சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயமார்ஜிதம் போலே –
திரு மந்தரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –சூரணை -7-
இப்படி சிஷ்யனாய் நின்று இம் மந்திர சிஷை பண்ணி இவ்வழி யாலே ஞானம் பிறக்க வேணுமோ ?
ஞானக் கலைகள் என்கிறபடியே சகல சாஸ்திரங்களும் ஞான சாதனமாய் அன்றோ இருப்பது –
அவற்றை அப்யசித்து அவ்வழியாலே ஞானம் பிறந்தாலோ என்ன –
சாஸ்திர ஜன்ய ஞானத்துக்கும் இம் மந்திர ஜன்ய ஞானத்துக்கும் உண்டான விசேஷத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-
அதாவது தத்வ ஞான ஜனகங்களான ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல சாஸ்த்ரங்களாலும்
சேதனருக்கு பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜித தனம் போலே அத்யாயாச லப்யமாய் இருக்கும் -என்கை-
சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம் புதேச்சல நகாரணம் உபதேசாத் ஹரிம் புத்த்வா விரமேத் சர்வ கர்மஸூ -என்னக் கடவது இறே –
இத்தால் சாஸ்த்ரங்களில் காட்டிலும் தத் ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆயிற்று
————————————
பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் –சூரணை-8-
ஆனால் சாஸ்திரங்கள் ஒழிந்தாகிறது-பகவந் மந்த்ரம் தான் இது ஓன்று அன்று இறே-
பின்னையும் பல இல்லையோ -என்கிற சங்கையிலே மந்த்ரங்களில் காட்டில் இதுக்கு
உண்டான வைபவத்தை அருளி செய்வதாக திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் –
ஆஸ்தாம் தே குண ராசிவத் குணா பரிவாஹ ஆத்மாநாம் ஜன்மனாம் சங்க்ய்யா-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்த்வம்-2-74-
ஸ்ரீ ரெங்க நாதா உன் கல்யாண குணங்களை போல அவற்றை உணர்த்தும் உன் அவதாரங்களும் பல –
(ஆஸ்தாம் தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜன்மனாம்
சங்க்யா பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரெங்கேஸ்வர
அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி
ப்ரீணீஷே ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே –74-
ஹே ரெங்கேஸ்வர தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் –தேவரீருடைய குண சமூகங்களுக்குப் போலே ஆத்ம குணங்களுக்கு பரிவாக ரூபமான
ஜன்மனாம் சங்க்யா ஆஸ்தாம்–அவதாரங்களும் எண்ணிக்கை யானது கிடக்கட்டும்
ஆஸ்தாம் – அநாதார யுக்தி–எண்ணிறந்த வித்துவான்கள் சேஷ்டிதங்கள் இருந்தாலும் அர்ச்சாவதாரங்களைப் பார்த்தால் பரத்வ ஸ்தானமே
பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு -இப் பூ மண்டலத்தில் உள்ள ஆலயங்களிலும் க்ருஹங்களிலும் ஆஸ்ரயங்களிலும்
அர்ச்சயஸ் –ஆராதிக்க அரியவராயும்
சர்வ ஸஹிஷ்ணு –எதையும் சகிப்பவராயும்
அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி–அர்ச்சகர்களுக்கு பரவசப்பட்ட சகல நிலைமைகளையும் உடையராய்
ப்ரீணீஷே –உகந்து அருளா நின்றீர்-
ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே–அப்படிப்பட்ட தேவருடைய சீல குணத்தினால்
ச ஹ்ருதயர்–ஆழ்வாராதிகள் – மோஹிக்கிறார்கள்
குணங்களும் அவதாரங்களும் எண்ணிறந்தவையாய் இருந்தும் ஸ்ரீ கோயில்கள் வீடுகள் ஆசிரமங்களில்
அர்ச்சக பராதீனமாக மகிழ்ந்து இருக்கும் ஸுவ்சீல்யம் என்னே-
பின்னானார் வணங்கும் ஜோதி -நம் போல்வாருக்கு அன்றோ
ஸ்ரீ ரெங்கா
நீ உன் கடாக்ஷ வீக்ஷணங்களை வழங்கி யோக நித்திரை பண்ணி அருள்கிறாய்-
அர்ச்சாவதார பரமான ஸ்லோகம் -தேவருடைய ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள் போலே
அவற்றுக்கு பிரகாசகங்களான வ்யூஹ விபவ அவதாரங்களும் அசங்க்யாதங்கள் ஆகையால் பேச முடியாது–
குணங்களைப் போலவே ப்ரவாஹ ரூபமான அவதாரங்களும் எண்ணிறந்தவை அன்றோ – அது இருக்கட்டும் –
தேவர் பூமியில் உண்டான ஸ்ரீ கோயில்களிலும் மாளிகைகளும் ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற
எல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் –
மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து ஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய்
அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –
அப்படிக்கொத்த அந்யாத்ருசமான தேவர் ஸீல குணத்தால் சஹ்ருதயர் எல்லாம் ஈடுபடும்படி யாய்த்து என்கிறார் –
மத்துறு கடை வெண்ணெய் எத்திறம் என்று ஈடுபடுவபர்கள் இதில் ஈடுபடச் சொல்ல வேணுமோ -என்றபடி –)
பாகவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய ஸந்தி தே -அயோத்யா காண்டம் -2-26-
தசரதனே உனது புத்ரனுக்கு கல்யாண குணங்கள்
பல த்வாநந்த குணச்யாபி ஷாட் ஏவ பரதமே குணா –
பஹுநீ மே வ்யதீதானி ஜன்மானி தவசார்ஜுனா-என்றும்
எண்ணில் தொல் புகழ்-திரு வாய் மொழி -3-3-3–என்றும்
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –திரு விருத்தம் -1-என்றும்-இத்யாதிகளில் சொல்லுகிற படியே
பகவத் குணங்களும் -குண பரிவாக ரூபங்களான அவதாரங்களும் –
அசங்க்யாதமாய் இருக்குமா போலே -அவற்றை அனுபந்தித்து இருக்கும்
மந்திர விசேஷங்களும் -அநந்தா வை பகவந் மந்த்ரா -என்கிறபடியே அநேககங்களாய் இருக்கும் என்கை-
—————————————–
அவை தான-வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –சூரணை -9
அவை எல்லாம் தான் ஏக வர்க்கமோ என்ன -இரண்டு வர்க்கம் என்கிறார் –
அதாவது
சர்வ வியாபகமான பகவத் ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கையாலே வியாபகங்கள் என்றும் –
பகவத் அவதார குண சேஷ்டிதங்களில் ஓர் ஒன்றை பிரதிபாதிக்கையாலே -அவ்யாபகங்கள் என்றும் –
உபய வர்க்கமாய் இருக்கும் என்கை –
————————————————–
அவ்யாபகங்களில் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் –சூரணை -10
வர்க்க த்ரயமும் தன்னில் ஒக்குமோ -என்ன –
அதாவது –
அவ்யாபகங்களாய் இருந்துள்ள சகல மந்த்ரங்களிலும் –
நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் –
என்று விஷ்ணு காயத்ரியில் ஒதப்படுகிற -வியாபக மந்த்ரங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்களாய் இருக்கும் என்கை –
இந்த விஷ்ணு காயத்ரியில் -நாராயண வாஸூதேவ -விஷ்ணு -சப்தங்கள்
அந்த மந்திர த்ரயத்துக்கும் பிரதான பூத நாம த்ரயங்கள் ஆகையாலே -சாதாரண பிரணவ நமஸூ க்களோடு கூடின
மந்திர த்ரயத்துக்கும் உப லஷணமாகக் கடவது –
(நாமங்களுக்கு ஓம் ஆய நம மூன்றும் -சேர்த்தால் மந்த்ரங்கள் ஆகும்
இந்த மூன்றுக்கும் தான் நம முன்னாக வரும் -மற்றவை ஓம் கேசவாயா நம போல இருக்கும்
——————————————–
இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்-சூரணை -11-
இந்த வியாபக மந்திர த்ரயமும் தன்னில் ஒக்குமோ என்ன –
அதாவது
அவ்யாபகங்களில் காட்டில் ஸ்ரேஷ்டமாய் இருந்துள்ள இவ் வியாபக மந்த்ரங்கள்
மூன்றிலும் வைத்து கொண்டு
நாராயணாய வித்மஹே என்று பிரதமோபாத்தம் ஆகையாலும் –
அர்த்த பூர்த்தி யாதிகளாலும் –
நாஸ்தி சாஷ்டாஸ்ராத்பர , ந மந்த்ரோஷ்டாஷராத் பர -என்னும்படியான பெருமை உடைய பெரிய திரு மந்த்ரம்
பிரதானமாய் இருக்கும் என்கை –
(ஆதி சப்தம் சிஷ்ட பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது
நாஸ்தி சாஷ்டாஸ்ராத்பர , ந மந்த்ரோஷ்டாஷராத் பர -யாதொருபடி ஸர்வ தேவதைகளிலும் வைத்துக் கொண்டு நாராயணனைக் காட்டிலும் பரனில்லை
அப்படியே ஸர்வ மந்திரங்களிலும் வைத்துக் கொண்டு திரு அஷ்டாக்ஷரியில் காட்டில் பரமில்லை
பூத்வேதி -புத்திரர்கள் சிஷ்யர்களைக் குறித்து கை எடுத்து சபதம் பூர்வகமாகச் சொல்கிறேன்
திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமமான ஒரு மந்த்ரம் இல்லை
பெரிய திருமந்திரம் ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளால் ஸ்ரேஷ்டமாகப் ப்ரதிபாதிக்கப்பட்ட பெருமையை யுடைய திருமந்திரம் ஸ்ரேஷ்டமாய் இருக்கும் என்று மூலார்த்தம்)
————————————————–
மற்றவை இரண்டுக்கும் அசிஷ்ட பரிக்ரஹமும் அபூர்த்தியும் உண்டு –சூரணை -12
மற்ற வியாபக த்வயத்துக்கும் தாழ்வு என்ன –
அதாவது
வாஸூதேவ விஷ்ணு சப்தங்களான மற்றை வியாபக மந்த்ரங்கள் இரண்டுக்கும்
நாராயண சப்தம் போலே
ஸ்வரூப ரூப குணாதிகளை எல்லாம் பிரதிபாதியாதே –
ஸ்வரூப மாத்ரத்தை பிரதி பாதிக்கையாலே –
நிர் விசேஷ சிந்மாத்ரா வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் மிகவும் ஆதரித்துப் போருகையாகிற
அசிஷ்ட பரிக்ரஹமும் –
வியாப்ய அத்ய ஆகாராதிச அபேஷதை ஆகிற அபூர்த்தியும் உண்டு என்கை –
(ஆதி சப்தம் விபூதிகளைச் சொல்லுகிறது
குத்ருஷ்டிகள் -சங்கராதிகள்-நிர்விசேஷ சின் மாத்ர வஸ்து வாதிகள் )
ஷட் அஷரி -வியாப்ய பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் -வியாபகனுடைய குணங்களையும்
சொல்லாதே -வியாப்தி மாத்திர பிரகாசம் ஆகையாலே -அபூர்ணம் –
வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் -வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
சர்வம் வசதி-என்ற அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் –
அதில் குணம் அன்வயியாமையாலும் இனி குண சித்திக்காகா பகவந் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் -திரு த்வாதச அஷரியும் அபூர்ணம்
(ஷட் அஷரி ஓம் நமோ விஷ்ணவே என்பது
திரு துவாதச அஷரி -ரெங்கநாதனுக்கு ஆராதன மந்த்ரம் -ஸர்வத்ர வசதீதி வாஸூ தேவ)
இம் மந்த்ரம் அவை போலே அன்றி –
வியாப்ய பதார்த்தங்களோடு
வியாபன பிரகாரத்தோடு
வியாபன பலத்தோடு
வியாபனுடைய குணங்களோடு
வாசி அற சாப்தமாக காட்டுகையாலே -அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த
பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு –
பரந்த ரகசியம் -என்று மற்ற வியாபக மந்த்ரங்கள் இரண்டினுடைய அபூர்தியையும்
திருமந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் ஸூ ஸ்பஷ்டமாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே
—————————————————–
இத்தை வேதங்களும் ருஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –சூரணை -13-
இதுக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்
அதாவது
விஷ்ணு காயத்ரியிலே வியாபக மந்திர த்ரயத்தையும் சொல்லுகிற அளவில்
பிரதமத்தில் நாராயண சப்தத்தை பிரதானயேன பிரதி பாதிக்கையாலும் –
விச்வம் நாராயணம் -என்று தொடங்கி
நாராயண பரம் ப்ரஹ்ம தத்தவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராதமா நாராயணா பர யச்ச
கிஞ்சிஜ் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர்பகிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித –
என்று சகல வேதாந்த சார பூதமான நாராயண அனுவாகத்திலும் –
(விஸ்வம் நாராயணம் -ஸ்வா தீன ஸர்வ தத்வ த்ரயம் -பத்த முக்த நித்ய த்ரிவித ஆத்மாக்களுக்கும் போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண த்ரிவித
அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து தாரண நியமன ரக்ஷணங்களைப் பண்ணிக்கொண்டு இருக்குமவனாய்)
(பர ப்ரஹ்ம வாஸ்யனும் நாராயணனே -பர தத்துவமும் நாராயணனே -பரஞ்சோதியும் நாராயணனே -பரமாத்வாவும் நாராயணனே
இந்த ஜகத்தில் ப்ரத்யக்ஷத்தால் காணப்படும் -ஸ்ருதியால் கேட்கப்பட்டும் இருக்கிறது யாதொரு வஸ்து -அந்த ஸகல பிரமாண
ப்ரதிபின்னமான ஸகல வஸ்துக்கள் எல்லாவற்றிலும் உள்ளோடும் புறம்போடும் வாசியற வியாபித்து அந்தராத்மாவாய்க் கொண்டு நிற்குமவன் நாராயணனே)
ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மோ நேசானோ நேம த்யாவாப்ருதிவி -என்று மகா உபநிஷத்திலும்
(ஒன்றும் தேவும் இத்யாதியால் -நம்மாழ்வார் இத்தை அருளிச் செய்கிறார் )
(நாராயணன் ஒருவனே உளனாவான் -பிரம்மாவும் இல்லை -ருத்ரனும் இல்லை -இந்த்ராதிகளும் இல்லை நக்ஷத்ரங்களும் இல்லை)
சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -என்று தொடங்கி-
திசச்ச பிரதிசச்ச நாராயணா -என்று முடிவாக நடுவு அடைய ஸூபால உபநிஷத்திலும்
(கண்ணும் கருவியும் பார்க்க வேண்டியவையும் நாராயணனே )
யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதுவீ சரீரம் -என்று தொடங்கி
யஸ்ய ம்ருத்யு சரீரம் -என்கிறது ஈறாக நடுவு உள்ள பர்யாயங்கள் தோறும்
ஏஷ சர்வ பூதாந்த்ராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவா ஏகோ நாராயணா -என்று
அந்தர்யாமி ப்ரஹ்மாணத்திலும்
(காண்கின்ற கண்ணும் காணப்படும் பொருள்களும் நாராயணனே -கேட்க்கிற செவியும் கேட்க்கிற பொருள்களும் நாராயணனே
திக்குகளும் விதிக்குகளும் நாராயணனே -யாவன் ஒருவனுக்கு ஜீவாத்மா சரீரமாய் இருக்கிறது –
யாவன் ஒருவனுக்கு பிருத்வி சஈரமாய் இருக்கிறதோ யாவன் ஒருவனுக்கு ம்ருத்யு சரீரமாய் இருக்கிறதோ
அவன் ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவாய் தத்கத தோஷம் தட்டாதபடி -அபஹத பாப்மாவாய் -பரமபத நிலையனாய் திவ்யமாய் இருக்கிற
லீலா விபூதி யோகத்தால் தேவனாய் இப்படி சர்வாதிகனாகையாலே அத்விதீயனான நாராயணன்)
வாஸூ தேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து-நாராயண சப்தத்தை இட்டு பகவத் ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும் –
அபௌ ருஷேயமாய்
நித்ய நிர்தோஷமாய்
ஸ்வத பிரமாணங்களான வேதங்களும் விரும்பிற்றன
எதா சர்வேர்ஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர
ததா சர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாஷராத் பர-என்றும் நாரதீயம்
(ஸ்வரூபாதிகளை–ஆதி ஸப்தத்தாலே குண சேஷ்டிதங்களைச் சொல்லுகிறது
யாதொருபடி ஸர்வ தேவர்களிலும் வைத்துக் கொடு நாராயணனைக் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
அப்படியே ஸர்வ மந்திரங்களில் வைத்துக் கொண்டு திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை)
பூத்வோர்தவ பாஹூ ரதயாத்ர சர்வ பூர்வம் ப்ரவீமிவ
ஹே புத்திர சிஷ்யா ஸ்ருணுத ந மந்த்ரோஷ்டாஷராத் பர-என்றும்
சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிரஷ்டாஷரோ
ந்ருனாம் அபு நர்ப்பவ காங்க்ஷினாம் ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச-என்றும்
(புத்ர சிஷ்யர்களைக் குறித்து கை எடுத்து சபத பூர்வகமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள் -திரு அஷ்டாக்ஷரத்தில் காட்டில் பரமாய் இருப்பது ஓன்று இல்லை
ஸர்வ வேதாந்த ஸாரமான அர்த்தமாய் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்துவதான திரு அஷ்டாக்ஷரம் மோக்ஷ காங்க்ஷி களான புருஷர்களுக்குப் புகலிடம்)
பீதா கோரேஷு சவ்யாதிஷு வர்த்த மாநா சங்கீர்த்தாயா நாராயண சப்த மாதரம்
விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்தி நாரயணோதி சப்தோச்தி வாகச்தி வசவர்த்திநீ-என்றும்
ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -என்றும்
கிம் தத்ர பஹூபிர் மந்தரை கிம் தத்ர பஹூபிர் விரதை
நமோ நாராயண யேதி மந்திர சர்வார்த்தாதா சாதகா -இத்யாதிகளாலே –
வேதார்த்த உப ப்ரஹ்மணங்களாய் இருக்கிற ஸ்வ பிரபந்தங்களிலே பல இடங்களில்
இத்தை ஸ்லாகித்துக் கொண்டு சொல்லுகையாலே –
வேதார்த்த விசதீ கரண பிரவ்ருத்தரான வ்யாசாதி பரம ருஷிகளும் விரும்பினார்கள்
(நாராயணன் என்கிற ஸப்தம் உண்டு -அதைச் சொல்லுவதற்கு வாக் இந்திரியம் உண்டு
இப்படி இருக்க கோரமான நரகத்தில் எவ்வாறு விழுகின்றார்கள் -இது ஒரு பெரிய ஆச்சார்யமே
திரு மந்திரமானது ஸர்வ அர்த்தத்தையும் சாதித்துக் கொடா நிற்கும் -அது உண்டாய் இருக்க அநேக மந்திரங்களால் என்ன பிரயோஜனம் உண்டு –
வியாஸாதிகள் -ஆதி ஸப்தத்தாலே பராசர வால்மீகி ஸூக ஸுநகாதிகளைச் சொல்லுகிறது)
வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8–என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1-
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –
நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று பெரிய ஆழ்வாரும் –
நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –
நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று திரு மழிசைப் பிரானும்
(நான்முகன் திருவந்தாதி முதலிலும் திருச்சந்த விருத்தம் பின்பும் )
நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –
நன் மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன் நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்
மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
(நம்மாழ்வாரை முந்துற அருளிச் செய்தது அவயவி பூர்வகமாக அருளிச் செய்ய வேணும் என்னும் அபிப்ராயத்தாலே)
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில்
இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-
———————————————
வாஸ்ய பிரபாவம் போலே அன்று வாசக பிரபாவம் –சூரணை-14-
இனி வாஸ்யம் தன்னிலும் இதுக்கு உண்டான வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
இதுக்கு வாஸ்யனாய் இருந்துள்ள ஈஸ்வரனுடைய பெருமை போல அன்று
தத் வாஸகமான இதன் பெருமை என்ற படி –
———————————————-
அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்–சூரணை -15-
அது தான் ஏது என்ன அருளிச் செய்கிறார்
அதாவது
இதுக்கு வாஸ்யன் ஆனவன் ஸந்நிஹிதன் அன்றிக்கே தூரஸ்தனாய் இருந்த காலத்திலும் –
வாஸகமான இது ஆசந்னமாய் நின்று
தன்னை அத்யவசித்தவர்கள் அபேஷிதங்களைச் சாதித்துக் கொடுக்கும் என்கை-
————————————————-
திரௌபதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது திருநாமம் இறே–சூரணை -16
இப்படி வாச்யன் தூரஸ்தனாய் இருக்க வாசகம் உதவின இடம் உண்டோ -என்ன அருளிச் செய்கிறார்
அதாவது
மகா சதச்சிலே துச்சாசனன் வஸ்த்ர அபகாரம் பண்ணுகிற போது-
மகாத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
முன்பே ஸ்ரீ வசிஷ்ட மக ரிஷி சொல்லி வைத்ததை நினைத்து –
சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீ காஷா ரஷமாம் சரணா கதாம் -என்று
சரணம் புகுந்த த்ரௌபதிக்கு அவ் வபத்திலே கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணமாம் தூரா வாசினம்-என்கிறபடியே
வாச்யனான கிருஷ்ணன் தூரஸ்தனாய் இருக்கச் செய்தேயும் –
வஸ்த்ரத்தை வர்த்திப்பித்து கொடுத்தது அவ் வவதாரத்துக்கு வாசகமான கோவிந்தன் என்கிற திரு நாமம் இறே என்கை –
நாராயண சப்த்தத்தில் ஏக தேசத்துக்கு வாசகமான ஒரு திரு நாமம் செய்த படி கண்டால் இதின் பிரபாவம்
கிம்புநர் நியாய சித்தம் இறே என்று கருத்து –
(மஹா சதஸ்ஸிலே -பீஷ்ம த்ரோணாதிகள் போன்ற மஹான்கள் உள்ள சதஸ்ஸிலே -பெரிய சதஸ்ஸிலே என்றுமாம்
இறே –மஹா பாரத ப்ரஸித்தம்
திருநாமம் இறே –கிருஷ்ணாவதாரத்துக்கு வாசகமான கோவிந்தன் என்னும் திருநாமம் அன்றோ)
———————————————–
சொல்லும் க்ரமம் ஒழிய சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது –சூரணை -17-
இன்னும் ஒரு பிரகாரத்தாலே இதின் பிரபாவத்தை அருளிச் செய்கிறார்
அதாவது
ஏதேனும் ஒரு மந்த்ரம் தன்னை தஞ்சமாக விச்வசித்து சொன்னவர்களுக்கு ஒழிய
தன் கார்யம் செய்யாதே ஆகிலும் –
இது அங்கன் இன்றி தன்னை தஞ்சமாக விச்வசித்து சொல்லுகிற க்ரமம் ஒழிய –
சாங்கேத்யம்-பாரிஹாச்யஞ்ச ஸ்தோபம் ஹேளநம் ஏவ வா -என்கிற படியே சொல்லிலும்
சொன்னவர்களுக்கு ரஷகம் ஆகையாகிற தன் ஸ்வரூபத்தில் நின்றும் நழுவ நில்லாது என்கை –
அஜாமிளன் -சிசு பாலன் போன்றவர்களுக்கு உதவிற்றே-
(சாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநம் ஏவ வா வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷ அநக ஹரம் விது —)
(பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் —முதல் திருவந்தாதி—56-)
———————————————-
இது தான் குலம் தரும் என்கிறபடியே எல்லா அபேஷிதங்களையும் கொடுக்கும் –சூரணை -18-
இனி இதன் சர்வ அபேஷித பிரதித்வம் ஆகிற வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
இம் மந்த்ரம் தான் குலம் தரும் என்று தொடங்கி -ஆழ்வார் அருளிச் செய்தபடியே –
அதிகார அனுகுணமான அபேஷிதங்களை எல்லாம் கொடுக்கும் என்கை –
——————————————
ஐஸ்வர்ய கைவல்ய பகவ லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றை கொடுக்கும் –சூரணை -19
அத்தை விசதீகரிக்கிறார்
அதாவது
ஐஹா லௌகிகம் ஐஸ் வர்யம் ஸ்வர்காத்யம் பார லௌகிகம் கைவல்யம்
பகவன் தஞ்ச மந்த்ரோயம் சாதா இஷ்யதி -என்கிறபடியே
ஐஹிஹமாகவும் பரலோககிகமாயும் இருக்கும் ஐஸ்வர்யத்தையும்
ஆத்ம ப்ராப்தி ரூபமான கைவல்யத்தையும்
பரம புருஷார்த்த பகவ லாபத்தையும்
ஆசைப்பட்ட அதிகாரிகளுக்கு ஜப ஹோமாதிகளாலே ஸ்வயம் சாதனமாய் நின்று
அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்கை –
—————————————————-
கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி
அவற்றை தலைக் கட்டிக் கொடுக்கும் –சூரணை -20
இனி கர்மா யுத்பாய சஹா காரித்வ ரூபமான இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
கர்ம யோகத்தில் இழிந்தவர்களுக்கு ஜப ஹோமாதிகளால் தன்னை சஹாயமாக கொள்ளும் அளவில் –
கர்ம யோக ஆரம்ப விரோதியான -பாபத்தைப் போக்கி –
அந்த கர்மத்தின் உடைய அவிச்சேதா பாதகமாய்க் கொண்டு
அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும் –
(கர்ம யோகமாவது -யஞ்ஞ தான தபோ த்யான ஸந்த்யாவந்தன மஹா யஞ்ஞ அக்னி ஹோத்ர தீர்த்த யாத்ர புண்ணிய க்ஷேத்ர வாஸ காசர
சாந்தராயண புண்ய நதீ ஸ்நான சாதுர் மாஸ்ய பல மூலாசன ஸாஸ்த்ர அப்யாஸ ஸமாராதன ஜப தர்ப்பணாதி
காய சோஷணத்தாலே பாப நாசம் பிறந்து
அத்தாலே இந்திரிய த்வாரா பிரசரிக்கிற தர்ம பூத ஞானத்திற்கு ஸப்தாதிகள் விஷயம் அல்லாமையாலே விஷய சாபேஷை பிறந்து
யம நியம ஆஸன பிராணாயாம ப்ரத்யாஹார தாரண த்யான ஸமாதி ரூப அஷ்டாங்க ரூப கிரமத்தாலே
யோக அப்யாஸ காலத்து அளவும் ஞானத்துக்கு ஆத்மாவை விஷயம் ஆக்குகை
இது தான் ஞான யோகத்துக்கு ஸஹ காரியாகவும் ஐஸ்வர்யத்துக்கு ப்ரதான சாதனமாயும் இருக்கும்)
பிரதமத்திலே ஞான யோகத்தில் இழிந்தவர்களுக்கு தன்னை சஹாயமாக கொள்ளும் அளவில்
கர்ம சாத்தியமான ஞான ஆரம்ப விரோதி பாப நிவ்ருத்தியைப் பண்ணி
அந்த ஞானத்துக்கு நாள் தோறும் அதிசயத்தை பண்ணா நின்று கொண்டு –அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும்
(ஞான யோகமாவது –யோக ஜன்ய ஞானத்திற்கு ஹ்ருதய கமலம் ஆதித்ய மண்டலம் தொடக்கமான ஸ்தல விசேஷங்களிலே
எழுந்து அருளி இருக்கிற ஸர்வேஸ்வரனை விஷயமாகி அவ்விஷயம் தன்னை சங்கு சக்ர கதா பீதாம்பர க்ரீடாதி நூபுர அந்தமான்
திவ்ய பூஷண அலங்ருத்தமாய் லஷ்மீ ஸஹிதமாயும் அனுபவித்து யோக அப்யாஸ கிரமத்தாலே அனுபவ காலத்தைப் போக்கி அனவ்ரத பாவனா ரூபம் ஆக்குகை)
பக்தி யோகத்தில் இழிந்தவர்களுக்கு தன்னை சகாயமாக கொள்ளும் அளவில்
பக்தி ஆரம்ப விரோதியான பாபத்தை போக்கி
பக்தி விருத்தி ஹேதுவாய்க் கொண்டு அத்தை தலைக் கட்டிக் கொடுக்கும் என்கை..
(பக்தி யோகமாவது -தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி ஸநாதன ரூபமான அனுபவத்தை ப்ரீதி ரூபா பன்னம் ஆக்குகையும்
அது தன்னை அறியப் பார்த்தால் ப்ராரப்த கர்மம் கழியும் படி சாதன ஸாத்யங்களை அனுஷ்ட்டித்து அதனுடைய
சங்கோச விகாசமாம் படி பரிணமிப்பிக்கை)
————————————————–
பிரபத்தியில் இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து
காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் —சூரணை-21
இங்கன் அன்றி பிரபன்னருக்கு இது செய்யும் உபகார வைபவத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
கீழ் சொன்னவை போலே
துஸ் ஸகமுமாய்
ஸ்வரூப விருத்தமாய் -இருக்கை அன்றிக்கே –
ஸூசகமுமாய் –
ஸ்வரூப அனுரூபமான பிரபத்தி உபாயத்தில் இழிந்தவர்களுக்கு
தத் அனுரூபமான – பகவத் பாரதந்த்ய ரூப ஸ்வரூப ஞானத்தை விசதமமாகப் பிறப்பித்து-
அர்த்த அனுசந்தாதிகளாலே போது போக்குக்கைக்கும் ஹேதுவாய் –
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6- என்கிறபடியே –
பிரதிபாத்ய வஸ்துவைப் போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை-
(ஸ்வரூப விருத்தமாய் -பாரதந்தர்ய ஸ்வரூப விருத்தமாய்
ஸ்வரூப அனுரூபமாய் -பாரதந்த்ர ஸ்வரூப அனுரூபமாய்
பிரபத்தி யுபாயத்திலே -ததேக உபாயத்வ பிரார்த்தனை யாகிற பிரபத்தி யுபாயத்திலே
தத் அனுரூபமான -அந்த பிரபத்தி அனுரூபமான
அர்த்த அநு சந்தானம் -ஸ்வார்த்த அனுசந்தானம்
ஆதி ஸப்தத்தாலே மந்த்ர அனுசந்தானம்)
(ப்ரதிபாத்ய வஸ்துவைப் போல் ஸ்வயம் போக்யமாகையாலே -ரஸோ வைஸ -என்றும்
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -என்றும் இத்யாதியில் படியே ப்ரதிபாத்ய வஸ்து ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே
போகத்துக்கும் -ஸதா அனுபவத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்
ப்ரபத்தியலே இழிந்தவர்களுக்கு ஸூ ஸகமாய் பாரதந்தர்ய ஸ்வரூப அனுரூபமாய் இருக்கும் பிரபத்தி உபாயத்திலே பிரவேசித்தவர்களுக்கு
ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து–தத் அனுரூபமான பகவத் பாரதந்தர்ய ஸ்வரூப ஞானத்தை விசதமாக பிறப்பித்து
காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும்–போது போக்குகைக்கும் ப்ரதிபாத்ய வஸ்துவைப் போலே ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்று மூலார்த்தம்)
(கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-)
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply