அவதாரிகை –
அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில்
யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர்
என்கிறார் –
நமக்கு எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே
கலக்கமே கார்யகரமாய்த்து
என்கிறார் –
————————————————————————————–
நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-
பதவுரை
சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனையானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்துபோய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ணபிரானை
ஆய்ச்சி–யசோதையானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!
—————————————————————————————-
வியாக்யானம் –
நலமே வலிது கொல் –
அறிவில் காட்டிலும்
பிரேமமானது சால வலிதாய் இருக்கும் ஆகாதே –
ஸ்த்ரீத்வ பிரயிக்தமான அச்சத்தில் காட்டில்
ஸ்நேஹமே வலிதாகாதே –
சலமே தான் நஞ்சூட்டுவன் பேய் நிலமே புரண்டு போய் வீழ –
சலத்தாலே -க்ரித்ரிமத்தாலே
தாய் வேஷத்தைக் கொண்டு
நஞ்சை யூட்டுவதாக
விஷ பானத்தைப் பண்ணுவிப்பதான
திண்ணிய நெஞ்சை யுடையாளான பூதனை
பூமியிலே மறிந்து போய் விழும்படிக்கு ஈடாக –
வெங்கொங்கை யுண்டான் –
வெவ்விய முலையை
உண்டவனை –
மீட்டாய்ச்சி யூட்டுவான் –
பூதனை பக்கல் நின்றும் பிள்ளையை மீட்டு
அதுக்குப் பரிகாரமாக
அம்ருதத்தை புஜிப்பிக்கைக்காக –
யூட்டுவான் –
யூட்டுகைக்கா –
சார்ந்து -தங்கொங்கை வாய் வைத்தாள் –
விஷ முலை யுண்டதுக்குப் பரிகாரமாக
அம்ருதத்தை யுடைத்தான தன் கொங்கையை –
கேட்ட விடத்தே மோஹித்து விழாதே
அவ்வளவு கால் நடை தந்து
தன்னுடைய முலையை
அவன் வாயிலே கொடுத்தாள் –
ஆன பின்பு
நலமே வலிது கொல் –
——————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –