முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று -ஸூரணை-1-
——
முமுஷு ஆகிறவன் மோஷத்திலே இச்சை உடையவன் ஆவான் –
யே முசில மோஷணே இறே தாது –
இத்தால் சம்சார விமோசனத்தில் இச்சை பிறந்தவனுக்கு என்ற படி-
(இத்தால் -இந்த முமுஷு பதத்தால்
ஸம்ஸாரமாவது -புண்ய பாப நிபந்தமான அசித் சம்பந்தம்-அதாவது சித் ஸ்வரூபனான ஆத்மாவுக்கு அவித்யாதி காரணமான தேஹ சம்பந்தம்
விமோசனம் -விடுகை
இச்சை பிறந்தவனுக்கு -நிவ்ருத்தியிலே அபேக்ஷை பிறந்தவனுக்கு )
(சம்சார நிர்வேதம் முதல் படி அன்றோ-விட்டே பற்ற வேண்டுமே-
பகவத் ப்ராப்தியில் இச்சை வந்தால் தான் சம்சார நிவ்ருத்தியில் இச்சை உண்டாகும்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு- என்றபடி
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-
எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –
வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி–அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –
அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம்-
சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால எளிதாம் –
பலம் ப்ராப்யம் உபேயம் புருஷார்த்தம் பேறு -பர்யாய சொற்கள்
உபாயம் பிராபகம் ஆறு-பர்யாய சொற்கள் )
ஆத்ம ப்ராப்தி காமனுக்கும் முமுஷ்த்வம் உண்டே ஆகிலும் இவ்விடத்தில் அவன் விவஷிதன் அன்று –
அவனுக்கு ரகஸ்ய த்ரய ஞான அபேஷை இல்லை இறே –
ஆகையால் இவர் முமுஷு என்கிறது –
பகவத் ப்ராப்தி காமதயா சம்சார நிவ்ருத்தியிலே இச்சை பிறந்தவனை –
(ஆத்ம பிராப்தி காமனுக்கு -ஆத்ம அனுபவத்தில் அபேக்ஷை பிறந்தவனுக்கு
முமுஷ்த்வம் உண்டே ஆகிலும்-முமுஷு பத வாஸ்யத்வம் சிலர் அபிப்ராயத்தாலே உண்டே யாகிலும்
இவ்விடத்தில் அவன் விவஷிதன் அன்று-இந்த முமுஷுவுக்கு என்ற பதத்தில் வாஸ்யனன் அன்று
இவ்வர்த்தம் ஸ்ரீ கீதா ஸாஸ்த்ர ப்ரஸித்தம் )
ஏவம் பூதன் ஆனவனுக்கு அறிய வேண்டிய ரகஸ்யம் மூன்று என்றது –
இவனுக்கு அவசியம் ஞானதவ்யமாய் உள்ளது ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் ஆகையாலும்
அவற்றை இந்த ரகஸ்ய த்ரயம் உள்ளபடி பிரதிபாதிக்கை யாலும் –
ரகஸ்ய த்ரயமே அறிய வேண்டும் என்கை–
ஸ்வ ஞானம் பிராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷுபி ஞான த்ரய உபாதேயம் ஏதத் அந்யந்ந கிஞ்சன –
என்னக் கடவது இறே –
(ஆச்சார்ய உபதேச பூர்வகமாக அறிய வேண்டும் எனது மேல் இக்கிரந்தத்திலேயே ஸூ ஸ்பஷ்டம்
சகல வேதாந்த சார அர்த்தமாவது -அர்த்த பஞ்சகத்தைப் ப்ரதிபாதியா நின்று கொண்டு அதி குஹ்யங்களாய் இருக்கும் அன்றோ)
ரகஸ்யம் மூன்று என்று இவர் உத்தேசிக்கிறது
திருமந்த்ரமும்
த்வயமும்
சரம ஸ்லோகமும் ஆகிற
இவற்றை என்னும் இடம் மேலே ஸூஸ்பஷ்டம்-
இவற்றை ரகஸ்யங்கள் என்கிறது –
சகல வேதார்த்த சாரார்த்த பிரதிபாதகதயா பரம குஹ்யங்கள் ஆகையாலே —
ஆக
இவ் வாக்யத்தால் –
அதிகாரி நிர்தேசமும் –
தத் ஞாதவ்ய நிர்தேசமும்
பண்ணி அருளினார் ஆய்த்து-
(முமுஷுவுக்கு- என்றதால் அதிகாரி நிர்த்தேசமும்
அறிய வேண்டிய ரஹஸ்யம் மூன்று -என்றதால் ஞாதவ்ய நிர்த்தேசமும் )
(நான் யார் -என்ன அறிய வேண்டும் -இவற்றைச் சொன்னவாறு
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -திருமந்திர யாதாம்யார்த்தம் )
———————————————
அதில் பிரதம ரகஸ்யம் திருமந்தரம் -ஸூரணை -2-
இனி அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதம ரகஸ்யம் ஏது என்னும் ஆகாங்கஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் வைத்து கொண்டு -இவ் அதிகாரிக்கு பிரதமம் -ஞாதவ்யமான ரகஸ்யம் –
ஸ்வரூப யாதாம்ய பரமாய் –த்யாஜ்ய உபாதேய விபாக ஞானத்தை
பரிபூர்ணமாக பிறப்பிக்குமதான திரு மந்த்ரம் என்கை –
இனி என்கிறது -அதிகாரி நீர்த்தேசியமும் ஞாதவ்ய நீர்த்தேயமும் பண்ணின அநந்தரம் என்றபடி
இவ்வதிகாரிக்கு என்றது -பகவத் பிராப்தி காமதயா ஸம்ஸார நிவ்ருத்தியிலே இச்சை யுடையவனாய் ப்ரஸ்துதமான அதிகாரி என்றவாறு
(ஸ்வரூப யாதாத்ம்ய பரம் – ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரதிபாதக பரம்-விபாக ஞானம் -விபாக விஷய ஞானம் )
அநந்யார்ஹ சேஷத்வம்–அநந்ய சரணத்வம் –அநந்ய போக்யத்வம் -ஆகிற
ஆகார த்ரயத்தையும் -பிரதிபாதிக்கையாலே –
சேதன ஸ்வரூப யாதாம்ய பிரதிபாதன பரமாய் –
தத் அனுகுண த்யாஜ்ய உபாதேய விபாகத்தையும் –
ஸூஸ்பஷ்டமாய் பிரதி பாதியா நின்று உள்ள இம் மந்த்ரத்தாலே -ஸூஷிததானவனுக்கு இறே
மற்றை ரகஸ்யங்கள் இரண்டிலும் பிரதிபாதிக்க படுகிற உபாய உபேயங்கங்களில் அபேஷை ஜனிப்பது –
ஆகையால் ஸ்வரூப யாதாம்ய பரமான திரு மந்த்ரம் பிரதம ரகஸ்யம் என்னக் குறை இல்லை –
(தத் அனுகுண-என்றது -பூர்வ யுக்த ஆகார த்ரய அனுகுணமான
த்யாஜ்ய உபாதேய விபாகத்தையும் ஸூஸ்பஷ்டமாய் -என்றது– ஸ்ரீ யபதித்வமு ம் -தத் ஏக உபாயத்வமும் -பாகவத சேஷத்வமும் -பகவத் பாகவத கைங்கர்ய பிரார்த்தனையும்
ஸூஷிததானவனுக்கு-என்றது–நன்றாக சிஷிதனானவனுக்கு
உபாய உபேயங்கங்களில் அபேஷை ஜனிப்பது -என்றது -பகவானாகிற உபாயத்திலும் பகவத் கைங்கர்யமாகிற உபேயத்திலும் அபேக்ஷை உண்டாகிறது என்கிறபடி
ஆகையால் என்றது -உபாய உபேயங்களிலே அபேக்ஷை ஜனிப்பது ஸ்வரூப யாததமய ஞான பூர்வகமாகையாலே என்றபடி
ஸ்வரூப யாதாம்ய பரமான திரு மந்த்ரம் பிரதம ரகஸ்யம் என்னக் குறை இல்லை-என்றது -சம்சயம் இல்லை என்றபடி)
இன்னமும் பிரணவத்துக்கு மந்திர சேஷம் விவரணமாப் போலே –
மந்திர சேஷத்துக்கு த்வயம் விவரணமாய் –
த்வயத்துக்கு சரம ஸ்லோகம் விபரணமாய் இறே இருப்பது –
அந்த நியாத்தாலும் இதனுடைய பிரதாம்யம் சித்தம் இறே –
மந்த்ர சேஷம் என்றது -மந்திரம் என்று சொல்லப்படும் பிரணவத்துக்கு சேஷம்
சேஷம் என்கிறது அதுக்கு வியாப்தமாகையாலே
இங்கு மந்த்ர சேஷம் என்கிறது நம பதத்தையும் நாராயணாய பதத்தையும்
(அ விளக்கம் உ ம -ஓம்
அதுக்கு விளக்கம் நமோ நாராயணாயா
அதுக்கு விளக்கம் த்வயம்
அதுக்கு விளக்கம் சரம ஸ்லோகம்
விவரண விவரணி பாவம்-இம் மூன்றுக்கும் உண்டே )
ஆக இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி ஆய்த்து –
பிரதம ரகஸ்யம் திரு மந்த்ரம் -என்று இவர் அருளிச் செய்தது –
இத்தை மந்த்ரம் என்கிறது –
மந்தாராம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
சப்த சக்தியாலும் –
அர்த்த போதனத்தாலும் –
தன்னை அனுசந்திப்பார்க்கு ரஷகம் ஆகையாலே –
மந்தாரம் என்றது அநுசந்தாதாரம் -என்றபடி
சப்தத்துக்கு சக்தியானது பல பிரதான ஸாமர்த்யம்
சப்த சக்தியாலே ரஷகமாம் –ஜப ஹோமாதிகளாலே கார்யம் கொள்ளும் உபாசகருக்கு –ஆதி ஸப்தத்தாலே –தர்பபண ப்ராஹ்மண போஜன தஷிணைகளைச் சொல்லுகிறது
அர்த்த போதனத்தாலே ரஷகமாம் –ஈச்வரனே உபாயம் என்று இருக்கும் பிரபன்னருக்கு –
அர்த்த போதனத்தாலே ரஷகம் ஆகையாவது –
தேகாசக்தாத்ம புத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்யாந்தோ யதி ஸ்யாத் பிரதமம்
இதர சேஷித்வ தீச்சேத் த்வதீயம்
ஆத்ம த்ரானோந் முகச்சே நம இதி ச பதம்
பாந்தவாபாச லோலச் சப்தம் நாராயணாக்யம்
விஷய சபல தீச்சேத சதுர்த்தீம் பிரபன்ன -ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி தன்னை அனுசந்திப்பார்க்கு –
1-தேக ஆத்மா அபிமானமும் (த்ருதீய -மகாரம்-ஞானமயன் – அறிந்து போக்க வேண்டும்- )
2-ஸ்வாதந்த்ரியமும் (பிரதமம் -அகாரம் அறிந்து போக்க வேண்டும்–அறிவுடையவன் என்று அறிந்து
நிமிந்து செருக்கி ஸ்வ தந்திர அபிமானம் போக்க -அ ஆய ம-அவனுக்கு அடிமை )
3-அந்ய சேஷத்வமும் (த்விதீயம் உகாரம் -அவனுக்கே அடிமை )
4-ஸ்வ ரக்ஷணே ஸ்வான்வயமும்
5-அபந்து சங்கமும்
6-விஷய பிராவணயமும்
மேலிடாத படி பண்ணி ஸ்வரூப அனுரூபமாக நடக்கும் படி நோக்குகை –
ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி பண்ணி நோக்குகையாவது -சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக யதேஷ்ட விநியோக அர்ஹமாக
யதேஷ்ட விநி யுஜ்ய மாநனால் அநந்ய போக்யமாக நடக்கும்படி பண்ணி நோக்குகை
—————————————–
திருமந்த்ரத்தின் உடைய சீர்மைக்கு போரும்படி பிரேமத்தோடே பேணி அனுசந்திக்க வேணும் -ஸூரணை -3-
இனி மேல் இம் மந்த்ரத்தின் உடைய வைபவத்தை விஸ்தரேண பிரதிபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் இதனுடைய அனுசந்தான க்ரம கதன முகத்தாலே இதன் வைபவத்தை அருளிச் செய்கிறார் –
திரு மந்த்ரத்துக்கு சீர்மை யாவது –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவ ஆதர்வணா நிச சர்வ அஷ்டாஷரச்ந்தச்தம் –என்கிறபடியே
(சகல வேத ஸங்க்ரஹமாய் -மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே ஞாதவ்ய சகலார்த்த பிரதிபாதகமாய் –)
(சகல வேத ஸங்க்ரஹமாய்-என்றது -லௌகிக சப்தங்களுக்கு வேதம் காரணமாய் -அந்த வேதம் தனக்கும் ப்ரணவம் காரணமான வழியாலே)
(ஞாதவ்ய சகலார்த்தங்களாவன –அர்த்த பஞ்சகம் -தத் ப்ரதிபாதமாய என்றபடி)
மந்த்ரானாம் பரமோ மந்திர குஹ்யானாம் குஹ்ய முத்தமம் பவித்ரம் ச பவித்ராணாம் மூல மந்த்ரஸ் சநாதன-என்கிறபடியே –
மந்த்ரங்களில் வைத்து கொண்டு பரமமான மந்த்ரமாய் – குஹ்யங்களில் வைத்து கொண்டு உத்தமமான குஹ்யமாய் –
பவித்ரங்களிலும் பவித்ரமாய் இருக்கிற கௌரவம்-
சீர்மைக்கு போரும் படி -என்றது -தகும்படி என்கை –
பிரேமத்தோடு பேணி அனுசந்திக்கை ஆவது -இத்தை அனுசந்திக்கும் அளவில்
சுஷ்க ஹ்ருதயனாய் )வறட்டு நெஞ்சம்) இருந்து அனுசந்திக்கை அன்றிக்கே -இதன் வைல்ஷண்ய ஞானம் அடியாக இதின் பக்கல் தனக்கு உண்டான பிரேமத்தோடே
குஹ்யானாம் குஹ்யமான இது அசல் அறியாதபடி -( அநதகாரிகள் செவிப்படாத படி )
மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற படி பேணிக் கொண்டு அனுசந்திக்கை –
இப்படி அனுசந்திக்க வேணும் என்கையாலே -பிரகாரந்தரேண அனுசந்திக்க லாகாது என்கிற நியமம் தோற்றுகிறது-
இதன் வைலஷண்ய ஞானம் அடியாக-என்றது இம் மந்திரத்தினுடைய ஸகல வேத ஸங்க்ரஹத்வ ஞாதவ்ய சகலார்த்த ப்ரதி பாதகத்வ
பரம மந்த்ரத்வ –உத்தம ரஹஸ்யத்வ -பரம பவித்ரத்வ ரூப வைலக்ஷண்யம் அடியாக என்றபடி
அசல் அறியாதபடி -( அநதகாரிகள் செவிப்படாத படி )-என்றது முமுஷுக்கள் அல்லாத வர்களுடைய செவியில் யாதிருச்சிகமாகவும் செவிப்படாத படி
பிரகாரந்தரேண அனுசந்திக்க லாகாது என்கிற நியமம் தோற்றுகிறது–என்றது -நியம அதிக்ரமம் பண்ணினால் ஸன்மார்க்க பிரச் யுதனாவான் -என்றபடி
——————————————-
மந்த்ரத்திலும்
மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
மந்திர பிரதனனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க உண்டானால் கார்ய கரமாவது -ஸூரணை -4-
(கார்ய கரமாவது-என்றது ஞாதவ்ய அர்த்த ஞாபகம் -அர்த்த பஞ்சக ப்ரதிபாதிதம்)
இப்படி தன் பக்கல் பிரேமம் உண்டாகவே
இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரமோ என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
ஞாதவ்யார்த்த ஞாபகமான இம் மந்த்ரம் தன்னிலும் –
சேஷித்வ சரண்யத்வ பிராப்யத்வங்கள் ஆகிற
ஆகார த்ரய யுக்ததயா இம் மந்த்ரத்துக்கு வாச்ய வஸ்துவாய் இருக்கிற சர்வேஸ்வரன் விஷயத்திலும் –
(சேஷித்வமாவது -சேஷ பூதரால் உண்டான அதிசயத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்கை
சரண்யத்வமாவது –அச்சரண்யனானவர்களுக்கு ஸர்வ பிரகாரத்தாலும் ரஷகனாய் இருக்கை
பிராப்யத்வமாவது –பரம புருஷார்த்த தயா அபிமதமாய் இருக்கை
ஆகார த்ரய யுக்ததயா-ஆகார த்ரயத்தோடே கூடி இருக்கையாலே
இம் மந்த்ரத்துக்கு–பத த்ரய ஆத்மகமான இந்தத் திரு மந்திரத்துக்கு
ப்ரணவத்தில் –சேஷித்வேநவும் —
நமஸ் பதத்தில் -சரணயத்வேநவும் –
நாராயண பதத்தில் கர்மணி வியுத் பத்தியாலே ப்ராப்யத்வேநவும்)
தன் மந்த்ரம் ப்ராஹ்மாணாதீனம் – என்கிறபடியே
இம் மந்த்ரம் ஆச்சார்யா அதீனமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
இத்தை யதா பிரதி பத்தி யுக்தனாய் கொண்டு -தனக்கு உபகரித்த ஆச்சர்ய விஷயத்திலும் –
தத் தத் வை லஷண அனுரூபமாக ப்ரேமம் அதிசயம் உண்டானால்
இம் மந்த்ரம் இவனுக்கு கார்ய கரம் ஆவது என்கை –
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரவ த்ரிஷூ பக்திஸ்
சதா கார்ய சாஹி பிரதம சாதனம் -என்னக் கடவது இறே —
(ஒன்றை விட அடுத்தத்தில் பிரேமம் கனக்க உண்டாக வேண்டும் -)
(இத்தை –ஆச்சார்ய ஆதீனமான இந்தத் திருமந்திரத்தை
யதா பிரதி பத்தி யுக்தனாய் கொண்டு-என்றது உபதேஷ்டாவான தன்னை ஆச்சார்யனாக நினைக்கையும்
உபதேச பாத்ரனான சிஷ்யனைத் தனக்கு சிஷ்யன் என்று நினைக்கையும்
உபதேசித்ததற்கு அர்த்த ஸுஸ்ரூஷாதி தர்ஷ்ட ப்ரயோஜனத்தை பலமாக நினைக்கையும் ஆகிற
விப்ரதிபத்தி இன்றிக்கே
உபதேஷ்டாவான தன்னை உபதேஸ சமயத்தில் தன்னுடைய ஆச்சார்யானையே இவனுக்கு உபதேஷ்டாவாகவும்
தான் அங்குத்தைக்குக் கரண பூதனாயும்
உபதேஸ பாத்ரனான சிஷ்யனையும் தன்னோபாதி தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யனாக பிரதிபத்தி பண்ணுகையும்
பர உபதேசம் பண்ணும் அளவில் இவ்வாத்மா திருந்தி ஆளுமாளார் என்கிற விஷயத்துக்கு மங்களா ஸாஸனத்துக்கு
ஆளாக வேணும் என்னும் அதுவே பலமாக உபதேஸிக்கை யதா பிரதிபத்தி யுக்தனாய்க் கொண்டு -என்றபடி
தனக்கு -என்றது அதி நீசனான தனக்கு என்றபடி
ஆச்சர்ய விஷயத்திலும் -பகவத் ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க வல்லனான ஆச்சார்யர் விஷயத்திலும்
மந்திரத்துக்கு வை லக்ஷண்யமாவது –ஸகல வேத ஸங்க்ரஹத் வாதிகள்
ஈஸ்வரனுக்கு வை லக்ஷண்யமாவது -ஸர்வ சேஷித்வாதிகள்
ஆச்சார்யனுக்கு வை லக்ஷண்யமாவது –உப தேஷ்டாவான தன்னை என்று தொடங்கி யதா பிரதிபத்தி யுக்தனாய் என்னும் அளவாகச் சொன்னது எல்லாம்)
————————————–
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து –
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து –
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட –
சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி –
தானே சிஷ்யனுமாய் -ஆச்சார்யனுமாய் நின்று –
திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் -ஸூரணை-5-
(நர நாராயணன் -சிஷ்யன் ஆச்சர்யனுமாய் -முதலில் சொன்னது நாம் தானே இழந்து உள்ளோம்)
இனி இம் மந்த்ரத்தின் உடைய அவதரண பிரகார கதன முகத்தாலே இதனுடைய அப்ரிதம வைபவத்தை அருளிச் செய்கிறார் –
சம்சாரிகள் ஆகிறார் அநாதி அசித் சம்பந்தத்தால் பிரவாக ரூபேண வருகிற –
அவித்யா கர்ம வாசன ருசி விவசராய் -ஜன்ம மரணாதி க்லேச பாகிகளாய் திரிகிற -பக்த சேதனர் —
தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -என்றது –
தாஸாபூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மான பரமாத்மனா
நான்யதா லஷணம் தேஷாம் பந்தே மோஷே ததைவ ச -என்கிற படியே –
ஸ்வத சித்தமான பகவத் சேஷத்வத்தை லஷணமாக உடையராய் இருக்கிற தங்களையும் –
பதிம் விஸ்வஸ்ய ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -இத்யாதிகளில் சொல்லுகிற படியே
தங்களுக்கு நிருபாதிக சேஷியாய் இருக்கிற ஈஸ்வரனையும் அறியாது என்கை-
ஆனால் அறியாமல் என்னாதே–மறந்து என்பான் என் ?-
முன் ஒரு கால் நினைத்து பின்பு
அந் நினைவுக்கு பிரச்யுதி வந்த இடத்தில் இறே மறந்து என்னாலாவது என்னில் –
மறந்தேன் உன்னை முன்னம் -பெரிய திரு மொழி -6-2-2-என்கிறபடியே
ஸ்வத சித்தமான சம்பந்தத்தை உணர்ந்தால் முன்பு நினைத்து இருந்த அர்த்தத்தை மறந்தால் போலே
இருக்கும் சம்பந்தத்தில் உறைப்பை நினைத்து அருளிச் செய்தாராம் இத்தனை –
(சம்பந்தத்தில் உறைப்பை நினைத்து என்றது –நிருபாதிக சம்பந்தம் ஆகையாலே யாவதாத்ம பாவி திருடமாய் இருக்கையை நினைத்து என்றபடி)
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -என்றது
கீழ் சொன்ன அஞ்ஞானத்தாலே வகுத்த சேஷியான ஈஸ்வர விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற பரம புருஷார்த்தையும்
ப்ராபிக்கப் பெறாதே என்கை —
புருஷார்த்தத்தின் உடைய கௌரவத்தையும் -அதுக்கு இட்டுப் பிறந்து வைத்து
கிட்டப் பெறாமல் கிடந்த படியையும் நினைத்து -இழந்து என்கிறார் –
(அதுக்கு இட்டுப் பிறந்து வைத்து–அந்தக் கைங்கர்ய ரூப பரம புருஷார்த்தத்துக்காகப் பிறந்து -என்றபடி –வைத்து -சாரியைச் சொல்லு
கிட்டப் பெறாமல் கிடந்த படியையும்–அது செய்யப் பெறாமல் விஷயாந்தர ப்ரவணராய் இருந்த பிரகாரத்தையும் என்றபடி)
இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே-என்றது
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஞானமும் புருஷார்த்த ஞானமும் இல்லாமையாலே –
ஸ்வ சேஷத்வ அனுரூபமான சேஷி விஷய கைங்கர்ய ரூப புருஷார்த்தத்தை
இழந்தோம் என்கிற அலாப க்லேச அனுசந்தானமும் இன்றிக்கே என்கை-
சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட என்றது –
சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே –
அநந்த க்லேச பாஜனமாய் -ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே கரை காண அரிதாம் படி இருக்கிற
சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்துக்கு உள்ளே விழுந்து -தாப த்ரய அபிபூதராய் கொண்டு -க்லேசப்பட என்கை –
இத்தால் –
தங்களையும் -ஈஸ்வரனையும் அறியாமையாலும் –
புருஷார்த்தத்தை அறியாமையாலும் –
சம்சார சாகரத்துக்கு உள்ளே கிடந்தது நோவு படா நிற்க -விரோதியான சம்சாரம் தன்னையும்
தந் நிஸ்த்ரண உபாயத்தையும் -அறியாமையாலும் –
ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்திலும் ஒன்றையும் அறியாமல் கிடந்தார்கள் என்கை –
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதிப்படியே -சகல சாஸ்த்ரங்களுக்கும் பிரதிபாதிப்பது
அர்த்த பஞ்சகத்தையும் இறே –
இவ்வர்த்தங்களை இவர்களுக்கு ஸூக்ரகமாக அறிவிக்கைக்காக சகல சாஸ்திர ஸங்க்ரஹமான
திரு மந்த்ரத்தை சர்வேஸ்வரன் வெளி இட்ட பிரகாரத்தை சொல்லுகிறது மேல் –
சர்வேஸ்வரன் தந் கிருபையால் என்றது –
ஈசேசித வியசம்பந்தாத் அநிதம் பிரதமாதபி -என்கிற படியே அநாதியாக ஈச்வரனோடு உண்டான ஈசே சிதவ்ய
சம்பந்தத்தை உடையனான எம்பெருமான் –
ஏவம் சம்ஸ்ருதி சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி
ஜீவே துக்கா குலே விஷ்ணோ க்ருபா காப்யு பஜாயதே -என்கிறபடியே –
இவர்கள் படுகிற துக்க தர்சன மாத்ரத்தால் உண்டான தன்னுடைய நிர்கேதுக கிருபையாலே என்கை –
இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி -என்றது –
இப்படி சம்சார சாகரத்திலே கிடந்தது நோவுபடுகிற இவர்கள் –
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷின-என்றும்
சம்சார ஆர்ணவ மக்நானாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம் -என்றும் சொல்லுகிறபடி
சம்சார நிஸ்தரண உபாய பூதனான தன்னை அறிந்து சம்சார சாகரத்தை கடந்து
அக்கரை படும்படி என்கை –
(வைகுந்தன் என்னும் தோணி -நாவாய் முகுந்தன் )
தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று -என்றது
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி–10-6-1- என்கிறபடியே
நர நாராயண ரூபேண அவதரித்து -நரனான தான் சிஷ்யனுமாய்
நாராயணனான தான் ஆச்சார்யனுமாய் நின்று என்கை –
திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளினான் -என்றது
சகல சாஸ்திர சங்க்ரகமாய்-அந்த சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும்
ஸூஸ்பஷ்டமாக பிரதிபாதியா நிற்கும் திரு மந்த்ரத்தை பிரகாசிப்பித்தது அருளினான் என்கை-
(ஸூஸ்பஷ்டமாக பிரதிபாதியா நிற்கும் திரு மந்த்ரத்தை-ப்ரணவத்தாலே ப்ரத்யகாம ஸ்வரூபத்தையும்
நமஸ்ஸாலே -விரோதி உபாய ஸ்வரூபங்களையும்-நாராயண ஸப்தத்தாலே பர ஸ்வரூபத்தையும்
அதில் சதுர்த்தியாலே பல ஸ்வரூபத்தையும் சப்ததயா பிரதிபதியா நிற்கிறது என்றபடி)
அருளிச் செய்தான் என்னாதே வெளி இட்டு அருளினான் -என்றது –
இப்போது தான் ஒன்றை நியமித்து சொன்னான் அல்லன் –
அநாதி யானத்தை பிரகாசிப்பித்தான் இத்தனை என்னும் இடமும்
அதி குஹ்யமாய் உள்ளதை இவர்கள் துர் கதி கண்டு சகிக்க மாட்டாமையாலே
பிரகாசிப்பித்தான் என்னும் இடம் தோற்றுகைக்காக–
———————–
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு -நாட்டார் அறியாமையாலே
அத்தை அறிவிக்கைக்காக -ஸூரணை-6-
ஆனால் ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருள அமையாதோ ?
சிஷ்யனாய் நின்றது எதுக்காகா ?-என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
ஆசார்யனாய் நின்று வெளி இட்டு அருளின அளவு அன்றிக்கே -தானே சிஷ்யனுமாய் கொண்டு நின்றது –
ஆஸ்திகோ தர்ம சீலஸ்த சீலவான் வைஷ்ணவ ச சுசி கம்பீரச் சதுரோ தீரச் சிஷ்ய இத்யபிதீயதே -என்றும் –
ஸாஸ்த்ர விஸ்வாசமுடையவனாய் -ஸாஸ்த்ர யுக்த தர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் என்ற மனமுடையவனாய்
தத் அநுரூபமான ஆசாரமுடையவனாய் -ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யமான விஷ்ணு பக்தியை யுடையவனாய்
பூர்வ யுக்த குணங்களால் வந்த உதகர்ஷ ரூப அஹங்காரம் நெஞ்சில் தட்டாதவனாய்
ஆச்சார்ய விஷயத்தில் தனக்குண்டான பாவ பந்தம் பிறரால் அறிய ஒண்ணாத ஸ்வ பாவம் யுடையவனாய்
ஆச்சார்ய அநு வர்த்தனத்தில் அவன் முக மலர்த்திக்கு உறுப்பான ஆச்சார்ய கைங்கர்யங்களிலே ஸ்தைர்யம் யுடையவனாய் இருக்குமவன் சிஷ்யன் என்றும்
சரீரம் வஸூ விஞ்ஞானம் வாசா கர்ம குணா நஸூன் குர்வர்த்தம் தாரேயேத் யஸ்து ச சிஷ்யோ நேதர ஸ்ம்ருத -என்றும் –
சரீர அர்த்த ப்ராண க்ரஹ க்ஷேத்ர புத்ர தாராதிகள் ஒன்றும் தனக்கு சேஷம் என்று நினையாதே அங்குத்தைக்கே சேஷமாக்கி
ப்ரவர்த்தக ப்ரயத்னம் ஒன்றுமே இன்றிக்கே அவன் நினைவிலே ஒதுங்கி கிரய விக்ரய அர்ஹனாய் இருக்குமவனே சிஷ்யன் எனப்படுவான் என்றும்
சத்புத்திஸ் சாதுசேவி சமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷி
ஸூஸ்ருஷி ச த்யக்தமான ப்ரணிபாதன பர பிரச்னகால பிரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயஸ் சரண முபகதஸ் சாஸ்திர விசுவாச சாலி
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவிதபிமத்தஸ் தத்வதச் சிஷணீய–நியாஸ விம்சதி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியும்
(சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்கமாக தண்டன் இடும் பழக்கம் யுடையவனாயும்
ப்ரஸ்ன கால ப்ரதீஷ-ஆச்சார்யன் இடம் தக்க காலம் எதிர்பார்த்து கேள்வி கேட்டு சங்கைகளைப் போக்கிக் கொள்பவனாயும்
சாந்தோ -மனத்தை அடக்கி வைப்பவனாயும்
தாந்தோ -வெளி இந்திரியங்களை அடக்கி வைப்பவனாயும்
அநஸூயு -பொறாமை இல்லாதவனாயும்
சரணமுபகத -ஆனு கூல்ய சங்கல்பாதி ஐந்து அங்கங்களோடே கூடிய விதிப்படி ஆச்சார்யன் இடம் சரணாகதி செய்பவனாயும்
சாஸ்த்ர விசுவாஸ சாலீ–ஸாஸ்த்ரங்களிலே விஸ்வாஸம் கொண்டவனாயும்
ப்ராப்த பரீஷாம் -ஒரு வருஷமா ஆறு மாதங்களோ தக்கபடி ஆச்சார்யனால் பரீக்ஷிக்கப் பட்டவனாயும்
க்ருதவித் -நன்றி யுடையவனாயும்
ஆகிய
சிஷ்ய-சிஷ்யன்
அபிமதம் தத்த்வத –தத்வ அர்த்தங்களில் விரும்பியதை -இஷ்டப்பட்டவற்றை
சிக்ஷணீய -உபதேசிக்கத் தக்கவன்
அல்லது அபிமதமாம்படி இருக்கும் படி தத்வார்த்தங்களைப் போதிக்கத் தகுந்தவன் –
சிஷ்ய லக்ஷணங்கள் –15-இதில் அருளிச் செய்கிறார் —
சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் ப்ரபந்நம் -அடிபணிந்து போக்கற்ற நிலையை அறிவித்துக் கொண்ட அர்ஜுனன் போன்றவனே நல்ல சீடன்)
சாத்யாந்திர நிவ்ருத்தியும் –
பல சாதன சிஸ்ருஷையும் –
ஆர்த்தியும்
ஆதரமும்
அனசூயையும்
உடையனாய் இருக்கையும் ஆகிற சிஷ்ய லஷணம் லோகத்தில் உள்ளார் அறியாமையாலே –
அத்தை ஸ்வ அனுஷ்டானத்தாலே அறிவிக்கைக்காக என்கை-
உபதேசத்தால் அறிவிக்கும் அளவில் -ஸ்வோத்கர்ஷம் தேடிக் கொள்ள வந்தான் இத்தனை என்று நினைக்கவும் கூடும் –
அனுஷ்டானத்தில் அறிவிக்கும் அளவில் நமக்கும் இது வேணும் என்று விஸ்வசித்து பரிக்ரஹிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே-
(சாத்யாந்திர நிவ்ருத்தி யாவது -ஸ்வரூப விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்களை ஆகிய ப்ராப்யாந்தரங்களில் மறந்தும் அந்வயம் அற்று இருக்கை
பல சாதன சிஸ்ருஷை யாவது -ஆச்சார்யர் உபகரிக்கிற தத்வ ஞான -(ஆச்சார்ய முக உல்லாசத்துக்கு என்றுமாம் ) பல சித்திக்கு ஸாதனமாய் இருக்கும் ஆச்சார்ய பரிசர்யை
ஆர்த்தி யாவது -இருள் தரும் மா ஞாலத்தில் பிறந்த ஞானத்துக்கு விரோதியாய் இருப்பதால் கடுக எடுக்கப் பெறாமையால் வரும் கிலேசம் அடியாக வரும் ஆர்த்தி
நித்தியமாக ஆச்சார்ய விக்ரஹ அனுபவ அலாபத்தால் வரும் கிலேசத்தைப் பொறாமல் உண்டான கிலேசத்தால் வரும் ஆர்த்தி யாகவும்
ஆதரம் யாவது –உத்தர உத்தர அநு புபுஷை விழையும்படி ஆச்சார்யர் அருளிச் செய்கிற பகவத் குண கண அனுபவத்தில் அபிநிவேசம்
அநசூயை யாவது -ஆச்சார்யர் பாகவத கைங்கர்யங்களைப் பறக்க உபபாதியா நின்றாள் அதில் அநசூயை அற்று இருக்கை
இறே –கீதா ப்ரஸித்தம்)
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply