் புகலிடமாகவும் கருணை பொருந்தி இருக்கிற அந்தப் ஆசார்யரை ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட முறையில் விநயத்துடன் கூடியவனாய் ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுமவனாய் மென்மையான பேச்சால் சந்தோஷப்படுமவராக -(ஆக்கினேன் நான் 21- ஸ்லோகத்தில் உள்ள அஹம் சொல்லுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும் -)

த்வத் ப்ரஸாத வஸேநைவ தத் அங்கீகார லாபவான்
ததுக்த தத்வ யதாத்ம்ய ஞான அம்ருத ஸூ ஸம்புத–24-

உனது அனுக்ரஹ விசேஷத்தினாலேயே ஆசார்யர்கள் என்னையே அங்கீ கரித்தல் என்னும் பயனைப் பெற்றவனாய் அந்த ஆச்சார்யர்கள் தெரிவித்த சித்து அசித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்துவங்களின் உண்மைப் பொருளை அறியம்படியான அமுதத்தைப் பெற்று முழுமை பெற்றவன் ஆனேன் –

(மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு. உள்ளீடான வஸ்துவிலும். மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால். கார்யகரமாவது.)

(ஆச்சார்யர் சர ரூபி –உலாவும் பெருமாள் -அனைவரும் சேர்ந்து குருவையும் புத்திரனையும் பத்நிகளை வணங்க வேண்டும் -ஸ்வ தந்திரனைப் பற்றினாள் சங்கை வரும் -மனித சரீரம் எடுத்து மேலே தூக்க அவதாரம் -ஸாஸ்த்ர பாணியாக –குருவே பராம் கதி ப்ரஹ்ம தானம் ஸ்தானம் பாராயணம் -அறிய வேண்டுமவரும் அவரே -அமுதூறும் என்னாவுக்கே -பசுர் பக்ஷி மனுஷ்ய வா -வைஷ்ணவ ஸம்ஸ்ரயா –அசுரர்களும் தங்கள் குருவான சுக்ராச்சாயரைப் பற்றி பல பேறு பெற்றார்கள் அன்றோ –கு அந்த காரம் -ரு தந் நிரோகத-ஆச்சார்யர் வேத சம்பன்னன் விஷ்ணு பக்தர் -மந்த்ரஞ்ஞா -அறிந்து ஞானம் பெற்று -மேல் பக்தி பக்தஸ்ய-மேல் கைங்கர்யம் – ஸதா மந்தாரஸ்ய -ஆஸ்ரயித்து உறுதியுடன் இருப்பவர் -ஸித்தம் ஸத் ஸம்ப்ரதாயம் -ஸ்திர நெஞ்சம் கொண்டவர் -ப்ரஹ்ம நிஷ்டம் -அந்தக்காலத்துக்குத் தக்க சாஸ்த்ர உபதேசம் -க்ருத யுகம் வேறே கலியுகம் வேறே -டம்பம் அஸூயை இல்லாதவர் -ஆத்ம குணங்கள் நிறைந்தவர் -விஷயாந்தர வைராக்யம் கொண்டு –தீர்க்க கால பந்து -அத்ர பரத்ர ஸாயி )-

(ஆச்சார்யருடைய திரு மேனி த்யானம் ஒன்றே போதும் –பின்பழகராம் பெருமாள் ஜீயர்-பெரும் திவத்திலும் அன்பு அற்று – -ஆன வடிமை -ஒவ்ஷதை சேவை -நம்பிள்ளை திருமுதுகு சேவிக்கவே -ஆலவட்டம் அருளி நடப்பதே புருஷார்த்தம்)

——-

ரஹஸ்ய மந்த்ர த்ரய ஸாரம் -திரு மந்த்ரம் -அஷ்டாக்ஷரீ -விவரணம்

அர்த்த ரஹஸ்ய த்ரிய தய கோசரம் லப்த வாநஹம்
கேவலம் க்ருபயா மாம் து நயதஸ்தே ப்ரஸாதத-
-25-

இயற்க்கை இன்னருளால் மட்டுமே என்னையே உய்விக்க வேண்டும் என்று எண்ணி உன்னுடைய அனுக்ரஹத்தினால் அஷ்டாக்ஷரீ த்வய சரம ஸ்லோகம் என்னும் படியான மந்த்ரங்களினால் தெரிவிக்கப் படுகிற பொருளை அடியேன் பெற்றேன்

(பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-)

(ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
)

(உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே)

(த்ரிதயம் – மந்த்ர ரஹஸ்யம்-திருமந்திரம் ப்ராப்ய ப்ரதானம் -ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம் -ஆத்மாவாலே பேறு -விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் -ப்ராபக பிரதானம் –ஈஸ்வர ருசி பரிக்ருஹீதம் -ஈஸ்வரனாலேயே பேறு அனுஷ்டான பிரதானம் -அனுசந்தான ரஹஸ்யம் –மந்த்ர ரத்னம் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-பிராட்டியாராலே பேறு -)

பிரணவ ஸப்தார்த்தம்
காரணம் ரக்ஷகம் ஸ்ரீசம் சேஷிணம் த்வாம் விசிந்தயன்
த்வ தர்தமித ரேஷாம் ச சேஷிணாம் விநிவர்த்த நாத்
–26-

உன்னையே எல்லாமே உலகுக்கும் காரணமாக காப்பவனாக திருமகள் நாயகனாக உணர்வது உன் பொருட்டே எஞ்சிய அதிகாரிகள் எனப்படுமவர்களையும் எனக்குத் தலைவர்கள் அல்ல என்று தள்ளி வைப்பதனால் உன்னையே தலைவனாக எண்ணி உள்ளேன் –

(ஸர்வார்த்தம் -ஸர்வ பல பிரதத்வம் –குலம் தரும் இத்யாதி -ஸாயுஜ்யம் -பிரகர்ஷமாக ஸ்தோத்ரம் -பிரணவம் –அகாரம் சகல வாசக காரணம் -உபாதான நிமித்த சஹகாரி காரணம் அவனே -ஆதி பகவன் முதற்றே உலகு -காரணமான அவனே ரக்ஷகன் -நயி பலான ஸாமர்த்யம் –காக்கும் இயல்பினன் கண்ணன் -அவள் மார்பில் நின்று பிரியாதாப் போல் -ஸ்ரீபதி –இதனால் சேஷியாக அறிவோம் -தாதர்த சதுர்த்தி -அநந்யார்ஹ சேஷி –காரணந்து த்யேய–ததர்த்த உன் பொருட்டு ஆன பின்பு -இதரர்கள் சேஷிகள் அல்ல என்று தள்ளியும் விட வேண்டும் அன்றோ –
ஒன்றென, பலவென, அறிய அரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் எனும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து, உள்ளி நும் இரு பசையறுத்து,
நன்று என நலம் செய்வது, அவனிடை நண்ணினம் நாமே
!)

மகாரார்த்தம்
அநந்யார்ஹம் ஸ்வதோ நித்யம் ப்ரக்ருதியாதி விலக்ஷணம்
பஞ்ச விம்சம் சிதா நந்த ஸ்வரூப குண ஸம்யுதம்
–27-

இயல்பாகவே மற்றை எவர்க்கும் அடியவனாக இருக்க இயலாதவனாய் எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் ப்ரக்ருதி தொடக்கமான இருபத்து நான்கு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டவனாய்-இருபத்து ஐந்தாம் தத்வமாய்த் திகழ்கின்றவனாய் -ஞான ஆனந்தங்களைத் தம் ஸ்வரூப குணங்களாகக் கொண்டவனாய் உள்ளேன் (இவ்வர்த்தங்களை மேல் உள்ள ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக -)

(மதி ஹர்ஷ மன ஞாநே மந அவ போதனே மூன்று தாதுக்களும் ஞான ஆனந்த ஸ்வரூபம் -தர்ம தர்மி ஞானங்கள் இரண்டையும் காட்டும்)

நமஸ் ஸப்தார்த்தம்
அஹமர்த்த மணும் நித்யம் ஆத்ம வர்க்கம் நிரூப்ய ச
தஞ்ச ஸ்வ அநர்ஹதா ஸித்தே அஹம்தா மமதா உஞ்சிதம் –
-28-

நான் என்ற பதத்தால் அறியப் படுமவனாய் மிகச் சிறியதான –அணு -பரிமாணம் உடையவனாய்- எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் -ஜீவாத்ம வர்க்கத்தைக் குறித்து விவரமாக அறிந்து கொண்டு -இயல்பாக ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் இருக்கும் காரணத்தினால் -அந்த ஆத்மாவை (-அஹம்தா மமதா உஞ்சிதம் –) -நான் -என்ற ஸ்வா தந்த்ர பாவனையும் எனது என்ற மமகார பாவனையும் அற்றவன் என்று அறிந்து கொண்டேன் -(இவ் வர்த்தங்களை இனி வரும் ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக-)

(பக்தாஞ்சலி -வணக்கம் -நம -என்றும் -அகண்ட நமஸ் -சகண்ட நமஸ் -பிரித்த நமஸ் -நான் எனக்கு அல்லேன் -நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து –அஹந்தா – கீழ் உகாரம் பிறருக்குத் அல்லேன் -இங்கு நான் எனக்கும் அல்லேன்)

ஸ்வ ரக்ஷணேப் யஸ்வ தந்த்ரம் த்வத் ரக்ஷ யத்வ நிரூபிதும்
விஜ்ஞாயா த்வதுபாயத்வாத் அநந்ய சரணஸ் ததா –29-

தன்னைத் தான் காப்பாற்றிக் கொள்வதிலும் ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் உன்னால் காக்கப்பட வேண்டியவனாய்த் திகழ்கின்றேன் என்பதை அறிந்து நீயே உபாயமாதலால் மற்றவர்க்கும் அடிமையாகாமை எவ்வாறோ அவ்வாறே மற்றவரைச் சரணமாகவும் அடையாதவன் ஆனேன் –

(பெருமாளுக்கு ஊணைப் பரிப்பது போல் நானே நம்மை ரக்ஷிப்பது -கழுத்துக் கட்டி போல் -விலைப்பாலைப் போல் -அவன் ரக்ஷணம் முலைப் பாலைப் போல் -கடற்கரையில் பெருமாள் வில்லும் கையுமாய் முதலிகளை ரஷித்து அருளிய விருத்தாந்தம் -அகாரத்தால் அவன் ரக்ஷகன் என்பது நிரூபகம் -நமஸ்ஸில் நாம் ரஷ்ய வர்க்கம் என்று நிரூபகம்-)

(சம்பந்த உபாய உணர்த்தி -தாய் தோழி தலைமகள்-பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -பேற்றுக்குத் த்வரிக்கையும் உண்டே – -உபாயம் க்ருஹம் ரக்ஷணம் -ஸாதனம் மார்க்கம் -ஆறு எனக்கு நீயே என்று தந்து ஒழிந்தாய் -ஸித்த உபாயம் –களை கண் மற்றிலேன் -என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் -ஆத்ம ரக்ஷணம் -மோக்ஷ பிரதம் -உஜ்ஜீவனம் இதுவே)

நாராயண ஸப்தார்த்தம்
நித்ய நிஸ் ஸீம நிஸ் ஸங்க்ய விபூதிநாம் உபாஸ்ரயம்
தத் அந்தர்யாமிணம் தேவம் நாதம் நாராயணம் ப்ரதி –30-

நித்தியமாய் -எல்லையற்றதாய் -கணக்கற்றதாய் -விளங்கும் எல்லாமே பதார்த்தங்களுக்கும் ஆதாரமானவனாய் -அவ்வவ் பதார்த்தங்களுக்குள் புகுந்து நியமிப்பவனாய் அப்பதார்த்தங்களின் தோஷங்கள் தனக்குத் ததாதி பிரகாசிப்பவனாய் நாயகனுமாய் நாராயணனைக் குறித்து –(கைங்கர்யம் செய்ய எண்ணுகிறேன் -யென்பதை 31 ஸ்லோகத்தோடு கொண்டு கூட்டுக )

(தன்னுள் அனைத்துலகும் நிற்க -ஆதாரம் நெறிமையால் தான் அவற்றுள் நிற்க -அந்தர்யாமி வாத்சல்யம் நியமனம்-தேவம் -விளையாட்டாக பிரகாசமாய் உள்ளவன் –அழுக்கு உடம்புக்குள் இருந்தாலும் -பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு உடம்பாய் -விருத்த விபூதிகத்வம் -நாரணன் -முழு ஏழு உலகுக்கும் நாதன் -வேத மயன் -வண் புகழ் நாரணன் -வாழ் புகழ் நாரணன்-)

(ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -தாங்குவது ஸங்கல்ப ஏக தேசத்திலே –நான் எல்லாப் பொருள்களுக்கும் இருந்தாலும் நானே ஆதாரம் -பஸ்ய மே யோக ஐஸ்வர்யம் -கீதையில் -)

(பஹிர் வியாப்தி -ஆதாரம் -அந்தர் வியாப்தி -நியமனம் -சரீராத்மா பாவம் -அகடிகடநா ஸாமர்த்யம்)

நித்யம் ஸர்வத்ர நிகிலா வஸ்தம் நிரவசேஷதஸ்
ப்ரீதி காரித கைங்கர்யம் நிரதம் சிந்தயாம் யஹம் –31-

எல்லாக் காலத்திலும் கைக் கொள்ளத் தக்கதாய் இடப்பாகு பாடின்றி எல்லா இடங்களிலும் செய்யத் தக்கதாய் எல்லாமே நிலையிலும் செய்யத் தக்கதாய் ஒன்றுமே விடாமல் அனைத்தும் விதமுமாய் -மகிழ்ச்சி மேலீட்டால் செய்யும் கைங்கர்யத்தை இடைவிடாமல் அடியேன் செய்ய வேண்டி சிந்திக்கிறேன் –

(ஆய -பிரார்த்த நாயாம் சதுர்த்தி -ஒழிவில் காலம் எல்லாமே உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பொரு சிறைப்புள் உகந்து ஏறி -ப்ரகர்ஷயிஷ்யாமி -)

(நிரதம்-நித்ய பிரார்த்தனை -இங்கு -உனது தாமரைக் கண்களால் நோக்காய் -அங்கும் அண்டர் -பிரியாமலேயே இருந்தாலும் தண்ணீர் தண்ணீர் என்று சொல்லும்படியான விலக்ஷணம் உண்டே இவனிடம் – பிரார்த்தனை -சிந்தனை -மாநாஸம் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -கைங்கர்யத்தில் நேராக –வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்-3-3–அவரிடம் பிரார்த்தனை இதில் இல்லை -அது 6-10-10-கைங்கர்ய பிரார்த்தனை -ப்ராப்ய நிஷ்கர்ஷம்-எம் மா வீட்டில் – அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -இதில் இருந்தாலும் பிரார்த்தனை -3-3-எம்மா வீட்டில் எம்மா வீடு -2-9-4-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -ஞப்தி ஞானம் –முக்தி பிரார்த்தனை -அப்புறம் விருத்தி -கைங்கர்யம் செய்வது-)

இத்தம் சேதன சாமான்ய ரூப அந்தர் பாவத ஸ்வத
ஸ்வாத்ம நேப் யநு சந்தானம் ததைவ விததாம் யஹம் –32-

இவ்விதமாகத் தெரிவிக்கப் பட்டுள்ள எல்லாமே ஜீவன் ராசிகளுடைய ஸ்வரூபத்தில் அடியேனும் அடங்கி யுள்ளமையால் சுயமாகவே அதே பிரகாரத்தில் அடியேன் செய்ய வேண்டிய மந்த்ரார்த்த அனுசந்தானத்தையும் செய்து வருகிறேன் –

அகாரார்த்தோ அர்த்த பூதோ அஹம் அநந்யார்ஹோசித பர
ஸ்வார்த்ததா ரஹிதோ நித்யம் அநந்ய சரணஸ் ததா —
33-

அகாரார்த்த வாஸ்யனான விஷ்ணுவுக்கு உரியதான கைங்கர்யம் செய்யும் அடியேன் மற்றவர்களுக்கு அல்லாது அவனுக்கே ஆட் செய்பவனாய் -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவனாய் -தன்னலம் அற்றவனாய் -எப்போதும் அவ்வாறு வேறு காப்பாளர்கள் அற்றவனாய் -நாராயணனுக்கே அடியவன் ஆவேன் -(இவ்வர்த்தம் கீழ் ஸ்லோகார்த்தத்துடன் கொண்டு கூட்ட வேண்டும் )

நாராயணாய நாதாய கிங்கரஸ் ஸ்யாம் நிரந்தரம்
இதி மந்த்ரம் ஸ்வ யாதாத்ம்ய பரமே வ அநுஸந்ததே –34-

தலைவனான நாராயணனே எப்பொழுதும் அடிமையாய் இருப்பன் என்னும்படியான இப்பொருள் அஷ்டாக்ஷரீ மந்த்ரத்தை ஜீவாத்ம ஸ்வரூப நிர்ணயம் செய்வதாக எண்ணுகிறேன் –

(தேரோட்டி-அவன் முன்பே இருந்தாலும் – -ஓங்காரம்-அகாரம் முன் இருந்தாலும் -உபதேசம் மகாரத்துக்கு -ஆத்ம பரமான உபதேசம் தானே –ஸ்யாம் –இருக்கக் கடவேன்-)

(அநந்யார்ஹ சேஷத்வமும் அநந்ய போக்யத்வமும் -அநந்ய உபாயத்வமம் காட்டி அருளியவாறு -உபேயத்வமுமே பிரதானம் -கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம் -உபாயமாகக் கொள்ளும் பொழுது -அங்கும் த்ரிவித பக்திகளும் பிரார்த்தித்துப் பெற வேண்டும் -கத்யத்தில் பார்க்கிறோம் -பக்தி யாரம்ப விரோதி போய் பக்தி செய்து -மேலே மேலே வளர்த்துக் கொள்கிறோம் -எல்லாமே அவனது இன்னருளாலேயே -அங்கும் சேர்ந்து இருந்தால் தான் ஸூகம் -இல்லையேல் துக்கம் -பிரியாமல் இருக்கக் கூடாதே என்ற படபடத்த எண்ணமே பர பக்தி -அகலகில்லேன் இறையும் என்று அவளுமே இருக்க நாம் இருப்பதைச் சொல்ல வேண்டாமே -கர்மாதீனம் அல்ல -விஷய வைலக்ஷண்யம் -தர்சனம் கிட்டிய பின்பும் சாமானாகாரம் -ராமனாகவும் நரஸிம்மனாகவும் அங்கும் மாநஸமாக ஸேவிக்கலாமே -)

த்வய மந்த்ர -மந்த்ர ரத்ன விவரணம்
ஸ்ரீ மந் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே -ஸ்ரீ மதே நாராயணாய நம
சித்தம் பிரகாசித ஸ்வாத்ம யதாத்ம்ய ஸ்வ உசிதம் அஹம்
வ்ருத்திம் ப்ரவ்ருத்திம் நிச்சிதய த்வயேந விததாமி தாம் –35-

இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்ட ஆத்மாவின் உண்மை ஸ்வரூபமுடைய நான் என்னுடைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தகுந்ததான அனுஷ்டானத்தையும் வாழ்வாதாரத்தையும் த்வய மந்திரத்தால் நிர்ணயித்து அந்தப் சரணாகதியைப் பின்பற்றுவேன் –

(ந வேதாந்தாத் ஸாஸ்த்ரம் –த்வய மந்த்ரம் ரத்னம் -ஆரோக்கியத்துக்கு ஸத்வ குணம் –இதம் பூர்ணம் இத்யாதி வாக்கியம் நடுவிலே –அர்ச்சையில் சரணாகதி -குண பூர்ணம் இங்கு தானே –என்பதும் இதனாலேயே –சர்வம் பூர்ணம் ஸஹோம் -குணங்கள் உடைய ஸ்ரீ மன் நாராயணனைப் பற்றி குணங்களுடைய மிதுனத்தில் கைங்கர்யம்-திருமந்த்ரத்தால் ஸ்வரூபம் அறிந்த பின்பு -ஆத்ம யாத்ரைக்கும் தேஹ யாத்ரைக்கும் –வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -கற்க கசடற -ஞானம் -கற்ற பின்பு நிற்க அதற்குத் தக -வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -உசிதமான வற்றையே கடைப் பிடிக்கிறேன் என்றபடி –)

(அநந்யார்ஹ சேஷத்வம் -ஞானம் -பிரணவம் -பெற்ற பின்பு -அநந்ய உபாயத்வம் -அவனைப் பற்றி -நமஸ் –அநந்ய போக்யத்வம் -அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -நாராயணாய நமஸ் வ்ருத்தி பூர்வ வாக்கியம் -நாராயணாய வ்ருத்தி -உத்தர வாக்கியம் -)

த்வாம் ஸ்ரிதா நிகிலைஸ் ஸேவ்யா ஸ்ரிய கடக பாவத
ஸமாஸ்ரித்ய தயா நித்ய யுக்தம் வாத்சல்ய சாகரம் —
36-

(எம்பெருமானே -எப்போதும் உன்னையே ஆஸ்ரயித்து இருப்பவளாய் –
அனைவராலும் ஆஸ்ரயிக்கத் தகுந்தவளான ஸ்ரீ மஹா லஹமியை புருஷகார ரூபமாகப் பற்றி –
அவளுடன் நித்யம் கலந்து இருப்பவனாய் –
வாத்சல்ய குணக்கடலாய் -தோஷ போக்யத்வம் -)

ஸ்வாமிநம் சீல ஜலதிம் ஸூலபம் ஸூகமம் ததா
ஸர்வஞ்ஞம் ஸக்தி ஸம்பந்தம் ஆப்த காமஞ்ச சேஷிணம் –37-

உலகுக்கு நாயகனாய் ஸ்வாமித்வம் –
சீல குண பூர்ணனாய் -ஸுசீல்யம் –
எளிதாக-துன்பப்படாமல் –
அறியக் கூடியவனாய் -ஸுலப்யம் –
எளிதாகப் பற்றக் கூடியவனாய் -ஸூக மத்வம் –
அவ்வாறே எல்லாமே அறிந்தவனாய் -ஸர்வஞ்ஞத்வம் –
பலவிதமான சக்திகள் உடையவனாய் -ஸர்வ சக்தித்வம் –
விரும்பும் பயன்களை அனைத்தையுமே பெறத் தக்கவனாய் -ஆப்த காமத்வம் –
அடியவர்களின் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்பவனாய் -ஸர்வ சேஷித்வம் -)

(1-நிகரில் புகழாய் என்று வாத்சல்யத்தைச் சொன்னபடி; (2). உலகம் மூன்று உடையாய் என்று ஸ்வாமித்துவத்தைச் சொன்னபடி: (3) என்னை யாள்வானே என்று சௌசீல்யத்தைச் சொன்னபடி; (4) நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே என்று சௌலப்பியத்தைச் சொன்னபடி.ஆக இந்த நான்கு குணங்களும் ஆச்ரயண சௌகர்யாபாதகங்களாகையாலே இவை இங்கு வரிசையாக அநுசந்திக்கப் படுகின்றன.)

காரணம் கருணா பூர்ணம் அசேஷ பல தாயகம்
த்வாம் விநிச்சித்ய நிர்தோஷ நித்ய மங்கள ரூபிணம்
–38-

(அனைத்துக்கும் காரணமாய் -ஸர்வ காரணத்வம்
நிரம்பிய கருணை என்னும் குணத்தால் அனைத்தும் பயன்களையும் கொடுப்பவனான -பல தாயகத்வம்
நிரம்பிய உன்னை
தோஷங்கள் தட்டாது அனைவருக்கும் புகலிடமாக இருப்பவனாக நிச்சயித்து

(-நிர்த்தோஷ நித்ய மங்கள-கல்யாண குணங்களைச் சொல்லி -உபய லிங்க-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக குண )

சரணவ் தவ ஸர்வாத்ம ஸாதாரண ஸூபாஸ்ரயவ்
அநிஷ்ட விநிவ்ருத்யர்த்தம் இஷ்ட ப்ராப்யர்த்த மேவ ச
–39-

எல்லாமும் ஆத்மாக்களுக்கும் பொதுவான மங்களகரமான உன் திருவடிகளை(பொது நின்ற பொன்னம் கழல்கள் அன்றோ ) எல்லாத் துன்பங்களும் விளக்குவதன் பொருட்டு -அநிஷ்ட நிவ்ருத்தி –
விரும்பிய மோக்ஷம் அடைவதற்காக -இஷ்ட ப்ராப்தி-
உன்னையே உபாயமாக என்னவனாய்)

உபாய பாவாத் சரணம் ப்ரபத்யே அத்யாவசாயவான்
இயம் ப்ரபத்திர் விஸ்வாஸ பூர்வக ப்ரார்த்தநா மதி –40-

(உன்னையே உபாயமாக என்ன்னவனாய்
த்ருடமான விஸ்வாஸத்தை உடையவனாய்
சரணமாகப் பற்றுகிறேன்
நிலையான விஸ்வாஸத்தோடு விரும்பியதைப் பெறும்படியான அறிவே இந்த சரணாகதி யாகும்)

தஸ்மான் மமாபி முக்யார்த்தம் ப்ரபத்திரிய மித்யத
த்வமே வோபாய பூதஸ் ஸந் பாஹி மாம் கருணாகர –41-

ஓ ஸ்வாமி இவ்வாறு செய்யப்பட்ட சரணாகதி அடியேன் உனக்கும் முகம் கோணாமல் நடப்பவன் என்பதைத் தெரிவிப்பதற்கே -ஆகையால் இவ்வாறு கூறப்பட்டதையே கொண்டு நீயே ஸாஷாத் ரக்ஷகனாய் கருணைக் கடலாய் என்னைக் காத்து அருள்வாய் –

(ஷேம க்ருஷிகன் -ஒட்டி வந்து தனி நெஞ்சை வஞ்சித்து இருக்க- -இசைவித்து அடியேனை அத்வேஷம் மாற்றி ஆபிமுக்யம் பண்ண வைத்து அருளியதால் -இத்தை அறிவிப்பதே சரணாகதி -)

ஸர்வ அதிசயத் ஆகார ஸ்வரூப குண ஸம்பதா
ஸ்ரியா நித்யம் ஸஹ ஸீநம் தேவ தேவம் ஜகத் பதிம் –42-

எல்லாரைக் காட்டிலும் மேன்மையான ஞானம் ஆனந்தம் முதலானவற்றால் நிரம்பிய ஸ்வரூபம் மற்றும் சவுந்தர்யம் காருண்யம் வாத்சல்யம் முதலான குணங்கள் நிரம்பிய பிராட்டியாருடன் வீற்று இருந்து -தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான

(உத்தர வாக்யார்த்தம்-ஸ்ரீ மதே நாராயணாய நம -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி-ஸஹ சீதயா -மிதுனத்தில் கைங்கர்யம் -ப்ராப்யம் மிதுனம் -ஸ்வாமித்வம் இங்கும் உண்டு -கீழே ஸ்வாமித்வம் -கைவிடமாட்டார் -உபாயமாக்கப் பற்றலாம்-ஸ்வாமி சொத்து -இங்கு -இங்கு ஸ்வாமித்வம் -கைங்கர்யம் உகந்து கொள்ளும் ஸ்வாமி-ஸ்வாமி -தாஸ்யம் இங்கு-மனிசர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான தேவாதி தேவன் )

பவந்த மநு பூயாஹம் ஆஹ்லாத பரி ப்ரும்ஹித
நித்யம் ஸர்வா த்ரிகம் ஸர்வ அவஸ்த்தம் ஸர்வ விதம் ததா –43-

தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான உன்னைக் கண்டு அனுபவித்து அடியேன் ஆனந்தம் அடைந்தவனாய் -எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும்

ஐஸ்வர்ய கைவல் யோத் தீர்ணம் த்வத் ஆனந்தாத் விலக்ஷணம்
லஷ்மீ போகாத் விஸிஷ்டம் ச கைங்கர்ய ஸூகமாப் நுயாம் –44-

எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும் பலதரப்பட்ட ஐஸ்வர்ய கைவல்ய அனுபவங்களை விஞ்சியதாய் உனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறானதாய் திருமகளுக்குக் கிட்டும் ஆனந்தத்தைக் காட்டிலும் சிறந்ததாய் இருக்கும் கைங்கர்ய ஸூகத்தை அடைவேனாக –
பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் -இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் -ஐஸ்வர்யம் கைவல்ய த்யாஜ்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை -விலக்ஷணம் -இது தானே -அத்திரு அவனைப் பற்றும் -இத்திரு இருவரைப் பற்றும்-அத்திரு திருமார்பினைப் பற்றும் இத்திரு திருவடியையே பற்றும் –

தத்ர ஸ்வார்த்தத்வ ஸம் பூதம் அஹம் தாமம தோஜ்ஜிதம்
ப்ரதி பந்தம் அஸேஷேண விநிவர்த்தய மாதவ –
-45-

ஓ மாதவ ஸ்வார்த்த புத்தியுடன் கூடிய அஹங்காரம் மமகாரங்களின் ஸம்பந்தம் அற்றதான உன் கைங்கர்யத்துக்குத் தடையான கெட்ட நோக்கை முழுவதுமாக நீக்குக –

(கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -பிரபல தர விரோதியும் போக வேண்டுமே -மற்றை நம் காமங்கள் மாற்று -படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே –தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே)

இத்தம் த்வயார்த்தம் ஸம் சித்ய பூர்ண பிரபதநாத் மகம்
தத்ர த்வதாராவ்ல் பண்யம் ஜாநே ஸ்லோக விதாநத–46-

இவ்வாறாக முழுமையாக சரணாகதியைத் தெரிவிப்பதான த்வய மந்திரத்தின் பொருளைப் பாவித்து அந்த சரணாகதி விஷயத்திலேயே உனக்கும் மிகுந்த ஆதரபுத்தி உள்ளது என்று நீயே சரம ஸ்லோகத்தில் அறுதியிடுவதைத் தெரிந்து கொண்டேன் –

——-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச —
ஸ்ரீ கீதா சரம ஸ்லோக விவரணம்

(தியாகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் ஸ்வீகாரம் செய்வது நம் கர்தவ்யம் -மேல் அவன் கர்தவ்யம் -பாபங்கள் தன்னடையே போம் -சோகப்படாதே -இதுவும் விதி -)

(மன்னு மணவாள அண்ணலொடு
சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்
மாம் என்று தொட்டுரைத்த சொல்லும்
துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்

நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும்.)

அபீஷ்ட உபாய ரூபேண ஸாத்யாநாம் சிர காலத
ஸ்வ கர்ம ஞான பக்தீ நாம் ஸ்வரூப பரி சோதநாத் –47-

விரும்பிய மோக்ஷ உபாயத்துக்கு சாதனமாக பண்டைக் காலத்தில் இருந்து கைக் கொள்ளப் பட்ட கர்ம ஞானம் பக்தி யோகங்களின் இயல்பைத் பரிசீலித்த போது –

ஸ்வ விளம்ப அஷமத்வேன ஸ்வாகிஞ்சன்ய விரோதத
ஸ்வ அனுபாயத்வ நிஷ்கர்ஷாத் ஸர்வ ஸம்த்யஜ்ய தூரத –
-48-

தான் -ஒரு ஜீவாத்மா -கால தாமதத்தைப் பொறுக்க மாட்டாமையாலும் -தன்னால் அவற்றைக் கடைப் பிடிக்க ஆற்றல் இல்லாமையாலும் பரதந்த்ரனான தனக்கும் இவைகள் உபாயம் அல்ல என்று நிச்சயித்துக் கொண்டதாலும் மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி

த்யாகம் ஸ்வீகார வித்யங்கம் விநிசிசத்ய ச மாம் தத
தட் ஸாரத்யே ஸ்தி தத்வேன ஸூ சீலம் பக்த வத்சலம் –
-49-

மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி இவ்வாறு உபாயாந்தரங்கள் விடுவதை சரணாகதியைப் பற்றுவதற்குப் பூர்வ அங்கமாக -தகுதி உடையதாக -எண்ணி பின்பு -உனக்குத் தேரோட்டியாய் இந்ததனால் சீலமும் வாத்சல்யம் உள்ளவன் என்றும்

(நிவ்ருத்தி ரூபமாய் இருப்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது-அனைத்தையுமே விட்டே ஸாஷாத் தர்மமாகப் பற்ற வேண்டும்-ஸ்நாத்வா புஞ்சீத போல் இது -புக்த்வா -விளக்கு அணைந்த பின்பும் ஒருவேளை சாப்பிட்டால் சாந்த்ராயண பிராயச்சித்தம் செய்ய வேண்டும் -என்பது போல் அல்ல )

அநந்ய அபேக்ஷ ரூபத்வாத் அத்விதீயம் அநுத்தமம்
அநிஷ்ட த்வம்ஸ நேதஷம் உபாயம் பரிசிந்தயன்
-50-

மற்றுமோர் எவருடைய உதவியையும் எதிர்பாராத ஒரே சாதனமாக என்றும் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் என்றும் பாபங்களைப் போக்குவதில் ஸமர்த்தன் என்றும் திகழ்கிற என்னை

(அபின்ன நிமித்த காரணம் பர ப்ரஹ்மம் ஒருவனே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –சத் ஏவ-ஸோம்ய ஏக மேவ அத்விதீயம்-வேதாந்தத்தில் இவ்வாறு அத்விதீயம் -உபாய உபேயமும் அவனே ரஹஸ்ய த்ரயத்தில் -)

மநோ வாக் காய சம்பன்ன கதித்ரய கோசரம்
வ்ரஜநம் ஸர்வ பாவேந குரு விஸ்வாஸ பூர்வகம்
–51-

என்னை ஸாஷாத் ஸாதனமாகப் பற்றி சிந்தை சொல் செயல்களால் கிடைக்கப் பெற்ற மூன்று விதமான பற்றுதல்களை குறிக்கும் சரணாகதியை ஆழ்ந்த நம்பிக்கையுடன் முழுமையாக கடைப் பிடிப்பாயாக –

(ஸர்வ பாவேந -உபாய ப்ராப்ய ப்ராபக பாவனைகள்-தாரக போஷக போக்யம் எல்லாமே அவனே-ப்ரார்த்தனா மதி சரணாகதி -புத்தி பூர்வகமாக செய்ய வேண்டுமே-கத்யர்த்தா புத்த்யர்த்தம் -அவன் கொடுத்த மூன்றாலும் மனம் மொழி மெய் -மூன்றாலும் செய்வது நல்லது )

அஹம் ஸ்வாதீந ஸர்வாத்ம பந்த மோக்ஷ விதிக்ரம
ஸார்வஞ்ஞ ஸர்வ சக்தித்வ பூர்த்தி ப்ராப்தி தயோததி —
52-

என் வசத்தில் இருக்கும் எல்லாமே ஜீவராசிகளுடைய கருமத்துக்கு வசப்படுதல் விடுவித்தல் என்ற தொழிலை யுடையவனாய் ஸர்வஞ்ஞத்வம் ஸர்வசக்தித்வம் உடையவனாய் குறைவற்றவனாய் எல்லோருடனும் நித்ய சம்பந்தம் உடையவனாய் கருணை யுடையவனாய்

(கர்மாதீனமாக பந்தம் அளிப்பதும் ரூபாதீனமாக மோக்ஷம் அளிப்பதும் அவனே)

மயி நிஷிப்ய கர்தவ்யம் தத்ர நிர்பர முஜ்ஜ்வலம்
த்வாம் ப்ரபத்தி க்ரியா முத்ரா முத்ரிதம் மத் பராயணம் –
-53-

இது போன்ற கல்யாணக் குணக்கடலான என்னை –
காப்பாற்றும் பொறுப்பை என்னிடத்தில் வைத்துக் இனி அவ் விஷயத்தில் சிந்தை அற்றவனாய் -ஐயம் தீர்ந்து சந்தோஷத்துடன் சரணாகதியைக் குறிப்பிடும் அஞ்சலி முத்திரையுடன் என்னையே பரம ப்ராப்யமான எண்ணின நீ

(பகவானுக்கு அபய முத்ரா முத்ரிதம் -நமக்கு அஞ்சலி முத்ரா முத்ரிதம்-ஸக்ருதேவ -தவாஸ்மி -உனக்கு உரியேனான என்னை-கைவிடாமல் அடியார்க்கு ஆட்க்கொண்டு அருளுவதே பாராயணம் )

பூர்வ உத்தர ஆராப்தா கௌக விபாகேன விசேஷிதாத்
நிரஸ்த சங்க்யாத் துர் மோசாத் நிகிலாத் பாப சஞ்சயாத்
-54-

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்னுமா போலே செய்த பிழைகளும் இனிச் செய்யப் போகுமவையும் -தற்போது பயனை அனுபவிக்குமவையுமாக வகை செய்யப்பட்ட எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து

(அக ஒக-பாபக் கூட்டங்கள் –ஸர்வ பாபேப்யோ-பூர்வ -ப்ராரப்தம் -ஆரப்தம் அநாரப்தம் இரண்டு வகைகள் –வர்த்தமான சரீர ஆரப்தம் -சரீராந்தர ஆரப்தம் -இவை பூர்வாகங்கள்–ஆர்த்த ப்ரபன்னனுக்கு மட்டுமே இந்த சரீர ஆராப்த கர்மங்களையும் போக்கி உடனே பேற்றை அளித்து அருளுகிறவன் -ப்ராப்தி ரோதகம்-பேற்றுக்குத் தடைகள் -உபாயாந்தர நிஷ்டனுக்கு பல பல சரீரங்கள் கழித்தே போக்கி -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீராவஸானத்தில் பேற்றை அளித்து அருளுகிறான் –பிரகிருதி சம்பந்தம் வாசாநா ருசிகளால் உத்தராகங்கள்-ஒன்றுமே செய்யாதவன் உத்தமன் -பண்ணி பச்சாதாபம் செய்து பிராய்சசித்தம் செய்பவன் மத்யமான் -அதமன் இவை இல்லாதவன் -லகுதண்டம் இவனுக்கு உண்டாம் -சரணாகதி செய்யாதவனுக்கு குரு தண்டனை உண்டாம் -)

முக்தமேவ கரிஷ்யாமி ஸங்கல்பா தேவ மாமகாத்
கதம் லபேதா வஸ்தானம் தமஸ் சமுதிதே ரவவ் –55

எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து வீண் போகாத என் சங்கபத்தனால் விடுவித்து அருளுவேன் -கதிரவன் குண திசைச் சிகரம் வந்தடைந்த பின்பு இருள் எப்படிப் நிலைத்திருக்கும் –

(புண்ய பாப ஈஸ்வர ப்ரீதி கோப-இவை அத்ருஷ்டம் -நாம் அறியாமல் -சங்கல்ப லேசத்தாலேயே போக்கி அருளுகிறான் -ஏவ -நீயும் வேண்டாமே நான்முகன் வேண்டாமே -தன்னடையே போகுமே)

தஸ்மாத் உபாய சாத்யத்வ துஷ் கரத்வ விசேஷத
பல ஸித்தேர் விலம்பாச் ச ந சோகம் கர்த்தும் அர்ஹஸி –56

ஆகையால் கர்ம ஞானனாய் முதலான உபாயங்களைப் பற்றுமதால் மட்டுமே மோக்ஷம் என்றோ அவைகளை முழுமையாக நான் கடைப்பிடிக்க முடியவில்லையே என்றோ பயனாகிய மோக்ஷம் காலதாமதமாக எப்போது கிடைக்குமோ என்றோ நீ வருந்தத் தக்கது அன்று-

(ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய் உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே)

பகவான் விரும்பிய உபாயம் சரணாகதியே

இத்தம் பார்த்தம் சமுத்திஸ்ய விதாநாத் சரம உதிதாத்
பவதோ பஹு மந்தவ்யாம் ப்ரபத்திம் அநு சந்ததே —
57-

இவ்வாறாக அர்ஜுனனைக் குறித்து சரம ஸ்லோகத்தில் அறுதியிடப்பட்ட பிரபத்தி எனப்படும் சரணாகதியை நீயே விதித்தமையால் உனக்கும் அதுவே அபிமதமான விஷயம் என்று எண்ணி இருக்கிறேன் –

(மந்த்ர ரஹஸ்யம் வேத-ஸாஸ்த்ர ருசி- பரிக்ருஹீதம் -ஞானத்தில் பேறு -மந்த்ர ரத்னம் த்வயம் பிராட்டியாலே பேறு -ஆச்சார்ய ருசி- ரிக்ருஹீதம் -சரம ஸ்லோகம் -அவனாலே பேறு -ஈஸ்வர ருசி-பரிக்ருஹீதம்-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க -ஸ்வ தந்த்ர பிரபத்தி ரஹஸ்ய த்ரயார்த்தம் -)

(ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |
பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
||-4-
உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.
ஓம் பார்த்தாயா ப்ரதி போதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம்
வ்யாஸேந க்ரதிதாம் புராண முநிநா மத்யே மஹா பாரதம்
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்ட தச அத்யாயிநீம் அம்ப
த்வாம் அநு சந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிணீம்-

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.)

ஏதா வந்தம் ஸதா த்யானம் இத்தம் மாம் க்ருபயா நயன்
சேஷாத்வலேச நயனம் க்ருபயா குரு மாதவ
-58-

இவ்வாறு சம்சாரம் என்னும் கொடிய காட்டில் வழி திகைத்துத் தவிர்த்து உனது கருணைக்கடல் நல் வழி அடையச் செய்த ஓ திரு மா மகள் கேள்வனே -எஞ்சிய தூரமும் அந்த நல்ல வழியிலேயே நடக்குமாறு அருளாய்

(எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-)

த்வத் ஸ்வரூப குணாகார விபூதியில் விஷயாம் மதிம்
விஸதீ க்ருத்ய தாமேவ பக்தி ரூபாம் குருஷ்வ மே –59-

ஞான ஆனந்தங்களுடன் கூடிய உன் ஆத்ம ஸ்வரூபன் -அவ்வாத்மாவுக்கே உரித்தான ஞான பல ஐஸ்வர்யம் தயா வாத்சல்யம் முதலான குணங்கள் திருமேனிக்கு உண்டான சவுந்தர்யம் முதலான குணங்கள் திவ்ய மங்கள விக்ரஹம் அத்திருமேனியாய் விளங்குகிற நித்ய லீலா விபூதிகள்-இவை அனைத்தையுமே குறிக்கும் ஞானமும் தெளிவாகப் பெற்று அன்புடன் கூடிய கைங்கர்ய ரூபமான அந்த ஞானத்தையே அடியேனுக்கு த்ருடமாக அளித்தருள வேணும்

(விஸதீ க்ருத்ய-ஞானம் -விஞ்ஞானம் -அறிந்து அறிந்து தேறித் தேறி -யாதாத்ம்ய -)

பரபக்திம் பரஞ்ஞானம் பரமாம் பக்தி ஸம் பதம்
ஆவிஷ்குரு மமாத்யர்த்தம் ஆத்ம தர்மத்வ யோகத–60-

பரபக்தி பரஞ்ஞானம் மேலான பரமபக்தி ஆகிய இவை எனது ஆத்மாவுக்கு உரித்தான தர்மங்களாகையாலே அஞ்ஞானத்தாலே மறைக்கப்பட்டு இருக்கும் அவைகளை எனக்கு வெளிப்படையாக சாஷாத்காரித்து அருள வேணும் –

(சேஷத்வமாகவும் பாரதந்தர்யமும்-உள்ளிதழ் -வெளிப்பட்டு அவன் ஆனந்தத்துக்காகக் கைங்கர்யம் -பரபக்தி பரஞானம் பரமபக்தி அடியாகவே -அனுபவ ஜெனித ப்ரீதிகாரிக கைங்கர்யம் -)

பூர்வாகம் உத்தராகம் ச சமாராப்த மகம் ததா
த்வத் ப்ராப்திரோதகம் க்ருத்ஸ்னம் நிச்சேஷம் பரிஹாரய–61-

முன்பு செய்யப்பட்டு இனிமேல் பயன் அனுபவிக்கும்படியான பாபங்கள் -இப் பிறவியில் இனி மேல் வரும் பாபங்கள் அவ்வாறே தற்போது பயன்களை அனுபவிக்கத் தொடங்கியதாக பாபங்கள் -உன்னை அடைவதற்குத் தடையான இருக்கும் இது போன்று எல்லாமே பாபங்களில் கூட்டங்களை அவற்றின் ருசி வாசனைகள் இல்லாததாய் நீக்கி அருள வேணும் –

(த்வத் ப்ராப்தி ரோதகம் -அடைய தசைகள் -அதிகாரிகள் தோறும் மாறுபடும் அன்றோ -ஆர்த்த ப்ரபன்னனுக்கு அனைத்துமே போக்கி உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு அருளுகிறான் -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீர அவசானத்தில் பேறு –உபாசகனனுக்கு சரீராந்தர அவசானத்தில் பேறு -)

சரீரே தார புத்ராதவ் தந ஷேத்ராதிகே ததா
சங்கம் துர் மோசமதிகம் ஸஹ ஸைவ விநாசய –62-

பாபச் செயல்களுக்குப் புகலிடமான இந்த ஸரீரத்திலும் மனைவி மக்களிடத்திலும் அவ்வாறே செல்வம் வீடு முதலானவற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாததான த்ருடமான மமகார ரூபமான பாசத்தை தாமதமின்றி அகற்றி அருள வேணும் –

(ஸக்ருத் ஏவ-சடக்கென -கூரத்தாழ்வான் நிர்வாகம்)

த்வத் குண அனுபாவாஸ்வாத ரஸிகேஷு மஹாத்மஸூ
த்வதீயேஷு பரம் ப்ரேம த்வமேவ பரிவர்த்தய –63-

உனது கல்யாண குணங்களை அனுபவிப்பதாக அமுத பானத்தை ரசித்து ருசித்தவர்களான உன் பக்தர்களான பெரியோர்கள் இடத்தில் மிகுந்த அநுராகத்தை அடியேனுக்கு வளரும்படி அருள வேணும் –

த்வயார்த்த கத வாக் சித்தம் தாயைஸ் த்ரிபிரநா குலம்
யாவச் சரீர பாதம் மாம் குருஷ்வ த்வம் த்வதந்திகே –64-

த்வய மந்திரப் பொருளில் எனது மனமும் வாக்கும் ஊன்றி இருப்பதால் ஆத்யாத்மிகம் ஆதிபவ்திகம் ஆதி தெய்விகம் என்கிற மூன்று வகைப்பட்ட துன்பங்களால் தாக்கப் படாதவனாக என்னையே இந்தச் சரீரம் போமளவும் உனக்குக் கிட்டி இருக்குமாறு அருள வேணும்
ஆத்யாத்மிகம்-உடலைப் பற்றி வருகிற கர்ப்பவாசம் போல்வன
ஆதி பவ்திகம் -பஞ்ச பூதங்களால் உண்டாகும் குளிர்ச்சி வெப்பம் முதலியன
ஆதிதைவிகம் -தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை போல்வன

யோ அசவ் த்வயைவ தத்தோமே வ்யவஸாயோ மஹோதய
குருஷ்வ நிச்சல மமும் யாவது ப்ராப்த்யனு வர்தினம் –65-

எம்பெருமானே ரக்ஷகன் என்னும்படியான நன்மை பயக்கக் கூடிய விஸ்வாஸமானது உன்னாலேயே எனக்கு அருளப்பட்டது -அந்த திருட விஸ்வாஸம் நிலை யற்றுப் போகாமல் உன்னை அடையும் வரை தொடரும் படியாக செய்தருள வேணும் –

ததோ தேஹா வஸாநே ச த்யக்த ஸர்வேதர ஸ்ப்ருஹ
த்வாமேவ ப்ரதிபுத்தஸ் ஸந் பஸ்யேயம் பகவந் நஹம் –66-

ஸ்வாமி மேல் ஸ்லோகத்தில் குறிப்பிட்ட அந்த திருட விஸ்வாஸத்துடன் இந்த சரீரம் நீங்கும் தருணத்தில் அனைத்தும் ஆசைகளும் துறந்தவனாய் நான் தத்வ ஞானத்தைத் தெளிவாகப் பெற்றவனாய் உன்னையே காணப் பெறலாவேன்

(கத்ய த்ரயத்தில் இவற்றையே ஸ்வாமிகள் படிப் படியாக வேண்டிக் கொண்டு அருளுகிறார்-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -மூன்றும் -ஆழ்வார் -இங்கும் கத்யத்ரயத்திலும் பொல்லா ஒழுக்கும் பொய் நின்ற ஞானமும் அழுக்கு உடம்பும் -என்ற வரிசைகள்-உபதேச அனுஷ்டான க்ரமங்கள் மாறி இருக்குமே )

(தேஹ இந்திரிய ஸூஷ்ம ரூப இந்திரிய ரூபமான ப்ரக்ருதி போக்கி அருள மேல் பிரார்த்தனை -)

பிராகிருத சரீரத்திருந்து என்னை வெளியேற்றுமாறு பிரார்த்தனை –

அவ்யக்த புத்த்யஹங்கார ஞான கர்ம அக்ஷ மாநஸை
ஸதந் மாத்ர மஹா பூதை பரிகல்பித மாதித–67-

மூலப்ப்ரக்ருதி மஹத் தத்வம் ஸாத்விக ராஜஸ தாமஸ அஹங்காரங்கள் ஞான கர்ம இந்திரியங்கள் மனஸ் தன்மாத்திரைகள் எனப்படும் பூத ஸூஷ்மங்கள் கூடியதான பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட

(அத்யாவசாய ஜனகம் மஹத் தத்வம் புத்தி உறுதி எடுக்கும் -சாத்விக அஹங்காரத்தில் இருந்தது 11 இந்திரியங்கள் -தாமச அகங்காரத்தை பூதாதி என்பர் -இவற்றில் இருந்து தன்மாத்ரை -அது மாத்ரம் -குணங்கல் மட்டுமே -பூதங்களாக விரிவடையாமல் இருக்கும் -ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் உதவும் -பிறவிகள் தோறும் ஸூஷ்ம இந்திரியங்கள் பதிவுடன் இருக்குமே -)

சர்மாஸ் ருங்மாம்ஸமே தோஸ்தி மஜ்ஜா சுக்லாதி ஸம் யுக்தம்
ததா மூத்ர புருஷாதி பூர்ணம் நித்ய ஜூகுப் ஸிதம் –68-

பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட தோல் ரத்தம் சதை தசை எலும்பு எலும்புகளில் உள்ளிருக்கும் மஜ்ஜை வீர்யம் ஆகியவற்றோடு கூடினதாய் மற்றும் மல மூத்ரங்களான அழுக்குகளைக் கொண்டதாய் எப்போதும் சகிக்க முடியாததான

இதம் சரீரம் துக்கைக நிதானம் பரிஹார்ய ச
நாட்யா சதாதிசாயிந்யா மாம் நிர் கமய தேஹத–69-

அனைத்து இன்னல்களுக்கும் காரணமான இச்சரீரத்தில் இருந்து எனக்கு விடுதலை அழித்து 101 வது நாடி -மூர்த்தந்ய நாடி -மூலமாக இச் சரீரத்தில் இருந்து என்னை வெளியேறச் செய்து அருள வேண்டுகிறேன் –

சரீர தோஷங்கள் அறிந்தால் தானே ஆத்ம பரமாத்ம வைலக்ஷண்யம் உணர்ந்து -சரீரம் இருக்கவே கர்மங்களைச் சேர்க்கிறோம் – பகவத் திருமேனியை உணர்ந்து இவற்றில் ஆசையை விட்டு அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யங்களை ஏவிப்பணி கொள்ளப் பிரார்த்தித்து பெற்று அவனை ஆனந்திப்பித்து நாமம் ஆனந்தம் பெறுவோம்(மோக்ஷ மார்க்கம் -ஸ்வர்க்க நரக மீண்டும் ஸம்ஸார -ஆகிய நாலுக்கும் தேகத்தில் இருந்து வெளியே புறப்படும் ஆத்மா -சம்சார சாகரத்தில் துக்கப்பட்டு -சுகத்துடன் தொடங்கினாலும் துக்கத்துடன் முடியும் -பரப்ரஹ்ம அனுபவம் ஒன்றே தான் துக்கமே கலசாத இன்பம் -அவற்றை முன்னோட்டமாக இங்கேயே காட்டி அருளி -அதில் பிராவண்யம் அடைய வைக்க அருளி -அபவர்க்க ரசம் அறிந்து இருந்தாலும் ஸம்ஸார துக்கம் பட்டே உணர்கிறோம் -வாக் மனஸ் -எல்லா இந்த்ரியங்களுடன் கூடிய பிராணன் -தேஜஸ் -ஐந்துக்கும் உபலக்ஷணம் -ஆத்மாவுடன் ஸூஷ்மமாகவே சேரும் -ஏவமேவம் -பரமாத்மாவுடன் சேர்கிறான் -ஸூஷ்ம சரீரத்துடன் சென்று விரஜையில் குளித்து -ருசி வாசனைகள் கழித்து – பேறு — இந்த பேரின்பம் ஆசை யுடையவன் இருக்கும் இடமே திவ்ய க்ஷேத்ரம் -ஞானிகள் அத்யந்த ப்ரிய தமர் -அவனும் ஆசைப்படுவான் -வராஹ சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி மத் பக்தம் -நயாமி பரமாம் கதிம் -ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -)

சரம ஸ்லோக விவரணம் முற்றிற்று

———

அர்ச்சிராதி மார்க்க நிரூபணம்

வஹ்ந்யஹச் சுக்ல பஷோ தகய நாப்தாநிலாஸ்ரயாத்
மார்க்காத் தவ்ஸ் ஸத் க்ருதோ கத்வா பித்வா ஸூர் யஸ்ய மண்டலம் —
70-

வஹ்நி எனப்படும் அர்ச்சிர் லோகம் பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் வாயு ஆகிய பிரதேசங்களை உடையதான அர்ச்சிராதி மார்க்கத்தில் அந்தந்த பிரதேசங்களின் அதிபதிகளால் பூஜிக்கப் படுமவனாய் -அவ்வழியாக ஸூர்ய மண்டலத்தை அடைந்து

சந்திர வித்யுஜ்ஜலே சேந்த்ர ப்ரஜாபதி ஸூபூஜிதா
அண்ட மாவ்ருதி பேதாம்ச் ச வ்யதிவத்ர்ய தசோத் தராந் –7
1-

சந்திரன் வித்யுல்லோக அதிபதியான வருணன் இந்திரன் நான்முகன் இவர்களால் அவ்வவ் உலகங்களில் பூஜிக்கப்படுமவனாய் ப்ரஹ்மாண்டத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக பல்வேறு ஆவரணங்களைக் கடந்து

(ஆதி வாஹிகர் -கூட்டிப்போய் -அமானவன் -வித்யுல்லோக அபிமானியே இவன் என்பர் -ஸமஸ்த கார்ய காரணங்களைக் கடந்து -அபுனராவ்ருத்தி மோக்ஷம் அடைகிறான் -)

அத ஸம்க்யா விஹீநம் தத் அவ்யக்த மதி வர்த்தயன்
விரஜா மம்ருதா காராம் மாம் ப்ராப்ய மஹா நதீம் —
72-

கீழே எண்ணற்ற பரிமாணங்களை யுடைய அந்த மூல ப்ரக்ருதி முழுவதையும் கடந்தவனாய் அழிவற்ற ஸ்வரூபத்தை யுடையதான அல்லது இனிமையான நீரையுடைய விரஜை என்னும் மஹா நதி அருகில் என்னை அடையும்படியாகச் செய்து அருள வேணும் –

(அவாந்தர பிரளயம் -கீழ் ஏழு லோகங்களும் மேல் மூன்றும் அழியும் -அர்ச்சிராதி -12 லோகங்களைத் தாண்டி -சில உபநிஷத்துக்கள் சிலவற்றை விட்டுச் சொல்லும் -அனைத்துக்கும் ஒருங்க விட்டு -சர்வ வேதாந்த சாகை நியாயம் – சத்ய லோகம் தாண்டி -ஆமோத பிரமோத சம்மோத ஸாந்தானிக லோகங்களைத் தாண்டி -விரஜை நீராடி -பேற்றை அடைகிறோம் -தெளி விசும்பு திரு மாடு -மாக வைகுந்தம் -அபராஜிதா -அயோத்யா -பர்யாயம்-தமஸ பரமோ தாதா -ஸாஸ்வத -த்ருவ -அயர்வரும் அம்பரங்கள் அதிபதி-நிறை கதிரோன் கீண்டு புக்கு -ஆராவமுதம் அங்கு எய்தி -)

(முக்தாத்மா ஸ்வரூப ஆவிர்பாவம் -இதுவே இயற்கை –சமத்துவம் -இங்கே பரமாத்மாவின் சரீரம் என்றும் உணர்வது -கர்மங்கள் கழிந்து -மாணிக்கத்தின் சேற்றைக் கழுவி இயற்கையான ஒளி பிரகாசிப்பது போல் -கிணறு வெட்ட வெட்ட கீழ் உள்ள நீர் போல் -ஹேய குண த்வம்சமான பின்பு இருக்கும் கல்யாண குணங்கள் பிராகாசிக்கும் -)

—–

ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேணும் என்னும் பிரார்த்தனை

க்ருத்வா ஸூஷ்ம சரீரஸ்ய சிர சக்தஸ்ய தூநநம்
தஸ்மாத்ராஹு விநிர் முக்த சந்திர ஸந்நிப முஜ்ஜ்வலம்
–73-

அநாதியாக தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களால் வடிவு கொண்ட ஸூஷ்ம சரீரத்தின் தொடர்பு அறுக்கப்பட்ட காரணத்தைக் கிரஹண சமயத்தில் ராஹுவால் விடுவிக்கப்பட்ட சந்திரனுக்கு ஒப்பான காந்தியை யுடையனாய்

தாம் நதீம் மநஸா தீத்ய வைத்யுதே நாநு கச்சதா
அமாந வேந ஸஹிதம் மாம் விபூதிம் பராந்நய–74-

அந்தப் விரஜா நதியை ஸங்கல்ப மாத்ரத்தால் கடந்து பின்தொடர்ந்து வருகிற வித்யுன் மண்டல அபிமானியான திவ்ய புருஷனுடன்-அமானவன் -இருக்கும் என்னை ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் திவ்ய தாமத்தில் சேர்க்க வேண்டுகிறேன் –

(மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் )

(இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி)

(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே-பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே
ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:-அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே-தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யேதி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந,ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *)

——

ஸ்வரூப ஆவிர்பாவம் -இயல்பான குணங்கள் -தோன்றும்படி அருளிச் செய்ய பிரார்த்தனை

தத்ர ஸ்வாபாவிக ஆகாராந் அவ போதிகாந் குணாந்
அநந்தாந பரிச்சின்னாந் அசங்க்யாந்மே ப்ரகாசய
–75-

அந்தப் பரம பதத்தில் எனக்கு இயல்பாக இருக்கக் கூடியதாய் அழிவில்லாதவையாய் அளவுபட்டு இல்லாததாய் கணக்கற்றவையான ஞானம் முதலான கல்யாண குணங்கள் தோன்றுமாறு செய்து அருள வேண்டுகிறேன்(அத்ர -இவ்வுலக இருப்பு தாண்டி தத்ர-அங்கு) –

(சாமீப்யம் சாலோக்யம் சாரூப்யம் சாயுஜ்யம் ஸாம்யாபத்தி)

—–

பஞ்ச உபநிஷத் மயமான உருவத்தை அருள பிரார்த்தனை

ததஸ்த்வ ப்ராக்ருதம் திவ்யம் ஸூத்த ஸத்வ ப்ரகாசகம்
பஞ்ச உபநிஷத் ஆகார விக்ரஹம் ஸூ மநோ ஹரம் —
76-

இனி ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு இருப்பிடமாய் ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் நித்யம் பிரகாசிப்பதாய் -ஸத்வ குணத்தை மட்டுமே வளர்ப்பிக்கவல்ல -மிகவும் அழகுடன் திகழ்வதான பஞ்ச உபநிஷத் எனப்படும் பஞ்ச சக்தி மயமான திவ்யமான திருமேனியை எனக்குக் கொடுத்தருளி உனது உத்தமமான பரிமளம் வீசும் ஒளியை பிரவேசிப்பித்து

ப்ராப்பய திவ்யா மோதந்தே பரம் தேஜ ப்ரவேஸ்ய ச
ஸ்வ ஸ்வரூபாதி நிஷ்பத்த்யா லப்த ஸாம்யம் ச மாம் குரு –
-77-

எனக்கு இயல்பாக எட்டு குணங்களை மறுபடியும் தோற்றுவித்து என்னை உன்னுடன் முழுமையாக ஒத்திருக்கும் தன்மையை உடையனாய்ச் செய்து அருள வேண்டும்
அஷ்ட குணங்கள் அபஹத பாப்மாதி -கர்மங்களுக்கு வசப்படாமை-விஜரக -மூப்பின்மை -வருத்தமின்மை -பசியின்மை -தாக்கமின்மை -ஸத்ய காம -பொய்த்து உரிய அழிவற்ற வஸ்துக்களை யுடைமை -ஸத்ய ஸங்கல்ப-நினைத்ததை முடிக்க வல்லமை -பாபமற்றவன் (அபஹத பாப்மா) கிழத்தன்மை இல்லாதவன் (விஜரக) இறப்பில்லாதவன் (விமிருத்யுகு) சோகமில்லாதவன் (விசோகக) (விஜிகத்சக) பசி தாகமற்றவன் (அபிபாசக) நித்திய பொருள்களின் மேல் ஆசை கொண்டவன் (சத்ய காமக) (சத்ய சங்கல்பக) முதலிய எட்டு 

ததச் சைரம் மதீ யாக்யே தடா கேச்வத்த மூலத
திவ்ய அப்சரோ கணை பஞ்ச சதா சங்க்யா ஸமன்விதை –7
8-

மாலா சூர்ண அஞ்சன ஷவ்ம பூஷா ஹஸ்தை ரூபஸ் திதம்
ப்ரஹ்ம அலங்கார ரூபேண சாதரம் சமலங்க்ருதம் –79-

பிறகு ஜரம்மதஹ்ரத-என்னும் பொய்கைக் கரையில் அமைந்துள்ள அஸ்வத் மரத்தின் நிழலிலே (நாளை என்பதே இல்லை -அனைத்தும் ஒன்றே -அஸ்வத் மரம் -)நூற்றுக்கணக்கான பூ மாலைகள் நறுமணம் கமழும் சூர்ணங்கள் சந்தனம் முதலான த்ரவ்யங்கள் பட்டாடைகள் மற்றுமோர் பல்வேறு ரத்ன ஆபரணங்களை கையிலே ஏந்தியவர்களாய் (பரவரா குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் )ஒளி மிக சவுந்தர்யத்தை யுடைய அப்ஸரஸ்ஸுக்களின் திரளால் சேவை செய்யப்படடவனாய்

(அரசமரத்தடியில் பரகாலனுக்கு திருமந்திர உபதேசம் -மகிழ மரத்தடியில் தீர்க்க சரணாகதி த்வயார்த்தம் பராங்குசருக்கு அருளியது போல்)

அப்யுத்தா நார்த்த மாயதை திவ்ய ஜாநபதைஸ் ஸூரை
சங்க சஸ் ஸம வேதைச் ச ஸத் க்ருதம் ஸம்பமாகுலை
–80-

ஸம்ஸார நிரயாதேவம் உத்தாப்ய கருணா நிதே
த்வம் மாம் கமய தேவேச தத் விஷ்ணோ பரமம் பதம் –81-

எதிர் கோட் வரவேற்பதற்காக திரள் திரளாக பரமபதத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்த நித்ய ஸூரிகளால் ஆச்சார்ய பாவித்துடன் சத்கரிக்கப் படுமவனான என்னையே -ஸம்ஸாரம் என்னும் நரகத்திலிருந்து இவ்வாறு கரையேற்றிய ஓ கருணைக்கடலே தேவர்களுக்கும் தேவனே -ஓ நாராயணா அந்த பரமபதத்தில் நீயே சேர்த்து அருள வேணும் –

(திருவல்லவாழ் கோனாரை அடியேன் அடி சூடுவது எந்நாளே –த்வாம் மாம் –ஸ்ரீ வைகுண்டே பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் பக்தைஸ் பாகவத ஸஹ -மேல் வர்ணனை-அயோத்யா அபராஜிதா ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ விஷ்ணோ பரமபதம் -பர்யாயம் )

—–

ஸ்ரீ வைகுண்ட புரம் -ஸ்ரீ அயோத்யா நகர வர்ணனை

ததஸ் ஸூரி ஜநைஸ் ஸர்வை வைகுண்ட புர வாஸிபிர்
ராஜ மார்க்க கதம் லாஜ புஷ்ப வ்ருஷ்ட்யாதி தோஷிதம் –82-

பிறகு வைகுண்ட வாசிகளான அனைத்து நித்ய ஸூரிகளால் தான்யங்கள் புஷ்பங்கள் தூவப்பட்டு மகிழ்விக்கப் பட்டவனாய் ப்ரதானமான ராஜவீதியிலே நுழைந்தவனாய்

(வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-)

த்ருஷ்ட்வா ப்ரணம்ய சோத்தாய வைகுண்ட த்வார கோபுரம்
அந்த ப்ரவிஷ்டம் பஸ் யந்தம் தாம திவ்ய மிதஸ் தத–83-

வைகுண்ட நகரத்தின் சிறந்த முகத்வார கோபுரங்களைக் கண்டு தொழுது எழுந்து நகரத்துள் நுழைந்தவனாய் -ஜ்வலிக்கின்ற மாளிகைகளை அங்குமிங்கும் கண்டவனாய் -உனது சேஷபூதனான என்னை-

அத மண்டப ரத்னம் தத் ஆனந்த பரிபூரிதம்
மஹா வகாசம் மாணிக்ய ஸ்தம்ப ஸாஹஸ்ர சோபிதம் –84-

அதற்கு மேல் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் மிக்க விசாலமானதாய் ஆயிரக் கணக்கான மாணிக்கக் கம்பங்கள் பொருந்தி பிரகாசிக்கிறதாய் அந்த உத்தமமான மண்டலத்தில்

ஆரோப்ய ஸூரி பரிஷதந்தர்பாவ மஹா தயம்
கமய த்வம் த்வதீயம் மாம் க்ருத்த க்ருத்யஸ் ஸூகீ பவந் –85-

அந்த உத்தமமான மண்டலத்தில் ஏற்றி வைத்துக் செய்ய வேண்டியத்தைச் செய்து முடித்தவன் போல் மகிழும் நீ நித்ய ஸூரிகளின் திரளில் சேரும் சிறந்த அதிஷ்டத்தை அடியேனுக்கு அளித்தருள வேண்டும் –

(அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை பாரித்தது கிட்டியதே-அடியார் மூலமும் அவனைப் பற்றி அவன் மூலம் அடியார் குழாங்களுடன் சேர்ந்து அனுபவிப்போம் -ஆதியும் அந்தமும் ஒன்றே -செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யர்-ததா ராம விஜ்வர பிரமோத ஹா-தேவரீர் கிருஷி அடியேனிடம் பலிக்க வேண்டும்-)

தத்ர சாதார சக்த்யாதி க்ரமேண பரிகல்பிதே
தர்மாத்யை ஸூரிபிஸ் தத் தத் பாத காத்ர மயாத்மகை –86-

அந்த மணி மயமான மண்டபத்தில் ஆதார சக்தி சித் சக்தி சதாசிவ சக்தி என்னும் முறையில் மூன்று சக்திகளுடன் கூடிய அந்தந்த பீடங்களின் -ஆசனங்களின் -கால்களாகவும் மற்றும் வேறு பாகங்களாகவும் பரிணமித்த

(கூர்ம பீடம் -கூர்மாசனம் -அதுக்கு மேல் தர்மாதி பீடம் -தர்ம ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் -பாதங்கள் -உடலாக அதர்மம் அஞ்ஞானம் அவைராக்யம் -அனஸ்வர்யம் -வ்ருத்த விபூதிமான்)

நிர்மிதே நிர்மலே பீடே நாநா ரத்ன சமன்விதே
ஸூபாஸ் தரண ஸம் யுக்தே ஸூந்தரே அதி மநோ ஹரே –
-87-

தர்ம ஞான முதலான பேர் கொண்ட எண்மரான -தர்ம -ஞான -வைராக்ய -ஐஸ்வர்ய-அதர்ம -அஞ்ஞான -அவைராக்ய -அனைஸ்வர்யம்-அதிஷ்டான தேவதைகளால் நிர்மிக்கப்பட்ட நிர்மலமான பல ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் மேல் பவித்ரமான கம்பளத்துடன் கூடியதாய் அழகாயத் தோற்றுவதாய் மனம் கவருவதாய்

விகசத்தன ஸாஹஸ புண்டரீ காஸ்த்ரு தோத்தரே
தத் கர்ணி கோபரி தலே தப்த சாமீ கரோஜ்வலே —
88-

அநந்த போகி பர்யங்கே விமலே விஸ்த்ரு தோச்ர்ச்சிதே
பணா ஸஹஸ்ர மாணிக்ய ப்ரபா சித்ர விதாநகே –
-89-

ஆயிரம் இதழ்கள் கொண்ட வெண் தாமரை மலர்வது போல் சுட்டுரைத்த நன் பொன் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிற அந்த தாமரையின் நடுவிலே இருந்து கர்ணிகா எனப்படும் பசுமையான மஞ்சள் நிறத்தில் மிளிரும் மலரின் மொட்டுக்களை யுடைய அப்பழுக்கு அற்றதாய் பரந்து விரிந்ததாய் -மேன்மையான ஆயிரம் பணங்களில் உள்ள ஒளி வீச்சை விதானமாக வுடைய ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-)

ஆஸீநம் அகிலஸ் யாஸ்ய ஸ்வாமிந்யா ஜகதஸ் ஸ்வயம்
தேவ்யா த்வதந பாயிந்யா ஸ்ரியா பூம்யா ச நீளயா –
-90-

ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே இவ்வுலகம் அனைத்துக்கும் பட்ட மஹிஷியாய் உன்னை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரியாதே இருக்கும்படியான பூஜிக்கத்தக்க திருமகளோடே வீற்று இருப்பவனாய் -பூமி நீளா தேவிமார்களுடன் உடன் இருப்பவனாய் —

ஸமேதம் ஸச்சிதாநந்தம் சாந்தோதித தசாத்மகம்
ஸந் மங்கள குணா வாஸம் ஸதைகாகார விக்ரஹம் –91-

சாந்தோதிதம் என்கிற அலையற்ற கடல் போன்ற ஸ்வரூபம் உடையவனாய் -ஞான ஆனந்தம் முதலான அனைத்தும் நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவனாய் -எப்பொழுதும் ஒரே விதமான -வளர்வது தேய்வது முதலான பரிணாமங்கள் இல்லாத -திவ்ய திருமேனியை உடையவனாய் –

(நித்யோதித ஸ்வரூப த்யானம் -சாந்தோதித குண த்யானம்)

லாவண்ய காந்தி மதிம யவ்வநாதி குணோ ததிம்
விஸ்வாதி ராஜ்ய பிசுந கிரீட சிகரோ மகுடோ ச்ச்ரிதம் —
92-

லாவண்யம் எனப்படும் சமுதாய சோபையும் மென்மை மற்றும் இளமை முதலான குணங்களுக்குக் கடல் போன்றவனாய் -அனைத்து உலகங்களுக்கும் இவனே ஸார்வ பவ்மன் என்பதைக் குறிக்கும் கிரீடத்தின் முன் பகுதியை உடையவனாய்

ஸூஸ் நிக்த நீல குடிலை ரலகைர் லலிதாளிகம்
ஸூகி பக்த லலாடாப்திம் ஊர்த்வ புண்ட்ரேண ஸேதுநா
–93-

நிகுநிகுவான தோற்றத்துடன் கறுத்து சுருண்டு வளைந்து நெளிந்து அசைந்தாடும் முடியுடன் கூடி ஒரு நீண்ட பாலம் போன்ற ஊர்த்வ புண்ட்ரத்தால் இரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்பட்ட கடல் போன்ற விசாலமான நெற்றியை உடையவனாய்

(கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-)

ஆகர்ண பாக விஸ்ராம்த புண்டரீ காருணேஷணம்
ருஜு நாஸா முகாதாத நிஜாஸ் யாமோத ஸம்பதம் –94

காதுகள் வரை நீண்ட செந்தாமரை போன்ற அப்பெரியவாய திருக்கண்களை உடையவனாய் -வளைவு சுழி வற்று நீண்ட மூக்கின் நுனியால் தாமரையாய் அலர்ந்த திருமுக மண்டலத்தின் நறுமணத்தை நுகர்பவனாய்

(ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-)

அம்ஸா வலம்பி ரத்நாட்ய கர்ணிகா மகரச்சவிம்
நிரஸ்த நிஸ்த ஸ்து லாபிக்ய தந்த மந்த ஸ்மித உஜ்ஜ்வலம்
–95-

தோள் அளவும் நீண்டு மகர குண்டலங்களால் அலங்கரிக்கப் பட்ட கர்ண பாசங்களை உடையவனாய் -முத்துக்களின் ஒளியை விஞ்சிய பல் வரிசையிலிருந்து வெளியேறும் குளிர்ச்சி மிகு வெண்மையான புன்னகையை உடையவனாய்

(கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகுவிலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியானஒருவன் அடியே னுள்ளானே.)

ஸூகந்தி கோமல ஸ்வாது ப்ரவால சத்ருசாதரம்
பிரபுல்ல கண்ட பலகம் கர்ண பூர்வ பரிஷ்க்ருதம் –
-96-

நறுமணத்துடன் திகழ்வதாய் மென்மை இனிமைகளைக் கொண்டதாய் பவளம் போன்ற சிவந்து அதரங்களை உடையவனாய் -மலர்ந்த புஷ்பங்கள் போன்ற விசாலமான கன்னங்களை உடையவனாய் -கர்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனாய்

(வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-)

பத்ம சந்த்ர அம்ருத சர ப்ரஸ்பர்த்தி முக மண்டலம்
ப்ரூஷோபா லோகிதாலாபை புவனாஹ்லாத காரிணம்
–97-

தாமரை சந்த்ரன் அமுதப்பொய்கை ஆகியவற்றைப் போல் அழகு மிக்கதாக திருமுக மண்டலத்தை உடையவனாய் -திருக்கண்களின் சைகைகளாலும் பார்வைகளாலும் பேச்சாலும் பார்க்குமவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவனாய்

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-)

க்ரைவேய பூஷா விலஸத் கம்பு க்ரீவா விராஜிதம்
உன்னதாம் சமுதாரோர ஸ்புரச்ச்ரீ வத்ஸ கௌஸ்துபம் —
98-

சங்கு போன்ற கழுத்தில் மணிமாலையால் அலங்கரிக்கப் பட்டவனாய் -உயர்ந்த தோள்களை உடையவனாய் -விசால வக்ஷஸ்தலத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீ வத்ஸம் எனப்படுவம் திரு மறுவும் கௌஸ்துப மணியும் யுடையவனாய்

(மல்லாண்ட திருத்தோள்கள் -ஸூந்தர தோளுடையான் -மந்த்ர கடைந்தால் -பிராட்டி ஆலிங்கணத்தால் -அலங்காரத்தால் -விகாசமாகி தோன்றும் – -திருமறு மார்பன் -மண்டோதரி ஸ்ரீ வத்ஸ -நித்ய ஸ்ரீ இரண்டையும் -பிராட்டிக்கு அந்தப்புரமாக திருமறு -புருடன் மணிவரமாக இத்யாதி -)

உதார பீவரோ தக்ர தீர்க்க பாஹு சதுஷ்ட்யம்
ஹார கேயூர கடகைர் அங்குளீ யைச்ச சோபிதம் —
99-

பருத்து விரிந்து நீண்ட நான்கு தோள்களை உடையவனாய் -தங்கத்தாலான ஆபரணங்களாலும் தோள் வளைகளாலும் கரங்களில் அணியும் கங்கணங்களாலும் விரல்களில் அணியும் மோதிரங்களாலும் ஒளி வீசுமவனாய்

(ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் -சர்வ பூஷண பூஷிதாயா -திருவடி -ஐயப்பாடு அறுக்கவும் ஆதரவு பெருக்கவும் அழகு -)

புஜத்வய த்ருதோதக்ர சங்க சக்ர விபாஸிநம்
ஜாநு ப்ரசாரித புஜம் பர்யங்க ந்யஸ்த பாஹுகம் –100-

திண் தோள் மணி வண்ணா என்னும்படியான இரண்டு தோள்களில் சங்கு சக்கரங்களுடன் திகழ்பவனாய் -ஒரு புஜத்தைப் படுக்கையின் மேல் வைத்துக் கொண்டு முழங்கால் அளவும் நீண்ட புஜங்கள் உடையவனாய்

தநு மத்யம் ஜகத்ரஷா நிபத்வ உதர பந்தனம்
நதநாபி ஹ்ருதோத் பூத விதி ஸூதி க்ருஹ அம்புஜம் –101-

மெல்லிய இடையை உடையவனாய் -உலகுக்கு அரணாக இருக்கும் பொருட்டு கட்டப்பட்ட அரை நாண் உடையவனாய் –சதுர் முகனான பிரமனுக்குப் பிறந்த அகம் எனக் குறிப்பிடலாம் படியான ஆழ்ந்த நாபீ கமலத்தை உடையவனாய்

(ரக்ஷண தீக்ஷை -கங்கணமும் -அரை நாண் கயிறும் உதரபந்தமும் -உபநயனத்திலும் கல்யாணத்திலும் தர்ம அனுஷ்டானத்துக்கு கங்கணமும் வயிற்றில் கட்டும் உண்டே நமக்கும்-மௌஞ்சி தாரணம் இடுப்பில் கட்டுவர்)

கடீ நிபத்வ காம்சீகம் கனக உஜ்ஜ்வல வாஸஸம்
ரம்பேப ஹஸ்த கரப காந்தி ஸுவ்ர்யக்ஷ மோருகம் –10
2-

தங்கம் போல் மிளிர்கிற பீதாம்பரத்தை உடையவனாய் -வாழை மரத்தினுடையதும் யானையின் துதிக்கையினுடையதும் உள்ளங்கையின் வெளிப் பாகத்தினுடையதும் சன்னிவேச சோபையை விஞ்சி அழகாயத் திகழும் தொடைகளை உடையவனாய்

ககுத்மத் ககுதாகார ஜாநு த்விதய சோபிதம்
மநோஜ்ஞ ஜங்காத் விதயம் மஹார்ஹ மணி நூபுரம் –103-

எருதைப் போன்றதான –முழங்கால்களை உடையவனாய் –அழகான இரு கணைக் கால்களை உடையவனாய் -விலை மதிப்பற்றதான உயர்ந்த ரத்நங்கள் பதித்த சிலம்புகளை உடையவனாய்

சாரதாம்போஜ சத்ருச சரண த்வந்த்வ ஸூந்தரம்
சரண்யம் ஸர்வ பூதானாம் சதுர்வர்க்க பலப்ரதம் –104-

இளவேனில் காலத்தில் மலர்ந்த தாமரையை போன்ற இரு பாதங்களை உடையவனாய் -(இவ்வாறு திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -91 ஸ்லோகம் தொடங்கி -இது வரை -பற்றிலார் பற்ற நின்றான் -அசரண்ய சரண்யன்-இதுவரை திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -மேல் கல்யாண குண வர்ணனை)-எல்லாப் பிராணிகளையும் காக்கும் தொழிலை யுடையனாய் -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை அளிப்பவனாய்

அபவ்ருஷேய வாசஸாம் அபூமிம் பக்த வத்சலம்
துஷ்ப்ராபம் விதி ருத்ராதயை ஸூப்ரபாம் பக்தி சாலிபிர் –105-

வேத வாக்யங்களுக்கு எட்டாத சீர்மை யுடையவனாய் -பக்த வத்சலனாய் -பிரமன் சிவன் ஆகியோரால் கிட்ட முடியாதவனாய் -களங்கமற்ற பக்தி பாவம் கொண்ட பக்தர்களால் எளிதில் கிட்டுமவனாய்

(பத்துடை அடியவர்க்கு எளியவனாய் பிறருக்குத் அரிய வித்தகனாய்)

சங்க சக்ர கதா கட்க ஸார்ங்காத்யைர் ஆயுதோத்தமை
பரிதம் புருஷகாரரஸ்தான த்ராண தத்பரை–106-

ஆபத்துக்கு இடமில்லாத போதிலும் எம்பெருமானைக் காப்பதில் ஊக்கமுடையவர்களான வீர புருஷர்களாய்த் தோன்றும் கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் -என்ற திவ்ய ஆயுதங்களால் எல்லாப் பக்கங்களிலும் கைங்கர்யங்கள் செய்யப் பட்டவனாய்

(ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவம் -ப்ரஹ்மத்தை ஒன்றாகி லயம் என்னும் அல்லல் எல்லாமே ஒழித்தான் -ப்ரஹ்மணா ஸஹ -கூடச் சேர்ந்து கல்யாண குண அனுபவம் -ப்ரஹ்மம் ஏவம் அல்ல ப்ரஹ்மம் இஹ பவதி)

(பல அத்யாயம் -நான்காவது அத்யாயம் -முதல் இரண்டு பாதங்களால்-வித்யா பலமான பாப அஸ்லேஷ விநாசமும்
உத் க்ரணமும்-கூறப் படுகின்றன
பின் இரண்டு பாதங்களால்-உத் க்ராந்தனான ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்க கமனமும் ப்ரஹ்ம பிராப்தியும்
முறையே பேசப்படுகின்றன –
சஞ்சித கர்மம் அநாரப்தம் -சேமிக்கப்பட்டதில் பலன் கொடுக்க ஆரம்பிக்காமல் -இவை தொலைக்கப்பட்டு -பிராரப்த கர்மங்கள் உபாசநா – வித்யா மஹாத்ம்யத்தால் தொலைத்துக் கொள்ள வேண்டும் –
492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-
இதுவரை பலன் அளிக்கத் தொடங்கா புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –
சர்வ பாப்மாந பிரயந்துதே –
அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று
பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது-
து ஸப்தம் பக்ஷத்தை விலக்குவது
பூர்வே -அநாரப்த கார்யே ஏவ-வித்ய உத்பத்திக்கு முந்திய ப்ராரப்தம் அல்லாத கர்மங்களே நசிக்கின்றன
ஏன் எனில்
ததவதே-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய-என்று வித்யை பூர்த்தியானவனுக்கு உடலை விடும் வரை விளம்பம் உண்டு என்று வேதம் கூறுவதால்
சர்வ கர்மங்களும் அழிந்திட்டால் சரீர ஸ்திதியே ஸம்பவிக்காதே
ஆதலின் சரீரத்தைத் தரிப்பதற்குக் காரணமான பிராரப்த கர்மம் தவிர
மற்ற அபிராரப்த கர்மங்களுக்கே நாசம் என்று தேறிற்று –
அவதார ரஹஸ்யம் அறிந்த உபாசகனுக்கும் அந்தப் பிறவியிலே மோக்ஷம் -அந்திம ஸ்ம்ருதி இவனுக்கும் வேண்டும் – ஜன்மாந்தர கர்மங்கள் தேக மன வியாதிகள் மூலமும் கழிக்கிறான் -)

(லயம் -காரணப்பொருள்கள் காரியப்பொருள்களில் சேர்வது -இந்திரியங்கள் மனசிலும் -மனஸ் ப்ராணனிலும் ஸம்ஸ்லேஷம் இவையும் லயம் -அ விபாக ரூபம் -பிராகிருத லயம் போல் அல்லவே இவை -ஜீவாத்மா பரமாதவிடம் சேர்வது ஐக்யம் அல்லவே -ஸ்வாமி தாஸ்ய பாவனை எப்பொழுதும் இருக்குமே -பிரிந்து தனித்து இருக்கத் தகுதி இல்லை என்று உணர்கிறான் அங்கு தானே -இங்கும் அப்படியே இருந்தாலும் பிரக்ருதியால் மறைக்கப்பட்டு மயங்குகிறான் –நியத பிரகாரம் -சரீரம் அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகாவே இருக்கும் – கர்மாதீனமாக தேஹ சம்ச்லேஷமும் விஸ்லேஷமும் செய்வதால் ஜீவனுக்கும் காரணம் பரமாத்மாவே -மம சாதரம்யம் -ஞான ஆனந்தங்களில் சாம்யம் -கூடி அனுபவம் -ஸஹ ஸ்ருதி -ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -ப்ரஹ்ம ஏவ அல்ல இஹ -அவனைப்போல் ஆகிறான் -சாதரம்ய ஸாம்ய ஸஹ ஸ்ருதிகளை பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும் –
511-அவிபாகோ வசநாத் —4-2-15-
பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -இப்படியே கூறப்பட்டது –
பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர்
உபாதான காரணமாக பர ப்ரஹ்ம் என்பதால்
இது தவறு
லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –
அவசனாத் -என்று இங்கு மறுபடி ஸ்ருஷ்டி பற்றிய வசனம் இல்லாமையால்
விட்டுப் பிரியாமையே ஸம்பத்தி என்று தாத்பர்யம் –
யானே நீ என்னுடைமையும் நீயே -அறிந்த ஆழ்வாருக்கு சூழ் விசும்பில் அந்தப் பேற்றையும் காட்டி அருளி உபதேசிக்க அருளினான் அன்றோ –

அநந்த விஹகாதீச ஸேநேசாத்யைச் ச ஸேவிதம்
கஜாநநாத்யைச் சண்டாத்யை குமுதாத்யைஸ் த்தைவ ச –107-

அனந்த கருட விஷ்வக் சேனர் முதலானோர்களாலும் கைங்கர்யங்கள் செய்யப் பெற்றவனாய் -வேழ முகத்துச் சேவகர்களாலும் அவ்வாறு சண்ட ப்ரசண்ட குமுதாஷர் முதலானோர்களாலும்

(தெற்கு வாசல் –பத்ரன் -ஸூபத்ரன்
வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –
மேற்கு வாசல் -ஜெயன் விஜயன்
கிழக்கு வாசல் -சண்டன் -ப்ர சண்டன்-)

அந்யை பரிஜனைர் நித்யை முக்தைர் போக பராயணை
பரங்குசாத்யைர் பக்தைரப்யா சார்யைஸ் ஸமுபஸ்திதம் –108-

பகவத் கைங்கர்யமே பிரதானமாக யுடைய முக்த புருஷர்களாலும் -நம்மாழ்வார் தொடக்கமான அனைத்து ஆழ்வார்களாலும் ராமாநுஜர் முதலான ஆச்சார்யர்களாலும் மிகுந்த ஆதார அதிசயத்தாலே ஆராதிக்கப் படுமவனாய்

அவாப்த காமம் லோகாநாம் அகிலா நாம தீஸ்வரம்
ஆத்ம அனுபவ ஜாநந்தம் அவாகீ நமநாதரம் –109-

எண்ணிய அனைத்து போகங்களையும் அனுபவிக்கச் செய்பவனாய் -எல்லா உலகங்களுக்கும் நாயகனாய் -தனது சீர்மையை எண்ணி தானே களிப்படைபவனாய் -தன் மிடுக்கின் காரணமாய் எவருக்கும் அடங்காதவனாய் -எவரோடும் உரையாடாதவனாய் –

(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-ப⁴க³வந்தம் உபேத்ய –எம்பெருமானைக் கிட்டி
தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *–திருவநந்தாழ்வான் திருமுடியில் பெரிய பிராட்டியாரோடே கூட இருப்பவனாய்
பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனாய் இருக்கிற அப் பெருமாளை
ஸமஸ்த பரிவார ஸமேதனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு நம -என்று சொல்லி
நெடும் தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே
ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று
ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று
ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்
ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்
ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு
பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு
ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்
ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥
ததோ –ஆத்ம சமர்ப்பண அநந்தரம்
ப⁴க³வதா ஸ்வயமேவ -எம்பெருமான் தானாகவே
ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய -ஆத்ம ஸம் உஜ்ஜீவன ஹேதுவாய்
அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய்
மிக அன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி
ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *ஸ்வீக்ருʼத: –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு
ஸ்வீ கரிக்க
அப்பேறு பெற்றவனாகி
அநுஜ்ஞாதஶ்ச –ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி
அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத -மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக்காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப்பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥
பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்
லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥)

பவந்தம் தத்ர த்ரஷ்ட்வா ச ப்ரணம்ய பவதா ஸ்வயம்
அங்கம் ஆரோபித ப்ரேம்ணா புஜைர் ஆலிங்கிதஸ் ததா –110

இவ்வாறு குறிப்பிட்ட ஏற்றங்களை யுடைய உன்னை -அந்த பரமபதத்தில் கண்டு -தொழுது -உன்னாலேயே சுயமாய் அன்புடன் உன் தொடை மேல் உட்கார வைக்கப்பட்டவனாய் -அவ்வாறே தோள்களை ஆரத்தழுவப் பட்டவனாய்

(கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் -இன்னும் என் செய்வன் என்று ஒருத்தி -மறப்பனோ என் மணியை -மறப்பேன் என்றும் செந்தாமரைக் கண்ணுடன் மறப்பற என்னுள் மன்னினான் தன்னை -மறப்பனோ -)

ஆக்ராதோ மூர்த்திநஸ் ஸ்நேஹம் ஆர்த்ரா லோகாபி வீக்ஷித
ஸ்ருணுயாம் ஸாந்த்வ வாக்யாநி ஸ்ரோத்ரு கர்ண அம்ருதாநி தே –111-

ஸ்நேஹ பாவத்தால் உச்சி நுகரப்பட்டவனாய் குளிர்ந்த கடாக்ஷத்துக்கு இலக்கானவனாய் -கேட்க்குமவர் செவிகளுக்கு அம்ருதம் ஊற்றினால் போல் நீ சொல்லும் தோற்றரவு வார்த்தைகளை எப்பொழுது கேட்கப் பெறுவேனோ அல்லவா-

(கோஸி -கேட்டு -அறிவித்து அருளிய நீ -அஹம் ப்ரஹ்மாஸ்மி -அப்ருதக் ஸித்த பிரகாரம்-கீழ் மா ஸூச இப்பொழுது குருஷ்வ -ஏவிப்பணி கொண்டு அருள வேண்டும் -)

தத ப்ரணம்ய புரத பார்ஸ்வ யோஸ்த்வாம் து ப்ருஷ்டத
பக்தி ரூப ப்ரபோதேன பஸ்யந் ஸஹ விபூதிபி
–112-

ஸர்வத்ர ப்ரஸ்ருதாஹ்லாத ஹடாத் காரேண காரித சோதித
த்வரமாணஸ் ஸதா குர்யாம் கைங்கர்யாண் யகிலாந் யஹம் –113-

இனி மேல் உன்னை நேரிலும் இரு பக்கங்களிலும் பின்புறமும் ப்ரதக்ஷிணமாக வந்து தொழுது பக்தியான திவ்ய ஞான ப்ரபாவத்தினால் அனைத்தும் செல்வங்களுடன் கண்டு கொண்டு எங்கும் பொங்கி வரும் களிப்பின் தாக்கத்தினால் தூண்டப் பட்டவனாய் எப்போதும் த்வரை உடையவனாய் அனைத்து விதமான கைங்கர்யங்களையும் அடியேன் செய்யப் பெறுவேன்

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.)

(பக்தி ரூபாபன்ன ஞானம் -அனைத்து செல்வங்களுடன் கூடிய அவனைப் பார்த்து சேவிக்கப் பெற்றவனாய்முன்னிலும் பின் அழகு பெருமாள் -)

ஏகதா தசதா சைவ சததாத ஸஹஸ்ரதா
அநந்ததா ஸ்வ சங்கல்பாத் ஆத்ம கிங்கர விக்ரஹ–11
4-

ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய்

(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லப் பெற்றேன் -உற்றேன் -உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -திருவடிகளே சாதனமும் பிராப்பியமும் -ஈதே இன்னும் வேண்டுவது எந்தாய் -)

(தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன் விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-
ச யதி பித்ரு லோகே காமோ பவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால்
அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது
சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –
4-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும்
சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும்
சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு
என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-
அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று
ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே)

யதா திவ்யேஷு லோகேஷு ததா த்வத் தயயா ஸ்ருத
இமாந் லோகாந் காம போக காம ரூப்ய நுஸஞ்சரன்
–115-

உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய்

இமாந் லோகாந் காமாந் நீ காம ரூப்ய அநு சஞ்சரன்
ஸோஸ்னுதே சேர்வான் காமாந் ஸஹ

ஸர்வதா தூர வித்வஸ்த துக்க லேஸல வாம்சக
குண அனுபவஜ ப்ரீத்யா குர்யாம் தாஸ்யமசேஷத–116-

ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய் -உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய் -அணு மாத்திரமும் துன்பம் அற்றவனாய் -எப்போதும் உன் ஒவ்வொரு குணத்தையும் ப்ரத்யக்ஷமாய் அனுபவித்ததனால் உண்டாகும் இன்பத்தின் மிகுதியால் பல்வேறு கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

யதா சேஷம் ச கருடம் ஸூமித்ரா தநயம் ததா
குருஷ்வ மாம் அநு சரம் தயயைவ தயா நிதே –117-

கருணைக் கடலே ஆதிசேஷனான திருவனந்த ஆழ்வானையும் வைநதேயனான பெரிய திருவடியையும் ஸூமித்ரையின் புதல்வனான லஷ்மணனையும் எவ்விதமாக ஆட்க்கொண்டு அடிமை கொண்டாயோ அவ்விதமே பின்பற்றும் அடியேனையும் உனது கருணையால் ஆட்க்கொண்டு அடிமை கொள்ள வேண்டும் -(ஸூமித்ரா தனய-கைங்கர்யத்துக்காகவே பெற்றவள் பெயர் உத்தேச்யம் அன்றோ-முகப்பே கூவிப் பணி கொள்வாய் -கூவுதல் வருதல் செய்து -குருஷ்வ மாம் அநு சரம் – -)

ஆத்ம அந்தராத்ம ரூபேண ஸ்திதம் ச அனுபவன் ஸதா
பவந்தம் அநுவரத்தேய ஸ்வச் சந்த அனுகதாத்மக –118-

எவனிடமிருந்து பிரிக்க ஒண்ணாத என் அந்தராத்மாவாய் நிலை பெற்று இருக்கும் உன்னைக் தர்சித்துக் கொண்டு ஸங்கல்ப அனுசாரமாய் விரும்பிய சரீரங்களைப் பெற்றவனாய் உன்னைப் பின் பற்றினவனாய் அடியேன் இருக்க வேண்டும் –

(பேரேன் என்றும் என்னெஞ்சு நிறையப் புகுந்தான் திருப்பேர் நகரான்)

பஸ்யந் நமந் ஸமுத்திஷ்டன் ப்ரவ்ருத்த ப்ரணயோ பவந்
ஸ்துவந் ந்ருத்யந் ப்ரமோதேந பவேயம் பவதந்திகே –119-

உன்னையே தர்சித்துக் கொண்டும் தொழுது எழுந்தவனாய் உன் மேல் அன்பின் மிகுதியை வளர்த்துக் கொண்டும் ஸ்துதித்துக் கொண்டும் மகிழ்ச்சியுடன் கும்பீடு நாட்டமிட்டாடிக் கொண்டும் உனது சந்நிதியிலேயே இருப்பேனாக –

யாவதாத்ம மஹம் ஹர்ஷாத் ஸாம காயன் ஸஹாமரை
ஆஸிஷீய ஸ்ரீயா ஸார்த்தம் பவந்தம் அபி நிர் விசந் –120-

இவ்வாத்மா உள்ளத்தையும் அடியேன் மகிழ்ச்சியுடன் அமரர்களான நித்ய ஸூரிகளுடன் சேர்ந்து ஸாமகாநம் பண்ணிக் கொண்டு திருமகளோடு இனிது அமர்ந்து இருக்கும் உன்னை ஸேவித்துக் கொண்டே இருப்பேனாக –

(இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-)

(தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-)

இத்தம் த்வத் சந்நிதவ் வாசமுக்தாம் மம தயா நிதே
ஸத்யாம் குருஷ்வ தயயா ததா தத் ப்ரதிபாதநாத் –121-

கருணைக் கடலே இவ்வளவிலே இந்த கிரந்தத்தில் முழுமையாக வெளியிடப்பட்டு உனது திருவடித் தாமரைகளில் அடியேன் விண்ணப்பித்தத்தை உனது கருணையால் அறுதியிடப்பட்ட பயன்களை அருளி மெய்ப்பிக்க வேணும் –

(எங்கனே சொல்லிலிலும் இன்பம் பயக்கும் அன்றோ -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே)

சவும்ய ஜாமாத்ரு முநிநா ஸம்யக் த்ருஷ்டாமி மாம் ஸதா
சிந்தாமத் யாத்ம விஷயாம் பரிசின்வந் பவேத் ஸூகீ –122-

அழகிய மணவாளச் சீயர் என்ற பெயருடைய இந்த கிரந்த கர்த்தாவினா செம்மையாக ஸாஸ்திரங்களில் கூறப்பட்டு ரீதியில் தெளிவாக உள்வாங்கிக் கொண்ட தன்னுடைய ஆத்மாவின் விசாரங்கள் அனைத்தையுமே எப்பொழுதும் அநுஸந்திக்குமவன் எல்லையில்லா ஆனந்தம் பெருகவானாக –

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நடாதூர் அம்மாள்-ஶ்ரீவத்ஸ குல திலகை꞉ஶ்ரீமத்₃வரதா ₃சார்ய மஹா கு₃ருபி₄꞉ அநுக்₃ருஹீத꞉பிரபந்த பாரிஜாதம் –

January 31, 2025

ஊர்த்₄வவ் ஹஸ்தவ் யதீயவ் பிரதிபட த₃லநே பி₃ப்₄ரத ꞉ ஶங்க₂ சக்ரே
ஸேவ்ய அங்க்₄ரீ ஸ்கீயாவபி த த த தரோ தக்ஷிணோ யஸ்ய பாணி ꞉ ।
தாவந் மாத்ரம் ப₄வாப்₃தி₄ம் க₃மயதி ப₄ஜதா மூருகோ ₃ வாமபாணி :
ஶ்ரீவத் ஸாங்கஶ்ச லக்ஷ்மீர் யது₃ரஸி லஸதோ வேங்கடேசஸஸ் ஜீயாத் ॥

சக்ரம் ஶாஸ்தி ஸூகர்ம யோக₃கலநம், ஜ்ஞாநம் ச ஶங்க₂ஸ் ததா ₂
பாணிஶ் சாரு கடி ப்ரஸஞ்ஜி ததல꞉ஶ்ரோ ப₄க்தி யோக₃ம் ததா ₂ ।
ஶ்ரீமத் பாத₃ஸரோஜ தர்ஶ ககரோ யோக₃ம் ப்ரபத்திம் பரம்
யஸ்யாந் வர்த ₂சதுர் பு₄ஜஸ் ஸ ப₄க₃வான் ஜேஜே து லக்ஷ்மீ ஸக₂
꞉ ||

ஶ்ரீ வேங்கடாத்₃ரி நிலய꞉ கமலாகாமுக꞉ புமான் ।
அபா₄ங்கு₃ர விபூ₄திர் ꞉ ந தரங்க₃யது மங்க₃லம்

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி
–நடாதூரம்மாளின் தனியன்:

ஸம்ஸார தாபத்ரயத்தினால் எரிக்கப்பட்டு தவிக்கும் என்னை ஸ்ரீ பாஷ்யார்த்த அம்ருதத்தை அருளி பிழைக்கச் செய்தவரும் -ஸ்ரீ வத்ஸ குலத்துக்கே அலங்காரமாகவும் -வரதாச்சார்யர் என்னும் பிரசித்தி பெற்ற இவற்றை வணங்குகிறேன்

சித்திரை நக்ஷத்ரம் –நடுவில் -நடுப்பதம் விளக்கம் வல்ல -ததீய சேஷத்வம் -ஸ்ரீ வத்ஸ குலம் அவதாரம் -தாசாரதி போல்-நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு-திருக் குமாரர் -தேவராஜன் -திருக் குமாரர்-நடாதூர் அம்மாள்

திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை.
அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்.
ஆசார்யன்: எங்களாழ்வான்.
சிஷ்யர்கள்: ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: காஞ்சிபுரம்.
அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் , கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேய மாலை, எதிராஜ விஜயாபநம் மற்றும் பல.
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது. இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.

1165-1275

கிடாம்பி அப்பிள்ளார் மருமகன் -தேசிகர்

விஷ்ணு சித்தர் -அம்மாள் ஆச்சார்யன் -எங்கள் ஆழ்வான் எம்பெருமானார் சாதித்த திருநாமம் -மிக்க மூன்றில் ஒரு பங்கு ஸ்ரீ பாஷ்யம் இவரைக்கொண்டே நிகமனம் -விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் சாதித்தவர்–ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே  இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.-சித்திரை – ரோஹிணி-எங்கள் ஆழ்வான் திருநட்சத்திரம்
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண
நோசேந் மமாபி யதிசேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய:–
நடாதூர் அம்மாள் இவருக்கு சாத்தி அருளிய தனியன் –

ஸ்ருத்யந்த த்வயம் -உபய வேதாந்தம் -நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு -நல்லான் அவர்களின் திருக் குமாரர்
இவர் திருக்குமாரர் -தேவராஜன் -இவருக்கு திருக்குமாரர் -நடாதூர் அம்மாள் –

எம்பெருமானார் 1017-1137
பிள்ளான் 1067 அவதாரமே
1097-எங்கள் ஆழ்வான் அவதாரம்
1113 நஞ்சீயர் -ஆயர் தேவு -எங்கள் ஆழ்வான் கேட்டதாக ஐதீகம்
நடதூர் அம்மாள் (கி.பி. 1165 – 1275)

இவருக்கு தேவப்பெருமாள் பிள்ளை -நான்முகன் -பேரன் -பெரும் தேவித் தாயார் -மாட்டுப்பெண்-

பிள்ளான் -குருகேஸ்வரர் -திருமலை நம்பியின் திருக்குமாரர் -எம்பெருமானார் அபிமானம் புத்திரர் –

கடாம்பு -கடத்தில் நீர் வைத்து பாகவத கைங்கர்யம் செய்த குலம் -மருவி கிடாம்பி -மடப்பிள்ளை மணம் கமழும் வம்சம்

பக்தி பிரபத்தி செய்ய அதிகாரம் இல்லாவிடில் ராமானுஜ சொன்னாலே போதும் -இவர் சாதித்து அருளினவர்

ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்ய கோடி விமானம் -பேர் அருளாளன் -வரதராஜன் -ஆச்சார்யராக பிறப்பித்து வளர்த்துக் கொடுத்த அருள் -சம்ப்ரதாயம் பரிபாலனம் -ஓம் நமோ நாராயணாய என்ற 3 பதத்தின் சாராம்சமாய் முறையே அநந்யார்ஹ சேஷத்வம், அனன்யார்ஹ சரணத்துவம், அனன்யார்ஹ போக்யத்துவம் என்ற மூன்று பண்புகளை கொண்ட தாயார். இந்த ஆச்சார்யர்கள் எல்லாம் அவள் கொடுத்து அருளியவள் –
என் தன் அளவல்ல யான் கொண்ட அன்பு –பக்தி வளர்த்து-பரிவாஹ ரூபமான ஸ்லோகங்கள் –

பிரபந்ந என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, இதற்கு முழுமையான ‘சரணடைதல்’, ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள்

சமஸ்கிருதத்தில் பாரிஜாதா என்பது ‘வம்சாவளி’, ‘பிறந்தவர்’ அல்லது ‘முழு வளர்ச்சியடைந்தது’ போன்ற அர்த்தங்களை வழங்கலாம். ஆசிரியரே பின்னர் உரையில் இதை இவ்வாறு வரையறுக்கிறார்:

பிரபத்தி பற்றிய அசேஷ விஷயங்களையும் முழுமையாக சேகரித்து வைத்துக் அருளிய கிரந்தம் என்றவாறு-

400 ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம்
சரணாகதி -சரணம் -ஆகதி -உபாயத்தை வரவைப்பது

அஹம் மத் ரக்ஷண பரோ மஹா ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதிரேவ இதி ஆத்மாநம் நிஷிபேத் புத்திர்
-1- -ந்யாஸ தஸகம்

—————-

ஸ்ரீயப்பதியாய் பரம காருணிகனாய் ஸகல கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ மன் நாராயணன் -தர்மங்களுக்குக் குறைவும் அதர்மங்களுக்கு விருத்தியும் உண்டாயிருக்கும் ப்ரதிஸமயங்களிலும் மத்ஸ்ய கூர்மாதி ரூபங்களாக அநேக அவதாரங்களை எடுத்து-துஷ்ட நிக்ரஹ -இஷ்ட பரிபாலாநாதிகளைச் செய்து தர்மங்களைக் நிலை நிறுத்தியது போலவே த்வாபர யுகத்திலும் கண்ணனாக அவதரித்து கம்சாதி துஷ்டர்களை நிரசித்தும் பாண்டவர்கள் போல்வாரை ரக்ஷித்தும் தர்மங்களைக் நிலைநாட்ட அர்ஜுனனை வ்யாஜமாக்கி கீதா சாஸ்திரத்தை வெளியிட்டு அருளி
அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால்

அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால் அல்ப ஞானம் உள்ள அஸ்மாதிகளும் உஜ்ஜீவனம் அடையும் பொருட்டு பிரபத்தி சாஸ்திரத்தை வெளியிட்டு அருளினான்
இது ஸர்வாதிகாரம்
ஒருக்கால் -ஸக்ருத் -பல பிரதம் -க்ஷண கால சாத்யம் -ஆகவே உயர்ந்த தவம் -கொண்டாடத்தக்கது
இருந்தாலும் மூடர்கள் அஞ்ஞானிகள் இழந்து சம்சாரத்திலேயே மக்நராகிறார்கள்
பின்பு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ரூபேண தானே அவதரித்து உபகரித்து அருளினான்

முதல் நான்கு ஸ்லோகங்கள் -நிர்விக்னமாக பிரபந்தம் அமைய ஆச்சார்ய பகவத் வந்தந ரூப மங்களா ஸாஸனம்-முதல் ஸ்லோகத்தால் தேஜஸ்விகளான ஆச்சார்யர்களை நம் மானஸ பத்மம் விகசிக்க திருவடிகளைப் பற்றுகிறார்

——————

1-பிரமாண பத்ததி (அவதரணிகா )

ஆச்சார்ய ஆரியமா பாதேப்யோ நமஸ்யா ததே
யதாஸங்க வஸாத் பும்ஸாம் மந பத்மம் ப்ரபுத்யதே
-1-

ஆச்சார்யர் திருவடிகளே அநேக ஸூர்ய துல்யம்
தேஜோ நிதி -பாவனத்வம் -பரப்ரகாஸத்வம் -வேதமயம் -பகவத் அதிஷ்டிதம் –

இத்தால் தமது குரு பரம்பரை
எங்கள் ஆழ்வான்
திருக்குருகைப் பிரான் பிள்ளான்
எம்பெருமானார்
பெரிய நம்பி
ஆளவந்தார்
மணக்கால் நம்பி
உய்யக்கொண்டார்
நாதமுனிகள்
நம்மாழ்வார்
விஷ்வக்சேனர்
பெரிய பிராட்டிமார்
பெரிய பெருமாள் –
இவர்கள் திருவடித் தாமரைகளைப் பற்றுகிறார்

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –மிதுனமே உத்தேச்யம்

——————

அபங்குர கலா தான ஸ்தூல லஷ்யாத் வமீயுஷே
துங்காய மஹதே தஸ்மை துரங்காய முகே நம
-2—-ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரைப் பற்றுகிறார்

கீழே சஹஸ்ர ஸூர்ய துல்யம் -இங்கு பூர்ண சந்திர துல்யம் -உபாசகர்களுக்கு அழியாத நித்ய ப்ரஹ்ம வித்யையை அளிப்பவர் –

———–

லஷ்மீ சஷு அநு த்யாநாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே
நமோஸ்து மீந வபுஷே வேதவேதி விபன்முஷே —
3-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வந்தனம்

மத்ஸ்ய ஹம்ஸ ஹயக்ரீவ திரு வவதாரங்கள் -வேத உபதேசம்
ஏக சேஷித்வம் -ஸ்ரீயபதி –

மையார் கருங்கண்ணி –செய்யாள் -இடைவிடாமல் பார்த்துத் தியானித்து சாரூப்பியம் பெற்ற திருமேனி

மிகவும் அழகுள்ள -அஸி தீக்ஷணை -காருண்ய ஏக ப்ரத-திருக்கண்கள் போல் மத்ஸ்ய மூர்த்தி திவ்ய மங்கள விக்ரஹம் –கடாக்ஷத்தாலே போஷித்து அருளுபவர் -பிரமனுடைய ஆபத்தைப் போக்கி அருளியதற்கு மங்களா ஸாஸனம்

———–

ரஜோ ரஜஸ் பிரசமனம் –ப்ரபந்ந பாரிஜாதாக்ய ப்ரபந்தய யதாமஹே –4-

தொண்டர் அடிப் பொடிகளே ரஜஸ் குணங்களை ஒழித்து விபரீத அஞ்ஞானங்களைப் போக்கி அருளும் என்கிறார்-இதற்காகவே இந்தப் பிரபந்தம்

ப்ரபத்யே சதா பத யோகோ

ப்ரபன்னர்களுக்கு வேண்டிய அர்த்தங்களைத் தெளிவாக வழங்குவதால் இந்தத் திரு நாம

——————

பிரபத்தே மானஸ ஸுபாஹ்யம் ஸ்வரூபம் அதிகார் யபி |
ப்ரபந்நானாம் குரவ் வ்ருத்தி ஸ்ரீம்ஸே ஸூரிஷு சத்சு ச–5

விஹிதேஷு வ்யவஸ்தாநம் வர்ஜநீயம் பலம் ததா |
ஏதே தசார்த்தே கத்யந்தே த்ரயந்தாத்ய அர்த்த ஸங்க்ரஹாத் ||
–6-

இதில் வேதாந்த சாரமாக பத்து விஷயங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன –
1-திடமான வேத பிரமாணம் உள்ள பிரபத்தி -பிரமாண பத்ததி -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றில் உள்ள பிரமாணங்கள்
2-ப்ரபத்தியின் ஸ்வரூபம் –ஆர்த்த -திருப்த ப்ரபத்திகள் -அங்கங்கள்
3-அதிகாரி ஸ்வரூபம்
4-ப்ரபந்ந அதிகாரியின் ஆச்சார்யருக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
5- ப்ரபந்ந அதிகாரியின் ஸ்ரீயப்பதிக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்கள் -திருவாராதனம் –
6-ப்ரபந்ந அதிகாரியின் நித்ய முக்தர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
7-ப்ரபந்ந அதிகாரியின் பாகவதர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-என்னைப் போலாவாது நினைக்க வேண்டும் என்று அன்றோ அவன் வார்த்தை
8-ஸாஸ்த்ர விஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
9-ஸாஸ்த்ர நிஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
10-பல ஸ்வரூபம்

—————-

ஸ்ருத்தார்த்த மனனஸ் தேம்நே மம நேதரதா ஸ்ரம |
ஸோதவ்யம் அத்ர ஸ்கலிதம் ஸத்பிர் விஷய கௌரவாத்
||–7-

க்யாதி லாப பூஜார்த்தமாகச் செய்யப்பட வில்லை
தாம் பெற்ற உயர்ந்த ஆச்சார்ய உபதேசங்களின் சாரமே இப்பிரபந்தம்
குற்றம் குறைகளை பெரியோர் க்ஷமிக்கப் பிரார்த்திக்கிறார் இதில்

——————

ப்ரபத்தி தைத்திரீ யாணம் வேத தாவத் விதீயதே ।
ந்யாஸ அப்₄யாஸ ப்ரயோகோ ஹி வஸூரண்யே -தி மந்த்ரத
꞉ ॥ 8 ॥

தைத்ரிய உபநிஷத்தில் இந்தப் பிரபத்தி ந்யாஸம் என்ற பெயரையே யுடைத்ததாக வஸூ ரண்ய -என்று தொடங்கி ஓதப்படும் மந்திரத்தால் பிரயோகிக்கத் தக்கதாக விதிக்கப் படுகிறது –

தஸ்மாத் நியாஸம் ஏஷம் தபஸம் அதிரிக்தம் ஆஹுஹ்” – நியாஸம்
மற்ற வகை தவங்களை விட மேலானது – தைத்திரீய உபநிஷத்
ந்யாஸம் -ஒப்படைத்தல் -வைத்தல் -சரணமடைத்தல் -ஆத்மாவை பரமாத்வாவிடம் சமர்ப்பித்தல்அப்பியாசம் -திரும்ப திரும்ப சொல்வதல்

————

தத்ரோ பாஸ்யம் யதா ₂ ப்₃ரஹ்ம ஸர்வ காரண முச்யதே ।
ப்ரபத் தவ்யம் ததை வேதி விபு விஸ்வஶ்ருக்– இத்யபி
॥ 9 ॥

——————–

ஸூர்யாதிநாம் யதா பூர்வம் தேஜஸ்꞉ கல்பயிதா (அ) ஸி வசி ச ।வஸூவத்
ரமணீயோ (அ)ஸீத்யேவம் ப்₃ரஹ்ம கு₃ணை ஸ்துதிம்
॥ 10 ॥

இந்த இரண்டு ஸ்லோகங்களுக்குத் தாத்பர்யம் -அவ்வுபநிஷத்தில் ஸர்வ காரணமான பர ப்ரஹ்மம் உபாஸிக்கத் தக்கதாகச் சொல்லப்படுகிறது –
அப்படியே அப்ரஹமம் விபு என்றும் நீர் ப்ரபஞ்சங்களைப் படைக்கிறவர் என்றும் -ஸூர்யன் முதலிய தேஜஸ் பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்கும் போதும் உன்போலவே தேஜஸ் கொடுப்பவர் நீர் என்றும் -பொன் போல் அழகிய திருமேனியைக் யுடையவர் நீர் என்றும் -ஸ்துதிக்கப்பட்டதாய் அதுவே சரணம் அடையத்தக்கது என்றும் சொல்லப்படுகிறது –

———-

ஜீவாத்மாநம் ஹவிஸ் ꞉ க்ருத்வா தச் ச₂ரீரம் மஹீயஸி ।
“ப்₃ரஹ்மாக்₃நவ் ஜுஹுயாத்” ஓமித்யநேந ஆம்நாய ரூபிணம்
॥11॥

இஜ் ஜீவனை ஒரு ஹவிஸ்ஸாகப் பாவித்து இஜ் ஜீவர்களை சரீரமாக யுடைய பர ப்ரஹ்மமாகிற அக்னியில் வேத ரூபமான ஓம் என்னும் ப்ரணவத்தால் ஹோமம் செய்ய வேண்டும் –

த்வய ரூபிணம் –பாடபேதம்-இந்த ஸ்லோகம் இந்தப் பாட பேதத்துடன் பிரமாணமாக முமுஷுப்படி வியாக்யானத்திலும் உள்ளது

—————

இதி ப்ரபத்தே ராம்நாத ꞉ ப்ரயோக₃꞉ ப்ரணவாத்மநா ।
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித
꞉ || 12 ||

இப்படி பிரணவ ரூப மந்திரத்தால் பிரபத்தி பிரயோகிக்கத் தக்கதாக வேதத்தில் ஓதப்படுகின்றது -இப்படி பிரபத்தி செய்தவருடைய பிரபத்தியை ஓர் யாகமாகவும் அவர் சரீரத்தை அதற்கு சாதனமாகவும் அவ் வேதத்தில் காட்டப்பட்டு இருக்கின்றது –

மஹா நாராயண உபநிஷத்தில் உள்ள மந்த்ரம்
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித -இப்படி ந்யாஸம் – பிரபத்தியை அறிந்தவன் -யஜமானனும் இவன் சரீரத்துடன் கூடியவன் -நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் -நெஞ்சு ஹோம குண்டம் -சாந்தி அடைவதே தக்ஷிணை -மனதே ப்ரமன்

உத்தேச் யத்வம் ஜநநி பஜதோ உஜ்ஜிதோபாதி கந்தம்
ப்ரத்யக் ரூபே ஹவிஷி யுவயோ ஏக சேஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ் தவ ச நிகமை: நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயந் மாநஸம் ந:–6-

அன்னையே அரியும் நீயும் மருவியே யுரிமை கொள்ளும்
தன்மை சாலாவி யென்னும் அவி தரும் வேள்வி தன்னில்
பின்னையும் மறைகளோரும் மகிமையின் மிகைமை தேறும்
நன்மையே கொள்ளுமுள்ளக் களி நடம் புரிவர் நாமே. — (6)

[ஜநநி! அன்னையே! ;
பத்மே! – இலக்குமியே!;
ப்ரத்யக் ரூப – ஜீவாத்மாவாகிற;
ஹவிஷி – ஹோமம் செய்யப் பெறும் த்ரவ்யத்தில், ஆத்ம ஸமர்ப்பண யக்ஞத்தில்;
உஜ்ஜிதோபாதிகந்தம் – மற்றொரு வஸ்துவை இடையிடாமல் , நேராகவே;
உத்தேச் யத்வம் – ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ளுகிறபடியை;
பஜதோ – அடையா நின்ற;
யுவயோ – தேவரீர்கள் இருவருடைய;
ஏக சேஷித்வ யோகாத் – ஒரே சேஷியாயிருக்குந் தன்மை கொண்டு;
பத்யு: — தேவரீருடைய பர்த்தாவினுடையவும், பகவானுடையவும்;
தவச: — தேவரீருடையவும்;
நித்யம் – எப்பொழுதும்;
நிகமை –வேதங்களால்;
அந்விஷ்யமாண — தேடும்படிக்குள்ள;
மஹிமா – பெருமையானது;
ந: அடியோங்களுடைய;
மாநஸம் – மநத்தை;
நர்த்தயந் – ஆச்சர்யத்தால் ஆடச் செய்து கொண்டு;
அவச்சேதம் – இவ்வளவு என்று அளவிடப்படும் தன்மையை, பிரிவை, எல்லையை;
ந பஜதி – அடைகிறதில்லை.

தாயே! லக்ஷ்மியே! தேவரீரும் பகவானும் ஜீவாத்மாவாகிற ஹவிஸ்ஸைக் குறித்து ஒரே சேஷியாதலால் காரண சேஷமேயில்லாமல் நேராக உத்தேச்யம் ஆகிறீர்கள்.
வேதாந்தங்களும் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றதும், எங்கள் மனத்தைக் கொந்தளிக்கச் செய்கின்றதுமான தேவரீருடைய பெருமைக்கு எல்லையே இல்லை.]

————

ப்ரபத்திம் தபஸாம் ஏஷாம் ந்யாசாக்யா மாஹுருதமா꞉ ।
ஆம்நாதம் கட₂ வல்லீஷு ப்ரபத்தேர் வசகம் த்₃வயம்
॥ 13-

அவ்வுபநிஷத்தில் ஸத்ய வாக்கை முதலாகத் தொடங்கிச் சொல்லப்பட்டு இருக்கும் பதினோரு தவங்களிலும் இது மேலான உயர்ந்த தவமாக ஓதப் பட்டு இருக்கிறது -கடவல்லி என்னும் உபநிஷத்தில் த்வயம் என்னும் மஹா மந்த்ரம் இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்வதாகவும் ஓதப்படுகின்றது –

சேஷத்வ பலம் சரணாகதி -பரதந்த்ர்ய பலம் கைங்கர்யம்

————-

ப்ரமாணம் ஸூப₄க₃ம் ப்ராஹ ஶ்வேதாஶ்வர ஸம்ஹிதா ।
ப்ராஹ ச உப நிஷந் ந்யாஸே யதா ₂(அ)நுஷ்டா₂ந த₃ர்ஶிநீ ||
14-

இப்பிரபத்திக்கு ஸ்வேதர உபநிஷத்தை சிறந்த ப்ரமாணமாகச் சொல்லுகிறார்கள் -இப்பிரபத்தியின் அனுஷ்டான க்ர மத்தைக் காட்டும் இவ்வுபநிஷத் கீழ் சொல்லியபடி ஓதுகிறது

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-

எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்

—————-

ப்₃ரஹ்மாணம் விததா₄த் யக்₃ரே ” “யஸ் தஸ்மை தி₃ஶதி ” ஶ்ருதி ꞉ ।
ஆத்ம ஜ்ஞாந ப்ரஸா தார்தம் முமுக்ஷு꞉ஶரணம் வ்ரஜேத் ॥ 15 ॥

யாதொரு பகவான் ஆதி காலத்தில் பிரமனைப் படைத்து அவருக்கு வேதங்களைக் கொடுக்கிறாரோ அந்தப்
பகவானை ப்ரஹ்ம ஞானம் பெறுவதற்காக சரணம் அடைய வேண்டும் –

———————-

அபி வத்₄யம் ப்ரபந்நம் ந ப்ரயச்ச₂ந்தி ” ஏவ மாதி₃கா꞉ ।
ப₃ஹவ ꞉ஶ்ருதயோ மாநம், ஶ்ரீ ஶாஸ்த்ரே ப₄க₃வாநபி || 16 |

—————–

ஶ்ரீமந் நாராயணாய ” இதி ப்₃ரஹ்மணே த்₃வய முக்தவான் ।
லக்ஷ்மீ தந்த்நர கமலயா ஶக்ராயைவ ப்ரபஞ்சிதம் ॥
17 ॥

கீழ் இரண்டு ஸ்லோகங்களின் தாத்பர்யம் –
சரணம் அடைந்தவன் ஒருவன் மரண தண்டனை கொடுக்கத் தக்கவனாக இருந்த போதிலும் அவனைக் கைவிடக்கூடாது என்றும் இவை முதலாக அநேக ஸ்ருதிகள் இப்பிரபத்திக்கு பிரமாணங்களாக இருக்கின்றன –
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்திலும் பகவான் இந்தப் பிரபத்தி மந்திரமான ஸ்ரீமன் நாராயண என்றும் தொடங்கிய த்வயம் என்னும் மந்த்ரத்தை ப்ரம தேவனுக்கு உபதேசிக்கிறார்
லஷ்மி தந்த்ரத்திலும் பெரிய பிராட்டியார் தேவேந்திரனுக்கு இவ்வாறு வெளியிட்டு அருளி உள்ளார் –

கிருஷ்ண யஜுர் வதம் 6-5-6-பிரமாணம் -ருத்ரன் ஆதித்யன் -ஜ்யோதிர் தேவதா மன்னித்து விட்ட விருத்தாந்தம்
நத்யஜேயம் கதஞ்சன போல் இங்கும்

————

ததா₂ஸநத் குமாரஸ்ய ஸம்ஹிதா வக்தி ஸாத₃ரம் |
ப்ரபத்திம் ஸர்வ ப₂லதா₃ம் ஸர்வ உபாய அநபேக்ஷணீம் ॥
18 ॥

அப்படியே ஸநத்குமார ஸம்ஹிதையும் இப்பிரபத்தி ஸர்வ பலன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் மற்ற ஸாதனங்களில் எதையும் இப்பிரபத்தி துணையாக வேண்டுவது இல்லை என்றும் சொல்கின்றது –

அடுத்த 5 ஸ்லோகங்கள் லஷ்மீ தந்திரத்தில் பிராட்டி அருளிச் செய்தவை
உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் அவனை பொறுக்கும்
இது மற்ற ஒன்றையும் பொறுக்காது

—————

ப்ரபத்தே ꞉ க்வசித் ₃அப்யேவம் பரா பேக்ஷா ந வித்₃யதே ।
ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா₃ ॥
19 ॥

இப்பிரபத்திக்கு ஒருக்காலும் வேறொரு துணை வேண்டியது இல்லை -எவர் எவர்கள் எந்த எந்த சமயங்களில் எந்த எந்த பலன்களைக் கோறு கின்றனரோ அவர் அவர்களுக்கு அந்த அந்தப் பயன்களைக் கொடுக்கும்

——–

ஸக்ருத் உ₃ச்சாரிதா ஹ்யேவ தஸ்ய ஸம்ஸார நாஸிநீ ।
ராக்ஷஸா நாம விஸ்த்ரம்பா₄த் ஆஞ்ஜநேயஸ்ய ப₃ந்த₄நே
॥ 20 ॥

————-

யதா ₂ விக₃லிதா ஸத்₃ய: அமோகா₄(அ)ப்யஸ்த்ர ப₃ந்த₄நா ।
ததா ₂ பும்ஸாம விஶ்வாஸாத் ப்ரபத்தி ꞉ ப்ரச்யுதா ப
₄வேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி ஒருக்கால் அனுஷ்டித்த அளவிலே அவர்களின் பாபங்களைப் போக்கி விடும் -ஆஞ்சநேயரை ராக்ஷஸ குமாரன் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டின போது அங்குள்ள ராக்ஷஸர்கள் அவ்வஸ்திரத்தை நம்பாமல் கயிறுகளினால் கட்ட அப்ரஹ்மாஸ்திரம் நழுவினது போல் இப்பிரபத்தியை அனுஷ்டிக்குமவர்களும் இதை நம்பார்களாகில் இப்பிரபத்தி நிஷ்பலமாய் விடும் –ஆகையால் இதை நம்புவர்களுக்கே இது மோக்ஷத்தைக் கொடுக்கும் –

———

தஸ்மாத்₃ விஸ்ரம்ப₄ யுக்தாநாம் முக்திம் தா₃ஸ்யதி ஸா (அ)சிராத் ।
ஸாதநாந்தர யுக்தாநாம் ப்ரபத்தி ꞉ஸ்வயமேவ வா ॥
22 ॥

இப்பிரபத்தி மோக்ஷத்தை விரும்புபவர்களுக்கு உபாயாந்தரமான பக்தி யோகத்துடன் சேர்ந்தும் தனித்தும் அனுஷ்டிப்பதனால் மோக்ஷத்தைக் கொடுக்கும் –
அதாவது பிரணவம் வேறொரு மந்திரத்துடன் சேர்ந்தும் தனித்தும் செய்கிறவர்களுக்கு அதன் பலத்தைக் கொடுப்பது போலாகும் -கீதையில் அங்க பிரபத்தி -பக்திக்கு அங்கம்
ரஹஸ்ய த்ரயத்தில் -தனித்தே உபாயம்-

————-

ஸாதயேத் முக்தி காமாநாம் விமுக்திம் ப்ரணவோ யதா ₂ ।
யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் வ்யக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே
॥ 23 ॥

————-

இதர உபாயதவ் ₃ஷ்கர்யாத் அதி ₄காராத் இஹாந்த ꞉|
உபாயமிஹ வக்ஷ்யாமி ப்ரபத்திம் ஸார்வ லௌகிகம் ॥ 24

கர்மயோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை அனுஷ்டிப்பவருக்கு சக்தி இல்லாமையாலும் அதிகாரம் இல்லாமையாலும்
சர்வருக்கும் ஸூலபமுமாய் அனுஷ்ட்டிக்கத் தக்க மோக்ஷ உபாயமாகவும் ப்ரபத்தியைச் சொல்லுகிறோம் என்று பகவத் ஸாஸ்திரத்தில் பகவான் விஷ்வக்சேனருக்கு எவ்வாறு உபதேசித்தாரோ அவற்றைச் சொல்லுகிறோம் –

———–

கால தோஷாந் மநுஷ்யாணாம் மநஶ் சாஞ்சல்ய யோக₃த் ꞉ ।
விஷயேந்த்₃ரிய ஸம் யோகா₃த் நிஷித்₃த ₄கரணாத ₃பி ॥ 25

————

விஹிதா (அ)கரணாந் நாபி ஜேதும் ஶக்யா க₃ணாதி ₄ப ! |
இந்த்₃ரியாண் இந்த்₃ரியார்தே ₂ப்₄ய꞉ ந்ருணாம் கால ஸ்வ பாவத₄ ꞉ || 26

இக்காலத்தில் கலி தோஷத்தினாலும் -மனஸ் ஓர் இடத்தில் நிலை பெறாமையாலும் -விஷய அனுபவம் செய்வதாலும் –சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யாமையாலும் -கால ஸ்வபாவத்தினாலும் மனிதர்களுக்கு விஷயங்களும் இந்திரியங்களும் ஜெயிக்க முடியாதவையாயே இருக்கின்றன –

———–

தஸ்மாத் து கர்ம யோகே ₃(அ)ஸ்மின் ந அதிகாரோ ஹி வித்₃யதே ।
விஹிதேஷு ச ஸர்வேஷு தத் அபா₄வாந் மஹா முநே ! ॥ 27 ॥

ஆகையால் சிலர்கள் இந்திரியங்களை ஜெயிக்க அசக்தர்களாய் இருப்பதாலும் -சிலர்கள் வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க ஸாஸ்திரங்களில் அதிகாரம் இல்லாதவர்களாக இருப்பதாலும் -எல்லோரும் கர்ம யோகத்தில் அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்

—————

ஜ்ஞாந யோகே₃ஷ்வ பி₄ரதி ꞉ கஸ்யசித்₃ வித்₃யதே ந ச |
தத் அ₃பா₄வாந் மயி ப்ரீதி ꞉ ந ச ப₄க்திஶ்ச ஜாயதே ॥ 28 ॥

அப்படியே ஞான யோகத்திலும் எவர்களுக்கும் ஆசை உண்டாகிறது இல்லை -ஞானம் இல்லாமையால் என்னிடத்தில் -ஸ்நேஹமாவது -பக்தியாவது -உண்டாகிறது இல்லை -ஆகையால் பக்தி யோகத்திலாவது ஞானம் யோகத்திலாவது எவருக்கும் அதிகாரம் இல்லை –

லஷ்மணன் பெருமாள் இடம் பக்தன்
சக்ரவர்த்தி பெருமாள் இடம் ஸ்நேஹம்

————-

தஸ்மாந் ந கர்ம யோகே ₃(அ)ஸ்மின் நாதி ₄காரோ ந ஸாந்யதா ₂
। தஸ்மாந் மத் பாத ₃யுக₃லம் ஐகாந்த் யாச் ச₂ரணம் வ்ரஜேத்
॥29॥

—————

ஆத்மநோ து₃ர்த₃ஶா பத்திம் விம்ருஶ்ய ச கு₃ணாந்மம ।
மத் ₃ஏக உபாய ஸம் ஸித்தி : மாம் ப்ரபந்நோ விமுச்யதே ॥ 30 ॥

ஆகையால் தனக்கு இவ்வாறு நேர்ந்திருக்கும் துர்த்தசைகளையும் இவ்வாறு அகதிகளாய் இருக்கும் அவர்களை ரக்ஷிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் என்னுடைய தயை முதலிய ஸத் குணங்களையும் நன்றாக யோஜித்து என் திருவடிகளையே ஒரே நிச்சயம் யுடையவனாய் சரணம் அடைய வேண்டும் –என்னை ஒருவனையே சரணம் அடைந்தவர் இந்த ஸம்ஸாரக் கிலேசங்களில் நின்றும் விடுவிக்கப் படுவார்கள்

புகல் ஒன்றுமே இல்லாத துர்த்தசை
ஆறு எனக்கு பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்

——————

ஆநு கூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸோ கோ₃ப்த்ருத்வ வரணம் ததா ₂ ॥ 31 ॥

—————-

ஆத்ம நிஷேப கார்பண்யே ஷட்₃ விதா ₄ஶரணாக₃தி ꞉ ।
அந்யா ச ப்ரபத்த்யா மாம் ஆகிஞ்சந்ய ஏக பூர்வகம்
॥ 32॥

பகவானுக்கு அனுகூலனாய் வர்த்திப்பதும் -பகவானுக்கு பிரதிகூலமான செயல்களை விடுவதும் -பகவான் நம்மைக் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்று நம்புவதும் -அவனையே தன்னை ரக்ஷகனாக கோறுவதும் -தன் ஆத்மாவை அவனிடம் சமர்ப்பணம் செய்தும் -தான் போக்கற்ற நிலையில் இருப்பதை நினைத்து இருப்பதுமாகிய -இவ்வாறும் சரணாகதி என்று சொல்லப்படும் –
இங்கு சொல்லப்பட்ட ஆனுகூல்ய சங்கல்பம் முதலிய ஐந்து அங்கங்களோடு கூடிய ஆத்ம நிஷேபமே ப்ரபத்தியாக கீழே சொல்லப்படுவது இவ்வங்கங்கள் பிரதானங்கள் என்று தோற்றுகைக்காக –

———–

மாம் மாதவ இதி ஜ்ஞாத்வா மாம் க₃ச்சே₂ச் ச₂ரணம் நர꞉ ।
ஏவம் மாம் ஶரணம் க₃ச்ச₂ன் க்ருத க்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 33 ॥

பிரபத்தி செய்யும் ஒருவர் என்னை ஸ்ரீ யப்பத்தி என்றும் அறிந்து நாம் வேறொரு கதி இல்லாமல் இருக்கிறோம் என்றும் எண்ணத்தை முன்னிட்டு மேல் சொல்லிய ப்ரபத்தியினால் என்னை சரணம் அடைய வேண்டும் என்று பகவான் அருளிச் செய்தார் –

23 ஸ்லோகம் தொடங்கி இது வரை விஷ்வக் சேனருக்கு பகவான் பஞ்ச ராத்ர சாஸ்திரத்தில் உபதேசம்

—————

ராமாயணே ச ப₄க₃வான் பா₄ரதே ச யது₃க்தவான் ।
“ஸக்ரு தேவ ப்ரபந்நாய தபா₃ஸ்மீதி ச யாசதே ॥
அப₄யம் ஸர்வ பூ₄தேப்₄யோ ததாம் ஏதத் விரதம் மம
॥34-

இவ்வாறு என்னை சரணம் அடைந்தவர் க்ருதக்ருத்யராய் விடுவர் -இதை ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ மஹா பாரதத்திலும் பகவானே அருளிச் செய்துள்ளார் –

என்னிடத்தில் ஒருக்கால் பிரபத்தி செய்தவருக்கு ஸர்வ பூதங்களில் இருந்தும் பயம் இல்லாமையைக் கொடுக்கிறேன் -இப்படி ப்ரபன்னர்களுக்கு அபய ப்ரதானம் அளிப்பது என்னுடைய விக்ரஹம்

———-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ” ॥ 35 ॥

மோக்ஷ சாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மயோகம் முதலிய ப்ரவ்ருத்தி தர்மங்களையும் -பலசாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் ஸர்வ கர்மங்களையும் விட்டு என்னையே ஒருவனையே ரக்ஷகனாக சரணம் அடைய வேண்டும் -மோக்ஷ சாதனமாக அனுஷ்ட்டிக்க வேண்டிய துராசையை விடுவதே வேண்டும் -பிரபதிக்கு சஹகாரியாக நினைத்து மற்ற கர்மங்களையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்-இப்படிச் செய்த ப்ரபன்னனுக்கு அனைத்தும் பாபங்களையும் பிரதிபந்தகங்களையும் நானே போக்கி அருளுகிறேன் -இவற்றைப் பற்றித் துக்கம் பட வேண்டாமே

———-

வரதா₃நாத் வசிஷ்ட₂ஸ்ய தேவதா பாரமார்த்₂ய வித் ।
பராஶர꞉ ப்ரணி ஜகௌ₃ புராணே வைஷ்ணவே ததா ₂ || 36 |
|

வசிஷ்ட மஹரிஷியின் அருளாலே -வரபலத்தினால் -பரதத்வம் பற்றி அனைத்தையுமே உள்ளபடி அறிந்த பராசர முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பிரபத்தியின் மஹாத்ம்யத்தை அருளிச் செய்துள்ளார்

வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர் -பரம்பரை

————

தாவ தார்த்திஸ் ததா ₃ வாஞ்சா₂ தாவந் மோஹ꞉ ததா ₃(அ)ஸூக₂ம் ।
யாவந்ந யாதி சரணம் த்வாம் அசேஷாக₄நாஸநம் ॥ 37 ॥

யாவன் ஒருவன் ஸர்வ பாபங்களையும் நாசம் செய்து அருளும் உம்மை சரணம் அடையவில்லையோ அப்பொழுது அவனுக்குப் பீடைகளும் வீணாசையும் கொடு மோஹமும் கஷ்டமும் உண்டாகும் என்கிறார் பராசரர் –

ஆர்த்தி -வாஞ்சை -மோஹம் -ஸூகம் -நான்கும் இருக்கும்
அதுவரை துடிப்பு -இழந்த ஐஸ்வர்யம் கிடைக்க -சரணாகதி பண்ணினதும் போகும்
வாஞ்சை -விருப்பம் -புதிய சொத்து -அர்த்தார்த்தி -கீதை -இவன் இரண்டாம் அதிகாரி
மோஹம் -ஜிஜ்ஜாசூ -கைவல்யார்த்தி -மயக்கம்
சுகம் -ஐஸ்வர்ய கைவல்ய அனுபவம் சுகம் -தன்மையும் போகும் அன்றோ

——–

கமல நயந வாஸூ தேவ விஷ்ணோ தரணிதர அச்யுத ஶங்க₂சக்ரபாணே ।
ப₄வ ஶரணமி தீரயந்தி யே வை த்யஜ ப₄ட தூ₃ர தரேண ॥ 38 ॥

தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவரே -வாஸூ தேவரே –விஷ்ணுவே-பூமியைத் தரிப்பவரே -ஆஸ்ரிதரை நழுவ விடாத அச்யுதனே –திருக்கைகளில் திரு வாழி திருச் சங்குகளை யுடையவரே -உம்மையே ரக்ஷகராக கைவிட எவர் சரணம் அடைகிறார்களோ -அவர்களை பாபங்கள் தீண்டாமல் செய்து அருளி யமபடர்களை அவர்களை வெகு தூரத்திலே இருந்து விட்டுவிட வேண்டும் என்றும் ஆணையும் செய்து அருளுகிறாயே

அஜாமிளா உபாக்யானம் -ஸ்ரீ மத் பாகவதம் -நாராயணா கூப்பிட்டதும் -யமபடர் -தூரம் போன வ்ருத்தாந்தம் -என் பேரைச் சொன்னாய்-அடையாளம் -சங்கேதம் -பரிஹாஸம் -எதற்காக சொன்னாலும் அசேஷ குற்றங்கள் இல்லாமல் போக்கும் அன்றோ -பரிகார மது ஸூதன ப்ரபந்நான் -செவிக்கு இறைஞ்சி சாதுவராய் போம் என்றான் -நமன் தமரால் ஆராயப்படார் அன்றோ

———-

மநுரப்யாஹ ப₄க₃வான் கூ₃ட₄ம் ஸந்யாஸ வைபவம் ।
அர்சா நாராயணஸ்யேதி ப்₃ருவன் வர்ணாஶ்ரம க்ரியா꞉
॥ 39 ॥

அர்சா நாராயணஸ்-என்று பகவானுடைய ஆராதனத்தைச் சொல்லத் தொடங்கிய மனுவும் இப்பிரபத்தியின் வைபவத்தை சமத்காரமாக அருளிச் செய்துள்ளார்

ஸந்யாஸம் -சரணாகதி -பிரபத்தி -பர்யாயம்

—————

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்த வைஷ ஹ்ருதி ₃ஸ்தித₂ ꞉ ।
தேந சேத விவாத ₃ஸ்தேமா க₃ங்கா₃ம் மா குரூன் க₃ம꞉ ॥ 40 ॥

ஸர்வ பிராணிகளுக்கும் அந்தர்யாமியாகவும் -ஸூர்ய மண்டலத்தில் மத்யவர்த்தியாயும் சர்வாதிகாராயும் இருக்கும் பகவான் உன்னுடைய ஹ்ருதயத்தில் வஸிக்கிறார் -அவருடன் உனக்கு-வழக்கு இல்லாமல் -அத்வேஷம் மாத்திரமே -விலக்காமை ஒன்றே -இருந்தால் -நீ நற்கதிகளைப் பெறுவதற்கு கங்கா தீர்த்த யாத்ரைக்கோ குருஷேத்ர திவ்ய தேச யாத்ரைக்கோ போக வேண்டாமே என்று உபதேசிக்கிறார் –

கங்கை கங்கை வாசகத்தால் கடுவினை களையலாமே
யம -நியமிப்பவர்உள்ளும் புறமும் நியமிப்பவர் -ஸூர்ய மண்டத்தில் இருப்பவர் அவரே அரசன் -ஒத்துண்டாலும் ஒத்துக் கொள்ளா விட்டாலும் கங்கா ஸ்நானம் வேண்டாம்கங்கை நீர் குடைந்தாடும் வேட்க்கை என்னாவதே -திருமாலை -இதன் தமிழ் ஆக்கம்நமன் வேறு கொண்டு தம்முள் வைத்திடாமையால் -விலக்காமல் -என்னுடையவன் என்று கொண்டால் யமபடர் தீண்டார்கள் அன்றோ

———–

த₃க்ஷிணா ஶாபதே ரத்ர ந முக்₂யாஹ்ரு ₃யஸ்தி ₂ திஸ் ꞉ ।
அந்த ꞉ ப்ர விஷ்ட꞉ஶாஸ்தா யோ ஜநாநாம் யமயத்யபி ॥
41 ॥

யம –தெற்கு திக்கு அதிபதி நமனை இங்கு சொல்ல வில்லை
வியாபித்து உள்ளும் புகுந்து நியமிக்கும் ப்ரஹ்மத்தை சொன்னவாறு -எங்கும் உளன் கண்ணன்

————-

ஆத்மாந மந்தரஸ் தஸ்ய ம்ருத்யுர் ம்ருத்யோ ꞉ஹ்ருதி ₃ஸ்தி₂த ꞉ ।
தேந ஸர்வாதி ₄ராஜேந விவஸ்வத்₃பி₃ம்ப₃ வர்தி நா ॥ 4
2 ॥

ஸர்வ பிராணிகளின் உள்ளே புகுந்து நியமிப்பவன் –ஆத்மாவைப் அறிய ஒண்ணாதவன் -மிருத்யுவுக்கும் மிருத்யுவானவன் -அவனுடன் வழக்கு இல்லாமல் இருப்பதாவது அவனிடம் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவதே

———–

அவி வாத₃ஸ்து தஸ்யைவ பாத ₃யோராத்மநோ(அ)ர்பணம்।
யோந்யதா ₂ஸந்த மாத்மாநம் அந்யதா ₂ ப்ரதி பத்₃யதே ।
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா ॥43||

ஆத்மா ஸ்வ தந்த்ரன் என்றும் நினைத்து செயல்படுபவன் -பிறர் நன் பொருளை அபஹரிப்பவன் -ஸர்வ பாபங்களையும் செய்தவன் ஆகிறான்

———-

தஸ்மாத் ஸர்வ நியந்தாரம் ஸர்வேஷாம் ச ஹ்ருதி ₃ஸ்தி₂ தடம் ।
ப₄க₃வந்தம் ப்ரபந்நா யே தீர்தா₂தி ₃: தை : விஶுத்₃ த₄யதி ॥ 44 ॥

ஆகையால் ஸர்வ நியாமகனாய் ஸர்வ அந்தர்யாமியாக இருக்கும் பகவானை எவர்கள் சரணம் அடைகிறார்களோ அவர்கள் புண்ய தீர்த்தங்களையும் மிக்க பாவநமாக ஆக்கி விடுகிறார்கள்

பாத தூளி பெறுவதால் பாவனம் பெறுகிறோம் அன்றோ

————-

அர்தோ ₂(அ)யம் ப₃ஹுஶ꞉ ப்ரோக்தோ சவ்நகாத்₃யைர் மஹர் ஷிபி₄꞉ ।
“தாவத்₃க₃ச்சே₂த் து தீர்தா₂ நி ஸரிதஶ்ச சராம்ஸி ச ।
யாவந்நா பூ₄ச்ச பூ₄பால ! விஷ்ணு ப₄க்தி பரம் மந
꞉ ॥ 45 ॥

————-

ப₄வத்₃ விதா₄ பா₄க₃வதா ꞉ தீர்த ₂பூ₄தா ꞉ஸ்வயம் ப்ரபோ ₄ ! |
தீர்தி ₂குர் வந்தி தீர்தா ₂ நி ஸ்வாந்த ꞉ஸ்தேந க₃தா ₃ப்₄ருதா ॥ 46 ||

கதாதரன் -கயாவில் உள்ள பெருமாள் -இவரிடம் சரணாகதி அடைந்தவர்கள் தீர்த்த நதிகளையும் பாவனமாக்கும்-துலா மாச – -கங்கையில் புனிதமாகிய காவேரியில் வந்து-புனிதத்தன்மை பெருகும் தீர்த்த நதிகள் –

———-

ப்ரமாணமியதே ₃ வாலம் ப்ரபத்தே ꞉ வ்யாஸ சவ்நகவ் ।
பரோக்த வந்தவ் யதா ₂ஶ்ரீமத்₃ விஷ்ணு த₄ர்மே ச பா₄ரதே ॥ 47 ॥

இவ்வர்த்தம் சவுனாக மஹரிஷிகளாலும் சொல்லப்படுகின்றது -இதுவரையில் உமது மனம் விஷ்ணு பக்தியைப் பெற வில்லையோ அதுவரை புண்ய தீர்த்தங்களில் நீராட வேண்டும் -பக்திமான் களாகில் வேண்டாம் என்றும் கருத்து –

பாகவதர்கள் புண்ய தீர்த்தங்களாகிறார்கள்-அவர்கள் திரு உள்ளத்தில் தியானித்து இருக்கும் பகவானாலேயே தீர்த்தங்களையே பாவனமாக்கி அருள்கிறார்கள் –

மேலும் விஷ்ணு தர்மத்திலும் மஹா பாரதத்திலும் பல பிரமாணங்கள் உள்ளன

————–

வ்ருதை ₂ வப₄ வதோ யாதா பூ₄யஸீ ஜந்ம ஸந்ததி ꞉ ।
தஸ்யாமந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ॥ 48 ॥

உனக்கு வீணாக அநேக ஜென்மங்கள் கழிந்தன -அவற்றுள் இதுவும் ஒரு ஜென்மமாகி விடும் என்றும் அறிந்து நீ பகவானை சரணம் அடையக் கடவாய்-

———–

அத ₂ பாதக பீ₄தஸ் த்வம் ஸர்வ பா₄வேந பா₄ரத |
விமுக்தாந்ய ஸமாரம் போ ₄ நாராயண பரோ ப₄ வ ॥ 49 ॥

தர்ம ராஜனே நீர் பாதகங்களில் நின்றும் பயந்தீராகில் எல்லாமே பிரயத்தனங்களையும் விட்டு ஸ்ரீ மன் நாராயணனையே பராயணமாகப் பற்றிப் போர வேண்டும் –

——

ப்ரத₂ம- ப்ரமாண பத்₃ததி ஸம்பூர்ணம்

————–

அத -த்வதீய -ஸ்வரூப பத்ததி

பு₃த்₃திர் ₄அத்₄யவஸா யாத்மா யாச்நா பர்யவஸாயிநீ ।
ப்ராப்யேச்சோ ₂ரநுபாயஸ்ய ப்ரபத்தே ரூபமுச்யதே ॥ 1 ॥

ஒரு பேற்றைப் பெறுவதற்கு வேறொரு கதி இல்லாமல் இருக்கும் ஒருவர் தம் இஷ்ட தேவதையை உத்தேசித்து திருட அத்யவசாயத்துடன் அப்பேற்றைப் பெறுவதற்கு அவர் செய்யும் பிரார்த்தனா ரூபமான தியானமே ப்ரபத்தியின் ஸ்வரூபம் –

பிரபத்தி -சரணாகதி இரண்டும் ஸ்த்ரீ லிங்கம்–யாசகம் -பிச்சை -இங்கு ஸ்த்ரீ லிங்கம் யாச்-ஞா -பிரபத்தி பிச்சை போல் தானே -நீதான் கொடுக்க வேண்டும் இவரே உபாயமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் -இதுவே பிரபத்திபிரபத்தி -சாமான்ய சப்தம் -சரணாகதி -விசேஷ சப்தம் -பிரபத்தி முத்தி சரணாகதி ஆகும் -பால் பால்கோவா ஆவது போல்பகவத் விஷய த்யானம் -அன்புடன் கூடிய ஞானம் பக்தி யாவது போல்

———————

அநந்ய ஸாத்யே ₄ஸ்வ அபீ₄ஷ்டே மஹா விஶ்வாஸ பூர்வகம் ।
தத் ஏக உபாய தாயாச் நா ப்ரபத்தி ꞉ஶரணாகதி ꞉
” ॥ 2 ॥

வேறொரு உபாயங்களால் பெறுவதற்கு அஸக்யமாய் இருப்பது ஒரு -தான் கோறிய பயனைப் பெறுவதற்கு மஹா விவாசத்தை முன்னிட்டு பகவான் ஒருவனையே உபாயமாகக் கோலி பிரார்த்திப்பது பிரபத்தி யாகும் -அதுவே சரணாகதி எனப்படுகிறது –

இங்கும் யாச்நா -யாசகம் –

விஸ்வ சேந சம்ஹிதை பிரமாணம் இது

————-

ஶரணாக₃தி ஶப்₃தேந ₃ப்ரபத்திஸ் து விஸேஷிதா ।
ப்ரபத்திம் ஸம் ஶ்ரயேத்₃ப₄க்த்யா ஶரணாக₃தி லக்ஷணம் ॥ 3 ॥

இங்கு பிரபத்தி சரணாகதியால் விசேஷிக்கப்பட்டு இருப்பதால் ப்ரபத்தியை சரணாகதியுடன் கூடிய பக்தியுடன் அனுஷ்ட்டிக்க வேண்டும் -தான் கோறிய பலனைக் கொடுக்கும் சுமையை பகவானிடம் சுமத்தும் பர சமர்ப்பணமே சரணாகதி யாகம் –

————-

இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா விஷ்வக்ஸேநாயா ஸாத₃ரம்।
ஆர்த்த ப்ரபத்திரித்யுக்தா ஸைஷா பஞ்சாங்க₃ ஸம்யுதா ॥ 4

இந்தப்பிரபத்தியை பகவான் விஷ்வக்சேனருக்கு ஆதரத்துடன் உபதேசித்து அருளி உள்ளார் -ஐந்து அங்கங்களோடு கூடிய இப்பிரபத்தி ஆர்த்த பிரபத்தி ஆகும்

———–

அஹம் அஸ்ம்யபராதாநாம் ஆலயோ (அ)கிஞ்சநோ (அ)க₃தி ꞉ ।
த்வமேவ உபாய பூ₄தோ மே பவதி ₄ ப்ரார்த₂நாமதி ꞉ ॥ 5 ॥

நான் அபராதங்களுக்கு எல்லாமே இருப்பிடம் -சக்தி இல்லாதவன் -அகதியாகவும் இருக்கிறேன் -ஆகையால் எனக்கு நீரே உபாயமாக வேண்டும் என்றும் பகவானைப் பிரார்த்திப்பதே சரணாகதி என்று சொல்லப்படும் -இச்சரணாகதி பகவான் இடத்தில் மட்டுமே செய்யத்தக்கது –

அஹிர் புத்த்ய சம்ஹிதை

உபாயமாக ஆனவனாக இரு என்று பிரார்த்திக்க வேண்டும் -அவர் எப்பொழுதும் உபாயம் உயயம் -தத்தம் ஸ்வரூபமே இது -நாம் இசைவதே வேண்டுவது -ப்ராப்யமாக இயற்க்கை -நமது மாட்டாமையால் பாயமாக்குகிறோம் கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம்
சேஷ புதன் -சேஷத்வம் இசைந்து -கைங்கர்யம் செய்ய வேண்டுமே

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

——–

ஶரணா₃தி ரித்யுக்தா ஸா தேவே (அ)ஸ்மின் ப்ரயுஜ்யதாம் ।
ஆத்மநோ து₃ர்த₃ஶாபத்திம் விம்ருஶ்ய ச ஹரேர் கு₃ணான்॥ 6 ॥

பிரபத்தி செய்ய வேண்டும் ஒருவன் தான் அகதியாய் இருப்பதால் உண்டான துர்தசையையும் -அகதிகளை ரக்ஷிப்பதற்குப் போந்தவைகளான பகவானுடைய கல்யாண குணங்களையும் நன்றாக யோசித்து பகவான் ஒருவனையே உபாயமாக அறிந்து அவனையே சரணம் அடைகிறவன் சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுகிறான் –

மநோ பாவம் வேறே -புத்தி உறுதி வேறே-

———-

தத் ஏக உபாய ஸம் ஸித்தி ꞉ தம் ப்ரபந்நோ விமுச்யதே ।
வாக்யேஷ் வேதேஷு பஞ்சாங்கா₃ ப்ரபத்திர் லக்ஷ்யதே யதா ₂ ॥ 7 ॥

—————

நிஷேபா பரபர்யாயோ ந்யாஸ ꞉ பஞ்சாங்க₃ லக்ஷண : ।
ஸந்யாயஸஸ் த்யாக₃ இத் யுக்தா ꞉ஶரணா க₃தி ரித்யபி ॥ 8 ॥

மேல் சொல்லிய வாக்யங்களினால் ஐந்து அங்கங்களோடு கூடிய பிரபத்தி காட்டப்படுகின்றது -இப்பிரபத்தியே நிஷேபம் என்றும் ந்யாஸம் என்றும் பஞ்சாங்க லக்ஷணம் என்றும் சன்யாசம் என்றும் த்யாஜ்யம் என்றும் சரணாகதி என்றும் சொல்லப்படுகின்றது –

ப்ராப்யத்தில் இச்சை முதலில் வேண்டும்
உபாயம் தேடி-மற்றவற்றை எல்லாம் சவாசனமாக விட்டு – அவனே உபாயம் என்ற மஹா விசுவாசமும் வேண்டுமே-அவனையும் பிரார்த்திக்கவும் வேண்டுமே

நிஷேபம் -ந்யாஸம் -ஸந்யாஸம் -தியாகம் -சரணாகதி -பிரபத்தி பர்யாயம்
நிஷேபம்-சமர்ப்பித்தல் -ந்யாஸம்-வைத்தல்-ஸந்யாஸம்-நன்கு விட்டு விடுத்த, தியாகம்-தொலைத்தல் -சரணம் ஆகதி

பிரபத்தி -உபாய வர்ணம் -ப்ரபன்னனுக்கு விசேஷணம் இது -தாண்ட ஆசை உள்ளதால் ஓடம் ஏறுவது போல் அதிகாரி விசேஷணம் இது -ஸ்ரீ யபதியே உபாயம் என்று -வரித்து -பற்றும் பற்றும் உபாயம் அல்லவே –

————

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்பாத் ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநாத் ।
அங்கா₃நாம் லக்ஷ்யதே ரூபம் லக்ஷ்மீ தந்த்ர ப்ரகாரத ꞉ ॥ 9 ॥

லஷ்மி தந்திரத்தில் ஆனுகூல்ய சங்கல்பம் பிரதிகூல்ய வர்ஜனம் இவ்விரண்டு அங்கங்களினாலேயே மற்றைய மூன்று அங்கங்களின் ரூபமும் ஒரு விதமாக கட்டப்படுகின்றன -இவற்றுள் அங்கிக்குச் சொல்லப்பட்ட பலனும் இவ்வங்களுக்கும் பயன் என்று பிரிவாக இவைகளின் ரூபங்களும் காட்டப்படுகின்றன –

————–

தேஷாம் அங்க₃ப₂லத்வம் ச தத்₃ரூபம் ச விபா₄க₃ஶ꞉ ।
ஆநுகூல்யமி த₃ம் ப்ரோக்தம் ஸர்வ பூ₄த அநுகூலதா ॥ 10 ॥

பகவான் சொல்வதை அருளிச் செய்கிறார் -நான் ஸர்வ பூதங்களின் உடையவும் உட் புகுந்து இருக்கிறேன் என்ற நிச்சயித்தினால் ஸர்வ பூதங்களிடமும் அனுகூல்யமாக இருப்பதே ஆனுகூல்ய சங்கல்பம் எனப்படுகிறது –

அங்கி யான பிரதானத்துக்கு பலமே அங்கங்களும் பலம் – அங்கங்களுக்குத் தனிப்பலன் இல்லை –

———–

அந்த꞉ஸ்தி ₂தோ (அ)ஹம் ஸர்வேஷாம் பா₄வாநாமிதி நிஶ்சயாத் ।
ஏதேந வியாப்தி விஜ்ஞாநாத் ப்ரபத்தவ் யஸ்ய ஸர்வஶ꞉ ॥ 11 ॥

———–

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ஹிம்ஸாத்₃யபாய விரதி ꞉ உக்தா ஸர்வேஷு ஜந்துஷு ॥ 12

மேல் சொன்னபடி பகவான் ஸர்வ வ்யாபி என்றும் அறிந்து இருப்பதால் அவருக்கு நான் அனுகூலமாக வர்த்திக்க வேண்டி இருப்பதால் ஸர்வ ஜந்துக்களிடமும் ஹிம்ஸை முதலிய அபாயங்களைச் செய்வதில் நின்றும் ஒழிவது பிரதிகூல்ய வ்ரஜனம் என்ற சொல்லப்படும்

உளன் சுடர் மிகு சுருதியுள் கரந்து எங்கும் பரந்துளன்-ஆத்ம தர்சனம் —சம தர்சனம் -யோக உச்யதே -பண்டிதன் சம தரிசனமாக இருக்க வேண்டுமே -தேஹ வியுக்த ஆத்ம ஸ்வரூபம் பார்த்தாலும் -அவனே உள்ளே இருந்து நியமிக்கிறான் என்ற புத்தி வந்தாலே இதுவும் வருமே –

——–

அங்க₃ ஸாமக்₃ர்ய ஸம்பத்தே ꞉ அஶக்தேஶ்சாபி கர்மணாம் ।
அதி ₄காரஸ்ய சா(அ) ஸித்₃தே ₄꞉தே₃ஶ கால கு₃ண க்ஷயாத் ॥ 1
3 ॥

—————–

உபாயா நைவ ஸித்₃த்₄யந்தி ஹ்யபாப ஹுலாஸ் ததா ₂ ।
இதி யா க₃ர்வஹா நிஸ்து தை₃ந்யம் கார்பண்ய முச்யதே
॥ 14 ॥

பக்தி யோகம் முதலிய உபாயங்களை அனுஷ்டிப்பதற்கு அவைகளின் அங்க பூர்த்தி இல்லாமையாலும் -அவற்றை அனுஷ்ட்டிக்க சிலருக்கு அதிகாரம் இல்லாமையாலும் -தேச காலங்களின் குணங்கள் குறைவு படுவதாலும் பக்தி யோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை தலைக்கட்டாதுகள் என்றும் அவைகளுக்கு அபாயங்கள் மேலிட்டு இருக்கின்றன என்றும் கர்வம் அழிந்து மனம் இரங்குவது கார்ப்பண்யம் என்று சொல்லப்படும் –

கிருபணன் சாதனம் இல்லாதவன்-அசக்தன் -அதிகாரம் இல்லாதவன் -தேச காலம் சாதகம் இல்லாதவன்

————–

உபாயாந்தர தவ்ஷ்கர்யாத் தந் நிவ்ருத்திர் ஹி ஸூசிதா ।
அகிஞ்சநாதி ₄காரத்வம் ப்ரபத்தேரபி ஸூசிதம் ॥ 15 ॥

பக்தி முதலிய உபாயாந்தரங்களில் சக்தி இல்லாமையைச் சொல்லுகையாலே ப்ரபன்னர்களுக்கு உபாயாந்தரங்களில் நின்றும் ஓழிகையும் போக்கற்று நிற்கிறவர்கள் ப்ரபத்திக்கு அதிகாரிகள் என்பதும் காட்டப்படுகின்றது –

————

ஶக்தேஸ் ஸூப ஸத₃த்வாச்ச க்ருபா யோகா₃ச்ச ஶாஶ்வதாத் ।
ஈஸே ஶிதவ்ய ஸம்ப₃ந்தா₄த் அநித₃ம் ப்ரத₂மாத₃பி ॥16॥

ஸ்ரீ லஷ்மி தந்த்ர வசனம் மேற்கோள் காட்டுகிறார்

————-

ரக்ஷிஷ்யத் யநுகூலாந்ந ꞉ இதி யா ஸூத்₃ருடா₄ மதி ꞉ ।
ஸ விஶ்வாஸோ ப₄வேச்ச₂க்ர ஸர்வ து₃ஷ் க்ருத நாஸந ꞉ ॥ 17 ॥

பகவான் ப்ரபன்னர்களை ரக்ஷிப்பதற்கு சக்தனாய் இருப்பதாலும் -எல்லாருக்கும் கிட்டும்படி ஸூலபனாய் இருப்பதாலும் -எப்பொழுதும் அருள் பொருந்தியனாய் இருப்பதாலும் -பகவானுக்கும் இவ்வாத்மாவுக்கும் உண்டான அநாதி கால சேஷி சேஷ பாவ சம்பந்தத்தாலும் அனுகூலராய் இருக்கும் நன்மை பகவான் ரஷித்தே தீருவான் என்கிற உறுதியான நம்பிக்கையே மஹா விஸ்வாஸம் எனப்படுகிறது -அது ஸர்வ பாபங்களையும் போக்கி அருளும் என்று ஸ்ரீ லஷ்மீ தேவி தேவேந்திரனுக்கு உபதேசம் செய்து அருளுகிறார்

கோலத்திரு மா மகளோடு கூடி சாலப்பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -காக்கும் இயல்பினன் கண்ணபிரான்

——–

ஸ்வ ரக்ஷ அயோக்₃யதாம் ஜ்ஞாத்வா ப்ரபத்தவ்யஸ்ய யுக்தித꞉ ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸாத் அபீ₄ஷ்ட உபாய கல்பநம் ॥ 18 ॥

தன்னால் சரணம் அடையத்தக்கவரான பகவான் தன்னை ரக்ஷிக்கத் திறமை யுடையவர் என்றும் அறிந்து தன்னை அவன் ரஷித்தே தீருவான் என்ற நம்பிக்கையுடன் கூடியவனாய் தான் கோறிய பயனுக்கு அவனை உபாயமாகக் கோல வேண்டும் –

————–

கருணா வாநபி வ்யக்தம் ஶக்த ஸ்வாம்யபி தே ₃ஹிநாம் ।
அப்ரார்தி ₂ தோ ந கோ₃பாயேத் இதி தத் ப்ரார்த₂நா மதி ꞉ ॥ 19 ॥

பகவான் தயை யுள்ளவராக இருந்தும் -ரக்ஷிப்பதற்கு சக்தராய் இருந்தும் -இப் பிராணிகளுக்கு ஸ்வாமியாய் இருந்தும் -நாம் பிரார்த்தனை செய்யாமல் அவர் நன்மை ரக்ஷிக்கக் கடவரலாராகையால் இங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் –

——

கோ₃பாயிதாப₄வேத்யேவம் கோ₃ப்த்ருத்வ வரணம் ஸ்ம்ருதம் ।
யாச்நா பர்யவஸாயித்வம் ப்ரபத்தேரத ₂ உச்யதே ॥ 20 ॥

ஆகையால் ரக்ஷகராக வேண்டும் என்று பகவானைப் பிரார்த்திப்பது கோப்த்ருத்வ வர்ணம் என்று சொல்லப்படுமாகையாலே தான் இப்பிரபத்தி ஒரு பிரார்த்தனையில் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது –

யாசிப்பதில் முடிய வேண்டுமே

———-

ப்ரபத்தேஸ்து ப்ரபத்தவ்ய ப்ரஸாத ₃த்₃வாரதா ததா ₂ ।
தேந ஸம் ரக்ஷ்ய மாணஸ்ய ப₂லே ஸ்வாம்ய வியுக்ததா ॥ 2
1 ॥

பலமும் அவனதே-பேற்றுக்கு உகப்பானும் அவனே-ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன்-ப்ராப்தாவும் பிராப்திக்கு உகப்பானும் ப்ராபகனும் அவனே –பற்றுவதும் சாதனம் அல்ல பலம் அனுபவத்துக்கு யோக்யதையே இவனுக்கு -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -எனது ஆவி யார் யான் யார் தந்த கொண்டாக்கினாயே-அசித்வத் பாரதந்தர்யம் வேண்டுமே-

———–

கேஶவார்பண பர்யந்தா ஹ்யாத்ம நிஷேப உச்யதே ।
உபாயே ச ப₂லே சைவ ஸ்வ ப்ரயத்தந நிவர்த்தநம் ॥ 22 ॥

இப்பிரபத்தி பகவானுக்கு அனுக்ரஹத்தை உண்டாக்குவது ஒழிய மோக்ஷத்துக்கு நேராக சாதனம் அன்று ஆகையாலும் இவ்வாறு ப்ரஸன்னரான பாவானால் ரக்ஷிக்கப்படும் சேதனருக்குக் கிடைக்கும் மோக்ஷ ரூபமான பயனில் இவனுடையவன் அல்லாமையாலும் மோக்ஷ சாதனமாகுகையும் மோக்ஷ ரூப பலன்கள் உடையவனாகைக்கும் பகவானிடத்தில் சுமத்துவது ஆத்ம நிஷேபம் என்று சொல்லப்படும் –

———-

ஸ்வாம்யாயத்த மிதி வ்யக்தம் நிஷேபஸ் யாங்கி₃ தா ததா ₂ ।
ஆர்த ப்ரபத்தா வித்யேஷாம் அங்கா₃நாம் சந்நிதி ₄꞉ ததா ₂ ॥ 23 ॥

உபாயத்தை அனுஷ்டிப்பதிலும் அதன் பயனை பெறுவதிலும் தனது ப்ரயத்னத்தைக் கழித்துக் கொள்வதும் பகவானுடைய அதீனம் என்பது வெளிப்படுகின்றது -ஆகையால் ஆத்ம நிஷேபம் என்பதும் அவனது அருளாலே தான் நடக்கும் என்பதும் வெளிப்படுகின்றது –

—————

த்₃ருப்த ப்ரபத்தவ் ஏதாநி ப₄விஷ்யந்த் யுத்தரோத்தரம் ।
ஆர்த த்₃ருப்த விபா₄க₃ஸ்து ஶ்ரீமத்₃ ராமாயணோதி₃ ꞉ || 24 ||

ஆர்த்த ப்ரபத்தியில் மேல் சொல்லிய ஐந்து அங்கங்களும் சேர அனுஷ்ட்டிக்கத் தக்கவைகள் -திருப்த ப்ரபத்தியில் இவ்வங்கங்கள் பின்பும் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

தேஹ அவசான முக்தி நாம் அறிந்தது
லௌகிக சுக போகங்களை அனுபவிக்க ஆசை கொண்டு ஒவ்வொன்றும் வர வர அடுத்த அங்கம் வரும்

———-

” ஆர்தோ வா யதி வா த்₃ருப்த ꞉ பரேஷாம் ஶரணாக₃ த꞉ ।
அரி꞉ ப்ராணான் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய꞉ க்ருதாத்மநா ” ॥ 25

மேல் சொல்லியபடி ஆர்த்த ப்ரபன்னர் என்றும் திருப்த ப்ரபன்னர் என்றும் பிரிவினை ஸ்ரீ மத் ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது -அது எங்கனே என்னில் பிறர்களில் எவனாவது ஒருவன் ஆர்த்தனாகவாவது திருப்தனாகவாவது சரணம் அடைவானாகில் ஸாஸ்த்ர நிச்சயமுடைய ஒருவர் அப்படி தன்னைச் சரணம் அடைந்தவன் சத்ருவாக இருந்த போதிலும் தம்முடைய ப்ராணன்களையாவது கொடுத்து அவனை ரக்ஷிக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமன் அருளிச் செய்துள்ளார் –

பரேஷாம் –சொல்லி மீண்டும் அரி ரஜஸ் குணம் தொடர்ந்து இருந்தாலும் –
கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றி அன்றே வந்தடைந்தேன் போல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும் -ரக்ஷணம் உயர்ந்தது -பெறாப்பேறு போன்றது –

————

யஸ்ய தே₃ஹாந்தர க்ருதே ஸோகோ த்₃ருப்தஸ் ஸ உச்யதே ।
யஶ்ச ப்ராரப்₃ ததே ₃ஹே (அ)பி ஸோசத்யார்தஸ் ஸ உச்யதே ॥ 26 ॥

எவர் ஒருவர் தமக்கு மறுபடியும் ஜென்மம் உண்டாவதில்லை சோகம் உடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் திருப்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார் -எவர் ஒருவர் தனக்கு இப்பொழுது உண்டாய் இருக்கும் தேஹத்திலேயே சோகமுடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் ஆர்த்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார்

————

ஆர்த த்₃ருப்த விபா₄கேந₃ே ப்ரபத்திரிய முச்யதே ।
ஸாதநம் ₄ ப₄க₃வத் ப்ராப்தவ் ஸ ஏவேதி ஸ்தி₂ரா த்₃ருடா₄ || 27 ॥

மேல் சொன்னபடி பிரபன்னர்களின் பிரிவால் இப்பிரபத்தியும் ஆர்த்த பிரபத்தி என்றும் திருப்த பிரபத்தி என்றும் பிரிவுள்ளதாய் சொல்லப்படுகிறது -ஆகிலும் பகவானைப் பெறுவதில் அவரே சாதனம் என்று உறுதியான கருத்து இருக்க வேண்டும்

————-

ஸாத்₄ய ப₄க்தி : ஸ்ம்ருதா சைவ ப்ரபத்தரிதி கீ₃யதே ।
இமம் சார்த ₂மபி₄ப்ரேத்ய வாசோ பா₄க₃வதே யதா ₂ ॥ 28 ॥

இப்பிரபத்தியே -ஸாத்ய பத்தி என்றும் பிரபத்தி என்றும் சொல்லப்படுகிறது -இப்பிரபத்தியை பக்தி பாவமாக சொல்லும் உக்தியிலும் கீழ் சொல்லியபடி இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டப்படுகின்றன –

பக்தி சாதனமாகக் கொள்ளாமல் பலமாகக் கொள்ள வேண்டும் -சாதன பக்தி உபாயாந்தர கோஷ்ட்டி -ஸ்வரூபத்துக்குச் சேராதே
ஸ்வயம் பிரயோஜனமாக ஸாத்ய பக்தி -இதுவே பலம் -அனுபவமே பிரயோஜனம் -ஆகவே பிரபத்தி போலவே இதுவும்

——————

“ப்ரபந்நஶ் சாதகோ யத்₃ வத் ப்ரபத் தவ்ய꞉ கபோதவத் ।
ரக்ஷ்ய ரக்ஷக யோரே தத் லக்ஷணம் லக்ஷ்ய மேதயோ ꞉” ॥ 29 ॥

ப்ரபன்னர் சாதக பக்ஷி போலவும் -பிரபத்தி செய்யத் தக்கவர் மாடப்புறா போன்றவும் இருக்கிறார்கள் -இவ்விரண்டு பக்ஷிகளுடைய நடவடிக்கைகளே ரக்ஷிக்கத்தக்க வரான ப்ரபன்னருக்கும் ரக்ஷகரான பிரபத்தி செய்யத்தக்கவருக்கும் லக்ஷணங்களாகக் காணத் தக்கவைகள் –
சாதக பக்ஷி தண்ணீர் குடிக்க மேகத்தையே எதிர்பார்ப்பது போல பிரபன்னர் மோக்ஷம் பெற பகவானையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்று கருத்து -காட்டில் வேட்டையாடிய ஒரு வேடன் காற்று மழைகளால் அலைந்து அங்கு இருக்கும் ஓர் மரத்தை இருந்த பிராணியை உத்தேசித்து சரணம் அடைய அதில் இருந்த மாடப்புறா அவ்வேடனைக் கண்டு அக்குளிரை யாத்தி தன் சரீரத்தின் மாமிசத்தை இட்டு அவன் பசியையும் தீர்த்த வ்ருத்தாந்தம் –சரணம் அடையப்பட்டவர் சரணம் அடைந்தவரின் வ்யஸனத்தை தீர்க்க வேண்டும் என்று கருத்து –

ப்ரபந்ந ஜன சாதகாம்புஜம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கபோத வியாக்யானம் சரணாகத க்ருத்யம் சொல்லுமே
பிரம்மகிரி என்ற மலையில் ஒரு கொடிய வேடன் இருந்தான். அவன் பறவைகள், மிருகங்களை மட்டுமின்றி பிராமணர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் வேட்டை ஆடிக்கொண்டே காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான் வேடன். அவனிடம் பிடிபட்ட சில புறாக்களும், பறவைகளும் இருந்தன. இருள் சூழ்ந்தது. மழையும் பெய்ய ஆரம்பித்தது. வேடனுக்குப் பசியும், தாகமும் அதிகரித்தது. அவன் ஒரு மரத்தை அடைந்து ஒரு கிளையில் அமர்ந்து இரவைக் கழிக்க முடிவு செய்தான். ஆனால், அவன் மனமோ மனைவி, மக்களை எண்ணி வருத்தமுற்றது.
அந்த மரத்தில் பல நாட்களாக ஒரு பெண்புறாவும், ஆண் புறாவும் வாழ்ந்து வந்தன. அவற்றில் பெண் புறா வேடனால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைப்பட்டு வேடனிடம் இருந்தது. இதனை அறியாத ஆண்புறா தன் மனைவியை எண்ணி வருந்தியது. வேடன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனிடமிருந்த பெண் புறா, ஆண் புறாவின் செவிகளில் விழும்படியும், ஆண் புறா பெண் புறாவின் காதுகளில் விழும்படியும் பேசத் தொடங்கின. வேடன் உறங்குவதால் பெண் புறாவை விடுவிப்பதாக ஆண் புறா கூற பெண் புறா அதை மறுத்தது. மேலும், ஒன்று ஒன்றை அழித்து உயிர் வாழ்வது உலக இயற்கை. எனவே அந்த எண்ணத்தை விடுத்து விருந்தினனான வேடனை எண்ணி அவனுக்கு உதவுவது தமது கடன் என்று கூறிற்று.
உடனே, ஆண் புறா வேடனின் குளிரை நீக்கச் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு தீ மூட்டியது. பின்னர் அது தீயில் விழுந்து இறந்தது. பெண் புறாவும் தானும் தீயில் விழுந்து உணவாக விரும்புவதாக கூறி தீயில் குதித்தது. இவற்றை உணர்ந்த அந்த வேடன் மனம் மாறினான். அவன் அன்று முதல் வேட்டையாடுவதை நிறுத்தியதுடன் ‘இதுவரையில் செய்த கொலைகளுக்காக வருந்தி, தான் இனி செய்ய வேண்டுவது யாது?’ எனச் சிந்தித்தான். புறாக்களின் தியாகத்தைக் கண்டு விண்ணிலிருந்து வந்த விமானத்தில் புறாக்கள் ஏறி நல்லுலகை அடைந்தன. அப்போது அப்புறாக்கள் கவுதம கங்கையில் பதினைந்து நாட்கள் நீராடினால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வேடனிடம் கூறின. இவ்வாறு புறாக்கள் தியாகம் செய்ய தீயில் விழுந்த இடம் கபோத தீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

————-

ப்ரபத்திரபி ஸாமாந்ய ஶாஸ்த்ரே (அ)ந்யத்ர ப்ரபஞ்சிதா ।
யத்₃யேந காம காமேந ந ஸாத்₄யம் ஸாதநாந்தரை ꞉ || 30 ॥

————–

முமுக்ஷுணா ந ஸாங்க்₂யேந யோகே₃ ந ந ச ப₄க்தி ꞉ ।
ப்ராப்யதே பரமம் தா₄ம யதோ நாவர்த்ததே புந ꞉ ॥ 31 ॥

——

தேந தேநாப்யதே தத் தந் ந்யாஸே நைவ மஹாமுநே ! ।
பரமாத்மா ச தேநைவ ஸாத்₄யதே புருஷோத்தம꞉ ॥
32 ॥

எந்த எந்த பயன்களை விரும்பும் எவர் எவர்களால் அப்பயன்களுக்கு சாதனங்களாக ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் பெறக்கூடாதவைகளாக இருக்கின்றனவோ அவைகளும் சாங்க்ய யோகத்தைச் செய்ய சக்தி இல்லாமையால் அதனால் பெறக் கூடாததான கைவல்யமும் பக்தி யோகத்தை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் அதனால் பெறக்கூடாதவைகளான புனராவ்ருத்தி இல்லாத மோக்ஷமும் பரமாத்மாவும் அவைகளைப் பெற சாதனங்களாக அனுஷ்ட்டிக்கப்படும் இப்பிரபத்தியினாலேயே சாதிக்கப்படுகின்றன என்று சாமான்ய சாஸ்திரங்களிலும் இப்பிரபத்தியின் மஹிமை விவரிக்கப்படுகின்றது –

————-

ஸாத நாந்தர து₃ஸ் ஸாத₄ம் ப்ராப்யம் யல் லோக வேதயோ ꞉ ।
ஸூகேந₂ ப்ராப்யதே யேந ஸா ப்ரபத்திரிதி ஸ்தி₂தி ꞉ ॥ 33 ॥

லோகங்களிலாவது சாஸ்த்ரங்களிலாவது சொல்லப்பட்டு இருக்கும் வேறு ஓர் உபாயங்களினால் பெறுவதற்கு அஸாத்யமாய் இருக்கும் -பயன்கள் யாவுமே இப்பிரபத்தியினால் சுகமாக ஸாதிக்கப்படும் என்பதே ஸித்தாந்தம்

————

த்விதீய -ஸ்வரூப பத்₃த₄தி ஸம் பூர்ணம்-

———

த்ருதீய -அதிகாரி பத்ததி

அநந்ய உபாய ஶக்தஸ்ய ப்ராப்யேச்சோ₂ரதி ₄காரிதா ।
ப்ரபத்தவ் ஸர்வ வர்ணஸ்ய ஸாத்த் விகத்வாதி ₃யோக₃த ꞉ ॥ 2 ॥

வேறொர் உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களாய் ஓர் பேற்றைப் பெற விரும்புபவர்கள் அது விஷயத்தில் இப்பிரபத்தியை அனுஷ்ட்டிக்க அதிகாரிகள் ஆகிறார்கள் -அவ்வதிகாரம் ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் கூடும் -ஆனால் அவர்கள் சாத்விக குணம் முதலிய ஸத் குணங்களை மாத்ரம் உடையவர்களாக இருக்க வேண்டும் –

விஷய நியமமே உள்ளது-தேச கால அதிகாரி நியமங்கள் இல்லையே
இச்சை வேண்டும் -சாத்விகராக இருக்க வேண்டும் -சோகமுடையவன் அதிகாரி சோக நிவ்ருத்தியே பலம்
பசிக்கிறவன் உண்டு பசி தீருவது போல்-சோகமுடையவன் பிரபத்தி செய்து சோக நிவ்ருத்தி அடைகிறான்
ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமும் வேண்டும்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் வேண்டும் –

————-

ஸா ஹி ஸர்வத்ர ஸர் வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா ₃।
இதி ஸர்வ ப₂ல ப்ராப்தவ் ஸர் வேஷாம் விஹிதா யத ꞉ ॥ 2 ॥

இப் பிரபத்தி ஸர்வ வர்ணத்தார்களுக்கும் ஸர்வ பயன்களையும் கொடுக்கும் என்று விதிக்கப்பட்டு இருப்பதால் சர்வாதிகாரம் ஆயிற்று –

——————

ப்ரபத்தேர் வாசகோ மந்த்ர꞉ கட₂ வல்யாதி ஷு ₃ஸ்ம்ருத ꞉ ।
அயம் புராணே பாத்₃மே ச பராஶர வஸிஷ்ட₂யோ ꞉ ॥ 3 ॥

———

ஸம் வாதே ₃ ப்ரண வைகார்த ₂꞉ பஞ்சவிம்ஶதி வர்ணக꞉ ।
ருஷ்யாதி ₃ஸஹித ꞉ஸாங்க₃꞉ பூ₄யோ பூ₄ய꞉ ப்ரபஞ்ச்யதே
॥ 4 ॥

இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்லும் த்வயம் என்னும் மந்த்ரம் கடவல்லி-என்னும் உபநிஷத்தில் ஓதப்படுகின்றது -பாத்ம புராணத்தில் பராசர வஸிஷ்ட முனிவர்களின் ஸம்வாதத்தில் இம்மந்திரம் பிரணவத்தோடு சமான அர்த்தத்தை யுடையத்தாயும் 25 அக்ஷரங்களுடன் கூடியதாகவும் சொல்லப்படுகிறது -ரிஷி சந்தஸ் முதலிய அங்கங்களோடு கூடியதாகவும் சொல்லப்படுகிறது –

—————-

தத்ர ஸர்வாதி ₄காரத்வம் ஸக்ருத் உ₃ச்சார்யதா ததா ₂ ।
விதீயதே ததா ₂(அ)ந்யத்ர ஶாஸ்த்ரே ப₄க₃ வதா (அ)பி ச ॥ 5 ॥

அந்தப் புராணத்தில் இம்மந்திரம் சர்வாதிகாரம் என்றும் ஒருக்கால் உச்சாரண மாத்திரத்தில் ஸர்வ பல ப்ரதத்வம் எனதும் விதிக்கப் படுகின்றது -அப்படியே பகவத் சாஸ்திரத்திலும் விதிக்கப் படுகின்றது –

—————–

த்ரை வர்ணி கேதரஸ்யாபி த்₃ வயே தஸ்மாத் ₃ தி₄க்ரியா ।
த₄ர்மி க்₃ராஹ கமாநேந யத் ஸித்₃ த₄ம் லோக வே ₃தயோ ꞉ ॥ 6 ॥

ஆகையால் இத்த்வத்தில் த்ரை வர்ணிகர்களாய் ஒழிந்தவர்களுக்கும் ஜபம் செய்ய அதிகாரம் உண்டு என்கிறது -மேலும் லோகத்திலும் வேதத்திலும் சாமான்ய விதியில் விசேஷத்தை அறிவிக்கும் பிரமாணங்களினால் கிடைத்திருக்கும் விசேஷ விசேஷங்களையும் சொல்லுகிறோம்

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமும் -இல்லை-சூரணை -23-
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வகாம பலப்ரதா -என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

விஷய நியமமே உள்ளது –சூரணை -24-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –சூரணை-29-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –சூரணை -30-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –சூரணை -32-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–சூரணை-33-

விஷய நியமம் ஆவது-
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -34-

ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -35-

————-

யதா ₂ஹி’ரத ₂காராதே ₃꞉ அக்₃ந்யாதா ₄நாதி ₃வைதிகே ।
ஆஜ்யா வேக்ஷணாதவ் ₃ து மந்த்ரே பத்ந்யா꞉ ப்ரமாணதா ꞉ ॥ 7 ॥

தச்சர் முதலிய சிலருக்கு வைதிகமான அக்னி யாதானம் முதலிய வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் -யஜமான பத்னிக்கு ஆஜ்யா வேஷண வைதிக மந்த்ரத்தை உச்சரிக்கும் அதிகாரமும் உண்டானது போல் வைதிகமான த்வயம் என்னும் மஹா மந்த்ரத்தை உச்சரிக்க த்ரை வர்ணிகர் ஒழிந்தவர்களுக்கும் ப்ரமாணத்தால் அதிகாரம் உண்டு என்கிறது –

——————-

யத்₃வா (ஆ)தி₄ தக்ரமாபாயாத் ஸ்வராதே₃ர்வா விலோபத ꞉ ।
த்₃வயஸ்ய ஸர்வாதி ₄க்ருதி ꞉ஸர்வேஷாம் தாந்த்ரிகம் து வா ॥ 8 ॥

இல்லாவிடில் வேதத்தில் ஓதப்படும் இம்மந்திரத்தின் கிரமத்தை குறைவு படுத்துவதனாலாவது இதன் ஸ்வரங்களை விட்டு விடுவதினாலாவது இம்மந்த்ரம் வைதிகம் ஆகாமல் த்ரை வர்ணிகர் ஒழிந்த மற்றவர்களாலும் உச்சரிக்கும் படியான தாந்த்ரிகமாகத் தக்கது அல்லது ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் தாந்த்ரிகமாகவே இருக்கத் தக்கது –

—————-

அஜ்ஞ ஸர்வஜ்ஞ-ப₄க்தாநாம் ப்ரபத்தாவதி ₄காரிதா ।
உபாயாந்தர விஜ்ஞாநா ஶக்தே ரஜ்ஞஸ்ய யுஜ்யதே
॥ 9 ॥

கர்ம யோகம் முதலிய உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கும் ஞானம் யோகம் பக்தி யோகம் இவற்றில் சக்தி உள்ளவர்களாய் இருப்பவர்களுக்கும் இப்பிரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது -அவற்றில் அசக்தர்களுக்கு இதர உபாயங்களை அறிய சக்தி இல்லாமையால் ப்ரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது –

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –சூரணை -41-
அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் —சூரணை -42-
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –சூரணை -43-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற -சூரணை -44-
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –சூரணை -45-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு –சூரணை -46-

——————-

ஸத்₃ருஸோபாய வை து₄ர்யம் ஸாக்ஷாத்₃ ப₄க₃வதோ வித₃ன்।
ஸர்வஜ்ஞ꞉ ஶரணம் யாதி யோக₃மார்க₃பராங்முக₂꞉ ॥ 10 ॥

ஞான யோகமும் ஸித்த உபாயமான பகவானைப் போல் மோக்ஷத்துக்கு நேரான உபாயமாகாமையாலும் சுலப உபாயமாகவும் கர்ம ஞான யோகங்களை விட்டு அவ்வதிகாரியும் பகவானைச் சரணம் அடைகிறார்

——————–

ஸர்வ காலம் ப்ரேம வஶாத் ப₄ஜன் ப₄க்தோ (அ)ப்ய நந்யதீ ₄꞉ ।
உபாயம் வா (அ)ப்யுபேயம் வா க்ஷமோ (அ)ந்யம் நா வலம்பி₃தும் ॥ 11 ॥

பக்தி யோகம் செய்கிறவர் வேறொரு இடத்தில் புத்தியைச் செலுத்தாமல் மிகவும் பக்தியுடன் ஸர்வகாலமும் பகவானை உபாஸனம் செய்பவராக இருந்தும் கால விளம்பம் முதலிய தோஷங்களோடு கூடியதால் வேறொரு உபாயங்களையாவது பலன்களையாவது பெற விரும்புகிறவராய் பகவானை சரணம் அடைகின்றனர்

—————

ஜிதந்தா மந்த்ர விவ்ருதவ் சவ்நகேந யதீ ₃ரிதிம் ।
அஜ்ஞ ஸர்வஜ்ஞ ப₄க்தாநாம் க₃திர் க₃ம்யோ ப₄வேத்₃ ₄தரி꞉ ॥ 12 ॥

சவுனாக முனிவரும் ஜிதந்தா என்னும் மந்த்ர விவரண கிரந்தத்தில் கர்மயோகாதிகளில் சக்தர்களுக்கும் அசக்தர்களுக்கும் பகவான் உபாயமாகவும் உபேயமாகவும் ஆகிவிடுகிறார் என்று அருளிச் செய்கிறார் –

————–

இத₃ம் ஶரணம் அஜ்ஞாநம் இத ₃மேவ விஜாநதாம் ।
இ த₃ம் திதீர் ஷதாம் பாரம் இத ₃மாநந்த்யமிச்ச₂ தாம் ॥ 13 ॥

ஜிதந்தையில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -கர்மயோகத்தை அறியாதவர்களுக்கும் அதை அறிந்தோர்களுக்கும் –ஸம்ஸாரத்தை கடக்க மட்டுமே விரும்பும் கைவல்யார்த்திகளுக்கும் என்றும் அழிவில்லாத பரம புருஷார்த்தமான பகவத் ப்ராப்திக்கும் இப்பிரபத்தியே உபாயமாகும் –

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –சூரணை -49-
இம் மூன்றும் -என்றது மூன்று அதிகாரிகளையும் சொன்னவாறு –
யுக்த அர்த்தத்துக்கு பிராமண உபாதானம் பண்ணுகிறார்
அஞ்ஞான ஹேதுகத்தவ ப்ரபத்தியையும் – ஞானாதிக்க -ஹேதுக பிரபத்தி –
பக்திர் பூம்யா -பக்தி பாரவஸ்யத்துக்கு -பக்தியின் எல்லை நிலம் ஹேதுக்கவாக
அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம் அவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி –

————

இதி லக்ஷ்ம்யா ச தந்த்ரே (அ)பி ப்ரபத்தா வநு வர்ணிதம் ।
ஆஸ்திக்யாதி ₃குணோ பேதம் ஶாஸ்த்ரம் வக்த்யதி ₄காரிணம் ॥ 14 ॥

பெரிய பிராட்டியாரால் லஷ்மீதந்த்ரத்தில் ஆஸ்திக்யாதி லக்ஷணங்களோடு கூடியவர் இப்பிரபத்திக்கு அதிகாரியாக ஸாஸ்த்ரம் சொல்லுவதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது –

————–

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் ஶாஸ்த்ரே விஷ் வக் ஸேநாய ஶ்ருண் வதே ।
ய ஏவம் ஶரணம் க₃ச்சே₂த் க்ருதக்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 15॥

யாவன் ஒருவன் இவ்வாறு என்னை சரணம் அடைகிறானோ அவன் செய்ய வேண்டிய க்ருத்யங்கள் யாவையும் செய்தவனாவான் என்று பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளுகிறார் –

————

ஏதத்₃ரஹஸ்யம் வேதா ₃நாம் புராணாநாம் ச ஸம்மதம் ।
கு₃ஹ்யாத்₃கு₃ஹ்ய தமம் ப்ரோக்தம் நிக₃மாந்தேஷு கீர்திதம் ॥ 16 ॥

இப்பிரபத்தி வேதங்களின் ரஹஸ்யார்த்தகம் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப் பட்டது -வேதாந்த ஸாஸ்திரங்களிலும் இப்பிரபத்தி ரஹஸ்யங்களிலும் ரஹஸ்யங்களாக ஓதப்பட்டு கொண்டாடப்படுகிறது –

———

நாதீ ₃க்ஷிதாய வக் தவ்யம் நா ப₄க்தாய கதா ₃சந ।
ந சா ஶுஶ்ரூஷவே வாச்யம் நாஸ்திகாய கதா ₃சந ।
கு₃ருப₄க்திர் ந யஸ்யாஸ்தி பீ₃ஜபிண்ட₃பதா₃தி ₃ஷு ॥ 17 ॥

இப்பிரபத்தி வித்யையை சக்ர அங்கநாதி நியமம் இல்லாதவருக்கும் -நாஸ்திகனுக்கும் -எவனுக்கு குருவிடத்திலாவது அவரது சந்நிதி வசனம் முதலியவற்றில் பக்தி இல்லையே அவர்களுக்கு உபதேஸிக்கக் கூடாது –

—————

நோப தே ₃ஶஸ்து யஸ்யாஸ்தி ந வக்தவ்யம் ஹிதார்தி ₂நா ।
இத்யுக்த வான் ஜக₃ந் நாதோ ₂ த்₃விரதா ந ந மாம் ப்ரதி ।
மயா(அ)பி தவ ப₄க்தஸ்ய கதி ₂ தம் யச்ச்₂ருதம் புரா ॥ 18 ॥

எவருக்கு இப்பிரபத்தி மந்த்ரம் உபதேசம் இல்லையோ அவருக்கும் சொல்லத்தக்க தல்ல என்றும் ஸ்ரீ ஜெகந் நாதனான பகவான் எங்களுக்கு உபதேஸித்தார்-நான் கேட்டபடி பக்தரான உமக்கும் இவ்வர்த்தகத்தை உபதேஸித்தேன் என்றும் விஷ்வக்ஸேனர் கஜானனுக்கு உபதேஸித்தார் –

————

த்ருதீயா -அதிகாரி பத்ததி ஸம் பூர்ணம்

———–

சதுர்தீ –குரு உபாஸந பத்ததி

ஸம்ஸாரோத்₃ விக்₃ந மநஸா தாபத்ரிதய பீ₄ருணா ।
விரக்தே நேஹ சா(அ)முத்ர ப₂லே க₃ம்யோ கு₃ருர் மஹான் ॥ 1 ॥

ஸம்ஸாரத்தில் நின்றும் பயந்த மனசை உடையவராய் -தாபத்ரயத்தால் பயந்தவராயும் -இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் பயன்களை வைராக்யம் யுடையவராயும் இருப்பவரால் மஹாத்மாவாய் இருக்கும் குரு ஒருவரை அடையத்தக்கவர்

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குழைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய உய்ய விரகில்லையே-முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் உபதேஸங்கள்-மந்த்ர உபதேஸம் பண்ண ஆச்சார்யர் வேண்டுமே-ஒழிக்க ஒழியாத ஒன்பது வித ஸம்பந்த ஞானம் கொடுப்பவர் ஆச்சார்யர் தானே- அதிகாரி ஸ்வரூபத்துக்கு பின் ஆச்சார்ய -பகவத் பரிசார -பகவத் பத்ததிகள் -மேல்அவ்வானவருக்கு மவ்வானவர் அடிமை உபதேஸம் -நானும் உனக்கு பழ வடிமை -உணராமல் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க -நடுவே வந்து உய்யக்கொண்ட நாதனே ஆச்சார்யர்-ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே உடைய குருவை அடைந்தக்கால்- -தானே வைகுந்தம் தரும் -சேர்ப்பார்களைப் பஷிகளாக்கி -கடகர்

————

பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் விப்ரோ நிர் விண்ண மாநஸா ꞉ ।
க்ருதேந மோஷோ நாஸ்தீதி தஜ் ஜ்ஞாநார்த₂ம் கு₃ரும் வ்ரஜேத்
॥ 2 ॥

ப்ராஹ்மணராக இருக்கும் ஒருவர் ஸ்வர்க்க லோகம் முதலிய போக ஸ்தானங்களை புண்ய கர்மங்களால் அடையப்படுபவை என்றும் அறிந்து மனம் இறக்கமுடையவராய் கர்மத்தினால் மோக்ஷம் கிடைப்பதில்லை என்றும் அறிந்து தெளிந்து அந்தப் மோக்ஷ ஞானத்தைப் பெறுவதற்கு ஓர் ஆச்சார்யரைக் கிட்ட வேண்டும் –

ஞானிகள் -தத்வ தர்சனிகள் -தத் வித்தி –பிரணி பாதேனா பரி பிரஸ்தேன -ஸேவையா –பீதக வாடைப்பிரானார் பரம குருவாக வந்து மயர்வற மதிநலம் ஆழ்வார்களுக்கு அருள -அவர்கள் ஆச்சார்யர்கள் மூலம் நமக்கு அருளுகிறார்கள் –

————

ஶ்ரோத்ரியம் ப்₃ரஹ்ம நிஷ்ணாதம் ப்ரீணயேத்₃ வஸ்துபி₄꞉ ப்ரியை ꞉ ।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய ஶிஷ்யாய ப்ரணதாய ச ॥ 3॥

——–

த₃த்₃யாத் அஷ்டாக்ஷரம் ஸத்யம் ப்₃ரஹ்ம நாராயணம் பரம் ।
தாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் ப்ரவதே ₃ தி₃த்யர ₂ம் ஶ்ருதி ராஹ ஹி
|| 4 ||

ஸ்ரோத்ரியராயும் ப்ரஹ்ம ஞானம் யுடையவராய் இருக்கும் ஆச்சார்யர் ஒருவருக்கு அவர் கோறிய வஸ்துக்களைக் கொடுத்து அவரை சிஷ்யன் தன்னிடத்தில் ப்ரீதி யுள்ளவராய்ச் செய்ய வேண்டும் -அவ்வாச்சார்யரும் அவ்வாறு தமக்கு ப்ரீதியை யுண்டாக்கியவனாயும் -வணக்கம் யுடையவனாயும் -சாந்தமான மனமுடையவனுமாக இருக்கும் சிஷ்யனுக்கு என்றும் அழிவில்லாத ஸத்ய ப்ரஹ்ம ரூபியான ஸ்ரீ மந் நாராயணனை அறியத்தக்க ப்ரஹ்ம வித்யயை உபதேசிக்க வேண்டும் என்றும் இவ்வர்த்தத்தை வேதம் சொல்கிறது –

ஆத்ம குணங்கள் கை புகுந்தால் ஆச்சார்யன் கை புகுரும் -மந்த்ரம் கை புகுந்தால் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து கை புகுரும்-இதனால் வைகுந்தமும் கை புகுரும்

———–

குரோஶ் ஶிஷ்யஸ்ய வித்₃யாயா லக்ஷணம் காலமேவ ச ।
ஸாமாந்யதோ விசேஷாச்ச ப₄க₃வான் ஶாஸ்த்ர உக்தவான் ॥ 5 ॥

குருவினுடையவும் சிஷ்யனுடையவும் ப்ரஹ்ம வித்யையினுடையவும் லக்ஷணத்தையும் அவைகளுக்குத் தக்க காலத்தையும் சாமான்யமாகவும் சேஷித்தும் பகவஸ் ஸாஸ்த்ரத்தில் பகவான் அருளிச் செய்துள்ளார் –

—————–

த்ரிஷு வர்கேஷு ஸம்பூ₄தோ மாமேவ ஶரணம் க₃த ꞉ ।
நித்ய நைமித்திக பரோ மதீ ₃யா(ஆ)ராத₄நே ரத ꞉ || 6
|

பகவஸ் ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -ப்ராமண ஷத்ரிய வைஸ்யராகிய மூன்று வர்ணங்களில் பிறந்தவராயும் -என்னையே சரணம் அடைந்தவராயும் -தம்முடையவர்களிடமும் பிறர்களிடமும் சமமான மனஸை யுடையவராயும் -நித்ய நைமித்திக கர்மங்களை மட்டுமே அனுஷ்டிப்பவராயும் -என்னுடைய ஆராதனத்தில் ஆசை யுடையவராயும் இருக்கும் ஒருவர் ஆச்சார்யர் எனச் சொல்லப்படுவார் –

—————-

ஆத்மீய பரகீயேஷு ஸமோ தே ₃ஶிக உச்யதே ।
ஆஸ்திகோ த₄ர்மஶஸீலஶ்ச ஸீலவான் வைஷ்ணவ
꞉ ஶுசி꞉ ॥ 7 ॥

————-

க₃ம்பீ₄ரஶ் சதுரோ தீ₄ர꞉ ஶிஷ்ய இத்யபி₄ தீ₄யதே ।
நாநுகூல்யம் ந ந க்ஷத்ரம் ந தீர்தா ₂ தி ₃நிஷேவணம் ॥ 8 ॥

ஆஸ்திகராயும் எப்போதும் தர்மங்களைச் செய்பவராயும் நன்னடத்தை யுள்ளவராயும் வைஷ்ணவராயும் பரிசுத்தராயும் கம்பீர ஸ்வபாவமுடையவராயும் -வல்லமை யுள்ளவராயும் –ஸாஸ்த்ரங்களில் நிலை யுள்ளவராயும் -இருக்கும் ஒருவர் சிஷ்யராகச் சொல்லப்படுவார்

இத் த்வயத்தினால் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தியாவது தேசம் காலம் முதலியவற்றின் நன்மைகளாவது- புண்ய தீர்த்தம் முதலியவைகளை அடைவதை யாவது -அடிக்கடி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கையாவது -ஸர்வ காலமும் ஜெபம் செய்ய வேண்டும் என்கையாவது – அபேக்ஷிக்கிறது இல்லை -எவ்விடத்தாலாவது -எப்படிக்காவது -ஒருக்கால் அனுஷ்டித்த மாத்திரத்திலேயே ஸ பலமாகும் என்றும் கருத்து –

————–

ந புநஶ் சரணம் நித்யம் ஜபம் வா (அ)பேக்ஷதே ஹ்யயம் ।
நமஸ் க்ருத்ய கு₃ரூன் தீ₃ர்க₄ப்ரணாமைஸ் த்ரிபி₄ராத்₃ருத꞉ ॥ 9 ॥

மூன்று முதலாக உள்ள அநேக அஷ்டாங்க ப்ரணாமங்களினால் ஆச்சார்யரைத் தண்டம் சமர்ப்பித்து -நிதியைப் பெறும் தரித்ரனைப் போல் மிகவும் ஆசை யுடையவனாய் சிஷ்யன் இந்த மந்த்ர ராஜத்தைப் பெற வேண்டும் –

————–

க்₃ருஹ்ணீயான் மந்த்ர ராஜாநாம் நிதி ₄காங்க்ஷீவ நிர்த₄ந ꞉ ।
பரம்பராமுபதி ₃ஸேத் கு₃ரூணாம் ப்ரத₂மம் கு₃ரு꞉ ॥ 10 ॥

ஆச்சார்ய பரம்பரையை முன்பு உபதேசித்து -பின்பு த்வயத்தை உபதேசிக்க வேண்டும்-பின்பு மனஸ்ஸால் த்யானிக்கத் தக்கதான இத் த்வயத்தின் அர்த்தமான ப்ரபத்தியை உபதேசிக்க வேண்டும் –

———————-

வாசயித்வா த்₃வயம் ஸாங்க₃ம் ப்ரபதிம் மாநஸீம் தி₃ஸேத் ।
அநுகாங்க்ஷன் ஸதா ₃ ஶிஷ்யம் கு₃ருரௌரஸ புத்ரவத் ॥ 11 ॥

ஆச்சார்யரும் தன் வயிற்றில் பிறந்த பிள்ளை யினதிடத்தில் போல் சிஷ்யனிடத்தில் மிகவும் அநுக்ரஹமுடையவராய் -அம்மந்திர அர்த்தங்களைத் தெளிய அறிந்து மனஸ் சமாதானமுடையவராய் அச்சீஷ்யனுக்கு கபடமின்றி உபதேசிக்க வேண்டும் –

———————-

“வித்₃வான் ஸமாஹிதோ பூ₄த்வா க்₃ராஹயேது₃பதி₄ம் விநா ।
ததவ் பநிஷதீ₃ம் வித்₃யாம் விஶ்வாஸ ஜ்ஞாந வர்தி ₄நீம் ॥ 12 ॥

—————

அந்யாமாத்₄யாத்மிகீம் வித்₃யாம் ஶிஷ்யா வஸ்தா ₂நுரூப்யத ꞉।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய க்ருபயா நிஸ்ப்ருஹோ வதே ₃த் ॥ 13 ॥

அப்படியே பக்தி ஞானங்களை அபிவிருத்தி செய்யத்தக்க த்ரவிட உபநிஷத் முதலிய வித்யைகளையும் இன்னும் வேதாந்த ஸாஸ்த்ரங்களையும் சிஷ்யனுடைய யோக்யதைக்குத் தக்கபடி அதனால் தனக்கும் ஒரு பிரயோஜனம் உண்டாக வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவனாய் சாந்த சித்தனான அச் சிஷ்யனுக்கு மிகவும் தயையுடன் குரு உபதேசிக்க வேண்டும் –

ஞானம் வந்து விசுவாசம் பிறந்து அதனால் மேலும் ஞானம் வளர்ந்து அதனால் மேலும் விசுவாசம் இப்படி சங்கிலித்தொடராக வளரும் -நித்ய அனுசந்தானம் நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் இதற்காகவே-

ஞான முத்ரை புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் -சாத்மிக்க -சாத்மிக்க உபதேசம்-

—————

த₃த்த்வா து த₃க்ஷிணாம் தஸ்மை யதா ₂ஶக்தி யதா ₂ விதி₄ ।
தமர்சயேத்₃யதா ₂காலம் ஹிதம் சாஸ்ய ஸமாசரேத் ॥ 14

சிஷ்யனும் அவ்வாச்சார்யருக்குத் தன் சக்திக்குத் தக்கபடிக்கும் ஸாஸ்த்ர விதிப்படிக்கும் ஸம்பாவனை ஸமர்ப்பித்து தகுந்த காலங்களில் அவரை ஆராதிக்க வேண்டும் -அவருக்கு ஹிதமான க்ருத்யங்களையும் செய்ய வேண்டும் –

——————

கு₃ரோர் வைப₄வ மாக்₂யாதி ஜயாக்₂யா (அ)பி ச ஸம்ஹிதா |
கு₃ருரேவ பரம் ப்₃ரஹ்ம கு₃ருரேவ பரம் த₄நம் ॥ 15 ॥

ஆகையால் அவ்வாச்சார்யருக்கு சிஷ்யன் ஒருக்காலும் த்ரோஹம் செய்யக்கூடாது –

——————

கு₃ருரேவ பரா வித்₃யா கு₃ருரேவ பராயணம் ।
கு₃ருரேவ பர꞉ காமோ கு₃ருரேவ பரா க₃தி ꞉ ॥ 16 ॥

குரு ரேவ பராகதி -என்றபடி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்கிறார் .
மேவினேன் அவன் பொன்னடி -என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும்
அதர பரத்ரசாபி -இங்கும் அங்கும் -என்று ஸ்ரீ ஆள வந்தாரும்
ஸ்ரீ ஆசார்யன் திருவடியையே ப்ராப்யமாக அறுதி இட்டார்கள் –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்யசாரிஷம் -என்று ஸ்ரீ ஆசார்யருக்கு நான் ஸூஸ்ருஷை பண்ணினேனோ-
அவர்களை அடையப் போகிறேன் -என்று ஸ்ரீ சபரியும் அவ்வாறே கூறினாள்-

————-

யஸ்மாத் தது₃பதே ₃ஷ்டா(அ)சவ் தஸ்மாத்₃கு₃ருதரோ கு₃ரு꞉ ।
அர்ச நீயஶ்ச வந்த ₃யஶ்ச கீர்த நீயஶ்ச ஸர்வதா ₃ ॥ 17 ॥

எண் திசையும் அறிய இயம்புவேன்-

————

த்₄யாயேஜ் ஜபேந் நமேத்₃ப₄க்த்யா ப₄ஜேத₃ப்₄யர்சயேந் முதா ₃ ।
உபாயோ பேயபா₄ வேந தமேவ ஶரணம் வ்ரஜேத் ॥ 18 ॥

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—————–66-

——————-

இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ।
ஏவம் த்₃ வயோபதே ₃ஷ்டாரம் பா₄வயேத் பு₃த்₃தி₄மான்
தி₄யா ॥ 19 ॥

இரும்பு போல் வலிய நெஞ்சம் பண்பட உபதேசம் -உள்ளம் உகந்து -உபகார ஸ்ம்ருதி வேண்டும் அன்றோ

—————–

ஶரீரம் வஸூ விஜ்ஞாநம் வாஸ ꞉ கர்ம கு₃ணாந ஸூன் ।
கு₃ர் வர்த ₂ம் தா₄ரயேத்₃ யஸ்து ஸ ஶிஷ்யோ
நேதரஸ் ஸ்ம்ருத ꞉ ॥ 20 ॥

சத்ருச ப்ரத்யுபகலாம் செய்ய இரண்டு ப்ரஹ்மமும் நான்கு விபூதிகளும் வேண்டுமே
முயல்கிறேன் அவன் மொய் கழலுக்கு என்று சொல்லிப்போம் அத்தனை

————–

நாராயணோ (அ)பி விக்ருதிம் யாதி கு₃ரோ ꞉ ப்ரச்யுதஸ்ய து₃ர்பு₃த்₃தே ₄꞉ ।
கமலம் ஜலாத ₃பேதம் ஶாேஷயதி ரவிர் ந தோஷயதி ॥21॥

தண்ணீரில் உள்ள தாமரையே உலர்த்தும் -இல்லாவிடில் உலர்த்தி விடுமே

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

——————

யோ விஷ்ணோ ꞉ ப்ரதி மாகாரே லோஹ பா₄ வம் கரோதி ச ।
யோ கு₃ரௌ மாநுஷம் பா₄வம் உபௌ₄ நரக பாதி நவ் ॥ 22 ॥

அர்ச்சாவதார லோக பாவம் -குருவை மானுஷ்ய பாவம் -நரக ஹேதுவாகுமே

—————-

ஸாமாந்யதோ விஸேஷாச்ச யஸ்மாத்₃ த₄ர்மான் ஸநாதநான் ।
ஆசிநோதி ஸ ஆசார்ய꞉ தஸ்மை த்₃ருஹ்யேத் ந கிஞ்சந ॥2
3॥

——————

கு₃’ ஶப்₃ த₃ஸ்த்வந்த₄காராக்₂யோ ‘ ‘ரு’ ஶப்₃ த₃ஸ்தந் நிரோத₄க꞉ ।
அந்த₄கார நிரோதி₄த்வாத் கு₃ருரித்யபி₄ தீ₄யதே ॥24 ॥

குரு என்னும் பதத்தில் கு என்னும் பதம் இருளையும் ரு என்னும் பதம் போக்குவதையும் சொல்லுகின்றது-அஞ்ஞானத்தைப் போக்குவதால் ஆச்சார்யர் குரு என்றும் சொல்லப்படுகிறார் –

————

மநுரப்யாஹ ப₄க₃வான் “வந்த்₃யோ பா₃லோ (அ)பி மந்த்ரத₃꞉ ।
ஜ்யைஷ்டயம் வேதா₃ந்த விஜ்ஞாநாத் விப்ராணாமிதி சோதித₃ ம் ॥25॥

பிராமணர்களுக்கு வேதாந்த ஞானத்தினால் பெரிய தனம் விதிக்கப்பட்டு இருப்பதால் பிராமணர் ஒருவரே சிறுவராக இருந்த போதிலும் மந்த்ரத்தை உபதேசித்தாராகில் அவர் வந்தனம் செய்யத்தக்கவர் என்று மனுவும் தர்ம ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்துள்ளார் –

—————–

அத்₄யா பயாமாஸ பித்ரூன் ஶிஶுராங்கீ₃ரஸ ꞉ கவி ꞉ ।
புத்ரகா இதி ஹோவாச ஜ்ஞாநேந பரி க்₃ருஹ்ய தான் ॥ 26

அங்கீரஸ் என்னும் ரிஷியின் புத்திரரான சுக்ராச்சார்யாரும் தன் தகப்பன்மார்களுக்கு வேதங்களை ஓதி வைத்தார் -தம்முடைய ஞானத்தைக் கொண்டு அவர்களை புத்ரர்களாகப் பாவித்து வாரீர் பிள்ளைகளே என்று அழைத்தார் –

————–

தே தமர்த₂மப்ருச்ச₂ந்த தே ₃ வாநாக ₃ தமந்யவ ꞉ ।
தே ₃ வாஶ் சைதான் ஸமத்யோசு꞉ ந்யாய்யம் வஶ்ஶிஶு ருக்தவான் ॥ 27 ॥

சுக்கிரனுடைய பிதாக்களான இவ்விரண்டு ரிஷிகளும் கோபமுடையவர்களாய் புத்ரன் சொல்லியவற்றைப் பற்றி தேவர்களிடம் கேட்டார்கள் -அத்தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்து வாரீர் ரிஷிகளே உங்களுடைய புத்திரன் நியாயமான வார்த்தைகளைத் தான் சொல்லி இருக்கிறான் என்றார்கள்

கணபுரம் கை தொழும் பிள்ளையை-
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்

—————

பா₃லோ (அ)பி விப்ரோ வ்ருத்₃ த₄꞉ஸ்யாத் பிதா ப₄வதி மந்த்ரத₃꞉|
அஜ்ஞம்ஹி பா₃ல மித்யாஹ பிதேத்யேவ ச மந்த்ர த₃ம் ॥ 28 ॥

ப்ராஹ்மணன் பாலனாக இருந்த போதிலும் ஞானத்தினால் பெரியவரால் மந்த்ர உபதேசம் செய்தவரானால் அவர் பெரியவராகிறார் -பெரியவராக இருந்தும் ஞானம் இல்லாதவரக இருப்பாராகில் அவரை பாலர் என்றும் சிறுவராய் இருந்தபோதிலும் மந்த்ர உபதேசம் செய்தவரை பிதா என்றும் பெரியோர்கள் சொல்லுகிறார்கள் –

—————–

ந ஹாயநைர் ந பலிதை ꞉ ந ச வித்தைர்ந ப₃ந்து₄பி₄꞉ ।
ருஷ்யஶ் சக்ரிரே த₄ர்மான் யோ (அ)நூசாந ஸ நோ மஹான் ॥ 29 ॥

ரிஷிகள் வயது சென்றதனாலாவது -தலை நரைத்தானாலாவது -விசேஷித்த தனங்களினாலாவது -பந்துக்களினாலாவது -தர்மங்களைச் செய்தார்கள் இல்லை -ஸாஸ்திரங்களை அறிந்ததனால் மட்டுமே தர்மங்களைச் செய்தார்களாதல் -எவர் குருவினிடத்தில் இருந்து சாஸ்திரங்களை ஓதியவரோ அவரே நமக்குக் குருவாகத் தக்கவர்

————-

விப்ராணாம் ஜ்ஞாநதோ ஜ்யைஷ்ட்யம் க்ஷத்ரியாணாம் து வீர்யத ꞉ ।
வைஶ்யாநாம் த₄நதோ ஜ்யைஷ்ட்யம் ஶூத்₃ராணாமேவ ஜந்மத ꞉ ॥ 30 ॥

ஆகையால் ப்ராஹ்மணர்களுக்கு ஞானத்தினாலும் ஷத்ரியர்களுக்கு பலத்தாலும் வைஸ்யர்களுக்கு தனத்தாலும் ஸூத்ரர்களுக்கு வயதானாலும் மேன்மை சொல்ல வேண்டும் –

——————

கு₃ரோஶ்ச கு₃ரவஸ் ஸர்வே பூஜநீயா விஶேஷத ꞉ ।
கு₃ருதா₃ரஸூததவ் ₃ து கு₃ருவத்₃வ்ருத்தி மாசரேத் ॥ 31 ॥

ஆச்சார்யர்களின் ஆச்சார்யர்களும் விசேஷித்து பூஜிக்கத் தக்கவர்கள் -ஆச்சார்ய பத்னியிடத்திலும் புத்திரர்கள் இடத்திலும் ஆச்சார்யர் இடத்தில் போலவே வர்த்திக்க வேண்டும் –

—————-

த₄ர்ம வ்யதிக்ரமஸ் ஸ்யாச்சேத் கு₃ருர்போ₃த்₄யோ ரஹஸ்யபி ।
பதநீயம் கு₃ரோ ꞉ கர்ம யத்₃யஶக்யம போஹிதும் ॥ 32 ॥

———————

போத₃ ₄நாத்₃தை ₃ வப₄ஜநா ஸத் ஸங்க₃பரிவேஷணாத்
।ஸத்₃கு₃ரூநுபஸேவேத ஹித்வா தத ₃நுவர்தநம் ॥ 33 ॥

ஆச்சார்யரும் ஸாஸ்த்ர யுக்த தர்மங்களைக் கடந்து நடப்பாராகில் அவருக்கு ரஹஸ்யத்தில் போதிக்க வேண்டும் -அப்படிக்கு போதித்தும் அவருக்கு நல்ல ஞானம் உண்டாகும்படியாய் பகவானிடத்தில் பிரார்த்தனைகள் செய்தும் சத்துக்களைக் கொண்டு உபதேசம் செய்வித்தும் அவர் இடத்தில் உள்ள துர்நடத்தை போகாமல் இருந்தால் அவர் சேவையை விட்டு வேறு சத்ருக்களை சேவிக்க வேண்டும் – அப்பொழுது முன் ஆச்சார்யருக்கும் ஹிதத்தைக் கோறுவாராகில் ஸர்வ பாதங்களில் நின்றும் நீங்குவர் –

———-

தஸ்யாபி ஹிதாமாகாங்க்ஷன் முச்யதே நாத்ர ஸம்ஶய꞉ ।
யதி ₃ ஶிஷ்ய꞉ பதேந் மார்கா₃த் தம் ப்ரயத்நேந வாரயேத் || 34 ॥

சிஷ்யனும் ஸாஸ்த்ர யுக்த சன்மார்க்கங்களைக் கடந்து நடப்பானாகில் ஆச்சார்யர் அவனைக் கெட்ட மார்க்கத்தில் செல்லாமல் இருக்கு படியாகத் தடுக்க வேண்டும் – பகவானுடைய திருவடிகளில் அவனுக்கு ஹிதத்தைப் பிரார்த்திக்க வேண்டும் –

————–

ஶ்ரிய꞉ பத்யு꞉ பதா₃ம் போ ₄ஜே கு₃ருர்யாசேத தத்₃ தி₄ தம் ।
ப்ரஸாத ₃யேத்₃ப₄க₃வதா ஆத்மநா (அ)பித முத்₃ த₄ரேத்
॥ 35 ॥

——————–

தேந ஸம்பா₄ஷணாதீ ₃நி வர்ஜயேத ₃நிவர்தநே ।
̈ந நிஶ்வாஸமபி ₄வ்யக்தம் விஸ்ருஜேத்₃கு₃ரு ஸந்நிதவ் ₄ ॥ 36 ॥

அவனுக்கு ஞானத்தை உண்டாக்கும்படியாக பாகவதர்களைப் பிரார்த்திக்க வேண்டும் -தன்னால் கூடிய வரை அவனை படு குழியில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் -அப்படிச் செய்தும் அவன் துர்நடத்தையில் இருந்து திரும்பானாகில் அவனுடன் சம்பாஷணை முதலியவை செய்யாமல் விட்டு விட வேண்டும் –

—————–

கு₃ரோர் யத்ர பரீ வாதோ ₃ நிந்தா ₃ வா (அ)பி ப்ரவர்ததே ।
கர்ணவ் தத்ர பிதா ₄ தவ்யௌ க₃ந்தவ்யம் வா ததோ (அ)ந்யத ꞉ ॥ 37 ॥

ஆச்சார்யருடைய சமீபத்தில் தமக்கு உண்டாயிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தக் கூடாது-ஆச்சார்யருக்கு எவ்விடத்தில் அபவாதமோ நிந்தையோ சொல்லப்படுகிறதோ அவ்விடத்தில் காதுகளையாவது மூடிக்கொள்ள வேண்டும் -அவ்விடத்தை விட்டு அப்புறம் போகவும் வேண்டும் –

——————-

ஆசார்யஸ்ய ப்ரஸாதே ₃ந மம ஸர்வமபீ₄ப்ஸிதம் ।
ப்ராப்நுயாமிதி விஶ்வாஸோ யஸ் யாஸ்தே
ஸ ஸூகீ₂ ப₄வேத் ॥ 38 ॥

ஆச்சார்யருடைய அனுக்ரஹத்தினால் யான் ஸர்வ இஷ்டங்களையும் பெறுவேன் என்ற நம்பிக்கை எவருக்கு வருகிறதோ அவர் சுகத்தை அடைவர் –

—————

யேநைவ கு₃ருணா யஸ்ய ந்யாஸ வித்₃யா ப்ரதீ ₃யதே ।
தஸ்ய வைகுண்ட₂து₃க்₃தா₄ப்₃தி ₄த்₃வாரகா꞉ஸர்வ ஏவ ஸ ꞉ ॥
39 ॥

எந்த ஆச்சார்யரால் எவருக்கு பிரபத்தி வித்யை உபதேசிக்கப் படுகிறதோ அவருக்கு இவ்வாச்சார்யாரே ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருத்துவாரகை முதலிய அனைத்து திவ்ய தேசங்களுமாகும்

பாட்டுக்கேட்க்கும் இடம் –எல்லாம் வகுத்த இடமே

——————

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் கு₃ருரஷ்டாக்ஷர ப்ரத ₃꞉ ।
இத்யேவம் யே ந மந்யந்தா த்யக்த வ்யாஸ்தே மநீஷிபி₄꞉ || 40 ॥

நமக்கு ஐஹிக ஆமுஷ்மிகங்களான அனைத்து நன்மைகளும் திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசித்த ஆச்சார்யர் தான் என்றும் எவர்கள் எண்ண வில்லையோ அவர்கள் சத்துக்கள் விடத்தக்கவர் –

———–

ஏகாக்ஷர ப்ரதா ₃ தாரமாசார்யம் யோ (அ) மந்யதே ।
ஶ்யாந யோநி ஶதம் ப்ராப்ய சண்டா₃லேஷ்வபி₄ஜாயதே ॥ 41 ॥

பிரணவத்தை யாவது ஓர் அக்ஷரத்தை யாவது உபதேசிக்கும் ஆச்சார்யர் ஒருவரை எவர் அவமானப்படுத்துகிறாரோ அவர் துர்ஜன்ம-நாய்கள் -போல் பிறந்து பிறக்கும் சண்டாளர் களில் பிறந்து உழல்வார் –

—————–

மஹா வராஹோ ப₄க₃ வாநாஹ ஜந்மாப்₃ தி₄தாரணே ।
நாவம் ந்ருதநும் ஆத்மாநம் அநுகூலா(அ)நிலம் கு₃ரும் ॥ 42 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பகவானும் சம்சாரமாகிற கடலைக் கடைக்கு விஷயத்தில் மனுஷ்ய ரூபமான தன் சரீரத்தை ஓடமாகவும் ஆச்சார்யானை இவ்வோடத்தை கரை சேர்க்கும் காற்றாகவும் இவ்வாத்மாவை ஓடக்காரனாகவும் சொல்லி இவ்வாச்சார்யனால் இவ்வாத்மா சம்சாரக்கடலை தாண்ட வேண்டும் என்று அருளிச் செய்துள்ளார் –

—————-

கர்ணதா ₄ரமதோ தே ₃ஹீ கு₃ருணா ஸம்ஸ்க்ருதிம் தரேத் ।
ந்ருதே ₃ஹமாத்₃யம் ப்ரதி லப்₄ய து₃ர்லப₄ம் ப்லவம் ஸூகல்யம் கு₃ரு கர்ணதா ₄ரம் ।
மயா(அ)நுகூலேந நப₄ஸ்வதேரிதம் புமான் ப₄வாப்₃தி₄ம் ந தரேத்ஸ ஹாத்மஹா ||

முன் ஸ்லோக அர்த்தத்தையே ஈண்டும் வேறு விதமாக அருளிச் செய்து இப்பத்ததியை நிகமிக்கிறார் -சம்சாரக்கடலைக் கடத்தும் ஓர் ஓடம் போன்றதாயும் ஆச்சார்யரை ஓடக்காரனை உடையவராகவும் கிடைப்பதற்கு அரியதான இந்த மனுஷ்ய தேகத்தை காற்று ஆனால் போல் என்னாலே ஏவப்படுகின்றன -இத்தேகத்தைப் பெற்றும் எவர் ஒருவர் சம்சாரக் கடலைத் தாண்ட வில்லையோ அவர் ஆத்ம த்ரோஹி யாவார் என்றும் பகவான் அருளிச் செய்கிறார் –

சிஷ்யன் என்பது-சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும் ஆர்த்தியும்
ஆதரமும் அநசூயையும் உடையவனை –சூரணை -321-
மந்த்ரமும் -தேவதையும்- பலமும் – பல அநு பந்திகளும் -பல சாதனமும் – ஐஹிக போகமும் -எல்லாம் ஆசார்யனே என்று நினைக்க கடவன் –சூரணை -322-
மாதா பிதா யுவதய -என்கிற ஸ்லோகத்திலே இவ் அர்த்தத்தை பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –சூரணை -323-
இதுக்கடி உபகார ஸம்ருதி-சூரணை -324-
உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை – முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –சூரணை -325-
சிஷ்யனும் ஆசார்யனும் அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்தக் கடவர்கள் –சூரணை -326-
சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் – ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் – ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –சூரணை -327-
சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –-ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –சூரணை -328-
ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய – ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை ––சூரணை -329-
நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே – இருவருக்கும் உபாதேயம் –சூரணை -330-
சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-சூரணை -331-
நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –சூரணை -332-
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –சூரணை -334-
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –சூரணை -335–
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-
ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –சூரணை -337-
ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –சூரணை -338-
கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை -339-
கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-

4-சதுர்தீ –குரு உபாஸந பத்ததி –ஸம் பூர்ணம்

  1. அத₂ ப₄க₃வத் பரிசர்யா பத்₃த₄தி꞉ பஞ்சமீ

ஏவம் கு₃ரு ப்ரஸாதே₃ந தேஷித்வ ஜ்ஞாந பூர்வகம் ।
தே₃வோந்தர வந்நித்யம் ஸப்₃தா₃தீ₃நபி குத்ஸயன் ॥
1॥

விஷ்ணு ப்ராப்தி ப₂லாகாங்க்ஷீ விஷ்ணூபாயோ ஹி வைஷ்ணவ꞉ ।
ஏகாந்தீ து விநிஶ் வித்ய தே₃வதா விஷயாந்தரை
꞉ ॥2॥

கீழ் பத்ததியில் சொல்லிய படி ஆச்சார்ய அனுக்ரஹத்தினாலே தனக்குக் கிடைத்திருக்கும் சேஷத்வ ஞானத்தை முன்னிட்டு பகவானை ஒழிந்த வேறு தெய்வங்களைப் போலே ஸப்தாதி விஷயங்களையும் பிழை உள்ளவைகளாக அறிந்து பகவானைப் பெறும் விஷயத்தில் பக்தி யோகத்தையும் உபாயமாக யுடைய ப்ரபன்னர் வைஷ்ணவர் என்று சொல்லப்படுவார்

———

ப₄க்த் யுபாயம் ஸமம் க்ருஷ்ண ப்ராப்தவ் க்ருஷ்ண ஏக ஸாத₄ந꞉ ।
தே₃வோந்தர ஸப்₃தா₃தி₃ப₄க்தி க்ருஷ்ணாக்₂ய ஹேதுஷு
॥3॥

பக்தி யோகம் என்றும் மோக்ஷ உபாயத்தை தேவதாந்தர விஷயாந்தர ங்களோடு சமமாக நினைத்து பகவானைப் பெரும் விஷயத்தில் பகவான் ஒருவனையே உபாயமாக யுடைய ப்ரபன்னர் ஏகாந்தி எனப்படுவர் –

————

ஸாம்ய க்ருத் பரமை காந்தீ ஹரௌ ஸ்வாமீதி பு₃த்₃தி₄மான் ।
கிங்குர்வாண꞉ ஸதா ₃காலம் ப₄க₃வத் பாத₃பத்₃மயோ ꞉ ॥4॥

தேவதாந்தரங்கள் ஸப்தாதி விஷயம் பக்தி பிரபத்தி என்னும் மோக்ஷ உபாயங்கள் இவைகளை சமமாக நினைத்து பகவானிடத்தில் ஸ்வாமி என்னும் புத்தியையுடைய ப்ரபன்னர் பரமை காந்தி -உயர்ந்ததான ஒரே நிச்சயம் உடையவர் -எனப்படுவர்
இங்கு ப்ரபத்தியையும் தேவதாந்தரங்களோடு சமமாக நினைப்பதாவது அவைகளைப் போல் இப்பிரபத்தி யையும் விட வேண்டும் என்னும் அர்த்தகமாகும் -மேற்கொண்ட ஸ்வரூபத்தில் சொல்லியபடி ப்ரபத்தியை அனுஷ்டித்த ப்ரபந்நரைப் பற்றி இங்கு இவ்வர்த்தம் விதிக்கப் படுவதால் இப்பிரபன்னர் இதை விடுவதாவது -இப்பிரபத்தியில் உபாய புத்தியை விடவேண்டும் என்பதாவது -அல்லது பக்தியோகத்தைப் போல் இப்பிரபத்தியும் ஆவர்த்தி செய்யதகும் என்று நினைத்தால் அதை விட வேண்டும் என்பதாவது கருதத் தகும் –

தமக்கு உண்டாயிருக்கும் சேஷத்வத்தை அறிந்து ஸர்வ காலமும் பகவானுடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு காலத்தை சார்த்தமாகப் போக்க வேண்டும்

————

ஸேஷத்வ மாத்மநோ ஜாநன் ஸார்த₂யன் காலமாக்ஷிபேத் ।
விஜ்ஞாய மூல மந்த்ரார்த₂ம் த்₃வயைகார்த₂தயா கு₃ரோ
꞉ ॥5॥

இம்மூல மந்த்ரார்த்தத்தை த்வயார்த்தத்தோடு ஸமான அர்த்தமாக ஆச்சார்யரால் அறிந்து பகவான் ஒருவனையே சரணமாக யுடையவராய் அம்மூல மந்த்ரத்தால் பகவானை ஆராதிக்க வேண்டும் –

———–

ததே₃க ஸரணோ பூ₄த்வா ஹரிம் தேந ஸமர்சயேத் ।
த்ரை கால்ய மர்சநம் குர்யாத் மூல மந்த்ரேண ஸக்தித꞉
॥6॥

ஸர்வ வேதா₃ந்த ஸாரார்த₂꞉ ஸம் ஸாரார்ணவ தாரண꞉ ।
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ கு₃ஹ்யாநாம் கு₃ஹ்யமுத்தமம் ॥7

மூன்று காலங்களிலும் பகவானுக்கு மூல மந்திரத்தால் ஆராதனம் செய்ய வேண்டும்-இம்மூல மந்த்ரம் ஸர்வ வேதங்களினுடையவும் சாரமான அர்த்தத்தை யுடையது -ஸம்ஸாரமாகிய கடலைத் தாண்டி வைக்கத்தக்கது -மந்திரங்களில் உயர்ந்த மந்த்ரமும் ரஹஸ்யங்களுள் பரமமான ரஹஸ்யமாகவும் பரிசுத்தமான வஸ்துக்களுக்கும் பரிசுத்தியை உண்டாக்கத் தக்கது -இது அநாதியான மஹா மந்த்ரம்

நான் கண்டு கொண்டேன் நாராயணாயா என்னும் நாமம் -மந்த்ரம் அல்ல -ஸர்வாதிகாரம் இது

————-

பவித்ராணாம் பவித்ரம் ச மூல மந்த்ர꞉ ஸநாதந꞉ ।
முமுக்ஷூணாம் ஸதா ₃ ஜப்யம் பு₄க்தி முக்தி ப₂ல ப்ரத₃ம் ॥8॥

வைஷ்ணவாநாம் ஸதா ₃ ஜப்யம் ப₄க்தி ஜ்ஞாநவிவர்த₄நம் ।
மந்த்ராணாமாஶ்ரயம் தி₃வ்யம் ஸர்வ பாப ப்ரணாஸநம் ॥9॥

இம்மந்திரம் போக மோஷங்களைக் கொடுக்கத் தக்கதாக இருப்பதால் மோஷத்தை விரும்புபவர்களுக்கு சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது -பக்தி ஞானங்களை விருத்தி செய்யத்தக்கதாய் இருப்பதால் வைஷ்ணவர்களுக்கும் சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது-

————

ஸமாஹித மநா பூ₄த்வா ஜபம் குர்யாத₃ தந்த்₃ரித꞉ |
இத்த₂ம் க₃ஜாந நாதீ₃நாம் ஶ்ரீமத் ஸேநேஸ ஸாஸநாத் ॥10॥

இத்திவ்ய மந்த்ரம் ஸர்வ மந்திரங்களுக்கும் ஆஸ்ரீ யமாக இருக்கின்றது – ஸர்வ பாபங்களையும் நாசம் செய்வதாய் இருக்கின்றது -இம்மந்தத்தை சாவதான மனத்தை யுடையவராகவும் சோம்பல் இல்லாதவராகவும் ஜபம் செய்ய வேண்டும்

படு துயர் ஆயின எல்லாம் நிரந்தரம் செய்யும்

———–

[அநேந வைஷ்ணவ꞉ குர்யாத் ஹரேரர்சாதி₃கம் ஸதா ₃ ।
த்₃வயேந வார்சநம் குர்யாத் கு₃ருவந்த₃ந பூர்வகம் ॥11

மேற் சொல்லியபடி ஸ்ரீ விஷ்வக் சேனர் தன் பரிவாரங்களான கஜநநாதிகளுக்கு நியமித்து இருப்பதால் வைஷ்ணவர்கள் இம்மூல மந்ரத்தால் பகவானுக்குத் திருவாராதானாதிகள் செய்ய வேண்டும் -அல்லது த்வயத்தினாலாவது ஆராதனம் செய்ய வேண்டும் -அப்படிக்கு ஆராதனம் செய்யும் போது குரு வந்தனத்தை முன்னிட்டு வந்தனம் செய்த பின்பு ஆராதனம் செய்ய வேண்டும் –

குரு பரம்பரா பூர்வகமாக இல்லாத த்வயமும் மற்ற மந்த்ரங்களோடு ஒக்கும்

————-

க்ருத லக்ஷண ஏவாயம் அர்சயேத்₃ வைஷ்ணவோ ஹரிம் ।
] வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ணைஸ்து க்ருத லக்ஷணை ꞉ ॥12॥

அர்சநீயஶ்ச ஸேவ்யஶ்ச பூஜநீயஶ்ச மாத₄வ꞉ ।
லக்ஷணம் த்₃விவித₄ம் ப்ரோக்தம் பா₃ஹ்யமாப்₄ யந்தரம் ததா ₂ ॥ 13॥

கீழ்ச் சொன்ன வைஷ்ணவ சின்னங்களோடு கூடியவராய் வைஷ்ணவர் பகவானை ஆராதிக்க வேண்டும் -வியாஸ முனிவரும் வைஷ்ணவ சின்னங்களோடு கூடிய நான்கு வர்ணத்தார்களாலும் பகவான் அர்ச்சனை செய்யத்தக்கவர் என்றும் சேவிக்கத் தக்கவர் என்றும் ஆராதனம் செய்யத்தக்கவர் என்றும் சொல்லுகிறார் –

—————-

ஸங்க₂சக்ராதி₃கம் பா₃ஹ்யம் அந்யத்₃ராகா₃த்₃யத பேததா ।
ததா ₂ச ஸர்வோபநிஷத் ஸித்₃த₄ம் சக்ராதி₃ தா₄ரணம் ॥14॥

பாஹ்யம் -வெளிப்பட்டவை -என்றும் ஆப்யந்தரம் -உள்ளிட்டவை என்றும் சின்னங்கள் இருவகைப்படும் -அவற்றுள் சங்கு சக்ராதி தாரணம் பாஹ்ய லக்ஷணங்களாகும் -வைராக்யம் சமதமாதி ஆத்ம குணங்கள் ஆப்யந்தர லக்ஷணங்களாகும் –

————–

அத₂ர்தவ உபநிஷத்₃ வ்யக்தம் வித₃தா₄தி விபஶ்சிதாம் ।
த₃க்ஷிணே து பு₄ஜே விப்ரோ பி₃ப்₄ருயாத்₃வை ஸுத₃ர்ஸநம் ॥15॥

அப்படியே ஸர்வ உபநிஷத்துக்களிலும் சித்தித்து இருக்கும் சங்கு சக்ராதி தாரணத்தை அதர்வ உபநிஷத்து ஞானிகளான வைஷ்ணவர்களுக்கு விதிக்கின்றது –

—————-

ஸவ்யே து ஸங்க₂ம் பி₃ப்₄ருயாத் இதி ப்₃ரஹ்ம விதோ₃ விது₃꞉ ।
தத்ர ஶ்ருதி த்வஸந்தே₃ ஹே கி₂ல மந்த்ரோ (அ)பி தத்ஸம꞉ ॥16॥

வலது தோளில் திருவாழியையும் இடது தோளில் திருச்சங்கையும் ப்ராஹ்மணர் தரிக்க வேண்டும் என்று ப்ரஹ்ம ஞானிகள் சொல்லுகிறார்கள் –

————–

மஹத் பரிக்₃ரஹாந் நாஸ்தி ஸந்தே₃ஹஸ் தத்ர சேத்₃ப்₄ரம꞉ ।
பாத்₃மம் புராணமாக்₃நேயம் க்ராேஸத் யுத்₃பா₃ஹு ரப்யுத ॥17॥

இப்படிக்கு சக்ராங்கனத்தை விதிக்கும் பிரமாணங்கள் வைதிகங்கள் அல்ல என்று ஸந்தேஹம் உண்டாகுமாகில் -இவ்வாறு ப்ரஸித்த வேதங்களில் காணாமல் இப்பொழுது அனுஷ்டானங்களில் உபயோகித்தது வரும் -கில மந்திரங்களும் இவ்வாறு சந்தேகிக்கத் தக்கவைகளாகும் -ஆகையால் மேற் சொல்லியவைகளை பெரியோர்கள் வைதிகங்களாக பரிக்ரஹித்து வருவதால் ஸந்தேஹிக்க வேண்டியதில்லை -இப்படிக்கு பெரியோர்கள் பரிக்ரஹிக்க இல்லை என்று பிரமம் உண்டாகில் பாத்மம் ஆக்னேயம் இவ்விரண்டு புராணங்களும் சக்ராங்கநாதிகளை வைதிகங்கள் என்றும் பெரியோர்கள் இவைகளை பரிக்ரஹித்து இருக்கிறார்கள் என்றும் கையெடுத்துக் கூவுவதால் இப்பிரமம் நீங்கி விடலாம் –

————–

பஞ்சாயுதா₄ நிதா₄ர்யாணி ப₄க்தி ஶ்ரத்₃தோ₄ப ப்₃ரும்ஹித ꞉ ।
லலாடே மூர்த்₄நி ஹ்ருத்₃வாஹ்வோ : ஏகத்ரைகம் ப்ருத₂க் ப்ருத₂க் ॥18॥

பாத்ம புராணத்தில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -நெற்றியிலும் சிரஸ்ஸிலும் மார்பிலும் தோள்களிலும் கதை முதலிய பஞ்ச ஆயுதங்களையும் பக்தி ஸ்ரத்தையுடன் கூடியவர்களாய் தரிக்க வேண்டும் –

த்வைத மதஸ்தர் இப்பொழுதும் பஞ்சாயுத தாரணம் கொண்டுள்ளார்கள்

———

லலாடே து க₃தா ₃ தா₄ர்யா மூர்த்₄நி சாபம் ததா ₂ பரம் ।
நந்த₃கம் சைவ ஹ்ருந் மத்₄யே ஸங்க₂ சக்ரே பு₄ஜ த்₃வயே ॥19॥

நெற்றியில் கதாயுதத்தையும் சிரஸ்ஸிலே சார்ங்கம் என்னும் வில்லையும் மார்பில் நந்தகம் என்னும் கத்தியையும் இரண்டு தோள்களிலும் திரு வாழி திருச் சங்குகளையும் தரிக்க வேண்டும்

—————-

லோஹை ரநல ஸந்தப்தை ꞉தத் தந் மந்த்ராதி₄ வாஸிதை ꞉ ।
அங்கயேத், வ்ருத்₃த₄ மநுரப்யே₃ததா ஹா (ஆ)த₃ராத்₃யதா
₂ ॥20॥

லோஹங்களினால் செய்யப்பட்டு இருக்கும் பஞ்சாயுதங்களை அக்னியில் தப்தம் செய்து அவற்றுக்கு உள்ள மந்த்ரங்களை ஜபித்து மேல் கண்ட இடங்களிலே லாஞ்சனை செய்து கொள்ள வேண்டும் -இவ்வாறே விருத்த மனுவும் சொல்லி இருக்கிறார் –

—————

ஊர்த்₄வ புண்ட்₃ரம் ததா ₂ சக்ரம் நித்யம் தா₄ரயதே நர꞉ ।
ஸூபா₄நி தஸ்ய வர்த₄ந்தே த்வஸூப₄ந்து ப்ரணஶ்யதி ॥21॥

விருத்த மனு அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -எவர் ஒருவர் ஊர்த்த புண்ட்ரம் திரு வாழி திருச்சங்கு இவைகளை நித்யம் தரிக்கிறாரோ அவருக்கு சுபங்கள் வளரும் -அசுபங்கள் நாசமடையும் –

———————–

கால உக்தோ ப₄க₃வதா ஸாஸ்த்ரே சக்ராதி₃தா₄ரணே ।
உத்தம꞉ ஷாேட ₃ஸாத₃ர்வாக் ஆபஞ்சா ஸஸ்து மத்₄யம꞉ ॥22॥

பதினாறு வயதிற்கு உட்பட்ட காலம் உத்தமம் என்றும் -அதற்கு மேல் ஐம்பது வரையில் மத்யம காலம் என்றும் பகவானால் ஸாஸ்த்ரத்தில் சக்ராதி தாரணத்திற்கு காலம் சொல்லப்பட்டு இருக்கின்றது –

———————

அத꞉ பரம் வை ஹ்யத₄ம இதி கால வ்யவஸ்தி₂தி꞉ ।
விநா து வார்ஷிகான் மாஸான் ஸர்வே மாஸாஶ் ஸூபா₄வஹா ꞉ ॥23॥

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட காலம் சக்ராங்கனம் செய்து கொள்வதற்கு அதமகாலம் என்றும் ஸாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது -மேலும் வர்ஷா காலங்கள் ஒழிய மற்ற காலங்கள் சக்ராங்கனத்திற்கு நன்மை யுண்டாக்கத் தக்கவைகள்

———

ஸ்தா₂நம் ப்ரமாணம் த்₃ரவ்யம் ச பாஞ்சராத்ரே விஸேஷத꞉ ।
விஹிதம் தத் ப்ரகாரேண தா₄ரயே தூ₃ர்த்₄வ புண்ட்₃ரகம் ॥24॥

ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பதற்கு ஸ்தானமும்-அதற்குப் பிரமாணமும் – அதற்குத் த்ரவ்யமும் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரத்தில் விசேஷமாக விதிக்கப்பட்டு இருக்கின்றது -அதன் படி ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

————

ப்ரஸஸ்தே பர்வதாக்₃ராதவ் ₃ ஜாதயாஶ் வேத ம்ருத்ஸ்நயா ।
ஊர்த்₄வ புண்ட்₃ரம் தத ꞉ கார்யம் வைஷ்ணவவஸ்து விஸேஷத꞉ ॥25॥

ஸாஸ்திரங்களில் கொண்டாடப்பட்டு இருக்கும் பர்வதங்களில் மேல்பாகம் முதலிய இடங்களில் உண்டாய் இருக்கும் ஸ்வேத ம்ருத்திகையினால் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் -வைஷ்ணவர்கள் விசேஷித்து ஸ்வேத ம்ருத்திகையினாலேயே ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

—————–

விமலாந் யூர்த்₄வ புண்ட்₃ராணி ஸாந்தராளாநி யோ நர꞉ ।
கரோதி விமலம் தேந மந்தி₃ரம் மே கரோதி ஸ꞉ ॥26॥

ஊர்த்வ புண்டரங்களை நடுவில் வந்துள்ளவைகளாகவும் அழுக்கு இல்லாத திருமண்களினால் எவர்கள் இடுகிறார்களோ அவர்கள் அதனால் எனக்கோர் கோயில் கட்டுகிறார்கள் -என்று பகவான் அருளிச் செய்கிறார் –

———–

ராகா₃த்₃ய பேதம் ஹ்ருத₃யம் வாக₃து₃ஷ்டா (அ)ந்ருதாதி₃நா ।
ஹிம்ஸாதி₃ரஹித꞉ காய꞉ கேஸவ ஆராத₄நம் த்ரயம் ॥27॥

ஆசை முதலிய துர்குணங்களோடு கூடாத மனமும் -பொய் முதலிய தோஷங்கள் இல்லாத வாக்கும் -கொலை முதலிய பாதகங்களை செய்யாத காயமும் பகவானை ஆராதிப்பதற்குத் தகுந்த ஸாதனங்களாகும்-

நாவகாரியம் இல்லாத -நாவுக்கு அவகார்யம் கூடாதே

———-

அஹிம்ஸா ப்ரத₂மம் புஷ்பம் புஷ்ப மிந்த்₃ரிய நிக்₃ரே꞉ ।
ஸர்வபூ₄த த₃யா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஸேஷத꞉ ॥28॥

ஜ்ஞாநம் புஷ்பம் தப꞉ புஷ்பம் த்₄யாநம் புஷ்பம் து ஸப்தமம் ।
ஸத்யமஷ்ட வித₄ம் புஷ்பம் விஷ்ணோ ꞉ ப்ரீதி கரம் ப₄வேத் ॥29॥

கொலை செய்யாமல் இருப்பது -ஐம் புலன்களையும் அடக்குவது -ஸர்வ பிராணிகளிடமும் தயையோடே கூடி இருப்பது -அபகாரம் செய்தவர்களிடங்களிலும் பொறுமையோடு கூடி இருப்பது -தத்வ ஞானம் உள்ளவனாக இருப்பது -விருத காலங்களில் காய சோஷணம் செய்வது -பகவானைத் த்யானம் செய்வது -எப்பொழுதும் ஸத்ய வாக்காய் இருப்பது -ஆகிய இந்த எட்டு குணங்களும் பகவானை ஆராதிக்கும் விஷயத்தில் எட்டு புஷ்ப்பங்களாகச் சொல்லப்பட்டு இருக்கின்றனவாகையால் இக்குணங்கள் பகவான் திரு உள்ளத்தை மிகவும் உகக்கச் செய்கின்றனவாம் –

————-

ஏவமாப்₄யந்தரைர் பா₃ஹ்யை ꞉ சிஹ்நை : பூ₄ஷித விக்₃ரஹ꞉ ।
(ஸ்நாதஸ் தீர்தே₂ஷு விதி₄வத் க்ருத தே₃வாதி₃தர்பண꞉ ॥30॥

அஷ்டோத்தர ஸதம் ஜப்த்வா மூலமந்த்ரம தந்த்₃ரித꞉ ।
ஸாம் ஸ்பர்ஶிகம் த்₃ரவ்ய ஜாதம் ததை ₂வா(ஆ)ப்₄யவ ஹாரிகம் ॥31॥

அப்யௌப சாரிகம் க்ருத்வா யாக₃பூ₄மேரளங்க்ருதிம் ।
யதீந்த்₃தரோதி₃தநித் யோக்தக்ர மேணைவ யஜேத்₃த₄ரிம் ॥32॥

இவ்வாறு மானஸீகங்களாயும் காயிகங்களாயும் பாகவத சிஹ்னங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும் தேஹத்தை யுடையவராய் -புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து -தேவரிஷி தர்ப்பணம் முதலான ஸந்த்யாவந்தனாதிகளை அனுஷ்ட்டித்து -சோம்பல் இல்லாதவராய் -மூல மந்த்ரத்தை நூற்று எட்டு ஆவர்த்தி ஜபம் செய்து -பகவான் திருமேனிக்கு சுகத்தை உண்டாக்கத்தக்க சந்தன குஸூ மாதி வஸ்துக்களையும் அமுது செய்யத்தக்க பல பக்ஷ்யாதி ஹவிஸ்ஸுக்களையும் வைத்துக் கொண்டு திருவாராதனம் செய்யும் இடத்தில் கோலமிடுவது முதலியவைகளினால் அலங்காரம் செய்து ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து இருக்கும் நித்ய கிரந்தத்தில் சொல்லியபடி பகவானை ஆராதிக்க வேண்டும் –

—————

ப்ரத₃க்ஷிண நமஸ்காரை ꞉ ஸ்தோத்ரை ரேகாந்தி ஸம்மதை ꞉ ।
யதா ₂ ப்₄ருத்யோ மஹா ராஜம் ப்ரீணயேத் ப்ரேம விஹ்வல꞉ ॥33॥

சேவகனாக இருக்கும் ஒருவன் தன் பிரபுவை எவ்வாறு அன்புடன் மனம் உகக்கச் செய்வானோ அவ்வாறு ஆத்ம ஸ்வாமியான பகவானை ப்ரபன்னன் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகளாலும் பரமை காந்தி ஸம் மதங்களான ஸ்தோத்ரங்களினாலும் திரு உள்ளம் உகக்கச் செய்ய வேண்டும் –

————

ததா ₂(ஆ)த்ம ஸ்வாமிநம் தே₃வம் ப்ரீணயேத் உபதி₄ம் விநா ।
மஹா வராஹோ ப₄க₃வான் அக₃ஸ்த்யாய யது₃க்தவான் ॥34॥

மஹா வராஹம் செய்த பெருமான் அகஸ்திய முனிவருக்கு உபதேசித்து இருக்கும் கீழ்ச் சொல்லிய பக்தி அங்கங்கள் யாவையும் அந்தவந்த காலங்களில் தவராமல் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

———-

ப₄க்த் யங்க₃ஜாதம் தத் குர்யாத் யதா ₂காலம் ஸமாஹித꞉ ।
மத்₃ப₄க்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாம் சாநுமாேத₃நம் ।
ஸ்வயமப்₄யர்சநம் சைவ மத₃ர்தே₂ த₃க்₃ப₄வர்ஜநம் ॥
35॥

மத் கதா ₂ஶ்ரவணே ப₄க்தி꞉ ஸ்வர நேத்ராங்க₃விக்ரியா |
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோப ஜீவதி ॥36॥

ப₄க்திரஷ்ட விதா ₄ ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்ச்₂ரே (அ)பி வர்ததே ।
ஸ விப்ரேந்த்₃ரோ முநி꞉ ஶ்ரீமான் ஸ யதி꞉ ஸ ச பண்டி₃த꞉ ॥37॥

மூன்றரை ஸ்லோகங்களினால் மேற் சொல்லிய பக்தி அங்கங்களை அருளிச் செய்கிறார்
என் பக்தி ஜனங்களில் அன்பு -அவர்கள் செய்யும் ஆராதனத்தை சந்தோஷிப்பது -தாமும் ஆராதிப்பது -என்னுடைய கைங்கர்யங்களில் டம்பத்தை விடுவது -என் கதைகளைக் கேட்பதில் பக்தி -என் கதைகளில் சொல்லப்படும் சுக துக்கங்களைக் கேட்க்கும் பொழுது கண்ணீர் விடுதல் -குரல் தழ தழுப்பது -அங்கங்கள் பூரிப்பது -எப்பொழுதும் என்னையே நினைத்து இருப்பது -இப்படிச் செய்யப்படும் பக்தியினால் என்னிடத்தில் ஐஹிக ப்ரயோஜனங்களை விரும்பாமல் இருப்பது
ஆகிய இவ்வெட்டு வித பக்திகள் இவரிடத்தில் உண்டாகின்றனவோ அவர் மிலேச்ச ஜாதியில் பிறந்திருந்த போதிலும்
வாரீர் மஹா முனிவரே
அவர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டராயும் யாதியாகவும் பண்டிதராகவும் இருக்கிறார்
ஆகையால் அவருக்குத் தானம் கொடுக்கத் தகும் -அவரிடத்தில் தானம் வாங்கத் தகும் – அவர் என்னைப் போலவே பூஜிக்கத் தக்கவராவார் –

கொடுமின் கொள்மின் -ஞானம் கொடுத்து பெறலாம்

—————–

தஸ்மை தே₃யம் ததோ க்₃ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ₂ ஹ்யஹம் ।
ஏவமர்சாவதாரம் து யஜேத் சவ்நக வாக்யத꞉ ॥38॥

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ꞉ ப்ரஸந்நவத₃நேக்ஷணாம் ।
க்ருத்வா(ஆ)த்மந꞉ ப்ரியகரீம் ஸுவர்ண ரஜதாதி
பி₄꞉ ॥39॥

சவுனாக மஹா முனிவர் அருளிச் செய்தபடியே பகவானுடைய அர்ச்சாவதாரத்தை கீழ்ச் சொல்லிய படியே ஆராதிக்க வேண்டும் -அதாவது மிகவும் அருள் பொருந்திய திருக்கண்களோடும் அழகுள்ள திருமுக மண்டலத்தோடும் கூடியதாகவும் -அதை ஸேவிக்கும் தமக்கு மிகவும் பக்தியை யுண்டாக்கத் தக்கதாகவும் பகவானுடைய பிரதிமையை பொன் வெள்ளி முதலிய லோஹங்களினால் செய்வித்து-அதில் பகவானை ஆவாஹனம் செய்து -அவரை மனஸ்ஸால் தியானித்து -அவருடன் தன்னை ஐக்யம் அடைந்ததாகவும் தியானிக்க வேண்டும் –

—————

(தஸ்யாம் ப்₃ரஹ்ம ஸமாரோப்ய மநஸா தந் மயோ ப₄வேத் ।
தாமர்சயேத் தாம் ப்ரணமேத் தாம் ப₄ஜேதாம் விசிந்தயேத் ॥40॥
விஸத்யபாஸ்த தோ₃ஷஸ்து தாமேவ ப்₃ரஹ்ம ரூபிணீம் ।)

அர்ச்சா ரூபியான அந்த பகவானை ஆராதிக்க வேண்டும் -அவரிடத்தில் வணங்க வேண்டும் -அவரை சேவிக்க வேண்டும் -அவரைத் தியானிக்க வேண்டும் -இப்படி அனுஷ்டிப்பதால் ஸகல தோஷங்களும் அற்ற இந்த பக்தன் பர ப்ரஹ்ம ஸ்வரூபரான அந்த பகவானை அடைகிறார் –

—————–

யத் கிசித₃பி குர்வாணோ விஷ்ணோர் ஆராயதநே வஸேத் ॥
விஷ்ண்வாலயே வஸேந் நித்யம் குர்யாத் தத் கர்ம ப₄க்தித꞉ ॥41॥

எதையாவது ஓர் கைங்கர்யத்தைச் செய்து கொண்டு ப்ரபன்னர் பகவானுடைய திவ்ய தேசங்களில் வஸிக்க வேண்டும் -எப்பொழுதும் திவ்ய தேசங்களில் வஸித்துக் கொண்டு தம்முடைய சக்திக்குத் தக்கபடிக்கு பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும் –

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
ஊரிலேன் காணி இல்லேன்

—————-

யத்₃ப₃லம் மந்தி₃ரம் விஷ்ணோ : யத₃லங்காரகம் ப்ரியம் ।
போ₄கோ₃ப யுக்தம் வா கிஞ்சித் குர்யாந் நோபாய பு₃த்₃தி₄த꞉ ॥42॥

ப்ரபன்னர்கள் பகவானுக்கு ஸ்திரமாகக் கோயில் கட்டுவதும் -அவன் திரு உள்ளம் உகக்கும் படியாகத் திரு ஆபரணம் செய்வது -அவன் அமுது செய்யத்தக்க ப்ரஸாதம் முதலிய உபகாரங்களை ஸமர்ப்பிப்பது -இவை முதலிய கைங்கர்யங்களை தான் கோறிய பலன்களுக்கு சாதனங்களாக வேண்டும் என்று பிரார்த்தனையோடு செய்வது தகாது-கைங்கர்ய புத்தியுடனேயே செய்ய வேண்டும் என்று கருத்து –

————

யந் முஹுர்தம் க்ஷணம் வா(அ)பி வாஸுதே₃வோ ந சிந்த்யதே ।
ஸாஹாநி꞉ தந் மஹச் சி₂த்₃ரம் ஸா ப்₄ராந்தி꞉ ஸா ச விக்ரியா ॥43॥

ப்ரபன்னர்கள் பகவானைத் த்யானிக்காமல் ஒரு முஹூர்த்த காலத்தை யாவது அல்லது க்ஷண காலத்தை யாவது வீணாக்கப் போக்குவார்களாகில் அது தான் தங்களுக்கு ஓர் கெடுதி என்றும் அபாயம் என்றும் மதி மயக்கம் என்றும் தீங்கு என்றும் நினைக்க வேண்டும் –

—————-

ஏகஸ்மிந் நப்யதி க்ராந்தே முஹூர்தே த்₄யாந வர்ஜிதே ।
த₃ஸ்யுபி₄ர்முஷிதேநேவ யுக்த மாக்ரந்தி₃தும் ப்₄ருஸம் ॥44॥

ப்ரபன்னர்களுக்கு ஒரு முஹூர்த்த காலமாவது பகவத் த்யானம் இன்றியில் கழியுமாகில் அவர்களால் திருடர்களுக்குப் பறி கொடுத்தவர்கள் போலே மிகவும் குரல் பாய்ச்சி அழத் தகும்

————–

ஆலோட்₃ய ஸர்வ ஸாஸ்த்ராணி விசார்ய ச புந꞉ புந꞉ ।
இ₃தமேகம் ஸுநிஷ்பந்நம் த்₄யேயோ நாராயண: ஸதா ₃ ॥45

ஸர்வ ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து அடிக்கடி விசாரித்த்துப் பார்த்ததில் இது ஓன்று தான் நன்றாகத் தேறியது -அதாவது எப்பொழுதும் பகவானைத் த்யானித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே –

—-

பஞ்சமீ -பகவத் பரிசர்யா பத்ததி -ஸம் பூர்ணம்

————-

ஷஷ்டீ -பகவத் பரிஜன உபாஸந பத்ததி

அத₂ லக்ஷ்மீம் ஸமப்₄யர்ச்ய பூ₄மி நீலாதி₃பி₄ஸ்ஸஹ ।
ஸூத்ரவத்யாதி₃பி₄ஶ் சைவ ப்ரபந்நேந விஸேஷத ꞉ ॥1॥

ப்ரபன்னராக இருக்கும் ஒருவர் பூ தேவி நீளா தேவி முதலிய திவ்ய மஹிஷிகளுடனும் ஸூத்ரவதி முதலிய பரிவார மஹிஷிகளுடனும் பகவானுக்குப் பெரிய பிராட்டியாரான ஸ்ரீ மஹா லஷ்மியை ஆராதிக்க வேண்டும் –

—————

கு₃ரூணாம் விஶ்ரமஸ்தா₂நம் ஈஸாநாம் ஜக₃தோ(அ)ஸ்ய ச ।
மஹிஷீம் தே₃வதே₃வஸ்ய தி₃வ்யாம் நித்யாநபாயிநீம் ॥2॥

நமது குரு பரம்பரை முடிவதற்கு ஓர் இடமாயும் இவ்வுலகத்துக்கும் மற்ற உலகங்களுக்கும் ஈஸ்வரியாகவும் தேவதேவனான பகவானுடன் என்றும் பிரியாத திவ்ய மஹிஷியான ஸ்ரீ மஹா லஷ்மியும் ப்ரபன்னருக்கு அவஸ்யம் ஆராதிக்கத் தக்கவள் –

————

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வாஞ்ச்சா₂ஸ்த்ரே விஷ்வக் ஸேநாய ஶ்ருண்வதே ।
லக்ஷ்ம்யாம் மயி ச யுஷ்மாஸு ப₄க்தோ யோ பு₄வி து₃ர்லப₄꞉ ॥3॥

இவ்வாறு பகவானும் விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளி உள்ளார் -அத்தை அருளிச் செய்கிறார் –
வாரீர் விஷ்வக் சேனரே -என்னிடத்திலும் மஹா லஷ்மியிடத்திலும் உங்கள் இடங்களிலும் பக்தரான ப்ரபன்னர் அரிதாக இருக்கிறார் –

—————–

அநந்தரம் ஹரேஸ்ஸர்வை ꞉ உபசாரைஸ் ஸமாஹித꞉ ।
தத்₃வத்ஸமர்சயேத்₃தே₃வீம் தே₃வ தே₃வஸ்ய வல்லபா₄ம் ॥4॥

பகவானை ஆராதித்த பின்பு தேவ தேவனான பகவானுக்கு இனிய வல்லபை யாகிய பெரிய பிராட்டியாரை ஸர்வ உபசாரங்களினால் ஜாக்கிரதையுடன் பகவானைப் போலவே ஆராதிக்க வேண்டும் –

அதிகமனம் -நோக்கிச் செல்லுதல் -அடுத்து உபகரணங்களைச் சேகரித்து ஆராதனம்-

—————-

அஸ்யா வைப₄வமாக்₂யாதி தத்த்வரத்நே யதா ₂ ஹரி꞉ ।
பரவ்யூஹாதி₃கான் பஞ்ச ப்ரகாராநாத்மநோ வித₃ன் ॥5॥

தத்வ ரத்னம் என்னும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸம்ஹிதையில் பர வ்யூஹாதி ரூபங்களான தம்முடைய அவதார பேதங்களைச் சொல்லும் பகவான் இம்மஹா லஷ்மியின் வைபவத்தை அவ்விடத்தில் எவ்வாறு அருளிச் செய்கிறாரோ அதை அருளிச் செய்கிறோம் –

————–

ததா ₂ லக்ஷ்ம்யா꞉ ஸ்வரூபம் ச வக்ஷ்யே ஶ்ருணு ஸமாஹித꞉ ।
கு₃ணதஶ்ச ஸ்வரூபேண வ்யாப்திஸ் ஸாதாரணீ மதா ॥6॥

வாரீர் விஷ்வக் சேனரே -அப்படியே இம்மஹா லஷ்மியின் ஸ்வரூபத்தையும் சொல்லுகிறோம் -ஸாவதானமாய் இதைக் கேட்க வேண்டும் -அதாவது -குணத்தினாலும் -நியாமிகை -நியமிக்கிறவள் –
ஸ்வரூபத்தினாலும் -ஈஸ்வரி-ஆளுகிறவள்
ஸர்வ லோகங்களையும் வியாபித்து இருப்பது எங்கள் இருவருக்கும் பொதுவான தர்மமாகும் -இங்கு சொல்லிய ஸ்வரூபமாவது தீபத்தின் ஜ்வாலை போலே தேஜோ ரூபமாய் இருக்கும் ஓர் ஞான ஆஸ்ரயம் -அதன் குணமாவது தீபத்தின் ஒளி போலே ப்ரகாஸ ரூபமாய் இருக்கும் ஓர் ஞானம் -வியாபித்து இருப்பதாவது இவைகள் எங்கும் பரவி இருப்பதாகும் –

ஸ்ரீ எங்கள் ஆழ்வானுடைய ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு சி விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் ஒட்டியே இங்கு இவ்வாறு அருளிச் செய்கிறார்-

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-அணுவாக இருந்தாலும் பிராட்டிக்கு இவ்வாறு வியாப்தி உண்டே -அநபாயினியாக இருப்பதால் -ஸ்வரூப நிரூபக தர்மம் -பகவான் விபுத்வேன சர்வ கத னான விஷ்ணு -யுடைய ஸ்வ பாவம் போல் -நீக்கமற நிறைந்து இருப்பது போல் இவளும் நீக்கமற நிறைந்து உள்ளாள் -தனக்கு உள்ள சக்தியால் விசேஷ அபிமானம் வைத்து அணுவாக இருந்தாலும் சர்வ கதத்வம் இவளுக்கும் ஆக்கி வைத்துள்ளான் –

———–

மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥7॥

மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –

விளக்கு -வெளிச்சம் எங்கும் பரவி குண வியாப்தி -சர்வத்வ வர்த்தமானத்தவம்
ஏகத்வ வர்த்தமானத்தவம் -விளக்கு
ப்ரஹ்மம் -ப்ரஹ்ம ஞானம் -இதே போல் -ப்ரஹ்மத்துக்கு ஸ்வரூப வியாப்தியும் உண்டு -இதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே –
நித்ய அநபாயினி என்பதால் அவளுக்கும் இவ்வாறே
ஆபாச விருத்திக்கு ஸுவ்பரி த்ருஷ்டாந்தம்

————–

மயா வ்யாப்தா ததா ₂ ஸா(அ)பி ததா ₂ வ்யாப்தோ(அ)ஹமீஶ்வர꞉ ।
மம தஸ்யாஶ்ச ஸே நேஸ ! வைலக்ஷண்யமித₃ம் ஶ்ருணு ॥8॥

வாரீர் விஷ்வக் சேனரே -என்னால் இம்மஹா லஷ்மியும் இம்மஹா லஷ்மியினால் யானும் ஒருவருக்கு ஓருவர் மேற் சொல்லிய ஸ்வரூபாதிகளினால் சூழப்பட்டு இருக்கிறோம் -ஆனால் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் பேதம் என் என்னில் அதைச் சொல்லுகிறோம் கேள்மின் -என்கிறார் –

———–

மச் சே₂ஷபூ₄தா ஸர்வேஷாமீஶ்வரீ வல்லபா₄ மம ।
தஸ்யாஶ்ச ஜக₃தஶ் சாஹமீஶ்வரோ வேத₃விஶ்ருத꞉ ॥ 9 ॥

ஸர்வர்களுக்கும் ஈஸ்வரியாகவும் எனக்கு மிகவும் இஷ்டையாகவும் இருக்கும் இம் மஹா லஷ்மி எனக்கு சேஷபூதையாய் இருக்கிறாள் -இம்மஹா லஷ்மிக்கும் இவ்வுலகங்களுக்கும் நான் ஈஸ்வரனாக வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறேன் –

————-

அஸ்யா மம ச ஸேஷம் ஹி விபூ₄தி ருப₄யாத்மிகா ।
இதி ஶ்ருதி ஶிரஸ் ஸித்₃த₄ம் மச் சா₂ஸ்த்ரேஷ்வபி மாநத₃ ॥10॥

யதா ₂ பூ₄மிஶ்ச நீலா ச தேஷபூ₄தே மதே மம ।
ததா ₂(ஆ)த்மநாஞ்ச ஸர்வேஷாம் ஜ்ஞாநதோ வ்யாப்திரிஷ்யதே ॥11॥

வாரீர் விஷ்வக் சேனரே -நித்ய விபூதி என்றும் லீலா விபூதி என்றும் விபூதிகள் இருவகைப்பட்டு இருக்கும் -இந்த உபய விபூதிகளும் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் சேஷ பூதங்கள் -யங்கள் இருவருக்கும் ஏற்றத்தைச் செய்வதற்காகவே இருப்பவர்கள் -இவ்வர்த்தம் வேதாந்த சாஸ்த்ரங்களிலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்த்ரத்திலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -அப்படியே பூமி தேவி நீளா தேவிமார் இருவரும் எங்களுக்கு சேஷ பூதை களாக இருக்கிறார்கள் –

முக்த ஜீவர்களுக்கு எல்லாம் குணபூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு -ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது -இப்படியே பூமி தேவி நீளா தேவி இவர்களுக்கும் குண பூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு ஒழிய ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது-

விபூத்தவம் இல்லாத ஸ்வரூப வியாப்தி பெரிய பிராட்டியாருக்கு மட்டுமே -விசேஷ அபிமானத்தால் இவ்வாறு உண்டாக்கி வைத்துள்ளான் -நம்மாழ்வாருக்கு சூழ் விசும்பில் பரமபத அனுபவம் காட்டி அருளிச் செய்து வைத்தது போல் –

———————-

ஸ்வரூபதஸ்து ந தயோ ꞉ வ்யாப்திர் வேதா₃ந்த பாரக₃ ! ।
அஸ்மின் ஸாஸ்த்ரே யதா ₂(அ)ந்யத்ர ததா ₂ லக்ஷ்மீரபி ஸ்வயம் ॥12॥

ஸ்வஸ்ய நாத₂ஸ்ய ஸம்ப₃ந்த₄ம் வ்யாப்திமைஶ்வர்ய மேவ ச ।
அப்ருத₂க்₃பூ₄த ஸேஷித்வாத் ப்₃ரஹ்மாத்₃வைதம் தது₃ச்யதே ॥13॥

இந்தப் பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மி தனக்கும் தன் கணவனான பகவானுக்கும் இச் சேதன அசேதனங்களில் அடங்கவும் உண்டாயிருக்கும் சேஷ சேஷித்வ ரூப ஸம்பந்தத்தையம் -வியாப்தியையும் –ஆளுகையும்-எவ்வாறு சொல்லி இருக்கிறாளோ அவ்வாறே ஸ்ரீ ஸ்துதி ஸ்ம்ருதி சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -ஆகையால் ப்ரஹ்மத்தின் சக்தி ரூபமான இம்மஹா லஷ்மி ப்ரஹ்மத்தைக் காட்டி லும் வேறுபடாமல் இருப்பதால் பஹ்மம் ஒன்றே என்று சொல்லப்படுகிறது –

—————

தஸ்ய யா பரமா ப₄க்தி: ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ₃தி₄தே꞉ ।
ஸர்வாவஸ்தா ₂க₃தா தே₃வீ ஸ்வாத்மபூ₄தா (அ)நபாயிநீ॥
அஹந்தா ப்₃ரஹ்மணஸ் தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ ॥14॥

மேற் சொல்லியபடி இம்மஹா லஷ்மிக்கு பகவான் வேறுபாடு இல்லாமையை அருளிச் செய்கிறார் -சந்திரனுக்கு நிலவு போன்றதான அப்பரமாத்மாவின் சக்தி எதுவோ அது தான் அப்பரமாத்மாவுடன் ஸர்வ அவஸ்தையிலும் பிரிவில்லாமலும் அப்பரமாத்மாவின் ஸ்வரூபையுமாக இம்மஹா லஷ்மி சொல்லப்படுகிறாள்

பகவத் ஸாஸ்த்ரத்தில் தன் ஸ்வரூபாதிகளைப் பற்றி இம்மஹா லஷ்மி அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

இம்மஹா லஷ்மி தான் பரமாத்மாவின் தன்மையாக இருக்கிறாள் என்றும் -இப்பரமாத்மா ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாய் இருப்பதால் அப்பிராணிகளைச் சொல்லும் தேவாதி பதங்கள் அப்பரமாத்மாவையும் சொல்லுகின்றது -அவ்வாறே அப்பரமாத்மாவின் தன்மையான தன்னையும் அப்பதங்கள் சொல்லும் விதத்தை இதனால் அருளிச் செய்கிறாள்

நான் அப்ப்ரஹ்மத்தின் தன்மையாக இருக்கிறேன் -அப்ப்ரஹ்மம் ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாக இருப்பதால் அந்த சர்வ பிராணிகளால் நான் என்று சொல்லத்தக்கவராக இருக்கிறார் -அது எப்படி என்னில் -ஆத்மஞானம் இல்லாத ஒருவன் தன் தேஹத்தைக் காட்டி நான் என்றால் அத்தேஹத்திற்க்கு ஆதாரமாக இருக்கும் ஆத்மாவும் அப்பதத்தில் பொருள் படுவது போலே -அவ்வாத்மாவுக்கும் ஆதாரமாக இருக்கும் இப்பரமாத்மாவும் பொருள் படுகிறார் என்பதாகும் –
இப்படிக்கு இப்பிராணிகள் இடத்தில் அடங்கி இருக்கும் அசித்து சித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் வேறுபட்டு இருக்கச் செய்தேயும் இவற்றுள் அசித்தான தேஹ வாசகமான தேவன் மனிதன் என்ற பதங்களைக் கொன்டு இம்மூன்று தத்துவங்களையும் பேதம் இன்றி வ்யவஹரிக்கக் காரணம் என் என்னில்
இம்மூன்று தத்வங்களும் பிரிவின்றி ஒன்றாய்ச் சேர்ந்து வேறுபாடு தோன்றாமல் சரீரமாகவும் தேஹமாகவும் இருக்கை -இதைத்தான் விசிஷ்ட வைதிகர்கள் பிரதிதந்தரம் என்பார்கள் – பிரதிதந்தரமாவது இதர சித்தாந்திகளுக்கு இசையாததாய் தமது வேதாந்த ஸித்தாந்த மாத்திரத்தில் இசைவதாய் இருக்கும் ஓர் அர்த்தம் -அதாவது ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் இங்கு சொல்லிய சரீர ஆத்ம பாவம் இதைக்கொண்டு தான் -இம்மூன்று தத்துவங்களில் பிரதானனாயும் மற்றவர்களுக்கு தாரகனாயும் இருக்கும் இப்பரமாத்மாவைக் கொண்டு விஷ்ணுர் ஏவ ஜகத் ஸர்வம் என்றும் ப்ரஹ்ம ஏவ சகலம் ஜகத் என்றும் சில ஸாஸ்த்ரங்களிலே ப்ரஹ்மத்தையே ஸகல ப்ரபஞ்சங்களாயும் சொல்லுகிறது

ஆகையால் இப்பிராணிகள் நான் என்று வியவஹரித்தால் அதில் பரமாத்மா பொருள் படுவதால் இம்மஹா லஷ்மி யான் அதில் தோற்றும் தன்மையாக இருக்கிறேன் என்கிறாள் –

————–

ஆத்மாஸ்மி ஸர்வபூ₄தாநாம் அஹம்பூ₄தோ ஹரி꞉ ஸ்ம்ருத꞉ ॥15॥
(அஹந்தா ஸர்வ பூ₄தாநாம் ஸாஹமஸ்மி ஸநாதநீ ।)
யேந பா₄வேந ப₄வதி வாஸுதே₃வ꞉ ஸநாதந꞉ ॥16 |

பகவான் எல்லா இடங்களிலும் வஸிப்பதால் வாஸூ தேவன் என்று சொல்லப்படுகிறார் -இப்படிக்கு பகவான் எல்லா இடங்களிலும் வஸிக்கிறார் என்பதை தேச காலங்களில் குறைவு படுத்துவதற்கு யாதொரு பிரமாணமும் இல்லாமையால் அவர் ஸர்வ தேச ஸர்வ காலங்களில் உள்ளவர் என்றும் -ஆகையால் அவர் ஓர் வஸ்து என்றும் ப்ரஹ்மம் என்றும் ஏற்படுகின்றது -ஆகையால் அவர் இச்சேதனருக்கு அழியாத பேறாக இருக்கிறார் –

——–

(ப₄வத்₃பா₄வாத்மகம் ப்₃ரஹ்ம ததஸ்தச்சா₂ஶ்வதம் பத₃ம் ।)
ப₄வாந் நாராயணோ தே₃வோ பா₄வோ லக்ஷ்மீரஹம் பரா ॥17 ॥

முன் ஸ்லோகத்தில் சாமான்யமாக ப்ரஹ்ம ஸ்வரூபத்தைச் சொல்லி இந்த ஸ்லோஹத்தினால் அந்த ஸ்வரூபம் உள்ள லஷ்மி நாராயணனே பரப்ரஹ்மம் என்று சொல்லுகிறாள் –
மேற் சொல்லிய சத்தையோடு கூடியவர் -சத்தை –உண்மை -இருக்கை -ஸர்வ உத்தமனான நாராயணன் -ஸ்ரீ மஹா லஷ்மி என்றும் திருநாமத்தை யுடைய நான் மேற் சொல்லிய சத்தையாக இருக்கிறேன் –
ஆகையால் ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ஆதியும் அந்தமும் இல்லாத பரப்ரஹ்மம் –

ஸர்வத்ர வஸதி வாஸூ தேவன்
பவது -இருப்பது -பாவ -இருக்கும் தன்மை -சத்தை -அவளுடன் இருப்பதாலேயே இருக்கும் தன்மை –

————

லக்ஷ்மீ நாராயணாக்₂யம் தத் ததோ ப்₃ரஹ்ம ஸநாதநம் ।
அஹந்தயா ஸமாயுக்தோ ஹ்யஹமர்த₂꞉ ப்ரஸித்₃த்₄யதி ॥18॥

வேதாந்தம் முதலிய ஸாஸ்திரங்களில் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லப்படுகின்றது -நீர் மேற் சொல்லிய ஸ்லோகத்தின் படி ஸ்ரீ லஷ்மீ நாராயணன் ப்ரஹ்மமாகில் ப்ரஹ்மம் இரண்டு என்று ஏற்படுகிறதே -அது கூடுமோ என்னில்
இம்மஹா லஷ்மி தமக்கும் பரமாத்மாவுக்கு பேதம் இல்லாமையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக்கூடும் என்கிறாள் -இந்த ஸ்லோகத்தினால்
நான் என்பதற்குப் பொருள் தன்மையோடு கூடியதாகவே கிடைக்கின்றது -இத்தன்மையும் நான் என்ற பொருளில் கிடைக்கிறது -இவ்விரண்டும் ஒன்றோடு ஓன்று பிரிவின்றி சேர்ந்தே இருப்பதால்
இவ்வர்த்தங்களாக இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி பரமாத்மா ஆகிய இருவருக்கும் பேதமில்லை
ஆகையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக் குறை இல்லை

மேற் சொல்லியபடி ஸ்ரீ மஹா லஷ்மியின் வைபவத்தைப் பற்றி இதர சாஸ்திரங்களிலும் சொல்லியவற்றை அருளிச் செய்கிறார் –

—————

அஹமர்த₂ ஸமுத்யா ச ஸா(அ)ஹந்தா பரிகீர்திதா ।
அந்யோந்யஸ்யா(அ)விநாபா₄வாத் அந்யோந்யேந ஸமந்வயாத் ॥19॥

தாதா ₃த்ம்யம் வித்₃தி₄ ஸம்ப₃ந்த₄ம் மம நாத₂ஸ்ய சோப₄யோ ꞉ ।
பராஸரஸ்து ப₄க₃வான் ஹைநாம் ப்₃ரஹ்ம ரூபிணீம் ॥20॥

பராசர முனிவரும் இம்மஹா லஷ்மியை பரப்ரஹ்ம ஸ்வரூபியாக ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் ஸர்வ ஜகத்துக்கும் மாதவாய் இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி நித்ய ஸ்வரூபையாகவும் பரமாத்மாவான பகவான் இடமிருந்து என்றும் பிரிவில்லாமலும் இருக்கிறாள் -பரமாத்மா ஸர்வ வ்யாபியாக இருப்பது போல் இம்மஹா லஷ்மியம் ஸர்வ வியாபியாக இருக்கிறாள் –

தாதார்த்தம் -அவனுக்காகவே இவள் -இவளுக்காகவே அவன் –

——————

நித்யைவைஷா ஜக₃ந்மாதா விஷ்ணோ ꞉ ஶ்ரீரநபாயிநீ ।
யதா ₂ ஸர்வக₃தோ விஷ்ணு꞉ ததை ₂வயம் த்₃விஜோத்தம ! ॥21॥

தே₃வ திர்யங் மநுஷ்யேஷு புந்நாமா ப₄க₃வான் ஹரி꞉ ।
ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீ மைத்ரேய ! நாநயோர் வித்₃யதே பரம்
॥22 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே
தேவர் பசு மிருகம் பஹ்யாதிகளான திர்யக்குகள் மனிதர்கள் இவர்களில் ஸ்த்ரீ ரூபிகளாய் இருக்கும் அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மி -புருஷ ரூபிகளாக இருக்கும் அனைவரும் பகவானது ஸ்ரீ மன் நாராயணன் என்றால் ஸ்த்ரீகள் லஷ்மி தேவியின் விபூதிகள் -புருஷர்கள் பகவானுடைய விபூதிகள் –
முன் ஸ்லோகத்தினால் இருவருமே ஸர்வ வ்யாபிகளாய்ச் சொல்லப்பட்டது -இங்கு இவ்வாறு பிரித்துச் சொல்வது எதனால் என்றால் இருவர்களும் சமானமாய் அந்தராத்மாவாய் -அந்தர்யாமிகளாய் -இருக்கச் செய்தேயும் ஸ்திரீகளை நியமிப்பதில் லஷ்மிக்கும் புருஷர்களை நியமிப்பதில் பகவானுக்கும் முயற்சி அதிகம் என்று கருத்து –

—————–

அபராதை₄க ஸக்தாநாம் அநர்ஹாணாம் சிரம் ந்ருணாம் ।
ப₄ர்துராஶ்ரயணே பூர்வம் ஸ்வயம் புருஷகாரதாம்
॥23 ॥

வால்லப்₄யே நாநுதிஷ்ட₂ந்தீம் வாத்ஸல்யாத்₃ யுப ப்₃ருஹிம்ணீம் ।
உபாயஸமயே ப₄ர்து꞉ ஜ்ஞாந ஸக்த்யாதி₃வர்தி₄நீம் ॥24॥

(முக்தாநாம் போ₄க₃வ்ருத்₃த்₄யர்த₂ம் ஸௌந்த₃ர்யாதி₃விவர்தி₄நீம் ।)
ஆகார த்ரய ஸம்பந்நாம் அரவிந்த₃ நிவாஸிநீம் ॥25 ॥

இம்மஹா லஷ்மி உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவள் என்பதை இதனால் அருளிச் செய்கிறார் –
எப்பொழுதும் அபராதங்களையே செய்வதில் மனமுடையவர்களான இச்சேதனர்கள் தன் பர்த்தாவான பகவானை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் பகவானுக்கு தாம் இஷ்டையாய் -வல்லபையாய் -இருப்பதால் அவனுக்கு இச்சேதனர்கள் இடத்தில் மிகவும் கிருபையை வளரச் செய்பவளாயும் -புருஷகாரம் செய்பவளாயும் –
இச்சேதனர்கள் உபாயத்தை அனுஷ்ட்டிக்கும் சமயத்தில் தம்முடைய கணவனுக்கு இச்சேதனர்களைக் காப்பதற்கு போந்தவைகளான ஞான சக்தியாதிகளை விருத்தி செய்பவளாயும்
முக்தர்களாகும் இச்சேதனர்களுக்கு பரிபூர்ண ஆனந்த அனுபவம் உண்டாகும்படி தனது வல்லபனான பகவானுக்கு தன்னுடைய சம்பந்தத்தினால் ஓர் அளவற்ற வடிவழகை யுண்டாக்கிறவளாய் இருப்பதால்
உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவளாகவும்
ஸர்வ லோக ஈஸ்வரியாகவும்
தம்மை அடைந்தவர்களுக்கு ஸர்வ ஐஸ்வர்யங்களையும் அளிப்பவரான -பகவானுக்கு மிகவும் இஷ்டதமையுமான தாமரை மேல் வீற்று இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மியை ஸேவிக்கிறேன் –

———–

அஸேஷ ஜக₃தீ₃ஶித்ரீம் வந்தே₃ வரத₃வல்லபா₄ம் |
ததா ₂ பூ₄மிம் ச நீலாம் ச தே₃வஶ்சாந்யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥26 ॥

நித்ய ஸூரிப்ரோ₄நாம்ஶ்ச தத் தந் மந்த்ரை ꞉ ஸமர்சயேத் ।
யத்₃த₄ஸ்வேத்ரவஸக₃ம் ஜக₃ச்சித₃சிதா₃த்மகம் ॥27 ॥

அப்படியே பூ தேவியையும் நீளா தேவியையும் மற்றுமுள்ள அவனுடைய அநேக திவ்ய மஹிஷிகளையும் மற்றும் விஷ்வக் சேனர் முதலிய பிரதானர்களான நித்ய ஸூரிகளையும் அவர்களுக்குச் சொல்லிய மந்திரங்களினால் ஆராதிக்க வேண்டும் –

வேத்ரம் -திருப்பிரம்பின் கீழ் வளர்ந்த வஸ்து ப்ரஹ்மம்

—————-

விஷ்ணே ரமாத்யம் ஸேநேஸம் பரிவாரைஸ் ஸமர்சயேத் ।
யே நித்ய ஸூரயோ (அ)நந்த க₃ருடா₃த்₃யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥28 ॥

சேதன அசேதன ரூபங்களான இவ்வுலகம் அனைத்தும் விஷ்வக் சேனர் திருக்கையில் பிடித்து இருக்கும் செங்கோலின் வசமாக இருப்பதால் விஷ்வக் சேனரை அவரது பரிவாரங்களோடு ஆராதிக்க வேண்டும் –

————-

பரிவாரை ꞉ ஸஹைதாம்ஶ்ச சக்ராதீ₃ந்யாயுதா ₄நி ச ।
தே₃வ்யஶ்ச ஸூத்ரவத் யாத்₃யா꞉ யா லக்ஷ்ம்யா꞉ பரிசாரிகா꞉ ॥29॥

பின்னும் அநந்த கருடாதிகளாயுள்ள அநேகம் நித்ய ஸூரிகள் எவர்களோ அவர்களையும் அவர்களின் பரிவாரங்களையும்
ஸ்ரீ ஸூதர்சனம் முதலிய திவ்ய ஆயுதங்களையும் ஸ்ரீ மஹா லஷ்மியின் பரிசாரிகளாய் இருக்கும் விஷ்வக் சேனர் முதலிய நித்ய ஸூரிகளுக்கு பத்னிமார்களான ஸூத்ரவதி முதலிய நித்ய ஸூரிகளையும் அவர்களின் பரிவாரங்களையும் அவர்களின் அந்தஸ்தின் கிரமப்படி ஆராதிக்க வேண்டும் –

————

தாஶ்ச தத் பரிவாரம் ச பூஜயேத் தத ₃நுக்ரமாத் ।
ப₄ஜந்தே யே ததா ₂ விஷ்ணோ : ஆக₃தா மந்தி₃ரே ஸுரா꞉ ॥30॥

நித்ய ஸூரிகளின் கோஷ்ட்டியில் சேராதவர்களாய் -பகவத் ஸேவார்த்திகளாய் -பகவானுடைய ஆலயத்தில் வந்திருக்கும் தேவர்கள் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கத்தக்கவர்கள் அன்று

———–

விநா விதா₄நம் நித்யேஷு நோபாஸ்யா: தே முமுக்ஷுபி₄꞉ ।
ப்₃ரஹ்ம ருத்₃ரார்ஜுந வ்யாஸ ஸஹஸ்ர கர பா₄ர்க₃வா꞉ ॥31॥

ககுத்ஸா(அ)த்ரேய கபில பு₃த்₃தா₄த்₃யா யே ஸஹஸ்ரஸ ꞉ ।
ஸக்த்யா வேஸாவதாராஸ்தே விஷ்ணோஸ் தத் கால விக்₃ரஹா ꞉ ॥32॥

முமுஷு உபாஸ்யத்வம் -முக்கியமான குணம் –போற்றும் புனிதன் -ராமானுஜன் -உபாசனம் அல்ல

பிரம்மதேவன் ருத்ரன் அர்ஜுனன் வ்யாஸ முனிவர் பரசுராமன் காகுஸ்த மஹா ராஜன் தத்தாத்ரேயர் கபில மகரிஷி புத்தர் இவர்கள் முதலாக பகவானுடைய அவதாரங்களாகச் சொல்லப்படும் அநேகர் சிலகாலம் இவர்கள் இடத்தில் பகவானுடைய சக்தி அனுபிரவேசம் இருந்ததால் சக்தி ஆவேச அவதாரங்கள் என்பர் -பகவானுடைய சக்தி இருந்தவரையில் பகவானுக்கு சரீரங்களாயும் அச்சக்தி நீங்கிய பின்னர் அக்னி முதலிய தேவர்களைப் போல் இவர்களும் சாமான்யவர்களாக இருப்பதால் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கப்படத் தக்கவர்கள் அல்லர்

———-

அநுபாஸ்யா முமுக்ஷூணாம் யதே₂ந்த்₃ராக்₃ந்யாதி₃தே₃வதா ꞉ ।
யதா ₂ ப₄க₃வதை வோக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே ॥33॥

முமுஷுக்களுக்கு ஆராதிக்கத் தகாதவர்களான தேவர்கள் தம்மிடத்தில் ஸாஸ்த்ரார்த்தங்களைக் கேட்க்கும் -விஷ்வக் சேனருக்கு பகவான் எவ்வாறு உபதேசித்தாரோ -அதைச் சொல்லுகிறோம் –

——–

அநுகாலம் முமுக்ஷூணா மநுபாஸ்யா விஸேஷத꞉ ।
அநர்ச்யாநபி வக்ஷ்யாமி ப்ராது₃ர் பா₄வான் யதா ₂க்ரமம் ॥
34॥

சதுர்முக₂ஸ்து ப₄க₃வான் ஸ்ருஷ்டி கார்யே நியோஜித꞉ ।
ஸங்கராக்₂யோ மஹான் ருத்₃ர꞉ ஸம்ஹாரே விநியோஜித꞉ ॥35॥

மாேஹநார்தே₂ ததா ₂ பு₃த்₃த₄꞉ வ்யாஸஶ் சைவ மஹாந்ருஷி꞉ ।
வேதா ₃நாம் வ்யஸநே தத்ர தே₃வேந விநியோஜித꞉ ॥36॥

அர்ஜுநோ த₄ந்விநாம் ஶ்ரேஷ்தடோ ₂ ஜாமத₃க்₃ந்யோ மஹாந்ருஷி꞉ ।
வஸூநாம் பாவகஶ்சா(அ)பி வித்தேஸஶ்ச ததை ₂வ ச ॥37॥

(யத்₃யத்₃விபூ₄திமத் ஸத்த்வம் ஶ்ரீமதூ₃ர்ஜிதமேவ வா ।
தத்ததே₃வாவக₃ச்ச₂ த்வம் மம தேஜோம்(அ)ஸ ஸம்ப₄வம் ॥38 ॥)

யத்₃யத்₃விபூ₄திமத் ஸர்வம் ஶ்ரியா ஜுஷ்டம் விஸேஷத꞉ ।
ராக₃த்₃வேஷ விஹீநம் து ஸ்வதோ ப₃லவது₃ல்ப₃ணம் ॥39॥

தத்த₃ம்ஸம் விஜாநீயாத் மம கார்யார்த₂மாத₃ராத் ।
ஏவமாத்₃யாஸ்து ஸேநேஸ ! ப்ராது₃ர்பா₄வை ரதி₄ஷ்டி₂தா ꞉ ॥40 ॥

ஜீவாத்மாநஸ் ஸர்வ ஏதே நோபாஸ் யாஸ்தே முமுக்ஷுபி₄꞉ ।
ஆவிஷ்ட மாத்ராஸ்தே ஸர்வே கார்யார்த₂ம் அமிதத்₃யுதே ॥41

முமுஷுக்களுக்கு பூஜிக்கத் தகாதவர்களான என்னுடைய ஆவேச அவதாரங்களைச் சொல்லுகிறேன் –
சதுர்முகனான பிரமன் உலகங்களை ஸ்ருஷ்டிக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
சங்கரன் என்னும் ருத்ரன் ஸம்ஹாரம் செய்ய என்னால் நியமிக்கப்பட்டவன்
புத்தன் பாபங்களைச் செய்த பிராணிகளுக்கு மோஹத்தை உண்டாக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
வ்யாஸ முனிவர் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் நான்கு வேதங்களுக்கும் ருக்கு யஜுர் சாமம் அதர்வணம் என்ற பிரிவுகளைச் செய்வதற்காக என்னால் நியமிக்கப்பட்டவன்
இவர்களும் பின்னர் வில்லாளிகளில் சிறந்தவனான அர்ஜுனனும் மஹரிஷியான பரசுராமனும் அஷ்ட வசுக்களில் ஒருவனான பாகவன் என்னும் வாசுவும் குபேரன் என்னும் திக் பாலனும்
பின்னும் இவர்களைப் போல் பிரபுத்வமான ஐஸ்வர்யத்துடனும் சம்பத்து கொண்டவர்களாயும் -ராக துவேஷாதி துர்குணங்கள் இல்லாதவராயும் -பல பராக்ரமுள்ளவர்களாயும் இருக்கும் பிராணிகள் எவர்களோ அவர்கள் அனைவருமே ஓரோர் காரியத்துக்காக என்னுடைய ஓர் அம்சத்துடன் கூடியவர்களாக அறியவேண்டும் –
இப்படிக்கு என்னுடைய அம்சத்தால் அடையப்பட்டு இருக்கும் இவர்கள் ஜீவர்களாக இருப்பதால் இவர்கள் வைஷ்ணவர்களால் பூஜிக்கத் தக்கவர்கள் அல்லர் –

——–

அநர்ச்யா: ஸர்வ ஏவைதே விருத்₃த₄த்வாந் மஹாமுநே ।
அஹங்க்ருதி யுதாஶ் சைதே ஜீவமிஶ்ரா ஹ்யதி₄ஷ்டி₂தா꞉ ॥42 ॥

ஒரு கார்ய நிமித்தமாக என்னாலே அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இஜ்ஜீவர்கள் கர்மபரவசப்பட்டு இருப்பவர்களாதலால் கர்ம பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பும் ப்ரபன்னர்களுக்கு உபாஸிக்கத் தக்கவர்கள் அல்லர் -பகவானால் அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் ஸ்வ தந்திரம் என்னும் அஹங்காரத்துடன் கூடியவர்கள் –

———-

ப்ராது₃ர் பா₄வாஸ்து முக்₂யா யே மத₃ம் ஸத்வாத்₃ விஸேஷத꞉ ।
அஜஹத் ஸ்வ ஸ்வபா₄வா ஹி தி₃வ்யா꞉ ப்ராக்ருத விக்₃ரஹா ꞉ ॥43॥

தீ₃பாத்₃தீ₃ப இவோத்பந்நா ஜக₃தோ ரக்ஷணாய தே ।
அர்ச்யா ஏவ ஹி ஸேநேஸ ஸம் ஸ்ருத் யுத்தரணாய வை
॥44॥

விசேஷித்து என்னுடைய அம்சமாகவே இருப்பதினால் முக்கியமானவைகளாக இருக்கும் ராம கிருஷ்ண முதலிய அவதாரங்களோ என்னில் அவைகள் கர்மபந்தமில்லாத -அபஹத பாப்மா முதலிய ஸத் குணங்களோடு கூடியவைகளாயும் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹங்களோடு கூடியவைகளாயும் -தீபத்தில் இருந்து உண்டாகும் தீபங்கள் போல் இவ்வுலகோரை ரக்ஷிப்பதற்காகவே அவதரித்தவைகள் ஆகையால் இவ்வவதாரங்கள் சம்சாரத்தைக் கடப்பதற்கு ப்ரபன்னர்களால் ஆராதிக்கத் தக்கவைகளாகும்-

——————–

யதாஹ₂ப₄க₃வான் வ்யாஸ꞉ புராணே ச பராஸர꞉ ।
ப்₃ரஹ்மாணம் ஶிதிகண்ட₂ம் ச யாஶ்சாந்யா தே₃வதாஸ்து தா ꞉ ॥45 ॥

ப்ரதிபு₃த்₃தா ₄ ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் ப₂லம் ।
அந்யே து புருஷ வ்யாக்₄ர ! சேதஸா யே வ்யபாஶ்ரயா꞉ ॥46॥
அஸூத்₃தா₄ஸ்தே ஸமஸ்தாஸ்து தே₃வாத்₃யா꞉ கர்மயோநய꞉ ॥

வ்யாஸ முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவரும் எவ்வாறு அருளிச் செய்துள்ளார்களோ அவற்றை அருளிச் செய்கிறோம்
பிரமதேவன் சிவன் முதலிய பகவானை ஒழிந்த தேவர்கள் இவர்களோ அவர்கள் தங்களை அடைந்த வர்களுக்கு மோக்ஷம் ஒழிந்த ஸ்வல்ப பலன்களை கொடுப்பவர்களாகையால் முமுஷுக்கள் அவர்களை அடைவதில்லை

பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

வாரீர் புருஷ ஸ்ரேஷ்டரான மைத்ரேய முனிவரே -மொஸார்த்திகளினால் தியானிக்கத் தகாதவர்களான பகவானை ஒழிந்த மற்ற தேவர்கள் துஷ்க்ருத ஸூஹ்ருத ரூப கர்மங்களினால் வசப்பட்டு அசுத்தராக இருப்பவர்கள் -ஆகையால் அவர்கள் பிரபன்னர்களால் ஆராதிக்கத் தகுந்தவர்கள் அல்லர் –

—–

ஷஷ்டீ₂–ப₄க₃வத் பரிஜந உபாஸநா பத்₃த₄தி–ஸம் பூர்ணம்

————

அத₂ -ஸப்தமீ-பா₄க₃வத் உபாஸநா பத்₃த₄தி꞉

வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவத ஸஹ -முனிவர்களும் யோகிகளும் -குண நிஷ்டர்கள் -கைங்கர்ய நிஷ்டர்கள்-ஆச்சார்யர் -மந்த்ர ப்ரதன் -அடுத்து -பகவத் -இப்பொழுது பாகவத -ஸத்துக்கள் உபாஸனம் –-ஆச்சார்யர் வைபவம் காட்டிக்கொடுத்தவர் யாதலால் பாகவதர் ஸ்ரேஷ்டர் -கண்ணி நுண் சிறுத்தாம்பு பிரவேசம் –மற்றவரைச் சிரித்து இருப்பார் மதுரகவி ஆழ்வார் ஒருவரே -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்க்கு அடிமை -திருவாய் மொழிகளின் ப்ரமேயம் -பாகவதர்களே உபாயம் -உபேயம் -சேஷீ –

அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —விபவம்–காசை இழந்தவனை விட -அர்ச்சை -பொன்னை இழந்தவனை விட -பாகவத சமாஹம் -வைரம் இழந்தது போல் மிக்க வருத்தம்-கேசவ பக்தியை விடவே -கேசவ பக்த பக்தி ஸ்ரேஷ்டம் – வேதகப்பொன் போல் இவர்களோட்டை ஸம்பந்தம்

ஶ்ருதார்த₂ஸம்ஸ யோச்சி₂த்யை போ₃த₄நாய பரஸ்பரம் ।
ஸாத ₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ॥1॥

வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் அர்த்தங்களிலாவது -ஆச்சார்யர்களிடம் கேட்க்கப்பட்ட அர்த்தங்களிலாவது உண்டாகும் ஸம்சயங்களைப் போக்கிக் கொள்வதற்காகவும் -ஒருவருக்கு ஒருவர் ஞானத்தை யுண்டாக்கிக் கொள்வதற்காகவும் -தங்களுக்கு உண்டாயிருக்கும் விஷய அனுபவங்களாகிய நோய்க்கு ஓர் மருந்தாக இருக்கும் சாதுக்களான ஞானிகள் ப்ரபன்னர்களினால் அடையத் தக்கவர்கள்

——————

(யதா₂ஹ ப₄க₃வான் வ்யாஸோ விஷய த்யாக₃ பே₄ஷஜம் ।
ஸங்க₃꞉ ஸர்வாத்மநா த்யாஜ்ய꞉ ஸ சேத் த்யக்தும் ந ஸக்யதே ॥2 ॥

பகவானாக வ்யாஸ முனிவர் விஷய அனுபவங்களை விடுவதற்கு ஓர் உபாயம் சொல்லி இருக்கிறார் -அதைச் சொல்லுகிறோம் -ப்ரபன்னர்கள் ஸர்வ பிரகாரத்தாலும் இவ் விஷய அனுபவங்களை விடவேண்டும் -விடுவதற்கு அஸக்யமாக இருக்குமாகில் அப்பொழுது ஸாதுக்களான ஞானிகளை ஆஸ்ரயிக்க வேண்டும் -அவர்கள் இவ்விஷய அனுபவங்களைப் போக்கும் மருந்தாக இருக்கிறார்கள் –

——————

(ஸாத₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ।)
விசிகித்ஸா யதா ₃ து ஸ்யாதா₃த்மந꞉ கர்ம வ்ருத்தயோ ꞉ ॥3 ॥

தத்ர ஸம்மர்ஶிநோ யுக்தா யே விப்ரா꞉ ஸத்பதே₂ ஸ்தி₂தா ꞉ ।
தேஷாம் ஸமீபம் விநயாத் உபேத்யார்த₂ம் து ஶிக்ஷயேத் ॥4॥

ப்ரபன்னராய் இருக்கும் ஒருவருக்கு தாம் அனுஷ்ட்டிக்கும் கர்மங்களிலும் தம்முடைய நடத்தைகளிலும் ஸந்தேஹம் யுண்டாகில் அது விஷயத்தில் ஸாஸ்த்ர விசாரம் யுடையவராயும் -சன்மார்க்கத்தில் நிஷ்டை யுடையவராயும் -ஞானிகளுமான ப்ராஹ்மணர்களின் சமீபத்தில் சென்று அவ்வர்த்தத்தை சந்தேகமறத் தெரிந்து கொள்ள வேண்டும் –

——————-

யதா ₂ தே தத்ர வர்தேரன் ததா ₂ வர்ததே ஸாத்த்விக꞉ ।
அபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தோ யத்₃யபி குர்வந்தி நைகமுபதே₃ஸம் ।
யாஸ்தேஷாம் ஸ்வைரகதா ₂꞉ தா ஏவ ப₄வந்தி ஸாஸ்த்ராணி ॥5॥

ஞானிகளான சாதுக்களை ஆஸ்ரயித்து இருக்கும் பிரபன்னர் அவர்கள் எந்த நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்கிறார்களோ அதே நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்க வேண்டும் -அந்த ஞானிகள் தன்னை ஆஸ்ரயித்து இருக்குமவர்களுக்கு அநேகமாய் ஸத் உபதேசங்களைச் செய்யவே செய்வார்கள் -அப்படிக்கு நேரா விடினும் அவர்கள் தன்னிச்சையாய் சொல்லிக்கொண்டு இருக்கும் கதைகளும் கூட ஸாஸ்த்ரார்த்தமாகவே இருக்கும் –

கலை இலங்கு மொழியாளர் -திண்ணைப் பேச்சும் ஸ்ருதார்த்தங்களே -சொல்லும் அடு ஸ்ருதியாம்

————–

சவ்நகஸ்து யதா ₂ ப்ராஹ ஸாதூ₄நாம் த₃ர்ஸநே ததா ₂ ।
ஸுதூ₃ரமபி க₃ந்தவ்யம் யத்ர பா₄க₃வதா ꞉ ஸ்தி₂தா ꞉ ॥6॥

ப்ரயத்நே நாபி த்₃ரஷ்டவ்யா꞉ தத்ர ஸந்நிஹிதோ ஹரி꞉ ।
( இமமே வார்த₂மாஹ ஸ்ம நாரத ₃ஶ்சவ்நகாய வை ।
பாபாவஸாநமிச்ச₂த்₃பி₄꞉ நித்யம் விஷ்ணு பராயணை ꞉॥
ஸுதூ₃ரமபி க₃த்வா ச த்₃ரஷ்டவ்யா லோக பாவநா꞉ ।)
ஸாதூ₄நாம் த₃ர்ஸநம் புண்யம் தீர்த₂பூ₄தா ஹி ஸாத₄வ꞉ ॥7॥

சவ்னக முனிவர் சாதுக்களின் தர்சனத்தைப் பற்றி எவ்வாறு சொல்லி இருக்கிறாரோ அதைச் சொல்லுகிறோம் -சத்துக்களான ஞானிகள் இருக்கும் இடம் வெகு தூரமாக இருந்த போதிலும் அவ்விடத்திற்கு பிரபன்னர்கள் அவஸ்யம் போக வேண்டும் -அவ்விடத்தில் இருக்கும் தத்வ ஞானியை ப்ரயத்தனமாவது செய்து பார்க்க வேண்டும் -அந்த சாதுவினிடத்தில் பகவான் வஸிக்கிறார் –

ரகு குணன் ஸாது ஸ்ருதி தேடிச் சென்றானே -தர்ம ஸந்தேஹம் தீர்க்க –

சாதுக்களின் தர்சனம் மிகவும் புண்ணியங்களை யுண்டாக்கத் தக்கது -அவர்கள் ஒரு புண்ய தீர்த்தங்களாக இருக்கிறார்கள் -அனால் புண்ய தீர்த்தங்கள் காலம் கழிந்த பின்பே பலன்களைக் கொடுக்கும் -சாதுக்களின் ஸஹ வாஸமோ அப்படிக்கு இல்லாமல் உடனே பயன்களை அளிக்க வல்லதாகும் –

———–

காலேந ப₂லதே தீர்த₂ம் ஸத்₃ய꞉ ஸாது₄ஸமாக₃ம꞉ ।
ஸூகோ (அ)பி ப₄க₃வாநாஹ ஸதாம் து கு₃ண கீர்தநம் ॥8॥

ஸூக மஹ ரிஷியும் சாதுக்களின் குணங்களைக் கொண்டாடுவது நெடும் காலமாய்த் தான் செய்திருக்கும் புண்ணியங்களின் பலனாகச் சொல்லி இருக்கிறார் -அதையும் சொல்லுகிறோம்

—————–

சிரகாலார்ஜி தஸ்யை தத் ஶ்ருதஸ்யவ ப₂லம் யதா ₂ ।
ஶ்ருதஸ்ய பும்ஸாம் ஸுசிரஶ் ரமஸ்ய நந்வஞ்ஜஸா ஸூரிபி₄ரீரிதோ(அ)ர்த₂꞉ ।
தஸ்மாத்₃கு₃ணாநுஸ்மரணம் முகுந்த₃பாதா₃ரவிந்த₃ம் ஹ்ரு₃தயேஷு யேஷாம் ॥9॥

நெடும் காலமாய் வருத்தமடைந்து சம்பாதிக்கப்பட்டு இருக்கும் ஸாஸ்த்ர ஞானத்திற்கும் மோக்ஷ ரூபமான பலன் சீக்கிரம் கிடைப்பதில்லை -ஆகையால் அதைப் பெறுவதற்கு எப்பொழுதும் பகவானுடைய திருவடிகளை தம்முடைய ஹ்ருதயத்தில் தியானித்து இருக்கும் சத்துக்களின் குணங்களைக் கொண்டாட வேண்டும் –

———–

ஸத்₃பி₄ர் க்₃ருஹா க₃தா ꞉ ஸந்த꞉ பூஜநீயா விஸேஷத꞉ ।
ப்ரியவாக்யை ꞉ ததா ₂ர்க்₄யாத்₃யை ꞉ போ₄கை ₃ரிஷ்டைர்யதோ₂சிதை ꞉ ॥10॥

சத்துக்களாக இருக்கும் பிரபன்னர்களினால் தம்முடைய க்ரஹத்துக்கு அதிதிகளாய் வந்திருக்கும் சத்துக்களான ஸ்ரீ வைஷ்னவர்கள் குசல ப்ரஸ்னம் செய்வது முதலிய பிரியமான ஸல்லாபங்களினாலும் -அர்க்க்ய பாத்ய ஆசமநீயம் முதலிய உபசாரங்களினாலும் அவர்களுக்குத் தகுந்தவைகளாயும் இஷ்டங்களாயும் இருக்கும் உபஹாரங்களை சமர்ப்பிப்பதினாலும் பூஜிக்கத் தக்கவர்கள் –

————-

நாகாம்ஸ்யே தா₄வயேத்பாதவ் ₃ இதி ஸ்ம்ருத்யா(அ)ந்ய பா₄ஜநே ।
ம்ருண்மயாத₃வ் க்ஷாலயீத யதா₂ஹ ப₄க₃வான் ஸூக꞉ ॥11॥

வெண்கலப் பாத்திரத்தில் கால்களை அலம்பக்கூடாது என்று ஸ்ருதிகளில் சொல்லி இருப்பதால் பாகவதர்கள் திருவடிகளை மண் பாத்திரம் முதலியவை கொண்டு அலம்ப வேண்டும் -இவ் விஷயத்தில் சுக முனிவர் எவ்வாறு சொல்லி இருக்கின்றாரோ அதைச் சொல்லுகிறோம்

————

வ்யாளாலயத்₃ருமா ஹ்யேதே ஹ்யரிக்தாகி₂லஸம்பத₃꞉ ।
யே க்₃ருஹாஸ்தீர்த பாதீ₃யபாத ₃தீர்த₂ விவர்ஜிதா꞉ ॥ 12 ॥

எந்த கிரஹங்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்துக் கொள்ளத் தக்கின பாகவதர்களின் திருவடி தீர்த்தங்களைப் பெறாதவைகளோ அவைகள் குறைவற்ற பெரும் செல்வங்கள் உள்ளவைகளாக இருந்தும் சர்ப்பங்களுக்கு இருப்பிடமான சந்தன மரங்கள் போன்றவைகளாம் -அவைகள் சத்துக்களினால் கிட்டத் தக்கவைகள் அன்று –

—————–

ஸர்வேஷாமேவ பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி₄꞉ ।
வர்ணிதம் ப₄க₃வத்₃ ப₄க்ததாபாதோ₃த₃க நிஷேவணம் ) ॥13॥

பகவத் பக்தர்களின் திருவடி தீர்த்தங்களைப் பானம் செய்வது சகல பாபங்களுக்கும் பிராயச் சித்தம் என்று பண்டிதர்களினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது

—————-

தத் தீர்த₂ம் ஶிரஸா தா₄ர்யம் ததா ₂ங்கை ₃ஶ்ச க்ஷுராதி₃பி₄꞉ ।
பேய மந்தர்யதா ₂ ஸோமே தத்ர நாசமந க்ரியா ॥14॥

அந்த ஸ்ரீ பாத தீர்த்தம் சிரஸ்ஸிலும் அங்கங்களிலும் கண்களிலும் தரிக்கத் தக்கது -அப்படியே பானம் செய்து உள்ளுக்கும் உபயோகிக்கத் தக்கது -இந்த தீர்த்தத்தைப் பானம் செய்தால் ஸோம பானத்தைப் போலவே ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

பகவானுடைய திருவடி தீர்த்தத்தை யாவது பாகவதர்களின் பாத தீர்த்தத்தை யாவது பானம் செய்தால் சோம பானத்தில் ஆசமனம் செய்ய வேண்டியது இல்லாமல் போனது போல் இதிலும் ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

—————

பீதே பாதோ₃த₃கே விஷ்ணோ ꞉ வைஷ்ணவாநாம் ததை ₂வ ச ।
தத்ர நாசமநம் கார்யம் யதா ₂ ஸோமே த்₃விஜோத்தம ॥15॥

நாரத₃ஸ்யாதிதே₂꞉ பாதவ் ₃ ஸர்வாஸாம் மந்தி₃ரே ஸ்வயம் ।
க்ருஷ்ண꞉ ப்ரக்ஷால்ய பாணிப்₄யாம் பபௌ பாதோ₃கம் முநே ꞉ ॥ 16 ।

ஸ்ரீ கண்ணனும் தம்முடைய பதினாறாயிரம் பட்ட மஹிஷிகளின் க்ருஹங்களிலும் -அநேகம் திவ்ய ரூபங்களை எடுத்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் காலத்தில் -அவ் விடங்களில் அதிதியாக வந்த முனிவருடைய திருவடிகளை தம்முடைய கைகளினால் தாமே அலம்பி அந்த ஸ்ரீ பாத தீர்த்தத்தை கண்ணன் அமுது செய்தார் –

————-

போ₄கே₃ரிஷ்டைஶ்ச ஸாஸ்த்ரீயை ꞉ தோஷயேத்₃வைஷ்ணவான் க்₃ருஹே
த்ரிவித₄த்யாக₃பூர்வம் து ஸேஷத்வ ஜ்ஞாந வ்ருத்₃த₄யே ॥17॥

தம்முடைய க்ரஹத்தில் வந்திருக்கும் வைஷ்ணவர்களை தமக்கு சேஷத்வ ஞானம் வளருவதற்கு அவர் ப்ராப்யர் என்றும் ப்ராபகர் என்றும் சேஷீ என்றும் மூன்றுவித ஞானங்களையும் முன்னிட்டு ஸாஸ்திரங்களில் சொல்லப் பட்டவைகளாயும் -அவர்களுக்கு இஷ்டங்களாயும் இருக்கும் போக வஸ்துக்களினால் ஸந்தோஷிப்பிக்க வேண்டும் –

——————-

பு₄க்தவத்ஸு ததா ₂ தேஷு ஸேஷம் பு₄ஞ்ஜீத ஸாத்த்விக꞉ ।
யது₃ச் சி₂ஷ்டாஶி நஸ் ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி₃ஷை ꞉ ॥18॥

அந்த பாகவதர்கள் அமுது செய்த பின்பு அந்த சேஷத்தை ஸாத்விகரான ப்ரபன்னர் புசிக்க வேண்டும் -அந்த சேஷத்தை புசிக்கும் சத்துக்கள் ஸர்வ பாவங்களில் நின்றும் நீங்குவார்கள்

—————

(தே த்வத₄ம் பு₄ஞ்ஜதே பாபா꞉ யே பசந்த்யாத்ம காரணாத் ।
தைஶ்ச ஸம்பா₄ஷணாதீ₃நி ப₄க₃வான் ஸாஸ்த்ர உக்தவான் ।
(த்ரிஷு வர்ணேஷு ஸஞ்ஜாதோ மாமேவ ஸரணம் க₃த꞉ ।)
நித்ய நைமித்திக பரோ ………………………………….
வேத₃ஸாஸ்த்ர ரதா ₂ரூடா ₄꞉ ஜ்ஞாந க₂ட்₃ க₃த₄ராத்₃விஜா꞉ ।
க்ரீடா ₃ர்த₂மபி யத்₃ப்₃ரூயு꞉ ஸ த₄ர்ம꞉ பரமோ மத꞉ ॥19॥

அந்த பாகவதர்களுடன் ஸம்பாஷணை செய்வது முதலியவை ஸாஸ்த்ரார்த்தங்களாக இருக்கின்றன என்று பகவத் சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கிறார் -அதாவது வேத சாஸ்த்ரங்களாகிய ரதத்தின் மேல் ஏறி ஞானமாகிய கத்தியை கையில் ஏந்திய ப்ராஹ்மணர்கள் விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகளும் ஸாஸ்த்ரீயங்களான தர்மங்களைச் சொல்லுகின்றன என்பதாகும் –

—————

வாஸு தே₃வம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாந் யபி ।
தாந்யேவ த₄ர்ம ஸாஸ்த்ராணீத் யேவம் வேத₃விதோ₃ விது₃꞉ ॥20॥

பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னர்களின் அனுஷ்டானங்கள் எவையோ அவைகள் அனைத்தும் தர்ம சாஸ்த்ரார்த்தங்கள் என்று வேதம் அறிந்தோர் சொல்லுகிறார்கள் -தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையே அவர்களும் அனுஷ்டிக்கிறார்கள் என்று கருத்து –

———-

வீக்ஷணாதே₃வ ஸித்₃த₄யந்தி வைஷ்ணவாநாம் ஹி மாநவா꞉ ।
ததா ₂ ந தீர்தை ₂ஶ்ஸூத்₄யந்தி சவ்நகஸ்து யதோ
க்தவான் ॥21॥

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கடாக்ஷத்தினால் மனிதர்கள் எவ்வளவு பரிசுத்தர் ஆகிறார்களோ அவ்வளவு புண்ய தீர்த்தங்களினாலும் அடைவது இல்லை -இவ்வாறு சவுனக முனிவரும் சொல்லி உள்ளார் –

———–

ந ஸூத்₄யதி யதா ₂ ஜந்து꞉ தீர்த₂வாரிஸ தைரபி ।
லீலயைவ யதா ₂ பூ₄ப வைஷ்ணவாநாம் ஹி வீக்ஷணை ꞉ ॥22॥

சவ்னக முனிவர் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -வாரீர் பரீக்ஷித் மஹா ராஜரே –ஸ்ரீ வைஷ்ணவர்கள் கடாக்ஷங்களினால் இப்பிராணிகள் எவ்வாறு சுத்தி அடைகிறார்களோ அவ்வாறு அநேக புண்ய தீர்த்தங்களினாலும் அடைவதில்லை –

———-

(வரம் ஹுதவ ஹஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்தி₂தி꞉ ।
ந சவ்ரி சிந்தா விமுக₂ ஜந ஸம்வாஸ
வைஸஸம் ) ॥23॥

பகவத் த்யானத்தில் விமுகர்களாக இருக்கும் ஜனங்களுடன் ஸஹவாஸம் செய்வதால் உண்டாகும் தீங்கை விட சுற்றிலும் அக்னி ஜ்வாலைகளினால் சூழப்பட்டு இருக்கும் கூண்டின் நடுவில் இருப்பது மேலானது –

——-

யே து பா₄க₃வதா நங்கை ₃꞉ ஸ்ப்ருஸந்த் யுபவிஸந்தி ச ।
பஶ்யந்த்யபி ச ஶ்ருண்வந்தி தா ₃ஸஸ் தேஷாம் மஹா முநே ॥24॥

வாரீர் மஹா முனிவரே -எவர்கள் பாகவதர்களை தங்கள் சரீரத்தினால் ஸ்பர்சிக்கிறார்களோ -அல்லது அவர்களை எழுந்த அருளி இருக்கச் செய்கிறார்களோ -அல்லது அவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்க்கிறார்களோ -அவர்களுக்கு நான் தாஸனாக இருக்கிறேன் –

————-

ஸத்₃பி₄ரேவ ஸஹா ஸீத ஸத்₃பி₄꞉ குர்வீத ஸங்க₃மம் ।
ஸத்₃பி₄ர் விவாத₃ம் மைத்ரீம் ச நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥25॥

சத்துக்களுடன் கூட இருக்க வேண்டும் -சத்துக்களுடன் கூட ஸஹவாஸம் செய்ய வேண்டும் -வழக்காடினாலும் ஸ்நேஹம் செய்தாலும் சத்துக்களுடனேயே செய்ய வேண்டும் அல்லது அசத்துக்களுடன் ஒரு காரியமும் செய்யத்தக்கது அன்று –

———–

யதா ₂ பதித்வா ஸந்மத்₄யே யயாதி꞉ புநராப்தவான் ।
ஸ்வபத₂ம் தத் ததா ₂ ஸத்ஸு பதிதோ ந விமுஹ்யதி ॥26॥

யயாதி மஹாராஜன் -ஸ்வர்க்க லோகத்தில் பதம் இழந்தவனாய் -அங்கிருந்து விழும் போது -அஷ்டகர் என்னும் சில சத்துக்களின் நடுவே விழுந்து அதனால் மறுபடியும் தன் பதத்தை அடைந்தது போலே சத்துக்களை சேர்ந்தவர் மோஹத்தை அடைவதில்லை –

———

ஸப்தமீ–பா₄க₃வது₃பாஸந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம்

———–

அத₂ விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ அஷ்டமீ

வைகுண்டேது பரே லோகே –பக்த பாகவத -முனிவர்களும் யோகிகளும்-குண அனுபவ ர்களும் -கைங்கர்ய பரர்களும் -இவ்வாறு பாகவதர்கள் இரண்டு கோஷ்ட்டிகள்
ஆச்சார்யர்கள் அனைவரும் பாகவதர்கள்-பேராளன் பேர் ஓதும் பெரியோர்கள் -ஆனால் எல்லா பாகவதர்களும் ஆச்சார்யர்களாக மாட்டார்கள் -மந்த்ர உபதேஸம் செய்து அருளினவர்கள்
ஆச்சார்யர் -பெருமாள் -பரிஜனங்கள் -பாகவதர்கள் -இவ்வாறு நான்கு பத்ததிகள் -இதில் –

விஹிதேஷு வ்யவஸ்தா ₂நம் ப்ரபந்நாநாம் ப்ரபஞ்ச்யதே ।
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி₃விஹிதம் அநுஷ்டே ₂யம் து நைத்யகம் ॥1॥

ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா இத்யாஹ லக்ஷ்மீபதிர் யத꞉ ।
ப்ரபந்நஸ்து விஸேஷேண ஸாஸ்த்ரேஷு விஹிதாந் யபி ॥2 ॥

ஸ்ருதி ஸ்ம்ருதி அனைத்தும் என்னுடைய ஆணையாக இருக்கின்றன -எவனாவது இவற்றை எனது கட்டளைகளை மீறி நடப்பார்களோ அவன் எனக்கே த்ரோஹம் செய்தவனாகிறான் -அவன் எனது பக்தனாக இருந்தாலும் வைஷ்ணவன் ஆவதில்லை –

ப்ரபன்னர்கள் விசேஷித்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் மாலை கட்டுதல் முதலிய அனுஞ்ஞா கைங்கர்யங்களையும் விடாமல் செய்ய வேண்டும் –

———–

குர்யாத் ஸ்ரக்₃ப₃ந்த₄நாதீ₃நி கர்மாணி ஶ்ரீபதேஸ் ஸதா ₃ ।
யதா ₂ லக்ஷ்ம்யா ஸ்வ தந்த்ரே (அ)பி ஸக்ரா யோக்தா து ப்ருச்ச₂தே ॥3॥

ந்யாஸ வித்யா நிஷ்டரான ப்ரபன்னருக்கு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களில் வியவஸ்தை ஸ்ரீ மஹா லஷ்மியால் தேவேந்திரனுக்கு அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

ந்யாஸ வித்₃யைக நிஷ்ட₂ஸ்ய விஹிதேஷு வ்யவஸ்தி₂தி꞉ ।
உபாயாபாய ஸந்யாஸீ மத்₄யமாம் வ்ருத்திமாஶ்ரித꞉ ॥4 ॥

ரக்ஷிஷ்யதீதி நிஶ்சித்ய விக்ஷிப்ய ஸ்வ ஸ்வ கோ₃சர꞉ ।
பு₃த்₄யேத தே₃வ தே₃வம் தம் கோ₃ப்தாரம் புருஷோத்தமம் ॥5॥

பகவானிடத்தில் பர ஸமர்ப்பணம் பண்ணிய ப்ரபன்னர் கீழ்ச் சொல்லும் லக்ஷணங்கள் உள்ளவைகளான -உபாய அபாய ரூபங்களான உபாயாந்தரங்களை விட்டு நித்ய நைமித்திக கர்மங்களை விடாமல் அனுஷ்ட்டித்து தேவாதி தேவனான புருஷோத்தமனையே நமக்கு ரக்ஷகனாக அறிந்து இருக்க வேண்டும் –

————-

உபாயாபாய யோர்மத்₄யே கீத்₃ருஶீ ஸ்தி₂திரம்பி₃கே ।
உபாயாபாய தாமேவ க்ரியா꞉ ஸர்வா வளம்ப₃தே ॥6॥

மேற் சொல்லிய உபாய அபாய இரண்டு வித கர்மங்களுக்கு மத்யஸ்தனாக ப்ரபன்னர் இருக்க வேண்டும் என்றால் எவ்விதமாகும் -அனைத்து கர்மங்களுமே உபாய அபாய ரூபங்களாகவே தானே இருக்கும் –

———

ஸ்வீகாரே வ்யதிரேகே வா நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரயோ ꞉ ।
த்₃ருஶ்யதே கர்மணோ (அ)வ்யக்தம் உபாயாபாய ரூபதா ॥7॥

நிஷேத சாஸ்திரங்களையும் விதி சாஸ்திரங்களையும் அனுஷ்ட்டித்தாலும் அல்லது விட்டாலும் அதில் உண்டாகும் கர்மங்கள் உபாய அபாய ரூபங்களாக இருக்கும்

——————

த்ரிவிதா₄ம் பஶ்ய தே₃வேஸ கர்மணோ க₃ஹநாம் க₃திம் |
நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரேப்₄ய꞉ தாம் விதா₄ம் ச நிபோ₃த₄ மே ॥8॥

நிஷேத விதி சாஸ்த்ரங்களினால் உண்டான இக்கர்மங்களின் வர்க்கங்கள் மூன்று விதங்களாக இருக்கின்றன -அவைகள் மிகவும் ஸூஷ்மமானவைகள் -அவற்றைச் சொல்கிறோம் -நீர் அறிய வேண்டும் –

—————-

அநர்த₂ஸாத₄நம் கிஞ்சித் கிஞ்சிச் சாப்யார்த ₂ஸாத₄நம் ।
அநர்த ₂பரிஹாராய கிஞ்சித் கர்மோபதி₃ஶ்யதே ॥9 ॥

இக் கர்மங்களில் சில அநர்த்த சாதனங்கள்-ஸூராபாநாதிகள் – சில அர்த்த சாதனங்கள் -ஜ்யோதிஷ்ட ஹோமாதிகள் -சில அநர்த்த பரிஹாரங்கள்-சாந்த்ராயுத ரூபாதி கர்மங்கள் – இவ்வாறு மூன்று வகைப்பட்டவை –

————

த்ரை ராஶ்யம் கர்மணா மேவம் விஜ்ஜேயம் ஸாஸ்த்ர சக்ஷுஷா ।
அபாயோபாய ஸஞ்ஜ்ஞவ் து பூர்வ ராஶீ பரி த்யஜேத் ॥10॥

சாஸ்திரங்களை அறிந்தவரால் இவ்வாறு மூன்று வர்க்கங்களாக கர்மங்களைச் சொல்லி -ப்ரபன்னர் முதலில் சொல்லிய அபாய உபாய கர்மங்களை விட்டுவிட வேண்டும் –

————–

த்ருதீயோ த்₃விவிதோ₄ ராஶி꞉ அநர்த₂பரிஹாரக꞉ ।
ப்ராயஶ்சித்தாத்மக꞉ கஶ்சித் உத்பந்நா நர்த ₂நாஸந꞉ ॥11॥

மேற் சொல்லிய கர்மங்களின் மூன்று ராசிகளில் மூன்றாவது ராசியான அநர்த்த பரிஹார ரூபங்களான கர்மங்கள் இரண்டு வகைப்படும் -அவற்றுள் தாம் செய்த பாவங்களினால் உண்டாகும் அநர்த்தங்களைப் போக்கும் பிராயச்சித்த ரூபங்களான சந்தராயணாதி கர்மங்கள் முதல் வகுப்பு -இவற்றையும் ப்ரபன்னர்கள் கீழ் சொன்ன உபாய அபாய ராசிகளை விட வேண்டியது போல் விடத் தக்கவையே யாகும்-பிராயச்சித்த கர்மங்களை செய்ய சக்தி உள்ளவராக இருந்தாலும் -அவற்றால் வரும் கால விளம்பம் ஸஹியாத ஆர்த்த ப்ரபன்னர்கள் விஷயத்திலும் ஆக வேண்டும் -என்று இந்த பத்ததியில் 23 ஸ்லோகத்த்தில் சொல்லுகிறோம் –

————-

தமம் ஸம் நைவ குர்வீத் மநீஷீ பூர்வ ராஶிவத் ।
க்ரியமாணம் ந கஸ்மைசித் யத₃ர்தா₂ய ப்ரகல்பதே ॥12॥

அக்ரியாவத₃நர்தா ₂ய தத்து கர்ம ஸமாசரேத் ।
ஏஷா ஸா வைதி₃கீ நிஷ்டா ₂ ஹ்யுபாயாபாய மத்₄யமா ॥13॥

எந்த கர்மங்களை அனுஷ்ட்டித்தால் யாதொரு பயன்களும் கிடைப்பதில்லையோ ஆனால் அனுஷ்ட்டிக்கா விடில் ப்ரத்யவாதங்களை யுண்டாக்கத் தக்க வைகளாக இருக்கின்றனவோ அவ்விதமான -நித்ய நைமித்திக கர்மங்களை மாத்திரம் ப்ரபன்னர் அவஸ்யம் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

————————–

அஸ்யாம் ஸ்தி₂தோ ஜக₃ந் நாத₂ம் ப்ரபத்₃யேத ஜநார்த₃நம் ।
ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ஹிம்ஸாஸ்தேயாதி₃கம் ச யத் ॥
14॥

இது தான் மத்தியஸ்தமான வைதிக நிஷ்டை -இதில் இருப்பை யுடையவராய் ஜகத்பதியான பகவானை அடைய வேண்டு -இவற்றை ஸ்பஷ்டமாக மேல் ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் –

—————–

அநர்த₂ஸாத₄கம் கர்ம காம்யம் த்வர்த₂ஸ்ய ஸாத₄கம் ।
சைத்யாதி₃கம் ததா ₂ கர்ம ஸாங்க்₂ய யோகா₃தி₃கம் ததா ₂ ।15॥

ப்ராயஶ் சித்தம் ததா ₂ த்₃வேதா ₄ க்ருத பாப ப்ரணாஸநம் ।
சாந்த்₃ராயணாதி₃கம் த்வேகம் அந்யத் ஸந்த்₄யார்சநாதி₃கம் ॥ 16 ।

ஸ்ரீ மஹாலஷ்மியால் லஷ்மி தந்திரத்தில் தேவேந்திரனுக்கு அருளிச் செய்த ப்ரமேயங்களை அருளிச் செய்கிறார் -கொலை முதலிய அநர்த்த கர்மங்கள் -ஐஹிக ஆமுஷ்மிக பலன்களைக் கொடுக்கும் காம்ய கர்மங்கள் -சாந்தராயணாதி பிராயச்சித்த ரூப கர்மங்களும் விடத்தக்கவையே –

ஸ்நாத்வா புஞ்சீதா -குளித்தே உண்ண வேண்டும்
பாபங்களைச் செய்திருந்தாயாகில் சாந்த்ராயணம் பண்ண வேண்டும்
முமுஷுப்படியில் உண்டே –

————

அத்ர ஹிம்ஸாத்₃யபாயம் ச காம்யம் சௌத்யாதி₃கம் ததா ₂ ।
உபாயம் கர்ம ஸாங்க்₂யாதி₃ ப்ராயஶ்சித்தாதி₃கம் ததா ₂ ॥17 ॥

சாந்த்₃ராயணாதி₃கம் கர்ம ந குர்யாச்ச கதா₃சந ।
பா₄வ்யநர்த₂ஸ்ய யத் கர்ம பரிஹாரேண கீர்திதம் ॥18 ॥

ஸந்த்₄யார்சா பஞ்ச யஜ்ஞாதி₃ தந் முமுக்ஷுபி₄ராத்₃ருதம் ।
நைமித்திகம் சாக்₃ரயணம் ஸீமந்தோந் நயநாதி₃கம் ॥19॥

ஆனால் எந்தக் கர்மங்களை அனுஷ்டியா விடில் கெடுதி சம்பாதிக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஸந்த்யாவந்தனாதிகள் -பஞ்ச மஹா யாஜ்ஞம் -ஆக்ரயண ஸ்தாலீபாகம் சீமந்த உன்னயநாதி களான நைமித்திக கர்மங்களும் ப்ரபன்னர்களான முமுஷுக்களுக்கு அவஸ்யம் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

————-

அக்₃ந்யாதா ₄நாதி₃கம் கார்யம் அதி₄காரே ஸதி த்₃விஜை ꞉ ।
நிஷித்₃த₄காம்யோ பாயாக்₂ய கர்மாண்யாநி நாசரேத் ॥20 ॥

அக்ன்யா தானம் முதலிய சிலஸ்ரளத கர்மங்களும் அவற்றை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் இருக்குமாகில் ப்ராஹ்மணர்கள் இடத்தில் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம் -கீழ்ச் சொல்லிய நிஷித்த காம்ய கர்மங்களை அனுஷ்ட்டிக்கக் கூடாது –

———–

ப்ராயஶ்சித்தம் ப்ரபந்நஸ்ய விஸேஷேண யது₃ச்யதே ।
லக்ஷ்மீ தந்த்ரே கமலயா நிமித்தே து ததா ₃சரேத் ॥21 ॥

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் பண்ணிக கொள்ளும் படியான ஏதாவது நிமித்தம் உண்டாகில் லஷ்மி தந்திரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மியால் ப்ரபன்னர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் ப்ராயச்சித்தத்தை அனுஷ்ட்டிக்க வேண்டும்

————-

ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் அஸக்தவ் ஸரணாக₃தி꞉ ।
ப்ராயஶ்சித்த மித₃ம் ஹ்யேதத் நிர்ணீதம் து மநீஷிபி₄꞉ ॥ 22 ॥

ப்ரபன்னர்கள் உபாய அபாய ரூபமான நிஷித்த கர்மங்களைச் செய்வாராகில் ப்ரபந்ந நிஷ்டையில் குறைந்தவர்களாகி விடுவார்கள்

————————

அநந்ய ஸாத்₄யே ஸ்வாபீ₄ஷ்டே இதி ந்யாஸஸ்ய லக்ஷணாத் ।
ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் ப்ராயஶ்சித்தம் ஹி ஸித்₃த்₄யதி ॥23॥

அந்யதா ₂(அ)திப்ரஸங்க₃ஸ் ஸ்யாத் அவைஷ்ணவ க்₃ருஹாஸநே ।
ஸரணாக₃த ஹந்துஸ் ஸ்யாத் ப்ரபத்த்யைவ பரிக்₃ரஹ꞉ ॥24॥

அப்பிராய்ச சித்தமாவது மீண்டும் சரணாகதி செய்வதே -உபாய புத்தியாகச் செய்தவற்றுக்குப் ப்ராயச்சித்தமும் இதுவே -அவற்றை 30-33 ஸ்லோகங்களில் அருளிச் செய்துள்ளார் -ப்ரபன்னர்களில் சக்தி யுள்ளவர்கள் சாந்த்ராயணாதி ப்ராயச்சித்தங்களும் அசக்தர்களும் ஆர்த்த ப்ரபன்னர்களும் புனர் பிரபத்தியையே பிராயச்சித்தமாகவும் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்பதே ஆச்சார்யர்களது திரு உள்ளம் –

————-

(ப்ராயஶ் சித்திரியம் ஸாத்ர ய꞉ புநஶ் ஸரணம் வ்ரஜேத்) ஸக்ருதே₃வ ஹி
ஸாஸ்த்ரார்த₂꞉ க்ருதோ(அ)யம் தாரயேந் நரம் ।
உபாயாபாய ஸம் யோகே ₃ நிஷ்ட ₂யா ஹீயதே(அ)நயா ॥ 25 ।

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் வேண்டும்படியாய் நேர்ந்தால் தேவ தேவனான பகவானுக்கு திவ்ய மஹிஷியான என்னைச் சரணம் அடைய வேண்டும் –

———-

அபாய ஸம்ப்லவே ஸத்₃ய꞉ ப்ராயஶ் சித்தம் ஸமாசரேத் ।
ப்ராயஶ் சித்திரியம் ஸா(அ)த்ர யத் புநஶ் ஸரணம் வ்ரஜேத் ॥26॥

ப்ரபன்னர்களுக்கு புத்தி பூர்வகமாவது அபுத்தி பூர்வகமாவது உண்டாகும் பாபங்கள் அனைத்துமே இச் சரணாகதியால் போய் விடும்

———-

உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப் யேத தே₃வ ஹி ।
ப்ராயஶ் சித்த ப்ரஸங்கே ₃ து ஸர்வபாப ஸமுத்₃ப₄வே ॥27॥

யாவன் ஒருவன் அக்ருத்யங்கள் என்று தெரிந்து இருந்தும் அவற்றைச் செய்கிறானோ அவனுக்கு இந்த சரணாகதியும் ப்ராயச்சித்தமாகாது -புத்தி பூர்வகமாக துஷ்க்ருத்யங்கள் செய்யத்தகாது என்று கருத்து –

—————–

மாமேகாம் தே₃வ தே₃வஸ்ய மஹிஷீம் ஸரணம் வ்ரஜேத் ।
தஸ்மாத் ப்ரமாதா ₃த் ப₄க்த்யா வா யத் ப்ரபந்நஸ்ய து₃ஷ்க்ருதம் ॥28 ॥

தத் ஸர்வம் ஸமயத்யாஸூ ஸரணாக₃தி ரேவ ஸா ।
ஜ்ஞாத்வா(அ)ப்யபாயே பாதித்வம் ய꞉ கரோதி விமூட ₄தீ₄꞉ ।
போ₄க₃ ஏவ ஹி தத்ர ஸ்யாத் நிஷ்க்ருதிர்நா(அ)நயா(அ)பி ஹி ॥29॥

நாம் பிரபன்னராய் விட்டதால் எந்த துஷ்க்ருத்யங்களையும் நாம் செய்ய அடுக்கும் என்னும் கர்வத்தினால் ஒருவன் அதிக துஷ்க்ருத்யங்களைச் செய்யக் கூடாது -அப்படி அறிந்து இருந்தும் அபராதங்களைச் செய்வானாகில் அவன் அதோகதியை அடைந்து விடுவான் -இவன் விஷயத்தில் பகவான் அந்தப்பிராயச்சித்த ப்ரபத்தியையும் செய்ய ஒட்டாமல் இவனுக்குத் தீங்கை வளர்த்து விடுவான் என்று கருத்து –

கர்ம பலன்களையும் கிருபா பலன்களையும் அனுபவித்தே தீர வேண்டும் –

———-

ப்ரபந்ந இதி க₃ர்வேண ந குர்யாத் புரு து₃ஷ்க்ருதம் ।
ஜ்ஞாத்வாப் யபாய கர்மாணி குர்வன் மூட ₄꞉ பதத்யத₄꞉ ॥30॥

ஞானிகளான ப்ரபன்னர் கள் ஒருக்காலும் அக்ருத்யங்களைச் செய்யார் -தெரியாமையிலாவது அஜாக்ரதையிலாவது அக்ருத்யங்களைச் செய்தாராகில் அவைகளை தம்முடைய ப்ரஹ்ம ஞானமாகிய நெருப்பிலே எரித்து விடுவார்கள் –

———-

ஜ்ஞாநிநோ ந ச குர்வந்தி யத்₃யஜ்ஞாநாத் ப்ரமாத₃த꞉ ।
தச்ச ஜ்ஞாநாக்₃நிநா ஸர்வம் த₃ஹந்தி விமலாஸயா꞉ ॥31॥

(அத்ராஹ ப₄க₃வான் க்ருஷ்ண꞉ அர்ஜுநஸ்ய து ஶ்ருண்வத꞉ ।
யதை ₂தா₄ம்ஸி ஸமித்₃தோ₄(அ)க்₃நி꞉ ப₄ஸ்ம ஸாத் குரு தே(அ)ர்ஜுந ॥32

ஜ்ஞாநாக்₃நிஸ் ஸர்வ கர்மாணி ப₄ஸ்ம ஸாத் குருதே ததா ₂ ॥33॥

இது விஷயத்தில் பகவானாக கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதா சாஸ்திரத்தில் -தீக்களினால் பரவி எரியும் அக்னி எவ்வாறு விரகுகளை பஸ்மமாய் எரித்து விடுகின்றதோ அவ்வாறே ப்ரஹ்ம ஞானமாகிற அக்னி மேற் சொல்லிய கர்மங்கள் அனைத்தையும் பஸ்மமாக எரித்து விடும் என்று அருளிச் செய்கிறான்

———

ப₄க₃வ ஜ்ஜ்ஞாந விஸ்ரம்ப₄ விஸூத்₃த₄ மநஸாம் ஸதாம் ।
ஸாஸ்த்ரோக்தம் ப₄க₃வஜ் ஜ்ஞாநம் ப்ராயஶ் சித்தம் க்ருதைநஸாம் ॥34 ॥)

பகவத் ஞானம் ஸர்வ பாபங்களையும் போக்கி விடும் என்னும் நம்பிக்கையினால் விசுத்த மனசை யுடைய ஸத்துக்களுக்கு வேதாந்த ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டு இருக்கும் உபாஸன ரூபமான பகவத் ஞானமானது அவர்களால் செய்யப்பட்டு இருக்கும் பாபங்களுக்குப் ப்ராயச்சித்தமாய் இருக்கின்றது –

———-

யஸ்ய யாவாம்ஶ்ச விஶ்வாஸ꞉ தஸ்ய ஸித்₃தி₄ஶ்ச தாவதீ ।
நைதாவா நிதி விஶ்வாஸ: ப்ரபா₄வ꞉ பரிமீயதே
॥35

பகவத் ஞானத்தில் எவ்வளவு நம்பிக்கை உண்டாகிறதோ அவ்வளவு ஸித்தியும் கிடைக்கும் -இந் நம்பிக்கையின் பிரபாவம் இவ்வளவு என்று அளவிட முடியாது -ஆகையால் உபாஸகர்களுக்கு பகவத் தியானமே ஸர்வ பாபங்களும் ப்ராயச்சித்தமாய் விடுகிறது என்று கருத்து –

————-

வேதோ₃தி₃தம் ஸதா ₃சாரம் (ஆத்₃ரியேத ஸதா ₃ ஸுதீ₄꞉ ।
அஸ்மின் தந்த்ரே யதோ₂க்தம் து வைதி₃காசாரளங்க₄நே ॥36॥

ஸாஸ்த்ர ஞானம் உள்ளவராய் இருக்கும் இப்பிரபன்னர் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் ஸத் ஆச்சாரங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -பாஞ்சராத்ர சாஸ்திரத்தில் வேதாந்த யுக்த கர்மங்களைக் கடந்தால் என்ன வென்று அருளிச் செய்யப்பட்டுள்ளது அவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

அவிப்லவாய த₄ர்மாணாம் பாலநாய குலஸ்ய ச ।
ஸங்க்₃ரஹாய ச லோகாநாம் மர்யாதா ₃ஸ்தா₂பநாய ச ॥37॥

ப்ரியாய மம விஷ்ணோஶ் ச தே₃வ தே₃வஸ்ய ஸார்ங்கி₃ண꞉ ।
மநீஷீ வைதி₃காசாரம் ) மநஸா(அ)பி ந லங்க₄யேத் ॥38 ॥

வேத யுக்த தர்மங்கள் அழியாமல் இருப்பதற்கும் ப்ராஹ்மண்யாதி நான்கு வர்ணங்களையும் காப்பாற்றுவதற்காகவும்-லோகத்தார்கள் அங்கீ கரிப்பதற்கும் -தேவதேவனான பகவானுக்கும் அவர் பெரிய பிராட்டியாரான எனக்கும் இஷ்டத்தை உண்டாக்குவதற்கும் ஞானியாக இருக்கும் பிரபன்னர் வேத யுக்த தர்மங்களை மனதாலும் கடக்கக் கூடாது –

———-

யதா ₂ஹி வல்லபோ ₄ ராஜ்ஜோ நதீ₃ம் ராஜ்ஞா ப்ரவர்திதாம் ।
( லோகோ பயோகி₃நீம் ரம்யாம் ப₃ஹு ஸஸ்ய விவர்தி₄நீம் ॥39 ॥)

லங்க₄யன் ஸூல மாரோஹேத₃நபேஷோ (அ)பி தாம் ப்ரதி ।
ஏவம் விளங்க₄யன் மர்த்யோ மர்யாதா₃ம் வேத₃நிர்மிதாம் ॥40॥

ராஜனுக்கு மிகவும் இஷ்டனாக இருக்கும் ஒருவன் -அந்த ராஜாவால் லோக உபயோகத்துக்காகக் கட்டித் திருப்பப் பட்டதாயும் -அதன் தண்ணீர் பாய்வதனால் பயிர்களை விருத்தி செய்யத் தக்கதாய் இருக்கும் ஓர் நதியின் அணையை அழிப்பானாகில் -அவ்வணையால் உபயோகம் அற்றவனாக இருந்தும் அவன் சூலத்தின் மேல் ஏற்றி அவனால் தண்டிக்கத் தக்கவனாவது போலேவே வேத யுக்தமானஹத்தை மீறி நடக்கும் ப்ரபன்னனும் எனது ஆஜ்ஜையைக் கடந்தானாகில் அவன் எனக்கு இஷ்டனாக இருந்த போதிலும் -இஷ்டனாக இல்லாமல் போவதும் அதுக்கும் மேலே தண்டிக்கத் தக்கவனாவான் என்று கருத்து –

————

ப்ரியோ (அ)பி ந ப்ரியோ மே (அ)ஸௌ மதா₃ஜ்ஞாவ்யதி வர்தநாத் ।
உபாயத்வமஹம் தத்ர வர்ஜயேந் மநஸா ஸுதீ₄꞉ ॥41॥

ஸ்வ வர்ணாஶ்ரம யுக்தம் து தே₃ஸ காலாநுரூபத꞉ ।
விஸேஷ விஹிதம் யச்ச தத் குர்யாச்ச்₂ரீபதே꞉ ப்ரியம் ॥
42 ॥

ஞானியாக இருக்கும் பிரபன்னர் தான் அனுஷ்ட்டிக்கும் நித்ய நைமித்திக்க கர்மங்களில் இவைகள் மோக்ஷ உபாயங்கள் என்னும் புத்தியை விடவேண்டும்
ஆகையால் தம்முடைய வர்ணாஸ்ரம தர்மங்களோடே கூடியவராகவே வைஷ்ணவர்களுக்கு என்று விசேஷித்து ஸாஸ்திரங்களில் விதித்து இருக்கும் பகவத் கைங்கர்யங்களான கர்மங்களையும் அப்பிரபன்னர் செய்ய வேண்டும் –

அஷ்டமீ–விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம் –

————————

அத₂ வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-

வர்ஜநீயம் ப்ரபந்நாநாம் வர்ண்யதே லோக தவேத₃யோ ꞉ ।
ஸ்வாவஸ்தா ₂தே₃ஶகாலாநாம் விருத்₃த₄ம் வர்ஜயேத் ஸதா₃ ॥ 1 ॥

லௌகிக வைதிக கர்மங்களில் ப்ரபன்னர்களுக்கு விடத்தக்கவை சொல்லப்படுகின்றன -அதாவது தாம் இருக்கும் அவஸ்த்தைக்கும் தேசத்துக்கும் காலத்துக்கும் விருத்தமான கர்மங்களை ப்ரபன்னர்கள் எப்போதும் விடவேண்டும் –

—————

வர்ணாஶ்ரம விருத்₃த₄ம் யத் மந்வாத்₃யுக்தம் விஸேஷத꞉ ।
ஸ்வாதி₄கார விருத்₃த₄ம் ச ஶாஸ்த்ரோக்தம் ந ஸமாசரேத் ॥ 2 ॥

மநு தர்ம ஸாஸ்த்ரம் முதலியவைகளில் தன்னுடைய வர்ணாஸ்ரம தர்மங்களுக்குத் தகாதவைகளாகச் சொல்லப்பட்டு இருக்கும் கர்மங்களையும் -ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருந்தும் தன்னுடைய ப்ரபந்ந அதிகாரத்துக்குத் தகாதவைகளாய் இருக்கும் கீழ்ச் சொல்லும் கர்மங்களையும் ப்ரபந்நர்கள் செய்யக்கூடாது –

————-

ஸாமாந்ய ஶாஸ்த்ராநுஜ்ஞாதம் விருத்₃த₄ம் யத்₃விஸேஷத꞉ ।
சதுஷ்பத₃வநஸ்பத்யோ ꞉ மங்க₃ளாதே₃꞉ ப்ரத₃க்ஷிணம் ॥ 3 ॥

ப்ரதோ₃ஷே ஶங்கரார்சாதி₃ பாபஹாநிகரம் ந்ருணாம் ।
ந குர்யாத் பரமை காந்தீ காம்யம் லோத்₃வய ப்ரத₃ம் ॥ 4 ॥

நற் சந்தி பெரிதான வ்ருக்ஷம் மங்கள வாத்யம் முதலியவைகளான இவைகளைப் ப்ரதக்ஷிணம் செய்வது -சந்தி வேளையில் சிவா பூஜை செய்வது இவை முதலியவை மனிதர்களின் பாபங்களைப் போக்குகின்றனவாக ஸாமான்ய ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன-இவைகளையும் இஹத்திலும் புறத்திலும் நன்மை யுண்டாக்குவதாக சில ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் காம்ய கர்மங்களையும் -இன்னும் வைஷ்ணவர்களுக்கு விருத்தங்களாக இருக்கும் விபூதி தரணம் முதலிய அடையாளங்களையும் பிரபன்னர்கள் செய்யக்கூடாது –

—————–

ஸாமாந்ய ஶாஸ்த்ரவிஹிதம் விருத்₃த₄ம் சாங்கநாதி₃கம் ।
க₃திந்ருத்தாதி₃கம் யத்து விஸேஷாக₃மசோதி₃தம் ॥ 5 ॥

தத் ஸர்வம் வைஷ்ணவ꞉ குர்யாத் யதோ₂க்தவ் யம ஶௌநகௌ ।
“ஹரி கீர்திம் விநை வாந்யத் ப்₃ராஹ்மணேந நரோத்தம ।
பா₄ஷாகா₃நம் ந கா₃தவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் ॥ 6 ॥

பகவத் குணங்களை கானம் செய்வது -பகவானுக்கு எதிரில் நர்த்தனம் செய்வது இவை முதலாவதாக பகவத் ஸாஸ்திரங்களில் பாகவதர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் கைங்கர்யங்கள் எவைகளோ அவைகளை வைஷ்ணவர்கள் -ப்ரபன்னர்கள் -அவஸ்யம் செய்ய வேண்டும் -யமதர்மராஜன் சவுனாக முனிவர் இவ்விருவர்களும் இவ்வாறு அருளிச் செய்துள்ளார்கள் –

——————-

விஷ்ணோ : கா₃நம் ச கே₃யம் ச நடநம் ச விஸேஷத꞉ ।
ப்₃ரஹ்மன் ! ப்₃ராஹ்மண ஜாதீநாம் கர்தவ்யம் நித்ய கர்மவத் ॥ 7 ॥

வாரீர் நர ஸ்ரேஷ்டரே -பகவத் குணங்களை கானம் செய்வது ஒழிய ப்ராஹ்மணானால் இதர பாஷையில் கானம் செய்யத் தகாதாகையால் நீர் அதைச் செய்தால் பாபங்களைச் செய்தீராவீர்

வாரீர் -ப்ராஹ்மணரே -ப்ராஹ்மண ஜாதியில் பிறந்தவர்களினால் பகவானுடைய கல்யாண குணங்களைப் பற்றிய கானங்களும் கீர்த்தனைகளையும் நர்த்தனங்களையும் தங்கள் நித்ய கர்மங்களைப் போலவே அவஸ்யம் செய்யத்தக்கவைகள் ஆகின்றன –

————–

ந்ருத்யதாம் ஶ்ரீபதே ரக்₃ரே கர ஸம்ஸ்போ₂ட நாதி₃பி₄꞉ ।
உட்₃டீ₃யந்தே ஶரீரஸ்தா ₂꞉ மஹா பாதக பக்ஷிண꞉ ॥ 8 ॥

பகவானுடைய எதிரில் நர்த்தனம் செய்கிற பாகவதர்களின் சரீரங்களில் இருக்கும் மஹா பாதகங்களாகிற பஷிகளானவை அவர்கள் போடும் கைத்தாளம் முதலியவைகளால் வெளியில் கிளம்பி விடுகின்றன –
மரத்தின் மேல் இருக்கும் பக்ஷிகள் கைகளைத் தட்டி ஓசைப் படுத்துவதினாலும் கிளைகளை அசைப்பதினாலும் உயர்க் கிளம்பி விடும் போலே பாகவதர்கள் பகவான் எதிரில் தாளம் போடுவதாலும் நர்த்தனம் செய்வதாலும் அவர்களின் மஹா பாதகங்களும் கழிகின்றன -என்று கருத்து –

————

ஏவம் விஸேஷ ஶாஸ்த்ரோக்தம் விஷ்ணு சக்ராங்கநாதி₃கம் ।
விஸேஷ ஶாஸ்த்ர ப்ராப₃ல்யாத் வைஷ்ணவஸ்து ந வர்ஜயேத் ॥ 9 ॥

இவ்வாறு விசேஷ ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் விஷ்ணு சக்ராங்கனம் முதலியவைகளை விதிக்கும் ஸாஸ்த்ரம் ஸாமான்ய ஸாஸ்த்ரங்களைக் காட்டிலும் பலமுள்ளதாகையாலே வைஷ்ணவர்கள் விடத்தகாது -வைஷ்ணவர்கள் அவஸ்யம் சக்ராங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று கருத்து –

————-

லோகே (அ)நுஷ்டா₂ந ஸங்கோசாத் லாக₄வாத் ப₂ ல கௌ₃ரவாத் ।
விமுக்தி ஸாத₄நத்வம் ஹி ப்ரபத்தேரவ ஜாநதே ॥ 10 ॥

அந்யதா₂ யோஜநாச்சாபி ப்ரமாணாநாம் குதர்கத꞉ ।
தேந து₃ஷ் க்ருதிநோ மூடா₄꞉ நராணாமத₄மா꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 11 ॥

உலகத்தில் ப்ரபத்தியை அனுஷ்டிப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றவராக இருப்பதாலும் -இப்பிரபத்தி லகுவான உபாயமாக இருப்பதாலும் -இதற்குக் கிடைக்கும் மோக்ஷம் மிகப்பெரிய பலனாக இருப்பதாலும் -இப்பிரபத்தி ப்ரமாணங்களான ஸாஸ்த்ரங்களுக்கு தர்க்கங்களினால் சிலர் வேறுவிதமாக அர்த்தம் செய்வதாலும் இப்பிரபத்தி மோக்ஷ உபாயம் என்பதை சிலர் அநாதரித்து வருகிறார்கள் –

————-

மாயயா(அ)பஹ்ருதஜ்ஞாம்நா꞉ ஆஸுரீம் யோநிமாஶ்ரிதா ꞉ ।
யாந்ந பஶ்யேஜ் ஜாயமாநான் பாபிநோ மது₄ஸூத₃ந꞉ || 12 |

இப்பிரபத்தி மோக்ஷ சாதனம் என்பதை அபலாபம் செய்யும் மேற் சொல்லியவர்கள் மிக்க பாபங்களைச் செய்த மூடர்கள் -மனிதர்களில் அதமர்கள் -பகவத் மாயையினால் ஞானம் இழந்தவர்கள் -அசுரர் ஸ்வ பாவத்தை அடைந்தவர்கள் –

————-

ப்₃ரஹ்மா ருத்₃ரோ (அ)த₂வா பஶ்யேத் ரஜஸா தமஸா வ்ருதான் ।
தைராளாபம் ந குர்வீத நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥ 13 ॥

பாபிகளாய் இருக்கும் எவர்களை பகவான் ஜனன காலத்தில் கடாக்ஷிக்க வில்லையோ அல்லது பிரம தேவனால் ருத்ரனால் அவர்களைப் பார்க்கப்பட்டதால் ரஜோ குணத்தோடும் தமோ குணத்தோடும் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடன் ப்ரபன்னர்களால் ஸல்லாபம் செய்யத்தக்கத்து அன்று -அந்த அசத்துக்களுடன் யாதொரு காரியமும் செய்யத்தக்கதன்று –

———

கௌதஸ்குதாநாம் ஶாஸ்த்ராணி தாம ஸாந்யவத₃ன் மநு꞉ |
வாங் மாத்ரேணாபி ஸம் ஸர்க₃ தைஸ் ஸாகம் து நிஷேத₄தி ॥ 14 ॥

கௌதஸ் குதர்களின் ஸாஸ்த்ரங்களை தாமஸ ஸாஸ்த்ரங்களாக மநு அருளிச் செய்துள்ளார் -ஆகையால் அவர்களுடன் ஸல்லாபம் செய்வதைக் கூட அம்மனு ஸாஸ்த்ரத்தில் நிஷேதித்து இருக்கிறார் –

————————-

யா வேத₃பா₃ஹ்யா ஸ்ம்ருதயோ யாஶ்ச காஶ்ச குத்₃ருஷ்டய꞉ |
ஸர்வாஸ்தா நிஷ்பலா ꞉ ப்ரேத்ய தமோ நிஷ்டா₂ஹி தா꞉ ஸ்ம்ருதா ꞉” ॥15॥

வேத விருத்தங்களாக இருக்கும் ஸ்ம்ருதிகள் எவைகளோ -ஸார்வாக மதம் முதலிய குத்ஸிக மதங்கள் எவைகளோ அவைகள் அனைத்தும் பர லோகத்தில் நிஷ்பலன்களாய் விடுகின்றன -அவைகள் தமோ குணத்தில் இருப்புள்ளவைகள் –

————–

பாஷண்டி₃நோ விகர்மஸ்தா₂ன் பி₃டா₃ லவ்ரதி காம்ஞ்ச₂டா₂ன் ।
ஹைதுகான் ப₃கவ்ருத்தீம்ஶ்ச வாங் மாத்ரேணாபி நார்சயேத் || 16 ||

வேத விருத்தங்களான சின்னங்களைத் தரிப்பவர்களாயும் -ஸாஸ்த்ர விருத்த கர்மங்களைச் செய்பவர்களாயும் வேதங்களை நம்பாதவர்களாயும் கபிடால விருத்திகளாயும் -வேதங்களின் பேரில் ஹேது வாதம் செய்பவர்களாயும் -பக விருத்திகளாயும் இருக்கும் அதிதிகளாய் வந்திருக்குமவர்களை பிரபன்னர்கள் வாக்கினால் கூட பூஜிக்கத்தக்கவர்கள் அன்று
பிடா விருத்திகளுக்கு லக்ஷணம்
தர்மத்வஜீ ஸதா லுப்தச் சாத்மிகோ லோக டம்பக
பைடால விருத்திக ஒக்ஜேயோகி மஸ்ரஸ ஸர்வாபி சந்தக
தான் தார்மிகன் என்று பேர் பெறுவதற்காக பலர் கூடுமிடத்தில் தர்மங்களைச் செய்து தன்னையே ஸ்துதி செய்து கொள்கிறவனாயும் -பிறர் பொருள்களில் ஆசை யுள்ளவனாயும் -கபடம் உள்ளவனாயும் -நம்பியவர்களை மோசம் செய்பவனாயும் -பிறர்களுக்குத் துன்பம் உண்டாக்குபவனாயும் -நல்லோர்களிடத்தில் பொறாமையால் தோஷங்கள் சொல்பவனாயும் இருக்குமவன் பிடால வ்ருத்தி யாவான் -பூனையின் நடவடிக்கை உள்ளவன்
பக விருத்தியின் லக்ஷணம் -கொக்கின் நடவடிக்கை உள்ளவன்
அதோ த்ருஷ்டிர்கை க்ருதிகஸ் ஸ்வார்த்த சாதன தத்பர கடோ மித்யா விநீத ச பக விருத்தி தரோ த்விஜ
எப்பொழுதும் கீழ் பார்வை யுள்ளவனாயும் கெடு நினைவு உள்ளவனாயும் பிறருக்கு கெடுதி செய்து தன் கார்யங்களை சாதித்துக் கொள்பவனாயும் துர் நடத்தை உள்ளவனாயும் கபட விநயம் உள்ளவனாயும் இருக்குமவன் பக விருத்தி உள்ளவன் என்று சொல்லப்படுகிறான் –

—————

ப்ரபத்தே꞉ ப்ரதிப₃ந்த₄ஸ்து ஜாயதே யைர்ஹி கர்மபி₄꞉ ।
ப்ரபந்நோ ந நிஷேவேத தாத்₃ருஶாநி ந கிஞ்சந ॥ 17 ॥

தே₃வதாந்த்ர ஸம் ப₄க்திம் நித்ய கர்மவிதி₄ம் விநா ।
உபாயாந்தர நிஷ்டா₂ம் ச த்₃ரோஹம் பா₄க₃வதேஷ்வபி ॥ 18 ॥

விஶ்வாஸ மாந்த்₃யம் விஷயேஷ்வதி ப்ராவண்ய மேவ ச ।
ஶ்ரீஶ்ரீஶயோ ꞉ பரிஜநே நிந்த₃நாதீ₃நி ஸர்வஶ꞉ ॥ 19 ॥

தே₃ஹாவத்₄ யநு வ்ருத்தாநி நாநுதாப யுதாநி ச ।
ப்ராயஶ்சித்த விஹீநாநி பாதகாநி மஹாந்தி ச ॥ 20 ॥

ப₃ந்த₄காநி ப்ரபந்நஸ்து ந குர்யாத்தாத்₃ருஶாந்யபி ।
தேஷ்வந்வயே ஸதி ஸதா மநுதாபோ ப₄வேத்₃யதி₃ ॥ 21 ॥

ப்ராயஶ்சித்தம் தத ꞉ குர்யாத்₃ரஹஸ்யம் ச ப்ரகாஶகம் ।
(ப்ரபந்நஸ்யாநு தப்தஸ்ய ரஹஸ்யே த்வதி₄காரிதா || 22 ||

நித்ய நைமித்திக கர்மங்களைத் தவிர மற்ற இடங்களில் தேவதாந்தர ஸம்பந்தம் பெறுவதும் -உபாயாந்தரங்களை அனுஷ்டிப்பதும் -பாகவதருக்கு த்ரோஹம் செய்வதும் -பகவத் பாகவதர்கள் இடத்தில் விச்வாஸம் குறைவு படுவதும் -ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களில் ப்ராவண்யம் கொண்டு இருப்பதும் -பெருமாள் பிராட்டிமார்கள் பரிஜனங்கள் இவர்களை நிந்தை செய்வதும் -ஆகிய இவைகள் தேஹம் இருக்குமளவுக்கு இவனிடத்தில் உள்ளவைகளாய்- இவைகளினால் பரிதாபாத்திகளையும் உண்டாக்காதாவைகளாயும் -நின்று இருக்கும் இவ்வபதாரங்களையும் பிராயச்சித்தம் இன்றிக்கே இருக்கும் மஹா பாதகாதிகள் எவையோ அவ்விதமான ஸம்ஸாரத்தில் கிடக்கச் செய்யும் பாதகங்களையும் ப்ரபன்னர் ஒருக்காலும் செய்யத்தகாதவைகள் –

——————

ப்ராயஶ்சித்தே யதே₂ந்த்₃ராய ப்ருச்ச₂தே கமலா ஆஹ ச ।
) ரஹஸ்யம் து ப்ரபந்நஸ்ய த₃ர்ஶிேம் பூர்வ பத்₃த₄தவ் ॥ 23 ॥

ஸத்துக்களான ப்ரபன்னர்களுக்கு மேற்கண்ட பாதகங்கள் நேர்ந்து அதனால் அனுதாபம் பிறக்குமாகில் பின்பு அவர்கள் ரஹஸ்யமாகவும் ப்ரகாசகமாயும் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் –

—————

ஏத த₃ர்த₂மபி₄ப்ரேத்ய பராஶர வஸோ யதா ₂ ॥ 24 ॥
” க்ருதே பாபே (அ)நுதாபோ வை யஸ்ய பும்ஸ꞉ ப்ரஜாயதே ।
ப்ராயஶ்சித்தம் து தஸ்யைகம் ஹரி ஸம் ஸ்மரணம் பரம் ॥
(பாபே கு₃ரூணி கு₃ரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத்₃வித₃꞉
ப்ராயஶ்சித்தாநி மைத்ரேய ஜகு₃꞉ ஸ்வாயம்பு₄வாத₃ய꞉ ॥ 26 ॥

துஷ் க்ருதங்களைச் செய்து அதனால் அனுதாபத்தோடு கூடிய ப்ரபன்னருக்கு ரஹஸ்ய ப்ராயச்சித்தத்தில் அதிகாரம் உண்டாகிறது -இவ்வாறு தன்னிடத்தில் உபதேசம் கேட்க்கும் தேவேந்திரனுக்கு ஸ்ரீ மஹா லஷ்மி உபதேசித்து அருளி உள்ளாள்
இவ்வாறே பிராயச்சித்த பிரபத்தியைப் பற்றி பராசர முனிவர் அருளிச் செய்தவற்றை மேலும் அருளிச் செய்கிறோம் –

——————-

ப்ராயஶ் சிதாந்ய ஸேஷாணி தப꞉ கர்மாத்மகாநி வை ।
யாநி தேஷாமஸேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம் ॥ 27 ॥

எவர் ஒருவர் பாபம் செய்ததால் அனுதாபம் உண்டாகின்றது அவருக்கு பகவந் நாம ஸ்மரணமே பிராயச்சித்தம் ஆகின்றது –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே

——————-

ப்ரமாதா₃த் க்ரியதே கர்ம ப்ரச்ய வேதாத்₄வரேஷு யத் ।
ஸ்மரணாதே₃வ தத்₃விஷ்ணோ ꞉ ஸம் பூர்ணம் ஸ்யாதி₃தி ஶ்ருதி꞉ ॥ 28 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே ஸ்வயம்பவ மநு முதலிய ரிஷிகளானவர்கள் அதிக பாபங்களுக்கு அதிக ப்ராயச்சித்தமும் அல்ப பாபங்களுக்கு அல்ப ப்ராயச்சித்தமும் சொல்லி இருக்கிறார்கள் –

பிரஸ்ய -நழுவுதல் -த்ரவ்ய லோபம் கிரியா லோபம் மந்த்ர லோபம் -போன்ற அசேஷ லோபங்களையும் போக்க வல்லது

———–

ப₄க₃வத்₃ த்₄யாந யுக்தஸ்ய தத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ।
(நாஸ்திகஸ்ய து மூர்க₂ஸ்ய யுக்தம் த்₃வாத₃ஶ வார்ஷிகம் ) ॥ 29 ॥

தபோ ரூபங்களாயும் கர்ம ரூபங்களாயும் ப்ராயச்சித்தங்கள் எவையோ அவைகள் எல்லாவற்றுக்கும் பகவந் நாம ஸ்மரணமே உயர்ந்த பிராயச்சித்தமாக இருக்கின்றது –

————–

(நாஸ்திகஸ்ய து கர்தவ்யம் யதோ₂க்தம் த₃ஶ வார்ஷிகம்) ।
ஏவம் விஷய பே₄தே₃ ந கு₃ருலத்₄வோர் ந ஸங்கர꞉ ॥ 30 ॥

யாகங்களில் அஜாக்ரதையால் பிழைகளாவது -செய்ய வேண்டியவற்றை தவரி விட்டாவது அனுஷ்ட்டிக்கப்படும் கர்மங்கள் பகவந் நாமங்களை ஸ்மரித்த மாத்திரத்தாலேயே பரிபூர்ணமாய் விடுவதாய் வேதத்தில் சொல்லப்படுகின்றது –

———-

ஷேத்ரஜ்ஞஸ் யேஶ்வரஜ்ஞாநாத் விஶுத்₃தி₄꞉ பரமா மதா ।
இத்யேவம் யாஜ்ஞவல்க்யேந ப்₃ருவதா (ஆ)த்மேஶ யோரபி ॥ 31 ॥

ஸேஷ ஸேஷித்வ விஜ்ஞாநாத் ஶுத்₃தி₄ர் ஜீவஸ்ய வர்ணிதா ।
“அதி பாப ப்ரவ்ருத்தோ(அ)பி த்₄யாயந் நிமிஷ மச்யுதம் ॥ 32 ॥

ப்ரபன்னர் அனுஷ்ட்டிக்கும் யாகாதி கர்மங்கள் அவர்களுக்கு பகவத் த்யானம் நிலைத்த உடனே முடிவாய் விடுகின்றன -பகவான் இடத்தில் நிஷ்டை இல்லாதவர்களால் பன்னிரண்டு வருஷங்களால் முடியத்தக்க யாகாதி கர்மங்கள் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம்

மேற் சொல்லியபடி பகவத் பக்தர்கள் அல்லாதவர்கள் பல ஆண்டுகள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பகவத் பக்தர்கள் ஸ்வல்ப பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதே போதும் என்றும் ப்ராயச்சித்தங்களை விதிக்கும் ஸாஸ்த்ரங்களுக்கு வ்யவஸ்தை ஏற்படுவதால் ஒன்றுக்கு ஒண்டு விரோதம் இல்லை –

இவ்வாத்மாக்கள் பரமாத்மாவை அறிவதால் இவர்களுக்கு பரமமான பரிசுத்தி யுண்டாவதாய் யாஜ்ய வல்க்யர் என்னும் மகரிஷி சொல்வதால் -இஜ்ஜீவர்கள் தமக்கும் ஈஸ்வரனுக்கும் யுண்டாய் இருக்கும் சேஷ சேஷித்வ ஞானத்தை அறிவதாலேயே இவர்களுக்குப் பரிசுத்தி சொல்லப்பட்டதாகிறது –

———-

பூ₄யஸ் தபஸ்வீ ப₄வதி பங்க்தி பாவந பாவந꞉ ।
அபவித்ர꞉ பவித்தரோ வா ஸர்வா வஸ்தா₂ம் க₃தோ(அ)பி வா ।
ய꞉ ஸ்மரேத் புண்ட₃ரீகாக்ஷம் ஸ பா₃ஹ்யாப்₄ யந்தரஶ் ஶுசி꞉ ॥ 33 ॥

ஒருவர் அதிக பாபங்களைச் செய்தவராய் இருந்தாலும் ஒரு நிமிஷ காலமாவது பகவானைத் த்யானிப்பவராகில் அவர் மறுபடியும் தபஸ்வியாகவும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தம் செய்பவர்களாயும் ஆகிவிடுகிறார்கள் –

———–

இத்யாதி₃ ஶௌநகாத்₃ யுக்தே꞉ ப₄க₃வத்₃ ஜ்ஞாநிநாம் ந்ருணாம் ।
க்ருதே பாபே (அ)நுதப்தாநாம் தாத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ॥ 34 ॥

அபரிசுத்தராக இருந்தாலும் பரிசுத்தராக இருந்தாலும் அல்லது அவர் எந்த துரவவஸ்தையை அடைந்து இருந்த போதிலும் எவர் ஒருவர் பகவானைத் தியானிக்கிறாரோ அவர் உள்ளத்திலும் புறத்திலும் பரிசுத்தர் என்று செல்லப்படுகிறார் –

இது முதலாக யுள்ள ஸுநகர் முதலிய மஹரிஷியின் வசநங்களினால் பகவத் பக்தர்களுக்கு பாபம் நேர்ந்து அதனால் அவர்கள் அனுதாபம் உள்ளவர்களாக இருப்பார்களாகில் அவர்கள் செய்யும் பகவத் த்யானத்து அளவிலேயே அந்த பாபங்கள் தீர்ந்து விடும் –

—————

தே₃வோந்தர ஸம் ஸக்தை ꞉ ஸங்க₃ம் த்யக்த்வைவ வைஷ்ணவ꞉ ।
உபாயாந்தர ஸக்தைஶ்ச ப்ரபந்நைஸ் ஸஹ ஸம் வஸேத் ॥ 35 ॥

பின்னர் வேறு தேவதைகளை அடைந்தவர்களாயும் வேறு உபாயங்களை அடைந்தவர்களாயும் இருக்குமவர்களுடன் ஸஹ வாசத்தை விட்டு ப்ரபன்னர்களுடன் வஸிக்க வேண்டும் –

————–

ந மூர்க₂மாஶ்ரயேத் ஸாது₄꞉ ந மூர்கா₂ய கு₃ருர்வதே₃த் ।
ய ஆஶ்ரயேத₃வித்₃வாம்ஸம் தாம ஸஸ்து தமோ விஸேத் ॥ 36 ॥

ஸாதுவாக இருக்கும் ஒருவர் மூர்க்கனாக இருக்கும் குருவை ஆஸ்ரயிப்பது தகாது -மூர்க்கனான சிஷ்யனுக்கு உபதேசிப்பது தகாது -யாவன் ஒருவன் மூடரான ஆசார்யனை ஆஸ்ரயிக்கிறானோ அவன் தமஸ்ஸில் இருந்து காட அந்தகாரத்தை அடைந்தவனாகிறான் –

————–

மூர்க₂த₃த்தம் து யஜ்ஜ்ஞாநம் உப்தம் பீ₃ஜமிவோஷரே ।
அந்யோந்யஸ்மை கு₃ருச்சா₂த்ரௌ ந த்₃ருஹ்யேதாம் கதா₃சந ॥ 37 ॥

மூர்க்கனிடத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஞானம் களர் பூமியில் விரைத்த விதையோடு ஒத்தது -ஆச்சார்யனும் சிஷ்யனும் ஒருவருக்கு ஒருவர் த்ரோஹம் செய்யத்தகாது -இவர்களில் எவர் த்ரோஹம் செய்கிறாரோ அவர் மோக்ஷ மார்க்கத்தை இழந்து விடுவார் –

ஓம் சஹ நாவவது சஹ நவ் புனக்து சஹ வீர்யம் கரவா-அவஹை தேஜஸ்வி நவ்-அதீ-தம்-ஆஸ்து மா விட்விச்ஸ்-ஆவஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி
எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு, ஊக்கத்துடன் பணிபுரிய சக்தியைக் கொடு, எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, மனிதர்களாகிய எங்கள் மனதிலுள்ள பேதங்களை நீக்கி எங்களுக்கு என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.

————

யோ த்₃ருஹ்யத் யநயோஸ் ஸோ(அ)யம் ப்₄ரஶ்யதே முக்தி மார்க₃த꞉ ।
அநாதி₃ஷ்டே ந கு₃ருணா மந்த்ரேண ந ஹரிம் ஶ்ரயேத் ॥ 38 ॥

கு₃ரும் ந க₃ர்ஹயேச் சி₂ஷ்யா꞉ தா₄ர்மிகம் த்வர்த₂லோப₄த꞉ ।
அநிவேத்₃ய கு₃ரோ ꞉ கிம்ஶ்சித் நோப பு₄ஞ்ஜீத பு₃த்₃தி₄மான் ॥ 39 ॥

ஆச்சார்யரால் உபதேசிக்கப்படாமல் இருக்கும் மந்திரத்தால் பகவானை ஆராதிக்கத் தகாது -தர்ம நிஷ்டராக இருக்கும் ஆசார்யரை சிஷ்யன் தனத்தின் ஆசையால் பழிக்கக் கூடாது -விசேஷ வஸ்துக்கள் தனக்கு ஏதாவது கிடைத்தால் அதில் சிலதை ஆச்சார்யருக்கு சமர்ப்பிக்காமல் சிஷ்யன் தனக்கு அதை உபயோகித்துக் கொள்ளக் கூடாது -தன் ஆச்சார்யருக்கு த்வேஷிகளாய் இருப்பவர்களை சிஷ்யன் விட்டுவிட வேண்டும் –

—————-

கு₃ருவித்₃வேஷிண: ஸர்வான் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
விஷ்ண்வாலய ந குர்யாத்து நிஷ்டீ₂வநமலாதி₃கம் ॥॥ 40 ॥

பாதவ் ₃ ந ஷாலயேத் தத்ர நாந்தரா தே₃வபீட₂தயோ ꞉ ।
க₃ச்சே₂த் ப்ரபந்நோ நா(அ)த்₃வாராத் ஸம் விஸேத்₃த₄ரிமந்தி₃ரம் ॥ 41 ॥

பகவானுடைய ஆலயத்தில் காறி உமிழ்தல் -மல மூத்ராதி விஸர்ஜனம் செய்தல் -கால்களைக் கழுவுதல் -இவை முதலிய கெட்ட கார்யங்களை ப்ரபன்னர்கள் செய்யவே கூடாது -பகவான் எழுந்து அருளி இருக்கும் இடத்துக்கும் பலி பீடத்துக்கும் நடுவில் குறுக்கே போகக் கூடாது -பகவத் ஆலயத்தில் வாசல் அல்லா வழியாகப் புகுந்து போகக் கூடாது –

——————

(க்ருஷ்ணகம்ப₃ ல ஸம்வீதோ ந விஸேஜ் ஜாது வைஷ்ணவ꞉ ।
விநா தீ₃பாதி₃கம் கர்ம தந்மாலா ப₃ந்த₄நாதி₃கம்) || 42 ॥

வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் கறுப்புக் கம்பளியினால் போர்வை யுள்ளவராய் பகவத் ஆலயத்தில் பிரவேசிக்கக் கூடாது -திரு விளக்கு முதலியவைகளினால் வெளிச்சம் இல்லாத இடத்தில் பகவானுக்கு மாலை கட்டுதல் முதலான கைங்கர்யங்களைச் செய்யக் கூடாது –

—————–

அந்யத் கார்யம் ந குர்வீத வைஷ்ணவோ விஷ்ணு மந்தி₃ரே ।
நாந்யம் தே₃வம் நமஸ் குர்யாத் நாந்யம் தே₃வம் நிரீஷயேத் ॥
43 ॥

வைஷ்ணவர் பகவத் ஆலயத்தில் பகவத் கைங்கர்யம் ஒழிய வேறொரு காரியங்களையும் செய்யக் கூடாது -அங்கு இருக்கும் வேறொரு தேவாலயத்தில் புகுரக் கூடாது -வேறே ஒரு தெய்வத்தைத் தொழவும் பார்க்கவும் கூடாது –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர
ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –
இஷ்ட சித்தி -என்பது
சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –
ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது
இத்தனை போது விளம்பித்தது என் என்ன
ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று
அருளிச் செய்து
புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளி
ஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்-

————–

நாந்யம் ப்ராஸாத₃மாரோஹேத் நாந்ய மாயதநம் வ்ரஜேத் ।
உத்₃தே₃ஶ தஸ்து த்₃வாத்ரிம்ஶத₃பசாரா ஹரே ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 44 ॥

ஸ்ரீ வராஹ புராணத்தின் 32 பகவத் அபசாரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன -வைஷ்ணவர்கள் இவற்றில் எதையுமே செய்யக் கூடாது

———–

புராணே க₂லு வாராஹே வர்ஜயேத்₃வைஷ்ண வஸ்து தான் ।
க₃ந்த₄ம் புப்பம் ததா ₂ வாஸ꞉ பூ₄ஷணாநி பஶூன் க்₃ருஹான் ॥ 45 ॥

ததா ₂ போ₄ஜ்யாநி சாந்யாநி நாத்மார்தே₂ வைஷ்ணவோ ஹரேத் ।
கர்தவ்யா ஸேஷதா பு₃த்₃தி₄꞉ நாத்மநஸ்த நயாதி₃ஷு ॥ 46 ॥

சந்தனத்தை யாவது புஷ்ப்பங்களையாவது வஸ்திர பூஷணங்களை யாவது பின்னும் பசு க்ரஹம் முதலிய பாக்யங்களையாவது அப்படியே அமுது செய்யத்தக்க பதார்த்தங்களையாவது ப்ரபன்னர் தன ப்ரயோஜனத்துக்காக ஸம்பாதிப்பது தகாது -பகவத் ப்ரயோஜனத்திற்காக மட்டுமே ஸம்பாதிக்க வேண்டும் என்று கருத்து –

—————

விஷ்ணோர் விபூ₄தி பூ₄தேஷு மமதாம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥ 47 ॥
ஏகாந்தீ வ்யபதே₃ஷ்டவ்யோ நைவ க்₃ராம குலாதி₃பி₄꞉ ।
விஷ்ணுநா வ்யபதே₃ஷ்டவ்ய꞉ தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி ॥ 48 ॥

ப்ரபன்னர் தமது பிள்ளைகள் முதலியவர்களை தமக்கு நியாமகர்கள் என்னும் எண்ணத்தையும் -அவர்கள் நம்முடையவர்கள் என்னும் எண்ணத்தையும் விட வேண்டும் -அவர்களும் தம்மைப்போலவே பகவானுக்கு நியாமகர்கள் என்றும் பகவானுடைய சொத்துக்கள் என்றும் நினைக்க வேண்டும் –

ஏகாந்தியாக இருக்கும் ப்ரபன்னர் கிராமம் குலம் முதலிய அடையாளங்களை இட்டு வியவஹரிக்கத் தக்கவர் அல்லர் -அவர் பகவானுடைய திரு நாமத்தாலேயே வியவஹரிக்கத் தக்கவர்-அவனுக்கு எல்லா அடையாளங்களும் பகவானாகவே இருக்கிறார்

மாம் மதீயஸ்ய சேதன அசேதன -உனது சொத்து -ஈஸ்வர ப்ரக்ருதிகளுக்கு நாம் கரைய வேண்டாமே-

————–

நத்₃யாஸ் தஸ்யைவ நாமாநி ப்ரவிஷ்டாயா யதா₂ர்ணவம் ।
ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ்ததா ₂ ॥ 49 ॥

கடலில் பிரவேசித்து இருக்கும் நதியின் ப்ரவாஹத்திற்கு அக்கடலின் பெயர் ஒழிய அந் நதியின் பெயர் இல்லாமல் போவது போலவே ஸர்வ பிரகாரத்தாலும் பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னருக்கு அந்தப் பாகவான் திரு நாமம் ஒழிய வேறு ஒரு பெயர் இல்லையாம்

——–

சா₂யா விளங்க₄ நாதீ₃நி ந குர்யாச்ச ஸதாம் ஸதா ₃ ।
ஸத்₃பி₄ஶ்ச ஸஹ வர்தேத விவாத₃ம் தேஷு வர்ஜயேத் ॥ 50 ॥

சத்துக்களின் நிழலைத் தாண்டுவது முதலிய குறைவான செயல்களைப் ப்ரபன்னர் செய்யத் தகாது -எப்பொழுதும் ஸத்துக்களுடனே ஸஹ வாஸம் செய்ய வேண்டும் -அவர்களுடன் வழக்காடுவதைத் தவிர்க்க வேண்டும் –

—————

ப்ரபந்நாநநு ஶாஸ்தீத்த₂ம் விஷ்வக் ஸேநேஶ ஸம்ஹிதா ।
நா வைஷ்ணவ க்₃ரந்த₂ரதி꞉ நா ஸச் சா₂ஸ்த்ர ரதோ ப₄வேத் ॥ 51

ஸ்ரீ விஷ்வக் சேன ஸம்ஹிதை ப்ரபன்னர்களைக் கீழ்ச் சொல்லியபடி கட்டளை இடுகின்றது -அதாவது ப்ரபன்னர் பகவானைப் பற்றியதல்லாத ஸாஸ்த்ரங்களில் ஆசை வைப்பது தகாது -அப்படியே அசத்துக்களினால் செய்யப்பட -அசத்துக்களைப் பற்றியதாக இருக்கும் கிரந்தங்களிலும் ஆசையுள்ளவராகவும் இருப்பதும் தகாது –

—————-

நாந்ருதம் ஶபத₂ம் குர்யாத் ந ச ப்ருச்சே ₂ச்சு பா₄ஶுபே ₄ ।
விஷ நிர்ஹரணம் சாபி பிஶாசாதி₃விமோசநம் ॥ 52 ॥

ஸமஸ்தவ்யாதி₄ஹரணம் ஸூத்₃ர மந்த்ரைர் ந ஸாத₄யேத் ।
ந தா₄ரயேஜ் ஜடாபா₄ரம் ப₄ஸ்ம சைவ ந தா₄ரயேத்
॥ 53 ॥

ப்ரபன்னர் பொய்யாக சபதம் கூறுவது கூடாது -ஜ்யோதிஷம் அறிந்தவர்களிடத்தில் தனக்கு நேரிடும் நன்மை தீமைகளைக் கேட்கக் கூடாது – விஷங்களை போக்குதல் -பிசாசம் முதலிய க்ரஹ விமோசனம் செய்தல் -ஸமஸ்த வியாதிகளுக்கும் சிகிச்சை செய்தல் -இவைகளை சூத்ர மந்திரங்களால் ஸாதிக்கக் கூடாது –

————-

பா₃ஹ்ய லிங்கா₃நி ஸர்வாணி ஸந்த்யஜேத்₃ யாவதா ₃யுஷம் ।
யத்ர யத்ர ஹி நீதிஸ்யாத் வைஷ்ணவீ ஶிஷ்டஸம்மிதா ।
தத்ர தத்ராவ ஸேந்நித்யம் நாந்யத்ரேதி மதிர் மம ॥ 54 ॥

சிரஸ்ஸில் சடை முடிதல் -பஸ்மம் தரித்தல்-பின்னும் வைதிக மந்திரங்களுக்கு வெளிப்பட்டவைகளான மதங்களில் இருப்போர் செய்து கொள்ளும் அடையாளங்கள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் ப்ரபன்னர் விடவேண்டும் – –

—————-

ந லோக வ்ருத்திம் வர்தேத வ்ருத்தி ஹேதோ꞉ கத₂ஞ்சந ।
ஸத்ஸம்மதா து யா வ்ருத்தி꞉ தே₃ஶகாலா நுரூபிணீ ॥ 55 ॥

எந்த எந்த இடங்களில் சிஷ்ட சம்மதங்களான வைஷ்ணவ தர்மங்கள் நடக்கின்றனவோ அந்த இடங்களிலேயே ப்ரபன்னர் வஸிக்க வேண்டும் -மற்ற இடங்களில் வஸிக்கக் கூடாது என்றும் எனக்குத் தோற்றுகிறது –

————-

தாமாஸ்தி₂தோ ந லோபே₄ந ஹீநாம் வ்ருத்திம் ஸமாஶ்ரயேத் ।
வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ஜநீயம் ஸதாமிஹ ॥ 56 ॥

தன் ஜீவன நிமித்தமாக சாமான்யர்களான லோகத்தார்கள் செய்யும் ஜீவன உபாயத்தை ப்ரபன்னர் செய்யக்கூடாது -அப்போதைய தேச காலங்களுக்குத் தக்கவைகளாயும் சத்துக்களினால் ஒப்புக் கொள்ளப் பட்டவைகளாயும் இருக்கும் ஜீவன உபாயங்கள் எவைகளோ அவைகளை பிரபன்னர் அடைந்து இருக்க வேண்டும் -அர்த்த ஆசையினால் ஹீந விருத்தியை இவர்கள் செய்யத் தகாது-

ஸத்துக்களுக்கு விடத் தக்கவைகளை பகவானான வ்யாஸ முனிவர் சொல்லி இருக்கிறார் –

————————-

ந ஶப்₃த₃ஶாஸ்த்ராபி₄ரதஸ்ய மோஷோ ந சாபி ரம்யாவஸத₄ப்ரியஸ்ய ।
ந போ₄ஜநாச்சா₂த₃ந தத்பரஸ்ய ந த லோக வ்ருத்த க்₃ரஹணே ரதஸ்ய ॥ 57 ॥

ஶிஶ்நாே₃தரே தய(அ)பி₄ரதா ꞉ ஸதை₃வ ஸ்தேயாந்ருதா வாக்பருஷாஶ்ச நித்யம் ।
வ்யபேத த ₄ர்மா இதி தாந் விதி₃த்வா ………………………… ஸம்பரிவர்ஜயந்தி ॥ 58 ॥

வ்யாஸ முனிவர் அருளிச் செய்ததை அருளிச் செய்துள்ளார் -ஸப்த ஸாஸ்த்ரத்திலேயே ஊற்றம் யுடையோனுக்காகவாவது -அஸனாச் ஸாதனங்களைப் பெறுவதிலேயே நினைவு யுடையோனுக்காகவாவது-உலகத்தாரின் ஸித்தங்களை வசப்படுத்திக் கொள்வதிலேயே யத்தனம் யுடையோனுக்காகவாவது-மோக்ஷம் கிடைப்பதில்லை -ஒரே நிச்சயம் யுடையோராயும் உறுதியான உறுதியான நன்னடத்தை யுள்ளவராயும் -ஐம் புலன்களில் ஆசையைக் கழித்தவராயும் -ஒருவருக்கும் துன்பம் யுண்டாக்காதவராயும் -ப்ரஹ்ம ஞானத்தில் மனமுடையவராயும் இருக்கும் ஞானிக்கே மோக்ஷம் நிச்சயமாகக் கிடைக்கத் தக்கதாகும் –

———–

ஏகாந்த ஶீலஸ்ய த்₃ருட₄வ்ரதஸ்ய பஞ்சேந்த்₃ரிய ப்ரீதி நிவர்தகஸ்ய ।
அத்₄யாத்மவித்₃யா ரதமாநஸஸ்ய மோஷோ த்₄ருவோ நித்ய மஹிம்ஸ கஸ்ய| 59

———-

நாபி₄நந்தே₃த மரணம் நாபி₄நந்தே₃த ஜீவிதாம் |
காலமேவ ப்ரதீஷேத நிர்வேஶம் ப்₄ருதகோ யதா₂ ॥ 60 ॥

ப்ரபன்னர் தமக்கு சீக்கிரத்தில் மரணம் யுண்டாகும் என்றாவது நெடுநாள் ஜீவித்து இருப்போம் என்றாவது ஸந்தோஷிப்பது கூடாது -கூலி வேலைக்காரன் தனக்குக் கூலி கிடைக்கும் காலத்தை எதிர்பார்த்து இருப்பது போல் அவைகளின் காலத்தையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் –

—-

ப்ராயேண அக்ருதக்ருத்யாஸ்து ம்ருத்யோருத்₃வேஜிநா ஜநா꞉ ।
க்ருதக்ருத்யா꞉ ப்ரதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரிய மிவாதிதி₂ம் ॥ 61 ॥

உலகத்தில் உள்ளவர்கள் தமோ வஸ்யராய் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்யாமையாலேயே அநேகமாய் மரணத்தின் நின்றும் பயப்படுகிறார்கள் -அப்படிக்கு அல்லாமல் தாம் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்தவர்கள் தம்முடைய க்ருஹத்திற்கு வரும் அதிதிகளை எதிர்பார்ப்பது போல் மிருத்யுவையும் எதிர்பார்த்து இருப்பார்கள் –

————-

தத்பாத₃ப₄க்தி ஜ்ஞாநாப்₄யாம் ப₂லமந்யத் கதா₃சந ।
ந யாசேத் புருஷோ விஷ்ணும் யாசநாந் நஶ்யதி த்₄ருவம் ॥ 62 ॥

ப்ரபன்னர்கள் பகவானிடத்தில் அவன் திருவடிகளில் பக்தி ஞானம் இவைகள் ஒழிய வேறு ஒன்றையும் கேட்பது தகாது -அப்படிக் கேட்ப்பாராகில் ஞானம் அழிந்து விடுவார் -இது நிச்சயம் –

————–

ப்ரமாதா₃த்₃பு₃த்₃தி₄தோ வா(அ)பி யதா₃க₃꞉ க்ரியதே ஸதாம் ।
அநுதப் தஸ்து தாநேவ ஷாம யேந் நாந்யதா ₂ ஶம꞉ || 63 ||

அபுத்தி பூர்வகமாவது புத்தி பூர்வகமாவது ப்ரபன்னர்கள் ஸத்துக்களிடம் அபசாரப் படுவார்களாகில் உடனே அனுதாபம் உள்ளவராய் அவர்கள் இடத்திலேயே அபதாரத்துக்கு ஷாமணம் செய்து கொள்ள வேண்டும் -வேறு விதமாக அவ் வபதாரம் கழியாது

———-

ப₄க₃வத் யபசாரே(அ)பி நைஷா ஶாந்திர நுத்தமா ।
ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி₃நாம் சைவ ஸம்ஸர்க₃ம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥64॥

பகவானிடத்தில் அபசாரம் நேர்ந்தாலும் இப்படி க்ஷமை கொள்ளுவதே உத்தமம் -நல்ல ஞானமுடியவர் ஸ்த்ரீகள் இடத்திலும் ஸ்த்ரீகளுடன் சமசர்க்கம் செய்பர்களிடமும் ஸஹ வாஸத்தை விட வேண்டும் –

———–

தஸ்மாத் ஸர்வாத்மநா வித்₃வான் விஷயாந் விஷவத் த்யஜேத் ।
அவித்₃ய꞉ ப்ராக்ருத꞉ ப்ரோக்தோ வைத்₃யோ வைஷ்ணவ உச்யதே
॥ 65 ॥

ஆகையால் ஞானியாக இருக்கும் பிரபன்னர் ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களை விஷத்தைப் போலே விடவேண்டும் -இவ்விஷயாந்தர அனுபவத்தினால் அஞ்ஞானம் மேலிடுகிறது -அஞ்ஞானி பிராகிருத மண்டலத்திலேயே அழுந்தி விடுவான் -ஞானியாகவே இருக்குமவர் பகவானைச் சேர்ந்து விட்டவராகவே சொல்லப்படுவார் –

———-

அவித்₃யேந ந கேநாபி வைத்₃ய꞉ கிஞ்சித் ஸமாசரேத் ।
இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா ஶாஸ்த்ரே மந்வாதி₃பி₄ஸ்ததா ₂ ॥ 66 ॥

ஞானியாக இருக்குமவர் அஞ்ஞானியுடன் யாதொரு காரியமும் செய்யத் தகாது -இவ்வாறு பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானும் மன்வாதி சாஸ்திரங்களில் மநு முதலியவர்களாலும் அருளிச் செய்யப்படுகின்றது –

————

தஸ்மாத் ப்ராக்ருத ஸம் ஸர்க₃ம் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
ஏகஶய்யாஸநம் பங்க்தி பா₄ண்ட₃ம் பக்வாந்நமிஶ்ரணம் ॥ 67 ॥

யாஜநாத்₄யாபநே யாநம் ததை ₂வ ஸஹ போ₄ஜநம் ।
நவதா ₄ ஸங்கர꞉ ப்ரோக்தோ ந கர்தவ்யோ (அ)த₄மைஸ்ஸஹ
|| 68 ॥

ஆகையால் ப்ரக்ருதி போகங்களில் ஆசை யுள்ளவர்களுடன் ஸஹ வாஸத்தை பாகவத உத்தமரான ப்ரபன்னர் விட வேண்டும் – அந்த பிராகிருத போகிகளுடன் ஒரே படுக்கையில் படுப்பது -ஒரே ஆசனத்தில் இருப்பது -ஒரே பங்க்தியிலே சேருவது -அவர்கள் உபயோகப்படுத்திய பாத்திரங்களை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்திக் கொள்வது -அவர்கள் அன்னத்தை தங்களுடைய அன்னத்தோடு கலந்து கொள்வது- அவர்களுக்கு ப்ரோஹிதர்களாய் வைதிக கர்மங்களைச் செய்விப்பது -அவர்களுக்கு வேத அத்யயனம் செய்விப்பது -அவர்களுடன் பந்துத்வம் செய்வது -அவர்களுடன் கூட புசிப்பது -ஆகிய இவ்வொன்பது விதங்களில் கலப்பு உண்டாகிறது -இவ்விதங்களில் அவர்களுடன் கலந்து இருப்பதை ப்ரபன்னர்கள் தவிர வேண்டும்-

—————

ஸல்லா பஸ் பர்ஶந ஸ்வாபவிதா ₄நா(அ)ஸநஶாயநாத் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் பாபம் ஸங்க்ரமதே ந்ருணாம் ॥ 69 ॥

ஸம்வத்ஸரேண பததி பதிதேந ஸமாசரன் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் ஸஹ ஶய்யாஸநாஶநாத் ॥ 70 ॥

ப்₃ருஹஸ்பதி மநுப்₄யாம் து ஸங்கரஸ்ய து வர்ணநம் ।
வைவித்₄யம் யாஜநாதீ₃நாம் ஸத்₃ய꞉ பாதித்ய ஹேதுநா ॥ 71 ॥

மேற் சொல்லியபடி தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையும் அருளிச் செய்கிறார் -பாபங்களைச் செய்த்தவர்களிடம் சம்பாஷணை செய்வது -ஸ்பர்சிப்பது -தூங்குவது -உட்க்காருவது-படுப்பது -ப்ரோஹிதம் செய்வது -வேத அத்யயனம் செய்விப்பது -பந்துத்வம் செய்வது -இவைகளினால் பாபம் செய்யாதவர்களுக்கும் அப் பாவிகளின் பாவங்கள் வந்து சேர்கின்றன –

புரோஹிதம் செய்வது வேத அத்யயனம் செய்வது -எப்பொழுதும் கூடத் திரிவது -கூடப் படுப்பது – உட்க்காருவது -புசிப்பது -இவைகளினால் பதிதனோடு ஒரு வருஷ காலம் ஸஹவாஸம் செய்தவன் அவனைப் போலவே தானும் பதிதனாகி விடுகிறான் –

ப்ருஹஸ்பதி மநு இவர்களினால் மேற் சொல்லியபடி கலந்திருக்கை பலவிதமாகச் சொல்லப்படுகின்றது -அப்பதிதர்களுக்கு புரோஹித தொழில்கள் முதலிய வைதிக கர்மங்களைச் செய்வித்தால் அவன் உடனேயே பதிதனாய் விடுவான் என்றும் சொல்லப்பட்டு உள்ளது –

—————

ந்யாஸ வித்₃யைக நிஷ்டா₂நாம் வைஷ்ணவாநாம் மஹாத்மநாம் ।
ப்ராக்ருதாபி₄ஷ்டுதிர்நிந்தா ₃ நிந்தா ₃ஸ்துதிரிதி ஸ்ம்ருதா ॥ 72 ॥

ந்யாஸ வித்யை என்னும் ப்ரபத்தியில் நிஷ்டையுடைய ப்ரபன்னர்கள் இப்பிரக்ருதி போகங்களை யுடையோர்களை ஸ்துதிப்பது அப் ப்ரபன்னர்களுக்கு பழிப்பு என்றும் அவைகளைப் பழிப்பது இவர்களுக்குப் புகழ் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது –

——–

அத்₃ய ப்ரப்₄ருதி ஹே லோகா யூயம் யூயம் வயம் வயம் ।
அர்த₂காம பரா யூயம் நாராயணா பரா வயம் ॥ 73 ॥

நாஸ்தி ஸங்க₃தி ரஸ்மாகம் யுஷ்மாகம் ச பரஸ்பரம் ।
வயம் து கிங்கரா விஷ்ணோ ꞉ யூய மிந்த்₃ரிய கிங்கரா꞉ ॥ 74 ॥

மேற் சொல்லியபடி ப்ரபன்னர்கள் ப்ராக்ருதர்களைப் பற்றி அருளிச் செய்ததை அருளிச் செய்கிறார் –
வாரீர் உலகத்தார்களே -இது முதல் நீங்கள் நீங்களே -நாங்கள் நாங்களே -எங்கனே ஏன் என்றால் -நீங்கள் அர்த்த காமங்களில் ஆசையை வைத்தவர்கள் -நாங்கள் ஸ்ரீ மந் நாராயணனையே அடைக்கலம் புகுந்தவர்கள் -ஆகையால் எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு துவக்கும் இல்லை -நாங்கள் பகவானுக்கே தாஸர்களாக இருக்கிறோம் -நீங்களோ ஜம்புவான் களுக்கு தாஸர்களாக இருக்கிறீர்கள் –

——–

9-வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-ஸம் பூர்ணம்

—————-

அத₂ ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ

ஏவம் ப்ரபந்நா விஷ்ணோஸ்து பாத₃வ் தத் ப்ராண ஸஞ்ஜ்ஞிதான் ।
அநுவ்ரஜதி தாந் விஷ்ணு꞉ அத்யர்த₂ப்ரேம விஹ்வல
꞉ || 1 ||

இவ்வாறு பகவானுடைய திருவடிகளைச் சரணம் புகுந்தவர்களாயும் பகவானால் தன்னுடைய பிராணனாகச் சொல்லப்பட்டு இருக்கும் இப்ரபன்னர்களை பகவான் மிகுந்த திருவருளோடு கூடியவராய் பின் செல்கிறார் –

————–

ஸ்வயம் ப₄க₃வதா சோக்தம் “ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ” ।
ப₃ஹு ஜந்ம ஸஹஸ்ராந்தே தி₃ஷ்ட்யா யஸ்து ப்ரபத்₃யதே
॥ 2 ॥

“வாஸுதே₃வஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄꞉” ।
உக்தா ஶஸ்த்ரே ப₄க₃வதா ப்ரபந்நே க்ருதக்ருத்யதா ॥ 3 ॥

ஞானியாக இருக்குமவர் என் ஆத்மாவாகவே எண்ணப்படுகிறார் என்னும் இவ்வர்த்தம் பகவானால் சொல்லப்படுகின்றது -எவர் ஒருவர் அநேக ஜென்மங்கள் கடைசியில் தமக்கு உண்டாய் இருக்கும் ஸூஹ்ருத விசேஷத்தால் எனக்கு ஸர்வ பயனும் பகவானே என்று என்னிடத்தில் பிரபத்தி செய்கிறார் -அந்த மஹாத்மா உலகத்தில் அரும் பொருளாகக் கிடைக்கத் தக்கவர்-

பகவான் இடத்தில் உயர்ந்த பக்தி உள்ளவராய் இருப்பதும் பகவான் சர்வோத்தமர் என்று அறிந்து இருப்பதுமே ப்ரபன்னர்களுக்கு க்ருதக்ருதையாக ஸாஸ்த்ரத்தில் பகவானால் சொல்லப்பட்டுள்ளது –

மம பிராண பாண்டவ -ஞாநீத் ஆத்மைவ மே மதம் -அறிவார் உயிரானாய்-அறிவார்களுக்கு உயிர் போல் -சாமான்ய அர்த்தம் -அறிவார்களா உயிராகக் கொண்டவன் –என்னது உன்னாவி உன்னது என்னாவி –ஸ மஹாத்மா துர்லபம் -விரஹம் ஸஹியாத மார்த்வம் களத்தில் கூடு பூரிக்கும் –

—————-

தஸ்மிம்ஶ் சாநுத்தமா ப்ரீதி꞉ ஸ்வஸ்யாஸேஷ விஶிஷ்டதா ।
விஷ்ணூபாயோ யோ (அ)ந்யப₂ல ꞉ ஸோ (அ)த₄ம꞉ பரிகீர்தித꞉ ॥ 4 ॥

அந்யோ பாயோ விஷ்ணுப₂ ல ꞉ மத்₄யம꞉ பரிகீர்திதா ꞉ ।
மாத₄வாங்க்₄ரி த்₃வயோ பாயோ மாதா₄வாங்க்₄ரி ப்ரயோஜந꞉ ॥ 5 ॥

பகவானை உபாயமாகக் கொண்டு பகவானை ஒழிந்த வேறு பலன்களை விரும்பும் ப்ரபன்னர் அதமர் என்றும் வேறே உபாயங்களைக் கொண்டு பகவானை அடைய விரும்புபவர்கள் மத்யமர் என்றும் சொல்லப்படுவார்கள் –

அங்கு விஷ்ணு பத பிரயோகம் -இங்கு மாதவ பத பிரயோகம் -த்வயம் போலவே -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

——–

ஸ உத்தமாதி₄காரீ ஸ்யாத் க்ருதக்ருத்யோ (அ)த்₃ய ஜந்மநி ।
யா꞉ க்ரியா꞉ ஸம் ப்ரயுக்தா ꞉ ஸ்யு꞉ ஏகாந்தக₃த பு₃த்₃தி₄பி₄꞉ ॥ 6 ॥

பகவானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்டு அத் திருவடிகளையே பயனாக விரும்புபவர்கள் ப்ரபன்னர்களில் உத்தமராவார் – அவர் இஜ் ஜென்மத்திலேயே க்ருதக்ருத்யராய் செய்ய வேண்டிய அனைத்தையுமே செய்தவராகிறார்கள்

ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண -அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || -புருஷோத்தமன் –

——————

தாஸ் ஸர்வா ஶிரஸா தே₃வ꞉ ப்ரதி க்₃ருஹ்ணாதி வை ஸ்வயம் ।
“ப₄க்தை ரண்வப்யுபாநீதம் ப்ரேம்ணா பூ₄ர்யேவ மே ப₄வேத் ॥ 7 ॥

பகவான் ஒருவர் இடத்திலேயே பரம நிச்சயமுடைய ப்ரபன்னர்களினால் எந்த ஆராதனங்கள் செய்யப் படுகின்றனவோ அவைகளை பகவான் தனது சிரஸ்ஸால் வஹிக்கிறார்
இவ்வாறு பகவான் பரிக்கிரஹிக்கிறார் என்பதற்கு பகவத் ஸ்ரீ ஸூக்திகளையே பிரமாணமாக அருளிச் செய்கிறார் –

குறும்பறுத்த நம்பி விருத்தாந்தம் அறிவோம்-பூரி ஜெகந்நாதப் பெருமாளுக்கு சமர்ப்பித்த புஷ்ப்பம் கனத்ததே -விதுரஸ்ய மஹா மதி –

—————

பூ₄ர்யப்ய ப₄க்தோபஹ்ருதம் ந மே தோஷாய கல்பதே” ।
ப₄க்த ஶப்₃த₃ஸ்து முக்₂யோக்யதா ப்ரபந்நே பர்யவஸ்யதி ॥ 8 ॥

எனது பக்தர்களினால் அன்புடன் எனக்கு ஸமர்ப்பிக்கப் பட்டு இருக்கும் உபஹாரம் கிஞ்சித்த்தாக இருந்தபோதிலும் அது அதிகமானதாகவே யாகி விடும் -என்னிடம் பக்தி இல்லாதவர்களால் ஸமர்ப்பிக்கப்படும் உபஹாரம் அதிகமாக இருந்த போதிலும் அது எனக்கு சந்தோஷத்தை உண்டாக்குவதில்லை –

மேற் சொல்லிய பக்த ஸப்தம் ப்ரபன்னர்கள் இடத்திலேயே முக்கியமாக முடிகிறது -இவ்வாறு விஷ்வக் சேனர் ஸம்ஹிதையில் அருளிச் செய்யப்பட்டுள்ளது –

மத் பக்தம் நயாமி பரமம் பதம் -விசேஷித்து ப்ரபன்னர் என்றே பொருள் –

———–

ஆத்மீய ஸம் ஹிதாயாம் து யதா₂ ஸேநேஶ உக்தவான் ।
“ஸேவா து ப்ரோச்யதே ஸத்₃பி₄꞉ ப₄க்தி ஶப்₃தே₃ந பூ₄யஸீ ॥ 9 ॥

ஒருவரிடத்தில் அதிகமாகச் செய்யப்படும் ஸேவை ஸத்துக்களினால் பக்தி என்று சொல்லப்படுகிறது -தனது ஸ்வாமியிடத்தில் தான் மிகவும் தாழ்ந்தவனாக இருப்பது ஸேவை எனப்படுகிறது –

எதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யுமீடே

—————-

ஸேவா சாத்யந்த நீசத்வா பதிர்ஹி ஸ்வாமிநம் ப்ரதி ।
தஸ்மாத் பரஸ்ய தா₃ஸ்யை கரஸதா ப₄க்தி ருச்யதே ॥ 10 ॥

ஆகையால் பகவானிடத்தில் தாஸனாக இருப்பதையே தனக்கு போகமாகக் கொண்டிருப்பது பக்தி என்று சொல்லப்படுகிறது –

———-

ஆகிஞ்சிந்யைக ஶரணா꞉ கேசித்₃பா₄க்₃யாதி₄கா꞉ புந꞉ ।
லக்ஷ்மீ புருஷகாரேண வ்ருத வந்தோ நரோத்தமா꞉ ॥ 11 ॥

மாமேகம் ஶரணம் ப்ராப்ய மாமேகம் ப்ராப்நுவந்தி தே ।
ஏவம் மாம் ப்ராப்ய ஶரணம் வீதஸோக ப₄யக்லமா꞉ ॥ 12 ॥

வேறொரு கதி இல்லாமல் இருப்பதையே உபாயமாகவுடைய பாக்யவான்கள் நரோத்தமர்கள் ஸ்ரீ மஹா லஷ்மியை புருஷகாரமாகக் கோலி ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய என்னைச் சரணம் அடைய விரும்புபவர்களாய் இவ்வாறு என்னைச் சரணடைந்து என்னையே பெறுகிறார்கள் –

———–

நிராளம்போ ₃ நிராஶஶ்ச நிர்மமோ நிரஹங்க்ருதி꞉ ।
மாமேவ ஶரணம் ப்ராப்ய தரேத் ஸம்ஸார ஸாக₃ரம் ॥ 13 ॥

என்னுடைய கைங்கர்யங்களையே செய்கிறவர்களாயும் -என்னையே பரமனாக நம்பியவராயும் -அதனால் சம்சாரத்தில் உண்டாகும் பய சோக வருத்தங்கள் தீர்ந்தவராயும் வேறொரு உபாயங்களை யுடையாதவராயும் -வேறொரு பயன்களை விரும்பாதவராயும் -அஹங்கார மமகாரங்கள் இல்லாதவராயும் என்னையே அடைந்தவர்கள் ஸம்ஸாரக் கடலைக் கடக்கிறார்கள் –

பற்றிலார் பற்ற நின்றானே -அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கம் -கைவளையும் மேகலையும் காணேன் -கண்டேன் கன வளையும் நான்கு தோளும்

—————

ஸத் கர்மநிரதா ꞉ ஶுத்₃தா ₄꞉ ஸாங்க்₂ய யோக₃வித₃ஸ்ததா ₂ ।
நார்ஹந்தி ஶரணஸ் த₂ஸ்ய கலாம் கோடிதமீமபி ॥ 14 ॥

கர்ம யோகத்தை அனுஷ்ட்டித்து அதனால் பரி சுத்தமாக இருப்பவர்களும் ஞான யோகத்தை அனுஷ்டித்தவர்களும் இச்சரணா கதியை அனுஷ்டித்த ப்ரபன்னர்களின் மஹிமையில் கோடியில் ஒரு அம்சத்தைக் கூடப் பெறத் தக்கவர்கள் ஆகார்கள் –

————-

உபாயாதி₄க்ருதஸ்யாபி ப₄வேது₃த்தர பூர்வ யோ ꞉ ।
அஶ்லேஷஶ்ச விநாஶஶ்ச புண்ய பாப மயாக₄யோ꞉ || 15 |

உபாயத்தை அனுஷ்டித்தவரான ப்ரபன்னருடைய உத்தராகங்களும் -பிரபத்தி செய்த பின் அபுத்தி பூர்வகமாகச் செய்த பாபங்களும் -பூர்வாகங்களும் நசித்து விடுகின்றன -பிரபத்தி செய்த பின்னர் புத்தி பூர்வ ஆகங்களோ என்னில் மேற் சொல்லப்பட்டு இருக்கும் ப்ராயச் சித்தங்களினால் தீர்ந்து விடுகின்றன –

புகுதறுவான் நின்றனவும் -உத்தர -அஸ்லேஷம் -தாமரை இலைத்தண்ணீர் போல் ஒட்டாமல் போகும்
போய பிழையும் -பூர்வ -விநாஸம் -தீயில் இட்ட பஞ்சு போல் ஆகும்

———

ப்ராரப்₃த₄தே₃ஹ போ₄க்₃யம் து விநா த்₃ருப்தஸ்ய நஶ்யதி ।
பூர்வாக₄முத்தராக₄ம் து மதி பூர்வம் மஹத்தரம் || 16 ||

ஆதே₃ஹ பதநாத்₃வ்ருத்தம் அநுதாப விவர்ஜிதம் ।
யத்தத்₃விநைவா(அ)ஶ்லேஷஸ் ஸ்யாத் அந்யஸ் யாக₄ஸ்ய யுக்தித꞉ ॥17॥

திருப்த ப்ரபன்னர் ஒழிந்த மற்றப் ப்ரபன்னர்களின் பூர்வாகங்களில் -பிராரப்த கர்மங்கள் ஒழிய மற்றைய கர்மங்கள் நசித்து விடுகின்றன -உத்தராகங்களில் புத்தி பூர்வமாய் செய்யப் பட்டவைகளாயும் -தேஹம் இருக்கும் அளவும் ஒழியாதவைகளாயும் -அனுதாபாதிகள் பிறவாதவைகளாய் இருக்கும் கர்மங்கள் ஒழிய மற்ற அபுத்தி பூர்வாகங்கள் கழிந்து விடுகின்றன என்று யுக்தியால் ஏற்படுகின்றது-

————-

அயமர்தோ₂ ப₄க₃வதா ஸ விஸேஷ முதீ₃ரித꞉ ।
“உபாய ப₄க்தி꞉ ப்ராரப்₃த₄ வ்யதிரிக்தாக₄ நாஶிநீ ॥ 18 ॥

ஸாத்₄ய ப₄க்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்₃த₄ஸ்யாபி பூ₄யஸீ” ।
உபாய ப₄க்தி ரித்யுக்தோ ப₄க்தியோகோ ₃ஹி ஸாங்க₃க꞉ ॥ 19 ॥

இவ்வர்த்தம் பகவானால் விவரித்துச் சொல்லப்பட்டு இருக்கின்றன –
உபாய பக்தி பிராரப்த கர்மங்களை ஒழிந்த மற்ற கர்மங்களைப் போக்கி விடும் -ஆகையால் உபாய பக்தியைக் காட்டிலும் ஸாத்ய பக்தி ஸ்ரேஷ்டம் –

பகவான் அருளிச் செய்தவற்றை இரண்டரை ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் -சாங்கமாக இருக்கும் பக்தி யோகம் உபாய பக்தி யோகம் என்று சொல்லப் படுகின்றது -அது அநேக ஜென்மங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராரப்த கர்மங்களைப் போக்க மாட்டாது

———–

ப₃ஹு தே₃ஹ நிமித்தம் ஹி ப்ராரப்₃தா₄க₄ம் ந நாஶயேத் ।
ஸாத்₄ய ப₄க்திரிதி ப்ரோக்தா ப்ரபத்திர் மோக்ஷ ரூபிணீ ॥ 20 ॥

மோக்ஷ ரூபமாக இருக்கும் இப்பிரபத்தி ஸாத்ய பக்தி என்று சொல்லப் படுகிறது -பக்தி யோகத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமாக இருக்கும் இப்பிரபத்தி ஆர்த்த ப்ரபன்னர்களின் விஷயத்தில் பிராரப்த கர்மங்களையும் போக்கி விடும் –

————-

ஆர்தாநாம் பூ₄யஸீ ஸா(அ)பி ப்ராரப்₃த₄மபி நாஶதயத் ।
ப்ராரப்₃த₄தே₃ஹபோ₄க்₃யம் து த்₃ருப்தஸ்யாக₄ம் ந நாஶயேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி திருப்த ப்ரபன்னர்களின் பிராரப்த கர்மங்களுக்குப் பயனாகக் கிடைத்து இருக்கும் தேஹத்தினால் அனுபவிக்கத் தக்கவைகளான அக்கர்மங்களைப் போக்க மாட்டாது –
ஆர்த்த ப்ரபன்னர் திருப்த ப்ரபன்னர் இவர்களின் லக்ஷணங்கள் ஸ்வரூப பத்ததியில் -27-38 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளன –

————-

ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ப₄க்தி யோகா₃த்₃ விமுச்யதே ।
ப்ராரப்₃த₄ கர்ம நிர்மோகே ப₃ஹு ஜந்மோபபோ₄க₃த꞉ ॥ 22 ॥

மேற் சொல்லிய அர்த்தங்களுக்கு இக்கிரந்த கர்த்தா கீழ் சொல்லும் ஸ்லோகங்களினால் தமது ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
அநேக ஜன்மங்களின் அனுபவத்தால் பிராரப்த கர்மங்கள் கழிந்தால் பக்தி யோகத்தால் பக்தர்கள் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார்கள் –

————–

கர்மணஶ் ஸோக ஹேதோஸ் த்வாம் மாேக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ।
ஏவம் ப₄க₃வதோக்தத்வாத் ஏதத்₃தே₃ஹே (அ)பி ஸோசநாத் ॥ 23 ॥

ஆர்தஸ்ய ஸத்₃யோ முக்தி꞉ ஸ்யாத் ப்ரபத்திர் பூ₄யஸீ யத꞉ ।
த்₃ருப்த꞉ ப்ராரப்₃த ₄தே₃ஹாத்து ந ஸோசதி யத꞉ ஸ்வயம் ॥ 24 ॥

உன் வ்யஸனத்திற்குக் காரணமாக இருக்கும் ஸர்வ கர்மங்களின் நின்றும் உன்னை விடுக்கின்றேன் என்று சரம ஸ்லோகத்தில் பகவான் அருளிச் செய்திருப்பதால் -இவ்வார்த்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்திலும் சோகமுடையவராக இருப்பதாலும் -இவர் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தி திருப்த ப்ரபத்தியைக் காட்டிலும் அதிக ஆர்த்தியோடு கூடியதால் ஸ்ரேஷ்டமாக இருப்பதாலும் இவ்வார்த்த ப்ரபன்னருக்கு இப்பிரபத்தியை அனுஷ்டித்த உடனே மோக்ஷம் கிடைக்கும் –

————-

தே₃ஹாந்தே முச்யதே ஸைஷா மாேக்ஷ கால வ்யவஸ்தி₂தி꞉ ।
ஸோ (அ)யம் ஶ்ரிய꞉ பத்யுரந்தர் ஹ்ருத₃யாம் போ₄ஜவாஸிந꞉ || 25 ||

திருப்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்தில் சோகம் இல்லாதவராக இருப்பதால் இவர் தேஹ அவசானத்தில் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார் -இது தான் திருப்த ப்ரபன்னருக்கும் ஆர்த்த ப்ரபன்னருக்கும் கிடைக்கும் மோக்ஷத்திற்கு வியவஸ்தையாக இருக்கின்றது –

————

ப்ரஸாதே₃நைவ ஸுஸுக₂ம் நாடீ₃ம் பி₄த்வா ஶதாதி₄காம் ।
ஸத்₃யஸ்த யோர்த்₄வ முத்க்ரம்ய க₃த்வா தான் ஆதி வாஹிகான் ॥ 26 ॥

அர்சிராதீ₃ன் ஸ தைர்நீத꞉ ப்ரீதியுக்தை ꞉ பதே₃பதே₃ ।
அமாநவ கர ஸ்பர்ஶாத் ஸூக்ஷ்ம தே₃ஹம் விஸ்ருஜ்ய ச ॥ 27 ॥

விரஜாம் மநஸா தீர்த்வா ப்₃ரஹ்ம க₃ந்தா₄தி₃ளாஞ்சி₂த꞉ | ஸாலோக்யமத₂
ஸாரூப்யம் ஸாமீப்யம் ச க்ரமாத்₃வ்ரஜேத் ॥ 28 ॥

ஸாயுஜ்யம் சாதி₄க₃ச்சே₂த ப்₃ரஹ்மணா ஸஹ ஸர்வஶ꞉ ।
அநு ஸஞ்சரந் நிமான் லோகான் காமாந் நீ காம ரூப்யபி ॥ 29 ॥

இப்பிரபன்னர் தமக்கு நேரும் நிர்ணய காலத்தில் தமது ஹ்ருதயத்தில் மத்யத்தில் வஸிக்கும் பகவானுடைய திருவருளால் நூற்று ஓராவது நாடியான ஸூஷும்நா நாடியைப் பிளந்து அதனால் வெளிப்புறப்பட்டு அக்னி முதலிய ஆதி வாஹிகர்களை அடைந்து மிகவும் அன்புடன் கூடிய அவர்களினால் அடிக்கடி மரியாதை செய்து அழைத்துக் கொண்டு போகப்பட்டவராய் -அமானவர் என்னும் நித்ய ஸூரியின் கர ஸ்பர்சத்தால் தமக்கு அப்பொழுது உண்டாயிருக்கும் ஸூஷ்ம தேஹத்தை கழித்து விட்டு -பிராகிருத மண்டலத்துக்கு எல்லையாய் இருக்கும் விரஜை என்னும் ஓர் நதியை தம்முடைய ஸங்கல்பத்தினால் தாண்டி பர ப்ரஹ்மத்தின் திருமேனியில் உள்ளவைகளான திவ்ய கந்தங்களை அணிந்தவராய் வரிசையாக
முதலில் ஸா லோக்யத்தையும்
பின்பு ஸா ரூப்யத்தையும்
பின்பு ஸா மீப்யத்தையும் அடைந்து
இறுதியில் ஸா யுஜ்யத்தையும்
அடைகிறார் –
இவ்வாறு அப் ப்ரஹ்மத்துடன் ஸர்வ விதத்தாலும் அவன் குணங்களைச் சேர்ந்து அனுபவித்து கைங்கர்யங்களைச் செய்து அவனைப்போலவே ப்ரீதி அடைகிறார்

ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே –ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை-அவனுடன் சேர்ந்தே அனுபவிக்கிறோம்

———

ஸாம கா₃யன் கிங்குருதே ஸூரிபி₄ஸ் ஸஹ ஸர்வதா ₃ ।
யத்₃வா(அ)ர்சிராதி₃மார்கே₃ண விளம்ப₃ மஸஹந்நிவ ॥ 30 ॥

இவ்வாறு பர ப்ரஹ்மத்துடன் ஸா யுஜ்யத்தை அடைந்த முக்தர் தாம் ப்ரஹ்ம ஆனந்த அனுபவம் யுள்ளவராய் தாம் நினைத்தபடி ஓர் ரூபத்தை எடுத்துக் கொண்டு நித்ய ஸூரிகளோடு இவ்வுலகம் எல்லாம் திரிந்து கொண்டும் ஸாம கானத்தால் பகவானுக்கு ஸர்வ காலமும் கைங்கர்யங்கள் செய்து கொண்டும் இருப்பர் –

அப்படிக்கு இல்லாமலும் பகவான் ப்ரபன்னருக்கு அர்ச்சிராதி மார்க்கத்தால் உண்டாகும் கால விளம்பத்தை ஸஹியாதவராய் அந்த மார்க்கம் அன்றியிலே அவரைத் தம் இஷ்டப்படி மோக்ஷத்தில் சேர்ப்பிக்கிறார் என்றும் வேதங்களில் சொல்லப்படுகின்றது –

————-

ப்ரபந்நம் ஹரதி க்ஷிப்ரம் யதே₂ஷ்டமிதி ச ஶ்ருதம் ।
மஹா வராஹோ ப₄க₃வா நேதத் ஸம்வாத₃கம் வச꞉ ॥ 31 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பிரான் பூமிப் பிராட்டி கேட்டிருக்கும் சமயத்தில் மேற் சொல்லிய சங்கதியுடன் ஓத்ததான திரு வாக்கை அருளிச் செய்துள்ளார் –

————

யதா₃ஹ தே₃வ்யாம் ஶ்ருண் வந்த்யாம் பூ₄ம்யாம் ப்ரவத₃தாம் வர꞉ ।
ஸ்தி₂தே மநஸி ஸுஸ்வஸ்தே₂ ஶரீரே ஸதி யோ நர꞉ ।
தா₄து ஸாம்யே ஸ்தி₂தே ஸ்மர்தா விஶ்வ ரூபம் ச மாமஜம்
॥ 32 ॥

ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட₂பாஷாண ஸந்நிப₄ம் ।
அஹம் ஸ்மராமி மத்₃ப₄க்தம் நயாமி பரமாம் க₃திம் ॥ 33 ॥

மஹா வராஹப் பெருமான் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார்
நோய் முதலிய தேஹ பீடைகள் இல்லாமல் ஸம தாதுவான தேஹத்துடனும் -தெளிந்த மனத்துடனும் – கூடியிருக்கும் சமயத்தில் யார் ஒருவர் விஸ்வ ரூபனாயும் பிறப்பிலியாயும் இருக்கும் என்னை ஸ்மரிக்கிறாரோ -பின்பு மரணம் அடையும் ஸமயத்தில் கட்டையைப் போலும் கல்லைப் போலும் நினைப்பில்லாமல் இருக்குமவரை நான் ஸ்மரிக்கிறேன் -அவரை உத்தம கதியிலும் சேர்ப்பிக்கிறேன்

————-

யதா ₃கதா₃சித் வாதாதி₃ தா₄து ஸாம்யாத் அரோக₃த꞉ ।
மநஸ்தி₂ திஸ் ஸம்ப₄வதி ய꞉ கஶ்சித்து ததா ₃ நர꞉ || 34 ॥

ஸ்மரேத் ஸ்வாமித்வ ஸௌஶீல்ய வாத்ஸல்யாதி₃ மஹாேத₃தி₄ம் ।
அவதீர்ணம் வராஹம் மாம் ஶ்ரியா தீ₃ப்த கு₃ணைர் யுதம் ॥ 35 ॥

நாராயணம் விஶ்வரூபம் அஜம் இச்சா₂த்த விக்₃ரஹம் ।
ஶ்ரீமந் நாராயண ஸ்வாமின் ! அநந்ய ஶரணஸ்தவ ॥ 36 ॥

சரணவ் ஶரணம் யாத꞉ இதி மாம் யஸ் ஸ்மரேத் ஸக்ருத் ।
ததஸ்த மித ரோபாய வ்யவதா ₄ந விவர்ஜிதம் ॥ 37 ॥

தத ₃வஸ்த₂ம் ம்ருதி ப்ராப்தவ் காஷ்ட₂ பாஷாண ஸந்நிப₄ம் ।
காஷ்ட₂ வத்து ஸ்வதோ தே₃ஹே மநஶ் ஸேஷ்டா விவர்ஜிதம் ॥ 38 ॥

பரப்ரபோ₃தா₄ஸஜ்ஞம் து விளுப்தஹ்ருத₃யம் தத ꞉ ।
ஆத்மவத் ஸ்வய மந்யைஶ்ச ஹித ஸ்மரண வர்ஜிதம் ॥ 39 ॥

எப்பொழுதாவது ஒருக்கால் தேஹத்தில் ரோகம் முதலிய உபாதிகள் இல்லாமல் இருக்கும் போது வாத பித்தாதி தாதுக்கள் சமமாக இருக்கும் ஸமயத்தில் மனம் தெளிந்து ஸ்திரமாக இருக்கச் செய்தே யாவன் ஒருவன் ஸ்வாமியாகவும் ஸுசீல்யம் வாத்சல்யம் இவை முதலிய கல்யாண குணங்களுக்கு கடலாகவும் வராஹ ரூபியாக அவதாரம் செய்கிறான் என்றும் -ஸ்ரீ மஹா லஷ்மியினால் விளங்குபவராயும் பின்னும் அநேக மங்கள குணங்களோடு கூடியவராயும் -இப்பிரபஞ்சத்தையே ரூபமாக யுடையவராயும் -பிறப்பில்லாமல் இருக்கச் செய்தேயும் எனது இச்சையால் அநேக திவ்ய தேஹங்களோடே கூடியவராயும் இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான என்னை
வாரீர் ஸ்ரீ மன் நாராயணனே -ஸ்வாமியே -யான் வேறு ஒரு கதியில்லாதவனாக உமது திருவடிகளை சரணம் அடைந்தேன் என்று நினைக்கிறாரோ -பின்பு வேறொரு உபாயத்தினால் இன்றியிலே அப்பிரன்ன நிஷ்டையிலேயே இருப்பேன் என்றும் நினைக்கும் அவர் மரண அவஸ்தையில் காஷ்ட பாஷாணங்களோடே சமானராக இருக்கும் -கட்டை போல் மனதில் உணர்வு இல்லாதவராயும் உடலில் அசைவு இல்லாதாராகவும் -பிறர் தெரிவிக்கிலும் அறிவு இன்றியிலே மனம் இழந்தவராயும் -அப் பொழுது தம்முடைய நன்மையைத் தாம் அறியாது இருக்குமா போல் அங்கிருக்கும் சுற்றத்தார்களான பிறருக்கும் தம்முடைய நன்மை தோன்றாமல் இருக்கும் படியான துர் அவஸ்தையுடன் கூடியவராயும் இருக்கும் ஸமயத்தில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களுக்கு சித்தியை யுண்டாக்குவதற்காக விழித்து இருக்கும் நான் என் பக்தர்களை ரக்ஷிப்பதில் மனம் யுடையோன் ஆகையால் அவர்களை நான் ஸ்மரிக்கிறேன்

——————–

ஆஶ்ரிதேஷு ப்ரஸுப்தேஷு புருஷோ யோ வ்யவஸ்தி₂த꞉ ।
காமம் காமம் நிர்மமாண꞉ தேஷாம் ஜாக₃ர்தி ஸித்₃த₄யே ॥ 40 ॥

ஸோஹமாஶ்ரித தந்த்ராத்மா ஸ்மராமி ச ததா ₃ ஸ்வயம் ।
இமம் மத்₃போ₄க₃யோக்₃யம் து க்ருபா பூர ப்ரகாஶநாத் ॥ 41 ॥

நயாமி பரமம் ஸ்தா₂நம் அர்சிராதி₃க₃திம் விநா ।
க₃ருட₃ஸ்கந்த₄மாரோப்ய யதே₂ஷ்ட மநிவாரித꞉ ॥ 42 ॥

நான் அனுபவிக்கும் திவ்ய போகங்களை அனுபவிப்பதற்குத் தக்கவராய் இருக்கும் இவரை இவரிடத்தில் எனக்கு உண்டாய் இருக்கும் கிருபையை வெளிப்படுத்துவதால் அர்ச்சிராதி மார்க்கத்தால் போவதால் உண்டான கால விளம்பமும் இன்றிக்கே என் இஷ்டப்படி கருடாழ்வான் தோளில் மேல் ஏற்றி யாதொரு தடையும் இன்றிக்கே உத்தம கதியான என் பதத்தைச் சேர்ப்பிக்கிறேன்

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

———-

ஏதத் ப்ரபா₄வயுக்தஸ்ய ப்ரபந்நஸ்ய து பார்ஶ்வத꞉|
அபயாந்தி த்₃ருதம் பீ₄தா ꞉ பாஶிநோ யம கிங்கரா꞉ || 43 ||
அயம் ந கஸ்யசித்₃ப்₄ருத்ய꞉ பராஶர ஶுகௌ யதா₂ ॥ 44 ॥

இவ்விதப் ப்ரபாவத்தோடே கூடிய ப்ரபன்னர்களின் பக்கங்களிருந்து பாஸ ஆயுதங்களோடு கூடிய யம கிங்கர்கள் பயந்தவர்களாக ஓடிப் போகிறார்கள்

இப்பிரபன்னர் பகவானை ஒழிந்த வேறு ஒருவருக்கும் கீழ்ப் பணிந்தவர் அன்று
இவ்வாறே பராசர முனிவரும் சக முனிவரும் அருளிச் செய்துள்ளார்கள்

———-

ஸ்ரீ விஷ்ணுபுராணே –
ஸ்வ புருஷமபி₄வீக்ஷ்ய பாஶ ஹஸ்தம் வத₃தி யம꞉ கிலம் தஸ்ய கர்ணமூலே ।
பரி ஹர மது₄ஸூத₃ந ப்ரபந்நான் ப்ரபு₄ரஹ மந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்
॥ 45 ॥

யமதர்ம ராஜன் பாஸ ஆயுதத்தைக் கையில் பிடித்திருக்கும் தன்னுடைய கிங்கரர்களைப் பார்த்து அவன் செவியில் ரஹஸ்யமாகச் சொல்லுகிறான்
வாரீர் கிங்கரரே -பகவான் இடத்தில் பிரபத்தி செய்திருக்கும் பாகவதர்களைப் பரிஹரித்து விடுங்கள் -நான் வைஷ்னவர்கள் ஒழிந்த மற்றப் பிராணிகளுக்குப் பிரபுவே ஒழிய வைஷ்ணவர்களுக்கு பிரபு அன்று –

ஸத்யம் ப்₃ரவீமி மநுஜா꞉ ஸ்வய மூர்த்₄வ பா₃ஹு꞉ யோ மாம் முகுந்த₃ நரஸிம்ஹ ஜநார்த ₃நேதி ।
ஜீவோ ஜபத்யநுதி₃நம் மரணே ப்ய்ருணீவ பாஷாண காஷ்ட₂ஸத்₃ருஶாய த₃தா₃மி மாேக்ஷம் ॥

——

ஶ்ரீபா₄க₃வதே –
தே₃வர்ஷி பூ₄தாத்ம ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜன் ।
ஸர்வாத்மநா ய꞉ ஶரணம் ஶரண்யம் நாராயணம் லோக கு₃ரும் ப்ரபந்ந
꞉ ॥46॥

ஸர்வ லோகங்களையும் ரக்ஷிக்கத் தக்கவராயும் ஸர்வ லோகங்களுக்கும் பிதாவாகவும் இருக்கும் ஸ்ரீ மந் நாராயணனை எவர் ஸர்வ பிரகாரங்களாலும் சரணம் அடைந்திருக்கிறாரோ அந்தப் பிரபன்னர் தவர்கள் ரிஷிகள் பூதாத்மாக்கள் பித்ருக்கள் இவர்களுக்கு கிங்கரரும் அன்று -கடனாளியும் அன்று

——

உப ஸம்ஹார꞉ –
த்ரை யந்த ஸ்ம்ருதி முக்₂ய ஸந்முநிவச꞉ ஶ்ரீபாஞ்சராத்ராசல ஷோதை ₃꞉
ஸங்க₄டித꞉ ப்ரபந்நசரித꞉ க்ஷீராப்₃தி₄ஸேதுர் மஹான் ।
யே வாஞ்ச₂ந்த்ய முநா பதா ₂(ஆ)ப்துமசிராத் பாரம் ப₄வாம் போ₄நிதே₄꞉
தே பூர்வோத்தர பாப கர்ம நிசயை ꞉ முக்தா விமுக்தா ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 47 ॥

ப்ரபன்னர்களின் சரித்ரங்களாகிற பாற் கடலில் வேதாந்த ஸாஸ்திரம் ஸ்ம்ருதி முதலிய ரிஷிகளின் வசனங்கள் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரம் இவைகளாகிற மலைகளின் பொடிகளினால் -இக்கிரந்தத்த்தில் சொல்லப்பட்ட ப்ரபந்ந நிஷ்டையாகிற பெரிய அணை கட்டப்பட்டு இருக்கிறது -இவ்வணையால் எவர் ஸம்ஸாரக் கடலின் கரையை சீக்கிரத்தில் அடைய விரும்புகிறார்களோ அவர்கள் மேல் சொல்லப்பட்டு இருக்கும் பூர்வாகங்கள் -உத்தராகங்கள் இவற்றின் நின்றும் நீங்கியவராய் முக்தர்களாகி விடுவார்கள் என்று ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது –

——-

கார்பண்யாசிதப₃த்₃த₄ மூலப₂ லகா விஶ்வாஸ கீலாசிதா
யாச்நா ப₃ந்த ₄நரஜ்ஜுக்ருஷ்டி வஶகா₃ நிஷேப ஸங்ஷேபணி꞉ ।
ஸம்ஸாரார்ணவ தாரிணீ தநுப்₄ருதாம் ந்யாஸாத்மநவ் ꞉ தாமிமாம்
அர்ச்சி₂த்₃ராமத₂ பாரயிஷ்ணுமப₄யா꞉ ஸத்₃யோ (அ)தி₄ரூடா₄ ஜநா꞉ || 48 ||

பிரபத்தியை ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிக்கும் ஓடமாக நிரூபிக்கிறார் -அதாவது கார்ப்பண்யத்தோடு கூடிய -(கார்ப்பண்யம் -வேறொரு கதி இல்லாமையால் உண்டாகும் மன இரக்கத்தால் )-புத்தியாகிய அடிப்பலகைகளோடு கூடியதாகவும் -மஹா விசுவாசமாகிற ஆணிகளினால் பிணையப்பட்டதாகவும் -பிரார்த்தனை யாகிற அதில் கட்டிய கயிற்றின் வசமாய்ப் போகத் தக்கதாயும் -பர ஸமர்ப்பணமாகிற ஓர் துடுப்போடே கூடி யதாயும் இருக்கிற ந்யாஸ வித்யை என்ற பெயர் பெற்று இருக்கும் இப்பிரபத்தியாகிற ஒடமானது இப்பிராணிகளின் ஸம்ஸாரக் கடலைத் தாண்டி வைக்கத் தக்கதாக விளங்குகிறது -ஸந்தேஹம் இல்லாமல் கரை சேர்க்கத் தக்கதாயும் இருக்கிறது -இவ்வோடத்தை பயமில்லாதவர்களாய் ஸத்துக்கள் ஏறினார்கள் –

——-

அஸேஷா பேக்ஷிதம் யத்ர பரிதோ ஜாயதே ஸதாம் ।
ப்ரபந்ந பாரிஜாதாக்₂ய꞉ ப்ரப₃ந்த₄꞉ கதி₂தோ பு₄வி ॥

உலகில் ப்ரபன்னர்கள் அபேக்ஷிக்கும் ஸகல அர்த்தங்களையும் தெரிவிக்கின்ற ப்ரபந்ந பாரிஜாதம் என்னும் இக் க்ரந்தம் வரதகுரு என்னும் ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டது –

————–

இதி ஶ்ரீவாத்ஸ்ய வரதா₃சார்ய மஹா கு₃ருபி₄ரநுக்₃ருஹீதே
ப்ரபந்ந பாரிஜாதே ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ ஶ்ரீமத்₃வரத₃மஹா
கு₃ரு தி₃வ்ய சரண நலிநே ஏவ ஶரணம்

—————————————————-

சுத்த குண விட்டு சித்தன் சுடர் அடியோன் வாழியே
ஸ்ருதப் பிரகாசிகையைச் சொல்லி வைத்தோன் வாழியே
தத்வ ப்ரமேயத்தின் தரம் அறிந்தோன் வாழியே
புத்தி மிகு சாரார்த்த சதுஷ்டயத்தோன் வாழியே
புகழ்ப் பாடியப் பொருளை புதர்க்களிப்போன் வாழியே
சித்திரையில் சித்திரை நாள் கச்சி வந்தோன் வாழியே
சீராரும் அம்மாள் தன் சேவடிகள் வாழியே

திங்கள் போன்ற திருமுகம் வாழியே
திருமங்கை காப்புத் திகழ் நெற்றி வாழியே
தொங்கு முப்புரி நூல் மார்பு வாழியே
தோன்று இலச்சினைத் தோள் மிக வாழியே
தனக்கு கோசம் விளங்கு கை வாழியே
தாங்கு சின் முத்ரை விரல் வாழியே
பொங்கு வத்ஸ குல வரதாரியன்
பொன் மலர்ப்பாதம் வாழியே வாழியே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரின் ஸ்ரீ மடிபிடி ரகஸ்யம்

December 1, 2024

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று ஸ்ரீ முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

பாசுரத்தை கேட்டு இவர் கால்வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச்சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

கால் வாசி அறிந்தவர்
லீலா விபூதி அறிந்தவர் -த்ரிபாத் விபூதி அறிய வேண்டியவர்
திருவடி வைலக்ஷண்யம் அறிந்தவர் திவ்ய மங்கள விக்ரஹ வைலக்ஷண்யம் அறிய வேண்டுபவர்

ஆழ்வார் திருமுடியில் அசைந்தாடும் பூ மாலைகளை சூடி இருப்பதைக் கண்ட மா மதலைப் பிரான்
ஆஹா அவற்றின் மீது புனுகுத் தைலம் பரிபூர்ணமாக கோருவது போல் நமது திருவடிகளை சிரம் மீது வைக்கப் புகுந்தான்

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம் கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

அவர்கள் எங்கே உளர்-இருள் தரும் மா ஞானத்தில் அன்றோ இவர்கள் இருப்பது என்ன- என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-2-6-4—விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே வாடினேன் வாடி என்று-நம்மைக் கவி பாட என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜ புருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை
விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் வைபவம் /ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

September 16, 2024

திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம்

அவதார ஸ்தலம்: திருவரங்கம்

ஆசார்யன்: வடக்குத் திருவீதிப் பிள்ளை

ஶிஷ்யர்கள்:  கூர குலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப் பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட் குழி ஜீயர், திருக் கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்.

பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)

அருளிச் செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

நம்பிள்ளையின் திருவருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்குத் திருவரங்கத்திலே திருக்குமாரராய் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர். அயோத்தியில் பெருமாளும் இளையபெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட் பார்வைக்கும் வழி காட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றை பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது திருத் தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச் சிறப்பு யாதெனில் இவ் விருவரும் தங்கள் வாழ் நாளில் நைஷ்டிக ப்ரஹ்ம சர்யம் அனுட்டிக்கப் போவதாய் ஶபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .

ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் ஶிஷ்யனுக்கு உபதேஶிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் ஶிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேஶித்து வந்தார். மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப் பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேஶங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேஶங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேஶங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்

யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதஶையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்)  திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேஶிக்குமாறு உத்தர விடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாஶாஸனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும்  உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .

நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருமவை மிக முக்கியமானவை .

  • முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா  மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை  எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் . 
  • தத்வ த்ரயம்  – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது.  பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது . 
  • ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் –  ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து  ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் . 

நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணர வேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ் வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணி ப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன்  ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேரிரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.

ப்ரமாண ரக்ஷணம் செய்ததோடன்றி ப்ரமேய ரக்ஷணமும் செய்து கொடுத்த வள்ளல் இவரே. திருவரங்கத்தில் அனைத்தும் நலமாக நடந்து வந்து கொண்டிருக்கும் வேளையிலே தான் திடீரென்று துலுக்கர்களின் படையெடுப்பு செய்தி காட்டுத் தீ போல் பரவியது. கோயில்களிலே இருக்கும் செல்வங்களை சூறையாடும் துலுக்க மன்னர்களின் போக்கை அறிந்தவர் அனைவரும் இச் செய்தியை அறிந்து துன்புற்று நிற்க, அக்காலத்தின் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் எழுந்தருளி இருந்த பிள்ளை உலகாரியர் அரங்கனை காக்கும் திருப் பணியில் ஈடுபட்டார். பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு , இவர் உத்ஸவ பேரரான நம்பெருமளுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டார். தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது நம்பெருமாளுடன் இவர் பயணமானார். காடுகள் வழியாக நம்பெருமாள் எழுந்தருளிச் செல்லும் போது  சில திருடர்கள் நம்பெருமாளின் திருவாபரணங்களை திருடினர். சற்றே முன்னே சென்று கொண்டிருந்த பிள்ளை லோகாசாரியர் இதனைச் செவியுற்று வந்து திருடர்களுக்கு நன்மையை போதித்து அவர்களைத் திருத்திப் பணி கொள்ள, அவர்களும் சரணடைந்து பெருமாளின் திருவாபரணங்களை மீளவும் ஸமர்ப்பித்தனர்.

மதுரையில் ஆனை மலைக்குப் பின்புறம் உள்ள ஜ்யோதிஷ்குடி என்ற சிறு க்ராமத்தைச் சென்றடையும் நேரத்தில், வயோதிகத்தால் திரு நோவு சாற்றிக் கொண்ட பிள்ளைலோகாசாரியர், திருநாட்டிற்கு எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.அச் சமயம் பிள்ளை லோகாசாரியர் தனது சீடர்களில் ஒருவரான திருமலை ஆழ்வாரை நினைத்து, அவரே தமக்கடுத்து ஸம்ப்ரதாய தலைவர் ஆக வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். கூர குலோத்தம தாஸர் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களை அழைத்து, திருமலை ஆழ்வாரை அவரது அரசாங்க பணியிலிருந்து விடுவித்து தரிஶன ப்ரவர்த்தகர் ஆகும் படிக்குத் திருத்திப் பணி கொள்ளுமாறு நியமித்தார். இறுதியாய் தனது சரம திருமேனியை துறந்து இன்பமிகு விண்ணாடு என்று போற்றப்படும் பரமபதத்தை அலங்கரித்தார்.-ஜ்யோதிஷ்குடி – பிள்ளை உலகாரியன் பரமபதம் அடைந்த இடம்

பிள்ளை உலகாரியன் மற்றும் சீர் வசன பூஷண ஶாஸ்த்ரத்தைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு விஶதவாக் ஶிகா மணியான மணவாள மா முநிகள் உபதேஶ ரத்தின மாலையை அருளினார். இதில் மணவாளமாமுநிகள் ஆழ்வார்கள் திருவவதார விஷயமாகவும், ஆசார்யர்கள் திருவவதார விஷயமாகவும், ஆசை உடையோருக்கெல்லாம் ஸத் ஸம்ப்ரதாயத்தைத் திறந்து வைத்த எம்பெருமானாரின் பேரிரக்கத்தின் விஷயமாகவும் , திருவாய்மொழி வ்யாக்யானங்களின் திருவவதார விஷயமாகவும் விளக்கி, பின்னர், பிள்ளை உலகாரியரின் திருவவதாரம் விஷயமாய் ஸாதிக்கத் துவங்கி, சீர் வசன பூஷணத்தின் பெருமைகள் மற்றும் அது கொண்டுள்ள சீரிய அர்த்தங்களின் பெருமைகள் தனை விளக்கி, இறுதியாய், அவ்வர்த்தங்கள் காட்டும் பாங்கிலே நாம் வாழ வேண்டும் என்றும் அவ்வாறாக வாழ்ந்தோமே ஆனால், எந்தை எதிராசரின் (எம்பெருமானாரின்) இன்னருளுக்கு இலக்காகுவோம் என்றும் உபதேஶிக்கிறார். மேலும் பூர்வாசார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் மீது நம்பிக்கை வைக்காது , நம் புரிதலை கொண்டும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் நாமாகவே இவை தான் அர்த்தங்கள் என்று உரைக்க முற்பட்டால், நாம் மூர்க்கர் என்று ஆவோம் என்று ஸாதிக்கிறார். மூர்க்கர் போன்ற அப ஶப்தங்களை ஒரு போதும் உபயோகிக்காத அழகிய மணவாளமாமுநிகளே இவ்வாறாக ஸாதித்துள்ளார் என்றால், பூர்வர்களின் நிலைக்கு மாறாக நடப்பது அத்தனை பெரிய குற்றம் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். இதுவே ஸ்ரீ வசன பூஷணத்தின் ஸாரம் என்றும் பெரிய ஜீயர் தனது அரிய உபதேஶ ரத்தின மாலை பிரபந்தத்தில் எடுத்துக் காட்டுகிறார் .

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளுவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .

ஸ்ரீ வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் உபகார ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் விசுவாசத்துடன் பிள்ளை லோகாசாரியர் இடத்தில் இருத்தல் வேண்டும். பிள்ளை உலகாரியன் இல்லையேல், நம்பெருமாளையோ எம்பெருமானார் தரிசனத்தின் ஆழ்பொருள்களையோ  நாம் காணவே முடியாது .

எம்பெருமானார் திருவடிகளிலும் நம் ஆசார்யன் திருவடிகளிலும் மாறாத பக்தி ஏற்பட நாம் பிள்ளை லோகாசாரியர் திருவடிகளை வணங்குவோம்.

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் – 006 – உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல?

அயோத்தியில் பெருமாளும் இளைய பெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது தம்பி  அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட்பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றைப் பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலேயே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச்சிறப்பு யாதெனில் இவ்விருவரும் தங்கள் வாழ்நாளில் நைஷ்டிக ப்ரஹ்மசர்யம் அனுட்டிக்க போவதாகச் சபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .

சம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் கனவில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேசித்து வந்தார். ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். (இவனே பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று பெயர் சூட்டிக் கொண்டான்). கிபி 1321 ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.  

தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். இவனது வெறிகொண்ட படை வீரர்கள் கடந்து வந்த பாதை தோறும் சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப் பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோவில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்து போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும். சமயபுரம் என்று அழைக்கப் பெறும் கண்ணனூரில் கடுமையான போர் நிகழ்ந்தது.  

படையெடுப்பு என்பது ஒரு துயரவியல் நிகழ்வு.  அமைதியாய் வேதவாய் மொழி அந்தணர்களை வாழ்ந்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத துயரம்.  ஆக்கிரமிக்கும் படை –  ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், செல்வங்களையும் கவர்ந்து,  திருவரங்கம் வாழ் மக்களுக்கு சொல்லொணாத் துயரம் தருகிறது. அரங்கன் தங்கள்  குலதனம் என்று எப்போதும் வாழும்   ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் அரங்கனிடத்திலே தங்களை அர்ப்பணித்து கைங்கர்யம் செய்த தேவதாசிகள், செந்தமிழும் வேதமும் சிறப்புற அறிந்த கைங்கர்ய பரர்கள், அச்சமயத்தில் வாழ்ந்திருந்த  வேதாந்தாச்சார் மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் போன்றோர் பலர் சேர்ந்து அரங்கனை காப்பாற்றப் பாடுபடுகின்றனர்.  

பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டு எழுப்பிவிட்டு,  உற்சவரின் அதி சௌந்தர்யமான திருமேனியை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார்  சில வீரர்களுடன்,  சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார்.  

திருக்கோபுரத்து நாயனாரும், பிள்ளைலோகாசாரியரும் அவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடு பல்லக்கில் எழுந்தருளிப் பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள். காட்டு வழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்துச் சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். இவை எல்லாம் நடந்த கொடிய காலத்தில் உலகாரியருக்கு  தள்ளாடும் பருவம் – நூற்றை தாண்டி நாம் நடக்கக் கூட சிந்திக்கும் பிராயம்.   

தன் தள்ளாத வயதில், அரங்கன் மீது கொண்ட பிரேமையாலே பல நாட்களுக்குப் பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தைச்  சென்றடைந்தார்கள்.  வெறி பிடித்த அரக்க மனம் கொண்ட கொள்ளையர்கள் கூட்டம்  ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களைக் கொன்றதாகக் கோவில் ஒழுகு உரைக்கிறது.  இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.  

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118 ஆவது வயதில் உலகாரியர்  திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து மதுரை ஆனைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளி படுத்தி திருவரசு எழுப்பினார்கள்.  அப்படி உடன் சென்று உயிர் நீத்தேனோ உலகாரியனைப் போல என்கிறாள் திருவல்லிக் கேணி பெண்பிள்ளை.

திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம்  என சென்று, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துக்  திருப்பதிக்கு செல்கிறார்.  உலுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.

1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்த பிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்ய காலத்திற்குச் சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக் கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு).  

(பிள்ளை லோகாச்சாரியர் 1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் திருநாடு அடைந்ததாக வரலாறு குறிக்கிறது.  இதில் கால வேறுபாடுகள் வரலாற்றில் இருந்தாலும் நமது இந்துக்கள் வரலாறு முகலாயர் வரலாறு போல தெளிவாக எழுதப் பெறவில்லை.  சிலர் அவர் 1311 ஆம் ஆண்டு தமது 106ஆம் அகவையில் திருநாடு அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  அதில் இப்படிப் பல குழப்பங்களை அன்றைய வரலாற்று அறிஞர்கள் வேண்டும் என்றே எழுதி நம் இந்து குருமார்களின் பல சாதனைகளைச் சந்தேகிக்க வைத்து விட்டனர்.)

மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று பயிலத் துவங்கினார் , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு சம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதசங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேசங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கிப் பயணித்துக் காட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேசங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” (பெண் பிள்ளை வாக்கியம் 2ஐ இங்கு நினைவு கூர்க) என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.

யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதசையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்)  திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேசிக்குமாறு உத்தரவிடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாசாசனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும்  உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .

நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருபவை மிக முக்கியமானவை .

இவரின் பதினெட்டு படைப்புகள் பொதுவாக அஷ்டதச ரகசியம் என வைணவர்களால் அழைக்கப்படுகிறது. முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப்பட்டவகளை முதன்முறையாக எழுத்துக்களில் கொணர்ந்த பெருமை இவரையே சாரும். 

  • தத்துவத் திரயம் – வடமொழியில்
  • முமுக்‌சுப் படி – மணிப்பிரவாள நடையில்
  • வசன பூசணம் – தமிழில் வைணவம், ஆழ்வார்கள் குறித்து
  • முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா  மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை  எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் . 
  • தத்வ த்ரயம்  – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது.  பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது . 
  • ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் –  ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து  ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் . 

நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணரவேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ்வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணிப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன்  ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேர் இரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாட வேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:பிள்ளை லோகாசாரியரின் தனியன்: 

வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம் வாழி முடும்பை என்னும் மாநகரம்                      வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார்  இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.பிள்ளை லோகாசாரியரின் வாழி திருநாமம்:

———–

ஸ்ரீ லோகாச்சார்ய பஞ்சாஷத் —ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

—————————–

முதல் -10-ஸ்லோகங்களால் ஸ்ரீ ரெங்க நாதன் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ விஷ்வக் சேனர் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் /ஸ்ரீ பட்டர் / ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம் பிள்ளை / ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை /
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் / ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் -இவ்வாறு குரு பரம்பரை ஸ்தோத்தம் செய்து அருளி
11-ஸ்லோகம் தொடங்கி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை ஸ்லோகம் செய்து அருளுகிறார் –

காவேரி புலி நாந்தராள லஹரி கல்லோல மாலா லசித்
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ் நித்ரா நிபத்தாதரம்
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமலஜே நாராதிதம் ஸ்ரீ சகம்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத
–1–

காவேரி புலி நாந்தராள-ஸ்ரீ காவேரி மணல் திட்டிலே
லஹரி கல்லோல மாலா லசித் -சிறிய பெரிய அலைகளால் தீண்டப் பட்டு –
பர்யங்கீக்ருத பன்னகேஷ் வரதநவ்-திரு அனந்தாழ்வான் மேலே திருப் பள்ளி கொண்டு அருளி –
நித்ரா நிபத்தாதரம்-யோக நித்திரை செய்து அருளி
கஸ்தூரீ தில காஞ்சிதம் கமல ஜே நாராதிதம் ஸ்ரீ சகம் -ஸ்ரீ கஸ்தூரி திலகம் பூண்டு -சத்ய லோகத்தில் சதுர் புஜ பிரமனால்
ஆராதிக்கப் பட்டு -பெரிய பிராட்டியார் உடன்
வஸ்து ஸ்வீக்ருத கௌஸ்துபம் தீக்ஷது ந ஸ்வஸ்தி ப்ரஷஸ்தம் ஸ்வத –ஸ்ரீ கௌஸ்துபம் பூண்டு திரு ஆர மார்பன் –
ஸ்வ பாவிக -பராத் பரன் -நமக்கு அருளை பொழியட்டும் –

—————————-

நாத லோக பால நதியா மருத் வ்ருதா
புளிநம் ஜகாம நளிநம் விஹாய யா
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா
கருணா தரங்க விததீர பாங்க ஜா
–2-

நாத லோக பால நதியா மருத் வ்ருதா-புளிநம் -திருக் காவேரி மணல் திட்டின் மேலே -ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்துக்காகவே
ஜகாம நளிநம் விஹாயயா -தாமரை மலர் வாசம் விட்டு வந்து அருளி
மயி சா தரங்க யது ரங்கிண ப்ரியா-கருணா தரங்க விததீர் அபாங்க ஜா -ஸ்ரீ ரெங்கநாதன் மேலே அளவு கடந்த பிரியத்துடன் இருப்பவள்
கடாக்ஷித்து அருளும் அருள் அலைகள் நம்மிடம் வீசட்டும் –

—————————————–

யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ
ஸ்பந்தஸ் ஸூரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா
வைகுண்ட ஸூரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே
–3-

யத் பாணி பத்ம த்ருதந் காஞ்சன வேத்ர வல்லீ –தாமரைக் கரங்களில் -ஸ்வர்ண ஒளிமயமாக திருப் பிரம்பின்
ஸ்பந்தஸ் ஸூ ரேந்த்ர பய பஞ்சன லம்படாத்மா-சிறு அசைவாலேயே அசுரர்கள் நிரசனத்தால் தேவர்கள் பயங்களைப் போக்கி அருளி
வைகுண்ட ஸூ ரி பரிஷத் பிரபுரத்ர ஷர்ம-நித்ய ஸூரிகள் தலைவராக இருந்து
சோயம் விகாசயது ஸூத்ரவதீ பதிர் மே –ஸூ த்ரவதி பதியாக இருந்து -உலகோரை மகிழ்விக்கிறார்

————————————-

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே
ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்
மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது
–4–

முஹூர் நத்வா மூர்த்நா வி நதவிவி ப்ரஷமநே –ஷடாரே பாதாப்ஜே மதுர கவி தேவஸ்ய ஷரணே –ஸமஸ்த வித பாபங்களையும் ஆஸ்ரிதர்க்குப் போக்கி அருளுபவர் –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி நிலைகளான ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரே சரண் ஆவார் -அவர் திருவடிகளை மீண்டும் மீண்டும் அடியேன் தலையால் வணங்கி
இதம் யாசே வாசா அலக வகுளாளீ பரிகளத்-மதூளீ மாதுர்யம் மம வசன பங்க்யாம் ச திஷது-அவர் திரு முடியில் சாத்தி இருக்கும்
வகுள மாலை கந்தம் அடியேன் வாக்குக்கும் மொழிக்கும் மனம் அருளிச் செய்ய வேண்டி ஸ்துதிக்கிறேன் –
வகுளாபரணர் அன்றோ -அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே என்றவர் திருவடிகளை பற்றி தம் வாக்குக்கும் அமுதூட்ட சரண் அடைந்து பிரார்த்திக்கிறார்

——————————————————–

விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய
சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம்
ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம்
ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம
–5-

ப்ராதர்ஷ யத்ய பரமம் புமாம்சம் -ச பாது மாம் சம்யமி ஸார்வ பவ்ம –ஸ்ரீ பாஷ்யகாரர் -யதிராஜா ஸார்வ பவ்ம்யர் –
பர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் நன்றாகக் காட்டி அருளி
விகாச யித்வா நிகமாந்த பாஷ்ய -சித்தாஞ்ஜநாத் காமபி தீர்க த்ருஷ்டிம் -விகசித்து -ஸ்ரீ பாஷ்யம் மூலமாக
ஸ்தாபித்து அருளியவர் நம்மை ரஷித்து அருளட்டும் –

—————————————————–

கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண –
6-

கூரேஷ கோவிந்த பதார விந்தே சேவார சாமோதித சித்த பூமா –ஸ்ரீ கூரேசர் ஸ்ரீ எம்பார் திருவடிகளில்
கைங்கர்யத்தால் விளைந்த உகந்த திரு உள்ளம் உடைய
பட்டார்யா வர்யோ அபி ஸூ கம் ததாது மமாத்ய வேதாந்தி முனீஷ் வரேண -ஸ்ரீ பராசர பட்டர் வேதாந்தியான
ஸ்ரீ நஞ்சீயர் உடன் -அடியேனை கடாக்ஷித்து அருள் பொழியட்டும்

———————————–

யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம்
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்
–7-

யஜ் ஜிஹ்வாக்ரவிஷாலை ரங்க ரசிகா வாணீ ப்ரவீணா அநிஷம் -சரஸ்வதி -சகல கலா வல்லவள் நாக்கு நுனி நாட்டிய அரங்கத்தில் ஆட விரும்பி
ந்ருத்யந்தீ த்ராவிடார்ய சம்ஸ்க்ருதவ புர்த்ததே கவீ நாம் ப்ரியம்-நம் பூர்வாச்சார்யர்கள் -திராவிட வேதாந்தாசார்யர்கள்
ஆழ்வார்கள் அருளிச் செயல் வியாக்கியானங்களை உகப்புடன் நமக்க அருளிச் செய்ய அருளி
லோகார்ய கலிவைர தாச குருரித்யந் யாபிதா நஸ் ச மே -ஸ்ரீ கலிகன்றி தாசர் –நம்பிள்ளை -ஸ்ரீ கந்தாடை தோழப்பர்
லோகாச்சார்யார் என்று உகந்து சூட்டி அருளி -பின்பு நஞ்சீயர் நம்பிள்ளை என்று அன்புடன் சூட்டி அருளப் பட்டவரும்
குர்யா துத்தர வீதி க்ருஷ்ண மஹிதாசார்ய கலா சம்பதாம்—ஸ்ரீ கிருஷ்ண என்பவரான ஸ்ரீ -வடக்கு திரு வீதிப் பிள்ளை யுடைய
ஆச்சார்யருமான அவர் அடியேனை கடாக்ஷித்து வாக் வன்மை அருளட்டும் –

——————————————————

அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா
–8-

அதுல கலிவைரி தாச வாணீ மணி வல்லீ வல நா வலம்ப ஷாகீ-அந்த ஸ்ரீ நம்பிள்ளை திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற கொடிக்கு மரம் போன்றவரும்
குரு ருத்தர வீதிகா நிவாஸீ மம பத்ராணி தா நோது க்ருஷ்ண நாமா -ஸ்ரீ கிருஷ்ண என்ற திரு நாமம் உடையவரும்
வடக்குத் திரு வீதியில் வாழ்பவருமான அவர் அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும் –
முடும்பை நம்பிகள் திரு வம்சம் -ஸ்ரீ ஈடு படுத்தி அருளியவர் -மட் அம்பி -மண் பானையில் தண்ணீர் என்பதே முடும்பை என்பர் –

————————————————————–

வத்ஸான் வவாய வரணீய பய பயோதே
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ்
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்
லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்
–9–

வத்ஸான் வவாய வரணீய பய பயோதே—
பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றிய -குல விளக்கான –
ஜாதோ தயவ் ஜகதி கௌஸ்துப சந்த்ர பிம்பவ் –உலகில் ஒளி மிக்கு விளங்கிய ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் சந்திரன் போலேயும்-
மன்யே ஜகத் விதத காந்தி கலா விலா சவ்-லோகார்ய ஸூந்தர வரவ் கில க்ருஷ்ண ஹ்ருத்யவ்–ஸ்ரீ வடக்கு திரு வீதி பிள்ளையும்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் -இருவரையும் தியானிக்கிறேன் –

——————————————————

வாணீ புண்ய ஸூதா பாகம் ஷட ஜித ஸ்வைரம் விகாஹ் யாதராத்
ஆநீயாம்ருத மத்ர சக்ர துருபவ் பா நீயஷாலாத்மகம்
யவ் வாக் பூஷண தேசிகேந்த்ர ஹ்ருதயாபிக்ய பிரபந்த த்வயம்
தவ் வந்தே புவ நார்ய ஸூந்தர வரவ் க்ருஷ்ணாத் மஜவ் தேஷி கவ்
–10-

ஸ்ரீ நம்மாழ்வார் உடைய இனிய திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ அவற்றில் ஆழ்ந்து
நாம் பருகும் படி -ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -என்ற இரண்டு
வடக்கு திருவீதி பிள்ளை திருக் குமாரர் இருவரையும் வணங்குகின்றேன் –

—————————————–

மது ரிபு மஹி லாயா ஸ்பிதவீஷா சரோஜாத்
மதுரக்பாணி திப்ருங்கீ நிர்கதா காசி தோஷா
புவன குரு பாதாப்ஜ த்வன்ட்வ நிர்யன் மரந்டான்
அநுதினம நு பூயா அனந்த சாந்த்ரா மமாஸ்து
–11-

அடியேனுடைய ஸ்ரீ ஸூ க்திகள் இனிமையையாயும் திவ்யமாயும் இருப்பது ஸ்ரீ மது சூதனன் திவ்ய மஹிஷியான
ஸ்ரீ மஹா லஷ்மி கடாக்ஷத்தின் பயனாக வந்தாலே தானே –
அவை மேலும் வன்மையும் திடமும் அடைய அடியேன் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் மேல் ஸ்தோத்ரம் பண்ணி
அவருடைய ஸ்ரீ ஸூ க்திகளை நித்யமும் அனுசந்திக்கிறேன் –

—————————————————–

மணி பிரவாளாந் ஜித ஸூக்தி ஸூநை
விபூஷி தாஷேஷ சஹஸ்ர ஷாகம்
அகல்பயத் கந்ஜந கல்ப வ்ருக்ஷம்
க்ருஷ்ண ஷிதவ் லோக குரூத்த மாக்யம்
–12–

ஒப்பில்லா கற்பக வ்ருக்ஷம் போலே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்உடைய -மணி பிரவாள – திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள் நம்மை ரக்ஷிக்கட்டும் –
செழும் கற்பகத்தை -கற்பகச் சோலை -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கற்பக வல்லிம்–என்னை ஆள வந்த கற்பகம் -என்பர்கள் –

————————————–

தேவீஷூ பத்ம நிலயா தயிதா பபூவ
பக்தேஷூ ஸோ அபி வகுளங்க முநிர் வரேண்ய
ஆர்யேஷூ நிர்மல குணஸ் த்வய மந்தரங்க
ரங்காதி பஸ்ய ந்ருபதே ஜகதார்ய நாமா
–13–

மலர் மகளான பெரிய பிராட்டியாரை போலவும் வகுளாபரணரான ஸ்ரீ நம்மாழ்வாரை போலவும்
ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களில் நிர்மல குணம் உடைய ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரை அந்தரங்கமாக கொண்டு அருளுபவர் ஸ்ரீ ரெங்க நாதர்

—————————————————-

ஹ்ருதய முகுர பிம்பம் யத் த்வ ஹங்கார பங்க
ஸ்தகித விமல ரூபம் ஸ்வோக்தி ஷூத் தாம்பு பூரை
புவன குருவர ஸ்தச்சோத யித்வா ஜனாநாம்
சிதசித திபதீம் த்ரீன் தர்ஷயன் பாதி தத்ர–
14-

அஹங்காரம்-போன்ற அஞ்ஞானங்கள் -மனக் கண்ணாடியில் அழுக்கு போலே -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
தம் ஸ்ரீ ஸூக்திகளால் இவற்றை அகற்றி -தத்வ த்ரயம் ஞானமும் ஸ்வரூப யாதாம்ய ஞானமும் அருளுபவர்

———————————————–

ஜனி ஜலதி பரீ தாகரா லீநா ஆத்ம பங்க்த்யை
த்ரிவித விஷய த்ருஷ்ணா ராக்ஷஸீ பீடிதாயை
புவன குருவரோ அதாத் ஸ்ரீ மதீம் ஸூ க்தி பூஷாம்
பவந ஜ இவ தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து
–15-

பவந ஜ இவ–திருவடியை போலே
தேவ்யை பாணி பூஷாம் ஸ்வ பர்து -ஸ்ரீ சீதா பிராட்டிக்கு பெருமாள் உடைய கணை யாழி கொடுத்து அருளியது போலே –
சம்சாரிகள் -பூமி தங்கள் பெண்ணாசை போன்ற ராக்ஷஸிகள் -இவற்றில் இருந்து ரஷிக்க பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷணம் –

———————————————————————————-

பணி தி கிரண ஜாலைர் மாநயன் மாந சாப்ஜம்
சர நமுஷித தோஷா அரூட காடாந்த கார
அபர இவ வபுஷமாநம் ஷூ மா லீ ஜனாநாம்
பதமிவ புவ நார்யோ பாசயன் பாதி விஷ்ணோ –16-

ஸூர்யன் இருளை போக்கி ஒளி தருமா போலேயும் தாமரையை விகசிக்க செய்யுமா போலேயும் -இவரது திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
நம் அந்தகாரம் போக்கி -அகங்கார மமகாரங்கள் ஆகிய தோஷங்களை விலக்கி-ஹ்ருதய தாமரை விகசிக்க செய்து
அந்தர்யாமி பகவானை சாஷாத்கரிக்கவே செய்யுமே –
வகுளா பூஷண பாஸ்கரர் -இராமானுஜ திவாகரர்-ஆச்சார்யர்கள் கடாக்ஷம் கொண்டே அவன் அருள்வான் –
நீரில் உள்ள தாமரையை தானே ஆதித்யன் உலர்த்தக் கடவன் –

—————————————————

அந்தர் விலோசனம் அனந்த தமோ நி கூடம்
ஆலோக்ய ஐந்து நிவஹஸ்ய தயாரித்த்ரா சேதா
உன்மீலயந்நு பஹி தேந ரஹஸ்ய த்ரயார்த்த
தீபேன யோ ஜயதி லோக குரும் தமீடே –1
7-

பரம காருணிகரான பிள்ளை லோகாச்சார்யார் தம் தயை உந்த ரகசிய த்ரய அர்த்தங்களை முமுஷுப்படி இத்யாதி
திவ்ய அஷ்டாதச ரகசியங்கள் மூலமாக நம் ஹிருதய அந்தகாரங்களைப் போக்கி
யாதாம்ய ஞானம் பெரும் படி செய்து அருளினார் -அவர் திருவடிகளைப் பற்றுவோம் –

——————————————

புவன குருத்தம சதுர ரெங்கபுர அபணிக
கலி ரிபு தாச வர்யா கலிதாமல ஸூ க்தி மணீந்
குண பண ஸங்க்ரஹேண நிபுணாய ததாதி ஹிதான்
அத புனரேவ வ்ருத்தி முப யாந்தி விசித்ரமிதம்–
18-

நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் விசேஷார்த்தங்களை சாத்விக சிஷ்யர்களுக்கு வழங்கி மேலும் மேலும் பிள்ளை லோகாச்சார்யார் கீர்த்தி வளருவது
நல்ல நகைக் கடை வியாபாரி நல்ல நகைகளை நல்ல முறையில் வியாபாரம் செய்து விருத்தி அடைவது போலே உள்ளது என்றவாறு –
பெருமாள் ஜடாயு மஹாராஜருக்கு சத்யத்தாலே லோகங்களை வென்றதாலேயே மோக்ஷம் கொடுத்ததாக சொல்லிய -அரசன் சங்கை போக்கிய – ஐதிக்யம் –

————————————————–

த்ருட மபவத வித்யா வல்லரீ வாசநா அத்பி
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி
சதருரப்ருதா ச ஷேத்ரினோ பக்நமூலா
–19-

ஷேத்ரினோ -ஜீவாத்மா உடைய
அவித்யா வல்லரீ-அவித்யை -கொடி போல –
சமய விஹித போஷா விஸ்த்ருதா கர்ம வ்ருஷே –கர்ம வசப்பட்டு மேலும் மேலும் விருத்தி அடைய
புவன குரு வரோக்திப் ரவ்டஜ ஞ்ஜாமருத்பி — பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்கிற
சூறாவளிக் காற்றாலே கர்மங்கள் தொலைக்கப் பட்டு
பக்நமூலா சதருரப்ருதா ச -அந்த கொடியானது வேருடன் அழியுமா போலே வாசனை ருசி உடன் அழித்து முடிக்கும் –

————————————————————————

யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம்
ஜகத் குரு வலா ஹக படு வவர்ஷ பூமவ் ஜலம்
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா
ப்ரவாஹ பஹுலா அபவத் நிகம மௌலி வித்யா நதீ
–20-

ஜகத் குரு வலா ஹக -லோகாச்சார்யார் -நம் பிள்ளை -ஆகிய மேகம் /பிள்ளை லோகாச்சார்யார் ஆகிய மேகம்
யதி ப்ரவர பாரதீ ஜல நிதிம் பிரபீ யாமலம் -யதிராஜர் ஸ்ரீ ஸூ க்திகள் -நஞ்சீயர் ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற அமுதாக கடலை முற்றப் பருகி
படு வவர்ஷ பூமவ் ஜலம் -பூமியில் பொழியுமா போலே பொழிந்து
நிகம மௌலி வித்யா நதீ–வேதாந்த நதியாக ஓட
ப்ரவாஹ பஹுலா அபவத் -வெள்ளமாக -பரவுமா போலே
விகாச மகமத் பரம் விநத ஸஸ்ய பங்க்தி ஸ்ததா -பரவி ஆஸ்ரிதர்கள் மலர்ந்தார்கள்

நம்மாழ்வார் -மேகம் -அவன் சமுத்திரம் என்பர் சம்பிரதாயத்தில் -அதே போலே
நஞ்சீயர் / யதிராஜர் / நம்பிள்ளை / பிள்ளை லோகாச்சார்யார் இங்கு -லோகாச்சார்யார்கள் இருவரும் என்பதால்
ஸ்ரீ ராமானுஜர் திரு உள்ளக் கருத்துக்களையே கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள் என்றவாறு –

————————————————————

படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா
பவப் ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா
–21-

படு ப்ரதமதேஷி கைர்விரசிதா பிரபந்தா பரே–அநேக பிரபந்தங்களால் -பூர்வர்கள் பலரும் முன்பே அருளிச் செய்து
ரகஸ்ய த்ரய பதா வலீ விவரேண ப்ரவ்ருத்தா பரம் -ரகஸ்ய த்ரய விவரங்களை விளக்கி இருந்தாலும்
ஜகத் குரு முகோதிதா ஜகதி பாந்த்யமீ பாஸ்கரா -பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த
அஷ்டாதச ரகசியங்களும் -ஸூ ர்யன் இருட்டை போக்குமா போலே
பவப்ரபவ சர்வரீ விபவ மோசநாஹஸ்கரா -சம்சாரத்தில் உழன்று மாரி மாரி பல பிறவி எடுத்து
உழலும் அஞ்ஞான அந்தகாரத்தை நன்றாக போக்கி அருளிற்றே-

————————————————————–

அகம்ய மஹிமா ஜநைர் நிகம மௌலி காந்தார பூ
விஹார ரசிகோ வ்ருஷ ஷிதிப்ருதோ வசன் கந்தரே
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன
ஷமோக்தி நகரோ மஹான் ச ஜகதார்ய கண்டீரவ
–22–

அகம்ய மஹிமா ஜநைர்-எவராலும் எளிதில் அரிய முடியாத மஹிமையை யுடைய
நிகம மௌலி காந்தார பூ -விஹார ரசிகோ -வேதாந்தம் ஆகிற காட்டுக்குள் அனுபவித்து உகந்து சஞ்சரிக்க
வ்ருஷ ஷிதிப்ருதோ -வசன் கந்தரே-தர்மம் ஆகிற மலையிலே -முழஞ்சிலே வசிக்கும் –திருவேங்கட திரு மலையிலே –
விபாதி விமதோன் மதத் விரத கும்ப சம்பே தன -ஷமோக்தி நகரோ –இவர் ஸ்ரீ ஸூ க்திகள் சிம்மத்தின் திரு உகிர்கள்
யானையின் தலையை உடைத்து -தெள்ளிய சிங்கம் ஹிரண்யன் ஆகம் பிளந்தால் போலே –
மஹான் ச ஜகதார்ய கண்டீரவ -மகத்தான பிள்ளை லோகாச்சார்யார் உடைய ஸ்ரீ ஸூக்திகள் பண்ணி அருளிற்று
எங்கள் இராமானுஜ முனி வேழம் –வலி மிக்க சீயம் போலே -யாதாம்ய ஞானம் அருளிற்று என்றவாறு –

———————————————————–

விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி
–23-

விகத விஷய த்ருஷ்ண கிருஷ்ண பாதாஷ்ரயாத்மா
விஷாந்தரங்களில் நசை அற்று ஸ்ரீ கிருஷ்ணனே உண்ணும் சோறு -இத்யாதி -எல்லாமாகப் பற்றிய
த்ரமிட நிகமதர்ஷீ தேஷிகா நாம் பிரதான -நம்மாழ்வாரைப் போலே முக்கிய ஆச்சார்யராக -பிள்ளை லோகாச்சார்யரும்
-அவர் அருளிச் செய்த நான்கு திவ்ய பிரபந்தங்கள் போலே இவர் அருளிச் செய்த அஷ்டாதச திவ்ய கிரந்தங்களும்
நம்மாழ்வார் கண்ணனே எல்லாமாகக் கொண்டது போலவே இவரும் வடக்கு திரு வீதிப் பிள்ளையையே எல்லாமாக கொண்டவர் –
மதுரகவிவசோபி மா நநீயோ மமாசவ் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே இந்த பஞ்சாஷத்தும்
ஷடரி புரிவ லோகாச்சார்ய வர்யோ விபாதி -இத்தால் பிள்ளை லோகாச்சார்யர் உடைய சிறப்பையும்
அவர் அருளிச் செய்த திவ்ய கிரந்தங்களில் சிறப்பையும் அருளிச் செய்கிறார் –

———————————————–

சுலுகித பவ சிந்தும் சித்த ஜக்ரோத தைத்ய
ப்ரமத நபடுபுத்தும் ஸ்ரீ ஜகத் தேசி கேந்திரம்
த்ரவிட பணிதஷம் தக்ஷிணா ஷானி ஷண்ணம்
கலஷத நயமன்யம் மன்யதே மே மனஸ் த்வாம்
–24–

அகஸ்திய முனி சமுத்திர ஜலத்தை ஆசமனமாக உறிஞ்சி வாதாபி அசுரனை நிரசித்தால் போலே பிள்ளை லோகாச்சார்யாரும்
சம்சார ஆர்ணவம் -காம க்ரோத -அசுரர்களை நிரசிக்க அஷ்டாதச ரகஸ்ய கிரந்தங்கள் அருளிச் செய்தார் என்றதாயிற்று –

————————————————

ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -அப்யரதி ப்ரியா தே –
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-
லோகா வலீ விமல லோசன கோசராங்க –
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி
–25-

ஸ்ரீ வத்ஸ ரூப ருசிரோ -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -மன்மதன் போல அழகானவர் –
மன்மதன் தாதை கிருஷ்ணன் -இவர் தாதை கிருஷ்ணன் என்னும் வடக்குத் திரு வீதி பிள்ளை
அப்யரதி ப்ரியா தே -அவனுக்கு ரதி மனைவி உமக்கோ அரதி-உலக விஷயாந்தரங்களில் ப்ரீதி அற்று -இருப்பதால்
ப்ரீதி மதுத் விஷி பவ ப்ரபாவ நபீதி-வசந்த ரித்து மது அவனுக்கு பிடிக்கும் -நீரோ மது அசுரனை நிரசித்த கண்ணன் மேலே ஆசை கொண்டவர்
அவன் சிவனை கண்டால் பயப்படுவான் -பவ-சிவனின் பெயர் -பவ சம்சாரம் உம்மைக் கண்டு அஞ்சும் –
லோகா வலீ விமல லோசன கோசராங்க -அவன் அங்கம் இல்லாமல் அநங்கன் ஆனான் -நீரோ அனைவரும் கண்டு மகிழும் படி
-அனைவர் கண்களுக்கும் விருந்தாகும் படி -இருக்கிறீர்
கிருஷ்ணாத்மஜ ஸ்த்வமபர கிமு மன்மதோ அஸி-கிருஷ்ணர் தாதை என்பது மட்டுமே உங்களுக்குள் பொருத்தம் –

———————————————

த்ருஷ்ட்வா தே புவநார்ய ஸூந்தர வபு கேசித் பாவம்போதி நிதிம்
சந்தீர்ணா ஷ்ரவணாம் ருதம் தவ குணம் ஷ்ருத்வா ஸக்ருத் கேசந
அன்யே கே அபி ஸூ தா சகோதர பீத்வா அப வன் நிர்மலா
தஸ்மாத் ஸம்ஸ்ருதி வர்த நீ ஷிதி தலே ஷீனா பபூவ ஷணாத்
–26–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -தம் திருமேனி அழகாலும் -குணங்களாலும் -ஸ்ரீ ஸூக்திகளாலும் சம்சாரம் கடலை தாண்டுவித்து அருளுகிறார் –
ஆகையால் க்ஷணம் பொழுதில் சம்சாரம் அழிந்தது -உம்முடைய ஸ்வரூப ரூப குண திவ்ய ஸ்ரீ ஸூக்திகளாலே -என்கிறார் –

———————————————————————

தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித்
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ
பவன குருவர ஸ்ரீ பத்ம நா பஸ்ய பாதே
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான
–27–

தவ சரண சரோஜ ஸ்பர்ஜ தன்யஸ்து கஷ்சித் –உமது திருவடித் தாமரை பலத்தால் ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை
பணி பதிபுர பாஹ்யோத்யான சீமாநி வாஸீ -திரு வனந்த புரத்திலே நித்ய வாசம் செய்யப் பட்டவராய்
பவன குருவர ஸ்ரீ பத்ம நாபஸ்ய பாதே-பிள்ளை லோகாச்சார்யார் திரு அருளாலே திரு பத்ம நாபன் திருவடி தாமரைகளை அடையப் பெற்று –
விலய மகமதாரான் மானவைர் த்ருஷ்ய மான -அனைவரும் பார்த்து புகழும் படி ஆனார்

சப்த காதை திவ்ய பிரபந்தம் அருளப் பெற்றவர் –
கூர குலோத்தமை தாசரும் விளாஞ்சோலை பிள்ளையும் -பிள்ளை லோகாச்சார்யார் ஆணைப் படி
திருவாய் மொழிப் பிள்ளையை சம்பிரதாயத்துக்கு கொண்டு வந்தார்கள் -விளாஞ்சோலைப் பிள்ளைக்கு அந்திம கைங்கர்யமும்
திருவாய் மொழிப் பிள்ளை செய்வித்தார் -பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு செய்தால் போலே –

————————————-

சஞ்சீவநீ சரண ரேணு கணாவலீ தே
சம்சார தக்ஷக முக ஷத முக்த ஐந்தோ
லோகார்ய வர்ய கருணாம்ருத சாரணீ து
சமவில்லதாம் கலயதே ஹ்ருதயே ப்ரரூடாம்
–28-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடி துகள்களே-சம்சார விஜ ஜந்துவால் கடி பட்டவர்களுக்கு மருந்து ஆகும் –
ஐந்தலை நாகத்தால் கடி பட்டது போலே பஞ்ச இந்த்ரியங்களால் இழுப்புண்டு இருப்போர்க்கு மருந்தாகும்
கடி பட்டு பாம்பு கடி உண்ட பாம்பு -அனந்தாழ்வான் ஐதிக்யம்
அவரது கருணை அமிர்த ஆறே இருதயத்தில் மலரும் ஞானச் செடிக்கு நீராகி பர ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்து அடைய உதவும் –

————————————————-

ஷிஷ்யேஷூ வாக் பூஷண போஷி தேஷூ
ஜகத் குரோ தே கருணா அபி ஷே காத்
ச கூரவம் ஷோத்தம தாச நாமா
மாந்யோ குருணாம பவந் மஹிம்நா
–29-

உம்முடைய கருணாம்ருதத்தால் அன்றோ ஸ்ரீ கூர குலோத்தம தாசர் -ஸ்ரீ வசன பூஷண அர்த்தங்களில் ஆழ்ந்து
-திருவாய் மொழிப் பிள்ளைக்கு அவற்றை அருளி ரகஸ்ய கிரந்த குரு பரம்பரையில் உமக்கும்
திருவாய் மொழிப் பிள்ளைக்கும் நடு ஸ்தானம் பெற்று உலகம் புகழும் படி ஆனார் –

———————————————–

ரூபம் புராண மணிபி ஷ்ருதி வஜ்ர தீப்தம்
பத்மா பதேர் முனி ஜன ஸ்தத லந்ஜகார
தத்ர த்வயா விரசித்தம் து மணி ப்ரவாள
வாக் பூஷணம் ஹி நிதராம் புநார்ய பாதி
–30-

ஸ்ரீ பராசர ஸ்ரீ வியாசாதிகள் புராண ரத்தினங்களை கொண்டு வேத மயனான ஸ்ரீ யபதிக்கு அலங்கரித்தனர்
அவன் திருமேனியில் மிக்க தேஜஸ் இதன் ஸ்ரீ வசன பூஷணம் -மணி பிரவாளமாக -திகழ்கிறதே –

——————————————-

காமம் பவந்து குரவோ விவிதாக மார்த
விஜ்ஞ்சான விஷ்வ விதிதா விஹித பிரபந்தா
த்வத் ஸூ க்தி மௌக்தி ககனோ யதலன் ஐகார
ரங்காதி பஷ்ருதியுகம் புவநார்ய கிம் தை
–31-

உமது திவ்ய ஸூக்திகள் ஸ்ரீ ரெங்கநாதன் திருக் காதுக்கு அணியாக இருக்க -மற்றைய ஆச்சார்ய
ஸ்ரீ ஸூக்திகள் நமக்கு எதற்க்காக -ரகஸ்ய த்ரயார்த்தமே சரமம் என்றவாறு –

—————————————

ஸ்ருதி நிகரக பீர கான நந்தர்
விஹரண விஷ் ருத புத்திநாத் வயைவ
ப்ரபதன சரணிர் விஷோதி தாச பூத்
புவன குரோ புவி லோக சாத நீயா
–32-

வேதத்தில் பிரபத்தி சொல்லப் பட்டு இருந்தாலும் அரிய அறியதாய் இருக்க நீர் உம்முடைய ஸ்ரீ ஸூக்திகளால் பிரபன்னர் சர்வாதிகாரம்
-சர்வ காலத்திலும் தேசத்திலும் -நின்ற நின்ற நிலைகளில் செய்யலாம் -அதிகாரி நியமமே உண்டு -என்று அருளிச் செய்தீரே

————————————————-

த்வயி விலசதி ரெங்கே சேஷ தல்பேந பும்ஸா
ஜகதி குருவர ஸ்ரீ த்ருஷ்ட்டி பூராபி ஷிக்தே
கதமிவ புவ நார்ய த்வாம் விநா அந்நியம் பஜந்தே
சதிதி நகர பிம்பே கே ப்ரதீபம் வஹந்தி
–33-

அரவணையில் பள்ளி கொண்டு அருளும் ஸ்ரீ ரெங்கநாதன் பூர்ண கடாக்ஷம் பெற்று தேஜஸ் உடன் விளங்கும் நீர் –
வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரர் -ராமானுஜ திவாகரர் போலேயும் இருக்க
பூர்ண சந்த்ரன் போலேயும் ஸூ ர்யன் போலேயும் இருக்க மற்றவர்கள் வெறும் தீபம் போலே தானே -நஹி நிந்தை நியாயம் –
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு வெங்கதிரோன் குல விளக்கு வேண்டாமே என்றுமாம் –

——————————————

அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம்
ததநு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ
ரசயதி ஸூக நித்ராம் ராகவாணாம் குலேந்திர
–34–

ராகவாணாம் குலேந்திர –ராகு குல தனமான ஸ்ரீ அரங்க நாதன்
அவநசவந கரமண்யாத்ம லோகஸ்ய ரங்கீ — க்ரமேண உபகார பரம்பரைகள் பல செய்து அருளி -கரண களேபரங்கள் கொடுத்து அருளி
-சாஸ்திரங்கள் கொடுத்து அருளி –ரகஸ்ய த்ரயங்கள் கொடுத்து அருளி –
அவதாரங்கள் பண்ணி அருளி -அனுஷ்டானங்கள் மூலம் காட்டி அருளி -ஆழ்வார்கள் மூலம் அருளிச் செயல்களைக் கொடுத்து அருளி –
நாதமுனிகள் தொடக்கமான ஆச்சார்யர்கள் மூலம் வியாக்கியானங்களை கொடுத்து அருளி -இவ்வளவும் செய்து அருளி
தத நு புஜக ராஜோத்துங்க பரியங்க ஷாயீ -அரவணை மேல் உறங்குவான் போலே யோக நித்திரை செய்து அருளி
புவன குருவர த்வாம் கல்பயித்வா சமர்த்தம் -பிள்ளை லோகாச்சார்யரை தோன்று வித்து -பின்பு தானே
ரசயதி ஸூ க நித்ராம் -நன்றாக -ஸூ கமாக ரசித்து உறங்குகின்றான் –

————————————————–

பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத
புலி நதட மவாப்ய த்வாம் புவம் சாபயித்வா
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த–
35–

பர பத நிலயோ அசவ் பத்மயா ரங்க நாத –புலி நதட மவாப்ய -ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பிராட்டியார் உடன்
காவேரி மணல் திட்டிலே வந்து சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடந்து
த்வாம் புவம் சாபயித்வா-உம்மை தோன்று வித்த பின்பு தானே அன்றோ
சிரமபி லஷிதார்த்தம் ப்ராப்ய லோகார்ய மன்யே —தனது அபேக்ஷிதம் கிட்டப் பெற்றான் –
கலயதி தரஹாசம் புல்ல வக்த்ரா விந்த-இதனாலே தானே அவன் திருமுகத் தாமரையும் நன்றாக மலர்ந்து விகாசம் அடைந்து உள்ளது –

——————————————————–

பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான்
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா
–36-

பஹு வித துரி தவ்கே மஜ்ஜதாம் மாநவாநாம் -பலவித துக்க சூழலில் அகப்பட்டு உழலும்
த்வய ம நு கர யுக்மம் சம்ப்ர சார்யா ஞஸாதான்-த்வயம் போலவே இரண்டு திருக் கரங்களைக் கொண்டு உஜ்ஜீவிக்க
தடபுவமுப நீய பிராபிதா சேஷ வித்யான் -அனைவரும் அறியும் படி த்வயார்த்தம் தெளிவித்து கரை ஏறும் படி
கலயசி புவ நார்ய தவம் க்ருபா சோதி தாத்மா -பரம காருண்யரான பிள்ளை லோகாச்சார்யார்
ஸ்ரீ ஸூக்திகளை அஷ்டாதச ரகஸ்யங்களாக அருளிச் செய்தார் –

——————————————————-

வக்த்ரேந்தோர் புவ நார்ய வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம்
–37-

வக்த்ரேந்தோர் புவ நார்ய- வர்ய பவதோ வாணீ ஸூ தா தோதோரணீ -பரம காருண்யரான -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் உடைய
சந்திரன் போன்ற குளிர்ந்த திருக் கண் கடாக்ஷத்தாலே -உதித்த அஷ்டாதச ரகஸ்ய ஸ்ரீ ஸூ க்திகள் என்ற அமுத வெள்ளமானது
ஜஜே அஷ்டாத ஷபேதபூர விஹிதத்ரா ணாத்ம ஸஸ்யா யத -18-கால்வாய்கள் மூலம் -சம்சார பூமியில் -நதி மாத்ருகம் –
மழை நீர் தேவ மாத்ருகம் என்றும் ஆறுகள் நீர் நதி மாத்ருகம் -என்றும் சொல்வர் –
இந்த நதி மாத்ருகம் ஜீவர்கள் உஜ்ஜவிக்க அன்றோ வந்தது –
ஏஷா ஸம்ஸ்ருதி பூரபூத் பலவதீ தஸ்மான் நதீ மாத்ருகா -இவர் அருளிச் செய்த இந்த நதி மாத்ருகத்தால் அன்றோ
சம்சாரம் கரை என்ற ஜீவர்கள் உணர்ந்தார்கள்
க்ருஷ்ணாம் போத விலாகிநீ கில புரா நப்ரபா வ்ருத்திம் பராம் -இதனால் அன்றி காள மேக ஸ்யாமளனான
ஸ்ரீ கிருஷ்ணனை நன்கு அறிந்து உஜ்ஜீவித்தோம் என்றவாறு-

————————————————————-

க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத்
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி
–38-

க்ரோத க்வாபி பயோ நிதவ் நிபதித காமஸ்த்வ நங்கோ அபவத் –கோபம் கடலிலே விழுந்து மறைந்ததே -/ காமங்களும் ஒழிந்தனவே
தர்ப சர்ப இவ த்ருதம் வநபிலே மக்னோ நத்ருக்கோசர -டம்பம் பாம்பு போலே காட்டிலே மறைந்ததே –
தம்பா ஹங்க்ருதி லோப மதசரபடா குத்ராபி கோணே கதா-அஹங்காரம் டம்பம் -கார்யம் – கோபம் காமம் காரணம்
-அனைத்தும் மூலையிலே ஒடுங்கிப் போயினவே
ஜாதே பூமி தலே விவேக மஹிதே லோகார்ய வர்ய த்வயி –நல்ல ஞானம் உள்ளவர்கள் வணங்கும்
பிள்ளை லோகாச்சார்யார் தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைப் பெய்தினரே –

———————————————-

தயா முத முபாக மத்த மஷமஷமா பூஷிதா
விரக்தி ரபிஷோ பதே விமல வித்யயா அலங்க்ருதா
முஹுஸ் ஸூமதி சம்ஸ்க்ருதா லஸதி விஷ்ணு பக்கத்து குணா
விவேக ஜனகம் ஜகத் குரு முபாஷ் ரிதா பாந்த்யமீ –
39–

நீர் அருளிய விவேக ஞானத்தால் விஷ்ணு பக்தி வளர்ந்து -விரக்தி மிக்கு -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் வர பெற்றோம் –

—————————————————

ஜகத் குரு வரா நிஷாம் சரண சம்ப்ருதா பூ ஸூ ரா
முமுஷூ ஜனஷேகராஸ் த்விதி ந சித்ர மத்ராவ நவ்
விவிஸ்ய சிதசித் ப்ரபூம் ஸ்தவ க்ருபாஞ்ஜநோத் யத்ருஷா
நிவ்ருத்தி பதகாமி நீ சபதி பாமி நீ கா அப்யபூத–40-

வையத் தேவர்கள் தேவரீர் திருவடியை ஆஸ்ரயித்து தத்வ த்ரய ஞானம் பெற்று உந்து போனார்கள் –
திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாயார் போன்ற பல பெண்மணிகளும் அன்றோ உமது கடாக்ஷ பலத்தால் தத்வ த்ரய ஞானம் பெற்று
நிவ்ருத்த தர்மம் -பிரபத்தி -மார்க்கம் மூலம் உந்து போனார்கள் -உம்முடைய திருவடி பலம் என்னே –

———————————————–

சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு
–41-

சதுர்வத நஸூந்தரீ தவ முகாரவிந்தம் ஷ்ரிதா –நான்முகன் பத்னி சரஸ்வதி உம் தாமரை திரு முகம் அடைந்தாள்
ரமாபதி பத ப்ரியா லஸதி கா அபி பக்திர் ருதி -ஸ்ரீ லஷ்மீ தேவி போலவே உம்முடைய பக்தி லஷ்மி திரு உள்ளம் நிறைய இருக்கிறாள் –
விரக்தி ரபி ஷோபதே விதித நீல கண்டாங்ககா-நீல கண்டன் பத்னி பார்வதி தேவி போலே உலக விஷய விரக்தி உம்மிடம் பொலிகின்றதே –
வதூவிமுகம் ஆகதம் புவன தேஷி கத்வாம் ஜகு –இப்படி இருக்க -உம்மை நைஷடிக்க ப்ரஹ்மச்சாரி என்று சொல்வது எங்கனம்
ஸ்வாமி உடைய வித்யா பக்தி விரக்தியை கொண்டாடும் படி –

—————————————————–

ஜகத் குருவர ஷிதவ் ஷபித கல்மஷவ் காம் கலாம்
சதுர்த்த புருஷார்த்த தாமபி கலவ் விதத்ய த்வயி
க்ருதவ தரனே புன க்ருத யுக க்ரம ஷோபதே
நகோபி புவி த்ருஷ்யதே நரக வர்த்தமகாமீ நர
–42-

தேவரீர் திருவவதரித்த பின்பு -சாஸ்த்ர யாதாம்ய ஞானம் பிறந்து மோக்ஷம் ஒன்றே புருஷார்த்தமாக கொண்ட பின்பு கலி கெட்டு க்ருத யுகம் போலே ஆனதே –
நரகமும் புல் மூடி ஒழிந்தே-போனதே — கலியும் கெடும் கண்டு கொண்மின் –நலியும் நரகமும் நைந்து நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை –
திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து பெரிய க்ருத யுகம் பற்றிப் பேரின்ப பெறுக

——————————————————

ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம்
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம்
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே–
43–

ஹ்ருத்தந்த்ர தம ப்ரபாம நுப வந்தி பக்திம் பரே –பக்தி மூலம் தமஸ் அந்தகாரம் நீக்கி அவனை அடைவதோ
பிரபத்தி மபி கேசந பிரபல கர்ம நிர்மூலி நீம் –பிரபத்தி மூலம் பிரபல கர்மாக்களை நிர்மூலம் ஆக்கி அவனை அனுபவிப்பதோ
ஜகத் குருவர த்வயம் பவது ஸித்திதம் சாதனம் -இரண்டுமே சாதனங்கள் -என்றாலும் நீர் திருவவதரித்த பின்பு அன்றோ
வயம் தவ பதாம் புஜ ஸ்மரணமேவ மன்யா மஹே-அவன் திருவடித் தாமரைகளை பற்றி அஞ்ஞானம் அந்தகாரங்கள்
களையப் பெற்று சர்வ பாபங்களையும் போக்கப் பட்டு –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி -பிரபத்தியில் அசக்தனுக்கு இது -என்று
நீர் பஞ்சம உபாயம் அருளிச் செய்து காட்டிக் கொடுத்தீர் அன்றோ –

———————————————-

குருர் பவதி தேஹி நாம் புவனதே ஷிகஸ் யாதராத்
அபாங்கலவ விப்ருஷ பரிபதந்தி யஸ்யாங்ககே
ஷூபானி கில தம் பஜந்த்யத கலா சமுஜ்ஜ்ரும்பதே
பவந்தி நவ சம்பதோ பஜதி மோக்ஷ லஷ்மீ ஸ்வயம்
–44-

உமது கடாக்ஷ லேசத்தாலே -ஆச்சார்யாக விரும்பி சிஷ்யர்களுக்கு சாஸ்த்ர ஞானம் உபதேசித்து -பாபங்களை போக்கி
மோக்ஷ லஷ்மியையும் அருளும் படி அன்றோ ஆகிறார்கள்-

———————————————-

ஷ்ருனோமி யதி வைதிகான் மகவிதீன் ஜகத் தேஷிக
ப்ரக்ருஷ்ட ஜன சேவிதான் அஹஹ மே மனா கம்பதே
அஹேதுக யார சைரவாதி தீன ஜீவான் முதா
ரமாபதி ரிதி த்வயா ரசிதஸூக்திபிர் மோததே
–45–

உபாயாந்தரங்களை பின் பற்றி கர்ம யோகாதிகளை பண்ணி பக்தி மார்க்கம் வழியாக எம்பெருமானை அடைவதில் உள்ள
கஷ்டங்களை நினைத்து வருந்தி இருக்கும் உள்ளத்தை -உம்முடைய நிர்ஹேதுக கிருபையால்
ஆச்சார்ய அபிமானம் -பஞ்சம -உபாய சீர்மையை அருளிச் செய்து
அவனே நம்மை அடையும் படி செய்து அருளினீரே –

—————————————-

ஆ சக்ர வாலமவநவ் புவ நார்ய சர்வே
ஷம் சந்தி மங்கள குணான் விபூத ப்ரியாம் சதே
தேஷூ த்வதீய கருணாம் ப்ரகுணாம் து மன்யே
ரஷாம் யயா கலயஸே பவபீத ஐந்தோ
–46–

சகல உலகத்தாருக்கும் -சக்கரவாள மலைப் பிரதேசம் -உள்ளாறும் தேவரீர் உடைய அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டாடினாலும்
தேவரீருடைய பரம காருண்யமே -அஷ்டாதச ரகசியங்களை அருளிச் செய்து -நிர்ஹேதுகமாக அவனே தன் சொத்தை தன்னிடம் சேர்த்துக் கொள்வான் –
என்று அருளிச் செய்து சம்சார பயத்தை நீக்கும் படி பண்ணி அருளினீரே -ஸ்ரீ நிவாஸன் தயை போலே இதுவே சிறந்த கல்யாணம் குணம் என்கிறார் –

—————————————–

ஸூ க்ருத லவவி ஹீனம் ஷூத்த பாவைர் விமுக்தம்
துரிதஷத நிகேதும் தூரயாதம் தயாயா
புநரபி ஜன மேநம் வீக்ஷஸே ரஷிதம் தவம்
புவன குருர சீத்தம் கோ அபி வாத்சல்ய சிந்து
–47–

குண ஆர்ணவம் நீர் -பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு அருளி
-நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் கை விட்டாலும் –
அபார காருண்யத்தாலே நிர்ஹேதுகமாக கைக் கொண்டு அருளி லோகாச்சார்யராக இருக்கிறீர்

————————————–

விமத குமதி பீடா மானஸே சம்ரரூடா
த்ருட மமுமிஹ ஜீவம் க்ருந்ததி க்ரூர வ்ருத்தயா
அம்ருத ரஸ சகீ பிஸ்தாம் நிவார்யாஷூ த்ருக்பி
விரசய விதி ஷக்தம் ஸ்ரீ ஜகத் தேஷி கேந்திர
–48-

கெட்ட புத்திகள் மூலம் தூண்டப்பட்ட கொடிய செயல்களால் தாழ்ந்து உள்ளவர்களை
உம்முடைய கடாக்ஷ லேசத்தாலே மீட்டு நாரணனுக்கு ஆளாக்கி அருளிச் செய்தீர் –

—————————————————

தோஷா யேன க்ருதா முராரி கருணா சாரா பகாரோ தகா
ஷைலேந்திரா ஷதஷோ வசந்தி ந குணஸ்யானோர ணுர்த் த்ருஷ்யதே
லோகாச்சார்ய ஜனம் தமே நமலசம் ரஷேத் பவாம்ஷ் சேத் தத
பத்மா காந்ததயா தயோ வர குணாஸ்தஸ்மிம்ஸ்து தேப்யோ நம –
49–

நாம் அபராத சக்க்ரவர்திகளாக இருப்பதால் –மலை போன்ற அபராதங்கள் -எம்பெருமான் தண்டனைக்கு பாத்திரம் ஆகிறோம் –
ஆச்சார்யர் திருத்தி பணி கொள்வதால் -நம்மால் அவனை அணுக முடிகிறது -சம்சார போகி சந்தஷ்டந் ஜீவ ஜீவாதே நம -என்றவாறு –

————————————–

யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம
–50-

யஸ்யா ஸீத் குல தைவதம் ரகுவரேனாரிதத ஸ்ரீ சக –உம்முடைய குல தைவம் பெருமாளால் ஆராதிக்கப் பட்ட ஸ்ரீ ரெங்க நாதன்
-ஸ்ரீ ரெங்க நாயகி கேள்வன் -என் திருமகள் சேர் மார்பன் –
காவேரி சரி தந்தரீ பநகரீ வாஸஸ் தலீ புண்ய பூ –உமது வாஸஸ் ஸ்தானமோ காவேரி நடுவில் உள்ள
பூ லோக வைகுண்டம் -திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று
கிருஷ்ணோ மான்ய குரூர்வரேண்ய மஹிமா வேதாந்த வித்யா நிதி –உம்முடைய திருத் தகப்பனாரோ உபய வேதாந்த ச்ரேஷ்டரான வடக்குத் திரு வீதி பிள்ளை
ப்ராதா ஸும்ய வர ஸ்வயம் ச புவனாச்சார்யோ அஸி கஸ்தே சம -உம்முடைய திரு சகோதரரே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்
-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் அருளிச் செய்தவர் –
நீரோ பிள்ளை லோகாச்சார்யார் -மிகப் பொருத்தமாக சாத்திய திரு நாமம் -உமக்கு யார் நிகர் ஆவார் –

——————————————–

காவேரீ யுகலாம் புபூர லலிதே புண்யந்தரீ பே அஸ்ம் யஹம்
லோகார்யோ வ்ரஜ தத் விஜேதி வரத ப்ரோவாச பக்தாய ஹி
இத்யேவம் குரு ஸூ க்தி பிர் குருவர த்வாம் மன்யமான ஸ்த்வஹம்
வந்தே வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம் -51-

வாரண ஷை லஷ் ருங்க நிலயம் மத்தைவதம் ஸ்ரீ சகம்–திருக் ஹஸ்தி நகரில் பெரும் தேவி சமேதனாக சேவை சாதிக்கும்
ஸ்ரீ வரதாச்சார்யனே – -மணல் பாக்கத்து நம்பியிடம் அருளிச் செய்த படியே -அவனே பிள்ளை லோகாச்சார்யராக திருவவதரித்தார்
இரண்டு ஆற்றுக்கு நடுவில் சென்று குறையும் ஸ்ரீ வசன பூஷணம் கேட்டுக் கொள்ள சொல்லி அருளினான் –
சேதனர்கள் உஜ்ஜீவனத்துக்காகவே இப்படி வந்து அவதரித்து ஸ்ரீ வசன பூஷணம் முதலியவற்றை அருளிச் செய்தான் பேர் அருளாளன் –

————————————————

வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம் ராமானுஜம் மத்குரும்
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை
–52-

வேதாந்தோக்தி விஷோதி தேஷூ சயத கர்மாத் யுபாயேஷூ மே -வேதாந்தங்களில் விதித்த கர்ம யோகங்களுக்கு சக்தன் அல்லேன்
ஷக் திர்ன ப்ரகுண நிஷித்த கரணைர் முஹ்யந்தி வாகாதய -வாக் இத்யாதி இந்திரியங்கள் பட்டி மேய்கின்றன
ஸ்ரீ வாணீ ரஸ ஜீவனம் ஷமதநம்-பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையே தாரகமாக கொண்டு அத்தாலே ஷாந்தியையே தனமாக கொண்டவருமான
ராமானுஜம் மத்குரும் -அடியேன் ஆச்சார்யரான -ஆத்ரேய ராமானுஜர் -கிடாம்பி ராமானுஜ பிள்ளான் -உடைய சிஷ்யன் என்றதையே கொண்டு
யோகீந்த்ரம் புவ நார்ய வீக்ஷய விமலைர்மாம் பாலயா லோகநை-அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ மன் நாதமுனிகளை பார்த்து தம்மை அங்கீ கரித்து அருளும் படி ஸ்தோத்ர ரத்னத்தின் அருளிச் செய்தது போலே இங்கும் –

———————————————————–

ப்ரணம்ய சரணவ் தவ ப்ரணததே அஹினாம் காமதவ்
இதம் கிமபி வாஞ்ஜிதம் புவன தேஷிக பிரார்த்தயே
அஸார பணி திஷமா சரணமத்ய ஹித்வா மன
ப்ரயாது பதவீம் ஷூபாம் வசன பூஷண அலங்க்ருதாம் –
53-

தேவரீர் திருவடி அபேக்ஷிதர் அபேக்ஷித்தவை எல்லாம் தர வல்லது –சம்சாரத்தில் பிரயோஜனாந்தரங்கள் பலவற்றிலும் அளந்து அவதி படாமல்
தேவரீர் அருளிச் செய்த ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதில் திட விசுவாசம் உடையவனாய் தேவரீர் ஆக்கி அருள வேணும் –

—————————————————–

இத்தம் ஜகத் குரு வர ப்ரவணந ஸர்வ
தந்த்ர ஸ்வதந்த்ர கவிதார்க்கிக ஸிம்ஹநா நாம்
ஸ்ரீ வேங்கடேஷ கவிநா கலிதாம் ஸ்துதிம் யே
ஸ்நிக்தா படந்தி புவி யாந்தி பராம் ஷ்ரியம் தே –5
4–

நிகமத்தில் பலமாக இந்த ஸ்தோத்ரம் கற்பவர்களுக்கு ஆச்சார்ய அபிமானம் கிட்டி பரம புருஷார்த்தம் பெறுவார் என்று அருளிச் செய்கிறார் –

———————————————

கவிதார்க்கிக சிம்ஹாயா கல்யாண குண ஷாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேஷாய வேதாந்த குரவே நாம –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –