அவதாரிகை –
இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது
திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர்
என்கிறார் –
———————————————————————————-
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-
பதவுரை
சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொருகாலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.
———————————————————————————–
வியாக்யானம் –
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு –
சுனையிலே நீரைப் பார்த்த கடுவன்
தன்னுடைய நிழலைக் கண்டு
இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண வறியாதே-
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து –
வேறே ஒரு கடுவன் என்று
பிரதிபத்தி பண்ணி
தன் நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே
தனக்கு எதிரியான கடுவன் என்று நினைத்து –
வேறு ஒரு களாவும் கடுவனுமாக புத்தி பண்ணி –
கார்த்த கள்ங்கனிக்கிக் கை நீட்டும்-
கருத்த நிறத்தை உடைத்தான
களாப் பழத்துக்கு கையை நீட்டா நிற்கும்
ஒரு சுனையின் கரையிலே களாவின் மேல் தான் நிற்குமே –
அது தன்னிலே நிழலைக் கண்டால் -அத்தப் படியே தோற்றுமே-
அது தன் நிழல் என்று புத்தி பண்ணாதே
தான் இருந்த களாவில் இது தன் கை படாததே
அதில் உள்ளதுவும் பெற வேணும் என்னும் சாபல்யத்தாலே
தா என்று கை நீட்டா நிற்கும் –
கார்த்த –
கையில் சிவப்புக்குப் பகைத் தொடை –
வேங்கடமே –
இப்படிப் பட்ட திருமலையே –
மேனாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு –
பண்டு ஒரு நாள் விளாவினுடைய பழத்துக்கு
கன்று எரிந்தவனுடைய வெற்பு –
இவற்றின் உடைய மௌக்த்யம் போலே யாய்த்து
அவனுடைய மௌக்த்யம் -இருக்கும்படி –
அசூரா வேசத்தாலே வந்தது என்று அறியாதே
அவனும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பழம் பெறப் பார்க்கிறான் இறே-
இருவர் செயலும் ஓன்று போலே இருக்கை –
————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply